10/17/2008

சினிமா - மலரும் நினைவுகள்

லக்கிலுக்கின் அழைப்பை ஏற்று இப்பதிவை போடுகிறேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

சமீபத்தில் 1951-ல் காஞ்சனா என்னும் படம். எழுத்தாளர் லட்சுமி அவர்கள் எழுதிய, விகடனில் தொடராக வந்த “காஞ்சனையின் கனவு” என்ற தொடர்கதையை படமாக எடுத்திருந்தனர். பத்மினியின் அக்கா லலிதா நடித்திருந்தார். பல ஆண்டுகள் கழித்து அக்கதையை படித்தேன். நன்றாகவே கதையை சிதைக்காமல் எடுத்திருந்தார்கள் என்றுதான் கூற வேண்டும்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

இம்சை அரசன் புலிகேசி - 23 என்று நினைக்கிறேன். அது பற்றி மனதைக் கவர்ந்த வைகைப் புயல் மற்றும் இம்சை அரசன் தூண்டிய நினைவுகள் என இரு பதிவுகளும் போட்டுள்ளேன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கேபிள் டீவி உபயத்தில் பார்த்த படம் வீராப்பு. சுந்தர் சி நடித்தது. அது பற்றியும் நான் பதிவு போட்டுள்ளேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

பாண்டவர் பூமி. நான் தில்லியிலிருந்து சென்னைக்கு நிரந்தரமாக திரும்ப வந்த காலக்கட்டத்தில் அதே மாதிரி ஒரு தீம் வைத்து வந்த படம் பற்றி நான் போட்ட பதிவுகள் பாண்டவர் பூமியும் டோண்டு ராகவனும் மற்றும் அதற்கு பின்னால் வந்த இப்பதிவும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி நடந்த போராட்டங்களும் கமல் அதை தைரியமாக எதிர்க்கொண்டதும்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

அபூர்வ சகோதரர்கள். இப்போது கூட அப்புவாக எப்படி நடித்தார் என்பது எனக்குத் தெரியாது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வம்புகள் பிடிக்கும். எழுபதுகளில் “மூக்குத்தி” என்னும் பத்திரிகை வரும். அதில் வந்த வதந்தியும் விசாரித்த உண்மையும் என்று சுவையான வம்புகள் வரும். உதாரணம்: வதந்தி என்னவென்றால் வியட்னாம் வீடு சுந்தரத்துக்கு வலது உள்ளங்கையில் அம்மன் அருள் என்பதே. விசாரித்த உண்மை: அம்மன் அருள் எல்லாம் இல்லை. சுந்தரத்துக்கு அவரது தங்கமணியுடன் ஏற்பட்ட சண்டையில் அம்மணி மேற்படி சுந்தரததை சமையலறையில் வைத்து தள்ளி விட, அதே நேரே அடுப்பின் மேல் சூடாக இருந்த தோசைக்கல்லின் மேல் வலது உள்ளங்கையை பதித்து அடுப்பின் மேல் விழ, அந்த சூட்டைத்தான் அம்மன் அருள் என்று கூறுவதாக செய்தி வந்தது.

7.தமிழ் சினிமா இசை?

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பழைய பாடல்கள் என்னை இன்னமும் கவருகின்றன.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
Pot Bouille என்னும் பிரெஞ்சு படத்தை சப்டைட்டில்களை பார்க்காமல் இருக்க கண்ணாடி அணியாது பார்த்தேன். எமிலி ஜோலாவின் அதே தலைப்பை உடைய புதினதின் படமாக்கம் மூலக்கதையை விட வெகு ஜோர். எனது அபிமான பிரெஞ்சு நடிகர் ஜெராற் ஃபிலிப் நடித்த படமாக்கும். அதிகம் தாக்கிய படம் Fiddler on the roof. சமீபத்தில் 1976-ல் பார்த்தேன். யூதக்கதை நடிப்பு எனது அபிமான இஸ்ரவேல நடிகர் டோபோல். டோண்டு ராகவனுக்கு பிடிக்காமல் இருக்குமா?

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

கமலஹாசன் என்னுடைய மாமா பிள்ளை பார்த்தசாரதியின் மனைவி நிர்மலாவின் அண்ணா ரகுவின் மனைவி நளினியின் தம்பி. அவரை நான் நன்கு அறிவேன். ஆனால் அவருக்குத்தான் என்னைத் தெரியாது. :))

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ் சினிமா என்றில்லை, ஹாலிவுட் சினிமாக்களே வருங்காலங்களில் உருப்படாது என அமெரிக்காவில் பலர் கூறியதாக சமீபத்தில் 1963-ல் ஆர்.கே. நாராயணனின் அமெரிக்க நினைவுகள் பற்றிய விகடன் தொடரில் படித்துள்ளேன். நான் கூறவருவது என்னவென்றால், இம்மாதிரி பேச்சுக்கள் சர்வசாதாரணமாக வந்து கொண்டிருக்கும். திரையுலக்ம் பாட்டுக்கு அதன் போக்கில் செல்லும் அவ்வளவே.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எல்லோரும் வேறு ஏதேனும் உருப்படியான வேலை பார்ப்பார்கள்.

நான் அழைக்க விரும்புவது:
1. என்றென்றும் அன்புடன் பாலா
2. டி.பி.ஆர். ஜோசஃப்
3. செல்வன்
4. அதிஷா
5. ப்ரூனோ
6. உண்மைத்தமிழன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

64 comments:

Anonymous said...

அவ் தூக்கம் தூக்கமா வருது டோண்டு சார் பதிவை படித்தால் அவில் மாத்திரை தேவை இல்லை உடன் தூக்கம் நிச்ச்யம்

அக்னி பார்வை said...

//கமலஹாசன் என்னுடைய மாமா பிள்ளை பார்த்தசாரதியின் மனைவி நிர்மலாவின் அண்ணா ரகுவின் மனைவி நளினியின் தம்பி.//

தல,
கன்பிசின் ஆயிட்டென்...நேரா சொல்லுங்க ..கமல் உங்களுக்கு என்ன உறவு?....

Anonymous said...

இலங்கை தமிழர்களை காப்பாற்ற
இன்சொல் வீரர் கலைஞர்
இட்ட கட்டளையை ஏற்று
இடியெனக் கிளம்பும் ராஜினமா
இயல் இசை நாடகம்

இதுக்கு உங்கள் பதில்?


உடனடி பதில் கொடுக்கவும்.அடுத்த 24.10.2008 கேள்வி பதிலுக்குள் கதை வேறு திசையில் சென்றுவிடும்.

dondu(#11168674346665545885) said...

//கன்பிசின் ஆயிட்டென்...நேரா சொல்லுங்க ..கமல் உங்களுக்கு என்ன உறவு?...//
வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், கமல் எனது அம்மாஞ்சி மன்னியுடைய மன்னியின் தம்பியாவார்.

ஆனால் இது உறவே அல்ல. அதாவது எனது உறவுமுறை அம்மாஞ்சி மன்னியுடன் நின்று விடுகிறது. திருமணம் மூலம் ஏற்படும் உறவுகள் ஒரு ஸ்டெப்பிலேயே நின்றுவிடும். பிறகு இம்மாதிரி கூறிக் கொண்டே போனாலும் ஒரு உறவும் இல்லை. வெறுமனே உறவு சங்கிலிதான், அதுவும் முதல் கண்ணியிலேயே பிளாக் ஆகும் சங்கிலி.

இப்ப புரிகிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//Anonymous said...
அவ் தூக்கம் தூக்கமா வருது டோண்டு சார் பதிவை படித்தால் அவில் மாத்திரை தேவை இல்லை உடன் தூக்கம் நிச்ச்யம்//

பொறுமை தேவைதான்
அதற்காக இந்தக் குத்துக்குகூட பதிலடி தர மறுப்பது ஏன்?

புரியவில்லை,விளக்கவும்

-

dondu(#11168674346665545885) said...

இதில் என்ன குத்து வந்தது. தூக்கம் வருதுன்னு சொன்னா சந்தோஷம்தானே. அவில் மாத்திரை செலவு மிச்சம் அல்லவா?
அது சரி, அவில் மாத்திரையெல்லாம் சாதாரணமாக உடல் ஒவ்வாமையால் ஏற்படும் அரிப்புகளுக்காகத்தானே தருவார்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//உடனடி பதில் கொடுக்கவும்.அடுத்த 24.10.2008 கேள்வி பதிலுக்குள் கதை வேறு திசையில் சென்றுவிடும்.//
அதாவது கலைஞரோ அல்லது மற்ற மந்திரிகளோ ராஜினாமா செய்யாமல் போய்விடுவார்கள் என்ற அச்சத்தை சூசகமாக வெளியிடுகிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

please explain the following with an example ( based on the latest trends in tamilnadu )

1.violence(ஹிம்சை)

2.greed(பேராசை)

3.ambition(புகழ்பெறவேண்டும் என்ற ஆசை)

4.competition(போட்டிமனப்பான்மை)

5.brutality(பண்பற்ற மிருகத்தனம்)

6.vanity(தற்பெருமை)

7.jealously(பொறாமை)

9.ideologies(கொள்கைகள்)

10.beliefs(நம்பிக்கைகள்)

ராமகிருஷ்ணஹரி

Anonymous said...

//dondu(#11168674346665545885) said...
//உடனடி பதில் கொடுக்கவும்.அடுத்த 24.10.2008 கேள்வி பதிலுக்குள் கதை வேறு திசையில் சென்றுவிடும்.//
அதாவது கலைஞரோ அல்லது மற்ற மந்திரிகளோ ராஜினாமா செய்யாமல் போய்விடுவார்கள் என்ற அச்சத்தை சூசகமாக வெளியிடுகிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்


மிகச் சரியா கணிச்சிட்டீங்க.

இருந்தாலும் தமிழ் மொழி மேலுள்ள பற்றை,தமிழர் நலன் மேலுள்ள கரிசனத்தை யாரும் குறைத்து மதிப்பிடுவது, தமிழன்னைக்கு செய்யும் துரோகமாக் கூடாது

29-10-2008 நல்ல பொழுதாக விடியட்டுமே!

பரந்து விரிந்து கிடக்கும் 5 கண்டங்களிலும் வாழும் 8 கோடி தமிழர் சார்பில்

Unknown said...

தலைவர்களின் நிறை/குறைகளை பட்டியலிடவும்

1.தேசப்பிதா காந்தி மகான்
2.தலைவர் ஜின்னாஜி
3.சட்ட மேதை அம்பேத்கார்ஜி
4.பெரியவர் நேதாஜி
5.மூதறிஞர் ராஜாஜி
6.பண்டிட் நேருஜி
7.நேர்மையாளர் மொராஜி
8.தூய்மையாளர் சாஸ்திரிஜி
9.பண்பாளர் நந்தாஜி
10.அன்னை இந்திராஜி

dondu(#11168674346665545885) said...

//இருந்தாலும் தமிழ் மொழி மேலுள்ள பற்றை,தமிழர் நலன் மேலுள்ள கரிசனத்தை யாரும் குறைத்து மதிப்பிடுவது, தமிழன்னைக்கு செய்யும் துரோகமாகக் கூடாது//
அதெல்லாம் இருக்கட்டும், சில நினைவுகள் கிளர்ந்தெழுகின்றன. தொண்ணூறுகளில் அகில இந்திய காங்கிரஸ் காரியக்கமிட்டிக்கு தேர்தல் நடந்து முடிந்தது. அதில் ஒரு தலித்தும் இல்லை. அதை குறை கூறிய நரசிம்மராவ், தான் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் லிஸ்டில் இருந்திருந்தால் இதற்காக உடனே ராஜினாமா செய்திருப்பேன் என கூறினார். ஒன்றை கவனிக்கவும். பிரதமர் நரசிம்ம ராவ் அவர் வகித்த பதவியின் காரணமாக காரியக் கமிட்டியில் உறுப்பினர். ஆனால் தான் மட்டும் ராஜினாமா செய்ய மாட்டாராம். ஊராரை ராஜினாமா செய்ய சொல்லுவார்.
எம்-பி.க்கள் விஷயத்துக்கு வருவோம். 40 எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்ல இவர் யார்? திமுக எம்பிக்களை பற்றி பேசட்டும். இல்லை தனது மந்திரிசபையுடன் சேர்ந்து தன் பதவியை ராஜினாமா செய்யட்டும். அதுவும் எம்பி பதவியை ராஜினாமா செய்தாலும் திமுக மத்திய மந்திரிகள் மந்திரி பதவியையும் ராஜினாமா செய்வார்களா? எப்படியும் 6 மாதங்களில் லோக்சபாவின் பதவிக்காலமே முடியப் போகிறது. இப்போது என்ன ஸ்டண்ட்? யார் காதில் பூச்சுற்ற இந்த நாடகம்?

பை தி வே, ஒரு கவுண்டமணி செந்தில் காமெடி காட்சியில், ஊர்ப்பெரியவரான கவுண்டமணி ஒரு பெண் குழந்தைக்கு முருகேசி என பெயர் வைக்க, “அண்ணன் முருகேசிக்கு 200 ரூபாய் மொய் வைப்பார்” என செந்தில் உதார் விடும் காட்சி எந்த படத்தில் வருகிறது? யாரேனும் கூறினால் தன்யனாவேன். (படத்தின் பெயர் “நினைவுச் சின்னம்” எனக் கூறுகிறார் லக்கிலுக்)

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//தல,
கன்பிசின் ஆயிட்டென்...நேரா சொல்லுங்க ..கமல் உங்களுக்கு என்ன உறவு?....
//
சகலை

dondu(#11168674346665545885) said...

சகலை என்பது இங்கு தவறான புரிதல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Rajaraman said...

ராகவன் சார், அது என்ன 1951 ஆண்டை கூட சமீபத்தில் என்று குறிப்பிடுகிறீர்கள்?

pt said...

உங்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப் பட்டால் என அதிரடி முடிவுகளை எடுப்பீர்கள்

1.இந்திய பிரதமராக
2.இந்திய நிதி அமைச்சாராக
3.இந்திய உள்துறை அமைச்சராக

4.இந்திய காங்கிரஸ் தலைவராக
5.செபி(sebi) தலைவராக
6.RBI தலைவராக
7.ரிலயன்ஸ் குழுமத்தின் தலைவராக
8.cpi(m) தலைவராக
9.திமுக/அதிமுக தலைவராக
10.பாஜக தலைவராக

ees said...

//பை தி வே, ஒரு கவுண்டமணி செந்தில் காமெடி காட்சியில், ஊர்ப்பெரியவரான கவுண்டமணி ஒரு பெண் குழந்தைக்கு முருகேசி என பெயர் வைக்க, “அண்ணன் முருகேசிக்கு 200 ரூபாய் மொய் வைப்பார்” என செந்தில் உதார் விடும் காட்சி எந்த படத்தில் வருகிறது? யாரேனும் கூறினால் தன்யனாவேன்//


ஊர் மரியாதை .. K.S.ரவிக்குமார் Film

Anonymous said...

வன்னிக்கான உணவு வினியோகத்தை தடுப்பதற்காக புலிகள் பேராற்று பாலத்துக்கு குண்டு வைத்து தகர்த்துள்ளதுடன், உணவு வாகன தொடரணி நோக்கி ஆட்டிலறி குண்டுத்தாக்குதலையும் நடாத்தியுள்ளனர்

வன்னியூரான்

lorries03-10-2008 அன்று இலங்கை அரசாங்கத்தின் வன்னிக்கான முதலாவது உணவு வாகன தொடரணி ஏ9 வீதியிலுள்ள மாங்குளத்தை அடைந்து,பின்னர் கிழக்கு நோக்கி திரும்பி 15மைல்கள் பயணம் செய்து ஒட்டிசுட்டானை அடைந்து,அங்கிருந்து வடக்கு நோக்கி திரும்பி 6மைல் தூரத்திலுள்ள புதுக்குடியிருப்பை அடைந்து,அங்கிருந்து திரும்ப மேற்கு நோக்கி திரும்பி 7மைல் தொலைவிலுள்ள தருமபுரம், கண்டாவளை பகுதிகளுக்கு சென்று,அங்கு உணவுப்பொருட்கள் இறக்கப்பட்டு, அவை பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் ஊடாக இடம் பெயர்ந்த மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. நேரடியாக ஏ9 வீதி வழியாக செல்லவேண்டிய உணவுப்பொருட்கள் சுற்றி வளைத்து ‘ப’வடிவத்தில் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதற்கு காரணம், முறிகண்டி பிரதேசத்தில் ஏ9 வீதியை அண்டிய பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகள் நடைபெறுவதேயாகும். இந்த பிரதேசத்தினூடாக உணவுப்பொருட்களை வரவழைப்பதன் மூலம் இராணுவத்தின் யுத்தநடவடிக்கைகளை நிறுத்தவைக்கலாம் என புலிகள் திட்டம்போட்டனர். ஆனால் அரசாங்கம் பாதையை மாற்றியதால் புலிகளின் திட்டம் தவிடுபொடியானது. இதனால் ஏமாற்றமடைந்த புலிகள்,வன்னிக்கான உணவு விநியோகத்தை சீர்குலைக்க முடிவுசெய்தனர். உணவு விநியோகத்தை சீர்குலைத்துவிட்டால், இலங்கை அரசாங்கம் வன்னிமக்களுக்கு உணவுப்பொருட்கள் அனுப்பாமல் பட்டினிபோட்டு கொலைசெய்கிறது என பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்பதே புலிகள் போட்ட திட்டமாகும். எனவேதான் உணவு லொறிகள் செல்லும் மார்க்கமான மாங்குளம் - ஒட்டிசுட்டான் வீதியில் 9வது மைலில் இருக்கும் பேராறு பாலத்துக்கு குண்டு வைத்து தகர்த்தனர். அதன்காரணமாகவே இலங்கை அரசாங்கம் 10-10-2008 அன்று அனுப்புவதாக திட்டமிட்ட இரண்டாவது வாகனத்தொடரணி இடையில் தாமதிக்கவேண்டி வந்தது. பின்னர் 14-10-2008 அன்று புளியங்குளம் - நெடுங்கேணி - ஒட்டிசுட்டான் வழியாக இரண்டாவது வாகனத்தொடரணி வன்னிக்கான உணவுகளை எடுத்துச் சென்றது.

பாலத்தை உடைத்த புலிகள், அதன்பழியை வழமைபோல இலங்கை இராணுவத்தின் ஆழஊடுருவும் அணியின் தலையில் போட்டுள்ளனர். இது முழுக்க முழுக்க ஒரு புரட்டுக்கதையாகும். இப்படி புலிகளின் எத்தனையோ அப்பட்டமான பொய்களை கேட்டுப்பழகிப்போன வன்னிமக்கள் இதையும் கேட்டு மௌனமாக மனதுக்குள் சிரித்துக்கொண்டனர். ஏனெனில் வன்னியில் பலத்துச்சிரிப்பதற்கு வாய் திறந்தாலும் அதற்கும் தண்டனை கிடைக்கும்! வவுனியாவிலிருந்து இன்று 16-10-2008, புளியங்குளம் - நெடுங்கேணி - ஒட்டிசுட்டான் வழியாக வன்னிக்கு உணவினை எடுத்துச் செல்வதற்காக புறப்பட்ட மூன்றாவது வாகனத்தொடரணி, புலிகளின் ஆட்டிலறி குண்டுத்தாக்குதல்களுக்கு இலக்காகியது. இதனால் மூன்றாவது வாகனத்தொடரணி தனது வன்னிக்கான பயணத்தைக் கைவிட்டு புளியங்குளம் சந்திக்கு அப்பால் செல்ல முடியாமல் வவுனியாவிற்கு திரும்பியுள்ளது. மாங்குளத்திலிருந்து ஏ9 வீதிக்கு கிழக்கே 9வது மைலில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருக்கும் பேராறு பாலத்தை,ஏ9 வீதிக்கு மேற்கே யுத்தத்தில் ஈடுபட்ருக்கும் இலங்கை இராணுவம் குண்டுவைத்து தகர்த்தது என்றால் மக்கள் நம்பமாட்டார்கள் என்பதால்தான் ,இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் தலையில் புலிகள் பழியைப்போட்டனர். ஏனெனில் கடந்தகாலஙகளில்; வன்னியில் புலித்தலைமையுடன் முரண்பாடு கொண்டுள்ள, கொல்லப்பட்ட மாத்தையாவுக்கு விசுவாசமான குழுவினர், சூசையின் ஆட்கள் போன்றவர்களால் நடாத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதல்களையும், இலங்கை இராணுவத்தின் ஆழஊடுருவும் அணி செய்துவந்ததாகவே புலிகளின் தலைமை தமிழ்மக்களுக்கு படம்காட்டி வந்துள்ளது. எனவே இதையும் அந்தக்கணக்கில் சேர்த்துவிட்டால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்பதே புலி ‘கொயபல்ஸ்’மூளைகளின் திட்டம்.

பேராறு என்பது வவுனியாவிலிருந்து ஆனையிறவு கடலேரி வரை பாயும் ஒரு ஆறாகும். வவுனியா பகுதிகளில் பருவமழையின் போது பெய்கின்ற மழைநீர் இந்த ஆற்றின் மூலமே கிளிநொச்சியிலுள்ள இரணைமடு குளத்தைச் சென்றடைகிறது. மீதி நீர் ஆனையிறவு கடல்நீரேரிக்கு செல்கின்றது. இந்த ஆறு ஏ9 வீதியிலிருந்து முல்லைத்தீவு செல்லும் வீதிகளை மூன்று இடங்களில் ஊடறுக்கிறது. பேராற்று நீர் தங்குதடையின்றி செல்வதற்காக இம்மூன்று இடங்களிலும் வீதியின் மேல் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. முதலாவது பாலம்,புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணியூடாக முல்லைத்தீவு செல்லும் பாதையில்,சின்னப்பரந்தனுக்கும் மதியாமடுவுக்கும் இடையில் பேராறு ஊடறுக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இரண்டாவது பாலம்,மாங்குளத்திலிருந்து ஒட்டிசுட்டான் ஊடாக முல்லைத்தீவு செல்லும் பாதையில்,கறுப்பட்டைமுறிப்புக்கும் ஒலுமடுவுக்கும் இடையில் பேராறு ஊடறுக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் இந்திய இராணுவத்துடன் புலிகள் போர் புரிந்தகாலத்தில், அவர்களது ‘சக்திமன்’(sakthiman) என்ற இராணுவ ட்ரக்வண்டியை, முதன்முதலாககண்ணி வெடிவைத்து பிரட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது பேராற்றுப்பாலம் பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்புக்கூடாக முல்லைத்தீவு செல்லும் பாதையில், கண்டாவளைக்கு செல்லும் வெலிக்கண்டல் சந்திக்கு அருகாமையில் கட்டப்பட்டுள்ளது. தரையிலிருந்து சுமார் சுமார் 50அடி ஆழத்தில் பாயும் பேராற்றின் மேல்,பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் மிக உறுதியுடன் கட்டப்பட்ட இந்தப்பாலங்கள், அரசாங்க பெருந்தெருக்கள் திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு, இன்றுவரை பாவிக்கப்பட்டு வருகின்றன. புலிகள் மாங்குளம் - முல்லைத்தீவு பாதையிலுள்ள பாலத்தை குண்டு வைத்து தகர்த்துள்ளதுடன், அரசாங்கம் மாற்றுப்பாதையாக புளியங்குளம் - முல்லைத்தீவ வீதியைப் பயன்படுத்தலாம் என்று கருதி,அப்பாலத்தையும் தகர்க்க முயன்றுள்ளனர். பாலங்களைத் தகர்த்து வன்னிக்கு உணவுப்பொருட்கள் செல்வதை தடுத்துவிட்டால், அரசாங்கம் வன்னி மக்களை பட்டினிபோட்டு கொல்கிறது என்று உரத்துக்கத்தி சர்வதேச சமூகத்தை ஏமாற்றலாம் என்பது புலிகள் போட்டுள்ள திட்டம்.

இவர்கள் சொல்வதை தமிழ்நாட்டிலுள்ள இவர்களது புகழ்பாடும் அரசியல் நடிகர்கள்,சினிமாபாணியில் ஜிகினா வேலைப்பாடுகளுடன் திருப்பி அழகாக வசனம் பேசி தமிழகமக்களை ஏமாற்றுவதற்கும்,வன்னியில் என்ன நடக்கிறது என்று அறியாமல், எழுந்தமானத்தில் இலங்கை அரசைக் கண்டித்துதீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கும், இது வசதியாக இருக்கும். இவ்வாறாக புலிகளின் ‘தேசியவிடுதலை’ வியாபாரம் தமிழ்நாட்டிலும் புலம்பெயர்நாடுகளிலும் கொடி கட்டிப்பறக்கும். பணவசூல் குவியும். ஆனால் என்னதான் புலிகள் தகிடுதத்தங்கள் செய்தாலும் ஒன்று மட்டும் நடக்கப் போவதில்லை. அதாவது வன்னியிலுள்ள மக்கள் புலிகளது பிரச்சாரங்களை ஒருபோதும் நம்பப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் இவர்களது கொடிய அடக்குமுறை நிர்வாகத்தின் கீழ் தமது நரக வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்களல்லவா?

Anonymous said...

அரசியல் பிரச்சினைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வு இல்லை . என்னிடம் தெளிவான நிலைப்பாடு; ஜனாதிபதி

mahinda-18இந்து' ஆங்கில நாளேட்டின் ஆசிரியரான என். ராமுடன் கொழும்பிலிருந்து நேற்று முன்தினம் வியாழக் கிழமை காலை தொலைபேசியூடான உரையாடலின் போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான அரசியல் தீர்வு தொடர்பாக தான் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அரசியல் பிரச்சினைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது என்பதிலும் தான் தெளிவுடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து வெளியாகும் "இந்து' ஆங்கில நாளேட்டின் ஆசிரியரான என். ராமுடன் கொழும்பிலிருந்து நேற்று முன்தினம் வியாழக் கிழமை காலை தொலைபேசியூடான உரையாடலின் போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான உரையாடலை "இந்து' பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தலைப்புச் செய்தியாக பிரசுரித்திருந்தது.

தொலைபேசி உரையாடல் தொடர்பாக என். ராம் கூறியிருப்பதாவது;

வன்னியில் மோதல்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், இடம்பெயர்ந்தோரின் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தனது அரசாங்கம் அதிக உயர்ந்த பட்சமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக ஜனாதிபதி அழுத்தியுரைத்தார். நாம் அவர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். புலிகளுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அரசாங்கத்தால் அனுப்பப்படும் உணவுப் பொருட்களில் 70 சதவீதமானவை புலிகளிடம் சென்றுவிடுகின்றன என்பது எமக்குத் தெரியும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

நிலைமையின் சிக்கலான தன்மைகள் குறித்தும் ஐ.நா. முகவரமைப்புகள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுடன் நிவாரண வேலைகள் தொடர்பாக ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட குறித்த சில பிரச்சினைகள் தொடர்பாகவும் விபரமாக தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ அண்மையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் தான் வழங்கிய உறுதிமொழியை மீள வலியுறுத்தினார். "வடக்கிலுள்ள எமது சகோதர, சகோதரிகள் தற்காலிகமாக எதிர்நோக்கியுள்ள சகல கஷ்டங்களும் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்துவிடும்' என்று ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டில் உறுதியளித்திருந்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்துடன் கலந்துரையாடலை நடத்தியிருந்த ஜனாதிபதி ராஜபக்ஷ விரைவில் டில்லிக்கு விசேட தூதுவர் ஒருவரை அனுப்பவுள்ளார். கடந்த அக்டோபர் 6 இல் இந்தியா தெரிவித்திருந்த கவலைகள் தொடர்பாகவும் நிலைவரம் குறித்தும் முழுமையாக விளங்கப்படுத்துவதற்காக விசேட தூதுவரை விரைவில் டில்லிக்கு அவர் அனுப்பவிருக்கிறார்.

வெற்றிகரமாக இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் அரசியல் தீர்வுக்குமிடையிலான தொடர்பு பற்றி குறிப்பிட்ட ராஜபக்ஷ, தீர்வானது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமே தவிர புலிகளுக்கு அல்ல என்று குறிப்பிட்டார்.

"பயங்கரவாதிகளுக்கு தீர்வை வழங்குவதால் பயன் என்ன? அவர்கள் பயங்கரவாதத்தை கைவிட மாட்டர்கள்' என்று அவர் குறிப்பிட்டார். கடந்த அக்டோபர் 11 இல் சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றும் போது "ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து ஜனநாயக நீரோட்டத்தில் பிரவேசிக்க வேண்டும்' என்று அவர் புலிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

முன்னரொரு போதுமில்லாத வகையில் புலிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதுடன் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். "விரைவில் அப்பகுதிகளையும் நாம் மீட்டுவிடுவோம்' என்று குறிப்பிட்ட ஜனாதிபதி ராஜபக்ஷ, மக்கள் (வடமாகாண) முடிவு செய்ய (தேர்தல்) விட்டுவிடுவோம்' என்று விபரித்தார்.

இனநெருக்கடிகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காண்பதற்கு கருத்தொருமைப்பாடு காண்பதற்கான பொறுப்பை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிடம் ஒப்படைத்திருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அத்தகைய தீர்வு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பாலும் செல்ல முடியுமெனவும் அரசியலமைப்பில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளத் தேவைப்படும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினூடாக கட்சிகள் இதனை உறுதிப்படுத்த முடியுமெனவும் சுட்டிக்காட்டினார்.

13 ஆவது திருத்தம் இந்தியா அறிமுகப்படுத்தியது என்பதை ஞாபகமூட்டிய ஜனாதிபதி, தென்னிலங்கையில் எதிர்ப்பு தோன்றியதால் அது அமுல்ப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

ஆனால், கிழக்கு மாகாணத்தில் அதனை அமுல்ப்படுத்த நாம் ஆர்வம் காட்டியுள்ளோம் விடுதலைப்புலிகளின் பிரசன்னத்திலிருந்து மாகாணத்தின் சகல பகுதிகளையும் மீட்டபின் தேர்தல்கள் அங்கு வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளன. பொதுமக்களின் இழப்புகளின்றி அவற்றை நாம் மேற்கொண்டோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) அவர் சிறுபான்மைச் சமூகத்தவராக இருந்தபோதும் ஜனாதிபதி முதலமைச்சராக நியமித்துள்ளார். புதிய முதலமைச்சர் சிறப்பாக செயற்படுகிறார். கிழக்கு மாகாணத்திற்கென ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் இந்தியாவில் பயிற்சிபெற்றவர்கள் என்று ராம் குறிப்பிட்டிருக்கிறார்.

வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை இலங்கைப் பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய பின்னர் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு இறுதி போசனைகளை முன்வைத்துவிடும் என்பது பற்றி எச்சரிக்கையுணர்வுடன் கூடிய நம்பிக்கையையே ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்.

இவற்றை (சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் சிபார்சுகள்) தெற்கில் முன்வைத்து அமுல்ப்படுத்தப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமானால் எதிரணியின் ஒத்துழைப்பு அவருக்கு தேவைப்படும் என்பதும் அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுமே இதன் அர்த்தமாகும் என்று இந்து ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

http://thenee.com/html/181008-6.html

Anonymous said...

ஒருகல்லில் இரு மாங்காய் அடிக்கும் ஜெயலலிதா!

சு.சீனிவாசன்

thuklak-171008முன்னாள் தமிழக முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தலைவியும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவியுமான செல்வி ஜெயலலிதா ஜெயராம் இலங்கை தமிழர் விவகாரத்தில் எடுத்துள்ள நிலைப்பாடு, அரசியல்ரீதியாகவும் தந்திரோபாயரீதியாகவும் தமிழக முதல்வர், திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர், மு.கருணாநிதியை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, தமிழ்மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சமவுரிமை கோரி நடாத்திவருகின்ற போராட்டத்தை தனது கட்சி முழுமையாக ஆதரிப்பதாகவும் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை தார்மீகரீதியில் ஆதரிப்பதாகவும் மிகத்தெளிவாக கூறியிருக்கிறார். அதேவேளை தமிழ்மக்களின் பெயரால் புலிகள் நடாத்திவருகின்ற மனிதப்படுகொலைகளையும் பயங்கரவாத செயல்பாடுகளையும் தான் ஏற்றுக்கொள்ளாததுடன்,மிக வன்மையாக கண்டிப்பதாகவும் உறுதியுடன் தெளிவுபடுத்தியிருக்கிறார். இலங்கை தமிழர் பிரச்சினை என்பது ஏனைய தமிழக அரசியல்வாதிகள் சொல்வதுபோல ஒன்றல்ல,அது இரண்டு வகையானது என அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஒன்று,அங்குள்ள தமிழ்மக்கள் பிரச்சினை சம்பந்தமானது. மற்றது, விடுதலைப்புலிகளின் எதேச்சாதிகார அதிகாரம் சம்பந்தமானது என்பதே ஜெயலலிதாவின் நிலைப்பாடு.

இலங்கை தமிழர் விவகாரம் சம்பந்தமாக இவ்வளவு தெளிவாக கருணாநிதி மட்டுமல்ல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட சொல்லவில்லை எனலாம். அவர்கள் தமிழ்மக்களின் பிரச்சினைக்கும் புலிகளின் நோக்கங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை பார்க்கத்தவறுவதுடன், தமிழ்மக்களுக்கான ஆதரவிலும் தெளிவான நிலைப்பாட்டில் இல்லை என்பதை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் எடுத்துக்காட்டியுள்ளன. அரசியல்ரீதியான ஆதாயங்கள் பெறுவதற்காக பெரும்பாலான தமிழக அரசியல்கட்சிகள் இலங்கை தமிழர்களை ஆதரிப்பதாக கூறிக்கொண்டு, உண்மையில் இலங்கைத்தமிழருக்கு பலவழிகளிலும் கேடுவிளைவித்துவரும் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதே நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் பார்க்கையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு தமிழ்மக்களுக்கெதிரான சிங்கள பேரினவாதத்தின் செயல்பாடுகளையும் புலிப்பாசிசவாதத்தையும் தெளிவாக எதிர்க்கின்றது.

இலங்கையில் இரண்டு வாரங்களுக்குள் இந்திய அரசாங்கம் தலையிட்டு போர்நிறுத்தம் கொண்டுவரவேண்டும் அல்லது தமிழக எம்.பிகள் அனைவரும் பதவி விலகுவார்கள் என கருணாநிதி கூட்டிய அனைத்துகட்சி கூட்டத்தில் எடுத்த முடிவையும் வெறும் கண்துடைப்பு என வர்ணித்த ஜெயலலிதா, போர்;நிறுத்தம் பற்றியும் மிகவும் சரியான ஒரு நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார். போர் நிறுத்தம் செய்யக்கோருவது புலிகளைக் காப்பாற்றும் செயல் என மிகத்தெளிவாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது இன்னொரு வார்த்தையில் கூறுவதானால் இலங்கையில் புலிகளின் பிரச்சினை என்பது இராணுவரீதியில் அதாவது யுத்தத்தின் மூலமே தீர்க்கப்படவேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கையில் நிலவுகின்ற பிரச்சினையை மிகச்சரியாக விளங்கிக்கொண்டு,அதற்கான யதார்த்தபூர்வமான தீர்வை முன்வைத்த ஒரேயொரு தமிழக தலைவர் மட்டுமின்றி, அகில இந்திய தலைவரும் செல்வி ஜெயலலிதாவே என்று கூறலாம். மற்றொருபுறத்தில் இலங்கைத்தமிழருக்கு ஆதரவாக கருணாநிதி போடும் வேசத்தை அம்பலப்படுத்திய ஜெயலலிதா, கருணாநிதிக்கு உண்மையில் இலங்கைத்தமிழர் மீது அக்கறை இருந்தால்,மத்திய அரசுக்கான ஆதரவை முற்றாக விலக்குவதுடன், அவரது தமிழக அரசும் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவரது இந்த சாணக்கியம்மிக்க தந்திரோபாயம் கருணாநிதியை பெரும் இக்கட்டில் மாட்டிவிட்டுள்ளது. ஏனெனில் இடதுசாரிகள் அணு ஆயுதப்பிரச்சினையில் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கியபின்,நுலிழைப்பெரும்பான்மையில் ஆடிக்கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசாங்கம், கருணாநிதி ஆதரவை விலக்கிவிட்டால் கவிழ்ந்துவிடும். கருணாநிதி அவ்வாறு செய்தால் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினதும் கம்யூனிஸ்ட் கட்சிகளினதும் ஆதரவை இழந்து, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் நுலிழையில் தொங்கிக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசாங்கத்துக்கான ஆதரவை காங்கிரஸ் விலக்கும். அப்பொழுது கருணாநிதியின் ஆட்சி கவிழுவது தவிர்க்கமுடியாதது.

இந்தசூழ்நிலையில் விரைவில் காலாவதியாக இருக்கும் மத்திய பாராளுமன்ற உறுப்பினர்; பதவிகளையும் தமிழக ஆட்சியையும் இழக்கத்தயார் என்றால்தான் கருணாநிதி இலங்கைத்தமிழர் ஆதரவு நாடகத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லலாம். கருணாநிதி தமிழகமக்களின் ஆதரவை பெறுவதற்காகவும் கூட்டணி கட்சிகள் ஜெயலலிதா பக்கம் போய்விடாமலும் இருக்க தற்போதைய இலங்கை தமிழர் ஆதரவு நாடகத்தை தொடர்ந்து நடித்தாலும்கூட,அடுத்த தமிழக ஆட்சியை அமைக்கப்போவது அ.தி.மு.க. என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியுடன் ஒட்டிக்கொண்டிருந்த இவ்வளவு காலமும் இலங்கைத்தமிழருக்கு ஆதரவாக கருணாநிதியின் ஆட்சி என்னசெய்தது என்ற கேள்வி தேர்தல் நேரத்தில் பிரதான விடயமாக எழும்பவே செய்யும். தென்கிழக்காசியாவின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவரான மு.கருணாநிதி இதனது 60 வருட அரசியல் வாழ்வில் சற்று பாரதூரமான சவாலை இப்பொழுது எதிர்நோக்கி நிற்கிறார்.
http://thenee.com/html/171008-5.html

Anonymous said...

1
மதிப்பிற்குரிய தமிழக அரசியல் மதிபப்ப் pறகு;கு; ரிய அரசியல ; தலைவரக்க் ளுககு;கு; ம ;
தமிழ ; திரையுலக தலைவரக்க் ளுககு;கு; ம ;
புலமn;n; பயரந்ந் த் இலஙi;i; கத ; தமிழரின ; வேணடு;டு; கோள!;!;
அன்புடையீர்!
இலங்கைத் தமிழர் துயர் தொடர்பில் கண்டனக் குரல்களை
எழுப்பி இந்திய மத்திய அரசை அவர்கள் துயர் தீர்க்க ஆவன
செய்யுமாறு நீங்கள் வலியுறுத்தி வருவது எமக்கு
பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பெரும்பான்மையான அனைத்து
அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலோடு இவ் வேண்டுகோளை
விடுக்க முயல்வது மத்திய அரசினை செயற்பட வைக்கும் என்ற
நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இலங்கைத் தமிழர்களின்
இன்னல்கள் தீர உதவ முயலும் தமிழக அரசியல்
தலைவர்களினதும் திரையுலக தலைவர்களினதும் ஏகோபித்த
ஆதரவிற்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சார்பில் எமது
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த முப்பது வருடகாலமாக இலங்கையில் நடந்துவரும்
உள்நாட்டு யுத்தம் பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களை
கடந்து வந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். அத்துடன், பல
சகோதரப் படுகொலைகளே எமது மக்களின் விடுதலையின்
பேரில் நடந்துவரும் இந்தப் போரின் முக்கிய குறிக்கோளாக
பரிணமித்துவந்திருப்பதையும், தமிழ் மக்களின் இழப்புகளுக்கு
பிரதான காரணமாக பங்களித்திருப்பதையும் நீங்கள் அறியாமல்
இருக்க முடியாது. இக்காரணிகளால் தமிழ் மக்களின் விடுதலைப்
போராட்டம் திசைதிருப்பப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள்
முழுத் தமிழ் மக்களையும் இன்று தற்கொலைக்கு
2
தள்ளிவந்துள்ளதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீரக் ள.;
இந்நிலையில், இலங்கைத் தமிழரின் துயரம் கண்டு
பொங்கியெழும் தமிழக மக்களின் ஆதரவு விடுதலைப் புலிகளின்
அழிவுப் பாதைக்கு உடந்தையாகி தடம் புரளக் கூடாது என்பதே
எமது எதிர்பார்ப்பாகும்.
இலங்கை அரசியல் சூழ்நிலைகளை நீங்கள் ஓரளவு புரிந்து
வைத்திருப்பீர்கள் என்றே எண்ணுகிறோம். தமிழ் மக்களின்
நியாயமான கோரிக்கைகளை அங்கீகரிக்க வேண்டி குரல்
கொடுககு; ம் அதே நேரம ; சில சிஙக் ள பேரின வாத சதத் pகளின ;
குரல்களுக்கு உணவளிப்பனவாக உங்கள் ஆதரவு
செயல்படாதவகையில் நீங்கள் கவனம் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் இலங்கையில் தமிழ் மக்களின் இரத்தக் களரி
தொடர்ந்து ஓடுவதற்கே உங்கள் ஆதரவும் உறுதுணையும்
உதவி செய்யும்.
தமிழ் மக்களுக்கு சமமான நியாயமான உரிமைகள் வழங்கப்பட
வேண்டும் என்பதை பெரும்பான்மை சிங்கள இனமக்களின்
பெரும்பான்மையோர் ஏற்றுக் கொண்ட போதும் அவர்களில் ஒரு
சிறுபான்மையோரான சிங்கள பௌத்த பேரினவாதத்தை
வலியுறுத்தும் சக்திகளின் எதிர்ப்புகளை மீறி அவர்களால்
செயற்பட முடியாத சூழ்நிலை காணப்படுவதும் இலங்கையில்
இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு நடைமுறைப்
படுத்தப்படாமைக்குரிய காரணங்களுள் ஒன்றாகும். இப்
பேரினவாத சத்திகளின் கரங்களை ஊக்குவிக்கும் வகையில்
தமிழகத்தின் செயல்பாடுகள் அமைதல் பாதகமானதாக
அமையும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு
எதிராகவும் தமிழகத்தில் 5 கோடி தமிழ் மக்கள் இருக்கிறார்கள்
என்பதும் தமக்கென வேறு நாடு எதுவும் இல்லையென்பதும்
3
சிங்கள இனவாத சக்திகளின் பிரச்சாரமாக இனவாத
தூண்டுதலுக்கு பயன்படுத்தப்படுகிறது. தமிழகமும் இந்தியாவும்
சிங்கள மக்களின் இறைமைக்கும் பாதுகாப்பிற்தும் உத்தரவாதம்
அளிக்கும் உறுதிமொழிகளே இலங்கையிலுள்ள சிங்கள தமிழ்
இனவாத சக்திகளை பலவீனப்படுத்தும்.
இத்தனை இழப்புகளின் பின்பும் இன்றைய இலங்கை அரசு
நியாயமான தீர்வினை முன்வைக்க முனைப்புடன் செயல்படாமை
வேதனைக்குரியது என்பது உண்மையே. சர்வ கட்சி மாநாட்டு
முடிவுகள் சாதுரியமாக பின் போடப்பட்டுக் கொண்டு செல்வது
இலங்கை அரசின் நோக்கங்களை கேள்விக்குறியாக்குகின்றது.
இலங்கை அரசு இனவாத சத்திகளுக்கு அடிபணிந்து,
நடுநிலையான சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் ஏற்றுக்
கொள்ள முடியாத தீர்வினை தமிழ் மக்கள் மீது திணிக்காமல்
பார்த்துக் கொள்ளும் பாரிய பொறுப்பினை இந்திய அரசு
புறந்தள்ளி வைக்காமல் செயல்படும் உந்துசக்தியாக தமிழக
அரசியல் தலைவர்கள் பங்களிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களிடையே ஜனநாயக அரசியலை வளர்க்க
விரும்பும் அரசியல் சத்திகளுக்கு உங்கள் ஆதரவு பெருக
வேண்டும். அவர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி
நிலைநாட்ட உங்களால் பெருமளவில் உதவ முடியும்.
இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சிகளுக்கிடையிலான
ஒற்றுமையே தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும். அவர்கள்
வலிமையை ஒருமுகப்படுத்தும். மாற்றுக்கருத்துகளுக்கு
மதிப்பளிக்கும் பண்பினை இலங்கைத் தமிழர் அரசியலில்
வலிமைப்படுத்தும் வகையில் உங்கள் செல்வாக்கு அமைய
வேண்டும். சகோதரப் படுகொலைகள் நிறுத்தப்படுவதற்கு
உங்கள் வலிமை பயன்படுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்
4
அரசியல் கட்சிகள் வேற்றுமைகள் பல இருப்பினும்
ஒற்றுமையுடன் செயல்பட உங்களால் ஊக்கமும் உற்சாகமும்
உதவியும் அளிக்க முடியும். விடுதலைப்புலிகளின் தவறான
போக்கினை அவர்களுக்கு வலியுறுத்தி அழிவுப்
பாதையிலிருந்து அவர்களை மீட்க வழிசமைக்க முடியும்.
இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும்படி மத்திய அரசினை
நிர்பந்திக்கும் உங்கள் ஒருமித்த செயல்பாடுகள் பலனளிக்கும்
என்று நாம் நம்புகிறோம். மறுபுறத்தில் தமிழ்நாடு எல்லா
வகையிலும் சிங்கள மக்களின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும்
உறுதுணையாக இருக்கும் என்ற உண்மையும் தெளிவாக
பிரச்சாரப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் இனவாத
சத்திகளை சீண்டிவிடவே உங்கள் ஆதரவு பயன்படுத்தப்படும்.
பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள
அவர்களுடனான உறவை வலுப்படுத்துவதே பயனுள்ளதாகும்
என்பதை தயவுசெய்து நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
இறுதியாக மறுபடியும் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் தீர
தமிழகத்தின் ஏகோபித்த ஆதரவுக் குரல்களுக்கு எமது
மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கையிலுள்ள சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
நியாயமான உரிமைகள் கிடைக்கப் பெற உங்கள் ஆதரவு
பாரிய ஆதாரமாக அமைய உங்கள் ஆதரவு மேலும் தொடரவும்
மேலும் செழுமை பெறவும் வேண்டுகிறோம்.
பெயர் ஸத் hபனம ;
1.
2.
3.

Anonymous said...

தமிழ் வலையுலகின் பிதாமகனான டோண்டு அய்யா விடுதலைபுலிக்கு எதிரான பின்னோட்டங்களை நீங்கள் தடை செய்வது ஏன்?

Anonymous said...

டோண்டு அய்யா ஏன் இலங்கை தமிழர்கள் மேல் உங்களுக்கு வெறுப்பு என் எங்களின் பின்னோட்டங்களை தடை செய்கிறீர்கள்

Anonymous said...

இலங்கை பிரச்சனை தீர விடுதலை புலிகளை அழித்தே தீர வேண்டும். நாகரீக உலகத்தில் மக்க்ள் அனைவரையும் கற்காலத்துக்கு அழைத்து செல்லும் விடுதலைபுலிகள்

கரும்புலிகள் என்று மூளை சலவை செய்யபட்டவர்கள் அனைவரும் ஏழை தாழ்த்தபட்ட தமிழ் மக்களே ஏன் ஒரு வெள்ளாள சாதியில் இருந்து கரும்புலிகள் வருவது இல்லை.

யாழ்பாண வெள்ளா தேசியமே புலிகள் சொல்லும் தமிழ் தேசியம்

ஏன் பிரபாகரன் தன் பிள்ளைக துவாரகா மடியில் குண்டை கட்டி அனுப்பு கூடாது துவாரகாவிற்க்கு மட்டும் லண்டலில் சொகுசு வாழ்க்கை

அப்பாவி தமிழர்களுக்கோ தற்கொலை படை

Anonymous said...

1.ஏன் டாக்டர் புருனோ போன்றவ படித்த அதோடு வசதியானவர்கள் கூட சாதி வெறி பிடித்து இட ஒதுக்கீடு கேட்க்கிறார்கள்? டாக்டர்கள் தான் அதிகமாக சம்பாதிப்பவர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் ஏன் தன் சாதி மக்கள் மட்டும் பயன் பெற நினைக்கிறார்கள்?
2.லக்கிலுக் என்ற பதிவர் நீங்கள் உயர்சாதி பெருமை பேசுகிறீர்கள் என்று சொல்லி இருக்கிறார் உங்கள் பதில் என்ன?
3.ஜீ டிவி தமிழில் ஒளிபரப்பு தொடங்கி இருக்கிறார்களே, அவர்கள் முதலிடத்துக்கு வரமுடியுமா?
4.தமிழில் சன் டிவிக்கு அடுத்தபடியாக ஆரம்பிக்கபட்ட ராஜ் டிவி ஏன் இன்று வரை கடைசி நிலையில் தல்லாடுகிறது?
5.சன் டிவி ஜோடி பொருத்தம் பார்த்ததுண்டா?
6. விடுதலைபுலிகள் அழிவது தமிழருக்கு நல்லதா?
7.இந்து ராம் அவர்களை சாதி ரீதியாக விமர்சிக்கும் வீரவன்னியன் பதிவுக்கு உங்கள்பதில் என்ன?

Anonymous said...

அமெரிக்காவில் தடை செய்யபட்ட புலிகள் இயக்கதை ஆதரிபப்வர்களை அந்த நாட்டின் அரசாங்கம் தண்டிக்க முடியாதா?

மார்க்ஸ் என்பவர் கஸ்மீர்க்கு சென்று வந்து ஒரு கட்டுரை ஜீனியர் விகடனில் எழுதி இருக்கிறார். இவர்கள் போன்றவர்கள் எண்ணம் என்ன?

கிருஸ்துவ மதமாற்றம் தான் ஒரிசா க்ர்நாடகா கலவரங்களுக்கு காரணமா?

சென்னையில் இந்து டைம்ஸ் ஆப் இந்தியா இதில் எது நல்ல பத்திரிக்கை

செந்தழல் ரவி பாரதியார் தொடர்பாக ஒரு கட்டுரை பதிந்து இருந்தார் அது உண்மையான கட்டுரையா?

Anonymous said...

சுகுணா திவாகர் என்பவர் விகடனை பார்பன பத்திரிக்கை என்று பல முறை திட்டி இருக்கிறார். அவர் தற்போது விகடனில் வேலை பார்க்கிறார். உங்கள் கருத்து என்ன?

dondu(#11168674346665545885) said...

யாரைக் கூறினாலும் மருத்துவர் ப்ரூனோவை சாதி வெறியர் எனக் கூறுவதை ஆட்சேபிக்கிறேன். அது அப்பட்டமான பொய்.

லக்கிலுக்கின் கருத்துக்கு அவரே பொறுப்பு. அது பற்றிக் கூற எனக்கு கருத்து இல்லை.

மிகுதி 5 கேள்விகள் மட்டும் அடுத்த கேள்வி பதில் பதிவின் வரைவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நல்லதந்தி said...

//லக்கிலுக்கின் கருத்துக்கு அவரே பொறுப்பு. அது பற்றிக் கூற எனக்கு கருத்து இல்லை.//

நான் லக்கிலுக் போன்றவர்களை சாதி வெறியர்கள் என்று நினைக்கிறேன்!.இவர்கள் போலிகள் என்பது எனது எண்ணம்.உங்களுடைய அபிப்ராயம்?. இதை மற்றொரு வாரக் கேள்வியாக நினைக்க வேண்டாம்!

dondu(#11168674346665545885) said...

லக்கிலுக் பார்ப்பனர்களை வெறுப்பவர் என்பதற்கு மேல் நான் எதையும் கூறவிரும்பவில்லை. அதே சமயம் அவர் என்னைப் போல பல பார்ப்பன நண்பர்களையும் உடையவர் என்பதையும் கூறலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நல்லதந்தி said...

//லக்கிலுக் பார்ப்பனர்களை வெறுப்பவர் என்பதற்கு மேல் நான் எதையும் கூறவிரும்பவில்லை.//

இந்த பயத்தைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் என்பது உங்களுக்குத்தெரியாததா?.ஏன் இந்த மழுப்பல்?.நாங்களும் உங்கள் கூட இருக்கிறோம்.பார்பன அடிவருடி என்ற பெயரோடு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

உண்மைத்தமிழன் said...

அழைப்புக்கு மிக்க நன்றி ஸார்..

ஆனால் நான் ஏற்கெனவே தம்பி குசும்பனின் அழைப்பின் பேரில் சினிமா பற்றிய பதிவைப் போட்டுவிட்டேன். http://truetamilans.blogspot.com/2008/10/blog-post_14.html

மீண்டும் ஒரு நன்றி..

Anonymous said...

//dondu(#11168674346665545885) said...
யாரைக் கூறினாலும் மருத்துவர் ப்ரூனோவை சாதி வெறியர் எனக் கூறுவதை ஆட்சேபிக்கிறேன். அது அப்பட்டமான பொய்.


aatharaththudan vilakkavum.appothutaan unmai theriyavarum

dondu(#11168674346665545885) said...

//aatharaththudan vilakkavum.appothutaan unmai theriyavarum//
ப்ரூனோவை சாதிவெறியர் எனக் கூறியவர்தான் ஆதாரம் அதற்கு தரவேண்டும்.

அன்ப்டன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//நரசிம்மா said...
1.ஏன் டாக்டர் புருனோ போன்றவ படித்த அதோடு வசதியானவர்கள் கூட சாதி வெறி பிடித்து இட ஒதுக்கீடு கேட்க்கிறார்கள்? டாக்டர்கள் தான் அதிகமாக சம்பாதிப்பவர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் ஏன் தன் சாதி மக்கள் மட்டும் பயன் பெற நினைக்கிறார்கள்?//

//dondu(#11168674346665545885) said...
யாரைக் கூறினாலும் மருத்துவர் ப்ரூனோவை சாதி வெறியர் எனக் கூறுவதை ஆட்சேபிக்கிறேன். அது அப்பட்டமான பொய்.




// dondu(#11168674346665545885) said...
//aatharaththudan vilakkavum.appothutaan unmai theriyavarum//
ப்ரூனோவை சாதிவெறியர் எனக் கூறியவர்தான் ஆதாரம் அதற்கு தரவேண்டும்.

அன்ப்டன்,
டோண்டு ராகவன்
//


நரசிம்மா இதற்கு என்ன உங்கள் பதில்.

விவாதம் ஆரோக்கியமாக இருப்பது நல்லது.

உங்கள் வக்கீல் வாதத்தை,மருத்துவரை எதிர்த்து தொடங்கலாமே?

புள்ளி விபரங்கள் இருந்தாலும்,சான்றுகள் இருந்தாலும்
உபயோகிக்கவும்.

நீதிபதியாக டோண்டு அவர்கள்.


ஒரு சில முற்பட்ட இனத்தினர் நடத்தும் பத்திரிக்கைகள் இட ஒதுக்கீட்டீன் பலன் தாழ்த்தபட்ட,ஒடுக்கப் பட்ட,பிற்படுத்தபட்ட பிரிவினரிடம் உள்ள நலிந்த வகுப்பினருக்கு கிடைப்பது இல்லை எனவும்
ஏற்கனவே ஒரளவு சமுதாய ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் முன்னேறிய சில வகுப்பினர் அதை தங்களுக்கு சாதகமாக்கி கொள்கிறார்கள் என்ற செய்தியை உண்மையில்லை என்று சொல்ல முடியுமா?

கலைஞர்,ராமதாஸ் ஏன் பொது உடைமை கட்சிகள் கூட இதைப் பற்றி அதிகமாக கண்டு கொள்வதில்லை.எனவே தான் பொருளாதார அளவுகோல் அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நலிந்த பிரிவினருக்கு சாதகமாகும் என்று நன்றாகத் தெரிந்தும் "கீரீமி லேயர் கூடாது" என்கின்றனர்.

இதையும் படியுங்கள்.

1.இட ஒதுக்கீடு தொடரவேண்டும்
2.பொருளாதர அளவுகோலுடன் இதுவரை பயன் பெறாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படவேண்டும்
3.அரசு வறுமையில் வாடும் ஒடுக்கப் பட்ட ஏழைக் குடுப்பங்களின் குழந்தைகளுக்கு தனிக் கவனத்துடன்
உணவுடன் சிறப்பு கல்வி அளிக்க வேண்டும்.
4.இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை வசதி படைத்த பிற்பட்ட வகுப்பினரை கொண்டு நிரப்பலாம்.
5.எந்தக் காலக் கட்டத்திலும் இடஒதுக்கீட்டில் உள்ள இடங்கள் பொது ஒதுக்கீட்டுக்கு மாற்றக்கூடாது.
6.இது சாத்தியப் பட்டால் உண்மையான சமத்துவ நீதி கிடைக்கும்


இனி உங்கள் விவாதம் தொடங்கட்டுமே!

ரமணா said...

1.ஜெட்ஏர்வேஸின் ஆட்குறைப்பு திடிர் வாபஸ் ? இடையில் என்ன நடந்தது?

2.icici வங்கி உண்மை என்ன?

3.மத்திய அரசின் வலிமையான உறுதிக்குப் பிறகும் அதன் பங்கின் வீழ்ச்சி ஏன்?

4.பிற வங்கிகளும் ,மென்பொருள் நிறுவனங்களும் சிக்கன நடவடிக்கை என்பது உண்மையா?

5.இது எல்லாம் சரியாக 10 வருடம் என்பது உண்மையா?

6. அமெரிக்க போல் வீட்டு விலை குறைய வாய்ப்புள்ளதா?

7.பொருளாதார தேக்கத்தை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பெரிது படுத்தி தங்கள் வருமானத்தை பெருக்குவது போலிருக்கிறதே?

8.ரிலயன்ஸ் குழும பங்குகள் தான் எல்லாத்தையும் தீர்மானிப்பது போலுள்ளதே?

9.உண்வுப் பற்றாக் குறை வந்துவிடும் போலுள்ளதே

10.விவசாப் பரப்பு குறைவது நல்லதிற்கில்லையே?

Anonymous said...

கண்ணதாசன் எழுதிய 'எண்ணங்கள் ஆயிரம்' புத்தகத்தில் இருந்து எனக்குப் பிடித்த கட்டுரைகளில் ஒன்றான 'நான் ஒரு இந்து' கட்டுரை.

நான் ஒரு இந்து.
இந்து என்பதில் பெரும்மைப்படுகிறேன்.
நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன்.
நான் கடவுளை நம்புகிறேன்; அவனை காட்டியவனை போற்றுகிறேன்: அந்த கடவுளை கல்லிலும் கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.
ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது.
நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.
நேரான வாழ்கையை இருதயம் அவாவுகிறது.
பாதகங்களை, பாவங்களை கண்டு அஞ்சுகிறது.
குறிப்பாக ஒரு இந்துவுக்கு தம் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.
கடைசி நாத்திகனையும் அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது. "என்னை திட்டுகிறவந்தான் அடிக்கடி நினைத்துக்கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்" என்பது இறைவனின் வாக்கு.
இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை.
நீ பிள்ளையாரை உடைக்கலாம், பெருமாள் நாமத்தை அளிக்கலாம்; மத சின்னங்களை கேலி செய்யலாம்; எதை செய்தாலும் இந்து சகித்துக்கொள்கிறான்.

ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாக பிறந்தது போல் எண்ணிக்கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தை கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்?.
கடந்த நாற்ப்பது வருஷங்களில் ஒரு நாலாவது அதற்கான துணிவு ஏற்ப்பட்டதாக தெரியவில்லை !

பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கிக் கொண்டு, அதை நம்புகிறது அப்பாவிகளிடம் ரேட்டு வாங்கி சொத்து சேர்க்கும் பெரிய மனிதர்களைத்தான் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் பேசுகிற நாத்திகவாதம், அவர்கள் 'குடும்பம் நடத்துகிற வியாபாரம்' என்பதை அறியாமல் வாழ்க்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.
பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வார்த்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
நடிகையின் 'மேக்-அப்' பைக் கண்டு ஏமாறுகிற சாரா சரி மனிதனைப் போல், அன்று இந்த வார்த்தை கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
அந்தக் கவர்ச்சி எனக்கு குறுகிய கால கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே !
என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்கு பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைகொண்டு, ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருகிறார்கள் .
அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது?
வேண்டுமானால் 'பணத்தறிவில்' முன்னேறிவிட்டது என்று சொல்லலாம்.
ஆளும் கட்சியாக எது வந்தாலும் ஆதரித்துக் கொண்டு, தன் கட்சியும் உயிரோடு இருப்பதாகக் காட்டிக் கொண்டு, எது கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு வாழ்க்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு !
உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர, வென்றதாக இல்லை. இதை உலகமெல்லாம் இறைவன் நிருபித்துக்கொண்டு வருகிறான்.
அவர்கள் எப்படியோ போகட்டும்.
இந்த சீசனில் வாழ்ந்துகொண்டிருக்கும் சில மனிதர்கள் கோவில்களுக்கு முன்னால் பகுத்தறிவு விளையாட்டு விளையாடிப் பார்க்கலாமென்று கருதுகிறார்கள். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும்.
நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்குப் போக வேண்டாம். நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்?.
அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்கச் சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன்னால் கடை வைக்கத் தொடங்குகிறார்கள்.
வெள்ளைக்காரனின் கால்களை கட்டி பிடித்துக்கொண்டு, 'போகாதே போகாதே என் கணவா' என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?
தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?
இந்த நாலரை கோடி மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக்கூட காண முடியாது.
பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும் திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன் !
ஆகவே, இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள்.
குறிப்பு: பெரியார் சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது எழுதப்பட்ட கட்டுரை இது. இதை தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்ட

Anonymous said...

//லக்கிலுக் பார்ப்பனர்களை வெறுப்பவர் என்பதற்கு மேல் நான் எதையும் கூறவிரும்பவில்லை.//

ஏன் மிகவும் வெளிபடையாக உங்கள் எண்ணங்களை சொல்லும் நீங்கள் தயங்குவது ஏன்? லக்கிலுக் என்பவர் உங்களை ப்ளாக்மெயில் செய்கிறாரா?
இல்லை அவர் உங்கள் நண்பர் என்பதால் அவருக்கு பணிந்து செல்கிறீர்களா?

Anonymous said...

//ப்ரூனோவை சாதிவெறியர் எனக் கூறியவர்தான் ஆதாரம் அதற்கு தரவேண்டும்.//
இட ஒதுக்கீடு என்றுமே பொருளாதார அடிபடையில் இருக்க கூடாது என்று சொல்லும் அவர் கட்டுரைகள் சாதி பற்றுள்ளவர் என்று காட்டுகிறதே

Anonymous said...

பக்கிலுக் - போலி டோண்டு ??
பொய்சொல்லபோகிறோம் படத்தில் வருவது போல உங்களுக்கு அனுபவம் ஏதேனும் உண்டா?
சம் மீயுசிக் - இசையருவி ஒப்பிடவும்
வாரணம் ஆயிரம் பாடல்கள் கேட்டீர்களா?
ஹாரிஸ் ஜெயராஜ் - ரகுமான் இருவரின் இசையை ஒப்பிடவும்

Anonymous said...

1. விவசாய தொழிற்பேட்டைகள் அமைத்தால் உணவு உற்பத்தி பெருகுமா?

Anonymous said...

தமிழ் ஓவியா என்று எழுதுபவர் தமிழச்சி என்று அறிகிறோம். ஏன் சாதி ஓழிப்பு என்ற பெயரால் அவர் சாதி வெறி கருத்துகளை பதிகிறார் ,உங்கள் கருத்து என்ன?

dondu(#11168674346665545885) said...

பக்கிலுக் - போலி டோண்டு ??
கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது லக்கிலுக். நானல்ல.
மீதி கேள்விகளில் I have got a very remarkable and extraordinary lack of experience. Hence no comments.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//தமிழ் ஓவியா என்று எழுதுபவர் தமிழச்சி என்று அறிகிறோம். ஏன் சாதி ஓழிப்பு என்ற பெயரால் அவர் சாதி வெறி கருத்துகளை பதிகிறார் ,உங்கள் கருத்து என்ன?//
கருத்து ஏதும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

I// have got a very remarkable and extraordinary lack of experience. Hence no comments.//

:))))))))

வால்பையன் said...

//கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி நடந்த போராட்டங்களும் கமல் அதை தைரியமாக எதிர்க்கொண்டதும்.//

இது தமிழ் தலைபிற்க்காக நடந்தது. ஆனால் சண்டியர் பட தலைபிற்கு பின் வாங்கியது தவறு. ஆனாலும் கனி இருப்ப காயை கவருவானேன் பாணியில் கெட்டதை விட்டு நல்லவற்றை சொல்லும் பாணி பிடித்திருக்கிறது

வால்பையன் said...

//கமலஹாசன் என்னுடைய மாமா பிள்ளை பார்த்தசாரதியின் மனைவி நிர்மலாவின் அண்ணா ரகுவின் மனைவி நளினியின் தம்பி.//

தலை சுற்றுகிறது

வால்பையன் said...

//வருங்காலங்களில் உருப்படாது என அமெரிக்காவில் பலர் கூறியதாக சமீபத்தில் 1963-ல் ஆர்.கே. நாராயணனின் அமெரிக்க நினைவுகள் பற்றிய விகடன் தொடரில் படித்துள்ளேன்.//

இன்னும் அந்த வருங்காலம் வரவில்லையோ

Anonymous said...

இது கற்பனையல்ல.... ஒரு பிணைக்கைதியின் கதை

கொழும்பில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. கனடாவிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவருக்கு திருமணம்.பம்பலப்பட்டி கதிரேசன் மண்டபத்தில் நடந்தது. திருமண வைபவத்திற்கு சென்றால் அங்கு வருபவர்களை குசலம் விசாரிக்கத்தானே வேண்டும்! மாப்பிள்ளையின் சகோதரி அவர். அவரை சிறுமியாகவே பார்த்திருக்கிறேன். மன்னாரில் ஒரு ஆசிரியரைத் திருமணம் செய்ததும் தெரியும். ஆனால் அவர் குடும்பத்துடன் கனடாவில் குடியேறியிருப்பார் என்றுதான் நினைத்திருந்தேன்.ஆனால் அவர் இன்னமும் தாயகத்தில் தான் இருக்கிறார் என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவரை எனக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை. நண்பன் அவரை அறிமுகம் செய்துவைத்தபோது, அவன் கண்கள் கலங்குவதையும் நான் கவனிக்கத் தவறவில்லை. எனக்கும் தான்.உடனே என் மனக்கண்ணில் அவரது இளமைத் தோற்றம் தான் நிழலாடியது.

அவரது இன்றைய கோலத்தைப் பார்க்க விபரிக்கமுடியாத சேகம் என்னுள்ளும் சூழந்துகொண்டது. அவரை அழைத்துச் கொண்டு ஒரு மூலையில் அமர்ந்தேன்.

அக்கா சொல்லங்கோ... எப்பிடி இருக்கிறீங்க... இப்ப எங்க இருக்கிறீங்க.... என்றேன்.

அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. தம்பி... அடம்பனிலதான் அவர் கடைசியாகப் படிப்பிச்சுக் கொண்டிருந்தவர்.... இப்ப ஆறு மாசத்தில... பதின்மூண்டு இடத்தில குடிசை போட்டு... கழட்டி... திருப்பி;போட்டு... கழட்டி.... கடைசியாக இப்ப உருத்திரபுரத்தில இருக்கிறம்.... என்றார். அப்பாடா... பறவாயில்லை அக்கா, தம்பியின் கலியாணவீட்டால n காழும்புக்;கு வந்திற்றீங்கள். இனி அவருக்கு (ஆசிரியரான அவர் கணவர்) கொழும்புக்கு றான்ஸ்பர் எடுத்துக்கொண்டு இங்கேயே இருந்தீங்கள் என்றால், தம்பியைச் சொல்லி கனடாவுக்கு கூப்பிடச் சொல்லலாம் என்றேன். இல்லைத் தம்பி... நாங்கள் உருத்திரபுரத்துக்கு கட்டாயம் திரும்பிப் போகவேணும்.. பொடியளுக்கு பிணை குடுத்திற்றுத்தான் வந்தனாங்கள்... கட்டாயம் போகவேணும், இல்லையெண்டால் எங்களுக்கு பிணை குடுத்தவருக்கு பிரச்னையாகப் போயிரும்.... எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

புலிகள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிக்கொண்டிருக்கும் இவ்வேளையிலும்..... இப்படியnhரு கட்டுப்பாடா?.... அக்கா... விசர்க்கதை பேசாதீங்க... பிணையும்... கத்தரிக்காயும்.... அவங்கள் என்ன செய்யப்போறாங்கள்... நீங்கள் இங்கயே இருங்கோ என்றேன் நான். ஐயோ தம்பி... பாவம் அந்த மனுசன்.. எங்களுக்காக பிணை நிண்டது. நாங்கள் போகாவிட்டால், அவருக்குப் பிரச்னையாகப் போயிரும், அந்த வயசுபோன மனுசனை அவங்கள் கொண்டுபோய் சண்டை நடக்கிற எல்லையில ஏதாவது வேலைக்கு போட்டிருவாங்கள்.... எங்களுக்காக ஒரு மனுசன் கஷ்டப்படவேணுமா?.. எங்களுக்கு என்ன நடந்தாலும் பறவாயில்லை... நடக்கிறது நடக்கட்டும்...
அவர் குரலில் அப்போது உயிர் இருக்கவில்லை.

- கொழும்பிலிருந்து ஈழப்பிரியன்
http://thenee.com/html/191008.html

dondu(#11168674346665545885) said...

//தலை சுற்றுகிறது//
நல்லதாய் போயிற்று. உலகை ஈசியாக சுற்றிப் பார்க்கலாம். :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Put more pressure on Tigers - TDNA tells Tamil Nadu

Courtesy: Sundy Observer
by our political correspondent

The Tamil Democratic National Alliance (TDNA) comprising the Tamil United Liberation Front (TULF), People’s Liberation Organisation of Tamil Eelam (PLOTE) and the Eelam People’s Revolutionary Liberation Front (Naba faction) has called upon the Tamil Nadu political fraternity to put more pressure on the LTTE to stop fighting and enter the political process instead of turning a blind eye towards the arrogant attitude of the outfit.

TULF leader Veerasingham Anandasangaree who heads the TDNA as well was commenting on the agitation campaign that was staged in Tamil Nadu with regard to the current situation in the Wanni. Anandasangaree told the Sunday Observer that Tamil Nadu politicians should act with utmost responsibility when they deal with the Sri Lankan issue. “The LTTE is solely responsible for the current humanitarian crisis in Kilinochchi and the rest of the Wanni. However, the outfit is giving a different picture to Tamil Nadu politicians. Innocent civilians are not allowed to get into safer areas. The LTTE has threatened those civilians in Kilinochchi and made them to remain as human shields. If the Tamil Nadu political fraternity and the Central Government of India are genuinely concerned about the safety of the innocent Tamils in the battle-hit areas in the north,they should bring more pressure on the LTTE politically to stop the clashes in the Wanni instead of pointing the finger only at the Government.

If the LTTE allows innocent civilians who are sandwiched between the warring sides in the Wanni to enter safer areas several innocent lives could be saved,”Anandasangaree said. The PLOTE leader Dharmalingam Sitharthan said that Tamil Nadu politicians must not get carried away by the false propaganda of the LTTE. “The LTTE is not allowing the Kilinochchi civilians to go into safer areas and shedding crocodile tears saying that the civilians are suffering without food or medicine. Therefore, the Tamil Nadu Government should bring more pressure on the LTTE in safeguarding helpless civilians who are trapped in the battle-hit areas,” Sitharthan said.

Meanwhile, the Tamil Nadu Government also arrested several agitators from various political parties who openly supported the LTTE in Chennai yesterday.

www.sundayobserver.lk/2008/10/12/pol02.asp

Anonymous said...

http://www.tamilnewsweb.com/SO_Thuklak.htm

Anonymous said...

On May 19, 1982, a shootout occurred at about 9:45 p.m. at Pondy Bazaar, Mambalam, Madras between LTTE and PLOTE members. V. Prabhakaran and Raghavan (alias Sivakumar) of the LTTE, armed with revolvers, opened fire on Jotheeswaran and Mukundan (alias Uma Maheswaran) of the PLOTE. In the mid-1970s, both Prabhakaran and Uma Maheswaran were members of the LTTE. During the gunfire, Jotheeswaran sustained bullet injuries both in his right and left thighs. Mukundan was also shot at but escaped unhurt. The accused V. Pirabhakaran and Sivakumar were arrested and remanded. Both of them were proclaimed offenders of the Sri Lankan government with a reward on their head of Rs. 5 lakhs each.

pt said...

1.அமெரிக்காவில் 700 சதுர அடி வீட்டு விலை ரூபாய் 70,000 உண்மையா?
2.அமெரிக்காவின் ஜாதகம் சரியில்லையாமே?( தகவல் classroom 2007-sri.subbiah)
3.2022 வரை திண்டாட்டமாம்?
4.இந்தியாவில் அந்த நிலை வராது என்ற உறுதியை நம்பாலாமா?

5.crr cut to 6.5 % from 9 % ,repo rate cut from 9 % to 8% ,what next?

ரவிஷா said...

Kamal did "Appu" character in the following ways:

1. In the long shots, he will be walking inside a ditch specially made for his character. If you watch in those scenes carefully, you will see that Appu is slightly away from the other character(s). Also, his leg movements will seem like he is dragging his legs and you won't see the knees of his legs.

2. In the mid range close up shots, he would have folded his legs backwards tightly so he would look like a dwarf. If you watch in those scenes carefully, you will see his bulging butt; this is because his toes were tied to his back.

3. In the close up shots, he didn't have to do anything special but to make his facial expression look like a dwarf

4. In the scenes where Appu is sitting in a chair or wall, his legs would be under the chair or wall and someone's legs would be used. If you watch carefully in those scenes, you will see that his torso won't be in sync with this legs.

Of course, these are all easily said. But the pain he endured during the movie is priceless.

Anonymous said...

1. விடுதலை புலிகள் இந்திய அமைதி படையை எதிர்த்து சண்டை போட சிங்கள ரானுவத்திடம் ஆயுதங்கள் பெற்றாற்களா? உண்மையாகவே நடந்த ஒன்றா?
2. விடுதலைபுலிகள் நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் மண்ணின் மைந்தர்கள் இந்தியர்கள் எங்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்று சொன்னார்களா? உண்மையில் நடந்த ஒன்றா?
3.ஏன் விடுதலைபுலிகளை விமர்சிக்கும் நபர்களை தனி நபர் தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது? பத்ரியின் சமீபத்திய பதிவில் கூட அவரை கேவலமாக தாக்கி பின்னோட்டங்கள் வருகின்றதே !! காரணம் என்ன? உண்மை சுடுமா?
4.திமுக + பாமக எம்பிகள் ராஜினாமா செய்தால் மத்தியில் காங்கிரஸ் அரசு கவிழும். அப்படி நேர்ந்தால் தமிழக அரசும் கவிழுமா?
5.புலம்பெயர்ந்த கவிஞர் ஒருவர் சென்னையில் வசித்த வரை புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு அனைத்து தமிழ் மக்களும் புலிகள் அல்ல என்று சொல்லி வந்தார். இன்று தன் புலம் பெயர்ந்த நாட்டுக்கு சென்ற பின்னர் புலிகளை விமர்சிப்பர்களை வசை பாடுகிறார். இதை போல இரட்டை நாக்கோடு பேசுவதின் காரணம் என்ன?
6.புலிகள் நம்ப கூடியவர்களா?
7.புலிகள் சபாரத்தினம், அமிர்தலிங்கம் போன்ற எண்ணற்ற தமிழ் தலைவர்களை கொன்றது ஏன்?
8. புலிகளை எதிர்பவர்கள் எப்படி தமிழ் துரோகி ஆகிறார்கள்? அனைத்து மாற்று கருத்து கொண்ட தமிழர்களை ஒழுத்த பிரபாகரன் எப்படி தேசிய தலைவர் ஆனார்?
9.இட ஒதுக்கீடு தான் இந்த பிரச்சனைக்கு காரணமாமே உண்மையா?
10. மலையக தமிழர்கள் யாழ்பாண தமிழர்களால் அடிமையாக நடாத்தபடுகிறார்களா?
11. ஏன் புலம் பெயர்ந்த தமிழர்களில் 90% யாழ்பாண வாசிகளாகவே இருக்கிறார்கள்?? கிழக்கு தமிழர்களோ அல்லது மலையக தமிழர்களோ ஏன் யாழ்பாண தமிழர்களை போல அகதி அந்தஸ்து கேட்ப்பதில்லை?
12. கொழும்பில் பல லட்சம் தமிழர்கள் இருக்கிறார்களாமே, தமிழ் ஈழம் கிடைத்தால் அவர்கள் கதி என்ன?

Anonymous said...

பெரியவர் டோண்டு அவர்களுக்கு வணக்கம்.

உங்கள் பதிவுகளில் மேலை நாட்டு அரசியல் பற்றிய பல விளக்கங்கள் படித்துள்ளேன்.நன்றி.


இலங்கையில் நடை பெறும் இனப் படுகொலை பற்றியும்,விடுதலைபுலிகளின் உண்மை பற்றியும் நடு நிலையுடன் ஒரு விரிவான பதிவினை போடவும்.


அரசியல் வாதிகளின் பேச்சு,திரைஉலகினர் ராமேஸ்வரத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேச்சு,பத்த்கிரிக்கைகள் தரும் வெவ்வேறு தக்வல்கள் அனைவரையும் குழப்புகிறது.

விடுதலைப்புலிகளை
சோ எதிர்க்கிறார்
வைரமுத்து ஆதரிக்கிறார்
ராமதாஸ் அது ஒரு இனப் புரட்சி என்கிறார்
சு,சாமியோ வேறு மாதிரி சொல்கிறார்

திமுக,அதிமுக பற்றி என்ன சொல்ல

உண்மையை விரிவாக விளக்கவும் சரித்திர ஆதரங்களுடன்.


கல்தோன்றி
மண்தோன்றாக்
காலத்தே முன் தோன்றி
மூத்த் குடியாம்
நம் தமிழ்குடி
என்றறெல்லம்
சொல்லி மகிழ்ந்த நமது
இனச் சகோதரர்கள்
இலங்கை மண்ணில்
இட்லரின் கொடுமையை
இன்றும் அனுபவிக்கும்
இம்சைகளை ...

பின் குறிப்பு: உங்கள் மேல் நம்பிக்கை வைத்து இலங்கை தமிழர் பலர் இப் பிரச்சனைபற்றி பல பின்னூட்டம் போடுகிறார்கள்.

ரமணா said...

அமெரிக்கவில் ராணுவ ஆட்சி வரும் என் ஒரு பதிவர் ஆருடம் கொடுத்துள்ளார். வீடியோ இணைப்பும் கொடுத்துள்ளார்.(thamizmanam)

பார்த்தீர்களா?
தங்களின் கருத்து என்ன?

அமெரிக்க செய்தி என்றால் எல்லோருக்கும்

Anonymous said...

யாழ்ப்பாணத்துக்கு உணவு கொண்டுவரும் சாதாரண கப்பல்கள் மீது புலிகள் தற்கொலை தாக்குதல்

பெருத்த சேதமடைந்துள்ளன இலங்கை கப்பல்கள்

இதுதான் தமிழர்களுக்கு உணவு கொடுக்கும் புலிகளின் வேலை.


Tigers in suicide attack against two merchant ships: Sri Lanka
38 minutes ago

COLOMBO (AFP) — Tamil Tiger rebels carried out a suicide attack against two merchant ships off Sri Lanka's northern peninsula of Jaffna early Wednesday, the defence ministry said in a statement.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) targeted the MV Ruhuna and MV Nimalawa just outside the port of Kankesanthurai on the northern edge of the peninsula, the statement said.

Jaffna is controlled by the government, but cut off from the rest of the island by LTTE-held territory and supplied entirely by ship or plane.

"The attack is viewed as another cowardly attempt by the terrorists to deny essential supplies to the civilians living in war-affected areas," the statement said.

The number of casualties was not immediately clear.

Defence sources said initial reports suggested that one ship was sinking and there was fighting between naval troops and a unit of Tamil Tiger rebels.

A defence official said naval reinforcements had been rushed to the area.

The attack came as the military kept up a major ground offensive against the Tigers in the northern mainland.

Anonymous said...

இதுதான் புலிகளின் வீரம்,
எப்படிடா நாம மட்டும் வன்னியில் அடுத்தவேளை சாப்பாட்டுக்கு இல்லாம இரண்டு லட்சம் பேரை அலைக்கழிச்சிட்டு இருக்க்கோம். யாழ்ப்பாணத்தில சாப்ப்டுறாங்களேன்னு அவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் கப்பலை தாக்குகிறார்கள்.

இவர்கள்தான் தமிழர்களுக்காக உழைக்கிறார்களாம்.

இங்கே புலிகள் தான் பிரதானம். தமிழ் மக்களின் நலன் அல்ல..
இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு

Anonymous said...

tamilnet இணையதளத்தில் யாழ்ப்பாணத்தில் உணவுப்பொருட்கள் விலை உயர்வு, வியாபாரிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை, சிமெண்ட் கிடைக்கவில்லை என்ற செய்தி போடப்பட்டு உடனே எடுக்கப்பட்டது.
தெரிந்துகொள்ளுங்கள்.
இது சாதாரண உணவு மற்றும் சப்ளை கப்பல். அதனை தாக்கி யாழ்ப்பாணத்தில் பட்டினி பஞ்சத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் புலிபாசிட்டுகள்.

யாழ்ப்பாணத்திலும் மற்றும் ஏன் வன்னிக்கும் உணவு அனுப்புபவர்கள் இலங்கை அரசாங்கத்தினர். புலிகள் அல்ல.
இவர்கள் கோடிகோடி டாலராக உலகெங்கும் நடத்தும் வசூலை வைத்து என்ன உருப்படியாக வன்னிக்கொ தமிழ்மக்களுக்கொ செய்தார்கள்?

திருட்டு முண்டங்கள்.

Anonymous said...

1. வைகோ கைது நாடகமா? கூட்டணியை உடைக்கும் முயர்ச்சியா?
2. அமீர், சீமான் போன்றவர்களை இது வரை கைது செய்யாமல் இருப்பது சரியா?
3. புலிகளை ஆதரித்து இணையத்தில் வரும் பதிவுகள், இந்திய அரசால் தடை செய்யபட்ட இயக்கத்தை ஆதரித்து இந்தியாவில் இருந்து பதிவு செய்பவர்களை தண்டிக்க முடியுமா?புகார் கொடுப்பது எப்படி?
4.புலிகளின் தலைவர் மட்டும் ஏன் தன் பிள்ளைகளை தற்கொலை படையாக மாற்றவில்லை?
5. புலிகள் தலைவர் பிரபாகரன் தன் மனைவியை கடத்தி வந்து கட்டாய திருமணம் செய்தாரா?

Anonymous said...

ஈழதேசம்; தமிழ்நாட்டில் நாட்டில் நடாத்திய
கருத்துக் கணிப்பின் முடிவுகள்

கருத்து ஆம் -- இல்லை

இலங்கையில் அமைதி
ஏற்படவேண்டும். 99.8 வீதம் - 0.2 வீதம்


இந்தியப் படை வன்னிக்கு
அனுப்பப்பட வேண்டும். 0.2 வீதம் - 99.8 வீதம்


புலிகள் அழிக்கப்பட வேண்டும். 99.9 வீதம் - 0.1 வீதம்


பிரபாகரனும் பொட்டம்மானும்
கொல்லப்பட வேண்டும். 99.9 வீதம் - 0.1 வீதம்


பிரபாகரனும் பொட்டம்மானும்
இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட
வேண்டும். 99.9 வீதம் - 0.1 வீதம்


தமிழீழம் கிடைக்க வேண்டும் 0.1 வீதம் - 99.9 வீதம்


நளினி விடுதலை செய்யப்படக்கூடாது 100 வீதம்


முருகன் தூக்கிலிடப்பட வேண்டும் 100 வீதம்



நெடுமாறன், கோபாலசாமி,
திருமாவளவன், ராமதாஸ்,
வீரமணி, சீமான் ஆகியோர் கைது
செய்யப்பட்டு பயங்கரவாத
தடைச்சட்டத்தின் கீழ்
சிறைத்தண்டனை வழங்கப்
படவேண்டும். 100 வீதம்


பிரபாகரன் ஒரு பாசிசவாதி 99.8 வீதம் - 0.2 வீதம்


புலிகளே மக்களின் பிரதிநிதிகள் 0.2 வீதம் - 99.8 வீதம்

Anonymous said...

நடந்தது ஒரு நாடகமே
நன்றி:- துக்ளக்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும்,இதைத் தடுக்
க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியும்,
இந்தியக் கம்யூனிஸ்;ட் கட்சியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்
தில், தே.மு.தி.க கலந்து கொண்டதும்,அ.தி.மு.க கலந்து கொள்ளாததும்
தான்-முக்கியமான செய்திகளாயின.


இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. இலங்கைத் தமிழர்களின் நிலைமை,
இங்கு அரசியல்தானே தவிர, வேறொன்றுமில்லை என்பது அனைவரும்
அறிந்த வி~யம். இப்போது உண்ணாவிரதம் நடத்திய வலது கம்யூனிஸ்
ட் கட்சிகளும், அதில் கலந்து கொண்ட மற்றக் கட்சிகளும் இலங்கைத்
தமிழர்கள் கொல்லப்படுவதைக் காணச் சகிக்காதவர்களா?

இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதுதான் கண்டனத்துக்குரியது என்
றால் இலங்கைத் தமிழ்ச் சிறுவர்கள் விடுதலைப் புலிகளினால்
தங்கள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு, ராணுவத் தாக்குதலின் போது
கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு பலியானதை – ஒருமுறை கூட இவர்
கள் கண்டிக்கவில்லையே ஏன்?

இலங்கைத் தமிழர்களின் தலைவர்களை எல்லாம் ஒருவர் பின் ஒருவராக
விடுதலைப் புலிகள் கொன்றபோது – ஒரு கொலைக்குக் கூட இவர்கள்
யாரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவில்லையே ஏன்?

விடுதலைப் புலிகளாகவே குற்றம் சாட்டி அவர்களாகவே தீர்ப்பளித்து
அவர்களாகவே கொலைத் தண்டனை விதித்து பல இலங்கைத் தமிழர்
களைக் கொன்றார்களே அப்போதெல்லாம் இக்கட்சிகள் கண்டனம் கூட
தெரிவிக்கவில்லையே ஏன்?

இலங்கையில் இயங்கிய மற்றத் தீவிரவாதக் குழுவினரை எல்லாம் கொத்
துக் கொத்தாக விடுதலைப் புலிகள் கொலை செய்த போது அந்த இலங்
கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து இக்கட்சிகள் எதுவும்
சொல்லவில்லையே ஏன்?

இப்போது கூட இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும்
இடையே கடும் மோதல்கள் நடக்கிற பகுதிகளிலிருந்து வெளியேறி விட
முனைகின்ற இலங்கைத் தமிழர்களை, வெளியேறி விடாமல் தடுத்து,
அவர்களை, இலங்கை ராணுவத்திற்கு எதிராக, தங்களுடைய கேடயங்
களாப் பயன்படுத்தி, அவர்களைப் புலிகள் பலி கொடுக்கிறபோது –
கொல்லப்படுகிற தமிழர்களை நினைத்து இக்கட்சியினர் ஒரு அனுதாபம்
கூட தெரிவிக்கவில்லையே ஏன்?

இப்போது ‘சகோதரர்கள்’ என்று கூறி இந்தியா தலையிடவேண்டும் என்று
கோருகிற கட்சிகளில் ஒன்று கூட – முன்பு விடுதலைப் புலிகள், நாங்
களும் சிங்களவர்களும் சகோதரர்கள், எங்களுக்குள் நடக்கிற மோதலில்,
தலையிட அந்நியர்களான இந்தியர்களுக்கு உரிமை இல்லை என்று
பேசியபோது, இந்த ‘சகோதரத்துவம்’ பற்றிப் பேசவில்லையே ஏன்?

இப்போது. இந்தியா தலையிட வேண்டும் என்று கோருகிற இந்தக் கட்
சிகளில் ஒன்று கூட - இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் விடுதலைப்
புலிகள் இணைந்து, அவருடைய உதவி பெற்று, இந்திய ராணுவத்தை
வெளியேற்றியபோது, வாய் திறக்கவில்லையே ஏன்?

இவைதான் போகட்டும், ஆதரவு என்கின்ற பெயரில், நாளொரு மிரட்டலும்,
பொழுதொரு எண்ணிக்கையுமாக மத்திய அரசை மிரட்டிக் கொண்டிருந்த
இடதுசாரிகள் - அந்த ‘ஆதரவு காலகட்டத்தில்’ ஒருமுறை கூட இலங்
கைத் தமிழர்கள் கொல்லப் படுவதைத் தடுக்கா விட்டால், ‘ஆதரவு
வாபஸ்’ மத்திய அரசை எச்சரிக்கவில்லையே ஏன்?

இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் : இந்த உண்ணாவிரதப் போராட்
டம் - இலங்கைத் தமிழர்கள் பற்றிய வி~யம் அல்ல: வெற்று அரசியல்
ஆதாயச் சமாச்சாரம், மத்திய – மாநில அரசுகளைச் சாடியும், தங்
களுடன் யார் யார் வருகிறார்கள் என்று பார்க்கவும், ‘இவர் வந்துவிடுவார்
- அதனால்தான் இங்கே வந்திருக்கிறார் - அதனால்தான் இங்கே சேர்த்
துக்கொள்ளுங்கள்’ என்று கூட்டணித் தந்திரங்களை செய்யவும், கம்
யூனிஸ்ட்களுக்கு இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை பயன்பட்டிருக்கிறது.
அவ்வளவு தான். இந்த உண்ணாவிரத வைபவத்தில் - அ.தி.மு.க பங்
கேற்காதது அக்கட்சிக்கு நல்லது.

உண்மையிலேயே இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் விரும்புவது
இலங்கைத் தமிழர்கள் நலனைத்தான் என்றால் அவர்கள் அனைவரும்
விடுதலைப் புலிகளைக் கண்டித்து பெரிய அளவில் பிரச்சாரம் செய்ய
வேண்டும். ஏனென்றால் இலங்கைத் தமிழர்களின் நன்மைக்கு பெரும்
முட்டுக்கடடையாக இருப்பது விடுதலைப் புலிகள்தான்.

அதைச் செய்யாமல். இங்கே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு என்ற
பெயரில் - புலி ஆதரவுப் பிரச்சாரகர்களுக்கு ஒரு மேடை அமைத்துத்
தருவதற்காகவும், வருங்காலக் கூட்டணிகளுக்கு அழைப்புக்களைத்
தேடுவதற்காகவும் செய்யப்பட்ட முயற்சி


- போராட்டம் அல்ல நாடகம்.

Anonymous said...

அல்லகை 1 : நீ என்னிக்காவது இந்து படிச்சு இருக்கியா
அல்லகை 2 : எனக்கு இங்கிலிஸ்ல புடிச்ச எழுத்து A B C D தான். ஏன்னா அத தவிர வேற எதையும் எனக்கு படிக்க தெரியாது
அல்லகை 1: அப்புறம் ஏன் தினமும் இந்து படிக்கிறது போல இந்து ராமை விமர்சனம் செய்றே
அல்லகை 2 : இந்து பேரே பார்பான் மதம் இந்து ராம் பார்பான் இப்படி யோசிச்சுதான் எனக்கு பலக்க வலக்கம். எல்லா பிரச்சனையிலும் என் மற்ற அலல்கை தோழர்கள் எப்படி எலுதாறங்களோ நானும் அப்படி தான் எலுதுவேன். நான் துக்ளக் படிச்சது இல்லை ஏன் நான் என் ஒழுங்கா டிகிரி கூட முடிக்கலை. அதுககாக என்ன பண்றது
அல்லகை 1 : ஏன் தோழரே பார்பான் மேல உங்களுக்கு காண்டு
அல்லகை 2 : நானும் திருட்டு க்ண்ணாலம் கட்டியது ஒரு பாப்பாத்தியை தான். அதுக்காக நாம கொளுகையை எல்லாம் உட்டுகொடுக்க முடியுமா

அல்லகை 1: தலைவா நம்ம கொளுகை என்ன?
அல்லகை 2 : இணையத்தில் எவனாச்சும் ப்ராடாக இருந்தாலும் சரி திராவிடன்ம்னு எழுதினால் ஜால்ரா போடனும். பார்பானியம் பாப்பாத்தின்னு சொந்த பெயரிலும் அனானியாகவும் பார்பானை திட்டனும். இலங்கை பிரச்சனையில் ராம் சோ செயலலிதாவை திட்டனும்.
அல்லகை 1 : தலைவரே இப்படி செய்வதால் நம் இயக்கம் எப்படி வளரும்?
அல்லகை 2 : இயக்கம் எப்படி போனால் எனக்கு என்ன தினமும் ஹிட்ஸ் வருது அது போதுமே

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது