4/14/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 66 & 67)

எபிசோட் - 66 (12.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நாதன் வீட்டில் அவரும் வசுமதியும் ஒருவருக்கொருவர் தகவல்களை இற்றைப்படுத்துகின்றனர். நீலகண்டனும் பர்வதமும் ரமேஷ் விஷயத்தில் நாதன் செய்தது சரி என்பதை உணர்ந்து கொண்டு அவர்களுடன் இயல்பாக பழகுகின்றனர். ஆனால் ரமேஷின் தாய் தந்தையர் அவர் மேல் கசப்புடன் இருக்கின்றனர். சாம்பு சாஸ்திரிகளின் பெண்ணின் திருமணம் நிச்சயமானது பற்றியும் பேசுகின்றனர். சஷ்டியப்தபூர்த்திக்கு அவர் வரவில்லை என வசுமதி குறை கூற நாதன் அவளை சமாதானப்படுத்துகிறார்.

வேம்பு சாஸ்திரிகளின் வீட்டு சொந்தக்காரர் செய்யும் கெடுபிடியை அறிந்த நாதன் அவருக்கு நன்றாக வேண்டும் என்ற ரேஞ்சுக்கு பேசுகிறார். அசோக் அவருக்கு உதவி செய்ய முயன்றதை குறித்து அவர் வெகுண்டெழுகிறார். (இந்த விஷயத்தில் அசோக்கைவிட வேம்பு சாஸ்திரிக்கே அவனது தாய் தந்தையின் மனநிலை நன்கு புரிந்திருக்கிறது எனக் கூற வேண்டும்). ரமேஷின் வேலையை பிச்சுமணிக்கே தந்து விடலாம் என நாதன் முடிவு செய்ததை வசுமதி வரவேற்கிறாள்.

பிச்சுமணியின் அக்கா புருஷன் அந்த எல்.ஐ.சி. ஏஜெண்டும் அவன் மனைவியும் பிச்சுமணிக்கு நாதன் வேலை போட்டுக் கொடுத்தது பற்றி மகிழ்கின்றனர். எல்.ஐ.சி. ஏஜண்டின் தங்கை மனம் மாறி பட்டாபியையே கல்யாணம் செய்து கொள்வதாக தன் அண்ணாவுக்கு கடிதம் எழுத அவனும் கீழே கேட்டரரிடம் அது பற்றி பேச முயல்கிறான். அவனது மனைவி சாம்பு சாஸ்திரியின் மகளோடு ஏற்கனவேயே நிச்சயம் ஆனதை கூறி, இப்போது அங்கு போய் குழப்பம் விளைவிப்பது மகா பாவம் எனக்கூறியும் அவன் கேட்கவில்லை. கேட்டரரிடம் போய் பேச, அவர் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனல் அவரது மனைவிக்கு சற்றே சபலம், தன் பிள்ளைக்கு அதிக சீர் கிடைக்குமென. சாம்புவிடம் போய் வேண்டுமென்றே ஆர்த்திக்கு ஒரு வைர நெக்லேஸ் போடச் சொல்லலாமென என கணவனை விட்டு சொல்ல உத்தேசிக்கிறாள்.

வேம்பு சாஸ்திரியை பார்க்க அசோக் சொல்லி அட்வொகேட் அனந்தராமன் வருகிறார். அவர் வீட்டை அவ்வலவு அவசரமாக காலி செய்ய வேண்டியதில்லை என அவருக்கு அட்வைஸ் செய்கிறார். தனது வீட்டுக்கு ஒவ்வொரு அமாவாசைக்கும் வந்து தர்ப்பணம் பன்ணித் தர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறார்.

பாகவதர் வீட்டில் ராமசுப்பு தன் அம்மாவிடமிருந்து சமையல் கற்றுக் கொள்கிறான். அவன் இஞ்சினியராகாமல் இது என்ன பெரிய நளமகா சக்கரவர்த்தியாக முயற்சிக்கிறான என பாகவதர் கேட்கிறார்.

சமையல்னா நளன் என ஏன் எல்லோரும் பேசுகிறார்கள் என சோவின் நண்பர் அவரைக் கேட்க, அவரும் நளமகாராஜாவின் கதையைக் கூறுகிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 67 (13.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
பாகவதர் வீட்டில் ராமசுப்பு சமையல் கற்றுக் கொள்வது பற்றி சர்ச்சை தொடர்கிறது. பெண்கள் மட்டும் சமையல் செய்ய வேண்டுமா, ஆண்கள் செய்யக்கூடாது என ஏதேனும் சட்டம் இருக்கா என ராஜி ஆணித்தரமாகக் கேட்கிறாள். சோவின் நண்பரும் அதை கேட்க, அவரும் சட்டம் இருக்கிறதா என ஓப்பனாக கேட்டால், இருக்கிறது எனக்கூறி சுக்ர நீதியை கோட் செய்கிறார். இதெல்லாம் ஒரு டிவிஷ ஆஃப் லேபர் என்றும், ஆனால் இக்காலகட்டத்தில் அதை பின்பற்றுகிறார்களா என்றால் அது வேறுவிஷயம் என்று கூறுகிறார்.

ராஜி தொடர்ந்து பேசுகிறாள். தன் கணவனுக்கு ஆத்திர அவசரத்திற்கு கூட சமையல் செய்யத் தெரியாது எனவும், தன் மகனுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் பிற்காலத்தில் வரப்போகும் தனது மருமகள் தன்னை வாழ்த்துவாள் எனவும் கூறுகிறாள். ராஜியின் மாமியார் அவளை இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க ஆதரிக்கிறாள்.

கேட்டரரின் மனைவி சாம்பு சாஸ்திரியின் மனைவியிடம் வந்து அவர்கள் ஆர்த்திக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு வைர நெக்லஸ் செய்து போட வேண்டும் எனக் கூறி விட்டு செல்கிறாள். செல்லம்மா திகைக்கிறாள்.

வேம்புவிடம் அவர் மனைவி வீட்டை காலி செய்ய வேண்டிய பிரச்சினையில் சாம்புவின் உதவியை கேட்குமாறு ஆலோசனை கூற அவரும் அவரை பார்க்க புறப்பட்டால் அவரே இவரை பார்க்க வருகிறார். வைர நெக்லஸ் டிமாண்டை பற்றிக் கூறிவிட்டு இது சம்பந்தமாக கிருபாவையும் பிரியாவையும் வரவழைத்து ஆலோசனை கேட்பதாக உத்தேசித்திருப்பதை கூறுகிறார். சாம்புவுக்கே பிரச்சினை என இருக்க, தனது பிரச்சினை பற்றி கூற மனமில்லை வேம்புவுக்கு.

வேம்பு வீட்டிலிருந்த சாமான்களை வீட்டுக்காரரின் ஆட்கள் வீட்டுக்கு வெளியே எடுத்து வீசுகிறார்கள். அவர் இடிந்து போய் உட்கார்ந்து அழுகிறார். சிங்காரம் ஆறுதல் சொல்கிறான்.

சுகமோ துக்கமோ சமமாக பாவிக்க வேண்டும் என சாத்திரம் கூறுகிறது, ஆனால் அதை படித்தும் இந்த பிராமணர் ஏன் அழுகிறார் என சோவின் நண்பர் கேட்கிறார். சோவின் பதில் அடுத்த எபிசோடில்.

இப்போது டோண்டு ராகவன். சோவின் பதில் இன்னும் தெரியாத நிலையில் நான் முயற்சி செய்கிறேன். நான் படித்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஓர் அரசன், அவனுக்கு ஒரே ஒரு மகள். அவள் இறந்து விட்டாள். அவன் அழுகிறான். அவனது மந்திரி ஆறுதல் கூறுகிறான். “அரசே, ஆண்டாண்டு அழுதாலும் மாண்டார் மீளார் என்பதை அறிய மாட்டீர்களா” என. அதனால்தான் அழுகிறேன் என்கிறான் அரசன்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

ttpian said...

bramins wear tamil names but against tamil community:utter selfishness-other name for bramins

நவீன பாரதி said...

'மாண்டார் மீள்வார்' - என்பது சரியா?

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டாம்
'நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்' என்று இட்டுண் டிரும்.

http://www.tamilauthors.com/01/74.html

Unknown said...

சக வலைபதிவர்களுக்கும் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் எமது இணையதளம் சார்பாக இனிய புது வருட வாழ்த்துக்கள் MULLAIMUKAAM.BLOGSPOT.COM

ராகின் said...

தங்களிடம் ஒரு சந்தேகம். நீங்கள் பின்னூட்டமிடும் போது பிளாகர் ஐடி எண் வருவதை எப்படி வர வைப்பது

dondu(#11168674346665545885) said...

@நவீன பாரதி
நான் பாடலை அப்படியே கோட் செய்யாது, பொருளை மட்டும் எழுதினேன். ஆனால் மீளார் என்பதற்கு பதில் மீள்வார் எனத் தவறாக எழுதிவிட்டேன். தவற்றை சுட்டியதற்கு நன்றி.

இப்போது திருத்திவிட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது