11/17/2010

எல்லாம் சரிதான் இனி நடக்க வேண்டியவை என்ன என்பதைப் பார்ப்போமே!

2-ஜி ஊழல் எல்லாம் நடந்து முடிந்துபோன கதை, அதை இனிமேல் மாற்றமுடியாது என்றா கூறப்போகிறார்கள்? தவறான தகவல் அளித்து பெறும் சலுகைகள் விஷயம் தெரிந்த பின்னால் சர்வசாதாரணமாக ரத்து ஆகின்றனவே.

இங்கு மட்டும் ஏன் இப்படி? இப்போது ராசா அளித்த லைசன்ஸ்கள் செல்லாது என அறிவித்தால் என்ன ஆகும்? யாருக்கு என்ன காம்ப்ளிகேஷன் வரும்? லைசன்ஸ் எடுத்த பினாமி கம்பெனிகள் பாதிக்கப்படும் என நினைக்கிறேன், அவ்வளவுதான்.

இதையெல்லாம் பொருளாதாரம், சட்டம் ஆகிய விஷயங்களில் அவ்வளவாக பரிச்சயமில்லாத டோண்டு ராகவனே நினைக்கும்போது நினைக்க வேண்டியவர்கள் நினைக்காமலா இருந்திருப்பார்கள், என என்னையே நான் கேட்டுக் கொண்டு கூகளிட்டால் கிடைத்தது இந்தச் சுட்டி; ட்ராய் அமைப்பு 2-ஜி லைசன்ஸை கேன்சல் செய்வது பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, வயிற்றில் பாலை வார்த்தாற்போல உள்ளது.

பயனியர் டைம்ஸின் போர் வீணாகவில்லை. சண்டையை கோர்ட்டுக்கு எடுத்துச் சென்ற சுப்பிரமணியன் சுவாமி பாராட்டுக்கு உரியவர். 16 மாதங்களாக கேள்விகளுக்கு பதிலேதும் சொல்லாமல் கல்லுளிமங்கத்தனமாய் செயல்பட்ட பிரதம மந்திரி கண்டனத்துக்குரியவர். அது சரி எல்லோருமே நரேந்திர மோடியைப் போல ஊழலன்றி இருக்க முடியுமா? குஜராத்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

இந்த லைசன்ஸை நம்பி ராசாவின் பினாமி கம்பெனி ஷேர்களை வாங்கிய பணமுதலைகள் ராசாவை “கவனித்துக்” கொள்வார்க்ள் என மனப்பூர்வமாக நம்புகிறேன். குருவி படத்தில் விஜய் ஏமாற்றுப் பேர்வழி வீட்டு கதவை பொது மக்களுக்குத் திறந்து விட்டு “சரோஜா சாமான் நிக்காலோ” என்று கூறி ஏமாற்றுப் பேர்வழிக்கு தர்ம அடி வாங்கிக் கொடுக்கும் காட்சி ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

யாராவது அந்த சீனுக்கு வீடியோ சுட்டி இருந்தால் கொடுங்கப்பூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

Subramanian said...

I don't know why when so much has happened he was allowed to be scot free all this period.We as a nation must teach our children ethics if this should not occur in the future. Here is the link to the CAG report

http://www.cag.gov.in/html/reports/civil/2010-11_19PA/contents.htm

ரவிஷா said...

நீங்க நெனக்கிறமாதிரி தர்ம அடியெல்லாம் கொடுக்கமாட்டார்கள்! அவர்கள் இண்டர்நேஷனல் மாஃபியாக்கள்! நெற்றிப்பொட்டில்தான் “சூடு” வைப்பார்கள்! ஈவு இரக்கமே இருக்காது! அதுவும் உள்நாட்டில் இருக்காது! வெளிநாட்டுக்குப் போனால்தான்! அதனால் சம்பந்தப்பட்டவர்கள் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்!

Krishnakumar said...

Why they did not finish off the pioneer reporter? when he started to dig into all these? Even if they had finished him off there would not have been a big outcry since this did not get any momentum at that time.

This shows Raja is not a mafia nor or the rich guys. This shows that things have not gone really really bad in india. This shows India is a great country and it has a bright future.

Krishnakumar said...

In reading all the replies of Shri.Raja to Honurable PM Manmohan singhji, Raja always refers FCFS ie First come first serve as First Cum First Serve. Who cummed on whom? Or is he trying to make Manmohan rememeber something that cum-med before?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது