Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

9/18/2010

25 நிமிடங்களில் மரணம்

நான் அந்தச் சிறைக்குச் செல்லும்போது நேரம் விடியற்காலை 04.00 மணி அளவில்.
.
நான் யார்? என் பெயர் எமர்சன். நான் ஒரு கத்தோலிக்கப் பாதிரி. அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் வசிக்கிறேன். இன்று காலை சரியாக 05.00 மணிக்கு வில்சனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. விஷவாயு மூலம் மரணம். அவன் செய்த குற்றம்? அது இருக்கும் நான்கைந்து. அதில் மூன்றில் அவனுக்கு 999 ஆண்டுகள் சிறைத் தண்டனை. நான்காவதுக்குத்தான் மரண தண்டனை.

சிறை அதிகாரி அறைக்குச் சென்றேன். வாருங்கள் ஃபாதர் என்றார் அவர் (மாத்யூ). அச்சிறையில் இம்மாதத்தில் இது ஏழாவது மரணதண்டனை. அவர் கண்கள் களைப்புடன் காணப்பட்டன. “என்ன செய்வது ஃபாதர். பல மாதங்களாக மரண தண்டனைகள் ஏதும் இல்லை. இப்போது சொல்லி வைத்தற்போல பல தண்டனைகள் க்ளியர் செய்யப்பட்டுள்ளன.

அவருடன் சேர்ந்து வில்சனின் அறைக்கு சென்ற போது நேரம் சரியாக விடியற்காலை 04.30 மணி.

“வில்சன்” என கூப்பிட்டார். கீழே தலை குனிந்து உட்கார்ந்திருந்த கைதி முகத்தை நிமிர்த்தினான். அப்பெயரில் இருப்பவனே இங்கும் இருக்கிறான் என்றான். உடம்புக்கு ஒன்றுமில்லையே எனக்கவலையுடன் கேட்டார் சிறை அதிகாரி. அவர் கவலை அவருக்கு. உடம்புக்கு முடியாதவர்களை குணப்படுத்தித்தான் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது விதி.

அப்போது சிறை மருத்துவரும் அங்கு வந்தார். அவனைப் பரிசோதித்து ஓக்கே எனக்கூறிவிட்டு புறப்பட்டார். ஒரு ஃபார்மாலிடி முடிந்தது. சிறை அதிகாரி என்னை அவனுடன் தனியே விட்டு விட்டு சென்றார். நேரம் 04.35 மணி. அவனது வாழ்நாளில் கடைசி 25 நிமிடங்கள் ஆரம்பமாயின.

அவன் பாவமன்னிப்பு கேட்கத் தயாரா என்று கேட்டேன். வேண்டாம் என தலையசைத்து விட்டான். அதிலெலாம் நம்பிக்கை இல்லை எனவும் கூறினான். எது பற்றி பேசுவது எனத் தெரியவில்லை. ஏதாவது வேண்டுமா எனக் கேட்டதற்கு ரேடியோவில் ஏதேனும் நிகழ்ச்சியைக் கேட்கலாமா எனக் கேட்டான். எனது பாக்கெட் ட்ரான்சிஸ்டரை காரில் வைக்க மறந்ததும் நல்லதாயிற்று.

ரேடியோவில் ஷோப்பன்ஹவர் இசை ஒலித்தது. அவன் கண்களை மூடியவாறு கேட்டான். திடீரென 04.50 க்கு இசை நின்றது. ஓர் அறிவிப்பு வந்தது. “நகரத்தின் மார்க்கெட் தெருவில் போக்குவரத்து நெரிசல். கார்கள் ஒரு மைல் தூரத்துக்கு நிற்கின்றன. புதிதாக அங்கு யாரும் காரை எடுத்துச் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள். மாட்டிக் கொள்ளாதீர்கள். இந்த நெரிசல் அடுத்த இருபது நிமிடங்களில் சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது”.

சரேலென வில்சன் தலைஅயை உயர்த்தி என்னைப் பார்த்தான். போக்குவரத்து நெரிசல் சரியாகும் போது அவன் ஏற்கனவே இறந்திருப்பான் என்ற எண்ணம் அவன் மனத்துள் எழுவதை என்னால் உணர முடிந்தது. பிறகு இசை தொடர்ந்தது. 04.58-க்கு அவனுக்கு அழைப்பு வந்தது. அவனுடன் கூட நானும் சென்றேன். அது எனது கடமைகளில் ஒன்று. மரண தண்டனை நிறைவேர்றப்படுவதையும் பார்த்துத் தொலைக்க வேண்டும்.

விஷ வாயு அறையில் அவனை நாற்காலியில் வைத்துக் கட்டினார்கள். விஷவாயு கோப்பையை வெளியிலிருந்து உடைத்தார்கள். அந்தச் சத்தமே அவன் வாழ்நாளில் கடைசியில் கேட்டது. வாயு வெளியான சில நொடிகளிலேயே அவன் சுய நினைவை இழந்தான். அவன் மரணிப்பது அவனுக்கே தெரியாது எனக் கூறப்படுவதை நான் நம்பித்தான் ஆக வேண்டும்.

எல்லாம் முடிந்து பேப்பர்களில் கையெழுத்திட்டு வெளியே வரும்போது நேரம் காலை 06.00 மணி. போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வந்ததாக ரேடியோவில் ஒரு புது அறிவிப்பு கூறியது.

இது ரீடர்ஸ் டைஜஸ்டில் சமீபத்தில் 1960களில் வந்த ஒரு கட்டுரையை நினைவிலிருந்து வரவழைத்து எழுதியது. இப்பதிவைப் போடும் முன்னால் ஒரு வேளை அது கிடைத்தாலும் கிடைக்கலாம் என்னும் நப்பாசையில் கூகளிட்டால் இந்த வீடியோவும் அதில் வரும் பாடலின் வார்த்தைகளும் கிடைத்தன. முதலில் வீடியோ, பிறகு பாடல் வரிகள்.

மேலே உள்ள பதிவில் வரும் மரண தண்டனை போல் இல்லாது கீழே வருவதில் தூக்கு போட்டு தண்டனை நிறைவேற்றப்படுகிறது..

+18 வயதுக்காரர்கள் மட்டுமே வீடியோ பார்ப்பது நலம்.




Pearl Jam - 25 Minutes To Go Lyrics

They're buildin' the gallows outside my cell.
I got 25 minutes to go.

And in 25 minutes I'll be in Hell.
I got 24 minutes to go.

Well, they give me some beans for my last meal.
23 minutes to go.

And you know... nobody asked me how I feel.
I got 22 minutes to go.

So, I wrote to the Gov'nor... the whole damned bunch.
Ahhh... 21 minutes to go.

And I call up the Mayor, and he's out to lunch.

I got 20 more minutes to go.

Well, the Sheriff says, "Boy, I wanna watch you die".
19 minutes to go.

I spit in his face... and I kicked him in the eye.
I got 18 minutes to go.

Well...I call out to the Warden to hear my plea.
17 minute to go.

He says, "Call me back in a week or three.
You've got 16 minutes to go."

Well, my lawyer says he's sorry he missed my case.
Mmmm....15 minutes to go.

Yeah, well if you're so sorry, come up and take my place.
I got 14 minutes to go.

Well, now here comes the padre to save my soul
With 13 minutes to go.

And he's talkin' about burnin', but I'm so damned cold.
I got 12 more minutes to go.

Now they're testin' the trap. It chills my spine.
I got 11 minutes to go.

''cause the goddamned thing it works just fine.
I got 10 more minutes to go.

I'm waitin' for the pardon... gonna set me free
With 9 more minutes to go.

But this ain't the movies, so to hell with me.
I got 8 more minutes to go.

And now I'm climbin up the ladder with a scaffold peg
With 7 more minutes to go.

I've betta' watch my step or else I'll break my leg.
I got 6 more minutes to go.

Yeah... with my feet on the trap and my head in the noose...
5 more minutes to go.

Well, c'mon somethin' and cut me loose.
I got 4 more minutes to go.

I can see the mountains. I see the sky.
3 more minutes to go.

And it's too damned pretty for a man to die.
i got 2 more minutes to go

I can hear the buzzards... hear the crows.
1 more minute to go.

And now I'm swingin' and here I gooooooooo....

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/17/2010

தொலைந்து போன திறமைகள்

இப்பதிவில் நான் குறிப்பிடப்போகும் திறமைகள் என்னிடம் மெதுவாக ஒட்டிக் கொண்டத் திறமையோ, என்னையறியாமலே வந்த திறமையோ, எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இருந்த திறமையோ அல்ல.

எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் மளிகைக் கடையில் பெரிய லிஸ்டைக் கொடுத்து சாமான்களை எடுத்து, அவற்றுக்கு பில் போடும்போது கடைக்காரர் ஒவ்வொரு பொருளுக்குமான தொகைகளை எழுதும்போதே நான் அவற்றை மனதிலேயே ஒன்றன் பின் ஒன்றாகக் கூட்டி விடுவேன். நான்கு/மூன்றிலக்கத் தொகைகளை சுலபமாகவே கூட்டிட இயலும். எல்லாவற்றையும் எடுத்து எழுதி அவர் கால்குலேட்டரை எடுக்கும்போது மொத்தத் தொகையையும் முதலிலேயே கூறி விடுவேன். அவர் கூட்டி முடித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட 100% சதவிகிதம் நான் சொன்னதுதான் வந்திருக்கும். சில சமயம் சரியாக வராமல் போவது அவர் எழுதும் எண்களை மாற்றிப் படிப்பதால் வரும். உதாரணத்துக்கு சிலர் 4 என எழுதுவது 9 போலத் தோன்றும் அபாயம் உண்டு.

நான் கடைக்கு சென்றால் இதை நாங்கள் எல்லோருமே ஒரு விளையாட்டாகவே பாவிப்போம். இதில் என்ன திறமை வந்தது என்றால், மனதுக்குள்ளேயே கணக்கு போடும் திறமைதான். நாங்கள் பள்ளீயில் படிக்கும்போது 4 மற்றும் ஐந்தாம் வகுப்பில் மனக்கணக்குகளை அதிகம் போடச் சொல்வார்கள். பிறகு நான் மேல் வகுப்புகளுக்கு சென்றபோது அந்த பழக்கமே கிட்டத்தட்ட அழிந்தது எனக் கொள்ளலாம்.

இப்போதெல்லாம் எல்லாவர்றுக்கும் கால்குலேட்டரையே எடுக்கிறார்கள். நான் பார்த்த ஒரு பிரெஞ்சு பிரகஸ்பதி 10 + 2 = 12 என்பதற்கும் கால்குலேட்டரைத் தேடியதை என்னால் இன்னும் மறக்கவியலவில்லை. சிலர் கூறலாம் கால்குலேட்டர்கள் இருக்கும்போது ஏன் மண்டையை உடைத்துக் கொள்ளவேண்டும் என. அவர்கள் இந்தத் திறமையின் மிகச்சிறந்த அனுபவத்தையே இழக்கிறார்கள் என்பேன். நாங்கள் அக்காலத்தில் லாகரிதம் எல்லாம் கற்றோம். இப்போதும் அதைக் கற்பிக்கிறார்கள் என நினைக்கிறேன். சமீபத்தில் 1990-91 கல்வியாண்டில் இரு ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு நான் கணக்கு சொல்லிக் கொடுத்த போதும் அது இருந்தது, இன்று இன்னும் இருக்கிறது என நம்ப விரும்புகிறேன்.

பொருளாதார நிர்ப்பந்தங்களால் பல திறமைகள் தேவையின்றியும் போயுள்ளன. அவற்றில் முக்கியமானது நல்ல கையெழுத்துடன் எழுதுவது. அக்காலங்களில் பத்திரங்கள் எழுத நல்ல காப்பி ரைட்டர்கள் தேவைப்பட்டனர். ஆனால் இப்போது அவர்களுக்கு தேவையின்றி கணினி ஃபாண்டுகள் வந்து விட்டன. பாட்டுகளை கம்போசிங் செய்வதிலும் கணினியின் உபயோகம் வந்துள்ளதக அறிகிறேன்.

இவை எல்லாம் நல்லதுக்கா இல்லையா என்பதை எளிதாகக் கூறிவிட முடியாது. பொருளாதார மாறுதல்கள் சில திறமைகளைத் தேவையில்லாமல் ஆக்கினாலும் நான் முதலில் கூறிய மனக்கணக்கு திரமைகள் மாணவர்களிடம் இல்லாமல் போவது நல்லதுக்கல்ல என்றே கூறுவேன். ஆகவே மாணவர்களிடம் எடுத்த எடுப்பிலேயே கால்குலேட்டர்கள தராது பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான் வழக்கமாக பத்திரிகைகள் வாங்கும் கடை முதலாளிக்கு பத்தாம் வகுப்பில் படிக்கும் ஒரு சுட்டிப் பெண் இருக்கிறாள். அக்குழந்தையை நான் அவளது ஐந்தாம் வகுப்ப்லிருந்தே கவனித்து வருகிறேன். நான் 100 ரூபாயைக் கொடுத்து 34.50 க்கு பத்திரிகைகள் எடுத்திருப்பதாகக் கூறினால், அந்த சுட்டிப் பெண் மீதி 65.50 என்பதை ஆங்கிலத்தில் உரக்கக் கூறிவண்ணம் சரியான சில்லறை தருவாள். அவள் பெற்றோகளோ முதலில் ஐம்பது பைசாவை எடுத்து 35 எனக்கூறிவிட்டு, 5 ரூபாயை எடுத்து 40 எனக்கூறி, பிறகு முறையே 10 மற்றும் ஐம்பது ரூபாய் நோட்டுக்களை சேர்த்து 100 எனக் கூட்டி நம்மிடம் தருவார்கள். சில்லறை நோட்டுகள் கைவசம் ரெடியாக இல்லாவிட்டால் கால்குலேட்டரே துணை. தென்றல் என்னும் பெயருடைய அந்தச் சுட்டிப் பெண் ஆறாம் வகுப்பிலேயே கணக்குக்கான ஒலிம்பியாட்டில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்றவள். சகபோட்டியாளர்கள் பலர் அச்சமயம் அவளை விட 4 அல்லது 5 வயது பெரியவர்கள்.

இந்தச் சுட்டிப் பெண் போல குழந்தைகள் இருக்கும்வரை நமது இளைய சமுதாயத்தின் மேல் உள்ள எனது நம்பிக்கை குறையாதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/11/2010

ஏதோ என்னாலான உதவி

பெங்களூருவிலிருந்து நண்பர் ஸ்ரீராம் சிவராமன் அனுப்பிய மின்னஞ்சலை இங்கே தந்துள்ளேன். ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

Dear Raghavan Sir,

I am Sriram from Bangalore. Hope you can recollect that we have interacted over phone few times.

I am a member in TamilBrahmins.Com website which is doing good service for our community. In that regard, I have volunteered for the Vivaha Sangamam (Parents Meet) to be held in Bangalore on 24th of this month. For giving publicity, I need your help by posting the
below content in your blog. Please help!


விவாஹ சங்கமம் - ஜனவரி 24 - பெங்களுரு

கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டை கட்டிப்பார்! என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். பொருத்தமான வரன் கிடைக்க பல நாள் அலைய வேண்டியிருக்கும் பலருக்கு. அவ்வாறு வரன் தேடும் பிராமின் சமூகத்தினருக்கு உதவும் விதமாக http://www.tamilbrahmins.com/ அமைப்பு வரும் ஜனவரி 24 அன்று, மல்லேஸ்வரம் காஞ்சி சங்கர மடத்தில் ஒரு விவாஹ சங்கமம் (பெற்றோர்கள் சந்திப்பு) ஏற்பாடு செய்துள்ளனர். இதில் தமிழ் பிராமின் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு பிராமின் சமூகத்தினரும் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்! கலை, கலாச்சாரம் மற்றும் பக்தியினை வளர்க்கும் விதமாக பிராமின் சமூகத்தினருக்கு ஒரு சிறந்த மேடையாக விளங்கும் http://www.tamilbrahmins.com/ , பக்தி பாடல்களும், கர்நாடக இசை பாடல்களும் கேட்க விரும்புவோருக்கு ஓர் வரப்ரசாதம்!

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர், http://www.tamilbrahmins.com/ வலைதளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், விவாஹ சங்கமம் குறித்த விவரங்களை வலைதளத்தின் வலப்புறம் உள்ள இணைப்பு மூலம் எளிதில் அறியலாம்.
சேவை நோக்கோடு ஏற்பாடு செய்யப்படும் இந்த விவாஹ சங்கமம் நிகழ்ச்சி பற்றி தங்களது நண்பர்களுக்கு தெரிவித்து, அவர்களது இல்லங்களில் கெட்டி மேளம் ஒலிக்க அவசியம் உதவி செய்யுங்கள்!


--
Thanks,
Sriram Sivaraman

ஓக்கே ஸ்ரீராம் அவ்வாறே செய்து விட்டேன். உங்கள் முயற்சிகள் நல்லபடி நடக்க எனது ஆசிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது