12/04/2008

பெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்

நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி பதில்களில் போட்டால் பதிவும் பெரிதாகிவிடும். ஆகவே இப்போதே தனிப்பதிவாக அவற்றைப் போடுவேன்.

குப்புக்குட்டி:
1. "நாட்டுக் கோட்டை" என்று ஏதேனும் ஊருக்குப் பெயர் இருக்கா? அது எங்க இருக்கு? வட்டிக்கடை என்றதும் சேட்டு தான் ஞாபகத்துக்கு வருகிறது. அப்ப தமிழர்களுக்கு இந்த தொழில் சேட்டு மூலம்தான் தெரியுமா?
பதில்: சேட்டுகள்தான் அதிகம் நினைவுக்கு வரும் காரணம் தமிழ் சினிமாக்களே. அதுவும் அவர்கள் கொச்சையாக பேசிய தமிழை வைத்து காமெடி காட்சிகள் வைக்கவும் செய்தனர். மற்றப்படி வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பது உலகளாவிய செயல், ஏனெனில் கடன்களும் உளகளாவிய தேவைகள் என்பதால்.
நாட்டுக்கோட்டையார் பற்றி மேலும் சில வரிகள்:
செட்டிநாடு என்று தமக்கொரு தனிநாட்டை அமைத்துக்கொண்டு அந்நாட்டிற்கென தனி அரசரையும் தனித்த பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர்.
புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 96 ஊர்களைத் தங்களின் இருப்பிடமாகக் கொண்ட இவர்கள் தற்போது செட்டிநாட்டில் எழுபத்தைந்து ஊர்களிலும தமிழகம் முழுவதிலும் பரவி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். வட்டித்தொழிலில் அதிக முனைப்போடு இருந்த இவர்கள் தற்போது மருந்துவணிகம், தாள்வணிகம் முதலான வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடைய இவர்கள் சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கச் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள். இவர்களின் பேச்சுவழக்கு மிகுதியும் தமிழ் வழக்கே என ஆய்வர் கருதுகின்றனர்.

2. காசு நிறைய இருந்தும் சிலவே செய்யாமல் (ஆடம்பரத்துக்கு அல்ல அத்தியவசியத்துக்கே) வாழ்க்கை முழுதும் சிலர் உழல்கிறார்களே அது பரம்பரை வியாதியா? எனக்கு தெரிந்து ஒரு சமுதாயத்தில் ஒரு கூட்டம் அப்படியே வாழ்கிறது.
பதில்: நீங்கள் செட்டியார்களையா கூறுகிறீர்கள்? அவ்வாறு பொதுப்படுத்த இயலாது. நகரத்தார் செய்திருக்கும் தான தருமங்கள் அனேகம். இப்போதும் அவர்கள் வீடுகளில் ஒவ்வொரு வேளைக்கும் குடும்பத்தை சேராதவர்களும் உணவருந்துவர். மற்றப்படி நீங்கள் சொல்லும் கருமிகள் எல்லா சமூகங்களிலும் உள்ளனர்.

3. அப்பச்சி என்ற சொல்லுக்கு தாத்தா என்று அர்த்தமா! திருநெல்வேலிக்காரர்களிடம் இன்னும் இந்தச் சொல் வழக்கத்தில் இருக்கிறதாமே!
பதில்: அப்பச்சி என்றால் எனக்கு தெரிந்து அப்பா என்றுதான் பொருள். ஏ.வி.மெயப்பச் செட்டியாரை அவர் மகன் அப்பச்சி என்றுதான் குறிப்பிடுகிறார்.

மற்றப்படி நாட்டுக் கோட்டை செட்டியார் பரம்பரையில் உறவுமுறைப்பெயர்கள் பின்வருமாறு.
ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகிpன்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன.
அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள் குடும்பப்பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள், என்ற நிலையில் பகுத்துக்காண இயலுகின்றது.

பொதுப்பெயர்கள்: நகரத்தார் மரபு ஆண்களை- செட்டியார் என்றும்; நகரத்தார் என்றும் பெண்களை- ஆச்சி என்றும் பொதுப்பெயரிட்டு பிற குலத்தார் அழைக்கின்றனர்.

இவர்களுக்குள்ளும் இப்பொதுப்பெயர் நிலவி வருகின்றது.அம்மாள் என்று மற்ற குலங்களில் அழைக்கப்பெறும் பெண்பால் பொதுப்பெயர் இக்குலத்தில் ஆச்சி என அழைக்கப் பெறுவது தனித்தன்மை உடையதாக இருக்கின்றது.
செட்டியார், நகரத்தார் என்ற ஆண்பாற்பெயர்கள் அவர்களின் குலம் குறித்தமைந்த பெயர்களாகும். ஆனால் ஆச்சி என்ற பெண்பாற்பெயர் பெண்களுக்கு வழங்கப்பெறுவது வரலாற்று அடிப்படையானது ஆகும்.

ஒருகாலத்தில் வணிக குல ஆண்களுக்கு பெண்கள் கிடைக்காத சூழலில் அவர்கள் வெள்ளாள(வேளார்) குலப் பெண்களை திருமணம் செய்துகொண்டனர். அவ்வகையில் கார்காத்த வெள்ளாளர் பெண்களை மணந்த வணிகர்கள் அரிவைநகரத்தார் எனப்பட்டனர். சோழிய வெள்ளாளர் பெண்களை மணந்தவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப்பட்டனர். காணிய வேளாளப் பெண்களை மணந்தவர்கள் சுந்தர நகரத்தார் எனப்பட்டனர். பெண்களை இவ்வாறு குலம் மாறி எடுத்துக்கொண்டாலும் இவர்கள் அடுத்த வாரிசுகளில் எம்குலப்பெண்களை வெள்ளாளக் குலத்திற்குத் தரமாட்டோம் என்ற உறுதியோடு இவர்கள் அப்போது பெண்கொண்டனர்.

இப்படி வேற்று ஆயத்தில் இருந்து பெற்ற பெண் என்ற குறிப்பை உட்கொண்டு வேற்று ஆயத்தாள் என்ற பெயர் அப்பெண்களுக்கு வழங்கப்பெற்று ஆச்சி என்று மருவி வந்திருக்கலாம் என்பது ஒருவகை. காலப்போக்கில் மருதநில மக்களான வேளாண் குலத்தவரே முல்லை நிலத்தார் செய்யும் தொழில்களான மாடு வளர்த்தல், பால் தயிர் விற்றல் முதலான தொழில்களைச் செய்து வந்ததால் ஆயர், ஆய்ச்சியர் என்ற முல்லை நிலப்பெயர்கள் மருத நிலத்தார்க்கு வழங்கப்பட அக்குலம் சார் பெண்களைப் பெற்றதனால் நகரத்தார் வேளாளப்பெண்களை ஆச்சி என அழைத்திருக்கவேண்டும். இவ்வாறு நகரத்தார் குலப்பெண்கள் ஆச்சி எனப்பட்டிருக்கலாம் என்பது இன்னொருவகை. எவ்வகையாயினும் ஆச்சி என்ற பொதுப்பெயர் நகரத்தார் இனத்துப் பெண்களுக்கான தனித்த பெயராக வழங்கி வருவது கருதத்தக்கது.

தற்போது ஆச்சி மோர், ஆச்சி சம்பார்பொடி ஆகியன விற்பனைக்கு வருகின்றன. அவை செட்டிநாட்டு சமையல் கருதி தயாரானவை என்பதை மறைமுகமாகக் காட்டிநிற்கின்றன. ஆச்சி வந்தாச்சு என்ற நகரத்தார் குல இதழ் தற்போது வெளிவந்து கொண்டுள்ளது. இவற்றின் வழி ஆச்சி என்றபெயர் பெறும் சிறப்புக்களை உணரமுடியும்.

குடும்பப் பெயர்கள்: இவர்களின் குலத்தில் குடும்பப் பெயர்கள் மிகவும் எளிமையான கட்டமைப்பின; காரண காரியம் மிக்கன; ஒரே அமைப்பின. அவற்றில் சில பெயர்கள் இங்குக் காட்டப் பெற்று அவற்றின் பொதுமைகள் ஆராயப் பெறுகின்றன.

தந்தை- அப்பச்சி எனவும் தாய்- ஆத்தாள் எனவும் அழைக்கப்பெறுகின்றனர். மகன், மகள் பெயர்களில் மாற்றம் இல்லை. மகனின் மனைவி- மகம்மிண்டி (மகன் பெண்டிர்) என அழைக்கப்பெறுகிறாள். பெண்டிர் என்ற சொல் பெண்பெயர்களுக்கான பின்ஒட்டு ஆகும். பெண்டிர் என்றால் பெண் எனப்பொருள்படும். இச்சொல் மரியாதைப் பன்மை கலந்த சொல்லாகும். எனவே பெண்களை மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இக்குலத்தாரிடம் உள்ளது என்பதை உணரமுடிகின்றது. மகளின் கணவர்- மாப்பிள்ளை? மருமகன் எனப்படுகின்றார். இவைபோல பின்வரும் பெயர்களும் காணத்தக்கன.

அண்ணன்- அண்ணன், அண்ணன் மனைவி- அண்ணமிண்டி (அண்ணன் பெண்டிர்), தம்பி- தம்பி, தம்பி மனைவி- தம்பியொண்டி(தம்பி பெண்டிர்), பேரன்-பேரன், பேரன்மனைவி- பேரம்பிண்டி(பேரன்பெண்டிர்), மாமா-அம்மான், மாமா மனைவி- அம்மாம்மிண்டி (அம்மான் பெண்டிர்), அத்தை-அயித்தை, அத்தைமகள்- அயித்தியாண்டி(அத்தையாள் பெண்டிர்), கணவனின் தம்பி,அண்ணன் ஆகியோர்-கொழுந்தனார்- கொழுந்தனாவண்டி (கொழுந்தனார் பெண்டிர்)என்பன ஒரே அமைப்பின. இவற்றில் பெண்டிர் என்ற சொல் அதன் முன்சொல்லுக்கு ஏற்றார்போல், மிண்டி, யாண்டி, யொண்டி, மிண்டி ஆகிய ஈறுகளாகப் பேச்சு வழக்கில் திரிந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இன்னும் சில குடும்பப் பெயர்கள் வேறு அமைப்பில் உள்ளன. அம்மாவைப் பெற்ற அம்மா- ஆயா எனவும், அப்பாவைப் பெற்ற அம்மா- அப்பத்தா (அப்பனைப் பெற்ற ஆத்தாள்) எனவும் அழைக்கப் பெறுகின்றனர். அப்பா, அம்மா இருவரையும் பெற்ற தாத்தா- ஐயா என்றே பொதுப்பெயரால் அழைக்கப்பெறுகிறhர்.

மாமானார்-சம்பந்தியான், மாமியார்-சம்பந்தியாள் என்பன எதிர் உறவுமுறையினரைக் குறிக்கும் பெயர்களாகும். இவை தவிர மற்றொரு பெண்ணின் கணவனைக் குறிக்கையில் ஆம்பிடையான் என்ற சொல் கொண்டு குறிப்பிடுவதும் உண்டு.

கணவனும், மனைவியும் -ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கையில் ஏங்கறேன் என்ற பேச்சு வழக்கு நகரத்தார் மரபில் காணப்படுகிறது. ஏன் என்கிறேன் என்ற சொல்லின் திரிபாக இதனைக் கொள்ளலாம்.

மகனுக்கு அவனின் தந்தைவழி தாத்தா (ஐயா) பெயரிடப்படுகையில், அதனை அவனின் அம்மா(ஆத்தாள் ) அழைப்பது மரியாதைக் குறைவு எனக் கருதி நகரத்தார் பெண்கள் அழைப்பதில்லை. மாறாக தம்பி என்றோ, வேறு ஒரு பெயர் கொண்டோ அழைப்பது முறைமையாக உள்ளது. அதுபோலவே அப்பத்தா பெயரை மகளுக்கு இடுகையில் அதனை அழைப்பதும் மரியாதைக்குறைவு என்பதால் வேறுபெயர் கொண்டோ அல்லது ஆத்தாள் என்றோ அழைப்பதும் முறைமையாகும்.

இதே போல இரண்டாவது மகன், மகள் பிறக்கையில் மாமானார், மாமியார் பெயர் சூட்டப்படுகையில் அதனை அழைப்பது மரியாதைக்குறைவு எனக்கருதுவதால் கணவனும் வேறுபெயர் இட்டு அழைப்பதும் வழக்காக உள்ளது. எனவே நகரத்தார்குல எல்லா பிள்ளைகளுக்கும் இருபெயர்கள் இருப்பது தவிர்க்கமுடியாததாகி விடுகின்றது.

இவ்விருபெயர்களும் திருமண அழைப்பிதழ் முதலாக பதிவு பெற வேண்டிய இடங்களில் பதியப்பெறுகின்றன என்பது குறிக்கத்தக்கது.

அண்ணன் என்ற சொல் நகரத்தார் மக்களிடையே பேச்சு வழக்கில் அதிகம் பயன்படும் சொல்லாகும். வயதில் மூத்த ஆண்களை அண்ணன் என்பது பொதுவழக்காகும். வயதில் குறைந்த ஆண்களை தம்பி என்றழைப்பதும் பொதுவழக்காகும். வயதில் மூத்த பெண்பிள்ளைகளை ஆச்சி என அழைப்பதும், வயதில் குறைந்த பெண்பிள்ளைகளை தங்கச்சி என்றழைப்பதும் பொதுவழக்கிற்கு உட்பட்டதே ஆகும். இவ்வழக்குகள் செட்டிநாட்டுப்பகுதிகளில் வாழும் பிற இனத்தாரிடத்திலும் காணப்பெறுகின்றன.

மனைவியுடன் பிறந்த ஆண்- மச்சான், மைத்துனன் என அழைக்கப்படுவதும், கணவனுடன் பிறந்த பெண்கள் நாத்தனார் எனப்படுவதும், பிற குலத்தினரால் அழைக்கப்பெறும் பான்மையினவே.

மேலும் முறையினர் பலராக இருக்கும் போது அவர்களை வயது அடிப்படையில் பெரிய, சிறிய என்ற அடைகளுடன் அழைக்கும்முறை இவர்களிடம் காணப்பெறுகின்றது.

எடுத்துக்காட்டிற்காக சின்ன (சிறிய) ஆயா, பெரிய ஆயா; சின்ன ஆத்தாள், பெரிய ஆத்தள் முதலியனவற்றைக் காட்டலாம்.

நெருங்கிய உறவினர் பெரியப்பா, சித்தப்பா போன்ற தந்தைவழிப்பட்ட நெருங்கிய உறவினர்கள் வளவினர் எனப்படுகின்றனர். வளவு என்பது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பங்காளிகள் அனைவரும் ஒரு வளைவிற்குள் வாழ்ந்தனர் என்ற அடிப்படையில் உருவான வளைவு என்ற சொல்லே பின்னர் வளவு என மருவியது என்பர் . இதனடிப்படையில் தந்தைவழிப்பட்ட நெருங்கிய உறவினரைக் குறிக்கும் சொல் வளவினர் ஆயிற்று.

தாய் வழிப்பட்ட நெருங்கிய உறவினர் தாயபிள்ளைகள் என அழைக்கப் பெறுகின்றனர். பெரும்பான்மை இச்சொல் தாய் வழிப்பட்ட உறவினரைக் குறித்தபோதும்- சிறுபான்மை தந்தை உறவினர்க்கும் உரிய தாகின்றது. தாயபிள்ளைகள் என்ற இச்சொல் தூய தமிழ் அடிப்படையில் அமைந்த காரணகாரியமிக்க இணைப்புச்சொல்லாகும். இச்சொல் பங்காளிகள் அல்லாத உறவுமுறையினர்க்குரியதாகும்.

தூரத்து உறவினர்: தூரத்து உறவினர் பங்காளிகள் எனப்படுகின்றனர். இவர்களுள் சில வகைகள் உண்டு. அவை பங்காளிகள், கோயில் பங்காளிகள், ஊர் பங்காளிகள், கூடிக்கொள்கின்ற பங்காளிகள் என்பனவாகும்.

பங்காளிகள்: பங்காளிகள் என்போர் தந்தைவழியில் உறவுமுறையினர் ஆவர். இவர்கள் திருமணம் முதலான மங்கல நிகழ்ச்சிகளிலும், இறப்பு முதலான துயர நிகழ்ச்சிகளிலும் முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்கள் இன்றி எந்நிகழ்வும் இக்குலமுறையினரிடம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் பங்காளிகள்: கோயில் பங்காளிகள் என்போர் கோயில் உறவால் உறவினர் ஆவோர் ஆவர். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் சார்ந்த குடிகள் ஆவர். இவர்கள் ஒன்பது நகரக்கோயில்கள் அடிப்படையில் ஒன்பது பிரிவனர் ஆவர். அவை இளையாற்றங்குடி, மாற்றூர், நேமம், இரணியூர், பிள்ளையார்பட்டி, இலுப்பைக்குடி, சூரைக்குடி, வைரவன் கோயில், வேலங்குடி என்பனவாகும்.

இச்சிவன்கோயில்கள் அடிப்படையில் ஒன்பது பிரிவாகியுள்ள இக்குலத்தார், இவர்களுக்கான பூர்வீக ஊர்களில் வாழ்ந்துவருகின்றனர். பலஊரினர் ஆனாலும் கோயில் அடிப்படையில் இவர்களிடத்தில் உறவு உண்டு. இவ்வுறவே கோயில்பங்காளிகள் என்னும் உறவாகின்றது.

ஊர்பங்காளிகள்: ஓரூர் சார்ந்த நகரத்தார்கள் தம்மை ஓரூர் பங்காளிகள் எனப் பெருமையோடு அழைத்துக்கொள்ளுகின்றனர். வெளியூர்களில் வேலையில் அமர்ந்த நகரத்தார் பெருமக்கள் ஊர் சார்ந்து ஒருமைப்படுவதற்கு இம்முறை பெரிதும் உதவுகின்றது. வழி, வழி மரபாக வாழ்ந்த இவ்வூர் இணைப்பு தவிர, வாழும் ஊர்களிலும் இம்முறை தொடர்கின்றது. எடுத்துக்காட்டாக கோயம்புத்தூரில் வாழும் பல ஊர் நகரத்தார்கள் ஒன்று சேர்ந்து நகரத்தார் சங்கம் என்ற அமைப்பைத் தங்களுக்குள் அமைத்துக் கொள்ளும்போது அவர்கள் கோயில், மரபு தாண்டி மற்றொரு உறவுமுறைக்குள் நெருக்கமாகின்றனர். இவ்வுறவுமுறையே தற்போது பெருமளவில் வெற்றிபெற்றுத் திகழ்கின்றது. நகரத்தரார் சங்கங்கள் மூலமாக உலக அளவில் கூட பல ஊர்களில் நகரத்தார்கள் ஒருங்கிணைகின்றனர். இச்சங்கங்கள் மூலமாக அவர்கள் பல அறப்பணிகளையும் சமுதாயப் பணிகளையும் செய்து வருகின்றனர்.

இவ்வாறு கூட்டம் கூட்டமாக- வளவு அடியாகவும், கோயிலடியாகவும், மரபூர் அடியாகவும், வாழுமமூர் அடியாகவும் வாழும் முறைமை இச்சமூகத்தாரின் இனக்கட்டுமானத்திற்கு இன உணர்விற்கு எடுத்துக்காட்டாகின்றது. எனினும் இவர்களின் இனஉணர்வு மென்மையானது மேன்மையானது என்பதும் இங்கு எண்ணத்தக்கது.

புள்ளி: புள்ளி என்ற இச்சொல் நகரத்தார் மரபில் மிகவும் பொருளுள்ளது ஆகும். திருமணமான நகரத்தார் ஆண்பிள்ளை ஒரு புள்ளியாக கணக்கில் கொள்ளப்பெறுகின்றனர். இதன்பின் இவர் ஊர்ப் பொதுக்காரியங் களுக்கான புள்ளிவரி கட்டவேண்டும். திருமணம் முதலான நிகழ்ச்சிகளில் தனிக் குடும்பமாகக் கருதப்பட்டு அவர் பெயருக்கு அழைப்பு தரப்பெறும். அவர் பெயரில் மொய்ப்பணம் பெறப்பெறும். இவ்வகையில் புள்ளி என்பது இவர்கள் குலத்துள் மிகப் பொருளுள்ளதாகின்றது.

புள்ளிக்குரிய ஆண் இறந்த சூழலில், அவரது மனைவி வாழும் நிலையில் அவர் அரைப்புள்ளியாக கருதப்பட்டு அவரிடம் வரிப்பணம் முதலியன அரையளவில் பெறப்பெறுகின்றன. மனைவி இறந்து கணவர் மட்டும் இருக்கும் சூழலில் அவர் ஒரு புள்ளியாகவே கருதப்படுகிறார். சாதி மாற்றி திருமணம் செய்து கொள்ளும்
இளைஞர்கள் இப்புள்ளி என்னும் நிலைக்கு வாரார் என்பது கருதத்தக்கது. இவ்வாறு நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபினர் தமக்கென தனித்த தமிழ் வழிப்பட்ட காரணகாரியமிக்க இனஉணர்வுடைய முறைப்பெயர்களை அமைத்துக் கொண்டு தம் பண்பாட்டை நாகரீகத்தை குலமரபைக் காத்து வருகின்றனர்.
செட்டியார்கள் பற்றி நான் மேலே தந்த விவரங்கள் இந்த உரலிலிருந்து பெறப்பட்டன. அதற்கு என் நன்றி.

நாட்டுக் கோட்டையார் பற்றி மேலும் சில விவரங்கள் இந்த உரலிலிருந்தும் பெற்றேன். அதற்கும் என் நன்றி. விவரங்கள் பின்வருமாறு:
1950ல் தமிழ் நாட்டிலுள்ள தொழில்களில் மூன்றில் ஒரு பகுதி நாட்டுக் கோட்டை செட்டிமார் கையிருந்ததாகச் செய்தி. நாட்டுக்கோட்டை செட்டிமாருடைய மொத்த ஜனத்தொகை அன்று 1½ லட்சம். 3 கோடி ஜனத்தொகையுள்ள தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தொழிலை ஒன்றரை லட்சம் ஜனத் தொகையுள்ள செட்டிமார் பெற்றது எப்படி? அவர்கள் குடும்பங்களில் அன்று ஒரு பழக்கம் இருந்தது. எவ்வளவு பணக்காரனானாலும் தன் பிள்ளைகளை மற்றவர்கள் கடைகளில் விட்டுப் பயிற்சி கொடுப்பது வழக்கம். முதல் பயிற்சி முடிந்தால் பையன் அரைக்கால் ஆள் ஆகிறான். அதிலிருந்து 8 கட்டம் தாண்டி முழு ஆளான பின் தன் சொந்தக்கடைக்கு வருகிறான். பிறரிடம் வேலை செய்வதால், செல்லம் கொடுக்க வழியில்லை. பயிற்சியில் எல்லா கட்டங்களும் உண்டு. பணம், பொருள், நிர்வாகம், கீழ்ப்படிதல், கணக்கு, வாடிக்கை, கொள்முதல் என எல்லாப் பகுதிகளுக்கும் பயிற்சியுண்டு. இது போன்ற முறையான பயிற்சியை தங்கள் நிறுவனத்தை விட்டு அகன்று பிள்ளைகள் பெற ஏற்பாடு செய்தது இந்தச் சமூகம் ஒன்றுதான். அவர்களுடைய ஸ்தாபனங்கள் திவாலாவதில்லை. அவர்கள் செல்வம் அளவு கடந்து பெருகியதற்கு இப்பயிற்சியை ஏற்றுக் கொண்டதே காரணம். அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது இப் பயிற்சியாகும்.

இதோ மூன்றாவது உரலிலிருந்து பெறப்பட்ட விவரங்கள்:
நாட்டுக் கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் நகரத்தார் சமூகத்தைச்
சேர்ந்தவர்களால் சிதம்பரம் கோயிலின் பல திருப்பணிகள் செய்யப்
பட்டிருக்கின்றன. செட்டி நாட்டு ராஜாவான சர் அண்ணாமலைச் செட்டியார், அவரின்
சகோதரர் திவான் ராமசாமிச் செட்டியார் போன்றவர்களும், நாலு கோபுரங்களின்
திருப்பணிகள், கனகசபையின் கூரையை மறு செப்பனிடுதல், சுற்றுச் சுவர்களைச்
செப்பனிடுதல், பிரகாரங்களில் கல்லால் ஆன பாதை அமைத்தல், சிவகங்கைக் குளத்துப்
படிக்கட்டுகளைக் கல்லால் செப்பனிடுதல், திரு வீதி உலாவுக்கான வாகனங்களைச்
செய்து அளித்தல், விளக்குகள், பாத்திரங்கள் போன்ற முக்கியமான தேவைகளை அளித்தல்
போன்றவற்றைச் செய்து கொடுத்து மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேகமும் செய்து
வைத்ததாயும் தெரிய வருகின்றது. 1891-ல் இவை நடந்ததற்குப் பின்னர் கிட்டத் தட்ட
64 வருடங்கள் சென்ற பின்னரே 1955-ல் திரு ரத்னசபாபதிப் பிள்ளையும், திரு
ரத்னசாமிச் செட்டியாரின் முயற்சியாலும் கும்பாபிஷேகம் செய்யப் பட்டதாயும் தெரிய
வருகின்றது.

விவரங்கள் சரியா, அல்லது ஏதேனும் சேர்க்க வேண்டுமா என்றால் நம்ம சுப்பையா அவர்கள்தான் இதற்கு சரியானவர்.

இப்போது டோண்டு ராகவனின் எண்ணங்கள். நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகித்து நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபவர்கள் செட்டியார்கள். அவர்களுக்கு நாடே கடமைப் பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் சண்முகம் செட்டியார். நேரு அவரை மிகவும் மதித்தார். விவேக் ஒரு படத்தில் தமிழ் நியூஸ் படிக்கும் ஒரு பெண் “ஆட்சியை நாங்கள் வரும் தேர்தலில் பிடிப்போம்” என்பதை கொச்சையாக “ஆச்சியை பிடிப்போம்” எனப் படிக்க, அவருக்கே உரித்த குரலில் “என்ன ஆச்சியா, அடேய் எங்க ஊர் காரைக்குடி பக்கம் இதை கேட்டாக்க கலவரமே வந்துடும்டா” என்று கத்துவது செம காமெடி. அப்படத்தின் பெயர் தெரியவில்லை. யாரேனும் கூறினால் தன்யனாவேன்.

“சிதம்பர ரகசியம்” என்னும் படத்தில் நம்ம எஸ்.வி.சேகர், மனோரமா, கிஷ்மு ஆகியோர் சக்கைபோடு போடுவதை பார்த்தவர்கள் அப்படத்தை மறக்க இயலாதல்லவா?

இப்பதிவை இடக்காரணமான கேள்விகள் அமைத்த குப்புக்குட்டிக்கு: நீங்கள் யாராக இருந்தாலும் வாழ்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

73 comments:

கோவி.கண்ணன் said...

டோண்டு சார்,

பார்பனர்களைப் போலவே செட்டியார்களும் பூணூல் அணிந்து இருப்பார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். எங்க ஊர் செட்டியார்களில் சிலர் போட்டு இருப்பார்கள் அவர்களை சைவ செட்டியார்கள் என்பார்கள்.

மற்ற செட்டியார்கள் சிக்கன் 65 சாப்பிடுகிறார்கள்.

dondu(#11168674346665545885) said...

//பார்பனர்களைப் போலவே செட்டியார்களும் பூணூல் அணிந்து இருப்பார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்//.
ஆம், நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று சொல்லப்படும் செட்டியார்கள் பூணூல் அணிபவர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

///ஆம், நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று சொல்லப்படும் செட்டியார்கள் பூணூல் அணிபவர்கள்.///

சோழியன் குடுமி சும்மா ஆடுமா ?

கோவி. நல்ல கிவ்வண்ட் டேக் பாலிஸி.

பெருமதிப்புக்குரிய பார்ப்பன சமூகம் பற்றி நாளை கேள்வி கேட்டுடறேன்.

SP.VR. SUBBIAH said...

முதலில் இந்தப் பதிவிற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில அரிய தகவல்களைக் கொடுத்துள்ளீர்கள். அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி!

நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் திருநீற்றையும் ருத்திராட்சையும் அணிவார்கள். பூணூல் அணிவதில்லை. அது தவறான செய்தி

அகத்தில் (உள்ளத்தில்) இருப்பவள் = அகத்தாள் = ஆத்தாள் என்ற சொல்லாயிற்று
அப்பாவின் = அப்பச்சியின் ஆத்தா= அப்பத்தா என்றாயிற்று.
அம்மாவின் சகோதரன் = அம்மான்

(இதைத்தான் கண்ணதாசன் ஒரு பாடலில்
"அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா"
என்று எழுதினார்

இப்படி ஒவ்வொரு சொல்லையும் பிரித்தால் அர்த்தம் கிடைக்கும்

1940 ற்கு முன்பு - அதாவது - இரண்டாம் உலகப்போருக்கு முன்பு - அத்தனை நகரத்தார்களும் வெளிநாட்டு வணிகம் செய்தவர்கள். பர்மா, மலேசியா, இலங்கை, சைகோன் என்று கடல் கடந்து வணிகம் செய்தவர்கள்.
உலகப்போரில் பல பொருள் இழப்புக்களைச் சந்தித்து நாடு திரும்பியவர்கள். பர்மாவில் மட்டும் சுமார் ஆயிரம் குடுமபத்தினர் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு வந்தனர்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிறுவனர் திரு.பெத்தாட்சி செட்டியார் குடும்பத்திற்கு மட்டும் 40 ஆயிரம் ஏக்கர்
விளை நிலம் பறிபோனது. என் தந்தையாருக்கு (எங்கள் குடும்பத்திற்கு) 2,500 ஏக்கர் நிலம் பறிபோனது.
1956ஆம் ஆண்டில் அப்போதைய பாரதப் பிரதமர். திரு. ஜவஹர்லால நேரு அவர்களை வைத்துப் பஞ்சாயத்து பேசி ஒன்றும் பெயரவில்லை. நீவின் அரசு சல்லிக் காசு கூட தரமறுத்துவிட்டது. அதெல்லாம் ஏடுகளில் உள்ளது

வைநாகரம் செட்டியார் என்பவர் 1900 ஆண்டு (ஆண்டைக் கவனிக்கவும்) தனி ஒரு மனிதனாக நின்று அப்போது சிதிலமடைந்திருந்த மீன்னாட்சி அம்மன் கோவிலைப் புதிப்பித்தார். அன்று அவர் கையில் இருந்து செலவு செய்த
பணம் சுமார் 40 லட்ச ரூபாய்.( அன்று பவுன் விலை பதின்மூன்று ரூபாய்) இன்றைய மதிப்பில் அது 400 கோடிக்குச் சமம்.

இப்படி எழுதிக்கொண்டே போகலாம். பின்னூட்டம் நீண்டு விடும் ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்
அன்புடன்
சுப்பையா

dondu(#11168674346665545885) said...

உங்கள் பின்னூட்டத்தைத்தான் மிக ஆவலுடன் எதிர் நோக்கினேன்.

நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பூணூல் போடுவார்கள் என்று படித்த ஞாபகத்தில் எழுதி விட்டேன். செட்டியார்களில் வேறு ஏதாவது பிரிவினர் போடுகிறார்களோ?

//இப்படி எழுதிக்கொண்டே போகலாம். பின்னூட்டம் நீண்டு விடும் ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்//
இதுதான் ஏமாற்றம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SP.VR. SUBBIAH said...

/////இப்போது டோண்டு ராகவனின் எண்ணங்கள். நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகித்து நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபவர்கள் செட்டியார்கள். அவர்களுக்கு நாடே கடமைப் பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் சண்முகம் செட்டியார். நேரு அவரை மிகவும் மதித்தார்./////

திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் கோவையைச் சேர்ந்தவர். அவர் செட்டிநாட்டுக்காரர் அல்ல!

SP.VR. SUBBIAH said...

//இப்படி எழுதிக்கொண்டே போகலாம். பின்னூட்டம் நீண்டு விடும் ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்//

இதுதான் ஏமாற்றம்./////

நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வரலாற்றை, அண்ணாமலை பழ்கலைக் கழகத்தின் ஸ்தாபகர் திரு.ராஜா சர்.முத்தையா செட்டியாரின் தனி உதவியாளராக இருந்த திரு. சர்மா என்பவர் எழுதியது
புத்தக வடிவில் உள்ளது. அது அவரால் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பெற்றது. அதனுடைய
புதுப்பிக்க பெற்ற பிரதி சென்னை தி.நகரில் உள்ள வானதி பதிப்பகத்தில் கிடைக்கும். முடிந்தால் வாங்கிப்
படியுங்கள். சுவாரசியமாக இருக்கும்

SP.VR. SUBBIAH said...

தட்டச்சுப் பிழை. திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்

பழ்கலைக் கழகத்தின் = பல்கலைக் கழகத்தின்

துளசி கோபால் said...

அருமையான விவரங்கள்.

நன்றி.

SP.VR. SUBBIAH said...

/////நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பூணூல் போடுவார்கள் என்று படித்த ஞாபகத்தில் எழுதி விட்டேன். செட்டியார்களில் வேறு ஏதாவது பிரிவினர் போடுகிறார்களோ?/////

கோவைப் பகுதியில் தேவாங்கச் செட்டியார், மற்றும் 24 மனைச் செட்டியார்கள் என்னும் இனத்தினர்
அதிக அளவில் உள்ளனர். இரு சமூகத்தினருக்குமே தாய் மொழி தெலுங்கு. அவர்களும் பூணூல் போடுவதில்லை

எனக்குத் தெரிந்து அந்தனர்களைத் தவிர, விஸ்வகர்மா இனத்தவர் மட்டுமே பூணூல் அணிகின்றனர்

Sethu Raman said...

a fantastic writeup about a community that contributed to the growth of commerce, and religion in Tamilnadu. Such articles are most welcome

Krishnan said...

என்னுடைய கல்லூரி நண்பர் ஈரோடை சேர்ந்தவர். அவர் செட்டியார் வகுப்பை சார்ந்தவர். உட்பிரிவு தெரியவில்லை, ஆனால் பூணூல்அணிந்திருப்பார்.

SurveySan said...

///சாதி மாற்றி திருமணம் செய்து கொள்ளும்
இளைஞர்கள் இப்புள்ளி என்னும் நிலைக்கு வாரார் என்பது கருதத்தக்கது////

இது கொஞ்சம் கேவலமா இருக்கே.
இது நல்ல விஷயமா கெட்ட விஷயமா?

#BMN said...

மிக அருமையான பதிவு.. நல்ல ஆராய்ச்சி..தகவலுக்கு நன்றி..
//கோவைப் பகுதியில் தேவாங்கச் செட்டியார், மற்றும் 24 மனைச் செட்டியார்கள் என்னும் இனத்தினர்
அதிக அளவில் உள்ளனர். இரு சமூகத்தினருக்குமே தாய் மொழி தெலுங்கு. அவர்களும் பூணூல் போடுவதில்லை

எனக்குத் தெரிந்து அந்தனர்களைத் தவிர, விஸ்வகர்மா இனத்தவர் மட்டுமே பூணூல் அணிகின்றனர்//

24 மனை தெலுங்கு செட்டியார்களில் சில பிரிவினர் பூணூல் அணிவார்கள்.

Ramesh said...

I have friends in Devanga community, who wear poonool.

There are enough schools built by Devanga Chettiars in Tamilnadu.

Anonymous said...

காசுக்காரச் செட்டியார்கள் பூணூல் அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன்.

// கார்காத்த வெள்ளாளர் பெண்களை மணந்த வணிகர்கள் அரிவைநகரத்தார் எனப்பட்டனர் //

கார்காத்த வெள்ளாளர் என்ற பெயர் இது வரை கேள்விப்படாததாக இருக்கிறது. இதைப்பற்றிய விவரங்கள் இருக்கிறதா?

Anonymous said...

Devanga chettiar community of Salem Gugai area wear Poonool. They belong to Kannada minority.
Rajan

Anonymous said...

//கார்காத்த வெள்ளாளர் என்ற பெயர் இது வரை கேள்விப்படாததாக இருக்கிறது. இதைப்பற்றிய விவரங்கள் இருக்கிறதா? //

KaarKatha Vellalar are from Tirunelveli District and they are subcaste of Tirunelveli Saiva Vellala community.

நல்லதந்தி said...

//கோவைப் பகுதியில் தேவாங்கச் செட்டியார், மற்றும் 24 மனைச் செட்டியார்கள் என்னும் இனத்தினர்
அதிக அளவில் உள்ளனர். இரு சமூகத்தினருக்குமே தாய் மொழி தெலுங்கு. அவர்களும் பூணூல் போடுவதில்லை//

தவறு வாத்தியாரே!.தேவாங்கச் செட்டியார்கள் பூணூல் போடுவார்கள்.ஆனல் அது கட்டாயமானதில்லை.ஆவணி அவிட்டம் அன்று மட்டும் போட்டு விட்டு கழற்றுபவர்களும் உண்டு.அதை நிரந்தரமாக போட்டுக் கொண்டிருப்பவர்களும் உண்டு.அது வழக்கமே தவிர பூணூல் கல்யாணம் மாதிரி கட்டாயமானதில்லை.அவரவர் விருப்பம் மட்டுமே.

Anonymous said...

//மற்ற செட்டியார்கள் சிக்கன் 65 சாப்பிடுகிறார்கள் //

Hai Kovi Kannan

What you mean it . Is there any harm in eating the chicken

Regds
Naga

Anonymous said...

//தற்போது ஆச்சி மோர், ஆச்சி சம்பார்பொடி ஆகியன விற்பனைக்கு வருகின்றன. அவை செட்டிநாட்டு சமையல் கருதி தயாரானவை என்பதை மறைமுகமாகக் காட்டிநிற்கின்றன //

Achi Sampar podi owners are not chettiars. They are from other religion.

Unknown said...

அருமையான பதிவு டோண்டு சார்....பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்...
வாத்தியார் ஐயாவிற்கும் என் நன்றி...

Anonymous said...

5000 + hits in less than a week . congrats dondu sir for crossing 3,15,000 hits

Anonymous said...

///சாதி மாற்றி திருமணம் செய்து கொள்ளும்
இளைஞர்கள் இப்புள்ளி என்னும் நிலைக்கு வாரார் என்பது கருதத்தக்கது////

இது கொஞ்சம் கேவலமா இருக்கே.
இது நல்ல விஷயமா கெட்ட விஷயமா?

Hi Survesan,

Don't you know Inter caste marriages are not accepted in any of the castes in india. It is accepted in your caste???

Regds
Naga

கோவி.கண்ணன் said...

//மற்ற செட்டியார்கள் சிக்கன் 65 சாப்பிடுகிறார்கள் //

Hai Kovi Kannan

What you mean it . Is there any harm in eating the chicken

Regds
Naga//

யார் சொன்னது, சிக்கன் சாப்பிடுவது தப்பு இல்லை. நன்றாக வேகவைத்த சிக்கனை சாப்பிடலாம், சீக்கு இல்லாதா சிக்கனாக இருக்கனும், இல்லாவிடில் சென்ற ஆண்டு சிக்கன் குனியா வந்து பலர் பாதிக்கப்பட்டது போல் எதாவது நடந்துடும்.

யார் வேண்டுமானாலும் சிக்கன் சாப்பிடலாம். மாட்டுக்கறி, பன்றி இறைச்சி கூட சாப்பிடலாம்.

Anonymous said...

//
வருணாசிரமத்துக்கும் தமிழர்களின் சாதிமுறைக்கும் தொடர்பு கிடையாது, தமிழர்களின் சாதிப்பிரிவுகள் தமிழர்களுடையதே//

தமிழர்களின் சாதிப்பிரிவுகளின் அடிப்படை பற்றிய தவறான கருத்து தமிழர்களிடையே நிலவி வருகிறது. தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளின் அடிப்படை ஆரிய வர்ணாசிரமமே ( பிராமண, ஸத்திரிய, வைஸ்ய, சூத்திர) என்ற கருத்து தவறானதென்கின்றனர் பல அறிஞர்கள், அதில் குறிப்பாகத் தமிழறிஞரும், சமக்கிருதம் உட்பட பல இந்தியமொழிகளில் புலமை வாய்ந்தவருமாகிய பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் தன்னுடைய The Four Hundred Songs of War and Wisdom” என்ற புறநானூற்றுப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலிலும், திரு.பார்த்தசாரதி அவர்கள் The Tales of An Anklet’ என்ற நூலிலும், கலாநிதி. N.சுப்பிரமணியம் அவரது ‘The Tamils’ என்ற நூலிலும் அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளை உருவாக்கியவர்கள் தமிழர்களே, தமிழர்களின் சாதி முறைகளும், சாதிப்பெயர்களும் பார்ப்பன வருணாசிரமத்துக்குப் பெருமளவு வேறுபட்டவை என நிரூபிக்கின்றனர் அறிஞர்கள்.

வருணாசிரமச் சாதிப்பாகுபாட்டிலுள்ளது பிரமிட் போன்ற மேலாதிக்கத் தன்மை தமிழர்களின் சாதிப்பிரிவுகளில் கிடையாது, அத்துடன் சாதியடிப்படையிலான வெறுப்பும் தமிழ்ச்சாதிப் பிரிவுகளுக்கிடையில் கிடையாது. ஆனால் அதன் கருத்து, தமிழ்ச்சாதிகளுக்கிடையில் சமத்துவமின்மை கிடையாது என்பதல்ல.

தமிழர்களின் சாதிமுறைக்கு அடிப்படை பார்ப்பனர்களின் வருணாசிரமல்ல, நிலவுரிமை அடிப்படையிலான ஆண்டான் - அடிமை வழக்கமே தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படையாகும். தமிழ்மண்ணில் நிலவுரிமையுடன், நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த தமிழ் மக்கள் குழுக்கள் பல “வெள்ளாளர்” என்ற பொதுவான பெயருடன் அரசியல், பொருளாதார வலிமையையும் , ஆதிக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.

தமிழர்களின் சாதிப்பாகுபாட்டுக்கு அடிப்படை எதுவாக இருந்தாலும், இந்த சாதிமுறைகள் தமிழ்ச்சமுதாயத்தைப் பிளவடையச் செய்து, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாம் தமிழர் என்ற அடையாளத்தை மட்டும் தமது ஓரே அடையாளமாகத் தமிழர்களை நினைக்க ஊக்குவிப்பதும், அந்த நோக்கத்தையடைய உழைப்பது மட்டுமே தமிழர்களுக்கிடையேயுள்ள சாதியடிப்படையிலான வேறுபாடுகளைக் களைந்து, நாளடைவில் சாதியற்ற தமிழ்ச்சமுதாயம் உருவாக வழிவகுக்கும்.

பல அறிஞர்களின் கருத்துப்படி தமிழர்களின் சாதிப்பாகுபாட்டை உருவாக்கியது தமிழர்களே அப்படியானால் பார்ப்பனர்களுக்கும், தமிழர்களின் சாதி முறைக்கும் தொடர்பு கிடையாது. பார்ப்பன வருணாசிரமத்துக்கும் தமிழ்ச்சாதிகளுக்கும் தொடர்பில்லை என்றால் அந்தணர்கள், பெருமானார்கள் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுவதெல்லாம் தமிழர்களையே தவிர, வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனர்களையல்ல என்பது தெளிவாகிறதல்லவா?
தமிழர்களை ஆரியமயமாக்குதல் (Sanskritization) பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இக்களத்தில் கூட, தமிழ்ச்சாதியையும், வேறு மாநிலங்களில் உள்ள தமிழரல்லாத சாதிக்குழுக்களில் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட சாதிக்குழுவினரையும் ஒன்றாக்கித், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பதன் மூலம் தமிழர்களின் தனித்துவத்தைக் குலைக்கச் சிலர் முயன்றதை நாம் அறிவோம்.

உதாரணமாக, கலப்பில்லாத தமிழ்ச்சாதியும், சிலப்பதிகாரத்துக்கும், காவிரிப்பூம் பட்டினத்தின் காலத்துக்கு முன்பிருந்தும் தம்முடைய தமிழ் வேர்களை அடையாளம் காணும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைத் தெலுங்குச் செட்டி என்ற சாதியுடன் இணைத்து, தமிழர்களைப் பிரித்துத் தமிழர்களை ஒரு தனித்துவமில்லாத, கலப்பினமாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் கறுப்பின மக்களின், இரண்டும் கெட்டான் நிலைக்குக் கொண்டு வருவதற்குச் சிலர் முனைந்ததைப் பலரும் அறிவர்.

இப்படி எல்லாத் தமிழ்க்குழுக்களுக்கும், சாதியைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்திய ஆரியர்களும் அவர்களின் வாலாயங்களாகிய தமிழெதிரிப் பார்ப்பனர்களும், தமிழர்களை ஆரியமயமாக்கல் மூலம் அதாவது, புராணத்துப் புனைகதைகளை தமிழர்களிடையே இன்றுள்ள பல சாதிப்பிரிவுகளுக்கும் இணைத்து, தமிழர்களைப் பிரித்தனர் ஆனால் அவர்களை விட மோசமாக அந்தப்புனைகதைகளை இன்றும் தாங்கிப்பிடித்துக் கொண்டு, தமக்கும் சத்திரியர் என்ற வருணப் பிரிவுக்கும் ஏதோ தொடர்பிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, தமிழர்களே தமிழர்களைத் தாழ்த்தும் கொடுமையை வன்னியர்கள் மட்டுமல்ல தமிழர்களின் பல சாதிக்குழுவினர்களும் செய்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு

அண்மைக் காலம் வரையில் தமிழர்களில் எல்லாச்சாதியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் சாதிக்கு ஆரியச் சாயம் பூசுவதற்கும், ஆரிய வேர் கண்டு பிடித்து, ஒரு புராணக்கதையை அதனுடன் இணைத்து விட்டுத் தம்மை உயர்வாகவும் காட்டுவதற்கு ஆளுக்காள் முந்திக் கொண்டார்கள், ஏனென்றால் ஆரியத் தொடர்பு உயர்ந்ததாகப் பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டது.

இவ்வாறு இடையில் வந்த பச்சைப் புளுகுக் கதை தான், உண்மையில் சுத்தத் தமிழர்களான, மலையாளிகளும் அவர்களின் பரசுராம கோத்திரத்தில் வந்ததாகக் கூறப்படும் குப்பைக்கதையும், தமிழர்களைப் பிரித்தாளுவதற்காக நம்பூதிரிப் பார்ப்பான்கள், சேர நாட்டுத் தமிழர்களின் காதில் சுற்றிய பூத் தான் இந்தப் பரசுராம கோத்திரக் கதை.

என்ன தான், தனிப்பட்ட முறையில் நான் பிராமணர்களைத் தாக்கக் கூடாது என்று நினைத்தாலும், தமிழர்களின் சரித்திரத்தை நாம் உற்று நோக்கும் போது பாரதியார் போன்ற சில தமிழ்ப்பற்றுள்ள பிராமணர்கள் இருந்தாலும், பெரும்பாலான பிராமணர்கள், தமிழினத்தின் முதுகில் குத்தியுள்ளார்கள் என்பதை அறியலாம், எம்முடைய இன்றைய பிராமண நண்பர்கள் விரும்பாது விட்டாலும், உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இன்று இஸ்ரேலும், ஜேர்மனியும் நட்பு நாடுகள், அதற்காக, ஹிட்லரையும், ஆறு மில்லியன் யூதர்களின் இறப்பையும் யூதர்கள் யாரும் மறந்து விடுவதில்லை, அது போல் தான் இதுவும்.

இந்த தமிழ்ச்சாதியினரை அல்லது தமிழர்களின் தொழில் அடிப்படையிலான, கிராமக் குழுக்களை ஆரியமயமாக்கும் முயற்சியின் முதல் படி தான், மனுசாத்திரத்தைப் பாவித்து, தமிழர்களை வடமொழிப் பெயர் கொண்ட, சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்தது, இதே பிரிவினையைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், வேறு மாநிலத் திராவிடர்களிடமும் செய்ததால், ஒரே மாதிரியான சாதிப்பெயர்கள், பல மொழி மக்களிடம் பாவனைக்கு வந்தன.

அந்த அடிப்படையில், உதாரணமாக், தமிழ்நாட்டுத் தமிழர்களான வெள்ளாளரும், பறையரும் ஆளுக்காள் பகைத்துக் கொண்டு, வேற்று மொழி, வேற்று மாநில அதே சாதிப்பெயர் கொண்ட மக்களிடம் நெருங்கிய தொடர்பிருப்பதாக உணர்ந்தார்கள் என்பதை விடத் திட்டமிட்ட ஆரியமயமாக்கலாலும், புராணக்கதைகளாலும் உணர வைக்கப்பட்டார்கள். அதனால் தான் தமிழர்களான வன்னியர்கள் தம்மைச் சத்திரியர்களென்று சொல்லிக் கொண்டு, மகாபாரதத்துப் புளுகுகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தாம் சத்திரியர்கள் என்று பொய்யான பெருமையளக்கிறார்கள். இப்படிச் செய்வதால், தம்முடைய தனித்துவமான, தமிழ்ப்பண்பாட்டை இழந்து, ஒரு கலப்புச் சாதியாகத் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையும், யாராவது கலப்பில்லாத தமிழாக, தமிழராக இருந்தால் குறைவானவர்கள், தமிழர்கள் என்றால் கூலிகள் என்ற நிலை ஏற்பட்டதாலும் தான், சோழர்களின் வீழ்ச்சியின் பின்பு, தமிழர்கள் தமது படைப்பலத்தை இழந்ததால், தமிழ்நாட்டை ஆண்ட தமிழரல்லாத பிற மாநிலத்தினரால், தமிழினம் சிறுமைப் படுத்தப் பட்டது, சொந்தமண்ணில் அதிகாரத்தை இழந்து கூலிகளாக்கப் பட்டனர். இன்று கூடத் திராவிடர்கள் என்றால், பெரும்பாலும் அது தமிழர்களைத் தான் குறிக்கும், தமிழர்கள் என்றால் பல வடநாட்டவரின் மனதில் கூலிகள் என்ற நினைப்பு.

ஒவ்வொரு தமிழ்ச்சாதிப் பிரிவும், ஆரியமயமாக்கப் பட்டது. தமிழர்களும் ஆரியத் தொடர்பையும், அதனுடன் சம்பந்தப்பட்ட புளுகு மூட்டைப் புராணக்கதைகளையும், அதன் மூலம் தமக்கு மற்றவர்களை விடச் சிறப்பு வந்ததாக நினைந்து, அவற்றை உண்மையாக நம்பியதும் தான், தமிழ்மண்ணுக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்களால் தமிழர்களைப் பிரித்தாள முடிந்தது மட்டுமல்ல, அன்னியப் படையெடுப்புகளின் போது, அவர்களுக்கு உளவு பார்த்துத் தமிழரசர்களைக் கவிழ்க்கவும் முடிந்தது.

உதாரணமாக, வெள்ளாளர் அல்லது வேளாளர் கலப்பில்லாத தமிழ்ச்சாதி, வேளாண்மை - அதாவது விவசாயம் செய்பவர்கள் அல்லது நிலவுடமைக்காரர், இலங்கையில் இன்றும் வெள்ளாளர்கள் நிலச் சொந்தக்காரர்கள். வெள்ளாளர்- வெள்ளம் - தண்ணீர்- அதாவது குளங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விவசாயிகள். இப்படியான தமிழ்ச்சாதியான வெள்ளாளர்களுக்கும், ஆரியப் புராணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.

இந்த பொய்யான ஆரியத்தொடர்பில் இருந்த மாயையில் தான் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்கள் கூடத் தம்முடைய பட்டப் பெயராக ஆரியச் சக்கரவர்த்திகள் என்று வைத்துக் கொண்டார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் பாண்டிய நாட்டுத் தமிழர்கள்.

இத் தமிழர்களை ஆரியமயமாக்கலும்,( Sanskritization process) தமிழர்களின் ஆரிய மோகமும், ஏதாவது புராணத்தை தமது தமிழ்ச்சாதிக்கு இணைத்து வீரம் பேசுவது தொடரும் வரை தமிழினம் உருப்படாது, சாதிப்பிரிவே தமிழர்களின் சாபக்கேடு அதற்கும் புராணக்கதையை இயற்றி, நான் உயர்ந்தவன் என்னுடைய வேர்கள் மகாபாரத்ததில் பாண்டவ்ர்களிடம் இருந்து வந்தது அல்லது வடக்கிலிருந்து வந்த முனிவரிலிருந்து வந்தது என்று கதை விட்டு, நாங்கள் தமிழர்கள் வெறும் கலப்பினம் தான், எங்களிடம் எந்த விதமான தனித்துவமும் கிடையாது , நாங்கள், பண்பாட்டையும் நாகரீகத்தையும் வடக்கில் இருந்து வந்த முனிவர்களிடமும், வட மொழியிலிருந்தும் பெற்றுக் கொண்டோம் என்று தமிழெதிரிகள் வெளிப்படையாகச் சொல்வதையும்,வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல், ஜால்ரா போடுவதையும் நாம் தமிழர்களும் ஏற்றுக்கொள்வதாகி விடுகிறது என்பதை விடக் கேவலம் வேறெதுவும் கிடையாது

Anonymous said...

// யார் வேண்டுமானாலும் சிக்கன் சாப்பிடலாம். மாட்டுக்கறி, பன்றி இறைச்சி கூட சாப்பிடலாம். //

We will eat what we wish to eat and we know to take care about ourself.You wish to eat what you like it. Don't try to act smart. In your first comment mislead about chettiars and non veg food. You first change your mindset about others.

Anonymous said...

தனிப்பட்ட விருப்பு வெறுப்பை பொதுப் படுத்தக் கூடாது என்பது தான் சரி. என்னுடைய இடத்தை நான் விற்க முன்ற போது எங்கள் அபார்ட்மெண்டில் இருந்த ஒருவர்எனக்கு உதவுவது போல பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தினார். என் நண்பரும் இந்த ஆட்களே இப்படி தான் என்றார். அந்த வருத்தம் வலைக்கு வந்திருக்கக் கூடாது. அது தான் கேள்வியாகியது. வட மாநிலங்களில் வெகு நாட்கள் இருந்ததாலோ என்னவோ எனக்கு இவர்களைப் பற்றிய பின்னணி தெரிந்திருக்கவில்லை. இத்தனை கட்டமைப்புடன் கூடிய சமுதாயம் என்பதை அறிந்த போது வியப்பாக இருந்தது. எல்லா சமுதாயமும் போல இதிலும் நல்லவர்களும் உண்டு தீயவர்களும் உண்டு. ஒரு தனிப்பட்ட ஒருவரின் "கலர்" -ஐ ஒரு குரூப்-க்கே பூசுவது தவறு. வாழ்கையில் எல்லா நேரங்களிலும் நாம் நம் பலவீனங்களை வெல்ல முடிவதில்லை. என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றபடி என்னை சரி செய்து கொள்ள உதவிய நல்ல பதிவு.அது சரி கடைசியில் என்ன "நான்" யாராயிருந்தாலும் என்று சொல்லியிருக்கிறீர்கள், உங்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும் என்பது தானே சரியாக இருக்கும். -குப்புக் குட்டி

வால்பையன் said...

//தமிழர்களுக்கு இந்த தொழில் சேட்டு மூலம்தான் தெரியுமா?//

சேட்டு என்று எந்த இனமும் இல்லை.
சேட்டு என்றால் முதலாளி என்று அர்த்தம். இன்று சேட்டு என்றால் மகிழ்வுறும் ராஜாஸ்தான் ஒட்டக மேய்ப்பாளார்கள், உண்மையில் அவர்கள் மார்வாடிகள் என்று அழைக்கபட வேண்டியவர்கள்

வால்பையன் said...

//பொதுப்பெயர்கள்: நகரத்தார் மரபு ஆண்களை- செட்டியார் என்றும்; நகரத்தார் என்றும் பெண்களை- ஆச்சி என்றும் பொதுப்பெயரிட்டு பிற குலத்தார் அழைக்கின்றனர்.//

இதுவெல்லாம் சுத்த கோமாளித்தனம்
வயது முதிர்ந்தவர்களை பொதுவாக அண்ணா என்றும் பெண்களை அக்கா என்றும் தான் அழைப்போம். செட்டியார் என்று அழைக்க யாரும் சொல்லவில்லை. சாதி விரும்பிகள் அதை தொடரலாம்.

வால்பையன் said...

//ஆச்சி என்ற பெண்பாற்பெயர் பெண்களுக்கு வழங்கப்பெறுவது வரலாற்று அடிப்படையானது ஆகும்.//

மதுரை வாழ் நாடார்கள், அம்மாவின் அம்மாவை ஆச்சி என்று தான் அழைக்கிறார்கள்.
கொங்கு மண்டலம் அம்மாச்சி என்று அழைக்கிறது. இதில் செட்டியாருகளுக்கு வரலாறேல்லாம் புனைவு தான்.

suvanappiriyan said...

பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். பதிவு அருமை.

வால்பையன் said...

//குலம் மாறி எடுத்துக்கொண்டாலும் இவர்கள் அடுத்த வாரிசுகளில் எம்குலப்பெண்களை வெள்ளாளக் குலத்திற்குத் தரமாட்டோம் என்ற உறுதியோடு இவர்கள் அப்போது பெண்கொண்டனர்.//

அப்படி தந்தா பொறக்குர கொழந்தைக்கு கொம்பு இருக்குமா என்ன?

வால்பையன் said...

இதுக்கு மேல படிக்கசொல்ல எனக்கு கொட்டாவியா வருது

passerby said...

பெருமதிப்புக்குறிய பறையர்களையும், பள்ளர்களையும், சக்கிலியர்களையும் பற்றி எப்போது பதிவு போடப்போகிறீர்கள் மிஸ்டர் இராகவன்?

passerby said...

Siruthai!

A good post!

Anonymous said...

//
பார்பனர்களைப் போலவே செட்டியார்களும் பூணூல் அணிந்து இருப்பார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். எங்க ஊர் செட்டியார்களில் சிலர் போட்டு இருப்பார்கள் அவர்களை சைவ செட்டியார்கள் என்பார்கள்.

மற்ற செட்டியார்கள் சிக்கன் 65 சாப்பிடுகிறார்கள்.
//

சிக்கன் 65 சப்பிடுவது தவறே இல்லை. ஆனால் உங்களைப் போல் பார்ப்பான், பார்க்கமாட்டான், பார்த்துகிட்டே இருப்பான், பூனூல், நார்னூல், பஞ்சுனூல், சணல்னூல் ன்னு அடுத்தவன் மூளையைச் சாப்பிடுவது தான் பாவச்செயல்.

Chenthil said...

"செட்டிநாடு என்று தமக்கொரு தனிநாட்டை அமைத்துக்கொண்டு அந்நாட்டிற்கென தனி அரசரையும் தனித்த பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர்."

வெறும் கதை. அண்ணாமலை செட்டியார் முதலில் திவான் பகதூர் பட்டம் பெற்றார். ஆங்கிலேயர்கள் எல்லாருக்கும் திவான் பகதூர் கொடுத்தவுடன், அதற்கு மேலான ராஜா பட்டம் கேட்டு வாங்கிக்கொண்டார் (1929ல்). ராஜா பட்டத்திற்காக உருவாக்கப் பட்டது தான் செட்டிநாடு என்ற ஊர். இராமநாதபுரம் , புதுக்கோட்டை மாதிரி அது தனி சமஸ்தானம் கிடையாது. செட்டியார்களோ, ஊர்க்காரர்களோ மற்ற ராஜாக்கள் மாதிரி இவர்களுக்கு வரி செலுத்தியதும் கிடையாது. இந்தியா விடுதலை அடைந்த போது இருந்த 547 சமஸ்தானங்களில் செட்டிநாடு கிடையாது (சுட்டி

இப்போதுள்ள யாரும் பெயருக்குப் பின்னால் செட்டியார் என்று போட்டுக் கொள்வது கிடையாது. இந்த பழம் பெருமை பேசுவது தேவையற்றது என்பது என் கருத்து.

Arun Kumar said...

நல்ல பதிவு டோண்டு சார்..

என் கல்லூரி காலத்தில் கானாடுகாத்தானுக்கு நண்பணின் வீட்டு திருமணத்திற்க்காக சென்று இருந்தேன்.

தமிழ் நாட்டில் இப்படி ஒரு ஊர் இருக்கிறதா என்று அசந்து போய் விட்டேன்.

அந்த ஊரில் சந்துகளில் கூட சர்வ சாதாரணமாக பென்ஸ் கார் காணபட்டது.

மேலும் விருந்தோம்பல் . ஆகா..

கல்யாண சாப்பாட்டில் அத்தனை பெரிய வாழை இலை எங்கு இருந்து தான் கொண்டு வந்தார்களோ.. அதை போல வாழை இலை இது வரை நான் பார்த்ததில்லை.. அந்த பெரிய இலை நிறைய பதார்தங்கள்.. நாம் கேட்காமலே மிகவும் ரசிக்க வைக்கும் உணவு வகைகள்.

அவர்கள் பழகும் தன்மை தன்னை விட வயதில் சிறியவனாக இருந்தாலும் மரியாதையாக பேசும் பாங்கு.. இன்னும் பல சொல்லி கொண்டே போகலாம்..

காரைக்குடி ஊரை சுற்றிலும் எங்குமே வெள்ளம் புயல் தாக்க வாய்பில்லை.. மிகவும் வறண்ட பூமி..


ஆனால் செட்டி நாடு வீடு எல்லாம் பல அடி உயரத்தில் இருக்கும். பல காலம் முன்பு தனுஷ்கோடி அருகில் இவர்கள் இருந்தாகவும் அங்கு கடல்கோள்கள் மற்றும் புயல்கள் தாக்கபட்டதால் காரைக்குடி பக்கம் இடம் மாறினார்கள் என்று எங்கோ படித்தேன்.

தனுஷ்கோடி அனுபவங்கள் காரணமாக தான் இவர்கள் வீடுகள் மிக உயரமாக கட்டபட்டதாம்...

காசி (வாரணாசி)யில் இவர்களால் நடத்தபடும் கோவிலே காசி விசாலாட்சி அம்மன் திருக்கோவில்.

காசியில் இவர்கள் நடத்தும் மடத்தில் 24 மணி நேரமும் அணையாத அடுப்பு என் நேரமும் வரும் பக்தர்களுக்கு அருசுவையான உணவு..கூடவே கனிவான கவனிப்பு.

பணம் சம்பாதிப்பது பெரிதல்ல அந்த பணத்தை இப்படி தொண்டு புரிய பரந்த மனப்பான்மை வேண்டும்.

மாயவரத்தான் said...

//சென்ற ஆண்டு சிக்கன் குனியா வந்து பலர் பாதிக்கப்பட்டது போல் எதாவது நடந்துடும்//

அடப்பாவிகளா.. பேர்டு ப்ளூவிற்கும், சிக்கன்குன்யாவிற்கும் வித்தியாசம் தெரியாதா? சிக்கன்குன்யாவிற்கும் சிக்கனுக்கும் உள்ள தொடர்பு மைசூர் போண்டாவிற்க்கும் மைசூருக்கும் உள்ள தொடர்பு போலக் கூட கிடையாது.

பின் குறிப்பு : இங்கே 'போண்டா' என்பது தற்செயலான உதாரணம் தான்.

வாசகன் said...

இதில் குறிப்பிடப்படாத ஒரு செய்தி:

செட்டியார்கள் அனைவரும் முதலில்(சிலப்பதிகாரக் காலத்தில்)தனவணிகர் என்றே அழைக்கப் பட்டனர்.

இவர்களே புதிய அரசனின் சிரசில் மணிமுடியைச் சூடும் தனிமதிப்பைக் கொண்டிருந்தனர்.

கோவலனும் கண்ணகியும் தனவணிக மரபைச் சேர்ந்தவர்களே.

பட்டினத்தடிகள் தனவணிகர் மரபில் வந்தவர்.

ஞானசம்பந்தர் உயிரோடு எழுப்பித்த பூம்பாவை தனவணிகர் மரபைச் சேர்ந்தவரே.

காவிரிப்பூம்பட்டனத்தில்(சிலப்பதிகாரக் காலம்) இருந்த தனவணிகர் மரபின் மீது பெருமதிப்புக் கொண்ட பாண்டிய மன்னர்கள் தங்கள் அரசில் உயர்ந்த பண்புள்ள குடிமக்கள் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தனவணிகர்களை தென்னாட்டிற்கு வரவேற்றுக் குடியமர்த்தினர்.

காலப்போக்கில் வணிகர் மரபில் பெண்கள் குறைந்த போது வெள்ளாளர்களில் பெண் எடுத்தனர்.

மேற்சொன்ன அரிவை நகரத்தார் மற்றும் நாட்டுக் கோட்டை நகர்த்தார் பிரிவு அந்த காலகட்டத்தில்தான் ஏற்பட்டது;காரணம் அவர்கள் குடியேறிய பகுதிகள்.

அரிவை பிரிவினர் மதுரைக்கு அருகிலிருந்த அருவியூர் என்ற ஊரில் குடியேறியதால் அருவியூர் நகரத்தார் என்றழைக்கப்பட்டனர்.(பின்னாளில் ஏதோ காரணம் பற்றி இந்த அருவியூர்ப்பட்டனம் முழுக்க எரியூட்டப் பட்டதாக சில தகவல்கள் சொல்கின்றன,அருவியூர் நகரத்தார் பிரான்மலை மற்றும் அதைச் சேரந்த பகுதிகளில் குடியேறினர்.)

நாட்டுக் கோட்டை நகரத்தார் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த கோட்டை அமைந்த 7 ஊர்களில் குடியேறினர்.

தொடக்கத்தில் கடல் கடந்து செல்லக் கூடாது;அசைவம் உண்ணக் கூடாது என்ற இரு கொள்கைகளைக் கடைப் பிடித்த நகரத்தார்களில் கோட்டைப் பகுதியில் குடியேறியவர்கள் இந்த இரண்டையும் மீறியதால் அரிவையூர் மற்றும் நாட்டுக் கோட்டை நகரத்தார் பிரிவு நிரந்தனமானது.

இந்த பிரிவினர்களில் இருந்து வெள்ளாளர்களுடனான தொடர்பை புதிப்பித்துக் கொண்டே வந்த சமுகங்களிலிருந்தே பின்னர் தோன்றிய பல செட்டியார் குலங்கள்-தெலுங்கு,தேவாங்க,கார்காத்த,24 மனை போன்ற பல- வந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

Anonymous said...

நாட்டுக்கோட்டையார் பற்றிய பதிவு நல்லது.

திராவிட இனக்கலாச்சாரத்தை நானும் ஆதரிக்கிறேன்.ஆனால் இக்கலாச்சாரத்தில் ஆபிராகிமிய மதங்களுக்கு வேலை என்ன?அது திராவிடமா?

Anonymous said...

///சீக்கு இல்லாதா சிக்கனாக இருக்கனும், இல்லாவிடில் சென்ற ஆண்டு சிக்கன் குனியா வந்து பலர் பாதிக்கப்பட்டது போல் எதாவது நடந்துடும்.
///

அட முண்ட கலப்பையே ?

சிக்கனுக்கும் சிக்கன் குன்ன்னியாவுக்கும் என்னடா சம்பந்தம் ங்கொன்னியா ?

Anonymous said...

அட இந்த மடப்பய மருமவன் இப்படீ எதையாவது உளறுவதே தொழிலாக உள்ளான். சிக்கன் குனியாவுக்கும் சிக்கனுக்கும் என்ன தொடர்பு ?

கோவி.கண்ணன் said...

மிஸ்டர் டோண்டு,

முன்பெல்லாம் உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் போடுபவர்களை உங்கள் நண்பர் போலி டோண்டு தான் திட்டுவான்,

இப்போதெல்லாம் அதை உங்கள் அல்லக்கைகள் உங்கள் வலைப்பக்கத்திலேயே செய்துவிடுகிறார்கள்.

மட்டுறுத்தல் உங்களை வசைபவர்களுக்கு மட்டும் தானோ ?

இங்கே வந்தது என் தவறாகவே எடுத்துக்கொள்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

@கோவி கண்ணன்:
உங்கள் பின்னூட்டத்தில் முதல் பாரா ஓக்கே. இரண்டாவது பாராவில் செட்டியார்கள் சிக்கன் சாப்பிடுவதை குறிப்பிடும் நோக்கம் என்ன? அதை நீங்கள் மட்டம் தட்டும் நோக்கத்திலேயே கூறியுள்ளதாக சிலர் கருதியுள்ளார்கள். அப்படியே அதை கூறவும் செய்தார்கள்.

அதற்கு பதிலாக நீங்கள் கூறியது:
//யார் சொன்னது, சிக்கன் சாப்பிடுவது தப்பு இல்லை. நன்றாக வேகவைத்த சிக்கனை சாப்பிடலாம், சீக்கு இல்லாதா சிக்கனாக இருக்கனும், இல்லாவிடில் சென்ற ஆண்டு சிக்கன் குனியா வந்து பலர் பாதிக்கப்பட்டது போல் எதாவது நடந்துடும்.
யார் வேண்டுமானாலும் சிக்கன் சாப்பிடலாம். மாட்டுக்கறி, பன்றி இறைச்சி கூட சாப்பிடலாம்.//
சிக்கன் சாப்பிடுவதால் சிக்கன் குனியா வந்து விடுமா என்ற கேள்விக்கு உங்கள் பின்னூட்டம் இடம் தந்தது. அதுவே சர்ச்சைக்கும் இடமாகியது.

இதில் நானென்ன செய்ய? உங்கள் முதல் பின்னூட்டத்துக்கு நேரடியாக பதில் அளித்து விட்டு நான் விட்டு விட்டேன்.

மற்றப்படி அல்லக்கைகள் சம்பந்தமாக.
/////ஆம், நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று சொல்லப்படும் செட்டியார்கள் பூணூல் அணிபவர்கள்.///

சோழியன் குடுமி சும்மா ஆடுமா ?
கோவி. நல்ல கிவ்வண்ட் டேக் பாலிஸி.
பெருமதிப்புக்குரிய பார்ப்பன சமூகம் பற்றி நாளை கேள்வி கேட்டுடறேன்.// என்று பின்னூட்டமிட்ட புரளி மனோஹர் என்பவரை உங்கள் அல்லக்கை என நான் சொல்ல இயலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இந்த கோவி கண்ணனோட படா தமாஷாகீதுப்பா. போலி யாரோட நண்பன் என்பதை தேக்கா மார்க்கெட்டில் போய்க் கேட்டால் கூட எல்லாரும் சொல்லுவார்கள். அதை விடுவோம். மட்டுறுத்தல் குறித்தெல்லாம் கோவி பேசுவது பாகிஸ்தான்காரனும் நம்மூரில் உள்ள அவனது அல்லக்கைகளும் தீவிரவாத எதிரிப்பு பேசுவதை விட கேணத்தனமானது.

Anonymous said...

ஹலால் உணவு என்றால் என்ன? துலுக்கன் மற்றொரு துலுக்கன் கடை உணவை மட்டும் உன்பது என்பது அப்பட்டமான தீண்டாமை தானே? அதை ஏன் சுட்டிக்காட்ட ஒரு பயலுக்கும் தில் இல்லை?

Anonymous said...

நாட்டில் ஆயிரத்தெட்டு குண்டு வெடிப்புகள், வன்முறைகள் எல்லாவற்றிலும் துலுக்கத் தீவிரவாதிகள் குற்றம்சாட்ட பொழுதெல்லாம் 'பொத்திக் கொண்டு' உட்கார்ந்த துலுக்கப் பதிவர்கள், மாலேகான் விசாரணையில் முடிவுகள் வரும் முன்னரே அதை மட்டும் பிடித்துக் கொண்டு 'ஆடிக்' கொண்டிருப்பதன் காரணம் என்ன?

Anonymous said...

'சாம்பார்' என்று ஜெமினி கணேசன் அழைக்கப்பட்டதன் காரணம் ஏன்? கருவாடு, பிரியாணி என்று ஏன் மற்ற நடிகர்களை யாரும் அழைக்கவில்லை?

dondu(#11168674346665545885) said...

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பட்டப் பெயர். உதாரணத்துக்கு ஜெயசங்கர் அவர்கள் கண்கள் சிறியதாக இருப்பதால் அவரை அன்புடன் கொசுக்கண்ணன் என அழைத்தோம். எம்ஜிஆருக்கு தொப்பி என்ற பெயரும் சிவாஜிக்கு அவர் ஆதரவாளர்களால் சிம்மக்குரலோன் என்றும் அவரது எதிர்ப்பாளர்களால் கழுதைக் குரலோன் என்ற பெயரும் அளிக்கப்பட்டன.

ஜெமினிக்கு சாம்பார் என்ற பெயர் வந்ததற்கு: கைராசி என்னும் படத்தில் அவர் டாக்டராகவும் சரோஜாதேவி நர்ஸாகவும் நடித்தனர். அதில் ஒரு காட்சியில் ஜெமினி சரோஜாதேவின் டிபன் காரியரிலிருந்து ஒவ்வொரு தட்டாக எடுத்து ஒரு தட்டைப் பார்த்து “சாம்பாரு” என்று திருப்தியுடன் கூவ அதுவே அவர் பெயராகவும் நிலைத்து விட்டதாக ஒரு கோஷ்டி சொல்லிக் கொண்டு திரிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சன் டி.வி.யும், கருணாநிதி டி.வி.யும் ஒன்றாகியாச்சு. நாட்டின் தலையாய பிரச்னை தீர்ந்து விட்டதல்லவா? (நியாயம் கிடைக்கும் வரை உங்களுடன் இருப்பேன் விடமாட்டேன் என்று கலாநிதி மாறன் அடித்த டயலாக் என்னவாயிற்று?)

Anonymous said...

தினகரனில் மீண்டும் தமிழக அரசின் முழுப்பக்க விளம்பரங்கள் வர ஆரம்பித்துவிட்டதே பார்த்தீர்களா? (இன்றைக்கு கூட கருணாநிதி விளக்க விளம்பரம்)

dondu(#11168674346665545885) said...

//ஹலால் உணவு என்றால் என்ன? துலுக்கன் மற்றொரு துலுக்கன் கடை உணவை மட்டும் உன்பது என்பது அப்பட்டமான தீண்டாமை தானே?//
கண்டிப்பாக இல்லை. கூர்ந்து பார்த்தால் ஹலால் உணவு விதிமுறைகள் உடல் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது. யூதர்கள் பாவிக்கும் கோஷர் என்ற முறைக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் உண்டு.

நம்மவர்களும் ஆச்சாரம் என உணவு வகைகளை வகைபடுத்தி வைப்பதிலும் ஆரோக்கிய அடிப்படை உண்டு. அதை நாம் பழிக்கலாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

உங்களுக்கு எப்போவாவது கண்கள் பனித்து, இதயம் இனித்திருக்கிறதா?

Anonymous said...

ஹலால் விளக்கம் ஓ.கே. அப்படியெனில் அப்புறம் என்ன மயித்துக்கு எல்லாவற்றிலும் பிராமணர்களை மட்டும் குற்றம் சாட்டுகிறார்கள்? அவரவர் பழக்கம் அப்படிதான் என்று பொத்திக் கொண்டு போக வேண்டியது தானே? கேட்டால் கோழியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை வெளியேற்றுவதன் பெயர் தான் ஹலாலாம். அதை ஒரு முஸ்லீம் செய்தால் ஒத்துக் கொள்ள மாட்டார்களாம். முதல் விளக்கம் ஓ.கே. அது என்ன அதை முஸ்லீம் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பது? அதுவும் உலக அளவில் பொருட்களில் ஹலால் சிம்பல் பிரிண்ட் செய்ய வேண்டும் என்பது உலகளாவிய தீண்டாமை இல்லையா?

dondu(#11168674346665545885) said...

//அதை ஒரு முஸ்லீம் செய்தால் ஒத்துக் கொள்ள மாட்டார்களாம்//.
அதை ஒரு முஸ்லீம் அல்லாதவர் செய்தால் ஒத்துக் கொள்ள மாட்டார்களாம் என்று கூற எண்ணினீர்கள் என நினைக்கிறேன்.

//அதுவும் உலக அளவில் பொருட்களில் ஹலால் சிம்பல் பிரிண்ட் செய்ய வேண்டும்//
அது அந்தந்த மதத்தினரின் நம்பிக்கையை பொருத்தது. யூதர்களுக்கு அந்த கோஷர் சிம்பல் கட்டுப்பாடு உண்டு.
பிராமணர்களிலும் பத்ரி முதலிய இடங்களுக்கு டூருக்கு அழைத்து செல்பவர்கள் “நல்ல ஆச்சார பிராம்மணர்கள் செய்யும் சமையலை” குறிப்பிடுவார்கள். எல்லாம் மனதுதான் காரணம். இதையெல்லாம் குறை கூற இயலாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//சோழியன் குடுமி சும்மா ஆடுமா ?
கோவி. நல்ல கிவ்வண்ட் டேக் பாலிஸி.
பெருமதிப்புக்குரிய பார்ப்பன சமூகம் பற்றி நாளை கேள்வி கேட்டுடறேன்.// என்று பின்னூட்டமிட்ட புரளி மனோஹர் என்பவரை உங்கள் அல்லக்கை என நான் சொல்ல இயலுமா//
well said dondu sir.

The same gentle man is always giving comments in others blogs hurting the others feelings and sentiments.( God faith)
dondu sir please give fitting reply to all ,as you gave given to this guy.
Some are giving provoking comments off late with ill intension.

Anonymous said...

//ஜெமினிக்கு சாம்பார் என்ற பெயர் வந்ததற்கு: //

இதைப் ப‌ற்றிய‌ இன்னொரு ச‌ம்ப‌வ‌த்தை முன்ன‌ர் ப‌டித்திருக்கிறேன். ஒரு முறை ஜெமினி ஏதோ ஒரு ர‌யில் நிலைய‌த்தில் வ‌ந்த்திற‌ங்கிய‌போது, அங்கிருந்த கூட்ட‌த்தில் ஒருவ‌ர் 'அதோ பார்ரா சாம்பார்' என‌ க‌த்த‌, ஜெமினிக்கு ச‌ட்டென்று கோவ‌ம் வ‌ந்து 'ஆமான்டா நான் சாம்பார்தான்.. நீ என்ன‌ பீயா திங்குற?" என‌ திருப்பிக்க‌த்தினாராம்.

தொம்ப‌ன்

Anonymous said...

////ஜெமினிக்கு சாம்பார் என்ற பெயர் வந்ததற்கு: //

ஆனால் அந்த சம்பாரின் மன்மத பானத்தில் விழுந்தவர் எத்தனையோ பேர் என்பார்கள்.அவருக்கு காதல் மன்னன் என்றும் அவரது வாரிசு(சுக்கிர பார்வையில்)கமலுக்கு காதல் இளவரசன் என்றும் பட்டப் பெயர் உண்டே!

ஜெமினி நடித்த படங்களிலே கே.பாலச்சந்திரரின் "நான் அவனில்லை" படம் பார்த்திருக்கிறீர்களா?( ரீமேக் கூட வந்தது)

அதை பார்த்த பிறகும் சாம்பார் அவரா?

மன்மத ரசமா?

Anonymous said...

//
ஜெமினி நடித்த படங்களிலே கே.பாலச்சந்திரரின் "நான் அவனில்லை" படம் பார்த்திருக்கிறீர்களா?( ரீமேக் கூட வந்தது)

அதை பார்த்த பிறகும் சாம்பார் அவரா?

மன்மத ரசமா?
//

என்ன தான் இருந்தாலும் ஜெமினி ஒரு தயிர் சாதம் தானே ? அது தான் தலையில் தூக்கிவச்சு ஆடறீங்க.

Anonymous said...

//ஜீப்பர்ஸ் கிரீப்பர் said...
//
ஜெமினி நடித்த படங்களிலே கே.பாலச்சந்திரரின் "நான் அவனில்லை" படம் பார்த்திருக்கிறீர்களா?( ரீமேக் கூட வந்தது)

அதை பார்த்த பிறகும் சாம்பார் அவரா?

மன்மத ரசமா?
//

என்ன தான் இருந்தாலும் ஜெமினி ஒரு தயிர் சாதம் தானே ? அது தான் தலையில் தூக்கிவச்சு ஆடறீங்க.//

திறமையைப் பாருங்க ஜீப்பர்ஸ் கிரீப்பர் சார்
இதிலேயுமா? வேண்டாமே!

passerby said...

பர்மாவில் மட்டும் சுமார் ஆயிரம் குடுமபத்தினர் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு வந்தனர்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிறுவனர் திரு.பெத்தாட்சி செட்டியார் குடும்பத்திற்கு மட்டும் 40 ஆயிரம் ஏக்கர்
விளை நிலம் பறிபோனது. என் தந்தையாருக்கு (எங்கள் குடும்பத்திற்கு) 2,500 ஏக்கர் நிலம் பறிபோனது.
1956ஆம் ஆண்டில் அப்போதைய பாரதப் பிரதமர். திரு. ஜவஹர்லால நேரு அவர்களை வைத்துப் பஞ்சாயத்து பேசி ஒன்றும் பெயரவில்லை. நீவின் அரசு சல்லிக் காசு கூட தரமறுத்துவிட்டது. அதெல்லாம் ஏடுகளில் உள்ளது

வைநாகரம் செட்டியார் என்பவர் 1900 ஆண்டு (ஆண்டைக் கவனிக்கவும்) தனி ஒரு மனிதனாக நின்று அப்போது சிதிலமடைந்திருந்த மீன்னாட்சி அம்மன் கோவிலைப் புதிப்பித்தார். அன்று அவர் கையில் இருந்து செலவு செய்த
பணம் சுமார் 40 லட்ச ரூபாய்.( அன்று பவுன் விலை பதின்மூன்று ரூபாய்) இன்றைய மதிப்பில் அது 400 கோடிக்குச் சமம்.

இப்படி எழுதிக்கொண்டே போகலாம். பின்னூட்டம் நீண்டு விடும் ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்
அன்புடன்
சுப்பையா

December 04, 2008 9:46 AM

Wherever they go, they exploit the locals. This is what I understand from the above post.

It is correct that they were exiled by the Burmese. Burmese recovered their country and land from these chettiyaars.

God bless burmese!

passerby said...

Dondu Raagahvan!

Your post on sambaar and Jemini Ganesan.

It is a very important post. Because, like me, so many others are thinking that Jemini's caste (Iyer) is getting mocked at racially in addressing him sambaar.

Your post clarifies that it has nothing to do with caste.

dondu(#11168674346665545885) said...

//Wherever they go, they exploit the locals. This is what I understand from the above post//.
மன்னிக்கவும். ஆறு மொழிகள் அறிந்த என்னாலேயே நீங்கள் சொல்வது போன்ற பொருளை சுப்பையா அவரது பின்னூட்டத்திலிருந்து ஊகிக்க முடியவில்லை. செட்டியார்களது நிலங்கள் என்ன தானாகவேவா அவர்களுக்கு கிடைத்தன? அத்தனையும் உழைப்பு சுவாமி, உழைப்பு.
//It is correct that they were exiled by the Burmese. Burmese recovered their country and land from these chettiyaars. God bless burmese!//
எவ்வளவு வன்மமான கருத்து? பாடுபட்டு தேடிவைத்ததை ஒரு கேடு கெட்ட அரசு கைப்பற்றி, பிறகு அதனால் துரத்தப்பட்ட அனுபவம் உங்களுக்குண்டா? அவ்வாறிருந்தால் இந்த சொற்கள் வராது. இப்போது பர்மாவின் நிலையை அறிவீர்களா? சீந்துவாரற்று கிடக்கின்றனர் பர்மியர்கள்.

இப்படித்தான் உகாண்டாவில் இடிஅமீன் என்னும் கொடியவனால் துரத்தப்பட்ட இந்தியர்கள் அங்கிருந்து அகன்றதும் உகாண்டா திவாலாக, அவனை தூக்கி எறிந்ததும் அதே உகாண்டா அரசு தன்னால் துரத்தப்பட்ட வியாபாரிகளை திரும்பவும் உகாண்டாவுக்கு வருமாறு காலில் விழாத குறையாக கெஞ்சியது என்னும் சரித்திர உண்மையை மறந்து பேசுகிறீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

passerby said...

Arun Kumar said:

காசியில் இவர்கள் நடத்தும் மடத்தில் 24 மணி நேரமும் அணையாத அடுப்பு என் நேரமும் வரும் பக்தர்களுக்கு அருசுவையான உணவு..கூடவே கனிவான கவனிப்பு

//

இது வெறும் கட்டுக்கதை.

காசியில் இவர்களுக்கு ஒரு மடம் ஒன்று உள்ளது. மிகப் பழங்காலத்திலிருந்து இருக்கிறது. ஆனால், அது இவர்கள் ஜாதியனருக்கு மட்டுமே.

நான் நேரில் கண்டது.

நானும் என் இரு சின்ன குழந்தைகள், என் மனைவி காசிக்கு சென்றடைந்த நேரம் இரவு 7 மணி. குளிர்காலம். ரிக்ஷாக்காரன், நாங்கள் தமிழர்கள் என்று அறிந்தவுடன், தானாகவே முன்வந்து, 'உங்களுக்குத் தெரியுமா...இங்கே நாட்டுக்கோட்டை செட்டியார் மடம் உண்டு. அங்கு உங்களை கூட்டிசெல்கிறேன். உங்கள் சாப்பாடு கிடைக்கும். தங்கும் வசதி மலிவாக கிடைக்கும்' என்று இந்தியில் சொன்னான். எங்களுக்கு இந்தி நன்றாகத் தெரியும்.

சரி செல்வோம். என்று அங்கு போனோம்.

அவர்கள் கேட்டது: 'நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?'

சொன்னோம். எங்கள் ஜாதி வேறாதனால், அந்த கண்காணிப்பாளர்,

'மன்னித்துக்கொள்ளுங்கள்..உங்களுக்கு இங்கு இடம் இல்லை. இது நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு மட்டுமே' என்றார்.

உள்ளே பல அறைகள் காலியாகத்தான் இருந்தன. வயாதான செட்டியார் ஜாதி யாத்ரீகர்கள் பாடிக்கொண்டும், பூஜை நடத்திக்கொண்டும் இருந்தார்கள்.

பின்னர், அவர் பக்கத்தில் இருந்தவர் சொன்னர்: 'இவர்கள் தமிழர்கள். வெகுதூரத்திலிருந்து வருகிறார்கள். சின்னக்க் குழந்தைகள் வேறு இருக்கிறார்கள். கொடுத்தால் என்ன?'

கண்காணிப்பாளர் சொன்னார்: என் வேலை பறி போய்விடும்.

பின்னர் நாங்கள் வேறிடம் பார்த்தோம்.

இது பொய்யா உண்மையா என்பதை நீங்களே உங்கள் அநுபவத்திலிருந்து பார்த்துக்கொள்ளலாம்.

Anonymous said...

ஆமா இவரு இங்கே இருந்து காசிக்கு கைய வீசிகிட்டு போவாராம் ! அங்கே இவரை வரவேற்று உட்கார்த்தி வைக்கனுமாம். இவ்வளவு தூரம் பிரயாணத்துக்கு இவ்வளவு அலட்சியமா போன (நிஜமா போயிருந்தா ) அல்லாட வேண்டியது தான். தீவிரவாதமும் வெடிகுண்டுகளும் பெருத்து விட்ட இந்தக் காலத்தில் அந்த சமூகத்தைச் சேராதவர்கள் தங்க வேண்டுமெனில் அறிமுகக் கடிதம் அவசியம் என் அறிகிறேன். சரி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களே தங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள். இது போல எத்தனை சமுதாயம் பொதுவில் காரியங்கள் செய்கிறது ?
பூங்காவனம்

passerby said...

ஆமா இவரு இங்கே இருந்து காசிக்கு கைய வீசிகிட்டு போவாராம் ! அங்கே இவரை வரவேற்று உட்கார்த்தி வைக்கனுமாம். இவ்வளவு தூரம் பிரயாணத்துக்கு இவ்வளவு அலட்சியமா போன (நிஜமா போயிருந்தா ) அல்லாட வேண்டியது தான். தீவிரவாதமும் வெடிகுண்டுகளும் பெருத்து விட்ட இந்தக் காலத்தில் அந்த சமூகத்தைச் சேராதவர்கள் தங்க வேண்டுமெனில் அறிமுகக் கடிதம் அவசியம் என் அறிகிறேன். சரி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களே தங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள். இது போல எத்தனை சமுதாயம் பொதுவில் காரியங்கள் செய்கிறது ?
பூங்காவனம்

I did not go alone. I was with my family members that included two small children. It was december night. A cold season.

It was not now. A long time ago, when there was no such things as terrorism and need for security. Varanaasi at the time was a heaven of pure bliss and freedom.

If your contention is good, then, they should have screened every person. They didnt.

All that they worry about was caste. Not security.

Even with recommendatory letter, only their caste people are welcome there. None else.

Perhaps the chettiars wanted to go to kailaasam with their caste certificates intact.

Your response is a justification of caste. In a far away land, a Tamilian will not say no to a Tamilian with two little children.

The feeling that we are Tamils is totally eclipsed by the feeling that we are chettiaars.

You are correct that many castes run such madams only for their caste people. This justification is the only one that can help your casteism here.I accept it.

With warm regards

passerby said...

செட்டியார்களது நிலங்கள் என்ன தானாகவேவா அவர்களுக்கு கிடைத்தன? அத்தனையும் உழைப்பு சுவாமி, உழைப்பு.

பாடுபட்டு தேடிவைத்ததை ஒரு கேடு கெட்ட அரசு கைப்பற்றி, பிறகு அதனால் துரத்தப்பட்ட அனுபவம் உங்களுக்குண்டா? அவ்வாறிருந்தால் இந்த சொற்கள் வராது. இப்போது பர்மாவின் நிலையை அறிவீர்களா? சீந்துவாரற்று கிடக்கின்றனர் பர்மியர்கள்.

இப்படித்தான் உகாண்டாவில் இடிஅமீன் என்னும் கொடியவனால் துரத்தப்பட்ட இந்தியர்கள் அங்கிருந்து அகன்றதும் உகாண்டா திவாலாக, அவனை தூக்கி எறிந்ததும் அதே உகாண்டா அரசு தன்னால் துரத்தப்பட்ட வியாபாரிகளை திரும்பவும் உகாண்டாவுக்கு வருமாறு காலில் விழாத குறையாக கெஞ்சியது என்னும் சரித்திர உண்மையை மறந்து பேசுகிறீர்கள்.


Mr Raaghavan!

Thanks for your response.

But you have seen the issue from the standpoint of a Tamilian, which you are, on whom lies the onus of defending a fellow Tamilians, like chettiars here.

Suppose you are a Burmese. You will definitely view this from the standpoint of a Burmese only. Wont you?

I am also a Tamilian. But I wont take a unilateral view on the side of any one party here. My conscience wont allow it.


For me, any issue that involves two parties, for e.g - one a fellow Tamil and the other, a non-Tamil - the stand to be taken shouldn’t depend upon the ethnicity of the parties; but on the rightness or wrongness of their actions.

I am, of course, with you when you said Chettiaars earned their wealth in Burma by the sweat of their brow (hard work). But they are merchants wherever they go. You know all about commerce. Profit is the motive of any merchant, not humanity. If a merchant cares for humanity in commerce, he will soon become broke.

However, let me leave that point out now, for discussion.

Burma is a land of Burmese. It is their ancient and, just Tamilnaadu for Tamils from time immemorial. It is thousands of miles away from TN. It was ruled by the British and as such, no visa and no other travel permit that time. The chettiars used that opportunity.

Why should they go there at all? Why not they make their own land prosper with their business acumen?

You will cite Tamilian kolkaikaL

திரைகடலோடியும் திரவியம் தேடு. யாதும் ஊரே யாவரும் கேளிர்

A Burmese will ask you:

உங்கள் கொள்கைகளை செயலில் காட்ட எங்கள் நாடா கிடைத்தது?

What right does a group of foreigners (Tamilians) speaking a foreign language (Tamil) with foreign customs and manners, have, to come to our land and prosper themselves?

A legitimate question, isnt it?

They have a valid point. The validity will be clear to us if we juxtapose it to similar issue in Assam.

The Bodos in Assam is an ancient tribe inhabiting the hills from when no body knows. They have now formed a deadly guerrila force to oust Bangladeshi Muslims who have occupied their land. Indian government did not take steps to clean their land of the foreigners. Hence, deadly actions.

Didnt we fight: Quit India, you the English?

Similar is the case of Uganda. The blacks have the right to reclaim their lands from Gujarati patels.

Same rules appied to Burma, rather, should apply anywhere.

You can say, they, now have fallen on bad days after the Chettiars have left. It is due to the military junta there. A movement for democracy is on. One day, it will win.

What the government may be, whatever the pathetic conditions theirs may be, the good point is that they have reclaimed their own land.

கூழாலானாலும் தன் சொந்த இல்லத்தில் குடிக்கவேண்டும்.

எலி வலையானாலும் தன் வலை வேண்டும்.

Anonymous said...

Dear Mr. Ragavan

i sent one reply comment for Mr. Karikulam's view, a couple of days back. But you are not release that. Kindly release the same, in that i answerered all the questions asking now by Mr. Karikulam.
Regds
Naga

Anonymous said...

கருணாநிதி - தெலுங்கு
ராமதாஸ் - தெலுங்கு

இரண்டுப் பேரும் மனப்பூர்வமாக தமிழை வெறுக்கின்றனர். இந்தி பேசுவோர்க்கு இடம் கொடுக்கும் தமிழக இடஒதுக்கீடு முறையை ஆதரிக்கின்றனர் நமது தமிழ்நாட்டு தெலுங்கு அரசியல்வாதிகள்.

Anonymous said...

நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பூணூல் அணிவதில்லை. ஒருகாலத்தில் சுத்த சைவமாக இருந்தவர்கள் இன்று செட்டிநாடு சிக்கன் என்று வெளுத்து வாங்குகிறார்கள். இருப்பினும் தமிழுக்கும் ஆன்மிகத்திற்கும் அள்ளிக்கொடுக்கிறார்கள்.
ந.மோகனசுந்தரம்.வேந்தன்பட்டி

veeran said...

"ஒருகாலத்தில் வணிக குல ஆண்களுக்கு பெண்கள் கிடைக்காத சூழலில் அவர்கள் வெள்ளாள(வேளார்) குலப் பெண்களை திருமணம் செய்துகொண்டனர்."-idhu oru muttaalthanamaana karutthu. unmai ennavendraal kuzhanthayae pirakkaatha velinaattil vanikam seythavarkal vaendip petra kulap penkalae velaar ina penkalaagum. Afterwards due to their ego, they refused to mix with velaar community.All these bullshit caste feelings are based on the money power only. If an ugly begger has sudden lottery money, every caste will run behind him to have him as a bridegroom..

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது