12/12/2008

டோண்டு பதில்கள் 12.12.2008

அனானிL:
1. உங்களுக்கு எப்போவாவது கண்கள் பனித்து, இதயம் இனித்திருக்கிறதா?
பதில்: நீங்கள் இதையா கூறுகிறீர்கள்? கலைஞர் இதைவிட ஜோக்கான வார்த்தை முத்துக்களை உதிர்த்துள்ளார். அது இருக்கட்டும், இவ்வாறு நடந்தால்தானே குடும்ப வியாபாரம் மேலும் களைகட்டும்? எவ்வளவு கோடிகள் மாறினவோ யார் கண்டது.

அனானி (05.12.2008 காலை 10.56-க்கு கேட்டவர்):
1. சென்ற நூற்றாண்டிற்கும் இந்த நூற்றாண்டிற்கும் இடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,நன்மைகள்,தீமைகள்,ஆபத்துகள்,சாதனைகள்,வேதனைகள்,லாபங்கள் ஆகிய‌வ‌ற்றை கீழ்க‌ண்ட‌ துறைக‌ளில் ஓப்பிடுக‌
1.அரசியல்; 2.வாணிபம்; 3.நாடகம்; 4.சினிமா; 5.இசை; 6.இலக்கியம்; 7.பத்திரிக்கை
8.அறிவியல்; 9.ஜாதி, ச‌ம‌ய‌ம், ப‌க்தி; 10.ம‌னித‌ நேய‌ம் ம‌ற்றும் மனித உறவுக‌ள்

பதில்: எம்.ஏ. சோஷியாலஜி பாட கேள்விகளை எல்லாம் என்னைக் கேட்டால் நான் என்ன செய்யட்டும்?

புரளி மனோஹர் (போலி டோண்டு பற்றிய கேள்விகள் தவிர்த்து) இப்போதும் பதில் முரளி மனோஹர்தான் அளிப்பான்:
1) இன்னும் சாதியை உயர்த்திப் பிடிப்பது கேவலமாக இல்லையா?
பதில்: கண்டிப்பா கேவலம்தான் அப்பு. எதுக்கெடுத்தாலும் பாப்பான்தான் காரணம்னு தூக்கிப் பிடிக்கறவங்கதான் அதை புரிஞ்சுக்கோணும். இந்தப் பெரிசு தன்னை பாப்பான்னு சொன்னதுக்கான பின்புலனை ஏற்கனவே பதிவா போட்டுடிச்சு. அதைத் தேவையான இடங்களிலேயும் சொல்லிட்டிருக்கு. அது சொல்லறா மாதிரி ஆ வூ-ன்னா பாப்பான்னாக்க என்னடா ஜாட்டான் உளறறேன்னு வந்து நிக்கும். அது அப்படித்தான். இதில எந்தக் கேவலமும் இல்லை. முக்கியமா தான் சூத்திரங்கறதாலத்தான் எல்லோரும் தனக்கெதிரா இருக்காங்கன்னு புலம்பறதைவிட இது எவ்வளவோ தேவலை. நீதியரசர் ராமசாமி இம்பீச்மெண்ட் போது அவர் பார்பனரல்லாதவர் என்பதற்காகவே அவருக்காக விடுதலை பத்திரிகை சப்பைக்கட்டு கட்டியதே. அதுதான் கேவலம்.

2) ”சண்டைக்கார பாப்பான்”!!??? ஏன் பாப்பானுக்கு கோபம் வருவது அவ்வளவு சிறப்பானதா? ஏன் பறையனுக்கு கோபம் வந்தால் தாழ்வானதா?
பதில்: யாரப்பா அப்படி சொன்னது? தலித்துகளுக்கும் கோபம் கண்டிப்பாக வரணும்னுதான் இந்தப் பெரிசு சொல்லிட்டு வந்திருக்கு. முடிஞ்சா படிச்சுக்கப்பு. 1, 2,

3) நீங்கள் உருவாக்கிய பார்ப்பனியத்துக்கு மாற்று சொல்லான “உயர் சாதீயம்” குறித்து?
பதில்: புதுசா வார்த்தையை உருவாக்க அந்தப் பெரிசு வெப்ஸ்டரா என்ன? ஏற்கனவே இருக்கற வார்த்தையைத்தான் அதுவும் சொல்லுது.

4) கீழ்கண்ட வினாக்களுக்கு நறுக் பதில்கள் -
அ - பார்ப்பனியம் என்ற வார்த்தை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
பதில்: ஏன் ஏத்துக்கணும். பாப்பானா வன்கொடுமை செய்யறான்? போய் கவுண்டர்கள், தேவர்கள் வன்னியர்கள், பிள்ளைமார்கள் எல்லோரையும் போய் சொல்லிக்கோ. பாப்பான் எவனாவது அட்டூழியம் பண்ணான்னா அப்போ அது பார்ப்பனீயம். இல்லேன்னாக்க அது கவுண்டனியம், தேவரியம், பிள்ளையியம், முதலியாரியம்னு பேசிக்கோ. இல்லேன்னாக்க உயர் சாதீயம்னு பேசிக்கோ. கன்னட பலிஜா நாயுடு வகுப்பை சார்ந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரே கீழ்வெண்மணியிலே தலித்துகளை உயிரோட கொளுத்தினது இன்னொரு நாயுடுன்னவுடனேயே சவசவன்னு ஒரு அறிக்கை விட்டு அப்பீட் ஆனாரே. அதுக்கு என்ன சொல்லுவீங்க.

ஆ - பார்ப்பனர்கள் வேறு பார்ப்பனியம் வேறு என்கிற தெள்ளத் தெளிவாக வரையறுக்கப்பட்டது தெரியுமா தெரியாதா?
பதில்: இந்த தில்லாலலங்கடி வேலைத்தானே வாணாங்கறது. ஏனப்பூ புரளி, மெனக்கெட்டு தவறா ஒரு வார்த்தையை போட்டுப்பீங்களாம். இந்த பெரிசு அதை வாய்லே வெரலை வச்சுட்டு கேட்டுக்கிட்டிருக்குமாம். யாரை ஏமாத்த இந்த வேஷம் அப்பு? மற்ற உயர்சாதியினர் செய்யற வன்கொடுமையை மறைக்கத்தானே இந்த வேஷம்.

இ - பார்ப்பானும் பறையனும் பெண் கொடுத்து பெண் எடுப்பதில் ஒன்றும் பிரச்சினை இல்லை - இதை ஒப்புக் கொள்கிறீர்களா?
பதில்: சம்பந்தப்பட்ட பிள்ளையும் பொண்ணும் ஒத்துக்கிட்டா யாருக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும்? ஒரு உயர்சாதி பிள்ளை பாரதியிடம் தன் மகனுக்கு அவர் பெண்ணை கேட்க, பாரதியார் சொல்றார், “ஐயா பிள்ளைவாள் எனக்கு ஆட்சேபணையேயில்லை. ஆனாக்க எங்க வீட்டில் நான் சொல்வதைக் கேட்பார் இல்லை. ஆகவே ஒண்ணு செய்யுங்க. உங்க வீட்டில நீங்க சொன்ன வார்த்தையை யாருமே மீறமாட்டாங்க. ஆகவே உங்க பையனுக்கு ஒரு அருந்ததியார் பெண்ணை கட்டி வையுங்க”. அப்போ அந்த பிள்ளைவாளின் ஆவேசத்தை கேட்டீங்கல்லே, பாரதி படத்துல. மேலும் பாண்டிச்சேரியில் இருக்கையில் பாரதியார் தனது முதல் பெண்ணுக்கு ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பையனுக்கே தர யோசித்ததும், செல்லம்மாள் பதறிப்போய் தன் பெண்களை அழைத்து கொண்டு கடையம் சென்றதும் அப்படத்தில் பதிவாகியுள்ளது. ஆகவே பாரதியின் நோக்கத்துக்கு இங்கு யாரும் களங்கம் கற்பிக்க இயலாது. இன்னும் ஒரு வார்த்தை. பாரதியாரால் தன் பெண்ணுக்கு புதுச்சேரியில் மாப்பிள்ளையாக குறிப்பிடப்பட்டவர் மிகவும் ஒழுக்கம் உடையவர். ஆனால் இந்த பிள்ளைவாளோ ஒழுக்கம் குன்றியவர். எப்படி என்பதை படத்தைப் பார்ப்பவர் புரிந்து கொள்வர்.

ஈ - பாப்பாத்தியை பறையன் கட்டினாலும் மூன்று மாதத்தில் வாந்தியெடுக்க வைக்க முடியும் - சரிதானே?
பதில்: ஆண்மையுள்ள ஆணும் பெண்மையுள்ள பெண்ணும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருந்தா கூடத்தான் பொண்ணு வாந்தி எடுப்பா. அதுக்கு என்ன இப்போ? அது கவுண்டசாதிப் பெண்ணா இருந்தா என்ன, கோமுட்டி பெண்ணா இருந்தா என்ன, முதலியார் பெண்ணா இருந்தா என்ன?
என் சார்பில் பதிலளித்ததுக்கு நன்னி முரளி மனோஹர்.

Anony (posed the question on 06.12.2008, 03.51 hrs.)
1. You seem to be liking Israel, Srilankan Government and Modi. Dont you think there is an explicit pattern?
பதில்: மோடியையோ இஸ்ரேலையோ நான் விரும்புவதை டைம் நியூஸ்வீக் பத்திரிகைகளிலேயே போடும் ரேஞ்சுக்கு எல்லோரும் அறிவர். ஸ்ரீலங்கா அரசை நான் விரும்புவதாக நீங்கள் கூறுவதுதான் உலக மகா ஜோக்.


ஸ்ரீராம்:
1. இந்தியாவில் நிலவும் பயங்கிரவாதிகளின் அச்சுறுத்தலால் நிலவும் அசாதரண சூழ்நிலையை சமாளிக்க -துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் "சோ" -இதில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்கா மற்றும் உங்களுக்கு மிகவும் பிடித்த இஸ்ரவேல் நாட்டின் வல்லுணர்களின் உதவியை பெற வேண்டும் என அருமையாய் துக்ளக்கில் எழுதியுள்ளார் படித்தீர்களா?உங்கள் கருத்து ?
பதில்: இதற்கான பதிலை மெனக்கெட்டு என்னிடம் பெறவேண்டுமா? இந்த விஷயத்திலே சோ சொல்லறதைத்தானே நானும் சொல்லறேன். அதுதான் லோகத்துக்கே தெரிஞ்சதாச்சே. இன்னொரு செய்தி சில ஆண்டுகளுக்கு முன்னாலே படிச்சேன். ஆனானப்பட்ட ரஷ்யாவே செசன்யா விவகாரத்தாலே நொந்து போய், பாலஸ்தீன பயங்கரவாதத்துக்கு எதிரா இஸ்ரேலவேலர்களின் செயல்பாட்டுக்கு தனது புரிதலை தெரிவித்துள்ளது. இந்தியாவும் அவ்வாறே செயல்பட்டால் நல்லது.

அனானி (09.12.2008 காலை 06.25-க்கு கேட்டவர்)
1. பா.ஜ.க வின் ஆட்சிக் கனவு அவ்வளவுதானா?
பதில்: தோல்வி கண்டு பா.ஜ.க. துவளாமல் இருப்பதுதான் அக்கட்சிக்கு நல்லது.

2. துக்ளக் சோ அவர்களின் முயற்சி அம்மையார் ஜெ-யிடம் எடுபடவில்லையே?
பதில்: முயற்சி செய், பலன் ஆண்டவனது விருப்பத்தை பொருத்தது. அதுதான் சோ அவர்களின் நிலை என நான் கருதுகிறேன்.

3. அஞ்சா நெஞ்சன் அழகிரி-சன் சகோதரர்கள் சமரசம் ,ஆனால் கனிமொழி கருணாநிதி கடும் கோபத்திலாமே?
ஆங்கிலத்தில் இவ்வாறு கூறுவார்கள்:
WHERE THE EAGLES GATHER, THERE HAS TO BE CARCASS/
AND WHERE THE CARCASS IS, THE EAGLES WILL GATHER TOGETHER/
[மொழிபெயர்ப்பு: கழுகுகள் வானில் வட்டமிட்டன என்றால் எங்கோ அழுகின பிணம் உள்ளது
அழுகின பிணம் இருந்தால் எங்கிருந்தோ கழுகுகள் வந்து வானில் வட்டமிடும்]
அளவுக்கு மீறி ஒரு குடும்பத்தினர் பணம் ஈட்டினால் அக்குடும்பத்திலுள்ள எல்லோருமே பணத்துக்கு அடித்து கொள்வார்கள். அதில் கோபதாபங்கள் எல்லாம் சகஜம்.

4. சசிகலா-ராஜாத்தி அம்மாள் சந்திப்பு புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா?
பதில்: கலைஞர் குடும்பத்தில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது போலிருக்கிறதே. இந்த கேள்விக்கு ஏதேனும் இப்போது முக்கியம் உள்ளதா?

5. சோதிடர்களின் கணிப்பு படி மீண்டும் சோனியா அம்மையாரின் ஆட்சி தொடரும் போலுள்ளதே-2009 -2014?
பதில்: டோண்டு ராகவன் சோதிடத்தை நம்பமாட்டான் என்பதை பிபிசியிலேயே கூறிவிட்டார்கள், அவனைப் போய் இந்த கேள்வி எல்லாம் கேட்டுண்டு. உங்களுக்கே இது ஓவரா தெரியல்லியா?

ராமகிருஷ்ணஹரி:
1. BJP has got 39% votes, congress has got only 37% votes in Rajasthaan. But the no of seats won by congress is 96. what is your comment?
பதில்: அதுதான் நமது தேர்தல் முறை. அதில் தவறு காண்பதற்கு இல்லை. விகிதாசார முறைப்படி சீட்டுகள் வந்தால் குழப்பம்தான் மிஞ்சும். நம்ம தேசத்துக்கு இப்போது இருக்கும் முறையே சிறந்தது. இந்த விஷயத்தில் நான் இட்ட “முயற்சியின் எல்லைகள்” பதிவிலிருந்து சில வரிகள் கூறுவேன். “தடை ஓட்டப்போட்டியில் பார்க்கலாம். விவரம் தெரிந்தவர்கள் தடையை க்ளியர் செய்ய எவ்வளவு தேவையோ அவ்வளவு உயரம்தான் குதிப்பார்கள். அப்போதுதான் அதிகம் களைப்படையாமல் தவிர்க்கலாம், ரேசையும் வெல்லும் வாய்ப்பு உண்டு. தேர்தல் சமயங்களில் பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சியினர் எங்கு வெற்றி வாய்ப்பு குறைவோ அங்குதான் அதிகம் பாடுபட வேண்டும். வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதிகளை தவிர்ப்பதுவும் புத்திசாலித்தனமான செயல். பத்து சீட்டுகளில் சுமாரான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது, இரண்டு சீட்டுகளில் அமோக வெற்றி பெறுவதை விடச் சிறந்ததுதானே”.

2. will the same trend repeat in next general election also?
பதில்: அதை எப்படி இப்போது கூற முடியும்? அடுத்த ஆண்டு துக்ளக் மீட்டிங் வரும் சமயத்துக்குள் நிலையில் ஏதேனும் தெளிவு பிறக்கும் என நம்புகிறேன். அப்போது சோ என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.


அனானி (10.12.2008 காலை 06.55-க்கு கேட்டவர்):
1. ஹார்லிக்ஸ் - காம்ப்ளான் : விளம்பர யுத்தம் எப்படி?
பதில்:It is in very bad state. என் பொருள் உயர்ந்தது எனக் கூறுவதைவிட்டு அடுத்தவன் பொருளை பழிப்பது சரியே இல்லை.

2. இலங்கையில் தமிழன் செத்து மடிவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாததற்குக் காரணம்?
பதில்: எதில் விரோதம் இருந்தாலும் புலிகளும் இலங்கை அரசும் போட்டி போட்டு கொண்டலவா தமிழன் சாக வழி செய்கின்றனர்?

3. ரஜினியின் பிறந்த தினமான டிச.12-ந் தேதி அதிமுக கட்சியில் ரசிகர்கள் இணையும் விழாவிற்கு ஏற்பாடு செய்து ரஜினிக்கு அதிர்ச்சி வைத்தியம் அதிமுக கொடுக்கவுள்ளனரா?
பதில்: ரஜினி அரசியலுக்கு வந்தால் தேவலையா வராவிட்டால் தேவலையா? அவரது ரசிகர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் அவர் பெயரைச் சொல்லி சம்பாதிக்க எண்ணுபவர்கள்.

4. கச்சா எண்ணைய் விலை கடுமையாக குறைந்துள்ள போதும், மக்களின் சிரமங்களைப் போக்க முன்வராமல் ஒரு கண் துடைப்பு வேலையாக பெட்ரோல், டீசல் விலையை பெயரளவில் அரசு குறைத்துள்ளது.நியாயமா?
பதில்: எண்ணெய் விலைக்கட்டுப்பாட்டை நீக்கி மார்க்கெட் விதிகளுக்கு அதை உட்படுத்தினாலே குழப்பங்கள் குறைந்துவிடும் என நம்புகிறேன். ராஜாஜி அவர்கள் துணிந்து 1952-ல் ரேஷன் முறையை நீக்கினார். தானாகவே நிலைமை சரியாகியது.

5.ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம் சரியாகுமா?
பதில்: இதில் பலகாரணிகள் செயல்படுகின்றன. முதலில் பொருளாதார மந்தநிலை மாறவேண்டும். பணப்புழக்கம் குறைந்தால் கார் முதலிய பொருட்களின் விற்பனைதான் முதலில் குறையும். அவற்றை வாங்குவதற்கான பணம் இருக்காது. கார் லோன் எல்லாம் இன்னும் தருவார்கள் என எதிர்பார்ப்பது மூடத்தனம்.

கிருஷ்ணன்:
1: Any comments on the article by Ms. Kanimozhi in The Hindu http://www.thehindu.com/2008/12/10/stories/2008121055791100.htm?
We cannot fault her when she writes, "A few days ago, in a particular school, when the teacher announced a project work for this day (Bakrid), a Muslim student expressed his inability to attend school on that day. She answers him, in a matter-of-fact manner: “Students who do not come to school on that day can consider themselves as failed.” But then she goes on to say, "This is not to blame any particular group or to say the others are all blameless. The others might have different versions of such stories to share. There are many such institutions that play similar games in the name of religion and end up sowing the seeds of hatred and divisiveness in the minds of children". Quite balancing on the face of it. But if you see deeply, you will see her bias when she just stops with one example. Either give more examples or just remove any identifying qualifications in the one example given. A true daughter of her father she is, I am afraid.

2. Do you agree with Boycott when he says cricket should not played amidst such tight security?
பதில்: அவர் கூறுவதிலும் அர்த்தம் இருக்கிறது. ஆனால் என்ன செய்யலாம்? கிரிக்கெட் ஆட்டங்கள் நடக்காவிட்டால் ஏழை கிரிக்கெட் போர்டும், சூதாட்டக்காரர்களும் எப்படி பிழைப்பதாம்? :))))) டெண்டுல்கர் அடுத்த கோடி ரூபாய்க்கு எங்கு போவார்? பாவம் இல்லையா அவர்?

3. Do you think India can do a Israel and bomb terrorist camps in Pakistan regardless of consequences?
பதில்: இல்லவே இல்லை. இந்தியாவால் அவ்வாறெல்லாம் செய்ய இயலாது. அகிம்சை நாடாயிற்றே.

4. Have you prepared a list of books to be purchased at the coming Chennai book fair? If so, can you share it with us ? How many times do you propose to visit the fair?
பதில்: பாரா அவர்களது இப்பதிவை படித்த பிறகு முத்துலிங்கத்தின் புத்தகம் வாங்க வேண்டும். தமிழினி பதிப்பகத்தில் கிடைக்கும் என்றார் பத்ரி, அவருக்கு நான் போன் போட்டு கேட்டபோது. மீதி புத்தகங்கள் உசிதத்துக்கேற்ப. ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலிய தொழில்நுட்ப அகராதிகள் வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 2001-ல் தில்லியிலிருந்து வந்தபிறகு ஒரே ஒரு இத்தாலிய அகராதி மட்டுமே வாங்க முடிந்தது. ஆனால் புத்தகக் கண்காட்சியில் இல்லை. ஜெர்மன் புக்செண்டருக்கு போய் வாங்க வேண்டியிருந்தது. அது நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன.

அனானி (11.12.2008 மாலை 07.21-க்கு கேட்டவர்)
1. பிள்ளையோ பிள்ளை முக முத்து பிரச்சனை பண்ணுவார் போலிருக்கே?
பதில்: டிசம்பர் 14, 2008 ஜூ.வி. இதழில் இது பற்றி படித்ததிலிருந்து கூறுகிறேன். நீங்கள் சொன்னதில் பசை உள்ளது.

2. பெரியவருக்கு மீண்டும் தர்மசங்கடமா?
பதில்: ஆம்

3. தாத்தா சொத்து பேரனுக்கு -கோர்ட் நடவடிக்கைகள் தலைவரின் மூத்த பேரன் அறிவு நிதி தொடர நடவடிக்கையாமே?
பதில்: தாத்தா உயிருடன் இருக்கும்வரை, அதுவும் கருணாநிதி அவர்களின் சொத்து அவரது சுயசம்பாத்தியமே என்னும் நிலையில் நீங்கள் சொன்னது பொருந்தாது. சாதாரணமாக, உயில் எழுதி வைக்காமல் தாத்தா இறந்த நிலையில்தான் பேரனுக்கு சொத்தில் பங்கு என்றெல்லாம் வரும். இதுதான் இந்து லா.

4. கருணா, தயா, கலா, அறிவு(நிதி)-கோடிகள் குவிந்ததற்கு பெயராலஜி காரணமா?
பதில்: சுரண்டாலஜி என வால் பையன் கொடுத்த பதிலே பொருத்தமாகத்தானே உள்ளது?

5. தவறான முறையில் சேர்த்த சொத்து தவறாமல் துன்பத்தை தரும் என்பது உண்மையாகப் போகிறதா?
பதில்: WHERE THE EAGLES GATHER, என்று ஆரம்பிக்கும் மேலே சொன்ன பதில்தான் இங்கும். கழுகுகள் பிய்க்கும்போது ஒட்டுமொத்த துன்பந்தானே.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

55 comments:

பாண்டித்துரை said...

///மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
///

அடுத்த வாரமும்மா!

Anonymous said...

//பாண்டித்துரை said...
///மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
///

அடுத்த வாரமும்மா!//


அடுத்த வாரம் கேள்வி கேட்கப்பட்டால் பதிவு வரும் இல்லையென்றால் இல்லை
இது தானே டோண்டு ஐயாவின் பாலிசி

எத்தனை தரம் சொன்னாலும்

நீங்களுமா பாண்டித்துரை அண்ணே!

அடுத்த விவாதம் தொடங்கியாச்சு
அப்போது தான் அந்த மனவருத்த மேட்டர் மறையும்
இதைத் தானே நமது அரசியல்வாதிகள் காலம் காலமாய் செய்து வருகிறார்கள்

Anonymous said...

சார் இந்தக் கேள்விகளுக்கு பதில் ?

ரிப்பளை ப்னனுவீங்கனு நம்பிட்டு இருக்கேன்.,

வணக்கம் டோண்டு ஸார்,

நான் ரொம்ப நாளா நீங்க எழுதுறதை எல்லாம் படிச்சிட்டுவறேன் ஸார். எனக்கு உங்களை மாதிரி அனுபவமிக்க ஒருத்தரிடம் இருந்து சில விவரங்களை தெரிஞ்சிக்கனும்னு ஆசை ஸார்..

எனக்கும் ரொம்ப நாளா எழுதனும்னு ஆசை , ஆனால் எழுத முடியவில்லை... அதற்கு சில காரணங்கள்,

1. இந்த வலைப்பதிவர்கள் சமூகத்தில் , ஒர் தணிப்பட்ட ஒருவரின் சொந்த வாழ்க்கையில், புகுந்து விளையாடுறாங்க. இது எனக்கு சரிபடாது.. நான் நிறையவே கோபப்படுவேன், என்னை ஒருத்தன் கிண்டல் பண்ணா அது தப்பு இல்லை, ஆனா இங்க சொந்த வாழ்க்கையில் தலையிடுறாங்க்.. இது ரொம்ப தப்புனு தோனுது... இதை எல்லாம் எத்துக்க முடியாது... (ஒவர் ஸின் போடுறான்டானு யாராவது சொல்லிடுவாங்களோ யோசிசுதான், பெயரையை கூட போடலை..

2. இரண்டாவது , தமிழ்ல எழுதனும்னு ஆசை தான், ஆனா தமிழ் நமக்கு தரிகினத்தோம் தான்.. எப்படி எழுதறதுணு தெரியலை.. அதிகமான எழுத்துப்பிழை வேற வ்ருது, சரியான தமிழ் நடை வரமாட்டேனங்குது...என்ன பன்னறது...

3. இரண்டாவதா நான் சொன்ன காரணத்தை விட , முக்கியமானது, யாராமே நமக்கு கமண்ட் போட மாட்டாங்கனு தோனுது... "கடமையை செய், பலனை எதிர்ப்பார்பேன்". நீங்க ப்லாகிங் பன்ன ஆரம்பிச்சப்போ எப்படி இருந்தது...

இப்படி இருக்கிற என்னை மாதிரி மக்களுக்கு எல்லாம் என்ன அட்வைஸ் பண்ணுவீங்க...

ரிப்பளை ப்னனுவீங்கனு நம்பிட்டு இருக்கேன்.,

நண்றி.
வாசகன்...

Anonymous said...

puzzle for 19--12-2008

Mr.S the boss went to the restaurant and ordered his lunch-complete with soup and dessert.Lunch worth Rs.200/=.When the lunch was placed on the table MR .K walked over and covered it with a vessel."Boss I'll bet you Rs.20/= that I can eat your lunch withuout touching this vessel,the table or the plate it's on.Infact I won't touch anything in the room nor will anyone elase help me out in any way.
Do we have a bet?

"I'll take the bet the boss quickly.

Did Mr.k win his bet?
How?


-r

Anonymous said...

Anonymous said...
puzzle for 19--12-2008

Mr.S the boss went to the restaurant and ordered his lunch-complete with soup and dessert.Lunch worth Rs.200/=.When the lunch was placed on the table MR .K walked over and covered it with a vessel."Boss I'll bet you Rs.20/= that I can eat your lunch withuout touching this vessel,the table or the plate it's on.Infact I won't touch anything in the room nor will anyone elase help me out in any way.
Do we have a bet?

"I'll take the bet the boss quickly.

Did Mr.k win his bet?
How?//


mr.k -கவுண்டமணியா?
mr.s- செந்திலா?

Anonymous said...

//mr.k -கவுண்டமணியா?
mr.s- செந்திலா?//

cela va sans dire

வால்பையன் said...

என் அறிவுக்கு அப்பாற்பட்ட விசயங்களை அலசியுள்ளதால் நான் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை

சில விசயங்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது.

Anonymous said...

//வால்பையன் said...
என் அறிவுக்கு அப்பாற்பட்ட விசயங்களை அலசியுள்ளதால் நான் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை

சில விசயங்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது.//


YOU TOO MR.VALPAIYAN

வால்பையன் said...

// Anonymous said...

//வால்பையன் said...
என் அறிவுக்கு அப்பாற்பட்ட விசயங்களை அலசியுள்ளதால் நான் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை

சில விசயங்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது.//


YOU TOO MR.VALPAIYAN//


நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.
கருத்து சொல்ல ஒன்னுமில்லை அதான் இப்படி சோல்லியிருக்கேன்

Anonymous said...

Hope Dondu sir might have solved the puzzle (mr. k & mr. s)

-r

பழையசோறு said...

//ஈ.வே. ராமசாமி நாயக்கரே கீழ்வெண்மணியிலே தலித்துகளை உயிரோட கொளுத்தினது இன்னொரு நாயுடுன்னவுடனேயே சவசவன்னு ஒரு அறிக்கை விட்டு அப்பீட் ஆனாரே//

படிக்கவே ரொம்ப மனசு கனக்குதே.. எதாவது சுட்டி தர முடியுமா! முழு விபரம் படிக்க

kapilavastu said...

அடுத்த வாரமும்மான்னு எதுக்கு கேள்வி மாதிரி கேட்கிறீங்க . இதையும் கேள்வின்னு நினைச்சிகிட்டு இதுக்கும் பதிலை எளுதி படுத்தும் இந்த பெரிசு.

dondu(#11168674346665545885) said...

@பழைய சோறு:
கீழ்வெண்மணி பற்றி பெரியார் கூறிய சில வரிகளை வீரமணி அவர்களே தனது கேள்வி பதிலில் தந்தது இதோ:
“கேள்வி: கீழ்வெண்மணியில் விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட போது பெரியார் கண்டு கொள்ளவில்லை என்று ஒரு பிரச்சாரம் நடை பெறுகிறதே?

பதில்: அக்கொடுமை நடந்த மறுநாள் விட்டு மறுநாள் (28-1௧2-1௧968) தந்தை பெரியார் ஒரு நீண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.

"கடைசி நடவடிக்கையாக நேற்று முன் தினம் தற்காப்புக்காக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உள்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டை பூட்டிக் கொளுத்தி, 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளையும் இது போன்ற அராஜகங்களையும் சட்ட விரோதங்களையும் அடக்கிட ஆட்சிகளால் முடியவில்லை. இந்தியாவை ஆள இந்தியருக்கு தகுதியில்லை. இதற்காக நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும் என்று கருதத் தேவையில்லை. அதற்காக அந்நியர் ஆண்டாலும் பரவாயில்லை" என்று எழுதி இருக்கின்றாரே - உண்மை இவ்வாறு இருக்க புழுதி வாரித் தூற்றுவோர் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்

(திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பதில் - விடுதலை ஞாயிறு மலர் 11.2.2006)

பார்க்க: http://eenpaarvaiyil.blogspot.com/2006/11/blog-post_13.html

பெரியார் திடல் எங்கு உள்ளது என்பது தெரியும் என நம்புகின்றேன். அங்கு பழைய விடுதலை, குடியரசு நாளேடுகள் ஆவணப்படுத்தி வைத்து இருக்கின்றார்கள். முழு அறிக்கையும் தேவை எனில் அங்கு சென்று படித்து அறிந்து கொள்ளலாம்.

(குறிப்பு) யார் வேண்டுமென்றாலும் அங்கே சென்று படிக்கலாம். நம்மவா, மத்தவா என்று வேறு படுத்தி பார்க்கமாட்டார்கள் :-)

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//குறிப்பு) யார் வேண்டுமென்றாலும் அங்கே சென்று படிக்கலாம். நம்மவா, மத்தவா என்று வேறு படுத்தி பார்க்கமாட்டார்கள் :-)//


செந்தழல் ரவி இதைப் பார்த்திட்டு என்ன கமெண்ட் கொடுக்கப் போராறோ?

Anonymous said...

//kapilavastu said...
அடுத்த வாரமும்மான்னு எதுக்கு கேள்வி மாதிரி கேட்கிறீங்க . இதையும் கேள்வின்னு நினைச்சிகிட்டு இதுக்கும் பதிலை எளுதி படுத்தும் இந்த பெரிசு//

siththaarththare

this is too much

dondu(#11168674346665545885) said...

@பழைய சோறு
இந்த உரலுக்கும் சென்று பார்க்கலாம்.
http://www.muthamilmantram.com/viewtopic.php?f=169&t=13858&start=30&st=0&sk=t&sd=a

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழையசோறு said...

சுட்டிக்கு நன்றி. சமுதாயத்த சீர்திருத்துவதற்க்கு முன்பு மனிதத்தன்மை மிக முக்கியம்.

Anonymous said...

//Palaya Soru said...
//ஈ.வே. ராமசாமி நாயக்கரே கீழ்வெண்மணியிலே தலித்துகளை உயிரோட கொளுத்தினது இன்னொரு நாயுடுன்னவுடனேயே சவசவன்னு ஒரு அறிக்கை விட்டு அப்பீட் ஆனாரே//

தலித்துகளுக்கு பார்ப்பனரால் ஏற்பட்ட துன்பம்/துயரத்தை விட மற்ற ஆதிக்க சாதிகளால் அவர்கள் பட்டதுதான் அதிகம்.

அதனால் தான் உத்திரப் பிரதேச மாநிலத்தில் தலித்களின் நம்பிக்கை நட்சத்திரம் ,கலங்கரை விளக்கு,வழிகாட்டி , தலைவர் மாயவதி அம்மையார் அங்குள்ள பிராமணர்களோடு நட்பு பாராட்டி ( அவரது மெய்ன் ஆலோசகரே பிராமணர்)பார்ப்பனர்களோடு கைகோர்த்து புது வரலாறு படைத்து சாதனை புரிந்துவிட்டு ,அதே பாணியில் தமிழகத்திலும் 2009 ல் வெற்றிப் பவனிவர
ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன.

அடுத்த பிரதமர் ஆவதற்கு பிரகாசமான எதிர்காலம் தெரிகிறது

பிராமின்ஸ்+தலித்துகள் > பிற சாதிகள்

அறிவும் பலமும் சேரும் போது வெற்றி உறுதி தானே!

பெரியார்/அண்ணா/கலைஞர் பக்தர்களூக்கு இனி சிரம திசைதான் போலிருக்கிறது.

Anonymous said...

//dondu(#11168674346665545885) said...
@பழைய சோறு
இந்த உரலுக்கும் சென்று பார்க்கலாம்.
http://www.muthamilmantram.com/viewtopic.php?f=169&t=13858&start=30&st=0&sk=t&sd=a

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டோண்டு சார் முத்தமிழ் மன்றம் பழைய போலி டோண்டு வினுடையது என்பார்களே .இது வேறு தளமா?

dondu(#11168674346665545885) said...

//டோண்டு சார் முத்தமிழ் மன்றம் பழைய போலி டோண்டுவினுடையது என்பார்களே .இது வேறு தளமா?//
அதே தளம்தான். அதனால் என்ன? நமக்கு தகவல்தான் முக்கியம். அங்கிருந்து இது பெறப்பட்டதால் அதன் சுட்டியைத் தருவது அவசியம்.

இது பற்றி எனது இப்பதிவை பார்த்தீர்களானால் உங்களுக்கு தெளிவு பிறக்கலாம். பார்க்க: http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதிபாலா said...

பதில்: எண்ணெய் விலைக்கட்டுப்பாட்டை நீக்கி மார்க்கெட் விதிகளுக்கு அதை உட்படுத்தினாலே குழப்பங்கள் குறைந்துவிடும் என நம்புகிறேன். ராஜாஜி அவர்கள் துணிந்து 1952-ல் ரேஷன் முறையை நீக்கினார். தானாகவே நிலைமை சரியாகியது.//

டோண்டு அவர்களுக்கு ,ரேஷனை நீக்கிய ராஜாஜியா? இதென்ன புது மேட்டர் ? கொஞ்சம் விளக்க முடியுமா?


தவிர்த்து , விலைக் கட்டுப்பாட்டை நீக்குவென்பது என்ன? அது உள்ளூரிலா இல்லை ஒட்டுமொத்த உலகளாவிய முறையிலா? சரியாகப் புரியவில்லையே , நீங்கள் என்ன கன் ட்ரோல்டு விலையை அரசு நிர்யணிப்பதைப் போன்றா சொல்கிறீர்கள் ?

உள்ளூரில் என்றால் , இன்றைக்கு சிமெண்ட் கம்பெனி முதலாளிகளும் ,மற்ற பல பெருமுதலாளிகளும் சிண்டிகேட் போட்டு விலையைத் தாறுமாறாக உயர்த்தவல்லவா வழி வகுக்கும்???

உலகளாவிய முறையில் என்றால் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருளை வைத்திருக்கும் வளைகுடா நாடுகளின் கையில் அல்லவா எண்ணெய் வளம் போய்ச்சேரும்??? அது இன்னும் அபாயகரமானதல்லவா??

கொஞ்சம் விளக்க முடியுமா ? அறிந்துகொள்ள ஆவல்..!!!

Anonymous said...

//dondu(#11168674346665545885) said...
//டோண்டு சார் முத்தமிழ் மன்றம் பழைய போலி டோண்டுவினுடையது என்பார்களே .இது வேறு தளமா?//
அதே தளம்தான். அதனால் என்ன? நமக்கு தகவல்தான் முக்கியம். அங்கிருந்து இது பெறப்பட்டதால் அதன் சுட்டியைத் தருவது அவசியம்.

இது பற்றி எனது இப்பதிவை பார்த்தீர்களானால் உங்களுக்கு தெளிவு பிறக்கலாம். பார்க்க: http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html

அன்புடன்,
டோண்டு ராகவன்//


தங்களின் விளக்கத்திற்கு நன்றி.
இதுதான்
மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மணம் உண்டு
எனும் நல்ல குணம்

நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க

(வாதத்தில்/தர்கத்தில்/விவாதத்தில்)

கெடுமதியாளரை வென்று வாழ்க
கொக்கரிப்போரை வென்று வாழ்க

தென்திருப்பேரையோன் புகழ் வாழ்க
தென்கலையோன் புகழ் வாழ்க

dondu(#11168674346665545885) said...

@மதிபாலா
ராஜாஜி அவர்கள் செய்த இக்காரியத்தை பற்றி நான் போட்ட பதிவு இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2005/04/1_25.html

பெட்ரோல் விஷயத்தில் இது அரசு மட்டுமே செய்யும் காரியம் என்பது பொதுபுத்தியில் வேரூன்றியுள்ளது. ரேஷனை எடுத்தபோதும் அபப்டித்தான் நினைத்தனர். 1952-ல் ராஜாஜி செய்ததை ஓராண்டுக்குள் நாடு முழுத்கும் செய்து முடித்தனர். பிறகு 1964-ல் வேறு நிர்ப்பந்தங்களால் வந்த அந்த ரேஷன் முறை இன்னமும் நீங்கவில்லை. ஏன்? ராஜாஜி நம்மிடம் இல்லை.

அதனால் பெட்ரோல் விஷயத்திலும் இதை செய்ய மனபலம் யாருக்கும் இல்லை என்பதுதான் நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

kapilavastu said...

இப்ப தான் இந்த பெர்சு பன் பட்டு கொண்டு வருகிறது போல கீது. இம்மா நாள் வரை சாதி வுட்டு சாதி கண்ணாலம் கட்டிக்க கூடாது அப்படி இப்படின்னு வூடு கட்டிகினு ,உதார் வுட்டுகினு தேவரியம் செய்திகினு கிடந்தது. இந்த பெர்சு நாள நல்ல பிராமணர்களுக்கெல்லாம் ஒரே இழுக்காக இருந்தது. பாரதி மாதிரி, ராஜாஜி மாதிரி, லட்சுமி ஸ்நேகள் மாதிரி பல மகத்தான சீர்திருத்த வாதிகள் பிறந்த குலத்தில் இந்த மாதிரி .... பிறந்து கற்கால சிந்தனைகளை வளர்த்து முற்போக்கு குணம் கொண்ட Majority ஆன பிராமணர்களுக்கு இழுக்கு விளைவித்துக்கொண்டு இருந்தது. இப்பவாவ்து இதுக்கு புத்தி வந்ததே, சந்தோஷம் தான். இனி மேலும் கற்கால சிந்தனைகளை பரப்பி பிராமணர்களுக்கேல்லாம் இழுக்கு விளைவிக்காது என்று நம்புவோம். இப்படி ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்யக்கூடாது போன்ற கற்கால சிந்தனைகளை வள்ர்க்குமானால் தன்னை பிராமணன் என்று சொல்லிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

Anonymous said...

//kapilavastu said...
இப்ப தான் இந்த பெர்சு பன் பட்டு கொண்டு வருகிறது போல கீது. இம்மா நாள் வரை சாதி வுட்டு சாதி கண்ணாலம் கட்டிக்க கூடாது அப்படி இப்படின்னு வூடு கட்டிகினு ,உதார் வுட்டுகினு தேவரியம் செய்திகினு கிடந்தது. இந்த பெர்சு நாள நல்ல பிராமணர்களுக்கெல்லாம் ஒரே இழுக்காக இருந்தது. பாரதி மாதிரி, ராஜாஜி மாதிரி, லட்சுமி ஸ்நேகள் மாதிரி பல மகத்தான சீர்திருத்த வாதிகள் பிறந்த குலத்தில் இந்த மாதிரி .... பிறந்து கற்கால சிந்தனைகளை வளர்த்து முற்போக்கு குணம் கொண்ட Majority ஆன பிராமணர்களுக்கு இழுக்கு விளைவித்துக்கொண்டு இருந்தது. இப்பவாவ்து இதுக்கு புத்தி வந்ததே, சந்தோஷம் தான். இனி மேலும் கற்கால சிந்தனைகளை பரப்பி பிராமணர்களுக்கேல்லாம் இழுக்கு விளைவிக்காது என்று நம்புவோம். இப்படி ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்யக்கூடாது போன்ற கற்கால சிந்தனைகளை வள்ர்க்குமானால் தன்னை பிராமணன் என்று சொல்லிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.//


பொதுவாய் கல்ப்பு திருமனம் செய்வோர் தன் ஜாதியைவிட மேல் ஜாதியில் ( மேல் ஜாதி- தாழ்ந்த ஜாதி -அரசியல் வாதிகள் புண்ணியம்)
சம்பந்தம் செய்யவே ஆசைப் படுகின்றனர்

உதாரனமாக

முற்போக்கு ஜாதி என அரசால் வரையறுக்கபட்டுள்ளோரில் சைவ முதலியார்,சைவைப் பிள்ளைமார்,சைவைச் செட்டியார்,கார்கார்த்தார்,ரெட்டியார்,

குடுபங்களில் நடை பெறும் கலப்புத் திருமனத்தில் மணமகனோ/மணமகளோ ஒருவர் ஐயர்/அயங்கார் என்றால் பிரச்சனை வேகமாய் சுமுகமாய்விடுகிறது.


இதே நிலை தான் பிற்படுத்தப் பட்ட/மிகவும் பிற்படுத்தப் பட்ட ஜாதியினரின் கலப்புத் திருமனம்
பற்றிய கண்ணொட்டம்.

அதே மாதிரி ஜாதிக் கொடுமை நீங்கப் போராடுவதாய் சொல்லி பெரும் புகழுடன் இருக்கும் பிற ஜாதித் தலைவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனப் பெண்களையே மனைவியாய் ( காதல் திருமனம்)அடைந்துள்ளனர்.

இதில் மேலும் விசேடம் என்னவென்றால் இந்த புரட்சிவாதிகள் தங்கள் பிள்ளைகளுக்கும் பார்ப்பன சம்பந்தம் செய்ய வே விரும்புவதை யாராலும் மறுக்கமுடியுமா?

ஒரு நிகழ்காலச் சரித்திரம்:
பகுதறிவுப் பகவலன் தந்தை பெரியாரின் கொள்கை காக்கும் மாமாவின் அன்பு மருமகனின்( மிகவும் பிற்பட்ட ஜாதி-அரசின் குறிப்புப் படி) மனைவி தஞ்சை வாழ் அந்தணர் குடுபத்தை சேர்ந்தவர்.மாமாவும் மகிழ்ச்சியுடன் ஆசிர்வதித்தார், இது தானே ஜெனரல் ரூல் .
அடுத்து தான் கிளைமேக்ஸ்.
மருமானின் பிள்ளையின் மனைவி உலகப் பிரசித்து பெற்ற பிரபல பத்திரிக்கை(பிராமண எதிர்ப் பாளர்களின் தாக்குதலை அதிகம் பெரும் புண்ணியவான்)அதிபர் குடுபத்தை சேர்ந்த பார்ப்பனப் பெண்.

சோ கதை இதிலும் இப்படித் தான் போகிறது.

(சமீபத்திய அரசியல் குடும்பச் சண்டையில் இந்த விவாதங்கள் பெரியவரால் எழுப்பப் பட்டதை அனைவரும் அறிவர்)



ஊருக்குதான் உபதேசம் உனக்கு இல்லையடி கண்ணே

இது பாரதி காலம் தொடங்கி
இன்று வரை தொடர்கிறதே!

dondu(#11168674346665545885) said...

@கபிலவஸ்து
எனது பதிலை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். உடற்கூறு ரீதியாக எந்த ஆணும் பெண்ணும் கூடினாலும் மற்ற காரணிகள் செயல்படும் நிலையில் குழந்தை உண்டாகும். அதே போல எல்லா கஷ்டங்களையும் மீறி திருமணம் செய்து கொள்ளும் இரு மேஜர்களை யாருமே தடுக்க இயலாது,. ஆனால் அதையெல்லாம் மீறியும் பல விஷயங்கள் உள்ளன. இது பற்றி நான் இன்னொரு பதிவில் எழுதியுள்ள விஷயங்கள் மாறவே இல்லை. அதிலிருந்து சில வரிகளை தருவேன்.

“சாதி கூடாது என்று கூறுவர் பலர். ஆனால் கிட்டிமுட்டிப் போய் நீங்கள் என்ன சாதியில் பெண் எடுத்தீர்கள் என்று கேட்டால் மென்று முழுங்குகின்றனர். தங்கள் பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து செய்தார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர். இருபது ஆண்டுகள் கழித்து தங்கள் பிள்ளைகளுக்கு கலப்பு மணம் செய்விப்பதாக வீறாப்புப் பேச்சு வேறு. யாராவது அவ்வளவு ஆண்டுகள் கழித்து கேள்வி கேட்கப் போககிறார்களா என்ற எண்ணம்தானே அதற்கு காரணம். ஜாதி சங்கங்கள் ஏன் வைத்துக் கொள்கிறார்கள் என்று கேட்டால் அது அவர் சொந்த விஷயம் என்று திருவாய் மலர்கின்றனர் சிலர்.

சமீபத்தில் 1972-ல் பம்பாயில் இருந்தேன். என் மாமா பிள்ளை என்னிடம் "என்ன டோண்டு, பேசாமல் மஹாராஷ்ட்ரா பெண்ணை மணந்து புரட்சி பண்ணுவதுதானே" என்று பொழுது போகாமல் அறிவுறை கூறினான். அவன் மணந்தது என்னவோ ஐயங்கார் பெண்ணைத்தான். அதை சுட்டிக் காட்டிய நான், ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்துமாறு கூறினேன். எனக்காகவே ஒரு ஐயங்கார் பெண் (என் மனைவி) ஊரில் இருந்ததும் நான் கூறியதற்கு காரணம்”.
பார்க்க: http://dondu.blogspot.com/2007/01/blog-post_30.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

// இப்படி ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்யக்கூடாது போன்ற கற்கால சிந்தனைகளை வள்ர்க்குமானால் தன்னை பிராமணன் என்று சொல்லிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.//

aa uu nna biramanaan thaanaa?

In the whole india the total representation in all fields is less than 10 % ( that too in tamil nadu it is less than 3 %).
Actually brain drain is loss to all.

By way of uplifting the supperessed people the nation should not push down the intellucuals/experts/scholars/intelligents based on cast lines.

It is the right time the enitre reservation policy should be relooked.Vote based politics has already done heavy damage to all sectors.

But no doupt that the social justice should continue.

The reservation benefit should be given to "ezhaikalil ezhaiikalukku"

3% reservation to muslims/christians
3% reservation to one of the s.c s
( they are demanding 6 %)

reservation in reservations.

ippadiye ponaal saathi eppadi maraiyum.

biramanarai mattum thaakuvathu niyaayamaa, yella visayaththilum

sinthippeer siththarththare

Anonymous said...

//(சமீபத்திய அரசியல் குடும்பச் சண்டையில் இந்த விவாதங்கள் பெரியவரால் எழுப்பப் பட்டதை அனைவரும் அறிவர்)


.))))))))))))

மதிபாலா said...

அய்யா டோண்டு அவர்களுக்கு ,

லிங்கிக்கு நன்றிகள்.

ஆனால் , அந்தப் பதிவும் என் கேள்விக்கான பதிலைக் கொண்டிருக்கவில்லை...கூகிளாண்டவரை கேட்டும் , படித்தும் பின் உங்களிடம் வருகிறேன். நன்றிகள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்னுடைய கேள்வி :

நீங்கள் எழுதும் எல்லாப் பதிவுகளுமே மொக்கையாக இருந்தாலும் சில பதிவுகளுக்கு மட்டுமே 'மொக்கை' என ஏன் குறிச்சொல் இடுகிறீர்கள்?

Anonymous said...

//aa uu nna biramanaan thaanaa?

In the whole india the total representation in all fields is less than 10 % ( that too in tamil nadu it is less than 3 %).
Actually brain drain is loss to all.

By way of uplifting the supperessed people the nation should not push down the intellucuals/experts/scholars/intelligents based on cast lines.

It is the right time the enitre reservation policy should be relooked.Vote based politics has already done heavy damage to all sectors.

But no doupt that the social justice should continue.

The reservation benefit should be given to "ezhaikalil ezhaiikalukku"

3% reservation to muslims/christians
3% reservation to one of the s.c s
( they are demanding 6 %)

reservation in reservations.

ippadiye ponaal saathi eppadi maraiyum.

biramanarai mattum thaakuvathu niyaayamaa, yella visayaththilum

sinthippeer siththarththare//


டோண்டு சார் இந்தக் கருத்து சரியாய் இருக்கும் போலிருக்கே.

ஆனால் இது நடக்குமா?

Anonymous said...

//என்னுடைய கேள்வி :

நீங்கள் எழுதும் எல்லாப் பதிவுகளுமே மொக்கையாக இருந்தாலும் சில பதிவுகளுக்கு மட்டுமே 'மொக்கை' என ஏன் குறிச்சொல் இடுகிறீர்கள்?//
நீங்கள் எழுதும் அனைத்து பதிவுகளும் படு குப்பை மோசமாக இருந்தாலும் காம கதைகள் என்று தலைப்பு போடும் அதே ரகசியம் தான். உங்களின் காம கதைகளை உங்களின் குடும்பம் பார்த்து ரசித்து பாராட்ட வாழ்த்துக்கள்

- ஜீனியர் முரளி மனோகர்

Anonymous said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
என்னுடைய கேள்வி :

நீங்கள் எழுதும் எல்லாப் பதிவுகளுமே மொக்கையாக இருந்தாலும் சில பதிவுகளுக்கு மட்டுமே 'மொக்கை' என ஏன் குறிச்சொல் இடுகிறீர்கள்?//

நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா சுந்தர்ஜி

கேள்வி கேட்பதைத்தான்.

Anonymous said...

1. காமகதைகள் எழுதுவர்கள் தங்களின் கதைகளை தம் குடும்ப உறுப்பினர்களுக்கு படிக்க கொடுப்பார்களா?
2. மாற்று எழுத்துக்கள் என்றால் என்ன?
3. ஏன் உங்கள் பதிவுக்கு தமிழ் மண டூல் பாரில் அதிக நெகடிவ் ஓட்டுகள் விழுகின்றன? ஆனால் அதிக ஹிட்ஸ் என கவுண்டர் காட்டுகிறதே
4.நீங்கள் தமிழ் பதிவு எழுதுவதை விட்டு விடலாம் என்று என்றாவது ஒரு நிமிடவாவது தோன்றியதா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

யாராவது அனானியாக வந்து ஏதாவது சொல்வார்கள் என நினைத்ததுதான். அதுவும் ஜூனியர் முரளிமனோஹரே வந்தது என் பாக்கியம் :)

துரதிர்ஷ்டவசமாக இப்போது காமக் கதைகளை எழுதுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன். கொஞ்ச நாட்கள் கழித்து திரும்ப ஆரம்பித்ததும், என் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமென்ன, உங்கள் குடும்ப உறுப்பினர்கள்கூட படித்து ரசிக்கலாம். வாழ்த்துகளுக்கு நன்றி!

kapilavastu said...

/*
ஒரு நிகழ்காலச் சரித்திரம்:
பகுதறிவுப் பகவலன் தந்தை பெரியாரின் கொள்கை காக்கும் மாமாவின் அன்பு மருமகனின்( மிகவும் பிற்பட்ட ஜாதி-அரசின் குறிப்புப் படி) மனைவி தஞ்சை வாழ் அந்தணர் குடுபத்தை சேர்ந்தவர்.மாமாவும் மகிழ்ச்சியுடன் ஆசிர்வதித்தார், இது தானே ஜெனரல் ரூல் .
அடுத்து தான் கிளைமேக்ஸ்.
மருமானின் பிள்ளையின் மனைவி உலகப் பிரசித்து பெற்ற பிரபல பத்திரிக்கை(பிராமண எதிர்ப் பாளர்களின் தாக்குதலை அதிகம் பெரும் புண்ணியவான்)அதிபர் குடுபத்தை சேர்ந்த பார்ப்பனப் பெண்.
*/

ஐயா அனானி,

கூமுட்ட கருணாநிதியின் சின்ன வீடு முதல் இன்னும் மறைந்த பல மனைவிகளின் வீடு வரை அனைவருமே கலப்பு மணம் புரிந்தவர்கள் தான். கிராச் பெல்ட் தவிர அவரின் குடும்பத்தில் அனைத்து சாதியினரும் உள்ளனர். அவரது சீமந்த புத்திரர் மதுரை மாமன்னரே ஒரு தலித் பெண்ணை தான் திருமணம் செய்துள்ளார்.

டூண்டுவின் தவறை சொன்னால் எதற்கு அந்த லூசு கருணாநிதியின் குடும்பத்தை இலுக்கிறீர்கள். ஆனால் அந்த தமிழக சக்கரவர்தியின் குடும்பம் போல் அனைவரது குடும்பமும் கலப்பு திருமணம் செய்து கொண்டால் தீண்டாமை மற்றும் சாதி துவேஷம் மறைந்து விடும்.

டூண்டு போன்ற பழய பன்சாங்கங்கள் களைந்தெரியப்பட்டு பாரதியாரியம் போன்ற புதிய காற்று வீசுமாயின் பாரதம் ஒளிவீசும்.

kapilavastu said...

/*
In the whole india the total representation in all fields is less than 10 % ( that too in tamil nadu it is less than 3 %).
Actually brain drain is loss to all.

By way of uplifting the supperessed people the nation should not push down the intellucuals/experts/scholars/intelligents based on cast lines.

It is the right time the enitre reservation policy should be relooked.Vote based politics has already done heavy damage to all sectors.

But no doupt that the social justice should continue.

The reservation benefit should be given to "ezhaikalil ezhaiikalukku"

3% reservation to muslims/christians
3% reservation to one of the s.c s
( they are demanding 6 %)

reservation in reservations.

ippadiye ponaal saathi eppadi maraiyum.

biramanarai mattum thaakuvathu niyaayamaa, */

Hello Anony,

I am questioning Donduji's stance and i am not writing anything about reservation etc., why are you bringing or linking unnecessary things. If you think straight answer about dondu's uncouth thinkings. I know people meandering in internet dont necessarily link the topics coherently. i will take the luxury of that to dismiss your unpertinent puking.

Anonymous said...

//டூண்டுவின் தவறை சொன்னால் எதற்கு அந்த லூசு கருணாநிதியின் குடும்பத்தை இலுக்கிறீர்கள். ஆனால் அந்த தமிழக சக்கரவர்தியின் குடும்பம் போல் அனைவரது குடும்பமும் கலப்பு திருமணம் செய்து கொண்டால் தீண்டாமை மற்றும் சாதி துவேஷம் மறைந்து விடும். //

கலைஞர் அவர்களை குற்றம் சொல்வதற்காக அந்த விசயம் சொல்லப் படவில்லை.

பொதுவாய் கலப்புத் திருமணங்களில்
ஒருவர் பார்ப்பனர் என்றால் ,பிராமணரல்லாத அடுத்த குடுபத்தார் சமரசமாய் விடுகின்றனர்.

இதுதான் தலைவர் குடுபத்திலும் நடந்துள்ளது என்றுதான் தகவல் சொல்லப் பட்டது.அதுவும் அவரது மனசாட்சி மருமகனுக்கே.( இந்த காலக் கட்டத்தில் தான் , தந்தை பெரியார் " பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பைவிட்டுவிடு பார்ப்பனை அடி" என்ற் தீவிரப் பிரச்சாரம் செய்தார் எனப்து அனைவரும் அறிந்த உண்மை) நண்பரே கோபம் வேண்டாம் .உஷ்ணம் கக்கும் வார்த்தைகள் தேவையா?

அதன் பின்னர் அவரது பேரனுக்கும் பார்ப்பனர் குடும்பத்தில்தான் சம்பந்தம் நடந்துள்ளது.இது ஏதோச்சையாகக் கூட இருக்கலாம்.

இதே போல்தான் கலபுத்திருமணத் தம்பதிகளில் ஒருவர் பிராமணர் என்றால், தனது மகனுக்கோ மகளூக்கோ பிராமணத் துணையையே பெரும்பாலும் தேர்ந்தெடுகின்றனர்.

இன்னும் ஒரு தகவல் பெரிய பணக்கராக் குடும்பங்களில் நடைபெறும் கலப்புத் திருமணங்கள் பெரும் பாலும் விரைவில் சமரசம் ஆகிவிடுகிறது. பணத்தோடு பணம் சேரும் போது
மதமாவது ஜாதியாவது?

தலைவரின் குடும்பம் இன்றையநிலையில் தமிழக பணக்காரக் குடுபங்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது.

வாழ்வில் நிதர்சனம் இப்படிப் போகும் போது பார்ப்பனர்களை மட்டும் கூற்றம் சொல்வதை நிறுத்தலாமே.

Anonymous said...

//டூண்டுவின் தவறை சொன்னால் எதற்கு அந்த லூசு கருணாநிதியின் குடும்பத்தை இலுக்கிறீர்கள். ஆனால் அந்த தமிழக சக்கரவர்தியின் குடும்பம் போல் அனைவரது குடும்பமும் கலப்பு திருமணம் செய்து கொண்டால் தீண்டாமை மற்றும் சாதி துவேஷம் மறைந்து விடும். //

இது பரவலாய்ப் பேசப் படும் செய்தி.

அரசின் வழிகாட்டுதல் படி

கலைஞர்-மிகவும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.
அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ள கல்ப்புத் திருமனங்கள் ,முற்பட்ட சமுகத்தார் மற்றும் பிற்பட்ட சமுகத்தாருடன் என்று சொல்வார்கள்.

கல்ப்புத் திருமனம் என்றால் அதில் ஒருவர் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவராய் இருக்க வேண்டும்.அதைத்தன் தான் அரசு க.திருமணம் என எடுத்துக்கொள்ளூம்.

அப்படிப் பார்த்தால் அவரது குடுபத்தில் ஒரே ஒரு கலப்புத் திருமணம் நடந்துள்ளது.

தலைவரின் குடும்பத்தை ஒரு உதாரனாமாய் மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

தகவல்கள் சரியில்லை என்றால் சரியான தகவலை தரவும்.

Anonymous said...

//Hello Anony,

I am questioning Donduji's stance and i am not writing anything about reservation etc., why are you bringing or linking unnecessary things. If you think straight answer about dondu's uncouth thinkings. I know people meandering in internet dont necessarily link the topics coherently. i will take the luxury of that to dismiss your unpertinent puking.//

In general all the political leadres and most of the bloggers are pointing biramins for all happenings and giving bad commnet.

reservation policy-attack
tamil elam issue- attack
entry in temples-attack


Though the reservation issue is not related with this inter caste marriage,as for as tamil nadu is concerned everything is linked with reservation.
some are demanding reservaton in journalism also.
Even Dr.Ramadoss is demanding reservation in judiciary also.

In most of the sectors, where reservtion policy is implemented( sate,central government departments and psu s), the representaion of biramins are very very limited.


But still the attack on biramins are continuing.

In the same way you have asked dondu's reply in respect of inter caste marriage.
It seems that he has given clearly also.

My sincere request to all is " don't attack biramins in all debates"

thank you mr.kapilavasthu for you kind reply.

kapilavastu said...

ஐயா அனானி,

கலப்பு திருமணம் இரு வேறு ஜாதியின் கலப்பு மணம். ஒரு குறிப்பிட்ட சாதியோடு திருமணம் செய்தால் தான் கலப்பு மணம் என்று எந்த டெக்கினிகாலிட்டியும் இல்லை. ஐயா, தாத்தாவின் குடும்பத்தில் 90 சதவிகிதம் பேர் வேறு சாதியினரை தான் மணம் புரிந்துள்ளனர். கேள்வி அதுவல்ல டூண்டுவின் அபத்தமான எண்ணங்களை கேள்விகாட்டால் அதை பத்தி எதுவும் சொல்லாமல் காமா,சோமான்னு எதோ எதோ எழுதுகிறீர்கள். அத பத்தி எலுத உங்களுக்கு திராணியும் ,தெகிரியமும் இல்லை. நான் எங்கு பிராமின்சை குறை கூறினேன்னு சொல்ல முடியுமா? அதற்கு மாறாக , அபத்தமான கருத்துக்களை தான் பிராமணன் என்று அடயாள்ம் காட்டிக்கொண்டு டூண்டு சொல்வது முற்போக்கு குணம் கொண்ட பிராமண சமுதாயத்திற்கு இழுக்கு விளைவிகின்றது அதனால் டூண்டு தன்னை முற்போக்கு சமுதாயாமான பிராமணன் என்று கூறி அந்த சமூதாயத்தை கேவலப்படுத்த வேண்டாம் என்று தான் சொன்னேன்.

kapilavastu said...

/* In general all the political leadres and most of the bloggers are pointing biramins for all happenings and giving bad commnet.

reservation policy-attack
tamil elam issue- attack
entry in temples-attack

*/

I am also deeply bothered by it.
Tamil elam support is a disgusting chauvinistic barbarism . Please read my blog posting on that.

The so called OBCs are the real perpeterators of crime against dalits.

But some brahmins are all proud about caste identity. There is nothing to be proud about one's caste identity.

Till now i have not heard about any brahmin guy proclaiming like that until i came across it in this disgusting blog.

dondu(#11168674346665545885) said...

@கபிலவஸ்து
முதற்கண் என் பெயரை டுண்டூ என்று அபத்தமும் தவறுமாக எழுதுவதை மாற்றவும். அது எரிச்சல் தருகிறது. தமிழ்ப் பதிவுலகில் டுண்டூ என அறியப்பட்டவன் போலி டோண்டு மட்டுமே.

//அபத்தமான கருத்துக்களை தான் பிராமணன் என்று அடையாளம் காட்டிக்கொண்டு டூண்டு சொல்வது முற்போக்கு குணம் கொண்ட பிராமண சமுதாயத்திற்கு இழுக்கு விளைவிகின்றது அதனால் டூண்டு தன்னை முற்போக்கு சமுதாயாமான பிராமணன் என்று கூறி அந்த சமூதாயத்தை கேவலப்படுத்த வேண்டாம் என்று தான் சொன்னேன்//.
நான் என்ன சொன்னேன் என்று கூட புரியாது நீங்கள் உளறுவதுதான் அபத்தம். கலப்பு திருமணத்தால் வரும் சங்கடங்களைத் தவிர்க்கவே நான் ஜாக்கிரதையாகச் செயல்படுமாறு தற்போதைய இளைஞர்களுக்கு கூறினேன். இதில் என்ன அபத்தத்தைக் கண்டீர்கள்?

கலப்பு திருமணத்தை ஆதரிப்பதுதான் முற்போக்கு செயல் என நீங்களாகவே முன்முடிவு செய்து கொள்வது கேனத்தனமாக உள்ளது. அதுதான் முற்போக்கு செயல் என குருட்டுத்தனமாக பேசும் உங்களைப் போன்றவர்களிடமிருந்து அந்தச் சான்றிதழ் பெற எனக்கு ஏதும் அவசியம் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//கலப்பு திருமணத்தை ஆதரிப்பதுதான் முற்போக்கு செயல் என நீங்களாகவே முன்முடிவு செய்து கொள்வது கேனத்தனமாக உள்ளது. அதுதான் முற்போக்கு செயல் என குருட்டுத்தனமாக பேசும் உங்களைப் போன்றவர்களிடமிருந்து அந்தச் சான்றிதழ் பெற எனக்கு ஏதும் அவசியம் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

கலப்பு திருமணத்தை ஆதரிப்பவர்களில் எத்தனைப் பேர் தங்கள் குடும்பத்தில் இந்த புரட்சியை செய்துள்ளார்கள்?

கபிலவஸ்து ஐயா பதில் ?
சான்றுகளுடன் கொடுக்கவும்.

passerby said...

4) கீழ்கண்ட வினாக்களுக்கு நறுக் பதில்கள் -
அ - பார்ப்பனியம் என்ற வார்த்தை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
பதில்: ஏன் ஏத்துக்கணும். பாப்பானா வன்கொடுமை செய்யறான்? போய் கவுண்டர்கள், தேவர்கள் வன்னியர்கள், பிள்ளைமார்கள் எல்லோரையும் போய் சொல்லிக்கோ. பாப்பான் எவனாவது அட்டூழியம் பண்ணான்னா அப்போ அது பார்ப்பனீயம். இல்லேன்னாக்க அது கவுண்டனியம், தேவரியம், பிள்ளையியம், முதலியாரியம்னு பேசிக்கோ. இல்லேன்னாக்க உயர் சாதீயம்னு பேசிக்கோ. கன்னட பலிஜா நாயுடு வகுப்பை சார்ந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரே கீழ்வெண்மணியிலே தலித்துகளை உயிரோட கொளுத்தினது இன்னொரு நாயுடுன்னவுடனேயே சவசவன்னு ஒரு அறிக்கை விட்டு அப்பீட் ஆனாரே. அதுக்கு என்ன சொல்லுவீங்க.

Raghavan!

You take the meaning of parppaneeyam as you like; and compared it with other communities or castes.

A thevariyaam, or a vanniyariyam, or a chettaariyaam etc. have little to do with religion. Among all castes, you find both Christians and Hindus. They retain their castes even after changing their religion. They cant do so if they change their religion to Islam. So, we have to take only Christians and Hindus for our discussions.

Now, come to Brahmins. A brahmin is a person who is Hindu and Hindu only. If he changes his religion, he can write in his school certifiate a brahmin christian? Even if he does, it is generally ignored. Because after crossing over to Christianity, he does not practice his caste rigidities like vegetarianism etc.

He consumes n.v food because no one looks askance at him. This is just an example to show that a change of religion means a change of his caste.

A brahmin loses his caste; loses his right to be counted as a brahmin among brahmins. He is a stranger who is just a christian. Since the number of brahmins among Christians is so small, he is thoroughly lost in the crowd. He does not mind because, what matters to him is Lord Jesus and not his friendship or recognistion in the community of brahmins.

Now, you may understand that a brahmin is a Hindu; and brahminism is his rigid practices as a Hindu. Such practices are imposed on him by his religion. If he fails in it, he has to suffer the consequences of violation - not in material terms, but in spiritual terms.

He will suffer in his next birth. That is why, brahmins are afrraid to violate the practices.

You may say, people today dont follow that. For which I can say that it is theory we are talking about; and parppaneeyam which you have misinterpreted, is a theory.

Brahminism is rooted in Hindu relgion. A brahmin is a Hindu. One cant say he is a brahmin and not a Hindu. That is a clear tom-foolery.

If you dont like the word, parppaneeyam, you can use the word, brahminism.

But you cant equate parppaneeyam with the practices of other castes, as you have done here.

In view of the deep connect - or rather one cant exist without other - between the Brahminism and Hindu religion, the imporance of the word Brahminism comes into being.

If brahminism becomes extinct, Hindu religion becomes extinct.

In the light of what I have written, you may have relook into your reply. And, perhaps, frame a different reply to the questioner.

dondu(#11168674346665545885) said...

@Dear Karikkulam
What you are advocating is known as a logical fallacy, and that too a very fundamental one.

All Brahmins are Hindus.
All Mudaliyars are Hindus
All Chettiyars are Hindus.

But remember,
Only some Hindus are Brahmins.
Only some Hindus are Mudaliyars
Only some Hindus are Chettiyars.

The first sentence "All Brahmins are Hindus" is an example for the logical form called "Universal affirmative".
The term "Hindus" is not exclusive to Brahmins. It is a trait shared by other castes as well.

Try to get this into your thick head and do not propound such nonsense ideas.

So the high class mentality cannot be exclusively called Brahminism.

Dondu N. Raghavan

passerby said...

This is your view. That was my view.

May both be where they are.

With your view that all brahmins need not be hindus, it is possible for you to give a non-religious color to brahminism. That exactly suits your purpose of tackling anti-brahmins in blogosphere. Isn't dealing with them your pastime? Without them, you lose your elan vital, dont you? Worthy foes!!

Anti-brahmins like brahmins like you. Brahmins like you like anti-brahmins of blogosphere!! Tit for tat! For your fight, casteism in you should be kept always burning. My views will attempt to quench it.

To me, brahminism and Hinduism are inseparable. A brahmin loses his name as a brahmin if he is not a Hindu.

All Hindus are not brahmins; but all brahmins are Hindus.

These are my views, no less, no more!!

We agree to disagree. Which means, I wont give up; and I dont ask you to give up.

Good luck! And more power to your pen for the fight!

dondu(#11168674346665545885) said...

//With your view that all brahmins need not be hindus,... //
உளறும் காரிக்குளம் அவர்களே, நான் எங்கும் எப்போதும் நீங்கள் மேலே சொல்வதுபோல கூறவில்லையே.

நான் கூறியது அழுத்தம்திருத்தமாக இன்னொரு தடவை கூறுவேன்:
“All Brahmins are Hindus.
All Mudaliyars are Hindus
All Chettiyars are Hindus.

But remember,
Only some Hindus are Brahmins.
Only some Hindus are Mudaliyars
Only some Hindus are Chettiyars”.

உமக்கு தர்க்க சாஸ்திரம்தான் தகராறு என நினைத்தேன். ஆங்கிலமும் அப்படித்தான் போலிருக்கிறது.

உம்மை மாதிரி ஆங்கிலம் புரிதலில் தவற்றை நான் சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது செய்திருந்தால், என் வகுப்பாசிரியர் ஜெயராம ஐயங்கார் என்னை ஒரு வாரத்துக்கு பெஞ்சு மேல் நிற்க வைத்து நினைத்தபோதெல்லாம் பிரம்பால் விளாசியிருப்பார். நானும் அதற்காக அவர் மேல் தவறு சொல்லியிருக்க மாட்டேன்.

டோண்டு ராகவன்

passerby said...

“All Brahmins are Hindus.
All Mudaliyars are Hindus
All Chettiyars are Hindus.

But remember,
Only some Hindus are Brahmins.
Only some Hindus are Mudaliyars
Only some Hindus are Chettiyars

//

Please have a look at the above.

All Brahmins are Hindus – True
All Mudaliyars are Hindus – False
All Chettiayars are Hindus – False

There are umpteen numbers of Christians from Mudalaiyaar and Chettiaar communities. If you deny it, you want to bury your head in the sand.

You should contradict my statement that a Brahmin cannot be a Christian.
But a mudaliyar and a chettiayar or Nadaar can be a Christian, and retain his caste. Only when he becomes a Muslim, caste is not retained.

The Nadaars retain their caste name on conversion. They are called CSI nadaars or Christian naadaars. The Hindu nadaars are leaders in Hindu munnani and in BJP. BJP MP, Pon Radhakirshnan is an example.
Among Pillais, there are thousands of Christians. The poet Krishnapillai is an example.

The reason is, as far as I know, the conversion activities of early missionaries in TN became a success with all communities, except Brahmins.

A Brahmin, if he becomes a Christian, can’t retain his caste. There are still a few Brahmins among Christians; but they conceal their previous caste identity that came from the Hindu religion. You can’t find Samuel Iyer, or Augustine Iyengaar; but you can find, Samuel Nadaar, Augustine Nadaar.

Believer it or not, to become a Chrisatian or a Muslim is to hate being a brahmanan – so intricate and inseparable the identity of brahmananan and Hindu religion.

On conversion, a Brahmin loses everything in Hindu religion. He is no longer a Brahmin. Therefore, a Brahmin and Hindu religion are inseparable.
Hindu religion imposes rigid codes on a Brahmin. All Brahmins are to follow those codes. A Brahmin cant be a non-vegetarian, for e.g. A brahmin has no existence outside his religion.

If a person does not do so, that is a personal to him. But the theory cannot be destroyed because of personal whims and fancies.

No such religious rules are imposed on castes like chettiayar or mudaliyaar exclusively to them just as there are for Brahmins exclusively. If they have any such things to follow in the religion, they are like other non-Brahmins in following that. If you find any separate habits among chettiayars, for example, it has little to do with the religion. It comes from their isolated and well preserved life as a community. For e.g nakaraththaar. Thirunelveli Saivappillai.

Brahmins have rules exclusive to them. The religion treats Brahmins separately from others. A Brahmins has his existence only in his religion. Detached from religion, he can’t exist. His daily life is based on religion. In that respect, he resembles a Muslim.

Tamil Brahmins want to preserve the identity that came to them from their religion. Read regularly the magainze Tambras and you will see how they want Brahmins to retain their religious identity by strictly following all rules. Read some of your caste people magazine, Iyengaars.

You say proudly that you are a Brahmin because you revel in the insularity. Others just call themselves as non-brahmins. The mudaliaary or chettaiars don’t retain the ancient varnashramdharama nomenclatures, vaishyas, shatraiyas, etc. It is you who retain that even today.
Remember the word, ‘paarppanar’ is not liked. And, the Dravidian politicians use the word paarppanar sarcastically to mock at brahmins.

Dont go to logic, தர்க்கமெல்லாம் எதுக்கு? What I wrote are simple observations from life.

Do you have any difficulty in accepting this obvious religious

My English is weak, very weak, very, very weak – I humbly accept all your criticism in this regard. I don’t want to improve it, though! What is the use? I did not study in Hindu High School from great English teacher. I am self-taught.

dondu(#11168674346665545885) said...

//You say proudly that you are a Brahmin because you revel in the insularity.//
And you seem to revel in your ignorance of English.

As for logic, it is there whether you like it or not. The term "Brahminism" to term high caste mentality is just not acceptable, period.

Get lost Karikkulam. No use talking to you, a man hiding his own profile. I now have a strong suspicion as to who you really are.

Dondu N. Raghavan

passerby said...

As for logic, it is there whether you like it or not. The term "Brahminism" to term high caste mentality is just not acceptable, period.

Get lost Karikkulam. No use talking to you, a man hiding his own profile. I now have a strong suspicion as to who you really are.

//

Maybe, not acceptable to you. That shows you are a good man. How nice TN would have been if everyone were like you - a man without any caste feeling! How nice it would have been if the law college students were taught by you not to be casteists thrashing one another with uruttukkattais.

I seem to have hurt you. I am sorry for that.

You are trying to use logic to subvert all my arguments.

We will meet you again I dont know when. You seem to think my presence in your feeback is a nuisance. Eliminating people with difference of opinion is an easy way to creat a make-believe world of happiness! Surrounded by sycophants and foot-lickers, you will be on seventh heaven always!!

I got lost, dont worry. Be cheerful. !

You know me! That is really interesting!!

Ragahvan, bye, bye!

(If there are any errors in my English, please pardon me, Sir!

Anonymous said...

Tamil Nadu Ranks 1st in Top e-Governance State & 1st Choice of Business

Destination in INDIA for the Second Consecutive Year!!! – DATAQUEST

http://dqindia.ciol.com/content/top_stories/2008/108121004.asp

Tamil Nadu seems to be a hot favorite destination for businesses; Bihar

stands at the complete opposite end of the spectrum. Relatively smaller

states like Himachal Pradesh and Chhattisgarh too seem to be attracting

businesses. Gujarats holistic e-governance agenda seems to be paying off.

The state is also the first state in Asia to implement e-connectivity

network in all 590 village councils.

In terms of overall business satisfaction, the top ranking state has been

Tamil Nadu which has outperformed on almost all parameters namely License &

Permits; Financial Assistance; Incentives & Grants; Sales Tax; Municipal

Corporation, etc. Incidentally business registration and power utility are

the only two categories where Tamil Nadu does not feature with Assam

leading at 77.4 and Karnataka and Orissa following with scores of 75 and

74.1 respectively.

In the Government Tenders/Contracts category while Tamil Nadu scores the

highest, close on the heels are Gujarat and Chhattisgarh at 74.9 and 74.7

respectively. Even as the state claims to have a business-friendly

environment, Gujarat was ranked third in the license and permits parameter,

way behind Tamil Nadu and Himachal Pradesh.

Anonymous said...

//
All Brahmins are Hindus – True
All Mudaliyars are Hindus – False
All Chettiayars are Hindus – False
//

கிருத்தவ முதலியார்களும், கிருத்தவ செட்டியார்களும் தங்களைவிட கீழ் சாதியில் உள்ள கிருத்தவர்களுடன் உறவு வைத்துக்கொள்கிறார்களா ?

இல்லை என்றால், அது அவர்கள் சாதி பற்றைத்தானே காட்டுகிறது.
பின் ஏன் அதை பிராம்மணீயம் என்று சொல்லவேண்டும்? உயர்சாதீயம் என்றால் என்ன?

Anonymous said...

தமிழ் OBC பட்டியல் இடி பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!

நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

வந்ததா? இல்லை.

இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.

Anonymous said...

I have an iphone with 200 text/month. Befor i got the iphone i already had family unlimited texting. Do i still have this feature or am i stuck with only 200 text/month?
[url=http://unlockiphone22.com]unlock iphone[/url]

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது