12/10/2008

ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு டெம்பிளேட் இருக்கும் போல

என் தந்தை கூறுவார். ஒவ்வொரு பெரிய மனிதருக்கும் அவர் உயிருடன் இருக்கும்போதே பத்திரிகைகளில் இரங்கல் செய்தி எழுதி தயாராக வைத்திருப்பார்களாம். அதை அவ்வப்போது சம்பந்தப்பட்ட பெரிய மனிதர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை வைத்து அப்டேட் செய்து கொள்வார்களாம். அம்மாதிரியான இரங்கல் செய்திகளுக்கு ready-made obituaries என்று பெயர். ஒரு தலைவர் திடீரென மண்டையைப் போட்டால் சட்டுபுட்டென்று அவருக்காக வைத்திருக்கும் ready-made obituary-யை எடுத்து தூசி தட்டிப் போட்டால் ஆயிற்று காரியம்.

இதையே நம்ம கலைஞர் இரங்கல் செய்திகளுக்கும் அப்பால் ஒரு தனிப்பெரும் அருங்கலையாக விரிவாக்கி வைத்துள்ளார். நோன்புக் கஞ்சி குடிக்கப் போன இடத்தில் இந்துக்களை திட்ட வேண்டுமா, அதற்காகவே தயாராக பாரசீக அகராதிகளை படித்து வைத்திருப்பார். “இந்து என்றால் திருடன் என்று பொருள்” என்னும் ரேஞ்சில் அப்போதுதானே பேச இயலும்?

அதேபோல ஓரிடத்தில் “ராமன் இஞ்சினியரா” என கேட்க வேண்டியது. பிறகு அதனால் கலாட்டா வந்தால் ராமன், ஏசு, முகம்மது ஆகிய மூவரும் ஒன்றே என பேச வேண்டியது.

சட்டக் கல்லூரி மாணவர்களை ஜெயலலிதாதான் தூண்டியிருப்பார் எனக் கூறியவர் அவதூறு வழக்கு வரும் என தெரிந்ததும் அது சும்மா லூலூலாயிக்குத்தான் சொல்லியது என்று கூறி நகைச்சுவை செய்வது. அம்மாதிரி வழக்கு வராது எனத் தெரிந்ததால் “நீதாண்டா கொலைகாரன்” என்று கூறியது வாபஸ் இல்லை.

பார்ப்பனர் என்பதாலேயே மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் வரதராஜனுக்கெதிராக கவிதை பாட வேண்டியது பிறகு பண்பான பார்ப்பனர்களை நான் பாராட்டத் தவறியதில்லை என்று கூறுவது. கீழே உள்ள வரிகளை பார்க்கவும்.

சென்னை: "பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றத் தவறியதில்லை' என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலை, இலக்கியம், நாட்டுப் பற்றுக்கான தியாகத்தில் ஈடுபட்டு மறைந்து விட்டவர் குடும்பங்களின் வழித் தோன்றல்களைப் பெருமைப்படுத்துவதும், அவர்களின் குடும்பம் வாடாமல் தழைத்திடச் செய்வதும் கடமையெனக் கொண்டு, ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆவன செய்து வருகிறேன்.

திராவிட இயக்கத்தில் இளமைக் காலந் தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டாலும், பிராமண சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றத் தவறியதில்லை. மகாகவி பாரதி தொடங்கி, ராஜாஜி, வ.வே.சு.அய்யர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா., கல்கி, ஏ.எஸ்.கே.அய்யங்கார், வெ.சாமிநாத சர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி என நீண்ட பட்டியல் உண்டு.

வ.ரா.,வின் துணைவி புவனேஸ்வரியை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து, மாதந்தோறும் அவருக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் உத்தரவை ஒப்படைத்தேன். வ.ரா.,வின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடினோம். திருவள்ளுவர் உருவத்தை தீட்டித் தந்த, வேணுகோபால் சர்மாவின் குடும்ப வாழ்வாதாரத்திற்கு நிதி வழங்கிய பெருமை இந்த அரசுக்கு உண்டு.

பரிதிமாற்கலைஞர் என்ற சூரியநாராயண சாஸ்திரி வாழ்ந்த வீட்டைப் புதுப்பித்து, அவரது உற்றார், உறவினர், பேரன், பேத்திகள் நிரம்பிய பெருங் குடும்பத்தை சிறப்பித்தவன் நான். மன்னித்து மறக்க வேண்டியது "தீது' எனும் ஒன்றைத் தான் என்பதை நான் தெளிந்து நடப்பதைப் போல், தி.மு.க.,வினரும் நடக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

நன்றி: தினமலர்

கடைசியில் கூறியதுதான் பெரிய பன்ச். மன்னித்து மறக்க வேண்டியது தீது என்னும் ஒன்றுதான் என அவர் தெளிந்து நடக்கிறாராம். ஆக, பார்ப்பனர்களை மன்னித்து விட்டாராம். அட்ரா சக்கை, அட்ரா சக்கை.

நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா அவர் பதிவில் போட்ட பாடல் அருமை. அதையே நானும் போடுகிறேன். அவருக்கும் என் நன்றி.

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலப் பார்த்து சிரிப்பு வருது!

மாடு செத்தா மனுஷன் தின்னான் தோல வச்சு மேளம் கட்டி கூத்து கட்டுடா..
அட்றா அட்றா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க!


அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

அக்னிக்குஞ்சு. said...

தினமலரை படிக்காதீங்கோன்னு சொன்னா யாருமே கேட்க மாட்டேங்கறாங்க........


இதோ இந்தச் செய்தியே அதுக்கு ஒரு நல்ல உதாரணம் , அவரது முழுமையான அறிக்கையை அங்கங்கே வெட்டியும் , பார்ப்பன என்னும் வார்த்தையை பிராமண என்றும் திருத்திப் போட்டு பார்ப்பன ஏடான தினமலர் அக மகிழ்ந்து போனது என்று ஏற்கெனவே கோவி.கண்ணன் கிழித்துக் காட்டியிருக்கிறார்கள்...

நண்பர்களே , தினமலரின் / பார்ப்பன ஏடுகளின் உண்மை முகமறிய இன்னொரு வாய்ப்பு....

படியுங்கள் முழு அறிக்கையை , பிறகு குற்றங் காணுங்கள் அவரது அறிக்கையை .. தங்களுக்கு சவுகரியமானவற்றை மட்டுமே எடுத்துப் போட்டு விவாதிப்பது எந்த வகையில் நியாயம் என்று நீங்களே சொல்லுங்கள்...

முழு அறிக்கைக்கு
http://thimuka.blogspot.com/2008/12/blog-post_2904.html

Anonymous said...

//நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா அவர் பதிவில் போட்ட பாடல் அருமை. அதையே நானும் போடுகிறேன். அவருக்கும் என் நன்றி.

மாடு செத்தா மனுஷன் தின்னான் தோல வச்சு மேளம் கட்டி கூத்து கட்டுடா..
அட்றா அட்றா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க! //


ithu yaar paadum paattu?

Vijay said...

யாரை யார் மன்னிப்பதென்பது என்ற விவஸ்தையே இல்லையா!!!

ஆதித்தன் said...

தனித்தமிழின் மீதுகொண்ட அளவில்லப் பற்றினால் சூரியநாராயணசாஸ்திரிகள் என்ற தன்பெயரை "பரிதிமாற்கலைஞர்"
என்று மாற்றிக்கொண்டவர் அந்த மாமனிதர். அப்பேர்ப்பட்டவர்கு திமுக மத்திய அமைச்சரான ராசா, அஞ்சல்முத்திரை வெளியிட்டபோது,
அதில் சூரியநாராயணசாஸ்திரி என்றே அச்சிட்டதாக அறிகிறேன். கழகக்கண்மணிக்கு என்னே ஒரு தமிழ்ப்பற்று? ஒரு வேளை, கலைஞர் என்றால் அது கருணாநிதியாகத்தான் இருந்தாகவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அரும்பெரும் செயலைப் புரிந்தாரோ தெரியவில்லை.

வால்பையன் said...

வெறும் சாதா பல்டி பாத்தவங்களுக்கு இந்த மாதிரி அந்தர் பல்டி கொஞ்சம் புதுசாத் தான் இருக்கும்.

Anonymous said...

Dondu Sir, Can you publish a new post with the tamil translation of the following ? Are these real facts ? if so - it will be a great post.

Many thanks. (Do not publish this comment)
Suresh.
----------------------------

Who owns the media in India ?

Let us see the ownership of different media agencies.

NDTV: A very popular TV news media is funded by Gospels of Charity in Spain Supports Communism. Recently it has developed a soft corner towards
Pakistan because Pakistan President has allowed only this channel to be aired in Pakistan . Indian CEO Prannoy Roy is co-brother of Prakash Karat, General Secretary of the Communist party of India . His wife and Brinda Karat are
sisters.

India Today which used to be the only national weekly which supported BJP is now bought by NDTV!! Since then the tone has changed drastically and
turned into Hindu bashing.

CNN-IBN: This is 100 percent funded by Southern Baptist Church with its branches in all over the world with HQ in US.. The Church annually allocates $800 million for promotion of its channel. Its Indian head is Rajdeep Sardesai and his wife Sagarika Ghosh.

Times group list:
Times Of India, Mid-Day, Nav-Bharth Times, Stardust, Femina, Vijay Times,
Vijaya Karnataka, Times now (24- hour news channel) and many more...

Times Group is owned by Bennet & Coleman. 'World Christian Council¢ does 80 percent of the Funding, and an Englishman and an Italian equally share balance 20 percent. The Italian Robertio Mindo is a close relative of Sonia Gandhi.

Star TV: It is run by an Australian, who is supported by St. Peters Pontifical Church Melbourne.

Hindustan Times: Owned by Birla Group, but hands have changed since
Shobana Bhartiya took over. Presently it is working in Collaboration with Times
Group.

The Hindu: English daily, started over 125 years has been recently taken over by Joshua Society, Berne , Switzerland .. N. Ram's wife is a Swiss national.

Indian Express: Divided into two groups. The Indian Express and new
Indian Express (southern edition) ACTS Christian Ministries have major stake in the
Indian Express and latter is still with the Indian counterpart.

Eeenadu: Still to date controlled by an Indian named Ramoji Rao.

Ramoji Rao is connected with film industry and owns a huge studio in
Andhra Pradesh.

Andhra Jyothi: The Muslim party of Hyderabad known as MIM along with a Congress Minister has purchased this Telugu daily very recently.

The Statesman: It is controlled by Communist Party of India.

Kairali TV: It is controlled by Communist party of India (Marxist)

Mathrubhoomi: Leaders of Muslim League and Communist leaders have major investment.

Asian Age and Deccan Chronicle: Is owned by a Saudi Arabian Company with its chief Editor M.J. Akbar.

Gujarat riots which took place in 2002 where Hindus were burnt alive,
Rajdeep Sardesai and Bharkha Dutt working for NDTV at that time got
around 5 Million Dollars from Saudi Arabia to cover only Muslim victims, which they did very faithfully... Not a single Hindu family was interviewed or shown on TV whose near and dear ones had been burnt alive, it is reported.

Tarun Tejpal of Tehelka.com regularly gets blank cheques from Arab countries to target BJP and Hindus only, it is said.

The ownership explains the control of media in India by foreigners. The result is obvious.

PONDER OVER THIS. NOW YOU KNOW WHY EVERY ONE IS AGAINST TRUTH

மதிபாலா said...

நண்பர் சுரேஷ் அவர்களே அப்படியே இதையும் படித்து விடுங்களேன்.

ஊடகத்துறையில் ஆதிக்கம் செலுத்துவது யார்???

ஒரு ஆய்வுக்கட்டுரை -

ஊடகங்கள் பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் , பார்ப்பனர்கள் நிரம்பிய ஊடகக்த்துறையானது ,ஒட்டுமொத்த இந்தியர்களின் / தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதே இல்லை என்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு எப்போதுமே நிலவி வந்திருக்கிறது...

அதைமெய்ப்பிக்கும் விதமாக ஒரு ஆய்வினை கண்டேன்...தோழர் அருணபாரதியின் பதிவின் மூலம்............அந்த ஆய்வானது ஊடகத்துறையில் ஆதிக்கம் செலுத்துபவர்களை படம் போட்டுக்காட்டியது...இதை நீங்கள் ஏற்கெனவே படித்திருக்க வாய்ப்பிருக்கிறது..இருப்பினும் தமிழில் அதை மொழிபெயர்ப்பதே நம் நோக்கம்....

இன்றைக்கும் தமிழ் விரோத பத்திரிகைகள் உண்மைகளை திரித்துகூறுவதில் முதலிடம் வகிக்கின்ற ஒரு சூழலில் இந்தக்கட்டுரை வெகுவாக உதவும்....

ஆங்கிலப்பதிப்பிற்கும் , மூல ஆய்வுக்கட்டுரைக்கும் இங்கே செல்லவும்....

http://www.thesouthasian.org/archives/2006/social_profile_of_indian_media.html

இதோ அந்த ஆய்வு முடிவுகளின் தமிழாக்கம்...

* இந்திய ஊடகத்துறை இந்தியாவின் சமூகக்கட்டமைப்பை பிரதிபலிக்கவே இல்லை...
* இந்திய உயர்வகுப்பு சமூக ஆண்கள் மிதமிஞ்சிய அளவில் ஊடகத்துறையில் இருக்கிறார்கள்......சமூகத்தின் மொத்த மக்கள்தொகையில் 8 சதவீதமே இருக்கும் அவர்கள் 71 சதவீத இடங்களை தம்மிடையே கொண்டிருக்கிறார்கள்..
* மொத்த அளவில் 17 சதவீதம் பெண்களே இடம்பெற்றிருக்கிறார்கள்...........ஆங்கில இணையதள ஊடகங்களில் அவர்களின் பங்கு 32 சதவிதமாக இருக்கிறது...
* உயர்வகுப்பு சாதிக்காரர்கள் ( பிராமண மற்றும் அதையொட்டிய சாதிகள்) இந்திய மக்கள் தொகையில் 16 சதமே இருந்தாலும் ஒட்டுமொத்த ஊடகத்துறைகளில் 86 சதவீதம் பங்கு அவர்களே இருக்கிறார்கள்...அதில் பிராமணர்களின் பங்கு மட்டுமே தனித்து 49 சதவீதம்..அதாவது மொத்த ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களில் ஐம்பது சதம் பேர் பார்ப்பனர்கள்...
* ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் பங்களிப்பு வெறும் பூஜ்யங்கள்....கணக்கெடுக்கப்பட்ட 315 ஊடகவியலாளர்களில் ஒருவர் கூட அந்த பிரிவுகளை சார்ந்தவர்கள் அல்லர்...
* இந்திய மக்கள் தொகையில் 40 சதவிதம் இருக்கும்சமூகத்தின் மிகவும் பின் தங்கிய வகுப்பினரின் பங்களிப்பு வெறும் 4 சதவீதமே...
* இந்திய மக்கள் தொகையில் 13.4 சதவீதம் இருக்கும் இசுலாமியர்களின் பங்களிப்பு வெறும் 3 சதவீதமே....
* இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் இருக்கும் கிறித்தவர்கள் 4 சதவீத பங்களிப்பை ஊடகத்துறையில் கொண்டிருக்கிறார்கள்..ஆனால் இவர்கள் அதிகளவில் இருப்பது ஆங்கில ஊடகங்களிலேயே...
* சமூகத்தின் அடித்தட்டு மக்கள் ஊடகத்துறையில் இல்லவே இல்லை என்பதுதான் வேதனையான உண்மையாகும்.........கிறித்தவர்களும் , இசுலாமியர்களும் அவ்வாறே....
* இந்த ஆய்வானது இந்திய ஊட்கத்துறையில் டெல்லியிலுள்ள 37 தேசிய ஊடகத்துறை நிறுவனங்களில் உள்ள 315 முக்கியமான ஊடகத்துறையாளர்களிடையே இந்தியன் மீடியா குருப் என்னும் அமைப்பின் தன்னார்வ தொண்டர்களால் 30 மே முதல் 2 ஜுன் 2006 வரைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வாகும்.....

இந்திய ஊடகங்களை விட தமிழக ஊடகங்கள் மிக அதிக அளவில் பார்ப்பனீய மயமாக்கப்பட்டவை என்பதை எல்லோரும் அறிவார்கள்......முக்கியமாக , தினமணி , தினமலர் , விகடன் , ஹிந்து , இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய தமிழ்ப்பத்திரிக்கைகள் யாருடையவை என்பதை அனைவரும் அறிவார்கள்....!!!!

ஊடகத்துறையிலும் சமூக நீதியை கொண்டு வர வேண்டியது மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணர்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே இக்கட்டுரையை பதிகிறேன்...

http://baluindo.blogspot.com/2008/10/blog-post_17.html

Anonymous said...

//இந்திய ஊடகங்களை விட தமிழக ஊடகங்கள் மிக அதிக அளவில் பார்ப்பனீய மயமாக்கப்பட்டவை என்பதை எல்லோரும் அறிவார்கள்......முக்கியமாக , தினமணி , தினமலர் , விகடன் , ஹிந்து , இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய தமிழ்ப்பத்திரிக்கைகள் யாருடையவை என்பதை அனைவரும் அறிவார்கள்....!!!!

ஊடகத்துறையிலும் சமூக நீதியை கொண்டு வர வேண்டியது மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணர்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே இக்கட்டுரையை பதிகிறேன்//

இதை பார்க்கவும் நண்பரே

1.கலைஞர் 5 டீவி சேனல்கள்
2.சன் 5 டீவி சேனல்கள்
3.சன் பிற மாநில சேனல்கள்
4.சன் எப்,எம் ரோடியோக்கள்
5.மெக டீவி
6.மக்கள் டீவி
7.தமிழன் டீவி
8.வசந்த் டீவி
9.பாலிமர் டீவி
10.ஸ்டார் டீவி
11.ஜி டீவி
12.வரப்போகும் கேப்டன் டீவி
13.சுமங்கலி கேபிள் விஷன்
14.ராயல் கேபிள் விஷன்
11.தினகரன்
12.குங்குமம்
13.தமிழ் முரசு
14.தினத் தந்தி
15.மாலைமுரசு
16.ராணி
17.முரசொலி
18.வண்ணத்திரை
19.the rising sun
20கதிரவன்
21தேவி
22தினபூமி
23.குமுதம் குழுப் பத்திரிக்கைகள்
24.விடுதலை
25.ஜனசக்தி
26.தீக்கதிர்
27.பாமகவின் நாளேடு
28.சின்னத்திரை( more than 69 %)
29.திரைத்துறை( more than 69 %)
30.பதிவுலகில் பெரும் பகுதியினர்
( more than 95 %)

ஒதுக்கீடு 69 % தாண்டிவிட்டது.

பழைய பல்லவி திமுக தலைவர் பாணியில் சொல்வது சரியல்ல

dondu(#11168674346665545885) said...

//ஒதுக்கீடு 69 % தாண்டிவிட்டது.//
இதில் எங்கேயிருந்து வந்தது ஒதுக்கீடு? உள்ளவர்கள் தத்தம் திறமையால் வந்தவர்கள். இங்கு சாதி பார்ப்பது விரயமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

// dondu(#11168674346665545885) said...
//ஒதுக்கீடு 69 % தாண்டிவிட்டது.//
இதில் எங்கேயிருந்து வந்தது ஒதுக்கீடு? உள்ளவர்கள் தத்தம் திறமையால் வந்தவர்கள். இங்கு சாதி பார்ப்பது விரயமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்//


உங்களின் இந்த நேர்மை உங்கள் மேல் அபாண்டமாய் குற்றம் சாட்டும் பகுத்தறிவு வாதிகளுக்கு என்று புரியும் என்று தெரியவில்லை.

ஒதுக்கீடு என்பதை பங்களிப்பு என மாற்றிக்கொள்ளவும்.

தகுதியினாலும் திறமையினாலும் அனத்து சாதியினரும் (பிற்பட்டோர்,மிகவும் பிற்பட்டோர்,ஒடுக்கப் பட்டோர்)பிராகசித்துக் கொண்டு இருக்கும் ஊடகத்தில் குறிப்பிட்ட பகுதியினர் கோலோச்சுவதாய் மீண்டும் மீண்டும் பழைய பல்லவி தேவை இல்லை என்பது தான் என் கருத்து.

இன்னும் ஒரு தகவல்;
போன மாதம் சட்டக்கல்லுரியில் மானவர் மோதல் பற்றிய செய்திகளை தருவதில் விகடன் குழுமம்(இதுவும் ஒரு பார்ப்பனர் நிறுவனம்)தாழ்த்தப் பட்டோருக்கு களங்கம் ஏற்படுத்துவகையில் சொன்னதாகவும் அதற்குக் காராணம்,விகடன் குழுமத்தில் பெரும் பகுதி செய்தி உழியர்கள் வேறு ஒரு மிகவும் பிற்பட்ட சமுகத்தை சேர்ந்தவர் எனப்தால் என்ற ஒரு குற்றச் சாட்டும் சொல்லப் பட்டது.

வினவு எழுதியதில் ஒரு பகுதி:

//தமிழ மக்களின் மனசாட்சி என்று சொல்லப்படும் ஆனந்த விகடன் வார இதழில் எப்படி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவான இவளவு மோசமான கட்டுரைகள் வெளிவரும் என்று ஆராய்ந்தால்.தோழர்களே….

விசாரித்த பின் தான் தெரிந்தது.ஆனந்த விகடனில் தலைமை இணை ஆசிரியரில் தொடங்கி முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பெரும்பாலானவர்கள் அனைவரும் தேவரினத்தைச் சேர்ந்தவர்கள் என்று.


குறிப்பிட்ட ஒரு சாதி ஒரு ஊடகத்தை ஆக்ரமிப்பது என்பதை மிகவும் நுட்பமான விஷயம். இந்த ஆதிக்க சாதி ஆக்ரமிப்பை மறைக்கத்தான் ஆனந்த விகடன் முற்போக்கு முகமூடி போட்டிருக்கிறது.அது அம்பேத்கர் பற்றியும் எழுதும் அம்பேத்கரின் மக்களை காட்டிக் கொடுக்கவும் செய்யும்.//

Anonymous said...

சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது

(சிரிப்பு)

லாரடி லாரடி லாரடி பாரடி
மேடை ஏறிப் பேசும்போது
ஆறு போல பேச்சு
கீழே இறங்கிப் போகும்போது
சொன்னதெல்லாம் போச்சு

காசை எடுத்து நீட்டு
கழுதை பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு
உனக்குங் கூட ஓட்டு

(சிரிப்பு)

உள்ள பணத்தைப் பூட்டி வச்சு
வள்ளல் வேஷம் போடு
ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு
உத்தமன் போல் பேசு

ந்ல்ல கணக்கை மாத்து,
கள்ளக் கணக்கை ஏத்து
நல்ல நேரம் பாத்து
நண்பனயே மாத்து

(சிரிப்பு)

மதிபாலா said...

இதை பார்க்கவும் நண்பரே

1.கலைஞர் 5 டீவி சேனல்கள்
2.சன் 5 டீவி சேனல்கள்
3.சன் பிற மாநில சேனல்கள்
4.சன் எப்,எம் ரோடியோக்கள்
5.மெக டீவி
6.மக்கள் டீவி
7.தமிழன் டீவி
8.வசந்த் டீவி
9.பாலிமர் டீவி
10.ஸ்டார் டீவி
11.ஜி டீவி
12.வரப்போகும் கேப்டன் டீவி
13.சுமங்கலி கேபிள் விஷன்
14.ராயல் கேபிள் விஷன்
11.தினகரன்
12.குங்குமம்
13.தமிழ் முரசு
14.தினத் தந்தி
15.மாலைமுரசு
16.ராணி
17.முரசொலி
18.வண்ணத்திரை
19.the rising sun
20கதிரவன்
21தேவி
22தினபூமி
23.குமுதம் குழுப் பத்திரிக்கைகள்
24.விடுதலை
25.ஜனசக்தி
26.தீக்கதிர்
27.பாமகவின் நாளேடு
28.சின்னத்திரை( more than 69 %)
29.திரைத்துறை( more than 69 %)
30.பதிவுலகில் பெரும் பகுதியினர்
( more than 95 %)

ஒதுக்கீடு 69 % தாண்டிவிட்டது.

பழைய பல்லவி திமுக தலைவர் பாணியில் சொல்வது சரியல்ல

==================================

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது