Showing posts with label போலி டோண்டு. Show all posts
Showing posts with label போலி டோண்டு. Show all posts

10/24/2012

சின்மயி விவகாரம்

இது பற்றி பலரும் பதிவு போட்டுள்ள நிலையில் நான் என்ன கூறப்போகிறேன்? எல்லாமே ஏற்கனவே பார்த்தது போன்ற ஃபீலிங்கையே உருவாக்கியுள்ளன. இதை déjà vu என்று கூறுவார்கள்.

போலி டோண்டு என்னை பீடித்தபோது நான் அவன் யார் என்பதை வெளிப்படையாகக் கூறாது தவிர்த்ததை பலர் குறை கூறினர். இன்னும் சிலர் நேராக சைபர் கிரைமுக்கு போக வேண்டியதுதானே என்றும் கூறினர். ஆனால் அதற்கான சமயம் இன்னும் வரவில்லை என நான் கூறியதை கேலி செய்தனர். 

விஷயம் என்னவென்றால் சாதாரண் நபர் போலீசுக்கு போனால் அதுவும் சைபர் போலீசுக்கு போனால் ஒன்றும் நடபதில்லை என்பதே என் அனுபவம். முதலில் கம்ப்ளைண்ட் எடுக்கவே அலைகழித்தனர். சிடி போலீஸ் சிபிசிஐடியை கை காட்டியது. அங்குள்ள டிஎஸ்பியோ தான் என்ன செய்ய முடியும் என சலிப்பைக் காட்டினார். ஆக உற்சாகமான அனுபவமாக இலை.

எனது யுக்தி வேறுமாதிரி இருந்தது. போலி டோண்டு எதிர்பார்த்தது போல நான் முடங்காமல் போனதே அவனை எரிச்சலூட்டி மேலும் தாக்குதல்களை நிகழ்த்த வைத்தது. அதில் பலர் அடிபட்டார்கள். அவற்றில் ஒருவருக்கு தமிழக அரசு மந்திரி ஒருவரின் பி.ஏ.வை தெரிந்திருந்தது. அவரை வைத்து மூவ் செய்து கடைசியில் போலியை வேருடன் அறுத்தார்கள். 

ஆனால் சின்மயிக்கு அப்பிரச்சினை இல்லை. அவர்தான் செலிப்ரிடி ஆயிற்றே. அவராகவே மூவ் செய்து கைதுகளை நடத்தி வைக்க முடிந்தது. இப்போ கையா முய்யா என அக்யூஸ்டுகளின் தோழர்கள் குதிக்கிறார்கள். 

சின்மயி விவகாரத்திலும் போலி டோண்டு விவகாரத்திலும் காமனாக என்ன இருந்தது என்பதை பார்த்தால் அதுதான் பார்ப்பன வெறுப்பு. சின்மயி பாப்பாத்தி, டோண்டு பாப்பான். போதாதா தாக்குதல்கள் நிகழ்த்த? இதை நான் மிகைபடுத்தவென்று கூறவில்லை. எனது பல பதிவுகளில் விவாதங்கள் வருமோது எனக்கு போலி டோண்டுதான் சரி என வன்மத்துடன் கூறியவர்களும் உண்டு. 

அதிலொருவர் எழுதினார், “போலி டோண்டு இருந்த காலத்தில் அனைவருமே அவனை எதிர்த்து கொண்டு தான் இருந்தார்கள், அந்த நேரத்தில் அப்பிராணி பட்டம் வாங்கி பலரது இரக்கத்தை சம்பாரித்து ப்ளாக்கில் மொக்கை போட்டு கொண்டிருந்தார் டோண்டு!” (தான் யார் பக்கம் என்பதை இங்கு தெளிவாகவே காட்டி விட்டார்)..

இப்போது கூட போலி டோண்டுவுக்காக பிரலாபிப்பவர்களது மோட்டிவேஷன்களில் முக்கியமானது பார்ப்பன வெறுப்பே.

என்ன செய்வது, I will have to call a spade a spade.

அன்புடன்,
டோண்டு ராகவன் 



10/03/2010

காங்கிரசும் போலி டோண்டுவும்

இன்று செய்திகளில் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதாகப்பட்டது, bjp.com என்ற பெயரில் ஒரு வலைத்தளம் திறக்கப்பட்டதாகவும் அதை க்ளிக் செய்தால் அது காங்கிரசின் பக்கத்துக்கு செல்வதாகவும் ஆகவே சைபர் கிரைம் குற்றம் என்னும் அடிப்படையில் பிஜேபி காங்கிரசுக்கு நோட்டீஸ் அனுப்பபடப் போவதாகவும் செய்தியில் வந்தது.

இதில் போலி டோண்டு எங்கே வந்தான் என்றால் அதை சற்றே விளக்கமாக கூறவேண்டும். அதற்கு முன்னால் மெடா ரிடைரக்க்ஷன் என்னும் பதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் என் பெயரில் பிளாக்கர் கணக்கு துவங்கப்பட்டு அசிங்கப் பின்னுட்டங்கள் அப்பெயரில் வெளியிடப்பட்டன. என்னுடைய உடனடி எதிர்வினை எலிக்குட்டி சோதனையைப் பற்றிக் கூறுவதே. போலி ஆசாமி அவ்வாறு துவக்கிய பிளாக்கர் கணக்கில் ஒரு வலைப்பூவையும் துவக்கினான். அதை க்ளிக் செய்தால் அது மெடா ரீடைரக்ஷன் என்ற உத்தியைப் பயன்படுத்தி என்னுடைய வலைப்பூவுக்கு இட்டுச் சென்றது. இதை எப்படி முறியடிப்பது? அதில்தான் பிறந்தது என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள் என்றப் பதிவு. சில நாட்களுக்கு புதுப்பதிவு ஒன்றும் போடாமல் இருந்ததில் மெடா ரீடைரக்ஷன் மூலம் என் வலைப்பூவுக்கு வந்தவர்களின் கவனம் இப்பதிவால் ஈர்க்கப்பட்டது. ஆகவே போலியின் எண்ணம் நிறைவேறவில்லை. ஓசைப்படாமல் மெடா ரீடைரக்ஷனை வாபஸ் பெற்றான்.

அதே மெடா ரிடைரக்ஷன் உத்தியைப் பயன்படுத்தியே பி.ஜே.பி. காம் தளத்தை க்ளிக் செய்து காங்கிரஸ் தளத்துக்கு வருமாறு செய்திருக்கிறார்கள். இதை காங்கிரஸ் செய்திருந்தால் அக்கட்சியினரைப் போல முட்டாள்கள் யாருமே இருக்க முடியாது. ஆகவே இது யாரோ விஷமியின் செயல் என்றுதான் எனக்குப் படுகிறது.

சமீபத்தில் 1989 லோக் சபா பொதுத் தேர்தலில் தெற்கு தில்லியில் எல்.கே. அத்வானி பிஜேபி வேட்பாளர். அப்போது எல்.கே. அத்வானி என்ற பெயருடைய சுயேச்சை வேட்பாளரை காங்கிரசார் தயார் செய்து அதே தெற்கு தில்லி தொகுதியில் நிற்க வைத்தனர். அவருக்கு அளிக்கப்பட்டது பனைமரச் சின்னம். போஸ்டரில் ஹிந்தியில் வந்த வாசகத்தின் தமிழாக்கம், “இப்போது நமது சின்னம் பனைமரம். பாரதீய ஜனதாவின் வேட்பாளர் எல்.கே. அத்வானி. இதில் சூட்சுமம் என்னவென்றால் பாரதீய ஜனதா என்று மொட்டையாக கூறினார் இந்திய மக்கள் என்றும் பொருள் கூறலாம். ஆனால் தேர்தல் சமயத்தில் பாரதீய ஜனதா என்றால் மக்கள் பி.ஜே.பி. என்றுதான் சாதாரணமாக பொருள் கொள்வார்கள். முடிவு என்னவாயிற்று? பாரதீய ஜனதாவின் எல்.கே. அத்வானிக்கு டிபாசிட் பறிபோயிற்று. அதாவது பனைமரச் சின்னம் கொண்டவருக்கு, ஹி ஹி ஹி.

பை தி வே இம்மாதிரி ட்ரிக் செய்வது பொதுவாகவே கட்சி அரசியலில் நடப்பது என்றுதான் நினைக்கிறேன். இதே ட்ரிக்கை பிஜேபி வேறு ஏதாவது தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பயன்படுத்தியிருந்தாலும் வியப்பதற்கில்லை என்பதையும் இப்போதே அருள் நோக்கில் கூறிவிடுகிறேன்.

போலி டோண்டு பற்றி பேசும்போது நான் எவ்வளவு எடுத்துக் கூறியும் எனது எலிக்குட்டி சோதனையை பயன்படுத்தத் தவறிய படித்த வலைப்பூ வாசகர்களை விட சாதாரண படிக்காத ஜனங்கள் தாமரைப் பூ சின்னம் பனைமரச் சின்னம் எனப்பார்த்து சுதாரித்து ஓட்டு போட்டு காங்கிரசின் சதியை முறியடித்ததைப் பார்க்கும்போது மூளைக்கும் படிப்புக்கும் ரொம்ப சம்பந்தமில்லை என்றுதான் தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/05/2010

அவதூறு ஆறுமுகம் பற்றி - கிசு கிசு ஏதும் இல்லை நேரடித் தாக்கு

செந்தழல் ரவி என்னைப் பற்றி எழுதிய அவதூறு கிசுகிசுக்களை இக்னோர் செய்து விடலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் அந்த மனுஷன் ஆர்.வி.யின் இந்தப் பதிவில் என்னைப் பற்றி குறிப்பிட்டது ஒட்டகத்தின் மேல் போட்ட கடைசி துரும்பாகி விட்டது.

முதலில் அவதூறு ஆறுமுகம் என் மேல் எரிந்த சேறுகளை பார்ப்போம்.

//முரளி மனோஹர் என்று புனைப்பெயரில் எழுதுவது ஓக்கே. ஆனால் அந்த பெயரில் ஒளிந்துகொண்டு பெரியார் ஒரு கன்னடன், அவன் ஒரு சிறியார் என்றெல்லாம் வசைமாரி பொழிந்ததை பற்றி யாரும் சமீபத்தில்** நீங்கள் இப்படி சொன்னீர்களே என்று கேட்கவில்லை.//
முரளி மனோகர் என்னும் பிளாக்கர் பெயரில் வந்த பின்னூட்டங்களில் ஏதேனும் ஆபாசம் இருந்ததா என்பதை எதிர் முகாமில் இருந்த அத்தனை பேரும் தேடிப் பார்த்து களைத்து விட்டனர். ராஜ வனஜின் கம்பெனி பெயரை வெளியிட்டு விட்டேன் என முனக அதுவும் இல்லை என காட்டியாகி விட்டது. அப்போதெல்லாம் கூறாத பெரியார் விஷயம் இப்போது ஞாபகத்துக்கு வந்திருக்கு போலிருக்கு. முரளி மனோகராக இருந்து பெரியார் பற்றி போட்ட பின்னூட்டங்களைப் பார்த்து, அவரை நான் //சிறியார், கன்னடர்// என்று எங்கே சொன்னேன் என்பதை அவதூறு ஆறுமுகம் முடிந்தால் சுட்டிகளுடன் விளக்கட்டும்.

1. //கையில் ரெண்டு ரூபாய் ஐம்பது காசோடு திருச்சியில் இருந்து தொலைபேசியில் அழைத்த நண்பரிடம், அப்படியே ஒரு பதிவு போட்டிருக்கேன். ஒரு பின்னூட்டம் போட்டுருங்க என்று கேட்டு அந்த முருக பக்தரையே கொலைவெறியாக்கியவர். சத்தியமான உண்மை.//
யாரைக் கூறுகிறார் எனத் தெரியவில்லை. இம்மாதிரி ஏதும் நடந்ததாக நினைவில்லை. அப்படியே ஒரு பேச்சுக்கு அதை வைத்துக் கொண்டாலும், போன் செய்தது அவர். அவர் கையில் இரண்டரை ரூபாய் இருந்ததா, கையில் பெப்சி கோலாவை பிடித்திருந்தாரா என்பதெல்லாம் அறிய நான் என்ன ஞானதிருஷ்டியை வைத்திருக்கும் ரிஷிமுனிவரா? மிகவும் அல்பத்தனமான கிசுகிசு.

2. //ஜெர்மன் ப்ரெஞ்சு கல்வி பற்றி தொலைபேசியில் அழைத்த வலைப்பதிவர் ஒருவரின் மனைவியின் குலம் கோத்திரம் பற்றி சப்ஜாடாக தொலைபேசியில் கேட்டு அறிந்தவர், அந்த நேரத்தில் அவரது எதிரியாக இருந்த போலிடோண்டுவிடம் இதை தெரிவித்துவிட, அன்று இரவு 12 மணியளவில் அந்த பதிவரின் மனைவியின் சாதியை சொல்லி திட்டி பின்னூட்டம் பெற்றவர் அக்கினி சூரியன் பதிவர்.//
இந்த அவதூறு பற்றி எனது இந்தப் பதிவில் ஏற்கனவே பதில் கூறியாகி விட்டது. அவதூறு ஆறுமுகத்தின் பதில்கள் சுருதி குறைந்து கொண்டே வந்தன. இது சம்பந்தமாக அப்பதிவில் நான் எழுதியது:
அ. //ஆனால் கடந்த சில நாட்களாக அவர் போலி டோண்டுவுக்கு பலதகவல்கள் கொடுத்து வந்தது உண்மை டோண்டுவாகிய நான்தான் என அவதூறாக எழுதி வருகிறார். அது ஏன் எனத் தெரிய ஒன்றும் பெரிய அறிவு எல்லாம் தேவையில்லை. லக்கிலுக்கைக் காப்பாற்றும் முயற்சியே அது என்பது புரிகிறது. ரவி எனக்கனுப்பிய மின்னஞ்சல்களையெல்லாம் தேடிப் பார்த்து விட்டேன். அவர் சொன்னது போல அவர் மனைவிக்கு ஜெர்மன் படிப்பது சம்பந்தமாக எனக்கு எந்த மின்னஞ்சலும் கிடைக்கவில்லை. பிறகு நான் ஃபோனில் பேசி அவரது மனைவியின் விவரங்களைக் கேட்டதாகவும் அவை பிறகு மூர்த்திக்கு சென்றதாகவும் கூறுகிறார். அவர் வேறு இடத்தில் குறிப்பிட்டுள்ள தோரணையில் “போலி டோண்டுவுக்கு தகவல் கொடுக்குமளவுக்கு டோண்டுவுக்கு மோட்டிவேஷன் என்ன”? என்னும் கேள்விதான் நிற்கிறது. அவர் மனைவி பற்றி அவரிடம் நான் ஒருவிவரமும் கேட்கவில்லை, அவரைப் பற்றி பேச்சே எங்கும் டெலிஃபோனில் பேசியதாக நினைவில்லை.//
அவரது முதல் பதில்:
//செந்தழல் ரவி said...
பதிவுக்கு நன்றி. ஆனால் உங்களிடமே இந்த தகவல்களை பெற்றுவிட்டதைத்தான் அப்படி சொன்னேன். என்னுடைய தகவல்களை நீங்கள் மூர்த்தியிடம் சொன்னதாக எங்காவது உள்ளதா ?

நீங்கள் எதார்த்தமாக உங்களுக்கு நெருங்கிய யாரிடமாவது சொல்லிவைக்க, அது அப்படியே போயிருக்ககூட வாய்ப்பு உண்டு என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். என்னைப் பொருத்தவரை இந்த செய்தியை வலையுலகில் யாருக்கும் சொல்லவில்லை என்ற அளவில் உண்மை..

உங்களுக்கு மேலும் தகவல்கள் வேண்டுமானால் என்னை தொடர்புகொள்ளுங்கள்.

September 22, 2009 6:17 PM
செந்தழல் ரவி said...
முன்பே உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் எழுதவும் நினைத்தேன், நேரமின்மை. மன்னிக்க. அப்படி என்னுடைய வார்த்தைகள் வேறு அர்த்தம் கொடுத்திருந்தால் அது என்னுடைய மொழி குறைபாட்டையே காட்டுகிறது (நன்றி பைத்தியக்காரன் அல்லது ஜ்யோராம்)
September 22, 2009 6:20 PM//

மேலே அவதூறு ஆறுமுகம் கூறியதற்கு எனது பதில்:
//dondu(#11168674346665545885) said...
//பதிவுக்கு நன்றி. ஆனால் உங்களிடமே இந்த தகவல்களை பெற்றுவிட்டதைத்தான் அப்படி சொன்னேன். என்னுடைய தகவல்களை நீங்கள் மூர்த்தியிடம் சொன்னதாக எங்காவது உள்ளதா//?

அப்படியா, இதற்கு என்ன அர்த்தம்?
//18. போலி குழுவாக அல்லது அவ்வாறு சொல்லிக்கொண்டு இயங்கிய காலத்தில் ஏதேனும் புதிய தகவல்கள் அவனுக்கு கிடைத்தால் 'எங்களது பெங்களூர் / சென்னை கிளை திரட்டிய தகவல்கள்' என்று குறிப்பிடுவான். அது பற்றி உங்களுக்கு தெரியுமா? சென்னை கிளை என்றால் யார்?

எனக்கு தெரியாது. ஒரு வேளை டோண்டு சாரை கேளுங்களேன்?//

அதற்கு பிறகு நீங்கள் என்னைப் பற்றி சொன்னவை இன்னொசெண்ட் ரிமார்க் அல்ல.
September 22, 2009 7:30 PM ”

வேடிக்கை கந்தசாமி என்பவருக்கு நான் எழுதிய பதிலின் ஒரு பத்தியும் அதற்கு அவதூறு ஆறுமுகத்தின் பதிலும்:
//செந்தழல் ரவி தேவையில்லாமல் என்னைச் சீண்டினால் நான் வேடிக்கை பார்த்து நிற்க என்னை என்ன விந்தை மனிதன் என நினைத்தீரோ?

September 22, 2009 9:44 PM
செந்தழல் ரவி said...
செந்தழல் ரவி தேவையில்லாமல் என்னைச் சீண்டினால் நான் வேடிக்கை பார்த்து நிற்க என்னை என்ன விந்தை மனிதன் என நினைத்தீரோ?///

நான் கிண்டலுக்காகத்தான் அப்படி சொன்னேன். புண்படுத்தியிருந்தால் மன்னிக்க. உங்களை சீண்டும் எண்ணமும் இல்லை, தேவையும் இல்லை. நன்றி.
September 22, 2009 10:13 PM//

செந்தழல் ரவி said...
முடிஞ்சதா ?

October 06, 2009 3:30 PM
dondu(#11168674346665545885) said...
நீங்கள் முடித்துக் கொண்டால் நானும் முடிந்தது என விடுவேன்.

ரொம்ப சீரியசான குற்றச்சாட்டை அதுவும் ஆதாரமில்லாத ஒன்றைக் கூறினால் நான் எப்படி வாளாவிருக்க முடியும்.

இப்போதும் கூறுவேன், நீங்கள் போலி டோண்டுவை பிடித்ததற்கு மிகவும் நன்றியுடையவனாகவே இருக்கிறேன்.

இவ்வாறாக இந்த விஷயம் முடிந்திருக்கும்போது அவதூறு ஆறுமுகம் தனது 21.04.2010 தேதியிட்ட இம்சை பதிவில் மறுபடியும் அதையே கிசுகிசுவாக வெளியிட்டிருப்பதை என்னவென்று கூறுவது?

இப்போது மற்ற அவதூறு கிசு கிசுக்களுக்கு செல்வோமா?

3. //சென்னை தி.நகரில் ஒரு ஹோட்டலில் சிக்கன் பிரியானியும் பியரும் சாப்பிட்டபின், சிகரெட்டுக்காக கையை நீட்டியது மேற்ச்சொன்ன அக்கினி சூரியனிடம். அப்போது அங்கே இருந்த ஒரே சிகரெட்டை கைப்பற்றி இவர் பத்தவைத்துவிட்டதால் அங்கே அரைமப்பில் இருந்த படக்கலையான் இதை சொல்லிக்காட்டி பதிவு எழுத, அதனால் படு உஷ்ணமாக நான் அந்த பதினாலு ரூ ஐம்பது பைசாவை தந்துவிடுகிறேன் என்று அக்கினிச்சூரியனுக்கு தொலைபேசினார். கடைசிவரையில் காசு வந்தபாடில்லை.//
நான் கிளம்பும் சமயம் ரோசா வசந்த் தன் பங்காக 200 ரூபாய் தந்தார். எனக்கும் கணக்கு புரியாததால் 200 நானும் தந்தேன். பிறகு ஓகை அவர்கள் 1000 ரூபாய் தந்ததாகவும் கேள்விப்பட்டேன். வரவனையான் தன் பதிவில் இதை பெரிய மேட்டராக ஆக்க, அவதூறு ஆறுமுகத்துக்கு ஃபோன் செய்து மீதிப் பணத்தை டிராஃப்ட் எடுத்து அவருக்கே அனுப்புகிறேன், ஏனெனில் வரவனையானின் முகவரி எனக்கு தெரியாது என்பதால் என்றேன். அப்போது இதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் எனக் கூறி விட்டு இப்போது அதை எழுப்புவது அல்பத்தனத்திலும் அல்பத்தனம். அது சரி, நீங்கள் சென்னையில் வைத்து அவருக்கு வாங்கிக் கொடுத்த சாப்பாட்டுக்கான பணத்தை திரும்பத் தந்துவிடுவதாக உண்மைத் தமிழன் மனம் நொந்து கூற வைத்தீர்களே. அதன் பின்புலம் தெரியுமல்லவா?

4. //தன்னுடைய ஜெயா டிவி பேட்டியை எடுத்துவந்து கொடுத்த பையனுக்கு உதவிக்கு நன்றி என்றெல்லாம் பதிவிட்டார். பிறகு சமயம் கிடைத்ததும், அந்த பையனை ஒரே வாறாக வாறினார். அவனே துஷ்டன் என்று பதிவிட்டார். அவன் துஷ்டனோ அதிஷ்டனோ. என் பார்வையின் அவன் என் நண்பன்.//
லக்கிலுக் எனக்கு சிடி பிரிப்பேர் செய்து தந்ததற்கு இப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன். ஆனால் அவரைப் பற்றி உண்மைத் தமிழன் போட்ட பதிவில் இன்னும் நன்றாகவே நீங்கள் பார்த்து கொள்ளலாம்.

5. //தனக்கு இளைஞர் பட்டாளமும் உதவுவதாக போலிடோண்டுவிடம் கூறி அதற்கு ரெபரன்ஸாக அவர் கொடுத்த பெயர் ஒரு திருச்சிக்காரன். அவனோ அப்பாவி. போலி டோண்டுவின் கடுந்தாக்குதலுக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளான அவனிடம் கை காட்டப்பட்டவர் மேலே உள்ள அதிஷ்டர். அவரும் இவரும் முட்ட, நடுவில் கை தட்டியது சாட்சாத் யாரு ? அதை நீயே உணர்ந்து பாரு..//
இதுக்கெல்லாம் அருணே பதில் கூறிக் கொள்வார், ஆதாரங்களுடன், அவருக்கு நேரம் இருந்தால். எதற்கும் அவரது இப்பதிவையும் பார்க்கலாம்.

6. //தொடர்ந்து தனது பதிவுகளில் பின்னூட்ட ஆதரவு கொடுத்த இந்துத்துவ கோஷ்டிகள், இவர் தமது பிரச்சாரத்துக்கு உதவுவார் என்று போலிடோண்டுவின் ஆபாச தாக்குதலையும் தாண்டி இவருக்கு உதவ, இவர் திடீரென எழுதிய சில முட்டாள்தனமாக கருத்துக்களாலும், இவரே மதத்தை தாக்குவதாலும், அலறி துடித்து ஓடினர். குமரி மைந்தன் கருநீல கண்ணுடைய, வட்டத்தில் பாதி ஆரம், ஆரத்தில் பாதி மீதி என்பது அந்த பதிவர் பெயர்.//
எங்கு தேடியும் இது பற்றிய ரெஃபரன்சுகள் கிடைக்கவில்லை. சுட்டியுடன் பேசவும்.

மீதி விஷயங்கள் பற்றி பேச ஒன்றும் இல்லை.

//இவருக்கு வழங்கப்பட்ட பல பட்டங்களில் சில காண்டு கஜேந்திரன், போண்டா மாதவன்//
உங்களுக்கும் அவதூறு ஆறுமுகம் என்னும் பெயர் பொருத்தமாகவே உள்ளது.

மறுபடியும் கூறுவேன், போலியை அடையாளம் காட்ட உதவிய உங்கள் பங்கை யாரும் மறுக்க மாட்டார்கள், முக்கியமாக நான் மறுக்க மாட்டேன். அதற்காகவெல்லாம் யாரையோ காப்பாற்றுவதாக நினைத்து முடிந்து போன விஷயங்களையெல்லாம் கிசுகிசுவாக போட்டால் அவற்றை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க நான் ஒன்றும் விந்தை மனிதன் அல்ல.

அதுவும் உங்களது அந்த அவதூறுப் பதிவு பார்வதி அம்மாள் விவகாரத்தில் நான் தாக்கப்பட்டபோது சந்தடி சாக்கில் சைக்கிள் கேப்பில் ஆட்டோ விட்ட கதையாகப் போயிற்று.

உங்களுக்கு மட்டும்தான் டைமிங் வருமா? எனக்கும் வருமில்ல. அதாவது நீங்கள் எதிர்பார்க்காத சமயத்தில் பதிலளிப்பது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/13/2009

போலி டோண்டு பற்றி 20.12.2009 தேதியிட்ட கல்கி இணையம் பற்றிய இதழில் வந்த எனது கட்டுரை

சில நாட்களுக்கு முன்னால் நேசமுடன் வெங்கடேஷ் தான் தயாரிக்கவிருக்கும் கல்கி இணையச் சிறப்பிதழில் போலி டோண்டு பற்றிய எனது அனுபவங்களை கட்டுரை ரூபத்தில் அனுப்பச் சொன்னார். அதற்காக நான் அனுப்பிய கட்டுரை இதோ.

இந்தியாவுக்கான கூகள் தேடுபெட்டியில் டோண்டு என தமிழ் ஒருங்குறியில் அடித்து க்ளிக் செய்தால் 38000 ஹிட்டுகளுக்கு மேல் வருகின்றன. அது இந்த உண்மை டோண்டுவுக்கு பெருமை ஒன்றும் அளிப்பதாக இல்லை. இந்த நிலைக்கான முக்கியக் காரணமே போலி டோண்டு என்ற பெயரில் வந்த மலேசிய பதிவர் மூர்த்திதான்.

2005-லிருந்து 2008 ஜூலை வரை அவன் தமிழ் இணையத்தில் கொட்டம் அடித்தான். அதற்கு முன்னரே பலரது வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டிருக்கிறான். பலர் அவனால் இணையத்தையே விட்டு விலகினர். அவனும் அதற்காக காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.2005-லிருந்து அவனது லீலைகள் வழக்கத்தைவிட அதிகமாகவே அத்துமீறின. காலணாகூட பெறாத ஒரு விஷயத்துக்காக அவன் என்னிடம் விரோதம் கொண்டான். சாதாரணமாக அவனால் தாக்கப்படுபவரது பெண் உறவினர்களை அசிங்கம் அசிங்கமாக திட்டுவான். ஆனால் என்னைப் பொருத்தவரை எனது அடையாளத்தையே முழுக்க முழுக்க ஏற்றுக் கொண்டு மற்ற பதிவர்களது பெண் உறவினர்களை திட்டினான்.

அதனால் திடீரென பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை டோண்டுவாகிய நான்தான் பதிவர்களை வாய்க்கூசும் வார்த்தைகளால் வசைபாடுகிறேன் என்று தோற்றம் அளித்தது. ஆகவே வேறு வழியின்றி நான் சண்டையில் இழுக்கப்பட்டேன்.

என்னைப் பற்றி முதலில் கூறிவிடுகிறேன். நான் பிடிவாதக்காரன்.மிரட்டல்களுக்கு அஞ்சாதவன். போலி டோண்டுவோ கணினி விஷயங்களில் நிபுணன். அந்தத் திறமையை வைத்துத்தான் எல்லோரிடமும் விளையாடி வந்திருக்கிறான். அவனுடன் போராடவே நான் எனது கணினி திறமைகளை வளர்க்க வேண்டியிருந்தது.

பிளாக்கர் பதிவுகளில் பின்னூட்டங்கள் இட மூன்று வழிகள் உண்டு. ஒன்று பிளாக்கராக லாகின் செய்து வருவது. இரண்டு அனானியாகவே அவருவது. மூன்று அதர் ஆப்ஷனில் வருவது. முதலில் அவன் அதர் ஆப்ஷன் மூலமாகத்தான் நான் பின்னூட்டம் இடுவது போன்ற தோற்றம் அளித்தான். வலைப்பூவில் எனது படத்தை போட்டுக் கொண்டு சமாளித்தேன். அதர் ஆப்ஷன் பின்னூட்டங்களுக்கு போட்டோ வராது,அதனால் அப்பின்னூட்டங்கள் போலியால் இடப்பட்டதாக அடையாளம் காண்ப்பட்டன. உடனே அவன் எனது வலைப்பூ போலவே அதே டிஸ்ப்ளே பெயர், எனது போட்டோ எல்லாம் வருமாறு ஏற்பாடு செய்தான். அதை அறிய எலிக்குட்டியை அந்த லிங்க் மேல் வைத்து பார்த்தால் போலி யார் உண்மை யார் என்பது பிளாக்கர் எண்ணை எலிக்குட்டி காண்பிப்பதால் தெரிய வரும். ஆனால் அதைச் செய்யவும் சோம்பேறிப்பட்டனர் பல பதிவர்கள். அதுதான் அவனுக்கு சாதகமாக அமைந்தது. நானும் விடவில்லை. சம்பந்தப்பட்ட பின்னூட்டங்கள் வந்த வலைப்பதிவுகளுக்கு போய் அவை போலி பின்னூட்டங்கள் என்பதை நிரூபித்தேன். இதை பெரும்பாலான பதிவர்கள் ஏற்றனர். ஆனால் சிலர் மட்டும் அதை ஏற்க மறுத்தனர்.

அதற்கான முக்கியக் காரணமே சாதி துவேஷம்தான்.இப்போது ஒரு கசப்பான உண்மை பற்றிக் கூறியே ஆக வேண்டும். இணையத்தில் பார்ப்பன எதிர்ப்பு சர்வ சாதாரணமாக நிலவுகிறது. அதுவும் போலி டோண்டு இத்தனை நாட்கள் ஆட்டம் போட முடிந்ததற்கு ஒரு முக்கியக் காரணம். டோண்டு ராகவன் என்னும் பார்ப்பனனை குறிவைத்ததை பலர் ஆதரித்தனர்.அப்படியே கூட தொடர்ந்திருக்க முடியும்.

ஆனால் இங்குதான் அவன் ஒரு முட்டாள்தனமான காரியம் செய்தான். யார் எனக்கு பின்னூட்டமிட்டாலும் அவர்கள் பதிவுக்கு போய் அவர்களை பயமுறுத்துவது, ஆபாசமாக திட்டுவது அதுவும் போதாது என்றால் அவர்களுக்கான போலிவலைப்பூக்களையும் உருவாக்குவது என்றே அவன் செயல்பட்டான். அதனால் பலர் பயந்து போய் எனக்காக பின்னூட்டம் இடுவதை நிறுத்தினர். எனது வலைப்பூக்களில் பின்னூட்டம் இடுவதற்கான அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களை செயல்படுத்தாமல் இருந்ததால் இது சாத்தியம் ஆயிற்று.

இப்போதுதான் எனது நண்பரான அமெரிக்கவாழ் பதிவர் ஒருவர் துணைக்கு வந்தார். நாட்டாமை, அறவாழி அந்தணன், தினகரன், ராஜ் சந்திரா ஆகிய பெயர்களில் வலைப்பூவை சிருஷ்டித்து கொண்டு எனக்கு பின்னூட்டங்கள் இட்டார். இன்னொரு சென்னை அன்பர் முனிவேலு, தங்கம்மா, பஜ்ஜி, கட்டபொம்மன் ஆகிய பெயர்களில் வலைப்பு சிருஷ்டித்தார். நான் என் தரப்புக்கு முரளி மனோகர் என்னும் பெயரில் வலைப்பூ சிருஷ்டித்தேன். ஆனால் அந்தோ அது பிளாக்கர் சொதப்பலால் வெளிப்பட்டது வேறு கதை. அது இங்கே வேண்டாம்.

தமிழ்மண நிறுவனர் காசி அவர்களையும் அந்த போலி டோண்டு விடவில்லை. அவர் சென்னை சைபர் கிரைமுக்கு சென்றார். நான் என் தரப்பில் சிபிசிஐடியின் சைபர் பிரிவுக்கு சென்றேன். இதெல்லாம் 2006-ல் நடந்தன. ஆனால் அம்முயற்சிகளால் பலன் அதிகம் இல்லை. ஏனெனில் சைபர் கிரைம் விதிகள் இன்னும் சரியாக வடிவமைக்கப்படவில்லை.

இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது போலி டோண்டுவான மூர்த்தி இன்னும் பலரை எனக்கு பின்னூட்டம் இட்டதற்காக தாக்க அவர்களில் சிலர் பொறுமை இழந்து அவனுக்கு எதிராக சாட்சியங்கள் சேர்க்க தொடங்கினர். இந்த முயற்சிகளில் முக்கியமாக நான் குறிப்பிடுவது செந்தழல் ரவி, உண்மைத் தமிழன், குழலி, ஓசை செல்லா ஆகியோர். எல்லோருமாக சேர்ந்து ஆகஸ்ட் 2007-ல் ஒட்டு மொத்தமாக மூர்த்திதான் போலி டோண்டு என சந்தேகத்துக்கிடமின்றி பதிவுகள் போட்டனர்.

2008-ஏப்ரல் மாதம் செந்தழல் ரவி, உண்மைத் தமிழன் மற்றும் ஓசை செல்லா அவன் மேல் சென்னை சைபர் கிரைமில் புகார் கொடுத்தனர். சில நாட்கள் கழித்து நானும் புகார் தந்தேன். இம்முறை போலீசார் நல்ல ரெஸ்பான்ஸ் தந்தன்ர். மூர்த்தி பிடிபட்டான். ஜூலை 2008-ல் அவனை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். நானும் உண்மைத் தமிழனும் சென்றோம்.

போலீஸ் செய்த கெடுபிடியில் அவன் எல்லாவற்றையும் ஒத்துக் கொண்டு தன்னால் உருவாக்கப்பட்ட போலி தளங்களை அழித்தான். போலி டோண்டுவின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. ஆனால் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல அவ்வப்போது அவனுக்கு அநுதாபம் தெரிவிக்கும் பதிவுகள் வருகின்றனதான். அதனால் என்ன? அவ்வாறு செய்பவர்களில் பலர் அவனுக்கு அல்லக்கைகளாக செயல்பட்டவர்கள் என்பது தெரிந்ததுதானே. ஆனால் ஒன்று, இன்னொரு போலி டோண்டு வராமல் தடுப்பது மிக முக்கியம்.


இன்னும் பலவிஷயங்கள் கூறியிருந்திருக்க வேண்டும். ஆனால் 500-600 வார்த்தைகளுக்குள் கட்டுரை இருக்க வேண்டும் என வெங்கடேஷ் கூறியிருந்தார். ஏனெனில் கல்கி பக்கங்கள் பல விஷயங்களை கவர் செய்ய வேண்டும். இது புரிந்து கொள்ளக்கூடியதே.

வெங்கடேஷ் அவர்கள் எனது கட்டுரையை பலகாரணங்களுக்காக மாடிஃபை செய்து எனது பார்வைக்கு அனுப்பினார். அக்காரணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே அவற்றை இங்கு விவரிக்க முயலவில்லை. இரண்டு கட்டுரைகளையும் கம்பேர் செய்தாலே அவை தெரிந்துவிடும். அவரால் செய்யப்பட்ட மாற்றங்களை ஏற்றுக் கொண்டேன். போட்டோ அனுப்பச் சொன்னார். அனுப்பினேன். அக்கட்டுரை இதோ.

போலி டோண்டு பற்றி நிஜ டோண்டு
=============================
டோண்டு ராகவன். தமிழ் வலைப்பதிவு உலகத்தில் மிகவும் பிரபலமான பெயர். அவருடைய எழுத்தைவிட, அவர் இணையத்தில் பட்ட ரணங்களுக்காகவும் வேதனைகளுக்காகவும் அதிகம் அறியப்படுபவர். இணையத்தில் முகம் தெரியாத மனிதர்கள் எப்படி போலி போர்வை போர்த்திக்கொண்டு, மற்றவர்களை ரணப்படுத்த முடியும் என்பதற்கு இவரது அனுபவமே நேரடி உதாரணம். இங்கே அவரே தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுகிறார்.

“நான் ஓய்வு பெற்ற சிபிடிபிள்யூ பொறியாளன். பிரெஞ்சு, ஜெர்மன் மொழிளைப் படித்தவன். மொழிபெயர்ப்பையே தொழிலாக வைத்துக்கொண்டு இருப்பவன். பல ஆண்டுகள் தில்லிவாசி. இணைய ஆர்வம் என்னையும் ஒரு நாள் தீண்டியது. அதுவும் தமிழில் எழுதவேண்டும் என்ற உந்துதல் என்னையும் ஆட்டிப் படைத்தது. அப்படித்தான், தமிழில் என்னுடைய வலைப்பதிவை நான் 2004ல் தொடங்கினேன். இவ்வளவு துன்பங்களுக்கும் வருத்தங்களுக்கும் நான் ஆளாவேன் என்று தெரியவில்லை.

வழக்கம் போல் என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள், என் சின்ன வயது அனுபவங்கள், கருத்துகள் என்று அனைத்தையும் என்னுடைய வலைப்பதிவில் எழுதிவந்தேன். தமிழ் வலைப்பதிவுகள் முழுவதும் புதிய நபர்களால் நிறைந்தது. என் வலைப்பதிவுகளைப் படித்துவிட்டு பல பேர் நண்பர்கள் ஆனார்கள். எண்ணற்றோர் என் பதிவுகளுக்கு பதில் தந்து, ஊக்குவித்து, என் எழுத்தை மெச்சினார்கள். நானும் பலருடைய வலைப்பதிவுகளில் போய் என் கருத்துகளை அவர்களோடு பகிர்ந்துகொண்டேன்.

மே 2005. வழக்கம்போல் நான் மற்ற நண்பர்களின் வலைப்பதிவுகளைப் படித்துக்கொண்டு இருந்தபோது, முகமூடி என்ற நண்பரின் வலைப்பதிவைப் பார்த்தேன். அவர் எழுதியிருந்த ஒரு பதிவுக்குக் கீழே பதில்கள் இருந்தன. அதில், என் பெயரில் ஒரு மோசமான, அருவருப்பான கமெண்ட் எழுதப்பட்டிருந்தது. படித்துப் பார்த்தவுடன், துடித்துப் போனேன். அதிர்ச்சி என்ற சொல்லுக்கு அன்றுதான் எனக்கு உருவம் தெரிந்தது.

சம்பந்தமே இல்லாமல், யாருடைய வம்புக்கும் போகாத என்னை யாரோ குறிவைத்திருக்கிறார்கள் என்று என் உள்மனம் சொன்னது. நான் என்ன பாவம் செய்தேன். எதற்கு என்னைக் குறிவைத்திருக்கிறார்கள்? யார் வைத்திருக்கிறார்கள்? தெரியவில்லை. ஒரு பக்கம் வலி. மறுபக்கம், இதை இப்படியே விட்டுவிடக் கூடாது என்ற வேகம், உறுதி.

உடனடியாக என் நண்பர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதி, இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதைத் தெரிவித்தேன். நான் இதைச் செய்யவில்லை, என் பெயரில் யாரோ விளையாட நினைக்கிறார்கள், ஜாக்கிரதை என்று எச்சரித்தேன். அடுத்த கட்டமாக, வலையுலகும் அதன் தொழில்நுட்ப விவரங்களும் தெரிந்த நண்பர்களிடம் பேச ஆரம்பித்தேன். எப்படி இதை எதிர்கொள்வது?

நண்பர்கள்தான் ஆபத்பாந்தவர்கள். தொழில்நுட்பம் சொல்லித் தந்தார்கள். இதுபோன்ற அனானிமிட்டி கமெண்ட்டுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று விவரம் சொல்லித் தந்தார்கள்.

நான் நண்பர்களிம் இதை எடுத்துச் சொன்னபிறகுதான் மற்றவர்கள் எல்லோரும் உஷாரானார்கள். தமிழ் வலைப்பதிவு உலகமே இந்தப் ‘போலி டோண்டு’வை எதிர்கொள்ளத் தயாரானது. நான் நிஜ டோண்டு. வேறு ஒருவன் என் பெயரில் எழுதுகிறான் என்பதை மற்றவர்கள் ஒத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

நான்தான் நிஜ டோண்டு என்பதை எப்படி நிரூபிப்பது? என் பிளாக்கர் ஐடி எண், என் போட்டோ ஆகியவற்றை என் பெயரோடு சேர்த்து எல்லா இடங்களிலும் எழுதத் தொடங்கினேன். மற்றவர்களின் வலைப்பதிவுகளில் நான் எழுதிய பதில்களை நானே ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து அதில் சேமித்தும் வைக்கத் தொடங்கினேன்.

இப்போது அடுத்த பிரச்னை ஆரம்பித்தது. என் வலைப்பதிவில் யார் வந்து பதில் போட்டாலும் அவர்களுக்கு எல்லாம் மிரட்டல் வரத் தொடங்கியது. என்னை ஊக்குவிப்பவர்கள் எல்லோரும், அந்த முகம் தெரியாத மனிதனுக்கு எதிரியானார்கள். உடனே, என் நண்பர்களை எல்லாம் அவர்களுடைய வலைத்தளங்களில் போய், வாய்கூசும் சொற்களால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தான். அருவருக்கத்தக்க மொழி. ஆவேசமான கெட்ட வார்த்தைகள். பல நண்பர்கள் பயந்துபோனார்கள்.

எப்படி எதிர்கொள்ளுவது என்று எல்லோருக்கும் திணறல். பலர் என்னோடு சகவாசம் வைத்துக்கொள்வதே ஆபத்துக்குரியது என்று நினைக்க ஆரம்பித்தார்கள். உண்மையில் என்னைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதே அந்த முகம் தெரியாதவனின் குறிக்கொள் போலும்.

இந்நிலையில், அடுத்த குண்டு விழுந்தது. என் வலைப்பதிவு போன்றே, அச்சு அசலாக முகம் தெரியாதவனும் இன்னொரு வலைப்பதிவு ஆரம்பித்தான். அதில் எவ்வளவு ஆபாசமாக கதைகளைப் போட முடியுமோ அவ்வளவையும் போட்டான். இதேபோல் இன்னும் பல வலைப்பதிவுகளை அவன் ஆரம்பிக்கத் தொடங்கினான். எல்லாவற்றிலும் இதேபோன்ற ஆபாச அர்ச்சனைகள்தான். என் நண்பர்களின் பெயர்களிலேயே இப்படிப்பட்ட வலைப்பதிவுகள் தொடங்கப்பட்டன.

உடனே, பிளாக்கர் வலைத்தள நிர்வாகத்துக்கு இந்த விவரங்களை எல்லாம் தெரிவித்து, கடிதங்கள் எழுதி, பல வலைப்பதிவுகளை தடுத்து நிறுத்தினோம். வெட்ட வெட்ட முளைக்கும் கள்ளிச்செடி போல், முகமற்றவன் இன்னும் இன்னும் மோசமாக என் மேல் பாய ஆரம்பித்தான்.

அடுத்த பாய்ச்சல்தான் என்னை இன்னும் குலை நடுங்க வைத்தது. என் வீட்டுக்கு ஒரு வலையுலக தோழி வந்து சென்றிருந்தார். அப்போது என் வீட்டினரோடு அந்த அம்மையார் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார். இதை எப்படியோ தெரிந்துகொண்ட அந்த முகமற்றவன், என்னுடைய இமெயில் ஐடி போன்றே இன்னொரு ஐடியை உருவாக்கிக்கொண்டு, மிக அமைதியாக அந்த அம்மையாருக்குக் கடிதம் எழுதி, என் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டான்.

அவ்வளவுதான், இப்போது, ஆபாசம் என் மகள் பெயரில் பொழிய ஆரம்பித்தது. அதுவும் போட்டோவோடு. நிச்சயம் நிலைகுலைந்து போனேன். இதுபோல் எண்ணற்றவர்களின் தனிப்பட்ட விவரங்களை எல்லாம், போட்டோக்களை எல்லாம் திரட்டியவன், அதைக் கொண்டு மோசமான வலைத்தளங்களை உருவாக்கத் தொடங்கினான். நண்பர்கள் நடுங்கிப் போனார்கள். பலர் வலைப்பதிவு உலகை விட்டே ஓடிப் போனார்கள்.

இந்த நிலையில்தான் போலீஸுக்குப் போவது, எல்லா விவரங்களையும் சொல்லுவது ஆரம்பித்தது. சைபர் கிரைம் பிரிவில் போய் விவரங்களை, எங்கள் ஆதங்கங்களையும் கொட்டினோம். 2006லேயே இதை ஆரம்பித்தோம். ஆனால், அப்போது, சைபர் கிரைம் துறைக்குப் போதிய உபகரணங்கள் இல்லை. விவரங்கள் போதவில்லை. எப்படி இப்படிப்பட்ட ஒரு மேனியாக்கை கையாள்வது என்று தெரியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், இணையத்திலும் அதன் தொழில்நுட்ப விவரங்களிலும், இந்த முகமற்றவன் பயங்கர தேர்ச்சியுடையவனாக இருந்தான். உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் வருவது போன்று, பல்வேறு நாடுகளின் ஐபி முகவரிகளில் இருந்து, இவன் பதில்களைப் போட்டு வந்தான். இவனை இந்த நாட்டில் இருப்பவன், இங்கிருந்து பதில் போடுகிறான் என்று சுட்டிக் காட்டுவது மிகவும் சிரமமாக இருந்தது.

ஆனால், அவனை விடத் திறமைசாலிகள் இல்லாமல் இல்லை. அவனை எப்படியும் பிடித்துவிடுவது என்ற வேகம் என் நண்பர்களிடையே தோன்றி, அவன் விட்டுச்சென்ற இணையத் தடங்களைக் கொண்டு, கடைசியாக அவனை மலேசியாவில் இருப்பவன் என்று கண்டுபிடித்தார்கள். பின்னர் அவன் பணியாற்றும் நிறுவனத்தையும், அவனையும் சேர்த்துக் கண்டுபிடித்தார்கள். எல்லாமே என் மூளைக்கு எட்டாத கம்பியூட்டர் சமாச்சாரம்.

சென்னை மாநகர போலீஸ் மூலம், அவனை மலேசியாவில் இருந்து இந்தியா வரவழைத்து, போலீஸ் ஸ்டேஷனில் நிற்கவைத்தபோதுதான், முதன் முறையாக அவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தேன்.

அவனுக்கு எனக்கும் என்ன பகை? என்ன விரோதம்? ஒன்றுமே இல்லை. நான் என் கருத்துகளை எழுதிப் போகிறேன். அவன் அவனுடைய எண்ணங்களை. ஆனால், என் கருத்துகளும் சார்புகளும் பிடிக்கவில்லை என்பதற்காக, என்னை இத்தனை சித்ரவதை செய்யவேண்டுமா? பல நாள்கள் என் உறக்கத்தைக் கொடூரமாகக் கலைக்க வேண்டுமா? என் குடும்பத்தை, என் உறவினர்களையும் நண்பர்களையும் எல்லாம் இவ்வளவு கொச்சைப்படுத்த வேண்டுமா?

என் அனுபவத்தின் வயதுகூட அவனுக்கு இல்லை. மிஞ்சி மிஞ்சி போனால், 30, 35 இருக்குமா? இணையமும், தொழில்நுட்பமும் அறிவின் சாளரங்களாக இருக்கின்றன. ஆனால், உள்ளே இருக்கும் சாதி அழுக்கும் விரோதமும் வன்மமும் எங்கிருந்து வந்தன? தொழில்நுட்பமும் வளர்ச்சியும் நம் மனத்தை இன்னும் தூய்மைப்படுத்தவில்லையே?”


இப்போது இன்று வெளியான 20.12.2009 தேதியிட்ட கல்கியைப் பார்த்தால் அவர் எழுதியதும் முழுக்க வரவில்லை. அதே இடப்பிரச்சினைதான். இருப்பினும் பரவாயில்லை. ஒருமாதிரி நன்றாகவே வந்துள்ளது. ஆனால் இதனால் ஒரு தட்டையான தோற்றம் மட்டுமே வருகிறது என்பதையும் மறுக்கவியலாது. முழு பரிமாணங்களையும் அறிய பொறுமையாக எல்லா தரப்பினர் எழுதியதையும் படிக்க வேண்டியிருக்கும். போலி டோண்டு பற்றி நான் இட்ட பதிவுகள் பிரச்சினை வளர்ந்த பின்னணியை ஓரளவுக்கு காட்டுகின்றன.

இங்கு ஒரு சுவாரசியமான விஷயத்தைச் சொல்லியேயாக வேண்டும். நேசமுடன் வெங்கடேஷ் அவர்கள் இட்ட கமலுக்குப் பின் என்னும் பதிவு ஒன்றிலிருந்துதான் எனக்கும் போலி டோண்டுவுக்குமான சண்டையே ஆரம்பித்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/22/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 22.09.2009

செந்தழல் ரவியின் பல்டிகள்
மோகன் கந்தாமி அவர்களது இப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ:
அதற்கு முன்னால் கோவி கண்ணன் அப்பதிவில் எழுதியதையும் முதலில் காட்டுகிறேன்.

//டோண்டுவுக்கும் போலி டோண்டுவுக்கும் தொடர்பு இருந்தது - என்று இவர் (செந்தழல் ரவி) சொல்வது போல் வேறு யாருமே சொன்னது கிடையாது.
டோண்டு சார் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்//.
இப்போது பின்னூட்டம்:

@கோவி கண்ணன்
அவற்றை முதலில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் சில மாதங்கள் கழித்து “நான் சொன்னதை டோண்டு ராகவன் மறுக்கவேயில்லை, ஆகவே அவர் அதை ஒப்புக் கொண்டுவிட்டார்” என்று இவரே ஜல்லியடிக்கலாம் என்பதால் சில விஷயங்களை சந்தேகத்துக்கிடமின்றி கூறிவிடுகிறேன். இவர் போலி டோண்டு மூர்த்தியுடன் உறவாடி அவன் ரகசியங்களை கறப்பதாக என்னிடம் கூறியது உண்மைதான். ஆனால் மேற்கொண்டு விவரங்கள் நான் கேட்கவில்லை. அவ்வப்போது இவராகவே பிராக்ரஸ் ரிப்போர்ட் ஃபோன் மூலமோ அல்லது வேறு வகையிலோ தருவார். மற்றப்படி ஏப்ரல் 2008-ல் இவர், உண்மைத் தமிழன், ஓசை செல்லா ஆகியோர் போலீசுக்கு போய் மூர்த்தி மேல் புகார் தந்தது, பத்திரிகைகளிலும் அது பற்றி செய்தி தந்தது ஆகிய விஷயங்கள் மனதுக்கு நிறைவையே தந்தன. பிறகு நானும் என் தரப்புக்கு போய் மூர்த்தி மேல் புகார் கொடுத்தது எல்லாம் ஏற்கனவே எழுதிவிட்டேன். அவை இப்போது இங்கு வேண்டாம். மொத்தத்தில் மூர்த்தி போலீசில் நின்று தலைகுனிந்து நின்றது, அவன் பல் பிடுங்கப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது என்பதே போதும்.

செந்தழல் ரவி பற்றி என்னைக் கேள்வி கேட்டு கோவிகண்ணன் இட்ட பதிவுக்கு நான் இட்ட எதிர்ப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
“செந்தழல் ரவி என் மகளைப் பற்றி அசிங்கமாக எழுதவில்லை. அப்படியே அவர் எழுதினார் என நிரூபணமானாலும் அவரை மன்னிக்கிறேன். ஹாரி பாட்டர் கதைகளில் வரும் ஸ்னேப் போல அவர் செயல்பட்டார். அதற்கு மிகுந்த மனவுறுதி வேண்டும். அது அவரிடம் இருந்தது. அவ்வளவுதான் விஷயம்”.

இன்னொன்றும் கூறுகிறேன். ரவியை நான் அப்போது விட்டுக்கொடுக்காமல் இருந்தது ஜயராமனைக் காப்பாற்றவே என்று கோவி கண்ணன் ஓரிடத்தில் அபிப்பிராயப்பட்டிருக்கிறார். அது தவறு. ஏனெனில் ஜயராமன் அப்பாவி என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. போலி டோண்டுதான் இங்கும் குற்றவாளி எனபதை நான் பல இடங்களில் கூறிவிட்டேன். எனது இலக்கு மூர்த்திதான். அச்சமயம் அவன் மேல் உள்ள குற்றச்சாட்டு திசைதிருப்பப்படக்கூடாது என்பதுதான் எனது நோக்கம். ஆகவே நான் அவ்வாறு எழுதியது எழுதியதுதான்.

ஆனால் கடந்த சில நாட்களாக அவர் போலி டோண்டுவுக்கு பலதகவல்கள் கொடுத்து வந்தது உண்மை டோண்டுவாகிய நான்தான் என அவதூறாக எழுதி வருகிறார். அது ஏன் எனத் தெரிய ஒன்றும் பெரிய அறிவு எல்லாம் தேவையில்லை. லக்கிலுக்கைக் காப்பாற்றும் முயற்சியே அது என்பது புரிகிறது. ரவி எனக்கனுப்பிய மின்னஞ்சல்களையெல்லாம் தேடிப் பார்த்து விட்டேன். அவர் சொன்னது போல அவர் மனைவிக்கு ஜெர்மன் படிப்பது சம்பந்தமாக எனக்கு எந்த மின்னஞ்சலும் கிடைக்கவில்லை. பிறகு நான் ஃபோனில் பேசி அவரது மனைவியின் விவரங்களைக் கேட்டதாகவும் அவை பிறகு மூர்த்திக்கு சென்றதாகவும் கூறுகிறார். அவர் வேறு இடத்தில் குறிப்பிட்டுள்ள தோரணையில் “போலி டோண்டுவுக்கு தகவல் கொடுக்குமளவுக்கு டோண்டுவுக்கு மோட்டிவேஷன் என்ன”? என்னும் கேள்விதான் நிற்கிறது. அவர் மனைவி பற்றி அவரிடம் நான் ஒருவிவரமும் கேட்கவில்லை, அவரைப் பற்றி பேச்சே எங்கும் டெலிஃபோனில் பேசியதாக நினைவில்லை.

அதேபோல தான் போலியின் தளத்தை brute force கொண்டு உடைக்க முயற்சித்ததாகவும், அது எனக்குத் தெரியுமென்றும் பிறகு மூர்த்தியிடம் அச்செய்தி போனதாகவும் வேறு கூறுகிறார். நான் ஏற்கனவே பல இடங்களில் சொன்னது போல முழுவிவரம் ஒன்றையும் நான் கேட்கவில்லை. போலிக்கு எதிராக வேலை செய்கிறார் என்பதே எனக்கு போடுமானதாக இருந்தது. ஆகவே இங்கும் ரவி பொய் சொல்கிறார். அதற்கும் மோட்டிவேஷன் லக்கிலுக்கைக் காப்பாற்றுவதற்கே என்று தோன்றுகிறது. அவரைப் பார்த்து பரிதாபப்படத்தான் முடியும்.

என்னைப் பொருத்தவரை நான் தெளிவாகவே உள்ளேன். இப்போது நடக்கும் விஷயங்களைப் பார்ப்பதில் ஒன்று தோன்றுகிறது. செந்தழல் ரவி வெறும் அப்ரூவராகச் செயல்பட்டுள்ளார் என வைத்துக் கொண்டாலும் மூர்த்தியை பிடிக்க அவரது உதவி இன்றியமையாததாக ஆகியிருக்கிறது. மூர்த்தி நீக்கப்பட்டுவிட்டான். அது போதும். இனிமேல் செந்தழல் ரவி வேறு பல்டிகள் அடித்தாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் அவரும் உண்மைத் தமிழனும் போலியை பிடிப்பதில் ஆற்றிய பங்கு விலைமதிப்பற்றது. அதற்காக என் நன்றி எப்போதுமே அவர்களுக்குண்டு.

நடிகர் விஜயின் செலெக்டிவ் நினைவுகள்
நடிகர் விஜயின் இளமை நினைவுகள் பற்றிய ஒரு தொடர் வாராந்தரி ராணி வார இதழில் வந்து கொண்டிருக்கிறது. லேட்டஸ்ட் இதழில் (27.09.2009) விஜய் தனது திரைவளர்ச்சி பற்றி குறிப்பிடுகையில் அது திட்டமிட்டு நடந்ததாகவே கூறுகிறேன். தனது சிறுவயது பாத்திரங்களையும் குறிப்பிட்டு, “சட்டம் ஒரு விளையாட்டு” மற்றும் இது எங்க நீதி” ஆகிய படங்களுக்கு முக அவர்களின் வசனம் என பெருமை பட்டுக்கொள்கிறார். நியாயமே. ஆனால் அதே சமயம் தான் ஏற்ற சிறுவயது பாத்திரங்களில் சில விஜயகாந்தின் கேரக்டருக்கானதே அவை என கூறாமல் விட்டுவிட்டார். ஆனால் வேறொரு சந்தர்ப்பத்தில் ஒரு டிவி பேட்டியில் இதை பெருமையாகக் குறிப்பிட்டு க்ளிப்பிங்ஸ் வேறு காட்டினார்.

இப்போது இதை இங்கு கூறாமல் விடுவதன் நோக்கம் என்னவாக இருக்கும்? ஒரு வேளை அடுத்த இதழில் கூறுவாரோ? அல்லது ஏதேனும் திட்டமிட்ட அரசியல் நோக்கங்கள்?

காந்தியும் சாதியும்
இது பற்றி நண்பர் ஜயமோகன் எழுதியுள்ள்ளவை ஒத்துக் கொள்ளும்படியாகவே உள்ளன.

அவற்றிலிருந்து சில வரிகள்:
“சாதி என்ற அமைப்பு இந்திய சமூகத்தின் முக்கியமான ஒரு கூறு. அதன் வரலாற்றுப் பரிணாமம், சென்றகாலத்தில் அதன் சமூகப்பயன்பாடு, அதன் நிகழ்காலப்பணி எதைப்பற்றியும் எந்த ஆய்வும் இந்தியாவில் நடக்கவில்லை. இந்தியாவை நோக்கிய ஆங்கிலேயர் அதை இந்திய சமூகத்தைப் பீடித்திருக்கும் ஒரு நோய் என்று சொன்னார்கள். இந்திய படித்த வர்க்கம் அப்படியே ஏற்றுக்கொண்டு சொல்ல ஆரம்பித்தது. வெள்ளையனே சொல்லிவிட்டான் என்ற தாழ்வுமனப்பான்மையே காரணம்.

ஆனால் உண்மையில் இந்த நிராகரிப்பு என்பது நம் படித்தவற்கத்தின் நாக்குகளில் மட்டுமே இருந்தது. நெஞ்சில் நிகழவில்லை. இக்கணம் வரை அப்படித்தான். ஏன் என்றால் அவனுக்குள் சாதியைப்பற்றிய எந்த விவாதமும் நிகழவில்லை. அவ்வாறு விவாதம் நிகழ்ந்திருந்தால் சாதியின் சமூகப்பங்களிப்பு குறித்து அவன் சிந்தனை செய்திருப்பான். இப்போதும் சாதியைச் சுமக்க அவனுக்கு என்ன காரணங்கள், கட்டாயங்கள் உள்ளனவோ அந்தக் காரணங்கள் எல்லாமே விவாதத்துக்கு வந்திருக்கும். அவற்றை வேறு எவ்வகையில் தாண்டிச்செல்ல முடியும் என்று பார்த்திருப்பான். அந்த வழிமுறைகள் அவனுக்கு உதவியிருக்கும்.

காந்தியைப் பொறுத்தவரை அவர் அந்த தாழ்வுணர்ச்சி முற்றிலும் இல்லாதவர். இந்தியாவைப்பற்றிய மேலைநாட்டு நோக்கை அவர் எவ்வகையிலும் கடன் பெற்றவர் அல்ல. மேலைநாட்டின் தத்துவஞான மரபில் அன்று மிகுந்த படைப்பூக்கத்துடன் உருவாகிவந்த ஒரு தரப்புடன் அவருக்கு தீவிரமான உறவிருந்தது — தோரோ, ரஸ்கின், டல்ஸ்தோய் மரபில். ஆனால் அவர் சிந்தனைகளைக் கடன்கொண்டவரல்ல.

காந்தியின் தனித்தன்மை அவர் தன் சிந்தனைகளை நூல்களில் இருந்து பெறவில்லை என்பதே. அவர் தன் சொந்தச் சிந்தனைகளுக்கு தேவையான அளவுக்கு மட்டும் நூல்களை பயன்படுத்திக்கொண்டார். அவர் நடைமுறைவாதி. சமூகம் குறித்த தன் தரவுகளை தன் சொந்த அவதானிப்புகளில் இருந்தே அவர் பெற்றுக்கொண்டார். தன் பகுத்தறிவுக்கு ஒரு விஷயம் உண்மையிலேயே திருப்தி அளிக்காத வரை அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை”.

“காந்தி சாதியைப் பற்றி என்ன நினைத்திருந்தார் என்று பார்க்க வேண்டும். காந்தி அக்காலத்தில் ஒரு இந்து சாதியைப்பற்றி இயல்பாக என்ன நம்பிக்கை கொண்டிருந்தாரோ அந்த நம்பிக்கையையே தானும் கொண்டிருந்தார். அவர் காலத்தில் ஐரோப்பியரை வழிமொழிந்து சாதிக்கு எதிராகப் பேசியவர்கள் அந்தரங்கத்தில் கொண்டிருந்த நம்பிக்கைதான் அது. காந்தியின் உண்மையுணர்ச்சியே அவரை அதை நேர்மையாக பதிவுசெய்ய வைத்தது.

காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று. அது சமூகத்தின் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. தந்தையரின் தொழிலை மகன் செய்யும்போது இயல்பாகவே அவனுக்கு அதில் திறமை உருவாகி வருகிறது. இந்திய சமூகம் உள்மோதல்களினால் அழியாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட அது பலநூற்றாண்டுகளாக உதவி வந்திருக்கிறது”.

“காந்தி சாதியைப்பற்றி பேசிய அந்நாட்களில் இந்திய சமூகத்தில் சாதி உருவாகி வந்த விதத்தைப் பற்றிய ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வே நடக்கவில்லை. இந்தியாவை மதவிழிப்பற்ற காட்டுமிராண்டி நாடாகச் சித்தரித்த கிறித்தவ மதப்பரப்புநர்கள் உருவாக்கிய சித்திரமே பிரபலமாக இருந்தது. அதன்படி, சாதி என்பது இந்திய சமூகத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான கொடிய வழக்கங்களில் ஒன்று. அது இந்து மதத்தாலும் பிராமணர்களாலும் அவர்களின் ஆதிக்கத்துக்காக ஒரு சதிவேலையாக உருவாக்கப்பட்டது. ஆகவே வேருடன் கெல்லி எறியப்பட வேண்டியது…

இன்றுவரை தமிழ்நாட்டில் அறிவுஜீவிகள் என்பவர்களிடையே பிரபலமாக இருப்பது இந்த ஒற்றைவரிப் புரிதல் மட்டுமே. இந்த மேலோட்டமான புரிதலை மக்களிடையே கொண்டுசெல்ல முடியாது, ஏனென்றால் அடிப்படையான ஒரு பயன்பாடு இருப்பதனால்தான் அவர்கள் சாதியை ஆரத்தழுவிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே சாதிநிராகரிப்பு என்பது மேடையில் செய்யப்படும் வெற்றுபாவனையாக நின்றுவிடுகிறது. நடைமுறை யதார்த்தத்துக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை.

தமிழ்நாட்டு யதார்த்ததையே பார்ப்போம். இங்கே கொஞ்சமாவது சாதியை விட்டு வெளியே வந்தவர்கள் ‘உயர்மட்ட’ சாதியினரே. இன்றும் ‘கீழ்மட்ட’ சாதியினரிடம் சாதிப்பற்று என்பது ஆழமாக வேரோடி இருக்கிறது. சாதிமறுப்பை மேடையில் கக்குபவர்கள், சாதியை உருவாக்கிய உயர்சாதிச்சதியை எதிர்த்து பொங்குகிறவர்கள் அனைவருமே சாதிக்குள்தான் வசதியாக இருந்துகொண்டிருக்கிறார்கள்”.


எழுத்தாளர் நாடோடி அவர்கள் சமீபத்தில் 1957-ல் எழுதியதைப் பார்ப்போமா?
“நாடோடி தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள இன்னொரு எழுத்தாளர் அப்போதைய (2057-ஆம் ஆண்டில்) ஜாதிக் கட்டுப்பாடு பற்றி விளக்குகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வர்ணாசிரமம் வந்து அதிலிருந்து ஜாதிகள் வந்ததை விளக்குகிறார். பிறகு அவற்றின் கட்டுக்கோப்பு குலைந்து போனதால் யார் வேண்டுமானாலும் எந்தக் குலத்தொழிலையும் செய்யலாம் என நிலை ஏற்பட, சம்பளம் அதிகம் வராத தொழில்களுக்கு ஆட்கள் கிடைக்காது, சம்பளம் அதிகம் கிடைக்கும் வேலைகளுக்கு ஒட்டுமொத்தமாக ஜனங்கள் போய் விழ அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் வந்தது. ஆகவே 500 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போது நிலவிய தொழில்களின் அடிப்படையில் மீண்டும் ஜாதிகளை வகுத்து ஒரு ஜாதிக்காரர் இன்னொரு ஜாதிக்காரரின் வேலையை செய்யக்கூடாது என்ற நிலை நிறுவப்பட்டது.

ஜாதிப் பிரிவுகள் இருந்தனவே தவிர இந்த ஜாதிதான் உயர்ந்தது இன்னொரு ஜாதி தாழ்ந்தது என்ற எண்ணங்களும் வராமல் பார்த்து கொள்ளப்பட்டன. தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் ஒரு தொழிலை மட்டும் செய்ததால் அத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகவேதான் ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினரைத் தொடுவது கூட குற்றமாகக் கருதப்பட்டது. போலீஸ் ஜாதியைச் சார்ந்தவர்கள் திருடர்களை பிடிக்கும்போது மட்டும் தங்கள் தொழில் தர்மப்படி அவர்களைத் தொடலாம். பிறகு தீட்டு கழிய அவர்கள் குளிப்பதற்கு சோப்பு டவல் எல்லாம் வழங்கப்படும். திருடர்களும் போலீஸ் ஜாதியினர தங்களைத் தொட்டு விட்டதால் அவர்களும் குளிப்பார்கள்.

இதையெல்லாம் கேட்ட நாடோடிக்கு தலை சுற்றி தெரியாத்தனமாக தான் 1957-லிருந்து வருவதாகக் கூற, “பைத்தியம் டோய்” எனக் கூறி எல்லோரும் அவரை அடிக்க வருகின்றனர். திடீரென விழித்துக் கொள்ளும் நாடோடி தான் 1957-லேயே இருப்பதை உணர்ந்த் நிம்மதி அடைகிறார்”.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/12/2009

சப்பைக்கட்டு கட்டும் போலியின் அல்லக்கைகள்

முத்துக்குமரன் என்னும் நபர் உண்மைத்தமிழனது இப்பதிவில் பின்னூட்டமிட்டுள்ளார். முதலில் அதை பார்ப்போம்.

“//மற்றபடி உங்களை கோவை மீட்டிங்கிக் எச்சரித்தது, போலி அனுப்பும் மின்னஞ்சல் லிஸ்டில் இருந்த அனைவரையும் சொல்லியே. அதன் பிறகு அது ஒரு பார்வேர்ட், அதில் இருக்கும் அனைவரும் அவனுடைய ஆட்கள் அல்ல என்று கண்டுகொண்டேன். மகேந்திரன் முத்துக்குமரன் கோவி கண்ணன் தவிர.//

செந்தழல் ரவி எனது பெயரை குறிப்பிட்டு இருப்பதாலும், போலியின் ஆள் என்ற தொனி இருப்பதால் மட்டுமே இந்த பின்னூட்டம். விடாது கருப்பு என்ற மூர்த்தி தன்னை பெரியார் தொண்டராக காட்டிக்கொண்டிருந்த போதிலும் அவரின் அநாகரீகமான மொழியை ஏற்றுக் கொண்டதோ அல்லது எந்த ஒரு இடத்திலும் உயர்த்திப் பிடித்ததும் கிடையாது. திராவிடர் தமிழர் குழுமத்தில் நடைபெற்ற விவாதத்திலும் இதைத் தெளிவாகவே பதிவு செய்திருக்கிறேன். தேவைப்படுபவர்கள் அதை வாசித்து தெரிந்து கொள்ளலாம். 2006ல் ஒருமுறை செந்தழல் ரவி ஐரோப்பியநாடுகளுக்கு சென்ற போது ஒரு பதிவிட்டிருந்தார். நான் ஓய்வாக இருக்கிறேன் தொலைபேசி எண்கள் கொடுங்கள் பேசுகிறேன் என்று. வலைப்பதிவர்கள் பலரோடும் பேசினார். அப்போது நானும் என் எண் கொடுத்தேன், பேசினோம், அந்தப் பேச்சிலும் குறிப்பிட்டது விடாது கருப்பு நம்பத் தகுந்தவர் அல்ல, பெரியார் பெயரை அவர் தவறாகவே பயன்படுத்துகிறார் என்பது. இன்னொரு முறை பேசியது தம்பிக்காக வேலை வாய்ப்பு தொடர்பாக சில ஆலோசனைகள் பெற. போலிக்கு எதிராக போராடியவர்கள் ஒருபுறம், அவனை நிராகரித்துவிட்டு போனவர்கள் ஒருபுறம், ஆதரித்தவர்கள் ஒருபுறம் என்று இருந்ததில் இரண்டாவதை நான் தேர்ந்தெடுத்தேன். அதனாலேயே எனக்கு வந்த ஆபாச அர்ச்சனைகளை பொதுவெளியில் வெளிப்படுத்திக்கொண்டது கிடையாது. விடாது கருப்பில் என்னை அர்ச்சித்து சூத்துகுமரன் என்றும் ஓசி பிரியாணி வாங்கி தின்கிறேன் என்றெல்லாம் சொன்னபோது கூட அவனுடைய தூண்டுதலுக்கு பலியாகி எதிர்வினை புரிவதை விட நிராகரித்தோமேயானால் காலப்போக்கில் தனிமைப்பட்டு விடுவான் என்றும் அவன் எழுத்துக்களே அவனை அம்பலப்படுத்திவிடும் என்பதையும் உறுதியாக நம்பினேன். மற்றபடி என் நேர்மையை யாரிடம் விளக்கி பட்டயம் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை.

குழுமத்தில் விவாதித்திருப்பதை குறிப்பிட்டிருப்பதால் அதை இங்கே தருகிறேன். அதற்கான கூடுதல் காரணம் போலி விசயத்தை பயன்படுத்தி திராவிடத் தமிழர்கள் எல்லோரையும் போலியின் அல்லக்கை என்று நிறுவ முனைவது இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது. அன்றைய சூழலில் திராவிடத் தமிழர் குழுமத்தில் நானும் ஒரு மட்டுறுத்தினராக இருந்ததும் இது தொடர்பான நிகழ்வுகளில் எங்களில் இருந்த வெளிப்படைத் தன்மையையும் அது உணர்த்தும் என்பதாலேயே!
டிசம்பர் 8 2006 அன்று குழுமத்தில் கருப்பு தொடர்பாக எழுதிய பதிவு
Friday, September 11, 2009 3:52:00 PM

முத்துகுமரன் said...
அதிகரித்துவிட்ட பணிசூழலினால் கடந்த சிலநாட்களாக இணையத்தில் செலவிடும் நேரம்
குறைந்துவிட்டது. தமிழ்மணத்திலிருந்து விடாது கருப்பு நீக்கம், அதைத்தொடர்ந்து
குழுமத்தில் நடைபெற்ற விவாதங்களை வாசித்திருந்தேன். இந்த நேரத்தில் சில
தெளிவுகளை முன்வைக்கவேண்டும் என்பதாலே இந்த விளக்கம்.
தமிழ்மணத்திலிருந்து கருப்புவின் நீக்கம் ஒரு வருத்தமளிக்கும் செய்தி.
ஆனால் அத்தகையதொரு சூழலை அவரின் எழுத்துகள் ஏற்படுத்திவிட்டன என்பதையும்
மறுக்கமுடியாது. இது தொடர்பாக குழுமத்தில் அவரின் கருத்துகளை அறிந்த போது சில
விசயங்களை சொல்ல வேண்டும் என்ற கட்டாயமும் வந்திருக்கிறது.
திராவிட, மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலை முன்னெடுப்பவர்கள் மிகவும்
கவனமாக இயங்க வேண்டியதருணம் இது. இந்த அரசியலின் தேவைகளை முக்கியத்துவத்தை
திரிப்பதில் தொடர்ந்து ஆதிக்க சக்திகள் வெற்றி பெற்று வருகின்றன. அதனால் மிக
அதிகப்படியான கவனத்தோடு இயங்க வேண்டி இருக்கிறது. நாம் சொல்லும் செய்திகளை விட
சொல்லபட்ட விதம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. செய்தியின் கணத்தைவிட
இந்த வெளிப்பாட்டிற்கு மிகுந்த முக்கியதுவம் அளிக்கப்படுகிறது. ஆகையால் வேகமாக
வார்த்தைகளை வாரியிறைப்பது என்பது விழலுக்கு இழைத்த நீராகுமே தவிர நமக்கு
எந்தவிதமான முன்னேற்றத்தையும் தாராது. நாம் போராட வேண்டியது, பயணிக்க வேண்டியது மிக நெடிய தூரம். அதில் முன்னேறி செல்வதை தடுக்க நமது சக்தியை வீணடிக்க
திசைதிருப்ப, சோர்வடையச்செய்ய எல்லாவகையான தந்தரங்களையும் நம் எதிராளிகள்
பிரயோகிக்கிறார்கள் என்பதையும் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
விடாது கருப்பு விடயத்திற்கு வருகிறேன். எவ்வளவு சீரிய கருத்தாயினும் அது
முறையாக சொல்லப்படல் வேண்டும். தங்களது சமீபத்திய சில பதிவுகளின் தரம்
எப்படியிருந்தது என்பதை அமைதியாக வாசித்தீர்களாயேயானால் உணர்வீர்கள். நீங்கள்
பெரியாரின் வழி நடப்பவர் என்று சொல்லுவதால் பெரியாரைக்கொண்டே உங்களிடம்
பேசுகிறேன்.
பெரியாரின் முக்கியமான பொன்மொழி.* ''மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'' *
பெரியார் நம் சமூக மக்கள் மான உணர்வோடும், அறிவு உணர்வோடும் வாழ
வேண்டுமென்பதற்காகவே தன்வாழ்வு முழுதும் உழைத்தவர். சுயமரியாதை, சமதர்மம்
என்பனவற்றை உயிர்மூச்சாக கொண்டிருந்தவர். அறிவுக்குப் புறம்பபன எந்த ஒரு
செயலையும் அவர் அனுமதித்ததில்லை.
மனிதர்க்கு மரியாதை தரப்பட வேண்டும் என்பதுதான் சுயமரியாதையின் அடிப்படைத்
தத்துவம். ஒரு பதிவரின் தாயை வேசி என்று குறீப்பிட்டு உங்கள் பதிவில்
எழுதியிருந்தீர்களே, இது எந்த வகை அறிவுணர்ச்சியில் வருகிறது???
அந்த தாயின் பெண்மையை விமர்சிக்க நீங்கள் யார்?? அந்த பெண்ணின் சுயமரியாதைக்கு
நீங்கள் தரும் மரியாதை என்ன? இந்த மாதிரி பேசமாறு எந்த இடத்தில் பெரியார்
கூறீயிருக்கிறார். சொல்ல முடியுமா?. சகமனிதனை மதிக்காதவன் எங்கனம்
சுயமரியாதைக்காரனாக இருக்க முடியும்???.
அடுத்ததாக, தீண்டாமை என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன? மனிதனை மனிதன் விலக்குவதுதான் தீண்டாமை. இது எல்லோர்க்கும் பொருந்தும். பார்ப்பனரை விலக்குவதும்
தீண்டாமைதான். பார்ப்பனர் என்பதால் அவர்கள் குறைந்த பட்ச மனிதத்தன்மையிலிருந்து
விலகிவிடுவதில்லை. குழலி அவர்கள் மாயவரத்தான் அவர்களோடு பேசுவது நட்பு கொள்வது
பற்றீ விமர்சித்து இருந்தீர்கள். பெரியாரை படித்திருப்பவன், வழிநடப்பவன்
எவனும் இதை விமர்சிக்க மாட்டான். ராஜாஜிக்கும் பெரியாருக்கும் இருந்த கருத்து
முரண்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவர்களுக்குள் ஆழமான நட்பு இருந்தது.
எப்படி சாத்தியாமானது. இருவருக்கும் அவரவர் கொள்கையின் பாலலிருந்த நம்பிக்கை.
இங்கு ஒரு பார்ப்பனிரிடம் பேசுவதாலோ, பழகுவதாலோ தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்க
கூடிய அளவிற்கு பலவீனமானவர்கள் கிடையாது. குறிப்பாக நானோ, முத்து தமிழினியோ,
குழலியோ பலவீனமானவர்கள் கிடையாது. கொள்கை என்பதும் நட்பு என்பதும் வேறு வேறு
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இன்னொன்று குழலியின் திராவிடத்தன்மையை பற்றி கேள்வி எழுப்பி இருந்தீர்கள்.
உங்களிடம்தான் எங்களின் திராவிட தன்மையை நீருபித்தாக வேண்டும் என்ற அவசியம்
இல்லை. தேவையும் இல்லை. யார் திராவிடத்தன்மையோடு இயங்குகிறார்கள் என்பதை
தீர்மானிக்கும் அதிகாரமையம் நீங்கள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளவும்.
Friday, September 11, 2009 3:57:00 PM

முத்துகுமரன் said...
பெரியார் விரும்பியது இந்த சமூகம் நாகரீகமடைந்த சமூகமாக வளரவேண்டும்,
அறிவுணர்ச்சியோடு வளர வேண்டும். சுயமரியாதையோடு வளரவேண்டும். அடுத்தவர்
குடும்மத்ததை விமர்சிப்பது என்பதுதான் நீங்கள் காணும் நாகரீக வளர்ச்சியோ?? மனித
நாகரீகத்திற்கு அப்பாற்பட்டது நீங்கள் செய்தது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இவ்வளவும் உங்களுக்கு சொல்வதன் காரணம் நீங்கள் பெரியாரைப் பின்பற்றுபவர்
என்பதால்தான். தான் வாழ்ந்த காலத்திலே தன்னைப்பற்றிய விமர்சனத்தை
ஏற்றுக்கொண்டவர், அனுமதித்தவர் பெரியார் என்பதால்தான்.அவரைப் பின்பற்ற
முயலுங்கள்.
திராவிட தமிழர் அமைப்பில் தொடர்வதும் தொடராததும் உங்கள் விருப்பம். ஆனால்
நாகரீகமற்ற செயல்களை குழுமம் ஒரு போதும் ஆதரிக்காது. அதுயாராக இருந்தாலும் சரி.
கருப்புவாக இருந்தாலும் சரி முத்துகுமரனாக இருந்தாலும் சரி.
மற்றபடிக்கு உங்கள் செய்கைகளுக்கு எல்லாம் பெரியாரை கேடயமாக பயன்படுத்தினால்
அதை அறிந்து கொள்ளமுடியாத அளவிற்கு இங்கு பகுத்தறிவற்றுப் போய்விடவில்லை.
சொல்லில் இல்லாமல் செயலில் நீங்கள் பெரியாரைப் பின்பற்றுபவராக வாழ முயற்சி
செய்யுங்கள்..
குறைகளை களைந்து மீண்டும் இயங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடும்,
எதிர்பார்ப்போடும் விருப்பத்தோடும் இப்போது விடைபெற்றூக்கொள்கிறேன்.
அன்புடன்
முத்துகும்ரன்
Friday, September 11, 2009 3:58:00 PM

முத்துகுமரன் said...
ஒரே பின்னூட்டமாக போட இயலாததால் மூன்றாக பிரித்து போட்டிருக்கிறேன்.
நன்றி
Friday, September 11, 2009 3:59:00 PM”


சரி மனிதர் தன் நிலையைத்தானே கூறியிருக்கிறார் இதில் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கும் முன்னால் முரளி மனோகர் விவகாரத்தில் அதே முத்துக் குமரன் தந்த எதிர்வினைக்கு அவரது போலி டோண்டு என்னும் பதிவையே பார்க்கலாமா?

“இரண்டு நாட்களாக சூடு பறக்க விற்பனையாகிக் கொண்டிருக்கும் போண்டா மஹா உற்சவத்தில் நானும் கலந்துகிறேன். இரண்டு ஆண்டுகளாக போலிப் புராணம் பாடியவர் இன்று போலியாய் அம்பலப்பட்டு நிற்கிறார். இது எதிர்பாராதது மற்றும் அல்ல பெரும் ஏமாற்றத்தை தருகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்பட்டு நிற்கிறது.

தமிழ்மணம் பின்னூட்ட மட்டுறுத்தலை கட்டாயமாக்கிய போது அதை தனது வெற்றியாக அறிவித்து கொண்ட திருவாளர் டோண்டு அவர்களே, உங்கள் யுத்தத்தை உங்களிடமே வைத்துக்கொள்ளலாமே, ஏன் பொதுவில் கொண்டு வந்தீர்கள். என்ன யோக்கியதை இருக்கிறது போலிகளைப் பற்றி பேச உங்களுக்கு. பதிவு பதிவாய் போய் எலிக்குட்டியையும், அனானி அதர் ஆப்சன்களை பற்றி நீட்டி முழக்கியது எதற்கு.

உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டதற்காக ஆபாச அர்ச்சனைகளை பெற்றார்களே, அவர்கள் எல்லாம் எதற்காக உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டார்கள்? நீங்கள் போலித்தன்மை இல்லாது இருப்பீர்கள் என்றூ நம்பித்தானே. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என உங்க அரிப்புக்கு ஏன் தமிழ்மணம் போன்ற பொதுத்தளத்தை பயன்படுத்திக் கொண்டீர்கள்.

நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம் கடைந்தெடுத்த அற்பத்தனம். நீங்கள் போலித்தன்மையற்றவராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு ஆதரவளித்த எல்லா பதிவர்களுக்கும் பந்தி போட்டு மலத்தை பறிமாரிவிட்டீர்கள். பிறர் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும், மதிப்பையும் உங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு, செய்தவந்த போலித்தனம் அம்பலப்பட்டு நிற்க போர்யுத்தி என்று சொல்லும் போது அருவருப்பாய் இருக்கிறது.
அம்பலப்பட்டவுடன் ஆங்கிலத்திற்கு தாவி தப்பிக்கும் உங்களுக்கு சுத்தத்தமிழில் ஒரு வாக்கியம்.
ஈரத்துணி போட்டு கழுத்தறுக்கும் வழக்கத்தை இந்த வயதிற்கு மேலாவாது விடுங்கள்.
போலி- டோண்டு என்று மிகச்சரியாக கணித்த உங்கள் புத்திக்கூர்மைக்கு என் வணக்கங்கள்”.


அவருக்கு நான் இட்ட்ப் பின்னூட்டங்களும் அவரது பதில்களும் இப்போது பார்ப்போம்.

“dondu(#11168674346665545885) said...
இந்த உதாரெல்லாம் என்னிடம் காட்டவேண்டாம் முத்துக் குமரன். நாம் மூவரும் சந்தித்ததை பதிவாகப் போட்டபோது போலி ஏதாவது திட்டுவானோ என்று பயந்துதானே நீங்கள் பின்னூட்டமிடாமல் தவிர்த்தீர்கள்?

இந்த அழகுக்கு நீங்கள் போலிக்கு பயப்படவேயில்லை என்று உதார் வேறு கடற்கரையில் கடல் சாட்சியாக விட்டீர்கள்.

//நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்
கடைந்தெடுத்த அற்பத்தனம்.//
இதில் என்ன அற்பத்தனம் கண்டீர்கள் முத்துக் குமரன்? வேறு பெயரில் எழுதுவது அற்பத்தனமா? யார் சொன்னது? அப்படியானால் அண்ணா, கலைஞர், கல்கி, ஸ்ரீவேணுகோபாலன் போன்ற எழுத்தாளர்களெல்லாம் அற்பர்களா? அப்படி நான் அற்பன் என்றால் நீங்கள் கோழை, கடைந்தெடுத்த கோழை.
ஒரு கேடு கெட்ட பிளாக்மெயிலருக்கு பயந்து பேடியைப் போல ஒடுங்கியவர்கள்தான் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும்.
ஆயினும் பலர் எனக்கு பின்னூட்டமிட வேண்டும் என்பதற்காகவே புது ஐடிக்கள் தேடிக் கொண்டனர். இதற்காகவும், சில பின்னூட்டங்களை என் சொந்தப் பெயரில் போட்டால் திசை திருப்பப்படும் என்பதாலுமே நான் ஒரு ஐ.டி. உருவாக்கிக் கொண்டேன். அது யாரையும் நகல் செய்யவில்லை. தரமான பின்னூட்டங்களையே இட்டது.
இதுவும், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஒரு போர் யுக்தியே. எனது பதிவுகளை நிலைநிறுத்த உதவி செய்தன.
இனிமேல் தேவை இல்லை என்று நான் தீர்மானம் செய்து அனானி/அதர் ஆப்ஷனை போட்டேன். நல்ல வேளையாக இதை நான் ஒரு நாள் முன்னாலேயே செய்தேன். இல்லாவிட்டால் இதற்கு கூட உங்களைப் போன்றவர்கள் ஜல்லியடித்திருப்பீர்கள்.

இதற்கு முத்துக்குமரனின் பதில்:
“நம் சந்திப்பு குறித்தான உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் போடாதது போலிக்கு பயந்து என்று சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது. அப்படி போலிக்கு பயந்தவனாக இருந்தால் தேடி அழைத்து உங்களை சந்தித்திருக்க மாட்டேன். துபாய் திரும்பியதும் இகலப்பை இல்லாது இருந்தது. இதை நம் ஜிடாக் உரையாடலின் போது கூட தெரிவித்து இருந்தேன்.
இந்தியா சென்று வந்தது தொடர்பான விரிவான பதிவை நான் எழுதவில்லை. அதற்கும் காரணம் போலிக்குப் பயந்தா?
உங்கள் பதிவை பார்த்தேன். அப்போதே ஜிடாக்கில் பேசி இருக்கிறோம். அதனால் அங்கு பின்னூட்டம் போடாதது மட்டுமே என் வீரம் பற்றிய முடிவை உங்களுக்குத் தந்திருக்கிறது என்றால் கோழை என்ற உங்கள் பாராட்டுப் பத்திரத்திற்கு நன்றி.
பொதுவாக தனி உரையாடலில் பேசுபவைகளை நான் வெளியே சொல்லுவதில்லை. இன்று குறீப்பிட நேர்ந்தது எனக்கு வருத்தமே.
போலிக்கெதிரான போரில் மற்றவர்கள் உங்களளோடிருந்தவர்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை என்ன? எந்த கருத்தானாலும் டோண்டு அவர் பெயரில் சொல்பவர் என்றுதானே...
இந்த நம்பிக்கை துரோகம்தான் உங்கள் பார்வையில் யுத்தியென்றால் அது அற்பத்தனமானது என்பதில் மாற்றுகருத்து இல்லை”.

எனது பதில்:
“போலிக்கெதிரான போரில் மற்றவர்கள் உங்களளோடிருந்தவர்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை என்ன?
எந்த கருத்தானாலும் டோண்டு அவர் பெயரில் சொல்பவர் என்றுதானே..."
இது என்னப்பா வாதம்? என்னுடனிருந்தவர்களில் பலர் நான் ஒன்றுமே செய்யாமல் உதை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சிலர் பதிவிடுவதையே நிறுத்துமாறும் ஆலோசனை கூறினர். எல்லாரின் நினைப்பையும் நான் நிறைவேற்ற வேண்டுமென்றால் வண்ணான், அவன் மகன், கழுதை கதைதான் நடந்திருக்கும்.
"துபாய் திரும்பியதும் இகலப்பை இல்லாது இருந்தது".
என்ன ஸ்வாமி கதையடிக்கிறீர்கள்? சுரதாப் பெட்டி என்று கேள்விப்பட்டதேயில்லையா. இல்லாவிட்டால் ஆங்கிலம் தெரியாதா? என்ன இதெல்லாம் சாக்குப் போக்கு.

//அதில் நானும் கூட வாழ்த்து தெரிவித்திருந்தேனே..//
உங்களை நான் குறைகூறவேயில்லை குழலி அவர்களே. ஒரு பதிவில் வாழ்த்து தெரிவித்ததற்குத்தான் தன்னை போலி தாக்கியதாகக் கூறினார். அப்போது கூட நான் கேட்டேன், அவரிடம் எதிர்க்கருத்தாயிருந்தாலும் பின்னூட்டமிடுங்கள் என்று. தலையை ஆட்டி விட்டுபோனவர் அப்புறம் வரவேயில்லை. ஓக்கே, அவரை நம்பியெல்லாம் நான் இல்லைதான்.
இங்கு என்னை அற்பன் என்று கூறியவரின் யோக்கியதையைத்தான் கிழிக்கிறேன். அவர் ஒரு ஆஷாடபூதி, கோழை என்று. அண்ணா, கலைஞர், கல்கி, பற்றிய குறிப்புக்கு பதில்?
இப்போது கூட பாருங்கள் குழலி அவர்களே, நான் இன்னொரு பெயரில் வந்ததைத்தான் கூறுகிறார்களே தவிர, அதற்கு ஆணிவேரான காரணம், ஒதுங்கியிருந்தவர் கோழைத்தனம் எல்லாம் பற்றி பேச வாயில்லை.
இந்த சந்திப்புக்கு பிறகு என் வீட்டுக்கு வந்த இன்னொரு பதிவர் தான் என் வீட்டுக்கு வந்ததை பதிவாகப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவு ஆம்பிள்ளை சிங்கங்கள் இங்கு”.

நடுவில் என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு அதே பதிவில் நான் தந்த பதில்:
“//இந்த சந்திப்புக்கு பிறகு என் வீட்டுக்கு வந்த இன்னொரு பதிவர் தான் என் வீட்டுக்கு வந்ததை பதிவாகப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவு ஆம்பிள்ளை சிங்கங்கள் இங்கு//. "ஒதுங்கியிருந்தால் கோழைத்தனம் என்று ஜெனரலைஸ் செய்வது சரியானதாகப் படவில்லை"

மன்னிக்க வேண்டும் பாலா அவர்களே. அந்த சம்பந்தப்பட்ட பதிவர் என்னை இவ்வாறு கேட்டு கொண்டதும், நான் அவரை காரணம் கேட்டதும் தான் போலியின் மீதுள்ள பயத்தால் அவ்வாறு கூறுவதாக ஒப்பு கொண்டார். அவர் மேல் எனக்கு கோபம் இல்லை. (பை தி வே, என்னை வீட்டுக்கு வந்து சந்தித்து விட்டு அதை பதிவாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட சிங்கக் குட்டி யார் என்று விழிப்பவர்களுக்கு, அவர் பெயர் முத்து தமிழினி).
இப்போது கூட 3-ஆம் தேதி நடந்த வலைப்பதிவு சந்திப்புக்கு அவரும் வந்திருந்தார். அப்பதிவைப் பற்றி ஒரு பின்னூட்டம்கூட இல்லை. இதற்கு என்ன சொல்லுவீர்கள்?
முத்துக்குமரன் மேலும் கோபம் இல்லை. ஆனால் இப்போது வந்து என்னமோ நான் கொலை செய்து விட்டது போல பதிவு போடுவதற்கு நான் சரியான எதிர்வினை தர வேண்டும்.
//நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்
கடைந்தெடுத்த அற்பத்தனம்.//
இப்படி அவர் உதார் விட்டதால்தான் அவர் கோழை என்பதை அழுத்தம் திருத்தமாக வெளியிட வேண்டியதாயிற்று.
முரளி மனோகர் என்ன ஆபாசமாக எழுதினார்? அப்படி அவர் மற்றவர்கள் பதிவில் எத்தனை பின்னூட்டம் இட்டு விட்டார்? இன்னொருவர் மின்னஞ்சல் போல ஐடி போல தயார் செய்து கல்யாண போட்டோக்கள், என் பெண் போட்டோக்கள் வாங்கினாரா?
டோண்டு சார் இப்படி செய்யலாமா என்று கேட்பவர்களை அவரை இவ்வாறான நிலைக்கு துரத்தியது பற்றி ஒரு வார்த்தையும் கேட்கக்கூடாதா?

//ஏன் பொதுவில் கொண்டு வந்தீர்கள். என்ன யோக்கியதை இருக்கிறது போலிகளைப் பற்றி பேச உங்களுக்கு. பதிவு பதிவாய் போய் எலிக்குட்டியையும், அனானி அதர் ஆப்சன்களை பற்றி நீட்டி முழக்கியது எதற்கு.//
உங்களிடம் அனானி மற்றும் அதர் ஆப்ஷன் இல்லை அல்லவா? மற்றப்படி தமிழ்மணம் மட்டுறுத்தலை கட்டாயமாக்கியது அல்லவா, அதனால் தமிழ்மணத்தில் ஆபாசங்கள் கட்டுப்பட்டன அல்லவா. போலிகளை பற்றி பேச எனக்கு யோக்கியதை இருப்பதால்தான் இதெல்லாம் நடந்தது.
மற்றப்படி ஒரு புனைப்பெயரை வைத்து கொண்டதற்காக அற்பம் என்று எல்லாம் திட்டினால் கோழை நீங்கள் என்ற எதிர்வினைதான் வரும். இந்த அழகில் சீப்பு இல்லை ஆகவே கல்யாணம் நின்றது என்ற ரேஞ்சில் இகலப்பை இல்லை என்ற அபத்ததமான சால்ஜாப்பை வைத்ததும் இதே பயம்தானே”.

ஆக டோண்டு விஷயத்தில் கோபக்கார இளைஞராக வந்த முத்துக்குமரன் போலி டோண்டு கருப்பு மூர்த்தி விஷயத்தில் எவ்வளவு அடக்கி வாசிக்கிறார் பாருங்கள்.

அதிலும் ஆச்சரியம் இல்லைதானே. ஏனெனில் அவரே கூறிவிட்டாரே ஆபாசமாக எழுதுவதை விட புனைப்பெயர் வைத்துக் கொண்டது அற்பமானது என்று.

அது சரி, மூர்த்திதான் போலி டோண்டு என்பது ஆகஸ்ட் 2007-லேயே தெளிவானது. அவனை 2008 ஜூலை மாதம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து சந்தித்ததையும் போலி டோண்டுவுடன் நேரடி சந்திப்பு என்ற பதிவிலாவது மூர்த்தியை கண்டித்து ஒரு சிறு பின்னூட்டம் இட்டாரா என பார்த்தால் பெரிய ஏமாற்றம். முரளி மனோகர் விஷயத்தில் பெரிய கொம்பன் மாதிரி எகிறிக்குதித்த இவர் இங்கு காட்டியது இடிபோன்ற மௌனம். அதுவே பல புனை பெயர்கள் வைத்துக் கொண்ட மூர்த்தி விஷயத்தில் அடக்கி வாசிப்பு.

அது பற்றி அவர் சொந்தப் பதிவு போட்டதாகவும் தெரியவில்லை. வேறு எங்கும் எழுதியதாகவும் தெரியவில்லை.

இப்போதுதான் புரிகிறது அம்மாதிரி அவர் கண்டித்திருந்தால் அவரது அல்லக்கை செயல்பாடுகள் பற்றி மூர்த்தி எழுதி அவரை நார் நாராக கிழித்துவிடுவானே என்ற பயம்தான் காரணம் என்று.

முத்துக்குமரரே நீங்கள் வேறும் கோழை ஆகவே நமது மெரினா சந்திப்பு பற்றிய எனது பதிவில் பின்னூட்டமிட தயங்கினீர்கள் என. அதையே சாடியவன் நான். இப்போது அந்த குற்றச்சாட்டை மாடிஃபை செய்கிறேன். நீங்கள் முதலில் அல்லக்கை பிறகுதான் கோழை. போதுமா?

இந்தத் தருணத்தில் மூர்த்தியின் இன்னொரு அல்லக்கை பெ. மகேந்திரன் 3-4 முறை என்னுடன் கூகள் டாக் மூலம் நட்பு கேட்டு வந்தார். அப்போதே அவரை மூர்த்தியின் அல்லக்கையாக அடையாளம் கண்டு கொண்ட நான் பெ. மகேந்திரன் என்னும் பெயர் இம்மாதிரி கோரிக்கை வைத்து வரும்போதெல்லாம் ரிஜெக்ட் செய்தேன்.

லக்கிலுக்கின் சைபர் கிரைம் பற்றிய தொடர் குமுதம் ரிப்போர்டரில் முடிவடைந்தது. பாலபாரதி கூறியது போல தொடர் முடியும் வரை காத்திருந்து பார்த்தாயிற்று. போலி டோண்டு மூர்த்தி பற்றி ஒருவார்த்தையும் இல்லை. அவன் சைபர் கிரிமினல் இல்லையென இவர் தீர்மானித்து விட்டாரா அல்லது முத்துக்குமரன் போன்று இவருக்கும் அதே பயமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/02/2009

போலி டோண்டு பற்றி மேலும் சில எண்ணங்கள்

உண்மைத்தமிழன் எழுதிய சாருநிவேதிதா-இ-மெயில் ஹேக்கிங்-குமுதம் ரிப்போர்ட்டர்-சைபர் கிரைம் தொடர்-சில உண்மைகள்..! என்னும் பதிவைப் பார்த்தேன். அதே போல சிறில் அலெக்ஸும் போலி பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை + வேண்டுகோள் என்னும் தலைப்பில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி போட்டுள்ளார். ஒரு பதிவு போட்டுள்ளார். அவ்வளவு வீராவேசமாக எல்லாம் பேசி உதார் விடும் சாருநிவேதிதா அவ்வளவுதானா என்பதை நினைத்து ஆயாசம் ஏற்படுகிறது. ஆனால் அவர் இப்பதிவின் சப்ஜெக்டில் இதற்கு மேல் இல்லை.

சிறில் அலெக்ஸின் பதிவை முதலில் பார்ப்போம்.

“இணையம் கட்டற்ற சுதந்திரத்தை அளிக்கிறது என்றபோதும், இணைய புழக்கங்களை கண்காணிக்கும் சட்டங்கள் போதுமானதாக இல்லாதபோதும் சில எல்லைகளைத் தாண்டியபோது போலியின் நடவடிக்கைகளை காவல் துறை தாமாகவே கண்காணிக்க ஆரம்பித்தது. கூடவே சில புகார்களும் பதியப்பட போலிஸ் ’போலி’ விவகாரத்தில் தீவிரம் காட்டியது. வெளிநாட்டில் இருந்த அவர் இந்தியா திரும்புகையில் காவல்துறை அவரை மடக்கி அவரது பாஸ்போர்ட்டை கைப்பற்றியது. விடுமுறைக்கு வந்த அவர் வெளிநாட்டுக்கு திரும்ப முடியாமல், வேலை பறிக்கப்பட்டு மிக வருந்தத் தக்க நிலையில் தற்போது உள்ளதாகக் கேள்விப்படுகிறேன்.

பதிவர்களே, அந்த போலி பதிவரால் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டிக் கேட்டுக் கொண்ட பின்னும்கூட காவல்துறை அவர்மீது இரக்கம் காட்டவில்லை. அந்தப் போலி பதிவர் விளையாட்டாகவே இவை அனைத்தையும் செய்திருக்கிறார் எனக் கூறியுள்ளார். ஒரு இளமை வேகத்தில் சிலரால் ஊக்குவிக்கப்பட்டு அவர் இதை செய்திருக்கலாம் அல்லது உண்மையிலேயே அவர் கெட்ட எண்ணத்திலும் போலியாக செயல்பட்டிருக்கலாம் ஆனால் அதன் விளைவு என்னவென்றால் அவரின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு கவலைக்குரிய நிலையில் அவர் உள்ளார்.

போலியாக இருக்கும்போது அவரை ஊக்கப்படுத்தியவர்கள் யாரும் அவருக்கு இப்போது எந்த உதவியும் செய்வதாகத் தெரியவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்க தகவல். இவையெல்லாம் நான் கேள்விப்பட்ட தகவல்களேயன்றி நேரடித் தகவல்கள் இல்லையென்றபோதும் இந்தக் கதை சொல்லும் பாடம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக தற்போது புதிய போலி பதிவுகள் உருவாகியிருப்பதாக அறியும்போது கவலை தருகிறது.’போலி’க்கு நிகழ்ந்த சோகத்தை பதிவுலகில் யாருமே பதியவில்லை என்றறிந்தபோது இதை எப்படியும் சொல்லியாகவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது எனவே இந்தப் பதிவு”.


சிறில் அலெக்ஸின் இப்பதிவு அவர் விரும்பியோ விரும்பாமலோ போலிக்கு அனுதாபம் காட்டுவதாக அமைந்துள்ளது. ஏதோ அவன் இளமை வேகத்தில் அப்படி செய்திருக்கலாம் என பட்டும் படாமலும் கூறியுள்ளார். அதே சமயம் எதையும் நேரடியாகத் தெரிந்து எழுதவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார். இருப்பினும் அவனுக்கு போய் அனுதாபம் காட்டுகிறார் என்பதை ஜீரணிக்க இயலவில்லை.

நடந்தது நடந்து விட்டது, இனிமேலும் புதிதாகப் போலி பதிவர்கள் வருவதை தடுக்கும் எண்ணம் கூட அவருக்கு இருந்திருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவரது இந்த வழவழா கொழகொழா பதிவைப் பார்த்ததுமே நானும் ஒரு பதிவு போடலாம் என யோசித்து வைத்திருந்தேன். அது உண்மைத் தமிழனின் பதிவைப் பார்த்ததும் உறுதி பட்டது. அதைக் குறிப்பிட்டு அவரது அப்பதிவில் பின்னூட்டமும் இட்டேன். பை தி பை சிறில் அலெக்ஸ் போலியால் பாதிக்கப்பட்ட யாரும் அவன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசில் எல்லாம் கேட்டுக் கொள்ளவில்லை.

ஏற்கனவேயே போலி டோண்டுவுடன் நேரடி சந்திப்பு என்னும் தலைப்பில் நான் சென்ற ஆண்டு ஜூலை மாதம் இட்டப் பதிவு வேறு இருக்கிறது.

ஜூன் 29, 2009 அன்று நடந்த பதிவர் சந்திப்பில் நான் இவ்வாறு எழுதியிருந்தேன்.
“குமுதம் ரிப்போர்டரில் சைபர் கிரைம் தொடர் பற்றி எழுதி வரும் லக்கிலுக்கிடம் நான் ஒரு கேள்வியை வைத்தேன். அதை எனக்கு ஒரு அனானி வாசகர் பின்னூட்டமாக இட்டிருந்தார், நான் அதை ஏற்கவில்லை. இப்போது எல்லார் முன்னிலையிலும் அக்கேள்வியை நான் வைத்தேன், அதாவது சைபர் கிரைம் ப்ற்றிய அத்தொடரில் அவர் போலி டோண்டு விவகாரத்தை தொடுவாரா என்பதே அக்கேள்வி. பாலபாரதி இப்போதுதான் லக்கிலுக் சீரியலையே எழுத ஆரம்பித்திருப்பதாகவும், இன்னும் பல காலத்துக்கு அது வரும் என்றும், அது முடிந்தபின் போலி டோண்டு விவகாரம் அதில் கவர் ஆகவில்லையெனில் அப்போது அவரை கேட்கலாம், இப்போது கேட்பது சஸ்பென்சை உடைத்து விடும் என்றார். நானும் அதை ஏற்று கொண்டேன்”.

அதைப் படித்ததுமே டென்ஷனான உண்மைத் தமிழன் அப்பதிவுக்கு இவ்வாறு பின்னூட்டமிட்டார்.

“எப்படி ஸார் இப்படி கூச்சப்படாம அவர்கிட்டயே கேட்டிருக்கீங்க..?

போலி டோண்டுவுக்கு அல்லக்கையா தானே இருந்த கதையையும், சக பதிவர்களைப் பற்றியத் தகவல்களை போலியாருக்கு திரட்டிக் கொடுத்த கதையையும், தானே அனானியா பலரையும் திட்டித் தீர்த்த கதையையும் அவரே எழுதுவாராக்கும்..!?

இதையும் ஒரு கேள்வின்னு சொல்லி நீங்களும் கேட்டிருக்கீங்க..?!!!

அவர் எழுதற கொடுமையைவிட நீங்க கேட்ட கொடுமைதாங்க ரொம்பப் பெரிசு..!

நல்லாயிருங்க..! [June 29, 2009 4:38 PM]”

எதற்கும் இருக்கட்டும் என உண்மைத் தமிழனுக்கே போன் போட்டு அவர்தான் அப்பின்னூட்டத்தைப் போட்டாரா என முதலில் உறுதி செய்து கொண்டேன். அவர் மேலும் சில விஷயங்கள் சொல்லி ஆதங்கப்பட்டார். சில வார்த்தைப் பிரயோகங்களைக் கேட்டு எனக்கு சிரிப்பு தாங்கவில்லை.

போலி டோண்டு விவகாரத்தில் அவனுக்கென அல்லக்கைகளாக செயல்பட்டவர்களில் விரும்பியே செய்தவர்கள் (டோண்டு என்னும் பாப்பானை திட்டறாண்டா, நாமும் சேர்ந்து கொள்வோம்), பிளாக்மெயில் செய்யப்பட்டு அவ்வாறு மாற்றப்பட்டவர்கள் ஆகியோர் உண்டு. பல பதிவர்கள் நமக்கேன் வம்பு என விலகி இருக்க அவர்களுக்காக நான் ஏற்கனவேயே பலமுறை கிட்டத்தட்ட இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன் “இன்று எனக்கு நடப்பது வேறு யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று. அதே போலவும் சில பதிவர்கள் விஷயத்தில் நடந்தது.

அவ்வாறு தாக்கப்பட்டவர்களில் ஒருவரின் மூன்று வலைப்பூக்களுக்குமே போலி பதிவு வர, அவர் ஓசைப்படாமல் அவனுடன் சமரசமாகப் போய் அந்த ஆபாச தளங்களை விலக்கிக் கொண்டதும் தெரியும். மிகவும் மரியாதைக்குரியவர் அவர், என் நண்பர் கூட. அவர் பெயரை இங்கு நான் கூறமாட்டேன். ஆனால் இதை படிக்கும் அவருக்கு நான் எழுதும் வரிகள் விளங்கும்.

எனக்கு யாரும் பின்னூட்டம் இடக்கூடாது என போலி டோண்டு மூர்த்தி கெடுபிடி செய்தபோது பலர் ஏனப்பா வம்பு என ஒதுங்கினர். ஆனால் எனது நண்பரும் அமெரிக்காவாழ் பதிவருமான ஒருவர் நாட்டாமை, அறவாழி அந்தணன், வெங்கடேஷ் சர்மா, ராஜ் சந்திரா ஆகிய பெயர்களில் வந்து பின்னூட்டங்கள் இட்டு போலியின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டது எனக்கு மன நிறைவை அளித்தது. இன்னொரு பதிவர் முனிவேலு, பஜ்ஜி, கிருஷ்ணன் ஆகிய பெயர்களில் வந்தார். நான் எடுத்த ஒரே ஒரு பெயர் முரளி மனோகர். பிளாக்கரின் சொதப்பலால் அது வெளியே தெரிந்த சமயம் பலரும், முக்கியமாக போலியில் அல்லக்கைகள், ஆடிய ஆட்டம் எல்லோரும் அறிந்ததே. அப்பெயரில் நான் ஏதேனும் ஆபாசமாக எழுதியிருப்பேனோ என்றெல்லாம் லென்ஸ் வைத்து பார்த்து ஏமாந்தது வேறு ஒரு கதை. அதை இங்கே ஏன் சொல்கிறேனென்றால் சாதாரண புனைப்பெயர்களுக்கு பிடுங்கிகள் மாதிரி எழுதி என்னைச் சாடியவர்கள், இதோ போலி டோண்டு இவந்தான் என போலீஸ் பிடித்த பிறகும் கூட கள்ள மௌனம் சாதித்தனர். அது போதாது என்று குதிரை கீழே தள்ளியதுடன் நிற்காது குழியும் பறித்ததாம் என்ற ரேஞ்சில் போலி ஒரிஜினலாக நல்லவனாக இருந்ததாகவும் அவனை இந்த டோண்டுதான் உசுப்பி விட்டதாகவும் சொல்லிக் கொண்டு ஒரு கோஷ்டி திரிந்தது.

அதெல்லாம் யார் எனத் தெரிய வேண்டுமானால் விடாது கருப்புவை முதலில் தமிழ்மணத்திலிருந்து தூக்கிய போது அவனை மீண்டும் சேர்த்துக் கொள்ளச் சொல்லி பெட்டிஷன் போட்டவர்களில் பெரும்பான்மையாவர்களே அவர்கள். அவர்களில் நான் யார் யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியும்.

எல்லாம் நேரம்டா சாமி. உண்மைத் தமிழனின் சொற்களில் கூற வேண்டுமானால், நல்லாயிருங்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/24/2008

போலி டோண்டுவுடன் நேரடி சந்திப்பு

செந்தழல் ரவி, உண்மைத் தமிழன், ஓசை செல்லா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் மூர்த்தியின் மேல் புகார் அளித்து அது பத்திரிகைகளிலும் வந்தது தெரிந்ததே. அதற்கு ஒரு வாரம் கழித்து நானும் சென்றேன். எனது புகார் சைபர் கிரைமில் ஒரு உதவி ஆய்வாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் என் பெயரில் மூர்த்தி தயாரித்த ஆர்க்குட் ஆபாச பக்கங்களை காண்பித்தேன். மொத்தம் 23 ப்ரொஃபைல்கள். எல்லாவற்றையும் பொறுமையாக அவர் ஸ்க்ரீன் ஷாட்டுகள் எடுத்தார். நேரம் ஆக ஆக மூர்த்தியின் மேல் அவரது கோபம் அதிகரிக்க ஆரம்பித்தது. போலி டோண்டு பற்றி நான் இட்ட பதிவுகள் எல்லாவற்றையும் பார்த்தார் அவர்.

முதல் காரியமாக ஆர்க்குட் பக்கங்களை அவர் கூகளுக்கு எழுதி அழிக்கச் செய்தார். டுண்டூ பதிவர் எண்ணில் போடப்பட்டிருந்த மூன்று வலைப்பூக்கள் அழிக்கப்பட்டன. வெளியில் சொல்லாமல் கமுக்கமாக விசாரணை நடத்தப்பட்டது. கூகள் நிறுவனம் ஒத்துழைத்தது. மலேஷியாவுக்கும் செய்திகள் பறந்தன. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக நேற்று ஒரு விஷயம் நடந்தது.

நேற்று சைபர் க்ரைமில் வைத்து போலி டோண்டு மூர்த்தியை நேருக்கு நேர் சந்தித்தேன். கேசை விசாரித்து வரும் அதிகாரிகளே மூர்த்தியின் செயல்பாடுகளைப் பார்த்து நொந்து போயினர். புகார் அளித்தவன் என்ற ஹோதாவில் என்னையும் அங்கு அழைத்ததால் நான் அங்கு சென்றிருந்தேன்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேர விசாரணை. மூர்த்தி இட்டிருந்த பதிவுகளின் அச்சடிக்கப்பட்ட காகிதங்களுடன் பதிவர் உண்மைத் தமிழனும் ஆஜரானார். என் தரப்புக்கு நானும் சைபர் கிரைம் அதிகாரியிடம் மூர்த்தியால் உருவாக்கப்பட்ட உரல்களை எடுத்து தந்தேன்.

மூர்த்தியுடன் அவரது வக்கீல் மற்றும் மைத்துனர் வந்திருந்தனர். தன் சகோதரியின் கணவன் இவ்வளவு கீழ்த்தரமாக செயல்பட்டதைப் பார்த்து அந்த இளைஞருக்கு பேச்சே வரவில்லை. அவமானத்தால் குனிந்த தலை நிமிரவே இல்லை.

மூர்த்திக்கு மலேஷியாவில் பார்த்த வேலை பறிபோயிற்று. பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. (அப்படியில்லை என செந்தழல் ரவி கூறுகிறார். இந்த வரியை சேர்த்த நேரம் 14.38 மணி, 25.07.2008)

இப்படியாக மூன்றாண்டுகளாக நடத்திய யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த மூன்றாண்டுகளாக என்னென்னவெல்லாம் நடந்து விட்டன! மூர்த்திக்கு சப்பைக்கட்டு கட்டியவர்கள் எத்தனை பேர்?

இன்னும் விசாரணை நடக்கிறது. அவருடன் சேர்ந்து செயல்பட்டவர்களின் லிஸ்டையும் தருமாறு சைபர் கிரைம் அதிகாரிகள் மூர்த்தியிடம் கூறியுள்ளனர். மூர்த்தியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு ஓர் அறிவிப்பு.

தன்னால் உருவாக்கப்பட்ட உரல்களை அழிப்பதாக அவர் வாக்கு தந்துள்ளார். ஆகவே சம்பந்தப்பட்ட பதிவர்கள் தத்தம் பெயரில் உருவாக்கப்பட்டிருந்த உரல்களின் லிஸ்டை தரலாம்.

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மூர்த்தி தனது மூர்த்தி மற்றும் விடாது கருப்பு வலைப்பூக்களில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

இப்போதைக்கு இவ்வளவுதான். இதற்கு மேல் எழுதினால் கோபத்தில் என்ன எழுதுவேன் என்று தெரியாது. மூர்த்திக்கு எதிராக இந்த யுத்தத்தில் பங்கு கொண்ட பதிவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/29/2007

இப்போது வெளிப்படையான யுத்தம்

மே 2005-லிருந்து ஆரம்பித்த போலி விவகாரம் தற்போது தீவிர நிலையடைந்துள்ளது. இது பற்றி நான் வெவ்வேறு நேரங்களில் போட்ட பதிவுகள் ஒரு லேபலின் கீழ் உள்ளன. தேவையானவர்கள் அவற்றைப் பார்த்து கொள்ளலாம்.

நண்பர் சர்வேசன் பதிவில் பல பின்னூட்டங்கள். அவற்றில் சிலவற்றில் போலி பிரச்சினைக்கு போலி மட்டும் காரணமல்ல, டோண்டுவும்தான் என கூறப்பட்டுள்ளது. ஆகவே இப்பதிவு.

முதலில் ஒன்றை கூறி விடுகிறேன். மற்றவர்கள் விஷயத்தில் அந்த மலேஷியப் பதிவர் எப்படியோ தெரியாது. ஆனால் எனது விஷயத்தில் நேரடியாக தாக்குதல்தான். அதுவும் என் பெயரில் வலைப்பூ தயாரித்து நான் கருத்து கூறுவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினான். அதனாலேயே அவன் போலி டோண்டு என பெயர் பெற்றான். பலர் அதை நம்பவும் செய்தனர் (உதாரணம் பதிவர் வேதா, டி.பி.ஆர். ஜோசஃப் ஆகியோர்). அந்நிலையில் நான் வேறு விதமாக செயல்பட்டிருக்க முடியாது. அவன் தாக்கிய மற்ற பதிவர்கள் பதிவு போடுவதையே நிறுத்தினர். ஆனால் நான் அவாறு செய்ய மறுத்தேன். என்ன செய்வது எனது அடிப்படை குணமே அடாவடிக்கு பணிய மறுப்பதுதான். நல்ல எண்ணத்துடன் அறிவுரை கூறியவர்களை நான் குறை சொல்லவில்லை. அதே சமயம் எனக்கு சரி என்று பட்டதையும் செய்தேன். அதில் எந்த குழப்பமும் இல்லை.

"அவன் அப்படித்தான், நீதான் பணிந்து போக வேண்டும்" என கருத்துடையவர்களை பார்த்து எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது. தெருவில் இருவர் சண்டை போடுகிறார்கள். அவர்களில் ஒருவன் எங்கே சண்டை என அலைபவன், இன்னொருவன் தாக்கப்பட்டு தற்காத்து கொள்ள போராடுபவன். பலர் சண்டையை விலக்க வருவார்கள். முக்கால்வாசி சமயம் என்ன நடக்குமென்றால் எல்லோரும் இரண்டாமவனை மட்டும் பிடித்து கொள்ள அடாவடிக்காரன் அவனை இன்னும் நாலு குத்து விடுவான். நான் கூறுவது என்னவென்றால், முடிந்தால் இருவரையும் கட்டிப் பிடித்து நிறுத்து. இல்லாவிட்டால் வேடிக்கை பார். இம்மாதிரி ஒருவரை மட்டும் இழுத்து பிடிக்காதே என்பதே.

என்னை தாக்கிய அந்த மலேசிய பதிவர் எனக்கு பின்னூட்டம் இட்டதற்காக ஆண் பெண் பேதமின்றி எவ்வளவு எவ்வளவு குருட்டுத்தனமாக தாக்குகிறான் என்பதைத்தான் எல்லோரும் பார்க்கிறீர்களே. அதை தவிர்க்கவே பலர் பின்னூட்டம் இடவே தயங்கினர். எனது நண்பர்கள் மட்டும் பல பெயர்களில் வந்து பின்னூட்டம் இட்டனர். நாட்டாமை, அறவாழி அந்தணன், ராஜ் சந்திரா, வெங்கடேஷ் சர்மா, பஜ்ஜி, முனிவேலு, தங்கம்மா, நெப்போலியன் இன்னு மற்றும் பல பெயர்களில் வந்தனர்/வருகின்றனர். இப்போது அனானி ஆப்ஷனை போட்டு விட்டதால் அதற்கும் தேவையின்றி போய் விட்டது.

முரளி மனோஹர்? எனக்கு நானே நண்பன்தானே. அப்பெயரில் ஏதேனும் ஆபாச கருத்துகள் வந்தனவா? அதை தேடி தேடி அலுத்தனர் எதிரி முகாமினர். முரளி மனோஹர் என்பது புனைப்பெயரே. அதை வைத்ததற்காக என்னை தாக்குபவர்கள் கல்கி, அறிஞர் அண்ணா, ஸ்ரீவேணுகோபாலன் ஆகியோரையும் தாக்குவார்களா? அவர்கள் வரிசையில் சேர்ந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சியே.

எனது கருத்துகளில் ஒப்புதல் இல்லையெனில் சம்பந்தப்பட்ட பதிவுக்கு வந்து பின்னூட்டமிடுங்கள். அவ்வாறு செய்யாது தயங்குபவர்களில் பலர் போலிக்கு பயப்பட்டே அவ்வாறு செய்கின்றனர். இது அவர்தம் மனசாட்சிக்கு தெரியும். இப்போது நடப்பது யுத்தம். Stand up and be counted.

சர்வேசன், ஓசை செல்லா, அதியமான் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/14/2007

ஆப்பரேஷன் சல்மா அயூப்

Anonymous has left a new comment on your post "ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 3":
xxxxxxxxxxxxxx (censored)
//என்ன நடந்தது என்று டோண்டு அவர்கள் ஒரு பதிவு போட்டு உண்மையை உலகுக்கு உரத்து சொல்ல வேண்டும்.
இப்பின்னூட்டத்தை வெளியிடுவதும், வெளியிடாததும் உங்கள் விருப்பம். ஆனாலும் உங்கள் மீது மதிப்பு கொண்டவர்கள் இவ்விவகாரத்தில் உங்கள் கணிப்பு என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள்.
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Posted by Anonymous to Dondus dos and donts at April 13, 2007 12:08 PM//

மேலே உள்ளதுபோல பல பின்னூட்டங்கள் வந்தன. என்னைப் பொருத்த வரைக்கும் நான் தெளிவாகவே இருக்கிறேன். ஜயராமன் கண்டிப்பாக இவர்கள் கூறியது போல செய்யக் கூடியவர் அல்ல என்பதே அது.

இந்த விஷயத்தில் நேசகுமார் அவர்களும் பதிவிட்டுள்ளார்.

இப்போது விஷயத்துக்கு வருகிறேன். போன ஆண்டில் ஜோதி என்ற பெயரில் பின்னூட்டங்கள் வரத் துவங்கின. பின்னூட்டங்கள் என்னமோ சாதாரணமானவைதான். ஆனால் நான் வழக்கமான எனது பிரசித்திபெற்ற எலிக்குட்டி சோதனையை செய்து சம்பந்தப்பட்டவர் ப்ரொஃபைலுக்கு சென்று அங்கிருந்து வலைப்பூவுக்கு சென்றால் அதனையும் காமக்கதைகள். அச்சமயம் ஜோசஃப் அவர்களிடமும் இந்த விஷயத்தைக் கூறியுள்ளேன். அவரும் அந்தப் பெயரில் வந்த பின்னூட்டத்தை நீக்கினார்.

இப்போது ஜயராமன் விஷயத்தில் ஜோதி என்று பெயர் வர நான் உஷாரானேன். உடனே எனது ஜீமெயில் ஆர்கைவ்ஸில் தேடியதில் மாயவரத்தானின் இப்பதிவிலும் பின்னூட்டம் இட்டதும், அதை நான் மாயவரத்தானுக்கு சுட்டிக் காட்டியதும் தெரியவந்தது. அதில் வந்த ஜோதியின் ப்ரொபைல் இப்போது சல்மா அயூப்பாக வருகிறது. எல்லாவற்றையும் ப்ரிண்ட் செய்து வைத்துள்ளேன்.

இதில் பாலபாரதிக்கு யாரோ வேண்டுமென்றே தவறாகத் தகவல் தந்துள்ளனர் என நினைக்கிறேன். அவரும் அதை good faith- ல் எடுத்து கொண்டு காரியமாற்றியுள்ளார் என நினைக்கிறேன். ஆகவே அவரையோ, முத்து தமிழினி அவர்களையோ குறை கூற விரும்பவில்லை.

இப்போது முக்கிய கேள்வி, ஜயராமன் ஏன் அவ்வாறு எழுதித் தரவேண்டும்? பயமே காரணம். போலீஸ் என்ற பெயரைக் கேட்டவுடனேயே ஒரு சராசரி மனிதனுக்கு வரும் பயம்தான் காரணம். என்ன இவர் விஷயத்தில் அது ஓவர் என்றே நினைக்கிறேன்.

ஏற்கனவே போலி டோண்டு பொன்ஸ் பேரில் தானே போலிப் பதிவு போட்டதாகவும் பிறகு அவர் சரியான செயல்பாட்டுக்கு வந்ததாகவும் கூறியுள்ளான், எனக்கு அனுப்பியுள்ள பின்னூட்டத்தில். அது என் குடும்பத்தாரை மிக அசிங்கமாகத் தாக்குவதால் அதை வெளியிட மனமில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/12/2007

ஆரவாரப் பேய்களெல்லாம் - டோண்டுவின் யோம்கிப்பூர்

கடந்த ஒருவாரமாக மனதில் ஒரு போராட்டம். அது என்ன என்பது தமிழ்மண பக்கங்களை இந்த காலக் கட்டத்தில் பார்த்தவர்களுக்கு புரியும்.நானாக தேடிக் கொண்டதுதான் அது என்பதை முதற்கண் கூறிவிடுகிறேன். திடீரென முரளி மனோஹர் வெளிப்பட்டு விட்டான். நல்ல வேளையாக அவன் தேவை இனிமேல் இல்லை என்ற நிலையெடுத்து எனது வலைப்பூவில் மாறுதல் செய்து கொண்ட அடுத்த நாள். எனக்கு ஆதரவளிக்கவே நான் இந்தப் பதிவில் கொடுத்த ஆலோசனையின்படி வந்த நண்பர்களின் ஆலோசனை பெற்று கொண்டு செய்த முடிவு அது. அதற்கு முன்னால் முரளி மனோஹர் வெளியே வந்திருந்தால் கதை கந்தர கோளமாக ஆகியிருக்கும். நல்ல வேளை.

இப்போது டோண்டு ராகவனது மூன்றாம் யோம் கிப்பூருக்கு செல்லும் முன்னால் சில வார்த்தைகள்.

சமீபத்தில் 1962-ல் வெளிவந்த "ஆலய மணி" படத்தை இன்றும் கூட யாரும் மறக்கவில்லை. அப்போது பிறந்திராதவர்களின் குழந்தைகள் கூட இப்படத்தின் பாடல்களை இன்றும் விரும்பி கேட்கின்றனர். முதலில் அதை இங்கு முழுமையாக போடுகிறேன்.

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து
பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டி வைத்ததடா

ஆட்டி வைத்த மிருகம் இன்று
அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில்
கோயில் கொண்டதடா

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா

எறும்புத்தோலை உரித்துப் பார்க்க
யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா

பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்
இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி
வந்து விட்டதடா!

என்ன அருமையான பாடல், சிம்மக்குரலோன் சிவாஜியின் நடிப்புடன்! சகபதிவர் SP.VR.சுப்பையா அவர்கள் இப்பாடல் பற்றிய இந்த அருமையான பதிவுக்கும் நன்றி. இப்பாடலில் வரும்

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா

என்ற அடிகளே இப்பதிவின் அடிப்படை. இதுவும் கடந்து போகும் என்றாலும், அது நல்லபடியாக கடந்து போக வேண்டாமா. அந்த வேலையில்தான் எனது வலைப்பூ நண்பர்கள் சிலர் குதித்தனர்.

தமிழ்மணம் நன்கு அறிந்த ஒரு பதிவர் முந்தாநேற்று திடீரென சேட்டில் வந்தார். அருமையான ஆலோசனை தந்தார். அதிலும் இந்த சேட் அனுபவம் வேறு வகையிலும் புதிதாக இருந்தது. அவர் பேச நான் ஸ்பீக்கர் மூலம் கேட்டேன். ஆனால் என்னால் மைக்கை என்னுடைய தட்டுமுட்டு சாமான் குவியலிலிருந்து கண்டு பிடிக்க இயலவில்லை. ஆகவே அவர் இன்னொரு ஆலோசனை தந்தார். தான் பேசுவதாகவும், நான் தட்டச்சு செய்து பதிலளிக்கலாம் என்பதுதான் அது. அவர் தந்த ஆலோசனையும் இந்தப் பதிவுக்கு ஒரு காரணம். அவருக்கு என் நன்றி.

நேற்று பிற்பகல் இன்னொரு பதிவர் வந்து அதே ஆலோசனையைத் தந்தார். அவருக்கும் என் நன்றி. அதைவிட முக்கியம் எதிர்த்தரப்பில் இருந்தாலும் என்னிடம் அன்பாக பழகிய ராஜா வனஜ் அவர்களிடம் வெற்றிகரமாக எனது நிலையை சொல்லி அவரது மனவருத்தத்தை போக்கியது ஆகும். அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது கடைசியில் 'எனது கார்' வலைப்பதிவர் மீட்டிங்கிற்கு என்னை அழைத்து செல்ல எப்போது வேண்டுமானலும் வரலாம் எனக் கூற வெடிச்சிரிப்புடன் முகமன் கூறி போனை வைத்தார். இந்த முழு முரளி மனோஹர் விவகாரத்தில் எனக்கு மிக வருத்தம் அளித்தது இந்த மனவேற்றுமைதான். அதுவும் சற்று பொறுமையுடன் செயல்பட்டதின் மூலம் தீர்த்து கொண்டது நான் போடவிருக்கும் இந்தப் பதிவை உடனே போடும்படி செய்துள்ளது. நல்ல காரியத்தை தள்ளிப் போடுவானேன். இந்த விஷயத்தில் நான் முரளி மனோஹராக இருந்து செல்வன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் போட்ட பின்னூட்டத்தை அப்படியே தேவையான சுட்டிகளுடன் தனது ஜிமெயிலில் வந்ததை எனக்கு அப்படியே நான் கேட்டு கொண்டதின் பேரில் அனுப்பி வைத்தார். அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து செல்வன் அவர்களுடைய மின்னஞ்சல் ஐடியை மட்டும் மறைத்து (சூடு கண்ட பூனை) நான் ராஜா வனஜுக்கு அனுப்பித்ததுநிலைமை சரியாக பெரிதும் உதவியது. அந்தச் சொல்லின் செல்வனுக்கும் நன்றி.

(சீக்கிரம் விஷயத்துக்கு வருமாறு முரளி மனோஹர் கூச்சலிடுகிறான்). இதோ வந்தேன்.

முதற்கண் என்னால் மனவருத்தம் அடைந்தவர்கள் எல்லோரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். முக்கியமாக எனக்கு பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்து பின்னூட்டம் இட்டு அதனால் அசிங்கமாக தாக்கப்பட்டவர்கள் என்னை மன்னிக்குமாறு கேட்டு கொள்கிறேன். அவற்றில் முக்கியமானவர்கள் கோபமான இளைஞன் முத்துக்குமரன், பதிவர் தமிழச்சி, நாமக்கல் சிபி (என் வருத்தத்தை உணர்ந்து ஒரு பதிவையே எடுத்தவர்), செந்தழல் ரவி (அடையாறிலிருந்து ட்ரைடெண்ட் ஹோட்டல் வரை நான் எனது காரில் செல்லும்போது என்னிடம் தொலைபேசியில் எஸ்.டி.டி. பேசியவர்), டி.பி.ஆர்.ஜோசஃப், லக்கிலுக், பால பாரதி, என்றென்றும் அன்புடன் பாலா (என் நண்பன் கிருஷ்ணன் என்னும் செர்வாண்டஸ் செய்த ஒரு அசட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்), துளசி மேடம், ஜெயராமன், ஓகை, மரபூரார், தன் விடாத முயற்சியால் என்னை போலியிடமிருந்து காப்பாற்றிய முத்து தமிழினி (அவர் பற்றிய பதிவு படித்திருப்பீர்கள்) ஆகியோர்.

அழையா விருந்தாளியாய் நான் வந்து என்னால் படுத்தப்பட்ட வரவனையானும் என்னை மன்னிக்க வேண்டும். மிதக்கும் வெளியிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

எனக்காக மெனக்கெட்டு களத்தில் வந்த நாட்டாமை, தினகர், அறவாழி அந்தணன், வெங்கடேஷ் ஷர்மா, பிரகாஷ், நெப்போலியன், புதியவன், வரதன் ஆகியோருக்கும் நான் மிக்க கடமைப்பட்டவன். யாராவது விட்டு போயிருந்தால் அது எனது ஞாபகசக்தியின் குறைபாடு என்று எண்ணி மன்னிக்கவும்.

மாசிவகுமாருக்கு தனிப்பட்ட நன்றி. அவர் நான் சரியான மனப்பக்குவத்துடன் இருந்த சமயத்தில் சொன்ன ஆலோசனைதான் முதல் யோம் கிப்பூர் பதிவுக்கு காரணம் என்பதையும் இவ்விடத்தில் கூறி விடுகிறேன்.

சாதி பற்றி நான் எழுதிய இப்பதிவின் முதல் பாதியை கிட்டத்தட்ட எல்லோரும் ஏற்று கொண்டனர். ஆனால் அத்துடன் நில்லாது கலப்புத் திருமணத்தை எதிர்த்து சில கருத்து வெளியிட்டது ஒரு புயலைக் கிளப்பியது. பாரத சமூகத்தை பிரிக்கும் விதமாக எந்த முயற்சியும் செய்யக்கூடாது என்பதை தங்கள் பதிவுகளின் மூலம் உணர்த்திய அரவிந்தன் நீலகண்டன், ஐயன் காளி ஆகியோரது கருத்தை ஏற்று, இனி இம்மாதிரி சாதி உணர்வை பற்றி எழுதியே ஆகவேண்டும் என்னும் பட்சத்தில் ரொம்பவும் டிஸ்கிகள் போட்டு எழுதவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். அளவுக்கு மீறி ஒரு பதிவில் டிஸ்கிகள் போட வேண்டியிருந்தால் அதற்கு அப்பதிவையே கைவிடுவதும் உத்தமமே. (அது சம்பந்தமாக வேறு பதிவர் யாராவது போடும் இடுகையில் பின்னூட்ட கும்மி அடித்தால் போயிற்று - "டோண்டு இப்போதாவது சீரியசாக இருடா என்று கூறுவது முரளி மனோஹர்).

கடைசியாக, ஆனால் முக்கியமாக, வளர்ந்த குழந்தையாக (நன்றி மாசிவகுமார்) செயல்பட்டு, தமிழ்மணம் யுத்த பூமியாக மாறுவதற்கு காரணமாக இருந்து படுத்திய இந்த டோண்டு ராகவனை முதலிலிருந்தே சகித்து வந்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கு எனது மனப்பூர்வ நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

இப்போது மேலே என்ன?

பல விஷயங்களில் கருத்து சொல்லி எனது நிலையை தெளிவாக்கி விட்டேன். அக்கருத்துக்களில் மாற்றம் இல்லை. ஆனால் இனிமேலும் அதை சொல்லித் திரிய வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆகவே இனிமேல் நடேசன் பூங்காதான். டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான் (ஓசை செல்லா அவர்கள் கவனிக்க).

ஆனால் டோண்டு ராகவன் மட்டுமே வந்து ஹைப்பர் லிங்குகள் எல்லாம் போட்டு தீவிரமாகப் படுத்துவான். இஸ்ரேல், ராஜாஜி, சோ, வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை ஆதரவாளன் டோண்டு ராகவனும் அப்படியே இருப்பான். வாடிக்கையாளர்களை படுத்தும் டோண்டு ராகவன் வேறெங்கே செல்ல முடியும்.? வாடகைக் கார் முதலாளிகள் எனது பதிவுகளைப் படிக்காது மன அமைதியுடன் இருப்பார்களாக. லாலு ப்ரசாத் யாதவும் பயப்பட வேண்டாம். புதிர்கள் பலவும் போடும் டோண்டு ராகவன் அப்படியே இருப்பான் என்பதை கூறவும் வேண்டுமோ.

ஆனால் ஒரு விஷயம். எந்தப் பழைய பதிவுகளையும் இப்போது எடுக்கும் முடிவுகள் காரணமாக திருத்தவோ நீக்கவோ போவது இல்லை. சொன்னவை சொன்னதுதான். வில்லிருந்து விடுபட்ட அஸ்திரங்களை பெறுவது அர்ஜுனனால்தான் முடிந்தது. அஸ்வத்தாமனால் முடியவில்லை. நான் இந்த விஷயத்தில் அஸ்வத்தாமா. அடேடே பரவாயில்லையே இந்த அர்ஜுன அஸ்வத்தாமன் கதையையும் பதிவாக பிற்காலத்தில் போடலாமே.

அவை எனது பழைய அணுகுமுறையால் உருவானவை.அப்படியே ஃப்ரீஸ்தான். சரித்திரத்தை ஏன் திருத்த வேண்டும்? வேண்டாத வேலை. அவை எனது அசட்டுத்தனத்துக்கு சான்றாக அப்படியே இருக்கட்டும்.

இப்போது கூற நினைத்ததையெல்லாம் கடந்த இரண்டு மணி நேரம் மனம் விட்டு கூறியதால்,

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/12/2006

யோம் கிப்பூர் யுத்தம் டோண்டு ராகவனுடையது

இஸ்ரேலுக்கும் எனக்கும் பூர்வ ஜன்ம பந்தம் என்று நான் மனப்பூர்வமாக நினைத்தது என்னை பொருத்தவரை நிஜமாகி விட்டது. யோம் கிப்பூரன்று இஸ்ரேல் மேல் யுத்தம் தொடுக்கப்பட்டது. என் மேலும்தான். என்னுடைய முந்தைய யோம் கிப்பூர் பதிவை வலைப்பூவில் இட்டப் போது அது நல்ல விளைவை ஏற்படுத்தும் என்பதை எதிர்ப்பார்த்தது நிஜம். ஆனால் அது பொய்த்தது. அப்பதிவு ஒரு சமாதானத்துக்கான சமிக்ஞை என்றால் இப்பதிவு ஒரு யுத்த அறிவிப்பு.

நான் மிகவும் மதிக்கும் வலைப்பூ நண்பர் ஒருவர் சொன்ன ஆலோசனையின் பெயரிலும், நானே அது பற்றி யோசித்து வந்ததாலுமே எனது அந்த சமாதான ஆஃபர் தந்தேன். அது ஏற்கப்படவில்லை. மாறாக எதிராளி தரப்பிலிருந்து விரோதச் செய்கைகள் பன்மடங்கு அதிகரித்து, என் மகள் பெயரிலும் வலைப்பூ ஆரம்பிக்க வைத்தது. ஏற்கனவே என் மனைவி பெயரில் இன்னொரு வலைப்பூ ஆரம்பிக்கப் பட்டிருந்தது. அதை தமிழ்மணத்திடம் பேசி லிஸ்டிலிருந்து எடுக்கச் செய்த பிறகே முந்தையப் பதிவையே போட்டேன். அதே போல எனது மகள் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூவையும் தமிழ்மணத்தார் எனது கோரிக்கையை மதித்து நீக்கினர். ஆனால் அவ்விரு பதிவுகளும் பிளாக்கரில் இருக்கும். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

துளசி அவர்களிடம் என்னை இம்பெர்சனேட் செய்து அவரிடமிருந்து நானும் என் மகளும் இருக்கும் படங்களை போலி வாங்கினான். அதே போல மாயவரத்தானை இமிடேட் செய்து ஜூலை மாதமே என்னிடமிருந்து சஷ்டியப்தபூர்த்தி படங்களை வாங்கியிருக்கிறான் என்பதை நான் நேற்று ஜீமெயில் ஆர்கைவ்ஸைப் பார்த்து தெரிந்து கொண்டேன். இப்போதைய நிலை என்னவென்றால், படங்கள் அவனிடம் போய் விட்டன. ஆனால் எனது தளங்களை உடைத்தல்ல. சாதாரண ஜேப்படித் திருடன் ரேஞ்சில்தான் வேலை செய்திருக்கிறான் போலி. என்னைப் போல இமிடேட் செய்ய அவன் உபயோகித்த ஐடி raghtransin at gmail dot com (the last t is missing in raghtransint). அதே போல மாயவரத்தானை இமிடேட் செய்ய உபயோகித்த ஐடி mayiladuturai at gmail dot com (h has been removed from mayiladuthurai). இரண்டு சேட்டுகள் நடந்துள்ளன. வேறு ஏதாவது நடந்ததா என்பதை இப்போதுதான் பார்க்க வேண்டும். என்னிடமிருந்து வரும் மெயில்களை ஐடியை சரிபார்த்து பதிலளிக்கவும் என என் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் நான் பார்க்க வேண்டும். மேலே கூறியது எல்லாம் மைனஸ் பாயிண்டுகள். ப்ளஸ்ஸில் என்ன இருக்கிறது? முதலில் எனக்கு பக்கபலமாய் இருப்பது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன். அதே போல லட்சக்கணக்கில் ராமநாமத்தை எழுதும் என் மகளுக்கோ, லட்சுமிநரசிம்மரின் பக்தையான என் மனைவிக்கோ ஒரு கேடும் வராது.

அடுத்த ப்ளஸ் பாயிண்ட் இந்த அறுபது வயது இளைஞன் டோண்டு ராகவனின் மனவுறுதி. அந்த உறுதி அவன் சாகும்வரை அவனுடனேயே இருக்கும். போலி டோண்டு, படங்களைத்தானே போடப் போகிறாய்? போ, போய் போட்டுக் கொள்.

நான் இப்போது என்ன செய்யப் போகிறேன்? நான் பாட்டுக்கு என் மொழிபெயர்ப்பு வேலைகளைப் பார்த்துக் கொண்டு, அதே சமயம் பதிவுகளும் போடப் போகிறேன். இது யுத்தம். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையேயானது. அதர்மம் இப்போது கொக்கரிக்கிறது, உன் சம்பந்தமானப் படங்களைப் போடுவேன் என்று மிரட்டுகிறது. போட்டுக் கொள் என்று அந்த மிரட்டலுக்கு பதில் கூறியாகி விட்டது. என் இணைய நண்பர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

அதற்கு முன்னால் சதயம் அவர்கள் அவர் பதிவில் போட்டதை இங்கே எடுத்து எழுதுகிறேன்.

"தனிப்பட்ட முறையில் பெரியவர் டோண்டுவிற்காக வருந்தினாலும் இத்தகைய ஆப்புகளை வாங்குவதற்காக அவர் மெனக்கெட்டு உழைத்தார் அல்லது அவரின் நலம்விரும்பிகளை உழைக்க வைத்தார் என்றே நிணைக்கிறேன்.அந்தச் சகோதரியைப் பற்றிய சில பின்னூட்டங்கள் நிச்சயமாய் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்."
ஏன் சார் ஆஷாடபூதித்தனமாக வருத்தமெல்லாம் தெரிவிக்கிறீர். அதற்கு உங்களுக்கு அனானியில் பின்னூட்டம் இட்டவரே மேல். வெளிப்படையாகவே எழுதுகிறார்.

"ஜாக்கிரதை சதயம். நீங்கள் கூறியது போல ஒரு டோண்டு சந்திக்கும் பிரச்சினைகள் போதாதா. நீங்கள் வேறு சனியனை ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள்? டோண்டு நாசமாய் போகட்டும். அவனால்தானே மட்டுறுத்தல் வந்து தமிழ்மணத்தின் சுதந்திரமே பறிபோனது. நன்றாக வேண்டும் அவனுக்கு."
அதானே, அந்த மட்டுறுத்தலால்தானே உங்கள் பதிவுகள் இற்றைப்படாமல் இருக்கின்றன. போய் ஸ்வீட் சாப்பிடுங்கள் சார்.

"இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டோண்டு அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார் என நான் எண்ணவில்லை."
இல்லையே, நன்றாகத் தூங்கிக் கொண்டுதான் இருந்தேன்.

"மற்றபடி தொழில்நுட்ப யுத்தத்தில் உங்கள் கை ஓங்கியிருப்பது உண்மைதான்....உங்களின் திறமையையும், உழைப்பையும், துல்லியத்தையும் பார்த்து என் போன்ற அரைட்ரவுசர்கள் அசந்து போயிருக்கிறோம். உங்களின் பின்னூட்டத்தை நீக்கவே படாதபாடு பட்டேன்...ஹி..ஹி...என்னுடைய தொழில்நுட்ப அறிவு அத்தகையது."
போய் போலி டோண்டு ரசிகர் மன்றம் வைப்பதே நலம், அல்லது சிம்ரன் ஆப்பக்கடையிலிருக்கும் ரசிகர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி, கருத்துச் சுதந்திரம் பறிபோகிறதென்று ஒரு ஹை மாரல் ரீசனுக்காக மட்டுறுத்தலையே செயல்படாது இருப்பவர் போலியின் தரப்பிலிருந்து வரும் கருத்து சுதந்திர கொலைக்கு இப்படி ஏன் ஜிஞ்சா அடிக்கிறீர்கள்? உங்களுக்கும் ஆப்பு வைப்பான் என்ற பயம்தானே காரணம்?

இப்போது போலிக்கு. என்னைப் பொருத்தவரை நீ இல்லை. அவ்வளவுதான். இனிமேல் உன்னை நான் லட்சியம் செய்ய மாட்டேன். நான் பாட்டுக்கு என் பதிவுகளை வழக்கம் போல போட்டுக் கொண்டிருப்பேன். பின்னூட்டங்கள் வருகின்றனவா இல்லையா என்பதைப் பற்றி கவலை இல்லை. இப்போது நண்பர்களுக்கு. இது யுத்தம். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நடுநிலைமை இருக்க முடியாது. என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

அதற்காக அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களை நான் திறக்கப் போவதில்லை. ஒரு வலைப்பூ உருவாக்கி, ப்ரொஃபைல் கிடைக்காமல் செய்தால் போலியால் என்ன செய்ய முடியும்? அதே சமயம் இன்னொரு வேண்டுகோள். என் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுபவர்கள் போலி டோண்டுவைப் பற்றி ஒன்றும் பேசாதீர்கள். பின்னூட்டங்கள் சம்பந்தப்பட்ட பதிவுக்கு ஏற்றவையாக இருக்கட்டும். இப்பதிவு மட்டும் நான் மேலே கேட்டுக் கொண்டதற்கு ஒரு விதி விலக்கு என்பதும் வெள்ளிடை மலை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/02/2006

Jom Kippur - டோண்டு ராகவனுடையது

இன்று யோம் கிப்பூர் என்று அழைக்கப்படும் நாள், யூதர்களுக்கு முக்கியமான நாள். தாங்கள் செய்த தவறுகள் மற்றும் சக மனிதர்களுக்கு இழைத்த அநீதிகள் ஆகியவற்றுக்காக யூதர்கள் மன்னிப்பு கேட்கும் நாள்.

இஸ்ரவேலர்கள் சந்திர நாட்காட்டியை உபயோகிப்பதால் அதன் தேதி முன்னே பின்னே வரும். சமீபத்தில் 1973-ல் இது அக்டோபர் 6 அன்று வந்தது. அன்றுதான் எகிப்தும் சிரியாவும் இஸ்ரேலைத் தாக்கினர். 20 நாள் நடந்த இந்த யுத்தத்தைப் பற்றி இங்கு நான் பேசப் போவதில்லை. வஜ்ரா அவர்கள் பதிவு, அதில் தரப்படும் சுட்டிகள் இது பற்றி மிகத் தெளிவாக விஷயங்கள் தருகின்றன.

இப்போது என்னுடைய யோம் கிப்பூருக்கு வருவோம்.

நேற்று எனக்கு நான் மிகவும் மதிக்கும் பதிவரிடமிருந்து இந்த மெயில் வந்தது. அதை அனுப்பும் முன்னால் என்னுடன் chatßl தொடர்பு கொண்டு மெயில் அனுப்பப் போவதையும் கூறினார். இப்போதைக்கு அவர் பெயரை இங்கு போடப் போவதில்லை. போடவே மாட்டேன் என்றும் கூறப்போவதில்லை. இப்போது அவருடைய மெயில் அப்படியே நகலெடுத்து:

"உங்களுடைய அனுபவம், அறிவு, துணிச்சல் போன்றவற்றை மதிப்பவர்களில் நானும்
ஒருவன். உங்கள் கருத்துக்களில் பெரும்பான்மையானவற்றுடன் ஒத்துப் போகா
விட்டாலும் உங்களுடைய எழுதும் பாணி, உங்கள் எழுத்திலிருந்து தெரியும்
அனுபவ உண்மைகளுக்காக உங்கள் பதிவுகளைத் தவறாமல் படித்து வருகிறேன்.

நீங்கள் மாதம் தோறும் சென்னையில் ஏற்பாடு செய்யும் வலைப்பதிவர் கூட்டங்கள், வெளியூர் போனாலும் சக பதிவர்களைச் சந்திக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைவருக்கும் பயனளிக்கும் நற்செயல்கள்.

ஆனால் உங்கள் அனுபவத்தை, பணிகளை எல்லோரும் இயல்பாக பயன்படுத்துவதற்கு
இருக்கும் சில இடையூறுகள் நம் எல்லோருக்கும் தெரியும்.

சில சூழ்நிலைகளால் போலிகளின் நாகரீகமற்ற எதிர்ப்புகளால் நீங்கள் மிக சிரமத்துக்கு ஆளாகினீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். பெரு முயற்சி எடுத்து உங்களைத் தற்காத்துக் கொள்கிறீர்கள் என்பதும் புரிகிறது. ஆனால் அந்த மிரட்டல்களால் சலித்துப் போய் கூட்டங்களுக்கு வருவதைத் தவிர்க்கும், உங்கள் பதிவில் பின்னூட்டம் இடுவதைத் தவிர்க்கும் நண்பர்களின் எண்ணிக்கை ஏராளம். அந்த மிரட்டல்களைச் செயல்படுத்தும் முகமாக போலிகள் உருவாக்கியுள்ள தளங்களின் பாதிப்பும் விரும்பத்தக்கவை இல்லை.

இந்த நிலையில் தமிழ் வலைப்பதிவு உலகுக்கு நீங்கள் ஒரு உதவி செய்தால் நான் என்றென்றும் உங்களுக்கு நன்றி உடையவனாக இருப்பேன்.

'என்னுடைய கருத்துக்களில் சில பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நான் அதைச் சொல்லும் விதம் சிலருக்குக் கோபத்தை மூட்டியிருக்கலாம். அதனால், ஒரு தவறும் செய்யாத பலர் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இன்னும் ஒரு தீ வளையத்துக்குள்ளேயே உலாவும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

போலி நண்பர்களுக்கு நான் நிபந்தனை இல்லாத வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு அவர்களது மனம் எந்த வகையிலாவது என்னால் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுமாறு கேட்டு கொள்கிறேன். அவர்கள் தமது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து விட்டு தமிழ் சமூகத்துக்குப் பலன் உள்ள வகையில் தமது ஆற்றலைப் பயன்படுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

நான் எனது மனதில் படும் கருத்துக்களை வழக்கம் போல வெளிப்படையாகச் சொல்லி
வருவேன். யாருக்காவது கருத்து வேறுபாடு இருந்தால் என்னிடம் கேட்டால் எனது பக்க நியாயங்களை விளக்கத் தயாராக இருக்கிறேன்.

பிறர் பெயரில் உருவாக்கியுள்ள ஆபாசப் பதிவுகள், சக பதிவர்களுக்கு அனுப்பும் ஆபாசப் பின்னூட்டங்களை முற்றிலும் அழித்து தமிழ் வலை உலகை மேம்படுத்த வேண்டுகிறேன்.'

இப்படி ஒரு பதிவை போட்டால் நீங்கள் பல நூறு மக்களின் அன்பையும் மதிப்பையும் ஈட்டிக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு எந்த இழப்பும் கிடையாது."

மறுபடியும் டோண்டு ராகவன்.

நானும் இது சம்பந்தமாக சில நாட்களாக யோசித்து வருகிறேன். இவருடைய மெயில் ஒரு ட்ரிக்கராக வந்தது.

இந்தப் பாராவை மட்டும் சற்றே மாற்றுகிறேன். ஏனெனில் என்னால் போலி டோண்டுவின் மனம் புண்பட்டது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

"போலி டோண்டுவுக்கு நான் நிபந்தனை இல்லாத வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு அவரது மனம் என்னால் புண்பட்டதற்காக என்னை மன்னித்து விடுமாறு கேட்டு கொள்கிறேன். அவர் தமது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து விட்டு தமிழ் சமூகத்துக்குப் பலன் உள்ள வகையில் தமது ஆற்றலைப் பயன்படுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்."

நான் போலி டோண்டுவுக்கு மேலே கூற விரும்புவது. நாம் இருவரும் நமது நிலைகளை தெளிவாகவே பல தருணங்களில் வெளிப்படுத்தி விட்டோம். இனிமேல் வெளிப்படுத்துவதற்கு வேறு விஷயங்கள் இல்லை என்று தோன்றுகிறது. நமது சண்டையில் collateral damage சற்று அதிகமாகவே வந்து விட்டது. அதற்கு நாம் இருவருமே காரணம். என் தரப்பு பங்களிப்பிற்காக சக வலைப்பதிவாளர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை விட நீங்கள் வயதில் இளையவர். இருப்பினும் உங்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

நானும் உங்களை மனப்பூர்வமாக மன்னிக்கிறேன்.

உங்களது எதிர்வினை எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையிலேயே இப்பதிவைப் போட்டுள்ளேன். உங்கள் பெயரை இப்போதும் வெளியிட மாட்டேன். முதலில் வெளியிட மறுத்தது போர் யுக்தி. ஆனால் இப்போது மறுப்பது சமாதான யுக்தி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/19/2006

முரட்டு வைத்தியம் - 4

முதல் பதிவு
இரண்டாம் பதிவு
மூன்றாம் பதிவு

இந்தப் பதிவில் நான் கூறப்போகும் முரட்டு வைத்தியத்துக்கானப் பின்னணியை முதலில் கூறிவிடுகிறேன்.

"துர் உபயோகம் ஆகக்கூடிய அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை நீங்கள் வைத்துள்ளதால், இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய மேலே சுட்டியப் பதிவிலேயே பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க:பதிவின் சுட்டி" என்ற ரேஞ்சில் வரும் என் பின்னூட்டங்கள் பலருக்கு ரொம்ப பரிச்சயமானது. இப்பதிவு அந்த அதர் ஆப்ஷனைப் பற்றியது.

கல்லூரிகளில் இயற்பியல் வகுப்பில் அளக்கும் கருவிகளை காலிப்ரேஷன் செய்யும் பரிசோதனையை உங்களில் பலர் செய்திருப்பீர்கள். உதாரணத்துக்கு ஒரு ammeter-ஐ எடுத்துக் கொள்வோம். மின்சார கரெண்டை அளக்கும் இக்கருவியை உபயோகத்துக்கு அளிக்கும் முன்னால் அதை கேலிப்ரேட் செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்வார்கள் என்றால் அக்கருவியை ஒரு ஸ்டேண்டர்ட் கருவியுடன் சீரீஸில் இணைத்து கரெண்ட் ரீடிங்குகளை எடுப்பார்கள். 1, 2, 3, 4, 5, .... 27, 28, 29, 30 ஆம்ப்ஸ் ரீடிங்குகளை ஸ்டேண்டர்ட் காண்பிக்கும்போது சோதனைக்குட்படுத்தப்படும் கருவி என்ன ரீடிங்குகள் காட்டுகிறது என்பதையும் குறிப்பார்கள். பிறகு இரண்டு கருவிகள் ரீடிங்குகளையும் க்ராஃபில் ப்ளாட் செய்வார்கள். 0-30 A கருவியில் ஒரு ஆம்பியருக்கு ஒரு புள்ளி வீதம் 30 பாயிண்டுகள் கிடைக்கும். எல்லாவற்றையும் ப்ளாட் செய்து பிறகு அவற்றை ஒரு கோட்டால் இணைப்பார்கள். சாதாரணமாக நாம் ஸ்மூத் கர்வ் வருவது போல இணைக்க வேண்டும். ஆனால் இங்கு மட்டும் ஒரு பாயிண்டை அதன் அடுத்த பாயிண்டுடன் நேர்க் கோட்டால்தான் இணைக்க வேண்டும். ஏனெனில் இந்த இணைக்கும் கோடு கண்டின்யுவஸ் கர்வ் அல்ல. அப்படி ஸ்மூத் கர்வாக வெளியிடுவது நியாயப்படுத்தமுடியாத துல்லியம் என்று கூறுவார்கள்.

விஞ்ஞானத்தில் இது ரொம்ப முக்கியமான அடிப்படை. அதாவது தேவையில்லாமல் துல்லியம் தரக் கூடாது. சரி, இப்பதிவின் விஷயத்துக்கு வருவோம். அனானி ஆப்ஷன் என்பதில் ஒரு பொய்மையும் இல்லை. அது அனாமத்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லையாதலால் தவறாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து இதில் இல்லை என்றுதான் கூறவேண்டும். அதாவது கேலிப்ரேஷன் கிராஃபில் நேர்க்கோடுகளால் பாயிண்டுகளைச் சேர்ப்பது.

ஆனால் இந்த அதர் ஆப்ஷன் இருக்கிறதே, இது ரொம்ப அபாயகரமானது. இதை வைத்துக் கொண்டு பல விஷமக் காரியங்கள் செய்யலாம்.என் விஷயத்தில் செய்யப்பட்டன என்பதை இந்தத் தமிழ்மணத்தில் பலரும் அறிவார்கள். இதை நாம் கேலிப்ரேஷன் புள்ளிகளை smooth curve ஆக இணைப்பதற்கு சமம்.

பலருக்கு நான் இப்போது கூறப்போவது கசப்பாக இருந்தாலும் ஒன்றைக் கூறியே ஆக வேண்டும். வலைப்பதிவாளர்களில் கணிசமான பேர்கள் மென்பொருள் உணர்வு அதிகம் இல்லாதவர்கள். பார்ப்பதை அப்படியே நம்புபவர்கள். அதர் ஆப்ஷனில் வெறுமனே பெயர் மற்றும் வலைத்தள முகவரி மட்டும் கேட்கப்படும். இந்த அதர் ஆப்ஷனை உபயோகித்து யார் வேண்டுமானாலும் எவருடைய பிளாக்கர் எண்ணையும் உபயோகித்து பின்னூட்டம் இட்டு விடலாம். அப்போது டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தாலும் சரியான பிளாக்கர் எண்ணே தெரியும். ஆனால் இதைப் பலமுறை கூறியும் பிரயோசனம் ரொம்ப இல்லை என்றுதான் கூறவேண்டும்.

இப்போதைய பிளாக்கர் வசதிகள்படி அனானி ஆப்ஷனும் அதர் ஆப்ஷனும் தனித்தனியே செயலற்றதாகச் செய்ய இயலாது. ஆகவேதான் வெறும் பிளாக்கர் பின்னூட்டங்களை மட்டும் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவ்வளவு அபாயம் இல்லாத அனானி ஆப்ஷனும் இதில் அடிபட்டாலும் வேறு வழியில்லை. பிளாக்கருக்கு இது பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். அவர்களும் கவனிப்பதாகக் கூறியுள்ளனர்.

அதெல்லாம் சரிதான் முரட்டுவைத்தியம் இதில் எங்கே வந்தது என்று கேட்பவர்களுக்கு இதோ கூறிவிடுகிறேன்.

இந்த அதர் ஆப்ஷனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்று கூறினேன் அல்லவா. அதை எப்படி எதிர்க்கொள்வது என்று யோசித்து செயல்பட்டதுதான் அந்த முரட்டு வைத்தியம். அம்மாதிரி யோசனையின் விளைவுதான் நான் பிரபலப்படுத்திய மூன்று சோதனைகள். அவை உருவானதுகூட ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான்.

முதலில் என் பெயரில் பிளாக்கர் கணக்கு துவங்கப்பட்டு அசிங்கப் பின்னுட்டங்கள் அப்பெயரில் வெளியிடப்பட்டன. என்னுடைய உடனடி எதிர்வினை எலிக்குட்டி சோதனையைப் பற்றிக் கூறுவதே. போலி ஆசாமி அவ்வாறு துவக்கிய பிளாக்கர் கணக்கில் ஒரு வலைப்பூவையும் துவக்கினான். அதை க்ளிக் செய்தால் அது மெடா ரீடைரக்ஷன் என்ற உத்தியைப் பயன்படுத்தி என்னுடைய வலைப்பூவுக்கு இட்டுச் சென்றது. இதை எப்படி முறியடிப்பது? அதில்தான் பிறந்தது "என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள்" என்றப் பதிவு. சில நாட்களுக்கு புதுப்பதிவு ஒன்றும் போடாமல் இருந்ததில் மெடா ரீடைரக்ஷன் மூலம் என் வலைப்பூவுக்கு வந்தவர்களின் கவனம் இப்பதிவால் ஈர்க்கப்பட்டது. ஆகவே போலியின் எண்ணம் நிறைவேறவில்லை. ஓசைப்படாமல் மெடா ரீடைரக்ஷனை வாபஸ் பெற்றான்.

இப்போது அதர் ஆப்ஷனை உபயோகித்து எலிக்குட்டி வைத்தாலும் என் பிளாக்கர் எண் வருமாறு செய்தான். சிறிது நேரம் என்ன செய்வது என்று திகைத்தேன். அப்போதுதான் என் நண்பர் எஸ்.கே. துணைக்கு வந்தார். என் ப்ரொஃபைலில் போட்டோ போட்டுக் கொள்ளச் சொன்னார். அவ்வாறு செய்ததில் நிலைமை சீரானது.

அதர் ஆப்ஷனில் வரும் பின்னூட்டங்களில் போட்டோ தெரியாது. அதே போல என் போட்டோவைப் போட்டு போலி ஆசாமி ஆரம்பித்த பிளாக்கர் கணக்கிலிருந்து பின்னூட்டமிட்டால் எலிக்குட்டி சரியான எண்ணைக் காண்பித்து விடும். இவ்வாறு என் முதல் இரண்டு சோதனைகள் வடிவு பெற்றன, அதாவது எலிக்குட்டி மூலம் சரியான பிளாக்கர் எண் தெரிய வேண்டும், அதே சமயம் போட்டோவும் தெரிய வேண்டும். மேலும் இவை இரண்டும் சேர்ந்து நிறைவேற வேண்டும்.

ஆனால் பிரச்சினைகள் வேறு ரூபத்தில் வந்தன. பல வலைப்பதிவாளர்கள் போட்டோக்கள் எனேபிள் செய்யவில்லை. அவர்களில் சிலர் அதர் ஆப்ஷன் வேறு வைத்திருந்தனர். மேலும், பிளாக்கர் இல்லாத வேறு சேவை தளங்களில் வலைப்பூ வைத்திருப்பவர்கள் விஷயத்தில் எலிக்குட்டி சோதனையோ போட்டோவோ பிரயோசனப்படாது. இங்குதான் என் மூன்றாம் சோதனை உருவாயிற்று. நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் அதன் நகலை நான் இதற்காகவே வைத்திருக்கும் என் தனிப்பதில் பின்னூட்டமாக இடுவதைத்தான் கூறுகிறேன்.

என்னால் முடிந்த அளவுக்கு பாதுகாப்புகள் செய்து கொண்டேன். ஆனால் அவை மட்டும் போதாது என்பதுதான் நிஜம். எலிக்குட்டியை வைத்துப் பார்க்கக் கூட சோம்பல் பலருக்கு. சிலருக்கு அது பற்றி நிஜமாகவே தெரியாது என்பதையும் கூறிவிட வேண்டும். இங்குதான் என் முரட்டு வைத்தியத்தின் அடுத்த நிலை எட்டப்பட்டது. தமிழ் மணத்தில் மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள், புதுப்பதிவுகள் எல்லாவற்றையும் படித்து என் பெயரில் ஏதாவது பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று பார்ப்பது எனக்கு வழமையான வேலையாயிற்று. அவ்வாறு வரும் பதிவுகளில் போய் சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளர்களின் கவனத்தை ஈர்ப்பது எனது அடுத்த நடவடிக்கை ஆயிற்று. வீர வன்னியன், மயிலாடுதுறை சிவா, ரயாகரன், வா. மணிகண்டன் போன்ற சிலரைத் தவிர்த்து எல்லோருமே உடனுக்குடன் போலிப் பின்னூட்டங்களை நீக்கினர். இத்தருணத்தில் என் சார்பில் போலி பின்னூட்டங்களை அடையாளம் கண்ட என் நண்பர்கள் ரோசா வசந்த், குழலி ஆகியோரை நான் நன்றியுடன் குறிப்பிடுகிறேன். பலர் எனக்கு இது சம்பந்தமாக தனி மின்னஞ்சல்கள் வேறு அனுப்பினர்.

ஆக, நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது. இங்குதான் போலி ஒரு தவறு செய்தான். என் பதிவில் யாருமே பின்னூட்டம் இடக்கூடாது என்று அடாவடி செய்ய ஆரம்பித்தான். அதன்படி யார் என் பதிவில் பின்னூட்டமிட்டாலும் அவர்கள் பதிவுகளில் போய் அசிங்கமாக பின்னூட்டம் என் பெயரில் இட ஆரம்பித்தான். அதன் விளைவாக தமிழ்மணத்தில் பின்னூட்ட மட்டுறுத்தல் கட்டாயமாக்கப் பட்டது. விரல் எண்ணிக்கையில் அடங்கக் கூடிய சிலரைத் தவிர எல்லோருமே இந்த விதியை ஆதரித்தனர். ஆகவே தமிழ்மணத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டப் பதிவுகளிலிருந்து அசிங்கப் பின்னூட்டங்கள் மறைந்தன.

இன்னும் எனது இந்த முரட்டு வைத்தியம் தொடர்கின்றது. எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருள்.

"Constant vigilance is the price demanded by freedom" என்பது தாரக மந்திரம். சிறிது ஏமாந்தாலும் சுதந்திரம் பறிபோய்விடும் அபாயம் உண்டு. அதே போலத்தான் மன நிம்மதியும். சுற்றுப்புறத்தில் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். எங்கிருந்து யார் வந்து நிம்மதியைக் குலைப்பார்கள் என்பது தெரியாது. ஆகவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது