12/31/2011

ஆஸ்பத்திரி வாசம்

கெட்டதிலும் நல்லது நடந்தது
மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு என்ற பதிவின் தொடர்ச்சியாகவும் இதை வைத்துக் கொள்ளலாம், அதன் பின் இது நடந்தது என்னும் அடிப்படையில். ஆனால் விஷயம் சற்றே சிக்கலானது.

முதலில் எட்டு நாட்கள் போல ஆஸ்பத்திரியில் தங்கியதில் உடல் பருமன் குறைய, அதனால் அதுவரை கண்பர்ர்வைக்குப்படாத ட்யூமர் ஒன்று இடது தொடையில் வெளிப்பட்டது. ஏதோ சாதாரண வீக்கம் என சத்ய நாராயணாவிடம் போக அவர் அதை பார்த்த போதே புன்னகையை தொலைத்து கேட் ஸ்கேனுக்கு ஆர்டர் செய்ய, அதன் ரிசல்ட் வந்ததும்தான் நிலைமை சற்றே சீரியஸ் என எனக்கே பட்டது. ஐந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி, 23-ஆம் தேதி அன்றுதான் ட்யூமரை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். டாக்டர் ரவிச்சந்திரன் என்னும் புகழ் பெற்ற ஓன்காலஜிஸ்ட்தான் அதை செய்தார். நேற்று டிஸார்ஜ்.

ஆஸ்பத்திரியில் எல்லாமே படுக்கையில் என ஆயிற்று. சிறுநீர் கழிக்க கதீட்டர், காயத்திலிருந்து கெட்ட நீர் வடிவதை மானிட்டர் செய்யும் ட்ரைன் என்றெல்லாம் அமர்க்களப்படுத்தி விட்டார்கள். பெட்பான் ஒத்துக் கொள்ளாததால் அடல்ட் டையப்பரை வேறு மாட்டி விட்டனர். கண்றாவி. ஆனால் என்ன செய்வது.

இப்போது டிஸ்சார்ஜ் ஆனாலும் கெட்ட நீர் வடிகால் பாத்திரம் அப்படியே உள்ளது. ஆகவே வீட்டை விட்டு வெளியேறுவது அசாத்தியமாயிற்று. வரும் செவ்வாயன்று அதை எடுப்பதாக ஐடியா. பார்ப்போம், கடவுள் விட்ட வழி. பிறகு இருக்கவே இருக்கின்றன தொடர் சிகிச்சைகள்.

இடது காலை நேராகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பெல்ட் போட்டுள்ளார்கள். ஆகவே ஒரு காலை இழுத்து இழுத்துத்தான் நடக்க வேண்டும். கூடவே கையில் டிரைனையும் ஏந்திக் கொள்ள வேண்டும்.

ஈரோட்டு பிடிவாதக் கிழவர் அக்காலகட்டங்களில் தன் மூத்திரச் சட்டியை சுமந்து செல்ல வேண்டியிருந்தாலும், மன உறுதியுடன் தன் வேலையை தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்வரை செய்தார் அவர். Hats off to him!!!

எனக்கும் அதே மனவுறுதியை அளிக்குமாறு என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பான் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டிக் கொள்கிறேன்.

நடுவில் ராஜேஷ் கன்னா என்னும் ஒரு அன்பர் எனக்கு ஃபோன் செய்து ஏன் எனது பதிவுகள் வரவில்லை எனக் கேட்டார். அவருக்கு அப்போது காரணத்தைக் கூறினேன். இப்போது இப்பதிவு.

நண்பர்கள் யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/12/2011

உன்மத்த நிலையை அடைதல்

நண்பர் ஜெயமோகனது இடுகையான யோகமும் பித்தும் என்ற பதிவு எனக்குள் எழுப்பிய எண்ணங்களே இப்பதிவு. அதிலிருந்து முதலில் சில வரிகள்.

பிரக்ஞையை மழுங்கடிக்கக்கூடிய சில அம்சங்கள் உண்டு. முக்கியமானது சீரான தாளம். பிரக்ஞை என்பது பெருமளவுக்குத் தாளத்தால் கட்டுப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தாளத்தைக் கேட்டுக்கொண்டிருந்தால் நம்முள் பிரக்ஞையாக ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் அந்தத் தாளத்திற்கு இயைப அமைவதைக் காணலாம் –ரயில்தாளத்தில் இதைப் பெரும்பாலானவர்கள் உணர்ந்திருப்பார்கள். தாளத்துடன் ஒளியும் காட்சிகளும் இணைக்கப்பட்டிருந்தால் அது இன்னும் தீவிரமாகிறது. ஒரு தாளத்துக்கு ஏற்பப் பத்துப்பேர் நம்மைச்சுற்றி ஆடினால், அந்தத் தாளத்துக்கு ஏற்ப வண்ணவிளக்குகள் மின்னினால் நம்மை அந்தத் தாளம் ஆட்கொள்கிறது. அது பிரக்ஞைநிலையை மழுங்கடிக்கிறது.

அதை சமீபத்தில் 1968-ல் வெளி வந்த ஷிகார் என்னும் இந்தி படத்தின் இப்பாடல் காட்சியில் காணலாம். ஆஷா, பரேக், பேலா போஸ் என்னும் இரு நாட்டிய நாரீமணிகளின் அந்த ஆட்டத்தில் பாடல் வரிகள் அற்புதமான ஹிந்தியின் ஒரு வட்டார வழக்காக அமைந்துள்ளன. என்னைப் போன்றவர்களுக்கு அது கூடுதல் போனஸ். நிற்க.

அப்பாடலில் டிரம்ஸ் இசை ஆஷா பரேக்கை படிப்படியாக ஆட்கொள்வதை இப்பாடல் காட்சியில் அற்புதமாக காட்டியுள்ளனர். அவரது அவஸ்தையை தர்மேந்திரா உற்று நோக்குவதும் கதையின் போக்குக்கு உதவி செய்வதாகவே அமைந்துள்ளது. பை தி வே அப்படத்தை நான் பார்க்கவில்லை. அப்பாடலை கீழே காணுங்கள்.



அதே போல சமீபத்தில் 1964-ல் வெளி வந்த நவராத்திரி படத்தில் வரும் கூத்துப் பாடலில் ஆரம்ப வரிகள் என்னை ஒரு மோன நிலைக்கே கொண்டு செல்லும். அப்பாடலின் வீடியோ கிடைக்கவில்லை. யாருக்காவது கிடைத்தால் சுட்டி தாருங்கள் அப்பு.

நண்பர் காளிராஜ் அவர்கள் தயவால் அக்காட்சியின் வீடியோவை கீழே எம்பெட் செய்கிறேன். என்ன ஆரம்ப வரிகள் மிஸ்ஸிங். பரவாயில்லை. காளிராஜ் அவர்களுக்கு என் நன்றி.



மற்றப்படி நான் சினிமா படங்கள் சில ஏன் இன்னும் மனதில் நிற்கின்றன? என்ற தலைப்பில் நான் வெளியிட்ட செண்டிமெண்டுகள் இங்கும் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

காதலிக்க நேரமில்லை: சமீபத்தில் 1964-ல் வெளிவந்த இப்படத்தை பார்க்கும்போதெல்லாம் விடுமுறை மூட் வந்து விடுகிறது. கதையிலும் ராஜஸ்ரீயும் காஞ்சனா கோடை விடுமுறைக்குத்தானே வீட்டுக்கு வருகிறார்கள். நான் கூட அப்படத்தை எனது முதல் ஆண்டு தேர்வுகள் முடிந்து கடை நாள் மாலை காட்சியில்தான் அப்படம் பார்த்தேன். ஸ்ரீதர் கூறியிருந்தது போல ஒருவரும் அப்படத்தில் அழவில்லை. சோகக் காட்சியே லேது. எல்லாமே ஜாலியாகப் போயிற்று. "என்னப் பார்வை இந்தப் பார்வை, இந்தப் பார்வை" பாடல் படமாக்கப்பட்டதுதான் அப்படத்தின் கடைசி ஷூட்டிங் என கேள்விப்பட்டேன்.

கலங்கரை விளக்கம்: இப்படத்தை நான் பார்க்கவில்லை. எனது முரட்டு வைத்தியம் - 1 பாதிப்பில் நான்கு ஆண்டுகள் படம் பார்க்காது இருந்தேன். அதில் மிஸ் செய்த படங்களில் இதுவும் ஒன்று. ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் Vertigo (starring James Stewart, kim Novak) படத்தின் தழுவல் இப்படம். படம் ரொம்ப சுமார்தான். ஆனால் அதன் பாடல்கள் என்னை மிகவும் பாதித்தன. "பொன்னெழில் பூத்தது"என்ற பாடல் மனத்துள் இன்னும் ஒலிக்கிறது. இதனுடைய இன்னொரு பாடல் "காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன், அதை கேட்டு வாங்கிப் போனாள் அந்த கன்னி என்னவானாள்" பாட்டு நான் மாலை நேரத்தில் பரீட்சையில் தோல்வியடைந்த வெறுப்பில் கடற்கரையில் பைத்தியம் போல உலவும்போது ட்ரான்ஸிஸ்டர்களிலிருந்து நான் போகுமிடமெல்லாம் என்னைத் தொடர்ந்து வந்தது. அப்பாட்டைக் கேட்கும் போது சமீபத்திய 1965 இன்னும் சமீபத்தில் வருகிறது.


அன்புடன்,
டோண்டு ராகவன்

12/06/2011

ஹிந்தி - தமிழ் மொழிபெயர்ப்பு

ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
ஹிந்தி/உருது மொழிகளை நான் சித்தி மொழி என்றே குறிப்பிடுவேன். அதாவது அன்னையின் தங்கை. மௌஸீ என்பார்கள். அதன் பொருள் தாயைப் போன்றவள் என்பதாகும். ஒரு குழந்தைகளின் அன்னை இறந்து விட்டால், அன்னையின் தங்கையையே அவர்களது அப்பாவுக்கு கட்டி வைப்பதும் ஒரு பழக்கமே. அதாவது தனது அக்காவின் குழந்தைகளை மாற்றாந்தாய் போலன்றி உண்மையாகவே அன்புடனும் அக்கறையுடனும் பார்த்துக் கொள்வாள் என்பதே அதன் தாத்பர்யம். நிற்க.

அவ்வாறு சித்தி மொழி எனக்கூறிவரும் நான் இத்தனை ஆண்டுகாலத்தில் ஒரு முறை கூட ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்ததில்லை. சான்ஸ் கிடைக்கவில்லை அல்லது அவ்வாறு வந்த வாய்ப்புகளையும் தவிர்த்தேன். காரணம் ஹிந்தியில் உள்ள எழுத்துக்களே. க, ச, ட, த ஆகியவை தலா நான்கு உச்சரிப்பில் உள்ளன. அவற்றில் எனக்கு எப்போதுமே தகராறுதான்.

இருப்பினும் ஒரு பிரபல வங்கியின் ரூரல் துறையிலிருந்து ஒரு மொழிபெயர்ப்புக்கான வாய்ப்பு வந்தது. அந்த வங்கியின் கிராம சேவைகளை காட்டும் வண்ணம் போஸ்டர்கள், படக்கதைகள் ஆகியவை. இம்முறை துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டேன். அடாடா மொழிபெயர்ப்பு வேலை தன்னைப் போல ஸ்மூத்தாக சென்றது. ஹிந்தியிலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு இய்ல்பாகவே வந்தது.

என்ன, சில மாறுதல்கள் செய்ய வேண்டியிருந்தது. சூரஜ் தமிழில் முருகன் ஆனார், அவர் மனைவி ரூபா வள்ளி என அழைக்கப்பட்டார், அவர்கள் மகள் ஜூஹி மேகலாவானாள். அவர்கள் ஊர் ராம்புர் புதூராயிற்று. கண்ஷ்யாம் கணேசன் ஆனார்.

இந்த வேலையில் மொழி பெயர்ப்பை விட DTP வேலைதான் அதிக. அதையும் செய்தேன் என வைத்துக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் நல்ல அனுபவம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/01/2011

மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு

வடிவேலு சொல்வது போல சென்ற செவ்வாய் 22.11.2011 அன்று எல்லாம் நல்லபடியகத்தானே போய் கொண்டிருந்தது. காலையில் வீட்டம்மாவுடன் வீட்டெதிரில் இருந்த உழவர் சந்தைக்கு சென்ற போதும், வரவிருக்கும் நிகழ்ச்சிகள் பற்றி ஒரு ஐடியாவும் இல்லைதானே.

வீட்டம்மா காய்கறிகள் வாங்க நான் பணம் பட்டுவாடா செய்யும் வேலையை மற்றும் மேற்கொண்டிருந்தேன். திடீரென உடலில் ஏதோ மாறுதல் வந்தது போன்ற உணர்வு. மயக்கம் வரப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்து ஜாக்கிரதையாக அருகில் உள்ள காலியான ஒரு ஸ்டாலில் அமர்ந்ததுதான் தெரியும். நினைவுக்கு வரும்போது என்னைச் சுற்றி என் வீட்டம்மாவும் மர்றவர்களௌம் என்னை நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்த வண்ணம் இருந்தனர். யாரோ ஒரு கடைக்கார புண்ணியவான் எனக்கு ஹார்லிக்ஸ் புகட்டிக் கொண்டிருந்தார்.

தினமும் என்னை அப்பாவென்றும், என் வீட்டம்மாவை அம்மா என அழைத்து வரும் அந்த எளிய மக்களின் முகத்தில் உண்மையான தவிப்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன். சும்மா சொல்லக் கூடாது அந்த நிலையிலும் மன உறுதியுடன் என்னை வீட்டுக்கு பத்திரமாக அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்ட என் வீட்டம்மா என் மதிப்பில் இமயமென உயர்ந்தார். சத்தியமாகவே சொல்கிறேன், அவர் நிலையில் நான் இருந்திருந்தால் என் கோழை மனது என்னை உறுதியுடன் செயல்பட விட்டிருக்காது.

வீட்டுக்கு வந்ததுமே, என்னை அவர் அருகில் உள்ள ஹிந்து மிஷன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இசிஜி எடுத்து, ஒரு நாள் அவதானிப்பில் வைத்திருந்தனர். அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியே, எனது இப்பதிவின் தலைப்புக்கு இன்ஸ்பிரேஷன். ஒரே நொடியில் என்னிடமிருந்த செல்பேசி, கடிகாரம், மோதிரம், பணம் ஆகியவை என்னிடமிருந்து எடுக்கப்பட்டு என் வீட்டம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஒரு தருணத்தில் என் மனது எண்ணாதவற்றையெல்ல்ம் எண்ணீயது. மரணத்தின் தருவாயில் இருப்பவன் எந்த வகைச் செல்வனாயினும் ஓட்டாண்டியாகத்தான் இவ்வுலகை விட்டு செல்கிறான்.

இப்போது பின்னால் பார்க்கும் போது நான் கூறுவது மிகைப்படுத்தலாகவே இருக்கட்டும். இருப்பினும், அத்தருணத்தில் அந்த எண்ணமே டாமினேட் செய்தது என்பதுதான் நிஜம். செவ்வாயன்றே ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த நான் மறுபடியும் வியாழனன்று உடல்நலம் சீர்க்கெடவே டாக்டர் சத்தியநாராயணாவின் ஸ்ரீசக்ரா ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். இம்முறை எனக்கு எம்ஆர்ஐ ஸ்கேன், பல முறை இசிஜி, ஸ்கல் எக்ஸ்ரே, எக்கோ டெஸ்ட் எல்லாம் செய்ய்ப்பட்டன. எல்லாம் நல்லபடியாக முடிந்து இன்றுதான் நல்லபடியாக டிஸ்சார்ஜ் ஆனேன்.

இப்போது எனக்கு வேறுவகை அனுபவம் ஏற்பட்டது. எனது முக்கிய வாடிக்கையாளருக்கு நான் தினசரி அளித்து வந்த மின்னஞ்சல்களின் மொழிபெயர்ப்பு வேலை பிளாக் ஆயிற்று. விஷயம் அறிந்து விரைந்து வந்த எனது வாடிக்கையாளர், கவலை வேண்டாம் எனவும், நான் ஆஸ்பத்திரியில் இருக்கும் வரை, ஜெர்மன் மின்னஞ்சல்களுக்கு தானே கூகள் டிரான்ஸ்லேட் மூலம் கண்டெண்ட் அறிந்து, அவற்றுக்கான பதில்களை ஆங்கிலத்திலேயே போட்டுக் கொள்வதாக அவர் கூறியதும்தான் நானும் நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஆக நாம் இல்லையென்றாலும் உலகம் இயங்கும், நாம் ஒன்றும் நாமே நினைத்துக் கொள்வது போன இன்றியமையாதவர்கள் இல்லை என்பதும் நான் இப்போது நேரடியாக கண்டுணர்ந்த இன்னொரு உண்மை.

எது எப்படியோ, இதை பதிவாக போட்டதும்தான் மனம் நிம்மதி அடைந்துள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/21/2011

டோண்டு பதில்கள் - 21.11.2011 முன்கூட்டியே, (ஆனால் இதுதான் கடைசி பதில்கள் பதிவு, ஆளை விடுங்கள்)

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.உயரமான தொலைக்காட்சி கோபுரம்: ஜப்பான் கின்னஸ் சாதனை
2.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
3.லோக்பால் வரம்புக்குள் சிபிஐ: ஹசாரே குழு
4.கூடங்குளம்: பேச்சு தோல்வி
5.அமெரிக்க நிறுவனங்களின் அச்சம் நீக்கப்படும்: மன்மோகன்
6.1996 உலகக் கோப்பையில் சூதாட்டம்?
7.மருந்துகளின் விலையை மிக அதிகமாக உயர்த்தக்கூடாது: உச்ச நீதிமன்றம்
8.சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்புகிறார்கள்: டி.ராஜேந்தர்
9.விலை உயர்வைக் குறைக்க மனம் இருந்தால் மார்க்கம் உண்டு: கருணாநிதி
10.தமிழக காங்கிரஸை பலப்படுத்துங்கள்: ஞானதேசிகனுக்கு சோனியா காந்தி உத்தரவு
ரமணா
1.தமிழக்த்தில் பஸ்,பால் கட்டணங்கள் அதீத உயர்வு?
2.அத்வானியின் ரத யாத்திரை வெற்றியா?
3.ராகுல் மாயா பைட் எப்படி?
4.காங் மம்தா ஊடல் பற்றி?
5.ஞானதேசிகன் காங்கிரசை கரை சேர்ப்பார?
6.விஜயகாந்த் போராட்டம் ஜெவை எதிர்த்து?
7.அதிமுகவின் மக்கள் செல்வாக்கு இனி?
8.சுக்கிராமுக்கு ஜெயில்?
9.சச்சின் அதிரடி 100/100 பற்றி?
10.பாமக வின் எதிர்காலம்?

ஏம்பா பிடி மற்றும் ரமணா, நீங்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? டோண்டு ராகவன் என்ன காதில் பூ வைத்துக் கொண்டிருக்கிறானா? அவனுக்கு வேறு உருப்படியான வேலைகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவற்றை செய்கிறானோ இல்லையோ உங்க்ளது கேனத்தனமான கேள்விகள் அவனுக்கு தேவையில்லை. கேள்விகளே தேவை இல்லை என ஒரு ஸ்டெப் முன்சென்று கூறி விடுகிறேன்.

பல முறை பலர் குறிப்பிட்டு விட்டார்கள், அவர்கள் இருவரும் ஒரே நபர், அதுதான் டோண்டு ராகவன் என. அது நிச்சயமாக டோண்டு ராகவன் இல்லை ஆனால் இருவரும் ஒரே நபர்தான் என மட்டும் நினைக்கிறேன். கேள்விகளையாவது புத்திசாலித்தனமாக கேட்கிறீர்களா? இணையத்தில் ஏதாவது செய்தி பக்கத்திற்கு போய் காப்பி பேஸ்ட் செய்து கேள்விகள் அனுப்புகிறீர்கள். சரி, பதில்கள் போட்டால், எதுவுமே நடக்காதது மாதிரி மேலும் கேள்விகள். நானும் ஏதோ பொழுது போகின்றதே என பதிலளிக்கிறேன். ஆனால் எனது பொறுமை இவ்வளவுதான், இதற்கு மேல் இல்லை. எது எப்படியாயினும் பதில்களை மூட்டை கட்டுகிறேன். போட்ட பதிவுகள்? அவை இருக்கட்டும், கேனத்தனமாக இருக்கின்றன கேள்விகள் என்றாலும்.

ரமணாவுக்கு வலைப்பூ இல்லை அதே சமயம், பிடிக்கு ப்ரொஃபைலே இல்லை.

மேலும் கேள்விகள் வந்தால் அவை மட்டுறுத்தலில் தடை செய்யப்படும். எல்லா விஷயங்களும் முடிவுக்கு வரவேண்டியதுதான்.

கொலை வெறியுடன்,
டோண்டு ராகவன்

11/17/2011

டோண்டு பதில்கள் - 17.11.2011

BalHanuman
கேள்வி-1. உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வதாக இருந்தால் எதற்காகப் பாராட்டிக் கொள்வீர்கள்?
பதில்: ரொம்ப சங்கடமான கேள்வி. அதே போன்ற இன்னொரு, ஆனால் இதனுடன் சம்பந்தமான கேள்வி, “நீங்கள் கற்றவற்றைப் பட்டியலிடுங்கள்” என்பதே. இக்கேள்விக்கு விடையாக பட்டியலிடும்போது பெரிய பட்டியலாக வந்து விட்டால் அதை வைத்துக் கொண்டு என்னைத்தானே பாராட்டிக் கொள்ள இயலுமா என பார்க்க2 வேண்டும்.

ஆனால் அந்தோ அவ்வாறு பட்டியலிடும்போது ரொம்பவும் தேற மாட்டேங்கறதே. இதைத்தான் கற்றது கைம்மண்ணளவுன்னு ஔவை பாட்டி சொன்னாருன்னு நினைக்கிறேன்.

ஆகவே ஆளை விடுங்கள், இந்த ஆட்டத்துக்கு நான் வரவில்லை.

கேள்வி-2. குடும்ப அதிகார மையப் போட்டியில் கனிமொழி வீழ்ந்துவிட்டால்...?
பதில்: ஒருவர் வீழ்ந்தால் வேறு இன்னொருவர் ஜெயிப்பார்தானே, அவரும் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்தானேன்னு விட்டுவிட வேண்டியதுதான், அவ்வ்வ்வ்.

கேள்வி-3. கட்சிக்காகவும் உறவுகளுக்காகவும் தான் நான் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு ஜெயிலில் இருந்து வருகிறேன் என்று கனிமொழி கூறியிருக்கிறாரே?
பதில்: பேரம் இன்னும் முடியவில்லை என நினைக்கிறேன்.


pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-4. கனிமொழி ஜாமீன் விவகாரம்: நீதி தாமதப்படுகிறது - கருணாநிதி வேதனை
பதில்: ஆம், நீதி தாமதபடுகிறதுதான். சட்டுபுட்டென கேசை முடித்தோமா, கனிமொழியை உள்ளே தள்ளினோமா சில ஆண்டுகளுக்கு, என இருக்க வேண்டாமா?

கேள்வி-5. 90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை
பதில்: ஆம்னி பஸ் டிரைவர்கள் மேல் அவரவர் முதலாளிகளால் தரப்படும் நிர்ப்பந்தம் பற்றியும் யோசிக்க வேண்டும். ரெஸ்ட் தராது, ஒரு ஆளையே வரிசையாக ட்ரிப்புகளுக்கு பயன்படுத்துவது வேறு இருக்கிறது. வேகமாகச் செல்ல வேண்டியது அவருக்கான கட்டாயம்.

கேள்வி-6. இந்தியா & பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம் ஏற்படும்
பதில்: பிளாஸ் பேக் போல பின்னால் செல்லும் விஷயம் ஏதும் இருக்காது என நம்புவோமா.

கேள்வி-7. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்ட பிரச்னை: மோடி கவலை!
பதில்: தேசபக்தியுடைய யாருமே பட வேண்டிய கவலைதானே. ஆகவே மோடியும் படுகிறார்.

கேள்வி-8. ஆர்க்டிக் பனிப்பாறைகள் 4 ஆண்டில் உருகும் : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
பதில்: பங்களா தேஷ், போன்ற பல நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம் உண்டு.


ரமணா
9. கிங்பிஸருக்கு அரசு பண உதவி சரியா?
பதில்: கமர்ஷியலாக அதை நியாயப்படுத்த முடிந்தால், பரவாயில்லை. ஆனால் உதாருக்காக அல்லவா மல்லய்யா செயல்படுவது போலத் தோன்றுகிறது?

10. பொதுத்துறைகள் இனி?
பதில்: வெறுமனே வெட்டி வேலைகளை உருவாக்காது இருந்தாலே பொதுத் துறைகள் உருப்பட்டு விடும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் கம்மி என்றுதான் அஞ்சுகிறேன்.

11. இந்தியா வங்கிகளின் எதிர்காலம்?
பதில்: அன்னிய வங்கிகளின் பிடியில் அகப்படாமல் இருந்தாலே போதும்.

12. அதிமுக காங் கூட்டணி கனியுமா?
பதில்: தமிழக ஊசல் விளையாட்டில் அதன் முறைதான் இப்போது.

13. அமெரிக்காவில் கலாமுக்கு சோதனை?
பதில்: நாமும் நம் பங்குக்கு பில் கிளிண்டன், ரசீது கிச்சா (நன்றி கிரேசி மோகன் அவர்களே) ஆகியோரை சோதித்தால் ஆயிற்று.

14. பெட்ரோலிய நிறுவனங்கள்‍‍‍... நஷ்டம் என்பது போலி கணக்கா?
பதில்: போலி இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

15. ராகுல் காங்கிரஸின் செயல் தலைவர் ஆவது பற்றி?
பதில்: நேரு குடும்பத்தையே பிடித்துக் கொண்டு தொங்குவது காங்கிரசுக்கு அவமானமே.

16. 2ஜி வழக்கு என்னவாகும்?
பதில்: வழக்கைத் துவங்கி விட்டார்கள் என படித்த நினைவு இருக்கிறதே.

17. கூடன்குளம் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கும்?
பதில்: வெற்றி மக்கள் நலனுக்கு கிடைத்தால் சந்தோஷமே.

18. அரசு டீவியில் சன் டீவி எப்படி சாத்யம்?
பதில்: இப்போதைக்கு சாத்தியம் இல்லைதான்.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/13/2011

மன்னிக்கவும் இது politically correct பதிவு இல்லை

மொழிபெயர்ப்பு தலைவாசலாம் ப்ரோஸ்.காம்-ல் நான் எனது பழைய மன்ற இடுகைகளை புரட்டிக் கொண்டிருந்தபோது இந்த இடுகை கண்ணில் பட்டது. அதன் தமிழாக்கம் இங்கே.

இதை நான் எதேச்சையாகக் கண்டேன். ரஷ்ய மன்றங்களை ஸ்க்ரால் செய்தபோது இது ஆங்கிலத்தில் இருந்தது. அந்த மன்ற இடுகைக்கு 220-க்கும் மேல் பின்னூட்டங்கள். (ரஷ்ய இடுகையின் சுட்டியை மறந்து விட்டேன், மன்னிக்கவும்). உங்களுடன் இதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ழ்சி அடைகிறேன்.

சந்தைப்படுத்தல் என்றால் என்ன? (நீங்கள் ஒரு பெண்).
ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை நேரடியாகவே அணுகி, "என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறீர்கள், இது நேரடி சந்தைப்படுத்தல்.

ஒரு பார்ட்டியில் உங்கள் நண்பர்களுடன் கலந்து கொள்கிறீர்கள். அப்போது ஒரு அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை உங்கள் நண்பர்களில் ஒருவர் அணுகி உங்களைக் காண்பித்து, "அவளுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறார். இது விளம்பரம்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை அணுகி அவனது தொலைபேசி எண்ணைப் பெறுகிறீர்கள். அடுத்த நாள் அவனை ஃபோனில் கூப்பிட்டு, "என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறீர்கள், இது டெலிமார்க்கெட்டிங்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். உங்கள் புடவைத் தலைப்பை சரி செய்து கொண்டு, அவனிடம் செல்கிறீர்கள். அவனுக்காக கூல்ட்ரிங்க் வாங்கி கொடுக்கிறீர்கள். அவன் டையை அட்ஜஸ்ட் செய்யும்போது “தற்செயலாக” உங்கள் மார்பகம் அவன் முழங்கையில் உரசுகிறது. பிறகு, "அட சொல்ல மறந்து விட்டேன், என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்” என்கிறீர்கள். இது பப்ளிக் ரிலேஷன்ஸ்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனே உங்களிடம் வந்து, “உன்னோடு படுத்தால் சந்தோஷம் நிச்சயம்னு எல்லோரும் சொல்லறாங்களே” ன்னு சொல்லறான். இது பிராண்ட் அங்கீகாரம்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை உங்கள் தோழியுடன் செல்லுமாறு அவனுக்கு கூறுகிறீர்கள். நீங்கள் ஒரு விற்பனை பிரதிநிதி.

உங்கள் தோழியால் அவனுக்கு மகிழ்ச்சி இல்லை. அவன் உங்களை அழைக்கிறான். இதுதான் டெக்னிக்கல் சப்போர்ட்.

நீங்கள் ஒரு பார்ட்டிக்கு செல்கிறீர்கள். திடீரென அங்கு பல அழகான வாலிபர்கள் இருக்கக் கூடும் என உங்களுக்குத் தோன்றுகிறது. ஆகவே ஒரு உயரமான மேஜை மீது ஏறிக் கொண்டு, “என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்” என்று உரக்கக் கூவுகிறீர்கள். அது ஸ்பாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/11/2011

மகாநாடுகளில் நடக்கும் திருட்டுகள்

எனது ஆங்கில வலைப்பூவில் நான் பின் தொடரும் வலைப்பூக்களில் நான் குறிப்பிடுபவரது வலைப்பூவும் ஒன்று. அவரது இந்த இடுகையே எனது இப்பதிவுக்கு தூண்டுகோலாக அமைந்தது. அந்த இடுகையிலிருந்து சில வரிகள்.
“One member of the Business Practices listserv was furious when her computer bag was stolen out of the room where the listserv was holding a happy hour. She had placed it on the floor next to the bartender station. After reporting the theft to hotel security, they found it 15 minutes later “on the 3rd floor, in an empty closed room, with all the zippers opened, conference materials left alone but [the] laptop was gone.” She was then upset with the way the hotel handled the situation because they would not give her the incident report because it was “confidential Marriott property,” claimed they did not have security cameras (although they initially told her they would check the cameras) and did not reported the incident to the police. She felt the Marriott was covering the incident up and asked people to contact her if they saw any suspicious activity.

OK, first of all, shame on her for leaving her bag unattended. I always remind the first-time conference attendees to be aware of their valuables and to look back when they leave their seat, room, etc. to make sure they have not left anything behind. I never let my laptop or purse out of my sight – or in fact out of my hands or off my shoulder. I would never in a million years leave it unattended next to a bartender station or anywhere else. The fact is that hotels in general are public locations, and anyone can come in off the street and blend into the crowd”.

ஆக திருட்டுகளுக்கு முக்கிய காரணமே இம்மாதிரி பொது இடங்களுக்கு செல்பவர்கள் தத்தம் பொருட்களை பாதுகாப்பதில் அதீத அக்கறையின்மையைக் காட்டுவதுதான். ஹோட்டல்களில் சாப்பிட வரும் பலர் தங்கள் செல்பேசியை டேபிள் மீது வைத்து விட்டு கைகழுவ செல்கிறார்கள். திரும்பி வருவதற்குள் யாரோ ஆட்டையை போட்டுவிட, அவர் குய்யோ முறையோ என கத்துவது மட்டும் குறையாது. பலருக்கு பல முறை இவ்வாறு நடந்திருப்பதை பார்த்தபின்னாலும் பலர் இம்மாதிரி கூமுட்டைத்தனத்துடன் செய்வது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இது போன்ற ஒரு விஷயத்தை நண்பர் பத்ரி அவர்கள் எழுதியது என் நினைவுக்கு வந்தது. அவருக்கு ஃபோன் போட்டு கேட்டதில் உலகச் செம்மொழி மாநாட்டில் நடந்ததைத்தான் தான் எழுதியதாக குறிப்பிட்டதாகக் கூறினார். அவர் பதிவு மாநாட்டு ஏற்பாட்டளர்கள் செய்த சொதப்பல்களை அதிகம் குறிவைத்தது. அதில் வந்த பின்னூட்டங்கள் பல மாநாட்டுக்கு வந்தவர்களது செயல்பாடுகளையும் புட்டு புட்டு வைத்தன. நோய்க்கூறு மனநிலை என்னும் தலைப்பிட்டு வந்த அவரது அப்பதிவிலிருந்து சில வரிகள்:

“கையேந்திக் கேட்பது என்பது ஒரு நோய்க்கூறு மனநிலை. அதுவும் அந்தப் பொருளால் தனக்கு ஏதேனும் பயன் உள்ளதா என்பதைப் பற்றி துளியும் புரிந்துகொள்ளாது, வேண்டும், வேண்டும், கொடு, கொடு என்று பறப்பது நோய்க்கூறு மனநிலை. தனக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டார்கள் என்றபின்னும் மேலும் மேலும் கொடுங்கள் (என் மாமனுக்கு ஒண்ணு, என் மச்சானுக்கு ஒண்ணு, என் கூட்டாளிக்கு ஒண்ணு) என்று கையேந்துவதும் நோய்க்கூறு மனநிலைதான். கீழே வைத்துள்ள பொருள்களை உரியவர் அனுமதி இன்றி எடுத்துச் செல்வது நோய்க்கூறு மனநிலை. யாரும் இல்லாத நிலையில் பொருளைத் திருடுவது அதீத நோய்க்கூறு மனநிலை.

கோவை செம்மொழி மாநாட்டில் இவை அனைத்தையும் பார்த்தேன்.

இணையக் கண்காட்சியில் நாங்கள் வாடகைக்கு எடுத்து வைத்திருந்த இரண்டு கணினிகளில் ஒன்றைக் களவாடி விட்டார்கள். இரவு கண்காட்சி முடிந்து, அடுத்த நாள் காலையில் வண்டியில் கட்டி எடுத்துப்போவதற்குமுன்னதாகவே களவாடிவிட்டார்கள். NHM Writer, NHM Converter அடங்கிய 3,000 சிடிக்களை வைத்திருந்தோம். அதில் 1,000-ஐ விநியோகித்திருந்தோம். காலையில் பார்த்தால் 700-தான் மீதம். சுமார் 1,300 சிடிக்கள் அடங்கிய பெட்டிகளை எடுத்துப்போய்விட்டார்கள். அதனை ஆளுக்கு ஒன்றாக கணினி வைத்திருப்போரிடம் சேர்த்தார்கள் என்றால் பயன் கொண்டதாக இருக்கும்.

தமிழ் இணைய மாநாட்டு வளாகத்தில் இந்தியத் தமிழர் முதல் வெளிநாட்டுத் தமிழர் வரை, படித்த பேராசிரியர்கள் முதல் பாமர துப்புறவுத் தொழிலாளர் முதல், கையேந்தி கையேந்தி, இலவசமாக அதைக் கொடு, இதைக் கொடு என்று பறக்காவட்டியாகப் பறந்து அலைந்ததைப் பார்க்க வெட்கமாக இருந்தது. செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த பலர் அடித்துப் பிடித்துக்கொண்டு கிடைத்ததையெல்லாம் சேகரிக்க விரும்பியதன் பலனாக, தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்தவர்களுக்குக் கொடுக்க என்று வைத்திருந்த மாநாட்டுக் கட்டுரைகள், சிடி அடங்கிய பைகளை பாதுகாக்கவேண்டியிருந்தது. இதனால் தமிழ் இணைய மாநாட்டுப் பேராளர்களுக்குக் கடும் கோபம். பெயர்களைப் பரிசீலித்து, கையெழுத்து போட்டு வாங்குங்கள் என்றால், பலர் பொய்க் கையெழுத்துகளைப் போட்டு பைகளைத் திருடிச் சென்றனர்”.


அப்பதிவில் சில பின்னூட்டங்கள்:

“அரவிந்தன் said...
பயிலரங்கில் நான் வைத்திருந்த குறிப்பேடு வந்திருந்த பொதுமக்களால் எடுத்துச்செல்லப்பட்டுவிட்டது.இருமுறை என்னோட டேட்டா கார்டு திருடு போகும்நிலை இருந்தது.நான் சற்று உஷாராக இருந்ததால் தப்பித்தது .

நான் படிப்பதற்காக வாங்கி வைத்திருந்த தினசரிகளை கேட்டு வாங்கி சென்றனர். மேஜையில் இருந்த அனைத்தையும் எடுத்து சென்றனர். அவ்வளவு ஏன் நான் சாப்பிட மேஜையில் வைத்திருந்த நேந்தரங்கா சிப்ஸை கூட விட்டு வைக்கவில்லை.:(
TUE JUN 29, 11:41:00 AM IST

நேந்த்ரங்கா வறுவலைக்கூடவா விட்டு வைக்கவில்லை எனக்கேட்பது முரளிமனோகர். :))

Badri said...
அரவிந்தன்: இன்னும் பலவற்றை நான் எழுதவில்லை. சாப்பாட்டு அரங்கில், தேநீர் வழங்கும் இடத்தில் நடந்தவை போன்ற அசிங்கங்களை எங்கும் பார்க்கவில்லை. மாடரேஷன் என்பதே இல்லாமல், வாங்கி வாங்கிச் சாப்பிட்டது; எக்கச்சக்கமாக தட்டில் நிரப்பிக்கொண்டு வீணடித்துக் குப்பையில் போட்டது...

எத்தனை எத்தனையோ பென் டிரைவ்கள் களவாடப்பட்டன. இலவசமாகப் பயன்படுத்த வைத்திருந்த கணினிகளின் ஆப்டிகல் மவுஸ்களைத் ‘தள்ள’ முயற்சி செய்தனர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இலவசம் என்ற வார்த்தை எந்த அளவுக்கு நம் மக்களை ஆட்டிவைக்கிறது! திருடுதல் என்பது எவ்வளவு ஈனத்தனமான செயல் என்பதை எப்படி அறியாமல் இருக்கிறார்கள்? ஐயன் திருவள்ளுவன் என்று வாய் கிழியப் பேசுவது இதற்காகத்தானா?

தமிழர்களின் ஒட்டுமொத்தக் கயவாளித்தனத்தை ஒரே இடத்தில் காண உதவியது ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’.
===
ஆனால் இவற்றையும் மீறி பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. அவைபற்றி எழுதுவதற்குமுன் கோபத்தைத் தணித்துக்கொள்ளவே இந்தப் பதிவு.
TUE JUN 29, 12:03:00 PM IST

இம்மாதிரி இடங்களில் நான் இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜாக்கிரதை உணர்வு பன்மடங்காக இருத்தல் அவசியம் எனக்கூறவும் வேண்டுமோ?

சில செய்ய வேண்டிய / செய்யக்கூடாத செயல்கள்
அப்போதுதான் உங்கள் பொருட்களை இழக்காமல் இருப்பீர்கள்.

1. பொது இடங்களுக்கு செல்லும்போது தேவையானவற்றை மட்டும் எடுத்து செல்லுங்கள். சில இடங்களில் செல்பேசியைக் கூட உள்ளே எடுத்து செல்ல முடியாது (அதுவும் அது கேமிரா வசதியோடு இருந்தால் கேட்கவே வேண்டாம்). நான் வாடிக்கையாளரது அலுவலகத்தில் அன்றைய தினத்துக்கு வேலை செய்வதற்காக செல்லும்போது செல்பேசி அவசியம் தேவை. அதே சமயம் அது கேமிரா செல்பேசியாக இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.
துக்ளக் ஆண்டுவிழா கூட்டங்களில் போலீசார் கெடுபிடி செய்வார்கள். ஆகவே அங்கெல்லாம் நான் செல்பேசியே எடுத்துச் செல்வதில்லை.

2. செல்பேசிக்கே அந்த கதி என்றால், லேப்டாப் பற்றி கேட்கவா வேண்டும்? எந்த இடத்திலும் அதை வைத்து விட்டு அப்பால் செல்வதைத் தவிர்க்க வேண்டும். டேட்டா கார்ட், பவர் கார்ட் ஆகியவற்றையும் கண்போல பாதுகாக்க வேண்டும் எனக்கூறவும் வேண்டுமா?

ஜெயமோகன் ஆர்கனைஸ் செய்த ஊட்டி இலக்கிய மாநாட்டுக்கு நான் செல்லாததற்கு முக்கியக் காரணமே லேப்டாப் பாதுகாப்பு பற்றிய எனது கவலைதான். எனது மொழிபெயர்ப்பு வேலைகள் தொடர்ச்சியாக வருபவை. ஆகவே லேப்டாப் எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பது என்னும் பேச்சுக்கே இடமில்லை.

3. மின்ரயில் பயணங்களில் செல்லும்போது சிலர் செல்பேசியை இரவல் கேட்பார்கள், அவசரமாக ஒருவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தங்களது செல்பேசியில் சார்ஜ் தீர்ந்தது என்றும் பொய் சொல்வார்கள். அழுத்தமாக அக்கோரிக்கைகளை நிராகரிப்பதுதான் நலம். இல்லாவிட்டால் ஒரு ரயில் நிலையம் வந்ததும் பேசிக் கொண்டே இறங்கிச் சென்று விடுவார்கள். எனது நண்பனின் செல்பேசி அப்படித்தான் பறி போயிற்று.

4. செல்பேசிகளை வெறுமனே சட்டை பாக்கெட்டில் வைப்பது சரியில்லை. எதற்காகவேனும் குனிந்தால் செல்பேசி கீழே விழும் வாய்ப்பு அதிகம். நான் செய்வது போல வாரில் அதை கட்டி பாக்கெட்டில் வைத்து, வாரை கழுத்தில் மாட்டிக் கொள்வது நலம். பார்க்க படம்:


பை தி வே இந்த படத்தைப் பார்த்துத்தான் ஜ்யோவ்ராம் சுந்தர் பூணூல் போட்டிருக்கிறாரா என அனாவஸ்ய கேள்வியை எழுப்பி என்னிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு போனார் ஒரு சோகால்ட் இணைய தாசில்தார். ஆகவே நான் இப்போது காட்டும் போட்டோவில் எனது செல்பேசியை நான் எவ்வாறு வைத்திருக்கிறேன் என்பதை மட்டும் பாருங்கள். பூணல் ஆராய்ச்சி எல்லாம் வாணாம்.

இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் இப்போதைக்கு இவ்வளவுதான்.

நீதி: அல்லாவை நம்பு. ஆனால் அதே சமயம் ஒட்டகத்தையும் பாதுகாப்பாக கட்டி வைக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்











11/10/2011

டோண்டு பதில்கள் - 10.11.2011



ரமணா
கேள்வி-1. கனிமொழி இனி?
பதில்: ஒரு தகுதியுமின்றி மஞ்சத் துண்டின் மகள் என்ற ஒரு காரணத்துக்காகவே தூக்கி நிறுத்தப்பட்ட அவர் இப்போது அதே காரணத்துக்காகவே சிறுமைபடுவதும் காலத்தின் விளையாட்டே.

கேள்வி-2. திமுகவில் ஸ்டாலினுக்கு எதிர்ப்பா?
பதில்: அது எப்போதுமே இருந்துதான் வந்திருக்கிறது, நீறு பூத்த நெருப்பாக. மேலே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.

கேள்வி-3. கமாடிடி ஆன்லயின் டிரெடிங் தடை செய்யப்படுமா?
பதில்: வால் பையன் பதில் சொல்லட்டும் இக்கேள்விக்கு.

கேள்வி-4. மீண்டும் அமைச்சரவை மாற்றம் பற்றி?
பதில்: ஜெயலலிதா அப்படியேதான் இருக்கிறார். மகாபாரதத்தில் சொல்லப்பட்ட கைவல்ய நீதியை அவர் பயன்படுத்துகிறார். அது திருதிராஷ்டரனுக்கு கூறப்பட்டது. உலகில் உள்ள எந்த அநீதியாக இருந்தாலும் அது உனக்கு சாதகமாக இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள் என்ற ரேஞ்சில் போகும் அது. சோ அவர்கள் எழுதிய மகாபாரதத்தின் வெர்ஷனில் அது வருகிறது.

அதே நீதிதான் அரசன் தன்னைச் சுற்றியிருப்பவர்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும், யாரும் தான் சாஸ்வதம் என நினைக்கும்படி விட்டுவிடக்கூடாது எனக் கூறுகிறது. ஜெ செய்வதும் அதுதான்.

5. அதிகாரிகளின் அடிக்கடி மாறுதல் பற்றி?
பதில்: கைவல்ய நீதி, முந்தைய கேள்வியை பார்க்கவும்.

கேள்வி-6. பெங்களூர் வழக்கு என்னவாகும்?
பதில்: நீதி தன் கடமையை செய்யும் என எதிர்பார்க்கிறேன்.

கேள்வி-7. அடுத்து மம்தா என்ன செய்வார்?
பதில்: அவருக்கே அது தெரியாது. டோண்டு ராகவனுக்கு எப்படி தெரியும்?

கேள்வி-8. சீமானின் புரட்சிப் பேச்சு மக்களை கவர்கிறதா?
பதில்: எங்கே சினிமாவிலா?

9. கூடன்குளம் சுமுகமாய் முடியுமா?
பதில்: சுமுகமாக முடிவதை விட, மக்களது தேவை, பாதுகாபு ஆகிய இரண்டும் ஊர்ஜிதம் செய்யும் நிலைதான் வேண்டும்.

கேள்வி-10. பெட்ரோல் விலை உயர்வுக்கு தி.மு.க திடீர் எதிர்ப்பு ஏன்?
பதில்: மத்திய மந்திரி சபையிலிருந்து திமுக விலகும் என நினைக்கிறேன்.


pt
KINDLY ANSWER THE FOLLOWING QUESTIONS IN DONDU'S STYLE:
கேள்வி-11. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
பதில்: முட்டையை எப்படி, எவ்வளவு உயரத்திலிருந்து போட்டாலும் கான்க்ரீட் தரை விரிசல் விடாது.

கேள்வி-12. If it took eight men ten hours to build a wall,how long would it take four men to build it?
பதில்: அதான் அந்த சுவரை ஏற்கனவேயே எட்டு பேர் கட்டிட்டாங்களே, இப்போ நாலு பேர் எதுக்கு அதை மறுபடியும் கட்டணுமாம்? கொழுப்பா?

கேள்வி-13. If you had 3 apples and 4 oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
பதில்: Two full hands.

கேள்வி-14. How can you lift an elephant with one hand?
பதில்: முதலில் ஒரு கையாவது இருக்கும் யானையை கொண்டு வாருங்கள், நான் அதை தூக்கிக் காண்பிக்கிறேன்.

கேள்வி-15. How can a man go eight days without sleep?
பதில்: இரவில் மட்டும் தூங்கினால் போகிறது. எப்படியும் பகலில் தூங்கக் கூடாது என கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்தில் கூறியுள்ளதாக முரளி மனோகர் எனக்கு சொல்கிறான்.

கேள்வி-16. If you throw a red stone into the blue sea what it will become?
பதில்: முழுகிப் போகும்.

கேள்வி-17. What looks like half apple?
பதில்: The other half.

கேள்வி-18. Bay of Bengal is in which state?
பதில்: In liquid state.

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-19. பெட்ரோல் விலை உயர்வு சரியே: மன்மோகன்

பதில்: அவர் வேறு என்ன கூற முடியும்?

கேள்வி-20. நூலகத்தை இடமாற்றுவது அண்ணாவுக்குச் செய்யும் அவமதிப்பு
பதில்: வேறு பல பிரச்சினைகள் இருக்கும்போது அண்ணாவின் பெயரை இழுப்பது உளறலாகத்தான் படுகிறது.

கேள்வி-21. மத்திய அரசில் இருந்து வெளியேறுவோம்: மம்தா பானர்ஜி
பதில்: சரியான அரசியல்வாதியின் பேச்சு. பாம்பு கீரி சண்டை விடுவேன் எனக் கூறிக் கொண்டே கடைசி வரை போக்கு காட்டும் போங்கு.

கேள்வி-22. டீசலுக்கும் விலைக் கட்டுப்பாடு கூடாது: முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கருத்து
பதில்: காலத்தின் கட்டாயம்.

கேள்வி-23. லோக்பால் மசோதாவை சிதைக்காதீர்கள்: ஹசாரே குழு
பதில்: அவ்வாறு செய்யாவிட்டால் ஊழல்வாதிகளின் வாழ்வு சிதைந்து விடுமே.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: பதிவை பார்டருக்குள் போட எனக்கு உதவியது இப்பதிவின் சொந்தக்காரர். அவருக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

11/07/2011

ஜெயா டிவி ஜாக்பாட்டில் டோண்டு ராகவன் பங்கேற்றால் வெற்றி வாய்ப்பு அதிகம்

டிஸ்கி: தலைப்பை பிறகு நிரூபிக்கிறேன்.

எங்கள் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ்.காம்-ல் அவ்வப்போது ஓட்டெடுப்புகள் நடைபெறும். உதாரணத்துக்கு, Have you ever found any (new) clients on Facebook? என்று கேள்வி கேட்டு விடைகள் சாய்ஸாக (No), (I'm not on Facebook), (Yes), (Other) தந்திருந்தார்கள்.

இம்மாதிரி பல கருத்து கணிப்பு ஓட்டெடுப்புகள் நடக்கும். உதாரணத்துக்கு, உங்களுக்கு இந்த ஆண்டு எத்தனை புது வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்? சாய்ஸ்கள் (0-2), (3-5), (> 5). இது ஒரு நல்ல கேள்வி. என்னைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் ஏதேனும் ஒரே ஒரு வாடிக்கையாளரை பிடித்துக் கொண்டு தொங்குவது ஆரோக்கியமானதல்ல. திடீரென அந்த வாடிக்கையாளர் ஏதேனும் காரணத்துக்காக வேலை தரவியலவில்லையென்றால், (திவாலாவது, அவரது தேவைகள் மாறுவது முதலிய காரணங்கள்), எனது கதை கந்தலாகி விடும். அந்த வகையில் நான் ரொம்பவுமே துடியாக செயல்பட்டு புது வாடிக்கையாளர்களை தேடும் முயற்சியில் இருப்பேன்.

எனது 36 ஆண்டுகால மொழிபெயர்ப்பாளர் வாழ்க்கையில் 19 ஆண்டுகளுக்கு ஒரு வாடிக்கையாளர் தொடர்ந்திருக்கிறார். அது ஒரு ரிகார்ட். இன்ஸ்டாக் எனப்படும் அந்த அமைப்பு மத்திய அரசின் கீழ் இயங்குகிறது. அவர்களது வெளி மொழிபெயர்ப்பாளர்களின் பட்டியலில் நான் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளுக்காக இருந்திருக்கிறேன்.

ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருந்த ஒரு வாடிக்கையாளர் தயவால்தான் சென்னைக்கு வந்து பல மாதங்களுக்கு கௌரவமாக தாக்கு பிடித்து சென்னை வாடிக்கையாளருடன் வலிமையான நிலையில் இருந்து பேரம் பேச முடிந்தது.

இப்போதைய பெரிய வாடிக்கையாளர் நான்கு ஆண்டுகளாக இருந்து வருகிறார், ரெகுலரான வேலை. இம்மாதிரி கூறிக் கொண்டே போகலாம். ஆனால் புது வாடிக்கையாளர்களை பிடிப்பது காலத்தின் கட்டாயமே.

இப்போது மேலே குறிப்பிட்டுள்ள கருத்து கணிப்புகளுக்கு வருகிறேன். நான் ஒவ்வொரு முறையும் எனது கருத்தை பதிவு செய்கிறேன். 90% எனது விடையே டாப்பாக இருந்திருக்கிறது. அதாவது என்னைப் போன்றே கருத்து கொண்டவர்கள் அதிகமே. இதை நான் கடந்த நூற்றுக்கும் மேலான கருத்து கணிப்பில் கண்டுகொண்டேன்.

இப்போது ஜெயா டிவி ஜாக்பாட்டுக்கு செல்வோம். கேள்விகளுக்கு விடை அளிப்பது அவ்வளவு முக்கியமல்ல. அதே விடையை மக்களில் எவ்வளவு பேர் கூறியுள்ளனர் என்பதுதான் முக்கியம். “மக்கள் என்ன சொல்லறாங்கன்னு பாப்போம்” என கூறி ரிசல்டுகளை காண்பிக்கும்போது எல்லோருமே ஆவலுடன் பார்ப்போம்.

ஆகவேதான் கூறுகிறேன், ப்ரோஸ்-ன் கருத்து கணிப்புகள் விஷயத்தில் எனது பதில்கள் கிட்டத்தட்ட எப்போதுமே டாப்பில் வருகின்றன எனக் கூறிவிட்டேன். அதே போல ஜெயா டிவி நிகழ்ச்சியில் நான் தரும் விடைகளும் மெஜாரிட்டி மக்களாலும் கூறப்படும்.

ஆகவேதான் கூறுகிறேன், ஜெயா டிவி ஜாக்பாட்டில் டோண்டு ராகவன் பங்கேற்றால் வெற்றி வாய்ப்பு அதிகம். :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/03/2011

டோண்டு பதில்கள் - 03.11.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. சீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரிக்கிறது இந்தியா
பதில்: இப்போதே டூ லேட்டாக இருக்குமோ எனக் கவலையாக இருக்கிறது.

கேள்வி-2. மத்திய அமைச்சர்களின் எரிபொருள் செலவு ரூ.3.67 கோடி
பதில்: அது பற்றி படிக்கும் மக்களின் வயிறும் எரிகிறதே.

கேள்வி-3. பறிபோகிறது பரம்பிக்குளம் அணை? கேரள அரசின் அடுத்த "அட்டாக்'
பதில்: தண்ணீர் விஷயத்தில் அண்டை மாநிலம் என்ன, அண்டை மாவட்டத்தையே நம்ப முடியாதுதானே.

கேள்வி-4. மாற்றான் தாய் பிள்ளை போல் நடத்துகிறது : அணுஉலை எதிர்ப்பு குழு தலைவர் பேச்சு
பதில்: அரசியல் கலந்தால் இம்மாதிரி நடத்தைகளும் அவற்றுக்கான எதிர்வினைகளும் வரத்தானே செய்யும்.

கேள்வி-5. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
பதில்: நல்ல விஷயம்தான், ஆனால் விவரங்களை பதிக்கும்போது ஏனோ தானோ என பதிக்காமல் கவனத்துடன் இருப்பது நலம். முகவரி பதிப்பதிலேயே கோளாறு செய்துதானே ரேஷன் கார்டு, எலெக்‌ஷன் அடையாள அட்டை எல்லாவற்றிலும் பிரச்சினை வருகிறது. அம்மாதிரி இல்லாமல் பார்த்துக் கொண்டாலே போதுமே.

கேள்வி-6. நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதில் "ஊழல்': 3 மாதங்களில் "பல்' இளித்த ரோடுகள்
பதில்: வழமையான செய்திதானே.

கேள்வி-7. ஒன்றிய தலைவர் பதவி அ.தி.மு.க., வில் குடுமிபிடி
பதில்: பிணம் கிடக்கும் இடங்களில் கழுகுகள் வட்டமிடும் என்னும் பொருள்பட ஆங்கிலச் சொலவடை உண்டு. (Wheresoever the carcase is, there will the eagles be gathered together).

கேள்வி-8. பயணிகளுக்குக் கொடுத்த அறிவுரையை ஆஸ்திரேலியா திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தல்
பதில்: இவ்வாறு கேட்பது இந்தியாவுக்கு அவமானம். தமது பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து அந்தந்த நாடுகள் கவலைப்படாமல் வேறு யார் படுவார்களாம்?

கேள்வி-9. லிபியர்கள் தன்னை விரும்பியதாக கடைசி வரை நம்பினார் கடாபி: பாதுகாவலர்
பதில்: ராஸ்புடீன் என்னும் போலி குரு ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னனை தன் கைப்பொம்மையாக்கி ஆட்டினான். அப்போதைய பல ரஷ்ய பிரபுக்கள் அவனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினர்.

அப்போது என்ன நடந்தது என்பதை Richard Armour என்னும் ஆங்கில எழுத்தாளர் தனது It all started with Marx என்னும் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார் நினைவிலிருந்து தருகிறேன்).

They stabbed him, Rasputin did not die.
They gunned him, he did not die.
They poisoned him, he did not die.
They drowned him and then he died of broken heart, suddenly aware of his unpopularity.

கேள்வி-10. கிரண் பேடி அறக்கட்டளை நிர்வாகி விலகல்
பதில்: இவருடைய பயண ஏற்பாடுகளை கவனிக்க என ஒரு தனி ஏஜென்சியா? என்னவோ இடிக்கிறதே.


ரமணா
கேள்வி-11. அஜித் சிங்கின் வருகை அழகிரிக்கு சிக்கலா?
பதில்: ஏன், கருணாநிதி அவரையும் வாரிசாகத் தேர்ந்தெடுத்து விட்டாரா என்ன?

கேள்வி-12. பருவ மழை இந்த ஆண்டு எப்படி?
பதில்: போன ஆண்டை விட இந்த ஆண்டு பரவாயில்லை என்று கூறுகிறார்கள்.

கேள்வி-13. டெல்லியில் தீபாவளி குடிகாரர்களில் 40 % பெண்களாமே?
பதில்: அவர்களில் கணிசமானோர் தத்தம் கணவரால் கம்பெல் செய்யப்பட்டு, பார்ட்டிகளில் குடிக்க வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்களும் இப்போது குருவையே மிஞ்சிய சிஷ்யைகளாகிவிட, கணவர்கள் பேய் முழி முழிக்கிறார்கள்.

கேள்வி-14. அடுத்த தேர்தலில் உதிரிக்கட்சிகளின் நிலை?
பதில்: அவரவர் பலம் தெரிந்தால் தெளிவு என்பது தானே பிறந்து விடுமல்லவா?

கேள்வி-15. வைக்கோ திருந்தவில்லை எனும் திமுக தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டு பற்றி?
பதில்: பூட்ட கேசெல்லாம் மற்றவர்கள் திருந்துவது பற்றி கவலைப்படுவது செனிலிடியையே காட்டுகிறது.

கேள்வி-16. உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலை என சொல்லும் உண்மைத் தமிழன்?
பதில்: அவருக்கு ஏதேனும் பின்னணி தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.

கேள்வி-17. கேபிடலிஸம் தோல்வியை நோக்கியா?
பதில்: மனவாடு கேப்பிடலிசத்துக்கு தோல்வி என வேண்டுமானால் கூறுங்கள்.

கேள்வி-18. விலைவாசி குறையுமா?
பதில்: யானை வாயில் போன கரும்பு திரும்பக் கிடைக்குமா?

கேள்வி-19. மக்கள் பெருக்கம் இப்படி போனால் பூமி தாங்குமா?
பதில்: தாங்காமல் கீழே விழுந்து விடுமா? அப்படியானால் எங்கே விழும்?

கேள்வி-20. ஊரை ஏமாற்றி பகல் கொள்ளை அடிக்கும் வல்லான்களுக்கு வால் பிடிக்கும் ஊழல் சக்திகளுக்கு இனி எதிர்காலம்?
பதில்: வல்லான்கள்தானே! தப்பிக்க வழி தேட மாட்டார்களா என்ன?

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

11/02/2011

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! (கவனித்தாயிற்று)

டிஸ்கியை கடைசியில் தருகிறேன்.

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.



இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...


குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..

1. குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
2. ஓட்டுக்கு பணம் கிடையாது.
3. டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
4. கரண்ட் கட் கிடையாது.
[இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது].
5. மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
6. இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
7.இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
8. TATA, Hyundai, Ford, Reliance, Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.
9. இந்தியாவின் No-1 மாநிலம் (தொழில், பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம், உள்கட்டமைப்பு, வருமானம், சட்டம்/ஒழுங்கு)


நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை??

அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும். (நல்ல வேளையாக இப்போதைக்கு மஞ்சத் துண்டு குடும்பத்துக்கு மக்கள் செக் வைத்துள்ளனர். சீக்கிரம் பட்டா பட்டி டிராயரை போட்டுவிட்டு அவிங்களை களி திங்க வச்சாத்தான் தமிழர் மனம் ஆறும்).

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல.

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்
(சம்மட்டி அடி கொடுத்தாயிற்று, மேலே சொன்னதை எல்லாம் மக்களும் நினைத்திருக்க வேண்டும்).

இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம் (நல்ல வேளை அவ்வாறு செய்யவில்லை).
உலகம் நம்மை காரி உமிழும் [அதுவும் இப்போதைக்கு இல்லை:))].

நல்ல வரலாறு படைப்போம்.நன்றி! (அதற்கான அடி எடுத்து வைத்தாயிற்று).

டிஸ்கி: இதை நான் ஏப்ரல் மாதத்தில் டிராஃப்டில் போட்டுவிட்டு மறந்து விட்டேன். இன்று எதேச்சையாக பார்த்தேன். இற்றைப்படுத்தி இப்போது போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுவனப்பிரியனுக்காக சேர்த்தது. அவருக்கான பதிலை பின்னூட்டப் பெட்டியில் போட இயலவில்லை. ஆகவே இச்சேர்க்கை:

@சுவனப்பிரியன்
மோதிக்கு எதிராக பேசுங்கள் நாங்கள் துணையாக இருக்கிறோம் என ப. சிதம்பரம் வகையறாக்கள் கூறியாகி விட்டது. இன்னும் அவருக்கு பயப்படுகிறார்கள் என உதார் விட்டால் எப்படி?

2002, மற்றும் 2007 பொது தேர்தலில் எலெக்ஷன் கமிஷனும் அதன் அப்போதைய கோமாளி கமிஷனர்களும் காங்கிரஸ் பூத் ஏஜெண்டாக செயல்பட்டதை மறந்தீர்களா?

பின்னே எப்படி மோதியின் மிரட்டல் பற்றிப் பேசுகிறீர்கள்?

அது சரி கோத்ரா கரசேவகர்களை எரித்த விஷயம் பற்றி மூச்சே இல்லை? அதை ஆதரிக்கிறீர்களா?

அந்த நேரத்தில் மகாத்மா காந்தியே முதன் மந்திரியாக இருந்திருந்தாலும் கலவரம் வெடித்திருக்குமே.

மோதியின் மேல் ஊழல் புகார் கூற முடியாமல் பொய்யையே கூறினால் அது உண்மையாகுமா?

மற்றும் ஏழை முஸ்லிம் வாக்காளர்?

மோதி பற்றி சுஹேல் சேத் என்னும் பிற மாநில இசுலாமியர் எழுதியதை கீழே தருகிறேன். இதில் நான் என வருவது சுஹேல் சேத்.

”முதலில் சில விஷயங்களை தெளிவுபடுத்துவேன்: மற்ற எல்லோரையும் விட மோடிக்கு எதிராக நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றில் கோத்ரா நிகழ்வுக்கு பிறகு நடந்த கலவரங்களை மோடி கையாண்ட விதம் பற்றி பல விமரிசனங்கள் தந்துள்ளேன். தற்கால ஹிட்லர் என மோடியைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். கோத்ரா அவர் மேல் மட்டுமல்ல, நாட்டின் அரசியல் வர்க்கத்தின் மீதே ஒரு களங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளேன். கோத்ரா விவகாரத்துக்காக நாடு பெரிய விலையைத் தரவேண்டிய்ருக்கும் என்று இன்னமும் கூறுவேன்.

விஷயம் என்னவென்றால் அதற்கப்புறம் காலம் தன் வழியில் செல்ல ஆரம்பித்து விட்டது. மோடியும்தான் மாறிவிட்டார். மதவாதத்துக்காக குற்றம் சாட்டப்படுபவர்களில் மோடி மட்டும் தனியாக இல்லை. கூடவே மற்ற அரசியல்வாதிகளும் உள்ளனர். மதசார்பற்ற அரசியலை நடத்துவதாக விதந்தோதப்படும் காங்கிரஸ் ஆட்சியில்தான் 1984-ல் சீக்கியர்கள் மேல் கொலைவெறித் தாக்குதல்கள் நடந்தன. 3500-க்கும் அதிகமாக சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதாவது குஜராத்தில் கொல்லப்பட்டவர்களை விட மூன்று மடங்கு.

மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால், மோடியை விட இந்திய அரசியல் வானில் வல்லவர் யாரும் இல்லை என்பதுதான். மூன்று வாரங்கள் முன்னால் நான் அஹமதாபாத் சென்றிருந்தேன். YPO (Young President's Organisation) கூட்டத்தில் பங்கெடுக்கவே நான் சென்றிருந்தேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோடி அவர்களை சந்திக்கலாம் என முடிவு செய்தேன். அங்கு செல்வதற்கு முந்தைய மாலைதான் அவருக்கு டெலிஃபோன் செய்து பேசினேன். நான் அங்கு வந்து சேரும் நாள் அன்றே அவரை பார்க்க அனுமதி தந்தார். அதுவும் அவர் அலுவலகத்தில் அல்ல, அவர் இல்லத்தில்தான். எளிமையின் உருவம் மோடி.

இந்த விஷயத்தில் சோனியா, மாயாவதி போன்றவர்கள் மோடியிடமிருந்து பாடம் கற்பது நல்லது. மீட்டிங்கில் மோடியை சுற்றி எந்த அள்ளக்கைகளும் இல்லை. நாங்கள் இருவர் மட்டுமே. தேனீரை ஊற்றுவதற்காக ஒரு வேலையாள் அவ்வளவே. மோடியிடமிருந்து நேர்மறை எண்ணங்கள் வந்த வண்ணம் இருந்தன. குஜராத்தின் முன்னேற்றம், மறுமலர்ச்சி, அதன் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மேம்பாடு அவற்றையெல்லாம் எடுத்துரைக்கும்போது அவர் வெளியிட்ட மகிழ்ச்சி ஆகியவற்றை அந்த எண்ணங்கள் பிரதிலித்தன. சில உதாரணங்கள்: சிங்கப்பூர்வாசிகள் அருந்தும் பாலில் கிட்டத்தட்ட முழு அளவு குஜராத்திலிருந்து வருகிறது. அதே போல ஆஃப்கானிஸ்தானில் உண்ணப்படும் தக்காளி, கனடாவில் உட்கொள்ளப்படும் உருளைக்கிழங்கு போன்ற எல்லாமே குஜராத்தில் விளைந்தவை. அதே சமயம் தொழிற்சாலைகளும் அவற்றில் உற்பத்தியாகும் பொருட்களும் மோடியின் முன்னுரிமைகளில் உண்டு.

ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அவர் அருகிலுள்ள மேஜையிலிருந்து GIFT என்று அறியப்படும் குஜராத்தில் அமையவிருக்கும் புது தொழில் நகரத்தைப் பற்றிய புத்தகத்தை எனக்கு காட்டினார். சபர்மதி நதியின் கரையில் வரப்போகும் இந்த நகரம் துபாயையும் ஹாங்காங்கையும் ஜுஜூபி என்று சொல்ல வைக்கும். பை தி வே குஜராத்தில் உள்ள நதிகளை இணைத்து மோடி அவர்கள் சபர்மதியின் தண்ணீர் பற்றக்குறையை தீர்த்து வைத்துள்ளார்.

ரத்தன் டாட்டாவின் புது நானோ கார் தொழிற்சாலை பர்றியும் அவர் பேசினார். டாட்டா அவர்களிடம் பார்சிக்காரர்கள் முதலில் குஜராத்தில் வந்த போது நடந்த நிகழ்ச்சியை எடுத்து கூறி அவரை உணர்ச்சிக்குவியலாக்கியதையும் சொன்னார். அக்கதை பின்வருமாறு: பார்சிகள் முதல் முதலில் குஜராத்தில் வந்தபோது குஜராத் அரசர் அவர்களுக்கு ஒரு டம்ளர் நிறைய பால் கொடுத்து அனுப்பினாராம். அதாவது ஏற்கனவே குஜராத் ஹவுஸ்ஃபுல், அவர்களுக்கு இடமில்லை என்று கோடி காட்டியுள்ளார். பார்சிக்காரர்களோ அந்தப் பாலில் சர்க்கரையை கலந்து திருப்பி அனுப்ப, அரசர் மனம் மாறினாராம். அதாவது சர்க்கரை போல பார்சிக்காரர்கள் குஜராத்தின் தரத்தை உயர்த்துவார்கள் என்பதுதான் அவர்கள் செய்ததன் பொருள்.

நரேந்தர் மோடி முன்னேற்றப் பாதையில் செல்லும் அவசரத்தில் உள்ளார். அவரை விட்டால் பிஜேபிக்கு அத்வானியைத் தவிர வேறு பெரிய தலைவர்கள் இல்லை என்பதுதான் நிஜம். தீவிரவாதத்தை ஒழிக்க அரசியல் சாராத கடும் நடவடிக்கைகள் வேண்டும் என அவர் உறுதியாக நம்புகிறார். தில்லியில் குண்டு வெடிக்கலாம் என்பதை அவர் முன்கூட்டியே பிரதமருக்கு கூறியும் தக்க ஏற்பாடுகள் செய்யாது கோட்டை விட்டனர் என்று வருந்தினார் அவர். அவரது இந்த உறுதியை நான் விதந்தோதுகிறேன். தீவிரவாதத்தை சகித்து கொள்ள கிஞ்சித்தும் அவர் விரும்பவில்லை என்பது அவர் நடவடிக்கைகளிலிருந்து தெரிகிறது. சிறுபான்மையினரை அழிக்க அவர் முயல்கிறார் என சிலர் குதர்க்கமாக பேசினாலும் அவர் என்னவோ தெளிவாகத்தான் உள்ளார். சட்ட ஒழுங்கில் அவர் எந்த சமரசமும் செய்வதாக இல்லை.

மோடியின் வீட்டிலிருந்து திரும்பும்போது கார் டிரைவரிடம் மோடி பற்றி பேசினேன். மோடி கடவுள் என்னும் ரேஞ்சில் அவர் பேசினார். மோடிக்கு முன்னால் குஜராத்தில் ஒன்றுமே சரியாக இல்லை. சரியான சாலைகள் இல்லை, மின்சாரம் இல்லை, கட்டுமான வசதிகள் இல்லை. ஆனால் இன்றோ மின்சாரத்தில் உபரி உற்பத்தியை குஜராத் எட்டியுள்ளது. இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் சேர்ந்தாற்போல் வரும் புது தொழில்களை விட அதிகமாக குஜராத்தில் வருகின்றன. பன்னாட்டு நிறுவனக்கள் முதலீடு செய்ய அதிகம் விரும்பும் மானிலம் குஜராத். அதே சமயம் அரசின் செயல்பாடுகளில் இருக்கும் நேர்மை மற்ற மானிலங்களில் இல்லை.

YPO (Young President's Organisation) உறுப்பினர்கள் கூட்டத்துக்கு பிறகு அவர்களில் பலரிடம் மோடி பற்றி கேட்க எல்லோருமே ஒருமுகமாக மோடியை கடவுள் என்றே கூறினர்.

மேலும் அவர்கள் கூறியதாவது. ஐந்து மோடிகள் இருந்தால் இந்தியா மிகச் சிறந்த நாடாக உருவெடுக்கும் என்று. இது குஜராத்திய மிகைப்படுத்தலா என்று தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவரது குறைபாடுகளையும் மீறி நாட்டில் நல்ல மாறுதல்களை கொண்டுவர மோடி போன்றவர்கள் இன்றியமையானவர்கள். இன்னும் பல மோடிகள் நாட்டுக்கு தேவை”!

மீண்டும் டோண்டு ராகவன். இதையெல்லாம் நான் எப்போதோ பதிவாக போட்டாகி விட்டது:

சும்மா குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவதை நிறுத்துங்கள்.

ஹாஜியார் நலமா? அவருக்கு என் வணக்கங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/01/2011

மொழிபெயர்ப்பாளர்கள் பற்றி மற்றவர் வைத்திருக்கும் சில வேடிக்கையான எண்ணங்கள்

எனது இந்தப் பதிவில் இது பற்றி பின்னால் தனிப் பதிவு போடப்போவதாக கூறியிருந்தேன். ஆகவே இப்பதிவு.

முதலில் அந்த ஸ்ரீலங்கா வாடிக்கையாளரையே எடுத்துக் கொள்வோம்.

1. துபாஷி வேலை விட்டு விட்டு நடந்தது. எனது குழுவினருடன் காரில் சென்று பல சப்ளையர்களை கண்டு அவர்கள் பேசுவதற்கு துணையாக துபாஷி செய்ய வேண்டியிருந்தது. அப்போதுதான் அந்த வாடிக்கையாளர் கூறினார், “நடுவில் சும்மாத்தானே இருக்கிறீர்கள். அந்த நேரத்துக்கு நீங்கள் சார்ஜ் செய்யக் கூடாது” என்றார். என் சக மொழிபெயர்ப்பாளர் என்னைப் பார்க்க, நான் புன்முறுவலுடன் கூறினேன், “அப்படியானால் அவ்வாறு சும்மா இருக்கும் நேரத்தில் நாங்கள் வீடுவரைக்கும் சென்று வருகிறோம். நீங்கள் கார் ஏற்பாடு செய்யுங்கள்” எனக் கூற அவர் அமைதியானார். நாங்கள் வந்து விட்டோம், எங்க்ளை பயன் படுத்திக் கொள்வது மகனே உன் சமத்து. என்பதுதான் அதற்கு பொருள்.

2. ரெசிடன்சி டவர்ஸில் நல்ல 5-ஸ்டார் டின்னர் தருவதற்காகவாவது நாங்க்ள் ரேட்டைக் குறைக்க வேண்டும் எனக்கூற, “வேலை நேரத்தில் சாப்பாடு போடுவது ஒப்பந்தத்தில் ஒரு பாகம். ஆகவே அதையெல்லாம் இங்கு கொண்டு வரலாகாது. மேலும் இந்தியக் குடியரசு தலைவர் மாளிகையில் டின்னர் சாப்பிட்ட டோண்டு ராகவனுக்கு ரெசிடன்சி டவர்ஸ் எல்லாம் ஜுஜூபியே என்று ஒரு போடு போட்டதும்தான் அவர் அடங்கினார்.

3. அடிமாட்டு விலைக்கு கறவை மாட்டை எதிர்பார்ப்பவர்கள் பற்றி நான் எழுதியதை சுட்டி மூலம் பார்த்து கொள்ளுங்கள்.

4. இரு மொழிகளையும் பேசத் தெரிந்தவர்களுக்கு அவற்றிடையே மொழி பெயர்ப்புக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது. இது மிகப் பரவலாக இருக்கும் தவறான நம்பிக்கை. பேசுவது வேறு, எழுத்து மூலம் மொழி பெயர்ப்பது வேறு. இது தெரியாமல் சந்தியில் நிற்பவர்கள் அனேகம்.

5. கணினி மூலம் மொழிபெயர்க்க மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அவை கண்றாவி மொழி பெயர்ப்புகள் என்பதை யார் கூறுவது.

6. இந்த அழகில் அவ்வாறு மெஷின் டிரான்ஸ்லேஷனை நாங்கள் பிழை திருத்த வேண்டும் எனக் கேட்பார்கள். நான் உடனே எகிறி குதித்து அங்கிருந்து ஓடி விடுவேன்.

7. ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பவர் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கும் மொழி பெயர்க்கவியலும். இன்னொரு லூசுத்தனமான நம்பிக்கை. உலக் அளவில் மொழி பெயர்ப்பு என்பது அன்னிய மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் செய்ய வேண்டும் என்பது ஒரு கோல்டன் விதி. விதி விலக்குகள் உண்டு என்றாலும் சாதாரணமாக அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்தான்.

8. முதல் டிராஃப்டிலேயே நல்ல மொழிபெயர்ப்பு வர வேண்டும். வரவே வராது. பல முறை ரிவைஸ் செய்ய வேண்டியிருக்கும்.

9. அதிக பக்கங்கள் கொண்ட வேலைக்கு டிஸ்கவுண்ட் தரவேண்டும். இதை நான் ஒப்புக் கொண்டதே இல்லை. எவ்வளவு பக்கங்கள் இருந்தால் என்ன, கடைசி பக்கத்துக்கும் முதல் பக்கம் போலவே முழு கவனம் தேவைப்படும். Economy of scale இங்கு செல்லாது.

10. ஒரு பெரிய மேன்யுவலை பத்து பேர் சேர்ந்து பல நாட்கள் வேலை செய்து உருவாக்கியிருப்பார்கள். ஆனால் அதன் மொழிபெயர்ப்பு மட்டும் நேற்றைக்கே வேண்டும் என்பார்கள். நான் இதற்கு இடம் அளிக்க மாட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம். இப்போதைக்கு போதும் என நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/28/2011

கணினியா குப்பைத் தொட்டியா?

என் நண்பன் ஒருவன் தன் கணினியைத் திறக்கும்போது எதேச்சையாக நானும் அருகில் இருந்தேன். அவனது டெஸ்க்டாப்பைப் பார்த்து ஆடிப்போனேன். எண்ணற்ற கோப்புகளால் அது நிறைந்திருந்தது. என்னடா எனக் கேட்டால் அவன் டவுன்லோட் செய்வதெல்லாம் டெஸ்க்டாப்புக்குத்தானாம். கிழிஞ்சது கிருஷ்ணகிரி என நினைத்தேன்.

அதே சமயம் ஏதேனும் கோப்பை அப்ப்டேட் செய்து வெளியில் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டுமானால் தாவு தீர்ந்து விடுகிறது என்று வேறு மூக்கால் அழுதான். “வேறு எதையடா எதிர்ப்பார்த்தாய் மடையா” எனக் கூறி அவன் தலையில் செல்லமாகக் குட்டினேன். பிறகு அவனுக்கு நான் சொன்னதை இங்கும் பதிவாகப் போடுகிறேன், ஏனெனில் அவனைப் போலவே பலரும் இருக்கிறார்கள் என அவன் அல்ப திருப்தியுடன் குறிப்பிட்டான்.

வழ்க்கம் போல எனது உதாரணங்களையே கூறுவேன். என் நண்பன் செய்வது போல எல்லாம் நான் எல்லாவற்றையும் டெஸ்ட்டாப்பில் லோட் செய்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஒரு வாடிக்கையாளர் ஒரு கோப்பை மொழிபெயர்ப்புக்காக அனுப்பியதும் நான் சரியான முறையில் சேமித்து எப்போது வேண்டுமானாலும் சுலபமாக அதை அடைய முடியும்.

டெஸ்க்டாப்பில் கூடாது என்பதற்கு இன்னொரு காரணம் அதில் சேமிக்கப்படுபவை எல்லாமே C டிரைவில்தான் இருக்கும். திடீரென புதிதாக ஃபார்மாட்டிங் செய்தால் முதலில் போவது டெஸ்க்டாப் கோப்புகளே என்பதை மறக்கக் கூடாது. சி டிரைவில் புரொக்ராம் கோப்புகள் மட்டுமே இருப்பது நலம். கணினியின் ரீபூட்டுக்கான வசதிகளும் அதில் இருக்க வேண்டும். தேவையின்றி வேறு எதுவும் இருக்கக் கூடாது.

நான் கோப்புகளை எவ்வாறு சேமிக்கிறேன் என்பதை இப்போது கூறுகிறேன். மொழிபெயர்ப்புக்காக வரும் வாடிக்கையாளர் கோப்புகளை நான் F டிரைவில் சேமிக்கிறேன். E டிரைவில் நான் டவுன்லோட் செய்யும் மென்பொருள்கள் இருக்கும். அவற்றை இன்ஸ்டால் செய்யுபோது அது ஆட்டமேடிக்காக சி டிரைவில்தான் இன்ஸ்டால் ஆகும். அதே போல ரீஃபார்மாட்டிங் செய்யும்போது இ டிரைவிலிருந்து நிரலிகளை தேர்ந்தெடுத்து வழமையான முறையில் இன்ஸ்டாலும் செய்து கொள்ளலாம்.

எஃப் டிரைவில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு தனி ஃபோல்டர். அந்த ஃபோலட்ருக்குள் வாடிக்கையாளர் அனுப்பும் ஒவ்வொரு வகை கோப்புக்கும் (வேர்ட், எக்ஸல், பவர் பாயிண்ட், பிடிஎஃப் ஆகியவை) தனித்தனி ஃபோல்டர். உதாரணத்துக்கு எனது ஒரு வாடிக்கையாள்ர் விஷயத்தில் இவ்வாறு 7 துணை ஃபோல்டர்கள் உண்டு. ஒவ்வொரு துணை ஃபோல்டரிலும் இன்னும் பிரிவினை தொடரும். கோப்பை டவுன்லோட் செய்யும் தேதியை தலைப்பாக வைத்து அதனுள் அக்குறிப்பிட்ட கோப்பை வைப்பது. அக்கோப்பின் மொழிபெயர்ப்பும் அதிலேயே வரும்.

ஒரு மாதிரி குன்ஸாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

இதற்கு இணையாக எனது மின்னஞ்சல்களையும் அடுக்க வேண்டும். ஜிமெயில் பாவிப்பதால் எதையும் அழிக்க வேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கான பதிலோ அல்லது ஆக்‌ஷனோ நடந்து விட்டால் அதை உடனே ஆர்கைவ்சில் போட வேண்டும். சாதாரணமாக எனது இன்பாக்ஸ் காலியாகத்தான் இருக்கும். பிறகு தேவையான மின்னஞ்சலை எப்போது வேண்டுமானாலும் சர்ச் போட்டு தேடிக் கொள்ளலாம். (பலரது இன்பாக்ஸில் நூற்றுக்காண மின்னஞ்சல்கள் இருப்பதையும் பார்த்துள்ளேன்).

ஒரு வாடிக்கையாளர் நீண்டகால மௌனத்துக்கு பிறகு என்னை அணுகினால் ஆர்கைவ்ஸை வைத்து அவரது பழைய மின்னஞ்சலைப் பார்த்து அதிலிருந்து எனத் எஃப் டிரைவில் உள்ள அவரது ஃபோல்டருக்கு போவதெல்லாம் இடது கை விளையாட்டுதான். ஆகவே முந்தைய ரேட் என்ன என்பதை பார்த்து அதற்கேற்ப கோட் செய்வதும் நடக்கும். அவர்களில் சிலர் தான் பழைய வாடிக்கையாளர் என்றெல்லாம் சீன் போட்டு ரேட்டை குறைக்க நினைத்தால், “ஐயா நீங்கள் கடைசியாக எனக்கு வேலை அனுப்பியது சில ஆண்டுகளுக்கு முன்னால் பலான தேதியில்” எனக்க்கூறி அவர் சீன் போடுவதைத் தடுப்பேன்.

நான் மேலே கூறியவை மிக எளிதாக எல்லோராலும் செய்யவியலும்.

நான் முதலில் குறிப்பிட்ட தோழனிடம் இந்த இடுகை பற்றி கூறியபோது அவன் இன்னொரு பீதியைக் கிளப்பினான். லேப்டாப் எல்லாம் இப்போது இன்ஸ்டால் செய்யப்பட்ட செயல் நிரலியுடன் வரும்போது ஒரே ஒரு சி டிரைவ்தான் இருக்கும் என்கிறான். கூடவே டி டிரைவில் கோஸ்ட் பேக் அப் இருக்கும் அவ்வளவே என்கிறான்.

நல்லா பீதியை கிளப்பறாங்கப்பா. ஏம்பா அது உண்மையா? யாராவது சொல்லுங்கப்பூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/27/2011

டோண்டு பதில்கள் - 27.10.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. வாஸ்து பிரச்னை: ஆன்டிலியாவிலிருந்து வெளியேறுகிறார் முகேஷ் அம்பானி?

பதில்: இதில் என்ன சொல்ல இருக்கிறது? ஒரு பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்பவர் இம்மாதிரி வாஸ்து மூட நம்பிக்கை வைத்திருப்பதால் வாஸ்து கன்சல்டண்டுக்குத்தான் பணம் வரப்போகிறது என்பதில் என்ன ஆர்வம் எனக்கு இருக்கப் போகிறது?

எனக்கு இதில் மொழிபெயர்ப்பு வேலை ஒன்றும் இல்லாததால் நோ கமெண்ட்ஸ். :))))))))

கேள்வி-2. ஊழல்களால் வர்த்தகத்துறை முதலீடுகளில் பாதிப்பா? பிரணாப் மறுப்பு
பதில்: பாதிப்பு என்பதைத்தான் மறுக்கிறார் போலிருக்கிறது. ஊழல்கள் இருக்கு என்பதை சிரிக்காமல் மறுக்க அவராலேயே முடியாது.

கேள்வி-3. விமான டிக்கெட் பாணியில் ரயில் டிக்கெட் விற்க பரிசீலனை: தினேஷ் திரிவேதி
பதில்: அப்போ தேவை குறையும்போது டிக்கெட் விலை குறையுமா?

கேள்வி-4. டி.என்.பி.எஸ்.சி., ரெய்டு எதிரொலி: நடந்து முடிந்த தேர்வுகள் குறித்தும் விசாரணை
பதில்: அவசியம் செய்ய வேண்டிய விஷயம்தானே.

கேள்வி-5. அமைதியான முறையில் நடந்து முடிந்தது 2ம் கட்ட ஓட்டுப்பதிவு: 80 சதவீத ஓட்டுக்கள் பதிவு
பதில்: 2-ஆம் கட்ட ஓட்டுப் பதிவில் கலந்து கொண்ட மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.


BalHanuman
கேள்வி-6. எடியூரப்பா?
பதில்: பாஜகாவுக்கு அவரால் சங்கடமப்பா.

கேள்வி-7.‘தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை’ என்கிறாரே பரிதி இளம்வழுதி?
பதில்: தனக்கு என வரும்போதுதான் அவருக்கு உரைக்கிறது என ஒரு வார இதழில் இது பற்றி கூறப்பட்டுள்ளது. அதுதான் என் கருத்தும்.

கேள்வி-8. கனிமொழி ஜாமீனில் தீபாவளி ரிலீஸ்?
பதில்: அவரை புக் செய்த செக்சன் 409 (?) ஜாமீனை அனுமதிக்காது என படித்த நினைவு இருக்கிறதே.

கேள்வி-9. கூடங்குளம் குழப்பங்குளம்?
பதில்: ரஷ்யாவின் சம்பந்தம் உள்ள எதுவுமே சரியில்லை.


ரமணா
கேள்வி-10. கனிமொழிக்கு கடைசியில் ஜாமீன்?
பதில்: கேள்வி 8-க்கான பதில்தான் இங்கும். ஒரு வேளை எனக்குத்தான் சரியாக புரியவில்லையா?

கேள்வி-11. கருணாநிதியின் சோனியாவை சந்திக்க மாட்டேன் எனும் சபதம் உடைந்தது ஏன்?
பதில்: குண்டி காஞ்சா குதிரையும் வைக்கோல் தின்னும்னு ஒரு பழைய சொலவடை உண்டு.

கேள்வி-12. தேமுதிகவின் படுதோல்வி?
பதில்: அது தனது செயல்பாட்டை சரி செய்து கொள்வது நல்லது.

கேள்வி-13. மருத்துவர் இனி என்ன செய்வார்?
பதில்: மரம் வெட்ட கோடாலியை தீட்டுவாரோ?

கேள்வி-14. காங்கிரசின் எதிர்காலம் இனி யார் கையில்?
பதில்: யாரும் அதை கையில் எடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள், குறைந்த பட்சமாக தமிழகத்தில்.

கேள்வி-15. அதிமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்திய விதம் எப்படி?
பதில்: மோசமில்லை என்றுதான் நினைக்கிறேன்.

கேள்வி-16. ரஜினி மீண்டும் திரை வானில்?
பதில்: அவர் பிழைக்க வேண்டாமா?

கேள்வி-17. இனி சட்ட சபை களை கட்டுமா?
பதில்: விஜயகாந்த் புள்ளி விவரங்களை அள்ளி வீசுவாரா? களை கட்டுகிறதோ இல்லையே தளை கட்டாமல் இருந்தால் சரிதான்.

கேள்வி-18. பாஜக‌வின் செல்வாக்கு தமிழகத்தில் உயர்ந்துள்ள‌தா?
பதில்: நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. முதலில் இருந்தது பூஜ்யம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

கேள்வி-19. 3ஜி உரிமம் இல்லாமல் சில தனியார் கம்பெனிகள் 3 ஜி வியாபாரம் செய்யும் விஷயம் அடுத்த ஸ்கீமா?
பதில்: அப்படி நடக்கவியலுமா?

கேள்வி-20. ஒரு உண்மையான தொழிற்சங்க வாதியின் அன்பு மகனாய் வளர்ந்த நீங்கள் அமெரிக்காவின் வலதுசாரி கொள்கையின் கண்மூடி ஆதரவளராய் இருப்பதின் அடிப்படை காரணம் என்ன?
பதில்: பதின்ம வயதுகள் என்பதே ரிபல்களின் வயதுதானே. இந்தியாவில் அப்போது நிலவி வந்த பெர்மிட் லைசன்ஸ் கோட்டா ராஜ்யத்தில் தொழிற்சங்கங்கள் சர்வாதிகாரமே செலுத்தின. எனது தந்தையின் நம்பிக்கையையே அவை சில சமயம் ஆட்டிப் பார்த்தன.

அப்போது நான் வலதுசாரி ஆதரவாளனாக இருந்தது காலத்தின் கட்டாயம்.

கேள்வி-21. அமெரிக்கா,ஐரோப்பா,ஆஸ்திரேலியாவில் உள்ள வசதி இல்லாத மக்களின் எழுச்சியை பார்த்த பிறகவாது‍ மன மாற்றம் வருமா?
பதில்: எழுச்சியா, எங்கே, எங்கே, எங்கே?

கேள்வி-22. அரசியல் சொல்வக்குடன், இல்லாத பொல்லாத செயல்கள் எல்லாம் செய்து பொருள் குவிக்கும் வல்லான்களை எப்பொழுது வசை பாடுவீர்கள்?
பதில்: அதைத்தான் பெர்மிட் லைசன்ஸ் கோட்டா ராஜ்ய கால கட்டங்களில் ஆள்பவர் துணை கொண்டு செய்யலாயினர். அதைத் நான் அப்போதே சாடினேனே.

கேள்வி-23. லஞ்ச லாவண்யத்தின் தயவால் நடத்தப்படும் ஆட்சி, அதிகாரம், வணிகம், கொள்ளை லாபம் பற்றி?
பதில்: முந்தைய கேள்வியிலேயே இதற்கான பதிலும் அடங்கியுள்ளது.

கேள்வி-24.பொருள் வர்த்தக வணிகம் மூலம் பரமபதம் விளையாடும் வர்த்தக சூதாடிகளை எதிர்ப்பீர்களா?
பதில்: பொருளாதார சுதந்திரத்தில் இதைத் தவிர்க்கவியலாது. ஸ்பெகுலேஷன் எனப்படும் இவ்வகை குற்றங்களை சோவியத் யூனியன் காலத்தில் சட்ட விரோதமாக்கி பார்த்துள்ளனர். காரியத்துக்காகவில்லை.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/22/2011

ஒரு தொழிற்சங்கவாதியின் மகனாக இருப்பதில் உள்ள சங்கடம்

எனது பதின்ம வயதுகளை நினைத்துப் பார்க்கும்போது எனக்கும் என் தந்தைக்கும் இடையே பல விவாதங்கள் நடந்துள்ளதை உணர்கிறேன். முக்கால்வாசி எல்லா விவாதங்களும் இடதுசாரி வலதுசாரி பற்றிய விவாதமே.

உண்மையான அமெரிக்கன் என என் தந்தையே என்னைக் கிண்டலாக குறிப்பிடும் அளவுக்கு நான் அமெரிக்க தனிநபர் பொருளாதாரத்தை விதந்தோதியிருக்கிறேன். என் தந்தையோ உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தில் தீவிர பங்கெடுத்து வந்தவர். முதலில் எக்ஸ்பிரசில் வேலை பார்த்திருக்கிறார். அப்போதிலிருந்து ராம்நாத் கோயங்காவை அவருக்கு பிடிக்காது. அதுவும் தினமணி, எக்ஸ்பிரஸ் (சென்னை எடிஷன்) ஆகியவற்றில் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கும் கோயங்காவிற்கும் ஏழாம் பொருத்தமே.

தினமணியிலிருந்து பலர் விலகி நவமணி என்னும் பத்திரிகை ஆரம்பித்திருந்த காலகட்டம் அது. தொழிலாளர்களால் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட முதல் பத்திரிகை என்று வேறு கூறப்பட்டது அப்போதெல்லாம். என்ன, சம்பளம் மட்டும் இரு மாதத்துக்கொரு முறை, மூன்று மாதத்துக்கு ஒரு முறை என போட்டு வந்திருக்கிறார்கள். அப்போது ஒரு முறை என தந்தை திடீரென ஒரு நாள் கூறினார், “நல்ல வேளை தினமணி மூடிய நேரத்தில் நான் எக்ஸ்பிரஸ் குரூப்பில் இல்லை”. அவ்வாறு இருந்திருந்தால் தனக்கும் அதே கதிதான் என்பதில் அவருக்கு ஐயமேதுமில்லை. இதை அவர் மனம் நொந்து கூறியிருக்கிறார். என் மரமண்டைக்கு அது எட்டாமல் யூனியன் விஷயங்களில் அவர் அதிகமாக ஆழ்ந்து போவதை அட்டாக் செய்திருக்கிறேன். அவருக்கே நான் கூறியதில் விஷயம் இருக்கிறது என்பதால் மேலே பேசவில்லை.

ஆனால் தந்தை மகன் இடையில் மகன் தந்தையை வெல்வது போன்ற சோகம் ஏதுமில்லை. சிறு வயதில் எங்களுடன் ஓட்டப் பந்தயம் பீச் மணலில் வைப்பார். அவர்தான் வெற்றி பெறுவார். ஆனால் வயதாக ஆக அவரது உடல் பலம் குறைந்து ஒரு நாள் நான் வின் செய்ததில் பிறகு எனக்குத்தான் அவ்வ்வ் என அழும்போல ஆகிவிட்டது. தந்தையின் ஆரோக்கியம் குறைகிறது என்பது மகனுக்கு எப்போதுமே அதிர்ச்சியைத்தான் தரும்.

சற்றே திசை திரும்பி விட்டேன், இருப்பினும் எழுதியது எழுதியபடியே இருக்கட்டும்.

1969-ல் நான் பொறியியல் பட்டம் பெற்றபோது வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. அச்சமயம் மின்வாரியத்தில் இஞ்சினியர்கள் ஸ்ட்ரைக் வர, பேப்பர்களில் இஞ்சினியர்கள் கேட்டு விளம்பரம் வந்தது. எனது வகுப்புத் தோழர்கள் அத்தனை பேரும் அப்ளை பண்ண என் தந்தை எனக்கு அனுமதி திட்டவட்டமாக மறுத்தார். ஒரு வேலை நிறுத்தத்தை உடைக்கும் செயலுக்கு துணைபோவது துரோகம் என்பதே அவரது நிலைப்பாடு. அவரது உறுதியைப் பார்த்து நானும் அப்ளை செய்யாமல் விட்டுவிட்டேன் என வைத்துக் கொள்ளுங்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது என்னையறியாமலேயே நானும் ஒரு மகத்தான காரியம் செய்திருக்கிறேன் என்பதை உணர மகிழ்ச்சியாக உள்ளது.

1967, 1968-ல் தொடர்ந்து இரு ஸ்ட்ரைக்குகள் ஹிந்துவில் நடந்தன. ரிப்போர்டர்கள் எல்லோரும் மேனேஜ்மெண்டுக்கு துணையாக நிற்க, என் தந்தை மட்டும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றார். அதனால் பல தொல்லைகள் அவருக்கு ஏற்பட்டன. உதவி தலைமை ரிப்போர்டர் பதவி அவருக்கு சீனியாரிட்டி மூலம் கிடைக்கவிருந்த நேரத்தில் அந்த போஸ்டையே நீக்கினார்கள். அதேர் போல அவர் தலைமை ரிப்போர்டராக வரவிருந்தபோது அப்போதைய தலைமை ரிப்போர்டருக்கு வேண்டுமெனவே ஓராண்டு நீடிப்பு தந்தனர். அதனால் எல்லாம் மனம் தளரவில்லை என் தந்தை. அவர் ரிட்டையரானதும் நிம்மதியாக தனது வழியில் ஆக்டிவாக இருந்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார்.

இக்கால கட்டங்களில் அவரைப் போன்ற பத்திரிகையாளர்கள் புதுப்புது அசைன்மெண்டுகள் பெற்று வாழ்கின்றனர். அவரது காலகட்டத்தில் அத்தனை வாய்ப்புகள் இல்லை, கூடவே அவரும் முயற்சி செய்யவில்லை. ஏனெனில் அவருக்கு பொருளாதாரச் சுமைகள் ஏதும் இல்லை என்பதுதான் நிஜமே. சொல்லி வைத்தது போல எனக்கும் மத்தியப் பொதுப்பணி துறையில் வேலை கிடைத்ததும் உதவியாக இருந்தது.

மொத்தத்தில் எனது தந்தை பொருளாதார வாழ்க்கையில் பிரமிக்கத்தக்க வகையில் செல்வம் ஈட்டவில்லையானாலும் அவருக்கு பத்திரிகை உலகில் நல்ல பெயர் இருந்திருக்கிறது. அவர் மறைந்து பல ஆண்டுகளுக்கு பின்னும் நான் எதிர்ப்பாராத தருணங்களில் அவரது பழைய நண்பர்களுடன் எனக்கு சந்திப்பு ஏற்படுவதில் எனக்கு மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/21/2011

துபாஷி வேலையில் எதிர் கொண்ட பிரச்சினை

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது. ஸ்ரீலங்காவிலிருந்து ஒரு தொழிலதிபருக்கு பிரெஞ்சு துபாஷி தேவைப்பட்டது. அவர் இது சம்பந்தமாக சென்னையிலுள்ள தனது க்ரூப் கம்பெனியை அணுகியிருக்கிறார். அந்த கம்பெனிக்காக நான் ஏற்கனவேயே பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் செய்துள்ளேன்.

அக்கம்பெனி என்னை சிபாரிசு செய்ய, இவர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். நானும் சென்றேன். அவர் என்னிடம் கொட்டேஷன் கேட்க அதையும் தந்தேன். சற்று பேரம் பேசிப் பார்த்தார், நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை. சரி என ஒத்துக் கொண்டார். பிறகுதான் தமாஷ். தன்னுடன் இன்னும் பலர் வந்திருப்பதாகவும், எல்லோரும் இரு குழுக்களாக பிரிந்திருப்பார்கள் என்றும், ஆகவே இன்னொரு துபாஷியும் வேண்டுமெனக் கேட்டார். நான் ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் கேட்டார்.

நான் யோசித்துச் சொல்கிறேன் என ஒரு நாள் டைம் கேட்டு வந்தேன். முடியாது என்று சொன்னால் அவர்கள் யாரேனும் இன்னொருவரை கூப்பிட்டு, அவருடன் நெகோஷியேட் செய்து அவரையே இன்னொருவரையும் கொண்டுவரச் செய்து என்னைக் கழட்டிவிடும் அபாயம் இருந்தது.

நான் தேர்ந்தெடுத்தது ஒரு பெண் துபாஷியை. ஒருவரை ஒருவர் பார்த்திருக்காவிட்டாலும் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் அவருடன் பரிச்சயம் உண்டு. அவருக்கு ஃபோன் செய்தேன். அவருக்கு துபாஷியாக வர விருப்பமா எனக் கேட்டேன். அவரும் சரி எனச் சொல்ல, அவருக்கு சில கண்டிஷன்கள் போட்டேன்.

1. நான் ஒத்துக் கொண்ட ரேட்டைத்தான் அவரும் கேட்க வேண்டும். அதற்குக் குறையக் கூடாது (இது ரொம்ப முக்கியம்). பிற்காலத்தில் அதே வாடிக்கையாளர் அவரை மட்டும் வேறு அசைன்மெண்டுக்கு கூப்பிட்டால், தாராளமாக தனது ரேட்டை என்ன வேண்டுமானால் கூறிக் கொண்டு செய்யட்டும். ஆனால் இம்முறை மட்டும் எனது ரேட்டைத்தான் கேட்க வேண்டும்.

2. வாடிக்கையாளர் அவருடன் தனியாகப் பேசி, அவர் மனதைக் கலைக்க முயற்சி செய்யலாம். ஆனால் அதற்கு இவர் இடமே தரலாகாது. ரேட்டை ராகவன் மட்டுமே நிர்ணயிப்பார் எனக் கூற வேண்டும்.

3. அவருடைய பணத்திலிருந்து நான் ஒரு பைசா கூட கமிஷனாகக் கேட்க மாட்டேன். அதே சமயம் தனது பில்களை சப்மிட் செய்து பணம் வாங்குவது அவரது பொறுப்பேதான். அவரது நிலையும் எனது நிலையும் இந்த அசைன்மெண்டில் ஒன்றுதான் எனவும் தெளிவுபடுத்தினேன்.

இந்த கண்டிஷன்களை அப்பெண்மணி தனது கணவரிடம் தெரிவிக்க, மறுபேச்சு பேசாமல் அவரை ஒத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்.

மூன்று நாட்கள் எங்கள் இருவருக்கும் வேலை இருந்தது. ஆக்சுவலாக அப்பெண்மணியின் குழுவினர் அவரை அதிக நேரம் ரீடைன் செய்ததில் அவரது பில் என்னுடையதை விட அதிகமே. அதில் எனக்கு பிரச்சினையில்லை, அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இருவருக்குமே பணம் கிடைத்தது.

இதில் என்ன வேடிக்கை என்றால், நான் அந்த தொழிலதிபர் இவ்வாறு செய்வார் என அனுமானித்தது அப்படியே நடந்தது. அப்பெண் ரேட் விஷயம் ராகவன் சொற்படி எனக்கூறி தப்பித்துக் கொண்டார்.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இரு குழுவினருமாக சேர்ந்து கடைசியில் ஒரு பார்ட்டி வைத்திருக்கின்றனர். என்னைக் கூப்பிடவில்லை, அப்பெண்மணிக்கு மட்டும் அழைப்பு போயிருக்கிறது. அப்பெண்மணியின் கணவர் ஒரு விஷயம்தான் அவரிடம் கூறினார், “ராகவன் சாரும் வருவதாக இருந்தால் தாராளமாகச் செல்”. அப்பெண் என்னிடம் இது பற்றிக் கேட்க, எனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என நான் தெளிவுபடுத்த, அவரும் பார்ட்டிக்கு செல்ல மறுத்து விட்டார். இது பற்றி பிறகுதான் அறிந்தேன்.

துபாஷி வேலையில், அதுவும் பெண்களுக்கு, இம்மாதிரி சங்கடங்கள் வரலாம். இந்த விஷயத்தில் அப்பெண்ணின் கணவர் சரியான முறையில் தன் மனைவியை வார்ண் செய்து அச்சங்கடத்தைத் தவிர்த்திருக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/20/2011

டோண்டு பதில்கள் - 20.10.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. அமெரிக்க செனட்டில் சீன கரன்சிக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்

பதில்: இடியாப்பச் சிக்கலாகத்தான் எனக்கு இது படுகிறது. தனது கரென்சியின் மதிப்பை அந்தந்த நாடுதான் தீர்மானிக்கும் என்பதுதான் எனது கருத்து. அதற்கு எதிர்வினைகள் மற்ற நாடுகளின் தரப்பிலிருந்து வரும் எனறும் எனக்கு புரிகிறது. இது எது சரி, எது தவறு என்பதில்தான் குழப்பம்.

இது பற்றி படிக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் லேசாக தலை சுற்ற, நான் என்னையே மறந்து விடுகிறேன்.

பிறகு நான் தூக்கத்தில் குறட்டை விடுவதாக அவதூறாக சிலர் கூறி வருகின்றனர்.

கேள்வி-2. "மக்கள் என்னை வீட்டுக்கு அனுப்பினாலும், நாட்டுக்குச் செய்யும் கடமையை மறந்து விடவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
பதில்: அவர் செய்ய வேண்டிய ஒரே கடமை அரசியலிலிருந்து விலக வேண்டியதுதான்.

கேள்வி-3. திராவிட கட்சிகளை வேரறுப்பதுதான் தலையாய நோக்கம்: ராமதாஸ்
பதில்: அதானே, அன்புமணிக்கு மந்திரி பதவி தர உதவாதவை இருந்தென்ன லாபம்?

கேள்வி-4. மத்தியில் அடுத்து தே.ஜ., கூட்டணி ஆட்சி தான்: அடித்துச் சொல்கிறார் அத்வானி
பதில்: அவர் நம்பிக்கை சரிதான். ஆனால் முதலில் உட்கட்சி ஒற்றுமை வரட்டுமே.

கேள்வி-5. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு பவுன் பத்து ரூபாய் இருந்தது ஒரு காலம். இப்போழுது இருபது ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது
பதில்: பவுனுக்கு பத்து ரூபாய் இருந்த காலத்திலும் அக்கால கட்டத்து மக்களில் 99 சதவிகிதத்தினருக்கு தங்கத்தின் அந்த விலையும் மிக அதிகமே.

நமது இக்கால சம்பளம் அக்காலத்தில் இருந்திருக்கும் என மயங்குவதுதான் பிரச்சினையே.

கேள்வி-6. ம.தி.மு.க., அதிக இடங்கள் கைப்பற்றும்: சொல்கிறார் வைகோ
பதில்: அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அது கூட இல்லாவிட்டால் எப்படி?

கேள்வி-7. அதிகாரிகள் வெளியில் நடமாட முடியாது: ராமதாஸ் எச்சரிக்கை
பதில்: இவர் போன்றவர்களை டிபாசிட் கூட கிடைக்க முடியாத அளவுக்கு தோற்கடித்தால்தான் அவர்கள் வெளியே வரவும் அஞ்சுவர்.

கேள்வி-8. மின் வெட்டால் இருளில் மூழ்கப்போகின்றன பல மாநிலங்கள்: அனல் மின் நிலையங்கள் தவிப்பு
பதில்: கவலை தரும் விஷயம். அரசுகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். மின் திருட்டுகளை ஒழித்தாலே நிலைமையில் அபிவிருத்தி காணப்படும்.

கேள்வி-9. சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
பதில்: பயனுள்ள செய்தி.


ரமணா
கேள்வி-10. உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு இரண்டாவது இடமாமே?
பதில்: அது நடந்தால் திமுக இன்னும் வேகமாக உடையும்.

கேள்வி-11. திருச்சியில் திமுக ஜெயித்தால்?
பதில்: கருணாநிதிக்கு சற்றே ஆசுவாசம் கிடைக்கும்.

கேள்வி-12. முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் செல்வாக்கு இப்போது?
பதில்: அதை தக்கவைத்துக் கொள்ள அவர் இன்னும் பாடுபட வேண்டும்.

கேள்வி-13. வைகைப்புயல் வடிவேலு?
பதில்: நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா.

கேள்வி-14. மாவீரன் அழகிரியின் அதிரடி அரசியல்?
பதில்: ஆட்சியில் இல்லாத போது அது எடுபடாது.

கேள்வி-15. பேராசை கொண்டோரை எதிர்த்து அமெரிக்காவில் நடைபெறும் போராட்டம்?
பதில்: போராட்டம் நடத்துவோருக்கு மட்டும் பேராசை இருக்காது என்கிறீர்களா?

கேள்வி-16. எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிக்கல்?
பதில்: தெரியவில்லையே. கூகளிட்டு பார்த்தாலும் பலனில்லையே.

கேள்வி-17. சன் டீவி விவகாரம் ‍/400 பிஎஸ் என் எல் போன்கள்/ ஏர்செல்?
பதில்: மாறன் சகோதரர்களுக்கு தலைவலிதான்.

கேள்வி-18. அரசு டீவியில் சன் டீவி சாத்யமா?
பதில்: இப்போதைக்கு இல்லை. அரசு டிவிக்கு இது நல்லதல்ல.

கேள்வி-19. உலகமயமாக்கம் தோல்வியை நோக்கியா?
பதில்: உலகமயமாக்கல் காலத்தின் கட்டாயம். பல மாறுதல்கள் வரும், அவற்றில் பல பலருக்கு சாதகமாக இருக்காதுதான்.

ஆனால் ஒன்று, உலகமயமாக்கல் வந்தே விட்டது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/18/2011

எனக்கும் வயசாயிடுத்தோல்லியோ, வேகமா பார்க்க முடியல்லே

அமெரிக்காவில் எல்லாம் பலர் தாங்களாகவே வீடு கட்டுவார்கள் என படித்துள்ளேன், எப்போது? சமீபத்தில் 1950-களில் “அமெரிக்கா அழைக்கிறது” என்னும் புத்தகத்தில் காந்திமதி என்னும் ஆசிரியை எழுதியுள்ளதை படித்ததைத்தான் இப்போது நினைவிலிருந்து கூறுகிறேன்.

அதே கால கட்டத்தில் ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த ஒரு ஜோக்கும் எனக்கு நினைவுக்கு வருகிறது. இம்மாதிரித்தான் ஒரு பெரிசு தனது அண்டை அயலார் தாங்களாகவே வீடு கட்டுவதை பார்க்கும் பழக்கம் வைத்து கொண்டிருந்ததாம். ஒரு முறை மிகுந்த தயக்கத்துடன் ஒரு இளைஞன் தன் பகுதியில் அஸ்திவாரத்துக்காக தோண்ட ஆரம்பிக்க இந்தப் பெரிசும், குடை, சாய்வு நாற்காலி, பக்கத்து ஸ்டூலில் லெமன் ஜூஸ் எல்லாம் வைத்துக் கொண்டு இவன் வேலை செய்ய ஆரம்பிப்பத்தை பார்க்க ஆரம்பிக்க, அந்த இளைஞனின் டென்ஷன் அதிகமானது.

“சார் நான் ரொம்ப மெதுவாகத்தான் வேலை செய்வேன், உங்களுக்கு போர் அடிக்குமே” என சொல்லிப் பார்த்திருக்கிறான். அதனால் என்னப்பா, எனக்கும் வயசாயிடுத்தோல்லியோ, நான் மெதுவாகத்தான் பார்ப்பேன், எனக் கூறியதாம் அப்பெரிசு.

ஆனால் இப்போதெல்லாம் அமெரிக்காவில் அவ்வாறெல்லாம் நடக்கிறதா என்றால் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் பிரிட்டனில் செய்கிறார்கள் போல இருக்கிறது.

ஆனால் இது முடியவில்லையென்றால் சாவகாசமாக மற்றவர் போடும் சண்டையை பார்ப்பதும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. என்ன, கட்சியெல்லாம் எடுக்கக் கூடாது. அதுவும் இரு தரப்பிலும் பார்வையாளருக்கு பிடிக்காதவர்கள் இருக்கும்போது யார் எங்கு அடி வாங்குகிறார்கள்/தருகிறார்கள் எனப் பார்ப்பதும் ஒரு பொழுது போக்குத்தானே. (உதாரணம்: பாமக, திமுக சண்டை, காங்கிரசார் பார்வையில்).

டிஸ்கி: திருவல்லிக்கேணி பிளாட்பாரம் கடையில் போன ஞாயிறு மாலை பழைய புத்தகங்கள் கடை வரிசையில் இந்த ரீடர்ஸ் டைஜஸ்டை பார்த்ததுதான் இப்பதிவுக்கு உந்துதல் தந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/17/2011

எப்படியோ ஒட்டு போட்டுட்டோமில்ல?

ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் இந்த தமாஷா விடாது நடைபெறுகிறது.

நாங்கள் வசிப்பது ஹிந்து காலனி 15-ஆம் குறுக்குத் தெருவில். எலெக்‌ஷன் புள்ளிவிவரங்கள் எடுக்க வந்த அந்த நாதாரி 17-ஆம் குறுக்குத் தெருவிலிருந்து எங்கள் தெருவுக்கு வரும்போது, புது பக்கத்தில் எங்கள் தெருவின் பெயரை மேலே எழுதிவிட்டு எங்களது விவரங்களையும் பதித்திருந்தால் பிரச்சினை ஏதும் இருந்திராது. 17-ஆம் குறுக்குத் தெருவின் கீழேயே எங்கள் விலாசத்தையும் எழுதிக் கொண்டு போயிருக்கிறார்கள். எனக்கு வந்த ஐடி கார்டில் 17-ஆம் குறுக்குத் தெரு என ஸ்பஷ்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே எங்கள் பெயர்களை புது லிஸ்டுகளில் கண்டறிவது வைக்கற்போரில் ஊசியை தேடும் நிலைதான். இம்முறை எனக்கு தந்த பதிவு எண் 877. அதே எண்ணை மேலும் இருவருக்கு தந்து சாதனை புரிந்துள்ளனர். இந்த அழகில் எனது பெயர் ஹிந்து காலனி 17-ஆம் தெருவில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் அம்மாதிரி தெருவே கிடையாது.

இரண்டு அடுத்தடுத்த பூத்துகளில் ஹிந்து காலனி 17-ஆம் தெரு காட்டப்பட்டுள்ளது. ஒரு பூத்தில் கிடைக்காமல் அடுத்த பூத்துக்கு போனால் அங்கு கிடைத்தது.

எங்கு போய் அடித்துக் கொள்வது? வோட்டர் ஐடி நம்பரை வைத்து லிஸ்ட் த்யாரித்தால் என்ன இந்த மடையர்களுக்கு? ஒருவேளை ஒரே ஐடி எண் ஒன்றுக்கும் மேற்பட்டவருக்கு தந்திருந்தால்? தலை சுற்றுகிறது சாமியோவ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/13/2011

டோண்டு பதில்கள் - 13.10.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்து கொண்டிருந்த தேயிலை, இப்போது அவமானத்தைத் தேடித் தருகிறது என்றால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை

பதில்: இதைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? அதில் வந்த ஒரு பின்னூட்டம் கூறுகிறது: திரு மன்மோகன் சிங் அரசு இதில் யாருக்கு எவ்வளவு கமிஷன் பார்க்கிறதோ இன்னும் ஐந்து ஆண்டுகள் இவர்களிடம் ஆட்சி கொடுத்தால் இந்தியாவை விற்று விடுவார்கள் மக்கள் எப்போதுதான் விழிப்பார்களோ தெரியவில்லை. அதுதான் என் கருத்தும்.

கேள்வி-2. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் சந்தித்துப் பேசுகின்றனர்.
பதில்: ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதா பதவியில் இருக்க இயலாமல் போன போது கொஞ்ச நாட்கள் டம்மி முதல்வராக இருந்தார். மன்மோகனும் டம்மிதான், சோனியாவுக்காக பிரதமரே. டம்மிகள் சந்திப்பு, பலே பலே.

கேள்வி-3. தயாநிதி வீட்டில் "எக்சேஞ்ச்': ஆவணங்களைக் கேட்கிறது சிபிஐ
பதில்: டெலிஃபோன் எக்சேஞ்சுடன் ஏன் நிறுத்த வேண்டும்? அதன் பின்னணியில் உள்ள பண எக்சேஞ்சையும்தான் கேட்க வேண்டும்.

கேள்வி-4. தூக்கு தண்டனை விவகாரம்: மூவரையும் விடுவிக்க வேண்டும்: கருணாநிதி
பதில்: அரசியலில் இது ஜகஜம்.

கேள்வி-5. ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்தார் ரஜினிகாந்த்
பதில்: மகிழ்ச்சி.

கேள்வி-6. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் : ஸ்டாலின்
பதில்: தேர்தலில் ஊழல் செய்து திருமங்கலம் ஃபார்முலாவை கொண்டு வந்த திமுகாவே இப்போது அதெல்லாம் நடக்கக் கூடாது எனக் கூறுவதே மாற்றம்தானே. இதில் என்ன ஏமாற்றம்?

கேள்வி-7.உள்ளாட்சி தேர்தலில் கரை ஏற கட்சிகள் வியூகம் : ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கவும் முயற்சி
பதில்: உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகள் கலந்து கொள்ளக் கூடாது சுயேச்சைகள் மட்டுமே என எதிர்பார்க்கும் ஆதர்ச நிலை வராத வரைக்கும் இதெல்லாம் நடப்பதை கண்டு வியப்படைய ஒன்றுமேயில்லை.

கேள்வி-8. ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும் "தகிடு தத்தம்' திட்டம் தடுக்கப்படுமா?
பதில்: நான் என்ன ஆளும்கட்சிக்கு குத்தகை எடுத்துள்ளேனா? ஆளும்கட்சியை எதிர்ப்பது எதிர்கட்சியின் கடமை. திட்டம் வெற்றி பெற்றால் எதிர்கட்சியினர் அதை நல்ல திட்டம் என்பார்கள், ஆளும் கட்சியினரோ அதை தகிடு தத்தம் என்பார்கள். அவ்வளவே.

கேள்வி-9. இலவச திட்டத்தால் அதிகரிக்கும் மின் தேவை: சமாளிக்குமா தமிழக அரசு?
பதில்: அந்தளவுக்கா மிக்சி கிரைண்டர் எல்லாம் தரப்போகிறார்கள்?

கேள்வி-10. நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.5,904 கோடி சரிவு
பதில்: எனக்கு தெரிந்தவரை அது வழமையான நடைமுறைதான். பங்குச் சந்தையில் வருவதும் போவதுமாக இருக்கும் நிலையில் அன்றாடம் நடக்கும் அதிகரிப்பு குறைப்புக்கு ஓரளவுக்கு மேல் முக்கியத்துவம் தரலாகாது என நினைக்கிறேன். நிலைமையை அவதானம் செய்ய இன்னும் கால அவகாசம் தேவைப்படும்.


BalHanuman
கேள்வி-11. கருணாநிதி இப்படி மாற்றி மாற்றி பேசி மக்களை முட்டாள்களாக்கக் காரணம் என்ன? முதலில் தி.மு.க. தோல்விக்கு தேர்தல் கமிஷனின் பாரபட்சம் தான் காரணம் என்றார். பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடம் கொடுத்தது தான் காரணம் என்றார். பின்னர் தான்தான் காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இப்போது கட்சியினர்தான் காரணம் என்கிறார்.
பதில்: ஏதாவது பேசி அப்போதைய நிலையை சமாளிக்கும் வேலையை மட்டும் செய்து நீண்ட கால பார்வை ஏதுமின்றி செயல்படுபவர் கருணாநிதி.

ஹிந்தி எதிர்ப்புக்காக அரசியல் சட்ட நகலை கொளுத்த, அவர்களை எம்.ஜி.ஆர். அரசு கைது செய்ய, “நாங்கள் பேப்பரைத்தான் கொளுத்தினோம்” என திமுக உறுப்பினர்கள் மன்றாடியது கலைஞரின் டிராஃப்ட்படி என்பது எல்லோருக்கும் தெரியுமே. அதன் பிறகு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ. பதவியும் பறிமுதல் ஆனதாக நினைவு. அப்போது எம்.ஜி.ஆர். சாடிஸ்ட் என டரியல் ஆனதும் கருணாநிதியே.

தேர்தலில் தோல்வியுற்றால் தமிழன் சோற்றுப் பிண்டம் என்பாரே வழக்கமாக? இம்முறை அதை இன்னும் கூறவில்லை போலிருக்கிறதே. அல்லது அதையும் கூறிடுவாரோ? நான் என்ன கண்டேன்?

கேள்வி-12. இந்த சிறிய தொகையை (2,645 கோடி) மத்திய கணக்குத் தணிக்கைக் குழு 1.76 லட்சம் கோடி என்று உயர்த்தி தில்லுமுல்லு செய்துள்ளது’ என்கிறதே முரசொலி? 2,645 கோடி இவர்களுக்குச் சிறிய தொகையா?
பதில்: ஒப்பிட்டு நோக்கினால், கணித லாஜிக்படி முரசொலி கூறுவதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், மத்திய கணக்குத் தணிக்கை குழு பொருள் நஷ்டத்தை மட்டும் குறிப்பிடவில்லை. தவற விட்ட லாபத்தின் சாத்தியக் கூற்றையும் பார்த்தது. எது எப்படியாயினும் திருட்டு நடந்ததை மறுக்கவியலாது.

ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களைக் கொல்லவில்லை, வெறுமனே 40 லட்சம்தான் என ஒரு பிரகஸ்பதி அக்காலத்தில் கணக்கு கூறுவதை போல முரசொலி பேசுகிறது என்பதும் நிஜமே.

கேள்வி-13. நில அபகரிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை, திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக எதேச்சாதிகாரமாக, மக்களின் பொதுக் கருத்தை மதிக்காமல் கருணாநிதி நிறுத்தியிருக்கிறாரே?
பதில்: தமிழன் சோற்றாலடித்த பிண்டம் என்பதை அவர் கூறாமல் கூறுகிறார்.

கேள்வி-14. சமீபத்தில் தமது வீடுகள், அலுவலகங்கள் முதலியவற்றில் சிபிஐ சோதனை நடைபெற்ற மாறன் சகோதரர்களுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு' என்கிறாரே கருணாநிதி?
பதில்: முரசொலி மாறன் ஒரு வேளை அவர் கனவில் வந்து அவரை மிரட்டியிருப்பாரோ?


Arun Ambie
கேள்வி-15. தமிழ் வலைப்பூக்களால் வசூல் வருவதில்லையாமே?
பதில்: சுலபமாக வருவதில்லை என்பது உண்மைதான். ஆனால் தாய் மொழியில் எழுதுவதில் வரும் இன்பத்துக்கெதிரில் இதெல்லாம் என்னைப் பொருத்தவரை தூசுதான்.

என்.எச்.எம் போன்ற நிரல்கள் இருக்கும்போது தமிழில் எழுத ஒரு கஷ்டமும் லேது.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/06/2011

டோண்டு பதில்கள் - 06.10.2011

ரமணா:
கேள்வி-1. அரசியல் உலகில் சனிப்பெயர்ச்சி பெரிய பாதிப்பை யாருக்கு கொடுக்கும்?
பதில்: நிஜமாகவே பெயர்க்கப்படப் போகிறவர்களுக்கு?

கேள்வி-2. கடைசியில் 2ஜி விவகாரம்?
பதில்: அதை பிசுபிசுக்க வைக்க எல்லா முயற்சிகளும் நடக்கின்றன.

கேள்வி-3. அதிமுக தனி ஆவர்த்தனம் ஜெயிக்குமா?
பதில்: உள்ளாட்சி தேர்தலில் இம்மாதிரி தனித்தனியாக போட்டி போடுவதுதான் நலம்.

4. மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் உலகம் முழுவதும்?
பதில்: கேப்பிடலிசத்தில் இம்மாதிரி மந்தமும் செழிப்பும் மாறி மாறி வருவது சகஜம்.

கேள்வி-5. உள்ளாட்சித் தேர்தலில் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் பிரகாசித்தால்?
பதில்: 1991-ல் காங்கிரஸ் செய்த கூத்தை இவர் ரிபீட் செய்யாமல் இருப்பது இவர் மேல் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இத்தேர்தலில் பிரகாசிக்க வேண்டியது அவரைப் பொருத்தவரை காலத்தின் கட்டாயம்.

BalHanuman
6. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கு அதன் தொண்டர்களே காரணம் என்கிறாரே கருணாநிதி?
பதில்: பிச்சைக்காரனிடமே பிச்சை எடுப்பவர்கள் பேசுவது போல இருக்கிறது. எல்லா நல்லவவற்றையும் இவரும் இவரது குடும்பம், சின்ன வீடுகள் ஆகியோர் மட்டும் அனுபவிப்பார்களாம். தேர்தலுக்கு மட்டும் தொண்டன் பாடுபட வேண்டுமாம். தூ, வெட்கமாக இல்லை!!!


pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-7. என்னை மயக்கவும் முடியாது.... யாருக்கும் விலை போகவும் மாட்டேன் :பாளையில் விஜயகாந்த் ஆவேசம்

பதில்: இப்போ அதை சொல்லறார். ஆனால் எப்போ எதைச் சொல்லுவாறோ என்ற சந்தேகமும் எழுகிறதே.

கேள்வி-8. மகாத்மா பட்டத்தை ஏற்க ஹசாரே மறுப்பு
பதில்: நல்ல முடிவு. அவர் அடக்கி வாசிக்கிறார். அடக்கி வாசிக்க வேண்டிய விஷயங்கள் அவரிடம் பல உள்ளன.

கேள்வி-9. ஆக்கப்பூர்வ பாதையில் செல்ல கருணாநிதி யோசனை
பதில்: அப்படியெல்லாம் நல்ல யோசனைகள் கூட அவர் செய்வாரா என்ன?

கேள்வி-10.ஊழல் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு : அத்வானி
பதில்: இல்லாவிடில் மத்திய அரசே காலியாகி விடுமே.

கேள்வி-11."ஐ.ஐ.டி., மாணவர்களின் தரம் குறைகிறது' : "இன்போசிஸ்' நாராயண மூர்த்தி வருத்தம்
பதில்: ஐஐடிகள் சுய பரிசோதனை செய்து கொள்ளும் காலம் வந்து விட்டது.


மேலும் கேள்விகள் வந்தல் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/05/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 05.10.2011

விட்டலன், புதிய தென்றல் மற்றும் நான்
எனது இப்பதிவில் இது சம்பந்தமாக நான் இட்ட கடைசி பின்னூட்டம் பற்றி சில வரிகள்:
தமிழ்மணத்தின் இப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இதோ:
//ஒவ்வோர் இடுகையையும் எங்களாலே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் இவ்விடத்தில் பதிவர்களும் பயனர்களும் இருகண்களாக இருந்து தெரிவிக்கக் கோருகிறோம். தமிழ்மணத்தின் சிறப்பிற்கு டி.எம்.ஐ நிர்வாகக் குழுவினர் மட்டுமன்றி, பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் காரணமே.//
அதைத்தான் நானும் காவ்யாவும் விட்டலன் போன்றவர்கள் விஷயத்தில் செய்தோம்.
நான் கேட்டுக் கொண்டபடி அம்மாதிரியான விளம்பரப் பதிவுகள் அதற்கான ஏதேனும் ஓர் அடையாளத்துடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் யாரேனும் நிஜமாகவே தில்லாலங்கடி வேலை செய்து தமது பதிவை முகப்புப் பக்கத்திலேயே நிலைக்கச் செய்தால், நான் அவை விளம்பரப் பதிவாக இருக்கலாம் என்னும் சந்தேகத்தின் பலனாய் ஒன்றுமே கூறாது விட்டுவிடும் வாய்ப்பு உண்டு.

இப்போதெல்லாம் விட்டலனோ புதிய தென்றலோ காணப்படவில்லை.

சந்தேகம் கேள் மகனே, அப்போதுதான் உனக்கு அறிவு வளரும்!!!
மகன்: அப்பா நீராவி இஞ்சின் எப்படி வேலை செய்கிறது?
தந்தை: (பேப்பர் படித்தவாறு) தெரியாது மகனே.

மகன்: உலகிலேயே அதிக மழை பொழியும் ஊர் எது?
தந்தை: (கொட்டாவி விட்டவாறு) தெரியாது மகனே.

மகன்: தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?
தந்தை: கககபோ

மகன்: கொதிக்கும் நீர் முழுவதும் ஆவியாகும் வரைக்கும் உஷ்ண அளவு 100 டிகிரி செல்சியாகவே நிற்கிறது அது ஏன்?
தந்தை: நான் என்னத்தைக் கண்டேன்.

அரை மணி நேரம் மௌனம் நிலவுகிறது.

தந்தை: என்ன மகனே கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டாய்? கேள்வி கேட்டுக் கொண்டேயிரு, அப்போதுதான் அறிவு வளரும்.

Any resemblance with actual events is purely intentional!

பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதும் கல்வி அமைச்சர்
ஒரு விவேக் படத்தில் ஒரு காட்சி. விவேக்குக்கு தவறாக ஆபரேஷன் செய்து விடுகிறார் டாக்டர். விவேக் தட்டிக் கேட்க அவர் பம்முகிறார். அப்போது அங்கு வரும் கம்பவுண்டர் “டாக்டர், நீங்கள் ப்ளஸ் டூவுல பாஸ் பண்ணிட்டீங்க” எனக்கூற, விவேக் டரியலாகிறார். படம் பெயர் யாராவது சொல்லுங்கப்பூ.

இப்போ பார்த்தால் பத்தாவது கூட பாஸ் செய்யாத கல்யாணசுந்தரம் புதுவையில் கல்வி அமைச்சர்! சட்டப்படி தவறில்லைதான், இருந்தாலும் இடிக்கிறது. இந்த அழகில் அவர் இப்போது பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதும் நிலையில் சமூக அறிவியல் தேர்வில் வசூல்ராஜா கிரேசி மோகன் மாதிரி இவர் சார்பில் இன்னொருவர் பரீட்சை எழுதுவதாக பீதியை கிளப்புகிறார்கள்.

அசாம் முதன் மந்திரியாக தெரிவு செய்யப்பட்ட பிரஃபூல்ல குமார் மொஹந்தாவும்தான் பிறகு ஒரு பரீட்சை சக மாணவர்களுடன் சேர்ந்து பந்தா ஏதுமில்லாமல் வெளிப்படையாகவே எழுதினார். நிருபர்கள் அதை கவர் செய்தனர். புதுவை கல்வி அமைச்சருக்கு மட்டும் இங்கு என்ன பிரச்சினை?

மெகா சீரியல்கள் என்றால் கிள்ளுக்கீரையா?
ஒரு சீரியலை தொய்வு ஏதும் இல்லாமல் கொண்டு செல்வதில் உள்ள கஷ்டம் நம்மைப் போன்ற வெளி ஆட்களுக்கு புரியாதுதான். இந்த முயற்சியில் பல டைரக்டர்கள் லேடீஸ் செண்டிமெண்டை பிழிந்தெடுக்க முயற்சி செய்து அபத்தமான அளவுக்கு செல்வதும் நடப்பதுதான். “கோபுரங்கள் சாய்வதில்லை” என்னும் அருமையான திரைப்படத்தை இப்போது கடந்த பல ஆண்டுகளாக கஸ்தூரி என்னும் சீரியலாக எடுத்து கொலை செய்வதையும் பார்க்கிறோம்.

அதே சமயம் “எங்கே பிராமணன்” போன்ற சீரியலையும் பார்க்கிறோம். எப்படி ஒரு சீரியலை எடுக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக் காட்டுதான் எங்கே பிராமணன் என நான் பலமுறை சொல்லியாகி விட்டது.

இப்போது நான் மிகவும் ரசிக்கும் ஒரு சீரியல் “நாதஸ்வரம்”. அது வந்த புதிதில் நான் பல்வேறு காரணங்களுக்காக அவற்றின் ஆரம்ப எபிசோடுகள் பலவற்றை பார்க்கவில்லைதான். இருப்பினும் என் வீட்டம்மாவிடம் கதை சுருக்கம் பெற்றுக் கொண்டு பிறகு பார்க்க ஆரம்பித்தது முதல் விடாமல் பார்த்து வருகிறேன். அதிலும் சில எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் காட்டப்பட்டபோது சம்பந்தப்பட்ட பதிவுகளை பார்க்காமல் புறக்கணிக்கவும் செய்தேன் என்பதும் நிஜம்.

இப்போதுதான் சில நாட்களாக விட்டுப்போன ஆரம்ப எபிசோடுகளை டெக்சதீஷ் உபயத்தில் பார்த்தேன். அசந்து விட்டேன். சும்மா சொல்லப்படாது, திருமுருகன் சீரியலின் மேல் தனது முழு கண்ட்ரோலையும் வைத்துள்ளார். முதல் நான்கு எபிசோடுகளிலேயே பாத்திரங்கள் அழகாகச் செதுக்கப்பட்டு விட்டனர்.

கீழே நான் காட்டும் க்ளிப்பிங்க் அக்டோபர் மூன்றாம் தேதியுடையது. காவிய ரேஞ்சுக்கு இதை டைரக்டர் இயக்கியுள்ளார். கோபி, மலருக்கு இனிமேல்தான் பல சோதனைகள் வரப்போகின்றன என்றாலும், அவர்கள் இருவருமாக சேர்ந்தே அவற்றை எதிர்கொள்வார்கள் என்ற நிச்சயமும் மனதில் ஏற்படுகிறது. வசனகர்த்தாவுக்கு ஒரு சல்யூட். திருமுருகனுக்கும், கோபிக்கும் மலருக்கும், காஜாவுக்கும் ரோகிணிக்கும்தான்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

9/30/2011

தேவை இல்லாமல் சீன் போட்ட பலன்

அடேங்கப்பா எத்தனை பதிவுகள், எத்தனை கிண்டல்கள்!!!

ஆனால் சும்மா சொல்லக் கூடாது, கிண்டலுக்கு ஆளானவர்கள் வாயே திறக்காமல் வடிவேலு மாதிரி நல்லவர்கள் ஆனார்கள்.

நான் குறிப்பிடுவது எனது இப்பதிவைத்தான்.

இப்போதுதான் பலமுறை நானும் மற்றவர்களும் துருவித் துருவி கேட்ட பிறகு தமிழ் மணம் சாவகாசமாகக் கூறுகிறது, “அவை கட்டணப் பதிவுகள்” என. ஓக்கே இருக்கட்டுமே, கட்டணப் பதிவு என இரு வார்த்தைகளை சம்பந்தப்பட்ட பதிவின் மேல் வைத்தால் அதை கேள்வி கேட்க எங்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?

இது பற்றி தமிழ் மணம் அளித்த பதில்கள்.

//கேள்வி :சில பதிவர்கள் தமது மென்பொருள் அறிவை தவறாகப் பயன்படுத்தி, தமது இடுகைகள் மட்டும் பல நாட்களாகத் தொடர்ந்து தமிழ்மண முதல் பக்கத்தில் வருமாறு செய்து விடுகிறார்கள்
பதில் : நீங்கள் குறிப்பிடும் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தொடர்ந்து இருக்க விளம்பரம் செய்யப்பட்ட பதிவுகள். தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்தில் எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே தமிழ்மணம் முகப்பில் தெரியும். அதனை யாரும் தவறாக பயன்படுத்துவதாக தெரியவில்லை//

டோண்டு ராகவன் on September 30th, 2011 6:10 am
அப்படி கட்டணச்சேவை என்றால் அது ஒருவித வர்ணப்பட்டையுடன் இருக்க வேண்டாமா? ஆனால் நான் சுட்டிய பதிவுகள் அவ்வாறு இல்லையே?
அன்புடன்,
டோண்டு ராகவன்//

//தமிழ்மணம் பல விதங்களில் விளம்பரங்கள் வழங்குகிறது. வர்ணப்பட்டையுடன் கூடிய விளம்பரங்களுக்கு கூடுதல் கட்டணம். வர்ணப்பட்டை இல்லாத விளம்பரங்களுக்கு குறைவான கட்டணம். சிலர் அதனைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்மணம் விளம்பரப் பக்கங்களில் அது குறித்த விபரங்கள் உள்ளன
http://www.tamilmanam.net/purchase_ads.php
http://tamilmanam.net/tamilmanam_paid_service.php//


விளம்பரங்களுக்கு குறைவான கட்டணம் செலுத்துபவர்களாகவே இருக்கட்டுமே, அதனால் என்ன? பதிவின் மேல் விளம்பரப் பதிவு என தமிழ்மண முகப்புப் பக்கத்தில் போட உங்களுக்கு என்ன தயக்கம்?

சம்பந்தப்பட்ட பதிவர்கள் தேவையின்றி அவதூறுக்கு ஆளானார்கள். ஆனால் அதிலும் தவறு அவர்கள் மீதுதான். தங்களது விளம்பரச் சேவை பதிவு என பதில் அளித்திருந்தால் தீர்ந்திருக்கும் விஷயம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அமுக்குனியாக இருந்து தாங்கள் என்னவோ மென்பொருள் நிபுணர்கள் என்ற ரேஞ்சில் சீன் போட்டால் இதுதான் நடக்கும்.

சரி சரி, ஆளை விடுங்கள். இதற்குத்தான் “நியாயமாக நடந்தால் போதாது, நியாயமாக இருப்பது வெளிப்படையாகவும் தெரிய வேண்டும்” எனக் கூறுகிறார்கள் போலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/29/2011

டோண்டு பதில்கள் - 29.09.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. கூடங்குளம்: பிரதமரே இறுதி முடிவு எடுப்பார்: அமைச்சர் நாராயணசாமி

பதில்: சரிதான் உச்சா போவதற்குக் கூட சோனியாவின் அனுமதியை எதிர்பார்ப்பவரிடமிருந்து இத்தகைய எதிர்பார்ப்பா>

கேள்வி-2. கூடங்குளம் உண்ணாவிரதம் வாபஸ்: முதல்வரின் உறுதிமொழி ஏற்பு
பதில்: ஒருவர் மீசையிலும் மண் ஒட்டவில்லை எனும் திருப்திதான்

கேள்வி-3. தேர்தலை முறையாக நடத்த நீதிமன்றத்தை நாடுவோம்: ஸ்டாலின்
பதில்: எல்லாம் தனக்கு வந்தால்தான் தெரியும்.

கேள்வி-4. நான் பிரதமர் வேட்பாளர் அல்ல: அத்வானி சூசகம்
பதில்: அரசியல், அரசியல்

கேள்வி-5. தனித்தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதை அரசு முடிவு செய்யும்: ஆணையர் அய்யர்
பதில்: அது சுழற்சி முறையில் வரும் என நினைக்கிறேன்.

கேள்வி-6. A murderer is condemned to death. He has to choose between three rooms. The first is full of raging fires. The second is full of assassins with loaded guns. The third is full of lions that haven't eaten in 3 years. Which room is safest for him?
பதில்: Lions' room. They should all be dead if starving for 3 years.


கேள்வி-7. A woman shoots her husband. Then she holds him under water for over 5 minutes. Finally, she hangs him. But 5 minutes later they both go out together and enjoy a wonderful dinner together. How can this be?
பதில்: It is a Photo-shoot.

கேள்வி-8. What is black when you buy it, red when you use it, and grey when you throw it away?
பதில்: Matchstick.

கேள்வி-9. Can you name three consecutive days without using the words Wednesday, Friday, or Sunday?
பதில்: Yesterday, today and tomorroww.

கேள்வி-10. This is an unusual paragraph. I'm curious as to just how quickly you can find out what is so unusual about it. It looks so ordinary and plain that you would think nothing was wrong with it. In fact, nothing is wrong with it! It is highly unusual though. Study it and think about it, but you still may not find anything odd. But if you work at it a bit, you might find out. Try to do so without any coaching!
பதில்: There are no e's in that, everyone knows the trick.

ரமணா
கேள்வி-11. பதுங்கும் பங்குச்சந்தை சீறிப்பாயும் கமாடிடி சந்தை?
பதில்: அவை பற்றி மிகக்குறைவே அறிவுடைய டோண்டு ராகவனிடமா இக்கேள்வி??

கேள்வி-12. அன்னாவை அழைக்கும் பாகிஸ்தான் பற்றி?
பதில்: அங்கு போய் என்ன செய்வாராம்? சுதந்திரம் வந்த புதிதில் காந்திஜி பாகிஸ்தான் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தார் என்றால் அது வேறு விஷயம், வேறு பிரச்சினை.

தான் இன்னொரு காந்தி என நிறுவுவதற்காகவே அவர் முயலுகிறார்.

கேள்வி-13. தமிழக முதல்வரின் தற்கால செயல்பாடுகள் பற்றி?
பதில்: உண்மையான க்ரைசிஸ்கள் ஏதேனும் வந்தால்தான் அவரது முழுசெயல்பாடுகளை மதிப்பிட இயலும்.

கேள்வி-14. அமெரிக்கா,ஐரோப்பா இவைகளின் எதிர்காலப் பொருளாதாரம்?
பதில்: கேப்பிடலிசத்தில் ஏற்றமும் தாழ்வும் மாறி மாறி வரும். தவிர்க்க முடியாது.

கேள்வி-15. கூடங்குளம் அணுமின்நிலையம் தேவையா?
பதில்: இல்லை.


BalHanuman
கேள்வி-16. 'டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தால் எனது இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று புலம்புகிறாரே ப.சிதம்பரம்?
பதில்: இல்லாத விஷயத்துக்கு ஏன் புலம்பல்கள்?

கேள்வி-17. நில மோசடித் தடுப்புப் பிரிவையே ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளதே தி.மு.க.?
பதில்: வன்கொடுமை தடுப்புச் ச்ட்டத்தையே எடுக்க வேண்டும் என மரம்வெட்டிக் க்ட்சித்தலைவர் கூறுவது போல உள்ளது.

இதைத்தான் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பார்கள்.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/24/2011

தமிழ் நாடகப் பேராசிரியர், பம்மல் சம்பந்த முதலியார் - 2

தமிழ் நாடகப் பேராசிரியர், பம்மல் சம்பந்த முதலியார் பற்றிய எனது இன்னொரு பதிவு இங்கே

அப்பதிவை இட்டபோது அவரது நாடகமேடை நினைவுகளிலிருந்து எனது நினைவிலிருந்து எடுத்து எழுதினேன். ஆனால் சில நாட்களுக்கு முன்னால் எனக்கு அப்புத்தகமும், பலகாலமாக தேடி வந்த வேறு சில புத்தகங்களும் கிடைத்தது என் பாக்கியமே.

அவரது நாடக மேடை நினைவுகளை இப்போதுதான் படித்து முடித்தேன். நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்த புத்தகத்துக்கும் இப்போதுதான் படித்து முடித்த புத்தகத்துக்கும் ஆறு வித்தியாசங்களுக்கும் மேலே உண்டு என்றுதான் நினைக்கிறேன்.

இப்போது படித்து முடித்தப் புத்தகம் 1932 வாக்கில் எழுதப்பட்டது, ஆனால் நான் முன்னால் படித்த புத்தகத்திலோ அதற்கு பிந்தையக் காலக் கட்டங்களும் சுட்டப்பட்டுள்ளன. மறுபடியும் கடையில் போய் பார்க்க வேண்டும். அது பற்றி பிறகு.

இப்போது இந்தப் புத்தகத்தை படித்ததும் எனது நினைவுகள் கிட்டத்தட்ட சரி என்ற நிலைக்குத்தான் வந்தேன். நாடக அரங்கங்களில் ஆபாசங்கள் என்னும் பதிவில் குறிப்பிட்ட ரோலக்ஸ் வாட்ச் ஒன்றுதான் எனது நினைவுகளுடன் ஒத்துப் போகவில்லை.

சம்பந்தம் முதலியாருக்கு துணைவி/காதலி பாத்திரங்களில் வந்த ரங்கவடிவேலு முதலியார், நாகரத்தினம் ஐயர் ஆகியோர் பற்றி அவர் தரும் விவரங்கள் புருவங்களைத் தூக்க வைக்கின்றன.

மனோகரன் நாடகத்தில் இவர் மனோகரனாக நடித்ததாலேயே ரங்கவடிவேலு விஜயாள் வேடம் தரித்தார், கர்ணன் நாடகத்தில் பானுமதியாக நாகரத்தினம் ஐயர் நடித்ததாலேயே இவர் துரியோதனன் வேடம் ஏற்க நேர்ந்தது, இவரும் அவரது பெண் ஜோடிகளாக வேடம் தரித்த ரங்க வடிவேலுவும் ஊடுவது பற்றி எல்லாம் படிக்கும்போது உண்மையான க்ணவன் மனைவி, நிஜக் காதலர்கள் கெட்டார்கள் போங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இவ்வரிகளை ஒரு மனோதத்துவ நிபுணர் படித்தால் என்ன நினைப்பார் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. சங்கடமாக உள்ளது.

இப்புத்தகத்தை படித்த போது இப்போது தோன்றிய விஷயத்தைக் கூறும் முன்னால் ஒரு சிறு டைவர்ஷன்.

பிரபல ஆங்கில நாவலாசிரியை ஜேன் ஆஸ்டன் பற்றிப் பேசுகையில் அவர் தனது சமகாலத்தில் நடந்த பிரெஞ்சு, அமெரிக்க மற்றும் தொழிற் புரட்சிகள் பற்றி தனது நாவல்களில் ஒன்றுமே கூறவில்லை. அது பற்றி பல விவாதங்கள் நடந்துள்ளன. அவை இப்போதைக்கு இங்கு வேண்டாம்.

அதே போல பாரதியார் கூட வீர பாண்டிய கட்டபொம்மன் பற்றி ஒன்றுமே எழுதாதற்கும் காரணங்கள் இருந்திருக்கும் அல்லவா? அது பற்றி இம்சை அரசன் புலிகேசி தூண்டிய நினைவுகள் என்னும் தலைப்பில் நான் இட்ட இடுகையில் நான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

உதாரணத்துக்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் ஐம்பதுகளில் வெளியானபோது தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் உள்ள தியேட்டர்களில் ஒன்றில்கூடத் திரையிடப்படவேயில்லை என்பது பத்திரிகை செய்தி. ஊர்கட்டுப்பாடுதான் அதற்குக் காரணம். தங்கள் மஹாராஜாவின் மீது அவ்வளவு பக்தி ஊர் மக்களுக்கு. ஒன்று இரண்டு மூன்று என்று கூறும்போது கூட, ஆறு, ஏழு, மஹாராஜா, ஒன்பது, பத்து என்றுதான் எண்ணுவார்களாம். ஏனெனில் எட்டு என்று கூறிவிட்டால் மஹாராஜாவைப் பெயர் வைத்துக் கூப்பிடுவதுபோல ஆகிவிடுமாம். அதனால்தான் பாரதியார் கூட தன் எழுத்துக்களில் வீர பாண்டிய கட்டபொம்மனைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். அக்காலக் கட்டங்களில் கட்டபொம்முவை கொள்ளைக்காரனாகத்தான் குறிப்பிட்டனர் பலர். பாரதியாரும் அவ்வாறே கருதியிருக்கலாம்.

சிறு டைவர்ஷன் முடிந்தது.

இப்புத்தகத்தில் முகத்தில் அறையும் எண்ணம் இதுதான். சுதந்திரப் போராட்டம் பற்றி ஒரு குறிப்புமே இல்லை. பல தமிழ் நாடகக் கலைஞர்கள் (கே.சாரங்கபாணி, கே.பி.சுந்தராம்பாள், நாகையா, டி.கே.சண்முகம், எஸ்.வி.சகஸ்ரநாமம், என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர்) தத்தம் உயிரைப் பயணம் வைத்து சுதந்திர தாகம் எழுப்பும் நாடகங்களை போட்ட கால கட்டத்தில் இவரது குழு சௌகரியமாக அரசு சார்பில் இருந்து, கவர்னர் துரை மற்ற அரசு அதிகாரிகள் மனம் மகிழும் நாடகங்கள் போட்டு, ராவ் பகதூர், திவான் பகதூர், சர் பட்டங்களைப் பெறுவதிலேயே காலம் கழித்திருக்கிறது. இவரும் அரசு உத்தியோகத்தில் ஜட்ஜாக எல்லாம் இருந்து ஓய்வும் பெற்றுள்ளார்.

இது பற்றியும் மனோதத்துவ நிபுணர்கள் இப்போது என்ன கூறுவார்கள் என்பதை நினைத்தாலும் சுவாரசியமாகத்தான் இருக்கும்.

அது சரி, பம்மல் சம்பந்த முதலியார் அறிவார்ந்த சுயநலத்துடன் செயல்பட்டுள்ளார். அதில் என்ன குற்றம் காண இயலும் என்னால்? நானே அப்படித்தானே!

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது