10/31/2008

டோண்டு பதில்கள் 31.10.2008

நரசிம்மா:
1. ஜீ டிவி தமிழில் ஒளிபரப்பு தொடங்கி இருக்கிறார்களே, அவர்கள் முதலிடத்துக்கு வர முடியுமா?
பதில்: முயன்றால் முடியாதது இல்லை. ஆனால் நிகழ்ச்சிகள் உண்மையாகவே உள்ளூர் தமிழாக இருக்க வேண்டும். இந்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது போன்ற தோற்றம் எல்லாம் தரலாகாது. பை தி வே அதை இன்னும் பார்க்கவில்லை. எங்கள் கேபிள் டிவியில் தெரியவில்லை. இது கட்டணச் சேனல் என கேள்விப்படுகிறேன். அப்படியானால் எடுத்ததுமே டிபாசிட் காலிதான்.

2. தமிழில் சன் டிவிக்கு அடுத்தபடியாக ஆரம்பிக்கபட்ட ராஜ் டிவி ஏன் இன்று வரை கடைசி நிலையில் தள்ளாடுகிறது?
நிஜமாகவே அந்த சேனல் ஐயோ பாவம்தான். முதலில் சன் டீவி அதை மந்திரி மாறன் துணையோடு நசுக்கியது. பிறகு சன் டீவிக்கு கெட்ட காலம் ஆரம்பித்தபோது, சில நாட்களுக்கு அதற்கு கலைஞரால் ஆதரவு வந்தது போன்ற தோற்றம். பிறகு கலைஞர் டிவி வர உள்ளதும் போச்சடா என ஆகி விட்டது. நிகழ்ச்சிகள் நடுவில் ப்ரொக்ராம் ப்ரமோஷன் என்ற கழுத்தறுப்புக்கு இவர்களே முன்னோடி என்ற வகையில் அந்த சேனல் எனக்கு ஏற்கனவே பிடிக்காது.

3. சன் டிவி ஜோடி பொருத்தம் பார்த்ததுண்டா?
பதில்: இல்லை. நான் பார்ப்பது கோலங்கள், கஸ்தூரி மற்றும் மேகலா மட்டுமே. பொதிகையில் ராமானுஜர். அவ்வளவே.

4. இந்து ராம் அவர்களை சாதி ரீதியாக விமர்சிக்கும் வீரவன்னியன் பதிவுக்கு உங்கள் பதில் என்ன?
இதில் வேடிக்கை என்னவென்றால் ஹிந்து ராம் அவர்களை யாரும் பார்ப்பன வெறியர் எனக் கூற மாட்டார்கள். ஆனால் வீர வன்னியனோ *அவரே கூறி கொண்டதுதான்) வன்னிய சாதி வெறியர். இதில் யார் யாரை விமரிசனம் செய்வது என்ற தராதரம் இல்லையா?

அனானி (18.10.2008 இரவு 08.58-க்கு கேட்டவர்):
2. மார்க்ஸ் என்பவர் காஷ்மீருக்கு சென்று வந்து ஒரு கட்டுரை ஜீனியர் விகடனில் எழுதி இருக்கிறார். இவர்கள் போன்றவர்கள் எண்ணம் என்ன?
தன் கூட்டிலேயே வெளிக்கிருத்தல் என்று இதை ஜெர்மானிய மொழியில் கூறுவார்கள் (Nestverschmutzung)

3. கிருஸ்துவ மதமாற்றம்தான் ஒரிசா கர்நாடகா கலவரங்களுக்கு காரணமா?
பதில்: அதுவும் காரணமே. இந்து மதத்தில் சாதிக் கொடுமை என்று போனால் கிறித்துவர்களிடமும் அது தலை விரித்து ஆடுகிறது. கிறித்துவர்களாக கன்வர்ட் ஆன தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக கருதப்படுவதால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அடி வாங்குகிறது. ஆகவே பழங்குடியினராக மாற எண்ணுகின்றனர். ஆனால் இந்துக்களில் இருக்கும் பழங்குடியினர் அதை ஆட்சேபிக்கின்றனர்.

4. சென்னையில் இந்து டைம்ஸ் ஆப் இந்தியா இதில் எது நல்ல பத்திரிக்கை?
என்னை பொருத்தவரை சென்னையில் இந்துதான். பம்பாயில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, தில்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அவ்வளவே.

5. செந்தழல் ரவி பாரதியார் தொடர்பாக ஒரு கட்டுரை பதிந்து இருந்தார் அது உண்மையான கட்டுரையா?
பதில்: சொந்த இடத்தை விட்டு வெளியிடத்தில் வாழ்வதென்பது கொடுமை. அதை தவிர்க்க சில சமாதானங்கள் செய்து கொள்ள வேண்டியுள்ளது. அதைத்தான் பாரதியாரும் செய்தார். செந்தழல் ரவி சொன்னது போன்ற விஷயங்கள் நடந்தன. ஆனால் அவர் நிலைமையில் இருந்து பார்த்தால்தான் புரியும்.


ரமணா:
1. ஜெட்ஏர்வேஸின் ஆட்குறைப்பு திடீர் வாபஸ் ? இடையில் என்ன நடந்தது?
பதில்: இதில் ஜெட் ஏர்வேஸின் போர் யுக்தியைத்தான் பார்க்கிறேன். முதலில் ஒட்டுமொத்த டிஸ்மிஸ். குய்யோ முய்யோ என பலர் கதறல். திடீரென நிறுவனத் தலைவரின் டிராமா. இப்போது எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இப்போது எந்த சம்பளக் குறைவுக்கும் மனத்தளவில் தயார். என்ன விளங்கிற்றா?

2. icici வங்கி உண்மை என்ன?
பதில்: நிலைமை அவ்வளவு மோசமில்லை என எனது நண்பர் கூறுகிறார். அவர் வங்கித் துறையில் நிறுவனத் தலைவருக்கு அடுத்த பதவியை வகித்தவர்.

3. மத்திய அரசின் வலிமையான உறுதிக்குப் பிறகும் அதன் பங்கின் வீழ்ச்சி ஏன்?
பதில்: பங்குகளின் வீழ்ச்சிகளைத் தடுக்க இயலாது. மட்டுப்படுத்தலாம். சற்று அசிங்கமாகக் கூறவேண்டுமானால் கோமணத்தால் மலத்தை அடக்க முடியுமா? பிய்த்துக் கொண்டு வராதா?

4. பிற வங்கிகளும், மென்பொருள் நிறுவனங்களும் சிக்கன நடவடிக்கை என்பது உண்மையா?
பதில்: சிறிது காலத்துக்கு இம்மாதிரி கலவர எதிர்வினைகள் இருக்கத்தான் செய்யும்.

5. இது எல்லாம் சரியாக 10 வருடம் என்பது உண்மையா?
பதில்: அப்படியெல்லாம் சரியாகக் கால அனுமானம் செய்ய இயலாது.

6. அமெரிக்கா போல் வீட்டு விலை குறைய வாய்ப்புள்ளதா?
பதில்: இங்கே இந்தியாவிலா? விலைகள் என்னதான் குறைந்தாலும் அவற்றை கொடுக்கும் நிலையிலும் மிகக் குறைவானவர்களே இருப்பார்கள்.

7. பொருளாதார தேக்கத்தை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பெரிதுபடுத்தி தங்கள் வருமானத்தை பெருக்குவது போலிருக்கிறதே?
பதில்: அவர்களாவது பிழைக்கட்டுமே. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியபோது எல்லா தொழிற்சாலைகளிலும் “வேலை காலி இல்லை” என்ற போர்டுகளே ஆட்சி செலுத்தியபோது அந்த சைன்போர்டுகளை வரைந்து விற்று காசாக்கியவர்களும் உண்டு என்பதை மறந்தீர்களா?

8. ரிலயன்ஸ் குழும பங்குகள்தான் எல்லாத்தையும் தீர்மானிப்பது போலுள்ளதே?
பதில்: சென்ஸக்ஸ் புள்ளிகளை நிர்ணயிப்பதில் அவற்றின் பங்குகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

9. உணவுப் பற்றாக்குறை வந்துவிடும் போலுள்ளதே
பதில்: வராது என்றுதான் நான் நம்புகிறேன்.

10. விவசாயப் பரப்பு குறைவது நல்லதிற்கில்லையே?
பதில்: உழவுத்தொழிலையும் லாபகரமாக மாற்ற வேண்டும். ஆனால் அதற்கு அரசியல் தைரியம் வேணது வேண்டும். மோடி மாதிரி ஒருவர் பிரதம மந்திரியாக வேண்டும்.

அனானி (18.10.2008 காலை 09.45-க்கு கேட்டவர்)>
1. விவசாய தொழிற்பேட்டைகள் அமைத்தால் உணவு உற்பத்தி பெருகுமா?
பதில்: இதே போன்ற கேள்விக்கு மேலே ரமணா அவர்களுக்கு சொன்ன பதில்தான் இங்கும்.

புரட்சித் தமிழன்:
1. அமெரிக்காவில் 700 சதுர அடி வீட்டு விலை ரூபாய் 70,000 உண்மையா?
பதில்: என்ன பாஸ்போர்ட் எடுப்போமா? அங்கு போய் வாங்குவோமா? முடியாது போலிருக்கிறதே. சொத்து வாங்க அமெரிக்கக் குடிமகனாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்

2. அமெரிக்காவின் ஜாதகம் சரியில்லையாமே? (தகவல் classroom 2007-sri.subbiah)
பதில்: நள்ளிரவில் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் ஜாதகப்படி அதற்கு பல கெடுதிகள் விளையும் என பல ஜோசியர்கள் சமீபத்தில் 1947-ல் கூறியதாகக் கேள்வி.

3. 2022 வரை திண்டாட்டமாம்?
பதில்: அதற்கப்புறம் அந்த திண்டாட்டமே பழகிவிடும் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

4. இந்தியாவில் அந்த நிலை வராது என்ற உறுதியை நம்பாலாமா?
பதில்: பொருளாதார விதிகளை மீறாது இருந்தால் நம்பலாம்.

5. crr cut to 6.5 % from 9 % ,repo rate cut from 9% to 8%, what next?
பதில்: எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என இருக்கிறார்கள்.


இளவேனில்: (கேள்விகள் இங்கிருந்து வந்துள்ளன)
டோண்டுவின் புதியபாணி பதிலை எதிர்பார்த்து.(நிகழ்காலச் சூழ்நிலை சார்ந்து)
01. பலவீனர்களின் பாதையில் தடைக்கல்லாக இருந்த கருங்கல் பலசாலிகளின் பாதையில் படிக்கட்டாக அமைகிறது.
பதில்: எஸ்கிமோ பிரதேசத்துக்கு ஒரு ஃப்ரிட்ஜ் விற்பனையாளனை அனுப்பினார்கள். அவன் அங்கே போனதும் தந்தி அனுப்பினானாம். “இங்கு ஒருவரும் ஃப்ரிட்ஜ் உபயோகப்படுத்துவதில்லை. ஆகவே நமக்கு வாய்ப்பில்லை” என்று. இன்னொரு விற்பனையாளனை அதே இடத்துக்கு அனுப்பிய போது அவன் அனுப்பிய தந்தி: “இங்கு இதுவரை யாருமே ஃப்ரிட்ஜ் வாங்கவில்லை, நமக்கு இங்கு அதிக விற்பனை ஏற்படுத்தும் வாய்ப்பு அமோகமாக உள்ளது” என்று.

02. உழவன் என்பவன் எப்போதும் அடுத்த ஆண்டு பணக்காரனாக இருப்பான்.
பதில்: உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்று சும்மாவா சொன்னார்கள்?

03. தனது குளத்துக்கு தன்னை ராஜாவாகக் கருதிக்கொண்டிருக்கும் கிராமத்து மீன் சமுத்திரத்தில் வேலைக்காரனாக இருக்க சம்மதிக்காது.
பதில்: இதை பல மாதிரி புரிந்து கொள்ளலாம். சாதனைகள் செய்தவரைக்கும் போதும் என்று இருப்பவர்கள் கிராமத்து மீனாகவே இருக்க விரும்புவர். ஆனால் அதே சமயம் சமுத்திரத்திலும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மீனும் கிராமத்து மீனே அதை பொருத்த வரையில் என்பதை நினைவில் கொண்டால் அங்கும் வெற்றி பெற இயலும். அவரவர் தேவையைப் பொருத்தது அது. பல வங்கி ஊழியர்கள் அதிகாரிகளாக பதவி உயர்வைப் பெற விரும்ப மாட்டார்கள். அந்த மனோபாவமும் இதில்தான் வரும்.

04. முழுப் பக்குவம் என்பது புகழ், பழி எதையும் இலட்சியம் செய்யாமல் சேவையில் ஒன்றி விடுவதுதான்
பதில்: இதில் சம்பந்தப்பட்டவரின் முன்னுரிமைகள் என்ன என்பதுதான் முக்கியம். சிலருக்கு உடனே புகழ் தேவை. சிலருக்கு அவ்வாறு இல்லை. இத்தீர்மானம் அவரவரால்தான் எடுக்கப்படவேண்டும். சமீபத்தில் 1957-58 கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு படித்த போது அவதானம் செய்த இப்பாடல் நினைவுக்கு வருகிறது.
கண் துஞ்சார்,
பசி நோக்கார்
மெய் வருத்தம் பாரார்
கருமமே கண்ணாயினார்!

05. அடிமையாக இருப்பது தெரியாதவனுக்கு சுதந்திரத்தைச் சொல்லிப் பயனில்லை. அடிமைத்தனத்தின் சுமை யாருக்குப் புரியுமோ அவர்களுக்குத்தான் சுதந்திரத்தின் சௌகரியமும் புரியும்.
பதில்: அடிமை வாழ்வில் அடிமைக்கு முக்கியமாக முடிவுகளை எடுக்கும் பிரச்சினை இல்லை. அதை எடுக்க இயலாதவர்கள் அனேகம். சரியோ தவறோ நான் செய்ய வேண்டியதைச் செய்வேன். அதன் பலனையோ கெடுதியையோ நானே பார்த்து கொள்கிறேன் என்று இருப்பவர்கள் குறைவே. அப்படிப்பட்டவர்களை அவ்வாறு செய்ய்விடாது தடுக்கும்போது அவர்களுக்கு அடிமைத்தனம் என்பது சுமையே.

06. கலை மூலம் சொல்லப்படும் கருத்துக்கள் உள்ளத்தைப் பண்படுத்த வேண்டுமேயல்லாது புண்படுத்தக் கூடாது.
பதில்: இது எல்லா செயல்பாடுகளுக்கும் பொருந்துமே.

07. மாடு காணாமல் போனவன் காதில் எப்போதும் மணியோசை கேட்டுக்கொண்டேயிருக்கும்.
பதில்: ஒரு படத்தில் வடிவேலு பார்ப்பவர் எல்லாருமே பார்த்திபனாக தெரிவார்கள். பார்த்திபன் என நினைத்து அவர்களிடம் பேசக்கூடாததைப் பேசி வடிவேலு உதை வாங்குவார். படத்தின் பெயர் மறந்து விட்டது.

08. மூடிய கைகளுடன் மனிதன் பூமிக்கு வருகிறான் திறந்த கைகளுடன் அதை விட்டுப் போகிறான்.
பதில்: ஆடையின்றி பிறக்கிறான். இறக்கும்போது ஆடை அணிவித்து மயானத்துக்கு கொண்டு சென்றாலும் கடைசியில் துணி உருவப்படுகிறது என்பதுதான் நிஜம். ஒவ்வொரு முறையும் மற்றவர்கள் இறக்கும்போது மாயானத்துக்கு செல்லும்போது இது என்ன வாழ்க்கை என சலிப்பு ஏற்படுவது நிஜம். இதை மயான வைராக்கியம் என்பார்கள். ஆனால் வீட்டுக்கு திரும்ப வந்ததும் மனைவியிடம் இரவு என்ன சமையல் என்பதை கேட்டு உறுதி செய்து கொள்வார்கள்.

09. வளைகிற முள் நுழையாது.
பதில்: அதாவது அந்த முள் குத்தாது என்கிறீர்கள். அதே சமயம் அம்மாதிரி முள்ளை வைத்து கொண்டு குத்தின வேறு முட்களை எடுக்கச் சொல்வதும் விரயம்தானோ?

10. வண்டி வந்தால் வழி தானாக உண்டாகும்.
பதில்: உண்மைதான். பல வேலைகள் குவிந்து மலைப்பாக இருக்கும்போது ஏதாவது ஓரிடத்தில் ஆரம்பிப்பது நலம். செய்யச் செய்ய வேலைகள் தானே பூர்த்தியாகும்.

11. வேலையில்லாதிருந்தால் அது ஆயிரம் நோய்களை கொண்டுவரும்.
பதில்: இது பற்றி நான் போட்ட பதிவிலிருந்து:
“ஐ.டி.பி.எல்.-லில் நான் இருந்தபோது ஒரு விஷயம் நடந்தது. எங்கள் ஜி.எம். ஒருவர் தனது 58 வயதில் ஓய்வு பெற்றார். எனக்கு ஒரே ஆச்சரியம். நான் அவரது வயது ஐம்பது இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். இளமை தோற்றம் + சுறுசுறுப்பு நிறைந்த மனிதர். அவருக்கு நல்ல பார்ட்டி கொடுத்து வழியனுப்பினோம்.
ஒரு மாதம் கழித்து அவர் ஒரு வேலையாக அலுவலகம் வந்தார். எனக்கு ஒரே திகைப்பு. மனிதர் இப்போது 70 வயதினராக தோறம் அளித்தார். அலுப்பு நிறைந்த முகம். முழுத்தலையும் நரைத்திருந்தது. "என்ன சார் உடம்புக்கு" என்று நான் கேட்டேன். "அதெல்லாம் ஒன்றும் இல்லை, மனதுதான் சோர்வாக இருக்கிறது" என்றார் அவர். அப்போது எனக்கு வயது 40. ஒரு நிமிடம் யோசித்தேன், ஏன் இவ்வாறு நடக்கிறது என்று. இந்த மனிதரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு கம்பெனியே சகலமும். எப்போதும் வேலை, வேலை என்று ஆழ்ந்திருப்பார். வீட்டை கவனிக்கக் கூட நேரமின்றி இருந்திருக்கிறார். ஆனால் இப்போது? திடீரென வேலை இல்லை. வேறு பொறுப்புகளும் இல்லை. குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்து வேலைக்கு போயாயிற்று. இவரது தேவை குடும்பத்துக்கு இல்லை. ஆகவே தான் உபயோகமற்றவனாகி விட்டோம் என்ற காப்ளக்ஸே அவருக்கு வந்திருக்கிறது. சட்டென்று முதுமை தாக்கி விட்டது”.

12. நன்மைக்கு நன்மை செய் தீமைக்கும் நன்மையே செய்.
பதில்: இதை கடைபிடிப்பது மிக்கக் கடினம். அதுவும் எப்போதுமே இது பலன் தரும் என்று சொல்ல இயலாது. ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தைக் காட்டுவது போல இருக்கிறது. அவ்வாறு இருந்தால் வடிவேலு மாதிரி உதை வாங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். நான் அப்படியில்லை. ஒரு கன்னத்தில் அடித்தால் அடித்தவர் இரு கன்னத்திலும் முறையே பத்து அறைகள் கொடுப்பேன்.

13. சாவின் அருகில் சென்றவனுக்குத்தான் உயிரின் மதிப்புத் தெரியும்.
பதில்: உயிர் இழப்பதென்பது சரிசெய்து கொள்ளமுடியாத விஷயம். அத்தருணத்தில் பல விட்டுப் போன விஷ்யங்கள் ஞாபகத்துக்கு வரும். அதையெல்லாம் செய்யமுடியாமல் போகிறதே என்ற துயரமும் அதிகம் வரும். ஆக அச்சமயம் உயிர் தப்பித்தால் அவற்றையெல்லாம் செய்யலாமே என்ற சந்தோஷத்தில் எல்லாமே மதிப்பாகத் தெரியும், அடுத்து சில நாட்களுக்கு? பிறகு, பழையக் குருடி கதவைத் திறடிதான்.

14. பழத்தைச் சாப்பிட விரும்பின் பூவைப் பாதுகாக்க வேண்டும்.
பதில்: அதாவ்து அப்பழத்தின் பூவை என்று தெளிவாக சொல்லாவிட்டால், பலர் மல்லிகைப் பூவை பாதுகாத்து விட்டு மாங்காய்க்கு ஆசைப்படுவார்கள்.

15. ஒரு குற்றமுள்ள மனைவி வேண்டாமென்றால் அந்த இடத்தில் இரு குற்றமுள்ளவள் வருவாள்.
பதில்: உண்மை. கட்டிய மனைவியை அவள் குழந்தை பெறவில்லை என குற்றம் சாட்டி கொடுமைப்படுத்தி அவளை விவாகரத்து செய்தான் ஒருவன். பிறகு இன்னொருத்தியை திருமணம் கட்டினான். வெகு சீக்கிரம் குழந்தை பிறந்தது. ஆனால் இவனுக்கு விஷயம் தெரியாது. அதாகப்பட்டது, இவன்தான் மலடன். அப்புறம் அடுத்த மனைவிக்கு ஏது குழந்தை என்கிறீர்களா? அவள் திருமணத்துக்கு முன்னமேயே வேறு ஒருவனிடம் கருவுற்றவள். அந்த வேறு ஒருவன் திடீர் மரணமடைய, மேலே குறிப்பிட்ட அந்த மனிதன் மாட்டினான். அவனை திருமணம் செய்து கொண்டாள். நான் கூறுவது நிஜமாகவே நடந்த நிகழ்ச்சி. சம்பந்தப்பட்ட கணவன் மீது எனக்கு சுத்தமாகவே அனுதாபம் இல்லை.

16. மற்றவர்கள் உனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கலாம் ஆனால் நல்ல குணத்தை களங்கப்படுத்த முடியாது.
பதில்: களங்கத்தால் தனிப்பட்ட முறையில் பல இன்னல்கள் வந்தால் அதை துடைக்க முயல்வதே நலம். நீங்கள் கூறுவது போல எல்லாம் இருந்தால் கட்டுப்படியாகாது.

17. தமிழருக்கு அன்றும் இன்றும் தொலைநோக்கு மருந்துக்கும் கிடையாது.
பதில்: அதானே. நல்லாட்சி தரக்கூடியவர்களை விட்டு இலவச டிவி தருவர்களுக்கெல்லாம் ஓட்டளித்தவர்கள்தானே அவர்கள்.

18. பெரும்பாலானவர்கள் வாழ அஞ்சுகிறார்கள் அதுபோல சாகவும் அஞ்சுகிறார்கள்.
பதில்: அதிர்ஷ்டவசமாக சாவு இதையெல்லாம் பார்த்து வராமல் நின்று விடுவதில்லை.

19. வாழ்வது எப்படியென அறிவோமாயின் சாவும் அதுபோல ஒன்றுதானென அறிவோம்.
பதில்: நோய், தேய்வு, மூப்பு, மற்றும் இறப்பு என்ற மாபெரும் பொய்களை மெய்யென்று நம்பி மோசம் போகாமல் பொய்யென்று தெளிந்தால் போதும். ஒரே கணத்தில் நீயும் மெய்ஞ்ஞானியாகலாம். ஏனெனில், உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.

20. எதையும் உருவாக்கத் தெரியாதவன் உடைக்கச் சொல்ல அருகதையற்றவன்
பதில்: அப்படியானால் யாருமே எதையும் விமரிசனம் செய்ய முடியாது.

21. ஆய்வு என்பது மன விருப்பத்தை கருத்தாக்குவதல்ல
பதில்: எந்த ஆய்விலும் முதலில் சில அனுமானங்களுடனேயே இறங்குவார்கள். ஆனால் அந்த ஆய்வின் மூலம் தான் முதலில் செய்த அனுமானங்கள் தவறு எனத் தெரியும்போது அவற்றைத் தூக்கியெறியத் தயங்கக் கூடாது. தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிப்புகளுக்கு பின்னால் பல வெற்றியடையாத அனுமானங்கள் உள்ளன. அவற்றையே பிடித்து தொங்கியிருந்தால் அவர் நாம் அறியும் எடிசனாக வந்திருக்க இயலாது.

22. கொட்டிய பிறகு தேள் என்று அறிந்து கொள்ளாதீர்கள்
பதில்: ஆம். தேள் கடிப்பட்டவர்களை பார்த்தாவது நீங்கள் தேளிடம் போகாதீர்கள். போதை பழக்கத்தில் சீரழிபவர்களை பார்த்த பிறகும் அதில் என்னதான் இருக்கிறது என பார்த்து விடலாமே என அசட்டுத்தனமாக போகிறவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய வரிகள் அவை.

23. ஒவ்வொரு காரியத்திற்கும் உரிய காரணம் அதற்குள்ளேயே இருக்கிறது
பதில்: சோழியன் குடுமி சும்மா ஆடுமா? ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போக மாட்டான்.

24. முட்டாள்களை அறியும் பொறுமை இல்லாதவர் அரசியலில் இருக்க முடியாது
பதில்: உண்மை. அதனாலேயே ராஜாஜி அவர்கள் அரசியலில் அதிக காலம் இருக்க இயலவில்லை. அதே சமயம் முட்டாள்களை சகித்து அரசியல் நடத்துபவர்கள் தனக்காக தீக்குளிக்கும் முட்டாள் தொண்டர்களின் தியாகத்தின் பேரில் மேலும் மேலும் வளர்வார்கள்.

25. அரசியலில் ஈடுபடாதே ஈடுபட்டால் அதுதான் உனக்கு செத்த வீடு
பதில்: அவ்வாறு ஈடுபட்டு மற்றவர்கள் வீட்டை செத்த வீடாக ஆக்குபவர்களும் உள்ளனரே.


நக்கீரன் பாண்டியன்:
1. சில மாநிலங்களில் பிற மாநிலத்தவரை தாக்கி உயிர் பலிகூட ஆவதாக செய்திகள். இது பற்றி?
பதில்: இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய நிகழ்ச்சிகள். விட்டால் நாட்டின் ஒருமைப்பாட்டுகே தீங்கு விளைவிக்கக் கூடியவை.

2. மத்திய அரசின் திடீர் இடதுசாரி பாசம் பற்றி?
பதில்: வரப்போகும் தேர்தல் குறித்து பயம்?

3. பாஜக வின் ஆட்சி வாய்ப்பு பற்றி?
பதில்: மத்தியில் நன்றாகவே உள்ளது. அவர்களாக இதை தங்கள் ஒற்றுமின்மையின் மூலம் கெடுத்து கொள்ளாமல் இருந்தால் நலம்.

4. ரஜினியின் அரசியல் பிரவேச கண்ணாமூச்சு ஆட்டம் பற்றி?
பதில்: வின்னர் படத்தில் வடிவேலு கூறுவது போல இன்னுமாப்பா அவரை இந்த விஷயத்தில் நம்புகிறீர்கள்?

5. விஜய் ராஜேந்திரரின் திடீர் திமுக பாசம் பற்றி?
பதில்: ஐயோ பாவம் கலைஞர். மச்சி, பஜ்ஜி, கச்சி என்றெல்லாம் பேசி கலைஞரை அவர் டரியல் ஆக்கப்போகிறார்.

6. பாரதிராஜாவின் தமிழ் இன உணர்வு பற்றி?
பதில்: யாரைத்தான் நம்புவதோ.

7. நடிகர்களின் 1-ஆம் தேதி உண்ணாவிரத முயற்சி பற்றி?
பதில்: காந்தியடிகளால் தவம் போல நடத்தப்பெற்ற இந்த செயல்பாடு இப்போது கேலிக் கூத்தாகி விட்டது.

8. சு.சாமி அலுவலகம் தாக்கப்பட்டது பற்றி?
பதில்: பைத்தியக்காரத்தனம்.

9. தயாநிதி கலைஞர் சமிபத்திய சந்திப்பு (அழகிரியை மீறி) பற்றி?
பதில்: Damage limiting exercise

10. பங்கு வணிகத்தில் வெளிநாட்டாரின் சித்து விளையாட்டு பற்றி?
பதில்: அவர்கள் முதலீடு செய்தார்கள். இப்போது எடுக்கிறார்கள். உலகமயமாக்கலின் ஒரு அங்கமே இது. இதையும் மீறி செயல்பட்டாலாதான் வெற்றி.

11. லக்கிலுக் பதிவாளருக்கும் ஒரு சில பதிவாளருக்கும் உள்ள கருத்து மோதல் பற்றி?
பதில்: எனக்கு இதில் கருத்து கூற ஒன்றுமில்லை.

12. மீண்டும் போலிகளின் நடமாட்டம் பற்றி?
பதில்: இப்போது நிலைமை என்னவென்றால் போலிகள் உடனே அடையாளம் காணப்படுவார்கள்.

13. வார்த்தை பிரயோகங்கள் அத்துமீறல் பற்றி?
பதில்: வள்ளுவர் கூறியபடி நா காக்காவிட்டால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு

14. சன் டீவி நிர்வாகம் திரைப் படங்களை வாங்குவது (அதீத விளம்பரம்) பற்றி?
பதில்: இம்மாதிரி ஒட்டு மொத்தமாக திரைப்படங்களை நம்புவது சரியல்ல. சுவாரசியமான நிகழ்ச்சிகளை திரை கலப்பில்லாமல் தரலாம். அவையே வேஸ்ட் என்னும்போது அவற்றுக்கான அதீத விளம்பரங்கள் வேஸ்டோ வேஸ்ட்.

15. கலைஞரின் சமாதான முடிவு (இலங்கை) பற்றி?
பதில்: நான் ஏற்கனவே கூறியபடி, “தியாகம் என்றால் இதுதான் தியாகம். இரண்டரை ஆண்டுகள் மீதியுள்ள மாநில முதல்வர் பதவியையோ, அதைத் தெருகின்ற அரசையோ, அதற்கு ஆதரவு அளிக்கின்ற எம்.எல்.ஏக்களையோ விட்டுவிடவில்லை. ஆறு மாத காலம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளக்கூடிய மந்திரிப் பதவிகளை விட்டு விடவில்லை. இன்னும் மிஞ்சிப் போனால் ஆறு மாதங்களே இருக்கப் போகும் எம்.பி. பதவிகளை மட்டும் துறந்தார். இன்று அதுவும் இல்லை என ஆகிவிட்டது”.

16. வீட்டு விலைகள் 40-50 % குறையலாம் என்பது பற்றி?
பதில்: சகட்டு மேனிக்கு அனியாயமாக உயர்ந்த விலைகள் கீழே இறங்கினால் மகிழ்ச்சியே. ஆனால் அவற்றை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் அளவில் நிதி நிலைமை இல்லாவிட்டால், “காசுக்கு நாலு புடவை விற்றாலும் நாயின் சூத்து அம்மணம்தான்” என்ற பழைய சொலவடைதான் நிலைக்கும்

17. பங்கு வர்த்தகம் கவிழ்ந்தது பற்றி?
பதில்: அதை சூதாட்டமாக நினைத்து ஆடினால் இதுவும் ஆகும் இன்னமும் ஆகும்.

18. நிதி அமைச்சரின் சமாதானம் (இந்தியப் பொருளாதார சமன் நிலை) பற்றி?
பதில்: எல்லோருக்கும் புரியும் உண்மைகள், ஆனால் ஏற்கத்தான் மனம் வராது. எப்படி வரும்? அதை மறந்து செயல்பட்டதில் எல்லோரும் வாங்கிய அடி சும்மாவா?

18. பெட்ரோல் விலை குறைப்பு இழுத்தடிப்பு பற்றி?
பதில்: இன்னும் சில நாட்களில் அது பற்றிய அறிவிப்பு வரும் என நினைக்கிறேன்.

19. ஒபாமாவின் இந்திய எதிர்ப்பு நிலை பற்றி?
பதில்: நான் ஏற்கனவே கூறியபடி அமெரிக்காவில் நான் ரிபப்ளிகன் கட்சியைத்தான் ஆதரிக்கிறேன். (அதை ஜார்ஜ் புஷ்ஷே அறிவார் என முரளி மனோஹர் கத்துகிறான்).

20. தமிழ்மணத்தில் நிலவும் இன்றய சூழ்நிலை பற்றி?
பதில்: என்ன சூழ்நிலை? நன்றாகத்தானே உள்ளது?

அனானி (30.10.2008, காலை 09.05-க்கு கேட்டவர்)>
please comment in dondu style
1. sudden arrest of directors ameer & seeman after the speech of jeyalalitha?
பதில்: இன்னும் சில மணி நேரங்களில் அவர்கள் அரெஸ்ட் ஆகப் போகிறார்கள் எனத் தெரிந்த நிலையிலும் கலைஞர் அவர்களுக்கு மனித சங்கிலி தருணத்தில் பாசத்தோடு கையசைத்ததை எண்ணி எண்ணி பலர் மறுகுகின்றனரே.

2. viduthalaipuli's threat rumour to jeyalalitha?
பதில்: இது வதந்தி அல்ல உண்மை. அவரது பாதுகாப்பை அதிகரித்தே ஆகவேண்டும்.

3. is it true that all brahmin journalists are against srilanka tamils?
பதில்: வேலுப்பிள்ளை பிரபாகரனை ஆதரிப்பவர்கள் எல்லோருமே பிள்ளைமாரா?

4. disputed remarks by actor ajit/arjun about srilankan tamils?
பதில்: ஆதரவு என்பதெல்லாம் தன்னிச்சையாக வரவேண்டும். அதையெல்லாம் பயமுறுத்தி வரவழைக்க இயலாது. அதிலும் இந்த விஷயத்தில் அதை கண்டிப்பாக செய்யலாகாது. புலிகள் நலனும் இலங்கைத் தமிழரின் நலனும் ஒன்றல்ல.

5. rajinikanth is going to condut a separate fast in support of tamils?
பதில்: காலை டிபனை ஒரு பிடி பிடித்து விட்டு மாலை வரை உண்ணாமல் இருப்பதெல்லாம் உண்ணாவிரதமா? நல்ல கேலிக்கூத்து.

வால்பையன்:

//இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்டும்//
வந்தால்:
1. இந்தியா முழுவதும் மது விலக்கை அமுல் படுத்துவாரா?

பதில்: கண்டிப்பாக அது அவரது முன்னுரிமைகளில் வராது. ஏனெனில் நாட்டின் தொழில் முன்னேற்றம்தான் முக்கியம். பூரண மதுவிலக்கு ப்ராக்டிகலே இல்லை என்பதுதான் நிஜம்.

2. ஈழதமிழர்களும் பூர்வீகத்தில் இந்தியர்களே அவர்களுக்காக குரல் கொடுப்பாரா?
பதில்: தூக்கு தண்டனை பெற வேண்டிய பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து அவருக்கு தண்டனை பெற்றுத் தரும் பிரயத்னங்களைத்தான் முதலில் செய்வார் என நம்ப விரும்புகிறேன்.

3. மத சார்பில்லாத சட்டம் நிறைவேற உத்திரவாதம் உண்டா?
பதில்: நமது நாடு அரசியல்சட்டப்படி ஏற்கனவே மதசார்பற்ற நாடுதான். புதிதாக இதற்காக சட்டம் தேவயில்லை.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/30/2008

இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்டும் என்று கூறுகிறார் சுஹேல் சேத்

எனது நண்பர் ஜயகமல் திரு. சுஹேல் சேத் போட்ட இந்த இடுகையை என் கவனத்திற்கு கொண்டு வந்தார். அவருக்கு என் நன்றிகள். இந்த சுஹேல் சேத் இருக்கிறாரே, அவர் மோடியை இதற்கு முன்னால் தீவிரமாக விமரிசனம் செய்தவர்.

எனது இம்மாதிரி இடுகைகளில் வரும் வழக்கம் போலவே இனி வரும் வரிகளில் வருவது சுஹேல் சேத் அவர்களே. இது பற்றிய எனது ஆங்கில இடுகை இங்கே. டோண்டு ராகவன் அப்புறம் வருவான்.

முதலில் சில விஷயங்களை தெளிவுபடுத்துவேன்: மற்ற எல்லோரையும் விட மோடிக்கு எதிராக நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றில் கோத்ரா நிகழ்வுக்கு பிறகு நடந்த கலவரங்களை மோடி கையாண்ட விதம் பற்றி பல விமரிசனங்கள் தந்துள்ளேன். தற்கால ஹிட்லர் என மோடியைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். கோத்ரா அவர் மேல் மட்டுமல்ல, நாட்டின் அரசியல் வர்க்கத்தின் மீதே ஒரு களங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளேன். கோத்ரா விவகாரத்துக்காக நாடு பெரிய விலையைத் தரவேண்டிய்ருக்கும் என்று இன்னமும் கூறுவேன்.

விஷயம் என்னவென்றால் அதற்கப்புறம் காலம் தன் வழியில் செல்ல ஆரம்பித்து விட்டது. மோடியும்தான் மாறிவிட்டார். மதவாதத்துக்காக குற்றம் சாட்டப்படுபவர்களில் மோடி மட்டும் தனியாக இல்லை. கூடவே மற்ற அரசியல்வாதிகளும் உள்ளனர். மதசார்பற்ற அரசியலை நடத்துவதாக விதந்தோதப்படும் காங்கிரஸ் ஆட்சியில்தான் 1984-ல் சீக்கியர்கள் மேல் கொலைவெறித் தாக்குதல்கள் நடந்தன. 3500-க்கும் அதிகமாக சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதாவது குஜராத்தில் கொல்லப்பட்டவர்களை விட மூன்று மடங்கு.

மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால், மோடியை விட இந்திய அரசியல் வானில் வல்லவர் யாரும் இல்லை என்பதுதான். மூன்று வாரங்கள் முன்னால் நான் அஹமதாபாத் சென்றிருந்தேன். YPO (Young President's Organisation) கூட்டத்தில் பங்கெடுக்கவே நான் சென்றிருந்தேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோடி அவர்களை சந்திக்கலாம் என முடிவு செய்தேன். அங்கு செல்வதற்கு முந்தைய மாலைதான் அவருக்கு டெலிஃபோன் செய்து பேசினேன். நான் அங்கு வந்து சேரும் நாள் அன்றே அவரை பார்க்க அனுமதி தந்தார். அதுவும் அவர் அலுவலகத்தில் அல்ல, அவர் இல்லத்தில்தான். எளிமையின் உருவம் மோடி.

இந்த விஷயத்தில் சோனியா, மாயாவதி போன்றவர்கள் மோடியிடமிருந்து பாடம் கற்பது நல்லது. மீட்டிங்கில் மோடியை சுற்றி எந்த அள்ளக்கைகளும் இல்லை. நாங்கள் இருவர் மட்டுமே. தேனீரை ஊற்றுவதற்காக ஒரு வேலையாள் அவ்வளவே. மோடியிடமிருந்து நேர்மறை எண்ணங்கள் வந்த வண்ணம் இருந்தன. குஜராத்தின் முன்னேற்றம், மறுமலர்ச்சி, அதன் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மேம்பாடு அவற்றையெல்லாம் எடுத்துரைக்கும்போது அவர் வெளியிட்ட மகிழ்ச்சி ஆகியவற்றை அந்த எண்ணங்கள் பிரதிலித்தன. சில உதாரணங்கள்: சிங்கப்பூர்வாசிகள் அருந்தும் பாலில் கிட்டத்தட்ட முழு அளவு குஜராத்திலிருந்து வருகிறது. அதே போல ஆஃப்கானிஸ்தானில் உண்ணப்படும் தக்காளி, கனடாவில் உட்கொள்ளப்படும் உருளைக்கிழங்கு போன்ற எல்லாமே குஜராத்தில் விளைந்தவை. அதே சமயம் தொழிற்சாலைகளும் அவற்றில் உற்பத்தியாகும் பொருட்களும் மோடியின் முன்னுரிமைகளில் உண்டு.

ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அவர் அருகிலுள்ள மேஜையிலிருந்து GIFT என்று அறியப்படும் குஜராத்தில் அமையவிருக்கும் புது தொழில் நகரத்தைப் பற்றிய புத்தகத்தை எனக்கு காட்டினார். சபர்மதி நதியின் கரையில் வரப்போகும் இந்த நகரம் துபாயையும் ஹாங்காங்கையும் ஜுஜூபி என்று சொல்ல வைக்கும். பை தி வே குஜராத்தில் உள்ள நதிகளை இணைத்து மோடி அவர்கள் சபர்மதியின் தண்ணீர் பற்றக்குறையை தீர்த்து வைத்துள்ளார்.

ரத்தன் டாட்டாவின் புது நானோ கார் தொழிற்சாலை பர்றியும் அவர் பேசினார். டாட்டா அவர்களிடம் பார்சிக்காரர்கள் முதலில் குஜராத்தில் வந்த போது நடந்த நிகழ்ச்சியை எடுத்து கூறி அவரை உணர்ச்சிக்குவியலாக்கியதையும் சொன்னார். அக்கதை பின்வருமாறு: பார்சிகள் முதல் முதலில் குஜராத்தில் வந்தபோது குஜராத் அரசர் அவர்களுக்கு ஒரு டம்ளர் நிறைய பால் கொடுத்து அனுப்பினாராம். அதாவது ஏற்கனவே குஜராத் ஹவுஸ்ஃபுல், அவர்களுக்கு இடமில்லை என்று கோடி காட்டியுள்ளார். பார்சிக்காரர்களோ அந்தப் பாலில் சர்க்கரையை கலந்து திருப்பி அனுப்ப, அரசர் மனம் மாறினாராம். அதாவது சர்க்கரை போல பார்சிக்காரர்கள் குஜராத்தின் தரத்தை உயர்த்துவார்கள் என்பதுதான் அவர்கள் செய்ததன் பொருள்.

நரேந்தர் மோடி முன்னேற்றப் பாதையில் செல்லும் அவசரத்தில் உள்ளார். அவரை விட்டால் பிஜேபிக்கு அத்வானியைத் தவிர வேறு பெரிய தலைவர்கள் இல்லை என்பதுதான் நிஜம். தீவிரவாதத்தை ஒழிக்க அரசியல் சாராத கடும் நடவடிக்கைகள் வேண்டும் என அவர் உறுதியாக நம்புகிறார். தில்லியில் குண்டு வெடிக்கலாம் என்பதை அவர் முன்கூட்டியே பிரதமருக்கு கூறியும் தக்க ஏற்பாடுகள் செய்யாது கோட்டை விட்டனர் என்று வருந்தினார் அவர். அவரது இந்த உறுதியை நான் விதந்தோதுகிறேன். தீவிரவாதத்தை சகித்து கொள்ள கிஞ்சித்தும் அவர் விரும்பவில்லை என்பது அவர் நடவடிக்கைகளிலிருந்து தெரிகிறது. சிறுபான்மையினரை அழிக்க அவர் முயல்கிறார் என சிலர் குதர்க்கமாக பேசினாலும் அவர் என்னவோ தெளிவாகத்தான் உள்ளார். சட்ட ஒழுங்கில் அவர் எந்த சமரசமும் செய்வதாக இல்லை.

மோடியின் வீட்டிலிருந்து திரும்பும்போது கார் டிரைவரிடம் மோடி பற்றி பேசினேன். மோடி கடவுள் என்னும் ரேஞ்சில் அவர் பேசினார். மோடிக்கு முன்னால் குஜராத்தில் ஒன்றுமே சரியாக இல்லை. சரியான சாலைகள் இல்லை, மின்சாரம் இல்லை, கட்டுமான வசதிகள் இல்லை. ஆனால் இன்றோ மின்சாரத்தில் உபரி உற்பத்தியை குஜராத் எட்டியுள்ளது. இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் சேர்ந்தாற்போல் வரும் புது தொழில்களை விட அதிகமாக குஜராத்தில் வருகின்றன. பன்னாட்டு நிறுவனக்கள் முதலீடு செய்ய அதிகம் விரும்பும் மானிலம் குஜராத். அதே சமயம் அரசின் செயல்பாடுகளில் இருக்கும் நேர்மை மற்ற மானிலங்களில் இல்லை.

YPO (Young President's Organisation) உறுப்பினர்கள் கூட்டத்துக்கு பிறகு அவர்களில் பலரிடம் மோடி பற்றி கேட்க எல்லோருமே ஒருமுகமாக மோடியை கடவுள் என்றே கூறினர்.

மேலும் அவர்கள் கூறியதாவது. ஐந்து மோடிகள் இருந்தால் இந்தியா மிகச் சிறந்த நாடாக உருவெடுக்கும் என்று. இது குஜராத்திய மிகைப்படுத்தலா என்று தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவரது குறைபாடுகளையும் மீறி நாட்டில் நல்ல மாறுதல்களை கொண்டுவர மோடி போன்றவர்கள் இன்றியமையானவர்கள். இன்னும் பல மோடிகள் நாட்டுக்கு தேவை!


சுஹேல் சேத் Counselage-ன் மேனேஜிங் பார்ட்னர்.

இப்போது மீண்டும் டோண்டு ராகவன். சுஹேல் சேத் ஒரு முசல்மான் எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் மோடியின் பெருமைகளை பட்டியலிடுவதில் அவர் தயங்கவில்லை.

அதே சமயம் “இது பலருக்கு பிடிக்காது, எல்லோரும் உன்மேல் பாயப்போகிறார்கள்” என்று எச்சரிப்பது முரளி மனோஹர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/28/2008

டோண்டு பதில்கள் இலங்கை சம்பந்தமாக

தமிழகத்தில் நடக்கும் அரசியல் நாடகங்களுக்கேற்ப இலங்கை பற்றிய கேள்விகள் அதிகமாக வந்ததால் நண்பர் அருண் அவர்களது ஆலோசனைக்கேற்ப அவற்றுக்கு இப்பதிவில் பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்.

நரசிம்மா:
1. விடுதலைபுலிகள் அழிவது தமிழருக்கு நல்லதா?
ஆம். ஏனெனில் அவர்கள் கணினி மொழியில் கூறுவதென்றால் கரப்ட் ஆன கோப்புகளாகி விட்டனர். பல வைரஸ்கள் அவர்களிடம் குடி கொண்டு விட்டன. கர்ணபிரபுவே நாணும் வண்ணம் மற்றவருக்கு அவற்றை தானமாக அளிக்கின்றனர். கொல்லப்பட்ட தமிழர்களில் புலிகளால் கொல்லப்பட்டவர்களே அதிகம். நேரடியாக கொல்வதோடு மட்டுமின்றி அப்பாவி மக்களையும் கேடயமாக்கி தாம் தப்பிக்க முயலுகின்றனர், இப்போது செய்வது போல.


அனானி (18.10.2008 இரவு 08.58-க்கு கேட்டவர்):
1. அமெரிக்காவில் தடை செய்யபட்ட புலிகள் இயக்கதை ஆதரிப்பவர்களை அந்த நாட்டின் அரசாங்கம் தண்டிக்க முடியாதா?
முடியும். தடை எத்தன்மையானது என்று தெரியவில்லை. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் புலிகளாலோ அல்லது மற்றவராலோ அச்சுறுத்தப்பட்டால் கண்டிப்பாக அமெரிக்க அரசிடம் புகார் செய்யலாம். நடவடிக்கை நிச்சயம். ஆனால் தற்சமயம் அமெரிக்கர்கள் கவனம் இசுலாமிய தீவிரவாதிகள் மேல் உள்ளதால் புலிகள் அபாயம் அலட்சியப்படுத்தப்படும் தோற்றம் இருக்கிறது.

மலையகத்தமிழன்
1) தன்னையே கொல்ல திட்டமிட்ட பிரபாகரனையும் மன்னித்து, ஈழத்தில் அவனால் கஷ்டப்படும் தமிழ் மக்கள் மீது கூட இலங்கை ராணுவம் கொலைகளை செய்துவிடக்கூடாது என்று இவ்வளவு முயற்சி எடுக்கும் கலைஞர் பாராட்டுக்குரியவர்தானே?
அதிமுக ஆட்சி சமயத்தில் மத்திய உளவுத்துறையிடமிருந்து வந்த இது பற்றிய எச்சரிக்கையை
தமிழக அரசு எடுத்ததாகவும், புலிகள் திமுகவில் முன்னிறுத்த முயன்றதாகக் கருதப்பட்ட வைகோ அதனாலேயே கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டதாக செய்திகள் படித்துள்ளேன். தன்னை கொல்லத் திட்டமிட்ட பிரபாகரனை கலைஞர் மன்னித்தாரா என்பது பற்றி கூற என்னிடம் கருத்து இல்லை. ஆனால் ராஜீவை கொலை செய்வித்த பிரபாகரனையும் அவர் மன்னித்து விட்டாரா என்ற கேள்வியை உங்கள் கேள்வி அடுத்ததாக எழுப்புமே. ஏன் கலைஞர் மேல் இந்த கொலை வெறி உங்களுக்கு?

2) கிழக்கிலங்கையில் இலங்கை ராணுவம் வெற்றிகொண்டபோது இவ்வளவு கூப்பாடு போடாத வெளிநாட்டு வாழ் ஈழத்து தமிழர்களும், இந்தியாவில் இவ்வளவு பிரச்னைகளை தூண்டிவிடும் ஈழத்து தமிழர்களும், வடக்கில் ராணுவம் பிரபாகரனையே நெருங்குவதாலேயே இவ்வளவு கூப்பாடு போடுகிறார்கள். ஆகையால், அடிப்படையில் யாழ்ப்பாணத்து மேலாதிக்கத்துக்காகத்தான் கூப்பாடு போடுகிறார்கள் என்று கூறலாமா?
பதில்: கண்டிப்பாக சொல்லலாம்.

3) சிங்கள பிரேமதாசா கொடுத்த பணத்துக்காக மற்ற இயக்கங்களில் இருந்த தமிழர்களை கொன்றொழித்த பிரபாகரன் துரோகியாகாமல் மற்ற இயக்கங்களில் இருந்தவர்கள் துரோகியானது எப்படி?
பதில்: பிரேமதாசா இதற்காக பணம் கொடுத்தார் என எங்கும் படித்ததில்லை. இருப்பினும் தன் சுயமுனைப்புடனேயே கொலைகளை செய்வித்து வரும் பிரபாகரனது பங்கை உங்கள் கேள்வி குறைத்து மதிப்பிடுகிறது என நினைக்கிறேன்.

4) நேற்றுவரை இந்தியத் தமிழர்களை கடுமையாக திட்டி வந்த ஒரு சில ஈழத்தவர்கள் (எல்லோரும் அல்ல) இன்று இந்தியாவின் ஆதரவு வேண்டி வாய் மூடி நிற்பதன் மர்மம் என்ன? வன்னியில் உண்மையிலேயே நிலைமை மோசம் என்பதாலா?
பதில்: 1987-ல் வந்த வாய்ப்பை தவறவிட்டு அச்சமயம் சிங்களவர்களும் புலிகளும் சகோதரர்கள், இந்திய அமைதிப்படை வெளியே செல்ல வேண்டும் என பிரேமதாசாவுடன் சேர்ந்து ஜல்லியடித்தவர்கள் இப்போது இந்திய ஆதரவை நாடுவது விந்தையே. அத்ற்கு நீங்கள் கூறுவது போல வன்னியில் நிலைமை மோசம் என்றுதான் கருத வேண்டியுள்ளது.

5) நேற்றுவரை புலிகளை கடுமையாக விமர்சனம் செய்துவந்த தா பாண்டியன் இன்று ஆதரவாக பேசுவதன் மர்மம் என்ன?
பதில்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

6) இன்னும் 4 மாதத்தில் காலியாகப்போகும் பாராளுமன்றத்திலிருந்து ராஜினாமா பற்றி பேசும் கலைஞர், தமிழகத்து சட்டமன்றத்திலிருந்து எல்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய சொல்வாரா?

பதில்: கெடுத்தீர்களே காரியத்தை. அப்புறம் அவர் குடும்பத்தாரிடம் அவர் பெறப்போகும் தாக்குதல்களை நீங்களா ஏற்கப் போகிறீர்கள்? நான் ஏற்கனவே கூறியது போல பதவியிழப்பு கலைஞருக்கு ஆகவே ஆகாது.

ஆனந்த குமார்:
1. விடுதலை புலிகள் இந்திய அமைதி படையை எதிர்த்து சண்டை போட சிங்கள ராணுவத்திடம் ஆயுதங்கள் பெற்றாற்களா? உண்மையாகவே நடந்த ஒன்றா?
பதில்: அவ்வாறு ஆயுதம் பெற்றது பற்றி தெரியாது. ஆனால் இருவருக்குமே இந்திய அமைதிப்படை ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை.

2. விடுதலைபுலிகள் நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் மண்ணின் மைந்தர்கள் இந்தியர்கள் எங்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்று சொன்னார்களா? உண்மையில் நடந்த ஒன்றா?
பதில்: ஆமாம். அவ்வாறுதான் நடந்தது.

3. ஏன் விடுதலைபுலிகளை விமர்சிக்கும் நபர்களை தனி நபர் தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது? பத்ரியின் சமீபத்திய பதிவில் கூட அவரை கேவலமாக தாக்கி பின்னோட்டங்கள் வருகின்றதே !! காரணம் என்ன? உண்மை சுடுமா?
பதில்: புலிகள் ஆதரவாளர்கள் சில சமயம் அவர்தம் செயல்முறைகளையும் கடைபிடிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

4. திமுக + பாமக எம்பிகள் ராஜினாமா செய்தால் மத்தியில் காங்கிரஸ் அரசு கவிழும். அப்படி நேர்ந்தால் தமிழக அரசும் கவிழுமா?
பதில்: காங்கிரஸ், திமுக மற்றும் பாமக கட்சிகள் நாயர் புலிவாலை பிடித்த நிலையில் உள்ளனர். மத்திய அரசு கவிழாது என்றுதான் நினக்கிறேன். ஏனெனில் இன்னும் இருப்பது ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே. ஆனால் தமிழக அரசோ இன்னும் சுமார் மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்தாக வேண்டும். காங்கிரஸ், திமுக கூட்டணி வாய்ப்பே இல்லையென்றால் நீங்கள் சொல்வது நடக்கக் கூடும். பாமகாவை பொருத்தவரை அதன் நிலை ஐயோ பாவமே.

5. புலம்பெயர்ந்த கவிஞர் ஒருவர் சென்னையில் வசித்த வரை புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு அனைத்து தமிழ் மக்களும் புலிகள் அல்ல என்று சொல்லி வந்தார். இன்று தன் புலம் பெயர்ந்த நாட்டுக்கு சென்ற பின்னர் புலிகளை விமர்சிப்பர்களை வசை பாடுகிறார். இதை போல இரட்டை நாக்கோடு பேசுவதின் காரணம் என்ன?
பதில்: யார் அவர் என்பதை அறியேன். அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ என்பதையும் ஆகவே அறியேன்.

6. புலிகள் நம்ப கூடியவர்களா?
பதில்: இல்லை

7. புலிகள் சபாரத்தினம், அமிர்தலிங்கம் போன்ற எண்ணற்ற தமிழ் தலைவர்களை கொன்றது ஏன்?
பதில்: ஈகோ.

8. புலிகளை எதிர்பவர்கள் எப்படி தமிழ் துரோகி ஆகிறார்கள்? அனைத்து மாற்று கருத்து கொண்ட தமிழர்களை கொன்ற பிரபாகரன் எப்படி தேசிய தலைவர் ஆனார்?
பதில்: எதிரிகளைக் கொன்றதன் பின்னால் மீதி இருப்பவர்கள் ஒன்று நண்பர்களாக இருக்க வேண்டும் அல்லது நமக்கேன் வம்பு என ஒதுங்கியிருக்க வேண்டும். தலைவனாக பிறகு என்ன தடை?

9. இட ஒதுக்கீடு தான் இந்த பிரச்சனைக்கு காரணமாமே உண்மையா?
பதில்: இதென்ன புதுக்கதை? இக்கேள்வி இங்கு எப்படி வந்தது?

10. மலையக தமிழர்கள் யாழ்பாண தமிழர்களால் அடிமையாக நடத்தப்படுகிறார்களா?
பதில்: இலங்கை தமிழர் சிக்கல் ஒரு இடியாப்பச் சிக்கல். மட்டக்களப்பு தமிழருக்கும் யாழ்ப்பாணத் தமிழருக்கும் ஆகாது. இசுலாமியருக்கும் புலிகளுக்கும் ஆகாது. இன்னும் யாருக்கும் யாருக்கும் ஆகாது என்பது தெளிவாக இல்லை.

11. ஏன் புலம் பெயர்ந்த தமிழர்களில் 90% யாழ்பாண வாசிகளாகவே இருக்கிறார்கள்?? கிழக்கு தமிழர்களோ அல்லது மலையக தமிழர்களோ ஏன் யாழ்பாண தமிழர்களை போல அகதி அந்தஸ்து கேட்பதில்லை?
பதில்: மேலே உள்ள கேள்வியிலேயே இதற்கு பதில் உள்ளதோ?

12. கொழும்பில் பல லட்சம் தமிழர்கள் இருக்கிறார்களாமே, தமிழ் ஈழம் கிடைத்தால் அவர்கள் கதி என்ன?
பதில்: யாருக்கு தீமையோ தெரியாது. ஆனால் இப்போதைய சூழ்நிலையில் தமிழ் ஈழம் கிடைப்பது புலிகளின் நலனுக்கு மட்டுமே உரியது என நினைக்கிறேன்.

இரணியன்
1. வைகோ கைது நாடகமா? கூட்டணியை உடைக்கும் முயற்ச்சியா?
பதில்: எது எப்படியாயினும் வைகோ பேசியது இந்திய இறையாண்மைக்கு விரோதமானது. அவர் கைது செய்யப்பட்டது ஆச்சரியமே இல்லை. ஆனால் இதனால் கூட்டணி உடையாது என்று வைகோவே கூறியதாகவே அறிகிறேன்.

2. அமீர், சீமான் போன்றவர்களை இது வரை கைது செய்யாமல் இருப்பது சரியா?
பதில்: அவர்களையும் கைது செய்தாயிற்று.

3. புலிகளை ஆதரித்து இணையத்தில் வரும் பதிவுகள், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து இந்தியாவில் இருந்து பதிவு செய்பவர்களை தண்டிக்க முடியுமா? புகார் கொடுப்பது எப்படி?
பதில்: முடியும், ஆனால் தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். அவர்களும் தம் கருத்தை கூறுகின்றனர். பெர்சனலாக இதில் நான் குறை ஏதும் காணவில்லை.

4. புலிகளின் தலைவர் மட்டும் ஏன் தன் பிள்ளைகளை தற்கொலை படையாக மாற்றவில்லை?
பதில்: ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.

5. புலிகள் தலைவர் பிரபாகரன் தன் மனைவியை கடத்தி வந்து கட்டாய திருமணம் செய்தாரா?
பதில்: அவர் திருமணம் நடந்து பல ஆண்டுகள் கடந்து, அவருக்கு வளர்ந்த பிள்ளைகளும் இருக்கும்போது இக்கேள்வியே தேவையற்றது.


பாண்டியன் நக்கீரன்:
1. இலங்கை இனப் படுகொலையை பற்றி?
பதில்: தனிப்பட்டவர்களது துயரத்தைப் பார்க்கும் போது மனம் வருத்தமடைகிறது.

2. கலைஞரின் இனம் காக்கும் புனிதப் போரில் ஆட்சி அதிகாரத்தையே தூக்கி எறியத் துணிந்த துணிவு?
பதில்: தியாகம் என்றால் இதுதான் தியாகம். இரண்டரை ஆண்டுகள் மீதியுள்ள மாநில முதல்வர் பதவியையோ, அதைத் தெருகின்ற அரசையோ, அதற்கு ஆதரவு அளிக்கின்ற எம்.எல்.ஏக்களையோ விட்டுவிடவில்லை. ஆறு மாத காலம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளக்கூடிய மந்திரிப் பதவிகளை விட்டு விடவில்லை. இன்னும் மிஞ்சிப் போனால் ஆறு மாதங்களே இருக்கப் போகும் எம்.பி. பதவிகளை மட்டும் துறந்தார். இன்று அதுவும் இல்லை என ஆகிவிட்டது. ஆமாம், நீங்கள் என்ன தியாகத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்?

3. பிரிவினை வாதம் தூண்டப் படுவதாக வந்த குற்ற்ச்சாட்டில் கைதுகள் நியாயமா?
பதில்: நியாயமே

4. தமிழ்நாட்டு மக்களின் இன எழுச்சிகண்டு நடுவண் அரசின் கிடுகிடு நடவடிக்கைகள், எப்படி?
பதில்: அவரவர் அரசியல் நிர்ப்பந்தம் அவரவருக்கு.

5. இலங்கை அரசே முன்வந்து நாம் கொடுக்கும் நிவாரண உதவிகளை தமிழ் மக்களுக்கு கொடுப்பது பற்றி?
பதில்: இலங்கை அரசின் மீது ராஜீயரீதியான நிர்ப்பந்தங்கள் வைக்கப்பட வேண்டும். அதுவும் இந்திய நலனுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.

6. இந்த சமயத்திலும் அரசியல் லாபம் பார்க்க துடிக்கும் ஜெயலலிதா அவர்கள் பற்றி?
பதில்: அவரும் அரசியல்வாதி என்பதை மறக்கலாகாது. அதே சமயம் புலிகள் அபாயத்தை தடுக்க நடவடிக்கைகளை துணிந்து எடுக்க அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பதும் உண்மையே.

7. இதிலும் பிராமண துவேஷம் காட்டுவோர் பற்றி?
பதில்: அப்படி காட்டாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

8. சினிமா நடிகர்கள் எழுச்சி எப்படி?
பதில்: என்ன எழுச்சி? அவர்கள் மேல் நிர்ப்பந்தம் பிரயோகிக்கப்படுவதாகத்தான் எனக்கு படுகிறது.

9. வைகோ அரசியல் கதை?
பதில்: இருதலைக் கொள்ளி எறும்புக்கு உதாரணம் அவர்.

10. மீண்டும் இலங்கை தமிழர் நலன் காக்கும்,கலைஞர் அரசின், நிதி திரட்டும் திட்டம்?
பதில்: பொறுத்திருந்து பார்ப்போம், நிதி திரட்டல் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்று.


இலங்கை சம்பந்தமான கேள்வி பதில்கள் அடங்கிய இந்த சிறப்புப் பதிவு நிறைவு பெற்றது.

வரும் வெள்ளியன்று மற்ற கேள்வி பதில்களுடன் சந்திப்போம்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

10/24/2008

டோண்டு பதில்கள் - 24.10.2008

ராமகிருஷ்ணஹரி
please explain the following in dondu style
1. crr(banking system)
பதில்: Cash reserve ratio என்பதன் சுருக்கம். இது அதிகமானால் பணப்புழக்கம் குறையும், குறைந்தாலோ அதிகமாகும். ஒரு வித கட்டாயச் சேமிப்பு வங்கிகளுக்கு என்று குன்ஸாகக் கூறலாம். டி.பி.ஆர். ஜோசஃப் போன்றவர்கள் இன்னும் நன்றாக பதிலளிப்பார்கள். எதற்கும் இதையும் பார்த்து விடுங்களேன்.

2. repo rate
பதில்: பணப்புழக்கம் குறைவானால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கலாம். அதற்கு அவர்கள் தரும் வட்டி விகிதம்தான் ரெபோ ரேட் எனப்படுகிறது.அது குறைந்தால் வங்கிகள் அதிக அளவில் கடன் வாங்க இயலும். அதிகரித்தால் வாங்கும் கடன் அளவுகள் குறையும். இரண்டு விஷயங்களும் தேசத்தில் உள்ள வியாபாரங்களை நேரெதிர் முறையில் பாதிப்பவை.

3. inflation (in india)
பணவீக்கம். சமீபத்தில் 1957-வாக்கில் எழுத்தாளர் நாடோடி இது பற்றி எழுதியுள்ளார். அதிலிருந்து: “நாட்டில் எல்லோருக்கும் சம்பளம் குறைந்த பட்சம் ஆயிரம் (1955 விலைவாசி கணக்கில்) என்று அதிசயபுரியின் மந்திரி நிர்ணயிக்க, அது விளைவிக்கும் கூத்து பற்றி படிப்பவரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார் நாடோடி. படிப்பவர்தான் சிரித்தனர். அனுபவித்தவர்? பணம் மட்டும் இருந்தது. வியாபாரிகளும் பணத்தை பார்த்ததும் உல்லாசமாக செலவழிக்க ஆரம்பித்தனர். உற்பத்தி குறைந்தது. விலைகள் விஷம்போல ஏறின. சம்பளங்கள் மறுபடியும் உயர்த்தப்பட்டன. Too much money chasing too little goods என்ற நிலை உண்டாயிற்று. விளைவு? Inflation எனப்படும் பணவீக்கம்”.

4. recession (in usa)
வியாபாரம் நடந்தால்தானே வேலை செய்பவர்களுக்கு சம்பளம் தர இயலும்? ஆகவே வேலைவாய்ப்புகளில் முதலில் பாதிப்பு வரும். அவ்வாறு வேலையிழந்தவர்களால் பொருட்களை வாங்க முடியாது போல மேலும் பல தொழில்களுக்கு மார்க்கெட் போய், இந்த ரிசஷன் இன்னும் அதிகரிக்கும்.

5. gdp ( in world)
பதில்: ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை அளக்க உதவுவது மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் GDP (Gross Domestic Product).
ஒரு ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட எல்லா பொருட்களின் மதிப்பையும், எல்லா சேவைகளின் மதிப்பையும் சேர்த்துக் கூட்டினால் கிடைப்பது மொத்த உள்நாட்டு உற்பத்தி.
இதில் நுகர்வோர் வாங்கும் பொருட்கள்/சேவைகள், வணிக நிறுவனங்கள் முதலீட்டுக்காக வாங்கும் பொருட்கள்/சேவைகள், அரசுகள் வாங்கும் பொருட்கள்/சேவைகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் சேவைகள் அடங்கும். நூறு கோடி மக்களும் அந்த ஆண்டில் என்ன குப்பை கொட்டினார்கள் என்று தெரிந்து விடும். இது பற்றி மேலே இன்னும் அழகாக நண்பர் மா. சிவகுமார் கூறியுள்ளார்.

அனானி (16.10.2008 இரவு 08.27-க்கு கேட்டவர்)
1. தம்பியின் தொப்பியே அவனுக்கு நெருப்பு அது என்ன?
பதில்: தீக்குச்சியின் மருந்து பகுதி.

2. அருந்த முடியாத பால், உலகம் சுற்றும் பால் அது என்ன?
பதில்: தபால் மற்றும் தனபால். இரண்டாமவர் தில்லியில் சாணக்யபுரியில் வசிக்கிறார். அவர் ஒரு இண்டர்நேஷனல் கூரியர் கம்பெனியில் பணி புரிகிறார். அந்த ஏரியாவில் உள்ள எல்லா தூதரகங்களுக்கும் அவர்தான் தபால் கொண்டு செல்வார். டெலிவரி செய்ய சம்பந்தப்பட்ட தூதரகத்துக்குள் செல்ல வேண்டும். ஜெனீவா ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு தூதரகமும் சம்பந்தப்பட்ட நாட்டின் பிரதேசமாகத்தான் கருதப்படும். ஆக தனபால் இம்மாதிரி உலகில் உள்ள பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

3.அடத்தியான ஒரு மரத்துக்குப் பல கால்கள் அது என்ன?
பதில்: ஆலமரம். அப்படியே அதன் கீழேயே ஒரு பி.சி.ஓ. இருந்தாலும் பல கால்கள் வரும்.

4. கறுத்த நீண்ட பாயின் மேலே வாகனம் ஓடுது அது என்ன?
பதில்: பிரதான வீதி அல்லது கரிய நிறப்பாயில் உள்ள மோட்டார் செல்வது போன்ற படங்கள்.

5. வலை பின்னும் ஆனால் அதனிடம் நூலில்லை அது என்ன?
சிலந்தி அல்லது தில்லியில் எங்கள் பக்கத்து வீட்டு ஆண்டி. அவரிடம் நூல் இல்லாததால் எல்லோரிடமும் ஓசியில் நூல் வாங்குவார்.

6. வாலால் நீர் குடிக்கும் வெளிச்சத்திலேதான் இருக்கும் அது என்ன?
பதில்: விளக்கு அல்லது தீயணைப்பு இஞ்சின். வால் பையனோ அது தானில்லை என பதறிப்போய் ஏற்கனவே கூறிவிட்டார்.

7. ஒற்றைக்கால் மனிதனுக்கு பல கைகள் அவன் யார்?
பதில்: சாலை சந்திப்புகளில் கைகாட்டி மரம். அல்லது ஒரு கால் வெட்டப்பட்ட ராவணன்

8. வீட்டைச் சுற்றி கருவேலி அது என்ன?
பதில்: என்ன போங்க, இப்படியா அசிங்கமாகக் கேள்வி கேட்பது? ஓ, அது கண்ணா?

9. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
பதில்: சாமரம் அல்லது மரத்தாலான சீலிங் ஃபேன்

10. உலகமெல்லாம் கால் நீட்டி, உறக்கமின்றி அலைகின்றான் அவன் யார்?
கடல் அல்லது ரோமிங்கில் இருக்கும் ஒருவனுக்கு வரும் செல்பேசி கால்கள்.

11. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன?
பதில்: கடலலை அல்லது சிலருக்கு ஜீரணக்கோளாறு என வைத்து கொல்ளலாமா?

12. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
பதில்: கண். இத்தருணத்தில் கவி காளமேகம் நினைவுக்கு வருகிறார். ஈயேறி மலை குலுங்கியதாகப் பாட இயலுமா என்பதற்கு, மலை என்ன ஜுஜூபி, அண்ட சராசங்களே ஈயேறி குலுங்கின என்று பாடினார். அதாகப்பட்டது, வெண்ணெய் திருடியதற்காக மத்தால் வாயில் அடிப்பட்ட குழந்தை கண்ணனின் அப்புண்ணின் மேல் ஈ வந்தமர, அத்தெய்வக்குழந்தை தலையையசைக்க, - மேலே கூறவும் வேண்டுமோ?

13. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
பதில்: அணில் அல்லது விபூதி அணிந்த டார்ஜான்

14. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?
பதில்: சங்கு ஆனால் சங்குபிள்ளையை அடித்தால் அவர் அலறித் துடிப்பார்.

15. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன?
பதில்: கோலம் அல்லது, அக்கா என்ன, அண்ணனே கூட முத்து ஒன்றை எடுத்து யாருக்கும் தெரியாத இடத்தில் ஆழ புதைத்தால், யாருமே அதை அள்ள இயலாதுதான்.

16. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
பதில்: பூட்டு, சாவி அல்லது “ஜாவ்ரே ஜாவ் இந்த வீட்டுக்கு நீ ராஜா” என்று சமீபத்தில் 1966-ல் வெளிவந்த மூன்றெழுத்து படத்தில் வரும் ரவிச்சந்திரனைப் போல் கூர்காக்களை வைத்து காமெடி பண்ணவில்லைதானே?

17. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
பதில்: மின்விசிறி, பம்பரம் அல்லது தில்லியில் நான் இருந்தபோது எதிர் வீட்டிலிருந்த குட்டிக் குழந்தை. அதை தூக்கி நான் எவ்வளவு சுற்றினாலும் அதற்கு தலை சுற்றாது. எனக்குத்தான் தலை சுற்றும்.

18. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
பதில்: பாய், வெற்றிலை அல்லது பிணத்துக்கும் நரம்புகள் உண்டு

19. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன், அவன் யார்?
பதில்: எறும்பு

20. மழை காலத்தில் குடை பிடிப்பான், அவன் யார்?
பதில்: காளான் அல்லது மழையில் வெளியே செல்லும் எல்லோருமே.

21. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன?
பதில்: பெரியாருக்கு பிடிக்கும் அது என்ன?

22. வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?
பதில்: தபால் பெட்டி

23. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?
பதில்: தேங்காய் அல்லது கைலாயத்தில் உள்ள சந்தையில் சிவபெருமான்

24. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்?
பதில்: சிலந்தி அல்லது வலை பின்னும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவன்

25. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?
பதில்: தண்ணீர்னு சொல்லலாம்னா, தண்ணி லாரி வந்துடுத்து, தண்ணி பிடிக்கணும்னு பல தங்கமணிகள் அவரவர் வீடுகளில் உள்ள வாயில்லாப் பூச்சிகளிடம் கூறுகிறார்களே.

26. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
பதில்: அகப்பை அல்லது செர்வர்

27. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம் அவன் யார்?
பதில்: மழை மேகம் அல்லது டி.பி. கஜேந்திரன்

28. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள்?
பதில்: முட்டை அல்லது தேங்காய் எண்ணெய் & நல்லெண்ணெய் (சுட்டிப்பையன் கிட்டு செய்ததற்கு அவனை தண்டிக்காதீர்கள்)

29. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
பதில்: தொலைபேசி

30. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?
பதில்: தென்னை மரம்
(30 கேள்விகளுக்குமான பின்குறிப்பு: அனானி, உங்கள் பெயர் என்ன இளவேனிலா)?

அனானி (16.10.2008 இரவு 08.38-க்கு கேட்டவர்)
1. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
பதில்: அதாவது ஒற்றுமையே பலம். அதை விளக்க நாங்கள் போட்ட நாடகம் பற்றி கூறுவேன்.
மரணப் படுக்கையில் தந்தை. அவருக்கு மூன்று பிள்ளைகள், ஒற்றுமையில்லாதவர்கள். தந்தை எல்லா பிள்ளைகளையும் அழைத்து, ஆளுக்கு ஒரு சுள்ளி கொடுப்பார். அதை உடைக்கும்படி கூறுவார். அவர்களும் சுலபமாக உடைப்பார்கள். பிறகு பல சுள்ளிகள் அடங்கிய காட்டு ஒன்றை கொடுப்பார். அதை உடக்க இயலாது. பின்னாலிருந்து ஒரு ஆழ்குரல் கேட்கும், "ஆகவே ஒற்றுமையில் உண்டு வாழ்வு, இல்லையேல் அனைவர்க்கும் தாழ்வு" என்று. ஒரே ஒரு நாள் மட்டும் சற்று வேறு சீன். நான் மரணப்படுக்கையிலிருக்கும் அப்பா வேடம் போட்டேன். ஒற்றை சுள்ளிகளை உடைத்தார்கள் பிள்ளைகள். கட்டு சுள்ளியை முதல் இரண்டு பிள்ளைகள் உடைக்க முடியாது மூன்றாம் பிள்ளையிடம் தர, அவன் தம் பிடித்து அதையும் உடைத்து தொலைத்தான். பிறகு என்ன எல்லோரும் (மரணப்படுக்கையில் இருக்கும் அப்பா உள்பட) எழுந்து ஓட்டம்தான்.

2. அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
பதில்: எப்படியாவது கலைஞரை ராஜினாமா செய்ய வைக்காமல் ஓய மாட்டார்கள் போல இருக்கு. ம்ம்ம், நடக்கட்டும்.

3. அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
பதில்: யார் அண்ணன், யார் தம்பி? யாருக்கு உதவ வேண்டும்?

4. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
பதில்: ஆக ரெண்டு பேருமே கொல்லாம விடமாட்டாங்கப்பு.

5. அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
பதில்: நாங்கள் இஞ்சினியரிங் கல்லூரி பரீட்சையில் அரியர்ஸ் வைத்து புலம்பியபோது எங்களிடம் கூறப்பட்ட இச்சொற்களை மறக்கவியலாது.

6. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
பதில்: இப்பெல்லாம் டி.வி.யில் சினிமா போட்டா பார்க்க ஆள் கிடைப்பதில்லை.

7. அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
பதில்: சமீபத்தில் 1954-ல் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் எங்களது நான்காம் வகுப்பு ஆசிரியர் பாஷ்யம் ஐயங்கார் இதை சொன்னபோது டோண்டு ராகவன் எழுந்து நின்று பவ்யமாகக் கையைக் கட்டிக் கொண்டு, “ஏன் சார் அர்த்த ராத்திரிலே, வெளீலே போறப்போ, மழை பெஞ்சா என்ன செய்யறது” என்று கேட்டு உதை வாங்கினான்.

8. அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
பதில்: அப்பத்தானப்பூ அதிகமாக குளிரெடுக்கும். இதென்ன சிறுபிள்ளத்தனமா இருக்கு?

9. அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அருவா
பதில்: ஸ்கூட்டரே இல்லாமல் கணவன் ஹெல்மெட் வாங்கினான். எதுக்கு? ஓசி லிஃப்ட் கேட்க. அதற்கு அவன் மனைவி “இதென்ன கூத்து, ஸ்கூட்டர் இல்லாமல் ஹெல்மெட் எப்படி வாங்கப் போச்சு” என கெக்கலி கொட்ட, அவன் எரிச்சலுடன் பதில் கூறினான், “இதப்பாரு, நீ பிரா வாங்கறதை பத்தி ஏதேனும் சொன்னேனா” என்று.

10. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
அப்ப, இச்சகம் பேச இருபது நாளா?

11. ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்
பதில்: ஆடத் தெரிந்தவள் கூறினாலும் மேடைக்கு பொறுப்பேற்றுள்ளவர் இதை கூறக்கூடும்.

12. விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை?
பதில்: ஆ, காந்தி இறந்து விட்டாரா?

13. விரலுக்குத் தக்கதே வீக்கம்
பதில்: அச்சமயம் மோதிரத்துக்கு அளவு கொடுத்து அதிக தங்கம் பெறுவது மாப்பிள்ளையின் மார்க்கம்

14. விளையும் பயிர் முளையிலே தெரியும்
நீ பிடுங்கறது எல்லாமே தேவையில்லாத ஆணிதாண்டான்னு வைகைப்புயல் சொன்னது ஞாபகத்துக்கு வருது.

15. வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்
ரொம்ப கஷ்டம்தேன்.

16. வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்
எங்கே இருக்கு வெண்ணெய்? அதான் தாழி ஒடஞ்சுப் போச்சே. ஆகவே ஆவின் நெய் வாங்கப் போறேன்.

17. வெளுத்ததெல்லாம் பாலல்ல
ஃபினாயிலுமல்ல

18. வேலிக்கு ஓணான் சாட்சி
பதில்: ஆவிக்கு பிசாசு சாட்சி

19. வைக்கோற் போர் நாய் போல
பதில்: தானும் லஞ்சம் வாங்காது மற்றவர்களையும் வாங்க விடாது படுத்தும் அதிகாரிகளை மற்ற அதிகாரிகள் இவ்வாறு ஒப்பிடுவர்.

20. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
தன் குஞ்சு மட்டுமல்ல, குயிலின் குஞ்சும்தான்


கிருஷ்ணன்
1. What is your stand on Sri Lankan issue ? Do you think political parties here in Tamil Nadu are enacting a drama to save LTTE ? Do you support The Hindu's stand ? What is your opinion on the article by Ms. Malini Parthasarathy?
பதில்: மாலினி பார்த்தசாரதி அவர்கள் கூறுவதிலிருந்து:
அ. The latest campaign in Tamil Nadu masterminded by a desperate LTTE must not be allowed to undermine the sound policy decision upheld by successive Indian governments since 1991 to stay out of Sri Lanka’s internal affairs.
உண்மை. வெறும் ஈழத்தமிழர்கள் மட்டும் அல்ல. மலையகத் தமிழர்களும் உள்ளனர். இப்போது புலிகள் ஆதரவு சரியல்ல.
ஆ. These parties have launched a campaign in the State ostensibly to express solidarity with the Sri Lankan Tamils trapped in the war zone in northern Sri Lanka but the timing of this campaign which appears to have materialised overnight, is a dead giveaway. The Sri Lankan army, just two kilometres away from the LTTE’s administrative capital, Kilinochchi, has successfully encircled the Tigers and their leader who are virtually trapped in their bunkers. For the first time in years, the Sri Lankan government appears to be on the brink of a major success in its battle with terrorism. There is now the very real prospect of the capture of the elusive LTTE chief, Velupillai Prabakaran, who is behind the assassination of a former Prime Minister of India, Rajiv Gandhi.
ஆம். பிரபாகரனை பிடிக்க வேண்டியது முக்கியம். ராஜீவின் கொலைக்கு தண்டனை பெற வேண்டியவர். இப்போது புலிகளுக்கு ஆதரவு தருவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல.
இ. The situation in Sri Lanka itself has undergone profound changes since the 1980s, when it was easier to conceptualise purely political solutions and rule out military responses to the violent dimensions of the conflict. At that point in time, it was indeed possible to sideline the militant groups of Sri Lankan Tamil politics by engaging the political interlocutors in the Tamil community such as the urbane leaders of the TULF, notably Appapillai Amirthalingam, who recognised the key to political empowerment lay in the democratic process. But with the ruthless elimination of every credible interlocutor in the Tamil community by the LTTE which insisted that it was the sole representative of the Sri Lankan Tamils, the space for a political solution has narrowed over the years, rendering null and void the several exercises seeking a devolution of power to the Tamil community.
அமிர்தலிங்கம் போன்றவர்களை கொலை செய்தவர்கள் புலிகள். தாங்கள் மட்டுமே தமிழர் பிரதிநிதிகளாகக் கருதப்பட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் பல படுகொலைகள் செய்தனர்.
ஈ. For the last decade or so, New Delhi has successfully resisted the various attempts made by the LTTE and its supporters in Tamil Nadu to force it to intervene in the Sri Lankan ethnic crisis. If New Delhi were to express its disapproval, even implicitly, of Sri Lanka’s sovereign right to recapture its own national territory from the LTTE, it would weaken the moral authority of India’s own actions in regard to its struggle against terrorism and the separatist agitation in Kashmir. This latest campaign in Tamil Nadu masterminded by a desperate LTTE must not be allowed to undermine the sound policy decision upheld by successive Indian governments since 1991 to stay out of Sri Lanka’s internal affairs.
தாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள். இந்திய அமைதிப்படை திரும்ப செல்ல வேண்டும் என பிரேமதாசாவுடன் சேர்ந்து கூத்தடித்தார் பிரபாகரன். “அப்படியா, உங்கள் சகோதரர்களுடன் நீங்களே பேசிக்கொள்ளுங்கள்” என கூறி விட வேண்டியதுதான் இந்தியாவின் நலனுக்கு நல்லது.

ரமணா:
1. 3G /2 G சேவை ,செல்பேசியில் விளக்குக?
பதில்: முதல் தலைமுறை, இரண்டாம் தலை முறை என்றெல்லாம் கூறவே G --> generation. மற்றப்படி இது பற்றி பத்ரி அவர்கள் அருமையான பதிவு போட்டுள்ளார்.

2. டெண்டரில் என்ன குழப்பம்?
பதில்: அதிக விலைக்கு கேட்பவர்களுக்கு தருவதா அல்லது அரசு லைசன்ஸ் தொகையை நிர்ணயித்து தருவதா என்பதில் பிரச்சினை என நினைக்கிறேன்.

3. யாருக்கோ சலுகை என்கின்றனரே? உண்மையா?
பதில்: அது இல்லாமல் இருக்குமா? அதுவும் இவ்வளவு பணம் புழங்கும் இடத்தில்?

4. இதிலும் அரசியலா?
பதில்: ஆம்

5. அமைச்சர் ராஜா அவர்கள் சொல்வதை பார்த்தால் எல்லாம் சரி போல் தெரிகிறதா?
பதில்: அவர் கூறும்போது சரி போலத்தான் தோன்றுகிறது.

6. தயாநிதியின் தலையிடா?
பதில்: தலையிடும் நிலையில் அவர் இல்லை என நினைக்கிறேன்.

7. பாராளுமன்றம் களை கட்டும் போலுள்ளதே?
பதில்: அது பல விஷயங்களுக்காக களை கட்டும். புலிகள், ராஜ் தாக்கரே, கூடவே இதையும் சேர்த்து கொள்ளலாம்.

8. கனிமொழி அமைச்சராவாரா?
பதில்: எம்.பி. பதவியே நிலைத்து நிற்கிறதா எனப் பாருங்கள்.

9.அவரது ராஜினாமா பற்றி
பதில்: கலைஞரிடம்தானே தந்திருக்கிறார். கலைஞருக்கு அடுத்த முறை அண்ணா கனவில் வரும்போது என்ன கூறுவாரோ, யாரே அறிவார்?

10. கலைஞரின் வாரிசாக வளர்ந்து அண்ணாக்களை முந்துவார் போலுள்ளதே?
பதில்: நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஸ்டாலின் அழகிரி கெடுபிடியில் காம்ப்ரமைஸாக அவரைத் தேர்ந்தெடுக்கலாம்.

புரட்சித் தமிழன்:
1. பங்குவணிக சூதாட்டம் பற்றிய தங்கள் கருத்து?
பதில்: நமக்கு சற்றும் ஒத்து வராத இடம் இது. கிட்டவே போவதில்லை. கேள்விக்கு நல்ல பதிலாக நண்பர் வால்பையன் தர இயலும்.

2. 7000 க்கு போய்விடும் எனக் கணிக்கிறார்களே?
பதில்: எது சென்செக்ஸா? ஏன் இந்த கொலை வெறி?

3. சரிவு என்றதும் நிதி அமைச்சர் ஓடி வருகிறாரே ஏன்?
பதில்: இது உலகளாவிய செயல்முறைதான். எல்லா நாடுகளிலும் உண்டு.

4. அவர் பையன் நஷ்டமடையாமல் காப்பாற்ற என்ற வதந்தியில் உண்மை உண்டா?
பதில்: நான் அதை நம்பவில்லை

5. இதற்குப் (பெரும் சரிவு) பிறகும் பொருளாதாரச் சீர்திருத்தம் தேவையா?
பதில்: தேவையா என்று கேட்க இது நேரம் இல்லை. நான் பலமுறை சொன்னது போல ஏற்கனவே அது வந்து விட்டது. கடிகாரத்தை திரும்ப வைக்க முடியாது.

6. கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்த பிறகும் பெட்ரோல் விலயை குறைக்க மறுக்கும் அரசின் செயல் பற்றி?
பதில்: சாதாரணமாக விலை பெட்ரோல் விஷயத்தில் உயர்ந்தால் உயர்ந்ததுதான்.

7. பின் அம்பானிகளை எப்படி நாம் குற்றம் சொல்ல முடியும்?
பதில்: சொல்ல முடியாதுதான்

8. கட்டுப்பாடான பொருளாதாரமே நம்மை போன்ற பெரிய நாட்டுக்கு உகந்தது என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்வீர்களா?
மாட்டேன். அடிப்படை பொருளாதார விதிகளை மறந்து வரவுக்கு மேல் தாம்தூம் செலவு செய்தால் கெடுதல்தான் வரும். இது எல்லா பொருளாதாரங்களுக்கும் பொருந்தும். கடன் கொடுப்பதற்கான அடிப்படை விதிகளை மறந்து கண்டவர்களுக்கு வாரி வாரி கடன் வழங்கினர் அமெரிக்கர்கள். இப்போது அனுபவிக்கின்றனர். அதற்கு முன்னால் நாட்டினரின் ஆதாரத் தேவைகளை கவனிக்காது ரஷ்யர்கள் ராணுவத் தளவாடங்களுக்கு செலவழித்தனர். திவாலாயினர். ஆக பொருளாதார விதிகளுக்கு மனுஷர்கள் தெரியாது, தத்துவங்கள் புரியாது.

9. விஷம்போல் ஏறும் உணவுப் பொருளின் விலைஉயர்வில் மூழ்கும் நமது ஏழை இந்திய சகோதரர்களை பற்றிய எண்ணம் எல்லோருக்கும் வருமா?
பதில்: வராது. அவரவர் கவலை அவருக்கு.

10. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் முழுத் தோல்வியை நோக்கிச் செல்கிறதா?
பதில்: இல்லை. அவற்றிலேயே நோய்க்கான மருந்தும் உள்ளடங்கியுள்ளது. கசப்பு மருந்தாயினும் அதை உட்கொண்டே தீர வேண்டும்.

அனானி (17.10.2008 காலை 07.49-க்கு கேட்டவர்)
1. கலைஞர் ஐயா கூட பேசுவது ஏதாக இருந்தாலும் அவர் நம்புவது பிராமண அதிகாரிகளை, மருத்துவர்களை, தணிக்கையாளர்களை, பத்திரிக்கையாளர்களை,வக்கீலகளை போல் தெரிகிறதே? ஏன்?
பதில்: பிராமணர்கள் என்று தனியாக இல்லை. அவரைப் பொருத்தவரை அவருக்கு வேண்டிய வேலைகளை செய்ய ஆட்களை நியமிக்கும்போது இட ஒதுக்கீடு எல்லாம் பார்க்க மாட்டார். அவ்வளவே. என்ன, அவ்வாறு நியமிக்கப்படுவர்களில் பார்ப்பனர் இருந்தால் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டார், அவ்வளவே.

அனானி (17.10.2008 காலை 07.30-க்கு கேட்டவர்)
1. மைனர் என்றால் என்ன? உண்மையிலேயே தெரியாது எனக்கு. மைனர் விளையாட்டு என்பதை பற்றி உங்கள் பதிவில் இருந்து ஒரளவு விளங்க முடிந்தது. என்றாலும் மேலும் விளக்கம் தேவை. (நான் இந்தியன் அல்ல)
பதில்: ஒரு சொத்தின் வாரிசு மைனராக (அதாவது 18 வயதுக்கு கீழே) இருந்தால், அவர் சொத்தை நிர்வகிக்க ஒரு கார்டியனை நியமிப்பார்கள். சாதாரணமாக அவ்வாறு நியமிக்கப்பட்ட கார்டியன்கள் மைனருக்கு எல்லா கெட்டப் பழக்கங்களையும் சொல்லிக் கொடுத்து நிர்வாகத்தை தாங்களே பார்த்து கொள்வார்கள். அப்படிப்பட்ட மைனருக்கு தினமும் பார்ட்டிதான். அதுதான் மைனர் வாழ்க்கை. பிறகு இந்த வார்த்தை ஜாலியாக பொழுதை போக்கும் எல்லோருக்குமே பாவிக்கப்பட்டது.

2. விஜய் தொலைக்காட்சியில் மாலை 6.00 ஒளிபரப்பாகும் சமய நிகழ்ச்சிகள் குறித்து உங்கள் கருத்து? மற்றய தொலைக்காட்சிகளிலும் இப்படி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் காலம் வருமா?
பதில்: இல்லை இதுவரை பார்த்ததில்லை.

3. மோடி போன்ற ஒருவர் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவது அடுத்த 25/50 வருடங்களில் சாத்தியமா?
பதில்: கஷ்டம்தேன். நம்மவர்களுக்கு சினிமா மோகம் அதிகம். அதே போல அடுக்கு மொழியில் ஒருவர் என்ன உளறினாலும் கைதட்டி விசிலடிப்பார்கள். குஜராத்தியர் அப்படியல்ல. பொதுவாக அதிகம் சீரியசானவர்கள். வியாபாரத்தில் கவனம் செலுத்துபவர்கள். ஆகவே இங்கே மோடி போன்றவர் பதவிக்கு வர்ழுவது நடக்காது என்றே கூறலாம்.

4. பாவாணர் கருத்துக்களை 3 பிரிக்கலாம். 1. தமிழ் கருத்துக்கள் 2. வடமொழி கருத்துக்கள் 3. குமரி/முதன்மை தாய்மொழி கருத்துக்கள். இந்த முன்றில் கடைசி இரண்டும் காலத்தால் கழிக்கப்பட்டு விட்டன. அனால் பாவாணர் தமிழ் கருத்துக்கள் மிகவும் சிறந்தவை என்பது என் கருத்து, உங்கள் கருத்து என்ன?
பதில்: மன்னிக்கவும். இது பற்றி நம்ம அறிவு கிட்டத்தட்ட லேது என்றே கூறலாம்.

5. தமிழில் சிறந்த கலை திரைப்படங்கள் இனிமேல் வருமா?
பதில்: பாக்ஸ் ஆஃபீசுக்கு குந்தகம் இல்லாத கலைப்படங்கள் வந்தால்தான் உண்டு.


அனானி (18.10.2008, காலை 09.10-க்கு கேட்டவர்):
தலைவர்களின் நிறை/குறைகளை பட்டியலிடவும்
1. தேசப்பிதா காந்தி மகான்

பதில்: சத்தியத்தை வைத்து பரிசோதனை செய்தவர். பிற்காலத்தில் வரும் சந்ததியினர் இம்மாதிரி ஒரு மனிதர் நிஜமாகவே உயிருடன் வாழ்ந்தார் என்பதை நம்ப சிரமப்படுவார்கள் என்று கருத்து தெரிவித்தார் ஐன்ஷ்டைன் அவர்கள். இது நிறை. குறை? அதுவும் இதுவேதான்.
2. தலைவர் ஜின்னாஜி
பதில்: நம்முடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தனது கொள்கைகளுக்கு உண்மையாக வாழ்ந்தவர். குறை? நாட்டை துண்டாட காரணமாக இருந்தவர். ஆனால் அதையே பாகிஸ்தானில் நிறையாகப் பார்ப்பார்கள்.
3. சட்ட மேதை அம்பேத்கார்ஜி
பதில்: அரசியல் நிர்ணயச் சட்டத்தின் பிதா என்று அழைக்கப்படுபவர். குறை என்று தேடினாலும் அகப்படவில்லை எனக்கு. அப்படி சொல்ல வேண்டுமானால் இன்னும் அதிக ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கலாம் என்ற மனக்குறையை வேண்டுமானால் சொல்லலாம்.
4. பெரியவர் நேதாஜி
பதில்: மிகுந்த தேசப்பற்றுள்ளவர். ஆனால் சேரக்கூடாதவர்களுடன் (ஜெர்மானியர், ஜப்பானியர்) சேர்ந்தவர். உலகப் போரில் அந்த நாடுகள் வெற்றி பெற்றிருந்தால் அவை முதலில் நேதாஜியைத்தான் போட்டு தள்ளியிருப்பார்கள்.
5. மூதறிஞர் ராஜாஜி
பதில்: பகவத் கீதை சொன்ன வழியில் நடந்து தன் கடமையைச் செய்தவர். குறை என்னவென்றால், அரசியலில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளத் தெரியாதவர். இவரிடம் ஆக வேண்டிய காரியம் நிறைவேறியதும் கழற்றிவிடப்பட்டவர். அதற்காக அவர் வருந்தவில்லை என்பது வேறு விஷயம்.
6. பண்டிட் நேருஜி
பதில்: நேர்மையானவர். ஆனால் நம்பக்கூடாதவர்களை நம்பியதால் (1962) நாட்டுக்கே கெடுதி வந்தது.
7 .நேர்மையாளர் மொரார்ஜி
பதில்: ராஜாஜிக்கு சொன்ன பதில் கிட்டத்தட்ட இவருக்கும் பொருந்தும், அதாவது சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள முடியாதவர்..
8. தூய்மையாளர் சாஸ்திரிஜி
பதில்: அவர் நேர்மையில் சந்தேகம் இருக்க முடியாது. குறைகள் வெளிப்பட்டு நாட்டை பாதிக்கும் முன்னரே மறைந்தவர்.
9. பண்பாளர் நந்தாஜி
பதில்: எளிமையான மனிதர். என்ன, சாதுக்கள் வீக்னஸ் அவ்வளவுதான்.
10. அன்னை இந்திராஜி
பதில்: பங்களாதேஷ் யுத்தத்தில் இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தியவர். ஆனால் தனது சுயநலனுக்காக ஜனநாயகத்தையே சூதாட்டத்தில் வைத்து ஆடியவர் (நெருக்கடிநிலை பிரகடனம்).


ராமகிருஷ்ணஹரி:
please explain the following with an example ( based on the latest trends in tamilnadu )
1. violence(ஹிம்சை)

பதில்: தமிழ் மெகா சீரியல்கள்

2. greed(பேராசை)
பதில்: எல்லாமே தன் குடும்பத்துக்காகத்தான் என்று செயல்படும் தலைவர்கள்

3. ambition(புகழ்பெறவேண்டும் என்ற ஆசை)
பதில்: யாருக்குத்தான் அது இல்லை?

4. competition (போட்டிமனப்பான்மை)
பதில்: இது இல்லையென்றால் மனித குலமே முன்னேறியிருக்காது.

5. brutality(பண்பற்ற மிருகத்தனம்)
பதில்: நாள் தவறாமல் பேப்பரை திறந்தால் இது பற்றித்தானே செய்திகள் வருகின்றன.

6. vanity(தற்பெருமை)
பதில்: தாம் செய்தால் சுயநம்பிக்கை, மற்றவர் செய்தால் தற்பெருமை என்றிருப்பதால் வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை

7. jealousy(பொறாமை)
அது போட்டி மனப்பான்மையை தோற்றுவித்து ஆரோக்கியமான போட்டியை உண்டாக்கினால் பரவாயில்லை.

9. ideologies (கொள்கைகள்)
பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள். அவற்றில் ஒன்றுதான் கொள்கைகள்.

10. beliefs(நம்பிக்கைகள்)
பதில்: நாளைக்கு உயிருடன் காலையைப் பார்ப்போமா என்ற நிச்சயம் இல்லாத சூழலில் எதிர்காலத்துக்காக நாம் சேமித்து திட்டம் போடுவதே நம்பிக்கையின் அடிப்படையில்தானே?


புரட்சித் தமிழன்:
உங்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப் பட்டால் என அதிரடி முடிவுகளை எடுப்பீர்கள்
1. இந்திய பிரதமராக

பதில்: இந்திய நலன்களுக்கு ஏற்ப செயல்படுமாறு நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் செயல்பட நிலையை உருவாக்குவது. ஏற்கனவே நிதி அமைச்சர் ஒருவருக்கு நல்ல இன்ஸ்ட்ரக்‌ஷன்களை அளிப்பதை சமீபத்தில் 1991-ல் நரசிம்மராவ் செய்து விட்டார். இந்த விஷயத்தில் அவர் மாதிரி செயல்பட்டாலே நல்லது. உள்துறை அமைச்சருக்கு தீவிரவாதத்தை ஒரு சமரசமுமின்றி வேருடன் கிள்ளியெடுப்பதற்கான செயல்பாடுகளை உருவாக்கச் சொல்லுவேன். முடிந்தால் மோடியை உள்துறை அமைச்சராக நியமிப்பேன்.

2. இந்திய நிதி அமைச்சராக
பதில்: மேலே குறிப்பிட்ட பிரதமர் கூறுவதை செயல்படுத்துவேன்.

3. இந்திய உள்துறை அமைச்சராக
மேலே குறிப்பிட்ட பிரதமர் கூறுவதை செயல்படுத்துவேன். அதுவும் பிரதமராக மோடி இருந்து விட்டால் விசேஷம்.

4. இந்திய காங்கிரஸ் தலைவராக
பதில்: நேரு குடும்பத்தின் டாமினேஷனை அகற்ற முயற்சிப்பேன்.

5. செபி(sebi) தலைவராக
தமிழ்: பங்கு சந்தைகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வர முயற்சிப்பேன்.

6. RBI தலைவராக
ரிசர்வ் வங்கியின் தலைவருக்கு இருக்கும் அதிகாரங்களை பயமோ பாரபட்சமோ இன்றி பிரயோகம் செய்வேன்.

7. ரிலயன்ஸ் குழுமத்தின் தலைவராக
பதில்: முதற்கண் எந்த ரிலையன்ஸ் குழுவின் தலைவரானாலும் இன்னொரு குழுவினருடன் பேசி தேவையற்ற தகராறுகளை தவிர்ப்பேன்.

8. cpi(m) தலைவராக
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிரச்சினை வந்தால் இந்தியாவின் பக்கமே பேசுவேன்.

9. திமுக/அதிமுக தலைவராக
சொந்த குடும்பம்/தோழியின் குடும்பம் ஆகியோரது டாமினேஷனைத் தவிர்ப்பேன்.

10. பாஜக தலைவராக
பதில்: கஷ்டமோ நஷ்டமோ தமிழகத்தில் கட்சியை சொந்தக் கால்களில் நிறுத்த முயற்சிப்பேன். திருநாவுக்கரசு போன்றோரை ஆதரிப்பேன்.

ஒரு சிறு அறிவிப்பு: பதிலளித்த கேள்விகள் இம்முறை மிக அதிகம் ஆகிவிட்டன. இன்னும் பதிலளிக்க மேலும் கிட்டத்தட்ட 50 கேள்விகள் உள்ளன. அவற்றில் இலங்கை விவகாரம் குறித்து மட்டும் இருபதுக்கும் மேலே கேள்விகள் வந்துள்ளன. இந்த எல்லா கேள்விகளையும் அடுத்த பதிவின் வரைவுக்கு கொண்டு செல்கிறேன்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/17/2008

சினிமா - மலரும் நினைவுகள்

லக்கிலுக்கின் அழைப்பை ஏற்று இப்பதிவை போடுகிறேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

சமீபத்தில் 1951-ல் காஞ்சனா என்னும் படம். எழுத்தாளர் லட்சுமி அவர்கள் எழுதிய, விகடனில் தொடராக வந்த “காஞ்சனையின் கனவு” என்ற தொடர்கதையை படமாக எடுத்திருந்தனர். பத்மினியின் அக்கா லலிதா நடித்திருந்தார். பல ஆண்டுகள் கழித்து அக்கதையை படித்தேன். நன்றாகவே கதையை சிதைக்காமல் எடுத்திருந்தார்கள் என்றுதான் கூற வேண்டும்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

இம்சை அரசன் புலிகேசி - 23 என்று நினைக்கிறேன். அது பற்றி மனதைக் கவர்ந்த வைகைப் புயல் மற்றும் இம்சை அரசன் தூண்டிய நினைவுகள் என இரு பதிவுகளும் போட்டுள்ளேன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கேபிள் டீவி உபயத்தில் பார்த்த படம் வீராப்பு. சுந்தர் சி நடித்தது. அது பற்றியும் நான் பதிவு போட்டுள்ளேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

பாண்டவர் பூமி. நான் தில்லியிலிருந்து சென்னைக்கு நிரந்தரமாக திரும்ப வந்த காலக்கட்டத்தில் அதே மாதிரி ஒரு தீம் வைத்து வந்த படம் பற்றி நான் போட்ட பதிவுகள் பாண்டவர் பூமியும் டோண்டு ராகவனும் மற்றும் அதற்கு பின்னால் வந்த இப்பதிவும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி நடந்த போராட்டங்களும் கமல் அதை தைரியமாக எதிர்க்கொண்டதும்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

அபூர்வ சகோதரர்கள். இப்போது கூட அப்புவாக எப்படி நடித்தார் என்பது எனக்குத் தெரியாது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வம்புகள் பிடிக்கும். எழுபதுகளில் “மூக்குத்தி” என்னும் பத்திரிகை வரும். அதில் வந்த வதந்தியும் விசாரித்த உண்மையும் என்று சுவையான வம்புகள் வரும். உதாரணம்: வதந்தி என்னவென்றால் வியட்னாம் வீடு சுந்தரத்துக்கு வலது உள்ளங்கையில் அம்மன் அருள் என்பதே. விசாரித்த உண்மை: அம்மன் அருள் எல்லாம் இல்லை. சுந்தரத்துக்கு அவரது தங்கமணியுடன் ஏற்பட்ட சண்டையில் அம்மணி மேற்படி சுந்தரததை சமையலறையில் வைத்து தள்ளி விட, அதே நேரே அடுப்பின் மேல் சூடாக இருந்த தோசைக்கல்லின் மேல் வலது உள்ளங்கையை பதித்து அடுப்பின் மேல் விழ, அந்த சூட்டைத்தான் அம்மன் அருள் என்று கூறுவதாக செய்தி வந்தது.

7.தமிழ் சினிமா இசை?

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பழைய பாடல்கள் என்னை இன்னமும் கவருகின்றன.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
Pot Bouille என்னும் பிரெஞ்சு படத்தை சப்டைட்டில்களை பார்க்காமல் இருக்க கண்ணாடி அணியாது பார்த்தேன். எமிலி ஜோலாவின் அதே தலைப்பை உடைய புதினதின் படமாக்கம் மூலக்கதையை விட வெகு ஜோர். எனது அபிமான பிரெஞ்சு நடிகர் ஜெராற் ஃபிலிப் நடித்த படமாக்கும். அதிகம் தாக்கிய படம் Fiddler on the roof. சமீபத்தில் 1976-ல் பார்த்தேன். யூதக்கதை நடிப்பு எனது அபிமான இஸ்ரவேல நடிகர் டோபோல். டோண்டு ராகவனுக்கு பிடிக்காமல் இருக்குமா?

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

கமலஹாசன் என்னுடைய மாமா பிள்ளை பார்த்தசாரதியின் மனைவி நிர்மலாவின் அண்ணா ரகுவின் மனைவி நளினியின் தம்பி. அவரை நான் நன்கு அறிவேன். ஆனால் அவருக்குத்தான் என்னைத் தெரியாது. :))

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ் சினிமா என்றில்லை, ஹாலிவுட் சினிமாக்களே வருங்காலங்களில் உருப்படாது என அமெரிக்காவில் பலர் கூறியதாக சமீபத்தில் 1963-ல் ஆர்.கே. நாராயணனின் அமெரிக்க நினைவுகள் பற்றிய விகடன் தொடரில் படித்துள்ளேன். நான் கூறவருவது என்னவென்றால், இம்மாதிரி பேச்சுக்கள் சர்வசாதாரணமாக வந்து கொண்டிருக்கும். திரையுலக்ம் பாட்டுக்கு அதன் போக்கில் செல்லும் அவ்வளவே.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எல்லோரும் வேறு ஏதேனும் உருப்படியான வேலை பார்ப்பார்கள்.

நான் அழைக்க விரும்புவது:
1. என்றென்றும் அன்புடன் பாலா
2. டி.பி.ஆர். ஜோசஃப்
3. செல்வன்
4. அதிஷா
5. ப்ரூனோ
6. உண்மைத்தமிழன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் 17.10.2008

அனானி (10.10.2008, மாலை 04.54-க்கு கேள்வி கேட்டவர்)
1. பார்ப்பனீயம் என்ற வார்த்தையை நீங்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிகொண்டிருப்பவர்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறார்கள்?
பதில்: பார்ப்பனீயம் என்னும் வார்த்தையை ஒரு பெரிய அவதூறாகத்தான் பார்க்கிறேன். அதுவும் தலித்துகள் மேன் வன்கொடுமை செய்வது வன்னியர், கவுண்டர், தேவர், பிள்ளைமார், முதலியார், நாயுடு, நாயக்கர் என்றிருக்க, எனக்கு தெரிந்து கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பார்ப்பனர் கூட அதைச் செய்ததாக இல்லாமல் இருக்கும்போது அவ்வாறு செய்பவர்கள் பார்ப்பனீயத்தை தூக்கி பிடிப்பதாகக் கூறி ஜல்லியடிப்பது பச்சை அயோக்கியத்தனம். அதையெல்லாம் செய்யும் பல சாதியினர் இட ஒதுக்கீடு வேறு பெற்று இருப்பது கொடுமையிலும் கொடுமை.
பகுத்தறிவுவாதிகள் என பொய்யாக உதார்விடுபவர்கள் பார்ப்பனீயம் என்று கூறுவது உயர்சாதீயத்தைத்தான். எங்கே தத்தம் சாதிக்கு கெட்ட பெயர் வந்து விடுமோ என எண்ணி பார்ப்பனீயம் என்று செயற்கையாகவே கட்சி கட்டுவது இன்னொரு கொடுமை.

அனானி (10.10.2008, மாலை 04.57-க்கு கேள்வி கேட்டவர்)
1. வால்பையன் லக்கிலுக்கு என்ன பிரச்சினை? இருவரும் நண்பர்களாக தானே இருந்தார்கள்? ஒரு வலைபதிவர் சந்திப்பில் கூட வால்பையன் உங்கள் மூலமாக லக்கிலுக்கிடம் பேசியதாக சொன்னார்களே?
பதில்: வால்பையனுக்கு ஃபோன் செய்து கேட்டேன். அப்படி ஒன்றும் இல்லை என கூறிவிட்டார். வால்பையன் பிரச்சினைக்கு காரணமே அவர் டோண்டுவை தன் நண்பர் என கூறிகொள்வதுதான் என்று பொருள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர். வேறு ஒன்றும் இது பற்றி பேச விசேஷமாக ஒன்றும் இல்லை.

அரவிந்தன்:
1. பிராமணப் பெண்களுக்கு இருக்கும் பரந்த மனசு, விசாலமான பார்வை பெரும்பாலான பிராமண ஆண்களுக்கு இருப்பதில்லையே ஏன்?
பதில்: பிராமண ஆண்களும் வேறு சாதி பெண்களை மண்க்கின்றனரே. எனது உறவினர்கள் பலர் அவ்வாறு செய்துள்ளனர். இதிலெல்லாம் பொதுப்படையாகக் கூற ஏதுமில்லை. பிராமணர்களோ மற்றவர்களோ யாராயினும் இக்காலக்கட்டத்தில் கலப்பு மணம் செய்தாலும் அதில் பெரும்பான்மையினர் பணமுள்ள இடமாகத்தான் மணமுடிக்கின்றனர்.

வீ.எம்.
1. சாரே, முன்பெல்லாம் 3 - 4 பக்கங்கள் வரை வந்த உங்க டோண்டு கேள்வி பதில் பதிவு, இப்போது அரை பக்கமாக குறைந்துவிட்டதே, கேள்விகளுக்கு வறட்சியா? அல்லது உங்கள் பதில்கள் சலிப்படையவைக்கிறாதா பதிவர்களை?
பதில்: எனது பதில்கள்தான் சலிப்படைய செய்திருக்க வேண்டும். ஆகவே கேள்வி கேட்க ஆள் இல்லாமல் போயிற்று. ஒரு வெள்ளியன்று கேள்விகளே இல்லாததால் இப்பதிவே வரவில்லை. அதற்கென்ன கூறுவீர்களாம்? “நானே கேள்வி நானே பதில்” என போட்டுக் கொள்ள நான் என்ன லூஸா? கேள்விகள் வந்தால் பதிவு வரும் இல்லாவிட்டால் இல்லை. ரொம்ப சிம்பிள்.

அனானி (14.10.2008 பிற்பகல் 1.13-க்கு கேட்டவர். சில கேள்விகள் மிகவும் ஆட்சேபகரமாக இருந்ததால் நீக்கப்பட்டுள்ளன)
1. காவேரி கரையில் விபச்சாரிகளுடனும், மற்ற மைனர்களுடனும் தான் நடத்திய மைனர் விளையாட்டுக்களுக்கு தன் பெண்டாட்டியையே சமைத்து எடுத்துவரச் சொன்னார் அந்த ஈவேரா. அந்தப் பெண்ணின் மனது எந்த அளவு பாடுபட்டிருக்கும் என்பதை அவர் புரிந்துகொண்டாரா?
பதில்: பெரியார் இளமை பிராயத்தில் மைனர் விளையாட்டு விளையாடியதை என்றுமே மறைத்ததில்லை. அவர் காலக் கட்டத்தில் அவரது சம அந்தஸ்தில் இருந்த பல பெரிய வீட்டு பிள்ளைகள் எல்லாம் சர்வசாதாரணமாக மைனர் விளையாட்டு விளையாடியுள்ளனர். ஆகவே இதற்காக பெரியாரை மட்டும் குறி வைப்பது என்ன நியாயம்? அதே நேரத்தில் தனது மனைவி நாகம்மையார் இறந்த சமயம் கையறு நிலையில் வெளியிட்ட இரங்கல் செய்தி கல்லையும் உருக்கும். அதுவரை அவரை வெறுமனே ஈ.வே.ரா. என்று குறிப்பிட்டு வந்த இந்த டோண்டு ராகவன் அதைப் படித்ததும்தான் அவரை பெரியார் என்று கூற ஆரம்பித்தான் என்பது இங்கு கூடுதல் செய்தி.

4. காசுக்காக ஒருவரை பாராட்டுவது, காசு கிடைக்காவிட்டால் அவரைப் பற்றி தவறாகப் பேசுவது என்று வாழ்க்கை நடத்தினார் ஈவேரா. இவருடைய ப்ளாக்மெயில் வித்தையைத்தான் சினிமா ரேட்டிங்குகளில் சன் டிவியும், கலைஞன் டிவியும், அழகிரியும் பயன்படுத்துகின்றன. இதுதான் ஈவேரா கொண்டுவந்த திராவிட கலாச்சாரமா?
பதில்: ஒரு சமயம் ஒருவரிடமிருந்து பணம் வராததால் அவரை திட்டி எழுதுமாறு அண்ணா அவர்கள் பணிக்கப்பட்டார். பிறகு அவர் பணம் தந்துவிட அவரே அண்ணாவை அதே காரணத்துக்காக எழுத விடாது தடுத்ததையும் பலர் வெளிப்படையாகவே எழுதி விட்டனர்.

6. கிருத்துவ மதம் மாற்றிகள் கொடுத்த தகவல்களை வைத்து தனக்கு பேச்சுக்களை தயாரித்துத்தர ஒரு குழுவை வைத்திருந்தார் ஈவேரா. ஆனால், தான் பேசியது எல்லாம் தனது சொந்த கருத்து என்று புருடா விட்டார். இதுதான் சுயமரியாதை உள்ள ஒரு ஆள் செய்யக்கூடியதா?
பதில்: யாராவது ஒருவர் எழுதித் தருவதைத்தானே பல தலைவர்கள் பேசுகின்றனர்? இதற்கு பணம் செலவழிப்பார்கள் மற்றவர். ஆனால் பெரியாரோ இலவசமாகவே மதம் மாற்றிகளிடமிருந்து பல விஷயங்களை புத்திசாலித்தனமாக எடுத்து கொண்டார் என்று வைத்து கொள்வதில் என்ன நட்டம்? இதில் சுயமரியாதை எங்கிருந்து வந்தது? சாமர்த்தியம்தான் தெரிகிறது.

7. காம சுதந்திரம் வேண்டும் என்று பேசிய ஈவேரா, காதல் சுதந்திரத்தைப் பற்றிப் பேசிய புராணங்களை இகழ்ந்தது ஏன்?
பதில்: பல முறை பெரியார் அவர்கள் சிந்திக்காமல் சந்தர்ப்பத்துக்கேற்ப பேசியவர். வேறு என்ன சொல்ல இருக்கிறது?

8. சமூக சேவை செய்கிறேன், சமூக சேவை செய்கிறேன் என்று பெருமை அடித்துக்கொண்ட ஈவேரா ஏதேனும் ஒரு அனாதை விடுதிக்கோ, முதியோர் இல்லத்திற்கோ ஒரு பைசா நன்கொடை கொடுத்திருப்பதை ஆதாரத்துடன் சொல்ல முடியுமா?
பதில்: என்னால் அவ்வாறு கூற இயலாது. பெரியார் அறக்கட்டளையில் இப்போது செய்யப்படுகிறதா என்பது பற்றியும் அறியேன். அதே சமயம் செய்தால் ஆச்சரியமும் படமாட்டேன்.

9. தனது பேச்சு முடிவில் எல்லாம், "நீயாக சுயமாக யோசித்து முடிவு செய்" என்று பேசி தன்னை ஒரு ஜனநாயகவாதியாகக் காட்டிய ஈவேரா தனது சமூக வாழ்விலும், தனது சொந்த வாழ்விலும் தான் விரும்பியதுதான் நடக்கவேண்டும் என்று ஒரு அடக்குமுறையாளனாக வாழ்ந்தது ஏன்? பேச்சும் செயலும் எதிரிடையாக இருந்தால் அப்படிப்பட்ட நபருக்கு தமிழில் என்ன பெயர்?
பதில்: அதாவது பெரியாரை ஆஷாடபூதி என்கிறீர்கள். அவ்வாறு இருந்ததன் பலன் 1949-ல் கட்சி உடைந்ததே.

10. ஆரிய இன வெறி பேசிய ஹிட்லருக்கு, திராவிட இனவெறி பேசிய ஈவேராவுக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: ஹிட்லர் சொன்ன ஆரியவாதத்தை கேட்டு நடக்க பலர் தயாராக இருந்தனர். அறுபது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். நல்ல வேளையாக பெரியார் சொன்ன திராவிட வாதத்தை கேட்க தமிழகம் விடுத்த திராவிட பிரதேசங்களில் யாரும் இல்லை. மற்றப்படி ஹிட்லரையும் பெரியாரையும் ஒப்பிடுவது ரொம்ப ஓவர்.

11. கிருத்துவர்களிடமும், முஸ்லீம்களிடமும் காசு வாங்கிக்கொண்டு இந்து மதம் அழிய வேண்டும் என்று பேசி, எழுதி அவர்களின் கைக்கூலியாக ஈவேரா செயல்பட்டார் என்று பலர் சொல்லுகிறார்கள். அது உண்மையா? எங்காவது கிருத்துவ, இஸ்லாமிய மதங்கள் என்று தெளிவாக அவற்றின் பெயரைச் சொல்லி, அவை அழிய வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறாரா?
பதில்: பெரியாருக்கு தனிப்பட்ட முறையில் இந்து மதத்தை பிடிக்காது என்பதுதான் உண்மை. அதே சமயம் ஒரு முறை இசுலாமியர் ஒருவர் பொது கூட்டத்தில் இந்து மதத்தை தாக்கி பேச, அவரை பெரியார் இம்மாதிரி எல்லாம் எங்கள் மதம் பற்றி நாங்களே பேசி கொள்வோம், வெளி நபர் நீங்க்கள் கூறலாகாது என தடுத்ததாகவும் கேள்விப்பட்டேன். அதே போல அம்பேத்கர் அவர்கள் இசுலாமிய மதத்தைத் தழுவலாம் என்ற நிலை தோன்றியபோது, இசுலாமிய மதத்தில் மாற்று கருத்துக்களை கடுமையாகக் கையாளுவார்கள் என்று கூறி அவரை அவ்வாறு செய்வதை தடுத்து அவருக்கு கூறியவர் பெரியார்.

12. தன்னைப் போன்ற உயர்ந்த ஜாதிக்காரர்களின் ஜாதி வெறிக்கு ஆதரவாகவும், பணக்காரர்களுக்காகவும் வேலை செய்தார் ஈவேரா என்றும் பலர் சொல்லுகிறார்கள். இல்லை என்று நிறுவ தேவையான தகவல்கள் தர முடியுமா?
பதில்: பெரியாரின் எதிர்ப்பு எல்லாம் பார்ப்பனரையே முக்கியமாக குறிவைத்தது. மற்ற உயர் சாதியினருக்கு ஆதரவாகத்தான் அவர் டீஃபால்ட்டாக செயல்பட்டுள்ளார். கீழ்வெண்மணி படுககொலை விவகாரத்தில் குற்றவாளி பார்ப்பன மிராசுதாராக இருந்திருந்தால் கிழித்து கட்டியிருப்பார் அவர். குற்றவாளி நாயுடுவாகப் போகவே சவசவவென்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

14. சமூக சேவை செய்ய வந்த தான் எளிமையானவன் என்று காட்டிக்கொண்டார் ஈவேரா. காந்தியின் வழியில் மது எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதாகச் சொல்லிவந்தார். பணத்தில் தனக்கு ஆர்வம் கிடையாது என்று மற்றவர்களை நம்பவைக்க தனக்குச் சொந்தம் இல்லாத, ஆனால் குடும்பத்தில் உள்ள மற்றொருவருக்கு என்று பேசப்பட்டு வந்த மரங்களை வெட்டிவிட்டு, தனக்குச் சொந்தமான மரங்களை வெட்டிவிட்டதாகப் பொய் சொன்னது ஏன்?
பதில்: இது எனக்கு புது செய்தி. அது உண்மையா என்பதில் சந்தேகம் இருக்கிறது. அவர் வெட்டிய மரங்கள் அவருடையவே என்றுதான் நான் உறுதியாக நம்புகிறேன்.

15. மது விலக்கிற்காகப் போராடியபோதுகூட தனது மதிய சாப்பாட்டில் வெளிநாட்டு மதுவை அருந்திவந்த ஈவேரா எந்த அளவுக்கு உண்மையான காந்தியவாதியாக இருந்தார்?
பதில்: மதுவிலக்கை கொண்டு வந்த காங்கிரஸின் தலைவர் நேருவும் மது அருந்தியவர்தானே. பெரியார் அவ்வாறு செய்திருந்தால் என்ன தவறு காண முடியும்? எல்லோரும் ராஜாஜி ஆக முடியுமா?

16. விபச்சாரிகளோடும், போதை வஸ்துக்களோடும் தனது இளமை காலத்தைக் கழித்த ஈவேரா திடீரென்று சாமியாராகப் போகப்போவதாகச் சொல்லி காசிக்கு ஏன் ஓடினார்? எந்த கொலைபாதகப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க அவர் அப்படி செய்தார்?
பதில்: அவரது தந்தையுடன் அவருக்கு ஏற்பட்ட தலைமுறை இடைவெளிதான் அதற்கு முக்கியக் காரணம். நீங்கள் சொல்வது போல இல்லை.

17. எப்போது பார்த்தாலும் தனது மைனர் லீலைகளுக்காக தனது முன்னோர்கள் சொத்தை பயன்படுத்த வெட்கப் படாத ஈவேரா, காசி மடத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஒழுக்கம் அற்றவர்கள் என்பதால்தான் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகச் சொல்லிக்கொண்டார். ஈவேராவை காசியில் இருந்த துறவிகள் வெறுத்து ஒதுக்க உண்மையான காரணங்கள் என்ன?
பதில்: மறுபடியும் கூறுவேன், மைனர் விளையாட்டு என்பது அக்காலக் கட்டங்களில் சமூக ரீதியாக கண்டிக்கப்பட்டதல்ல. பொது நீர்ரோட்டத்தில்தான் பெரியாரும் இருந்திருக்கிறார். மற்றப்படி காசியில் என்ன நடந்தது என்பதை நான் அறியேன்.

18. ஈவேரா பிறக்காத, வேலை செய்யாத மாநிலங்களில் இருக்கும் தலித்துக்களின் நிலைமை, அவர் பிறந்த வேலை செய்த தமிழ்நாட்டைவிட மேம்பட்டதாக இருக்கக் காரணம் என்ன?
பதில்: தலித்துகள் நிலைமை இந்தியா முழுக்கவும் மோசமாகவேதான் உள்ளது. நீங்கள் கூறுவது போல தமிழகத்தில்தான் அதிக மோசமாக உள்ளது என்பதை நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன்.

19. ஜாதி ஒழிய வேண்டும் என்று பசப்பிய ஈவேரா, தன்னை ஒருவர் சந்திக்க வந்தால் அவருடைய ஜாதி என்ன என்று ஒவ்வொருமுறையும் கேட்டது ஏன்?
பதில்: அக்காலத்து சூழ்நிலை அப்படி. ரொம்ப சாதாரணமாக புதிதாக ஒருவரை சந்தித்ததுமே “என்ன வர்ணம்” என்று வெளிப்படையாகவே கேட்டு தெரிந்து கொள்வார்கள். மற்றப்படி பெரியார் அவர்கள் யாரையும், மிகவும் தன்னைவிட இளையவர்களையும் வாங்க போங்க என்றுதான் மரியாதையாகப் பேசுவார் என்பதை ஹிந்து நிருபராக இருந்த எனது தந்தை கூறியுள்ளார்.

20. ஜாதி கிடையாது, ஆனால் ஜாதிப் புத்தி என்பது உண்டு என்று அவர் சொல்லி வந்தார். ஜாதி இல்லாவிட்டால், ஜாதிப் புத்தி மட்டும் எங்கிருந்து வரும்? இந்த வாதத்தின் அறிவுபூர்வமான தன்மையை தர்க்க நியதிகளின்படி விளக்கவும்.
பதில்: மணியம்மையார் விவகாரத்தில் அவரை திருமணம் செய்வதை தவிர்த்து பெரியார் அவரை வெறுமனே வைத்து கொண்டால் தம்பிகளுக்கு ஆட்சேபணை இருக்காது என அண்ணா கூற அப்போதுதான் பெரியார் அவர்கள் “அண்ணாத்துரை தன் ஜாதி புத்தியை காட்டிவிட்டார்” என்று கூறியது பல இடங்களில் பதிவாகி உள்ளது. அது பற்றி மேலே பெரியாரிடம் இவ்வாறு கூறலாமா என கேட்க அதற்கு அவர் ஜாதிகள் கூடாதுதான் ஆனால் ஜாதிபுத்தியும் போகாது” என்று கூறிவிட்டார்.

21. ஈவேராவைப் பற்றிய நல்ல விஷயங்கள் எல்லாம் அவர் அடுத்தவர்களுக்கு சொல்லி, அந்த அடுத்தவர்கள் மற்றவர்களுக்கு சொல்லிவந்த விஷயங்களாக இருக்கின்றன. ஆனால், ஈவேராவுடன் நேரடியாகப் பழகியவர்கள் எல்லாம் அவரைப் பற்றி மோசமாகவே கருத்துத் தெரிவித்தார்கள். இதில் யாரை நம்புவது?
பதில்: 90 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமான செயல்பாட்டோடு வாழ்ந்த ஒருவர் பல காலக் கட்டங்களில் பல கருத்துகளை ஏற்க வேண்டியிருக்கும். ஒரே விஷயத்தில் எதிரெதிர் கருத்துக்களையும் சூழ்நிலைக்கேற்ப பாவிக்க வேண்டியிருக்கும். அதே சமயம் அவருடன் பழகுபவர்களுக்கு அதெல்லாம் பிடிக்காமல் இருக்கலாம். ஆகவேதான் நீங்கள் சொல்வது போல நடக்கிறது. அதுவும் பெரியார் அவர்கள் இறந்து 35 ஆண்டுகள் நிறைவு பெறும் தருவாயில் அவரோடு நேரடியாக பழகியவர்கள் எண்ணிக்கை இன்றைய தேதியில் குறைச்சலாகத்தானே இருக்கும்?

22. ஈவேரா ஒரு அமைப்பை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்திவந்தார். அவருடைய மிரட்டலுக்குப் பயந்து பணம் கொடுத்த பணக்காரர்கள் தவிர, அவர் உண்மையில் நல்லவர் என்று நம்பிய பல ஏழை தமிழர்களும் அந்த இயக்கத்திற்காக நன்கொடை அளித்தனர். ஆனால், அந்த அமைப்பிற்குக் கிடைத்த பணத்தை, அவருக்கு மிக நெருங்கிய இரண்டாம்நிலை தலைவர்கள் சிலர் வட்டிக்கு விட்டும், சொந்த செலவுகளுக்குப் பயன்படுத்தியும் கொண்டனர். ஆனால், அதை ஈவேரா தட்டிக் கேட்கவில்லை. பண விவகாரத்தில் கறாரானவரான ஈவேரா இவர்கள் அடித்த கும்மாளங்களை ஏன் கண்டுகொள்ளவில்லை? அவரை நம்பி பணம் கொடுத்த ஏழைகள் வாழ்வு எவ்விதமாவது உயர்ந்ததா? (அனானியால் திருத்தப்பட்டு கேட்ட கேள்வி)
பதில்: கேள்வியை திருத்தி கேட்டதற்கு நன்றி. எந்த ஸ்தாபனமும் நிறுவனர் மறைந்ததும் தனது மூல கொள்கைகளை மறந்துவிடும் என்பது கசப்பான உண்மை. அதுவும் கடைசி காலக்கட்டங்களில் பெரியார் அவர்கள் கடுமையான உடல் உபாதையால் அவதிப்பட்டார். அதையும் மீறி ஒரு மன உறுதியுடன் செயல்பட்டது வியக்கத்தக்கது. கும்மாளம் போட்டவர்களை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவரது நிலை இந்த விஷயத்தில் ஒரு கையறுநிலையாகவே மனதுக்கு படுகிறது.

22. வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவுடன் திருவிதாங்கூர் அரசாங்கத்திற்கு ரகசியமாக கடிதம் எழுதி சிறை என்ற பெயரில் வசதிகளைப் பெற்றுக்கொண்டது ஏன்?
பதில்: அவ்வாறு நடந்ததாக நான் எங்குமே படிக்கவில்லை. ஆகவே இதை நான் நம்பவில்லை என்று கூறுவதற்கு மேல் வேறு பதிலளிக்க விரும்பவில்லை.

23. வைக்கம் போராட்டத்தை ஆரம்பித்து, வெற்றிகரமாக நடத்தி, வெற்றிகரமான முடிவிற்குக் கொண்டுவந்தவர்களாக அறியப்பட்டவர்கள் அங்கிருந்த வேறு தலைவர்கள். ஆனால், காங்கிரஸும் இந்த பிரச்சினையில் கலந்துகொண்டது என்று காட்ட காந்தி போகச் சொன்னதால் அங்கே சென்று, "எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார்" என்று சொல்லப்படுகிற ஈவேரா தனக்குத் தானே "வைக்கம் வீரர்" என்று பட்டம் கொடுத்துக்கொண்டது எந்தவகை நேர்மை?
பதில்: வைக்கத்தில் பெரியார் நிஜமாகவே பாடுபட்டு போராடியது சரித்திரத்தில் பதிவு செயப்பட்டுள்ளது. பெரியார் மேல் பல விமரிசனங்கள் எனக்கு இருந்தாலும் உங்கள் கேள்வியில் இருக்கும் குற்றச்சாட்டை நான் நம்பவில்லை.

24. அந்தக் காலத்து காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் தங்களுடைய சுகவாழ்வை விட்டுக்கொடுத்தும், சொத்துக்களை செலவழித்து தீண்டாமையை ஒழிக்கவும், ஏழைகள் முன்னேற காதி இயக்கத்திற்காக செலவழிக்கவும் செய்தனர். ஆனால், இவர்களைவிட தான் செய்ததுதான் சரியான சமூக சேவை என்று சொல்லிவந்த ஈவேராவின் சொத்துக்கள் அவர் "சமூக சேவை" செய்யவந்தபின் பலமடங்கு அதிகரித்தது. தனது சொத்தை பெருக்கிக்கொள்ள சமூகத்தை பயன்படுத்திக்கொள்ளுவதுதான் சமூக சேவையா?
பதில்: திராவிட கழகத்தில் மற்றவர்களை பற்றி தெரியாது. ஆனால் பெரியார் அவர்கள் சொந்தமாக சொத்து சேர்த்தார் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. அவர் பார்த்து பார்த்து சேர்த்தது இயக்கத்துக்கு மட்டுமே.


நக்கீரன் பாண்டியன்:
1. மின்வெட்டு காரணம் யார்?
பதி: சரியாக திட்டமிடாமை, மின் திருட்டு, தவறான உபயோகம் ஆகியவையே காரணம்.

2. சரியாகுமா?
பதில்: மனதிருந்தால் சரியாகும். ஆனால் நிறைய அரசியல்ரீதியான தைரியம் தேவை.

3. அரசு பிழைக்குமா?(மக்கள் கோபம்)
பதில்: கஷ்டம்தேன்.

4. இலவச டீவி ஒரு காரணமா?
பதில்: மின்வெட்டுக்கா? கண்டிப்பாக இல்லை.

5. இங்கு மட்டும் ஏன் இந்த நிலை?
பதில்: இந்தியாவில் பரவலாகத்தன் இந்த நிலை என அறிகிறேன். ஒரு வேளை குஜராத்தில் மட்டும் அவ்வாறு இல்லாதிருக்கலாம்.

6. காற்றாலை திட்டம் என்னாச்சு?
பதில்: சுற்றுவட்டாரத்தில் வெகுதூரத்துக்கு கட்டிடங்கள் அமையக்கூடாது. அப்போதுதான் நல்ல காற்று கிடைக்கும். எவ்வளவு நாளைக்கு நடக்கும்?

7. அணுமின்சாரம் கைகொடுக்குமா?
அதுதான் இனிமேல் கைகொடுக்க வேண்டும். ஆனால் உடனடியாகக் கிடைக்காது.

8. மழை இதை சரி செய்யுமா?
பதில்: சிறிது ரிலீஃப் தரலாம். ஆனால் மழை சரியான இடங்களில் பெய்ய வேண்டும்.

9. கழகங்களின் ஆட்சி காரணமா?
பதில்: இந்தியாவில் மற்ற பல மாநிலங்களிலும்தான் மின் தட்டுப்பாடு உள்ளது. அதற்கும் கழக ஆட்சிதான் காரணமா?

10. மத்திய அரசு கைவிட்டுவிட்டதா?
எவ்வளவு மாநிலங்களுக்குத்தான் அவர்களால் உதவி செய்ய இயலும்? அதுவும் பற்றாக்குறை பரவலாக உள்ளதே.

11. அனல் மின்சாரம் என்னாச்சு?
பதில்: சுடுகிறது.

12. சென்னையில் தாக்கம் இல்லையா?
பதில்: அவ்வளவு இல்லை. தயவு செய்து கண் போடாதீர்கள்.

13. தேர்தலில் எதிரொலிக்குமா?
பதில்: கண்டிப்பாக எதிரொலிக்கும். அது எம்மட்டில் என்பதில்தான் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

14. ஹெல்மெட் போல் இன்வெர்ட்ட்டர் விற்பனை தந்திரமா?
இன்வெர்டர் என்பது சற்று விலையுயர்ந்த தெரிவு. எல்லோராலும் இயலாது. மேலும் ஹெல்மட் போல இதை யாரும் சட்டப்படி கட்டாயமாக்கவில்லை.

15. எல்லாக் கட்சிகளும் வேடிக்கை பார்க்கின்றனவா?
பதில்: அவர்களிடம் அரசு இல்லையே. மேலும் எதிர்க்கட்சி என்பது இம்மாதிரி நிலைகளை தனது லாபத்துக்குத்தானே பயன்படுத்தும்?

16. மற்ற மாநிலங்களில் எப்படி?
பதில்: பொதுவாகவே இந்தியாவில் பல மாநிலங்களில் நிலை மோசம்தான் என படித்தேன்.

17. இலவச மின்சாரம் காரணமா?
பதில்: அதுவும்தான் முக்கியக் காரணம்.

18. எப்போ சரியாகும்?
பதில்: எப்போ சரியாக வேண்டும் என்று கேட்டாலாவது கூடிய சீக்கிரம் என்று சொல்லலாம். ஆனால் எப்போ சரியாகும் என்னும் இக்கேள்விக்கு அவ்வாறு பதில் கூற இயலாது.

19. விளம்பர விளக்குகளை தடை செய்யலாமே?
பதில்: செய்ய முடியுமா? மனம் வருமா?

20. அரசியல் மாநாட்டு அலங்கார விளக்குகளை?
பதில்: பலருக்கு மாரடைப்பே ஏற்படும்.


டோண்டு ஐயாவிடம் கேள்வி கேட்போர் சங்கம்
1. பிடித்த நடிகர்?(தமிழ்)
பதில்: ஜெமினி கணேசன், கமலஹாசன்

2. பிடித்த நடிகர்?(இந்தி)
பதில்: சஞ்சீவ் குமார், காதர் கான்

3. பிடித்த நடிகர்?(ஆங்கிலம்)
பதில்: கிரெகெரி பெக், இஸ்ரேலிய நடிகர் டோபோல்

4. பிடித்த நடிகை(தமிழ்)
பதில்: சரோஜாதேவி, தேவயானி

5. பிடித்த நடிகை(இந்தி)
பதில்: ரேகா, மாதுரி தீட்சித்

6. பிடித்த நடிகை?(ஆங்கிலம்)
பதில்: டோரிஸ் டே, எலிசபெத் டெய்லர்

7 .பிடித்த எழுத்தாளர்?(தமிழ்)
பதில்: கல்கி, தேவன்

8. பிடித்த எழுத்தாளர்?(இந்தி)
பதில்: பிரேம்சந்த், பகவதி ஷரன் ஷர்மா

10. பிடித்த எழுத்தாளர்?(ஆங்கிலம்)
ழான் கே ரௌலிங், அகாதா கிறிஸ்டி

11. பிடித்த அரசியல்வாதி?(தமிழ்)
ராஜாஜி, நல்லக்கண்ணு

12. பிடித்த அரசியல்வாதி?(இந்தி)
பதில்: மோடி, சந்திரசேகர்

13. பிடித்த அரசியல்வாதி?(ஆங்கிலம்)
பதில்: மார்க்கரெட் தாட்சர், ரீகன்

14. பிடித்த ஊர்? (தமிழகம்)
பதில்: சென்னை

15. பிடித்த ஊர்?(வட இந்தியா)
பதில்: புது தில்லி


16. பிடித்த ஊர்?(உலகம்)
பதில்: ஜெரூசலம்

17. பிடித்த புத்தகம்?(தமிழ்)
பதில்: துப்பறியும் சாம்பு

18. பிடித்த புத்தகம்?(இந்தி)
பதில்: ஷத்ரஞ்ச் கே கிலாடி

19. பிடித்த புத்தகம்?(ஆங்கிலம்)
பதில்: ஹாரி பட்டர் புத்தகங்கள் ஏழும்

20. பிடித்த மொழி?
பதில்: தமிழ்


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது