10/19/2010

குஜராத் உள்ளாட்சி தேர்தலில் மோடியின் அபார வெற்றி

மொத்தமுள்ள ஆறு நகராட்சிகள் உட்பட, 558 இடங்களுக்கு 2,100 பேர் போட்டியிட்டனர். இதில், பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், ஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பவநகர் உள்ளிட்ட ஆறு நகராட்சிகளை பா.ஜ., கைப்பற்றியது. ஜாம்நகரில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ., வெற்றி பெற்றது. இதன் மூலம், குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மோடி அவர்கள் தன்னடக்கம் காரணமாக பாஜகவின் வெற்றி எனக்கூறினாலும் உண்மையில் இது மோடியின் தனிப்பட்ட வெற்றிதான்.

80 % வோட்டுகளுக்கு மேல் பெற்று, அவர் பல நகராட்சிகளில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றதில் குஜராத் இசுலாமியர்களின் பங்கும் உண்டு. பொறுக்குமா நம்மூர் ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு? இலவச டிவி இல்லை, இலவச வாயு இணைப்புகள் இல்லை, புடவைகள் வேட்டிகள் தானமாகத் தரப்பட்டதாகத் தெரியவில்லை. பின்னே இந்த மனிதரிடம் எந்த மந்திரக்கோல் உள்ளது என அவனவன் தலையைப் பிய்த்துக் கொள்வதாகக் கேள்வி.

சில வீடியோ காட்சிகள்:


மோடி விரோத என்டிடிவியில் காங்கிரஸ் தலைவரது புலம்பல் கீழே:


வெவ்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக பெற்ற வெற்றிகளின் விவரங்கள் இங்கே.



அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

அருள் said...

// //மோடி அவர்கள் தன்னடக்கம் காரணமாக பாஜகவின் வெற்றி எனக்கூறினாலும் உண்மையில் இது மோடியின் தனிப்பட்ட வெற்றிதான்.// //

உண்மைதான். குஜராத்தில் எப்போதும் வெற்றி பெறுவது மோடிதான். பா.ஜ.கவோ இந்துத்வமோ அல்ல. குஜராத் மக்கள் மோடியின் அரசியல் உறுதிக்குதான் வாக்களிக்கிறார்கள். இந்துத்வத்திற்கு அல்ல.

Anonymous said...

மோடியின் வெற்றிக்கு காரணம் முஸ்லிம்தான் காரணம் அதில் எந்த சந்தேகமுமில்லை. மோடியின் கையில் எப்போது சாவோமோ என்ற பயத்தில் பெருவாரியான முஸ்லிம்கள் வோட்டு போடவில்லை என்பதே உண்மை. நரமாமிச புகழ் மோடி குசராத் கலவரம் நடத்தி ௦௦௦ முஸ்லிகளின் உயிரை குடித்த சூட்டுடன் நடத்திய தேர்தலிலும்தான் மெசர்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது போலதான் இதுவும். இதில் என்ன பெருமையோ அவாளுக்குத்தான் வெளிச்சம்.

மகாராஜா

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///// உண்மைதான். குஜராத்தில் எப்போதும் வெற்றி பெறுவது மோடிதான். பா.ஜ.கவோ இந்துத்வமோ அல்ல. குஜராத் மக்கள் மோடியின் அரசியல் உறுதிக்குதான் வாக்களிக்கிறார்கள். இந்துத்வத்திற்கு அல்ல. /////

VALID POINT ...,Mr.Arul

Anonymous said...

//குஜராத் மக்கள் மோடியின் அரசியல் உறுதிக்குதான் வாக்களிக்கிறார்கள்.//

அந்த உறுதி ஏன் வேற எந்த அரசியல் வாதிகளுக்கும் / தலைவருக்கும் இருக்குறதில்லை....

நல்ல விஷயம்தானே... இருந்தாலும் ஏன் 'மோடிய' எல்லாரும் இப்பக் கூட புரிந்துகொள்ள மாட்டேங்கறாங்க..?

Anonymous said...

//
குஜராத் மக்கள் மோடியின் அரசியல் உறுதிக்குதான் வாக்களிக்கிறார்கள். இந்துத்வத்திற்கு அல்ல.
//

அதே போல் கலைஞருக்கு வாக்களித்தால் அது தி.மு.க வுக்கு அல்ல.

ஜே வுக்கு வாக்களித்தால் அது ஆ.இ.அ.தி.மு.க வுக்கு அல்ல.

ராமதாசுக்கு வாக்களித்தால் அது பா.ம. க வுக்கான வோட்டு அல்ல.

அப்படித் தானே ?

சுபத்ரா said...

குஜராத்தில் இருக்கும் இந்த ஒன்றரை வருடங்களில் ஒரு முறையேனும் மோடியைப் பற்றி குஜராத்தில் இருக்கும் ஒருவர் கூட மோசமாகப் பேசி நான் பார்த்ததேயில்லை.

Anonymous said...

மோடியின் அரசியல் உறுதி அவர் ஒரு இந்துத்வாவாதி என்பதால் தான்.

அவர் காங்கிரஸ் செக்குலர்வாதியாக இருந்திருந்தாலோ இல்லை குறியறுந்து ஒம்போதாகத் திரியும் கம்யூனிஸ்டாகவோ இருந்தால் இந்த அரசியல் ஸ்திரத்தன்மை அவரிடம் இருந்திருக்காது.

மூக்கில் குத்தும் முனியாண்டி ஐயர் said...

விசயம் இஸ்லாமியர்களும் பா.ஜ.க வுக்கு வோட்டு போட்டுள்ளனர் என்பது தான்.

செக்குலர் வாந்திகளுக்கு பேதி புடுங்கிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது.

அதுவும் முஸ்லீம்கள் எப்படி பா.ஜ.க வுக்கு வோட்டு போட்டார்கள் என்று அவர்கள் மரமண்டையில் ஏறவே இல்லை. வோட்டு பா.ஜ.க வுக்கு அல்ல, மோடியின் அரசியல் உறுதிக்கு, என்றெல்லாம் கொட்டித் தீர்க்கிறார்கள்.

அட முட்டாள் செக்குலர் முண்டங்களா, துலுக்கர்களிடம் சோராபுத்தீன் சேக்கு என்கவுண்டர், கோத்திரா கலவரம் போன்ற பருப்புகள் வேகவில்லை என்பது இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள்... குறியறுந்த நாய்களா.

Suresh Ram said...

நல்ல நேர்மையாக மக்கள் உள்ள மாநிலத்தில் நேர்மையான அரசியல்வாதிகள் உள்ளனர்.

மதுவிலக்கு உண்மையாகவே அமலில் உள்ள மாநில மக்களால் சிந்தித்து வாக்களிக்க முடிகிறது. இலவச கவர்ச்சி திட்டங்கள் இல்லை . குத்தாட்ட கவர்ச்சி, பண பட்டுவாடா குற்றச்சாட்டுகள் கூட இல்லை!

தமிழ் நாடு திராவிட மதம் வளர்க்கிறது . பார்பனன் சுரண்டுகிறான் என் கூறி திராவிட தலைவர்கள் சுரண்டுகின்றனர். தமிழ் நாட்டில் பணத்துக்கு வோட்டு போடும் முறை மக்களால் ஏற்றுகொள்ளபட்டு விட்டது.

Anonymous said...

//மோடியின் வெற்றிக்கு காரணம் முஸ்லிம்தான் காரணம் அதில் எந்த சந்தேகமுமில்லை. மோடியின் கையில் எப்போது சாவோமோ என்ற பயத்தில் பெருவாரியான முஸ்லிம்கள் வோட்டு போடவில்லை என்பதே உண்மை. நரமாமிச புகழ் மோடி குசராத் கலவரம் நடத்தி ௦௦௦ முஸ்லிகளின் உயிரை குடித்த சூட்டுடன் நடத்திய தேர்தலிலும்தான் மெசர்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது போலதான் இதுவும். //

790 இஸ்லாமியரைக் காப்பாற்ற வக்கற்றவர் மோடி என அவப்பெயர் பெற்ற அதே நேரத்தில் அவரால் 254 இந்துக்களையும் அவரால் காப்பாற்ற முடியவில்லை என்பதே உண்மை.

Madhavan Srinivasagopalan said...

//சுபத்ரா said..."குஜராத்தில் இருக்கும் இந்த ஒன்றரை வருடங்களில் ஒரு முறையேனும் மோடியைப் பற்றி குஜராத்தில் இருக்கும் ஒருவர் கூட மோசமாகப் பேசி நான் பார்த்ததேயில்லை.//

I was in GJ for 10 yrs.. GJ got much much better in all sense just after Modiji started leading the state.

For those outsiders who allege modiji.. , first you go to GJ and be there for couple of weeks.. U know what kind of good/great administration / governance the state is enjoying

Anonymous said...

/*குஜராத்தில் இருக்கும் இந்த ஒன்றரை வருடங்களில் ஒரு முறையேனும் மோடியைப் பற்றி குஜராத்தில் இருக்கும் ஒருவர் கூட மோசமாகப் பேசி நான் பார்த்ததேயில்லை. */

என்னங்க இப்படி சொல்லிடீங்க.......அயூப்கான் போலி என் கவுண்டர்...கோத்ரா மத கலவரத்தை தூண்டி பாதிரியார் உயிருடன் எரிப்பு என்று அடுக்கி கொண்டே போகலாம்..இதனால் இவருக்கு ஐரோப்பிய விசா மறுக்க பட்டு அங்கு போகமுடியாத ஒரு நிலையில் உள்ளார்....இதனை விட ஒரு கேவலம் யாருக்கும் வருமா? இதனை எல்லாம் டோண்டு பார்ப்பான் சொல்ல மாட்டார்...ஏன் என்றால் மோடி பி.ஜே.பி யில் இருந்து கொண்டு இவாளுக்கு தம்பட்டம் அடிக்கிறார் அல்லவா? அதனால்

Anonymous said...

ஐரோப்பிய விசா மறுக்கப்பட்டதாம்.

ந்ஷ்டம் ஐரோப்பாவுக்கு தானடா மடையா.

(அது சரி. அது அமெரிக்கா விசா இல்லையா?)

Anonymous said...

//
என்னங்க இப்படி சொல்லிடீங்க.......அயூப்கான் போலி என் கவுண்டர்...கோத்ரா மத கலவரத்தை தூண்டி பாதிரியார் உயிருடன் எரிப்பு என்று அடுக்கி கொண்டே போகலாம்..இதனால் இவருக்கு ஐரோப்பிய விசா மறுக்க பட்டு அங்கு போகமுடியாத ஒரு நிலையில் உள்ளார்....
//

ஐரோப்பாவுக்கு விசா மறுக்கப்பட்டவனெல்லாம் அயோக்கியன் அல்ல.

ஐரோப்பாவிசா கிடைத்தவனெல்லாம் யோக்கியனும் அல்ல.

இடி அமீன், ராபர்ட் முகாபே போன்ற கொடுங்கோலர்களுக்கெல்லாம் விசா கொடுத்து சிகப்புக் கம்பளம் விரிக்கும் ஐரோப்பிய, அமேரிக்க நாடுகளில் மோடி அனுமதிக்கப்படவில்லை என்றால் ஒன்றும் குடி முழுகிப்போயிவிடாது. நஷ்டம் அவர்களுக்குத் தான்.

வஜ்ரா said...

மோடியை பற்றி மேதாவி போல் பேசும் 100 க்கு 90 பேர் குஜராத்துக்கே போனதில்லை என்பது தான் நிதர்சன உண்மை.

அதுவும் மோடி என்றால் ஹிட்லர், இஸ்லாமியரின் எதிரி என்பவர்கள் குஜராத் மாநிலத்தில் எத்தனை சதவிகிதம் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் எவனோ சொன்னதை திரும்பச் சொல்லும் மாமேதைகள். இவர்களிடம் நல்லபெயர் வாங்கவேண்டும் என்று மோடிக்கோ, குஜராத் மக்களுக்கோ ஆசை இல்லை.

டோண்டு பாசையில் சொன்னால் "போடா ஜாட்டான்..."

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது