8/11/2008

கைவசம் நல்ல வேலை உளவாக ஆராய்ச்சிக் கல்வி பெறுவது கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

நண்பர் சந்திரசேகரன் (Hayek Order) எனக்கு அனுப்பிய இக்கட்டுரையை எழுதிய John Samuel Raja D மேலும் கூறுகிறார், "மோசமான ஆசிரியக்குழு மற்றும் மிகக் குறைவான ஸ்காலர்ஷிப் தொகையும் இதற்குக் காரணமே என்று. முழு கட்டுரையையும் எனது ஆங்கிலப் பதிவில் காணலாம்.இங்கு சுட்டவும்.

நான் படித்த அகாதா கிறிஸ்டியின் நாவல் 4.50 from Paddington இத்தருணத்தில் நினைவுக்கு வருகிறது. அதில் வரும் லூசி என்னும் பெண்மணி கணிதத்தில் எம்.ஏ. படித்தவர். அவர் மார்க்கெட்டை கூர்ந்து கவனித்து எடுத்த வேலை ஹவுஸ்கீப்பிங்தான். அதில் நல்லபடியாகச் செயல்பட்டு வந்ததில் அவருக்கு ஏகப்பட்ட டிமாண்ட். அவரை புக் செய்ய பெரிய கியூவே இருந்தது. சில நாட்களுக்கு மட்டும்தான் ஒவ்வொரு அசைன்மெண்டும் எடுத்து கொள்வார். எங்கும் முழுநேர வேலைக்கு போக மாட்டார். என்னை மாதிரி ஃப்ரீலேன்ஸ் என்று வைத்து கொள்ளுங்களேன்.

இதையெல்லாம் நான் கூறுவதை விட மேலே குறிப்பிட்ட அந்த கட்டுரை மிகச் சிறப்பாகவே கூறுகிறது. கீழே தடித்த சாய்வெழுத்துகளில் அதன் சுருக்கமான மொழிபெயர்ப்பு வருகிறது.

Madras School of Economics (MSE) -ன் டைரக்டர் D K ஸ்ரீவாஸ்தவ் அவர்கள் ஆண்டுதோறும் ஐம்பது எம்.ஏ. மாணவர்கள் பட்டம் பெற்ற கையுடன் நல்ல வேலையை சம்பாதித்துக் கொண்டு போவது குறித்து ஏமாற்றத்தால் வருந்துகிறார்.

ஏனெனில் அவர்களில் யாருமே பி.எச்.டி. பெறுவதிலோ டாக்டரேட் படிப்புகள் படிப்பதிலோ அக்கறை காட்ட மாட்டேன் என்கிறார்கள். நல்ல உயர்தர மாணவர்களை இப்படிப்புக்கு இழுப்பது கடினமாகவே உள்ளது.

இந்த பிரச்சினை சென்னையில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ளது என்று கூறப்படுகிறது

"மாஸ்டர்ஸ் டிகிரி முடிந்ததும் நல்ல வேலை பெற்று வெளியில் சென்று விடுகின்றனர்" கூறுகிறார் ஸ்ரீவாஸ்தவ்.

ஆராய்ச்சி மாணவர்களின் இந்த வறட்சி சாதாரணமான மற்ற கல்வி கழகங்களுக்கு மட்டும்தான் இதுவரை இருந்துள்ளது. ஆனால் தற்போதோ மிகச் சிறந்த முன்னணி கல்வி அமைப்புகளும் இந்த வறட்சியிலிருந்து தப்பவில்லை என அவர் கூறுகிறார்.

அமார்த்யா சென் போன்ற நோபல் பரிசு பெற்றவர்கள், வணிக பொருளாதார நிபுணர் ஜகதீஷ் பகவதி ஆகியோர் சிலரை மேற்கோள் காட்ட முடிந்தாலும் இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் நடைபெறும் ஆய்வு சர்வதேச தரத்துக்கு ஏற்றதாக இல்லை.

உயர்தரமற்ற ஆசிரியர் குழுக்கள், குறைந்த அளவு ஸ்காலர்ஷிப் பணம், வேலை வாய்ப்பு ஆகிய விஷயங்களே நல்ல மாணவர்கள் பற்றாக்குறைக்கு காரணம் என்று இந்த கட்டுரை சம்பந்தமாகக் கேள்வி கேட்கப்பட்ட நான்கு பொருளாதார நிபுணர்கள் கூறினர். அவர்களில் மூவர் கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள்.

"அவ்வாறு பி.எச்.டி. படிக்க விரும்பும் மாணவர்களும் வெளிதேச பல்கலைக் கழகங்களுக்கு செல்லவே விரும்புகின்றனர், ஏனெனில் அங்கு அளிக்கப்படும் உதவித் தொகைகள் நமது இந்திய நிறுவனக்களுக்கு கட்டாது" என்று கூறுகிறார் IGIDR-ன் டைரக்டர் D. M. Nachane அவர்கள்.

இங்குள்ள ஆய்வு மாணவர்களுக்கு கிடைக்கும் உதவித் தொகை மாதத்துக்கு Rs 6,000 முதல் Rs 14,000 வரைதான்; சில இடங்களில் அது ரூபாய் 25,000 வரை கூட செல்கிறது. ஆனால் வெளி நாட்டு பல்கலைக் கழகங்களில் பாடக் கட்டணம் தள்ளுபடி, கூடவே மாதம் $800-லிருந்து $1,500வரை உதவித் தொகை. சான்ஸே இல்லை இந்திய கல்வி நிறுவனங்களுக்கு.

Nachane மற்றும் Srivastava உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். இது பற்றி MSE மற்றும் IGIDR சிந்தித்து வருகின்றன. Delhi School of Economics (DSE) கருத்து ஏதும் கூறவில்லை.

மாஸ்டர்ஸ் டிகிரியுடன் வரும் MSE மற்றும் IGIDR மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஆறு லட்சத்திலிருந்து 8 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. பி.எச்.டி. முடித்தால் மேலே 50,000 ரூபாய் கிடைக்கலாம் அவ்வளவுதான் என்கிறார் IGIDR-ன் Nachane.

ஆக இந்த விஷயத்தில் பி.எச்.டி. செய்வது ரொம்ப காஸ்ட்லியாகப் போய்விடுகிறது என்றும் அவர் கூறுகிறார். நேரே வேலைக்கு சென்றால் 4 ஆண்டுகளுக்கு 24 லட்சம் கிடைக்குமே, அதை விட்டுவிட அவர்கள் என்ன கேனைகளா?

அதே சமயம் ஆசிரியர் குழுவும் பாடத்திட்டங்களும் கூட சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை என்று கூறுகிறார் மிச்சிகன் பல்கலை கழகத்தில் முன்னாள் பொருளாதார பேராசிரியர் பார்த் ஜே. ஷா அவர்கள்.

பல்கலைக் கழகங்களில் உள்ள சம்பளவிகிதங்கள் திறமைக்கேற்ற ஊதியம் தரும் அளவுக்கு வளைந்து கொடுப்பதாக இல்லாததும் நல்ல ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆறாம் சம்பள கமிஷன் இதை சரி செய்யும் என அபிப்பிராயப்படுகிறார் திரு. Nachane.

ஷா அவர்கள் இன்னொரு விஷயத்தை கூறுகிறார். கல்வி நிறுவனங்கள் எந்தப் பல்கலைக் கழகத்துடன் தாங்கள் இணைந்து கொள்வது என்பதில் சுதந்திரம் இருப்பது நலம் என்கிறார். தற்சமயம் இந்த இணைப்பு பூகோள அடிப்படையில் செய்யப்படுகிறது. அது நீக்கப்பட வேண்டும் அப்போதுதான் பல்கலைக் கழகங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நல்ல கல்வி நிறுவனக்களை தங்களுடன் இணைக்கச் செய்வதில் போட்டி ஏற்படும் என்று அவர் கூறுகிறார்.

தற்சமயம் ஆண்டொன்றுக்கு சுமார் ஐந்து மாணவர்கள் ஓரிரண்டு காலம் வேலையில் இருந்துவிட்டு Madras School of Economics (MSE)-க்கு ஆய்வு படிப்புக்காக வருகின்றனர். ஆனால் அவர்கள் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் கோர்ஸுகளுக்கு தயார் செய்து கொள்ளவே அங்கு வருகின்றனர். இனிமேலாவது அவர்களில் சிலர் இங்கேயே தங்குவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறார் ஸ்ரீவாஸ்தவ் அவர்கள்.


மீண்டும் டோண்டு ராகவன். பதிவை முடிக்கும் முன்னால் ஒரு சிறு கதை சொல்லுவேன். இதய நோய் நிபுணராக பணிபுரியும் நாச்சிமுத்து அவர்கள் தன் வீட்டு வாஷ்பேசினை ரிப்பேர் செய்ய பிளம்பர் பேச்சிமுத்துவை கூப்பிடுகிறார். ரிப்பேருக்கு பின் பேச்சி முத்து தனது பில்லை நாச்சிமுத்துவிடம் தருகிறார். அதைப் பார்த்து நம்ம நாச்சிக்கு ரொம்ப ஷாக். பெருமூச்சு விட்டவாறே கூறுகிறார், "என்ன இது எனது பில்லைவிட அதிகமாக இருக்கிறதே" என்று. நீங்கள் சொல்வது சரி சார், நான்கூட உங்களை மாதிரி டாக்டராக இருந்தபோது இவ்வளவு ஃபீஸ் பெற்றதில்லை" என்கிறார் முன்னாள் மருத்துவர் பேச்சிமுத்து.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

வால்பையன் said...

//என்ன இது எனது பில்லைவிட அதிகமாக இருக்கிறதே" என்று. நீங்கள் சொல்வது சரி சார், நான்கூட உங்களை மாதிரி டாக்டராக இருந்தபோது இவ்வளவு ஃபீஸ் பெற்றதில்லை//

இந்த மாதிரி பிட்டைஎல்லாம் எங்கேயிருந்து புடிக்கிறிங்க.
தினம் ஒரு குட்டி கதை கிடைக்குமா

வால்பையன்

Unknown said...

சீக்கிரம் வந்து ஜோதில ஐக்கியம் ஆகுங்க
புதுகைச் சாரல்
http://mohideen44.blogspot.com

Unknown said...

ஐய்ய்யா......நான்தான் மொதல்ல!
"புதுகைச் சாரல் "

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது