7/28/2011

டோண்டு பதில்கள் - 28.07.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. சூரிய மின்சக்திக்கு முதலீடு தாருங்கள்: அமெரிக்காவுக்கு முதல்வர் அழைப்பு
பதில்: இது ஆரம்பம் மட்டுமே. மேற்கொண்டு பல விஷயங்கள் நடக்க வேண்டும். அப்போதுதான் பலன் இருக்கும். இல்லாவிட்டால் பல யோசனைகள் போல இதுவும் ஏட்டளவிலேயே நின்றுவிடும் வாய்ப்பும் உண்டு.

கேள்வி-2. அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதே நிலப் பறிப்பு புகார்
பதில்: நேற்றைய கட்டைப் பஞ்சாயத்தார் இன்றைய மந்திரி என்றிருப்பது இரு திராவிட கட்சிகளிலும் நிலை பெற்றிருப்பது விசனத்துக்குரியதே.

கேள்வி-3. உலகுக்கே வழிகாட்டுகிறது இந்து தர்மம்: சுவாமி தயானந்த சரஸ்வதி
பதில்: இது உலகுக்குத் தெரியுமா? சற்றே சீரியசாக, நாமே நம் மதத்தை உயர்த்திப் பேசுவதில் பயன் இல்லை. மற்றவர்கள் அதைச் சொன்னால் நல்லது.

கேள்வி-4. கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் விஸ்வநாதன் எம்.பி. ஆய்வு
பதில்: அதே சமயம் அப்பகுதி மக்களின் அச்சத்தையும் போக்க வேண்டியது அவசியம். (அப்பகுதியில் வசிக்கும் மக்கள், "கடல் நீரை குடிநீராக்கும் பணியால் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் மீதமுள்ள உப்பு நீரை மீண்டும் கடலுக்குள் விடும் பட்சத்தில் கடல் மேலும் அதிக உவர்ப்பு தன்மை அடையும். அதனால் மீன்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். எங்கள் தொழில் பாதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்).

கேள்வி-5. சுயநிதி எம்.பி.பி.எஸ்.: 182 முதல் தலைமுறை மாணவர்களுக்கு தலா ரூ. 1.25 லட்சம் சலுகை
பதில்: அப்பணத்தை பட்டுவாடா செய்யும்போது மாணவர்களிடம் கமிஷன் கேட்காமல் இருப்பது முக்கியம்.

கேள்வி-6. தி.மு.க.,வை அசைக்க முடியாது: கருணாநிதி
பதில்: அதைச் செய்யவும் கருணாநிதிதான் வரவேண்டும் என்கிறாரோ அவர்?

கேள்வி-7. கலைமாமணி' கேட்கும் தவில் கலைஞர் கட்டைக்காலில் 61 கி.மீ. நடைபயணம்
பதில்: சம்பந்தப்பட்டக் கலைஞரின் ஆதங்கம் புரிந்தாலும், அதற்காக கட்டைக் காலில் ஊர்வலமாக வருவது ரொம்பவுமே ஓவர்.

கேள்வி-8. அரசு கேபிளுக்கு கட்டுப்பாட்டு அறைகள்
பதில்: சுமங்கலி கேபிள் விஷனுக்கு ஆப்பு வைக்கும் எந்த முயற்சியும் பாராட்டத் தக்கதே.

கேள்வி-9. வேலு நாச்சியார் போன்ற வீர பெண்மணிகள் தேவை: வைகோ பேச்சு
பதில்: அவசியமான பேச்சு பேச வேண்டிய இடத்தில் பேசிய வைகோ பாராட்டுக்குரியவர்.

கேள்வி-10. டெலிவரி செய்யாத தபால்கள் மூட்டை மூட்டையாக கண்டுபிடிப்பு: பொதுமக்கள் புகாரில் எம்.எல்.ஏ. அதிரடி
பதில்: கேட்டால் தபால்காரருக்கு சம்பளம் போதவில்லை என்பார்கள். அது உண்மை என்றாலும் இவ்வாறு செய்த தபால்காரர் கண்டிக்கப்பட வேண்டியவரே. மேற்கொண்டு என்ன செய்வார்கள்? வேலையை விட்டு நீக்குவார்கள்? அதனால் என்ன பயன்? அதுதான் ஏற்கனவேயே சிறையில் இருக்கிறாரே?

ஊர் மக்களின் பாசத்துக்கு பாத்திரமாகி சேவை செய்த பல தபால்காரர்கள் இருக்க இம்மாதிரி புல்லுருவிகளும் இருப்பது கொடுமையே.


ரமணா
கேள்வி-11. அதிமுக அரசு அவசர அவசரமாய்அச்சடித்த பழைய முறை பாடப்பத்தகங்கள் இனி ?
பதில்: வேறென்ன, எள்ளுதான். அதிமுகாவுக்கு இது சருக்கலே.

கேள்வி-12. அழ‌கிரி வராத திமுக மாநாடு கோவையில்?
பதில்: திமுகவின் முடிவு ஆரம்பமாகி விட்டதாகவே தோன்றுகிறது.

கேள்வி-13.சமச்சீர் கல்வியை மெட்ரிக் பள்ளிகள் எப்படி ஏற்றுக் கொள்ளும்?
பதில்: இப்போதைக்கு நிச்சயமற்ற நிலை முடிந்ததே என்ற நிம்மதி -பெருமூச்சுடன்.

கேள்வி-14. ஆங்கில பள்ளிகளெல்லாம் சிபிஎஸ்இ முறைக்கு மாறிவிட்டால்?
பதில்: அதனால் என்ன பலன் வரும் என நினைக்கிறீர்கள்?

கேள்வி-15. அதிமுகவின் தலைவி என்ன செய்வார் சமச்சீர்கல்வி அமுல்படுத்த உச்ச நீதி மன்றமும் சொல்லிவிட்டதே?
பதில்: தடை உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொள்ளாததன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தின் நிச்சயமற்றத் தன்மையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சிக்குரியதே.

கேள்வி-16. அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சியாமே?
பதில்: பிரச்சினையை தீர்க்காமல் சொதப்பலாகக் காரியம் செய்தால் வீழ்ச்சிதானே.

கேள்வி-17. 2ஜி விவாகரத்தில் அடுத்து யார்?
பதில்: இதில் பெரிய பெட்டிங் நடந்தால் வியப்படைவதற்கில்லை.

கேள்வி-18. சூரிய சக்தி மின்சாரம் சாத்யமா?
பதில்: மற்றவகை மின்சக்திகளைப் போல பலமடங்கு விலை தரவேண்டிய நிலை இன்னும் உள்ளது. இப்போதைக்கு அதன் பரவலான உபயோகத்துக்கு இன்னும் நாள் இருக்கிறது.

கேள்வி-19.கேஸ் விலை ரூபாய் 800 ஆகப்போகிறதாமே?
பதில்: இது பற்றி நான் இட்டப் பதிவுகள் 1 மற்றும் 2-ஐ  பார்க்கவும். மிகவும் தவறான பயன்பாடுகளை ஊக்குவிக்கும் இந்த சப்சிடி ஒழிவது அவசியமே.

கேள்வி-20. தமிழக முதல்வரின் ஆட்சி இது வரை எப்படி?
பதில்: சமச்சீர் கல்வி விஷயத்தில் சொதப்பியதை ரிபீட் செய்யாமல் இருந்தால் தேவலையான ஆட்சிதான். 




BalHanuman
கேள்வி-21. டோண்டு ஸார், ஒரு சிறிய சந்தேகம்.
>>காகித ஓடம் கடலலை மீது
>>போவது போலே மூவரும் போவோம்
யார் அந்த மூவர் ?
1. கருணாநிதி - தயாளு - ராஜாத்தி
2. கருணாநிதி - அஞ்சாநெஞ்சன் - தளபதி
3. 
கருணாநிதி - கனிமொழி - ஆ.ராசா
4. கருணாநிதி - தயாநிதி - கலாநிதி
5. கனிமொழி - ஆ.ராசா - சரத்குமார் ரெட்டி 



பதில்: எல்லோருமே மாட்டட்டுமே, சந்தோஷம்தானே.



மேலும் கேள்விகள் வந்தால் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/25/2011

கூட்டுக் களவாணிகள் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கும் கதை

நடக்கும் என்பது நிச்சயமாகத் தெரிந்திருந்தாலும், எப்போது என்பது நிச்சயமில்லாமல் இருந்தது.

ராசா அதை ஆரம்பித்து வைத்து விட்டார் எனப்படுகிறது. பிரதமருக்கும் அப்போதைய நிதி மந்திரிக்கும் தான் செய்வது முதலிலிருந்தே தெரிய வந்தது என ராசா பூசனிக்காயை உடைத்து நல்ல துவக்கம் தந்திருக்கிறார்.

தில்லி அமர்க்களப்படுகிறது. இது சம்பந்தமாக சுப்பிரமணியம் சுவாமி சொன்ன சதவீதக் கணக்குகளும் முன்னால் வரும் என நம்புகிறேன். (ராசா, கருணாநிதி, சோனியா பங்குகள்).

ராசாவை முதலில் தோலுரித்துக் காட்டிய கோபி கிருஷ்ணா ஒரு செவ்வியில் கூறியதை நான் இங்கு கோட் செய்கிறேன்.

கேள்வி: 2-ஜி ஊழலை எப்போது கண்டுகொண்டீர்கள்?

விடை: Swan மற்றும் Unitech நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அமோக விலைகளுக்கு விற்றதுமே (4,500 கோடி மற்றும் `6,200 கோடி, செப்டம்பர் 2008-ல்). எங்கள் மூக்கு ஊழலை முகர ஆரம்பித்து விட்டது. அலுவலக தலைவர் நவீன் உபாத்யாயா என்னிடம் மேலும் தகவல்களை தேடி எடுக்குமாறு கூறினார். நல்லவேளையாக தகவல் தொடர்பு அமைச்சகத்தின் உள்ளும் புறமும் நன்றி அறிந்த ஒரு நம்பிக்கையான எட்டப்பர் கிடைத்தார். பிரதமர் ராஜாவின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்து ராஜாவிடமே என்ன நடக்கிறது எனக் கேட்டதாகவும் ஒருமுறை அந்த எட்டப்பர் கூறினார்.

மெதுவாக எட்டப்பர்மூலம் அமைச்சகத்தின் ஊழல்களின் பரிமாணங்கள் புலப்படத் துவங்கின. அன்னாட்களில் தான் தனக்கு முன்னால் இருந்தவர்கள் செய்ததையே தானும் செய்ததாக ராஜா பொய்யுரைத்து வந்தார். அந்த எட்டப்பரோ ராஜாவும் அவரது உறவினர்களும் பினாமி கம்பெனிகளில் செய்த முதலீடுகளை விளக்கினார். இந்த ஊழலின் பலன்கள் பல பெரிய நிறுவனங்கள், அரசியல்வாதிகள் லயசன் முதலைகள் ஆகியவருக்குத்தான் சென்றது என அவர் என்னிடம் சொன்னார். 

எனது எடிட்டருடன் பேசி அவரது ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே தான் மற்றத் தகவல்கலை தரவியலும் எனவும் இந்த எட்டப்பர் கூறினார். எடிட்டரும் அவ்வாறே ஒப்புதலைத் தர, தகவல்கள் சரிபார்ப்பு எட்டப்பரது அலுவலகத்திலும் வேறு பல இடங்களிலும் ரகசியமாக நடந்தது.

கேள்வி: எது உங்களது முதல் ஸ்டோரி, அதன் எதிர்வினைகள் என்ன?

பதில்: ஊழலின் அளவைப் பார்த்ததுமே ராஜாவின் ரியல் எஸ்டேட் பினாமிக் கம்பெனிகளின் விவரங்களை எடுத்தோம். ராஜாவின் தகுதிக்கு மீறிய சொத்து சேர்ப்பை வெளிக்கொணர முடிவு செய்தோம். சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் சந்தன் மித்ராவும் நவீன் உபாத்யாயாவும் சரிபார்த்தனர். 11 திசம்பர் 2008-ல் வெளியான முதல் ஸ்டோரியில் ராஜாவின் பிரதான ரியல் எஸ்டேட் கம்பெனியான Green House Promoters பற்றிய விவரங்களை கூறியிருந்தோம். மற்ற பினாமி கம்பெனியின் விவரங்கள் அடுத்துவரும் நாட்களில் வர ஆரம்பித்தன.

கே: எல்லாவற்றையும் நிறுத்துமாறு உங்கள் மேல் அழுத்தம் வந்ததா? எப்படி சமாளித்தீர்கள்?

ப: முதல் ரிப்போர்ட் வந்ததுமே எடிட்டர் சொன்னபடி நான் ராஜாவை சந்தித்தேன். அவரது கட்சியில் உள்ள அவரது விரோதிகள்தான் இதற்கு பின்னால் உள்ளனரா எனக்கேட்டு சில பெயர்களையும் கூறினார். அவரது தனிப்பட்ட சொத்து விவரங்கள் எனக்கு எப்படிக் கிடைத்தன என்று அவர் என்னை கேட்டார். அப்படியே ஆடிப்போயிருந்தார் அவர். எல்லாவற்றையும் நிறுத்துமாறு அவர் கேட்டார். நான் எடிட்டர் சொன்னதாலேயே அவரது வெர்ஷனைப் பெறவே அவரைப் பார்க்க வந்தேன், வேறு எதற்கும் இல்லை என்று அவரிடம் கூறிவிட்டேன். ராஜா என்னுடன் பேச ஒப்புக்கொண்டாலும் திரும்பத் திரும்ப நான் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். பல பெரிய நிறுவனங்களும் என்னிடம் அதையே கேட்டன. அதே நேரம் யாரும் என்னிடம் தவறாக நடந்ததாகவோ என்னை பயமுறுத்தியதாகவோ கூற மாட்டேன்.

அச்சமயம் ராஜா 3G ஏலத்தை கேபினட்டின் ஒப்புதல் இன்றி மலிவான விலைக்கு நடத்தத் திட்டமிட்டிருந்தார். பெரிய நிறுவனங்களின் ஏஜெண்டுகள் நான் நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டன. இல்லாவிட்டால் மத்திய அரசு 3G ஏலத்தை ஒரு EGoM-விடம் ரெஃபர் செய்யும் என அவர்கள் பயந்தனர். அதைத்தானே நாங்களும் விரும்புகிறோம் என நாங்கள் பதிலளித்தோம். அதே சமயம் என்னைக் குறி வைப்பார்கள் என்றும் பலர் எச்சரித்தனர். அதை நான் அலட்சியம் செய்தேன். 3G விஷயத்தை எப்படியாவது EGoM-க்கு கொண்டு போகக்கூடாது என்பதுதான் அவர்கள் நோக்கம். அதற்காக எனக்கு என்னவெல்லாம் ஆசை காட்டினார்கள் என்பதை நான் இங்கே கூறுவது சரியாக இருக்காது. ஆனால் கடைசியில் EGoM வந்தது, ராஜா பிக்சரில் இருந்து விலகினார், நாட்டுக்கு 1.06 லட்சம் கோடிகள் கிடைத்தன.

Q: நீங்கள் இதையெல்லாம் நிறுத்த உங்களுக்கு யாரேனும் பணம் கொடுப்பதாகச் சொன்னார்களா?

A: ஆகா செய்தார்களே. ஆஃபர் செய்த தொகைகள் மிக பெரியன. நிறுவன மற்றும் ராஜாவின் ஏஜெண்டுகளும் நான் எடிட்டரிடம் ஒன்றுமே கூறாது கட்டுரைகளை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள். நான் ஒப்புக் கொள்ளவில்லை. அதில் சிலர் டபுள் கேம் எல்லாம் ஆடினார்கள். ஒருவர் ராஜாவைப் பற்றி பல தகவல்கள் தந்து அதே சமயம் ராஜாவுக்கும் பல தகவல்கள் தந்தார். ஆனால் முதல் எட்டப்பர் ஸ்டெடியாக நின்றார் பயமின்றி. பல அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், போலீஸ்காரர்களும் உதவி செய்தனர்.

கே: ராஜாவின் ராஜினாமாவோடு விஷயம் நிற்குமா அல்லாது மேலும் தலைகள் உருளுமா?

ப: நான் என்ன நினைக்கிறேன் என்றால் சுப்பிரமணியன் ஸ்வாமி மற்றும் சாந்தி பூஷன் தொடுத்த வழக்குகள் அவற்றின் கோர்சை முடித்து, சட்டவிரோதம் என சியேஜியால் அடையாளம் காணப்பட்ட லைசன்சுகள் எல்லாமே கேன்சலாகும். பெட்ரோல் பம்ப் ஊழல் வழக்கில் நடந்தது போல அரசு ஏலம் நடத்தச் சொல்லும். ராஜா போன்ற சிலர் சட்டத்தின் சீற்றத்துக்கு ஆளாகலாம். அதே சமயம் நிறுவனங்களுக்கு ரொம்ப பாதிப்பு இராது. ஏலம் நடந்து அரசுக்கு சுமார் 2-3 லட்சம் கோடி ரூபாய்கள் கிடைக்கலாம்.

கே: Howஸ்பெக்ட்ரம் கொள்கையில் வெளிப்படை தன்மையைக் கொணர்ந்து தில்லுமுல்லு நடக்கதிருக்க அரசு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

ப: ஸ்பெக்ட்ரம் மேலாண்மை ISROவிடம் தரவேண்டும், ஆனால் எந்த அரசியல்வாதியும் இதை விரும்ப மாட்டான், காரணம் தெரிந்ததே. ஸ்பெக்ட்ரம் ஆடிட் இன்னும் இந்தியாவில் நடக்கவில்லை. இந்த நிலை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது எளிதாக பணம் பண்ணும் பொருட்டு. இஸ்ரோ மாதிரி ஒரு நிறுவனம் ஆடிட் செய்தால்தான் வெளிப்படைத் தன்மை வரும்.

கே: ஸ்பெக்ட்ரமுக்கு பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?

ப: தெரியவில்லை. ராஜாவின் ராஜினாமா பற்றி தெரிந்ததும் ஒரு களைப்பு வந்துள்ளது. இப்போதைக்கு ஏதும் ஐடியா இல்லை.


ராசா அப்ரூவராக மாறினால் பலருக்கு சங்குதான். ஆகவே அவரது உயிருக்கு மிக்க ஆபத்து. இப்போதைக்கு சுயபாதுகாப்புக்காகவாவது அவர் திகாரில் இருப்பதே அவருக்கு நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/23/2011

பயம் பறக்கும் சக்தியையும் கொடுக்கும்

இது ஒரு மீள்பதிவு. இது வருவதற்கான காரணம் தமாஷானது.

முதலிலெல்லாம் பிளாக்கரில் ஒரு புது பதிவை இடும்போது தலைப்பின் கீழே லிங்க் என்று ஒரு கட்டம் வரும். அதில் நாம் ஏதாவது குறிப்பிட்டால் அது பின்னால் அக்குறிப்பிட்ட பதிவுக்கு சுட்டியாக செயல்படும். ஆனால் பிறகு அந்த லிங்கை போடுவதற்கு பல கட்டுப்பாடுகள் வந்தன. ஆகவே நான் யதார்த்தமாக போட்ட பல பழைய லிங்குகள் காரணமாக குறிப்பிட்டப் பதிவை ஹோம் பக்கத்திலிருந்து அதன் மேல் க்ளிக் செய்து வரவழைக்க இயலாது போயிற்று.

இதை எனக்கு மா. சிவகுமார்தான் கண்டுபிடித்து கூறினார். அதன் பிறகு சமயம் கிடைக்கும் போதெல்லாம் பழைய பதிவுகளிலிருந்து அந்த லிங்குகளை காலி செய்வது நடந்தது. அதற்குள் பல நூறு பதிவுகள் வந்ததில் எல்லாவற்றுக்கும் போக சோம்பேறித்தனம். ஆகவே இக்காரியம் மெதுவாகவே நடந்தது.

இதன் நடுவில் இன்னொரு கூத்தும் நடந்தது. டிஃபால்டாக டிராஃப்ட் பிளாக்கரில்தான் பதிவுகள் திறந்ததில், பதிவு போடும்போது டைட்டிலுக்கு கீழே இருந்த லிங்க் கட்டம் பதிவு போடும் சமயத்தில் காணக்கிடைக்கவில்லை.

இப்பதிவுக்கு வேறு ஏதோ காரணத்துக்காக வந்ததில், ஹோம் பக்கத்திலிருந்து அப்பதிவின் மேல் க்ளிக் செய்து வர இயலவில்லை. சரி எடிட் செய்யலாம் என்றால் லிங்க் கட்டம் தெரியவில்லை. ஆகவே டிராஃப்ட் பக்கத்தின் டிஃபால்டை விலக்கி எடிட் செய்ய முற்பட்டால் ஆது தெரிந்தது. பிறகென்ன, அதை நீக்கியாயிற்று.

இப்போது பதிவுக்கு போவோமா.

நான் டில்லியில் ஜூலை 2001 வரை சுமார் 20 வருடங்கள் வசித்தேன். கடைசி மூன்று வருடங்கள் அகில இந்திய வானொலியின் வெளிநாட்டுப் பிரிவின் கீழ் இயங்கும் பிரெஞ்சு ஒலிபரப்புச் சேவையில் அறிவிப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பவராக வேலை செய்தேன்.

விடியற்காலை 1.15 முதல் 2.00 வரை நேரடி ஒலிபரப்பு. நடுவில் 1.20 முதல் 1.30 வரை பிரெஞ்சில் செய்திகள். இரவு சுமார் 10.30க்கு ஏ.ஐ.ஆர். வண்டி வீட்டுக்கு வந்து அழைத்துப் போகும். போன உடனே கையில் ஆங்கிலச் செய்தியைக் கொடுத்து விடுவார்கள். அதை நாங்கள் பிரெஞ்சில் மொழி பெயர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒலிபரப்பு முழுவதும் பிரெஞ்சு மொழியில்தான். முதல் ஒரு நிமிடம் சுய அறிமுகம் மற்றும் அன்றைய ஒலிபரப்பு பற்றிய அறிவிப்பு. பிறகு ஒரு சினிமாப் பாடல். 1.20க்கு செய்திகள் என்று நிகழ்ச்சிகள் ஒரு இறுக்கமான கட்டுக்கோப்பில் செல்லும்.

ஒரு நாள் இரவு வண்டி வர வெகு நேரம் ஆகி விட்டது. வானொலி நிலையம் செல்லும்போது மணி 12.55. ஆங்கிலச் செய்தி தயார். மொழி பெயர்க்க ஏது நேரம்? புலம்பக்கூட நேரம் இல்லை. நான் மட்டும் அன்று ஒலி பரப்பில் இருந்தேன். செய்தி விமரிசனம் தனி. நல்ல வேளையாக அது டேப் செய்யபட்டு விட்டது. டேப்பை மெஷினில் பொறுத்தியாகி விட்டது. வேக வேகமாக தலைப்புச் செய்திகள் மட்டும் பிரெஞ்சில் மொழி பெயர்த்து வைத்துக் கொண்டேன்.

அதற்குள் நேரம் 1.14 ஆகி விட்டது.

மற்ற செய்தித் தாள்களை வரிசைப் படுத்தி அடுக்கிக் கொண்டேன். இப்பொழுது நேரம் 1.15.

அறிவிப்பு செய்தேன், பிறகு முதல் பாட்டைப் போட்டேன். 1.20 வரை மனதைத் தயார் செய்துக் கொண்டேன்.

1.20. தலைப்புச் செய்திகள் வாசிக்கப்பட்டன. முதல் தாளை கையில் எடுத்துக் கொண்டேன். கண்கள் பார்த்தன ஆங்கில வாக்கியங்களை, ஆனால் வாய் வாசித்தது பிரெஞ்சு மொழியில். ஒன்றன் பின் ஒன்றாய் எல்லா தாள்களையும் படித்தப் பிறகு மறுபடியும் எழுதி வைத்து கொண்டிருந்தத் தலைப்புச் செய்திகள். மணி 1.30. பிறகு ஒரு பிரச்சினையும் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று கொடுக்கப்பட்ட அத்தனை தாள்களையும் படிக்க முடிந்தது. சாதாரணமாக எழுதி வைத்து கொள்ளும்போது ஒன்றிரண்டு தாள்கள் விட்டு போய்விடும். செய்திகள் முடிந்த பிறகு ஒரே குஷிதான்.

எல்லாம் முடிந்து கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று பொறுப்பை ஒப்படைத்த போது அவ்வறை அதிகாரி மிகவும் பாராட்டினார். எல்லாம் முடிந்து வெளியே வந்தப் பிறகுதான் லேட் ரியேக்ஷனாக வியர்த்துக் கொட்டியது.

பயம் பறக்கும் சக்தியையும் கொடுக்கும் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அது உண்மை என்பதை உணர்ந்து கொண்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்.

7/21/2011

டோண்டு பதில்கள் - 21.07.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா : பேச்சில் மீண்டும் தோல்வி

பதில்:

பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய புரிதல்கள்பெண்கள் இட ஒதுக்கீடு என்னும் தேவையில்லாத கூத்து ஆகிய விஷயங்கள் பற்றிய எனது கருத்துகள் அப்படியே உள்ளன. மேலும் பெரும்பாலான கட்சிகளுக்கும் அதே கருத்துக்கள்தான். ஆனாலும் என்ன செய்வது, என்னை மாதிரியோ சோ அவர்கள் மாதிரியோ வெளிப்படையாக பேச முடியாத நிலையில்தானே அவை உள்ளன. ஏன் தேர்தலுக்கு சீட்டு தரும்போது தத்தம் கட்சிகளுக்குள்ளேயே 33% பெண்களுக்கு ஒதுக்குவதுதானே. ஆகவேதான் நான் சொல்லுவேன், இது விவாத நிலையிலேதான் இருக்கும்.  

உண்மை கூறப்போனால் இந்த விஷயத்தில் இட ஒதுக்கீடு திருநங்கைகளுக்குத்தான் உண்மையாகத் தேவை





கேள்வி-2. போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள்
பதில்: மடியில் பாவமூட்டைகள் இருந்தால் வேறு என்னதான் செய்ய முடியுமாம்?


கேள்வி-3. இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' 
பதில்: கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஈகோ பிரச்சினையில் அல்லாடும் விஷயங்களில் இதுவும் ஒன்றானது விசனத்துக்குரியதே.


கேள்வி-4. மும்பையை குறிவைத்து, பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், மத்திய, மாநில அரசுகள் மீது, அந்நகர மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்
பதில்: தீவிரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுத்தாலே இசுலாமியருக்கு விரோதமாகக் கருதப்படும் என்ற ஆதாரமற்ற பயத்தால் பொட்டையாகக் கிடக்கும் அரசுகளிடம் மக்கள் கோபம் கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.


கேள்வி-5. சாதிக் மரணம் குறித்து சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி
பதில்: க்ளிமாக்சில் சண்டை காட்சிக்கு பிறகு வந்து அரெஸ்ட் செய்யும் போலீசாரின் காமெடி நிலையில் இருக்கும் சி.பி.ஐ. தன் பெயரைக் காப்பாற்ற கிடுக்கிப்பிடி போடுகிறது என நம்புகிறேன்.


கேள்வி-6. கறுப்புப் பணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பதில்: கறுப்புப் ப்ண ஊற்றுகள் பின்னே வேறு எவ்வாறு ரியேக்ட் செய்யுமாம்?


கேள்வி-7. கடலாடியில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற அதிகாரியை டிராக்டர் ஏற்றிக் கொல்ல முயற்சி
பதில்: இது ஒன்றும் முதன்முறையாக நடக்கவில்லையே? ஒரு தாசில்தாரை இவ்வாறுதான் கொன்றார்கள். 


கேள்வி-8. 2ஜி விவகாரம்: ப. சிதம்பரத்திடம் விசாரியுங்கள்: சிபிஐ இயக்குநரிடம் பாஜக மனு
பதில்: மன்மோகன் மற்றும் சோனியா, அவரது சகோதரிகளையும் விசாரிக்க வேண்டியதுதான்.


கேள்வி-9. 2-ஜி ஊழலை சி.பி.ஐ. விசாரித்து முடிக்கும் வரை எனது வாதத்தைத் துவங்க விரும்பவில்லை: ராசா
பதில்: அவரே வக்கீல்தானே ஆகவே சக குற்றவாளிகளது வாக்குமூலங்களையும் அவதானிக்கிறார் போலும். 


கேள்வி-10. தெலுங்கானா விவகாரம்: பிரிவினைக்கு எதிராக ஆந்திரா, ராயலசீமா பகுதி தலைவர்கள் போர்க்கொடி
பதில்: இது ஒரு இடியாப்பச் சிக்கல். ஆந்திர மாநிலம் வரும் நிலையிலேயே தெலுங்கானாவை தனியான மாநிலமாக அமைக்கும் யோசனை இருந்திருக்கிறது. அதை அப்போது சரியாக அவதானிக்காது பொறுப்பற்ற முறையில் அலட்சியம் செய்த நேரு இதில் முக்கிய பொறுப்பேற்க வேண்டியவர்.  






periyar has left a new comment on your post "டோண்டு பதில்கள் - 14.07.2011":
கேள்வி-11. மஞச துண்டுக்கு ஜால்ரா போட்டே பிழைப்பை நகர்த்தி வந்த காக்கா கவிரசுகளான வைரமுத்து, வாலி போன்றவர்கள் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார்களே? இவர்கள் எதிர்காலம்?
பதில்:  வைரமுத்து எப்படியோ தெரியாது. ஆனால் வாலி ஏற்கனவேயே ஜெயை புகழ்ந்து கவிதை எழுதி விட்டதாக அறிகிறேன். வழக்கம்போல அதிலும் சோவை தாக்கியுள்ளதாகவும் தெரிகிறது.  




ரமணா
கேள்வி-12. சுவாமி நித்யானந்தா சொல்வது உண்மையா அல்லது ?
பதில்:  மார்ஃபிங்கோ அல்லது நிஜமான டேப்போ எதுவாக இருந்தாலும் நித்யானந்தா செய்தது சட்டப்படி தவறு இல்லை. அவரும் ரஞ்சிதாவும் மனமொப்பித்தான் அதில் ஈடுபட்டார்கள், மேலும் இருவரும் மேஜர். ஆகவே அதை வீடியோ மூலம் பரப்பிய கோபாலும் கலாநிதியும்தான் போர்னோகிராஃபி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டியவர்கள்.
நித்யானந்தா உபதேசித்தது ஒன்று ஆனால் தானே செய்தது அதற்கு மாறானது என்றால் அதை அவர் சீடர்கள் பார்த்துக் கொள்ளட்டும். 
இது சம்பந்தமாக நான் இட்ட பதிவுகள் நித்யானந்தரும் பெரியாரும் மற்றும் நித்யானந்தர் விவகாரம் - மேலும் சில எண்ணங்கள் ஆகிய இரண்டிலும் நான் தெரிவித்த கருத்துகள் அப்படியே உள்ளன 


கேள்வி-13. கலாநிதிக்கும் சிக்கலா?
பதில்: கலாநிதி போர்னாக்ரஃபி சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்படவேண்டியவர்.


கேள்வி-14. திமுகவில் மீண்டும் சகோதரர் கலகமா?
பதில்: கலகம் எப்போது நின்றது, இப்போது மீண்டும் ஆரம்பிக்க?


கேள்வி-15. அடிக்கடி தமிழகத்தில் அதிகாரிகளை இப்படி மாற்றுவது பற்றி?
பதில்: இதுவும் ஒன்றும் புதிது இல்லையே. அதற்குத்தான் நிர்வாகத் தேவை என்று ஒரு பல்லவியை வைத்திருக்கிறார்களே.


கேள்வி-16. முரசு டீவி வருகிறதாமே?
பதில்: போலி சீட்டுக் கம்பெனிகள் ஓரிடத்தில் வண்டவாளம் வெளியே வந்து அங்கிருந்து ஓடி இன்னொரு ஊரில் வேறு பெயரில் கம்பேனி ஆரம்பிப்பது நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.


கேள்வி-17. அநியாய கொள்ளை லாபம் பார்க்கும் உணவு விடுதிகள், கல்விச் சாலைகள், மருத்துவ மனைகள் - நாம் எங்கே போகிறோம்?
பதில்: இம்மாதிரி நிகழ்காலத்தை குறைவாக மதிப்பிட்டு, முன்னொரு காலத்திலே எல்லாமே சரியாக இருந்தது என நினைக்கும் மனப்பான்மை பல ஆயிரம் ஆண்டுகளாகவே இருந்து வந்துள்ளது என்பது குறித்து நான் இட்ட இப்பதிவில் கூறியிருக்கிறேனே.



கேள்வி-18. பெங்களுர் வழக்கு அதிமுக தலைவிக்கு தலைவலியா?
பதில்: ஆம், அதில் என்ன சந்தேகம்?



கேள்வி-19. ஒரு பகுதி நீதிபதிகளே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்படுவது பற்றி?
பதில்: நீதிபதிகளும் மனிதர்கள்தானே எனக் கூறினாலும், சம்பந்தப்பட்டவர்களது சரியற்ற இம்மாதிரிச் செயல்களால் நீதித்துறையின் நம்பகத்தன்மையே பணாலாவது சோகமானது.


கேள்வி-20. திமுக தலைவர் பதவி ஸ்டாலினுக்கு கிடைத்தால்?
பதில்: இப்போதைய நிச்சயமற்ற நிலையில் திமுக பல துண்டுகளாவதுதான் நிச்சயமாக நடக்கும்.



கேள்வி-21. இந்த வருடம் 10ம் வகுப்பு மாணவர்களின் எதிர் காலம்?
பதில்: சமீபத்தில் 1961-62 கல்வியாண்டில் நான் பல்ளியிறுதி வகுப்பில் படிக்கையில் இம்மாதிரி தமிழ் புத்தகம் கிடைக்காது போய், பிறகு அது கிடைத்தவுடன் எங்கள் ஆசிரியர் எங்களுக்கு நீக்கப்பட்ட பகுதிகளை கோடிட்டு அறிவித்தது நினைவுக்கு வருகிறது. அம்மாதிரி ஏதாவது செய்வார்களாக இருக்கும்.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

7/18/2011

தமிழ்மணம் கருவிப்பட்டை பிரச்சினை

இதை தமிழ் மணமும் தொட்டு விட்டது. பலமுறை எனது பதிவை திறப்பதற்கே கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

வேறு வழியே இல்லை, தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை நீக்கியேயாக வேண்டும்.

கருவிப்பட்டையை இணைக்க வழி தரும் தமிழ்மணம், அதை நீக்கவும் வழி சொன்னால் நன்றாக இருக்கும். டெம்பிளேட்டை விஷயம் தெரியாமல் தொட பயமாக உள்ளது.

யாராவது உதவி செய்ய முடியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்.

7/14/2011

டோண்டு பதில்கள் - 14.07.2011

 pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. தயாநிதி ராஜினாமா:காங்கிரஸ் மவுனம்

பதில்: ஸ்பெக்ட்ரமில் திமுக மட்டும் ஊழல் செய்யவில்லை. காங்கிரசும்தான். ஆகவே ரொம்பவெல்லாம் அதனால் அலட்டவெல்லாம் முடியாது.

கேள்வி-2. கோபாலபுரம்தான் முதலில் பிடிபடும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு
பதில்: இதை ஒரு காங்கிரஸ்காரர் போய் சொல்வது தமாஷாக இருந்தாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.

கேள்வி-3. சன் டி.விக்கு அனுமதியின்றி கேபிள் கனெக்க்ஷன்: விரைவில் நடவடிக்கை- ஜெயலலிதா
பதில்: தமிழ் சினிமாக்களில் கடைசியில் போலீஸ் வந்து எல்லோரையும் அரெஸ்ட் செய்வது போலத்தான் இங்கும்.

கேள்வி-4. கருணாநிதியிடம் மன்மோகன், சோனியா தொலைபேசியில் பேச்சு
பதில்: எது பற்றி அப்பேச்சு இருக்கும் என நினைக்கிறீர்கள்?

கேள்வி-5. கலாநிதி மாறன், சக்சேனா மீது கமிஷனரிடம் நித்யானந்தா சீடர் புகார்
பதில்: வீடியோக்களை போட்டவர் தமது மடத்துக்கு காப்புரிமை ஃபீஸ் தரவில்லை என்னும் கோபத்தால் இருக்குமோ?

கேள்வி-6. சிதம்பரத்துக்கு எதிராக சதி: கபில் சிபல்
பதில்: அவர் அப்படித்தான் சொல்லோணும் என இத்தாலிய எஜமானி கூறியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்று ப.சி. நாளை தான் என்னும் பயமாகவும் இருக்கலாம்.

கேள்வி-7. வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்: ஸ்டாலின்
பதில்: அப்படி செய்யோணும்னா தங்கள் ஆட்சி காலத்தில் சட்டப்படியே எல்லா காரியங்களும் செஞ்சிருக்கோணுமே.

கேள்வி-8. கூட்டணி குறித்து தங்கபாலு பேச அதிகாரம் இல்லை: யுவராஜா
பதில்: யுவராஜாவுக்குத்தான் அந்த அதிகாரமா அல்லது அதுக்கும் இத்தாலிய எஜமானிதான் வரணுமா?

கேள்வி-9. தயாநிதி மாறனுக்கு மாற்று கேட்க மாட்டோம்: டி.ஆர்.பாலு
பதில்: இதில் பல விஷயங்கள் உள்:ளன. டி.ஆர். பாலுவை யாரும் ஏற்க மாட்டார்கள். கலைஞரின் உறவினர்கள் வேறு யாரும் மிஞ்சியதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் ஒரு சாதாரண திமுக எம்.பி. பதவிக்கு வந்து விடக்கூடாது என்ற நல்லென்ணம் நிரம்பியவர் தலைவர். அந்த நிலையில் வேறு எம்மாதிரித்தான் பேசுவார்களாம்?

கேள்வி-10. சமச்சீர் கல்வி: நிபுணர் குழு அறிக்கை பாரபட்சமானது: கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் உயர் நீதிமன்றத்தில் மனு
பதில்: அதில் சொல்லியிருக்கும் ஆட்சேபணைகள் கருத்தில் கொள்ள வேண்டியவையே.


ரமணா
கேள்வி-11.  அடுத்தது சி.தா னவா?
பதில்:  சிதம்பரமா எனக் கேட்கிறீர்களா? சிதம்பரமோ, கபில் சிபலோ அல்லது மன்மோகன் சிங்கோ யார் மாட்டிக் கொண்டாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை.

கேள்வி-12.  மத்திய அமைச்சர்களில் வாய் சாமர்த்தியசாலி யார்?
பதில்: அப்பெயரை பெறுவதற்கு கபில் சிபல் முயற்சி செய்து வருகிறார் என நினைக்கிறேன்.


கேள்வி-13. கடைசியில் காங்கிரஸ் திமுகவிடம் சரண்டரா?
பதில்: திடீரென திமுக அப்ரூவராக மாறி விட்டால் என்ன செய்வது என்ற கவலை இருக்குமோ என்னவோ.

கேள்வி-14. டி.ஆர் பாலுவின் மேல் பிரதமருக்கு என்ன கோபம்?
பதில்: கொள்ளை அடித்ததில் அவரவருக்கான பங்கைத் தரவில்லை என்ற கோபம் கருணாநிதிக்கு மட்டுமல்ல, பிரதமருக்கும் உண்டு என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.

கேள்வி-15. திடீர் நில மோசடி வழக்குகள் பற்றி?
பதில்: பல நாள் திருடர்கள் நிஜமாகவே அகப்படுகிறார்கள் போலிருக்கிறதே.

கேள்வி-16. மத்திய மந்திரி சபை மாற்றம் என்ன செய்தி சொல்கிறது?
பதில்: மந்திரியாக இன்றிருப்பார் நாளை இல்லை.

கேள்வி-17. கர்நாடகாவில் முன்னாள் முதல்வரின் உண்ணாவிரதம்?
பதில்: அதை கைவிட்டு விட்டதாக டிவியில் கட்டினார்களே.

கேள்வி-18. அர‌சு கேபிள் டீவி வரவு வரமா ?
பதில்: ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுத்தால் பயனர்களுக்கு நலம் விளையும்.

கேள்வி-19. சமச்சீர் கல்வி விவாதம் எப்போது முடிவுக்கு வரும்?
பதில்: எல்லோரையும் பைத்தியமாக்கியதற்கு பிறகு?

கேள்வி-20. அதி நவீன செல்போன்களினால் இளைஞர்களின் வாழ்வுமுறை திசை மாறுகிறதா?
பதில்: திசை மாற உதவுகின்றன என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.


Surya said...
கேள்வி-21. சமச்சீர் கல்வி பற்றி "அருள்" அவர்கள் (அதாங்க நம்ம ராமதாசுக்கு அறிவிக்கப்படாத கொ.பா.செ. வாக செயல்படும் மகானுபாவன்) அவர் தளத்தில் கீழ்க் கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.
"பள்ளிகள் போதவில்லை, கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றெல்லாம் கூறுவது ஓரளவுக்குதான் உண்மை. மாறாக, பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்கள், கற்பிக்கப்படும் முறை எல்லாமே 'மேல்தட்டு குழந்தைகளை' இலக்காகக் கொண்டவை. அந்த கல்வியால் ஏழைக் குழந்தைகளுக்கு பயனும் இல்லை, அது அவர்களுக்கு பழக்கமானதும் இல்லை.
(என்னுடைய மகள் ஒரு சென்னை தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறது. அதன் பொதுஅறிவு 'தனியார்' நூலில் அப்பாவின் உடை 'குர்த்த - பைசாமா' என்றும், அம்மாவின் உடை 'சல்வார் கமீசு' என்றும் கூறப்பட்டுள்ளது. நூலின் எந்த இடத்திலும் வேட்டி, புடவை இல்லை. அதைவிட - விளையாட்டையும் பந்தையும் ஒப்பிடு என்று கூறி 'ரக்பி' விளையாட்டை போட்டுள்ளார்கள்.)"
நியாயமான கேள்விதான். ஆனால் இவர் ஏன் தன் மகளைத் தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார்? சமச்சீர் கல்விக்காக வாதிடுபவர்கள் ஏன் எல்லாப் பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் வேண்டும் என்று வாதிடுகிறார்கள் என்று புரியவில்லை. அரசாங்கப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே. எதற்காக தனியார் பள்ளிகளுக்கும் அரசாங்கமே பாடத் திட்டத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்? தனியார் பள்ளிகளை நன்றாகத் திட்டுவார்கள். ஆனால் இவர்கள் (அன்புமணி, கலைஞர் குடும்பம் உட்பட) மட்டும் தங்கள் வீட்டுக் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவார்கள். இந்த லாஜிக் உங்களுக்குப் புரிகிறதா?
பதில்: இது சம்பந்தமாக நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் இட்ட இப்பதிவைப் பார்க்கவும்.

கேள்வி-22. இன்னொரு அட்வைசும் அவர் கொடுக்கிறார் " தமிழ்நாட்டின் மிகப்பெரிய வளம் என்பது அதன் மனித வளம்தான். அதுவும் 'மக்கள்தொகை அனுகூலம்' (Demographic Dividend) எனப்படுகிற - மொத்த மக்களில் அதிகமானோர் இளையோராக இருக்கும் நிலையில் இப்போது தமிழ்நாடு உள்ளது. இது இனி முதியோர் அதிகம் என ஆகும் (இப்போது சப்பானில் அதுதான் நிலை). அதற்குள் - எல்லோரையும் ஆற்றல்மிக்கவர்களாக வளர்த்தால்தான் தமிழகம் வளரும். இல்லையென்றால் எதிர்காலம் இருண்ட காலம்தான். எல்லா சிறுவர்களையும் ஆற்றல் மிக்க இளைஞர்களாக வளர்த்தெடுக்க கல்வியில் சமத்துவம் ஒரு கட்டாயமான முன்தேவை. தமிழக அரசின் போக்கைப் பார்த்தால் - இருண்டகாலமே காட்சியளிக்கிறது."இவர் கட்சியில் ஏன் அன்புமணிக்கு மட்டும் ராஜ்ய சபா வாய்ப்பு? கட்சியில் வேறு யாருக்குமே திறமை இல்லையா? இவர்கள் நடத்தும் டீ.வி.யிலோ அல்லது கலைஞர் குடும்பம் நடத்தும் டீ.வீ.யிலோ அரசாங்கப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஒதுக்கலாமே? தமிழன் என்றுதான் இந்தப் பச்சோந்திகளைப் புரிந்து கொள்ளப் போகின்றான்?
பதில்: அன்புமணி மட்டுமல்ல ராமதாசும் நல்லத் தந்தையே.

கேள்வி-23. ராசாவும் ராசாத்தி அம்மாளும் "லட்டு" சாப்பிட்டு மாறன் ராஜினாமாவைக் கொண்டாடினார்களாமே?
பதில்: ஹா ஹா ஹா ஹா.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/07/2011

டோண்டு பதில்கள் - 07.07.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி தரிசனம் செய்தார்.
பதில்: யோசித்து பார்க்கிறேன். நமக்கு வேண்டுமானால் கேலியாக இருக்கலாம். ஆனால் செல்வியின் பார்வை கோணத்திலிருந்து பார்ப்போமா? உறவினர்களை காப்பாற்ற என்ன வழி என அலைந்து கொண்டிருக்கும் நிலையில், எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என அலையும்போது பகுத்தறிவு எல்லாம் நினைவுக்கு வராதுதானே.

எனக்கு கலைஞர் மேல் உள்ள விமரிசனங்கள் அப்படியே இருந்தாலும், அவர் வீட்டு பெண்மக்களின் கவலைகள் நியாயமானதே. என்னதான் பகுத்தறிவு எல்லாம் பேசினாலும் பெண்கள் பிராக்டிகலானவர்கள். நோக்கம் என்ன? உறவினரது விடுதலை. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்தக் கடவுளிடம் போயும் வேண்டலாம்.

நான் அதை புரிந்து கொள்கிறேன்.

கேள்வி-2. லோக்பால் மசோதா தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை நாளை சந்திக்க உள்ளதாக பிரபல சமூக சேவகர் அண்ணா ஹசாரே தெரிவித்தார்.
பதில்: யார் அந்த குவாட்ரோக்கியின் ரசிகையையா? அன்னா ஹசாரேக்கு என்ன ஆயிற்று?

கேள்வி-3. இலங்கை அதிபர் ராஜபக்ஷ போர்க் குற்றவாளி என உலக நாடுகள் அறிவித்த நிலையில், இனியும் இந்தியா மௌனம் காக்கக் கூடாது என்றார் திராவிடர் கழக மாநிலப் பேச்சாளர் அதிரடி அன்பழகன்.
பதில்: அவர் சொல்வதை வீரமணியே கேட்க மாட்டார் என நினைக்கிறேன்.

கேள்வி-4. உண்மையான ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை: ராமதாஸ்
பதில்: இரண்டு முறை என் வீட்டுக்கு சென்சஸ் எடுக்க வந்தார்கள். இரண்டு முறையுமே என்னை ஜாதி பற்றி எதுவும் கேட்கவில்லையே. நானாக கூற முன்வந்தபோதும் அதை ஏற்கவில்லை.

ராமதாசால் ஏதாவது செய்ய முடியுமா?

கேள்வி-5. உமாபாரதி கட்சி பாஜகவுடன் இணைந்தது
பதில்: தேவையற்ற தலைவலி பாஜகாவுக்கு. பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கும் கதை. கட்டுச்சோற்றில் பெருச்சாளி. வேறென்னவெல்லாம் கூறலாம்?

கேள்வி-6. கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும்: ஜஸ்வந்த் சிங்
பதில்: அது அவரது தனிப்பட்ட கருத்து. எனக்கு அதனுடன் ஒப்புதல் இல்லை. குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போகச் செய்தாலும் செய்வார்கள் என்னும் நிலையில் இப்படியாவது கனிமொழி போன்றவர்கள் சிறையில் இருக்கட்டுமே. எவ்வளவு நாட்கள் இருக்கிறார்களோ அது வரை நீதிக்கு நல்லது.

கேள்வி-7. உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கூட்டணி மறுபரிசீலனை: பாமக பொதுக்குழுவில் ராமதாஸ்
பதில்: காமெடி பீஸ் ராமதாசர் அதை கூறாவிட்டால்தான் ஆச்சரியம்.

டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,

69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளி கல்விக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த ஒன்றரை மாதகால அதிமுக அரசின் மோசமான செயல்பாட்டிற்கு கல்வி பிரச்சனையே உதாரணம். மற்றப்படி பாராட்டும்படி பெரிய அளவில் ஒன்றும் இல்லை.

பொதுமக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடை நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே செயல்பட வேண்டும்
என்றார் அவர்.

ஆனால் முக்கியமான கண்டிஷனை கூறவில்லையே. அவர் சார்பில் நானே கூறி விடுகிறேன். அன்புமணிக்கு ராஜ்யசபை எம்.பி. பதவி, முடிந்தால் மந்திரி பதவி, ஹெல்த் மந்திரியாவது உத்தமம்.

கேள்வி-8. புதுவை அமைச்சரவை: முக்கியத் துறைகளை தன்வசமே வைத்துக் கொண்டார் ரங்கசாமி
பதில்: புதுவையில் நடக்கும் கழைக்கூத்தாடி ஆட்டத்தில் அவரால் வேறு என்ன செய்ய முடியும்? யாரைத்தான் நம்புவார் அவர்?

கேள்வி-9. கோயில் யானைகள் பராமரிப்பு குறித்து ஆலோசனை
பதில்: முதலில் அவற்றை வைத்து பிச்சை எடுக்கும் அவலத்தைக் கண்டிக்க வேண்டும்.

கேள்வி-10.சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார்?: சிபிஐ சந்தேகம்
பதில்: அடாடா, யாருக்கும் தோன்றாததுதான் இவர்களுக்கு தோன்றி விட்டதா?


ரமணா
கேள்வி-11. சூரியப் பேரனின் மத்திய மந்திரி பதவி இன்னும் எத்தனை நாள் வரை?
பதில்: அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன.

கேள்வி-12. மருத்துவர் ஐயா உள்ளாட்சித் தேர்த‌லில் அணிமாறுவார் போலுள்ளதே?
பதில்: மாறாவிட்டால்தான் ஆச்சரியம். அவரும் என்ன செய்வார் பாவம். அன்புமணி மந்திரியாக வேண்டாமா?

கேள்வி-13. கேபடன் அடுத்து என்ன செய்வார்?
பதில்: புத்திசாலியாக இருந்தால் லூஸ்டாக் ஏதும் செய்யாது சிறப்பாக எதிர்க்கட்சித் தலைவரின் கடமைகளை ஆற்றுதல் நலம். அதிமுகாவுக்கு அக்கால எதிரிக்கட்சியான (1991-1996) காங்கிரஸ் ஜால்ரா அடித்ததுபோல இப்போது செய்யாமல் இருப்பதே இவரைப் பொருத்தவரை புத்திசாலித்த்னமான காரியம்.

கேள்வி-14. உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் எழுப்பப்படும் கோஷம் என்ன சொல்கிறது?
பதில்: அதிகாரத்தில் பங்கு, ஊழல் சம்பாத்தியத்தில் ஷேர்.

கேள்வி-15. மொபைலில் அதிகம் பேசினால் மூளை புற்றுநோய் வரும் என சொல்லப்படும் செய்தியால் அதிகம் பாதிக்கப்படப் போவது யார் யார்?
பதில்: மூளை இல்லாதவர்கள்.

கேள்வி-16. இது எப்படியிருக்கு? காளகஸ்திக்கு போன குடும்பம்
பதில்: நான் முதல் கேள்விக்கு சொன்ன பதில்தான் மறுபடியும்.

கேள்வி-17. மீண்டும் சமூகம் காத்த வீராங்கனையின் முயற்சியால் பொறியியல் கல்லுரி தகுதி மதிப்பெண் விவகாரம்?
பதில்: கேள்வியின் பின்புலன் புரியவில்லையே.

கேள்வி-18. அம்மையாரின் அடுத்த டெல்லி பயணம் யாருக்கு வேட்டு?
பதில்: தெரியவில்லையே. ஆனால் இலக்கு மட்டும் கருணாநிதிதான்.

கேள்வி-19. அன்னை ஹசாரேயின் முயற்சி?
பதில்: அன்னா ஹசாரேவா அன்னை ஹசாரேவா?

கேள்வி-20. தமிழகத்தில் நில மோசடி வழக்குகள் களை க‌ட்டுகின்றனவே?
பதில்: அப்படியாவது குற்றவாளிகள் சிக்கினால் நல்லதுதானே.


Surya
கேள்வி-21. நெத்தியடியாக கேள்வி கேட்பதில் வீரமணியை மிஞ்ச யாராலும் முடியாது. சமீபத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார் விடுதலை பத்திரிக்கையில். "திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் பாதாள அறைகளில் கோடி கோடியாக தங்கமும் ரத்தினங்களும் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டுமாம்! பணவீக்கத்தை சரி செய்ய அரசு பயன்படுத்திக் கொள்ளுமா?" இவ்வளவு வக்கணையாகக் கேள்வி கேட்கும் இவர் பெரியார் டிரஸ்ட் பெயரால் அனுபவிக்கும் ஆயிரம் கோடி ரூபாய் சொத்திலிருந்து இது வரை ஒரு பைசா கொடுத்து இருக்கிறாரா அரசுக்குப் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த? நிறைய சாதாரண அமெரிக்க குடிமக்கள் அரசின் வெளி நாடு கடன் சுமை குறைக்க தாமாகவே நன்கொடை அளிக்கின்றனராமே?
பதில்: பத்மநாதசாமி கோவில் அறைகளில் அரசர்கள் அக்காலகட்டங்களில் பல நோக்கங்களுக்காக சேமித்திருக்கலாம். ஆனால் இப்போது அவை கோவில் சொத்துகள். அவற்றை முறையாக கணக்குபடுத்தி இந்து கோவிகளுக்காக (பல இந்து கோவில்களின் சொத்துகளை தீயவர்கள் கையகப்படுத்தியதால் பூஜைகள் கூட சரிவர நடப்பதில்லை) செலவழிப்பதுதான் முறை.

மற்றப்படி வீரமணி கனவிலும் செய்த்துணியாத காரியங்களையெல்லாம் அவரிடமிருந்து எதிர்பார்ப்பது வீண்.

கேள்வி-22. ரஜினியைத் திட்டி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள் விடுதலையில். அதில் ஒரு வரி "சங்கராச்சாரியார் போல நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே (தெய்வத்தின் குரல் 3ஆம் பகுதி பக்கம் 734) என்று சொல்லக் கூடியவர்களல்லர் பகுத்தறிவு வாதிகள்." வீரமணி வகையறாக்கள் பக்க reference எல்லாம் கொடுத்து அவர்கள் வாதம் உண்மை என நம்ப ஒரு casual ரீடர் நம்பும் போல் செப்படி வித்தை செய்வதில் கில்லாடிகள். என்னதான் அப்படி சொல்லி இருக்கிறார் சங்கராச்சாரியார் என்று தெய்வத்தின் குரல் 3ஆம் பகுதி பக்கம் 734 ஐ பார்த்தேன். ஆயுர்வேத சாஸ்த்ரங்களை எழுதிய ரிஷிகள் "நாத்திகனுக்கு வைத்யம் செய்யாதே" என்று எழுதி வைத்துள்ளதாக சங்கராச்சாரியார் கூறுகிறார். ஆனால் எப்படி அவரை வீரமணி வகையறாக்கள் misquote செய்கிறார் பாருங்கள்?
பதில்: நாய் வால் நிமிருமா? லூசில் விடுங்கள். காமெடி பீஸ்களின் உளறல்களை கேட்டு சிரிக்கலாம். அவ்வளவுதான்.

கேள்வி-23. இன்னும் ஒரு விடுதலை கட்டுரையில் வழக்கம் போல ஜெயலலிதாவையும் சோவையும் வீரமணி கிண்டல் "சரிதான். அதோடு, அ.தி.மு.க. பக்தர்கள் அம்மாவுக்காக மண்சோறு தின்கிறார்களே. அது பற்றி ஒன்றும் அம்மா சொல்லமாட்டாரா? துக்ளக் அய்யர்வாளும் அதனைக் கண்டு கொள்ளத்தான் மாட்டாரா?" செல்வி குடும்பம் காளஹச்திக்குச் சென்று கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி பெயரில் ராகு கேது பூஜை செய்த கூத்தைப் பற்றி இவர் ஒன்றும் கூற மாட்டாராம். ஆனால் சோ "மண்சோறு" தின்றவர்களை விமர்சனம் செய்ய வேண்டுமாம்! என்ன ஒரு பித்தலாட்டம்?
பதில்: அ.தி.மு.க. பக்தர்கள் ஆத்திகர்களாக இருக்கும் பட்சத்தில் அதை மறைத்ததில்லையே. இப்போது வீரமணி சொல்வது வெறும் கேலிக்கூத்தே.

கேள்வி-24. Dirk Nowitzki என்ற ஜெர்மானிய கூடைப் பந்து வீரர் அவர் சார்ந்த அணிக்கு அமெரிக்க கூடைப் பந்து championship டைட்டில் வாங்கிக் கொடுத்திருக்காரே! Dirk ஒரு gentleman என்று கூடைப் பந்து ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கி விட்டார்! உங்களுக்கு ஆர்வம் உண்டா கூடைப் பந்து விளையாட்டில்?
பதில்: விளையாட்டுகளுக்கும் எனக்கும் காததூரம். நான் பார்த்து எஞ்சாய் செய்த கூடைப்பந்து மேட்ச் சமீபத்தில் 1961-ல் திரையான ஆப்சண்ட் மைண்டட் ப்ரொபசர் என்னும் படத்தில் வந்த கூடைப்பந்து மேட்ச்தான். அது இதோ.

முதல் பாதியில் உதை வாங்கும் குள்ளர்கள் டீம் அடுத்த பாதியில் ஃப்ரெட் மாக்முர்ரேயின் தயவாலும் ஃப்ளப்பரின் துணையாலும் தூள் கிளப்புவதை பார்க்கலாம். இதை காப்பி அடித்து “பட்டினத்தில் பூதம்” படத்திலும் சீன் வருகிறது. ஆனால் அங்கிருப்பது ஜீபூம்பா ஜாவர் சீத்தாராமன்.



மேலே சொன்ன படத்தின் முழு வீடியோவுமே கிடைத்தது. அதையும் கீழே போடுகிறேன். எஞ்சாய்.



சுழியம்
கேள்வி- 25. உங்களுடைய அருமையான கேள்வி பதில் தொடருக்கான கேள்வி ஒன்று:
ஒரு தலித்தை சங்கராச்சாரியார் ஆக்குங்கள் என்று அம்பேத்கர் சொன்னதாக இந்தக் கட்டுரை சொல்கிறதே. அது சாத்தியமா?

பதில்: உங்கள் முதல் வரி என்னைக் கூச்சப்படுத்துகிறது. எனது கேள்வி பதில் தொடர் அருமையானது என்பதை நான் உறுதியாகவே மறுக்கிறேன். அறுவை ஜோக்ஸ், மொக்கைகள் ஆகியவைதான் அதில் அதிகம். ஆனால் உங்களது இக்கேள்வி அருமையானது என்பதில் ஐயம் இல்லை.

நிற்க. அக்கட்டுரை கூறும் விஷயங்கள் அலட்சியம் செய்யத்தக்க்கது அல்ல. அதற்கான நேர்மையான பதில் “முடியாது” என்னும் ஒரு சொல் மட்டுமே. அதைக் கூற மனம் வருந்தினாலும், துரதிர்ஷ்டவசமாக அதுவே எதார்த்தம்.

சங்கர மடம் என்று மட்டும் இல்லை, நிறுவனப்பட்ட அமைப்புகளில் சாதி, மதம் ஆகியவை மறுக்க முடியாத காரணிகளாக உள்ளன. உதாரணத்துக்கு ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் கத்தோலிக்க கன்னியாஸ்த்ரீதான் முதல்வராக வர இயலும். லயோலா கல்லூரியிலும் கிறித்துவப் பாதிரியார்தான் (?) முதல்வராக இயலும். பேராசிரியர்களில் சீனியாரிட்டி மட்டும் அதற்கு உதவாது.

ஆதீனங்களில் பார்த்தாலும் குறிப்பிட்ட சாதியினரே வர இயலும். அதே போலத்தான் சங்கர மடமும். காஞ்சியில் ஐயர்தான் சங்கராச்சாரியாராக வர இயலும். ஐயங்காரால் கூட முடியாது. அதே போல ஐயர் ஜீயராக வர முடியாது.

இந்தக் கட்டுப்பாடு பெர்சனலாக என்னைப் பொருத்தவரை நியாயமற்றது என்பதையே உணர்கிறேன்.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது