3/26/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 56 & 57)

எபிசோடு - 56 (24.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சாம்பு சாஸ்திரிகளின் இரண்டாம் மகன் அந்த கேட்டரர் வீட்டில் கணக்கு விவகாரங்களை பார்த்து கொண்டிருக்கிறான். அவர்கள் வீட்டில் அவர் பையன் பட்டாபியின் கல்யாண சம்பந்தம் ஒன்று தவறிப்போனதை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் கேட்டரர் என்பதால் அவரை வெறுமனே சமையல்காரர் என மட்டம் தட்டுவதாக அவருக்கு தோன்றுவதை அந்த கேட்டரர் கூறுகிறார். தன் செய்வது சமையல், அது ஓர் கலை என அவர் ஒரு தருணத்தில் அழுத்தந்திருத்தமாக கூற, அப்படியா என சோ வின் நண்பர் அவரைக் கேட்கிறார்.

ஆம் என்னும் சோ, ஆயகலைகள் 64 உண்டு, அவை என்னென்ன என்பதற்கு சில பட்டியல்களே உண்டு. அவற்றில் சிலவற்றில் சமையல் சேர்க்கப்பட்டுள்ளது, சிலவற்றில் சேர்க்கப்படவில்லை என்க்கூறிவிட்டு, ஏ. சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியிலிருந்து ஒரு லிஸ்டை உரக்கப்படிக்கிறார். சோவின் நண்பர் திறந்த வாய் மூடாமல் கேட்கிறார். அதில் போஜன சாத்திரம் என ஒரு மென்ஷன் வருகிறது. அவர் கூறிய வேகத்துக்கு என்னால் நோட்ஸ் எடுக்கவியலவில்லை. ஆகவே என்னால் ஆனது, கூகளண்ணன் தயவில் இன்னொரு லிஸ்டை இங்கே தருகிறேன். அதை மூச்சு விடாமல் உரக்க ஒரேயடியாக படிப்பவர்களுக்கு வலையுலக (கேளடி கண்மணி புகழ்) எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்னும் பட்டத்தை தருகிறேன். சும்மா வச்சுக்குங்க சார், காசா பணமா?

1. அக்கரவிலக்கணம் 2. இலிகிதம் 3. கணிதம் 4. வேதம் 5. புராணம் 6. வியாகரணம் 7. நீதி சாஸ்திரம் 8. ஜோதிடம் 9. தர்ம சாஸ்திரம் 10. யோக சாஸ்திரம் 11. மந்திர சாஸ்திரம் 12. சகுன சாஸ்திரம் 13. சிற்ப சாஸ்திரம் 14. வைத்திய சாஸ்திரம் 15. உருவ சாஸ்திரம் 16. இதிகாசம் 17. காவியம் 18. அலங்காரம் 19. மதுர பாடனம் 20. நாடகம் 21. நிருத்தம் 22. சத்தப்பிரும்மம் 23. வீணை 24. வேணு (புல்லாங்குழல்) 25. மிருதங்கம் (மத்தளம்) 26. தாளம் 27. அத்திரப் பரிட்சை 28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்) 29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்) 30. கஜப் பரிட்சை (யானை ஏற்றம்) 31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்) 32. இரத்தினப் பரிட்சை 33. பூமிப் பரிட்சை
34. சங்கிராம விலக்கணம் 35. மல்யுத்தம் 36. ஆகருடனம் 37. உச்சாடனம் 38. வித்து வேடனம்(ஏவல்) 39. மதன சாஸ்திரம் 40. மோகனம் 41. வசீகரணம் 42. இரசவாதம் 43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை) 44. பைபீலவாதம் (மிருக பாஷை) 45. கவுத்துவ வாதம் 46. தாதுவாதம் (நாடி சாஸ்திரம்) 47. காருடம் 48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது நாட்டியம்
பழகுவித்தல்) 49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்) 50. ஆகாய கமனம் வானத்தில் ஊர்ந்து செல்லுதல்) 51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்) 52. ஆகாயப் பிரவேஷம் (ஆகாயத்தில் மறைந்து கொள்வது) 53. அதிரிசியம் 54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை) 55. மகேந்திர ஜாலம் 56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்) 57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்) 58. வாயுஸ்தம்பம் 59. திட்டி ஸ்தம்பம் 60. வாக்கு ஸ்தம்பம் 61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம் 63. கட்கத்தம்பம் 64. அவத்தைப் பிரயோகம்

இதே மாதிரி வேறு பட்டியல்களும் இந்த 64 கலைகளுக்குண்டு. அவற்றுள் சிலவற்றில் சமையற்கலையும் இருக்கிறது என சோ கூறுகிறார். எப்படியும் பட்டாபிக்கென்று ஒரு பெண் இனிமேலா பிறக்கப் போகிறாள், நிச்சயம் வருவாள் என்றும் கூறுகிறார். இதையெல்லாம் அவர்கள் உரக்கவே பேசுவதால், சாம்பு சாஸ்திரியின் இரண்டாம் மகன் இந்த வீட்டில் ஒரு பிரும்மச்சாரி பையன் இருக்கிறான், அப்பாவிடம் சொல்லி தனது தங்கை ஆர்த்திக்கு பார்க்கச் செய்யலாம் என யோசித்து, ஒரு அண்ணன் செய்ய வேண்டிய கடமையை உருப்படியாக செய்கிறான்.

நீலகண்டன் வீட்டில் நாதன் சஷ்டியப்தபூர்த்திக்கு தங்கள் தரப்பிலிருந்து என்னென்ன செய்ய வேண்டும் என அவரும் பர்வதமும் பேசிக் கொள்கின்றனர். அவர்கள் மகன் ராம்ஜியும் அப்பேச்சில் கலந்து கொள்கிறான்.

நாதன் வீட்டில் சிங்காரமும் சமையற்கார மாமியும் ஒருவரை ஒருவர் கலாய்க்க முயற்சி செய்கின்றனர். சிங்காரத்துக்குத்தான் வெற்றி. அவன் போடும் போட்டில் சமையற்கார மாமி தலை தெறிக்க ஓடுகிறாள்.

ரமேஷ் வீட்டில் அவனுக்கு நள்ளிரவில் அழைப்பு வருகிறது. கீழே யாரோ வந்திருக்கிறார்கள் என்பது அவனுக்கு செல்பேசி மூலம் செய்தி வருகிறது. அவனும் கீழே போய் திரும்பும்போது கைநிறைய பணத்துடன் வருகிறான். உமா கேட்கும் கேள்விகளுக்கு மழுப்பலாகவே பதில் தருகிறான்.

(தேடுவோம்)

எபிசோடு - 57 (25.03.2010) சுட்டி - 1 சுட்டி - 2
நாதன் கம்பெனிக்கு எம்.டி. ஆக வசுமதியின் சிபாரிசை பெற்றும் வரமுடியாது போன பிச்சுமணி முதன் முதலாக சீரியலில் பிரவேசம். கேட்டரர் வீட்டில் குடியிருக்கும் எல்.ஐ.சி. ஏஜெண்டின் மச்சினன் அவன்.

வேம்பு சாஸ்திரிகள் குடியிருக்கும் வீட்டு சொந்தக்காரர் அவரிடம் வாடகையை ஆயிரத்து ஐநூறிலிருந்து மேலும் ஆயிரம் ரூபாய உயர்த்தியிருப்பதாகவும், அவரால் அதை தரவியலாவிட்டால் அவர் வீட்டை காலி செய்ய வேண்டும் எனக் கறாராக கூறிவிட்டு செல்கிறார்.

சாரியார் வீட்டில் அவர் தனது மகன் பாச்சு சரியாக ஆடியோ கேசட் கடையை கவனிக்கவில்லை என அவனிடம் கோபப்படுகிறார். கயிலை டைம்ஸ் என்னும் வட்டார பத்திரிகையை வெளியிடும் ராமய்யருடன் பேசுகிறார். பேச்சு ஸ்தல புராணங்கள் பற்றி திரும்ப, அவை ஒவ்வொரு தலத்துமாக உருவாக்கப்பட்டு வருகிறது, அது உண்மையான விவரங்களையே தருகிறதா, என சோவின் நண்பர் கேட்க, சோ பல உதாரணங்கள் தந்து அவை உண்மையே என ஸ்தாபிக்கிறார்.

அசோக் பாடுபட்டு, பலரிடமும் நன்கொடை பெற்று ஒரு புது வேதபாடசாலையை உருவாக்கியிருப்பதை சிலாகித்து கூறி அது சம்பந்தமாக கயிலை டைம்ஸில் போடுமாறு ராமய்யரிடம் சாரியார் கேட்டு கொள்கிறார். அசோக் ஒரு துருவ நட்சத்திரம் எனக் கூறுகிறார்.

நாதன் சஷ்டியப்தபூர்த்தி டிவிடியை வீட்டில் நாதன், வசுமதி, நீலகண்டன், பர்வதம், சிங்காரம் ஆகியோர் பார்க்கின்றனர். நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள் அவரவர் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப வருகின்றன. எல்லோரும் நாதன் வசுமதியை சேவிக்க, அசோக் கீழே சாஷ்டாங்கமாக விழுந்து சேவிக்கிறான்.

சாஷ்டாங்க நமஸ்காரம் என்றால் என்ன என சோவின் நண்பர் கேட்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

வால்பையன் said...

எட்டாவதாக இருக்கும் ஜோதிடம் பார்பனர்களின் கண்டுபிடிப்பு என சோ ஒப்பு கொள்கிறாரா!?

pichaikaaran said...

விரிவான பதிவு... முன்பு போல், நீங்கள் ஏன் அதிகமாக எழுதுவதில்லை?

மாயவரத்தான் said...

அது தெரியாது வால். ஆனால் உங்களை மாதிரியான ஆட்கள் தான் 54-வது ஐட்டத்தை கண்டுபிடித்தவர்கள் என்பது உண்மை.

deepak said...

DONDU RAGAVAN , YOU joined in JAYA TV?

deepak said...

பார்வையாளன் : podhum sir please.. indha alavuku avar ezhudi yuira vangaradhey podhum.. paavam avarai vittudunga..!

venkatraman vaidhyanathan said...

vaalpaiyan - what the hell is wrong with you ? why you always against god, brahmins.. ! please check with a good doctor (not rudhran pls) ... ! else you may go like "kaadhal" movie murugan very soon..

dont think that brahmins are bad.. change your views! brahmins are all educated and always good hearted..

Anonymous said...

Check out the show on Indian Small Screen it would explain how a Brahmin is suppose to lead his life.. I watched every show on the and Cho does a decent job on explaining the meaning.. but I feel the show could have a better director to direct the show.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது