8/15/2010

தாலிபானியத்துக்கு ஜால்ரா போடும் மேற்கு வங்க கம்யூனிச அரசு

திண்ணை வார இதழில் சின்னக் கருப்பன் எழுதிய கட்டுரையை எல்லோரும் படிப்பது நல்லது. அதிலிருந்து சில வரிகள்:

“மேற்குவங்காளத்தின் முதல் இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஆலியா முஸ்லீம் யுனிவர்சிட்டியில் வங்காள மொழி விரிவுரையாளராக வேலை பெற்ற சிரின் மிட்டியா (Sirin Middya) கடந்த மார்ச்சிலிருந்து நூலகத்தில்தான் வேலை செய்கிறார். காரணம் அவர் புர்கா போட மறுத்ததுதான்.

மதரஸா மாணவர் சங்கம் எல்லா பெண் விரிவுரையாளர்களும் புர்கா போட்டுத்தான் கல்லூரிக்கு வந்து பாடம் நடத்தவேண்டும் என்று வற்புறுத்துகிறது. இதனால், மற்ற விரிவுரையாளர்கள் புர்கா போட்டாலும் நான் போடமாட்டேன் என்று இவர் மறுத்துவிட்டார். அதனால் நூலகத்தில் வேலை. பல்கலைக்கழக துணைவேந்தர் இவருக்காக வாதாடவில்லை. மேற்கு வங்காள கம்யூனிஸ்டு அரசும் கண்டுகொள்ளவில்லை. இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. வெளியிட்டு எட்டு நாட்கள் கழித்து பல்கலைக்கழக நிர்வாகம் இவரை புர்கா இல்லாமலேயே விரிவுரையாளர் வேலையை செய்யலாம் என்று கேட்டுகொண்டிருக்கிறது. பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, இவர் “டீஸண்டாக” உடை உடுத்திக்கொண்டு விரிவுரையாற்றலாம் என்று அனுமதித்திருக்கிறது. மேற்குவங்காள மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹசானுர் ஜமான் ஒரு பிரச்னையும் இல்லாதபோது பத்திரிக்கைகளுக்கு சென்று பிரச்னையை கிளப்பியுள்ளார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். தான் மீண்டும் வேலைக்கு போகும்போது எப்படிப்பட்ட வரவேற்பை பெறுவோம் என்பதை பற்றி பயப்படுவதாக சிரின் கூறியிருக்கிறார்”.


சம்பந்தப்பட்ட இசுலாமிய ஆண்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? புர்க்கா போட்டுக் கொள்வதோ போட மறுப்பதோ சம்பந்தப்பட்ட பெண்ணின் தனிவிருப்பத்தில் வரும்.

அது இருக்கட்டும், இம்மாதிரி தனிமனித உரிமையை பாதிக்கும் செயல்பாடுகளுக்கு அரசு எவ்வாறு ஒத்துப் போகலாம்? அவர்கள் ஆட்சி செய்கிறார்களா அல்லது ஜால்ரா அடிக்கிறார்களா? நாம் இருப்பது இந்தியாவா அல்லது பாகிஸ்தான்/ஆஃப்கானிஸ்தான்/சவுதி அரேபியா போன்ற மனித உரிமையை மதிக்காத நாடுகளா? இவன்களுக்கு இந்தியாவில் உள்ள சுதந்திர நிலை பிடிக்கவில்லையென்றால், மேலே குறிப்பிட்ட நாடுகளுக்கு போய் தொலைவதுதானே?

“ஒரு இந்துத்துவ சார்புடைய குழு , பாரில் குடிக்கும் பெண்களை அவமானப்படுத்துவது எவ்வளவு கண்டிக்கத்தக்கதோ அதே போல கண்டிக்கத்தக்கதுதான் புர்க்கா போடவேண்டும் என்று பெண்களை வற்புறுத்துவதும். பாரில் குடித்த பெண்களை அவமானப்படுத்திய இந்துத்துவ அமைப்பு மீது கரித்து கொட்டியதில் ஒரு துளி அளவு, இந்த பெண்ணின் உரிமைக்கும் பேசியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! இது காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் கடுமையான பரிணாமத்தை அடைந்ததை நமது அறிவுஜீவிகள் அறிந்தே இருப்பார்கள். புர்கா போடாததால் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டும், கால்களில் ஆசிட் ஊற்றப்பட்டும் பெண்கள் அச்சுறுத்தப்பட்ட பின்னால் முஸ்லீம் பெண்கள் புர்கா போடுவதை வழக்கமாகவே ஆக்கிகொண்டுவிட்டார்கள். ஆண்கள் புர்கா போட வேண்டும் என்று அச்சுருத்தி பத்து பேர் மீது ஆசிட் ஊற்றினால் நான் கூட புர்கா போடுவேன். ஆண்கள் விரும்பித்தான் புர்கா போடுகிறார்கள்; நான் விரும்பித்தான் புர்கா போடுகிறேன் என்று சத்திய வாக்குமூலம் கொடுக்கவும் தயார். இதுதான் இந்திய அறிவுஜீவிகள் விரும்பும் சுதந்திரமா”?

“இந்த கேள்விகளை நாம் கேட்காமல் இருந்தால் இவர்கள் தானாக எடுத்துகொண்ட அதிகாரத்தை நாமும் அங்கீகரித்தால் போல் ஆகிவிடும். அது மட்டுமல்ல, நான் முன்னரே பலமுறை எழுதியிருப்பதுபோல, இந்தியாவின் ஒழுக்கவிதிகளை நிர்ணயிப்பவர்கள் இவர்களைப் போன்றவர்களே. புடவை உடுத்துவது காட்டிமிராண்டித்தனம், பிகினி போடுவது ஒருவகை நாகரிகம், புர்கா போடுவது மற்றொரு வகை நாகரிகம் என்று நாகரிகத்துக்காக இந்தியர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆனால் இருவரும் புடவை கட்டுவது காட்டிமிராண்டித்தனம் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

சிறுபான்மை மத உரிமைகள் என்ற பெயரில் இந்தியாவில் அரசாங்கம் வளர்ப்பது தாலிபானியம்தான். அதனை எவ்வளவு வார்த்தைகளிலும் “சொல்லாடல்களிலும்” மறைத்தாலும் அதுதான் வெளிப்படையாக சாதாரண பாமரனான எனக்கு தெரிகிறது”.


இப்பதிவு புர்க்கா போடுவது சரியா தவறா என்ற கேள்விக்குள் போகவில்லை. அதுதான் டீச்ண்டான உடை என்பதை மொண்டித்தனமாகக் கூறுவதைத்தான் எதிர்க்கிறது. அதை சம்பந்தப்பட்ட பெண்ணே நிர்ணயிக்கட்டும் என்றுதான் கூறுகிறது. அப்படி பெண்களுக்கு புர்க்காவை கட்டாயமாக்க நினைக்கும் இசுலாமிய ஆண்கள் அந்த உடையை அரை மணிநேரமாவது அணிந்து பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இசுலாமிய ஆண்கள் என்று மட்டுமில்லை, பொதுவாகவே பெண்கள் எந்த உடையை அணிய வேண்டும் என பேசும் எல்லா ஆண்களையுமே இந்தப் பதிவு சாடுகிறது. அதன் கீழ் “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை”ன்னு விவசாயி படத்தில் பாடும் எம்.ஜி.ஆர். ஏற்று நடித்த அப்பாத்திரமுமே இந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்காகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

121 comments:

Anonymous said...

I support your views on cultural/religious police.

I really pity these Muslim women as I pity for those women who were pulled up at bars by Pramod Muthalik's goondas.

At least for those women (if they are Hindus) they have an option to go to media and get their plight addressed - if not atleast to share what they feel. In this case, that is not an option for Muslim women.

Also, for these Muslims, they do not have an option to change religion. If they convert, that will be punished by death sentence by religious fanatics (sanctioned by religion itself). Same is the case for Islamic men as well.

What I cannot understand is - I do not know how they tolerate such crappy religious rules/law and inspite of that justify and gloat that their version of the religion is greatest. Well, that is up to people who follow that :-) God has given all of us something in between 2 ears - he has mandated us to use it - for them he has mandated to read the book he wrote and act :-)

For me - there is nothing that is greater than my own life - irrespective of what my religion says in whatever F****** book.

What I wear is up to me - as long as that comes under the accepted contemporary conventions/rules - like shorts/T Shirt or shirts and trousers. Others (Religious/cultural police) do not have a place in deciding on what others wear...

New ideas would come only from open societies; The society that allows and nurtures new ideas will thrive and lead others.

A faith - whether it is Hindu, Muslim, Jewish or Christianity - it is JUST a faith. It is not based on facts...I do not know why people have to fight for what they (after all) only believe...

hayyram said...

//சம்பந்தப்பட்ட இசுலாமிய ஆண்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? புர்க்கா போட்டுக் கொள்வதோ போட மறுப்பதோ சம்பந்தப்பட்ட பெண்ணின் தனிவிருப்பத்தில் வரும்.// முஸ்லீம்கள் அரபிகளின் வழியில் நடப்பதையே பெருமையாகக் கொள்கின்றன. அவர்கள் எங்கே வாழ்ந்தாலும் ஷரியத் சட்டத்தின் படி வாழவேண்டும் என்று தீர்மானிக்கின்றனர். என் அலுவலகத்தில் பக்கத்து ஸீட் முஸ்லீம் ஒரு நாள் ஓடிப்போன காதலர்கள் பற்றிய செய்தியை நாளிதழில் படித்து விட்டு இவர்களை கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறான். ஷரியத் சட்டத்தில் இது சொல்லிக்கிறது என்று அப்படித்தான் இந்தியா முழுவதும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வாதிடுகிறான். அந்த ஆசிரியை மூஞ்சியில் ஆசிட் வீசாமல் இந்த காட்டிமிராண்டிகள் இன்னும் விட்டு வைத்திருப்பதே பெரிய விஷயம். இவர்கள் கொடூரத்தை ஸ்டோனிங் அஃப் ஸொரையம் என்ற படத்தை பார்த்தால் இன்னும் உருக்குமாக உணரலாம்.

Renga said...

communism என்றாலே Taliban கள் தான்... communist கள் என்றாவது மாற்று கருத்துக்களை ஏற்று கொண்டுள்ளார்களா... ஒன்று அவர்கள் சொல்படி நடக்க வேண்டும் இல்லையேல் ஆயுதம் ஏந்துவார்கள்... அதுவும்.. இல்லை என்றால் வெட்டியாக ப்ளாக்இல் துப்பி வைப்பார்கள் / போராட்டம் என்று 4 பேரோடு தெரு முனையில் கூச்சல் போட்டுவிட்டு டாஸ்மாக்கில் குடித்துவிட்டு.. ம்ம்ம்ம் total time waste parties...

see this link... http://money.cnn.com/2010/07/30/news/international/china_japan_economy/index.htm... China has surpassed Japan and take over the 2nd place in the world order... This reveals that across the Globe Communism failed in all aspects... When China warehoused its communism (yeah.. long back) it's economic engine has produced results..

Lessons learnt. In India also.. communists shut their mouth & *** and change their useless policies. At least India can achieve something in 20 Years..

Renga

virutcham said...

இந்த பதிவில் எதிர் கருத்துக்கள் எதுவும் வைக்கப்படாததற்கு முக்கிய காரணம் பதிவில் ஒரு முழுமை இருக்கிறது.
திட்ட படை எடுப்பவர்கள் பாராட்ட ஏனோ வருவதில்லை.அது போலி secularisa வெளிப்பாடு

//“ஒரு இந்துத்துவ சார்புடைய குழு , பாரில் குடிக்கும் பெண்களை அவமானப்படுத்துவது எவ்வளவு கண்டிக்கத்தக்கதோ//
இந்துத்துவ அமைப்புகள் வன்முறையை விடுத்து counselling centres துவங்கி அவர்களுக்கு உதவலாம். எவ்வளவு மன அழுத்தம் இருந்தால் ஒரு பெண் அப்படிக் குடிப்பாள். இது போல் ஆண்களுக்கும் உதவலாம். ஆனால் அவர்கள் குடிப்பதை யாரும் வன்முறை கொண்டு எதிர்ப்பதில்லையே

Anonymous said...

பார்களில் குடித்த பெண்களை அடித்தது, காங்கிரஸிடம் பணம் வாங்கிக்கொண்டு பா.ஜ.கவுக்கு எதிராக தேர்தலில் நின்ற முத்தாலிக். அவனுக்கும் இந்துத்வாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

என்.டி.டீ.வி போன்ற கம்மூனிஸ்டு சகலை டீ.வி பிரச்சாரம் செய்து பரப்பிய பொய், முத்தாலிக் இந்துத்வாவாதி என்பது.

அருள் said...

டோண்டு ராகவன்

// //நாம் இருப்பது இந்தியாவா அல்லது பாகிஸ்தான்/ஆஃப்கானிஸ்தான்/சவுதி அரேபியா போன்ற மனித உரிமையை மதிக்காத நாடுகளா? இவன்களுக்கு இந்தியாவில் உள்ள சுதந்திர நிலை பிடிக்கவில்லையென்றால், மேலே குறிப்பிட்ட நாடுகளுக்கு போய் தொலைவதுதானே?// //

இந்தியா மனித உரிமைகளை மதிப்பதாக, ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்திய உங்களை பாராட்டத்தான் வேண்டும்.

'இந்தியாவில் உள்ள சுதந்திர நிலை' என்று எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. நரேந்திர மோடி பிடிக்காதவர்களை 'என்கவுன்ட்டரில்' போட்டுத்தள்ளுவதைச் சொல்கிறீர்கள் போலிருக்கிறது.

இசுலாமியர்களை பாகிஸ்தான்/ஆஃப்கானிஸ்தான்/சவுதி அரேபியாவுக்கு போகச்சொல்லும் நீங்கள் - அப்படியே உங்களது இந்து கலாச்சார தீவிரவாதிகளை எந்த நாடுகளுக்கு போகச்சொல்வீர்கள்? என்பதையும் விளக்கினால் நன்றாக இருக்கும்.

'புர்க்காவை' இன்னும் எத்தனை காலத்திற்கு பிரச்சினை ஆக்குவீகள்? தலையில் பெரிய முண்டாசு கட்டுவது ஆண்களுக்கு தொல்லை என்றெல்லாம் நீங்கள் சீக்கியர்களை 'துன்புருத்தாதது' ஏன்?

மதநம்பிக்கையை ஏற்பவர்கள் அதன் சில கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அந்தக்கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை என்றால் அதனை அந்த மத்தத்திற்குள் பேசி தீர்த்துக்கொள்வதே நல்லது. அதுவும் முடியாமல் போனால் மதத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டியதுதான்.

இதில் உங்களது பஞ்சாயத்திற்கு வேலை இருப்பதாகத் தெரியவில்லை.

sri said...

Hello Dondu Sir,
An eye opener post..

Thanks,
Sri.

வஜ்ரா said...

இந்த உடை அணியும் விசயத்தில் பல தனியார் கல்லூரிகள் இப்படித் தாலிபான்தனமாகத் தான் நடந்துகொள்கின்றன.

கோவையில் ஒரு பிரபலமான தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணியத் தடை உள்ளது. சுடிதார் அல்லது பாவாடைத் தாவணி மட்டுமே.

தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றிலும் இப்படித்தான், ஆண்கள் பெண்களிடம் பேசக்கூடாது பழகக்கூடாது, மற்றும் டீ சர்ட் போடக்கூடாது என்றெல்லாம் ஏராளமான கண்டிசன்கள். இதற்கெல்லாம் உட்பட்டுத் தான் நம் மாணவர்கள் படிப்பை முடிக்கிறார்கள்.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு யூனிஃபார்ம் போடச் சொல்வது பற்றி தங்கள் கருத்து என்ன?

யூனிஃபார்ம் என்பதை யார் கண்டுபிடித்தார்கள் ? எதற்காக வேகாத வெயிலில் லெதர் சூவும், டையும் போட்டுக்கொண்டு பொதி மூட்டை மாதிரி ஸ்கூல் பேகை சுமக்க வேண்டும் ?

என்னைப் பொருத்தவரை, 10 ம் வகுப்பு முடித்தவுடன் எனக்கு பொதிமூட்டையிலிருந்தும், கல்லூரி நாட்களில் யூனிஃபார்மிலிருந்தும் விடுதலை கிடைத்தது சத்தியமாக என் வாழ்வில் நடந்த சந்தோசமான விசயங்களில் அடங்கும்.

Anonymous said...

//Arul

அதுவும் முடியாமல் போனால் மதத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டியதுதான்.

இதில் உங்களது பஞ்சாயத்திற்கு வேலை இருப்பதாகத் தெரியவில்லை//

Arul, if you live Taliban area, irrespective of your religion you too must follow their codes. One can not come out of a religion. You get death sentence for that. So if you are not opposing this culture, you are bound to follow that.I wish we prefer freedom than religion.

Sridhar

வஜ்ரா said...

அருள்,

உங்களுக்கு இந்தியாவின் மனித உரிமை சுதந்திரம் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் விரும்பும் மனித உரிமையை உங்களுக்கு வழங்கும் நாட்டுக்கு நீங்கள் குடிபெயருமாரு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு ஏதேனும் உதவி வேணுமானால் செய்யத் தயார்.

Anonymous said...

//
மதநம்பிக்கையை ஏற்பவர்கள் அதன் சில கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அந்தக்கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை என்றால் அதனை அந்த மத்தத்திற்குள் பேசி தீர்த்துக்கொள்வதே நல்லது.
//

எப்படி ?

நீங்கள் வீதியில் போகும் பார்ப்பானை இழுத்துவைத்து பூனூல் அருப்புப் "போராட்டம்" செய்வது மாதிரி தீர்க்கணுமா ?

புருக்கா போடுபவள் said...

///இவர் “டீஸண்டாக” உடை உடுத்திக்கொண்டு விரிவுரையாற்றலாம் என்று அனுமதித்திருக்கிறது. ///---அடடா... 'வடை' போச்சே...!


//இவன்களுக்கு இந்தியாவில் உள்ள சுதந்திர நிலை பிடிக்கவில்லையென்றால், மேலே குறிப்பிட்ட நாடுகளுக்கு போய் தொலைவதுதானே?// ---அப்படீன்னா... இஸ்லாமியரை பிடிக்காமல் கொலை செய்யும் உங்க மாதிரி ஆட்களை எந்த நாட்டுக்கு பத்தி உடுறது? நேப்பாளமும் திருந்திருச்சே...!

///ஒரு இந்துத்துவ சார்புடைய குழு , பாரில் குடிக்கும் பெண்களை அவமானப்படுத்துவது எவ்வளவு கண்டிக்கத்தக்கதோ அதே போல கண்டிக்கத்தக்கதுதான் புர்க்கா போடவேண்டும் என்று பெண்களை வற்புறுத்துவதும்.///--- அஹா..! நாளை ஒருத்தர், "கக்கூசில் பீ திண்பது எவ்வளவு கண்டிக்கத்தக்கதோ அதே போல கண்டிக்கத்தக்கதுதான் ஓட்டலில் பிரியாணி உண்ணுவதும்" என்று எழுதக்கூடும்.

//நாகரிகத்துக்காக இந்தியர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆனால் இருவரும் புடவை கட்டுவது காட்டிமிராண்டித்தனம் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.//---இந்திய நாகரிகம்: அரசகுல பெண்கள் மார் கச்சை மட்டும் கட்டி இருப்பதுதான். மற்றவர்களுக்கு அதுவும் கிடையாது. 'ஒப்பன்'தான்.

[[[ One point of particular controversy is the history of the choli, or sari blouse, and the petticoat. Some researchers state that these were unknown before the British arrived in India, and that they were introduced to satisfy Victorian ideas of modesty. Previously, women only wore one draped cloth and casually exposed the upper body and breasts. Other historians point to much textual and artistic evidence for various forms of breastband and upper-body shawl.

In Kerala and Tamil Nadu, it is indeed documented that women from many communities wore only the sari and exposed the upper part of the body till the 20th century.[10] Poetic references from works like Silappadikaram indicate that during the sangam period in ancient Tamil Nadu, a single piece of clothing served as both lower garment and head covering, leaving the bosom and midriff completely uncovered.[6] In Kerala there are many references to women being bare-breasted,[10] including many pictures by Raja Ravi Varma. Even today, women in some rural areas do not wear cholis. ஆதாரம்:- விக்கிபீடியா:- http://en.wikipedia.org/wiki/Sari ]]]
என்ன..? எல்லாரும் இந்திய -தமிழ் நாகரிகத்தி பின்பற்ற தயாரா?

@அருள்:
{{{தலையில் பெரிய முண்டாசு கட்டுவது ஆண்களுக்கு தொல்லை என்றெல்லாம் நீங்கள் சீக்கியர்களை 'துன்புருத்தாதது' ஏன்?}}}---எனாங்க அருள் சின்னபுள்ளையா இருக்கீங்க...

அதை அவுத்துப்பார்த்தா உள்ளே கொங்கைகள் தெரியாதே... மசுருதான் இருக்கும்... டோண்டுக்கு அதெல்லாம் பிடிக்காது. பின்னே எது பிடிக்கும்?
///http://dondu.blogspot.com/2010/08/blog-post_11.html
சராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள்...
டிஸ்கி: இது +18 களுக்கு மட்டுமே.///

நீங்கள் எல்லாம் தலைகீழே நிண்ணு முஸ்லிம் பெண்களை ரசிக்கணும்னு நேநேச்சாலும் ... ம்ஹூம்... முடியாது...

Anonymous said...

பள்ளிகளில் குழந்தைகளுக்கு யூனிபார்ம் முறையை கொண்டு வந்தவனே ஆங்கிலேயன். அதை படுமுட்டாள் தனமாக தொடர்ந்தும் பின் பற்றி வருகிறோம். கனடா, அமெரிக்காவிலும் இன்னும் பல நாடுகளிலும் இந்த பள்ளி குழந்தைகளுக்கு யூனிபார்ம் முறை கிடையது. வசதி குறைந்த பிள்ளைகள் தான் யூனிபார்ம் முறையால் மிகவும் பாதிக்கபடுகிறார்கள். கொடுமையான புர்க்காவை ஒழிப்பதோடு யூனிபார்ம் முறைக்கும் முடிவுகட்ட வேண்டும்.

வஜ்ரா said...

//
நீங்கள் எல்லாம் தலைகீழே நிண்ணு முஸ்லிம் பெண்களை ரசிக்கணும்னு நேநேச்சாலும் ... ம்ஹூம்... முடியாது...
//

ஆனா நீங்க மட்டும் மற்ற மதப் பெண்களை ரசிப்பீர்கள், சான்சு கிடைத்தால் ருசிப்பீர்கள். முடிந்தால் மதம் மாற்றி தற்கொலைப்படையாக்குவீர்கள்.

வாழ்க லவ் ஜிஹாத்.

அருள் said...

புர்காவை பற்றி பேசும் போதெல்லாம், எதற்காக 'பாகிஸ்தான்/ஆஃப்கானிஸ்தான்/சவுதி அரேபியாவில்' புர்கா போடுவதப் பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்.

மலேசியா, இந்தோனேசியவில் எல்லாம் அதைவிட அதிகமானோர் போடுகிறார்களே. ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் கூடத்தான் போடுகிறார்கள். பிரான்சு அரசாங்கம் புர்காவை தடைசெய்வதை எதிர்த்து இசுலாமிய பெண்கள் போராடுகிறார்கள். அங்கெல்லாம் 'மனித உரிமை மீறல்' என்று யாரும் பேசக்காணோமே?

எல்லாம் போகட்டும் - இசுலாமியர்களின் பண்பாட்டு விஷயங்களில் பார்ப்பனர்களுக்கு அப்படி என்ன அக்கறை? ஓநாய் எதற்காக இப்படி அழுகிறது.

ஒன்றை தயவுசெய்து புரிந்து கொள்ள முயலுங்கள். பெரும்பாலான இந்துமதப் பெண்கள் விரும்பி குங்குமம் அணிவதைப் போன்று, இசுலாமிய பெண்கள் தாங்களாக புர்கா அணிவதை விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தையும், பண்பாட்டு அடையாளத்தையும் நீங்கள் உங்கள் அரிப்பை தீர்த்துக்கொள்வதற்காக கொச்சைப் படுத்தாதீர்கள்.

அருள் said...

// //@வஜ்ரா

இந்தியாவின் மனித உரிமை சுதந்திரம் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் விரும்பும் மனித உரிமையை உங்களுக்கு வழங்கும் நாட்டுக்கு நீங்கள் குடிபெயருமாரு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். // //

எங்களுடைய நாட்டை விட்டு "இந்தியா" வெளியே போனாலோ, அல்லது எங்களது ஆட்கள் இந்தியாவின் அதிகாரத்தை தீர்மானிக்கும் காலம் வரும்போதோ - மனித உரிமை என்னவென்று உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

அதுவரை, மண்ணின் மைந்தர்களை வெளியே போகச்சொல்லுவதும் ஒரு மனித உரிமை மீறல் என்பதை புரிந்து நடந்துகொள்ள வேண்டுகிறேன்.

அடடா, உங்களுக்குதான் "மண்ணின் மைந்தர்கள்" என்றால் என்னவென்றே புரியாதே!

// //@Sridhar

I wish we prefer freedom than religion.// //

மதத்தை விட சுதந்திரம்தான் முக்கியம் என்று நினைத்தால் - இந்துமதத்தில் வெறும் 5% பேர்தான் மிஞ்சியிருக்க முடியும். அப்புறம் இந்துமதம் இந்தியாவிலும் சிறுபான்மை மதமாகிவிடும். பரவாயில்லையா?

virutcham said...

//ஒன்றை தயவுசெய்து புரிந்து கொள்ள முயலுங்கள். பெரும்பாலான இந்துமதப் பெண்கள் விரும்பி குங்குமம் அணிவதைப் போன்று, இசுலாமிய பெண்கள் தாங்களாக புர்கா அணிவதை விரும்புகிறார்கள்.//
@arul
விரும்பி அணிவது பற்றிய பதிவா இது?
டோண்டு, உங்க வீட்டு பால்/ லாண்டரிக் கணக்கை அடுத்த பதிவுக்கு தயார் செய்யலாம். அதையும் சுடச் சுட ஒரு இன ஜாதி பதிவாக மாற்றி பின்னூட்டங்கள் பெற்றுத் தர ஆள் இருக்கும் போது நீங்க இப்படி எல்லாம் மெனக்கெடனும்னு அவசியமே இல்லை

மடிசார் மாமி said...

///“இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை”ன்னு விவசாயி படத்தில் பாடும் எம்.ஜி.ஆர். ஏற்று நடித்த அப்பாத்திரமுமே இந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்காகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்///---மேலும் தொடர்ந்து இப்படி எல்லாம் எழுதி இருக்கலாம்...

\\\\
சடங்காகி விட்டால் வீட்டைவிட்டு தூரமாக்கி வைப்பது, ஆண்களால் பெண்களுக்கு தாலி கட்டுவது, பொட்டு-கும்கும் வைப்பது, மெட்டி அணிவிப்பது, முதலிரவில் சொம்பில் பால் கொண்டுவரவைப்பது, கதவை மூட சொல்லி அப்புறம் வயிற்றில் பிள்ளையை கொடுப்பது, மற்ற பெண்கள் போல கீழே 'ஃபிரீயாக' இருக்க விடாமால் மடிசார் கட்டிக்கொள்ள சொல்வது, சானியைத்தொட்டு குழைத்து கரைத்து கலக்கி தெளித்து கோலம் போட வைப்பது, பால் காய்ச்ச சொல்வது... இவை அனைத்தும் இந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்காகிறது.
\\\\
===என்று முடித்திருக்க வேண்டும்....

ஸ்ரீ said...

|||||
மற்ற பெண்கள் போல கீழே 'ஃபிரீயாக' இருக்க விடாமால் மடிசார் கட்டிக்கொள்ள சொல்வது
|||||

ஹி...ஹி... மடிசார் மாமி கெளப்புரீங்கலேமா...

உங்களுக்கு மடிசார் பிடிக்கலேன்னா தாராளாமா "ஃபிரியா"வே இருந்துக்கங்கமா... அது உங்க சுதந்திரம்...

டோண்டு போன்ற பழங்கிழகங்கள் 'ஆச்சாரம் போச்சேன்னு' கத்தும்...

ஆணா இனிமே கத்தாது....

|||||
பொதுவாகவே பெண்கள் எந்த உடையை அணிய வேண்டும் என பேசும் எல்லா ஆண்களையுமே இந்தப் பதிவு சாடுகிறது.
|||||
---அப்டீனுட்டுது... பெருசு.

Anonymous said...

//
மதத்தை விட சுதந்திரம்தான் முக்கியம் என்று நினைத்தால் - இந்துமதத்தில் வெறும் 5% பேர்தான் மிஞ்சியிருக்க முடியும். அப்புறம் இந்துமதம் இந்தியாவிலும் சிறுபான்மை மதமாகிவிடும். பரவாயில்லையா?
//

இதுவரை இந்துக்கள் அப்படித் தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துக்கள் இப்படி நினைத்துக்கொண்டிருக்கும் வரை தான் உங்களுக்கு இந்த சுதந்திரம் எல்லாம். அவர்களும் தாலிபான்கள் போல் நினைக்க ஆரம்பித்தால் படையாச்சி, நீ காலி.

வஜ்ரா said...

//
அதுவரை, மண்ணின் மைந்தர்களை வெளியே போகச்சொல்லுவதும் ஒரு மனித உரிமை மீறல் என்பதை புரிந்து நடந்துகொள்ள வேண்டுகிறேன்.
//

அருள், நீங்கள் ஒருவர் தானே ?
உங்களை உங்கள் விருப்பமுக்கு ஏற்ற மனித உரிமை வழங்கும் நாட்டுக்குத் தானே போகச் சொன்னேன் ? உடனே எங்களைப் போகச் சொல்ல நீ யார் என்கிறீர்களே ?

இந்தியாவின் மனித உரிமை மீது தான் உமக்கு நம்பிக்கை இல்லையே. பின்ன என்ன ம*த்துக்கு அங்கேயே இருந்து புலம்பவேண்டும் ? எங்கே உங்களுக்கு மனித உரிமை கொடுக்கிறார்களோ அங்கே போகச் சொல்வது ஒன்றும் மனித உரிமை மீரல் ஆகாது.


//
எங்களது ஆட்கள் இந்தியாவின் அதிகாரத்தை தீர்மானிக்கும் காலம் வரும்போதோ - மனித உரிமை என்னவென்று உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
//

உங்கள் இனமான சிங்கம் பா.ம.க தலைவர் ராமதாசு ஐயாவின் மகன் தீர்மானித்தாரே...அதைச் சொல்கிறீர்களா ?


அது சரி, நீங்கள் தான் மண்ணின் மைந்தர்களா, நான் இல்லையா ?

இஸ்லாமியன் said...

சரி,

இந்த அம்மா வேலையில சேர்ந்தது இஸ்லாமியக்கல்லூரியில. இஸ்லாமியர்களால் நடத்தப்படும் கல்லூரியில இந்த அம்மாவுக்கு வேலைக் கிடைச்சதே இந்த அம்மா முஸ்லீம் என்பதற்காகத்தான். அந்த அம்மாவுக்குத் நல்லாத் தெரியும், ஒரு அரசாங்கக் கல்லூரியில இவனுக்கு எவனும் வேலைத் தரமாட்டான் என்று. ஒரு முஸ்லிம் என்பதற்காகத் தான் இந்த அம்மாவுக்கு இத்தனை நாள் கிடைக்கவில்லை. மேலும் முஸ்லிம் என்பதற்காகத் தான் இப்போ வேலைக் கிடைச்சிருக்கு. பின்னே, அது படிச்ச படிப்புக்கு மட்டும்தான் கிடைச்சிச்சா ?

எல்லாத்தையும் யோசிச்சு கல்லூரி சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்ற ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்.

சத்தார் said...

///மதரஸா மாணவர் சங்கம் எல்லா பெண் விரிவுரையாளர்களும் புர்கா போட்டுத்தான் கல்லூரிக்கு வந்து பாடம் நடத்தவேண்டும் என்று வற்புறுத்துகிறது. இதனால், மற்ற விரிவுரையாளர்கள் புர்கா போட்டாலும் நான் போடமாட்டேன் என்று இவர் மறுத்துவிட்டார்.///--இந்த பல்கலை நிர்வாகம் இந்த அம்மாவை பல்கலை வளாகத்தில் மட்டுமே ஒரு யூனிபார்மை போட சொல்லி இருக்கிறது. அதே யூனிபார்மை அவர் பல்களை நேரமில்லாத நேரங்களில் வெளியேயும் போட்டாக வேண்டும் என்று சொல்லவில்லையே!!???

'விரிவுரையாளர்கள் யூனிபார்ம்' என்ற அந்த பல்கலை சட்டத்தை மதிக்காத அந்தம்மா மீது இன்னும் எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல் இன்னும் வேலை பார்க்க விட்டு வைத்திருப்பதே பல்கலையின் மிகப்பெரிய கருணை. இது பல்கலையின் பரந்தமனப்பான்மையை காட்டுகிறது. இஸ்லாமிய பல்கலையில் மட்டுமே இது சாத்தியம்.

நான் மாணவனாக இருந்தபோது ஒருநாள் அரசுப்பள்ளியின் யூனிபார்ம்....

(அதாங்க... நம்ம அரசு பள்ளிகளில் வைத்திருக்கிறார்களே... ஆர்.எஸ்.எஸ் யூனிபார்ம்...! காக்கி டவுசர், வெள்ளை சட்டை... பாழாப்போன அதே யூனிபார்ம்தான்...!)

அந்த கருமாந்திரத்தை போடாமல் பள்ளிக்கு போய்விட்டதால் அன்று பள்ளிக்குள்ளேயே விடமால் வெளியேற்றிவிட்டார் தலைமை ஆசிரியர் ராகவாச்சாரியார்.

ஒரு முஸ்லிமாகிய என்னை ஆர்.எஸ்.எஸ். யூனிபார்மை படிக்கும் காலத்திலிருந்தே போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் தமிழக அரசுக்கு எதிரான சரியான 'சவுக்கு(!)அடி' பதிவு இது...!

வெல்டன் டோண்டு சார்...! வெல்டன்!!!

dondu(#11168674346665545885) said...

/////மதரஸா மாணவர் சங்கம் எல்லா பெண் விரிவுரையாளர்களும் புர்கா போட்டுத்தான் கல்லூரிக்கு வந்து பாடம் நடத்தவேண்டும் என்று வற்புறுத்துகிறது. இதனால், மற்ற விரிவுரையாளர்கள் புர்கா போட்டாலும் நான் போடமாட்டேன் என்று இவர் மறுத்துவிட்டார்.///--இந்த பல்கலை நிர்வாகம் இந்தம்மாவை பல்கலை வளாகத்தில் மட்டுமே ஒரு யூனிபார்மை போட சொல்லி இருக்கிறது. அதே யூனிபார்மை அவர் பல்களை நேரமில்லாத நேரங்களில் வெளியேயும் போட்டாக வேண்டும் என்று சொல்லவில்லையே!!??? //

கெடுபிடி செய்வது மாணவர் சங்கமே. நிர்வாகம் அல்ல. மாணவர் சங்கத்துக்கு அந்த அதிகாரத்தை வழங்கியது யார்? ஆகவேதான் நிர்வாகம் அப்பெண்ணை நூலகத்தில் வேலை செய்யச் சொல்லியுள்ளது, ரவுடி மாணவர்களைக் கண்டிக்க துப்பில்லாமல்.

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@மடிசார் மாமி
மடிசார் கட்டச் சொல்லி யார் வற்புறுத்தினார்கள்? போடாவிட்டால் ஆசிட் ஊற்றுவோம் என யார் பயமுறுத்தினார்கள்? ஆனால் இசுலாமியப் பெண் அவளாக விரும்பி பர்தா போடாது இருந்தால் அவள் மேல் ஆசிட்டை ஊற்றும் இசுலாமிய ரவுடிகளைத்தான் இப்பதிவு கண்டிக்கிறது.

பர்தா போட மறுத்தால் ஆசிட் ஊற்றுவதை நியாயப்படுத்தும் எல்லோருமே ரவுடிதான்.

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இந்துத்வ தீவிஅரவாதிகள் இந்துப் பெண்களை பார்களில் தக்கியதை எந்த இந்துவும் ஆதரிக்கவில்லை, ஆனால் இசுலாமிய ரவுடித்தனம் என்றால் அதைக் கண்டிக்க சாமான்ய இசுலாமியரும் பயப்படுகின்றனர்.

எனது கேள்வி எளிமையானது. புர்க்கா போட வேண்டும், இல்லாவிட்டால் ஆசிட் ஊற்றுவோம் என்ற வாதம் இசுலாமுக்கு உவப்பானதுதானா?

டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
பர்தா போட மறுத்தால் ஆசிட் ஊற்றுவதை நியாயப்படுத்தும் எல்லோருமே ரவுடிதான்.
//

அவிங்க ரவுடிங்க இல்ல, சும்மா ரவுடிக்குத் தெரிஞ்சவனுங்க..அவ்வளவு தான்.

ரவுடி இருக்குற வரைக்கு சிலம்புவானுங்க. ரவுடியை என்கவுண்டர் பண்ணிட்டா அடங்கிருவானுங்க.

அருள் said...

// //இந்துத்வ தீவிரவாதிகள் இந்துப் பெண்களை பார்களில் தக்கியதை எந்த இந்துவும் ஆதரிக்கவில்லை// //

சூப்பர்....!

"தாக்கியவர்கள் இந்துக்களே அல்ல" என்று சொல்லாமல் விட்டதற்கு மிக்க நன்றி.

Anonymous said...

//மதநம்பிக்கையை ஏற்பவர்கள் அதன் சில கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அந்தக்கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை என்றால் அதனை அந்த மத்தத்திற்குள் பேசி தீர்த்துக்கொள்வதே நல்லது. அதுவும் முடியாமல் போனால் மதத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டியதுதான்//

ஆஹா. அப்புறம் என்ன மசித்துக்கு நீ இந்து மதத்தை திட்டுற? அதில உள்ளதை அப்படியே ஏத்துக்க. இல்லாங்காட்டி வெளியேறு. எதுக்காக கமெண்ட் அடிக்கிற?

Anonymous said...

"பார்ப்பனர்கள் பூணுல் போடுகிறார்கள்; போடவில்லை. இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை?”

கேட்டவர் டோண்டு ராகவன்.

இல்லையா?

இதன் பொருள். ஒரு குழுவின் வாழ்க்கை முறையில் மற்றவர் தலையிடலாகாது.

இல்லையா?

இதே வண்ணம், இசுலாமியர் தங்கள் பெண்களுக்கு என்ன உடை போடவேண்டும் என சொல்லும்படி தங்கள் மதக்கோட்பாட்டை எழுதி கடைபிடிக்கிறார்கள். அவ்வுடை பிடிக்கிறதோ, இல்லையா என்பது இசுலாமியர் மற்றும் அவர்கள் பெண்களுக்கிடையேயான பிரச்சினை.

இதில் சின்னகருப்பனுக்கும், பெரிய கருப்பனுக்கும் என்ன பிரச்சினை?

மாணவர் இயக்கம் தலையை வெட்டிவிடுவேன் என்றால், அது அவர்கள் மாணவர் இயக்கம். அதைத் தட்டிக்கேட்பது அவர்க்ள் செய்யட்டுமே>

சின்னக்கருப்பனும், பெரிய கருப்பனும் அங்கே ஏன் நுழைந்து நாட்டாணமை பண்ணவேண்டும்?

இந்துப்பெண்கள் மடிச்சரர் போடவில்லயென்றால், அவர்களை இந்துக்கள் மிரட்டவில்லயென்றால், மற்றமதத்த்வரும் இந்துக்கள் வழியைப்பின் பற்றவேண்டுமா? ஏன்? நீங்கள் அவர்களுக்கு வழிகாட்டியா?
உங்களைக்கேட்டா அவர்கள் மதத்தை படைத்தார்கள்?

Anonymous said...

//
"தாக்கியவர்கள் இந்துக்களே அல்ல" என்று சொல்லாமல் விட்டதற்கு மிக்க நன்றி.
//

குசுபூவை மாரல் போலீஸ் செய்யும் கூட்டத்துல இருந்து வரும் அட்வைசைப் பாரு.

கேக்குற கேணையா இருந்தா ...கே.ஆர். விஜயாவுக்கு...

Anonymous said...

அப்படி தலையிடாமல் தான் நீங்கள் இருக்கிறீர்களா ஜோ?

அப்படியென்றால் ஒரு சமயத்தில் தலையிட்டு மற்றொன்றில் வியாக்கியானம் பேசுவது மொக்கைத் தனம் இல்லையா?!

Anonymous said...

பூனூல் போடுவது என்பது "இது பத்தினி வீடு" என்று எழுதிவைப்பதற்குச் சமம்


-சொன்னவர் அருள் போன்ற அறிவுஜீவிகள்.

புர்க்கா அணியாதவள் தேவடியாள் என்றும் அந்த அர்த்தத்திலும் பலர் பலவிதமாகச் சொல்லிக்கொண்டிருப்பது அந்த அறிவுஜீவிகளுக்கு செவிடன் காதில் ஊதும் சங்கு மாதிரி என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார்கள்.

லிஸ்டில் சேர்ந்திருக்கும் புதுச் செவிடு ச்சீ...அறிவுஜீவி, ஜோ.அமலர். ராயர். பெர்னாண்டர் அவர்களை வரவேற்கிறேன்.

Anonymous said...

தலையிடுவது என்பது வேறு. மற்ற மத்ததை மரியாதையுடனும் மதிப்புடனும் பேசுவது வேறு.

சின்னகருப்பன் எழுதியது இசுலாமியப்பழக்கங்களையும் இசுலாமியர் அப்பழக்கங்களை மீறுவோரை பகடி செய்து கிண்டல்டிப்ப்தும் தேவையில்லாது தலையீடு.

இந்துக்கள் வழக்கங்களில் இசுலாமியர் தலைய்டுவதும் (for e.g ஏன் விதவைப்பெண்களுக்கு மொட்டையடித்து, வெள்ளைச்சீலை கட்டுகிறீர்கள்? ஏன் நூற்றியெட்டுச்சாமிகள் உங்களுக்கு? போன்ற கேள்விகள்) இசுலாமியர் வழக்கங்களில் (ஏன் உங்கள் பெணகளுக்கு பர்கா? ஏன் அரபியில் ஓதுகிறீர்கள் போன்ற கேள்விகள்) இவையெல்லாம் தலையீடுகள்.

வேலையத்த வேலைகள்.

பார்ப்ப்னர் பூணுல் போட்டாலென்ன போடாவிட்டலென்ன? மத்தவனுக்கு இலாபமோ நட்டமோ இல்லை.

இசுலாமியப்பெண்கள் பர்கா போட்டாலென்ன்? போடாவிட்டலென்ன்? போடவில்லையென்றால் அவர்கள் ஆண்கள் அவர்களைக்கட்டாயப்படுத்தினாலென்னபண்ணாவிட்டாலென்ன்? மத்தவனுக்கு என்ன இலாபம் அல்லது நட்டம்?

பிறமதத்தைப்பற்றிப் பேசலாம், எழுதலாம். நான் செய்வது போல. மரியாதையாக. மதிப்புடனும்.

முடியாதென்றால், அமைதி காக்கவும்.

சின்னக்கருப்பன் செய்தது தவறு.

Anonymous said...

’...புர்க்கா அணியாதவள் தேவடியாள் என்றும் அந்த அர்த்தத்திலும் பலர் பலவிதமாகச் சொல்லிக்கொண்டிருப்பது ”

அப்படி நீங்கள்தான் சொல்கிறீர்கள். இசுலாமியர்கள் சொல்வதில்லை. அவர்கள் சொல்வதென்னவென்றால், பர்கா பெண்களின் நலத்திற்காகவே அணியப்படுகிறது. ஆண்களின் கட்டாயத்திற்காக அல்ல,

மேலும், பர்காவில் பலவகைகள் உள. அவை அங்கு வாழும் இசுலாமியர்களைப்ப்பொறுத்தது. எடுத்துக்காட்டாக, உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் வாழும் இசுலாமிய நாடு இந்தோனிசியா. அங்கு பெண்கள் தலையைமறைக்கும் ஆடையொன்றையே அணிகிறார்கள்.

Muslim women report that they feel more spiritual and more islamic in the dress they wear according to their religion.

Take Hindus. In TN, the Hindu women dont go to temples covering their heads with the hem of their saari or dupattaa. Their heads are always uncovered.

But in Northern India, all Hindu women cover the heads when entering the temples or offering prayers in puja rooms of their houses.

No man compels them. Because you can still find some women in temples with heads uncovered.

Then, why do they do it?

Because, they feel spiritual and can drive away all other unnecessary thoughts from their minds in temples.

Ditto for muslim women. They dont wear it, esp. the head cover called niqab, it covers head only so that an arugment that it keeps her off from the ogling eyes of males is invalid here. They do it, because of feeling spiritual.

All religions have some or more such things which facilitate their followers to feel one with the religion.

Examine your own religion. You will find such examples. Why do you prevent your women entering puja room or temple when they are menstruating? Why do you shave the heads of your women if they become widows? Tamil brahmins did not even allow their women enter homes during menstruation, hence it is called வீட்டுத்தூரம். Why does Sabaramlai temple ban women devotees whether menstruating or not? Why do temples ban girls and women with jeans? Tirupathi temple has recently imposed this ban.

If you ask Hindus why, why, they will offer convincing reasons for the dos and donts imposed on women.

Therefore,

The one who has not sinned among you, let him take the first stone and pelt at her.

Or,

Dont try to remove the beam in the eye of the other without first removing the straw in your eye.

Both statemens are from Jesus Christ, which are very appropriate here.

dondu(#11168674346665545885) said...

@ஜோ
வேண்டுமென்றே பிரச்சினையை திரிக்கிறீர்கள். இப்பதிவே புர்க்கா போடுவது தவறா இல்லையா என்பது பற்றி இல்லவே இல்லை. அதை போடும்படி ஒரு லெக்சரரை மாணவர் சங்கம் வற்புறுத்துவது சரியா என்பதுதான். மாணவர் சங்கத்துக்கு அத்தனை இடம் கொடுத்த பல்கலைக்கழக நிர்வாகமும் கண்டிக்கத் தக்கது.

//இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. வெளியிட்டு எட்டு நாட்கள் கழித்து பல்கலைக்கழக நிர்வாகம் இவரை புர்கா இல்லாமலேயே விரிவுரையாளர் வேலையை செய்யலாம் என்று கேட்டுகொண்டிருக்கிறது. பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, இவர் “டீஸண்டாக” உடை உடுத்திக்கொண்டு விரிவுரையாற்றலாம் என்று அனுமதித்திருக்கிறது. மேற்குவங்காள மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹசானுர் ஜமான் ஒரு பிரச்னையும் இல்லாதபோது பத்திரிக்கைகளுக்கு சென்று பிரச்னையை கிளப்பியுள்ளார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். தான் மீண்டும் வேலைக்கு போகும்போது எப்படிப்பட்ட வரவேற்பை பெறுவோம் என்பதை பற்றி பயப்படுவதாக சிரின் கூறியிருக்கிறார்”.//

இப்போது பிரச்சினை பத்திரிகைக்கு போனதும் எல்லோரும் வழிக்கு வந்தார்களா இல்லையா? அந்த எரிச்சலில்தான் மாணவர் சங்கம் அவர் பிரச்சினையை பொது மக்கள் கவனத்துக்கு கொண்டு வந்ததை சாட நினைக்கிறது.

மறுபடியும் கூறுவேன், புர்க்கா போடுவது சரியா தவறா என்ற கேள்விக்குள் போகவில்லை. இவ்வாறு கட்டாயப்படுத்துவது தவறா சரியா என்பதே இங்கு கேள்வி.

ஹிந்து மதத்து விவகாரங்களில் புகுந்து கன்வர்டுகளை அறுவடை செய்ய நினைக்கும் ஜோ வகையறாக்கள் கவனிக்க.

டோண்டு ராகவன்

Anonymous said...

"...ஹிந்து மதத்து விவகாரங்களில் புகுந்து கன்வர்டுகளை அறுவடை செய்ய நினைக்கும் ஜோ வகையறாக்கள் கவனிக்க."

இதற்கும் நான் எழுதியதற்கும் என்ன தொட்ர்பு? இதுதான் திரித்தல்.

Anonymous said...

"...அதை போடும்படி ஒரு லெக்சரரை மாணவர் சங்கம் வற்புறுத்துவது சரியா என்பதுதான். மாணவர் சங்கத்துக்கு அத்தனை இடம் கொடுத்த பல்கலைக்கழக நிர்வாகமும் கண்டிக்கத் தக்கது.
"

இதைப்பற்றி ஒரு இசுலாமியர் எழுதிவிட்டார் இங்கே.

பல்கலைக்கழகம் இசுலாமியரது. அங்கு பெண்கள் எப்படி வரவேண்டும் என்பதற்கு ஒரு கட்டுப்பாடு உண்டு. அதை கல்வி நிர்வாகமே செய்திருக்கவேண்டும். செய்யாத்தால், மாணவர்கள் செய்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் மத்த்த்தின் பேர் அவ்வளவு அக்கறை. அவர்களுக்கு ஆரையும் திருப்திபடுத்தவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்ல. ஆனால், நிர்வாகத்திற்கு உண்டு. எனவேத்டான் நிர்வாகம் பணிந்திருக்கிறது.

லயோலாவுக்கும் லீனாவுக்கும் நடந்தவிவகாரத்தில், கல்லூரி நிர்வாகமே லீனாவை வெளியே போ என்றது. இதையே வங்கப்பல்கலைக்கழகம் செய்திருந்தால் மாணவர்கள் ஏன் குறுக்கிடுகிறார்கள்?

‘கட்டாயம்’ இல்லாவிட்டால், இசுலாமியம் இன்று இந்துமதத்தைப்பொல உருமாறியிருக்கும்.

2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தமாதிரியா இன்று இந்து மதம் இருக்கிறது ? காமலீலைகளில் ஈடுபடும் சாமியார்களுக்கும் மதிப்பிருக்கிறதல்லவா? அப்படியா உங்கள் மதத்தை எழுதிவைத்தார்கள்?

நாளை எப்படியிருக்குமோ, இருக்காதோ?

ஆனால் இசுலாம் அப்படியே இருக்கும். அவர்கள் அவர்கள் வாழ்க்கைமுறையை மாற்றமாட்டார்கள்.

‘கட்டாயம்’தான் காரணம்.’கட்டாயமே’ இசுலாமின் தனித்தன்மை என்று நான் கருதுகிறேன்.

உங்களால் முடியவில்லையென்றால் போங்கள். அவர்களும் உங்களைப்போலத்தான் ‘எப்படியும் வாழலாம்’ என்று இருக்கவேண்டுமா?

மாணவர் சங்கம் செய்தது சரியே என்று சொல்லி அமர்கிறேன். வாய்ப்புக்கு நன்றி.

dondu(#11168674346665545885) said...

//பல்கலைக்கழகம் இசுலாமியரது. அங்கு பெண்கள் எப்படி வரவேண்டும் என்பதற்கு ஒரு கட்டுப்பாடு உண்டு. அதை கல்வி நிர்வாகமே செய்திருக்கவேண்டும். செய்யாத்தால், மாணவர்கள் செய்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் மத்த்த்தின் பேர் அவ்வளவு அக்கறை. அவர்களுக்கு ஆரையும் திருப்திபடுத்தவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்ல. ஆனால், நிர்வாகத்திற்கு உண்டு. எனவேதான் நிர்வாகம் பணிந்திருக்கிறது.//
முட்டாள்தனஃமான வாதம். நிர்வாகம் செய்தது நமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. மாணவ ரவுடிகள் சட்டத்தை மதிக்காததாலேயே பிரச்சினை வந்தது.

மறுபடியும் கூறுவேன் சம்பந்தப்பட்ட பெண் புர்க்கா போடுவது அவரது தனி விருப்பம். மாணவ ரவுடிகளது அல்ல. அப்படி இந்திய சட்டம் பிடிக்காவிட்டால் பாகிஸ்தானுக்கு சென்று ஒழியட்டும்.

டோண்டு ராகவன்

virutcham said...

நீங்க நல்லவரா கெட்டவரா ?
பதிவுக்கு சம்பந்தம் இல்லாம சிலர் எப்போதும் ஒரே மாதிரி கருத்தை தயார் செய்து வைத்துக் கொண்டு தேவைகேற்றப customise செய்து எழுதுவது போல இது என்ன. அதுவும் உங்க கட்டப் பஞ்சாயத்து. தாங்கலை. முடியலை. அவ் அவ் அவ்.....

இனிமே எல்லோரும் அவங்க அவங்க இனக் குழுக்களா கல்வி நிலையங்கள் , வேலை நிரவாகங்கள் எல்லாம் நிறுவி, அதில் அவங்க ஆட்களுக்கு மட்டும் 100 % என்று தீர்மானம் நிறைவேற்றி அவங்க அவங்க சம்பிரதாயங்களை சட்ட மாக்கி, மீறுபவர்களை அடக்க, தனிப் படைகள் நிறுவி ....

வாழ்க வாழ்க இந்திய சமுதாயம் வாழ்கவே

அருள் said...

Anonymous said...

// //அப்புறம் என்ன மசித்துக்கு நீ இந்து மதத்தை திட்டுற? அதில உள்ளதை அப்படியே ஏத்துக்க. இல்லாங்காட்டி வெளியேறு. எதுக்காக கமெண்ட் அடிக்கிற?// //

அடடா....அந்த ரகசியம் உங்களுக்குத் தெரியாதா?

"இல்லாங்காட்டி வெளியேறு" என்று சும்மா 'டபாய்க்க'தான் முடியும். உண்மையாக வெளியேற உங்க ஆளுங்க வழியே வைக்கவில்லை. இந்து மதம் என்பதற்கு ஒரு வரையறையே இல்லை. அப்படி வரையறுத்தால் "உங்கள் மதம்" அந்த நிமிடமே சிறுபான்மை மதமாக ஆகிவிடும்.

இந்தியாவில் இசுலாம், கிறித்தவ மதங்களுக்கெல்லாம் தெளிவான அடையாளம் உள்ளது. எனவே, எந்த ஒரு நபரும் அந்த மதங்களை தழுவுவதும், வெளியேறுவதும் எளிது. ஆனால், இந்து மதத்திற்கு எந்த ஒரு தனி அடையாளமோ, விளக்கமோ இல்லை.

இசுலாமியர்கள், கிறித்தவர்கள் அல்லாதவர்கள் இந்துக்கள் என்ற அளவில்தான் 'விளக்கம்' உள்ளது. இந்திய அரசியல் அமைப்பின் 25 ஆவது பிரிவின்படி சீக்கியர்களும், ஜெயினர்களும், பவுத்தர்களும் கூட இந்துக்கள்தான்.

அவ்வளவு ஏன்? இந்துமத்தத்தின் பரம எதிரிகள் என்று நீங்கள் கருதும் திராவிடர் கழகத்தினர் கூட "சட்டப்படி இந்துக்கள்"தான்.அதன்படி, கி.வீரமணி கூட இந்துதான்.

இப்படி "வெளியே போனவர்கள்" உட்பட எல்லோரையுமே "இந்துக்கள்' என்று நீங்களாக இழுத்து சேர்த்துக்கொண்டு, வெளியேறு என்றால் எப்படி?

Anonymous said...

"...இனிமே எல்லோரும் அவங்க அவங்க இனக் குழுக்களா கல்வி நிலையங்கள் , வேலை நிரவாகங்கள் எல்லாம் நிறுவி, அதில் அவங்க ஆட்களுக்கு மட்டும் 100 % என்று தீர்மானம் நிறைவேற்றி அவங்க அவங்க சம்பிரதாயங்களை சட்ட மாக்கி, மீறுபவர்களை அடக்க, தனிப் படைகள் நிறுவி ....
"

Perhaps you have written this out of your desparation of inability to tie all together.

ஆனால் உண்மையென்னவென்றால், இந்திய அரசு மைனாரிட்டி கல்வி நிறுவனங்களுக்குப் பல உரிமைகளை வழங்கியிருக்கிறது. அதன்படி அவர்கள் அவர்கள் ஆட்களுக்குமட்டுமெ அதை நடாத்தாலாம். தடையேதுமில்லை. அவர்கள் அரசிடமிருந்து எந்தவொரு உதவியும் பெறக்கூடாது என்பது மட்டுமெ நிபந்தனை. அப்படி பெற்றால், அவர்கள் அவர்கள் ஆட்களுக்கென்று நடாத்தமுடியாது.

Last year, the case of Aligarh Muslim University came up. The muslims contended that Sir Syed Ahmed Khan set up the AMU only to help muslims to advance educationally; and initially the AMU was founded with the overwhelming financial support of muslims. Hence, AMU should reserve seats for muslims.

It is just a demand for reservations. Nothing else.

But the central government rejected the argument on the grounds that the AMU is a central university, like JNU, IITs and Pondicherry University etc. Which means it is fully supported financially by Central Government. Therefore, reservation policy as applicable to other Central Universities, IITs, AIMMS should be applicable here too, Which means no reserations on religion basis.

Anonymous said...

1/2 baked arul,

வெளியேறு என்றால் இசுலாமுக்கோ, கிருத்தவத்துக்கோ போகவேண்டியது தானே என்று அர்த்தம்.

இந்து மதம், அதன் சுதந்திரம், மனித உரிமை, என்று எதுவுமே பிடிக்காமல் அதை எப்பப்பார்த்தாலும் திட்டிக்கொண்டு புலம்பிக்கொண்டு இருப்பதைவிட சுலபமாக இஸ்லாம், கிருத்தவனாக மாறித் தொலைந்து போகவேண்டியது தானே என்பது தான் அந்தக் கேள்வியின் உள்ளர்த்தம்.

virutcham said...

@arul
அதுக்கும் ஒரு fair trade என்கிற பெயரில் ஒரு தலைப்பட்ச வியாபாரம் இருக்குமே உங்க கிட்டே.

மொத்தத்திலே சிறுபான்மை கொள்கைகளுக்கு சிறுபான்மை (குறிகிய ) வட்டத்திலேயே பதிலளிப்பதும் ஆதரிப்பதும் ...
என்னமோ போங்க.

@Arul
பரம எதிரிகள் இன்னும் இந்துக்களா இருப்பதற்கு காரணம் சுய லாபம் தானே. அது பறி போகாம இருக்கத் தானே இத்தனை வருடமா பொதுவான category வைக்கவே இல்லை. பகுத்தறிவுன்னு ஒரு option வச்சுக்கறது தானே. மாட்டீங்களே .

Anonymous said...

இந்து மதம், அதன் சுதந்திரம், மனித உரிமை, என்று எதுவுமே பிடிக்காமல் அதை எப்பப்பார்த்தாலும் திட்டிக்கொண்டு புலம்பிக்கொண்டு இருப்பதைவிட சுலபமாக இஸ்லாம், கிருத்தவனாக மாறித் தொலைந்து போகவேண்டியது தானே என்பது தான் அந்தக் கேள்வியின் உள்ளர்த்தம். "

In my opinion, you have not understood him.

அவரின் உள்ளர்த்தம் என்னவென்றால், இந்து மதத்தில் இருப்பது இல்லாதது அனைத்தும் ஒன்றே என்கிறார். அதற்கு அவர் கூறூம் காரணம் அம்மத்த்தில் ஒருவரை உள்ளே சேர்ப்பதும் வெளியேற்றுவதும் என்பதற்கெல்லாம் ஆரும் சட்ட்ம் போடவில்லை. திறந்த மடம்.

இப்படிப்பார்க்கும் போது அதன் சுதந்திரம், மனித உரிமை இவற்றையெல்லாம் குறை சொல்லிப் புலம்பிக்கொண்டே இந்துவாக இருக்கலாம்.

அதே வேளையில் பிறமதன்க்களில் இப்படி செய்யமுடியாது. விலக்க அவர்கள் சட்டம் வைத்திருக்கிறார்கள். அதன்படி விலக்கிவிடுவார்கள். For e.g the excommunication of Spinoza.

இந்துமதத்தில் ஆருக்கும் அவ்வுரிமை கொடுக்கப்படவில்லை. சாமியார்கள் மட்டுமே அவர்கள் சீடர்களை மடத்திலிருந்து வெளியே துரத்தலாம். சன்கரச்சாரியார் சங்கரராமனைத் துரத்தியது போல.

புலம்ப்லைக்கேட்டுத்தான் தீரவேண்டும்.

Anonymous said...

விருட்சம்!

இந்திய ஜனநாயகம் அப்படித்தான் இருக்கிறது.

புலம்ப வேண்டியது மட்டும்தான் நீங்கள் செய்யலாம். பாவம்.

virutcham said...

@arul - this is for Jo
அதுக்கும் ஒரு fair trade என்கிற பெயரில் ஒரு தலைப்பட்ச வியாபாரம் இருக்குமே உங்க கிட்டே.

மொத்தத்திலே சிறுபான்மை கொள்கைகளுக்கு சிறுபான்மை (குறிகிய ) வட்டத்திலேயே பதிலளிப்பதும் ஆதரிப்பதும் ...
என்னமோ போங்க.

அருள் said...

// //வெளியேறு என்றால் இசுலாமுக்கோ, கிருத்தவத்துக்கோ போகவேண்டியது தானே என்று அர்த்தம்.// //

என்னை இசுலாமுக்கோ, கிறித்தவத்துக்கோ போகச்சொல்ல நீங்கள் யார்? அது எனது சுய விருப்பத்தைப் பொருத்தது.

நான் என்னை இந்து என்று கூறிக்கொள்ளவில்லை. ஆனால், உங்களது சட்டம் என்னை இந்து என்று சொன்னால், அதற்கு நான் என்ன செய்யமுடியும்?

முடிந்தால் 'இந்துமதம் ஒரு சிறுபான்மை மதம்' ஆகாதவாறு, "இந்து என்போர் யார்?" என்பதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள், பார்ப்போம்!

virutcham said...

@Jo
புலம்பல்கள் புலம்பல்களாக இருக்கும் வரை தான் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் மத ஜாதி வியாபாரம் செய்ய முடியும்
//ஆனால், உங்களது சட்டம் என்னை இந்து என்று சொன்னால், அதற்கு நான் என்ன செய்யமுடியும்?//
இதன் பின்னால் இருக்கும் சௌகர்யம் கருதி தானே அப்படிச் சொல்லிக் கொள்கிறீர்கள் என்று கேட்டால் அதை மட்டும் தவிர்த்து சுத்தி சுத்தி வரீங்களே. ஒரு நாள் உங்கள் மக்களே உங்களை ஓடவிடுவார்கள்

Anonymous said...

//
முடிந்தால் 'இந்துமதம் ஒரு சிறுபான்மை மதம்' ஆகாதவாறு, "இந்து என்போர் யார்?" என்பதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள், பார்ப்போம்!
//

இந்து மதத்தை சிறுபான்மை மதம் என்று சொன்னால் அதை எல்லோரும் வரவேற்பார்கள். சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் சலுகைகளைப் பார்த்தால் பேசாமல் இந்துக்களும் சிறுபான்மையினர் என்று சட்டம் போட்டுவிடலாம் தான்.

நீ இந்து இல்லை என்றால், நீ யார்? அதற்கு முதலில் ஒரு விளக்கத்தைக் கொடுக்கவும்.

Anonymous said...

//
அது எனது சுய விருப்பத்தைப் பொருத்தது.
//

உங்களிடம் இருப்பது சுய விருப்பம் அல்ல. சுய வெறுப்பு.

Anonymous said...

''நீ இந்து இல்லை என்றால், நீ யார்? அதற்கு முதலில் ஒரு விளக்கத்தைக் கொடுக்கவும்.''

அனானி!

நீங்கள்தான் அவரை இந்துவா என்று கேட்கிறீர்கள். அவர் உங்களைக்கேட்கவில்லை. உங்களிடம் இந்து என்றால் ஆர் என்று அவர்தான் முதலில் கேட்டவர்.

இந்து இவரைப்போன்றோர் இல்லையென்றால், பின்னர் ஆர்?

இந்து என்பவன் ஆர்?

பதிலை சொல்லி தெளிவுபடுத்தவேண்டியது ‘இந்து என்று சொல்லிக்கொள்ளும் உங்கள் பொறுப்பு.

சொல்லுங்கள்: இந்து என்பவன் ஆர்?

Anonymous said...

நாட்டாமை ஜோ.அ.மலம் ராயம் பெர்ணாண்டம்,

உம்ம தீர்ப்பு இங்கன தேவையில்லை ஓய்.

அது தான் அருளே அவரோட இந்து என்றால் யார் என்ற வெளக்கத்தைக் கொடுத்துவிட்டாரே..பின்ன என்ன மசுத்துக்கு திரும்ப என்னாண்டே கேக்குறார் ?

அவர் இதே மாதிரி தான் ஒரு இந்து இல்லை என்றால் தான் யார் என்ற வெளக்கத்தச் சொல்லச் சொன்னது.

Anonymous said...

Anyone who believes in Rebirth and karma is a Hindu.

Anonymous said...

"...Anyone who believes in Rebirth and karma is a Hindu."

If Arul believes in the two concepts, but criticises all other concepts like Varnasharam, Hindu way of life as prescribed in smritis like manu, will be a Hindu or not?

Because that is the bone of contention here. Arul is speaking about, or criticising vaious other concepts like brahmin domination in the religion, rituals and ceremonies that are practicable only to certain people. For such criticisms, the group of so-called Hindus here under orignal as well as anonyomous names, ask him to get of the religion.

What is your opinion?

அருள் said...

// //நீ இந்து இல்லை என்றால், நீ யார்? அதற்கு முதலில் ஒரு விளக்கத்தைக் கொடுக்கவும்.// //]

இந்து என்பவர் யார்? என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்.

Bramchari Sidheswar Shai and others Versus State of West Bengal (1995 AIR 2089) வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம், "இந்து யார்?" என்பதற்கு பின்வரும் கருத்தை சுட்டிக்காட்டியுள்ளது:

1. இந்து மதத்தின் உயர்ந்த தத்துவங்களாக வேதங்களை ஏற்றுக்கொள்ளுதல்,
2. சகிப்புத்தன்மையை மற்றும் அடுத்தவர் கருத்தை செவிமடுத்து முடிவுக்கு வருதல்,
3. ஆக்கம், காத்தல், அழித்தல் உள்ளிட்ட முடிவில்லாத ஆறு வகை உலகவழக்கு குறித்த நம்பிக்கையை ஏற்றல்,
4. முற்பிறப்பு, மறுபிறப்பை நம்புதல்,
5. முக்திக்கு பல வழிகள் உண்டு என்பதை ஏற்றல்
6. பலதெய்வ வழிபாடு மற்றும் உருவமற்ற வழிபாடு என்கிற அனைத்து வேறுபாடுகளும் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளுதல்
7. எந்த ஒரு உறுதிப்படுத்தப்பட்ட தனி தத்துவத்திற்கும் வரையறைக்கும் கட்டுப்படாதிருத்தல்.

இவையே இந்து மதத்தின் "அடையாளாம்" என்று சுட்டிக்காட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்.

இங்கே என்னுடைய கேள்வி:

1. இதில் ஏதாவது ஒரு விஷயமாவது தமிழ்நாட்டின் 90% இந்துக்களுக்கு தெரியுமா? (அதேசமயம்: குர் ஆனை அறியாத இசுலாமியர், பைபிளை அறியாத கிறித்தவர் உண்டா?).

2. மேலே சொல்லப்பட்ட 7 விஷயங்களை நான் ஏற்கவில்லை என்று வைத்துக்கொண்டால் - எனது சான்றிதழில் உள்ள "இந்து வன்னியர்" என்ற அடையாளத்தை, சட்டப்படி, எப்படி மாற்றுவது?

3. இது போன்ற கட்டுப்பாடுகளை முன்வைத்து ஒரு கணக்கெடுப்பு நடத்தினால், இந்துமதம் இந்தியாவில் ஒரு "மைக்ரோ" மதமாக ஆகிவிடாதா?

Anonymous said...

Well said, Arul.

தற்போதைய இந்து மத அரசியல்வாதிகள் எந்த கட்டமைப்பையும் எந்த கோர்ட்டு சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஒரு காட்டுவாசிக்கு என்ன இவையெல்லாம் தெரியுமா? தெரியாது. ஆயினும் அவன் இந்துவே எனச்சொல்லக்காரணம் இவர்கள் சொல்ல்வில்லையென்றால், மிசுனோரிகள் காட்டுவாசிகளை மதமாற்றம் செய்யும்போது, இந்துக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என குற்றம் சாட்டமுடியாது.

மேலும், இக்கட்டமைப்புகளுக்கு உட்படாதவர்கள், குறிப்பாக தலித்துகள் கோடிக்கணக்கில் உண்டு. அவர்களெல்லாம் இந்து என்ற லேபிளை விட்டுவிடவேண்டியதுதான். பின், இந்துமதம் மைனாரிட்டி ஆகிவிடும்.

எனவேதான், இந்து மதம் என்றால் என்ன? இந்து என்பவன் ஆர்? என்பதற்கு பதில் சொல்ல மறுக்கிறார்கள். பிறர் சொன்னால், அதை ஏற்றுக்கொள்ளாமல் ஓடுகிறார்கள்.

Anonymous said...

நாட்டாமை ஜோ.அ.மலம் ராயம் பெர்ணாண்டம்,

உம்ம தீர்ப்பு இங்கன தேவையில்லை ஓய்.

அது தான் அருளே அவரோட இந்து என்றால் யார் என்ற வெளக்கத்தைக் கொடுத்துவிட்டாரே..பின்ன என்ன மசுத்துக்கு திரும்ப என்னாண்டே கேக்குறார் ?

அவர் இதே மாதிரி தான் ஒரு இந்து இல்லை என்றால் தான் யார் என்ற வெளக்கத்தச் சொல்லச் சொன்னது."

இதெல்லாம் நழுவப்பார்க்கும் வேலை. இந்து என்றால் ஆர்?

Anonymous said...

இந்து என்றால் ஆர்? இந்துமதத்தின் கோட்ப்பாடுகள் எவையென்றெல்லாம் விளக்கங்கள் உண்டு. ஆனால் எழுத்துகளில் இந்து அறிஞர்களாலும் ஆச்சாரியர்களாலும் படைக்கப்பட்ட அல்லது விளக்கப்பட்ட.

ஆனால், அவற்றை வெளியில் சொல்ல மாட்டார்கள். அதுதான் அரசியல்.

Anonymous said...

Kannappa Nayanar was a hindu, he never knew any vedas.

Rebirth and karma are the 2 main parts in hinduism.

To escape from Rebirth, One starts to choose a path he wish to reach god. It would be either devotion or many other ways.

டூ இட் said...

//Anyone who believes in Rebirth and karma is a Hindu.// என்பது கேள்வி கேட்ட உடனேயே //Rebirth and karma are the 2 main parts in hinduism.// என்று மாறி விட்டது. இவ்வாறு இஷ்டத்துக்கு மாற்றுவதும் எந்த வரைமுறைக்கும் கட்டுப்படாத காட்டாற்று வெள்ளம்தான் ஹிந்து மதம்.

//இந்து என்றால் ஆர்?//---மேற்படி அம்சப்படி தனக்கென்று எந்த கொள்கையும் இல்லாதவன்தான் ஹிந்து. எம்மதத்தையும் சாராதவன்தான் ஹிந்து. தனக்கென எச்சட்ட புத்தகமும்,எவ்வேதமும் இல்லாதவன்தான் ஹிந்து.(பகவத்கீதை பார்ப்பன மதத்துக்குறியது). எத்தனை கடவுளை வேண்டுமானாலும் யாரையும் எதையும் கடவுளாக வணங்ககுபவந்தான் ஹிந்து.

Anonymous said...

// நீங்கள் எல்லாம் தலைகீழே நிண்ணு முஸ்லிம் பெண்களை ரசிக்கணும்னு நேநேச்சாலும் ... ம்ஹூம்... முடியாது.//

ich.. cheee you naughty bahi.

Romba asinga asingama peaththura.

Sridhar

Anonymous said...

A person creating a will can only say to whom it belongs too. Lord krishna never said like that, and he himself is not a brahmin.

Read Bhagavad gita in 1 minute:
http://www.karmayog.org/redirect/strred.asp?docId=7482

those are not applicable to brahmins, but to entire humanity.

Anonymous said...

"இவ்வாறு இஷ்டத்துக்கு மாற்றுவதும் எந்த வரைமுறைக்கும் கட்டுப்படாத காட்டாற்று வெள்ளம்தான் ஹிந்து மதம்.

மேற்படி அம்சப்படி தனக்கென்று எந்த கொள்கையும் இல்லாதவன்தான் ஹிந்து. எம்மதத்தையும் சாராதவன்தான் ஹிந்து. தனக்கென எச்சட்ட புத்தகமும்,எவ்வேதமும் இல்லாதவன்தான் ஹிந்து.(பகவத்கீதை பார்ப்பன மதத்துக்குறியது). எத்தனை கடவுளை வேண்டுமானாலும் யாரையும் எதையும் கடவுளாக வணங்ககுபவந்தான் ஹிந்து. "

This is not written by the person who wrote about rebirth and karma.

The above is chaotic.

யாரையும் எதையும் கடவுளாக வணங்ககுபவந்தான் ஹிந்து

அப்படியென்றால், அல்லாவை, இயேசுவை வணங்குபவன் ஹிந்துவா?

“தனக்கென எச்சட்ட புத்தகமும்,எவ்வேதமும் இல்லாதவன்தான் ஹிந்து.(பகவத்கீதை பார்ப்பன மதத்துக்குறியது). ’’

அப்படியென்றால் பார்ப்பனர் ஹிந்து இல்லையா?

Anonymous said...

Another point Arul makes is that:

If an Indian does not belong to any religion, he is assigned to be a Hindu. Even if he is an athieist and breaks the idols of HIndu gods and goddesses.

Is he a Hindu or not?

Arul says, even if he does not like the lable Hindu to be attached to him, the Indian government calls him Hindu in official records.

Is he a Hindu or not?

Further, is there any way for him to get out of the offcial label?

Anonymous said...

நாட்டாமை ஜோ.அ. மலம், மற்றும் அருள்,

A hindu is an adherent of Hinduism, a set of religious, philosophical and cultural systems that originated in the Indian subcontinent.

Anybody who worship formless spirits and demons and hold distant foreign desert lands as holy are not hindus.

Anonymous said...

"...A hindu is an adherent of Hinduism, a set of religious, philosophical and cultural systems that originated in the Indian subcontinent.

"

You have made a cut and paste of this defintion. I have already told you that defintions are available in books.

You can cut and paste; but you should explain them so that we can find out whether arul is a hindu or not.

Your definition now prescribes something or many things.

Earlier your anonoymous friend has written: There is no definition at all.

Even in your definition, look at the following words:

"Anybody who worships formless spirits and demons ... are not hindus."

Tell me: Whether adivasis, and innumberable villagers who worship formless spirits and demons are Hindus or not?

You are siding with Robert Caldwell and trying to mock at the religious habits of villagers. He called worship of village deities lkie அய்யனார், கருப்பசாமி, முனியசாமி, பேச்சியம்மன், காளியம்மன், பெரியபாளையத்தம்மன் ETC. DEMONLOGY.

You should now clarify this simple question:

What are those "set of religious, philosophical and cultural systems that originated in the Indian subcontinent."?

Kannappa Nayanaar did not know a single letter of such " set of religious, philosophical and cultural systems that originated in the Indian subcontinent."

Is he a Hindu or not?

திருடி புரியாமல் போட்டால் இப்படித்தான் மாட்ட வேண்டியது வரும்.

முதலில் புரிதல் வேண்டும்.

எத்தனை பேருக்குத் தெரியும் அந்த set of religious, philosophical and cultural systems that originated in the Indian subcontinent.?

உமக்காவது தெரியுமா அனைத்தும்?

அங்குதான் இருக்கிறது இந்துமதத்தில் வீக் போயிண்ட்.

Anonymous said...

//
Further, is there any way for him to get out of the offcial label?
//

Can you ask the Dravidian ruler to amend the law and make provision for non religious people ? From the times of your "thanthai" periyar you guys make such noise. But never once you took the initiative to define yourselves. Your own "thanthai" guy did not respect your "self-respect" nonsense and he registered his last wedding according to hindu marriage law.

Empty vessels.

Anonymous said...

"Can you ask the Dravidian ruler to amend the law and make provision for non religious people ? ..

Laws like Hindu Marriage Law are Central laws. States have nothing to do with them.

Are dravidian politicians ruling at the centre? They may be partners, but as partners, they are not interested in this. It is an usless exercise to write laws to faciltate driving out persons like arul out of Hinduism. It is useless it wont solve any problem.

Arul staying in Hindu religion while criticising many parts of it, causes no social or political problme. Why shold politicians care?

You, as Hindus, can. But you cant do anything because the religion has no single leader to guide and dictate to people. No one is authorised to write any laws for the religion now.

Hindus dont want to write such stringent laws for fear of being creating a taliban culture of fatwas.

கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை. நடக்காது தம்பி.

In Roman Catholicism, the Syndicate of Cardinals meet once a decade to review and rewrite laws after taking into consideration the changes that have taken place. In Anglican Church (Under Queen Elizabeth), too, they have periodic gathering of bishops to write new laws for followers to adopt in the changed world. The last gathering wrote a law that facilitated the ordainment of women as priests.

Your religion does not have such reexamiantion. It is frozen in the past in the sense nothing is rexaimaned and rewritten. However, the Hindus manage the present in a different way, without writing new laws or re-examining. How? By just ignoring those areas which come into conflict with the present times. For e.g varnashradharmam.

Just now, I have returned from Tamil brahmins.com. Some fellows are arguing there that we ought to allow Tamil brahmins to eat meat.

Ok. This way - by undermining, if not rejecting outright, the redundant and irrelevant parts of ancient Hinduism, the religion accepts the new world.

All said and done, I still feel there is no way to make Veeramani an official non-Hindu! ha..ha..ha

The only way for you is to take periyars, karunanithi, aruls as Hindus and keep smiling at their criticisms.

Criticism, both negative and positive, is healthy.

Anonymous said...

Valid criticism are always welcome in hindu intellectual tradition (இந்து ஞான மரபு!). We never had central authority. This is the greatest advantage of Hindu religion.

Are you telling that these veeramani clones (aruls etc.,) will only stop if Hinduism evolves a central authority like desert demon worshipper religions ?

//
எத்தனை பேருக்குத் தெரியும் அந்த set of religious, philosophical and cultural systems that originated in the Indian subcontinent.?

உமக்காவது தெரியுமா அனைத்தும்?

அங்குதான் இருக்கிறது இந்துமதத்தில் வீக் போயிண்ட்.
//

லூசுப்புடுக்கு,

நீ உன் தாத்தனையும் தந்தையையும் வழிபடும் மூதாதயர் வழிபாடு முதல் இம்மண்ணில் தோன்றிய அனைத்து வழிபாட்டுமுறைகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுபவன் தான் இந்து என்பது அதன் அர்த்தம்.

அதில் எதையும் செய்யாமல் வீம்பு பேசித் திரியும் தருதலைகளெல்லாமும் இப்போதைக்கு இந்துக்கள் தான். ஏனென்றால் மொத்தத்தில் 1000 பேர் கூட இல்லாத கூட்டத்துக்கு எல்லாம் தனி அந்தஸ்து வழங்கி கவுரவிக்க முடியாது என்பதால். போதுமா ?

Anonymous said...

//
You have made a cut and paste of this defintion. I have already told you that defintions are available in books.
//

ஜோ மலம்,

உன் மூளைக்கு கட் அன்ட் பேஸ்டே அதிகம், அதுல இருக்குற விசயத்தக்கூட புரிஞ்சுக்குற அறிவு உங்கிட்ட இல்ல.

அருள் said...

பார்ப்பனர்கள் இந்திய நிலத்தின் மீது படையெடுத்து வந்த போது, அவர்கள் வசம் இருந்தது இந்திரனும் ரிக் வேதமும்தான். மற்ற எல்லா கதைகளும் இங்கிருந்த மக்களிடமிருந்து சுட்டவைதான். (இந்து/இந்தியா என்றாலே சிந்து நதிக்கு அப்பால் உள்ள இடம் என்பது மட்டும்தான் உண்மையான பொருள்)

எங்களது கத்தியை வைத்து எங்களது கழுத்தை அறுப்பதுபோல - எங்களது நம்பிக்கைகளையே ஆயுதமாக்கி, எமது மக்களை அடிமைகளாகவும் ஆக்கிவிட்டீர்கள். "கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிவந்த" கதைதான். நாங்கள் கட்டிய கோயிலில் நீங்கள் தண்ணீர் மட்டும் தெளித்து, தீட்டுபோக்கி, உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது போன்றுதான் எல்லாம்.

இந்து மதம் என்பது எமது மக்களை காலகாலத்திற்கும் அடிமைப் படுத்தி, சுரண்டுவதற்கான ஆயுதம் தான். மன்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் - நீங்கள் இந்து மதத்தின் முக்கிய அடையாளமாகக் கொள்வது ஆதிசங்கரரை தான். அன்று ஆதிசங்கரர் தொடங்கி, இன்று ஜெயேந்திரர் வரை - எமது மக்களின் நம்பிக்கைகளை, பழக்கவழக்கங்களை அங்கீகரித்ததோ, மதித்ததோ உண்டா?

Anonymous said...

எந்த சம்பந்தமும் இல்லாமல் பார்ப்புகள் படையெடுத்து வந்து இந்து மதத்தைவைத்து இருக்கும் இந்தியர்களை அடிமைப்படுத்திவிட்டனர். வெள்ளைத்தோல் பரதேசி பிரித்தானியன் வந்து விடுதலை கொடுத்தான் என்று வெள்ளைக்காரன் கத்துக்கெடுத்துவிட்டுப் போனதை இன்னும் சொல்லிக்கொண்டு திரியும் அருள். எல்லாப் பதிவிலும் பார்ப்பானதுவேசம் கொண்டு எழுதிவருகிறார்.

இப்படி உள்மன வக்கிரத்தை பகிரங்கப்படுத்தும் உன்னுடன் எவனாவது ஒரு பார்ப்பான் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்டான் என்றால் அதைவிட மானங்கெட்ட ஈனச்செயல் ஏதும் இருக்காது.

இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் மானங்கெட்ட ஈனப் பார்ப்பானர்கள் அதிகம்.

அருள் said...

தமிழ்துவேசம் கொண்டு நீங்கள் எங்களைப் பார்த்தால் - எங்களது நியாயம் உங்களுக்கு "பார்ப்பானதுவேசமாக"த்தான் தெரியும்.

Anonymous said...

அதில் எதையும் செய்யாமல் வீம்பு பேசித் திரியும் தருதலைகளெல்லாமும் இப்போதைக்கு இந்துக்கள் தான்''

எதையும் செய்யாமல் வீம்பு பேசித்திரிபவனெல்லாம் இந்துக்கள் என்றால்,அது என்ன மதம்?

மதம் என்றால் அது ஒரு கட்டுப்பாடோடுதான் இருக்கும். இல்லயென்றால், எப்படிப்பட்ட கயவனும், சொல்லத்தகா கொடும்பாவத்தைச்செய்து விட்டு தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளலாம்.

இதனாலேயே, ‘லூசுப்புடுக்கு’ என்றூ எழதிய இவனும், இவனோடு சேர்ந்த தேவநாதனும் இந்துவாகிறான்.
இப்படிப்பட்டவனெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க ஒரு மதம் வேண்டும். எனவேதான் நான் இம்மத்த்தை ஒரு திறந்த மடம் என்று சொன்னேன்.

தேவநாதனும் இவனும் இந்துவா ?

Anonymous said...

அதில் எதையும் செய்யாமல் வீம்பு பேசித் திரியும் தருதலைகளெல்லாமும் இப்போதைக்கு இந்துக்கள் தான்''

எதையும் செய்யாமல் வீம்பு பேசித்திரிபவனெல்லாம் இந்துக்கள் என்றால்,அது என்ன மதம்?

மதம் என்றால் அது ஒரு கட்டுப்பாடோடுதான் இருக்கும். இல்லயென்றால், எப்படிப்பட்ட கயவனும், சொல்லத்தகா கொடும்பாவத்தைச்செய்து விட்டு தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளலாம்.

இதனாலேயே, ‘லூசுப்புடுக்கு’ என்றூ எழதிய இவனும், இவனோடு சேர்ந்த தேவநாதனும் இந்துவாகிறான்.
இப்படிப்பட்டவனெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க ஒரு மதம் வேண்டும். எனவேதான் நான் இம்மத்த்தை ஒரு திறந்த மடம் என்று சொன்னேன்.

தேவநாதனும் இவனும் இந்துவா ?

Anonymous said...

’’உன் மூளைக்கு கட் அன்ட் பேஸ்டே அதிகம், அதுல இருக்குற விசயத்தக்கூட புரிஞ்சுக்குற அறிவு உங்கிட்ட இல்ல’’

நான் கேட்டதற்கு பதிலெங்கே? எனக்கு அறிவு இருக்கா இல்லையா என்ற ஆராய்ச்சி உனக்கு எதற்கு?

நீ எழுதியது:

set of religious, philosophical and cultural systems that originated in the Indian subcontinent.?

இதை தெரிந்த அறிவாளி எத்தனை பேரு? எததனை இந்துக்களுக்கு தெரியும்? உனக்காவது தெரியுமா?

ஒரு சாதாரண முசுலீமுக்கு அவன் மதம் என்ன சொல்கிறது என்று நன்றாக தெரிகிறது. ஒரு கிருத்துவனுக்கு, ஒரு சீக்கியனுக்கு, ஒரு ஜெயினுக்கு தெரிகிறது.

ஒரு சாதாரண இந்துவுக்கு தெரிகிறதா? ஏன் தெரியவில்லை? என்ன காரணம்?

ரொம்ப ஸ்டைலா திருடி எழுதிய நீ, உனக்குத்தெரிந்ததைச்சொல். பார்ப்போம்.

Indian subcontinent? Pakistan, Afaganistan, Ceylon, Burma, Nepal,

religious systems?
Philosophical system?
Cultural system?

What are the difference between them? How many know about them? Are they practicable? If so, do you pracise them?

லூசுப்புடுக்கி என்று எழுதி ஓடிவிடுவது சுலபம். சிந்தித்துப்பதில் சொல்ல உனக்கு முதலில் ‘தில்’ வேண்டும்.

I mean, you need mental courage to face some inconvenient facts.

First, one needs to accept that one has a disease. Only then, one will come forward to seek cure.

Anonymous said...

The inconvenient facts are:

Hindu religion is not a free for all. It does have codes, dos and donts.

It is a clever trick to tarnish the religion, as the anonoymous who wrote லூசுப்புடுக்கு, tried to say that anyone can be a Hindu.

In order to become an Hindu, you need to practice certain virtues in life.

It is not necessary to know about set of religious, philosophical and cultural systems that originated in the Indian subcontinent.

You can be a quite an ordinary person without knowing such things as our cut and paste matter wrote. Yet, practice of virtues is compulsory.

At the same time, தெரிந்தால் நல்லது. தெரியாவிட்டால் பொல்லாப்பில்லை.

So, Devanathan and this anonoymous who wrote லூசுப்புடுக்கு are out of this religion.

True, there is no central authority to excommunicate such criminals. But they cant claim to be a Hindus in fact.

De jure they are Hindus - as Arul has pointed out. Devanathan, and this anonoymous, all the athiestis who deny Hindu relgion as true, are de jure hindus.

De facto, they are not.

My conclusion is always the same:

HINDU RELIGION IS NOT A OPEN TOILET. RAPISTS, ROBBERS, MURDERERS, BURGLERS, CHEATS AND HOST OF MALEFACTORS cannot claim to be Hindus.

IT IS A SACRED HOUSE WHERE YOU NEED TO DISCIPLINE YOURSELF.

Anonymous said...

'Valid criticism are always welcome in hindu intellectual tradition (இந்து ஞான மரபு!). We never had central authority. This is the greatest advantage of Hindu religion. '

சென்ட்ரல் அதாரிட்டி இல்லயெனபதற்காக திருப்பதி கோயிலுள் கிடா வெட்டி சாப்பிடுவாயா ?

தேவன்நாதன் காண்டோமை தூக்கி லிங்கத்தின் மேல் போட்டு ஜல்சா பன்ணலாலாமா ?

சாமியின் நகைகளைத்திருடலாமா?

கோயில் உள்ளே அம்மண உடையில் பெண்களை ஆடவிட்டு சூட்ட்டிங்க் எடுக்கலாமா?

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவை நான் சொல்லக்காரணம்,

எல்லாமே இந்து மதத்தில் அனுமதி என்று நீ சொல்வாயானால், நீ என்னவோ பண்ணப்போகிறாய். அதற்கு ஒரு வழிதேடுகிறாய் மரியாதை கிடைக்குமென்று.

கோயில் கூடாதென்று சொல்ல்வைல்லை. கோயில் கொடிய்வர்களின் கூடாரமாகி, அவனுங்கெல்லாம் இந்துக்கள் எனச்சொல்லித்திரிவதை தடுக்கவேண்டுமென்கிறேன்.

virutcham said...

@ Arul and his spokesman

//Arul says, even if he does not like the lable Hindu to be attached to him, the Indian government calls him Hindu in official records.

Is he a Hindu or not?

Further, is there any way for him to get out of the offcial label?//

இத்தனை வருடமாக இவர்கள் இயக்கங்கள் மத/ஜாதி சார்பற்ற ஒரு அடையாளத்துக்கு ஒரு கோரிக்கையாவது ஏன் வைக்கவில்லை?
காரணம், அரசியல் சட்டத்தில் இந்த தனித்துவ அடையாளங்களுக்கு இட ஒதுக்க்கீடு என்று ஓன்று இல்லை.

உங்களுக்கு இந்து அடையாளத்தை விட்டு உண்மையிலேயே வெளியே வர வேண்டும் என்றால் அதற்க்கு கோரிக்கை வைக்க வேண்டிய இடம் இதுவா?

அருள் said...

virutcham said...

// //இத்தனை வருடமாக இவர்கள் இயக்கங்கள் மத/ஜாதி சார்பற்ற ஒரு அடையாளத்துக்கு ஒரு கோரிக்கையாவது ஏன் வைக்கவில்லை? காரணம், அரசியல் சட்டத்தில் இந்த தனித்துவ அடையாளங்களுக்கு இட ஒதுக்க்கீடு என்று ஓன்று இல்லை.// //

நல்லாதான் போட்டு தாக்குறீங்க!

அரசியல் சட்டத்துல கிறித்தவ, இசுலாமிய அடையாளங்களுக்குதான் இடஒதுக்கீடு இல்லை. மற்றபடி பவுத்தம், மதமில்லாதவர்கள், கடவுள் மறுப்பாளர்கள் எல்லோருக்கும் இடஒதுக்கீடு உண்டு.

இப்படி "இல்லாதவர்கள்" எல்லோரையும் நீங்க "இந்து" அப்படின்னு சொல்லிக்கொள்கிறீர்கள். இது உங்களுடைய பிரச்சினை. உங்களுடைய வெட்கம் கெட்ட நிலையின் வெளிப்பாடு. இதுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?

இப்போது கடைகளில் கிடைக்கும் இந்தியா டுடே (செப்டம்பர் 1, 2010) இதழின் 31 ஆம் பக்கத்தில் ஒரு செய்தியைப் படித்துப்பாருங்கள்:

"மண்ணின் வழிபாட்டு முறைகளையும் கடவுளர்களையும் ஒழித்துக்கட்ட வைதீக, பிராமண மதங்கள் எவ்வளவோ முயன்றுள்ளன. அவற்றை தாண்டி இன்னும் கூட வலுவாக இருக்கும் நாட்டார் தெய்வ வழிபாடு வரலாற்றின் மறக்கடிக்கப்பட்ட பக்கங்களை மீட்பதற்கான மூல வாசலாக திகழ்கிறது.

பெரும்பாலான மாதங்களுக்கு மண்மேடாக கிடக்கும் சிறுதெய்வ ஆலயங்களை பார்ப்பவர்களுக்கு சிறுதெய்வ வழிபாட்டை வைதீகம் மொத்தமாகவே விழுங்கிவிட்டதாக தோன்றக்கூடும். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை அந்த ஆலயங்கள் உயிர்பெற்று எழும்போது எந்த வைதீக மரபைச் சேர்ந்த கோவிலும் அதற்கு அருகில் நெருங்க முடியாது. திருச்செந்தூரிலிருந்து 14 கி.மீ. தொலைவிலிருக்கும் கற்குவேல் அய்யனார் கோவில் அதற்கு சரியான உதாரணம்." என்று போகிறது அந்தக் கட்டுரை.

இப்போது சொல்லுங்கள், கற்குவேல் அய்யனார் இந்து மதத்தில் எந்த இடத்திலாவது இருக்கிறாரா? முப்பத்து முக்கோடி தேவர்களில் அவருக்கு இடம் உண்டா?

ஒன்றை புரிந்துகொள்ள முயலுங்கள். இந்து அடையாளத்திற்கு வெளியேதான் நாங்கள் இருக்கிறோம். நீங்கள்தான், 'வெட்கம் கெட்டு' அந்த அடையாளத்தை எம்மீது திணிக்கின்றீர்.

Anonymous said...

//
ஒன்றை புரிந்துகொள்ள முயலுங்கள். இந்து அடையாளத்திற்கு வெளியேதான் நாங்கள் இருக்கிறோம். நீங்கள்தான், 'வெட்கம் கெட்டு' அந்த அடையாளத்தை எம்மீது திணிக்கின்றீர்.
//

இந்து அடையாளம் வேண்டாம் என்றால் நீங்கள் யார் என்பதை நீங்கள் தான் முதலில் விளக்கவேண்டும். இந்து என்றால் யார் என்று பெரிய பருப்பு மாதிரி கேட்கக் கூடாது.

இதுவரை தமிழகத்தில் இந்து, கிருத்தவன், இஸ்லாமியன், என்று இல்லாமல் எம்மதத்தையும் சாராதவர் என்று உங்களால் உங்கள் பெயரையும், உங்கள் குடும்பத்தாரின் பெயரையும் கெஜட்டில் பதிந்து கொள்ள முடியுமா ?

சட்டப்படி இதில் எந்த சிக்கலும் இல்லை. யார் வேண்டுமானாலும் இச்செயலைச் செய்ய முடியும்.

ஆனால், நீங்கள் இவ்வளவு வாய் கிழியப் பேசிவிட்டு அதைச் செய்யத் தயாராக இல்லை என்பதே உங்கள் பின்னூட்டம் காட்டுகிறது.

உங்கள் நிலைக்கு அடுத்தவர் மேல் ஏன் பழி போடுகிறீர்கள் ? கையாலாகாதவர்கள் தான் இப்படி நடந்துகொள்வார்கள்.

Charity begins at home. முதலில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இந்துக்கள் இல்லை என்று, எம்மதத்தையும் (கிருத்தவம், இசுலாம், பௌத்தம், சமணம், சீக்கியர், பார்சீ ...) சாராதவர் என்று பதிவு செய்துகொள்ளுங்கள். பின்னர் இங்கு வந்து பேசுங்கள்.

நாங்கள் இந்துக்கள் தான். எங்களுக்கு எந்த புத்தகத்து அறிவும் இல்லை. சமஸ்கிருதம் தெரியாது. ஆனால் நாங்கள் இந்துக்கள் தான். கிடாவெட்டிப் பொங்கல் வைப்போம், பட்டைச் சாராயமும் பன்னிக்கறியும் தின்றுவிட்டு பங்காளியைப் போட்டுத் தள்ளுவோம், கோவில் திருவிழாவில் ரெக்கார்ட் டேன்ஸ் பார்ப்போம். இதைச் செய்தால் தான் இந்து, இல்லாட்டி நான் காபிர் என்றெல்லாம் எங்களுக்கு சட்ட திட்டம் இருப்பது கூடத் தெரியாது.

கண்ட கண்ட மலப்பன்னாடைகளுக்கு எல்லாம் இந்து என்றால் யார் என்று விளக்கம் கொடுக்க எங்களுக்கு எந்த அவசியவும் இல்லை.

அருள் said...

Anonymous said...

// //இதுவரை தமிழகத்தில் இந்து, கிருத்தவன், இஸ்லாமியன், என்று இல்லாமல் எம்மதத்தையும் சாராதவர் என்று உங்களால் உங்கள் பெயரையும், உங்கள் குடும்பத்தாரின் பெயரையும் கெஜட்டில் பதிந்து கொள்ள முடியுமா ? // //

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இசுலாமியர், கிறித்தவர், சீக்கியர், பவுத்தர் அல்லாதோர் அனைவரும் இந்துக்கள் என்று கணக்கெடுக்கிறீர்கள். அதன் பிறகு இந்தியாவின் 80 % மக்கள் இந்துக்கள்தான் என்று கதையளக்கிறீர்கள்.

இது வெட்கம் கெட்ட செயல் இல்லையா? உங்களது சங்கப் பரிவாரக் கூட்டம், இந்து என்பதற்கு ஒரு வரையறைக் கொடுத்து - அதன்படி இந்துக்களைக் கணக்கெடுத்து தொலைக்க வேண்டியதுதானே?

நீங்களாக எங்களை இந்து பட்டியலில் சேர்த்துவிட்டு, இப்போது "எம்மதத்தையும் சாராதவர் என்று உங்களால் உங்கள் பெயரையும், உங்கள் குடும்பத்தாரின் பெயரையும் கெஜட்டில் பதிந்து கொள்ள முடியுமா ?" என்று கேட்பது கேடுகெட்ட நாணயக்குறைவான செயலன்றி வேறு என்ன?

நான் ஒரு இசுலாமியன் அல்ல - அதற்காக எந்த இசுலாமியராவது என்னை "இசுலாமியர் அல்ல" என்று கெஜட்டில் பதிவு செய்ய சொல்கிறாரா?

நான் ஒரு கிறித்தவன் அல்ல - அதற்காக எந்த கிறித்தவராவது என்னை "கிறித்தவர் அல்ல" என்று கெஜட்டில் பதிவு செய்ய சொல்கிறாரா?

நான் ஒரு இந்துவும் அல்ல - ஆனால் நீங்கள் மட்டும் எதற்காக அதனை கெஜட்டில் பதிவு செய்ய சொல்கின்றீர்?

பிறந்த போது எனக்கு பெற்றொர் வைத்த பெயர் அருள். அதனை மாற்ற வேண்டுமானால் நான் கெஜட்டில் பதிவு செய்வது நியாயம். ஆனால், நான் இந்து அல்ல என்று எதற்காக பதிவு செய்ய வேண்டும். எனக்கு இந்து என்று பெயர்வைக்க மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

virutcham said...

அடடா, அரைச்ச மாவும் கல்லுமே கதறி அழுது. ஏன் இப்படி திரும்பத் திரும்ப என்னைப் போட்டு அறைக்கிறேனு.
solution அப்படீன்னு ஒன்னு இருக்கு. அதை நோக்கி உங்கள் போராட்டத்தை வைங்க என்று சொன்னால், அதைக் காணோம்.

அதெப்படி முடியும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர் பற்றிக் எங்களுக்கு கவலை இல்லை. எல்லா துறைகளையும் ஆக்கிரமிக்கும் வரை வழி அடைத்து நிற்கத் தான் செய்வோம். பழி சுமக்க ஒரு சமூகத்தை வைத்து இருக்கிறோம் ...

ஆமா BC என்பது இட ஒதுக்கீடு இல்லையா? இந்து மதத்தின் ஜாதிய குறியீடுகளில் இருந்து வெளியே வாங்க. நாங்க தறோம் சரி சமமான மனித அந்தஸ்தை என்பது தானே இந்த பிற மத மாற்றங்களில் ஒரு முக்கிய அடிப்படை. இப்போ அங்கே ஒதுக்கீடு இல்லை என்றால் என்ன அர்த்தம் சாமி?

Anonymous said...

//
நீங்களாக எங்களை இந்து பட்டியலில் சேர்த்துவிட்டு, இப்போது "எம்மதத்தையும் சாராதவர் என்று உங்களால் உங்கள் பெயரையும், உங்கள் குடும்பத்தாரின் பெயரையும் கெஜட்டில் பதிந்து கொள்ள முடியுமா ?" என்று கேட்பது கேடுகெட்ட நாணயக்குறைவான செயலன்றி வேறு என்ன?

நான் ஒரு இசுலாமியன் அல்ல - அதற்காக எந்த இசுலாமியராவது என்னை "இசுலாமியர் அல்ல" என்று கெஜட்டில் பதிவு செய்ய சொல்கிறாரா?

நான் ஒரு கிறித்தவன் அல்ல - அதற்காக எந்த கிறித்தவராவது என்னை "கிறித்தவர் அல்ல" என்று கெஜட்டில் பதிவு செய்ய சொல்கிறாரா?

நான் ஒரு இந்துவும் அல்ல - ஆனால் நீங்கள் மட்டும் எதற்காக அதனை கெஜட்டில் பதிவு செய்ய சொல்கின்றீர்?
//

ங்கொய்யால.

யாருய்யா உன்ன இந்து ன்னு சொல்றது ?

உங்கள் அப்பன் ஆத்தாகிட்ட கேட்டுக்க நீ யாருன்னு.

உனக்கு அது தெரிஞ்சா இன்னேரம் தான் கெஜட்டுல நீ யாருன்னு பதிஞ்சிருப்பியே ?

உனக்கே நீ யாருன்னு தெரியாது. என்ன இந்துன்னு பார்ப்பான் சொல்லிட்டான். அதனால எனக்கு எடஒதுக்கீடு கொடு. அது என் உரிமைன்னு கூவுற ஆளு நீனு.

மொதல்ல நீ யாருன்னு நீனே முடிவு செஞ்சுக்கோ. நீ யாரு இல்லங்குறது பத்தி இங்கன எவனுக்கு கவலை இல்லை. இந்துன்னா யாருன்னு கேட்ட ஒனக்கு நீ யாருன்னு முதலில் டிஃபைன் செய்யத் தெரியனும். அப்படி தெரியாம சும்மா ஓலப்பாயில ஒண்ணுக்குப் போன மாதிரி சொள சொளன்னு பேசுறதுல ஒரு மயிராண்டிப் பிரயோசனமும் இல்ல.

அருள் said...

Anonymous said...

// //யாருய்யா உன்ன இந்து ன்னு சொல்றது ? உங்கள் அப்பன் ஆத்தாகிட்ட கேட்டுக்க நீ யாருன்னு.// //

நான் ஒரு இந்து'ன்னு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பும், இந்திய அரசியல் சட்டமும்தான் சொல்லுது. நான் சொல்லவில்லை.

சாதியால் நான் படையாட்சி, என் உறவினர்கள் எல்லோரும் வன்னியர்கள்தான்.

இனத்தால் நான் தமிழன். தமிழனுடைய நம்பிக்கைகள் திராவிட நம்பிக்கைகள் என்று கூறப்படுகின்றன. என்னுடைய கடவுள் சார்ந்த நம்பிக்கைகளை திராவிட இனத்தின் வழிவழி நம்பிக்கைகள் என்று கருதலாம்.

எனவே, படையாட்சி - வன்னியன், தமிழன் - திராவிடன் என "நான் யார்" என்பதற்கு விளக்கங்கள் இருக்கின்றன.

இதில் "இந்து"வை எதற்காக "இந்தியா" என்மீது திணிக்கிறது?

Anonymous said...

"...ங்கொய்யால.

யாருய்யா உன்ன இந்து ன்னு சொல்றது ?

உங்கள் அப்பன் ஆத்தாகிட்ட கேட்டுக்க நீ யாருன்னு.

உனக்கு அது தெரிஞ்சா இன்னேரம் தான் கெஜட்டுல நீ யாருன்னு பதிஞ்சிருப்பியே ?

உனக்கே நீ யாருன்னு தெரியாது. என்ன இந்துன்னு பார்ப்பான் சொல்லிட்டான். அதனால எனக்கு எடஒதுக்கீடு கொடு. அது என் உரிமைன்னு கூவுற ஆளு நீனு.

மொதல்ல நீ யாருன்னு நீனே முடிவு செஞ்சுக்கோ. நீ யாரு இல்லங்குறது பத்தி இங்கன எவனுக்கு கவலை இல்லை. இந்துன்னா யாருன்னு கேட்ட ஒனக்கு நீ யாருன்னு முதலில் டிஃபைன் செய்யத் தெரியனும். அப்படி தெரியாம சும்மா ஓலப்பாயில ஒண்ணுக்குப் போன மாதிரி சொள சொளன்னு பேசுறதுல ஒரு மயிராண்டிப் பிரயோசனமும் இல்ல..."


அருள் எழுப்பும் கேள்விகளை புரிந்து கொள்ளும் சக்தி, உன் பார்ப்ப்ன ஜாதி வெறியால் உனக்கியலாமல் போய்விட்டது.

அவர் சொல்வது இதுதான்:

தமிழர்களுக்கென ஒரு தெய்வவழிபாடு இருந்திருக்கிறது. அது மெல்லமெல்ல வைதீக இந்து மத்ததால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது. எனினும் இன்னும் அவற்றில் சில அழியாமல் தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் இருந்து வருகிறது (கற்குவேல் அய்யனார் போன்று). இத்தொல் மதத்தை சேர்ந்த பழந்தமிழர்களைச்சேர்ந்தவர்கள் நாங்கள் என்கிறார். நாங்கள் வைதீக இந்து மதத்தை ஏற்கவில்லை. எங்களுக்கு ஏன் இந்து என்று பெயர் சூட்டப்படுகிறது? என்று கேட்கிறார்.

விருச்சம் கேட்கிறார்: அதற்கு எதிராக ஏன் போராடக்கூடாது?

Answer: Hindu orgainsations wont allow it. According to them, the ancient god worship of Tamil people is nothing but Hindu religion only. The organisations dont distinguish between the Hindu religions as Vedic and Tamil. They vehemently condemn such attempt to distinguish between the two as a mischief played by Dravidian politicians like Periyaar.

Not only here. But also elsewhere the same story repeats. In tribal areas, the worship of tribals is called Hinduism. The organisations calim that anyone who worships nature is a Hindu, so all tribals are Hindus. Thus, pantheism, animims etc are all parts of Hindu religion.

Now, you see Virucham, there is a fundamental issue or tussle between you of the Vedic religion and people like Arul in classifying what is Hindu religion.

His blunt question to you: WHY DO YOU CALL MY ANCESTORS'S RELIGION AS YOURS. WHY DID YOU DESTROY IT?

Anonymous said...

"...நாங்கள் இந்துக்கள் தான். எங்களுக்கு எந்த புத்தகத்து அறிவும் இல்லை. சமஸ்கிருதம் தெரியாது. ஆனால் நாங்கள் இந்துக்கள் தான். கிடாவெட்டிப் பொங்கல் வைப்போம், பட்டைச் சாராயமும் பன்னிக்கறியும் தின்றுவிட்டு பங்காளியைப் போட்டுத் தள்ளுவோம், கோவில் திருவிழாவில் ரெக்கார்ட் டேன்ஸ் பார்ப்போம். இதைச் செய்தால் தான் இந்து, இல்லாட்டி நான் காபிர் என்றெல்லாம் எங்களுக்கு சட்ட திட்டம் இருப்பது கூடத் தெரியாது.

கண்ட கண்ட மலப்பன்னாடைகளுக்கு எல்லாம் இந்து என்றால் யார் என்று விளக்கம் கொடுக்க எங்களுக்கு எந்த அவசியவும் இல்லை."

அழித்தது மட்டுமில்லை. அவர்கள் வழிபாட்டை கேலியும் கிண்டலும் பண்ணியே வந்திருக்கிறார்கள் மேலே செய்திருப்பவரைப்போல.

பார்ப்பனர்களும், பிறமேல்ஜாதியனரும் செய்கிறார்கள். மறைமலை, தமிழர்களின் தொல்தெய்வங்களை, ‘பேய்த்தெய்வங்கள்’ என எழுதுவது வழக்கம்.

ஏற்கனவே இங்கு குறிப்பிடதுபோல, இவர்களும் இராபர்டு கால்டுவெல்லும் ஒன்று தமிழர் வழிபாட்டைக்கேலி பண்ணுவதில்.

Englishmen claim that they brought culture and civilisation to the dark continent like Africa, the black natives like Indians.

Similarly, it is parrppnars who claim that they taught everything to Tamils. Paarppnars say it was Agasthiyar their original first ancestor who came from Northern India who regulated the barabarous language spoken by the indigenous Tamils into a well defined grammar but, unfortunately, his grammar book was lost. He was followed by his parppanr disciple Tholkaappiyar who took it further and made the language beautiful.

Without paarppnars, there wont be Tamil language today. True!

Even today, Hindu munnani is introducing variety of vedic style worship in the village temples of Southern Tamilnadu, completely destroying the local worship. This is the charge made by Gnani in one of his O pages in A.V some years ago. He charged Muka with overlooking the mischief.

பன்னாடை, மலம், ம்சுராண்டி என்று எழுதினால் எல்லாரும் உம்மிடம் நியாயம் என மயங்கிவிடுவாரா?

சிந்தித்து எழுது.

மறைமலை, கால்டுவெல், நீ - உங்களுக்குள் கூட்டு உண்டா இல்லையா?

Anonymous said...

கால்டுவெல்லின் நேரடி சீடப்பயல் ஜோ.மலம்,

குறைந்தது 2500 வருசமா இந்துமதம் இருக்கு, நாட்டார் வழிபாட்டு முறையும் இருக்கு. ஒரு பார்ப்பு நடராசனைக் கும்பிட்டுவிட்டு அறுவாதூக்கும் பாண்டி கோயிலிலும் போய்த் திருநீறு பூசிக்கொள்ளும். வடநாட்டு மார்வாடியும் இதைச் செய்யும். இது காட்டுவது என்ன தெரியுமா ?

செம்மைப்படுத்தப்பட்ட நாட்டார் வழிபாட்டு முறையே வைதீக மதம். இரண்டுக்கும் வித்தியாசம் கிடையாது என்பதே.

ஆனா, கடந்த 50-100 வருசமா மதம் மாத்தப்பட்ட கிருத்தவப் பயலுவ எவனாச்சும் பாண்டி கோயிலுக்குப் போறானா ? அவிங்க குல தெய்வம் என்ன, மூதாதயர் யார். என்பதெல்லாம் மறந்து அவன் பேசுவதெல்லாம் யூதப்பழங்குடி கதை ஒன்றை. யார் நாட்டார் வழிபாட்டு முறையை அழிக்கிறார்களோ அவர்கள் கு.வை நக்குவது அருள் போன்ற அறிவாளிகள் செய்யும் சூப்பர் அறிவாளித்தனம்.


போய்யா, போ. நான் இந்துமதத்தைக் கேவலப்படுத்தவில்லை. நான் அதில் வாழ்பவன்.

நீ அதை பெடஸ்டலில் ஏத்தி மியூசியத்துக்கு அனுப்பப்பார்க்கும் வெள்ளைக்கார துரையின் கைக்கூலி. (எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் நாய்).

அருள் said...

Anonymous said...

// //செம்மைப்படுத்தப்பட்ட நாட்டார் வழிபாட்டு முறையே வைதீக மதம். இரண்டுக்கும் வித்தியாசம் கிடையாது என்பதே.// //

இது சுத்த பேத்தல் மட்டுமல்ல - பார்ப்பனத் திமிர். எம்முடைய மக்களின் நாட்டார் வழிபாட்டு முறை எல்லாம் செம்மைப்படுத்தப்படாதவை என்று சொல்வது உமது பார்ப்பனக் கொழுப்பின் வெளிப்பாடு.

உமக்கு கொஞ்சமாவது துணிவு, நேர்மை இருந்தால் ஏதாவது ஒரு கிராமத்தில் போய் "நாட்டார் வழிபாட்டு முறை" என்பது செம்மைப் படுத்தப்படாதது என்று கூறிப்பாருங்கள்.

ஏற்றத்தாழ்வையும் பார்ப்பன மேலாண்மையையும் தூக்கிப்பிடிக்கும் வைதீக மதத்தை, நாட்டார் வழிபாட்டு முறையுடன் ஒப்பிடுவதே தவறு. இதில் வைதீக மதம் செம்மையானது என்கிற கேடுகெட்ட விளக்கம் வேறா?

அருள் said...

Anonymous said..

// //ஒரு பார்ப்பு நடராசனைக் கும்பிட்டுவிட்டு அறுவாதூக்கும் பாண்டி கோயிலிலும் போய்த் திருநீறு பூசிக்கொள்ளும். வடநாட்டு மார்வாடியும் இதைச் செய்யும். இது காட்டுவது என்ன தெரியுமா ?// //

சும்மா அள்ளி விடாதீங்க. நீங்க வேற, நாங்க வேற! உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு ஒப்பீட்டைப் பார்ப்போம்.

சென்னை நகரிலேயே இரண்டுவகையான திருவிழாக்கள் நடக்கின்றன.

ஆடி மாதத்தில் மாரியம்மன் திருவிழாக்கள் எல்லா மூலையிலும் நடக்கின்றன. மக்கள் தீமிதி, வேப்பிலை கரகம், பாரதம் படிப்பது என்று பட்டையைக் கிளப்புகின்றனர். இங்கெல்லாம் எல்லா அரசியல் கட்சிகளும்கூட பங்கெடுத்து கொண்டாடுகின்றனர்.

கிறித்தவர்களோ, இசுலாமியர்களோ இதைக்கண்டு அச்சப்படுவது இல்லை. மசூதிக்கு முன்பு வேப்பிலைக் கரகத்துடன் போகக்கூடாது என்று எவரும் மறுப்பு கூறுவது இல்லை. காவல்துறையினரும் 'அய்யோ ஆடிமாதம் வந்து விட்டதே, மதக்கலவரம் வரும்' என்று பாதுகாப்பை பலப்படுத்துவது இல்லை. மக்கள் இயல்பாக பங்கெடுக்கின்றனர்.

அதேசமயம், பார்ப்பனர்களோ, இந்து முன்னணியோ இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்பது இல்லை. வடநாட்டு மார்வாடிகள் இதற்கு பணத்தை தருவதும் இல்லை. மக்கள் அவர்களாக செலவிடுகிறார்கள்.

ஆனால், அதற்கு பின்னால், வினாயகர் சதுர்த்தி என்று ஒரு திருவிழா வருகிறது. இந்து முன்னணி முன்னால் நிற்கிறது. மார்வாடிகள் பணத்தை வாரி இறைக்கின்றனர்.

மசூதிக்கு முன்பு வினாயகர் ஊர்வலம் போகக்கூடாது என்று மாற்று மதத்தினர் மறுப்பு கூறுகின்றனர். காவல்துறையினரும் 'அய்யோ வினாயகர் சதுர்த்தி வந்து விட்டதே, மதக்கலவரம் வரும்' என்று பாதுகாப்பை பலப்படுத்துகின்றனர்.

ஆனால் ஒரு வேடிக்கை பாருங்கள் - ஆடிமாத மாரியம்மன் கொண்டாட்டங்களில் மிகப் பெரும்பான்மையான மக்கள் பங்கேற்கின்றனர். ஆனால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களைக் இந்து முன்னணி சங்கப் பரிவாரக் கூட்டத்தைத் தவிர, தமிழர்கள் எவரும் கண்டுகொள்வது இல்லை.

மாரியம்மன் திருவிழாவும் இந்து, விநாயகர் சதுர்த்தியும் இந்து என்றால் - ஏன் இந்த மாபெரும் வேறுபாடு?

Anonymous said...

"இந்து ஞான மரபு மூன்று அடுக்குகள் கொண்டது. முதல் அடுக்கு என்பது பலநூறு பழங்குடி, நாட்டார் தெய்வ நம்பிக்கைகளினால் ஆனது. மூதாதை வழிபாடு, ஆவி வழிபாடு, இயற்கை வழிபாடு ஆகிய மூன்றின் கலவை அது. அடுத்த தளம் நாம் பரவலாக அறியும் பெருந்தெய்வ வழிபாடுகளினால் ஆனது. மூன்றாம் தளம் தூய தத்துவத்தால் ஆனது.

முதல் அடுக்கில் தெய்வ உருவகம் என்பது நடைமுறைத்தேவை சார்ந்ததாக உள்ளது. நடவுக்கு ஒரு தெய்வம், அறுவடைக்கு இன்னொரு தெய்வம் என. பலியும் கொடையும் அதன் வழிபாட்டு முறைகள். இரண்டாம் அடுக்கில் தெய்வ உருவகம் என்பது முழுமுதல்தெய்வம் என்ற கருதுகோளாக உள்ளது. படைத்தல் காத்தல் அழித்தலைச் செய்யும் பிரபஞ்ச அதிபன். அதன் வழிபாடு ஆராதனை,பக்தி.

மூன்றாம் அடுக்கில் தெய்வ உருவகம் என்பது முழுமையான தத்துவ உருவகமே. பிரம்மம் போல. அதன் வழிமுறை யோகம், தியானம்.

இம்மூன்று உருவகங்களும் ஒன்றோடொன்று பிணைந்து ஒரேசமயம் இருந்துகொண்டிருக்கின்றன ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாகிவந்து கொண்டிருக்கிறது. ஒன்று இன்னொன்றாக மாறிக் கொண்டுமிருக்கிறது."

இப்படி ஒரு எழுத்தாளர் சொல்கிறார். அவர் நிச்சயம் உங்களையும், என்னையும், விட நன்றாகவே இவ்விசயத்தில் தேர்ச்சி பெற்றவர்.

ஏன் விநாயகர் சதுர்த்தின்னா துலுக்கனுங்க துள்றானுக, மாரியாத்தா தீமிதின்ன்னா கண்டுகுறதில்லன்னு மேம்போக்கா மேஞ்சுட்டு வந்து கேக்குற மாபெரும் அறிவாளியாக நீங்கள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நீங்கள் நினைப்பது மட்டுமே உண்மை என்று சீராக சிந்திக்கக் கூடிய மனிதன் எவனுமே ஏற்றுக்கொள்ள மாட்டான்.

Anonymous said...

//
வைதீக மதத்தை, நாட்டார் வழிபாட்டு முறையுடன் ஒப்பிடுவதே தவறு. இதில் வைதீக மதம் செம்மையானது என்கிற கேடுகெட்ட விளக்கம் வேறா?
//

வைதீக மதம் என்பது பல நூறு ஆண்டுகளாக நாட்டார் வழிபாட்டு முறையிலிருந்து செம்மைப்படுத்தப்பட்டது என்பது அதன் அர்த்தம்.

செம்மைப்படுத்தப்பட்டது என்றால் சில நூறு பேர் வழிபட்ட தெய்வத்தை கோடானகோடி பேர் வழிபடுவது. காலங்காலமாக இந்து மதத்தில் இது நடந்துவருவது.


ஒரு நாட்டார் தெய்வத்தை வழிபடும் ஒரு ஜாதி மேலெழும் போது அதன் தெய்வமும் மேலெழும். பல கோடிபேர் வழிபாடுவார்கள். கோயில்கள் எழும், எழுப்பப்படும், செம்மைப்படுதல் என்பது அதுவே.

உம்மைப்போன்ற ஜாதிவெறி பிடித்து பகுத்தறிவு என்று வைரஸ் வந்து தாக்கி சூம்பிய மூளையுள்ளவனுக்கெல்லாம் இந்து மத தத்துவங்கள், வாழ்க்கை முறைகள் எல்லாம் புரியாது. மண்டையில் ஏறாது. உனக்குத் தெரிந்ததெல்லாம் கம்மூனிசம், பெரியாரியம், வெங்காயம் என்ற புடுங்கிக் கொள்கைகள். அதைவைத்து ஒன்றும் புடுங்க முடியாது.

மாரியாத்தா கோவில் திருவிழா என்று சொல்லி வன்னிய ஜாதிவெறி நாய்கள் காசு வாங்கி தலித்துகளை அனுமதிக்காது திருவிழா நடத்திய ஜாதி வெறி பிடித்தவர்களை சப்போர்ட் செய்யுற ஆள் தானே நீ.

Anonymous said...

"ஏன் விநாயகர் சதுர்த்தின்னா துலுக்கனுங்க துள்றானுக, மாரியாத்தா தீமிதின்ன்னா கண்டுகுறதில்லன்னு மேம்போக்கா மேஞ்சுட்டு வந்து கேக்குற மாபெரும் அறிவாளியாக நீங்கள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நீங்கள் நினைப்பது மட்டுமே உண்மை என்று சீராக சிந்திக்கக் கூடிய மனிதன்
எவனுமே ஏற்றுக்கொள்ள மாட்டான்" இது பதிலல்ல. இது சமாளிப்பு.

அருள் சொல்வதென்னவென்றால், இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்றால் பொது மக்கள் பயப்படுகிறார்கள்.

விநாயகர் ஒரு தமிழ்நாட்டுத்தெய்வமல்ல. மராட்டியர்களின் தெய்வம். மராட்டியரான திலக் விநாயக்ர் ஊர்வலத்தை ஒரு அரசியல் இயக்கமாக்கினார். அது நல்ல பலனைத் தந்தது. அதையே இந்து முன்னனி தமிழ்நாட்டில் செய்து வருகிறது.

அது தமிழ்த்தெய்வமாக இருந்திருந்தால், இந்து முன்னனி சட்டைபண்ணாது. மார்வாடிகளும் பணம் தரமாட்டார்கள்.

Anonymous said...

’...இம்மூன்று உருவகங்களும் ஒன்றோடொன்று பிணைந்து ஒரேசமயம் இருந்துகொண்டிருக்கின்றன ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாகிவந்து கொண்டிருக்கிறது. ஒன்று இன்னொன்றாக மாறிக் கொண்டுமிருக்கிறது."

இப்படி ஒரு எழுத்தாளர் சொல்கிறார். அவர் நிச்சயம் உங்களையும், என்னையும், விட நன்றாகவே இவ்விசயத்தில் தேர்ச்சி பெற்றவர்....”

ஜெயமோகந்தான் அந்த எழுத்தாளர். பார்ப்ப்னீய ஆதரவாளரான இவர் எழுதுவதற்கு முன்பேயே என்ன எப்படி சொல்லவேண்டும் என முடிவெடுத்துத்தான் எழுத ஆரம்பிப்பார்.

இவரின் கருத்தையே இங்கு பார்த்தாலும், முதலடுக்கில் வருவது நாட்டார் வழிபாடு. அவர்களின் இறைக்கொள்கை.

இதில் என்ன தவறு கண்டார்கள்? இதனுடன், இரண்டாவது அடுக்கான ‘பெருந்தெய்வ வழிபாட்டை’ அதாவது ஒரே கடவுள் வழிபாட்டை ஏன் இணைக்க வேண்டும்? தமிழ் கிராமத்து மக்கள் கேட்டார்களா? இங்குதான் சூழ்ச்சி வருகிறது. அவர்களை ஏமாற்றி அவர்கள் இறைவழிபாட்டைச்சிதைக்கும் நோக்கத்துடனே இந்த செயல் நடைபெற்றது. இதை மன்னர்கள் பிற உயர்ஜாதிகளுடன் சேர்ந்து செய்தார்கள்!

Anonymous said...

”...இம்மூன்று உருவகங்களும் ஒன்றோடொன்று பிணைந்து ஒரேசமயம் இருந்துகொண்டிருக்கின்றன ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாகிவந்து கொண்டிருக்கிறது. ஒன்று இன்னொன்றாக மாறிக் கொண்டுமிருக்கிறது."
மாறுவதும் உருமாறுவதும் இப்போது இயற்கை. ஆனால் அதற்கென்று ஒரு தொடக்கம் இருக்கவேண்டும். இருந்தது. அதொடக்கமில்லாமலிருந்தால், இன்று நாட்டார் வழ்க்கியல் அப்படியே இருந்து ஒரு தமிழருக்கென்று தனிக்கலாச்சாரம் இருக்கும். இன்று இருப்பது வைதீக பார்ப்ப்னீயம் கலந்த ஒன்றே. இருப்பினும் ஆங்காங்கே கற்குவேல் அய்யனார் போன்று, தீமிதி, அலகு குத்தல், சாமியாட்டம், கருப்பசாமி வழிபாடு, போன்று இருக்கத்தான் செய்கிறது. அதையும் அழிக்க வைதீக பார்ப்ப்னீயத்தை கிராமங்களுக்கு கொண்டு வருகிறது இந்துத்வா இயக்கங்கள் என்பதே இங்கு அருள் வைக்கும் குற்ற்ச்சாட்டு.

Anonymous said...

”...செம்மைப்படுத்தப்பட்டது என்றால் சில நூறு பேர் வழிபட்ட தெய்வத்தை கோடானகோடி பேர் வழிபடுவது. காலங்காலமாக இந்து மதத்தில் இது நடந்துவருவது.


ஒரு நாட்டார் தெய்வத்தை வழிபடும் ஒரு ஜாதி மேலெழும் போது அதன் தெய்வமும் மேலெழும். பல கோடிபேர் வழிபாடுவார்கள். கோயில்கள் எழும், எழுப்பப்படும், செம்மைப்படுதல் என்பது அது”

முதலில் திமிராக எழுதிவிட்டு இப்போது சமாளிப்பு!

இப்போது சொல்வது: வைதீக மதம் நாட்டார் மதத்தால் செம்மைப்படுத்தப்பட்டதாம்.

அப்படியென்றால், பார்ப்ப்னர்கள் ஏன் இன்னும் கருப்பசாமியை கும்பிட மறுக்கிறார்கள். ஏன், முனியச்சாமிக்கு படையல் போடவில்லை? ஏன் அம்மனுக்கு ஆடிக்கூழ் ஊற்றி கருவாட்டைப்படைக்கவில்லை? ஏன் கருப்பசாமிக்கு சாரயம் கொடுக்கவில்லை?

வைதீக மதம் இன்னும் செம்மைப்படுத்தப்படவில்லையோ? அட தேவுடா!

Anonymous said...

மெக்காலே சொன்னார்: ”இந்தியர்களிடம் இருப்பது ஒரு காட்டுமிராண்டிக் கலாச்சாரம். இவர்களுக்கு நம் ஆங்கில அறிவை புகட்டினால் – ஐரோப்பிய விஞ்ஞானம், ஐரோப்பிய இலக்கியம் போன்று- இவர்கள் நாகரிக மனிதர்களாகி நமக்கும் உதவியாக இருப்பார்கள்”. அவர் இப்படி சொன்ன பிறகுதான் (He submitted his proposal for English medium of instructions in Indian Universities, with such introduction). ஆங்கில வழிக்கல்வி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இராபர்டு கால்டுவெல் சொன்னார் (சானார்களும் பேய்த்தெய்வ வழிபாடும். Saanaars and Demonology என்ற நூலில்) தமிழர்கள் வணங்குபவை தெய்வங்களல்ல; அவை பேய் வழிபாடுகளாகும். அவர்களை மீட்டு நம் இயேசு வழிபாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். இங்கு கால்டுவெல் சொன்னது கருப்பசாமி, சுடலை, இசக்கி, பேச்சி போன்ற தெய்வங்களை மட்டுமல்ல. சுயம்புலிங்க சுவாமி (a favorite God – Lord Siva- of Uvari Nadaars. Uvari is 16 km from Idyangudi, the place where Caldwell lived and finally buried), திருச்செந்தூர் முருகன், பார்வதி, திருவைகுண்டம் நவ திருப்பதிகள் – அனைத்தையும் சேர்த்துத்தான் சொன்னார். Srivaikuntam is so close to Nazereth where all Nadaars were converted to Chrisitianity by Robert Caldwell.

இவர்கள் காலம் 19ம் நூற்றாண்டு, பின் நம் நூற்றாண்டு. இவர்கள் நம்மை காட்டுமிராண்டிகளெனக் கண்டனர்.

இவர்கள் மதம் ஆபிரகாமிய மதமென்றும் அஃது உருவானது அன்னியநாட்டிலென்றும் எனவே இவை அன்னிய மதம் என்றும் இழிக்கப்படுகிறது அல்லது சொல்லப்படுகின்றது.

இவர்கள் வருவதற்கு முன் – நம் அனாமதேயர் சொன்னது போல 2500 ஆண்டுகளுக்கு முன் – தமிழ்நாட்டுக்கு வந்தது வைதீக மதம். அதன் பெயர் இந்து மதமல்ல. சனாதன மதம். அது உதித்தது சிந்து சமவெளிக்கரையில், அப்போதும், அதற்கு முன்பும் தமிழகத்தில் மக்கள் தமிழ்ப்பேசி வாழ்ந்தார்கள். அவர்களுக்கு எப்படி ஆபிரகாமிய மதங்கள் அன்னிய மதமோ, அப்படியோ சனாதன மதமும் அன்னியமதமே. ஆனால், சனாதன மதம் நாட்டார் மதத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதை அழித்து ஓரளவு வெற்றி கண்டும் விட்டது என்பது ஜெயமோகன் எழுதியதிலிருந்து தெரியலாம்.

1. கால்டுவெல், 2. மெக்காலே, 3. சனாதனவாதிகள் – இந்த மூவருக்கும் ஒரே அஜெண்டா. இவர்களில் மூன்றாமவர் காலத்தால். மூத்தவர்: எனவே, முதலிருவருக்கு இவரே முன்னோடி---. எனவேதான் கூட்டு என்றேன்.

நாட்டார் மதம் இன்னும் ஓரள்வுக்கு இருக்கிறது என்பது நாம் தமிழக கிராமங்களுக்குச்சென்றால் கண்கூடு. ”அம்மதத்தைச்சேர்ந்தவன் நான்” என்கிறார் அருள்.

நீங்கள் ஆர்? அவர் உங்கள் மதமா? அவரை ஏன் இந்து என்று கட்டாயப்படுத்தி ரிகார்டு எழுதுகிறீர்கள்? சனாதனமத்த்தின் வழித்தோன்றலான – ‘மலம்..மலம்’ என்றெழிதி இன்புறும் நீயும் கால்டுவெல்லும் கள்ளக்கூட்டுதானே?

Anonymous said...

மெக்காலே சொன்னார்:

”இந்தியர்களிடம் இருப்பது ஒரு காட்டுமிராண்டிக் கலாச்சாரம். இவர்களுக்கு நம் ஆங்கில அறிவை புகட்டினால் – ஐரோப்பிய விஞ்ஞானம், ஐரோப்பிய இலக்கியம் போன்று- இவர்கள் நாகரிக மனிதர்களாகி நமக்கும் உதவியாக இருப்பார்கள்”. அவர் இப்படி சொன்ன பிறகுதான் (He submitted his proposal for English medium of instructions in Indian Universities, with such introduction). ஆங்கில வழிக்கல்வி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இராபர்டு கால்டுவெல் சொன்னார் (சானார்களும் பேய்த்தெய்வ வழிபாடும். Saanaars and Demonology என்ற நூலில்)
"தமிழர்கள் வணங்குபவை தெய்வங்களல்ல; அவை பேய் வழிபாடுகளாகும். அவர்களை மீட்டு நம் இயேசு வழிபாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். "

இங்கு கால்டுவெல் சொன்னது கருப்பசாமி, சுடலை, இசக்கி, பேச்சி போன்ற தெய்வங்களை மட்டுமல்ல. சுயம்புலிங்க சுவாமி (a favorite God – Lord Siva- of Uvari Nadaars. Uvari is 16 km from Idyangudi, the place where Caldwell lived and finally buried), திருச்செந்தூர் முருகன், பார்வதி, திருவைகுண்டம் நவ திருப்பதிகள் – அனைத்தையும் சேர்த்துத்தான் சொன்னார். Srivaikuntam is so close to Nazereth where all Nadaars were converted to Chrisitianity by Robert Caldwell.

இவர்கள் காலம் 19ம் நூற்றாண்டு, பின் நம் நூற்றாண்டு. இவர்கள் நம்மை காட்டுமிராண்டிகளெனக் கண்டனர்.

இவர்கள் மதம் ஆபிரகாமிய மதமென்றும் அஃது உருவானது அன்னியநாட்டிலென்றும் எனவே இவை அன்னிய மதம் என்றும் இழிக்கப்படுகிறது அல்லது சொல்லப்படுகின்றது.

இவர்கள் வருவதற்கு முன் – நம் அனாமதேயர் சொன்னது போல 2500 ஆண்டுகளுக்கு முன் – தமிழ்நாட்டுக்கு வந்தது வைதீக மதம். அதன் பெயர் இந்து மதமல்ல. சனாதன மதம். அது உதித்தது சிந்து சமவெளிக்கரையில், பரவியது கங்கைச்சமவெளியில். வேதங்கள் சிந்துக்கரையில் எழுதப்பட்டன; உபனிடதங்கள் கங்கைக்கரையில்.

அப்போதும், அதற்கு முன்பும் தமிழகத்தில் மக்கள் தமிழ்ப்பேசி வாழ்ந்தார்கள். அவர்களுக்கு எப்படி ஆபிரகாமிய மதங்கள் அன்னிய மதமோ, அப்படியோ சனாதன மதமும் அன்னியமதமே. ஆனால், சனாதன மதம் நாட்டார் மதத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதை அழித்து ஓரளவு வெற்றி கண்டும் விட்டது என்பது ஜெயமோகன் எழுதியதிலிருந்து தெரியலாம்.

1. கால்டுவெல், 2. மெக்காலே, 3. சனாதனவாதிகள் – இந்த மூவருக்கும் ஒரே அஜெண்டா. இவர்களில் மூன்றாமவர் காலத்தால். மூத்தவர்: எனவே, முதலிருவருக்கு இவரே முன்னோடி---. எனவேதான் கூட்டு என்றேன்.

நாட்டார் மதம் இன்னும் ஓரள்வுக்கு இருக்கிறது என்பது நாம் தமிழக கிராமங்களுக்குச்சென்றால் கண்கூடு. ”அம்மதத்தைச்சேர்ந்தவன் நான்” என்கிறார் அருள்.

நீங்கள் ஆர்? அவர் உங்கள் மதமா? அவரை ஏன் இந்து என்று கட்டாயப்படுத்தி ரிகார்டு எழுதுகிறீர்கள்?

சனாதனமத்த்தின் வழித்தோன்றலான – ‘மலம்..மலம்’ என்றெழிதி இன்புறும் நீயும் கால்டுவெல்லும் கள்ளக்கூட்டுதானே?

Anonymous said...

//ஆனா, கடந்த 50-100 வருசமா மதம் மாத்தப்பட்ட கிருத்தவப் பயலுவ எவனாச்சும் பாண்டி கோயிலுக்குப் போறானா ? அவிங்க குல தெய்வம் என்ன, மூதாதயர் யார். என்பதெல்லாம் மறந்து அவன் பேசுவதெல்லாம் யூதப்பழங்குடி கதை ஒன்றை. யார் நாட்டார் வழிபாட்டு முறையை அழிக்கிறார்கள//

idharku yaen padhil varuvadhillai?

Anonymous said...

'பாண்டி கோயில்’ என்ன இழிவும் இழக்காரமும்.

மலையாளிகள் தமிழனை இழிவு படுத்த இச்சொல்லை பயன்படுத்துவர்.

நீரும்தான் தமிழரை இழிவுபடுத்த ஆசைப்படுகிறவர்தான் என்பது எப்போதே தெளிவாகிவிட்டது.

நான் இங்கு கிறுத்தவர் சார்பாக எழுதவில்லை. எனவே கிறுத்தவருக்கோ கிறுத்துவமிசுனோர்களுக்கோ வரிந்துகட்டிக்கொண்டு இங்கே எழுதிக்கொண்டிருக்கவில்லை. என் பார்வை ஒரு மூன்றாம் மனிதனின் பார்வை.

எனவேதான்: அருள் சொல்கிறார், அருள் நினைக்கிறார். அருள் கருத்து என்று அவர் கருத்துடன் இணையாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இருக்கட்டும். உம் கருத்தை மட்டுமே பார்ப்போம்.

அடுத்து...

Anonymous said...

கிறுத்தவரும் இசுலாமியருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவர்கள் இந்துக்களை மத மாற்றம் செய்யும்போது, அவ் இந்துக்களின் பழைய மதத்தை முழுக்கமுழுக்க துர்லபம் செய்து தூக்கியெறிந்துதான் தம் மதத்தில் சேர்த்த்துக்கொள்வர்.

பேச்சி, இசக்கி, கருப்பன, சுப்ப்ன், சுடலை என்று மட்டுமில்லாமல், சிவன், பார்வதி, முருகன், பிள்ளையார், விஸ்ணு என்று அனைத்தையும் தூக்கியெறிந்து விடவேண்டும். இசுலாம் இதில் கண்டிப்பு. அவர்கள் இந்து மதக்கலாச்சாரம் அனைத்தையும் எறிந்து விடச்சொல்கிறார்கள்.

கிறுத்துவம் கொஞ்சம் விட்டுக்கொடுக்கிறது.

The Trichy brahmin christians are allowed to retain some brahminical culture of decorating their houses. The Church allows celebration of pongal etc.

I have already told you Mr to read the Tamil brahmin Glady's blog titled Tamil Brahmin Christian. He puts a picture of an orthodox-dressed TB.

What about Sadhu Sundar singh? He was a Christian preacher who dressed like a Hindu sanyasi!

நான் நிறைய த.பி.கிறுத்த்வர்களைப்பார்த்து பழகியிருக்கிறேன். அவர்கள் சொன்ன பின்னர்தான் அவர்கள் கிறுத்துவர்கள் என எனக்குத் தெரிந்தது.

ஆனால், சனாதனவாதிகள் ஏன் அவர்களை பின்பற்றவேண்டும்? அருள் போன்ற பாண்டிகளை இந்து என்று கட்டாயப்படுத்த தெரியும். ஆனால் அருள் வணங்கும் ‘அம்மன்’களையும், கொடை உற்சவங்களையும் ஏன் புறக்கணிக்கிறார்கள்?

நான் வெஜ் சாப்பிடவேண்டாம். அது இல்லாமல் கொடை உற்சவம் முதல் மூன்று நாட்களுக்கு நடக்குமே அப்போது சனாதனவாதிகள் எங்கே போனார்கள்?

Dont compare yourself to Christians and Muslims. They reject pandis' religion in toto.

What about you? Why do you reject their religion? Why dont you accept karuppasamy, munian, sudalai, karkuvel aiyanaar, isakki?

Which Madras Parppanar present padaiyal before Muniyasami who is in the temple in front of Pallavan Headquarters near Theevuththida;?

Pandis say Muniasaami protect the drives when they are on the move. Muniasaami has the power to ward off evils spirits.

பெரியபாளையத்தமனுக்கு ஆடிக்கூழூற்றி கருவாடுக்குழம்பு படைக்கவேண்டா. கூழ் மட்டுமே ஊற்றலாமே?

Give your answer.

virutcham said...

இந்து மதத்தில் ஒரு குறிப்பிட்ட வழிபட்டு முறை என்று இல்லை என்பது ஏற்றுக் கொள்ளப் பட்ட விஷயம் இல்லையா?
மனிதனின் விருப்பு வெறுப்பு பழக்க வழக்கங்களுக்கேற்ற்ப உணவு, உடை ஏற்படுத்திக் கொள்வது போல் தான் இதுவும். ஒரு பெரும் பல் பொருள் அங்காடிக்குச் சென்றால் எல்லோரும் ஒரே பொருளையா வாங்குகிறோம்? உபயோகம் என்று பார்த்தால்அடிப்படையில் ஒன்றாக இருக்கும். அதாவது உடை என்றால் அதற்கு என்ன உபயோகமோ அது என்ன துணியால் ஆனதாக இருந்தாலும் உடுத்திக் கொள்ளவே வாங்குவோம்.புத்தகம் என்றால் அவரவருக்கு எது பிடிக்குமோ அது.

இந்த சுதந்திரம் தான் இந்து மதத்தின் சிறப்பு.
ஒருவருக்கு அப்பாவாக இருக்கும் தெய்வம் இன்னொருவருக்கு தாயுமானவராக, தவழும் கண்ணனாக, தீமைகளை அழிக்கும் காளியாக, சாந்த லஷ்மியாக, கலைகளின் வடிவமாக, பாலகன் முருகனாக, காவல் தெய்வம் கருப்பண்ண னாக, விக்னங்கள் தீர்க்கும் விநாயகனாக ...

இப்படித் தான், இப்படி ஏன் இல்லை என்ற விவாதம் இந்த அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகிறது.

கூழ் ஊற்றி கிடா வெட்டி வழிபடுவது ஒரு வழக்கம். மாவிளக்கு போட்டு, விளக்கு பூசை செய்து வழிபடுவது ஒரு வழக்கம். அவரவர் விருப்பம். இதை எல்லாம் செய்யாமலும் சிலர் தனக்கென்று தனி வழி வைத்து இருப்பார்கள். எல்லோரும் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றால் இந்து மதத்தில் இருக்கும் வழிபாட்டு முறைகளுக்கு ஒரு ஆயுள் போதாது

அருள் said...

விருட்சம் அய்யா,

எங்களது "நாட்டார் வழிபாடு" கீழானது, உங்களுடைய "வைதீக மதம்" உயர்வானது என்று ஏன் கூறுகிறீர்கள்? ஒரே மதம் என்றால் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?

எங்கள் மதத்தை எதற்காக "மேம்படுத்த" முயற்சிக்கிறீர்கள்?

virutcham said...

முதல்ல நீங்க தெளிவா இருக்கீங்களா சொல்லுங்க.
என்னை ஏன் இந்துவா இருக்கச் சொல்லி வற்புருத்தறீங்க னு புலம்புனீங்க.
இப்போ 'எங்களது' நாட்டார் வழிபாட்டு முறை கீழனதா ? என்று கேள்வி எழுப்புறீங்க.
சிவன் வந்து அருளிய தமிழ் மறை என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் இந்த அவதாரங்கள் எல்லாம் பார்ப்பன சதி அப்படீன்னு சொல்லுறீங்க.

இப்போ உங்க பிரச்னை தான் என்ன?

நாட்டார் வழிபாட்டு முறைகளை இந்து மதத்தின் உள் அல்லாமல் வேறு பெயர் வச்சுக்கணுமா?
அப்படி வைத்துக் கொண்டாலும் சிவனை தான் கருப்பசாமியாக, பார்வதியை தான் காளியாகவும் வழிபடுகிறார்கள் என்பது இல்லை என்று ஆகி விடுமா?
இப்போ எல்லாத் தரப்பினரும் சில பொது வழிபாட்டு முறைகளை பின்பற்றராங்களே அதை எல்லாம் தவிர்க்கச் சொல்லி, சில மதங்கள் வைத்து இருக்கும் கட்டுப்பாடுகளை போல் விதித்து அப்படிதான் இனிமேனு சொல்லிடலாமா?

virutcham said...

நாட்டார் வழிபாட்டு முறைகள் கீழானதா இல்லையா என்ற விவாதமே வேண்டாம்.
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் இந்த வித்தியாசங்களை விருப்பு வெறுப்பற்ற நிலையில் இருந்து பாருங்கள்.
அதாவது கடவுள் என்பவர் தண்டிக்கக் கூடியவர். திருப்திப் படுத்தினா அருளக் கூடியவர் என்பது ஒரு வகை.
கடவுளை நான் குழந்தையாக பார்க்கும் போது அக் குழந்தை என் கையில். அல்லது என் குழந்தை பருவத்தில் என் விளையாட்டு தோழன்.
சிறுவனாகப் பார்க்கும் போதும் அதே தான் விளையாட்டுத் தோழன். குமாரனாகப் பார்க்கும் போது வழி நடத்தும் நண்பன். அம்மை அப்பனாகப் பார்க்கும் போது நான் அவர்கள் கையில் குழந்தையாக. இது ஒரு வித நெருக்கத்தை, உரிமையை, ஏன் கோபித்துக் கொள்ளும், தோளில் சாய்ந்து அழும், கை கோர்த்து சிரிக்கும் உரிமையைக் கூடக் கொடுக்கும். என்னை தண்டிக்கும் உயரத்தில் கடவுள் இருப்பதை விட எனக்கு அருகில் துணையாக கூட வரும் கடவுள் எனக்கு அதிக நம்பிக்கையைக் கொடுக்கிறது. இப்போ இதை தவறு என்று நீங்கள் ஏன் சொல்லுகிறீர்கள்? உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி வைத்துக் கொள்ளுங்களேன்.

Anonymous said...

எனக்குத் தெரிந்த பல பிராம்மணர்களுக்கு மாரியம்மன் தான் குலதெய்வம்.

அருள் said...

virutcham said...

// //உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் இந்த வித்தியாசங்களை விருப்பு வெறுப்பற்ற நிலையில் இருந்து பாருங்கள்.// //

தமிழ்நாட்டு மக்களில் மிகப்பெரும்பானமையானோருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், அவர்களில் எவருக்கும் "இந்துமத வெறி" கிடையாது. இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரும்பான்மையானோர் "வைதீக" மதத்தைப் பின்பற்றுவோர் அல்ல.

தமிழர்கள் மதவாதிகள் அல்ல. அவர்களுக்கு மதம் ஒரு பெரிய விஷயமோ, சிக்கலோ அல்ல. தமிழ்நாட்டின் நாட்டார் தெய்வ நம்பிக்கையை பின்பற்றும் மக்கள் எவரும், இசுலாமியர்களையோ, கிறித்தவர்களையோ - வேறுபடுத்தி பார்ப்பது இல்லை.

இன்னும் சொல்லப்போனால் நாகூர் ஆண்டவரும் வேளாங்கன்னி மாதாவும் கூட அவர்களது தெய்வம்தான். இப்போது சென்னையின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள "வேளாங்கன்னி மாதா பாதயாத்திரைக் குழு"வின் பதாகை(பேனர்)களில் தமிழர்களின் முகங்கள் குங்மம், திருநீற்றுடன் உள்ளன.

நன்றாக சிந்தித்துப் பார்த்தால் "தமிழர்களுக்கு கடவுள் உண்டு, ஆனால் மதம் இல்லை" - என்பது விளங்கும். இங்குள்ள கிறித்தவ தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும்தான் மதம் என்ற ஒன்றை பின்பற்றுகின்றனர். மற்றவர்களுக்கு அவரவர் நம்பிக்கைகள் மட்டுமே.

மிகக்குறிப்பாக, தமிழர்கள் வேறு எந்தஒரு நம்பிக்கையையும் தாழ்வாகவோ கீழானதாகவோ நினைப்பது இல்லை.

இந்திரன் என்கிற கடவுள், ரிக் வேதம் இவற்றோடு வந்த பார்ப்பனர்கள் இந்த நாட்டின் நம்பிக்கைகளை வைதீக இந்து நம்பிக்கையாக மாற்றினீர். கூடவே, சாதி ஏற்றத்தாழ்வு, தீண்டாமையைத் திணித்தீர்கள்.

இப்போது, நாமெல்லாம் இந்து - இசுலாமியரும் கிறித்தவரும் வேறு என்று எமது மக்களைப் பிரிக்கத் துடிக்கின்றீர். அதற்காக எங்களை இந்து பட்டியலில் சேர்க்கின்றீர். இதைத்தான் நான் தவறு என்கிறேன்.

virutcham said...

திரும்பத் திரும்ப திரிக்கப் பட்ட வரலாறையே சொல்லி விடுவதால் பிரச்னை தீராது.
//
"தமிழர்களுக்கு கடவுள் உண்டு, ஆனால் மதம் இல்லை" //
சரி. இதுக்கு என்ன தீர்வு? என்ன அடையாளம் வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்?
நாட்டார் வழிபாடு செய்யும் அனைவரும் ஒரே ஜாதி என்று ஒரு பொது அடையாளம் வைத்துக் கொள்ளலாமா? மத அடையாளம் வேண்டாம் என்றால் தமிழன் என்ற பிராந்திய அடையாளம் போதும் என்று அர்த்தம். அப்போ பிற மதத்தில் இப்போ இருக்கும் தமிழர்களை எப்படி அழைப்பது?

Anonymous said...

//Arul - இந்திரன் என்கிற கடவுள், ரிக் வேதம் இவற்றோடு வந்த பார்ப்பனர்கள் இந்த நாட்டின் நம்பிக்கைகளை வைதீக இந்து நம்பிக்கையாக மாற்றினீர். கூடவே, சாதி ஏற்றத்தாழ்வு, தீண்டாமையைத் திணித்தீர்கள்.//

Bramins were not rulers. They were and are less than 5% of the total population.

How do you beleive the above theory. Even if it is true, you better, blame your forefathers than bramin.

Anonymous said...

"...எனக்குத் தெரிந்த பல பிராம்மணர்களுக்கு மாரியம்மன் தான் குலதெய்வம்"

’சக்தி வழிபாடு’ பார்ப்பனீய அல்லது வைதீக மத்ததில் உள்ள வழிபாடுகளில் ஒன்று. அதற்கென்று ஒரு கூட்டம் ஆதியிலிருந்து உண்டு; அதில் பார்ப்ப்னர்களும் உண்டு.

பாரதியார் அதைச்சேர்ந்தவர்.

காஞ்சி சங்கரமடம் அதற்காகவே உருவாக்கப்பட்டது.

பார்ப்பனீயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சக்தி வழிபாடும் ஆதி தமிழர்களில், அதாவது மலம் விரும்பியால், ‘பாண்டிகள்” என்று இழித்துரைக்கப்பட்ட தமிழ்மக்களின் சக்தி வழிபாடும் வெவ்வேறாகும்.

அக்காலம் தொட்டு, பாண்டிகளின் அம்மன்களை பார்ப்ப்னீய சக்தி வழிபாட்டின் இணைக்கும் முயற்சிகள் நடந்தேறின. ஓரளவுக்கு வெற்றி.

எடுத்துக்காட்டாக, பாண்டிகளின் மீனாட்சி இன்று ஒரு வைதீக தெய்வம். சிவனின் மனைவி. கள்ளழகரின் தங்கை. இதேபோல, கன்யாகுமரி அம்மன்.

ஒரிஜனலாக இவ்வம்மன், மீனவர்களின் தெய்வம். இன்று சிவனின் மனைவி.

சமயபுரம் அம்மன் அன்று ஒரு காட்டுத்தெய்வம் கொற்கை. இன்று சிரங்கநாதரின் தங்கை.

குலசேகரபட்டணம் (தசரா புகழ்) முத்தரம்மன் தலித்துகளின் ஆதி தெய்வம் அங்கே.

இன்று, சிவனுடன் உறையும் (ச்மேத) பார்வதி. மூலவர் ஜோடியாகத்த்தான். பூஜாரிகள் அன்று தலித்துகள் இன்று பார்ப்ப்னர்கள். வேத மந்திரங்களும், யாகங்களும் இன்று.

எதிர்ப்பு இல்லை. Reasons? The indigenous Tamils were in awe of brahmins, their mantras and yaagams etc.

எனினும், இப்படி வைதீககரங்களால் தொடப்படா வழிபாடு இன்றும் இருக்கிறது. அது என்ன மதம் ? அதை ஏன் இந்து என்கிறார்கள்? என்பதே அருளின் கேள்வி.

He wont accept எதிர்ப்பு இல்லை. But I rely on historians like Sastri for that statement.

This is a big subject. Caste fanatics and Hindutva zealots cant discuss it as they will dislike it.

அருள் said...

virutcham said...

// //பிற மதத்தில் இப்போ இருக்கும் தமிழர்களை எப்படி அழைப்பது?// //

தமிழர்கள் என்றுதான் அழைக்க வேண்டும்.

எங்களது ஊரில் மக்கள் - அவர் நாடார், இவர் முதலியார், மற்றவர் வன்னியர், அடுத்தவர் முஸ்லீம் என்று வரிசையாக வகைப்படுத்துவார்கள்.

அதாவது, வன்னியர், நாடார், நாயுடு என்பது போலத்தான் இசுலாமியர், கிறித்தவர் என்பதையும் மக்கள் எடுத்துக்கொள்கின்றனர். சிலசமயம் கிறித்தவர்களையும் சாதி ரீதியாக அடையாளம் காண்கின்றனர்.

மாறாக, நாங்கலெல்லாம் இந்து, அவர்கள் இசுலாமியர் - என்று நடைமுறையில் மக்கள் தங்களை வேறுபடுத்தி பார்ப்பது இல்லை.

ஆக, தமிழ் நாட்டில் "மதம்" என்கிற அடையாளத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை.

அதனால்தான் - இராமஜென்ம பூமியும், இராமர் பாலமும், பாகிஸ்தானின் தீவிரவாதமும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரிவது இல்லை. அவை குறித்த வாத பிரதிவாதங்களில் அவர்கள் ஈடுபடுவதும் இல்லை.

Anonymous said...

"...Bramins were not rulers. They were and are less than 5% of the total population.
"

It is not necessary to be the rulers. It is not necessary to be the majority either. It is sufficient to be near the rulers to become 'movers and shakers'.

Brahmins were king-makers.

Writes Neelakanta Sastri: 'The king took every advice from the Brahmins in all important activities'.

Anonymous said...

"...சரி. இதுக்கு என்ன தீர்வு? என்ன அடையாளம் வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்?
நாட்டார் வழிபாடு செய்யும் அனைவரும் ஒரே ஜாதி என்று ஒரு பொது அடையாளம் வைத்துக் கொள்ளலாமா? மத அடையாளம் வேண்டாம் என்றால் தமிழன் என்ற பிராந்திய அடையாளம் போதும் என்று அர்த்தம். அப்போ பிற மதத்தில் இப்போ இருக்கும் தமிழர்களை எப்படி அழைப்பது?"

You are rushing to the conclusion. Please discuss. Tell yourself what is the name of the worship being followed in Karcuvel Iyanar cult or innumerable worship where no brahmin participates, no vedic riturals are performed etc. Is there any name for them but to say they still follow the ancient form of worship which has no connection with yours?

Anonymous said...

"தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரும்பான்மையானோர் "வைதீக" மதத்தைப் பின்பற்றுவோர் அல்ல'

Correct. This is the basic point.

வைதீக மதம் வேறு. தமிழர்களின் மதம் வேறு.

இன்று, வைதீக மதம் தமிழர்களின் மதத்தோடு இணைந்து காணப்படுகிறது. அதே வேளையில் இணையாமலும் காணப்படுகிறது.

கேள்வி: அப்படி இணையாமலிருப்பவையை ஏன் பார்ப்ப்னர்கள் இந்துத்த்வாவினருடம் சேர்ந்து அழிக்கப்பார்க்கிறீர்கள்?

அருள் said...

virutcham said...

// //திரும்பத் திரும்ப திரிக்கப் பட்ட வரலாறையே சொல்லி விடுவதால் பிரச்னை தீராது.// //

எது திரிக்கப்பட்ட வரலாறு? தமிழ் மக்களை "ஹிந்து" என்பதுதான் திரிக்கப்பட்ட வரலாறு.

""தமிழ்நாட்டு மக்கள் திரளில் மிகப்பெரும்பான்மையினர் ஆகமங்கள் வழி நிற்கும் சைவ வைணவப் பெருஞ்சமயங்களின் எல்லைகளுக்கு உட்படாதவர் என்பது வெளிப்படை. மிகப் பழமையான வழிபாட்டு நெறிகளே அவர்களின் சமயமாக அமைகின்றன. இந்த மக்கள்திரளின் வாழ்நெறிகள், நம்பிக்கைகள், சடங்குகள் பற்றிய மரபுகளே இங்கு 'நாட்டார் மரபுகள்' என்று சுட்டப்படுகின்றன. தவிர்க்க இயலாதவாறு இந்நாட்டார் மரபுகளில் சிலவற்றை நிறுவன சமயங்களான சைவமும் வைணவமும் ஏற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறு அவை ஏற்றுக்கொண்ட முறைகள் சமய நிறுவனங்களான பெருங்கோயில்களிலும் அக்கோயில்கள் தொடர்பான சடங்குகளிலும் காணக்கிடக்கின்றன.""

தொ. பரமசிவன், 'மாற்று மரபுகளும் தமிழ் வைணவமும்' என்கிற கட்டுரை, 'பண்பாட்டு அசைவுகள்' நூல், பக்கம் 166.

எனவே, உங்களது 'மதம்'தான் எங்களையும் 'இந்து'வாக்கியது. ஆனால், நடைமுறையில் தமிழ்நாட்டுமக்கள் இந்துக்கள் அல்ல. எத்தனை பேர் வேதத்தை ஏற்கிறார்கள்? எத்தனை பேர் முற்பிறப்பு, மறுபிறப்பில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்? எத்தனை பேர் காசிக்கும் இராமேசுவரத்துக்கும் யாத்திரை போகிறார்கள்? எத்தனை பேர் தங்களை 'ஹிந்து' விளிக்கிறார்கள்?

ஏதோ 'இடையில் வந்த' பழக்க வழக்கம் என்று சில பார்ப்பனீய கூறுகளை எப்போதாவது பயன்படுத்துகிறார்கள். சட்டப்படி 'இந்து'வாக அடையாளம் காணுகிறார்கள். அவ்வளவுதான்.

ஆனா, "இந்துத்வாவையோ, இந்துமதவெறியையோ" தமிழர்கள் கொஞ்சமும் ஏற்கவில்லை. மிகக் குறிப்பாக இசுலாமியர்களையும், கிறித்தவர்களையும் எவரும் எதிரிகளாகவோ, அன்னியர்களாகவோ ஒருபோதும் பார்க்கவில்லை. அவ்வாறு இனிமேலும் நடக்காது.

Anonymous said...

நான் பல நாட்களுக்கு முன் எழுதிய ஒரு பதிவு இங்கே சில மறுமொழிகளைப் பார்த்ததும் நினைவு வருகிறது. http://koottanchoru.wordpress.com/2009/01/08/எதிர்ப்பாளர்களின்-பார்வ/

Anonymous said...

//

கேள்வி: அப்படி இணையாமலிருப்பவையை ஏன் பார்ப்ப்னர்கள் இந்துத்த்வாவினருடம் சேர்ந்து அழிக்கப்பார்க்கிறீர்கள்?
//

ஜோ.மலம்

யார்ரா நாட்டார் தெய்வத்தை அழிக்கிறது ?

கிராமம் கிராமமாப் போயி ஏசு காவியம் படிச்சு யூதப்பழங்குடிக் கதைச் சொல்லி மதம் மாத்தும் உன்ன மாதிரி மாமாவேலை பார்க்கும் மாமாவா ? இல்லை திண்ணையில உக்காந்துகிட்டு வெட்டிக்கதை பேசும் பார்ப்பான மாமாவா ?

Anonymous said...

ஜோ.மலம்

யார்ரா நாட்டார் தெய்வத்தை அழிக்கிறது ?

கிராமம் கிராமமாப் போயி ஏசு காவியம் படிச்சு யூதப்பழங்குடிக் கதைச் சொல்லி மதம் மாத்தும் உன்ன மாதிரி மாமாவேலை பார்க்கும் மாமாவா ? இல்லை திண்ணையில உக்காந்துகிட்டு வெட்டிக்கதை பேசும் பார்ப்பான மாமாவா ?

"
இதே கேள்வியை நீ நாகரிமாக கேட்டால் பதில் போடப்படும்.

virutcham said...

@Arul
// தமிழர்கள் என்றுதான் அழைக்க வேண்டும்.//

பாராட்டுக்கள். இது அவங்களுக்குத் தெரியுமோ?

// அவர் நாடார், இவர் முதலியார், மற்றவர் வன்னியர்//

அப்போ இது எதுக்கு ?

இதை வைத்துக் கொள்ள இட ஒதுக்கீடு ரீதியான கரணங்கள் இருக்கு. சரி. வச்சுக்கோங்க.

மாதா கோவிலில் பொட்டு திருநீறுடன் ...
இதுக்கு காரணம் உங்கள் நிலையில் மத நல்லிணக்கமாக இருக்கலாம். ஆனா அவங்க அதை வைப்பதற்கு காரணம் அதாவது மேரியை மாரியாக்கி வைப்பதற்குக் காரணம் உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.


உங்களுக்கு நாட்டார் வழிபாடு உசந்தது. சரி. அவங்களுக்கு அது சாத்தான் வழிபாடு என்பது உங்களுக்குத் தெரியும் தானே.

ஒன்னு புரியுது. அதாவது எதையும் இன்னார் சொன்னால் ok . அந்த இன்னார யார்?
வழங்குவது தமிழ் மறை என்றால் வழங்கியது சிவன் என்றாலும் ok .

சொல்லி வைத்தவன் யார் என்பது பற்றி அக்கறை இல்லை.

தமிழனுக்கு சிந்திக்க சொல்லித் தந்தது தாமஸ் என்றாலும் சொன்னது வெள்ளைக்காரன் என்றால் வள்ளுவனையும் தாரை வார்த்து விடுவது double ok

//மாறாக, நாங்கலெல்லாம் இந்து, அவர்கள் இசுலாமியர் - என்று நடைமுறையில் மக்கள் தங்களை வேறுபடுத்தி பார்ப்பது இல்லை.//

இங்கே நாங்க மட்டும் என்ன அக்கம் பக்கம் சண்டை போட்டுகிட்டா இருக்கோம். எல்லா சாதியையும் எல்லா மதமும் சந்தோஷமாத் தான் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டு இருக்கோம்.

virutcham said...

@Arul
நாட்டார் வழிபாடு செய்யும் தமிழ் மக்கள்அவர்களின் சாதிகள் மற்றும் இதே சாதி அடுக்குகளில் உள்ள பிற மத தமிழர்களுக்கும் ஒரே அடையாளம் மதம் தாண்டி தமிழன் என்பது. சரி. அவங்க தமிழ் கிறித்தவர், தமிழ் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் போது நீங்க தமிழ் நாட்டார் என்றோ இல்லை எதோ ஓன்று தமிழ் pre -fixed வைத்து சொல்லிக் கொள்வீர்கள்.
சரி.
இந்து என்ற இந்திய அடையாளத்தில் இருந்து தமிழன் என்ற பிராந்திய அடையாளத்தை விரும்புகிறீர்கள்.
சரி.
இப்போ தமிழ் நாடு இந்தியாவில் இருக்கலாமா கூடாதா? அதை சொல்லிடுங்க.
அப்புறம் தமிழ் நாட்டில் இருக்கும் பிற மாநிலத்தவரை என்ன செய்யலாம்? ஒரு வேலை நாட்டார் வழிபாடை செய்யும் தெலுங்கர்கள் உங்களுக்கு ஓகே வாக இருக்கலாம். மத்தவங்க?
இப்போ இட ஒதுக்கீடு என்பது கல்வியில் மட்டும் இல்லை விளையாட்டுத் துறை கலை என்று எல்லா மட்டத்திலும் வைத்துக் கொள்ளலாம். அதான் ஒன்லி தமிழ்ஸ் .

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது