9/12/2009

சப்பைக்கட்டு கட்டும் போலியின் அல்லக்கைகள்

முத்துக்குமரன் என்னும் நபர் உண்மைத்தமிழனது இப்பதிவில் பின்னூட்டமிட்டுள்ளார். முதலில் அதை பார்ப்போம்.

“//மற்றபடி உங்களை கோவை மீட்டிங்கிக் எச்சரித்தது, போலி அனுப்பும் மின்னஞ்சல் லிஸ்டில் இருந்த அனைவரையும் சொல்லியே. அதன் பிறகு அது ஒரு பார்வேர்ட், அதில் இருக்கும் அனைவரும் அவனுடைய ஆட்கள் அல்ல என்று கண்டுகொண்டேன். மகேந்திரன் முத்துக்குமரன் கோவி கண்ணன் தவிர.//

செந்தழல் ரவி எனது பெயரை குறிப்பிட்டு இருப்பதாலும், போலியின் ஆள் என்ற தொனி இருப்பதால் மட்டுமே இந்த பின்னூட்டம். விடாது கருப்பு என்ற மூர்த்தி தன்னை பெரியார் தொண்டராக காட்டிக்கொண்டிருந்த போதிலும் அவரின் அநாகரீகமான மொழியை ஏற்றுக் கொண்டதோ அல்லது எந்த ஒரு இடத்திலும் உயர்த்திப் பிடித்ததும் கிடையாது. திராவிடர் தமிழர் குழுமத்தில் நடைபெற்ற விவாதத்திலும் இதைத் தெளிவாகவே பதிவு செய்திருக்கிறேன். தேவைப்படுபவர்கள் அதை வாசித்து தெரிந்து கொள்ளலாம். 2006ல் ஒருமுறை செந்தழல் ரவி ஐரோப்பியநாடுகளுக்கு சென்ற போது ஒரு பதிவிட்டிருந்தார். நான் ஓய்வாக இருக்கிறேன் தொலைபேசி எண்கள் கொடுங்கள் பேசுகிறேன் என்று. வலைப்பதிவர்கள் பலரோடும் பேசினார். அப்போது நானும் என் எண் கொடுத்தேன், பேசினோம், அந்தப் பேச்சிலும் குறிப்பிட்டது விடாது கருப்பு நம்பத் தகுந்தவர் அல்ல, பெரியார் பெயரை அவர் தவறாகவே பயன்படுத்துகிறார் என்பது. இன்னொரு முறை பேசியது தம்பிக்காக வேலை வாய்ப்பு தொடர்பாக சில ஆலோசனைகள் பெற. போலிக்கு எதிராக போராடியவர்கள் ஒருபுறம், அவனை நிராகரித்துவிட்டு போனவர்கள் ஒருபுறம், ஆதரித்தவர்கள் ஒருபுறம் என்று இருந்ததில் இரண்டாவதை நான் தேர்ந்தெடுத்தேன். அதனாலேயே எனக்கு வந்த ஆபாச அர்ச்சனைகளை பொதுவெளியில் வெளிப்படுத்திக்கொண்டது கிடையாது. விடாது கருப்பில் என்னை அர்ச்சித்து சூத்துகுமரன் என்றும் ஓசி பிரியாணி வாங்கி தின்கிறேன் என்றெல்லாம் சொன்னபோது கூட அவனுடைய தூண்டுதலுக்கு பலியாகி எதிர்வினை புரிவதை விட நிராகரித்தோமேயானால் காலப்போக்கில் தனிமைப்பட்டு விடுவான் என்றும் அவன் எழுத்துக்களே அவனை அம்பலப்படுத்திவிடும் என்பதையும் உறுதியாக நம்பினேன். மற்றபடி என் நேர்மையை யாரிடம் விளக்கி பட்டயம் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை.

குழுமத்தில் விவாதித்திருப்பதை குறிப்பிட்டிருப்பதால் அதை இங்கே தருகிறேன். அதற்கான கூடுதல் காரணம் போலி விசயத்தை பயன்படுத்தி திராவிடத் தமிழர்கள் எல்லோரையும் போலியின் அல்லக்கை என்று நிறுவ முனைவது இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது. அன்றைய சூழலில் திராவிடத் தமிழர் குழுமத்தில் நானும் ஒரு மட்டுறுத்தினராக இருந்ததும் இது தொடர்பான நிகழ்வுகளில் எங்களில் இருந்த வெளிப்படைத் தன்மையையும் அது உணர்த்தும் என்பதாலேயே!
டிசம்பர் 8 2006 அன்று குழுமத்தில் கருப்பு தொடர்பாக எழுதிய பதிவு
Friday, September 11, 2009 3:52:00 PM

முத்துகுமரன் said...
அதிகரித்துவிட்ட பணிசூழலினால் கடந்த சிலநாட்களாக இணையத்தில் செலவிடும் நேரம்
குறைந்துவிட்டது. தமிழ்மணத்திலிருந்து விடாது கருப்பு நீக்கம், அதைத்தொடர்ந்து
குழுமத்தில் நடைபெற்ற விவாதங்களை வாசித்திருந்தேன். இந்த நேரத்தில் சில
தெளிவுகளை முன்வைக்கவேண்டும் என்பதாலே இந்த விளக்கம்.
தமிழ்மணத்திலிருந்து கருப்புவின் நீக்கம் ஒரு வருத்தமளிக்கும் செய்தி.
ஆனால் அத்தகையதொரு சூழலை அவரின் எழுத்துகள் ஏற்படுத்திவிட்டன என்பதையும்
மறுக்கமுடியாது. இது தொடர்பாக குழுமத்தில் அவரின் கருத்துகளை அறிந்த போது சில
விசயங்களை சொல்ல வேண்டும் என்ற கட்டாயமும் வந்திருக்கிறது.
திராவிட, மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலை முன்னெடுப்பவர்கள் மிகவும்
கவனமாக இயங்க வேண்டியதருணம் இது. இந்த அரசியலின் தேவைகளை முக்கியத்துவத்தை
திரிப்பதில் தொடர்ந்து ஆதிக்க சக்திகள் வெற்றி பெற்று வருகின்றன. அதனால் மிக
அதிகப்படியான கவனத்தோடு இயங்க வேண்டி இருக்கிறது. நாம் சொல்லும் செய்திகளை விட
சொல்லபட்ட விதம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. செய்தியின் கணத்தைவிட
இந்த வெளிப்பாட்டிற்கு மிகுந்த முக்கியதுவம் அளிக்கப்படுகிறது. ஆகையால் வேகமாக
வார்த்தைகளை வாரியிறைப்பது என்பது விழலுக்கு இழைத்த நீராகுமே தவிர நமக்கு
எந்தவிதமான முன்னேற்றத்தையும் தாராது. நாம் போராட வேண்டியது, பயணிக்க வேண்டியது மிக நெடிய தூரம். அதில் முன்னேறி செல்வதை தடுக்க நமது சக்தியை வீணடிக்க
திசைதிருப்ப, சோர்வடையச்செய்ய எல்லாவகையான தந்தரங்களையும் நம் எதிராளிகள்
பிரயோகிக்கிறார்கள் என்பதையும் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
விடாது கருப்பு விடயத்திற்கு வருகிறேன். எவ்வளவு சீரிய கருத்தாயினும் அது
முறையாக சொல்லப்படல் வேண்டும். தங்களது சமீபத்திய சில பதிவுகளின் தரம்
எப்படியிருந்தது என்பதை அமைதியாக வாசித்தீர்களாயேயானால் உணர்வீர்கள். நீங்கள்
பெரியாரின் வழி நடப்பவர் என்று சொல்லுவதால் பெரியாரைக்கொண்டே உங்களிடம்
பேசுகிறேன்.
பெரியாரின் முக்கியமான பொன்மொழி.* ''மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'' *
பெரியார் நம் சமூக மக்கள் மான உணர்வோடும், அறிவு உணர்வோடும் வாழ
வேண்டுமென்பதற்காகவே தன்வாழ்வு முழுதும் உழைத்தவர். சுயமரியாதை, சமதர்மம்
என்பனவற்றை உயிர்மூச்சாக கொண்டிருந்தவர். அறிவுக்குப் புறம்பபன எந்த ஒரு
செயலையும் அவர் அனுமதித்ததில்லை.
மனிதர்க்கு மரியாதை தரப்பட வேண்டும் என்பதுதான் சுயமரியாதையின் அடிப்படைத்
தத்துவம். ஒரு பதிவரின் தாயை வேசி என்று குறீப்பிட்டு உங்கள் பதிவில்
எழுதியிருந்தீர்களே, இது எந்த வகை அறிவுணர்ச்சியில் வருகிறது???
அந்த தாயின் பெண்மையை விமர்சிக்க நீங்கள் யார்?? அந்த பெண்ணின் சுயமரியாதைக்கு
நீங்கள் தரும் மரியாதை என்ன? இந்த மாதிரி பேசமாறு எந்த இடத்தில் பெரியார்
கூறீயிருக்கிறார். சொல்ல முடியுமா?. சகமனிதனை மதிக்காதவன் எங்கனம்
சுயமரியாதைக்காரனாக இருக்க முடியும்???.
அடுத்ததாக, தீண்டாமை என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன? மனிதனை மனிதன் விலக்குவதுதான் தீண்டாமை. இது எல்லோர்க்கும் பொருந்தும். பார்ப்பனரை விலக்குவதும்
தீண்டாமைதான். பார்ப்பனர் என்பதால் அவர்கள் குறைந்த பட்ச மனிதத்தன்மையிலிருந்து
விலகிவிடுவதில்லை. குழலி அவர்கள் மாயவரத்தான் அவர்களோடு பேசுவது நட்பு கொள்வது
பற்றீ விமர்சித்து இருந்தீர்கள். பெரியாரை படித்திருப்பவன், வழிநடப்பவன்
எவனும் இதை விமர்சிக்க மாட்டான். ராஜாஜிக்கும் பெரியாருக்கும் இருந்த கருத்து
முரண்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவர்களுக்குள் ஆழமான நட்பு இருந்தது.
எப்படி சாத்தியாமானது. இருவருக்கும் அவரவர் கொள்கையின் பாலலிருந்த நம்பிக்கை.
இங்கு ஒரு பார்ப்பனிரிடம் பேசுவதாலோ, பழகுவதாலோ தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்க
கூடிய அளவிற்கு பலவீனமானவர்கள் கிடையாது. குறிப்பாக நானோ, முத்து தமிழினியோ,
குழலியோ பலவீனமானவர்கள் கிடையாது. கொள்கை என்பதும் நட்பு என்பதும் வேறு வேறு
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இன்னொன்று குழலியின் திராவிடத்தன்மையை பற்றி கேள்வி எழுப்பி இருந்தீர்கள்.
உங்களிடம்தான் எங்களின் திராவிட தன்மையை நீருபித்தாக வேண்டும் என்ற அவசியம்
இல்லை. தேவையும் இல்லை. யார் திராவிடத்தன்மையோடு இயங்குகிறார்கள் என்பதை
தீர்மானிக்கும் அதிகாரமையம் நீங்கள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளவும்.
Friday, September 11, 2009 3:57:00 PM

முத்துகுமரன் said...
பெரியார் விரும்பியது இந்த சமூகம் நாகரீகமடைந்த சமூகமாக வளரவேண்டும்,
அறிவுணர்ச்சியோடு வளர வேண்டும். சுயமரியாதையோடு வளரவேண்டும். அடுத்தவர்
குடும்மத்ததை விமர்சிப்பது என்பதுதான் நீங்கள் காணும் நாகரீக வளர்ச்சியோ?? மனித
நாகரீகத்திற்கு அப்பாற்பட்டது நீங்கள் செய்தது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இவ்வளவும் உங்களுக்கு சொல்வதன் காரணம் நீங்கள் பெரியாரைப் பின்பற்றுபவர்
என்பதால்தான். தான் வாழ்ந்த காலத்திலே தன்னைப்பற்றிய விமர்சனத்தை
ஏற்றுக்கொண்டவர், அனுமதித்தவர் பெரியார் என்பதால்தான்.அவரைப் பின்பற்ற
முயலுங்கள்.
திராவிட தமிழர் அமைப்பில் தொடர்வதும் தொடராததும் உங்கள் விருப்பம். ஆனால்
நாகரீகமற்ற செயல்களை குழுமம் ஒரு போதும் ஆதரிக்காது. அதுயாராக இருந்தாலும் சரி.
கருப்புவாக இருந்தாலும் சரி முத்துகுமரனாக இருந்தாலும் சரி.
மற்றபடிக்கு உங்கள் செய்கைகளுக்கு எல்லாம் பெரியாரை கேடயமாக பயன்படுத்தினால்
அதை அறிந்து கொள்ளமுடியாத அளவிற்கு இங்கு பகுத்தறிவற்றுப் போய்விடவில்லை.
சொல்லில் இல்லாமல் செயலில் நீங்கள் பெரியாரைப் பின்பற்றுபவராக வாழ முயற்சி
செய்யுங்கள்..
குறைகளை களைந்து மீண்டும் இயங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடும்,
எதிர்பார்ப்போடும் விருப்பத்தோடும் இப்போது விடைபெற்றூக்கொள்கிறேன்.
அன்புடன்
முத்துகும்ரன்
Friday, September 11, 2009 3:58:00 PM

முத்துகுமரன் said...
ஒரே பின்னூட்டமாக போட இயலாததால் மூன்றாக பிரித்து போட்டிருக்கிறேன்.
நன்றி
Friday, September 11, 2009 3:59:00 PM”


சரி மனிதர் தன் நிலையைத்தானே கூறியிருக்கிறார் இதில் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கும் முன்னால் முரளி மனோகர் விவகாரத்தில் அதே முத்துக் குமரன் தந்த எதிர்வினைக்கு அவரது போலி டோண்டு என்னும் பதிவையே பார்க்கலாமா?

“இரண்டு நாட்களாக சூடு பறக்க விற்பனையாகிக் கொண்டிருக்கும் போண்டா மஹா உற்சவத்தில் நானும் கலந்துகிறேன். இரண்டு ஆண்டுகளாக போலிப் புராணம் பாடியவர் இன்று போலியாய் அம்பலப்பட்டு நிற்கிறார். இது எதிர்பாராதது மற்றும் அல்ல பெரும் ஏமாற்றத்தை தருகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்பட்டு நிற்கிறது.

தமிழ்மணம் பின்னூட்ட மட்டுறுத்தலை கட்டாயமாக்கிய போது அதை தனது வெற்றியாக அறிவித்து கொண்ட திருவாளர் டோண்டு அவர்களே, உங்கள் யுத்தத்தை உங்களிடமே வைத்துக்கொள்ளலாமே, ஏன் பொதுவில் கொண்டு வந்தீர்கள். என்ன யோக்கியதை இருக்கிறது போலிகளைப் பற்றி பேச உங்களுக்கு. பதிவு பதிவாய் போய் எலிக்குட்டியையும், அனானி அதர் ஆப்சன்களை பற்றி நீட்டி முழக்கியது எதற்கு.

உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டதற்காக ஆபாச அர்ச்சனைகளை பெற்றார்களே, அவர்கள் எல்லாம் எதற்காக உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டார்கள்? நீங்கள் போலித்தன்மை இல்லாது இருப்பீர்கள் என்றூ நம்பித்தானே. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என உங்க அரிப்புக்கு ஏன் தமிழ்மணம் போன்ற பொதுத்தளத்தை பயன்படுத்திக் கொண்டீர்கள்.

நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம் கடைந்தெடுத்த அற்பத்தனம். நீங்கள் போலித்தன்மையற்றவராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு ஆதரவளித்த எல்லா பதிவர்களுக்கும் பந்தி போட்டு மலத்தை பறிமாரிவிட்டீர்கள். பிறர் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும், மதிப்பையும் உங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு, செய்தவந்த போலித்தனம் அம்பலப்பட்டு நிற்க போர்யுத்தி என்று சொல்லும் போது அருவருப்பாய் இருக்கிறது.
அம்பலப்பட்டவுடன் ஆங்கிலத்திற்கு தாவி தப்பிக்கும் உங்களுக்கு சுத்தத்தமிழில் ஒரு வாக்கியம்.
ஈரத்துணி போட்டு கழுத்தறுக்கும் வழக்கத்தை இந்த வயதிற்கு மேலாவாது விடுங்கள்.
போலி- டோண்டு என்று மிகச்சரியாக கணித்த உங்கள் புத்திக்கூர்மைக்கு என் வணக்கங்கள்”.


அவருக்கு நான் இட்ட்ப் பின்னூட்டங்களும் அவரது பதில்களும் இப்போது பார்ப்போம்.

“dondu(#11168674346665545885) said...
இந்த உதாரெல்லாம் என்னிடம் காட்டவேண்டாம் முத்துக் குமரன். நாம் மூவரும் சந்தித்ததை பதிவாகப் போட்டபோது போலி ஏதாவது திட்டுவானோ என்று பயந்துதானே நீங்கள் பின்னூட்டமிடாமல் தவிர்த்தீர்கள்?

இந்த அழகுக்கு நீங்கள் போலிக்கு பயப்படவேயில்லை என்று உதார் வேறு கடற்கரையில் கடல் சாட்சியாக விட்டீர்கள்.

//நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்
கடைந்தெடுத்த அற்பத்தனம்.//
இதில் என்ன அற்பத்தனம் கண்டீர்கள் முத்துக் குமரன்? வேறு பெயரில் எழுதுவது அற்பத்தனமா? யார் சொன்னது? அப்படியானால் அண்ணா, கலைஞர், கல்கி, ஸ்ரீவேணுகோபாலன் போன்ற எழுத்தாளர்களெல்லாம் அற்பர்களா? அப்படி நான் அற்பன் என்றால் நீங்கள் கோழை, கடைந்தெடுத்த கோழை.
ஒரு கேடு கெட்ட பிளாக்மெயிலருக்கு பயந்து பேடியைப் போல ஒடுங்கியவர்கள்தான் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும்.
ஆயினும் பலர் எனக்கு பின்னூட்டமிட வேண்டும் என்பதற்காகவே புது ஐடிக்கள் தேடிக் கொண்டனர். இதற்காகவும், சில பின்னூட்டங்களை என் சொந்தப் பெயரில் போட்டால் திசை திருப்பப்படும் என்பதாலுமே நான் ஒரு ஐ.டி. உருவாக்கிக் கொண்டேன். அது யாரையும் நகல் செய்யவில்லை. தரமான பின்னூட்டங்களையே இட்டது.
இதுவும், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஒரு போர் யுக்தியே. எனது பதிவுகளை நிலைநிறுத்த உதவி செய்தன.
இனிமேல் தேவை இல்லை என்று நான் தீர்மானம் செய்து அனானி/அதர் ஆப்ஷனை போட்டேன். நல்ல வேளையாக இதை நான் ஒரு நாள் முன்னாலேயே செய்தேன். இல்லாவிட்டால் இதற்கு கூட உங்களைப் போன்றவர்கள் ஜல்லியடித்திருப்பீர்கள்.

இதற்கு முத்துக்குமரனின் பதில்:
“நம் சந்திப்பு குறித்தான உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் போடாதது போலிக்கு பயந்து என்று சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது. அப்படி போலிக்கு பயந்தவனாக இருந்தால் தேடி அழைத்து உங்களை சந்தித்திருக்க மாட்டேன். துபாய் திரும்பியதும் இகலப்பை இல்லாது இருந்தது. இதை நம் ஜிடாக் உரையாடலின் போது கூட தெரிவித்து இருந்தேன்.
இந்தியா சென்று வந்தது தொடர்பான விரிவான பதிவை நான் எழுதவில்லை. அதற்கும் காரணம் போலிக்குப் பயந்தா?
உங்கள் பதிவை பார்த்தேன். அப்போதே ஜிடாக்கில் பேசி இருக்கிறோம். அதனால் அங்கு பின்னூட்டம் போடாதது மட்டுமே என் வீரம் பற்றிய முடிவை உங்களுக்குத் தந்திருக்கிறது என்றால் கோழை என்ற உங்கள் பாராட்டுப் பத்திரத்திற்கு நன்றி.
பொதுவாக தனி உரையாடலில் பேசுபவைகளை நான் வெளியே சொல்லுவதில்லை. இன்று குறீப்பிட நேர்ந்தது எனக்கு வருத்தமே.
போலிக்கெதிரான போரில் மற்றவர்கள் உங்களளோடிருந்தவர்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை என்ன? எந்த கருத்தானாலும் டோண்டு அவர் பெயரில் சொல்பவர் என்றுதானே...
இந்த நம்பிக்கை துரோகம்தான் உங்கள் பார்வையில் யுத்தியென்றால் அது அற்பத்தனமானது என்பதில் மாற்றுகருத்து இல்லை”.

எனது பதில்:
“போலிக்கெதிரான போரில் மற்றவர்கள் உங்களளோடிருந்தவர்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை என்ன?
எந்த கருத்தானாலும் டோண்டு அவர் பெயரில் சொல்பவர் என்றுதானே..."
இது என்னப்பா வாதம்? என்னுடனிருந்தவர்களில் பலர் நான் ஒன்றுமே செய்யாமல் உதை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சிலர் பதிவிடுவதையே நிறுத்துமாறும் ஆலோசனை கூறினர். எல்லாரின் நினைப்பையும் நான் நிறைவேற்ற வேண்டுமென்றால் வண்ணான், அவன் மகன், கழுதை கதைதான் நடந்திருக்கும்.
"துபாய் திரும்பியதும் இகலப்பை இல்லாது இருந்தது".
என்ன ஸ்வாமி கதையடிக்கிறீர்கள்? சுரதாப் பெட்டி என்று கேள்விப்பட்டதேயில்லையா. இல்லாவிட்டால் ஆங்கிலம் தெரியாதா? என்ன இதெல்லாம் சாக்குப் போக்கு.

//அதில் நானும் கூட வாழ்த்து தெரிவித்திருந்தேனே..//
உங்களை நான் குறைகூறவேயில்லை குழலி அவர்களே. ஒரு பதிவில் வாழ்த்து தெரிவித்ததற்குத்தான் தன்னை போலி தாக்கியதாகக் கூறினார். அப்போது கூட நான் கேட்டேன், அவரிடம் எதிர்க்கருத்தாயிருந்தாலும் பின்னூட்டமிடுங்கள் என்று. தலையை ஆட்டி விட்டுபோனவர் அப்புறம் வரவேயில்லை. ஓக்கே, அவரை நம்பியெல்லாம் நான் இல்லைதான்.
இங்கு என்னை அற்பன் என்று கூறியவரின் யோக்கியதையைத்தான் கிழிக்கிறேன். அவர் ஒரு ஆஷாடபூதி, கோழை என்று. அண்ணா, கலைஞர், கல்கி, பற்றிய குறிப்புக்கு பதில்?
இப்போது கூட பாருங்கள் குழலி அவர்களே, நான் இன்னொரு பெயரில் வந்ததைத்தான் கூறுகிறார்களே தவிர, அதற்கு ஆணிவேரான காரணம், ஒதுங்கியிருந்தவர் கோழைத்தனம் எல்லாம் பற்றி பேச வாயில்லை.
இந்த சந்திப்புக்கு பிறகு என் வீட்டுக்கு வந்த இன்னொரு பதிவர் தான் என் வீட்டுக்கு வந்ததை பதிவாகப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவு ஆம்பிள்ளை சிங்கங்கள் இங்கு”.

நடுவில் என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு அதே பதிவில் நான் தந்த பதில்:
“//இந்த சந்திப்புக்கு பிறகு என் வீட்டுக்கு வந்த இன்னொரு பதிவர் தான் என் வீட்டுக்கு வந்ததை பதிவாகப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவு ஆம்பிள்ளை சிங்கங்கள் இங்கு//. "ஒதுங்கியிருந்தால் கோழைத்தனம் என்று ஜெனரலைஸ் செய்வது சரியானதாகப் படவில்லை"

மன்னிக்க வேண்டும் பாலா அவர்களே. அந்த சம்பந்தப்பட்ட பதிவர் என்னை இவ்வாறு கேட்டு கொண்டதும், நான் அவரை காரணம் கேட்டதும் தான் போலியின் மீதுள்ள பயத்தால் அவ்வாறு கூறுவதாக ஒப்பு கொண்டார். அவர் மேல் எனக்கு கோபம் இல்லை. (பை தி வே, என்னை வீட்டுக்கு வந்து சந்தித்து விட்டு அதை பதிவாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட சிங்கக் குட்டி யார் என்று விழிப்பவர்களுக்கு, அவர் பெயர் முத்து தமிழினி).
இப்போது கூட 3-ஆம் தேதி நடந்த வலைப்பதிவு சந்திப்புக்கு அவரும் வந்திருந்தார். அப்பதிவைப் பற்றி ஒரு பின்னூட்டம்கூட இல்லை. இதற்கு என்ன சொல்லுவீர்கள்?
முத்துக்குமரன் மேலும் கோபம் இல்லை. ஆனால் இப்போது வந்து என்னமோ நான் கொலை செய்து விட்டது போல பதிவு போடுவதற்கு நான் சரியான எதிர்வினை தர வேண்டும்.
//நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்
கடைந்தெடுத்த அற்பத்தனம்.//
இப்படி அவர் உதார் விட்டதால்தான் அவர் கோழை என்பதை அழுத்தம் திருத்தமாக வெளியிட வேண்டியதாயிற்று.
முரளி மனோகர் என்ன ஆபாசமாக எழுதினார்? அப்படி அவர் மற்றவர்கள் பதிவில் எத்தனை பின்னூட்டம் இட்டு விட்டார்? இன்னொருவர் மின்னஞ்சல் போல ஐடி போல தயார் செய்து கல்யாண போட்டோக்கள், என் பெண் போட்டோக்கள் வாங்கினாரா?
டோண்டு சார் இப்படி செய்யலாமா என்று கேட்பவர்களை அவரை இவ்வாறான நிலைக்கு துரத்தியது பற்றி ஒரு வார்த்தையும் கேட்கக்கூடாதா?

//ஏன் பொதுவில் கொண்டு வந்தீர்கள். என்ன யோக்கியதை இருக்கிறது போலிகளைப் பற்றி பேச உங்களுக்கு. பதிவு பதிவாய் போய் எலிக்குட்டியையும், அனானி அதர் ஆப்சன்களை பற்றி நீட்டி முழக்கியது எதற்கு.//
உங்களிடம் அனானி மற்றும் அதர் ஆப்ஷன் இல்லை அல்லவா? மற்றப்படி தமிழ்மணம் மட்டுறுத்தலை கட்டாயமாக்கியது அல்லவா, அதனால் தமிழ்மணத்தில் ஆபாசங்கள் கட்டுப்பட்டன அல்லவா. போலிகளை பற்றி பேச எனக்கு யோக்கியதை இருப்பதால்தான் இதெல்லாம் நடந்தது.
மற்றப்படி ஒரு புனைப்பெயரை வைத்து கொண்டதற்காக அற்பம் என்று எல்லாம் திட்டினால் கோழை நீங்கள் என்ற எதிர்வினைதான் வரும். இந்த அழகில் சீப்பு இல்லை ஆகவே கல்யாணம் நின்றது என்ற ரேஞ்சில் இகலப்பை இல்லை என்ற அபத்ததமான சால்ஜாப்பை வைத்ததும் இதே பயம்தானே”.

ஆக டோண்டு விஷயத்தில் கோபக்கார இளைஞராக வந்த முத்துக்குமரன் போலி டோண்டு கருப்பு மூர்த்தி விஷயத்தில் எவ்வளவு அடக்கி வாசிக்கிறார் பாருங்கள்.

அதிலும் ஆச்சரியம் இல்லைதானே. ஏனெனில் அவரே கூறிவிட்டாரே ஆபாசமாக எழுதுவதை விட புனைப்பெயர் வைத்துக் கொண்டது அற்பமானது என்று.

அது சரி, மூர்த்திதான் போலி டோண்டு என்பது ஆகஸ்ட் 2007-லேயே தெளிவானது. அவனை 2008 ஜூலை மாதம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து சந்தித்ததையும் போலி டோண்டுவுடன் நேரடி சந்திப்பு என்ற பதிவிலாவது மூர்த்தியை கண்டித்து ஒரு சிறு பின்னூட்டம் இட்டாரா என பார்த்தால் பெரிய ஏமாற்றம். முரளி மனோகர் விஷயத்தில் பெரிய கொம்பன் மாதிரி எகிறிக்குதித்த இவர் இங்கு காட்டியது இடிபோன்ற மௌனம். அதுவே பல புனை பெயர்கள் வைத்துக் கொண்ட மூர்த்தி விஷயத்தில் அடக்கி வாசிப்பு.

அது பற்றி அவர் சொந்தப் பதிவு போட்டதாகவும் தெரியவில்லை. வேறு எங்கும் எழுதியதாகவும் தெரியவில்லை.

இப்போதுதான் புரிகிறது அம்மாதிரி அவர் கண்டித்திருந்தால் அவரது அல்லக்கை செயல்பாடுகள் பற்றி மூர்த்தி எழுதி அவரை நார் நாராக கிழித்துவிடுவானே என்ற பயம்தான் காரணம் என்று.

முத்துக்குமரரே நீங்கள் வேறும் கோழை ஆகவே நமது மெரினா சந்திப்பு பற்றிய எனது பதிவில் பின்னூட்டமிட தயங்கினீர்கள் என. அதையே சாடியவன் நான். இப்போது அந்த குற்றச்சாட்டை மாடிஃபை செய்கிறேன். நீங்கள் முதலில் அல்லக்கை பிறகுதான் கோழை. போதுமா?

இந்தத் தருணத்தில் மூர்த்தியின் இன்னொரு அல்லக்கை பெ. மகேந்திரன் 3-4 முறை என்னுடன் கூகள் டாக் மூலம் நட்பு கேட்டு வந்தார். அப்போதே அவரை மூர்த்தியின் அல்லக்கையாக அடையாளம் கண்டு கொண்ட நான் பெ. மகேந்திரன் என்னும் பெயர் இம்மாதிரி கோரிக்கை வைத்து வரும்போதெல்லாம் ரிஜெக்ட் செய்தேன்.

லக்கிலுக்கின் சைபர் கிரைம் பற்றிய தொடர் குமுதம் ரிப்போர்டரில் முடிவடைந்தது. பாலபாரதி கூறியது போல தொடர் முடியும் வரை காத்திருந்து பார்த்தாயிற்று. போலி டோண்டு மூர்த்தி பற்றி ஒருவார்த்தையும் இல்லை. அவன் சைபர் கிரிமினல் இல்லையென இவர் தீர்மானித்து விட்டாரா அல்லது முத்துக்குமரன் போன்று இவருக்கும் அதே பயமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

56 comments:

Anonymous said...

////அவன் சைபர் கிரிமினல் இல்லையென இவர் தீர்மானித்து விட்டாரா அல்லது முத்துக்குமரன் போன்று இவருக்கும் அதே பயமா?////

இரண்டுமில்லை.திராவிட அரசியல் பேசும் அல்லக்கைகள் அனைவருமே ஆபாசப் பிரியர்கள் தான்.அது, பெரிய தாடிக்காரர்,அண்ணாதுரை,மஞ்ச துண்டு போன்ற தலைவர்களாக(?) இருந்தாலும் சரி,அல்லது போலி டோண்டு,லக்கிலுக்,முத்துகுமரன்,மகேந்திரன் போன்ற பிரியாணி தொண்டரடிப்பொடிகளாக இருந்தாலும் சர்.இதுதான் நிதர்சனமான உணமை.ஏனென்றால், ஆபாசம்,அசிங்கம்,குப்பை ஒன்று கலந்த கூவம் தான் இவர்களின் பெடிக்ரி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

புதுசா எதும் விஷேசம் இருக்குங்ளா ஐயா!?

வால்பையன் said...

லைட்டா எட்டி பார்த்துக்கிடட்டுமா?

வால்பையன் said...

சென்னை இன்னுமும் சூடாவே இருக்கே!

Anonymous said...

போலி டோண்டு பற்றி லக்கிலூக் எழுதியிருக்க வேண்டுமானால் போலியை போலியாக மாற்றிய பலே கேடியான உங்களை பற்றியும் எழுதியிருக்க வேண்டும். அதற்கு பயந்துகொண்டு லக்கிலூக் எழுதவில்லையோ என்னமோ.

வருண் said...

To whom it may concern!

There is nothing wrong in supporting someone for being "your kind" or a " good friend", But when someone is involving in a "criminal act" and "terrorizing" innocent people, WE ALL SHOULD JOIN TOGETHER to "ERASE" such a criminal for his/her inhuman acts no matter whohe/she is. That is everyone's responsibility in our tamil community

If anyone who does not do that, that human being is "worthless" and a "traitor" for our whole tamil community!

When you are talking about cyber crime, how can you leave out the "real villain" who terrorized everybody?????

Only one of the following, could be a REASON for your cowardly act

1) Are you a good friend of him??

2) or ARE YOU AFRAID of him????

It does not matter whether he is is a friend or you are scared of him, you should be ashamed of being yourself no matter what reputation you have in the internet world!

Arun Kumar said...

ரொம்ப சூடு சார் :)
மூர்த்தியால் அதிகமாக பாதிக்கபட்ட நீங்கள் விடாமல் போராடியது மிகவும் பாராட்ட பட வேண்டிய ஒன்று,

சந்தோஷ் said...

இன்னமும் கல்லாபெட்டி காலியாகவே இருக்கே

SurveySan said...

//புதுசா எதும் விஷேசம் இருக்குங்ளா ஐயா!?//

repeatu :)

idhu mudiyaadhu polarukke.

கிருஷ்ண மூர்த்தி S said...

உங்களுடைய பதிவில் யோம்கிப்பூர், போலி டோண்டு என்ற குறியீட்டின் கீழுள்ள அத்தனை பதிவுகளையும் முன்னமே படித்திருக்கிறேன். மனிதரில் இத்தனை வக்கிரங்களா என்று வியந்தும் இருக்கிறேன்.

அந்த நேரத்தில், தமிழ் மணம் நாறியதையும்,[இப்போது மணம் வீசுகிறதா என்று கேட்காதீர்கள்!] இந்தப் பிரச்சினைக்குப் பிறகுதான் நிலைமை மாறியது மாதிரியும் சொல்லப் பட்டதெல்லாம் வெறும் கதையா?

யோம் கிப்பூர்-இந்த வார்த்தையின் உண்மையான பொருளில், பழையகதையையே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்காமல், அதே நேரம் அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தையும் மறக்காமல், தமிழ்ப்பதிவர்கள் முன்னேறிக் கொண்டே செல்லவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்!

dondu(#11168674346665545885) said...

//போலி டோண்டு பற்றி லக்கிலூக் எழுதியிருக்க வேண்டுமானால் போலியை போலியாக மாற்றிய பலே கேடியான உங்களை பற்றியும் எழுதியிருக்க வேண்டும்.//
ஐயா அறிவுக்கொழுந்து அனானி, போலியை போலியாக எப்படி மாற்றுவது? ஏற்கனவே போலிதானே. புதிதாக மாற்ற என்ன இருகிறது இதில்?

முதலில் முக்காட்டை கழட்டிவிட்டு வாரும்.

டோண்டு ராகவன்

முத்துகுமரன் said...

டோண்டு சார்,

உண்மைத் தமிழன் பதிவில் பின்னூட்டத்தையும், எனது பழைய பதிவையும் எடுத்துப் போட்டதற்கு நன்றி. வாசிப்பவர்களே தீர்மானித்து கொள்வார்கள். நான் எதுவும் விளக்கிக்கொண்டிருக்கப்போவதில்லை.உங்கள் பார்வையும் என் மீதான உங்கள் தீர்மானங்களும் உங்களது உரிமை. அதுவே உண்மை ஆகி விடாது.

இதுவே இப்பதிவிற்கான இறுதி பின்னூட்டம். அனானி விளையாட்டுகள் நடந்தாலும் நான் வார்த்தைக்கு வார்த்தை பதிலளிக்கப்போவதில்லை.

நன்றி

dondu(#11168674346665545885) said...

@கிருஷ்ணமூர்த்தி
மூர்த்தியால் தமிழ்மணம் நாறியது உண்மை. அவனை தமிழ்மணம் தூக்கி எறிந்தது உண்மை. அதன் பிறகு விடாது கருப்பு, ஆதிசேஷன், சட்னிவடை போன்ற பல பெயரில் வந்து ஆட்டம் போட்டது உண்மை. விடாது கருப்புவை முதல்முறையாக தூக்கியபோது அவனது அல்லக்கைகள் பெட்டிஷன் கொடுத்து தமிழ்மணத்தில் அவனை திரும்பச் சேர்க்க வைத்தது உண்மை.

கடைசியாக எல்லா கவர்களும் நீக்கப்பட்டு போலி வெளிக்கொணரப்பட்டது உண்மை. போலீஸ் ச்டேஷனில் நின்றது உண்மை. அவனது அல்லக்கைகள் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது உண்மை.

இன்னும் எத்தனை உண்மைகள் வேண்டும் உங்களுக்கு?

இப்போது கூட ஒரு அல்லக்கையின் செயல்பாடுதான் இத்தனையையும் வெளிக்கொணர்ந்தது என்ற உண்மையையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுப்புடு said...

**லைட்டா எட்டி பார்த்துக்கிடட்டுமா?**

Repeatu !

dondu(#11168674346665545885) said...

//இதுவே இப்பதிவிற்கான இறுதி பின்னூட்டம். அனானி விளையாட்டுகள் நடந்தாலும் நான் வார்த்தைக்கு வார்த்தை பதிலளிக்கப்போவதில்லை.//
நான் அனானி அல்ல.

மற்றப்படி பதிலளிக்கக் கூடியதாக ஏதேனும் கைவசம் சரக்கு இருந்தால்தானே உங்களால் பதிலளிக்க இயலும்? நீங்கள்தான் இப்படி எக்ஸ்போஸ் ஆகி நிற்கிறீர்களே.

ஆக, இப்படி கௌரவமாக சொல்லிக் கொண்டு போவதே நீங்கள் இப்போது செய்யக்கூடிய டேமேஜ் லிமிடிங் எக்சர்சைஸ். நடத்துங்கள். நான் மட்டுமல்ல இன்னும் பலரும் உங்களை புரிந்து கொண்டு விட்டார்கள்.

டோண்டு ராகவன்

Santhosh said...

//சந்தோஷ் said...
இன்னமும் கல்லாபெட்டி காலியாகவே இருக்கே
///
இதை போட்டது யாரா இருந்தாலும் நல்லா இருங்கடே...

டோண்டு சார் அவன் நானில்லை.. அனானி/புனைப்பெயர்/போலி பின்னூட்டம் எல்லாம் நான் போடுறது இல்ல..எங்கும் எப்பவும் ஒரிஜினல் தான்...

மாடல மறையோன் said...

போலீசு போலி டோண்டுவுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்?

சைபர் க்ரைம் லாவில் போலி டோண்டு செய்ததற்கு என்ன தண்டனை?

Prabhu S said...

Hope Luckylook & other Moorthe's disciple will ignore this conversation by giving the reason they dont have any time to think about the past and they no need to explain thier views & facts.

But the truth is, they dont have any way to hide thier ugly faces & dont have an answer to defend.

Well written Mr. Raghavan

dondu(#11168674346665545885) said...

@சந்தோஷ்
அது அனானி பின்னூட்டம் என்பதை நானும் கண்டுகொண்டேன். ஆகவேதான் அதற்கு பதிலளிக்கவில்லை.

நீங்கள் நேரடியாகத்தான் எழுதுவீர்கள் என்பதை நானும் அறிவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முத்துகுமரன் said...

டோண்டு சார்,

நீங்கள் அனானி அல்ல.ஆகையாலே மீண்டும் பின்னூட்டம். பதிலளிக்க சரக்கு இல்லை என்று இருக்கிறீர்கள். இருக்கட்டும். முந்தைய பதிவையும் பின்னூட்டத்தையும் எடுத்து போட்டிருக்கிறீர்கள். அதிலேயே பதில்கள் இருக்கின்றன. நீங்கள் நினைக்கும் பதிலைச் சொன்னால் மட்டும்தான் அது பதிலா? அதனால்தான் வாசிப்பவர்களே தெரிந்து கொள்ளட்டும் என்று சொல்லியிருந்தேன்.

போலிக்கு பயந்திருந்தால் நானாக உங்களை அழைத்துச் சந்தித்திருக்க வேண்டிய தேவை எனக்கிருக்காது.என்னுடைய போலி டோண்டு பதிவிலேயே உங்கள் கேள்விக்கு பதிலளித்து இருக்கிறேன்.சென்னை சந்திப்பிற்கு பிறகு நாம் ஜிடாக்கில் பேசி இருக்கிறோம். அதனால் பதிவில் பின்னூட்டம் இடுவது அவசியமானதாக தோன்றவில்லை என்று அப்போதே பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
அதே போல உங்கள் பதிவில் நான் ரசித்த விசயங்கள் இருக்கும் போது பின்னூட்டமிட்டிருக்கிறேன். ஜெயா தொலைக்காட்சியில் உங்கள் பேட்டி வந்த போது, மொழி குறித்து நீங்கள் பேசியதை குறிப்பிட்டும் பின்னூட்டமிட்டிருந்தேன்.

உண்மைத்தமிழன் பதிவில் பின்னூட்டமிட்டிருந்ததில் இணைத்திருந்த குழுமப் பதிவிலேயே தெளிவாகவே என் நிலைப்பாட்டை சொல்லியிருந்தேன். விடாதுகருப்பு, மூர்த்தி, போலி ஆகிய மூன்றும் ஒன்று என்று தீர்மானமாகாத போதே கருப்பு பெயரில் அவன் சக பதிவர்களையும், அவர்கள் குடும்பத்தாரை இழிவாக பேசுவதை பெரியார் கேடயத்துக்குள் ஒளிந்து கொள்ள முனைவதையும் கண்டித்து இருக்கிறேன். அதுவெல்லாம் உங்கள் கண்களுக்கு புலப்படவில்லை, அல்லது நீங்கள் நிறுவ முனைவதற்கு அவையெல்லாம் உதவவில்லை.

நான் வெளிப்படையாகவே இருக்கிறேன். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாணி. உங்கள் பாணிக்கு வராததால் மட்டுமே உங்களுக்கு எதிராக இருப்பதாக நீங்கள் புரிந்து கொண்டால் ஒன்றும் செய்ய இயலாது.

dondu(#11168674346665545885) said...

@முத்துக்குமரன்
முரளிமனோகர் விஷயத்துக்கு அற்பத்தனம் என பொங்கி எழுந்த நீங்கள் மூர்த்தி செய்ததற்கு அப்படி எல்லாம் பொங்கி எழவில்லையே. அது ஏன் என்பதில்தான் விஷயமே உள்ளது.

பூனை மாதிரி நீங்கள் கண்ணை மூடிக்கொள்வதால் உலகம் அஸ்தமித்து விடாது.

டோண்டு ராகவன்

கிருஷ்ண மூர்த்தி S said...

அம்பலப்பட்டு நிற்பது being exposed என்பதெல்லாம், கொஞ்சம் சுய சிந்தனையோடு, சுரணையோடு இருப்பவர்களை மட்டுமே பாதிக்கும் விஷயம்!சிறு வயதில், லஞ்சம் வாங்குவது, ஒளித்து மறைத்து டேபிளுக்கு அடியில் வாங்குவது என்று கேவலமாகப் பார்க்கப்பட்டதை அறிவேன். இன்றோ?!

அதே மாதிரித் தான், இங்கேயும், பாதிக்கப்பட்டவர்களுடைய கோபம், காயப்பட்ட கொந்தளிப்பு, அதற்கு ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும் என்ற முனைப்பு எல்லாம் அன்றைக்கு இருந்ததை அறிகிறேன்.

அதே நேரம், குற்றம் செய்பவர்கள் எல்லோருமே தண்டிக்கப் படுவதுமில்லை, திருந்துவதும் இல்லை என்பதையும் நடைமுறை வாழ்க்கையில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்!

டோண்டு சார், இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வாகத் தெரிவது: திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பது தான். கள்ளன், மாட்டிக் கொள்ளும்போது கள்ள மௌனம் தான் அப்போதைக்குத் தப்பிக்க ஒரே வழி! வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்?

திரும்பத் திரும்ப ஆவேசப்படுவதால் மட்டுமே, இந்தப் பிரச்சினைகள் மாறிவிடுமா என்ன?

வஜ்ரா said...

லக்கிலுக்கைப்போய் சைபர் கிரைம் பற்றி எழுதச்சொல்லியிருக்கிறார்களே. குமுதத்தில் தொடர் எழுதுவதற்கு ஹெவி ரெக்கமெண்டேஷன் லெட்டர் தேவை என்று நினைக்கிறேன்.

தான் ஒரு போலியாக இருந்தாலாவது "பெருமையாக" சொல்லிக்கொள்ளலாம், வெறும் அல்லக்கை எப்படி தான் ஒரு அல்லக்கை என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் ? அதை நீங்கள் குமுதம் தொடரில் வேறு எழுதித்தொலைக்க வேண்டியிருக்கிறீர்கள்.

dondu(#11168674346665545885) said...

//கள்ளன், மாட்டிக் கொள்ளும்போது கள்ள மௌனம் தான் அப்போதைக்குத் தப்பிக்க ஒரே வழி! வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்?//
அதை கள்ள மௌனம் என்பதையாவது சொல்லிவைப்போமே. அதெப்படி அதுகூட இல்லாமல் அவர்களை லூசில் விடுவது?

அதுவும் லார்ட் லபக்தாஸ் தோரணையில் முத்துக்குமரனார் நான் சுட்டிய பதிவில் எகிறியதை பார்த்தீர்கள் அல்லவா?

அதென்னப்பா இந்த இரட்டை அளவுகோல் என்று கேட்காமல் விட்டுவிடுவோமா என்ன?

@வஜ்ரா
:)))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

குப்பன்.யாஹூ said...

where is that Hero moorthy now,

Anonymous said...

//முதலில் முக்காட்டை கழட்டிவிட்டு வாரும்.

//

ஏன் நீங்க முக்காடை வைத்து இருக்கின்றீர்கள்?? அதை முதலில் எடுங்கள்.

Anonymous said...

சாக்கடை என்று தெரிந்தால் விலகி செல்வது முத்துக்குமரன் போன்றோரின் பாணி.

பீக்குள் குதித்தி துழாவி பொழுது போக்குவது உங்கள் பாணி. அவருக்கு அதற்கு நேரம் இல்லாமல் இருக்கலாம்.

dondu(#11168674346665545885) said...

//சாக்கடை என்று தெரிந்தால் விலகி செல்வது முத்துக்குமரன் போன்றோரின் பாணி.//
அப்படியா போலியின் அல்லக்கை அனாமத்து பேர்வழியே? உன் சக அல்லக்கை லார்ட் லபக்தாஸ் மாதிரி முரளி மனோகர் விஷயத்தில் பதிவு போட்டதால்தான் கேட்டேன், இப்போது ஏன் ஐயா வாய் அடைத்துப் போயிற்று என. அதற்கு அவரே பதில் சொல்லட்டும், முத்துக்குமரனாக லாக் இன் செய்து வந்து.

டோண்டு ராகவன்

டவுசர் பாண்டி... said...

புதுசா எதாவது இருக்குமோன்னு வந்தேன்....

அதே பழய காலி பெருங்காய டப்பா....உண்மைத் தமிழன் புண்ணியத்துல இனி உங்களுக்கு நல்லா பொழுது போவும்...

புதுசா எதாச்சும் மேட்டர் இருந்தா தாக்கல் சொல்லுங்க...வர்றேன்.பேர் புதுசா இருக்கேன்னு நினைக்க வேணாம்...பழய ஆள்தான் :)

முத்துகுமரன் said...

//அதற்கு அவரே பதில் சொல்லட்டும், முத்துக்குமரனாக லாக் இன் செய்து வந்து.//
டோண்டு சார்

எந்த பின்னூட்டமாக இருந்தாலும் நான் என் பெயரில்தான் போடுவேன். எனக்கு அனானி சாயம் பூச முற்படுவது வீண் வேலை. முரளி மனோகருக்கான பதிவு உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்து அதை சிதைந்த போது போடப்பட்ட பதிவு. உங்களுக்கு யுக்தியானது எனக்கு உங்கள் மீதான நம்பிக்கை சிதைவு. இன்னொன்று உங்களுக்கு பின்னூட்டம் போட்டால் மட்டுமே போலிக்கு எதிரி என்று சூத்திரம் வைத்துக்கொண்டால் எனக்கொன்றும் இல்லை. அதுக்கு பதிவு போடல, இதுக்கு பின்னூட்டம் போடவில்லை என்று சொல்கிறீர்களே, உங்களை சந்தித்துவிட்டு வந்த ஒரு மாதத்திற்குள் என் வீட்டில் நடந்த ஒரு துக்ககரமான நிகழ்வை பதிவாக்கி இருந்தேன். அதற்கு நீங்கள் பின்னூட்டமே போடவேயில்லை. அதைப்பற்றி நான் எந்தவிடத்திலும் குறிப்பிடவோ உங்களைத் தவறாகவோ ஆதங்கப்படவோ இல்லை.ஏனெனில் பதிலளிப்பதும் /இரங்கல் தெரிவிப்பதும், அளிக்காததும் அவரவர் உரிமை,சவுகர்யம் என்று இருந்தேன். இந்த நிகழ்வை இங்கு குறிப்பிடுவதற்காக மிகவும் வருந்துகிறேன்.

நீங்கள் எனக்களிக்கும் எந்த பட்டங்களைப் பற்றி கவலையில்லை.

dondu(#11168674346665545885) said...

@முத்துக்குமரன்
//நீங்கள் எனக்களிக்கும் எந்த பட்டங்களைப் பற்றி கவலையில்லை.//
உங்களுக்கு கவலையில்லை என்பது ப்ற்றி எனக்கும் கவலையில்லை.

ஒரு அல்பப் புனைப்பெயர் விவகாரம் உங்களுக்கு நம்பிக்கைச் சிதைவை ஏற்படுத்தியது எனவெல்லாம் பிரலாபிக்கும் நீங்கள் ஒரு அடாவடி பேர்வழி எனக்கு பின்னூட்டம் போடக்கூடாது என ஜபர்தஸ்து செய்தபோது வாய்மூடி மௌனியாக இருந்தது, ஒரு புனைப்பெயர் என்ன பல புனைப்பெயர்களுடன் உமது குரு போலீசில் மாட்டிக் கொண்ட போது கள்ளமௌனம் சாதித்தது ஏன் என்பதுதான் எனது கேள்வி.

அதற்கு மேலும் கள்ளமௌனம் மூலமாகவே எனக்கு பதில் தந்தீர்கள். அது போதும்.

//எந்த பின்னூட்டமாக இருந்தாலும் நான் என் பெயரில்தான் போடுவேன்.//
சாரி, எனக்கு உங்கள் மேல் அம்மாதிரியான நம்பிக்கை எல்லாம் போய்விட்டது. குட்பை.

டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு அய்யா சில கேள்விகள்
1. மூர்த்தியை மேலும் மேலும் வளர்த்து விட்டு ஆதாயம் தேடினீர்கள் என்ற குற்றசாட்டு உண்மையா
2. மூர்த்தி உங்களின் குடும்ப பெண்களை புகைபடம் போட்டு மோசமாக எழுதியும் நீங்கள் ஏன் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை

Anonymous said...

லக்கிலூக் தொடரை நிறுத்த நீங்கள் தான் காரண்மா? இது உங்களின் யுக்திக்கு கிடைத்த பரிசா?

dondu(#11168674346665545885) said...

//அதற்கு நீங்கள் பின்னூட்டமே போடவேயில்லை. அதைப்பற்றி நான் எந்தவிடத்திலும் குறிப்பிடவோ உங்களைத் தவறாகவோ ஆதங்கப்படவோ இல்லை.ஏனெனில் பதிலளிப்பதும் /இரங்கல் தெரிவிப்பதும், அளிக்காததும் அவரவர் உரிமை,சவுகர்யம் என்று இருந்தேன்.//
அப்பதிவை நான் பார்த்திருக்க மாட்டேன்.

ஆனால் அதே சமயம் முத்துக்குமரனுக்கு பின்னூட்டம் தரக்கூடாது என்று எந்த அடாவடிப் பேர்வழியும் ஜபர்தஸ்து எதையும் செய்யவில்லை என்பதையும் நீங்கள் நினைவு வைக்க வேண்டும்.

ஆனால் எனக்கு எதிராக அந்த ஜபர்தஸ்து இருந்தது, அதுவே முரளிமனோகருக்கும் ஒரு காரணமாக அமைந்தது என்பதை சௌகரியமாக மறக்கக்கூடாது.

அத்தருணத்தில் போலிக்கு பயந்து பின்னூட்டம் இடாதவர்கள் அவனை ஆதரித்து பின்னூட்டம் இடாதவர்கள் என்றெல்லாம் பிரித்துப் பார்க்க வேண்டுமானால் அதற்கு வேறு க்ரைட்டீரியன்கள் தேவைப்படும். கள்ளமௌனம், இரட்டை நிலை ஆகியவையும் பார்க்கப்படும் என்பது தவிர்க்க இயலாததே.

டோண்டு ராகவன்

பழைய வலைப்பதிவர் said...

//
1. மூர்த்தியை மேலும் மேலும் வளர்த்து விட்டு ஆதாயம் தேடினீர்கள் என்ற குற்றசாட்டு உண்மையா
//

ஆம், மூர்த்தியை மேலும் மேலும் வளர்த்துவிட்டு ஆதாயம் தேடினது மூர்த்தியின் அல்லக்கைகளே.

இப்போது அந்த அல்லக்கைகள் எல்லாம் பிரபல வலைப்பதிவர்களாக உலா வருகிறார்கள். இந்த விசயத்தைப்பற்றி பேச்செடுத்தால் வாய்ப்*&$!@#யை மூடிக்கொள்கிறார்கள் என்பதும் உண்மை.

Anonymous said...

////அதற்கு நீங்கள் பின்னூட்டமே போடவேயில்லை. அதைப்பற்றி நான் எந்தவிடத்திலும் குறிப்பிடவோ உங்களைத் தவறாகவோ ஆதங்கப்படவோ இல்லை.ஏனெனில் பதிலளிப்பதும் /இரங்கல் தெரிவிப்பதும், அளிக்காததும் அவரவர் உரிமை,சவுகர்யம் என்று இருந்தேன்.//
அப்பதிவை நான் பார்த்திருக்க மாட்டேன். //


ஏனுங்கையா?

போலியின் மீதான புனிதப்போரில் யாரும் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களா என்று தமிழ்மணத்தில் வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பீர்களே? அந்தப் பதிவை எப்படி தவற விட்டீர்கள்?

போலியுடனான யுத்தம் உங்களுக்குத் தொழில். மத்தவங்கெல்லாம் வேலை வெட்டி இல்லாமல் இதிலேயே மாரடிக்க வேண்டுமா? வேற பொழப்ப பாக்க வேணாமா?

dondu(#11168674346665545885) said...

//போலியுடனான யுத்தம் உங்களுக்குத் தொழில்.//
அப்படீன்னு நினைத்துத்தான் பலர் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள், அவர்களே போலியின் கையால் அர்ச்சிக்கப்படும்வரை. அதை விடுங்கள்.

சாதாரணமாக மூர்த்தி விஷயத்தில் என்ன நடக்குமென்றால் அவனால் தாக்கப்படுபவர்கள் வலையுலகத்திலிருந்து விலகி விடுவார்கள். அவனும் கொஞ்ச நாளைக்கு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடப்பான்.

அவனது துரதிர்ஷ்டம் டோண்டு ராகவன் என்னும் சண்டைக்கார பாப்பானிடம் சண்டை வைத்ததுதான்.

பின்னூட்டம் தருவதை இவன் எதிர்த்தால் என்ன, பல நண்பர்கள் இதற்கெனவே இன்னொரு ஐடி எடுத்து வந்தார்கள் அல்லவா.

ஆளைவிடுங்கள். இந்த யுத்த யுக்தியெல்லாம் உமது அறிவுக்கு அப்பாற்பட்டது. ரிசல்டைப் பாருங்கள்.

அன்புடன்,
முரளி மனோகர்

ரொம்ப பழைய பதிவர் said...

சாதாரண பிட்பாக்கேட் திருடனாக இருந்த மூர்த்தியை இண்டர்நேசனல் கிர்மினலாக ஆக்கியதே உங்களின் வெற்றிதான்.

பாருங்க உங்க நண்பர்கள் தொடர்சியாக மூர்த்தியால் ஆப்பு வைக்கபட்டு கொண்டு இருந்த போது நீர் யுத்தம் யுக்தி என்று சொல்லி கொண்டு இருந்தீர்

போலிஸில் புகார் கூட கொடுக்கவில்லை.மூர்த்தியும் மேலும் வளர்ந்து கொண்டே இருந்தான்

உங்களின் எதிர் நடவடிக்கைகளில் maturity இல்லாமல் தான் இருந்தது. இப்போது கூட எல்லாருக்கும் தெரிந்த லக்கிலூக்க்கை விட்டு முத்துகுமரனை தாக்குகிறீர்கள். இந்த பதிவில் என்ன புது விசயம் இருக்கிறது. பழைய லிங்குகளை எடுத்து போட்டு புது பதிவு வந்து இருக்கிறது.

Anonymous said...

//ஆளைவிடுங்கள். இந்த யுத்த யுக்தியெல்லாம் உமது அறிவுக்கு அப்பாற்பட்டது. ரிசல்டைப் பாருங்கள்.//
operation success but patient is no more.

கிருஷ்ண மூர்த்தி S said...

டோண்டு சார்,

முத்துக்குமாருக்கோ அல்லது அனானிக்கோ பதில் சொல்வதை விட, இந்த இரண்டு அல்லது மூன்று விஷயங்களைத் தெளிவுபடுத்தினால், பழசிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்ட மாதிரியும் இருக்கும், புதியவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்கும்.

ஒன்று, இங்கே இருக்கும் சைபர் சட்டங்கள் இதைப் பற்றி என்ன சொல்கின்றன, பாதிக்கப்பட்டவர் நியாயம் தேடுவதெப்படி? நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள்,என்ன?

இரண்டு, ப்ளாகரில் ஒரு வசதி இருக்கிறது, ஒரு பதிவின் உள்ளடக்கம் விவகாரமானதாக இருக்கிறது என்று நீங்கள் கருதினால், புகார் செய்ய வசதி இருக்கிறது. தொடர்ந்து அந்த மாதிரிப் புகார் வருமானால், பதிவு முடக்கப்பட்டு விடும். அதே மாதிரி, திரட்டிகளும் செய்ய ஆரம்பித்தால், பிரச்சினை குறைய வழி இருக்கிறதா? திரட்டிகளை, இப்படிச் செய்யும் படி வற்புறுத்தப் பதிவர்கள் ஒன்று சேர்வார்களா? அல்லது, பரபரப்புக்காக, இந்த மாதிரிப் பதிவுகளையும் ஆதரிக்கும் திரட்டியுமே, உடந்தையாக இருந்ததாகத் குற்றம் சாட்டப் பட முடியுமா? குற்றவாளியோடு, குற்றவாளியாகச் சேர்க்க முடியுமா?

இந்த மாதிரி மோசமான அனுபவம் மறுபடியும் எவருக்குமே நிகழாமல் இருக்க, நடந்ததில் இருந்து கற்றுக் கொண்ட பாடமாக, எதைச் சொல்வீர்கள்?

dondu(#11168674346665545885) said...

மோகன் கந்தசாமி என்பவரது பதிவில் இட்டது எனது இப்பின்னூட்டம். பார்க்க:http://mohankandasami.blogspot.com/2009/09/blog-post.html

//அப்பதிவில் 'வழிப்போக்கன்' என்ற பெயரில் பின்னூட்டமிட்டவர்தான் விசாரனைக்குள்ளான பதிவர் மூர்த்தி என்று கருதப்படுகிறது//.
தான் வழிப்போக்கன் என்பதை மூர்த்தியே ஒத்துக் கொண்டாகி விட்டது. ஆகவே கருதப்படுகிறது என்றெல்லாம் எழுதப் [பிரமேயமே இல்லை.

//முப்பதுக்கும் மேற்பட்ட அவரது பின்னூட்டங்களில் அவர் அனைத்துவித கண்ணியத்தையும் கடைபிடித்திருக்கிறார்.//
மூர்த்தியின் ஆரம்பப் பின்னூட்டம் இதோ:
“நடிகர் திலகம் தனது நடிப்பால் எல்லோரையும் கவர்ந்திழுத்ததோடு தம் வாழ்க்கையும் திறந்த புத்தகமாக வைத்திருந்தார். அதனாலேயே அவரின் புகழ் இறந்த பின்னும். உங்களின் கமலும் திறந்த புத்தகமாகத்தான்! ஆனால் திறந்திருப்பது அவர் வாழ்க்கையல்ல... அண்டர்வேர்!//
இதில் என்ன கண்ணியம் கண்டீர்கள்.

//இன்று புனிதராக தனக்கு தானே பட்டம் கட்டி கொண்டிருக்கும் டோண்டு ஒரிஜினல் பெயரிலும், அனானிமஸ் மற்றும் முரளிமனோகர் பாணியில் வேறு வேறு பெயர்களிலும் தனிப்பட்ட முறையில் தாக்கியிருப்பதை காணலாம். குறிப்பாக 'கமல் ரசிகன்' என்ற பெயரில் வந்த பின்னூட்டம் மிக மோசமானது.//
Quite uncalled for libellous accusation that I commented under the name of கமல் ரசிகன்.
முரளி மனோகர் பெயரில் ஒரு ஆபாசப் பின்னூட்டத்தையாவது காட்டவியலுமா? விஷயம் புரியாமல் உளறக்கூடாது.

//பிரச்சினையை தொடக்கத்திலேயே முடித்திருக்க டோண்டுவால் முடிந்திருக்கக் கூடும். போலிடோண்டுவின் எதிர்வினை ஆபாச பதிவுகளை நிறுத்துவது தொடர்பாக டோண்டு ஆதரவாளர்களும் அதை நிறுத்தி விட்டு தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்திருக்கலாம். வேறு சிலர் அவ்வாறு பிரச்சினையை முடித்திருக்கின்றனர்.//

ஆம் வலைப்பூவையே விட்டு ஓடியிருக்கின்றனர், ஆகவே பிரச்சினையிலிருந்து விலகினர். அம்மாதிரி நான் செய்யவில்லை. உமக்கு ஏதேனும் ஆட்சேபணை? அல்லது கடைசியில் மூர்த்தியை தூக்கி குப்பைத் தொட்டியில் வீசியது குறித்து ஏதேனும் வருத்தம்?

//பிரச்சினையில் ஒதுங்கி நின்றவர்கள் சிலரை பற்றிய தகவல்கள் டோண்டுவால் போலிடோண்டுவுக்கு போனதாக கூறப்படுகிறது.//
இந்த கூறப்படுகிறது, நம்பப்படுகிறது என்றெல்லாம் இல்லாது ஆதாரம் தரமுடிந்தால் தாருங்கள்.

எனக்கு பின்னூட்டமிடக்கூடாது என மூர்த்தி கூறியது எந்த விதத்தில் உங்களால் ஜஸ்டிஃபை செய்யப்படும்?

//எப்படி இருந்தாலும் போலியை உருவாக்கியவர் என்ற முறையிலும், போலி டோண்டு தற்போது வலைப்பூக்களை விட்டு விலகி விட்டதாலும் டோண்டுவே அப்போது இருந்த ஆபாசசூழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் ஆகிறார்.//
வழக்கமான மோகன் கந்தசாமித்தனமான உளறல் என்று அதை அலட்சியம் செய்கிறேன்.

இப்பின்னூட்டம் உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதைக் காட்டும் விதமாக அதன் நகலை எனது போலி டோண்டு பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன்.
பார்க்க: http://dondu.blogspot.com/2009/09/blog-post_12.html

டோண்டு ராகவன்

ரவி said...

///

திரட்டிகளை, இப்படிச் செய்யும் படி வற்புறுத்தப் பதிவர்கள் ஒன்று சேர்வார்களா?

///

Krishnamoorthy, Sorry for English.

I had sent a mail to Thamizmanam, asking them to block all the IP's from Malaysia. I had received couple of Smily's :):) like this from them.

!!!

Swami said...

started reading Dondus blog recently .. It was fun before this post i guess. Cant understand head and tail of this .. Looks like some ugly fight between educated ( ! ) people. Dondu sir come out and post the intresting posts. I started reading from the coverage of Enge Brahmnan.. Hope you continue the good work you were doing..

வஜ்ரா said...

ரொம்ப பழைய பதிவர் என்ற வெண்ணைவெட்டிக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால்...

நீர் சொல்வதற்குப் பெயர் தான் சப்பைக்கட்டு என்பதே.

மலேசியப்பன்னாடை பார்ப்பானர்களைத் திட்டுகிறான் என்பதற்காகவே சிலர் அவனுக்கு பல பதிவர்களின் வீட்டு விஷயங்களை திரட்டிக்கொடுத்தார்கள் அவர்களைத்தான் அல்லக்கைகள் என்று சொல்கிறோம்.

அவர்கள் எல்லாம் அந்த மலேசியப்பன்னாடையை ஏன் போலீசில் மாட்டிவிடாமல், இப்படி பதிவர்களின் குடும்ப விஷயங்களை அவனுக்கு அனுப்பிவைத்தார்கள் என்று கேட்க துப்பில்லாத வெண்ணை வெட்டி எல்லாம் இங்கே என்ன மயித்துக்கு வந்து பேசுது ?

Anonymous said...

//I had sent a mail to Thamizmanam, asking them to block all the IP's from Malaysia. I had received couple of Smily's :):) like this from them.//

The request deserves some more smiley.

Mr. Ravi, as a techie don't you know that this is like ** மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது ** ?

whom you are trying to fool?

Anonymous said...

////I had sent a mail to Thamizmanam, asking them to block all the IP's from Malaysia. I had received couple of Smily's :):) like this from them.//

The request deserves some more smiley.

Mr. Ravi, as a techie don't you know that this is like ** மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது ** ?

whom you are trying to fool?//

Ravi can open an blog aggregator like Tamilmanam and ban all sites coming from Malaysia, Singapore or anywhere, and allow only those blogs which sing the glory of things he likes very much.

Rajaram said...

Sir an unrelated doubt. Hope you would help me in this regard. Do you know any good place to learn Chinese in Chennai?
I searched in Internet. Was not satisfied with Google results.
Thanks in advance, sir.
Rajaram

Anonymous said...

மூர்த்தி கேஸ் விசாரணைக்கு வந்த தினத்தன்று அவசர அவசரமாக தங்களுடைய அரசியல் தொடர்புகளை (?) பயன்படுத்திக் கொண்டு மூர்த்தியை மாட்டி விட்டவர்கள் மீது பொய்க் கேஸ் போடும் முயற்சி நடந்ததே. அதற்கு முழு மூச்சாக இருந்த பெரும் அல்லக்கை ஒருவனைப் பற்றி யாருமே மூச்சு விட மாட்டேன் என்கிறீர்களே?

Anonymous said...

காமெடி பீஸ் மோகன் நொந்தசாமி, களபிறர் போன்றவர்களைப் பற்றி நீங்கள் கண்டு கொள்ளவில்லை என்று ரொம்ப வருத்தத்தில் இருப்பதாக கேள்வி ஸ்வாமி

வஜ்ரா said...

அண்ணாதுரை பிறந்தநாளன்று கோவை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சில குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார் கருணாநிதி. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

M Arunachalam said...

Dondu Sir,

//அண்ணாதுரை பிறந்தநாளன்று கோவை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சில குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார் கருணாநிதி.//

Why don't you also "relieve" these Pottai Bloggers from your onslaught on the 100th Anniversary of Annadurai?

வஜ்ரா said...

//
அதற்கு முழு மூச்சாக இருந்த பெரும் அல்லக்கை ஒருவனைப் பற்றி யாருமே மூச்சு விட மாட்டேன் என்கிறீர்களே?
//

இது என்னது ?
"கருப்பு பூனை சொல்வதைக் கேளுங்கள்" மாதிரி...ஒரு பிட்டப்போட்டு எஸ்(கேப்) ஆகியிருக்குது ஒரு அனானி....?

ரவி said...

Ravi can open an blog aggregator like Tamilmanam and ban all sites coming from Malaysia, Singapore or anywhere, and allow only those blogs which sing the glory of things he likes very much.

Hi, that time its only few 100 people blogged. and i was telling about the IP's registered in that particular location where he worked, works now.

Anonymous said...

//and i was telling about the IP's registered in that particular location where he worked, works now.//

Last heard was that his passport is confiscated and he is in TN.

Are you saying that Poli is back in MY?

Sanjai Gandhi said...

இதை பின்னூட்டமா உண்மை தமிழன் பதிவிலேயே போட்டிருக்கலாமே. எப்போ ஹிட் கவுண்டர்களை எல்லாரும் தூக்கறாங்களோ. அப்போ தான் நல்லது மட்டும் நடக்கும்.

dondu(#11168674346665545885) said...

@சஞ்சய் காந்தி
உண்மைத் தமிழன் பதிவிலும் பின்னூட்டம் போட்டுள்ளேன். ஆனால் அது மட்டும் போதாது. போலி மற்றும் அவனது அல்லக்கைகளின் திருவிளையாடல்களால் பாதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவன் நான். ஆகவே எனக்கு தெரிந்ததையும் போட வேண்டும்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், மற்றவர் பதிவில் போட்டு விட்டு, சிலசமயங்களில் அப்பதிவே காணாமல் போகும் போது நான் போட்ட பின்னூட்டமும் போய் விடும் அல்லவா. அது எனது கட்டுப்பாட்டில் இல்லாததால் முக்கியமான விஷயத்துக்கு எனது வலைப்பூவிலும் பதிவிடுவது அவசியமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது