8/20/2010

எல்லாமே மாயை

நேற்று இரவு டிவியில் ரஜனி நடித்த “அதிசயப் பிறவி” படம் போட்டார்கள். தவறுதலாக எமலோகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஜனி தூள் கிளப்புவார். அவருக்கு துணையாக உபகுப்தன் என்னும் பெயரில் வரும் சோ அவர்களும் பட்டை கிளப்புவார். ஆனால் இப்பதிவு அப்படம் பற்றி இல்லை.

அதில் நாகேஷின் வேலையாளாக வரும் ஓமக்குச்சி நரசிம்மன் அடிக்கடி உணர்ச்சியின்றி முகத்தை வைத்துக் கொண்டு எல்லாமே மாயை என்பார். அது என்ன மாயை? பார்ப்பவை எல்லாமே உண்மை எனக் கொள்ளக்கூடாது. உதாரணத்துக்கு இருட்டில் வரும் வழியில் ஒரு தாம்புக் கயிறு கிடக்க, அதை பாம்பு என மருளுபவர்கள் உண்டல்லவா. அது கயிறே எனத் தெரியும் வரை இந்த பய உணர்வு என்னவோ உண்மையானதே. ஆனால் அதன் காரணம் உண்மையானதல்ல.இதுவும் மாயையே.

தில்லியிலிருந்து சென்னைக்கு நிரந்தரமாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் வரும் வரை நான் எனது வீட்டை விட்டு விலகி இருந்த அந்த இருபது பிளஸ் ஆண்டுகளில் பலமுறை என்னைப் பின்தொடர்ந்த கனவு பற்றி நான் எழுதிய சில வரிகள்:

“இப்போது நங்கநல்லூரில் நான் வசிக்கும் வீட்டிற்கு 1969-ல் குடிவந்தோம். சொந்த வீடுதான். 1979-ல் குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டை வாடகைக்கு விட்டு மாம்பலத்தில் குடி புகுந்தோம். பிறகு 1981-ல் ஐ.டி.பி.எல்லில் வேலை கிடைத்து தில்லி சென்றோம். தில்லியில் 20 வருடங்கள் வாசம். அந்தக் காலக் கட்டத்தில் அடிக்கடி எனக்கு ஒரு கனவு வரும்.

கனவில் நான் திரும்பவும் நங்கநல்லூர் வீட்டிற்கே குடி வருகிறேன். எல்லா அறைகளிலும் சுற்றுகிறேன். என் தந்தையுடன் பேசிய, விவாதித்தத் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. நீண்ட கனவுதான். திடீரென்று விழிப்பு வரும். தில்லியில்தான் இருக்கிறோம் என்பது புரிய சில நிமிடங்கள் ஆகும். அப்போது தீராத சோகம் என்னைக் கவ்வும். அடுத்த நாள் முழுக்க ஒரு வித மயக்கத்தில் கழியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், சில சமயம் கனவில் எனக்கு நானே கூறிக் கொள்வேன். "இது வரை கனவாக இருந்தது, நிஜத்திலேயே நடக்கிறது" என்று. அதுவும் கனவுதான் என்றுத் தெரிய, இரட்டிப்பு ஏமாற்றம்தான்”.

எப்படியோ நிஜமாகவே எனது வீட்டுக்கே திரும்பவும் குடி “வந்தப் புதிதில் சிறிது கலக்கம்தான், திடீரென்று விழித்துக் கொள்வேனோ தூக்கத்திலிருந்து என்று. அதிலிருந்து மீள மேலும் சில காலம் பிடித்தது. அக்கனவும் வருவதில்லை இப்போது”.


ஆக மேலே சொன்ன கனவும் மாயைதான் என்றாலும் அதுவும் வரும்போது உண்மையே. அதே போலத்தான் பறக்கும் கனவுகளும்.

இதையே வேதாந்திகள் விரிவுபடுத்தி வாழ்வே மாயம் என்று கூறுகின்றனர்.

ஜெயமோகனின் இப்பதிவைப் பார்த்ததும் எனக்குள் பல எண்ணங்கள் எழுந்தன. அதிலிருந்து சில வரிகள்:
“விஷ்ணுபுரத்தில் உள்ள கனவுகளில் இருந்து கனவுக்கு என்ற விஷயம் எளிமையாக காடு நாவலிலும் வருகிறது. அய்யர் சிவஞானபோதத்தில் இருந்து ஒரு பாடல் சொல்கிறார்

நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்திற்
தாக்காது நின்றுளத்தில் கண்டு இறைவன் ஆக்கத்தே
கண்ட நனவுணர்வில் கண்ட கனவுணர
கண்டவனில் இன்றாம் கட்டு

மொத்த காடு நாவலுக்கும் சாரம் அது. ‘நனவுணர்வில் கண்ட கனவுணர’ க்கூடிய ஒரு சில மாதங்கள், அதுதான் காட்டின் பேசுபொருள்.

சமீபத்தில் என்னைபபர்க்கவந்த என் வாசகரான குமார்பாபு, முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் உளமருத்துவமனையில் மருத்துவப்பேராசிரியராக இருந்தவர், இந்த வரியைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.காடு நாவலை பலமுறை வாசித்த அவருக்கு அதன் தத்துவச் சாரமாகவே ’நனவுணர்வில் கண்ட கனவுணர’ என்றவரி தென்பட்டதாகச் சொன்னார்.

நனவுக்குள் கனவும் கனவுக்குள் நனவும் என்பது இந்திய சிந்தனை மரபில் வேதாந்தம், மகாயான பௌத்தம், சைவசித்தாந்தம் மூன்றுக்கும் பொதுவான அகத்தரிசனம். பலபல கோணங்களில் இந்திய நூல்கள் அதை விவாதித்திருக்கின்றன. இந்த வாழ்வெனும் கனவுக்குள் இருந்து நாம் இன்னொரு கனவுக்குள் விழித்தெழுகிறோம், கனவுகளுக்குள் கனவாகச் சென்று உள்ளே இருக்கும் இன்மை வடிவம் கொண்ட பிரம்மத்தை அறிகிறோம் என்பதே அத்வைதம்”.


ஜெயமோகனது அப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ:
“தான் பட்டாம்பூச்சியாக இருப்பது போன்ற கனவை அடிக்கடி காணும் அரசன் ஒருவனுக்கு ஒரே குழப்பமாம், “தான் பட்டாம்பூச்சியாக இருப்பதாக கனவு காணும் அரசனா அல்லது அரசனாக இருப்பது போன்ற பட்டாம்பூச்சியா என்று.

அவன் குழப்பம் மேலே எவ்வாறு விரிவடைந்தது, அது தீர்ந்ததா இல்லையா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

கனவு முடியும் வரைக்கும் அது யதார்த்தமே என்றும் ஓரிடத்தில் படித்துள்ளேன். திருமாலுக்காக நீர் சேந்தி வரச்சென்ற நாரதர் மாயையில் சிக்கி, பெண்ணாக மாறி குழந்தைகள் பெற்று என்றெல்லாம் போகும் கதையும் படித்துள்ளேன்”.


ஆனால் இம்மாதிரி எண்ணங்களில் ஈடுபட்டால் என்னடா இந்த வாழ்க்கை என விரக்தி தோன்றலாம். அப்படி எல்லோருமே செய்தால் காரியத்துக்காகுமா? ஆகவே அம்மாதிரி எண்ணங்கள் மற்றும் கவித்துவமான கருத்துகள் வருபவர்களுக்கு ஹாரிஸ்தான் சரி. அவன் என்ன செய்தான் என்பதை “படகில் மூவர், அதில் நாயை மறக்கலாமா” என்னும் உலகபிரசித்தி பெற்ற நாவலில் பார்க்கலாம்:

“You can never rouse Harris. There is no poetry about Harris - no wild yearning for the unattainable. Harris never "weeps, he knows not why." If Harris's eyes fill with tears, you can bet it is because Harris has been eating raw onions, or has put too much Worcester over his chop.

If you were to stand at night by the sea-shore with Harris, and say:
"Hark! do you not hear? Is it but the mermaids singing deep below the waving waters; or sad spirits, chanting dirges for white corpses, held by seaweed?" Harris would take you by the arm, and say:
"I know what it is, old man; you've got a chill. Now, you come along with me. I know a place round the corner here, where you can get a drop of the finest Scotch whisky you ever tasted - put you right in less than no time."

Harris always does know a place round the corner where you can get something brilliant in the drinking line. I believe that if you met Harris up in Paradise (supposing such a thing likely), he would immediately greet you with:
"So glad you've come, old fellow; I've found a nice place round the corner here, where you can get some really first-class nectar."

என்னுடைய பம்பாய் நண்பன் ரங்கராஜுவும் ஹாரிஸ் போலத்தான். அவனுடன் சமீபத்தில் 1973-ல் பேசிக் கொண்டிருந்தேன். ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களைக் கொலை செய்வித்தான் என்பதை அரை மணிநேரம் உணர்ச்சி பூர்வமாக சித்தரித்தேன். சிறிது நேரம் பிரமிப்புடன் நின்றான். “நிஜமாகவே அறுபது லட்சம் பேரா” எனக் கேட்டான். ஆமாம் என்றேன். இன்னும் சில நிமிடங்கள் கழித்து தீவிரமாக “பக்கத்தில் இருக்கும் பஞ்சாபி டாபாவில் லஸ்ஸி நல்லாருக்கும், வா போவோம்” என்றான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

Prakar said...

Even Sri ramar was worried when he started enquiring about the purpose of the body and the i thought during his teens (i think).

Just found a link: See : Yoga Vasistha
http://valmikiresearch.com/Yoga%20Vasistha%20Is%20Advaita.htm

Sri ramana's answer was very close to this explanation of "I" thought and the dreams.

In my opinion, Advaita has a very good answer on dreams and the perceiever of dreams

அருள் said...

INCEPTION திரைப்படம் பாருங்க.

Anonymous said...

I don't know how many of you experienced this. I can take my problems (like maths or technical etc) to my dream, and can get it solved.

Sridhar

Anonymous said...

Indecent Proposal படம் பாருங்க

என்றும் ஜாதி வெறியுடன்,
குருள்

jayakumar said...

dear sir dont get confused yourself...there are many scientific researches are going on...since from sigmundfreud...please refer with those studies...

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது