Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

2/04/2013

ஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((

திண்ணையில் வந்த இக்கட்டுரையைப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்:

5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை

லாமியா அல் காம்தி என்ற 5 வயது குழந்தை டிசம்பர் 25 ஆம் தேதி 2011இல் பலவிதமான காயங்களுடனும், நசுக்கப்பட்ட தலையுடனும், உடைக்கப்பட்ட நெஞ்செலும்பு, இடது கை, உடலெங்கும் காயங்களும் சூடுகளும் போன்ற பலவிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்குழந்தை அக்டோபர் 22 ஆம் தேதி 2012இல் மரணமடைந்தது.

இந்த குழந்தையின் தந்தை பாயன் அல் காமிதி என்பவர் இஸ்லாமிய பிரச்சாரகர். இவர் முஸ்லீம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்து இஸ்லாமை விளக்குபவர். இவர் கம்பிகளாலும், குச்சிகளாலும் இந்த குழந்தையை சித்ரவதை செய்ததை ஒப்புகொண்டிருக்கிறார் என்று Women to Drive என்ற சவுதி பெண்கள் குழு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த தந்தை லாமியாவின் கன்னித்தன்மையை சந்தேகித்தார் என்றும், அந்த குழந்தையை ஒரு மருத்துவர் மூலம் பரிசோதித்தார் என்றும் தெரிவித்திருக்கிறது இந்த குழு.

ராண்டா அல் கலீப் என்ற மருத்துவமனை சமூகசேவகி இந்த மருத்துவமனையில் வேலை செய்பவர். அந்த குழந்தையின் முதுகு உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த குழந்தை உடலெங்கும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்றும் கூறியிருக்கிறார்.

”அந்த குழந்தையின் மலத்துவாரம் கிழிக்கப்பட்டு பிறகு அதனை சூடு வைத்து மூட முயற்சிக்கப்பட்டிருக்கிறது” என்றும் அந்த குழந்தையின் தாயார் அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

தந்தை இதுவரை சிறையில் இருந்த காலமே அவருக்கு தகுந்த தண்டனை என்றும், அவர் அந்த குழந்தைக்காக ரத்தப்பணத்தை அந்த குழந்தையின் தாயிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதுவே இஸ்லாமிய நீதி என்றும் நீதிபதி  தீர்ப்பு அளித்திருப்பதை பெண்கள் உரிமை குழு எதிர்க்கிறது.

மனல் அல் ஷரிப் உட்பட மூன்று சவுதி பெண்கள் உரிமை போராட்டக்காரர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்திருக்கிறார்கள்.  
ஒரு தந்தை தன் குழந்தைகளை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்க முடியாது, ஒரு கணவன் தன் மனைவியை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்கமுடியாது என்ற இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இந்த போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.
நன்றி: திண்ணை

இச்செய்திக்கு சுவனப்பிரியர்கள் என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள்? இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியும் இசுலாமிய மதச்சட்டத்தின்படித்தான் செய்ததாகக் கூறிக் கொள்வார்.

பதிவர் நந்தவனத்தான் அவர்களது பின்னூட்டம் இதே விஷயம் பற்றிய இன்னொரு பதிவில் இதோ. அது எனது கருத்துமாக இருப்பதாலேயே அதையும் இங்கே இடுகிறேன்.

குழந்தையை வன்கொடுமை செய்யபவர்களை கொன்றுவிட வேண்டும் என்பதுதான் எமது கருத்து. அல்லது குறைந்த பட்சம் ஆயுட்சிறை அளிக்கவேண்டும். ஏனெனில் இக்குற்றவாளிகள் மனநோயாளிகள். இவர்களை சில வருடம் சிறையில் வைத்துவிட்டால் வெளியில் வந்து அதையே திரும்ப செய்வார்கள். இவர்களை திருத்தவே இயலாது.

ஆனால் அப்படிப்பட்ட குற்றவாளி, அதிலும் சொந்த மகளை வன்புணர்வு செய்ததோடு மட்டுமல்லாது அவளை சித்திரவதை செய்த ஒருவனை தண்டிக்காமல் விட ஆண்டவன் ஒரு சட்டம் போட்டிருக்கிறான் என்றால் திருவள்ளுவர் மாதிரி 'கெடுக உலகு இயற்றியான்' எனத் தோன்றுகிறது (அவன் இருந்தால்).

இதை பீ மாதிரியான மதத்தலைவனுக ஆதரிப்பானுக அடத்தூ! பிறரின் அப்பா மகள் உறவை ஏன் கொச்சைப்படுத்துகிறார்கள், அந்த சிந்தனை எங்கிருந்து வருகிறது என்பது இப்போதுதானே புரிகிறது. இவனுகளுக்கு பிள்ளையாக பிறந்த பெண்களை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது
.

ஒரு 17 வயதுப் பெண் குழந்தைக்கு உணவளிக்கும் தவற்றைச் செய்ததற்காக அவள் தலையை வெட்டிய சவுதி அரசு இப்போது பல்லிளித்துக் க்ண்டு நிற்கிறது.

கொலைகாரப் பாவி


கொலையுண்ட மலர் பிணமாகவும் உயிரோடு இருந்த் போதும்


அதே திண்ணைக் கட்டுரையில் வந்த இன்னொரு செய்தி:

பெண்மகவைக் கொல்லும் தந்தைகளுக்கு எதிரான குரானின் போதனைக்கும் எதிராக இந்த தீர்ப்பு செல்கிறது. ஹதிஸ் “குழந்தையின் சாவுக்கு தந்தைக்கு  மரண தண்டனை கிடையாது” என்ற ஹதீஸின் அடிப்படையில் இந்த தீர்ப்பு சொல்லப்படுகிறது. இந்த தீர்ப்பின் நீண்டகால விளைவை கணக்கில் எடுத்துகொள்ளாமல், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுஹைலியா ஜைனுலபிதின் என்ற மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர் கூறுவதன் படி, தன் மகளை சித்ரவதை செய்து கொன்ற ஒரே ஒரு தந்தைக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். இதே போல, தன் மனைவியை கொன்ற கணவன்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்கிறார்.  இதற்கு இரண்டு உதாரணங்களை தருகிறார்.  தன் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவனுக்கு ஐந்து ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது. இன்னொரு வழக்கில் தன் மனைவியை தன் காரின் பின்புறத்திக் கட்டி அவள் சாகும் வரை வண்டி யோட்டி கொன்ற கணவனுக்கு 12 வருட தண்டனை வழங்கப்பட்டது.

ஆண் கார்டியன்களுக்கு தங்கள் பாதுகாப்பில் உள்ளவர்களை கொல்வதற்கு இந்த தண்டனைகள்தான் கிடைத்தால், ஏன் இப்படிப்பட்ட தீச்செயல்கள் தொடராது? இந்த ஆண் கார்டியன்கள் தங்களது பாதுகாப்பில் உள்ள  பெண் குழந்தைகளை  சட்டப்பூர்வமாக விற்க அனுமதி பெறுகிறார்கள். குழந்தைகளை முக்கியமாக பெண் குழந்தைகளை காப்பாற்ற சட்டங்களே இல்லை.  ஷூரா கவுன்ஸிலில் குழந்தை பாதுகாப்பு சட்டம் என்று பிரேரணை செய்யப்பட்டபோது, குழந்தை என்று யாரை வரையறுப்பது என்று சிக்கல் வந்ததால், குழந்தை திருமணத்தை கூட தடை செய்யமுடியவில்லை.  தன் பெண் குழந்தைகளுக்கான கஸ்டடியை பெற முடியாததால், தந்தைகளால் அவலத்துக்கு உள்ளாக்கப்படும் பெண்குழந்தைகளின் கதைகள் ஏராளமாக இருக்கின்றன.

கணவனால் அடிக்கப்பட்ட பெண் போலீசுக்கு போனால் என்ன நடக்கும் என்று  ஒரு பெண் சமூக சேவகி விவரித்தார்.  அந்த போலீஸ் உடனே  Commission for the Promotion of Virtue and Prevention of Vice (CPVPV) அமைப்பையும், அந்த பெண்ணின் ஆண் கார்டியனையும் கூப்பிடும். பெரும்பாலான நேரங்களில் அந்த ஆண்கார்டியனே அந்த பெண்ணை அவலத்துக்கு ஆளாக்குபவர். ஆகவே அந்த பெண்ணை சுற்றி, மத குருக்களும், போலீஸும், அந்த பெண்ணை அடிப்பவரும் சுற்றி நிற்பார்கள். அந்த பெண்ணையும் அந்த ஆண்கார்டியனையும் சேர்த்து வைப்பதுதான் அங்கிருப்பவர்களின் பணி.  நான்கு மணி நேரம் அந்த பெண்ணை அந்த ஆணுக்கு அடங்கிப்போக வற்புறுத்துவார்கள். அதன் பின்னரும் அந்த பெண் பிடிவாதமாக இருந்தால்தான் பாதுகாப்பு வழங்கப்படும்.

தன் மகளையும் தன் மனைவியையும் வன்முறைக்குள்ளாக்கிய ஆணுக்கு தண்டனை வழங்கப்பட்ட வரலாறே இல்லை.  சில நேரங்களில் சிலமணிநேரம் சிறை தண்டனை, இல்லையென்றால், இனி செய்யமாட்டேன் என்று எழுதித்தர வேண்டும். அவ்வளவுதான்.

இந்த ஆண் கார்டியன் அமைப்பு பெண்களை ராணிகளாக வைத்திருக்கிறது என்று இதற்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள் கூறுகிறார்கள். 
http://saudiwoman.me/2013/01/31/rest-in-peace-lama/

அடத்தூ, ஈனப்பிறவிகளா!

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

1/28/2013

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 28.01.2013

பட்டுக்கோட்டைக்கு வழி என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப்பணம் என்பது
நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் தமிழ் இலக்கணத்தை சீர்யசாகவே சொல்லிக் கொடுப்பதுண்டு. அதில் “விடை வழு (பட்டுக்கோட்டைக்கு வழி எது என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப்பணம்) என்பது அடங்கும். அதற்கு சிறந்த உதாரணங்கள் நம்ம தமிழ் ஓவியாவின் கிட்டத்தட்ட எல்லா பதிவுகளுமே என்றால் அது மிகையாகாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவரது லேட்டஸ்ட் பதிவையே நோக்கலாம்.

அப்பதிவிலிருந்து:
”ஒரு பார்ப்பனன் தன் பெண்ஜாதியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி அந்தம்மாளை விபசாரி, விபசாரி, என்று கூறிக்கொண்டே வந்தான். ஆனால், அந்தம்மாள் தன் புருஷனின் சந்தேகத்திற்கிடமான காரியங்களுக்கெல்லாம் அவ்வப்போது பல சாக்குப் போக்குகள் சொல்லி புருஷனை அடக்கிக் கொண்டே வந்தாள்.

இப்படி இருக்கையில், அந்தப் பார்ப்பான் தன் மனைவி அந்நிய புருஷனிடம் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு நாள் கைப்பிடியாய் பிடித்து விட்டான். அப்பொழுது அந்த அம்மாள் வேறு எவ்வித சாக்குப் போக்கும், சமா தானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் பிராமணா!, உன் வாக்குப் பலித்துவிட்டது. அதற்கு நான் என்ன செய்யட்டும்? என்று பதில் சொல்லி மறுபடியும் புருஷன் மீதே குற்றத்தைக் சுமத்தினாள்.

அதாவது, புருஷனைப் பார்த்து நீ அடிக்கடி என்னை விபசாரி, என்று உன் வாயால் சொல்லிக் கொண்டே வந்தால் அல்லவா (பிராமணன் வாக்கு பொய்க்காது அது எப்படியும் பலித்துவிடும் என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கின்றபடி) நீர் பரிசுத்தமான பிராமணரானதால் உமது வாக்குப் பலித்துவிட்டது”.

இதைத்தான் self fulfilling prophecy எனச் சொல்வார்கள். புலி வருது கதையைப்போல எனவும் கூறலாம். இப்பார்ப்பனனை விடுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் தன் புது மனைவி கோவிலுக்குச் செல்லும்போது தன் நண்பர்களிடம் அவள் ஊருக்கு புதிதாக வந்த தாசி எனக்கூறி அவளை கேலி செய்ய வைத்தாராம். பெரியவர் வாக்கு பலித்திருக்குமோ?

நிற்க. இதில் விடை வழு எங்கிருந்து வருகிறது எனக் கேட்கிறீர்களா? அப்ப்திவுக்கு 16 பின்னூட்டங்கள், ஒன்றுகூட பதிவுடன் சம்பந்தப்பட்டதில்லை என்பத்தான் விசேஷம். இந்த மனிதரது கிட்டத்தட்ட எல்லா பதிவுகளிலுமே இந்த நிலைதான், அதாவது காபி பேஸ்ட் விவகாரங்கள்..

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இம்மாதிரி எல்லாம் கேனத்தனமான விடைகள் வருமா என வியந்ததுண்டு. இப்போது அவ்வியப்பு போயே போயிந்தி.

விஸ்வரூபம் விவகாரம்:
அப்படத்தைப் பார்த்த பலரும் கூறிவிட்டார்கள், அதில் இசுலாமிய அவதூறு இல்லையென. இருப்பினும் அரசு தடை விதிக்கிறது என்பது நாட்டில் ஓட்டு பொறுக்கும் அரசியல்தான் கோலோச்சுகிறது எனத் தெரிகிறது. தடையை உடனடியாக நீக்குவது அவசியம்.

மதுரா விஜயம்:.
வெள்ளீயன்று மதுரை வந்தேன், இன்று {திங்கட்கிழமை) சென்னைக்கு செல்கிறேன். நான் மதுரையில் இருந்தவரை குருட்டு  அதிர்ஷ்டம், பவர்கட் லேது.

சனியன்று தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை தரிசிக்கச் சென்ற நேரத்தில் பவர் கட் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று காலை எட்டு மணிவாக்கில் கிளம்பும்வரை அது இல்லாமலிருந்தால் அதிர்ஷ்டம்தேன்.

அப்டேட் (18.06 மணி, 28.01.2013)
 சென்னை வந்தாகி விட்டது. காலை 10.30 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பினேன். நோ பவர்கட். சந்தோஷமாக இருந்தது.

தென்றலாக வந்த புதிர்:
மிருதுவாக இப்புதிர் தோன்றியது.
ஒரு பெண்ணுக்கு இரு சகோதரர்கள். ஆனால் அச்சகோதரர்களுக்குள் ஒரு உறவும் இல்லை. சினேரியோ கூறவும்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

1/19/2013

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 19.01.2013

சிலுக்கு சிலுக்கு காலை நல்லா அமுக்கு, அமுக்கு
சிலுக்கு செயலாக இருந்தபோது நான் படித்தது, இங்கு இற்றைப்படுத்தப்படுகிறது..

பாற்கடலில் எம்பெருமான் பள்ளி கொண்டுள்ளார் பாம்பணையின் மேல். அவர் காலை பிடித்தவாறு லக்ஷ்மி. பிரும்மதேவன் சூழ தேவர்கள் வருகின்றனர்.

தேவர்கள்: பிரபோ அபயம் நாடி இங்கு நாங்கள் வந்தோம்.

மகாவிஷ்ணு: வாருங்கள் தேவர்களே, என்ன விஷயம்?

தே: பூலோகத்தில் கலி ரொம்பவும் முற்றியாகி விட்டது பிரபோ. நீங்கள் சொன்ன சம்பவாமி யுகே யுகே கான்சப்ட் படி நீங்கள் இன்னொரு அவதாரம் எடுக்கும் நேரம் வந்து விட்டது.

: (திடுக்கிட்டு): என்ன பூலோகமா, அது இன்னுமா இருக்கிறது?

தே: இப்படிச் சொன்னால் எப்படி பிரபோ, நீங்கள் அறியாததா?

: ஓக்கே, ஓக்கே டென்ஷன் வேண்டாம். எனது முகநூலில் ஸ்டேடஸ் பார்க்க மிஸ் ஆகிவிட்டது. இப்போ கொஞ்சம் பிசியாக இருக்கிறேன், பிறகு பார்க்கலாமே

தேவர்கள் இதை எதிர்த்து கோஷம் போட ஆரம்பிக்கிறார்கள்.

- மகாவிஷ்ணு அண்ணாச்சி, உங்க வாக்குறுதி என்னாச்சி?
- தூங்கியது போதும் அண்ணாச்சி, காரியம் வேணும் அண்ணாச்சி!
- சம்பவாமி யுகே, யுகே, பூலோகத்துள் நீங்கள் புகே, புகே.

இவ்வாறாக பலர் பல கோஷங்கள் போட, ஒருவர் மட்டும் “சிலுக்கு, சிலுக்கு, சிலுக்கு! வராட்டா ஆகும் பொடுகு பொடுகு, பொடுகு!” என கத்திக் கொண்டே நடனமாடுகிறார்.

பிறகு மகாவிஷ்ணு வாக்களிக்கிறார் என வைத்துக் கொளுவோம். ஆனால் அவருக்கு கடைசி கோஷம் குறித்து மண்டை காய்கிறது. அச்சமயம் அப்பக்கம் “நாராயண, நாராயண” எனக் கூறிக்கொண்டே வ்ரும் நாரதர் விஷ்ணுவுக்கு விளக்குகிறார். ”பிரபோ, இதுதான் இப்போ பூலோகத்தில் ஃபேஷன். எல்லாத்திலேயும் சிலுக்கை இழுப்பதுதான் அது”. சிலுக்கு பற்றி மேலும் கூற, மகாவிஷ்ணு சிந்தையில் ஆழ்கிறார்.

அப்போது லக்ஷ்மிதேவி கேட்கிறார், “பிரபோ என்ன யோசனை”?

மகாவிஷ்ணு கூறுகிறார், ”சிலுக்கு சிலுக்கு காலை நல்லா அமுக்கு, அமுக்கு”.

“யூ டூ”? என கோபிக்கிறார் மகாலட்சுமி.

பிறகு மகாவிஷ்ணு அவதாரம் எடுத்து, எல்லோரையும் நல்லவர்களாக்கிவிட, நாட்டில் இனிஷியேட்டிவ் எடுப்பவர்கள் இல்லாமல் போகிறார்கள், எல்லாமே பக்தி பஜனை கூடங்களாகின்றன என்றெல்லாம் கதை போகிறது..

கதையின் நீதி யாது எனக் கேட்டால் கெட்டதும் முக்கியம் என்றே வருகிறது. நீங்களே சொல்லுங்கள், வில்லன், வில்லி இல்லாமல் கதை போகுமா?

சோ அவர்கள் அதிமுக பக்கமே அதிகமாகச் சாய்கிறார் 
இப்போதிருக்கும் நிலைமையில் வேறு என்ன செய்ய முடியும்? நான்கு பிள்ளைகளில் நல்லவன் யாரென ஒரு தகப்பனைக் கேட்க அவனோ, கூரைமேல் தீப்பந்தத்துடன் நிற்பவனே நல்லவன் எனக் கூறுவதாக ஒரு கதையும் உண்டு.

நான் ஏற்கனவேயே கூறியது போல, ”மோதி மாதிரி எல்லோரும் இருப்பதில்லையே, ஆகவே அவர் மாதிரி ஒருவர் நமக்கு முதல்வராக கிடைக்காதவரை ஜெயலலிதாவா, கருணாநிதியா என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.

ஒருவரும் தேறவில்லை எனக்கூற ஐந்து நிமிட்ங்கள் கூட ஆகாது. ஆனால் அவ்வாறு இருப்பது காரியத்துக்காகாது.

இதைத்தான் சோ பல முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறி வருகிறார். அவரது செயல்பாடுகளும் இம்மாதிரித்தான்.

மேலும் ஜெவுக்கு செம்பு அடிப்பதால் அவருக்கு என்ன லாபம்? தன் சுய தேவைகளுக்காக சோ அவர்கள் யாரிடமும் இதுவரை கையேந்தியதில்லையே. அதை நாம் மறக்கக் கூடாது”.

Form 26 AS:
வரவர இந்த வருமானவரித்துறையின் லொள்ளுக்கு அளவில்லாமல் போயிற்று. சில பணவரவுகளுக்கு முதலிலேயே வரி பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்த வேண்டியது பணம் தருபவரது கடமை. இதை TDS (Tax deduction at source) என்பார்கள். நமக்கும் ஒரு ஸ்டேட்மெண்ட் தருவார்கள். அதுதான் படிவம் 16 ஏ. பல கம்பெனிகள் இங்குதான் அழும்பு செய்யும். வரியை பிடிப்பார்கள், ஆனால் கருவூலத்தில் அதை செலுத்த சரியான நேரத்தில் மாட்டார்கள். படிவம் எண் 16 ஏ தராமல் நம்மைத் தொங்கலில் விடுவார்கள். அதை வாங்குவதற்குள் நமது தாலி அறுந்து போகும்.

அதற்குத்தான் அரசு படிவம் 26 ஏஎஸ் கொண்டு வந்தது. அதை நாம் இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம். அதற்கென் பல வழிமுறைகள் உண்டு. திடீரென அதிலும் குழப்பம் வந்தது. அக்டோபர் 31, 2012-க்கு பிறகு இப்படிவத்தில் இற்றைப்படுத்தலே இல்லை. முட்டி மோதி விசாரித்ததில் அப்படிவத்தின் தளம் மாற்றப்பட்டது எனத் தெரிகிறது. (சொல்லவே இல்லை!)  புதிய தளத்தில் மறுபடி பதிய வேண்டும். நேற்று கிட்டத்தட்ட 3 மணி நேரம் மன்றாடிய பின்னர்தான் அதுவும் நடந்தது.

எனது கேள்வி இதுதான். படிப்பறிவு பெற்ற நாமே இப்பாடுபடும்போது, மற்றவர்கள் என்ன செய்வார்கள்? எல்லோருமே வரி ஆலோசகர்களை நியமித்துக் கொள்ள இயலுமா?

மானிய விலையில் வருடத்துக்கு 9 கேஸ் சிலிண்டர்கள் எனச் சலுகை உயர்வு:
நிலைமையில் தெளிவு இல்லை. ஒரே கெடுபிடிதான். இத்தனைக்கும் காரணம் என்னவென்று பார்த்தால், சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் சப்சிடிதான். தற்சமயம் வீடுகளுக்கு கொடுக்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை 398 ரூபாய்கள். ஆனால் உண்மையாகவே அதன் விலை சுமார் 890 ரூபாய்கள்.

என்ன நடக்கிறதென்னவென்றால், துண்டு விழும் ரூபாய்கள் சப்சிடி ஆகும். அவ்வாறு சப்சிடி பெறுபவர்கள் எல்லோருமே தினக்கூலிகள் அல்ல. இது முற்றிலுமே ஓட்டு பொறுக்கும் பிரச்சினை.

இண்டேனுக்கு அரசு அளிக்கும் த்கையும் திருப்திகரமாக இல்லை.ஆகவே இந்த சிலிண்டர்களை நிரப்புவதில் இண்டேனுக்கும் அக்கறை இல்லாமலிருப்பது புரிந்து கொள்ள்ளக் கூடியதே. சுதந்திரச் சந்தையில் உள்ளே புகுந்து அரசு குளறுபடி செய்வதற்கான உதாரணமாகவே இதை எடுத்து கொள்ளலாம்.

இதற்கு என்ன வழி? எனக்குத் தோன்றுவதை கூறுகிறேன். பேசாமல் இந்த சப்சிடியை மொத்தமாக ஒழியுங்கள், அல்லது கணிசமாகக் குறையுங்கள். இண்டேன் கம்பெனிக்கு அரசு தரும் விலையும் யதார்த்தத்தை ஒட்டியிருக்க வேண்டும். பிறகு பாருங்கள், இந்த கோட்டா முறையெல்லாம் ஒழிந்து மக்களும் தேவையின்றி பதுக்க மாட்டார்கள்.

1949-ல் ஜெர்மன் ஃபெடெரல் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு, Reichmark விலக்கப்பட்டு Deutschmark வந்து, ரேஷன் முறையும் ஒழிக்கப்பட்டது. அதுவரை காலியாக இருந்த கடைகளில் எங்கிருந்தோ பொருட்கள் வந்து ஷெல்ஃப்களை அலங்கரித்தன. அதுவரை அரசு சப்சிடி சார்ந்த குறைந்த விலையால் பொருட்களை விற்பவருக்கு ஊக்கம் இல்லாமல் இருந்ததே முந்தைய நிலைக்கு காரணம் என்பது பின்னால் புலப்பட்டது.

இவ்விஷயத்தில் இந்திய உதாரணங்களுக்கும் பஞ்சமில்லை  மோதி பதவிக்கு வந்த சமயத்தில் குஜராத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தமிழக அரசு வழ்ங்கும் மின்சாரம் போல எப்போதாவதுதான் வந்தது.

மோதி ஒரே ஒரு ப்ரபோசலை வைத்தார், பணம் கட்டுங்கள் 24 மணிநேர மின்சாரம் என்று. அவர்களும் ஒத்து கொண்டனர். குஜராத் இப்போது விவசாயத் துறையில் அமோகமாக முன்னேறியுள்ளது என்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

அதே மாதிரி சமீபத்தில் 1952-ல் சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற ராஜாஜி அவர்கள் செய்த முதல் காரியம் ரேஷன் முறையை விலக்கிக் கொண்டதே. அதனால் பல பொருள் விரயங்கள் தடுக்கப்பட்டு, நாடு முழுவதிலும் அது அமுலுக்கு வந்தது. 1964 வரை ரேஷன் முறை இல்லாமல்தான் இருந்தது. அவ்வாண்டு ரேஷன் மீண்டும் வந்ததிலிருந்து இன்றுவரை நிலைமை விரயங்களுடன் அப்படியே உள்ளது. நமக்கெல்லாம் இன்னொரு ராஜாஜி அல்லது மோதி தேவை.

ஆக, சப்சிடி சிலிண்டர்களது எண்ணிக்கை வருடத்துக்கு 6 என கட்டுப்படுத்தியது நல்ல, சரியான ஸ்டெப்தான். ஆனால் வழமையான ஓட்டுப் பொறுக்கும் அரசியலால் இப்போது அது ஆண்டுக்கு 9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழப்பங்கள் தொடர்கின்றன..  இப்போதைய நிலவரப்படி சப்சிடி சிலிண்டர்களை வினியோகிப்பது 6/9 குழப்பத்தால் நிறுத்தப்பட்டுள்ளது என அறிகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்



.


-

1/03/2013

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 03.01.2013

சோ அவர்களது கேள்வி பதில்களில் சில 

சில கேள்வி பதில்களுடன் எனது சேர்க்கையும் சில சமயம் இருக்கும். கண்டுக்காதீங்க.

1. கே: குஜராத் தேர்தல் வெற்றி நரேந்திர மோதி என்ற தனிமனிதருடையதா? இல்லை பாரதீய ஜனதாக் கட்சியுடையதா?
ப: ஒரு தனி மனிதர் மாநில அளவில் இப்படிப்பட்ட வெற்றியை பெற்று விட முடியது.அதே போல ஒரு கட்சியும் கூட, மக்களிடையே நம்பிக்கையை பெற்ற ஒரு மனிதனின் தலைமயில் இயங்கும்போதுதான் இப்படிப்பட்ட வெற்றிகளைப் பெற முடிகிறது. இப்படி வேண்டுமானால் சொல்லலாம்: பாரதிய ஜனதா ஒரு மோட்டார் கார். அதை ஓட்டிச் சென்றவர் நரேந்திர மோதி. இரண்டுமே அபாரமாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.  

2. கே. குஜராத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற நரேந்திர மோதி தனது அரசியல் எதிரியான கேசுபாய் படேலை சந்தித்து ஆசி பெற்றுள்ள அரசியல் நாகரிகம் பற்றி?
ப: இதில் அரசியல் நகரிகமும் இருக்கிறது, அரசியல் விவேகமும் இருக்கிறது. கேசுபாய் படேலை நம்பி ஓட்டளித்த படேல் சமூகத்தினர் மீண்டும் அத்தவற்றைச் செய்யாமலிருக்க இந்தப் பெருந்தன்மையான நடவடிக்கை உதவும் அல்லவா?
டோண்டு ராகவன் சேர்ப்பது: பிறகு பத்திரிகையாளர்களுடன் பேசிய கேசுபாய் படேல் தான் அல்பத்திலும் அல்பம் என்பதை நிரூபித்துள்ளார். அதுவும் மோதிக்குத்தான் பலம் சேர்க்கிறது.

3. கே: குஜராத் ஒன்றும் இந்தியா அல்ல என நரேந்திர மோதியின் வெற்றி குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளதே?
ப்: காங்கிரஸ்காரர்களுக்கு மோதி மேல் வரும் கோபத்தில் குஜராத் இந்தியாவிலேயே இல்லை என்று கூட சொல்லத் தயாராகி விடுவார்கள் போலிருக்கிறதே.
டோண்டு ராகவன் சேர்ப்பது: அப்படியாவது ஆறுதல் பெறட்டும் காங்கிரஸ்.

4. கே: எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது இப்போதைக்கு நடவடிக்கை இல்லை என பாரத் ஈய ஜனதா முடிவெடுத்திருப்பது பயத்தினால்தானே?
ப: இப்போதைக்கு சுயமரியாதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலாட்சி கவிழ்ந்துவிடும். ஆகையால் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஆட்சி தொடர வழி செய்வ்அது என்று பாஜக த்லை தீர்மானித்திருப்பது புரிகிறது
டோண்டு ராகவன் சேர்ப்பது: இது நிச்சயம் பாஜகவுக்கு இழிவுதான்.

ஆனந்த விகடன் செய்யும் கூத்து (இதழ் 09.01.13)
லேட்டஸ்ட் விகடன் முதல் கட்டுர்ஃபை ஆணாதிக்கத்தை எதிர்த்து முழக்கமிடுகிறது. அடுத்த கட்டுரையோ நயனதாரா யாருக்கு என சீப்பாக இரு சகோதர்களுக்கிடையே நடக்கும் போட்டியை பற்றி எழுதுகிறது. இக்கட்டுரையின் டைட்டில் ஆணாதிக்கத்துக்கு சரியான சான்று.

வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தென்றல் மாத இதழ்
அமெரிக்காவிலிருந்து திரும்பிய எனது மைத்துனி எனக்கு இதன் இரண்டு மாத இதழ்களைத் தந்தார். தூள் கிளப்புகிறது. அக்டோபர் 2012 இதழில் நம்ம பழமைபேசியின் கவிதை அமர்க்களம். அதை இங்கே பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்








12/23/2012

குஜராத்துக்கும் பிற மாநிலங்களுக்கிடையில் உள்ள முக்கிய வேறுபாடுகள்

குஜராத்தில்கூட மோதிக்கு முன்னால் அவர் வந்த பிற்கு என பார்க்க வேண்டியுள்ளது.

முதலில் குஜராத்தில் மோதிக்கு முன்னால் எப்படி இருந்தது, அதை அவர் எவ்வாறு சரி செய்தார் என்பதை பார்ப்போமா.

1. மோதி பொறுப்பை ஏற்ற சமயம்கல்வி விஷயத்தில் அதுவும் பெண்குழந்தைகள் கல்வி விஷயத்தில் குஜராத் 20-ஆம் இடத்தில்தான் இருந்தது. அதுவும் பாதியில் படிப்பை விடுபவர்கள் 49 விழுக்காட்டில் இருந்தனர்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மோதி முடிவு செய்தார். எல்லா பின் தங்கிய பகுதிகளுக்கும் விசிட் செய்தார். முக்கியமாக பெண்கள் கல்வியறிவு பெறுவதற்கு முன்னுரிமை அளித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பாதியில் படிப்பை விடுபவர்களது விழுக்காடு  2008-ல் 49-லிருந்து 4-க்கு வந்துள்ளது. (2011-ல் படிப்பாளிகள் 80%, அரசின் விடாமுயற்சியால்).

மேலும், பிரசவத்தில் பெண் மரணம் என்பது குஜராத்திலும் மற்ற இடங்களைப் போலவே துவக்கத்தில் இருந்திருக்கிறது.
மோதி அவர்கள் ஒரு காரியம் செய்தார். ஒவ்வொரு வெற்றிகரமான பிரசவத்துக்கு பிறகும் வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு ரூபாய் இரண்டாயிரம் ஊக்கத் தொகை அறிவித்தார். பிரசவத்துக்கு வரும் ஏழை பெண்களுக்கும் நல்ல மருத்துவ மற்றும் பண உதவி அளிக்கப்பட்டது. (ஒரு நாளைக்கு ரூபாய் 200, கூட வரும் அட்டெண்டண்டுக்கும் அதே தொகை). இதன் மூலம் 1,58,000 கர்ப்பிணிகள் பயன் அடைந்தனர். இதெல்லாம் இல்லாத நிலையில் பிரசவ மரணம் 6000 என்ற நிலையிலிருந்து ஒரே ஒரு மரணம் என்ற அளவில் பிரமிக்கத்தக்க முறையில் இறங்கியுள்ளது என அவர் துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் கூறினார்.அதே கூட்டத்தில் அவர் கூறிய பிற விஷயங்கள் இன்வருமாறு:.


2. தமிழகத்தில் மின்சாரம் வந்தால் அது செய்தி. குஜராத்திலும் முதலில் அதே நிலைமைதான் மோடி அவர்கள் பதவிக்கு வந்த போது இருந்தது.
நிலைமையில் முன்னேற்றம் காண்பது கடினம் என்பது அதிகாரிகளின் கூற்று. மோடி அவர்கள் சளைக்காது நடவடிக்கை எடுத்தார். பகுதி பகுதியாக எடுத்து காரியமாற்றினார். முதல் 1000 நாட்களில் 45 விழுக்காடு கிராமங்களுக்கு முழு மின்சாரம் வழங்கப்பட்டது. இப்போது அதே திட்டம் குஜராத் முழுக்க விஸ்தரிக்கப்பட்டு 100 விழுக்காடு கிராமங்களுக்கு 24 மணி நேரமும் 3-phase மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக மோடி அவர்கள் முதல் 1000 நாட்களில் செய்த விஷயங்கள் பின்வருமாறு. 23 லட்சம் மின்கம்பங்கள், 56,000 ட்ரான்ஸ்ஃபார்மர்கள், 75000 எலெக்ட்ரிக் மீட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டன. ஒரு அரசு மனது வைத்தால் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு இதை விட நல்ல உதாரணம் வேறு ஏது?

 ”500 நாட்களில் 700 கிலோமீட்டர் நீளத்துக்கு நர்மதா திட்டத்தில் பைப்புகள் இடப்பட்டன” என்று சோ கூறியதை குறிப்பிட்டு அதை அப்டேட் செய்தார். தற்போது அதே புள்ளிவிவரம் 700 நாட்களில் 1400 கிலோமீட்டர் பைப்லைன்கள் போடப்பட்டன என்று கூறினார். அந்த பைப்பில் கருணாநிதி அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருடன் காரில் செல்ல இயலும் என்று பைப்லைனின் விட்டத்தை பற்றி கூறுவதற்காக அவர் தமாஷாக மேற்கோள் காட்டினார். (ஜெயும் சசிகலா கூட அவ்வாறு செய்யலாம்). ஒரே சிரிப்பு அரங்கில். தனக்கு எதிராக ஒரு ஊழல் புகாரும் இல்லை என்பது ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது என்றார். 

3. அரசு மனம் வைத்தால் வருவாயையும் பெருக்க இயலும் என்கிறார் மோதி. ஆனால் அது லஞ்சத்தை ஒழித்தால்தான் முடியும். உதாரணத்துக்கு மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது ஒரு நிதியாண்டில் மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம். சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

4. மேலும் சில குஜராத் புள்ளி விவரங்கள். மோடி முதலில் ஆட்சிக்கு வந்தபோது நிதி பற்றாக்குறை 6700 கோடி ரூபாய், தற்சமயம் (2008-ல்) 1000 கோடி ரூபாய் உபரியாக கையில் உள்ளது. ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் வரி உயர்வு ஏதும் இன்றி 400கோடி ரூபாய் உபரி பட்ஜெட்டாக உயர்ந்துள்ளது. முக்கிய காரணம் லஞ்சம் எல்லா தளங்களிலும் ஒழிக்கப்பட்டு வரி வசூல் சரியாக நடந்ததே.

5. 2007 தேர்த்ல் சமயத்தில் காங்கிரஸ் கலர் டிவி தருவதாக வாக்களித்தபோது அவரிடம் பத்திரிகைக்காரர்கள் இது பற்றி கேட்டுள்ளனர். கலர் டிவி தர இயலாது ஆனால் தான் பதவிக்கு வந்தால் வரி கொடுக்காதவர்களை தேடி கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுக்கப் போவதாக தயக்கமின்றி கூறியுள்ளார். மக்கள் தங்கள் நலனை அறிந்தவர்கள். ஆகவே வரி வசூல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக சொன்ன தனக்கு ஓட்டு போட்டு ஜயிக்க வைத்தனர் என்பதில் மோடிக்கு ஐயமேயில்லை. (இப்போது 2012-ல் மட்டும் என்ன வாழுகிறதாம்).

சரி குஜராத்தை பார்த்தாயிற்று. மர்ற்ற மாநிலங்களைப் பார்ப்போமா. தமிழகத்தையே எடுத்து கொள்வோம்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழலை ஊக்குவிப்பவையே. ஜெயலலிதா தேவலை என நான் முன்னால் கூறியதற்கு காரணமே கருணாநிதி worse என்பதால்தான். மற்றப்படி இருவரையும் மோதியுடன் ஒப்பிட்டால் நமக்கு டிப்ரஷன்தான் வரும்.

ஜெயும் சரி கேயும் சரி தாம் பதவியில் இருக்கும்போது மற்றவர் அடுத்த தேர்தலில் வெற்றி எற ஏதுவாகவே உழைக்கின்றனர். ஜெ பதவியில் இருப்பதால் முதலில் அவரது சொதப்பகளை பார்ப்போம்.

சமச்சீர் கல்வி, அரசு தலைமைச் செயலகம், அண்ணா நூல்நிலையம், சாலைப் பணியாளர் ஆகிய விஷயங்களில் அவர் தேவையின்றி அவசரமாக செயலாற்றி நேர விரயம் செய்துள்ளார்.  மின்வெட்டு விஷயமோ இன்னும் சரியாகவில்லை. முயற்சி செய்வதக அவர் கூறினாலும் அது பலனடையும்போதுதான் தெரியும்.

கே அவர்களோ சுத்தம். மானாட மயிலாட நிகழ்ச்சிக, தனக்கு அளித்த பாராட்டு நிகழ்ச்சிகள் ஆகியவர்றுக்கு நேரம் ஒதுக்கியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவரது குடும்பத்தினரோ ஐயையோ என்றுதான் கூற வேண்டும்.

இருப்பினும் எரியும்  கொள்ளியில் எது நல்ல கொள்ளி என பார்த்து ஜெக்கு ஆதரவு தர வேண்டியிருக்கிறது.

தமிழகம் போலவே  மற்ற மானிலங்களும் (குஜராத் தவிர).  குஜராத்திலோ காங்கிரஸால் ஒறும் செய்ய இயலவில்லை. வெறுமனே பொரும வேண்டியதுதான்.

சரி, மோதி பிரதமராகலாமா? என்னைக் கேட்டால் அவர் இப்போதைக்கு குஜராத்திலேயே இருக்க வேண்டும் என்பேன். இன்னும் ஓர் ஐந்தாண்டு போகட்டும். அப்போதாவது குஜராத்தின் உதாரணம் மற்ற மானிலங்களுக்கு இன்னும் நன்றாக உரைக்கட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்சேர்க்கை: நண்பர் அருண்பிரபு அவர்களது பதிவு அருமையாக உள்ளது. கண்டிப்பாக படிக்கவும். 

12/20/2012

மனம் நிறையச்செய்த மோதியின் வெற்றி-2

இந்தத் தலைப்பில் போட்ட முந்தையப் பதிவு 5-ஆண்டுகளூக்கு முந்தையது. அப்போதே சொன்னது இப்போதும் அப்ப்ளை ஆகிறது என்றாலும் இந்த வெற்றி இன்னும் பெருமை வாய்ந்ததே.

மோதிக்கு எதிராக நின்ற காங்கிரஸ் வேட்பாளர் டிபாசிட் இழந்தாரா எனத் தெரியவில்லை. ஆமாம் என்றால் இரட்டிப்பு சந்தோஷமே.

இம்முறை மோதிக்கு உள்ளிருந்து எதிரிகள் அதிகம். அதில் கேஷுபாய் ,முக்கிய்மானவர். அவர் வெற்றி பெற்றாலும் அவரது கட்சிக்கு அமோகத் தோல்வி. அக்கட்சிக்காரர்கள் எத்தனை பேருக்கு டிபாசிட் போயிற்று என்பது நாளைக்குத்தான் தெரியும். அப்போது பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..

இப்போதைக்கு மோதியின் வெற்றியை பதிவு செய்வோமாக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/25/2012

விடுதலைப் புலிகளை யூதர்களுடன் ஒப்பிடலாமா?

எனது முந்தையப் பதிவில் விடுதலைப் புலிகளையும் யூதர்களையும் ஒப்பிட்டு வந்த பின்னூட்டமும் அதற்கு எனது எதிர்வினையும் பின்வருமாறு:

//புலிகள் விஷயத்தில் உங்களது நேர்மையைப் பாராட்ட வேண்டும். என்னதான் புலிகள் இஸ்ரேல் ஆதரவு, முஸ்லீம் விரோதப்போக்கு, மோடியைப் போல‌ பொது மக்களைக் கொல்லுதல் என இருந்தாலும், புலி ஆதரவாளராக நீங்கள் இல்லை.//

டோண்டு கூறியது:
//புலிகளை இஸ்ரவேலர்களுடன் ஒப்பிடுவதா? வாயைக் கழுவுங்கள். அவர்களை பாலஸ்தீனியருடன் வேண்டுமானால் கம்பேர் செய்வேன், முட்டாள்தனமாக தமது ஆதரவாளர்களிடம் ஏடாகூடமாக நடந்து கொண்டதில்.

1982-ல் பாலஸ்தீனியரை ஏற்றுக் கொள்ள எந்த அரபு தேசமுமே தயாராக இல்லை.

அதே போல தனக்கு ஏதுவாக செயல்படகூடிய தமிழகத்தை, ராஜீவை கொலை செய்தது மூல்ம் விரோதித்துக் கொண்டனர் புலிகள்.//

இருப்பினும் இந்த ஒப்பிடுதல் சரியில்லை என்பதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன.

ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக பலவித ஆட்சிகளால் பீடிக்கப்பட்டு, ஆண்டுதோறும் தமக்குள் கூறிக்கொளும் முக்கிய முகமனாக “அடுத்த ஆண்டு ஜெரூசலத்தில் பார்ப்போம்” வைத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுடன் புலிகளை ஒப்பிட நினைப்பதே தகாது.

நான் தில்லியில் இருந்த சமயம் மாரெக் ஹால்டர் என்னும் யூத எழுத்தாளர் எழுதிய  ”அப்ரஹாமின் புத்தகம்” என்னும் புத்தகம் படிக்கக் கிடைத்தது. அருமையான ஃபிரெஞ்சில் அது அமைந்தது பற்றி இங்கே மேலே வேண்டாம்.

அப்புத்தகத்தின் கதை கி.பி. 70 வாக்கில் துவங்கி 1936-ல் முடிவடைகிறது, அதுவும் ஒரே குடும்பத்தின் கதைதான் அது. அதில் யூதர்கள் அனுபவித்த எல்லா சோதனைகளும் அழகாகக் கையாளபட்டுள்ளன. 19940-களில் வார்ஸா யூதக்குடியிருப்பு அழிப்பு சமயத்தில் கதை முடிவடைகிறது. அதில் உள்ள ஒரு கதபாத்திரம் இறக்க, “Ainsi mourut mon grandpère" (இப்படித்தான் இறந்தார் எனது தாத்தா) என்ற வாக்கியம் வர நான் எங்கோ குத்தி விட்டது போல நிமிர்ந்து உட்கார்ந்தேன். இக்கதைசொல்லியும் அக்குடும்பத்தின் உறுப்பினர் என்ற உண்மை முகத்தில் அறைந்தது. அப்புத்தகம் பற்றி இன்னொரு சுவையான செய்தி. சமீபத்தில் 1991-ல் நான் பிரெஞ்சு துபாஷியாக ஆக்ரா சென்ற போது அந்த பிரெஞ்சுக்காரர் மாரெக் ஹால்டர் எழுதிய ”அப்ரஹாமின் குழந்தைகள்” என்னும் புத்தகத்தை சிலாகித்து பேசினார். அது நான் முதலில் குறிப்பிட்ட புத்தகத்தின் தொடர்ச்சி என் நான் அவருக்கு எடுத்துக் கூற், அவ்வளவுதான் ஆக்ராவிலிருந்து காரில் டில்லி வரும்வரை நாங்கள் இருவர் மட்டுமே பேசி வந்தோம். நேரம் போனதே தெரியவில்லை.

முதல் புத்த்கம் சரித்திரத்தைக் கூற இரண்டாம் புத்தகமோ தற்போது இஸ்ரவேலர்கள் அரபியருடன் சேர்ந்து சமாதானத்துக்காக முயற்சிப்பதை கூறுகிறது.

அவை கதை புத்தகங்கள்தான், ஆனால் உண்மையின் அடிப்படை அவற்றுக்கு உண்டு.

இப்போது கூட குடி முழுகவில்லை. ஈழத்தமிழர்கள் கிபி 70-ல் இஸ்ரவேலர்கள் இருந்த நிலையில் உள்ளனர். அவர்களைப் போல இவர்களும் முயன்றல் வேண்டுமானால் ஒப்பீடு குறித்து சில நூற்றாண்டுகள் கழித்து யோசிக்கலாம். இல்லாவிட்டல் ஒப்பிட்ட வாயைக் கழுவு என்றுதான் நான் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன். 

    

9/18/2012

விடுதலை புலிகளை பற்றிய ஒரு தூரப்பார்வை

19.9.2012 தேதியிட்டு வந்த "துக்ளக்" பத்திரிக்கையில் "இலங்கை பிரச்சனை" என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் சில பகுதிகளை அபி அப்பா அவர்கள த்னது இப்பதிவில் வெளியிட்டிருந்தார். முதற்கண் அவருக்கு என் நன்றிகள்.

சோ அவர்கள் எழுதியது கீழே:

1. விடுதலைப்புலிகளின் தூண்டுதலினால் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படையினர் மீது அபாண்டமான பழிகளை சுமர்த்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நின்று, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச தமிழ் மக்கள் அமைதி முயற்சியை முறியடித்தனர்.

2. இந்திராகாந்தியால் ஆயுத உதவியும் ராணுவ பயிற்சியும் பெற்ற புலிகள் இலங்கை தமிழர்களுக்கு நல்ல தீர்வை தடுத்தது மட்டும் இன்றி இந்திராவின் மகனை கொன்றனர்.

3. இந்திய உதவி இல்லாமல் வளந்தே இருக்க முடியாத ஒரு கூட்டம் இந்தியாவை அயல் நாட்டினராக அறிவித்து சிங்களர்களை சகோதரர்களாக கொண்டாடி இந்திய அமைதிப்படையை வெளியேற சொல்லியது. அந்த கூட்டம் இலங்கையில் இருந்த தமிழ் தலைவர்களை எல்லாம் கொன்றது. அப்பாவி தமிழர்களை எல்லாம் கொன்றது. இறுதியில் தானும் அழிந்தது. அழிந்த அந்த கூட்டத்துக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் நடக்கின்றன.

4.பல வருடங்களாக நடந்து வந்த புலி- அரசு மோதல்கள் போது வெளியேறி அயல்நாடுகளில் குடியேறி விட்ட இலங்கை தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்வதை விரும்பவில்லை.

5.நம் நாட்டில் பங்களாதேஷ் விடுதலை பெற்ற பின் அங்கிருந்து இங்கு வந்த அகதிகள் திரும்பி செல்ல வேண்டும் என்று கோருவது போல சில நாடுகளில் குரல்கள் எழலாம். உங்கள் நாட்டில் நீங்கள் பட்ட அவதியின் காரணமாக இங்கு வந்தீர்கள். இப்போது உங்கள் நாட்டில் தான் அமைதி திரும்பி விட்டதே. ஆகையால் நீங்கள் திரும்பி செல்லுங்கள் என்று சில நாடுகளில் சில அமைப்புகள் கூற தொடங்கலாம்.

6.இதை விட முக்கியமாக இப்போது ஈழம் பெற வேண்டிய போர்.. அதற்கான ஆயுதம் செய்ய நிதி தேவை என்று இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதால் அவர்களுக்கு நிதி தேவை என்று, அல்லது இது மாதிரி வேறு காரணங்கள் கூறி அயல் நாடுகள் சிலவற்றில் இலங்கை தமிழ் முக்கியஸ்தர்கள் பண வேட்டை நடத்துகின்றனர். இது மிரட்டல் மூலமாகவும் நடக்கின்றது. பணத்துக்கு பணம். ஆதிக்கத்துக்கு ஆதிக்கம்.இது தொடர வேண்டும் எனில் இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக யாரும் ஒப்புக்கொள்ள கூடாது. ஆகையினால் இலங்கையில் இன்றும் தமிழர்கள் வேட்டையாடப்படுகின்றார்கள் என்று அயல் நாட்டு அமைப்புகள் முன் காட்ட அயல்நாடுகளுக்கு சென்று ஆதிக்கம் புரிந்து வசதியாக வாழகின்ற இலங்கை தமிழர்கள் முயல்கிறார்கள்.

7. இந்த ஈழ பிசினஸ் தொடங்குவதற்காக அவர்கள் வசூல் செய்யும் நிதியில் ஒரு பங்கு இதற்கான பிரச்சாரத்துக்காக செலவிடப்படுகின்றது. அந்த நிதி எங்கெங்கோ செலவிடப்படுகின்றது. யார் யாருக்கோ பிரச்சார சம்பளம் தரப்படுகின்றது என்பது எல்லாம் இலங்கை அரசு ஆராய வேண்டிய விஷயங்கள். இப்படி நடக்கிற பிரச்சாரத்தின் காரணமாக இன்றும் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதை நாம் நம்பி விடக்கூடாது.

8. உலகத்திலேயே சப்மரைன் முதல் விமானம் வரை சேர்த்து வைத்து இருந்த, தன் மக்களையே கேடையமாக வைத்து இருந்த, சிறுவர்களை முன்னிருத்தி பலிகடா ஆக்கிய , தமிழ் தலைவர்களை கொன்று போட்ட ஒரு கொலைகார கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது இலங்கை அரசுக்கு.அதை எதிர்கொண்டு அந்த கும்பலை அரசு ஒடுக்கியது என்பது பாராட்டத்தக்க ஒரு சாதனையாகும். அந்த மாதிரி ஒரு வெறிச்செயலை இலங்கை அரசு எதிர்கொண்ட போது பல சிவிலியன்கள் உயிர் இழக்க நேரிட்டது மிகவும் வருத்தமான ஒரு விஷயம் தான் எனினும் சிவிலியன்களை கேடயமாக புலிகள் பயன் படுத்திய போது, ஆஸ்பத்திரிகளில் புலிகள் பதுங்கி தங்கள் தாக்குதலை நடத்திய போது ராணுவத்தின் எதிர் தாக்குதலில் சிவிலியன்கள் உயிரிழப்பு என்பது சகஜம் தானே! இதற்கு எல்லாம் புலிகள் தானே காரணம்!

9. தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அல்ல.. பல்லாயிரக்கணக்கான அளவு கன்னி வெடிகள் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை நீக்கி விட்டு தான் குடியேற்றம் நடத்த வேண்டும். இதனால் ஏற்படும் தாமதத்துக்கு இலங்கை அரசா பொறுப்பு???

10. ஐ நா சபையில் இலங்கைக்கு எதிராக வந்த ஒரு தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களித்தது ஒரு மாபெரும் தவறு. அந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்து இருந்தால் இரு நாடுகளின் உறவு வலுப்பெற அது உதவி இருக்கும்.

இப்போது டோண்டு ராகவன். புலிகள் ஜெயித்திருந்தால், தமிழகத்தில் நிகழ்ந்திருக்கக் கூடிய விபரீதங்கள் இப்போதும் மன நடுக்கத்தையே கொடுக்கின்றன.

இப்போதைய நிலையில் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என சீன் போடும் பேர்வழிகள் தமிழர்கள் நலனுக்கு விரோதமாகவே உள்ளனர்ர் என்பேன்.


பை தி வே அவரது அப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டும்தான் இது வரை உள்ளது. மீதியை பிறகு மட்டுருத்துவார் போல.

சோ சொன்னது அத்தனையும் உண்மை.

அதை விடுங்கள். தனது குடும்பத்தினர் நலனுக்காக கடைசி வரை மத்திய அரசுக்கு ஜால்ரா அடித்தார் கலைஞ்ர் ஆட்சியில் இருந்தவரை.

இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார். அவரை நம்ப வேண்டும் எனக் கூறும் உங்களைப் போல சில தீவிர கலைஞர் ஆதரவாளர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாதுதான்.

சரிஅவரை விடுங்கள். அவர் அப்படித்தான், அவரது கலைஞர் ஆதரவு வேறுவித்மாக எழுத விடாது அவரை.

இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு சம்பந்தமாக சோ அவர்கள் எழுதியதை அதே துக்ளக் கட்டுரையில் காணலாம். 

அன்புடன்,
டோண்டு ராகவன்.


9/01/2012

தவிர்க்க முடியாத சாதி அமைப்புகள்

சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா, அது தேவைதானா என்னும் தலைப்பில் நான் இட்ட பதிவில் பல இசுலாமிய உதாரணங்கள் தந்தேன். ஏனெனில் அம்மார்க்கத்தில் மட்டுமே சாதிகளே கிடையாது என பல அலட்டல்கள் சுவனப்பிரியன் ஆகியோரிடமிருந்து வந்துள்ளன.

இப்போது இன்னொரு உதாரணமும் சிக்கியுள்ளது. முதலில் இந்த வீடியோவைப் பாருங்கள்.



இந்த வீடியோ பற்றி திண்ணையில் வந்த இக்கட்டுரையில் வந்த இப்பின்னூட்டத்தைக் காணவும்.

முதலில் இக்கொடுமை 1400 ஆண்டுகளுக்கு முன்னால்தான் இருந்தது என சப்பைக்கட்டு கட்டிய சுவனப்பிரியன் இப்போதைக்கு சைலண்டாகி விட்டார். திண்ணையில்

பாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம் என்ற தலைப்புடன் அப்பதிவில்  நண்பர் சுவனப்பிரியன் ரொம்பவுமே மெனக்கெட்டு வாதாடினார். 

இப்போது பாரதப்போரில் பத்மவியூகத்து அபிமன்யு போல எனது நண்பர் சுவனப்பிரியன் தனியாக நிற்கிறார். சக இசுலாமிய பதிவர்கள் அவருக்கு துணை செய்யுங்களப்பூ.

பை தி வே, இந்தப் பதிவையும் பார்க்கவும்.

அன்புடன்,

டோண்டு ராகவன் 

8/11/2012

திராவிட அரசியலின் தரக்குறைவும் வெட்கம் கெட்டத்தனமும்

ஈவேராமசாமி நாயக்கர் பற்றி நன்கு அறிந்தவர்களில் திமுகவினரே முக்கியமானவர்கள். அவர்கள் இவருடன் முரண்பட்டு நின்ற காலகட்டம் 1949 முதல் 1967 வரை ஆகும். அச்சமயத்தில் இரு தரப்பினரும் எதிர்தரப்பினரின் வண்டவாளத்தை வண்டியில் ஏற்றினர். உதாரணத்துக்கு சமீபக்த்தில் 1962-ல் வெளியான முரசொலி கார்ட்டூன்களை கீழேகாணலாம்.



இமேஜ் பெரிதாக இல்லை என குறை நீங்க, கேப்ஷன்களை கீழே  மீண்டும் தருகிறேன்.

துணிவிலை உயர்ந்ததேன்?
புலைச்சி எல்லாம் ஜம்பர் போட ஆரம்பிச்சுட்டா அதனாலதான்.

வேலையில்லா திண்டாட்டம் ஏன்?
பள்ளு பறையனுங்க படிக்க ஆரம்பிச்சுட்டானுங்க அதனாலதான்.

அரிசிவிலை உயர்ந்ததேன்?
கள் குடிக்கிற பசங்களெல்லம் சோறு திங்கறாங்க அதனாலதான்.

கார்டு கவர் விலையெல்லாம் உயர்ந்ததேன்?
தபால்காரனெல்லாம் அதிக சம்பளம் வாங்கறானே அதனால்

விபூதி பூசிக்கொள்ளாததேன்?
சந்நிதானம் பூசிக்கோ என்றால் பூசிக் கொள்வேன்.

வெங்கட் சாமிநாதன் அவர்கள் எழுதியதிலிருந்து சில வரிகள்:

கிறித்துவ, முகம்மதிய மதத்தினரிடம் நாத்திகம் பேச பயப்படுபவர்களிடம், அவர்களிடம் காணும் ஜாதீய தீண்டாமையைப் பேசப் பயப்படுபவர்களிடம் என்ன நேர்மை இருக்க முடியும்? கக்கூசைக் கழுவ என்றே ஒரு சாதி என்ற இழிநிலைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்ன தலித் தலைவரிடம், பெரியார் சொல்கிறார் – “இதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க. வேறே யார் செய்வாங்க?”. “பறச்சிகள்ளாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா துணிப்பஞ்சம் வந்துராதா” என்றாராம் பெரியார்.

காமராசன் ஸ்விஸ் பாங்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறான் என்றும் காமராசன் என்ற அழகனின் தோலை உரித்தால் இரண்டு டமாரம் செய்யலாம் என்றும் பேசும் தலைவர்களைக் கொண்டது, கண்ணியம் கட்டுப்பாடு, கடமை என்று கோஷமிடும் கழகம் ஒன்று. 67 தேர்தலில் பத்து லட்சம் பக்தவத்சலம் என்று கோஷமிட்ட தலைவர்களைப் பற்றி இன்று பேசுவதானால் எததனை ஆயிரம் கோடி என்று சொல்லி கோஷமிடவேண்டும்?

கண்ணியம் தான். இது கழகம் ப்ராண்ட் கண்ணியம்.

கீழ்வெண்மணி கொடுமைக்கு எதிர்வினையாக ஈவேரா அவர்கள் கொடுத்த அறிக்கையே அவரது சுயசாதி அபிமானத்தைக் காட்டுகிறது.

"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''

அந்த வலைப்பூ இங்கே:

ஆக 42 பேர் இறந்ததற்கு அணுவளவேனும் அனுதாபம் கூட இல்லை. கொலை செய்வித்த கோபால கிருஷ்ண நாயுடுவின் பெயரையும் இந்த பலீஜா நாயுடு சொல்லவில்லை. வேறு என்னத்தைத்தான் சொல்ல?

அன்புடன்,
டோண்டு ராகவன்


7/28/2012

பேஷ், பேஷ், ராமதாசு தேறிட்டாரு!!!!!!!

கட்சி ஆரம்பித்தப் புதிதில் தானோ, தனது உறவினர்களோ பதவிக்கு ஆசைப்பட்டால் முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடிக்கும்படி கூறியவர் இப்பெருந்தலைவர்.

ஆனால் கணிசமான வெற்றி கிடைத்ததும் தனது மகன் அன்புமணியின் பதவிக்காக அலைந்து திரிந்து பெற்றார். அப்போது இந்த வாக்குறுதியை நினைவுபடுத்தியபோது அப்போதைய கொபசெ பதிவாளர், அன்புமணிக்கு தனிக் குடும்பம் உண்டு ஆகவே ராமதாஸ் கூறியது அவரைக் கட்டுப்படுத்தாது என்றெல்லாம் கூறியதை நான் படித்துள்ளேன்.

இருப்பினும் இது ஒரு பிரச்சினைக்குரிய விஷயமாகவே அவ்வப்போது எழுப்பப் பட்டு வந்திருக்கிறது.

இப்போதை லேட்டஸ்ட் அறிக்கையில் ராமதாசர் ஜாக்கிரதையாகவே இருந்துள்ளார். அவர் விகடனுடனான பேட்டியில் கூறுவது.

1. நிச்சயம் எதிர்காலத்தில் நாங்கள் த்மிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவோம்.

2. அப்படிப் பொறுப்பேற்றுக் கொண்ட மூன்று மாதங்களுக்குள் தமிழகத்துள் ஒரு சொட்டு மது இல்லாமல் மாற்றிக் காட்டுவோம்.

3. அப்படிச் செய்யாவிட்டா மூன்று மாதம் முடிந்ததும் நாங்களே பதவி விலகிக் கொள்வோம்.

4. இதனை எங்கு வேண்டுமானாலும் எழுதிக் கொடுக்க நான் தயாரா இருக்கேன்.

(ஆனந்தவிகடன், 01.08.2012).

பேஷ், பேஷ், ராமதாசு தேறிட்டாரு. 1) எங்கே நிறைவேறுகிறது? அதன் பின்னால்தானே 2, 3 போன்றவை வரும்?

அன்புடன்
டோண்டு ராகவன்

5/17/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 17.05.2012

கையில் ஒரு கோடி ஆர் யு ரெடி?
இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்காக கேள்வி கேட்கப்படும். விடையை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.

சரியான விடை (மிகவுமே எளிமையான கேள்விகள்தான்)அனுப்பியவர்களில் நூறு பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். அந்த வரிசையில் மார்ச் இறுதியில் நடந்த நிகழ்ச்சிக்கான பரிசு எனக்கும் கிடைத்தது. ஆனால் அந்தோ, அதை அறிவித்த பிறகு நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் கிணற்றில் கல் போட்ட நிலையில் இருக்கிறார்கள். எப்போது தருவார்கள், அல்லது தருவார்களா என்பதெல்லாம் புரிவதில்லை.பார்ப்போம்.

அப்ட்டேட்டட்: 1000 ரூபாய்க்கு செக் அனுப்பித்து விட்டார்கள். வாழ்க வளமுடன்.

தெனாவெட்டு காதெரின் பான்கோல் (தொடர்ச்சி)
காதெரின் அவர்களுக்கு நான் எழுதிய கடிதமும் அவருடைய பதிலும் இங்கே.

Madame,

Even though I would have loved to write to you in French, I am writing in English for two reasons. My keyboard is English and putting in the accents is a botheration. The second reason is I want to be free in expressing my thoughts and do not want to be spending time in drafting correct French and losing the thread.

The two books preceding the above book I have already read and was impatiently looking for the third of this triology.

I like Josephine as I too am a translator (cum engineer) (French, German,English, Tamil) and I was gratified to see that lady succeeding as one.

One question I want to pose. You have very frankly written about Shirley's mother and Father. Did you not get any trouble from England as implying something about their queen is just not tolerated, I think?

One suggestion. Please allow comments to your blog posts.

Regards,
Dondu N. Raghavan



காதரீனின் பதில் கீழே:
Hello !

Thank you for your message. It’s wonderful to know that you’ve loved reading what I’ve enjoyed so much writting !

Oups ! I’m sorry I should write in french !!

Pour ce qui est de la Reine d’Angleterre, je ne sais pas encore !

Je ne lui ai pas demandé la permission. Et peut-être sera t-elle choquée quand elle lire “The yellow eyes of the crocodiles” quand il sera traduit en anglais.

Pour le moment, il n’est pas encore sorti en langue anglaise et devrait être publié en 2013.

Nous verrons alors ce qu’en pensera sa Majesté mais j’espère qu’elle aura le sens de l’humour et qu’elle prendra cela comme un hommage. Car le personnage de la Reine est très aimable dans la trilogie...


Avec un grand sourire,
Katherine Pancol



கிழிஞ்சது கிருஷ்ணகிரி. எலிசபெத் ராணியின் அனுமதி ஒன்றும் பெறவில்லையாம். நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் வரவில்லையாம். எலிசபெத் ராணி ஹாஸ்ய உணர்ச்சி உள்ளவர் என தான் நம்புவதாக வேறு எதிர்பார்ப்பு. 


என்ன செய்ய? அவருக்கு நான் போட்ட பதில்:
Thanks a lot. I would advise you to consult with your English translator. I am worrying for you. :)))
Junior is really out of this world and I love him!

நிஜமாகவே தெனாவெட்டுதான் காதெரினுக்கு.

ஸ்பெக்ட்ரம் ராசா
ஜாமீனில்தானே வந்திருக்கிறார்? அதற்கு ஏன் இவ்வாறு சீன் போடுகிறார்களாம்? தன் உயிருக்கு பயந்து இத்தனை நாள் உள்ளே இருந்தவருக்கு இப்போது ஏதேனும் த்னிப்பட்ட முறையில் ஆசுவாசம் கிடைத்திருக்குமோ?

எதற்கும் அவர் வாக்கிங் எல்லாம் தனியாக போகாமல் இருத்தல் நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/14/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 14.05.2012

அம்பேத்கர் நேரு கார்ட்டூனில் என்ன தவறு இருக்கிறது?
அதுதான் புரியவில்லை. அதுவும் அறுபது வருடங்களுக்கு முன்னால் இக்கார்ட்டூன் வந்தபோது யாரைய்ம் கோபப்படச் செய்ததாகத் தெரியவில்லை? இப்போது மட்டும் ஏன்? நேரு, அம்பேத்கர் ஆகியோரை அவரவர் சிஷ்யகோடிகள் தெய்வ நிலைக்கு உயர்த்திப் பார்ப்பதே காரணம் என நான் நினைக்கிறேன். அக்கார்ட்டூனைத்தான் கீழே பாருங்களேன்.

நேரு சாட்டையை நத்தை மீதுதான் குறிவைக்கிறார். அம்பேத்கர் மீதல்ல. உண்மை கூறப்போனால் அம்பேத்கரும்தான் சாட்டையை தன் கையில் வைத்துள்ளார். இரு சாட்டைகளுமே நத்தைக்காகத்தான். நேரு அம்பேத்கருக்கு உதவியாகத்தான் செயல்பட நினைக்கிறார் என்பது எனது புரிதல்.

தெனாவட்டு காதெரின் பான்கோல் (Katherine Pancol) இந்தப் பெண்மணி ஒரு பிரசித்தி பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர். அவர் ஒரு மூன்று நாவல்கள் வரிசையை (triology) உருவாக்கியுளார். அந்த நாவல்கள்:  
1. Les yeux jaunes des crocodiles (முதலைகளின் மஞ்சள் நிறக்கண்கள்)
2. La valse lente des tortues (ஆமைகளின் மெதுவான சுழல் நடனம்)
3. Les écureuils de Central Park sont tristes le lundi (மத்தியப் பூங்காவின் அணில்கள் திங்களன்று சோகம்)

முதல் நாவல் என் மூச்சையே நிறுத்தியது. அதன் கதாநாயகி ஜோசஃபின் தன்னம்பிக்கையற்ற, தன் திறன் அறியாத பெண்மணி. சந்தர்ப்பச் சூழலால் தனது அக்காவின் பெயரில் ஒரு நாவலை எழுத, அது உலகப்பிரசித்தி பெறுகிறது.

கூடவே பல பாத்திரங்கள், அவர்களிடையே எதிர்வினைகள் ஆகியவை ஒரு ரோலர் கோஸ்டரில் பயணம் செய்யும் மனநிலையை உருவாக்கின. முதல் நாவல் பிடித்துப் போனதில் மற்ற இரு நாவல்களையும் படித்து முடித்தேன் என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவ்விரு நாவல்களும் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றுதான் நான் கூறுவேன்.

ஆனால் அந்த மூன்று நாவல்கள் வரிசையில் குறிப்பிடப்படும் Shirly என்னும் பாத்திரம் என் கவனத்தை ஈர்த்தது. அப்பெண்மணியின் தாயாராக சித்தரிக்கப்படுபவர் இங்கிலாந்தின் எலிஸபெத் மகாராணி. அவருக்கும் அரண்மனையில் பணிபுரிபவருக்கும் தவறான வழியில் பிறப்பவர்தான் இப்பாத்திரம். இது திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது.

எனது கவலை எல்லாம் இதை பிரிட்டிஷ் அரண்மணை வட்டம் எவ்வாறு எடுத்துக் கொண்டிருக்கும் என்பதே. இக்கேவியை அந்த பிரெஞ்சு எழுத்தாளரிடமே வைத்துள்ளேன். இதுவரை பதில் வரவில்லை.

எனக்குத் தெரிந்து இங்கிலாந்து அரசு பரம்பரை பற்றி அவ்வாறு அவதூறு செய்வது பொறுத்துக் கொள்ளப்படாது என்பதே. பார்ப்போம்.

சென்னை சூபர் கிங்ஸுக்கு சான்ஸ் இன்னும் இருக்கிறதா?
ஆம் என்றுதான் நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா கூறுகிறார். அது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும்.

பை தி வே நம்ம காமெடி நடிகர் சந்தானத்தைப் பார்த்தால் டோனி ஞாபகத்துக்கு வருகிறார். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் இதுபற்றி இன்று ஓரிருவரிடம் பிரஸ்தாபிக்க அவர்களும் ஆமாம் என ஒத்துக் கொண்டனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/10/2012

ஈவேரா அவர்களது வழியை சரியாக பின்பற்றுபவர் அண்ணாவா அல்லது கலைஞர் வீரமணி முதலானோரா?

உண்மையைக் கூற வேண்டுமானால் கலைஞர் மற்றும் வீரமணிதான் ஈவேரா அவர்களை சரியாக பின்பற்றுபவர்கள் எனக்கூறுவேன். அது பற்றித்தான் இப்பதிவு.

முதலில் ஈவேரா அவ்ர்களின் செயல்பாடுகளைப் பார்ப்போம்.

1. உட்கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாதவர்.

2. த்னது சீடர்கள் தன்னைவிட அதிக புகழ் பெறுவதை பொறுக்காதவர்.

3. தனது வாரிசுக்குத்தான் தனது அறக்கட்டளையின் மேனேஜ்மெண்ட் செல்ல வேண்டும் என்பதற்காகவே தனது 76-வது வயதில் அதுவரை தான் எதிர்த்த பொருந்தாத் திருமணத்தை செய்து, கட்சியினரின் முகத்தில் கரி பூசியவர்.

4. அதற்காக நான் அதுவரை பலருக்கு செய்வித்த சுயமரியாதை திருமணத்தை விலக்கி பதிவுத் திருமணம் செய்து கொண்ட்வர்.

5. தன்னைப் பின்பற்றுபவர்கள் பகுத்தறிவை கழட்டி வைக்க வேண்டும் என எதிர்பார்த்தவர்.

இப்போது அண்ணா அவர்களை அவதானிப்போம்.
1. உட்கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர். அவரது காலகட்டத்தில் திமுக ஒன்றில்தான் உட்கட்சி ஜனநாயகம் இருந்தது என்றால் அது மிகையாகாது.

2. அடுத்த கட்டத் தலைவர்களை ஊக்குவித்து அவர்களை அணைத்துச் சென்றவர்.

3. வாரிசா? மூச்? அவரது வளர்ப்பு ம்கன்களோ, மனைவியோ அவரது கால கட்டத்திற்கு பிறகு அரசியலிலேயே இல்லை.

4. தனது கொள்கைகளில் உறுதியாக நின்றவர். மதுவிலக்குக் கொள்கையை ரத்து செய்ய மறுத்தவர். அக்கால கட்ட்டத்தில் பலர் அவரிடம் கூறினார்கள், புதிதாக மதுவிலக்கு செய்தால் மத்திய அரசு கிராண்ட் கிடைக்கும், ஆனால் ஏற்கனவேயே மதுவிலக்கு அமலில் இருந்த மாநிலங்களுக்கு ஒன்றும் இல்லை. ஆகவே முதலில் மதுவிலக்கை ரத்து செய்து சிலகாலம் கழித்து அதை அமல்படுத்தினால் துட்டு கிடைக்கும் என்று. அப்படிப்பட்டப் பாவப்பணம் தமது மாநிலத்துக்கு வேண்டாம் என அழகாகக் கூறினார்.
 ஆக இவர் ஈவேரா வழியில் சென்றவர் அல்ல.

கருணாநிதி அவர்களை அவதானிப்போம்.
1. உட்கட்சி ஜனநாயகம் இல்லை.

2. எம்ஜிஆர், வைக்கோ போன்ற்அவர்கள் தன்னைவிட அதிகப் புக்ழ் பெற்றபோது அவர்களைக் கட்சியிலிருந்து விலக்கி வைத்தவர்.

3. வாரிசு அரசியலுக்கு புது இலக்கணங்கள் வகுத்தவர். தனது மூன்று மனைவியரின் குழந்தைகளுக்கும் கட்சியில் பல உயர் பதவிகளை அளித்தவர்.  அவர்களுக்கு இடம் தர மற்றவரை ஓரம் கட்டியவர். இப்போது முறை அன்பழகனுடையது.

4. கொள்கை? ஹா ஹா ஹா. மாநில சுயாட்சி, ஈழவிடுதலை இத்யாதி இத்யாதி ஆகியவை கால நேரத்துக்கு ஏற்ப வரும்.

வீரமணி அவர்களை இப்போது பார்ப்போமா?
1. உட்கட்சி ஜனநாயகம் கோவிந்தா.

2. அடுத்த கட்டத் தலைவர்களை ஓரம் கட்டியவர்.

3. தனது மகனையே வாரிசாக நியமித்தவர்.

ஆக அண்ணா அவர்கள் ஈவேராவை பின்பற்றவில்லை. கருணாதி, வீரமணி ஆகியோர் பின்பற்றுகின்றனர்.

பதிவு முடிந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/23/2012

சாதிகளின் அவசியம்



சாதிகளின் அவசியம் என்னும் தலைப்பில் திண்ணை டாட் காம்-ல் மலர்மன்னன் அவர்கள் எழுதிய கட்டுரை


மலர் மன்னன் எனது நண்பர். அடிக்கடி ஃபோனில் பேசிக் கொள்வோம். அண்ணா பற்றிய அவரது இரு பதிவுகள் மற்றும் கோட்ஸே பற்றிய அவரது பதிவுகள் ஆகியவற்றை நான் அவரது அனுமதியுடன் எனது இந்த வலைப்பூவிலும் இட்டுள்ளேன். இப்போது இடவிருக்கும் அவரது கட்டுரை திண்ணையில் வந்தது. அதை அவரது அனுமதியுடனேயே இங்கேயும் இடுகிறேன்.

முதலில் மலர் மன்னன். இங்கு வரும் ”நான்” அவரையே குறிக்கும்.
சாதிப் பிரிவுகள் எதுவும் ஹிந்து சமய ஸ்ருதிகளிலோ ஸ்மிருதிகளிலோ குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஹிந்து சமூகத்தில் எப்படியோ பல நூறு சாதிகள் உட்பிரிவுகளுடன் காலங் காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றன. வருணாசிரம தர்மத்துக்கும் சாதிகளின் கட்டமைப்புக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று திரும்பத் திரும்ப நிரூபித்தாலும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இரண்டையும் ஒன்று படுத்திக் காட்டும் போக்கு இருந்துகொண்டுதான் உள்ளது.
ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் இருப்பதிலேயிருந்தே குண கர்ம விசேஷப் பிரகாரம் பிரிவுகள் அமைந்த வர்ணாசிரமத்துக்கும் சாதி அமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்பது உறுதியாகிறது. சில சாதிகள் குறிப்பிட்ட தொழில்களில் தேர்ச்சியுள்ள குழுக்கள் ஒருங்கிணைந்தமையால் தனி அடையாளம் பெற்று உருவாகியிருக்கின்றன. ஆனால் எல்லா சாதிகளுமே குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளதையொட்டி உருவானவையாகக் கொள்வதற்கில்லை. தமிழ்நாட்டில் இருந்த வலங்கை இடங்கை சாதிகள் தொழில்களின் அடிப்படையில் இனம் காணப்படவில்லை. 

ஒரு சாதி செய்யும் தொழிலை வைத்து அது வலங்கையிலோ இடங் கையிலோ சேர்க்கப்படவில்லை. சமூகத்தில் அவ்வப்போது நிகழும் கொந்தளிப்பின் விளைவாக சாதிகளின் மேலாதிக்கம் இடம் மாறி அதன் தாக்கம் வலங்கை, இடங்கைப் பிரிவுகளில் பிரதிபலித்திருக்கிறது. 

சாதிக் கட்டமைப்பு செங்குத்தாக மேலிருந்து கீழ் என்றில்லாமல் படுக்கைவாட்டில் அமைந்தமையால் அவ்வப்போது எதன் கை ஓங்குகிறதோ அது வரிசைக் கிரமத்தில் முன்னோக்கி நகர்வதும் பின்னுக்குப் போவதும் நிகழ்ந்திருக்கிறது. சாதிகள் அனைத்தும் சரிசமமான சமூக அந்தஸ்துள்ளவையாக இருந்தாலும் வரிசைக் கிரமத்தில் முதலாவது இரண்டாவது என்று அவ்வப்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப இடமாற்றம் செய்து வந்துள்ளன. 


ஒரு விளையாட்டில் நிகழ்வதுபோல் இது ஆரோக்கியமான போட்டியாக இருந்து சமயங்களில் விளையாட்டுகளிலுங்கூட பகைமையும் பொறாமையும் எப்படியும் முதல் இடத்தைக் கைப் பற்றியே தீர வேண்டும் என்கிற வெறியும் தோன்றிவிடுவதுபோலவே சாதிகளிடையேயும் வரிசைக் கிரமத்தில் முதலிடத்தைக் கைப்பற்றுவதில் தொடங்கும் போட்டி பகைமை வெறியில் முடிவதுமுண்டு.

சாதிகளிடையே வரிசைக் கிரமப்படி நிலைகளில் இடமாற்றங்கள் நிகழ்வதுதான் சாத்தியமாகியிருக்கிறதேயன்றி ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் இன்னொரு சாதிக்கு மாறுவது வெகு அரிதாகவே நிகழ்ந்துள்ளது. கள்ளர், மறவர், அகமடியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனாரே என்று ஒரு சொலவடை உண்டு. ஆனால் எல்லா சாதிகளிலும் இப்படி ஒட்டு மொத்தமாக சாதியை மாற்றிக் கொள்வது சாத்தியமாகியிருப்பதாகக் கூறுவதற்கில்லை.


உணவு விடுதியில் சமையற்காரராகவோ பரிசாரகராகவோ ஒரு பிராமணர் இருக்கையில் அந்த விடுதியின் உரிமையாளர் நாடார், ரெட்டியார் என எந்த சாதியினராகவும் இருக்கும் நிலை இன்று மாநகரங்களீல் உள்ளது. இந்த நிலவரத்தை எந்தத் துறையிலும் காணக் கூடிய நிலைதான் இன்று உள்ளது. முக்கியமாகத் தகுதியும் திறமையும் பொருளாதார மேம்பாடும் செல்வாக்கும் குறிப்பிட்ட ஒரு நபரை அவர் எந்த சாதியைச் சேர்ந்தவரானாலும் உயர் நிலைக்குத் தூக்கிக்கொண்டுபோய் விடுகிறது. அதுபோலவே ஒருவர் எந்த சாதியினராக இருந்தாலும் கீழ் நிலைக்குப் போய் விட நேர்கிறது. இத்தகையோர் வெறும் வறட்டு ஜம்பமாகத் தாம் உயர்சாதி என்று வேண்டுமானால் பெருமை பாராட்டிக் கொள்ளலாமேயன்றி உயர் சாதி என்று தலை நிமிர்ந்து நடமாடிக் கொண்டிருப்பது சாத்தியமில்லை. 


ஹிந்து சமுதாயத்தில் காலத்திற்கு ஏற்ப இயல்பாக நிகழ்ந்துள்ள மாற்றங்களுள் இதுவும் ஒன்று. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வு உணர்வை காணாமலடிக்கும் மந்திரக் கோல் இது. .காலப் போக்கில் சாதிகளிடையே உயர்வு தாழ்வு மனப்பான்மை மறைய இந்த மாற்றம் உதவும். ஆனால் உத்தியோகப் பதவிப் படிநிலைகள், பொருளாதாரம், அரசியல் முதலான காரணிகள் சமுதாயத்தில் உயர்வு தாழ்வு உணர்வைத் தோற்றுவித்துக் கொண்டுதான் இருக்கும். வாலு போச்சு கத்தி வந்தது என்கிற கதைதான்!
வர்ணாசிரமப் பிரிவில் உயர்வு தாழ்வு எதுவும் கற்பிக்கப்படவில்லை. சமூகத்திற்கு அந்தந்தப் பிரிவுகள் ஆற்ற வேண்டிய கடமைகளையே அது பேசுகிறது. மனித உடலில் எந்த உறுப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். உறுப்புகளுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்வது அறியாமை. அதேபோல் கடமை களிடையே ஏற்றத் தாழ்வென்பதும் இல்லை சமூகம் சீராக இயங்கிவர எல்லா உறுப்புகளும் நல்லபடியாக கவனித்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதோடு அவை ஆற்றும் கடமைகளும் சரிவர நிறைவேற்றப்பட வேண்டும். சமூகத்தை ஒரு விராட் புருஷனாகக் கற்பிதம் செய்து கடமைகளின் நிர்ணயம் சிரசு, தோள்பட்டை, வயிறு, கால்கள் எனக் குறியீடாகக் காட்டப் பட்டுள்தேயன்றி ஆரிய சமாஜத்தைத் தோறுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி சொன்ன மாதிரி அவரவரும் பிறப்பது அவரவர் அன்னை யின் யோனியிலிருந்துதான். சமூகத்தின் சிறிதாக்கபட்ட வடிவமே குடும்பம். அதன் சிறிதாக்கப்பட்ட வடிவம் மனிதன். ஆகவேதான் சமுகத்தை ஒரு விராட் புருஷனாக, பிரமாண்ட மனித சரீரமாக உருவகித்துக்கொள்கிறோம்.


ஆக, உயர்வு தாழ்வு என்கிற பிரக்ஞையே சாதிகளின் கட்டமைப்பில்தான் அவற்றுக்கிடையிலான போட்டா போட்டிகளிருந்துதான் வருகிறது.இந்த சாதிகளுக்கிடையிலான உயர்வு தாழ்வு மனப்பான்மையை எப்பாடுபட்டாவது அகற்றிவிட்டால் எல்லாரும் ஓர் நிறை என்கிற நிலவரம் உருவாகிவிடும். இதற்காக மூட்டைப் பூச்சித் தொல்லைக்குப் பயந்து வீட்டையே கொளுத்துவதுபோல் சாதி களையே இல்லாமற் போகச் செய்ய வேண்டியதில்லை. அது சாத்தியமும் இல்லை.
நமது ஆன்மிகத் தத்துவ விசாரங்களின் விஷயத்திலும் இதுதான் எனது வழக்கமாக உள்ளது. ஒருமுறை மாயையை அறிதல் பற்றி எனது சாமானிய அறிவுக்கு எட்டியவாறு ஒரு கட்டுரை எழுதினேன் ஒரு தத்துவப் பேராசிரியர் அதற்கு எதிர்வினை செய்கையில் ஒரு கோணத்தில் என் கருத்து சரியாகத் தோன்றினாலும் தத்துவ வரம்புக்கு அது உட்பட்டதல்ல, தவறான புரிதலுக்கு இடமளித்து விடும் என்ற கருத்துப்பட எழுதியதாகச் சொன்னார்கள். பேராசிரியர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும், அவர்கள் இலக்கண பூர்வமாக ஒரு வரம்புக்கு உட்பட்டுத் தாம் கற்ற சூத்திரங்களுக்கு ஏற்பவே பாடம் நடத்துபவர்கள்; ஆதலால் எந்தவொரு பொருளைப் பற்றி அவர்கள் பேசினாலும் அதன் இலக்கண வரம்புக்கு உட்பட்ட தாகத்தான் இருக்கும், நான் சொல்வது என் சாமானிய அறிவுக்கு எட்டிய பிரகாரம் இருப்பதால் தவறாகப் போய்விட வாய்ப்புண்டு என்று சொன்னேன். 



அதேபோல இப்போது நான் வெளியிடும் சாதிகளைப் பற்ரிய என் கருத்தும் பகிர்ந்து கொள்ளப்படுவதற்காகவே யன்றி, எதையும் புகட்டுவதற்காக அல்ல.


எவ்வித நியாயமோ காரணமோ இன்றித் தலைவிரித்தாடும் சாதி வெறியைச் சில பகுதிகளில் கண்டு எரிச்சலடைந்து இந்த உயர்சாதி கீழ்சாதி உணர்வு போனால்தான் ஹிந்து சமுதாயத்திற்கு விடிவு பிறக்கும் என்று சொல்வதற்கு மாறாக சாதிகளே ஒழிந்து போய்விட வேண்டும், அது இருப்பதால்தான் உயர்வு தாழ்வு என்கிற பேத உணர்வு தலையெடுக்கிறது என்று நானும் பேசியதும் எழுதியதும் உண்டுதான். ஆனால் யோசிக்கும் வேளையில் ஹிந்து சமுதாயத்தின் நலனைக் காப்பதற்கான வழி சாதிகளிடையே காணப்படும் உயர்வு தாழ்வு உணர்வு பாராட்டும் போக்கை ஒழிக்கப்பதுதானே யன்றி, சாதிக் கட்டமைப்பை அல்ல என்கிற விவேகம் வருகிறது..


சாதி ஒழிப்பு சாத்தியமாகப் போவதில்லை என்றாலும் அப்படியொரு மாற்றம் வலுக் கட்டாயமாக நிகழ்வதாயின் அது சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியைப் போல மோசமான பின்விளைவுகளைத் தருவதாகவே இருக்கும்..


சாதிக் கட்டமைப்பு இருந்து அவற்றுக்கிடையே நிலவும் உயர்வு தாழ்வு பேதம் அகன்றுவிட்டால் சமுதாயம் பல வண்ணப் பூக்கள் மலரும் நந்தவனமாகத் தோற்றமளிக்கும்.


சமுதாயம் ஒரே கட்டமைப்பாக இல்லாமல் பல்வேறு சாதிப் பிரிவுகளாக இருப்பதால் ஒவ்வொரு சாதியும் மொத்த சமுதாயத்தைக் காட்டிலும் சிறியதாக இருக்கும். ஆகையால் அதில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள், முன்னேற்றங்கள் யாவும் எளிதாக சாத்தியமாகும். இதைக் குறிப்பிடுகையில் எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது நாடார் சாதியினர்தான். இந்தச் சாதி குறுகிய காலத்தில் பல்வேறு துறைகளிலும் கால் வைத்து ஓசைப்படாமல் பெரும் முன்னேற்றங் கண்டிருப்பது சாதாரண விஷயம் அல்ல. சமுதாயம் ஒட்டு மொத்த அமைப்பாக இல்லாமல் பல்வேறு சாதிப் பிரிவுகளாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது ஆரோக்கியமான பார்வையாக இருக்கும். ஒவ்விரு சாதியும் தன்னளவில் ஒன்றுபட்டு தனது முன்னேற்றத்திற்கான ஆக்க பூர்வ வழியைத் தேடுவது மற்ற சாதியுடன் சச்சரவிட்டுக் கொள்ளும் மோதலை மாற்றி சுமுகமான சமூகச் சூழல் உருவாவது மிகவும் இயல்பாக நடந்தேறிவிடும்.
ஆனால் ஒருவருடைய வர்ணம் என்பது அவரது குணவியல்புகளுக்கும் ஈடுபாடுகளுக்கும் ஏற்ப மாறக்கூடிய, மாற்றிக் கொள்ளக் கூடிய தன்மை வாய்ந்தது என்றுதான் வர்ணாசிரம தர்ம இலக்கணம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. வர்ணம் பிறவியினால்.வருவது அல்ல என்று அது மிகவும் உறுதிபடச் சொல்கிறது. ஆனால் சாதிகளின் சமாசாரம் அப்படியில்லை. ஒரு சாதியில் பிறந்தால் பிறந்ததுதான் தனி நபர் எவராலும் தாம் பிறந்த சாதியை மாற்றிக் கொள்ள முடியாது. சில சாதிக் குழுக்கள் வரிசைக் கிரமத்தில் தமக்கு முன்னால் உள்ள இடத்தைப் பெறுவதற்காக அந்த இடத்தில் உள்ள சாதியுடன் சேர்ந்து அதனோடு இரண்டறக் கலந்து போவது வேண்டுமானால் சாத்தியமாகியிருக்கலாம். இது குறிப்பாக பொருளாதார அடிப்படையில் சாதிகள் முன்னேறுகையில் நிகழ்வதாக இருக்கலாம். ஆனால் வர்ணாசிரமத்தில் மாற்றம் சாத்தியமாவது குழப்பமற்றுத் தெளிவாகவே சாத்தியமாகிறது. அவரவர் தத்தம் குணவியல்புகளுக்கும் ஈடுபாடுகளுக்கும் இணங்க நடந்து கொள்கிற போதும் சமூகத்தில் தமக்குரிய கடமை இன்னதென்று தேர்ந்துகொள்ளும்போதும் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வர்ணத்தை இயற்கையாகவே மாற்றிக் கொண்டவராகின்றனர்.
சாதிகளை இல்லாமல் செய்தாலொழிய ஹிந்து சமுதாயத்திற்கு விமோசனம் இல்லை என்று மிகுந்த நல்லெண்ணத்துடனும் அக்கரையுடனும் கருதுபவர்கள் இருக்கிறார்கள். சாதி அமைப்பைக் கண்டித்து மிகவும் தீவிரமாகப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். 
ஆனால் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இன்று சாதி உணர்வு பன்மடங்கு அதிகரித்து மேலும் மேலும் உக்கிரமாக வளர்ந்து வருவதாகத்தான் நிலைமை இருக்கிறது.. சாதி அடிப்படை யிலான இட ஒதுக்கீடுக் கொள்கையின் விளைவு இது. என்று எல்லாருக்கும் தெரியும் ஆனால் ரொம்பப்பேர் வெளியே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் வெளீப்படையாக இதனை ஒப்புக் கொண்டுவிட்டால் அங்கீகாரமோ மரியாதையோ ஆதரவோ கிடைக்காமல் போய் விடும். இவை பற்றிய கவலை இல்லாதவர் களுக்குப் பிரச்சினை இல்லை.
நான் சமூகவியலாளனோ மானிடவியல் ஆய்வாளனோ அல்ல. பண்டிதர்கள் மிகவும் காரண காரியங்களுடன் இவை பற்றி விளக்கக் கூடும். ஆனால் எனக்கு இருக்கிற சாமானிய அறிவுக்கு இணங்கவே எனக்குத் தோன்றுகிற கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். நான் சொல்வதுதான் சரி என்கிற பிடிவாதமும் எனக்கு இல்லை. சொல்லப் போனால் பண்டிதர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று என்று ஒதுங்கிப் போய்விடுவதுதான் எனது வழக்கம். வெற்றுப் பிடிவாதமான தர்க்கங்களால் கால விரையம் தான் மிச்சம். அந்த நேரத்தில் எவ்வளவோ ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடலாம். 
இருவேறு சாதிகளிடையே திருமணம் செய்துகொள்வதன் மூலம் சாதிகளை ஒழித்துக்கட்டிவிடலாம் என்கிற கருத்து மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தப்படுகிறது. நான் அறிந்தவரையில் இப்படி இரு வேறு சாதிகளுக்கிடையிலான திருமணம் ஒரு புதிய சாதியை உற்பத்தி செய்து சாதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத்தான் பயன் படுகிறது. மேலும் வேறு சாதியில் மணம் புரிய விழைபவர் களில் பெரும்பாலோர் தமது சாதியை விட உயர்ந்தது என்று வழக்கில் உள்ள மேல்சாதியில் மணம் புரிவதிலேதான் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிலும் இரு வேறு சாதிகளுக்கிடையிலான திருமணத்தில் தம்பதிகள் ஒன்றுபட்டு வாழ்க்கையைத் தொடங்கும்போது முற்றிலும் அந்நியமான சாதி நடைமுறைக்குத் திடீரென அறிமுகமாகும் மனைவிதான் தனது சாதி அடையாளங்களை விட்டுக் கொடுத்துக் கணவரது சாதியின் நடைமுறைகளுக்குக் கட்டுப் பட்டுப் போவதாக இருக்கிறது.
ஒவ்வொரு சாதிக்கும் சில பிரத்தியேகமான கலாசாரக் கூறுகள் உள்ளன. வீட்டுக்கு வீடு வித்தியாசப்படுகிற நடைமுறைகள்கூட உள்ளன. இவை மிகுந்த சுவாரசியத்துடன் விவாதிக்கப்படுவதுண்டு. அதுவே ஒரு. மகிழ்ச்சிகரமான தகவல் பறிமாற்றமாக இருக்கும். ரசனை உள்ள மனம் .அவற்றை அனுபவிக்கவே விரும்பும். எல்லாவற்றையும் ஒரே அச்சில் வார்த்த பொம்மைகளாகப் பார்த்துச் சலிப்படைய ரசனையுள்ள மனம் விரும்புவதில்லை. இரு வேறு சாதிகளுக் கிடையிலான திருமணம் நடக்கும்போது ஒரு சாதியின் கலாசாரக் கூறு அழிந்துபோகிறது. ரசனையுள்ள மனம் இதற்காக வருந்தவே செய்யும்.
ஹிந்து சமுதாயம் சாதிப் பிரிவுகள் இன்றி ஒரே கட்டமைப்பாக இருந்திருந்தால் பாரசீக சமுதாயம்போல் ஒட்டு மொத்தமாக வலுக் கட்டாய மத மாற்றத்திற்கு இலக்காகித் தனது பாரம்பரிய கலாசார அடையாளத்தை எப்போதோ இழந்துவிட்டிருக்கும். எத்தனையோ நெருக்குதல்கள், வன்முறைகள், மோசடிகள், ஆசை காட்டல்கள் இருந்தும் ஹிந்து சமுதாயம் இன்றளவும் தனது பாரம்பரிய கலாசாரத்தையும் இறைக் கோட்பாட்டையும் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சாதிப் பிரிவுகள்தான் என்பதை மறந்துவிடலாகாது. ஒரு குரு பீடம் ஒரு புத்தகம் என்கிற நிலைமை இங்கு இருந்திருந்தால் மத மாற்றங்கள் பெருமளவில் வெகு எளிதாக நடந்தேறியிருக்கும்.
இன்று சாதிகளிடையே நிலவும் அமைதி ஒருவிதத்தில் எரிமலை குமுறி வெடிப்பதற்கு முன் நிலவும் அமைதியைப் போலவே உள்ளது. இட ஒதுக்கீட்டில் இடம் பிடிக்கும் தாபம் ஒவ்வொரு சாதியிலும் ததும்பிக்கொண்டிருக்கிறது. இடஒதுக்கீட்டுப் பட்டியலில் சாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, தனது வாய்ப்புக் குறைவதாக ஒவ்வொரு சாதியும் கவலைப்பட ஆரம்பித்துச் சாதிகளிடையே பகைமை உணர்வும் பொறாமையும் வளரும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு சாதி இன்னொரு சாதியை இட ஒதுக்கீடு பட்டியலில் சேர்க்க்க் கூடாது என்று போராடத் தொடங்கி கடைசியில் சம்பந்தப்பட்ட சாதிகளுக்கிடையிலான மோதலாக வெடிக்கும் அளவுக்குப் பதட்ட நிலை முற்றிவிடும்.. வம்பை விலைக்கு வாங்குவது போன்ற சாதி அடிப்படையிலான இட ஒதுக்கிட்டுக் கொள்கை எவ்வளவு துரிதமாகக் கைவிடப்படுகிறதோ அவ்வளவுக்கு சாதிகளிடையிலான பூசல் தவிர்க்கப்படுவது சாத்தியமாகும். நான் உயர்ந்த சாதி நீ தாழ்ந்த சாதி என்று சச்சரவிட்டுக்கொள்வதைவிட சமநிலையில் உள்ள சாதிகளே தமக்குள் நீயா நானா என்று சண்டை போட்டுக் கொள்ளும் நிலை தோன்றிவிடும். மாறாக, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்குமானால் சாதிகளிடையே சுமுக உறவு கெடுவதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.
மீண்டும் டோண்டு ராகவன். நான் ஏற்கனவேயே பலமுறை கூறியதுதான். சாதி அமைப்பு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. அதன் உபயோகம் இல்லாமலிருந்தால் அது நீடித்திருக்க இயலாது என்பதுதான் நிஜம். சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலாது எனக் குறிப்பிட்ட எனது பதிவில் உள்ள விஷயங்களை அலட்சியம் செய்ய முடியாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

4/19/2012

அரசியல்வாதிகளும் கார்ட்டூன்களும்

அரசியல்வாதிகள் பயப்படும் ஒரு விஷயம் கார்ட்டூன்கள் மற்றும் நையாண்டி சித்திரங்களே.

சமீபத்தில் எண்பதுகளில் எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, விகடன் அட்டைப்பட ஜோக் ஒன்றில் அமைச்சரையும் எம் எல் ஏ ஐயும் கேலி செய்ததற்காக விகடன் ஆசிரியர் பால சுப்பிரமணியம் மூன்று நாட்கள் சிறைதண்டனை பெற்றார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அந்த ஜோக்:
மேடையில் இருக்கிற இரண்டு பேர்ல, யாரு எம்.எல்.ஏ., யாரு மந்திரி...?

ஜேப்படித் திருடன் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ., முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி இருக்கிறவர்தான் மந்திரி...!





ஆனால் ஒன்றை சொல்லியாக வேண்டும். அரசியல்வாதிகள் கேலிச்சித்திரங்களுக்கு பொங்குவது காலம் காலமாக நடந்து வருகிறது. ஹிட்லரை கிண்டல் செய்து டேவிட் லோ என்னும் கார்ட்டூனிஸ்ட் போட்ட கேலிச்சித்திரங்களுக்கு பொங்கியது ஹிட்லர். அவரது சில கார்ட்டூன்கள் கீழே:





தற்சமயம் மமதா பானர்ஜியின் முறை எனத் தோன்றுகிறது. கல்கத்தா பேராசிரியர் ஒருவரை அரெஸ்ட் செய்யும் அளவுக்கு அது சென்றுள்ளது. அது பற்றி இங்கே பார்க்கலாம்.


அங்கிருந்து ஒரு சாம்பிள்: (மீதி கார்ட்டூன்களை அங்கேயே பார்த்து கொள்ளவும்)


ஒரு சராசரி அரசியல்வாதி தன்னைப் பற்றி மிக உயர்வாகவே நினைத்துக் கொண்டிருப்பவர். அவரை கிண்டல் செய்வதன் மூலம் ஒரு கார்ட்டூனிஸ்ட் அரசியல்வதி அப்படி ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்பதைக் காட்டிவிடுவதை எந்த அரசியல்வாதியாலும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை என்பதே அடிப்படை உண்மை.


அன்புடன்,
டோண்டு ராகவன்

4/08/2012

பார்ப்பான் தமிழனா? புதிய த​லைமு​றை விருதுகள் பற்றி செல்​லையா முத்துசாமியின் உளறல்கள்

செல்லையா முத்துசாமிக்கு எரிகிறது, பாப்பானுக்கு விருது வழங்கி விட்டார்கள் என. அதற்கு பக்கா வயிற்றெரிச்சல் என்பதை விட வேறு காரணம் இருக்க முடியாது.

உமக்கு ஏன் ஐயா எரிகிறது?

//இப்​போது புதியத​லைமு​றை தமிழன் விருதுகளில் 4 பச்​சைப்பார்ப்பனர்கள். இவர்கள் தமிழ​ரே அல்ல என்று எவனாவது புதியத​லைமு​றை​யைக் கண்டித்தீர்களா? (​இனி ​வேறுவழியின்றி ​முகநூலில் மட்டும் கண்டித்ததாக காட்டிக்​கொள்வார்கள்)

பார்ப்பான் ஆண்டாண்டு காலமாக நமது இனஇழிவுக்குக் காரணம் என்கி​றோம். அவ​னை இந்த பி​ழைப்புவாதிகள் எதிரியாக நி​னைப்பதில்​லை. பார்ப்பானின் இந்துமதம் வருண​பேதங்க​ளைக் காக்கிறது என்கி​றோம். இவர்களுக்கு அ​தை எதிர்க்கத் துணிவில்​லை. இதில் ஒருபடி ​மே​லே​​போய் இந்துத்துவ ​வேட்பாளருக்கு ​தேர்தல் பரப்பு​ரையில் ஈடுபட்டார் நாம் தமிழர் என்று ​சொல்லிக்​கொள்ளும் சீமான். இவர் ​தன்​னை ​பெரியாரின் ​பேரன் என்று நாகூசாமல் ​சொல்லிக்​கொள்கிறார். ஆனால் திராவிடத்தால் வீழ்ந்​தோம் என்கிறார்.//

இப்போது ஜாதி வெறியுடன் நடந்து ஹரிஜனக் கொலை/வன்கொடுமைகளைச் செய்பவர்கள் பிசி மற்றும் ஓபிசி மற்றும் பார்ப்பனரல்லாத ஆளும் சாதியினரே. அவர்கள்தான் வருணபேதங்களைக் காக்கிறார்கள். கீழ்வெண்மணியில் கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் நிலச்சுவான்தார் 44 தலித்துகளை உயிருடன் எரித்த செயலை கண்டிக்கத் துப்பில்லாதச் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்னும் கன்னட பலீஜா நாயுடு அதற்கு கம்யூனிஉஸ்டுகளை குறை கூறி ஒரு சொதப்பல் அறிக்கை விட்டது எதில் சேர்த்தி?

சரி அந்தக் கருமாந்திர விஷயங்கள் பற்றி வேணது எழுதியாகி விட்டது. உதாரணத்துக்கு ஒன்று இங்கே.

ஒரு சிறு டைவர்ஷன். பிராமண் ஆற்றல் என்னும் பதிவில் ஜெயமோகன் எழுதியதை இங்கே கோட் செய்கிறேன்.
//தமிழகத்தில் உள்ள பிராமணவெறுப்பு என்பது பிற்படுத்தப்பட்டவர்கள் தங்கள் சொந்தச் சாதிவெறியை மறைக்க, அதன் பழியை மடைமாற்றம் செய்ய, கண்டுபிடித்த ஒரு தந்திரம் மட்டுமே//.

இப்போது செல்லையாவின் வயிற்றெரிச்சல் பற்றி பேசுவோம்.விருது பெற்ற நான்கு பாப்பான்களுக்கு அதற்கான த்குதியில்லை என்றால் அதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். அதை விடுத்து அவர்கள் பார்ப்பனர்கள் ஆகவே தரக்கூடாது என்பதைக் கூற உமக்கு ஒரு அருகதையும் இல்லை. வயிற்றெரிச்சலுக்கு ஜெலூசில் நல்லது என்கிறார்கள். அதை வேண்டுமானால் பாவியுங்கள்.

நான் சமீபத்தில் 1962-63 கல்வியாண்டில் சென்னை புதுக்கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்த சமயம் அங்கு தமிழ்த்துறையின் பேராசிரியர் பாலூர் தூ. கண்ணப்ப முதலியார் அவர்கள். அவருடன் என் தந்தை ஒரு மீட்டிங்கில் டிஸ்கஸ் செய்த விவரத்தை எனது தந்தையா அமரர் நரசிம்மன் அவர்கள் எனக்கு கூறியுள்ளார். கண்ணப்ப முதலியார் எனது தந்தையிடம் பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல எனக்கூறியதும், “தமிழகத்திலேயே பிறந்து, அங்கேயே படித்து, வளர்ந்து அங்கேயே சாகப்போகும் தன்னைப் போன்றவர்களுக்கு தமிழன் என சர்டிஃபிகேட் கொடுக்க முதலியார்களுக்கு ஒரு உரிமையும் இல்லை எனக்கூறி விட்டார். நானாக இருந்திருந்தால் இன்னும் ஒரு வரி சேர்த்து கூறியிருப்பேன். ஆதாகப்பட்டது, முதலியார்களில் பல பேருக்கு தெலுங்குதான் தாய் மொழி. வீட்டில் என்னவோ ஒரு கண்ணறாவித் தெலுங்கு பேசுவார்கள். வெளியில் மட்டும் தமிழ் தமிழ் என போலியாகக் கூச்சல் போடுவார்கள். யார் கண்டது கண்ணப்ப முதலியாரும் வீட்டில் தெலுங்குதான் பேசியிருப்பாரோ என்னவோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

பிற்சேர்க்கை: செல்லையா முத்துசாமியின் உளறல்கள் நிறைந்த எதிர்வினை:

//(இதில் விமர்சிக்கப்பட்டிருக்கும் சாந்தா, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகி​யோர் தமிழர்களல்ல என்ப​தோடு, விருதுக்குத் தகுதியற்றவர்கள். ​மேலும் மற்ற பார்ப்பான்களுக்கும் விருது வழங்கிய​தை விமர்சிக்கக் காரணம் தமிழன் விருது என்று அறிவித்ததனால்தான். புதியத​லைமு​றை விருது என்று அறிவிக்கப்பட்டிருந்தால் நாம் ​கேள்வி ​கேட்கப்​போவதில்​லை. இ​தைக்கூட புரிந்து​கொள்ள இயலாத ​டோண்டு பாப்பான் எந்த வ​கையில் விருதுக்கு தகுதியில்​லை என்று ​கேள்வி எழுப்பியுள்ளான். நமக்கு வயிற்​​றெரிச்சல் என்கிறான். கூட​வே ​​ஜெய​மோக​னையும் து​ணைக்கு அ​ழைத்திருக்கிறான். இந்துத்துவவாதிகள் எதற்​கெடுத்தாலும் எடுத்தாளும் ப​டைப்புகள் ​ஜெய​மோகனு​டைய​வை.)//

பாப்பான் தமிழன் இல்லை எனக்கூற யாருக்கு ஐயா அதிகாரம் இங்கே உண்டு? அதையும் நான் கண்ணப்ப முதலியார் உதாரணத்தில் கூறிவிட்டேனே. சாந்தா மற்றும் சுவாமிநாதன் தமிழரில்லை என்று கூற இந்த செல்லையா முத்துசாமி யார்? அதுதான் எனது இப்பதிவின் அடிநாதம். அது கூட புரியாமல் செல்லையா உளறுகிறார். இந்த அழகில் டோண்டு பாப்பான் கூறுகிறான் என்று ஒருமையில் வேறு பேச்சு. அந்த அடிப்படை மரியாதைகூட தெரியாத செல்லையா எல்லாம் ஒரு மனிதரா?

அம்புடன், (எழுத்துப் பிழை இல்லை)
டோண்டு ராகவையங்கார்

2/16/2012

ஒரு கன்னத்தில் அடித்தால் அடிப்பவனின் இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி அடி

ஒருவர் உன்னை சீண்டினால் அதற்கு ரியேக்ட் செய்யும் சிறந்த முறையை இப்பதிவில் பார்க்கலாம்.

உறங்கிக் கிடக்கும் கிருஷ்ண சர்ப்பத்தை தூண்டும் விதமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த விளம்பரத்தை வெளியிட்டது.



ஹிந்து பத்திரிகை சும்மா இருக்குமா? அதன் விளம்பரங்களை பாருங்கள்.







இதே மாதிரி கோக்கோ கோலாவுக்கும் பெப்சிக்கும் இடையே நடந்த விளம்பர யுத்தங்கள் அமெரிக்காவில் பிரபலமானவை.

இங்கே தமிழ்நாட்டில் நாற்பதுகளில் விகடனுக்கும் கல்கிக்கும் இடையே கூட இம்மாதிரி சொற்போர்கள் நடந்துள்ளன.

ஒரு முறை விகடன் ராஜாஜிக்கு வார்ணிங் கொடுக்க, கல்கி அதை ஒரு கார்ட்டூனாக்கினார். சிங்கத்துக்கு (ராஜாஜி) எலி (விகடன்) வார்ணிங் கொடுப்பது போல இருந்தது அது.

அதே கார்ட்டூனை விகடன் மேற்கொண்டு, சிங்கத்தின் வாலில் ஒரு ஈயை வரைந்து அதற்கு கல்கீஈஈஈ என பெயரிட்டது.

கல்கி இவ்வாறு எழுதினார்.

“இதில் ஒன்று நிச்சயமாகி விட்டது. ராஜாஜி சிங்கம்தான், விகடன் எலிதான், மற்றப்படி அப்படிப்பட்ட சிங்கத்தின் வாலில் ஈயாக இருப்பதில் எமக்கு ஆட்சேபணை இல்லை”

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/13/2012

சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா? அது தேவைதானா?

இந்தப் பதிவு இரு பாகங்களை கொண்டது. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம்.

சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா?
கஷ்டம்தான், முடியவே முடியாது என்றும் சொல்லலாம். முதலில் மாற்று தளத்தில் வந்த கருப்பாயி என்கிற நூர்ஜஹான் என்ற தலைப்பில் வந்துள்ள இப்பதிவிலிருந்து சில வரிகளை பார்ப்போம்.


திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகரத்தின் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் மீனாட்சிபுரம். இக்கிராமத்தில் வாழ்ந்துவந்த தேவந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் 19.2.1981 அன்றும் 27 குடும்பங்கள் 23.5.1981 அன்றும் இஸ்லாம் மதத்தைத் தழுவின. ஏறத்தாழ 1500 பேர் ஒரு குழுமமாக மதம்மாறிய இந்நிகழ்ச்சி அகில இந்தியாவையும் இக்கிராமத்தின் பக்கம் ஈர்த்தது.
இந்துமடாதிபதிகளும், இந்து சமய அடிப்படைவாத இயக்கம் சார்ந்தோரும், அரசியல்வாதிகளும் இக்கிராமத்தை நோக்கி வரத் தொடங்கினர். இது ஒரு படையெடுப்பு போல் அமைந்தது.
///////////////////////////////////////////////////////////////////////////////////

மீனாட்சிபுரம் தேவேந்திரகுல வேளாளர்கள் முஸ்லிம்களாக மாறியதன் வாயிலாக தம் பாதுகாப்புக்கும், சுயமரியாதைக்கும் உத்தரவாதம் செய்து கொண்டனர். இம்மதமாற்றம் நிகழ்ந்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் தமிழ்ச்சமூகம் இந்நிகழ்ச்சியைப் பெரும்பாலும் மறந்துவிட்டது. தற்போது ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற இந்நாவலின் வாயிலாக எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கலை நாவலாசிரியர் அன்வர் பாலசிங்கம் வெளிக்கொணர்ந்துள்ளார்.

மீனாட்சிபுரத்திற்கு அருகில் உள்ள ‘கலங்காதகண்டி’ ஊரைச் சார்ந்த அன்வர் பாலசிங்கம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமியராக மதம்மாறிய இவர் அதே ஊரில் தம்மைப்போன்றே புதிய மதம்மாறிய தம் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்துக் கொண்டவர். மீனாட்சிபுரம் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வருபவர். மீனாட்சிபுரம் முஸ்லிம் ஜமாத்தின் உறுப்பினர்.

நாவலின் கதை

காமாட்சிபுரத்தில் (மீனாட்சிபுரத்தில்) முதல் முதலாக மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்களில் ஒன்று கருப்பசாமி என்பவரின் குடும்பம். மதமாற்றத்தை அடுத்து தம்பெயரை காதர் என்றும், தன் மகள் கருப்பாயியின் பெயரை நூர்ஜஹான் என்றும் மாற்றிக் கொண்டவர். தம் மகளை உயர்கல்வி படிக்க வைத்த இவரால் உரிய வயதில் அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. காரணம், இவர் ‘நவ்முஸ்லீம்’ (புதிய இஸ்லாமியர்), அதுவும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்திலிருந்து மதம்மாறியவர் என்பதுதான்.

தனக்கு மணம் முடிக்க மணமகனைத் தேடி அலையும் தந்தையின் துயரத்தைப் பொறுக்க இயலாது நாற்பது வயதைக் கடந்த அவரது மகள் நூர்ஜஹான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். மகளின் பிரிவைத் தாங்க இயலாத காதரும் அவரது மனைவியும் நஞ்சுகுடித்து இறந்து போகிறார்கள். காதரின் கொழந்தியாள் ‘பன்னீர்’ மதம் மாறாதவள். ஆனாலும் காதரின் மகள் நூர்ஜஹான் மீது அன்பைப் பொழிபவள். நூர்ஜஹானின் பிரிவைத் தாங்க இயலாது கிணற்றில் விழுந்து அவளும் தற்கொலை செய்து கொள்கிறாள்.

அடுத்தடுத்து நிகழும் இந்த நான்கு தற்கொலைகள், நாவலை வாசிப்பவனின் உள்ளத்தில் சோக உணர்வைத் தோற்றுவிக்கின்றன. நூர்ஜஹானின் தற்கொலை, அவளது பெற்றோர் மற்றும் சித்தி பன்னீரின் தற்கொலை, அவர்களது சவ அடக்கம் என அனைத்து நிகழ்வுகளும் ஒரே நாளில் நடந்து முடிந்துவிடுகின்றன. இந்த ஒரு நாள்தான் நாவல் நிகழும் காலமாகும். ஆனால் உரையாடல்கள் வாயிலாக முப்பதாண்டுகால நிகழ்வுகளையும், மதம் மாறியோர் எதிர்கொள்ளும் ஓர் முக்கியப் பிரச்சனையையும் இந்நாவல் பேசுகிறது.
////////////////////////////////////////////////////////////////////////////////////////

மதமாற்றம் என்பது ஒரு சமூகத்தின் எதிர்க் குரலாக அமைந்தாலும், காலப்போக்கில் சில புதிய பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கும் என்பதை இந்நாவல் வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்வகையில் இந்நாவலின் மையப்பிரச்சனையாக நவ்முஸ்லிம்களது பெண்பிள்ளைகளின் திருமணம் அமைகின்றது.

தமது சாதி அடையாளத்தையும் துறந்து இஸ்லாத்தை தழுவியவர்களை அன்புடன் வரவேற்ற பரம்பரை இஸ்லாமியர்கள், திருமண உறவு என்று வரும்பொழுது தம் அடையாளத்தைத் துறக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நவ்இஸ்லாமியர்களின் பூர்வீக சாதி அடையாளத்தை மறக்கவும் இல்லை. நவ்இஸ்லாமியர்களின் உரையாடல்கள் வாயிலாக இவ்வுண்மையை நாவலாசிரியர் ஆங்காங்கே பதிவு செய்து உள்ளார்.

நவ்முஸ்லிமான ‘முஸ்தபாவாத்தியார்’ எம்.ஏ., பி.எட்., படித்தவர். தம் திருமணப் பத்திரிக்கையில் தம் தந்தையின் பெயருக்கு பின்னும், தன் பெயருக்குப் பின்னும் ‘இராவுத்தர்’ என்று போட்டு அச்சிட்டுவிட்டார். அவர் திருமணம் செய்த பெண், பரம்பரை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமணப் பத்திரிக்கையை பார்த்த பெண் வீட்டார் ‘நவ்முஸ்லிமெல்லாம் ராவுத்தராயிட்டா அப்புறம் ராவுத்தர் என்னாவதுன்னு’ (பக்கம் 56) கேட்டு அசிங்கப்படுத்தினர்.

மீனாட்சிபுரத்து நவ்முஸ்லிமான ‘உசேன்’ என்பவர், வெளியூர் பள்ளிவாசல் ஒன்றில் ‘அசரத்’ ஆகப்பணிபுரிகிறார். இஸ்லாமியராக மதம்மாற விரும்பிய தலித் இளைஞர் ஒருவரைச் சந்திக்க விரும்பினார். அப்போது அசரத்து, நாம அங்கயெல்லாம் போகக்கூடாது. அந்தப் பையன் எஸ்ஸி யாக்கும். அதனால் அவன் இங்க வரட்டும். நம்ம அங்க போனமுன்னா சரிவராது என்கிறான் பரம்பரை முஸ்லிம் இளைஞன் ஒருவன் (பக்கம் 58). இதற்கு விடையாக அசரத் கூறியதும், அதை அவன் ஏற்க மறுத்துக் கூறிய பதிலும் நாவலில் இவ்வாறு இடம் பெறுகின்றது.

ஏத்தா... இப்படிப் பேசக்கூடாது. இந்த உலகத்தையே அல்லாஹ்தான் படைச்சான்னு சொல்லிகிட்டு அதுலயும் மனுசங்கள்ல நாம எஸ்ஸி, பீஸின்னு பிரிக்கலாமான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொல்லுறான். நீங்க என்ன வேணா சொல்லுங்க அசரத்து, அவங்க அவங்கதான்... நாம நாமதாங்கிறான் (பக்கம் 58).

தான் உரையாடிக் கொண்டிருக்கும் அசரத், மீனாட்சிபுரத்தில் மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திலிருந்து வந்த ‘நவ்முஸ்லிம்’ என்பது அந்த இளைஞனுக்குத் தெரியவில்லை. பரம்பரை இஸ்லாமியர் ஒருவர் நடத்திவந்த தேநீர் விடுதியில் நவ்முஸ்லிம்களின் நிலையை
‘‘கம்பிளி தைக்கா முக்குக்கு போனாத்தான் தெரியுது நான் பள்ளனா... பாயான்னு. அங்க சந்தை முக்கில கடை வச்சிருக்கிற முல்லாபாய்ட்ட போயி டீ தாங்க பாய்ன்னு கேட்டமுன்னா... நமக்குனு ஒரு டீ வரும். அவருக்கு தெரிஞ்ச வித்தியாசமெல்லாம் பேரு மட்டும்தான்’’ என்று குறிப்பிடுவது அதிர்ச்சியான செய்தி. அரபு நாடுகளிலிருந்து கோடிகோடியாக மீனாட்சிபுரத்தில் பணம் கொட்டியதாக வெளியூர்க்காரர்கள் நம்ப, அதற்கு மாறான நிலையே அங்கு நிலவியுள்ளது. நவ்முஸ்லிம்களின் பெயரைச் சொல்லி நிதி திரட்டப்பட்டதையும், அதில் கையாடல் செய்த அவ்வட்டாரத்தின் பரம்பரை முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர்குறித்த சில செய்திகளும் நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன. (பக்கம் 24-25, 43-46, 59-61).

இவையெல்லாம் போகிறபோக்கில் என்பது போன்ற பதிவுகள். நாவலின் மையச் செய்தியாக இடம் பெறுவது, நவ்முஸ்லீம்கள் வீட்டு இளம் பெண்களுக்கு மணமகன் கிடைக்காது திருமணம் தடைப்பட்டு நிற்பதுதான். நாவலின் தொடக்கத்தில் இடம் பெறும் நூர்ஜஹானின் மரணக்கடிதம் இந்த அவலத்தை மிக உருக்கமாக எடுத்துரைக்கிறது. நாவலின் வளர்ச்சிப்போக்கில் இச்சிக்கல் பல்வேறு கதைமாந்தர்களின் கூற்றாக எடுத்துரைக்கப்படுகின்றது.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////

கீரனூர் ஜாகிர்ராஜாவின் நாவல்களில் அடித்தள இஸ்லாமியர்களின் வாழ்வு இடம் பெற்று ஒரு வேறுபாடான இஸ்லாமியர் சமூகம் அறிமுகப்படுத்தப்படுவது போல், இந்நாவலும் வேறுபாடான ஓர் இஸ்லாமிய சமூகத்தை அறிமுகம் செய்கிறது. முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் இது ஓர் விவாதத்திற்குரிய நாவல்.

1981-இல் மீனாட்சிபுரத்தில் நிகழ்ந்த மதமாற்றத்திற்கான சமூகக் காரணிகளையும், மதமாற்ற நிகழ்வுகளையும் நன்றாக உணர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றவர் நாவலாசிரியர். ஆனால் ‘இவையெல்லாம் கடந்த கால வரலாற்றின் நிகழ்வுகள்’ ஆகிவிட்டன. மதமாறியவர்களின் வாழ்வியல் சிக்கல்கள், நிகழ்காலம் சார்ந்தவை. இதையே நாவலின் கருவாக இவர் எடுத்துக் கொண்டுள்ளார்.

இதனால் கடந்த கால நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதை அவர் தவிர்த்துள்ளார். தாமும் ஒரு நவ்முஸ்லிம் என்பதன் அடிப்படையில் தன் சமூகத்தின் நிகழ்கால அவலத்தை இந்நாவலில் நன்றாகவே பதிவு செய்துள்ளார்.

பொதுவாக, குழும மதமாற்றங்கள் ஒரு கலகச் செயலாக அல்லது எதிர்க்குரலாக நிகழும். அத்துடன் மதம் மாறியவர்களுக்குத் தற்காலிகமாகவேணும் ஒரு பாதுகாப்புவளையமாக அமையும் தன்மையது. மீனாட்சிபுரம் மதம் மாற்றமும் இத்தகையதுதான். ஆனால் ஒரு கட்டத்தில் இதன் தேவை முடிந்துபோய், புதிய சிக்கல்கள் உருவாகின்றன. மீனாட்சிபுரம் தேவேந்திரக்குல வேளாளர்கள் மேற்க்கொண்ட, இஸ்லாமிய மதமாற்றம், சில சமூகக் கொடுமைகளிலிருந்து விடுபட துணை நின்றுள்ளது என்பது உண்மை. ஆனால், ஒரு கட்டத்தில் தேக்கநிலை அடைந்து இறுதியில் தடைகள் ஆகிவிட்டது என்பதே நாவல் விடுக்கும் செய்தி.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////

இஸ்லாமும் சாதியும் பற்றி ஜெயமோகனின் பதிவிலிருந்து சில வரிகள்:
இஸ்லாமுக்குள் சாதி இல்லை என அவர் எப்படி நம்பினார் என்று கேட்டேன். சாதி என்ற சொல் ஜாத என்ற வேர்ச்சொல் கொண்டது. பிறப்பு என்று பொருள். பிறப்பு சார்ந்த குல,குடி, இனக்குழு அடையாளம் இல்லாத மக்கள் உலகில் எங்குமே இல்லை. நவீன ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்தான் குலம்,குடி சார்ந்த அடையாளம் சென்ற இருநூறாண்டுக்காலத்தில் மெல்லமெல்ல மழுங்கியுள்ளது.

ஆனால் அங்கும் இனம் சார்ந்த அடையாளங்கள் திட்டவட்டமானவை. அமெரிக்க சமூகத்த்தின் உச்சியில் ஆங்கிலோ சாக்ஸன் இனம்தான் இன்றும் உள்ளது. யூதர்கள், இத்தாலியர்கள், ஹிஸ்பானியர்கள், சீனர்கள், கறுப்பர்கள் எனத் தெளிவான இனப்பிரிவினை அங்குள்ளது. அது உண்மையில் ஒரு நவீன சாதியடுக்குத்தான். சென்ற நூற்றாண்டில் இந்தியாவில் இருந்தது போல அங்கே ஒவ்வொரு இனமும் தங்களுக்குரிய குடியிருப்புப்பகுதிகளில் தனித்தனியாகத்தான் வாழ்கிறார்கள். பொதுவான புழங்குதளத்தில் ஒரு சுமுகமான உறவிருக்கிறதென்பதைத் தவிர்த்தால் அவர்களுக்குள் தனிப்பட்ட, குடும்ப உறவுகள் ஏதுமில்லை. ஆம், அக்ரஹாரங்களும் சேரிகளும் புதிய வடிவில் அங்கே உள்ளன.

அரேபிய சமூகத்தின் இனக்குழு அடுக்குகளைப்பற்றி இன்று எந்த ஒரு சமூகவியல் நூலிலும் வாசிக்கலாம். அதன் உச்சியில் இன்றும்கூட குறைஷிக்குலமே உள்ளது, நபி அக்குலத்தில் பிறந்தாரென்ற தனி அடையாளத்துடன்.
இஸ்லாம் பரவிய எந்த நாட்டிலும் அங்குள்ள இனக்குழு வேறுபாடுகள் இல்லாமலானதில்லை. இன்னும்கூட மன்னராட்சியும், பாரம்பரியப் பதவிமுறைகளும் நிலவும் இஸ்லாமிய நாடுகளில் இனம்,குடி,குலம் போன்ற பிறப்படையாளங்களைத் தவிர்ப்பது சாத்தியமே அல்ல என்பதே உண்மை.மனிதர்கள் அவர்களின் பாரம்பரியத்தாலன்றி உழைப்பாலும் திறனாலும் அடையாளப்படுத்தக்கூடிய நவீனக்கருத்துக்கள் வளரக்கூடிய சூழல் கொண்டஒரு சமூகத்திலேயே சாதி போன்ற பிறப்படையாளம் காலப்போக்கில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. ஐரோப்பாவை விட்டால் இந்தியாவில்தான் அதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்திய இஸ்லாமிய சமூகம் எக்காலத்திலும் அதற்கான பிறப்படிப்படையிலான பிரிவினைகளைப் பேணி, அப்பிரிவினைகளுக்குள் கடுமையான வெறுப்புகளை வளர்த்துக்கொண்டு செல்வதாகவே இருந்துள்ளது. சுன்னி-ஷியா என்ற பிரிவினைகூட இன்று நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல, பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் மாறிமாறிக் கொன்றுகுவித்துக்கொண்டிருக்கிறார்கள். கேரளத்தில் எழுநூறாண்டுகளுக்கு முன்னால் மதம் மாறியவர்கள் இன்றும்கூட முஜாஹிதுகள் என்று சுன்னிகளால் சற்றே தள்ளித்தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் ரீதியாகக்கூட அவர்கள் ஒன்றுபடமுடியவில்லை. தமிழகத்தில் இன்றும்கூட பட்டாணிகளும் மரைக்காயர்களும் தங்களை ஒரே சமூகமென உணர்வதில்லை.
////////////////////////////////////////////////////////////////////////////////////////

இப்போது டோண்டு ராகவன். எனது இப்பதிவுக்கு நான் அதிகமாக இசுலாமிய உதாரணங்களை காட்டியதன் நோக்கமே இசுலாமில் சாதி இல்லை என்ற ஒரு பொது புத்திதான். மனித இனம் உருவாகி வரும்போதே சாதிகள் உருவாகி விட்டன. அவற்றை மதங்கள் வரையறுத்துள்ளன என்று வேண்டுமானால் கூறலாம், அவ்வளவுதான்.

இது இப்படியிருக்க என்னவோ பாப்பானே சாதிகளுக்குக் காரணம் என பல பதிவர்கள் கும்மி அடிப்பதுதான் சகிக்கவில்லை. அவ்வாறு கும்மி அடிப்பவர்களை ஊன்று கவனித்தால் தத்தம் சாதி சங்கங்களில் முக்கிய பணியார்றுபவராகக் கூட இருக்கலாம். ஆளை விடுங்கள்.

இப்போது பதிவின் இரண்டாம் பகுதிக்கு வருவோம். சாதியை ஒழிப்பது தேவைதானா? இல்லை என்றுதான் நான் கூறுவேன். அவற்றை ஒழிக்க நினைப்பது மனித இயற்கைக்கு புறம்பானது. ஒரு செட் சாதி அடையாளங்களை அழித்தால் அது வேறொரு செட்டாக சில ஆண்டுகள் கழித்து வரப்போகிறது, மீனாட்சிபுரத்தில் நடப்பதுபோல.

பொருளாதாரக் காரணங்களால் சாதிக்கொடுமைகள் அழிந்தால் நல்லதுதான். எந்த சாதியும் உயர்ந்தது அல்ல, எதுவும் தாழ்ந்ததும் அல்ல என்ற எண்ணப் போக்கை மேற்கொள்வது நலம். முடியுமா? தெரியவில்லை. முடிய வேண்டும் என்று மட்டும் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது