11/19/2009

பலே ஆர்வி அவர்களே

இப்போதுதான் வினவின் வன்மம் நிறைந்த பதிவைப் பார்த்தேன். அது உங்களைக் குறிவைத்து எழுதப்பட்டுள்ளது. இதுவரை உங்கள் பின்னூட்டம் அதில் இல்லை. இனிமேலும் வராது என நம்புகிறேன். அப்படியே கீப் இட் அப்.

வினவின் பதிவுக்கு பின்னூட்டம் போடுவதை விட வேறு பல நல்ல வேலைகள் உள்ளன. வேண்டுமெனவே உங்களை ப்ரவோக் செய்து எல்லோரும் எழுதுகிறார்கள். அம்மாதிரியானவர்களை இக்னோர் செய்யவும் (முக்கியமாக வினவு போன்ற மனிதர்களை). அவர்களுடன் வாதம் செய்வது முட்டாள்களுடன் பேசுவது போன்றதே. யாராவது நடுவில் வந்து பார்த்தால் யார் முட்டாள் என்பது கூட தெரியாமல் போய்விடும்.

ஒரு வேளை நீங்கள் வேறு எங்காவது பிசியாக இருந்து இதை பார்த்திருக்காமலும் இருந்திருக்கலாம். கூப்பிட்ட மரியாதைக்கு போக வேண்டும் என நீங்கள் போனால் உங்களை திட்டுவதுதான் நடக்கும். கூடவே அபத்தமான வாதங்களும் வரும். போக மாட்டீர்கள் என நம்புகிறேன்.

கள்ளர்சாதிப் பெண் கொலை பற்றிய பதிவிலேயே பார்த்தீர்கள்தானே. எப்படியெல்லாம் வார்த்தைகளை திரித்து பேசினார் என்று. முதலில் கள்ளர் சாதியை கண்டித்தவர் யாரிடம் செருப்படி பட்டாரோ தெரியவில்லை, பார்ப்பனீயம் பற்றி பேச ஆரம்பித்து, அப்பதிவையே ஒட்டு மொத்தமாக திசை திருப்பினார்.

அப்பதிவில் நான் உங்களுக்குக் கூறியதைத்தான் இங்கேயும் கூறுவேன். Avoid Vinavu like a plague. மற்றப்படி அங்கு செல்வதும் செல்லாததும் உங்கள் விருப்பம். இப்பதிவை அச்சேற்றும்வரை நீங்கள் அங்கு செல்லவில்லை என்பதை கண்டேன். அதுவே சரியான முறை.

அதையே maintain பண்ணுவீர்கள் என நம்புகிறேன். உயர் சாதீயம் என்னும் வார்த்தை இருக்க எல்லாவற்றையும் பார்ப்பனீயம் என ஜல்லியடிக்கும் வினவு, அவரோட நண்பர்கள், எதிரிகள் எல்லோரும் அடிச்சுண்டு சாகட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

வால்பையன் said...

உரையாடல்களை அறியும் பொருட்டு!

வழிப்போக்கன் said...

எங்கள் தாத்தா சொல்லிக்கொடுத்த நீதி நினைவுக்கு வருகிறது. தீயோரைக் காண்பதும் தீது; தீயோர் சொல் கேட்பதும் தீது”. இது பதிவுகளுக்கும் பொருந்தும் என்று படுகிறது. மெத்தப் படித்த ஆர்விக்கும் இது நன்கு தெரிந்திருக்கும்.
கிருஷ்ணமூர்த்தி

hayyram said...

////யாரிடம் செருப்படி பட்டாரோ தெரியவில்லை///

உண்மை உண்மை பிராமணர்கள் அப்படி அடிக்காமல் ஏன் தடுக்க கூட இல்லாமல் சூரியனைப் பார்த்து நாய் குரைக்கிறது என்று வேலையை பார்த்துக் கொண்டு போவதால் இவர்கள் பிராமணர்களிடம் மட்டும் வீரம் காட்டுகிறார்கள் என்பதே உண்மை.

Anonymous said...

ஆர்.வி என்பவர் அங்கு இதுவரை பதில் ஏதும் சொல்லவில்லை.
ஆனால் வினவு மற்றும் அவனது தொண்டரடிப்பொடியினர் சேர்ந்து 100 பின்னூட்டம் போட்டுவிட்டனர்.

வினவு தளம் ஒரு கம்யூனிஸ மன நோயாளிக் காப்பகம்.

Anonymous said...

இது பின்னூட்டம் அல்ல.

இந்து ஒற்றுமையைக்குலைக்க உம்மை விட்டால் வேறு ஆள் இல்லை.

முடிந்தால் இந்துக்களுக்குள் சம நிலையை உண்டாக்க முயலுங்கள் இல்லாவிட்டால் சும்மா இருங்கள். ஆபிரகாமிய மதக்காரர்கள் செய்யவேண்டிய வேலையை பார்ப்பனர்களை டிபெண்ட் பண்ணுவதாக செய்து கொண்டிருக்கிறீர்கள்.

RV said...

டோண்டு சார்,

இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். அதிலிருந்து வினவின் பதிவைப் பற்றி தெரிந்துகொண்டு அதையும் ஒரு அவசரப் பார்வை பார்த்தேன். நாலைந்து நாட்களுக்கு முன்தான் அந்த தளத்தில் என் நேரத்தை வீனடிக்க விரும்பவில்லை என்று அங்கே ஒரு மறுமொழியில் எழுதி இருந்தேன். நான் மாற்று கருத்து உள்ளவர்களிடம் பேசுவதில் பெரு நம்பிக்கை உள்ளவன்; ஓரளவு பொறுமை உண்டு, ஆனால் என் பொறுமையும் கை மீறிப் போய்விட்டது. அதற்குள் இப்படி ஒரு பதிவு போட்டிருக்கிறார்கள், இதற்கு பதில் எழுதலாமா வேண்டாமா என்று இரண்டு மனதாக இருக்கிறது. யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இதற்கு முன்னாலேயே நான் வினவு தளத்தை வாரம், பத்து நாளுக்கு ஒரு முறைதான் பார்த்துக் கொண்டிருந்தேன் - ஏதாவது விவாதங்களில் "மாட்டிக் கொண்டால் ஒழிய". நீங்கள் எழுதவில்லை என்றால் இந்தப் பதிவை எப்போது பார்த்திருப்பேன் என்று சொல்வதற்கில்லை. இதை பற்றி எழுதியதற்கும், உங்கள் கருத்துக்கும் நன்றி!

வஜ்ரா said...

ஹலோ RV

பதிலை அங்கே போட்டு விடாதீர்கள்.
தயவு செய்து உங்கள் வலைப்பதிவிலேயே போடுங்கள்.

மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடி பெறும்

Anonymous said...

17.யாரை திருத்த(வே) முடியாது?
18.தாராளமாக செலவு செய்வதால் ஒருவனைச்சுற்றும் நண்பர்கள் ?
19.நம்பிக்கை யானவர்கள் கூட சில நேரங்களில் காலை வாருகின்றனரே?
20.உங்கள் ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?
21.தற்சமயம் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்கள்., சமீபத்தில் டெல்லியில் இருக்கும் போது எப்படி?
22.பிற அயல்நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு வந்து, வேலை செய்பவர்கள் மன நிலை?
23.யோகாசனப் பயிற்சி செய்தால், தொப்பை குறையுமென்ற கருத்து?
24.நிலவும் சமூக ஒழுக்கக் கேட்டுக்கு முக்கிய காரணம் ?
25. தமிழ் தெரிந்தும், தமிழர்களிடையே ஆங்கிலம் பேசும் மேதாவிகள்?
26.அக்கு பஞ்சர் சிகிச்சை முறை பிரபலமாய் வருவது போலுள்ளதே?பயன் எப்படி?
27.காதலே கதி என பார்க்கை சுற்றிக் கொண்டிருக்கும் வாலிபர்கள்?
28.நம் நாட்டிலும் பெண்களும் பரவலாய் மது குடிக்கின்றனர் என வரும் செய்தி?
29.சேமிப்பே அர்த்தமற்றது என்று ஆகிவிடும் போல் தோன்றுகிறதே?
30.மது மயக்கம், மாது மயக்கம் - எது கொடியது?
31.விலைவாசியை கட்டுப்படுத்த முடியுமா?செய்வார்களா?
32.தமிழ் எழுத்தாளர்களில் இலக்கியத் தரமாக எழுதுவதில் யார் பிரபலமாய் உள்ளார்?

Suresh Ram said...

ஜெனோடைப் என்று மருத்துவர் ருத்ரன் சொன்னது அறிவியல் பூர்வமாகத் தப்பு என்பதை வினவு ஒத்துக் கொள்கிறதா இல்லையா
=====================
இது தான் விவாத பிரச்னை
***********************************
மார்க்சின் விவாத முதல் விதி

தனக்கு தெரிந்த எல்லோராலும் ஒப்புகொள்ளப்பட்ட பதிலுக்கு தானே கேள்வி கேட்டு எல்லா விவாதத்தையும் மற்ற வேண்டும் . இப்போது கேள்வி என்னவென்றால் ......
// பார்ப்பனர்களின் சாதிய உயர்வு கண்ணோட்டம் பிறப்பிலா, வளர்ப்பிலா என்பதை விட பார்ப்பனிய சாதி அமைப்பு ஒழிக்கப்பட வேண்டியதா, நியாயப்படுத்த வேண்டியதா என்ற கேள்வியை இக்கட்டுரை முன்வைத்து
வாதிடுகிறது//
//ஜெனோடைப் என்ற வார்த்தைக்கு மருத்துவ அகராதியில் பொருள் தேடுவது இருக்கட்டும். சமூகத்தைப் பார்ப்போம். //

மார்க்சின் விவாத இரண்டாம் விதி

தன்னால் விவாதம் செய்ய முடியாத இடங்களில் இது தேவை இல்லை என்று மூடுவது

/வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில், நிரூபிப்பதில் பயனில்லை./
/நீ பெரியவனா நான் பெரியவனா விவாதத்துக்கோ, வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதற்கோ இங்கு வேலை இல்லை/


மார்க்சின் விவாத மூன்றாம் விதி

தான் பார்க்கும் கோணாம் தான் சரி. ஏற்காதவன் அறிவிலி
//இந்தக் கோணத்திலிருந்து இப்பிரச்சினையைப் பார்த்தால் மட்டும்தான்//

மார்க்சின் விவாத நான்காம் விதி

மாற்றுகருத்து உள்ளவனை கிழ்தரமாக திட்டு

/அறிவுசார் சுய இன்ப நடவடிக்கை/

கிருஷ்ண மூர்த்தி S said...

சுரேஷ் ராம்,

கார்ல் மார்க்ஸ் பற்றி ரொம்பத் தான் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் போல!
இதுமாதிரித் திரித்துப் போட உங்கள் மாதிரி ஆசாமிகளிடம் வினவு குழுவினர் கற்றுக் கொண்டார்களா, அல்லது அங்கே போய் நீங்கள் கற்றுக் கொண்டு வந்தீர்களா?

உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமே தெரியவில்லையே, அதனால் தான் கேட்க வேண்டியிருக்கிறது.

ரமணா said...

செல்தொலைபெசி சேவையில் “நமப்ர் போர்டபிலிட்டி” வரும் 2010 முதல் வருவதாய் செய்திகள் வருகிறதே( ட்ராயின் அறிவிப்பு)
1.யார் யாருக்கு லாபம்?
2.யார் யாருக்கு நட்டம்?
3.எப்படி அமலாக்கபடுகிறது?
4.பில் குழப்பம் வராதா?
5. போட்டியில் பின்தங்கும் அரசுத்துறை என்னவாகும்?

Anonymous said...

ஏண்ணா என்னா ஆச்சு உங்களுக்கு , ஊரிலிருக்கிற கண்ட கருமத்தையும் கொண்டாந்து தலையில இட்டுண்டு !! என்னா பண்ரேல் இதெல்லாம் ஒரு பதிவா !!! குழந்தை புள்ளையாண்டான் மாதிரின்னா இருக்கு ?

Anonymous said...

சென்னையில் கவிஞர் வா.ம கலந்துகொண்ட பதிவர் சந்திப்புக்கு சென்றிர்களா. அது பற்றி பதிவு எங்கே.

சொல்லளகன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது