10/08/2009

டோண்டு பதில்கள் - 8.10.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

அனானி (32 கேள்விகள் கேட்டவர்)
1. முதல்வர் கருணாநிதி ,"என் கருத்தால் பிறர் மனதை புண்படுத்த விரும்பவில்லை"-உங்கள் விமர்சனம்?
பதில்: நல்ல காமெடி.

2. ரஜினி, கமலுக்கு சிறந்த நடிகர் விருது-விருதுகள் பகிர்வின் உள்நோக்கம்?
பதில்: எல்லாம் ஒரு சம்ச்சீராக்கும் செயல்தான். பல கலைஞர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களை பற்றிக் கூறும்போது எம்.ஜி.ஆர். - சிவாஜி, கமல் - ரஜனி, விஜய் - அஜீத் என்று ஜோடி ஜோடியாக சேர்த்து அவர்களை தங்களுக்கு பிடிக்கும் என்று கூறிவிடுவார்கள். அப்போதுதானே ஏதேனும் சந்தர்ப்பம் சம்பந்தப்பட்ட நடிகர்களது கேம்பிலிருந்து கிடைக்கும்?

3. கோவை 9 வது உலகத் தமிழ் மாநாடு-கலைஞரின் திடீர் முடிவு -இலங்கை அரசியல் பிண்ணனி-ராகுல் விசிட்-திசைதிருப்பும் திருப்பணி-இதில் எது சரி?
பதில்: ஒன்றுமே சரியில்லை. தன்னைத் துதிப்போருக்கு இன்னொரு வாய்ப்பு தரும் சீரிய நோக்கமே காரணம்.

4. இலங்கைத் தமிழர் படும் இன்னல்கள் பற்றி வரும் தகவல்கள்?
பதில்: மனதை உருக வைக்கின்றன. ஆனால் அதே சமயம் இன்னும் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றெல்லாம் தமாஷ் செய்து ஈழத்தமிழர்களுக்கு ஆப்பு வைக்கும்வேலையும் அவ்வப்போது நடப்பது கண்டிக்கத்தக்கது.

5. புஸ்வாணமாய் போன நடிகர் விஜயின் அரசியல் விஜயம்- காரணகர்த்தா யார்?
பதில்: சரத்குமாருக்கு நேர்ந்த கதியைப் பார்த்து மிரண்டிருக்கலாமோ?

6. தமிழக தென்பகுதி காவலர் மாவீரனுக்கு டெல்லி கசக்குதாமே-இனி?
பதில்: அது அவர் பாடு, அவர் குடும்பம் பாடு. நமக்கென்ன இதில் அக்கறை?

7. இந்தியாவின் கண்டுபிடிப்பு -நிலவில் நீர் -உங்கள் பாராட்டு விமர்சனம்?
பதில்: இந்தியாவின் பெருமைக்கு அணி சேர்க்கும் செய்தி இது.

8. ராஜராஜ சோழன் புகழ் பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி பற்றி?
பதில்: இவர்தானே “குழந்தையும் தெய்வமும்” படத்தில் ஜமுனாவின் அன்னையாக வந்தது? எனக்கு பிடித்த நடிகை. இவர் மல்யுத்தவீரர் அஜித்சிங்கை மணந்தவர் என நினைக்கிறேன். அல்லது அது ஜி.வரலட்சுமியா?

9. சீன ராணுவ உதவியுடன் இலங்கை ராணுவத்தின் தொந்திரவு தமிழக மீனவ்ர்களுக்கு-இது எதில் கொண்டு போய் விடும்?
பதில்: இம்மாதிரி செய்தி ஏதும் நான் படித்ததாக நினைவில்லையே? சுட்டி ஏதேனும்?

10. சமீபத்தில் சிவபத அடைந்த பிரபல எழுத்தாளர் தென்கச்சி ‌கோ சுவாமிநாதனை சந்தித்து உள்ளீர்களா?
பதில்: இல்லை.

11. கறுப்புப்பண முதலைகள் பற்றிய விக்ரமின் ‘கந்தசாமி’ படம் எப்படி?
பதில்: இந்தியன் படத்தைப் பார்க்க பிளாக்கில் டிக்கெட் எல்லாம் விற்று அதன் காரணமாக படத்தை சாடியவர்களுக்கு இப்படத்தில் அதற்கான வாய்ப்பு இல்லாது போயிற்று.

12. தொலை தொடர்புத்துறை சாதனையாளர் தயாநிதிமாறன் ஜவுளித்துறையிலும் சாதிப்பாரா?
பதில்: அதில் சாதிக்கிறாரோ இல்லையோ, தன் மனைவிக்காக இவரே தனியாக ஜவுளிக்கடைக்குப் போய் புடவை செலக்ட் செய்து மனைவியிடமிருந்து இடிவாங்காமல் இருந்தால்தான் இவர் ஜெயித்ததாக ஒத்துக் கொள்வேன்.

13. சன் டீவி-கலைஞர் டீவி போட்டி தொடர்வது போலுள்ளதே?
பதில்: போட்டியா, யார் சொன்னது? சன் டீவியை கலைஞர் காப்பி அடிப்பது தொடர்கிறது என்று வேண்டுமானால் கூறுங்கள். அதை விடுத்து போட்டி எனக் கூறுவது அவதூறானது.

14. முதலில் ஜஸ்வந்த் சிங், பின் அருண்ஷோரி - அடுத்து?
பதில்: பா.ஜ.க. சுதாரித்துக் கொள்ளவிலை என்றால் நஷ்டம் அதற்குத்தான்.

15. எல்லா டீவிகளும் கமலின் ஐம்பது வருடத் திரையுலகச் சேவை பற்றித் கலக்குகின்றனவே?
பதில்: கலக்க வேண்டிய விஷயம்தானே.

16. ஒரு கலக்கு கல்க்கிய பன்றிக் காய்ச்சல்-அமெரிக்காவின் சதியா?
பதில்: கண்டிப்பாக இருக்கவியலாது. இதெல்லாம் ஒருவித சுழற்சியில் வருகின்றன. எல்லா வகைக் கிருமிகளும் காற்றில் உள்ளன. சிலவற்றின் எண்ணிக்கை ஒரு க்ரிட்டிகல் அளவைத் தாண்டியதும், கூடவே அதன் பரவலுக்கு தோதான சீதோஷ்ணநிலையும் இருந்தால், மேலும் வேறுகாரணிகளுக்கான ஷரத்துகளும் பூர்த்தி செய்யப்பட்டால் அது பரவ ஏதுவாகிறது. அதுதான் இந்த விஷயத்திலும் நடந்துள்ளது.

17. மு.க. அழகிரி-ஸ்டாலின் -தமிழரசு இவர்களின் சகோதர உறவு ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளதா?
பதில்: பஞ்ச பாண்டவர்களும் கௌரவர்களும் சகோதரர்களே. போதுமா?

18. 2 வழிகள் கோபத்தை அடக்க?
பதில்: உன்னையே நீ அறிவாய், எதிராளியையும் அறிவாய்.

19. 2 வழிகள் ஆனந்தத்தை அதிகரிக்க?
பதில்: உன்னையே நீ அறிவாய், எதிராளியையும் அறிவாய்.

20. 2 வழிகள் வாழ்வில் வெற்றி அடைய?
பதில்: உன்னையே நீ அறிவாய், எதிராளியையும் அறிவாய்.

21. 2 வழிகள் எதிரிகளை சமாளிக்க?
பதில்: உன்னையே நீ அறிவாய், எதிராளியையும் அறிவாய்.

22. 2 வழிகள் துரோகிகளை எதிர் கொள்ள?
பதில்: உன்னையே நீ அறிவாய், எதிராளியையும் அறிவாய்.
(பின்குறிப்பு: ஒரே பதில் பல கேள்விகளுக்கும் ஏற்றதாய் இருந்தால் வேறு என்னதான் செய்வதாம்)

23. விலைவாசி ஏற்றத்தால் அல்லல்படும் சாதரண மக்களின் நிலை?
பதில்: செலவுக்கேற்ப வருவாயை பெருக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை. அது எங்கனம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அந்த வழிகளின் சாதக-பாதகங்களுக்கும் அவரவரே பொறுப்பு.

24. வாக்குபதிவு எந்திரம் பற்றிய எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு என்னாச்சு?
பதில்: அந்த எதிர்ப்பு குழந்தைத்தனமானது. அந்த ஏற்பாட்டிற்கு மாற்றாக அக்கட்சிகள் கூறியது பொறுப்பற்றத்தனத்தின் உச்சக்கட்டம்.

25. நல்லச் செயல்களுக்கும் செய்த நன்றிகளுக்கும் மதிப்பு குறைகிறதே?
பதில்: எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு என்னும் ரேஞ்சில் வள்ளுவரே எழுதியதிலிருந்து இதெல்லாம் ஒன்றும் புதிதில்லை எனத் தெரியவில்லையா?

26. விஜயதசமி அன்று ஒரு கரும்பு விலை 50 ரூபாய்-இனிப்பும் கசக்குமோ?
பதில்: கரும்பு கடிக்க முடிகிறது உங்களுக்கு? அது மட்டுமல்ல சர்க்கரை தொல்லை வேறு (எனக்கில்லைதான் என இருந்தாலும்). நான் கரும்பு ஒரு துண்டுதான் பொங்கல் பானையில் கட்ட வாங்குவேன். அவ்வளவே. ஆகவே கரும்புவிலை என்னைப் பொருத்தவரை இர்ரெலவண்ட்தான்.

27. அதிமுகவை வி.காந்த் கட்சி முந்துகிறதா?
பதில்: அப்படித்தான் இப்போதைக்கு தோன்றுகிறது.

28. கமலின் அரசியல் பிரவேசம் நடைபெற வாய்ப்புள்ளதா?(அவர் அறிவு ஜீவி)
பதில்: கூடவே புத்திசாலியும் கூட. அரசியலுக்கெல்லாம் அவர் வருவார் எனத் தோன்றவில்லை.

29. கமல் இயக்கத்தில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் -இதற்கு உவமையாய் எதைச் சொல்வீர்கள்?
பதில்: பிரேக் வண்டியோட்டுகிறது, மோட்டார் பிரேக் அடிக்கிறது என்பது போன்ற எண்ணங்கள் வருகின்றன.

30. இயக்குனர் இமயம் என்ன செய்கிறார்?
பதில்: பாலச்சந்தர்தானே, மறுபடியும் நாடகம் எடுக்கப் போவதாகக் கேள்வி.

31. உங்களை கவர்ந்த இளம் திரைப்பட இயக்குனர் யார்?
பதில்: அப்படியென்று என்னைப் பொருத்தவரை யாரும் கிடையாது

32. இதுவரை மொத்தம் எத்தனை கேள்விகள் உங்கள் பதிவில் கேட்கப்படுள்ளது?
பதில்: யார் இதையெல்லாம் உட்கார்ந்து எண்ணுவதாம்? ஆளை விடுங்கள்/

தமிழ் ஓவியா
1. ஓடிப்போன சங்கராச்சாரியார் or ஓடிப்போகாமல் இங்கேயே ஆபாசபடம் பார்த்த்து அக்கிரகார அம்மணிகளை செட்டப் செய்த சின்ன (வீடு) சங்கராச்சாரியார் - இவர்களில் யார் சிறந்த மாமாப் பயல்?
பதில்: முதலில் மாமாப்பயல் என்ற சொல்லின் விளக்கத்தில் தெளிவுடன் இருப்பது அவசியம். மாமாப் பயல் என்பவன் மற்றவர்கள் அனுபவிப்பதற்காக பெண்களை ஏற்பாடு செய்பவன். பெரிய அல்லது சின்ன சங்கராச்சாரியர்கள் மேலே வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அதுவல்ல. ஆகவே அவர்களில் யாருமே மாமாப்பயல் என அவர்தம் விரோதிகள்கூட சொல்லிட இயலாது.

மேலும், சொந்த மனைவியையே ஊருக்கு வந்துள்ள புது தாசி என தம் நண்பர்களுக்கு அடையாளம் காட்டி அவர்களை விட்டு அந்த உத்தமப் பெண் நாகம்மையாரை கேலி செய்வித்து, கோவிலுக்கு வந்த மற்ற பெண்டிரை பயம்காட்டி, அவரது மனதையும் நோவடித்த ஈ.வே. ரா. அவர்கள் பற்றி என்ன கூறுவீர்கள்?

இதுதான் போதாது என்றால், ஒரு முறை மனைவிகளும் கள்ள புருஷன் வைத்துக் கொள்ளலாம் என ஈ.வே.ரா. அவர்கள் ஒரு கூட்டத்தில் கூற, நாகம்மையிடம் தான் செல்லலாமா என ஒருவர் கூட்டத்தில் கேட்டு வைக்க, “நாம் இருவருமே நாகம்மையிடம் இது சம்பந்தமாக பேசுவோம், அவர் கொடுப்பதை வாங்கி வருவோம்” என்று பொருள்பட திருவாய் மலர்ந்தருளினது பற்றியும் என்ன கூறுவீர்கள்?


எம்.கண்ணன்
1. வரலாறு, புவியியல் என முன்பெல்லாம் பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் தனியாக பரீட்சைகள் இருந்தது. தற்போது சமூக அறிவியல் (Social Science) என ஒரே பரீட்சையாகவும் வரலாறுக்கு முக்கியத்துவத்தை குறைத்துவிட்டனரா? சேரர், சோழர், பாண்டியர், அசோகர், பாபர், அக்பர் என தற்போது சிறார்கள் படிப்பதில்லையா?
பதில்: தெரியவில்லையே. நான் படிக்கும்போது கூட சமூக அறிவியல் என்றுதான் இருந்தது. சரித்திரம், பூகோளம் இரண்டும் அதில் அடங்கின. நான் பத்தாம் வகுப்பில் பொறியியல் சிறப்புப் பாடமாக எடுத்ததில் சமூக அறிவியலில் பெறும் மதிப்பெண்கள் பள்ளியிறுதி வகுப்பு தேர்வில் கணக்கிடப்படாது எனக்கூறிவிட்டனர். இதில் சோகம் என்னவென்றால், அதை வெளிப்படையாக நான் 11-ஆம் வகுப்புக்கான தேர்வுகளை முடித்தபின்னால்தான் கூறினார்கள். அது தெரியாது மெனக்கெட்டு நான் படித்து 61% வாங்கியிருந்தேன்.

நீங்கள் சொன்ன சுட்டி ரொம்பவும் ஜெனரலாக இருக்கிறது. பாட மாடல்கள் எதையும் பார்க்க இயலவில்லை. ஒரு வேளை நான் தவறுதலாக அந்தச் சுட்டியை கையாண்டேனா எனத் தெரியவில்லை. இங்கு இன்னொரு விஷயம். பாடநூல்களில் சரித்திர சம்பவங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது குறித்து நான் இம்சை அரசன் தூண்டிய நினைவுகள் என்னும் பதிவில் இவ்வாறு எழுதியுள்ளேன்.

“நான் சமீபத்தில் எழுபதுகளில் பம்பாயில் இருந்தபோது எனது நண்பன் ஸ்ரீனிவாசமூர்த்தி கூறியது நினைவுக்கு வருகிறது. அவன் ஷிமோகாவைச் சேர்ந்தவன். "கர்னாடகாவில் உள்ள பள்ளிகளில் இப்போது கூட (எழுபதுகளில்) சரித்திரப் பாடங்களில் புலிகேசிதான் ஹீரோ. வாதாபி கொண்டான் நரசிம்மவர்ம பல்லவன் கொடுங்கோல் மன்னனாகவே சித்தரிக்கப்படுகிறார்." எழுபதுகளில் உள்ள நிலைமைதான் தற்போதும் என்று உறுதியாக நினைக்கிறேன்.

இதே போல பழைய சரித்திரங்கள் இன்னும் நமது தற்கால நம்பிக்கைகளின் மீது ஆட்சி செலுத்துகின்றன என்பதையும் பார்க்கிறேன். உதாரணத்துக்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் ஐம்பதுகளில் வெளியானபோது தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் உள்ள தியேட்டர்களில் ஒன்றில்கூடத் திரையிடப்படவேயில்லை என்பது பத்திரிகை செய்தி. ஊர்கட்டுப்பாடுதான் அதற்குக் காரணம். தங்கள் மஹாராஜாவின் மீது அவ்வளவு பக்தி ஊர் மக்களுக்கு. ஒன்று இரண்டு மூன்று என்று கூறும்போது கூட, ஆறு, ஏழு, மஹாராஜா, ஒன்பது, பத்து என்றுதான் எண்ணுவார்களாம். ஏனெனில் எட்டு என்று கூறிவிட்டால் மஹாராஜாவைப் பெயர் வைத்துக் கூப்பிடுவதுபோல ஆகிவிடுமாம். அதனால்தான் பாரதியார் கூட தன் எழுத்துக்களில் வீர பாண்டிய கட்டபொம்மனைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். அக்காலக் கட்டங்களில் கட்டபொம்முவை கொள்ளைக்காரனாகத்தான் குறிப்பிட்டனர் பலர். பாரதியாரும் அவ்வாறே கருதியிருக்கலாம்.

இன்னொரு உதாரணம் "தர்பண் (Dharpan)" என்ற தொடரில் காண்பித்த ஒரு கதையே. (பை தி வே, இந்த தர்பண் சமீபத்தில் எண்பதுகளில் வந்த ஒரு அருமையான தொலைக்காட்சித் தொடர். அது பற்றி பிறகு, வேறொரு பதிவில்). அதில் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் வந்த சிறந்த சிறுகதைகள் படமாக்கப்பட்டன. அதில் ஒரு கதை பற்றி இங்கே கூறுவேன்.

அது ஒரு ஒரியமொழிக்கதை. புவனேஸ்வரில் ஓர் அலுவலகத்தில் இரண்டு நண்பர்கள். ஒருவர் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர், இன்னொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். இருவரும் ஒரிஸ்ஸாக்காரர் வீட்டில். ஒரிஸ்ஸாக்காரர் கிருஷ்ணதேவராயரை பற்றி இகழ்ச்சியாகப் பேசி தங்கள் பழங்காலத்து கலிங்கதேசத்து மன்னரை உயர்த்திப் பேச சீறி எழுகிறார் ஆந்திராக்காரர். பேச்சு தடித்து விரோதமாகப் போகும் நிலையில், ஒரிஸ்ஸாக்காரரின் மனைவி பேச்சில் குறுக்கிடுகிறார்.

அவர் கேட்கிறார்: "இந்த விஷயங்களெல்லாம் நடந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன. உங்கள் வாதத்தில் கிருஷ்ணதேவராயர் அல்லது ஒரிய மன்னர்தான் சிறந்தவர் என்று ஸ்தாபிப்பதால் உங்களில் ஒருவருக்கேனும் ஏதேனும் பிரயோசனம் உண்டா? இப்போதைக்கு பே கமிஷன் அரியர்ஸை கிருஷ்ணதேவராயரோ, கிருஷ்ணராஜுவோ வாங்கித்தர இயலுமோ? என்ன இது சிறுபிள்ளத்தனமால்ல இருக்கு." (கடைசி வாக்கியத்தை நிச்சயமாகவே வடிவேலு பாணியில் அவர் கூறவில்லை என்பதை நான் இங்கு கூறிவைக்கிறேன்). இரு நண்பர்களும் சிரிக்க, கதை சுமுகமாக முடிகிறது.

இம்மாதிரித்தான் உள்ளூர் மக்களின் செண்டிமெண்ட்டில் சரித்திரம் தப்ப இயலவில்லை”.


2. கோயில் கருவறைக்குள் குஜால் என்றெல்லாம் ஜூவி கவர் ஸ்டோரி போடுகிறதே? அதுவும் பலான சிடி படங்கள் எல்லாம் காட்டி? இதுமாதிரி (அல்லது பாதிரியாரின் செக்ஸ் சம்பந்தப்பட்ட கட்டுரைகள்) செய்திகள் அதிகம் வெளியாவதால்தான் மக்களும் பலவித செக்ஸ் வக்கிரங்களுக்கு தூண்டப்படுகிறார்களா?

பதில்: சம்பந்தப்பட்ட குருக்கள் கடும் தண்டனைக்கு உரியவர். அதில் எந்த சமாதானமும் கூடாது. பாதிரியார்கள் பற்றி இங்கு பேச விரும்பவில்லை. இக்கட்டுரைகள் மக்களின் விழிப்புணர்வை தூண்டினால் சந்தோஷமே.

3. வாத்தியார் சுப்பையா சார், ஸ்வாமி ஓம்கார், சாரு நிவேதிதா (நித்யானந்தர்) - யாருடைய ஜோதிட / ஆன்மீக பதிவுகள் சுவாரசியமாக இருக்கிறது (உங்களைப் பொறுத்தவரை) ? யாருடைய எழுத்து நல்ல நடை? படிக்க சுவாரசியம்? (விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம் / இல்லாதிருக்கலாம் - அது வேறு)? யாருடைய பதிவுகளில் இருந்து பல நல்ல விஷயங்கள் தெரிய வருகிறது?
பதில்: சாரு நிவேதிதா என்னைப் பொருத்தவரை அன்செலக்டட். வாத்தியார் சுப்பையா, ஓம்கார் ஸ்வாமிகள் டபுள் ஓக்கே.

4. மகாராஷ்டிர தேர்தலில் அதிமுக 2 இடங்களில் போட்டியிடுகிறதே? தாராவி / மாதுங்கா / சயான் தமிழர்களை நம்பித்தானே? ஜெயலலிதாவோ இன்னும் கொடநாட்டை விட்டே வர மனமில்லை. இப்படி இருக்கையில் மும்பையில் போட்டியிட்டு என்ன ஆகப் போகிறது ? அங்கிருக்கும் தமிழர்கள் எல்லாம் எதற்காக அதிமுகவுக்கு ஓட்டுப் போடவேண்டும்? ஒரு அவசரம் உதவி என்றால் அவர்களுக்கு உதவப் போவது லோக்கல் கட்சிகள்தானே?
பதில்: வெற்றி வாய்ப்பை கணிக்காமலா அவர்கள் இருந்திருப்பார்கள்? மற்றப்படி தாராவியில் தமிழர் எம்.எல்.ஏ.வாக இருப்பதே நல்லது. அவர்களாலும் உள்ளூர் மக்களுக்கு உதவ முடியும்.

5. மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா, பாஜக ஜெயித்து உத்தவ் தாக்கரே முதல்வராகிவிட்டால் - ராஜ் தாக்கரே என்ன செய்வார்? சென்றவாரம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்நாப் கோஸ்வாமி கேட்ட ஆங்கிலக் கேள்விகளுக்கு முழுவதும் மராட்டியில் பதிலளித்த (ஆங்கிலம் தெரிந்திருந்தும்) ராஜ் தாக்கரே போன்ற மொழி வெறியர்கள் ஏதாவது ஒரு வகையில் மும்பை சாமானியர்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனரே? மக்கள் பாடம் புகட்டுவார்களா? இதில் மருமான் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிராவின் ஜின்னா என பால் தாக்கரே அறிவித்துள்ளாரே ? பிள்ளைப்பாசம் இந்தளவுக்கா ?
பதில்: ராஜ் தாக்கரே நிச்சயம் சிவசேனாவுக்கு தலைவலிதான். அவரை எதிர்க்க சிவசேனாவுக்கு அதுவே போதிய காரணமே.

ஆங்கிலம் தெரிந்திருந்தும் மராட்டியிலேயே பேசுவேன் எனக் கூறுவது இந்த காண்டக்ஸ்டில் அசட்டுத்தனமானது.

6. சீனாவில் மாவோவின் பேரன் ராணுவத்தில் முக்கிய பதவியிலும், அரசியல் கமிட்டியிலும் முக்கிய பதவிக்கு வந்திருப்பது - சீனாவிலும் வாரிசு அரசியல் என்பதைத் தானே காட்டுகிறது ?
http://beta.thehindu.com/news/international/article27209.ece

பதில்: வாரிசு அரசியல் எங்குதான் இல்லை? சீனாவில் இருப்பது குறித்து ஏன் வியப்படைய வேண்டும்?

7. தற்போது சாதாரண போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர் போன்றவற்றின் விலை என்ன? சமீபத்தில் யாருக்கேனும் கார்டில் கடிதம் அனுப்பியதுண்டா?
பதில்: போஸ்ட் கார்ட் 50 பைசா, ரிப்ளை பெய்ட் 1.00 ரூபாய். இன்லேண்ட் லெட்டர் 2.50 ரூபாய், கவர் 5.00 ரூபாய் (முதல் 50 கிராம்களுக்கு, பிறகு ஒவ்வொரு 50 கிராம்களுக்கும் 3 ரூபாய்). கடைசியாக பதிவுத் தபால்தான் அனுப்பினேன், அதன் விலை முதல் 50 கிராம்களுக்கு 22 ரூபாய், கவர் நீங்கள் கொடுத்தால். இல்லாவிடில் 22.50 ரூபாய். தில்லியில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் இன்லேண்ட் லெட்டர்கள் பத்துக்கு குறையாமல் வாடிக்கையாளர்களை பிடிக்க அனுப்பியிருக்கிறேன். அப்போது கணினி இல்லை, மின்னஞ்சலும் இல்லை. இங்கு வந்ததும் லெட்டர் அனுப்புவது சுத்தமாக நின்று போயிற்று. உள்ளூர் தபாலுக்கு கூரியர்கள் 9 ரூபாய் ஆகவே உள்ளூருக்கு அது உத்தமம். அதுவே தில்லி போன்ற இடங்களுக்கு 50 ரூபாய்கள். அங்கு ரிஜிஸ்டர்ட் போஸ்ட் லாபகரமானது.

8. ஐடிபிஎல் போன்றே ஏர் இண்டியாவையுவும் மறையவிட வேண்டும் என்றெல்லாம் கட்டுரையாளர்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். உங்கள் கருத்து என்ன? ஐடிபிஎல் என்ன செய்திருக்கவேண்டும் ? ஏர் இண்டியா என்ன செய்யவேண்டும்?
பதில்: ஏர் இண்டியா இழுத்து மூடப்பட வேண்டும். ஐ.டி.பி.எல் பற்றி நான் ஒரு பதிவில் எழுதியது எல்லா அரசு கம்பெனிகளுக்கும் பொருந்தும். அதிலிருந்து சிலவரிகள்:
“ஐ.டி.பி.எல்லின் வீழ்ச்சி மூலம் ஒன்று கற்கலாம். அதாவது ஒரு நிர்வாகம் எவ்வாறு இருக்கக் கூடாது என்று. அதற்காக ஐ.டி.பி.எல்லின் உயர் அதிகாரிகளை குற்றம் சொல்வதாக நினைத்து விடாதீர்கள். அதிகாரிகளில் பலர் மிகத் திறமைசாலிகள். ஆனால் ஐ.டி.பி.எல்லை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மினிஸ்ட்ரியின் செயல்கள் அது நல்ல முறையில் செயல்பட முடியாமல் தடுத்துவிட்டது.

உதாரணத்துக்கு ஐ.டி.பி.எல்லுக்கு சொந்தமான கார்களில் ஒன்று மினிஸ்ட்ரி அதிகாரிகள் வசமே இருந்தது. அதன் உபயோகத்தின் மேல் ஐ.டி.பி.எல்லுக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால் அதன் செலவுகள் மட்டும் ஐ.டி.பி.எல் தலையில். அதன் ஓட்டுனர் ஐ.டி.பி.எல்லில் சம்பளம் பெற்றார். அது மட்டுமன்றி ஐ.டி.பி.எல்லில் வேலை செய்த எழுத்தர்கள் நான்கைந்து பேர் மினிஸ்ட்ரியிலேயே நிறுத்திக் கொள்ளப்பட்டனர். அவர்கள் சம்பளமும் ஐ.டி.பி.எல். பொறுப்பிலேயே. அதே போல மினிஸ்ட்ரியில் இருந்த ஜாயிண்ட் செக்ரெடரி வீட்டில் வாஷிங்க் மெஷின் வேலை செய்யவில்லையென்றால் எலெக்ட்ரிஷியனை அழைத்துக் கொண்டு நான் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். நாங்கள் சென்ற காரை அந்த அதிகாரியின் வீட்டினர் தங்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் கறிகாய் வாங்க எடுத்து சென்றனர், ஏனெனில் அங்கு கிலோவுக்கு அரை ரூபாய் மலிவாம். எங்கு அடித்துக் கொள்வது என்று தெரியவில்லை.

அல்ஜீரிய வேலையைப் பற்றியும் எழுதியிருந்தேன். தோல் பதனிடும் தொழிற்சாலையில் வரும் கழிவு நீரை சுத்தம் செய்யும் ப்ளாண்டை நிறுவும் வேலைக்கு ஒப்பந்தப் புள்ளிகள் தருமாறு ஐ.டி.பி.எல். என்னும மருந்துக் கம்பெனிக்கு அரசியல் ரீதியான நிர்ப்பந்தம். நல்ல வேளையாக அல்ஜீரியாவிலேயே எதோ அரசு கவிழ்ப்பு நடந்து எங்களுக்கு அந்த வேலை கிடைக்கவில்லையோ பிழைத்தோமோ. ஆனால் அதற்குள் ஒரு கணிசமான தொகையும் செலவழிக்கப்பட்டிருந்தது. அத்தனையும் எள்ளுதான்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல 1980களின் தொடக்கத்திலேயே ஐ.டி.பி.எல்லின் சரிவு நிதானமாக ஆரம்பித்தது. அதெல்லாம் இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. நிலைமை மோசம் என்பதை நான் 1990-ல் ஐ.டி.பி.எல். ரிஷிகேஷுக்கு துபாஷி வேலையாய் சென்றபோது உணர்ந்தேன். அதற்கான சில அறிகுறிகள். டௌன்ஷிப்பில் விளையாடிய குழந்தைகள் பெரும்பான்மையினர் வேலை செய்பவர்களின் குழந்தைகள் அல்ல, பேரக் குழந்தைகள். அதாவது வேலை செய்பவர்களின் சராசரி வயது 40-க்கும் மேல். புது ஆள் சேர்ப்பு பல வருடங்களாக நடைபெறாததன் விளைவுதான் இது. வருடா வருடம் பலர் ஓய்வு பெற்று சென்றனர். ஆனால் அதனால் விளைந்த காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. தெரு விளக்குகளில் பாதிக்கு மேல் பல்புகள் இல்லை. தெருக்களின் பராமரிப்பும் மோசம். வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் கூடி நின்று வம்பு பேசிக் கொண்டிருந்தனர். தொழிற்சாலைக்கு வந்த பிரெஞ்சுக்காரர் கேட்ட அளவுக்கு மூலப் பொருள்கள் கிடைப்பதில் தாமதம். இன்னும் கூறிக் கொண்டே போகலாம்.

1992-ல் விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. டைனமிக்காக வேலை செய்யக் கூடியவர்களில் முக்கால்வாசிப்பேர் விருப்ப ஓய்வு பெற்று சென்றனர். தினசரி உற்பத்திக்கு தேவையான பணம் கிடைப்பதில் சுணக்கம். க்ரெடிட்டில் மருந்துப் பொருட்கள் பெற்ற அரசு மருத்துவமனைகள் பில்கள் செட்டில் செய்வதில் ஆமை வேகம் காட்டினர். இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசு கொடுத்துவந்த பட்ஜெட் ஆதரவு சுருங்கிப் போயிற்று. ஒரு நிதி ஆண்டில் 19 கோடி ரூபாய் அரசு ஒதுக்க, அது போதாது என்று தலைமை நிர்வாகி பெரிய நோட் போட்டார், அதை பரிசீலித்த அமைச்சு அதிகாரிகள் விழித்துக் கொண்டு உண்மையில் ஒதுக்கியது 19 கோடி அல்ல 19 லட்சமே என்று கண்டுபிடித்து எங்கள் தலைமை அதிகாரியை நோக அடித்தனர் என்றெல்லாம் வதந்திகள் பரவின. 1993 வாக்கில் இன்னொரு செய்தி அடிபட்டது. அதாவது அந்த ஆண்டு முடிவதற்குள் ரிஷிகேஷிலிருந்து கணிசமான மின்னியல் அதிகாரிகள் ஓய்வு பெறப்போவதால் எங்களில் அனேகம்பேரை அந்த ப்ளாண்டுக்கு மாற்றப் போவதாக அறிந்தேன். அப்போதுதான் நான் விழித்துக் கொண்டு என்னுடைய விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன். நல்ல வேளையாக ரிலீவும் செய்யப்பட்டேன். சிறிது தாமதித்திருந்தாலும் காரியம் கெட்டிருக்கும். ஏனெனில் எனக்கப்புறம் என் துறையில் வேலை செய்தவர்களுக்கு விருப்ப ஓய்வு மறுக்கப்பட்டது.

இவ்வளவு ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் ஐ.டி.பி.எல்லின் வீழ்ச்சி எனக்கு மனச் சோர்வை ஏற்படுத்துகிறது”.

9. பா.ரா தவிர எல்லா எழுத்தாளர்களும் பின்னூட்டப் பெட்டி வைக்காமல் கடிதப் போக்குவரத்தையே வைத்து கடிதங்களையும் பதிவுகளை வெளியிட்டு பதிவு எண்ணிக்கை அதிகரித்துக் கொள்கிறார்களே?
பதில்: அவர்களில் ஜெயமோகனது பதிவுக்கு வரும் ஹிட்ஸ்கள் அபாரம்.

10. காந்திஜி, லதா மங்கேஷ்கர் போன்ற பலர் தமிழில் எழுதவும் தெரிந்து வைத்திருந்தார்களே (விகடன் பொக்கிஷம்) - தமிழ் மீது அவர்களுக்கு என்ன அப்படியொரு பாசம்?? (அப்பாடா காந்தி பிறந்த நாள், லதா 80 இரண்டையும் சேர்த்து கனெக்ட் பண்ணியாகிவிட்டது)
பதில்: சரியாகப் பாருங்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் எழுதியிருக்கக் கூடும். அப்படியொன்றும் தமிழ் மீது மட்டும் என்ன பற்று வந்துவிடுமாம்? வேறு கருத்துகள் இல்லை.

சுதாகர்
1. டான் புரொனின் புதிய படைப்பான, The Lost Symbol, படித்தீர்களா? அல்லது படிக்க வேண்டுமென எண்ணம் உள்ளதா?
பதில்: டான் புரோனின் ஒரு புத்தகம் The Da Vinci Code வாங்கினேன், இன்னும் படிக்க முடியவில்லை. எனக்கு பிடிக்கவில்லை. அதன் ஃபிலிம் கூட அரசில் தடை செய்தார்கள்.

2. இந்திய விமான நிறுவன ஊழியர்கள் வரிசையாக வேலை நிறுத்தம் செய்கிறார்களே, அவர்கள் கோரிக்கை சரியா (அ) அவர்களை கட்டுப்படுத்த முடியாதா?
பதில்: இவர்களுக்கெல்லாம் மார்கரெட் தாச்சர்தான் சரி.

சவகிருஷ்ணா
1. சிட்டுகுருவி லேகியம் ருசித்துண்டா?
பதில்: இல்லை, எனக்கு அதன் தேவை ஏற்படவில்லை. அது இல்லாமலேயே செயல்பாடு அமர்க்களமாக இருந்தது.

கேடியார்
1. ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சீனா வர சீன அரசு விசா தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறதே, உங்கள் கருத்து என்ன?
பதில்: விஷமத்தனமான்ச் செயல். தேசத்துரோகத்தனமாக சீனாவை அடிவருடும் இந்தியக் கம்யூனிஸ்டுகள் இதற்கு என்ன கூறுவார்களாம்?

கேடி/பேடி கண்ணன்
1.மத்தியப் பல்கலைகழகம் திருவாரூரில் அமைவதால் என்ன நன்மை? அந்த கல்லூரியில் என்ன பாடங்கள் சொல்லி தருவார்கள்.
பதில்: திருவாரூர் தொகுதி முன்னேறும். முதல்வர் குடும்பமும் முன்னேறும். அவ்வளவே.

2. இம்முறை ஏன் பதிவர் சந்திப்பு பதிவு போடவில்லை?
பதில்: எனது கார் அங்கு போய் சேரும் முன்னாலேயே நல்ல மழை. பதிவர்கள் மரத்தடியில் ஒண்டிக் கொண்டிருந்தனர். கொட்டும் மழையில் சமுத்திரக் கரையில் நின்று கால்களை நனைத்துக் கொண்டேன். திரும்பி வரும்போது எல்லோரும் டீக்கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். கைவசம் நோட்புக் வைத்துக் கொள்ளவில்லை. ஆகவே நோ ரிகார்ட்ஸ். நோ பதிவு.

மணி
Given a choice where would you like to live among these three places 1. Munich 2. Thenthirupperai 3. Triplicane
பதில்: திருவல்லிக்கேணிதான் அதில் என்ன சந்தேகம்?

பிருகு
1. சார் அப்படியே இதற்குமொரு பதில் சொல்லிவிடுங்கள்!! வீட்டில் மகாபாரதம் புத்தகத்தைப் படிக்ககூடாது என்கிறார்களே? எந்தளவுக்கு உண்மை. நான் இரண்டு முறை படித்த போதும் விரும்பத்தகாத அதிர்ச்சி செய்தி வந்தது. எனக்கும் அது சரியோ என்று தோன்றி விட்டது. மகாபாரதம் வீட்டில் படிக்கலாமா, கூடாதா?
பதில்: பாரதம் படித்தால் கலகம் வரும் என்பார்கள். பகவத் கீதையையும் பாராயணம் செய்யகூடாது என்பார்கள். கடவுள் மிகவும் சோதிப்பார் எனக் கேள்வி.

மகாபாரத நிகழ்ச்சிகள் பல எதிர்மறையான சிந்தனைகளை தூண்டுபவையாக சிலரால் பார்க்கப் படுகின்றன.

ரமணா
சுவிஸ்வங்கி நிர்வாகம் மத்திய அரசு விண்ணபித்தால் இந்திய பகாசுரக் கொள்ளையர்கள் கள்ளத்தனமாய் சேர்த்து வத்துள்ள 70 லட்சம் கோடிகள்(வல்லான் பொருள் குவிப்பு அல்ல இது- வழிப்பறி,மொள்ள மாறித்தனம்,மக்களின் உழைப்பை உறிஞ்சிய அட்டைக் கூட்டம், வரிஏய்ப்பு வல்லூறுகள்)பற்றிய தகவல் தரத்தயார் என் அறிவித்துள்ளதே!
1. என்ன நடக்கும்?

பதில்: ஒன்றும் நடக்காது. நாசர் பதவிக்கு வந்ததும் ஸ்விஸ் வங்கிகளை இவ்வாறு வற்புறுத்த, அந்த அரசும் எகிப்தின் அத்தனை டிபாசிட்காரர்கள் பெயரையும் பகிரங்கமாக அறிவிக்கப் போவதாக மிரட்டல் விட நாசர் பின்வாங்கினார். என்ன காரணமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

2. இதுவும் இன்னொரு கீரி-பாம்பு சணடை காட்டுவேன் என சொல்லி 100 ஆண்டுகளாய் வேடிக்க பார்க்க கூடும் பாமர மக்களை ஏமாற்றும் குறளி/மோடி வித்தையா?
பதில்: ஆம்.

3. இந்த சுநலமிகளுக்கு தெய்வ தண்டனையாவது கிடைக்குமா? (அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்)
பதில்: பலருக்கு தண்டனை கிடைத்துள்ளது. வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அதை ரொம்பவுமே ரகசியமாக செய்ய, அவர்கள் திடீரென இறந்ததும் வாரிசுதாரர்களுக்கு அக்கணக்கு இருந்தது கூடத் தெரியாது போன நிகழ்வுகள் உண்டு. அதுதான் தண்டனை என வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

4. இவர்கள் அநியாயமாய் சேர்த்த அட்ட கருப்பு பணம் இவர்களுக்கும் இவர்கள் சந்ததியினருக்கு உதவமால் போக என்ன நடந்தால் நல்லது?
பதில்: மேலே உள்ள பதிலைப் பாருங்கள்.

5. வால் பையனின் கருத்து இதில் என்னவாயிருக்கும்?
பதில்: இன்று வியாழன் அல்லது நாளை வெள்ளியன்று அவர் பதில் தருவார். நானும் அதைப் பார்க்கும் ஆவலில் உள்ளேன்.

கிருஷ்ணகுமார்
1.Who is more dengerous to World peace u.s.a or china? why?
பதில்: சீனாதான். ஜனநாயக நாடான அமெரிக்காவில் இருக்கும் checks and balances அங்கு இல்லாததே முக்கியக்ஜ் காரணம்.

2.Female population always less than male population reason?
பதில்: பெண் குழந்தை எனத் தெரிந்தால் கருக்கலைப்பு செய்தல், பெண் குழந்தைகளை சரியாக பராமரிக்காது அவர்களை சாக விடுதல்

3.There is H2O in the moon. will you want to go & live there?
பதில்: எனக்கு இங்கு கிடைக்கும் பாலாற்றுத் தன்ணீரே போதும்.

4. tell does LOVE needs SACRIFICE?
பதில்: ஆம், ஆனால் அது இரு தரப்பிலிருந்தும் வருதல் அவசியம்.

5. Does your childhood deeds still haunt you ?
பதில்: அப்படியென்று சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.

ராகவ்
1. Dondu Sir, from your point of view, could you explain more on this topic
பதில்: “சாதி மற்றும் இனத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் தன்னம்பிக்கை அற்றவர்கள். ஆகவே, தன்னம்பிக்கை அற்று கற்பனை வாழும் வீணர்களின் கட்டுக்கதைகளுக்கு பதிலளித்தல், ஆதரித்தல், எதிர்த்தல் போன்றவை அவர்களக்கு ஊக்கம் அளித்து சமூக பிரிவினையை வளர்க்கும். கண்டுகொள்ளமல் விட்டுவிட்டால் அவர்கள் தானாகவே மனம் திருந்தி வாழ ஆரம்பிப்பார்கள். சமூகத்தில் சாதி, மத, இன வேறுபாடுகள் மெல்ல மறைந்து விடும்”, என ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது. அதை நான் ஆதரிக்கவில்லை. பொய்பிரசாரங்களை எல்லா தளங்களிலும் எதிர்த்தேயாக வேண்டும் என்றுதான் நான் கூறுவேன்

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

80 comments:

Anonymous said...

//8. ஐடிபிஎல் போன்றே ஏர் இண்டியாவையுவும் மறையவிட வேண்டும் என்றெல்லாம் கட்டுரையாளர்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். உங்கள் கருத்து என்ன? ஐடிபிஎல் என்ன செய்திருக்கவேண்டும் ? ஏர் இண்டியா என்ன செய்யவேண்டும்?
பதில்: ஏர் இண்டியா இழுத்து மூடப்பட வேண்டும். ஐ.டி.பி.எல் பற்றி நான் ஒரு பதிவில் எழுதியது எல்லா அரசு கம்பெனிகளுக்கும் பொருந்தும். அதிலிருந்து சிலவரிகள்:
“ஐ.டி.பி.எல்லின் வீழ்ச்சி மூலம் ஒன்று கற்கலாம். அதாவது ஒரு நிர்வாகம் எவ்வாறு இருக்கக் கூடாது என்று. அதற்காக ஐ.டி.பி.எல்லின் உயர் அதிகாரிகளை குற்றம் சொல்வதாக நினைத்து விடாதீர்கள். அதிகாரிகளில் பலர் மிகத் திறமைசாலிகள். ஆனால் ஐ.டி.பி.எல்லை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மினிஸ்ட்ரியின் செயல்கள் அது நல்ல முறையில் செயல்பட முடியாமல் தடுத்துவிட்டது.

உதாரணத்துக்கு ஐ.டி.பி.எல்லுக்கு சொந்தமான கார்களில் ஒன்று மினிஸ்ட்ரி அதிகாரிகள் வசமே இருந்தது. அதன் உபயோகத்தின் மேல் ஐ.டி.பி.எல்லுக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால் அதன் செலவுகள் மட்டும் ஐ.டி.பி.எல் தலையில். அதன் ஓட்டுனர் ஐ.டி.பி.எல்லில் சம்பளம் பெற்றார். அது மட்டுமன்றி ஐ.டி.பி.எல்லில் வேலை செய்த எழுத்தர்கள் நான்கைந்து பேர் மினிஸ்ட்ரியிலேயே நிறுத்திக் கொள்ளப்பட்டனர். அவர்கள் சம்பளமும் ஐ.டி.பி.எல். பொறுப்பிலேயே. அதே போல மினிஸ்ட்ரியில் இருந்த ஜாயிண்ட் செக்ரெடரி வீட்டில் வாஷிங்க் மெஷின் வேலை செய்யவில்லையென்றால் எலெக்ட்ரிஷியனை அழைத்துக் கொண்டு நான் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். நாங்கள் சென்ற காரை அந்த அதிகாரியின் வீட்டினர் தங்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் கறிகாய் வாங்க எடுத்து சென்றனர், ஏனெனில் அங்கு கிலோவுக்கு அரை ரூபாய் மலிவாம். எங்கு அடித்துக் கொள்வது என்று தெரியவில்லை.//

one million dollar question

This same type of actions are enacted by vested interests and politcal leaders for the past 10 years in one .............( to promote and help private companies)Can you guess that ?

(clue : lot of cost reduction in spite of global inflation and cut throat competition)

bala said...

//மு.க. அழகிரி-ஸ்டாலின் -தமிழரசு இவர்களின் சகோதர உறவு ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளதா?
பதில்: பஞ்ச பாண்டவர்களும் கௌரவர்களும் சகோதரர்களே. போதுமா?//

டோண்டு அய்யா,

இது என்ன புது கதை?அப்ப தப்பு செய்தது யார் என்ற கேள்விக்கு விடை சொல்லக் கடமைப் பட்டுள்ளிர்கள்.

அது சரி;கவிதாயினி யார்?அம்பையா?என்னவோ போங்க.

பாலா

வால்பையன் said...

//ஒரு கலக்கு கல்க்கிய பன்றிக் காய்ச்சல்-அமெரிக்காவின் சதியா?
பதில்: கண்டிப்பாக இருக்கவியலாது.//

இதுவே கம்யூனிஷ நாடுகளின் சதியான்னு கேட்டிருந்தா பதில் என்னவாக இருக்கும்!

மருந்து கம்பெனி பணமுழுங்கி முதலாளி முதலைகள் கொள்ளை லாபம் அடிக்க இம்மாதிரி வேலைகள் செய்வார்களாமே!?

வால்பையன் said...

//நல்லச் செயல்களுக்கும் செய்த நன்றிகளுக்கும் மதிப்பு குறைகிறதே?//


செய்தவற்றிர்க்கு பாராட்டும், நன்றியும் எதிர் பார்த்து செய்தால், அது நல்லது என எவ்வாறு பட்டியல் இடமுடியும்!

என்னை புகழ்ந்து பாடு நான் உனக்கு விருது தர்றேன்னு சொல்றா மாதிரி இருக்கு, அப்படியே தனக்கு தானே ஒண்ணு குடுத்துக்க வேண்டியது தான்!

வால்பையன் said...

//விஜயதசமி அன்று ஒரு கரும்பு விலை 50 ரூபாய்-இனிப்பும் கசக்குமோ?//

சென்ற வருட விவசாய பூம்மியையும், இந்த வருட விவசாய பூமியையும் அளவெடுத்து பாருங்கள்!

அடுத்த வருடம் கரும்பு ஒன்று 100 ருபாய்!

சவகிருஷ்ணா said...

புவனேசுவரி வழக்கில் தினமலர் ஆசிரியர் கைது செய்யபட்டது சரி தானே ஏன் ரமேசை கைது செய்யவில்லை

வால்பையன் said...

//அதிமுகவை வி.காந்த் கட்சி முந்துகிறதா?//

தே.மு.தி.க அப்படியே தான் இருக்கு!,
அ.தி.மு.க தான் பின்னாடி போகுது!

வால்பையன் said...

//கமலின் அரசியல் பிரவேசம் நடைபெற வாய்ப்புள்ளதா?(அவர் அறிவு ஜீவி)
பதில்: கூடவே புத்திசாலியும் கூட.//

அறிவுஜீவி, புத்திசாலி ரெண்டும் வேற வேறயா!?

வால்பையன் said...

//கமல் இயக்கத்தில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் -இதற்கு உவமையாய் எதைச் சொல்வீர்கள்?
பதில்: பிரேக் வண்டியோட்டுகிறது, மோட்டார் பிரேக் அடிக்கிறது என்பது போன்ற எண்ணங்கள் வருகின்றன.//

பதிலில் உடன்பாடில்லை!

மாணவன் ஒரு நாள் ஆசிரியன் ஆகலாம்!
அந்த வகுப்பில் பழைய ஆசிரியர் அமரலாம்,

அல்லது படகும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் படகில் ஏறும்னு சொல்லலாம்!

அதை விட்டுட்டு காது சாப்டுச்சு, வாய் பார்த்துச்சுன்னு சொல்ற பதில் நல்லாவா இருக்கு!

வால்பையன் said...

தமிழ் ஓவியா எதையோ கொடுத்து, எதையோ புண்ணாக்கிக்கிட்ட மாதிரி தெரியுதே!

Anonymous said...

அடுத்த வார கேள்வி பதிலுக்கு


நோபல் பரிசுக்கு தெரிவாகியுள்ள, சிதம்பரத்தில் பிறந்த, அமெரிக்கர், இங்கிலாந்தில் வசிப்பவர், டாக்டர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக தமிழக அரசியல் வட்டாரத்தில் கொண்டாடப்படவில்லையே ? என்ன கொடுமை சார் இது ?

நாரத முனி said...

ஸ்வாமின் இவா ஏ எல் ஸ்ரீனிவாசன் ஆம்படையா... நீர் சொல்ற ஜி வரலக்ஷ்மி தான் மல்யுத்த வீரர கல்யாணம் பண்ணிண்டா..

வால்பையன் said...

//மகாராஷ்டிர தேர்தலில் அதிமுக 2 இடங்களில் போட்டியிடுகிறதே?//

ஆமாம் அது
அஇஅதிமுக தானே!

நாம் மறந்துருர கூடாது அல்லவா!?

வால்பையன் said...

//அவர்களில் ஜெயமோகனது பதிவுக்கு வரும் ஹிட்ஸ்கள் அபாரம்.//

காக்கா இன்னோரு காக்காவ பார்த்து தான் அழகுன்னு சொல்லும், மயிலை பார்த்தா சொல்லும்!

Anonymous said...

தமிழ் ஓவியாவிற்கு நீங்கள் அளித்திருப்பது பதில் அல்ல, அதுக்கு எங்க ஊர் பக்கம் செருப்படின்னு சொல்லுவாங்க

வால்பையன் said...

//இந்த சுநலமிகளுக்கு தெய்வ தண்டனையாவது கிடைக்குமா? (அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்)//

எனது கருத்துக்களை கேட்டுள்ளீர்கள்!
கேட்காவிட்டாலும் சொல்லியிருப்பேன்!

எனக்கு பாவ, புண்ணியத்தில் நம்பிக்கை இல்லை, எந்த செயலுக்கும் நம் மனம் தரும் நிம்மதி அல்லது குற்ற உணர்வே தீர்ப்பு!

நல்ல செயலில் மகிழ்ச்சி தரும் நிம்மதி,
தவறென்றால் இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே மூஞ்சி இருக்கும்! எவனை பார்த்தாலும் கண்டுபிடிச்சிருவானோன்னு வயித்தை கலக்கும், அடுத்தவன் காசை திங்கிறோமோன்னு மனசாட்சி உறுத்தும், அவன் நிம்மதி போகும், வாழ்க்கை போகும், வெளியில் சிரிச்சிகிட்டு தானே இருக்காங்கன்னு நினைக்காதிங்க, எல்லா பெருசுகளும் தனியா தாரை தாரையா அழுவுங்க!, நமக்கு தான் தெரியாது!

இன்னோரு விசயமும் இருக்கு, நான் திருடின காசு அடுத்தவன் காசுன்னு நினைசா தான் அதெல்லாம், எல்லாம் என் காசுன்னு நினைச்சா நாம விரல் சூப்பிட்டு போக வேண்டியது தான்!

வால்பையன் said...

//Who is more dengerous to World peace u.s.a or china? why?
பதில்: சீனாதான். ஜனநாயக நாடான அமெரிக்காவில் இருக்கும் checks and balances அங்கு இல்லாததே முக்கியக்ஜ் காரணம். //

அப்ப சீனாவுல ஓட்டு போட்டு அதிபர்களை தேர்ந்தெடுப்பது இல்லையா!? நிஜமாலுமே தெரியாமத்தான் கேட்கிறேன்!

உலக நாடுகள் பிரச்சனையில் ஐ.நாவே அமுக்கிகிட்டு இருக்கும் போது அமெரிக்கா மூக்கை நுழைப்பது ஏன்?

dondu(#11168674346665545885) said...

//அப்ப சீனாவுல ஓட்டு போட்டு அதிபர்களை தேர்ந்தெடுப்பது இல்லையா!?//
இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//அப்ப சீனாவுல ஓட்டு போட்டு அதிபர்களை தேர்ந்தெடுப்பது இல்லையா!?//
இல்லை.//

வேறு எப்படி?
வாரிசு முறையா?

dondu(#11168674346665545885) said...

//வேறு எப்படி? வாரிசு முறையா?//
தெரியாது. அங்கு பதவிப் போட்டியில் பல காரணிகள் உள்ளன. அவற்றையெல்லாம் அறிய சீனாவை ரெகுலராக அவதானிக்கும் அமெரிக்கர்கள், பிரிட்டானியர்கள், ரஷ்யர்கள் எல்லோருமே முயலுகின்றனர். வெற்றிதான் கிட்டவில்லை. அந்த தேசத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

எம்.கண்ணன்

கேள்விகள்:

1. மது அருந்தும்போது அதை நல்ல கோப்பையில் ஊற்றி அதில் ஐஸ் கட்டியோ, சோடாவோ, லெமனேட், கோலா, தக்காளி சாறு என கலந்து அரைக் கப்பை அரை மணிநேரம் உறிஞ்சியபடி, வறுத்த முந்திரிகளையோ, நல்ல உருளை சிப்ஸ் அல்லது கடலை/வெங்காய மிக்ஸ் என நண்பர்களுடன் அளவளாவியபடி எஞ்சாய் செய்யாமல் டாஸ்மாக்கில் பல்வேறுவித மணங்கள், வாந்தி மற்றும் இன்னபிற சமாச்சாரங்களுடன் கல்ப் அடிப்பதில் என்ன சுகம் கிடைக்கப்போகிறது ? ஃபைவ் ஸ்டார் பார் எல்லாம் வேண்டாம். ஏன் தமிழக அரசு டாஸ்மாக்கை கள்ளுக்கடை சாராயக்கடை ரேஞ்சுக்கே வைத்திருக்கிறது ? (ஒருவித குடோன் போல)

2. டில்லியிலும் சரி சென்னையிலும் சரி மத்திய/மாநில அரசுப் பணிகளில் இருப்போர் வெளியூர் செல்லும் போது அந்த அந்த ஊர் அரசு அதிகாரிகளை ரூம் புக் பண்ணி, கார் புக் பண்ணி என ஒருவிதமாக வேலை வாங்கிக்கொள்கிறார்களே ? இவர்கள் பண்ணும் அலம்பல் (அதைக் கொண்டா, இதைக் கொண்டா என) ஜாஸ்தியாக இருக்கிறதே ? மேலும் இவர்கள் மக்கள் பணத்தில் தானே 2 அல்லது 3 கார், ஜீப் என எல்லாவற்றிற்கும் உபயோகிக்கிறார்கள் ??

3. தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைதுக்குப் பிறகு அனைத்து நாளிதழ், வார இதழ்களும் சுதாரிக்குமா ? விவேக்கின் பேச்சு ஓவராகத் தெரிகிறதே ?
http://thatstamil.oneindia.in/movies/news/2009/10/08-actors-turn-furious-over-news-on-actresses.html


4. விஜய் டிவியில் கோபிநாத் நடத்திய 'உங்களில் ஒருவன் உலகநாயகன்' நிகழ்ச்சியில் கமல்ஹாசன் 'பார்ப்பண மகளிர் - ஷாப்டாச்சா என்றெல்லாம் பேசி தமிழை கொலைசெய்கின்றனர். அதை கேலிசெய்துதான் தான் சில தமிழ் சம்பந்தப்பட்ட கேலிகளை படத்தில் வைத்ததாகவும் சொன்னார். எந்த பார்ப்பண மகளிர் தற்போதெல்லாம் 'ஷாப்டாச்சா' என்று பேசுகின்றனர் ? கமல் பழகிய பார்ப்பண மகளிர் 20- 25 ஆண்டுகள் முந்தைய பார்ப்பண மகளிராக இருக்கலாம். இவரின் 'ஹே ராம்' படத்தில் இந்தி ட்ரீம் கேர்ள் ஹேமமாலினி இதே 'ஷாப்டாச்சா' வசனத்தை எப்படி பேசினார் ? அவருக்கு இயக்குனராக சொல்லிக் கொடுத்தது யார் ?

5. அதென்ன பார்ப்பண மகளிர் ? தற்போது பார்ப்பணர் அல்லாத இளைஞிகளும் சிவா என்பதை ஷிவா எனவும் சக்தி என்பதை ஷக்தி எனவும் தானே உச்சரிக்கின்றனர். (அலைபாயுதே முதல் ஆரம்பித்த பழக்கம்)

6. கர்நாடகம் - ஆந்திரம் வெள்ள சேதத்திற்குப் பிறகு நதி நீர் இணைப்பு முயற்சிகள் வலுப்பெறுமா ? இல்லை எதிர்ப்பு வலுக்குமா ? இந்த அளவிற்கு சேதமடைய நேர்ந்ததற்கு ஆந்திராவில் முதல்வர் ரோசைய்யாவின் கட்டளைகளைக் கேட்டு நடக்க விருப்பமில்லாத அதிகாரிகள்/அமைச்சர்களும் காரணமா ?

7. ஜெ. நாளை சென்னை வருகிறாராமே ? மழை பெய்யுமா ?

8. பொக்ரான் அணுகுண்டு சோதனை ஃபெயிலியர் என விஞ்ஞானி சந்தானம் சொல்லுகிறாரே ? ஏன் இத்தனை வருடம் கழித்து ? அதை மறுக்கும் அரசு மற்றும் கலாம் கூறும் பதில்கள் ஆணித்தரமாக இல்லையே ?

9. பாமக மூன்றாவது அணி என்கிறதே ? அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக இருவரும் பாமகவை சேர்த்துக் கொள்ளாவிட்டால் மருத்துவர் ஐயா என்ன செய்வார் ?

10. விஜய் டிவி புதிது புதிதாக நிகழ்ச்சிகளை வைத்தாலும், தாம்பரம் தாண்டி (அதாவது பெருநகரங்களைத் தவிர) அதன் ரீச் இல்லையாமே ? ஆனாலும் க்ரியேடிவிடி என்பதைவிட - வெளிநாட்டு டிவி நிகழ்ச்சிகளை ஸ்டார் டிவி இந்தியில் காப்பி அடிக்க, அதை அப்படியே தமிழ்ப் படுத்துகிறது விஜய். இதைப் பார்த்து சன், கலைஞர் மற்ற டிவிக்கள் காப்பி அடிக்கிறது. டி.ஆர்.பி.யில் வெற்றி பெற ஒரிஜினலாக நிகழ்ச்சியே தயாரிக்க முடியாதா ?

இங்கிலிபீஸ் ஓவியா said...

Anony,

/தமிழ் ஓவியாவிற்கு நீங்கள் அளித்திருப்பது பதில் அல்ல, அதுக்கு எங்க ஊர் பக்கம் செருப்படின்னு சொல்லுவாங்க/

நீங்க சொல்லுற செருப்படி எல்லாம் சோறு சாப்புடுற சென்மங்களுக்குதான் ஒறைக்கும். எங்க தோலு கெட்டி, எரும மாடு மாறி, தெரியும்ல?

M Arunachalam said...

Dondu Sir,

K.Balachandar's title is "Iyakkunar Sigaram". Director Bharathiraja is called as "Iyakkunar Imayam".

M Arunachalam said...

For next week's Q & A:

1. இன்னும் ஏன் "தமிழக மனித உரிமை கழகம்" நடிகைகளின் மானம் காக்க களத்தில் குதிக்கவில்லை?

2. கூடவே, "பெண் உரிமை சங்கமோ அல்லது கழகமோ" ஒன்று உள்ளதே, அதுவும் சேர்ந்து கோதாவில் குதித்தால், "சபாஷ், சரியான போட்டி" என்று சொல்ல இயலுமா?

3. Do you think Immoral Traffic Act provides for the arrest of gigolos also for indulging or soliciting in immoral acts? If so, do you think any present day "actors" will be a prime suspect for the TN police?

தமிழ் ஓவியா said...

கலைஞரையும் பேராசிரியரையும் ஒப்பிட்டு யார் இளித்தவாயர்கள் என்று கேள்வி பதில் எழுதும் டோண்டு அவர்களே
சாங்கராச்சாரியர்களின் காமலீலைகளைப் பற்றியும், பெண்களிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் பற்றியும் கேள்வி எழுப்பினால்

அதாவது நம்முடைய கேள்விக்கு டோண்டுவின் பதில் இதோ

கேள்வி:"ஓடிப்போன சங்கராச்சாரியார் or ஓடிப்போகாமல் இங்கேயே ஆபாசபடம் பார்த்த்து அக்கிரகார அம்மணிகளை செட்டப் செய்த சின்ன (வீடு) சங்கராச்சாரியார் - இவர்களில் யார் சிறந்த மாமாப் பயல்?

பதில்: முதலில் மாமாப்பயல் என்ற சொல்லின் விளக்கத்தில் தெளிவுடன் இருப்பது அவசியம். மாமாப் பயல் என்பவன் மற்றவர்கள் அனுபவிப்பதற்காக பெண்களை ஏற்பாடு செய்பவன். பெரிய அல்லது சின்ன சங்கராச்சாரியர்கள் மேலே வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அதுவல்ல. ஆகவே அவர்களில் யாருமே மாமாப்பயல் என அவர்தம் விரோதிகள்கூட சொல்லிட இயலாது.

மாமா பற்றி உங்கள் விளக்கம் மூலம் அறிந்து கொண்டேன். ஓ..ஓ அப்ப சங்கராச்சாரிகள் மாமாப் பயல்களை உருவாக்கும் மாமா என்று சொல்லலாமா? டோண்டு அய்யா.

தமிழ் ஓவியா said...

வால் பையன் சங்கராச்சாரிகளின் யோக்கியதைகளை அறிந்து கொண்டுதான் விமர்சிக்கிறீர்களா?

கலைஞர்- பேராசிரியார் யார் இளித்தவாயர்கள் என்ற கேள்விக்கு எதிர்வினையாகத்தான், டோண்டு போன்றவர்கள் ஆரோக்கியமாக நாகரிகமாக விமர்சிக்க வேண்டும் அடிப்படையில்தான் அக்கேள்வி வைக்கப்பட்டது.

இப்போதும் அதேபோல் தான் கேள்வி வைக்கப்படுகிறது

சரியான ஊத்த வாயன் ஓடிப்போன சங்கராச்சாரியா? அல்லது ஆபாசப்படம் பார்த்து அக்கிரகார அம்மணிகளை அனுபவித்த சின்னச்சங்கராச்சாரியா?

மேலும் தகவல் அறிய சங்கராச்சாரியார் யார்? பாக 1 மற்றும் 2 படிக்க வேண்டுகிறேன்.

நன்றி வால்பையன்

பே*ப்பிறந்தவன் *த்திரம் போக மாட்டேன் said...

\\தமிழ் ஓவியா எதையோ கொடுத்து, எதையோ புண்ணாக்கிக்கிட்ட மாதிரி தெரியுதே!//

\\தமிழ் ஓவியாவிற்கு நீங்கள் அளித்திருப்பது பதில் அல்ல, அதுக்கு எங்க ஊர் பக்கம் செருப்படின்னு சொல்லுவாங்க//

இதுக்குப் பேருதான் குமுறுக் கஞ்சி காச்சுறது.
பாவம் தமிழ் ஓவியா. அதனால் தான் விளக்கெண்ணெய்யை வைத்துக் கொண்டே அலைகிறாராம் @ வால்பையன்.

தமிழ் ஓவியா said...

//சொந்த மனைவியையே ஊருக்கு வந்துள்ள புது தாசி என தம் நண்பர்களுக்கு அடையாளம் காட்டி அவர்களை விட்டு அந்த உத்தமப் பெண் நாகம்மையாரை கேலி செய்வித்து, கோவிலுக்கு வந்த மற்ற பெண்டிரை பயம்காட்டி, அவரது மனதையும் நோவடித்த ஈ.வே. ரா. அவர்கள் பற்றி என்ன கூறுவீர்கள்?//

நாகம்மையார் அவர்களை திருத்துவதற்காக பெரியார் கையாண்ட முறை இது.

அதன் பின் உண்மையை எடுத்துக்கூறி கடவுளுக்கும் மணியாட்டும் பார்ப்பனுக்கும் எந்த சக்தியுமில்லை என்று நிரூபித்தார் பெரியார்.
நாகம்மையாரும் உண்மையை உணர்ந்து கொண்டார்.

மருத்துவர்கள் ஷாக் டீர்ட்மெண்ட் கொடுத்து நோயைக் குண்ப்படுத்துவதில்லையா?

அது போல் பக்தி நோயை குணப்படுத்த சமுதாய மருத்துவராம் பெரியார் கையாண்ட முறை அவ்வளவுதானே தவிர யாரையும் நோகடிக்க அல்ல.

நோயைக் குணப்படுத்த ஊசி போட வேண்டும் என்கிற போது வலிக்காமல், குத்தாமல் எப்படி ஊசி போட முடியும். அப்புறம் எப்படி நோய் குணமாகும்?

டோண்டு அவர்களே

தமிழ் ஓவியா said...

//இதுதான் போதாது என்றால், ஒரு முறை மனைவிகளும் கள்ள புருஷன் வைத்துக் கொள்ளலாம் என ஈ.வே.ரா. அவர்கள் ஒரு கூட்டத்தில் கூற, நாகம்மையிடம் தான் செல்லலாமா என ஒருவர் கூட்டத்தில் கேட்டு வைக்க, “நாம் இருவருமே நாகம்மையிடம் இது சம்பந்தமாக பேசுவோம், அவர் கொடுப்பதை வாங்கி வருவோம்” என்று பொருள்பட திருவாய் மலர்ந்தருளினது பற்றியும் என்ன கூறுவீர்கள்?

டோண்டு உங்களின் அசல்பார்ப்பனப் புத்தி இதன் மூலம் அம்பலமாகிவிட்டது. வாசகர்களே நன்றாக உற்று நோக்குங்கள். மேலே டோண்டு அவர்கள் எழுதியதை இன்னொருமுறை படியுங்கள்

"ஒரு முறை மனைவிகளும் கள்ள புருஷன் வைத்துக் கொள்ளலாம் என ஈ.வே.ரா. அவர்கள் ஒரு கூட்டத்தில் கூற, "
என்று எழுதியுள்ளார் டோண்டு. ஆனால் அவர் கொடுத்த சுட்டியில்
என்ன உள்ளது தெரியுமா? படியுங்கள்..

"இந்த உதாரணத்தை ஜெயகாந்தன் அவரது சபையில் முன்பொரு நாள் சொன்னார். ஜெயகாந்தன் பெரியார் கருத்துகளுடன் உடன்படுபவரில்லை. அதனால் பெரியாரைப் பாராட்டி ஜெயகாந்தன் சொன்ன இந்தக் கதை (நிகழ்ச்சி) உண்மை என்று நம்புவோம். இதற்கு ஆதாரம், எதுவும் என்னிடம் இல்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். ஒருமுறை - நாகம்மையார் உயிருடன் இருந்தபோது - பெரியார் கூட்டத்தில் ஒருவர் எழுந்து கேள்வி கேட்டாராம். "கற்பு இல்லை இல்லை என்று சொல்கிறீரே (அல்லது இந்த மாதிரி பேசுகிறீரே), உம் மனைவியை என்னுடன் அனுப்புவீர்களா?" என்ற மாதிரி கேள்வி. "பெரியார் யார்? சிங்கம். இதற்கெல்லாம் அசந்துவிடுபவரா அவர்?" (மேற்கோளுள் இருப்பது ஜெயகாந்தன் சொன்ன வாசகங்கள்!). பெரியார் பதில் சொன்னாராம். "அப்படியா! சரி வாரும். கூட்டிட்டுப் போறேன். நாகம்மை என்ன தராங்களோ அதை ரெண்டு பெரும் வாங்கிக்கலாம்" என்ற பொருளில் பதில் சொன்னாராம். இந்த இடத்தில், நாகம்மையார் உதைப்பார். உதைத்தால் அதையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற பொருளும் இருப்பதைக் கவனிக்கவும். இப்படிப்பட்ட நேர்மையுள்ளவர் பெரியார். கற்பு இல்லை என்று சொன்ன பெரியாரே, மனைவியின் கற்பின் பேரில் நம்பிக்கை இருப்பதால்தான் இன்னொருவரைத் தைரியமாக அழைத்துச் செல்ல அழைக்க முடிந்தது என்பது இதன் இன்னொரு பரிமாணம்"

இப்போது புரிகிறதா,தெரிகிறதா? டோண்டுவின் அசல் பார்ப்பனியத்தனம் .

அங்கு கற்பு பற்றி விவாதிக்கப்படுகிறது.ஆனால் டோண்டுவோ கள்ளப் புருசன்களைப் பற்றி விவாதிக்கிறார்.

சங்கராச்சாரிகளின் அடியொட்டி செயல்படும் டோண்டு வேறு எப்படிச் சிந்திப்பார் என்று நீங்கள் கேட்கும் கேள்வி எனக்குக் கேட்கிறது.

ஆக டோண்டு தான் கொடுத்த சுட்டியில் உள்ள கருத்தையே எப்படி திரித்து வெளியிடுகிறார் என்பதை ஆதாரத்துடன் எடுத்து வைத்து விட்டோம்.

இனிமேலும் வாசகர்கள் பார்ப்பனியத்துக்கு பலியாகமல் உண்மை உணர்ந்து செயல் பட வேண்டுகிறேன்.

மிக்க நன்றி

Anonymous said...

\\ஆக டோண்டு தான் கொடுத்த சுட்டியில் உள்ள கருத்தையே எப்படி திரித்து வெளியிடுகிறார் என்பதை ஆதாரத்துடன் எடுத்து வைத்து விட்டோம்.//

அதெல்லாம் இருக்கட்டும் தமிழ் ஓவியா தள்ளாத வயசுல எதுக்காக ஒங்க பொர்ச்சி தலீவரு ஒரு சின்ன வயசுப் பொண்ணக் கட்டிக்கினாறு?

Anonymous said...

\\சங்கராச்சாரிகளின் அடியொட்டி செயல்படும் டோண்டு வேறு எப்படிச் சிந்திப்பார்//

டோண்டு ஐயா சங்கராச்சாரி அடிப்பொடி இல்லைன்னு ஏRகனவே சொல்லியிருந்ததப் படிக்கலியா தமிழ் ஓவியா? இன்னாத்துக்கு இப்டி அழுது மாய்மாலம் காட்டுரிறு? வெளக்கெண்ணெய தேச்சமா எளப்பாறிநோமானு இல்லாம ஏமய்யா சொம்மா கூவுரீரு?

dondu(#11168674346665545885) said...

//அதெல்லாம் இருக்கட்டும் தமிழ் ஓவியா தள்ளாத வயசுல எதுக்காக ஒங்க பொர்ச்சி தலீவரு ஒரு சின்ன வயசுப் பொண்ணக் கட்டிக்கினாறு?//

இதற்கு பதில் நான் இங்கு கூறியுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2009/10/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

\\சரியான ஊத்த வாயன் ஓடிப்போன சங்கராச்சாரியா? அல்லது ஆபாசப்படம் பார்த்து அக்கிரகார அம்மணிகளை அனுபவித்த சின்னச்சங்கராச்சாரியா?//

இந்த ரெண்டு சங்கராச்சாரியோட ஆசாரம் பாத்த நாகம்மைகிட்ட குளிக்காம, பல்லு தேய்க்காம எதுக்கோ போன 26 வயசு பொடிசக் கண்ணாலம் கட்டின உம்ம பொர்ச்சி தலீவரு பேரையும் சேத்துக்குங்க.
இது எதையோ குடுத்து அதப் புண்ணாக்கிட்ட கதை # 3 @ வால் பையன்

வஜ்ரா said...

//
3. இந்த சுநலமிகளுக்கு தெய்வ தண்டனையாவது கிடைக்குமா? (அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்)
பதில்: பலருக்கு தண்டனை கிடைத்துள்ளது. வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அதை ரொம்பவுமே ரகசியமாக செய்ய, அவர்கள் திடீரென இறந்ததும் வாரிசுதாரர்களுக்கு அக்கணக்கு இருந்தது கூடத் தெரியாது போன நிகழ்வுகள் உண்டு. அதுதான் தண்டனை என வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

4. இவர்கள் அநியாயமாய் சேர்த்த அட்ட கருப்பு பணம் இவர்களுக்கும் இவர்கள் சந்ததியினருக்கு உதவமால் போக என்ன நடந்தால் நல்லது?
பதில்: மேலே உள்ள பதிலைப் பாருங்கள்.
//

இது கொடூரம்.


இவனே நோகாமல் நொங்கு தின்னவன். அவனிடம் நோண்டித் தின்பது வங்கிகளா ?

அதுவும் இவர்களெல்லாம் இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரகசியக்கணக்கு வைத்திருந்தாலாவது பரவாயில்லை. ஏதாவது இந்திய தொழில் முனைபவருக்குக் கடன் கொடுக்க வசதியாக இருந்துவிட்டுப் போகும். வெள்ளைக்காரன் வங்கியில அல்லவா பணத்தைப் போட்டிருக்கிறார்கள் ?

வஜ்ரா said...

//
1. மது அருந்தும்போது அதை நல்ல கோப்பையில் ஊற்றி அதில் ஐஸ் கட்டியோ, சோடாவோ, லெமனேட், கோலா, தக்காளி சாறு என கலந்து அரைக் கப்பை அரை மணிநேரம் உறிஞ்சியபடி, வறுத்த முந்திரிகளையோ, நல்ல உருளை சிப்ஸ் அல்லது கடலை/வெங்காய மிக்ஸ் என நண்பர்களுடன் அளவளாவியபடி எஞ்சாய் செய்யாமல் டாஸ்மாக்கில் பல்வேறுவித மணங்கள், வாந்தி மற்றும் இன்னபிற சமாச்சாரங்களுடன் கல்ப் அடிப்பதில் என்ன சுகம் கிடைக்கப்போகிறது ? ஃபைவ் ஸ்டார் பார் எல்லாம் வேண்டாம். ஏன் தமிழக அரசு டாஸ்மாக்கை கள்ளுக்கடை சாராயக்கடை ரேஞ்சுக்கே வைத்திருக்கிறது ? (ஒருவித குடோன் போல)
//

Necessity is the mother of invention.

டாஸ்மாக்கில் தண்ணியடிப்பவன் நண்பர்களுடன் அரட்டை அடிக்க எல்லாம் தண்ணி போடுவதில்லை.
அந்த அளவுக்கு நம் தமிழர்களிடம் டைம் இல்லை. அவர்கள் உழைப்பாளிகள்...!

கலாட்டாப்பையன் said...

\\1. சிட்டுகுருவி லேகியம் ருசித்துண்டா?
பதில்: இல்லை, எனக்கு அதன் தேவை ஏற்படவில்லை. அது இல்லாமலேயே செயல்பாடு அமர்க்களமாக இருந்தது. //

இறந்த காலத்துல சொல்லி இருகிங்கலே அப்போ இப்ப (நிகழ காலத்துல )

வால்பையன் said...

//கற்பு இல்லை என்று சொன்ன பெரியாரே, மனைவியின் கற்பின் பேரில் நம்பிக்கை இருப்பதால்தான் இன்னொருவரைத் தைரியமாக அழைத்துச் செல்ல அழைக்க முடிந்தது என்பது இதன் இன்னொரு பரிமாணம்"//

சங்கராசாரியர் கடைந்தெடுத்த அயோக்கியன் தான் நான் இல்லையென்று சொல்லவில்லையே!
அதற்கு டோண்டு கொடுத்த பதில்களும் அதற்கு நீங்கள் சொன்ன விளக்கமும் பெரியாரே வாழ்க்கையில் பல முரண்களுடன் வாழ்ந்தார் என்பது போல் தான் தெரிகிறது!

மற்றவர்கள் கற்புடன் இருக்க வேண்டியதில்லை என்றவர், தன் மனைவி கற்புடயவள் என்று நம்புவது பார்பனன் இது பத்தினி வீடு என்று போர்டு வைத்த மாதிரி தானே!

பெரியாருக்கு எப்படியே ராஜாஜி சிறந்த நண்பரோ அது போல தான் எனக்கு டோண்டுவும், அவருடய கருத்துகளுடன் தான் நான் மோத முடியும், அவருடன் குஸ்தியெல்லாம் போட முடியாது!

மேலும் ஏற்கனவே சொன்னது போல் நான் கடவுள், மத ,சாதி மறுப்பாளனே தவிர பெரியார் சீடன் அல்லது பக்தன் கிடையாது!

சங்கராசொறியை கேள்வி கேட்பது தப்பல்ல அதே நேரம் பெரியார் செய்த சொதப்பல்களுகெல்லாம் சப்பை கட்டு கட்டுவது உங்கள் நேர்மையை சந்தேகிக்கும்!

தமிழ் ஓவியா said...

வால் பையன் அவர்களுக்கு
கற்பு பற்றி பெரியாரின் கருத்து என்ன என்று அறியாமல் தாங்கள் எடுத்து வைத்த வாதமாகவே இதைப் பார்க்கிறேன்.
பெரியார் கற்பு குறித்த கருத்து இதோ:-

"நாசமாகப் போகிற கற்பு! கற்பு! என்று சொல்லி நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கிவிட்டார்கள். பார்ப்பானோ மிகக் கெட்டிக்காரன். ஆயிரம் பேரை அவள் பார்த்திருந்தால் கூட அவளைப் பத்தினியாக்கி விடுவான். சீதை, துரோபதை, தாரை இவர்களே இதற்கு உதாரணம். கற்பு என்றால் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியாக அல்லவா இருக்க வேண்டும்? பைத்தியக்காரத்தனமாக மூடநம்பிக்கைகளைப் புகுத்திப் பாழாக்கி விட்டார்கள். கட்டுப்பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒரு காலமும் கூடாது! கூடவே கூடாது!!வாழ்க்கை ஒப்பந்தத்திற்காகவும், காதல் அன்பிற்காகவும், இருவரையும் கற்பு எனும் சங்கிலியால் எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டட்டும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு மாத்திரம் அடிமைப்படுத்துவதில் ஆசை மூர்க்கத்தனமே அல்லாமல் அதில் கடுகளவு யோக்கியமும் நாணயமும் பொறுப்பும் இல்லவே இல்லை. பாவத்திற்குப் பயந்து பதிவிரதையாய் இருப்பவளும், காவலுக்கு பயந்து பதிவிரதையாய் இருப்பவளும்; மானத்திற்குப் பயந்து பதிவிரதையாயிருப்பவளும் ஒரே யோக்கியதை உடையவளே ஆவாள்.

------------------- பெரியார் ஈ.வெ.ரா - வாழ்க்கைத் துணைநலம் என்ற நூலிலிருந்து பக்கம் 45-46

தமிழ் ஓவியா said...

வால்பையன் அவர்களின் பார்வைக்கு

கற்பு பற்றி பெரியாரின் கருத்து இதோ:-


தோழர்களே!



கற்பு கெட்டுப் போகும் என்கின்ற கவலை எவரும் அடைய வேண்டியதில்லை.பெண்கள் கற்பு பெண்களுக்கே சேர்ந்ததே ஒழிய, ஆண்களுக்கு அடமானம் வைக்கப்பட்டதல்ல.கற்பு என்பது எதுவானாலும் அது தனிப்பட்ட நபரைச் சேர்ந்ததாகும். கற்பு கெடுவதால் ஏற்பட்ட தெய்வத் தண்டனையை அவர்கள் அடைவார்கள்.அதற்காக மற்றொருவர் அடையப்போவதில்லை. இது தானே மதவாதிகள் ஆஸ்திகர்கள் சித்தாந்தம். ஆதலால் பெண் பாவத்துக்குப் போகிறாளே என்று ஆண் பரிதாபப்பட வேண்டாம். பெண் அடி மையல்ல.அவளுக்கு நாம் எஜமானல்ல கார்டியன் அல்ல என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப்பற்றியும் காத்துக் கொள்ள தகுதி பெற்றுக் கொள்ள விட்டு விட வேண்டுமே ஒழிய ஆண்காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.

கற்பு கெடுதலால் நோய் வரும் என்றால் இருவருக்கும் தான். ஒருவருக்கு மாத்திரம் வராது. ஆதலால் பெண்களைப் படிக்க வைத்து விட்டால் தங்கள் கற்பு மாத்திரம் அல்லாமல் ஆண்கள் கற்பையும் காப்பாற்றக் கூடிய தன்மை வந்து விடும்.

ஆகவே தோழர்களான நீங்கள் நன்றாய் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்து அந்தப்படி உங்கள் தங்கை, குழந்தை ஆகியவர்கள் விஷயத்தில் நடவுங்கள்.


------------------------- 18.10.1935 - அன்று ஈரோடு லண்டன் மிஷன் கம்யூனிட்டி டிரெய்னிங் பள்ளிக்கூட மாணவர் சங்க கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை, "குடிஅரசு" - 03.11.1935

முழுமையான கட்டுரைக்கு

http://thamizhoviya.blogspot.com/2008/06/blog-post_2360.html

சுட்டியை சுட்டவும்

நன்றி .

வால்பையன் said...

தமிழ் ஓவியா அவர்களின் கவனத்திற்கு!

கற்பு பற்றி அடுத்தவர்கள் கருத்து இருக்கட்டும்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், பெரியார் காலத்துக்கு பின் அது பற்றிய கூற்று மாறவேயில்லையா!?

அன்று அது பற்றிய விழிப்புணட்வு இல்லாத பெண்கள் 99 சதவிகிதம் இன்று அப்படியே 9 சதவிகதமாக குறைந்து விட்டது, இன்றும் கற்பு பாட்டு பாடுபவர்கள் பெரும்பாலும் பார்பன பெண்களே!

இன்று தேவையான விழிப்புணர்வு பல, அதை விட்டு பழைய பாட்டை பாடி கொண்டிருப்பது சலிப்பு தரும் செயலாக இருக்கிறது, மார்க்ஸ், லெனின் கேட்பாடுகளே நீர்த்து போய் இன்று பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் கண்டுவிட்டது கம்யூனிச நாடுகளே, தத்துவ கதை சொல்லி முட்டாளாக்க நினைக்கும், ஜக்கிக்கும், நித்திக்கும் மக்களீன் பதில் “இதெல்லாம் நாங்க ஒஷோ காலத்துலயே பாத்துட்டோம்” என்பது தான்!

கொஞ்சம் அப்டேட் ஆகுங்க தமிழ் ஓவியா!

Anonymous said...

\\கொஞ்சம் அப்டேட் ஆகுங்க தமிழ் ஓவியா!//

அப்டேட் ஆவுறதா? இதெல்லாம் ஆவுற கதையில்ல வால் பையன் சார். 1900 - 1964 விட்டு வரவே மாட்டோம். ஊர்ல என்னய மாதிரி கேனையனுங்க இருக்குற வரைக்கும் என்னோட மானமிகு ஐயா வி. கீரமணிக்கு கொண்டாட்டம். எங்க பெரிய ஐயா சொன்னா மாரி நாங்க முட்டாளாவே இருக்குறோம். தயவு செஞ்சு என்னிய அறிவாளியா ஆக்கீடாதீங்க. தமிழ் ஓவியா கம்ப்யூட்டர் கீ போர்டுல Ctrl, A, C, V கீ எல்லாம் தேஞ்சு நஞ்சு போச்சுன்னு ஊருக்குள்ளாற பேசிக்கிடுதானுங்க.

தமிழ் ஓவியா said...

//கற்பு பற்றி அடுத்தவர்கள் கருத்து இருக்கட்டும்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், பெரியார் காலத்துக்கு பின் அது பற்றிய கூற்று மாறவேயில்லையா!?//



கற்பை வைத்து இன்னும் கொலைகள் நடந்து வருவது கண்கூடு.

பிடிக்க வில்லையென்றால் பிரிந்து செல்வது தான் சரியான அணுகுமுறை.


பெரியார் கூறிய அளவுக்காவது வரவேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

Anonymous said...

\\பெரியார் கூறிய அளவுக்காவது வரவேண்டும் என்பது தான் எனது விருப்பம்.//

எப்டி எவன் பொண்டாட்டிய எவன் வேணும்னாலும் எடுத்துக்குற ஐடியாவா? இல்ல யார் வேணும்னாலும் வரை முறையில்லாம ஒன்னாப் படுத்துகுறதையா?
சோசிய செகாமணி வேற சைக்காலஜிப் படி பொண்ணு வயசு இல்லன்னா அம்மா வயசுல கலியாணம் கட்ட சொல்லீருக்காரு. பொர்ச்சித் தலைவர பின் பத்துனா இப்டிதான் மூளை வரை முறையில்லாம சிந்திக்கும்.
உலகமே ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையே வியாதிகளிலிருந்து தப்பிக்க ஒரே வழினனு புரிஞ்சி நடக்க முயற்சி பண்ணுது. இதுல பொர்ச்சித் தலைவர் மாதிரி பார்த்தவங்க கூட எல்லாம் படுக்கணும்னு சொல்றீங்களா? பொர்ச்சித் தலீவரின் கடைசி நாட்களில் என்னென்ன உபாதைகள் வந்துச்சின்னு யாருட்டயாது கேட்டு சொல்லுங்க தமிழ் ஓவியா.

வால்பையன் said...

//பெரியார் கூறிய அளவுக்காவது வரவேண்டும் என்பது தான் எனது விருப்பம். //

பெரியாரை தவிர வேறு யாரையுமே நீங்க படிச்சதில்லையா!?
பெரியார் காலத்துக்கு முன்னாடியே பென்ணியம், விளிம்பு நிலை மனிதர்கள் ப்ற்றியெல்லாம் பேசி, எழுதி அலசி துவைச்சு காயபோட்டாச்சு!

நீங்க மாறவே மாட்டிங்களா தமிழ் ஓவியா!? நீங்க செய்யுறது உங்களுக்கே இயந்திர தனமா தெரியலையா? சுயமா சிந்திச்சு வாழ்றவன் பகுத்தறிவுவாதியா இல்லை இப்படி புத்தகத்துல இருக்கு அது படி தான் நான் நடப்பேன்னு சொல்றவன் பகுத்தறிவுவாதியா?

ஒரே வார்த்தையில சொல்லட்டுமா

உங்களுக்கும் ,பாப்பானுங்களுக்கும் வித்தியாசமில்லை, அவுங்களுக்கு வேதம், உங்களுக்கு பெரியார்!,
நீங்களும் சுயபுத்தியில வாழ்றதில்ல, அடுத்தவனையும் சுய புத்தியில வாழ விடுறதில்லை

உங்களால பெரியார் மேலிருக்குற கொஞ்ச நஞ்ச மரியாதையும் காணாம போயிறும்!

Guru said...

டோண்டு சார்,
சங்கராச்சாரியார் குறித்த தமிழ்ஓவியா கேள்விக்கு சரியான சவுக்கடி பதில்.. இவர்களுக்கு பிரித்து பிரித்து பேசுவதில் அவ்வளவு சந்தோஷம். இன்றைய தேதியில் இளைய தலைமுறை யாரும் ஜாதி மதம் பார்ப்பதில்லை. எல்லோரும் ஒன்றாக தான் இருக்கிறார்கள். சில பூட்ட கேசுகள் தான் நாத்திகம் என்று ஹிந்துக்களை புண்படுத்தி பொழப்பு நடத்துகின்றனர். தரமாக கேள்வி கேட்க தெரியாமல் மாமாபையல் என்றெல்லாம் எழுதும் பொழுதே இவர்கள் எப்படி என்று தெளிவாய் தெரிகிறது.,
நாத்திகவாதி என்றால் உங்களோடு வைத்து கொள்ளுங்கள். அல்லது அதை பரப்புங்கள்.
நாத்திகத்தை பரப்புவதற்க்காக (உங்கள் சரக்கை விற்பதற்க்காக) மதங்களை (ஹிந்து அல்லது எந்த மதமாக இருக்கட்டும்) bad mouthing செய்யாதீர்கள். ஹிந்து மதத்தை மட்டும் தான் இவர்கள் பேசுவார்கள் மற்ற மதத்தை பற்றி பேச இவர்கள்ளுக்கு தைர்யம் இல்லை.

தமிழ் ஓவியா said...

//தரமாக கேள்வி கேட்க தெரியாமல் மாமாபையல் என்றெல்லாம் எழுதும் பொழுதே/

கலைஞர்- அன்பழகன் யார் இளித்தவாயர்கள் என்ரு கேள்வி எழுப்பி பதில் அளிப்பது நாகரிகமான செயலா?

எதிர்வினைக்காக நீங்கள் புரிந்து தெளிய வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் கேள்விகேட்கப்பட்டது.

அந்தகேள்வி எவ்வளவு உண்மை என்பதை சங்காராச்சாரியார் வழக்குதொடர்பான ஆவணங்கள் கட்டியம் கூறும் குரு

தமிழ் ஓவியா said...

//ஹிந்து மதத்தை மட்டும் தான் இவர்கள் பேசுவார்கள் மற்ற மதத்தை பற்றி பேச இவர்கள்ளுக்கு தைர்யம் இல்லை.//
இந்தக் கேள்விக்கு பல முறை பதி அளித்தாகிவிட்டது. தமிழ் ஓவியா வலைப் பூவில் தேடிப் படித்துக் கொள்ளவும்.

ஹிந்து மதத்தை விமர்சிப்பது ஏன்?தெரியுமா? அந்த மதத்தில் கடைப்பிடிக்கும் நெறிமுறைகள் மனித இனத்திற்கே கேடாஇ இருப்பதால்தான். ஆதாரம் வேண்டுமா? குரு.

இதோ ஆதாரம்


"தாழ்த்தப்படடோரைத் தொடாதே எட்டி நில் என்று சொல்லுகின்றோம். அதற்குக் காரணம் பிறவியின் அடிப்படையில் அவனுக்குள்ள தூய்மையற்ற நிலையேயாகும். உலகத்லேயே உயர்ந்த சோப்பினால் அவனைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவநாகரிக ஆடை அணிமணிகளால் அலங்கரித்தாலும், பரம்பரைப் பரம்பரையாக வந்த அவர்களுடைய தீட்டை அழுக்கைப் போக்கவே முடியாது

------------------------(நூல்:- Hindu Ideal பக்கம் 230)

இப்படிச் சொன்னவர் சிருங்கேரி சங்கராச்சாரியார் இவருக்கு நான் ஒன்றும் சளைத்தவனல்ல என்ற வகையில் நாசிக் கூட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் பேசியது இதோ.
“சதுர்வர்ண அமைப்பு (பிறவி பேதம்) இந்து மதத்தின் அடித்தளமாகும். இந்து சமுதாய அமைப்பு (பிறவி பேதம்) மறைந்துவிட்டால் இந்து மரமே அழிந்து விடும்”.

இவ்வாறு தாழ்த்தப்பட்டோரை இழிவுபடுத்தும்
இந்து மதத்தை, இந்து மதத்தை போதிப்பவர்களை விமர்சிக்காமல் கொஞ்சவா முடியும் குரு.

dondu(#11168674346665545885) said...

//கலைஞர்- அன்பழகன் யார் இளித்தவாயர்கள் என்ரு கேள்வி எழுப்பி பதில் அளிப்பது நாகரிகமான செயலா?//
அது கலைஞர் அன்பழகன் அல்ல, நெடுஞ்செழியன் அன்பழகன். இக்கேள்வியில் என்ன தரக்குறைவை கண்டீர்கள்?

சங்கராச்சாரியார்களை மாமாப்பயல்கள் என்பதை பகுத்தறிவு வாதத்தின்படி மறுத்து உண்மையான மாமாப்பயலை அடையாளம் காட்டினேன்.

உங்களுக்கு புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் ஓவியா said...

//உங்களுக்கும் ,பாப்பானுங்களுக்கும் வித்தியாசமில்லை, அவுங்களுக்கு வேதம், உங்களுக்கு பெரியார்!,
நீங்களும் சுயபுத்தியில வாழ்றதில்ல, அடுத்தவனையும் சுய புத்தியில வாழ விடுறதில்லை//

என்னங்க வால் பையன் உலகத்திலேயே சுயபுத்தி உடையவர் உங்களை தவிர வேறு யாருமே இல்லையென்று அனைத்து நாடுகளும் அறிவித்த பின்பு அடுத்தவனை சுய புத்தியில் வாழ விடுறதில்லையென்று உங்கள் குற்றச் சாட்டு அபத்தமா படவில்லையா.

பெரியாரின் தொண்டால் உழைப்பால் அவர் போராடியதால் தான் நான் முன்னுக்கு வந்தேன்.அவர் போராடாமல் இருந்திருந்தால் இப்படி முதல் தலைமுறையில் பள்ளிக்கூடம் போன நானெல்லாம் உங்களைப் போன்ற மிகப் பெ... ரி... ய... சுய சிந்தனையாளரும் உல்க அறிவாளிகளின் தொடர்பே கிடைச்சிருக்காதுங்க வால் பையன்.

பெரியாருக்கு முன்னே துவைச்சு காயப்போட்டாச்சா.. இருக்கலாம் காய்ந்ததை எடுத்து அணிவிக்கிற உரிமை கிடைக்க பெரியார் தானுங்க போராடி பெற்றுக் கொடுத்தார்.
மேல் துண்டு கூட போட முடியாத சமுதாயத்தையெல்லாம் கோட் சூட் போட வைத்தது பெரியாரோட உழைப்புதாங்க வால் பையன். என்னமோ என்னுடைய சின்ன அறிவுக்கு எட்டியதை எழுதியுள்ளேன்.

சுய சிந்தனை மிகப்பெரிய அறிவு எல்லாம் உங்களைப் போல் உள்ளவுங்க கிட்டத்தான் இருக்கும்.

நான் எழுதியதுல ஏதாவது பிழை இருந்தா சொல்லுங்க என்னுடைய புத்திக்குட்பட்டவரை விவாதிக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

//சங்கராச்சாரியார்களை மாமாப்பயல்கள் என்பதை பகுத்தறிவு வாதத்தின்படி மறுத்து உண்மையான மாமாப்பயலை அடையாளம் காட்டினேன்//

அதற்குத்தான் நன்றி சொல்லிவிட்டேன் .மீண்டும் நன்றி
அதற்கு ஏற்கனவே விளக்கம் சொல்லிவிட்டேன். மீண்டும் உங்கள் பார்வைக்கு.

"மாமா பற்றி உங்கள் விளக்கம் மூலம் அறிந்து கொண்டேன். ஓ..ஓ அப்ப சங்கராச்சாரிகள் மாமாப் பயல்களை உருவாக்கும் மாமா என்று சொல்லலாமா? டோண்டு அய்யா."

ஆதாரம் வேண்டுமா?

ரவி சுப்பிரமணியத்திடம் சரஸ்வதியை ஏற்பாடு செய்யச் சொல்லிய விசயங்கள் பத்திரிக்கையில் வந்ததே நீங்கள் படிக்கலையா? டோண்டு அய்யா

முழுமையான செய்திகளை அறிந்து கொள்ள காஞ்சி சங்கராச்சாரிகள் மீது கொலை வழக்கு என்ற நூலைப் படிக்க வேணுகிறேன்.
நன்றி

dondu(#11168674346665545885) said...

வழக்கு கோர்ட்டில் உள்ளது. அது வரைக்கும் பொறுக்கவும். பை தி வே சங்கராச்சாரியர்களுக்கு நான் எங்குமே வக்காலத்து வாங்கவில்லை. அதற்கு அவரது வக்கீல்கள் உள்ளனர், அவர்கள் பார்த்து கொள்கிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் ஓவியா said...

//பெரியாரை தவிர வேறு யாரையுமே நீங்க படிச்சதில்லையா!?//


ஏதோ எம்.ஏ. தத்தவம் படிச்சேன். மதங்கள் பற்றி படிச்சேன்.அம்பேத்கரை அறிஞ்சு வச்சிருக்கேன். உலக வரலாறு ஓரளவுக்கு தெரியும். கொஞ்சம் பெரியாரைத் தெரியும். அவருடைய உழைப்பின் பலனை முழுமையா தெரிஞ்சு வைச்சுருக்கேன் வால் பையன்.

இப்பவும் ஏதாவது படிச்சிட்டு இருப்பேன்.

இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களைப்போல் சுய சிந்தனையுடன் மிகப் பெரிய அரிவாளியா ஆக வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்குக் கிடையாதுங்க.

கற்றுக் கொள்ள வேண்டும்.கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மனிதன் மனிதனாக நடத்தப்பட வேண்டும்.

அவ்வளவுதான்.

தமிழ் ஓவியா said...

//கொஞ்சம் அப்டேட் ஆகுங்க தமிழ் ஓவியா!//

கூரை ஏறி கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்
எங்க ஊரில் இப்படி ஒரு பழமொழி இருக்குங்க.

ஆமா நீங்க இதுவரைக்கும் அப்டேட் ஆகி என்ன சாதிச்சிருக்கீங்க வால் பையன்.

உதாரணத்திற்கு மக்கள் சமத்துவமாக வாழ ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காக நான் ஜாதியை ஒழிக்கும் நோக்கில் நான் பிறந்த ஜாதியில் திருமணம் செய்வதில்லை என்று உறுதி ஏற்றுக்கொண்டு (படிக்கும் காலத்திலிருந்து ) அதன் படி வேறு ஜாதியில் திருமணம் அதாவது ஜாதி ஒழிந்த திருமணம் செய்து கொண்டேன்.

அது போல் எங்க அப்பா அம்மா இறந்த போது எந்தச் சடங்கும் இன்றி (சடங்கின் உண்மைத்தன்மை என்ன என்பதை அறிவுறுத்தி இதனால் சடங்கு செய்ய மாட்டேன் என்று ஊரார் முன்னால் கூறி)அவர்களின் இறுதி நிகழ்ச்சியை நடத்தினேன்.

சுய சிந்தனை இல்லாத நானே இது போன்ற காரியங்கள் செய்துள்ளேன்.

நீங்களோ மிகப் பெரிய சுய சிந்தனையாளன்,பெரியாரியலையெல்லாம் தாண்டி பேசுபவர் உலக அறிவாளியான நீங்கள் செய்த காரியங்கள் (மக்களுக்காக) ஏதாவது
இருந்தால் எடுத்துவிடுங்கள். அப்போதாவது உங்கள் சுயசிந்தனை இன்னும் சுடர் விட ஏதுவாக இருக்கும் செய்வீர்களா? வால் பையன்

வால்பையன் said...

பெரியார் நீங்கள் சொன்னதையெல்லாம் செய்யவில்லை என நான் சொல்லவில்லையே!

ஏன் பெரியாரை கடவுளாக்குகிறிர்கள் என்று தானே கேட்கிறேன்!

வால்பையன் said...

//நீங்களோ மிகப் பெரிய சுய சிந்தனையாளன்,பெரியாரியலையெல்லாம் தாண்டி பேசுபவர் உலக அறிவாளியான நீங்கள் செய்த காரியங்கள் (மக்களுக்காக) ஏதாவது
இருந்தால் எடுத்துவிடுங்கள். //

நீங்கள் செய்ததெல்லாம் மக்களுக்கு செய்த நல்ல காரியமா!?
நான் செய்தவற்றையெல்லாம் எனக்கு பிடித்தே செய்தேன்! என்னௌ முற்போக்குவாதியாக காட்டி கொள்ள அல்ல!

எனது திருமணம் குறித்து தனி மடலில் தான் தகவல் பரிமாறிக்க முடியும்!

வால்பையன் said...

கடைசி மூண்று பின்னூட்டங்கள் அபந்தங்களாக(தவறாக புரிந்து கொண்டது) இருந்தாலும் உங்களது சொந்த கருத்து என்பதில் மகிழ்ச்சி!

தமிழ் ஓவியா said...

//ஏன் பெரியாரை கடவுளாக்குகிறிர்கள் என்று தானே கேட்கிறேன்!//

யாருங்க பெரியாரை கடவுளாக்குறாங்க? சுய சிந்தனையோடு தான் பின்னூட்டம் அளிக்கிறீர்களா?

தான் சொன்ன கருத்துக்கள் சரியா தவறா என்று பாருங்கள். சிந்தியுங்கள் .சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நிராகரித்து விட்டுப் போங்கள் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் பெரியார் சொல்லுவார். அதுபோல் நான் மகான் அல்ல சாதாரண மனிதன் என்று சொல்லியுள்ளார்.

சில அரைகுறைகளும் அரைவேக்காடுகளும் சில அதி புத்திசாலிகள் என்று நினைக்கும் அதிமே(ல்)தாவிகளும் பெரியாரை தவறாகப் புரிந்து கொண்டு பெரியாரைக் கடவுள் ஆக்குறாங்க என்று பிலாக்கியானம் பாடுகிறார்களே தவிர மூளையுள்ளவன் பெரியார் என்று சொல்லும் போதோ, நினைக்கும் போதோ அவருடைய கடவுள் மறுப்புத் தத்துவம்தான் முதலில் நினைவுக்கு வரும் வால்பையன்.

தமிழ் ஓவியா said...

//நீங்கள் செய்ததெல்லாம் மக்களுக்கு செய்த நல்ல காரியமா!?
நான் செய்தவற்றையெல்லாம் எனக்கு பிடித்தே செய்தேன்! என்னௌ முற்போக்குவாதியாக காட்டி கொள்ள அல்ல!

எனது திருமணம் குறித்து தனி மடலில் தான் தகவல் பரிமாறிக்க முடியும்!//

அய்யா வால்பையன் உலகில் அனைவரும் அவரவர் விருப்பத்திற்குத்தான் இயங்க முடியும். நிர்ப்பந்தத்திற்க்கா இயங்குபவர்கள் விரைவில் அம்பலப்பட்டுப் போவார்கள். இதில் முற்போக்கு முகமூடியெல்லாம் விரைவில் கழண்டு விடும்.

ஜாதி மறுப்புத் திருமணம் கூட (சிரமம்தான் இருந்தாலும் காதல் மூலம்)செய்து விடலாம்.

ஆனால் இறப்பு நிகழ்ச்சியில் சடங்கின்றி நடத்துவது லேசு பட்ட காரியமல்ல. இது ஏதோ நீங்கள் நினைப்பது போல் சாதாரணக் காரியமல்ல.

ஊரே கூடியிருக்கும் இறப்பு நிகழ்வில் அதுவும் ஒரு கிராமத்தில் வாழ்ந்த என்னைப் போன்ற எளியவர்கள் சடங்கின்றி தான் அடக்கம் செய்வேன். அந்தச் சடங்கு செய்தால் நான் மட்டும் அல்ல என் தாயையும் இழிவு படுத்தும் செயல் இந்தச் செயலைச் செய்யச் சொல்கிறீர்களா? என்று நேருக்கு நேர் கேட்டு இறுதி நிகழ்வை நடத்தினேன்.


எம் மக்களின் முடநம்பிக்கைகளையும், அறியாமையையும் போக்க செய்ததே தவிர முற்போக்குக்காக செய்ததல்ல.
1996 இல் இது நடந்தது.

சென்ற ஆண்டு எனது தாய் இறந்தார் இறுதி நிகழ்வுக்கு வந்த என் ஊர் மக்கள், உறவினர்களின், எந்த எதிர்ப்பும் இன்றி,எந்தச் சடங்கும், சீரும்,செய்யாமல்தான் இறுதி நிகழ்வை நடத்தினேன்.

மக்கள் 1996 இல் காட்டிய எதிர்ப்பு 2008 இல் சுத்தமாக இல்லை. நன்கு ஒத்துழைப்பும் நல்கினார்கள். இது முற்போக்கு முகமூடியால் செய்ய இயலாது வால் பையன்.

தமிழ் ஓவியா said...

//கடைசி மூண்று பின்னூட்டங்கள் அபந்தங்களாக(தவறாக புரிந்து கொண்டது) இருந்தாலும் உங்களது சொந்த கருத்து என்பதில் மகிழ்ச்சி!//

உங்களுக்கு அபத்தங்களாகத்தான் தெரியும்.
என்ன செய்வது சுய சிந்தனையாளரின் சுயரூபம் வெளிப்பட்டால் அபத்தமாகத்தான் இருக்கும்.

தமிழ் ஓவியா said...

//எனது திருமணம் குறித்து தனி மடலில் தான் தகவல் பரிமாறிக்க முடியும்!//

சரக்கு அடிப்பதை விலாவாரியாக பெருமையாக எழுதும் நீங்கள் இதை மட்டும் தனிமடலில் பரிமாறிக் கொள்ளலாம் என்பது எனக்கு என்னமோ சரி என்று தோன்ற வில்லை.

உலகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை வால் பையன்.

வால்பையன் said...

//சரக்கு அடிப்பதை விலாவாரியாக பெருமையாக எழுதும் நீங்கள் இதை மட்டும் தனிமடலில் பரிமாறிக் கொள்ளலாம் என்பது எனக்கு என்னமோ சரி என்று தோன்ற வில்லை.//

அபந்தம்னு சொன்னது தப்பேயில்ல!

நான் சரக்கடிப்பது என் உரிமை, ஆனால் என் மனைவின் முன்னாள் வாழ்க்கையை அவளை கேட்காமல் நான் பகிர்ந்து கொள்ள முடியாது, அவள் எனக்கு அடிமையல்ல!, அவள் அனுமதித்தால் மட்டுமே உங்களுக்கு கூட மெயில், இல்லையென்றால் என்னை பற்றியும் என் வாழ்க்கை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை!

உங்களுக்கு சரியென்று படாததற்கெல்லாம் நான் வருத்தபட்டு கொண்டிருக்க முடியாது!

அவர் யாருடன் தம்மை இணைத்து கொள்கிறாரோ, அங்கே விமர்சனங்கள் வாங்கி கொள்வார், யாரென்றே தெரியாதவர்கள் அவரை விமர்சனம் செய்ய நான் பார்த்து கொண்டிருக்க முடியாது!

உங்கள் விமர்சனம் என்னோடு நிற்கட்டும்!

தமிழ் ஓவியா said...

//உங்கள் விமர்சனம் என்னோடு நிற்கட்டும்!//

நீங்கள் மற்றவர்களை விமர்சிப்பதற்கும் இதுதான் அளவு கோளா?

உங்களையோ முகம் தெரியாத நமது விவாதத்துக்கு தொடர்பில்லாத அந்த சகோதரியையோ சங்கடப் படுத்த வேண்டும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. அது தேவையுமில்லை.

நீங்கள் திருமணம் ஆனவரா ஆகாதவரா என்று எனக்குத் தெரியாது. விவாதத்தில் என்னைப் பற்றி விமர்சித்ததற்கு எனது செயல் பாடுகளை மட்டுமே சுட்டி, நீங்கள் அப்படி செய்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தேன்.
அதற்கு மறுமொழியாக நீங்கள்

"எனது திருமணம் குறித்து தனி மடலில் தான் தகவல் பரிமாறிக்க முடியும்!"

என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.


உலகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. ஆனால் அதே வேளை அந்த விமர்சனம் அவதூறாக, கொச்சைப் படுத்துவதாக மாறிவிடக்கூடாது.

விமர்சனம் என்பது சான்றுகளுடன் கூடிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவைகள்.

அவதூறுகள் ஆதாரங்கள் ஏதுமில்லாமல் மற்றவர்களைக் கொச்சைப்படுத்த அல்லது இழிவுபடுத்தக் கூடியது.

என்னப் பொருத்தவரை இதுநாள் வரை யாரையும் இந்த எல்லைகுட்பட்டே விமர்சித்து வருகிறேன். இனியும் இதே போல் செயல்படுவேன். எப்போதும் எல்லையைத் தாண்டமாட்டேன்.


என்னை விட்டுத்தள்ளுங்கள். நான் தான் உங்கள் பார்வையில் சுய சிந்தனையற்றவனாயிற்றே.

ஆனால் நீங்கள் வைத்திருக்கும் விமர்சனம் மற்றவர்களை எப்படியெல்லாம் காயப் படுத்தியிருக்கும்.

இந்த பதிவில் கூட


பெரியாரையும் அவர் மனைவியையும் தாங்கள்

"மற்றவர்கள் கற்புடன் இருக்க வேண்டியதில்லை என்றவர், தன் மனைவி கற்புடயவள் என்று நம்புவது பார்பனன் இது பத்தினி வீடு என்று போர்டு வைத்த மாதிரி தானே!"
(இந்த உதாரணகூட பெரியார் சொன்னதுதான் வால்பையன்)

என்று விமர்சித்துள்ளீர்கள்.

"அவர் யாருடன் தம்மை இணைத்து கொள்கிறாரோ, அங்கே விமர்சனங்கள் வாங்கி கொள்வார், யாரென்றே தெரியாதவர்கள் அவரை விமர்சனம் செய்ய நான் பார்த்து கொண்டிருக்க முடியாது!"

என்று நீங்கள் சொல்லியுள்ள விமர்சன வரையரைக்கு மேலே சுட்டிக் காட்டிய விமர்சனம் ஏற்புடையதுதானா?


மீண்டும் சொல்கிறேன். எந்த விதத்திலாவது எனது கருத்துக்கள் அந்த முகம் தெரியாத சகோதரியை சங்கடப் படுத்தியிருந்தால் எனது வருத்தத்தை பகிங்கரமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே வேளை வால்பையன் அவர்களும் எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று விமர்சிக்காமல் சரியான சான்றுகளுடன் விமர்சிக்க வேண்டுகிறேன்.

ஆரோக்கியமான விமர்சனமே நல்ல மனிதர்களை உருவாக்குகிறது.

(சுமார் 3 ஆண்டுகள் ஒவ்வொரு சனி இரவும் நடந்த விமர்சனக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு தன்முனைப்பு, போலி கவுரவம் , இன்றி என்னையும் விமர்சனத்துக்கு உட்படுத்தி நானும் விமர்சித்து என்னை எளியவனாக நல்ல மனிதனாகப் பக்குவப் படுத்திய எனது தோழர்களுக்கு நன்றி.அந்த அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது.)


நன்றி வால்பையன்.

வால்பையன் said...

"மற்றவர்கள் கற்புடன் இருக்க வேண்டியதில்லை என்றவர், தன் மனைவி கற்புடயவள் என்று நம்புவது பார்பனன் இது பத்தினி வீடு என்று போர்டு வைத்த மாதிரி தானே!"
(இந்த உதாரணகூட பெரியார் சொன்னதுதான் வால்பையன்)//

அது பெரியார் சொன்னதுன்னு எனக்கு தெரியும் தோழரே! தெரிந்தே தான் பயன்படுத்தினேன்! பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையின் மீது கூட பல கருத்து வேறுபாடுகள் உண்டு, அவை யாவும் பொதுவான கடவுளுக்கு எதிரான கருத்துகளாக இல்லாமல் முழுக்க முழுக்க இந்து மதத்தை மட்டும் சாடுவது எனக்கு உடன்பாடில்லை!

ஆனாலும் பெண்ணுரிமைக்கு தமிழகம் என்றும் பெரியாருக்கு கடமை பட்டிருக்கிறது! உங்களை விட டாக்டர் ஷாலினி இதை மிக அழகாக எழுதி கொண்டிருக்கிறார்!

இன்னோரு விசயம் நான் ப்ளாக் எழுத வந்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறது!, நீங்கள் கடைசியாக சொன்னது என்னை குறிக்காது என நம்புகிறேன்!

வால்பையன் said...

மேலும் நீங்கள் அந்த பின்னூட்டத்தில் சொன்னது போல் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனக்கு உட்பட!

பெரியார் தன் மனைவியை கற்புடயவள் என நம்புவது ஒரு ஆணாதிக்க சிந்தனையே! அது இது பத்தினி வீட்டுக்கே சமமே!

இதை நான் மறுபடி சொல்ல காரணம் ”கற்பு” என்ற ஒன்றே இல்லை என்று நினைப்பவன் நான்!

தமிழ் ஓவியா said...

//பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையின் மீது கூட பல கருத்து வேறுபாடுகள் உண்டு, அவை யாவும் பொதுவான கடவுளுக்கு எதிரான கருத்துகளாக இல்லாமல் முழுக்க முழுக்க இந்து மதத்தை மட்டும் சாடுவது எனக்கு உடன்பாடில்லை!//

வால் பையன் பெரியார் இந்து மதத்தை மட்டும் சாடவில்லை. அனைத்து மதங்களும் ஒழிய வேண்டும் என்பதுதான் பெரியார் கொள்கை. இந்து மதத்தை அதிகமாக சாடுவது கூட மற்ரமதங்களில் இல்லாத கொடுமை அதிகமாக இந்து மதத்தில் இருப்பதுதான் காரணம். இந்து மதத் தலைவன் சங்கராச்சாரிகள் சொல்லியுள்ளதை இதே பதிவில் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளேன். இருப்பினும் மீண்டும் உங்கள் பார்வைக்காக மீண்டும் சம்ர்பிக்கிறேன்

"ஹிந்து மதத்தை விமர்சிப்பது ஏன்?தெரியுமா? அந்த மதத்தில் கடைப்பிடிக்கும் நெறிமுறைகள் மனித இனத்திற்கே கேடாக இருப்பதால்தான். ஆதாரம் வேண்டுமா? .

இதோ ஆதாரம்


"தாழ்த்தப்படடோரைத் தொடாதே எட்டி நில் என்று சொல்லுகின்றோம். அதற்குக் காரணம் பிறவியின் அடிப்படையில் அவனுக்குள்ள தூய்மையற்ற நிலையேயாகும். உலகத்லேயே உயர்ந்த சோப்பினால் அவனைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவநாகரிக ஆடை அணிமணிகளால் அலங்கரித்தாலும், பரம்பரைப் பரம்பரையாக வந்த அவர்களுடைய தீட்டை அழுக்கைப் போக்கவே முடியாது

------------------------(நூல்:- Hindu Ideal பக்கம் 230)

இப்படிச் சொன்னவர் சிருங்கேரி சங்கராச்சாரியார் இவருக்கு நான் ஒன்றும் சளைத்தவனல்ல என்ற வகையில் நாசிக் கூட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் பேசியது இதோ.
“சதுர்வர்ண அமைப்பு (பிறவி பேதம்) இந்து மதத்தின் அடித்தளமாகும். இந்து சமுதாய அமைப்பு (பிறவி பேதம்) மறைந்துவிட்டால் இந்து மரமே அழிந்து விடும்”.

இவ்வாறு தாழ்த்தப்பட்டோரை இழிவுபடுத்தும்
இந்து மதத்தை, இந்து மதத்தை போதிப்பவர்களை விமர்சிக்காமல், சாடாமல் இருக்க முடியாது வால்பையன்.

இது போல் எத்தனை எத்தனை கொடுமைகள் இந்து மதத்தில் . அதே போல் மற்ற மதங்களையும் பெரியார் விமர்சித்துள்ளார்.

//பெரியார் தன் மனைவியை கற்புடயவள் என நம்புவது ஒரு ஆணாதிக்க சிந்தனையே!//

கற்பு பற்றி அவரின் சிந்தனை தெளிவானது. இது பற்றி ஏற்கனவே விலாவாரியாக விளக்கப்பட்டு விட்டது.

பெரியார் அப்படி எதுவும் நீங்கள் நினைப்பது போல் சொன்னதில்லை.

இது குறித்த பெரியாரின் விளக்கம் உங்களுக்கு உண்மையை உணர்த்தும் என்பதால் அதை அப்படியே தருகிறேன்.

"வெற்றி பெற்று விட்டேன்

தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் இராமசாமிக் கழுதைக்குச் செருப்படி என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழவில்லை. இங்கும் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்றும், இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதி இருந்தது.

இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால், இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே, இராமசாமி மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரி மழைவரச் செய்து பயன் பெற்று இருந்தால், இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்பட வேண்டும்.
ஆகவே, அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், இவற்றிலிருந்து ஓர் அளவுக்கு நான் வெற்றி பெற்று விட்டேன் என்பதை மாத்திரம் உணருகிறேன்.

--------------- தந்தைபெரியார், "குடிஅரசு", 11.10.1931"

தமிழ் ஓவியா said...

//பெரியார் தன் மனைவியை கற்புடயவள் என நம்புவது ஒரு ஆணாதிக்க சிந்தனையே! அது இது பத்தினி வீட்டுக்கே சமமே!

இதை நான் மறுபடி சொல்ல காரணம் ”கற்பு” என்ற ஒன்றே இல்லை என்று நினைப்பவன் நான்!//

கற்பு பற்றி பெரியார் 1930 களில் சொன்ன கருத்தை உங்கள் பார்வைக்கு...

"சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும்,சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததேயாகும்.ஜீவசுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த்தைகளும் சிறிதும் பொருத்தமற்றதேயாகும்"

---"குடிஅரசு"26-10-1930

இப்போது கற்பு பற்றி நாம் எப்படி வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம். 1930 களில் இது பற்றி பெரியார் பேசியுள்ளது மிகப் பெரிய புரட்சியே.

இன்று நாம் மிகப் பெரிய புரட்சிக்கருத்துக்கள் என்று நினைப்பதை பெரியார் அவர் வாழ்ந்த காலத்தில் சாதாரணமாகச் சொல்லி வெற்றியும் பெற்றுள்ளார்.


-----------தொடர்வோம்

வால்பையன் said...

//இப்போது கற்பு பற்றி நாம் எப்படி வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம். 1930 களில் இது பற்றி பெரியார் பேசியுள்ளது மிகப் பெரிய புரட்சியே.

இன்று நாம் மிகப் பெரிய புரட்சிக்கருத்துக்கள் என்று நினைப்பதை பெரியார் அவர் வாழ்ந்த காலத்தில் சாதாரணமாகச் சொல்லி வெற்றியும் பெற்றுள்ளார்.//


பிற்போக்கான இந்தியாவில் அது பெரிய விசயம் தான்!
ஆதிக்க சாதி ஆண்களுக்கு என்றைக்குமே விளிம்புநிலை மனிதர்களின் கற்பை பற்றி கவலையில்லை! ஆனால் தன் பொண்டாட்டி ஒழுக்கமா இருக்கனும்னு நினைப்பானுங்க!,

எனக்கு சாதி புத்தியில் நம்பிக்கை இல்லை, உங்களுக்கு இருக்கா!?

நம்பிக்கை இல்லைனா ஏன் பாப்பானுங்களை குடாஞ்சிகிட்டே இருக்கனும்!?

வால்பையன் said...

//தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் இராமசாமிக் கழுதைக்குச் செருப்படி என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழவில்லை. இங்கும் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்றும், இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதி இருந்தது.

இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால், இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே, இராமசாமி மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரி மழைவரச் செய்து பயன் பெற்று இருந்தால், இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்பட வேண்டும்.
ஆகவே, அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், இவற்றிலிருந்து ஓர் அளவுக்கு நான் வெற்றி பெற்று விட்டேன் என்பதை மாத்திரம் உணருகிறேன்.//


சத்தியமா புரியல!
நாகம்மாள் பத்தினின்னு எழுதியிருந்தாள் (ஒருவேளை) எனக்கு மகிழ்ச்சி அடைந்திருந்தால் மட்டுமே, இதுக்காக நான் விசனப்பட வேண்டும் என சொல்கிறாரா!?

ஒரே வார்த்தையில் உன் மனைவி எப்படியோ அதே போல் தான் என் மனைவியும் முடிச்சிட்டு போலாமே! எதுக்கு இத்தனை முடக்கு வாதம்!

தமிழ் ஓவியா said...

//ஒரே வார்த்தையில் உன் மனைவி எப்படியோ அதே போல் தான் என் மனைவியும் முடிச்சிட்டு போலாமே! எதுக்கு இத்தனை முடக்கு வாதம்!//

இதுக்குப் பெயர் தான் முடக்கு வாதம்.

அப்படியெல்லாம் பதில் சொல்லமுடியாது வால்பையன்.

ஒருவர் மனைவி எப்படிப்பட்டவர் என்பதை அடுத்தவர் முழுமையாக அறிந்து கொள்ள முடியுமா?
வால் பையன் .

தமிழ் ஓவியா said...

//எனக்கு சாதி புத்தியில் நம்பிக்கை இல்லை, உங்களுக்கு இருக்கா!?

நம்பிக்கை இல்லைனா ஏன் பாப்பானுங்களை குடாஞ்சிகிட்டே இருக்கனும்!?//

பார்ப்பான் என்பது ஒரு இனம். அய்யர் அய்யங்கார் சர்மா என்பது தான் ஜாதி.

"வருண ஜாதி உருவாக்கம்" என்ற நூல் கிடைத்தால் வாங்கிப் படிக்கவும்.


ஓஓஒ நீங்கள்தான் சுய சிந்தனையாளராயிற்றே. சிந்தித்து தெரிந்து கொள்ளுங்கள். பார்ப்பனர்களை எதிர்ப்பது ஏன்? என்பது பற்றி பல பதிவுகள் தமிழ் ஓவியா வலைப் பூவில் உள்ளது.
படித்தறிந்து கொள்ளுங்கள்.

நீயும் இந்து நானும் இந்து என்று சொல்லும் பார்ப்பான் முதுகில் மட்டும் பூணூல் ஏன்?
நானும் மனிதன் நீங்களும் மனிதன். என் முதுகில் மட்டும் பூணூல் எதற்கு என்று எத்தனை பார்ப்பனர்கள் பூணூலை அறுத்தியத் தயாராயிருக்கிறார்கள்?

பூணூலை அறுத்தெறிந்த பார்ப்பனர்கள் பட்டியலை தமிழ் ஓவியா வலைப் பூவில் வெளியிடுகிறேன்.

தமிழ் ஓவியா வலைப் பூவில் மட்டு மல்ல உலகம் முழுதும் அறிய என்னன்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து அவர்களைப் பெருமைப் படுத்த தயாராயிருக்கிறேன்.
பூணூலை அறுத்தெறியும் பார்ப்பனர்கள் யார் யார் என்ற விபரத்தை கேட்டுச் சொல்லுங்கள் வால் பையன்.

அது வரை பார்ப்பனர்களின் அட்டுழியங்களை, அயோக்கியத்தனங்களை சொல்லிக் கொண்டே இருப்பேன். உங்கள் பாணியில் சொல்வதனால் பாப்பானுங்களை குடாஞ்சிகிட்டே இருப்பேன்.

வால்பையன் said...

//ஒருவர் மனைவி எப்படிப்பட்டவர் என்பதை அடுத்தவர் முழுமையாக அறிந்து கொள்ள முடியுமா?//

கஷ்டம் தான்!

பத்தினிங்க பேரு ரெண்டு சொல்லுன்னு சொன்னதுக்கு ஒருத்தன், சீதா ஒண்ணு, கண்ணகி ஒன்னுன்னு சொன்னானான்!
அப்போ உன் பொண்ணாட்டின்னு கேட்டதுக்கு திருதிருன்னு முழிச்சானாம்!

அந்த கதை ஞாபகம் வருது!

அடுத்தவர் மனைவி எப்படிபட்டவர்ன்னு எனக்கு தெரியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம் தெரியுமா!?
என் மனைவியை தவிர மற்றவர்கள் ஒழுக்கத்தை நான் நம்புவதில்லைன்னு அர்த்தம்!

அடுத்த பின்னூட்டத்துக்கு,

பாப்பானுங்களை நீங்கள் தாராளமாக குடாயலாம்! தெளிவான பதிலாகவே எனக்கு அது படுகிறது!

தமிழ் ஓவியா said...

//அடுத்தவர் மனைவி எப்படிபட்டவர்ன்னு எனக்கு தெரியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம் தெரியுமா!?
என் மனைவியை தவிர மற்றவர்கள் ஒழுக்கத்தை நான் நம்புவதில்லைன்னு அர்த்தம்!//

ஏங்க இது மாதிரி எழுதுவதற்கு கூசவில்லையா? சகட்டுமேனிக்கு அடுத்தவர்களை அதுவும் அவர்களின் மனைவியர்களை சங்கடப்படுத்துவது என்ன நகரிகமோ?

நான் ஊரில் உலகில் உள்ளவர்களையெல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சிப்பேன். என்னைச் சேர்ந்தவர்களை யாரும் விமர்சிக்ககூடாது என்பது எந்த வகையில் நியாயமானது?

தமிழ் ஓவியா said...

//பாப்பானுங்களை நீங்கள் தாராளமாக குடாயலாம்! தெளிவான பதிலாகவே எனக்கு அது படுகிறது!//

மிக்க நன்றி வால்பையன்.

Anonymous said...

//அடுத்த பின்னூட்டத்துக்கு,

பாப்பானுங்களை நீங்கள் தாராளமாக குடாயலாம்! தெளிவான பதிலாகவே எனக்கு அது படுகிறது!//

சபாஷ் வால். ஒரு நல்ல விவாதக்காரனுக்கு இது ஒரு அடையாளம்.

வால்பையன் said...

//ஏங்க இது மாதிரி எழுதுவதற்கு கூசவில்லையா? சகட்டுமேனிக்கு அடுத்தவர்களை அதுவும் அவர்களின் மனைவியர்களை சங்கடப்படுத்துவது என்ன நகரிகமோ?//


உன் மனைவி மாதிரி தான் என் மனைவியும்னு சொன்னது நாகரிகமா!?

உன் மனைவி எப்படின்னு எனக்கு எப்படி தெரியும்னு சொன்னது நாகரிகமா!?


ரொம்ப பல்டி போட்டா சர்க்கஸ்ல சேர்த்துருவாங்க!

தமிழ் ஓவியா said...

வால் பையன்

என் வாழ்நாளில் பல்டி அடிப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
எதயும் எப்போதும் நேருக்கு நேர் சந்திக்கும் நெஞ்சுரம் கொஞ்சம் அதிகமாகவே எனக்கு இருக்கிறது.

வால்பையன் said...

//என் வாழ்நாளில் பல்டி அடிப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.//

அந்த வேலையை தலைவர் மட்டும் தான் செய்வாரோ!?

பரிசுத்த ஆவியில் இட்லி வேகவைப்பவர்கள் சங்கம். said...

//
நெஞ்சுரம் கொஞ்சம் அதிகமாகவே எனக்கு இருக்கிறது.
//

உரம் என்பது மனித மிருகக்கழிவால் ஆனது. அதை நெஞ்சில் வைத்திருக்கும் நீங்கள் ஏன் சரசுவதி நாக்கில் இருப்பதாகச் சொல்பவர்களைப்பார்த்து எங்கே கக்கூஸ் போவாள் என்று கேட்கிறீர்கள் ?

தமிழ் ஓவியா said...

//அந்த வேலையை தலைவர் மட்டும் தான் செய்வாரோ!?//

தலைவரும் தொண்டர்களும் சரியாகத்தான் இருக்கிறார்கள். உங்களைப் போல் இராட்டிணம் சுற்றுபவர்களுக்குத்தான் அப்படித் தெரியும். சுற்றுவதை நிறுத்திவிட்டுப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தெரியும்.

வால்பையன் said...

//தலைவரும் தொண்டர்களும் சரியாகத்தான் இருக்கிறார்கள். உங்களைப் போல் இராட்டிணம் சுற்றுபவர்களுக்குத்தான் அப்படித் தெரியும். சுற்றுவதை நிறுத்திவிட்டுப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தெரியும்.//

ராட்டினம் சுத்துனா தப்பில்ல, உங்களை மாதிரி கண்ணுல துணிய கட்டிட்டு தான் சுத்தக்கூடாது! கொஞ்சம் நாட்டுல என்ன நடக்குதுன்னு கண்ணை துறந்து பாருங்க!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது