9/24/2010

ஈ.வே. ராமசாமி அவர்கள் சார்பில் இங்கு யாராவது சில பகுத்தறிவு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கப்பூ!!

ஆசிட் தியாகுவின் இப்பதிவைப் பார்த்து எனக்குள் தோன்றியதே பகுத்தறிவுக் கேள்விகளை எல்லோருமே கேட்பாங்களே, என்ன செய்வது என்னும் கேள்விதான்?

நீலாவதி - ராமசுப்பிரமணியம் திருமணத்தை முன்னிட்டு கூடியிருந்தவர்கள் இடையே ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஆற்றிய உரைக்கு முன்னால் ஒருவர் கேட்ட கேள்வியும், நாயக்கரின் பதிலும்:

ஒருதாரமிருக்கிற பொழுது மறுதாரம் கட்டலாமென்பது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையா? ஹிந்து மதக் கடவுள்கள் பல மனைவிகளையுடையவர்களாய் இருக்கின்றனர். அந்த மதம் தப்பிதமானது என்று கூறும் சுயமரியாதை இயக்கம் ஒரு மனைவியிருக்க மற்றொரு மனைவியை மணம் செய்ய அனுமதிக்கலாமா? என்று கேட்டார்.

திரு. இராமசாமி அவர்கள் பதில் கூறியதாவது:-

இப்பொழுது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியது நமது கடமையேயாகும். சுயமரியாதை இயக்கம் என்ன சொல்லுகிறதென்றால், ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களிலும் தங்கள் பகுத்தறிவை உபயோகப் படுத்த வேண்டுமென்றும், ஆண், பெண் இருவருக்கும் சமத்துவம் இருக்க வேண்டுமென்றும் சொல்லுகிறது. சுயமரியாதை இயக்கத்தால் கண்டிக்கப்படுகிற தேவர்கள் செய்யும் காரியங்களையெல்லாம் செய்யக் கூடாதென்பது நோக்கமல்ல. தேவர்கள் சாப்பிடுகின்றார்கள். மூச்சு விடுகிறார்கள் என்பதால் நாமெல்லோரும் சாப்பிடக் கூடாது, மூச்சுவிடக் கூடாது என்பது முட்டாள் தனமாகும். பகுத்தறிவிற்கு எது பொருத்தமாயிருக்கிறதோ அதைக் கைக் கொள்ளவேண்டுமென்பதுதான் சுய மரியாதை இயக்கத்தின் நோக்கமாகும். கல்யாணம் என்பது ஒரு மனிதனுடைய இன்பத்தைப் பொறுத்ததேயன்றி வேறொன்றுமில்லை. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் ஒத்துவராவிட்டால் வேறு கல்யாணம் செய்து கொள்வதில் பிசகொன்றுமில்லை. அதே உரிமையை பெண்ணுக்கும் கொடுக்க ஆண் தயாராயிருக்கிறார்.

கல்யாணத்தை கத்தரிக்காய், வாழைக்காய் போல நினைத்து பொருத்தமற்ற முறையில் கல்யாணத்தைச் செய்து வைத்து வாழ்க்கை முழுமையும் துன்பத்திலும் அடிமைத்தனத்திலும் இருக்கும்படி செய்வது அறியாமையாகும். சமீபத்தில் நகர் என்ற ஊரில் ஒரு சுயமரியாதை கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை கிறிஸ்தவர். கிறிஸ்து மதச் சட்டப்படி ஒரு மனைவி யிருக்க மற்றொரு மனைவியை விவாகம் செய்து கொள்ள அனுமதியில்லை என்றாலும் அவரவர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல் விரோதமாகும். எனவே அக்கல்யாணத்தைச் சிறப்பாக முடித்து வைத்தோம். இங்கு நடைபெற்ற திருமணத்தின் தம்பதிகள் மிகச் சிறந்தவர்கள் என்பது என் கருத்து. தகுதி வாய்ந்த இத்தம்பதிகள் சிறந்து வாழ விரும்புகிறேன்.


குடி அரசு - சொற்பொழிவு - 12.10.1930
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

இப்போது எனது கேள்விகள்:

1. //தேவர்கள் சாப்பிடுகின்றார்கள். மூச்சு விடுகிறார்கள் என்பதால் நாமெல்லோரும் சாப்பிடக் கூடாது, மூச்சுவிடக் கூடாது என்பது முட்டாள் தனமாகும்.//
ஆக இரண்டாம் பெண்டாட்டி கட்டுவது சாப்பிடுவது, மூச்சு விடுவது போல அடிப்படைத் தேவை அப்படித்தானே? பேஷ், பேஷ், நல்ல பகுத்தறிவு.

2. //ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் ஒத்துவராவிட்டால் வேறு கல்யாணம் செய்து கொள்வதில் பிசகொன்றுமில்லை. அதே உரிமையை பெண்ணுக்கும் கொடுக்க ஆண் தயாராயிருக்கிறார்.//
அற்புதமான சொற்கள். பெண்ணுக்கு ஆண் உரிமை தரவேண்டும் ஆனால் ஆணோ அதை தானே எடுத்துக் கொள்வான் அப்படித்தானே? அது இருக்கட்டும், நாயக்கர் அம்மாதிரி பெண்ணுக்கான இரண்டாம் திருமணங்கள் எத்தனைக்கு தலைமை தாங்கியுள்ளார்? பெண் அப்படிப் போக மாட்டாள் என்ற தைரியத்தில்தானே பேசினார் அவர்? (இதில் டைவர்ஸ் ஆன பெண்ணின் திருமணத்தைச் சேர்க்கவில்லை. இரண்டாம் திருமணம் செய்யும் ஆண்கள் அவர்கள் காலகட்டத்தில் இரு மனைவியருடனுமேயே வாழ்ந்து வந்துள்ளனர். அம்மாதிரி வாழ நினைத்த எத்தனைப் பெண்களின் இரண்டாம் திருமணத்தில் இவர் கலந்து கொண்டார் என்பதுதான் எனது கேள்வி).

அதிலும் சொந்த மனைவியையே ஊருக்கு வந்துள்ள புது தாசி என தம் நண்பர்களுக்கு அடையாளம் காட்டி அவர்களை விட்டு அந்த உத்தமப் பெண் நாகம்மையாரை கேலி செய்வித்து, கோவிலுக்கு வந்த மற்ற பெண்டிரை பயம்காட்டி, அவரது மனதையும் நோவடித்த ஈ.வே. ரா. அவர்கள் பற்றி என்ன கூறுவீர்கள்?

இதுதான் போதாது என்றால், ஒரு முறை மனைவிகளும் கள்ள புருஷன் வைத்துக் கொள்ளலாம் என ஈ.வே.ரா. அவர்கள் ஒரு கூட்டத்தில் கூற, நாகம்மையிடம் தான் செல்லலாமா என ஒருவர் கூட்டத்தில் கேட்டு வைக்க, “நாம் இருவருமே நாகம்மையிடம் இது சம்பந்தமாக பேசுவோம், அவர் கொடுப்பதை வாங்கி வருவோம்” என்று பொருள்பட திருவாய் மலர்ந்தருளினது பற்றியும் என்ன கூறுவது, தமிழகத்தின் தலைவிதியை நொந்து கொள்வதை விட அல்லது நாகம்மை கற்புடையவள் அம்மாதிரியெல்லாம் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையைத் தவிர? ஆணாதிக்கம், ஆணாதிக்கம்....

3. அப்போதும் சரி இப்போதும் சரி ஒரு பெண்ணால் அம்மாதிரி முடிவெடுக்க சரியான சூழ்நிலை இருந்ததில்லை. அச்சூழ்நிலை வேண்டுமென்பதற்காக எங்காவது போராடியிருக்கிறாரா? நிற்க.

அதே பேச்சில் நாயக்கர் திருவாய் மலர்ந்தருளிய மேலும் சில பாயிண்டுகளை இங்கு சுருக்கமாகத் தருகிறேன். அதனையையும் காப்பி பேஸ்ட் செய்து விட்டால் உண்மைத் தமிழனின் மிக நீண்ட பதிவுகளையும் விடப் பெரிதாகி விடும் அபாயம் உண்டு.

எப்படிப்பட்ட மனைவி அமைந்தால் கணவன் மறுமணம் செய்து கொள்ளலாம் என ஒன்பது விஷயங்களை அக்கறையாக பட்டியலிடுபவர், ஒரு பாயிண்டைக் கூட கணவன் மோசமாக இருக்கும் உதாரணங்களையே தராது ஜாக்கிரதையாகத் தவிர்த்து தனது ஆணாதிக்கத் திமிரைத்தான் காட்டியுள்ளார். கடைசியில் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என மனைவியும் வேறு கணவனைத் தேடிக் கொள்ளலாம் என கூறி நழுவி விடுகிறார்.

ஈவே ராமசாமி நாயக்கரா ஆணாதிக்கவாதி என சீறிக் கொண்டு வரும் பகுத்தறிவுத் திலகங்களுக்கான் பதிலை நாயக்கரின் சொற்களிலிருந்தே தந்து விடுகிறேன்.

எனது இப்பதிவிலிருந்து கோட் செய்கிறேன். கீழே இடப்பட்டவற்றை நாயக்கரே அவரது முதல் மனைவி நாகம்மையார் மறைந்தபோது எழுதியுள்ளார்.

நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.

நான் சுயலநல வாழ்வில் ‘மைனராய்', ‘காலியாய்', ‘சீமானாய்' இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்.

பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லம்ம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நான் காங்கிரசிலிருக்கும் போது, நாகம்மாள், மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.

ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை' ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க. நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ, அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டார். அதற்கு நேர்ரெதிரியடையாக்குவதற்காக உபயோகித்துக் கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.


ஆக, பெரியார் ஆணாதிக்கவாதி இல்லையென்பதை நிறுவ சப்பைக்கட்டெல்லாம் கட்டி சிரமப்பட வேண்டாம்.

இன்னொரு விஷயம். பொருந்தாத் திருமணத்தின் முக்கிய எதிர்ப்பே, கிழவரால் குமரிக்கு மன மகிழ்ச்சி அளிக்கக் கூடிய மணவாழ்க்கை தர இயலாது என்பதுதான். அப்படிப்பட்டவர் தானே ஒரு பொருந்தாத் திருமணத்தை செய்து கொண்டாரே, அதற்கு என்ன சமாதானம் கூறுவது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

83 comments:

வஜ்ரா said...

இப்படியெல்லாம் ஈ.வே.ரா சொல்லியிருந்தால் அவரைவிட தன்னலவாதி எவருமே இல்லை என்பதைத் தான் காட்டுகிறது என்ற முடிவுக்கு வரலாம்.

----
பெயரைப்பாருங்கள், ஆசிட் தியாகு! பெண்கள் தன் ஆசைக்கு சம்மதிக்கவில்லை என்றால் முட்டையில் ஆசிட் ஊற்றி மூஞ்சியில் வீசும் "பெண்விடுதலைவாதி" போல இருக்கிறது. இவனையெல்லாம் மனுசனா மதிச்சு இவ்வளவு பெரிய பதிவு தேவையா ?

DR.K.S.BALASUBRAMANIAN said...

நல்ல பதிவு

ராகவேந்திரன் said...

@,,இந்நேரம் கோதாவில் குதித்து பதிலிட்டு டோண்டு சாரை புறமுதுகிட்டு ஓட வைத்திருக்க வேண்டாமா அருள் சார், எங்கே அருள் சார் எங்கே அருள் சார் ,

smart said...

சார் நேத்துதான் இந்தப் பதிவைப் பார்த்துட்டு பதிலிட நேரமில்லாததால் அதை காப்பி செய்து வைத்தேன்.
சூப்பர் நீங்க போட்டு தாக்குங்க அப்பப்ப வந்து தாக்குறேன்.

smart said...

//இரண்டாம் பெண்டாட்டி கட்டுவது சாப்பிடுவது, மூச்சு விடுவது போல அடிப்படைத் தேவை//
சவுக்கடி எல்லாரும் மூஞ்சிய எங்க போய் வைப்பாங்க?

smart said...

//கல்யாணம் என்பது ஒரு மனிதனுடைய இன்பத்தைப் பொறுத்ததேயன்றி //
காரித் துப்பலாம் போல இருந்தாலும் அவையடக்கம் கருதி அமைதியாகிறேன். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இரண்டாது திருமணம் இதற்குத் தான் செய்தார் என்று ஒப்புக் கொண்டதைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள்.

smart said...

மேலே சொன்ன வரிகளுக்காக தன்மானக் காரர்கள் யாரும் எனக்கு ஆட்டோ அனுப்ப வேண்டாம் பல கலியாணம் செய்து உங்க பல பல புள்ளகுட்டிகள் நல்லாயிருக்கட்டும்

smart said...

மேலே சொன்ன உதாரணத்திற்கு திருக்குவளை தீயசக்தி மற்றும் பேர சக்திகள் என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். பெரியார் பொதுவாகச் சொன்னதை பொதுயிடத்தில் செய்துக் காட்டியவர் என்று நான் சொல்லவில்லை. மீ பாவம்.

அருள் said...

// // இரண்டாம் பெண்டாட்டி கட்டுவது சாப்பிடுவது, மூச்சு விடுவது போல அடிப்படைத் தேவை அப்படித்தானே?// //

இரண்டாவது கணவரைக் கட்டுவது அடிப்படைத் தேவை என்றால், இரண்டாவது பெண்டாட்டியையும் அடைப்படைத் தேவையாகக் கருதலாம்.

நீங்களாக 'கருத்துத்திணிப்பு' செய்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தியில் - "இரண்டாம் பெண்டாட்டி கட்டுவது சாப்பிடுவது, மூச்சு விடுவது போல அடிப்படைத் தேவை" என்று தந்தை பெரியார் கூறியதாக எந்த இடத்திலும் இல்லை.

"பகுத்தறிவிற்கு எது பொருத்தமாயிருக்கிறதோ அதைக் கைக் கொள்ளவேண்டுமென்பதுதான் சுய மரியாதை இயக்கத்தின் நோக்கமாகும்" என்று மிகத்தெளிவாகவே இருக்கிறது.

மற்றபடி அடுத்தவன் பெண்டாட்டி மீது மோகம் கொள்வது, அதற்காக கொலை செய்வது - இதையெல்லாம் பெரியார் ஆதரிக்கவில்லை. அதெல்லாம் 'மகா பெரியவா' கொள்கை.

smart said...

//பகுத்தறிவிற்கு எது பொருத்தமாயிருக்கிறதோ அதைக் கைக் கொள்ளவேண்டுமென்பதுதான் சுய மரியாதை இயக்கத்தின் நோக்கமாகும்//
சுருக்கமாகச் சொன்னால் எது வசதியோ அதை வைத்துக் கொள் என்கிறீர்கள். அதற்கு எதற்கு இயக்கம் வேண்டும் அவரவர் விருப்பம் போல திரிய வேண்டியது தானே. மிருகங்கள் போல திரிந்து இனவிருத்தி செய்யவேண்டும் என்று பகுத்தறிவு சொன்னால் காட்டுக்குள் தாராளமாகப் போகலாம்.

smart said...

சார், பதில் சொல்ற மாதிரி தெரியல சப்போஸ் யாரச்சும் வந்தாங்கன்னா பெரியார் பிறந்த நாள் அன்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல அனுப்பிவையுங்க

தன்மானக் காரர்களே,
நீங்க வரமுடியாவிட்டால் கூட உங்கள் புள்ளகுட்டிகளையாவ்து அனுப்பி பதிலா சொல்லுங்கப்பா!

dondu(#11168674346665545885) said...

அடேடே ஸ்மார்ட் அருமையான கேள்விகளாச்சே. எதுக்கும் இருக்கட்டும்னு இங்கேயும் போட்டு வைக்கிறேன் அவற்றை. போடலாமல்லவா?

* “நாயக்கர் என்றால் தான் ஆந்திராவில் தெரியும் ” என்று தெலுங்கில் பெரியார் படத்தின் பெயர் காரணத்தின் விளக்கத்திலிருந்து அறியமுடிகிறது. அப்படியென்றால் நாயக்கர் சமூக பலத்தைப் பெற அப்பெயரில் தான் ஆந்திராவில் அறிமுகமானாரா?
* பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல என்று சொன்னால் மறுப்பீர்களா?
* திராவிடக் கொள்கை, திராவிட இனம், திராவிட பகுத்தறிவு என்று பதவி ஆசையில் இந்தியாவை பிரிக்க நினைத்தவர் பெரியார். இந்த திராவிடக் கொள்கை மற்ற மாநிலங்களில் உள்ள பற்று எவ்வளவு? அவருக்குப் பிறகும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் மற்ற மாநிலத்தில் திராவிட போலிப் பிரச்சாரம் எடுபவில்லை என்பதை அறிவீர்களா?
* மதம் என்கிற கண்ணாடி வழியே பார்க்காமல் தனி மனிதனாக ஒரு இறை நம்பிக்கையாளரை மதித்து அவரைப் பாராட்டியதுண்டா? இல்லையென்றால் இறை மருப்பாளரைத் தவிர மற்றவரெல்லாம் மட்டி மடையர்களா?
* அன்றிலிருந்து சாதி என்கிற விஷயத்தைத் தவிர வேறு ஏதாவது முற்போக்கான சிந்தனையில் நாட்டுக்கு என்ன செய்தார்?
* ஒதுக்கீடு முறையை அமல்படுத்தப் பாடுபட்டவர்கள் என்கிற காரணத்தால் கேட்கிறேன் ஒவ்வொரு சாதிக் கட்சியும் அரசிடம் அளவிற்கு அதிகமாக ஒதுக்கீடுகள் கேட்கிறதே! இதற்கு என்ன வழி? ‘..நிதி’ அவர்களின் பேரன்களுக்கு மட்டும் ஒதுக்கீடு வழங்கலாமா?
* ராமாயணம் போன்ற மதப் புராணங்களில் நொட்டை எனப்படும் குறைகள் கண்டுபிடித்து பக்கம் பக்கமாக எழுதும் கழகக் கண்மணிகள் ஏன் அதில் உள்ள நல்ல விஷயங்களை எழுதுவதில்லை? தர்மத்திற்காக கொள்கையா? இல்லை கொள்கைக்காக தர்மமா?
* கடவுள் இல்லை என்பதுதானே இவரின் கொள்கை அதற்குத்தானே கோவில்களையும் சிலைகளையும் உடைக்கின்றனர் பின் எதற்கு தலித்களுக்கு ஆலயப்பிரவேசம் வாங்கித் தர வேண்டும்? கூட்டம் சேர்க்கவா?
* கடவுள்களை ஆபாசமாகக் காட்டி எழுதி பகுத்தறிவை வளர்ப்பதாகச் சொல்லும் கழக கண்மணிகள் ஏன் பெரியார் இணைந்த நிர்வாண சங்கத்தைப் பற்றி ஒப்புக்குக் கூட எழுதுவதில்லை? உபதேசம் ஊருக்கு மட்டுமா?
* அன்றைக்கு எடுத்த அதே சாதி ஆதிக்கத்தைத் தான் இன்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள் சமூகத்தில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாததைப்போல வேறு எதுவும் சிந்திக்கமுடியவில்லையா? இல்லை அறிவில் பரிணாமமில்லையா?
* அன்று ஆதிக்கச் சாதி மக்களை அடிமைப் படுத்தியது என்று இன்று எழுதும் நீங்கள் கண்முன்னே ஒரு அரசியல் குடும்பம் பல தொழில்களில் ஆக்கிரமித்து வருமானம் ஈட்டி கொள்ளை அடிப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா? இல்லை கண்ணுக்கும் கறுப்புச் சட்டையா?
* பெரியார் கொள்கைகளை பலர் பினபற்றுவதாகச் சொன்னாலும் கொள்கையின் வாரிசாக காட்டும் தி.க.மற்றும் பெரியார் தி.க. ஏன் சண்டைப் போட்டுக் கொல்கிறது? கொள்கையில் ஏதாவது கொள்ளைபோகிவிட்டதா?
* சாதி வேற்றுமையை ஒழிக்கத்தான் சாதி ஒதுக்கீடு என்று பிரச்சாரமிடும் நீங்கள், சதிகள் ஒழிந்தபின் அந்த ஒதுக்கீடு திரும்ப எடுக்கப்படும் என்று எங்குமே பிரச்சாரம் செய்யாதது ஏன்? ஆரசியல் நடத்த முடியாதே அதனாலா?
* பகுத்தறிவை வளர்க்க கடவுள் சிலைகளை உடைப்போம் என்கிறீர்களே அப்படி என்றால் பெரியார் வன்முறையைத்தான் சொல்லிக் கொடுத்தாரா? வன்முறை எடுத்தபிறகு எங்கே பகுத்தறிவு வேலை செய்யும்?

அன்புள்ள,
டோண்டு ராகவன்

அருள் said...

டோண்டு ராகவன் & ஸ்மார்ட் கேள்விகளுக்கு பதில்கள் Part 2:

கேள்வி 4: * மதம் என்கிற கண்ணாடி வழியே பார்க்காமல் தனி மனிதனாக ஒரு இறை நம்பிக்கையாளரை மதித்து அவரைப் பாராட்டியதுண்டா? இல்லையென்றால் இறை மருப்பாளரைத் தவிர மற்றவரெல்லாம் மட்டி மடையர்களா?

பதில் 4: உங்கள் நினைப்பு தவறு. இறை நம்பிக்கையாளர்களை பெரியார் மதித்து போற்றியது உண்டு. வள்ளலாரின் பாடல்களை அவர் நூலாக வெளியிட்டார்.

கடலூர் ஞானியார் மடத்தின் ஆன்மீகவாதி ஞானியார் அடிகள் ஒரு இந்துமதத்துறவி. அவரிடத்தில் பெரியார் பெரிதும் மதிப்பு கொண்டிருந்தார். 02.05.1925 அன்று குடியரசு மாத இதழின் முதல் பிரதியை ஞானியார் அடிகள் கைகளினால் வெளியிடச்செய்தார் பெரியார்.

கேள்வி 5:* அன்றிலிருந்து சாதி என்கிற விஷயத்தைத் தவிர வேறு ஏதாவது முற்போக்கான சிந்தனையில் நாட்டுக்கு என்ன செய்தார்?

பதில் 5: இது முட்டாள்தனமான கேள்வி. பெரியார் அவரது காலத்தின் எல்லா பிரச்சினைகளையும் முன்னெடுத்து பிரச்சாரம் செய்தார். இன்று தமிழ்நாடு வடமாநிலங்களைவிட பலவற்றில் முன்னிலையில் இருப்பதற்கு அவரது வழிகாட்டலே காரணம் என்பதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கேள்வி 6: * ஒதுக்கீடு முறையை அமல்படுத்தப் பாடுபட்டவர்கள் என்கிற காரணத்தால் கேட்கிறேன் ஒவ்வொரு சாதிக் கட்சியும் அரசிடம் அளவிற்கு அதிகமாக ஒதுக்கீடுகள் கேட்கிறதே! இதற்கு என்ன வழி? ‘..நிதி’ அவர்களின் பேரன்களுக்கு மட்டும் ஒதுக்கீடு வழங்கலாமா?

பதில் 6: எந்த சாதி, எதனைப் பேர் என்கிற விவரம் இல்லாததுதான் இதற்கு காரணம். சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால், இக்கேள்விக்கு தேவை இருக்காது.

கேள்வி 7: * ராமாயணம் போன்ற மதப் புராணங்களில் நொட்டை எனப்படும் குறைகள் கண்டுபிடித்து பக்கம் பக்கமாக எழுதும் கழகக் கண்மணிகள் ஏன் அதில் உள்ள நல்ல விஷயங்களை எழுதுவதில்லை? தர்மத்திற்காக கொள்கையா? இல்லை கொள்கைக்காக தர்மமா?

பதில் 7: அதான் நல்ல விஷயங்களை எழுத நிறைய பேர் இருக்கீங்களே? அப்புறம் என்ன? இராவணன் எவ்வளவு பெரிய வீரன் என்று பெரியார் புகழ்ந்து எழுதியிருக்கிறார். மாவலி மன்னனின் சிறப்பை கருணாநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார். சம்புகன், ஏகலைவன், கர்ணனின் சிறப்பை பலரும் பேசியிருக்கின்றனர்.

அதெல்லாம் போகட்டும்: பெரியாரின் கருத்துக்களில் எவையெல்லாம் நல்ல விஷ்யங்கள் என்று நீங்கள் ஏன் எழுதுவதில்லை. தர்மத்திற்காக கொள்கையா? இல்லை கொள்கைக்காக தர்மமா?

கேள்வி 8: * கடவுள் இல்லை என்பதுதானே இவரின் கொள்கை அதற்குத்தானே கோவில்களையும் சிலைகளையும் உடைக்கின்றனர் பின் எதற்கு தலித்களுக்கு ஆலயப்பிரவேசம் வாங்கித் தர வேண்டும்? கூட்டம் சேர்க்கவா?

பதில் 8: கடவுள் இல்லை என்பதெல்லாம் ஒரு கொள்கை இல்லை. கடவுள் நம்பிக்கையை முன்வைக்கும் இசுலாமையும், பவுத்தத்தையும் பெரியார் போற்றிப் பேசியிருக்கிறார். கடவுளின் பெயரால் பார்ப்பனர்கள் செய்கிற கொடுமைக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதுதான் கொள்கை.

எல்லா இடத்திலும் சம உரிமை என்கிற வகையில்தான் தலித்துகளின் ஆலயப்பிரவேசமும் பார்க்கப்படுகிறது.

கேள்வி 9: * கடவுள்களை ஆபாசமாகக் காட்டி எழுதி பகுத்தறிவை வளர்ப்பதாகச் சொல்லும் கழக கண்மணிகள் ஏன் பெரியார் இணைந்த நிர்வாண சங்கத்தைப் பற்றி ஒப்புக்குக் கூட எழுதுவதில்லை? உபதேசம் ஊருக்கு மட்டுமா?

பதில் 9: தவரான கருத்து. பெரியார் குறித்த எல்லா வரலாற்று தொகுப்புகளிலும் அவர் நிர்வாண சங்கத்தில் சேர்ந்த்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

அருள் said...

டோண்டு ராகவன் & ஸ்மார்ட் கேள்விகளுக்கு பதில்கள் Part 3:

கேள்வி 10: * அன்றைக்கு எடுத்த அதே சாதி ஆதிக்கத்தைத் தான் இன்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள் சமூகத்தில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாததைப்போல வேறு எதுவும் சிந்திக்கமுடியவில்லையா? இல்லை அறிவில் பரிணாமமில்லையா?

பதில் 10: அந்தந்த காலகட்டத்தின் எல்லா பிரச்சினைகளையும்தான் பெரியார் வழியில் பொதுவாழ்வில் உள்ளோர் பேசுகின்றனர். சாதி ஆதிக்கம் இன்னமும் ஒரு முக்கிய பாதிப்பாக இருப்பதால் அதற்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நோயாளிக்கு என்ன நோய் என்று கண்டறிந்து அதற்குதான் சிகிச்சையளிக்க வேண்டும். இல்லாத நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாது. இருக்கிற நோயை கண்டுகொள்ளாமல் விடவும் முடியாது.

கேள்வி 11:* அன்று ஆதிக்கச் சாதி மக்களை அடிமைப் படுத்தியது என்று இன்று எழுதும் நீங்கள் கண்முன்னே ஒரு அரசியல் குடும்பம் பல தொழில்களில் ஆக்கிரமித்து வருமானம் ஈட்டி கொள்ளை அடிப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா? இல்லை கண்ணுக்கும் கறுப்புச் சட்டையா?

பதில் 11: நீங்கள் சொல்கிற பிரச்சினையை அதிமுக, மதிமுக ஆகிய 'பெரியார் வழிவந்த' கட்சிகள் முன்வைத்து போராடுகின்றன.

கேள்வி 12:* பெரியார் கொள்கைகளை பலர் பினபற்றுவதாகச் சொன்னாலும் கொள்கையின் வாரிசாக காட்டும் தி.க.மற்றும் பெரியார் தி.க. ஏன் சண்டைப் போட்டுக் கொல்கிறது? கொள்கையில் ஏதாவது கொள்ளைபோகிவிட்டதா?

பதில் 12: தமிழ்நாட்டில் இந்து முன்னணி பல பிரிவாக இருப்பது ஏன்? இந்து மதத்திற்காக பேசும் அமைப்புகளில் பிளவு ஏன்? கொள்கையில் ஏதாவது கொள்ளைபோகிவிட்டதா?

கேள்வி 13: * சாதி வேற்றுமையை ஒழிக்கத்தான் சாதி ஒதுக்கீடு என்று பிரச்சாரமிடும் நீங்கள், சதிகள் ஒழிந்தபின் அந்த ஒதுக்கீடு திரும்ப எடுக்கப்படும் என்று எங்குமே பிரச்சாரம் செய்யாதது ஏன்? ஆரசியல் நடத்த முடியாதே அதனாலா?

பதில் 13: சாதி வேற்றுமை ஒழிந்தால் இட ஒதுக்கீட்டின் தேவையே இருக்காது. அதுசரி, இன்னும் குழந்தையே பிறக்கவில்லை. அதற்குள் ஏன் பேர்வைக்க அலைகின்றீர்? முதலில் இட ஒதுக்கீடு அமலாகட்டும், அப்புறம் பார்க்கலாம்.

கேள்வி 14:* பகுத்தறிவை வளர்க்க கடவுள் சிலைகளை உடைப்போம் என்கிறீர்களே அப்படி என்றால் பெரியார் வன்முறையைத்தான் சொல்லிக் கொடுத்தாரா? வன்முறை எடுத்தபிறகு எங்கே பகுத்தறிவு வேலை செய்யும்?

பதில் 14: உங்க ஆளுங்களைப் போல அடுத்தவரின் மசூதியை இடிக்கும் வன்முறையை பெரியார் கற்றுக்கொடுக்கவில்லை.

கடவுள் சிலையை உடைக்கச் சொன்னது ஒரு அடையாளப் போராட்டம். அதுவும் கோயிலில் உள்ள சிலைகளையோ, அடுத்தவர் வீட்டில் உள்ள சிலைகளையோ அல்ல. அவரவர் சொந்தமாக சிலை வாங்கி அதனை உடைக்கும் போராட்டம்தான் நடத்தப்பட்டது. சொந்த சிலையை உடைத்தவர்கள் எல்லோரும் இந்துக்கள்தான். மாற்று ம்தத்தினரும் அல்ல. நீங்கள் சொல்வது போல இதில் வன்முறை எதுவும் இல்லை.

Anonymous said...

//
அவரவர் சொந்தமாக சிலை வாங்கி அதனை உடைக்கும் போராட்டம்தான் நடத்தப்பட்டது. சொந்த சிலையை உடைத்தவர்கள் எல்லோரும் இந்துக்கள்தான். மாற்று ம்தத்தினரும் அல்ல.
//

இதே போல் பெரியார் பெயர் சொல்லும் இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தை எதிர்த்து சொந்தச் செலவில் குரான் வாங்கி எரிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

அருள் said...

Anonymous said...

// //இதே போல் பெரியார் பெயர் சொல்லும் இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தை எதிர்த்து சொந்தச் செலவில் குரான் வாங்கி எரிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.// //

சாதீய ஏற்றத்தாழ்வை எதிர்த்துதான் தந்தை பெரியார் தீவிரமாக போராடினார். சாதி உள்ளிட்ட எந்த ஒருதீமைக்கும் இசுலாம் காரணம் அல்ல. பெரியாரின் காலத்தில் பவுத்த மதமும் மிகச்சிறந்த மதமாக கருதப்பட்டது. இதனால், பவுத்த மதத்தையும் இசுலாம் மதத்தையும் பெரியார் ஆதரித்து பேசியுள்ளார்.

உண்மையில் தீண்டாமைக் கொடுமையிலிருந்து தப்பிக்க தலித்துகள் இசுலாமிய மதத்திற்கு மாற வேண்டும் என்றும் பெரியார் கோரினார்.

இன்று நாட்டார் வழிபாடு என்று கூறப்படும் கிராமப்புற கடவுள்களைக் கூட பெரியார் எதிர்க்கவில்லை. நிறுவன மயமாக்கப்பட்ட வைதீக மதத்தையே அவர் எதிர்த்தார்.

எனவே, இந்து எனக்கூறப்படும் BC/MBC/SC/ST மக்கள், தங்களை இழிவுபடுத்தும் வைதீக மதத்தை எதிர்ப்பதற்கான தேவை இருப்பது போல, எந்த இசுலாமியனும் இசுலாமிய மதத்தை எதிர்ப்பதற்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை.

நீங்கள் இந்த காலத்தின் தீவிரவாதம் குறித்து பேசுகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் தீவிரவாதத்திற்கும் குரானுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. உண்மையில் இந்தியாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய தீவிரவாதம் என்பது - காவித் தீவிரவாதம்தான்.

dondu(#11168674346665545885) said...

அருள் has left a new comment on your post "ஈ.வே. ராமசாமி அவர்கள் சார்பில் இங்கு யாராவது சில ப...":

Part 1 விடுபட்டிருக்கிறது....


டோண்டு ராகவன் Said...

// //அடேடே ஸ்மார்ட் அருமையான கேள்விகளாச்சே. எதுக்கும் இருக்கட்டும்னு இங்கேயும் போட்டு வைக்கிறேன் அவற்றை.// //

டோண்டு ராகவன் & ஸ்மார்ட் கேள்விகளுக்கு பதில்கள் Part 1:


கேள்வி 1: “நாயக்கர் என்றால் தான் ஆந்திராவில் தெரியும் ” என்று தெலுங்கில் பெரியார் படத்தின் பெயர் காரணத்தின் விளக்கத்திலிருந்து அறியமுடிகிறது. அப்படியென்றால் நாயக்கர் சமூக பலத்தைப் பெற அப்பெயரில் தான் ஆந்திராவில் அறிமுகமானாரா?

பதில்.1: கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது: நாயக்கர் என்று தெலுங்கு மக்களால் அறியப்பட்டிருக்கிறார். ஆனால், அவராகத் திட்டமிட்டு அப்பெயரை பரப்பவில்லை. அதனால் அவருக்கு எந்த பலனும் இல்லை. (ஆந்திர சாதிப்பெயர் நாயுடு என்பதுதான், நாயக்கர் அல்ல).

கேள்வி 2:* பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல என்று சொன்னால் மறுப்பீர்களா?

பதில்.2: நிச்சயமாக மறுப்போம்.

எந்த ஒரு தனிப்பட்ட சாதியினரையும் ஒழிப்பது பெரியாரின் நோக்கம் அல்ல. உண்மையில் பெரியார் பார்ப்பனர்களுக்கு எதிரானவரே அல்ல. அவர் சாதீய மேலாதிக்கத்தையே எதிர்த்தார். அனைத்து சாதியினருக்கும் சம உரிமைக் கேட்டார்.

ஆதிக்கம் ஒழியவேண்டும் என்று சொல்வது ஆதிக்கசாதியினருக்கு தீங்காகத்தான் தெரியும். சுரண்டலை எதிர்த்தால் அடுத்தவன் உழைப்பில் வாழ்வோருக்கு எரிச்சல் வரும்தான். இந்தியாவுக்கு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைக் கோரியபோது பிரிட்டிஷாருக்கு எரிச்சல் வரவில்லையா? அது போலத்தான் இதுவும்.

கேள்வி 3:* திராவிடக் கொள்கை, திராவிட இனம், திராவிட பகுத்தறிவு என்று பதவி ஆசையில் இந்தியாவை பிரிக்க நினைத்தவர் பெரியார். இந்த திராவிடக் கொள்கை மற்ற மாநிலங்களில் உள்ள பற்று எவ்வளவு? அவருக்குப் பிறகும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் மற்ற மாநிலத்தில் திராவிட போலிப் பிரச்சாரம் எடுபவில்லை என்பதை அறிவீர்களா?

பதில்.3: பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது, திராவிட நாடும் பிரிக்கப்பட வேண்டும் என்று பெரியார் கோரினார். இது ஒரு நியாயமான கோரிக்கை. விடுதலைக்கு பிறகு அண்ணாவும் இதே கோரிக்கையை முன்வைத்தார். 'அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு' என்கிற முழக்கம் மிகப்பிரபலமானது.

இந்தியா மீது சீனா படையெடுத்தபோது இந்த கோரிக்கை வலுவிழந்தது. அண்ணா ஆட்சிக்கு வந்த போது - அரசியல் சாசனத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் - திராவிட நாடுகோரிக்கை கைவிடப்பட்டது. "ஆனால், திராவிட நாட்டிற்கான தேவை" இருப்பதாக அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.

திராவிடக் கோள்கை மற்ற மாநிலங்களில் எடுபடாதது ஒன்றும் பெரிய விஷயமல்ல. பெரியார் காலத்திலேயே திராவிடக் கொள்கை என்பது தமிழ்பேசும் பகுதிகளில் மட்டும்தான் எழுச்சியாக இருந்தது.

உண்மையில் திராவிடம் என்பது தமிழ் பேசும் பகுதியின் ஒரு அரசியல் வடிவம்தான். "தமிழர்" என்கிற பதத்திற்கு ஒரு மாற்றாகத்தான் "திராவிடர்" என்கிற பதத்தை பெரியார் உருவாக்கினார்.

காரணம் மிக எளிதானது - தமிழர் என்றால் பார்ப்பனர்களும் தங்களை தமிழர் என்று கூறுவர். அதேசமயம் தமிழ்பேசும் பகுதியில் வசிக்கும் பார்ப்பனர் அல்லாத பிறமொழியினர் இதில் சேரமுடியாது.

திராவிடர் என்றால் அது ஆரியத்துக்கு எதிரானது. பார்ப்பனர் சேரமுடியாது. தமிழ்பேசும் பகுதியில் வசிக்கும் பார்ப்பனர் அல்லாத பிறமொழியினர் இதில் சேரமுடியும்.

எனவே, திராவிடம் என்பது தமிழ்பேசும் பகுதியின் அரசியல் வடிவம்தான். மற்ற மாநிலங்களில் இது இல்லாதது ஒன்றும் வியப்பில்லை.

(காஷ்மீர் சிக்கல், இராமஜென்மபூமி. இராமர் பாலம் - இதெல்லாம் ஏக இந்தியாவுக்கும் பெரிய பிரச்சினை என்று பேசுகிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் யாராவது இவற்றைக்கண்டு கொள்கிறார்களா? தமிழ்நாட்டு மக்கள் ஈழப்படுகொலையை கண்டு கவலை கொள்கின்றனர். ஆனால் ஏக இந்திய மக்கள் இதனை முக்கியமாக நினைப்பதில்லையே! - அது போலத்தான் திராவிடமும்).

Publish
Delete
Mark as spam

hayyram said...

//நீங்கள் குறிப்பிடும் தீவிரவாதத்திற்கும் குரானுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.// அதே போல தான் இந்து மதத்திற்கும் ஜாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

http://hayyram.blogspot.com/2010/08/blog-post_28.html

படித்துப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

அருள் said...

hayyram said...

// //
//நீங்கள் குறிப்பிடும் தீவிரவாதத்திற்கும் குரானுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.//

அதே போல தான் இந்து மதத்திற்கும் ஜாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.//
// //

"பார்ப்பனர்களுக்கும் ஜாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று சொல்லாமல் விட்டதற்கு மிக்க நன்றி.

அப்படியே மனுஸ்ம்ரிதி எந்த மதம் சார்ந்த சட்டநூல் என்று விளக்கினால் புண்ணியமாக இருக்கும்.

hayyram said...

வன்னியருக்கும் ஜாதிக்கும் தொடர்பில்லாமல் போகும் போது பார்பனர்கும் ஜாதிக்கும் தொடர்பில்லாமல் போகும்! மனுஸ்மிரிதி எனக்குத் தெரியாது. இருந்தாலும் அது தொடர்பன பதிலை படித்துப் பாருங்கள்!

http://hayyram.blogspot.com/2010/09/2.html

அருள் said...

hayyram said...

// //வன்னியருக்கும் ஜாதிக்கும் தொடர்பில்லாமல் போகும் போது பார்பனர்கும் ஜாதிக்கும் தொடர்பில்லாமல் போகும்!// //

பார்ப்பனர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரம், கல்வி, அதிகாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருப்பதற்கு காரணம் - தனிமனித திறன் அல்ல. மாறாக, பார்ப்பனராக இருப்பதே முன்னிலைக்கு காரணமாக இருக்கிறது.

வன்னியர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரம், கல்வி, அதிகாரத்தில் மிக தாழ்ந்த நிலையில் இருப்பதற்கு காரணம் - தனிமனித திறன் போதாமை அல்ல. மாறாக, வன்னியராக இருப்பதே பின் தங்கிய நிலைக்கு காரணமாக இருக்கிறது.

இதுகுறித்து வரலாற்று பூர்வமாக விளக்க வலைப்பூ போதாது, நேரமும் இல்லை. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் நூல்களைப் படித்தால் விளக்கம் கிடைக்கும்.

கூடவே, Caste-Based Reservations And Human Development In India, by K. S. Chalam எனும் நூலைப் படியுங்கள். (www.flipkart.com - ல் கிடைக்கிறது. விலை ரூ. 294)

"வன்னியர்கள் ஒன்றுதிரண்டு, தமது மக்கள்தொகைக்கேற்ப அனைத்திலும் இடம்பிடிக்க வேண்டும், உரிமை பெறவேண்டும்" என்பது - சாதியை காப்பாற்ற அல்ல. சாதியால் ஏற்பட்ட இழிநிலையை அகற்றத்தான்.

"நான் வன்னியர் இல்லை" என்று கூறிக்கொள்வதன் மூலம், வஞ்சிக்கப்பட்ட வன்னியர்களுக்கு விடுதலைக் கிடைக்காது. "நாங்கள் வன்னியர்" என்று அழுத்திக்கூறுவதன் மூலம்தான் விடிவு கிடைக்கும்.

இதுபோன்று, ஒடுக்கப்பட்ட அனைத்துசாதியினரும் தத்தமது சாதியை உயர்த்திப்பிடிப்பதன் மூலமே விடுதலை பெற முடியும். (கூடவே, இந்துத்வ தீவிரவாதத்திற்கும் இதுவே சரியான மாற்றாக அமையும்.)

ஒடுக்கப்பட்ட மக்கள் விகிதாச்சார உரிமை பெறுவது ஒன்றே சாதியை ஒழிக்க ஒரே வழி. வேறு வழியே இல்லை.

வஜ்ரா said...

அருள்,

//
"நான் வன்னியர் இல்லை" என்று கூறிக்கொள்வதன் மூலம், வஞ்சிக்கப்பட்ட வன்னியர்களுக்கு விடுதலைக் கிடைக்காது. "நாங்கள் வன்னியர்" என்று அழுத்திக்கூறுவதன் மூலம்தான் விடிவு கிடைக்கும்.
//

தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்கும் இதே விசயம் பொருந்தும். பார்ப்பானர்களுக்கும் பொருந்தும்.

நீங்கள் சொல்வது போல் டோண்டு அவர்கள் "சமீபத்தில்" ஒரு ஆண்டுக்கு முன்னால், பிள்ளைமார்கள், நாடார்கள், முதலியார்கள் என்று ஜாதிப் பெருமைப்பதிவுகள் பதித்தார். நல்ல விசயங்கள் தான் சொன்னார்.

அதற்கு இந்துத்வாவாதிகள் எவனுமே வந்து தட்டிக்கேட்கவில்லை. மாறாக பெரியார் பெயர் கூறி ஜாதி ஒழிக்கும் "சமத்துவ வாதிகள்" தான் தாருமாறாக திட்டி அவரை ஏசினார்கள். அது அவருக்கே தெரியும்.

நீங்கள் சேம்சைடு கோல் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பது என் கருத்து.

பரணீதரன் said...

/********* சார், பதில் சொல்ற மாதிரி தெரியல சப்போஸ் யாரச்சும் வந்தாங்கன்னா பெரியார் பிறந்த நாள் அன்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல அனுப்பிவையுங்க

தன்மானக் காரர்களே,
நீங்க வரமுடியாவிட்டால் கூட உங்கள் புள்ளகுட்டிகளையாவ்து அனுப்பி பதிலா சொல்லுங்கப்பா!*********/

உங்கள் முகத்திரை கிழித்து தொங்க விடப்பட்டுள்ளது ..போய் பாரும்.....பெரிய ஊரில் கேட்காத கேள்வி இவர் கேட்டு விட்டார்..பெரியார் பற்றி......இப்பொழுதுதான்..பெரியாரை படித்திருப்பார் போலும்.....பிதற்றி கொள்ள ஒரு அளவே இல்லை.....பெரிய அறிவுஜீவி கேள்விகள்.....வடிவேல் கேட்பது போல... என்ன வாய்க்கால் சண்டை? என்ன கைய புடிச்சி இழுத்திய?..என்ன அய்யயோ? இப்படி கேள்வி கேட்க என்ன அறிவு வேண்டும்..அது போலத்தான் உங்கள் கேள்வி...புரிந்து கொள்ளுங்கள் ஸ்மார்ட்....இப்படி பட்ட கேள்விகளுக்கு பதில் எதிபார்ப்பது வாயால் சிரிக்க முடியவில்லை....இருந்தும்..பதில் கூறியாயிற்று.....மேலும் விளக்கம் வேண்டும் என்றால் கேளும்..

dondu(#11168674346665545885) said...

@சங்கமித்திரன் % அருள்
இப்பதிவில் நான் கேட்ட 3 கேள்விகளுக்கு முழுமையான பதிலைக் கூற முடிந்தால் கூறுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பரணீதரன் said...

அய்யா நீங்கள் என்னதான் பெரியாரை விமர்சித்தாலும்.......பெரியார் தாடி மயிர் அளவு கூட ஒரு சறுக்கலும் அவர் கொள்கைக்கு ஏற்படுத்தி விடமுடியாது..என்பதே எமது கருத்து...

பெரியார் எந்த ஆதிக்கவாதியும் இல்லை ஒய்..அவர் ஒரு ஒப்பற்ற மனிதபற்றாளர் அவளாவே....நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளது போல நாகம்மை திருமணம் நன்மை தருவதாகுக என்ற தலைப்பில் அய்யா அவர்கள் எழுதியது.....அது அவருடைய நேர்மைக்கு எடுத்துகாட்டு...எதனையும் மறைக்க முயற்சிப்பவர் அல்ல....எப்பொழுதும் நேர்மை,உண்மை,ஒழுக்கத்தை முழுமையாக நம்புபவர்..இதனை உங்கள் ராஜாஜியே ஒப்புக்கொண்டுள்ளார்..

உண்மை - நேர்மை - நியாயம் - நீதி இவற்றுக்காக பகுத்தறிவுடன் தொடர் போராட்டம் நடத்திய பெரியார் எந்த வெறிதனத்திர்க்கும் ஒத்துப்போகதவராக இருந்தார். தமிழர்களின் மொழியை சீராக்குவதிலும், எளிமைப்படுதுவதிலும் காட்டிய அக்கறையில் அவர் தமிழை தெயிவமாக்கவில்லை. வளர்ச்சியடையாத, மாற்றமும் முன்னேற்றமும் அடையாத எதுவும் காட்டுமிரண்டிதனமானவையே என்பதுதான் அவரது தத்துவ அணுகுமுறை.


தமிழர்கள் என்பதாலேயே கரிகார்ச்சோழனும்,நரசிமபல்லவனும்,ராஜராஜ சோழனும் போற்றுவதர்க்குரியவர்களாக பெரியார் ஏற்றுகக் கொண்டதில்லை.

தமிழ் என்பதாலேயே தேவாரமும்,திருவாசகமும்,கந்தபுராணமும் அவருக்கு பெருமிதமாக படவில்லை, அவர்களாலும் அவைகளாலும் மனுதர்மம் தழைத்ததா,சமதர்மம் தழைத்ததா என்பதுதான் அவரது அளவுகோல். சமத்துவத்தை மறுக்காத சமநீதி சொன்ன திருக்குறளை ஏற்றுக்கொண்டதும் தமிழன் மீதான பற்றினால் அல்ல சமதர்மத்திர்க்காகதான்.

ஒப்பற்ற மனிதப் பற்றாளரான பெரியார் எப்போதும் பாதிக்கப்படவர்களுக்காக சிந்தித்தார்,செயல்பட்டார் போராடினார். போலித்தனம் ஏதுமின்றிப் போராடினார்.

ஆதிக்க ஆரியத்திற்கு எதிராக
பாதிக்கப்பட்ட திராவிடர்களுக்கான விடுதலை.

தன்னல பார்ப்பனியத்திற்கு எதிராக
பார்பனரல்லதொரின் விடுதலை.

தேவமொழி சமஸ்கிருதத்திற்கு எதிராக
மக்கள் மொழி தமிழுக்கான விடுதலை.

மடமை மதவாதத்தின் கொடுமைகளிலிருந்து
பகுத்தறிவின் மூலம் பாமரர்களுக்கு விடுதலை.

ஆணாதிக்க மரபுகளிலிருந்து
பெண் விடுதலை.

மூடநம்பிக்கயிளிருந்து பகுத்தறிவுக்கு விடுதலை.

வன்மைங்களிருந்தும் வெறிதனன்களிருந்தும் விடுதலை
(வன்முறையின் - பயங்கரவாதத்தின் விதையே வெறித்தனம் அல்லவா?)

இவ்வாறு தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கும் நெடிய போராட்டங்களுக்கும் உணர்வாக,உயிரோட்டமாக இருப்பது அவரது விடுதலை தத்துவமே.

அது வெறும் அரசியல் விடுதலை தத்துவம் அல்ல. சமுக விடுதலை தத்துவமல்ல

அது மனவிடுதலை முதல் சமுக பொருளாதார அரசியல் விடுதலை என அனைத்தையும் தழுவிய முழுவிடுதலை தத்துவம்.

மகா பெரியவாள் போல ஒழுக்கம் கெட்ட,மானம் கெட்ட பல பெண்களின் கையை பிடித்து இழுத்து கற்பழித்த மகா அயோக்கியர்களை தலைமை ஆக ஏற்றுக்கொண்டுள்ள நீங்கள்தான் யோசிக்க வேண்டும்..இது போல எழுதும் முன்பு...

dondu(#11168674346665545885) said...

//ஆணாதிக்க மரபுகளிலிருந்து
பெண் விடுதலை//
அதற்குத்தானே சான்று கேட்கிறேன். எல்லா இரண்டாம் திருமணமும் ஆண்களுக்குத்தானே செய்தார்.

டோண்டு ராகவன்

பரணீதரன் said...

/*அதற்குத்தானே சான்று கேட்கிறேன். எல்லா இரண்டாம் திருமணமும் ஆண்களுக்குத்தானே செய்தார். */

சான்றுக்கு பெரியார் திரைப்படத்தை பாருங்கள் அய்யா...அந்த காலத்தில் குழந்தை திருமணம் செய்து கணவன் இறந்து விட்டால் மறுமுறை திருமண செய்யாதது வழக்கம்..அதனை உடைத்து திருமண செய்து வைப்பார்..இது உண்மையாக அவர் உறவினர் பெண்ணுக்கு செய்தது...

ஜெயந்திரன் ஏன் இப்படி இரண்டாவது திருமணம் வேண்டுமானால் செய்து கொள்ளாமல்...மடத்திற்கு வரும் பெண்களை அபகரித்தார்?

dondu(#11168674346665545885) said...

@சங்கமித்திரன்
விதவை திருமணம் பற்றி நான் பேசவில்லை. முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, விவாகரத்து பெறாமல் ஓர் ஆண் இரண்டாம் திருமணம் செய்த போது அத்திருமணத்தை நடத்தியவர் ஈவே ராமசாமி நாயக்கர். அவர் வார்த்தைகளில்:
//சமீபத்தில் நகர் என்ற ஊரில் ஒரு சுயமரியாதை கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை கிறிஸ்தவர். கிறிஸ்து மதச் சட்டப்படி ஒரு மனைவி யிருக்க மற்றொரு மனைவியை விவாகம் செய்து கொள்ள அனுமதியில்லை என்றாலும் அவரவர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல் விரோதமாகும். எனவே அக்கல்யாணத்தைச் சிறப்பாக முடித்து வைத்தோம்//.

அம்மாதிரி முதல் கணவனை விவாகரத்து செய்யாது இன்னொரு ஆணை திருமணம் செய்து கொண்ட ஏதேனும் பெண்ணின் திருமணத்தை இவர் நடத்தி வைத்தாரா. அதை விடுங்கள், அம்மாதிரி ஒரு கோரிக்கையுடன் ஒரு பெண் வந்திருந்தால் அவரது எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்?

மனைவிக்கு தாம்பத்திய சுகம் தருவது கணவன் கடமை. அதை ஈவேரா தனது இரண்டாவது திருமண் விஷயத்தில் செய்ய முடிந்ததா? பரிகாரம் என்ன?

டோண்டு ராகவன்

Anonymous said...

\\சான்றுக்கு பெரியார் திரைப்படத்தை பாருங்கள் அய்யா..//

ஏன் அப்படியே தேவர் மகன், வேதம் புதிதுன்னு அடிச்சு விட வேண்டியது தானே சங்கமித்திரன்? சினிமால சொல்றதெல்லாம் உண்மையாயிருக்கனும்னு பகுத்தறிவுப் பாசறைல சொல்லித் தந்திருக்காங்களா சங்கமித்திரன்? ஆமாம் ரொம்ப நாளா ஒரு சந்தேகம். வீரத்துக்கு மணியடிக்கிற நீங்க சங்கமித்திரன்னு பேரு வச்சிருக்கிற ரகசியம் என்ன? சங்கமித்திரன்னா என்ன அர்த்தம் ஒய்?

பரணீதரன் said...

/*மனைவிக்கு தாம்பத்திய சுகம் தருவது கணவன் கடமை. அதை ஈவேரா தனது இரண்டாவது திருமண் விஷயத்தில் செய்ய முடிந்ததா? பரிகாரம் என்ன? */

இப்படிப்பட்ட ஒரு கேள்வி அவர் திருமணம் செய்து கொண்ட எங்கள் அம்மா மணியம்மையிடம் இருந்து வரவேண்டும். உங்களுக்கு வயது அதிகமே தவிர...மற்றபடி வாழ்வியல் புரிதல் இல்லை. (ஜெயந்திரன் தலைமை ஏற்றால் அப்படித்தான் தாம்பத்திய நினைவே மேலோங்கி இருக்கும்...ஏன்னா தேவநாதனே அதே நினைப்பில் கர்ப்பகிரகத்தில் கர்ப்பை சூறை செய்தவன் அவர் பரம்பரை இப்படி யோசிப்பது வியப்பல்ல)

தம்பத்தயம் மட்டுமே என்றால் அதற்க்கு திருமணம் தேவை இல்லை. அதற்க்கு ஜெயந்திரன் போல தாம்பரம் லலிதா, மறைந்த அனுராதா ரமணன் ...இப்படி லிஸ்ட் போட்டு வைத்து கொள்ளலாம்......அய்யா ஒழுக்கமானவர் ...பொதுவாழ்க்கையில் இருப்பவர் அவருக்கு உதவி செய்ய அம்மா அவர்கள் அவர்களை அற்பநித்துகொண்டார்....இதில் பெண்ணுரிமை மீறலோ அல்லது பெண்ணடிமைத்தனமோ இல்லை.

சரி நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லையே? ஜெயந்திரனுக்கு பவள விழா தாண்டியும் தம்பத்தயம் தேவைன்ன இரண்டாம் , மூன்றாம் திருமணம் நேரடியாக பண்ணிக்கொள்ள வேண்டியது தானே....என இப்படி லலிதா மாரை புடிச்சி அவுங்க சத்தம் போட்டதா ரவி. சுப்பிமணியம் சொல்லி உள்ளார்.....இந்த வயசுல தம்பத்தயம் ஜெயந்திரனால நன்னா பண்ண முடியமா?

அப்புறம் அந்த அனநிமொஸ் யாரு......சந்தேகம் வருது....முடிந்த பெயர் உள்ளவர்களை மட்டும் பின்னோட்டம் பொட அனுமதியுங்கள்.....பெயரில்ல்தவருக்கு எல்லாம் பதில் கூற இயலாது...

பரணீதரன் said...

/*மனைவிக்கு தாம்பத்திய சுகம் தருவது கணவன் கடமை. அதை ஈவேரா தனது இரண்டாவது திருமண் விஷயத்தில் செய்ய முடிந்ததா? பரிகாரம் என்ன? */

இப்படிப்பட்ட ஒரு கேள்வி அவர் திருமணம் செய்து கொண்ட எங்கள் அம்மா மணியம்மையிடம் இருந்து வரவேண்டும். உங்களுக்கு வயது அதிகமே தவிர...மற்றபடி வாழ்வியல் புரிதல் இல்லை. (ஜெயந்திரன் தலைமை ஏற்றால் அப்படித்தான் தாம்பத்திய நினைவே மேலோங்கி இருக்கும்...ஏன்னா தேவநாதனே அதே நினைப்பில் கர்ப்பகிரகத்தில் கர்ப்பை சூறை செய்தவன் அவர் பரம்பரை இப்படி யோசிப்பது வியப்பல்ல)

தம்பத்தயம் மட்டுமே என்றால் அதற்க்கு திருமணம் தேவை இல்லை. அதற்க்கு ஜெயந்திரன் போல தாம்பரம் லலிதா, மறைந்த அனுராதா ரமணன் ...இப்படி லிஸ்ட் போட்டு வைத்து கொள்ளலாம்......அய்யா ஒழுக்கமானவர் ...பொதுவாழ்க்கையில் இருப்பவர் அவருக்கு உதவி செய்ய அம்மா அவர்கள் அவர்களை அற்பநித்துகொண்டார்....இதில் பெண்ணுரிமை மீறலோ அல்லது பெண்ணடிமைத்தனமோ இல்லை.

சரி நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லையே? ஜெயந்திரனுக்கு பவள விழா தாண்டியும் தம்பத்தயம் தேவைன்ன இரண்டாம் , மூன்றாம் திருமணம் நேரடியாக பண்ணிக்கொள்ள வேண்டியது தானே....என இப்படி லலிதா மாரை புடிச்சி அவுங்க சத்தம் போட்டதா ரவி. சுப்பிமணியம் சொல்லி உள்ளார்.....இந்த வயசுல தம்பத்தயம் ஜெயந்திரனால நன்னா பண்ண முடியமா?

அப்புறம் அந்த அனநிமொஸ் யாரு......சந்தேகம் வருது....முடிந்த பெயர் உள்ளவர்களை மட்டும் பின்னோட்டம் பொட அனுமதியுங்கள்.....பெயரில்ல்தவருக்கு எல்லாம் பதில் கூற இயலாது...

பரணீதரன் said...

/*அம்மாதிரி முதல் கணவனை விவாகரத்து செய்யாது இன்னொரு ஆணை திருமணம் செய்து கொண்ட ஏதேனும் பெண்ணின் திருமணத்தை இவர் நடத்தி வைத்தாரா. அதை விடுங்கள், அம்மாதிரி ஒரு கோரிக்கையுடன் ஒரு பெண் வந்திருந்தால் அவரது எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்?*/

போங்கடா வெங்காயம்ன்னு பண்ணி வச்சுருப்பார்......என்ன யூகமா? இப்போ அது மாறி திருமணத்தை ஆசிரியர் வீரமணி பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் மூலம் நிறைய செய்துகொண்டிருக்கிறார் .......அதுவும் மணியம்மையார் அரங்கத்திலே நிறைய நடைபெற்றிக்கிறது ........

பெண்ணுரிமையில் பார்ப்பன வீட்டு பெண்களுக்கு சேர்த்துதான் போராடினார்..அது வலிக்குதோ உங்களக்கு....

dondu(#11168674346665545885) said...

//இப்போ அது மாறி திருமணத்தை ஆசிரியர் வீரமணி பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் மூலம் நிறைய செய்துகொண்டிருக்கிறார் .//
நீங்கள் இப்பின்னூட்டம் போட்டது வீரமணிக்குத் தெரியுமா? அது உண்மையாக இருந்து, சம்பந்தப்பட்ட விவாகரத்து பெறாத கணவர் போலீசுக்கு போனால், வீரமணியும் சேர்ந்து கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

நாயக்கர் முதல் மனைவியை விவாகரத்து பெறாது இருந்த ஓர் ஆணுக்கு மறு கல்யாணம் செய்வித்தார் என்றால், அக்காலத்தில் ஒருதார திருமணச் சட்டம் இல்லை. ஆகவே மாட்டிக் கொள்ளவில்லை. இப்போது அதுவும் சட்டப்படி குற்றமே.

பதிலளிப்பதாக நினைத்து உளறக்கூடாது. வீரமணி கண்டிப்பாக விவாகரத்து பெறாது, முதல் கணவன் உயிருடன் இருக்கும்போது ஒரு பெண்ணுக்கு மணம் முடித்திருப்பார் என்பதை நான் நம்பவில்லை.

அவ்வளவு சட்டம் தெரியாத பேர்வழியா வீரமணி?
அதே சமயம் மனைவி எவ்வாறெல்லாம் இருந்தால் கணவன் மறுமணம் செய்யலாம் என்றெல்லாம் பட்டியல் போட்ட நாயக்கர், கணவர்களுக்கான லிஸ்டை போடவே இல்லை என்பதையும்தான் இப்பதிவில் பார்த்தோம்.

தாம்பத்திய சுகம் மணியம்மைக்கும் நாயக்கருக்கும் இடையில் தனிப்பட்ட விஷயம் என்பதை ஒத்துக் கொள்கிறேன். அதே சமயம் அவர் தலைமை தாங்கி எதிர்த்த பல பொருந்தாத் திருமணங்களில் அவரும் சரி அவர் கட்சி ஆட்களும் சரி சம்மன் இல்லாமல்தான் ஆஜராகியிருக்கிறார்கள். அதனால்தான் மணியம்மையைத் திருமணம் செய்தபோது அண்ணா, சம்பத் ஆகியோர் பிரிந்தார்கள் என்பது சரித்திரம்.

டோண்டு ராகவன்

பரணீதரன் said...

/*நாயக்கர் முதல் மனைவியை விவாகரத்து பெறாது இருந்த ஓர் ஆணுக்கு மறு கல்யாணம் செய்வித்தார் என்றால், அக்காலத்தில் ஒருதார திருமணச் சட்டம் இல்லை. ஆகவே மாட்டிக் கொள்ளவில்லை. இப்போது அதுவும் சட்டப்படி குற்றமே.

பதிலளிப்பதாக நினைத்து உளறக்கூடாது. வீரமணி கண்டிப்பாக விவாகரத்து பெறாது, முதல் கணவன் உயிருடன் இருக்கும்போது ஒரு பெண்ணுக்கு மணம் முடித்திருப்பார் என்பதை நான் நம்பவில்லை.*/

உளறவெல்லாம் இல்லை..வியாகரத்து வாங்கி வந்த பெண்களுக்குத்தான் திருமணம் செய்துவைத்துள்ளார்....நீங்கள் கேட்ட யூக கேள்விக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு தான்..அதனை கூறியுள்ளேன் என்பதை நினைவில் கொள்ளவும் அய்யா ராகவன்...

சரி நான் கேட்ட கேள்வி என்ன ஆயிற்று.?

dondu(#11168674346665545885) said...

ஜெயேந்திரர் இப்பதிவில் வரவேயில்லை. நீங்கள்தான் நாயக்கருக்கு சப்பைக்கட்டு கட்டுவதாக எண்ணி இந்தத் திசை திருப்பல் செய்கிறீர்கள். இருப்பினும் அந்த விஷயத்துக்கும் வருகிறேன்.

ஜெயேந்திரர் பற்றி நான் ஏற்கனவே அனுராதா ரமணன் அவர்கள் பற்றிய அஞ்சலி பதிவின் பின்னூட்டத்தில் எனக்கு இது சம்பந்தமாக வந்த கேல்விக்கு இவ்வாறு பதில் எழுதியுள்ளேன்:

//காஞ்சி பெரியவர் மீது அனு வைத்த குற்றச்சாட்டுகளை எவ்வாறு பார்க்கிறீர்கள் ...//
அனு பொய்யுரைப்பார் என்பதை நான் நம்பவில்லை. அதுவும் இம்மாதிரியான விஷயங்களை பெண்கள் ஜாக்கிரதையாகவே கையாளுவார்கள். ஏனெனில் இது சம்பந்தமாக அவர்கள்மீதும் சேறடிக்க முயற்சிகள் நடக்கும்.

இந்த விவகாரத்தை நான் இங்கு அடக்கி வாசிக்கும் காரணமே ஜெயேந்திரருக்காக இல்லை. காலன்சென்ற அனுவின் மேல் வேறு யாரும் அவதூறு செய்யக்கூடாது என்பதாலேயே.

நீங்கள் யோக்கியமாக இருந்தால் மட்டும் போதாது, அவ்வாறான தோற்றத்தையும் அளிக்க வேண்டும் என்று பொருள் வருமாறு ஆங்கிலத்தில் It is not sufficient that you are honest, you should also appear to be honest ஒரு சொலவடை உண்டு.

அதன்படி ஜெயேந்திரர் என்னைப் பொருத்தவரை தேறவில்லை. மீதி விஷயங்கள் கோர்ட்டில் இருப்பதால் இப்போதைக்கு இது பற்றி மேலே பேச விருப்பம் இல்லை.//
பார்க்க: http://dondu.blogspot.com/2010/05/16.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பரணீதரன் said...

/*அதே சமயம் மனைவி எவ்வாறெல்லாம் இருந்தால் கணவன் மறுமணம் செய்யலாம் என்றெல்லாம் பட்டியல் போட்ட நாயக்கர், கணவர்களுக்கான லிஸ்டை போடவே இல்லை என்பதையும்தான் இப்பதிவில் பார்த்தோம்.*/

முட்டாள் தனமான விவாதம்...உரிமை மறுக்க பட்டவர்களுக்குத்தான் போராட வேண்டும் ஒழிய ஆதிக்கம் செலுத்து ஒரு இனத்துக்கு யாரும் பட்டியல் போடமாட்டர்கள்..நீங்கள் கூறுவது எப்படி இருக்கிறது என்ற......பெண்கள் இருக்கை என்று பேருந்தில் இருந்தால் ஆண்கள் இருக்கை என்று எழுதவேண்டும் என்று விவாதம் செய்வது போல உள்ளது...உரிமைகள் மறுக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்த பெண்கள் வெளியில் வேலைக்கு செல்லுகிறார்கள் எனவே பெண்களுக்கு ஊக்குவிக்க அரசு பேருந்து,புகைவண்டி என அனைத்திலும் முன்னுரிமை கோருகிறது....இதே அடிப்படை தான் அய்யா சொல்லி இருப்பது............பாவன் நீங்கள்...பெரியாரை கொச்சை படுத்த துடியாய் துடிக்கீர்கள் .....

ஜெயந்திரன் உடன் சேர்ந்து தம்பத்தய மோகம் சூழ்ந்து இருப்பது கண்ணை மறைக்கிறது....76 வயதிலும் அலையும் கூட்டம்..

பரணீதரன் said...

/******அதன்படி ஜெயேந்திரர் என்னைப் பொருத்தவரை தேறவில்லை. மீதி விஷயங்கள் கோர்ட்டில் இருப்பதால் இப்போதைக்கு இது பற்றி மேலே பேச விருப்பம் இல்லை *******88/

முதலில் நீங்கள் லோக குருவாக ஏற்றுக்கொண்டவர் யோகிதை பேசகூட முடியாத நிலைமையில் உள்ளது..இதில் அறிவு ஆசான் அய்யாவை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என்று புரியவில்லை...........மற்றபடி அம்மையார் அனுராதா அவர்கள் பற்றி சொன்ன செய்திக்கு வருந்துகிறேன்...அவர்கள் மறைந்துவிட்டார்...அவரை பற்றி பேச வேண்டாம் என்ற கருத்துடன் உடன்படுகிறேன்

dondu(#11168674346665545885) said...

//உரிமை மறுக்கப்பட்டவர்களுக்குத்தான் போராட வேண்டும் ஒழிய ஆதிக்கம் செலுத்து ஒரு இனத்துக்கு யாரும் பட்டியல் போடமாட்டர்கள்..//
என்ன சார் இப்படி மாட்டிக்கொள்கிறீர்கள்? இங்கு உரிமை மறுக்கப்பட்டவர்கள் கணவரா மனைவியா? கணவர்தான் ப்ரிவிலெஜ்ட் ஆயிற்றே. தாராளமாக இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமே. அதற்க்த்தான் புரோகிதராகச் செயல்பட நாயக்கர் வேறு இருந்தாரே?

அவ்வாறு அடாவடியாக இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்காக லிஸ்ட் போட்டவர் ஒரு பெண்ணும் கணவன் இந்தந்த முறையில் லாயக்கானவன் இல்லை என்றால், பெண் திருமணம் விவாகரத்து இல்லாமல் செய்து கொள்ளலாம் என்ப்தற்கான லிஸ்ட் தரவில்லை என்றுதான் கூறுகிறேன்.

ஆண்களுக்கு மட்டும் அவர் லிஸ்ட் கொடுத்தார், பெண்களுக்குத் தரவில்லை என்பதைத்தான் அவர் தனிப்பட்ட முறையில் ஆணாதிக்க வாதி எனக் கூறுகிறேன்.

டோண்டு ராகவன்

பரணீதரன் said...

/*ஆண்களுக்கு மட்டும் அவர் லிஸ்ட் கொடுத்தார், பெண்களுக்குத் தரவில்லை என்பதைத்தான் அவர் தனிப்பட்ட முறையில் ஆணாதிக்க வாதி எனக் கூறுகிறேன்.*/

மேலே நீங்கள் கேட்ட கேள்வி என்ன?....நீங்கள் மீண்டும் மீண்டும் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட நினைகீர்கள்....பெண்களுக்கான லிஸ்ட் நிறைய உள்ளது ...பெண் ஏன் அடிமையானால்? நூலில் நீங்கள் கேட்கும் விளக்கம் உள்ளது ....முடிந்தால் வாங்கி படித்து அசைபோடுங்கள்...ஸ்பூன் பீட் பண்ண முடியாது.......

பரணீதரன் said...

/*என்ன சார் இப்படி மாட்டிக்கொள்கிறீர்கள்? இங்கு உரிமை மறுக்கப்பட்டவர்கள் கணவரா மனைவியா? கணவர்தான் ப்ரிவிலெஜ்ட் ஆயிற்றே. தாராளமாக இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமே. அதற்க்த்தான் புரோகிதராகச் செயல்பட நாயக்கர் வேறு இருந்தாரே? */

நீங்கள் பண்ணும் மொட்டை விவாதத்தில் மாட்டிக்கொள்ள என்ன இருக்கிறது?...........புரோகிதர் (அப்புறம் கர்ப்பகிரகம் மேட்டர் புரோகிதர் என்று சொல்லும் எல்லோருக்கும் பொருந்தும்) என்பது பார்ப்பனர் புத்தி.......சுயமரியாதை வீரர் என்று சொல்லுங்கள்...

Anonymous said...

\\அய்யா ஒழுக்கமானவர்//

மஹா ஜனங்களே, சங்கமித்திரன் ஐயாவே சொல்லிட்டார், ஐயா ஒழுக்கமானவராம்! சங்கமித்திரரே, மொதல்ல சங்கமித்திரனுக்கு அர்த்தம் கேட்டேன், இப்போ ஒழுக்கத்துக்கும் சேர்த்துக் கேக்க வச்சுட்டீங்களே ? ஆமா ஒழுக்கம்னா என்ன சார்? ஆத்தங்கரைல ஐயாவும் நண்பர்களும் நிலா வெளிச்சத்துல அடிச்ச கொட்டமா?

dondu(#11168674346665545885) said...

மொட்டை விவாதம் யார் ஐயா செய்வது. நீங்கள்தான் பொருந்துகிறதோ இல்லையோ எல்லாவற்றுக்கும் குடியரசு, விடுதலை ஆகிய பத்திரிகைகளில் நாயக்கர் போட்டதை காப்பி பேஸ்ட் செய்து மொட்டை விவாதம் செய்கிறீர்கள்.

பதில் தெரியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறார் ஜெயேந்திரர்.

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஸ்பூன்ஃபீடாக தர யாரும் கேட்கவில்லை, ஏனெனில் இந்த இடத்தில் ஸ்பூன்ஃபீடாக உங்களிடமிருந்து வரக்கூடியது பெரியாரின் துவேஷ விஷம்தான்.

நாயக்கர் ஆணாதிக்கவாதி என்பதை அவரே நாகம்மை விஷயத்தில் ஒத்துக் கொண்ட பிறகு, நீங்கள் more catholic than the pope ஆகச் செயல்படுவது நகைப்புக்குரியது.

கீழ்வெண்மணி விவகாரத்தில் மிகவும் ஜாக்கிரதை உணர்வுடன் கொலையாளி கோபால கிருஷ்ண நாயுடுவின் பெயரைக் கூறாது தவிர்த்து அக்கொலைகளை வெறுமனே கூலி உயர்வுக்கான போராட்டமாக சித்தரித்து கம்யூனிஸ்டுகள் மேல் பழியைப் போட்டபோதே அந்த பலீஜா நாயுடுவின் சுயசாதி அபிமானம் தெரிந்து விட்டது.

தான் அப்போது காமராஜ் மற்றும் காங்கிரசையும் ஆதரித்ததாலேயே 1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பல கட்டுரைகளை விடுதலை இதழ்களில் அவ்வாண்டு ஜனவரி 25 முதல் மார்ச் 15 வரை போடச் செய்தவர். அதிலிருந்து அரசியல் அனுகூலத்துக்காக ஹிந்திக்கும் சாமரம் பிடித்தவர் என்பது வெள்ளிடை மலையாகிறதல்லவா?

அந்த காலகட்ட விடுதலை இதழகளை நான் பார்க்க எண்ணி வீரமணியிடம் நேரிலேயே கேட்ட போது அவர் பதறிப்போய் அனுமதி மறுத்த போதே உண்மை வெளியில் வந்ததே. பார்க்க: “பெரியார் திடலில் டோண்டு ராகவன்”: http://dondu.blogspot.com/2009/08/blog-post.html

ஜெயேந்திரரை நான் எப்போதுமே குருவாக ஏற்றதில்லை. நான் வைணவன், எங்களுக்கு அவர் குரு இல்லை.

அதே சமயம் எங்கள் ஜீயர் ஏதேனும் அம்மாதிரி செய்திருந்தாலும் அவரையும் கண்டித்திருப்பேன். அதுதான் உண்மையான பகுத்தறிவு. நீங்கள் நாயக்கர் மேல் வைத்திருப்பது குருட்டு பக்தி.

டோண்டு ராகவன்
பின் குறிப்பு சொல் குற்றம் (அதனால் பொருட்குற்றத்துடன்) இருந்த எனது பின்னூட்டம் நீக்கப்பட்டு இதை வெளியிடுகிறேன்

suneel krishnan said...

தமிழ் சூழலில் ஓரளவேனும் சிந்தனை மாற்றம் நிச்சயம் பெரியாரால் நிகழ்ந்தது .இதில் மாற்றம் இல்லை .அவரை நாம் முற்றிலும் புறக்கணிக்கிறோம் அல்லது முற்றிலும் ஆராதிக்கிறோம் , இந்த வழிபாட்டு மன நிலை அல்லது நிந்தனை நிலையை இரண்டையும் ஒதுக்கி விட்டு அவரது கூற்றுகளை நாம் நோக்கினால் .நிச்சயம் சில நல்ல விஷயங்கள் கிடைக்கும் அதே சமயம் சில தேவையற்ற விவாதங்களை புறம் தள்ளவும் முடியும் .

பரணீதரன் said...

/8பதில் தெரியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறார் ஜெயேந்திரர்*/

உங்களுக்கு பதில் தெரியாமல்...இருக்கவே இருக்கு பெரியார் மணியம்மை திருமணம் என்று கொச்சை படுத்துகீர்கள்......தவறு இல்லாத எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாய் திரிபு பண்ணி விவாதம் நீங்கள் செய்யும்போது யாருக்கு தெரியாமல் உங்கள் தலைவர் லோக குருவை செய்த லீலைகளை கேட்டால் கோபம் வருதோ?

கீழ்வெண்மணி பற்றி நிறைய விவாதம் உங்களோடு பண்ணியாகிவிட்டது........நீங்கள் உங்கள் இந்த நாயுடு புராணத்தை மாற்றிக்கொள்ள இயலாத நிலையில் உள்ளீர்கள்.............................இப்படி மீண்டும் மீண்டும் சொன்னதை சொன்னால் ..பெரியார் கொள்கை மாறிவிடாது...பாவம் பெரியாரால் பாதிக்க பட்ட டோண்டுவுக்கு தான் அந்த வலி தெரியும் என்கீறீர்களா?

பரணீதரன் said...

/*ஸ்பூன்ஃபீடாக தர யாரும் கேட்கவில்லை, ஏனெனில் இந்த இடத்தில் ஸ்பூன்ஃபீடாக உங்களிடமிருந்து வரக்கூடியது பெரியாரின் துவேஷ விஷம்தான்.

நாயக்கர் ஆணாதிக்கவாதி என்பதை அவரே நாகம்மை விஷயத்தில் ஒத்துக் கொண்ட பிறகு, நீங்கள் more catholic than the pope ஆகச் செயல்படுவது நகைப்புக்குரியது

அதே சமயம் எங்கள் ஜீயர் ஏதேனும் அம்மாதிரி செய்திருந்தாலும் அவரையும் கண்டித்திருப்பேன். அதுதான் உண்மையான பகுத்தறிவு. நீங்கள் நாயக்கர் மேல் வைத்திருப்பது குருட்டு பக்தி.*/
*/

நான் அய்யா பெரியார் சொல்லி இருக்கும் கருத்தை அவர் கூறவில்லை என்று சொல்லவில்லை...நீங்கள் அதனை உங்கள் பார்ப்பன புத்தியோடு சொல்லி இருக்கும் விதத்தை தான் கண்டிக்கிறேன். பொது வாழ்க்கையில் அய்யா அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று மேலே சிறு விளக்கத்தோடு பின்னூட்டத்தில் சொல்லி உள்ளேன்....."போலித்தனம் இல்லாமல் போராடினார்" என்று...அதற்க்கு உதாரணம் தான் நீங்கள் சொல்லி உள்ள கருத்து. அவரே நேரிடையாக ஒப்புக்கொண்டு பொது வாழ்க்கையில் நேர்மை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று உணர்த்தியுல்லாறே தவிர மற்றபடி அவர் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கவாதி இல்லை. மேலும் அய்யா அவர்கள் சொல்லி உள்ள படி அவராக அதனை எதிர்பார்க்கவில்லை அன்னை நாகம்மையார் அவர்களே அய்யாவுக்கு அப்படி பணிவிடை செய்து பாதுகாத்துள்ளார்......அப்படி இருக்கும் போது நீங்கள் என்ன சொல்லி எழுத வேண்டும்..."பொது வாழ்க்கையில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஈ.வே.ரா பார்த்து கற்றுகொள்ளுங்கள்" என்று சொல்லவேணும்.. இது உங்களுக்கும் புரியும்...இருந்தும் தன் இனப்பற்று காரணமாக திரித்து எழுதி கொச்சை படுத்த நினைக்கீறீர்கள்...இதனை தான் நான் கண்டிகீறேன்..இதனை குருட்டு புத்தி என்றால் அப்படியே இருந்து விட்டு போகட்டும்...உங்கள் பார்ப்பன புத்திக்கு இது எவளவோ மேல் தானே அய்யா?

/*ஜெயேந்திரரை நான் எப்போதுமே குருவாக ஏற்றதில்லை. நான் வைணவன், எங்களுக்கு அவர் குரு இல்லை. */

அப்படியானால் அவர் யோகியர் இல்லை ஒரு அயோக்கியர்...லோக குரு இல்லை......சங்கர மடம் ரியல் எஸ்டேட் செய்யும் இடம் என்று வெளிப்படையாக கண்டித்து ஒரு பதிவு போடுங்கள்.......வெளிப்படையாக, நேர்மையோடு எதனையும் மக்கள் முன் சமர்பிக்கும் அய்யா தந்தை பெரியார் அவர்களை கொச்சை படுத்தும் நோக்கில் எழுத முடியும் போது...கயவாளி ஒருவர் மக்களை கடவுள், மதம் பேரை சொல்லி ஏமாற்றுகிறார் ...இதனை கண்டிக்க உங்கள் மனம் ஒப்ப வில்லையே? இதுதான் பார்ப்பன பாசமோ?

மற்ற படி எனக்கு ஜெயந்திரனை இழுத்து உங்களை அவமானபடுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை அய்யா......

Anonymous said...

//
மற்ற படி எனக்கு ஜெயந்திரனை இழுத்து உங்களை அவமானபடுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை அய்யா......
//

ஆமாஞ்சாமி நாங்க நம்பிட்டோம்.

நீங்கள் செயேந்திரனை இழுப்பதே "லோக குரு" என்று சொல்லிக்கொள்ளுவதால் அவனை ஒப்பிட்டால் ஈ.வே.ரா "லோகத்துக்கே பெரியார்" மாதிரி என்று எண்ணத்தில் தானோ என்னமோ.

செயேந்திரனை எப்படி தமிழகத்தின் 2% பேர் லோக குருவாக ஏற்கிறார்களோ அதே மாதிரி தான் ஈ.வே.ரா வை பெரியாராக தமிழகத்தின் ஒரு 10% பேர் ஏற்கிறார்கள்.

நீங்க செயேந்திரனை இழுத்து ராமசாமியை நல்லவனாகக் காட்ட நினைக்கிறீர்கள்.

கொலை செய்பவனைவிட கற்பழிப்பவன் நல்லவன் என்பது போல் உள்ளது உங்கள் ஒப்புமை.

பெரியார் உண்மையில் நல்ல மனிதராக வாழ்ந்து அவர் ஊருக்கு உபதேசித்ததை அவரே தன் வாழ்க்கையில் கடைபிடித்தாரா என்றால் இல்லை என்பதே பதில்.

அவர் உபதேசித்ததை அவரே கடைபிடிக்காமல் இருந்தார் என்பதற்கு அவர் செய்துகொண்ட பொருந்தாத் திருமணம் ஒரு உதாரணம்.

பொதுவாழ்க்கையில் ஒருவர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் ஈ.வே.ரா கன்னட பலீஜா நாயுடு. இப்படியெல்லாம் சொன்னால் உங்கள் ரத்தம் சூடேரி நீங்கள் என்னைத் திட்டினால் நீங்கள் பகுத்தறிவுவாதி அல்ல. செயேந்திரனை லோக குரு என்று சொல்லும் கூட்டத்துக்கும் இல்லை இல்லை, ஈ.வே.ரா தான் லோக குரு என்று நம்பும் கூட்டத்தில் இருக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

மொத்தத்தில் பகுத்தறிவு என்பது ஒரு மதம் ஆகிவிட்டது. இஸ்லாத்துக்கு முகம்மது, கிருத்தவத்துக்கு ஏசு, மாதிரி பகுத்தறிவு மதத்தின் முதன்மை குரு ஈ.வே.ரா.

பரணீதரன் said...

பெயரில்லாமல் வரும் இவர் மீது எனக்கு சந்தேகமே? பார்பனருக்கு என்றும் பின்புத்தி என்பது நன்னா இருக்கு பேஷ் பேஷ்.......பார்ப்பன பாசம் இப்படி..லோக குருவை கண்டித்து பதிவு போடுங்கள் என்றால்.....பெயரில்லாமல் வந்து வசை பாடுவது அழகல்லவே...வெட்கம் கேட்ட ஜென்மங்கள்....

பரணீதரன் said...

/*மொத்தத்தில் பகுத்தறிவு என்பது ஒரு மதம் ஆகிவிட்டது. இஸ்லாத்துக்கு முகம்மது, கிருத்தவத்துக்கு ஏசு, மாதிரி பகுத்தறிவு மதத்தின் முதன்மை குரு ஈ.வே.ரா. */'

பார்ப்பன பரதேசிகள் இந்த ஊரில் உள்ளவரை எல்லாம் அப்படித்தான் மாற்றப்படும் அபாயம்...எழுத்து நடையே காட்டி கொடுத்து விட்டதே...பெயரில்லாத நீங்கள் யார் என்று...பார்ப்பானுக்கு புத்தி இல்லை என்பது எவளவு உண்மை...

dondu(#11168674346665545885) said...

ஒரு அனானி பின்னூட்டத்தை சற்றே சென்சார் செய்து போட்டது:

“ஒரு இசுலாமியனிடம் முகம்மதை விமர்சித்தால் எவ்வளவு ஆத்திரத்தை எதிர்பார்க்க முடியுமோ அதே தான் ஈ.வே.ரா வை விமர்சித்தால் பகுத்தறிவுவாதி "சங்கமித்திரனிடமும்" எதிர் பார்க்க முடியும் என்பதை நிருபித்ததற்கு நன்றி. வாழ்க பகுத்தறிவு”.

(அனானிக்கு: கருத்தை மட்டும் கூறவும். பெயரை இழிவாக எல்லாம் திரிக்காதீர்கள்).

Anonymous said...

//
அனானிக்கு: கருத்தை மட்டும் கூறவும். பெயரை இழிவாக எல்லாம் திரிக்காதீர்கள்
//

பெயரை இழிவாகத் திரிப்பது எல்லாம் திராவிட நாய்களில் தனிப்பட்ட உரிமையா என்ன ?

இழிவு படுத்துவதே முழுநேரத் தொழிலாகச் செய்யும் இழிபிறப்புகளுக்கெல்லாம் மரியாதை கொடுத்துப் பேசுவது வெட்கம், மானம், சூடு, சொறனை உள்ள மனிதனால் இயலாது.

Anonymous said...

//பெயரை இழிவாகத் திரிப்பது எல்லாம் திராவிட நாய்களில் தனிப்பட்ட உரிமையா என்ன ?//

You still remember the curse?

Suresh Ram said...

/பகுத்தறிவு என்பது ஒரு மதம் ஆகிவிட்டது. இஸ்லாத்துக்கு முகம்மது, கிருத்தவத்துக்கு ஏசு, மாதிரி பகுத்தறிவு மதத்தின் முதன்மை குரு ஈ.வே.ரா./
கி பி 1985 ஆம் ஆண்டு முதன்மை குரு ஈ.வே.ரா. என்பவர் பகுத்தறிவு மதத்தை ஸ்தாபித்தார். நாடெங்கிலும் அவருக்கு சிலைகள் நிறுவப்பட்டு அவை பின்னர் நினைவாலயங்களாக மாறி "பகுத்தறிவு" பெற்ற மக்களால் வழிபடப்பட்டன. பின்னர் குரு ஈ.வே.ரா கொள்ககைகளை பின்பற்றி பெயருக்கு முன் அடைமொழி என்கிற பகுத்தறிவு கலாச்சாரத்துடன் அறிஞர், கலைஞர், பேராசிரியர்,மானமிகுக்கள், புரட்சி தலைவர், தலைவி, அய்யா, தளபதி, இனமான காவலர் போன்ற பலர் தோன்றி பகுத்தறிவு மதத்தை வளர்த்தனர். இதன் பலனாக திராவிட ஆன்மிகம் செழித்து ஓங்கி தெரு முனைகளில் காவல் கடவுள் கோயில்கள் அமைக்க பட்டு ஆண்டு முழுவதும் கோலாகலமான திருவிழ்க்கள் நடை பெற்றன. எனவே கடவுள் வழிபாடு புதிய முறைகள் பகுத்தறிவு மதத்தினால் ஆதரிக்க பட்டது

Anonymous said...

"\அய்யா ஒழுக்கமானவர்//

மஹா ஜனங்களே, சங்கமித்திரன் ஐயாவே சொல்லிட்டார், ஐயா ஒழுக்கமானவராம்! ஆத்தங்கரைல ஐயாவும் நண்பர்களும் நிலா வெளிச்சத்துல அடிச்ச கொட்டமா?”

அனானிக்கு அனானிதான் பதில் சொல்லனும்.

என் பதில்:

அவர்களுக்கு அவர் ஒழுக்கமானவர். உங்க கூட்டத்துக்கு ஜெயெந்திரர் ஒழுக்கமானவர்.

ஒழுக்கம் என்றால் என்ன என்றால், உங்கள் கூட்டத்துக்கு தேவநாதனும் லலிதா கையைபிடிச்சிழுத்த ஜெயேந்திரனும் செய்த்த்துதான் ஒழுக்கம்.

அவர்களுக்குப் பெரியார் செய்தவை ஒழுக்கம்.

இதையெல்லாம் ஒத்துக்கிறயா?

Anonymous said...

”அதே சமயம் எங்கள் ஜீயர் ஏதேனும் அம்மாதிரி செய்திருந்தாலும் அவரையும் கண்டித்திருப்பேன்.”

ஜீயர்கள் நிறைய. பல மடங்கள் உண்டு.

அவர்களுள் ஒரு இந்திக்காரர் - இவர் சிரிரங்கத்தில் உள்ள மடத்தின் ஜீயர்- இம்மடத்தில் தலைமைமடம் காசியில் உள்ளது.

இவரைக் க்டத்தி விட்டார்கள். சொத்து தகராறாம். சீடர்களிடையே இரு கோஷ்டிகள். இவரை கையில் பிடித்து வைத்திருக்கிறது ஒரு கோஷ்டி.

மடமா? ஜீயரா? இன்கே என்ன நடக்கிறது?

திருச்சி கோர்ட்டில் எதிர் கோஷ்டி வழக்குப் போட்டிருக்கிறது.

டோண்டு ‘பகுத்தறிவு வாதி’ என்றால் ஒரு தனிப்பதிவு போட்டு ஜீயரைத் தாக்கலாமே?

Anonymous said...

”செயேந்திரனை லோக குரு என்று சொல்லும் கூட்டத்துக்கும் இல்லை இல்லை, ஈ.வே.ரா தான் லோக குரு என்று நம்பும் கூட்டத்தில் இருக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.


அனானி, ஒரு பாயிண்ட்.

பெரியார் என்னும் ஒருவரைப்பற்றி பேசும்போது, அவர் செய்த தனிநபர் செயல்களைவிட, அவர் எண்ணங்கள் அதாவது சிந்தனைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின, ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஓ.பி.சிக்களின் எழுச்சி நடந்தது அவரின் சிந்தனிகளால். அப்பாதிப்புகள் உன்னைப்போன்ற பார்ப்பனர்களுக்கு கடும்பாதிப்பை ஏற்படுத்தின. கடுமையோ, அல்லது நன்மையோ - பெரியார் என்றால் சிந்தனைகள்தான்.

ஆனால், ஜெயேந்திரன் என்றால் சிந்தனைகளா? அவனுக்கு முன்னால் இருந்த ஆசாமியைப்பற்றிச்சொன்னால், சிந்தனைகள் என்று சொல்லல்லாம். ஆனால் எப்படிப்பட சிந்தனைகள்

வாழ்க அந்தணர் வாழ்க பார்ப்பனீயம்
என்றெல்லாம் சொல்லி பார்ப்ப்னர்களே தெய்வ்மென்றும் அவர்களுக்கு அடிபணிதலே மற்றவர்கள் செய்யவேண்டுமென்றும் சிந்தனைகள்?

ஒத்துக்கிரியா?

Anonymous said...

”பெயரில்லாமல் வரும் இவர் மீது எனக்கு சந்தேகமே? ”

சங்கமித்திரன்!

அவனை எனக்குத் தெரியும்.

அவனை நான் பாத்துக்கிறேன். நீங்கள் பெயருடன் வருவ்பவர்களுக்குப்பதில் சொன்னால் போதும்.

Anonymous said...

”இழிபிறப்புகளுக்கெல்லாம் மரியாதை கொடுத்துப் பேசுவது வெட்கம், மானம், சூடு, சொறனை உள்ள மனிதனால் இயலாது.”

அப்படியென்றால், நீயும் மரியாதை கொடுக்காதே. மத்தவாளும் கொடுக்க மாட்டார்கள். சரியாப்போச்சு.

Anonymous said...

//பெயரை இழிவாகத் திரிப்பது எல்லாம் திராவிட நாய்களில் தனிப்பட்ட உரிமையா என்ன ?//

You still remember the curse?

What is that curse?

The anony refers to change of Sanskrit names to pure Tamil names.

வே. சூரியநாராயண சாஸ்திரி தன் பெயரை

‘பரிதிமால் கலைஞர்’ என்று மாற்றிக்கொண்டார்.

For anyony, is he a dog also?

அருள் said...

Suresh Ram said...

// //கி பி 1985 ஆம் ஆண்டு முதன்மை குரு ஈ.வே.ரா. என்பவர் பகுத்தறிவு மதத்தை ஸ்தாபித்தார். நாடெங்கிலும் அவருக்கு சிலைகள் நிறுவப்பட்டு அவை பின்னர் நினைவாலயங்களாக மாறி "பகுத்தறிவு" பெற்ற மக்களால் வழிபடப்பட்டன. // //

கி பி 1985 ஆம் ஆண்டு தந்தை பெரியார் உயிருடன் இல்லை. கடவுள், வழிபாடு என்கிற கருத்துக்களை எதிர்த்ததனால் - வழிபட முடியாத முதல் தலைவரானார் தந்தை பெரியார்.

அதனால்தான் இந்து மதத்தின் எதிரியான கவுதம புத்தரை மகாவிஷ்ணுவின் 11 ஆவது அவதாரமாக ஆக்கியவர்களால், அண்ணல் அம்பேதகருக்கு பொட்டுவைத்து ஆர்.எஸ்.எஸ் சார்பில் நூல்வெளியிட முடிந்தவர்களால் - தந்தை பெரியாரிடம் மட்டும் நெருங்க முடியவே இல்லை.

இராசராசன் காலத்தில் செழித்து வளர்ந்து கோலோச்சியது பார்ப்பன அதிகாரம். இப்போது, ஆயிரம் ஆண்டுகள் ஆதிக்க தொடர்ச்சிக்கு பின்னர் - வீழ்ச்சியை நோக்கி பயணிக்கிறது. பார்ப்பன ஆதிக்கத்தின் மீது அறையப்படும் கடைசி ஆணியாக அமையப்போகிறது 'சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு'.

இந்த வரலாற்று மாற்றத்திற்கு அடிகோலியவர் மாமனிதர் தந்தை பெரியார். அவர்மீது BC/MBC/SC/ST மக்கள் கொண்டிருப்பது பக்தி அல்ல. அது மதிப்பு, அன்பு, பாசம், நன்றியுணர்வு, பெருமிதம்.

மல அடிமை said...

//
இராசராசன் காலத்தில் செழித்து வளர்ந்து கோலோச்சியது பார்ப்பன அதிகாரம்.
//

ராஜராஜன் காலத்துல ஏன் பார்ப்பானர்கள் செழித்தார்கள் ? ராஜராஜன் பொங்குதமிழ் திராவிடத் அரசன் இல்லையா ?

Anonymous said...

//

ஒத்துக்கிரியா?
//

இல்லை.

நான் சொன்னது எனக்கே சொன்னா எப்படி ?

ஈ.வே.ரா வை விமர்சித்தால் உனக்குப் பொத்துக்கொண்டு வருகிறது. முகமதை விமர்சித்தால் அவனுக்குப் பொத்துக்கொண்டு வருகிறது.

செயேந்திரனை ஜெயிலில் போட்டாலே சீந்த நாதியில்லாமல் கிடக்கிறான். 4 பார்ப்பானர்கள் வந்து பெயில் எடுக்கிறார்கள்.

ஆகவே முகம்மது தோற்றுவித்தது மதம் என்றால் ஈ.வே.ரா தோற்றுவித்தது அல்லது நீ சொல்வது போல் அவனது "சிந்தனைகள்" செய்தது எல்லாம் மதம் தான். வேறில்லை. இந்த விமர்சனத்திற்கு தெளிவான, இனவெறி உமிழாத, ஒரு பதில் கூட இன்றுவரை யாரும் தரவேயில்லை.

இந்த விமர்சனம் ஏன் எழுகிறது என்று யோசிக்கவும். அதற்கு கொஞ்சம் சொந்த அறிவு வேண்டும். அது பெரியார் பெயர் கூறும் எந்த திராவிட நாய்க்கும் இல்லை. எவனாவது ஒரு பார்ப்பான் உங்கள் கொள்கையை ஆதரிப்பான் அவனை வைத்து பதில் எழுதவும்.

அதுவரை
TATA

Anonymous said...

//
வே. சூரியநாராயண சாஸ்திரி தன் பெயரை

‘பரிதிமால் கலைஞர்’ என்று மாற்றிக்கொண்டார்.
//

அப்ப சங்க மித்திரன் என்றால் "கழக நண்பன்" என்று பொருளா ?

"கழகங்களுக்கு காக்கா பிடிப்பவன்" என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். கழகங்கள் ஆரம்பித்துவைத்த அடுக்கு மொழிக்கு மரியாதை செலுத்துவதாக இருக்கும்.

Anonymous said...

//
இராசராசன் காலத்தில் செழித்து வளர்ந்து கோலோச்சியது பார்ப்பன அதிகாரம்.
//

ராஜராஜன் காலத்துல ஏன் பார்ப்பானர்கள் செழித்தார்கள் ? ராஜராஜன் பொங்குதமிழ் திராவிடத் அரசன் இல்லையா ?

Please read http://pamaran.wordpress.com/2010/09/24/ராஜ-ராஜ-சோழன்-நான்/

அருள் said...

Anonymous said...

// //முகம்மது தோற்றுவித்தது மதம் என்றால் ஈ.வே.ரா தோற்றுவித்தது அல்லது நீ சொல்வது போல் அவனது "சிந்தனைகள்" செய்தது எல்லாம் மதம் தான். வேறில்லை. இந்த விமர்சனத்திற்கு தெளிவான, இனவெறி உமிழாத, ஒரு பதில் கூட இன்றுவரை யாரும் தரவேயில்லை// //

அடடா...தெளிவான, இனவெறி உமிழாத, ஒரு பதில்தானே வேண்டும்?

அதற்கு நீங்கள் குறைந்தபட்சம் மதம் என்றால் என்ன? என்பது குறித்த தெளிவுடன் இருக்கவேண்டும். (தெளிவில்லாமல் போனால் இந்துமதத்தைப் போல இன்னொரு மதம்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று நீங்கள் உளரும் நிலை வரலாம்).

நீங்கள் குறிப்பிட்டுள்ள அடிப்படையில் பார்த்தால் கூட, இசுலாம் என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இசுலாமியர்கள் திருகுர்ஆனை அப்படியே நம்பிதான் ஆகவேண்டும்.

பெரியாரை பின்பற்றுவது என்பது 'அப்படியே நம்புவது அல்ல'. எடுத்துக்காட்டாக, 1931 ஆம் ஆண்டின் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பெரியார் கடுமையாக எதிர்த்தார். இப்போது எல்லா பெரியார் தொண்டர்களும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றனர்.

"""மனிதன் என்பதற்கே பொருள், விஷயங்களை ஆராய்ந்து, நன்மை தீமை எனபதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும்.

மற்ற ஜீவப் பிராணிகளை எடுத்துக்கொண்டால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவை எப்படி இருந்தனவோ அப்படியேதான் இன்னும் இருக்கின்றன. பட்சி - காகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அதேமாதிரியாக இன்னும் இருக்கிறது. அதேமாதிரி ஆடு, மாடு, குதிரையை எடுத்துக்கொள்ளுங்கள் - ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தனவோ அதேமாதிரிதான் அவைகளின் சுபாவமும் தன்மையும் இருக்கின்றன. ஆனால், மனிதன் அப்படி அல்லன்.

மனிதன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட எவ்வளவோ மாற்றமடைந்திருக்கிறான்; நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட எவ்வளவோ மாற்றமடைந்திருக்கிறான்; இன்னும் சொல்லப்போனால் அய்ம்பதாண்டுகளுக்கு முன் இருந்ததைவிட எவ்வளவோ மாற்றமடைந்திருக்கிறான்; அறிவிலே, வளர்ச்சியிலே, அற்புதங்களைக் கண்டுபிடிப்பதிலே எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறான். அதற்கு எல்லாம் காரணம் மனிதனுக்கு உண்டான அறிவு மேன்மைதான்.....

நான் சொல்வதென்னவென்றால் - எந்தச் சங்கதியாக இருந்தாலும் நன்றாகச் சிந்திக்கவேண்டும்; ஆராய்ந்து பார்க்கவேண்டும். இது கடவுளாச்சே; இது சாத்திரமாச்சே; இது பகவான் வாயில் இருந்து வந்ததாச்சே; பெரிய புராணம் சொல்லுகிறதே; சின்னபுராணம் சொல்லுகிறதே; கழற்றுகிறதே - என்று எல்லாம் நினைக்கக்கூடாது.

நமக்கு அறிவு இருக்கிறது; அனுபவம் இருக்கிறது; ஆராயும் திறன் இருக்கிறது. அவற்றைக்கொண்டு எந்தச் சங்கதி ஆனாலும் ஆராய்ந்து பார்த்துதான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்."""

தந்தை பெரியார் - 'விடுதலை' 27.3.1951

இப்படி சொல்லப்படும் கருத்தை நீங்கள் மதம் என்கிறீரா?

அருள் said...

Anonymous said...

// //ராஜராஜன் காலத்துல ஏன் பார்ப்பானர்கள் செழித்தார்கள் ? ராஜராஜன் பொங்குதமிழ் திராவிடத் அரசன் இல்லையா ? // //

ராசராசன் ஒரு தமிழ் மன்னன். அதாவது திராவிடன். அவன் தமிழுக்கும் கலைக்கும் நன்மை செய்தான் என்பது உண்மைதான். ஆனால், அவனேதான் பார்ப்பனர்களை உச்சாணிக்கொம்பில் ஏற்றியும் வைத்தான். சூத்திரர்களைச் சுரண்டி பார்ப்பனர்களை வாழவைத்தான். இது அந்தக் காலகட்டத்தின் அரசியல்.

என்ன செய்வது? வரலாறு நெடுகிலும் விபீடணர்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றனர். ஒருமன்னன் செய்த தீமைகளை பேசும்போது அவன் செய்த நன்மைகளையும் மறுத்துவிட முடியாதே.

ராசராசனுக்கு பின்வந்த பாண்டியர்களும், விசயநகரப் பேரரசும், மராட்டியர்களும் கூடத்தான் பார்ப்பனர்களை போற்றி வளர்த்தார்கள்.

ஏதோ ஆங்கிலேயர்கள் வந்து கொஞ்சம் மாற்றினார்கள். தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேதகரும் எல்லாவற்றையும் புரட்டி போட்டார்கள்.

ஆனாலும், ஆயிரமாண்டுகளுக்கு மேற்பட்ட கொடியநோய் என்பதால் - பார்ப்பனக் கொட்டம் ஒடுங்க இன்னும் இரண்டு மூன்று தலைமுறைக் காலம் செல்லும்.

Suresh Ram said...

அருள் said...
/ தந்தை பெரியாரிடம் மட்டும் நெருங்க முடியவே இல்லை/

அறிவு இருக்கிறது; அனுபவம் இருக்கிறது; ஆராயும் திறன் இருக்கிறது. அவற்றைக்கொண்டு எந்தச் சங்கதி ஆனாலும் ஆராய்ந்து பார்த்துதான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்."""

தந்தை பெரியார் - 'விடுதலை' 27.3.1951


உமக்கு அறிவு இல்லாத ஒரு விஷயத்தை நீர் பின்தொடராதீர். நிச்சயமாக கேள்வி, பார்வை, உள்ளம் என்பன விசாரணைக்குட்படுத்தப்படும்” (பனூஇஸ்ராயீல்: 36) என்றும் அல்குர்ஆன் பலவாறாகப் பேசுகின்றது.

அருள் said...

@Suresh Ram

திருக்குர்ஆன் குறித்து எனக்கு எதிரான கருத்து எதுவும் இல்லை. ஒரு இசுலாமியர் திருக்குர்ஆன் கூறும் செய்திகளை முழுவதுமாக ஏற்க வேண்டும். ஆனால், ஒரு பகுத்தறிவுவாதி பெரியாரின் கருத்துகளை முழுமையாக ஏற்க வேண்டிய தேவை இல்லை.

சாதி அடையாளங்களை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்று தந்தை பெரியார் கருதினார். அதில் ஒரு அங்கமாக 1931 ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, யாரும் சாதியை சொல்லக்கூடாது என்றும் அவர் கோரினார். ஆனால், அந்தக் காலம் இப்போது காலாவதியாகிவிட்டது.

இன்று சாதிவாரி கணக்கெடுப்பினை எல்லா பெரியார் இயக்கங்களும் வரவேற்கின்றன. சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது எல்லோரும் அவரவர் சாதியை சொல்ல வேண்டும் என்பது பெரியார் இயக்கங்களின் கோரிக்கையாகவே மாறிவிட்டது.

""மாறுதல்கள் காலத்திற்கும், பகுத்தறிவிற்கும் நாட்டின் முற்போக்கிற்கும் ஏற்றாற்போல நடந்துதான் தீரும். எனவே, நான் மாறூதலடைந்துவிட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை. நாளை நான் எப்படி மாறப்போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால், நான் சொல்வதைக் கண்மூடித்தன்மாய் நம்பாதீர்கள்"" என்றார் தந்தைப் பெரியார்.

எனவே, பகுத்தறிவையும் மதத்தையும் ஒன்றாகப் பேசி, பெரியாரை பின்தொடர்வோரை இராமரின் குரங்குப் படை போன்று பேசுவது சரியா? என சிந்தித்துப்பாருங்கள்.

Anonymous said...

'ஆகவே முகம்மது தோற்றுவித்தது மதம் என்றால் ஈ.வே.ரா தோற்றுவித்தது அல்லது நீ சொல்வது போல் அவனது "சிந்தனைகள்" செய்தது எல்லாம் மதம் தான்."

மகமது அவர் நாட்டு மக்களுக்கு காட்டியது ஒரு மார்க்கம். இறைவனைப்பற்றியதால், அஃது ஒரு இறை மார்க்கம்.

ஈ.வே.ரா எழுதியவை, பேசியவை இறைவனைப்பற்றியதல்ல. இறைவனற்ற் ஒரு மார்க்கமுமல்ல.

ஈ.வே.ரா, தன் சிந்தனைகளை எவர் மீது திணிக்கவில்லை. மாறாக, அவர், ‘நான் சொல்லிவிட்டேன். அவற்றை ஆராய்ந்து பார்த்து உங்களுக்கு வேண்டுமெனில் எடுத்துக்கொள்க” என்று சொல்லியதாக பெரியாரிஸ்டுகள் அடிக்கடி எடுத்துக்காட்டுகிறார்கள்.

இருவரையும் ஒப்பிடுவது அறிவுகெட்டச்செயல்.

Anonymous said...

”உமக்கு அறிவு இல்லாத ஒரு விஷயத்தை நீர் பின்தொடராதீர். நிச்சயமாக கேள்வி, பார்வை, உள்ளம் என்பன விசாரணைக்குட்படுத்தப்படும்”

Suresh Ram!

Elaborate this. We shall see how both EVR and Prophet approach human problems.

i am afraid you have not understood Prophet's statment properly. So, I request you to elaborate it.

Talk to me direct, can you?

அருள் said...

@Suresh Ram

முகமது நபி அவர்களைப் போல, தந்தை பெரியாரும் தமது மக்களின் நல்வாழ்விற்காக பாடுபட்டார். இருவரும் மனிதர்கள். அந்த அளவுக்குதான் ஒப்பிட முடியும்.

முகமது நபி "மக்களின் துன்பங்கள் குறித்து மனம் வருந்துபவர்; அவர்களின் நலன்கள் குறித்து மகிழ்பவர்; பரிவிரக்கம் காட்டுபவர்." (அத்தவ்பா 128)

முகமது நபி அவர்களின் பொறுப்பு: "மக்களை வழிகேட்டின் இருளிலிருந்து வெளியேற்றி, நேர்வழியின் வெளிச்சத்துக்கு கொண்டுவருவது; நேரிய வழியைக் காண்பிப்பது". (அல்மாயிதா 16-19)

பெரியாரும் அப்படிப்பட்டவர்தான். ஆனால், முகமது நபி அவர்கள் இறைதூதர். பெரியார் இறைதூதர் அல்ல.

அருள் said...

Suresh Ram said...

// //"அறிவு இருக்கிறது; அனுபவம் இருக்கிறது; ஆராயும் திறன் இருக்கிறது. அவற்றைக்கொண்டு எந்தச் சங்கதி ஆனாலும் ஆராய்ந்து பார்த்துதான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்."தந்தை பெரியார் - 'விடுதலை' 27.3.1951

"உமக்கு அறிவு இல்லாத ஒரு விஷயத்தை நீர் பின்தொடராதீர். நிச்சயமாக கேள்வி, பார்வை, உள்ளம் என்பன விசாரணைக்குட்படுத்தப்படும்” (பனூஇஸ்ராயீல்: 36) என்றும் அல்குர்ஆன் பலவாறாகப் பேசுகின்றது.// //



"உங்களிடம் எதைப்பற்றிய அறிவு இல்லையோ அதைப் பின் தொடராதீர்கள். திண்ணமாக கண், காது, இதயம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் விசாரிக்கப்பட்டே தீரும். மேலும், பூமியில் செருக்காக நடக்காதீர்கள். ஏனெனில், உம்மால் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையளவுக்கு உயர்ந்துவிடவும் முடியாது!" (பனூ இஸ்ராயீல்: 36)

இந்த அறிவுரையின் நோக்கம், மக்கள் தம் தனிப்பட்ட வாழ்விலும், சமூக வாழ்விலும், கற்பனைகளையும் ஊகத்தையும் பின்பற்றுவதற்குப் பதிலாக, அறிவைப் பின்பற்ற வேண்டும் என்பதேயாகும்.

இந்த வசனத்தில் "விசாரிக்கப்பட்டே தீரும்" என்பது மறுமையில் விசாரிப்பதாகும். பெரியார் கூறியதும் இதைத்தான் என்கிறீரா?

Anonymous said...

//ஈ.வே.ரா வை விமர்சித்தால் உனக்குப் பொத்துக்கொண்டு வருகிறது. முகமதை விமர்சித்தால் அவனுக்குப் பொத்துக்கொண்டு வருகிறது.

செயேந்திரனை ஜெயிலில் போட்டாலே சீந்த நாதியில்லாமல் கிடக்கிறான். 4 பார்ப்பானர்கள் வந்து பெயில் எடுக்கிறார்கள்.

//

இதற்கு நான் எழுதியது டோண்டுவால் அனுமதிக்கபடவில்லை.

அதன் சாராம்சம்: உனக்கு ஆரைப்பற்றிப்பேசினால் பொத்துக்கொண்டு வருகிறது என்றுதான்.

Anonymous said...

"ராசராசனுக்கு பின்வந்த பாண்டியர்களும், விசயநகரப் பேரரசும், மராட்டியர்களும் கூடத்தான் பார்ப்பனர்களை போற்றி வளர்த்தார்கள்."

இதற்கு காரணம் மன்னர்கள் வைதீக இந்து மதத்தை ஏற்றுக்கொண்டார்கள். வைதீக இந்து மதம் என்றாலே அங்கு நால்வகை வருணத்தாரில் பிராமணர் என்போரே முதலிடம் பெற்றதுமல்லாமல், அவர்களுக்கு certain divine rights உண்டு என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்களின் தெய்வத்தன்மையை மறுதலிப்பது ஒரு தெய்வ நிந்தனையாகும்.

அவர்களுக்குத் தானம், அன்னதானம், கோதானம், அவர்கள் வரும்போது எழுந்து நின்று மரியாதையும் வணக்கமும் செய்வது, அவர்கள் ஆச்சாரங்களைப்பேணி வாழ் அவர்களுக்கு தனியே இருப்பிடங்கள் (அக்ரஹாரங்கள்) பிற ஜாதி ஜனங்களால் அவர்கள் மேல் தீட்டுப்படாமல இருக்க செய்வது, அவர்கள் மட்டுமே கல்வி (வைதீகக்கல்வி பெற்று ஆசானகளாக்குவது) போன்றவைகளைச்செய்வது மன்னர்கள் க்டமையாகும்.

கோயில் ஒன்று இருந்தால் பிராமணர் ஒன்று வேண்டும். பல கோயில்கள இருந்தால், பல பிராமண்ர்கள் வேண்டும்.

மன்னர்கள் வடநாட்டிலிருந்தெல்லாம பிராமணர்களைக்கூட்டி வந்து குடியமர்த்தினார் சிரிரங்கத்தில், நவதிருப்பதிகள் இருக்கும் திருவைகுண்டத்தில், 9 கோயில்களுக்கும் 200 குடும்பங்களை கொண்டுவந்து அமர்த்தினான் பாண்டியன்.

அவன் அவர்களைப்போற்றத்தான் வேண்டும்.

Therefore, the brahmins enjoyed a life of seclusion with continuous provisions from the royalty; and the people were not questioning, because

TO QUESTION THE BRAHMINS IS TO QUESTION THE GREAT GOD.

The life of seclusion boomeranged on brahmins themselves: they became arrogant and looked down upon others with contempt. தலித்துகளை மட்டுமல்ல, பிற மூன்று வருணத்தாரையும், தீண்டத்தகாதவர்களாகவே பார்த்தார்கள்.

The royal favours to the brahmins only created the heart burning among other masses. To retain their favours with the kings, the brahmins had to become scheming and thus, they came to be perceived as cunning people.

அதே வேளையில் மன்னன் மதமாறினால், அவன் கொல்வது பிராமணர்களை மட்டுமே. ஓட ஓட விரட்டிக்கொல்லப்பட்டார்கள் மதுரையில் சுந்தரபாண்டியனால். பாலக்காட்டுக்கே ஓடினார்கள். பாண்டியன் சமணனானபடியால்!

இருந்த பிராமணர்கள், மன்னனின் ராணியை (மங்கையர்க்கரசியார்) வைத்தே மன்னனை மீண்டும் சிவபக்தனாக்கிவிட்டார்கள். ராணியையும் 64 நாயன்மார்களில் ஒருவராக்கி போற்றினார்கள்.

Histroy of Tamilnadu belonged to brahmins.

Past belonged to them.
Present does not.
Future may belong to them again.

அருள் said...

// //Future may belong to them again.// //

தமிழ் நாட்டில் அப்படி நடக்க தப்பித்தவறியும் விட்டுவிட மாட்டோம்.

அருள் said...

// //Future may belong to them again.// //

தமிழ் நாட்டில் அப்படி நடக்க தப்பித்தவறியும் விட்டுவிட மாட்டோம்.

Suresh Ram said...

//Therefore, the brahmins enjoyed a life of seclusion with continuous provisions from the royalty; and the people were not questioning, because

TO QUESTION THE BRAHMINS IS TO QUESTION THE GREAT GOD.//

Now replace the word brahmins with Judges and Officers. They are noe the NEO brahmins.

So
Histroy of Tamilnadu belonged to brahmins in one way or other.

Past belonged to them.
Present does belong to them
Future may belong to them again.

The life of seclusion boomeranged on brahmins themselves: they became arrogant and looked down upon others with contempt.


Therefore, the judges and officers enjoyed a life of seclusion with continuous provisions from the royalty;(Read Govt) and the people were not questioning, because

TO QUESTION THE JUDGES AND OFFICERS IS TO QUESTION THE GREAT GOD(Govt).

Did the life of seclusion boomeranged on judges and officers themselves:
Have they became arrogant and looked down upon others with contempt. //

Suresh Ram said...

அருள் said...
//பெரியாரும் அப்படிப்பட்டவர்தான். ஆனால், முகமது நபி அவர்கள் இறைதூதர். பெரியார் இறைதூதர் அல்ல//

Anonymous said...
//ஈ.வே.ரா, தன் சிந்தனைகளை எவர் மீது திணிக்கவில்லை. மாறாக, அவர், ‘நான் சொல்லிவிட்டேன். அவற்றை ஆராய்ந்து பார்த்து உங்களுக்கு வேண்டுமெனில் எடுத்துக்கொள்க” என்று சொல்லியதாக பெரியாரிஸ்டுகள் அடிக்கடி எடுத்துக்காட்டுகிறார்கள்.//




எனவே திராவிட பகுத்தறிவு மதமே சிறந்தது?

Anonymous said...

சுரேஷ் தெளிவா எழுதமாட்டேங்கிறார். கிரிப்டிக்கா எழுதினா எப்படி பதில் போடுறது?

சுரேஷ்...எல்லாரும் உங்க லெவல் அறிவாளியா இருக்க முடியுமா?

கொஞ்சம் டைரக்டா எழுதுங்க.

Suresh Ram said...

கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம், சாதி வெறி, ஆணாதிக்கம் அனைத்தையும் எதிர்த்து வந்த தந்தை பெரியாருக்கு கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை செய்யும் அதிசயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்த அதிசயத்தை ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் செய்து காட்டியிருக்கிறது.

http://www.vinavu.com/2010/09/17/untouchability-in-temples/

Anonymous said...

எனவே திராவிட பகுத்தறிவு மதமே சிறந்தது?

What is the meaning of such cryptic statements?

Why dont you say what is in your mind, just plain and clear?

Anonymous said...

"கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம், சாதி வெறி, ஆணாதிக்கம் அனைத்தையும் எதிர்த்து வந்த தந்தை பெரியாருக்கு கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை செய்யும் அதிசயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்த அதிசயத்தை ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் செய்து காட்டியிருக்கிறது"

சுரேஷ்!

நானும் படித்தேன். அதில் அவர்கள் ஏன் அச்செயலைச் செய்தார்கள் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. அதை மறைத்தது ஏனோ?

மேலும், மாலை போட்டது ஒரு பகடிச்செயல். போட்டவர்கள் பெரியாரிஸ்டுகளும் அல்லர்.

இவையெல்லாம் ஏன் மறைத்தீர்கள்?

மேலும் ஒரு கேள்வி

நீங்கள் பெரியாரைப்பற்றி எழுதிகிறீர்களா? அல்ல, பெரியாரிஸ்டுகளைப்பற்றியா?

Why do you quote me? I am not a pereiyaarist. I just write about him as I know - without saying whether I accept his thoughts or not, neither caring for what the periyasarist are doing now/

அருள் said...

@ Suresh Ram

சுரேஷ் - உண்மையை சொல்லனும்னா நீங்க என்ன சொல்லவரீங்க'ன்னு புரிஞ்சுக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு.

ம.க.இ.க'வினர் அனைத்துசாதியினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும் என்கிற போராட்டத்துக்காக பெரியாருக்கு பூசை செஞ்சிருக்காங்க. அது ஒரு போராட்டம்.

இப்படியே போனா - திமுக'வினர் குஷ்பு மதத்தை பின்பற்றுவதாகச் சொல்வீர்களோ! (குஷ்புவுக்கும் கோவில் கட்டிய நாடுதான் இது)

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது