11/27/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 27.11.2009

பார்ப்பன வெறுப்பு
உயர் சாதீயம் என்னும் ஒருவார்த்தை இருக்கும்போது ஏனய்யா பார்ப்பனீயம் என எழுதுகிறாய் என்றால் நீட்டி முழக்கிக் கொண்டு எழுதுவார்கள்.அதற்கு டிஸ்கியெல்லாம் போடுவார்கள். உத்தபுரத்தில் பிள்ளைமார்கள் அட்டூழியமா, அவர்கள் பார்ப்பனீயத்துக்கு அடிமை. கண்டதேவி தேரில் தகராறா, தேவர்கள் ஆட்டமா, அவர்களும் பார்ப்பனீயத்துக்குஅடிமை. திண்ணீயத்தில் தலித்துகளை மலம் தின்ன வைத்தார்களா, அவ்வாறு செய்த கள்ளர் சாதியினரும் பார்ப்பனீயத்தைத்தான் கடை பிடிக்கிறார்களாம். கீழ் வெண்மணியில் கோபாலகிருஷ்ண நாயுடு செய்த கொலையை கண்டிக்காத பலீஜா நாயுடுவும் பார்ப்பனீயம்தான் செய்வார் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவ்வப்போது பார்ப்பனர்களை கூறவில்லை என்று ஒரு டிஸ்கி. யாரை அய்யா ஏமாற்றுகிறீர்? உயர் சாதீயம் என உங்களைச் சொல்லவிடாது தடுப்பது எது? இன்னொரு மகானுபாவர் இருக்கிறார், இசுலாமியர் செய்யும் சாதிவெறி ஆட்டமும் பார்ப்பனீயமாம்.

உயர் சாதீயம் என கூறாது பார்ப்பனீயம் என தில்லாலங்கடி செய்யும் இவர்களை யார் திருத்துவது? ஆகவே அம்மாதிரி பதிவர்களையும் அவர்தம் இம்மாதிரி பார்ப்பன வெறுப்பு விஷங்களை உள்ளடக்கிய பதிவுகளையும் கொள்ளைநோய் போலக் கருதி விலக்குவதே சிறப்பாக இருக்கும்.

ஹுசைன் என்னும் சில்லுண்டிப் பயல்
ஒரே ஃபீலிங்ஸ்தான் போங்கள். கலைவாணியின் படத்தை நிர்வாணமாக வரைந்த இந்த் சில்லுண்டிப் பயலை இந்தியாவில் விடமறுக்கிறார்களாம். ஏன் வெளிநாட்டில் சௌக்கியமாகத்தானே இருக்கிறான் அவன்? ரஷ்டியைப் போல உயிருக்கு பயந்து இல்லையே. ரஷ்டிக்குஎதிராக வந்த ஃபத்வாவுக்கு இந்த ஹுசைனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்றறிய ஆவலாக இருக்கிறேன். அவனுக்காக ஒப்பாரி வைத்து எழுதிய பதிவரும் நான் ரஷ்டி பற்றி எழுதியதற்கு கள்ள மௌனம் சாதிக்கிறார்.

அந்த பங்களாதேஷ் பெண்ணுக்கு வந்த கொலை மிரட்டல் வெறும் தவறாம், ஆனால் மகாத்மா ஹுசைனுக்கு எதிராக வந்தது மட்டும் குற்றமாம். அதை எவ்வாறு கண்டறிந்தார் அவர் என்பதும் பெரிய புதிர்தான். ஒருவேளை கடவுள் அவருக்கு தனியாகத் தோற்றமளித்து கூறியிருப்பாராக இருக்கும்.

ஹிட்லரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அவனை நிர்வாணமாக வரைந்தவன் கலைவாணியையும் அவ்வாறே வரைந்திருப்பதை என்னவென்று பொருள் கொள்வது? இவனுக்கெல்லாம் கராத்தே ஹுசைனிதான் சரி. நிர்வாணமான சரஸ்வதி படத்துக்கு இரண்டே வீச்சுகளில் அழகான புடவை போட்டு மரியாதைப் படுத்திய அவர் ஹுசைனின் நிர்வாணப் படத்தை வரைந்ததுதான் அவனுக்கு சரியான தண்டனை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

42 comments:

மணிகண்டன் said...

டோண்டு - ஹுசைன் மேட்டர்ல நீங்க செய்யும் அலப்பறை தான் ஓவர். ஹிட்லரை அவமானப்படுத்த நிர்வாணமா வரைஞ்சா, நிர்வாணமா வரையும் அத்தனை ஓவியங்களும் அவமானப்படுத்ததான்னு எதை வச்சி சொல்றீங்க ? இது என்ன லாஜிக் ?

அடுத்தது - ஹிட்லரை அவமானப்படுத்த நிர்வாணமா வரைஞ்சேன்னு சொன்னது ஹுசைன் தான் :)- அதை நம்பும் நீங்க சரஸ்வதி சம்பந்தமா அவர் சொல்லும் விளக்கத்தை மட்டும் ஏன் மறுக்கறீங்க ?

உங்களின் அபிமானமான எழுத்தாளர் கூட தான் இதைப்பத்தி எழுதி இருக்கார். அதை பத்திக் கேட்டா "அவர் கருத்துடம் மாறுபடுகிறேன்னு" ஒரு வரில தான பதில் சொல்றீங்க. அவர் எழுதின விலாவாரியான விளக்கங்களுக்கு எதுவும் மாற்றுக்கருத்து சொல்லலியே :)- ஏன் ? அட்லீஸ்ட் மாதவராஜ்
அவரது அபிமான communist party செய்தது தவறுன்னு சொல்லி இருக்கார். நீங்க ?

Sabarinathan Arthanari said...

ஆஹா பதிவு சரியான காரங்க. இன்றைய சாதியம் பல பரிணாமங்களை உள்ளடக்கியது. அப்படியே இதையும் பாருங்க.

இன்றைய சாதியம் மத அடிப்படையிலானதா? - 2

பெயர் டோண்டுவால் மாற்றப்பட்டது said...

\உயர் சாதீயம் என்னும் ஒருவார்த்தை இருக்கும்போது ஏனய்யா பார்ப்பனீயம் என எழுதுகிறாய்//

டோண்டு சார், அப்படி சொல்லிவிட்டா சட்டக் கல்லூரில மிருகம் மாதிரி தாக்கினாங்களே, அதே மாதிரி தன்னையும் போட்டு விளாசீருவாங்கன்ற பயத்துலதான் பார்ப்பனீயம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். விட்டால், முசுலீம்களில் ஒரு பிரிவை இடுகாட்டில் புதைக்க விடாமல் கொடுமைப் படுத்திய இன்னொரு பிரிவினரையும் பார்ப்பனீய முலாம் பூசி விடுவார்கள். தினமும் பார்ப்பனனை வம்புக்கிழுக்காவிட்டால் இவர்களுக்குப் பொழுது புலரவே புலராது போல.

முனைவர்

dondu(#11168674346665545885) said...

@மணிகண்டன்
ரஷ்டி, தஸ்லீமா விஷயங்களை பற்றி நீங்கள் என்ன கூறுவீர்கள்? ஹுசைன் என்ன கூறுகிறார்?

எல்லாம் தனக்கென வந்தால்தான் தெரிகிறது. மாற்று மதத்தினரின் கடவுள்களை இம்மாதிரி அசிங்கமாகப் படம் வரைய இவர் யார். கோவில் சிற்பங்களை இங்கு குறிப்பிடுவது அவுட் ஆஃப் காண்டக்ஸ்டாகத்தான் எனக்கு படுகிறது.

ஹிந்து மதத்தினர் தன் மதத்தவர் போல இல்லை, தன்னை ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்பதன் பொருளே, கிடச்சாங்கடா இளிச்சவாய்க்காரங்க என அவர் நினைத்ததாகத்தான் எனக்கு படுகிறது.

@சபரிநாதன்
உங்கள் பதிவைப் பார்த்தேன், நன்றாக இருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

RajaShekar said...

Fantastic article..first time one see the real insight on cast murders/atrocities in Tamil Nadu instead of being pseudo secular or targeting against the society which Hitler did in Germany.
There are many more caste fights happening in Tamil Nadu in high scale. Like MBC(Ramadoss caste) Vs SC(Thirumavalavan) which is well known every one in North T.N.

I completely agree with u on Hussein and his sadistic approach on Hindu goddess painting. Some say Nudity is in our culture and its our proud too. Bit the same people don't want their family members to do that in real life.

Comments by Manikandan are ultimate comedy.

Unknown said...

sir piramanarkalitam vinavu mathiriyana aalugaluku ennathan venum? kuzhapuranga sir ellarum.
nan paamaran enaku puriura mathiri sollugalen.avanga korikai ennanu.

sundar said...

All these casteist parties like DK/DMK/PMK/VCK are only basking in fanning communal passions.Just to show they are very progressive,they have to invoke Brahmins as a community for all the ills.For all the reservation in TN,still communal riots between BCs and Sc/St take place only here which only shows whatever measure they have taken has only backfired

வஜ்ரா said...

மணிகண்டன்,
ஹுசைன் எடுத்த திரைப்படத்தில் குரானின் வரிகள் பயன்படுத்தியது தவறு என்று முசுலீம் உலேமா சத்தம் போட்டதும், படத்தில் உள்ள அந்த வரிகளை நீக்கியவர் தான் இந்த ஹுசைன்.


ஏன் அதற்கு ஏதாவது கலை விளக்கம் கொடுத்துவிட்டு பெப்பே காட்டவேண்டியது தானே ?

அப்படி செய்தால் அவன் தலைக்கு விலைவைத்துவிடுவார்கள் என்று பயந்துதானே குரான் வரிகளை மீனாக்சி படத்திலுருந்து நீக்கினார் ?

இப்படிப்பட்டவரெல்லாம் எப்பேற்பட்ட கலை விளக்கம் கொடுத்து சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தாலும் அதை ஏற்க முடியாது.
சரஸ்வதியை நிர்வாணமாக வரையும் தகுதி ஹுசைனுக்கு இல்லை என்பதே என் கருத்து.

RV said...

டோண்டு சார்,

ஹுசெனைப் பற்றி நீங்கள் எழுதி இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சுருக்கமாக எழுத முடியாததால் பதிவாகவே எழுதிவிட்டேன். - http://koottanchoru.wordpress.com/2009/11/28/எம்-எஃப்-ஹுசேனின்-ஓவியங்/ முடிந்தால் பாருங்கள்!

dondu(#11168674346665545885) said...

@ஆர்வி
அது உங்கள் கருத்து, நான் அதனுடன் ஒத்துப் போகவில்லை என்று மட்டும்தான் கூறமுடியும்.

வான்கோ சாதாரணமாக முகம்மதுவின் படத்தை வரைந்ததற்கே துலுக்கன்கள் ஆட்டம் போட்டு அவரைக் கொன்றார்கள். உருவப்படம் போடக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கும் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்ற மதங்களின் கடவுளை வரைவது, அதுவும் நிர்வாணமாக வரைவது தேவையில்லாத கொழுப்புத்தானே. அதே ஹுசைனே ரஷ்டிக்கு எதிரான ஃபத்வாவுக்கு விரோதமாக ஒன்றுமே பேசவில்லை என்றுதான் உறுதியாக நம்புகிறேன்.

ஹிட்லர் படத்தை நிர்வாணமாக வரைந்தது அவனை அவமானப்படுத்தவே என்று கூறினான் ஹுசைன். காந்தியின் படத்தைத் தலையில்லாமல் வரைந்தான் எனவும் படித்தேன். இவனெல்லாம் இந்தியாவில் இருக்க வேண்டும் என யார் அழுதார்கள்?

ஒரு தரப்பினர் மட்டும் சகிப்புத் தன்மையுடன் இருந்தால் மிளக்கய் அரைத்து விடுவார்கள். ஆகவே சீற வேண்டிய இடங்களில் சீறத்தான் வேண்டும். அதைத்தான் செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ellaavartilum ippadi oru thanippatta unarchikuviyalaa? ethoo ungkal viittirukul wulainthu ungkalai husaain adiththathippola

Anonymous said...

There are many dimensions to Husseins.

You can read the tamil hindu and especially the comments for the article hindu thalibhanism, you will understand why the portraits of husseins have only one motto- degrading hindu myths.

1. nirvana may not be a criminal thing in drawin deities.

But why Parvathy should indulge in sex with Nandhi (to say she has extra marital affairs, ). That does not have any Purana evidence and comes from only evil thoughts

2. why shd sita masturbate on hanumans' tail.

what these portraits has- freedom of expression? or humiliating Hindu tradition? or artistic skills?

sundar

பெசொவி said...

Sir,
Please accept my offer here http://ulagamahauthamar.blogspot.com/

அ சொ said...

Sir,you hav condemned abt hussain for his paintings...but i dun see any article from u regarding kancipuram perumal temple issue, why not u give ur view abt this?? the guy who is being charged with sexual scandal is also a brahmin...is tht the reason stoppin you from writting abt this???... i dun see any of the hindu parties or organisation show any reaction to this....i want to know ur opinion abt this too..Tks - Arun

Anonymous said...

Not only dondu, all hindutava organisations and blogs like tamilhindu.com are silent on this. The guy Thevanaathan lured the women telling them having sex inside karuvrai will give them long life.

hayyram said...

/////ஒரு தரப்பினர் மட்டும் சகிப்புத் தன்மையுடன் இருந்தால் மிளக்கய் அரைத்து விடுவார்கள். ஆகவே சீற வேண்டிய இடங்களில் சீறத்தான் வேண்டும். அதைத்தான் செய்கிறேன்.//// நீங்கள் சரியாகத்தான் சொல்கிறீர்கள். மேலும் முஸ்லீம்கள் எது செஞ்சாலும் சரிங்கர மனோபாவத்தில் அரசியல் வாதிகள் இருக்கிறார்கள். அதை மக்களிடமும் பரப்புகிறார்கள்.

dondu(#11168674346665545885) said...

அர்ச்சகர் தேவநாதன் செய்தது அயோக்கியத்தனம். தண்டனையிலிருந்து அவர் தப்பக்கூடாது, தப்பவும் இயலாது. இதில் என்ன பிரச்சினை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அ சொ said...

Sir,You have written this only as a reply to my comment...why not you write your views of abt it?? jus a 4 line reply.. but jus think how your reaction would be if same happend some where else or done by some other caste(im sorry to use this word).. to point out the mistake of others one shld b a neutral person...

dondu(#11168674346665545885) said...

தேவநாதன் செய்தத் அசிங்கமானக் காரியம். அதே சமயம் அவனுடன் உல்லாசமாக இருந்த பெண்களும் குற்றமற்றவர்கள் அல்ல. யாரையும் அவன் கட்டாயப்படுத்தவில்லை. செல்பேசியில் பதித்தது முட்டாள்தனத்தின் உச்சக் கட்டம். கடவுளே அவன் புத்தியில் அவ்வாறு நடந்து கொள்ள செய்திருக்கிறார் என்று கூட நான் கூறுவேன்.

வாட்டர்கேட் விவகாரத்தில் நிக்சன் தனது டேப்புகளிலாயே மாட்டிக் கொண்டது போலத்தான்.

இதில் வேறு என்ன எழுத வேண்டும் என நினைக்கிறீர்கள்.

இதே போல கத்தோலிக்க பாதிரிகள் சிறுவர்களை ஓரினப்புணர்ச்சி செய்த விஷயங்களையும் நான் தனிப்பதிவாக போட்டதாக நினைவில்லை.

பொதுவாகவே இம்மாதிரி செக்ஸ் லீலை விஷயங்கள் எனக்கு அலர்ஜி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அ சொ said...

Sir,Im not mentionin abt the sexual activities which tht guy has did...but it has taken place in a temple.. you are pointin out hussain tht he drew god's pictures wrongly, whereas you are responding to my ques in diff way than to my question. If a hindu priest does somethin in temple in front of god statue, why u didnt even write a small 2 line note in ur blog as post?? if i hav not asked this in comment, you wudnt hav ever spoke abt it, is tht not...anyway thanks for showing your true face - Arun

dondu(#11168674346665545885) said...

@அ.சொ.
பால்ரீதியாக நடந்த விஷயங்கள் அவற்றைப் பொருத்தவரை குற்றங்களே அல்ல. ஏனெனில் சம்பந்தப்பட்ட எல்லோருமே வயதுக்கு வந்த பெரியவர்கள். கோவில் சன்னிதியில் செய்ததுதான் மகத்தான குற்றம். அதற்காகத்தான் தேவநாதம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்கிறேன்.

இது இப்படி இருக்க நீங்கள் என்னை இக்கேள்வி கேட்கும் பிரமேயமே இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

குறைந்த பட்சம், அந்தத் தேவநாதன் தான் செய்தது தவறு, குற்றம் என்று ஒத்துக்கொண்டுள்ளான்.
அதைக்கூடச் செய்யவில்லை ஹுசைன்.

Anonymous said...

Hi Dondu sir,

Why you always against Islam and muslim?

You know onething no body will control or suppress Islam.

Thanks
Taj

வால்பையன் said...

உயர்சாதி என்ற ஒன்றை நாங்கள் ஏற்காத போது எப்படி அதை குறிப்பிட முடியும்!

பார்பனியர்களுக்கும், மற்ற சாதி வெறியர்களுக்கும் ஒரே வித்தியாசம் பூனூல் தானே! மற்ற படி தாங்கள் உயர்சாதியை சேர்ந்தவர்கள் என அவர்களே நினைத்து கொள்வதற்காக நாங்களும் அப்படியே குறிப்பிட வேண்டுமா என்ன அந்த கம்முனாட்டிகளை!

வால்பையன் said...

சிவசேனா குண்டர்களை நாடு கடத்தி விட்டு ஹுசைனுக்கு மறுப்பு சொல்லலாமே!

அப்புறம் மோடி!?

வால்பையன் said...

//சரஸ்வதியை நிர்வாணமாக வரையும் தகுதி ஹுசைனுக்கு இல்லை என்பதே என் கருத்து.//

அப்படியே வேறு யாருக்கு அந்த தகுதி இருக்குன்னு சொன்னா அவுங்களை வரைய சொல்லலாம்!

வால்பையன் said...

//வான்கோ சாதாரணமாக முகம்மதுவின் படத்தை வரைந்ததற்கே ”துலுக்கன்கள்” ஆட்டம் போட்டு அவரைக் கொன்றார்கள். //

இதுக்கு பேர் தான் பார்பனீயம்னு சொல்றது!

வால்பையன் said...

// dondu(#11168674346665545885) said...

அர்ச்சகர் தேவநாதன் செய்தது அயோக்கியத்தனம். தண்டனையிலிருந்து அவர் தப்பக்கூடாது, தப்பவும் இயலாது. இதில் என்ன பிரச்சினை?//

வேதத்தில் பார்பனீயர்களுக்கு அதிகபட்ச தண்டனை என்பதால், பூனூல் போட்டு தன்னை ஒரு பார்ப்பான் என்று பறைசாற்றி கொண்ட அந்த புறம்போக்கு தனக்கு கோர்ட்டு தரும் தண்டனை பத்தாது, வேதத்தின் படி அதைவிட நாற்பது மடங்கு வேண்டும் என்று சொல்லுமா!?

வால்பையன் said...

//கடவுளே அவன் புத்தியில் அவ்வாறு நடந்து கொள்ள செய்திருக்கிறார் என்று கூட நான் கூறுவேன்.//

வெளிநாட்டில் நீலப்படம் எடுப்பவர்களுக்கும் அதே கடவுள் தானே, அவர்களை மட்டும் பொது சேவைக்கு படம் எடுக்க சொல்கிறாரோ!?

வால்பையன் said...

//கோவில் சன்னிதியில் செய்ததுதான் மகத்தான குற்றம். //

ஒருவேளை அங்கிருக்கும் சிலைகளை பார்த்து மூடு வந்துருச்சோ என்னவோ!?

dondu(#11168674346665545885) said...

உயர்சாதீயம் என்றால் உயர்சாதிமனப்பான்மையில் தலித்துகளை வன்கொடுமை செய்வதையே உயர் சாதீயம் என்கிறார்கள். அதை பார்ப்பனரல்லாதவர் பார்ப்பனீயம் என சௌகரியமாக பெயரிட்டுக் கொண்டு தத்தம் சாதியினர் செய்யும் வன்கொடுமைகளை மறைக்கின்றனர்.

ஆகவேதான் சொன்னால் உயர்சாதீயம் எனச்சொல்லவும், இல்லாவிட்டால் நாங்கள் உங்களுடன் வீண்விவாதம் செய்ய வரவில்லை, நீங்களே அடித்துக் கொண்டு சாகுங்கள், நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம் என நான் கூறுகிறேன்.

இந்த சோகால்ட் உயர்சாதியினருக்கு தலித்துகள் மேல் வன்கொடுமை செய்யாது நிறுத்துவதில் ஒரு இச்சையும் இல்லை என்பது பெரியாரிடமிருந்து தொடங்கி வரிசையாக இக்கால நாயுடுக்கள், வன்னியர்கள், கவுண்டர்கள் ஆகிய்யொரிடம் காணப்பெறுகிறது. அவர்கள் சொரிதலுக்கு நாங்கள் துணைபோவதாக இல்லை என்பதுதான் எனது போர்ப் பிரகடனம்.

அதில் என்ன குழப்பம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//பார்ப்பனீயம் என சௌகரியமாக பெயரிட்டுக் கொண்டு தத்தம் சாதியினர் செய்யும் வன்கொடுமைகளை மறைக்கின்றனர்.//

அவ்வாறு செய்பவர்களை பஸ் ஸ்டேண்டில் ஐஸ்புரூட் சாப்பிடும் வேலைக்கு பரிந்துரைக்கிறேன்!

நான் நாங்கள் என குறிப்பிடுவது உண்மையான சாதி, மத மறுப்பாளர்களை தான், பச்சோந்திகளை அல்ல!

வால்பையன் said...

//இந்த சோகால்ட் உயர்சாதியினருக்கு தலித்துகள் மேல் வன்கொடுமை செய்யாது நிறுத்துவதில் ஒரு இச்சையும் இல்லை என்பது பெரியாரிடமிருந்து தொடங்கி வரிசையாக இக்கால நாயுடுக்கள், வன்னியர்கள், கவுண்டர்கள் ஆகிய்யொரிடம் காணப்பெறுகிறது.//

தற்கால அரசியலலில் இக்கொடுமை அரசியல்வாதிகளாலேயே தூண்டி விடப்படுகிறது என்பதையும் அறிகிறேன்!


என்னை பொறுத்தவரை சாதி ஒழியனும் அவ்வளவே!

பார்ப்பன சாதி ஒழியனும், உயர்சாதி ஒழியனும், கீழ்சாதி ஒழியனும்னு எந்த ஓர வஞ்சனையும் கிடையாது!

மொத்தமாக சாதி ஒழியனும்!

வஜ்ரா said...

//
அப்படியே வேறு யாருக்கு அந்த தகுதி இருக்குன்னு சொன்னா அவுங்களை வரைய சொல்லலாம்!
//

வால்பையன்,

கோவில்களில் எத்தனையோ நிர்வாண சிலைகள் உள்ளன. இன்றும் சிற்பிகள் நிர்வாண சிலைகளை வடிக்கிறார்கள்.

இவ்வளவு ஏன், பெரியார் பாசறைக்காரர் சிற்பி ராஜன் வடிக்கும் சிலைகளை பல கோவில்களின் கர்பகிரகத்தில் வைக்கிறார்கள். அவர் ஒரு தலித். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் வெள்ளியம்பலத்தானின் வெள்ளிக்காப்பு செய்வதும், ஒரு முஸ்லீம் தான்.

இவர்களை எல்லாம் சுட்டிக்காட்டி யாரும் போராட்டம் நடத்துவதில்லை. அப்படிப்பட்ட மரபு இந்து மரபு அல்ல.

ஆனால் மனதிற்குள் வண்மம் வைத்து செய்யப்படும் படைப்புகள் கலை என்றும் அதை செய்தவன் கலைஞன் என்றும் பாராட்டப்படவேண்டும் என்பது ஒருவித பிரச்சாரம் தான்.

ஹுசைனை யாரும் வலுக்கட்டாயமாக நாடுகடத்தவில்லை. அவர் தன்னைத்தானே நாடுகடத்திக்கொண்டார். 92 வயது பயந்தாங்கொள்ளி.

வால்பையன் said...

அவ்வளவு வல்கராவா இருக்கு அந்த பின்னூட்டம்!?

dondu(#11168674346665545885) said...

வல்கர் என எந்தப் பின்னூட்டத்தை குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லையே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

வந்ததை கவனிக்கலை சார்!

நன்றி என் கருத்தை வெளியிட அளித்த உரிமைக்கு!

மாடல மறையோன் said...

//ஆனால் மனதிற்குள் வண்மம் வைத்து//

Vajra

How did you find that out- he has vanmam in his mind - exactly?

மாடல மறையோன் said...

//தேவநாதன் செய்தத் அசிங்கமானக் காரியம். அதே சமயம் அவனுடன் உல்லாசமாக இருந்த பெண்களும் குற்றமற்றவர்கள் அல்ல. யாரையும் அவன் கட்டாயப்படுத்தவில்லை. செல்பேசியில் பதித்தது முட்டாள்தனத்தின் உச்சக் கட்டம். கடவுளே அவன் புத்தியில் அவ்வாறு நடந்து கொள்ள செய்திருக்கிறார் என்று கூட நான் கூறுவேன். //

அப்பெண்களும் குற்றமற்றவர்களல்ல.
யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
பதிந்த்து முட்டாள்தனததின் உச்சக்கட்டம்.
கடவுளே அவன் செய்ததற்கு காரணியம்.

In these statments, you lay bare your innmermost attachement to brahmins, even if the brahmin is evil.

If the same crime was done by a follower of periyaar or another man belonging to another caste who does not enjoy your respect, you will write a long piece ending:

சீரவேண்டிய இடத்தில் சீரத்தான் வேண்டும்.

Caste attachement should not lead to moral degeneration.

மாடல மறையோன் said...

Let me repeat the gist:

1. யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
2. பதிந்த்து முட்டாள்தனததின் உச்சக்கட்டம்.
3. கடவுளே அவன் செய்ததற்கு காரணியம்.

1. The propenstity of his crime gets lessened because he had consensual sex with adult women.

So, according to you, a man can have consensual sex. If he is a married man, he can have it with anyone anywhere, if it is consensual. He is not morally culpable.

It is free love and free sex theory. Do you accept it? If so, will you apply it to all women, too ? - let them have such sex with consenting adult males whoever they are.

2.So, here, too, the crime becomes a crime only because he has the foolhardiness to be careless in recording the orgies. If he had not done that, and simply enjoyed the sex within the temple, behind the idols, it is ok for you. According to your theroy, all crimes become crimes proper only if they are revealed. திருடரத மத்தவங்க பாத்தாத்தான் திருட்டு. பாக்கலே..எடுத்துப்போட்டுக்கிட்டா திருட்டு இல்லே.

3. This is the most tragic of all your sentences. God is responsible for inculcating in a person the desire to commit the crime. Fine. Religions do not accept it. According to them, the evil in men is not induced; but it is a corruption or perversion of his good self. It is possible to turn him around. This is the basis on which the prisons are called correctional centres. This nice moral point is encapsulated in Thomas Aquinas, the Catholic Philosopher's statement:

"Evil is the defect of Good."

He meant that it is only good that is created by God. And the evil is a defect that can be caused by the worldly life, and that can be erased; and that is in fact the responsibility of the religion.

Ravan kidnaaped Sita. God has induced him.

Devanaathan raped some; fornicated some - all because he was induced to commit the crime by God.

Dondu Raagavan needs to go no farther in his corruption of mind. Ulitmate.

Maybe, God is responsible for his corruption.

I escape now! That God is not my God. That is his God!!

dondu(#11168674346665545885) said...

நான் கூறியது: செல்பேசியில் பதித்தது முட்டாள்தனத்தின் உச்சக் கட்டம். கடவுளே அவன் புத்தியில் அவ்வாறு நடந்து கொள்ள செய்திருக்கிறார் என்று கூட நான் கூறுவேன்.

அதாவது அவன் மாட்டிக் கொள்ள வழி செய்திருக்கிறார் என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன். ஜோ, உம்முடைய தமிழ் புரிதல் பரிதாபகரமானது.

மற்றப்படி நான் சொன்ன மீதியையும் சரியாகப் பார்க்கவும்.

வயதுக்கு வந்த இருவர் தனிப்பட்ட முறையில் கலவி செய்வது சில சமயம் சட்டத்திற்கு புறம்பானதாக இருக்கும், உதாரணம் தடுக்கப்பட்ட உறவு முறைகளுக்குள். மற்றப்படி தேவநாதன் அவனுக்கு இம்மாதிரி உறவில்லாத பெண்ணுடன் தொடர்பு கொண்டால் அது தேவநாதனின் மனைவி அவனிடமிருந்து விவாகரத்து பெற வேண்டுமானால் உதவியாக இருக்கும். சம்பந்தப்பட்ட பெண் கல்யாணமானவளாக இருந்தால் அவள் கணவனுக்கும் அதே ரெமெடி உண்டு, தேவநாதன் மேல் தன் மனைவியின் காதலை தன்னிடமிருந்து திசைதிருப்பியதாக வேண்டுமானால் மேலும் குற்றஞ்சாட்டலாம்.

மற்றப்படி சவுதியில் செய்வது போல கல்லால் அடித்தெல்லாம் கொல்ல முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராமுடு said...

Mr.Dondu Sir,

Dont feel bad, if somebody call Parpan.. My tamil profession (who is not a brahmin) used to tell us like "Parpanan" means "Person who saves others".. In tamil parpu means "Adai Kaththal". So dont feel bad. But as you said, it is hurting to call any irrelevant person and matter with parpaneeyam.. They are just bloddy crap.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது