10/07/2010

ஆடும் கூத்து - ஓர் அற்புதமான திரைப்படம்

ஜெயமோகனுக்கு முதற்கண் என் நன்றிகள் உரித்தாகுக. அவரது ஆடும் கூத்து என்னும் பதிவில் இப்படத்தைப் பற்றி எழுதியிருப்பதைப் பார்த்தேன். அங்கிருந்து இந்தப் பதிவுக்குச் சென்றேன். அதில் இப்படத்தின் சுட்டி கொடுக்கப்பட்டிருந்தது. யூ ட்யூப்பில் இருக்கிறது என்பதை அறிந்தேன்.

நான் கூற நினைத்ததை பதிவர் வினாயக முருகனே கச்சிதமாகக் கூறியுள்ளார்.

என் வாழ்வின் மகத்தான மணித்துளிகள். வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த திரைப்படத்தில் சேரன்,நவ்யாநாயர்,தலைவாசல் விஜய், பாண்டியராஜன், பிரகாஷ்ராஜ், சீமான் ,மனோரமா, கொச்சின் ஹனீஃபா,ரேகா இன்னும் பலர் நடித்துள்ளார்கள்.இருந்தும் ஏன் இந்த படம் பேசப்படவில்லை? வருத்தமாக இருக்கிறது. தமிழ் சமூகத்தின் மீது ஆத்திரமாகவும் இருக்கிறது. தமிழ் சமூகத்தை தரமற்ற குப்பை படங்களால் நிரப்பி வைத்திருக்கும் ஆட்கள் மீது கோபம் வருகிறது . இந்த படம் ஏன் வெற்றியடையவில்லை. சாட்டிலைட் டிவிக்களை, தமிழின் கமர்ஷியல் டைரக்டர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. இது போன்ற படங்களை ஊக்குவிக்காத பேசாத நானும், நீங்களும் கூட குற்றவாளிதான். ஈரானிய டைரக்டர் மஜீத் மஜீதியின் படங்களை இந்த படம் தரமானது. அடித்து சொல்வேன். உலக சினிமா,உலக சினிமா என்று சொல்கிறார்களே.. அந்த தர வரிசையில் இந்த திரைப்படத்தை தாராளமாக சேர்க்கலாம். மிக தேர்ந்த பிண்ணனி இசை. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ,திரைக்கதை, ஒவ்வொரு நடிக, நடிகைகளின் கச்சிதமான நடிப்பு, முகபாவங்கள், கேமரா கோணம் என்று எல்லாம் சமச்சீரான விகிதத்தில் அடுத்தடுத்து நிற்க ஒரு வானவில் போல என் மனதில் அழகாய் விசுவரூபமெடுத்து நிற்கிறது அந்தப்படம். இன்னும் பல வருடங்களுக்கு என் நினைவில் இந்த படம் நிற்க போவது உறுதி.

அப்படத்தின் முதல் பகுதி கீழே. அடுத்த பகுதிக்கான சுட்டி முதல் பகுதி பக்கத்திலேயே உண்டு. அவ்வாறே அடுத்தடுத்தப் பதிவுகளுக்குப் போகலாம். சீக்கிரம் பார்த்து விடுங்கள். எப்போது வேண்டுமானாலும் எடுத்துவிடும் அபாயம் உண்டு.



படத்தின் மீதி விமரிசனங்களை வினாயக முருகன் கூறுவதை விட நான் என்ன அதிகமாகக் கூறிட இயலும்? அருமையான விமரிசனத்துக்காக அவருக்கு என் வாழ்த்துக்கள்.

எனது இப்பதிவை பொருத்தவரை இன்னொரு விஷயமும் கூறிவிடுகிறேன். படம் நன்றாகத்தான் இருக்கும் நான் இதுவரை எழுதியது எதையும் மாற்ற வேண்டியிராது என்னும் நம்பிக்கையில்தான் முதல் பகுதியை எம்பெட் செய்த இடத்துக்கு மேலே உள்ள வரிகளை படத்தை முழுமையாகப் பார்க்காமலேயே எழுதிவிட்டு, ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து முடித்தப் பிறகே (12 பகுதிகள்) இப்போது மேலே எழுதுகிறேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை.

இப்படம் ஓரிடத்தில் எனக்கு சீவலப்பேரி பாண்டியின் கதையை நினைவுபடுத்தியது. அதில் அவன் ஒரு கிராமத் தலையாரியைக் கொன்றதால்தான் பெரிய கொள்ளைக்காரனாகிறான். அக்கொலை அறுபதுகளில் நடந்தது. ஆகவே அப்படத்தை பின்னால் நெப்போலியனை வைத்து எடுத்தபோது பிரச்சினை கொல்லப்பட்ட அத்தலையாரியின் உறவினர்களால் வந்தது. இம்மாதிரி உண்மைக்கதையை எடுக்கும்போது இவ்வாறெல்லாம் பிரச்சினை வரும் என்பது சாதாரணமாக எல்லோரும் அறிந்ததே. ஏன், கீழ்வெண்மணி படுகொலைகளை செய்வித்த கோபாலகிருஷ்ண நாயுடுவின் கதை எடுத்தாலும் அவரது உறவினர்கள் பிரச்சினை செய்யத்தான் செய்வார்கள்.

இப்படத்தின் முடிச்சு சமீபத்தில் 1968-ல் வந்த நீல் கமல் என்னும் படத்தையும் நினைவுபடுத்தியது. வஹீதா ரஹ்மான், ராஜ்குமார், பால்ராஜ் சஹானி, மனோஜ் ஆகியோர் நடித்தது. அதில் பூர்வ ஜன்ம நிகழ்வுகள் இந்த ஜன்மத்துடன் சேர்ந்து வரும். இந்த ஜன்மத்தில் வஹீதாவின் கணவனாக வரும் மனோஜ் குமார் அவளது முன் பிறவியொன்றில் அவளைக் காதலித்த ராஜ்குமாரின் எலும்புகளைப் பார்க்கும்போது, அவன் காதில் பகவத் கீதையில் கண்ணன் அர்சுச்சுனனுக்கு சொன்ன வார்த்தைகள் ரீங்காரமிடும்.

கண்ணான் கூறுவான்: அருச்சுனா, நீயும் நானும் பல ஆயிரக்கணக்கான பிறவிகளை ஏற்க்கனவேயே எடுத்துள்ளோம். உனக்கும் எனக்கும் இதில் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், எனக்கு அவை எல்லாம் நினைவில் உள்ளன, உனக்கு இல்லை, அவ்வளவுதான்”

அதற்காக ஆடும் கூத்து படம் பூர்வ ஜன்மம் என்றெல்லாம் கூற வரவில்லை. அதற்கான சில சமிக்ஞைகள் தென்படுகின்றன என்று மட்டும் கூறி வைக்கிறேன்.

ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. ஆனால் அதே சமயம் ஏதோ சிக்கல்களால் இது சரிவர திரையிடப்படவில்லை என்பதில் வருத்தமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

வே.நடனசபாபதி said...

திரு டோண்டு அவர்களே! சீவலப்பேரி பாண்டி தலையாரியைக் கொன்றதால்தான் பெரிய கொள்ளைக்காரனாகிறான் என எழுதி உள்ளீர்கள். ஆனால் அவன் கிராம முன்சீபை கொன்றதாக படித்த நினைவு.

Enterprise Mobility as a service said...

Mudhal thadavaiyaga idhai nan kelvi padugirean..

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

Thanks for recommending this movie...As you said watched the first part and could resist watching the rest...
Annai Annai Aadum koothai naadai seithai ennai....

Anonymous said...

Very nice movie and BGM music, much better than endiran, thanks for sharing

Anonymous said...

Arul should see the movie and comment about 'Anbarasan, Kaniarasan and some other 'Arasan'! We can expect a comment implicating brahmins from him on a twisted logic, even for this good movie depicting the real life situation in Tamil nadu under the so called casteless Dravidian Rule for about 50 years!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது