5/25/2005

என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி

அன்பு வலைப்பதிவு நண்பர்களே,

இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன. நான் கனவிலும் நினைக்க முடியாத அளவில் அவை அவதூறுகளைத் தாங்கியுள்ளன. முதலில் முகமூடி அவர்களின் பதிவுகளில் அவை ஆரம்பித்தன. இப்போது குமரேஸின் பதிவிலும் அவை தொடர்ந்துள்ளன. இன்னும் எங்கெல்லாம் அவை வரப்போகின்றன என்பது புரியவில்லை. ஆகவே என் பெயரைக் காத்து கொள்ள இப்பதிவினை ஆரம்பித்துள்ளேன். நான் எங்கு என்ன பின்னூட்டமிட்டாலும் இங்கும் அப்பின்னூட்டத்தை இடுவேன்.

ரோஸ வசந்த் அவர்களுக்கும் இம்மாதிரியே நடந்தது. அதற்கு எதிராக அவர் செய்ததையே செய்வது என்று தீர்மானித்துள்ளேன். இப்போது என் பெயரைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் என்னுடைய இப்பதிவிலும் என் பெயரில் பின்னூட்ட்மிடலாம். அவை உடனடியாக அழிக்கப்படும். ஏதோ என்னால் முடிந்ததை செய்யலாம் என்று உத்தேசம்.

நண்பர்களே, உங்களில் பலருக்கு என் மேல் கோபம் இருக்கலாம். இருப்பினும் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது சம்பந்தமாகக் கடைசியாக குமரேஸ் அவர்கள் பதிவில் இது சம்பந்தமாக வந்தவை இதோ:

(http://kumaraess.blogspot.com/2005/05/blog-post_21.html)

At Saturday, May 21, 2005 6:48:54 PM, Dondu said…

[[கமல் "திருமணம் என்கிற சடங்கிலேயே உடன்பாடில்லைனு சொன்ன...." தில் மிகவும் கோபமடைந்த இரசிகர்களில் நானும் ஒருவன்.]]

கல்யாணம் செய்தால் கழட்டி விடுவது ரொம்ப கஷ்டம். கோர்ட் படியேறி வக்கீல், வாய்தா என்று அலைய வேண்டும். பின்னர் ஜீவனாம்சம் என்ற தொந்தரவு வேறு உண்டு. கல்யாணம் செய்யாமல் என்றால் சிம்ரனைக் கூப்பிட்டோமா உறை போட்டு அடிச்சோமா, அபிராமியைக் கூப்பிட்டோமா.. அந்த நாள் கணக்கு பார்த்து செஞ்சோமா, கெளதமியைக் கூப்பிட்டோமா காப்பர்டீ மாட்டி செஞ்சோமா என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு பாணியில் சென்று விடும். இதுகூடத் தெரியாத மண்டுவாக இருக்கிறீர்களே?


At Wednesday, May 25, 2005 2:16:24 PM, அன்பு said…

டோண்டு-சார் சும்மா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...!?


At Wednesday, May 25, 2005 3:02:26 PM, Dondu said…

This is getting more and more ridiculous. The 4th comment above is given in my name after creating a new blogger identity. It leads to http://bramin.blogspot.com
If you click the blog title in that URL, it leads to my regular blog.
I am sure I saw some other name when I saw this comment sometime back.
This is a sure way of destroying the trust in the blogging world.
I can only hope that this madness will stop.
By the way, my original blogger number is 4800161, whereas the number of the misleading blogger is 9267865. I request the fellow bloggers to remember that such a thing can happen to anybody else.
Regards,
N.Raghavan

At Wednesday, May 25, 2005 3:06:59 PM, Dondu said…
The same thing has happened in Mugamoodi's two blogs as well. Some mad fellow is at large. I reproduce Mugamoodi's comments in this connection in http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_18.html
"யாருக்குமே தெரியாது என்றாலும் நீ என்ன சிந்திப்பாய், என்ன செய்வாய் என்பதுதான் நீ 'உண்மையிலேயே' யார் என்பதை கண்டுபிடிக்க எளிய வழி என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். நகைச்சுவையாக எழுதப்பட்ட பதிவு இது. சம்பந்தமே இல்லாமல் ஒரு தனி மனிதனை பற்றி கேவலமாக பின்னூட்டம் இட்டு துர்வாசர் என்பவர் திசைதிருப்பும் வேலையை ஆரம்பித்தார். பின்பு பாப்பான் என்ற பெயரிலும் அதனை தொடர்ந்தார். அது hackingல் முடிந்திருக்கிறது... துர்வாசர் இப்பொழுது தன் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருப்பார்.... வெற்றிக்களிப்பில் குதூகலமாக சிரித்துக்கொண்டிருக்கலாம்... துர்வாசர் உங்கள் வீட்டில் கண்ணாடி இருந்தால் அதன் முன் நின்று சிரித்துப்பாருங்கள்.... பெருமையக இருக்கிறதா... எனில் உங்களுக்கு உடனடி தேவை ஒரு மாறுதலான வாழ்க்கை முறை... அட்லீஸ்ட் சிறிது காலத்துக்காவது... குழந்தைகளின் சிரிப்பை ரசிக்கப்பாருங்கள்... காலையில் முடிந்தால் கடற்கரை பக்கம் போய் வாருங்கள்... நகைச்சுவை படங்கள் பாருங்கள்... கண்ணியை ஒரு வாரத்துக்கு மூட்டை கட்டி வையுங்கள்... நீங்கள் தற்போது பார்க்கும் வேலையில் ஒரு படி முன்னேற உங்கள் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்துங்கள்.... எல்லா குற்றவாளியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் குற்றத்தை ஆரம்பிக்கிறார்கள். கண்டுபிடிக்காத குற்றங்களின் விழுக்காடு மிக மிக குறைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்... ஒருவரை துன்பப்படுத்தி அதன் மூலம் மகிழ்ச்சி கொள்ளும் sickest mentality (ஸாடிஸ்ட் மனோபாவம்) மனிதனை மனிதன் என்ற நிலையில் இருந்து கீழிக்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... என் திருப்திக்காக இதையெல்லாம் சொன்னேன்.... சிந்தித்துப்பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் நோயின் தீவிரத்தை பொறுத்தது.

illegitimate பின்னூட்டங்கள் அனைத்தையும் அழித்துவிட்டேன்... எதிர்கால தேவையை மனதில் கொண்டு linkஐ அழிக்கவில்லை. பின்னூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பபற்று இருப்பது நெருடலாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது."

அன்புடன்,
டோண்டு ராகவன்

529 comments:

«Oldest   ‹Older   201 – 400 of 529   Newer›   Newest»
dondu(#11168674346665545885) said...

The comment below was posted by me in Arokkiyam's blog vide http://ennamopo.blogspot.com/2005/06/blog-post_27.html#comments
இதில் என்ன குழப்பம் ஆரோக்கியம் அவர்களே? நல்லடியாரின் ப்ளாக்கர் எண் http://www.blogger.com/profile/8617727 ஆனால் இங்கிருக்கும் நல்லடியாரின் எண் அது அல்ல. (அது http://www.blogger.com/profile/10318125)

எலிக்குட்டியை நீங்கள் பார்க்கும் ப்ளாக்கர் பெயரைன் மேல் வைத்து பார்த்தால் தெரிந்து போகிறது.

மற்றப்படி நீங்கள் எழுதிய இப்பதிவின் கருத்துடன் ஒத்து போகிறேன்.

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப் பதிவிலும் நகலிடப்படும். பார்க்க:

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

The following comment was posted in Neyveli Vichu's blog vide http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_112007358705167310.html#comments
போலி டோண்டுவால் ஒரு நல்ல காரியம் நடக்கிறது. அதாவது ஒவ்வொரு வலைப்பதிவராக தத்தம் வலைப்பூவில் அனானிப் பின்னூட்ட வசதியை செயலிழக்கச் செய்து வருகிறார்கள். இப்பதிவரும் அவ்வாறே செய்வார் என நினைக்கிறேன். நல்லதுதானே, நடக்கட்டும். இப்பதிவில் போட்டொ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் போட்டோவுடனே பின்னூட்டம் வரும். ஒரு போதும் டோண்டு ராகவன் "வேறு" வழியாக உள்ளே வர மாட்டான் என்பது தெரிந்ததே (தினத் தந்தி?).

வழக்கம் போல இப்பின்னூட்டமும் என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்fடு ராகவன்

dondu(#11168674346665545885) said...

The following comment was posted in Neyveli Vichu's blog vide http://manikoondu.blogspot.com/2005/06/blog-post_27.html#comments

It seems that you have just now disabled the anonymous comments after the last comment by Poli Dondu. Was it the last straw?

போலி டோண்டுவால் ஒரு நல்ல காரியம் நடக்கிறது. அதாவது ஒவ்வொரு வலைப்பதிவராக தத்தம் வலைப்பூவில் அனானிப் பின்னூட்ட வசதியை செயலிழக்கச் செய்து வருகிறார்கள். இப்பதிவரும் அவ்வாறே செய்வார் என நினைக்கிறேன். நல்லதுதானே, நடக்கட்டும். இப்பதிவில் போட்டொ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் போட்டோவுடனே பின்னூட்டம் வரும். ஒரு போதும் டோண்டு ராகவன் "வேறு" வழியாக உள்ளே வர மாட்டான் என்பது தெரிந்ததே (தினத் தந்தி?).

வழக்கம் போல இப்பின்னூட்டமும் என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்fடு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Karikalan's blog vide http://karikaalan.blogspot.com/2005/06/blog-post_29.html
போலி டோண்டுவின் முட்டாள்தனம் அளவுக்கதிகமாகப் போகிறது. அவர் எழுதுகிறார். "எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்"

வைத்து பாருங்கள். அவர் குட்டு வெளிப்படும். இம்மாதிரி என் படத்தையும் நகலெடுப்பார் என எதிர்பார்த்தேன். இப்போது சக வலைபதிவர்கள் எலிக்குட்டியின் உபயோகத்தையே நாட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

மேலும் இப்பின்னூட்டம் என் தனிப்பதிவிலும் நகலிடப்படும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Halwacity's blog vide http://halwacity.blogspot.com/2005/06/blog-post_29.html#comments
போலி டோண்டுவின் முட்டாள்தனம் அளவுக்கதிகமாகப் போகிறது. அவர் எழுதுகிறார். "எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்"

வைத்து பாருங்கள். அவர் குட்டு வெளிப்படும். இம்மாதிரி என் படத்தையும் நகலெடுப்பார் என எதிர்பார்த்தேன். இப்போது சக வலைபதிவர்கள் எலிக்குட்டியின் உபயோகத்தையே நாட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

மேலும் இப்பின்னூட்டம் என் தனிப்பதிவிலும் நகலிடப்படும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted in Manikoondu's blog vide http://manikoondu.blogspot.com/2005/06/blog-post_27.html#comments
"டோண்டு சார், இதற்கெல்லாம் எதற்கு நன்றி சொல்கிறீர்கள். ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்து இருக்கிறீர்களே.. அது ஒன்று போதாதா..?? :-)"

மறுபடியும் தவறு செய்து விட்டீர்களே மூக்கு சுந்தர் அவர்களே. எலிக்குட்டியை வைத்து பார்த்து விட்டு எழுதியது நான்தானா என்று ஏன் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். என்னைப் பற்றி இவ்வளவு தவறான அபிப்பிராயம் ஏன் மூக்கு சுந்தர் அவர்களே? டோண்டு அவ்வாறு பேசக் கூடியவர் என்று வேறு சப்பை கட்டு கட்டுவீர்கள். நான் கூறுவேன் நீங்கள் அவசரக்காரர் என்று. அருணிடம் கோபித்து கொண்டு பிரயோசனம் இல்லை. முதலில் உங்கள் அளவில் சரியாக பார்த்து எழுதவும் என்று நான் கேட்டு கொள்கிறேன்.

வழக்கம் போல இப்பின்னூட்டமும் என் தனிப்பதிவில் வரும். http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Vichu's blog vide http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_112010340546883258.html#comments
விச்சு அவர்களே, மேலே என் பெயர் மற்றும் போட்டோவுடன் வந்தப் பின்னூட்டம் நான் எழுதியதல்ல. போலி டோண்டு எழுதியது. எலிக்குட்டியை அவர் பெயரின் மேல் வைத்து பார்த்தல் உண்மை தெரிந்து விடும்.

வழக்கமாக என் பதிவு என் தனிப்பதிவில் வரும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

என்னுடைய இப்போதையப் பதிவையும் பார்க்கவும் http://dondu.blogspot.com/2005/06/blog-post_30.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
That person has opened a new blog with my user name and copy pasted my profile and photo.

dondu(#11168674346665545885) said...

The comment below was posted by me in Ramesh's blog vide http://abithacharan.blogspot.com/2005/07/7.html
யோம் கிப்பூர் யுத்தம் முதலில் இஸ்ரேலுக்கு பாதகமாக இருந்தாலும் மனம் தளறாத இஸ்ரவேலர்கள் எகிப்துக்கும் சிரியாவுக்கும் கடைசியில் தோல்வியையே அளித்தனர். நாட்டு நலன் என்று வரும்போது விட்டுக்கொடுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இஸ்ரேலியர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தனர். ஏரியல் ஷரோன் ஆறிய பணி விலை மதிக்கமுடியாதது.

நல்ல பதிவுக்கு பாராட்டுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

The comment below was posted by me in Sri Rangan's blog vide http://srisagajan.blogspot.com/2005/06/blog-post_30.html#comments

(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

நன்றி ஈழநாதன்அவர்களே.

Pooli Dondu ist jetzt ganz offen gewesen. Er hat Sie dazu eingeladen, die Mouseover über die jeweilige Blogger-ID auszuführen und zu kontrollieren, ob es sich dabei um den echten Dondu handelt.
dessen ID. Nr. 4800161 ist. Seine ID-Nummer ist aber 10214825.
Dabei hofft er, daß wahrscheinlich keiner das wirklich macht. Er hat diesmal bloß recht gehabt.
Grüße,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Karupy's blog vide http://karupu.blogspot.com/2005/06/blog-post_30.html#comments

Hello pretty young lady, have a great holiday.
Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Mayavarathan's blog vide http://mayavarathaan.blogspot.com/2005/07/blog-post_03.html#comments
வெற்றிகரமான ஓராண்டு செயல்பாட்டிற்கு வாழ்த்துக்கள், என் இனிய நண்பரே. இணையத்தின் மூலம் உங்கள் நட்பு கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

The comment below was posted by me in Mugamoodi's blog vide http://mugamoodi.blogspot.com/2005/07/10.html#comments
"உங்களுக்காவது வெளில சொல்லி மனச தேத்திக்க முடியுது... சொல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம புழுங்கிகிட்டே சேது சமுத்திர திட்டத்துல யாரோ மனம் கலங்கியிருந்தாங்களாமே..."

தமிழ் நாட்டிலிருந்து சென்ற மந்திரிகளுள் டி.ஆர். பாலுவைப் புகழ்ந்து அம்மா கருணாநிதி அவர்கள் வயிற்றில் ஒரு தடவை புளியைக் கரைத்தாரே, நினைவுக்கு வருகிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Abu Muhai's blog vide http://abumuhai.blogspot.com/2005/06/blog-post_30.html
மல்லிகா யாஸ்மின் அவர்களே, இம்ரானா அவர் கணவருடன் வாழக்கூடாது என்றளிக்கப்பட்ட தீர்ப்பு சரியா? அவர் தன் கணவனுடன் வாழக்கூடாது என்று கூற பஞ்சாயத்துக்கு என்ன உரிமை? அதாவது திருமணமானப் பெண்ணை ஒருவன் வன்புணர்ச்சி செய்தால் அவள் திருமணம் செல்லாததாக ஆகி விடுமா? என்ன இதெல்லாம்?

உங்கள் பெயரிலிருந்து நீங்கள் பெண் என்று ஊகிக்கிறேன். அப்படியில்லையென்றாலும் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். இங்கு நீங்கள் பெண்ணா இல்லையா என்பது பற்றி ஏன் கேட்டேன் என்றால் பலருக்கு இஸ்லாமியத் திருமண சட்டங்கள் பெண்களுக்கெதிராகவே உள்ளது என்று தோன்றுகிறது. ஆகவே கேட்டேன், தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

மாமனாருக்கு கல்லடி தண்டனையும் குறைவுதான் என்பது என் தனிப்பட்டக் கருத்து என்பதையும் இங்கே கூறி விடுகிறேன்.

மற்றப்படி தலாக்கிலிருந்து ஆரம்பித்து ஒரு ஆண் சாட்சிக்கு இரு பெண் சாட்சிக் கணக்குகள் எல்லாமே பெண்களுக்கெதிரானதாகத்தான் தோன்றுகின்றன என்பதையும் நான் கூறி விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Singai Murasu blog vide http://singaimurasu.blogspot.com/2005/07/blog-post_06.html#comments
"ஆனால் இதை பற்றி எழுத்தும் போது ஒரு தனி மனிதனை குறி வைத்து திட்டுவதும் அவர் தன் இனம் தான் உயர்ந்தது என்று கூறி கொள்கிறார் என்பதற்காக அந்த இனத்தையே ஒட்டு மொத்தமாக திட்டி, அவர் என்னவோ அந்த இனத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் கடவுளா என்ன? அப்படிச் அவர் சொல்வது அவரின் தனிப்பட்டக் கருத்தாக இருக்கலாம்."

நீங்கள் குறிப்பிட்ட நபர் நான்தான். ஆகவே நான் உண்மையில் என்ன கூறினேன், அதை எந்தச் சூழ்நிலையில் கூறினேன் என்பதை இங்கு கூறுகிறேன், முடிவு உங்கள் கையில்.

என் ஜாதிதான் உயர்ந்தது என்று நான் எப்போதுமே கூறவில்லை. உண்மை நிலை என்னவென்றால் பார்ப்பனர்கள் நிலை தமிழகத்தில் கேவலமாக இருப்பதால் பல பார்ப்பனர்கள் தங்கள் வேர்களை மறைத்து வாழ்கின்றனர். அவர்களில் சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று பார்ப்பனர்களை மற்றவர்களை விட அதிகம் தாக்குகின்றனர். இந்த நிலையில் நான்முன் வந்து என் பார்ப்பன வேரைக் கூறிக் கொண்டு அதில் பெருமை அடைகிறேன் என்றும் கூறியதை ஒரு சவாலாகத்தான் செய்தேன். கல் வீச்சுக்கள் வரும் என்றாலும் அதை செய்தேன். அதை செய்ததற்காக வருத்தப்படவில்லை.

இவற்ரையெல்லாம் "சில வெளிப்படையான எண்ணங்கள்" என்றப் பதிவில் என் வலைப்பூவில் ஏப்ரல் இரண்டாம் தேதி 2005-ல் எழுதினேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/04/blog-post.html

இப்பதிவுக்கு வந்த பின்னூட்டங்களையும் பாருங்கள். எவ்வளவு கண்ணியமாக விவாதங்கள் நடந்தன என்று. ஆனால் ஒருவர் மட்டும் என்னை விட்டாது பின் தொடர்ந்தார். நான் எதைப்பற்றி, யாரைப் பற்றி எழுத வேண்டும் என்றெல்லாம் உபதேசம் செய்ய ஆரம்பித்தார். அவருடன் எனக்கு ஏற்பாட்ட கருத்து மோதல்கள் தமிழ்மணத்தில் எல்லோருக்கும் தெரியும். பிறகு என் பெயரில் போலி பின்னூட்டங்கள் வந்தன இதுவும் எல்லோரும் அறிவர். இப்போதைக்கு அவ்வளவுதான் கூற முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Kasi's blog vide http://kasi.thamizmanam.com/?item=199&comment=1900#comment1900
அன்பு காசி,

இத்தனை நாட்களாய் காசி காசி என்று வெறுமனே வாசித்து வந்த நான் காசியை நேரில் சந்தித்து பேசிப் பேசி, யோசி, யோசி என்று பல விஷயங்களை நேற்று மாலை யோசித்ததில் தெளிவு பிறந்து, பாசி, பாசி என்று மூடிக் கிடந்த சில புரிதல் இல்லாமைகளும் விலகின. நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

The comment below was posted by me in Nalladiyar's blog vide http://athusari.blogspot.com/2005/07/blog-post_09.html#comments

It is so easy. The arbitrator brought in his own camel. Total number of canmels is 17+1=18. The first son had half of camels, that is 9, the second son had one third, that is 6 and the third son had one ninth that is 2. 9+6+2=17. The remaining camel the arbitrator took back. OK?

By the way Mr. Nalladiyar, what is your opinion about me as a Hindu blogger?

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Aruna's blog vide http://aruna52.blogspot.com/2005/07/blog-post_11.html#comments
உங்கள் கவலை நியாயமானது அருணா அவர்களே. நீங்கள் குறிப்பிட்ட மீட்டிங்க் காசி அவர்கள் வந்த சந்திப்புதானே? அதற்கு என்னால் வர முடியாததால் அதற்கு முந்தைய நாளே நான் காசி அவர்களை அவர் அறைக்கு சென்று சந்திது பேசினேன்.

உங்கள் பதிவு ஒன்றில் அந்த கீழ்த்தரமான நபர் என் பெயரில் பின்னூட்டம் இட்டு சென்றதை நான் எடுத்து கூறினேன். உடனே நீங்கள் அனாமத்து பின்னூட்டங்களிடும் வசதியை நீக்கினீர்கள் அல்லவா?

அவ்வாறு பின்னூட்டம் இடும் நபர் யார் என்பதை நீங்கள் இதற்குள் ஊகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அவர் தன் சொந்தப் பதிவில் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல எழுதி வருவதற்கு பின்னூட்டம் இடாமல் புறக்கணித்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Aruna's blog vide http://aruna52.blogspot.com/2005/07/blog-post_11.html#comments

I am distressed to note that the person in question has already attacked you. When I was writing my comments, I did not see those comments in my screen. Perhaps it was a cached view I was having. I saw them only after my posting.

It is precisely because of this fear that many people choose to keep aloof or even give conciliatory comments in the topics posted by the concerned trouble maker.

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Kanchi Films blog vide http://kanchifilms.blogspot.com/2005/07/blog-post_09.html#comments

காஞ்சி பிலிம்ஸ் அவர்களே,

பெரியாரின் கருத்துக்களை பிரெஞ்சு மொழியில் அளிப்பது என்பது நல்ல முயற்சியே. ஆனால் ஒன்று. மொழிபெயர்ப்பை இத்தருணத்தில் பிரெஞ்சைத் தாய் மொழியாகக் கொண்டவர்களே செய்ய வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் அக்கருத்துக்கள் ஆங்கிலத்தில் சரியாக வந்திருக்கின்றனவா என சரி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ் நன்கறிந்த பிரெஞ்சுக்காரர் கிடைப்பது கஷ்டம்.

இத்தருணத்தில் நான் ஒன்றைக் கூற விரும்புவேன். "தலித் இன் ரிவர்ஸ்" பிரெஞ்சில் மிகத் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி அப்போதே ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

இன்னொன்றையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். மொழிபெயர்ப்பு என்பது மலிவான சேவை அல்ல. சரியான விலை கொடுக்கத் தயாராக இருக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

The following comment was posted by me in ராமச்சந்திரன் உஷா's blog vide http://nunippul.blogspot.com/2005/07/blog-post_112114101310373341.html

ராமச்சந்திரன் உஷா அவர்களே,

கடந்த சில நாட்கள் மௌனமாக இருந்தேன். இப்போது அந்த மௌனத்தை கலைக்கிறேன்.

யதார்த்தமாக என்ன எழுதினாலும் அதற்கு சாதி வர்ணம் கொடுத்தால் என்ன செய்வது? வெங்கடேஷ் அவர்கள் தனக்கு கமல் பிடிக்கும் என்றும் அவருக்கு வாரிசாக அரவிந்தசாமியையும் மாதவனையும் பார்ப்பதாக தன்னுடைய ஒரு பதிவில் கூறியதும் அவர்கள் பார்ப்பனர்கள் என்றதால்தானே அப்படி என்று குதித்தவர்களில் முக்கியமானவர் மூர்த்தி அவர்கள். அங்கும் தன் சொந்தப் பெயரில் இல்லாது வழிப்போக்கன் என்ற பெயரிலேயே வந்தார்.

உண்மையை கூறப்போனால் கமல் தன்னுடைய பார்ப்பன வேர்களை மறுத்து தன்னை தி.க.வாகக் காட்டி கொள்கிறவர். வெங்கடேஷ் சாதி பார்ப்பவராயிருந்தால் அதற்காகவே அவரை எதிர்த்திருக்க வேண்டும் என்று கூறிய என்னிடம் நான் வடகலையா தென்கலையா என்று கேட்டவர் மூர்த்தி. நான்தான் வெளிப்படையாக பேசுபவன் ஆயிற்றே. உண்மையை கூற பிறகு என்னமோ நான்தான் அதை த்ன்னிச்சையாகக் கூறினேன் என்று சொல்லித் திரிந்தவர் மூர்த்தி.

என் "சில வெளிப்படையான எண்ணங்கள்" பதிவு எந்த சூழ்னிலையில் எழுதப்பட்டது என்பதை நீங்கள் அந்தப் பதிவை படித்தாலே புரிந்து கொள்ளலாம். பார்க்க: http://dondu.blogspot.com/2005/04/blog-post.html

இப்போதிருக்கும் பிரச்சினை வேர் விட்ட என் பதிவு "இரண்டு செய்திகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை". அங்கு மூர்த்தியாக வந்து பின்னூட்டமிட்டு விலகினார். பிறகு துர்வாசர் என்பவர் வந்தார். காது கொடுத்து கேட்க முடியாத வசவுகளைப் பொழிந்தார். See: http://dondu.blogspot.com/2005/04/blog-post_30.html

முகமூடியின் பதிவில் மூர்த்தி அவர்கள் தன் சொந்தப் பெயரின் கீழே எழுதியது இதோ: (பார்க்க: http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_18.html)


@ May 22, 2005 8:21 PM க்கு நம்ம Moorthi சொல்றது என்னன்னா:
//பயத்திலே இங்கே யாரோ என்னவோ ஒளருற மாதிரியில்ல இருக்கு. யாருப்பா அது வீராதி வீரர்?//

பார்ப்பன ஆதரவாளரே... யாருக்கு பயம் என்பதை தெளிவு படுத்தவும்.

//சரியா சொன்னீங்க KVR அண்ணாச்சி, ஆனா உங்க ஊரிலே மட்டுமில்லே எங்க ஊரிலேயும் அப்படிதான் சொல்லுவாங்க தெரியுமா?//

"உன் அப்பன் குதிருக்குள் இருந்தாலும் சரி.. டோண்டு வீட்டுக்குள் இருந்தாலும் சரி. அது எனது பிரச்னை இல்லை. நான் என் நிலையை தெளிவு படுத்தி விட்டேன். மேற்கொண்டு ஆகவேண்டியதை தாங்கள் கவனிக்கவும்."

தான் எதிர்ப்பவரின் தாயை இதைவிட ஒருவர் கேவலமாக கூறிவிட முடியுமா? இதுதான் மூர்த்தி அவர்களின் தரம். இப்போது கூட தன் சொந்தப் பதிவில் அவருக்கு எதிராக எழுதியவர்களையெல்லாம் "அந்த வெறியரின் மகன்கள் பின்னூட்டமிட்டு சென்றனர்" என்ற ரேஞ்சில்தான் எழுதி வருகிறார்.

ஒருவர் எழுதும் முறையிலிருந்து அவரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமா? மூர்த்தி யாகூ சேட்டுகளில் எவ்வளவு அசிங்கமாக எழுதக் கூடியவர் என்பது சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக உணர்ந்து கொண்டிருப்பார்கள். எஸ்.கே. அவர்கள் என் பதிவில் குறிப்பிட்டது இதோ:

"இப்போதுதான் புரிகிறது. இன்று காலை திடீரென்று மூர்த்தி யாஹூவில் தோன்றி, "நீங்கள்தானா அது" என்று கோபமாகக் கேட்டார். மேலும் எனக்கு "உதவிப் பார்ப்பன வெறியர்" போன்றதொரு பட்டம் வேறு அளித்தார்! (தலைமைப் பதவி உங்களுக்குத்தான்!). எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பதிவுகளையும் அவற்றின் அலைஅலையான பின்னூட்டங்களையும் நான் படிக்கவில்லை. (அதையெல்லாம் வாசித்து முடிக்க நான் இரண்டு நாள் ஸி.எல் போடவேண்டியிருக்கும் என்பதால் நான் நெருங்குவதில்லை)

அது போகட்டும். மூர்த்தி உங்களுக்கு செய்திருக்கும் அர்ச்சனைகளை உங்கள் பதிவில் எல்லோருடைய பார்வைக்கும் வையுங்களேன். உங்கள் பிறப்புறுப்பையும், மற்றும் குடும்பத்தினரையும் இழுத்து எவ்வளவு கீழ்த்தரமாக ஒரு மனிதர் எழுத இயலும் என்று இன்னமும் அவருக்கு தார்மீக ஆதரவு அளித்துவரும் சிலர் புரிந்து கொள்ளட்டும்.

முன்பு ஒரு முறை திருமலை அவர்களை நோக்கி இவர் யாஹூவில் அழைப்பு விடுத்தார். உடனே பதிலுரைக்கவில்லை என்று கோபம் கொண்டு, "ஏய், நீ என்ன பெரிய பருப்போ?" என்றும், இன்னும் சில "முத்தமிழ்ச்" சொற்களிலும் வசை பாடத்தொடங்கினாராம். திருமலை என்னிடம் "பருப்பு" என்ற சொல்லுக்கு இந்த context-ல் பொருள் கேட்டார். உடனே நான் ஒரு "பருப்புக்குப் பொருளுரைத்த பண்டித"ரானேன்! :)" (பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html)

இதையெல்லாம் எழுதியதற்காக என் பதிவுகளில் மறுபடி தன் "செந்தமிழ்" அர்ச்சனைகளை ஆரம்பிக்கலாம். என் பெயரில் எல்லா பதிவுகளிலும் சென்று அசிங்கமாகப் பின்னூட்டமிடலாம். அதற்காகவெல்லாம் நான் கவலைப்பட்ட காலம் மலையேறி விட்டது. எனக்கு ஆதரவாகப் பேசிய மாயவரத்தான், விஜய், லாடு லபக்தாசு, ஈழநாதன் ஆகியவர் திட்டு வாங்கும் போது நான் மட்டும் பின்புலத்தில் இருந்து தப்பிப்பது கோழைத்தனம். அதுவும் அருணா அவர்கள் பதிவில் எழுதப்பட்டதை பார்க்கும் போது என் ரத்தம் கொதித்தது.

கெட்டதிலும் நல்லது என்பது போல அவராகவே வாயைத் திறந்து பிரச்சினையை வெளியில் கொண்டு வந்ததது என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருள் என்றுதான் கூற வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Tamilsolai's blog vide http://tamilsolai.blogspot.com/2005/07/blog-post_11.html#comments

"A melancholy comeddy" and the cruel death of Pyramus and Thisbe was the name of thje play staged within the Shakespearean play "A mid-summer night's dream".

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Ravi Srinivas's blog vide http://ravisrinivas.blogspot.com/2005/07/blog-post_112110833886656509.html#comments

Dear Gajendrapalan,

Don't worry. I have copy pasted these comments in a Word file along with all the references. If you want I can send the same to you per email as attachment.

And I saw all the comments in the blog of Usha Ramachandran as referred to by you here.

Regards,
N.Raghavan

dondu(#11168674346665545885) said...

The following comments were posted by me in Mayavaraththaan's blog vide http://mayavarathaan.blogspot.com/2005/07/blog-post_11.html#comments
பாராட்டுகள் மாயவரத்தான். நுணலும் தன் வாயால் கெட்டது உஷா அவர்களின் பதிவில். வாலி அவர்கள் துணிந்து கட்டியை உடைத்து அறுவை சிகிச்சை செய்து விட்டார். அவர் யாராயிருந்தாலும் வாழ்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Eramu's blog vide http://vembanattukkaayal.blogspot.com/2005/07/blog-post_13.html#comments
சந்தேகமே வேண்டாம் இரா. முருகன் அவர்களே. நம் தமிழ்மணம் வாசகர்கள் விவரமானவர்கள். வெகு சில நாட்களாக எழுதிக் கொண்டு வரும் என் நடையையே தெரிந்து கொண்டு போலி டோண்டுவை புறக்கணித்தவர்கள் அவர்கள். போலி மத்தளராயன் நடைதான் வெகு தூரத்திலேயே அறியப்படுகிறதே. அந்த நடையை இரா.மு. வுடன் சம்பந்தப்படுத்த யாரும் துணிய மாட்டார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Elle's blog vide http://losangelesram.blogspot.com/2005/07/blog-post_112121775460045044.html#comments

இந்த ரயிலை வைத்துத்தானே "ஒரு தலை ராகம்" படம் சமீபத்தில் 1980-ல் வந்தது? அதை மறந்து விட்டீர்களே எல்லே இளங்கிளியே. வண்டி சிக்னலுக்காக நிற்கும்போது ஒரு டான்ஸுடன் கூடியப் பாட்டு வேறு அந்த படத்தில் இருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in G.Raghavan's blog vide http://gragavan.blogspot.com/2005/07/blog-post.html#comments

திருவெம்பாவையின் அழகிய வரிகளை தயவு செய்து மாற்றாதீர்கள். வினோத ரச மஞ்சரி என்ற ஒரு தமிழ் வெளியீடு 1800-களில் வந்தது. அதில் காளமேகப் புலவரைப் பற்றிய இந்தக் கதை வந்தது. இவ்வரிகளைப் பாடிய அப்பெண் தன்னையறியாமல் தலை குனிய அவள் தோழியர் அவளை இடித்துரைக்கின்றனர். அதன் பிறகுதான் கதையில் திருப்பமே வருகிறது. வைணவன் சைவனாகிறான்.

இவ்வரிகளையும் ஒரு ஹைப்பெர்லிங்க் என்று நான் கூறினால் நண்பர்கள் உதைக்க வருவார்கள். ஆகவே ஓட்றா டோண்டு.

ஆகவே தலைப்பை மாற்றாதீர்கள் ராகவன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Ellee's blog vide http://losangelesram.blogspot.com/2005/07/blog-post_112121775460045044.html#comments

என்னது? ஒரு தலை ராகம் படம் பார்க்கவில்லையா? அப்புறம் நீங்கள் மாயவரக்காரர் என்று எப்படி சொல்லிக் கொள்கிறீர்கள்? முதலில் எங்காவது சி.டி. கிடைத்தால் பார்க்கவும். அருமையான பாட்டுகள், காட்சிகள் - அதுவும் இந்த ரயிலை வைத்து. அதைப் பார்த்தால் அதற்காகவே ஒரு தனி பதிவு போடுவீர்கள் எல்லே அவர்கெல்லே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Cithan's blog vide http://ciththan.blogspot.com/2005/07/blog-post.html

தலித்து சகோதரர்களே, பொறுத்தது போதும். பொங்கி எழுங்கள். மற்றவர்களை நம்பாதீர்கள். முக்கியமாக அரசியல் வாதிகளை நம்பாதீர்கள். பொருளாதார சுதந்திரம் வந்தால்தான் நீங்கள் முன்னேற முடியும். உங்களைப் போலவே ஒடுக்கப்பட்டு வந்த நாடார்கள் தங்கள் சுய முயற்சியால் முன்னேறி இப்போது மற்றவர்கள் அவர்களுக்கு மரியாதை செய்யும் நிலையில் உள்ளனர்.

இரட்டை தம்ளர் வைத்திருக்கும் டீக்கடைகளை புறக்கணியுங்கள். பணமும் கொடுத்து அவமானமும் பெற வேண்டும் என்று என்ன தலையெழுத்து? எப்படியாவது உங்கள் குழந்தைகளைப் படிக்க வையுங்கள்.கேரள சகோதரர்களைப் பாருங்கள். ஒருவர் நகரத்துக்கு சென்று வேலையில் அமர்ந்ததும் சகமலையாளிகளை ஒவ்வொருவராக பக்கத்தில் வேலைகளில் நுழைத்து விடுகின்றனர். அவ்வாறு வருபவர்களும் தங்கள் உழைப்பை கொடுத்து நல்ல பெயர் பெற்று மற்றும் பலரை வரவழைக்கின்றனர். அதுதான் நீங்கள் செயல்பட வேண்டிய முறை. எப்படியாவது நகரங்களுக்கு வரப் பாருங்கள். அங்கு தீண்டாமை இல்லை. அடுத்த வீட்டில் யார் இருக்கின்றனர் என்பதுகூட தெரியாத வாழ்க்கை முறை. தீண்டாமை பார்க்க நேரம் கூட இல்லை. அதுவே உங்களுக்கு பாதுகாப்பு.

போராடுங்கள். நீங்கள் இழப்பதற்கு கால் சங்கிலிகளைத் தவிர வேறு எதுவும் இல்லை.

உழைப்பே வெற்றி தரும், ஆனால் அது உங்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பதாக இருக்க வேண்டும். உங்களுக்கு தேவை உங்களுடன் சேர்ந்து போராடும் உங்கள் தலைவர்கள். அவர்கள் உங்களிடமிருந்துதான் வர முடியும்.

தனியாக டீக்கடை வைத்துக்கொள்ள யோசனையை பலர் எள்ளி நகையாடினர். இப்போதும் கூறுவேன். டீக்கடை ஏன் வைக்க முடியாது என்பதற்கு ஆயிரமோ அதற்கு மேலோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் தலித்துகளின் சுயமரியாதைக்கு அது முதல் படி. இந்த எல்லா காரணங்களையும் மீறி எப்படி அவற்றை செயல்படுத்துவது என்பது பற்றித்தான் யோசிக்க வேண்டும். தேவை போராட்டம் மற்றும் முன்னேற்றம். அவற்றை கவனியுங்கள். திசைதிருப்பப்படாமல் இருங்கள் என்றுதான் நான் தலித் சகோதரர்களை வேண்டுவது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Karuppi's blog vide http://karupu.blogspot.com/2005/03/blog-post_28.html#comments
கிட்டத்தட்ட கடந்த ஐந்து மாதங்களாக அவஸ்தையில் இருந்திருக்கிறேன். எதேச்சையாக இப்போதுதான் நீங்கள் முதலிலேயே கொடுக்கத் தவறிய குறிப்பை படித்தேன். மனம் அமைதியடைந்தது. அது வரை இது ஏதோ உங்களுக்கு நிஜமாகவே உண்டான பாதிப்பு என்றே என் மனதில் பதிந்திருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Rajni Ramki's post vide http://rajniramki.blogspot.com/2005/07/blog-post_13.html#comments

என்ன கூறுகிறீர்கள் கறுப்பி அவர்களே? உஷா பதிவு போடத்தான் நிலைமையே கட்டுக்கு வந்தது? அவர்கள் பதிவை பாருங்கள். (31 பின்னூட்டங்கள்) ஆனால் கருத்து பெட்டியைத்தான் மூடி விட்டார்.

பார்க்க http://nunippul.blogspot.com/2005/07/blog-post_112114101310373341.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Chiththan's blog vide http://ciththan.blogspot.com/2005/07/blog-post.html

போலி டோண்டுவின் நிலைப்பாடு புரிந்து விட்டதலாவா? இப்பதிவில் அதர் ஆப்ஷன் இருப்பதால் என் பதிவு எண்ணுக்கு மேட்ச் செய்து பின்னூட்டம் தர முடியும். ஆனால் போட்டோ வராது. போட்டோ வரும் பின்னூட்டத்திலோ எலிக்குட்டி காண்பித்து கொடுத்து விடும். எது எப்படியாயினும் தலித்துகள் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டு போகட்டும் என்ற தன் நிலைப்பாட்டை இப்போது காண்பித்ததார் அவர். அந்த ஜாட்டானை விடுங்கள். தலித்துகளே உங்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு உழைக்கவும். இம்மாதிரி போலிகளிடம் ஏமாறாதீர்கள்.

வெற்றி உங்களுக்கே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in G.Ganesh's blog vide http://madhumithaa.blogspot.com/2005/07/blog-post_112131259234384813.html#comments

Hello Geetha,

What system are you using? If it is XP no problem. If it is something else, you require to change settings. Awaiting that you can do one thing. Download Suratha's converter fromhttp://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

You can save it to your hard disk as well for offline use.

But while you are reading the blogs, you must necessarily be online. Hence it will be better to put the above URL among your favorites. As soon as you start browsing, open this window too and keep it minimized.

For each blog, copy paste the squares and paste them in the top box in the Suratha converter. The bottom box will contain the text readable in Tamil Unicode. If you suspect that the squares are in Tiscii, press the appropriate button in the converter and proceed as before.

You can repeat the same for comments as well.

I had to do this when I was visiting my sister. I know what I am talking about and understand your frustration.

By the way, I am unable to get at your email id. Hence this reply here.

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

The following comment was posted by me in Karuppy's blog vide http://karupu.blogspot.com/2005/07/blog-post_112084367219926886.html#comments
Hello pretty young lady,

Glad to see that you have had a great holiday with great pictures to prove it.

It is nice to charge one's batteries now and then. The trick is to live the moment with the wonder that is always felt by a child out to investigate its surroundings.

As the inimitable P.B.Srinivas sings in Gemini Ganesan's voice in the film Vaazkkaip padagu" (screened recently in 1966)
"பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லையொரு துன்பமடா"

I am glad to see that you have come back with more vigor with a renewed zest for life.

God bless you and your family.

Regards,
Dondu Raghavan

15 July, 2005

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Karuppi's blog vide http://karupu.blogspot.com/2005/07/blog-post_15.html#comments

Hello pretty young lady,
So it is farewell? You will be missed by all.
Regarding the lines quoted by you:
1. "இளமைக் கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் - பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே"
From film "Hello Mr. Zamindar, screened 1965, starring Gemini Ganesan, Savitri, M.R.Radha et al. Story stolen from "If I were you" by P.G.Wodehouse.

2. "பூமியில் பிறப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் - ஜிக்கு ஜிக்கு ஜிக்கு
நிலவுக்கும் போய் வரலாம் - ஜிக்கு ஜிக்கு ஜிக்கு"
From film "Shanti Nilayam, starring Gemini Ganesan, Kanchana, Nagesh and others, screened 1969. Some scenes plagiarized from the film "Sound of Music".

Are you a fan of Gemini Ganesan? Well, I am.

Do try to keep in touch with Tamilmanam and all the best in your further endeavours.

Regards,
Dondu Raghavan

15 July, 2005

dondu(#11168674346665545885) said...

The following comment was posted by me in Selvaraj's blog vide http://selvaraj.weblogs.us/archives/151

"எனது நண்பர் ரமேஷ்குமார் அவர்கள் புது அவதாரமாக கஜேந்திரபாலனாக அவதரித்துள்ளார்கள். ஏற்கெனவே மாயவரத்தான் என்ற பெயரிலும் முகமூடி என்ற பெயரிலும் நான்தான் என்ற பெயரிலும் தகதிமிதா என்ற பெயரிலும் வாலி என்ற பெயரிலும் அவர்களிடம் கேட்ட கேள்விக்கே இன்னும் பதிலைக் காணோம். பார்த்துக் கொண்டே இருங்கள்."
Comment No. 12 is not from me. Kindly delete the same on account misrepresentation.

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

The following comment was posted by me in Halwacity's blog vide http://halwacity.com/blogs/?p=216#comments

Dear Vijay,
Comment No.18 is not mine. Kindly do the needful.
Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

The following comment was posted by me in Nalladiyaar's blog vide http://athusari.blogspot.com/2005/07/blog-post_15.html#comments
நல்லடியார் அவர்களே,
ச.திருமலை என்ற பெயரில் எழுதியது போலி டோண்டுவே. அவரே மாயவரத்தான், விஜய், மத்தளராயன், எல்.எல்.தாசு என்ற பெயர்களில் போலியான பின்னூட்டங்கள் எழுதி வருகிறார். எலிக்குட்டியை வைத்து பாருங்கள். உண்மை விளங்கும். நிஜமான ச.திருமலைக்கு ப்ளாக்ஸ்பாட்டில் ஐ.டி. கிடையாது.
இது உங்கள் தகவலுக்கு மட்டுமே. ச.திருமலை பெயரில் உள்ள பின்னூட்டத்தை அழிப்பதோ அழிக்காமலிருப்பதோ உங்கள் இஷ்டம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

The following comment was posted by me in Karuppi's blog vide http://karupu.blogspot.com/2005/07/blog-post_14.html#comments

Hello pretty young lady,

Here are some information that may be of interest to you.
1. See: http://picturenet.co.za/photographers/kc/
Kevin Carter (1961-1994) - South Africa Pulitzer Prize winner, Kevin Carter, took his own life months after winning the Pulitzer Prize for feature photography for a haunting Sudan famine picture. A free-lance photographer for Reuter and Sygma Photo NY and former PixEditor of the Mail&Gaurdian, Kevin dedicated his carrer to covering the ongoing conflict in his native South Africa. He was highly honoured by the prestigious Ilford Photo Press Awards on several occasions including News Picture of the Year 1993. Kevin is survived by a seven year old daughter, Megan.

2. See also: http://www.thisisyesterday.com/ints/KCarter.html

Hope these help.

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Icarus's blog vide http://icarus1972us.blogspot.com/2005/07/blog-post_19.html#comments

Rem acu tetigisti
Pronunciation: rem-'ä-"kü-"te-ti-'gis-tE
Etymology: Latin
You have touched the point with a needle : you have hit the nail on the head.
Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

The following comment was posted by me in Arun Vaithyanathan's blog vide http://arunhere.com/pathivu/?p=60
அருண் அவர்களே,
ச.திருமலை அவர்கள் பெயரில் நம் எல்லோருக்கும் தெரிந்த போலி ஒருவரே பின்னூட்டமிட்டுள்ளார். நிஜமான ச.திருமலை இவ்வாறெல்லாம் கேனத்தனமாக எழுத மாட்டார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted in mugamoodi's blog vide http://mugamoodi.blogspot.com/2005/07/blog-post_19.html#comments

டோண்டுவின் அந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டத்தை மிஞ்ச வேண்டுமா? செய்யலாமே. என்னுடைய இந்த பின்னூட்டத்தையும் விளையாட்டில் சேர்த்து கொள்ளுங்கள். ஆனால் என்ன. இந்த டோண்டு இருக்கிறானே, இதே பின்னூட்டத்தை தன்னுடைய அந்தப் பதிவிலும் இடுவானே? வாலியிடம் இருந்த இந்திரன் மாலை போல?

என்ன செய்யலாம்? இட்லி வடையின் பதிவில் செய்ததைப்போல போல எல்லோரும் சேர்ந்து அம்மா குத்து கும்மா குத்து என்று குத்த வேண்டியதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஞானபீடத்தின் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க http://njanapidam.blogspot.com/2005/07/blog-post_22.html

நான் கூறுவது என்னவென்றால் Mayavaraththaan cannot be faulted. கண்டுக்காதீங்க.

ஒன்றுமில்லை நண்பர்களே இகலப்பை போட்டு டைரெக்டா பின்னூட்டப் பெட்டியிலே அடிக்கிறேன். அவ்ளோதான் விஷயம்.

இகலப்பை வாழ்க. Long live ekalappai.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கார்த்திக் அவர்கள் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இதோ. பார்க்க: http://karthikraamas.net/pathivu/?p=74
அகிலன் அவர்கள் எழுதிய “வேங்கையின் மைந்தன்” நாவலில் இது வளை எறி என்னும் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் கதாநாயகன் இளங்கோவின் தோழன் (பின்னால் விரோதி) வீரமால்லன் என்பவன் வளை எறி எறிவதில் வல்லவன் என்றும் அந்த நாவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சிறீகாந்த் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kurangu.blogspot.com/2005/07/blog-post_22.html#comments

சிவாஜி சுஜாதா நடித்த படம் ஒன்று நினைவுக்கு வருகிறது. தலைப்பு நினைவில் இல்லை. இதில் சிவாஜி சட்டத்திடமிருந்து ஓடி ஒளிபவர். ஒரு ரயில்வே waiting room-ல் ஒரு முழு இரவும் ஒளிந்திருக்க வேண்டிய நிலை. அவர் படுத்திருக்கும் பெஞ்ச் டாயிலெட்டுக்கு வெளியில். இரவு முழுதும் மனிதர் மூக்கை மூடிக்கொண்டுதான் படுத்திருப்பார். ரயில்வே டாயிலெட்டை அந்த லட்சணத்தில் maintain செய்கிறார்கள் என்பதை காண்பிப்பார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

maayavaraththaan avargaL pathivu onRil waan itta pinnuuttam ithoo. paarkka
http://mayavarathaan.blogspot.com/2005/07/blog-post_22.html#comments
"அதே போல பெயரிலி, அது என்ன உங்கள் பின்னூட்டத்திற்கு இடையில் "அநாகரிகமாக வசவு பொழிவதாக நீங்கள் குற்றம் சுமத்தும்" என்றொரு வாக்கியம்? என்னவோ நான் மட்டும் தான் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறேன்... மற்றவர்களுக்கு எல்லாம் அதில் பிரச்னையே இல்லை என்பது போல? இப்போது ரொம்ப தைரியமாக கேள்வி எழுப்புவதைப் போல அப்போது எல்லாரும் கேள்வி அல்ல.. சும்ம 'ம்' என்று ஒரு எழுத்து பின்னூட்டம் கொடுத்திருந்தால் கூட அந்த அநாகரிகம் அடுத்த டார்கெட்டாக உங்களைத் தான் தாக்கியிருக்கலாம் என்ற பயம் தானே காரணம்?"

சந்தேகமே வேண்டாம் அதுதான் காரணம் மாயவரத்தான் அவர்களே. இந்த பயம்தான் அந்த மனம் பிறழ்ந்தவனுக்கு பலமாக அமைந்து விட்டது. ஆனால் ஒன்று என்னதான் ஜாக்கிரதையாக வார்த்தைப் பிரயோகம் செய்தாலும் அவன் அமாவாசை பௌர்ணமி தினங்களில் வந்து இன்னும் பலரை பிராண்டுவான். அதுதான் நடக்கப் போகிறது. பார்த்து கொண்டே இருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மாழவரத்தான் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://mayavarathaan.blogspot.com/2005/07/blog-post_24.html#comments

"// தலைப்பை பார்த்துட்டு என்னவோ ஏதோன்னு // நல்ல கற்பனை... ஆனா நான் இன்னும் இந்த பதிவை படிக்கவில்லை"

அதானே, நானும் முகமூடி அவர்களின் இந்தப் பின்னூட்டத்தை இன்னும் படிக்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பத்மா அரவிந்த் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

என்ன அருண் சார் புரியாமல் எழுதுகிறீர்கள். பத்மா அவர்கள் தான் பார்த்ததைப் பற்றி மட்டும்தானே எழுத முடியும்? அவ்ர பார்த்த முதலியார், செட்டியார், நாயுடு, மற்றும் பிற சாதியைச் சேர்ந்த எஜமானிகள் அன்னை தெரஸா போல இருந்திருப்பார்கள் போல.

பத்மா அவர்கள் எழுதிய இன்னொரு பதிவையும் பாருங்கள்.
"கணவனுடன் H4 விசாவில் வந்து வீடில் இருக்க போரடிக்கிறது என்ற மாமிகள் சிலரிடம் மருத்துவமனையில் தன்னார்வ தொண்டு செய்யௌங்களேன் என்று கூறி இருக்கிறேன். ஒரு நாளைக்கு 2 மணி நேரம். காசு தருவாளா என்ற கேள்விக்கு இல்லை என்று சொன்னதும், அட போ வேறா வேலையில்ல எனக்கு, அங்க போய் எறும் வேலை பார்க்க, ஆத்தில் படமாவது பார்க்கலாம் இது ஒருத்டர், எங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் புடிக்காது இது இன்னொருவர். இவர்களுக்கு ஆங்கிலமும் பேச தெரியும். இதே பெண்கள் மணிக்கு 8$க்கு மேசி போன்ற கடைகளில் வேலை பார்ததும், இதில் வர்ற காசில் என வேனா பண்ணுட்டார், நாங்க மூனு பேரும் ஒரே மாதிரி நெக்லஸ் வாங்கிக்க போறோம் என்று சொன்னதையும் பார்த்திருக்கிறேன்."
மற்ற சாதித் தமிழ்பெண்கள் இவ்வாறு பேசுவார்களா?

தெரியாமல்தான் கேட்கிறேன், அது என்ன உதாரணங்கள் எல்லாம் ஒரு சாதியையே குறி வைத்து வருகின்றன?
இதற்கு பெயர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல என்று கூறுவார்கள். இது தெரியாமல் நீங்கள் எவ்விதமாக எழுதினாலும் சிலருடைய mindset மாறாது என்றுதான் கூற வேண்டும்.

மன்னிக்கவும் பத்மா அவர்களே, நான் என் சில வெளிப்படையான என்ணங்கள் கூறியதற்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பத்மா அரவிந்த் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

http://www.domesticatedonion.net/blog/?item=568&comment=3052#comment3052
"பார்ப்பனியம் என்ற அதற்குறிய தத்துவப் பெயரை நான் இங்கு பயன்படுத்துவதை வைத்து அருணும், அவரது நண்பர் பி.கே.சிவக்குமாரும் என்னைச் சாதியை வைத்து சர்ச்சை செய்பவர் என்று முத்திரை குத்தி விடுவது எளிது."

அது என்ன ஐயா பார்ப்பனியம் என்பது தத்துவப்பெயர் என்றெல்லாம் கூறுகிறீர்கள்? யார் வைத்தது அந்தத் தத்துவப்பெயரை? ஏன் உயர் சாதீயம் என்றால் புரியாதா? பார்ப்பனீயம் என்று எழுதிவிடுவது, பிறகு தட்டிக்கேட்டால் தத்துவப் பெயர் என்று சமாளிப்பது, என்ன இதெல்லாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பத்மா அரவிந்த் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

http://www.domesticatedonion.net/blog/?item=568&comment=3052#comment3052

உண்மையான டோண்டுதான் எழுதினேன், அதில் பிரச்சினையல்லை. முடிந்தால் சோ அவர்கள் எழுதிழ வெறுக்கத்தக்கதா பிராம்மணீழம் என்ற புத்தகத்தைப் படியுங்கள்.

மற்றப்படி என்னத்த கேஸு போட்டு, உருப்பட்டால் போலத்தான்.

வழக்கம் போல இந்தப் பின்னூட்டங்கள் எல்லாம் என் தனிப்பட்டப் பதிவிலும் வரும். பார்க்க
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சித்தன் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://ciththan.blogspot.com/2005/07/1.html

"காவியம்:சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது"

மேலே குறிப்பிட்ட அதே கவிதையைப் பற்றி நண்பர் ரோஸா வசந்த் அவ்ர்கள் ஒரு பதிவு போட்டுள்ளார். பார்க்க
http://rozavasanth.blogspot.com/2004/10/blog-post_109877978221018657.html#comments
அதற்கு நான் இட்டப் பின்னூட்டங்களும், ரோஸா அவர்களின் பதில்களும் கீழே கொடுத்துள்ளேன்.

இதே கவிதையை என் நண்பர் ஸ்றீராம் அவர்கள் 1979-ல் பிரெஞ்சில் அழகாக மொழி பெயர்த்து ஒரு பிரெஞ்சுக் காரரிடம் காட்ட, அவர் இக்கருத்தை புகழ் பெற்ற ப்ரெவெர் என்ற பிரெஞ்சுக் கவிஞர் எழுதியிருக்க வேண்டும் என்று அடித்துக் கூறினார். பிரெஞ்சில் அக்கவிதை பின் வருமாறு:

"Isolée de l'ail, s'envole une plume
écrivant la vie d'un oiseau dans
les pages vides du ciel"

அன்புடன்,
டோண்டு

By Dondu, at 11/20/2004 12:38 AM

நன்றி டோண்டு, (கடந்தமுறை பெயரை தப்பாய் குறிபிட்டதற்கு மன்னிக்கவும்).

இது மிகவும் ஆச்சரியமளிக்கும் செய்தியாக இருக்கிறது. பிரமீளின் இந்த பிரபலமான கவிதை குறித்து இதுவரை இப்படி ஒரு செய்தியை நான் கேள்வி பட்டதில்லை. (ஸ்ரீராம் என்று நீங்கள் குறிப்பிடுபவர், `குட்டி இளவரசன்' உள்ளிட்ட பல பிரஞ்சு படைப்புகளை பொருத்தமான தமிழில் மொழிபெயர்த்த அதே ஸ்ரீராமா?).

அந்த பிரஞ்சுகாரரின் தகவல் உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கையான சில கேள்விகள் எழுகிறது. பிரமீள் காப்பியடித்திருக்க கூடுமா, எனபது உடனடியாய் எழக்கூடியது. அப்படி இல்லாத படசத்தில் இந்த `எதேச்சையான ஒரே நிகழ்வு' மிகவும் ஆச்சரையமானது.

பிரமீளின் கவிதையில் காற்றின் தீராத(unfinished) பக்கம் என்று வருவது `ப்ரேவரின் கவிதை'யில் வானத்தின் வெற்று பக்கம் என்பதாக இருக்கிறது. பிரமீளின் கவிதை தரும் படிமத்தில் சிறகு கீழ்நோக்கி வீழ்வதாகவோ, காற்றின் போக்கில் செல்வதாகவோ எனது வாசிப்பு. ப்ரேவரின் சிறகு மேலே வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இந்த சாதாரண வித்தியாசம் மிக வேறுபட்ட interpretationsக்கு கொண்டு செல்ல கூடும்.

இதை ஸ்ரீராம் பல ஆண்டுகளுக்கு முன்னால்(பிரமீள் உயிருடனிருந்தபோது) வெளிபடுத்தியிருந்தால் பிரமீளுக்கு இருந்த இலக்கிய விரோதத்தில் பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். ஏன் வெளிபடுத்தவில்லை என்று புரியவில்லை.

அன்புள்ள வசந்த்.

By ROSAVASANTH, at 11/20/2004 4:35 PM

"அந்த பிரஞ்சுகாரரின் தகவல் உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கையான சில கேள்விகள் எழுகிறது. பிரமீள் காப்பியடித்திருக்க கூடுமா, எனபது உடனடியாய் எழக்கூடியது. அப்படி இல்லாத படசத்தில் இந்த `எதேச்சையான ஒரே நிகழ்வு' மிகவும் ஆச்சரையமானது.

மன்னிக்கவும் ரோசா அவர்களே, நீங்கள் மேலே எழுதியப் பின்னூட்டத்தை யதேச்சையாக இன்றுதான் (12-05௨005)பார்த்தேன். நான் வலைப்ப்பூவில் சேர்ந்த புதிதில் நான் பின்னூட்டமிட்ட இடங்களைத் திரும்ப கண்டுபிடிப்பதில் அவ்வளவு பயிற்சியில்லாததே காரணம். ஆகவே நான் கூறவந்ததை சரியாகக் கூறவில்லை என்பதை இப்போதுதான் பார்த்தேன்.

சிறீராம் (நீங்கள் சொன்ன அதே சிறீராம்தான்) பிரெஞ்சுக்காரரிடம் தன் மொழிபெயர்ப்பைக் காட்டியிருக்கிறார். பிரெஞ்சுக்காரர் ப்ரெவெரில் அதாரிட்டி. ஆகவே அவர் ஆச்சரியப்பட்டிருக்கிறார். பிறகு சிறீராம் அவரிடம் அது தமிழிலிருந்து தன்னால் மொழிபெயர்க்கபாட்டது என்பதைக் கூறியிருக்கிறார். சுதாரித்து கொண்ட பிரெஞ்சுக்காரர் கவிதையின் தரம் ப்ரெவரின் தரத்தில் உள்ளது என பாராட்டியிருக்கிறார். அதுதான் நடந்தது.

"pages vides" என்பதற்கு பதில் "pages iépuisables" என்று எழுதலாமா என்று நான் ஆலோசனை கூறியதற்கு சிறீராம் தான் எழுதியது சரியே என்பதை எனக்கு பொறுமையாக விளக்கினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

By Dondu, at 5/13/2005 1:18 AM

விளக்கத்திற்கு நன்றி. இதை நீங்கள் விளக்கியது முக்கியமானது. அதாவது மேலே உள்ள பிரஞ்சு வடிவம் பிரமீள் எழுதியதன் மொழிபெயர்ப்பே அன்றி, பிரேவரின் கவிதை அல்ல என்று புரிந்துகொள்கிறேன். பிரமீள் மீதான அபிமானம் கூடுகிறது. நன்றி.

By ROSAVASANTH, at 5/13/2005 1:54 PM

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இரா முருகன் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://vembanattukkaayal.blogspot.com/2005/07/blog-post_24.html#comments

இரா முருகன் அவர்களே,
நீங்கள் சீனாவில் நடக்கப் போவதாகக் கூறுவது இந்தியாவில் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதென்று நம் சகவலைப்பதிவர் ஒருவர் பதிவு ஒன்றைப் போட்டு விட்டார். யார் அவர் என்பதெல்லாம் இங்கே வேண்டாமே. அது உண்மையா பொய்யா என்பது கூட யோசிக்க வேண்டிய விஷயமே.

"சரி இந்தப் பதிவில் ஒரு சின்ன எச்சரிக்கை மணி அடிக்கலாம் என்னும் எண்ணம் தான். இனக்குழுக்கலாக கூடிப் பேசும் இடங்களில் எல்லாம் அரசாங்க காவல் நாய்கள், கூட்டத்தோட கூட்டமா ஜோதியில் கலந்து ஆள் அடையாளம் கண்டு கொள்வது என்பது பழைய நிகழ்வு.
soc.culture காலங்களில் இருந்து வரும் நிகழ்வு இது. sao.culture.tamil ல் ஈழ ஆதரவு கடிதங்களை எழுதிய ஒரே காரணத்துக்காக, வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் தணிக்கை செய்யப்பட்டும், தந்தை SITயினரால விசாரனை என்ற பெயரில் இழுக்கப்பட்டதும் அவமானப்படுத்தப்பட்டதும் உண்மை நிகழ்வு. இன்னமும் இந்திய அரசாங்க நாய்களுக்கு கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்பதன் அர்த்தமே தெரியாது. ஜெர்மன் மொழி
பேசுகிறவன் பிரன்சு பேசுகிறவன் என்று வேறு உண்மையிலேயே உருப்படியான காவல் நாய் உத்தியோகத்து தேவையான திறமை இருந்தும் கல்யாண வீட்டு வாசல் சோறு பொறுக்க வெல்லாம் விடுவான்கள். (retirement வேலையாகக் கூட இருக்கலாம்) தவிர்ப்பது எளிதோ எளிது. வெகுண்டு எழுந்து உருப்படியான பதிவுகள் கொடுக்கலாம். எல்லோருக்கும் நல்ல புரிதல் கிடைக்கலாம். ஆனால் ip address போன்ற ஆள் அடையாளம் காட்டும் விடயங்களை இவர்கள் இடத்தில் விடுவதை தயவு செய்து தவிர்ங்கள். நேரில் சந்திக்கும் கூட்டங்களை தவிருங்கள். அமெரிக்க எல்லைக்கு உட்பட்ட இடத்தில் கூட ஒரளவிற்கு ( ஓரளவிற்குத் தான் ) privacy act உதவும். அதாவது இந்திய காவல் நாய்கள் கேட்டால் எல்லாம் blogger.com உங்கள் விவரங்களை "அவ்வளவு சீக்கிரம்" கொடுத்து விடாது. ஆனால் மற்ற தளங்களோ ஆட்களோ அவ்வாறு அல்ல. இந்த எச்சரிக்கை இந்திய அல்லது இலங்கை அரசாங்கங்கள் செய்வதெல்லாம் பைபிளோ, குரானோ, கீதையோ, (டோல்முத்து வையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் போலுள்ளது) படி நடக்கின்றது என்று நம்பும் பரமார்த்தகுரு சீடர்களுக்கு இல்லை. மற்றபடி happy blogging. நன்றி."

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பத்மா அரவிந்த் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://www.domesticatedonion.net/blog/?item=562&comment=3098#comment3098
அரசு கட்டிடங்களில் பார்த்தால் (முக்கியமாக C.P.W.D. ஆல் கட்டப்பட்டவை) ஒன்று புலப்படும். டாயிலட்டுகளுக்கு வெளியில்தான் water coolers நிறுவப்படுகின்றன. மிகத்துரிதமாக அந்த கூலர்கள் உபயோகத்திலிருந்து விலகிவிடுகின்றன, ஏனெனில் அவ்வளவு நாற்றம். ஏன் அவ்வாறு அமைக்கிறார்கள் என்று கேட்டால் தண்ணீர் இணைப்பு குழாய்கள் நீளத்தைக் குறைக்க என்று குரைத்துக்கொண்டே கூறுகிறார்கள்.
நான் கேட்கிறேன்: கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கட்டிடம் கட்டுகிறீர்கள். செலவோடு செலவாக ஒரு சில மீட்டர்கள் அதிக நீளத்தில் தண்ணீர் இணைப்பு பைப்களை உபயோகப்படுத்தி கூலர்களை டாயிலட்டுக்கு தூரத்தில் நிறுவக்கூடாதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மதுரமொழி அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://mozhi.blogspot.com/2004/09/blog-post_07.html#comments

குமுதத்தில் தொடராக வந்த போது படித்திருக்கிறேன். விறுவிறுப்பான தொடர். ஆனால் என்ன, கடைசி வரை தன்னுடைய வழக்கின் விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஆகவே இவருக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு சரியா இல்லையா என்பது தெரியாமல் போயிற்று.

ஆனாலும் நல்ல புத்தகம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பத்மா அரவிந்த் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

http://www.domesticatedonion.net/blog/?item=568&comment=3052#comment3052

"தனிப்பட்ட எந்த ஒரு இனத்தையும் நான் குறிக்கவில்லை.
அதேபோல டோண்டு: என் முந்தைய பதிவில் இருந்து நீங்கள் உங்களுக்கு தோதுவான ஒன்றை மேற்கோளிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதில் " என் வீட்டுக்காரருக்கு இதெல்லாம் பிடிக்காது என்று சொன்ன பெண்களையும் எழுதி இருந்தேன். அதேபோல பொதுவாக தென்னிந்தியர்களையும் குறித்திருந்தேன்."

நான் என் கட்சியை நிலைநிறுத்த எழுதும்போது எனக்கு சாதகமானதைத்தான் மேற்கோள் காட்ட முடியும்? இதில் என்ன தவறு? அதைத்தானே எல்லோரும் செய்கிறார்கள். வாதம் புரிபவர் தன் கட்சிக்கு சாதகமானதைத்தான் பட்டியலிடுவார்.

உங்கள் அடுத்த பாயிண்டுக்கு வருவோம். நீங்கள் கூறுகிறீர்கள் பார்ப்பனப் பெண்மணிகளைப் பற்றிக் கூறிய அதே பதிவில் பொதுப்படையாகவும் அதாவது பார்ப்பனரல்லாதவரைப் பற்றியும் எழுதினீர்கள் என்று.

பார்ப்பனரல்லாதவர்கள் என்று ஒரு ஜாதி கிடையாது. பார்ப்பனரைப் பற்றி எழுதிய பதிவில் முதலியார், செட்டியார் என்றெல்லாம் பிரிக்காமல் தென்னிந்தியர்கள் என்று குறிப்பிட்டேன் என்கிறீர்கள். அதற்கு பேசாமல் ஒரு சாதியையும் குறிப்பிடாமல் இருப்பதுதானே. இப்போது நீங்கள் கூறுவது சப்பைகட்டாகவே தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://nattunadappu.blogspot.com/2005/07/blog-post.html#comments

சாரு சொல்கிறார், மணிச்சித்திரத்தாழ் கதாசிரியருக்கு அவர் ஒரு லட்சம் கொடுக்கக்கூடாதா என்று.

ஏன் ஐயா கொடுக்க வேண்டும். ரஜனியா படத்தயாரிப்பாளர்? இக்கேள்வியை மணிச்சித்திரத்தாழ் கதையை படமாக்கியவரிடம் போய் கேளுங்கள். இல்லையென்றால் பிரபுவைக் கேளுங்கள்.

சாருவுக்கு பதில் கூறியாகி விட்டது. இப்போது அவருக்கு ஒரு கேள்வி.

தன் நண்பன் ஆபிதீனின் கதையைத் திருடித் தன்பெயரில் போட்டுக்கொண்ட சினேகிதத் துரோகிக்கு இதை எல்லாம் பேச மனம் கூசவில்லையா?

dondu(#11168674346665545885) said...

ஆரோக்கியம் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennamopo.blogspot.com/2005/07/blog-post_112239634566956778.html#comments

முகம்மது நபி அவர்கள் கூறியது சரி என்று கூறுவதாக எண்ண வேண்டாம். ஆனால் அவர் பதில் அக்காலக்கட்டத்தில் புரிந்து கொள்ளக் கூடியதே. எப்படி? விளக்குகிறேன்.

இதை விளக்க Konrad Lorenz என்னும் ஜெர்மானிய இயற்கையியல் விஞ்ஞானியை மேற்கோள் காட்டுகிறேன். அவர் பல விலங்குகளின் நடத்தையை பல தருணங்களில் அவதானித்து எழுதியவர். தன் எழுத்துக்களுக்கு நோபல் பரிசும் பெற்றவர். அவர் எழுதுகிறார் (நினைவிலிருந்து அவர் ஜெர்மனில் எழுதியதை தமிழில் மொழிபெயர்த்து சாரத்தைத் தருகிறேன்.)

ஒரு சிங்கக் கூட்டத்தின் தலைமை ஆண்சிங்கத்தைக் கொன்று அதன் இடத்துக்கு வரும் இன்னொரு ஆண் சிங்கம் செய்யும் முதல் காரியம் அக்கூட்டத்தில் இருக்கும் குட்டிகளை கொன்று, அங்கிருக்கும் பெண்சிங்கங்களைப் புணர்ந்து தன்னுடைய வாரிசுகளை உருவாக்குவதே அதன் நோக்கம். இந்த மன நிலை கூட்டமாக வாழும் எல்லா மிருகங்களிடமும் பார்க்கலாம்.

மனிதனும் மிருகம்தானே. போர் வீரர்கள் தாங்கள் ஜெயித்த நாட்டின்பெண்களை வன்புணர்வது அந்தக் காரணத்துக்காகவே. முகம்மது இறைதூதர் மட்டுமல்ல, சிறந்த தளபதி கூட. அவர் அப்படித்தான் பேச முடியும். அக்கால கட்டத்தில் அது தவறாகக் கருதப்படாததால் அதை பற்றிப் பெருமையாகவெல்லாம் மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டு விட்டனர். பாவம் இக்கால இசுலாமியர். அவர்கள் மென்று விழுங்க வேண்டியிருக்கிறது.

நம் ராமாயணத்தையே எடுத்து கொள்ளுங்கள். ராமர் ஷத்திரியர், புலால் உண்ணாமல் இருக்க முடியுமா? ஆனாலும் ராம பக்தர்கள் அவரை அவ்வாறு வர்ணிப்பதில்லையே?

இன்னும் எல்லா மதங்களிலிருந்தும் மேற்கோள் காட்டலாம், ஆனால் இதற்கு மட்டும் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து கொண்டு எனக்கு ஆட்டொ அனுப்பும் முன்னால், விடு ஜூட்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தருமி அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://dharumi.blogspot.com/2005/07/blog-post_29.html

பதில்தானே? மண்டபத்துக்கு வாருங்கள். நான் எழுதித் தருகிறேன். பரிசு பெற்று கொள்ளவும். பரிசோ உதையோ நீங்களே வைத்து கொள்ளவும்.

எல்லாமே ஜீன்களின் விளையாட்டுத்தான். மயிலிறகு விளையாட்டு நான் செய்ததில்லை, ஏனெனில் என் அப்பா செய்யவில்லை. அவர் அப்பாவும் செய்திருக்க சான்ஸ் இல்லை. சில preferences வம்ச வழியாக வருபவை.

அரசு அல்லது மதன் கேள்வியில் ஒருவர் நடிகை லைலா அந்த காலத்து நடிகை அஞ்சலி தேவியைப் போல இல்லையா என்று கேட்டதற்கு பதிலுடன் இன்னொரு prediction கொடுக்கப்பட்டது. அதாவது கேட்டவருக்கு லைலா பிடித்திருந்தால் அவர் தாத்தா அஞ்சலி தேவியின் விசிறியாக இருந்திருப்பார். ஆக இந்த விருப்பங்கள் எல்லாம் ஜீன் வழி வருபவையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பத்மா அரவிந்த் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

http://www.domesticatedonion.net/blog/?item=568&comment=3153#comment3153

"இப்பொழுதய அசுகாதார நிலைமையில் டோண்டு சாரும் அருணும் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டது போல தோன்றுகிறது."
ரவியா அவர்களே, இப்போதுதான் ஒரு பெரிய சர்ச்சை இணையத்தில் முடிந்துள்ளது. தேவையற்ற இன்னொரு சர்ச்சை வேண்டாமே என்பதையே நானும் அருணும் கூற முயன்றோம்.

dondu(#11168674346665545885) said...

நாடோடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://nattunadappu.blogspot.com/2005/07/blog-post.html#comments

"சரி, ரஜினிக்கு இது தெரியவில்லையென்றே வைத்துக் கொள்வோம். ஆ.வியில் வந்த பிறகாவது ஏதாவது செய்திருக்கலாம் அல்லவா. இங்கே பிரச்சனை எவ்வளவு தருவது என்பது அல்ல. இது ஒரு தொழில் தர்மம் [professional ethics]அவ்வளவுதான்."

நானும் அதைத்தான் கூறுகிறேன். professional ethics என்பது இங்கே பொருந்தாது, ஏனெனில் அவர் தயாரிப்பாளர் அல்ல, அவ்வளவுதான். அதிலும் இப்பதிவாளர் ரஜனி தன்னுடைய சம்பளத்திலிருந்து ஒரு லஷம் தர வேண்டும் என்பது சரியேயில்லை.

ரஜனி பாபா படத்தில் கையை சுட்டுக்கொண்ட விநியோகஸ்தகர்களுக்கு பணம் திருப்பித் தந்தார், தயாரிப்பாளர் என்னும் முறையில். அது அவராக விருப்பப்பட்டு கொடுத்தது. கொடுத்திருக்க வேண்டியதே இல்லை என்பதுதான் யதார்த்த நிலை. வேறு யாரும் அதை இது வரை செய்ததேயில்லை. இதற்கு என்ன கூறுகிறீர்கள்.

மற்றப்படி சாரு அவர்கள் கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறிந்ததால்தான் கேட்டேன். அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட பின்னூட்டம் இதோ: பார்க்க:

"கோடானு கோடி மக்களின் இதய தெய்வம், பார் புகழும் பாவேந்தன், எங்கள் ஆருயிர் தலைவர் அண்ணன் ராஜ கண்ணப்பனை வேண்டுமென்றே விடச் செய்தமைக்காக போராட்டம் நடத்தி தீக் குளிக்க வைப்போம் என்று எச்சரித்துக் கொள்கிறேன்."

யாரை தீகுளிக்க வைப்பீர்கள்? அண்ணன் ராஜ கண்ணப்பனையா? பாவம் வ்ட்டுவிடுங்கள் அவரை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வெற்றி திருமலை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://vetrithirumalai.blogspot.com/2005/07/blog-post_26.html

"இப்பல்லாம் ரஜினியை பற்றி பதிவுகள் போட்டால் அனானிமஸாக வந்து கொதர்ற பின்னூட்டங்கள் அதிகமாகிவிட்டது. அதனால் இந்த பதிவுல மட்டும் அந்த வசதியை எடுத்து விட்டேன். (இல்லாட்டா நம்ம பதிவை யூஸ் பண்ணி அவ அவன் அடிச்சுக்குவான்) அனானிமஸ் நண்பர்கள் மன்னிக்கவும். "

அப்ப இது என்ன? அனானிமுஸ் பின்னூட்டங்கள்? நான் வந்து விட்டேன் அல்லவா? தானே அவை தொடரும். போலி டோண்டு வருவார் ஜாக்கிரதை.

ரஜனியைப் பற்றி. அவர் உழைத்து சம்பாதிக்கும் காசை என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். இக்கருத்துடன் 100 சதவிகிதம் ஒத்து போகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கறுப்பி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://karupu.blogspot.com/2005/06/blog-post_27.html#comments

Hello pretty young lady,

"மொத்தத்தில் பார்ப்பண்ய வாழ்க்கை முறையை நன்றாகவே நக்கலோ நக்கல் அடித்திருக்கின்றார்கள்"

பார்ப்பன சமுதாயத்தை ஓவராகவே தூக்கி நிறுத்துகிறார் சங்கர் என்று எல்லோரும் சாமி வந்து ஆடும் இன்னேரத்தில் நீங்கள் மாறுபட்டக் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். நான் இன்னும் இப்படத்தைப் பார்க்கவில்லை. பார்த்ததும்தான் தெரியும் யார் சரியாக கூறியிருக்கிறார்கள் என்று.

"இனி ஆக, இணையத்தில மாயமாப் போய்வரத்தான் ஒரு வரம் உங்களுக்குத் தேவை"

இடாலிக்ஸில் எழுதியதை மட்டும் படியுங்கள். புரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தாஸு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://lldasu.blogspot.com/2005/07/blog-post_30.html#comments

தமிழர்களாகிய நமக்கு ஒரு வழக்கம். அதாவது ஒன்றைப் புகழ வேண்டுமானால் மற்றொன்றை இகழ வேண்டும் என்று உந்துதல் நமக்கு உண்டு. நம்மவரில் ஒருவர்தானே திருமா அவர்களும்.

அவர் கனேடியத் தமிழர்களைப் புகழும்போது தமிழகத் தமிழர்களை மட்டம் தட்டியிருக்கிறார். அவ்வளவே. இது எல்லோரும் செய்வதுதான். ஒன்றுக்கு +5 என்று மதிப்பெண் கொடுக்கும் போது இன்னொன்றுக்கு -2 என்று கொடுத்தால் வித்தியாசம் ஏழாகிறதல்லவா.

இவ்வாறு நடப்பது சரி இல்லைதான். இருந்தாலும் ஆளாளுக்கு திருமாவை தாக்குவதையும் நிறுத்தி விடுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தர்சன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

தர்சன் அவர்களே,

ஒரு தனி மின்னஞ்சலில் என் போட்டோவை இணைத்துள்ளேன். மாறுதல் செய்வித்து வலைப்பூவில் போட்டு கொள்ளுங்கள். என் போட்டோ மட்டுமே. அருணா மற்றும் மாலனை விட்டுவிடவும்!
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என்ன்றென்றும் அன்புடன் பாலா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://balaji_ammu.blogspot.com/2005/07/i-birthday-flashback.html#comments

உங்கள் பதிவால் இன்ஸ்பைர் ஆகி பதிக்க வந்தவன் நான். ஹிந்து உயர்நிலைப்பள்ளி நினைவுகள் இன்னும் எழுதவேண்டியவை உண்டா? ஆவலுடன் எதிர்பார்க்கிரேஏண்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தர்சன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://tamilkavithai.blogspot.com/2005/07/blog-post_24.html#comments

நன்றி தர்சன் அவர்களே. என் பதிவில் போய் பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/07/zzz.html#comments

நான் ஏற்கனவே கூறி விட்டேன். அன்புமணி செய்தது தவறே இல்லை. ஒரு தந்தை என்ற முறையில் அவர் செய்தது நியாயமே. அதே போல தொண்டர்களையும் ப்ராக்டிகலாக இருங்கள் என்றுதான் கூறினேன்.

குழலி அவர்களே, நீங்களே ப்ராக்டிகலாக இருந்துதானே வருகிறீர்கள். இருப்பது வெளிநாட்டில், அவ்வப்போது பா.ம.க.வுக்கு நன்றி நவிலல். அவ்வளவுதானே. நான் கூறுவது நாள் முழுக்க இந்த அரசியல் தலைவர்களின் வார்த்தை ஜாலத்தில் மயங்கி தன் வாழ்க்கையைத் தொலைத்து கொள்ளும் சாதாரண தொண்டனைப் பற்றியே.

தலைவர் சொன்னார் என்று ஒரு தலை முறையே ஹிந்தியைத் தவிர்த்தது. அவர் பேரன் அதே ஹிந்தியை படித்து மந்திரியாகிவிட்டான். இதற்கு அப்பெரியவர் பெருமை வேறு அடைகிறார்.

அது சரி அன்புமணி அவர்களே ஆங்கிலப் பள்ளியில்தான் படித்தாராமே, அதற்கு என்ன சப்பைகட்டு வைத்திருக்கிறீர்கள்?

சோ என்ன தலைப்பு வைக்க வேண்டும் என்பது அவருக்கு கூற நாம் யார். அவர் அனுபவமே அவரை நடத்திச் செல்லும். 35 ஆண்டுகளுக்கு மேலாக தரம் குறையாமல் பத்திரிகை நடத்துபவர் அவர். அவர் ரேஞ்சுக்கு இங்கு யாரும் இல்லை. அவர் தாங்கியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/07/zzz.html#comments
"எனவே வசதியாக தமிழை இரண்டாம் சொல்லித்தரும் பள்ளிகளின் கல்வி கட்டணம் குறைவு என்று கூறிய நீங்கள் தரத்தைப் பற்றி சொல்லவில்லை என்ற போது தான் தமிழ் கற்றுத்தரும் சிறந்த பள்ளிகள் தரமான பள்ளிகள் என்றார் வசதியாக"

மறுபடியும் கூறுவேன், D.T.E.A. பள்ளிகளின் தரத்துக்கு குறைவு ஒன்றுமில்லை. அதன் மாணவ மாணவிகள் பள்ளியிறுதித் தேர்வுகளில் நல்ல ரேங்குகள் பெறுகின்றனர்.

அன்புமணி அவர்கள் அப்பள்ளிகளில் தன் குழந்தைகளை சேர்க்காததற்கு snobbism தான் காரணம். முதல் ஐந்து வகுப்புகளில் சேலத்தை சேர்ந்த வேலைக்காரர்களின் குழந்தைகள் அப்பள்ளியில் படிப்பதாலேயே பலரும் அப்பள்ளியில் ஆறாவது வகுப்பிலிருந்துதான் த்ங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர். அதையும் நான் அப்போதே இது சம்பந்தமான என் பதிவில் கூறியிருந்தேன். அதை வசதியாக நீங்கள்தான் பதிலளிக்காமல் விட்டு விட்டீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அனிதா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://ani-anithaa.blogspot.com/2005/07/blog-post_27.html#comments
சந்தேகமில்லாமல் பாடலில் ஒன்றின்பால்- பலவின்பால் பிழை இருக்கிறது.
"எல்லா பூக்களுமே சொல்லுவது... என்று ஆரம்பித்திருக்கலாம். சந்தப் பிரச்சினைகளை வேறு வழியில் தீர்த்து கொள்ளலாம்.

ஆனால் ஒன்று. மிகப் பெரிய எழுத்தாளர்களும் இம்மாதிரிப் பிழைகளை செழ்து வருகின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/07/zzz.html#comments

"தொண்டர்களுக்கு(மட்டும்) அறிவுரை கூறுகிறேன் என அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்காதது போல தவறான பொருள்படும் படியான கருத்துகளுடைய பதிவெழுதியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு வாருங்கள்."

இதற்கு ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்? அக்குழந்தைகள் தமிழ் படிக்கின்றனர் என்னும் செய்தியே இப்போதுதானே வருகிறது? உங்களுக்கே அது தெரியாததால்தானே உங்கள் சப்பைகட்டில் அது இடம் பெறவில்;லை? ஆனால் ஸ்னாப்பிசம் பற்றி நான் எப்போதே எழுதி விட்டேன். அதை புறக்கணித்துதானே நீங்களும் எழுதி வந்திருக்கிறீர்கள்? அதற்கு வேண்டுமானால் நீங்கள் வருத்தம் தெரிவித்து பதில் கூறவும்.

அன்புமணி செய்தது ஒரு தந்தை என்ற முறையில் தவறு இல்லை என்று நான் முதலிலேயே கூறி விட்டுத்தானே அவர்கள் தொண்டர்களுக்கும் இம்மாதிரியே செயல்படுமாறு ஆலோசனை (அறிவுரை அல்ல) கூறினேன்? இதில் என்ன தவறு கண்டீர்கள்?

உங்கள் நிலைப்பாடு இப்படியிருக்குமோ? அதாவது அன்புமணி, குழலி ஆகியோர் ப்ராக்டிகலாக இருந்து விடுவார்கள். தொண்டர்கள் மட்டும் அடிபட்டு, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை தொலைத்து தரம் கெட்டப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அப்போதுதானே அறிவு மழுங்கின எதிர்காலத் தொண்டர்கள் கிடைப்பார்கள்?

உங்கள் அஜெண்டா ரொம்ப எதிர்காலத்தை நோக்கியுள்ளது போலிருக்கிறதே?

நான் ஊத வேண்டிய சங்கை ஊதி விட்டேன். தொண்டர்கள் புத்தியிருந்தால் பிழைத்து கொள்ளட்டும்.

இப்போது ஒன்று கூறுவேன். இம்மாதிரி தொண்டர்களை அடிமுட்டாளாக்கும் முயற்சி எல்லா கட்சிகளிலும் நடக்கிறது. ஆகவே கருணானிதி அவர்களின் பேரனைப் பற்றிக் கூறினேன். நீங்கள் என்னவென்றால் அன்புமணி அவர்கள் செய்யும் முட்டாள்தனத்தை பற்றி மட்டும்தான் பேசுவேன் என்கிறீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கே.வி.ஆர். அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kvraja.blogspot.com/2005/08/saudi-king-fahd-passed-away.html#comments
ஹிந்துவில் சாதாரணமாக passes away என்று குறிப்பிடுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மாயவரத்தான் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://mayavarathaan.blogspot.com/2005/08/blog-post.html#comments

கவுண்டமணி கேள்வியை மாற்றிக் கேட்டிருந்தால் செந்தில் உண்மையை கூறியிருப்பார். இது பற்றி நான் என்னுடைய புதிர்களில் ஒன்றில் கூறியிருந்தேன். அதாவது:
"2 வாழைப்பழத்தில இன்னொண்ணு இங்கே இருக்கு, ஒண்ணு எங்கே?"

அதாவது செந்திலின் பார்வைகோணத்திலிருந்து கேள்வி கேட்டிருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆனந்த் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://anandvinay.blogspot.com/2005/08/blog-post.html#comments

"சினிமாவில் நடிக்கிறார் திருமாவளவன்"

நம்பியாரை மிமிக்ரி செய்யும் விவேக்கின் குரலில்:
"சினிமாவிலுமா?"

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ரவி ஸ்றீனிவாஸ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://ravisrinivas.blogspot.com/2005/07/blog-post_16.html

"பொறுப்பு இருக்கிறது என்று சொல்லும் சுஜாதா, அப்படி நடந்துகொள்ளவில்லை என்பதைக்காட்டவே சிறப்பு அம்பலத்தில் அவர் எழுதியதை இங்கிட்டேன்."

முதலில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். தன்னுடைய சொந்தப் பெயரைக் கூட வெளியிட முடியாத உங்களுக்கு மற்றவர் பொறுப்பை சுட்டிக் காட்ட என்ன உரிமை இருக்கிறது?

பல்லாயிரக் கணக்கான கடிதங்களிலிருந்து வருபவை வடிக்கட்டப்பட்டு அவர் பார்வைக்கு வரும்போது டெட்லைன் என்று இருக்கிறது அல்லவா? ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

நீங்கள் குறிப்பிடும் "தவறான" பதில்களின் சதவிகிதம் எவ்வளவு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://mugamoodi.blogspot.com/2005/08/blog-post_02.html#comments

dondu(#4800161) said...
டோண்டு: உங்கள் செய்தி 9-ல் பொருட்குற்றம் உள்ளது. இரண்டுமே சனிதானே. ஞாயிறு எங்கிருந்து வந்தது?

முகமூடி: குற்றத்துக்கேற்றபடி ஏதாவது குறைத்துக் கொண்டு வெகுமதி தாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இது கண்ணன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம். பார்க்க: http://knski.blogspot.com/2005/08/procrastination.html#comments

நாளை என்று வைக்கும் காரியங்களை இன்றே செய்க என்னும் தாரக மந்திரத்தை தன் அலுவலகச் சுவரில் எல்லோருக்கும் தெரியும்படி போட்டுக்கொள்ளுமாறு ஒரு வியாபாரிக்கு அவர் நண்பர் அறிவுரை கூறினார்.

சில நாகள் கழித்து நண்பர்கள் இருவரும் சந்தித்தப் போது பலன் ஏதாவது தெரிந்ததா என்று வியாபாரியிடம் அவர் நண்பர் கேட்டார்.

வியாபாரி கூறினார்: "என் காசாளர் 10 லட்ச ரூபாய் இரும்புப் பெட்டியிலிருந்து கிளப்பிக் கொண்டு கம்பி நீட்டினார், என் பெண் காரியதரிசி என்னைப் பற்றி வருமான வரி இலாகாவுக்கு மொட்டைப் பெட்டிஷன் போட்டார், என் மகன் லேடி டைப்பிஸ்டுடன் ஓடிப் போனான்."

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://mugamoodi.blogspot.com/2005/08/blog-post_02.html#comments

"தனித்தனியான செய்திகளினூடே முகமூடி வித்தை காட்டிய விதம் ரசிக்கக் கூடியதாக இருந்தது."

பேசாமல் இப்பதிவுக்கு "மூன்று செய்திகள், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை" என்று தலைப்பு வைத்திருந்தால் பின்னூட்டங்களின் எண்ணிக்கை மூன்று செஞ்சுரியைத் தாண்டியிருக்குமே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என்னார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://merkondar.blogspot.com/2005/08/vs.html#comments

ராமதாசு அவர்களின் பேத்திகள் மேட்டர்டே பள்ளியில் சேர்க்கப்பட்டது மே மாதத்திலேயே குமுதம் ரிப்போர்டரில் செய்தியாக வெளி வந்து விட்டது.

அதை வைத்து நான் போட்ட பதிவும் தமிழ்மணத்தில் தூள் கிளப்பிற்றே. ஆனால் இப்போதுதான் சாவகாசமாக துக்ளக்கில் போட்ட செய்திக்கு பா.ம.க. எதிர் வினை கொடுக்கிறது. ஏன்?

எது எப்படியாயினும் உங்கள் பதிவுக்கான ஆதாரத்தை குறிப்பிடுவது நலம் என்னார் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என்னார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://merkondar.blogspot.com/2005/08/vs.html#comments

விசிதா அவர்களே, press meet எல்லாம் நடக்காமல் செய்தியெல்லாம் போட மாட்டார்கள். மற்ற நிருபர்களும் பார்த்து கொண்டிருப்பார்கள் அல்லவா? ஆகவே செய்தி உண்மை என்று எடுத்து கொள்ள வேண்டியதுதான்.

மற்றப்படி சங்கராச்சாரியார் விஷயம் இப்பதிவுக்கு அப்பாற்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இது கண்ணன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம். பார்க்க: http://knski.blogspot.com/2005/08/procrastination.html#comments

உங்களிடம் கூறுவதற்கென்ன. நான் யதேச்சையாகத்தான் 31-ஜூலைக்குள் கண்டிப்பாக ரிடர்ன் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தேன். நீங்களாவது ஒரு மாதம் நீட்டிப்பு எதிர்பார்த்தீர்கள். என் விஷயமோ அது கூட இல்லை. ஆகஸ்டு 31 தான் கடைசி தேதி என்று ஒரு குருட்டு எண்ணம்.

ஜூலை 29 அன்றுதான் எனக்கு விஷயத்தின் தீவிரம் புரிந்தது. உடனே பேங்குக்கு ஓடி பெற வேண்டிய வருமான சான்றிதழ் எல்லாம் ஒரே விசிட்டில் பெற்றேன். மைலையில் உள்ள சீதாராமன் கடைக்கு சென்று நபி கைடையும், படிவம் 2-D யும் வாங்கினேன். அடுத்த இரண்டு நாட்கள் பேய் மாதிரி உழைத்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி ரிடர்ன் சமர்ப்பித்தேன். என் வீட்டம்மா ஸ்டைலாக தன் ரிடர்னில் கையெழுத்திட்டதுடன் சரி. இப்படித்தான் கடைசி நிமிஷத்தில் குதிப்பதா என்று செல்லமாக ஒரு தட்டு வேறு தட்டிவிட்டு சென்றார்.

அவருடையது nil ரிடர்ன். வருமானவரி அலுவலகத்தில் வாங்க மறுத்து விட்டனர். ஏனெனில் தேவையில்லையாம். இது முன்பே தெரிந்திருந்தால் சில மணி நேர வேலையாவது மிச்சமாயிருந்திருக்கும்.

பரவாயில்லை, all's well that ends well.

அன்புடன்,
டோண்டு ராகவன் .

dondu(#11168674346665545885) said...

இது பிச்சைப்பாத்திரம் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம். பார்க்க:
http://pitchaipathiram.blogspot.com/2005/08/blog-post_03.html#comments

பாக்கியராஜ் படம் (இது நம்ம ஆளு) ஒன்றில் பாலகுமாரன் ஹோட்டல் முதலாளியாக வருவார்.

"சக்களத்தி" படத்தில் அழகாபுரி அழகப்பன் சபல டாக்டராக வருவார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என்னார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://merkondar.blogspot.com/2005/08/vs.html#comments

"சட்டையை பிடிச்சு இழுத்து... "வா... நான் தனியா பதில் சொல்றேன்'ன்னு சொன்னாங்களாம் பா...!'' என்று புதிரோடு துவங்கினார் அக்பர்பாய்.
""என்னது வே வில்லங்கமா ஆரம்பிக்கீரு... என்ன விவகாரம்...'' என்று விசாரித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

""நம்ம பா.ம.க., தலைவரோட நிருபர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று சென்னை பிரஸ் கிளப்புல நடந்ததாம் பா... தமிழ் தமிழ்ன்னு அவரு முழங்கிட்டிருந்தாராம்... ஆளுங்கட்சி "டிவி' நிருபர் ஒருத்தர் சூடா ஒரு கேள்வி கேட்டாராம் பா... "நீங்க தமிழ் தமிழ்ன்னு சொல்றீங்க... உங்க பேரன், பேத்தியெல்லாம் கான்வென்ட்ல இங்கிலீஷ் படிக்குதே'ன்னு கேட்டாராம்... அவருக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறிருச்சாம் பா...'' என்றார் அக்பர்பாய்.

""என்ன வே... கிளைமாக்ஸ்ல வந்து நிறுத்திட்டீரு... மேல சொல்லும்...'' என்று கேட்டார் அண்ணாச்சி.

""நீ எந்த பத்திரிகை... யாரு உன்னை இங்க கூப்பிட்டது... முதல்ல வெளியில போய்யா... அப்படி இப்படின்னு அந்த நிருபர் மேல ஏக வசனத்துல பாய்ஞ்சுட்டாராம் பா... அதுக்குள்ள அந்தக் கட்சி மா.செ., அந்த நிருபரோட சட்டையை பின்பக்கமா பிடிச்சு இழுத்தாராம்... "வெளியில தனியா வா... நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்றேன்'ன்னு கூப்பிட்டாராம்... அவர் விசும்பிட்டு அங்க இருந்து தப்பிச்சு வர்றதுக்குள்ள பெரும்பாடா ஆயிருச்சாம்... பிரஸ் கிளப்பிலேயே இந்த கதின்னா வேற எங்கேயாவது பிரஸ் மீட் நடந்தா அந்த நிருபர் கதி

என்னன்னு பார்த்துக்கோங்க பா... நிருபர் மேல கை வைச்ச மா.செ., மேல கேஸ் போடலாமான்னு ஆளுங்கட்சி வட்டாரத்துல யோசிச்சுட்டு இருக்காங்களாம் பா...''

என்றார் அக்பர்பாய்.
(நன்றி, டீக்கடை பெஞ்ச், தின மலர்)

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என்னார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://merkondar.blogspot.com/2005/08/vs.html#comments

"டில்லில அந்த ஸ்கூல்ல மட்டும்தான் தமிழ் சொல்லித்தராங்க. அதனாலதான் அங்க சேர்த்தேன்."

இது பச்சைப் பொய். தில்லி தமிழ் கழகம் பல பள்ளிகளை தில்லியின் பல இடங்களில் நடத்தி வருகிறது. அவற்றுள் ஒன்றான லோதி எஸ்டேட் பள்ளிக்குத்தான் அன்புமணியின் பெண்கள் தமிழ் படிக்கச் செல்கிறார்கள். அப்பள்ளியில் முதல் நான்கு வகுப்புகள் தமிழ் மீடியத்தில்தான். நல்லத் தமிழ் சூழ்நிலை. ஆனால் சேலத்துப் பசங்கள் அங்கு படிக்கிறார்கள் என்ற ஸ்னாப்பிஸ மனப்பான்மையினால்தான் மேடர்டே பள்ளியில் அக்குழந்தைகள் சேர்க்கப் பட்டனர். D.T.E.A. பள்ளிகச்ளைப் பற்றி நான் தனியாகப் பதிவு போட்டிருக்கிறேன். அங்கு சென்று பாருங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இது கண்ணன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம். பார்க்க: http://knski.blogspot.com/2005/08/procrastination.html#comments

"நான் பயன்படுத்துவது 2E, சரள். படிவம்-16 இருந்தால் குழந்தை கூட நிரப்பி விடும்."

நான் கூட அதைத்தான் பாவிக்கிறேன். இருப்பினும் அப்படிவத்தை நிரப்பத் தேவையான அடிப்படைத் தகவல்கள் ஒரு முழு ஆண்டு கணக்கையும் பார்த்தால்தான் கிடைக்கும். நாம் கணக்கு போடுவதற்காக உபயோகப்படுத்திய தாள்களை எல்லாம் சரியாக அடுக்கி வைத்து கொள்ள வேண்டும். அது எல்லாத்துக்கும்தான் இரண்டு நாட்கள். சரளை நிரப்ப 30 நிமிடங்கள். அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

எல்.எல். தாசு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: "ராமதாஸ் செய்த கேவலம்"

On 8/4/05, dondu(#4800161) raghtransint@gmail.com> wrote:
ராமதாசு அவர்கள் செய்த காரியங்களைப் பார்த்தீர்களா? கிரிக்கெட்டில் ரன்
எடுக்கவில்லை, பேத்திகளைத் தமிழ் பள்ளியில் சேர்க்கவில்லை, பிரஸ்டீஜ் பத்மனாபனை டார்ச்சர் செய்தார். நவாப்பிடம் பணம் வாங்கி ராமர் கோவில் கட்டினார். இன்னும்
என்னெல்லாம் செய்ய போகிறாரோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அபூ உமர் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://nihalvu.blogspot.com/2005/08/blog-post_04.html#comments

அடாவடி செய்த ஆய்வாளருக்கு இடமாற்ற தண்டனை போதாது. அதிலும் இரு ஆய்வாளர்கள் அல்லவா குறிப்பிடப் பட்டுள்ளனர் அல்லவா? இருவருக்குமே தண்டனை தர வேண்டும், அதுவும் கடுமையானதாக இருக்க வேண்டும்.

வெறும் இடமாற்றம் தண்டனை ஆகாது. கொடுமைக்கு உள்ளான இசுலாமிய சகோதரர்களுக்கு முறையான நஷ்டஈடு வழங்கப் பட்டு அதற்கான பணம் குற்றம் செய்த ஆய்வாளர் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆனந்த் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://anandvinay.blogspot.com/2005/08/blog-post.html#comments

விசிதா அவர்களே,
சோ ஒரு பெயர் பெற்ற நடிகர், எழுத்தாளர், வழக்குறைஞர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமரிசகர், கொள்கை வீரர். ஆனால் நிச்சயமாக அரசியல் வியாதி அல்ல. திருமா அவர்கள் படத்தில் நடிப்பது வேடிக்கையாக பட்டது, ஆகவே மெல்லிய தமாஷாகப் போட்டேன்.

கார்திக் அவர்களே,
நவீனப் பெண்ணின் பதிவைப் பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. இதுதான் மாடர்ன் ஆர்ட்டோ? அதை வைத்து நானும் பதிவு போட்டேன், பார்த்தீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வெற்றி திருமலை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://vetrithirumalai.blogspot.com/2005/08/blog-post.html

"நான் பிராமணனாக பிறந்ததற்கு பெருமையடைகிறேன் என்று டோண்டு ஒரு பதிவில் கூறினார்(சமீபத்தில்தான் படித்தேன்). இதில் பெருமையடைவதிற்கு என்ன இருக்கிறது."

சமீபத்தில்தானே படித்தீர்கள். அதில்தான் காண்டக்ஸ்டை கூறியிருந்தேனே. அதற்குள் மறந்து விட்டீர்களா? பரவாயில்லை, மறுபடி நினைவுபடுத்துகிறேன். இப்போது தமிழகத்தில் பார்ப்பனர்களை ஏளனமாகவே பார்க்கிறார்கள். எல்லா துறைகளிலும் இட ஒதுக்கீடு என்ற முறையில் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் பல பார்ப்பனர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழ்கிறார்கள். நம் இணையத்திலேயே பல பார்ப்பனர்கள் ஒரு படி மேலே சென்று பார்ப்பன எதிர்ப்பு எழுத்துக்களை அவர்களே எழுதி வருகிறார்கள். என்னுடைய கோபம் முக்கியமாக அவ்வாறான பார்ப்பனர்கள் மீதுதான். அவர்களுக்காகத்தான் நான் பார்ப்பனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன் என்று முழக்கமிட்டேன்.

இப்போது ஒருவன் தான் பார்ப்பனன் என்று கூறிக் கொள்வது ஒரு முட்கிரீடத்தை அணிவது போலத்தான். அதை நான் என் சாதிக்காக பெருமையுடன் ஏற்றுக்கொண்டேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மாறாக அதற்கும் சேர்த்து பெருமை அடைகிறேன் என்று இன்னொரு முறை கூறிவிட்டுப் போகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்

dondu(#11168674346665545885) said...

வெற்றி திருமலை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://vetrithirumalai.blogspot.com/2005/08/blog-post.html

"டோண்டு ஐயா அவர்களின் ஆதங்கத்திற்கு மதிப்பளிக்கிறேன். அதே சமயம் நம்முடைய கேள்வி எல்லாம் இட ஒதுக்கீடு காரணமாக பிராமனர்களின் அவர்களின் மக்கள் தொகைக்கேற்ற பிரதிநிதித்துவம் குறைந்துவிட்டதா? ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியுமா?"

பிரதிநிதித்துவம் குறைந்ததாக எங்கே கூறினேன். பார்ப்பனர்கள் எதிர்கொள்ளும் அவர்களை சிறுமை படுத்தும் முயற்சிகளை பற்றித்தான் எழுதினேன். அதே சமயம் யார் தலைகீழாக தன்ணி குடித்தாலும் பார்ப்பனர்கள் படித்து முன்னேறுவதிலிருந்து அவர்களை யாரும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளேனே. இட ஒதுக்கீடு இல்லையா, போடா ஜாட்டான் என்று எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் சென்றுவிடுவோம் என்றும் எழுதினேனே. வேறு மாநிலங்கள், வேறு தேசங்கள் என்றெல்லாம் சென்று விட்டோம். என் பதிவு "சில வெளிப்படையான எண்ணங்கள்"-ல் இதையெல்லாம் எழுதியுள்ளேனே.

வெற்றி திருமலை அவர்களே, மனிதசார்பு எங்களிடம் இல்லையென்று யார் சொன்னது? சமுதாய சீர்திருத்த வாதிகள் எங்கள் சாதியிலும் பலர் இருக்கின்றனர். நானே தலித்துகள் இரட்டை தம்ளர் முறையை எப்படிக் கையாளலாம் என்பதற்கு தனிப் பதிவே போட்டுள்ளேன். என்னுடைய ஏதேனும் ஒரு பின்னூட்டத்தில் நாங்கள்தான் உயர்ந்த சாதி என்று எங்காவது கூறியிருக்கிறேனா? என் சாதியில் பெருமையடைகிறேன் என்று கூறியது எங்களை மட்டம் தட்டும் செயல்பாட்டிற்கு ஒரு எதிர்வினை மட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பி.கு. நான் வெளிநாடு எங்கும் சென்றதில்லை.

dondu(#11168674346665545885) said...

எல்.எல். தாசு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://lldasu.blogspot.com/2005/08/blog-post.html#comments

பிரஸ்டீஜ் பத்மனாபனாக சிவாஜி நடிக்க அவரை டார்ச்சர் செய்பவராக வில்லன் நடிகர் ராமதாஸ் நடித்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

துளசி அவர்கள் பதிவில் நான் இட்ட இரண்டு பின்னூட்டங்கள் இதோ. பார்க்க: http://thulasidhalam.blogspot.com/2005/08/blog-post_112321187625414155.html#comments

முதல் கேள்விக்கு பதில் தலை முடி, இரண்டாவது கேள்விக்கு பதில் தலை முடி. மூன்றாம் கேள்விக்கு பதில் அளிக்கும் வாய்ப்பை மற்றவர்களுக்கு விட்டு கொடுக்கிறேன்.

கலங்கரை விளக்கம் ஆல்பிரெட் ஹிச்காக்கின் வெர்டிகோ என்னும் படத்தின் தழுவல். ஜேம்ஸ் ஸ்டூவர்ட் மற்றும் கிம் நோவாக் நடித்தது. அப்படம் வெளி வந்த வருடம் 1964.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3:37 PM
dondu(#4800161) said...
மன்னிக்கவும் முதல் கேள்விக்கு விடை சவப்பெட்டி.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

துளசி அவர்கள் பதிவில் நான் இட்ட இரண்டு பின்னூட்டங்கள் இதோ. பார்க்க: http://thulasidhalam.blogspot.com/2005/08/blog-post_112321187625414155.html#comments

கலங்கரை விளக்கம் 1965-ல் தான் வந்தது. நான் பேசியது வெர்டிகோ படத்தைப் பற்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பினாத்தல்கள் சுரேஷ் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://penathal.blogspot.com/2005/08/preview-05-aug-2005.html#comments

தவறு தொண்டர்களிடம்தான் இருக்கிறது. தலைவர்கள் மேல் தவறில்லை. அவர்கள் ப்ராக்டிகலாகத்தான் நடந்து கொள்கிறார்கள். அதை நேரடையாக பார்க்கும் தொண்டனோ அதில் மட்டும் அவர்களைப் பின்பற்றுவதிலிருந்து தவறி விடுகிறான்.

தலைவர் பேச்சைக் கேட்டு ஒரு தலைமுறையே ஹிந்தி படிக்காமல் எதிர்க்காலத்தைத் தொலைத்தது. அவர் பேரன் மட்டும் அதே மொழியைப் படித்து மந்திரியாகி விட்டான். அதுவும் எப்படி? அடி உதை எல்லாம் பட்டது தொண்டர்கள். அலுங்காமல் மந்திரி ஆனது பேரன்கள். அடித்து கொள்ள ஆயிரம் கை வேண்டும் ஐயா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

துளசி அவர்கள் பதிவில் நான் இட்ட இரண்டு பின்னூட்டங்கள் இதோ. பார்க்க: http://thulasidhalam.blogspot.com/2005/08/blog-post_112321187625414155.html#comments

"ஒரு வேளை நீங்கள் வெர்டிகோ சென்னையில் ரிலீஸ் ஆன வருடம் சொல்கிறீர்களோ??"

அட, ஆமாம். சாதாரணமாக அந்தக் காலகட்டங்களில் ஹாலிவுட் படங்கள் உடனுக்குடன் இந்தியாவில் ரிலீஸாகி விடும். அந்த ஞாபகத்தில் கூறி விட்டேன் போல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அலெக்ஸ் பாண்டியன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://alexpandian.blogspot.com/2005/08/blog-post_05.html#comments

என்ன செய்வது. இயற்கை செய்யும் சதி. முப்பது வயதுக்கு மேல் பெண்ணின் உடற்கூறு பிரச்சினைகள் குழந்தைப் பிறப்பை பாதிக்கின்றன. பெண்ணின் கல்யாண வயதான 21-க்கு பிறகு சீக்கிரம் மணம் நடந்து 30 வயதுக்கு முன்னமேயே குழந்தை பிறப்பது பல சிக்கல்களைத் தவிர்க்கும்.

60 வயதுக்குப் பிறகும் ஓர் ஆண் தந்தையாக முடியும். ஆனால் பெண்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வெற்றி திருமலை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://vetrithirumalai.blogspot.com/2005/08/blog-post.html

"சாதிகளைப்பற்றி யார் எழுதினாலும் அங்கு போய் சிலர் உங்கள் இருவரையும் பற்றி தரக்குறைவாக கிறுக்கிவிடுகின்றனர். என் பதிவில் அது வேண்டாம் என்றுதான் இந்த விஷயம்."

சிலர் எல்லாம் இல்லை. அவர் ஒற்றை ஆள்தான். யார் என்று எல்லோருக்கும் தெரியும். போலி டோண்டுதான் அது.

அன்புடன்,
டோஒண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_06.html#comments

அதெல்லாம் இருக்கட்டும் குழலி அவர்களே. பா.ம.க. வின் பயிற்சி அரங்கம் வன்னிய சாதிக் குழந்தைகளுக்கு மட்டும் என்றும் படித்தேனே. ஏன்? பா.ம.க. தன் வன்னிய சாதிக் கண்ணோட்டத்திலிருந்து இன்னும் வெளியே வரவில்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/07/zzz.html#comments

At 9:18 AM, dondu(#4800161) said…
"முதலில் நீங்கள் அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்கவில்லை என்று தவறான பொருள்படும் படியான பதிவெழுதியதிற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு பிறகு தார்மீக உரிமையோடு கேள்வி கேட்கலாம் அது வரை இது ஒரு ஜல்லியடிப்பு தான்."

மேலே நீங்கள் கூறியதுதான் மிகப் பெரிய ஜல்லியடிப்பு. அன்புமணியின் குழந்தைகள் தமிழ் படிப்பது, படிக்காதது பற்றி வந்த விஷயங்களை முடிந்த அளவு கீழே கொடுத்துள்ளேன்.

மே மாதத்திலேயே செய்தி குமுதம் ரிப்போர்டரில் வந்து விட்டது. இரண்டு மாதங்கள் கழித்து துக்ளக்கில் அதே செய்தி வந்ததும் சாவகாசமாக எதிர்வினை கொடுக்கின்றனர் அன்புமணி, அவர் மனைவி மற்றும் ராமதாசு அவர்கள்.

அன்புமணி கூறுகிறார், தில்லியில் மேட்டர் டே பள்ளியை விடுத்து எங்குமே தமிழ் கற்று தரவில்லை என்று.

அவர் மனைவியோ தமிழ் பாடம் மட்டும் குழந்தைகள் தில்லி தமிழ் கழகத்தைச் சேர்ந்த லோதி எஸ்டேட் பள்ளியில் படிக்கின்றனர் என்றும் இதற்காக மேட்டர் டே பள்ளியிடம் தனி அனுமதி வாங்கப்பட்டதென்றும் கூறுகிறார்.

ராமதாசு அவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்ட்டம் தானை இது சம்பந்தமாகக் கேள்வி கேட்ட நிருபரை மிரட்டுகிறார்.

ஆகக்கூடி நான் கொண்டுள்ள கருத்து இதுதான். விஷயம் கைமீறிப் போவதை உணர்ந்து தமிழ் பாடம் படிப்பதற்கான "தனி அனுமதி" என்பது உட்லாங்கடியாகத்தான் தோன்றுகிறது. ஆகவே வருத்தம் எல்லாம் தெரிவிப்பதற்கில்லை.

இன்னும் ஒரு விஷயம். அரசியல்வாதிகள் வெறும் தமிழ் பாடம் படிப்பதை மட்டும் கூறவில்லை. அவர்கள் கூறுவது தமிழில் எல்லா பாடங்களையும் படிப்பதாகும்.

தில்லி தமிழ் கழகப் பள்ளிகளில் மட்டுமே நான்காம் வகுப்பு வரை தமிழ் மீடியம். அங்கு தன் குழந்தைகளை சேர்க்காத அன்புமணி அவர்களோ அவர் தந்தையோ மற்றவர்களுக்கு இது சம்பந்தமாக மிரட்டல் ஆலோசனைகளை கொடுப்பது வெறும் ஜல்லியடிப்பே.

சரி இப்போது கூறுங்கள், அன்புமணி அவர்களே ஆங்கிலக் கல்விதான் படித்தாராமே. இது பற்றி உங்கள் சமாளிப்பு ஏதாவது உண்டா?

ஆகவே மறுபடியும் கூறுவேன். கட்சித் தொண்டர்களே, உங்கள் தலைவர்களைப் போல ப்ராக்டிகலாக இருங்கள். அன்புமணி அவர்களைப் போல நல்ல தந்தையாகுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இது பாரா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம். பார்க்க: http://writerpara.tamiloviam.com/

இது துக்ளக்கில் தொடர்கதையாக வந்ததுதானே? சத்யா அவர்கள் எழுதியது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆரோகியம் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennamopo.blogspot.com/2005/08/blog-post_07.html#comments

நான் சப்பைகட்டு கட்டினேனா? இல்லவே இல்லை. நான் முதலிலேயே இவ்வாறுதானே எழுதினேன். "முகம்மது நபி அவர்கள் கூறியது சரி என்று கூறுவதாக எண்ண வேண்டாம். ஆனால் அவர் பதில் அக்காலக்கட்டத்தில் புரிந்து கொள்ளக் கூடியதே. எப்படி? விளக்குகிறேன்".

அதன் பிறகு நான் கூறியது animal behavior பற்றித்தான். இயற்கையின் விளையாட்டு அது. தன் இனமோ, குழுவோ அதுவே வெற்றிபெற வேண்டும் என்ற குழு மனப்பான்மையே அது.

இதையும் கூட நான் எழுதியுள்ளேனே, "அக்கால கட்டத்தில் அது தவறாகக் கருதப்படாததால் அதை பற்றிப் பெருமையாகவெல்லாம் மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுவிட்டனர். பாவம் இக்கால இசுலாமியர். அவர்கள் மென்று விழுங்க வேண்டியிருக்கிறது."

இம்மாதிரி தர்மசங்கடங்கள் எல்லா மத நூல்களிலும் தென்படுகின்றன. எங்கள் ராமாயணத்தில் கூட ராமர் தன் மனைவியை அக்கினி பரீட்சை செய்வித்தது, அவளை காட்டுக்கு அனுப்பியது எல்லாவற்றையும் அவர் பெருமைக்கு உதாரணமாகவே ஒரு காலத்தில் குறிபிட்டார்கள். அச்செயல்களே இக்காலத்தில் வேறு மாதிரி பார்க்கப்படுகின்றன.

ஆகவேதான் நான் கூறுவேன், கால தேச வர்தமானத்தை உணர்ந்து நமக்கு தேவையானவற்றை மட்டும் தத்தம் மதத்திலிருந்து எடுத்து கொள்ள வேண்டும். பொருந்தாதவற்றை விட்டு விட வேண்டும்.

இசுலாமிய நண்பர்களுக்கு நான் கூறுவது இதுதான். 1400 ஆண்டுகளுக்கு முன் எழுதியதை கேள்வி கேட்காமல் எடுத்து கொள்ளாதீர்கள்.

பூமி தட்டை என்று பல மத நூல்கள் கூறின. உருண்டை என்று துணிந்து கூறியவர்களைக் கொன்றே போட்டார்கள். அந்த நிலை இன்னும் தொடர வேண்டுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆரோகியம் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennamopo.blogspot.com/2005/08/blog-post_07.html#comments

நல்லடியார் அவர்களே,
நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்: "கற்பழிப்பு என்பது இஸ்லாத்தில் தடுக்கப் பட்டுள்ளது. இஸ்லாத்தின் பெயரால் எதிரி நாட்டு பெண்களை கற்பழிப்பதை எந்த இஸ்லாமிய நட்டின் சட்டமும் அனுமதிக்கவில்லை. பெண்களையும், குழந்தைகளையும், போரில் ஈடுபடாத முதியோரையும், இதர மத குருமார்களையும் போரில் துன்புறுத்துவது நபிகளாரால் தடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மென்று விழுங்குவதற்கு ஒன்றுமில்லை."

ஆனால் அபுமுஹை தன்னுடைய ஒரு பின்னூட்டத்தில் கூறுவதைப் பாருங்கள்: "முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னும் - முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறைவுக்குப்பின் சில நூறு ஆண்டுகள் வரையிலும் அடிமைகளின் வழக்கம் இருந்து வந்தது. இது போர் கைதிகளை சிறையிலடைக்கும் வழக்கம் ஏற்படுவதற்கு முன்பு, போர் கைதிகளை போர் வீரர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பதே வழக்கமாக இருந்தது.

பண்டைய உலகம் ஆண் அடிமைகளிடம் வேலை வாங்குவதும், பெண் அடிமைகளை அனுபவிப்பதும் வழக்கமாகக் கொண்டிருந்தது. அடிமைப் பெண்களை திருமணமின்றி அனுபவிப்பது அநாகரிகமாக நமக்குத் தோன்றினாலும். அன்று அடிமைப் பெண்களை அனுபவிப்பது அங்கீகரிக்கப்பட்டிருந்தது. உலகெங்கும் நடந்த அடிமை வியாபாரத்தை அன்றைய மக்கள் அங்கீகரித்திருந்தார்கள். சந்தைகளில் ஆண், பெண் அடிமைகளை விற்பதும் வாங்குவதும் சர்வசாதாரணமாக ஆடு, மாடு விற்பனையாக நடந்து வந்தது. அதுபோல் போரிலும் வெற்றி பெற்றவர்களுக்கு, தோல்வியடைந்த ஆண், பெண் கைதிகள் அடிமையாக்கப்பட்டார்கள்.

உதாரணமாக:
அபூ முஹை என்பவர் ராணுவத் தளபதி என்பது போல், எதிரணியில் ராணுவத் தளபதியாக ஆரோக்கியம் என்பவர் இருக்கிறார். என்று வைத்துக் கொள்வோம் இரு அணியினருக்கும் பொதுவான போர் நிபந்தனைகளில் - போரில் தோல்வியடைந்தவர்கள் கைது செய்யப்பட்டு, வெற்றியடைந்தவர்களுக்கு அடிமையாக வேண்டும், பெண்கள் போரில் உதவி செய்யும் வழக்கமிருந்ததால் - பெண் போர் கைதிகளும் அடிமையாக்கப்பட்டார்கள். பெண் அடிமைகளை அவர்களின் எஜமானர்கள் அனுபவித்துக் கொள்ளலாம் - அதாவது போரில் நிராகரிப்பாளர்கள் வெற்றி பெற்றால் முஸ்லிம் பெண் போர் கைதிகளை அடிமைகளாக்கி நிராகரிப்பாளர்கள் அனுபவித்தார்கள் - போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றால் நிராகரிப்பாளர்களின் பெண் போர் கைதிகளை அடிமைகளாக்கி அனுபவித்தார்கள்.

போரில் ஆரோக்கியம் என்பவரின் அணி ஜெயித்தால், தோல்வியடைந்த அபூ முஹை என்பவரின் அணியின் பெண் போர் கைதிகளை, அடிமைகளாக்கி ஆரோக்கியம் என்பவரின் அணியினர் அனுபவித்துக் கொள்வார்கள் - போரில் அபூ முஹை என்பரின் அணி ஜெயித்தால், தோல்வியடைந்த ஆரோக்கியம் என்பவரின் அணியின் பெண் போர் கைதிகளை அடிமைகளாக்கி அபூ முஹை என்பவரின் அணியினர் அனுபவித்தக் கொள்வார்கள். இரு போர் அணியினர்களுக்கும், ஒருவரையொருவர் வெற்றி கொண்டால் கைது செய்யப்பட்ட பெண்களை அடிமைகளாக்கி அனுபவிப்பதில் சம உரிமை இருந்தது." பார்க்க: http://abumuhai.blogspot.com/2005/07/blog-post_16.html

இதைத்தான் நான் ஜெர்மானிய நோபல் அறிஞர் Konrad Lorenz அவர்கள் கூறியதை ஆதாரமாக வைத்து animal behavior" என்று கூறினேன். மற்றவர்கள் செய்ததைத்தான் முகம்மது என்ற தளபதியும் அனுமதித்திருக்கிறார் என்று குறிப்பிட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆரோக்கியம் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennamopo.blogspot.com/2005/08/blog-post_07.html#comments


"வன்புணர்தல் என்பது அக்காலத்தில் இருந்ததால்தான், கடவுளின் அவாதர புருஷரான இராமர்கூட தன் மனைவி மேல் சந்தேகம் கொண்டு அக்னி பரீட்சை செய்வித்தார் என்று கூறப்பட்டுள்ளது."
ராமாயணத்தை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று அஞ்சுகிறேன். ராமருக்கு ஒரு சந்தேகமும் கிடையாது. அதை அவரே தெளிவாகக் கூறுகிறார். இருப்பினும் மற்றவர்கள் சந்தேகத்தை தீர்ப்பது அவர் கடமை. ஆக, கடவுளேயானாலும் மனிதனாக வந்தப் பிறகு அவன் கடை பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களை அவரும் ஒப்புக் கொண்டு செய்தார் என்பதே அவரின் அவதாரச் சிறப்பாகக் கூறப்படுகிறது.

ஆனால் இக்காலத்தவர் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

துளசி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. http://thulasidhalam.blogspot.com/2005/08/blog-post_08.html#comments

சோ அவர்களின் நாடகக் குழுவில் நடிகர்கள் தங்கள் பாத்திரங்களை சமயத்துக்கேற்றாப்போல் மாற்றிக் கொள்வார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். அம்பி செய்த ரோலை சோவும், சோ செய்த ரோலை அம்பியும் செய்திருப்பத்தாக படித்திருக்கிறேன்.

மற்றப்படி நீங்கள் சொல்வது நாடகங்கள் சினிமாவாக மாற்றப்படும்போது நடக்கும். ஞான ஒளி நாடகம் சினிமாவாக வந்தபோது மேஜர் செய்த ரோலை சிவாஜி ஏற்று நடித்தார். மேஜர் அவர்களோ வீரராகவன் நாடகத்தில் செய்த இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் ரோலை ஏற்று நடித்தார்.

அதே போல விஸ்வாமித்திரராக நாடகத்தில் நடித்த மனோஹர் அவர்கள் அதன் சினிமாவாக்கத்தில் (ராஜரிஷி) துர்வாசராக நடித்தார்.

ஏனெனில் சினிமாவில் ஸ்டார் வேல்யூ ரொம்ப முக்கியம். அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாது டைகர் தாத்தாச்சாரியாக மேஜர் சினிமாவிலும் கண்டின்யூ செய்ததில் கையை சுட்டுக் கொண்டார்.

இன்னுமொரு விஷயம். எல்லோரும் நல்லவரே என்னும் படத்தில் முதல் பாதியில் வில்லனாக வரும் பாத்திரம் இரண்டாம் பாதியில் ஹீரோ ரேஞ்சுக்குப் போயிற்று. ஜனங்களால் அதை புரிந்து கொள்ள முடியாமல் போனதால் படம் ஊற்றிக் கொண்டது. ஜெமினி ஸ்டூடியோவுக்கு பயங்கர அடி.

அதனால்தான் இமேஜை பாதுகாப்பதில் எல்லோரும் கவனம் செலுத்துகின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இது நான் குழலி அவர்கள் பதிவு ஒன்றில் இட்டப் பின்னூட்டம். பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_06.html#comments

//அதெல்லாம் இருக்கட்டும் குழலி அவர்களே. //
அதானே வைக்கப்படும் கேள்வி பலவீனப்படும் போது அடுத்த கேள்விக்கு தாவுவது வழமைதானே."

என்னுடைய முதல் கேள்வியே இதுதான். நான் இச்செய்தியை நக்கீரனில் படித்தேன், ஆகவே கேட்டேன். எல்லா சாதி குழந்தைகளுக்கும் என்றால் மகிழ்ச்சியே. உண்மையிலேயே வேற்று சாதிக் குழந்தைகள் யாராவது அட்டெண்ட் செய்தார்களா என்பதையும் முடிந்தால் கேட்டு சொல்லுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இது நான் குழலி அவர்கள் பதிவு ஒன்றில் இட்டப் பின்னூட்டம். பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_06.html#comments

//அதெல்லாம் இருக்கட்டும் குழலி அவர்களே. //
இந்த பதிவின் உங்கள் முதல் பின்னூட்டத்தின் முதல் வரி இது தான், அப்போது தாங்கள் அதெல்லாம் இருக்கட்டும் என்று எதை கூறுகின்றீர்?

அவை என் கேள்வி அல்ல, என் கேள்வி இதுதான் என்பததைத்தான் அவ்வாறு கூறினேன். இதில் என்ன குழப்பம் உங்களுக்கு? இப்பதிவில் அதுதான் என் முதல் பின்னூட்டம். மேலும், குழந்தைகள் பெற்றோரின் அனுமதியுடனே சென்றனர் என்பதையும் நக்கீரனே கூறி விட்டது. அதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
அது எல்லா சாதியினருக்கும்தான் என்று கூறுவது ஒன்று, ஒரு விஷயம் நடந்து முடிந்த பிறகு யாராவது வேறு சாதியினர் வந்திருந்தால் அனுமதித்திருப்போம் என்று கூறுவது சுலபம்.
ஆனால் அவ்வாறு வேறு சாதியினர் நிஜமாகவே வந்தார்களா என்பது இன்னொன்று. அதைத்தான் உங்களை செக் செய்து கூறச் சொன்னேன். முடிந்தால் வருகைப் பதிவை பார்ப்பதும் தவறாக இருக்காது. இதில் நான் தெளிவாகவே இருக்கிறேன். ஏனெனில் நக்கிரனில் வெளியான செய்தி அப்படிப்பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இது மூக்குக்கண்ணாடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம். பார்க்க: http://mkannadi.blogspot.com/2005/07/blog-post_112261351711010623.html#comments

தூங்கும்போது கண்ணாடி போட்டு கொண்டால் கனவெல்லாம் நன்றாகத் தெரியுமாமே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இது நான் கே.வி.ஆர். அவர்கள் பதிவு ஒன்றில் இட்டப் பின்னூட்டம். பார்க்க:
http://kvraja.blogspot.com/2005/07/blog-post.html#comments

So you have successfully called the bluff of the hacker. Congrats.

அந்த மனம் பிறழ்ந்தவன் இன்னும் தன் வேலையை நிறுத்தவில்லை போலிருக்கிறது. அவன் யார் என்பதுதான் நம் எல்லோருக்கும் தெரிந்து விட்டதே. எல்லோருக்கும், முக்கியமாக எனக்கும் தெரியும் என்பதும் அவனுக்குத் தெரியும். இருந்தும் அவனுக்கு ஏன் இந்த வெட்கமில்லாத வேலை என்பதுதான் புரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு: உங்களுக்கு பின்னூட்டம் இடுபவர்கள் நேரடியாக ப்ளாக்கர் பின்னூட்டப் பக்கத்திற்கு வருமாறு வழி செய்யுங்கள். முதலில் நீங்கள் கொடுக்கும் மாற்றுப் பெட்டி அனானி பின்னூட்டத்திற்கே வழி வகுக்கிறது.

posted by dondu(#4800161)

dondu(#11168674346665545885) said...

இது மாடர்ன்கேளின் பதிவு ஒன்றில் இட்டப் பின்னூட்டம். பார்க்க:
http://moderngirl83.blogspot.com/2005/08/blog-post.html

மாடர்ன்தேளுக்கு,
உங்கள் பதிவை நீங்கள் எப்படிப் போட வேண்டும் என்று அறிவுரை கூறும் எண்ணம் எனக்கில்லை. ஆனாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறை என ஒன்று இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன் (நம்பிக்கையின்றி வாழ்க்கை இல்லைதானே).

நான் வாந்தி எடுப்பதாக பொருள் வருமாறு போட்டீர்கள். ஆனால் அதில் யாரும் பின்னூட்டமிடவே முடியாதபடி செய்து விட்டீர்களே. அதைப் பற்றி உங்களுக்கு தனி மின்னஞ்சல் அனுப்பினால் அதுவும் அம்மாதிரி முகவரியேயில்லை என்று திரும்பி வந்து விட்டது. ஆகவே இதற்காகவே நான் தனிப்பதிவு போட்டேன். அங்காவது வந்து நீங்கள் விளக்கமளித்திருக்கலாம்.

ஏன் இந்த ஓடி ஒளியல். சற்றே சபை நாகரிகம் பயிலுங்கள். பிறகு மற்றவர்கள் வாந்தி எடுக்கிறார்களா அல்லது வேறு ஏதாவது செய்கிறார்களா என்று பார்க்கலாம்.

"டோண்டு"வை "தோண்டு" என்றும் "முகமூடி"யை முகமூதி என்றும் திரிக்கும் உங்களை மாடர்ன்தேள் என்று கூறுவதும் தவறில்லைதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ராசா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://raasaa.blogspot.com/2005/08/pda.html

எவ்வளவு வயதானால்தான் என்ன, சில குழந்தைத்தனங்கள் போகுமா என்ன?

ஜெர்மன் எழுத்தாளர் Erich Kaestner எழுதிய Das fliegende Klassenzimmer என்னும் கதையில் ஒரு காட்சி வரும்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் வயலில் நடந்து வரும்போது நடுவில் ஒரு குறுக்குச்சுவர் வரும். சுமார் 3 1/2 அடி உயரம் இருக்கும். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சுவற்றின் மேல் இரு கைகளையும் வைத்து அழுத்தி ஒரு ஜம்ப் செய்து உடலை அந்தரத்தில் ஒரு திருகு திருகி சுவற்றின் அடுத்தப் பக்கம் குதித்து மேலே செல்வார்.

தனக்குள் இவ்வாறு முணுமுணுப்பார்: "Gelernt ist gelernt" (சின்னவயசில் கத்துண்டதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துடுமா என்ன?).

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சுந்தரவடிவேல் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://bhaarathi.net/sundara/?p=229#comments

"காந்தியைக் கொன்ற கோட்சேயை ரகசியமாய்ப் போற்ற முடிகிறது, இந்திரா காந்தியைக் கொன்ற சீக்கியர்களை மன்னிக்க முடிகிறது, இதோ நேற்றைக்குப் பல்லாயிரம் பேர்களைப் பலி கொண்ட சுனாமி அழிவுகளை மறந்துபோக முடிகிறது நம்மால். ஆனால் ஒரு ராஜீவ் காந்தியின் இழப்பை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இது ஏனென்றால், திட்டமிடப்பட்ட முறையில் மக்களுக்கு மீண்டும் மீண்டும் இது நினைப்பூட்டப் படுகிறது."

கோட்ஸேயைப் பிடித்து தூக்கில் போட்டகி விட்டது. இந்திரா காந்தியைக் கொன்ற சீக்கியர்களையும் பிடித்து தூக்கில் போட்டயிற்று. சுனாமி பற்ற பேச்சு இங்கு சம்பந்தமில்லாதது. ஆனால் ராஜீவ் காந்தி விஷயம்? முக்கியக் கொலையாளியான பிரபாகரன் இன்னும் தலை நிமிர்ந்துதானே இருக்கிறார். துன்பியல் சம்பவம் என்று அவர் பசப்புவாராம், அதை கேட்டுக்கொண்டு நாம் புளகாங்கிதம் அடைய வேண்டுமாம். இது என்ன போங்கு.

அவர் புலிகளின் definition-படியே நிச்சயம் மாவீரன் ஆகப்போவதில்லை. தன் பிள்ளைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு ஊரார் பிள்ளைகளுக்கு பெல்ட் பாம் போடுகிறார். ஆகவே அவர் பிள்ளைகள் கரும்புலிகளாக மாறும் வாய்ப்பும் இல்லை. அதையும் கைதட்டி ரசிக்கும் கும்பல். அவர்களில் தமிழகத் தமிழர்களும் அடக்கம் என்பது வெட்கம் அளிக்கும் உண்மை.

இந்திய அரசசோ வேறு எந்த அரசோ செயலாற்றும்போது தன் நாட்டின் நலனைத்தான் குறிவைக்கும், வைக்க வேண்டும். ஆகவே புலிகள் எதிர்பார்ப்பது போல அவர்களுக்கு தமிழ் ஈழத்தை இலங்கை அரசிடமிருந்து போரடி பெற்று தர முடியாது. அவ்வாறு செய்தால் இந்தியாவில் இருக்கும் பிரிவினை சக்திகளுக்கு ஊக்கம் அளித்தது போல் ஆகி விடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மாலன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பினூட்டம் இதோ. பார்க்க:
http://blog.360.yahoo.com/blog-ZNQAcr48eqejL3AYqfNnPeUWFtKeU4Rh?p=116&n=28500

"இவையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிவரும் முயற்சிகள். ஆர்வமே பிரதானமாகக் கொண்டு நடைபெறும் முயற்சிகள். ஆனால் அதற்குள் அவற்றின் பலன்களை பன்னாட்டு நிறுவனங்கள் மோப்பம் பிடித்துவிட்டன. தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு இந்தக் கிராமக் கணினி மையங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று இந்துஸ்தான் லீவர் போன்ற நிறுவனங்கள் ஆராய்ந்து வருவதாக கேள்வி."

பன்னாட்டு நிறுவனங்கள்தனே, வரட்டுமே. நல்லதுதானே. தங்கள் நலனுக்காகவாவது அவர்கள் கிராமங்களை சீக்கிரம் இணைப்பார்கள் அல்லவா. நீங்கள் கொடுத்த கணக்கு இதோ.

"இந்தியாவில் உள்ள 64 லட்சம் கிராமங்களைக் கணினி மூலம் இணைக்க வேண்டும் என்பது இவரது கனவு.ஆண்டுக்கு 20 ஆயிரம் கிராமங்களை எளிதாக இணைக்கலாம் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்."

இதன்படி 65 லட்சம் கிராமங்களை இணைக்க 320 ஆண்டுகள் அல்லவா ஆகும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு:
உங்கள் கருத்துப் பெட்டியில் தட்டச்சு செய்ய மிகுந்த நேரம் ஆகிறது. சுரதாவின் மற்று பெட்டியில் அடித்து இங்கு நகல் இட வேண்டியிருக்கிறது. ஏதாவது பிரச்சினையா?

dondu(#11168674346665545885) said...

அண்ணாகண்ணன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://annakannan-interviews.blogspot.com/2005/08/creative-menopausity.html#comments
தஸ்கியில் பதிவிட்டு விட்டீர்களே. அதை கீழே ஒருங்குறியில்.

பதிவு ஒருங்குறியில். பார்க்க மேலே உள்ள் சுட்டியில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/07/zzz.html#comments

"தில்லிப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப்பாடமா என்பது குறித்து I have no information (டோண்டு அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்)! அப்படி இருந்தால் அதையும் எதிர்க்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு."

தில்லியில் ஹிந்தி கட்டாயப் பாடமே. ஆனால் அதற்கெல்லாம் யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. ஏனெனில் அது நம்முடைய தேசீய மொழி. அதை நம் பிள்ளைகள் படிக்காவிட்டால் நமக்குத்தான் நஷ்டம். அது தெரிந்தே தலைவர் பேரன்கள் மற்றும் பேத்திகள் ஹிந்தி படிக்கின்ற்னர். மந்திரி ஆயினர் மற்றும் ஆவார்கள்.

இதையெல்லா விவாதம் புரியும் நாம்தான் ஏமாளிகள்.

தலைவர் எவ்வழி, அவ்வழியே தொண்டனுக்கும், குழந்தைகள் பள்ளி படிப்பு விஷயத்தில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/07/zzz.html#comments

"இதை உண்மையிலயே டோண்டு அவர்கள் எழுதியிருந்தால் ...வெட்கமாக இல்லை?..சீ!..தில்லியில் மட்டும் யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாதாம் ..தமிழ் நாட்டில் தமிழ் ஒரு பாடமாகவேனும் இல்லாதது பற்றி ஆட்சேபிக்க முடியாதாம் .. தேசிய மொழியாம் .. என் தாய் மொழிக்கு பிறகுதான் எந்த மொழியும்."

கூறியது டோண்டுதான். ஜோ அவர்களே தேவையின்றி உணர்ச்சிவசப்படாதீர்கள். நான் யதார்த்தத்தையே கூறினேன். தமிழகத்தில் உங்களால் ஹிந்தியேயில்லாமல் தமிழ் மீடியத்தில் படிக்க இயலும். அதே மாதிரி தமிழே இல்லாமலும் படிக்க இயலும். ஹிந்தியைத் தவிர மற்ற எல்லா தேசீய மொழிகளுக்கும் இதே நிலைதான். பங்களூரில் கன்னடம் இல்லாமல் படிக்க இயலும், ஆந்திராவில் தெலுங்கு இல்லாமல், ... இப்படியெல்லாம் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் தில்லியில் மட்டும் ஹிந்தியை உங்களால் தவிர்க்க முடியாது. ஏன்? அது அப்படித்தான். தில்லி தமிழ் கழகப் பள்ளிகளில் கூட ஹிந்தி படிக்கத்தான் வேண்டும். இதை அங்கு இருக்கும் தமிழர்கள் கூட யாரும் எதிர்க்கவில்லை என்பதே நிலை.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் பிள்ளைகளுக்கு எது நல்லக் கல்வியோ அதையே அளிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/07/zzz.html#comments

"சரி நீங்கள் என்ன சொல்கின்றீர்?? தமிழே வேண்டாம் என்கின்றீரா?,"

நான் அவ்வாறு சொல்வேனா? உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்பதே என் நிலை. இங்கு வலைப்பூக்களில் கூட பலர் ஆங்கிலத்தில் பின்னூட்டமிடும் போது அவர்களை தமிழில் எழுதுமாறு கேட்டுக்கொண்டவன் நான்.

ஆறாம் வகுப்பில் என்னை சிறப்புத் தமிழ் எடுத்துக் கொள்கிறாயா அல்லது வடமொழி எடுத்துக் கொள்கிறாயா என்று கேட்டபோது என் தந்தையின் அறிவுறை ஏற்று சிறப்புத் தமிழ் எடுத்தவன் நான். பிறகு அதற்காக எப்போதும் வருந்தியதில்லை. என் பெண்ணையும் தில்லியில் தமிழ்ப் பள்ளியில்தானே சேர்த்தேன்.

இப்போது நிலை என்ன தெரியுமா? தில்லியில் உள்ள பல தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. இதற்காக நான் வருத்தப்பட்ட அளவுக்கு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் வருந்தவில்லை என்பதே நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/07/zzz.html#comments

"இங்கே தமிழகத்தில் தமிழே படிக்காமலிருக்க முடிகிறது .அதைப் பற்றி முதலில் கவலைப்படுவோம்."

உங்கள் ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா என்று தெரியாது.

இங்கு சென்னையில் நான் இருமுறை ஆங்கிலம்-தமிழ் துபாஷியாக சென்றேன் கடந்த 4 வருடங்களில். ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளுக்காக சென்றதை இதில் சேர்க்கவில்லை. இது எதைக் குறிக்கிறது? தமிழகத்திலும் நிலைமை மோசம் என்றுதானே. எழுதும் தமிழில் பிழைகள், ஆங்கிலமோ கொலை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பெடியன்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://tamizboyz.blogspot.com/2005/08/blog-post.html#comments
உம்மாண்டி அவர்களே,
இந்தியாவும் இலங்கையும் ஏற்கனவே ஒன்றாய் இருந்தது மறந்து விட்டதா? பர்மாவும் சேர்ந்து இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லோரும் பிரிட்டனின் காலனிகள்.

கிரிக்கெட்டுக்கே வருவோம். தெற்காசிய கிரிக்கெட் அணி ஏற்படுத்தலாமே. மேற்கு இந்திய அணிவீரர்கள் ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும் தெரியும்தானே. அதேபோல தெற்காசிய அணியில் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா நாடுகளிலிருந்து ஒரு டீம் அமைக்கலாமே. இதற்கு போய் ஒரு நாடு என்றெல்லாம் கஷ்டப்பட வேண்டாமே.

சுப்பிரமணியசாமியையெல்லாம் ஏன் தொந்திரவு செய்ய வேண்டும்_

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நேசமுடன் வெங்கடேஷ் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://www.tamiloviam.com/nesamudan/page.asp?folderID=1&ID=145

கால் டாக்சியில் சென்றால் திருவல்லிக்கேணிக்கு சுமார் 120 ரூபாய் ஆகும். எது எப்படியாயினும் மீட்டர்படி கொடுத்தால் போதும். சூடு வைக்காத மீட்டர்கள். கிளம்பும் முன்னால் போன் செய்து வாசலில் நின்றால் டாக்ஸி தன்னால் வருகிறது. செல்பேசி இருக்கிறதல்லவா? அப்புறம் என்ன பிரச்சினை? வண்டியில் ஏறியதும்தான் மீட்டரே போடுவார்கள்.

சில தொலைபேசி எண்கள்:
Fasttrack 24732020, Chennai 25984455, Bharati 28142233

கால் டாக்சியில் எவ்வளவு ஆகுமோ அதில் பாதிதான் ஆட்டோவுக்காகும். நான் டைடல் பார்க்குக்கு வரும்போதெல்லாம் கால் டாக்சிதான் கூப்பிடுவேன். ஒரு பிரச்சினையும் இல்லை. திருவான்மியூரில் எப்போதும் வண்டியிருக்கும், அதை உங்களுக்கு டைவர்ட் செய்வார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நாராயணன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://urpudathathu.blogspot.com/2005/08/blog-post_112377981416311718.html#comments

மங்கள் பாண்டேயின் தற்போதைய வாரிசுகளைக் கண்டு பேட்டி எடுக்கும் எண்ணம் யாருக்குமே வரவில்லையா?
அவர்களைக் கண்டு பிடிப்பது அவ்வளவு கஷ்டமா? இப்போதுதானே சமீபத்தில் 1857-ல் சிப்பாய் கலகம் நடந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தேசிகன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://desikann.blogspot.com/2005/08/blog-post.html

3. வளரும் சமுதாயம்
5. நாற்சந்தி
11. திரும்பிப்பார்

மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம், ஹி, ஹி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://bhaarathi.net/ntmani/?p=153#comments

Two chips and a miss என்றத் தலைப்பில் வால்ட் டிஸ்னி கார்ட்டூன் படம் பார்த்தது ஞாபகத்துக்கு வருகிறது.

இப்போதுதான் புரிகிறது, சிப்மன்கைத்தான் சிப் என்று தலைப்பில் போட்டார்கள் என்று. இந்த இரண்டு அணில்களுக்கும் டொனால்ட் டக்கிற்கும் ஜன்மப் பகை போல. ஒரே போராட்டம்தான். வழக்கம்போல அணில்களே ஜெயிக்கும்.

அமெரிக்கர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படியிருந்தாலும் கதையில் வலியவனும் எளியவனும் போரிடும்போது எளியவன் ஜெயிப்பதையே விரும்புவார்கள்.

Rooting for the underdog.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மெய்கீர்த்தி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://mymeikirthi.blogspot.com/2005/08/blog-post_13.html#comments

மத்திய பொதுப்பணித் துறையில் 10 வருடம் வேலை செய்தவன் நான். அங்கு இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கூறுவேன்.

யு.பி.எஸ்.சி.யில் தேர்வு பெற்று ஒரு பொறியாளர் கஜட்டெட் அதிகாரியாக, உதவி கோட்டகப் பொறியாளராக நியமிக்கப்பட முடியும். இதில் இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு உண்டு. இதில் பிரச்சினையில்லை. ஆனால் அவ்வாறு இட ஒதுக்கீடு பெற்று முன்னேறிவிடுபவர் தலைமைப் பொறியாளர் வரைக்கும் பதவி உயர்வு பெற தனி லிஸ்டே உண்டு. ஒன்றாக நியமிக்கப்படும் இருவரில் இட ஒதுக்கீடு பெறுபவர் தலைமைப் பொறியாளராக (CE) நல்ல வாய்ப்பு. இன்னொருவரோ மேற்பார்வைப் பொறியாளருக்கு (SE) மேல் உயர்வது கடினம். (AEE, EE, SE, Dy.CE, CE)

அது மட்டும் இல்லை. அவ்வாறு பதவி உயர்வு பெறும் ஒருவரின் பிள்ளைகளுக்கு எல்லா இடத்திலும் இட ஒதுக்கீடு உண்டு. இப்போது 3-4 தலைமுறைக்கு இட ஒதுக்கீடு பெறும் ஒரே குடும்பத்தினர் அனேகம் உண்டு.

இது பழைய நிலை. 1990-க்குப் பிறகு மண்டல் கமிஷன் உபயத்தால் இட ஒதுக்கீடு பின்தங்கிய வகுப்பினருக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது நிலைமை இன்னும் மோசம். மந்திரிகளின் குழந்தைகள், பேரர்கள் கூட இட ஒதுக்கீடு பெறும் நிலை.

ஆகவே என்ன ஆயிற்று? பதவி உயர்வு இல்லாததால் பலர் தனியார் துறைக்கு சென்று விட்டனர். அரசுக்கு திறமையான அதிகாரிகள் கிடைக்காமல் போய் விட்டனர். இந்த நட்டத்தை ரூபாய் பைசா கணக்காகக் கூறமுடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_13.html#comments

"அந்த குழந்தைகளின் வயது 12,14."

அப்படியா. நான் சிறு குழந்தைகள் என்றல்லவா நினைத்தேன்? இது வரை தமிழ்நாட்டில்தானே இருந்தார்கள்? என்னப் பள்ளியில் படித்தார்களாம்? தமிழ் மீடியமா?

தில்லி தமிழ் கழகத்தில்தான் தமிழ் மீடியம் உள்ளது. ராமதாசு அவர்கள் தமிழ் வழிக்கல்வியையே வலியுறுத்துகிறார், வெறுமனே தமிழ் ஒரு பாடமாக அல்ல.

மேலும் அன்புமணி செய்தது தவறே இல்லை என்றும்தானே கூறினேன். அதையே தொண்டர்களையும் பின்பற்றும்படி அறிவுரை கூறினால் ஏன் எல்லோருக்கும் கோபம் வர வேண்டும் ப்ராக்டிகலாகத் தலைவர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பது எண்ணமா?

தன்னால் செய்யப்படாததை அல்லது செய்ய முடியாததை மற்றவர்கள் மேல் திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். கேலி செய்கிறோம்.

அன்புமணி அவர்கள் ஏன் ஆங்கிலப் பள்ளியில் படித்தர் என்ற கேள்விக்கு பதில் இது வரை இல்லை.

இன்னொன்று. நாம்தான் இங்கு தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கிறோம். தலைவர்கள் அவர்கள் பாட்டுக்கு தங்கள் நலன்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மறுபடியும் கூறுவேன், தொண்டர்களே உங்கள் குழந்தையின் நலனுக்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நந்தலாலா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://nandalaalaa.blogspot.com/2005/08/blog-post.html#comments

At Tue Aug 16, 07:18:50 AM 2005, dondu(#4800161) said...
"அரசு உதவி பெறாத தனியார் சுயநிதி கல்லூரிகளில் இனி மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு முறை ரத்து - உச்ச நீதி மன்றம் தீர்ப்பு"

இதில் என்ன தவறு கண்டீர்கள்? இட ஒதுக்கீடு தனியார் துறையில் கிடையாதுதானே. மேலும் இந்த "இட ஒதுக்கீடு" சம்பந்தப்பட்ட சாதிகளில் வசதியானவரால்தான் அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

மெனக்கெட்டு ஒருவன் பணம் போட்டு கல்லூரி ஆரம்பிக்கிறான். அரசு உதவியும் இல்லை. அவனிடம் போய் இட ஒதுக்கீட்டு என்று அலம்பல் செய்வதைத்தான் நீதிமன்றம் தடை செய்தது.

நம்மையே எடுத்துக் கொள்வோம். நமக்கு கோர்ட் கேஸ் என்று ஏதாவது பிரச்சினை வந்தால் நாம் மிக நல்ல வக்கீலைத்தான் தேடிப் போவோமே தவிர சாதி ஒதுக்கீடு அடிப்படையில் நமக்கு 10 கேஸுகள் இருந்தால் அதில் 6 கேசுகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த வக்கீல்களுக்கா கேசுகளைக் கொடுப்போம்? திருமாவும் க்ரிஷ்ணசாமியும் கூட அவ்வாறுதான் செய்வார்கள்.

அதற்காக முற்போக்கு சாதி என்றும் தேடிப் பிடித்து தர மாட்டோம். திறமைசாலி என்பதுதான் இங்கு பார்க்கப்படும் என்பதையே சொன்னேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_13.html#comments

"எனக்கு விருப்பமிருந்தால் பதில் சொல்கின்றேன்,"

விருப்பம் மட்டும் இருந்தால் போதாது. சொல்வதற்கு பதிலும் இருக்க வேண்டும். மேலும் ஒருவர் பதிவுக்கு வந்து பின்னூட்டமிடும்போது அவரிடமும் கேள்விகள் வைக்கப்படும் என்பதும் தவிர்க்க முடியாததே.

மேலும், தமிழ்நாட்டில் இருந்திருந்தால் அன்புமணி தன் குழந்தைகளை நல்லத் தமிழ்ப்பள்ளியில்தான் படிக்க வைத்திருப்பார் என்று ஒரு முறை கூறப்பட்டது. ஆகவேதான் அக்குழந்தைகள் இங்கு இருந்தவரை தமிழ் வழிக் கல்வி படித்தார்களா என்று கேட்டேன்.

"பெரியார் கூட ஆத்திகராக இருந்து பின் நாத்திகரானவராம்,

அருணகிரிநாதர் கூட பித்தராக இருந்து சித்தராக மாறியவராம்,

பதில் கிடைத்திருக்கும் என நினைக்கின்றேன்."

ஆக சமீபத்தில்தான் இவர்களின் தமிழ் உணர்வு பீறீட்டு கொண்டு வருகிறது! ஏன்?

பாவம், இதற்கு மேல் உங்களை சங்கடமான கேள்விகள் கேட்டு தொந்திரவு செய்யவில்லை. பதிலைத்தான் மறைமுகமாகவே கூறிவிட்டீர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நந்தலாலா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://nandalaalaa.blogspot.com/2005/08/blog-post.html#comments

At Tue Aug 16, 10:22:17 AM 2005, dondu(#4800161) said...
"எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இக்குற்றச்சாட்டு?"

கைப்பூணுக்கு கண்ணாடி வேண்டுமா?தெரிந்துதான் கேட்கிறீர்களா அல்லது தெரியாமல் கேட்கிறீர்களா என்று தெரியவில்லை. இருப்பினும் சந்தேகத்தின் பலனை இப்போதைக்கு அளித்து பதில் கொடுக்கிறேன்.

இது சம்பந்தமாக நான் வேறு இடத்தில் அளித்தப் பின்னூட்டத்தின் ஒரு பகுதியை இங்கு தருகிறேன். பார்க்க:

http://mymeikirthi.blogspot.com/2005/08/blog-post_13.html#comments

"மத்திய பொதுப்பணித் துறையில் 10 வருடம் வேலை செய்தவன் நான். அங்கு இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கூறுவேன்.

யு.பி.எஸ்.சி.யில் தேர்வு பெற்று ஒரு பொறியாளர் கஜட்டெட் அதிகாரியாக, உதவி கோட்டகப் பொறியாளராக நியமிக்கப்பட முடியும். இதில் இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு உண்டு. இதில் பிரச்சினையில்லை. ஆனால் அவ்வாறு இட ஒதுக்கீடு பெற்று முன்னேறிவிடுபவர் தலைமைப் பொறியாளர் வரைக்கும் பதவி உயர்வு பெற தனி லிஸ்டே உண்டு. ஒன்றாக நியமிக்கப்படும் இருவரில் இட ஒதுக்கீடு பெறுபவர் தலைமைப் பொறியாளராக (CE) நல்ல வாய்ப்பு. இன்னொருவரோ மேற்பார்வைப் பொறியாளருக்கு (SE) மேல் உயர்வது கடினம். (AEE, EE, SE, Dy.CE, CE)

அது மட்டும் இல்லை. அவ்வாறு பதவி உயர்வு பெறும் ஒருவரின் பிள்ளைகளுக்கு எல்லா இடத்திலும் இட ஒதுக்கீடு உண்டு. இப்போது 3-4 தலைமுறைக்கு இட ஒதுக்கீடு பெறும் ஒரே குடும்பத்தினர் அனேகம் உண்டு.

இது பழைய நிலை. 1990-க்குப் பிறகு மண்டல் கமிஷன் உபயத்தால் இட ஒதுக்கீடு பின்தங்கிய வகுப்பினருக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது நிலைமை இன்னும் மோசம். மந்திரிகளின் குழந்தைகள், பேரர்கள் கூட இட ஒதுக்கீடு பெறும் நிலை."

கல்வியிலும் அதே நிலைதான். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தா கலெக்டரின் பசங்கள், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் எல்லோரும்தான் இந்த இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நந்தலாலா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://nandalaalaa.blogspot.com/2005/08/blog-post.html#comments

இட ஒதுக்கீட்டால் முன்னுக்கு வந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கே தலை முறை தலைமுறையாக சலுகைகள் கிடைக்கின்றன என்பதையும் எழுதியிருந்தேனே. அதுதான் துஷ் பிரயோகம் என்றேன். அதைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே நீங்கள்?

இப்போது கூறுங்கள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆனால் இட ஒதுக்கீடு காரணமாக உயர் பதவியில் இருக்கும் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்கிறார். அப்பிள்ளைகளுக்கு மேலும் இட ஒதுக்கீடு, வெறும் சாதி காரணமாக. ஏன்? இதற்கு நீங்கள் பதில் சொல்லாதவரை நம் விவாதம் பலனளிக்காது என்று நானும் கருதுகிறேன்.

அதே போல சீனியரிட்டி லிஸ்டையும் தலைமைப் பதவி வரைக்கும் சாதி அடிப்படையில் வைத்திருப்பது என்ன நியாயம்?

"தாழ்த்தப்பட்டவர்களில் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டின் பலன் சென்றடைய வேண்டிய வழி வகையே ஆராயப்பட வேண்டியது. மாறாக அதையே ஒழிக்க நினைப்பது கயமைத்தனம் அல்லாது வேறில்லை."
ஆயிரத்தில் ஒரு வார்த்தை. ஆனால் முன்னேறிவிட்டக் குடும்பங்களை அந்த லிஸ்டில் இருந்து எடுத்தால்தானே அதே தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மற்ற பிள்ளைகளும் முன்னுக்கு வர முடியும்? இதில் என்னக் குழப்பம் உங்களுக்கு?

இவ்வாறு செய்ய எம்.ஜி.ஆர். அவர்கள் முயன்றார். ஆனால் சலுகைகளை தலைமுறை தலைமுறையாய் அனுபவித்து வரும் சில vested interests அவரை அவ்வாறு செய்ய விடவில்லை.

நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நந்தலாலா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://nandalaalaa.blogspot.com/2005/08/blog-post.html#comments

At Tue Aug 16, 09:01:40 PM 2005, dondu(#4800161) said...
அத்தகைய //vested interests// களுக்கு இடம்தரக்கூடாது என்பதாலேயே, இட ஒதுக்கீட்டில் சீர்திருத்தம் என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை...

அப்படிக் கூறிக்கொண்டே எவ்வளவு நாள்தான் காத்திருப்பது? முன்னேறியக் குடும்பங்கள் லிஸ்டிலிருந்து வெளிவர வேண்டியது உடனே நடக்க வேண்டிய சீர்திருத்தம் ஆகும்.

அதனாலேயே நீதிமன்றத் தீர்ப்பு எனக்குப் பிடித்திருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மூக்குக்கண்ணாடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://mkannadi.blogspot.com/2005/08/blog-post.html#comments

"hey the name is not getting displayed, i have given my name on the text box- Angaiyar
please chk that one!It's a bug!"

பக்கெல்லாம் ஒன்றுமில்லை. இப்படி எழுத்துறு மாற்றுப் பின்னூட்டப் பெட்டியுடன் வரும் எல்லா வலைப்பூவிலும் இந்தப் பிரச்சினைதான். ப்ளாக்கர் பின்னூட்டத்துக்கு இம்மாதிரி நேரடியாக வந்து விட்டால் பிரச்சினை இல்லைதான்.

மற்றப்படி குரங்குகளுடன் அட்வென்சர் சுவையாக இருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்


By: dondu(#4800161) at 3:52 AM

Kindly enable the display of profile photos along with the respective comments.

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

காலக்கிறுக்கன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://josaph.blogspot.com/2005/08/blog-post.html#comments

At 6:17 PM, dondu(#4800161) said...
"வாசிப்போரை சற்றே நிலைகுழைய வைக்கின்றன....,"

இது "வாசிப்போரை சற்றே நிலைகுலைய வைக்கின்றன...." என்று இருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தாசு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://lldasu.blogspot.com/2005/08/blog-post_06.html#comments
" --L-L-D-a-s-u--- said...
மேலே உள்ளது என்ன? விளம்பரமா?? இல்லா வேற எதுவுமா? இத படிக்கிற அளவுக்கு பொறுமை இல்ல.. அழிச்சிடலாமா?"

மேலே உள்ளது எரிதமே. அதை அழித்து விடலாம். ஆனால் முழுமையாக அழித்தால் உங்கள் இப்பதிவுக்கு புது பின்னூட்டங்கள் வரும்போது தமிழ்மணம் அவற்றை இற்றைப்படுத்தாமல் போகும் அபாயம் உள்ளது. ஆகவே லிங்கை அப்படியே வைத்து பின்னூட்டத்தை மட்டும் அழியுங்கள். எரிதம் போட்டவரும் புரிந்து அமைதி காப்பார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மூக்குக்கண்ணாடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://mkannadi.blogspot.com/2005/08/blog-post.html#comments

காப்பியடிச்சப் பையன் கேஸ் முடிந்து விட்டதே.

பத்தாவது கேள்விக்கு பக்கத்து சீட் மாணவன் விடை எழுதினான்: "விடை எனக்குத் தெரியாது", அதைக் காப்பியடிச்சப் பையன் எழுதினான்:"விடை எனக்கும் தெரியாது."

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://mugamoodi.blogspot.com/2005/08/blog-post_112431649737601428.html#comments

@ August 17, 2005 6:46 PM க்கு நம்ம dondu(#4800161) சொல்றது என்னன்னா:
"அது ஏன் கி.வீரமணி எழுதிய 'வாழ்வியல் சிந்தனைகள்' புத்தகத்துக்கு மட்டும் 'நன்கொடை ரு.80' அப்படீன்னு சொல்றாங்க ?நன்கொடை என்றால் விரும்பி கொடுப்பதுதானே ? இல்லை 'தலைவர் பிறந்த நாள், 2000 ரூ நன்கொடை எழுதுங்கண்ணா' ன்னு சைக்கிள் செயின் சகிதம் கேப்பாங்களே"
அதானே.

"பொதுவாக போட்டிகளில் ஆறுதல் பரிசு என்று ஒன்று தருகிறார்கள்... இதனால் அந்த பரிசை வாங்குபவர்கள் "நல்ல வேளை, முதல் பரிசு கிடைக்கவில்லை" என்று உண்மையிலேயே ஆறுதல் அடைகிறார்களா?"
அதாவது முதல் மூன்று பரிசுகள்தான் சாதாரணமாக அறிவிப்பார்கள். சற்றே குறைந்த மார்கினில் பரிசு கிடைக்காமல் கோட்டை விட்டவர்களுக்காக ஆறுதல் பரிசு.

"பேய் ரீலி என்பவரின் பதிவிலே தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன... ஆனால் அர்த்தம் புரிவதில்லை."
எனக்கும் புரியவில்லை.

"பீஹாரில் கால்நடைகள் பட்டினியில் இறந்ததற்கும், அங்கு நடந்த கால்நடை தீவன ஊழலுக்கும் பீஹார் மக்கள் புண்ணாக்கு சுவை அறிந்ததுதான் காரணமா?"
முக்கியமாக லாலு அவர்கள் அச்சுவையை அறிந்ததுதான் காரணம்.

"இவர்கள் குறிப்பாக ஒரு சில படைப்புக்களை பற்றி எழுத, எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள்?"
இதற்குப் பெயர் ஆட்டுமந்தை மனப்பான்மை.

இப்போது முகமூடிக்கு ஒரு கேள்வி. நீங்கள் ஏன் கேள்விக்குறிக்கு முன்னால் இடம் விடுகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சக்ரா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://www.chakkarapani.com/graffiti/?p=93

Dondu Says:

August 18th, 2005 at 2:33 am
பலரும் ஆங்கிலத்தில் அல்லது தங்கிலீஷில் எழுதும்போது நான் மட்டும் தமிழில் எழுதுகிறேன்.

வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
In case you are unable to read my above comments in Tamil fonts make use of Suratha font converter vide http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
Copy paste the illegible portion above into the top box of the Suratha converter with option for Unicode. You will get to read the same in readable Tamil.
Regards,
Dondu Raghavan

Leave a Reply

dondu(#11168674346665545885) said...

கணேஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://dganesh.blogspot.com/

என்ன, பீட்டர் ஜென்னிங்க்ஸ் இறந்து விட்டாரா? நம்பவே முடியவில்லையே.

தில்லியில் நான் வசித்து வந்த போது அமெரிக்க நூலகத்தில் பிரதி வெள்ளி பிற்பகல் 3.30-க்கு "World this week" ABC-யிலிருந்து திரையிடுவார்கள். அன்று காலை 10.30-க்கு டி.வி.யிலிருந்து ரெகார்ட் செய்திருப்பார்கள். யார் கண் பட்டதோ 1995-ல் அது நின்று விட்டது ஒரு துரதிர்ஷ்டமே.

இப்போது பீட்டரும் போய் விட்டார். இது எனக்கு ஒரு தனிப்பட்ட இழப்பாகவே தோன்றுகிறது. அவர் ஆன்மா சாந்தியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழில் நான் எழுதியதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என நம்புகிறேன். உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி. அதற்குத் தனியாக பதில் அளிக்கிறேன்.

அது இருக்கட்டும், ப்ளாக்கர் பின்னூட்டத்தை செயலாக்கவில்லையா? இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"தூண்டில்" பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://thoondil.blogspot.com/2005/08/blog-post.html#comments

dondu(#4800161) said...
எல்லாம் சரிதான், 70 ஆண்டுகளுக்கு மேல் சோஷலிஸம்தானே ரஷ்யாவில் ஆட்சி செலுத்தியது? அதன் பலன் என்ன? தேசமே திவாலானதுதானே. 1991-ல் சோவியத் யூனியனே உலக வரைப்படத்திலிருந்துக் காணாமல் போயிற்று. முப்பதுகளில் ஸ்டாலினின் நிலச்சீர்திருத்தங்களால் மரணித்தவர் எண்ணிக்கை உங்களுக்குத் தெரியுமா?

ஐம்பதுகளில் "முன்னோக்கிக் குதித்தல்" கொள்கையால் சீனாவில் நடந்தக் கொடுமைகளை அறிவீர்களா?

மனிதர்கள் எல்லோருமே ஒரே ஆற்றலுடன் பிறப்பதில்லை. வல்லான் பொருள் குவிப்பதைத் தடுத்திட இயலாது. தடுத்தால் எல்லோரும் சேர்ந்து சாகலாம். அம்முறைக்கே திரும்பச் செல்லலாம் என்று நீங்கள் கூறுவது போல உள்ளதே? நல்ல வேளையாக உங்களிடம் அவ்வாறு மாறுதல் கொண்டு வரும் சக்தி இல்லை. எல்லாம் வல்ல இறைவனின் கருணையே கருணை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

காயத்ரி அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://yaalisai.blogspot.com/2005/08/blog-post_20.html

நான் புரிந்து கொண்ட அளவில் பெப்ஸி யூனியன்தான் தடை விதித்தது. ஒரு வேளை நவ்யா நாயர் அந்த யூனியனின் உறுப்பினரோ என்னவோ. அப்படியே இல்லாத பட்சத்திலும் தன் சிகை அலங்கார நிபுணருக்காகக்க குரல் கொடுத்ததில் என்னத் தவறு? இம்மாதிரித் தயாரிப்பாளர்களிடம் வசூல் செய்ய இதுவே சரியான முறை.

தங்கர்ரச்சான் ரொம்பத்தான் அலம்பல் செய்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கொங்குராசாவின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://raasaa.blogspot.com/2005/08/blog-post_20.html

dondu(#4800161) said...
படத்தைப் பார்த்தால் மண்டையில் என்ன இருக்கிறது என்று கேட்பது போல இல்லை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_112451737668150218.html#comments

At 3:16 PM, dondu(#4800161) said…
"கம்யூனிசம் இந்த இடத்தில் வெறும் இலாப நோக்கை மட்டும் பார்ப்பதில்லை. சமூக பொறுப்போடும் மனிதாபிமானத்தோடும் செயல்படுகின்றது இரஷ்யாவில் கம்யூனிசம் இருந்த போது ஏழை பணக்காரர்களுக்கிடையேயான இடைவெளி குறைவாக இருந்தது"

எல்லோருமே ஏழைகளாகத்தான் இருந்தார்கள். தனியார் சொத்து தடைபட்டிருந்தது. கம்மிஸ்ஸார்கள் தவிர எல்லோருக்கும் கஷ்ட ஜீவனம்தான். அப்போது கூட விவசாயிகள் சிறு அளவில் சொந்தமாகப் பயிர் செய்து லாபம் ஈட்ட முடிந்தது. அது அனுமதிக்கப்பட்டது கூட கூட்டுப்பண்ணைகளில் ஏற்பட்ட உற்பத்திக் குறைவே ஆகும். பத்திரிகைத் தணிக்கை அமுலில் இருந்த நாட்களில் எல்லாமே சுபிட்சமாக இருப்பது போன்ற செயற்கைச் செய்திகளே வெளியில் வந்தன. அதை உண்மை என்று நம்பிய நம்மூர் கம்யூனிஸ்டுகள் ஆட்டம் போட்டார்கள். அது வேறு கதை. உண்மை என்னவென்றால் சோவியத் யூனியன் திவாலானதாலேயே மறைந்தது.

1992-ல் மக்கள் எல்லோரும் ஏறத்தாழ ஒரே பொருளாதார நிலையில்தான் (திவால்) இருந்தனர். இப்போது? நீங்களேதான் பார்க்கிறீர்களே.

சீனா இக்கொள்கையை விட்டதும்தான் முன்னேறி வருகிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"தூண்டில்" பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://thoondil.blogspot.com/2005/08/blog-post.html#comments

//மனிதர்கள் எல்லோருமே ஒரே ஆற்றலுடன் பிறப்பதில்லை//

"வணக்கம் டோண்டு அய்யா, இதன் பொருள் என்ன என்று சரியாக அறிந்து தான் கூறினீர்களா??"

தெரிந்துதான் கூறினேன். இதில் என்னக் குழப்பம் உங்களுக்கு? உங்களையே எடுத்துக் கொள்வோம். உங்கள் வகுப்பில் உங்களுடன் படித்த எல்லோரும் தேர்வு பெற்று விட்டார்களா? தேர்வு பெற்றவர்கள் எல்லோரும் ஒன்று போல அதிக மதிப்பெண்கள் வாங்கினார்களா? எல்லா பாடங்களையும் எல்லோரும் ஒரே போல புரிந்து கொண்டார்களா?

உங்கள் முயற்சி எல்லோருக்கும் இருந்ததா? நிச்சயமாக உங்களை விட அதிகப் பொருளாதார வசதி படித்த மாணவர்களில் சிலர் கூட உங்களை விடக் குறைந்த வெற்றி பெற்றிருப்பார்கள்.

ஆற்றல் வேண்டும், அதை உபயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டும், வாய்ப்புகள் வேண்டும், வந்த வாய்ப்பை உபயோகிக்கும் அறிவு வேண்டும். அது எல்லாம் இருக்கப் போய்த்தானே நீங்கள் இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள்.

புரிதலுக்காக உங்கள் உதாரணத்தை எடுத்துக் கொண்டேன். மற்றப்படி நான் கூறியது சரி என்பதைக் காட்ட எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சிமுலேஷன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://simulationpadaippugal.blogspot.com/2005/08/blog-post_112455906667122786.html#comments

இது கதையா அல்லது சொந்த அனுபவமா? எதுவாயினும் நன்றாக உள்ளது. உங்கள் பதிவைப் படிக்கும் போது சமீபத்தில் ஐம்பதுகளில் திருவல்லிக்கேணி பாண்டுரங்க மடத்தில் நடைபெற்ற ராம நவமிக் கச்சேரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன. எங்கள் வீடு மடத்திலிருந்து இரண்டு வீடுகளே தள்ளியிருந்ததால், மாடி வராந்தாவி;ல் அமர்ந்தபடி ஆனந்தமாகக் கேட்போம். மதுரை மணி ஐயர் அவர்கள் கச்சேரியில் கும்பல் சொல்லி மாளாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சிமுலேஷன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://simulationpadaippugal.blogspot.com/2005/08/embarrassment.html#comments

தாவணிக் கனவுகள் படத்தில் பாக்கியராஜ் தன் தங்கைகளை சினிமா பார்க்க அழைத்து சென்று, பலான சீன்கள் வரும்போது சில்லறைகளை கீழே போட்டு அவர்களைத் தேடச் சொல்வது ஞாபகத்துக்கு வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://simulationpadaippugal.blogspot.com/2005/08/blog-post_20.html#comments

ஓடும் நதியில் தவறி விழுந்தப் பெண்ணைக் காப்பாற்றியதற்காகத் தன்னைப் பாராட்டி பரிசு வழங்கிய கூட்டத்தில் "அதெல்லாம் இருக்கட்டும், என்னை நதியில் பிடித்துத் தள்ளி விட்டது யார் என்பது எனக்கு முதலில் தெரிந்தாக வேண்டும்" என்றான் முருகன் ஆவேசத்துடன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பிரகாஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க"
http://icarus1972us.blogspot.com/2005/08/blog-post_20.html#comments

இப்போதுதான் வெசா அவர்களுடன் தொலைபேசினேன். இன்று அவர் ஃப்ரீதான். கிருபாவும் நீங்களும் என் வீட்டிற்கு வந்தால் அவரை இன்று பார்க்கலாம்.

என் தொலை பேசி எண்கள் 22312948 மற்றும் 9884012948.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அனுராக் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://akaravalai.blogspot.com/2005/03/blog-post_12.html#comments

At Sunday, August 21, 2005 9:37:46 AM, dondu(#4800161) கூறுவது...
விபத்து இந்தியரின் தவறால் நடக்கவில்லை. இறந்தவர்கள் டாங்கருக்குப் பின்னால் தங்கள் காரை கட்டுப்பாடு இழந்து மோதியிருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே இந்தியர் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சவுதியில் இந்தியர்களை அதுவும் இஸ்லாமியர் அல்லாதவர்களை மிக மட்டமாக நடத்துகின்றனர். இன்னொரு கேஸில் இந்து இந்தியர் ஒருவர் மேல் கார் ஏற்றிக் கொன்று விட்டனர். அவருக்கான நஷ்ட ஈட்டை குற்றவாளியிடமிருந்து வசூல் செய்த சவுதி அரசு இறந்தவர் குடும்பத்துக்கு கால் பங்கை வழங்கி மிகுதியை ஸ்வாஹா செய்தது. ஏனெனில் இறந்தவர் முஸ்லிம் அல்லவாம். இம்மாதிரி இறந்தவர் பணத்தைக் கபளீகரம் செய்யும் சவுதி அரசு பேசாமல் பிச்சை எடுக்கலாம். சரியான அல்பங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என்னார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ, பார்க்க:
http://ennar.blogspot.com/2005/08/blog-post_13.html

dondu(#4800161) said...
//இங்குதான் அவர் குடும்பத்தினர் இருக்கிறார்களே, இங்கேயே தமிழ்வழிக் கல்வி படிக்க அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டியதுதானே!
//
ஏற்கனே இதே கேள்விக்கு டோண்டு அய்யாவிற்கு சொன்ன பதில்தான், ஒரு தந்தையும், தாத்தாவும் தமிழ் மொழிப்பற்றி பேசுகிறார்கள் என்பதற்காக சிறு குழந்தைகள் பெற்றோர்களை விட்டு பிரிந்திருக்க வேண்டுமென்பது சத்தியமாக எந்த விதத்தில் நியாயம்.
அப்படியா குழலி அவர்களே, அன்புமணி கொடைக்கானல் பள்ளியில் படித்தாராமே, அப்போது தந்தையைப் பிரிந்து ஹாஸ்டலில்தானே படித்தார்? இங்கு பேத்திகள் தாத்தா பாட்டியிடம் இருந்து படிப்பது என்ன பாதுகாப்புக் குறைவு?

"ஒரு வாதத்திற்காக கேட்கின்றேன், அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் என்பதற்காக அந்த கருத்தே தவறு என்பது எந்த விதத்தில் நியாயம்."
அதே வாதத்திற்காகக் கூறுகிறேன். இவ்வாறு தான் கடைபிடிக்காததை மற்றவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறுவானேன், பிரஸ்மீட்டில் இதைப்பற்றிக் கேள்வி கேட்டால் நிருபரை "அன்பாக" மிரட்டுவானேன்? இதில் அவர்கள் சொன்ன "நல்ல" கருத்துகளுக்குத்தானே பாதிப்பு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

21 August, 2005

dondu(#11168674346665545885) said...

தமிழ்த்தென்றல் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ, பார்க்க:
http://thamizhthendral.blogspot.com/2005/08/blog-post.html#comments

At 1:10 PM, dondu(#4800161) said...
இதையெல்லாம் படிக்கும்போது அண்ணா பல்கலைகழகத்தின் முன்னோடிகளில் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தது ஞாபகம் வருகிறது. அப்போதெல்லாம் ஐந்து ஆண்டுகள் படிப்பு, 1963 முதல் 1969 வரை படித்தேன். இரண்டாம் ஆண்டில் அரியர்ஸால் ஒரு வருடம் வீட்டில் இருக்க வேண்டியதாயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தமிழ் பித்தன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://biththan.blogspot.com/2005/08/blog-post_22.html#comments

At Monday, August 22, 2005 5:35:24 PM, dondu(#4800161) said…

"Plane crashes in airport, 100 feared dead"

மேற்படித் தலைப்புச் செய்தியை ஒருவர் இவ்வாறு மொழிபெயர்த்தாராம்:

"விமானம் நிலையத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்தது, 100 பேர் பயத்திலேயே மரணம்."

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என்னார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://ennar.blogspot.com/2005/08/blog-post_13.html

At 22 August, 2005, dondu(#4800161) said...
""நம் மக்கள் எதையும் சீக்கிரம் மறந்தவிடுவார்கள்", என துக்ளக் சோ சொன்னது தங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன். எதை வேண்டுமானாலும் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் எங்கு வேண்டுமானாலும் பேசலாம் சுதந்திர நாடல்லவா?"
அப்படியே நம் மாதிரி யாராவது நினைவு வைத்துக்கொண்டு கேட்டால் அவ்வாறு பேசிய அரசியல்வியாதிகளுக்கு சப்பைகட்டு கட்ட பல நன்றி மறவா தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முகுந்த் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://www.mugunth.tamilblogs.com/?itemid=46#cmt96

ப்ராக்ஸிக்கு தஞ்சை பல்கலைகழக அருங்கலைச் சொல்லகராதி பகர-ஆள் என்று பொருள் தருகிறது. இது ஒரு மனிதரைக் குறிக்கும். நாம் உங்கள் சொல்லுக்கு பகர-இணைத்தளம் என்று கூறலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நீலகண்டன் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://arvindneela.blogspot.com/2005/08/1_22.html

நீலகண்டன் அவர்களே,

மேலே என் பெயர் மற்றும் படத்துடன் வந்தப் பின்னூட்டம் என்னுடையதல்ல. என் பெயரில் இழி பிறவி ஒன்று இவ்வாறு செய்து வருகிறது. என்னுடைய ப்ளாக்கர் எண்ணையும் அடைப்புக் குறிக்குள் போட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் நீங்கள் அப்பெயர் மேல் mouse over செய்துப் பார்த்தால் குட்டு வெளிப்படும். (அதனுடைய எண் 11882041).

இது தமிழ்மணத்தில் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் புதிது என்பதால் இப்பின்னூட்டத்தை நான் இங்கு இடுகிறேன். நான் மற்றப் பதிவுகளில் இடும் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அப்பதிவையும் ஒரு முறை படித்தால் உங்களுக்கு விஷயம் புரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என்னார் அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://ennar.blogspot.com/2005/08/blog-post_23.html

கைகேயி பற்றி நான் வாய்ஸ் ஆன் விங்க்ஸின் ஆங்கிலப் பதிவு ஒன்றில் கீழ்க்கண்டப் பின்னூட்டம் இட்டேன். பார்க்க:
http://voiceonwings.blogspot.com/2005/02/kaikeyi-mother.html#comments

"Actually, Kaikeyi is a complex character. She loved Rama very much and her love was returned, till the day of her asking the boons. In fact, when Mantara tells her of the impending coronation of Rama, her first reaction was unadultrated joy. It was only after Mantara's ill-advise that she turned against Rama. Here we have to see the inevitable hand of fate. Just consider. Had she not asked these boons, Rama would have become king and Sita would not have been abducted. Then how could Ravana be killed? After all that was the aim of Ramavatar.
Once the banishment of Rama becomes irreversible, Kaikeyi wakes up from her dream and she is the most distressed person in Ayodhya. She accompanies Bharat to the forest and begs Rama to return.

There is another version to the events in one of the Ramayanas. It seems that Shani Bhagwan comes to her in disguise and tells her that he was going to cast his spell on Ayodhya for the next 14 years. Kaikeyi, not wanting to have her beloved Rama face problems, decides to put her own son at the helm of affairs, so that any problem on account of Shani will not touch her beloved Rama. How about it?"
அது இருக்கட்டும். உங்கள் இப்பதிவில் நீங்கள் ராமரை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

http://ramsanjay.blogspot.com/2005/08/blog-post_112473270320356358.html#comments

அவ்வாறு அமையும் புது நாட்டுக்கு நம்ம கங்கூலியையும் அனுப்பி அணி காப்டன் ஆக்கி விட்டால் ஒஹோன்னு இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

துளசி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://thulasidhalam.blogspot.com/2005/08/blog-post_25.html#comments

அக்கதையில் ஒரு பாட்டு வரும்.. சமீபத்தில் 1952-ல் என் அம்மா அதை எனக்கு சொல்லியிருக்கிறார்.
"கொழு கொழு கன்றே என் பேர் என்ன" என்று கன்றிடம் ஆரம்பிக்கும் பாட்டு பசுவிடம் செல்லும் போது "கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, என் பேரென்ன" என்று விரிவடையும். அப்படியே ஒவ்வொருவராகப் போகும் போது பாடல் 'அடியைப் பிடிடா பாரதப் பட்டா' என்ற ரேஞ்சில் விரிவடைந்து செல்லும். ஒவ்வொரு முறையும் கொழு கொழு கன்றே என ஆரம்பித்து, கன்றின் தாயே, தாயின் மாட்டுக்காரனே என்றெல்லாம் சொல்பவர் கற்பனைக்கேற்ப விரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அரசு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://arrasu.blogspot.com/2005/08/blog-post_25.html#comments

கண்ணகி மதுரையை எரித்தது பற்றி எனக்கும் மாற்றுக் கருத்து உண்டு. அவள் செய்தது ஓவர்தான். இது பற்றி நான் என் வலைப்பூவில் பதிவும் போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/07/100.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என்னார் அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://ennar.blogspot.com/2005/08/blog-post_23.html

"ஆமாம் அது என்ன சார் இருவருக்கும் ஓரளவிற்கு ஒற்றுமையிருக்கும் போலிருக்கே நான் இதற்கு முன் உங்கள் ஆங்கில பதிவை படிக்க வில்லையே."

சொல்லப்போனால் நானும் என்னார்தானே (N.Raghavan). மேலும் அது என்னுடைய ஆங்கிலப் பதிவல்ல. வாய்ஸ் ஆன் விங்க்ஸின் ஆங்கிலப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் அது.

"சிவத்தொண்டனை அழித்த வகையில் எனக்கு ராமன் மேல் கோபம்."
சிவத் தொண்டனானாலும் சிவனே அவன் செய்ததை ஒப்புக் கொள்ளவில்லையே. மேலும் ராமரின் இஷ்ட தெய்வமும் சிவன்தான் என்பதை அறிவீர்களா?

ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் ராமர் ராமேஸ்வரம் பெயர்க்காரணம் அனுமனுக்கு கூறுகிறார்.

அதாவது யார் ராமனுக்கு ஈஸ்வரனோ அவனே ராமேஸ்வரன் என்று. ராமனின் பூஜையை சிவனும் பார்வதியும் வானுலகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது சிவன் பார்வதியை நோக்கிக் கூறுகிறார்: "உமா, பார்த்தாயா எவ்வாறு என் பிரபு ராமபிரான் ராமேஸ்வரனின் அர்த்தத்தை சாமர்த்தியமாக மாறி விட்டார்" என்று. விஷ்ணுவின் தங்கை பார்வதிக்கு அண்ணன் புகழ் கேட்டு ஒரே பெருமை. இருப்பினும் தெரியாதது போலக் கேட்கிறார்.

"அப்படியா சுவாமி, ராமேஸ்வரன் யார் என்று நீங்கள் கூறுங்களேன்" என்று. அதற்கு சிவன் அவர்கள் கூறுகிறார். "யாருடைய ஈஸ்வரன் ராமனோ அவனே ராமேஸ்வரன்" என்று.

ராமர் கீழிருந்து வானத்தை நோக்கி வணங்க, சிவன் வானத்திலிருந்து அவருக்கு பதில் வணக்கம் போடுகிறார்.
ஹிந்தி எனக்கு நன்றாகத் தெரியுமாதலால் நான் இக்காட்சியை முழுமையாக ரசித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சலாஹுத்தீன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://economicdiary.blogspot.com/2005/08/blog-post_20.html#comments

"அன்றைய சூழ்நிலையில் அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடு தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என்ற தேவையற்ற அச்சம் காரணமாக சொல்லப்பட்டது."

தேவையற்ற அச்சம் என்று எப்படிச் சொல்லுகிறீர்கள் சலாஹுத்தீன் அவர்களே? வெள்ளைக்காரர்கள் இம்மாதிரி வணிக நோக்கத்தில் உள்ளே வந்துதானே இந்தியாவையே அடிமை கொண்டனர். ஆகவே உள்ளூர்காரர்கள் இம்மாதிரி எம்முயற்சியையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தருமி அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://dharumi.blogspot.com/2005/08/59-4.html#comments

தருமி அவர்களே,
எல்லாம் சரிதான். முதலில் எரிதப் பின்னூட்டங்களை நீக்குங்கள். அனாமத்துப் பின்னூட்டங்களுக்கு வழிவகுத்தால் இப்படித்தான் நடக்கும். அதை எடுத்தாலே பாதி பிரச்சினை தீரும்.

இன்னும் பிரச்சினை வந்தால் automated comments வராமல் தடுக்கலாம். இதைப் பற்றி நான் தனிப்பதிவு போட்டிருக்கிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/08/blog-post_24.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_27.html#comments

"சரியா சொன்னீங்க. அதே போல ஊரிலே இருக்குற மரத்தையெல்லாம் வெட்டிப்புட்டு 'பசுமைத்தாயகம்' அப்படீன்னு கப்ஸா விடுறவங்களையும் உதாரணமா சேர்த்திருக்கலாம்"

எல்லாத்தையு கேட்டு நம்புபவர்களைத்தான் குறை சொல்லணும். காதில் கூடைப் பூ வைத்துக்கொண்டால் ஏமாத்துறவனுக்குக் கொண்டாட்டம்தானே.

ஊராருக்குத் தாய் மொழிக் கல்வியைத் தீவிரமாக வலியுறுத்துவார்கள், உன் வீட்டு விஷயம் என்ன என்று கேட்டால் அன்புடன் மிரட்டுவார்கள். இதில் விசேஷம் என்னவென்றால் அதையும் சப்பைகட்டு கட்டிப் பேசும் அறிவுஜீவிகள் வேறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_27.html#comments

"டோண்டு அய்யாவிற்கு என்ன பிரச்சினையென்று தெரியவில்லை அவரால் பாமகவை தவிர்த்து வேறெதுவும் சிந்திக்க முடியவில்லை போலும் அந்தளவிற்கு பாமகவும் மருத்துவரும் அவரை ஆக்கிரமித்துவிட்டார்கள் போல :-))"

என்ன செய்வது குழலி அவர்களே, இந்த சமூக இளைஞர்களை வன்முறையில் திசை திருப்புவதைக் கண்டித்து எழுதும்போது படச்சுருளைக் கடத்தியவர்களையும், திருட்டு வி.சி.டி. போடுவோம் என மிரட்டியவர்களையும் கூட உதாரணம் காட்ட வேண்டியிருக்கிறது.

"kizava, paapara puthiya vituttu veliya varave maattiya..." என்று முகவரியில்லாக் குமார்கள் எழுதும் பின்னூட்டத்தைக் கண்டிக்காது ரசிக்கும் மனப்பான்மையை என்னவென்று சொல்வது?

ஐயா குமாரு, என் பின்னூட்டம் எனக்கு முன்னால் வந்தப் பின்னூட்டத்தின் எதிர்வினை என்பதைக் கூடப் புரியாது என்ன ஐயா தமிழ் படிக்கிறீர்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சலாஹுத்தீன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://economicdiary.blogspot.com/2005/08/blog-post_20.html#comments


"ஆனால் உலகமயமாக்கலின் தாக்கத்தால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் இது தேவையற்ற அச்சமாகத்தான் படுகிறது."

அப்படீங்கறீங்க? வெளிநாட்டுப் பத்திரிகைகள் இந்தியாவில் கடை திறப்பதையும் பேசாமல் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானா? என்னதான் உலகமே கிராமமாகப் போனாலும் sensitive துறைகளில் வெளிநாட்டு முதலீடு நடப்பது எதிர்ப்புக்குள்ளகும்தானே.

"சவுதிஅரேபியாவின் Aramco அமெரிக்காவின் எண்ணை நிறுவனமொன்றை வாங்கியபோது இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது."
சவுதியிடம் தேவையான அளவு உள்நாட்டு தொழில் வல்லுனர்கள் இல்லை என்பதும் உண்மைதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_27.html#comments

//இதில் விசேஷம் என்னவென்றால் அதையும் சப்பைகட்டு கட்டிப் பேசும் அறிவுஜீவிகள் வேறு.//
"hey dondu kuzali arivujeevyaka irupadhil unaku enna pirachini un paapara jaadhi veriyai vida avarin jadhi patru paravillai."

குழலி அறிவுஜீவியாக இருப்பதில் எனக்கு என்னப் பிரச்சினை இருக்க முடியும்? ஆக, சப்பைகட்டு கட்டிப் பேசும் அறிவுஜீவி என்பது குழலிதான் என்று ஒத்துக் கொள்கிறீர்கள். உம்மை விடப் பெரிய அனுகூல சத்ரு குழலிக்குக் கிடைக்காது. நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கோபி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://higopi.blogspot.com/2005/08/blog-post_29.html

அந்த ஆறு வயது கனவுப் பெண் குமரியாகி உங்கள் வாழ்வில் இணைய வருகிறார். உங்கள் திருமண வாழ்க்கை மாறா புத்துணர்ச்சியுடன், 'ஊடுதல் காமத்திற்கின்பம், அதனினும் இன்பம் கூடி முயங்கப்பெறின்' என்று இயம்பிய தமிழ் வேதத்துக்கிணங்க சீரும் சிறப்புமாக விளங்குமாறு என் உள்ளம் கவர் கள்வன் என்னப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதனை மனப்பூர்வமாக வேண்டுகிறேன்.

வர முயற்சிப்பேன். சென்னையில் ஏதாவது வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நாகூர் ரூமி அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://www.tamiloviam.com/rumi/page.asp?ID=48&fldrId=1

பெண்களை ஒடுக்க நினைக்கும் எந்த சமுதாயத்திலும் பெண்களுக்குள்ளே இவ்வாறு எதிர்ப்பு உணர்ச்சிகள் வருவது ஆச்சரியப்படுவதற்குரியதல்ல.

1001 இரவு அரபுக் கதைகளையே எடுத்துக் கொள்ளுங்கள். அரசனின் மனைவியர் சோரம் போவது தாராளமாகக் கூறப்படுகிறது. ஏன் பெண்கள் அவ்வாறு செய்கிறார்கள்? அந்தப்புரத்தில் நூற்றுக்கணக்கான மனைவியர் இருக்கும்போது அரசன் எத்தனை பேருடன் புணர முடியும் என்கிறீர்கள்? ஒரு குறிப்பிட்ட மனைவி ஆண் சுகம் இல்லாமல் கழிக்கும் இரவுகள்தான் அதிகம். வேறு வெளிப்பாடுகள் சாத்தியமில்லாத போது ஓரினச் சேர்க்கை வருகிறது. அலிகளைக் காவலுக்கு வைத்த ஆண்கள் அவர்களிடம் விரல்களும் நாக்கும் உள்ளன என்பதை எப்படி மறந்தார்கள்? இதையெல்லாம் மதம் என்னும் பெயரில் சௌகரியமாக மூடி மறைத்ததுதான் இத்தனை நாட்களாக நடந்து வருகின்றது. அதன் எதிர் வினை இப்படித்தான் வரும். அதை எடுத்துக் கூற சல்மா போன்ற கதாசிரியைகளும் வருவர். நான் இப்போது கூறியது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். ஆண்கள் கவனிக்காமல் இருந்தால் பெண்களுக்கிடையில் fire-தான்.

மற்றப்படி கிராமங்களிலும் சரி நகரங்களிலும் சரி கள்ள உறவு என்பது சர்வசாதாரணமாக நடப்பதுதான். ஆண்கள் தன்ணியடித்துவிட்டு தங்களுக்குள் பச்சை பச்சையாக பேசுவது போல பெண்களும் தனியாக இருக்கும்போது அவ்வாறு பேசிக் கொண்டால் உமக்கு என்ன கோபம்? இதே கதையை சாருநிவேதிதா போன்ற ஆண் ஒருவர் எழுதியிருந்தால் வரவேற்றிருப்பீர்களா?

கதையைக் கதையாக விமசரியுங்கள். எழுதியது பெண், அவர் எப்படி இவ்வாறு எழுதப்போயிற்று என்றெல்லாம் பிரலாபிப்பது ஆணாதிக்கமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நல்லடியார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://athusari.blogspot.com/2005/08/blog-post_29.html#comments

படிக்கும்போதே புரிந்து கொண்டேன். எலிக்குட்டியை பயன்படுதத் தேவையே இருக்கவில்லை எனக்கு.

நம்முடைய சிறந்தக் குடியரசுத் தலைவரின் மனிதாபிமானம் கண்டு பெருமிதமடைகிறேன். அவரால் குடியரசுத் தலைவர் பதவியே பெருமையடைகிறது. அந்தச் சிறந்த தமிழர் எங்கள் அண்ணா பலகலைகழகத்து மாணவர் என்பதிலும் மிகப் பெருமையே. அவர் நீடூழி வாழ்க என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

The comment below was posted by me in Lollu's post vide http://sinthanaigalthoughts.blogspot.com/2005/08/blog-post_30.html#comments

Here are some information that may be of interest to you.
1. See: http://picturenet.co.za/photographers/kc/
Kevin Carter (1961-1994) - South Africa Pulitzer Prize winner, Kevin Carter, took his own life months after winning the Pulitzer Prize for feature photography for a haunting Sudan famine picture. A free-lance photographer for Reuter and Sygma Photo NY and former PixEditor of the Mail&Gaurdian, Kevin dedicated his carrer to covering the ongoing conflict in his native South Africa. He was highly honoured by the prestigious Ilford Photo Press Awards on several occasions including News Picture of the Year 1993. Kevin is survived by a seven year old daughter, Megan.

2. See also: http://www.thisisyesterday.com/ints/KCarter.html

Hope these help.

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

இளவஞ்சி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ:

At 8:15 PM, August 30, 2005, dondu(#4800161) said...
"எட்டாம் வகுப்பு படிக்கும்போது வரலாற்றுப்பரிச்சையில் மடகாஸ்கரை ஆந்திராவுக்கு நடுவிலும் போபாலை கன்னியாகுமாரி முனையிலும் இந்திய வரைபடத்தில் குறித்து வைத்து நடேசன் வாத்தியாரிடம் தொடையில் நிமிட்டாம்பழம் வாங்கியபோதிருந்து..."

பரவாயில்லையே நடேசன் வாத்தியார். பாஷ்யம் ஐயங்கார் மாதிரி மோசம் இல்லை. பார்க்க என் பதிவு:
http://dondu.blogspot.com/2005/08/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நல்லடியார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://athusari.blogspot.com/2005/08/blog-post_29.html#comments

"நகைச்சுவைக்காக கேட்கிறேன். பின்லாடனும் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்திருந்தால் பெருமைப் படுவீர்களா?"

வெட்கப்படுவேன். அதையும் அழுத்தம் திருத்தமாகக் கூறுவேன். என் alma mater-ஐ அப்படிப்பட்ட மாணவர்களிடமிருந்து இறைவன் காப்பான் என நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நல்லடியார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://athusari.blogspot.com/2005/08/blog-post_29.html#comments

alma mater என்றதும் நான் சமீபத்தில் கல்வியாண்டு 1962-63-ல் புகுமுக வகுப்பு படித்த சென்னை ராயப்பேட்டையிலுள்ள புதுக்கல்லூரி ஞாபகத்துக்கு வருகிறது.

அப்போது அதன் முதல்வர் அல் ஹஜ் அஃப்ஸல் அல் உலேமா சையத் அப்துல் சாஹேப் வாஹேப் புகாரி அவர்கள். பதவிக்குரிய கம்பீரத்துடன் அவர் வரும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.

பாக்தாத் நகரத்தின் 1000-வது ஆண்டு விழாவிற்கு அவர் இந்தியாவின் பிரதிநிதியாகச் சென்றார். அரேபிய மொழியில் சொற்பொழிவாற்றி எல்லோர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டார்.

அவர் மாணவர்களாகிய நாங்கள் என்னமோ நாங்களே அச்சாதனையைச் செய்தது போல ஆகாசத்தை நோக்கிப் பார்வை வைத்து நடந்து சென்றோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நல்லடியார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://athusari.blogspot.com/2005/08/blog-post_29.html#comments

"1992-93 ஹாஸ்டல் டேயில் தற்போதைய '30 ஆயிரம் கோடி பத்திர குற்றச்சாட்டு புகழ்' மதிப்பிற்குறிய முஹமம்து அலி IPS அவர்களும் நியூகாலஜ் மாணவன் என்பதோடு ஹாஸ்டல் ரூம் நம்பர் 18 இல் தங்கி படித்தாக சொன்ன ஞாபகம். நீங்கள் அவருக்கு ஜூனியரா?"

இது லொள்ளுதானே? சீனியரா என்று கேட்க வேண்டியதை மாற்றிக் கேட்கிறீர்களே!

புதுக் கல்லூரியைப் பற்றி இன்னும் பேசுவோமா? முதலில் நீங்கள் எந்த வருடம் அங்கு படித்தீர்கள்? எந்த கோர்ஸ்? இப்போது சென்னையில்தான் இருக்கிறீர்களா? நான் படித்த போது இருந்த முதல்வரைப் பர்றி எழுதியாயிற்று. ஆங்கிலம் எடுத்தது திரு. தேவப்ரஸாத், மொரேஸ், பாஷா (Pasha). தமிழ் எடுத்தது நா. பாண்டுரங்கன், அமீர் அலி. இரண்டாமவருக்கு கம்ப ராமாயணம் என்றால் அவ்வளவு பிரியம். பௌதிகம் எடுத்தது சம்பத்குமார், ரசாயனம் ஷாஹுல் ஹமீது, லாஜிக் மொஹம்மது காசிம் மற்றும் பொருளாதாரம் ஷம்ஸுத்தீன் அவர்கள். நாங்கள் அக்காலத்தில் இவை எல்லாமே படித்தோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நல்லடியார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://athusari.blogspot.com/2005/08/blog-post_29.html#comments

முக்கியம் வாய்ந்த கணிதத்தை மறந்து விட்டேனே. அனாலிடிகல் ஜியோமெட்ரி எடுத்தது துறைத் தலைவர் திரு. நரசிம்மாச்சாரி, ட்ரிக்னாமெடெரி எடுத்தது திரு. குமாரஸ்வாமி, அல்ஜீப்ரா எடுத்தது திரு. மஜீத் பாஷா மற்றும் ஜியோமிதி எடுத்தது திரு. சையத் அஹமத். என்னுடைய ஃபேவரைட் மஜீத் பாஷா அவர்களே. மனுஷன் புலி பாடம் எடுப்பதில். கணக்கில் எனக்கிருக்கும் ஆர்வத்தை இன்னும் வளர்த்தவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"என்னமோ போங்க" அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://randakka.blogspot.com/2005/09/blog-post.html#comments

நடந்த விஷயம் ரொம்ப சிம்பிள். வாய்க்கொழுப்புடன் தங்கர் பேசினார். வாங்கிக் கட்டிக் கொண்டார். மன்னிப்பு கேட்டார். சிலர் மன்னித்தனர், சிலர் மன்னிக்கவில்லை. ஒரு சங்கட நிலை நீடிக்கிறது.

இது போதாது என்று அவருக்கு ஆதரவாகப் பேசுகிறேன் பேர்வழி என்று இங்கு வலைப்பதிவர் குழு ஒன்று கிளம்பியிருக்கிறது. தங்கர் கடுமையான வார்த்தையைப் பேச, அதைப் பிடித்துக் கொண்டு பலர் தொங்குகிறார்களாம். ஆகவே அவர் கூறிய உண்மை மறைக்கப்பட்டதாம். இவர்கள் இவ்வாறு வருத்தப்படுகிறார்கள். இவர்கள் எல்லோருமே தங்கள் ஆணாதிக்க மனப்பான்மையை இம்முறையில் காட்டிக் கொண்டார்கள். இவர்களுக்கு எதிராக எழுதிய மற்றவரும் இவர்களின் பெண் உறவினர்களை இழுக்கிறார்கள். மொத்தத்தில் எம்.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் சேர்ந்திசையைக் கேட்ட உணர்வே ஏற்படுகிறது. தங்கர் பச்சானே இவற்றையெல்லாம் படித்தால் நொந்து நூலாகியிருப்பார். பாவம் அவர்,

விட்டு விடுங்கள் இந்த விஷயத்தை. அவர் தன்னால் காயப்பட்டவர்களை அதை மறக்கச் செய்து தன்னுடன் சேர்ந்து வேலை செய்யும் மனநிலைக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டிய நிலையிலிருக்கிறார். இந்த மாதிரியான நேரத்தில் அனுகூல சத்ருக்கள் ஆகாதீர்கள் அவருக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஷாங்ரீலா பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://pavithra.blogspot.com/2005/02/blog-post.html#comments

"உண்மையைச் சொல்கிறேன். இந்தக் காட்சி எனக்கு ஸ்ரீராமானுஜரின் வரலாற்றில் வரும் 'வில்லிதாசனின்' கதையை நினைவுபடுத்தியது."

எனக்கும்தான். இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இன்னும் வரவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தங்கரின் பிரச்சினை குறித்து குழலி, முகமூடி, எம்.கே. குமார் மற்ரும் என்னமோ போங்கவின் பதிவுகளில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ:

"வாங்க டோண்டு அய்யா வாங்க, என்னடா பிரச்சினை ஆரம்பித்து இத்தனை நாட்களாயிற்று இவரின் பின்னூட்டத்தை காணவில்லையே அதுவும் பிரச்சினையில் நான் வேறு இரண்டு பதிவு போட்டிருக்கேனே என்று நினைத்தேன் வந்துவிட்டீர்கள்"

எல்லோருடையப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்து எழுதியது என்னுடையப் பின்னூட்டம். ஆகவே நேரம் ஆகி விட்டது.

"//இவர்கள் எல்லோருமே தங்கள் ஆணாதிக்க மனப்பான்மையை இம்முறையில் காட்டிக் கொண்டார்கள்.//

வாங்கய்யா டோண்டு அய்யா இதில் என்னையும் சேர்த்துதான் கூறினீர்களா? நீங்கள் அளித்த இந்த பட்டமளிப்பில் நான் உண்டா, இல்லையா?"

நீங்களும் அதில் உண்டு. அப்படி நீங்கள் இருக்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டுக் கொள்ளலாமே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

//நீங்களும் அதில் உண்டு. அப்படி நீங்கள் இருக்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டுக் கொள்ளலாமே?//

நான் என் மனசாட்சியிடம் கேட்டுபார்த்தேன் அது இல்லை என்று சொல்கின்றது, ஆணாதிக்க மனப்பாண்மையோடு எழுதினேன் என்று (என் பழவிலிருந்து வேண்டுமானாலும் காட்டுங்கள்) நிரூபித்தால் என் வலைப்பதிவில் தனியாக ஒரு பதிவு போட்டு வருத்தம் தெரிவிக்கின்றேன், அப்படி முடியாவிட்டால் அய்யா டோண்டு அவர்கள் என் மீது ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றேன் என அவதூறு பரப்பியதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

டோண்டு அய்யா நான் உங்களைவிட வயதில் வயசில்,படிப்பில் அனுபவத்தில் மிக குறைந்தவன், எனவே என்னை குறி வைப்பதைவிட உங்கள் தகுதிக்கு இணையான ஆட்களை குறி வைங்கள், அதுதான் உங்கள் தகுதிக்கு பொறுத்தமாக இருக்கும்

நன்றி

dondu(#11168674346665545885) said...

"தங்கர் விபச்சாரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதுதான் இங்கே பிரச்சினை. "பணத்துக்காக மட்டும் நடிக்கும் " என்றாவது சொல்லியிருக்கலாம் ஆனால் இதற்காக செய்யப்படும் அளவுக்கு மீறிய எதிர்வினைகள் எங்கே இந்த நடிகர்களும்/நடிகைகளும் பணத்திற்காக செய்யும் அட்டகாசங்கள் வெளியாகிவிடுமோ என்ற பயத்தினால் செய்யப்படும் காட்டு கூச்சல் தான் என்பதில் சந்தேகமில்லை."

பணத்திற்காக மட்டும் என்று அழுத்திக் கூறும்போது நடிககைகளையும் சேர்த்தால் அவர்கள் விபசாரிகள் என்று கூறியப் பொருளும் வரும். டிஸ்கஷன்களைப் பற்றிப் பேசியதும் துரதிர்ஷ்டவசமானதே. நடிகர்கள் தங்களுக்குளேவா டிஸ்கஷன் வைத்துக் கொள்வார்கள்? நடிகைகளும் அதில் அடக்கம்தானே.

உங்களையும் ஆணாதிக்கம் உள்ளவர்களில் ஒருவராக சேர்த்தது என் மனசாட்சிப்படி சரியே.

"என்னை குறி வைப்பதைவிட உங்கள் தகுதிக்கு இணையான ஆட்களை குறி வைங்கள், அதுதான் உங்கள் தகுதிக்கு பொறுத்தமாக இருக்கும்."
உங்களை எதற்கு நான் குறிவைக்க வேண்டும்? நான் பொதுப்படையாகக் கூறியதை நீங்களே "நானும் அதில் உண்டா" என்று ஆசையுடன் கேட்டு உள்ளே வந்தால் நான் என்ன செய்ய முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

//தங்கர் விபச்சாரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதுதான் இங்கே பிரச்சினை//
இப்போதும் சொல்கின்றேன் தங்கர் விபச்சாரி என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு மற்றும் அது தான் பிரச்சினையே, நான் என்ன தங்கர் அந்த வார்த்தையை பயன் படுத்தியது சரி என்றா கூறினேன்.

அதற்காக நடிகர்/நடிகைகள் செய்யும் அட்டகாசங்களை எதிர்க்க கூடாதா?


//"பணத்துக்காக மட்டும் நடிக்கும் " என்றாவது சொல்லியிருக்கலாம் ஆனால் இதற்காக செய்யப்படும் அளவுக்கு மீறிய எதிர்வினைகள் எங்கே இந்த நடிகர்களும்/நடிகைகளும் பணத்திற்காக செய்யும் அட்டகாசங்கள் வெளியாகிவிடுமோ என்ற பயத்தினால் செய்யப்படும் காட்டு கூச்சல் தான் என்பதில் சந்தேகமில்லை//
இங்கே தங்கர் பேசிய பேச்சிற்கு எதிர்வினைகள் தவறு என்று நான் சொல்லவில்லை, சரியாக படியுங்கள் அளவுக்கு மீறிய எதிர்வினைகள் தான் தவறு என்று கூறியுள்ளேன், அதற்கு என்ன காரணமென்றும் கூறியுள்ளேன்

//பணத்திற்காக மட்டும் என்று அழுத்திக் கூறும்போது நடிககைகளையும் சேர்த்தால் அவர்கள் விபசாரிகள் என்று கூறியப் பொருளும் வரும்.//
தவறாக பொருள் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது அல்லது உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ள விரும்பவில்லை, தங்கர் பேசியது கடுமையானது என்று கூறிய பிறகும் வரிகளுக்கு இடையில் வார்த்தைகளை பிடித்துக்கொண்டு பேசுவது தான் இது.

// டிஸ்கஷன்களைப் பற்றிப் பேசியதும் துரதிர்ஷ்டவசமானதே//
எதிர்பார்த்தது தான் நீங்கள் இங்கே வருவீர்கள் என்று, சரியாக படியுங்கள் டிஸ்கஷன் என்ற கருத்தில் நடிகைகளை பற்றி அவதூறாக பேசவில்லை, நடிகைகளின் மீதான நல்லெண்ணத்துடன் பத்திரிக்கையாளர்களின் முன் ஆவேசம் காண்பித்த நடிகர்களின் வெளிவேசத்தை கிழிக்கத்தான் அது பயன்படுத்தப்பட்டது.

//"என்னை குறி வைப்பதைவிட உங்கள் தகுதிக்கு இணையான ஆட்களை குறி வைங்கள், அதுதான் உங்கள் தகுதிக்கு பொறுத்தமாக இருக்கும்."
உங்களை எதற்கு நான் குறிவைக்க வேண்டும்? நான் பொதுப்படையாகக் கூறியதை நீங்களே "நானும் அதில் உண்டா" என்று ஆசையுடன் கேட்டு உள்ளே வந்தால் நான் என்ன செய்ய முடியும்?
//
நீங்கள் என் பதிவினைப்பற்றி குறிப்பிட்டு எல்லோரும் என்று குறிப்பிட்டதால் அங்கே நான் மற்றுமொருமுறை உறுதிபடுத்திக்கொள்ள கேட்டேன்.

//உங்களையும் ஆணாதிக்கம் உள்ளவர்களில் ஒருவராக சேர்த்தது என் மனசாட்சிப்படி சரியே.
//
என்ன செய்வது, அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்கவில்லை என்று மட்டையடித்தவர் நீங்கள், பின் ஆதரங்களோடு இல்லை என்று நிரூபித்த வருத்தம் தெரிவிக்க சொன்னபோது நான் அதை நம்பவேயில்லை என்று கூறி இந்த விடயத்தில் உங்கள் நேர்மையை ஏற்கனவே ஒரு முறை நிரூபித்தவர் தானே நீங்கள், உங்களால் அப்படித்தான் நினைக்கத் தோன்றும். இப்படித் தான் ஏதாவது சப்பைகட்டு கட்டுவீர்கள் என எதிர்பார்த்தேன், இருந்தாலும் நீங்கள் என்னை ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தியவன் என்று கூறியதால் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது என் கடமை.

இனி இங்கே படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் நான் ஆணாதிக்கத்தோடு எழுதினேனா இல்லையா என்று.


எம்மால் ஒரு விடயத்திலோ ஒருவரையோ வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்று முழுவதும் ஆதரிப்பதும் முழுவதும் எதிர்ப்பதும் முடியாத விடயம்.

தங்கர்பச்சான் வெளிப்படுத்திய வார்த்தைகளை எதிர்த்தாலும் அதன்பின்னால் நடிகர்/நடிகைகளின் அட்டாகசத்தை எதிர்த்து தங்கர் கூறியதை ஆதரித்தால் இப்படித்தான் ஆணாதிக்க பட்டம் சூட்டுவீர்கள்

dondu(#11168674346665545885) said...

"என்ன செய்வது, அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்கவில்லை என்று மட்டையடித்தவர் நீங்கள், பின் ஆதாரங்களோடு இல்லை என்று நிரூபித்து வருத்தம் தெரிவிக்க சொன்னபோது நான் அதை நம்பவேயில்லை என்று கூறி இந்த விடயத்தில் உங்கள் நேர்மையை ஏற்கனவே ஒரு முறை நிரூபித்தவர் தானே நீங்கள், உங்களால் அப்படித்தான் நினைக்கத் தோன்றும்."

தமிழ்குடிதாங்கி மற்றவருக்கு வலுவுறுத்தியது தமிழ்வழிக் கல்வியே. வெறுமனே தமிழை ஒரு பாடமாகப் படிப்பதல்ல. மேலும் சம்பந்தப்பட்டக் குழந்தைகள் தமிழ்நாட்டில் இருந்த வரைக்கும் கூடத் தமிழ்வழிக் கல்வி படித்த்தாகத் தெரியவில்லை. அதை பற்றிக் கேட்டதற்கு துக்ளக்கையும், தின மலரையும் அந்துமணியையும் கேட்டுக் கொள்ளச் சொன்னீர்கள்.

இப்போதும் கூறுவேன், குழந்தைகள் இப்போது தமிழ்ப்பாடம் படிப்பதாகக் கூறுவது ஒரு டேமேஜ் லிமிடிங்க் முயற்சிதான் என்று.

தமிழ்நாட்டில் இருந்திருந்தால் அன்புமணி தன் குழந்தைகளைத் தமிழ் கல்விமுறையிலேயே படிக்க வைத்திருப்பீர்கள் என்று வேறு ஒரு ஜல்லியடித்தீர்கள். ஐயா, அவரே ஆங்கிலப் பள்ளியில்தான் படித்தார் என்பதற்கு சரியானப் பதில் இல்லை. தில்லி தமிழ் கல்விக் கழகத்தில் தன் குழந்தைகளை அன்புமணி படிக்க வைக்காமல் போனதற்கு மேட்டுக்குடி மனப்பான்மை என்று கூறியதற்கும் சரியான பதில் இல்லை. உங்களிடம் அப்பள்ளிகளில் தரம் இல்லை என்று கூறிய நண்பர் இதையே அதற்கு முக்கியக் காரணமாக வைத்திருப்பார் என்று கூறியதற்கும் உங்களிடம் பதில் இல்லை. என்ன செய்யச் சொல்கிறீர்கள் என்னை?

"இனி இங்கே படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் நான் ஆணாதிக்கத்தோடு எழுதினேனா இல்லையா என்று."

மற்றவர்கள் உங்களைப் பற்றி எழுதியதைத்தான் பார்த்திர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

//மற்றவர்கள் உங்களைப் பற்றி எழுதியதைத்தான் பார்த்திர்களே.//

நன்றாக பார்த்தேன் யாருமே நான் ஆணாதிக்க சிந்தனையோடு எழுதியதாக சொல்லவில்லை உங்களைத்தவிர. (உங்களுக்கு அப்படி எழுதுவதற்கு பல உள்நோக்கங்கள் இருக்கலாம்)

டிஸ்கஷன் பற்றி எழுதியதை தவறாக அர்த்தம் செய்து கொண்டவர்களும் நான் அதற்கு மறுப்பு தெரிவித்து எழுதியபின் எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை.

தெக்கத்திடெர்மினேட்டர் லிங்கம் பதிவில் சம்மந்தமில்லாமல் பின்னூட்டமிட்டீர், இது மாதிரி பல உங்கள் உள் நோக்கங்களுக்கு பல உதாரணங்கள் தரமுடியும், எனவே டோண்டு அய்யா இப்போதும் சொல்கின்றேன் நான் சின்னபையன் என்னை குறி வைக்காதீர்கள் உங்கள் தகுதிக்கு நான் சரியான இலக்கு அல்ல

dondu(#11168674346665545885) said...

"தெக்கத்திடெர்மினேட்டர் லிங்கம் பதிவில் சம்மந்தமில்லாமல் பின்னூட்டமிட்டீர்"

சம்பந்தமில்லாமல் ஏதும் பின்னூட்டமிடவில்லை. எனக்கு முன்னால் வந்தப் பின்னூட்டத்தின் எதிர்வினை அது. மேலும் அப்பதிவில் இளைஞர்களை வன்முறைக்குத் திருப்புவதைக் கண்டித்தீர்கள். அதற்குக் கூடுதல் உதாரணமாக மரம் வெட்டியவர்களையும் சேர்த்துக் கூறினேன், படச்சுருளை திருடுவது, திருட்டு வி.சி.டி. போடவைப்பேன் என பயமுறுத்துவது போன்றவையைக் கூட வன்முறையைத் தூண்டுவதற்கு உதாரணமாகக் கூறினேன்.

நீங்கள் மட்டும் என்னவாம், இப்பதிவில் சம்பந்தமில்லாது அன்புமணி விஷயத்தை இழுத்தீர்கள். அதற்கு பதில் கூறியதும் சௌகரியமாகத் தெக்குத் டெர்மினேட்டருக்கு ஓடுகிறீர்கள்.

"நான் சின்னபையன் என்னை குறி வைக்காதீர்கள் உங்கள் தகுதிக்கு நான் சரியான இலக்கு அல்ல"
உங்களை நான் குறிவைக்கவில்லை. உங்கள் கருத்துகளுக்கு என்னிடம் பதில் இருந்தால் அதைக் கூறுவதே நான் செய்வது. யாரையும் நான் குறிவைப்பதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"என்னமோ போங்க" அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://randakka.blogspot.com/2005/09/blog-post_02.html#comments

"டோண்டு அய்யா உங்க படத்தையும் நீங்க எங்க கடைக்கு வந்து பேசுனது போல அமைந்துள்ள இந்த பதிவையும் நீங்கள் ஆட்சேபிக்கும் பட்சத்தில் நீக்கப்படும்."

ஆட்சேபிப்பதா? மூச். மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி. அது சரி, எனக்கு சட்டை போட்டு விடுங்கள் ஐயா. மற்றப்படி டீ கூடக் குடித்திருப்பேன். எனக்கு பிடித்தது ஸ்ட்ராங்க் டீ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தாஸு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

"அ) எனக்கு தங்கரை ஆதரிக்கவேண்டிய அவசியமில்லை.. நான் தங்கர் ஜாதியில்லை .."

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா !!!!! அற்புத டிஸ்க்ளைமர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குத்தூஸ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuddusa35.blogspot.com/2005/08/blog-post.html#comments

தமிழில் பசியாறுதல், ஆங்கிலத்தில் breakfast (உபவாசத்தை முடித்தல்), ஃபிரெஞ்சில் dejeuner (உபவாசத்தை முடித்தல்), இவை எல்லாமே ஒருவகையில் பார்த்தால் மதம் சம்பந்தப்பட்டவையாகவே இருந்திருக்கின்றன. மனித வாழ்க்கையில் மதம் வகித்த பங்கு அப்படி.

நல்லப் பதிவு. செத்தும் கொடுத்தான் சீதக்காதி கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தாரா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://siragugal.blogspot.com/2005/09/blog-post.html#comments

"With due respects, ஆணாக இருந்தாலும் அதற்கு வழி இருக்கிறது. Gigolo, Male sex worker என்றெல்லாம் சாரு கேள்விபட்டதில்லையோ?"

இந்த மாதிரி ஆட்களுக்கு என்ன With due respects வேண்டியிருக்கிறது? ஆண்புணர்ச்சி பழக்கமுடைய ஆட்களிடமும் தன்னை விற்றுக் கொள்ளலாமே. இவரெல்லாம் ஒரு தமிழ் எழுத்தாளன் என்று வந்து விட்டார். தமிழுக்குத்தான் இவர் போன்றவர்களால் இழுக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குத்தூஸ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuddusa35.blogspot.com/2005/08/blog-post.html#comments

"டோண்டு சார், நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளில் மதம் சார்ந்து இருப்பதாக என்னால் அறிய முடியவில்லை. தெளிவு படுத்துங்கள்."

உபவாசம் யார் இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? உதாரணத்துக்கு இந்து மதத்தை எடுத்துக் கொள்வோம். ஏகாதசி தினங்களில் (அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்து 11-ஆம் நாள்) பட்டினியிருப்பார்கள். அதை உபவாசம் என்று கூறுவார்கள். அதே போல இரவு உணவுக்குப் பிறகு காலையில்தான் உண்ண வேண்டும் என்பதும் மதத்தால் வலியுறுத்தப்படும் விஷயமே.

ஆனால் பலர் திடீரென்று இரவு 12 மணியளவில் நினைத்துக் கொண்டு வண்டியெடுத்துக் கொண்டு ஊரில் இருக்கும் கையேந்தி பவன்களில் இருக்கும் டிபனை ஒரு பிடி பிடிக்கிறார்கள்.

அவ்வாறெல்லாம் செய்யக் கூடாது என்று மதம் கூறுகிறது. எல்லாமே நம் நல்லதுக்குத்தான். ஆனால் அக்காலத்தில் பெரியவர்கள் இதை சாமி பெயரைச் சொல்லி நிறைவேற்றினார்கள். அதைத்தான் நான் இங்கு எடுத்துரைத்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தெருத்தொண்டன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://theruththondan.blogspot.com/2005/09/blog-post.html#comments

"இதற்கிடையில் பல வலைப் பதிவுகளில் இது குறித்த அனல் பறக்கும் விவதங்கள் நடந்து முடிந்தன(?) என்பதையும் அறிவேன்."

அந்த விவாதங்களையும் உள்ளிருத்தி உங்கள் பதிவை இற்றைப் படுத்தி வெளியிட்டிருக்கலாமே. தங்கர் நடிகைகளைப் பற்றிப் பேசியதற்கு ஆதரவாக வந்த சப்பைக் கட்டுகளைப் பற்றிய உங்கள் நிலைப்பாட்டைகயும் கூறியிருக்கலாமே.

முக்கியமாக ஸ்வீட் ஸ்டாலில் ஸ்வீட் விற்றது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சங்கர் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://ssankar.blogspot.com/2005/09/blog-post.html#comments
உங்கள் பதிவை ஒருங்குறியில் மாற்றியிருக்கிறேன்.

போன வாரம் ஜெயா T.V யில் குஷ்பு மாதா நடத்தும் "ஜாக்பாட்" தெரியாத்தனமாக?! பார்க்க நேர்ந்தது.

அதில் challenge round என்று ஒரு கட்டம்.

அதில் கேட்கப் பட்ட ஒரு கேள்வி " எழுத்தாளர் அகிலனுக்கு ஞான பீடம் பரிசு எந்தப் புத்தகத்திற்கு வழங்கப் பட்டது ? "

பதில் சொல்லிக் கொண்டிருந்த அணி சொன்ன பதில்
" சில நேரங்களில் சில மனிதர்கள் "

"தவறு" என்று சொல்லி விட்டு எதிரணியைப் பார்த்து " உங்களுக்கு தெரியுமா" என்றார் குஷ்பு.

அவர்கள் சொன்ன பதில்
" பார்த்திபன் கனவு "

இதைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது-
1."உண்மையிலேயா இந்தக் கேள்வி கஷ்டமானதா அல்லது பொதுவாகவே நமது மக்களின் தமிழ் படைப்புகள் பற்றிய பொது அறிவு இந்த மட்டில்தான் இருக்கிறதா "

2. இரண்டு அணிகளும் பதில் சொல்கிறேன் பேர்வழி என உளறிக் கொட்டியதை "முயற்ச்சியாவது செய்தார்களே" அதுவும் "தமிழ் புஸ்தகப்பெயர்களை சொன்னார்களே " என சந்தோஷப் படுவதா இல்லை தலையில் அடித்துக் கொள்வதா...புரியவில்லை...

3.சமீபத்தில் வலைப்பதிவுகளில் புத்தக மீ மீ என ஒரு விளையாட்டை விளையாடினார்களே அதில் நான் படித்தது,என்னிடம் உள்ளது என்று புத்தகப் பட்டியல் எழுதினார்கள் அதை விடுத்து படித்த நல்ல பத்து தமிழ் புத்தகங்கள்,அதன் ஆசிரியர்,பெற்ற விருதுகள் முடிந்தால் புத்தகம் எதைப் பற்றியது...கதைக் கரு,களம் பற்றி சுருக்கமாக எழுதினா படிக்க சுவாரஸ்யமாகவும் அதே சமயம் உபயோகமாகவும் இருக்குமில்லையா?அதுக்காக ஒரே புத்தகத்தைப் பற்றி திரும்பத் திரும்ப பல பேர் எழுதக் கூடாது(வலைகளில் அன்னியன் விமர்சனம் மாதிரி)...போரடித்து விடும்.

யோசனை எப்படி இருக்கு...நீங்க சொல்லுங்க...நல்லா இருந்தா யாராவது படித்தவர்கள் பத்து புத்தகம் பற்றி atleast ஐந்து புத்தகம் பற்றி எழுதி ஆரம்பித்து வையுங்களேன்...நானா...நான் அவ்வளவு படிக்கலையே மக்கா...

அன்புடன்...ச.சங்கர்

dondu(#11168674346665545885) said...

ராமசந்திரன் உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://nunippul.blogspot.com/2005/09/blog-post_04.html

At 4:00 AM, dondu(#4800161) said...
நல்ல முடிவு உஷா அவர்களே. இம்மாதிரி தரங்கெட்டப் பின்னூட்டங்களை அலட்சியப்படுத்துவதுதான் நல்லது.

அப்படியே அழிப்பதாக இருந்தாலும் லிங்க்குகள் அப்படியே இருக்குமாறு அழியுங்கள். இதைப் பற்றி நான் ஏற்கனவே பதிவு போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/08/blog-post_24.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நல்லடியார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://athusari.blogspot.com/2005/09/blog-post.html#comments

இருண்டகாலம் என சரித்திரப் பேராசிரியர்களால் வர்ணிக்கப்படும் middle ages போது இஸ்லாமியர்கள் அறிவில் சிறந்து விளங்கினர். ஐரோப்பியர்கள் அக்காலத்தில் அறிவில் பின்தங்கியிருந்தனர் என்றே சொல்ல வேண்டும். நிற்க.

நம்ம நியூகாலேஜில் படித்த நல்லடியார் கேட்டதற்காகக் கூக்ளேயில் தேடியதில் சர்வப்பள்ளி என்பது ஒரு ஊரரின் பெயர் எனத் தெரிந்து கொண்டேன். ஊரின் விவரம் கிடைக்கவில்லை. surnames எவ்வாறு கொடுக்கப்படுகின்றன என்பது பற்றி எழுதப்பட்டுள்ளது. கீழே பார்க்க: http://ikashmir.org/Sociology/B.html

"Name of Locality
Name of the locality from which a person's ancestors had come is also used as a surname. To add the name of locality to one's name for a better identification is a common practice in South India. Thus the name 'Shiyali Ramamrita Ranganathan' is a combination of his Christian name (Ranganathan), his father's name (Ramamrita) and the name of his ancestoral village (Shiyali). Other names derived from places are Bhatnagar, Malviya and Sarvepalli."

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நல்லடியார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://athusari.blogspot.com/2005/09/blog-post.html#comments

middle ages சமயத்தில் இசுலாமியரின் அறிவியல் முன்னேற்றம் சரித்திரத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அறிவை அவர்கள் விடாப்பிடியாகத் தூக்கி வைத்ததால்தான் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி (renaissance) சாத்தியமாயிற்று.

நல்லடியார் குறிப்பிட்டது போல தற்கால் இந்தியாவில் இசுலாமியர் கல்வியில் பின்தங்கியதற்கு முக்கியக் காரணம் அவர்களுக்கு சரியான வழிகாட்டாமை இல்லாமல் போனதே ஆகும்.

மாறாக "பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த பொழுது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு ஆதரவாக ஆங்கிலக் கல்வியைக் கற்க மாட்டோம் என்று கூறி பள்ளி, கல்லூரிகளை விட்டும் வெளியேறிய முஸ்லிம்கள் இன்று வரை, கல்விக் கூடங்களுக்கு வெளியில் தான் நின்று கொண்டிருக்கின்றார்கள். ஏன்? ஆங்கிலக் கல்வியைக் கற்பது ஹராமானது என்று கூட மார்க்க அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்." என்று நல்லடியார் எழுதியது சிந்திக்கத்தக்கது. இசுலாமிய சகோதரர்கள் படிப்பில் முன்னேற வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ராமசந்திரன் உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://nunippul.blogspot.com/2005/09/blog-post_06.html

இவ்வாறு அசிங்கப் பின்னூட்டம் இடுவது யாரென்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. இன்னும் அலுப்படையாமல் குப்பைகளை எழுதும் அந்த இழிபிறவியைக் கண்டு ஆச்சரியம் அடைகிறேன்.

கே.வி.ஆர் மற்றும் என்னுடையப் பதிவுகளில் எழுதப்படாத குப்பைகளா? நான், விஜய், மாயவரத்தான், எஸ்.கே., திருமலை, இரா.முருகன் ஆகியோர் கேட்காத வசவுகளா?

அந்த இழிபிறவிக்கு யார் புத்தி கூறுவது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மூக்கு சுந்தர் அவர்களின் "என் ரண்டு சல்லி...." பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://mynose.blogspot.com


அந்த மனம் பிறழ்ந்தவன் இதனால் எல்லாம் அடங்குவான் என நினைக்கிறீர்கள்?

லேட்டஸ்டாக ராமச்சந்திரன் உஷா அவர்களுக்கும் டார்ச்சர் கொடுத்தான் அவன். அதற்கு முன் கே.வி.ஆர். அவர்கள் பதிவுகளுக்குப் போய் அவர் வீட்டுப் பெண்களை பெயர் சொல்லி வம்பு வளர்த்தான். அவனுக்கு கஜேந்திர பாலனும் வாலியும்தான் சரி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மூக்கு சுந்தர் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://mynose.blogspot.com/2005/07/blog-post.html#comments

" "மத்தளராயன்" கூட பேச்சுவர்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. ;-)"

நீங்களும் அழகாக அடையாளம் கண்டுகொண்டீர்கள். ஆனால் அந்த மனம் பிறழ்ந்தவன் இதனால் எல்லாம் அடங்குவான் என நினைக்கிறீர்கள்?

லேட்டஸ்டாக ராமச்சந்திரன் உஷா அவர்களுக்கும் டார்ச்சர் கொடுத்தான் அவன். அதற்கு முன் கே.வி.ஆர். அவர்கள் பதிவுகளுக்குப் போய் அவர் வீட்டுப் பெண்களை பெயர் சொல்லி வம்பு வளர்த்தான். அவனுக்கு கஜேந்திர பாலனும் வாலியும்தான் சரி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பொறுக்கி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://porukki.blogsome.com/2005/09/07/20/

"தங்கர்பச்சான் விடயத்தைத் தாண்டிப் பார்த்தோமென்றால் இந்த ஆணியம் பல்வேறு வழிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வலைப்பதிவுகளில் தொடர்வதைக் காணலாம்."
"இந்த வகையில் நானும் இருக்கிறேனா" எனக் கேட்டுக் கொண்டு ஒருவர் வரப்போகிறார். இன்னேரத்துக்கு வந்திருக்க வேண்டுமே. ஏன் வரவில்லை எனத் தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சோம்பேறிப் பையன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://lazyguy2005.blogspot.com/2005/08/blog-post_30.html#comments

ஹல்லோ பம்பாயில்தான் இருக்கிறீர்களா? சமீபத்தில் 1971 முதல் 1974 வரை எனக்கு பம்பாய் வாசம். மாதுங்கா கே.ஏ. சுப்ரமணியம் சாலையில் சரஸ்வதி நிவாஸில் வாசம். கட்டை பிரம்மச்சாரி. கன்சர்ன்ஸில் சாப்பாடு, பக்கத்து அரோரா தியேட்டரில் சினிமா என்று அமர்க்களமான வாழ்க்கை. அந்தக் காலக் கட்டத்தில் ந்டந்த நிகழ்ச்சியொன்றைப் பதிவு செய்திருக்கிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/07/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இட்லி வடை அவர்க்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://idlyvadai.blogspot.com/2005/04/blog-post_20.html

என்னை மாதிரி செய்யலாமே. அதாவது நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் அதன் நகலை என் தனிப் பதிவு ஒன்றில் இட்டு விடுவேன். ஆக, என்னுடைய இப்பதிவு எப்போதும் தமிழ்மணத்தில் இருக்கும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
இது வரை 403 பின்னூட்டங்கள். இப்போது நகலிடப் போவதையும் சேர்த்தால் 404.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சந்திரவதனா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://manaosai.blogspot.com/2005/09/party.html#comments

g.ragavan அவர்கள் கூறிய "இப்பொழுது நீங்கள் ஜெர்மனிய மொழியில் பிய்த்து உதறுவீர்கள்தானே?" என்னும் வாக்கியத்தைத்தான் நான் ஜெர்மனில் மொழிபெயர்த்து கூறியது.
Jetzt koennen Sie Deutsch sehr gut nicht wahr?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/09/blog-post.html#comments

சாருவின் இணையதளம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. நீங்கள் கொடுத்தப் பதிவு எண்கள் தவறானவை. சுட்டிகள் இதோ:

1. http://www.charuonline.com/kp151.html
கண்காணிப்பின் அரசியல் - ரெண்டாம் ஆட்டம்

2. http://www.charuonline.com/kp150.html
க்ரியா யோகமும் இருபது கோடியும்

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அபத்தம் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://apaththam.blogspot.com/2005/09/blog-post_112636972876969751.html#comments

ஜ-வுக்கும் ய-வுக்கும் ஒரு உறவு உண்டு. ஜெர்மனையே எடுத்துக் கொள்வோம். அங்கு ja என்று எழுதி ya என்று உச்சரிப்பர். ஜ ஒலியே கிடையாது என்றும் கூறலாம். ஜூன் மற்றும் ஜூலையை யூனி மற்றும் யூலி என்றே கூறுவர்.

இந்திய மொழிகளிலும் இந்த உறவு உண்டு. ராஜன் ராயன் ஆகிறார். கிருஷ்ணதேவராஜா கிருஷ்ணதேவராயராகிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மாயவரத்தான் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://mayavarathaan.blogspot.com/2005/09/blog-post.html#comments

எல்லா இடத்திலும் இம்மாதிரித்தான். என் சகோதரியும் அவ்ள் கண்வரும் மருத்துவர்கள். ஏழைகளுக்கு ரூபாய் 5 அளவில் சார்ஜ் செய்வார்கள். மற்றவர்களுக்கு 20 ரூபாய். மாதக் கடைசியில் பார்த்தால் ஏழைகளிடமிருந்து மொத்தப் பணமும் வந்திருக்கும். மற்றவர்கள்? முக்கால்வாசி நேரம் அரியர்ஸ்தான். முகத்துக்கெதிரே கேட்க கூச்சப்பட்டதால் வந்த வினை. நான் சொல்வது எழுபதுகளின் ஆரம்பத்தில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்.

«Oldest ‹Older   201 – 400 of 529   Newer› Newest»
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது