Showing posts with label டோண்டுவின் அனுபவங்கள். Show all posts
Showing posts with label டோண்டுவின் அனுபவங்கள். Show all posts

7/07/2012

பதிவர் தருமி அவர்களுக்கு நன்றி

அவரது இப்பதிவைப் பார்த்ததும்தான் எனக்கு இந்த நிகழ்ச்சி பற்றி தெரிய வந்தது. முதற்கண் அவருக்கு என் நன்றிகள் உரித்தாகுக. கூகளில் தேடி நிகச்சியின் வீடியோவை பிடித்தேன். 22-06-2012 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியை கீழே எம்பெட் செய்கிறேன். அந்த வாரம் முழுக்கவே அக்கிரகாரம் ஸ்பெஷல் என எண்ணுகிறேன். பார்ப்போம்.

 

பைதிவே அவரது பதிவின் முதற்பகுதி பற்றி நோ கமெண்ட்ஸ். அந்த விளம்பரத்தின் முழு பின்புலன் தெரியாமல் நான் கூற ஒன்றும் இல்லை.

மற்றப்படி ஜூனியர் சூப்பர் சிக்கர் நிகழ்ச்சி அற்புதமாக இருந்தது.

தருமி அவர்கள் தனது பிடித்தமின்மையை வெளிப்படையாகவே கூறிவிட்டார். அதே போல எனக்கு பிடித்ததையையும் நான் கூறிவிட்டுப் போகிறேனே.

என்ன செய்வது தருமி சார். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கர்நாடக சங்கீதத்தை ஆதரிப்பவர்களில் அதிக பட்சம் பார்ப்பனர்களே. ஆகவேதான் அக்கிரகாரம் ஸ்பெஷல் இயற்கையாகவே சோபித்தது. பார்ப்பனர்கள் தமது குழந்தைகளுக்கு இசை கற்பிப்பதில் காட்டும் அக்கறையை மற்ற சாதியினர் செய்ய வேண்டாம் என யார் தடுத்தது?

தமிழ்ழிசை சம்பந்தமாக ஜெயமோகன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து சில வரிகளை இங்கு கோட் செய்கிறேன். மீதி வரிகளை அங்கு போய் படித்துக் கொள்ளுங்கள்.

சமீபத்தில் ஓர் விவாதக்குழுமத்தில் நண்பர் ஒருவர் தமிழிசை பற்றி ஒரு கருத்தை எழுதியிருந்தார். உண்மையில் அவர் ஒரு சிறிய குறிப்பு தான் எழுதியிருந்தார். அது பொதுவான ஒன்று. அதில் இசை முதல் சமகால அரசியல் வரை எல்லா தளத்திலும் நம் பொதுப்புத்தி சார்ந்து முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன. அதில் ஒன்று சென்னை சங்கீத சபாக்களுக்கு எதிரான குமுறல். திருவிழாக்களிலும் கல்யாணவீடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த இசையை சபாக்கள் மூலம் பிராமணர் அழித்தார்கள் என்றார் நண்பர்.
அந்த சபாக்களால் முன்னிறுத்தப்பட்ட தமிழ்நாட்டின் பிராமண இசைவாணர்கள் அனைவரும் தமிழ்மேல் காழ்ப்புகொண்டவர்கள், தமிழிசையை அழிக்கும் நோக்கம் கொண்டவர்கள், தமிழைப்பாட திட்டமிட்டு மறுத்து மாற்றார் இசையை முன்னிறுத்துபவர்கள் என்பது அந்த தரப்பு. தமிழிசைவாணர்கள் என அவர் நினைக்கும் மதுரைசோமு போன்றவர்களை சபாக்கள் திட்டமிட்டு புறக்கணித்தன என்கிறார்.
நான் அவருக்கு கொஞ்சம் கோபமாக பதில் எழுதினேன். என் முதல் கேள்வியே இதுதான். பிராமணர் தமிழிசையை அழிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம், நீங்கள் பேணவேண்டியதுதானே? உங்கள் கல்யாணவீடுகளிலும் திருவிழாக்களிலும் மரபிசை பாடக்கூடாதென யார் தடுக்கிறார்கள்? மரபிசைக்காக நீங்கள் உங்கள் குடும்பங்களில் யாருக்காவது இசையை கற்றுத்தருகிறீர்களா என்ன? இசைக்காக என்ன செய்தீர்கள்? நீங்கள் மரபிசையை கைவிட்டமைக்கும் ’பாப்பான்’ தான் காரணமா? பொதுமேடை ஒன்றில் ஒரு கருத்தை முன்வைப்பதற்கு முன் அதற்கான அடிப்படை வாசிப்பைச் செய்ய வேண்டாமா? 

இப்போது நிகழ்ச்சி பற்றி மேலும் பேசுவேன்.

அடுத்தாத்து அம்புஜம் பற்றிய பாடல் சூப்பர் தூள். சக போட்டியாளர்களில் ஒருத்தியான அப்பெண் அதற்கு தன்னிடத்தில் அமர்ந்தவாறே பிடித்த அபிநயம் பலே ஜோர். சவுக்கார் ஜானகி கெட்டார் போங்கள்.

பலர் பிராமண பாஷை பேச கஷ்டப்பட்டாலும் முயற்சி பாராட்டத் தக்கதே. கீப் இட் அப்.

அன்புடன்,
டோண்டு ராகவன்  

4/30/2012

எனக்கும் இசாக் அசிமோவுக்கும் உள்ள ஒற்றுமை - 2

இதன் முந்தையப் பதிவு போட்டு சற்றே  (2000 சொச்சம்) நாட்கள் ஆகி விட்டன. இப்போ என்னவாயிற்று எனக்கேட்கிறான் முரளி மனோகர். பொறு அப்பனே கூறாமலா போகப்போகிறேன். மேலும் நான் வேறு நீ வேறா என்ன?

ஐசக் அசிமோவ் ஒரு டிராமாவுக்கு போயிருக்கிறார் தன் மனைவியுடன். நாடகம் முடிந்ததும் அவர்கள் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அதே ஹோட்டலுக்கு அந்த நாடகக் குழுவினரும் வந்திருந்தனர். அவர்களுடன் பேச வேண்டும் என அசிமோவின் மனைவுக்கு நப்பாசை. “எனது மனைவிக்கு என் பிரசித்தம் மேல் அபார நம்பிக்கை”என விரக்தியுடன் எண்ணிய அசிமோவ் வேறு வழியின்றி தன் மனைவியுடன் சென்று அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் பயந்தது போலவே அசிமோவ் என்னும் பிரசித்தி பெற்ற எழுத்தாளரை அவர்கள் அறிந்திருக்கவிலை. நான் அசிமோவ் எனக் கூறிக்கொள்ள, அதுக்கு இப்போ என்ன செய்யணுங்கறீங்க என்னும் முகபாவத்தில் இருந்திருக்கின்றனர்.

அசிமோவுக்கு முகத்தில் டன் டன்னாக அசடு வழிய ஆரம்பித்திருக்கிறது. பேசாமால் பின்வாங்க எண்ணும் போது திடீரென நாடகக் குழுவின் தலைவர் அசிமோவின் மனைவியைப் பார்த்து “ நீ ஜேனட்தானே, இங்கே எங்கே வந்திருக்கே எனக் கேட்க ஆரம்பித்திருக்கிறார். பிறகுதான் அவரது அத்தையின் நாத்தனார் பெண் ஜேனட் என்பதையும் கூறினார்.

பிறகென்ன, இருவரும் தெரிந்தவர்கள் என்னும் முறையில் ஜேனட்டும் அவரும் பேச ஆரம்பித்தனர். ஜேனட் அசிமோவை தனது கணவர் என அறிமுகப்படுத்த அவரையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றி அசிமோவ் எழுதுகிறார், “ஒரு பிரசித்தி பெற்றவரது கணவராக இருப்பதன் அருமையை அறிந்து கொண்டேன்” என.

இப்போ என் கதை. சமீபத்தில் 1981-ல் ஐடிபிஎல்-ல் சேர்ந்த போது எனது மனைவி சென்னையில் இந்தியன் வங்கியில் வேலை செய்து வந்தார். எங்கள் ஐடிபிஎல்-ன் அக்கவுண்ட் இந்தியன் வங்கியிலும் இருந்திருக்கிறது. எங்கள் சம்பளங்களை கணக்கில் ஏற்றி எங்களுக்கு மாதா மாதம் சம்பளம் கொடுப்பதற்கெனவே இந்தியன் வங்கியின் விரிவாக்க சேவை கவுண்டர் எங்கள் ஐடிபிஎல் டவுன்ஷிப்பில் இருக்கிறது.

அந்த கவுண்டரின் தலைமை அதிகாரி என் மனைவிக்கு தெரிந்தவர். ஆகவே என் மனைவி சென்னையிலிருந்து ஒரு அக்கவுண்ட் திறக்கும் படிவத்தில் தன் பெயரையும் என் பெயரையும் நிரப்பி என்னிடம் கொடுத்து அனுப்பினார். நானும் குர்காவுனுக்கு வந்ததும் அந்த அதிகாரியைப் போய் பார்த்து அக்கவுண்ட் ஓப்பன் செய்தேன். என் மனைவியின் பெயரும் கையெழுத்தும் இருந்ததால் எனது அக்கவுண்ட் ஸ்டாஃப் அக்கவுண்டாக நிர்ணயிக்கப்பட்டு வட்டியும் அதிகமாகத் தந்தார்கள்.

பிறகு என் மனைவி தில்லிக்கே மாற்றிக் கொண்டு வந்து விட்டார். .எனக்கு ஸ்டாஃப் ஆகவுண்ட் ஸ்டேட்டஸ் கிடைத்ததால் குர்கான் இந்திய வங்கிக் கிளைக்கு நான் எப்போது சென்றாலும் எங்கிருந்தோவெல்லாம் என்னை விஷ் செய்வார்கள். என்னுடன் கூட வந்திருக்கும் சக ஐடிபிஎல் அதிகாரிகளுக்கு அது எப்போதுமே வியப்பைத் தோற்றுவிக்கும்.

இதைத்தான் செலிப்ரட்டியின் கணவனாக இருப்பதில் உள்ள சௌகரியம் என இசாக் அசிமோவைப் போலவே நானும் கூறிக் கொள்கிறேன்..

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/24/2012

எந்த வேளையில் சாதியின் அவசியம் பற்றி பதிவு போட்டேனோ, தெரியவில்லை

சற்று நேரம் முன்னால் பிரபாகரன் என்பவர் ஃபோன் செய்தார். சற்று நேரம் கழித்து அஞ்சா சிங்கம் செல்வின் என்பவரும் ஃபோன் செய்தார்.

இருவருமே சொன்னது என்னவென்றால் நாளை காலை 9 மணிக்கு சத்யம் தொலைகாட்சியில் ஒரு கலந்துரையாடல் என்றும், லைவாக ஒளிபரப்பப்படும் என்றும் அதற்கு நானும் வரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. நானும் ஒத்துக் கொண்டேன். பத்ரி அவர்களும் கலந்து கொள்கிறார்.

தலைப்பு: மக்கள் கணக்கெடுப்பு சாதிவாரியாகவும் செய்வது சரியா? நான் சரியே என வாதிடப் போகிறேன். நேரமிருப்பின் பார்க்கவும்.

எந்த வேளியில் சாதிகளின் அவசியம் பற்றி பதிவு போட்டேனோ தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/03/2012

பெப்பே பெப்பெப்பே

சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் நான் எட்டாப்பு படிக்கையில் எங்கள் ஆசிரியர் ஜெயராம ஐயங்கார் ஒரு கதை சொன்னார். அது பின்வருமாறு.

ஒரு கொலை வழக்கில் குற்றவாளி கேசவனுக்கு சார்பாக வக்கீல் பராங்குசம் ஆஜரானார். அரசு தரப்பு கேஸ் ரொம்பவுமே ஸ்ட்ராங். ஆகவே அவர் ஒன்று செய்தார். அதாவது குற்றவாளியிடம் “உன்னை என்ன கேள்வி கேட்டாலும் நீ பெப்பே பெப்பெப்பே எனச் சொல்லவும். நீ பைத்தியம் என வாதாடி நான் விடுதலை வாங்கித் தருகிறேன். அவ்வாறே அவனும் செய்ய அவனுக்கு விடுதலை கிடைத்தது.

அடுத்த நாள் அவன் பராங்குசத்தை பார்க்க வந்தான். அவரும் அவனிடம் ஃபீஸ் கேட்க அவனோ பெப்பே பெப்பெப்பே என்றான்.

இக்கதை ஏன் நினைவுக்கு வர வேண்டும். எதேச்சையாக நான் அறுபதுகளில் படித்த “The anatomy of a murder" என்னும் நாவலின் திரையாக்கம் பர்றி இப்போதுதான் கூகளில் பார்த்தேன். அப்படியே எங்கள் எட்டாப்பு ஆசிரியர் சொன்ன ஒன்லைன் ட்ரீட்மெண்ட்தான் இங்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/31/2011

ஆஸ்பத்திரி வாசம்

கெட்டதிலும் நல்லது நடந்தது
மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு என்ற பதிவின் தொடர்ச்சியாகவும் இதை வைத்துக் கொள்ளலாம், அதன் பின் இது நடந்தது என்னும் அடிப்படையில். ஆனால் விஷயம் சற்றே சிக்கலானது.

முதலில் எட்டு நாட்கள் போல ஆஸ்பத்திரியில் தங்கியதில் உடல் பருமன் குறைய, அதனால் அதுவரை கண்பர்ர்வைக்குப்படாத ட்யூமர் ஒன்று இடது தொடையில் வெளிப்பட்டது. ஏதோ சாதாரண வீக்கம் என சத்ய நாராயணாவிடம் போக அவர் அதை பார்த்த போதே புன்னகையை தொலைத்து கேட் ஸ்கேனுக்கு ஆர்டர் செய்ய, அதன் ரிசல்ட் வந்ததும்தான் நிலைமை சற்றே சீரியஸ் என எனக்கே பட்டது. ஐந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி, 23-ஆம் தேதி அன்றுதான் ட்யூமரை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். டாக்டர் ரவிச்சந்திரன் என்னும் புகழ் பெற்ற ஓன்காலஜிஸ்ட்தான் அதை செய்தார். நேற்று டிஸார்ஜ்.

ஆஸ்பத்திரியில் எல்லாமே படுக்கையில் என ஆயிற்று. சிறுநீர் கழிக்க கதீட்டர், காயத்திலிருந்து கெட்ட நீர் வடிவதை மானிட்டர் செய்யும் ட்ரைன் என்றெல்லாம் அமர்க்களப்படுத்தி விட்டார்கள். பெட்பான் ஒத்துக் கொள்ளாததால் அடல்ட் டையப்பரை வேறு மாட்டி விட்டனர். கண்றாவி. ஆனால் என்ன செய்வது.

இப்போது டிஸ்சார்ஜ் ஆனாலும் கெட்ட நீர் வடிகால் பாத்திரம் அப்படியே உள்ளது. ஆகவே வீட்டை விட்டு வெளியேறுவது அசாத்தியமாயிற்று. வரும் செவ்வாயன்று அதை எடுப்பதாக ஐடியா. பார்ப்போம், கடவுள் விட்ட வழி. பிறகு இருக்கவே இருக்கின்றன தொடர் சிகிச்சைகள்.

இடது காலை நேராகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பெல்ட் போட்டுள்ளார்கள். ஆகவே ஒரு காலை இழுத்து இழுத்துத்தான் நடக்க வேண்டும். கூடவே கையில் டிரைனையும் ஏந்திக் கொள்ள வேண்டும்.

ஈரோட்டு பிடிவாதக் கிழவர் அக்காலகட்டங்களில் தன் மூத்திரச் சட்டியை சுமந்து செல்ல வேண்டியிருந்தாலும், மன உறுதியுடன் தன் வேலையை தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்வரை செய்தார் அவர். Hats off to him!!!

எனக்கும் அதே மனவுறுதியை அளிக்குமாறு என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பான் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டிக் கொள்கிறேன்.

நடுவில் ராஜேஷ் கன்னா என்னும் ஒரு அன்பர் எனக்கு ஃபோன் செய்து ஏன் எனது பதிவுகள் வரவில்லை எனக் கேட்டார். அவருக்கு அப்போது காரணத்தைக் கூறினேன். இப்போது இப்பதிவு.

நண்பர்கள் யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/12/2011

உன்மத்த நிலையை அடைதல்

நண்பர் ஜெயமோகனது இடுகையான யோகமும் பித்தும் என்ற பதிவு எனக்குள் எழுப்பிய எண்ணங்களே இப்பதிவு. அதிலிருந்து முதலில் சில வரிகள்.

பிரக்ஞையை மழுங்கடிக்கக்கூடிய சில அம்சங்கள் உண்டு. முக்கியமானது சீரான தாளம். பிரக்ஞை என்பது பெருமளவுக்குத் தாளத்தால் கட்டுப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தாளத்தைக் கேட்டுக்கொண்டிருந்தால் நம்முள் பிரக்ஞையாக ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் அந்தத் தாளத்திற்கு இயைப அமைவதைக் காணலாம் –ரயில்தாளத்தில் இதைப் பெரும்பாலானவர்கள் உணர்ந்திருப்பார்கள். தாளத்துடன் ஒளியும் காட்சிகளும் இணைக்கப்பட்டிருந்தால் அது இன்னும் தீவிரமாகிறது. ஒரு தாளத்துக்கு ஏற்பப் பத்துப்பேர் நம்மைச்சுற்றி ஆடினால், அந்தத் தாளத்துக்கு ஏற்ப வண்ணவிளக்குகள் மின்னினால் நம்மை அந்தத் தாளம் ஆட்கொள்கிறது. அது பிரக்ஞைநிலையை மழுங்கடிக்கிறது.

அதை சமீபத்தில் 1968-ல் வெளி வந்த ஷிகார் என்னும் இந்தி படத்தின் இப்பாடல் காட்சியில் காணலாம். ஆஷா, பரேக், பேலா போஸ் என்னும் இரு நாட்டிய நாரீமணிகளின் அந்த ஆட்டத்தில் பாடல் வரிகள் அற்புதமான ஹிந்தியின் ஒரு வட்டார வழக்காக அமைந்துள்ளன. என்னைப் போன்றவர்களுக்கு அது கூடுதல் போனஸ். நிற்க.

அப்பாடலில் டிரம்ஸ் இசை ஆஷா பரேக்கை படிப்படியாக ஆட்கொள்வதை இப்பாடல் காட்சியில் அற்புதமாக காட்டியுள்ளனர். அவரது அவஸ்தையை தர்மேந்திரா உற்று நோக்குவதும் கதையின் போக்குக்கு உதவி செய்வதாகவே அமைந்துள்ளது. பை தி வே அப்படத்தை நான் பார்க்கவில்லை. அப்பாடலை கீழே காணுங்கள்.



அதே போல சமீபத்தில் 1964-ல் வெளி வந்த நவராத்திரி படத்தில் வரும் கூத்துப் பாடலில் ஆரம்ப வரிகள் என்னை ஒரு மோன நிலைக்கே கொண்டு செல்லும். அப்பாடலின் வீடியோ கிடைக்கவில்லை. யாருக்காவது கிடைத்தால் சுட்டி தாருங்கள் அப்பு.

நண்பர் காளிராஜ் அவர்கள் தயவால் அக்காட்சியின் வீடியோவை கீழே எம்பெட் செய்கிறேன். என்ன ஆரம்ப வரிகள் மிஸ்ஸிங். பரவாயில்லை. காளிராஜ் அவர்களுக்கு என் நன்றி.



மற்றப்படி நான் சினிமா படங்கள் சில ஏன் இன்னும் மனதில் நிற்கின்றன? என்ற தலைப்பில் நான் வெளியிட்ட செண்டிமெண்டுகள் இங்கும் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

காதலிக்க நேரமில்லை: சமீபத்தில் 1964-ல் வெளிவந்த இப்படத்தை பார்க்கும்போதெல்லாம் விடுமுறை மூட் வந்து விடுகிறது. கதையிலும் ராஜஸ்ரீயும் காஞ்சனா கோடை விடுமுறைக்குத்தானே வீட்டுக்கு வருகிறார்கள். நான் கூட அப்படத்தை எனது முதல் ஆண்டு தேர்வுகள் முடிந்து கடை நாள் மாலை காட்சியில்தான் அப்படம் பார்த்தேன். ஸ்ரீதர் கூறியிருந்தது போல ஒருவரும் அப்படத்தில் அழவில்லை. சோகக் காட்சியே லேது. எல்லாமே ஜாலியாகப் போயிற்று. "என்னப் பார்வை இந்தப் பார்வை, இந்தப் பார்வை" பாடல் படமாக்கப்பட்டதுதான் அப்படத்தின் கடைசி ஷூட்டிங் என கேள்விப்பட்டேன்.

கலங்கரை விளக்கம்: இப்படத்தை நான் பார்க்கவில்லை. எனது முரட்டு வைத்தியம் - 1 பாதிப்பில் நான்கு ஆண்டுகள் படம் பார்க்காது இருந்தேன். அதில் மிஸ் செய்த படங்களில் இதுவும் ஒன்று. ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் Vertigo (starring James Stewart, kim Novak) படத்தின் தழுவல் இப்படம். படம் ரொம்ப சுமார்தான். ஆனால் அதன் பாடல்கள் என்னை மிகவும் பாதித்தன. "பொன்னெழில் பூத்தது"என்ற பாடல் மனத்துள் இன்னும் ஒலிக்கிறது. இதனுடைய இன்னொரு பாடல் "காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன், அதை கேட்டு வாங்கிப் போனாள் அந்த கன்னி என்னவானாள்" பாட்டு நான் மாலை நேரத்தில் பரீட்சையில் தோல்வியடைந்த வெறுப்பில் கடற்கரையில் பைத்தியம் போல உலவும்போது ட்ரான்ஸிஸ்டர்களிலிருந்து நான் போகுமிடமெல்லாம் என்னைத் தொடர்ந்து வந்தது. அப்பாட்டைக் கேட்கும் போது சமீபத்திய 1965 இன்னும் சமீபத்தில் வருகிறது.


அன்புடன்,
டோண்டு ராகவன்

12/06/2011

ஹிந்தி - தமிழ் மொழிபெயர்ப்பு

ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
ஹிந்தி/உருது மொழிகளை நான் சித்தி மொழி என்றே குறிப்பிடுவேன். அதாவது அன்னையின் தங்கை. மௌஸீ என்பார்கள். அதன் பொருள் தாயைப் போன்றவள் என்பதாகும். ஒரு குழந்தைகளின் அன்னை இறந்து விட்டால், அன்னையின் தங்கையையே அவர்களது அப்பாவுக்கு கட்டி வைப்பதும் ஒரு பழக்கமே. அதாவது தனது அக்காவின் குழந்தைகளை மாற்றாந்தாய் போலன்றி உண்மையாகவே அன்புடனும் அக்கறையுடனும் பார்த்துக் கொள்வாள் என்பதே அதன் தாத்பர்யம். நிற்க.

அவ்வாறு சித்தி மொழி எனக்கூறிவரும் நான் இத்தனை ஆண்டுகாலத்தில் ஒரு முறை கூட ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்ததில்லை. சான்ஸ் கிடைக்கவில்லை அல்லது அவ்வாறு வந்த வாய்ப்புகளையும் தவிர்த்தேன். காரணம் ஹிந்தியில் உள்ள எழுத்துக்களே. க, ச, ட, த ஆகியவை தலா நான்கு உச்சரிப்பில் உள்ளன. அவற்றில் எனக்கு எப்போதுமே தகராறுதான்.

இருப்பினும் ஒரு பிரபல வங்கியின் ரூரல் துறையிலிருந்து ஒரு மொழிபெயர்ப்புக்கான வாய்ப்பு வந்தது. அந்த வங்கியின் கிராம சேவைகளை காட்டும் வண்ணம் போஸ்டர்கள், படக்கதைகள் ஆகியவை. இம்முறை துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டேன். அடாடா மொழிபெயர்ப்பு வேலை தன்னைப் போல ஸ்மூத்தாக சென்றது. ஹிந்தியிலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு இய்ல்பாகவே வந்தது.

என்ன, சில மாறுதல்கள் செய்ய வேண்டியிருந்தது. சூரஜ் தமிழில் முருகன் ஆனார், அவர் மனைவி ரூபா வள்ளி என அழைக்கப்பட்டார், அவர்கள் மகள் ஜூஹி மேகலாவானாள். அவர்கள் ஊர் ராம்புர் புதூராயிற்று. கண்ஷ்யாம் கணேசன் ஆனார்.

இந்த வேலையில் மொழி பெயர்ப்பை விட DTP வேலைதான் அதிக. அதையும் செய்தேன் என வைத்துக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் நல்ல அனுபவம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/01/2011

மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு

வடிவேலு சொல்வது போல சென்ற செவ்வாய் 22.11.2011 அன்று எல்லாம் நல்லபடியகத்தானே போய் கொண்டிருந்தது. காலையில் வீட்டம்மாவுடன் வீட்டெதிரில் இருந்த உழவர் சந்தைக்கு சென்ற போதும், வரவிருக்கும் நிகழ்ச்சிகள் பற்றி ஒரு ஐடியாவும் இல்லைதானே.

வீட்டம்மா காய்கறிகள் வாங்க நான் பணம் பட்டுவாடா செய்யும் வேலையை மற்றும் மேற்கொண்டிருந்தேன். திடீரென உடலில் ஏதோ மாறுதல் வந்தது போன்ற உணர்வு. மயக்கம் வரப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்து ஜாக்கிரதையாக அருகில் உள்ள காலியான ஒரு ஸ்டாலில் அமர்ந்ததுதான் தெரியும். நினைவுக்கு வரும்போது என்னைச் சுற்றி என் வீட்டம்மாவும் மர்றவர்களௌம் என்னை நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்த வண்ணம் இருந்தனர். யாரோ ஒரு கடைக்கார புண்ணியவான் எனக்கு ஹார்லிக்ஸ் புகட்டிக் கொண்டிருந்தார்.

தினமும் என்னை அப்பாவென்றும், என் வீட்டம்மாவை அம்மா என அழைத்து வரும் அந்த எளிய மக்களின் முகத்தில் உண்மையான தவிப்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன். சும்மா சொல்லக் கூடாது அந்த நிலையிலும் மன உறுதியுடன் என்னை வீட்டுக்கு பத்திரமாக அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்ட என் வீட்டம்மா என் மதிப்பில் இமயமென உயர்ந்தார். சத்தியமாகவே சொல்கிறேன், அவர் நிலையில் நான் இருந்திருந்தால் என் கோழை மனது என்னை உறுதியுடன் செயல்பட விட்டிருக்காது.

வீட்டுக்கு வந்ததுமே, என்னை அவர் அருகில் உள்ள ஹிந்து மிஷன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இசிஜி எடுத்து, ஒரு நாள் அவதானிப்பில் வைத்திருந்தனர். அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியே, எனது இப்பதிவின் தலைப்புக்கு இன்ஸ்பிரேஷன். ஒரே நொடியில் என்னிடமிருந்த செல்பேசி, கடிகாரம், மோதிரம், பணம் ஆகியவை என்னிடமிருந்து எடுக்கப்பட்டு என் வீட்டம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஒரு தருணத்தில் என் மனது எண்ணாதவற்றையெல்ல்ம் எண்ணீயது. மரணத்தின் தருவாயில் இருப்பவன் எந்த வகைச் செல்வனாயினும் ஓட்டாண்டியாகத்தான் இவ்வுலகை விட்டு செல்கிறான்.

இப்போது பின்னால் பார்க்கும் போது நான் கூறுவது மிகைப்படுத்தலாகவே இருக்கட்டும். இருப்பினும், அத்தருணத்தில் அந்த எண்ணமே டாமினேட் செய்தது என்பதுதான் நிஜம். செவ்வாயன்றே ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த நான் மறுபடியும் வியாழனன்று உடல்நலம் சீர்க்கெடவே டாக்டர் சத்தியநாராயணாவின் ஸ்ரீசக்ரா ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். இம்முறை எனக்கு எம்ஆர்ஐ ஸ்கேன், பல முறை இசிஜி, ஸ்கல் எக்ஸ்ரே, எக்கோ டெஸ்ட் எல்லாம் செய்ய்ப்பட்டன. எல்லாம் நல்லபடியாக முடிந்து இன்றுதான் நல்லபடியாக டிஸ்சார்ஜ் ஆனேன்.

இப்போது எனக்கு வேறுவகை அனுபவம் ஏற்பட்டது. எனது முக்கிய வாடிக்கையாளருக்கு நான் தினசரி அளித்து வந்த மின்னஞ்சல்களின் மொழிபெயர்ப்பு வேலை பிளாக் ஆயிற்று. விஷயம் அறிந்து விரைந்து வந்த எனது வாடிக்கையாளர், கவலை வேண்டாம் எனவும், நான் ஆஸ்பத்திரியில் இருக்கும் வரை, ஜெர்மன் மின்னஞ்சல்களுக்கு தானே கூகள் டிரான்ஸ்லேட் மூலம் கண்டெண்ட் அறிந்து, அவற்றுக்கான பதில்களை ஆங்கிலத்திலேயே போட்டுக் கொள்வதாக அவர் கூறியதும்தான் நானும் நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஆக நாம் இல்லையென்றாலும் உலகம் இயங்கும், நாம் ஒன்றும் நாமே நினைத்துக் கொள்வது போன இன்றியமையாதவர்கள் இல்லை என்பதும் நான் இப்போது நேரடியாக கண்டுணர்ந்த இன்னொரு உண்மை.

எது எப்படியோ, இதை பதிவாக போட்டதும்தான் மனம் நிம்மதி அடைந்துள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/23/2011

பயம் பறக்கும் சக்தியையும் கொடுக்கும்

இது ஒரு மீள்பதிவு. இது வருவதற்கான காரணம் தமாஷானது.

முதலிலெல்லாம் பிளாக்கரில் ஒரு புது பதிவை இடும்போது தலைப்பின் கீழே லிங்க் என்று ஒரு கட்டம் வரும். அதில் நாம் ஏதாவது குறிப்பிட்டால் அது பின்னால் அக்குறிப்பிட்ட பதிவுக்கு சுட்டியாக செயல்படும். ஆனால் பிறகு அந்த லிங்கை போடுவதற்கு பல கட்டுப்பாடுகள் வந்தன. ஆகவே நான் யதார்த்தமாக போட்ட பல பழைய லிங்குகள் காரணமாக குறிப்பிட்டப் பதிவை ஹோம் பக்கத்திலிருந்து அதன் மேல் க்ளிக் செய்து வரவழைக்க இயலாது போயிற்று.

இதை எனக்கு மா. சிவகுமார்தான் கண்டுபிடித்து கூறினார். அதன் பிறகு சமயம் கிடைக்கும் போதெல்லாம் பழைய பதிவுகளிலிருந்து அந்த லிங்குகளை காலி செய்வது நடந்தது. அதற்குள் பல நூறு பதிவுகள் வந்ததில் எல்லாவற்றுக்கும் போக சோம்பேறித்தனம். ஆகவே இக்காரியம் மெதுவாகவே நடந்தது.

இதன் நடுவில் இன்னொரு கூத்தும் நடந்தது. டிஃபால்டாக டிராஃப்ட் பிளாக்கரில்தான் பதிவுகள் திறந்ததில், பதிவு போடும்போது டைட்டிலுக்கு கீழே இருந்த லிங்க் கட்டம் பதிவு போடும் சமயத்தில் காணக்கிடைக்கவில்லை.

இப்பதிவுக்கு வேறு ஏதோ காரணத்துக்காக வந்ததில், ஹோம் பக்கத்திலிருந்து அப்பதிவின் மேல் க்ளிக் செய்து வர இயலவில்லை. சரி எடிட் செய்யலாம் என்றால் லிங்க் கட்டம் தெரியவில்லை. ஆகவே டிராஃப்ட் பக்கத்தின் டிஃபால்டை விலக்கி எடிட் செய்ய முற்பட்டால் ஆது தெரிந்தது. பிறகென்ன, அதை நீக்கியாயிற்று.

இப்போது பதிவுக்கு போவோமா.

நான் டில்லியில் ஜூலை 2001 வரை சுமார் 20 வருடங்கள் வசித்தேன். கடைசி மூன்று வருடங்கள் அகில இந்திய வானொலியின் வெளிநாட்டுப் பிரிவின் கீழ் இயங்கும் பிரெஞ்சு ஒலிபரப்புச் சேவையில் அறிவிப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பவராக வேலை செய்தேன்.

விடியற்காலை 1.15 முதல் 2.00 வரை நேரடி ஒலிபரப்பு. நடுவில் 1.20 முதல் 1.30 வரை பிரெஞ்சில் செய்திகள். இரவு சுமார் 10.30க்கு ஏ.ஐ.ஆர். வண்டி வீட்டுக்கு வந்து அழைத்துப் போகும். போன உடனே கையில் ஆங்கிலச் செய்தியைக் கொடுத்து விடுவார்கள். அதை நாங்கள் பிரெஞ்சில் மொழி பெயர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒலிபரப்பு முழுவதும் பிரெஞ்சு மொழியில்தான். முதல் ஒரு நிமிடம் சுய அறிமுகம் மற்றும் அன்றைய ஒலிபரப்பு பற்றிய அறிவிப்பு. பிறகு ஒரு சினிமாப் பாடல். 1.20க்கு செய்திகள் என்று நிகழ்ச்சிகள் ஒரு இறுக்கமான கட்டுக்கோப்பில் செல்லும்.

ஒரு நாள் இரவு வண்டி வர வெகு நேரம் ஆகி விட்டது. வானொலி நிலையம் செல்லும்போது மணி 12.55. ஆங்கிலச் செய்தி தயார். மொழி பெயர்க்க ஏது நேரம்? புலம்பக்கூட நேரம் இல்லை. நான் மட்டும் அன்று ஒலி பரப்பில் இருந்தேன். செய்தி விமரிசனம் தனி. நல்ல வேளையாக அது டேப் செய்யபட்டு விட்டது. டேப்பை மெஷினில் பொறுத்தியாகி விட்டது. வேக வேகமாக தலைப்புச் செய்திகள் மட்டும் பிரெஞ்சில் மொழி பெயர்த்து வைத்துக் கொண்டேன்.

அதற்குள் நேரம் 1.14 ஆகி விட்டது.

மற்ற செய்தித் தாள்களை வரிசைப் படுத்தி அடுக்கிக் கொண்டேன். இப்பொழுது நேரம் 1.15.

அறிவிப்பு செய்தேன், பிறகு முதல் பாட்டைப் போட்டேன். 1.20 வரை மனதைத் தயார் செய்துக் கொண்டேன்.

1.20. தலைப்புச் செய்திகள் வாசிக்கப்பட்டன. முதல் தாளை கையில் எடுத்துக் கொண்டேன். கண்கள் பார்த்தன ஆங்கில வாக்கியங்களை, ஆனால் வாய் வாசித்தது பிரெஞ்சு மொழியில். ஒன்றன் பின் ஒன்றாய் எல்லா தாள்களையும் படித்தப் பிறகு மறுபடியும் எழுதி வைத்து கொண்டிருந்தத் தலைப்புச் செய்திகள். மணி 1.30. பிறகு ஒரு பிரச்சினையும் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று கொடுக்கப்பட்ட அத்தனை தாள்களையும் படிக்க முடிந்தது. சாதாரணமாக எழுதி வைத்து கொள்ளும்போது ஒன்றிரண்டு தாள்கள் விட்டு போய்விடும். செய்திகள் முடிந்த பிறகு ஒரே குஷிதான்.

எல்லாம் முடிந்து கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று பொறுப்பை ஒப்படைத்த போது அவ்வறை அதிகாரி மிகவும் பாராட்டினார். எல்லாம் முடிந்து வெளியே வந்தப் பிறகுதான் லேட் ரியேக்ஷனாக வியர்த்துக் கொட்டியது.

பயம் பறக்கும் சக்தியையும் கொடுக்கும் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அது உண்மை என்பதை உணர்ந்து கொண்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்.

11/27/2010

பள்ளிகளில் தர்ம ஹிந்தி வகுப்புகள்

நான் சமீபத்தில் 1954 முதல் 1962 வரை திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் படித்தபோது, ஹிந்தி வகுப்புகள் ஒரு ஜோக்காகவே பார்க்கப்பட்டு வந்தன.

ஆறாம் வகுப்பிலிருந்து ஹிந்தி மற்றும் ஆங்கிலப் பாடங்கள் ஆரம்பிக்கும். அதற்கு ஈராண்டுகளுக்கு முந்தியிலுருந்தே என் அன்னை எனக்கு இரு மொழிகளையும் கற்பித்து வந்தார். ஆகவே டீச்சர் எழுத்துக்களை வேகமாக போர்டில் எழுத நான் சுலபமாக அவற்றை எழுத முடிந்தது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை என் அன்னை இலக்கணத்துடன் கற்றுத் தந்ததால் அம்மொழிக்கான தேர்வுகள் எனக்கு எப்போதுமே கஷ்டமாக இருந்ததில்லை.

ஆனால் ஹிந்தியை பொருத்தவரை இன்னொரு கூத்தும் நடந்தது. அதன் தேர்வில் பாஸ் செய்ய வேண்டியதில்லை. ஆகவே அதன் மதிப்பெண்கள் ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு செல்லும் விஷயத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதனாலேயே அவ்வகுப்புகள் தர்ம ஹிந்தி வகுப்புகள் என அன்புடன் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன.

தேர்வுகளில் ஒரு விதி கண்டிப்பாக அமுலாக்கப்பட்டது. அதாவது அரை மணி வரை ஹாலில் இருந்தாக வேண்டும். அரை மணி பெல் அடித்ததும் பேப்பரை மடித்துக் கொடுத்து விட்டு வெளியேறலாம். இதற்கு பிராக்டிகலாக ஒரு காரணம் இருந்தது. அதாவது லேட்டாக வரும் மாணவர்கள் அரை மணிக்குள் வந்தாக வேண்டும். ஆகவே வெளியே செல்லும் மாணவர்கள் உள்ளே வருபவர்களுக்கு பேப்பரை லீக் செய்யக் கூடாது என்ற எண்ணமே இந்த ஆணைக்குக் காரணம்.

சாதாரணமாக தேர்வுகளிலிருந்து அரை மணிக்கு பிறகு உடனே யாரும் செல்ல மாட்டார்கள்தான். பெரும்பான்மையினர் கடைசி நிமிடம் வரை எழுதுவார்கள் அல்லது எழுதியதை ரிவைஸ் செய்வார்கள். பல முறை கடைசி மணி அடித்ததும் “எழுதுவதை நிறுத்துங்கள்” என்ற அறிவிப்புடன் மேற்பார்வையாளர்கள் ஒவ்வொரு பெஞ்சாக சென்று பேப்பர் கலெக்ட் செய்வார்கள். அதற்கு ஒரு நிமிடம் முன்வரைக்கும் எழுதியவர்களும் உண்டு.

ஆனால் ஹிந்தி தேர்வு மட்டும் அதற்கு விதிவிலக்கு. சாதாரணமாக மாணவர்கள் தங்கள் பெயர் வகுப்பு விவரங்களை எழுதியதும் மோட்டுவளையைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருப்பார்கள். சிலர் பெரிய மனது பண்ணி வினாத்தாளையே நகல் எடுப்பார்கள். அதிலும் ஸ்பெல்லிங் பிழைகள் இருக்கும் என்பது வேறு விஷயம். ஆனால் உண்மை என்னவென்றால் அவ்வாறு நகல் எடுப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் கொடுக்கப்பட்டது.

அரை மணி நேர பெல் அடிக்கப்பட்டதுமே அவரவர் அவசரம் அவசரமாக வெளியேறுவார்கள். தாழ்வாரங்கள் மாணவர்களின் சலசலப்புகளால் நிரம்பியிருக்கும். ஐந்து நிமிடங்களுக்குள் அமைதி நிலவும். மேற்பார்வையாளர்களும் பேப்பர்களை கட்டி வைத்துவிட்டு அவற்றை உரிய இடத்தில் ஒப்படைத்து விட்டு காப்பி குடிக்க செல்வார்கள்.

இதுதான் நான் படித்தபோது ஹிந்தி தேர்வுகளில் பொதுவான நிலை. ஆனால் ஒரே ஒரு மேற்பார்வையாளர்தான் மாட்டிக் கொள்வார். அவர்தான் டோண்டு ராகவன் தேர்வு எழுதும் ஹாலில் பணி புரிபவர். எல்லோரும் வெளியே சென்று விட்ட நிலையில் நான் மட்டும் அமர்ந்து சீரியசாக எழுதிக் கொண்டிருப்பேன்.

நான் ஏழாம் வகுப்பு படித்தபோது ஒரு முறை தோசி என மாணவர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பாஷ்யம் ஐயங்கார் என்னும் ஆசிரியர்தான் அவ்வேலைக்கு நியமிக்கப் பட்டிருந்தார். அவருக்க்கு தானும் காப்பி சாப்பிடப் போக முடியவில்லையே எனக் கவலை. அதனால் எரிச்சல். “சீக்கிரம் எழுதி முடியேண்டா கடன்காரா” என்று அலுப்புடன் பலமுறை கூறிப் பார்த்து விட்டார். அதற்குள் டிகிரி காப்பியை குடித்து விட்டு காப்பி நெடி மூச்சுடன் எவரெஸ்ட் என்னும் ஆசிரியர் (ஆறடிக்கும் மேல் உயரம், பெயர் ஸ்ரீனிவாசாசார்லு) அவரிடம் வந்து “என்ன பாஷ்யம் ஸ்வாமி என்ன இன்னும் காப்பி குடிக்கவில்லையா” என வெறுப்பேர்ற, “இந்த கடன்காரன் என்னை விடமாட்டேன் என்கிறான்” என அவர் அழாக்குறையாகக் கூற, அவர் மேல் பரிதாபப்பட்டு அவரை காப்பி குடிக்க அனுப்பி விட்டு இவர் இங்கு மேற்பார்வையாளராக அமர்ந்தார்.

அதற்குள் எங்கள் ஹிந்தி ஆசிரியர் வி.ஜி. சேஷாத்ரி ஐயங்கார் நான் பரீட்சை எழுதும் கண்கொள்ளாக் காட்சியை பார்க்க வந்தார். அவர் மிகவும் கோபக்காரர், தவறு செய்தால் அடிபின்னிவிடுவார். இருப்பினும் அவர் பாடத்தில் நான் சின்சியராக எழுதுவதை அவர் மகிழ்ச்சியுடன் பார்த்தார். எனக்கும் மகிழ்ச்சிதான்.

கேள்வித்தாளில் ஒரு வினா தவறாக அச்சடிக்கப்பட்டதைக் காட்டி என் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டேன். எவெரெஸ்டின் முறை இப்போது டென்ஷன் ஆவதற்கு. அவரை சேஷாத்ரி ஐயங்கார் அனுப்பிவிட்டு ரிலாக்ஸ்டாக தானே அமர்ந்து கொண்டார்.

இந்த தர்ம ஹிந்தி கூத்து பள்ளியிறுதி வகுப்பு வரை நடந்தது. கடைசி ஆண்டு பரீட்சைகளின் போது (சமீபத்தில் 1962-ல்) தலைமை ஆசிரியர் ராஜகோபால ஐயங்கார் ப்ரேயர் ஹாலில் வைத்து ஹிந்தி பரீட்சைக்கு தவறாமல் வருமாறு மாணவர்களைக் கேட்டுக் கொண்டார். பேப்பர் காலியாகத்தான் இருக்கும், ஆனால் அதை திருத்தும் ஆசிரியருக்கு உரிய ஃபீஸ் சென்றுவிடுமே என நகைச்சுவையாகக் கூறினார்.

நான் பள்ளியில் ஹிந்தி படிக்கும்போதே தட்சிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபையிலும் ஹ்ந்தி கற்றதாலும், என் அன்னையின் தயவாலும் அம்மொழியில் ஆளுமை பெற முடிந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/10/2010

Dress code - குடியரசு தலைவர் மாளிகையில் டோண்டு ராகவன்

பிப்ரவரி 2000 ஆண்டு நான் தில்லியில் இருந்தபோது ஒரு துபாஷி வேலைக்கு என்னைக் கூப்பிட்டிருந்தார்கள். மொராக்கோவிலிருந்து ஒரு வணிக தூதுக்குழு அந்த நாட்டின் வணிகத்துறை மந்திரியின் தலைமையில் வந்திருந்தது. அதற்கு பிரெஞ்சு துபாஷி தேவை. அதற்காக என்னை அழைத்திருந்தார்கள்.

அக்குழு வரச்சொன்ன இடத்துக்கு போய் சேர்ந்ததுமே என்னை ஒரு காரில் ஏற்றி அழைத்து சென்றார்கள் ராஷ்ட்ரபதி பவனுக்கு. அங்கு குடியரசு தலைவர் கே. ஆர். நாராயண் தன்னை சந்திக்க வந்த மொராக்கோ மந்திரிக்கு விருந்தளித்தார். பெரிய மேஜையை சுற்றி அவர், அவரது மனைவி, பிரதமர் வாஜ்பேயி, ராம் விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் அமர்ந்திருந்தனர். நாராயணன் அவர்கள் அருகில் மொராக்கோ மந்திரியின் மனைவி அமர அவர்கள் நாற்காலிகளுக்கு நடுவில் சற்றே பின்தள்ளி மொராக்கோ வெளியுறவு அமைச்சகத்திலிருந்து வந்த மொழிபெயர்ப்பாளர், மேஜைக்கு எதிர்ப்பக்கத்தில் மொராக்கோ மந்திரி திருமதி நாராயணன் அவர்கள் நடுவில் சற்றே பின்னால் வைக்கப்பட்ட நாற்காலியில் இந்தியத் தரப்பு துபாஷி டோண்டு ராகவன். மொராக்கோ மந்திரியிடம் நான் முதலிலேயே பிரெஞ்சில் பேசுமாறும், மொழிபெயர்ப்பு செய்யவே நான் வந்துள்ளேன் எனவும் கூறிவிட்டேன். விருந்து பாட்டுக்கு நடந்தது. எல்லோரும் உண்டனர், இரு துபாஷிகளும் வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாயம். விருந்து முடிந்து எல்லோரும் போனதும் இரண்டு துபாஷிகளுக்கும் அத்தனை சர்வர்களுமாக சேர்ந்து அன்புடன் விருந்து பரிமாறினர், அதே ஐட்டங்கள் எங்களுக்கும் போடப்பட்டன.

ஆனால், விருந்துக்கு முன்னால் நடந்ததுதான் சுவாரசியமான நிகழ்ச்சி. இப்பதிவின் முக்கியப் பொருளும் அதுவே.

மாளிகைக்குள் சென்றதும் என்னை முதலில் நேர்காணல் செய்தது அம்சமான ஒரு சுமார் 26-வயது ஃபிகர். சரளமான ஃபிரெஞ்சில் பேச ஆரம்பித்தார். வெளியுறவு மந்திரி அலுவகத்தில் அசிஸ்டண்ட் செக்ரடரி அவர், ஐ.எஃப்.எஸ். படித்தவர். நானும் அதே மொழியில் பேச அவருக்கும் எனது ஃபிரெஞ்சு மொழியாளுமையில் திருப்தி ஏற்பட்டது.

பிறகு என்னை ஏற இறங்க பார்த்தவர் மொழிபெயர்ப்பாளர்கள் சூட், கோட், டை எல்லாம் அணிந்திருக்க வேண்டுமே அதை என்னிடம் யாரும் சொல்லவில்லையா எனக்கேட்க, நான் குடியரசு மாளிகைக்கு வரப்போவதே அங்கு வந்த பின்னால்தான் எனக்கு தெரிந்தது என்றதும் யோசனையில் ஆழ்ந்தார். எனக்கு இந்த சூட் டை எல்லாம் அலர்ஜி. வேண்டுமானால் நான் அங்கிருந்து சென்றுவிடட்டுமா என நம்பிக்கையுடன் கேட்க, அவர் மாற்று ஏற்பாடுகள் செய்ய நேரமில்லை என்றும், என்னை மாதிரி விஷயம் தெரியாமல் வருபவர்களுக்காகவே கோட் டை எல்லாம் வைத்திருப்பதாகக் கூறி என்னிடம் அவற்றை தந்தார். டை கட்ட எனக்குத் தெரியும் என்பதை காட்டிக் கொள்ளாது நான் பாவ்லா காட்ட, அவரே எனக்கு டையையும் கட்டிவிட்டார். பிறகு கோட் அணிந்து சென்றேன். அதன் பிறகுதான் டின்னர், மேலே சொன்னபடி.

ஆனால் டின்னருக்கு வந்திருந்த வாஜ்பேயி, ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் இந்திய முறைப்படியே உடை அணிந்திருந்தனர். ஆந்திராவிலிருந்து ஒரு எம்.பி. பஞ்சக்கச்ச வேட்டி அணிந்து வந்தார். அவர்களுக்கெல்லாம் ட்ரெஸ் கோட் கிடையாது போல. என்ன செய்வது, அதுதான் வாழ்க்கை.

கோட் மற்றும் டையை அப்பெண்மணியிடம் திருப்பி அளிக்கும்போது அவரிடம் அவரே இவ்வளவு அழகாக ஃபிரெஞ்சு பேசக்கூடியவராக இருக்கும் நிலையில் என்னை ஏன் கூப்பிட்டார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் தனது ஸ்டேட்டசுக்கு அது ஒத்துவராது எனக்கூறிவிட்டார். என்ன இருந்தாலும் துணைச்செயலாளர் அல்லவா. அவர் கூறியதிலும் தவறில்லைதான்.

பிறகு வணிகத்துறை அமைச்சகத்துக்கு சென்றோம். அப்போது மந்திரி முரசொலி மாறன். எனக்கு அவருக்கும் மொராக்கோ தூதுக்குழுவுக்கும் இடையில் தமிழ்-பிரெஞ்சு துபாஷியாக செயல்படலாம் எனப்பார்த்தால் அன்றைக்கென்று அவர் வரவில்லை. துணைமந்திரி ஒருவர்தான் வந்திருந்தார். அவரிடம் ஆவலாக ஹிந்தியில் மொழிபெயர்க்கட்டுமா எனக்கேட்க அவர் ஆங்கிலத்திலேயே பேசுமாறு கூறிவிட்டார். எனக்கு ஏமாற்றம்தான். என்ன செய்வது. வாடிக்கையாளர் சொல்வதே வேதவாக்கு (The customer is always right).

எனக்கு ஒரு சந்தேகம். வெள்ளைக்காரன் நம்நாட்டை விட்டுப் போய் அறுபத்தி மூன்று ஆண்டுகள் ஆனாலும் இந்த மாதிரி ட்ரெஸ் கோடுகள் வைத்திருக்க வேண்டுமா? ஆனால் இந்த நிகழ்வைப் பொருத்தவரை பிரச்சினை இல்லைதான். தில்லியின் குளிருக்கு அது தேவைதான். நானே ஷு, முழுக்கை சட்டை மற்றும் முழுக்கை ஸ்வெட்டர்தான் போட்டிருந்தேன். ஆகவே கோட் டை அணிவதில் பிரச்சினை இல்லைதான். இருப்பினும் மே மாத தில்லி வெயிலில் ஒரு வாடிக்கையாளர் ஃபுல் சூட் அணிந்து ஜெர்மானியரை வரவேற்க என்னை அழைத்து சென்றால், வந்தார் அந்த வெளிநாட்டுக்காரர் அரை டிராயர் டீ ஷர்ட் அணிந்து. நான் சற்றே திரும்பி என் புன்முறுவலை மறைத்துக் கொண்டேன்.

சீதோஷ்ண நிலைக்காக வெள்ளைக்காரன் கோட் அணிகிறான், அவன் ஊரில் பிச்சைகாரனும் சூட் போடுகிறான். நமக்கென்னெ கேடு? ஏன் இந்த அடிமை புத்தி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/25/2010

பிஸ்மில்லாஹ்! - இன்ஸா அல்லாஹ்! - மாஷா அல்லாஹ்! - சுப்ஹான் அல்லாஹ்!

சென்னைக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் மெரீனா பீச்சுக்கு சென்ற தருணங்கள் கொஞ்சமே. அதிலும் அலைகளில் ஆசைதீர கால்களை நனைத்துக் கொண்ட தருணங்களை கைவிரல்களில் எண்ணி விடலாம்.

நேற்று குடும்பத்துடன் பீச்சுக்கு சென்றிருந்தோம். திடீரென என்ன தோன்றியதோ, பீச்சுக்கு போகலாம் என தீர்மானித்து எனது காரை வரவழைத்தேன். காந்தி சிலைக்கு அருகில் காரை நிறுத்திவிட்டு நான், என் வீட்டம்மா, என் மகள் ஆகிய மூவரும் கடலுக்கு சென்றோம். வெகு நாட்களுக்கு பிறகு மணலில் காலடிகள் அழுந்த சென்றது நன்றாகவே இருந்தது. சிறிது நேரம் கழித்து மனைவியும் மகளும் கரைக்கு சென்று மணலில் உட்கார நான் ஆசை தீர இன்னும் சிறிது நேரம் அலைகளில் நின்றேன். கடல் நீருடன் பளபளவென ஒரு அட்டை மிதப்பதை பார்த்து அதை பாய்ந்து எடுத்தேன். (என்ன இருந்தாலும் எனது சிறுவயது திறமைகள் மறையவில்லைதான். அவையாவன, அலை வந்து மூடும் முன்னமேயே மணலுக்குள் மறைய முயலும் சிப்பிகளை தாவித் தோண்டி எடுத்தல், நண்டுகளை துரத்தி உள்ளங்கையால் அவற்றை அறைந்து கொல்லுதல் ஆகியவை).

அந்த அட்டையில் பல இசுலாமிய வாசகங்கள் காணப்பட்டன. அதன் ஒருபக்கத்தில் ஆயத்துல் குர்ஸி வாசகங்கள்:


Allahu la ilaha illa huwa, Al Haiyul Qaiyum La ta'khudhuhu sinatun wa la
nawm lahu ma fi as samawati wa ma fil 'ard Man dhal ladhi yashfa'u 'indahu
illa bi idhnihi Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhitunabi
shai'in min 'ilmihi illa bima sha'a Wasi'a kursiyuhus samawati wal ard wa la
ya'uduhu hifdhuhuma wa Hu wal 'Aliyul Adheem
Allah! There is no god but He - the Living, The Self-subsisting, Eternal. No slumber can seize
Him Nor Sleep.His are all things In the heavens and on earth. Who is there can intercede In
His presence except As he permitteth?He knoweth What (appeareth to His creatures As)
Before or After or Behind them. Nor shall they compass Aught of his knowledge Except as He
willeth. His throne doth extend Over the heavens And on earth, and He feeleth No fatigue in
guarding And preserving them, For He is the Most High. The Supreme (in glory).
(Al-Baqarah 2: 255)

அல்லாஹ்- அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (அல்குர்ஆன்: 2:255)

இதன் ஆடியோவை இங்கே கேட்கலாம்.

இன்னொரு பக்கத்திலோ அனைத்து நேரமும் அல்லாஹ்வின் நற்சிந்தனைகள்:
எதையும் செய்ய ஆரம்பிக்கும்போது: பிஸ்மில்லாஹ்!
எதையும் செய்ய நினைக்கும்போது: இன்ஸா அல்லாஹ்!
நற்செய்தி கேள்விப்படும்போது: மாஷா அல்லாஹ்!
எதையும் ஆச்சரியத்துடன் புகழும்போது: சுப்ஹான் அல்லாஹ்!
இன்னும் பல. அட்டையை பத்திரமாக எடுத்து வந்துவிட்டேன். அதை வைத்துத்தான் இப்பதிவு. இதைப் போடுவதற்கென்றே எனக்கு அது கடலலையில் எதேச்சையாகக் கிடைத்தது போல தோன்றியது. ஆகவே இப்பதிவு.

தில்லியில் இருந்தபோது கேபிள் டிவி இணைப்பின் உபயத்தால் பாகிஸ்தான் டிவி நிகழ்ச்சிகள் பார்க்க முடிந்தது. அதில் வரும் உருது செய்திகளை தேனினும் இனிய உருது மொழியை கேட்பதற்காகவே அவதானிப்பேன். ஆரம்பத்திலேயே செய்தி வாசிப்பவர் BISMILLAH-IR-REHMAN-IR-RAHIM (In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful - அதீத கருணையும் ஆழ்ந்த இரக்கமும் கொண்ட அல்லாவின் பெயரால்) என கம்பீரமாக ஆரம்பிப்பதைக் கேட்கும்போது அரபு மொழியின் இனிமை புலப்படும் (கடவுள் விருப்பம் அதுவானால் அதையும் கற்க ஆசை).

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/24/2010

மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் டோண்டு ராகவன் குற்றவாளியாக நின்றபோது

சமீபத்தில் 1962 செப்டம்பர் 14-ஆம் தேதி இரவு ஏழரை மணியளவில் சென்னை டி-1 போலீஸ் ஸ்டேஷன் போலீசாரால் அப்பக்கம் சைக்கிளில் வந்த நான் வாலாஜா ரோடில் நிறுத்தப்பட்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை, சைக்கிள் லைட் எரிந்து கொண்டுதான் இருந்தது. அப்புறம் பார்த்தால் தெருநடுவில் ரேஷ் ட்ரைவிங் என பிடித்திருக்கிறார்கள். பெயரை கேட்டு வயதையும் கேட்டார்கள், எங்கே வேலை செய்கிறேன் என்றும் கேட்டார்கள்.

நான் மாணவன், புதுக்கல்லூரியில் பி.யு.சி. படிக்கிறேன், வயது 16 என்றதும் நம்பாமல் பொய் சொல்கிறேன் என்றார்கள். நல்ல வேளையாக கல்லூரி நூலக அட்டை எதேச்சையாக பையில் இருந்ததோ பிழைத்தேனோ (வீட்டில் அதை பத்திரமாக வைக்காது மறதியாக பாக்கெட்டிலேயே இருந்ததும் நல்லதற்கே). எது எப்படியானாலும் சைக்கிளை ஸ்டேஷனிலேயே விடவேண்டியிருந்தது. அடுத்த நாள் காலை எக்மோர் மேஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு போக நானும் என் அத்தை பிள்ளையும் பஸ் ஏறினோம்.

கோர்ட்டில் நல்ல கும்பல். மேஜிஸ்டிரேட் பெண்மணி வந்தவுடனேயே கேஸ்களை கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். முதலில் டி ஸ்டேஷன் கேஸ்கள் கூப்பிட ஆரம்பித்தனர். முதலாமவ்ர் கூப்பிடப்பட்டு அவர் கேஸ் பைசல் செய்யப்பட்டதும் இரண்டாவதாக ராகவன், ராகவன் என டவாலி கத்த நான் முன்னேற, அந்தப் பாவியோ “நாராயணன் மகன் ராகவன்” என்றதும் திரும்பி வந்து விட்டேன். சற்று நேரம் கழித்துத்தான் அந்த மடையன் நரசிம்மன் என இருந்ததை நாராயணன் என படித்து தொலைத்திருக்கிறான் என புரிந்து கொண்டேன். டூ லேட். எனது முறை தவறியது தவறியதுதான். டி1 ஸ்டேஷன் போலீஸ்காரர் என்னிடம் ஓப்பனாக சொன்னார், பேப்பர் திரும்ப மேஜிஸ்ட்ரேட்டிடம் செல்ல வேண்டுமானால் சம்பந்தப்பட்ட கிளார்க் கையில் நான்கணா வைத்து அழுத்தும்படி. நான் பயம் காரணமாக அதை செய்யவில்லை.

சில நாட்கள் கழித்து சம்மன் வரும் என சொன்னார்கள். பிறகு என் தந்தை என்னுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து எனது சைக்கிளை போலீசில் பேசி வாங்கித் தந்தார். அவருக்கு தெரிந்த ஏ.சி. மூலம் கேஸையே தள்ளச் செய்தார். (சாதாரண நியூசன்ஸ் கேசானதாலோ, எனக்கு வயது குறைவு என்பதாலோ என்னவென்று தெரியாது. ஆனால் இதுதான் நடந்தது).

என்ன ஆச்சரியம்? 29 நாட்கள் கழித்து சம்மன் வேறு வந்தது. என் தந்தை போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்க, அது தவறாக அனுப்பப்பட்டது என்றும், அதை கண்டு கொள்ள வேண்டாம் எனவும் கூறப்பட்டது. இருப்பினும் நான் போய் வைத்தேன் என வைத்துக் கொள்ளுங்கள். அதே போலீஸ்காரர் எனது பெயர் லிஸ்டில் இருப்பதை உறுதி செய்தார். ஆனால் 15 நிமிடம் கழித்து என்னிடம் நேரே வந்து பேசாமல் வீட்டுக்கு போகும்படி கூறிவிட்டார். ஆக, என்ன நிஜமாக நடந்தது என்பது இப்போதும் எனக்கு தெரியாது.

ஆனால் அச்சமயம் கூறப்பட்ட அபராதத் தொகைகள்தான் தமாஷ். நான் செய்த குற்றத்துக்கு அபராதம் ஒரு ரூபாய். அதே சமயம் ஜட்ஜ் குற்றம் செய்தாயா எனக் கேட்டால் இந்த ஒரு ரூபாயுடன் தப்பிக்கலாம், இல்லை என வாது புரிந்தால் அபராதம் சகட்டுமேனிக்கு ஏறிவிடும். ஆகவே எல்லோருமே குற்றத்தை ஒப்புக் கொண்டு விடுவார்கள், கோர்ட் நடவடிக்கைகளும் சீக்கிரம் முடியும்.

ஆனால் இம்மாதிரி ஒப்புக் கொண்டு தப்பிப்பது எல்லா குற்றங்களுக்குமே சாத்தியம் எனக் கூற முடியாது. இருவர் அல்லது பலர் தெருவில் சண்டை போட்டு போலீசாரல் கைது செய்யப்பட்டால், ஜட்ஜ் அவர்களை சண்டை போட்டீர்களா எனக் கேட்பார். ஆமாம் என்றால் அடுத்த கேள்வி ஏன் சண்டை போட்டீர்கள் என்பதேயாகும். அபராதமும் சற்றே ஹெவிதான் (15 ரூபாய்). அதாவது இது சீரியஸ் குற்றமாக கருதப்படுகிறது.

ஒரு 20 வயது வாலிபரை கேட்ட கேள்வி, அவர் தெருவில் காற்றாடி விட்டாரா என்பதாகும். அவர் ஆமாம் எனக் கூற அபராதம் 50 ரூபாய் எனக் கூறப்பட்டது. அக்காலக் கட்டத்தில் அது பெரிய தொகை. நான் கூட நினைத்தேன், இதற்கு ஏன் இவ்வளவு அபராதம் என்று. பிறகு மாஞ்சா நூலில் கழுத்து அறுபட்டு சில மரணங்கள் நிகழ்ந்த பிறகுதான் இது தேவையே என்பதை நான் உணர்ந்தேன்.

அதுவும் ஜூலை 24-27 தேதியிட்ட நக்கீரன் இதழில் அம்மாதிரி மாஞ்சா கயிற்றல் கழுத்து அறுபட்டு மரணமடைந்த திருப்பதி என்பவரின் கதையை படித்ததும் இது எவ்வளவு சீரியசான கிரைம் என்பது புரிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/04/2010

காரைக்கால் AIR FM-ல் திடீர் நேர்காணல்

கடந்த வெள்ளியன்று (02.07.2010) திருநள்ளாறு சென்றிருந்தேன். அதற்கு முன்னால் புதனன்று திடீரென எடுத்த முடிவில் மதுராந்தகம், ஸ்ரீரங்கம் எனக்கிளம்பி, அடுத்த நாள் திருவிண்ணகரம் ஒப்பில்லா அப்பன், நாச்சியார் கோவில், திருச்சேரை ஆகிய தலங்களுக்கு விஜயம் என இருந்தேன்.

திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்து என் மச்சினிக்கு செல்பேசி மூலம் தெரியப்படுத்தினோம். அவரோ உடனே ஆல் இண்டியா ரேடியோ காரைக்கால் நிலையத்தில் பணிபுரியும் அவரது முன்னாள் சக ஊழியரான திரு குருமூர்த்தி அவர்களின் உதவியுடன் எங்களுக்கு கோவிலில் சுலபமாக தரிசனம் செய்து வைத்தார். அது போதாது என்பதுபோல என்னை காரைக்கால் எஃப்.எம். ஒலிபரப்புக்காக நேர்காணல் காண விரும்புவதாகவும் கூறினார். கரும்பு தின்னக் கூலியா வேண்டும், சரி எனக்கூறிவிட்டேன்.

பகல் சுமார் ஒருமணிக்கு துவங்கிய நேர்காணலின் ரிகார்டிங் கிட்டத்தட்ட அரைமணி நேரம் நடந்தது. அது காரைக்கால் பண்பலையில் திங்கள் (05.07.2010) அன்று ஒலிபரப்பப்படும் என எனக்கு கூறப்பட்டது.

நேர்காணலின் எடிட் செய்யப்படாத சிடி ஒன்றையும் எனக்கு தந்தனர். அதை இணையத்தில் ஏற்றும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. எதற்கும் இருக்கட்டும் என நேர்காணலின் சுருக்கத்தை இப்போது தந்து விடுகிறேன்.

நிலைய தலைமை நிர்வாகி துரைசாமி அவர்களே நேர்காணலை நடத்தினார்.

உலகில் ஆறாயிரம் மொழிகளுக்கு மேல் உள்ளன, அவற்றில் ஆறு செம்மொழி அந்தஸ்து பெற்றவை. ஐரோப்பிய மொழிகளில் ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய மொழிகள் சிறப்பு வாய்ந்தவை. உலகையே இங்கிலாந்து ஆண்டாலும் ஆரம்ப காலங்களில் ஃபிரெஞ்சுதான் அதன் ஆட்சிமொழி, இத்தாலிய மொழியோ கவிதைகளுக்கு முன்னுரிமை தரும் மொழி, ஜெர்மானியர் எந்த வேலை செய்தாலும் அதை துல்லியமாக செய்கின்றனர். இந்த மூன்று மொழிகளிலும் தக்க பாண்டியத்தியம் பெற்ற தமிழர் என். ராகவன் இங்கு வந்திருக்கிறார், நமது ஆல் இண்டியாவிலும் பணி புரிந்திருக்கிறார் (பிரெஞ்சு ஒலிபரப்பு) என்ற முத்தாய்ப்போடு அவர் நேர்காணலை துவங்கி வைத்தார்.verbatim

டிஸ்கி: கீழே வருபவை verbatim ஆக இருக்காது.

திரு. துரைசாமி: எவ்வாறு இத்தனை மொழிகளை கற்றுக் கொண்டீர்கள்?

நான்: மிகவும் தற்செயலான நிகழ்ச்சி. ஐந்தாண்டுகள் பொறியியல் கல்வியில் கடைசி ஆண்டு (1969) பரீட்சையில் மூன்று சப்ஜக்டுகளில் தேறவில்லை. மன உளைச்சலுடன் இருந்த என்னை எனது தந்தை ஆர். நரசிம்மன் (அப்போது ஹிந்து பத்திரிகையில் நிருபர்) என்னை Max Mueller Bhavan-ல் ஜெர்மன் வகுப்பில் சேர்ந்து மனதை சிறிது தேற்றிக் கொள்ளும் ஆலோசனை தந்தார். சேர்ந்ததும் நான் எதிர்பார்க்காத அளவில் அதில் ஆர்வம் செலுத்தி எல்லாவற்றையும் விரைவாகக் கற்றுக்கொண்டேன்.

பிறகு பம்பாயில் மத்தியப் பொதுப்பணித் துறையில் ஜூனியர் இஞ்சினியராக வேலைக்கு சேர்ந்து மூன்றரை ஆண்டுகள் கழித்து சென்னைக்கு வந்தேன். விட்டுப்போன ஜெர்மன் கோர்சை படிக்க சேர்ந்த எனக்கு சில மொழிபெயர்ப்பு/துபாஷி வேலைகளை MMB நிர்வாக அதிகாரி தேசிகன் வாங்கித் தந்தார். அப்போதுதான் மொழியை பயன்படுத்தி பொருள் ஈட்டலாம் என்பதை நேரடியாக உணர்ந்தேன். அதுவரை வெறுமனே ஜெர்மனில் புத்தகம் படிக்கவே அந்த அறிவை பயன்படுத்தினேன்.

பிறகு ஃபிரெஞ்சு கற்க ஆரம்பிக்கும் தருணம், புத்தகம் படிக்க மட்டுமில்லை, மொழிபெயர்ப்பு வேலைகளைப் பெறுவதும் எனது நோக்கமாயிற்று. இத்தருணத்தில் இந்தியாவில் ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சுன் கற்றுக் கொள்ள மிகச்சிறந்த முறை Max Mueller Bhavan & Alliance Francaise-ல் சேருவதுதான் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுவேன். ஜே.என்.யூ. கூட இரண்டாம் பட்சமே.

சென்னையில் ஃபிரெஞ்சு படித்து முடிந்ததும் IDPL-ல் பிரெஞ்சு துபாஷிக்கான வேலைக்கு அப்ப்ளை செய்ய அவர்களோ நீ இஞ்சினியர் இங்கு ஏன் வர எண்ணூகிறாய் எனக்கேட்க, எனது இஞ்சினியரிங் காப்பியில் கலந்த சர்க்கரை போல பத்திரமாக இருக்கும் எனக்கூற, எனக்கு பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் என்னும் பெயரில் வேலை தந்தனர். அங்கு 12 ஆண்டுகள் கழிந்தபிறகு விருப்பம் ஓய்வு பெர்று மேலும் எட்டாண்டுகள் தில்லியில் இருந்து இப்போது கடந்த 9 ஆண்டுகளாக சிறந்த முறையில் மொழிபெயர்ப்பாளர் வேலை செய்து வருகிறேன்.

திரு. துரைசாமி: இத்தாலியன் எப்போது கற்றுக் கொண்டீர்கள்?

நான்: தில்லியில் இருக்கும்போது, ஆனால் அதை ஆங்கிலம் மூலம் சொல்லிக் கொடுத்த தவறான முறையால் எனது திறமை அங்கு சோபிக்கவில்லை. ஜெர்மனும் பிரெஞ்சும் அந்தந்த மொழி மூலமாகவே சொல்லிக் கொடுத்தனர். ஆனால் இத்தாலியனில் சொதப்பலே நடந்தது. ஆகவே அம்மொழியில் எனது திறமை பிரெஞ்சு ஜெர்மன் மொழி அளவுக்கு இல்லை என்பதே நிஜம். அப்படியிருந்து இத்தாலிய மொழிபெயர்ப்பு செய்வதன் முக்கிய காரணமே அம்மொழிக்கும் பிரெஞ்சு மொழிக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பேயாகும்.

திரு. துரைசாமி: உலகில் பிரெஞ்சு எந்த அளவுக்கு பரவலாக புழக்கத்தில் உள்ளது.

நான்: மிக அதிக அளவில் பேசப்படும் மொழி மேண்டரின் சீன மொழியே. ஆனால் அது முக்கியமாக சீனாவில் பேசப்படுவதாலேயே அவ்வளவாக பரவல் இல்லை. அம்முறையில் ஆங்கிலம், அரேபிய மொழி அவற்றுக்கெல்லாம் மிகப்பின்னால் பிரெஞ்சு ஆகிய மொழிகள் வருகின்றன.

ஓக்கே, ஓக்கே ஆடியோவை இஅணையத்தில் ஏற்றி இப்பதிவிலேயே எம்பெட் செய்ய முடிந்ததால் மீதியை ஆடியோவிலேயே கேட்பதே நலமாக இருக்கும். அதுவரை எழுதியதை அழிக்க மனம் இல்லை.

இது எடிட் செய்யப்படாத சிடி, நான் ஓரிரு முறை இருமியுள்ளேன். சற்றே ஏற்ற இறக்கங்களுடன் சவுண்ட் இருக்கும், மன்னித்தருள்க.

காரைக்கால் AIR தலைமை நிர்வாகி துரைசாமி அவர்கள், அவரது துணை அதிகாரி திரு குருமூர்த்தி அவர்கள், எனது மைத்துனி ஆகியோருக்கு என் நன்றி.

இந்த ஆடியோ சிடியை இணையத்தில் ஏற்றவும் மிக சிரமப்பட்டேன். இரண்டு தளங்களை கூகளில் கண்டு முயற்சி செய்தால் தேறவில்லை. பிறகு நண்பர் பத்ரி அவர்களது உதவியால் archive.org தளத்தில் வலையேற்றி அந்த ஆடியோவை எம்பெட் இங்கு செய்ய முடிந்தது. அவருக்கும் என் நன்றி உரித்தாகுக.

ஆடியோ லிங் கீழே உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்


3/02/2010

சுஜாதா இரண்டாம் நினைவு நாள் விழா - 27.02.2010 - பகுதி - 2

முதல் பகுதி இங்கே.
கவிஞர் ஞானக்கூத்தன்
மனுஷ்யபுத்திரன் தன்னை இக்கூட்டத்திற்கு வருமாறு அழைத்தபோது மற்ற பங்கேற்பாளர்கள் யார் யார் என தெரிந்ததும் இவ்வளவு பெரிய கூட்டத்தில் பேசவியலுமா என தயங்கினதாக குறிப்பிட்டார்.

சுஜாதாவை 1965 முதல் தெரியும் எனக்குறிப்பிட்டார். அவரது இயற்பெயரும் ரங்கராஜன்தான் எனக்குறிப்பிட்டவர் சுப்பிரமணியம், ரங்கராஜன் ஆகிய பெயர்கள் ரொம்பவும் அதிகமாகவே தமிழகத்தில் இருப்பதாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். அக்காலகட்டங்களில் உட்லேன்ட்ஸ் டிரைவ் இன்னில் வைத்து சுஜாதா, இவர் இன்னும் பலர் அடிக்கடி சந்தித்து பேசுவதை குறிப்பிட்டார். பிரெஞ்சு எழுத்தாளர் Jean Paul Sartre காஃபீ ஷாப்பில் அமர்ந்து நண்பர்களுடன் உரையாடுவதை விரும்பியதையும் குறிப்பிட்டார். அச்சமயங்களில் சந்த்தித்த மற்றவர்களில் மாலன், பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜு ஆகியோரை குறிப்பிட்ட அப்போதே அவர்கள் எல்லாம் தத்தம் ஈடுபாடுகளில் பெரிய ஆட்களாக வரும் சாத்தியக்கூற்றை சுஜாதா கணித்ததாக கூறினார்.

சுஜாதா ஆசிரியராக சிலகாலம் செயல்பட்ட குமுதம் கவிதை போட்டியில் தான் நடுவராக பங்காற்றி கவிஞர் தாமரையையும் இன்னொரு கவிஞரையும் தேர்ந்தெடுத்து இருவருக்குமே பரிசளிக்க சிபாரிசு செய்ததையும் நினைவு கூர்ந்தார். சுஜாதாவுடன் அதிக அளவில் பழகிய கவிஞன் தானாகத்தான் இருப்பார் என்பதையும் குறிப்பிட்டார். சுஜாதா மனுஷ்யபுத்திரனை அடையாளம் கண்டு, அவரை முதலில் பலருக்கு தன் எழுத்துக்கள் வாயிலாக அறிமுகப்படுத்தியதையும் அவர் குறிப்பிட்டார்.

திருமலை
இந்த மேடையில் தனக்கு பேச வாய்ப்பு கிடைத்ததற்கான ஒரே தகுதி தான் சுஜாதாவின் தம்பி என்பது மட்டுமே என அவர் ஆரம்பத்திலேயே வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.

தனது அண்ணா ஒரு பன்முக ஆளுமை என குறிப்பிட்டார். பல துறைகளில் செயல்பட்டாவர். அதே சமயம் ஒவ்வொன்றிலுமே சிறப்பாக செயல்பட்டவர். நேர மேலாண்மையை நன்கறிந்து கடைபிடித்தவர். இவ்வளவு திறமை வாய்ந்தவரை மருத்துவத்தால் காப்பாற்ற இயலாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்தார். எந்த கலைஞனையும் அவர் இறந்தபிறகுதான் புகழ்வது என்ற நிலை மாறி அவர்கள் உயிருடன் இருக்கும்போதே கௌரவம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

டைரக்டர் வசந்த்
தனது புனைப்பெயர்தான் வசந்த் எனக்கூறிவிட்டு, அப்பெயர் கணேஷின் தோழன் வசந்த் ஏற்படுத்திய பாதிப்பாலேயே தனக்கு வந்தது எனக்கூறினார். தனக்கு சுஜாதா மேல் காதல் என குறிப்பிட்டு, பிறகு தான் அவரை சந்தித்த தருணங்களை விளக்கினார். முதல் சந்திப்பு பற்றி அப்புறம் கூறுவதாக சொல்லிவிட்டு அடுத்த சந்திப்புகள் பற்றி பேச ஆரம்பித்தார்.

தனது அன்னைக்கு படித்து காட்டவே முதலில் சுஜாதா நாவல்களை வாசிக்க ஆரம்பித்தவர் அவர் மேலே காதலாகி போனதை குறிப்பிட்டார். இரண்டாம் சந்திப்பு சாவி ஆஃபீசில் வைத்து நடந்ததாக சொன்னார். “யார் உள்ளே இருக்கிறார் தெரியுமா” என அவரிடம் கேட்கப்பட, அவர் கேஷுவலாக என்ன சுஜாதா இருப்பது போல பில்ட் அப் தருகிறாயா எனக் கேட்க, ஆம் சுஜாதாதான் என பதில் வந்த போது திக்குமுக்காடி போனதையும் சொன்னார். உள்ளே எட்டிப் பார்த்தல் பலர் (சுஜாதா உட்பட) புகைத்து கொண்டிருந்த சிகரெட் புகையால் அவரை சரியாக பார்க்க இயலவில்லை.

மூன்றாம் சந்திப்பில் பங்களூருவில். அப்போதுதான் சுஜாதாவின் கையெழுத்தை பார்த்ததாகவும், ஒன்றுமே புரியாத இடியாப்பச் சிக்கலாய் இருந்தது என்றும் குறிப்பிட்டார். பிறகு நான்காம் சந்திப்பும் பெங்களூருவில் வைத்துத்தான் நடந்தது, “சொல்லத்தான் நினைக்கிறேன்” படத்தில் கன்னட வெர்ஷனின் படப்பிடிப்பின்போது. அப்போது 45 நாட்கள் பெங்களூருவில்தான் இருந்தாலும் படப்பிட்டின் பிசி ஷெட்யூலால அவரை கடைசி நாள்தான் சந்தித்து பேச முடிந்தது என்றும் கூறினார்.

கடைசியாக முதல் மீட்டிங்கிற்கு வந்தார். அப்போது என்ன நடந்தது என்று பார்த்தால் ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறிவிட்டார். தன்னை ஒருவர் சுஜாதாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததுமே, அப்படியா சரி எனக்கூறிவிட்டு அவர் நகர்ந்து விட்டதாகவும், தனக்கு மிகுந்த ஏமாற்றம் என்றும் அவர் கூறினார்.

எழுத்தாளர் தேவிமைந்தன்
எதையும் சான்சுக்கு வைக்காமல் இவர் சில முழுத்தாள்களில் எழுதிக் கொண்டு வந்து படித்து விட்டார். ஆகவே தயக்கம் ஏதும் இன்றி பேச்சு வந்தது.

சுஜாதாவுடன் தனக்கு வந்த தொடர்புகளை பட்டியலிட்டார். அவரது கற்றதும் பெற்றதும் தொடர் விகடனில் வந்தது பற்றி குறிப்பிட்டார். ஏன், எதற்கு, எப்படி என்னும் தலைப்பில் அவர் நடத்திய கேள்வி பதில்கள் சீரியல்கள் மிக நன்றாக இருந்தன. பதில்கள் சிந்தனையை தூண்டுவதாக இருந்தன.

கார்ட்டூனிஸ்ட் மதன்
சுஜாதா எழுதிய புத்தகங்களின் லிஸ்ட் மிக உயரமானது.

ஜூனியர் விகடன் ஆரம்பித்த போது அதில் இணையாசிரியராக தான் நியமிக்கப்பட்டதாக மதன் கூறினார். அச்சமயம் அதில் கதை எதுவும் வேண்டாம் என முடிவெடுத்தையும் அவர் கூறினார். அப்போது சுஜாதாவின் கேள்விபதில்கள் அதில் வர ஆரம்பித்த பின்னணியையும் கூறினார். ஒரு சமயம் சுஜாதாவின் பதில்கள் பெங்களூருவிலிருந்து வர தாமதமாக தானே 3 கேள்விகளுக்கு பதில் எழுதியதையும், அதை சுஜாதா பாராட்டியதையும் குறிப்பிட்டார்.

தான் இப்போது நாடக இயக்கம் ஒன்றில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அதில் பல விஷயங்களில் நாடகம் போட போட்டி வைத்தபோது பெரும்பாலானோர் சுஜாதாவின் கதைகளையே தேர்ந்தெடுத்ததையும் கூறினார். அதனால் தனக்கு வந்த துயரம் மகிழ்ச்சி இரண்டையுமே சுவைஒயாக விளக்கினார்.

இந்த நிகழ்ச்சி நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஹால் மெல்லிசை நிகழ்ச்சி நடத்தவே லாயக்கு என்றும், அடுத்த முறை நல்ல அகௌஸ்டிக் உள்ள ஹாலை தேர்ந்தெடுக்க வேண்டும் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சென்னையில் பல நூலகங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாகவும் அவற்றில் சுஜாதாவின் நூல்களுக்காக பிரத்தியேக இடம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நடிகர் பார்த்திபன்
தாமதமாக வந்ததற்காக முதற்கண் மன்னிப்பு கேட்டு கொண்டார். சுஜாதாவை தான் தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதாக குறிப்பிட்டார். அவரது அறக்கட்டளைக்காக தன்னல் இயன்ற அளவு உதவி செய்வதாக கூறினார்.

மணி எட்டை தாண்டிய நிலையில் கூட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு அடுத்த ஹாலில் எல்லோருக்கும் உணவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக அறிவிப்பு வர, அங்கு விரைந்தேன். சும்மா சொல்லப்படாது, நல்ல கல்யாண சமையல்.

எல்லோரும் சுஜாதாவுடனான தத்தம் தொடர்பை கூறிவிட்டார்கள். டோண்டு ராகவனான என்னால் ஆனது, இங்கே சில வரிகள்.

அறுபதுகளில் சில கதைகள் என் மனதைக் கவர்ந்தன. அவற்றில் ஒன்றுதான் "ஒரு கதையில் இரு கிளைக்கதைகள்". ஒரு கிளைக்கதை சரித்திரக்கதை, இன்னொன்று தற்காலக் கதை. இரண்டாவதில் வந்த கதாநாயகனை அவன் காதலிக்கும் பெண் நிராகரிக்கிறாள். முதல் கதையில் வந்த ராஜகுமாரி தனது முறைமாப்பிள்ளையை துரத்தி விட்டு பல்லக்கில் செல்கிறாள். திடீரென ஒரு உருவம் வந்து நிற்கிறது. பல்லக்கின் திரையை விலக்குகிறது. ராஜகுமாரி "யார் அது" என்று கேட்க, "ராஜகுமாரி, நான் பக்கத்துக் கதையில் நிராகரிக்கப்பட்டவன்" என்று கூறுகிறது. அவனை பல்லக்கில் ஏற்றிக் கொள்கிறாள் ராஜகுமாரி, பயணம் தொடர்கிறது. சர்ரியலிசம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் அக்கதையைப் படித்ததுமே என் மனதைக் கொள்ளை கொண்டது அது. எழுத்தாளர் பெயரை அப்போது கவனிக்கவில்லை.

அதே போல இன்னொரு கதை, தலைப்பு மறந்து விட்டது, ஆனால் கடைசி வரி ஞாபகத்தில் இருக்கிறது. "இஞ்சினியர்கள் நாசமாப் போக". ஹோட்டலில் ஒரு பெண்ணின் நெக்லஸைத் திருட திட்டம் போடுகிறான் ஒரு இளைஞன். விளக்கையெல்லாம் அணைக்க ஏற்பாடு செய்து விட்டு, நெக்லஸையும் வெற்றிகரமாக பறித்து ஓடுகிறான். ஆனால் திடீரென மீண்டும் விளக்குகள் எரிகின்றன. கதையிலிருந்து சில வரிகள்: "நான் கோழிக்குஞ்சு மாதிரி ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆறடி உருவமும் மிகுந்த அகலமும் கொண்ட தர்வான் கைகளை விரித்து கொண்டு வந்து, என்னை தடுத்து, தமிழ் சினிமாவில் அப்பா மகனை அணைத்துச் செல்வது போல தூக்கிச் செல்கிறான்". விஷயம் என்னவென்றால், எமெர்ஜென்சி ஜெனெரேட்டர் தானாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதனால்தான் "இஞ்சினியர்கள் நாசமாப் போக". இக்கதையின் எழுத்தாளர் பெயரையும் அச்சமயம் கவனிக்கவில்லை.

சமீபத்தில் 1971 ஜனவரியில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு மெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தேன். அப்போதெல்லாம் ரயில் வண்டிகளில் மூன்று வகுப்புகள் உண்டு. பிறகுதான் இரண்டாம் வகுப்பு நீக்கப்பெற்று, அப்போதைய மூன்றாம் வகுப்பு இப்போதைய இரண்டாம் வகுப்பாயிற்று. கம்பார்ட்மெண்டில் ஒரே கூட்டம். நால்வர் அமர வேண்டிய பெஞ்சில் ஏழு பேர் அமர்ந்திருந்தோம். என் பக்கத்தில் இருந்தவரை எங்கோ பார்த்த உணர்வு. அப்போது ஐ.ஓ.பி. மீனம்பாக்கம் கிளையின் மேனேஜர் திரு. கோபு அவர்களது முகஜாடை இருந்தது, ஆனால் அவர் இல்லை. ஆகவே அவரிடம் அவர் கோபு அவர்களது சகோதரரா எனக்கேட்க, அவர் அதை மறுத்து தான் எழுத்தாளர் சுஜாதா என்றார். எனக்கு ஒரே சந்தோஷம்.

அவரது நைலான் கயிறு நாவலிலிருந்து எனக்கு பிடித்த வரிகளை கோட் செய்த போது அவருக்கு மிக்க மகிழ்ச்சி. அந்த ரயில் பயணத்தின்போது திடீரென நான் மேலே சொன்ன கதைகள் ஞாபகத்துக்கு வர, ஒரு வேளை அவர்தான் அவற்றை எழுதியதோ எனக்கேட்க, அவரும் ஆமோதித்தார். ஆக, ஒரு நல்ல கதை எழுத்தாளர் யார் என்றே தெரியாத நிலையிலும் நினைவில் நிற்கும் என்பது நிரூபணம் ஆயிற்று.

அவரது ”ரத்தம் ஒரே நிறம்” என்ற கதை அக்காலக் கட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அது பற்றி நான் எழுதிய பதிவில் எனது அனுமானங்கள் சிலவற்றை வைத்திருந்தேன். அவற்றை சரி பார்த்துக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதே போல கணேஷும் வசந்தும் ஒருவரே என்பது பற்றியும் கன்ஃபர்ம் செய்து கொள்ள முடியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/01/2010

புது மொழிபெயர்ப்பு அனுபவம்

யாழ்தேவி நட்சத்திர பதிவராக இது எனது இரண்டாவது பதிவு. ஏற்கனவேயே இட்ட பதிவுதான். ஆயினும் இச்சந்தர்ப்பத்துக்காக மீள்பதிவு செய்யப்படுகிறது. யாழ்தேவியில் இது திரட்டப்படுவது முதல் முறையாக.

ஈழம் பற்றிய எனது சிந்தனைகள் பல ஈழசகோதரர்களுக்கு பிடிக்காது என்பதை நான் அறிவேன். இருப்பினும் கீழே சித்தரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியை பதிவு செய்தபோது எனது மனதில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் துயரம்தான் தெரிந்தது. நேரிடையாக பாதிக்கப்பட்டவரை கண்டதும் எனது தர்க்கங்கள் எங்கோ ஒளிந்தன. இப்போது பதிவுக்கு போகிறேன்.

இன்று (ஈழ நாட்காட்டியின்படி புரட்டாசி 3, 2007) காலை ஒரு சஷ்டியப்தபூர்த்தி (அறுபதாம் பிறந்த நாள்) நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது செல்பேசி திடீரென soulful ரிங் ஓசையை எழுப்பியது. எடுத்து கேட்டால் இலங்கைத் தமிழில் ஒருவர் பேசினார். அவருக்கு ஸ்விட்சர்லேந்திலிருந்து ஒரு ஆவணம் வந்திருக்கிறது என்றார். என்ன மொழி என்று கேட்க, தெரியாதென்றார் (அந்த நாட்டில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன், கூடவே இத்தாலிய மொழியும் உண்டு. நான்காம் மொழி சிறிய அளவினரே பேசும் மொழி). நேரே வீட்டுக்கே வரச்சொன்னேன். பிற்பகல் 3 மணிக்கு கையில் ஆவணத்துடன் வந்தார். இளம்வயதுக்காரர், சுமார் 25 வயதிருக்கும். கூடவே அவர் மனைவி, கையில் பொம்மை போல் ஒரு குட்டிப் பெண் குழந்தை. 11 மாதம் இருக்கும்.

ஆவணத்தை பார்த்தேன். சுவிஸ் ஜெர்மன் மொழியில் இருந்தது. 6 பக்கங்கள், மிக நெருக்கமாக தட்டச்சிடப்பட்டிருந்தது. பார்த்த உடனேயே கூறி விட்டேன். இது நிறைய வேலை எடுக்கும், எனக்கு நேரமே இல்லையென்று. அத்துடன் சாதாரணமாக கதை முடிந்திருக்கும். நான் வீட்டுக்கு வரும் வாடிக்கையாளர் யாரையும் சாதாரணமாக தேவைக்கதிகமாக காக்க வைப்பதில்லை. சட்டு புட்டென்று பேசி அனுப்பிவிடுவேன். வந்தவர் சற்றே தயங்கினார். மென்று விழுங்கினார். சாதாரணமாக அதற்கு எவ்வளவு செலவாகும் எனக் கேட்டார். ஆவணத்தைப் பார்த்தேன். பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தேன். அவர் ஸ்விட்சர்லாந்திற்கு அகதியாக வர விண்ணப்பித்திருந்தார். அவருடை கேஸ் விவரம் இருந்தது. என்னையறியாமலேயே படிக்க ஆரம்பித்தேன்.

இவர் வட இலங்கையில் வசிப்பவர். அவரது பிராந்தியத்தில் அவரால் பாதுகாப்பாக இருக்க இயலவில்லை. அவரது அன்னை துப்பாக்கி குண்டால் அடிப்பட்டவர். என்றெல்லாம் அதில் இருந்தது. தங்களுக்கே உரித்தான நேர்த்தியுடன் ஸ்விஸ் ஜெர்மனில் அவை விவரிக்கப்பட்டிருந்தன. இப்போதுதான் என்னை அறியாமலேயே நான் இதுவரை செய்யாததைச் செய்தேன்.

அவரிடம், பேசாமல் என்ன இருக்கிறது இதில் என்பதை வேகமாகப் படித்து கூறுகிறேன் என சொல்ல. அவரும் ஒத்துக் கொண்டார். அவருடைய கஷ்டங்கள் எல்லாவற்றையும் பட்டியலிட்டுவிட்டு அவரது விண்ணப்பத்தை பைசல் செய்யும் வாக்கியங்கள் வந்தன.

இந்தக் கஷ்டமெல்லாம் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை என்றாலும், ஸ்விஸ் சட்டத்தின் பலான, பலான பிரிவு, உப-பிரிவு ஆகியவற்றின்படி அவருக்கு அடைக்கலம் அளிக்க ஏலாது என திட்டவட்டமாக எழுதப்பட்டிருந்தது. அதை அவரிடம் கூறிவிட்டு மேலே பார்த்தால், அப்பீல் செய்ய 30 நாட்கள் அவகாசம் தரப்பட்டிருந்தது. அதை அவரிடம் கூறினேன். அவருக்கும் அவர் மனைவிக்கும் மிகுந்த ஏமாற்றம். அவர்களது முகத்திலேயே அது தெரிந்தது. அந்த 11 மாதக் குழந்தை இஃதொன்றும் அறியாது என் வீட்டம்மாவுடன் விளையாடிக் கொண்டிருந்தது. இதிலேயே கிட்டத்த ஒரு மணி நேரம் போய்விட்டது. அவர்களுக்கு என் வீட்டம்மா டீ மற்றும் ஸ்நேக்ஸ் கொண்டு வந்தார் அவர். மிகுந்த கூச்சத்துடன் எடுத்து கொண்டனர்.

கடைசியில் அவர்கள் கிளம்பினர். அவர் தன் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து எனக்கு எவ்வளவு தரவேண்டும் எனக் கேட்டார். இப்போது டோண்டு ராகவன் இதுவரை செய்யாத இன்னொரு காரியம் செய்தான். "பணமா, மூச்" என்றான். அது என்னையறியாமலேயே வந்தது. வாடிக்கையாளரை அணுகும் முறைகளைப் பற்றி பத்து பதிவுகள் போட்டு, வசூல் எல்லாம் எப்படி உறுதியாக செய்ய வேண்டும் என பல இடங்களில் கூறிவரும் அவன் இங்கு இவ்வாறு நடந்து கொண்டான். அவர் விடவில்லை. கிட்டத்தட்ட உங்களது நேரம் ஒரு மணி எடுத்துக் கொண்டேன், ஏதேனும் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். ஒரு வார்த்தை பேசாது கைகூப்பினேன் (தொண்டை அடைத்ததால் ஒன்றும் பேச இயலவில்லை). போய் விட்டார்கள். சிறிது நேரம் அப்படியே பிரமித்துப் போய் அமர்ந்திருந்தேன். நாம் எல்லாம் பத்திரமாக தாய்நாட்டில் இருக்கும்போது இம்மாதிரி நாடுவிட்டு நாடு வந்து கஷ்டப்படுபவர்களின் துயரம் என்னை மிகவும் பாதித்தது.

சற்று நேரம் கழித்து அப்பக்கம் வந்த என் வீட்டம்மா கேட்டார், "ஏன் அழுகிறீர்கள்" என.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/28/2010

சுஜாதா இரண்டாம் நினைவு நாள் விழா - 27.02.2010 - பகுதி - 1


சுஜாதா அறக்கட்டளையும் உயிர்மையும் சேர்ந்து நடத்திய இந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை நியூ உட்லேண்ட்ஸில் நடந்தது. நிகழ்ச்சி பற்றி நான் சாரு நிவேதிதாவின் வலைப்பூவிலிருந்து அறிந்து கொண்டேன். ஏற்பாடு செய்த ஹால் போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் வந்தது. திடீரென அழைப்பு உள்ளவர்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்களா என்ற சந்தேகமும் வந்ததில் நண்பர் ஒருவரிடமிருந்து மனுஷ்யபுத்திரனின் நம்பர் பெற்று அவருக்கு ஃபோன் செய்து அழைப்பு எல்லோருக்குமே என்பதை உறுதி செய்து கொண்டேன்.

எனது கார் உட்லேண்ட்ஸை சென்றடைந்தபோது மணி சரியாக 06.30. நல்ல வேளையாக இடம் இருந்தது. முதல் இரண்டு வரிசைகளுக்கு பின்னால் காமெராக்கள் நிறுவப்பட்டிருந்தன. அவற்றுக்கு பின்னால் உள்ள நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்கள் காமெராக்காரர்களது முதுகுகளை மட்டும் பார்க்க முடிந்தது.

முதலில் சாரு நிவேதிதாவை பார்த்தேன். அவருடன் பேசினேன். அவரது வலைப்பூ வைரஸ் தாக்குதலால் பீடிக்கப்பட்டு பழைய கோப்புகள் அழிக்கப்பட்டதை குறித்தும் கேள்விகள் கேட்டதில் கோப்புகள் நகல் உள்ளதாகவும் சீக்கிரம் வலையேற்றப்படும் என்றும் தெரிவித்தார். பேசாமல் பிளாக்ஸ்பாட் இலவச சேவைக்கு மாறிக்கொள்வதே நலம் என்று கூறிவிட்டு எனது இடத்தில் சென்று அமர்ந்தேன். உடனேயே நிகழ்ச்சியும் ஆரம்பமாகியது.

அதிஷா, லக்கிலுக், ஓகை, சிமுலேஷன் (இப்பதிவில் உல்ள படங்களை அனுப்பியவர். அவருக்கு நன்றி) ஆகிய வலைப்பதிவர்கள் வந்திருந்தனர்.

முதலில் எல்லோரையும் வரவேற்று பேசியது மனுஷ்யபுத்திரன். சுஜாதாவை தங்களை போன்ற எழுத்தாளர்களின் ஆசான் என அவர் குறிப்பிட்டார். ஒவ்வொருவரது கனவையும் உருவாக்கிய மாபெரும் கலைஞர் அவர். அவரை கொண்டாடும் அளவுக்கு ஒரு எழுத்தாளரை கொண்டாடுவது அபூர்வம். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அவரது இருப்பு வந்திருக்கிறது. இன்னும் வலிமை கொண்டு செல்கிறது. சுஜாதா அறக்கட்டளை மற்றும் உயிர்மையுமாக சேர்ந்து சுஜாதா நினைவு விருதுகளை அளிக்கத் துவங்குவது பற்றியும் கூறினார். சிறுகதை, நாவல், கவிதை, உரைநடை, இணையம், சிற்றிதழ் ஆகிய தலைப்புகளில் அவை வழங்கப்படும் என்று கூறினார். இவ்வாண்டுக்கான விருதுகளுக்கான பரிந்துரைகள் மார்ச் 31 வரை ஏற்கப்படும் என்றும் அவற்றின் முடிவுகள் சுஜாதாவின் பிறந்த நாளான மே 3-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பிறகு ஒவ்வொருவராக பேச அழைக்கப்பட்டனர்.

தூர்தர்ஷனின் முன்னாள் டைரக்டர் நடராஜன்
சுஜாதா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தனது 40-ஆண்டுகால பரிச்சயத்தை அவர் எடுத்துரைத்தார். பல்வேறு நிலைகளில் அவருடன் உரையாடி இருக்கிறார். அவர் கடவுளின் அரிய படைப்பு. 1998 தான் சான் ஃப்ரான்சிஸ்கோ சென்றபோது அங்கிருந்து அவருடன் தொலைபேசியதாகவும், என்ன புத்தகம் வாங்கலாம் என அவரிடம் கேட்டதாகவும், புகைப்படம் எடுத்தல் பற்றிய ஒரு புத்தகத்தை சிபாரிசு செய்ததாகவும், அதை வாங்கி பிறகு ஊருக்கு வந்ததும் அவர் வீட்டுக்கு சென்று அவரிடம் அதை தந்ததாகவும் கூறினார். ஆனால் சுஜாதாவோ தன்னிடம் ஏற்கனவே அந்த புத்தகம் இருப்பதாகவும், அதை நடராஜன் தனக்காக வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே அதை சிபாரிசு செய்ததாகவும் கூறினார்.

அவரது ஒரு தொடர்கதை வாய்மையே சிலசமயம் வெல்லும் என்னும் தலைப்பில் வந்து, பிறகு புத்தகமாகவும் வந்ததாம். அதுவே தூர்தர்ஷனில் வாரத் தொடராக வந்தபோது மாதர் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து, அதை தான் சமாளித்த விதத்தை சுஜாதா சிலாகித்ததையும் குறிப்பிட்டார். மேலும், சுஜாதா எங்கு சென்றாலும் சோபித்தார்.

டைரக்டர் சங்கர்
சிறுவயதிலிருந்தே அவரது புத்தகங்களை படித்து ரசித்திருக்கிறார். அவர் புத்தகங்களை படிக்கும்போது ஒரு படமே பார்ப்பது போலிருக்கும். அப்படி தான் ரசித்த அவரே தனது படங்களுக்கு கதை எழுதுவார் என்பதை அக்காலத்தில் தான் நினைத்தும் பார்த்ததில்லை என கூறினார். இந்தியன் படத்திலிருந்து ஆரம்பித்து தனக்காக படங்களில் பணியாற்றியதை பல உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். சுவையான அவரது வசனங்களுக்கான சில சாம்பிள்கள் தந்தார்.
1. பிற நாடுகளில் கடமையை மீறத்தான் லஞ்சம் வாங்குகின்றனர், ஆனால் இங்கோ கடமையை செய்யவே லஞ்சம்.
2. தப்பிலே ஸ்மால், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜெல்லாம் சொல்ல அது என்ன பனியன் சைஸா?
3. தன் உள்ளங்கையில் முத்தமிட்ட நந்தினியிடம் ரெமோ: நான் என்ன போப்பாண்டவரா?
4. அம்பி டிடி.ஆரிடம்: அட்ஜஸ்ட் பண்ணி பண்ணித்தான் நாடே இந்த நிலைமையில் இருக்கு.
5. அன்னியன் நேரு ஸ்டேடியத்தில்: இப்போ நீங்க பார்த்த சீன்கள் நியூஸ் ரீல் இல்லை, நம் நாடு தப்ப விட்ட விஷயங்கள பற்றிய தொகுப்பு.
6. (இந்தியாவில்) எல்லாம் புதுசா வந்துடுச்சு, ஆனா இது மட்டும் (பிச்சை எடுப்பது) அப்படியே (பழசா) இருக்கு.
7. தாடி மீசையுடன் வந்த நாயகனை பார்த்து: என்ன லீவுல வந்த ரிஷி மாதிரி இருக்கே.

ஸ்டோரி விவாதங்களில் தான் சொன்ன பல ஐடியாக்களை அவர் பல ஆண்டுகளுக்கு முன்னமேயே எழுதியிருந்ததை ப்லமுறை காட்டியுள்ளார். ஒரு சீனுக்கு ஒரு பக்கத்துக்கு மேல் எழுத மாட்டார். சினிமா ஒரு விஷ்வல் மீடியா என்பதை புரிந்தவர்.

எவ்வளவுதான் பிசியாக இருந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை வற்புறுத்தினார்.

பத்மஸ்ரீ இந்திரா பார்த்தசாரதி:
அவர் பேசியதை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. ஹாலின் அகௌஸ்டிக்கிலும் பிரச்சினை. இருப்பினும் கூர்ந்து கேட்டதில் புரிந்தவற்றில் இருந்து எழுதுபவை:
சுஜாதாவை அவரது தில்லி நாட்களிலிருந்து தெரியும் என்றார். கணையாழி பத்திரிகையில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்னும் பெயரில் அவர் எழுதியதை நினைவு கூர்ந்தார். அவரது பிரசித்திபெர்ற நாவலான நைலான் கயிறு முதலில் குருக்ஷேத்திரம் என்னும் தலைப்பில் சிறுகதையாக வந்ததையும் குறிப்பிட்டார். தான் நாடகங்கள் எழுத அவர் தூண்டுகோலாக இருந்தார் என்றும் சொன்னார். பல வளரும் கவிஞர்களை அடையாளம் காட்டியதையும் சொன்னார். எழுத்தாளர்களை நாம் மறக்கலாகாது என்றும் குறிப்பிட்டார்.

பெண்டாமீடியா சந்திரசேகரன்
1995-லிருந்து அவருடன் பழக்கம். தனது பல அனிமேஷன்களில் அவரது வசனங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அபாரமாக இருந்ததாக கூறினார். ஓப்பன் சோர்ஸ் மர்றும் ப்ரொப்ரைட்டரி மென்பொருட்கள் பற்றி அவருடன் செய்த விவாதஃங்களையும் குறிப்பிட்டார் அவர். தனக்கும் சுஜாதாவுக்கும் ஒரே நாளில் (மே 3) பிறந்த நாள் என குறிப்பிட்டார். தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் புத்தகங்கள் பரிசாக தந்ததாகவும் அவை எல்லாவர்றையும் தான் பாதுகாத்து வருவதாகவும் கூறினார் அவர். தனது வேலை சம்பந்தமாக தான் எடுத்த முடிவுக்கு எதிராக குடும்பத்தினர் அனைவரும் பேச அவர் மட்டும் தனக்கு ஆதரவாக இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

சிவாஜி படக்கதை என்ன என தன்னை இவர் மட்டுமே கேட்கவில்லை என்று பாராட்டிவிட்டு தனக்கு அப்படத்தின் வெளியீட்டுக்கு சற்று முன்னால் அதன் கதையை கூறியதையும் சொன்னார். அவர் நுழைந்த எந்தத் துறையிலும் வெற்றிகரமாக செயல்பட்டதாக கூறினார்.

ராஜீவ் மேனன்
தனக்கு கண்ணளித்த ஆப்டீஷியன் அவர் என இவர் குறிப்பிட்டார். அவரை தனது நண்பராகவும் தந்தையாகவும் கருதியாகக் கூறினார். விக்ரம் படத்தின்போது அவரோடு ஏற்பட்ட காண்டாக்டுகளை சொன்னார். எல்லா வேலைகளுக்கும் நேரத்தை ஒதுக்கினார் என்பதை மேற்கோள்களுடன் கூறினார். மனதால் எப்போதும் இளமையாக தன்னை உணர்ந்தவர், தான் செய்ய விரும்பிய எல்லாவற்றையும் நிறைவேற்ற அவரால் நேரம் ஒதுக்க முடிந்தது.

அவரது தமிழ் எழுத்துக்களில் ஒரு ரிதம் இருந்தது. எல்லா இளைஞர்களுக்கும் அவருக்கான access உருவானது. கவிஞர் W.H. Auden-னின் வரிகளான no one anywhere wants to be forgotten, not even a man about to be hanged என்னும் அமரத்துவம் பெற்ற வரிகளை “மரணத்தைவிட மோசம் மறக்கப்படுவதே” என்ற வாக்கியத்தில் மிக அழகாக கூறியதை அவர் சிலாகித்தார். ஆனால் சுஜாதைவை அம்மாதிரி யாரும் மறக்க மாட்டார்கள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னமும் இவ்வளவு பேர் வருவதே அதை நிரூபிக்கிறது. தமிழ் ரசிகர்கள் இருக்கும் வரை அவர் மறக்கப்பட மாட்டார்.

(தொடரும்)

2/15/2010

கேணி சந்திப்பு - 14.02.2010

கேணி சந்திப்புகளை ஞாநி அவர்கள் 8 மாதங்களாக நடத்தி வருகிறார். நேற்று ஒன்பதாம் கூட்டம் என அவர் சொன்னார். நான் போக வேண்டும் என ஒவ்வொரு முறையும் நினைத்து ஏதோ காரணத்தால் அது தள்ளிபோடப்பட்டுக் கொண்டே வந்தது.

14.02.2010 மதியம் 03.30-க்கு துவங்கும் கூட்டத்தில் ஜெயமோகன் முக்கிய விருந்தாளியாக பேசுவார் என அறிந்ததுமே என் மனதில் அதை புத்தகக் குறி இட்டு வைத்து கொண்டேன். அதே தினம் மாலை 05.30 மணியளவில் கேபிள் சங்கர் மற்றும் பரிசல்காரனுடைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. இரண்டுமே கேகே நகரில் நடந்ததால் பிரச்சினை இல்லை. என்ன, ஜெயமோகன் மீட்டிங் மாலை ஆறரைக்குத்தான் முடியும். ஆக கேபிள் சங்கர் நிகழ்ச்சிக்கு நான் ஒரு மணி நேரம் தாமதமாகப் போகப்போவது முதலிலிலேயே வரையறுக்கப்பட்டு விட்டது.

எனது கார் ஞாநியின் வீட்டை அடைந்தபோது மணி சரியாக 03.30. அவர் வீட்டுக்கான வழியை நான் சரவணபவன் ஹோட்டல் அருகில் ஒருவரிடம் அழகிரிசாமி தெரு பற்றி கேட்டதற்கு அவர் 39-ஆம் நம்பர்தானே என திருப்பிக் கேட்டார். ஏற்கனவே யாராவது அவரிடம் கேட்டார்களா என்பதற்கு அவர் நான் இக்கேள்வியை அவரிடம் கேட்கும் 11-வது நபர் என்றார்.

நான் உள்ளே சென்றபோது கேணிக்கருகில் இருந்த நாற்காலிகள் பாதிக்கு மேல் நிரம்பியிருந்தன. சில நிமிடங்களில் ஞாநியும் ஜெயமோகனும் வந்து கூட்டத்தை துவக்கினர். நம்மால் ஏன் விவாதம் செய்ய மிடிவதில்லை என்பது பற்றி ஜெயமோகன் பேசுவார் என ஞாநி குறிப்பிட்டார். அவர் பேசி முடித்ததும் பார்வையாளர்கள் கேள்வி கேட்கலாம் எனவும் கூறினார்.

முதலில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு விடுகிறேன். நான் கையில் நோட்டு புத்தகம் எதையும் எடுத்து செல்லவில்லை. ஆகவே வழக்கமாக நான் செய்யும் குறிப்புகளை எழுதிக் கொள்வதையும் செய்யவில்லை. இங்கு எழுதப் போவது முற்றிலும் எனது நினைவிலிருந்தே வருபவை. எனவே சில விஷயங்கள் விட்டுப் போகலாம், சரியான வரிசையில் வராது போகலாம். எப்படியும் ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில் எழுதப்போகிறார். ஞாநியும் எழுதுவார், ஆனால் அவர் தளத்துள் போவது சில முயற்சிகளை தேவையாக்கும். பார்ப்போம்.

ஜெயமோகன் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். விவாதம் செய்ய சில புரிதல்கள் தேவை என்பதில் இருந்து அவர் துவங்கினார். பழங்காலங்களில் விவாதத்துக்கு புதிதாக வருபவரிடம் அமைப்பாளர்கள் அவர் எந்த சந்தஸ்-ல் பேசப் போகிறார்கள் என கேட்பார்களாம். இந்த இடத்தில் சந்தஸ் என்பதை சொற்களின் அர்த்தத்தை கூறுவதாக புரிந்து கொண்டேன். சில கலைச்சொற்களை எந்த அர்த்தத்தில் பிரயோகம் செய்வது என்பதை definition of terms/concepts என பல அறிவியல் கட்டுரைகளில் முதலிலேயே எழுதி விடுவார்கள் என்பதை நான் மொழிபெயர்ப்பு செய்த ஜெர்மன்/பிரெஞ்சு/ஆங்கில எழுத்துக்களில் பார்த்தவன் என்ற முறையில் ஜெயமோகன் சொன்னது புரிந்தது.

ஒருவர் தன் கருத்தைக் கூறும்போது சில terms of reference வைத்திருப்பார். அதனுள் அவர் கூறியதை மறுப்பதுதான் சரியான விவாதத்துக்கு வழிவகுக்கும். அதை விடுத்து tangential ஆக கேள்விகளை எழுப்புவது திசை திருப்பல்களாகத்தான் இருக்கும். அது குறித்து பல உதாரணங்கள் தந்தார். தான் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன ஒன்றை திரித்து சிலர் எழுத, அது அப்படியில்லை எனச் சொல்லிச் சொல்லியே தன் நாட்கள் கடப்பதாகவும் அவர் கூறினார். செங்கல் மேல் செங்கல் அடுக்குவதுபோல அவர் விஷயங்களை சொல்லிக் கொண்டே போனார். அவை எல்லாவற்றையும் இங்கே தர இயலவில்லை.
(frame of reference - என்று ஜெயமோகன் சொல்லியதாக சுட்டிக்காட்டிய கிருஷ்ண பிரபுவுக்கு நன்றி. அதை குறிப்பிட்ட பிறகு தான் உபயோகிக்கும் கலை சொற்களை எனத் பொருளில் கூறுகிறார் வாதத்தை வைப்பவர் என்பதையும் தெளிவுபடுத்துவது முக்கியம் என்றும் அவர் உடனேயே கூறியதால் நான் சற்றே குழம்பிவிட்டேன் என நினைக்கிறேன்).

பேச்சுவாக்கில் என்னை உதாரணமாக வைத்து சொன்ன ஒன்று நினைவில் இருக்கிறது. டோண்டு ராகவன் ஒரு விஷயம் பற்றி ஒரு கட்டுரை எழுதினால், அதில் உள்ள விஷயத்தை ஆங்கிலப்படுத்தி கூகளிட்டு பார்த்தால் நூறுக்கும் மேலான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கலாம், அவற்றை பார்த்து டோண்டு ராகவன் தவறாகக் கூறினார் என்பதை கட்டுரையின் கருப்பொருளை பற்றி அடிப்படை புரிதல் இல்லாதவர் கூட கூறிட இயலும் என அவர் குறிப்பிட்டார். (இதை கேட்டு நான் புன்னகை செய்தேன். ஏனெனில் இதை நான் ஏற்கனவே அனுபவித்தவன்). இவையெல்லாமே பேசியவரின் terms of reference-ஐ அலட்சியம் செய்து வெளியிலிருந்து கேள்வியை கேட்பதால்தான் வருகிறது என்றார். அப்போது விவாதம் குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் அனுபவத்தைத்தான் தருகிறது. ஆகவே நம்மால் விவாதிக்க முடியவில்லை என்பதை நிலைநாட்டினார்.

பிறகு ஞாநி அவர்கள் எழுந்து கேள்விகளை கேட்கலாம் என சொல்ல, முதல் கேள்வியை நான் கேட்டேன். ஜெயமோகனிடம் ஒரு முறை அவர் பதிவுகளில் பின்னூட்டமிட ஏன் ஏற்பாடு இல்லை என கேட்டதற்கு அவர் முக்கால்வசி பின்னூட்டங்கள் வசைகளாக இருப்பதாலேயே அவற்றை தவிர்ப்பதாக அவர் கூறியிருந்தார். அப்போதெல்லாம் அவரிடம் பின்னூட்டங்களை மின்னஞ்சல்களாகத்தான் அனுப்பவியலும். ஆனால் இப்போது பின்னூட்டங்கள் மட்டுறுத்தல் இருக்கிறது. பின்னூட்டங்களும் வருகின்றன. தற்சமயம் ஒரு பதிவில் சராசரியாக வசைகளின் சதவிகிதம் என்ன எனக் கேட்டேன்.

அவர் பதிலில் வசைகளின் சதவிகிதம் என்ன என்பதை அவர் கூறாவிட்டாலும், ஒரு நல்ல பின்னூட்டத்துக்கு மாறாக நான்கு வசைகள் வருவதாக அவர் கூறினார். ஆகவே வசைகளின் சதவிகிதம் 80% என குன்சாக நான் மனத்தில் குறித்து கொண்டேன். தனது பதிவுகளுக்கு வரும் மட்டுறுத்தல்களை தன்னையும் சேர்த்து நான்கு பேர் செய்வதாகவும், உலகில் வேவேறு இடங்களில் அவர்கள் வசிப்பதால் மட்டுறுத்தல் உடனுக்குடன் நடைபெறுவதாகவும் கூறினார். மற்ற மூவரில் ஒருவர் சிறில் அலெக்ஸ். மற்ற இருவர் பெயர்களையும் குறிப்பிட்டார், நான் மறந்து விட்டேன்.

சில குடும்பங்கள் தவிர பெரும்பாலும் விவாதங்கள் குடும்ப அளவிலேயே ஊக்குவிக்கப் படுவதில்லை என ஒருவர் கேள்வியெழுப்ப, அதை ஏற்றார் ஜெயமோகன். ஒரு சிறுவன் எட்டாவது படிக்கும் தருணத்தில்தான் உண்மையிலேயே தனது சுற்றுப்புறத்தை அவதானிக்கிறான், சகமாணவனுடன் அஜீத் பெரியவரா விஜய் பெரியவரா என்பது பற்றி வீவதிப்பதே அவனைப் பொருத்தவரை துவக்கம் என்றும் கூறினார்.

விவாதம் என வரும்போது எதிராளி எவ்வளவு பெரியவர் என்றெல்லாம் பார்த்து கொண்டிருக்க இயலாது என்றார். தான் சுந்தர ராமசாமியுடன் விவதித்தபோது அதையே ஒரு கண்டனத்துக்கிரிய செயலாக சிலர் கருதியதையும் அவர் குறிப்பிட்டார். சுந்தர ராமசாமி எவ்வளவு பெரிய மனிதர், அவருக்கு சமமாக தன்னைக் கருதிக் கொள்வதா என பொருள்படவும் அவரிடம் சிலர் சொன்னதையும் குறிப்பிட்டார்.

ராஜன்குறை (பெயரை சரியாக சொல்லி திருத்தியதற்கு நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்) என்பவர் ஜெயமோகன் அவரது கட்டுரைகளில் ஒரு extreme நிலைக்கு சென்று விடுகிறார். அதை விடுத்து எல்லா பார்வை கோணங்களையும் அவர் எழுத வேண்டும் என தான் கருதுவதாக அவர் சொன்னார். சில உதாரணங்களும் தந்தார். ஜெயமோகனும் அவருக்கு பாயிண்ட் பை பாயிண்ட் பதில்களை கொடுத்தார்.

இன்னும் சில கேள்விகள் வந்தன. நான் ஏற்கனவேயே கூறியபடி நினைவிலிருந்துதான் கூறுகிறேன். ஆகவே எல்லா கேள்விகளையும் இங்கு கவர் செய்ய இயலவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் இப்பதிவை பார்க்கும்போது பின்னூட்டமாக தத்தம் கேள்விகளையும் அவற்றுக்கு ஜெயமோகன் அளித்த பதில்களையும் கூறினால் இப்பதிவு முழுமை பெறும்.

பார்வையாளர்களில் ஒருவராக ஞாநியும் ஒரு கேள்வி கேட்டார். வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை ஜெயமோகன் குறைத்து மதிப்பிட்டதாக அவர் கூறினார். அதை ஜெயமோகன் மறுத்தார். வைக்கம் போராட்டமே பெரியார் அவர்கள் ஆரம்பித்ததாகவும் அவரே அதை நடத்தியதாகவும் தமிழகத்தில் திராவிட இயக்கத்தினரின் பிரச்சாரத்துக்கு பதிலாகவே உண்மையில் நடந்தது என்ன என்பதை தான் எழுதியதாகவும், பெரியாரின் பங்களிப்பை மறைக்கவில்லை என்பதையும் விளக்கினார். தனது கருத்துக்களை மறுத்து தமிழச்சி எழுதியது எல்லாமே பெரியாரை கோட் செய்துதான் வருகிறது. நடுநிலை ஊடகங்களை அடிப்படையாக வைக்கவில்லை என்றும் அவர் கூறினார். கேரளாவில் அக்காலக் கட்டத்தில் வந்த விவரங்களை பார்த்தால் திராவிட இயக்கங்கள் கூறும் ரேஞ்சில் பெரியாரின் பங்களிப்பு இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். அதுவும் இந்த விஷயங்கள் தமிழக கல்விக்கூடங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ள விஷயத்தையும் சுட்டிக் காட்டினார். மேலும் வைக்கம் பற்றி தான் எழுதியது காந்தியை பற்றிய சில புரிதல் குறைவுகளை களையும் நோக்கம்தான் கொண்டது என்றும், அதில் பெரியார் காந்தி சநாதனவாதிகளிடம் விலைபோய் விட்டார் என கூறியதை மறுக்க முனைந்தபோது பெரியாரின் உண்மையான் பங்களிப்பு இவ்வளவுதான், அதற்கு மேல் இல்லை என காட்டவே அவரைப் பற்றி எழுதியதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விவாதத்தின்போது நான் எழுந்து நின்று, வைக்கத்துக்கு பிறகு பெரியார் தமிழகத்தில் ஆலயப் பிரவேச போராட்டம் ஒன்றுமே தலைமை தாங்கி நடத்தவில்லை, இரட்டைக் குவளை பிரச்சினைக்கும் எந்த போராட்டமும் நடத்தியதாகத் தெரியவில்லை. அவர் செய்த ஒரே போராட்டம் பிராமணாள் ஹோட்டல் என பெயர்ப்பலகைகளில் இருந்ததி தார் பூசி அழிக்க முயன்றது மட்டுமே என்பதை கூறினேன்.

(அவ்வப்போது பிள்ளையார் பொம்மைகளை உடைப்பது, ராமர் படத்துக்கு செருப்புமாலைகள் போடுவது ஆகிய அவரது மற்ற பொழுதுபோக்கு செயல்களை நான் நேரமின்மை கருதி கூறாமல் விட்டுவிட்டேன், இங்கே குறிப்பிட்டு விடுகிறேன்).

கீழ்வெண்மணியில் 44 தலித்துகளை உயிரோடு கொளுத்திய பண்ணையார் கோபால கிருஷ்ண நாயுடுவின் பெயரைக்கூட கூறாது, அந்த நிகழ்ச்சி கம்யூனிஸ்டுகளால் துவக்கப்பட்ட கூலி உயர்வு போராட்டம் என கொச்சை படுத்தினார் என்றும், ஒரு நாயுடுவின் செயலை ஒரு பலீஜா நாயுடு பூசி மொழுகியதாகவும்தான் நான் இதை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டேன்.

தலித்துகளுக்கு என தனிப்பட்ட முறையில் ஏதும் செய்யவில்லை எனவும், அவர் கவலை எல்லாம் பார்ப்பனரல்லாத மற்ற உயர்சாதியினரின் நலன் பற்றி மட்டுமே என நான் குறிப்பிட்டேன். நான் கூறியதற்கு எதிர்வினை இல்லாதது நேற்றைய விவாதப் பொருளுக்குள் அதுவராததால் மட்டுமே என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன் என்றும் நான் கூறிவிடுகிறேன்.

காந்தி அம்பேத்கர், காந்தி பெரியார் ஆகிய விவாதங்கள் போது சம்பந்தப்பட்டவர் இடையே எழுந்த பிரச்சினைகள் தர்மத்துக்கும் தர்மத்துக்கும் இடையே என்றும், அவர்றை ஜெயமோகன் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடந்த பிரச்சினையாக கூறியதாக (காந்தி தர்மத்தின் தரப்பு) ராஜன் துரை மீண்டும் கேள்வியெழுப்ப, அதையும் வாதங்களுடன் மறுத்தார் ஜெயமோகன்.

இவ்வாறே நிகழ்ச்சிகள் சுவாரசியமாக போக மணி ஆறரை ஆனதே உணரமுடியவில்லை. ஜெயமோகன் புத்தகங்கள் விற்பனைக்கு இருப்பதாகவும் 10% விற்பனைக் கழிவு உண்டு எனவும் ஞாநி அறிவித்தார். எனக்கும் புத்தகம் வாங்க ஆசைதான். ஆனால் கேபிள் சங்கர் பரிசல்காரன் புத்தக வெளியீட்டுக்கு போக வேண்டியிருந்தது. ஆகவே அங்கு சென்றேன்.

அங்கு சென்று இருவரது புத்தகங்களையும், கூடவே கீழே உள்ள புத்தகக் கடையில் நர்சிம் எழுதிய அய்யனார் கம்மா புத்தகத்தையும் வாங்கினேன். மற்றப்படி நிகழ்ச்சிக்கு வெகு நேரம் கழித்து போனதால் சரியாக கவனிக்க முடியவில்லை. ஒரு மணி நேரம் கழித்து ஆரம்பித்திருந்தால் இரு சந்திப்புகளுக்கும் நல்ல முறையில் சென்றிருக்கலாம் என நினைக்கிறேன். இது என் சொந்த கருத்து மட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/28/2009

மடிக்கணினி அனுபவங்கள்

நேற்று காலை என் வீட்டம்மா சில கோவில்க்ளுக்கு போக வேண்டும் எனக்கூற பழக்க தோஷத்தில் முதலில் அதை ஏற்க மறுத்தேன். அவரும் மேலே வற்புறுத்தாது சென்று விட்டார். பிறகு எனக்கு கொஞ்சம் உறுத்தியது.

எனது முக்கிய ஆட்சேபணையே எனது மொழிபெயர்ப்பு வேலைதான். அது எப்போது வேண்டுமானாலும் மின்னஞ்சல் மூலம் வரும். ஆகவேதான் கணினி திறந்து, இணையத் தொடர்புடன் ஒரு நாளின் பெரும்பாலான பகுதிகளில் இருக்கும். ஆனால் இப்போதுதான் மடிக்கணினி வந்து விட்டதே. மேலும் ரிலையன்ஸ் டேட்டா கார்ட் வேறு இருக்கிறது.

முதலில் ரிலையன்ஸின் வாடிக்கையாளர் பிரிவுக்கு ஃபோன் செய்து எனது சேவைகள் தெரிவுக்கு அகில இந்திய அளவில் இணையத்தில் மேய இயலுமா என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு, முதன் முறையாக சென்னைக்கு வெளியில் செல்வதால் ஏதேனும் பிரத்தியேக அமைவுகள் செய்து கொள்ள வேண்டுமா எனக் கேட்டதற்கு, அவர் அமைவுகளில் ஹைப்ரிட் தரவுகளை பெற்றுக் கொள்ளும் தெரிவை டிக் செய்யச் சொன்னார். அதன்படித்தான் எற்கனவே தெரிவு இருந்தது என்பதை உறுதி செய்து கொண்டேன்.

பிறகு வீட்டமாவை அழைத்து கோவில்களுக்கு செல்லலாம் எனக் கூற, அவர் மகிழ்ச்சியுடன் கரூர், நாமக்கல், திருச்சி ஸ்ரீரங்கம், திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன் கோவில், திருநள்ளாறு என்று நிகழ்ச்சி நிரல் தயார் செய்தார்.

காலை 8 மணிக்கு இந்த முடிவு செய்தவுடன், எனது காருக்கு சொல்லி, அதை 09.30 மணிக்கு வர ஏற்பாடு செய்தேன். வீட்டுக் காவலுக்கு ஆளை நிறுத்தினோம். கிட்டத்தட்ட 10 மணிக்குத்தான் கிளம்ப முடிந்தது.

போன தடவை செல்லும்போது கரூர் பெருமாள் தரிசனம் செய்ய இயலாது போயிற்று. சொல்லிவைத்தாற் போல கோவில் நடையை மாலை 7 மணிக்கே சாத்தி விடுவதே காரணம். இம்முறை ஆகவே முதலில் கரூர், பிறகு நாமக்கல் எனச் சென்றதில் இரண்டு இடங்களிலும் நல்ல தரிசனம். இந்த இடத்தில் பெருமாள் கோவில்களுக்கே உரித்தான ஒரு அசௌகரியத்தையும் கூறத்தான் வேண்டும். அதாகப்பட்டது கோவில் நடை திறப்பது மிகக் குறுகிய கால அளவில்தான். அதிலும் ஒரு கோவிலில் திடீரென நடுவில் திரையெல்லாம் போட்டு படுத்துகிறார்கள். வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது.

சிவன் கோவில்களில் இப்பிரச்சினை இல்லை. அதிகம் இல்லை. அதிக நேரம் திறந்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நாளாக மனதில் உறுத்தும் விஷயம் இது. இப்போதுதான் அதைக்கூற சந்தர்ப்பம் வந்தது.

உடனேயே திருச்சி வந்து ஹோட்டலில் ரூம் போடும்போது, இரவு 11 மணி ஆகிவிட்டது.

மடிக்கணினியை திறந்து டேட்டா கார்டை பொருத்தி, இணைய இணைப்புக்கு க்ளிக் செய்தால் அது அமர்க்களமாக வந்தது. வாடிக்கையாளர் 4 மின்னஞ்சல்கள் மொழிபெயர்ப்புக்காக அவர் ஏற்கனவேயே எனக்கு தொலைபேசி மூலம் கூறியது போல வந்திருந்தன. அவற்றை முடித்து விட்டு படுக்கச் செல்லும்போது நள்ளிரவைத் தாண்டி முப்பது நிமிடங்கள் ஆகிவிட்டிருந்தன. இப்போது இந்தப் பதிவை போட்டு விட்டு திருவரங்கம் செல்ல வேண்டும். ஒரு ஏவிஜி ஸ்கேன் செய்தாயிற்று, Adaware ஸ்கேனும் இப்போதுதான் ஓக்கேயாக முடிந்தது.

செல்பேசிக்கு எனது லேண்ட் லைனுக்கு வரும் அழைப்புகளை திசை திருப்பியதன் மூலம் ஏதாவது வாடிக்கையாளர் அழைப்புகள் தவறுமோ என்ற ஐயம் அகன்றது. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது கணினியும் நம்முடன் கூடவே வரும் என்பதால் இன்னொரு சுதந்திரமும் வந்தது.

அதற்காக டெஸ்க்டாப்பை விட்டுவிட இயலுமா? இப்போதே எனது மடிக்கணினியில் உருவாக்கும் கோப்புகளை எனக்கே மின்னஞ்சல் செய்து கொண்டு அவற்றை வீட்டுக்கு சென்றதும் டெஸ்க் டாப்பிலும் இறக்கி கொள்கிறேன். ஆகவே தரவுகள் இரு வெவ்வேறு இடங்களில் பத்திரமாக இருக்கின்றன.

இந்த அனுபவம் சில நாட்களிலேயே பழகிவிடுமாகத்தான் இருக்கும். இருப்பினும் இப்போதைக்கு இந்த சுதந்திரம் தரும் மனநிறைவு வந்தது வந்ததுதான். அதை ரிகார்ட் செய்வதே இப்பதிவு.

வாழ்க்கை அற்புதமயமானது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/15/2009

அப்பாடி, ஒரு வழியாக மடிக்கணினி வாங்கி விட்டேன்

நான் பலமுறை பல இடங்களில் கூறியது போல என்னை எனது கணினியின் அருகாமையிலிருந்து பலவந்தமாக இழுத்துக் கொண்டுதான் என் வீட்டம்மா கோவில்கள் டூருக்கு அழைத்து செல்வார். நானும் நடுவில் வரும் ஊர்களில் ஏதேனும் உலாவி மையங்களை தேடிச் செல்வேன்.

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு புது வாடிக்கையாளர் என்னை ஒரு மாதகாலத்துக்கு ஹைதராபாத் வந்து அங்கு மொழிபெயர்ப்பு/துபாஷி வேலை செய்யவியலுமா எனக் கேட்டதற்கு நோ சான்ஸ் எனக் கூறிவிட்டேன். ஏனெனில் எனது மற்ற வாடிக்கையாளர்களது வேலையை புறக்கணிக்க இயலாது அல்லவா? அப்போதுதான் நான் ஏன் ஒரு மடிக்கணினி வாங்கிக் கொள்ளக் கூடாது என யோசிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் அது மட்டும் போதாதே, இணைய இணைப்பும் நான் செல்லுமிடத்திலெல்லாம் இருக்க வேண்டுமே. அதற்குத்தான் டேட்டா கார்ட் வாங்கிக் கொள்ளலாம் என எனது கணினி குரு முகுந்தன் கூறினான்.

பல நாட்கள் யோசித்த பிறகு போன சனியன்றுதான் காம்பாக் மடிக்கணினியும் ரிலையன்ஸ் டேட்டா கார்டும் வாங்கினேன். மடிக்கணினி மொத்தமாக 34000 ரூபாய் ஆயிற்று. டேட்டா கார்ட் ரூபாய் 3500. மடிக்கணினியை செட் செய்வதில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது. விண்டோஸ் எக்ஸ்.பி. மீடியா செண்டரை அதில் ஏற்ற இயலவில்லை. கடையில் போய் கேட்டால் ஏதோ பயாஸில் ஒரு ஆப்ஷனை செயலிழக்கச் செய்ய வேண்டும் எனக் கூறி அதை செய்தும் காட்டினார்கள். மீதியை முகுந்தன் பார்த்து கொண்டான். ஆனால் அதெல்லாம் செவ்வாயன்றுதான் நடந்தது. அதற்குள் டேட்டா கார்டும் செயலாக்கப்பட்டது.

இப்போது அமர்க்களமான வேகத்தில் இணையத்தில் உலாவ முடிகிறது. ஸ்கைப்பும் போட்டுக் கொண்டேன். அதற்காக மேஜை கணினியை விட்டு விட முடியுமா. அதையும் பராமரிக்கிறேன். இப்போது எனது கோப்புகள் இரு கணினிகளிலும் ஏற்றப்படுகின்றன. இதுவே நல்ல Backup ஆகவும் ஆகிவிட்டது. இப்போது என்னிடம் மூன்று இணைய இணைப்புகள் உள்ளன, டாட்டா இண்டிகாம், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் டேட்டாகார்ட். சரியான முன்ஜாக்கிரதை முத்தண்ணா என்று வேண்டுமானாலும் கூறிக் கொள்ளுங்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் 2002-ல் நான் டெஸ்க்டாப் வாங்கியபோது அதன் விலை கிட்டத்தட்ட 35,000 ரூபாய். அப்போது மடிக்கணினி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்கள், எனக்கு தெரிந்து டேட்டா கார்டுகள் லேது. வெறுமனே தொலைபேசி இணைப்புகள்தான் பெரும்பாலும். நவம்பர் 2002-ல்தான் டிஷ்னெட் போட்டுக் கொள்ள முடிந்தது. அதற்கு அப்போதைய செலவு 32,000 சொச்ச ரூபாய்கள்.

எல்லாவற்றுக்கும் ஒரு வேளை வரவேண்டும் என நினைக்கிறேன். 2000 ஆண்டில்தான் எனது மிகப்பெரிய வாடிக்கையாளரை தில்லியில் பிடித்தேன். 2001-ல் சென்னைக்கு வந்தபிறகும் அவரது வேலைகளால்தான் முதல் மூன்று ஆண்டுகளுக்கு சென்னையில் குப்பை கொட்ட முடிந்தது. இப்போது சென்னையிலும் நல்ல பிக்கப் ஆகிவிட்டது. இனிமேல் எங்கு சென்றாலும் கவலையில்லை என்னும் நிலைதான். எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருள்தான். ஆகவே 2000 ஆண்டுக்கு முன்னால் வந்திருந்தால் வாடிக்கையாளரை பிடிப்பதில் பிரச்சினையாக இருந்திருக்கும்.

பை தி வே மடிக்கணினியில் சிறு பிரச்சினை. ஷட் டௌன் செய்யும்போது கடசியில் மூடாது சிஸ்டம் தொங்குகிறது. நானும் சரியான வழிமுறைகளையே உபயோகித்தாலும் அப்படித்தான் நடக்கிறது. ஆகவே ஒவ்வொரு முறையும் பவர் ஸ்விட்ச் மூலம்தான் அணைக்க நேரிடுகிறது.

மறுபடியும் சிஸ்டத்தை ரீலோட் செய்ய வேண்டும் என முகுந்தன் அபிப்பிராயப்படுகிறான். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஏனெனில் மிகவும் சள்ளை பிடித்த வேலை. எனது ஏவிஜி, அட்அவேர், பிராக்டிகௌண்ட் & இன்வாய்ஸ் ஆகிய மென்பொருட்களை மீண்டும் நிறுவ வேண்டும். அவற்றில் பலவற்றுக்கு பல இற்றைப்படுத்தல்களும் செய்ய வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பிக்கும் பல இற்றைப்படல்கள் தேவைப்படும்.

நண்பர்கள் யாரேனும் ஆலோசனை த்ரவியலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது