Showing posts with label இஸ்ரேல். Show all posts
Showing posts with label இஸ்ரேல். Show all posts

9/25/2012

விடுதலைப் புலிகளை யூதர்களுடன் ஒப்பிடலாமா?

எனது முந்தையப் பதிவில் விடுதலைப் புலிகளையும் யூதர்களையும் ஒப்பிட்டு வந்த பின்னூட்டமும் அதற்கு எனது எதிர்வினையும் பின்வருமாறு:

//புலிகள் விஷயத்தில் உங்களது நேர்மையைப் பாராட்ட வேண்டும். என்னதான் புலிகள் இஸ்ரேல் ஆதரவு, முஸ்லீம் விரோதப்போக்கு, மோடியைப் போல‌ பொது மக்களைக் கொல்லுதல் என இருந்தாலும், புலி ஆதரவாளராக நீங்கள் இல்லை.//

டோண்டு கூறியது:
//புலிகளை இஸ்ரவேலர்களுடன் ஒப்பிடுவதா? வாயைக் கழுவுங்கள். அவர்களை பாலஸ்தீனியருடன் வேண்டுமானால் கம்பேர் செய்வேன், முட்டாள்தனமாக தமது ஆதரவாளர்களிடம் ஏடாகூடமாக நடந்து கொண்டதில்.

1982-ல் பாலஸ்தீனியரை ஏற்றுக் கொள்ள எந்த அரபு தேசமுமே தயாராக இல்லை.

அதே போல தனக்கு ஏதுவாக செயல்படகூடிய தமிழகத்தை, ராஜீவை கொலை செய்தது மூல்ம் விரோதித்துக் கொண்டனர் புலிகள்.//

இருப்பினும் இந்த ஒப்பிடுதல் சரியில்லை என்பதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன.

ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக பலவித ஆட்சிகளால் பீடிக்கப்பட்டு, ஆண்டுதோறும் தமக்குள் கூறிக்கொளும் முக்கிய முகமனாக “அடுத்த ஆண்டு ஜெரூசலத்தில் பார்ப்போம்” வைத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுடன் புலிகளை ஒப்பிட நினைப்பதே தகாது.

நான் தில்லியில் இருந்த சமயம் மாரெக் ஹால்டர் என்னும் யூத எழுத்தாளர் எழுதிய  ”அப்ரஹாமின் புத்தகம்” என்னும் புத்தகம் படிக்கக் கிடைத்தது. அருமையான ஃபிரெஞ்சில் அது அமைந்தது பற்றி இங்கே மேலே வேண்டாம்.

அப்புத்தகத்தின் கதை கி.பி. 70 வாக்கில் துவங்கி 1936-ல் முடிவடைகிறது, அதுவும் ஒரே குடும்பத்தின் கதைதான் அது. அதில் யூதர்கள் அனுபவித்த எல்லா சோதனைகளும் அழகாகக் கையாளபட்டுள்ளன. 19940-களில் வார்ஸா யூதக்குடியிருப்பு அழிப்பு சமயத்தில் கதை முடிவடைகிறது. அதில் உள்ள ஒரு கதபாத்திரம் இறக்க, “Ainsi mourut mon grandpère" (இப்படித்தான் இறந்தார் எனது தாத்தா) என்ற வாக்கியம் வர நான் எங்கோ குத்தி விட்டது போல நிமிர்ந்து உட்கார்ந்தேன். இக்கதைசொல்லியும் அக்குடும்பத்தின் உறுப்பினர் என்ற உண்மை முகத்தில் அறைந்தது. அப்புத்தகம் பற்றி இன்னொரு சுவையான செய்தி. சமீபத்தில் 1991-ல் நான் பிரெஞ்சு துபாஷியாக ஆக்ரா சென்ற போது அந்த பிரெஞ்சுக்காரர் மாரெக் ஹால்டர் எழுதிய ”அப்ரஹாமின் குழந்தைகள்” என்னும் புத்தகத்தை சிலாகித்து பேசினார். அது நான் முதலில் குறிப்பிட்ட புத்தகத்தின் தொடர்ச்சி என் நான் அவருக்கு எடுத்துக் கூற், அவ்வளவுதான் ஆக்ராவிலிருந்து காரில் டில்லி வரும்வரை நாங்கள் இருவர் மட்டுமே பேசி வந்தோம். நேரம் போனதே தெரியவில்லை.

முதல் புத்த்கம் சரித்திரத்தைக் கூற இரண்டாம் புத்தகமோ தற்போது இஸ்ரவேலர்கள் அரபியருடன் சேர்ந்து சமாதானத்துக்காக முயற்சிப்பதை கூறுகிறது.

அவை கதை புத்தகங்கள்தான், ஆனால் உண்மையின் அடிப்படை அவற்றுக்கு உண்டு.

இப்போது கூட குடி முழுகவில்லை. ஈழத்தமிழர்கள் கிபி 70-ல் இஸ்ரவேலர்கள் இருந்த நிலையில் உள்ளனர். அவர்களைப் போல இவர்களும் முயன்றல் வேண்டுமானால் ஒப்பீடு குறித்து சில நூற்றாண்டுகள் கழித்து யோசிக்கலாம். இல்லாவிட்டல் ஒப்பிட்ட வாயைக் கழுவு என்றுதான் நான் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன். 

    

6/21/2012

லீனா மணிமேகலை விவகாரம்

பலரும் இது பற்றி எழுதி விட்ட நிலையில் நானும் எழுதலாம் என இருக்கிறேன். .

லட்சியம் எல்லாம் ஓக்கேதான். ஆனால் அவை பிழைப்புக்கு எதிராக வரும்போது அவற்றுக்காக ரொம்பவும் அலட்டக் கூடாது என்பதுதான் எனது கொள்கையும். லீனாவின் தொழில் என்ன? படம் எடுப்பது. அதில் அவருக்கு நல்ல பெயர் உண்டு. அவருக்கு ஓர் ஆஃபர் வருகிறது. அதன்படி எடுக்கிறார். ஸ்க்ரிப்டை அவராக எழுதினாரா அல்லது எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்டை அவர் எடுக்க வேண்டியிருந்ததா என்று பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான். அவராகவே ஸ்க்ரிப்டை எழுதினாலும் அவர் என்ன எழுத வேண்டும் என்பது அவரிடம் கூறப்பட்டிருக்கும் என்பதே நிஜம்.


சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவை அங்கவை சங்கவை காமெடிக்காக சாடினார்கள். அப்போதும் நான் சொல்வேன் அவர் அப்படத்தில் நடிகர், எழுதிக் கொடுத்ததைத்தான் நடித்தார் என.  அவர் மாட்டேன் என்றால் என்ன நடக்கும். பேசாமல் அவரை தூக்கி விடுவார்கள். அதன் மூலம் வரும் பொருள் இழப்பை அவரை சாடிய சும்பன்களா கொடுப்பார்கள்? நல்லா வாயில வருது. 


இவங்களே வாய்ப்பு கிடைச்சா அவ்வாறு செய்யக் கூடியவங்கதான். எனக்கு தெரிஞ்ச ஒரு பிளாக்கர் அமெரிக்காவை கண்டபடி சாடுபவர். ஆனால் கிரீன் கார்டுக்கும் அப்ளை செய்தவர். சொந்தப் பெயரில் எழுத தில் இன்றி புனைப்பெயரில் எழுதுபவர். எப்படி எழுதுவார்? அவர் அவ்வாறு செய்யாது சொந்தப் பெயரில் எழுதியிருந்தால், அவற்றை மொழிபெயர்த்து அமெரிக்கர்களுக்கு தெரிவித்திருந்தால்? ஒன்றும் தலையை எல்லாம் எடுக்க மாட்டார்கள். போடா உன் ஊருக்கே மயிராண்டி என்றுதான் அனுப்புவார்கள். அதுவே இவருக்கு இடிதானே. 


கம்யூனிசத்தை விதந்தோதும் இரு பதிவர்கள் - அவர்கள் பெயர் வேண்டாமே - மல்டி நேஷனல் கம்பெனிகளில்தான் வேலை பார்க்கிறார்கள். ஒருவர் தான் செல்ஃப் அப்ரைசலில் 40% இன்க்ரிமெண்ட் பெற்றதை என்னிடம் சந்தோஷமாகக் கூறினார்.


நானே ஐடிபிஎல்-ல் வேலை பார்த்த சமயம் எல்லாமே மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, ஒன்றைத் தவிர. அதாகப்பட்டது அல்ஜீரியாவுக்கு சென்று பணி புரிய வேண்டும் என்பதே. இஸ்ரேலுக்கு விரோதியான அந்த நாட்டுக்கு பணி செய்ய வேண்டுமா என்ற கலக்கம் இருந்தது வாஸ்தவமே. ஆனால் அதற்காக கிடைத்த வாய்ப்பை விட்டுவிட முடியுமா? இது வேறு, அது வேறு. ஆனால் நல்ல வேளையாக அல்ஜீரியா வேலை வரவிலை என்பதில் போனஸ் மகிழ்ச்சிதான்.


சில ஆண்டுகளுக்கு முன்னால் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான தளம் ஒன்றிலிருந்து மொழிபெயர்ப்பு வேலை வந்தது. தயங்காமல் செய்து அனுப்பினேன். அவ்வளவுதான்.


ஆனால் சில இடங்களில் சட்டவிரோதம், பின்னால் மாட்டிக் கொள்ளலாம் என்பது தெரிந்தால் அவ்வேலைகளை ஏற்கலாகாது. ஆனால் அதுவும் சுயபாதுகாப்பில்தான் வரும்.

எது எப்படியானாலும் ஒரு செய்கையை மேற்கொள்ளும் முன்னால் எல்லாவற்றையும் பார்த்தல் நலம். ஆனால் அது சுய விருப்பத்தில் இருக்க வேண்டும். அவ்வளவே.

இதற்காக சாடும் மற்றவர்கள் நாசமாக போகட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்







1/12/2012

கோவி கண்ணனின் எதிர்ப்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்ப்பதிவு

வடை பஜ்ஜி பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இது.

//விவசாயத்திற்கு தேவையான மண்ணோ, நீரோ மற்றும் பூலோக அமைப்போ
இல்லாத பாலைவனமான சவுதியை சோலைவனமா மாத்த அங்கங்க மணல், தண்ணி அது இது அப்படின்னு வாங்கி விவசாயத்த பெருக்க அந்த நாட்டு அரசு முயல்கிறது, அதில் குறிப்பிட தக்க அளவு வெற்றியும் பெற்று உள்ளது. நாம பூத்துக் குலுங்கும் சோலைவனமா உள்ள நமது நாட்ட பாலைவனமா மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பது தான் சுவனப்பிரியனோட கட்டுரையின் சாரம்.


எவ்வளவு நல்ல கருத்து இது? எவ்வளவு உண்மையும் கூட. இதை எவ்வளவு ஆக்கபூர்வமான விவாதத்திற்கு உரியதாக நீங்கள் மாற்றி இருக்கலாம் ? அதெல்லாம் விடுத்து சவூதி அரேபியா என்ற பெயர் வந்து விட்டதா , உடனே எதிர்த்தாக வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் நீங்கள் கட்டுரை தீட்டியதோ ஏனோ?????//

இதற்கெல்லாம் பல பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே இஸ்ரேல் நெகேவ் பாலைவனத்தை சோலை வனமாக மாற்றி விட்டது.

லஞ்ச லாவண்யங்கள் ஏதுமின்றி குஜராத்தில் மோதி அரசு திறம்பட அரசை நடத்தி வருகிறது. அதையே இந்தியாவின் மற்ற நாடுகளிலும் பின்பற்றுவது எல்லோருக்கும் நல்லது.

இப்பின்னூட்டத்துக்கு இசுலாமிய பதிவர்கள் எவ்வாறு எதிர்வினை புரிவார்கள் என நினைக்கிறீர்கள்?


இப்போது எனது இப்பதிவின் விஷயத்துக்கு வருவோம்.

நெகேவ் பாலைவனம் பற்றிய இஸ்ரேலின் டூரிசம் வீடியோ கீழே.



மற்றொரு வீடியோ



இஸ்ரேல் உருவாவதற்கு முன்பிருந்தே அங்கு யூதர்கள் பல முன்னேற்றங்களை விஞ்ஞானம் தொழில் நுட்பத்தில் கொண்டு வந்துள்ளது பற்றி இங்கு பார்க்கவும்.

இஸ்ரவேலர்கள் பல முறை நம் நாட்டுக்கும் தனது விவசாய முறைகளை கற்றுக் கொடுக்க முன்வந்தது. இசுலாமிய ஓட்டு வங்கியை மனதில் கொண்ட இந்திய அரசு அதை மறுத்து வந்திருக்கிறது. ஏதோ நல்ல புத்தி வந்து இப்போதுதான் இஸ்ரேலுடன் பல துறைகளில் - முக்கியமாக தீவிரவாதத்துக்கு பலமான எதிர்வினை - ஒத்துழைக்க ஆரம்பித்துள்ளது. இது போதாது. மேலும் செய்ய வேண்டும் என்பதே என் அவா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/06/2010

யூதர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் ரோமானிகளுக்கு ஏன் கிடைக்கவில்லை?

ஐரோப்பாவின் தீண்டத்தகாதவர்கள் ஏனும் தலைப்பில் கலையரசன் என்பவர் இட்ட பதிவை பார்த்து சிந்தனையில் ஆழ்ந்தேன். அதிலிருந்து முதலில் சில வரிகளை பார்ப்போம்.

ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும், தீண்டத்தகாதவர்களாக கருதி ஒடுக்கப்பட்ட, "ரோமா" நாடோடி இன மக்களைப் பற்றி வெளியுலகம் அதிகம் அக்கறைப் படுவதில்லை. காலங்காலமாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக கூடாரங்களை அமைத்து வசித்த ரோமா இனத்தவர்கள், பெரும்பான்மை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. அதனால் நிரந்தர வறுமைக்குள் வாழும் படி நிர்ப்பந்திக்கப் பட்டனர். ஹிட்லரின் நாசிச ஆட்சிக் காலத்தில் யூதர்கள் மட்டும் அழிக்கப் படவில்லை. இலட்சக் கணக்கான ரோமா மக்கள் ஹிட்லரின் இனவழிப்புக்கு பலியானார்கள். இரண்டாம் உலகப் போர் முடிவில், யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற தாயகத்தை உருவாக்க முன்வந்த வல்லரசுகள், ரோமா மக்களின் பிரச்சினையை கண்டு கொள்ளவில்லை.

ரோமா இன மக்கள், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து நாடோடிக் கூட்டமாக ஐரோப்பாவிற்குள் வந்தவர்கள். அந்த மக்களின் தாயகம், வட இந்தியாவில், அல்லது இன்றைய பாகிஸ்தானில் இருந்திருக்க வேண்டும். அனேகமாக இஸ்லாமிய படையெடுப்புகளால் காரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்திருக்கலாம். இது வரை உறுதியான வரலாற்றுத் தகவல்கள் இல்லா விட்டாலும், சரித்திர ஆசிரியர்கள் அவ்வாறு கருதுகின்றனர். ரோமா மக்கள் ஒரு காலத்தில் இந்து மதத்தை பின்பற்றியவர்கள். அவர்களின் ஸ்வாஸ்திகாவை (இந்துக்களின் புனிதச் சின்னம்), பிற்காலத்தில் ஹிட்லர் நாஸி கட்சியின் சின்னமாக்கியதாக ஒரு கதையுண்டு. ஆயிரக் கணக்கான வருடங்கள் ஐரோப்பாவில் வாழ்வதால், இன்றைய ரோமா இனத்தவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். ஆனால் நிறவெறி கொண்ட வெள்ளையின கிறிஸ்தவர்கள், அவர்களை சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை.


யூதர்கள் மற்றும் ரோமா குடியினர் பற்றி பிறகு பார்ப்போம். முதலில் நம் நாட்டில் கிட்டத்தட்ட இதே மாற்று நிலையில் உள்ள நாடார்கள் மற்றும் தலித்துகள் பற்றி நான் இட்ட ஆதரிசமாகக் கொள்ள வேண்டிய பெருமதிப்புக்குரிய நாடார் சமூகம் என்னும் பதிவில் நான் எழுதியதை முதலில் இங்கு மீண்டும் கொணர்வேன்.

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அடக்கு முறை அது. உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும். அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது. செருப்பு போடக் கூடாது. தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது. மாடி வைத்து வீடு கட்டக் கூடாது. பசுக்களை வளர்க்கலாம். ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்கவேண்டும்.

இப்படி நாளுக்கு நாள் அவர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகமாகிக்கொண்டே போனதன் விளைவு? பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட அந்த சமூகம் வீறுகொண்டு எழுந்தது. தங்களை அடக்கியவர்களையும் ஒடுக்கி வைத்திருந்தவர்களையும் எதிர்த்து அவர்கள் போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. வரலாறு காணாத அந்தப் புரட்சியை செய்தவர்கள் நாடார் சமூக மக்கள்.
------------------------------------------------------------------------------------------
தலித்துகளைப் போலவே நாடார்களும் சொல்லொண்ணா வன்கொடுமைகளை அனுபவித்தவர்கள். ஆனால் தலித்துகள் அப்படியே இருக்கிறார்கள், நாடார்களோ பெருமிதம் தரும் அளவுக்கு முன்னேறியுள்ளனர் என்பதை பார்க்கும்போது முன்னவர்களது நிலை வேதனை அளிக்கிறது. ஒரு முதல் முயற்சியாக இரட்டைக் குவளை முறையை எப்படி எதிர்க்கொள்ளலாம் எனக் கூறிய ஆலோசனைக்கு எவ்வளவு கேலியான பின்னூட்டங்கள்? நான் சந்தித்த ஒரு தலித் நண்பரிடம் இப்பதிவைப் பற்றி கூறியபோது அவர் அரசு டீக்கடை வைத்து தருமா என ஒரு அடிப்படை கேள்வியே கேட்டார். அவ்வாறு எல்லாவற்றுக்கும் அரசை எதிர்பார்த்து நின்றால் சுயமரியாதைக்காகாது என்பதை அவர் புரிந்து கொள்ள தயாரில்லை. அதே மாதிரி நாடார்களும் நின்றிருந்தால் இப்போதைய அவர்களது உன்னத நிலை கனவில்கூட கிட்டியிராது என்பதே நிஜம்.

இம்மாதிரி நேர்மறையான எண்ணங்களை உள்ளடக்கிய தொடரை எழுதியதற்கு குமுதம் பாராட்டப்பட வேண்டும். அதைவிடுத்து அது என்னவோ ஜாதியை தூக்கி நிறுத்துகிறது எனக் கூறுவது வெறும் தட்டையான எண்ணம். இத்தகைய முன்மாதிரிகளை எத்தனை முறை எடுத்தியம்பினாலும் போதாது என்பதே எனது ஆணித்தரமான கருத்து.

நான் இட்ட ராம்நகரி பதிவிலிருந்து சில வரிகளை இங்கு காட்டுவேன். “இடையில் (நாவிதர் வகுப்பைச் சார்ந்த ராம்நகரியின்) தந்தைக்கு உடல் நலம் சரியாக இல்லாது போக அவ்ரை மருத்துவ மனையில் சேர்க்கிறார்கள். அங்கிருக்கும் மருத்துவர் ராம்நகரியின் தூரத்து உறவுக்காரர். ராம்நகரி அவரிடம் "நல்ல வேளை நம்ம சாதி ஆள் நீ இங்க இருக்க.." என்று இழுக்கும்போதே, மருத்துவர் ஒரு மாதிரி சங்கடத்துடன் கனைத்து விட்டு அவரை தனியாக அழைத்து சென்று தனது சாதி யாருக்கும் அந்த மருத்துவமனையில் தெரியாது, ஆகவே தயவு செய்து அங்கு அதைப் பற்றி பேச வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார். பிறகு வரும் ஒவ்வொரு காட்சியிலும் இந்த சாதி பிரச்சினை ராம் நகரியை ஒவ்வொரு மாதிரி பாதிப்பதையே பல வகையில் காண்பிக்கிறார்கள்”.

நாடார்கள் தம் முயற்சியால் பெற்ற பெருமை இஸ்ரவேலர்கள் தம் நாட்டையே உருவாக்கினதற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல. அவர்களும் நாடார்கள் போலவே தமக்குள்ளேயே ஒற்றுமையாக இருந்து முன்னேறினர். முன்னேற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் நாடார்களுக்கு எனது பெரிய சல்யூட். இந்த வலைப்பூவை இப்போதுதான் பார்த்தேன். நல்ல முயற்சி.


இந்த வேற்றுமைகள் ஏன் என்பதை நான் கூறித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. நாடார்கள் சுயமுயற்சி செய்தனர், தலித்துகள் செய்தவை போதாது அவ்வளவே. கசப்பான, ஆனால் மறுக்க முடியாத உண்மை. அதை விடுத்து தலித்துகளுக்கு ஆதரவாக பேசுவது போல அவர்களது செயலின்மைக்கு சப்பைக்கட்டு கட்டுபவர்களது ஆழ்மனதில் போய் பார்த்தால் அவர்கள் எங்காவது முன்னேறி விடுவார்களோ, நாடார்கள் போல தங்கள் ஆதிக்கத்திலிருந்து தப்பித்து விடுவார்களோ என்ற அச்சம்தான் தெரிகிறது.

சரி இங்குதான் இப்படி என்றால் ரோமா குடிமக்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் உள்ள இந்த வேற்றுமைகள் ஏன் என்பதைப் பார்த்தாலும், இங்கு இந்திய நிலைக்கான காரணங்களே அங்கும் முன்னுக்கு வருகின்றன.

ரோமா இன மக்களும் யூதர்களும் நாடின்றி பல நூற்றாண்டுகள் அலைந்தவர்கள் என்னும் ஒரு செய்தி மட்டுமே இருவருக்குமே பொதுவானது. ரோமா இன மக்கள் ஓரிடத்தில் நிற்கும் மனநிலை இல்லாதவர்கள். சுதந்திரப் பிரியர்கள். ஆகவே அவர்களாகவே பல முறை ஊர் ஊராக குடிபெயர்ந்தனர். கைவசம் நிலையான தொழில் இல்லாததால் அவர்களில் சிலர் திருட்டு தொழிலிலும் ஈடுபட்டனர். அந்த சிலரது செயல்பாட்டினால் மற்றவர்களது பெயரும் கெட்டது, நம்மூரில் குறவர்கள் இனத்துக்கு வந்தது போல. அவர்களை பற்றிய அசைக்க முடியாத கெட்ட அபிப்பிராயம் மற்றவர்கள் மனதில் விழுந்தது விழுந்ததுதான் என ஆயிற்று. அதை மீறிச் செயல்பட மிகுந்த கடின உழைப்பு தேவை. அதை செய்ய அவர்கள் இதுவரை தயாராக இருந்ததாகவும் தெரியவில்லை.

ஆனால் யூதர்கள் விஷயத்தில் அவர்களாக விரும்பி இடம் மாற்றவில்லை. எங்கு இருந்தாலும் அந்தந்த சமூகத்தில் ஓர் அங்கமாக இருக்கவே முனைந்தார்கள். அவர்கள் தம் நிலையை உழைப்பின் மூலம் உயர்த்தவே முயன்றனர். சில ஆண்டுகளிலேயே அவ்வாறு உயர்ந்தும் காட்டினர். ஆனால் சுற்றிலுமிருந்த மக்கள் அவ்வளவாக முன்னேறவில்லை, அதற்கு அவர்களது சோம்பேறித்தனமே காரணம் என்றாலும், எப்போது ஒரு சமூகம் தனது குறைபாடுகளை ஒத்துக் கொண்டுள்ளது?

சௌகரியமாக பல குற்றச்சாட்டுகளை யூத சமூகத்தின் மேல் வைத்தது. ஏசு கிறித்துவை கொன்றதாக எழுந்த பொய் அவற்றில் முக்கியமானது. மேலும் ஒருவர் அக்கால கட்டத்தில் இஷ்டத்துக்கு எந்தத் தொழிலையும் ஏற்றுச் செய்ய முடியாது. ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு குழு உண்டு (guild). அதில் சேர்ந்து, பயிற்சி பெற்று, தேர்வுகளை எதிர்க்கொண்டு வெற்றி பெற்றால்தான் அத்தொழிலை செய்யவே இயலும். அந்த நிலையில் யூதர்களை ஒரு குழுவுமே சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை. அவர்களுக்கு கிடைத்த ஒரே தொழில் வட்டிக்கு கடன் கொடுப்பதுவே. அதிலும் அவர்கள் நல்ல முறையில் ஈடுபட்டு பணக்காரர்கள் ஆனாலும், அதற்காக வேறு வயிறெரிந்தனர் மற்றவர். கடன் தொகைகள் அதிகமானால் கடன் கொடுத்த யூதர்களை போட்டுத் தள்ளவும் அக்கால பிரபுக்கள் தயங்கவில்லை. உண்மை கூறப்போனால் சிலுவைப் போர்களின் ஆரம்பமே யூத வட்டிக் கடைக்காரர்களைக் கொல்வதுதான்.

இருந்தாலும் யூதர்களும் போராடினர். தங்களுக்கு நடந்தவற்றையெல்லாம் ஆவணப்படுத்தினர். அவற்றின் உதவியோடு புதிதாக அபாயம் உருவாவதை கண்டுகொண்டு தங்களைக் காத்துக் கொண்டனர்.

அமெரிக்க யூத எழுத்தாளர் லியோன் யூரிஸ் (Leon Uris) எழுதிய நாவல் மிலா-18 போலந்தில் வார்ஸா நகர யூதக்குடியிருப்பில் உள்ளவர்கள் நாஜிகளை எதிர்த்துப் போராடியது பற்றி விளக்கும் ஒரு காவியம். அதில் ஒரு ஜெர்மன் படைத் தலைவர் வார்சா தலைமை நிர்வாகியிடம் யூதர்களை பற்றிய தனது எண்ணங்களை இவ்வாறு வெளியிடுவார். (நினைவிலிருந்து மொழிபெயர்ப்பு செய்கிறேன்).

“நீங்கள் என்னவோ யூதர்கள் கோழைகள், அவர்களது இந்த எதிர்ப்பை ஓரிரு நாட்களில் நசுக்குவோம் என்கிறீர்கள். அது தவறான புரிதல். இப்போது பலருக்குமே தெரியாத விஷயம் என்னவென்றால் யூதர்கள் மிகுந்த போர்க்குணம் கொண்ட இனத்தவர். அவர்கள் போர் புரிய ஆரம்பித்தால் கடுமையாகவே அதை செய்வார்கள். மேலும் இந்த போராட்டம் பிற்காலத்தில் அவர்களது ஆவணங்களில் வரும், ஜெர்மனிக்கு தீராத அவமானம் தரும்”.

அப்படித்தான் நடந்தது. மேலே நடந்ததைக் கூறும் முன்னால் எனது நங்கநல்லூர் பஞ்சாமிர்த்தம் - 28.06.2009 பதிவிலிருந்து சில வரிகளைத் தருகிறேன்.

„Wanderer, kommst du nach Sparta, verkündige dorten, du habest uns hier liegen gesehn, wie das Gesetz es befahl.
கி.மு. 480-ல் தெர்மோபைலே என்னும் இடத்தில் தங்களை விட பலமடங்கு அதிகம்பேரை கொண்ட பாரசீகப் படையினரை 300 பேர்களே இருந்த கிரேக்கப் படை எதிர்த்து போராடி அத்தனை பேரும் அழிந்த இடத்தில் உள்ள நடுகல்லில் மேலே கூறிய ஜெர்மானிய வாசகங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன. அதன் பொருள் பின்வருமாறு, “இதைப் பார்க்கும் நாடோடிகளே, நீங்கள் எங்கள் ஊரான ஸ்பார்ட்டாவுக்கு செல்ல நேரிட்டால் அங்குள்ள எங்களவரிடம் கூறுங்கள், நாங்கள் யாவரும் ஒருவர் விடாமல் எதிரிகளுடன் போராடி எங்களுக்கென விதிக்கப்பட்ட வீர மரணம் அடைந்தோம் என”. உலக சரித்திரத்தில் பல போர்கள் நடந்து விட்டன, நடக்கின்றன, நடக்கவும் இருகின்றன. ஆனால் இந்தப் போரும் அதை போன்ற வெகு சில போர்கள் மட்டும் இன்னமும் மக்களின் நினைவுகளில் பசுமையாக உள்ளன. வெற்றியா தோல்வியா என்பது இரண்டாம் பிரச்சினை. முக்கிய விஷயம் என்னவென்றால், மரணம் நிச்சயம் என அறிந்திருந்தும் கடைசிவரை எதிர்த்து போராடி உயிர்த்தியாகம் செய்வதே.

அவர்கள் கொல்லப்பட்டாலும் அவர்களது பெயர்கள் மக்கள் மனதில் வைக்கப்பட்டு பாடப்படும். அதே போல இஸ்ரவேலர்களது வரலாற்றில் மஸாடா என்னும் இடத்தில் நடந்த போரை இன்னமும் இஸ்ரவேல குழந்தைகள் போற்றுகின்றனர். அப்போரில் எல்லா யூதர்களும் இறந்தனர். அவ்விடத்தில் இன்னமும் இஸ்ரவேலர்கள் “மஸாடா இனிமேல் விழாது” என்னும் வீரச்சபதம் எடுக்கின்றனர். 1943-ல் போலந்து தலைநகரம் வார்சாவின் யூதக் குடியிருப்பை நாஜிகள் நாசமாக்கிய போது அவர்கள் எதிர்த்து போராடினர். அது April 19, 1943 - May 16, 1943 வரை நீடித்தது. 1939-ல் போலந்தின் அதிகாரபூர்வமான ராணுவம் கூட அவ்வளவு நாள் தாக்கு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்க யூத எழுத்தாளர் எழுதிய “மிலா 18” நாவலிலும் அமெரிக்க எழுத்தாளர் எழுதிய “தி வால் (சுவர்)” என்னும் நாவலிலும் இது பற்றி பார்க்கலாம். இங்கும் போராளிகள் கடைசியில் கொல்லப்பட்டாலும் மக்கள் மனதில் அழியா இடம் பெற்றுள்ளனர்.


அவ்வாறெல்லம் செய்தவர்கள் யூதர்கள். அவர்களது ஆவணப்படுத்தலாலும் விடாமுயற்சியாலும்தான் ஐ.நா. சபை யூத நாடு பாலஸ்தீனம் என இரு நாடுகளை உருவாக்கியது. அப்படியே உருவான யூத நாட்டை குழந்தையை தொட்டிலிலேயே கொல்வது போன்ற குரூரத்துடன் முயன்ற அரேபியன்களை மலத்தில் தோய்த்த செருப்பால் மாறி மாறி அடித்தனர் இஸ்ரவேலர்கள்.

ஒன்று நிச்சயம். மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்ற நிலை வரவேண்டுமானால் நீங்கள் முதலில் உங்கள் தேவை என்னவென்று என உணர்ந்து, அதற்கான முழுமுயற்சியில் விடாமல் ஈடுபடவேண்டும். ஒரு போதும் அதைரியப்படக் கூடாது. அவ்வளவுதான் விஷயம்.

இதை ரோமா இனத்தவரும், நம் நாட்டில் தலித்துகளும் புரிந்து போராட முயல வேண்டும். அப்புறமும் பல கடினமான பரீட்சைகள் அவர்களுக்கு முன்னால் உள்ளன. ஆனால் முயல வேண்டும் என்ற எண்ணமே வராது முடங்கினால் எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/02/2010

இஸ்ரேலிய சிங்கங்களான மொசாத்தின் தீரச்செயலை பாராட்டுகிறேன்

உண்மைதமிழனுக்கு மிக்க நன்றி, ஒரு சந்தோஷமான செய்தியை அளித்ததற்காக. அது பழைய செய்தியாக லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளதில் மகிழ்ச்சியே.

உடனே இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தவே அவரது பதிவை இங்கு போட்டு பத்தி பத்தியாக எனது கமெண்டுகளை எழுதுகிறேன். ஓகேயா எல்.கே?

எதிராளியைவிட ஒரு மணி நேரமாவது கூடுதலாகச் சிந்தித்தால்தான் அவனை வெல்ல முடியும் என்பது போர்த் தந்திரங்களில் ஒன்று. உலகம் முழுவதும் இதனை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளோ, போராளி இயக்கங்களோ பின்பற்றுகின்றனவோ.. இல்லையோ.. யூத தேசமான இஸ்ரேல் மட்டுமே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகின்றது.
100 % உண்மை

தான் தூங்கினால் பாலஸ்தீனம் முழித்துக் கொள்ளும் என்பதில் இன்றைக்கும் தெளிவான சிந்தினையுடன் ஆட்சி நடத்தி வருகிறார்கள் இஸ்ரேலியர்கள். மத்திய கிழக்காசியாவில் தனிப்பெரும்பான்மையுடன் அமெரிக்காவைப் போல் சர்வாதிகாரத்துடனும், சகல செல்வாக்குடனும் இருந்து வந்தாலும், ஒவ்வொரு நொடியையும் தனது பாலஸ்தீன எதிர்ப்பிலும், தனது நாட்டின் பாதுகாப்பு பற்றிய கண்காணிப்பிலும் உறுதியுடனேயே இருக்கிறது இஸ்ரேல்.
நம் அரசு இந்த விஷயத்தில் சொதப்புவதை பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறதே

தனது எதிரிகளை அழித்தொழிக்க தான் உருவாக்கிய மொஸாத் என்னும் கூலிப் படையினர் மாதந்தோறும் இத்தனை பாலஸ்தீன விடுதலை விரும்பிகளை அழித்தொழிக்க வேண்டும் என்பதை கட்டளையாகவே மேற்கொண்டு வருகின்றனர்.
கூலிப்படைக்கு பொருள் தெரியாமல் உண்மை தமிழன் பேசுகிறார். மொசாத் தேசபக்த அமைப்பு. மஸாடா மறுபடியும் விழலாகாது என்பதை பிரதிக்ஞை எடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாது, அதை ஒவ்வொரு மூச்சிலும் பிரதிபலிப்பவர்கள் கூலிப்படை என்பதை எவ்வாறு ஒப்புக்கொள்ள இயலும்?

பாலஸ்தீனப் பிரச்சினைகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோதெல்லாம் அப்பாவிகள் இருக்கின்றார்களே என்ற ஒரு சின்ன தயக்கம்கூட இல்லாமல் ஒரு தீவிரவாதிக்காகவே கட்டிடம் முழுவதையுமே ராக்கெட் தாக்குதலில் சிதைக்கும் அளவுக்கு கொடூர மனம் கொண்டது இஸ்ரேல். அதனால்தான் இன்றுவரையிலும் இத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்தும் தாக்குப் பிடித்து வருகிறது.
என்னவோ பாலஸ்தீன கொலையாளி மயிராண்டிகள் அப்பாவிகளுக்காக வருந்துவது போல பேசுகிறீர்களே உண்மை தமிழன்? இது யுத்தம், அப்படித்தான் இருக்கும்.

பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் ஒவ்வொன்றின் வரலாறும், அந்த இயக்கத்தினருக்கே தெரிகிறதோ இல்லையோ.. மொஸாத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் நன்கு தெரிந்துவிடுகிறது.
நல்ல விஷயம்தானே. உளவுப்படையின் கடமையே அதுதானே. நம்ம RAW ஆட்களை வைத்து மத்தவங்களை எடைபோடாதீர்கள்.

விடுதலை இயக்கங்களின் தொண்டர்களையெல்லாம் விட்டுவிட்டு கமாண்டர்கள் என்றழைக்கப்படும் தளபதிகளை குறி வைத்துத் தாக்கியழிப்பதும் மொஸாத்தின் அன்றாடப் பணிகளில் ஒன்று. இதனால்தான் தங்களது இயக்கங்களின் தளபதிகளுக்கு நான்கைந்து பெயர்களைச் சூட்டி அவர்களை மறைமுகமாகக் காத்து வருகிறார்கள். அந்த இயக்கத்தினர் ஆனாலும் மொஸாத்தின் ஆழ ஊடுறுவும் வேவு தந்திரத்தின் முன்னால் இது அத்தனையையும் அவ்வப்போது தோற்றுப் போகிறது.
மனதுக்கே நிறைவாக உள்ளது.

ஆனானப்பட்ட சி.ஐ.ஏ.வுக்கே தண்ணி காட்டக்கூடிய அளவுக்கு செல்வாக்கும், அறிவுத் திமிரும் படைத்த இந்த யூதக் கொலையாளிகள் இந்த ஆண்டின் துவக்கத்தில் துபாய் நாட்டில் நடத்திய ஒரு அட்டகாசமான, திரில்லிங்கான படுகொலையைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
பாலஸ்தீனிய சீனியர் கொலையாளியை கொன்ற மொசாத் வீரர்களின் சாகசம் பாராட்டுக்குரியது.

இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாத் பற்றி கூகிளாண்டவரிடம் விசாரித்துக் கொண்டே வந்தபோது, திடீரென்று இந்த வீடியோ காட்சியும், இது பற்றிய செய்திகளும் கண்ணுக்குப் பட்டது. படிக்கப் படிக்க நேரம் போவதே தெரியாமல் தலையுச்சியில் இருந்து உள்ளங்கால்வரையிலும் மயிர்கூச்செறியும்வகையில் ஒரு திகில் அனுபவம் எனக்குக் கிட்டியது. உங்களில் பலருக்கு இது பற்றி முன்பே தெரிந்திருக்கலாம். சிலருக்குத் தெரிந்திருக்காது. அப்படித் தெரியாதவர்களுக்காக இந்தச் செய்தி.
கூகளில் தேடும் சிரமம் வைக்காது இந்த டோண்டு ராகவனுக்கு அதை அளித்த உங்களுக்கு என் நன்றி. மயிர்கூச்செறியும் வகையில் சாகசம்.

முகமது அல் மாப்ஹா என்பவர் ஹமாஸ் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவர். இவருடைய வயது 49. Izz ad-Din al-Qassam Brigades என்ற ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பாலஸ்தீன அரசுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம்வரையிலான காலக்கட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த பல்வேறு வன்முறை எதிர்ப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டது முகமதுவின் இந்த இயக்கம்தான். இந்த இயக்கத்தின் சார்பாகத்தான் ஜோர்டானில் இருந்து ஆயுதங்களைத் தருவித்து அதன் மூலம் இஸ்ரேலிய ராணுவத்துடன் போர் நடத்தினார் முகமது என்பது இஸ்ரேல் அரசின் குற்றச்சாட்டு.

டெல் அவிவில் நடைபெற்ற பல்வேறு மனித வெடிகுண்டுத் தாக்குதல்களின் சூத்ரதாரியும் இவர்தான் என்பதால் இஸ்ரேல் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கிறார். இந்த காரணங்களுக்காகவே மிக நீண்ட நாட்களாக மொஸாத் படையினராலும், இஸ்ரேலிய அரசாலும் கொல்லப்படுவதற்காகவே தேடப்பட்டு வந்தவர்.
தேடத்தானே வேண்டும்? மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டாமா? கசாப்புக்கு பிரியாணி போட்டு அவனை பாதுகாப்பது போல மொசாதும் இந்தக் கொலையாளியை செல்லம் கொஞ்ச வேண்டுமா?

பாலஸ்தீனத்தில் இருந்தால் தான் எப்படியும் கொல்லப்படுவோம் என்பதால் ஹமாஸ் இயக்கத்தினர் இவரை சிரியா தலைநகரமான டமாஸ்கஸில் இவரைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார்கள்.

டமாஸ்கஸிலும் இவரைக் கொல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் வருத்தத்தில் இருந்த மொஸாத் படையினருக்கு முகமது, துபாய்க்கு வரவிருக்கிறார் என்ற செய்தி ஒரு வாய்ப்பாகிவிட்டது.

தனது நீண்ட நாள் கனவு பலிக்கப் போகிறதே என்ற சந்தோஷத்தோடு முகமதுவை கொலை செய்ய பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து தனது ஏஜெண்டுகளை துபாய்க்கு அனுப்பி வைத்தது மொஸாத்.

இத்தனை ஆண்டு கால போராட்ட வரலாற்றில் ஒரு சின்ன சறுக்கலை முகமது செய்ததுதான் அவரது கொலைக்கு அவரே ரத்தினக் கம்பளம் விரித்தது போலாகிவிட்டது என்கிறார் ஹமாஸ் இயக்கத்தின் டமாஸ்கஸ் பிரிவின் வழக்கறிஞர்.

விமான டிக்கெட்டை டமாஸ்கஸில் இருந்து ஆன்லைனில் பதிவு செய்தது. அதிலேயும் தனது சொந்தப் பெயரில் இருந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தியது. அதன் பின்பு இப்போதும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருக்கும் தனது குடும்பத்தினருக்கு போன் செய்து தான் துபாய்க்கு செல்லும் தகவலையும், தங்கப் போகும் ஹோட்டலின் பெயரையும் சேர்த்து சொன்னது என்று பலவும் சேர்ந்து முகமதுவை வீழ்த்திவிட்டது என்கிறார்கள் ஹமாஸ் இயக்கத் தோழர்கள்.

இந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதியன்று டமாஸ்கஸில் இருந்து பாங்காங் வழியாகத் துபாய் வந்து சேர்ந்தார் முகமது. துபாய் ஏர்போர்ட் அருகேயிருக்கும் பஸ்டன் ரொட்டனா என்ற ஹோட்டலில் 230-வது எண் அறையில் தங்கினார் முகமது.

அவரைப் பின் தொடர்ந்து வந்த சில மொஸாத்துக்களும் அதே ஹோட்டலில்தான் முகமது தங்கியிருந்த அறையின் எதிர் அறையில்தான் தங்கியுள்ளனர். மற்ற ஏஜெண்டுகள் நகரின் பல்வேறு ஹோட்டல்களில் தனித்தனிப் பிரிவாகத் தங்கியவர்கள், ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து பேசியுள்ளனர்.

முகமது மட்டுமே தனியே வந்திருக்கும் தகவலை உறுதி செய்து கொண்டு இரவு 8.20 மணியளவில் ஹோட்டலுக்குள் 4 மொஸாத் ஏஜெண்ட்டுகள் மட்டுமே நுழைந்து முகமதுவை சப்தமில்லாமல் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார்கள்.

ஏதோ Ken Follet நாவல் படிப்பது போல இருக்கிறதே.

அந்தக் கொலைக்காரக் மொஸாத் கூலிப் படையினர் சென்று வந்த இடங்களில் இருந்த CCTV-யில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து முகமதுவை அவர்கள் படுகொலை செய்ய போட்டிருந்த திட்டத்தை துபாய் போலீஸார் பட்டவர்த்தனமாக்கியுள்ளனர்.

அதன் வீடியோ காட்சிகள்தான் இரண்டு பாகங்களாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தயவு செய்து நேரத்தைக் கணக்கில் எடுக்காமல் முழுவதையும் பாருங்கள். யூதர்களின் மூளைத் திறன் எப்பேர்ப்பட்டது என்பதை இந்த வீடியோவைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

வீடியோக்களுக்கு நன்றி. நானும் அவற்றை யூ ட்யூப்பிலிருந்தே எம்பெட் செய்து தருகிறேன். மொசாத்தா கொக்கா?





எப்போதும் பாதுகாவலர்கள் படை சூழ இருந்து வரும் முகமது இந்த முறை தனியே பயணப்பட வேண்டியதாகிவிட்டது. அன்றைக்கு பார்த்து அவர் புக் செய்த விமானத்தில், பாதுகாவலர்களுக்கு டிக்கெட் கிடைக்காததால் அவர்களை அடுத்த நாள் விமானத்தில் வரும்படி சொல்லியிருக்கிறார். இதுவும் மொஸாத்துக்குத் தெரிந்துவிட அதற்கு முன்பாகவே முந்திக் கொள்ள நினைத்து, முகமது வந்து சேர்ந்த அன்றைக்கே ஆறரை மணி நேர இடைவெளியில் அவரைக் கொலை செய்திருக்கிறார்கள்.

இந்த டிவி காட்சிகளின் தொகுப்பை வெளியிட்ட துபாய் போலீஸின் தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் டாகி கஃப்லன் தமீம் இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட மொஸாத் ஏஜெண்டுகள் என்று 11 பேரை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற Michael Lawrence Barney, James Leonard Clarke, Jonathan Louis Graham, Paul John Keeley and Stephen Daniel Hodes; அயர்லாந்தில் குடியுரிமை பெற்ற Gail Folliard, Evan Dennings and Kevin Daveron பிரான்சு நாட்டைச் சேர்ந்த Peter Elvinger, மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த Michael Bodenheimer. இவர்கள்தான் அந்த தேடப்படும் மொஸாத் ஏஜெண்டுகள்.

பல்வேறு நாடுகளில் இருந்து கிளம்பி சுவிட்சர்லாந்தில் ஒன்று சேர்ந்து தனி விமானம் மூலம் துபாய்க்குள் கால் வைத்த இந்த மொஸாத் ஏஜெண்டுகளில் சிலர் டூரிஸ்ட்டுகள் போலவும், சிலர் விளையாட்டுப் போட்டியைக் காண வந்தது போலவும் காட்சியளித்துள்ளனர். துபாயில் அவர்கள் தங்களது தலைக்கு விக்கை பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

முகமதுவின் அறைக்கதவின் லாக், எலெக்ட்ரானிக் புரோகிராமிங் செய்யப்பட்ட ஒன்றாம். அந்த புரோகிராமையே உடைத்தெறிந்துவிட்டு அறைக்குள் நுழைந்த 4 மொஸாத்துகள் முகமதுவைச் சித்ரவதைப்படுத்தியும், இறுதியில் விஷம் கொடுத்தும் கொலை செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. பின்பு, கதவை உட்பக்கமாக முகமதுவே தாளிட்டிருப்பதுபோல் அதில் ரீபுரோகிராம் செய்துவிட்டுத்தான் தப்பியோடியிருக்கிறார்கள். என்ன கில்லாடித்தனம்..?

துபாய் அரசு இந்த படுகொலைக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தனது கெடுபிடியை இறுக்கமாக்கியிருக்கிறது. முன்பெல்லாம் அரபு குடியரசு நாடுகள் பாலஸ்தீனர்கள் என்றால் கொஞ்சம் கருணையுடன் நடந்து கொள்ளும் என்பதால்தான் இந்த நாடுகளுக்கு மட்டும் தைரியமாக வந்து செல்வார்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தளபதிகள். இதனை உடைத்தெறிந்திருக்கிறது சர்வ வல்லமை பொருந்திய மொஸாத்..

ஏற்கெனவே உலகம் முழுவதும் இருக்கும் மொஸாத் ஏஜெண்டுகளின் போலி பாஸ்போர்ட்டுகளை பல்வேறு நாடுகளும் அடையாளம் கண்டு அவற்றை தடை செய்துள்ளன. இந்த முறை இந்த ஏஜெண்ட்டுகள் வந்த அனைத்து ஐரோப்பிய நாடுகளுமே போலியான புகைப்படம் ஒட்டிய பாஸ்போர்ட்டுகளுக்கு அனுமதியளித்துள்ளார்கள். இது பற்றி அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட நாடுகள் முகமதுவின் படுகொலை பற்றி விசாரணை செய்து போலியாக பாஸ்போர்ட் வழங்கியமைக்காக சில அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படுகொலை வழக்கில் போலி பாஸ்போர்ட் வழங்க உதவியதற்காக ஆஸ்திரேலிய அரசு, தனது நாட்டுக்கான இஸ்ரேலிய தூதரை வெளியேற்றியது.

இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஒருவரை மட்டுமே போலந்து தலைநகர் வார்சாவில் அந்நாட்டு போலீஸ் கைது செய்துள்ளது. அவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இதில் இன்னொரு திருப்பமாக ஹமாஸ் அமைப்பின் விரோதியாகச் செயல்படும் எகிப்து நாட்டைச் சேர்ந்த பாத் அமைப்பின் இரண்டு உறுப்பினர்கள்தான் துபாய் வந்திருந்த மொஸாத் ஏஜெண்டுகளுக்கு மறைமுகமாக உதவிகள் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனராம்.

மேலும் இந்தப் படுகொலையின் பின்னால் நிச்சயமாக மொஸாத் இருக்கிறது என்று துபாய் அரசு சொன்னாலும் இன்றுவரை இஸ்ரேல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கும், இதற்கும் யாதொரு ஸ்நானப் பிராப்தமும் இல்லை என்றே சொல்லி வருகிறது. ஆனாலும் துபாய் அரசு மொஸாத்தின் தலைமை இயக்குநரை கைது செய்து தரும்படி சர்வதேச போலீஸாரிடம் ரெட் அலர்ட்டை கொடுத்துவிட்டது கூடுதல் சுவாரஸ்யமான விஷயம்.


இந்த வீரச்செயல் பற்றி பற்றிய முழு விவரமும் அறிய இங்கே சென்று படிக்கவும்.

ஆறின கஞ்சி பழங்கஞ்சி என விடாது பதிவு போட்ட முருக பக்தருக்கு நன்றி. நம்மவர் இஸ்ரேலவர்களிடமிருந்து கற்க வேண்டியது நிறைய உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/08/2010

இஸ்ரேல் - ஹிட்லரின் தீர்க்கதரிசனம் என ஒரு இசுலாமியரின் புலம்பல்கள்

பதிவர் மஸ்தானின் இந்த இடுகையைப் பார்த்ததும் இந்த டோண்டு ராகவனால் சும்மா இருக்க இயலவில்லை. ஆகவேதான் இப்பதிவு.

அவர் உளறியதிலிருந்து சில வரிகள்.

இஸ்ரேல்... ஹிட்லரின் தீர்க்கதரிசனம்
Posted by ..:: Mãstän ::.. நாள் Friday, August 06, 2010
Aug 6,
சிலரை உயிரோடு விட்டுள்ளேன், அவர்கள் மீது இரக்கபட்டு அல்ல, அந்த இனம் எப்படி பட்டது என்பதை உலகம் அறியவேண்டும். --ஹிட்லர்.

இந்த படங்களை பாருங்களேன், மிகவும் வருத்தமாய் இருக்கும் இதையெல்லாம் பார்க்க, ஏன்தான் இப்படி நடக்கிறதோ??? ஹிட்லர் சொன்னது உண்மைதான் போல், ஈவு இரக்கம் இல்லாமல் இப்படியும் செய்வார்களா”?

பிறகு சில படங்கள்.

என்ன செய்வது மஸ்தான் அவர்களே, யுத்தம் என்றால் அப்படித்தான் இருக்கும். தங்கள் தேசத்தையே அழிக்க வேண்டுமென சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் இஸ்ரேல் வேறு எப்படி நடந்து கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? இந்த அழகில் ஹிட்லர் சிலரை விட்டுவைத்தானாம். அந்த இழிபிறவியை தீர்க்கதரிசி என்று சொல்ல ஒரு கொடூரமான மைண்ட்செட் தேவைப்படுகிறது. அது பல இசுலாமியரிடம் தாராளமாகவே உள்ளது. செத்தது ஒன்றே அவன் இவ்வுலகுக்கு செய்த நல்ல காரியம்.

அறுபதுகளின் ஆரம்பத்தில் ஐஷ்மேனை அர்ஜன்டைனாவிலிருந்து சிறையெடுத்து வந்தனர் இஸ்ரவேலர்கள். பென் குரியன் இதை அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தப் போது உறுப்பினர்கள் மேஜைகளைத் தாட்டித் தங்கள் களிப்பை வெளிப்படுத்தினர்.

அது சம்பந்தப்பட்டச் செய்திகளை நான் தினமும் கவனமாகப் படித்தேன். எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் என்னவென்றால் பேசாமல் அவனைப் போட்டுத் தள்ளியிருந்தால் பணம் மிச்சமாக இருந்திருக்குமே என்பதுதான். ஆனால் இஸ்ரவேலர்கள் வேறு மாதிரி நினைத்தனர். அவன் மேல் வழக்குத் தொடுத்தனர். அவனுக்காக வக்கீலும் வைத்துக் கொடுத்தனர். அவரும் தர்ம வக்கீல் போலன்றி அவனுக்காக உண்மையுடன் வாதாடினார். விவரங்கள் வெளி வரத் தொடங்கின. அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது. நாஜிகள் எவ்வளவுக் கீழ்த்தரமானவர்கள் என்றுப் புரிந்தது.

அறுபது லட்சம் பேரைக் கொலை செய்வது என்பது இது வரை சரித்திரத்தில் நடக்காதது. அதைச் செய்ய இந்த மனிதன் அரசு எந்திரத்தைப் பயன் படுத்தியிருக்கிறான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது எல்லாத் தளவாடங்களும் பற்றக்குறையில் இருக்க, யூதர்களை சித்திரவதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் வேலைக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டது.

வழக்கு நடந்தக் காலத்தில் ஜெர்மனியிலும் சரி, இஸ்ரேலிலும் சரி தலைமுறை விரிசல்கள் அதிகமாயின. "நீங்கள் இவ்வளவுக் கொடூரமானவர்களா" என்று ஜெர்மானிய இளைய சமுதாயம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டனர். அவர்கள் அவமானத்தில் தலை குனிந்தனர். "நீங்கள் இவ்வளவு முட்டாள்தனமாக நடந்து நம்மவர்களில் அறுபது லட்சம் பேரை பலி கொடுத்தீர்களா" என்று இஸ்ரேலிய இளைய சமுதாயம் சீறலுடன் கேட்க, அவர்தம் பெற்றோர்கள் அவமானத்தால் தலை குனிந்தனர். அதனால்தான் 1967 யுத்தத்தின் போது அரபு தேசங்கள் தாங்கள் யூதர்களை எப்படியெல்லாம் அழிக்கப் போகிறோம் என்றுக் கூறியதை இஸ்ரவேலர்கள் யாரும் வெற்று மிரட்டலாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டினர்.

அதுதான் இன்னும் தொடர்கிறது. இசுலாமியர் தரும் பயமுறுத்தல்களை சீரியசாக எடுத்துக் கொள்வது இஸ்ரேலைப் பொருத்தவரை காலத்தின் கட்டாயமே.

இசுலாமியர்கள் இன்னொன்றையும் சௌகரியமாக மறைக்கின்றனர். அதாவது பாலஸ்தீனியருக்கு அளிக்கப்பட்ட நாட்டை அவர்கள் அனுபவிக்க முடியாத வண்ணம் செய்தவர்கள் சக இஸ்லாமியரான எகிப்தியர்கள் மற்றும் ஜோர்டானியரே.

இப்படித்தான் 1948-ல் முறையான ஐ.நா. வாக்கெடுப்பில் பாலஸ்தீனப் பிரிவினை ஏற்பட்டது. அன்றிலிருந்து யுத்தம்தான். அப்போதுதான் பிறந்தக் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொல்ல சுற்றியிருந்த அரபு நாடுகள் தாக்கின. அதையும் எதிர்க்கொண்டது இஸ்ரேல். அந்த யுத்தத்தில் யூதர்களை ஒட்டு மொத்தமாகக் கொல்ல ஏதுவாக பாலஸ்தீனர்களை தங்கள் வீடுகளைக் காலி செய்து விலகிப் போகுமாறுக் கூறினர் அரபு நாட்டவர்கள். அவ்வாறு சென்றவர்கள்தான் பாலஸ்தீன அகதிகள். தங்கள் போராட்டத்தைத் தாங்களே நடத்திக் கொள்ளாமல் மற்றவர்கள் தோளில் சவாரி செய்த சோம்பேறி பாலஸ்தீனியர்கள் அந்த வழக்கத்தை விடவே இல்லை. அதுதான் அவர்கள் பிரச்சினை.

யூதர்களுக்கும் அவர்களை இவ்வளவு ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்திருப்பவர்களுக்கும் எதில் கருத்து வேறுபாடு? மற்றவர்கள் யூதர்கள் இறக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அவர்கள் அவ்வாறு இறக்க விரும்பவில்லை.

ஜூலை 31, 1971. ஜோர்டான் நதியின் இக்கரையில் காவல் காத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்குத் தங்கள் கண்களை நம்பவே இயலவில்லை. என்ன நடந்தது? ஜோர்டான் பக்கக் கரையிலிருந்து சிலரை ஜோர்டான் படையினரைத் துரத்தி வந்தனர். யார் அந்தச் சிலர்? அவர்கள் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். துரத்தப்பட்டவர்கள் நேராக ஜோர்டான் நதிக் கரையில் குதித்து இஸ்ரேல் தரப்பை நோக்கி நீந்த ஆரம்பித்தனர். இக்கரைக்கு வந்து இஸ்ரவேலர்களிடம் தஞ்சம் புகுந்தனர். பிறகு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர்கள் கூறினார்கள்: "இஸ்ரவேலர்கள் எங்களைக் கைதுதான் செய்வார்கள். ஆனால் ஜோர்தானியர்கள் கொன்று விடுவார்கள்" இந்த விஷ்யத்தில் பாலஸ்தீனியத் தலைமை மிகவும் அவமானப்பட்டது. இந்தச் செய்தி இங்கும் சகவலைப்பதிவாளர்கள் பலருக்குப் புதிதாக இருக்கும்.

ஆகவே மஸ்தான் அவர்களே, உங்கள் புலம்பல்களை தொடரவும். ரெடி ஜூட், ஸ்டார்ட் மியூஜிக் ஒன், டூ, த்ரீ....

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/10/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் 10.07.2009

டோண்டு பதில்கள்
டோண்டு பதில்களை நான் விளையாட்டாக ஆரம்பித்தேன். விளையாட்டாகவே ஜஸ்ட் லைக் தட் ஒரு அனானி (நிச்சயம் எனது நலத்தை விரும்பும் இனிய நண்பரே என்பதில் ஐயமில்லை) கேள்வி பதில்கள் பதிவு வரிசை ஒன்றை ஆரம்பிக்கலாமே எனக்கூறி, போணி செய்ய சில கேள்விகளை கேட்டு வைக்க, நானும் தமாஷாக ஆரம்பித்து வைக்க விளையாட்டு போல 16 மாதங்கள் சென்று விட்டன.

தானே கேள்வி தானே பதில் நிபுணர்கள் கெக்கலி காட்ட, இந்த பதிவு வரிசை நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே நான் சில முடிவுகள் எடுத்தேன். அதாவது ஒவ்வொரு முறையும் கையில் கேள்விகள் ஏதும் மிச்சம் வைக்கக் கூடாது. அடுத்த வாரத்துக்கு என சேமித்து வைக்கக் கூடாது. Zero budgetting என ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஒவ்வொரு நிதியாண்டுக்கும் ஒரு குறிப்பிட்ட ப்ராஜக்ட் தனது அவசியத்தை நிரூபிக்க வேண்டும். ஆரம்பித்தாயிற்றே நடத்த வேண்டுமே என நினைப்பது சூதாட்ட விடுதியில் போட்ட காசை எடுக்கும் முயற்சியில் தொடர்ந்து சூதாடுவதைப் போன்றது. அதை தவிர்க்க வேண்டும் என்ற முடிவால்தான் நான் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன். அவ்வாறு செய்ததில் இந்த 16 மாதங்களில் ஒரே ஒரு முறை பதிலளிக்க கேள்விகளே இல்லாமல் போயிற்று. அப்போதைய பதிவும் இல்லை. சில முறைகள் விரல் விட்டு என்ணக் கூடிய அளவிலேயே கேள்விகள் வந்தன. அதற்காகவும் கவலைப்படவில்லை.

நமது உற்சாகத்துக்காக எழுதுகிறோம். இதில் என்ன கொலைவெறி வேண்டிக் கிடக்கிறது. கேள்விகள் வந்தால் பதிவு, இல்லாவிட்டால் இல்லை. ரொம்ப சிம்பிள். எழுத்தாளர் நண்பர் பாரா அவர்கள் ஒரு சேட்டில் கேள்விகளை தெரிவு செய்து கேடகரைஸ் எல்லாம் செய்ய ஆலோசனை கூறினார். மிகவும் நல்ல யோசனை, ஆனால் எனது அமைவுகளுக்கு அதை செய்ய இயலவில்லை. மேலே சொன்னதைத்தான் அவருக்கும் கூறினேன். நேற்றைய பதிவு சற்றே அதிக நீளமாக போய் விட்டது. காப்பி செய்து வேர்ட் பக்கத்தில் ஒட்டினால் 20 பக்கங்களுக்கு மேல் வந்தது. 4000 வார்த்தைகளுக்கும் மேல். எனது தமிழ் படிக்கும் வேகத்துக்கு வெறும் வாசிப்பே 10 நிமிடங்கள் எடுக்கும். ஆகவே கேள்விகளை லிமிட் செய்யுமாறு பல நண்பர்களின் ஆலோசனைகள் வருகின்றன. பார்ப்போம்.


அனுகூல சத்ருக்கள்
ஸ்ரீலங்கா தமிழர்கள் நிலை மிகவும் டெலிகேட்டாக இருக்கிறது. ஸ்ரீலங்கா அரசை ராஜரீக முறையில் இந்தியா நிர்ப்பந்திக்கும் நேரம் இது. இப்போது போய் புலிகள் இன்னும் யுத்தம் செய்யப்போவதாக கிளப்பப்படும் செய்திகளை பரப்புபவர்கள் பொறுப்பற்ற முறையிலேயே செயல்படுகின்றனர். கரும்புலிகள் இலங்கையில் பல பகுதிகளில் ஊடுருவியுள்ளனர் என்ற வதந்திகள் ஸ்ரீலங்கா அரசுக்குத்தான் சாதகமாகப் போகும் என்பதை மறக்கலாகாது. இதுதான் சாக்கு என தமிழர்களை கேம்புகளில் வைக்கும் நிலை நீடிப்பதுதான் நடக்கும் என அஞ்ச வேண்டியுள்ளது. சமாதான முயற்சிகளை தொடர்வது மிகக் கடினமான காரியம்தான். இருந்தாலும் வேறு வழியில்லை. வீராப்பு பேச்சுகளை குறைத்தல் நலம்.

ஃபிரெஞ்சு எழுத்தாளர் Marek Halter
மாரெக் ஹால்டெர் 1936-ல் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். ஹிட்லரின் படைகளிடமிருந்து தப்பிக்க அவரது குடும்பம் பல ஊர்களுக்கு குடிபெயர்ந்து கடைசியில் ஃபிரான்சில் வசிக்கலாயிற்று. அவரது La Mémoire d'Abraham என்னும் புத்தகத்தை நான் யதேச்சையாக தில்லியில் உள்ள அல்லியான்ஸ் ஃபிரான்சேஸ் நூலகத்தில் பார்த்தேன். படித்து பிரமித்தேன். அது ஒரு குடும்பத்தின் கதை. கி.பி. 70-ல் இஸ்ரேலில் ஆரம்பித்து 1936-ல் போலந்தில் முடிகிறது. அக்குடும்பத்தில் ஒரு பழக்கம். முக்கிய நிகழ்ச்சிகளை டயரி ரூபத்தில் எழுதி வருவார்கள். அந்த டயரி 1800 ஆண்டுகளுக்கு மேல் தலைமுறை தலைமுறையாய் கைமாறி வந்துள்ளது. கி.பி. 70-ல் யூதர்கள் இஸ்ரேலிலிருந்து துரத்தப்பட்டு பல நாடுகளில் நாடற்றவர்களாக அலைந்து வந்துள்ளனர். சில நாடுகளில் சில காலம் இருக்க வேண்டியது, பிறகு அங்கிருந்து துரத்தப்பட வேண்டியது என்றே அவர்கள் காலம் கழிந்தது. நடுநடுவே அவ்வப்போது நடக்கும் படுகொலைகள் வேறு. அவற்றுக்கு pogroms என தனிப்பெயரே சூட்டியிருந்தார்கள்.

போராட்டங்கள், சிறு சந்தோஷங்கள் என்றெல்லாம் காலம் கழிந்துள்ளது. கடைசியில் மாரெக் ஹால்டெரின் தாத்தா போலந்தில் வார்சா கெட்டோ போரில் இறக்கும் வரை கதை தொடர்ந்தது. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு ஒரு குடும்பத்தின் போராட்டங்களை பார்த்து நிகழ்காலத்துக்கு வந்து சேரும் அனுபவத்தை அப்புத்தகத்தை படித்தால்தான் தெரிந்து கொள்ள இயலும். அடுத்த ஆண்டு பிழைத்து கிடந்தால் யெருசலத்தில் சந்திப்போம் என்றுதான் ஒருவருக்கொருவரிடமிருந்து விடை பெறும்போது அவர்கள் கூறிக் கொள்வார்கள். கடைசியில் 1948-ல் இஸ்ரேல் உருவானது சரித்திரத்தின் ஒரு மகத்தான தருணமே.

விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டு இஸ்ரவேலர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/04/2009

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி ஜெயித்திருக்கலாம் ...

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி ஜெயித்திருக்கலாம், ஒன்று மட்டும் செய்யாதிருந்தால். அது என்ன அந்த ஒன்று? அதற்கு பிறகு வருகிறேன்.

ஜியோனிசத்தின் தந்தை என அழைக்கப்படும் தியோடர் ஹெர்ட்ஸல் எழுதிய Der Judenstaat (யூத நாடு) புத்தகத்துக்கு முதலில் யூதர்களிடமே அதிக வரவேற்பு இல்லை. அப்போதைய யூத பொது புத்தி எப்படியிருந்ததென்றால், தத்தம் நாடுகளிலேயே நிலைத்து இருந்து மற்ற மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து நாட்டின் நலத்துக்காக பாடுபடுவது. ஆனால் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் போராடியும் அவர்களுக்கு இந்த ஆதர்சநிலை கிட்டவில்லை என்பது கசப்பான சரித்திர உண்மை.

இப்போது ஜெர்மனிக்கே வருவோம். முதல் உலக மகாயுத்தத்தில் ஜெர்மானிய யூதர்கள் ஜெர்மனிக்காக அபாரமாக பணி புரிந்தனர். பல கண்டுபிடிப்புகள் ஜெர்மனியின் யுத்த முயற்சிக்கு ஆதரவாக இருந்தன. ஆனால் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் என்னவாயிற்று? யூதர்கள் விரும்பினாலும் அவர்கள் பங்களிப்பை ஏற்கும் மனநிலையில் ஜெர்மனி இல்லை. ஏன், 1939-ல் யுத்தம் ஆரம்பிக்கும் முன்னாலேயே நாஜிகளின் முதல் ஆறாண்டு கால ஆட்சியில் யூதர்கள் பொது வாழ்க்கையிலிருந்து நீக்கப்பட்டு வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இதில் யூதர்கள் இழப்பு மிக அதிகமே என்றாலும், ஒரு மாறுதலுக்கு ஜெர்மனியின் இழப்புகளைப் பார்ப்போம். முதற்கண் யூத விஞ்ஞானிகளின் பங்களிப்பு இல்லை. இரண்டாவதாக யூத தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் இல்லை. யூத மத்திய வர்க்கத்தினர் இல்லை. பல யூத விஞ்ஞானிகள் வெளி நாடுகளுக்கு குடிபெயர்ந்து அந்த நாடுகளின் ஜெர்மனிக்கு விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த அழகில் எல்லாமே பற்றாக்குறையாக, முக்கியமாக ரயில் போக்குவரத்து சாதனங்கள், இருந்தபோது, யூதர்களை வதைமுகாம்களுக்கு கொண்டு செல்லும் ரயில்வண்டிகளுக்கே முன்னுரிமை கொடுத்ததில் ஜெர்மனியின் சீரழிவு இன்னும் வேகப்படுத்தப்பட்டது. எல்லாமே ஒரு பைத்தியக்கார தலைவனின் ஆசைக்கு உட்பட்டு நடந்தன. கடைசியில் சாகும் தருவாயில் ஹிட்லர் எழுதிய உயிலில் கூட தனது யூத வெறுப்பை கக்கிவிட்டுத்தான் செத்தான்.

யூதர்கள் இம்மாதிரி ஒடுக்கபடாமல் இருந்திருந்தால் ஜெர்மனி இந்த யுத்தத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்றிருந்திருக்கும். இஸ்ரேலும் உருவாகியிருக்காது. நரகத்தில் இதற்காகவே எண்ணெய் கொப்பரையில் உட்கார்ந்து கொண்டு ஹிட்லர் மனம் புழுங்கி கொண்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எல்லோரையும் அணைத்து செல்வதே புத்திசாலித்தனம். ஒரு பிரச்சினையை தீர்க்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆதரவு திரட்டுவது புத்திசாலித்தனம். அதன்றி சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அந்த பிரச்சினையை தீர்ப்பதில் உதவக்கூடிய சிலரை தாக்கினால் அவர்களுக்கு என்னவாயிற்று? போடா ஜாட்டான் என போய்விடுவார்கள்.

உதவுவதற்கு தோதான மனநிலையில் இருக்கும் நாட்டின் தலைவனை போட்டு தள்ளுவதும் நான் சொன்னதற்கு இன்னொரு உதாரணம். பிறகு எந்த முகத்தை வைத்து கொண்டு அந்த நாட்டினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/26/2007

ஞாநிக்கும் அப்பால்

தனது பார்ப்பன வேர்களை மறுத்து இயங்கிவரும் ஞாநியைக் கூட விட்டுவைக்காமல் அவர் தங்களது புனித பிம்பத்தை குலைத்தார் என நினைத்த சில அரைகுறை கேசுகள் ஞாநியின் பாப்பார புத்தி, பனியனுக்குள் நெளியும் பூணூல் என்றெல்லாம் பழித்து பதிவிட்ட பல பதிவுகள் பல registered பார்ப்பன விரோதிகளையே நெளியச் செய்து விட்டதைத்தான் பார்க்கிறோம்.

ஆனால் இது பனிக்கட்டியின் (iceberg) வெளியில் தெரியும் பத்தில் ஒரு பாகமே. ஞாநி சொன்னதை நானும் ஒத்துக் கொள்ளவில்லைதான். அதை எனது இப்பதிவிலேயே வெளிப்படையாக எழுதியவன். இது வரை ஞாநி தங்களுக்கு விருப்பமான கருத்தை கூறியபோதெல்லாம் அவர் பார்ப்பனர் என்பதை சௌகரியமாக மறந்து, இப்போது மட்டும் அதை வெளிக்காட்டும் அவலத்தை அதில் குறித்திருந்தேன்.

இந்த அழகில் அவரை கண்ணியமாக கண்டித்த மீட்டிங் என்று ஒரு பதிவு. எது அம்மா கண்ணியம்? ஞாநியின் ஜாதியை இங்கு இழுத்ததுதானா, அல்லது இந்தமட்டில் ஞாநியின் பெண் உறவினர்களை திட்டாமல் விட்டார்களே என்ற உணர்ச்சியா? அதாவது ஒரு தகப்பனிடம் உன் நான்கு பிள்ளைகளில் எவன் நல்ல பிள்ளை எனக்கேட்க அதற்கு அவன் கூரைமேல் நின்று கொண்டு வீட்டுக்கு நெருப்பு வைக்க நினைக்கும் அப்பிள்ளைதான் இருப்பவர்களிலேயே உத்தமமானவன் எனக் கூறுவது போலத்தான் இருக்கிறது இந்த உணர்ச்சி.

இந்த ஞாநி விஷயத்தில் இந்த ஆஸ்பெக்டை இப்பதிவு நன்றாகக் கையாளுகிறது.

ஆனால் இப்போது கூற நினைப்பதே வேறு. தமிழ் இணையத்தில் ஆ ஊ என்றால் திட்டு பார்ப்பனனை என்ற எண்ணப்போக்கு ஒரு வயிற்றுப்போக்கு போல அமைந்து விட்டது விசனிக்கத்தக்கது. தலித்துகள் இரட்டை தம்ளர் முறையா, திட்டு பார்ப்பனர்களை. சம்பந்தப்பட்ட டீக்கடைக்காரர்கள் பார்ப்பனர்கள் இல்லையே என்று தோன்றினால் இருக்கவே இருக்கிறது பார்ப்பனீயம் என்னும் ஜல்லி. கவுண்டனீயம், தேவரீயம், முதலியாரீயம், நாயுடுயிசம் (கீழ்வெண்மணி) என்றெல்லாம் கூறினால் செருப்பால் அடிக்கப்படுவோம் என பயந்து பார்ப்பனீயம் என்று இவர்களாகவே ஒரு டெஃபினிஷன் செய்து விடுவது. பிறகு டிஸ்கி வேறு. உயர்சாதீயம் என்று அதை புரிந்து கொள்ளவேண்டுமாம். அது பார்ப்பனருக்கு எதிரானதாக இல்லையாம். ஏன் ஐயா, உயர்சாதீயம் என்றே போட்டு தொலைப்பதுதானே என்றால், கோசாம்பி என்ற விளங்காத ஒருவர் கொடுத்த டெஃபினஷன் என்ற சுய புத்தியேயில்லாத சமாதானம் வேறு.

இதில் சில socalled முற்போக்கு சிந்தனை பார்ப்பனர்களே ஈடுபடுவதுதான் சோகம். மற்றவர்களுக்கு முன்னால் தாமே சகபார்ப்பனரை திட்டிவிட்டால் தாங்கள் தப்பிக்கலாம் என எண்ணுபவர்கள். பாவம், செருப்படி இவர்களுக்கும் அவர்கள் எதிர்ப்பார்க்காத தருணங்களில் கிடைக்கும் என நம்பாதவர்கள். அப்படியே கிடைத்தாலும் அதை துடைத்துப்போட்டு தங்கள் சுய கௌரவத்தை குலைத்து கொண்டவர்களாகத்தான் அவர்களை நான் பார்த்து பரிதாபப்படுகிறேன். அதனால்தான் ஞாநிக்கு இது தேவையா என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்தினேன்.

ஹிட்லர் காலத்தில் சில யூதர்கள் தங்கள் இனத்தினருக்கு எதிராகவே பேசினர். என்ன, அவர்கள் கடைசியாக உயிர்க்கொல்லும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர், அவ்வளவே. யூதர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேல் அவ்வாறு நடுநிலையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு அறிவு முத்துக்களை தமது இனத்தவருக்கு எதிர்ப்பாகவே உதிர்த்த யூதர்கள் பலரை சரித்திரம் பார்த்துள்ளது. Dobi ka kuththaa, naa ghar kaa, naa gaat kaa (வண்ணனின் நாயை வீட்டிலும் சேர்க்க மாட்டார்கள், வண்ணான் துறையிலும் சேர்க்க மாட்டார்கள் என்பதைக் கூறும் ஹிந்தி சொலவடை இது). நல்ல வேளையாக இஸ்ரேல் உருவாகி இம்மாதிரி அபத்த காட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே என்று எனக்கு ஒரு ஆறுதல்.

ஜோசியத்தில் நம்பிக்கையில்லாத ஒரு பதிவர் தனது தந்தை தனக்காகப் பெண்பார்க்க ஜோசியரை நாட அவர் எங்கோ சொறிந்து கொண்டே இவரது ஜாதகத்துடன் ஒரு பெண்ணின் ஜாதகம் பொருந்தி வருவதாகக் கூற, அதற்கு ஜோசியனை எத்தாலோ அடிக்க வேண்டும் என்று இவர் பதிவுபோட, எய்தவனிருக்க அம்பை நோகலாமோ என்று பொருள் வருமாறு நான் பின்னூட்டமிட, "ஆகா என் தந்தையை அத்தால் அடிக்கச் சொல்லும் உன்னை எத்தால் அடிப்பது" என குற்ற உணர்ச்சியுடன் என்னை ஒருமையில் திட்டினார் அப்பதிவர். இந்த மட்டில் தன் தந்தைக்காக அவரைப் பரிந்து பேசவைத்த எனது நோக்கம் நிறைவேறிய திருப்தியில் நான் வேறுவேலை பார்க்கப் போனேன். இதை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் நம்மவரை நாமே விட்டுக் கொடுப்பது எவ்வளவு அபத்தமானது என்பதை வலியுறுத்தத்தான். அவ்வாறெல்லாம் செய்தால் இப்பதிவு மாதிரி பல பதிவுகளை பார்க்க நேரிடும்.

All lawyers are dishonest, because all the lawyers I have seen are charlatans. இந்த வாக்கியம் தர்க்க சாத்திரப்படி Fallacy of hasty generalization என்ற பிரிவில் வரும் தவறான வாதமாகும். அதைத்தான் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் செய்து வருகின்றனர். அதற்கு இந்த socalled முற்போக்கு சிந்தனை பார்ப்பனர்களும் துணை போவதுதான் பெரிய நகைமுரண். அதை எடுத்து சொன்னால், "என்ன செய்ய வேண்டும்? பிராமண சங்கத்தில் உறுப்பினர் அட்டை வாங்கி இதுவரை செய்ததெல்லாம் தவறு என்று இம்போஸிஷன் எழுத வேண்டுமா"? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் நான் கூறுவது இதுதான். நீங்கள் நுனிமரத்திலிருந்து கொண்டு அடிமரத்தை வெட்டுகிறீர்கள். சொன்னால் புரிந்து கொள்ளாது போனால் நீங்களே விழும்போது புரிந்து கொள்வீர்கள். ஆனால், அப்போதும் திருடனுக்கு தேள் கொட்டியதுபோலத்தான் இருக்க முயலுவீர்கள் என அஞ்சுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/01/2007

வளைகுடா யுத்தமும் இஸ்ரேலும்

ஈராக் குவைத்தை அபகரித்து தனது மாநிலங்களில் ஒன்றாக அதை மாற்றியதால் வந்தது வளைகுடா யுத்தம். கொடுங்கோலன் சதாம் அமெரிக்கா தன்னை தாக்கினால் தனது தாக்குதல் இஸ்ரேல் மீதுதான் என்பதை தெளிவுபடுத்தினான். அதில் ஒரு சூட்சுமம் உள்ளது. இஸ்ரேலை அவன் தாக்கினால் அது ஈராக்கை செருப்பால் அடிக்கும். அதை காரணம் காட்டி மற்ற அரபு தேசத்தினர் அமெரிக்காவுக்கு துணை போக மாட்டார்கள் என்பது அவன் கணக்கு. அதில் விஷயம் இல்லாமல் இல்லை.

மற்ற நாடுகள் (இந்தியா உட்பட, அஹிம்சாவாதம்?) இந்த விஷயத்தில் எப்படியிருந்தாலும் இஸ்ரேலை சீண்டிய அண்டை நாடுகள் உதை வாங்காமல் இருந்ததில்லை. 1976-ல் யூத பயணக் கைதிகளை உகாண்டா எண்டெப்பெ விமான நிலையத்திலிருந்து அது மீட்டு வந்தது தீவிரவாதத்திற்கு எதிராக கொடுத்த பலமான அடியாகும். 1982-ல் லெபனானிலிருந்து தொல்லை கொடுத்த பாலஸ்தீன தீவிரவாதிகளை பெல்ட் அடி கொடுத்து அங்கிருந்து விரட்டியதை யாரால் மறந்திருக்க முடியும்?

ஆக இந்த விஷயத்தில் அமெரிக்கா ஏகத்துக்கு கவலைப்பட்டது. இஸ்ரேலிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அப்படியே ஏதேனும் தாக்குதல்கள் வந்தாலும் எதிர்வினை செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டது. இஸ்ரேலின் பாதுகாப்புக்குக்கு முழுபொறுப்பு ஏற்று கொண்டது. சொன்னதுபோலவே பாதுகாப்பும் பேட்ரியாட் ஏவுகணைகள் ரூபத்தில் கொடுத்தது. சதாமின் கணக்கு பொய்த்தது. இஸ்ரேலை சாக்காக வைத்து அரபு நாடுகளின் ஆதரவை பெற இயலவில்லை. இன்று குவைத் நாளை நாம் என்ற பயத்திலேயே அவை அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்தன. பிறகு நடந்தது எல்லோருக்கும் தெரியும்.

இப்போது இஸ்ரேலுக்கு வருகிறேன். அது எப்போதுமே தனது பாதுகாப்பை தானே பார்த்து கொள்ளும். ஆனாலும் இம்முறை மிக கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டது. ஆனாலும் யுத்தத்தில் மறைமுகமாக பல உதவிகள் செய்தது. உதாரணத்துக்கு:

· அப்பிராந்தியத்திலேயே இஸ்ரேலிய படை மட்டுமே ஈராக்கிய படையை வெற்றிகரமாக சமாளித்திருக்க முடியும். இந்த எண்ணமும் சதாம் மற்ற தேசங்களை ஆக்கிரமிப்பதிலிருந்து தடுத்தது.

· ஈராக்கிய படைகள் ஜோர்டானுக்குள் நுழைந்தால் தனது போர் நடவடிக்கையை தொடங்கும் என்ற எச்சரிக்கையால் ஜோர்டான் தப்பித்தது.

· அமெரிக்கா இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட Have Nap வான் ஏவுகணைகளை தனது B­52 விமானங்களில் பொருத்தி கொண்டது. அமெரிக்க கடற்படையும் இஸ்ரேலின் பயனீயர் விமான ஒட்டி இல்லாத drones வானூர்திகளை வேவு வேலைக்கு பயன்படுத்தியது.

· இஸ்ரேலின் கண்ணிவெடி நீக்கும் கலப்பைகளை உபயோகித்தது அமெரிக்கா.

· இஸ்ரேலின் கணினி தொழில்நுட்பம் அளித்த ஆலோசனையின்படி பேட்ரியாட் ஏவுகணைகளின் மென்பொருளில் தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.

· இஸ்ரேலிய விமான தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்ட எரிபொருள் டேங்குகள் மூலம் F­15 விமானங்களின் வீச்சை அதிகரிக்க முடிந்தது.

· எல்லாவற்றையும் விட முக்கியமாக இஸ்ரேல் 1981-லேயே ஈராக்கின் அணு ஆராய்ச்சி நிலையத்தை அழித்ததால் பத்து ஆண்டுகள் கழித்து அமெரிக்காவும் நேச நாடுகளும் ஈராக்கை தாக்கியபோது அது அணுசக்தி உள்ள நாடாக இல்லை. 1981-ல் இஸ்ரேலை இதற்காக குறை கூறிய பலநாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டன.


இன்னும் கூறிக் கொண்டே போகலாம். தேவையானால் இந்த உரலுக்கு செல்லவும்.

இப்போது பதிவின் கருப்பொருளுக்கு வருகிறேன். நேரடி நடவடிக்கைகளை எடுக்காது அடக்கிவாசிப்பதும் ஒரு போர் யுக்தியே. ஆனால் இதுதான் மிகக்கடினம். என்ன செய்வது, பலன் வேண்டுமானால் அதையும் செய்ய வேண்டும்.

Disclaimer: Any resemblance to events in the Tamil blogging world is purely intentional.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/12/2007

ஆரவாரப் பேய்களெல்லாம் - டோண்டுவின் யோம்கிப்பூர்

கடந்த ஒருவாரமாக மனதில் ஒரு போராட்டம். அது என்ன என்பது தமிழ்மண பக்கங்களை இந்த காலக் கட்டத்தில் பார்த்தவர்களுக்கு புரியும்.நானாக தேடிக் கொண்டதுதான் அது என்பதை முதற்கண் கூறிவிடுகிறேன். திடீரென முரளி மனோஹர் வெளிப்பட்டு விட்டான். நல்ல வேளையாக அவன் தேவை இனிமேல் இல்லை என்ற நிலையெடுத்து எனது வலைப்பூவில் மாறுதல் செய்து கொண்ட அடுத்த நாள். எனக்கு ஆதரவளிக்கவே நான் இந்தப் பதிவில் கொடுத்த ஆலோசனையின்படி வந்த நண்பர்களின் ஆலோசனை பெற்று கொண்டு செய்த முடிவு அது. அதற்கு முன்னால் முரளி மனோஹர் வெளியே வந்திருந்தால் கதை கந்தர கோளமாக ஆகியிருக்கும். நல்ல வேளை.

இப்போது டோண்டு ராகவனது மூன்றாம் யோம் கிப்பூருக்கு செல்லும் முன்னால் சில வார்த்தைகள்.

சமீபத்தில் 1962-ல் வெளிவந்த "ஆலய மணி" படத்தை இன்றும் கூட யாரும் மறக்கவில்லை. அப்போது பிறந்திராதவர்களின் குழந்தைகள் கூட இப்படத்தின் பாடல்களை இன்றும் விரும்பி கேட்கின்றனர். முதலில் அதை இங்கு முழுமையாக போடுகிறேன்.

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து
பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டி வைத்ததடா

ஆட்டி வைத்த மிருகம் இன்று
அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில்
கோயில் கொண்டதடா

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா

எறும்புத்தோலை உரித்துப் பார்க்க
யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா

பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்
இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி
வந்து விட்டதடா!

என்ன அருமையான பாடல், சிம்மக்குரலோன் சிவாஜியின் நடிப்புடன்! சகபதிவர் SP.VR.சுப்பையா அவர்கள் இப்பாடல் பற்றிய இந்த அருமையான பதிவுக்கும் நன்றி. இப்பாடலில் வரும்

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா

என்ற அடிகளே இப்பதிவின் அடிப்படை. இதுவும் கடந்து போகும் என்றாலும், அது நல்லபடியாக கடந்து போக வேண்டாமா. அந்த வேலையில்தான் எனது வலைப்பூ நண்பர்கள் சிலர் குதித்தனர்.

தமிழ்மணம் நன்கு அறிந்த ஒரு பதிவர் முந்தாநேற்று திடீரென சேட்டில் வந்தார். அருமையான ஆலோசனை தந்தார். அதிலும் இந்த சேட் அனுபவம் வேறு வகையிலும் புதிதாக இருந்தது. அவர் பேச நான் ஸ்பீக்கர் மூலம் கேட்டேன். ஆனால் என்னால் மைக்கை என்னுடைய தட்டுமுட்டு சாமான் குவியலிலிருந்து கண்டு பிடிக்க இயலவில்லை. ஆகவே அவர் இன்னொரு ஆலோசனை தந்தார். தான் பேசுவதாகவும், நான் தட்டச்சு செய்து பதிலளிக்கலாம் என்பதுதான் அது. அவர் தந்த ஆலோசனையும் இந்தப் பதிவுக்கு ஒரு காரணம். அவருக்கு என் நன்றி.

நேற்று பிற்பகல் இன்னொரு பதிவர் வந்து அதே ஆலோசனையைத் தந்தார். அவருக்கும் என் நன்றி. அதைவிட முக்கியம் எதிர்த்தரப்பில் இருந்தாலும் என்னிடம் அன்பாக பழகிய ராஜா வனஜ் அவர்களிடம் வெற்றிகரமாக எனது நிலையை சொல்லி அவரது மனவருத்தத்தை போக்கியது ஆகும். அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது கடைசியில் 'எனது கார்' வலைப்பதிவர் மீட்டிங்கிற்கு என்னை அழைத்து செல்ல எப்போது வேண்டுமானலும் வரலாம் எனக் கூற வெடிச்சிரிப்புடன் முகமன் கூறி போனை வைத்தார். இந்த முழு முரளி மனோஹர் விவகாரத்தில் எனக்கு மிக வருத்தம் அளித்தது இந்த மனவேற்றுமைதான். அதுவும் சற்று பொறுமையுடன் செயல்பட்டதின் மூலம் தீர்த்து கொண்டது நான் போடவிருக்கும் இந்தப் பதிவை உடனே போடும்படி செய்துள்ளது. நல்ல காரியத்தை தள்ளிப் போடுவானேன். இந்த விஷயத்தில் நான் முரளி மனோஹராக இருந்து செல்வன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் போட்ட பின்னூட்டத்தை அப்படியே தேவையான சுட்டிகளுடன் தனது ஜிமெயிலில் வந்ததை எனக்கு அப்படியே நான் கேட்டு கொண்டதின் பேரில் அனுப்பி வைத்தார். அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து செல்வன் அவர்களுடைய மின்னஞ்சல் ஐடியை மட்டும் மறைத்து (சூடு கண்ட பூனை) நான் ராஜா வனஜுக்கு அனுப்பித்ததுநிலைமை சரியாக பெரிதும் உதவியது. அந்தச் சொல்லின் செல்வனுக்கும் நன்றி.

(சீக்கிரம் விஷயத்துக்கு வருமாறு முரளி மனோஹர் கூச்சலிடுகிறான்). இதோ வந்தேன்.

முதற்கண் என்னால் மனவருத்தம் அடைந்தவர்கள் எல்லோரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். முக்கியமாக எனக்கு பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்து பின்னூட்டம் இட்டு அதனால் அசிங்கமாக தாக்கப்பட்டவர்கள் என்னை மன்னிக்குமாறு கேட்டு கொள்கிறேன். அவற்றில் முக்கியமானவர்கள் கோபமான இளைஞன் முத்துக்குமரன், பதிவர் தமிழச்சி, நாமக்கல் சிபி (என் வருத்தத்தை உணர்ந்து ஒரு பதிவையே எடுத்தவர்), செந்தழல் ரவி (அடையாறிலிருந்து ட்ரைடெண்ட் ஹோட்டல் வரை நான் எனது காரில் செல்லும்போது என்னிடம் தொலைபேசியில் எஸ்.டி.டி. பேசியவர்), டி.பி.ஆர்.ஜோசஃப், லக்கிலுக், பால பாரதி, என்றென்றும் அன்புடன் பாலா (என் நண்பன் கிருஷ்ணன் என்னும் செர்வாண்டஸ் செய்த ஒரு அசட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்), துளசி மேடம், ஜெயராமன், ஓகை, மரபூரார், தன் விடாத முயற்சியால் என்னை போலியிடமிருந்து காப்பாற்றிய முத்து தமிழினி (அவர் பற்றிய பதிவு படித்திருப்பீர்கள்) ஆகியோர்.

அழையா விருந்தாளியாய் நான் வந்து என்னால் படுத்தப்பட்ட வரவனையானும் என்னை மன்னிக்க வேண்டும். மிதக்கும் வெளியிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

எனக்காக மெனக்கெட்டு களத்தில் வந்த நாட்டாமை, தினகர், அறவாழி அந்தணன், வெங்கடேஷ் ஷர்மா, பிரகாஷ், நெப்போலியன், புதியவன், வரதன் ஆகியோருக்கும் நான் மிக்க கடமைப்பட்டவன். யாராவது விட்டு போயிருந்தால் அது எனது ஞாபகசக்தியின் குறைபாடு என்று எண்ணி மன்னிக்கவும்.

மாசிவகுமாருக்கு தனிப்பட்ட நன்றி. அவர் நான் சரியான மனப்பக்குவத்துடன் இருந்த சமயத்தில் சொன்ன ஆலோசனைதான் முதல் யோம் கிப்பூர் பதிவுக்கு காரணம் என்பதையும் இவ்விடத்தில் கூறி விடுகிறேன்.

சாதி பற்றி நான் எழுதிய இப்பதிவின் முதல் பாதியை கிட்டத்தட்ட எல்லோரும் ஏற்று கொண்டனர். ஆனால் அத்துடன் நில்லாது கலப்புத் திருமணத்தை எதிர்த்து சில கருத்து வெளியிட்டது ஒரு புயலைக் கிளப்பியது. பாரத சமூகத்தை பிரிக்கும் விதமாக எந்த முயற்சியும் செய்யக்கூடாது என்பதை தங்கள் பதிவுகளின் மூலம் உணர்த்திய அரவிந்தன் நீலகண்டன், ஐயன் காளி ஆகியோரது கருத்தை ஏற்று, இனி இம்மாதிரி சாதி உணர்வை பற்றி எழுதியே ஆகவேண்டும் என்னும் பட்சத்தில் ரொம்பவும் டிஸ்கிகள் போட்டு எழுதவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். அளவுக்கு மீறி ஒரு பதிவில் டிஸ்கிகள் போட வேண்டியிருந்தால் அதற்கு அப்பதிவையே கைவிடுவதும் உத்தமமே. (அது சம்பந்தமாக வேறு பதிவர் யாராவது போடும் இடுகையில் பின்னூட்ட கும்மி அடித்தால் போயிற்று - "டோண்டு இப்போதாவது சீரியசாக இருடா என்று கூறுவது முரளி மனோஹர்).

கடைசியாக, ஆனால் முக்கியமாக, வளர்ந்த குழந்தையாக (நன்றி மாசிவகுமார்) செயல்பட்டு, தமிழ்மணம் யுத்த பூமியாக மாறுவதற்கு காரணமாக இருந்து படுத்திய இந்த டோண்டு ராகவனை முதலிலிருந்தே சகித்து வந்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கு எனது மனப்பூர்வ நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

இப்போது மேலே என்ன?

பல விஷயங்களில் கருத்து சொல்லி எனது நிலையை தெளிவாக்கி விட்டேன். அக்கருத்துக்களில் மாற்றம் இல்லை. ஆனால் இனிமேலும் அதை சொல்லித் திரிய வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆகவே இனிமேல் நடேசன் பூங்காதான். டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான் (ஓசை செல்லா அவர்கள் கவனிக்க).

ஆனால் டோண்டு ராகவன் மட்டுமே வந்து ஹைப்பர் லிங்குகள் எல்லாம் போட்டு தீவிரமாகப் படுத்துவான். இஸ்ரேல், ராஜாஜி, சோ, வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை ஆதரவாளன் டோண்டு ராகவனும் அப்படியே இருப்பான். வாடிக்கையாளர்களை படுத்தும் டோண்டு ராகவன் வேறெங்கே செல்ல முடியும்.? வாடகைக் கார் முதலாளிகள் எனது பதிவுகளைப் படிக்காது மன அமைதியுடன் இருப்பார்களாக. லாலு ப்ரசாத் யாதவும் பயப்பட வேண்டாம். புதிர்கள் பலவும் போடும் டோண்டு ராகவன் அப்படியே இருப்பான் என்பதை கூறவும் வேண்டுமோ.

ஆனால் ஒரு விஷயம். எந்தப் பழைய பதிவுகளையும் இப்போது எடுக்கும் முடிவுகள் காரணமாக திருத்தவோ நீக்கவோ போவது இல்லை. சொன்னவை சொன்னதுதான். வில்லிருந்து விடுபட்ட அஸ்திரங்களை பெறுவது அர்ஜுனனால்தான் முடிந்தது. அஸ்வத்தாமனால் முடியவில்லை. நான் இந்த விஷயத்தில் அஸ்வத்தாமா. அடேடே பரவாயில்லையே இந்த அர்ஜுன அஸ்வத்தாமன் கதையையும் பதிவாக பிற்காலத்தில் போடலாமே.

அவை எனது பழைய அணுகுமுறையால் உருவானவை.அப்படியே ஃப்ரீஸ்தான். சரித்திரத்தை ஏன் திருத்த வேண்டும்? வேண்டாத வேலை. அவை எனது அசட்டுத்தனத்துக்கு சான்றாக அப்படியே இருக்கட்டும்.

இப்போது கூற நினைத்ததையெல்லாம் கடந்த இரண்டு மணி நேரம் மனம் விட்டு கூறியதால்,

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/12/2006

யோம் கிப்பூர் யுத்தம் டோண்டு ராகவனுடையது

இஸ்ரேலுக்கும் எனக்கும் பூர்வ ஜன்ம பந்தம் என்று நான் மனப்பூர்வமாக நினைத்தது என்னை பொருத்தவரை நிஜமாகி விட்டது. யோம் கிப்பூரன்று இஸ்ரேல் மேல் யுத்தம் தொடுக்கப்பட்டது. என் மேலும்தான். என்னுடைய முந்தைய யோம் கிப்பூர் பதிவை வலைப்பூவில் இட்டப் போது அது நல்ல விளைவை ஏற்படுத்தும் என்பதை எதிர்ப்பார்த்தது நிஜம். ஆனால் அது பொய்த்தது. அப்பதிவு ஒரு சமாதானத்துக்கான சமிக்ஞை என்றால் இப்பதிவு ஒரு யுத்த அறிவிப்பு.

நான் மிகவும் மதிக்கும் வலைப்பூ நண்பர் ஒருவர் சொன்ன ஆலோசனையின் பெயரிலும், நானே அது பற்றி யோசித்து வந்ததாலுமே எனது அந்த சமாதான ஆஃபர் தந்தேன். அது ஏற்கப்படவில்லை. மாறாக எதிராளி தரப்பிலிருந்து விரோதச் செய்கைகள் பன்மடங்கு அதிகரித்து, என் மகள் பெயரிலும் வலைப்பூ ஆரம்பிக்க வைத்தது. ஏற்கனவே என் மனைவி பெயரில் இன்னொரு வலைப்பூ ஆரம்பிக்கப் பட்டிருந்தது. அதை தமிழ்மணத்திடம் பேசி லிஸ்டிலிருந்து எடுக்கச் செய்த பிறகே முந்தையப் பதிவையே போட்டேன். அதே போல எனது மகள் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூவையும் தமிழ்மணத்தார் எனது கோரிக்கையை மதித்து நீக்கினர். ஆனால் அவ்விரு பதிவுகளும் பிளாக்கரில் இருக்கும். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

துளசி அவர்களிடம் என்னை இம்பெர்சனேட் செய்து அவரிடமிருந்து நானும் என் மகளும் இருக்கும் படங்களை போலி வாங்கினான். அதே போல மாயவரத்தானை இமிடேட் செய்து ஜூலை மாதமே என்னிடமிருந்து சஷ்டியப்தபூர்த்தி படங்களை வாங்கியிருக்கிறான் என்பதை நான் நேற்று ஜீமெயில் ஆர்கைவ்ஸைப் பார்த்து தெரிந்து கொண்டேன். இப்போதைய நிலை என்னவென்றால், படங்கள் அவனிடம் போய் விட்டன. ஆனால் எனது தளங்களை உடைத்தல்ல. சாதாரண ஜேப்படித் திருடன் ரேஞ்சில்தான் வேலை செய்திருக்கிறான் போலி. என்னைப் போல இமிடேட் செய்ய அவன் உபயோகித்த ஐடி raghtransin at gmail dot com (the last t is missing in raghtransint). அதே போல மாயவரத்தானை இமிடேட் செய்ய உபயோகித்த ஐடி mayiladuturai at gmail dot com (h has been removed from mayiladuthurai). இரண்டு சேட்டுகள் நடந்துள்ளன. வேறு ஏதாவது நடந்ததா என்பதை இப்போதுதான் பார்க்க வேண்டும். என்னிடமிருந்து வரும் மெயில்களை ஐடியை சரிபார்த்து பதிலளிக்கவும் என என் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் நான் பார்க்க வேண்டும். மேலே கூறியது எல்லாம் மைனஸ் பாயிண்டுகள். ப்ளஸ்ஸில் என்ன இருக்கிறது? முதலில் எனக்கு பக்கபலமாய் இருப்பது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன். அதே போல லட்சக்கணக்கில் ராமநாமத்தை எழுதும் என் மகளுக்கோ, லட்சுமிநரசிம்மரின் பக்தையான என் மனைவிக்கோ ஒரு கேடும் வராது.

அடுத்த ப்ளஸ் பாயிண்ட் இந்த அறுபது வயது இளைஞன் டோண்டு ராகவனின் மனவுறுதி. அந்த உறுதி அவன் சாகும்வரை அவனுடனேயே இருக்கும். போலி டோண்டு, படங்களைத்தானே போடப் போகிறாய்? போ, போய் போட்டுக் கொள்.

நான் இப்போது என்ன செய்யப் போகிறேன்? நான் பாட்டுக்கு என் மொழிபெயர்ப்பு வேலைகளைப் பார்த்துக் கொண்டு, அதே சமயம் பதிவுகளும் போடப் போகிறேன். இது யுத்தம். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையேயானது. அதர்மம் இப்போது கொக்கரிக்கிறது, உன் சம்பந்தமானப் படங்களைப் போடுவேன் என்று மிரட்டுகிறது. போட்டுக் கொள் என்று அந்த மிரட்டலுக்கு பதில் கூறியாகி விட்டது. என் இணைய நண்பர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

அதற்கு முன்னால் சதயம் அவர்கள் அவர் பதிவில் போட்டதை இங்கே எடுத்து எழுதுகிறேன்.

"தனிப்பட்ட முறையில் பெரியவர் டோண்டுவிற்காக வருந்தினாலும் இத்தகைய ஆப்புகளை வாங்குவதற்காக அவர் மெனக்கெட்டு உழைத்தார் அல்லது அவரின் நலம்விரும்பிகளை உழைக்க வைத்தார் என்றே நிணைக்கிறேன்.அந்தச் சகோதரியைப் பற்றிய சில பின்னூட்டங்கள் நிச்சயமாய் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்."
ஏன் சார் ஆஷாடபூதித்தனமாக வருத்தமெல்லாம் தெரிவிக்கிறீர். அதற்கு உங்களுக்கு அனானியில் பின்னூட்டம் இட்டவரே மேல். வெளிப்படையாகவே எழுதுகிறார்.

"ஜாக்கிரதை சதயம். நீங்கள் கூறியது போல ஒரு டோண்டு சந்திக்கும் பிரச்சினைகள் போதாதா. நீங்கள் வேறு சனியனை ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள்? டோண்டு நாசமாய் போகட்டும். அவனால்தானே மட்டுறுத்தல் வந்து தமிழ்மணத்தின் சுதந்திரமே பறிபோனது. நன்றாக வேண்டும் அவனுக்கு."
அதானே, அந்த மட்டுறுத்தலால்தானே உங்கள் பதிவுகள் இற்றைப்படாமல் இருக்கின்றன. போய் ஸ்வீட் சாப்பிடுங்கள் சார்.

"இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டோண்டு அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார் என நான் எண்ணவில்லை."
இல்லையே, நன்றாகத் தூங்கிக் கொண்டுதான் இருந்தேன்.

"மற்றபடி தொழில்நுட்ப யுத்தத்தில் உங்கள் கை ஓங்கியிருப்பது உண்மைதான்....உங்களின் திறமையையும், உழைப்பையும், துல்லியத்தையும் பார்த்து என் போன்ற அரைட்ரவுசர்கள் அசந்து போயிருக்கிறோம். உங்களின் பின்னூட்டத்தை நீக்கவே படாதபாடு பட்டேன்...ஹி..ஹி...என்னுடைய தொழில்நுட்ப அறிவு அத்தகையது."
போய் போலி டோண்டு ரசிகர் மன்றம் வைப்பதே நலம், அல்லது சிம்ரன் ஆப்பக்கடையிலிருக்கும் ரசிகர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி, கருத்துச் சுதந்திரம் பறிபோகிறதென்று ஒரு ஹை மாரல் ரீசனுக்காக மட்டுறுத்தலையே செயல்படாது இருப்பவர் போலியின் தரப்பிலிருந்து வரும் கருத்து சுதந்திர கொலைக்கு இப்படி ஏன் ஜிஞ்சா அடிக்கிறீர்கள்? உங்களுக்கும் ஆப்பு வைப்பான் என்ற பயம்தானே காரணம்?

இப்போது போலிக்கு. என்னைப் பொருத்தவரை நீ இல்லை. அவ்வளவுதான். இனிமேல் உன்னை நான் லட்சியம் செய்ய மாட்டேன். நான் பாட்டுக்கு என் பதிவுகளை வழக்கம் போல போட்டுக் கொண்டிருப்பேன். பின்னூட்டங்கள் வருகின்றனவா இல்லையா என்பதைப் பற்றி கவலை இல்லை. இப்போது நண்பர்களுக்கு. இது யுத்தம். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நடுநிலைமை இருக்க முடியாது. என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

அதற்காக அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களை நான் திறக்கப் போவதில்லை. ஒரு வலைப்பூ உருவாக்கி, ப்ரொஃபைல் கிடைக்காமல் செய்தால் போலியால் என்ன செய்ய முடியும்? அதே சமயம் இன்னொரு வேண்டுகோள். என் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுபவர்கள் போலி டோண்டுவைப் பற்றி ஒன்றும் பேசாதீர்கள். பின்னூட்டங்கள் சம்பந்தப்பட்ட பதிவுக்கு ஏற்றவையாக இருக்கட்டும். இப்பதிவு மட்டும் நான் மேலே கேட்டுக் கொண்டதற்கு ஒரு விதி விலக்கு என்பதும் வெள்ளிடை மலை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/02/2006

Jom Kippur - டோண்டு ராகவனுடையது

இன்று யோம் கிப்பூர் என்று அழைக்கப்படும் நாள், யூதர்களுக்கு முக்கியமான நாள். தாங்கள் செய்த தவறுகள் மற்றும் சக மனிதர்களுக்கு இழைத்த அநீதிகள் ஆகியவற்றுக்காக யூதர்கள் மன்னிப்பு கேட்கும் நாள்.

இஸ்ரவேலர்கள் சந்திர நாட்காட்டியை உபயோகிப்பதால் அதன் தேதி முன்னே பின்னே வரும். சமீபத்தில் 1973-ல் இது அக்டோபர் 6 அன்று வந்தது. அன்றுதான் எகிப்தும் சிரியாவும் இஸ்ரேலைத் தாக்கினர். 20 நாள் நடந்த இந்த யுத்தத்தைப் பற்றி இங்கு நான் பேசப் போவதில்லை. வஜ்ரா அவர்கள் பதிவு, அதில் தரப்படும் சுட்டிகள் இது பற்றி மிகத் தெளிவாக விஷயங்கள் தருகின்றன.

இப்போது என்னுடைய யோம் கிப்பூருக்கு வருவோம்.

நேற்று எனக்கு நான் மிகவும் மதிக்கும் பதிவரிடமிருந்து இந்த மெயில் வந்தது. அதை அனுப்பும் முன்னால் என்னுடன் chatßl தொடர்பு கொண்டு மெயில் அனுப்பப் போவதையும் கூறினார். இப்போதைக்கு அவர் பெயரை இங்கு போடப் போவதில்லை. போடவே மாட்டேன் என்றும் கூறப்போவதில்லை. இப்போது அவருடைய மெயில் அப்படியே நகலெடுத்து:

"உங்களுடைய அனுபவம், அறிவு, துணிச்சல் போன்றவற்றை மதிப்பவர்களில் நானும்
ஒருவன். உங்கள் கருத்துக்களில் பெரும்பான்மையானவற்றுடன் ஒத்துப் போகா
விட்டாலும் உங்களுடைய எழுதும் பாணி, உங்கள் எழுத்திலிருந்து தெரியும்
அனுபவ உண்மைகளுக்காக உங்கள் பதிவுகளைத் தவறாமல் படித்து வருகிறேன்.

நீங்கள் மாதம் தோறும் சென்னையில் ஏற்பாடு செய்யும் வலைப்பதிவர் கூட்டங்கள், வெளியூர் போனாலும் சக பதிவர்களைச் சந்திக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைவருக்கும் பயனளிக்கும் நற்செயல்கள்.

ஆனால் உங்கள் அனுபவத்தை, பணிகளை எல்லோரும் இயல்பாக பயன்படுத்துவதற்கு
இருக்கும் சில இடையூறுகள் நம் எல்லோருக்கும் தெரியும்.

சில சூழ்நிலைகளால் போலிகளின் நாகரீகமற்ற எதிர்ப்புகளால் நீங்கள் மிக சிரமத்துக்கு ஆளாகினீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். பெரு முயற்சி எடுத்து உங்களைத் தற்காத்துக் கொள்கிறீர்கள் என்பதும் புரிகிறது. ஆனால் அந்த மிரட்டல்களால் சலித்துப் போய் கூட்டங்களுக்கு வருவதைத் தவிர்க்கும், உங்கள் பதிவில் பின்னூட்டம் இடுவதைத் தவிர்க்கும் நண்பர்களின் எண்ணிக்கை ஏராளம். அந்த மிரட்டல்களைச் செயல்படுத்தும் முகமாக போலிகள் உருவாக்கியுள்ள தளங்களின் பாதிப்பும் விரும்பத்தக்கவை இல்லை.

இந்த நிலையில் தமிழ் வலைப்பதிவு உலகுக்கு நீங்கள் ஒரு உதவி செய்தால் நான் என்றென்றும் உங்களுக்கு நன்றி உடையவனாக இருப்பேன்.

'என்னுடைய கருத்துக்களில் சில பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நான் அதைச் சொல்லும் விதம் சிலருக்குக் கோபத்தை மூட்டியிருக்கலாம். அதனால், ஒரு தவறும் செய்யாத பலர் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இன்னும் ஒரு தீ வளையத்துக்குள்ளேயே உலாவும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

போலி நண்பர்களுக்கு நான் நிபந்தனை இல்லாத வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு அவர்களது மனம் எந்த வகையிலாவது என்னால் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுமாறு கேட்டு கொள்கிறேன். அவர்கள் தமது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து விட்டு தமிழ் சமூகத்துக்குப் பலன் உள்ள வகையில் தமது ஆற்றலைப் பயன்படுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

நான் எனது மனதில் படும் கருத்துக்களை வழக்கம் போல வெளிப்படையாகச் சொல்லி
வருவேன். யாருக்காவது கருத்து வேறுபாடு இருந்தால் என்னிடம் கேட்டால் எனது பக்க நியாயங்களை விளக்கத் தயாராக இருக்கிறேன்.

பிறர் பெயரில் உருவாக்கியுள்ள ஆபாசப் பதிவுகள், சக பதிவர்களுக்கு அனுப்பும் ஆபாசப் பின்னூட்டங்களை முற்றிலும் அழித்து தமிழ் வலை உலகை மேம்படுத்த வேண்டுகிறேன்.'

இப்படி ஒரு பதிவை போட்டால் நீங்கள் பல நூறு மக்களின் அன்பையும் மதிப்பையும் ஈட்டிக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு எந்த இழப்பும் கிடையாது."

மறுபடியும் டோண்டு ராகவன்.

நானும் இது சம்பந்தமாக சில நாட்களாக யோசித்து வருகிறேன். இவருடைய மெயில் ஒரு ட்ரிக்கராக வந்தது.

இந்தப் பாராவை மட்டும் சற்றே மாற்றுகிறேன். ஏனெனில் என்னால் போலி டோண்டுவின் மனம் புண்பட்டது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

"போலி டோண்டுவுக்கு நான் நிபந்தனை இல்லாத வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு அவரது மனம் என்னால் புண்பட்டதற்காக என்னை மன்னித்து விடுமாறு கேட்டு கொள்கிறேன். அவர் தமது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து விட்டு தமிழ் சமூகத்துக்குப் பலன் உள்ள வகையில் தமது ஆற்றலைப் பயன்படுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்."

நான் போலி டோண்டுவுக்கு மேலே கூற விரும்புவது. நாம் இருவரும் நமது நிலைகளை தெளிவாகவே பல தருணங்களில் வெளிப்படுத்தி விட்டோம். இனிமேல் வெளிப்படுத்துவதற்கு வேறு விஷயங்கள் இல்லை என்று தோன்றுகிறது. நமது சண்டையில் collateral damage சற்று அதிகமாகவே வந்து விட்டது. அதற்கு நாம் இருவருமே காரணம். என் தரப்பு பங்களிப்பிற்காக சக வலைப்பதிவாளர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை விட நீங்கள் வயதில் இளையவர். இருப்பினும் உங்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

நானும் உங்களை மனப்பூர்வமாக மன்னிக்கிறேன்.

உங்களது எதிர்வினை எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையிலேயே இப்பதிவைப் போட்டுள்ளேன். உங்கள் பெயரை இப்போதும் வெளியிட மாட்டேன். முதலில் வெளியிட மறுத்தது போர் யுக்தி. ஆனால் இப்போது மறுப்பது சமாதான யுக்தி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/01/2006

நான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன் - 5

இது மறு பதிவு செய்யப்பட்டது.

அறுபதுகளின் ஆரம்பத்தில் ஐஷ்மேனை அர்ஜன்டைனாவிலிருந்து சிறையெடுத்து வந்தனர் இஸ்ரவேலர்கள். பென் குரியன் இதை அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தப் போது உறுப்பினர்கள் மேஜைகளைத் தாட்டித் தங்கள் களிப்பை வெளிப்படுத்தினர்.

அது சம்பந்தப்பட்டச் செய்திகளை நான் தினமும் கவனமாகப் படித்தேன். எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் என்னவென்றால் பேசாமல் அவனைப் போட்டுத் தள்ளியிருந்தால் பணம் மிச்சமாக இருந்திருக்குமே என்பதுதான். ஆனால் இஸ்ரவேலர்கள் வேறு மாதிரி நினைத்தனர். அவன் மேல் வழக்குத் தொடுத்தனர். அவனுக்காக வக்கீலும் வைத்துக் கொடுத்தனர். அவரும் தர்ம வக்கீல் போலன்றி அவனுக்காக உண்மையுடன் வாதாடினார். விவரங்கள் வெளி வரத் தொடங்கின. அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது. நாஜிகள் எவ்வளவுக் கீழ்த்தரமானவர்கள் என்றுப் புரிந்தது.

அறுபது லட்சம் பேரைக் கொலை செய்வது என்பது இது வரை சரித்திரத்தில் நடக்காதது. அதைச் செய்ய இந்த மனிதன் அரசு எந்திரத்தைப் பயன் படுத்தியிருக்கிறான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது எல்லாத் தளவாடங்களும் பற்றக்குறையில் இருக்க, யூதர்களை சித்திரவதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் வேலைக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டது.

வழக்கு நடந்தக் காலத்தில் ஜெர்மனியிலும் சரி, இஸ்ரேலிலும் சரி தலைமுறை விரிசல்கள் அதிகமாயின. "நீங்கள் இவ்வளவுக் கொடூரமானவர்களா" என்று ஜெர்மனிய இளைய சமுதாயம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டனர். அவர்கள் அவமானத்தில் தலை குனிந்தனர். "நீங்கள் இவ்வளவு முட்டாள்தனமாக நடந்து நம்மவர்களில் அறுபது லட்சம் பேரை பலி கொடுத்தீர்களா" என்று இஸ்ரேலிய இளைய சமுதாயம் கேட்க, பெற்றோர்கள் அவமானத்தால் தலை குனிந்தனர். அதனால்தான் 1967 யுத்தத்தின் போது அரபு தேசங்கள் தாங்கள் யூதர்களை எப்படியெல்லாம் அழிக்கப் போகிறோம் என்றுக் கூறியதை இஸ்ரவேலர்கள் யாரும் வெற்று மிரட்டலாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டினர்.

அது பற்றி ஏற்கனவே கூறி விட்டேன். ஐஷ்மன் விஷயத்துக்கு வருவோம். அவன் குற்றவாளி என்றுத் தீர்ப்பளிக்கப் பட்டது. எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து மே 31 1962-ல் அவன் தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிட இரண்டு சக்கிகள் உபயோகப்படுத்தப்பட்டன. அவற்றை இருவர் ஒரே நேரத்தில் செயலாக்கினர். ஆகவே யார் அவனைத் தூக்கில் ஏற்றியது என்பது ரகசியமாக வைக்கப்பட்டது. பிணத்தை எரித்து சாம்பலை மத்தியதரைக் கடலில் தூவினர் இஸ்ரவேலர்கள். ஐஷ்மன் சகாப்தம் முடிவடைந்தது.

நாஜிகள் பலர் வேடையாடிக் கொல்லப்பட்டனர். தப்பியவர்கள் தங்கள் வாழ்நாள் கடைசி வரை நிம்மதியாக வாழ இயலவில்லை. இத்தனை ஆண்டுகள் யூதர்களைக் கிள்ளுக்கீரையாக மதித்தவர்கள் இப்போது இஸ்ரவேலர்களைக் கண்டு பயந்தனர்.

வலைப்பதிவர்கள் பலர் நான் ஏன் இஸ்ரேலை இவ்வளவுத் தீவிரமாக ஆதரிக்கிறேன் என்பதற்குத் தங்கள் மனதுக்குத் தோன்றியக் காரணங்களை எழுதியுள்ளனர். அது அவர்தம் சுதந்திரம். நான் உலக விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொண்டுப் பத்திரிகைகள் படிக்கும் காலத்திலிருந்தே இஸ்ரவேலர்கள் என்னைக் கவர்ந்தனர்.

கடைசி பிரெஞ்சு பரீட்சையில் (Diplome superieur) ஜெரூசலத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை முழுக்க முழுக்க இஸ்ரேலிய ஆதரவுடையது. நான் அதை எழுதிக் கொண்டிருந்த போது என் ஆசிரியர் (ஒரு பிரெஞ்சுக்காரர்) என் பின்னால் நின்ற வண்ணம் அதைப் படித்திருக்கிறார். பிறகு என்னிடம் அதை பற்றிப் பேசும்போது, அக்கட்டுரைக்கு பூஜ்யம் மதிப்பெண்கள் கொடுக்கப்படும் அல்லது கிட்டத்தட்ட 100 மதிப்பெண்கள் கொடுக்கப்படும் என்றார். பிரான்ஸில் பேப்பர் திருத்துபவரின் மனநிலையை பொருத்தது என்றும் கூறினார். நான் அதற்காகக் கவலைப்படவில்லை. தோல்வியடைந்தால் இஸ்ரேலுக்காக என்னால் ஏதோ செய்ய முடிந்தது என மக்ழ்ச்சி கொள்வேன் எனக் கூறினேன். அப்பரீட்சையில் நான்காவது ரேங்கில் (Tres honorable) தேர்வடைந்தது வேறு விஷயம்.

ஜெர்மன் பரீட்சை ஒன்றில் ஓரல் தேர்வு நடந்தது. மேக்ஸ் ஃப்ரிஷ் எழுதிய அண்டோரா என்ற நாடகத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வழக்கத்துக்கும் மேல் தீவிரமான என்னுடைய யூத ஆதரவு நிலையைக் கண்ட ஜெர்மன் ஆசிரியர் திகைப்படைந்தார். அவர் என்னிடம் "நீங்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் நீங்கள் நம்பும் முந்தையப் பிறவி காரணமாக இருக்குமோ? அதாவது 1946-ல் பிறந்த நீங்கள் ஒரு வேளை யூதராக இருந்துக் கொல்லப்பட்டவரா?" என்றுக் கேட்டார். அதற்கு நான் "தெரியாது ஐயா, ஒரு வேளை நாஜியாக அப்பிறவியில் இருந்து இப்போது பிராயச்சித்தம் தேடுகிறேனோ என்னவோ" என்றேன். இப்போதும் தெரியவில்லை. நான் அதிகம் நேசிக்கும் நாடு இஸ்ரேல். அதை விட அதிகமாக நேசிக்கும் நாடு என் தாயகம் இந்தியா மட்டுமே. நான் அமெரிக்க ஆதரவாளனாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இஸ்ரேல் ஆதரவு நிலையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/30/2006

நான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன்-4

நான் படித்த ஒரு ஜோக். இஸ்ரவேலர்களுக்கு திடீரென ஒரு விபரீத எண்ணம் வந்தது. அதாவது தங்கள் பெயர் இப்படி ரிப்பேராயிருக்கிறதே என்ன செய்வது என்று யோசித்தனர். ஒரு பப்ளிக் ரிலேஷன்ஸ் கம்பனியைத் தெரிவு செய்து அவர்களிடம் ஆலோசனை கேட்டனர். அவர்களும் சில நாட்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து ஒரு பெரிய அறிக்கை கொடுத்தனர். அதில் நூற்றுக் கணக்கானப் பரிந்துரைகள் இருந்தன. முதல் பரிந்துரை கூறியது: "இஸ்ரேல் என்றப் பெயருக்குப் பதிலாக இர்விங்க் என்றுப் பெயரைப் போடவும்." அவ்வறிக்கை குப்பைத் தொட்டிக்குப் போயிற்று.

இஸ்ரேல் என்றப் பெயரைக் கேட்டவுடன் பலருக்கு இங்கு ரத்தக் கொதிப்பே வந்து விட்டது. அதில் ஒரு புது மாப்பிள்ளையும் அடக்கம். அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. எனக்கோ இஸ்ரேல் என்றப் பெயர் ஒரு புத்துணர்சியைக் கொடுக்கிறது.

சரி விஷயத்துக்கு வருகிறேன். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல 1948-ல் 2/3 பெரும்பான்மையுடன் பாலஸ்தீனத்தை இரு பாகங்களாகப் பிரிக்கும் தீர்மானம் நிறைவேறியது. யூதப் பகுதியில் வசிக்கும் யூதரல்லாதவர்களுக்கு பென் குரியன் அங்கேயே இருக்கும்படி வேண்டுகோள் விடுத்ததையும் கூறினேன். ஆனால் சுற்றியுள்ள் அரபு தேசங்கள் அவர்களுக்குத் தவறான வழி காட்டின. ஹிட்லர் செய்யத் தவறியதைத் தாங்கள் செய்து விடப் போவதாக ஆசை காட்டின. அவர்களும் அரபு படைகளுக்கு வழி விட்டு அகதிகள் முகாமுக்குச் சென்றனர். 1948 யுத்தம் இஸ்ரேலியர் வெற்றியுடன் முடிவடைந்தது. அகதிகள் முகாம்களில் மாட்டிக் கொண்டனர். மேற்குக் கரை பகுதி மற்றும் யூதரல்லதவர்காக ஒதுக்கியப் பகுதியில் அவர்களைக் குடியேற்றி ஒரு தனி நாட்டை அமைப்பதில் அரபு தேசங்கள் ஒரு அக்கறையும் காண்பிக்கவில்லை. அவர்கள் குறி இஸ்ரேலே. எல்லா யூதர்களையும் கொன்று விடுவதே அவர்கள் திரும்பத் திரும்பச் செய்த கோஷம்.

நிலைமை இவ்வாறிருக்க இஸ்ரேல் அகதிகளைத் திரும்ப உள்ளே விடும் என்று எவ்வாறு எதிர்ப்பார்க்கலாம்? அறுபது லட்சம் மரணங்கள் போதாதா?

ஜூல 31, 1971. ஜோர்டான் நதியின் இக்கரையில் காவல் காத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்குத் தங்கள் கண்களை நம்பவே இயலவில்லை. என்ன நடந்தது? ஜோர்டான் பக்கக் கரையிலிருந்து சிலரை ஜோர்டான் படையினரைத் துரத்தி வந்தனர். யார் அந்தச் சிலர்? அவர்கள் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். துரத்தப்பட்டவர்கள் நேராக ஜோர்டான் நதிக் கரையில் குதித்து இஸ்ரேல் தரப்பை நோக்கி நீந்த ஆரம்பித்தனர். இக்கரைக்கு வந்து இஸ்ரவேலர்களிடம் தஞ்சம் புகுந்தனர். பிறகு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர்கள் கூறினார்கள்: "இஸ்ரவேலர்கள் எங்களைக் கைதுதான் செய்வார்கள். ஆனால் ஜோர்தானியர்கள் கொன்று விடுவார்கள்" இந்த விஷ்யத்தில் பாலஸ்தீனியத் தலைமை மிகவும் அவமானப்பட்டது. இந்தச் செய்தி இங்கும் சகவலைப்பதிவாளர்கள் பலருக்குப் புதிதாக இருக்கும்.

1976-ல் என்டெப்பெயில் நடந்ததையும் எழுதியுள்ளேன். நம் அரசாங்கம் உட்படப் பலர் நடந்துக் கொண்டது ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை. அதே மாதிரி நம் விமானம் ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்டப்போது நாம் என்ன செய்தோம்? மேற்கொண்டு ஒப்பிட எனக்கு மனதில்லை.

1982-ல் பாலஸ்தீனியர் லெபனானைத் தங்கள் முட்டியின் கீழ் வைத்திருந்தனர். அங்கு அரசாங்கம் இருக்கிறதா என்றச் சந்தேகம் பலருக்கு. புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி பாலஸ்தீனியர்களால் கொல்லப்பட்டார். அப்போது இஸ்ரவேலர்கள் பாலஸ்தீனியரின் முகாம்களைத் தாக்கினர். அவர்களுக்கு லெபனான் ரகசிய உதவி செய்தது. கொல்லப்பட்டவரின் தம்பி புதிய ஜனாதிபதி. அவ்வளவு அலுத்துப் போயிருந்தனர் அவர்கள் பாலஸ்தீனியரின் அட்டூழியங்களால். லெபனானின் பெரும் பகுதியில் இஸ்ரவேலர்கள். பாலஸ்தீனியரை என்ன செய்வது? அவர்களை ஏற்றுக் கொள்ள எந்த அரபு தேசமும் தயாராக இல்லை. அப்போது இன்னொரு அதிசயம் நடந்தது. அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று கூறினார் இஸ்ரேலியப் பிரதமர் மெனாசெம் பெகின். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. அவர்கள் இஸ்ரேலை எதிர்த்துப் போராடுவதை விட வேண்டும். இப்போது கூட இரு பாலரும் ஒத்துழைக்கலாம். வேறு வழியில்லாது அரபு தேசங்கள் பாலஸ்தீனியரை ஏற்றுக் கொள்ள முன் வந்தன.

சடில்லா முகாமைப் பற்றி. இஸ்ரவேலர்களுக்கு அதில் மறைமுகப் பங்கு இருந்தது என்று வெளிப்படுத்தியதே இஸ்ரேலியப் பத்திரிகைகள்தான். அதற்கானப் பொறுப்பை அவர்கள் சுமந்தே ஆக வேண்டும். ஆனால் ஒருவரும் அந்தப் படுகொலைகளுக்கு நேரடிப் பொறுப்புள்ளவரான லெபனானியரைக் கண்டிக்கவேயில்லை. அதுதான் உலகம். 1982-ல் இதையெல்லாம் குறித்து நான் ஹிந்துஸ்தான் டைம்ஸில் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அது அப்படியே ஒரு திருத்தமுமில்லாது வெளியாயிற்று என் முழு முகவரியுடன். அது சம்பந்தமாக எனக்கு வந்தக் கடிதங்கள் எல்லாமே ஆதரவுக் கடிதங்கள்தான். இப்போதும் எனக்கு மின்னஞ்சலில் ஆதரவுக்கடிதங்கள்தான் வருகின்றன. வெளிப்படையாக எழுதத் தயங்குகின்றனர். அவர்கள் தயக்கம் எனக்குப் புரிகிறது. எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.

அராஃபாத்துக்கு சமாதானப் பரிசு கொடுக்கப்பட்டதைப் பறைசாற்றுபவர்கள் கூடவே இஸ்ரேலியப் பிரதமருக்கும் வெளி உறவு மந்திரிக்கும் அதே பரிசு கொடுக்கப்பட்டதை சௌகரியமாக மறைத்து விடுகின்றனர்.

இன்னும் எழுதுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன் - 3

இந்த மீள்பதிவுக்கு போகுமுன் ஒரு வார்த்தை, இதற்கு பின்னூட்டம் ஈட்டிய ஒருவரைப் பற்றி. அவர்தான் சங்கர நாராயணன் அவர்கள். இஸ்ரேலில் தங்கி படித்து வருபவர். என்ன வேடிக்கை பாருங்கள், இப்போது அவரும் தன் வலைப்பூவில் இஸ்ரேலை பற்றி எழுதி வருகிறார். நிற்க, இப்போது பதிவுக்கு செல்வோம். அதை அப்படியே மீள்பதிவு மட்டும் செய்யாது, தேவையானால் தெளிவாக்க வேண்டிய இடங்களில் அதையும் செய்வேன்.

எதிர்ப்புகள் வரும் என்று எதிர்ப்பார்த்ததுதான். ஆகவே அவற்றைப் பற்றிக் கவலையில்லை. சொல்லப் போனால் அவைதான் எனக்கு சக்தி தருகின்றன.

1948-ல் முறையான ஐ.நா. வாக்கெடுப்பில் பாலஸ்தீனப் பிரிவினை ஏற்பட்டது. அன்றிலிருந்து யுத்தம்தான். அப்போதுதான் பிறந்தக் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொல்ல சுற்றியிருந்த அரபு நாடுகள் தாக்கின. அதையும் எதிர்க்கொண்டது இஸ்ரேல். அந்த யுத்தத்தில் யூதர்களை ஒட்டு மொத்தமாகக் கொல்ல ஏதுவாக பாலஸ்தீனர்களை தங்கள் வீடுகளைக் காலி செய்து விலகிப் போகுமாறுக் கூறினர் அரபு நாட்டவர்கள். அவ்வாறு சென்றவர்கள்தான் பாலஸ்தீன அகதிகள். தங்கள் போராட்டத்தைத் தாங்களே நடத்திக் கொள்ளாமல் மற்றவர்கள் தோளில் சவாரி செய்தப் பாலஸ்தீனியர்கள் அந்த வழக்கத்தை விடவே இல்லை. அதுதான் அவர்கள் பிரச்சினை.

யூதர்களுக்கும் அவர்களை இவ்வளவு ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்திருப்பவர்களுக்கும் எதில் கருத்து வேறுபாடு? மற்றவர்கள் யூதர்கள் இறக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அவர்கள் அவ்வாறு இறக்க விரும்பவில்லை.

இங்கோ கேட்கவே வேண்டாம். ஆ ஊ என்றால் பார்ப்பனியக் குணம் பற்றிய விமரிசனங்கள், சோ மேல் தாக்குதல்கள், தமிழ் மக்களை தான் எவ்வளவுக் கீழாக மதிக்கிறார் என்பதை வெளிப்படையாகவே பல முறை கூறியவர் காலிலேயே விழுந்துக் கிடப்பது ஆகியவை ஜாம் ஜாம் என்று நடந்து வருகின்றன. அதற்கெல்லாம் கவலைப்பட்டு ஆகப் போவதென்ன. நான் இப்பதிவில் கூறப் போவதாகச் முந்தையப் பதிவில் எழுதியதைக் கூறி விடுகிறேன்.

இஸ்ரேலுக்கு அங்கீகாரம் கொடுத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் என்ன, பம்பாயில் ஒரு கான்ஸுலேட் மட்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள கணிசமான முஸ்லிம்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ, அரபு தேசத்தவர்களுடன் வணிகம் பாதிக்கப் படுமோ என்ற யோசனைகள் பேரில் இதற்கு மேல் செய்ய இந்திய அரசு தயாராக இல்லை. அது புரிந்துக் கொள்ளக் கூடியதுதான். வெளியுறவுக் கொள்கைகளின் நாட்டின் நலப் பாதுகாப்பு என்பது ஒன்றுதான் முக்கியக் காரணியாக இருக்க வேண்டும். ஆனால் நிஜமாகவே இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்பட்டனவா என்றுப் பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி அஞ்சியே காரியம் செய்ததில் இந்தியாவிம் கௌரவம் பாழாய் போனதுதான் மிச்சம்.

1956 அரபு-இஸ்ரேலிய யுத்தத்தில் பாகிஸ்தான் அரபு நிலைக்கு எதிர் நிலை எடுத்தது. ஏனெனில் அச்சமயம் அது அமெரிக்காவுடன் பல ஒப்பந்தங்கள் செய்துக் கொண்டிருந்தது. ஆனாலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எப்போது பிரச்சினைகள் வந்தாலும் அரபு தேசத்தவர்கள் தங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்து வந்த இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானையே ஆதரித்து வந்திருக்கின்றனர். இதற்குக் காரணம் பாகிஸ்தான் இசுலாமிய நாடு என்பதுதான்.

ஆனால் என்ன அவமானம் பட்டாலும் இந்தியா ஒன்றும் செய்யும் நிலையில் இல்லை. நாயர் புலி வாலைப் பிடித்தக் கதையாய் விரும்பினால் கூட இஸ்ரேலுடன் தன் ராஜரீக உறவை அப்கிரேட் செய்யும் நிலையில் இல்லை இந்தியா.

இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானங்கள் அனேகம். அறுபதுகளின் முடிவில் இஸ்ரேலியர் கட்டுப்பாட்டில் இருந்த ஜெருசலத்தில் ஒரு மசூதியில் யாரோ பயித்தியக்காரன் நாச வேலை செய்ய அரபு நாடுகள் ஒரு பெரியக் கூச்சல் இஸ்ரேலுக்கெதிராகக் கிளப்பின. அதைப் பற்றி விவாதிப்பதற்காக ராபாத்தில் ஒரு இஸ்லாமிய தேசங்களின் மகாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தானும் ஒரு இஸ்லாமிய நாடுதான், தன்னையும் அழைக்க வேண்டும் என்று நிஜமாகவே இந்தியா அடம் பிடித்துக் கெஞ்சியது. அது அவமானங்களின் ஆரம்பம். ரொம்பக் கெஞ்சியதன் பேரில் இந்தியாவுக்கு வேண்டா வெறுப்பாக ஓர் அழைப்பு அனுப்பபட்டது. பக்ருதீன் அஹ்மத் அவர்கள் இந்தியாவின் பிரதிநிதியாக ராபாட் விரைந்தார். ஆனால் என்னப் பரிதாபம். அதற்குள் பாகிஸ்தானும் ஜோர்டானுமாகச் சேர்ந்து நடவடிக்கை எடுத்து இந்த அழைப்பை ரத்து செய்வித்தனர். இந்தியப் பிரதிநிதி மாநாடு நடந்த ஹாலுக்கு வெளியேயே நிறுத்தப்பட்டார், பள்ளியில் வகுப்புக்கு வெளியே மாணவனை நிறுத்தி வைப்பது போல. பல முறை ஜாடை மாடையாக பெற்ற அவமானங்களுக்கு இது ஓர் சிகரமாக அமைந்தது. அக்காலக் கட்டத்தில் இதையெல்லாம் பத்திரிகையில் படித்து மிக வெட்கப்பட்டேன். இதுவும் இந்திரா அவர்களின் ஒரு சாதனை. ஏற்கனவே சொன்னது போல இந்திய பாகிஸ்தான் யுத்தங்கள் எல்லாவற்றிலும் பாக் ஆதரவு நிலையையே அரபு நாடுகள் செய்து வந்துள்ளன.

1972 ஒலிம்பிக் போது 11 இஸ்ரேலியத் தடகள வீரர்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கொல்லப் பட்டனர். அது பற்றி இந்தியாவின் கருத்துக் கேட்கப் பட்டபோது இந்தியத் தொடர்பு அதிகாரி ஒன்றுமே பேசாமல் தோள்களைக் குலுக்கினார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலியர் ஒரு பாலஸ்தீனியத் தீவிரவாதிகள் முகாமைத் தாக்கியப் போது மட்டும் அதே அதிகாரி உரக்கவே தன் ஆட்சேபத்தை வெளியிட்டார்.

ஜூலை 1976. ஓர் ஏர் பிரான்ஸ் விமானம் உகாண்டாவுக்குக் கடத்தப்பட்டு அதில் இருந்த யூதப் பயணிகளை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு மற்றப் பயணிகளையும், விமானச் சிப்பந்திகளையும் விடுதலை செய்தனர் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். இடி அமீனும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாய் செயல்பட்டார். அப்போதெல்லாம் இந்தியா அதைக் கண்டிக்கவில்லை. இஸ்ரேல் என்ன செய்தது? 4000 மைல்கள் பறந்துச் சென்று 53 நிமிடச் செயல்பாட்டுக்குப் பிறகு அத்தனைப் பேரையும் மீட்டு வந்தது, ஒரே ஒரு வயதானப் பெண்மணியைத் தவிர. ஏனெனில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரை உகாந்தியர் கொன்று விட்டனர். இந்தியா இப்போது என்ன செய்தது? உகாந்தாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டது என்று கூப்பாடு போட்டது. தன்னைப் பாதுகாதுக் கொள்ள முடியாதக் கிழவியைக் கொன்றது பற்றி மூச்சுக் கூட விடவில்லை இந்தியா. என்ன வெட்கம்!

எண்டெப்பியைப் பற்றி பேசும்போது; அது நடப்பதற்கு முன்னால் நான் படித்த ஒரு கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு பயங்கரவாதியிடம் மூவர் அகப்பட்டுக் கொண்டனராம். ஒரு இந்தியர், ஒரு அமெரிக்கர், ஒரு இஸ்ரேலியர். அவர்களை கொல்ல முடிவு செய்த பயங்கரவாதி தத்தம் கடைசி ஆசையை கூறும்படி அவர்களை கேட்கிறார். இந்தியரும் அமெரிக்கரும் கடவுள் பிரார்த்தனை செய்ய ஆசைப்பட, இஸ்ரேலியரோ, பயங்கரவாதி தன்னை உதைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறார். அவனும் அவ்வாறே செய்ய, பந்து போல ப்ரூஸ் லீ ஜம்ப் செய்து, குட்டிக்கரணம் அடித்து, தன் கைத்துப்பாக்கியால் பயங்கரவாதியை சுட்டுக் கொன்று விடுக்கிறார். இதை முன்னமேயே செய்திருக்கலாமே என அமெரிக்கர் கேட்க, அவ்வாறு செய்திருந்தால் இந்தியர் பயங்கரவாதியைக் கொன்ற குற்றத்துக்காக தன்னை ஐ.நா. பொதுச் சபை முன் இட்டுச் சென்றிருப்பார் என இஸ்ரேலியர் கூறுகிறார்.

இதை நான் படித்தபோது, ரொம்பத்தான் மிகைபடுத்திக் கூறுகிறார்கள் என நினைத்தேன். ஆனால், எண்டெப்பி விஷயத்தில் இந்தியா நடத்திய கூத்தைப் பார்த்ததும் மனம் மாறி விட்டது.

இஸ்ரேல் செய்தப் பசுமைப் புரட்சியின் தொழில் நுட்பத்தை இந்தியாவுக்குத் தர முன் வந்தது. அரபு நாட்டவர் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில் இந்தியா அதை மறுத்தது. அதேபோல டேவிஸ் கப் போட்டியின் இறுதி ஆட்டம் இஸ்ரேலில் நடந்தது. நம் விஜய் அமிர்த்தராஜும் மற்ற வீரர்களும் சுலபமாக ஜெயித்திருக்க முடியும். ஆனால் நாம் போகாமல் இஸ்ரேல் வாக் ஓவரில் ஜெயித்தது.

இந்த அழகில் இஸ்ரேலின் முக்கிய எதிரியான எகிப்து அதற்கு ராஜரீக அங்கீகாரம் கொடுத்தது. அந்த நாடு தன் நலனுக்கேற்பச் செயற்பட்டது. ஆனால் இந்தியா? அதன் பிறகுதான் இஸ்ரேலுடன் தன் ராஜீய உறவுகளைப் பலப்படுத்தியது. என்ன வானமா இடிந்து விழுந்து விட்டது? முதலிலேயே செய்திருந்தால் நம் நிலைமை இன்னும் வலுவானதாக இருந்திருக்கும். பிறகு தேவையானால் அந்த உறவை அடக்கி வாசித்திருக்கலாம். அது ஒன்றுக்கும் இடமளிக்காமல் காரியம் செய்ததால் ஒரு பயல் நம்மை மதிக்கவில்லை.

இவ்வளவு ஆதரவு தெரிவித்தும் 1973-ல் மீண்டும் அவமானப்பட்டது. எண்ணை விலையை உயர்த்தி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே எண்ணை சப்ளை என்றன எண்ணை உற்பத்தி செய்த நாடுகள். அப்படி வெளியிட்ட லிஸ்டில் இந்தியா இல்லை. இம்மாதிரியாகத்தான் ஒரு கை ஓசையால் இந்தியா திரும்பத் திரும்ப அவமானத்தை சந்தித்தது.

அடுத்தப் பதிவில் இன்னும் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/29/2006

நான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன் - 2

இப்போது இரண்டாம் பதிவுக்கு செல்வோமா. அங்கு கூற மறந்தது இங்கே கூறிவிடுகிறேன். அதாவது, ஒரு பழைய பதிவை வகைபடுத்த வேண்டுமானால் மீள்பதிவைத் தவிர எனக்கு வேறுவழி தெரியவில்லை. வகைபடுத்தாவிட்டால் அவற்றிற்கான பின்னூட்டங்கள் வரும்போது தமிழ்மணத்தில் அவற்றை இற்றைப் படுத்தப்பட முடியவில்லை. இப்போது இரண்டாம் பதிவின் மீள் பதிவுக்கு செல்வோம்.

எவ்வளவு பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. ஐ.நா. பொதுச் சபையில் 1947-ல் பாலஸ்தீனத்தை யூதப் பகுதியாகவும், யூதரல்லாதப் பகுதியாகவும் பிரிக்க வந்தத் தீர்மானம் தேவையான 2/3 பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப் பட்டது. அதற்கு முக்கியக் காரணம் சோவியத் யூனியனும் அதன் ஆளுகைக்குட்பட்ட நாடுகள்தான். அறுபதுகளில் சோவியத் யூனியன் அரேபியர்களுக்கு ஆதரவாகப் போட்ட ஆட்டங்களைப் பார்த்தவர்களுக்கு இது நம்ப முடியாததுதான்.

என் நினைவுகளிலிருந்து எழுதுகிறேன். தீர்மானத்தை இந்தியா எதிர்த்தது. பிரிட்டன் நடு நிலைமை வகுத்தது. அமெரிக்கா ஆதரித்தது. சோவியத் யூனியனும் அதன் ஆளுமைக்குட்பட்ட நாடுகளும் ஆதரித்தன. சோவியத் யூனியன் ஏன் அவ்வாறு செய்தது?

எந்த நாடாயினும் சரி, ராஜரீக விஷ்யத்தில் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்தல் அவசியம். "நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர விரோதியும் இல்லை, நிரந்தரம் நம் நாட்டின் நலனே" என்பதே தாரக மந்திரம். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தத் தருணம். சோவியத் யூனியனுக்கு மத்தியக் கிழக்கு ஆசியாவில் ஒரு நட்பு நாடு தேவைப்பட்டது. அது இஸ்ரேலாக இருக்கும் என்று நினைத்தது. ஏனெனில் இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியனும் அவரது கட்சியும் சோஷலிசக் கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. இஸ்ரேல் ஜனநாயகத்தைத் தேர்ந்தெடுத்தது. மெதுவாக சோவியத் யூனியன் அரேபியர்கள் பக்கம் சாய ஆரம்பித்தது.

1948-ல் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டப்போது அமெரிக்கா அதற்கு de facto அங்கீகாரம்தான் கொடுத்தது, சோவியத் யூனியனோ de jure அங்கீகாரமே கொடுத்தது. முன்னதை விடப் பின்னது அதிக சக்தி வாய்ந்தது.

இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டப்போது பென் குரியன் இஸ்ரேலியப் பகுதியில் வாழும் யூதரல்லாதவர்களை அங்கேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். எல்லோரும் புது தேசத்தில் சமக் குடியுரிமை பெற்று வாழலாம் என்றுக் கூறினார். ஆனால் சுற்றியிருந்த அரபு தேசங்கள் அவர்களை இடத்தைக் காலி செய்து தற்காலிகமாக வேறு இடங்களுக்குச் செல்லப் பணித்தனர். அப்போதுதான் யூதர்களைக் கடலுக்குள் தள்ளி ஒரேயடியாக இஸ்ரேல் இல்லாமல் செய்ய முடியும் என்று ஆசை காட்டினர். அப்போது வெளியேறியவர்கள்தான் பாலஸ்தீன அகதிகள். 1948 போரில் இஸ்ரேல் எதிர்பாராமல் வெற்றி பெற்று விட்டது. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாக பாலஸ்தீனியர் அகதி முகாம்களில் மாட்டிக் கொண்டனர். இந்த அழகில் ஜோர்டான் வேறு யூதர் அல்லாதப் பகுதி என்று ஐ.நா. அறிவித்திருந்தப் பகுதியைக் கபளீகரம் செய்து தன்னுடன் சேர்த்துக் கொண்டது. அதுதான் மேற்குக் கரைப் பகுதி. 1948 போர் நிறுத்தத்துக்குப் பின்னால் ஜெரூஸலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பெரும் பகுதி ஜோர்டனிடமும், ஒரு சிறு பகுதி இஸ்ரேலியரிடமும் வந்தது. இஸ்ரேலியரால் அழுகைச் சுவர் என்றுப் பெயரிடப்பட்ட பயைய யூதக் கோவிலின் இடிபாடு ஜோர்டான் வசம். 1948-லிருந்து 1967 வரை யூதர்களுக்கு அங்கே அனுமதியில்லை. 1956-ல் சூயஸ் கால்வாயை எகிப்தியர் தேசீயமயமாக்கினர். அப்போதிலிருந்து இஸ்ரேலியக் கப்பல்கள் அதில் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இஸ்ரேலை எல்லாப் பக்கங்களிலிருந்தும் நசுக்கி அதை ஒன்றுமில்லாமல் செய்வதே அரபு தேசங்களின் நோக்கம்.

ஆனால் என்ன அக்கிரமம்! இஸ்ரேல் அழிய மறுத்தது. அது பாட்டுக்கு உலகெங்கிலிருந்தும் யூதர்களை வந்துக் குடியேறச் செய்துக் கொண்டிருந்தது. எந்த நாட்டிற்கும் இம்மாதிரி சந்தர்பங்களில் முழி பிதுங்கியிருக்கும். ஆனால் இஸ்ரேல் எல்லா சோதனைகளையும் தைரியமாக சமாளித்து வந்தது. இஸ்ரேலின் அந்த நாட்களை வர்ணிக்கும் லியோன் ஊரிஸ் என்னும் எழுத்தாளர் தன் நாவல் "எக்ஸோடஸ்"ல் இவ்வாறு எழுதுகிறார் (நினைவிலிருந்து எழுதுகிறேன், தமிழ் மொழி பெயர்ப்பு என்னுடையது):

"அவர்கள் (யூதர்கள்) எல்லா விதமாகவும் வந்தனர். சிலர் நடந்து வந்தனர். சிலர் கப்பல்களில் வந்தனர். சிலர் விமானங்களில் வந்தனர். சிலர் சைக்கிளில் வந்தனர். அவர்கள் 64 நாடுகளிலிருந்து வந்தனர்"

1956-ல் நடந்தப் போரில் இஸ்ரேல் சினாயை மிகத் துரிதமாகப் பிடித்தது. ஆனால் அமெரிக்காவின் வற்புறுத்தலால் அது சினாயைக் காலி செய்தது. அப்போது அமெரிக்கா இஸ்ரேலின் நலனைப் பாதுகாப்பதாக உறுதி கூறியது. இருப்பினும் இஸ்ரேலியக் கப்பல்கள் சூயஸ் கால்வாயில் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதிலிருந்து இஸ்ரேல் ஒரு பாடம் கற்றுக் கொண்டது. அதாவது தன் நலனைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டும். நட்பு நாடுகள் எப்போதும் உதவிக்கு வருவார்கள் என்றுச் சொல்ல முடியாது. இதற்கு முன்னால் இப்படித்தான் 1938-ல் செக்கொஸ்லோவாக்கியா பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் கைவிடப்பட்டது.

1967-ல் நிலை என்ன? இஸ்ரேலுக்கு மறுபடி நெருக்கடி. அதைச் சுற்றியுள்ளத் தேசங்கள் அதை அழித்தே தீருவது என்றுக் கங்கணம் கட்டின. அப்போரைப் பற்றி என் முந்தையப் பதிவில் எழுதியுள்ளேன். யுத்தத்துக்கு சில தினங்களுக்கு முன் வெவ்வேறு நாடுகளிலிருந்த இஸ்ரேலியத் தூதுவரகங்களுக்கு உள்ளூர் யூதர்கள் வந்து இஸ்ரேலுக்காக சண்டையிட விருப்பம் தெரிவித்தனர். "ஏற்கனவே 60 லட்சம் பேரை ஹிட்லரின் வெறிச்செயல் கொன்று விட்டது. இன்னொரு படுகொலையை எங்களால் தாங்க முடியாது. நாங்களும் உங்களுடன் சேர்ந்து இறக்கிறோம்" என்றுக் கூறினர். இஸ்ரேலியரோ அவர்களிடம் இவ்வாறுக் கூறினர். "இறப்பதா, அதற்கு வேறு ஆள் பாருங்கள். நாங்கள் வாழப் பிறந்தவர்கள்" என்றனர்.

இஸ்ரேலிய எழுத்தாளர் எஃப்ரைம் கிஷோன் (Ephraim Kishon) எழுதியதைப் பார்ப்போம். அவருடையப் புத்தகம் "மன்னியுங்கள் ஐயா, நாங்கள் வெற்றி பெற்றதற்கு". அதில் உள்ளக் கட்டுரைகள் அச்சமயத்தில் இஸ்ரேலியப் பத்திரிகை ஒன்றில் தொடராக வந்தது. ஆரம்பக் கட்டுரைகள் இஸ்ரேல் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகளை பற்றியவை. ஆகவே ரொம்ப ஸீரியஸாக இருக்கும். ஆனால் போருக்குப் பின்? ஒரே தமாஷ்தான். "நிர்பந்திக்கப்பட்ட அதிசயக் குழந்தை" என்றுத் தலைப்பிடப்பட்ட ஒரு படம். அதில் இஸ்ரேலை ஒரு பையனாகக் காண்பித்திருப்பார்கள். நாலா பக்கத்திலிருந்தும் வரும் தாக்குதல்களை தன் குத்துக்களால் எதிர்க் கொள்கிறான். இன்னொரு படத்தில் அவன் இஸ்ரேலியக் கொடியை ஏந்திக் கொண்டு ஒவ்வொரு ஊராகக் கைபற்றிக் கொண்டே செல்ல, அவன் பின்னால் சரித்திரம் ஒரு பெண் ரூபத்தில் கதறிக் கொன்டே வருகிறது: "இவ்வளவு வேகமாகப் போகாதே, எனக்கு மூச்சு வாங்குகிறது". இம்மாதிரிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அடுத்தப் பதிவில் இந்தியா இஸ்ரேல் பிரச்சினையை எவ்வாறு கையாண்டது என்பதைப் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன் - 1

மிகுந்த யோசனைகளுக்கு பிறகு இஸ்ரேலைப் பற்றிய எல்லா ஐந்து பதிவுகளையும் மீள் பதிவு செய்யத் தீர்மானித்துள்ளேன். இதற்கு கடைசி தூண்டுதல் இஸ்ரேலில் இருக்கும் சங்கர நாராயணன் அவர்களின் பின்னூட்டம் கொடுத்தது. அதே நேரம் அவரும் இஸ்ரேலில் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை விவரித்து பதிவுகள் போட்ட வண்ணம் இருக்கிறார்.

அவரும் நானும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போகிறோம். இஸ்ரேலுடன் உறவை பலப்படுத்துவது இந்தியாவின் நலனுக்கு உகந்தது என்பதே அது. பாலஸ்தீனிய ஆதரவு நமக்கு என்ன பெரிதாகக் கொடுத்து விட்டது? எல்லா ஆதரவையும் அவர்கள் பெற்றுக் கொண்டனர், ஆனால் பாகிஸ்தானுடன் பிரச்சினை என்றவுடனேயே அவர்கள் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானையே ஆதரிக்கின்றனர். வெளி உறவு விஷயத்தில் தேசத்தின் நலன்கள்தான் நிரந்தரம், நண்பனோ அல்லது எதிரியோ அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது முதல் பதிவுன் மீள்பதிவு பழைய பின்னூட்டங்களுடன்.

ஜூன் 5, 1967. நாசர் இஸ்ரேலியத் துறைமுகத்துக்கு வழியை அடைத்தார். ஐ.நா. துருப்புகளை சினாய் பாலைவனத்திலிருந்து திரும்பச் செல்ல வைத்தார். அப்போதைய பத்திரிகைகக்ளில் உலகின் அப்பகுதியின் வரைபடம் காண்பிக்கப்பட்டது. அதில் அம்புக் குறிகள் எல்லாம் இஸ்ரேலுக்குள் சுற்றியுள்ள அரபு நாடுகளிலிருந்து அதன் உள்ளே செல்வது போலக் காண்பிக்கப்பட்டிருந்தன.

ஜூன் 6. யுத்தம் ஆரம்பம். அதற்கு முந்திய நாள் இஸ்ரேல் தங்கள் ரிஸ்ர்வ் படைகளைத் திரட்டியது. சில நிமிடங்களில் அழைப்புகள் அனுப்பப்பட்டு இஸ்ரேலிய வீரர்கள் தத்தம் யூனிட்டுகளுக்குப் பயணப்பட்டனர். போகும் வழியில் வண்டியிலேயே முகச்சவரம் செய்து கொண்டு, போர் உடைகளை அணிந்துச் சென்றனர். இஸ்ரேலிய அரசியல் மற்றும் ராணுவத் தளபதிகள் ஒருங்கிணைந்துத் துல்லியமாகத் திட்டமிட்டனர்.

முதல் இரண்டு நாட்களில் எகிப்தின் அத்தனைப் போர் விமானங்களும் தரையிலேயே அழிக்கப் பட்டன. மற்ற நாடுகளின் விமானங்களும் தப்பவில்லை. அரேபியர்கள் முட்டாள்தனமாக தாங்கள் வெற்றி பெற்று வருவதாக யுத்தப் பிரசாரம் செய்ய அவர்களின் புரவரலரான சோவியத் யூனியனும் ஏமாந்து விட்டது. கோலன் உயரங்களிலிருந்து இஸ்ரேலிய வயல்களைத் தாக்கி வந்திருக்கிறது சிரியா. அவற்றைப் பிடித்தது இஸ்ரேலியரின் இன்னொரு படைப் பிரிவு. அதுவும் சிரியர்கள் எதிர்ப் பார்க்காத கோணத்திலிருந்து வந்தது அவர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது. லெபனான் இரண்டு விமானங்களை இழந்து இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று ஒதுங்கியது. ஜோர்டானுக்கு இஸ்ரேல் சண்டையிலிருந்து விலகி நின்றால் அதைத் தான் தாக்கப் போவதில்லை என்று செய்தி அனுப்பியது. அது கேட்காமல் யுத்தத்தில் கலந்துக் கொள்ள, மிக அதிக உதை அதற்குத்தான். சொல்லப் போனால் இஸ்ரேலியர் மற்ற எல்லா முனைகளை விட ஜோர்டான் முனையில் உயிரை வெறுத்து சண்டையிட்டனர். அவர்களை ஜோர்டானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெரூசலத்தைப் பிடித்ததும்தான் நின்றனர் இஸ்ரேலியர். இதற்குள் யுத்தம் ஆரம்பித்து 5 நாட்கள் ஆகிவிட்டன. சோவியத் யூனியன் அரேபியர்களுக்குக் கொடுத்த ராணுவத் தளவாடங்களில் முக்கால்வாசி இஸ்ரேலியரிடம். இஸ்ரேலிய தளபதி மோஷே தயான் உலகப் பிரசித்திப் பெற்றவரானார். சோவியத் யூனியன் போர்நிறுத்தத்திற்கு வற்புறுத்த, போர் 6 நாட்களில் முடிவுக்கு வந்தது.

அது வரைக்கும் ஜெர்மானியர்கள் யூதர்களைப் படுகொலை செய்த விவரங்களைப் படித்து ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தேன். இஸ்ரேலின் இந்த வெற்றி எனக்கு மிகுந்த மன்நிறைவைக் கொடுத்தது.

கதையின் நடுவிலிருந்து ஆரம்பித்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். யூதர்கள் 2000 ஆண்டுகளுக்கு மேல் ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர். அவர்கள் வீறு கொண்டெழுந்து ஒரு நாட்டையே நிறுவியது உலகில் இதுவரை நடந்திராத சாதனை. இறந்த மொழி என்றுக் கருதப்பட்ட ஹீப்ரூவை மறுபடி ஒரு பேசுமொழியாக ஆக்கியது சரித்திரத்தில் ஒரு சிறப்பிடம் பெரும். இதையெல்லாம் அடுத்தப் பதிவுகளில் பேசத்தான் போகிறேன். அதற்கு முன் 1967 ஒரு ட்ரெயிலரே. இது எனக்குத் தனிப்பட்ட முறையில் நிறைவைத் தந்தது.

ஆறு நாள் போரைப் பற்றி சில ஜோக்குகள்:
1. இஸ்ரேல் உல்லாசப் பயணத் துறை விளம்பரம் செய்கிறது: "இஸ்ரேலுக்கு வாருங்கள், பிரமிட்டுகளைப் பார்க்கலாம்."
2. சினாய் பாலவனத்தில் ஒரு எகிப்தியப் படை தூரத்தில் ஒரு இஸ்ரேலியப் போர்வீரனைக் கண்டு, அவனைப் பிடித்து வருமாறு ஒவ்வொருவராக அனுப்ப, ஒருவரும் திரும்பவில்லை. கடைசியில் ஒரு எகிப்திய வீரன் தலைதெறிக்க ஓடி வந்து தன் தலைவனிடம் கூறுகிறான்: "நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். அங்கு இரண்டு இஸ்ரேலியர்கள் உள்ளனர்."
3. நாசர் ராஜினாமா செய்தார். எஷ்கால் (அப்போதைய இஸ்ரேலியப் பிரதமர்) அதை ஏற்க மறுத்தார்.
4. நாசர் சோவியத் யூனியனிடம் அதிகத் தளவாடங்கள் கேட்டு எழுதுகிறார். அவருக்கு வந்த பதில்: "இஸ்ரேலியர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதற்கு லிஸ்ட் அனுப்பவும்."

இஸ்ரேலைப்பற்றி எழுத மறுபடியும் வருவேன்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

2/23/2005

ஜெர்மன் கற்றுக் கொண்டக் கதை - 2

ஜெர்மன் கற்றுக் கொண்டக் கதை - 2
தேசிகன் எனக்குச் செய்த உதவி அளவற்றது. எம்- 1 வகுப்பில் கடைசி ஒரு மாதம் படித்ததற்குக் கட்டணம் பெற மறுத்து விட்டார். ஆக நான் ஜெர்மன் வகுப்புக்களுகாகக் கட்டிய மொத்தப் பணம் 48 ரூபாய்கள்தான்.
1971 ஜனவரியில் மத்தியப் பொதுப் பணித் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பதவி நியமனம் பெற்றேன். வேலை பம்பாயில். அங்கிருந்த மேக்ஸ் ம்யுல்லர் பவன் என்னைக் கவரவில்லை. தவறு என்னுடையதுதான். சென்னை மேக்ஸ் ம்யுல்லர் பவனை மறக்க இயலவில்லை. அவ்வாண்டு ஜூலையில் பூனா மேக்ஸ் ம்யுல்லர் பவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். இந்தியாவிலேயே மிகச் சிறப்பானது அது. முழு நேரப் பாடங்கள் அங்கே. நான் எம்- 2 வகுப்புக்கானத் தேர்வை பிரைவேட்டாக எழுத முடியுமா என்றுக் கேட்டிருந்தேன். கடிதம் எழுதியது ஆங்கிலத்தில். அவர்கள் பதில் வந்ததோ ஜெர்மனில். இம்மாதிரி அவர்களுக்கு ஒரு கடிதமும் வந்ததில்லை என்பதைப் பிறகு அறிந்தேன். நானும் ஜெர்மனில் எழுத, அவர்கள் பதில் போட, ஆகஸ்டில் எம்- 2 எழுதி தேர்ச்சிப் பெற்றேன். இரண்டாம் ரேங்க்தான் கிடைத்தது. நவம்பரில் ஒரு டிப்ளொமா பரீட்சைக்குப் பணம் கட்டி நவம்பரில் அதிலும் தேர்ச்சி பெற்றேன். இது ம்யுன்ஷென் சர்வகலாசாலைக்காக கதே இன்ஸ்டிட்யுட்டால் உலகெங்கும் உள்ள பல தேர்வு மையங்களில் நடத்தப் படும் தேர்வு. விடைத் தாள்கள் ஜெர்மனியில் மதிப்பீடு செய்யப் படும். பூனாவும் தேர்வு மையங்களில் ஒன்று.
அத்துடன் ஜெர்மன் பரிட்சைகள் என்னைப் பொருத்தவரை முடிவுக்கு வந்தன. பிறகு ஜெர்மனில் புத்தகங்கள் படிப்பதே வேலையாகப் போயிற்று. ஆனால் மொழி பெயர்ப்பு வேலைகள் ஒன்றும் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. அதைச் செய்ய 1975-ல் தான் வாய்ப்பு கிடைத்தது. 1974-ல் எனக்குச் சென்னைக்கே மாற்றல் வந்து விட்டது. தேசிகன்தான் வழக்கம் போல மொழி பெயர்ப்பு வேலைகள் பெறுவதற்கும் உதவினார். எப்போது அவரைப் பார்த்தாலும் என்னுடன் ஜெர்மனிலேயே பேசுவார்.

1975-ல் ஃபிரெஞ்சு கற்பதற்காக சென்னை அல்லியான்ஸ் ஃபிரான்சேஸில் சேர்ந்தேன் அந்தக் கதை பின்னால் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/22/2005

ஜெர்மன் கற்றுக் கொண்டக் கதை

1969, ஜூலை 1. எல்லோரும் எங்கள் முதல் ஜெர்மன் வகுப்புக்காக உட்கார்ந்திருந்தோம். சரியாக 9 மணிக்கு மிடுக்காக உள்ளே நுழைந்தார் எங்கள் ஆசிரியர் சர்மா அவர்கள். சிறு அறிமுகம் - 1 நிமிடத்திற்கு, ஆங்கிலத்தில். அதில் அவர் கூறியதன் சாராம்சம் தான் இனி ஜெர்மனில்தான் பேசப் போவதாகவும் அம்மொழியிலேயே ஜெர்மன் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

உடனே பாடத்தை ஆரம்பித்து விட்டார். முதலில் பாடத்தை அவர் நிறுத்தி நிதானமாக உரக்கப் படித்தார். பிறகு எங்களை அதே உச்சரிப்புடன் படிக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம், தட்டுத் தடுமாறிப் படிக்க ஆரம்பித்தோம். பயிற்சி மிக உபயோகமாக இருந்தது. இது புது முறையைச் சார்ந்தது என்பதை அறிந்தோம். பிறகு டேப் ரிக்கார்டர் வழியே ஒரு ஜெர்மானியரின் உச்சரிப்பையும் பெற்றோம். எல்லாவற்றையும் கான்டக்ஸுடன் படித்துக் கேட்டதால் ஜெர்மன் மொழி எங்களை அறியாமலேயே எங்களிடம் குடி புகுந்தது.

கூடவே உரக்க நாங்களும் பாடத்தைத் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. பலருக்கு உரக்கக் கத்துவதில் கூச்சம். ஆகவே உதட்டை மட்டும் அசைத்தனர். ஆனால் நான்? கூச்சமா? மூச், பேசப்படாது என்பது என் தாரக மந்திரம். என்னைப் பொருத்தவரை சர்மா தன் தெளிவானக் குரலில் ஜெர்மனில் எதைக் கூறினாலும் எனக்குப் புரிய ஆரம்பித்தது.

மெதுவாக வகுப்பில் மாணவர் நிலை ஒரு சமன்பாட்டுக்கு வரத் துவங்கியது. முதலில் வகுப்பறையில் உட்காரக்கூட இடம் இருக்காது. ஓரிரு வாரத்திலேயே சட சடவென்று பல மாணவர்கள் வகுப்புக்கு வருவதை நிறுத்தினர். மிஞ்சியவர்கள் அபார முன்னேற்றம் அடைந்தனர்.

நான் சேர்ந்தது Grundstufe - 1 வகுப்பில். ஒவ்வொருக் கல்வியாண்டிலும் இரண்டு செமஸ்டர்கள். முதல் செமஸ்டர் தேர்வு நவம்பர் 1969-லும், இரண்டாம் செமஸ்டர் தேர்வு ஏப்ரல் 1970-லும் நடப்பதாகத் திட்டம். அப்போது G - 1 சான்றிதழ் கிடைக்கும்.

இப்போது நான் ஒரு காரியம் செய்தேன். வாரத்துக்கு மூன்று வகுப்புகள், காலை 8-லிருந்து 9 வரை. மீனம்பாகத்திலிருந்து மாம்பலத்துக்கு மின் ரயில் வண்டியில் பயணம், அங்கிருந்து அண்ணா சாலை டி.வி.எஸுக்கு பேருந்துப் பயணம். ஆக, பயண நேரம் ஒரு மணிக்கு மேல். அப்போது விளையாட்டாக அடுத்தப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்து, அதில் கூறப்பட்டப் பயிற்சிகளைச் செய்யத் தலைப் பட்டேன். ஒரு வேளை ஏதாவது ஒரு நாள் வகுப்புக்குச் செல்ல முடியாவிடினும் சமாளித்துக் கொள்ளலாம் என்பதே இதற்குக் காரணம். ஆனால் நடந்ததென்னவென்றால் முதல் செமஸ்டர் முடியும் முன்னரே முழுப் புத்தகத்தையும் எல்லப் பயிற்சிகளையும் எழுத்தால் செய்து முடித்து விட்டேன். இப்போது ஜெர்மனில் நானே வாக்கியங்களை உருவாகிப் பேச ஆரம்பித்தேன். முதலில் என்னை வியப்புடன் பார்த்த சர்மா அவர்கள் என்னுடன் ஜெர்மனில் பேச ஆரம்பித்தார். நான் செய்தத் தவறுகளை நாசூக்காகத் திருத்தினார். மொழி வகுப்புகளில் எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய டிக்டேஷன் எனக்கு ஒரு ஒரு விளையாட்டாயிற்று.

நவம்பர் 1969-ல் ஒரு நாள் மாலை 7 மணிக்கு முதல் செமஸ்டர் தேர்வு. சித்ரா திரையரங்கில் பாமா விஜயம் பகல் நேரக் காட்சியைப் பார்த்து விட்டு, மாலை தேர்வுக்குச் சென்றால் எல்லா மாணவர்களும் கடைசி நேரக் கொந்தளிப்பில். நான் பாட்டுக்கு ஒரு ஜெர்மன் தினசரிப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்து விட்டு இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மையரின் கட்சிக்குத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று என் நண்பர்களிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அவர்களுக்கோ வாழ்க்கையே வெறுத்து விட்டது. பரீட்சை முடிவு வந்தது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு எனக்கு முதல் பரிசு கிடைத்தது.

இன்னொரு போனஸ். முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர்கள் அடுத்த வகுப்புக்கான முதல் மாதக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டது. (மாதக் கட்டணம் 12 ரூபாய்!). ஆனால் ஒரு நிபந்தனை. பின் வரும் எல்லா மாதத் தேர்விலும் முதல் வகுப்பு மதிப்பெண்களை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அம்மாதத்திலிருந்து கட்டணம் கட்ட நேரிடும். நான் முதல் செமச்டருக்காகக் கட்டிய நான்கு மாதக் கட்டணமான 48 ரூபாய்களுக்கு மேல் ஒரு பைசாவும் கட்டவில்லை. வெறுமனே பரீட்சைக் கட்டணம் (ரூ. 10) மட்டுமே கட்டினேன்.

நவம்பர் 1969-ல் இரண்டாம் செமஸ்டர். கல்யாணி ஜானகிராமன் என்ற ஒரு அருமையானப் பெண்மணி வகுப்பெடுத்தார். ஏப்ரல் 1970-ல் இரண்டாம் செமஸ்டர் தேர்விலும் தேறி அடுத்த வகுப்புக்கான கட்டணத்திலிருந்து விலக்குப் பெற்றேன். இப்போது G - 2 வகுப்பை ஒரே செமஸ்டரில் முடிக்கத் திட்டமிட்டு, வாரத்துக்கு 5 நாள் வகுப்பில் சேர்ந்தேன். ஆசிரியை சியாமளா அவர்கள். வயலின் வித்தகர் துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் பெண். (மாதக் கட்டணம் 18 ரூபாய்கள், நான் கட்டவில்லை). பாதி செமஸ்டரில் Mittelstufe - 1 வகுப்புக்கானப் புத்தகம் வாங்கி பயிற்சிகளைச் செய்யலாமா என்று தேசிகனுடன் ஆலோசனை செய்ததில் அவர் மிகுந்த உற்சாகத்துடன் எனக்கு உதவி செய்தார். அவ்வகுப்பில் கடைசி மாதத்துக்கு மட்டும் வகுப்புக்குச் சென்றேன். சர்மாதான் ஆசிரியர். பிறகு நடந்ததுதான் தமாஷ். இரண்டு பரீட்சைகளையும் சில நாட்கள் இடைவெளியில் எழுதி இரண்டிலும் முதல் பரிசு பெற்றேன். முதல் பரிட்சை (G-1) அன்றுப் பார்த்தப் படம் சிராக் என்ற ஹிந்திப் படம், அடுத்தப் பரீட்சை (M1) தினத்தன்றுப் பார்த்தது லட்சுமி கல்யாணம்!

பதிவு மிக நீள்வதால் இங்கு நிறுத்துகிறேன். அடுத்தப் பதிவில் மேலே எழுதுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது