2/03/2009

தூங்கியது போதும் மாணவர்களே விழிமின்! எழுமின்!

மாணவப் பருவம் என்பது உணர்ச்சிவசப்படும் பருவம். புத்தகங்களில் தரப்படும் ஆதரிசங்களை அப்படியே கேள்வியில்லாது கேட்டு தமதாக்கிக் கொள்ளத் துடிக்கும் பருவம். காலப்போக்கில் வாழ்க்கை தரும் பாடங்களை கற்று சுதாரித்து கொள்பவர்கள் அனேகம். அவர்களைப் பற்றி கவலையில்லை, அவர்களுக்காக இப்பதிவும் இல்லை.

சமீபத்தில் 1965 ஜனவரியில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. அந்த வருடம் ஜனவரி 26-ஆம் தேதி முதல் ஹிந்தி மட்டும் ஒரே ஆட்சிமொழியாக மாற இருந்தது. அதை எதிர்த்து போராட்டம். அந்த போராட்டத்தில் பலரும் பங்கேற்றனர். அதில் ஒரு பழுதும் சொல்ல இயலாது.

ஆனால் மாணவர்களுக்கு அது பெருங்கேடாக முடிந்தது. ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரை மூன்றாம் டெர்ம். ரொம்ப முக்கியமானது. ஆண்டு பரீட்சை வேகமாக நெருங்கும் காலம். ஆண்டு முழுதும் ஓபி அடிப்பவர்கள் கூட சீரியசாக படிக்க ஆரம்பிக்கும் காலம். அந்த நேரம் பார்த்து இந்த போராட்டம் வந்ததில் கல்லூரிகள் கால வரையறையின்றி மூடப்பட்டன. கிட்டத்தட்ட மார்ச் 15 வரை இந்த நிலைமை.

போராட்டம், அது சம்பந்தமான நியூஸ், வம்பு ஆகியவற்றுடன் காலம் கடந்தது. படிக்கும் மூட் போயே போயிந்தி. இறுதி ஆண்டு தேர்வே கேன்சல் ஆகலாம் என்ற புரளி வேறு வந்தது. இப்போது அது அபத்தமாகத் தோன்றினாலும் அப்போது அதை நம்பத் துடித்தது மனது. ஆக மார்ச் 15 அன்று கல்லூரிகள் திறந்த போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. தேர்வுகள் பொறியியல் கல்லூரிகளில் மே மாதம் நடந்தன. நான் முதல் மூன்று தேர்வுகளில் ஃபெயில். ஒரு வருடம் சும்மா அமர வேண்டியிருந்தது.

என்னை விடுங்கள். அதற்கப்புறம் சுதாரித்து வந்தேன். ஆனால் பல மாணவர்கள் நிலைமை அதல பாதாளத்துக்கு சென்றது. எனக்கு தெரிந்த ஒரு மாணவன் போலிசிடம் உதை வாங்கி ஆஸ்பத்திரியில் மாதக் கணக்கில் இருந்து தேர்வையே கோட்டை விட்டான். அவனது குடும்பம் எழையான குடும்பம். இவன் வந்துதான் அந்த குடும்பத்தை நிமிர்த்த போகிறான் என எதிர்பார்ப்பு அவன் மேல் அக்குடும்பம் வைத்திருந்தது. அவனைப் பார்க்க நான் ஆஸ்பத்திரி சென்றபோது அதை சொல்லியே கதறி அழுதான் அவன். இவனைப் போல பலர்.

இப்போது இதையெல்லாம் ஏன் சொல்லறே என கேட்கும் முரளி மனோஹருக்காக கூறுகிறேன்.

இப்போதுள்ள நிலைமை எனக்கு 1965 ஜனவரி நிலையைத்தான் காட்டுகிறது. அதே மாதிரி சூழ்நிலையில் மாணவர்கள் கல்லூரிகள் மூடப்பட்டு அவதிப்படுகின்றனர். ஏற்கனவே சட்டக் கல்லூரி விவகாரம் வேறு.

மாணவர்களே, முதலில் உங்கள் போராட்ட உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைத்து விட்டு உருப்படும் வழிகளை பாருங்கள். சரி, கல்லூரிகளை மூடி விட்டார்கள். என்ன செய்வது? வீட்டிலிருந்தபடியே பாடங்களை படியுங்கள். கல்லூரி எப்போது திறக்கப் போகிறார்கள் ஆகிய செய்திகளை தவிர்த்து மற்ற செய்திகளுக்கு இடம் தராதீர்கள். முக்கியமாக மாணவர்களுக்கு கொம்பு சீவும் தோரணையில் பேசும் பேச்சாளர்களை இனம் கண்டு வெறுத்து ஒதுக்குங்கள். அதிலும் தத்தம் ஊர்களில் மாணவ அமைப்புகளை உருவாக்கி ஈழத்துக்காக போராட வேண்டும் என்ற உபயோகம் கிஞ்சித்தும் இல்லாத யோசனை ஒரு பதிவில் கூறப்பட்டுள்ளது. அப்படியெல்லாம் செய்து குட்டிச்சுவராகப் போகாதீர்கள்.

ஏனெனில், இந்தி எதிர்ப்புக்காக மாணவர்களை கொம்பு சீவிவிட்டு பதவிக்கு வந்த தி.மு.க.வின் தலைவர்கள் பிற்காலத்தில் தமது பேரன்களை இந்தி படிக்கவைத்து மந்திரிகளாக்கி மாணவர்களுக்கு பட்டை நாமம் போட்டு முட்டாளாக்கியதை மறக்காதீர்கள். நீங்கள் போராடித்தான் தமிழ் ஈழம் வரும் என்றில்லை. அதற்காக நீங்கள் போராடி வாழ்க்கையையே தொலைத்தாலும் உங்களை நினைவு கொள்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படியே நினைவு கொண்டாலும் உங்களுக்கு தம் இதயத்தில் மட்டும் இடம் கொடுத்து நட்டாற்றில் விடுவார்கள்.

இந்தியை எதிர்த்து தீக்குளித்த சிங்கத் தமிழன் சின்னசாமியை இப்போது யார் நினைக்கிறார்கள்? வைக்கோவை திமுகவிலிருந்து வெளியேற்றியதற்காக தீக்குளித்தனர் சிலர். அதே வைக்கோ அடுத்த சில ஆண்டுகளிலேயே கலைஞரின் உறவை நாடிச் சென்றார். முத்துக்குமாரை எவ்வளவு காலம் நினைவில் கொள்வார்கள என நினைக்கிறீர்கள்? அவர் குடும்பத்தை காப்பாற்றப் போவது யார்?

ஆக, இம்மாதிரி உணர்ச்சிவசமாகப் பேசக்கூடிய தலைவர்கள் எல்லோருமே சுயநல பிண்டங்கள். அவர்களை நம்பி நாசமாகப் போகாதீர்கள்.

அவ்வளவுதான் சொல்வேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

101 comments:

Anonymous said...

மிகச் சரியான அறிவுரை.
மாணவர்கள் படிக்க வேண்டும்.
அரசியல் தேவை இல்லை.
உணர்ச்சி வேகத்தில் முடிவெடுப்பது மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

Anonymous said...

very important and timely needed post. Thank u Dondu Sir...!

Anonymous said...

நல்ல அறிவுரை அய்யா. மாணாக்களை தூண்டி விட்டு தமிழ்நாட்டை சீர்குலைக்க புலி கூட்டம் துடிக்கிறது.

அதற்க்கு ஆதரவு தெரிவுத்து சில இலங்கை தமிழர்களும் கருத்து தெருவிக்கிறார்கள்.

இவர்கள் வெளிநாட்டில் தங்கள் பிள்ளைகளை இதை போல பாடசாலைகளை புறக்கணித்து போராட்ட செல்ல அனுமதிப்பார்களா?

மாணவர்களே உங்களின் பெற்றோர்களின் ஆசைகளை புதைத்து விடாதீர்கள்.

Anonymous said...

ungalukku minjapovadhu parpanan endra vasavu matume...indha madiri unmaya sonal yarukum pidakadhu

ப்ரியன் said...

ஆடு நனையுதாம் , ஓநாய் அழுகுதாம்.

Anonymous said...

My father and uncles participated in anti-hindi agitation. My father became Treasury officer, one of my uncles became Deputy collector and the other became a DSP. He was responsible for enconuter of 6 muslim terrorists in Bangalore, while he was working in Madurai. I don't know hindi but studied in IIT-Bombay, Mumbai. I lived four years in mumbai with out knowing Hindi. Currently I am working as research professor in US. I will be moving to Pune soon. I don't know Hindi and will not learn too. I am 33 years old and travelled to several countries and I only speak Tamil and English. If someone thinks that his job opportunities are enhanced by knowing hindi, he is ignorant. Krishnamoorthy is my name.

ரவிஷா said...

//ஆக, இம்மாதிரி உணர்ச்சிவசமாகப் பேசக்கூடிய தலைவர்கள் எல்லோருமே சுயநல பிண்டங்கள். அவர்களை நம்பி நாசமாகப் போகாதீர்கள்.
//

நெத்தியடி ஆலோசனை!

Anonymous said...

இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்வர் போராடியபோது கூட அவர்களை போராட வேண்டாம் என்றும் படிக்க மட்டும் செய்தால் போதும் என்றும் நீங்கள் கூறினீர்களா ஐயா

-

மாணவர்களை பார்த்து பயந்து போயுள்ளதீல் நீங்கள் கலைஞர் கட்சி

ஜோ/Joe said...

ஆடு நனையுதுண்ணு ஓநாய் அழவுது.

M Arunachalam said...

Nethi Adi posting Sir. Well Done.

Vijay said...

மிகச் சரியான அறிவுரை. மாணவர்கள் இது போல் அரசியல் சார்ந்த போராட்டங்களில் குதித்தால், அவர்கள் சஸ்பெண்டு செய்யப் படுவார்கள், இல்லை, அந்த செமஸ்டர் தேர்வு எழுத முடியாது என்ற கடுமையான சட்டம் கொண்டு வந்தால் தான் இதெல்லாம் உருப்படும். இந்த சினிமாக்காரர்கள் மாணவர்களை சந்திப்பதைத் தடுத்தாலே பாதி மாணவ சமுதாயம் உருப்படும். இதெல்லாம் நடக்கும்’ங்கறீங்க?

Anonymous said...

மாணவர்களே உங்களின் பெற்றோர்களின் ஆசைகளை புதைத்து விடாதீர்கள்.


வாஸ்தவம்

Anonymous said...

You are right.

Only wish you had thought of such things, as said before, during demonstrations against reservations. Are these advices only when you have no personal gains?:-)

Hmmm...hey ram!

Arun Kumar said...

dondu sir good advice.
students should not waste their time in political activities.

மருள்நீக்கி said...

ஐயமேயில்லை....
இது காளைகளை எருதுகளாக்கும் திட்டம்.

"படைவீரர்களே.. எப்போதும் முதலில் செல்லாதீர், சமீபத்தில் நடந்த பல வரலாற்றுப் போர்களில் முதலில் சென்றவர் இறந்துபட்டனர்.
ஆகவே பூசாரி வேடம் போட்டு கோயிலில் புகுந்துகொள்ளுங்கள். எவன் வென்றால் நமக்கென்ன.. அவன் மொழியையும் படித்து காலமெல்லாம் உண்டுகொழுக்கலாம்"

என்று எழுதாமல்விட்டீரே.. அதுவரை மகிழ்ச்சி.

dondu(#11168674346665545885) said...

@மருள்நீக்கி
நீங்கள் சொல்வது போல யாரவது கூறினாலும் அதில் அறிவுரை கூறப்படுபவரின் நலமும் அடங்கியுள்ளது என்பதை மறுக்க இயலாது.

ஆனால் கொம்பு சீவிவிடுபவர்களோ காளையை பலி கொடுக்கவே விரும்புகின்றனர், தங்களது சுயநலம் தோய்ந்த அரசியல் நோக்கங்களுக்காக என்ற உண்மையை மறைக்காதீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

எருது கழுதை என வீர வசனம் பேசும் கூட்டம் ஒரு பக்கம்
இன்று பிண செய்தி கிடைக்காதா பிண்படங்கள் காண கிடைக்காதா என ஏங்கும் வல்லூறு கூட்டம் மறு பக்கம்

வெளிநாடுகளில் இருந்து பொழுது போகாமல் புலி எலி ஈழம் என வீர வசனம் பேசுவது எளிது.

இப்படி பேசுபவர்களை இந்தியா வந்து போராட சொல்ல வேண்டும்.

இங்கு மாணவர்களை போராட சொல்லும் கண்ணியவான் கள் எத்துனை பேர் தெருவில் இறங்கி போராட்டம் செய்ய தயாராக இருக்கிறார்கள். எத்துனை பேர் போராடுகிறார்கள்.

தமிழ் பற்று வேசம் சுத்த வெளி வேசம்.

வால்பையன் said...

நல்ல அறிவுரை
ஆனால் அறிவுரை சொல்லும் பெருசுகளை மாணவர்களுக்கு பிடிக்காதே!

உளவியல் ரீதியாக நமக்குள் இருக்கும் மிருகம் வன்முறை செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது வெளியே வருகிறது.
பின்னாளில் அது வருத்தப்படுய்ம் என்பது தெரியும். ஆனாலும் அதற்கு அறிவுரை கேட்க நேரம் இல்லை.

சினிமா ஹீரோக்களின் ஆக்சன் மாயையும், அரசியல் புகழும் அவர்கள் கண்ணோடு சேர்த்து காதையும் மூடிவிட்டது

Anonymous said...

செருப்படி பதிவு.வாழ்த்துக்கள் டோண்டு.

ஜோ/ப்ரியன் மாதிரி நல்ல வேலை கிடைத்து செட்டிலாகி இருக்கும் ஆட்கள் மூன்றுமாதம் லீவு எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்து போராடட்டும். அதன்பிறகு மாணவர்களை போராட சொல்லட்டும்.

Anonymous said...

இங்கு போராட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் அனைவரும் அவரவர் பிள்ளைகளை போராட அனுப்பவேண்டும்....மகனே நீ படித்து கிழித்து போடும் போய் நம் இன மக்களுக்காக போராடு என்று அனுப்ப வேண்டியதுதானே.....தங்கள் பிள்ளைகள் மற்றும் தங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் அடுத்தவன் குடும்பம் இந்த போராட்டத்தால் நாசமாக போக வேண்டும் !!!!!!அருமை என்ன ஒரு வீரம் !!!!!!!!!

puduvaisiva said...

"இதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது"

ஆடு நனையுதாம் , ஓநாய் அழுகுதாம்.

"சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆறுமுகசாமி எனும் ஒரு கிழவர் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு சிதம்பரம் கோயிலுக்கு நீதிமன்ற அனு மதியுடன் சென்றார் போலீசு பாதுகாப்புடன்,அடுத்த நாள் போலீசு ஸ்டேசனில் வந்து சொன்னார்” பாதுகாப்புக்கு வாங்க!” ” ஏன் சாமி நீதான் நீதி மன்ற ஆணைய வச்சுருக்கியே தைரியமா போ சாமி” தைரியமாகத்தான் போனார் தேவாரம் பாடி முடிப்பதற்கு முன்னரே தீட்சித பார்ப்பன ரவுடிகளால் அடித்து குற்றுயிரும் குலையுயிருமாக தெருவில் வீசப்பட்டார். சாலையில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர் .

பிறப்பால் பார்ப்பனராய் பிறக்காததால் தான் சந்தித்த கொடுமைகளுக்கு தன்னந்தனியாய் கையளவு நோட்டீசுகளுடன் மக்களிடம் முறையிட்டார் அவர்கள் கூடுமிடங்களில்,பின்னர் மனித உரிமை பாதுகாப்புமையத்தை நாடி ம.க.இ.க,மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சீறிய முயற்சியால் தற்போது தினமும் அவரின் கடவுளை தமிழால் வழிபடுகிறார்,தீட்சிதப்பார்ப்பனர்களோ வயிறெரிந்து சாபமிடுகிறார்கள் ,சாமியார் ஆறுமுக சாமியோ வெற்றிநடைப்போட்டு கோயிலுக்கு வருகிறார்.கோயிலை இந்து அறனிலையத்துறை அதிகாரி நியமிக்கப்பபட வேண்டும் என்று இன்று வந்த தீர்ப்பால் தீட்சிதர்களோ வீட்டுக்கு மூட்டை முடிச்சை கட்டலாமா மேல்முறையீடு செய்யலாமா எனக் காத்திருக்கிறார்கள்.
புதியதாய் இதை படிக்கும் பலருக்கும் அண்ணாமலை படப்பாணியை நினைவிருக்கலாம்,இந்த நீண்ட நெடிய வரலாறு 2 மணிநேரத்தில் முடிந்து விடவில்லை,பல்லாண்டுகளாக போராடியது மனித உரிமை பாதுகாப்புமையம் , ம க ,இ க அதன் தோழமை அமைப்புகள்,

முதலில் மனித உரிமை பாதுகாப்புமையம் உள்ளூரில் உள்ள சனனாய சக்திகளை திரட்டியது,ஆரம்பத்தில் ஆகா ஓகோ என முண்டியடித்து வந்தவர்களெல்லாம் நேரம் ஆக ஆக ஒவ்வொருவராய் கழண்டு போனார்கள்.அதிலும் முக்கியமாக முதல் கூட்டத்தில் சீபீஎம் மட்டும்தான் இதை சாதிக்கும் என பேஇய அக்கட்சியின் மா செ அடுத்த மீட்டிங் முதல் தாங்கள் விலகுவதாக அறிவித்தார் . கேட்டதற்கு சொன்னார்கள் நீங்கள் “பார்ப்பனர்கள் என்று பிராமணர்களை திட்டுகிறீர்கள்” அன்று பார்ப்பான் என்று சொன்னதால் ஓடிப்போன சூரப்புலிகள் தான் இன்று ம க இ க வை பார்ப்பனீயம் என அழைக்கிறார்கள்,

பிறகு சிதம்பரத்தில் ஆறுமுக சாமி தேவாரம் பாடுவது தொடர்பாக வழக்கு நடைப்பெற்றது,அதற்கு திர்ப்பு வழங்கிய அம்பேத்கார்”ஆறுமுக சாமி தமிழில் பாட நிரந்தர தடை விதித்தார்,மேலும் இவர்கள் நுழைந்தால் கோயில் நகைகள் திருடு போக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்”
ஒன்றல்ல ரெண்டல்ல எத்தனை வாய்தாக்கள் எத்தனை துரோகிகள் துவளவில்லை மனித உரிமை பாதுகாப்புமையம்.தொடர்ந்து போராடினார்கள்.சாதித்து விட்டார்கள், மக இ க ,பு மா இ மு, பு ஜ தொ மு, ஆகிய அமைப்புகள் மக்களிடையே வழக்கினை கொண்டு சென்றன.முதல் கட்டமாக தமிழ் நுழைந்தது, அந்த தமிழ் நுழைவதற்குதான் மாபெரும் போர் நடத்த வேண்டியிருந்தது..அவ்வரலாறை சொல்லுவதற்கு ஆயிரம் பக்காங்கள் போதாது . அக்கோயிலில் நடந்த கொள்ளை பற்றியும் கொலை பற்றியும் விசாரிக்க வழக்கு தொடர்ந்தது மனித உரிமை பாதுகாப்புமையம்.இன்று (திங்கள்) கோயி லை அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கோரும் மனு மீது நீதிபதி கீழ்க்கண்ட வாறு தீர்ப்பளித்திருக்கிறார்”




இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும்


This news well plane Govt to dyvert the srilanka student issuein tamilnadu


ஆயிரமாண்டுகளாக வெல்லப்படாத அந்த பார்ப்பன கோட்டை வீழ்த்தப்பட்டு விட்டது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீட்சிதர்களால் சிறைபிடிக்கப்பட்ட நடராசன் விடுதலைசெய்யப்பட்டிருக்கிறார் நாத்திகர்களால்,சோவின் மொழியில் சொன்னால் “நக்சலைட்டுகளால்”. தினமும் பார்ப்பனர்களின் குறட்டை சத்தத்தால் தூங்காத நடராசன் நிம்மதியாய் தூங்கப்போகிறான். .நாளையே மீண்டும் ஏதாவது உத்தரவினை காட்டி மீண்டும் நடராசனை கைப்பற்றலாம் தீட்சிதர்கள் ,பார்ப்பன தீட்சிதர்களோ கோயிலை விட்டு வெளியேற்றப்படவில்லை ,திங்கள் இரவு 11.30க்கு அதிகாரி வந்து கோயிலை பூட்டிவிட்டு செவ்வாய் கிழமை காலை 7.30க்கு கோயிலை திறக்கிறார்.இத்தனை காலம் நாம் போராடியது அரசு வாட்சுமேனை நியமிப்பதற்காகவா.பார்ப்பனர்களோ திமிராய் இருக்கிறார்கள் மேல் முறையீடு செஞ்சு வந்துடுவோம் என்று.இதுவல்ல முழு வெற்றி எப்ப்போது பார்ப்பன கும்பல் கோயிலை விட்டு முற்றாக துடைத்தெறியப்படுகின்றதோ அதுதான் “தில்லை தீட்சிதர் சொத்தல்ல” எனும் முழக்கம் வெற்றிபெற்றதாய் அறிவிக்கப்படும். தமிழ் நுழைய போரினை நடத்திய புரட்சிகர அமைப்புகளால் தில்லை நடராசனை நிம்மதியாய் தூங்க வைக்க முடியாதா என்ன?""

Dear Doondu sir

what do have idea to help srilanka Tamil people by student??

many education people still wating a good job but they work very low salary. if that student will compleate their study are you give any assurance their Job??

dondu(#11168674346665545885) said...

//if that student will compleate their study are you give any assurance their Job??//

What bullshit are you talking my friend?

If that student were to sacrifice his future for some fancied interest of riffraffs like Prabhakaran and to die in the process, will you then look after the family of the deceased for ever?

Dondu N. Raghavan

Anonymous said...

மிகச் சரியான அறிவுரை. பிரபாகரன் சர்வாதிகாரியாக ஆள்வதற்காக தமிழ் ஈழம் உருவாக்கபடுவதற்கு ஏன் மாணவர்கள் தங்கள் வாழ்வை நாசமாக்க வேண்டும்.

//ராசசேகரன் - மாணாக்களை தூண்டி விட்டு தமிழ்நாட்டை சீர்குலைக்க புலி கூட்டம் துடிக்கிறது. அதற்க்கு ஆதரவு தெரிவுத்து சில இலங்கை தமிழர்களும் கருத்து தெருவிக்கிறார்கள்.இவர்கள் வெளிநாட்டில் தங்கள் பிள்ளைகளை இதை போல பாடசாலைகளை புறக்கணித்து போராட்ட செல்ல அனுமதிப்பார்களா?//

ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள். இவர்களுக்கு Holidaysக்கு சென்றுவர தான் தமிழ் ஈழம் தேவை.
இலங்கையில் உள்ள ஏழை பெற்றோரின் பிள்ளைகள் தான் புலிகளால் பலவந்ததாக யுத்தத்திற்கு சேர்க்கப்பட்டு பலியிடப்படுகிறார்கள்.

Anonymous said...

என்ன நைனா.. ப்ராம்ணாள் சங்கம் கூட்டம் போடற போது
ஒங்காத்துப் பசங்க கையில இதே மாரி சொல்லுவியா
வாத்யாரே.. இப்போ சேகரு 7 சதம் இடஓதுக்கீடு கேட்டுகிணு
மாநாடு போடறார்.. அப்போ இதே மாரி எளுதேன் பாக்கலாம்..
ஊரச் சுத்தி சாக்கடை நாத்தம் அடிச்சிகிணு இருக்கும் போது,
அது நடுவுல வூட்ட கட்டிப் போட்டு சுத்த பத்தமா இருக்கலாம்ங்கறயே..
அதென்ன மந்திரம் நைனா..

Anonymous said...

ஆடு நனையுதுண்ணு ஓநாய் அழவுது.

Anonymous said...

You can’t wake up the people who pretend that they are sleeping. The people like dondu will not see the suffering of innocent Tamils in SL even though he speaks the same language. I don't understand what Sri Lankan Tamils did to people like Dondu? Can dondu will contempt the aerial attack of Sri Lankan government? What is his stand about the Indian government’s support to Sl government and supply arms and personnel to SL? What his stand on aerial bombing, kidnapping, raping of tamil girls by SL government?

வஜ்ரா said...

ப்ரியன் said...

ஆடு நனையுதாம் , ஓநாய் அழுகுதாம்.

//

ஆமாம், ஆமாம், தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்ளும் அளாவிற்கு மனுசனை மந்தை ஆடு போல் மாற்றிவைத்துள்ளார்கள் சில திராவிட ஓநாய்கள்.

Anonymous said...

நல்ல பதிவு.. உண்மை என்ன தெரியுமா?? போராடுவதாக சொல்லப்படும் மாணவர்கள் பலரும் கட்சி சார்ப்பு உடையவர்களாக உள்ளார்.. தங்கள் தலைவர் சொன்னார் என்பதால் தான் போராட்டம்..
கட்சி சார்ப்பு இல்லாது வீதிக்கு வந்து போராடுபவர்கள் வெகு சிலர்..
அந்த சிலரிலும் பலருக்கு என்ன பிரச்சனை என்று தெரியாது.. ஒருவர் தீக்குளித்து விட்டார்.. போராட்டம் என்ற அளவில் மட்டுமே தெளிவு உள்ளது..
அல்லது தன் நன்பர்கள் எல்லோரும் போனார்கள் நானும் போனேன் என்ற அளவிற்கு உள்ளது..

இதை விட எனக்கு தெரிந்த கோவை கல்லூரியில் படிக்கும் ஒரு நன்பரிடம் என்ன காலேஜ் லீவு விட்டாச்சே.. ஏன் என்று கேட்டால், அவர் சொன்ன பதில்.
ஆமாம் இலங்கை பிரச்சனைக்காக சென்னைல ஒரு காலேஜ் ஸ்டூடன்ட் தீகுளிச்சுட்டார்.. அதான் லீவு விட்டுடாங்க..

என்னத்தை சொல்றது?

இப்படி தெளிவூ இல்லாமல் வீதிக்கு வந்து போராடும் மாணவர்கள் இந்த அரசியல்வாதிகளால் நிச்சயம் தவறாக வழிநடத்திடும் வாய்ப்பு உள்ளது..

அப்புறம் ஒரு திருத்தம் : 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் இல்லை.. அது இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்..

அரவிந்தன் said...

என்னடா இதுவரை டோண்டுவிடமிருந்து இதுவிஷயமாக விஷமத்தனமான பதிவு ஏதும் வரவில்லையே என்று நினைத்திருந்தேன். வந்துவிட்டது.

முதலில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் எந்த அரசியல் அமைப்பயையும் சேர்ந்தவர்கள் அல்ல.

இன உணர்வால் (உங்களைப்ப்போல் சாதி உணர்வால் அல்ல) போராடும் கூட்டம்.

முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருந்த மருத்துவ மாணவர்கள் ஊர்வலம் ஆரம்பிக்கும் வரை அமைதியாக பாடப்புத்தகங்களை வாசித்தபடியே இருந்தனர்.

வெளியே வாருங்கள் டோண்டு. மனதை திறந்து வைத்து வெளி உலகினை பாருங்கள்

குருத்து said...

டோண்டு,

சிலர் சொல்வது போல, ஆடு "நனையுதாம். ஓநாய் அழுததாம்" என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

அரசியல் தேவை இல்லை. போய் படிக்கிற வேலைய பாருங்க என்கிற உங்களுடைய அறிவுரை இருக்கிறதே புல்லரிக்க வைக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகமயம், தாராளமயம், தனியார் மயம் கொள்கைகள் அமுலாகி வருகின்றன.

முன்பெல்லாம், 8% போனஸ் வாங்கினால், 3 அல்லது 5 ஆண்டுகள் கழித்து 10% போனஸ் கேட்டு தொழிலாளர்கள் போராடுவார்கள். இப்பொழுது, கொடுத்த 8% த்தை கொடு என்று தான் போராட்டம் நடக்கிறது.

இதே ரீதியில் தான், மாணவர்கள் போராட்டம், இளைஞர்கள் போராட்டம், நெசவாளர்கள் போராட்டம் என அனைத்து போராட்டமும் இருக்கிறது.

இதுவரை கிடைத்த அத்தனை உரிமைகளும் அமைதியாய் இருந்து கிடைத்ததில்லை. போராடி பெற்றது தான் அனைத்தும்.
“போராடாதே” என்பது அப்பட்டமான சுயநலம். இந்த போராட்டங்களில் சிலர் படிப்பை இழக்கலாம். சிலர் வாழ்வை இழக்கலாம். சிலர் உயிரையே கூட இழக்கலாம். இழப்பு இல்லாமல் போராட்டம் என்பது சாத்தியமேயில்லை.

முத்துக்குமாரின் மரண சாசனம் தெளிவாக குறிப்பிடுகிறது. “சுயநலகாரர்கள், சமரசவாதிகள் இருக்கிறார்கள். எழும் போராட்டங்களில், மக்களிடமிருந்து நல்ல தலைவர்கள் உருவாவார்கள்”. வரலாற்றிலிருந்து அவன் கற்றிருக்கிறான்.
அவன் ஒரு தீர்க்கதரிசி.

உங்கள் “அக்கறைப் பதிவு” “இழப்பதற்கு நிறைய இழக்கிற” ஒரு நடுத்தர வர்க்கத்துப் பார்வை. அதில் சுயநலம் தான் பொங்கி வழிகிறது.

குருத்து said...

உங்களுடைய இந்த அக்கறைப் பதிவில் ஒரு சந்தேகம்.

உங்கள் கருத்துக்கு எதிராக எழுதுகிறவர்கள், பதிவர்களாக இருக்கிறார்கள்.

ஆதரவாக எழுதுகிறவர்கள், 99% அனானிகளாக வருகிறார்களே! ஏன்?

வஜ்ரா said...

இப்போதைக்கு வெளியிடப்பட்டுள்ள அனானிப்பின்னூட்டங்களில் 6 ஆதரவாகவும், 6 எதிராகவும் உள்ளது குருத்து அவர்களே. ஆக 50-50 என்று தானே சொல்லவேண்டும்.

உங்களைப்போன்றவர்களுக்கு எதிர் கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததைத் தான் தங்கள் 99% என்று குற்றம் சாட்டும் வேகம் காட்டுகிறது.

குருத்து said...

மதிப்பிற்குரிய வஜ்ரா அவர்களுக்கு,

நீங்கள் சொன்னதும், நாமதான் தப்பா எண்ணிட்டோமோ என கணக்குப்பார்த்தேன்.

9 அனானிகள் ஆதரவு கருத்துக்கள் + தூரியன், புதிய மாதவன் அனானிகளே! ஆக மொத்தம் 11 அனானிகள்.

எதிர்ப்பு அனானிகள் 3 பேர் மட்டுமே!

50%க்கு 50% தப்பு வஜ்ரா! ஒங்களுக்கு ஒன்று ரெண்டு எண்ண தெரியுமல்லவா!

மாற்றுக்கருத்துன்னு பில்டப் வேணாம்! ஆளும் வர்க்க கருத்து, சுயநல கருத்து, வரலாற்று அரங்கில் காலாவதியாகிப் போன கருத்து என சொல்லுங்கள்.

Anonymous said...

அப்பா, தலைப்பை பார்த்துட்டு எங்க நீங்க திருந்தீட்டீங்களோன்னு தப்பா நெனெச்சுட்டேன், மன்னிச்சுக்குங்க டோண்டு சார்!

ஜோசப் பால்ராஜ் said...

// February 03, 2009 7:31 PM
Blogger குருத்து said...

உங்களுடைய இந்த அக்கறைப் பதிவில் ஒரு சந்தேகம்.

உங்கள் கருத்துக்கு எதிராக எழுதுகிறவர்கள், பதிவர்களாக இருக்கிறார்கள்.

ஆதரவாக எழுதுகிறவர்கள், 99% அனானிகளாக வருகிறார்களே! ஏன்? //

:-) :)

ஜோசப் பால்ராஜ் said...

அய்யா, மாணவர்களுக்கு நல்லா ஆலோசனை சொல்றீங்க, சந்தோசம் தான். ஆனா இந்த அறிவுரை மாணவர்களை உங்கள மாதிரியே சுயநலவாதியாவே இருங்கன்னு சொல்லுற மாதிரியில்ல இருக்கு. அவனுக்கு இயல்பா வர்ற மனிதாபிமானத்தையும் ஏன் அய்யா தடுக்குறீங்க?
உடனே நீங்க எல்லாம் வெளிநாட்டுல உக்காந்துக்கிட்டு பேசாதீங்க, இங்க வந்து போராடுங்க இல்ல இலங்கையிலப் போயி போரடுங்கன்னு அனானிகள வைச்சு சொல்லாதீங்க.

நாங்களும் போராடிக்கிட்டுத்தான் இருக்கோம். நாங்க எங்களால என்ன முடியுமோ அதை செய்யிறோம். அரசாங்கம் அதால என்ன முடியுமோ அதை செய்யச் சொல்லி ஓயாம எழுதிக்கிட்டே பலர் இருக்காங்க. ( நான் என் வேலைப் பளுவால எழுத முடியல, உடனே என் பதிவ தேடிப்பார்த்துட்டு நீ எழுதலேயேன்னு சொல்லிறாதீங்க, நீங்க சொல்ல மாட்டீங்க, ஆனா அனானிங்க சொல்லுவாங்க)

செய்ய வேண்டியத செய்யாததும் தப்பு, செய்யக் கூடாதத செய்யிறதும் தப்பு. இந்த இரண்டு தப்பயும் இந்திய அரசும், பெரும்பாலான அரசியல்வாதிகளும் செய்யிறாங்க. அதை தடுக்க வேண்டியது மக்களோட கடமை. மாணவர் புரட்சி எப்பவோ வந்துருக்க வேண்டியது, இப்பவாச்சும் வருதேன்னு சந்தோசப்படுங்க.
சும்மா சுப்ரமண்ய சாமி பேசுறமாதிரி பேசாதீங்க. இப்ப மாணவர்கள் போராடுறது ரஜினி படத்துக்கு டிக்கெட் கிடைக்கலன்னோ அல்லது கமல் படத்துக்காகவோ இல்லை.
ஒரு இனம் அழிஞ்சுக்கிட்டு இருக்கு, அதக் காப்பாத்த போராடிக்கிட்டு இருக்காங்க.
தலைவலியும், திருகுவலியும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சொல்லுவாங்க. நாளைக்கு உங்களுக்கே இப்டி ஒரு நிலைமை வந்தாலும் மாணவண் போராடுவான், அப்ப சொல்லுவீங்களா, போயி உங்க வேலையப் பாருங்கடான்னு?
மனிதாபிமானமே இல்லாம அப்டி என்னத்த படிச்சு சாதிக்கப் போறோம்? அப்டி படிச்சு வர்ற தலைமுறையால என்ன பிரயோசனம்?

Anonymous said...

குருத்து மாணவர்கள் போராட்டம் எதற்கு பிரபாகரன் ஆள ஒரு நாடு வேண்டும் என்பதற்காகவா?

Arun Kumar said...

//முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருந்த மருத்துவ மாணவர்கள் ஊர்வலம் ஆரம்பிக்கும் வரை அமைதியாக பாடப்புத்தகங்களை வாசித்தபடியே இருந்தனர்.//

சாவு வீட்டில் பாட புத்தகம் படிப்பதை இப்போதுதான் வாழ்க்கையில் முதலில் கேள்விபடுகிறேன். கேக்குறவன் கேனையாக இருந்தா எருமை கூட ஏரோப்பிளேன் டிரைவ் செய்யுமாம்

Anonymous said...

//மனிதாபிமானமே இல்லாம அப்டி என்னத்த படிச்சு சாதிக்கப் போறோம்? அப்டி படிச்சு வர்ற தலைமுறையால என்ன பிரயோசனம்?//

கொலைகாரன் பிரபாவிடம் மனிதாபிமானம் காட்டுவது வெட்க்ககேடானது.

Anonymous said...

@ஆதரவாக எழுதுகிறவர்கள், 99% அனானிகளாக வருகிறார்களே! ஏன்@

பிளாக்கர் ஐடியில் வந்தால் தேடி வந்து திட்டி விட்டு துரோகி பட்டம் கொடுக்கும் கூட்டத்திடம் முகத்தையா காட்ட முடியும்

ராஜ நடராஜன் said...

Dear Mr.Raghavan,

It is good to read your versatile writings at your age.But most of the occassions your views are unethical and disgusting sir.

I am sorry to come to your blog and give a negative comment which I don't comment often.

புதிய கோணங்கி ! said...

// அரவிந்தன் said...

முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருந்த மருத்துவ மாணவர்கள் ஊர்வலம் ஆரம்பிக்கும் வரை அமைதியாக பாடப்புத்தகங்களை வாசித்தபடியே இருந்தனர்.//

அதுமட்டுமல்ல, வந்திருந்த வழக்கறிஞர்கள் அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட நடமாடும் நீதிமன்றத்திலே வழக்காடி கொண்டிருந்தனர். இறுதி ஓர்வலம் ஆரம்பிக்கும்போது மட்டுமே வழக்கை நிறுத்தி விட்டு அதில் கலந்து கொண்டனர்.

பின்குறிப்பு: கேக்கிறவன் கேணையன்னா கேழ்வரகில் நெய் வடியுமாம்!!!

Anonymous said...

பாம்பு விசத்தை வெளியேற்றிவிட்டதா?

Anonymous said...

there needs to be some reaction in tamilnadu after the way the congress govt treats the tamilnadu voters. but they should do it without affecting their future.

my brother's friend died in hindi agitation in annamalai university. he hangs in photo now. see which families are collecting the benefits. tamilnadu politicians are most untrustable.
-aathirai

Anonymous said...

மனிதாபிமானமே இல்லாம அப்டி என்னத்த படிச்சு சாதிக்கப் போறோம்? அப்டி படிச்சு வர்ற தலைமுறையால என்ன பிரயோசனம்?//

அதானே,மனிதாபிமானமே இல்லாம அப்டி என்னத்த வெளிநாட்டுல வேலை செஞ்சு சாதிக்கப் போறோம்? அப்டி வர்ற காசால என்ன பிரயோசனம்?

சோசப் அண்ணே சிங்கப்பூர்ல வேலைய உடனே தமிழ்நாட்டுக்கு இலல இல்ல ஈழத்துக்கு வந்து போராடுங்கண்ணே!!!
அதவிட்டு கடனவுடன வாங்கி படிக்கவைக்குற அப்பனாத்த அடிவயித்துல கொள்ளி சொருவறீங்களே?

அ.பிரபாகரன் said...

நண்பர்களே,
இதையேதான் இனமான ஆசிரியர், தமிழர் தலைவர் கீ.வீரமணியும் சொல்லியிருக்கார்.

ஆனால் என்னதான் டோன்டு கடைந்தெடுத்த பார்ப்பன வெறியராக இருந்தாலும், இந்த கட்டுரையை அவர் மாணவர்கள் மீது கொண்ட அக்கறையில் எழுதியதாகத்தான் எனக்கு படுகிறது.

கீ.வீரமணியின் அறிக்கையைப் படியுங்கள், அதில் கருணாநிதியை நக்கிப்பிழைக்கும் பிழைப்புவாதமே தெரியும் உங்களுக்கு.

Anonymous said...

I completely agree with u Dondu Sir.

Without protest or uprising nothing is going to happen even for a genuine cause... but why the students?

All these gimmicks by DMK is just to subvert their selfish reasons not to pressurize the Central govt on the issue.

Anonymous said...

உங்கள் கருத்து 100/100 சரி.இப்போ ஒரு 10-15 வருடமாகத்தான் நம்ம மாணவர்கள் படிக்கும் போது போராட்டம் நடத்தி கல்லூரி,பள்ளி படிப்புகளுக்கு தடை ஏற்படுத்தி கொள்ளும் செயலை செய்யாமல்


ஒழுங்காய் படித்து நல்ல வேலையில் இருப்பதால் நடுத்திரக் குடும்பங்கள் கூட பொருளாதார சுதந்திரத்தோடு வளமாய் வாழ்வது அனைவரும் அறிந்த உண்மை.சட்டக் கல்லூரி சமபவத்தை தவிர பிற அடி தடி சம்மபவங்கள் மிகக் குறைவு.


மாணவர்கள் படிக்கும் சமயத்தில் படிக்க வேண்டும்.உணர்ச்சி உசுப்பல்களுக்கு பலியாகிவிடக் கூடாது என்ற தங்களின் அறிவுரை சாலச் சிறந்தது.

///மனிதாபிமானமே இல்லாம அப்டி என்னத்த படிச்சு சாதிக்கப் போறோம்? அப்டி படிச்சு வர்ற தலைமுறையால என்ன பிரயோசனம்?//

மாணவர்கள் கல்லூரி முடிந்ததும் மாலை தமிழர் நலனை அரசுகள் காக்கவேண்டும் என ஆர்ப்பாடம் செய்யலாம்.
கல்லூரி இல்லாத நாளில் அனைவரும் திரண்டு ஊர்வலமாய் போய் அரசுக்கு
அடுத்த தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என எச்சரிக்கை விடலாம்.(இப்பத்தான் 18 வயசு ஒட்டுகள் கட்சிகளுக்கு தேவயே)

இதைவிடுத்து இன்னுமொரு இந்தி எதிர்ப்பு போராட்டம் போல் ஆரம்பித்தால்!


இளைய சமூதாயம் இன்னும் ஒரு 50 ஆண்டுகளுக்குப் பின்னால் தள்ளப்படும் அபாயம் உள்ளது.

Anonymous said...

//அதானே,மனிதாபிமானமே இல்லாம அப்டி என்னத்த வெளிநாட்டுல வேலை செஞ்சு சாதிக்கப் போறோம்? அப்டி வர்ற காசால என்ன பிரயோசனம்?

சோசப் அண்ணே சிங்கப்பூர்ல வேலைய உடனே தமிழ்நாட்டுக்கு இலல இல்ல ஈழத்துக்கு வந்து போராடுங்கண்ணே!!!
அதவிட்டு கடனவுடன வாங்கி படிக்கவைக்குற அப்பனாத்த அடிவயித்துல கொள்ளி சொருவறீங்களே?//

சரியாச் சொன்னீங்க.

சிங்கப்பூர் சம்பளம் வாங்குனா இப்படியெல்லாம்ந்தான் தோணும். வேலையை விட்டுபிட்டு இங்குவந்து போராடி பாருங்க அப்பதான் அண்டகுண்டா அடகு வைச்சு ஆத்த தாலி வித்து படிக்க வைக்கிற குடும்ப கஷ்டம் தெரியும்!

குருத்து said...

//குருத்து மாணவர்கள் போராட்டம் எதற்கு பிரபாகரன் ஆள ஒரு நாடு வேண்டும் என்பதற்காகவா?//

//பிளாக்கர் ஐடியில் வந்தால் தேடி வந்து திட்டி விட்டு துரோகி பட்டம் கொடுக்கும் கூட்டத்திடம் முகத்தையா காட்ட முடியும்//

எந்த கேள்வியானாலும், விவாதமானலும் குறைந்த பட்ச நேர்மை அவசியம். பதிவு போட்டவர் டோண்டு. அவர் கேள்விகளை எதிர்கொண்டு பதில் சொல்லாமல், அனானிகள் பதில் சொல்வதும், அனானிகள் கேள்வி கேட்பதும் சகிக்கலை.

துரோகத்திற்கான கருத்து வைத்திருப்பவர்கள் துரோகி பட்டம் வாங்கத்தான் வேண்டும்.

பயந்தாங்கொள்ளிகளிடம் நான் விவாதிப்பதில்லை.

//அப்பா, தலைப்பை பார்த்துட்டு எங்க நீங்க திருந்தீட்டீங்களோன்னு தப்பா நெனெச்சுட்டேன், மன்னிச்சுக்குங்க டோண்டு சார்!//

இந்த பின்னூட்டத்தின் மூலம், எனக்கு முன்னாடியே, நிறைய பேர் உங்களிடம் விவாதித்து நொந்து போயிருக்கிறார்கள் என புரிந்து கொள்ளமுடிகிறது.

dondu(#11168674346665545885) said...

@குருத்து
பதில்தானே வேண்டும். தந்தால் போயிற்று. முகம் காட்டி எழுதினால் நாகரிகத்தைத் தொலைத்து பெரிய மனிதர்களே எழுதும்போது மற்றவர்களை கேட்க வேண்டுமா. அங்கு வந்து நீங்கள் ஒன்றும் அதை கண்டித்தது போல தெரியவில்லையே? இங்கு வந்து ஏன் இந்த மாய்மாலம்?

டோண்டு ராகவன் அதற்கெல்லாம் பயப்பட மாட்டான் என்பதை நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதே மாதிரி வசவுகளை மற்றவர்களும் ஏற்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்? என்னைத் திட்டி வந்த பலரும் கூடத்தான் அனானி முகமூடியில் வந்தனர். அதற்கு என்ன கூறுவீர்கள்?

//உங்களுடைய இந்த அக்கறைப் பதிவில் ஒரு சந்தேகம்.
உங்கள் கருத்துக்கு எதிராக எழுதுகிறவர்கள், பதிவர்களாக இருக்கிறார்கள்.
ஆதரவாக எழுதுகிறவர்கள், 99% அனானிகளாக வருகிறார்களே! ஏன்?//
முதலில் மாணவர்கள் உருப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதின எனது பதிவின் பாயிண்டுகளுக்கு உங்கள் எதிர்வினை தாருங்கள். அதை விடுத்து பெரிஃபெரலான ஒரு விஷயத்தை பிடித்து கொண்டு ஏன் தொங்குகிறீர்கள்? இன்னும் அந்த பாயிண்டுகளுக்கான பதிலை கூறும் நேர்மை உங்களிடம்தான் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//துரோகத்திற்கான கருத்து வைத்திருப்பவர்கள் துரோகி பட்டம் வாங்கத்தான் வேண்டும்.
பயந்தாங்கொள்ளிகளிடம் நான் விவாதிப்பதில்லை.//
நாகரிகத்தை தொலைத்த விஷயம் பற்றி இட்ட அந்த இடுகைக்கு அங்காவது இங்காவது பதில் சொல்லி விட்டு இங்கு வாருங்கள். மேலே பேசலாம். யார் பயந்தாங்கொள்ளி என்றெல்லாம் பேசலாம்.

அந்த இடுகையை நான் இங்கு சுட்டுவதன் காரணம் எனது முந்தஒய பின்னூட்டத்தில் கூறிவிட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைத்து நமது ராஜீவை போட்டு தள்ளிய துரோகிகளை காப்பாற்ற நம் அப்பாவி மாணவர்கள் ஏன் பலியாக வேண்டும் என்ற கேள்விக்கு முதலில் பதில் கூறுங்கள்.

அம்புடன், (இது ஸ்பெல்லிங் பிழை அல்ல)
டோண்டு ராகவன்

ராஜேஷ், திருச்சி said...

நமது ராஜீவை //
is it really dondu...???? i cudnt believe my eyes :)

Anonymous said...

அதெல்லாம் சரி நோண்டு , இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகிட்ட எல்லாரையுமே முட்டாள்ன்னு சொல்றியா ! பகத்சிங்க், வாஞ்சிநாதன் இன்னும் பலரெல்லாம் எதுக்கு ராசா உயிர விட்டாங்க? சுத்திர போராட்டத்துல லட்சகணக்கான பேர் பங்கெடுத்தும் காந்தி மட்டும் ஏன் ராசா தேசத் தந்தைன்னு சொல்லராங்க ?
இத பாரு நோண்டு பேசாம அமைதியா வீட்ல உக்காந்து டிவி சீரியல் பாரு இதெல்லாம் உனக்கு வேண்டாத வேலை.
ஆமா பசங்ச படிப்பு கேட்டுபோகும்னு நீ அக்கரைப்படும்போது தமிழன் கொல்லப்படுவது தடுக்கணும்னு நாங்க அக்கரைபடுறது என்ன தப்பு?
- உணர்வுள்ள மனிதன் தனஞ்செயன் காண்டீபன்

அரவிந்தன் said...

//உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைத்து நமது ராஜீவை போட்டு தள்ளிய துரோகிகளை காப்பாற்ற நம் அப்பாவி மாணவர்கள் ஏன் பலியாக வேண்டும் என்ற கேள்விக்கு முதலில் பதில் கூறுங்கள்//
அமைதியாப்படையாக இலங்கைக்கு சென்ற இராணுவம் அனுமார் படையாக மாறி தமிழ் பெண்களை வண்புணர்வு செய்ததே என்ற் என் கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள் டோண்டு

வெறுப்புடன்
அரவிந்தன்

த‌வ‌ளை said...

அதெல்லாம் சரி நோண்டு , இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகிட்ட எல்லாரையுமே முட்டாள்ன்னு சொல்றியா ! பகத்சிங்க், வாஞ்சிநாதன் இன்னும் பலரெல்லாம் எதுக்கு ராசா உயிர விட்டாங்க? சுத்திர போராட்டத்துல லட்சகணக்கான பேர் பங்கெடுத்தும் காந்தி மட்டும் ஏன் ராசா தேசத் தந்தைன்னு சொல்லராங்க ?
இத பாரு நோண்டு பேசாம அமைதியா வீட்ல உக்காந்து டிவி சீரியல் பாரு இதெல்லாம் உனக்கு வேண்டாத வேலை.
ஆமா பசங்ச படிப்பு கேட்டுபோகும்னு நீ அக்கரைப்படும்போது தமிழன் கொல்லப்படுவது தடுக்கணும்னு நாங்க அக்கரைபடுறது என்ன தப்பு?
- உணர்வுள்ள மனிதன் தனஞ்செயன் காண்டீபன்

dondu(#11168674346665545885) said...

//ஆமா பசங்ச படிப்பு கேட்டுபோகும்னு நீ அக்கரைப்படும்போது தமிழன் கொல்லப்படுவது தடுக்கணும்னு நாங்க அக்கரைபடுறது என்ன தப்பு?//
அவ்வளவு அக்கறை இருந்தால் நீங்கள் போய் தீக்குளியுங்கள். மாணவர்களை கொம்பு சீவாதீர்கள்.

நான் சொல்கிறேன், “மாணவர்களே உங்கள் ஆண்டு பரீட்சை வரும் நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது. இப்போது படிப்புத்தான் முக்கியம்”. நீங்கள் சொல்லாமல் சொல்கிறீர்கள் “மாணவர்கள் நாசமாய்ப் போனாலும் பரவாயில்லை, தமிழ் ஈழம்தான் முக்கியம்” என்று. மாணவர்களே மீதியைப் பார்த்து கொள்வார்கள்.

//இத பாரு நோண்டு பேசாம அமைதியா வீட்ல உக்காந்து டிவி சீரியல் பாரு இதெல்லாம் உனக்கு வேண்டாத வேலை.//
ஐயா அருச்சுனரே, நீங்களும் பேசாமல் அலுவலக நேரத்தில் தமிழ்மணம் பார்த்து கொள்ளாமலா இருக்க போகிறீர்கள்? நடத்துங்கள், நடத்துங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அமைதிப்படையாக இலங்கைக்கு சென்ற இராணுவம் அனுமார் படையாக மாறி தமிழ் பெண்களை வண்புணர்வு செய்ததே என்ற் என் கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள் டோண்டு//
சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் பெல்ட் பாம் கட்டி அனுப்பும் வழக்கம் விடுதலைப்புலிகளுக்கு உண்டு. ஆகவே ராணுவ அதிகாரிகள் ஜாக்கிரதையாகத்தான் செயல்பட வேண்டும். அதே சமயம் அத்துமீறல்களும் நடந்தன. முக்கியக் காரணமே இந்திய அரசு தமிழ் பேசும் வீரர்களை அமைதிப்படையில் அதிகம் வைக்காததுதான்.

மற்றப்படி ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் சரியாக நிறைவேற புலிகள் ஒத்துழைத்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். அந்த நேரத்தில் பிரபாகரன் பிரேமதாசாவுடன் சேர்ந்து கொட்டமிட்டு, தாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் என ரேஞ்சில் பேசி, இந்தியப் படை வேண்டாம் என அதை போகச் செய்தார்.

சரி, இந்தியர்கள் தேவையில்லை என்றுத்தான் விட்டு விட்டீர்கள். ராஜீவையும் அவருக்கு தண்டனை தருகிறேன் பேர்வழி என போட்டுத் தள்ளினீர்கள். ஒரு வாதத்துக்கு அதையே சரி என வைத்து கொள்வோம்.

அப்புறம் எந்த முகத்துடன் இந்தியாவிடம் வந்து கையேந்துகிறீர்கள்? பாலசிங்கத்துக்கு வைத்திய உதவி எல்லாம் கேட்டு ஏன் சிறுமைப்பட வேண்டும்? ராஜீவ் மரணம் ஒரு துன்பியல் சம்பவம் என்று ஏன் பசப்ப வேண்டும்?

இப்போது மாணவ்ர்களை அவர்கள் படிப்பை கவனிக்க சொன்னால் மட்டும் ஏன் பொங்கி எழ வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

puduvaisiva said...

"If that student were to sacrifice his future for some fancied interest of riffraffs like Prabhakaran and to die in the process, will you then look after the family of the deceased for ever?

Dondu N. Raghavan"


டோன்டு சார்
தமிழனுக்கு இயல்பிலே
இன உணர்வு
தன்மானம்
ஈகை
எதிரியை பகை தீர்க்கும் அறிவு
சூழ்சியை தூசியாக்கும் வித்தை தெரிந்தவன்,

தயிர் வடை பில்டர் காபி சாப்பிட்டு ஏமாந்த எவானவது கிடைச்ச்சா நாட்டாமை அல்லது சீன்டு முடிச்சி சிற்றின்பம் பார்பதை (பாப்பானை)காட்டிலும். தன் இன மான உணர்வை காப்பதற்காக உயிர் இழப்பது மாவீரனுக்கு அழகு.


அந்த பெரும் புகழ் அந்த பெற்றோரைசாரும்.

கூலிக்கு அப்பு,தினகரன்,வச்சி சங்கராமனை போட்டு தள்ளிய மோல்லமாரி இனத்துக்கு மாவீரனை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

புதுவை சிவா

dondu(#11168674346665545885) said...

//தயிர் வடை பில்டர் காபி சாப்பிட்டு ஏமாந்த எவானவது கிடைச்ச்சா நாட்டாமை அல்லது சிண்டு முடிச்சி சிற்றின்பம் பார்பதை (பாப்பானை) காட்டிலும். தன் இன மான உணர்வை காப்பதற்காக உயிர் இழப்பது மாவீரனுக்கு அழகு.//
ஆனா, ஒண்ணு இந்த பிரபாகரர் மட்டும் மாவீரராகவோ கரும்புலியாகவோ மாறவே போவதில்லை என பட்சி கூறுகிறது.

//அந்த பெரும் புகழ் அந்த பெற்றோரை சாரும்.//
அந்தப் புகழை வைத்து என்ன செய்வது? நாக்கு வழிக்கக் கூட பயன்படாது. இவ்வளவு பேசிய நீங்கள் தைரியமாக “நான் இருக்கிறேன். அவ்வாறு மகனை இழந்த ஒரு பெற்றோருக்காவது ஆகும் செலவை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி, அதை நிறைவேற்றும் தில் உண்டா?

//கூலிக்கு அப்பு, தினகரன், வச்சி சங்கராமனை போட்டு தள்ளிய மொள்ளமாறி இனத்துக்கு மாவீரனை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை//.
தினகரன் பத்திரிகை ஊழியர்கள் இறக்கக் காரணமானவர்கள், கீழ்வெண்மணியில் தலித்துகளை எரித்தவன் தன் சாதி என்பதாலேயே அதை அடக்கி வாசித்து சொதப்பலாக ஸ்டேட்மெண்ட் விட்டு எஸ்கேப் ஆனவர் ஆகியவர்களை பற்றி உங்கள் எண்ணம் என்ன, அதையும் கூறிடவும்.

அன்புட்ன்,
டோண்டு ராகவன்

க. கா. அ. சங்கம் said...

புலி ஆதரவாக இங்கே கூச்சல் போடும் அறிவாளிகள் 1989 ல் ரணசிங்கே பிரேமதாசாவுடன் கூட்டுச் சேர்ந்து பிரபாகரன் IPKF இந்தியப்படையை விரட்டினான் என்ற குற்றச்சாட்டும், இந்தியத் தலையீடு தேவையில்லை என்று கொக்கரித்தான் என்பதும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில், விடுதலைப்புலிகளை எதிர்ப்பவர்களை இந்தியாவிலோ, அல்லது மற்ற மேலை நாடுகளிலோ அமர்ந்து கொண்டு கெட்டவார்த்தையில் திட்டுவது முதல் கேவலமாக ஜாதிவெறியைத் தூண்டும் விதத்தில் பின்னுட்டம் இடுவது வரை அனைத்து ஈனச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அன்று தேவையில்லை என்று தமிழ் விரோத சிங்கள அரசுடன் கூட்டு சேர முடிந்த பிரபாகரனால் இன்று அப்பாவித் தமிழர்கள் உயிருக்காக சிங்கள அரசுடன் உடன்பாடு செய்துகொள்ள முடியாதா என்று கேட்டால் அவன் பார்ப்பான், தயிர் வடை சாப்பிடுபவன் என்கிறார்கள்.

என்ன மயித்துக்கு இந்த சுயநலவாதி பிரபாகரனுக்காகவும் அவனை ஆதரிக்கும் கூட்டத்திற்காகவும் இந்திய மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வீணடிக்கவேண்டும் ? என்று நேரடியாகக் கேட்டாலும் பதில் இல்லை. பார்ப்பான், நோண்டு, என்று தனிமனிதத் தாக்குதல்கள்.

சரி, அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு அனைவரையும் திட்டத் தோன்றுகிறது என்றால் அப்படிப்பட்ட ஜந்துக்கள் எல்லாம் ஸ்ரீ லங்காவுக்குப் போய் பிரபாகரனுடன் சேர்ந்து போராடவேண்டியது தானே ? இல்லை முத்துக்குமரன் போல் தீ குளித்துச் சாக வேண்டியது தானே...பூமிக்குப் பாரமாக ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் ? அவர்களைப் பெற்ற தாய் தந்தையருக்குப் பேரும் புகழும் கிட்டும், அதை வைத்துக் கொண்டு அவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்று நம்பி பெட்ரோலை ஊற்றிக் கொள்ளுங்கள், என் சார்பாக க்ளோப் மார்க் தீ பெட்டி பரிசளிக்கிறேன்.

Anonymous said...

///அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு அனைவரையும் திட்டத் தோன்றுகிறது என்றால் அப்படிப்பட்ட ஜந்துக்கள் எல்லாம் ஸ்ரீ லங்காவுக்குப் போய் பிரபாகரனுடன் சேர்ந்து போராடவேண்டியது தானே ? இல்லை முத்துக்குமரன் போல் தீ குளித்துச் சாக வேண்டியது தானே...பூமிக்குப் பாரமாக ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் ? அவர்களைப் பெற்ற தாய் தந்தையருக்குப் பேரும் புகழும் கிட்டும், அதை வைத்துக் கொண்டு அவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்று நம்பி பெட்ரோலை ஊற்றிக் கொள்ளுங்கள், என் சார்பாக க்ளோப் மார்க் தீ பெட்டி பரிசளிக்கிறேன்.////

I am also giving match box
- kajendran

தாமிரபரணி said...

இந்த பதிவு உங்களின் அப்பட்டமான சுயநலத்தை காட்டுகிறது, நீ சொல்வதை பார்த்தால் நெல்லையில் இலங்கை புகுந்து மக்களை அழித்தால்கூட யாரும் போராடகூடாதுனு சொல்லுவ போலிருக்கு, நல்லாயிருக்கு உங்க மனித நேயம், உன்னை போன்ற சிலர்ரால்தான் நியாயமான போராளிகளுக்குகூட கெட்ட பெயர்
உன்னை போல் அன்று நம் சுதந்திர விரர்கள் நினைத்திருந்தால் நாம் இன்று சுதந்திரம் அடைந்திருக்க மாட்டோம், போராளிகள் தங்களை மக்கள் நினைத்துயிருக்க வேண்டும் என்று போராடவில்லை மாறாக மக்கள் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் அதுபோல்தான் இதுவும், நம் தமிழ்ஈழ மன்னிக்கனும் எங்கள் தமிழ்ஈழ மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க நாங்கள்தான் போராடித்தான் ஆக வேண்டும், கண்டிப்பாக போராட்டம் தொடரத்தான் செய்யும் அதில் எந்த ஐயமும் இல்லை. தான் மட்டும் பிழைத்தால் போதும் என ஒடும் ஆடு,மாடு,மான் கூட்டம் அல்ல இது தமிழ் கூட்டம் ஒடுற கூட்டம் அல்ல எதிர்த்து போராடுற கூட்டம் உன்னை மாதிரி பேடிகள்
எல்லாம் எங்கயாவது போய் ஒளிந்துகொள்ளலாம், அவர்களாவது கொம்பை சீவிவிடுகிறார்கள் அதுமேலும் நம் போராட வலுசேர்க்கும் ஆனால் நீ எங்கள் கொம்பை அறுத்து அடிமைகளாக இருக்க சொல்கிறாய். அப்பறம் எப்படி தமிழ் அவர்களுக்கு தேவையில்லாத மொழியோ அதுபோலதான் இந்தியும் தமிழனுக்கு தேவையில்லாத ஒன்று, வடநாட்டில் சிலபேருக்கு தமிழ் தேவைபடலாம் அதுபோல தமிழகத்தில் உள்ள சிலபேருக்கு இந்தி தேவைபடலாம் அதெல்லாம் அவர்கள் சுயவிருப்பு, அந்த ஒரு சிலபேருக்காக பலபேர் மேல் திணிக்கயிலாது,நம்மவர்களை இந்தி படி படினு சொன்ன நேரு குடும்பம்கூட அங்கிலத்தையே முதன்மையாக பயின்றார்கள்,பயில்கிறார்கள் இந்தியாவில் உள்ள அனைவரும் ஆங்கிலம் படிக்கிறார்கள் அதையே இனைப்பு மொழியாக வைப்பதில் எந்த தவறும் இல்லை
இந்தியா அன்றே ஆங்கிலத்தை ஆதரித்திருந்தால் இந்தியா என்றோ வல்லரசாயிருக்கும், காலம் போகிற வேகத்திலும், கண்ணி வேகத்திலும் இந்தியை படித்துகொண்டிருந்தால் நாம் நம் சுயமரியாதையை இழந்து அவர்களிடம் அடிமையாக இருக்க நேரும், அந்த காலத்தில் தமிழன் எத்தனையோ கடல் கடந்து வணிகம் செய்துள்ளான், ஏன் அண்ணா பெரியார்கூட எத்தனையோ வடமாநிலங்களுக்கு சென்று வந்திருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் என்ன இந்தி படித்தா சென்று வந்தார்கள்
இலங்கையில் நடப்பது இனப்படுகொலை.இலங்கை அரசாங்கம் தமிழர்களைத் திட்டமிட்டுக் கொன்றொழித்து வருகிறது
இதற்க்கு முதன்மையான காரணம்
இந்திய அரச தமிழர்களை புறக்கணிக்கிறது
இரண்டாவதாக இந்திய அரசை வற்புறுத்த இயலாத தமிழக அரசு, எல்லாவற்றிற்கும் மேலாக, தன் இனம் அழிகிறதே என்ற எந்த பதைப்பும் இன்றி தன் நலமே பெரிது என்று உண்டு, உறங்கி வாழும் தமிழ்மக்கள்!

அப்பறம் ஒரு விசயம்
நிங்கள் கூறியதில் நியாயம் இருப்பதாக
சில குருடர்கள் எழுதியிருக்கிறார்கள்
அநியாயத்தில் கூட நியாயம் இருக்கிறது அதற்காக அதை ஏற்று கொள்விர்களா தோழர்களே
சிந்தியுங்கள் தோழர்களே சிந்தியுங்கள்

Anonymous said...

என் உயிருக்கும் மேலான உடன்பிறப்பே,

அண்ணனும் சாக மாட்டார்; திண்ணையும் காலியாகாது. நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் கூறினர். அதையும் மீறி, இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக இந்தச் செயற்குழு கூட்டப்பட்டு, அதில் பங்கேற்கிறேன்.

அமிர்தலிங்கம் கொல்லப்பட்ட துயரம்: இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக புதிய புதிய குரல்கள் கிளம்பியுள்ளன. இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக 1956ம் ஆண்டு தந்தை செல்வா குரல் எழுப்பினார். பின் அமிர்தலிங்கம் போராடினார். பின் விடுதலைப் புலிகள் உட்பட பல போராளி இயக்கங்கள் தோன்றின. அவர்கள் ஒன்றாக இணைந்து போராடியிருந்தால் இந்நேரம் தமிழ் ஈழம் கிடைத்திருக்கும்.சர்வாதிகார அணுகுமுறையாலும், சகோதர யுத்தத்தாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அமிர்தலிங்கம் விருந்துக்கு அழைக்கப்பட்டு, அவர் மனைவி மங்கையர்க்கரசி கண் முன்னாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரபாகரன் பேட்டியில் என்ன சொன்னார் : இந்தக் கொடுமைகளைக் கூட மறக்கக் காரணம், அங்குள்ள தமிழர்கள் உரிமையோடு வாழ வேண்டும் என்பது தான்.பிரபாகரனை சர்வாதிகாரியாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர்; ஏற்க மறுத்த அனைவரும் கொல்லப்பட்டனர். அப்போது ஒரு பத்திரிகையில் பிரபாகரனின் பேட்டி வெளியாகி இருந்தது. "தமிழர் பகுதிகளுக்கு விடுதலை கிடைத்தால் உங்கள் ஆட்சி எப்படி இருக்கும்?' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பிரபாகரன், "சர்வாதிகார ஆட்சியாகத் தான் இருக்கும்' என அளித்திருந்த பதிலைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன். அப்போதே அவர்களது போராட்டம் எனக்கு புளித்துப் போய்விட்டது.
செல்வாக்கை பிடிக்க ராமதாஸ் முயற்சி : தமிழர்த் தலைவர்கள் கொல்லப்பட்டதும், ஆதரவு உணர்வு குறைந்து குறைந்து, மறைந்தே போய்விட்டது. முகுந்தன், கருணா போன்றவர்கள் விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டது.இலங்கையில் இன்று தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். பச்சைக் குழந்தைகள், பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர். அவர்கள் தமிழகத் தலைவர்களைப் பார்த்து, "காப்பாற்றுங்கள்' என அபயக்குரல் எழுப்புகின்றனர். அந்த அபயக் குரலுக்கு உதவ வேண்டியவர்களாக இருக்கிறோம்.சில கட்சிகள் திடீரென முளைத்து, இலங்கைத் தமிழர்களுக்கு தாங்கள் தான் பிரதிநிதிகள் போலவும், நாங்கள் இப்பிரச்னையைக் கைவிட்டுவிட்டது போலவும் பேசி, பாவ்லா காட்டி வருகின்றனர். ராமதாஸ், எனக்கும் மத்திய அரசுக்கும் விரோதத்தை உருவாக்கி, இவர் அந்த செல்வாக்கைப் பிடிக்கும் காரியத்தை செய்து வருகிறார்.

அண்ண்ன் சாக மாட்டான்: ஆட்சியைக் கலைத்துவிடுவோம், ஆட்சியை விட்டு வெளியேறி விடுவோம் என்பது போல சில பத்திரிகைகள் எழுதி வருகின்றன. "இந்த ஆண்டு இறுதியில் தி.முக., ஆட்சி ஒழிந்து, அ.தி.மு.க., ஆட்சி மலரும்' என ஜெயலலிதா சொல்லிக்கொண்டிருக்கிறார். இதிலிருந்தே, அவர்களின் திட்டம் தெரிகிறது.இலங்கைத் தமிழர் பிரச்னையைக் காட்டி நாங்கள் மத்தியில் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவோம்; திண்ணை காலியாகிவிடும்; நாம் போய் படுத்துக்கொள்வோம் என ஜெயலலிதா போன்றவர்கள், "அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும்' என கனவு கண்டு வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... அண்ணனும் சாக மாட்டான்; திண்ணையும் காலியாகாது. இதை அவர்களுக்கு உணர்த்துகிற வகையில் நமது முடிவுகள் இருக்கும். இவர்களுக்கு கறுப்புச் சட்டை போடக் கற்றுக் கொடுத்தவர்களே நாம் தான். நாம் கழற்றி வைத்ததைத் தான் இவர்கள் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றப் புறப்பட்டது போல் சிலர் நாடகம் ஆடுகின்றனர்.

இலங்கையில் ஆகட்டும், மற்ற வெளிநாடுகளில் ஆகட்டும் தமிழர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் குரல் கொடுத்தவர்கள் நாம். அவர்களைப் பற்றி பேசும் தகுதி பெற்ற ஒரே கட்சி தி.மு.க., தான். வேறு யாருக்கும் கிஞ்சித்தும் கிடையாது.

மு. கருணாநிதி

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

thooooooooooo!

Rajendra Prasad, P said...

இங்கே கண்ட முன்னூட்டம், பின்னூட்டம் எல்லாமே இலங்கை தமிழர் என்றாலே புலிகள் மட்டும் என்பது போலவே குறிப்பிடுகின்றன. ஆனால் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும் தான். இத்தகையோருக்காக குரல் கொடுப்பது தேவையில்லாதது என்பதுதான் மனிதாபிமானமில்லாத செயல்.

வெறும் அறிவைக் கொண்டு மட்டுமே வாழ்வை பார்க்க நமக்கு கண்ணீர் எதற்கு? உணர்வும், அறிவும் ஒருங்கே பெற்றவனே மனிதன்; அவன் அடுத்தவர் துன்பம் கண்டு துடிப்பான்; தன்னால் இயன்றதை செய்வான். சுயநலமிகுந்த மனிதரல்லாதோரே, தன் வாழ்வை மட்டுமே எண்ணுவர்.

தமிழனாக இல்லாவிடினும், மனிதனாகவாவது இருப்போம். பலர் எழுதியிருப்பதை போல் யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று சுதந்திர போராட்ட வீரர்களிருந்திருந்தால் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்து சமயத்திலும் ஆங்கிலேயன் காலை தொழுதுகொண்டுதானிருந்திருப்பீர்கள்.

"தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினையே அழித்திடுவோம்" என்ற பாரதி இப்போதிருந்தால் என்ன சொல்லுவான்?

- பா.இராசேந்திர பிரசாத், பெங்களூரு.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

இப்போ கஷ்டப்படுறவனுக்காக போராடணும்னு யாருக்குத் தோணுதோ, அதிகாரம் பண்றவன் தன்னோட நாட்டுக்காரனா இருந்தாலும் தப்புன்னு சொல்ற மனசு யாருக்கு இருக்கோ, அவனை மாதிரி மனசு உள்ளவந்தான் போன நூற்றாண்டுலயும் சரி, இன்னைக்கும் சரி போராடி தீமையை ஒழிக்கிறவன்.

இன்னைக்கு பாதுகாப்பா இருந்துகிட்டு, நாளைக்குப் பணக்காரனா ஆனாப் போதும்னு நினைக்கிற நாய்கள், அதிகாரத்துக்கு அடிதாங்கும் கூட்டத்திலதான், அன்னைக்கும், இன்னைக்கும், என்னைக்கும்.

த‌வ‌ளை said...

என்னுடைய பின்நூட்டதில்லிருந்த தனிமனித தாக்குதலுக்காக வருந்துகிறேன்.

ஐயா ராகவன் அவர்களே இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா ??????

௧) இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகிட்ட எல்லாரையுமே முட்டாள்கள்னு சொல்லுகிறிர்களா ?

2)பகத்சிங்க், வாஞ்சிநாதன் இன்னும் பலரெல்லாம் உயிர விட்டது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவுன்னு சொல்லுகிறிர்களா ?

3) இதேபோல இந்திய சுத்திர போராட்ட காலத்துல மாணவர்களைப் புத்தகங்களோட பூட்டி வெச்சிருந்தா இன்னைக்கு நாம சுதந்திர காற்றை சுவாசிக்க முடிந்திருக்கும்னு நினைக்கிறீங்களா ?

௪)மாணவர்கள் அரசியலில் தலையிடக்கூடாதென்றால் அரசியலில் தலையிடும் உரிமை அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் உள்ளதா ?

இன்னும் நிறைய கூற / கேற்க வேண்டிஉள்ளது .....................................................

Anonymous said...

அண்ணனும் சாக மாட்டார்; திண்ணையும் காலியாகாது.

கருணாநிதி குண்டியில பெவிகால் தடவிகிட்டு உட்க்கார்ந்து இருக்கார் யாராலும் அசைக்கவே முடியாது

Anonymous said...

//இலங்கையில் ஆகட்டும், மற்ற வெளிநாடுகளில் ஆகட்டும் தமிழர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் குரல் கொடுத்தவர்கள் நாம். அவர்களைப் பற்றி பேசும் தகுதி பெற்ற ஒரே கட்சி தி.மு.க., தான். வேறு யாருக்கும் கிஞ்சித்தும் கிடையாது.//

thalaiva nee aayiran aandu vaazhka

Anonymous said...

//அண்ணனும் சாக மாட்டார்; திண்ணையும் காலியாகாது. நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் கூறினர். அதையும் மீறி, இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக இந்தச் செயற்குழு கூட்டப்பட்டு, அதில் பங்கேற்கிறேன்.//

அன்னைத் தமிழுக்கும்,தமிழ் சாதியின் விடியலுக்கும்,மதவாத பிற்போக்கு சக்திகளிடமிருந்து மைனாரிட்டி சமூகத்தை காக்கும் உன்னத செயலுக்கும், ஆதிக்க மனப்பான்மை கொண்ட கழுகின் கொடூர மனம் படைத்த உயர் ஜாதிகளிடமிருந்து பிற்படுத்தபட்ட ,ஒடுக்கப்பட்ட ஜாதி மான்களை காப்பாற்றுவதற்கும் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கலைஞரும் அவரது குடுபத்தாரும் தியாகம் செய்த வரலாற்றை மறந்து,மீண்டும் பார்ப்பன தீய சக்திகளின் மொத்தத் தலைமையின் கையில் இந்த 10 கோடி தமிழர்களின் தலை விதியையை அடகு வைக்கத் துடிக்கும் சுயநலக் கும்பல்களின் சதிக்கு இந்தச் தமிழ்ச் சமூதாயம் இன்னும் ஏமாறத் தயராயில்லை.

தள்ளாத வயதிலும்,உடல் நலம் குன்றிய நிலையிலும் மக்களுக்கு உழைப்பதற்காக பாடுபடும் ஓய்வறியாச் சூரியனை காலம் உள்ளவரை வாழ்ந்து சிறக்க வாழ்த்தி மகிழுவோம். .

Anonymous said...

//அண்ணனும் சாக மாட்டார்; திண்ணையும் காலியாகாது. நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் கூறினர். அதையும் மீறி, இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக இந்தச் செயற்குழு கூட்டப்பட்டு, அதில் பங்கேற்கிறேன்.//

அண்ணா,நெடுஞ்செழியன்,சம்பத்,மதியழகன்,என்.வி.நடராஜன் ஆகிய அரும் பெரும் தலைவர்களால் கொட்டும் மழையில் ஆரம்பிக்கப் பட்ட திராவிடர் நலம் காகும் அரணாம் திமுகழகத்தை கட்டிக் காத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கும் தியாக வரலாற்றை எழுதும் கலைஞரின் குடுபத்தை வசை பாடும் இந்த பார்ப்பனக் குசும்பர்களை இந்த நாடும் வரலாறும் மன்னிக்காது.

Anonymous said...

கலைஞர்-தலைவர்
மகன் ஸ்டாலின்-பொருளாளர்,இ.அணிச் செயலர்
மகன்- அழகிரி-தென்மண்டல காப்பாளர்
மருமான் -மாறன் -கழகப் பாதுகாப்பு செயலர்
மகள்-கனிமொழி-பண்பாடு காக்கும் செயலர்.

ஒரே குடுபத்தில் இத்தனை வாரீசுகளை தமிழ் சமுதாயம் காக்கும் அறப் போரில் ஈடுபடுத்தியுள்ள தியாகத்தின் மொத்த உருவத்தை கேலி பேசுவோரை வரலாறு மன்னிக்காது.

Anonymous said...

அனைவருக்கும் சரியாய் லக்கிலுக்காரின் இனமானம் காக்கும் பதில்




இணையத்தில், பத்திரிகைகளில், சாலையில், ரேஷன் கடையில், பேருந்தில், தொடர்வண்டியில் எங்குப் பார்த்தாலும் சில திடீர் ஈழ ஆதரவாளர்கள் (பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் ஒரு நூலை இடுப்புக்கும், தோளுக்கும் குறுக்காக அணிந்திருக்கிறார்கள்) கலைஞரை துரோகியென்று தூற்றுகிறார்கள். ஜெயலலிதா, சோ ராமசாமி, இந்துராம், சுப்பிரமணியசாமி வகையறாக்கள் எப்போதுமே அவர்கள் கண்களுக்கு துரோகிகளாக பட்டதில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இதுவரை தமிழுக்கான, தமிழருக்கான கலைஞரின் எழுபதாண்டு கால உழைப்பை அங்கீகரிக்காத எவனுமே / எவளுமே இப்போது புதியதாக இப்பிரச்சினையில் கலைஞரை திட்ட அருகதையற்றவர்கள். ‘டாக்டர் கலைஞர் வாழ்க’ என்றே கோஷமிட்டு பழக்கமடைந்த எங்கள் நாவே ‘கருணாநிதி ஒழிக’ என்று உரத்துச் சொல்ல உரிமைபெற்றவை

dondu(#11168674346665545885) said...

@தனஞ்செயன் காண்டீபன்
தனி மனித தாக்குதல்களுக்கேல்லம் இந்த டோண்டு ராகவன் அஞ்ச மாட்டான் என்பதை தமிழ் இணைய உலகமே அறியும்.

மற்றப்படி கேள்விகளுக்கு நன்றி. டோண்டு பதில்கள் - 12.02.2009 பதிவுக்கான வரைவுக்கு அவைன் சென்று விட்டன.

முரளி மனோகர் சில வார்த்தைகள் கூற விரும்புகிறான்:
இதான்யா இந்த பெரிசு கிட்ட கஷ்டம். தன்னோட காரியத்துலத்தான் அதுக்கு கண்ணு.

இப்பப் பாருங்க, ஏனய்யா பெரிசுக்கு கேள்விகள் போட்டு குடுத்து அடுத்த பதிவுக்கு வழி செஞ்சீரு என பலர் உங்களை சாடப் போகிறார்கள்.
நன்றி முரளி மனோகர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//Only wish you had thought of such things, as said before, during demonstrations against reservations. Are these advices only when you have no personal gains?:-)//
அதிலாவது சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்கள் எதிர்க்காலத்துக்காக அஞ்சி போராடிதில் அர்த்தம் இருந்தது. ஆனால் இப்போது இதுவோ அப்பட்டமான சுயநலப் புலிகளுக்காக நடக்கும் போராட்டம். இங்கு உணர்ச்சி வசப்பட்டு மாணவர்களது எதிர்காலம் பாழானால் எவன் வந்து அவர்களை காப்பாற்ற போகிறான்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//வித்யாசாகரன் (vidyasakaran) said...

இப்போ கஷ்டப்படுறவனுக்காக போராடணும்னு யாருக்குத் தோணுதோ, அதிகாரம் பண்றவன் தன்னோட நாட்டுக்காரனா இருந்தாலும் தப்புன்னு சொல்ற மனசு யாருக்கு இருக்கோ, அவனை மாதிரி மனசு உள்ளவந்தான் போன நூற்றாண்டுலயும் சரி, இன்னைக்கும் சரி போராடி தீமையை ஒழிக்கிறவன்.

இன்னைக்கு பாதுகாப்பா இருந்துகிட்டு, நாளைக்குப் பணக்காரனா ஆனாப் போதும்னு நினைக்கிற நாய்கள், அதிகாரத்துக்கு அடிதாங்கும் கூட்டத்திலதான், அன்னைக்கும், இன்னைக்கும், என்னைக்கும்.//

சரி சரி பெங்களூர் எலங்கா விமானதளத்தில் இலங்கை ராணுவத்துக்கு பயிர்ச்சி தராங்களாம். சாரு பெங்களூர்ல தானே இருக்காரு போய் முடிஞ்சா தடுத்து நிறுத்தவும் இல்லை அங்க வாயிலில் பொய் குரலாவது கொடுக்கவும்.

பெரிய இணைய புரட்ட்சிகாரரு இவரு த்தோடா

Anonymous said...

//Blogger குருத்து said...



எந்த கேள்வியானாலும், விவாதமானலும் குறைந்த பட்ச நேர்மை அவசியம். பதிவு போட்டவர் டோண்டு. அவர் கேள்விகளை எதிர்கொண்டு பதில் சொல்லாமல், அனானிகள் பதில் சொல்வதும், அனானிகள் கேள்வி கேட்பதும் சகிக்கலை.

துரோகத்திற்கான கருத்து வைத்திருப்பவர்கள் துரோகி பட்டம் வாங்கத்தான் வேண்டும்.

பயந்தாங்கொள்ளிகளிடம் நான் விவாதிப்பதில்லை.//

த்தோடா சாரு தன்னோட பெயர் முகவரி தொலைபேசி எண் என்று அனைத்தையும் குறிபிட்டுவிட்டே கருத்து சொல்கிறார்.

குருத்து என்பது இவரின் சொந்த பெயர் என்பதை அனைவரும் நம்பி விட்டோம். இவரே ஒரு முகமூடி இதில் அடுத்தவனை ஏளனம் வேற

த‌வ‌ளை said...

"மற்றப்படி கேள்விகளுக்கு நன்றி. டோண்டு பதில்கள் - 12.02.2009 பதிவுக்கான வரைவுக்கு அவைன் சென்று விட்டன." ??????????????

அன்புசிவம்(Anbusivam) said...

டோண்டு அவர்களே...சுத்த அபத்தமாக உள்ளது உங்கள் வாதம்...
எதுவுமே யாருதோன்னு நெனச்சா அப்படித்தான் தோனும்... நம்ம வீட்டு அம்மாவும் அக்காளும் யாராலோ சீரழிக்கப்படும்போது படிப்பு வீனாப்போயிடும்னு எந்த ஒரு மனுசனும் சும்மா இருக்க மாட்டான்... எல்லாம் உங்க நெனப்பில தான் இருக்கு... பிரச்சனை உங்களுதுன்னு நெனயுங்க...இப்படிப்பட்ட அபத்தமான என்னமேல்லாம் தோனாது... யாருக்கோ என்னமோ ஆகுது நமக்கு கொள நனஞ்சிடுச்சா இல்லையான்னு பாத்தா இப்படித்தான் தோனும்... யாருமே மாணவன் வீனா போகட்டும்ன்னு நெனைக்கலை.. போரடுரதால படிப்பு வீனாப்போகும்ங்கிரதையும் முழுசா ஏத்துக்க முடியல.. போரட்டத்தோட படிப்பும் பாதிக்கப்படாம இருக்க முடியும்ங்கிறது என்னோட வாதம்... அப்படியும் தடங்கல் ஏற்ப்பட்டா அது தற்காலிகமான தடங்களே தவிற நிரந்தரமானது இல்ல... பல்லுல சொத்த வந்தா வலிய பொருத்துக்கிட்டு புடுங்கி எறியரம்ல அது மாதிரிதான்... பல்லு என்னுதுன்னு நெனயுங்க... புடுங்கலாமா இல்ல புல்லாங்குழல் வாசிக்கலாமான்னு தெரியும்...
இன்று பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கும் நாடுங்க எல்லாமே புரட்சிகளிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டவைதான்... இப்பவே கிட்டத்தட்ட எல்லாரும் மழுங்கடிக்கப்பட்டுதான் இருக்கிறோம்.. இனி இருக்கரதயும் வேண்டாம்னா ஒன்னும் கிடைக்காது..

இப்படி கொதிச்சு எழுகிற மாணவன் ஒருத்தன போய் வா க.க.முக்கா வோ இல்ல தெத்.தே,முக்காவோ சரியில்லை போராட்டம் பன்னலாம்னு கூப்பிட்டு பாருங்க.. ஒரு பய வரமாட்டான்... இது உணர்வு சம்ந்தப்பட்டது.. தவிற நியாயமானதும் கூட..

கொதிச்சு எழுற மாணவன சரியா வழி நடத்த ஒரு சரியான தலைவன் இல்ல வேணும்னு கேளுங்க அது நியாயம்.. போராட்டத்தோட படிப்பும் முக்கியம் அதயும் பாருன்னு சொல்லுங்க அதுவும் நியாயம்.. ஊர் குடும்பத்தோடயே உன் குடும்பத்தயும் பாருன்னு சொல்லுங்க அது நியாயம்... சும்மா உணர்ச்சி வசப்பட்டதோட மட்டும் இல்லாம தீர யோசன செஞ்சு சரியான பாதயில போரட்டத்த கொண்டு செல்ல சொல்லுங்க அதுவும் நியாயம்... மாணவர்கள் மட்டும் தான் சுயநலமில்லாம இருக்காங்க அது மட்டும் போதாது எல்லோரும் கை கொடுக்கனும்ன்னு சொல்லுங்க அதுவும் நியாயம்... அனா அதயெல்லாம் விட்டுப்புட்டு காடு பத்திக்கிச்சி வீட்டுக்கென்னன்னு குப்பரிக்கடிச்சு படுக்கசொன்னா.. வீடும் பத்திகிற நாள் மிக தொலைவில் இல்லை...

அரவிந்தன் said...

//அதே சமயம் அத்துமீறல்களும் நடந்தன. முக்கியக் காரணமே இந்திய அரசு தமிழ் பேசும் வீரர்களை அமைதிப்படையில் அதிகம் வைக்காததுதான்//

அத்துமீறல் நடந்ததுல்ல.அதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.?

இந்திரா கொலையான சீக்கீயர்கள் 3000 பேர் புதுடில்லியில் கொல்லப்பட்டனரே(அப்ப நீங்க டில்லியில் தான் இருந்திருப்பீங்க) அதற்கு இராசீவ் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா.?

ஆலமரம் விழும்போது சில அதிர்வுகள் ஏறபடத்தான் செய்யுமாம். என்ன திமிரான வார்த்தை..

ஏன் டோண்டு இந்த கொலக்கார இராசீவுக்கு நீங்க இன்னும் சொம்பு தூக்கறீங்க.

Rajendra Prasad, P said...

////Only wish you had thought of such things, as said before, during demonstrations against reservations. Are these advices only when you have no personal gains?:-)//
அதிலாவது சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்கள் எதிர்க்காலத்துக்காக அஞ்சி போராடிதில் அர்த்தம் இருந்தது. ஆனால் இப்போது இதுவோ அப்பட்டமான சுயநலப் புலிகளுக்காக நடக்கும் போராட்டம். இங்கு உணர்ச்சி வசப்பட்டு மாணவர்களது எதிர்காலம் பாழானால் எவன் வந்து அவர்களை காப்பாற்ற போகிறான்?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

அப்ப சுயநலத்துக்காக போராடுங்கன்றீங்க, எவ்ளோ நல்ல மனசு சார் உங்களுக்கு! அப்படி செத்த கோஸ்வாமிக்கு லாபமே இல்லியே?

எல்லாரும், நாம மட்டும் நல்லா இருந்தா போதும் நினைங்க. நம்ம எவனாவது ஒதைச்சானா சுத்தி நிக்கறவங்க அவங்க வேலய மட்டும் பார்பாங்க. "உலகமே மோசம், அவவன் அவ(ன்) வேலய மட்டும் பார்க்கறான்" ன்னு புலம்புவோம்.

வாழ்க்கை ஒரு செமஸ்டர்ல மட்டுமே முடிவாயிடாது. எனக்கு தெரிஞ்சி எத்தனையோ பேர் சுமாரா படிச்சி ரொம்ப மேலயும் வந்திருக்காங்க, நல்ல மார்க் எடுத்து உருப்படாமயும் போயிருக்காங்க

dondu(#11168674346665545885) said...

//அப்படி செத்த கோஸ்வாமிக்கு லாபமே இல்லியே?//
கோஸ்வாமி சாகவில்லை. தப்பித்து கொண்டார்.

//வாழ்க்கை ஒரு செமஸ்டர்ல மட்டுமே முடிவாயிடாது.//
அப்படீங்கறீங்க? நீங்களும் மாணவரா இருந்தா தாராலமா போராடுங்களேன், இல்லையானால் உங்கள் தம்பி/பிள்ளை ஆகியோரை போராடச் செய்யுங்களேன். யார் தடுத்தது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அத்துமீறல் நடந்ததுல்ல.அதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?//
பலர் கோர்ட் மார்ஷல் செய்யப்பட்டனர். அது இருக்கட்டும் ராஜீவ் கொலையின் முக்கிய குற்றவாளி இன்னும் தெனாவெட்டாக சுற்றிக் கொண்டு அது ஒரு துபவியல் சம்பவம் எனக் கூறித் திரிகிறாரே அவர் மேல் எப்ப ஆக்‌ஷன் எடுக்கப் போறாங்களோ தெரியல்லியே. அதுக்குள்ள எத்தனை ஊரார் பிள்ளைகளுக்கு அவர் பெல்ட் பாம் கட்டப் போகிறாரோ பயமா இருக்கே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அடாடாடா, பதிவர்களின் உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது. மாணவர்களை கொம்பு சீவி அவர்கள் தமது எதிர்காலத்தை தொலைப்பதில் இவர்களுக்கு என்ன இவ்வளவு கொலை வெறி?

கேட்டால், நாங்கள்தான் செய்ய முடியவில்லை, மற்றவர்களாவது செய்ட்யட்டுமே என பெருந்தன்மையாக பேசுவார்கள்.

அன்புடன்,
முரளி மனோகர்

அரவிந்தன் said...

3000 சீக்கியர்களின் கொலையை நியாபடுத்திய இராசீ வின் செய்கை குறித்து எனது கேள்வியை நீங்கள் மற்ந்துவீட்டீர்கள

என்ன கோர்ட்மார்ஷல் நடவடிக்கை என்று விரிவாக சொல்லமுடியுமா.?

dondu(#11168674346665545885) said...

@அரவிந்தன்
கோர்ட் மார்ஷல்கள் பற்றி அக்காலக் கட்டத்தில் படித்தேன். ஆனால் விவரமாக பார்க்கவில்லை.

ராஜீவ் சீக்கியக் கொலைகளை நியாயப்படுத்தியதை நானும்தான் ஒத்து கொள்ளவில்லை. இது பற்றி எனது மோடி பற்றிய பதிவுகளில் கூறியுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2007/12/blog-post_28.html

அதில் எனது பின்னூட்டம் இதோ:

////ஒருவர் தேர்தலில் வெற்றிபெற்றதாலேயே அவர் புனித பசு என்றாகாது. அனுபமுள்ள நீங்கள் இதை ஏற்பீர் என நினைக்கிறேன்..//
கண்டிப்பாக இதை ஏற்கிறேன். அதே சமயம் மோடி பெற்ற வெற்றி அவரது நல்லாட்சிக்காகத்தான். அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் ராஜிவின் மீதும் சாட்டப்பட வேண்டும். ஆயினும் யாரும் ராஜீவை அந்த ரேஞ்சுக்கு பேசவில்லை. ஏன் இந்த இரட்டை நிலை?

2001-ல் ந்டந்ததாகக் கூறப்பட்டதை மறுபடியும் 2007-லும் ஏன் கூற வேண்டும்? அப்படியானால் 1984 பற்றியும் பேசலாமே?

ஆனால் இந்த தேர்தலில் குஜராத் மக்கள் தெளிவாகவே இருந்தனர். தங்களுக்கு வேண்டிய ஆட்சியை தெரிவு செய்தனர். அவர்களை நான் பாராட்டுகிறேன்.//

அன்புடன்,
டோண்டு ராகவன்

த‌வ‌ளை said...

இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா ??????

௧) இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகிட்ட எல்லாரையுமே முட்டாள்கள்னு சொல்லுகிறிர்களா ?

2)பகத்சிங்க், வாஞ்சிநாதன் இன்னும் பலரெல்லாம் உயிர விட்டது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவுன்னு சொல்லுகிறிர்களா ?

3) இதேபோல இந்திய சுத்திர போராட்ட காலத்துல மாணவர்களைப் புத்தகங்களோட பூட்டி வெச்சிருந்தா இன்னைக்கு நாம சுதந்திர காற்றை சுவாசிக்க முடிந்திருக்கும்னு நினைக்கிறீங்களா ?

௪)மாணவர்கள் அரசியலில் தலையிடக்கூடாதென்றால் அரசியலில் தலையிடும் உரிமை அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் உள்ளதா ?

dondu(#11168674346665545885) said...

@தனஞ்சயன் காண்டீபன்
ஐயா அருச்சுனரே,
அதான் பெரிசு சொல்லிடுச்சே, ஒங்க கேள்விங்க அடுத்த கேள்வி பதில் பதிவுல வரும்னு. அடுத்த வியாழனன்னிக்கு நிச்சயம் பதில்கள் வரும்.

முரளி மனோகர்

த‌வ‌ளை said...

????
கேள்வி கேட்டது பதிலைத் தெரிந்துகொண்டு என் அறிவுக்கண்ணைத் திறந்துகொள்ள அல்ல. இந்த தலைப்பின் கீழ் எழுதப்பட்டதால்தான் இந்த கேள்விகள் கேட்கப்பட்டது .

Anonymous said...

//Thananjeyan Kandeeban T said...
????
கேள்வி கேட்டது பதிலைத் தெரிந்துகொண்டு என் அறிவுக்கண்ணைத் திறந்துகொள்ள அல்ல. இந்த தலைப்பின் கீழ் எழுதப்பட்டதால்தான் இந்த கேள்விகள் கேட்கப்பட்டது .//

Rajendra Prasad, P said...

//அப்படி செத்த கோஸ்வாமிக்கு லாபமே இல்லியே?//
கோஸ்வாமி சாகவில்லை. தப்பித்து கொண்டார்.//
செத்திருந்திருந்தாலும் லாபமே இல்லையே

//வாழ்க்கை ஒரு செமஸ்டர்ல மட்டுமே முடிவாயிடாது.//
அப்படீங்கறீங்க? நீங்களும் மாணவரா இருந்தா தாராலமா போராடுங்களேன், இல்லையானால் உங்கள் தம்பி/பிள்ளை ஆகியோரை போராடச் செய்யுங்களேன். யார் தடுத்தது? //

என் பள்ளி நாட்களில் நானும் ஈழத்தமிழருக்கான போராட்டங்களில் பங்கு பெற்றேன் (உண்ணாவிரதம், ஊர்வலம், நிதியளிப்பு; அப்ப LTTE, PLOT, TELO, EPRLF எல்லாருக்காகவும்). இப்போதும் என் தம்பியோ, மகனோ கல்லூரியில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர்களும் பங்குபெற்றிருப்பார்கள்.

இதற்காக மட்டுமில்லாமல் வேறு சில பொது பிரச்சனைகளுக்காகவும் முன்னின்றிருக்கிறேன்.

//அப்ப சுயநலத்துக்காக போராடுங்கன்றீங்க//

இதுக்கும் பதில் சொல்லியிருக்கலாம்....

Anonymous said...

நல்லா சொன்னீங்க.

முகம்மது பின் துக்ளக்கில் ஒரு வசனம் ஞாபகம் வருகிறது.

நிருபரின் கேள்வி. "மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?"

சோவின் கலக்கல் பதில்... "அரசியல் ஒரு சாக்கடை. அதில் எது வேண்டுமானாலும் கலக்கலாம்!"

அதுதான் ஞாபகம் வருகிறது. மாணவர்களைக் கெடுத்து மஞ்சள் துண்டுகள் வாழ நினைக்கின்றன. வருத்தம், வருத்தம்.

Anonymous said...

This very good posting has got more negative votes( 103 /121), but receied very good support comments .what is the reason?could you please explain?

kamalakkannan.

dondu(#11168674346665545885) said...

@கமலக்கண்ணன்
18/121 என்பதில் 18 என்பது ஆதரவு ஓட்டு என்று பொருள் அல்ல. எதிர் மறை ஒட்டுகளுக்கும் ஆதரவு ஓட்டுகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்தான் அது. அதாவது ஆதரவு ஓட்டுகள் மொத்த 121 ஓட்டுகளில் எதிர்மறை ஓட்டுகளை விட 18 அதிகம்.

நீங்கள் சொல்வது போல 103 எதிர் ஓட்டுகள் என்றால் விளைவு [மைனஸ் 93]/121 எனக் காட்டப்பட்டிருக்கும். அதுதான் எனது புரிதல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

thank you very much for your clarification .my support vote is counted as 19/122.

kamalakkannan

Anonymous said...

Now the schools and colleges are opend by the govt of tamil nadu.What is the present mindset of students at chennai about srilankan issue?

kamalakkannan

Anonymous said...

அறுபதுகளில், இந்தி எதிர்ப்பு, வர்க்க எதிர்ப்பு என்ற பசப்பலில் பல நூறு மாணவர்களின் வாழ்க்கை காவு கொடுக்கப்பட்டது, சில அரசியல்வாதிகளின் தீரா விட ங்களினால். அப்போது, தமிழகத்தில் வெள்ளாமை இன்னும் ஒரு முக்கிய அங்கமாய் இருந்திருந்தது. சிறு தொழில்கள் நன்றாக தழைத்திருந்தன. ஆனால், ரிசர்வேசன் குறைவாகவே தாக்கியிருந்தது. வேலை வாய்ப்பு போட்டிகளும் மிகவும் குறைந்திருந்தன. இம்மாதிரி சூழலில் படிப்பைத் தொலைத்த மாணாக்கர்கள் தங்கள் வாழ்வில் ஒரு இரண்டாவது நிலையில் வாழத் தொடர்வது சாத்தியமாய் இருந்தது.

எண்பதுகளில் இதே இலங்கைப் போராட்டத்தின் முதல் இன்னிங்ஸ். ஆதிக்க சாதிகளின் தீரா விடம் முழுதாய் வெற்றி பெற்றிருந்த காலம். இட ஒதுக்கீடு இன்னும் ஆழமாய் பரவியிருந்தது. சிறு தொழில்கள் இன்னும் முழுசாய் செத்துப்போகவில்லை. வாழ்க்கை வாழ்வதற்கு விவசாயத்தை அண்டுவது இன்னும் சாத்தியமாய் இருந்தது. ஊடகங்கள் தன் விஷக் கரங்களை நீட்டி மாணவர்களை ஒருநாள் ஹீரோக்களாக்கி விட ஆரம்பித்திருந்தன. இப்போது படிப்பைத் தொலைத்த மாணாக்கர்கள் கொஞ்சம் சேதாரத்துடன் தப்பித்துக்கொள்ள இன்னும் வாய்ப்பு இருந்தது. வேலை வாய்ப்புகளும் ஆயிரம், இரண்டாயிரம் என்று இருந்தது. தொலைத்தாலும் ரொம்ப நஷடம் கிடையாது என்ற நிலை. ஒரு இரண்டு வருஷங்கள் தேக்கம் என்றாலும் ஒப்பேற்றி விட முடிந்தது. போட்டிகள் சுமாராய் இருந்தது. அதிகமாய் உழைக்காத மாணவனும் அந்த பந்தயங்களில் சில சில வெற்றிகள் பெற முடிந்தது.

இப்போது நிலை வேறு. சிறு தொழில்கள் முற்றிலுமாய் நிராகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன. விவசாயம் என்பது வக்கற்றவர்களின் வாழ்வாதாரமாய் போய்விட்டது. விவசாயம் என்பது தற்கொலைக்கு ஒரு லெவல் மேலே நின்று விட்டது. பெரிய பெரிய நிறுவனங்களைக் குறிவைத்து கொள்கைகள் நிர்ணயிக்கபட்டு, வளைக்கப்படுகின்றன. தமிழகம் இந்தியாவில் முழுதும் நகரமயமாக்கப்பட்ட முண்ணனி மாநிலங்களில் ஒன்றாய் ஆகிவிட்டது. தமிழகத்தில் 98% எல்லோருக்கும் இட ஒதுக்கீடு என்ற விஷம் முழுதுமாய் பரவி இப்போது ஆதிக்க சாதிகளுக்கு ஒரு லாபமும் இல்லாமல் அவர்களிடையே கூட போட்டிகள் கழுத்தை நெறிக்கின்றன. எத்தனை படித்தாலும் வேலையும், கல்லூரியும் கிடைக்க இயலாமல் போகிறது. 98 1/2 வாங்கினால் ஐ.டி படித்து மாசம் 20 ஆயிரம் வாங்கி வாழலாம். அதே 98 மட்டும் வாங்கினால் சிவில் என்ஜினியரிங் படித்து ஒரு வருடம் வேலை தேடினால் 5 ஆயிரம் ரூபாய்க்கு வேலை கிடைக்கலாம். - என்பது போல அரை மார்க்குகளில் வாழ்க்கை லாட்டரியாய் ஆகி விட்டது. இரண்டாம் நிலை மாணாக்கர்களின் நிலை பரிதாபமாய் இருக்கிறது. முதல் நிலைக்கும் பிறர்களுக்கும் இடையே தராதரம் மிகவும் விலகிப்போய் விட்டது. கலைக்கல்லூரிகளில் படித்தவர்களை நந்தனம் நாய் கூட மதிக்க மாட்டேன் என்கிறது. தமிழகத்தில் கடந்த 10 வருஷங்களாக ஒரு தொலைநோக்குத்திட்டங்களும் இல்லாததால், பெங்களூர், குஜராத், டில்லி ஆகிய இடங்களில் வேலை வாய்ப்புகள் பல மடங்கு பெருகிவிட்டாலும், தமிழக மாணவர்கள் அதில் பங்கு பெற ஆர்வமும், திறமையும் இல்லாமல் முடங்கிப்போகிறார்கள். பெண் பிள்ளைகள் நன்றாய் படித்தாலும் இம்மாதிரி அரசியல் கலாட்டாக்களில் பலி ஆவது ஆண்கள் மட்டுமே. இன்றைய நிலையில் மாணவர்கள் படிப்பை ஒரு நாளும் புறக்கணிப்பது என்பது தற்கொலைக்குச் சமமே. முத்துக்குமார் செய்தது ஒருநாள் வேதனையில் அவருக்கு முடிந்தது. இவர்களோ வாழ்க்கை முழுக்க பாரத்தைச் சுமந்துகொண்டிருப்பார்கள்.

முத்துக்குமாருக்கு வீரவணக்கம் என்று தொண்டை வரக்க கத்தியவர்கள் இன்று எங்கே! முத்துக்குமார் ஊர்வலத்தில் வந்த 2000 பேர் பின்னர் மற்ற இறுதி ஊர்வலங்களில் அதே மயானத்தில் 200 பேர் கூடத் தேரவில்லை. இவர்கள் செய்த "வீரத்தியாகத்தின்" மதிப்பு ஒரு வாரம் அவ்வளவுதான். சன் டிவியின் "வீர வணக்க" வாரம் இது. இதற்காக பெட்ரோல் கேனில் ஓட்டை போட்டு விடிய விடிய நாலு பக்கம் எழுதி சாகும் நம் சகோதரர்களை என்ன சொல்ல? இன்றைய மாணவர்களுக்கு 80 களின் இலங்கை போராட்டத்தில் நடந்தது தெரியாது, புரியாது. தாங்கள் இப்போது போராடுவதால் மயிரைக்கட்டி தேரை இழு. வந்தால் தேர், போனால் மயிரு என்று நினைக்கிறார்கள். பட்டவர்கள் சொன்னால் அது பாப்பான்-புத்தி ஆகிறது. கலைஞரோ "உள்ளம், பள்ளம்" என்று டி.ஆர் கணக்காய் பேசிக்கொண்டிருக்கிறார். மாணவர்கள் தமிழகத்தில் பகடைகள். ஆனால், அவர்களோ தலைவர்கள் என்று தப்பாய் நினைத்துக் கொள்கிறார்கள்.

சொல்மண்டி

Anonymous said...

கலைஞர் அவர்கள் இனி எந்த ஒரு கோரிக்கையின் மீது நடத்தப்படும் தீக்குளிப்பு தியாகங்களுக்கு தமிழக அரசின் நிதி உதவி கிடையாது என்பதில் உறுதியாய் இருப்பாரா?

akilis said...

ஆம் நல்ல அறிவுரை ஐயா. இலங்கையில் உள்ள நம் சொந்தங்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன? அங்கே இலங்கை படையினரிடம் சரம் அடைந்த ஆண்கள் சுட்டு கொல்லப் படுகிறார்கள், பெண்கள் கதற கதற கற்பளிக்கப்படுகிரார்கள், அதெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.எங்களுக்கு
வருசத்துக்கு 2 விஜய், 2 அஜித் படம் வந்தால் கானும். எங்கலுக்கு வேற கவலைகள் வேணாம்..... என்ன?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது