5/31/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 31.05.2009

அடாடா என்ன கரிசனம், உடலே அரிக்குதய்யா!!!!!!!
உலகளாவிய மொழிபெயர்ப்பாளர் தலை வாசல் ப்ரோஸ்.காம்-ல் வரும் சில வேலை சம்பந்தமான விளம்பரங்களை பார்த்தால் ஒரு பக்கம் இகழ்ச்சி கலந்த சிரிப்பு மறுபக்கம் கண்மண் தெரியாத கோபம் ஆகிய உணர்வுகள் நம்மை ஆக்கிரமிக்கின்றன. உதாரணத்துக்கு இன்று ஒரு விளம்பரத்தின் ஒரு பகுதி உதாரணம் அளிக்க:

We are a large poker school that continuously produces a large quantity of strategy articles, video scripts, presentations and news pieces which need to be translated from German to English. We are therefore looking to extend our translation team.

Due to the educational nature of the content it is not only important to have excellent English but also that you are also able to convey the material in a didactically well presented fashion.

Initial payment is 0,04 USD per word and work is done via an easy to use CMS system
Translation quantity can range from 10,000 to 100,000+ words a months depending on your own capacities. We are looking for long term translators.

மேலே செல்வதற்கு முன்னால் உலக மொழிபெயர்ப்பு உலகின் சில யதார்த்தங்களை கூற வேண்டும். சாதாரணமாக மேலே உள்ள தேவைகளுக்கான மொழிபெயர்ப்பின் விலை ஒரு வார்த்தைக்கு 0.15 டாலர்களுக்கு குறையாது. இந்த ஏஜென்சி வாங்கும் ரேட் சற்றே அதிகமானதாகக் கூட இருக்கலாம். ஆனால் இவர்கள் தர முன்வரும் 4 செண்டுகள் என்பது அடிமாட்டு விலைக்கும் கீழானது. We are looking for long term translators என்று கூறுவது இன்னொரு மோசடி. நீண்டகால கொத்தடிமைகள்தான் அவர்களுக்கு உண்மையில் தேவை!

இவர்களாவது பரவாயில்லை. இன்னும் வேறு சில ஏஜென்சிகள் கணினி உதவியுடன் மொழிபெயர்ப்பு (Computer Aided Translation --> CAT) பாவிக்க வேண்டும் எனக் கூறுவார்கள். அதுவும் ட்ரடோஸ் என்னும் மென்பொருளைத்தான் அதிகம் வற்புறுத்துவார்கள். அதன் விலை இப்போதைக்கு 10000 ரூபாய்களுக்கும் மேல். அதை வாங்கி போட்டு கொள்கிறோம் என வைத்து கொள்ளுங்கள். உடனே அடுத்தபடியாக degrees of matches என்னும் கோட்பாட்டுக்கு வருவார்கள். அதாவது சில வரிகள் சற்றே சிறிய மாற்றங்களுடன் திரும்ப திரும்ப வருமாம். ஒரு தடவை மொழிபெயர்த்த பிறகு அதை மறுபடியும் செய்வது சுலபமாம், ஆகவே அவற்றுக்கான விலையை குறைக்க வேண்டுமாம். அதாவது 10000 ரூபாய்களுக்கு மேல் கொடுத்து ஒரு மென்பொருளை நிறுவுவதற்கு பிரதிபலன் நீங்கள் ஈட்டப் போகும் தொகையில் வெட்டு.

குதிரை கீழே தள்ளியதுடன் குழியையும் பறித்த கதைதான். இதில் எனக்கு எரிச்சல் தருவது, “இது உங்களுக்கு சுலபம் ஆகவே விலையை குறைக்க வேண்டும்” என்னும் வாதம்தான். இப்படித்தான் ஒரு வாடிக்கையாளர் “சார் பல வாக்கியங்கள் ரிபீட் ஆவதால், அவற்றுக்கு ஒரு முறைக்கு மேல் நீங்கள் சார்ஜ் செய்யக் கூடாது” என்றார். அவர் தனது வேலையை எங்கு சொருகிக் கொண்டு செல்லலாம் என்பதை நாகரீகமாக கூறினேன். என்னுடைய நிலைப்பாடு ரொம்ப சிம்பிள். ரிபீட் ஆவது ஒரிஜினலை எழுதியவர் முடிவு செய்வது. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. மேலும் எனக்கு எது சுலபம் என தேவையின்றி வாடிக்கையாளர் தன் மண்டையை உடைத்து கொள்ள வேண்டாம். அவருக்கு வேண்டியது நல்ல மொழிபெயர்ப்பு, அது கிடைக்கிறதா என்பதை பார்த்தால் போதும். என்னை பொருத்தவரை நான் அலாவுதீனின் விளக்கை தேய்த்து பூதத்தை வரவழைத்து மொழிபெயர்ப்பு செய்தாலும் அது வாடிக்கையாளருடன் எவ்வித சம்பந்தமும் இல்லாதது.

காரியத்துக்கு சிறிதும் உதவாத தெனாவெட்டு மனப்பான்மை:
தில்லியில் ஒரு வாடிக்கையாளர் என்னுடன் டிஸ்கஸ் செய்யும்போது “இத்தனை நாட்களாக அவரது செக்ரட்டரி தனக்கு ஜெர்மன் தெரிந்திருந்ததால் இந்த மொழிபெயர்ப்பு வேலைகளை அவளே பார்த்து கொண்டாள், தனக்கு காலணா அதிக செலவில்லை” எனக்கூற, “இப்போதும் அதே செக்ரட்டரியிடம் வேலை வாங்கிக் கொள்வதுதானே” என நான் கேட்க, அந்த நன்றி கெட்ட செக்ரட்டரி அவரது போட்டியாளர் ஆஃபர் செய்த அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு அங்கு சென்று விட்டாள்” என கோபத்துடன் கூறினார். “நீங்கள் அவள் தனது வேலைக்கு சம்பந்தமில்லாத மொழிபெயர்ப்பு வேலைக்கு ஏதும் கூடுதல் அலவன்ஸ் தந்தீர்களா” எனக் கேட்டதற்கு அவள் முழுநேர எம்ப்ளாயி, ஆகவே அதெல்லாம் தருவதற்கில்லை” எனக் கூறினார். அவள் இத்தனை நாள் அவருடன் இருந்ததே ஆச்சரியம் தரும் விஷயமே என நான் சொன்னதை அவர் ரசிக்கவில்லை.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். சில கஞ்சப் பிசுனாறி முதலாளிகளிடம் வேலை செய்யும்போது தன்னிடம் உள்ள அதிக திறமைகள் வெளியில் தெரியாது பார்த்து கொள்ள வேண்டும். அதை செய்ய மேலே குறிப்பிட்ட செக்ரடரி செய்யாததால் கொஞ்ச நாளைக்கு கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஆனால் கடைசியில் வேறு நல்ல வேலைக்கு செல்ல முடிந்தது என பார்த்தால் வேறுவிதமாகவும் எண்ணத் தோன்றுகிறது. குறைந்த பட்சம் இந்த கஞ்சப் பிசுனாறி முதலாளி சற்றும் எதிர்பாராத தருணத்தில் திராட்டில் விட்டு சென்றாள் என்பது நிச்சயமாக இருந்தால் எனது மகிழ்ச்சி இன்னும் அதிகரித்திருக்கும்.

ஒரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம், இன்னொரு பக்கமோ நல்ல வேலை செய்பவர்கள் கிடைக்காத, மற்றும் அவ்வாறு வேலை செய்பவர்களை தன்னிடமே நிறுத்திக் கொள்ள செய்ய வேண்டிய காரியங்கள் என உள்ளன. மேலே குறிப்பிடப்பட்ட, தங்களை திருத்திக் கொள்ளாத முதலாளிகள் பாடு திண்டாட்டம்தான்.

ஐடி வேலையாளர்களுக்கு போறாத காலம்
விப்ரோவில் வேலை செய்பவருடன் பேசிக் கொண்டிருந்தேன். இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் சம்பள உயர்வு கிடையாதாம். அதன் பிறகாவது கிடைக்குமா என்பதும் சொல்வதற்கில்லையாம். வேலை நிலைத்து இருப்பதே நாங்கள் உங்களுக்கு போடும் பிச்சை என்பது போல கம்பெனி நடந்து கொள்கிறதாம். இதே நிலை மற்ற ஐடி கம்பெனிகளிலும் எனக் கேள்விப்பட்டேன். நீண்ட, இருண்ட சுரங்கப் பாதையில் செல்கிறார்கள். அடுத்த முனையின் வெளிச்சம் இன்னும் தெரியவில்லை.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமைங்க ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம் என்பது போல ஐடி காரர்களை பார்த்து வயிறெரிந்தவர்கள் பேசும் கேலி வேறு. பாவம் ஐடி-காரங்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/30/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 82 & 83

பகுதி - 82 (28.05.2009):
இப்பகுதியின் ஒளிபரப்பு ஜெயா டிவியில் நடந்த போது நான் கிழக்கு பதிப்பகத்தின் மீட்டிங்கில் இருந்தேன். ப்ளாக்.இசைதமிழ்.நெட்டில் எபிசோடுகளை வலையேற்றப்போவதை நம்பித்தான் ப்ரூனோ மீட்டிங்கிற்கே சென்றேன். ஆனால் சோதனை போல அது வலையேற்றப்பட ரொம்பவும் நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அடுத்த நாள் காலையிலிருந்தே அந்த வலைத் தளத்தில் பலமுறை போய் பார்த்து ஏமாந்ததுதான் நடந்தது. நல்ல வேளையாக பிற்பகல் மூன்றரை மணியளவில் அதை வலையேற்றினர். முழுக்க பார்த்து விட்டு இப்பதிவுக்கு வருகிறேன். எனது நம்பிக்கை வீணாகப் போகாததில் மிக்க மகிழ்ச்சியே.

அசோக் உமாவுக்கு அட்வைஸ் கொடுப்பது தொடர்கிறது. உமாவின் ஆட்சேபணைகளை நட்புடனும் அதே சமயம் உறுதியாகவும் எதிர்க்கொண்டு அவளை கன்வின்ஸ் செய்யத் தொடங்குகிறான். ஒரு பெண்ணின் காயப்பட்ட மனது அவனுக்கு புரியாது என அவள் ஒரு தருணத்தில் அவனிடம் குற்றம் கூறும் தொனியில் கூற, அவன் அசராது அவள் இந்த துன்பத்தை ஒருவகையில் விரும்புவதாகவே தோன்றுகிறது எனக்கூறிவிட்டு, அது மிக அபாயமான மனநிலை என்பதையும் விளக்குகிறான். அவள் கடைசியில் அவன் சொல்வதை ஏற்று தன் தாய் தந்தையர் ஏற்பாடு செய்யும் மாப்பிள்ளையையே திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறாள். ”இப்போதுதான் நீ எனது உண்மைத் தோழி உமா” என அவன் மகிழ்ச்சியடைகிறான். “ஏதோ மேகக்கூட்டம் விலகியது போல தனக்கு தோன்றுகிறது” என்றும் அவள் கூறுகிறாள்.

அரசியல்வாதி வையாபுரியின் மகன் படிப்பை முடித்து விட்டு வந்திருக்கிறான். அவன் மேலே செய்ய வேண்டியது பற்றி வையாபுரி அவனுடன் விவாதிக்கிறார். தான் பிசினஸ் செய்ய உத்தேசித்திருப்பதை பையன் கூற வையாபுரி அதெல்லாம் சரிப்படாது என கூறுகிறார். அவனும் தன்னைப் போலவே அரசியலுக்கு வருவதுதான் சுலபம் மற்றும் புத்திசாலித்தனமும் கூட என அவர் சொல்கிறார். டாக்டர் மகன் டாக்டராகிறான், வக்கீல் மகன் வக்கீலாகிறான், நடிகன் மகன் மகன் நடிகனாகிறான். இம்மாதிரி செய்பவர்கள் சுலபத்தில் வெற்றியும் பெறுகின்றனர். ஆக தனக்கு குலக்கல்வியின் மகத்துவம் இப்போதுதான் புரிகிறது என்றும், இதை மட்டும் அக்காலத்திலேயே கொண்டு வந்திருந்தால் நாடே தொழில் துறையில் அமோக வெற்றி பெற்றிருக்கும் எனவும் வையாபுரி கூறுகிறார்.

நீலகண்டன் வீட்டுக்கு வரும் நாதன் அசோக்கை முந்தைய நாள் தன் வீட்டுக்கு அனுப்பி உமாவுடன் பேச வைத்ததற்கு நன்றி கூறுகிறார். இப்போது உமா அசோக்கின் பேச்சைக் கேட்டு, தன் பிடிவாதங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார். நாதன் திகைக்கிறார். பிறகு அசோக் முந்தைய நாள் முழுதும் தன் அறையிலேயே அடைபட்டு இருந்ததாகவும், அவன் எப்படி நீலகண்டன் வீட்டுக்கு வந்திருக்க முடியும் என்றும் நாதன் கேட்கிறார். இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த வசுமதிக்கும் திகைப்பு. அச்சமயம் கீழே வந்த அசோக்கும் தான் நீலகண்டன் வீட்டுக்கு வந்து உமாவுடன் பேசியதை திட்டவட்டமாக மறுக்கிறான்.

சோவின் நண்பர் “அசோக்தான் உமா வீட்டுக்கு போனானே, அதே சமயம் நாதன் வீட்டிலேயே வேறு இருந்திருக்கான். இது என்ன குழப்பம்”? என கேட்கிறார். வாழ்வில் பல விஷயங்கள் இம்மாதிரி நமது புரிதல்களையும் மீறி நடந்து விடுகிறது. நாம் நமது எல்லைகளை உணர வேண்டும். எல்லாவற்றையுமே எப்போதுமே புரிந்து கொள்ள இயலாது. தெய்வச்செயல் என்று வேண்டுமானால் கூறலாம். பல விஷயங்கள் நடந்து முடிந்த்வுடன் யோசித்து பார்த்தால் இம்மாதிரி புரியாதவை பல வரும்.

உதாரணத்துக்கு 1991-ல் நரசிம்ம ராவ் பிரதமராக வருவார் என்பதை யாருமே அதற்கு முன்னால் கற்பனை செய்திருக்க முடியாது. ஹரியானாவில் போலீசார் ராஜீவை வேவு பார்ப்பதை அவர் உணர்ந்து கோபப்பட்டு, சந்திரசேகர் மந்திரி சபைக்கு அதுவரை அளித்த காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொள்ள, ராஜீவை தாஜா செய்யாமல் சந்திரசேகர் பிரதம மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பிறகு 1991 தேர்தல் வந்தது. காங்கிரசுக்கு வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது என்பதை பலர் அப்போது கணித்தனர். திடீரென ராஜீவை புலிகள் கொல்ல அனுதாப ஓட்டுகள் காங்கிரசுக்கு கிடைத்தது. பிரதமர் போட்டிக்கு பலர் உரிமை கொண்டாட அதிக சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாத நரசிம்ம ராவை தற்காலிகமாக தேர்ந்தெடுத்தனர். அவரோ முழுமையாக 5 ஆண்டுகளும் பதவியில் இருந்து இந்தியப் பொருளாதார மேலாண்மையில் பல மாறுதல்கள் கொண்டு வந்தார். அவைதான் இன்னமும் இந்திய அரசியலை வழிநடத்துகின்றன. ஆக, ஹரியானாவில் நடந்த ஒரு சாதாரண நிகழ்ச்சி இவ்வளவு விஷயங்களை தன்னுள் கொண்டிருந்தது என்பதுதானே நிஜம்?

தனக்கு மகாபெரியவரிடம் கிட்டிய அனுபவத்தையும் சோ அவர்கள் கூறினார். அதற்கு பல நூற்றுக்கணக்கான பேர் சாட்சி எனக் கூறிய அவர் அதற்காகவெல்லாம் தன்னை மகாபெரியவரின் அத்யந்த சிஷ்யன் எனக் கூறவியலாது, தனக்கு அந்த அருகதை இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இந்த இடத்தில் நான் என் மனதில் பட்டதை கூறவிரும்புவேன். சீரியலின் கதை ஓட்டத்தை அறிந்த நான் இம்மாதிரி அசோக் ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்தது குறித்து ஆச்சரியப்படவில்லை. அசோக்கின் பிறப்பின் நோக்கம் என வைத்து பார்க்கும்போது இதெல்லாம் நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். இது தெய்வச்செயலே. அதே சமயம் அதை அவ்வாறு உணர வசுமதிக்கோ நாதனுக்கோ, நீலகண்டனுக்கோ பக்குவம் இல்லை என்பதையும் பார்க்க வேண்டும். சிறிது முனைந்து பார்த்திருந்தாலே உணர்ந்திருக்கக் கூடிய இந்த விஷயத்தை அவர்கள் பார்க்கத் தவறுவது மிக இயல்பாகவே காட்டப்படுகிறது. மாயை அவர்கள் கண்ணை மறைப்பதும் இங்கு தெரிகிறது. இந்தப் புரிதல் வர அவர்களுக்கு இன்னும் சமயம் வாய்க்கவில்லை என்றுதான் வைத்து கொள்ள வேண்டும்.

நீலகண்டனோ தன் பெண் உமா பொய் கூறுவாள் என நினைக்கவில்லை எனக் கூறி தன் வீட்டுக்கு ஃபோன் செய்து உமாவையே நாதனுடன் பேச வைக்கிறார். நாதனின் திகைப்பு இன்னும் அதிகரிக்கிறது. எது எப்படியாயினும் உமா மனம் மாறியதே போதும் என கூறும் நீலகண்டன் அசோக்குக்கு தன் நன்றியை தெரிவித்து விட்டு, அவன் நிஜமாகவே கிரேட் என்னும் சான்றிதழையும் போகிற போக்கில் தந்து விட்டு செல்கிறார்.

அவர் அந்தண்டை போனதும் வசுமதி நாதனுடன் பிலுபிலுவென சண்டை போடுகிறாள். அவர்தான் அசோக்கை ரூமிலிருந்து விடுவித்து அனுப்பியிருக்க வேண்டும் என்பது அவளது முடிவான முடிவு. அவளுடன் வாது செய்ய சக்தி இல்லாத நிலையில் உள்ள நாதனுக்கு குழப்பம் தொடர்கிறது.

வேம்பு சாஸ்திரி மற்றும் சாம்பு சாஸ்திரி அப்போதுதான் நல்லபடியாக நடந்து முடித்திருந்த ஜெயந்தி-கிரி திருமணம் பற்றி பேசுகின்றனர். சாம்புவின் மருமகள் பிரியாவும் அருகில் இருக்கிறாள். கல்யாணம் நன்றாக நடந்ததில் சாம்பு திருப்தியை தெரிவிக்க, வேம்புவோ தனது மற்றும் சிகாமணி முதலியார் உறவினர்களில் பாதிக்கு மேல் இத்திருமணத்தை தவிர்த்தது பற்றிய தனது மனக்குறையை வெளிப்படுத்துகிறார். எந்த சீர்திருத்த நடவடிக்கைகளிலும் ஆரம்பம் இப்படித்தான் இருக்கும் என்றும், அவர் இதற்கெல்லாம் கவலைப்படலாகாது என்று பிரியாவும் சாம்புவும் வேம்புவை தேற்றுகின்றனர். அவரும் மனச்சமாதானம் அடைகிறார்.

சாரியாரை பார்க்க அசோக் அவர் வீடு தேடி வருகிறான். தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவன் சாரியார் தமிழில் மொழிபெயர்த்து தனது அச்சகத்தில் வெளியிட்ட யோக வாசிஷ்டத்தை பெரிதும் சிலாகித்து பேசுகிறான். அவனது இளவயதிலேயே யோக வாசிஷ்டத்தை போற்றும் அவன் அசாதாரணமானவன் என்பதை கண்டறிந்த சாரியார் அவனது அறிவை கண்டு வியந்து மகிழ்கிறார். வைஷ்ணவ சம்பிரதாயங்களை அவரிடமிருந்து கற்க விரும்புவதாக அசோக் கூறிவிட்டு, அவர் தன் வீட்டுக்கு ஒரு நாள் வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறான். அவரும் அவ்வழைப்பை ஏற்று கொள்கிறார். ஆழ்வார்களை பிரதானமாக கொண்டாடும் திருபெரும்புதூர், திருவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி ஆகிய கோவில்கள் பற்றியும் பேசுகிறார்.

பகுதி - 83 (29.05.2009):
அசோக் வீட்டுக்கு சாரியார் வருகிறார். அசோக் மிக்க மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று நாதனுக்கு அறிமுகப்படுத்துகிறான். நாதன் வசுமதியை அழைத்து அவளும் அவரை வரவேற்கிறாள். பெருமாள் கோவில்களில் ஏன் நவக்கிரக வழிபாடு இல்லை என்ற வசுமதியின் கேள்விக்கு சாரியார் தெளிவாக பதிலளிக்கிறார். ஆனால் தற்சமயம் மதுரையருகிலுள்ள கூடலழகர் கோவில், திருமோகூர் கோவில் ஆகிய இடங்களில் நவக்கிரகங்களுக்கான சன்னிதி உண்டு என்றும் கூறுகிறார்.

நாதன் தன் பிள்ளை நார்மலாக இல்லையென வருத்தப்பட, யோகவாசிஷ்டம் படிக்கக் கூடியவன் பிரத்தியேகப் பிறவி என்றும் அவனைப் பற்றி நாதன் தேவையின்றி கவலைப்படுவதாகவும் சாரியார் கூறுகிறார். இப்படிபட்ட சத்புத்திரனை மகனாக பெறும் பாகியம் செய்தவர்களை பார்க்கவே தான் அந்த வீட்டுக்கு வந்ததாகவும் சாரியார் கூறுகிறார். நாதன் தனக்கு பாதுகா ஸ்லோகம் என்னும் ஆன்மீக புத்தகம் அவர் அச்சகத்தில் கிடைக்குமா எனக் கேட்க அதை தான் உடனே இவருக்கு கூரியர் செய்வதாகவும் இல்லாவிட்டால் அசோக் தன்னை பார்க்க வரும்போது அவனிடம் கொடுத்து விடுவதாகவும் கூறுகிறார். அவர் விடைபெற்று சென்றதும் வசுமதி இவனுக்கென்று இப்படியெல்லாம் நண்பர்கள் வருகிறார்களே என தன் வியப்பை வெளிப்படுத்த, ஞானமார்க்கத்தில் செல்பவனுக்கு குரு தானே கிட்டுவார் என நாதன் பதிலளிக்கிறார். பாகவதராவது ஸ்மார்த்தர், ஆனால் சாரியாரோ ஐயங்கார், அதுதான் தனக்கு உறுத்தலாக இருப்பதாக வசுமதி கூற, சத்சங்கம் தங்கள் பிள்ளைக்கு அமைவதே முக்கியம், இதில் ஸ்மார்த்தர் என்ன, வைஷ்ணவர் என்ன என நாதன் விடை கூறுகிறார்.

கடற்கரையில் காதலர் இருவர் அமர்ந்திருக்கின்றனர். ஆண் எம்.எல்.ஏ. வையாபுரியின் மகன், பெண் நடேச முதலியாரின் இரண்டாம் மகள் சோபனா. அவர்கள் தங்கள் காதலை எப்படி திருமணம் வரைக்கும் கொண்டு செல்வதென் யோசிக்கின்றனர். அவர்கள் அச்சமயம் சோபனாவின் அக்கா பார்வதியின் நண்பர் ஹிந்தி பேசும் ஃபினான்ஷியரின் கண்களில் படுகின்றனர்.

நாதனின் குடும்ப டாக்டர் வீட்டில் அவர், நர்ஸ் பார்வதி, ஃபினான்ஷிய்ர் மற்றும் சாரியார் இந்தப் பிரச்சினை பற்றி பேசுகின்றனர். வையாபுரியின் மகன் ஹரிஜன். சோபனாவோ முதலியார் சாதியை சேர்ந்தவள். இவர்கள் திருமணத்துக்கு சோபனாவின் தந்தை நடேச முதலியார் நிச்சயம் ஒத்து கொள்ளப் போவதில்லை. பிராமண ஜாதியில் பெண் எடுத்ததற்காக அவர் தனது சொந்த தம்பியையே பல ஆண்டு காலம் ஒதுக்கி வைத்தவர் என்ற நிலை வேறு இவர்கள் எல்லோரையும் தயக்கம் கொள்ளச் செய்கிறது. இந்த வேலையை நாசூக்காக செய்யக் கூடியவர் அவர்து நண்பர் சாரியார் மட்டுமே என எல்லோரும் முடிவு செய்கின்றனர். இருப்பினும் பார்வதி ஒன்று கூறுகிறாள். முதலில் வையாபுரியை சந்தித்து பேச வேண்டும். அவர் இந்த திருமணத்துக்கு ஒத்து கொள்வாரா என்பதை பார்க்க வேண்டும். பிறகுதான் நடேச முதலியாரை பார்க்க வேண்டும். இதற்கு எல்லோரும் ஒத்து கொள்கிறார்கள்.

நாதன் வீட்டுக்கு அசோக்கை பார்க்க வருகிறன் நீலகண்டனின் மகன் ராம்ஜி. தன் சகோதரி உமாவுக்கு அவன் அறிவுரைகள் கூறி அவளை அவள் பிடிவாதத்திலிருந்து விடுவித்ததற்காக நன்றி கூறுகிறான். தன் அந்த குறிப்பிட்ட தினத்தன்று அவர்கள் வீட்டுக்கு வரவே யில்லை என அசோக் திட்டவட்டமாக மறுக்கிறான். ராம்ஜி திகைக்கிறான். இதே மாதிரி இன்னொரு விஷயம் அசோக் வீட்டில் நடந்தது பற்றி அவன் கோடி காண்பிக்க, அசோக் தான் பாகவதரை நேரடியாக இங்கே சென்னையில் பார்த்த சில நொடிகளில் அதே பாகவதர் காஞ்சியிலிருந்து ஃபோன் செய்ததையும் கூறுகிறான். இம்மாதிரி ஏதேனும் மறுபடியும் அமானுஷ்யமா நடந்திருக்குமா என ராம்ஜி கூற அசோக்கும் ஆமோதிக்கிறான். தன் ரூபத்தில் அவர்கள் வீட்டுக்கு சென்று உமாவுடன் பேசியது ஒரு தெய்வசக்தியாகத்தான் தோன்றுகிறது என அசோக் கூறுகிறான். அதே சமயம் இந்த சந்தேகங்களை எல்லாம் உமாவிடம் கூற வேண்டாம் எனவும் அவள் நினைத்தபடியே தானே அவளுடன் பேசியதாக இருக்கட்டும், இல்லாவிட்டால் அவள் குழப்பமடைந்து தன் முடிவை மாற்றக்கூட செய்யலாம் என அசோக் கூற ராம்ஜியும் ஒத்து கொள்கிறான்.

“உண்மையை மறைப்பது தப்பு இல்லையா? ஏன் அசோக் இம்மாதிரி குழப்பறான், அவன் நிஜமாவே நல்லவனா” என சோவின் நண்பர் கேட்கிறார். சோ அழுத்தம் திருத்தமாக கூறுகிறார், “நல்லவன்தான். ஒரு நல்லது நடக்கவேண்டுமானால் பொய் சொல்வதில் தவறே இல்லை என்பது ஆன்மீக வாக்கு. ராமரே பொய் சொல்லியிருக்கிறார். அவர் வனவாசம் செல்லும்போது பின்னால் ஓடிவரும் தசரதர் தேரோட்டி சுமந்திரனை விளித்து தேரை நிறுத்துமாறு கூற ராமரோ தேரை வேகமாக செலுத்த ஆணையிடுகிறார். அது மட்டுமன்றி அவன் அயோத்தி திரும்பியதும் அரசரிடம் அவர் சொன்னது காதில் விழவில்லை என்றும் கூற சொல்கிறார். தந்தையின் வாக்கு பரிபாலனம் செய்யும்போது அவர் எந்த தடங்கலையும் விரும்பவில்லை என்பதாலேயே இது நடந்தது. அதே போல காட்டில் தன்னை பார்க்க வரும் பரதர் தன் அன்னையை கடுமையாக சாட, ராமர் பரதனிடம் தந்தை தசரதர் கைகேயியை மணம் முடிக்கும்போது அவளுக்கு பிறக்கும் மகனே தனக்கு பின்னால் பட்டத்துக்கு வருவான் என்று வாக்களித்தார் என ராமர் கூறி சமாதானப்படுத்துகிறார். வால்மீகி ராமாயணத்தில் வேறு எந்த இடத்திலும் இது வரவே இல்லை. மேலும் இது உண்மையாக இருந்திருந்தால் ராமரே முதலிலேயே பட்டாபிஷேகத்துக்கு சம்மதிதிருக்க மாட்டார், ஆகவே இது பரதனின் கோபத்தை தணிக்கவே செய்யப்பட்டது” என சோ கூறுகிறார்.

இப்போது நண்பர் இன்னொரு கேள்வி கேட்கிறார். “வாலியை மரத்தின் பின்னால் ஒளிந்து நின்று ராமர் அம்பு விட்டது மட்டும் சரியா” என கேட்க, சோ அவர்கள் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார், ராமர் அவ்வாறு ஒருபோதும் செய்யவேயில்லை என. இம்மாதிரி மரத்தின் பின்னாலிருந்து அம்பு விட்ட கதை கம்ப ராமாயணம் மற்றும் துளசி ராமாயணத்திலும்தான் வருகிறது, வால்மீகி ராமாயணத்தில் வரவேயில்லை. மேலும் வால்மீகி ராமாயணம்தான் அத்தாரிட்டி, மீதி ராமாயணங்கள் அல்ல என சோ அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். வாலியின் உடலை பார்க்க வந்த தாரையிடம் வானரங்களே கூறுகிறார்கள், “வாலி ஆக்ரோஷமாக ராமருடன் சண்டையிட்டான் மரங்கள் பாறைகள் ஆகியவற்றை அவர் மீது எறிந்தான், ஆயினும் ராமபாணத்தின் முன்னால் அவை எல்லாம் வியர்த்தமாகப் போயின” என்று. மேலும் சோ கூறுகிறார், இதை நானாக சொல்லவில்லை. பிரதிவாத பயங்கர, ராமாயண பிரவசன சிரோன்மணி பிரும்மஸ்ரீ சீதாராம சாஸ்திரிகள் 1939-ல் வெளியிட்ட புத்தகத்தில் கூறப்பட்டதையே தானும் கூறுவதாக சோ கூறுகிறார்.

என் அப்பன் ராமபிரான் குற்றம் செய்யவில்லை என அறிந்து எனக்கும் மனச்சமாதானம் ஏற்பட்டதை நான் இங்கே மறைக்கப் போவதில்லை.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 30.05.2009

பழைய காலத்திலும் எய்ட்ஸ் இருந்ததா?
பன்றிக் காய்ச்சல் சம்பந்தமாக நடந்த கலந்துரையாடலில் ஒரு தருணத்தில் டாக்டர் ப்ரூனோ எய்ட்ஸ் வைரஸ் மிக பலவீனமான வைரஸ்களில் ஒன்று என்ற கருத்தை வெளியிட்டார். அவர் கூறவந்தது என்னவென்றால், இன்ஃப்ளுயென்ஸா வைரஸ்கள் பரவும் வேகம் எய்ட்ஸ் வைரஸ்கள் பரவும் வேகத்தை விட பல மடங்கு அதிகமே என்பதாகும். பலமான வைரஸ்களை/பாக்டீரியாக்களை நாளடைவில் அடக்க கற்றுக் கொண்ட மனிதன் இப்போது எய்ட்ஸ் வைரஸ்களால் பாதிக்கப் படுகிறான் என்றார். இதற்கு முன்னால் எய்ட்ஸ் வந்து ஒருவனை பீடிக்கும் முன்பாகவே அவன் வேறு பல நோய்களால் உயிரிழக்கும் வாய்ப்பு உண்டு என்றார்.

நான் உடனேயே ஒரு கேள்வி கேட்டேன். “அதாவது எய்ட்ஸ் பழங்காலத்திலேயே இருந்து வந்திருக்கிறதா”? என்று. அதற்கு இப்போதைய தகவல்களை வைத்து இதற்கு தெளிவான பதில் கூற முடியாது என ப்ரூனோ ஒத்து கொண்டார். அதே சமயம் பக்கவாத நோய் இருந்தது என்றும், சுந்தர சோழருக்கு இருந்தது அந்த நோய்தான் என்றும் கல்கியின் பொன்னியின் செல்வனில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.

அப்போது எனக்கு திருமந்திரத்தின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. சரியாக முழுமையாக நினைவில் கொண்டு வர இயலாததால் அப்போது அங்கு அதை குறிப்பிடவில்லை. அப்பாடல் இதோ:

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
[திருமந்திரம்:த1:யாக்கைநிலையாமை:பாடல்148]

"இப்பதான் வந்தாரு, நல்லா சாப்பிட்டுவிட்டு எல்லாத்துக்கிட்டேயும் நல்லா பேசிக்கிட்டிருந்தாரு, இலேசா நெஞ்சை வலிக்குதுன்னாரு - படுத்தாரு அப்படியே போய்ட்டாரு" என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிகழ்வைச் சொல்கிற பாடல் இது. இப்போதெல்லாம் இதை massive heart attack எனச் சொல்கிறோம்.

தொழுநோய் பற்றியோ கேட்கவே வேண்டாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்து வந்திருக்கிறது. ஐரோப்பாவின் இருண்ட காலத்தில் தொழு நோய் ஒருவருக்கு வந்தால் அவருக்கான நீத்தார் சடங்குகளை செய்து அவர்களை ஊருக்கு வெளியே கொண்டு விடுவார்கள். பிறகு அவர் தம் குடும்பத்தாருடன் சேர்ந்திருக்க இயலாது. Werner Bergengruen என்னும் ஜெர்மானிய எழுத்தாளர் தனது Am Himmel wie auf Erden என்னும் நாவலில் இம்மாதிரி ஒரு சடங்கை வர்ணித்திருப்பார். அதை படித்துவிட்டு பல நாட்கள் தூக்கம் தொலைத்தேன்.

தொழுநோயை மருத்துவர்கள் Hansen's disease என்னும் பெயரால் குறிப்பிடுகிறார்கள். இப்போது அதற்கு சிகிச்சை எல்லாம் நன்கு வரையறுக்கப்பட்டுவிட்டது. பூரண குணமும் கிடைக்கிறது. இருப்பினும் அதற்கு எதிராக மக்களின் அறியாமை பல இடங்களில் அப்படியே உள்ளது.

மச்சமச்சினியே:
ஸ்டார் படத்தில் வந்த மச்சமச்சினியே என்னும் பாடல் என் மனதை மிகவும் கவர்ந்தது பற்றி நான் ஏற்கனவேயே மச்சமச்சினியே என்னும் தலைப்பில் பதிவு போட்டுள்ளேன். அதில் அப்பாடலுக்கான சுட்டியையும் தந்திருந்தேன். அப்பாடலை ஹிந்தியிலும் கேட்டதாகவும் ஆனால் படத்தின் பெயர் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன். அந்த ஹிந்தி வெர்ஷன் வேறு எதையோ தேடும்போது எதேச்சையாக கிடைத்தது.

இப்போது இதே பாட்டை ஹிந்தியில் கேளுங்கள், ருத் ஆ கயீ ரே எனத் துவங்கும் பாடல் எர்த் 1947 என்னும் படத்தில். சும்மா சொல்லப்படாது. ஏ.ஆர். ரஹ்மான் பின்னி பெடலெடுத்து விட்டார். ஆமிர் கான் மற்றும் நந்திதா தாஸ் (அழகி) நன்றாக நடித்துள்ளனர். பாடல் முடிந்ததும் அதே பாடலை சற்றே நீண்ட வெர்ஷனிலும் கேட்கலாம். சிற்றருவி துள்ளி செல்லும் அதே எஃபக்ட் இங்கும் உள்ளது.

இதென்ன தொழுநோயை பற்றி ஃபீலிங்ஸோட எழுதி விட்டு இப்படி திரைப்பாடலை பற்றியும் அதே மூச்சில் எழுதுகிறீர்கள் என்பவர்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான். அதுதான் வாழ்க்கை. எல்லா உணர்வுகளுமே தேவை. அதுவும் இம்மாதிரி பாடல்கள் எனக்கு டானிக் மாதிரியாக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/29/2009

பன்றிக்காய்ச்சல் பற்றிய ஒரு கலந்துரையாடல் - 28.05.2009

எனது கார் கிழக்கு பதிப்பகத்தை அடைந்தபோது மணி சரியாக மாலை 6 மணி. கீழே அக்கினி பார்வை, லத்தீஃப் ஆகியோர் நின்றிருந்தனர். மேலே நான் அப்போது பார்த்தவர்கள் தங்கவேல், பத்ரி, வடிவேல், (இன்னொரு தங்கவேல்) ஆகியோர். சற்று நேரத்தில் கலந்துரையாடலை துவக்கி நடத்துபவராக மருத்துவர் ப்ரூனோ வந்தவுடன் கூட்டம் களை கட்டியது. மனிதர் கையில் லேப்டாப் கொண்டு வந்திருந்தார். ஒரு வேளை கூட்டம் நடக்கும்போதே பதிவையும் எழுதிவிடப் போகிறாரா என நான் கேட்டதில் சற்றே கலகலப்பு ஏற்பட்டது. பேசாமல் அவரிடமிருந்து அதை இரவல் வாங்கி எனது வழமையான பதிவை அதிலேயே போடலாம் என ஒருவர் ஆலோசனை தந்ததில் ஓரிருவர் முகத்தில் கவலைக் குறிகள் தென்பட்டன என்பது எனது கற்பனையாகக் கூட இருக்கலாம்.

பத்ரி வழக்கம்போல தனது அறிமுகப் பேச்சை தரும் முன்னால், ப்ரூனோவின் லேப்டாப்புக்கு மின் கனெக்‌ஷன் தர ஏற்பாடுகள் செய்தார். பிறகு பேசிய அவர் தொட்ட விஷயங்கள்: மெக்சிகோவில் துவங்கிய இந்த பன்றிக் காய்ச்சல் இபோது உலகம் முழுதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை ஜப்பானியர் ரொம்பவும் சீரியசாகவே எடுட்து கொண்டுள்ளனர். தமிழக அரசு பல நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. இந்த பன்றிக் காய்ச்சல் பல அச்சங்களை எழுப்பியுள்ள நிலையில் அது பற்றிய பொது அறிவு வளர வேண்டும். வலைப்பதிவர்கள் லெவலில் இதை செய்வதே இந்த முயற்சி. நாம் அறிவார்ந்த கருத்துக்களை உருவாக்க வேண்டும். தேவையின்றி பயமுறுத்தல்கள் கூடாது. பொதுவான விவாதங்களுக்கு பிறகு ஒரு சிறு புத்தகமும் வெளியிடும் எண்ணம் உள்ளது. இதையெல்லாம் கூறிவிட்டு, ப்ரூனோவின் பேச்சுக்கு பிறகு கலந்துரையாடல் நடைபெறும் என்றார்.

கடைசியாக ப்ரூனோவை பற்றிய சிறு அறிமுகமும் தரப்பட்டது. மருத்துவ படிப்பை முடித்து விட்டு அரசு மருத்துவத் துறையில் பணி புரியும் அவர் இப்போது நரம்பியல் துறையில் MCH. செய்வதாக குறிப்பிட்டார். நரம்பியல் மருத்துவத் துறை என்றால் என்ன என நான் கேட்க அது ந்யூரோ சர்ஜரி என தெளிவு பெற்றேன். மேலும் பதிவுகள் போடுவதில் முன்னணியில் அவர் இருக்கிறார். அவர் ஜோஸ்யமும் பார்ப்பார் என்ற தகவலை முழுமை தரும் நோக்கில் நான் தெரிவித்தேன்.

ப்ரூனோ தனது வழக்கமான நேரடி அணுகுமுறையை மேற்கொண்டு பேச்சை ஆரம்பித்தார். முதற்கண் இது சம்பந்தமாக பாவிக்கப்படும் சில கலைச்சொற்களுக்கு விளக்கம் தந்தார். பன்றிக் காய்ச்சல், பறவை காய்ச்சல் ஆகியவை பற்றி விஞ்ஞான பூர்வமான விளக்கங்கள் தந்தார். எண்டெமிக் (உட்பரவு நோய்), எபிடெமிக் (கொள்ளை நோய்), பாண்டெமிக் (உலகம் பரவும் நோய்) என்றெல்லாம் வகைபடுத்தியது எந்தெந்த அடிப்படையில் என்பதையும் அவர் குறிப்பிட்டார். சில பிரதேசங்களீல் அதிகமாகக் காணப்படும் நோய்கள் சாதாரணமாக எண்டெமிக் வகையில் வரும். உதாரணத்துக்கு மலேரியா நோய் ராமநாதபுரம், தூத்துக்குடி கடற்கரையோரம் ஆகிய இடங்களில் பரவலாகக் காணப்படும். வேறு சில இடங்களில் யானைக்கால் நோய் தென்படும். கடற்கரை பிரதேசங்களிலிருந்து விலகிச் செல்ல செல்ல, Goitre என்னும் தைராய்ட் சம்பந்தப்பட்ட நோய் அயோடின் குறைபாட்டால் அதிகரிக்கும். புரத சத்துக்குறைவு கூட ஒரு வகை எண்டெமிக் நிலைதான். நல்ல வேளையாக அது தமிழகத்திலிருந்து மறைந்து வருகிறது என்றார் ப்ரூனோ.

அதே சமயம் எண்டெமிக் அளவில் உள்ள நோய் திடீரென அதிக அளவில் காணப்பட்டால் அது எபிடெமிக்காக மாறியதற்கான சாத்தியக்கூறு உண்டு. சாதாரணமாக 1000 பேரில் நான்கு பேருக்கு ஒரு நோய் என ஒரு பிரதேசத்தில் இருப்பது 1000 பேரில் 400 பேர் என அதிகரித்தால் அதை எபிடெமிக் என்று கூறலாம். Madras eye கூட இந்த எண்டெமிக்/ எபிடெமிக் அளவில் வருவது உண்டு. புயல், சுனாமி இயற்கை சீற்றங்கள் காரணமாகவும் எபிடெமிக் உருவாகலாம். ஆகவே அம்மாதிரி சமயங்களில் காலரா, டைஃபாய்ட் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இந்த எண்டெமிக்/எபிடெமிக் நோய்கள் கிருமி சார்ந்தோ அல்லாது சாராமலோ இருக்கலாம். உதாரணத்துக்கு போபால் வாயு லீக் சம்பவம் உருவாக்கிய எபிடெமிக் கிருமி சாராததது. மணலியிலும் சில ஆண்டுகளுக்கு முன்னால் வாயு கசிவால் அந்த ஏரியாவில் எபிடெமிக் ஏற்பட்டது. இதையெல்லாம் point-source epidemic என்பார்கள். அதனாலேயே அணுசக்தி உலைகள் கடற்கரையோரமாக அமைக்கப்படுகின்றன. நதிக்கரையோரத்தில் அல்ல. எண்டெமிக் நோய்கள் உடலின் தடுபு சக்தி குறைந்தால் அதிகப்பேருக்கு பரவி எபிடெமிக்காக உருவெடுக்கிறது. அதே சமயம் எண்டெமிக் நோயை கண்ட்ரோல் செய்வது கஷ்டம், ஆனால் எபிடெமிக்கை ஒப்பீட்டு அளவில் சற்று சுலபமாக கண்ட்ரோல் செய்ய இயலும்.

கிருமிகள் மனித உடலை எப்படி தாக்குகின்றன என்பதை பிறகு அவர் விளக்கினார். மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் நோய்களில் எயிட்ஸை விட இன்ஃப்ளூயன்ஸா அதிக வேகமாக பரவுவதன் காரணத்தையும் அவர் விளக்கினார். எய்ட்ஸ் பரவ ரத்தம் தேவை ஆனால் இன்ஃப்ளுயென்ஸஸாவோ தும்மினாலே பரவும் தன்மையுடையது என்பதே இதன் காரணம். இது பன்றிக்காய்ச்சலுக்கும் பொருந்தும். சிஃபிலிஸ் என்னும் மேக நோய் உருவாக 90 நாட்கள், ஆனால் இன்ஃப்ளுயென்ஸஸாவுக்கு 3 நாட்களே போதுமானது.

பிறகு பாசி மற்றும் பாக்டீரியா பற்றி பேச ஆரம்பித்தர். நான் புரிந்து கொண்டது என்னவென்றால் பாசியிடம் பச்சயம் இருப்பதால் தனது உணவை தானே உற்பத்தி செய்து கொள்ள இயலும். ஆனால் பேக்டீரியாவுக்கு ஒரு host தேவைப்படுகிறது. பாக்டீரியாவிலும் பல காம்பினேஷன்கள் உண்டு. அவற்றில் சில தானும் பலன் பெற்று அவை குடியிருக்கும் மனிதனுக்கும் நல்ல பலன் இருக்கும். சிலவற்றில் பாக்டீரியாவுக்கு மட்டும் நல்லது நடக்கும், மனிதனுக்கு நல்லதோ கெடுதலோ நடக்காது. இன்னும் வேறு சில பாக்டீரியாக்கள் விஷயத்தில் அவற்றுக்கு மட்டும்தான் நன்மை, மனிதனுக்கு சங்குதான்.

வைரஸ் என்பது பாக்டீரியாவை விடச் சிறியது. அவற்றில் சில உயிருடன் இருக்கும், சிலவற்றுக்கு உயிர் இருக்காது. பாக்டீரியாவின் அளவு பெரிதாயிருப்பதால் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் சுலபமாகின்றன. வைரசிடம் வெறும் ந்யூக்ளியஸ் மட்டும் இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்துவது கடினம்.

கடந்த நூற்றாண்டில் உலகம் பரவும் நோய்களில் முக்கியமானது வைரஸ்கள் மூலமே பரவின. பிளேக் போன்ற கொள்ளை நோய்கள் பாக்டீரியா மூலம் பரவுவதால் அவற்றுக்கு மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

பிறகு இன்ஃப்ளூயென்ஸா பற்றி விரிவாக பேச ஆரம்பித்தார். அதற்கு இரண்டு புரதங்கள் உண்டு. ஒரு வகை H1, H2, H3 என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இன்னொரு வகை N1, N2, N3 என அழைக்கப்படுகிறது. எச் புரதம் வைரசை உடலிலுள்ள செல்லுக்குள் செலுத்துகிறது, என் வகை புரதம் அதே வைரசை உடலிலுள்ள செல்லிருந்து வெளியேற்ற உதவுகிறது. இந்த இரு புரதங்களூம் வெவேறு சேர்க்கைகளில் உள்ளன. உதாரணத்துக்கு பன்றி காய்ச்சலில் நாம் எதிர்கொள்வது H1N1 வைரசே. சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்த பறவைக் காய்ச்சல் H5N1 வைரசால் வந்தது. இவ்வாறு வெவ்வேறு சேர்க்கைகள் ஏற்படும்போது சில சமயம் பலவீனமான வைரசும் சில சமயம் பலம் வாய்ந்த வைரசும் உருவாகின்றன. சில எதேச்சையான சேர்க்கைகள் உயிருக்கே அபாயம் விளைவிக்கின்றன. இன்ஃப்ளுயென்சா பல உயிரினங்களில் காணப்படுகின்றன. வைரஸ்களின் மாற்றம் சில சமயம் ஷிஃப்டாகவும் சில சமயம் ட்ரிஃப்ட் ஆகவும் அமைகின்றன. முந்தையது அதிக அபாயமானது. அதி வேகமாக பரவக் கூடியது. உதாரணத்துக்கு இப்போது இருக்கும் பன்றிக் காய்ச்சல் இரண்டே மாதங்களில் உலகம் பரவும் நோயாக உருவெடுத்துள்ளது. அதுவும் 2003-ல் வந்த சார்ஸ் கலாட்டாவுக்கு பிறகு இப்போதெல்லாம் WHO வெகுவேகமாகவே எதிர்வினை புரிகிறது.

வழக்கம் போல இங்கும் முன்கூட்டி தடுப்பது நல்லதாகவும் எளிதகவும் கருதப்படுகிறது. நோய் நிலைகொண்ட பிறகு ட்ரீட்மெண்ட் என்பது கடினமாகிறது. இப்போதெல்லாம் நோய் பற்றிய தகவல்கள் தினசரி பரிமாறப்படுகின்றன. முன்னெல்லாம் மாதம் ஒரு ரிபோர்ட் என்ற நிலைதான் இருந்தது. இப்போது அதுவே தினசரி அளவில் ஆனதற்கு நமது எச்சரிக்கை உணர்வே காரணம். வைரஸ் நோய்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னால் மருந்துகளே கிட்டத்தட்ட இல்லை என்னும் நிலையிலிருந்து மாறி இப்போது பல மருந்துகள் வந்துள்ளன. அவற்றில் பல எய்ட்ஸ் கிருமிக்கு எதிராக கண்டுபிடிக்கும் முயற்சியில் உருவாயின என்பது ஒரு நகை முரணே. பன்றிக் காய்ச்சலை கண்டறிய நம்பகமான முறை ரத்தப் பரிசோதனைகளே. ரத்த மாதிரிகள் பூனாவுக்கு அனுப்பப்படுகின்றன. ஸ்பாட் செக் எனப்படும் துரித சோதனை அவ்வளவு நம்பத் தகுந்ததில்லை என்பதையும் ப்ரூனோ விளக்கினார்.

பிறகு நான் முதலில் கேட்ட பிளேக் பற்றிய விளக்கங்களை அவர் தந்தார். பிளேக் rat flies மூலம் பரவுகின்றன என அவர் விளக்கினார். எலிகளிடம் அந்த rat flies இருப்பு ஒரு சமநிலை தாண்டினால் அது மனிதருக்கும் பரவ ஆரம்பிக்கிறது என்றார். உதாரணத்துக்கு சூரத்தில் மனித அலட்சியத்தால் துணி வேஸ்டுகளில் எலிகள் குடிபுகுந்து பிளேக் பரவியது என்றும் நல்ல வேளையாக துரித நடவடிக்கை எடுத்ததால் சூரத்துக்கு வெளியே அது பரவுவதிலிருந்து தடுக்க முடிந்தது என்றார்.

பன்றிக் காய்ச்சல் என்பதை விட இன்ஃப்ளூயென்ஸா என்ற வார்த்தையையே அவர் அதிகம் தேர்ந்தெடுத்தார். பறவைக் காய்ச்சல் என்னும் H5N1 பறவையிடமிருந்து மனிதனுக்கு வந்தது. அதே சமயம் H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சலோ மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது. பிறகு ஏன் பன்றிக் காய்ச்சல் என அழைத்தார்கள் என்றால் அது பன்றிகளிடமும் காணப்பட்டது என அவர் கூறினார்.புது புது வைரசுகளை கண்டுபிடித்து பயோ ஆயுதங்களாக பல அரசுகள் உபயோகிக்கின்றனவா என்ற கேள்விக்கு அவர் ஏற்கனவே இருக்கும் வைரசுகளை வைத்து பயோ ஆயுதங்களை உருவாக்க இயலும் நேரத்தில் இதற்காக மெனக்கெட்டு புது வைரசுகள் கண்டுபிடிப்பதில்லை, மேலும் அது எளிதும் அல்ல என்றார்.

அதே சமயம் தங்களது மருந்துகள் அதிகம் விற்பனையாவதற்காக சில மருந்து கம்பெனிகள் அவற்றை எடுத்து கொள்ளும் நிலைகளை சௌகரியம் போல மாற்றிக் கொள்கின்றன எனவும் கூறினார். தான் மருத்துவம் படிக்கும்போது ரத்த அழுத்தம் மேல் அளவு நோயாளியின் வயது ப்ளஸ் 100 என்னும் அளவுக்கு மேல் இருந்தால் மருந்து உட்கொள்ள வேண்டும் என்ற நிலையிலிருந்து (அதாவது 60 வயது நோயாளி அதிக ரத்த அளவு 160க்கு மேல் போனால் மருந்து உட்கொள்ளலாம் என்ற நிலை மாறி இப்போது 120க்கே மருந்து என கூறப்படுவதை அவர் நாசூக்காக சுட்டிக் காட்டினார். மேலும் சில போலி மருத்துவர்கள், லேகியம் விற்பவர்கள் சில நோய்களுக்கு மருந்துகள் இல்லை என்ற நிலை இருக்கும்போதே தாங்கள் மருந்து தருவதாக விளம்பரம் செய்து காசு பார்த்துள்ளதையும் கூறினார்.

இப்போது பத்ரி ஒரு கேள்வி கேட்டார். இந்த பன்றிக் காய்ச்சலை எதிர்த்து போராடும் விஷயத்தில் அரசு த்ரப்பிலிருந்து செய்யக் கூடியது என்ன என அவர் கேட்டார். இதற்கு ஒரு குறிப்பிட்ட விடை அளித்தல் கடினமே. இந்த வைரஸ்கள் உஷ்ணத்தால் பாதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் தட்ப வெப்ப நிலை இப்போதைய பன்றிக் காய்ச்சலை எவ்வாறு பாதிக்கும் என்பதை சொல்வது கடினம் என்றார் ப்ரூனோ. அரசுக்கு பொறுப்புகள் அதிகம். தேவையின்றி பயமுறுத்துவதும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே நிலைமையை நன்கு அவதானித்து செயல்பட வேண்டும். உதாரணத்துக்கு சார்ஸ் நோய் இந்தியாவுக்குள் வரவே இல்லை. 2006-ல் வ்ந்த சிக்கன் குனியா கேரளாவையும் தமிழ்நாட்டையும் தாக்கியது, ஆனால் ஆந்திராவும் கர்நாடகமும் தப்பித்தன. ஆகவே புலி வருது கதையை தவிர்த்தல் முக்கியம். இல்லாவிட்டால் நிஜமான அபாயம் வரும்போதுஅலட்சியமாக இருந்துவிடும் அபாயம் உண்டு. இதுவரைக்கும் பயமுறுத்தும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை. ஆனால் நடக்கவும் வாய்ப்பு உண்டு. ஆகவே ஜாக்கிரதையாக இருப்பது மிகமிக முக்கியம். போதுமான அளவு மருந்தை மருந்தை தமிழக அரசு இப்போது கையிருப்பில் வைத்துள்ளது என்பதையும் ப்ரூனோ கூறினார்.

காலரா போன்ற நோய் மனித உடலை எவ்வாறு தாக்குகிறது என்பதையும் அவர் உதாரணங்களுடன் விளக்கினார். சில மரணங்கள் கிருமிகள் மூலமாகவும் இன்னும் சில மரணங்கள் வேறுகாரணங்களால் ஏற்படுகின்றன என்பதையும் அவர் கூறினார். மனித உடலின் auto immune ஏற்பாடு அதிகமாக செயல்படுவதாலும் சில மரணங்கள் ஏற்படுகின்ர்றன என்பதையும் அவர் எடுத்துரைத்தார். சிலர் மோசமாகவும், சிலர் மிதமாகவும் தாக்கப்படுகின்ர்றனர். சிலருக்கு பாதிப்பே இல்லை என்ற நிலை கூட காணப்பட்டுள்ளது என்றார் அவர். டிப்தீரியா, நிமோனியா ஆகியவை செயல்படும் வித்தத்தையும் கூறிய அவர் கடைசியில் பார்த்தால் மூளைக்கு ரத்தம் சப்ளை ஆவது பாதிக்கப்படுவதே மரணத்துக்கு காரணம் என்பதையும் விளக்கினார். தலையணையால் முகத்தை மூடி மூச்சுத் திணற வைத்து கொல்லப்படுவதை போன்றது அவ்வகை மரணம் என்பதையும் கூறினார். போபால் சோகத்திலும் கூட எல்லோருமே இறந்து விடவில்லை, சிலருக்கு வேறு நோய்கள் வந்தன, சிலர் முழுமையாக தப்பினர். எல்லாம் சம்பந்தப்பட்டவர்களின் உடல்கூறே காரணம் என்பதையும் கூறினார். auto immune ஏற்பாடுகள் பாதிப்பை தவிர்க்க சில மருந்துகள் அதை குறைக்கவும் தரப்படுகின்றன எனவும் அவர் கூறினார். சில ஸ்டீராய்டுகள் அவ்வகையில் அடங்கும் எனவும் குறிப்பிட்டார்.

ஆனால் இதெல்லாம் தியரி லெவலிலேயே இருக்கின்றன என்பதையும் அவர் நினைவூட்டினார். ஒவ்வொரு தியரிக்கும் ஒரு ஆதரவு/எதிர்ப்பு கோஷ்டி உண்டு என்பதையும் கூறினார். இத்தருணத்தில் சின்னம்மை என்னும் சிக்கன் பாக்ஸ் குழந்தைகளுக்கு பொதுவாக உயிர் அபாயம் விளைவிப்பதில்லை. ஆனால் பெரியவர்க்ளுக்கு அது வந்தால் கவலைக்குரிய விஷயமே என்றார். ஈக்களும் கொசுக்களும் நோய் பரப்பும் விதங்களில் மாறுவதால் அவற்றை எதிர்க்கும் நடவடிக்கைகளின் விளைவுகளும் வெவ்வேறு அளவில் உள்ளன என்றார் அவர். கொசுக்களை ஒழித்தால் மலேரியாவை அடியோடு தடுக்கலாம், ஆனால் ஈக்களை ஒழிப்பதால் அதே மாதிரி வாந்தி பேதி மறையாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

தங்கவேல் என்பவர் சித்த மருத்துவம் படித்தவர், தொத்து நோய் ஆராய்ச்சியாளர். அவர் மருத்துவர் ப்ரூனோ சில மருந்து கம்பெனிகள் மேலே செய்ததாகக் கூறப்படுவதை மறுத்தார். இம்மாதிரி கைட்லைன்ஸ்கள் எல்லாம் பலரால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும், யாரும் தன்னிச்சையாக முடிவு எடுக்க இயலாது எனவும் கூறினார். ப்ரூனோ இம்மாதிரி ஒரு முறை நடந்தது பெரிய ஸ்கேண்டலாக உருவெடுத்தது பற்றி கூறினார். இந்த விஷயத்தில் நான் புரிந்து கொண்டதை கூறினேன், தவறு இருந்தால் ப்ரூனோ/தங்கவேல் திருத்தலாம்.

கடைசியில் பத்ரி நன்றியுரை தந்து ப்ரூனோவுக்கு சில கிழக்கு பதிப்பக வெளியீடுகளை பரிசாகத் தந்தார். எல்லாம் முடிந்தவுடன் கேபிள் சங்கர் மேலே வந்து மீட்டிங் முடிந்ததா என கேட்டார். முடிந்தது என நான் சொன்னதும் அவர் முகத்தில் நிம்மதி பரவியது என நான் உணர்ந்தது வெறும் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

மணி எட்டேகால் ஆன அளவில் கீழே இறங்கி என் காரை வரவழைத்து நான் எல்லோரிடமும் விடை பெற்று சென்றேன். உறவினர் வீட்டுக்கு போய் விட்டு வீட்டுக்கு வர மணி 11 ஆகி விட்டது. உடனே தூக்கம். விடியற்க்காலை 02.50-க்கு ஆரம்பித்தவன் 05.00 அளவில் முடித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இந்த கலந்துரையாடலின் ஆடியோவை பத்ரி அவரது பதிவில் தந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி.

5/28/2009

எங்கே பிராமணன் - பகுதி - 81

பகுதி - 81 (27.05.2009):
தாழ்ந்த சாதி என கருதப்பட்ட ஒருவன் மரணமடைய அந்திம சடங்கு செய்ய யாரும் கிடைக்காத நிலையில் ஒரு வைணவர் துணிந்து முன் வந்து அவனுக்கான அந்திமச் சடங்குகளை செய்ததை சாரி எடுத்துரைக்கிறார். அச்சமயத்தில் அவருக்கு சாதி முக்கியமாக படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

“யார் சார் இந்த திருமலை நல்லான் சக்கரவர்த்தி? ஒண்ணும் புரியல்லியே” என சோவின் நண்பர் கேட்கிறார். சோ பதிலளிக்கிறார். “இதிலே புரிஞ்சுக்க என்ன இருக்கு? சாதி வேறுபாடு கூடாது என்பதுதான் உயர்ந்த நிலை. ஆளவந்தார் ஸ்வாமிகளின் சீடர்கள் இருவர், ஒருவர் மாறநேரி நம்பி என்பவர், தாழ்ந்த சாதி என வரையறுக்கப்பட்டவர். இன்னொருவர் பெரிய நம்பி, உயர்ந்த சாதி என கூறப்படுபவர். முன்னவர் இறக்க பெரிய நம்பி அவருக்கான அந்திமச் சடங்குகளை செய்து அதனால் சக சாதியினரால் சாதி விலக்கு செய்யப்படுகிறார். அவர் விட்டை சுற்றி முட்புதர்கள் போடப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோவில் உற்சவத்தில் அன்று தேரோட்டம். இவர் வீட்டை தாண்டி செல்ல வேண்டிய தேரை அவரது புதல்வி ராமானுஜருக்கு திருப்பாவை ஜீயர் என பெயர் வந்ததற்கு காரணமாக அமைந்த அத்துழாய் அம்மை தேரின் முன்னால் நமஸ்காரம் செய்து “திரு நின் ஆணை! நின் ஆணை கண்டாய்”! என ஆணையிட்டு தேரை நிறுத்தி, தனது தந்தை செய்த குற்றம் என்ன என்பது பற்றி சரியான பதில் வரும்வரையில் தேர் மேலே செல்லாது, எனக் கூறி, திருப்பாணாழ்வார் வரலாற்றையும் மேற்கோள் காட்ட, தேரும் மேலே செல்லவியலாது நிற்கிறது. பிறகு பெரிய பட்டர் வந்து பெரிய நம்பிக்கான ஊர்விலக்கை நிறுத்திவைத்த பிறகே தேர் நகருகிறது. இதை கூறிய சோ அவர்கள் அதே சமயம் எப்போதுமே ஆசாரங்களை மாற்றிக் கொண்டு வந்தால் கடைசியில் மிச்சம் ஒன்றுமிராது என நடேச முதலியார் சொன்னதையும் ஆமோதிக்கிறார். இதற்கு உதாரணமாக காஞ்சி பெரியவர் ஒரு குறிப்பிட்ட தவச மந்திரத்தை மாற்றுவதற்கான தனது இயலாமை மற்றும் எதிர்ப்பை தெரிவித்தது பற்றிக் கூறுகிறார். எல்லோரும் சமம் என எல்லோராலும் இருக்கவியலாது என்றும் அதே சமயம் அதுதான் ஆதர்ச நிலை என்பதில் ஐயமில்லை என்றும் சோ கூறுகிறார்.

சாரி, நடேச முதலியாரின் பேச்சு தொடர்கிறது. அந்த நல்லான் சக்கரவர்த்தியின் பரம்பரையை சேர்ந்தவரே ராஜாஜி எனவும் அவர் கூறுகிறார். தன்னுடன் 25 ஆண்டுகளாக பாவிக்கும் நட்பு ஒரு புறமிருக்க, நடேச முதலியார் தனது சொந்தத் தம்பியை ஒதுக்கி வைப்பதன் காரணத்தையும் கேட்கிறார். “நீங்கள் சொல்வது எனது நன்மைக்கே என்பதை நான் உணர்ந்துள்ளேன்” எனக் கூறிவிட்டு நடேச முதலியார் விடைபெறுகிறார்.

நாதன் தனது குடும்ப டாக்டரிடம் செக்கப் செய்து கொள்கிறார். ரத்த அழுத்தம் 150/100 என காணப்படுகிறது. 150 ஓக்கே, ஆனால் 100 என்பது கவலை அளிக்கும் விஷயம் என டாக்டர் கூறிவிட்டு அவரது மருந்தை மாற்றுகிறார். அசோக் பற்றி தேவைக்கதிகமாக கவலை கொள்ளலாகாது என்றும் கூறுகிறார்.

டாக்டரை பார்க்க சாரியார் வருகிறார். அவரை வரவேற்கும் நர்ஸ் பார்வதி, சோஃபாவில் அமரச் செய்து விட்டு டாக்டரிடம் கூறுகிறாள். டாக்டர் வெளிநாடு போகவிருப்பதால் அவருக்காக சாரியார் கேசவ பெருமாள் கோவில் பிரசாதம் கொண்டு வந்திருக்கிறார். பாவம் செய்தவர்களை கடவுள் ஏன் மன்னிக்கிறார் என டாக்டர் கேட்க, பாவம் செய்தவரைத்தான் மன்னிக்க வேண்டும், பாவம் செய்யாதவர்களை மன்னிப்பது என்பதே அபத்தமாக இருக்கிறதே என சாரியார் பதிலளிக்கிறார். பாவமே செய்யாதவர்களை பிறகு ஏன் கடவுள் தண்டிக்க வேண்டும் என கேட்க, அது அவரது கர்மபலன் என சாரியார் விடை தந்து அப்படி யாரை கடவுள் தண்டித்து விட்டார் என கேட்கிறார். “உங்களைத்தான் சொல்கிறேன்” என்னும் டாக்டர், சாரியாருக்கு அம்மாதிரி மூளைவளர்ச்சி குறைந்த பிள்ளை பிறந்தது பற்றி வருந்துகிறார். அவனுக்கு ஒரு குறையும் இல்லை, அவன் ஜாதகப்படி அவன் ஓகோ என இருப்பான் என சாரியார் கூற, நர்ஸ் பார்வதி சாரியாருக்கு இருக்கும் சொத்துக்களுக்கு அவர் பையனுக்கு சாப்பாட்டுக்கு குறையிருக்காது என கூறுகிறாள். “அதற்காக சும்மா உட்கார்ந்து சாப்பிடுவது என்பது ஆண்பிள்ளைக்கு அழகில்லை” என குறிப்பிடும் சாரியார் நர்ஸ் பார்வதியின் உதாரணத்தையே எடுத்து பேசுகிறார். அவள் தந்தை நடேச முதலியார் பெரிய காண்ட்ராக்டர், பணத்துக்கு குறைவில்லை, இருப்ப்னும் அவள் நர்ஸ் வேலை செய்யவில்லையா என அவர் கேட்கிறார்.

தனக்கு 15 வயதிலேயே சோஷல் சர்வீஸில் ஆர்வம் வந்ததாகவும், அப்போதிலிருந்தே இந்த வேலையில் இருப்பதாகக் கூறும் அவள் 25 ஆண்டுகள் இதிலேயே அவ்வாண்டு முடிக்கப் போவதையும் குறிப்பிடுகிறாள். கல்யாணத்தில் எல்லாம் இண்டெரஸ்ட் இல்லை என அவள் இருப்பது அவள் தந்தைக்கு பெரும் சோகத்தைத் தருகிறது என குறிப்பிடும் சாரியார் அவளது தங்கை சோபனாவுக்காவது சீக்கிரம் திருமணம் நடக்கட்டும் என தனது எண்ணத்தை கூறுகிறார். அச்சமயம் அங்கு வந்து சேருகிறார் ஹிந்தி பேசும் ஃபினான்சியர். கேரக்டர் பெயரை எங்குமே கூறவில்லை. வரும் எபிசோடுகளில் பார்க்க வேண்டும். அவருக்கு நர்ஸ் பார்வதி மேல் ஒரு அபிப்பிராயம் இருப்பது போல காட்சி செல்கிறது என்பதை மட்டும் இப்போதைக்கு கூறி வைக்கிறேன்.

நாதன் வீட்டில் அசோக் அரக்கப் பரக்க கீழே ஓடி வந்து ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு வேளியே செல்ல யத்தனிக்கிறான். வசுமதி அவனை பிடித்து வைத்து விளக்கம் கேட்க, உமாவுக்கு ஏதோ ஆபத்து என்றும் தான் உடனே அவள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் தனக்கு உள்ளிருந்து ஒரு குரல் கட்டளையிட்டதாகக் கூறுகிறான். வசுமதி அவனிடம் நைச்சியமாகப் பேசி அவனை ரூமுக்குள் தள்ளி கதவை பூட்டுகிறாள். “ஏதோ இன்னர் வாய்ஸாம், ஒரு வெளி சக்தி இயக்குகிறதாம். இப்போது அதெல்லாம் என்ன செய்கிறது என்பதையும் பார்க்கிறேன்” என வசுமதி கறுவுகிறாள்.

சமையற்கார மாமி குப்பையை வெளியே கொட்ட வரும்போது, அசோக் ரோட்டோரமாகச் செல்வதைப் பார்க்கிறாள். உள்ளே வந்து வசுமதியிடம் கூற, அவள் அவனை அசோக்கின் ரூமுக்கு அழைத்து சென்று வெளியிலிருந்து காட்டுகிறாள். உள்ளே அசோக் ஜன்னல் கம்பியை பிடித்தவாறு வெறித்த பார்வையுடன் நின்று கொண்டிருக்கிறான். கோமதி மாமிக்கு தலை சுற்றுகிறது. அப்போ ரோட்டில் பார்த்தது யார் என குழம்புகிறாள்.

நீலகண்டன் வீட்டில் அசோக்கும் உமாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அசோக் உமாவிடம் தான் யாரையுமே மணக்க இருப்பதாக இல்லை என அவளிடம் திட்டவட்டமாகக் கூறுகிறான். அது தனக்கும் தெரியும் என கூறும் உமா, அவன் மனதை எப்படியாவது தன்னால் மாற்றவியலும் என தனது நம்பிக்கையை தெரிவிக்கிறாள். வாழ்நாள் முழுக்க தான் பிரும்மச்சாரியாகவே இருக்கபோவதாக கூறும் அசோக், உமா தன் பிடிவாதத்தை விட வேண்டும் என்றும், தனிப்பட்டவரின் விருப்பத்தை விட தெய்வத்தின் விருப்பம்தான் நிறைவேறும் என கூறுகிறான். உமா அவன் சொல்வதை கவனமாகக் கேட்ட வண்ணம் இருக்கிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 28.05.2009

சிவகுமார்:
1. என்ன ஆச்சு தமிழ் இந்துவிற்கு?
பதில்: இது சம்பந்தமாக நண்பர் எஸ்.கே. அவர்களுடன் பேசினேன். தமிழ் இந்துவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நடப்பதால் தற்போது செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை தெரிவித்தார். கூடிய சீக்கிரம் வெளி வரும் என்பதையும் தெரிவித்தார்.

2. மிகச் சிறந்த முறையில் சென்று கொண்டிருந்த போகப் போகத் தெரியும் தொடரை திடீரென நிறுத்தி விட்டார்களே?
பதில்: மேலே சொன்ன பதில்தான் இங்கும்.

3. மற்றவர்களைப் போல் இந்துக்கள் ஏன் காரசாரமாக பதிவுகள் எழுதுவதில்லை?
பதில்: எழுதாமல் இருப்பார்களா, நாம்தான் அவற்றை தேடிப் போக வேண்டும்.

4. காங்கிரசுககு ஆதரவாக பிளாக் ஆரம்பிக்கும் தொண்டர்கள் மத்தியில் எதிர்முகாமில் இவ்வாறு ஏன் இல்லை? (நல்ல காமெடி செய்வார் அந்த பதிவர்)
பதில்: எதிர் முகாம் என்று யாரை சொல்கிறீர்கள்? எந்த கட்சியை சொல்கிறீர்கள்? அதுவும் கூட்டணி கூத்துகள் ஒவ்வொரு எலெக்‌ஷனுக்கும் மாறும்போது நண்பர் யார், எதிரி யார்?

5. ரிபப்ளிகன் கட்சி ஆதரவு என்பது சோ-வை இமிடேட் செய்ததா அல்லது தங்களுடைய சொந்த கருத்தா?
பதில்: அது எனது சொந்தக் கருத்தே. அதுவும் அது என்னிடம் அறுபதுகளிலிருந்தே உண்டு.

6. சென்ற தேர்தலில் அடல்ஜி இம்முறை லால்ஜி - அடுத்த தேர்தலில் யாரோ?
பதில்: அது பாஜகவின் உள்விவகாரம். அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

7. ஐபுவன் - இந்த வார்த்தை ஜெர்மனி என்பது தெரியும். அர்த்தம் வணக்கம் என்பதா காலை வணக்கம் என்பதா?
பதில்: இது ஜெர்மன் வார்த்தை இல்லை என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

8. ப்ரோஸ். காம் வெப்-முகவரி என்ன?
பதில்: http://www.proz.com/
இதில் எனது பக்கம்: http://www.proz.com/profile/47242

9. சாமான்யர்களிடம் அடித்து பிடித்து வரி வசூல் செய்யும் வருமான வரித் துறை கந்து வட்டி ரௌடிகளை ஏன் கவனிப்பத்ல்லை?
பதில்: அவர்கள் இவர்களை கவனிப்பவர்களாக இருக்கும்.

10. மாமி நடிகையை விட அம்மா மிக அழகாகத் தெரிகிறாரே?
பதில்: பல முறை அம்மா மகள் ஜோடி சகோதரிகள் போல தோன்றுவர். சிலர் உடல்வாகு வயதாக ஆக அழகாய் பிரகாசிக்கும். அப்படித்தான் என் நண்பன் பெண் பார்த்து விட்டு வந்ததும் அவனிடம் பெண் எப்படி என கேட்டதற்கு, பெண்ணீன் அம்மா கொள்ளை அழகு எனக் கூறிவிட்டு, என்னிடம் சொடேரென பிடரியில் அடிவாங்கினான்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/27/2009

தோழர் அ. வரதராஜப்பெருமாள் அவர்களுடனான நேர்காணல்

முதலில் ஆங்கிலத்தில் வந்த இந்த நேர்க்காணலின் தமிழாக்கம் புகலியின் இந்த உரலில் வந்தது. விஷயம் முக்கியமானதாக எனக்கு பட்டது. ஆகவே இது இன்னும் பரவலாக அறியப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் புகலி ஆசிரியர் குழுவிடம் இதை எனது வலைப்பூவிலும் பதிவிட அனுமதி கேட்டிருந்தேன். அவர்களிடமிருந்து சற்று முன்னால் எனக்கு அந்த அனுமதி கீழே காணப்படும் மின்னஞ்சல் மூலம் கிடைத்தது.

from editors
to raghtransint@gmail.com
date Wed, May 27, 2009 at 5:54 PM
mailed-by puhali.com
5:54 PM (9 minutes ago)
தொடர்பு கொண்டமைக்கு நன்றி. எமது இணைப்பை வழங்கி பதிவிடுங்கள்.
புகலி


அவர்களுக்கு என் நன்றி. எனது கமெண்டுகள் பின்னால் வரும்.

முன்னால் வடக்கு கிழக்கு மாகான முதலமைச்சராக இருந்தவரும், EPRLF இன் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், தற்போது இந்தியாவில் வசித்து வருபவருமான தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவர்களுடனான நேர்காணலின் தமிழ் வடிவம்

கேள்வி: பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நீங்கள் நம்பிவிட்டீர்களா?
வ.பெ: நிச்சயமாக. அது குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை. எல்லோரும் பார்க்கக்கூடியதாக புகைப்படங்கள் இருக்கின்றன. அடுத்து, கருணா அந்த இடத்திற்குச் சென்று பிரபாகரனுடைய உடலை அடையாளம் காட்டி இருக்கின்றார்.

கேள்வி: கருணா ஒரு காலத்தில் பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவராக இருந்தாரா?
வ.பெ: 2004ம் ஆண்டுவரையும் அவர் விடுதலைப்புலிகளுக்கு 2வது தளபதியாக இருந்தவர். அத்துடன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று பொய் சொல்லவேண்டிய எந்தக் காரணமும் இலங்கை அரசுக்கு இல்லை என்பதையும் சொல்ல விரும்புகிறேன்.

கேள்வி: இது உண்மை என்றால், விடுதலைப் புலிகள் இன்று அநாதையாகிவிட்டார்கள் என்று நீங்கள் சொல்வீர்களா?
வ.பெ: இன்னும் 500 தொடக்கம் 600 வரையிலான விடுதலைப்புலிகளில் எஞ்சியவர்கள் கிழக்கு மாகாணத்திலும் வடக்கின் வன்னிக் காடுகளிலும் உலாவிக்கொண்டிருக்கின்றபோதும், விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் முடிந்துவிட்டார்கள்.

கேள்வி: அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றதா?
வ.பெ: சில ஆயுதங்கள் இருக்கின்றன.

கேள்வி: அவர்களுக்கு ஏதாவது தலைமை இருக்கின்றதா?
வ.பெ: அவர்களுக்கு அப்படி யாரும் இல்லை. எனவே இவர்கள் சில காலத்திற்கு ஆயுதக் குழுக்களாக இயங்குவார்கள். அதற்கு மேல்செல்லமுடியாது. ஏனெனில் அவர்கள் தங்கள் ஆயுதங்களைப் பராமரித்துக் கொள்ள எப்படி முடியும்?

கேள்வி: இந்த நிலையில் இலங்கைத் தமிழருக்கு யார் தலைமை கொடுப்பார்கள்?
வ.பெ: இலங்கைத் தமிழ் மக்களிற்கு இவ்வளவு காலமும் விடுதலைப்புலிகள் தலைமை கொடுத்தார்கள் என்ற தப்பபிப்பிராயத்திற்கு நாங்கள் இடம் கொடுக்கக்கூடாது. உண்மையில் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு. அது தமிழ்த் தலைமைகளைக் கொன்றொழித்தது. இது 1986இல் ரெலோ சிறீ சபாரட்ணத்தின் படுகொலையில் இருந்து தொடங்கியது. தொடர்ந்து அமிர்தலிங்கம் (தவிகூ), பத்மநாபா (ஈபிஆர்எல்எவ்), நீலன் திருச்செல்வம் (தவிகூ), கேதீஸ்வரன் (ஈபிஆர்எல்எவ்) போன்றோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
1986ம் ஆண்டு தொடக்கம் விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகளில் இருந்த தலைவர்களும் போராளிகளுமாக 10 000 க்கும் மேற்பட்டவர்கள் விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் எந்தவொரு அறிவுஜீவிகளின் அபிப்பிராயத்தையும் நசுக்கியே வந்தனர். விடுதலைப்புலிகள் தமிழ் மக்களிடையே திகிலைப் பரப்பினார்கள். அதாவது, எங்கு வாழுகின்ற தமிழ் மக்களாக இருந்தாலும் அவர்கள் மனத்தில் அச்சத்தைச் செலுத்தி இருந்தார்கள்.

கேள்வி: ஆனால் பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் கிடைத்த மக்கள் ஆதரவை, குறிப்பாக புகலிடத் தமிழர்கள் மத்தியில் கிடைத்த ஆதரவை, அதற்கான அடிப்படையை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?
வ.பெ: நல்லது. நீங்கள் தமிழ் சமூகம் அப்படி இருக்கின்றதென்று கருதினால், அவர்கள் இந்த விடயங்களைத் தர்க்கரீதியாகவோ பகுத்தறிந்தோ பார்த்திருக்கவில்லை. தீவிரமான உணர்ச்சிப் பெருக்கினாலும் சிங்கள எதிர்ப்பு உணர்வினாலுமே அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்தார்கள்.
புலம்பெயர் தமிழர்களை எடுத்துக் கொண்டால், இவர்கள் இலங்கைத் தமிழ் மக்களிடம் இருந்து தொலைந்து போன மக்கள். அவர்களுடைய சொந்த நலன்களும் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. தாங்கள் வசிக்கும் நாடுகளில் அவர்கள் தங்கியிருப்பதற்கு அவர்களுக்கு அகதி அந்தஸ்த்து தேவை. அது இலங்கையில் நடைபெறும் முடிவுறாத யுத்தத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த யுத்தம் அவர்களை நாட்டுக்குத் திரும்ப முடியாதிருப்பதை உறுதி செய்கின்றது.

கேள்வி: இனிமேல் இலங்கையில் என்ன நடக்கும்?
வ.பெ: தமிழர்கள் ஜனநாயகப் பாதையில் முன்னேறிச் செல்வதற்கான முக்கியமான தடங்கல் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட்ட விடுதலைப்புலிகளின் படுகொலையுடன் அகற்றப்பட்டுவிட்டது. ஜனநாயகத்தை விரும்பும் தலைமைகள் இப்போது அங்கு சென்று தங்கள் மக்கள் மத்தியில் எந்த இடையூறும் இன்றி பணிபுரியக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

கேள்வி: ஆனால் இலங்கை அரசாங்கத்தின் குறிக்கோள் என்ன? விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தில் அவர்கள் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லவா?
வ.பெ: இலங்கை அரசின் குறிக்கோளும் அவர்களின் மனித உரிமை மீறல்களும் சந்தேகத்திற்கிடமில்லாமல் முக்கியமானவைதான். ஆனால் முதன்மையான விடயம் தமிழர்களின் பிரச்சினை. இன்றுவரை தமிழர் பிரச்சினையானது பிரிவினை என்ற பதாகையின் கீழ் விடுதலைப்புலிகளினால் திசைதிருப்பப்பட்டிருந்தது.
பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு பிரிவினை அல்லது தனியாகப் போதல், அதாவது ஈழம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்பது தெரியும். ஆனால் அவர்கள் எல்லோரும், விடுதலைப்புலிகள் போராடி சிங்களத் தலைமைகளிடம் இருந்து தங்களுடைய கோரிக்கைகளைப் பிடுங்கித் தருவார்கள் என்று நினைத்தார்கள். எப்படி இருப்பினும் விடுதலைப்புலிகளால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இன்னும் விளக்கமாகச் சொன்னால், தமிழ்த்தலைமைகளை படுகொலை செய்ததன் மூலம் எந்தத் தமிழத் தலைமை உருவாவதையும் தடைசெய்தது. விடுதலைப்புலிகளுடன் அணிசேராத எந்தவொரு அமைப்பபையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.

கேள்வி: ஈழம் சாத்தியமற்றது என்று சொல்கின்றீர்களா?
வ.பெ: தனியே பிரிந்து போவதற்கான போராட்டம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் மறைந்து விட்டது. விடுதலைப்புலிகள் ரெலோ அமைப்பை 1986இல் தாக்கி அழித்தபோது பிரிவினைக்கான இயக்கம் அகால மரணத்தைத் தழுவியது.

கேள்வி: ஆனால் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு தடவை ஈழத்திற்கான கோரிக்கை எழமாட்டாதா?
வ.பெ: விஷயம் என்னவென்றால், தமிழ்மக்கள் ஒரு சுயாட்சி முறையை அனுபவிக்கின்ற ஒரு அரசியல் சூழலை சிங்களத் தலைமைகள் உருவாக்காமல் இருந்தால் தமிழ் மக்களுடைய போராட்டம் தொடரும்.

கேள்வி: இனி வரும் காலங்களில் தமிழர்களின் போராட்டம் வன்முறை சார்ந்து இருக்குமா அல்லது ஒரு அகிம்சைப் போராட்டமாக இருக்குமா?
வ.பெ: எதிர்காலத்தில் அநேகமாக வன்முறை சாராத அகிம்சைப் போராட்டமாகத்தான் இருக்கும். நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் எற்கனவே வன்முறை சார் போராட்த்தின் அனுபவங்களைக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை சிங்கள மக்கள் புரிந்து கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் அறவழியிலான போராட்டம் மட்டுமே வழிவகுக்கும்.

கேள்வி: 1990ம் ஆண்டு தொடக்கம் 1998ம் ஆண்டு வரை நீங்கள் முதலமைச்சராக இருந்திருக்கின்றீர்கள்? தமிழ்ப்பகுதிகளுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயத்தில் உங்கள் அனுபவம் எப்படியானது?
வ.பெ: அந்த நேரத்தில் பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்தார். ஜனாதிபதி ஜயவர்த்தனா பதவியில் இருந்த காலத்தில், 13வது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது. அது அதிகாரப் பகிர்வு தொடர்பான செயன்முறையைத் தடுத்தது. இந்த 13வது திருத்தச் சட்டம் நிறைய போதாமைகளைக் கொண்டுள்ளது. அதில் அதிகாரங்களுக்கான பற்றாக்குறை உள்ளது. அது ஒரு நல்ல சட்டமல்ல. அதில் தவறான அர்த்தப்படுத்தல்களுக்கு நிறைய இடம் இருக்கின்றது. அதேவேளை இது 1987இன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கும் அதிகாரப் பகிர்விற்கும் எதிராக இருந்தது. அந்த நேரம் அதிகாரப் பரவலாக்கத்தை அமுல்படுத்துவதற்கு எந்தச் சிங்களத் தலைமையும் அக்கறை காட்டவில்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் முதலமைச்சர்கள் இயங்கியது போன்று நிலைமை அந்தக் காலப் பகுதியில் எனக்கு அங்கு இருக்கவில்லை. எல்லா அதிகாரங்களையும் கொண்ட முதலமைச்சராக நான் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிகாரப் பகிர்வுக்காக போராடுகின்ற முதலமைச்சராகத்தான் நான் இருந்தேன்.
எப்படி இருப்பினும் நேர்மையாகச் செயற்படும் ஒரு ஜனாதிபதி இருந்தால், அவரால் 13வது திருத்தச் சட்டத்தை அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தக் கூடிய விதத்தில் அர்த்தப்படுத்த முடியும். ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலத்தில் ஒரு புதிய அதிகாரப் பகிர்வுப் பொதி முன்வைக்கும் நோக்கம் இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒரு கூட்டாட்சி அமைப்புமுறையை ஏற்றுக் கொண்டிருந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் 13வது திருத்தச் சட்டத்தை அதிகாரப் பகிர்வினைக் கொண்டு வருவதற்குப் பாவிக்க முடியும். உண்மையில், ஒரு தீர்வுப்பொதிக்கான சாத்தியத்தைக் காணுமாறு விஞ்ஞான தொழில்நுட்பத்துறை அமைச்சர் திஸ்ஸவிதாரண அவர்கள் தலைமையில் ஒரு சர்வகட்சிகள் குழு ஒன்று ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டது.

கேள்வி: ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அதிகாரப்பகிர்வை அமுல்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
வ.பெ: நிச்சயமாக. எதுவும் இன்னும் முற்றுப் பெறவில்லை.

கேள்வி: இதில் இந்திய அரசாங்கம் என்ன மாதிரியான அனுகூலமான பாத்திரத்தை வகிக்க முடியும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள?
வ.பெ: இப்போது இலங்கை-இந்திய அரசுகளிற்கிடையில் நல்ல உறவொன்று இருக்கின்றது. இரண்டு அரசுகளும் தமிழ், சிங்கள, முஸ்லிம் தலைமைகளுடன் பேசி ஒரு ஒழுங்குக்கு வரவேண்டும். தமிழ்நாட்டுத் தலைமைகளும் இதில் கணிசமான பங்களிப்பை வழங்கும்படி பார்க்க வேண்டும.;

கேள்வி: பிரபாகரனின் மரணத்திற்குப் பின்னாக இப்போதிருக்கும் இந்தச் சூழலில், தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய பாதைகள் திறந்துவிடப்பட்டிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
வ.பெ: ஓம். வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப்புலிகள் தங்களுடைய வன்செயல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்வரை அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுதல் சாத்தியமற்றது என்று இன்றுவரை சிங்களத் தலைமைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சாக்குப் போக்கு இப்போது இல்லாமற் போய்விட்டது.
தனிப்பட்ட முறையில் நான் உணர்வது என்னவென்றால் சிங்களத் தலைமைகளுக்கும் தமிழ்நாட்டுத் தலைமைகளுக்கும் இடையில் ஒருவிதமான நம்பிக்கை வெகுவிரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும். அது நிச்சயமாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும்.

கேள்வி: விடுதலைப்புலிகளை அழிப்பதென்னும் பிரமாண்டமான ஒரு கடமையை எவ்வாறு மகிந்த ராஜபக்ச செய்து முடித்தார்? அவருக்கு முன்பிருந்தவர்கள் எல்லோரும் இந்த முயற்சியில் தோல்வியடைந்த பொழுது? நீங்கள் இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?
வ.பெ: ஜனாதிபதி ராஜபக்சவிற்கு விடுதலைப்புலிகளை அழிப்தென்பதே ஒரே குறிக்கோளாக இருந்தது. அவருக்கு முதல் இருந்த ஜனாதிபதி சந்திரிக்காவும் உண்மையிலேயே தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றும் சமாதானம் நிலவவேண்டும் என்றும் விரும்பிச் செயற்பட்டவர். ஆனால் அவர் பல்வேறு பிரச்சினைகளால் சூழப்பட்டிருந்தார்.
இன்னும் ஒரு விடயம், விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை.

கேள்வி: ஆனால் இந்திய அரசு இன்று இலங்கைத் தமிழர்களுக்கு முன்பிருக்கும் மனித அவலங்கள் பற்றிக் கவலை கொள்கின்றதா?
வ.பெ: இந்திய அரசாங்கம் இலங்கைத் தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையிலான சகல உதவிகளையும் வழங்குவதைச் சாத்தியப்படுத்துகின்றது. இந்த அலுவல் இந்தியாவினால் மட்டுமல்ல முழு சர்வதேச சமூகத்தினாலும் முன்னெடுக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த தமிழர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதிலும் அவர்களை மீள்குடியேற்றுவதில் பெருந்தன்மையாக இருக்கவேண்டும.;
கேள்வி: பிரபாகரனின் மரணத்துக்குப் பின்னர் இலங்கையில் பயங்கரவாதச் செயல்கள் ஊடுருவும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
வ.பெ: அது நீண்ட காலத்திற்கு இல்லை. இலங்கை அரசு கண்டிப்பாக இருந்தால் அப்படியான செயல்கள் நீண்ட காலத்திற்கு தொடர முடியாது.

கேள்வி: உங்களுக்கு பிரபாகரனை நீண்ட காலமாகத் தெரியும். நீங்கள் அவரை எப்படி விவரிப்பீர்கள்?
வ.பெ: அவர் உலகின் மிகப் பெரிய ஈவிரக்கமற்ற பயங்கரவாதத் தலைவர்களில் ஒருவர். அதேநேரம் அவர் அரசியல் ரீதியாக கோழைத்தனமுடையவர்.

கேள்வி: தயவுசெய்து எப்படி என்று சொல்லுங்கள்?
வ.பெ: அவர் எந்த ஒரு அரசியல்ரீதியான போட்டியையோ அல்லது விமர்சனங்களையோ எதிர்கொள்ளமுடியாதவராய் இருந்தார்.

கேள்வி: இன்று முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் 18வது ஆண்டு நினைவு தினம். அவர் பிரபாகரனின் கட்டளைப்படி 21.05.1991 இல் படுகொலை செய்யப்பட்டார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இப்போது பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட்டிருக்கின்றதென்று நீங்கள் சொல்வீர்களா?
வ.பெ: ஓம் நிச்சயமாக. ராஜீவ் காந்தி பத்மநாபா கேதீஸ்வரன் மற்றும் பிரபாகரனினால் படுகொலை செய்யப்பட்ட ஏனையோர்களின் நண்பர்களுக்கும் குடும்பங்களுக்கும் கடவுள் தீர்பு வழங்கி இருக்கிறார்.
நான் இன்று ராஜீவ் காந்தியுடனான என்னுடைய பழைய நினைவுகள் எல்லாவற்றையும் மீட்டுப் பார்க்கிறேன். ஏனெனில் அவர் இலங்கையுடனான உறவில் அக்கறையாக இருந்த அதேவேளை இலங்கைத் தமிழர்களின் அரசியல் ரீதியான நன்மைகளைக் கொண்டு வரவும் தனிப்பட்ட முறையில் தன்னை அர்ப்பணித்திருந்தார். இலங்கை, இந்திய மக்களுக்கு இவ்வளவு துன்னப்தைக் கொண்டு வந்த பிரபாகரனின் அழிவை இன்று ராஜீவ்காந்தி இருந்து பாரத்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

கேள்வி: இலங்கைத் தமிழர்கள் முன்னே உள்ள பணி என்ன?
வ.பெ: அவர்கள் அதிகாரப் பகிர்வைக் கொண்டு வருவதற்கான ஒரு இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துப் போராடக்கூடிய தலைமைகளை இப்போது கண்டடைய வேண்டும்.
[ஆங்கில மூலம்
மொழிபெயர்ப்பு: லக்ஷ்மி]

மீண்டும் டோண்டு ராகவன். எல்லாம் நடக்கிறபடி நடந்திருந்தால் 1987-ல் வந்த ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இன்னேரம் நன்கு வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் என்னும் ஆதங்கத்தை என்னால் அடக்க இயலவில்லை. இதை கெடுக்க பிரேமதாசாவுடன் சேர்ந்து புலிகள் போட்ட ஆட்டம் மறக்கக் கூடியதா என்ன? எல்லாம் ஒரு தனி மனிதனின் ஈகோவுக்காக பலி கொடுக்கப்பட்டது என்பதில் எனக்கு ஒரு ஐயமுமில்லை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

எங்கே பிராமணன் - பகுதி - 80

பகுதி - 80 (26.05.2009):
சிகாமணியும் அவர் மனைவி ஸ்ரீமதியும் அவரது அண்ணா நடேச முதலியார் வீட்டுக்கு வருகின்றனர். அவரது அண்ணி அதை தன் கணவரிடம் கூறி, வெளியே வந்து தம்பியுடன் பேசுமாறு கேட்டு கொள்கிறாள். முதலில் மிக தீவிரமாக மறுத்த நடேச முதலியார் பிறகு மனைவியின் பேச்சை தட்ட முடியாமல் வெளியே வருகிறார். தம்பியுடன் தனது குத்தலான பேச்சைத் தொடர, தம்பி அசாத்திய பொறுமை காட்டுகிறார். அதே சமயம் தனது மகன் கிரி கல்யாணத்துக்காக அவரை அழைக்க வந்த காரியத்திலும் கண்ணாக இருக்கிறார். அண்ணனுக்கு கோபம் இருக்கும் அதே தருணத்தில் தம்பி மேல் பாசமும் இருக்கிறது. அது வெளியே வருவதற்கு முன்னால் தன் தம்பி சாதி விட்டு திருமணம் செய்ததை எல்லாம் சாடி விட்டு, சாதியின் மகத்துவத்தை அவருக்கு புரிந்த வண்ணம் விளக்குகிறார்.

பொறுமையுடன் அடங்கும் சிகாமணியின் அன்புக்கு முன்னால் அவரும் தணிந்து போவது சீரியலில் நன்றாகவே காட்டப் பட்டுள்ளது. இருப்பினும் கடைசி ஷாட்டாக தனது நண்பர் சாரி என்னும் ஐயங்கார் ஸ்வாமியை குறிப்பிட்டு, அவர் நண்பராக இருந்தாலும் அதற்காக அவர் குடும்பத்துடன் எல்லாம் சமப்ந்தம் வைத்துக் கொள்ள இயலுமா என அவர் ஒரு பந்தை bowl செய்ய, பந்தை ஸ்லிப் வழியாக பவுண்டரிக்கு அடிப்பது போல அவருக்கும் தான் பத்திரிகை வைக்கவிருப்பதை குறிப்பிட்டு, அவ்வாறு செய்யலாமா என அண்ணாவிடம் பவ்யமாக கேட்க, அவரும், சாரி வீட்டில்தான் இருக்கிறார், அங்கு உடனே போனால் அவரை பார்க்கலாம் என கூறுகிறார். கடைசியில் தம்பியும் அவர் மனைவியுமாக அளிக்கும் தட்டை வாங்கி மனைவியிடம் தருகிறார்.

நீலகண்டன் அனுப்பிய கடிதத்தை வைத்து கொண்டு நாதனும் வசுமதியும் விவாதிக்கின்றனர். அசோக்கை அனுப்பி உமாவுடன் பேசி அவள் மனதை மாற்றி அவள் பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமண ஏற்பாட்டுக்கு ஒத்து கொள்ளுமாறு செய்ய நீலகண்டன் கடிதம் மூலமாக நாதனுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை எவ்வாறு எதிர்க்கொள்வது என நாதன் குழம்ப, வசுமதியோ தெளிவாகவே இக்கோரிக்கையை நிராகரித்தாள். அப்போது தன் கடிதத்துக்கான எதிர்வினை பற்றி அறிய நீலக்ண்டன் அங்கு வந்து சேர, நாதன் அவரிடம் இதெல்லாம் சரியாக வராது என தயக்கம் காட்டுகிறார். நீலகண்டன் வற்புறுத்த மெதுவாக ஒத்துக் கொள்கிறார். ஆனால் வசுமதி அங்கு வந்து வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசி விடுகிறாள். அசோக் வந்து உமாவுடன் பேசினால் மேலும் அதிக பிரச்சினைகள்தான் வரும் என்பதையும் அவள் விளக்குகிறாள். நீலக்ண்டன் மேலே வற்புறுத்தாமல் செல்கிறார்.

நடேச முதலியார் தனது நண்பர் சாரியார் வீட்டுக்கு வருகிறார். அவர் வீட்டில் அவருக்கு அதிதி போஜனம் நடக்கிறது. சாரியாரின் மகன் பார்த்தசாரதி மூளை வளர்ச்சி குறைவாக உள்ள ஒரு வாலிபன். குழந்தை மாதிரி தன் தந்தையிடம் சினிமா போக 50 ரூபாய் கேட்கிறான். அவர் தனது மகன் சுலோகம் எல்லாம் கூறுவான் என நடேச முதலியாரிடம் கூறி விட்டு விஷ்ணு சஹஸ்ரநாமம் அவனுக்கு நன்றாக பாடம் ஆகியுள்ளது என தான் கூறுவதை தானே நம்புகிறார்.

சோவின் நண்பர் விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி கேள்வி கேட்கிறார். அதை யார் எழுதியது என்ற கேள்விக்கு சோ அவர்கள் அது ஏற்கனவே இருந்ததாகவும், அதை வியாசர் உணர்ந்து பீஷ்மர் வாயால் யுதிஷ்டிரருக்கு சொல்ல வைத்தார் என கூறுகிறார். அம்பு படுக்கையில் பீஷ்மர் இருந்த நிலையில் அவரிடம் யுதிஷ்டிரருக்கு பாடம் சொல்ல பீஷ்மரை விட்டால் சரியான ஆள் கிடையாது என கிருஷ்ணர் கூற பீஷ்மர் உபதேசம் செய்ய ஆரம்பிக்கிறார். அவர் போதித்த பல விஷயங்களில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒன்று. அது முக்தியை தரக்கூடியது, செல்வம் அளிக்கக் கூடியது, பயத்தை போக்கக் கூடியது, பிறவிப் பெருங்கடனை நீக்கக் கூடியது என அதன் பெருமைகளை பற்றியும் சோ கூறுகிறார். விஷ்ணூ சஹஸ்ரநாமத்துக்கு மேல் இன்னும் மேலதிக பலன் அளிக்கக் கூடிய “நமோ வசிஷ்டாய..” என கம்பீரத் தொனியில் துவங்கும் ஒரு மந்திரத்தையும் சோ கூறுகிறார். ஆனால் அதன் பெயரை சொல்லவில்லை என்பதில் எனக்கு சற்று வருத்தம்தான்.

அதனால் என்ன, அந்த ஸ்லோகத்தை ஒரு அனானி நண்பர் அனுப்பியுள்ளார் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அந்த சுலோகம் இதோ:

நமோ வசிஷ்டாய மஹா வ்ரதாய
பராசரம் வேத நிதிம் நமஸ்யே
நமோஸ்து அனந்தாய மஹோரகாய
நமோஸ்து ஸித்தேப்ய இஹாஷயேப்ய:
நமோஸ்து ரிஷிப்ய: பரமம் பரேஷாம்
தேவேஷூ தேவம் வரதம் வராணாம்
ஸஹஸ்ரஷீர்ஷாய நம சிவாய
ஸஹஸ்ரநாமாய ஜனார்தனாய

பார்த்தசாரதிக்கு சாரியார் 50 ரூபாய் கொடுத்து அனுப்புகிறார். அவனும் குழந்தை மாதிரி “சாந்தாகாரம், புஜங்க சயனம்...” என விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஓரடியை உரக்கக் கூறிய வண்ணம் செல்கிறான். பிறகு அவர் நடேச முதலியாரிடம் அவர் தம்பி சிகாமணி தன் வீட்டுக்கு வந்து தன் மகன் கிரியின் திருமணத்துக்கு அழைத்ததை கூறுகிறார். அதில் அவ்வளவு சுவாரசியம் காட்டாத நடேச முதலியாருக்கு அவ்வாறு இருக்கலாகாது என மிருதுவாக போதிக்கிறார். என்ன இருந்தாலும் அவரது ஆசிகள் அவரது தம்பி மகன் திருமணத்துக்கு மிகவும் தேவை என அவர் வலியுறுத்துகிறார். நடேச முதலியார் மசிய மறுத்ததால் மேலே சாரியார் அவருக்கு பல விஷயங்களை கூறுகிறார். வைணவர்களில் ஒரு பிரிவினர் திருமலை நல்லான் சக்கரவர்த்தி என்னும் பெயரில் அழைக்கப்படுகிறவர்கள் எனக் கூறி மேலும் சொல்கிறார்: தாழ்ந்த சாதி என கருதப்பட்ட ஒருவன் மரணமடைய அந்திம சடங்கு செய்ய யாரும் கிடைக்காத நிலையில் ஒரு வைணவர் துணிந்து முன் வந்து அவனுக்கான அந்திமச் சடங்குகளை செய்ததை எடுத்துரைக்கிறார். அச்சமயத்தில் அவருக்கு சாதி முக்கியமாக படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

“யார் சார் இந்த திருமலை நல்லான் சக்கரவர்த்தி?” என சோவின் நண்பர் கேட்கிறார். சோ பதிலளிக்க தயாராகிறார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/26/2009

சோ அவர்களது செவ்வி தூண்டிய கஸாண்ட்ரா பற்றிய எண்ணங்கள்

சோ அவர்கள் ET-க்கு தந்த பிரத்தியேக நேர்காணலை பார்த்ததும் என்னுள் பல எண்ணங்கள் கிளர்ந்தெழுந்தன. பிரெஞ்சில் déjà vu என்ற ஒரு சொலவடை உண்டு. அதன் பொருள் ஏற்கனவே பார்த்தது என்று வரும். அதை கடைசியில் விளக்குகிறேன்.

கஸாண்ட்ரா (Cassandra) என்னும் பாத்திரம் ஹோமரின் இலியாடில் வரும். அது ட்ராய் மன்னன் ப்ரியாமின் பெண்ணின் பெயர். அவளது சகோதரர்கள்தான் பாரிஸ் மற்றும் ஹெக்டார். கிரேக்க ராணி ஹெலனை பாரிஸ் ஓட்டி வந்து விடுகிறான். அது ட்ராயின் பத்து ஆண்டுகால முற்றுகையில் உருவெடுத்து ட்ராய் நகரம் அழிவதற்கே வழிகோலுகிறது. இந்த கஸாண்ட்ராவால் எதிர்காலத்தைத் துல்லியமாகக் கூற இயலும் என்பது அவள் பெற்ற வரம். அதே நேரத்தில் அவள் கூறுவதை யாருமே நம்ப மாட்டார்கள் என்றும் அவளுக்கு செக் வைக்கப் படுகிறது.

ஹெலனை அழைத்துவரக்கூடாது, அவ்வாறு செய்தால் ட்ராய் அழியும் என்று அவள் கூறுகிறாள், யாருமே நம்பவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முடிவில் ஒரு மரக்குதிரையை மட்டும் விட்டு விட்டு கிரேக்கர்கள் ட்ராயிலிருந்து பாய் விரித்து கப்பலை செலுத்துவது போல போக்கு காட்ட, அந்த குதிரையை ட்ராயுக்கு உள்ளே இழுத்து வரலாகாது என்றும் அதே கஸாண்ட்ரா கூறுகிறாள். அப்போதும் யாரும் அவள் சொல்வதை லட்சியம் செய்வதில்லை. அப்புறம் என்ன ஆயிற்று என்பதை பார்க்க இலியாட் படிக்கவும். ஹெலன் ஆஃப் ட்ராய் என்னும் தலைப்பில் படமும் எடுத்துள்ளார்கள்.

இப்போது இக்கதையெல்லாம் ஏன் என கேட்கிறான் முரளி மனோஹர். விஷயத்துக்கு வருகிறேன்.

சோ சொன்ன பல விஷயங்கள் இப்போது ரொட்டீனாக பலிக்க ஆரம்பித்துள்ளன. முதலில் புலிகள் விஷயத்தைப் பார்ப்போம்.

புலிகள் வந்த நாள் முதலிலிருந்தே சோ அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் இல்லை என சொல்லி வந்தார். ஆரம்பத்தில் புலிகளை விரும்பிய பலருக்கு அவரை இதனால் பிடிக்காமல் போயிற்று. மற்ற காரணங்கள் இருந்தாலும் இதுவும் அதற்கு ஒரு முக்கிய காரணமே. இப்போது புலிகள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட நிலையில் அவர் சொல்லி வந்த உண்மைகள் பலருக்கு புரிய ஆரம்பித்துள்ளன. இந்திய தேர்தலில் புலிகள் பிரச்சினை பெரிய பங்கு வகிக்காது என்றார். அப்படியில்லை என பலர் சீன் காட்டினாலும் அவர் சொன்னதுதான் நடந்தது. ஒரு சராசரி தமிழக வாக்காளனுக்கு ஆயிரத்தெட்டு கவலைகள், ஆனால் அவற்றுள் புலிகள் உள்ளே வரவில்லை என்பதே நிஜம்.

அவர் மேலே சுட்டப்பட்டுள்ள செவ்வியில் சொன்னது போல இங்குள்ள சில விளிம்பு நிலை மனிதர்கள் வேண்டுமானால் ஏதேனும் போராட்டங்களில் ஈடுபடலாம், சிலர் தீக்குளிக்கும் அளவுக்குக்கூட போகலாம். ஆனால் அப்போராட்டங்கள் எல்லாமே மாநில அரசால் சுலபமாக அடக்கப்பட்டு விடும். ஏனெனில் அம்மாதிரியான போராட்டங்களுக்கு பொது மக்கள் ஆதரவு கிட்டாது. காரணம், அவர் ஏற்கனவேயே கூறி வந்ததைப் போல இது எப்போதுமே எந்த தேர்தலிலும் ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை, இப்போது முடிந்த தேர்தலிலும் கூட அதே நிலைதான். எதிர்க்கட்சிகள் கோஷம் போட சில வாய்ப்புகள் உண்டு, ஆனால் அதனால் எல்லாம் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதே யதார்த்தம்.

புலிகள் ஒடுங்கிய நிலையில் இங்குள்ள இளைஞர்கள் என்ன செய்வார்கள்? அவர்களது சக உணர்வு போராட்டங்களாக வெடிக்காதா எனக் கேட்டால், தமிழனுக்கு தமிழன் என்னும் அளவில் ஒரு ஈழத் தமிழனுடன் சக உணர்வு இருக்கும். ஆனால், கோபமுள்ள போராட்டமாக அவை மாற வாய்ப்பில்லை என்பதை மறுக்க இயலாது. புலிகளை பொருத்தவரை இங்குள்ள தமிழர்களுக்கு அவர்களுடன் சக உணர்வு இல்லை. ஒரு வேளை தேர்தலில் வெறுமனே பேசப்படும் பிரச்சினையாக வேண்டுமானால் அது பின்னால் அது உருவாகலாம், அவ்வளவே என சோ கூறுவதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

புலிகள் ஆதரவு தொல். திருமாவளவன் ஓரிடத்தில் ஜெயிக்கும் அதே நேரத்தில் இன்னொரு புலி ஆதரவாளர் வைக்கோ தோற்கிறார். இதுவும் சோ சொன்னதைத்தான் ஊர்ஜிதம் செய்தது.

புலிகளின் தோல்வியால் தமிழகத்துக்கு அகதிகள் வருவது அதிகரிக்கக் கூடும். ஆனால் அகதிகளுடன் அகதிகளாக எஞ்சியுள்ள புலிகளும் வராமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும். இலங்கை அரசும் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அவர் கூறுவது சரியே என நான் நினைக்கிறேன்.

கூட்டிக் கழித்து பார்த்தால் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை சரியாக நிறைவேற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்னும் பெருமூச்சு எழுவதை தடுக்கவியலாதுதான். ஏனெனில், தமிழர்களுக்கு அதிக அனுகூலங்களை அது தன்னுள் கொண்டிருந்தது. அதை கெடுத்தது புலிகளே. இதையெல்லாம் சோ அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே சொல்லி வந்திருக்கிறார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எது எப்படியானாலும் தனி ஈழம் என்பது எதிர்க்கத் தக்கதே. இலங்கையின் உள்ளே ஒரு தமிழ் மாநிலம், இருக்க வேண்டும், சிங்களவர்களுக்கு இருக்கும் அதே உரிமைகளோடு என்பதுதான் சரியாக அமையும் என சோ சொன்னது சரியே.

ஆகவே இந்திய அரசு தேவையானால் அழுத்தம் கொடுத்து ஸ்ரீ லங்கா அரசு ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என வற்புறுத்த வேண்டும். ஏனெனில், இந்தப் பிரச்சினைக்கு அடிப்படை காரணமே இலங்கை அரசுதான் என்பதையும் நம் மறக்கக் கூடாது. இதையெல்லாம் சோ சொல்வது, ஏற்றுக் கொள்ளத் தக்கதே.

மற்ற விஷயங்களைப் பார்ப்போம்.

வி.பி.சிங்கை எல்லோரும் கொண்டாடும் காலத்திலிருந்தே அவர் நம்பத் தகாதவர் என்பதை சோ வலியுறுத்தி வந்திருக்கிறார். அந்த மனிதர் செய்த சொதப்பல்களால் இந்திய அரசியலில் விளைந்த குழப்பங்கள், முக்கியமாக மண்டல் விஷய பிரச்சினைகள் இன்னும் நாட்டை பீடிக்கின்றன.

இந்தியாவை சோவியத் யூனியன் அடிமைபடுத்த முயற்சிக்கிறது என்பதை அவர் ஆதாரங்களுடன் எழுபதுகளிலேயே கட்டுரைகளில் எழுதியபோது பலர் அவரை நம்பத்தான் இல்லை. இருப்பினும் சோவியத் யூனியன் அழிந்ததும் வெளியான பல ஆவணங்கள் எவ்வாறு நம் நாட்டின் பல தலைவர்கள் சோவியத் யூனியன் பேச்சுக்கு தாளம் போட்டனர் என்பது தெரிந்து கொண்டபோதுதான் அவர் சொன்னதன் உண்மை பலருக்கு புலப்பட்டது.

என்ன செய்வது, கஸாண்ட்ரா சொல்லும்போது யாரும் நம்பவில்லை. உண்மை தெரிந்தபோது எல்லாமே டூ லேட் என ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் இம்மாதிரி நடப்பதை பார்த்தால் இந்த déjà vu எண்ணங்களை தவிர்க்க இயலாதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எங்கே பிராமணன் - பகுதி - 79

பகுதி - 79 (25.05.2009):
நீலகண்டன் வீட்டில் தன் பெற்றோருடன் உமாவின் வாக்குவாதம் தொடர்கிறது. தான் மேஜர் என முதலில் கூறும் உமா, அப்படி தன் பெற்றோர்கள் தான் அசோக்கை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என முடிவு செய்தால், தனக்கு கல்யாணமே வேண்டாம் என தன்னால் இருக்க முடியும் என்றும் கூறுகிறாள். அதனால் எல்லாம் அசராத நீலகண்டன் தான் நாதனிடம் அவரது ஆஃபீசிலேயே போய் பேசுவதாக சொல்லி கிளம்புகிறார். பெண்ணின் பயமுறுத்தலை அவர் சீரியசாக எடுத்து கொள்ளவில்லை.

அவ்வளவு பெரிய மனிதர்கள் நாதனும் வசுமதியும், அவர்களே வந்து பெண் கேட்கும்போது அதை ஏன் கோட்டை விட வேண்டும் என உமா கேட்டு விட்டு, அப்பாவின் செல்போனுக்கு கனெக்‌ஷன் தந்து அவரை திரும்ப அழைக்குமாறு அம்மாவிடம் கூறுகிறாள். பர்வதமும் போனில் பேசி நீலகண்டனை வீட்டுக்கே வரச்சொல்லி விடுகிறாள். உமா மகிழ்ச்சியடைகிறாள், ஆனால் அது நீடிப்பதில்லை. ஏனெனில் அதே மூச்சில் அன்று மாலை தாங்கள் இருவருமாக சேர்ந்து போய் சொல்வதே மரியாதையாக இருக்கும் என அபிப்பிராயப்படுகிறாள். உமா திகைக்கிறாள்.

கிருபா வீட்டில் அவன் மாமனார் ஜட்ஜ் தன மகள் பிரியாவுடன் பேசி கொண்டிருக்கிறார். அன்று மாலை அவள் அன்னை அவளை பார்க்க வருவாள் என அவர் கூறுகிறார். சேர்ந்து வந்திருக்கலாமே என பிரியா கூற, அவள் அன்னை மஹிலா மண்டலி வேலையாக வெளியே சென்றிருப்பதாகவும், மாலை தனக்கு முக்கியமான மீட்டிங் இருப்பதாகவும் கூறுகிறார். அது என்ன மீட்டிங் என பிரியா கேட்கிறாள். பால்ய விவாகம் ஒன்று கும்பகோணத்தில் நடந்ததாகவும் அது சம்பந்தமான கேஸ் தன் முன்னால் வந்துள்ளதாகவும், அது பற்றிய பல விவரங்கள் தெரிந்து கொள்ளவே மீட்டிங்கிற்கு போகப் போவதாகவும் கூறுகிறார்.

“இது என்ன சார் பால்யவிவாகம், சின்ன பசங்களை அவங்களுக்கு விவரம் தெரியறதுக்கு முன்னாலேயே கல்யாணம் பண்ணித் தருவது? இதில் சென்ஸே இல்லையே” என சோவின் நண்பர் அங்கலாய்க்கிறார். சென்ஸ் இல்லைன்னு நண்பர் சொல்வதாலேயே அதில் ஒரு சென்ஸ் இருந்ததை சுட்டிக்காட்ட முற்படுகிறார் சோ. பால்ய விவாகம் தற்காலத்துக்கு ஒத்து வராது, முக்கியமாக இளம் விதவைகள் பிரச்சினை என ஒத்து கொள்கிறார் சோ அவர்கள். அதே சமயம் அது சமூகத்தில் புகுத்தப்பட்ட நாட்களில் அது ஒரு சென்சிபிளான நோக்கத்திலேயே நடந்தது எனவும் கூறுகிறார். அதாவது 25 வயதுக்கு மேல் ஒரு பென்ணை திருமணம் செய்து வைக்கும் நேரத்தில் அவள் தன் பிறந்தகத்து பழக்க வழக்கங்களில் அப்படியே ஊறிவிடுகிறாள். பிறகு புகுந்த வீட்டுக்கு சென்று முற்றிலும் மாறுபட்ட வழக்கங்களை கடைபிடிக்கும் காலக் கட்டத்தில் மனத்தளவில் பல இடையூறுகள் ஏற்பட்டு பல டென்ஷன்களுக்கு வழி வகுக்கிறது. இவை எல்லாமே பெண்ணை சிறு வயதில் மணம் செய்து தரும்போது ஏற்படாது, ஆகவே பால்ய விவாகத்தில் இந்த விஷயத்தில் சென்ஸ் இருந்தது என சோ சொல்கிறார்.

நாதன் வீட்டில் நீலகண்டன், வசுமதி மற்றும் நாதன் பேசுகின்றனர். அசோக் உமா திருமண சம்பந்தத்திற்கு நீலகண்டன் சம்மதித்ததாக நினைத்து முதலில் மகிழ்ச்சி அடைகிறார் நாதன். ஆனால் அப்படியில்லை என நீலகண்டன் நாசுக்காக தெரிவிக்க்க நாதன் புரிந்து கொண்டு அதை வசுமதிக்கும் தெரிவிக்கிறார். மனதுக்குள் எழுந்த மகிழ்ச்சியை மறைத்து கொண்டு வசுமதி தான் ரொம்ப ஏமார்றம் அடைந்தது போல பேசுகிறாள். நாதனுக்கு நிஜமாகவே ஏமாற்றம் இருப்பினும் சுதாரித்து கொள்கிறார். வழ்க்கம் போல நீலகண்டன் தன் வீட்டுக்கு போகவர இருக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறார். உமாதான் இன்னும் பிரச்சினை செய்வதாக நீலகண்டன் குறைபட்டு கொள்கிறார். அதுவும் தனது தவறாலேயே என நாதன் மீண்டும் வருந்துகிறார்.

நாதன் அசோக்குடன் இது சம்பந்தமாக பேசுகிறார். இந்த வீட்டில் நடப்பது என்னவென்று அவன் அறிவானா என அவர் கேட்க, ஏற்கனவே குப்பை போல பல விஷயங்கள் மனதை ஆக்கிரமிக்கும்போது மேலும் விஷயங்களை தான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என அசோக் திட்டவட்டமாகக் கூறுகிறான். அவனை உலக வாழ்க்கைக்கு திருப்ப உமா அசோகை தனக்கு மணமுடித்து தருமாறு கேட்டது தெரியுமா என நாதன் கேட்க, அவன் தெரியாது என்கிறான். அதே போல வசுமதி நீலகண்டன் வீட்டிற்கு போய் உமாவை அசோக்குக்காக பெண் கேட்டது, அவர்கள் மறுத்தது ஆகிய எதுவுமே தெரியாது என மறுக்கிறான். அதே சமயம் உமா அசோக்கை மணமுடிக்க பிடிவாதம் காட்டுகிறாள் என நாதன் கூற, அசோக் அது வெறும் infatuation, அவள் வயதுக்கு வருவது புரிந்து கொள்ளக் கூடியதே என கூறிவிடுகிறான். தனக்கு உமாவை மட்டுமல்ல, வேறு எந்த பெண்ணையுமே மணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்பதையும் வெளிப்படையாகவே கூறுகிறான்.

இனிமேல் இங்கே உமா வரமாட்டாள் என நாதன் கூற, ஏன் அவளை தடுக்க வேண்டும், அவள் பாட்டுக்கு வந்து போய் கொண்டிருக்கட்டுமே என அசோக் கூறுகிறான். அசோக்கும் அவளை போய் பார்க்கக் கூடாது என நாதன் கூற, தான் அவ்வாறு செய்யப் போவதில்லை எனவும் அவன் கூறுகிறான். அதே சமயம் நாதனிடம் மேலும் கூறுகிறான். முதலில் உமாவின் உதவி கேட்டு லெட்டர் எழுதியது முதல் தவறு, தன்னை அவளுக்கு மணமுடிப்பதாக வாக்களித்தது இரண்டாம் தவறு, அவள் வீட்டுக்கு போய் பெண் கேட்டதோ எல்லாவற்றையும் விட மிகப் பெரிய தவறு என அவன் அடுக்க, நாதன் திகைக்கிறார். எல்லா விஷயங்களும் தெரிந்தும் அவன் ஏன் ஒன்றும் தெரியாது மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என அவர் திகைக்கிறார்.தனக்கு இது தேவை இல்லாததாலேயே தனக்கு ஏன் இந்த விவகாரம் என த்ள்ளியிருந்ததாகவே அவன் கூறுகிறான். முதலில் தன் மேல் லேசான அபிப்பிராயம் உமாவுக்கு இருந்திருக்கலாமென்றும், அதை ஊதி ஊதி பெரிதாக்கியது பெரியவர்கள் தவறு என்றும், இப்போது வெறும் சாதாரண தீப்பொறி பெரிய எரிமலையாக உருவெடுத்துள்ள நிலையில் அவர்கள் அதை வெறுமனே ஊதி அணைக்க விரும்புகின்றனர், முடிந்தால் ஊதுங்கோ அப்பா, ஊதுங்கோ எனவும் கூறுகிறான்.

உமா வீட்டில் நீலகண்டன் அவளுக்கு வரன் பார்க்க பேப்பரில் விளம்பரம் தந்திருக்கிறார். அதை அறிந்த உமா கோபப்படுகிறாள். தான் நர்சிங் படிக்கப் போவதாகவும், ஆஸ்திரேலியாவில் வேலை செய்யப் போவதாகவும் கூறும் அவள் எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன என சொல்கிறாள்.

நீலகண்டன் நாதன் செய்ததையே தானும் செய்யப் போவதாகக் கூறி நாதனுக்கு ஒரு கடிதம் எழுதி, அதை தங்கள் பிள்ளை ராம்ஜியிடம் கொடுத்து, நாதன்வீட்டில் கொடுத்து விடுமாறு பர்வதத்திடம் கூறுகிறார். பர்வதம் கடிதத்தை படிக்கிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/25/2009

இலங்கை பிரச்சினை பற்றி சோவுடன் நேர்காணல் - 19.05.2009

சோ அவர்கள் ET-க்கு தந்த பிரத்தியேக நேர்காணலில், அவர் ஸ்ரீலங்காவின் லேட்டஸ்ட் நிகழ்வுகள், தமிழகத்தில் அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்பு, ஸ்ரீ லங்காவின் தமிழர்களுக்கு வந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக இந்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள் ஆகியவை பற்றி விவாதிக்கிறார். அதன் சுட்டியை எனக்கு அனுப்பிய நண்பர் சந்திரசேகருக்கு நன்றி. நேர்காணலுக்கு செல்வோமா?

தமிழக தேர்தலில் ஒரு பிரச்சினையாக காணப்பட்ட ஸ்ரீலங்கா யுத்தத்தின் முடிவு இப்போது தமிழகத்தில் எம்மாதிரியான எதிர்வினைகளை கொண்டு வரும் என எண்ணுகிறீர்கள்?
இங்குள்ள சில விளிம்பு நிலை மனிதர்கள் சில போராட்டங்களில் ஈடுபடலாம், சிலர் தீக்குளிக்கும் அளவுக்குக்கூட போகலாம். ஆனால் அப்போராட்டங்கள் எல்லாமே மானில அரசால் சுலபமாக அடக்கப்பட்டு விடும். ஏனெனில் அம்மாதிரியான போராட்டங்களுக்கு பொது மக்கள் ஆதரவு கிட்டாது. நான் ஏற்கனவேயே கூறி வந்ததைப் போல இது எப்போதுமே எந்த தேர்தலிலும் ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை, இப்போது முடிந்த தேர்தலிலும் கூட அதே நிலைதான். எதிர்க்கட்சிகள் கோஷம் போட சில வாய்ப்புகள் உண்டு, ஆனால் அதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை.

இங்குள்ள இளைஞர்கள் என்ன செய்வார்கள்? அவர்களது சக உணர்வு போராட்டங்களாக வெடிக்காதா?
தமிழனுக்கு தமிழன் என்னும் அளவில் சக உணர்வு இருக்கும். ஆனால், கோபமுள்ள போராட்டமாக அவை மாற வாய்ப்பில்லை. புலிகளை பொருத்தவரை இங்குள்ள தமிழர்களுக்கு அவர்களுடன் சக உணர்வு இல்லை. ஒரு வேளை தேர்தலில் பேசப்படும் பிரச்சினையாகலாம் ஆனால் கட்சிகள் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் அளவுக்கு அது போகாது.

அரசியல் பக்கத்தைப் பார்ப்போம். புலிகள் ஆதரவு தொல். திருமாவளவன் ஓரிடத்தில் ஜெயிக்கும் அதே நேரத்தில் இன்னொரு புலி ஆதரவாளர் வைக்கோ தோற்கிறார். இது எதை காட்டுகிறது?
அதான் சொன்னேனே, புலிகள் ஒரு தேர்தல் பிரச்சினயாக பார்க்கப்படவேயில்லை என. அவர்கள் ஆதரவாளர் என்ற ஒருவரை தேர்ந்தெடுப்பதோ அதே காரணத்துக்காக நிராகரித்ததோ இங்கு நடக்கவில்லை, அவ்வளவுதான்.

புலிகளின் தோல்வியால் தமிழகத்துக்கு அகதிகள் வருவது அதிகரிக்குமா? இதில் பார்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?
ஸ்ரீலங்கா ராணுவம் அவர்களை கொடுமையாக நடத்தினால் இங்கு அகதிகள் வரும் வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் அகதிகளுடன் அகதிகளாக புலிகளும் வராமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும். அங்கும் பல சிவிலியன்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு சென்றுள்ளனர், அவர்களில் எத்தனை புலிகள் அடங்குவர் என்பதை நான் அறியேன். ஆயுதங்களை பிற்கால உபயோகத்துக்காக எங்காவது புதைத்து வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம். ஆகவே இலங்கை அரசும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இப்பிரச்சினைக்கு தீர்வாக எதை காண்கிறீர்கள்?
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழர்களுக்கு அதிக அனுகூலங்களை அது தன்னுள் கொண்டிருந்தது. அதை கெடுத்தது புலிகளே. மெதுவாக ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பு அங்கு உருவாக வேண்டும்.

தனி ஈழம் அமைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
தனி ஈழம் என்றால் இலங்கையை துண்டாட வேண்டும். அதற்கு நான் எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்தவன். இலங்கை துண்டாடப்பட வேண்டும் என்பது எனது ஆலோசனை அல்ல. இந்தியர்களும் அதை கோரக்கூடாது. இலங்கையின் உள்ளே ஒரு தமிழ் மாநிலம், சிங்களவர்களுக்கு இருக்கும் அதே உரிமைகளோடு என்பதுதான் சரியாக அமையும்.

இந்தியா இப்போது என்ன செய்ய வேண்டும்?
இந்திய அரசு தேவையானால் அழுத்தம் கொடுத்து ஸ்ரீ லங்கா அரசு ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற செய்ய வேண்டும். படைகளை அனுப்பக் கூடாது. இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணமே இலங்கை அரசுதான். அவர்கள் தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தியதே இதற்கெல்லாம் காரணம். அதனால்தான் தீவிரவாதமும் தலை தூக்கிற்று. ஆனால் பிரச்சினையை மேலும் எடுத்து பெரிதாக்கியது பிரபாகரனே. தமிழ் தலைவர்கள் மற்றும் மக்களை கொன்று குவித்து அவரே பிரச்சினையாகிப் போனார்.


மீண்டும் டோண்டு ராகவன். இந்த நேர்காணலின் சுட்டியை எனக்கு அனுப்பிய நண்பர் சந்திரசேகரனுக்கு மீண்டும் நன்றி.

இத்தருணத்தில் எனது நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.05.2009 பதிவில் நான் எழுதிய இந்த வரிகளை இங்கு மீண்டும் தருகிறேன்.

“அவர் (பிரபாகரன்) இருக்கிறார் என்கிறார்கள், இல்லை என்கிறார்கள். இன்னும் அறிக்கை போர்கள் விடாமல் நடக்கின்றன. இதுவரை நம்பகத்தன்மை கொண்ட பத்மநாதன் துரோகி என்கிறார் வைக்கோ. என்ன நடக்கிறது இங்கே? ஸ்ரீலங்கா அரசை பொருத்தவரை அவர் இறந்து விட்டார் எனக் கூறி விட்டது. போட்டோக்களையும் காட்டியது, உடலையும் எரித்து விட்டது. அதை பொருத்தவரை தீர்ந்தது விஷயம். அதே சமயம் புலிகள் தரப்பு இன்னும் ஒத்துக் கொள்ளாதது அவ்வரசுக்குத்தான் சாதகமாக முடியும்.

ஏனெனில் இதை வைத்து எஞ்சி இருக்கும் தமிழர்களை சந்தேகத்தின் பார்வையில் வைக்க இயலும். வீரம் பேசும் நேரம் இதுவல்ல”.


அன்புடன்,
டோண்டு ராகவன்

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.05.2009

பிரபாகரன் - தொடரும் மர்மங்கள், இன்னும் செய்ய வேண்டியவை என்ன?:
அவர் இருக்கிறார் என்கிறார்கள், இல்லை என்கிறார்கள். இன்னும் அறிக்கை போர்கள் விடாமல் நடக்கின்றன. இதுவரை நம்பகத்தன்மை கொண்ட பத்மநாதன் துரோகி என்கிறார் வைக்கோ. என்ன நடக்கிறது இங்கே? ஸ்ரீலங்கா அரசை பொருத்தவரை அவர் இறந்து விட்டார் எனக் கூறி விட்டது. போட்டோக்களையும் காட்டியது, உடலையும் எரித்து விட்டது. அதை பொருத்தவரை தீர்ந்தது விஷயம். அதே சமயம் புலிகள் தரப்பு இன்னும் ஒத்துக் கொள்ளாதது அவ்வரசுக்குத்தான் சாதகமாக முடியும்.

ஏனெனில் இதை வைத்து எஞ்சி இருக்கும் தமிழர்களை சந்தேகத்தின் பார்வையில் வைக்க இயலும். வீரம் பேசும் நேரம் இதுவல்ல. ஹிட்லர் இன்னும் இறக்கவில்லை, நேச நாடுகளுக்கு எதிராக இன்னும் கொரில்லா போராட்டம் நடத்தலாம் என்ற நோக்கில் ஒரு சிறுமுயற்சி நடந்ததாகவும் ஆனால் ஜெர்மானிய பொதுமக்கள் அதற்கு மசியாததால் அது சீக்கிரமே பிசுபிசுத்து போயிற்று என்றும் படித்திருக்கிறேன். இப்போது தேவை புனரமைப்பு முயற்சிகளே. ஸ்ரீலங்கா அரசு வெற்றி பெற்ற நிலையில் அதன் கடமை மிக அதிகம்.

அமெரிக்கா தனது மார்ஷல் திட்டத்தில் பழைய அச்சு நாடுகளையும் சேர்த்து கொண்டது ராஜதந்திரச் செயல். மேற்கு ஜெர்மனி நேட்டோவில் மிக பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்தது. அதுவே ரஷ்யா கிழக்கு ஜெர்மனியை சுரண்டி அதன் வளங்களை தன் நாட்டுக்கு கொண்டு போயிற்று. ஆகவே சோவியத் யூனியன் வீழ்ந்தபோது அதற்காக கிழக்கு ஜெர்மானியர் சொட்டுக் கண்ணீர் கூட வடிக்கவில்லை.

அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிந்ததும் தென் மாநில மிலிட்டரி கமாண்டர்களை லிங்கன் அரசு கௌரவமாகவே நடத்திற்று. இப்போது கூட தென் மாநிலங்களில் தெற்கில் உள் நாட்டு யுத்தத்தை நடத்தியவர்கள் பிறந்த நாள்/நினைவு நாள் ஆகியவை விடுமுறைகளாக அறிவிக்கப்படுகின்றன. அமெரிக்க வெளியுறவு மந்திரி அட்லாய் ஸ்டீவன்ஸன் ஒரு படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தாராம். அதில் ஓரிடத்தில் உங்கள் மூதாதையர் யாராவது அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளனரா என கேள்வி இருந்ததாம். ஸ்டீவன்ஸன் சிறிதும் தயங்கவில்லையாம். “எனது தாய்வழி/தந்தைவழி பாட்டனார்கள் என்று உள்ளிட்டாராம். அதனால் அவருக்கு ஒரு பாதகமும் இல்லை என்பதுதான் நிஜம்.

வலைப்பூவில் விட்ஜட்டுகள் பொருத்தும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்:
இப்போதுதான் NTamil.com widget களை தத்தம் வலைப்பூவில் பொருத்தி கொண்டவர்கள் சந்தியில் நின்றார்கள். அவர்களது பக்கங்களுக்கு போனாலே அது மால்வேர் கொண்டது என கூகள் குரோமும் நெருப்பு நரியும் எச்சரிக்க, வேகவேகமாக அப்பக்கங்களை மூடினோம். இண்டெனெட் எக்ஸ்ப்ளோரரோ சுத்தம், வார்ணிங் எதுவும் தரவில்லை ஆகவே பலரது கணினிகள் பாதிக்கப்பட்டன. ஒவ்வொன்றாக வைரஸுடன் கூடிய வலைப்பூக்கள் திரும்பப் பெறாத அளவுக்கு மூடப்பட்டன. இப்போது ஒருமாதிரி அசௌகரியமான சமநிலை உருவாகியுள்ளது என நினைக்கிறேன். இதிலிருந்து நான் பெற்ற பாடங்கள் பின்வருமாறு:

1. குடுகுடுவென எல்லா விட்ஜட்டுகளையும் பொருத்தி கொள்ளலாகாது. 2. இணையத்தில் என்ன புது ஆஃபர் வந்தாலும் உடனே போய் விழக்கூடாது. 3. இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரை பாவிக்கவே கூடாது. அது பாட்டுக்கு எங்காவது ஓரமாக கிடக்கட்டும். அதை சீந்தாதீர்கள். நமக்கு நெருப்பு நரி அல்லது கூகள் க்ரோம்தான் பாதுகாப்பானது. 4. அவ்வப்போது உலாவிகள் பாவிப்பதால் உருவாகும் தற்காலிக கோப்புகள், குக்கீஸ் ஆகியவற்றை அழித்துக் கொண்டே இருக்கவும். 5. மால்வேர்களை இனம்காண உதவும் Ad aware போன்ற கருவிகளை நிறுவி தினம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்து கொள்ளவும். 6. AVG போன்ற antivirus நிரலிகளை நிறுவி அவற்றை அப்டேட் செய்த வண்ணம் இருக்கவும். தினசரி ஒருமுறை முழு கணினியையும் ஸ்கேன் செய்ய வேண்டும்.

நான் மேலும் பாவிக்கும் முன்சாக்கிரதை நடவடிக்கைகள்:
போலி டோண்டுவால் பல தொல்லைகள். இருப்பினும் என்னை பலவிஷயங்களுக்கு தயார் செய்தது இந்த விவகாரமே. கூகள் டாக்கில் அவனது கூட்டாளி (தலையில் முக்காடு போட்ட ஒரு உருவம் அவரது ஐக்கான்) ஒருவர் அடிக்கடி ‘நட்பு கொள்ள விரும்பி’ வருவார். அவர் பெயரைப் பார்த்ததுமே முடியாது என டிக் செய்து விடுவேன். அப்படியும் ஐந்து முறைகள் வந்தார். அதே போல யாஹூ மெசெஞ்சரில் ஒருவன் தன்னை பிருந்தா என்னும் 13 வயது பெண் என சொல்லிக் கொண்டு வந்தான். என்னதான் செய்கிறான் என பார்த்தேன். “அப்பெண்ணின்” பேச்சு சற்றே விரசமான எல்லைக்கு சென்றது. பேசாமல் ஆஃப் செய்தேன்.

அமெரிக்காவில் இம்மாதிரி சிறுமிகள் பெயரில் பெண்போலீசார் சேட் செய்து சம்பந்தப்பட்ட ஆணை ஓரிடத்துக்கு வரச் செய்து விடுவார்கள். பிறகு என்ன சங்குதான். அங்கெல்லாம் இக்குற்றத்துக்கு தண்டனை பல ஆண்டுகள் பரோலே இல்லாத சிறை. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லையே என கூறலாம். யார் கண்டது, என்னை கன்னாபின்னாவென்று பேச செய்து விட்டு “பாரீர் டோண்டு ராக்வனின் யோகியதையை” என்று கூட பதிவுகள் ஏதேனும் போட்டிருக்கலாம். தேவையா அது எனக்கு? ஆகவே அந்த சேட்டில் ரொம்பவும் பொதுவான விஷயங்களை பேசினேன். அதற்கு எனது இந்த உள்ளுணர்வே காரணம்.

போலி டோண்டு விவகாரம் சம்பந்தமாக சைபர் கிரைமில் உதவி ஆய்வாளருடன் பேசியபோது அவரும் நான் இந்த நிகழ்ச்சியை கூறி எனது சந்தேகங்களை கூறியபோது அவை உண்மையாக இருக்கும் சாத்தியக் கூற்றை ஊர்ஜிதம் செய்தார். மின்னஞ்சலில் தெரியாதவர்கள் தரப்பிலிருந்து வரும் மின்னஞ்சல்களை திறக்காமல் அழிப்பதே உத்தமம். அப்ப்டியே திறந்தாலும் அட்டாச்மெண்ட் கோப்புகளை திறக்கவே கூடாது. அப்படி ஏதேனும் செய்து தொலைத்தால் உங்கள் கணினி வன்தகட்டில் உள்ள விஷயங்கள் மற்றவருக்கு போய் சேரும் அபாயம் உண்டு. முக்கியமாக phishing மின்னஞ்சல்களை அடையாளம் காண வேண்டும். திடீரென் நீங்கள் பல மில்லியன் பவுண்டுகள் லாட்டரியில் ஜெயித்ததாக மின்னஞ்சல் வந்தால் அதை தாட்சண்யமே இல்லாமல் அழிக்க வேண்டும்.

இப்போது என்ன ஆயிற்றென்றால் ட்விட்டர், ஃபேஸ்புக், ஆர்க்குட் போன்ற சோஷல் நெட்வொர்க்குகள் எனக்கு அலர்ஜியாகி விட்டன. அவை சம்பந்தமான எந்த மின்னஞ்சல் வந்தாலும் அதை ஜிமெயில் ஆர்கைவ்சில் போட்டு விடுகிறேன், ஆளை விடுங்கள் என்று. ப்ரோஸ். காம் மூலம் வரும் தொடர்புகள் எனது மொழிபெயர்ப்பாளருக்கான தொழில்முறை வாழ்க்கைக்கு எதேஷ்டம். இருக்கவே இருக்கிறது எனது தமிழ் வலைப்பூ. மீதி எதுவும் இப்போதைக்கு தேவையில்லை என்று நிம்மதியாக இருக்கிறேன். தொடர்புகள் தேவை என்றால் வலைப்பதிவர் சந்திப்புகள் இருக்கவே இருக்கின்றன.

வால்பையன் மூலம் கற்ற ஒரு விஷயம்:
நேற்று வால்பையனிடமிருந்து ஒரு ஃபோன். Kerchiefக்கு ஸ்பெல்லிங் கேட்டார். சொன்னேன். அது பிரெஞ்சு வார்த்தையா என கேட்க, முதலில் இருக்கவே முடியாது என கூறினேன், ஏனெனில் பிரெஞ்சில் சாதாரணமாக் k யில் வார்த்தைகள் துவங்காது. பிறகு எதற்கும் பார்த்து விடுவோம் என கூகளிட்டால் அது couvre-chef (head cover) என்னும் பிரென்சு சொல்லின் மருவிய உருவமாம். தலையை மூடும் துணி என்று பொருள். மறுபடியும் அவரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். இதை நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்தில் போடச் சொல்லி கேட்டு கொண்டார். போட்டு விட்டேன். ஓக்கேதானே வால்பையன்? என் பேத்திக்கு என் அன்பை தெரிவிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/24/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 77 & 78

பகுதி - 77 (21.05.2009):
உமா அசோக்கிடம் தான் அவனுடன் வந்து பழகியதின் பின்புலனை விவரிக்க, விஸ்வாமித்திரரை மயக்க மேனகையை அனுப்பியது போல உன்னை அனுப்புகிறார்களா என அவன் கூறுகிறான்.

“இந்த மேனகா கதையை நானும் கேள்விப்பட்டிருக்கேன், அது என்ன சார் கதை” என சோவின் நண்பர் குழந்தை மாதிரி கேட்கிறார். சோ பேசுகிறார். “சாதாரணமாக நமக்கு தெரிந்த மேனகா விவரங்கள் எல்லாம் காளிதாசனின் சாகுந்தலை நாடகத்திலிருந்துதான் வருகின்றன. ஆனால் மேலதிக விவரங்கள் ராமாயணத்திலேயே கூறப்பட்டுள்ளன. மிதிலைக்கு ராம லட்சுமணர்கள் விஸ்வாமித்திரரை தொடர்ந்து வருகின்றனர். அங்கு ராமருக்கு அகல்யையின் புத்திரரும், ஜனகரின் புரோகிதருமான சதானந்தர் விஸ்வாமித்திரரின் பெருமைகளை கூறுகிறார். அதில் ஒரு அரசர் என்னும் நிலையிலிருந்து தன்னை பிரும்ம ரிஷியாக அவர் உயர்த்திக் கொண்ட வரலாறு இருக்கிறது. அவ்வாறு அவர் ஆவதற்காக கடுமையான தவங்கள் மேற்கொள்ள, பல முறை அவர் தவத்துக்கு பங்கம் வருகிறது. பலமுறை அதற்கு காரணம் தேவர்களின் தலையீடுதான். அத்தலையீடுகளில் ஒன்றுதான் மேனகாவை அனுப்பி அவர் மனதை கலைத்தது. அவற்றையெல்லாம் மீறி அவர் பிரும்மரிஷியானார் என்பதுதான் அவர் சாதனை”.

அசோக் இங்கு உமாவிடம் அவளை மேனகா மாதிரி தன்னை அனுப்பித்தார்களா எனக் கேட்டு, வாய்விட்டு சிரிக்கிறான். “நீ இந்த மாதிரி மனம் விட்டு சிரிப்பதை நான் இப்போதுதான் பார்க்கிறேன்” என உமா ஆச்சரியத்துடன் குறிப்பிடுகிறாள். “மாயையை ஜயித்தால்தால்தான் ஆத்மானுபூதிகை கிடைக்கும். அந்த மாயை உன் அன்பு ரூபத்தில் வந்தால் வரட்டுமே. பொன்னிலிருந்து மாசை எடுக்க அதை தீயில் காண்பித்தது போல என்னை எரித்து என் ஆன்மாவை மாயையிலிருந்து இறைவன் காப்பாறுகிறான். எனக்கு அது தேவையே” என கூறுகிறான்.

“உனக்கு என் மேல் இரக்கம் வரவில்லையா” என உமா கேட்க, “அதனால் உனக்கு என்ன பலன்? உன் மேல் அன்பு இருப்பதால்தான் உன்னிடம் வந்தேன்” என்கிறான். “இதுதான் காதல்” என உமா கூற, “நீ சொல்வது அன்பை கொடுத்து அன்பைக் கேட்கும் செயல். அது எதிர்ப்பார்ப்பில் அளிக்கப்படுகிறது. எதிர்ப்பார்த்தது கிடைக்கவில்லையென்றால், டிப்ரஷனுக்கு காரணமாகிறது. ஆனால் தன்னலம் கருதாது எல்லோரிடமும் செலுத்தும் அன்பால் அம்மாதிரி தொல்லைகள் எல்லாம் வராது” என்கிறான் அசோக். “இந்த மாதிரி விதவிதமான அன்பெல்லாம் வேண்டாம், என்னைப் பொருத்தவரை எனக்கு உன் அன்பு போதும்” என உமா கூறுகிறாள். “அதனால் உனக்கு என்ன லாபம்? சரி, என்னுடன் வா” எனக்கூறி அவளை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறான்.

உமாவுடன் தன் வீட்டுக்கு வருகிறான். அசோக். திகைத்து நிற்கும் வசுமதியிடம் தான் போய் அழைத்ததால்தான் அவள் வந்ததாகவும், இனிமேல் அவள் எப்போது வேண்டுமானாலும் தன்னைப் பார்க்கலாம் என்றும் கூறி விட்டு அசோக் உள்ளே போகிறான். அவனை பின் தொடர்வதற்கு முன்னால் உமா வசுமதியிடம், தான் கூறுவதை அவள் எதிர்ப்பதமாக புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டு பேசுகிறாள். “எனக்கு இந்தாத்துக்கு வர பரம இஷ்டம். உங்க மூஞ்சியெல்லாம் பார்க்க குஷியா இருக்கு. அசோக் என்னை வரவே கூடாது என்றான். வேறே வழியில்லாதுதான் வந்தேன். நான் இங்கே வருவது உங்களுக்காகத்தான். அசோக்குக்காக இல்லை. நான் வெளியே போறேன்” என்றெல்லாம் கூறி விட்டு, “ஸ்வீட் மாமி” என செல்லமாக அவள் கன்னத்தில் தட்டி விட்டு உள்ளே திருப்தியுடன் செல்கிறாள்.

உள்ளே வந்து இம்மாதிரி தன்னை உமா பழி தீர்த்து கொண்டது பற்றி வசுமதி சமைய்ற்கார மாமி கோமதியிடம் புலம்ப, அவள் முன் ஜாக்கிரதையாக தான் வெறும் சமையற்காரி என்றும், இது சம்பந்தமாக கருத்தெல்லாம் சொல்வதற்கில்லையென கூறுகிறாள். வேறு வழியின்றி வசுமதி கோமதிக்கு பேச்சு சுதந்திரம் தர, அதற்காகவே காத்திருந்தது போல கோமதி தன் மனதில் பட்டதையெல்லாம் படவென கூறி வசுமதியை மேலும் வெறுப்பேற்றுகிறாள்.

பேச வேண்டியதை பேசிவிட்டு உமா புறப்படுகிறாள். அசோக்கிடம் மட்டும் சொல்லிக் கொண்டு போகும் அவள் வசுமதியை கண்டு கொள்ளாமல் போகிறாள். அது வேறு வசுமதிக்கு கடுப்பை உருவாக்குகிறது. அசோக்கிடம் அவன் உமாவை திருமணம் செய்யும் விருப்பத்தில் உள்ளானா என கேட்க, அவன் எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு, அந்த கர்ம விதிப்பயனும் பாக்கி இருந்தால் அதுவும் நடக்கட்டுமே எனக் கூற வசுமதி இன்னும் குழம்புகிறாள். அவன் என்ன கூறுகிறான் என கோமதி மாமியிடம் கேட்க, அவள் தன் பங்குக்கு, “அதான் சொன்னானே, கர்மா, விதி, பயன் அப்படீன்னு. யாருக்கு புரியறது” என நொடித்து விட்டு போகிறாள்.

நீலகண்டன் வீட்டுக்கு சாம்பு சாஸ்திரிகள் வருகிறார். தன் தங்கை காசிக்கு போய் கங்கை சொம்பு கொண்டு வந்ததாகவும், அதை தனது நாத்தனார் வீட்டில் கொண்டு தருமாறு தன்னைக் கேட்டுக் கொண்டதால், தான் அந்தப் பக்கம் வந்ததாகவும், இவர்களையும் அப்படியே பார்க்க வந்தாகக் கூறுகிறார். தஙளாத்துக்கும் ஒரு சொம்பு கொண்டு வந்திருக்கலாகாதா, தாங்களும் சிறிது கங்கை ஜலத்தை தங்கள் மேல் தெளித்து கொண்டிருக்கலாமே என ஆதங்கப்படுகிறாள் பர்வதம். அதனால் என்ன ஆகப்போகிறது என நீலகண்டன் இடக்காக கேட்க, கங்காஜலத்தின் பெருமைகள் பற்றி சாம்பு சாஸ்திரி ஒரு கிளாஸே எடுக்கிறார். நீலகண்டன் சற்றும் எதிர்பாராவண்ணம் ஃபிசிக்ஸ் தியரிகள் பற்றி எல்லாம் பேசி, ஸ்டெப் பை ஸ்டெப்பாக நீலக்ண்டனை தான் சொல்வதற்கு ஒப்புதல் தெரிவிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விடுகிறார்.

திடீரென நீலகண்டன் பிள்ளையாரின் வாகனமாகிய இந்த சிறிய மூஞ்சூறு அவ்வளவு பெரிய பிள்ளையாரை துதிக்கையுடன் சேர்த்து எவ்வாறு செல்லும் என கேள்வியை எழுப்புகிறார். “அதானே” என ஆமோதிக்கிறார், சோவின் நண்பர். சோ அவர்கள் ஹிந்து மதத்தில் உருவகமாக பலவிஷயங்கள் குறிப்பிடப்படுவதை சுட்டுகிறார். இந்த வாகனங்களும் அப்படித்தான் என்கிறார். மூஞ்சூறு எதிரில் இருக்கும் எல்லாவற்றையும் வர்ஜா வர்ஜமில்லாமல் உண்ணும் இயல்புடையது. மனிதனின் புத்திக்கு அது உருவகமாக அமைகிறது. அந்த புத்தியை அடக்கி நல்வழிப்படுத்துபவர் விநாயகர், ஆகவே அது அவரது வாகனம். கர்வம் மிக்க பறவையான மயிலை முருகர் வைத்திருப்பது எல்லோரும் கர்வத்தை அடக்கிச் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே.

இப்போது சாம்பு சாஸ்திரிகள் நீலகண்டனை ஒரு கேள்வி கேட்கிறார். கார் ரிப்பேரானால் ஜாக்கியை போட்டு தூக்குகிறோம் அல்லவா, அந்த சிறிய ஜாக்கி எப்படி அவ்வளவு பெரிய காரை தாங்குகிறது என கேட்க, நீலகண்டன் அது mechanism என்கிறார். அதே போல தான் சொல்வது occultism எனக் கூறி சாஸ்திரி சிக்சர் அடிக்கிறார். பர்வதத்தின் முகத்தில் புன்னகை.

பகுதி - 78 (22.05.2009):
நாதன் கோபமாக சாப்பிடாமல் அமர்ந்திருக்கிறார். வசுமதியிடம் அவள் உமாவிடம் நடந்து கொண்டது பற்றி தனது அதிருப்தியை தெரிவிக்கிறார். தான் உமாவுக்கு வாக்கு தந்தது பற்றி அவர் நினைவுபடுத்த, அது வெறும் வாய் வார்த்தையாகக் கூறப்பட்டதென்று என்று வசுமதி கூற, தன்னைப் பொருத்தவரை சொன்ன சொல்தான் முக்கியம் எனக் கூறிவிடுகிறார் நாதன்.

“ஆஃப்டர் ஆல் வெறும் வார்த்தைதானே” என நண்பரும் ஆமோதிக்க, சோ பேச ஆரம்பிக்கிறார். நல்லோர் அளிக்கும் வாக்கு வாய் வார்த்தையாக இருந்தாலும் கல்மேல் எழுதப்பட்டது போல. அதே சமயம் கீழோர் தரும் வாக்கு சபதமாகவே இருந்தாலும், எழுத்து ரூபத்தில் தரப்பட்டிருந்தாலும் அது நீர் மேல் எழுதியது போலவே எனக் கூறுகிறார். இதற்கு வேரியேஷனாக, “வாயால் ஆயிரம் வார்த்தை சொல்லிக் கொள், ஆனால் மறந்தும் அதை எழுத்தில் வைக்காதே” என்று பேசும் பெரியவர்களும் உண்டு. இந்த நாதன் வாய் வார்த்தையை மதிப்பவர், மேலும் அவர் நீலகண்டனுக்கு எழுதிய கடிதம் வேறு இருக்கிறது எனக்கூறி கலகலப்பு ஊட்டுகிறார் சோ.

வேறு வழியின்றி வசுமதி பணிந்து போக வேண்டிய நிர்ப்பந்தம். நீலகண்டனுக்கும் ஃபோன் செய்து தனது நடத்தைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறாள். நாதனுக்கே ஆச்சரியம், அவளது இந்த துரித மனமாற்றத்தைப் பார்த்து. அசோக் விரும்பினால் உமாவை அவனுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்னும் அளவுக்கு அவள் இறங்கி வந்து விடுகிறாள்.

வசுமதி வீட்டுக்கு வரும் அவள் சினேகிதி மைதிலி அசோக் உமா பற்றிய அவளது கவலைக்கு தூபம் போடுகிறாள். நேராகப் போய் பர்வதத்திடம் திருமணப் பேச்சை வசுமதி எடுக்க வேண்டும், பர்வதத்துக்கே இந்த சம்பந்தத்தில் இஷ்டம் இல்லாததால் வசுமதிக்கு ஏதும் அவள் கணவரிடம் கெட்டப் பெயர் வராத வண்ணம் பர்வதம் நீலகண்டனே மறுத்து விடுவார்கள் என ஒரு அபார யோசனை கூறுகிறாள். அப்படி பர்வதம் செய்யாவிட்டால் தான் தனது காதுகளை அறுத்து கொள்வதாகவும் சூளுரைக்கிறாள் அந்த மாது சிரோன்மணி. அவள் தன் காதுகளை அறுத்து கொள்வதால் எனக்கு என்ன லாபம் என வசுமதி அலுத்து கொண்டாலும் அந்த ஆலோசனையை செயல்படுத்த முடிவு செய்கிறாள்.

“இதென்ன சார், நல்ல பெண் கைகேயியை மனம் மாற்றிய கூனி போல இந்தப் பெண்மணி செயல்படுகிறாள்” என நண்பர் அலுத்துக் கொள்ள, கைகேயி அப்படியெல்லாம் பலர் கூறுவது போல நல்ல பெண்மணி இல்லை என்பதை சோ அவர்கள் நிறுவுகிறார். அவளுக்கே அடிமனதில் ராமர் பட்டாபிஷேகம் பற்றிய பயங்கள் இருந்திருக்கின்றன, கூனி பேசியதால் அவை குபீரென தூண்டப்பட்டன, அவ்வளவே என கூறும் சோ, இங்கும் வசுமதிக்கு ஏற்கனவே இருந்த அந்தஸ்து மோகம் மைதிலியால் தூண்டப்பட்டது அவ்வளவே எனக் கூறுகிறார்.

தன் வீட்டுக்கு திடீரென வந்த வசுமதியை வரவேற்கிறாள் பர்வதம். “என்ன விஷயமா வந்திருக்கே, எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லு, ரெண்டே வார்த்தைகளில் சொல்லு” என அவள் கூற, வசுமதி “சரி சம்பந்தி” என பதிலளிக்கிறாள். பர்வதம் திக்குமுக்காடிப் போகிறாள். இப்போது வசுமதி அசோக் உமா சம்பந்தத்தின் அனுகூலம் பற்றி பாயிண்டுகளை அடுக்குகிறாள். அதாகப்பட்டது: உமாவும் விரும்புகிறாள். அசோக்குக்கு பைத்தியம் குணமாகும்னு தோணலை, இருந்தாலும் உமாவை அவனூக்கு கல்யாணம் செஞ்சுவச்சு முயற்சிக்கலாம். உமா மாதிரி ஒரு பெண் அசோக்குக்காக தியாகம் செய்வது பாராட்டத்தக்கது, and so on.

பர்வதம் தன் பங்குக்கு தன் கணவர் நீலகண்டனை கலந்து பேசித்தான் முடிவு செய்ய இயலும் எனக்கூறி அவளை வழியனுப்புகிறாள். நீலகண்டன் கேரளா டூர் முடிந்து வரும் போது அவள் இப்பிரச்சினையை கணவன் முன்னால் வைக்கிறாள். தனக்கும் இந்த சம்பந்தத்தில் இஷ்டமில்லை என அவர் கூற, பர்வதம் நிம்மதியடைகிறாள். இப்போதே போய் நாதன் வீட்டில் இந்த சம்பந்தம் சரிப்படாது எனக் கூறிவிட்டு வருவதாக நீலகண்டன் புறப்பட, உமா வந்து அவரைத் தடுக்கிறாள். தான் மேஜர், ஆகவே தனது திருமணம் தன் விருப்பப்படியே அமையும் எனக்கூறுகிறாள் அவள். அப்படியே அசோக்குக்கு அவளை திருமணம் செய்து வைக்காவிடில் தான் திருமணமே செய்யப் போவதில்லை எனவும் உறுதியாகக் கூறுகிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/23/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 23.05.2009

பிரபாகரன் கொலையுண்டாரா, உயிருடன் இருக்கிறாரா?
இதுதான் இப்போது எல்லோர் மனதையும் ஆக்கிரமிக்கும் விஷயம். பி.இராயகரன் புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார் என்பது பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்:

“திட்டமிட்ட சதி மூலம் புலித்தலைமையும், அவர்கள் குடும்பமும் முற்றாக சரணடைய வைத்தே அழிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் எஞ்சி இருந்ததாக நம்பப்படும் 2000 போராளிகளுக்கு கூட, இதுதான் கதி. இந்தச் சதி மூலமான சரணடைவின் பின், சித்திரவதைக் கூடங்களில் இன்னமும் சில தலைவர்கள் சிக்கி மரணிக்கின்றனர் என்பது வேதனையானது.

இந்த சதி வலையின் முன் பக்க பரிணாமத்தை நன்கு தெரிந்தவர்கள், இதை வழி நடத்தியவர்கள். சரணடைய வைத்து, இந்த துரோகத்தை முழுமையாக வழி நடத்தியவர்கள் தான், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கதை சொல்கின்றனர். உண்மையில் புலித்தலைமையை விட்டில் பூச்சியாக்கிய அரசியல், அதன் பின்னணி என்பது துரோகத்தாலானது.

இந்தச் சதி நன்கு திட்டமிட்டு திணிக்கப்பட்டது. இந்த துரோகம் வெளித்தெரியாது இருக்க, புலித் தலைவரை உயிருடன் இருப்பதாக கூறுவதன் மூலம், துரோகிகளே இன்று புலித் தலைமையாகியுள்ளது.

யார் இதை நன்கு திட்டமிட்டு சரணடைய வைத்தனரோ, அவர்கள் தாங்கள் செய்த துரோகத்தை தலைவர் இருப்பதாக கூறி இன்று மூடிமறைகின்றனர்.

தங்களைத் தாங்களே இராணுவத்திடம் ஓப்படைத்து பலியான அந்த புலி அரசியல் அடிப்படை என்ன? தனிமனித வழிபாடும், சர்வாதிகாரமும் மேலோங்கிய ஒரு அமைப்பு, இதற்கு வெளியில் சிந்திக்கவும் செயலாற்றவும் அவர்களால் முடியவில்லை. தான் சரியாக இருப்பதாகக் கருதிக்கொண்டு, தன்னைத்தானே பலி கொடுத்துள்ளது. இதைத்தான் நோர்வே சமாதான முகவர் எரிக்சூல்கெய்ம், எதையும் சிந்திக்கும் நிலையில் பிரபாகரன் இருக்கவில்லை என்கின்றார்.

இந்த சதிக்கு உதவியது, மாபியாக் குழுக்களுக்கு இருக்கக் கூடிய விசுவாசம் தான். அதைக் கைவிடும் போது, அது உள்ளிருந்தே கழுத்தறுக்கின்றது.

இன்று புலிப் போராட்டங்கள், நம்பிக்கைகள், விசுவாசங்கள் அனைத்தும் மந்தைத்தனத்தை அடிப்படையாக கொண்டது. புலித்தலைமை மக்களை வெறும் மந்தையாக பயன்படுத்தியது. இதில் துயரம் என்னவென்றால், அதே மந்தைத் தனத்தடன் புலித்தலைமை இலங்கை அரசிடம் சரணடைந்து பலியானதுதான்.

மந்தைத்தனம் தலைமை வரை புரையோடிக் கிடந்தது. இது தன்னைத்தானே பலியிட அழைத்துச் சென்றது. மூன்றாம் தர மாபியாக்கள், இலகுவாக கழுத்தறுக்க முடிந்தது. இடைக் காலத்தில் தப்பி செல்ல முற்படா வண்ணம், அவர்களுக்கு ஒரு மூன்றாம் தரப்பு பற்றிய நம்பிக்கையை ஊட்டி, அவர்களை சுற்றிவளைக்கப் பண்ணிய பின் அதுதான் இது என்று சரணடைவை வைத்து கழுத்தறுத்துள்ளனர். மக்களை முட்டாளாக்கி மந்தையாக்கிய புலியின் பின், இந்தத் துரோகம் இலகுவாக ப+சி மெழுக முடிந்துள்ளது.

மக்கள் எவ்வளவு முட்டாளாக மந்தைகளாக உள்ளனர் என்பதை பார்க்க, நக்கீரன் வெளியிட்ட மோசடிப் படத்தை புலி கொண்டாடிய விதம் நல்ல எடுத்துக்காட்டு. ஒரு நாள் கூட அந்த படம் உயிர் வாழமுடியாது போனது. பாலசிங்கத்துடன் அமர்ந்து இருந்து பிரபாகரன் உரையாடும் அந்தப் படத்தை வைத்து, நக்கீரன் அரங்கேற்றிய மோசடி அம்பலமாகின்றது. மக்களை மந்தையாக்கி, அதை நம்பவைத்து நக்கீரன் போன்ற பொறுக்கிகள் பணம் சம்பாதிக்கின்றனர். ஒரு விடுதலைப் போராட்டத்தில் பல மாபியாக்கள். இறந்தவர்களை வைத்து பிழைப்பு”.


இப்போது இந்த வெர்ஷனை கிட்டத்தட்ட முழுமையாகவே ஜூனியர் விகடனும் குமுதம் ரிப்போர்டரும் உறுதி செய்துள்ளன. பிரபாகரன் எப்படி தப்பினார், சுரங்கப்பாதை வழியாக எவ்வாறு கடலுக்கருகில் சென்று அங்கிருந்து மிக வேகப் படகுகளில் பத்திரமான இடத்துக்கு தப்பினர் என்றெல்லாம் கூறப்படுபவை, அவ்வாறு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற தோரணையில் கூறப்படுபவனாகவே தோற்றம் தருகின்றன. நக்கீரன் செய்த ஃபோட்டோஷாப் கூத்து ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டதும், அதற்கும் ஒரு சப்பைக்கட்டு வைத்திருக்கிறார்கள். இம்மாதிரி தருணங்களில் உண்மையை கண்டறிவது கடினம். இதற்கு முன்னால் பலமுறை பிரபாகரன் இறந்ததாக்க் கருதப்பட்டு பிறகு அவர் உயிருடன் வெளிப்படுவது என்ற precedents இருந்ததாலேயே இந்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. பல புலி ஆதரவாளர்களுக்கோ இது தன்னம்பிக்கை பிரச்சினையாகப் போய் விட்டது. ஆகவே பிரபாகரன் இனி இல்லை என்பதையே யோசித்து பார்க்கவும் அவர்கள் தயாராக இல்லை.

சதாம் ஹுசைன், முசோலினி, ருமானிய அதிபர் சோசெஸ்கூ, ஜெர்மனியின் Göringg, Goebbels, Von Ribbentropp ஆகியோர் இறந்தது ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் மரணத்தில் சந்தேகம் இல்லை. அதே சமயம் ஹிட்லர் இறக்கவில்லை என சில கோஷ்டிகள் ரொம்ப ஆண்டுகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தனர். மேற்கு ஜெர்மனி அரசு ஹிட்லருக்கெதிரான கைது உத்திரவை ரொம்ப நாளைக்கு நிலுவையில் வைக்கும் அளவுக்கு இந்த வதந்தி சக்தி வாய்ந்ததாக இருந்தது. இப்போது பிரபாகரன் மரணத்தில் சிறிதளவு சந்தேகம் கூட இருக்கும் வரை இந்திய அரசும் அவரது பெயரை ராஜீவ் கொலை வழக்கு குற்றப்பத்திரிகையில்ருந்து நீக்கக் கூடாது.

பிரபாகரன் உயிரோடு இன்னும் இருக்கிறார் என்று சொல்பவர்கள் அவ்வாறு சொல்வதற்கு பல காரணங்கள் உண்டு. அவை பின்வருமாறு. இன்னொரு முக்கிய விஷயம், ஒன்றுக்கு ஏற்பட்ட காரணங்களும் சிலர் விஷயத்தில் நடக்கும்.

1. மேலே ரயாகரன் கூறியது போல புலித் தலைமையை காட்டிக் கொடுத்த துரோகிகள் தாம் செய்த துரோகத்தை இவ்வாறு மறைக்க முற்படலாம். அவர்களை தப்பிக்க வைத்ததே தாங்கள்தான் என சீன் கூட காட்டுவார்கள். பின்னால் புலிததலைமை வெளியே வராமலே போனாலும் அவர்கள் தங்களுடன் பிற்பாடு தொடர்பு கொள்ளவேயில்லை எனக்கூறி, அவர்களுக்கு என்னாயிற்றோ என அவர்களும் மற்றவர்களுடன் முதலைக் கண்ணீர் வடிக்கலாம்.

2. புலிகளின் தலைமை உயிரோடு இருந்தால்தான் அவர்கள் பெயரைச் சொல்லி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் வசூல் செய்யலாம். உண்மை முழுமையாகத் தெரியும்வரை வந்த வரையில் லாபம் எனவும் செயல்படலாம்.

3. புலிகள் தப்பிவிட்டனர் என உண்மையாகவே நம்பி ஆறுதல் அடையலாம். அவர்களில் பலர் புலித்தலைமை அழிந்திருக்கலாம் என்பதை வாதத்துக்குக் கூட ஒப்புக் கொள்ள மறுக்கலாம்.

4. புலி செத்தது, புலி செத்தது என்று சொல்லி சொல்லி ஏமாற்றியதாலேயே கூட இப்போ புலி செத்தது என்பதை நம்ப மறுப்பவர்களும் இருக்கலாம்.

மத்தியில் காங்கிரஸ் - திமுக இடையே மந்திரி பதவிக்காக இழுபறிகள்:
எங்களூர் கவுன்சிலர் காங்கிரஸ்காரர். அவர் இது விஷயமா ஒரே வார்த்தைதான் சொன்னார். “இந்த திமுக காரங்களுக்கு எப்போதுமே தாங்கதான் சாப்பிடணும்னு குறி. மாநிலத்தில் மந்திரி பதவி காங்கிரசுக்குத் தர துப்பில்லை. இங்கே மட்டும் வந்திடறாங்க” என்றார் அவர். தமிழக காங்கிரசார் மூன்றாண்டுகளாக மனதில் வைத்து புழுங்கியதைத்தான் அவர் சரேலென சொன்னார். 2004 நிலைமை வேறு, இப்போது நிலைமை வேறு. அப்போது காங்கிரசுக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை. ஆகவே அக்கட்சி செய்ததையெல்லாம் பொறுத்துப் போக வேண்டியதாயிற்று. இப்போது நிலைமை தலைகீழான பிறகும் திமுக அதே மாதிரி தங்களுக்கு கேட்ட பதவிகள் கிடைக்கும் என எப்படி நம்புகிறது என்பதுதான் புரியவில்லை. வேறு ஏதேனும் உள்ளடி விவகாரங்கள் உள்ளனவோ என்பதை யாரறிவார் பராபரமே! அதையும் பார்ப்போம்.

பை தி வே, 1971-ல் இந்திரா காங்கிரசுக்கு வெறுமனே பாராளுமன்றத்தில் மட்டும் சீட்கள் ஒதுக்கி அசெம்பிளியில் ஒரு சீட்டும் தராது அழிச்சாட்டியம் செய்தார் கருணாநிதி. அப்போதைக்கு அந்த அவமானத்தை வேறுவழியின்றி இந்திரா விழுங்கினார். பிறகு 1976-ல் சர்காரியா கமிஷன், மிசா கைதுகள் என்றெல்லாம் சொல்லி சொல்லி அடித்தார். 1980-ல் கருணாநிதியே வேறு வழியின்றி “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என கெஞ்ச வேண்டியதாயிற்று. இப்போதும் சரித்திரம் லேசாகத் திரும்புகிறது என்றுதான் நினைக்கிறேன். பார்க்கலாம்.

ஆனால் ஒன்று. முக அவர்கள் இப்போதைய பிரபாகரன் விஷயத்தில் என்ன கூறுகிறார் என்பதை எங்குமே பார்க்க இயலவில்லை. யாரேனும் எங்கேனும் பார்த்திருந்தால் பின்னூட்டமாக தெரிவியுங்கோ சாமியோவ். ஓக்கே அவரோட குடும்பக் கவலை அவருக்கு. புலிகளா முக்கியம்னு சொல்லறீங்களா? சரி சரி, கண்டுக்கலை.

சோ அவர்களைப் பார்த்து சீறுபவர்களுக்கு:
இதில் சோ அவர்களை பல சேனல்கள் பேட்டி எடுக்கின்றன, அவர் கருத்துக்களையும் கேட்கின்றன, அவரும் சொல்கிறார். சீறி எழுகிறார்கள் திராவிட குஞ்சுகள். பார்ப்பன கொழுப்பு என்றெல்லாம் வார்த்தை பிரயோகங்கள் வருகின்றன. சோவை ஏன் நொந்து கொள்கிறீர்கள் பார்ப்பன துவேஷிகளே? அந்தந்த சேனல்களுக்கு எழுதுங்கள், சோவையெல்லாம் பேட்டி காணக்கூடாது என. அவர்களுக்கும் துடைத்துக் கொள்ள காகிதங்கள் கிடைத்த மாதிரி இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது