11/21/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் 21.11.2010

தமிழ்மணத்துக்கு என்னாயிற்று? தன்னிச்சையான இற்றைப்படுத்தல் இல்லை. இது சம்பந்தமாக நான் அளித்த ட்வீட்டுகள்
மாயவரத்தானைத் தவிர வேறு யாருமே கண்டுகொள்ளவில்லை. எல்லோருக்கும் இப்பிரச்சினை பற்றி ஏற்கனவேயே தெரியும், ஆகவே யாரும் இது ஓல்ட் நியூஸ் எனக்கண்டு கொள்ளவில்லை என நினைக்கிறேன். இப்போது ட்வீட்டுகளைப் பார்ப்போம்.

டோண்டு
தமிழ்மணத்துக்கு என்னாயிற்று? தன்னிச்சையான இற்றைப்படுத்தல் இல்லை. தேவையானால் நாம்தான் அதை செய்ய வேண்டியிருக்கிறது.

மாயவரத்தான்
@dondu1946 இம்மாம் பெரிய பதிவு போடுற நீங்க இன்னும் ஒரு நிமிஷத்திலே அதையும் செஞ்சா என்னவாம்?! ;)

டோண்டு
@mayavarathaan செய்யலாம்தான், செய்யவும் செய்கிறேன். ஆனால் என்ன ஆச்சு என்கிற தகவலும் முக்கியம்தானே.

டோண்டு
கூடவே தமிழ்மணத்தில் பதிவுகளை இணைக்க முடியவில்லை. என்ன நடக்கிறது இங்கே?

டோண்டு
பின்னூட்டங்களை இற்றைப்படுத்துவதிலும் சில முடிச்சுகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னால் இட்டப் பின்னூட்டம் திடீரென இற்றைப்படுத்தப்படுகிறது.


மோடி - மகத்தான மன்னன்! முன்னேறும் முதல்வன்! by B.R.ஹரன்
தமிழ் ஹிந்துவில் வந்த இப்பதிவிலிருந்து நான் கோட் செய்வேன்.
உலக அளவில் வேகமாக முன்னேறும் மிகவும் சக்தி வாய்ந்த நகரங்களுள் ஒன்றாக, இந்தியாவில் முதலாவதாக, அகமதாபாத் நகரைத் தேர்ந்தெடுத்துள்ளது ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை.

உணவு உற்பத்தி, கல்வி, சுகாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம், விவசாயம், தொழில்துறை, மகளிர் மேம்பாடு, சமூகநலம், சாலை வசதி, அனைத்திற்கும் தேவையான கட்டுமானங்கள் என்று எல்லா துறைகளிலும் முதன்மை மாநிலமாக குஜராத் திகழ்கிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலமைச்சராக இருந்துவரும் பா.ஜ.க. தலைவர் நரேந்திர மோடி மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது ஒன்றையே கடமையாகக்கொண்டு செயல்பட்டு வருகிறார். நாட்டில் உள்ள கல்வி, சுகாதார மற்றும் தொழில் வல்லுனர்கள் அனைவரும் அவரின் ஊழலற்ற சிறப்பான ஆட்சிமுறையைப் பெரிதும் பாராட்டுகின்றனர்.

இத்தனைக்கும் மற்ற மாநிலங்கள் போல் வருமானத்திற்காக, மக்களின் ஆரோக்கியத்தையும் ஏழைக் குடும்பங்களின் குடியையும் கெடுக்கும் மதுபான வியாபாரத்தை மேற்கொள்ளாமல், பூரண மதுவிலக்கு அமலில் இருக்கின்றபோதும் திறமையாக ஆட்சிபுரிந்து நிதிநிலையை அதிக இருப்புடன் வைத்துள்ளார் மோடி.

ஐநா சபையின் பொருளாதார மற்றும் சமூக சங்கதிகளுக்கான துறை (Economic & Social Affairs), ஒளிவு மறைவு அற்ற, பொறுப்புமிக்க நிர்வாகமும் பொதுமக்கள் சேவையும் (Better Management; Better Public Service- Improving Transparency, Accountability and Responsiveness in the Public Service Category) தந்ததற்காக உலக அளவில் இரண்டாம் பரிசைத் தந்து, மோடி அரசைப் பெருமைப்படுத்தியுள்ளது. இது இரண்டாவது முறை. முதல் முறை சென்ற ஆண்டும் ஐ.நா. பரிசு பெற்றது குஜராத் அரசு. அந்த நற்சான்றிதழைத் தன்னுடைய அலுவலகத்தில்- தன் அறையில்- மாட்டி வைத்துவிட்டு, ஆரவாரமின்றி, அமைதியாகத் தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் மோடி.

இந்தியா டுடே பத்திரிகை நாடு முழுவதும் எடுத்த கருத்துக் கணிப்பின்படி, சிறந்த முதல்வர் விருதை மூன்றுமுறை வென்றுள்ளார் மோடி.

மத்திய அரசு, தனியார் ஆராய்ச்சி மையங்கள், வெளிநாட்டு அமைப்புகள், பத்திரிகைகள் என ஒட்டு மொத்தமாக மோடி 90 விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். அனைத்து விருதுகளும் அவரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்காகவும் மாநிலத்தின் அனைத்துத் துறை முன்னேற்றத்திற்காகவும் கொடுக்கப்பட்ட விருதுகள் என்பது குறிப்பிடத்தக்கது. (Ref:- http://gujaratindia.com/state-profile/awards.htm )

இவற்றின் எதிரொலியாகத்தானோ என்னவோ சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளிலும் மற்றும் நகராட்சிகள், மாவட்ட பஞ்சாயத்துகள், தாலுக்கா பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களிலும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸை இருக்கின்ற இடம் தெரியாமல் செய்து விட்டனர் குஜராத் மக்கள்.

குஜராத்தில் நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலிகளில் மோடியின் பிரம்மாண்ட வெற்றி எதிர்க்கட்சியான காங்கிரஸை ஒட்டு மொத்தமாக ஆட்டம் கொள்ள வைத்திருக்கிறது. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளையும் 53 நகராட்சிகளில் 42 நகராட்சிகளையும் 24 மாவட்டப் பஞ்சாயத்துகளில் 21-ஐயும், 208 தாலுக்கா பஞ்சாயத்துகளில் 155-ஐயும் கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. இந்தத் தேர்தலில் பா.ஜ.கட்சிக்கு 80 சதவீத வெற்றியும் காங்கிரஸ் கட்சிக்கு 18 சதவீத வெற்றியும் மற்ற கட்சிகளுக்கு 2 சதவீத வெற்றியும் கிடைத்துள்ளன.

மோடியின் நல்லாட்சிக்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

- பத்து வருடத்திற்கு முன்னால் 6700 கோடி ரூபாய் பற்றாக்குறையுடன் இருந்த குஜராத்தின் நிதிநிலைமை, தற்போது 500 கோடி ரூபாய் அதிக இருப்புடன் இருக்கிறது.
- அரசின் அனைத்துத் துறைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, ஊழலற்ற சிறப்பான பணிபுரிதலால், எல்லாத் துறைகளிலும், தேசிய சராசரியை விட பல மடங்கு அதிகமான வளர்ச்சி காட்டி சாதனை செய்து வருகிறது மோடி அரசு.
- மற்ற மாநில அரசுகள் “நலத்திட்டம்” என்ற பெயரில் இலவசங்களை அள்ளி வீசும்போது, எதையுமே இலவசமாகக் கொடுக்காமல் ஏழை மக்களுக்குத் தேவையான பொருள்களை, தரமான நிலையில் நியாயமான விலையில் தடங்கல் இன்றி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் கிடைக்குமாறு செய்கிறது மோடியின் அரசு.
- குஜராத்தில் 185 சிற்றாறுகளும் 8 அழியாத ஆறுகளும் உள்ளன. இவற்றை இணைத்ததன் மூலம் நிலத்தடி நீர் பெருமளவில் அதிகரித்துள்ளது. மோடி தலைமையேற்று கடந்த 10 ஆண்டுகளில் விவசாயப் பொருளாதார வளர்ச்சி 9% ஆக (தேசிய சராசரி 2% தான்) உயர்ந்துள்ளது.
- பத்து வருடங்களுக்கு முன்னால் 2500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்த குஜராத் மின்சார வாரியம் தற்போது 500 கோடி ரூபாய் லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் மின்சாரக் கட்டணம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.
- “ஜோதிக்ராம் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள 18000 கிராமங்களுக்கும் 24 மணிநேரமும் 3 பகுதி (3 Phase) மின்சாரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை அமல்படுத்தச் சொல்லி இந்திய அரசு மற்ற மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்திருக்கிறது.
- மேலும், பெரும்பான்மையான மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் தருவதாகச் சொல்லிக்கொண்டு, பல நேரங்களில் மின்தடை மூலம் விவசாய உற்பத்தியைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும்போது, மோடி அரசு 24 மணிநேரம் மின்சாரமும் பாசனத்திற்குத் தங்குதடையின்றி நீரும் கொடுத்து, மின்கட்டணம் கட்டாத விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கிறது. 24 மணிநேரமும் மின்சாரமும், தண்ணீரும் கிடைக்கப் பெற்று உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ளும் விவசாயிகள் - சந்தோஷமாக, கட்டணங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டிச் செல்கின்றனர்.
பொதுமக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தேங்கியுள்ள வழக்குகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், 810 புதிய நீதிமன்றங்கள் (700 தற்காலிக நீதிமன்றங்களையும் சேர்த்து) அமைத்துள்ளார். ஒவ்வொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு ஒரே வருடத்தில் தீர்க்கப்படவேண்டும் என்கிற கட்டாயமும் பின்பற்றப்படுகிறது. மாலை நேர நீதிமன்றங்களும் நடத்தி, வழக்குகளை விரைவாக முடிக்கிறது குஜராத் அரசு. உச்ச நீதிமன்றம் மாலை நேர கோர்ட்டுகளை நடத்தச்சொல்லி மற்ற மாநிலங்களுக்கும் பரிந்துரை செய்திருக்கிறது.
அரசு, தொழிலாளர் நலனைப் பாதுகாப்பதாலும் தொழிலாளர்களுடன் நல்ல உறவு முறை பராமரிப்பதாலும் வேலைநிறுத்தங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், ஒரு வேலைநாள் கூட வீணாகாமல் மாநிலம் நடக்கிறது.
- ”சிரஞ்சீவி” திட்டத்தின் மூலம் சிசுக்கொலைகள் முழுவதுமாகத் தடுக்கப்பட்டுவிட்டது. இத்திட்டத்தை மற்ற மாநிலங்களும், உலக வங்கியும் ஆராய்ந்து வருகின்றன.
குழந்தைகள் ஆரம்பக் கல்வி பெற அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு, அனைத்துக் குழந்தைகளும் நாள் தவறாமல் வகுப்புகளுக்கு ஆஜராவதற்கான அனைத்து வழிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. குழந்தைகளுக்கு சீரான சுகாதாரம், சிறப்பான கல்வி ஆகியவை கிடைக்க புதிய வழிமுறையைக் (ஒவ்வொரு குழந்தையையும் கண்காணிக்கும் விதமாக- Child Tracking System) கையாள்கிறது அரசாங்கம்.
- மகளிர் கல்வியில் 100% பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றன. ஆரம்பக் கல்வி முடித்தவுடன் மாணவர்கள் படிப்பை நிறுத்துவது (Drop-out rate) 40%-லிருந்து 2%-மாக குறைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 14 பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டுள்ளன. தொழிற் கல்விக்கான இடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. கப்பல் பொறியியல் (Marine Engineering), தடயவியல் விஞ்ஞானம் (Forensic Science) போன்றவற்றிற்கான பிரத்தியேகக் கல்வி நிறுவனங்களும், மிகவும் புதிய திட்டமாக “பாதுகாப்பு-சக்தி” (Raksha Shakti) பல்கலைக் கழகம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளன. தேசப்பாதுகாப்புக்கென்றே பாடத்திட்டம் அமைத்து அதற்கு ஒரு பல்கலையும் துவங்கியள்ளது மோடி அரசின் ஒப்பற்ற சாதனை. அதே போல் குழந்தைகளுக்கென்று ஒரு பிரத்தியேகமன பல்கலையும திட்டமிடப் படுகின்றது.
- இவ்வளவு நலத்திட்டங்கள் மட்டுமில்லை; வருவாய்க்காக மற்ற மாநிலங்களில் ஆறென ஓடும் குடும்பங்களைக் குலைக்கும் மதுபானம் அறவே இல்லை. மதுபானத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் இல்லாமலே இத்தனை நலத்திட்டங்களும் செயல்படுத்தியுள்ளார் மோடி.
- நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5% மட்டுமே உள்ள குஜராத் மாநிலம், தொழில்துறையில் 16% உற்பத்தியும், 16% முதலீடும், 15% ஏற்றுமதியும், 30% சந்தை ஆக்கிரமிப்பும் செய்கிறது.
ஊழலற்ற திறமையான அரசாட்சி நடப்பதால், தொழிலதிபர்கள் பலரும் குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் கட்டுமானங்களையும் வேகமாகவும் சிறப்பாகவும் செய்து கொடுப்பதால், அவர்கள் மோடியின் குஜராத் மாநிலத்தில் விரும்பி முதலீடு செய்கின்றனர். டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை துவங்குவதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் இரண்டே நாள்களில் குஜராத் அரசு முடித்து கொடுத்ததே ஒரு சிறந்த உதாரணம்.
நன்றி: தமிழ் ஹிந்து


மீதி விஷயங்கள் மற்றும் பின்னூட்டங்களை அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம்.

மீண்டும் மார்க்கச்சுகள் தொழிற்சாலையில் ஜெர்மன் துபாஷியாக அசைன்மெண்ட்
இது பற்றி நான் இட்ட முந்தையப் பதிவு தையல் மெஷினை இயக்கி தைப்பவர்களுக்கு அளிக்கும் பயிறசிக்காக வந்த இரு ஆஸ்திரிய தொழில்நுட்ப நிபுணிகளுக்காக ஜெர்மன் துபாஷியாகச் சென்றதைக் குறிக்கிறது.

திடீரென 17-ஆம் தேதி டெலிஃபோன் அழைப்பு வந்தது. 18, 19 மற்றும் 20-ஆம் தேதிகளுக்காக மீண்டும் கூப்பிட்டனர். நானும் சென்றேன். ஆனால் இம்முறை மெஷிகளை பரமாரிக்க வேண்டிய மெக்கானிக்குகளுக்கான பயிற்சி. இப்போது வந்தது இரு ஆண்கள். மெக்கானிக்குகள் அத்தனைப் பேரும் ஆண்களே. போன முறையோ தைப்பவர்கள் அனைவருமே பெண்களே. இந்த வேலை பங்கீடு இயற்கையாகவே அமைந்து விட்டது. ஏன், பெண்கள் உடையைத் தைக்கும் ஆண் தையற்காரர்கள் பிரபலம் ஆயிறே. அதே போல பெண் மெக்கானிக்குகளும் உண்டுதானே. ஆனால் இங்கே அம்மாதிரி இல்லைதான்.

சும்மா சொல்லக்கூடாது, நம்மூர் மெக்கானிக்குகள் கற்பூரம் மாதிரி எல்ல விவரங்களையும் பிடித்துக் கொள்கிறார்கள். அவர்கள் பிறகு கேட்கும் கேள்விகளில் ஜெர்மானியர் சற்றே திக்குமுக்காடினர். சிலவற்றுக்கு வெகு நேரம் யோசனை செய்ய வேண்டியிருந்தது. இங்குதான் ஒரு சராசரி ஐரோப்பிய தொழிலாளியும் இந்தியத் தொழிலாளியும் மாறுபடுகின்றனர் எனத் தோன்றுகிறது. நம்மவர்கள் கொடுத்த வேலையுடன் நின்று விடாது சம்பந்தப்பட்ட பிற விஷயங்களையும் கவனிக்கின்றனர். ஆனால் ஐரோப்பாவிலோ சொன்ன வேலையை சொன்னபடியே முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் என்று எனக்குப் படுகிறது.

நம்மவர்கள் பலாபட்டறை வேலை செய்வதென்னவோ உண்மைதான். இது பற்றி மணியன் அவர்களும் தனது “இதயம் பேசுகிறது-ஜப்பான் பயணம்” என்னும் புத்தகத்தில் ஒரு ஜப்பானிய நிபுணரின் உதாரணத்துடன் விளக்கியுள்ளார். அதாவது நகர லே-அவுட் தயாரிப்பதில் நிபுணரான அவரிடம், சற்றே வேறுபட்ட விஷயம் பற்றிக் கேட்க அவர் குழம்பி விட்டார்.

அதே சமயம் இந்தியாவில் ஒருவர் காலையில் வக்கீலாக வேலைக்கு செல்கிறார். அதை வெற்றிகரமாக செய்கிறார். மாலையில் நாடகங்கள் போடுகிறார், அனைத்தும் வெற்றி நாடகங்கள். கூடவே ஒரு பத்திரிகையையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என அவர் கொடுத்த உதாரணங்கள் சோ அவர்களை குறித்துத்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

எல் கே said...

ஒரு சிலரின் இடுகைகளை இணைப்பதில் பிரச்சனை உள்ளது

வஜ்ரா said...

//
ஆனால் ஐரோப்பாவில்லோ சொன்ன வேலையை சொன்னபடியே முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் என்று எனக்கு படுகிறது.
//

ஐரோப்பாவில் அப்படி சொல்லாத வேலையெல்லாம் பார்க்குறவன் சீக்கிரமே முன்னேறிவிடுகிறான். சொல்றவேலையை மட்டுமே செய்யத் தெரியும் சாதாரணத் தொழிலாளியாக இருப்பதில்லை. இந்தியாவில் முன்னேறனும்னா சொல்றவேலையை மட்டும் தான் செய்யணும். சொல்லாத வேலையெல்லாம் செஞ்சா மேலதிகாரிகளுக்குப் பிடிக்காது.

Krishnakumar said...

Gujarat ranks very very low in attracting FDI. Congress ruled states such as Maharashtra,Delhi,Karnataka and even West Bengal ranks much higher than Gujarat. Maharashtra has got 10 times more FDI investments than Gujarat.

Modi is just gas. Every bullshit is only on paper nothing in reality.

MV SEETARAMAN said...

krishna Kumar's remarks are to be countered if what he is saying is true. however he is talking about FDI investment only. what about the total governance, welfare, efficient utilisation of scarce POWER.

there are lot of Myopic Krishnakumars are there when it comes to Sri MODI.

Palam Thozhan said...

// Krishnakumar said...
Gujarat ranks very very low in attracting FDI. Congress ruled states such as Maharashtra,Delhi,Karnataka ...//

as on date, there is no congress rule in Karnataka. Shows how much truth is there in mr krishnakumar's statement!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது