11/21/2008

டோண்டு பதில்கள் - 21.11.2008

AnonyT:
1. கருணாநிதி நிர்வாகத் திறமையானவர் என்று அவரது ஆதரவாளர்கள் பெருமையாகக் கூறிக் கொள்வர். ஆனால் கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் வன்முறைகளும், கரண்ட் கட் போன்ற மக்களை பாதிக்கும் பிரச்னைகளும் அதிகம் என்பது உண்மையா?
பதில்: நிர்வாகத்திறன் என்று பார்த்தால் அவரும் ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட சமமே. என்ன, மழைநீர் சேமிப்புத் திட்டம் போல உருப்படியான திட்டம் கலைஞர் ஆட்சியில் கண்டிப்பாக நிகழ்ந்திருக்காது. இந்த விஷயத்தில் ஜெயலலிதா காட்டிய உறுதியை அவர் காட்டியிருப்பார் என நம்ப இயலவில்லை. வன்முறைகள் கரெண்ட் கட் ஆகிய விஷயங்களில் இருவருமே சமமான நிலையில் உள்ளனர். ஆனால் புலிகள் விஷயத்தில் கருணாநிதி ஆட்சிக்கு வரும்போது மட்டும் அவர்களது அட்டகாசம் அதிகரிக்கிறது. அது ஜெயலலிதா காலத்தில் குறைவு. அவ்வளவுதான். இப்போதைய தமிழகத்தில் திமுக அல்லது அதிமுகாதான் பதவிக்கு வரும் வாய்ப்பு உண்டு. ஆகவே ஒப்பீடு அவர்கள் இருவருடன் நிறுத்தி கொள்கிறேன்.

அனானிM:
1. உங்களுக்கு பிடித்த சிற்றுண்டி போண்டாவா, பக்கோடாவா? (உங்களை போண்டா என்று சிங்கம் & அல்லக்கைகள் சொல்கிறதே, அவர்களை பக்கோடா (தேங்க்ஸ் : மெட்ராஸ் டு பாண்டிச்சேரி) என்றால் ஒப்புக் கொள்வீர்களா?
பதில்: எனக்கு பிடித்தது காஞ்சீபுரம் இட்லி. என்னை போண்டா என்று சொன்னால் சொல்லிவிட்டு போகட்டுமே. எனக்கு என்ன போச்சு? அவர்களுக்கு பிடித்ததை வைத்து கூப்பிடவேண்டுமானால் சுண்டக்கஞ்சி என்று வேண்டுமானால் கூறலாம்.

அனானிT:
1. மந்த்ராவை (தமிழ் நடிகை) உங்களுக்கு பிடிக்காதா? பரந்த மனம் கொண்டவராமே?
பதில்: தாராளமாக பிடிக்கும்.

2. சட்டக் கல்லூரி பிரச்னை நடந்த அன்று கருணாநிதி சட்டசபை பக்கம் தலைகாட்டாமல் ஓடி விட்டாரே?
பதில்: ஏனாம்? எங்காவது டாக்டர் பட்டம் தந்தார்களாமா அல்லது மானாட மயிலாட நிகழ்ச்சி நடந்ததா?

அதே அனானி:
1. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஜெ. தைரியமாக தனிப்பட்ட நபர்களின் பெயரை நீக்கி உத்தரவிட்டது போல அரசு கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பஸ்ஸ்டாண்டுகள் போன்றவற்றுக்கு தனிப்பட்ட தலைவர்கள், நபர்களின் பெயரை நீக்கினால் என்ன?
பதில்: செய்தால் நன்றாகத்தான் இருக்கும். முதலில் நகரில் உள்ள எல்லா சிலைகளையும் எடுத்து விட்டு அவற்றை மியூசியத்தில் வைத்து விடலாம். காந்தி சிலையையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

அனானிA:
1+1=3; Is this correct?
கணவன் + மனைவி சில காலம் கழிந்த பிறகு குழந்தை. மொத்தம் 3.

AnonyT:
1. கருணாநிதியின் வாரிசுகளில் உங்களை கவர்ந்தவர் யார், ஏன்?
பதில்: ஸ்டாலின். இவர்தான் அடிநாட்களிலிருந்து தி.மு.க. வில் பணியாற்றியுள்ளார்.

AnonyA:
1. பாத்திமா பாபு என்றவுடன் உடனடியாக உங்கள் நினைவுக்கு வரும் அரசியல் பிரபலம்?
பதில்: தெரியவில்லையே.

November 14, 2008 5:10 PM
AnonyM:
1. கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பீர்களா? அடிக்கடி வாயில் வந்து விழும் கெ.வா. என்ன?
பதில்: உபயோகித்தது உண்டு, சமீபத்தில் 1956-57 கல்வியாண்டில் ஆறாவது படித்த போது. (அப்போதுதான் அதிகம்). அவை என்ன என்பது இப்போது வேண்டாமே.

AnonyT:
1. இத்தனை கேள்விகள் திடீரென வரத் தொடங்கும் என்று எதிர்பார்த்தீர்களா? யார் இப்படி கேள்வி கேட்கிறார்கள் என்று மண்டை காய்கிறதா?
பதில்: மண்டை காய்வதற்கு வேறு ஆளைப் பாருங்கள். கேள்விகள் வந்தால் பதிவு, இல்லாவிட்டால் அந்த வெள்ளியன்று பதிவு இல்லை. வரும் கேள்விகள் அத்தனைக்கும் பதில் போட்டு தீர்த்து விடுவது என்பது டீஃபால்ட் அமைவு. ஆக பதிவு வரும் வெள்ளியன்று காலை கைவசம் கேள்விகள் இருக்காது. ஒவ்வொரு முறையும் க்ளீன் ஸ்லேட்டில்தான் கணக்கு துவங்கும். மற்றப்படி சில கேள்விகளை கேட்பவர்களை ஊகிக்க முடிகிறது. அது எனக்குள் ஒரு புன்முறுவலையும் வரவழைக்கிறது.

அனானிM
1. வருஷத்துக்கு எவ்வளவு income tax கட்டுறீங்க? எவ்வளவு ஏமாத்துறீங்க?
பதில்: தனிப்பட்ட/அந்தரங்க/சென்சிடிவ் விஷயங்களை கேட்கும் இம்மாதிரி கேள்விக்கு பதில் தருவதற்கில்லை.

நியாயவான்:
1. நீங்க எவ்வளவு கரண்ட் சார்ஜ் கட்டுறீங்க?
பதில்: இரண்டு மாதங்களுக்கு 1200 ரூபாய் போல பில் வருகிறது. சும்மா சொல்லக் கூடாது நங்கநல்லூர் துணை மின்நிலையத்தில் வேலைகள் ரெகுலராக, பக்காவாக நடக்கின்றன.

அனானிA:
1. அடுத்தது கிளிண்டனின் பெண்ணுக்கு தான் வாய்ப்பாமே?
பதில்: அமெரிக்கா என்ன இந்தியாவா என்ன, நேருஜி --> இந்திரா --> ராஜீவ் --> பிரியங்கா என்று போக. அப்படியே அப்பெண் வருவதாக இருந்தாலும் அடியைப்பிடிடா பாரத பட்டா என்றுதான் அடிமட்டத்திலிருந்து வர வேண்டும்.

அனானிI:
1. ஏண்டா இந்தியாவில் வந்து பொறாந்தோம் என்று என்றைக்காவது நினைத்ததுண்டா?
பதில்: என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என பதிவு போட்ட டோண்டு ராகவனைப் பார்த்து கேட்கும் கேள்வியா இது?

அனானிM:
1. வாரத்துக்கு எத்தனை தடவை **** வைத்துக் கொள்வீர்கள்? எத்தனை முறை தன் கையே தனக்குதவி?
பதில்: தனிப்பட்ட/அந்தரங்க/சென்சிடிவ் விஷயங்களை கேட்கும் இம்மாதிரி கேள்விக்கு பதில் தருவதற்கில்லை.

அனானிT:
1. உங்கள் வலைப்பூ பின்னூட்டமிடுபவர்களை(யும்) சைபர் போலீஸ் கண்காணித்து வருகிறதாக சொல்கிறார்களே? சைபர் போலீஸ் வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கிறார்களா என்ன?
பதில்: விஷயம் என்னவென்றால், தேவைப்பட்டால் சைபர் கிரைம் முறையாக விண்ணப்பித்து பிளாக்ஸ்பாட்டில் அசிங்க கமெண்ட் போடுபவர்களின் ஐபி-ஐ கூகள் நிர்வாகம் துணை கொண்டு கண்டுபிடிக்க ஏலும்.

அனானிM:
1. வூட்டுக்காரம்மா தவிர வேறு யாரையாவது 'கண்டுக்கிட்டது' உண்டா? 'துணைவி' எல்லாம் உண்டா?
பதில்: தனிப்பட்ட/அந்தரங்க/சென்சிடிவ் விஷயங்களை கேட்கும் இம்மாதிரி கேள்விக்கு பதில் தருவதற்கில்லை.

அனானிG:
1. உங்களுக்கு நெருக்கமான பதிவர்கள் லிஸ்டில் உங்கள் நெருங்கிய நண்பர் மாயாவரத்தான் பெயர் காணோமே? ரெண்டு பேரும் டுக்கா விட்டு விட்டீர்களா?
பதில்: அப்படியில்லை. அவருக்கு என் மேல் ஜெயராமன் விஷயத்தில் சற்றே மனவருத்தம். அவ்வளவுதான்.


ராமகிருஷ்ணஹரி:
1. BJP LEADER ADVANI TODAY MET ACTOR RAJNI AND DISCUSSED FOR 30 MINUTES ABOUT FUTURE COURSE OF ACTION. WILL BJP,RAJINI AND J.LALITHA FORM AN ALLIANCE IN TAMIL NADU?
பதில்: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பெர்சனலாக எனக்கு ரஜினி அரசியலுக்கு வருவார் எனத் தோன்றவில்லை. 1972-ல் எம்.ஜி.ஆர், 1982-ல் என்.டி.ஆர். ஆகியோர் சரியான சமயத்தில் சரியான முடிவெடுத்து வந்தனர். வெற்றி பெற்றனர். அதே போல ரஜினி 1996-ல் வந்திருக்க வேண்டும். வாய்ப்பை தவறவிட்டார். இப்போது புலி வருது கதைதான். வந்தாலும் ரொம்ப ரியேக்சன் இருக்காது.

2. WHAT WILL HAPPEN TO TAMIL NADU GOVT IF SRILANKA REFUSES TO END THE WAR IN SRILANKA (EVEN AFTER THE REQUEST OF CENTRAL GOVT)?
பதில்: மத்திய அரசு சீரியசாக போர் நிறுத்தத்தை கோருவதாகத் தெரியவில்லை. இந்தியாவுக்கு இலங்கை அரசிடம் செல்வாக்கு உண்டு. சீரியசாகக் கேட்டால் நடக்கலாம்.

3. IT IS TOLD DMK LEADER IS VERY MUCH WORRIED ABOUT THE ACTION OF SOME OF HIS CLOSE ASSOCIATES IN CONNECTION WITH LIBERATION TIGERS SUPPORT. IS IT TRUE?
பதில்: பாவம் கலைஞர் எதற்க்த்தான் கவலைப்படுவார், எத்தனை விஷயங்களுக்காக மனம் நோவார்?

4. IT IS LEARNT THAT SOME OF THE CONGRESS LEADRS AND MLAS ARE TRYING FOR AN ALLIANCE WITH ADMK? WILL IT BE POSSIBLE?
பதில்: இந்தத் தேர்தலில் கஷ்டம் என நினைக்கிறேன். சோனியாவை ஜெயலலிதா அந்தளவுக்கு வசை பாடியுள்ளார்.

5. WHICH IS BETTER ALLAINCE HAVING BRIGHT CHANCE OF WINNING AND FOR THE WELFARE OF TAMIL NADU AT PRESENT
1. SET1:ADMK+MDMK+PMK, ADMK+BJP+MDMK+RAJINI, ADMK+PMK+CONGRESS, ADMK+CPI+CPIM+MDMK
2. SET 2: DMK+PMK+CONGRESS, DMK+CONGRESS+VIJAYKANTH, DMK+BJP+RAJINI,
DMK+CPI+CPM+BMK+CONGRESS
3. SET 3: VIJAY KANTH+RAJINI+S.KUMAR+CPI+CPM
4. SET 4: MDMK+CPI+CPM+PMK+OTHERS

பதில்: ADMK+BJP+MDMK+RAJINI

புரட்சித் தமிழன்:
1. அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமாவுக்கு ஜாதகப் படி 1-03-2009-to 12/2010 வரை சிக்கலாமே?
பதில்: ஒபாமாவுக்கு சிக்கல் வருவது இருக்கட்டும். ஒபாமாவால் அமெரிக்காவுக்கு சிக்கல் வராதிருந்தால் சரிதான். டெமாக்ரடிக் கட்சியினர் கீழ் அமெரிக்கர்கள் அதிகம் சோபிக்கவில்லை என்பதை நான் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். எனது நிலை அப்படியேதான் உள்ளது.

2. அமெரிக்காவில் துப்பாக்கி வியாபாரம் படு சூடாய் இருக்காமே? இன மோதலுக்குக்கான அறிகுறியா?
பதில்: துப்பாக்கி வியாபாரம் அமெரிக்காவில் எப்போதுமே சூடாகத்தான் இருக்கும்.

3. பிரபல கேரள ஜோதிடர் கணிப்புப்படி, அத்வானிக்கு கிரக நிலை சரியில்லையாம்,காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமாம். கிரகங்கள்தான் எதிர்காலத்தை முடிவு செய்கின்றன நம்புகிறிர்களா?
பதில்: இல்லை. இது பற்றி எனது பதிவு இங்கே.

4. சட்டக் கல்லுரி மோதலில் தாங்கள் சொல்லிய வகுப்பினருக்கு தொடர்பில்லை என்பது உண்மையா?
பதில்: எந்த வகுப்பினரையும் நான் குறிப்பிட்டு சொன்னதாக நினைவில்லையே.

5. வழக்கம் போல் இதுவும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயலா?
பதில்: அப்படி திசை திரும்பினால் அதை வேண்டாம் கூறுவார் யார்?

அனானி (16.11.2008 மாலை 06.36-க்கு கேட்டவர்)
1. எமர்ஜென்சி வருமா?
பதில்: 1977-ல் கொண்டுவரப்பட்ட அரசியல் நிர்ணயச் சட்ட மாற்றங்களால் எமெர்ஜென்சியை சுலபமாக கொண்டு வர இயலாது.


நக்கீரன் பாண்டியன்:
1. சென்னையில் நடிகர் விஜய் தாய் தந்தையருடன் உண்ணாவிரதம். அடுத்த நடிகர் அரசியலுக்கா? அதற்கான வெள்ளோட்டமா?
பதில்: அப்படித்தான் தோன்றுகிறது. ஏமாளி மக்கள் இருக்கும்வரை இம்மாதிரி எல்லோருமே அரசியலுக்கு வர முயற்சிப்பது தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.

2. நடிகர் ரஜினிக்கு எம்.பி பதவி கொடுத்து அரசியலுக்கு இழுக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன பார்த்தீர்களா?
பதில்: தமிழகத்தை பொருத்தவரை தேசீய கட்சிகள் சொந்தக் காலில் நிற்பது கடினம்தான். ஆனால் அதற்கு முயற்சி கூட செய்யாதிருந்தால் எப்படி? இப்போது பாஜக வையே எடுத்து கொள்ளுங்கள். அவர்களுடன் கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை. ஆகவே அவர்களுக்கு கிடைத்தவருடன் கூட்டு தேடும் நிலைமை. பாவம்.

3. இங்கே இவ்வளவு பரபரப்பில் -நடிகர் விஜய்காந்த் அமராவாதி அணையில் மரியாதை செய்ய?
பதில்: கேள்வியின் காண்டக்ஸ்ட் புரியவில்லை. என்ன செய்தார் அங்கு விஜயகாந்த்?

4. இலங்கையில் போர் இறுதிக்கட்டம் எனும் செய்தி உண்மையா?
பதில்: அங்கிருப்பது யுத்தச் சூழ்நிலை. அதில் இரு தரப்பினருமே பிரசாரத்தில் ஈடுபடுவர். அங்கு கிடைப்பது செய்தி அல்ல, பிரசாரம்தான். ஆகவே, இலங்கை அரசானாலும் சரி புலிகளானாலும் சரி அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்க இயலாது. உண்மை எங்கேயோ நடுவில் உள்ளது. அல்லது அவர்கள் இருவரில் ஒருவர் கூறியது முழு உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் நமக்கு அது நிச்சயமாக்த் தெரியாது, என சோ கூறியதை விட நான் என்ன அதிகமாகக் கூறப் போகிறேன்.

5. சீனா மீண்டும் அருண்சாலப்பிரதேசப் பகுதியை சொந்தம் கொண்டாட முயலுகிறதே?
பதில்: கேள்வியே தவறு. எப்போது அது சொந்தம் கொண்டாடுவதை நிறுத்தியது?

6. மீண்டும் பா.ம.க -தி.மு.க வின் அணியில் அதனால் சட்டக்கல்லூரி மாணவர் மோதலில் அமைதி காக்கிறதா?
பதில்: அதிமுகவிடமிருந்து சரியான சமிஞை வராத நிலையில் மருத்துவர் என்ன செய்ய இயலும்?

7. ஹெல்மெல்ட் கட்டாயச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறதா?
பதில்: நான் டூ வீலர் பாவிக்காததால் எனக்கு சரியாகத் தெரியவில்லை.

8. புகை புடிக்கும் தடைச் சட்டம் எந்த நிலையில் உள்ளது?
பதில்: போலிசாருக்கு மாதக் கடைசியில் இன்னொரு வருமானத்துக்கான சோர்ஸ்.

9. பணவீக்கம் குறைந்ததாய் அரசின் அறிக்கை கூறுகிறது ஆனால் விலைவாசிகள் உச்சத்தில். இது என்ன கணக்கு?
பதில்: விலைவாசி உயர்ந்தது உயர்ந்ததுதான். என்ன, அது உயரும் வேகம் மாறுபடுகிறது. கணித முறையில் கூற வேண்டுமானால், dy/dx அப்படியே உள்ளது. d²y/dx² மட்டும் ஏறுகிறது/குறைகிறது.

10. மின்வெட்டு->இலங்கைத் தமிழர்->மாணவர் மோதல்-> அடுத்து?
பதில்: மாநில சட்டசபைக்கு இடை தேர்தல்?

அனானி (18.11.2008 காலை 09.13-க்கு கேட்டவர்):
அ. காலையும் மாலையும் இணையும் சந்தியா காலத்தில் உணவருந்தக் கூடாது ஏன்?
பதில்: கையெழுத்து மறையும் நேரம் எனக் கூறுவார்கள். அப்போது சாப்பிட்டால் இரவு தூங்கப் போகும் முன்னாலேயே இன்னொரு முறை பசியெடுக்கலாம். அல்லது, பூச்சி ஏதாவது ஆகாரத்தில் விழலாம் என்பதற்காகவே இவ்வாறு கூறியுள்ளனர் என நினைக்கிறேன்.

ஆ. தாமரை இலையில் மட்டும் உணவை பின்பிறத்தில் வைத்து சாப்பிடலாம் ஏன்?
பதில்: முன்பக்கத்தில் தண்ணீர் சரியாக நிற்காது. அதே போல ரசம் குழம்பு ஆகியவையும் நிற்காது. ஆகவேதான் இலைக்கு பின்னால் வைத்து சாப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன்.

இ. சேர்ந்து சாப்பிடும் போது ஒருவருக்கொருவர் தொட்டுக்க்கொள்ளக்கூடாது ஏன்?
பதில்: சாப்பாடு என்பது தனி மனிதனின் அந்தரங்க வேலைகளில் ஒன்று. இன்னொருவரை தொடுவதை எச்சில்படுத்துவது எனக் கூறுவார்கள்.

ஈ. பாயசம்,வடைகளை தெய்வங்களுக்கு படைத்துவிட்டு சாப்பிடவேண்டும் ஏன்?
பதில்: பாயசம் வடை மட்டுமே, எதையுமே தெய்வத்துக்கு படைத்து விட்டுத்தான் உன்ணும் பழக்கமுள்ளவர்கள் உள்ளனர். எதற்கும் இக்கேள்விகளை இந்த வலைப்பூவிலும் கேட்டு பாருங்கள், நல்ல பதில் கிடைக்கும் என நினைக்கிறேன்

எம் கண்ணன்:
1. ஸ்டாலினுக்கு என்னதான் உபாதை ? எந்த பத்திரிக்கையிலும் இது பற்றிய அதிகவிபரங்கள் வெளிவருவதில்லையே? ஏன்? (அடிக்கடி வெளிநாடு சென்று மருத்துவம் செய்து கொள்வதால் இந்தக் கேள்வி)
பதில்: அவர் உடல் உபாதை அவருக்கு. அதைப் பற்றி கேட்பது நாகரிகமல்ல.

2. ஸ்டாலினின் இளமைக்குக் காரணம்? உணவு, உடற்பயிற்சி மட்டுமே காரணமா இல்லை அவரும் தந்தையைப் போன்று யோகா பயில்கிறாரா?
பதில்: இந்த வயதிலும் சுறுசுறுப்பாகச் செயல் படுகிறார். இளமை சிந்தனைகளுடன் இருக்கிறார்.

3. சமீப வருடங்களில் பெண்கள் அதிகம் கலப்பு மணம் புரிவது / துணிவது எதனால் ? ரிபெல்லியன் காரணமா? இல்லை அதிகம் பேர் தற்போது ஹாஸ்டலில் தங்கி படிப்பது/வேலை பார்ப்பது/ பெற்றவர்களிடமிருந்து வேறு ஊரில் வாழ்வது (வேலைக்காக) கொடுக்கும் சுதந்திரமா? இல்லை இதற்கு ஏதேனும் உளவியல் ரீதியான காரணம் உண்டா?
பதில்: முக்கியமானக் காரணம் அவர்களது பொருளாதார சுதந்திரம்.

4. சென்னை பதிவர் சந்திப்புகள் ஏன் கடற்கரை காந்தி சிலைக்கருகே மட்டும் நடத்தப்படுகின்றன? ஏன் நகரின் மற்ற மத்தியப் பகுதிகளான கோடம்பாக்கத்திலோ சைதாப்பேட்டையிலோ நடத்தப்படுவதில்லை?
பதில்: முதலில் எல்லாம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் நடந்தது. பிறகு தி.நகர் நடேசன் பூங்கா. இப்போது காந்தி சிலைக்கு பின்னால். ஒரு முறை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிடி செண்டரிலும் நடந்தது. கடற்கரை காந்தி சிலை என்றால் எந்த ஆட்டோக்காரனும் கொண்டு விட்டு விடுவான். அதுவும் காரணமே.

5. சென்னையிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும், அரசியலில் அன்றாடங்காய்ச்சியாய் இருந்து பின்னர் ஏதோ ஒரு கட்சிப்பொறுப்பிலும் பின்னர் கல்வித்தந்தையாகி பல ஏக்கர்களை வளைத்தும் கட்டப்பட்டுள்ள கல்லூரிகளின் (நன்றி: குமுதம் - அன்று- இன்று) தரம் எப்படி? எந்த கல்லூரி பெஸ்ட்? எந்தக் கல்லூரி டுபாக்கூர்?
பதில்: இது சம்பந்தமாக எனக்கு தனிப்பட்ட விஷயம் எதுவும் தெரியாது.

6. விவேக் பல படங்களிலும் கறுப்புக் கண்ணாடி அணிந்தே வருகிறாரே? என்ன காரணம்?
பதில்: அப்படியா, நான் கவனிக்கவில்லையே. ஏதாவது படத்தில் அம்மாதிரி கண்ணாடி போட்டு நடித்து படம் வெற்றி பெற்றிருக்கலாம். அதையே செண்டிமெண்டாக அவரும் தயாரிப்பாளர்கள் பிடித்து கொண்டிருக்கலாம்.

7. சுஜாதாவுக்கே ஏற்பட்ட இந்த சந்தேகத்திற்கு உங்களுக்கு விடை தெரியுமா? (காலையில் எழும் போது ஆண்களின் தொப்புளின் பஞ்சு ஏன்?)
பதில்: பஞ்சு மனித உடல்களுக்கே பொது என்றுதான் நினைக்கிறேன். இதில் ஆணென்ன பெண்ணென்ன?

8. சுமார் 20 வருடங்களாக விகடன் கட்டுரைகளில் அவர்களது மாணவ/நிருபர்கள் எழுதும்போது - பன்மையில் எழுதி வந்தனர் - நாம் , சென்றோம், கவனித்தோம், கேட்டோம் - என. புது சைஸ் விகடனில் எல்லாம் ஒருமையில் -தான் - என தன்னை முன்னிலைப் படுத்தி எழுதப்படுகிறதே (நான், வந்தேன், சென்றேன்..)? நான் எனவும் நிருபர் / புகைப்படக்காரரின் பெயர் மற்றும் செய்கைகளும் கட்டுரையில் இடம் பெறுகின்றன. என்ன காரணமாக இருக்கும்?
பதில்: தன்னிலை ஒருமையில் எழுதுவதை எப்போதுமே கண்டித்து வந்துள்ளனர். முக்கியமாக பள்ளிக் கட்டுரைகளில். என் தந்தை இந்து நிருபராக இருந்தபோது ரிப்போர்ட் அளிப்பவரின் பெயரைப் போடக் கூடாது. கட்டுரையில் தன்னைக் குறிக்குக்போது கூட “உங்கள் நிருபர் அவரை இது பற்றி கேட்டபோது” என்ற ரேஞ்சில் எழுதுவார்கள். இப்போ காலம் மாறிப்போச்சு. அவ்வளவுதான்.

குப்புக்குட்டி:
1. Do you accept Modi govt as transparent govt? What about Nitesh Kumar's Govt?
பதில்: அதில் என்ன சந்தேகம்?

அனானி (18.11.2008 இரவு 19.57-க்கு கேட்டவர்):
1. இப்போ உள்ள ரைட் டு இன்பர்மெஷன் ஆக்ட் பல உண்மைகளை வெளிப்படை ஆக்குகிறதா?
பதில்: ஓரளவுக்கு ஆக்குகிறது. அதற்காக நடிகை ஜலஜாஸ்ரீயை யார் வைத்திருக்கிறார்கள் என்று செந்தில்தனமாக கேள்வி கேட்டால் கவுண்டமணி தரும் உதைக்கு ரேஞ்சாகா ஏதாவது பெற வேண்டியதுதான்.

புரட்சித் தமிழன்:
புரட்சி நடிகர் M.G.R திரையுலக வாழ்வில்:
1. பெற்ற உச்சம் எதில்

பதில்: வசூல் ராஜா என்ற பெயர். இப்போது கூட அவரது படங்களை போட்டால் ஹவுஸ் ஃபுல் ஆகிறது, மற்ற எந்த நடிகருக்கும் அதை சொல்ல இயலாது.

2. பெரிய தோல்வி
பதில்: வசூலில் எதுவும் தோல்வியுற்றதாகத் தெரியவில்லை. அதே சமயம் நல்ல சினிமா என பார்த்தால் அவரது படங்கள் எல்லாமே பி மற்றும் சி செண்டர்காரர்களுக்குத்தான் பிடிக்கும். பேசப்படும் அளவுக்கு படங்கள் இருக்காது.
3. அவரால் வாழ்ந்தவரில் முக்கியமானவர்
பதில்: ஜெயலலிதா
4. அவரால் வீழ்ந்தவரில் முக்கியமானவர்
பதில்: கலைஞர், அவரும் விழவில்லை, தேர்தலில் எம்.ஜி.ஆரிடம் மோசமான தோல்வியை பெற்று வீழ்ந்தார்.
5. திருப்பத்தை ஏற்படுத்திய படம்
படம்: நாடோடி மன்னன்

6. நீங்கள் விரும்பி பார்த்த படம்
பதில்: படகோட்டி (பாடல்களுக்காக) புதியபூமி (இன்னொரு காரணத்துக்காக)
7. பிடிக்காத அவரது படம்
பதில்: அப்படி என்று எதுவுமே இல்லை, ஏனெனினில் அவர் படங்கள எதற்கும் நான் எதிர்பார்ப்புகளுடன் சென்றதில்லை.
8. பெரும் வெற்றிபெற்ற படம்
படம்: உலகம் சுற்றும் வாலிபன்
9. பெரும் தோல்விப் பட்ம்
பதில்: அப்படிக் கூறும் அளவுக்கு எனக்குத் தெரிந்து ஒரு படமும் இல்லை.
10. திரையுலகில் ஆட்சி செய்த மொத்த காலம்.
பதில்: 1958-ல் நாடோடி மன்னனில் அவரது ஆட்சி உண்மையாக ஆரம்பித்தது. அது அவர் 1977-ல் மீனவ நண்பன் எடுக்கும்வரை இருந்தது. பிரபலத்தின் உச்சியில் அவர் அரசியலில் முழு பிரவேசம் செய்தார். ஆக 20 ஆண்டுகள் எனக் கூறலாம்.

ஸ்ரீராம்:
1. காலம் இவ்வளவு மாறிய பிறகும் அந்த பிராமண எதிர்ப்பை விடாமல் இருப்பது மனவேதனையை தரவில்லையா?
பதில்: இல்லை. ஏன் தர வேண்டும்?

2. போன தலைமுறையினர் செய்ததாய் சொல்லப்படும் ஒரு சில நல்லது அல்லாத செயல்களுக்கு 2வது, 3வது தலைமூறையை துவஸ்தம் பண்ணுவது நியாயமா?
பதில்: செய்ததாகக் கூறப்படுவது என்பதுதான் முக்கியம். நியாயம் இல்லைதான். ஆனால் ஏன் அதற்காக மனம் வருந்த வேண்டும்? போடா ஜாட்டான் என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதானே.

3. பிராமண (ஆசிரியர் ,மருத்துவர் ,வக்கீல்,ஆடிட்டர்,முதலாளி......)வேண்டும், ஆனாலும் எதிர்ப்பை காட்டுவேன் இது சரியா?
பதில்: இது சரியா என்று ஏன் பார்க்க வேண்டும்? அது வேறு, இது வேறு.

4. ஒடுக்கப் பட்டவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற கொள்கைக்காக ஒரு முன்னேறிய அறிவுசால் இனத்தையே ஒளித்து கட்ட நினைக்கிறார்களே?
பதில்: என்னதான் தலைகீழாக தண்ணீர் குடித்தாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதை யாராலும் தடுக்க இயலாது.

5. இப்படி இவர்களுக்கு தவறுதலாய் போதிக்கும் பல தலைவர்களின் அம்மா, மனைவி, மருமகள், பேத்தியின் கணவன் பிராமண சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பது புரியவில்லையே? இதை சரி செய்வது எப்படி?
பதில்: அவர்களை சரி செய்வது நம் வேலை அல்ல. நமக்கு நேரம் போதவில்லை, வேறு உருப்படியான வேலைகளை கவனிக்க.


அனானி (19.11.2008 இரவு 08.19-க்கு கேட்டவர்):
1. இன்று இறைவனடி சேர்ந்த நடிகர் நம்பியார் சுவாமியின் கலைப்பணி/ஆன்மிகப் பணி பற்றிய செய்திகள் விரிவாய் சொல்லவும்?
பதில்: ஒரு சகாப்தம் முடிந்தது. மர்மயோகி படத்தில் அவரை காமெடியனாகப் பார்த்தேன். சிவந்த மண்ணில் கொடூர வில்லனாக. இந்த சோக நினைவுகளுக்கு நடுவில் எஸ்.வி.சேகர் நாடகம் ஒன்றில் (எல்லோரும் வாங்க) வரும் ஒரு சிறு சீனை இங்கே கூறுவேன். சேகரின் காதலியின் அம்மாவுக்கு அவரது அண்ணனின் கடிதம் இவ்வாறு வரும்: “அன்புள்ள மகாலட்சுமி, இங்கு தம்பி நம்பியார் உள்பட எல்லோரும் நலம். இப்பவும் எனது மகன் மனோஹர் உன் மகளை பெண் பார்க்க நாளை மறு நாள் வருவான். இப்படிக்கு அப்பா வீரப்பா சொற்படி, உன் அண்ணன் அசோகன்” இக்கடிதத்தை அம்மாக்காரி படிக்க பக்கத்தில் நிற்கும் சேகரின் முகபாவங்கள் அபாரமாக இருக்கும். நம்பியார்கள் எல்லாம் மரிப்பதில்லை. மிமிக்ரி கலைஞர்கள் உபயத்தில் அவரது குரலை இன்னும் கேட்டு கொண்டே இருக்கலாம்.

2. அஞ்சலி செலுத்த வந்த புன்னகை அரசிக்கு( கே.ஆர்.விஜயா) என்னாச்சு? உடல் நலக் குறைவா?
பதில்: எனக்கும் சொரேல் என்றது. காரே மூரே என இளைத்துள்ளார். வயது நன்றாகத் தெரிகிறது. மேக்கப் இல்லாமல் பார்ப்பதால் இருக்குமோ?

3. அவரது 90 ஆண்டு வயதில் எல்லாக் கடமைகளையும் முடித்து உடல் நலக் குறைவின் காரணமாய் (Heart attack) இயற்கை எய்திவிட்டார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பிறகும் ,அஞ்சலி செலுத்த வருகிறவர்கள் அழுது ஆர்பாட்டம் (குறிப்பாக நடிகை மனோரமா ஆச்சி) செய்து கலைஉலகத்துக்கு பெரிய இழப்பு என உபசார வார்த்தை சொல்வது பற்றி -டோண்டு சாரின் கமெண்ட் என்ன?
பதில்: என்ன இப்படி கூறிவிட்டீர்கள்? அவருடன் நேரில் பழக்கமில்லாத நானே வருத்தப்படும்போது ஆச்சி போன்றவர்களது எதிர்வினைகளை சந்தேகிக்கலாகாது.

4. அரசியல் தலைவர் ஒருவர் மற்றொருவர் மீது போட்ட மானநஷ்ட வழக்கில் யாருக்காவது பணம் கிடைத்துள்ளாதா?
பதில்: எனக்கு தெரிந்து இலை. எம்.ஜி.ஆருக்கு அவரது மனைவி ஜானகியே விஷம் கொடுத்ததாகவும் யாரோ கூறியதாக ஞாபகம். கவர்னரே ஈவ் டீஸிங் செய்ததாகவும் கூறப்பட்டது. கவுண்டமணி சொல்வது போல அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.

5. மீண்டும் சோ/மோடி/டோண்டு எதிர்ப்பாளர்கள் பார்ப்பன துவேசத்தை,புலிகள் ஆதரவு/எதிர்ப்பு போர்வையில் தொடங்கிவிட்டார்களே?
பதில்: பார்ப்பன வெறுப்பு எப்போது விடப்பட்டது, மீண்டும் தொடங்கி விட்டார்கள் என்று சொல்ல?

தென்காசி:
புகழ்பெற்ற திரைப்பட பாடல் வரிகளுக்கு உங்கள் ஸ்டெயிலில் விளக்கம் கொடுக்கவும்.
அ. தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
பதில்: சில சமயம் தெளிவா தெரிஞ்சுதுன்னா சே இவ்வளவுதானா விஷயம்னு தோணும். முக்கியமா மேஜிக்கிலே அது நடக்கும். ஆகவே வெற்றி பெற விழையும் வித்தைக்காரர் கண்கட்டி வித்தையிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆ. கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை, காத்திருந்தால் பெண் கனிவதில்லை
பதில்: ஆம், ரொம்ப காத்திருந்தால் ஃபிகரை வேறு எவனாவது தள்ளிக் கொண்டு போய் விடுவானுங்கள். ஆகவே சட்டுபுட்டென்று ஃபிகரிடம் காதலை சொல்லிவிடு. கிடைச்சால் சரி, இல்லையா அடுத்த ஃபிகர்னு போயிட்டிருக்கணும்.

இ. ஒவ்வொரு உறவாய் இழந்த பின்னும், வலியுடன் வாழ்க்கையை தொடர்ந்து வந்தான், கடைசி உறவையும் இழந்த பின்னே, கல்லைப் போலே கிடந்து விட்டான் ........
பதில்: அப்பவும் கல்லு போன்ற நிலையுடன் இருந்தானா? மனுஷனா இரும்பா?

ஈ. காசை எடுத்து நீட்டு, கழுதை பாடும் பாட்டு, ஆசை வார்த்தை காட்டு, உனக்குங்கூட ஓட்டு
பதில்: ஆகவே, சிரிப்பு வருது, சிரிப்பு வருது, சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.

உ. மேடை ஏறிப் பேசும்போது ஆறு போல பேச்சு, கீழே இறங்கிப் போகும்போது, சொன்னதெல்லாம் போச்சு
பதில்: சாதி மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்பு மகாநாட்டில் வீர உரையாற்றிய தலைவர், சீக்கிரம் வீட்டுக்கு விரைந்தார். தனது மகளுடைய ஜாதகத்தை மாப்பிள்ளை தேடும் பொருட்டு தனது சாதி சங்கத்தில் பதிய வைக்க மனைவி சமேதராக நல்ல நேரம், சகுனம் பார்த்து புறப்பட்டார்.

ஊ. செப்பு கொஞ்சம் சேர்க்கலன்னா தங்கம் ஆபரணமாகாது, தப்பு கொஞ்சம் பண்ணலன்னா சங்கு கனியாது
பதில்: அதுக்காக தப்பை ரொம்பவும் பண்ணா சங்கை அறுத்துடுவானுங்களே. அவ்வ்வ்வ்வ்.

எ. கொடுத்தத திருப்பி நான் கேட்க கடனா கொடுக்கலையே, உனக்குள்ளதானே நான் இருக்கேன், உனக்கது புரியலையே
பதில்: பம்பாய் வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தை வைத்து காமெடி பண்ணல்லயே?

ஏ. கொஞ்சம் நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா
பதில்: அது வரைக்கும் பிரச்சினையை சமாளிக்க அதை கையில் எடுத்து கொள்ளவும்.

ஐ. நீ நடக்கும் புல்வெளியில், பனித்துளிகள் துடைத்து வைப்பேன், நீ பேசும் தாய் மொழியில், வல்லினங்கள் களைந்து வைப்பேன்
பதில்: அப்போ உன் வேலையை எப்பப்பா கவனிப்பே? இதான் வேலைங்கறியா, கிழிஞ்சது கிருஷ்ணகிரி.

ஒ. ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை, இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை, பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
பதில்: அதானே, கொன்னா பாவம், தின்னா போச்சு.

ஓ. சந்தோசம் , சந்தோசம் , வாழ்கையின் பாதி பலம், சந்தோசம் இல்லை என்றால் , மனிதர்க்கு எது பலம்
பதில்: சில சமயம் அடுத்தவரை சந்தோஷமுறச் செய்து பார்ப்பதிலே வரும் சந்தோஷம் எல்லாவற்றையும் விட அதிகம்.

ஓள. காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி, அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

பதில்: ஏன், ஏன் என்று கேள்விகளாக கேட்டு, பதில்களும் பெற்று கடைசியில் கேள்விகள் இல்லாமல் போகும்போது கேட்காத கேள்விக்கு பதிலாக வருவது ஒரு பிடி சாம்பலே.


நக்கீரன் பாண்டியன்:
1. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பொருளாதாரப்போட்டி, எல்லைத் தகராறு, நதிநீர் பங்கீட்டு தாவா இந்தியா சீனா தேசத்துக்கிடையே உள்ள ராஜீய உறவுகளில் உள்ள உரசல் பெரிய அளவு மோதலுக்கு வழிவைக்கும் எனும் அரசியல் பார்வையாளர்களின் இன்றையப் பத்திரிக்கை செய்தி பற்றிய தங்களின் கருத்து?
பதில்: இச்செய்தியை நான் பார்க்காவிட்டாலும், மேலே சொன்ன விஷயங்கள் எந்த இரு அண்டை நாடுகளுக்கிடையே நடந்தாலும் பெரிய அளவு மோதல்தான் விளைவு.

2. அதிமுக மீண்டும் 3 வது அணியை நோக்கியா?
பதில்: மூன்றாம் அணி தமிழகத்தில் அவருக்கு பொருந்தாது. ஏனெனில் இங்கு மூன்றாவது அணி என்றாலே திமுக மற்றும் அதிமுக இல்லாத அணிதான் என்ற நிலை. மத்தியில் பார்த்தாலும் மூன்றாம் அணிக்கு வாய்ப்பு மிகவும் குறைவு. வேண்டுமானால் ஜெயலலிதா எம்பி சீட்டுகளை அதிகமாக பெற்று மத்தியில் வரும் ஆட்சிக்கு ஆதரவு அளித்து மந்திரிசபையில் கூட்டணி வேண்டுமானால் வைத்து கொள்ளலாம். அது கூட இப்போதைய நிலையில் பி.ஜே.பியுடன் மட்டுமே சாத்தியம். ஏனெனில் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலை திமுகவுடனான கூட்டணியில்தான் இருந்து சந்திக்கும் என தற்போதைய நிலைகள் தெரிவிக்கின்றன.

3. ஜெ.யின் ஒரு கோடி கேட்டு வழக்கு?
பதில்: மதுரை சம்பவத்தைப் பற்றி கேள்வி கேட்ட நிருபரை “நீதாண்டா கொலைகாரன்” என்று பதில் கூறிய ஞாபகத்தில் கலைஞர் அவ்வாறு கூறிவிட்டார் என நினைக்கிறேன். அதை தான் கிண்டலுக்காகவே கூறியதாக வேறு பிறகு சொன்னார் என படித்தேனே. ஒரு கோடி ரூபாய் கிடைக்கிறதோ இல்லையோ ஒரு சில சங்கடங்கள் கலைஞருக்கு வரலாம்.

4. மின்சார சுடுகாட்டுப் பராமரிப்பு தனியார் வசம்? (build/operat/transfer)
பதில்: நல்ல ஐடியாவாகத்தானே இருக்கு?

5. டெல்லி யாருக்கு? இலவச திட்டங்கள் அறிவிப்பு ஒட்டுகளைபெற -பா.ஜ.வும் - இது நல்லதிற்கில்லயே?
பதில்: பாஜகவும் ஒரு அரசியல் கட்சிதானே. இலவசங்கள் தராமலேயே தேர்தலை வெற்றி பெறலாம் என வழி காண்பித்த மோடியை பின்பற்றவேண்டுமானாலும் அவர் அளவுக்கு எவன் நேர்மையாக இருந்து கஷ்டப்படுவதாம்?


விக்ரம்:
1) மான‌மிகு(!!) த‌மிழர் த‌லைவ‌ர்(!!) வீர‌ம‌ணியின் ச‌மீப‌த்திய‌ விடுத‌லையில் பார்ப்ப‌ன‌ர்க‌ளை கிழிகிழியென்று கிழித்துள்ள‌ன‌ர்!! க‌வ‌னித்தீர்க‌ளா? புலி ஜால்ரா போடாத‌தால் பார்ப்ப‌ன‌ர்க‌ள் தமிழ் எதிரிக‌ள் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்ற‌ன‌ராம்!! உங்க‌ள் கருத்து இதைப்ப‌ற்றி?
பதில்: புலிகளின் சுயரூபத்தை தெரிந்தவர்கள் ஒன்று அமைதி காக்கின்றனர், பயத்தால் இல்லையெனில் தைரியமாக வெளியில் பேசுகின்றனர், சோ, ராம் போல. அவர்கள் பார்ப்பன ஜாதியில் பிறந்திருப்பது இதற்கு சற்றும் சம்பந்தமில்லாத விஷயம் என்பதை பகுத்தறிவு கொண்டவன் எவனுமே கூறிவிடுவான். இதில் விஷயத்தை பற்றி பேசாது பாப்பாந்தான் காரணம்னு குதிக்கறவங்களுக்கு பகுத்தறிவு சுத்தமா லேது.

2) 'மான‌மிகு', 'த‌மிழர் த‌லைவ‌ர்' இந்த்த‌ப்ப‌ட்ட‌ங்க‌ள் யார் வீர‌ம‌ணிக்கு கொடுத்த‌து?. அத‌ற்கு அவ‌ர் த‌குதியான‌வ‌ரா? உங்க‌ள் கருத்து?
பதில்: தனிப்பட்ட முறையில் வீரமணி பழகுவதற்கு எளியவர் என கேள்விப்பட்டுள்ளேன். மற்றப்படி மானமுள்ள, தமிழர் தலைவர் என்பது பற்றியெல்லாம் வேறு கருத்து இல்லை. வீரமணிக்கும் வேறு கவலைகள் அதிகம் உண்டு. அவரது அறக்கட்டளை நடத்தும் கல்விநிறுவன வேலைகளின் கணக்கு வழக்குகளே அவருக்கு வேணது உள்ளன.

3) 'த‌மிழர் த‌லைவ‌ர்' வீர‌ம‌ணி!! 'த‌மிழின‌த் த‌லைவ‌ர்' க‌ருணாநிதி!! பின் யார்தான் த‌மிழ‌ருக்கு த‌லைவ‌ர்?!! 'மான‌மிகு' என்றால் என்ன‌ அர்த்த‌ம்?
பதில்: காமெடியெல்லாம் ஆராயக் கூடாது. அனுபவிக்கணும். எனக்கும் வேறு வேலைகள் வேணது உள்ளன. முக்கியமாக இந்த வாரம் வந்துள்ள கேள்வி பதில்களை முடிக்கும் வேலை வேறு மலையாக முன்னால் நிற்கிறது. இப்போதைக்கு ஜூட்.

4) பார்ப்ப‌ன‌ருக்கு என்று தாய்மொழி இல்லையாம்!! தாய்நாடு இல்லையாம்!!! த‌மிழ் நாட்டில் ஒட்டிக்கொண்டு த‌மிழை வைத்துதான் பொழைப்பு ந‌ட‌த்திக்கொண்டு உள்ளார்க‌ளாம்!!! உங்க‌ள் கருத்து?
பதில்: பார்ப்பனருக்கு எந்த கலாச்சார தாசில்தாரின் அனுமதியும் தேவையில்லை. போடா ஜாட்டான் என கூறிவிட்டு அவர்கள் தம் வேலையை பார்ப்பார்கள்.

5) வீர‌ம‌ணி போன்ற‌வ‌ர்க்கு ஏன் பிராம‌ண‌ர் மீது இத்த‌னை வெறுப்பு? ஏன் விடுத‌லையில் ம‌ற்ற‌ உய‌ர்சாதி துவேஷ‌ங்க‌ள் ப‌ற்றி பேசுவ‌தில்லை? ஏன் பிராம‌ண‌ரை ம‌ட்டும் குறி வைக்கின்ற‌ன‌ர்?
பதில்: நியாயமாக பேசுங்கள். திராவிட முகாமில் பார்பனர் அல்லாத மற்ற உயர்சாதியினரின் ஆதிக்கம்தானே. அவர்கள் எப்படி தங்களது ஜாதிக்கு விரோதமாகப் போவார்கள்? கீழ் வெண்மணியில் தலித்துகளை உயிருடன் எரித்தது ஒரு பார்ப்பனராக இருந்தால் ஆட்டம் போட்டிருக்கக் கூடிய பெரியாரே அது ஒரு நாயுடு என்றவுடன் அடக்கி வாசிக்கவில்லையா?

6) பார்ப்ப‌ன‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌ என்று சொல்ல‌ வீர‌ம‌ணி போன்றோருக்கு என்ன‌ த‌குதி? அவ‌ர்க‌ள் என்ன‌ த‌மிழின் உரிமையாள‌ர்க‌ளா அல்ல‌து த‌மிழ் அவ‌ர்க‌ள் முப்பாட்ட‌ன் வீட்டு சொத்தா? இப்ப‌டிச்சொல்லும் இவ‌ர்க‌ள் எப்ப‌டி ஒரு த‌மிழ‌ர் அல்லாத‌ (க‌ன்ன‌ட‌ர்) பெரியாரை ஏற்றுக்கொண்டார்க‌ள்?
பதில்: இக்கேள்விக்கு பெரியாரே ஒரு முறை பதில் கூறிவிட்டாரே, தமிழனுக்கு தலைமைப் பதவி பெறும் தகுதி இல்லையென்று.

கிருஷ்ணன்:
1) Give us a list of books (both Tamil and English) you enjoyed reading this year.
பதில்: அமரர் வி.எஸ். திருமலை எழுதிய “கிருஷ்ணன் பொம்மை” என்னும் சிறுகதை தொகுதி எதேச்சையாகக் கிடைத்தது. படித்ததும் பிரமித்து போனேன். அதில் உள்ள பல கதைகளை வெவ்வேறு தருணங்களில் பத்திரிகை கதைகளாக படித்துள்ளேன். அப்போதே அவை என் மனதைக் கவர்ந்தன. இப்போது அவை அனைத்தும் இவர் எழுதியதே என்று அறிந்ததும், அடடா இது மட்டும் முன்னாலேயே தெரிந்திருந்தால் அவரை நேரில் பாராட்டியிருக்கலாமே எனத் தோன்றியது. அவர் எனது மாமாவின் மாப்பிள்ளை.

2) With just 41 days to go for 2008 to fade into history, what are your impressions of this year?
பதில்: இதுவரை நன்றாகவே போயிற்று. ஆனால் ஒன்று. இந்த ஆண்டு கணக்கெல்லாமே மனிதனாகவே உருவாக்கி கொண்டது. நேரம் என்பது அதை உணர்வதற்கு யாரேனும் இருந்தால்தான் பொருளுடையது. இதை ஐசக் அசிமோவ் தனது “கடைசி கேள்வி” என்னும் கதையில் கூறியிருப்பார்.

குப்புக்குட்டி:
a) மசால் தோசை junk food -லிஸ்டில் வருமா? anything fried/cooked in oil comes under this classification?
பதில்: இல்லை வராது. உளுந்து, அரிசி, சிறிது வெந்தயம் போட்டு அரைத்து புளிக்கச் செய்வதில் வரும் ஈஸ்ட் ஜீரண சக்தியை தூண்டுகிறது. அதில் நார்ச்சத்தும் உண்டு. நல்லெண்ணெய் போட்டு தோசை வார்த்தால் அதன் மணமே தனிதான். ஜங்க் உணவில் இருக்கும் அஜீனோ மோட்டோ சமாசாரங்கள் இதில் இல்லை.

b) மாடு பிடிக்கப் போனதுண்டா? ஜல்லிக்கட்டுக்கு
பதில்: இல்லை. இந்தக் கொடூரமான விளையாட்டை தொலைக்காட்சியில் பார்க்கக்கூட விரும்ப மாட்டேன்.

c) கோவை அண்ணபூர்ணாவில் காபி சாப்பிட்டு இருக்கிறீர்களா?
பதில்: சமீபத்தில் 1978-ல் அங்கு சில நாட்கள் தங்கியிருந்தபோது கௌரிசங்கர் என்னும் ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறேன். அன்னபூர்ணாவில் சாப்பிட்டதில்லை. ஏன் நன்றாக இருக்குமா?

d) காந்தி சிலைக்கு மாலை அணிவித்ததுண்டா? காந்தி ஜெயந்தி அன்று அவரை நினைப்பதுண்டா?
பதில்: இல்லை

e) கடலில் கால் நனைக்க துணை தேடுவது எதானால்? சுனாமி வந்து விடுமோ என்ற பயமா?
பதில்: கொட்டும் மழையில் குடையின்றி கடலலையில் காலை நனைக்க, உடல் முழுவதும் மழையில் நனைய அந்த அனுபவமே தனிதான். யாராவது வருகிறார்களா என கேட்டுவிட்டு கடலலைக்கு செல்வதுண்டு. யாம் பெற்ற இன்பம் வையகம் பெறட்டுமே என்ற நோக்கம்தான். இம்முறை பதிவர் மீட்டிங்கில் மீட்டிங் முடிந்தவுடன் சென்றிருக்கலாம்தான். ஆனால் நேரம் ஆகிவிட்டது. கடலிடம் பயமில்லாவிட்டாலும் திருடர்களிடம் பயம் அதிகமாகவே உண்டு. ஆகவே செல்லவில்லை. மற்றப்படி சுனாமி வந்தால் எல்லோருமே காலி. இதில் துணை கூட இருந்தால் என்ன பலன்?

f) முடிவெட்டிக் கொள்ளும் போது உங்களுக்கு தூக்கம் வருமா?
பதில்: சிலருக்கு வரும் என்பதைப் பார்த்திருக்கிறேன். எனக்கு வராது.

g) சகோதரி நிவேதிதா -ஐ சந்தித்த பிறகுதான் பாரதி பெண் விடுதலை பற்றி எழுத ஆரம்பித்தாராமே?
பதில்: பாரதி படத்தில் அவர் ஒரு வெள்ளைக்கார பெண்மணியுடன் பேசும்போது தன் மனைவி படிக்காத பெண் என்று பேச, அவர் கையில் குட்டு வாங்கினார் என்பதை பார்த்தேன். அது நிவேதிதாவா? கவனிக்கவில்லை.

h) நமக்கு வால் மட்டும் இருந்தா இப்ப மாதிரி பாண்ட் போட்டுக்க முடியுமா? பஞ்சக்கச்சம்தான் சரியா வரும்னு நினைகிறேன். உங்கள் கருத்து என்ன?
பதில்: வால் பையன் என் வீட்டிற்கு வந்தபோது பேண்ட் அணிந்துதானே வந்தார்?

i) English தான் என் உயிர், பிரெஞ்சுதான் என் மூச்சு என்ற கோஷ்டிகள் அவர்களிடம் இருக்கிறதா?
பதில்: ஆங்கிலத்தில் எனக்கு தெரிந்து இல்லை. ஆனால் பிரெஞ்சில் அதுவும் கனடாவில் உள்ள கியூபெக்கில் அமோகமாக உண்டு. இது பற்றி நான் “தாய்மொழி வெறியர்கள்” என்ற தலைப்பில் போட்ட இப்பதிவிலிருந்து: “நான் பார்த்த ஜெர்மானியர் முடிந்த வரைக்கும் தாங்களே ஆங்கிலம் பேசி என்னைப் போன்ற துபாஷிகளின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டனர். அவர்களை துரோகிகள் என்று நான் பாதி விளையாட்டாகவும் பாதி வினையாகவும் கூறுவதுண்டு. அப்போதிலிருந்து இன்று வரை நான் செய்த ஜெர்மானிய துபாஷி வேலைகள் ஃபிரெஞ்சு துபாஷி வேலைகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.

பிரெஞ்சுக்காரர்கள்? ஆங்கிலம் தெரிந்தாலும் அதில் பேச விரும்ப மாட்டார்கள். அவ்வளவு தாய்மொழிப் பற்று அவர்களுக்கு. அவர்களைத்தான் எனக்கு பிடிக்கும். என் போன்றவர்களுக்கு வேலை கிடைக்கிறதல்லவா? ஹி ஹி ஹி.

அவர்களது மொழிவெறிக்கு ஒரு உதாரணம் Gerge Pompidou என்பவர். அவர் ஃபிரான்ஸின் குடியரசுத் தலைவராக இருந்தபோது நடந்த விஷயம் இது. அப்போது இங்கிலாந்து ஐரோப்பிய பொதுச் சந்தைக்குள் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தது. எல்லோரும் ஒத்து கொண்ட நிலையில் ஃபிரான்சு மட்டும் முட்டுக்கட்டை போட்டது.

அப்போது Pompidou சொன்னார். "இந்த ஆங்கிலேயர்கள் உள்ளே வந்தால், ஐரோப்பிய சந்தையின் பொது மொழியாக ஆங்கிலம் வந்து விடும். எனக்கு அது பிடிக்கவில்லை" என ஒரு குண்டைப் போட்டார். அச்சமயத்தில் சில ஃபிரெஞ்சுக்காரர்களுக்கே இது கொஞ்சம் ஓவராகப் பட்டது. ஒரு பத்திரிகையில் இவ்வாறு தலைப்பு குடுத்தார்கள். "Monsieur le Président, vous êtes chauviniste!!" (குடியரசுத் தலைவர் அவர்களே, நீங்கள் ஒரு வெறியர்). அதற்காகவெல்லாம் அவர் அசரவில்லை. உண்மையைத்தானே கூறுகிறார்கள் என்று விட்டுவிட்டார் போல.

எது எப்படியானாலும் பிரெஞ்சுக்காரர்களுடன் ஒப்பிடும்போது நாம் இந்த விஷயத்தில் சற்று பின்தங்கித்தான் இருக்கிறோம். எல்லா ஆங்கில வார்த்தைக்கும் தமிழ் பதங்களை காண்பதை பலர் கண்டிக்கிறார்கள். இந்த மனப்பான்மையை நாம் கண்டிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு கப்பல் சம்பந்தப்பட்ட கலைச் சொற்களையே எடுத்து கொள்வோம். பழந்தமிழர்கள் கடற்பயணங்களில் விரும்பி ஈடுபட்டவர்கள். கப்பல்களை கட்டி, கடலில் செலுத்தியவர்கள். நான் கூறுவது சோழர்கள் காலத்தை. கண்டிப்பாக கப்பலின் எல்லா பகுதிகளுக்கும் தமிழ்ப் பெயர் வைத்திருப்பார்கள். அவற்றை கண்டறிந்து இக்காலக் கப்பல்களுக்கு ஏற்ற மாதிரி கொடுக்க முடியாதா? உதாரணம் மாலுமி, மீகாமன், சுக்கான், நங்கூரம் போன்றவை.

அதைத்தான் ஃபிரெஞ்சுக்காரர்களும் செய்கிறார்கள். பல புதிய தொழில்நுட்ப ஆங்கில வார்த்தைகளை முதலில் அப்படியே எடுத்துக் கொள்கிறார்கள். பிறகு அவற்றுக்கேற்ற பிரெஞ்சு வார்த்தைகளை உற்பத்தி செய்கிறார்கள். நம்ம வைகைப்புயல் ஒரு படத்தில் சொன்னது போல இதுக்குன்னே ஒக்காந்து யோசிப்பாங்க போல.

உதாரணத்துக்கு:
Walkman --> Baladeur
Email --> Courriel
Spam --> Pourriel or Polluriel
Hardware --> Matériel
Software --> Logiciel

இந்த மாதிரி ஒக்காந்து யோசிக்கறதுக்குன்னே எனக்கு தெரிந்து இரண்டு அமைப்புகள் உள்ளன. அவை:

Académie Française,
L'enrichissement de la langue française (ELF)

நிஜமாகவே உக்காந்துதான் யோசிக்கிறாங்க. அவ்வப்போது பயங்கர சண்டையெல்லாம் ஏற்படும். அது வேறு கதை. ஆனால் ஒன்று யாராவது சரியான வார்த்தையை உபயோகிக்காவிட்டால் அவர்களுக்கு சங்குதாண்டி. அதே போல பெயர்ப்பலகை வைக்கும்போது ஃபிரெஞ்சில் இல்லையேன்றால் கையில் அகப்பட்டதை வெட்டி விடுவார்கள்”.

j) சட்டக் கல்லூரி முன்னால் அன்று நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் -
பதில்: அந்த இடத்தை விட்டு பைய நகர்ந்திருக்கலாம். அல்லது பதிவு போடும் நோக்கத்தில் நோட்ஸ் எடுத்திருக்கலாம். என்ன செய்திருப்பேன் என்ற்பதை சொல்லத் தெரியவில்லை.


அனானி (20.11.2008 மாலை 05.31-க்கு கேட்டவர)
1. will the world be destoyed-in 2012 as said by a boy (who came from mars)?
பதில்: இம்மாதிரி பல ஜோசிய அனுமானங்களை கேட்டாகி விட்டது. ஆளை விடுங்கள்.

2. already threats to obama is comming in news?( from extremists)
பதில்: அமெரிக்க அரசியல் வாழ்வில் இது சகஜம்.

3. what is the real reason for the downward trend in stock market?
பதில்: Because the upward trend was not growth. It was only an inflammation. It had to break.

4. 2.75 lak crores of money released by reserve bank .where it has gone?
பதில்: சுவிட்ஸர்லாந்து

5. what will happen to indian economy?
பதில்: பயப்படாமல் செயல்பட்டால் சமாளித்து விடலாம். நமக்கு இயற்கையாகவே சேமிக்கும் பழக்கம் உண்டு. ஆகவே பிரச்சினை அதிகம் இருக்கக் கூடாது.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

32 comments:

Anonymous said...

// தனிப்பட்ட/அந்தரங்க/சென்சிடிவ் விஷயங்களை கேட்கும் இம்மாதிரி கேள்விக்கு பதில் தருவதற்கில்லை//

dondu saarin kelvi pathil pathivai payanullathaaay ( more informative and useful) seeyyavum nanbarkale

thevaiyatra kelvukali ( personal questions) thavirththal nallathu

nalla kelvikal kedkappattal theriyaata nalla visayangal
yellorukkum theriyavarume.

kelvi pathil pathivai melum suvaiullathaakka anaivarthu
nal aatharvum nanmai payakkum.

Anonymous said...

மதிப்பிற்குரிய டோண்டு,

உங்களது உழைப்பு மற்றும் அறிவுத்திறன் மிகவும் போற்றுதற்குரியது .

ஆனால் , உங்களது மேட்டிமமைத் தன்மையை பிறர் பாராட்ட நீங்கள் முயலுவது ,உங்கள் பதிவின் மூலமாக , உண்மையில் சிறு பிள்ளைத் தனம்

je vous sollicite de bien vouloir utiliser votre connaissance sur les choses plus importantes que de parler pour ou contre une personne.

Intelligence comes out naturally not by trying exposing it (as you try to do in vain ur Q and A s)

J'espère que you ll publish this comment.

Ilan.
இளங்கோவன்

dondu(#11168674346665545885) said...

//J'espère que you ll publish this comment//
பிரசுரிக்க என்ன தடை? அது சரி, ஒன்று ஆன்ஙிலத்தில் எழுதுங்கள் இல்லையெனில் பிரெஞ்சில் எழுதுங்கள். இதென்ன கதம்ப சோறு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//கருணாநிதி நிர்வாகத் திறமையானவர் என்று அவரது ஆதரவாளர்கள் பெருமையாகக் கூறிக் கொள்வர். ஆனால் கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் வன்முறைகளும், கரண்ட் கட் போன்ற மக்களை பாதிக்கும் பிரச்னைகளும் அதிகம் என்பது உண்மையா?//

எனக்கு தெரிந்து கருணாநிதி, ஜெயலலிதாவின் ஃபாலோயராகத்தான் இருக்கிறார்.
ஜெயலலிதாவால் கொண்ட வரப்பட்ட மழைநீர் சேமிக்கும் திட்டம் மட்டும் எடுத்துகொள்ள படவில்லை.
லாட்டரியை ஒழித்தது.
கோவில்களில் அன்னதானம்
அரசு கேபிள்
டாஸ்மாக் போன்றவற்றில்

அப்பட்டமாக கருணாநிதி ஜெயலலிதாவின் மேலாண்மையை பாராட்டுகிறார் என்று தானே அர்த்தம்.

எதோ நல்லது நடந்தால் சரி என்னையை போலுள்ள குடிமகன்களுக்கு

:)

வால்பையன் said...

//மந்த்ராவை (தமிழ் நடிகை) உங்களுக்கு பிடிக்காதா? பரந்த மனம் கொண்டவராமே?
பதில்: தாராளமாக பிடிக்கும்.//

அது செயற்கை மனமாமே!!

வால்பையன் said...

//அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஜெ. தைரியமாக தனிப்பட்ட நபர்களின் பெயரை நீக்கி உத்தரவிட்டது போல//

ஜெ.ஜெ பஸ் சர்வீஸ் என்று ஒன்று அவரால் ஆரம்பிக்க பட்டதாக ஞாபகம்

வால்பையன் said...

//சுஜாதாவுக்கே ஏற்பட்ட இந்த சந்தேகத்திற்கு உங்களுக்கு விடை தெரியுமா? (காலையில் எழும் போது ஆண்களின் தொப்புளின் பஞ்சு ஏன்?)//

நமக்கு காட்டன் பனியன் அணியும் பழக்கம் இருப்பதால் இருக்கலாம்.

வால்பையன் said...

//10. திரையுலகில் ஆட்சி செய்த மொத்த காலம்.
//

இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் விடப்பட்டிருக்கிறது

வால்பையன் said...

//காலம் இவ்வளவு மாறிய பிறகும் அந்த பிராமண எதிர்ப்பை விடாமல் இருப்பது மனவேதனையை தரவில்லையா?
பதில்: இல்லை. ஏன் தர வேண்டும்? //

இதையே தான் அவர்கள் ”ஏன் விடவேண்டும்” என்று கேட்கிறார்கள்.
(எங்களுக்கும் பொழுது போகணுமுல்ல)

வால்பையன் said...

//மீண்டும் சோ/மோடி/டோண்டு எதிர்ப்பாளர்கள் //

இங்கே பாருய்யா
சோ,மோடி ரேஜ்ஜிக்கு நம்ம டோண்டு சார்.

வால்பையன் said...

//தென்காசி:
புகழ்பெற்ற திரைப்பட பாடல் வரிகளுக்கு உங்கள் ஸ்டெயிலில் விளக்கம் கொடுக்கவும்.//

உங்களுடய அறிவு பூர்வமான கேள்விகளை பார்த்து எனக்கு மெய்சிலிர்த்து போச்சு.

வால்பையன் said...

//ஜெ.யின் ஒரு கோடி கேட்டு வழக்கு?//

செலவுக்கு காசு இல்லையோ என்னவோ!!

dondu(#11168674346665545885) said...

////10. திரையுலகில் ஆட்சி செய்த மொத்த காலம்.
//
இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் விடப்பட்டிருக்கிறது//

சுட்டிக்காட்டியதற்கு நன்றி. பதிலை சேர்த்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//தமிழனுக்கு தலைமைப் பதவி பெறும் தகுதி இல்லையென்று.//

இதெல்லாம் கொஞ்சம் ஓவரு

வால்பையன் said...

//காந்தி சிலைக்கு மாலை அணிவித்ததுண்டா? காந்தி ஜெயந்தி அன்று அவரை நினைப்பதுண்டா?
பதில்: இல்லை//

ரெண்டு கேள்விக்கும் ஒரே பதிலா?
:)

வால்பையன் said...

//நமக்கு வால் மட்டும் இருந்தா இப்ப மாதிரி பாண்ட் போட்டுக்க முடியுமா? பஞ்சக்கச்சம்தான் சரியா வரும்னு நினைகிறேன். உங்கள் கருத்து என்ன?
பதில்: வால் பையன் என் வீட்டிற்கு வந்தபோது பேண்ட் அணிந்துதானே வந்தார்?//

ஒருவேளை சுருட்டி ஒளித்து வைத்திருக்கலாம் இல்லையா?

வால்பையன் said...

// 2.75 lak crores of money released by reserve bank .where it has gone?
பதில்: சுவிட்ஸர்லாந்து
//

இது தான் மாஸ்டர் பீஸ் ஜோக்

வால்பையன் said...

//மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
//

இல்லை இந்த வாரமே சந்திப்போம்

dondu(#11168674346665545885) said...

//ரெண்டு கேள்விக்கும் ஒரே பதிலா?
:)//
ஆம். இதில் என்ன பொய் வேண்டியிருக்கிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வாழவந்தான் said...

/// 2.75 lak crores of money released by reserve bank .where it has gone?
பதில்: சுவிட்ஸர்லாந்து ///
இதுதான் இந்த வார ஹைலைட்..

///தனிப்பட்ட/அந்தரங்க/சென்சிடிவ் விஷயங்களை கேட்கும் இம்மாதிரி கேள்விக்கு பதில் தருவதற்கில்லை///
இது ஏதோ டெம்ப்லேட் போல் உள்ளது..
முடிந்தால் அடுத்த வாரத்திலிருந்து பதில் தர விரும்பாத(அனேகமாக உங்களால் எல்லா கேள்விகளுக்கும் பதில் அள்ளிக்க இயலும் என்று ஒரு நம்பிக்கை :-)) கேள்விகளை கடைசியில் தொகுத்திடவும்

Rajaraman said...

\\அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஜெ. தைரியமாக தனிப்பட்ட நபர்களின் பெயரை நீக்கி உத்தரவிட்டது போல அரசு கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பஸ்ஸ்டாண்டுகள் போன்றவற்றுக்கு தனிப்பட்ட தலைவர்கள், நபர்களின் பெயரை நீக்கினால் என்ன?//

டோண்டு சார் தயவு செய்து தவறான கேள்விகளுக்கு தவறாக பதிலளிக்க வேண்டாம். அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் மற்றும் மாவட்டங்களுக்கும் வைக்கப்பட்டிருந்த தனி நபர்களின் பெயர்களை நீக்கி உத்தரவிட்டது கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான். நன்றாக Refer செய்துவிட்டு பதில் அளிக்கவும். நன்றி.

thenkasi said...

//வால்பையன் said...
//தென்காசி:
புகழ்பெற்ற திரைப்பட பாடல் வரிகளுக்கு உங்கள் ஸ்டெயிலில் விளக்கம் கொடுக்கவும்.//

உங்களுடய அறிவு பூர்வமான கேள்விகளை பார்த்து எனக்கு மெய்சிலிர்த்து போச்சு.//


வால் பையனின் விமர்சனத்துக்கு நன்றி..
இதைத்தான் புகழ் வஞ்ச அணியென்பர்.

பொதுவாய் இது மாதிரி(மொக்கை) கேள்விகளுக்கு தற்கால அரசியலை நிகழ்வுகளை சம்மபந்தப் படுத்தி டோண்டு சார் கலக்குவர்.
இருந்தாலும் வால்பையன் சுட்டிக் காட்டியதால் கேள்விகள் கேட்கும் முறையை மாற்றுகிறேன்.

மீண்டும் கோடி நன்றிகள் வால்பையரே
ஞாயிறு டோண்டு சாரின் வீட்டு விஜயத்தை தனிப் பதிவாய் எதிர்பார்க்கலாமா?

வால்பையன் said...

//ஞாயிறு டோண்டு சாரின் வீட்டு விஜயத்தை தனிப் பதிவாய் எதிர்பார்க்கலாமா? //

இதுக்கு எதுக்கு தனி பதிவு, என்ன நடக்கும்னு இங்கேயே சொல்லிடுறேனே
எதாவது பாருக்கு போவோம்,
ஆளுக்கு ரெண்டு பீர் ஸ்ட்ராங்கா,
கடிச்சிக்க சிக்கன் லெக் பீஸ் அவ்வளவு தான்.

வால்பையன் said...

//
மீண்டும் கோடி நன்றிகள் வால்பையரே//

கோடிய வச்சி நான் என்ன பண்ண போறேன்.
எனக்கு ஒண்ணு போதும், மீதிய மத்தவங்களுக்கு பிரிச்சி கொடுத்திடுங்க

thenkasi said...

//வால்பையன் said...
//ஞாயிறு டோண்டு சாரின் வீட்டு விஜயத்தை தனிப் பதிவாய் எதிர்பார்க்கலாமா? //

இதுக்கு எதுக்கு தனி பதிவு, என்ன நடக்கும்னு இங்கேயே சொல்லிடுறேனே
எதாவது பாருக்கு போவோம்,
ஆளுக்கு ரெண்டு பீர் ஸ்ட்ராங்கா,
கடிச்சிக்க சிக்கன் லெக் பீஸ் அவ்வளவு தான்.//


சும்மா விளையாட்டுக்குதானே சொல்கிறீர்கள்

இல்லை உண்மையிலே கச்சேரி உண்டா?



சிலர் குடிப்பது போலே ...

சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார் !

மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !
அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே
நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது ந‌ல்ல‌வ‌னும் தீய‌வ‌னே
கோப்பை ஏந்தும் போது

சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார்

புகழிலும் போதை இல்லையோ
பிள்ளை மழலையில் போதை இல்லையோ
காதலில் போதை இல்லையோ
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ
மனம் மதி அறம் நெறி தரும் சுகம் மது தருமோ ?
நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு
நிம்மதியை தேடி நின்றால்
உண்மை சொல்லிப் பாரு !

சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார் !

வால்பையன் said...

//சும்மா விளையாட்டுக்குதானே சொல்கிறீர்கள்
இல்லை உண்மையிலே கச்சேரி உண்டா?//

கச்சேரி தான் கீழே நீங்க வச்சிடிங்களே!
நான் பொய் சொன்னா அந்த கமெண்ட டோண்டு சார் ரிலீஸ் பண்ணுவாரா?

Anonymous said...

டோண்டு,
எல்லாம் தெரிந்த கோயிஞ்சாமி மாதிரி ஒரு எடுத்துக காட்டு சொல்லி இருக்கிறீர்களே இப்படி "dy/dx அப்படியே உள்ளது. d²y/dx² மட்டும் ஏறுகிறது/குறைகிறது",விளக்குவீர்களா?

இதற்கும் கேட்ட கேள்விக்கும் என்ன தொடர்பு?

komanakrishnan

thenkasi said...

//வால்பையன் said...
//சும்மா விளையாட்டுக்குதானே சொல்கிறீர்கள்
இல்லை உண்மையிலே கச்சேரி உண்டா?//

கச்சேரி தான் கீழே நீங்க வச்சிடிங்களே!
நான் பொய் சொன்னா அந்த கமெண்ட டோண்டு சார் ரிலீஸ் பண்ணுவாரா?//


கதை அப்படி போகுதா?

ஆளுக்கு ரெண்டு பீர் ஸ்ட்ராங்கா,

இது டபுள் ஓ.கே


ஆனால்

கடிச்சிக்க சிக்கன் லெக் பீஸ் அவ்வளவு தான்.

இது கொஞ்சம் இடிக்குதே!


இதற்கு ஒரு பழமொழி சொல்வார்களே

any how
have
a
good & cheerful
sunday
with
dondu sir

வால்பையன் said...

//கடிச்சிக்க சிக்கன் லெக் பீஸ் அவ்வளவு தான்.
இது கொஞ்சம் இடிக்குதே!//

நல்லாவே இடிக்கட்டும்.

வ்றுத்த கொழின்னா சென்னையில ஒருத்தர் விரும்பி சாப்பிடுவாராம்,
அவரு யாருன்னு கண்டுபிடிங்க,
அவரு புனை பெயரு
செய்யு, ஆனா செய்ய வேணாம்

thenkasi said...

//வால்பையன் said...
//கடிச்சிக்க சிக்கன் லெக் பீஸ் அவ்வளவு தான்.
இது கொஞ்சம் இடிக்குதே!//

நல்லாவே இடிக்கட்டும்.

வ்றுத்த கொழின்னா சென்னையில ஒருத்தர் விரும்பி சாப்பிடுவாராம்,
அவரு யாருன்னு கண்டுபிடிங்க,
அவரு புனை பெயரு
செய்யு, ஆனா செய்ய வேணாம்//


அபச்சாரம் அபச்சாரம்

நவதிருப்பதியில் முக்கியத் தலமும் , நால்லாயிரத் திவ்ய பிரபந்தம் அருளிய நம்மாழ்வார் பிறந்த புண்ணிய பூமியாம் ஆழ்வார்திருநகரியில் சேவை சாதிக்கும் பெருமாளை வணங்கும்
டோண்டு சாரைப் போய்
இப்படி சொல்லாமா?


இந்த பாடலை பார்க்கவும்

பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகருளானேன்

ஊரிலேன் காணியில்லை
உறவு மற்றொருவர் இல்லை
பாரில்நின் பாதமூலம்
பற்றினேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே கதருகின்றேன்
ஆருளர்களை கணமா
அரங்கமா நகருளானேன்

பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானேன்


டோண்டு சார் இன்னும் ஏன் மெளனம்
வால்பையன் அண்ணா
ஏதோ ஒரு திட்டத்தோடு தான் ...

Anonymous said...

//any how
have
a
good & cheerful
sunday
with
dondu sir

.)))

க. கா. அ. சங்கம் said...

1. தா. பாண்டியன் என்பவர் தமிழகத்திலிருந்து வெங்காயம் போகவில்லை என்றால் ஸ்ரீலங்காவில் சாம்பார் இல்லை என்றும் ஆவடியிலிருந்து தான் பீரங்கிகள் ஸ்ரீலங்காவிற்குப் போவதாகவும் பிதற்றுகிறாரே...இதைப் பற்றிய தங்கள் மேலான கருத்து ?

சாம்பார் இல்லை என்றால் வத்தக்குழம்பு சாப்பிட்டுக் கொள்வார்கள் என்று சமாளிக்கவேண்டாம்.

2. சோ சொல்வது போல் தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் காணாமல் போய்க் கொண்டிருப்பதால் இப்படி லூசுத்தனமாக எதையாவது எடுத்துக் கொண்டு பேசுகிறார்களா ?

3. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு 1992 முதல் நடந்த எல்லா குண்டு வெடிப்புகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அரைக்கூவல் விடுகிறது பற்றி ?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது