Showing posts with label புதிர்கள். Show all posts
Showing posts with label புதிர்கள். Show all posts

1/06/2012

2012-க்கான முதல் செட் புதிர்கள்

1. இந்தியாவை விட்டும் எங்குமே வெளி தேசத்துக்கு செல்லாத டோண்டு ராகவன் அந்த நிலை மாறாமலேயே வெறும் தரையில் நின்று கொண்டு சீனாவின் பெருஞ்சுவரை நேரடியாகவே காணவியலும். எங்கனம்?

2. மெக்கானிக் அண்ணாமலையின் சகோதரன் தாயுமானவன் இறந்து விட்டார். ஆனால் தாயுமானவுக்கு சகோதரனே கிடையாது. எவ்வாறு?

3. தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்? இம்சை அரசனுக்கு விடை தெரியாமல் மண்டையே வெடித்து விடும் போல. டோண்டு ராகவனுக்கும்தான்.

4. கோவிந்தாச்சாரி தனது காரை ஸ்பீட் லிமிட்டிற்குள்தான் ரோட்டோரமாக ஓட்டிக் கொண்டிருந்தார். எதிரே வந்த கார்களோ இவரது காரை விட வேகமாகவே வந்தன. இருப்பினும் போலீஸ்காரர் மணவாளன் கோவிந்தாச்சாரியை நிறுத்தி அபராதம் போட்டார். என்ன அக்கிரமம?

5. ராமகிருருஷ்ணன், தன்னருகிலேயே படுத்திருக்கும் தன் மனைவி பத்மாசனிக்கு தனது செல்பேசியிலிருந்து அழைப்பு அனுப்ப, அவள் தனது செல்பேசியை எடுத்து பேசும் முன்னால், தனது செல்பேசியை அணைத்து விட்டு ஆனந்தமாக தூங்கலானான். ஏன் இந்தக் கொலைவெறி அவனுக்கு?

6. எலெக்ட்ரீஷியன் ஆதிகேசவன் அந்த ரூம் விளக்கை அணைச்சுட்டு போனதாலே, 200 பேர் செத்தாங்க? எப்படி?

7. தன் சொந்த வீட்டில் இருந்தும் கூட ராமநாராயணன் தாகத்தால் அவதிப்பட்டான், தண்ணீரை வாங்கிக் குடிக்கவும் இயலவில்லை, பணம் நிறைய இருந்தும். ஏன்?

8. ராஜகுமாரன் பிங்களன் தன் குதிரை நீலவேணியை 15 அடி நீள கயிற்றில் கட்டி விட்டு ராஜகுமாரி பரிமளாவுடன் உல்லாசமாக இருக்க செல்கிறான். குதிரைக்கு 25 அடி தூரத்தில் புல்கட்டு இருக்கிறது. இருப்பினும் நீலவேணியால் அப்புல்லை தின்ன முடிந்தது. எங்கனம்?

9. மெய்யூரில் இருப்பவர்கள் அனைவரும் உண்மையை மட்டும் கூறுவார்கள். பொய்யூரிலோ பொய்யைத் தவிர அம்மக்களுக்கு ஒன்றும் தெரியாது. இரு ஊரையும் இணைக்கும் ராஸ்தாவின் நடுவில் உள்ள கூட்டு ரோட்டில் ஒரு வழிப்போக்கன் வருகிறான். அவன் ஒரு அழகான பென்ணைப் பார்க்கிறான் (வயது 18). அவன் மெய்யூருக்கு செல்ல வேண்டும். எவ்வாறு?

10. நான் கடவுளை விட வலிமைமையானவன், ஏழைகளிடம் இருப்பவன், பணக்காரர்களிடம் இல்லாதவன். நான் உன்னிடம் வந்தால் நீ இறப்பாய். நான் யார்?


அன்புடன்,
டோண்டு ராகவன்

8.

7/15/2010

புதிர்கள், கூடவே நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 15.07.2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் போட்டு ரொம்பநாளாச்சு பெரிசு, நீ போடறயா இல்லே நானே போடட்டுமா என முரளிமனோகர் சில நாட்களாக படுத்தி வருவதால் நானே போடறேண்டான்னு அவன்கிட்டே சொல்லிட்டு, இப்போ இப்பதிவை போடறேன்.

புதிர்களை அவ்வப்போது தோன்றும்போது எழுதி வரைவாக வைத்துக் கொள்வது வழக்கம். இது வரைக்கும் 4 தேறியுள்ளன, சரி அதையும் இங்கேயே கேட்டுடுவோம்னு போட்டுட்டேன்.

மேலும் சில புதிர்கள்
1. இரு ஷட்டகர்கள் (சகலைபாடிகள்) சடகோபாச்சாரியும் கண்ணன் ஐயங்காரும் காட்டில் வாக்கிங்கிற்கு சென்ற போது வழி தவறி விட்டனர். என்ன செய்வது எனப் புரியாது சடகோபாச்சாரி வடக்கு நோக்கி நகர, கண்ணன் ஐயங்காரோ தெற்கு நோக்கி நகர்கிறார். கால் மணி நேரம் அவ்வாறு நடந்த பின்னால் அவ்விருவருவரும் சந்திக்கின்றனர். எப்படி இது சாத்தியம்?

2. சீனக்கலாசாரம் 4500 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தியக் கலாச்சாரமோ 5500 ஆண்டுகளாக இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என வாத்தியார் பாஷ்யம் ஐயங்கார் கேட்க மாணவன் கஸ்தூரிரங்கையங்கார் பதிலளிக்கிறான். ஆசிரியர் அவனை வகுப்பிலிருந்து வெளியேற்றுகிறார். அவன் என்ன பதில் சொல்லியிருப்பான்?

3. ஆசிரியர் ரங்காராவ் திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தார் என்றால், அதே கஸ்தூரிரங்கையங்கார் 2000 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் எனச் சொல்லி உதை வாங்குகிறான். அது எப்படி அவ்வளவு கரெக்டாக சொன்னானாம்? ஏதேனும் கார்பன் டேட்டிங் முறை புதிதாக வந்திருக்கிறதா என்ன?

4. தொட்டதெல்லாம் பொன்னாகும் என வரம் பெற்ற மைதாஸ் மன்னன் மிகத் துயருறுகிறான். அவன் சாப்பிட நினைத்த உணவு தங்கமாகிறது, அவனது அருமை மகளை கட்டி அணைக்க அவளும் தங்கப் பதுமையாகி விட்டாள். பாவம் அவன் என்னதான் செய்வான் இதில் எல்லாவற்றிலிருந்தும் விடிவு பெற என பத்தாம் வகுப்பு ஆசிரியர் சங்கரராமன் அழகான ஆங்கிலத்தில் அங்கலாய்க்க, மாணவன் வரதராஜன் மகரக்கட்டு உடைந்த தன் கழுதைக் குரலில் தமிழில் யதார்த்தமாக ஒரு தீர்வு சொல்ல ஆசிரியர் அவனை வகுப்பிலிருந்து வெளியேற்றுகிறார் (நான் சமீபத்தில் 1960-61 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்தபோது உண்மையாகவே நடந்த நிகழ்ச்சி இது). அப்படி என்ன வரதராஜன் தவறாகச் சொல்லியிருப்பான்?

சாதிகள் தவிர்க்கப்பட்டிருக்க முடியுமா?
ஆல்டஸ் ஹக்ஸ்லி என்னும் ஆங்கில எழுத்தாளர் எழுதிய “சாகசங்கள் நிறைந்த ஓர் புது உலகம்” (Aldous Huxley's Brave New World") என்னும் புத்தகம் போன நூற்றாண்டில் முப்பதுகளில் வந்தது. மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அது பற்றி மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லலாம். நான் இப்பதிவில் கூறவந்த விஷயங்களுக்கு தேவையானவற்றை மட்டும் அதிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.

குழந்தை பிறப்பையே ஆண் பெண் சேர்க்கையிலிருந்து விலக்கிவைத்து விஞ்ஞான பூர்வ முறையில் செயற்கை கருத்தரிப்பு, இன்குபேட்டரில் கருக்கள் ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குழந்தைகளை உருவாக்கும் ஒரு சமூகம் பற்றிய கதை இது என்றால் மிகையாகாது.

அதில் கருக்களை அவை குழந்தைகளாக உருவாகும் முன்னரே ஐந்து சாதிகளாக பிரிக்கின்றனர் (five castes என்றே வெளிப்படையாகக் கூறப்படுகிறது). அவற்றுக்கு ஆல்ஃபா, பீட்டா, காம்மா, டெல்டா மற்றும் இப்சிலான் என பெயரிடுகின்றனர். இப்பெயர்கள் கிரேக்க மொழியில் உள்ள முதல் ஐந்து எழுத்துக்களே, ஆங்கிலத்தில் A, B, C, D & E எனக்கூறலாம்.

ஆல்ஃபாவைச் சேர்ந்த குழந்தைகள் அறிவில் சிறந்தவர்கள், புதிய கண்டுபிடிப்புகளைக் கூறுபவர்கள், மனபலம் மிக்கவர்கள் இத்யாதி, இத்யாதி. மற்ற வகை கருக்கள் ஆரம்பத்திலிருந்தே அவரவர் அறிவு வளர்ச்சியில் வெவ்வேறு நிலைகளில் தடை செய்யப்பட்டு பல வேறு திறமைகளை வளர்க்கின்றனர். அவரவர் திறமைக்கேற்ப அவரவரிடமிருந்து பிறகு வேலைகள் பெறப்படுகின்றன. சிலர் அறிவு சம்பந்த வேலைகளில், சிலர் அரசாட்சி செய்து போர்த் தொழிலில் ஈடுபடுதல், சிலர் வியாபாரத்தில் செயலாற்றல், சிலர் மற்ற பிரிவினருக்கு சேவை அளித்தல் ஆகியவையும் அந்த நாவலில் விவரிக்கப்படுகின்றன. அதே சமயம் ஒவ்வொரு சாதிக் குழந்தையும் தத்தம் சாதியே சிறந்தது என மூளைச்சலவையும் செய்யப்படுகின்றனர். ஆகவே யாரும் சாதியை மாற்றிக் கொள்ளும் குழப்பமும் இல்லை.

இதெல்லாம் நான் சொல்லவில்லை அந்த நாவல் சொல்கிறது. தமாஷாக நாடோடி அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் தமிழகத்தில் என்னென்ன சாதிகள் இருக்கும் என்பதை கற்பனை செய்து எழுதியதை நான் எனது ஒரு பதிவில் கூறியவற்றில் இருந்து சில வரிகள்:

“அன்றிரவு தங்குவதற்காக ஹோட்டலுக்கு பாகலாம் என்றால் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி ஹோட்டலாக இருந்தது. ஆக வக்கீலும் எழுத்தாளரும் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க வேண்டி வருகிறது. நாடோடி தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள இன்னொரு எழுத்தாளர் அப்போதைய ஜாதிக் கட்டுப்பாடு பற்றி விளக்குகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வர்ணாசிரமம் வந்து அதிலிருந்து ஜாதிகள் வந்ததை விளக்குகிறார். பிறகு அவற்றின் கட்டுக்கோப்பு குலைந்து போனதால் யார் வேண்டுமானாலும் எந்தக் குலத்தொழிலையும் செய்யலாம் என நிலை ஏற்பட, சம்பளம் அதிகம் வராத தொழில்களுக்கு ஆட்கள் கிடைக்காது, சம்பளம் அதிகம் கிடைக்கும் வேலைகளுக்கு ஒட்டுமொத்தமாக ஜனங்கள் போய் விழ அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் வந்தது. ஆகவே 500 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போது நிலவிய தொழில்களின் அடிப்படையில் மீண்டும் ஜாதிகளை வகுத்து ஒரு ஜாதிக்காரர் இன்னொரு ஜாதிக்காரரின் வேலையை செய்யக்கூடாது என்ற நிலை நிறுவப்பட்டது.

ஜாதிப் பிரிவுகள் இருந்தனவே தவிர இந்த ஜாதிதான் உயர்ந்தது இன்னொரு ஜாதி தாழ்ந்தது என்ற எண்ணங்களும் வராமல் பார்த்து கொள்ளப்பட்டன. தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் ஒரு தொழிலை மட்டும் செய்ததால் அத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகவேதான் ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினரைத் தொடுவது கூட குற்றமாகக் கருதப்பட்டது. போலீஸ் ஜாதியைச் சார்ந்தவர்கள் திருடர்களை பிடிக்கும்போது மட்டும் தங்கள் தொழில் தர்மப்படி அவர்களைத் தொடலாம். பிறகு தீட்டு கழிய அவர்கள் குளிப்பதற்கு சோப்பு டவல் எல்லாம் வழங்கப்படும். திருடர்களும் போலீஸ் ஜாதியினர தங்களைத் தொட்டு விட்டதால் அவர்களும் குளிப்பார்கள்”.


வேறு ஒன்றும் வேண்டாம், சாதாரண அரசு அலுவலகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். Class 1, class 2, class 3 class 4 ஆகிய நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தந்த கிளாசுகளுக்கான சம்பள விகிதங்கள், பொறுப்புகள் ஆகிய எல்லாமே வரையறுக்கப்படுகின்றன. கிளாஸ் மாறுவதற்கு படாத பாடும் பட வேண்டியிருக்கிறது. யூ.பி.எஸ்.சி. தேர்வுகள் எழுதி பெற்ற மதிப்பெண்களுக்கேற்ப கிளாஸ் 1 & 2 அதிகாரிகள் வேலையில் சேர்க்கப்படுகின்றனர். கிளாஸ் 3 சூப்பர்வைசர் மற்றும் கிளெரிக்கல் கேடர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டினால் பிரமோஷன் மூலம் அபூர்வமாக கிளாஸ் 2 க்கு வேண்டுமானால் வரலாம், கிளாஸ் 1-க்கு வரவே இயலாது.

ஆனால் இங்கும் ஒரு தமாஷ். பல கிளாஸ் 3 ஊழியர்களுக்கு (வங்கி குமாஸ்தாக்கள்) டிரான்ஸ்ஃபர் இருக்காது. ஆகவே சௌகரியமாக ஒரே ஊரில் இருந்து கொண்டு சைட் பிசினஸ் பார்க்க ஏதுவாக அரும்பாடுபட்டு தவறிக்கூட கிளாஸ் 2-க்கு பதவி உயர்வு வராமல் பார்த்துக் கொள்கின்றனர். அவர்களைக் கேட்டால் கிளாஸ் 3-யே உத்தமம் எனக்கூறுவார்கள். பல கிளாஸ் 4-க்களின் நிலைப்பாடோ வேறு மாதிரி. வெறுமனே தண்ணீர் கொண்டு வந்து வைப்பது, கோப்புகளை ஒரு மேஜையிலிருந்து இன்னொரு மேஜைக்கு கொண்டு செல்வது போன்ற வேலை செய்பவர்களைக் கேட்டால் ஆளைவிடுங்கள், அரசு வேலை, நல்ல சம்பளம், பெரிய பொறுப்பும் இல்லை என்ற ரேஞ்சிலேயே பதில்கள் வரும்.

இதெல்லாவற்றையும் மீறி அடுத்த மேல் வகுப்புக்கு செல்பவர்களும் உண்டு. அவர்களிலும் பலர் பின்னால் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலாவது “நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். இப்பப் பார் பொறுப்பு அதிகம், இடமாற்றம் வேற, சம்பளம் அப்படி ஒண்ணும் அதிகம் இல்லை. குடும்பம் குழந்தைகளுக்கான படிப்புக்காக ஓரிடத்தில், நாம் இன்னோரிடத்தில் இரட்டைச் செலவு, தேவையா இது தேவையா என வடிவேலு ரேஞ்சுக்கு தங்கள் முகத்துக்கு முன்னால் தம் விரலையே காட்டிக் காட்டிப் பேசுபவர்களும் உண்டு.

ரேண்டமாக எந்த சமூகமோ, மக்கள் சேர்ந்து வாழும் குழுக்களோ எல்லாவற்றிலும் தினசரி விஷயங்களை நடத்திச் செல்ல வேவ்வேறு திறமையுடையவர்கள் தேவைப்படுவார்கள். கால நேர வர்த்தமானத்தைப் பொருத்து இம்மாதிரி வேலை பங்கீடுகள் நடக்கும். அது காலத்தின் கட்டாயம். பிற்காலத்தில் தமிழ்மணத்தில் பலர் அது பற்றி திட்டுவார்கள் என்றெல்லாம் அவர்களுக்கு தெரிந்திராது, அவ்வாறே தெரிந்தாலும் போடா ஜாட்டன்களா என அந்தந்த சமூகம் தன் இயல்புக்கேற்றபடி சாதிகளை உருவாக்கிக் கொள்ளுமாய் இருந்திருக்கும்.

அரசியல் நாகரிகம்
நேற்றைய ஹிந்துவில் ஒரு போட்டோ பார்த்தேன். கர்நாடகா முதன் மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் விவாதம் ஆரம்பிக்கும் முன்னால் ஒருவருக்கொருவர் சுமுகமாகப் பேசிக் கொள்வதை காட்டியிருந்தார்கள். எனக்கு அதை பார்த்து பெருமூச்சுதான் வந்தது. நம்மூரில் இம்மாதிரி காட்சிகளை இப்போது பார்க்கவியலுமா? ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இவ்வாறு நடந்து கொள்வார்களா? இம்மாதிரியான நாகரிகச் செயல்பாடுகள் நம்மூரிலும் நடந்துதான் வந்தன. நிலைமை மோசமானதே 1987-க்கு பிறகுதான் எனக்கூற வேண்டும். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை கருணாநிதியும் அவரும் அவ்வப்போது சந்தித்து சிரித்துப் பேசுவது நிற்கவில்லை.

ஆனால் அதன்பிறகு கவர்னர் ஆட்சி, அதற்கப்பால் 1989 எலெக்‌ஷனில் கருணாநிதி ஜெயித்து ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக வந்ததும் ஆரம்பித்தது சனியன். ஜெயும் சும்மா இல்லை கருணாநிதியும் சும்மா இல்லை. கடைசியில் ஜெயின் புடவையை பிடித்து இழுத்து அவிழ்க்கும் நிலை வரை வந்தது. அதன் பிறகு ஜெ சபைக்கே வரவில்லை. 1991-ல் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டு ஜெயின் ஆட்சி ஏற்பட்டபோது கருணாநிதியும் 1996 வரை சபைக்கே வரவில்லை. இந்த கண்ணாமூச்சி நாடகம் இன்னும் தொடருகிறது. ஜெயும் சரி கருணாநிதியும் சரி எதிர்க்கட்சித் தலைவருக்கான கடமையை செய்யவே இல்லை. இந்த அழகில் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்வதெல்லாம் வேண்டாத ஆசையாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

எலிப்புழுக்கை எழுத்துக்கள்
ஆங்கிலத்தில் இதை small print என்பார்கள். பல படிவங்களில் முக்கிய ஷரத்துகள் இம்மாதிரி சிறு எழுத்துக்களில் வரும். அதை நான் எலிப்புழுக்கை எழுத்துக்கள் என்பேன். இதையே mouse print என அழைத்து ஒரு வலைப்பூ ஆங்கிலத்தில் ஒவ்வொரு திங்களன்றும் வருகிறது. கடந்த திங்களன்று வந்த அதன் பதிவில் நார்ட்டன் பிராடக்டுகளில் தரப்படும் கழிவுகளை குறித்து எழுதப்பட்டிருந்தது.

சகட்டுமேனிக்கு ரிபேட்டுகளை அறிவிப்பது, எப்படியாவது தங்கள் பொருட்களை வாங்கச் செய்வது. பிறகு அந்த வாக்குறுதிகள்? தேர்தல் வாக்குறுதிகள் ரேஞ்சுக்குத்தான் அவற்றின் மரியாதை இருக்கும். சாதாரணமாக பலர் ரிபேட்டுகளை பெற வேண்டியதற்கு செய்ய வேண்டிய காரியங்களை சோம்பேறித்தனம் காரணமாக அப்படியே திராட்டில் விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு தரவேண்டியது மிச்சம். அப்படியே அதற்கான பூர்வாங்க வேலைகளை செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பது, அல்லது பேப்பர்கள் தங்களிடம் வரவே இல்லை என சாதிப்பது என்றெல்லாம் மாய்மாலம் செய்வார்கள்.

கல்வியறிவு மிகுந்த மேல்நாடுகளிலேயே அவ்வாறு செய்யும்போது நம்ம ஊர் மோசடி பேர்வழிகள் சும்மா இருப்பார்களா என்ன? சமீபத்தில் 1961-ல் வெளிவந்த படம் பாவ மன்னிப்பு. அதில் வந்த எல்லா பாடல்களுமே ஹிட். அவற்றை தரவரிசைப்படுத்தி கூப்பன்களை அனுப்ப வேண்டியது. ஒவ்வொரு பாட்டுக்கும் கிடைக்கும் வாக்குகளை பொருத்து அவர்றின் இடவரிசை, அந்த இடவரிசை நீங்கள் அனுப்பிய லிஸ்டுக்கு ஒத்துப்போனால் உங்களுக்கு பரிசு. ஒரு தவறுமில்லாம இருந்தால் முதல் பரிசு, ஒரு தவறு மட்டும் இருந்தால் இரண்டாம் பரிசு, இரு தவறுகள் இருந்தால் மூன்றாம் பரிசு என்றெல்லாம் அமர்க்களப்படுத்தினர். ஒருவர் எத்தனை கூப்பன்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்றும் கூறப்பட்டது. என்ன, ஒவ்வொரு கூப்பனுக்கும் ஒரு இணைப்பு வைக்க வேண்டும், அது என்ன என்பது இப்போது மறந்து விட்டது, ஆனால் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கி அதன் ரசீதுதான் அது. அவை இலவசமாக கிடைக்காது, ஆகவே அதை விற்பவருக்கு அமோக சேல்.

அதெல்லாம் விடுங்கள். ரிசல்ட் அறிவிக்கும்போது ஒரு அதிரடி அறிவிப்பு. பாடல்களை வரிசைப்படுத்த வேண்டும் அல்லவா? அப்போது உதாரணத்துக்கு முதல் பாடல் (காலங்களில் அவள் வசந்தம்) இடத்தில் கடைசி பாடலை (சாய வேட்டி தலையிலே கட்டி) ஒருவர் மாற்றிப் போட்டால் அது ஒரு தவறு இல்லையாம், இரண்டு தவறுகளாம். ஒரு தவறு எப்போது வரும்? அது வரவே வராதாம், ஆகவே இரண்டாம் பரிசு கிடையவே கிடையாதாம். அட பிச்சைக்கார பசங்களா இப்படியா கொள்ளையடிப்பீர்கள் என நினைத்தேன். அப்புறம் எந்த மயித்துக்குடா இரண்டாம் பரிசு என்னவென அறிவித்தீர்கள் என கேட்டால் அது அப்படித்தானாம். இது எப்படி இருக்கு?

ஒரு அசைவ ஜோக்
ஃபிரெஞ்சில் படித்தது தமிழில் தருகிறேன்.

ஒருவன் நன்றாக ஏமாந்தால் அவனை ஓத்துவிட்டார்கள் என்பார்கள் எல்லா மொழிகளிலுமே (he has been fucked thoroughly, er ist gründlich gefickt worden). இதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

இரு 10 வயது சிறுமிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒருத்தி கையில் மரத்தில் செய்யப்பட்ட குழந்தை பொம்மை. இன்னொருத்தி கையில் பார்பி பொம்மை.

இன்னொருத்தி: உன் கையில் இருக்கும் பொம்மை எவ்வளவு செலவாயிற்று?
ஒருத்தி: 10 ரூபாய். உன்னுடையது?
இன்னொருத்தி: 100 ரூபாய்.

அப்போது ஒரு பெண்மணி தன் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு அப்பக்கம் வருகிறாள். அக்குழந்தையை காட்டி இரு சிறுமிகளும் கேட்கின்றனர், “அதற்கு எவ்வளவு செலவாயிற்று”?

சிசேரியன் செய்து கொண்டு அக்குழந்தையை பெற்றெடுத்த அப்பெண்மணி கூறுகிறாள் “10000 ரூபாய்”.

அவள் அந்தண்டை போகும் வரை பேசாமல் அச்சிறுமிகள் இருக்கின்றனர், பிறகு ஒருத்தி இன்னொருத்தியிடம் கூறுகிறாள், “அடேங்கப்பா 10,000 ரூபாயா, யாரோ அந்தப் பெண்ணை நல்லா ஓத்துட்டாங்க”.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/09/2010

ரொம்ப நாளுக்கப்புறம் மீண்டும் புதிர்கள்

புதிர்கள் போட்டு ரொம்ப நாளாச்சுன்னு சிலர் அபிப்பிராயப்படறதாலே இப்பதிவு. இரண்டு நாட்கள் டைம். அதற்குள் விடையளிக்கப்பட்டால் சரி, இல்லாவிட்டால் விடை கிடைக்காத புதிர்கள் அடுத்த புதிர்கள் செட்டிற்கு கேரி ஓவர் செய்யப்படும்.

1. தல அஜீத் கலந்துக்கிட்டார் கார் ரேசில். அவர் ஓட்டற காருல ஒரு வீல் பஞ்சர். இருந்தாலும் விடாம காரை ஓட்டி முதல் இடத்தைப் பிடிச்சு கப் வாங்கறாரு. ஆனாக்க யாருமே ஆச்சரியப்படல்ல. ஏன்?

2. புதை பொருள் ஆராய்ச்சி செய்திட்டிருக்கிறபோது பனிப் பிரதேசத்தில் இரண்டு பிணங்கள் கிடைத்தன. ஒன்று ஆண், இன்னொன்று பெண். அதைப் பாத்த உடனேயே ஆராய்ச்சியாளர் சொல்லிட்டாரு, அவங்கதாம் ஆதாம் ஏவாள்னு. எப்படி சொல்லியிருப்பார்?

3. தான் பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு 20 ஆண்டுகள் கழித்து வரும் பாதிரியார் தனக்கு தரப்பட்ட வரவேற்பில் பேச, பார்வையாளர்களில் ஒருவன் பாதிரியாரின் பக்கத்தில் அமர்ந்திருந்த நாட்டாமையை கத்தியால் குத்திக் கொல்கிறான்.

4. ராமகிருஷ்ணமாச்சாரியாரும் கோவிந்தராஜ ஐயங்காரும் இரட்டைச் சகோதரர்கள். ஆனால் ராமகிருஷ்ணமாச்சாரியார் தன் பிறந்த நாளை கொண்டாடி இரண்டு நாட்கள் கழித்துத்தான் கோவிந்தராஜ ஐயங்காரின் பிறந்த நாள் வருகிறது. இது என்ன கலாட்டா?

5. ரங்காச்சாரி புது இன்னோவா கார் வாங்கிய குஷியில் இருக்கிறான். அவன் மனைவியிடம் அதை காட்டி மகிழ்விக்க அவன் ஆவலுடன் வீட்டுக்கு விரைகிறான். ஒருவழிப்பாதையில் புகுந்து வேகமாகச் செல்கிறான். அதைப் பார்த்தாலும் கான்ஸ்டபிள் மணவாள நாயுடு அவனை கைது செய்யவில்லை. ஏன்?

6. கோபாலகிருஷ்ணுடு வீட்டில் இரண்டு தொட்டிகளில் நீர் இருக்கிறது. ஒன்றில் நீர் 20 டிகிரி வெப்பத்திலும் இன்னொன்றில் 30 டிகிரி வெப்பத்திலும் உள்ளது. அவன் எந்த தொட்டியை குளிப்பதற்காக தேர்ந்தெடுப்பான்?

7. தன்னிடம் இருக்கும் புத்தகத்தில் முடிவு முதலில் வரும், அதன் பிறகுதான் முன்னுரை வரும் என கிட்டு பெருந்தேவியிடம் கூற அவள் நம்பவில்லை. ஆனால் நான் நம்புகிறேன். ஏன்?

8. பேச்சிமுத்து தன் கையில் பச்சை குத்திக்க ஆசைப்படறான். ஊரிலே மாரிமுத்து, வீராச்சாமி ஆகிய இரண்டு பேர்தான் இந்தத் தொழிலில் இருக்காங்க. முதல்ல பேச்சிமுத்து வீராச்சாமி கிட்ட போறான். சுமாரான கடை. அவன் கையில ஒரு பாம்பு பச்சை குத்தப்பட்டிருக்கு. இதோ வரேன்னு சொல்லிட்டு மாரிமுத்து கடைக்குப் போறான் நம்ப பேச்சிமுத்து. அவன் கடை அமர்க்களமா ஏசி செஞ்சிருக்கு. அவன் கைய்லே தத்ரூபமா ஒரு கீரியோட பச்சை இருக்கு. கடைசீல பேச்சிமுத்து வீராச்சாமிகிட்டயே போறான். அவனுக்கு என்ன பைத்தியமா?

9. அப்துல் புகாரி சவுதிக்கு பயணம் போறான். அங்கே மெக்காவில் அவனுக்கு ஏதோ காரியம் ஆக வேண்டியிருக்கு. போன இடத்தில் ஒரு பப்ளிக் யூரினலுக்கு போறான். யூரின் போகும்போது பக்கத்துல யூரின் போறவனை பார்த்து நீங்க இந்தியாவில இருக்கிற அலிகார் பக்கத்துல இருக்கிற பைசலாபாத்திலேதானே பிறந்தீங்கன்னு கேக்கறான். உங்களுக்கு எப்படித் தெரியும், ஒங்களை நான் பாத்ததே இல்லையே என இன்னொருவன் ஆச்சரியப்படுகிறான். நானும்தான் உங்களை பார்த்ததில்லைன்னு புகாரி சொல்றான். ஆக, புகாரிக்கு இந்த விவரம் எப்படித் தெரிந்தது?

10. மனைவியுடன் பயங்கரமா சண்டை போட்ட ஸ்ரீஹரி ஒரு பெரிய கோபுரத்திலிருந்து தலைகீழா விழறான். அன்று மாலை டிபன் சாப்பிட வீட்டுக்கு வரான். எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/23/2009

இன்னும் அதிக புதிர்கள்

போன புதிர்கள் பதிவிலிருந்து இன்னும் விடையளிக்கப்படாத கேள்விகள் இங்கே முதல் மூன்று கேள்விகளாக வருகின்றன.

1. ஒரே தெருவில எதிரெதிரா வந்த காருங்க மோதிக்கலைதான். ஆனாலும் ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு பயணிங்கற கணக்குல மொத்தம் ரெண்டு பேர் அவுட்டு. எப்படி?

2. விஷத்தை சாப்பிடலைன்னா கூட இந்த தம்பதிங்க இறந்துட்டாங்க, ஏன்? இத்தனைக்கும் அவங்க சாப்பிட்டது ஒரே ஒரு பழம்தான்.

3. அடிக்கடி சிலேடையால் ஆங்கிலேய மன்னனை வெறுப்பேற்றியதால் விதூஷகனுக்கு தூக்கு தண்டனை தந்தான் மன்னன். பிறகு மனமிரங்கி இனிமேல் சிலேடை பண்ணாமலிலிருந்தால் மன்னிப்பு என செய்தி அனுப்ப, அப்பவும் சிலேடையை விடாததால் விதூஷகன் தூக்கிலிடப்பட்டான். என்ன நடந்தது?

4. கண்ணப்பர் அந்த 26 மாடி கட்டடத்தின் மேல் மாடி ஜன்னலிலிருந்து பார்க்கிறார். ஒரே போர் அடிக்கிறது. ஜன்னல் கதவைத் திறந்து அதன் வழியே குதிக்கிறார். செங்குத்தான கட்டிடம். கீழே மெத்தை போன்று ஒன்றையும் காணோம். அப்படியும் கீழே விழுந்தும் கண்ணப்பருக்கு அடி ஏதும் படவில்லை. அவர் பாரச்சூட்டும் உபயோகிக்கவில்லை. என்ன நடந்தது?

5. இரண்டு கார்கள் மலைப்பாதையில் வளைந்து வளைந்து வந்து அந்த பூங்காவின் வாசலில் வந்து நிற்கின்றன. ஏழு பேர் இறங்கி பார்க்கில் செல்கின்றனர். திடீரென மழை ஆறு பேரிடம் குடை எல்லாம் இருந்தன. ஏழாமவரிடம் அது ஒன்றும் இல்லை. ஆனால் அந்த ஆறுபேர் நனைந்து விடுவோமா என அஞ்ச, ஏழாமவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. அந்த ஆறு பேர் சொட்டச் சொட்ட நனைகின்றனர் ஆனால் ஏழாமவர் நனையவேயில்லை. இது எங்கனம்?

6. கோவிந்தசாமி கொலைக்குற்றச்சாட்டுக்கு இலக்காகி தூக்கு தண்டனை கிடைக்கிறது. கண்டம் செல்லிலிருந்து தப்பித்து ஓட்டம் எடுக்கிறான் அவன். கைவசம் ஒரு துப்பாக்கி வேறு. ஒரு விமானத்தில் திருட்டுத்தனமாக ஏறி, அதையும் ஹைஜாக் செய்கிறான். பிறகு துப்பாக்கி முனையில் எல்லோரையும் பயமுறுத்தி 5 லட்சம் ரூபாய் பணமும் ஒரு பாரச்சூட்டும் கேட்டு பெறுகிறான். துப்பாக்கி முனையில் பைலட்டை பயமுறுத்தி பிளேனை ஓட்டச் செய்கிறான். பிளேன் சிறிது தூரம் பறந்ததும் பாரச்சூட் துணையுடன் கீழே குதிக்கிறான். ஆனால் பணத்தை மறதியாக பிளேனிலேயே விட்டு விடுகிறான். பிறகு விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரி பணத்தை மட்டும் எடுத்து அரசு கஜானாவில் செலுத்தி விட்டு, கேஸ் அவ்வளவுதான் என்கிறார். தப்பிய குற்றவாளியை பிடிக்க வேண்டாமா?

7. ஒருவன் திநகர் பனகல் பார்க்கிலிருந்து ஜெமினி வரை நடக்கிறான். பட்டப் பகல் வேளை. தெருவெல்லாம் கும்பல். இருப்பினும் அவ்வாறு நடந்து செல்லும்போது ஒருவரையும் அவன் பார்க்கவில்லை. வேறு யாரும் அவனைப் பார்க்கவும் இல்லை. எவ்வாறு?

8. ஒரு ஐந்து கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலம். அது பத்தாயிரம் கிலோகிராமுக்கு மேல் ஒரு கிராம் கூட அதிகம் பாரம் தாங்காது. ஒரு லாரி, அதன் எடை சரியாக 10,000 கிலோகிராம், பாலத்தில் விரைந்து செல்கிறது. பாலத்தின் நடுவில் ஒரு சிறுபறவை முப்பது கிராம்தான் எடையிருக்கும். அது பறந்து வந்து லாரியின் மேல் உட்காருகிறது. அப்போதும் பாலம் உடையவில்லை? ஏன்?

9. ஒரு தந்தை தன் பெண்ணிடம் கூறுகிறார். “நீ அன்னிக்கு ரொம்ப லேட்டாக விடியற்காலை மூன்று மணிக்குத்தான் வந்தாய். உனக்காக நானும் உன் அம்மாவும் ரொம்பக் கவலையுடன் காத்து கொண்டிருந்தோம். இனிமேலும் இம்மாதிரி நடக்கவே கூடாது என விரும்புகிறேன்” கண்டிப்பாக அம்மாதிரி நடக்க சான்ஸே இல்லை அப்பா” என பெண் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறாள். அவள் எப்படி அதை அவ்வளவு நிச்சயமாகக் கூறினாள்?

10. ஒரு குறிப்பிட்ட நாட்டின் அரசு தனது ஒரு துறையில் வேலை செய்பவர்களுக்கு தினம் இலவசமாக பிஸ்கட்டுகள் தருகிறது. அவை அவர்கள் சாப்பிட அல்ல, பாதுகாப்புக்காக வழங்கப் படுகிறது. என்ன நடக்கிறது இங்கே?

அன்புடன்,

டோண்டு ராகவன்





10/20/2009

ரொம்ப நாட்களுக்கு பிறகு மீண்டும் புதிர்கள்

புதிர்கள் விஷயம் வழக்கம் போலத்தான். விடைகள் தர இயலாத கேள்விகள் அடுத்த புதிர்கள் பதிவுக்கு கேரி ஓவர் ஆகும். அம்புட்டுதேன்.

1. ராமகிருஷ்ணமாச்சாரிக்கு கோபமான கோபம். “அதெப்படி? நான் அறுபது மைல் வேகத்துலே காரை ஓட்டினேன் போல. அதனால போலீஸ் பிடிச்சுட்டாங்க. ஆனால் அதே தெருவில் எழுபது மைல் வேகத்துக்கு குறையாத அளவில் காரை ஓட்டின அந்தக் கட்டேல போனவங்க ரெண்டு பே ரை மட்டும் ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டாங்க”? அதானே, ஏன் அப்படி நடந்தது?

2. வேலை செய்யற இடத்துல துணி கிழிஞ்சதாலே வடிவேலு செத்துட்டான். இது நியாயமா?

3. ஒரே தெருவில எதிரெதிரா வந்த காருங்க மோதிக்கலைதான். ஆனாலும் ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு பயணிங்கற கணக்குல மொத்தம் ரெண்டு பேர் அவுட்டு. எப்படி?

4. விஷத்தை சாப்பிடலைன்னா கூட இந்த தம்பதிங்க இறந்துட்டாங்க, ஏன்?

5. நாற்காலியோட முருகனை அவங்க அப்பா அம்மாவே கட்டறாங்க. ஆனால் முருகன் கோபித்து கொள்ளவில்லை.

6. மஞ்சுளா சென்னையில் செத்தாள். ஆனால் கமலாவோ கடலிலேயே செத்தாள். கமலா செத்ததற்கு மட்டும் எல்லோரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மஞ்சுளா செத்ததுக்கு அவளைத் திட்டினர். என்ன வில்லத்தனம்?

7. அடிக்கடி சிலேடையால் ஆங்கிலேய மன்னனை வெறுப்பேற்றியதால் விதூஷகனுக்கு தூக்கு தண்டனை தந்தான் மன்னன். பிறகு மனமிரங்கி இனிமேல் சிலேடை பண்ணாமலிலிருந்தால் மன்னிப்பு என செய்தி அனுப்ப, அப்பவும் சிலேடையை விடாததால் விதூஷகன் தூக்கிலிடப்பட்டான். என்ன நடந்தது?

8. 1964-ல் பிறந்த ஒருவன் 28 வயதில் 1968-ல் இறக்கிறான். எப்படி சாத்தியம்?

9. மாட்டை 30 அடி நீளக் கயிற்றாலே கட்டியிருக்காங்க, ஆனாக்க அதனால் நாற்பது அடிதூரத்துல இருக்கற வைக்கோற்போரை மேய இயலுகிறது, எப்படி?

10. இந்த இரு சொற்களில் நிறையா எழுத்துக்கள் உள்ளன. அவை என்ன?


அன்புடன்,
டோண்டு ராகவன்

4/03/2009

பல மாதங்களுக்கு பிறகு சில புதிர்கள்

ரொம்ப நாளாயிற்று புதிர்கள் போட்டு. அவற்றை இப்போது பார்க்கலாமா?
1. ஒரு பெண்மணி ஆஸ்பத்திரிக்கு வருகிறாள். தலைமை டாக்டருடன் தனக்கு அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதாகக் கூறுகிறாள். டாக்டர் உள்ளே முக்கிய டெலிஃபோன் கான்ஃபரன்ஸில் இருப்பதாகவும், காத்திருக்க வேண்டும் என்றும் அவளுக்கு கூறப்படுகிறது. அவளும் காத்திருக்கிறாள். அரை மணி கழித்து அவள் உள்ளே சென்று செய்த செயலால் டாக்டரின் மானமே போயிற்று. என்ன நடக்கிறது இங்கே?

2. ஒருவன் பார்க்க நன்றாக இல்லாத ஓவியம் ஒன்றை மிக அதிக விலைக்கு வாங்குகிறான். ஏன்?

3. ஒருவன் ஒரு நீண்ட தெருவின் ஒரு கோடியில் காரை நிறுத்தியுள்ளான். அதே தெருவின் மறுகோடியில் உள்ள தபால் நிலையத்துக்கு அவன் செல்ல வேண்டும். கார்கள் அத்தெருவுக்குள் செல்ல அனுமதி இல்லை. ஆகவே நடந்துதான் செல்ல வேண்டும். தெருவின் நடுவில் உடுப்பி ஹோட்டல் ஒன்று உள்ளது. அதை கடக்காமல் அவன் போஸ்ட் ஆஃபீசுக்கு செல்கிறான். தெரு வழியாகத்தான் செல்கிறான், சுற்று வழியெல்லாம் எடுக்கவில்லை.

4. ரூம் டெம்பெரேச்சரில் இருக்கும் ஒரு திரவம் பலரை பைத்தியமாக்குகிறது. அது என்ன திரவம்? விளக்கவும்.

5.
E
K
A
M
என்றால் என்ன பொருள்?

6. Woman is equal to man; woman is superior to man. இந்த இரு ஆங்கில வாக்கியங்களின் பொருள் வருமாறு சொல்லக்கூடிய ஒரே ஒரு வாக்கியம் என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/17/2008

மெதுவாக ஒட்டிக் கொண்ட திறமை என்பதைவிட அறியாமலே ஒட்டிக் கொண்ட திறமை என்றே கூறலாம்!

நான் ஏற்கனவே போட்ட மெதுவாக ஒட்டிக் கொண்ட திறமை பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தவை போல அன்றி இப்போது நான் குறிப்பிடப்போவது என் தரப்பிலிருந்து எந்த முயற்சியும் இல்லாது என்னுடன் ஒட்டி கொண்டது என்று கூறினால் மிகையாகாது. அதைப் பற்றி கூறுவதற்கு முன்னால் ஒரு சிறு புதிர்.

ஆம்புலன்ஸ்களில் முன் கண்ணாடியில் AMBULANCE என்னும் சொல் கீழே உள்ளது போல தலகீழாகக் காண்பிக்கப்படும்.


இது ஏன் என்பதுதான் கேள்வி. பயப்படாதீர்கள். விடை உடனேயே தரப்படும், ஏனெனில் இது புதிருக்கான பதிவு அல்ல. ஒரு ஆம்புலன்ஸ் சாலையில் செல்லும்போது முன்னுரிமை அதற்குத்தான். முன்னாலிருக்கும் வண்டிகள் ரியர் வ்யூ கண்ணாடிகளில் ஆம்புலன்ஸை பார்க்க நேர்ந்தால் அதற்கு வழிவிடவேண்டும். கண்ணாடி எழுத்துக்கள் முந்தைய காரின் பின்னோக்கு கண்ணாடியில் நேராகத் தெரியும். ஆகவேதான் ஆம்புலன்ஸ் என்பது தலகீழாக எழுதப்படுகிறது.

புதிர் எளியதுதான், ஆனால் பலர் அவர்களிடம் நான் இதை கேட்டபோது சரியான விடையைத் தர இயலாமல் போனார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள் சாதாரணமாக "எனது காரை" ஓட்டும் நபர்கள்தான். நான் விடையை கூறியவுடன் "அடேடே இது தெரியாமல் போயிற்றே", என ரொம்ப ஃபீலிங்ஸ்லாம் ஆவார்கள். ஒரு தடவை என் வாடிக்கையாளரது காரில் பூந்தமல்லியிலிருந்து காஞ்சீபுரம் செல்லும் சமயம் ஓட்டுனரிடம் நான் இதை கேட்க, அவர் விடையை சரியாக கூறியது மட்டுமின்றி, நான் நங்கநல்லூர் ஹிந்து காலனியில் வசிக்கிறேனா எனக் கேள்வியும் கேட்டார். எப்படி அவர் அதை அறிந்தார் என கேட்க, அவரது மச்சானும் டாக்ஸி டிரைவர் என்றும், தன்னிடம் இதே கேள்வியை பத்து நாட்களுக்கு முன்னால் கேட்டதாகவும் கூறினார். பிறகு அதே மச்சான் அவரிடம் நங்கநல்லூர் ஹிந்து காலனியில் வசிக்கும் ஒரு பெரிசு இதை தன்னிடம் கேட்டு ரொம்பவும் படுத்தினார் என்பதையும் இவரிடம் கூறியிருக்கிறானாம். சேச்சே, அப்படியா நான் படுத்துகிறேன்?

நிற்க. நான் இப்பதிவில் ஆரம்பத்தில் கூறிய திறமைக்கு வருவோமா? இந்த கண்ணாடி எழுத்துக்களை நான் மிகச்சுலபமாக எழுதுவேன். இத் திறமையை நான் முதலில் கண்டுகொண்டது சமீபத்தில் 1956-57 கல்வியாண்டில் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போதுதான். ஒரு நாள் தமிழாசிரியர் பூவாளூர் சுந்தரராமன் (எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "தாய் மகளுக்கு கட்டிய தாலி" என்ற திரைப்படம் இவர் எழுதிய கதைதான்) தமிழ் பாடத்துக்கான நோட்ஸ் டிக்டேட் செய்ய நாங்கள் எல்லோரும் எழுதிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் விளையாட்டாக நான் கண்ணாடி எழுத்துக்களில் நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தேன். சரளமாக எழுத முடிந்தது. என்ன, பிறகு கண்ணாடியில் வைத்து பார்த்தால் நேராகத் தெரியும். ஆனால் அது எனக்கு தேவைப்படாது, ஏனெனில் அதை என்னால் அப்படியே படித்து உள்வாங்கி கொள்ள முடியும்.

இப்போது ஒரு சிறு சினோரியோ கூறுகிறேன். நான் முதல் பெஞ்சில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆசிரியர் வகுப்பறையின் எதிர்க்கோடியில் கடைசி பெஞ்சுக்கருகில் நின்று கொண்டு டிக்டேட் செய்கிறார். அவர் குரலைத் தவற வேறு சத்தமே இல்லை. டிக்டேட் செய்து கொண்டே அவர் பூனைபோல மெதுவாக நான் இருக்கும் திசை நோக்கி நடக்கிறார். நான் அஹ்டை கவனிக்கவில்லை. ஓரிரு நிமிடங்கள் கழிகின்றன. நாங்கள் எழுத்தில் மூழ்கியுள்ளோம். அப்போது சொடேரென்று என் பிடரியில் ஒரு பலத்த அடி விழுகிறது. ஆசிரியர் நோட்டு புத்தகத்தை பிடுங்கிப் பார்க்கிறார். "என்னடா கிறுக்குகிறாய்" என்னும் கேள்வி வேறு. பிறகு என் வகுப்பாசிரியர் ராமஸ்வாமி அய்யரிடம் வேறு நடந்ததைக் கூறி புகார் செய்கிறார். அவருக்கோ ஒருபக்கம் சிரிப்பு இன்னொரு பக்கம் சங்கடம், நான் அவருடைய செல்ல மாணவன் என்பதால்.

ராமசாமி அய்யர் பிறகு சுதாரித்து கொண்டு, "அதிருக்கட்டும் சுந்தரராமன், அவ்வளவு தூரத்தில் இருந்து கொண்டு இந்த ராகவன் பயல் செய்வதை எவ்வாறு கண்டு கொண்டீர்கள்" என்று கேட்கிறார். அதற்கு ஓர் அருமையான பதிலை சுந்தரராமன் தந்தார். அது என்னவாக இருக்கும்? நான் என்ன எழுதுகிறேன் என்பதை அவரால் அவ்வளவு தூரத்திலிருந்து படித்திருக்க முடியாது. பிறகு எவ்வாறு அவ்வாறு கண்டுகொண்டு அவ்வளவு தூரத்திலிருந்து பூனை மாதிரி வந்தார்?

இது புதிருக்கான பதிவு இல்லையென்று முதலில் கூறிய இந்த டோண்டு ராகவனே இக்கேள்வியை இப்போது முன்வைக்கிறான். உண்மையில் என்ன நடந்திருக்கும் என நினைக்கிறீர்கள்? சகமாணவர்கள் யாரும் போட்டு கொடுக்கவில்லை என்பதையும் கூறிட வேண்டியதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/04/2007

ரொம்ப நாட்களுக்குப் பிறகு புதிர்கள்

ரொம்ப நாளைக்கு அப்புறம் சில புதிர்கள் போடுகிறேன்.

1. நான் இப்போது வேறொரு சூழ்நிலையில் கேட்ட இன்னொரு கேள்வியை இங்கு சற்றே மாற்றி கேட்கிறேன்.
ஜகந்நாத பூபதி தன்னுடைய டூ-சீட்டர் காரை ஓட்டிக் கொண்டு பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருக்கிறார். நல்ல மழை, மாலை மறையும் நேரம். பஸ்கள் ஒன்றும் தென்படவில்லை. அவர் வேலப்பன் சாவடி அருகில் வரும்போது ஒரு பஸ் நிறுத்தத்தில் கீழ்க்கண்டவர்களைப் பார்க்கிறார்.
அ) செத்து விடுவார் போன்ற தோற்றத்தில் ஒரு கிழவி ஆஸ்பத்திரி செல்வதற்காக நின்று கொண்டிருக்கிறார்.
ஆ) ஜகந்நாத பூபதியின் உயிரை ஒரு காலத்தில் காப்பாற்றிய உயிர் நண்பன் ஒருவன் நிற்கிறான்.
இ) ஒரு அழகான 20 வயது பெண் நிற்கிறாள்.
டூ-சீட்டர் காரில் இன்னும் ஒருவருக்கு மட்டும்தான் இடம் என்ற நிலையில் ஜகந்நாத பூபதி என்ன செய்யப் போகிறார்?

2. அனாமத்து போன் காலில் வந்த தகவல்படி ஒரு கொலைகாரன் ஒரு வீட்டில் இருப்பதாக நிச்சயமாகத் தெரிகிறது. அவன் எப்படியிருப்பான் என்பது கூட தெரியாது. ஆயினும் அவன் பெயர் ராமசுப்பிரமணியம் என்பது மட்டும் தெரியும். அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது நால்வர் சீட்டாடிக் கொண்டிருந்தனர். ஒருவர் தச்சர், இன்னொருவர் லாரி டிரைவர், மூன்றாமவர் மருத்துவர், நான்காமவர் மெக்கானிக். போலீஸ்காரர் ஒரு தயக்கமுமில்லாமல் தச்சரை பிடித்து விட்டார். அவர்தான் கொலைகாரர். ஆனால் போலீஸ்காரர் அதை எப்படி எடுத்த எடுப்பிலேயே கண்டு கொண்டார்?

3. ஒரு குட்டிச் சிறுமியின் கார்டியன் அவளை அந்த வீட்டுத் தோட்டத்தில் உள்ள கார் ஷெட் கதவைத் திறக்கவே கூடாது என எச்சரித்து இருக்கிறார். ஒரு நாள் அந்த சிறுமி கார்டியன் இல்லாதபோது அந்த ஷெட் கதவை திறந்து விடுகிறாள். அவள் என்ன பார்த்திருப்பாள்?

4. அமெரிக்காவில் பல கடைகளில் விலைகள் முழு டாலர்களாக இருக்காது. விலைகள் $9.99, $99.95 என்ற ரேஞ்சில்தான் இருக்கும். நம்மூர் பாட்டா கலணிகள் விலை போல. இதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். அதாவது மனோதத்துவ முறைப்படி $9.99 பத்து டாலர்கள் என்று சொல்லும்போது வரும் உணர்வை விட குறைவான விலைத் தோற்றத்தைத் த்ரும் என்று. ஆனால் உண்மை அதுவல்ல? என்ன காரணம்? இது உண்மையான நிகழ்வு என்பதை மனதில் நிறுத்தவும்.

5. எண்பதுகளில் சென்னை பஸ்களில் சில்லறை பிரச்சினை அதிகம் இருக்கும். ஒரு நாள் தில்லியிலிருந்து விடுமுறைக்காக சென்னை வந்த டோண்டு ராகவன் பஸ்ஸில் செல்லும்போது ஒரு காரியம் செய்தான். அதனால் டோண்டு ராகவனை அந்த கண்டக்டருக்கு பிடிக்காமல் போயிற்று. அவன் என்ன செய்திருப்பான்?

6. தபால் நிலையத்தில் விற்கப்படும் தபால் தலைகள் ஏன் கருப்பு வண்ணத்தில் இல்லை?

7. உலகின் மொத்த ஜனத்தொகை கிட்டத்தட்ட 5,000,000,000 (500 கோடிகள்). அவர்களது இடது கை விரல்களை ஒன்றோடொன்று பெருக்கினால் என்ன தொகை வரும்? கட்டை விரலைக் கூட விரல்களில் சேர்த்து கொள்லலாம். சரியான விடை தெரியாவிட்டாலும் அதன் அளவை உத்தேசமாகக் கூற இயலுமா?

8. சமீபத்தில் 1981-ல் குதுப் மினாரில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். கட்டடத்தின் ஒரு வடிவமைப்புத் தவறே அதற்குக் காரணமாயிற்று. அது என்ன?

9. நீந்தத் தெரியாத ஒருவன் கப்பலிலிருந்து கடலில் விழ, அவனை உயிருடன் காப்பாற்ற இரண்டு மணி நேரம் ஆயிற்று. அவன் லைஃப் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை. பக்கத்தில் மரக்கட்டை ஏதுமில்லை. கப்பலிலும் பிடித்துக் கொள்ள ஏதுவாக ஒன்றுமில்லை. இது எப்படி சாத்தியம்?

10. கப்பலிலிருந்து கடலில் விழுந்த கன்னியை கடலில் குதித்து காப்பாற்றிய அந்த கன்னியாகுமரிக்காரர், இருவருமே கப்பல் தளத்துக்கு திரும்பக் கொண்டு வரப்பட்டதும் என்ன கூறியிருப்பார்?

11. பிரணதார்த்தி ஹரன் நல்ல பையன். தினம் அவனுக்கு ஒரே கனவு வருகிறது. அதில் அவனைச் சுற்றி அழகிய இளம் பெண்களாகவே இருந்து அவனைக் கட்டியணைத்து முத்த மழை பொழிகின்றனர். ஆனாலும் பிரணதார்த்தி ஹரன் இக்கனவால் மன வியாகூலத்தில் ஆழ்கிறான். ஏன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/24/2007

61 வயது இளைஞன் டோண்டு ராகவனைக் கேள்வி கேட்போமா?

சில நாட்களுக்கு முன்னால் நண்பர் சுபமூகா அவர்கள் இட்ட இப்பதிவை எதேச்சையாகப் பார்த்தேன். அதில் ஆரம்பத்திலேயே அவர் "டோண்டு, வீ மிஸ் யூ ;-)" என குறிப்பிட்டிருந்தது எனது ஆவலைத் தூண்டியது. என்னடா இது நான் என்னை அறியாமலேயே தமிழ் மணத்தை விட்டு நீங்கி விட்டேனா, இங்கேத்தானே பலரை படுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று யோசித்து கொண்டே மேலே பார்த்தேன். அதில் சுபமூகா அவர்கள் தனது இன்னொரு பதிவைக் குறிப்பிட்டிருந்தார். அதில்தான் அவர் கேள்வி பதில் பகுதியை திறந்திருக்கிறார் என தெரிந்தது. கேள்விகளை அப்பதிவில் பின்னூட்டமாக போடும்படி கேட்டிருந்தார். ஆனால் என்ன ஆச்சரியம்? ஒரு பின்னூட்டமும் இன்னும் பப்ளிஷ் ஆகவில்லை. என் பங்குக்கு நானும் சற்று விஸ்தாரமான கேள்வியை இட்டிருந்தேன். அதை மட்டும் அவர் தனிப்பதிவாகவே போட்டு விட்டார்.

இப்போது சிறிதே வேறு விஷயம் பற்றிப் பேசுவோமா? இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பலர் பெயர் பெற்றிருந்தனர். எனக்கு தெரிந்து அமெரிக்காவில் இது முதலில் பிரபலம் ஆயிற்று. சமீபத்தில் அறுபதுகளில் ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையில் "Ask Henry" என்னும் கேள்வி பதில் பதிவு பர்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதில் வந்த ஹென்றி அப்போது ஒரு பதின்ம வயதினர். ஆகவே தன்னால் தன் சம வயதுடைய இளைஞர் இளைஞிகளை பற்றி கேள்வி கேட்டால் உண்மையான பதிலை அளிக்க இயலும் என்று வேறு கூறியிருந்தார். பல கேள்வி பதில்களும் அக்கட்டுரையில் வெளியாகி இருந்தன. அவற்றில் ஒரு ஜோடியை மட்டும் இங்கு என் ஞாபகத்திலிருந்து தருகிறேன்.

கேள்வி: என் பத்து வயது மகன் ரொம்ப முரடன். அம்மாவாகிய நான் என்ன சொன்னாலும் கேட்காமல் எதிர்வாதம் எல்லாம் செய்வான். ஆனால் சில நாகளாக "அம்மா நீயில்லாமல் எனக்கு உலகம் ஏது" என்றெல்லாம் கவித்துவமாக பேசுகிறான். என்னுடன் ரொம்ப இழைகிறான். என்ன விஷயமாக இருக்கும்?

ஹென்றி: அந்தப் பையன் ஏதோ பெரிய விஷமம் செய்திருக்க வேண்டும். அதை நீங்கள் எப்போது வேணுமானாலும் கண்டு பிடிப்பீர்கள் என்ற பயம் அவனுக்கு இருந்திருக்க வேண்டும். ஜாக்கிரதை.

இந்தியாவுக்கு வந்தால் மதர் இந்தியாவின் ஆசிரியர் பாபுராவ் படேல் நினைவுக்கு வருகிறார். அவர் கேள்வி பதில்களிலிருந்து ஒரு சாம்பிள்.
Q: What is the difference between a lover and a non-lover?
A: A lover kisses a miss, whereas a non-lover misses a kiss.

தமிழ்நாட்டிலோ கேட்கவே வேண்டாம். தமிழ்வாணன், சாவி, மணியன், அரசு, தராசு, பராசக்தி, சோ ஆகியோர் முதலில் நினைவுக்கு வருகின்றனர். அதில் சாவி அவர்கள் கேள்வி பதிலில் ஒரு ஜோடி என் மனதை நெகிழ்ச்சியடையச் செய்தது.

எழுபதுகளில் அவர் குங்குமம் பத்திரிகையின் முதல் ஆசிரியராக இருந்தார். அப்போதெல்லாம் எல்லா குங்குமம் இதழ்களும் அட்டைப் படத்தில் குங்குமம் எப்படியாவது காட்டப்பட்டு விடும். ஆனால் ஒரு இதழில் அது வரவில்லை. அது பற்றி எழுந்த கேள்வி பதில் குறித்து பேசும் முன்னால் சிறிது பின்புலத்தை கூறவேண்டும்.

அச்சமயத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் சாவி அவர்கள் மகள் ஜயாவின் கணவர் இறந்து விட்டார். சில காலம் கழித்து சாவி அந்த மகளுக்கு மறுமணம் செய்வித்தார். அதே விமான விபத்தில் இறந்த ஒரு பெண்மணியின் கணவர்தான் சாவியின் மகளை மணந்தார். இப்போது கேள்வி பதிலுக்கு வருவோம்.

கேள்வி: இவ்வார இதழில் குங்குமம் பார்க்க முடியவில்லையே, எங்கே அது?
சாவி: அதை என் மகள் ஜயாவுக்கு வைத்து விட்டேன்.

என்னை மிகவும் நெகிழச் செய்தது சாவி அவர்களின் இந்த பதில்.

அரசு அவர்களுக்கு சமீபத்தில் 1976-ல் நான் இட்ட கேள்வி இது:
"Fiddler on the roof படம் பார்த்து விட்டீர்களா? அதில் கதாநாயகனாக வரும் எனது அபிமான இஸ்ரவேல யூத நடிகர் டோப்போலின் நடிப்பு எப்படி?

அதற்கு அரசு அவர்களின் பதில் (நினைவிலிருந்து தருகிறேன், வார்த்தைகள் சற்று முன்னே பின்னே இருக்கலாம்). "இஸ்ரவேலர்கள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் நாடின்றி அலைந்ததை இக்கதையின் மூலம் இயக்குனர் கூற முயன்றுள்ளார். டோப்போலின் நடிப்பு அபாரம்".

சோ அவர்கள் கேள்வி பதிலுக்காகவே இந்த டோண்டு ராகவன் தனிப்பதிவு போட உத்தேசித்துள்ளான். ஆகவே இங்கு ஒரு ஜோடி மட்டும் கூறுகிறேன்.

கேள்வி: தமிழ்நாட்டில் பசு அம்மா என்று கத்தும். 'தாய்'லாந்தில் என்னவென்று கத்தும்?
பதில்: 'சித்தப்பா' என்று கத்தும். தாய்லாந்து போனால் கேட்டு சொல்கிறேன்.

இப்போது சுபமூகா விஷயத்துக்கு வருவோம்.
அவரிடம் கேட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் பதிலும்:

கேள்வி: உங்கள் காரில் உங்களுடன் உங்கள் தந்தை, தாய், மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். காரில் இடம் இல்லை. போகும் வழியில் த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா அனைவரும் ஒரு சேர நின்று லிப்ட் கேட்டால் யாரை இறக்கி விட்டு விட்டு யாருக்கு லிப்ட் கொடுப்பீர்கள்?

சுபமூகாவின் பதில்: த்ரிஷாவை எனக்குப் பிடிக்கும் என்பதை விட என் மனைவி, மகளுக்குப் பிடிக்கும் என்பதால், வேண்டுமானால் என்னையே இறக்கிவிட்டுவிட்டு அவரை ஏற்றிக் கொண்டு விடுவார்கள்.
அசின் - அவருக்கு லிப்ட் கொடுக்கவில்லை என்றால் it is a sin!
ஷ்ரேயா - இவருக்குக் கொடுக்கவில்லை என்றால் பெய்யும் 'மழை'யும் நின்று விடாதா?
நமீதா - யார் தான் கொடுக்க மாட்டார்கள்?! நான் கொடுக்கவில்லை எனில், கடவுளின் சாபம் 'நம் மீதா' இல்லையா சொல்லுங்கள்.

அது சரி, என்னை என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? குடும்பத்தினரில் ஒருவரை இறக்கிவிட்டு, யாரையாவது ஏற்றிக் கொள்ளும் அளவுக்கு நான் இறங்கி விட மாட்டேன். குடும்பத்தினர் எல்லோரையும் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு, திரும்ப வந்து எல்லோரையும் ஏற்றிக் கொண்டு செல்வேனாக்கும்!

மேலும் சுபமூகா எழுதுகிறார்: //நீங்களும் சுவாரசியமான கேள்விகளை அனுப்பலாம். பின்னூட்டத்தில் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.//

ஆனால் மேலே குறிப்பிட்டபடி ஒரு பின்னூட்டமும் இன்னும் பப்ளிஷ் ஆகவில்லை. என் பங்குக்கு நானும் சற்று விஸ்தாரமான கேள்வியை இட்டிருந்தேன். அதை மட்டும் அவர் தனிப்பதிவாகவே போட்டு விட்டார்.

இப்போது சுபமூகாவுக்கு நான் இட்ட கேள்வி:
////குடும்பத்தினர் எல்லோரையும் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு, திரும்ப வந்து எல்லோரையும் ஏற்றிக் கொண்டு செல்வேனாக்கும்! //

நீங்கள் திரும்பி செல்லும்போது அங்கு நீங்கள் எதிர்பார்க்கும் யாரையுமே காணும்.

அங்கிருந்த டீக்கடைக்காரர் அந்தப் பக்கம் தன் காரில் (!) வந்த டோண்டு ராகவன் என்னும் அறுபது வயது இளைஞன் அந்த நால்வரையும் தன்னுடன் காரில் தள்ளிக் கொண்டு போய்விட்டான் என்று கெக்கெக்கே என சிரித்து கொண்டும், பொறாமை பெருமூச்சுடனும் கூறுகிறார்.

அப்போது உங்கள் மனநிலை:
1. டோண்டு ராகவனைப் பற்றி
2. த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா ஆகியோர் பற்றி என்னவாக இருக்கும்?

இந்த சிச்சுவேஷனுக்கு:
அ. கண்ணதாசன் மற்றும்
ஆ. வாலி என்ன பாட்டு எழுதுவார்கள்?


யாராவது அக்கேள்விக்கு இந்தப் பதிவில் பின்னூட்டம் ரூபத்தில் பதிலளிக்க முயற்சி செய்யுங்களேன். மேலும் ஏதாவது உங்கள் தரப்பிலிருந்து என்னைக் கேள்வி கேட்டாலும் மகிழ்ச்சியே.

இது பற்றி பேசும்போது நாட்டாமை அவர்கள் எனக்கு வைத்த கேள்விகளும் அவற்றுக்கு எனது பதில்களும் இப்பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/17/2006

புதிர்கள் புதுசு - 3

"புதிர்கள் புதிசு - 2" போட்டு பல நாளாச்சு. இன்னும் சில கேள்விகள் பாக்கி உள்ளன. அவற்றை கேரி ஓவர் செய்து, விடையளிக்கப்பட்டவைக்கு பதிலாய் சில புது புதிர்களைச் சேர்க்கிறேன். முந்தைய புதிர்கள் பதிவின் பின்னூட்டப் பெட்டியை மூடி விடுகிறேன். விடைகள் இங்கு தந்தால் போதும்.

இப்புதிர்களை உங்கள் நண்பர்களிடம் விடை தெரிந்த பிறகு கேளுங்கள். அவர்கள் ரசித்தாலோ அல்லது ஏற்கனவே இப்பதிவில் நான் குறிப்பிட்டபடி மைதானம் முழுக்க துரத்தித் துரத்தி உதைத்தாலோ என்னை ஒண்ணும் கேக்கப்படாது.

1. உலகம் முற்றும் சுற்றினாலும் இது மட்டும் ஒரு மூலையிலேயே இருக்கும்.

2. இதன் பொருள் என்ன? --> --> --> --> --> -->

3. ராமமூர்த்தி மோட்டல் ஒன்றில் தன் மனைவியுடன் தங்கியிருக்கிறார். அன்று இரவு வெளியே கார் பார்க்கிங் வரை செல்கிறார், சற்று நேரம் கழித்து கார் ஹாரனை அழுத்துகிறார், பிறகு ரூமுக்கு திரும்புகிறார்.

4. பேசினாலே இது கலைந்து விடும். அது என்ன?

5. புது காலணிகளை அணிந்து வேலைக்கு போன பிரதீபா அதனாலேயே மரணம் அடைகிறார்.

6. டோண்டு ராகவன் ஜெயராமனிடம் கூறுகிறான்: நீங்கள் இந்த அறையில் உள்ள நாற்காலியில் உட்காருங்கள், உங்களை சுத்தி சுத்தி 3 முறை ஓடுவேன். அதற்குள் நீங்களாகவே சேரை விட்டு எழுந்து விடுவீர்கள்."
ஜெயராமன்: என்னை என்ன காதில் பூ வைத்தவன் என எண்ணி விட்டீரா? ஏதாவது குண்டூசி வைத்து குத்துவீர்.
டோண்டு: சத்தியமாக இல்லை உம்மை தொடவே மாட்டேன், நேரடியாகவும் சரி அல்லது ஏதாவது குச்சி அல்லது கயிற்றை வைத்தும் சரி.
அதே போல ஜெயராமன் உட்கார்ந்து கொள்ள, டோண்டு இரு முறை சுற்றியதும் ஜெயராமன் தானே எழுந்து விடுகிறார். என்ன நடந்தது? விடை கூற அங்கு டோண்டுவோ ஜெயராமனோ இல்லை. டோண்டு தப்பித்து மான் போல ஓட, அவரைத் துரத்திக் கொண்டே ஜெய்ராமனும் வேங்கை மாதிரி ஓடி விட்டார்.

7. ஓடும் ரயிலில் கதவுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி ராவ் கையில் இருந்த வெள்ளைத் துணியை வீசி எறிந்து விட்டு, கதவைத் திறந்து வெளியே குதித்து தற்கொலை செய்து கொள்கிறான். ரயில் பெட்டியில் யாருமே இல்லை. அவன் மட்டும் ரெயில் பயணத்தில் இல்லாதிருந்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கவே மாட்டான். விளக்குக.

8. அபீதகுசலாம்பாளின் அன்னைக்கு மூன்று பெண்கள். ஒருத்தியின் பெயர் சித்திரை, இன்னொருத்தி வைகாசி. மூன்றாமவள் பெயர் என்னவாக இருக்கும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/20/2006

புதிர்கள் புதுசு - 2

"புதிர்கள் புதிசு" போட்டு அஞ்சு நாளாச்சி. இன்னும் சில கேள்விகள் பாக்கி உள்ளன. அவற்றை கேரி ஓவர் செய்து, சில புது புதிர்களைச் சேர்க்கிறேன். கேரி ஓவர் செய்யும்போது, குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக சில மாறுதல்களை செய்துள்ளேன். என்ன கூறுகிறீர்கள்? முந்தைய புதிர்கள் பதிவின் பின்னூட்டப் பெட்டியை மூடி விடுகிறேன். விடைகள் இங்கு தந்தால் போதும்.

இப்புதிர்களை உங்கள் நண்பர்களிடம் விடை தெரிந்த பிறகு கேளுங்கள். அவர்கள் ரசித்தாலோ அல்லது ஏற்கனவே இப்பதிவில் நான் குறிப்பிட்டபடி மைதானம் முழுக்க துரத்தித் துரத்தி உதைத்தாலோ என்னை ஒண்ணும் கேக்கப்படாது.

1. ஆடிட்டர் கோவிந்தாச்சாரியின் மனைவி லேடி டாக்டர் கனகவல்லி தன் கணவர் கேட்டுக் கொண்டபடி கப்பலிலிருந்து நடுக்கடலில் அவரை வீசி எறிகிறார். ஆனால் ஆடிட்டர் கோவிந்தாச்சாரியோ திரும்பப் பறந்து வந்து கப்பலைச் சேருகிறார். என்ன நடந்தது? (அதாவது, அவர்கள் பறவை அல்ல சாமியோவ்).

2. இதன் பொருள் என்ன? --> --> --> --> --> --> --> --> --> -->

3. இதன் பொருள் என்ன?

4. ராமமூர்த்தி மோட்டல் ஒன்றில் தன் மனைவியுடன் தங்கியிருக்கிறார். அன்று இரவு வெளியே கார் பார்க்கிங் வரை செல்கிறார், சற்று நேரம் கழித்து கார் ஹாரனை அழுத்துகிறார், பிறகு ரூமுக்கு திரும்புகிறார்.

5. புது காலணிகளை அணிந்து வேலைக்கு போன பிரதீபா அதனாலேயே மரணம் அடைகிறார்.

6. டோண்டு ராகவன் ஜெயராமனிடம் கூறுகிறான்: நீங்கள் இந்த அறையில் உள்ள நாற்காலியில் உட்காருங்கள், உங்களை சுத்தி சுத்தி 3 முறை ஓடுவேன். அதற்குள் நீங்களாகவே சேரை விட்டு எழுந்து விடுவீர்கள்."
ஜெயராமன்: என்னை என்ன காதில் பூ வைத்தவன் என எண்ணி விட்டீரா? ஏதாவது குண்டூசி வைத்து குத்துவீர்.
டோண்டு: சத்தியமாக இல்லை உம்மை தொடவே மாட்டேன், நேரடியாகவும் சரி அல்லது ஏதாவது குச்சி அல்லது கயிற்றை வைத்தும் சரி.
அதே போல ஜெயராமன் உட்கார்ந்து கொள்ள, டோண்டு இரு முறை சுற்றியதும் ஜெயராமன் தானே எழுந்து விடுகிறார். என்ன நடந்தது? விடை கூற அங்கு டோண்டுவோ ஜெயராமனோ இல்லை. டோண்டு தப்பித்து மான் போல ஓட அவரைத் துரத்திக் கொண்டே ஜெய்ராமனும் ஓடி விட்டார்.

7. விடையில் மைனஸ் வராமல் 21-லிருந்து 2-ஐ எத்தனை முறை கழிக்கலாம்?

8. ஓடும் ரயிலில் கதவுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி ராவ் கையில் இருந்த வெள்ளைத் துணியை வீசி எறிந்து விட்டு, கதவைத் திறந்து வெளியே குதித்து தற்கொலை செய்து கொள்கிறான். ரயில் பெட்டியில் யாருமே இல்லை. அவன் மட்டும் ரெயில் பயணத்தில் இல்லாதிருந்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கவே மாட்டான். விளக்குக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/15/2006

புதிர்கள் புதுசு

புதிர்கள் போட்டு கொஞ்ச நாளாச்சு. என்ன கூறுகிறீர்கள்? இப்புதிர்களை உங்கள் நண்பர்களிடம் பிறகு கேளுங்கள். அவர்கள் ரசித்தாலோ அல்லது துரத்தித் துரத்தி உதைத்தாலோ என்னை ஒண்ணும் கேக்கப்படாது.

1. கோவிந்தாச்சாரியின் மனைவி கனகவல்லி தன் கணவர் கேட்டுக் கொண்டபடி நடுக்கடலில் அவரை எறிகிறார். ஆனால் கோவிந்தாச்சாரி திரும்பப் பறந்து வந்து கப்பலை சேருகிறார். என்ன நடந்தது?

2. சிறுவன் கிட்டுவை அவனுக்கு மிகவும் வேண்டிய ஒருவரே நாற்காலியுடன் சேர்த்து கட்டுகிறார். ஆனாலும் கிட்டு எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை.

3. நெருப்புக்குள் ஓடியவன் பிழைத்தான். நெருப்பில்லாத இடத்தில் இருந்தவன் இறந்தான், ஆனால் நெருப்பால் அல்ல.

4. ராமமூர்த்தி மோட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார். அன்று இரவு வெளியே செல்கிறார், சற்று நேரம் கழித்து கார் ஹாரனை அழுத்துகிறார், பிறகு ரூமுக்கு திரும்புகிறார்.

5. புது காலணிகளை அணிந்து வேலைக்கு போன பிரதீபா அதனாலேயே மரணம்

6. பெட்டியில் பத்து வெள்ளை சாக்ஸுகளும் பத்து கறுப்பு சாக்ஸுக்களும் உள்ளன. கும்மிருட்டில் இருக்கிறீர்கள். விளக்கு கிடையாது. வெளியே செல்ல வேண்டும் எவ்வளவு குறைந்த பட்ச சாக்ஸுகள் எடுத்தால் ஒரு ஜோடி நிச்சயம்?

7. தஞ்சையில் பிறந்து, திருச்சியில் வளர்த்து சென்னையில் இறந்தவரை என்னவென்று அழைப்பீர்கள்?

8. பத்தொன்பதிலிருந்து ஒன்றை எடுத்தால் இருபது ஆகிறது என்று உப்பிலி கூற ஆசிரியர் ரங்காராவ் அவனை பெஞ்சு மேல் ஏற்றுகிறார். ஆனால் உப்பிலி கூறியது சரியே.

9. டோண்டு ராகவன் ஜெயராமனிடம் கூறுகிறான்: நீங்கள் இந்த அறையில் உள்ள நாற்காலியில் உட்காருங்கள், உங்களை சுற்றி 3 முறை ஓடுவேன். அதற்குள் நீங்களாகவே சேரை விட்டு எழுந்து விடுவீர்கள்."
ஜெயராமன்: என்னை என்ன காதில் பூ வைத்தவன் என எண்ணி விட்டீரா? ஏதாவது குண்டூசி வைத்து குத்துவீர்.
டோண்டு: சத்தியமாக இல்லை உம்மை தொடவே மாட்டேன், நேரடியாகவும் சரி அல்லது ஏதாவது குச்சியை வைத்தும் சரி.
அதே போல ஜெயராமன் உட்கார்ந்து கொள்ள, டோண்டு இரு முறை சுற்றியதும் தானே எழுந்து விடுகிறார். என்ன நடந்தது?

10. மைனஸ் வராமல் 21-லிருந்து 2-ஐ எத்தனை முறை கழிக்கலாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

விடை கிடைக்காத புதிர்களை அடுத்தப் பதிவுக்கு கேரி ஓவர் செய்து, சில புதிர்களையும் புதிதாகச் சேர்த்துள்ளேன். எல்லா புதிர்களுக்கும் விடைகளை அங்கேயே அளிக்கவும். இப்பதிவின் பின்னூட்டப் பெட்டியை மூடி விடுகிறேன்.

10/27/2006

ரொம்ப நாளைக்கப்புறம்

ரொம்ப நாளாயிற்று புதிர்கள் போட்டு.

1. ராஜாமணி தான் கையில் பிடித்திருந்த பந்தை மிக மெதுவாகத்தான் தள்ளி விட்டான். ஆனால் அதற்கு பிறகு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகப் போக வேண்டியிருந்தது. ஏன்?

2. ஒருவன் தனது காரின் முன்சீட்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான். கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் மூடி உள்பக்கமாக லாக் செய்யப்பட்டுள்ளன. சுட்ட துப்பாக்கியோ காரின் பின் சீட்டில் அவன் கைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. காரின் எந்தக் கண்ணாடியும் உடையவில்லை, குண்டு புகுந்த துளைகளும் எங்கும் இல்லை. என்ன நடந்தது?

3. ஒரு போலீஸ்காரன் கடற்கரையில் நின்று அழுது கொண்டிருக்கிறான். அவன் ஒரு பேப்பரில் எதையோ படித்துக் கொண்டிருக்கிறான். சிகரெட் புகைக்க ஆரம்பிக்கிறான். அதன் நெருப்பு அவன் கையைத் தீண்டினாலும் அவன் அதை கவனிக்கவில்லை. அப்படி என்னத் துயரம்?

4. ஒரு பெண்மணி மைக்ரோ அவனில் இரண்டு நிமிட செட்டிங் செய்து கொண்டு காப்பி தயாரிக்கிறாள். இரண்டு நிமிடம் கழித்து கதவைத் திறந்து பார்த்து விட்டு மறுபடி இரண்டு நொடிகளுக்குக் கதவை மூடி விட்டு பிறகு கப்பை வெளியே எடுக்கிறாள். ஏன்?

5. ஒருவன் அவன் மனைவி அவனுக்கு பரிசாக அளித்த ஆஃப்டர்ஷேவ் லோஷனைப் போட்டுக் கொண்டு வேலைக்குப் போகிறான். இறக்கிறான். என்ன நடந்தது?

6. ஒருவன் தனது மனைவியுடன் சினிமாவுக்குப் போகிறான். அந்த தியேட்டரில் ஹவுஸ்ஃபுல். படம் பார்க்கும்போது மனைவியைக் கொன்று விடுகிறான். பிறகு பதட்டப்படாமல் அவள் பிணத்தை ஒருவருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு செல்கிறான். எப்படி?

7. தில்லியில் வசிக்கும் ராமகிருஷ்ணமாச்சாரி ஒரு சாதாரண மனிதர். ஒரே நாளில் விசா, பாஸ்போர்ட் ஏதும் இல்லாமல் 8 அயல்நாடுகளுக்கு சென்று திரும்புகிறார், காலணா செலவில்லாமல். யாரும் அவரை எங்கும் கைது செய்யவில்லை. எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/20/2006

புதிர்கள் பத்து - 3

வழக்கம்போலவே சில நாட்களுக்குள் விடை கிடைக்காத வினாக்கள் கேரி ஓவர் செய்யப்பட்டு அடுத்த கேள்விகள் பட்டியலில் சேர்க்கப்படும். முதல் 5 கேள்விகள் புதிர்கள் பத்து - 2லிருந்து கேரி ஓவர் ஆனவை.

1. எம்.ஜி. ஆர். அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் சிவாஜி அவர்களுக்குத் தெரியும். என்ன அது? இதில் பல விடைகள் வந்து குழப்பம் ஆனதால் இங்கொரு க்ளூ. இருவருக்கும் ஒரே விஷயம்தான் நடந்தது.

2. இமயமலை ஏறுவதற்காக அந்த மலையடிவாரத்துக்கு சென்றவன் காலை உணவுக்கு ஆம்லெட் எடுத்துக் கொண்டதால் மரணமடைந்தான். ஏன்? ஆம்லட்டை அவன் முகாமிலிருந்தே கொண்டு வந்ததால் அவன் அடுப்பு எதையும் மூட்டவில்லை என்பது நான் கொடுக்கும் ஒரு க்ளூ.

3. பாலைவனத்தில் வழி தவறிய ஒருவன் ஒரு சப்பாத்திக் கள்ளி அருகே வருகிறான். அதில் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி குத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்துப் படித்த அவன் தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான்.

4. ஒரு பார்வையற்றவன் ஓர் ஆஸ்பத்திரி ரிசப்ஷனில் யாருக்காகவோ காத்திருக்கிறான். அவன் பக்கத்து நாற்காலியில் அவன் முன்பின் அறியாத இன்னொருவன் கையில் கூடையுடன் அமர்கிறான். அவனிடம் பேச்சுக் கொடுக்காமலேயே அவன் கூடையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து, அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்கிறான். என்ன நடக்கிறது இங்கே?

5. திவான் பகதூர் ஆவுடையப்பர் ஒரு காரியம் செய்தார். அதிலிருந்து அவர் மேல் பெருமதிப்பு வைத்திருந்த சென்னை ராஜதானி கவர்னர் அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஏன்? (1930-ல் இந்த நிகழ்ச்சி நடந்தது, ஆனால் 2006-லும் இது நடக்கக் கூடும்)

6. For a change, two puzzles in English. A plane has three wheels and flies. What has got four wheels and flies?

7. A man arrives in a town on Friday. He leaves town after two days again on Friday. How come?

8. 29 வயதே ஆன கிருஷ்ணமூர்த்தி எப்போதும் விமானத்தில் முதல் வகுப்பில்தான் பயணம் செய்வார். அவர் பேசுவதை எல்லா முக்கியப் பிரமுகர்களும் காதுகொடுத்து கேட்பார்கள். பயணம் முடிந்து அவர் தங்குவது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்தான். ஒரு வணிகத்தையும் எங்கும் முடிக்காமல் அவர் மறுபடி பயணம் செய்வார். என்ன நடக்கிறது இங்கே. ஆனாலும் யாரிடமிருந்தும் அவர் எதுவும் தானமாகப் பெறுவதில்லை. தேவையுமில்லை. அவர் ஜோஸ்யரும் இல்லை, கன்ஸல்டண்டும் இல்லை.

9. நீச்சல் உடையில் 3 பெண்கள் நிற்கின்றனர். அதில் ஒருத்திக்கு சந்தோஷம் மற்ற இருவருக்கும் துக்கம். ஆனால் சந்தோஷமானவள் அழுகிறாள், மற்ற இருவரும் புன்னகை புரிகின்றனர். என்ன நடக்கிறது இங்கே?

10. உலகில் 1000 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவருடைய இடது கையிலும் கட்டை விரலைச் சேர்த்து ஐந்து விரல்கள். எல்லாருடைய இடது கை விரல்களையும் ஒன்றாகப் பெருக்கினால் வரும் எண்ணை எழுத முடியுமா? என்ன எண் வரும்? (கேள்வி முழுமையாக்கப்பட்டது, ஏனெனில் நான் கேட்டது அரைகுறை விடையை வரவழைக்கக் கூடியது.)

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/07/2006

புதிர்கள் பத்து - 2

வழக்கம்போலவே சில நாட்களுக்குள் விடை கிடைக்காத வினாக்கள் கேரி ஓவர் செய்யப்பட்டு அடுத்த கேள்விகள் பட்டியலில் சேர்க்கப்படும்.

1. எம்.ஜி. ஆர். அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் சிவாஜி அவர்களுக்குத் தெரியும். என்ன அது? இதில் பல விடைகள் வந்து குழப்பம் ஆனதால் இங்கொரு க்ளூ. இருவருக்கும் ஒரே விஷயம்தான் நடந்தது.

2. இமயமலை ஏறுவதற்காகச் அந்த மலையடிவாரத்துக்கு சென்றவன் காலை உணவுக்கு ஆம்லெட் எடுத்துக் கொண்டதால் மரணமடைந்தான். ஏன்? ஆம்லட்டை அவன் முகாமிலிருந்தே கொண்டு வந்ததால் அவன் அடுப்பு எதையும் மூட்டவில்லை என்பது நான் கொடுக்கும் ஒரு க்ளூ.

3. பாலைவனத்தில் வழி தவறிய ஒருவன் ஒரு சப்பாத்திக் கள்ளி அருகே வருகிறான். அதில் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி குத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்துப் படித்த அவன் தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான்.

4. ஒரு பார்வையற்றவன் ஓர் ஆஸ்பத்திரி ரிசப்ஷனில் யாருக்காகவோ காத்திருக்கிறான். அவன் பக்கத்து நாற்காலியில் அவன் முன்பின் அறியாத இன்னொருவன் கையில் கூடையுடன் அமர்கிறான். அவனிடம் பேச்சுக் கொடுக்காமலேயே அவன் கூடையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து, அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்கிறான். என்ன நடக்கிறது இங்கே?

5. டோண்டு ராகவன் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லும்போது ஒரு திருப்பத்தில் எப்போதும் விபத்துத்தான். என்ன பிரச்சினை? முத்து (தமிழினி) அவர்களே தயவு செய்து நீங்கள் இதற்கு விடை அளிக்காதீர்கள்

6. திவான் பகதூர் ஆவுடையப்பர் ஒரு காரியம் செய்தார். அதிலிருந்து அவர் மேல் பெருமதிப்பு வைத்திருந்த சென்னை ராஜதானி கவர்னர் அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஏன்? (1930-ல் இந்த நிகழ்ச்சி நடந்தது, ஆனால் 2006-லும் இது நடக்கக் கூடும்)

7. தான் பலான தேதி பலான கிழமை பலான மணிக்கு இறக்கப் போவதாக அறிவித்தார் ஒருவர். கீழே கொடுக்கப்பட்டுள்ள நால்வரில் அவர் யாராக இருக்கும்?
அ: கபீர்தாஸ் ஆ: சுவாமி விவேகானந்தர் இ: ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஈ: ராமமூர்த்தி.
விளக்கமும் கூற வேண்டும்.

8. ஒரு பணக்காரரின் பிள்ளையின் 10-ஆம் பிறந்த நாள் விழா 1988-ல் நடக்கிறது ஆனால் அப்பிள்ளையின் 20-ஆம் பிறந்த நாள் விழாவோ 1978-ல் நடக்கிறது. பிள்ளை பிறந்தது என்னவோ கி.பி.யில்தான்

9. ஒரு சித்திரச் சாலையில் சித்திரங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சைத்திரிகரின் பல சித்திரங்களை அடுக்க அவருக்கு ஒரே இடம்தான் கொடுக்கப்பட்டது. 2 மணியளவில் அவர் பார்வைக்கு மாட்டிய சித்திரத்தின் எண் 300, 9 மணிக்கு பார்வைக்கு வைத்த சித்திரத்தின் எண் 90 என்றால் 5 மணிக்கு அவர் பார்வைக்கு பொருத்திய சித்திரத்தின் எண் என்னவாக இருக்கும், ஏன்?

10. டோண்டு ராகவனும் பாராவும் ஒரு குறிப்பிட்ட 5 செட் டென்னிஸ் போட்டியில் ஆடினர். இருவருமே 3 செட்களில் வெற்றி பெற்றனர். என்ன கூத்து இது? வெற்றி பெற்றது யார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/01/2006

புதிர்கள் பத்து

சில நாட்களுக்குள் விடை கிடைக்காத வினாக்கள் கேரி ஓவர் செய்யப்பட்டு அடுத்த கேள்விகள் பட்டியலில் சேர்க்கப்படும்.

1. வேலு நாயக்கர் ரொம்ப எடை போட்டுவிட்டதாக மருத்துவர் (doctor) கூறிவிட்டார். தினமும் ஜாக்கிங் போய்விட்டு தினம் தினம் எடையை செக் செய்து கொள்ளுமாறு கூறி விட்டார். அவரும் மெனக்கெட்டு ஜாகிங்கிற்கான உடைகள், காலணிகள் எல்லாம் வாங்கி பார்த்திப ஆண்டு மார்கழி மாதம் கூடாரைவல்லி நாளன்று ஒரு நல்ல பிரும்ம முகூர்த்தத்தில் ஜாகிங்கை ஆரம்பித்து விட்டார். முதல் நாள் எடை பார்த்த போது அவர் எடை 1 கிலோ குறைந்திருந்தது. இருப்பினும் அவர் மேற்கொண்டு ஜாக்கிங் செய்வதை விட்டு விட்டார். ஏன்?

2. எம்.ஜி. ஆர். அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் சிவாஜி அவர்களுக்குத் தெரியும். என்ன அது?

3. ஒரு மேஜை மேல் ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தை டிஸ்டர்ப் செய்யாமல், தொடாமல் அதன் கீழ் ஒரு பேப்பரை வைக்க முடியுமா?

4. ஒரு 4 அடி நீளமான குறுகிய குழிக்குள் குட்டிப் பையன் விளையாடிய பந்து விழுந்து விட்டது. குழியைப் பெரிதாக்கவும் வழியில்லை. துரோணாச்சாரியாரும் பக்கத்தில் இல்லை. பந்தை பின்னே எப்படித்தான் எடுப்பது?

5. இமயமலை ஏறுவதற்காகச் அந்த மலையடிவாரத்துக்கு சென்றவன் காலை உணவுக்கு ஆம்லெட் எடுத்துக் கொண்டதால் மரணமடைந்தான். ஏன்?

6. பாலைவனத்தில் வழி தவறிய ஒருவன் ஒரு சப்பாத்திக் கள்ளி அருகே வருகிறான். அதில் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி குத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்துப் படித்த அவன் தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான்.

7. ஒரு பார்வையற்றவன் ஓர் அறையில் யாருக்காகவோ காத்திருக்கிறான். அவன் பக்கத்து நாற்காலியில் அவன் முன்பின் பார்த்திராத இன்னொருவன் கையில் கூடையுடன் அமர்கிறான். அவனிடம் பேச்சுக் கொடுக்காமலேயே அவன் கூடையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து, அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்கிறான். என்ன நடக்கிறது இங்கே?

8. டோண்டு ராகவன் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லும்போது ஒரு திருப்பத்தில் எப்போதும் விபத்துத்தான். என்ன பிரச்சினை?

9. திவான் பகதூர் ஆவுடையப்பர் ஒரு காரியம் செய்தார். அதிலிருந்து அவர் மேல் பெருமதிப்பு வைத்திருந்த சென்னை ராஜதானி கவர்னர் அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஏன்? (1930-ல் இந்த நிகழ்ச்சி நடந்தது)

10. தான் பலான தேதி பலான கிழமை பலான மணிக்கு இறக்கப் போவதாக அறிவித்தார் ஒருவர். கீழே கொடுக்கப்பட்டுள்ள நால்வரில் அவர் யாராக இருக்கும்?
அ: கபீர்தாஸ் ஆ: சுவாமி விவேகானந்தர் இ: ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஈ: ராமமூர்த்தி

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/24/2006

11 கேள்விகள்

நம்பவே முடியவில்லை. இம்மாதிரி நான் கேள்விகள் கேட்டப்போதெல்லாம் விடைகள் சீறிக்கொண்டு வரும். ஒரே நாளில் கிட்டத்தட்ட அத்தனையும் விடையளிக்கப்பட்டு விடும். ஒன்று அல்லது இரண்டு விடைகள் மட்டும் கேரி ஓவர் ஆகும். ஆனால் இம்முறை நான் கேட்ட 10 கேள்விகளில் ஒன்றுக்கு மட்டும் இலவசக் கொத்தனார் அவர்கள் பதிலளித்தார். ஆகவே 9 கேள்விகள் கேரி ஓவர் செய்யப்படுகின்றன. மேலே இரண்டு கேள்விகளை சேர்க்கிறேன். ஆக 11 கேள்விகள்.

1. சிறையிலிருது தப்பித்த ஒரு கைதி ஒரு நேர்ப்பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறான். அப்போது தூரத்தில் அவன் ஓடும் திசைக்கு எதிரிலிருந்து ஒரு போலீஸ் கார் அவனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அவன் போலீஸ் காரை நோக்கியே ஓடி, நூறு அடி தூரத்தில் வண்டி இருக்கும்போது பாதைக்கு வலப்புறம் காட்டில் நுழைந்து தப்பிக்கிறான். ஏன்?

2. கோடைகால நடுவில் ஒரு பூங்காவின் நடுவில் ஒரு பிணம். உடல் எலும்பெல்லாம் முறிந்துள்ளது. இருப்பினும் பிரேதப் பரிசோதனையில் மரணம் கடும் குளிரால் ஏற்பட்டது எனத் தெரிய வருகிறது. விளக்கவும் (இது உண்மையாக நடந்த நிகழ்ச்சி).

3. கண்ணிழந்த ஒருவன் தன் பணம் எல்லாம் செலவு செய்து அறுவை சிகிச்சை முடிந்து பார்வை பெற்று வீடு திரும்ப ரயிலில் பயணம் செய்கிறான். அவன் பயணம் செல்லும் கம்பார்ட்மெண்டில் அன்றி வேறு எங்கு பயணம் செய்திருப்பினும் அவன் தற்கொலை செய்து கொண்டிருப்பான்.

4. அழகிய பெண் நடக்கிறாள். பின்னணியில் ஒரு இசை. இசை நின்றது அவள் இறந்தாள். ஏன்?

5. அவனுக்கு ஒரு நாற்காலி கிடைக்காததால் இறந்தான். ஏன் இந்தக் கொடுமை?

6. வேலு நாயக்கர் ஒரு கடையில் 100 ரூபாய் கொடுத்து பொருள் வாங்குகிறார். கடைக்கு வந்த அழகான ஃபிகரிடம் பேசிக்கொண்டே கடைக்காரன் அவருக்கு மீதி சில்லறையாக நூறு ரூபாய் கொடுக்கிறான். வேலு நாயக்கர் கூலாக அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடையை கட்டுகிறார். வேலு நாயக்கர் நல்லவரா கெட்டவரா?

7. பாலிண்ட்ரோம் பற்றிய என் பதிவைப் பார்த்திருப்பீர்கள்தானே. ஆகவே நேரடியாகக் கேள்வி. பாலிண்ட்ரோமை மொழிபெயர்க்க முடியாது என்று நான் சொன்னால் ஒத்துக் கொள்வீர்கள்தானே. ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழி சார் பாலிண்ட்ரோம் இன்னொரு மொழியில்தான் வரும். அது என்ன?

8. மீன் தின்னும் சீல்கள் மிக புத்திசாலிகள். அவற்றை வைத்து விளையாட்டெல்லாம் காட்டுவார்கள். அம்மாதிரி ஒரு கேம் ஷோவில் சீல்கள் விளையாட வந்தன. பார்வையாளர்களை பார்த்ததும் எல்லாம் நீரில் மறுபடி குதித்து ஓடி விட்டன. ஏன்?

9. கமலஹாசன் ஒரு புது நண்பருடன் ஓர் அறையில் சீட்டாடிக் கொண்டிருக்கிறார். சுற்றுமுற்றும் பார்த்த அவர் திடீரென ஆபத்தை உணருகிறார்? ஏன்?

10. தன் வீட்டிலேயே ஒரு பெண் ஆபத்தில் இருப்பதைப் பார்த்தும் டோண்டு ராகவன் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டான். ஏன் அவனுக்கு பயமா?

11. லண்டனில் உள்ள அந்த ரகசிய க்ளப்பிற்குள் போக நம்ம வடிவேலு ஆசைப்படுகிறார். ஆனால் உள்ளே செல்ல அவருக்குக் கடவுச்சொல் வேண்டும். அது கிடைக்கவில்லை. அதனாலெல்லாம் அவர் விட்டு விடுவாரா? வாயிற்காப்போன் பார்த்திபன் நிற்கும் இடத்தருகே உள்ள தூண் ஒன்றின் பின்னே அவர் ஒளிந்து கொள்கிறார், மற்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம் என்று. முதலில் வருபவரிடம் பார்த்திபன் 12 என்று கூற அவர் 6 என்று கூறுகிறார். அவரை உள்ளே விடுகிறார் பார்த்திபன். அடுத்த வருபவரிடம் பார்த்திபன் 6 என்று கூற அவர் 3 என்று கூறுகிறார். அவரும் உள்ளே சொல்கிறார். வடிவேலுவுக்கு ஒரே குஷி. தன் டையை சரி செய்து கொண்டு, மீசையை ஒதுக்கி விட்டுக் கொண்டு பெரிய மனிதத் தோரணையோடு பார்த்திபனிடம் வருகிறார். பார்த்திபன் 20 என்று கூற வடிவேலு ஸ்டைலாக 10 என்று கூறி விட்டு நன்றாக உதை வாங்குகிறார். என்ன ஆயிற்று?

இக்கேள்வியை எனக்கு அனுப்பியது என் நண்பர் ரவி பாலசுப்பிரமணியன் அவர்கள். அவருக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/20/2006

10 கேள்விகள்

கோட்ஸே நல்லவனா கெட்டவனா என்பதை பின் வரும் பத்து கேள்விகளுக்கு பதிலளித்தப் பிறகு பார்க்கலாம்.

1. சிறையிலிருது தப்பித்த ஒரு கைதி ஒரு நேர்ப்பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறான். அப்போது தூரத்தில் அவன் ஓடும் திசைக்கு எதிரிலிருந்து ஒரு போலீஸ் கார் அவனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அவன் போலீஸ் காரை நோக்கியே ஓடி, நூறு அடி தூரத்தில் வண்டி இருக்கும்போது பாதைக்கு வலப்புறம் காட்டில் நுழைந்து தப்பிக்கிறான். ஏன்?

2. கோடைகால நடுவில் ஒரு பூங்காவின் நடுவில் ஒரு பிணம். உடல் எலும்பெல்லாம் முறிந்துள்ளது. இருப்பினும் பிரேதப் பரிசோதனையில் மரணம் கடும் குளிரால் ஏற்பட்டது எனத் தெரிய வருகிறது. விளக்கவும் (இது உண்மையாக நடந்த நிகழ்ச்சி).

3. கண்ணிழந்த ஒருவன் தன் பணம் எல்லாம் செலவு செய்து அறுவை சிகிச்சை முடிந்து பார்வை பெற்று வீடு திரும்ப ரயிலில் பயணம் செய்கிறான். அவன் பயணம் செல்லும் கம்பார்ட்மெண்டில் அன்றி வேறு எங்கு பயணம் செய்திருப்பினும் அவன் தற்கொலை செய்து கொண்டிருப்பான்.

4. அழகிய பெண் நடக்கிறாள். பின்னணியில் ஒரு இசை. இசை நின்றது அவள் இறந்தாள். ஏன்?

5. அவனுக்கு ஒரு நாற்காலி கிடைக்காததால் இறந்தான். ஏன் இந்தக் கொடுமை?

6. வேலு நாயக்கர் ஒரு கடையில் 100 ரூபாய் கொடுத்து பொருள் வாங்குகிறார். கடைக்கு வந்த அழகான ஃபிகரிடம் பேசிக்கொண்டே கடைக்காரன் அவருக்கு மீதி சில்லறையாக நூறு ரூபாய் கொடுக்கிறான். வேலு நாயக்கர் கூலாக அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடையை கட்டுகிறார். வேலு நாயக்கர் நல்லவரா கெட்டவரா?

7. ஒருவன் ஒரு சதுர வீடு கட்டுகிறான். அதனுள் நான்கு அபார்ட்மெண்டுகள். அதன் நான்கு பக்கங்களிலும் ஒரு கதவு, ஒவ்வொரு அபார்ட்மெண்டுக்கும். நான்கு குடித்தனக்காரர்கள். எல்லோருக்கும் வாசல் கதவு வடக்கு நோக்கியே உள்ளது. எப்படி?

8. மீன் தின்னும் சீல்கள் மிக புத்திசாலிகள். அவற்றை வைத்து விளையாட்டெல்லாம் காட்டுவார்கள். அம்மாதிரி ஒரு கேம் ஷோவில் சீல்கள் விளையாட வந்தன. பார்வையாளர்களை பார்த்ததும் எல்லாம் நீரில் மறுபடி குதித்து ஓடி விட்டன. ஏன்?

9. கமலஹாசன் ஒரு புது நண்பருடன் ஓர் அறையில் சீட்டாடிக் கொண்டிருக்கிறார். சுற்றுமுற்றும் பார்த்த அவர் திடீரென ஆபத்தை உணருகிறார்? ஏன்?

10. தன் வீட்டிலேயே ஒரு பெண் ஆபத்தில் இருப்பதைப் பார்த்தும் டோண்டு ராகவன் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டான். ஏன் அவனுக்கு பயமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/02/2005

எனக்கு விடை தெரிஞ்சாகணும்

கேள்விகள் கேட்டு ரொம்ப நாளாகி விட்டது. என்ன, விடை அளிக்கத் தயாரா?

1. கீழே உள்ள பாராவின் விசேஷம் என்ன?
"How quickly can you find out what is unusual about this paragraph? It looks so ordinary that you would think that nothing was wrong with it at all, and in fact, nothing is. But it is unusual. Why? If you study it and think about it you may find out, but I am not going to assist you in any way. You must do it without coaching. No doubt if you work at it for long, it will dawn on you. I don't know. Now, go to work and try your luck."

2. இருட்டான அறைக்குள் நுழைகிறீர்கள். உங்களிடம் ஒரே ஒரு நெருப்புக் குச்சிதான் இருக்கிறது. அறைக்குள் மெழுகுவர்த்தி, குத்து விளக்கு, ஹரிக்கேன் விளக்கு ஆகியவை தலா ஒவ்வொன்றுதான் இருக்கின்றன. எதை நீங்கள் முதலில் கொளுத்துவீர்கள்?

3. 1971-ல் அமெரிக்க குடியரசுத் தலைவரின் பெயர் என்ன? நிக்ஸன் தவறான விடை.

4. என்னிடம் இரண்டு ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 55 ரூபாய். ஆனால் அதில் ஒன்று ஐந்து ரூபாய் நோட்டு அல்ல. விளக்க முடியுமா? என்னென்ன நோட்டுகள் என்னிடம் உள்ளன?

5. சிங்க்கத்தை சொப்பனத்தில் கண்ட என் அண்ணன் தூக்கத்திலேயே பயத்தில் இறந்தான் என்ற ஒருவனிடம் "புளுகாதே" என்றான் இன்னொருவன். ஏன்?

6. கீழே குறிப்பிடப்பட்டுள்ள குதிரையின் பெயர் என்னவாயிருக்கும்?
"There once was a race horse
That won great fame
What-do-you-think
Was the horse's name."

7. ஒரு g நான்கு t கொண்ட ஆங்கில வார்த்தை ஒன்றைக் கூற முடியுமா?

8. There was an airplane crash, every single person died, but two people survived. How is this possible?

9. இரண்டு ரத சாரதிகளுக்குள் போட்டி. அதாவது இரண்டாவதாக வரும் ரதம்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். போட்டியும் தேவையற்றத் தாமதம் இன்றி முடிக்கப்பட வேண்டும். என்ன செய்யலாம்?

10. ஆங்கிலத்தில் மிக நீள வார்த்தை எது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/07/2005

இக்கேள்விகளை முயற்சி செய்யலாமா?

என்னுடைய முந்தைய கேள்விகளில் இரண்டுக்கு பதில் வரவில்லை ஆதலால் அவற்றை இங்கு முதல் இரண்டு கேள்விகளாக கேரி ஓவர் செய்கிறேன்.

1. இக்கதை அக்கால மேற்கு ஜெர்மனியில் நடந்ததாகக் கூறுவர். அப்போது Adenauer பிரதம மந்திரி (Bundeskanzler). தேசத்தின் அணுசக்தித் துறையின் தலைமை பதவி காலியாக இருந்தது. மூவர் போட்டியிட்டனர். ஒருவர் Karl Fritz. அவர் கணித நிபுணர். இன்னொருவர் Arendt. அவர் இயல்பியல் நிபுணர். மூன்றாவர் Schmidt. அவர் ரசாயனத் துறையில் வல்லவர். மூவருமே ஒரே அளவில் மதிப்பெண்கள் பெற்றனர். Adenauer வேலையை யாருக்குக் கொடுத்திருப்பார்?

2. டொனால்ட் டக் கார்ட்டூனில் வால்ட் டிஸ்னி செய்த பொருள் குற்றம் என்ன? (குற்றத்துக்கு குறைத்துக்கொண்டு மீதிக்கு பரிசளியுங்கள் என்று அவர் கேட்கக்கூட இல்லை).

3. நான் கிழே குறிப்பிடுவது என்ன? ஒரு க்ளூ தருகிறேன். இதற்கு ஆங்கில அறிவு தேவை.
வில்லியம் சித்திரை
வில்லியம் வைகாசி
வில்லியம் ஆனி
வில்லியம் ஆடி

4. கீழே உள்ள மூன்று 10-களில் ஒரே ஒரு நேர்க் கோட்டைப் போட்டு அவற்றை 9.50 ஆக ஆக்க முடியுமா?
10 10 10

5. அப்பா பையனிடம் என்ன பிறந்த நாள் பரிசு வேண்டும் எனக் கேட்க, பையன் இவ்வாறு எழுதிக் காண்பிக்கிறான்: S U I T. அப்பா உடனே கோபத்துடன் அதெல்லாம் கட்டுப்பிடி ஆகாது என்று கூறிவிடுகிறார். பையன் கேட்டது என்ன?

6. கீழ்க்கண்ட வரிசையில் அடுத்து வரும் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் என்ன?: A E F H I K L M ? ?

7. இந்த சமன்பாடு சரி என்று கூறுவது கோயின்சாமி. 8 + 8 = 91. எப்படி சரியாகும்?

8. கோவலன், கண்ணகி மற்றும் கவுந்தி அடிகள் மதுரையை நோக்கிச் செல்லும் பாதையில் கீழ்க்கண்டவர்களை எதிர் கொள்கின்றனர். இரண்டு ஆண்கள், ஒவ்வொரு ஆணுக்கும் இரு மனைவியர், ஒவ்வொரு மனைவிக்கும் நான்கு குழந்தைகள். அவர்களுடன் சேர்த்து டோண்டு ராகவனையும் சந்திக்கின்றனர். இப்போது மதுரையை நோக்கிச் செல்வது எத்தனை பேர்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது