12/19/2008

டோண்டு பதில்கள் 19.12.2008

அனானி r (12.12.2008 காலை 07.33-க்கு கேட்டவர்)
1. கவுண்டமணி ஹோட்டலில் அமர்ந்து 200-ரூபாய் பெறுமான லன்ச் ஆர்டர் செய்தார். அவரது வேலையாள் செந்தில் அந்த பக்கம் வந்தார். “பாஸ் சாப்பாடு சாப்பிடவா வந்தீங்க”? என்று கேட்க, “ஏண்டா கோமுட்டித் தலையா, பின்னே ஹோட்டலுக்கு பாட்டு கேக்கவா வருவான்”? என்று கவுண்டமணி எகிறினார். பிறகு செந்தில் சுதாரித்து கொண்டு, சாப்பாட்டுத் தட்டை ஒரு பாத்திரத்தை கவிழ்த்து மூடினார். "பாஸ் 20 ரூபா பெட்டு வைக்கிறேன். உங்களோட இந்த சாப்பாட்டை பாத்திரம், மேஜை, அது இருக்கும் தட்டு ஆகிய எதையும் தொடாமல் சாப்பிடுவேன். யார் உதவியும் எனக்கு இதற்காக தேவையில்லை. என்ன சொல்லறீங்க”? என்று கேட்டார். "இந்த பெட்டை நான் ஏத்துக்கிறேன்” என கவுண்டமணி உடனடியாக கூறினார். பெட்டில் யார் ஜெயித்தது? எவ்வாறு?
பதில்: கவுண்டமணி மேலே பேசும் முன்னால் கோவை சரளா அங்கு ஓடிவந்து, அவர் காதில் ஏதோ கிசுகிசுக்கிறார். கவுண்டமணி உடனே செந்திலை பார்த்து, “டேய் கோமுட்டித் தலையா, ஓடிப்போயிடு. இல்லேன்னா உன் சங்கை கடிச்சு துப்பிடுவேன். நல்ல வேளையா சரளா எனக்கு ஞாபகப்படுத்தினா. இன்னும் அந்த வாழைப்பழ கணக்கு புரியாமல் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன். ஓடிப்பொயிடு” என்று கூறிவிட்டு சாப்பிட ஆரம்பிக்கிறார். ஓசி சாப்பாடு கிடைக்காத வருத்தத்தில் செந்தில் அங்கிருந்து செல்கிறார்.
“பெரிசுக்கு விடை தெரியல்லை, அதனாலே பம்முது” என்று கூறும் முரளி மனோஹரை அலட்சியம் செய்கிறேன்.


நக்கீரன் பாண்டியன்:
1. திருவாளர் சோ அவர்களின் நாடகக்குழு இப்போது போடும் நாடகங்களுக்கு மக்கள் ஆதரவு முன்பு மாதிரி இருக்கிறதா?
பதில்: சோ அவர்கள் இப்போதெல்லாம் நாடகம் போடுவதில்லை என்றுதான் நினைக்கிறேன். அவர் குழுவினரில் எல்லோருக்குமே வயதாகி விட்டது. அப்படியும் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முறை நாடகம் ஒரு பிரத்தியேக நிகழ்ச்சியில் போட்டதாக அறிந்தேன். நண்பர் டி.வி. ராதாகிருஷ்ணன் அவர்கள் அதை பற்றி இன்னும் துல்லியமாகக் கூற இயலும். அவர் சௌம்யா நாடகக் குழுவின் முக்கிய அங்கம்.

2. அவரது துக்ளக் விற்பனையில் ஒரு காலத்தில் சக்கை போடு போட்டதே, இப்போது சர்குலேசன் எப்படி?
பதில்: துக்ளக் சர்குலேஷன் 2005 ஜனவரியில் துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் அவர் தெரிவித்தபடி 75000.

3. துக்ளக் பத்திரிகையின் பேப்பர் தரம் பற்றிக் கூட சிலர் ரொம்ப அட்வெர்ஸாக கமெண்ட் அடித்தார்களே. விற்பனை, விமர்சகர்கள் சொல்வது போல் குறைவு இல்லை என்றால் பேப்பர் தரத்தைகூட்ட ஏது தடை?
பதில்: பேப்பர் ஏன் தரமில்லை என நான் யோசித்ததே இல்லை. உள்ளடக்கத்தின் உயர்ந்த தரம் என்னை அதையெல்லாம் யோசிக்க விட்டதில்லை. இது பற்றி நண்பர் லக்கிலுக் மேலதிகத் துல்லியத் தகவல் தருவார், ஊடக/விளம்பரத் துறையில் உள்ளவர் அல்லவா?

4. உங்களின் இந்த பதிவுகளை துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் படிப்பதுண்டா?
தன்னை பற்றி பதிவுகளில் வரும் விமர்சனங்களை பற்றி உங்களுடன் ஏதாவது சொல்வாரா?
பதில்: நான் சோ அவர்களை சமீபத்தில் 1970-லிருந்து நன்றாக அறிவேன். என்ன, அவருக்குத்தான் எப்போதுமே என்னைத் தெரியாது. :)))

5. அவர் ஏதாவது பதிவில் எழுதுகிறாரா?
பதில்: நான் அதுபற்றி கேள்விப்பட்டதில்லை. ஒருமுறை அவருடன் தொலைபேசினேன். அவருக்கு ஒரு தகவல் தெரிவிக்க அவரது மின்னஞ்சல் முகவரி கேட்ட போது அவர் கணினி வேலைகளையெல்லாம் மற்றவர்கள்தான் பார்த்து கொள்கிறார்கள் என்று கூறிவிட்டார்.

6. சமீபத்தில் அவரைச் சந்தித்து உண்டா?
பதில்: இல்லை, நேரில் சந்தித்து பேசவும் ஆசையில்லை. தூரத்திலிருந்தே அவர் செய்யும் மகத்தான காரியங்களை ரசித்து வருகிறேன்.

7. தொலைபேசி/கடித/மின்னஞ்சல் தொடர்பு உண்டா?
பதில்: கிடையாது

8. பொதுவாக நடுத்தரக் குடுப்பங்களில் 60 வயதை தாண்டியதும் ஞாபகக்குறைவு, செயல் பாட்டுக் குறைவு, உடல் நலக் குறைவு,முடிவெடுக்கும் ஆற்றல் குறையும் தன்மை சர்வ சாதாரணமாய் இருக்கும் போது அரசியல்வாதிகள்/பெரும் ஆலை அதிபர்கள் /மத குருக்கள், ஆன்மீகச் செம்மல்கள்/பத்திரிக்கை யாளர்கள்/வக்கீல்கள்/ஆடிட்டர்கள்/டாக்டர்கள்/விஞ்ஞானிகள்/பேராசிரியர்கள்/சினிமா,டீவி ,விளம்பரத்துறை போன்ற ஊடகங்களில் தலமைப் பொறுப்பாளர்கள்/பதிவுலக ஜாம்பவான்கள் ஆகியோரில் புகழ் பெற்ற பெரியவர்கள் 60,70 வயதை கடந்த பிறகும் தூள் கிளப்புகிறார்களே இது எப்படி சாத்யமாகிறது?
பதில்: அப்படியெல்லாம் பொதுப்படையாகக் கூற இயலாது. ஒன்று சொல்லலாம், நீங்கள் உதாரணம் காட்டிய நபர்கள் மேலே குறிப்பிட்ட குணநலன்கள் இல்லையென்றால் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. ஆனால் சாதாரண வாழ்க்கையில் அவை இல்லாமலும் வாழ்ந்துவிட்டு போக இயலும். ஆகவே உங்கள் கண்களில் அவர்கள் படுவதில்லை. பழைய சினிமா பாடல்கள் மாதிரி இல்லையென்று சொல்வார்கள். அப்பாடல்கள் காலத்தை மீறி புகழ் பெற்றவை. அவைதான் நினைவில் இருக்கும். அவற்றுடன் சம்பந்தப்பட்ட காலங்களில் இருந்த அடாசு பாடல்கள் எல்லாம் மறந்து போய் விட்டன. ஆனால் தற்காலப் பாடல்கள் எல்லாமே இப்போதைக்கு உள்ளன, அடாசு பாடல்களையும் சேர்த்து. இன்னும் பல ஆண்டுகள் கடந்த பிறகு இப்போதைய நல்ல பாடல்கள் அதே மாதிரி மனதில் நிற்கும். ஒரு வகையான டார்வின் கோட்பாடு என வைத்து கொள்ளலாமே. அதாவது வலிமையுள்ளதே வெற்றி பெறும், ஆகவே மனதிலும் நிற்கும்.

ஜியோவ்ராம் சுந்தர்:
1. நீங்கள் எழுதும் எல்லாப் பதிவுகளுமே மொக்கையாக இருந்தாலும் சில பதிவுகளுக்கு மட்டுமே 'மொக்கை' என ஏன் குறிச்சொல் இடுகிறீர்கள்?
பதில்: அதில் ஒரு சூட்சுமம் உண்டு. நான் மொக்கை என குறியீடு தரும் பதிவுகள் மொக்கை போட வேண்டும் என்ற எண்ணத்தில் சிரமப்பட்டு போடபட்டவை. ஆகவே அவற்றுக்கு அந்தக் குறியீடு. மற்றவை அனாயாசமாக மொக்கையாக வந்திருக்குமாக இருந்திருக்கும். ஆகவே அவற்றுக்கு அந்த அங்கீகாரம் தர இயலாது. நான் எப்போதும் முயற்சி செய்து சாதிப்பதையே விரும்புவேன்.


கிரிதரன்:
1. I saw your post on SuperStar Rajini's political stand. But Mr. Cho has solid belief in integrity and political power that our Thalaivar Superstar holds. Please comment.
பதில்: ரஜனி அரசியலுக்கு வருவார் என்று பெரிதாய் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த ஒரு விஷயத்தில் சோ அவர்கள் ரஜனி மேல் தேவைக்கதிமாக நம்பிக்கை வைத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது.

2) What is your personal stand on Superstar's ideas on political things? I assume that you had a chance to read his direct interviews to AaVi, Kumudham and so many media.
பதில்: ரஜனி நான் பார்த்தவரை நிதானமாகத்தான் உள்ளார். புத்திசாலியாக இருந்தால் மற்றவர்கள் கொம்பு சீவுவதை எல்லாம் இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.

3) You made a harsh comment about fans of Superstar in your last Q&A section. Yes, there are so many people willing to make money if he heads in to politics. But in his last meet with his fans he made this impossible because he clearly mentioned not to expect money from him for doing welfare. Also there are so many fans doing welfare and changed a lot.
பதில்: ரசிகர் மன்றம் என்பது டீஃபால்ட்டாக உபயோகமற்ற அமைப்பு என நான் நினைக்கிறேன்.

அனானி (13.12.2008 இரவு 09.12-க்கு கேட்டவர்):
1. பிரபாகரன் வழமை போல இந்த வருட மாவீரர் தின பேச்சில் இந்தியாவோடு உறவுகளை புதுப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாரே? பிரபாகரன் ஏன் இதை போல வருடா வருடம் இந்தியாவிடம் கெஞ்சுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்?
பதில்: அவர் கெஞ்சுகிறார் என்றெல்லாம் உங்களால் சொந்தப் பெயர் அடையாளத்துடன் வந்து கூற இயலுமா?

2. பிரபாகரன் பிள்ளைகள் ஏன் தற்கொலை குண்டுதாரிகளாக போகவில்லை?
பதில்: பிரபாகரனைத்தான் கேட்க வேண்டும்.

3. ஈழ தமிழ் மக்களின் மீது 50 வருட பொருளாதார தடை என்பது உண்மையா?
பதில்: ஈழம் இப்போது யுத்த சூழ்நிலையில் உள்ளது. யுத்த சமயத்தில் பொருளாதார முன்னேற்றம் எங்கிருந்து வரும்?

4. இந்த ஈழ போரால் பல ஈழ தமிழர்களின் ஐரோப்பா கனவுகள் பலித்தது என்பது உண்மையா?
பதில்: இல்லை நான் அப்படி நினைக்கவில்லை. புலிகள் தலைமை என்பது அவர்கள் செய்த துரதிர்ஷ்டம். உயிர் தப்பித்து ஓடும்போது கிடைக்கும் தேசங்களுக்குத்தான் செல்வார்கள். துயரநிலையில் இருக்கும் அவர்கள் ஐரோப்பிய கனவு எல்லாம் காண்கிறார்கள் எனக் கூறுவது தவிர்ப்பது நலம்.

5. சொகுசாக புலத்தில் இருந்து கொண்டு கற்பழிப்பு கொலை என்று பேசுபவர்கள் மன நிலை எப்படி இருக்கும்?
பதில்: அவ்வாறான கற்பழிப்பு மற்றும் கொலைகளில் தானோ தன்னவர்களோ பாதிக்கப்படாதவரை அமைதியாகவே இருக்கும்.

6. கண்முண்ணே நடந்த கற்பழிப்புகளை தடுக்க முடியாமல் புலத்துக்கு ஓடி வந்து சொகுசு வாழ்க்கையில் இதை எல்லாம் புறம் பேசுவது சரியா?
பதில்: அந்த கஷ்டமே படாத நாமெல்லாம் அதை பழித்துப் பேசுவதும் நியாயமே இல்லைதானே. நிஜமாகவே கஷ்டப்பட்ட அந்த இருவரைப் பார்த்ததும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை என்பதுதானே நிஜம்.

7. தமிழ் ஈழம் என்பது சாத்தியமா?
பதில்: தமிழ் ஈழம் வரும் என்பது இப்போதைக்கு கஷ்டமான குறிக்கோளாகத்தான் படுகிறது.

8. பிரபாகரனுக்கு பின்னர் ஈழ போராட்டம் ஓய்ந்து விடுமா?
பதில்: நிலைமை குழப்ப நிலையில் உள்ளது. ஒன்றும் கூற இயலாது.

9. யாழ்ப்பாண மக்கள் பூ நகரி வழியாக தரைபாதை திறக்கபட்டபோது மூன்று சக்கர ஓட்டுநர்கள் வரவேற்று ஊர்வலம் நடாத்தியது ஈழ போராட்டம் தொய்வு அடைந்து விட்டது என்று ஏற்று கொள்ளலாமா?
பதில்: இந்த நிகழ்ச்சி பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஆகவே கருத்து தெரிவிப்பதற்கில்லை.

10. தமிழ் நாட்டு மக்களுக்கு இது வரை நெடுமாறன் செய்த நல்காரியங்கள் ஏதாவது உண்டா?
பதில்: படகில் ஏறிப்போனார். ஆனால் திரும்பி வந்துவிட்டார் என சிலர் அங்கலாய்ப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் கூறுகின்றன.


ஜூனியர் முரளி மனோஹர் (பதிலளிப்பது முரளி மனோஹர்):
1. காமகதைகள் எழுதுவர்கள் தங்களின் கதைகளை தம் குடும்ப உறுப்பினர்களுக்கு படிக்க கொடுப்பார்களா?
பதில்: எனக்கு எப்படித் தெரியும்? நான் வெறுமனே காமக்கதைகள் படிப்பவன் மட்டுமே. இது பற்றி பெரிசு இப்பதிவில் எழுதியுள்ளது. நான் படிப்பது குடும்பத்தினருக்கு தெரியாமல்தான்.

2. மாற்று எழுத்துக்கள் என்றால் என்ன?
பதில்: பின் நவீனத்துவ எழுத்துக்களைத்தான் குறிக்கிறாங்க போல.

3. ஏன் உங்கள் பதிவுக்கு தமிழ்மண டூல் பாரில் அதிக நெகடிவ் ஓட்டுகள் விழுகின்றன? ஆனால் அதிக ஹிட்ஸ் என கவுண்டர் காட்டுகிறதே
பதில்: அவர்களும் படித்த பின்னர்தானே நெகடிவ் குத்து இடுவார்கள்? அதனால ஹிட் கவுண்டர் தானே ஏறிடுது.

4.நீங்கள் தமிழ் பதிவு எழுதுவதை விட்டு விடலாம் என்று என்றாவது ஒரு நிமிடவாவது தோன்றியதா?
பதில்: பெரிசுக்கு அப்ப்டியெல்லாம் எப்போதுமே தோணினதில்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். அது பதிவு எழுத வந்ததுக்காக பலர் என்றென்றும் அன்புடன் பாலாவை திட்டுவதாக ராய்ட்டர் செய்திகள் கூறுகின்றன.

5. வாரணம் ஆயிரம் பாடல்கள் எப்படி?
பதில்: படமும் பார்க்கவில்லை, பாடல்களையும் கேட்கவில்லை.

6. இந்து தினசர் பெங்களூரில் 2 ரூபா ஹைதராபத்தில் 1.50 பைசா . ஆனால் சென்னையில் மட்டும் மாறுபட்ட விலை..அதே பக்கங்கள் அதே செய்திகள் அதே தாளின் தரம்.காரணம் என்ன?
பதில்: நிலவும் சந்தைப் போட்டியின் நிதரிசனம்.

7. இந்து தினசரி படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா?
பதில்: அப்படித்தான் தோன்றுகிறது.

8. தினகரன் - தினமலர்..ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க
பதில்: இரண்டையுமே நான் படிப்பதில்லை.

9. தினதந்தி இன்னமும் தமிழகத்தின் முதன்மையான தினசரியாக இருந்தும் குவாலிட்டி இல்லாத தாளில் தருகிறார்களே
பதில்: ரிட்சாக்காரர்களையும் பத்திரிகை படிக்கும் வழக்கத்துக்கு உட்படுத்தியது அப்பத்திரிக்கை. செய்தி உள்ளடக்கம்தானே முக்கியம்? பேப்பர் தரத்தை உயர்த்தினால் விலையையும் உயர்த்த வேண்டியிருக்கும். பல ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என பத்திரிகை நினைத்திருக்கலாம்.

10. நாட்டின் தலைநகர் தில்லியில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை விட மின்சாரத்தடை அதிகமாமே?
பதில்: அப்படியெல்லாம் இல்லை என என தில்லியில் வசிக்கும் எனது உறவினர் கூறிவிட்டார். இக்கேள்விக்கு பதிலளிக்கவே நான் அவருக்கு போன் செய்து கேட்டேன்.

11. கூடங்குளம் அணுமின்திட்டம் திறக்கபட்டால் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை தீருமா?
பதில்: அணுமின் திட்டம் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தொழில் நுட்பத்தை தருவது ரஷ்யர்கள் என்பதுதான் கவலையளிக்கும் விஷயம்.

12. அது என்ன மத்திய அரசின் மின்சார தொகுப்பு கொஞ்சம் விளக்க முடியுமா?
பதில்: எல்லா மாநிலங்களின் மின்வாரியங்களையும் இணைத்து மின்சாரம் கொடுக்கல் வாங்கல் செய்வது இந்தத் தொகுப்பின் வேலை. இந்த வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் பல இணைக்கப்பட விஷயங்கள் உள்ளன. இந்த உரலுக்கு சென்றால் மேலும் பார்க்கலாம்.

13. கர்நாடாகவிற்க்கு நெய்வேலியில் இருந்துதான் மின்சாரம் செல்கிறதா?
பதில்: நெய்வேலியிலிருந்தும் செல்கிறது என்று வேண்டுமானால் கூறலாம்.

அனானி (14.12.2208, பிற்பகல் 12.45க்கு கேட்டவர்)
1. What happened to the mega tender of bsnl in respect of gsm expansion?
பதில்: இது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

2. What is ADC charges hitherto paid by private operators to bsnl?
பதில்: நான் புரிந்து கொண்டது வரை கூறுவேன். access deficit charge (ADC)என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். கிராமங்களில் லேண்ட்லைன் டெலிஃபோன் வசதி தருவதற்கு பி.எஸ்.என்.எல். மட்டுமே உண்டு. தனியார் சேவை அளிப்பவர்கள் அதிக வருவாய் வரும் சேவைகளிலே பிசியாக இருந்தார்கள். கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கும் வசதி வேண்டும். ஆகவே தனியார் சேவை அளிப்பவர்கள் இந்த சார்ஜ் தர வேண்டியிருந்தது. கடந்த அக்டோபரில் அதை எடுத்து விட்டார்கள் என படித்தேன். இப்போது நிலைமை தெரியவில்லை. செல் போன் உபயோகங்கம் மிகவும் அதிகரித்து, ஏழை எளியமக்களும் அதை உபயோகிக்கும் நிலையில் இந்த சார்ஜை விதிப்பது அவர்களையும் பாதிக்கும் என ஒரு கருத்தும் தெரிவிக்கப்பட்டது.

3. After the abolition of that,it is told by controlling authorities that the cell rate will come down.isn't?
பதில்: அது இல்லாமல் போவதால் வரும் லாபம் மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்றால் செல்போன் ரேட்டுகளை குறைக்கத்தானே வேண்டும்.

4. In the news papers (frequently) it is being written that the private operators are not paying the due amounts to bsnl( for using the network of bsnl) in due dates, quoting some legal points.Is it justifiable?
பதில்: ஒரு வியாபாரி நியாயமாக இருப்பான் என நம்பினால் மட்டும் போதாது. அரசும் விழிப்புடன் இருந்து அவன் போங்குத்தனமாக ஏதேனும் செய்யாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

5. Having huge infrastructure , plenty of trained work force and executives ,when bsnl will become the leader in mobile sector?
பதில்: பி.எஸ்.என்.எல்.-ன் கைகளை அரசியல்வியாதிகள் கட்டிப்போடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

கிரிதரன்:
1) What is your opinion on Bush's connection with 9/11? There was a movie called “9/11” (I am not sure about the movie name) released to thrash American government.
பதில்: அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. அதில் என்ன கூறியுள்ளார்கள்? புஷ்தான் 9/11-க்கு காரணம் என்றா? அமெரிக்காவில் இம்மாதிரி படங்கள் சர்வ சாதாரணம். கென்னடியின் கொலையை ஜான்சன்தான் செய்வித்தார் என்று அக்காலக்கட்டத்தில் ஒரு நாடகம் ஓடியது. அதுதான் அமெரிக்கா. நம்மூர் மாதிரி இதற்கெல்லாம் ஆட்டோ வராது.

2) If 9/11 was just a drama to attack IRAQ to conquer it for oil wealth, then how come we are trusting USA in our terrorist attack 26/11?
பதில்: 9/11 ஒரு டிராமா என்று ஒன்றும் தெரியாதவர்கள்தான் கூறுவார்கள். அது நடந்து விட்டது. நடந்த கெட்ட விஷயத்தை தனக்கு சாதகமாக புஷ் மாற்றிக் கொண்டார் என்று வேண்டுமானால் கூறலாம்.

3) Many banks/departments under private sector in US are taking recourse to the control of government. So America's basic core ideas is being changed. Please comment.
பதில்: சாதாரணமான ஜுரம் கூட வராமல் இருந்த ஒரு மனிதனுக்கு திடீரென உடம்புக்கு வந்தால் திக்குமுக்காடி போய்விடுவான். அதுதான் அமெரிக்கா விஷயத்தில் நடக்கிறது. எனது அபிமான நாடான அமெரிக்கா என்னும் தேசத்தின் கஷ்டம் சீக்கிரம் நீங்க வேண்டும் என்று என் உள்ளங்கவர் கள்வன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதனைப் பிரார்த்திக்கிறேன்.

4) I heard Albert Einstein and Google's CEO are Jewish. Is it so?
பதில்: ஐன்ஷ்டைன் என்னவோ யூதர்தான். இரண்டாமவர் பற்றி எனக்கு தெரியாது.

5) Jewish always live in groups. Also they won't encourage getting marriage outside their religion. Please authenticate this news.
பதில்: ஒருவர் யூதராவதற்கு தாய்வழி உறவுதான் முக்கியம். கல்யாண விஷயமாக நீங்கள் கூறுவது இப்போதெல்லாம் அவ்வளவாக நடப்பதில்லை. ஆச்சாரம் மிகுந்த யூதர்களும் உண்டு. யூதமதக் கோட்பாடே தெரியாத யூதர்களும் உண்டு.


எம். கண்ணன்:
1) எந்த எந்த பிராண்டு சரக்கு என்ன மாதிரி போதையையும், நறுமணத்தையும் (!) தரும் ? (காண்டு கஜேந்திரனுக்கான கேள்வி உங்களுக்கு ரீடைரக்ட் ஆகிவிட்டது :-) )
கிங் ஃபிஷர் முதல் ஓல்ட் மாங்க், ரெட் லேபல், ஷீவாஸ் ரீகல், வோட்கா, ரம், பிராந்தி, விஸ்கி, என்ன எல்லா வகைகளையும் தொட்டுக் காட்டினால் நன்று.

பதில்: இதனை இவனால் முடிக்கும் என உணர்ந்து அதனை அவன்கண் விடல் என்பது போல கூறும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு மதிப்பளிக்க விரும்புவதாலும், இந்த விஷயங்களில் நிபுணர் வால்பையன் இருக்க வேறு யாரும் ஆதண்டிக்காக தகவல் கூற இயலாது என்பதாலும் நான் வால்பையனுக்கு போன் போட்டு கேட்டு கொண்டதற்கிணங்கி அவர் அளித்த பதில் இதோ (காண்டு கஜேந்திரன் எல்லாம் வாழ்ச்சவடாலோடு சரி. வெறுமனே தம்ஸ் அப் போட்டதுமே கிக் ஏறிவிடுவதாக கேள்வி, அதாவது வடிவேலு வெறும் தண்ணீர் பாக்கெட்டை உடைத்து குடித்து அலம்பல் செய்வது போல, படத்தின் பெயரை நண்பர் லக்கிலுக் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்):
பீர்= இந்தியாவில் கிடைக்கும் பீர்கள் அனைத்தும் குறைந்த ஆல்ஹகால் கொண்டவை, புளிப்பும், கசப்பும் கலந்த சுவை, குளிராக இல்லையென்றால் கசப்பே பிரதானம்.

ரம்= கசப்பு தன்மையுடையது, கருப்பு நிறத்தில் கசாயம் போல இருப்பதால், பெரும்பாலான தொழிலாலர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள். உடல் அலுப்பை தீர்க்கும் இதன் போதையே அதற்கு காரணம். ஜ்யோவ்ராம் சுந்தர் என்ன அடிப்பார்னு எனக்கு தெரியாது.


பிராந்தி= லேசான இனிப்பும், தொண்டையை பிடிக்கும் அமிலத்தன்மையும் உடையது, தங்க நிறத்தில் இருப்பதால் இதுதான் எனது விருப்ப சரக்கு. அடிமையாக்கிவிடும் போதை கொண்டது. சில சரக்குகள் அலர்ஜியை கொடுக்கலாம். சுகர் இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும்

விஸ்கி= அளவாக சாப்பிட்டால் மருந்து என்று பெயர் வாங்கியது, அதே தங்க நிறம் இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை. பெரிதாக வாசம் இருக்காது, அப்படியே இருந்தாலும் அது சரக்கு வாடை போலவே இருக்காது(காஸ்ட்லி சரக்கு மட்டும்) இந்தியாவில் கிடைப்பது மால்ட் விஸ்கி.

வோட்கா= தண்ணீர் போல இருந்தாலும் கசப்புத் தன்மையுடயது, அதை போக்க ஆரஞ்ச், ஆப்பிள் என்று வாசம் சேர்த்திருப்பார்கள், இதில் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை

ஜின்= பார்ப்பதற்க்கு வோட்கா போலவே இருக்கும், ஆனால் கசப்புடன் புளிப்பு சுவையுடயது, இது பெண்களுக்கானது என்றும் சொல்வார்கள், காரணம் இது அதிக காட்டமில்லாதது, இதை குடித்தால் ஆண்மை குறைவு ஏற்படும் என்று சொல்வார்கள், அது தவறான தகவல்; மேலே கூறப்பட்டுள்ள எந்தச் சரக்கை அடித்தாலும் ஆண்மை குறைவு ஏற்ப்படலாம்.

ரெட் லேபல், ஷீவாஸ் ரீகல், போன்றவை விஸ்கியிலேயே ஸ்காட்ச் வகையை சார்ந்தவை முறையே பதப்படுத்தி வைத்திருக்கும் வருடங்களை பொறுத்து அதன் தரம். மால்ட் விஸ்கியை விட காரம் குறைவாக இருக்கும், வாசம் தூக்கலாக இருக்கும்.

இது என் அனுபவம் மட்டுமே! எனக்கு கசப்பாக தெரிவது உங்களுக்கு இனிப்பாக தெரியலாம்.

நன்றி வால்பையன் அவர்களே. எனக்கு பிடித்தது ப்ளடிமேரி. பியர் பரவாயில்லை. விஸ்கி எப்போதாவது அடிப்பதுதான், சோடா மட்டும் ஐஸ்கட்டிகள் சேர்த்து, மிகவும் மிதமாக.

2) கமல் நற்பணிமன்ற தலைவராக (பல ஆண்டுகள்) இருந்த ர.குணசீலனை கமல் தூக்கியது - சரிதானே ? கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை ர.கு வெளியே சொல்லலாம் என்ற பயம் கமலுக்கு இல்லையா?
பதில்: I have got an extraordinary lack of interest in these accursed fan clubs. Period.

3) யாத்ராவுக்கே 2 வயசாகப்போகுது - இன்னும் ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க வேண்டும் என ரஜினி அடம்பிடிப்பது ஏன் ? அதுவும் ஐஸ்வர்யா ராய்க்கு நடிப்பு வராது + அழகும் தற்போது கெட்டுவிட்ட நிலையில்?
பதில்: அது யாத்ராவின் பிரச்சினை. மற்றப்படி ஐஸ்வர்யா ராயின் நடிப்பை யார் பார்க்கிறார்கள்?

4) சுஜாதா எழுதிய தொடர்கதைகளிலேயே (வார இதழ்களில் வந்த) உங்களுக்குப் பிடித்த தொடர்கதை எது ஏன் ? எந்தக் கதையை மீண்டும் மீண்டும் படித்ததுண்டு? அதில் ஜெயராஜ்
ஓவியம் இருந்திருந்தால் எந்த ஓவியம் பெஸ்ட்?

பதில்: எல்லாமே பிடிக்கும். ஆனால் நான் முதலில் கவரப்பட்டது “நைலான் கயிறு” நாவலால்தான். முதல் காதல் அல்லவா, அதன் இடமே தனி.

5. அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சரானால் தமிழகத்திலிருந்து சிகரெட்டையும் மதுவையும் ஒழித்துவிட ஆசைப் படுகிறார். முடியுமா? உங்கள் நிலை என்ன?
பதில்: முடியாது. தமிழகத்தை விடுங்கள். பாமக தனது கோட்டையாக கருதும் புதுச்சேரியில் அதை செய்ய முயற்சிக்கட்டும், அங்கு ஆட்சிக்கு வந்தால்.

6. தற்போதைய பெண் திரைப்பாடல் பாடகிகளின் குரல்கள் பெரும்பாலும் ஆண் குரல் போன்றே இருக்கிறதே ? ஒரு சுசீலா, ஜானகி, சித்ரா, வாணி ஜெயராம், ஜென்சி, உமா ரமணன், சாதனா சர்கம், ஷ்ரேயா கோஷல் போன்ற இனிமை காணக் கிடைப்பது அரிதாகி வருகிறதே? இதற்கு என்ன காரணம்?
பதில்: வாத்தியங்களின் ஓசைகளில் பெண்குரல் காணாமல் போய்விட்டது.


ரமணா:
1.ஸ்பெக்டரம் ஊழல் அடுத்த தேர்தலில் வில்லனாய் பிரசன்னமாய் ஆளும் கூட்டணியை பாடாய் படுத்தும் போலுள்ளதே?
பதில்: அதாவது அது முடிந்துபோன கதை எனக் கலைஞர் கூறிவிட்டாலும் அவ்வாறு விடாது தமிழக மக்கள் அவர் நோக்கில் அல்பமாக நடந்து கொள்வார்கள் என நினைக்கிறீர்கள் அல்லவா? அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

2.கலைஞர்-அவரது பிரதான உதவியாளர் ஷண்முகநாதன் பிரிவு-தலைவரின் குடும்ப ஓற்றுமை சந்தோஷத்தை சற்று குறைத்துவிடும் போலுள்ளதே?
பதில்: Blood is thicker than water.

3. பா.ஜ.க திருமங்கல தேர்தலில் மறைமுகமாய் அதிமுக பக்கம் சாயும் போலுள்ளதே?
பதில்: தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு ஐயோ பாவம் கட்சி. அது யார் பக்கம் சாய்ந்தால் என்ன?

4. பா.ம.க தி.மு.க-வுக்கு பிடி கொடுக்காது போலுள்ளதே?
பதில்: அந்தோ, காடுவெட்டி குருவை விடுதலை செய்தது வீண்தானா? ஆ, ஐயோ!!!!

5.ஒருவேளை அரசின் மீது உள்ளதாய் சொல்லப்படும் கோபத்தால் மக்கள் அதிமுகவை வெற்றி பெறச் செய்து விட்டால் காங்கிரஸ் தி.மு.கவை கை கழுவிவிடும் போலுள்ளதே?
பதில்: பார்லிமெண்ட் தேர்தலில் அதிமுகவுக்கு அதிக சீட் கிடைத்து, திமுக பிளாங்கி அடித்தால் நீங்கள் சொன்னது நடக்குமாகத்தன் இருக்கும்.

6. விஜயகாந்தும் திருமங்கலத் தொகுதியில் பெரும்பான்மை உள்ள சமுகத்தாரையே வேட்பாளாராக நிறுத்தி உள்ளதால் அவருக்கும் தன் கட்சியின் செல்வாக்கு மேல் முழு நம்பிக்கை இல்லாதது போலுள்ளதே?
பதில்: அவர் வேகமாக அரசியல்வாதியாகி வருகிறார் என்பதைத்தான் அது காட்டுகிறது.

7. சரத் குமார் அரசியல் சதுரங்கத்தில் பின் தங்குகிறார் போலுள்ளதே?
பதில்: அதற்கெல்லாம் உழைக்க சித்தப்பாவுக்கு நேரம் இல்லை.

8.சன் குழுமம், குடும்ப ஓற்றுமைக்குப் பின் தொழிலில் விஸ்வரூபம் எடுக்கும் போலுள்ளதே?
பதில்: அப்படியென்றால் அப்பத்தைப் பங்கிடுவது சுமுகமாக நடந்தது என பொருள். அப்பத்தை கைவிட்ட பூனைகளாக மக்கள் இருக்கின்றனர்.

9.மீண்டும் தளபதி ஸ்டாலினுக்கு முடிசூட்டும் முயற்சிகள் தொடங்கிவிடும் போலுள்ளதே?
பதில்: ராஜராஜ சோழனுக்கு பிறகு ராஜேந்திர சோழன் பட்டத்துக்கு வந்தபோது அவனுக்கு வயது 50. சென்ற கார்த்திகை மாதத்தில் இங்கிலாந்து வேல்ஸ் இளவரசருக்கு 60 வயது நிரம்பியது.

10. மதுரை அழகிரியாரின் திடீர் சமாதானம் திமுகவுக்கு போட்டியே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிடும் போலுள்ளதே?
பதில்: இது ஸ்டாலினுக்கு தெரியுமா?


கிருஷ்ணன்:
1. Can you enlighten me abut Satyam-Maytas aborted takeover?
பதில்: இந்த உரலுக்கு செல்லவும்.

2. India cricket tour of Pakistan has been called off - comments please.
பதில்: ஆதரிக்க வேண்டிய செயல். இப்போது பாகிஸ்தானுக்கு நமது டீம் செல்வது உசிதம் இல்லை.

3. Mumbai, Delhi, Chennai - if you have to select only one city to live in, which one will you choose?
பதில்: சந்தேகமே இல்லை, சென்னைதான். இந்த மூன்று நகரங்களிலும் நான் வசித்திருக்கிறேன். 20 ஆண்டுகாலப் பிரிவுக்கு பிறகு மறுபடியும் சென்னைக்கு சமீபத்தில் 2001-ல் வந்தேன். இனிமேல் இந்த நகரத்தை விட்டு போவதாக இல்லை.

4. Ananda Vikatan's standard is plummeting - agree or disagree?
பதில்: ஒத்து கொள்கிறேன்.

5. Hope you are following Badri Seshadri's posts on Pakistan. What is your opinion ? Do you agree with Badri when he says we have to economically help Pakistan?
பதில்: நிச்சயம் படிக்கிறேன். உங்கள் பின்னூட்டங்களையும் பார்த்தேன். நிதானமாக அழுத்தம் திருத்தமாக வாதங்களை வைப்பதில் பத்ரி திறமையானவ்ர். ஆனால் பாகிஸ்தானுக்கு நாம் கடன் தரவேண்டும் என கூறுவது ஓவர்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

31 comments:

Anonymous said...

//அனானி r (12.12.2008 காலை 07.33-க்கு கேட்டவர்)
1. கவுண்டமணி ஹோட்டலில் அமர்ந்து 200-ரூபாய் பெறுமான லன்ச் ஆர்டர் செய்தார். அவரது வேலையாள் செந்தில் அந்த பக்கம் வந்தார். “பாஸ் சாப்பாடு சாப்பிடவா வந்தீங்க”? என்று கேட்க, “ஏண்டா கோமுட்டித் தலையா, பின்னே ஹோட்டலுக்கு பாட்டு கேக்கவா வருவான்”? என்று கவுண்டமணி எகிறினார். பிறகு செந்தில் சுதாரித்து கொண்டு, சாப்பாட்டுத் தட்டை ஒரு பாத்திரத்தை கவிழ்த்து மூடினார். "பாஸ் 20 ரூபா பெட்டு வைக்கிறேன். உங்களோட இந்த சாப்பாட்டை பாத்திரம், மேஜை, அது இருக்கும் தட்டு ஆகிய எதையும் தொடாமல் சாப்பிடுவேன். யார் உதவியும் எனக்கு இதற்காக தேவையில்லை. என்ன சொல்லறீங்க”? என்று கேட்டார். "இந்த பெட்டை நான் ஏத்துக்கிறேன்” என கவுண்டமணி உடனடியாக கூறினார். பெட்டில் யார் ஜெயித்தது? எவ்வாறு?
பதில்: கவுண்டமணி மேலே பேசும் முன்னால் கோவை சரளா அங்கு ஓடிவந்து, அவர் காதில் ஏதோ கிசுகிசுக்கிறார். கவுண்டமணி உடனே செந்திலை பார்த்து, “டேய் கோமுட்டித் தலையா, ஓடிப்போயிடு. இல்லேன்னா உன் சங்கை கடிச்சு துப்பிடுவேன். நல்ல வேளையா சரளா எனக்கு ஞாபகப்படுத்தினா. இன்னும் அந்த வாழைப்பழ கணக்கு புரியாமல் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன். ஓடிப்பொயிடு” என்று கூறிவிட்டு சாப்பிட ஆரம்பிக்கிறார். ஓசி சாப்பாடு கிடைக்காத வருத்தத்தில் செந்தில் அங்கிருந்து செல்கிறார்.
“பெரிசுக்கு விடை தெரியல்லை, அதனாலே பம்முது” என்று கூறும் முரளி மனோஹரை அலட்சியம் செய்கிறேன்.//

Answer for the above buzzle:

Mr. K simply picked up the basket and ate the lunch and soup,dessert and all .He gave the Rs 20/=.
Sure he lost the bet worth Rs 20/= but he ate a lunch worth Rs 200!

Thank you very much for your straight forward answer.

-r

Anonymous said...

please answer in detail

It is learnt that murasoli maran sudied his higher studies with the help of the mony support given by M.G.Ramachandran.
Some 20 yeras before his sons were having business in small scale.
yester day it is told that the enthiran, rajini-sankar ,mega project,worth of Rupees 150,00,00,000 is going to be produced by the great brothers.

How it is possible in India that some middle class family legal heirs alone is able to reach atop ,this much,withih a span of 20 years.

Is this due to
1.Their hard work
2.Their luck
3.Their tricks
4.Their gimmicks
5.Their ambani's style

dondu(#11168674346665545885) said...

உங்கள் புதிர் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கேயும் எஸ்ஸும் இடம் மாறியிருந்தனர். மேலும் புதிர் தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என நான்தான் அதை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து போட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//8.சன் குழுமம், குடும்ப ஓற்றுமைக்குப் பின் தொழிலில் விஸ்வரூபம் எடுக்கும் போலுள்ளதே?
பதில்: அப்படியென்றால் அப்பத்தைப் பங்கிடுவது சுமுகமாக நடந்தது என பொருள். அப்பத்தை கைவிட்ட பூனைகளாக மக்கள் இருக்கின்றனர்//

//yester day it is told that the enthiran, rajini-sankar ,mega project,worth of Rupees 150,00,00,000 is going to be produced by the great brothers.//


எல்லாம் அவன் செயல்

அவன்= ஆண்டவன்(ர்)
அவன்(ர்)-கலைஞர்
அவன்(ள்)-அழகிரியின் அன்பு மகள்

Anonymous said...

திமுக வுக்கு மிகவும் தர்மசங்கடமான சூழ் நிலையில் வரும் திருமங்கலத் தேர்தல் தி.மு.க வேட்பாளர் தேர்வு மதுரையாருக்கு திருப்தியில்லாச் சூழ்நிலையில்,வருங்கால முதல்வர் அண்ணன்,மதுரை விரைகிறாராமே,தலைவரின் நிம்மதியை குலைக்கும் சம்பவங்கள் தொடர்கிறதே?
குருப் பெயர்ச்சி மஞ்சள் துண்டாருக்கு அவ்வளவு நல்லதில்லையா?
அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கு துணை பொதுச் செயலர் பதவி என்றால், திமுக வின் வருங்காலத் தலைமை அவர் கைக்கு செல்ல வாய்ப்புள்ளதா?
ஜெ யின் அதிரடி அரசியலுக்கு சரியான பதிலடிக்கு மதுரையார்தான் சரி என கலைஞர் எண்ணுவார் போலுள்ளதே?
காங்கிரஸாரின் நீண்ட மெளனம்,காற்று திசை மாறும் அறிகுறியா?
அன்பழகனாருக்கு மக்கள்,தொண்டர் செல்வாக்கு அவ்வளவு இல்லாத போதும் சீனியர் என்பதற்காக ,அவருக்கு கலைஞர் தரும் மரியாதை,கட்சி அந்தஸ்து பற்றி உங்கள் கமெண்ட் என்ன?
அன்பழகனார் அண்ணாவின் மறைவுக்கு பின்னால் ஏற்பட்ட தலைவர்/முதல்வர் தேர்தலில் வீர வேசமாய் பேசிய பேச்சுக்களையும் ,இன்றைய அவரது படு சுமுகமான அணுகு முறையும் பார்க்கும் போது முதலியார்வாள் அதி புத்திசாலியா? மறைமுக காரியவாதியா?கையறு நிலையிலா?

கலைஞரின் சாணக்கிய அரசியல் ராஜதந்திரத்தை ஒப்பீடு செய்து அவருக்கு இணையாய் பரந்த இந்திய அரசியலில் இருப்பவர்களில் சம காலத்தில் உங்கள் தேர்வு யார்?

வீரபாண்டியார் மீண்டும் லைம்லயிட்டுக்கு வரமுடியுமா?

ஆற்காட்டாருக்கு சங்கடம்-சன் குழுமத்துக்கு உச்சம்-ஸ்டாலினுக்கு லையின் கிளியர்-அழகிரிக்கு அங்கீகாரம்-
ஜெ. க்கு முன்னேற்றத் தடை-விஜயகாந்த் சிரம திசையில்-விலைவாசி போனற பிரச்சனைகள் வக்கிரகதியில்-

2008 ஆண்டு நிகழ்ச்சியில் தாத்தா-பேரன்கள் சமரசம்-(குரு/சனி பெயர்ச்சி போல்)
ஹைலைட்டா?

வால்பையன் said...

இன்னைக்கு லேட்டு போல!

வால்பையன் said...

//மாற்று எழுத்துக்கள் என்றால் என்ன?
பதில்: பின் நவீனத்துவ எழுத்துக்களைத்தான் குறிக்கிறாங்க போல.//

நடைமுறையில் பொதுபுத்தியுடன் இருக்கும் எந்த கருத்துகளையும் கட்டுடைக்கும் எழுத்துகளே மாற்று எழுத்துக்கள்.

பின்நவீனத்தில் மாற்று எழுத்துகளும் பெரும் பங்கு வகிக்கிறது

வால்பையன் said...

//தினதந்தி இன்னமும் தமிழகத்தின் முதன்மையான தினசரியாக இருந்தும் குவாலிட்டி இல்லாத தாளில் தருகிறார்களே//

தினதந்தி அதிக வாசகர்களை கொண்டது
(டீக்கடையில்)
தினமலர் அதிகம் விற்பனையாவதாக தகவல்,

ஆனாலும் தினதந்தி செய்திகளில் முதலிடத்தில் இருக்கிறது.
அதனால் விளிப்பு நிலை மனிதர்களும் அதை விரும்புகிறார்கள்

dondu(#11168674346665545885) said...

//இன்னைக்கு லேட்டு போல!//
இல்லையே! கில்லி மாதிரி விடியற்காலை 5 மணிக்கு பதிவு வந்து விட்டது. அப்போது நான் உறக்கத்தில் இருந்தேன்.

அன்புடன்
டோண்டு ராகவன்

Anonymous said...

தமிழகத்தில் இன்னொரு பிரபாகரன் பிறக்கும் வரை இந்த இனம் மீளாது. ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு இரண்டு இலட்சம் பேரை அனுப்பினாரே ராஜீவ், இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா என இயக்குநர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.-உங்கள் கருத்து என்ன?

dondu(#11168674346665545885) said...

தனது கருத்தைக் கூற சீமானுக்கு உரிமை உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//dondu(#11168674346665545885) said...
தனது கருத்தைக் கூற சீமானுக்கு உரிமை உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராய் பேசியதாய் -ஆளும் காங்கிரஸாரின் குற்றச்சாட்டின் படி தமிழக காவல் துறையால் கைது செய்யப்டார் என்ற தகவலுக்கு பிறகு உங்கள் கருத்து?

அவரது உரிமை சட்டத்திற்கு உட்பட்டதில்லையா?

Arun Kumar said...

இந்த வார பதில்கள் மிக அருமை சார்:)

dondu(#11168674346665545885) said...

//ஆளும் காங்கிரஸாரின் குற்றச்சாட்டின் படி தமிழக காவல் துறையால் கைது செய்யப்டார் என்ற தகவலுக்கு பிறகு உங்கள் கருத்து?//
தனது கருத்தை கூற அவருக்கு உரிமை உண்டு. அதே சமயம் அவ்வாறு தெரிவிப்பதால் வரும் விளைவுகளை எதிர்க்கொள்ளும் உரிமையும் அவருக்கு உண்டு.

அன்புஅட்ன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

தமிழ்மணம் பரிந்துரை : 1/1



Pathivu Toolbar ©2008thamizmanam.com


ரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்! -சீமான் கைது!!
ரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்!

சீமான்கள் சொன்னால் சீமானும் கைது செய்யப்படுவார்!

காங்கிரஸ்க்காரத் தமிழர்களுக்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன். முடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள். முடியாவிட்டால், தவறான பிரச்சாரம் செய்யாமல் உண்மையை சீர் தூக்கி பார்த்து எழுத வேண்டுகிறேன்.

1) வங்க தேச உதயம் எப்படி நடந்தது?

2) அன்னை இந்திராவைக் கொன்றவர்களை காங்கிரஸ் எப்படி நடாத்தியது, நடாத்துகிறது?

3) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாலய உள்துறை அமைச்சர் ஏன் பொற்கோவிலுக்கு எதிரே காலணிகளைத் துடைத்து வைத்தார்?

4) இந்திராவை கொன்ற சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் இந்திய பிரதமராக முடிகிறது. காந்தியைக் கொன்ற கோட்சேயின் ஆர்.எஸ்.எஸ் -ஐ சேர்ந்தவர்கள் பிரதமராக உதவிப் பிரதமராக இருக்க முடிகிறது. ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லது யாரோ ஆக விடாமல் தடுக்கிறார்கள்?

5) அகாலிதளம் மான் பிரிவு தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் துப்பாக்கியுடன் பாராளுமன்றம் வருவேன் என்று சொல்கிறார். அவரும் இங்கு தானே குப்பை கொட்டினார். அவரை என்ன செய்தார்கள் காங்கிரஸ் ஆட்சியில்?

6)கூறியத் அமைப்பினர் துப்பாக்கியுடன் தான் பேச்சு வார்த்தைக்கு வருவோம் என்கிறார்கள். அவர்களை காங்கிரஸ் அரசு என்ன செய்ய முடிந்தது?

7) அசாமை ஆண்ட பிரபுல்ல குமார் மகந்தா உங்கள் பார்வையில் தீவிர வாதியா? அப்படி இருந்தால் அந்த மாநில மக்கள் அவரை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?

8) இந்திரா கொலை முயற்சி, இராஜீவ் கொலை குற்றச்சாட்டு போன்றவற்றில் திமுகவுக்கு தொடர்பு உள்ளது என்று காங்கிரசார் பிரச்சாரம் செய்தனரே? பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்தால் அது நியாயமா?

9) பல கொலைகளில் சம்பத்தப் பட்ட முன்னாலைய தீவிரவாத இயக்கம், பிரிவினை வாத இயக்கம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த சிபு சோரனை எப்படி காங்கிரஸ் அமைச்சரவையில் சர்ச்சைகளுக்கிடையில் சேர்க்க முடிந்தது?

10) அப்சல் என்னும் தண்டனை வழங்கப்பட்ட தீவிர வாதியை, தூக்கிலிடுவதை நிறுத்திவைக்க வேண்டி காஷ்மீர் முதலமைச்சர் குழாம் நபி ஆசாத் சப்பைக் கட்டுடுடன் பிரதமரைச் சந்திக்கலாமா?

11) இராஜீவைத் முதுகில் தாக்கிய சிங்கள சிப்பாய்க்கு சிறிலங்கா அரசாங்கம் எவ்வளவு மரியாதை அளித்தது என்று தெரிந்தும் அவர்களோடு கொஞ்சிக் குலாவுவதில் காங்கிரஸ் அரசுக்கு என்ன மரியாதை அங்கு கிடைக்கும்? மரியாதை இல்லாத இடத்தில் பல்லிளிப்பது ஏனோ?

12) கிழக்குத் தீமோர் இந்தோனேஷியாவில் இருந்து பிரிய முடிகிறது, ஏறக்குறைய அதே நிலை அல்லது அதைவிட மனித உரிமைகளை தரையில் போட்டு மிதிக்கும் நிகழ்வுதானே இன்று சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கிறது? இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டாமா?

வால்பையன் said...

கடைசியாக கேட்ட அனானியின் கேள்வியில் சில உடன்பட கூடியவையே!

உங்கள் பதிலை நானும் எதிர்பார்க்கிறேன்

dondu(#11168674346665545885) said...

//ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லது யாரோ ஆக விடாமல் தடுக்கிறார்கள்?//
ஒரு காலக்கட்டத்தில் மூப்பனார் பிரதமராக வாய்ப்பு வந்தது. அப்போது முட்டுக்கட்டை போட்டவர் கலைஞர் என்று ஞாபகம்.

//2) அன்னை இந்திராவைக் கொன்றவர்களை காங்கிரஸ் எப்படி நடாத்தியது, நடாத்துகிறது?//
குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் தூக்கில் போடப்பட்டாயிற்று. ஆனால் இது ஒரு துன்பியல் சம்பவம் மட்டுமே என நீட்டி முழக்கும் பிரபாகரன் இன்னும் தேடப்படும் குற்றவாளி. மாட்டிக் கொண்டால் தூக்கு தண்டனை பெற வேண்டியவர். அவரை தலைவராக கொண்ட விடுதலைப் புலியினரை எப்படி ஏற்று கொள்வது?

//காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாலய உள்துறை அமைச்சர் ஏன் பொற்கோவிலுக்கு எதிரே காலணிகளைத் துடைத்து வைத்தார்?//
அது அவரது மதநம்பிக்கை.

Anonymous said...

////2) அன்னை இந்திராவைக் கொன்றவர்களை காங்கிரஸ் எப்படி நடாத்தியது, நடாத்துகிறது?//
குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் தூக்கில் போடப்பட்டாயிற்று. ஆனால் இது ஒரு துன்பியல் சம்பவம் மட்டுமே என நீட்டி முழக்கும் பிரபாகரன் இன்னும் தேடப்படும் குற்றவாளி. மாட்டிக் கொண்டால் தூக்கு தண்டனை பெற வேண்டியவர். அவரை தலைவராக கொண்ட விடுதலைப் புலியினரை எப்படி ஏற்று கொள்வது?//

நீங்க இப்படி திரும்பத் திரும்பச் சொல்லுவதால் உங்களை தமிழின விரோதி என முத்திரை குத்தப் போகிறார்கள்.
உங்களை உசுப் பேத்தவே இப்படி கேள்விகள்.
நீங்களும் இங்கே நடக்கும் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கிடையே ....


கடைசியாக வலம் வரும் தகவல்
அன்பழகன் திமுக உதவித் தலைவர்
ஸ்டாலின்-பொதுச் செயலர்+துணை முதல்வர்
அழகிரி-உதவிப் பொதுச்செயலர்+ ?????

இதை அருமையாய் கொண்டு செல்வது
சன் குழும அதிபதி சகோதரர்களாம்.
மின்சார ராஜ குருவும் சம்மதம் தெரிவித்து தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்காராம்.

நேற்று வரை வார்த்தைச் சாடல் போர்களத்தில் இருந்தவர்கள் இன்று சம்பந்திகள் போல் சமரசம்.
இதுவெல்லாம் இங்கே சகஜமாய் இருக்கும் போது

ஒருவேளை இலங்கை போராளிகளின் சார்பாய் , ராஜிவின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டால்,உண்மையான குற்றவாளியையே மன்னிக்கும் சோனியா அம்மையார் சமாதானம் அடைந்தால்
நாளை காங்கிரஸாரின் கோபமும் மாறலாம் இல்லையா?

இதுவும் கடந்து போகும் இது தானே நிதர்சனமான உண்மை.
மாறுவது ஒன்றுதானே உலகில் மாறாமல் இருக்கிறது.

இலங்கை பிரச்சனையில் உள்ள தீவிரம் குறையும் வரை அது சம்பந்தமான கேள்விகளை மட்டுறுத்தி,உங்கள் மேலும் உங்கள் குடும்பத்தார் மேலும்
எறியப்படும், பொல்லாங்கு வார்த்தைக் குவியல்களை தவிர்க்கலாமே?

இது ஒரு அன்பு வேண்டு கோள்.

Anonymous said...

//இலங்கை பிரச்சனையில் உள்ள தீவிரம் குறையும் வரை அது சம்பந்தமான கேள்விகளை மட்டுறுத்தி,உங்கள் மேலும் உங்கள் குடும்பத்தார் மேலும்
எறியப்படும், பொல்லாங்கு வார்த்தைக் குவியல்களை தவிர்க்கலாமே?

இது ஒரு அன்பு வேண்டு கோள்//


Will you accept the above request?

or


naamaarkkung kudiyalloom namanai yanjcoom
narakattil idarpadoom nadalai illoom
eemaappoom piNiyaRiyoom paNivoo malloom
inbamee yennaaLun tunba millai
taamaarkkung kudiyallaat tanmai yaana
cangkaran cangkaveN kuzaiyoor kaatiR
koomaaRkkee naamenRum miiLaa aaLaayk
koymmlarcee vadi iNaiyee kuRukinoomee ?

Anonymous said...

Questions for 26-12-2008.



1. There is one word in the English language that is always pronounced incorrectly. What is it?



********



2. A boat has a ladder that has six rungs, each rung is one foot apart. The bottom rung is one foot from the water.

The tide rises at 12 inches every 15minutes. High tide peaks in one hour. When the tide is at it's highest, how many rungs are under water?



********



3. Is half of two plus two equal to two or three?



********



4. How much dirt would be in a hole 6 feet deep and 6 feet wide that has been dug with a square edged shovel?



********



5. What is the significance of the following: The year is 1978, thirty-four minutes past noon on May 6th.



********



6. If a farmer has 5 haystacks in one field and 4 haystacks in the other field, how many haystacks would he have if he combined them all in the center field?



********



7. What is it that goes up and goes down but does not move?



********


-r

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

திரு டோண்டு இராகவன் சார்!

உங்கள் பின்னூட்டத்தில் இருக்கும் பன்னிரண்டு கேள்விகளை உள்ளடக்கிய அனானியின் பின்னூட்டம் என்னுடைய பதிவில் இருந்து நகல் எடுக்கப் பட்டிருக்கிறது. அதற்கு நீங்களும் பதில் சொல்ல முயற்சித்திருக்கிறீர்கள். உங்களுடைய நிலைப்பாடு எனக்கு ஓரளவுக்குத் தெரியும் ஆதலால், நீங்கள் சொல்லப் போகும் பதிலும் என்னவாக இருக்கும் என்பதும் எனக்குத் தோராயமாக/குத்துமதிப்பாகத் தெரியும்.
இருப்பினும் பதில் சொல்கிறேன் என்று அபிப்பிராயப்பட்டீர்கள் எனில் என்னுடைய பதிவில் வந்து சொல்லுங்கள். நன்றி!

அன்புடன்,
ஜோதிபாரதி.

dondu(#11168674346665545885) said...

கேள்விகளை நீங்கள் கேட்டீர்களோ அல்லது அனானி கேட்டாரோ என்பது எனது பதிவுக்கும் அவை வந்ததும் என்னைப் பொருத்தவரை ஒன்றுதான். ஆகவே பதிலளிக்கத்தான் போகிறேன். ஒன்று செய்வேன் அதே பதில்களை உங்களது அப்பதிவுக்கும் வந்து, வரும் வெள்ளிக்கிழமை காலை தருவேன் என உறுதி கூறுகிறேன். அதாவது http://jothibharathi.blogspot.com/2008/12/blog-post_19.html
சரிதானே.

பை தி வே, உங்களுக்கு எனது தரப்பிலிருந்து சிறு ஆலோசனை. உங்கள் பதிவு பற்றி பேசும்போது அதன் சுட்டியையும் கொடுப்பது நல்ல வழக்கம். அதை ஹைப்பர் லிங்காக மாற்றினால் இன்னும் விசேஷம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்போதுதான் கவனித்தேன் அக்கேள்விகளில் ஓரிரண்டுக்கு இங்கேயே பதில் தந்திருக்கிறேன். அவற்றை வரும் வெள்ளிக்கிழமைக்கான வரைவில் போட மறந்திருக்கிறேன். இப்போது அதையும் செய்து விட்டேன், இந்த ரூபத்தில்.

“அனானி (அவரது கேள்விகள் இப்பதிவிலிருந்து சுடப்பட்டவை என சம்பந்தப்பட்ட பதிவர் தெரிவித்துள்ளார். அது உண்மை என்பதை உறுதி செய்து கொண்டேன்)

பிறகு 12 கேள்விகளும் தொடரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//. பிரபாகரன் பிள்ளைகள் ஏன் தற்கொலை குண்டுதாரிகளாக போகவில்லை? //

அப்படிப் பார்த்தால்,மானமிகு வெங்காய பாசறையிலிருந்தோ, அல்லது கொளத்தூரார் பாசறையிலிருந்தோ, ஒருவருமே கூடத்தான் தற்கொலை குண்டுதாரியாகப் போகவில்லை. இங்கிருந்து கொண்டுதானே சூரத்தனமாக பேசுகின்றனர். இவ்வளவு ஏன், அஞ்சா நெஞ்சன் இயக்குநர் சீமான் கூடத்தான் போகவில்லை. இது ஒரு பெரிய விஷயமா?

க. கா. அ. சங்கம் said...

//
Hope you are following Badri Seshadri's posts on Pakistan. What is your opinion ? Do you agree with Badri when he says we have to economically help Pakistan?
பதில்: நிச்சயம் படிக்கிறேன். உங்கள் பின்னூட்டங்களையும் பார்த்தேன். நிதானமாக அழுத்தம் திருத்தமாக வாதங்களை வைப்பதில் பத்ரி திறமையானவ்ர். ஆனால் பாகிஸ்தானுக்கு நாம் கடன் தரவேண்டும் என கூறுவது ஓவர்.//

பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் போரிட தேவையான உதவிகளை இந்தியா செய்யவேண்டும் என்று பத்ரி கருதுவது தவறா சரியா ?
அமேரிக்காவும், பிரிட்டனும் பாகிஸ்தானுக்கு இந்த விஷயத்தில் உதவி அளித்துவருகிறது. இந்த உதவி சரியான இடத்திற்குச் சென்று சேர்கிறதா என்றெல்லாம் பார்க்கமாட்டார்களா ?

பாகிஸ்தானிகள், பிரிட்டனிலும், அமேரிக்காவிலும் குண்டு வைக்கும் வரையில் தான் பத்ரி போன்றவர்கள் இப்படி பேசிக்கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அமேரிக்க அறிவுசீவிகள் அப்போது இதே மாதிரி பாகிஸ்தானுக்கு உதவவேண்டும் என்று பேச மாட்டார்கள்.

அது சரி, தீவிரவாதிகள் ஏன் இந்தியர்களைக் குறிவைக்காமல் வெளி நாட்டவர்களைக் குறி வைத்தார்கள் என்று தெரியுமா ?

சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயரைக் கெடுக்கவேண்டும் என்று பாகிஸ்தான் மட்டுமே நினைக்கும். இஸ்லாமியத் தீவிரவாதிகள் அப்படி நினைப்பதில்லை.

பதில்: இந்தியர்களின் உயிரின் விலை மலிவு. இந்தியா பயப்படவேண்டும் என்றால் அங்கிருக்கும் வெளி நாட்டவரைத் தாக்கினால் சர்வதேச அமைப்புகள் இந்தியா மீது பாயும், இந்தியா நடவடிக்கை எடுக்கும். இல்லையென்றால் அறிக்கை விட்டதுடன் கடமை முடியும்.

Anonymous said...

போலி
1.மதவாதம்
2.தமிழின உணர்வு
3.தமிழ்ப்பற்று
4.பகுத்தறிவு
5.மதச்சார்பின்மை


உங்கள் ஸ்டெயிலில் உதாரணம் தந்து
விளக்கவும்

Unknown said...

4.1.2008 முதல் 26.12.2008 வரை உள்ள கேள்வி பதில் பதிவை அடிப்படியாக வைத்து கேள்விகள்.

இதை இந்த வாரக் கடைசி கேள்வியாய், உங்களது நாளைய பதிவில் வரைவு செய்ய வேண்டுகிறேன்.

1.மொத்தம் கேட்கப்பட்ட கேள்விகள்?
2.அதிகம் கேள்வி கேட்ட பதிவாளர்?
3.பதிலளிக்காமல் விட்ட கேள்விகள் எத்தனை?
4.என்ன காரனம்?
5.அனைத்து பதிவிலும் கேள்வி கேட்டவர் யாரவது உண்டா?
6.கேள்வி கேட்டவர் ,பதிலை பார்த்து பின்னூட்டம் விடவில்லை என்பது வாடிக்கையா?
7.உசுப்பேத்தும் கேள்விகளை தவிர்க்காமல் விட்டு விட்டோமே என் நினைத்து உண்டா?
8.கேள்விபதில் இது மாதிரி தொடர்ந்து வேறு யாரவது பதிவு போடுகிறார்களா?
9.அவரிடம் நீங்கள் கேள்வி கேட்ட அனுபவம் இருக்கிறதா?
10.இது எத்தனையாவது கேள்வி பதில் பதிவு-ஆரம்பத்திலிருந்து கணக்கிடவும்.



குறிப்பு:
வெள்ளிகிழமை கேள்வி பதில், தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு விடுமுறை ஆதலால் உங்களது தகவல்கள் ,எல்லோரும் பயன் பெறும் வகையில், அடுத்த 2009 முதல், இந்த பதிவுகளை இனி வியாழக்(1.1.2009) கிழமைக்கு மாற்றினால், நல்லது.

இதே கோரிக்கை பல அன்பர்களால் வைக்கபட்டுள்ளது தாங்கள் அறிந்ததே.

உங்களின் வாசகர்களுக்கும்,பதிவை வழிகாட்டியாய் எண்ணி பின் தொடரும் 55 Followers க்கும் புத்தாண்டு பரிசாய் இதைச் செய்வீர்களா
டோண்டு ராகவன் சார்.

dondu(#11168674346665545885) said...

@ நக்கீரன் பாண்டியன்
உங்கள் கேள்விகளை அடுத்த ஆண்டின் முதல் பதிவின் வரைவுக்கு கொண்டு செல்வதே பொருத்தமாக இருக்கும். ஆகவே அங்கேயே அவற்றை சேர்த்து விட்டேன்.

இந்த கேள்வி பதில்களை அரசு பாணியில் ஒரு நட்பு சூழ்நிலையில் கலாய்க்கும் விஷயமாகத்தான் வைக்க முயற்சி செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//dondu(#11168674346665545885) said...
@ நக்கீரன் பாண்டியன்
உங்கள் கேள்விகளை அடுத்த ஆண்டின் முதல் பதிவின் வரைவுக்கு கொண்டு செல்வதே பொருத்தமாக இருக்கும். ஆகவே அங்கேயே அவற்றை சேர்த்து விட்டேன்.

இந்த கேள்வி பதில்களை அரசு பாணியில் ஒரு நட்பு சூழ்நிலையில் கலாய்க்கும் விஷயமாகத்தான் வைக்க முயற்சி செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

நன்றி ஐயா.

அதுவும் நல்லதிற்கே.
பின்னூட்டங்களின்,ஹிட்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது வியாழக்கிழ்மைக்கு மாற்றினல்
இன்னும் கல கலப்பு கூடுமே.

பொதுவாய் வெள்ளிக்கிழமை பதிவுகள்
எல்லோர் பிளாக்கிலும், சனி ஞாயிறு விடுமுறையால், பாதிக்கப் படுவது உண்மையில்லையா?

பதிவு வானத்தில் ஆர்வமாய் உள்ளவர்களில் பெரும் பாலோனோர்,25 டு 35 வது உள்ள இளைஞர்கள்,அதுவும் மென்பொருள் வல்லுனர்கள்.
அவர்களது மன அழுத்தம் தீர சனி ஞாயிறுகளில் ,சுற்றுலா சென்று விடுகிறார்கள்.
அடுத்த வாரம் முதல் திங்கட் கிழ்மை அன்று , போன வெள்ளிகிழமை களில் போடப் படும் பதிவுகள் மறைவுப் பிரதேசத்தில் மறைந்து .
விடுகிறதே.

தற்சமயம் திரட்டிகளில் வேறு, வேண்டியவர்,வேண்டாதவர் என பாகுபாடு பார்க்கப்படுகிறதே.

அதில் குறிப்பாய் டோண்டுவின் வெள்ளிகிழமை பதில்கள் பாதிக்கப் பட்டதாய் தாங்களே ,திரட்டியின் மேலாளருக்கு பின்னூட்டம் போட்டிருக்கிறீர்களே

dondu(#11168674346665545885) said...

//அதில் குறிப்பாய் டோண்டுவின் வெள்ளிகிழமை பதில்கள் பாதிக்கப் பட்டதாய் தாங்களே ,திரட்டியின் மேலாளருக்கு பின்னூட்டம் போட்டிருக்கிறீர்களே//
இல்லையே. நீங்களே பாருங்களேன்.

“//அது தவிர தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளுக்கு முரண்பட்ட சில பதிவுகளும் சூடாக்கும் பரபரப்புக்காக மட்டுமே தலைப்பிடும் சில பதிவர்களின் பதிவுகளும் தற்போது சூடான இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றன.//

அப்படியா, நன்று. அந்த சில பதிவர்கள் யார்?

எனது சமீபத்திய பதிவுகளின் ஒரு பகுதி லிஸ்ட் கீழே தந்திருக்கிறேன். மேலே நீங்கள் சொன்னது எனது எந்தப் பதிவுக்குப் பொருந்தும் என கூற இயலுமா?

1. நன்றி தமிழ் ஓவியா மற்றும் விடுதலை!
2. டோண்டு பதில்கள் 19.12.2008
3. புதுக்கோட்டுக்கு ஜூட் - 3
4. புதுக்கோட்டுக்கு ஜூட் - 2
5. புதுக் கோட்டுக்கு ஜூட்!
6. போகட்டும் விடு நண்பா, சண்டை வேண்டாம்
7. சோ அவர்கள் எழுதிய அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - 4
8. டோண்டு பதில்கள் 12.12.2008
9. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது
10. நாகரீகத்தைத் தொலைத்த பெயரிலி
11. ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு டெம்பிளேட் இருக்கும் போல
12. ஜென் கதை தூண்டிய எண்ணங்கள்
13. ஒரு தவறு இன்னொரு தவற்றை நியாயப்படுத்தாது
14. எனக்கொரு மகன் பிறப்பான்”

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

WILL YOU AND YOUR CLOSE FRIENDS IN TAMIL BLOG WORLD, START A SEPARATE THAMIL THIRATTI IN 2009?


-ALL YOUR WELLWISHERS

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது