3/31/2011

டோண்டு பதில்கள் - 31.03.2011

pt
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா: பெண்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்

பதில்: தமிழக மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரைக்கும் இதெல்லாம் தொடரும். அதானே, அவர்கள் குஜராத்தியர் அளவுக்கு புத்திசாலிகள் இல்லைதானே.

கேள்வி-2. தேர்தல் ஆணையம் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்: ஜெயலலிதா பேட்டி
பதில்: அதுதான் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பிரச்சினை. மோதி போன்ற ஊழலற்ற முதலமைச்சர் மாநிலத்தில்தான் எல்லா கெடுபிடிகளையும் காட்டி ஒன்றும் தவறு அவரிடம் கண்டுபிடிக்க முடியவில்லை, தான் காங்கிரஸ் பூத் ஏஜெண்டாக செயல்பட்டதுதான் மிச்சம் என அசடு வழியும்.

இல்லாவிட்டால் மற்ற அடாவடி மாநில முதலமைச்சர்கள் விஷயத்தில் அவர்கள் காங்கிரசுடன் சம்பந்தம் உடையவர்களாக வேறு இருந்து தொலைத்தால் சலாம் போட்டு சீப்படும்.

கேள்வி-3. அ.தி.மு.க. அறிக்கை எடுபடாது: கருணாநிதி
பதில்: இல்லையா பின்னே. தன்னை மாதிரியே மக்களை டுபாக்கூராக்கும் அறிக்கையை மற்றவரும் தரலாமா என்னும் கோபம் வராதா? காப்பிரைட் வைத்திருப்பவர்களுக்கு வரும் தார்மீகக் கோபமே அது.

கேள்வி-4. தமிழகத்தில் தி.மு.க. அணிக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட்டுப் பிரசாரத்துக்கு வர மாட்டார்கள்
பதில்: யார் சொன்னதாம்? அதை பொருத்துத்தான் அது உண்மையா அல்லவா என்பதை பார்க்கோணும்.

கேள்வி-5. இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னைகளுக்கு போர் மூலம் தீர்வு காணமுடியாது என்று பாக். பிரதமர் யூசஃப் கிலானி கூறியுள்ளார்.
பதில்: உண்மைதான். போர் என்றால் ஒரு நாளைக்கே கோடிக் கணக்கில் செலவாகும். இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குமே அது தேவையில்லாத, கட்டி வராத ஆடம்பரமே.

Arun Ambie
கேள்வி-6. பிட் அடித்த மாணவர்களை "தேர்தல் நேரம், ஓட்டுப் போய்விடும்" என்று காப்பாற்றினாராம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. இதில் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறார்களாம். இந்த கண்றாவிக்கு இலவச +2, இலவச டிகிரி என்று கொடுத்து விட்டுப் போகலாமே? Your take, Sir!

பதில்: மன்னிக்கவும் உங்கள் சுட்டியில் இப்போது வரும் செய்தி அந்தந்த தினத்தினுடையது. ஆகவே மாணவர்கள் விஷயம் அதில் இல்லை. ஆனால் நான் அதை ஏற்கனவேயே பார்த்து விட்டேன். வெட்கக்கேடு.

ரமணா
கேள்வி-7. NAMATHU VARI PANAM IPPADI POKUTHU
பதில்: தோண்டத் தோண்ட அத்து மீறல்கள்.

கேள்வி-8. 2. Ananda Vikatan survey Result in Tamilnadu elections 2011
பதில்: // எனவே அதிமுக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தாலும் அது, ஜெயலலிதா வார்த்தைகளின்படி மைனாரிட்டி அரசாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.//
அதாகப்பட்டது ஜெயலலிதாவும் கருணாநிதி போலவே மற்ற கூட்டணிக் கட்சிகளை அரசில் சேர்க்காமல் இருந்தால் மட்டுமே இங்கு சொல்லப்படுவது சரியே.

கேள்வி-9. A word to karunanidhi?
பதில்: //உலகத்தில் தமிழகத்தைத் தவிர வேறு எங்கேயுமே சுய மரியாதைக்கு கட்சி தொடங்கியதாகவோ, தன்​மானத்துக்காக இயக்கம் தொடங்கியதாகவோ, சரித்திரம் இல்லை. ஆனால், இன்றைக்கு அவமரியாதையின் அடை​யாளமாகவும், அவமானத்தின் சின்னமாகவும் எம் மக்கள்//
பகுத்தறிவு பகலவன் என அவதூறாக அழைக்கப்படும் ஈ. வே. ராமசாமி நாயக்கரே தன் கட்சியில் உள்ளவர்களுக்கு சுயமரியாதையோ பகுத்தறிவோ இருக்கக் கூடாது என்று சொன்னவர் ஆயிற்றே. அவர் சீடர்கள் மட்டும் என்ன ஸ்பெஷல்? விரை போட்டால் சுரையா முளைக்கும்?

கேள்வி-9. ANTHARANGAM AMBALAM
பதில்: சூடாமணி விகாரத்தின் தலைமை பிக்கு யார்?

கேள்வி-10. ARE YOU GOING TO VOTE "CONGRESS" OR "DMK"
பதில்: மனதை உருக்கும் நிகழ்ச்சிகள். ஆனால் நம்மூர்க்காரர்கள் இதை தேர்தல் பிரச்சினையாகப் பார்ப்பது போலத் தோன்றவில்லையே.

கேள்வி-11. TOP 10 REASONS KARUNANITHI GOING TO LOSE
பதில்: கூடவே இவற்றையும் பார்த்து விடுங்கள். நண்பர் பழமைபேசி நன்றாகவே அலசியுள்ளார் ஒவ்வொரு சினேரியோவையும்.
அ. அதிமுக தோற்பதற்கான காரணங்கள்
ஆ. அதிமுக வெல்வதற்கான காரணங்கள்
இ. திமுக வெல்வதற்கான காரணங்கள்
ஈ. திமுக தோற்பதற்கான காரணங்கள்

கேள்வி-12. இவர்களின் தேர்தல் பிரச்சாரம் பற்றி உங்கள் கருத்து?
1. கலைஞர் 2.அம்மா 3.மருத்துவர் 4.திருமா 5.ஸ்டாலின் 6.அழகிரி 7.வடிவேலு 8.விஜயகாந்த் 9.பிரேமலதா 10.சின்னத்திரைகள்

பதில்: ஒரு படம் 1000 வார்த்தைகளுக்கு சமம். ஒரு காணொளி?
1. விஜயகாந்த் அடாவடி/உளறல்:

2. வடிவேலு:
வடிவேலுவின் பேச்சு வண்டு முருகனாக அவர் ஒரு படத்தில் பேசிய காமெடிக்கு சற்றும் குறைந்ததில்லை. வீடியோ முதல் 25 விநாடிகளுக்கு சரியாக வரவில்லை. பொறுமையாக பார்க்கவும். ஆடியோ க்ளியராக உள்ளது.


மற்றவர்கள் பற்றிச் சொல்ல கருத்து ஏதுமில்லை.

மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/25/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.03.2011

நான் திரும்ப பதிவு போட முனைவதில் மிக அதிகமாக மகிழ்ச்சி அடைந்தவன் முரளிமனோகர்தான். “உடனடியாக நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவு ஒன்று வேண்டும் பெரிசு எனக் கேட்டான். ஆகவே இப்பதிவு.

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்
சமீபத்தில் 1966-ல் காஞ்சீபுரம் பிரும்மோத்சவம் காண சின்னக்காஞ்சீபுரம் சென்றிருந்தேன். எங்கள் வீட்டுக்கார மாமா W.P.K. ஐயங்கார் என்னை தன் குடும்பத்தாருடன் சேர்த்து அழைத்துச் சென்றிருந்தார். அவரது ஷட்டகர் ஜீயப்பையங்கார் வீட்டில் சன்னிதித் தெருவில் தங்கியிருந்தோம். தான் எங்கு சென்றாலும் என்னையும் கூடவே அழைத்துச் செல்வார் அவர். எங்கள் இருவரையும் ஒருசேர பார்த்ததில் உள்ளூர்க்காரர்கள் அதிர்ச்சியடைந்ததைக் காணமுடிந்தது. இல்லையா பின்னே, தென்கலை நாமக்காரரும் வடகலை நாமக்காரரும் (அடியேன்) ஒன்றாக உலா போவது ஆச்சரியம்தானே. சாதாரண சமயங்களில் உயிர்த்தோழர்களாக இருப்பினும் பிரும்மோத்சவ சமயத்தில் மட்டும் வடகலையாரும் தென்கலையாரும் கீழே இருப்பதுபோல ஒன்றாக சேரமாட்டார்கள் என எங்கள் வீட்டுக்கார மாமா கூறியுள்ளார். பை தி வே இவ்வளவு ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்தாலும் நான் வீட்டுக்கார மாமா என குறிப்பது அவரைத்தான்.



அதை விடுங்கள். பதிவில் இனி நாமங்கள் வராது. நான் கூற வந்தது பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் அவர்கள் பற்றித்தான். திருப்பாவை பற்றிய அவரது உபன்யாசங்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். நல்ல ஞானஸ்தர். அவரை அண்ணா என்றும் குறிப்பிடுவார்கள். அவர் பற்றி இன்று வெளியான துகள்க்கில் சாரு நிவேதிதா எழுதியுள்ளார் (30.03.2011, பக்கம் 16-17). வாங்கி படிக்கவும், சுவாரசியமாகவே உள்ளது. அவர்தான் உண்மையான பேரறிஞர் அண்ணா என சாரு கூறுவதும் ஏற்கத் தக்கதே. [அவர் கூறியது, “தமிழில் எல்லா சொற்களுமே அவற்றின் உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டன. பெர்னாட் ஷாவைப் படித்திருந்ததால் ‘தென்னகத்து பெர்னார்ட் ஷா’ என்ற பட்டம், ஆங்கிலம் அறிந்ததால் ‘அறிஞர்’ பட்டம்’].

30.03.2011 தேதியிட்ட துக்ளக்
மன்மோகன் சிங் பற்றி சில வரிகள்.
1. அன்றைய பாராளுமன்றத்தில் நடந்ததை, இன்றைய பாராளுமன்றத்தில் கவனிக்க முடியாது - என்றும் கூறியிருக்கிறார். உண்மைதான். ஆனால் இன்றைய பிரதமரின் புகழ்பெற்ற ‘நேர்மை’ அன்றே என்ன கதி ஆகியது என்பதை இன்றாவது அறிந்து கொள்ள மக்கள் கடமைப்பட்டவர்கள்.

2. [மன்மோகன் சிங் பெயரளவுக்கு மட்டுமே பிரதமர் என விக்கி லீக்ஸ் கூறியதற்கு பதில்]: விக்கிலீக்ஸ் ரகசியத் தகவல்களைத்தானே வெளியிடும்? இதில் என்ன ரகசியம் இருக்குது?

டோண்டுவின் கேள்வி. எதுவுமே தமக்குத் தெரியாது என வெட்கமில்லாமலேயே கூறுகிறாரே, சோறுதானே சாப்பிடுகிறார்?

96 வயது வரை வாழவேண்டும் மாமா
என் அத்தைப் பிள்ளையும் பிற்காலத்தில் என் மைத்துனனாகவும் தங்கையின் கணவனாகவும் வரவிருந்த ஸ்ரீதரனும் நானும் என் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த போது அவன் சொன்னதுதான் மேலே உள்ளது. எங்கள் இருவருக்கும் அப்போதைய வயது 12. அவன் சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்ட என் தந்தை அது மிகக் கொடுமையாக இருக்கும் என்பதை எடுத்துக் காட்டினார்.

அவர் கூறியதாவது, “உன் சமகாலத்தவர் யாருமே உயிருடன் இருக்க மாட்டார்கள். உன் நினைவுகளை உனக்கு ஈடாகப் பகிர்ந்து கொள்ளவும் ஆட்கள் கிடைக்காது. அது ஒருவித சித்திரவதையே”.

இந்திரா பார்த்தசாரதி அவர்களது ‘ஔரங்கசீப்’ நாடகத்தில் கடைசி காட்சியில் அவரது தனிமை மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தனை உறவினர்களைக் கொன்று வெற்றி பெற்ற அவருக்கு கடைசியில் அத்தனையும் வியர்த்தமே எனத் தோன்றுவதாக எனக்குப் பட்டது. ஏனெனில் அவர் வெற்றியை ஒரு புரிதலோடு ஏற்றுக் கொண்டு அட்மைர் செய்யவோ, பொறாமைப்படவோ யாருமே இல்லை என்பதுதான் நிஜம். He was just left alone and only an ignored man knows what this means.

பாண்டவ குமாரர்களை அவர்கள் தூங்கும்போது கொன்ற அசுவத்தாமனுக்கு அவன் இறப்பின்றி காலகாலத்துக்கும் பூமியில் அலைய வேண்டும் என்பதே பெரிய சாபமாக கிருஷ்ணர் தருகிறார். அதற்கு அவன் பதறுகிறான், புலம்புகிறான். ஆனால் பலன் ஏதுமில்லை. பல ஆண்டுகளாகத் திரியும் அவன் தனது கடந்தகால கசப்பான நினைவுகளுடனேயேதான் வளைவர வேண்டும். கூடவே புதிதாக அவனது செயல்பாடுகள் குறித்து சீறலோடு கேட்பவர்களையும் சமாளிக்க வேண்டும். ஆகவே என்ன செய்திருப்பான் என்றால் ஆட்டமேட்டிக்காக கிருஷ்ணர் சொன்னது போல் பூமியில் இங்குமங்கும் அலைய வேண்டும். அதுவும் தான் யார் என்பதை சட்டெனக் கூற முடியாத நிலை. யாருமே அவனது செயலை மறக்கத் தயாராக இல்லை என்பதுதானே அவனைப் பொருத்தவரை நிஜம்?

இங்கு ஸ்ரீதரன் விஷயத்துக்கு வருவோம். நீண்ட நாள் வாழ்வதின் வியர்த்தங்களை எடுத்துக் கூறிய என் தந்தை அவரது 67-ஆம் வயதில் இவ்வுலகை விட்டுச் சென்றார்? ஸ்ரீதரன்? 53 வயதுகூட நிரம்பாத நிலையில் எங்களை தவிக்க விட்டுச் சென்றான். உறவினன் பல வகையில் எனக்கு என்பதைவிட அவன் என்னுடைய சிறந்த நண்பன் என்பதுதான் நிஜம்.

நான்? இப்போதும் எங்களது பல பொது நினைவுகளை என்னால் பலருடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை. அவற்றில் ஒன்றுதான் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய விடுமுறை நாட்களில் திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் இருந்த மாதவராவ் என்னும் பையனை வம்புச்சண்டைக்கிழுத்து அடிப்பது. ஸ்ரீதரன் அவன் மரணத்துக்கு சில மாதங்கள் முன்னால் கூட நானும் அவனும் அதைச் சொல்லிச் சொல்லி சிரித்து மாளவில்லை. அவன் மனைவி (என் தங்கை) “ ரெண்டு பேரும் துஷ்டப்பசங்களாகத்தான் இருந்திருக்கீங்க” என நொடித்தாள்.

இனி எனக்கு என்ன வாய்த்திருக்கிறதோ தெரியவில்லை.

ஒரு வேளை 96 வயது வரை வாழும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? இளைஞ்ர்களை அதிகம் நண்பர்களாகப் பெற்றுச் செல்வதுதான் ஒரே வழி. செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. யார் கண்டது, நான் ஏற்கனவே சொன்னதுபோல 2078-லும் உயிரோடு இருந்து, நான் பதிவிடும்போது சமீபத்தில் 2008-ல் என எழுத, அப்போதைய மடிப்பாக்க ஆஸ்தான பதிவர், “நம்ம கொள்ளுத் தாத்தா அடிக்கடி சொன்னது போலவே இந்த மாதிரி ஆள் ஒருத்தர் நிஜமாகவே இருந்திருக்கிறார் போலிருக்கே” எனப் புழுங்கலாம்.

கிரிக்கெட் மேட்சில் இந்தியா வெற்றி
நானும் கிரிக்கெட் பார்க்கும் விஷயத்தில் எங்கள் வீட்டுக்கார மாமா W.P.K. அய்யங்காரைப் போலத்தான்.

அவர் பம்பாயில் பல ஆண்டுகள் ரயில்வேயில் வேலை செய்துவிட்டு ரிடையர் ஆனவர். அவருக்கு பம்பாய் டீமை பிடிக்காது. அந்த டீம் இந்திய கிரிக்கெட் டீமை ரொம்பத்தான் ஆளுமை செய்கிறது என்பது அவர் எண்ணம். ஆகவே கிரிக்கெட் செலக்ஷன் கமிட்டி மேலும் அவருக்கு சுத்தமாக நல்ல அபிப்பிராயம் கிடையாது.

அறுபதுகளில் ஒரு சமயம் மேற்கிந்தியத் தீவுக்கு இந்திய கிரிக்கெட் டீம் சென்றது. டீம் உறுப்பினர்களை செலக்ட் செய்து ரேடியோவில் அறிவித்தார்கள். அச்சமயம் W.P.K. ஐயங்கார் அவர்கள் வீட்டில் இல்லை. வந்ததும் வராததுமாக என்னை அழைத்து கேட்டார்:
"என்ன டோண்டு, கிரிக்கெட் டீமை சொல்லிட்டாங்களா?"
நான்: "ஆயிற்று மாமா"
அவர்: "வெங்கடராகவன் டீமில் இருக்கானா?"
நான்: "இல்லை மாமா."
அவர்: "உருப்படாதுன்னா, நம்ம டீமுக்கு அஞ்சு மேட்சிலும் உதைதான்".

மேலே பேச விருப்பமின்றி அவர் சென்றார். ஆனால் அந்தோ, அவர் கூறியது அப்படியே பலித்தது. நன்றாக வேண்டும் இந்தியாவுக்கு என்றுதான் எனக்கும் அவருக்கும் அப்போது தோன்றியது.

நல்லதுக்கு காலம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.


அதை விடுங்கள். நேற்று இந்தியா ஆஸ்திரேலியா உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தை இந்தியா ஆடும்போது பார்த்தேன். ட்விட்டரில் இந்தியர்கள் கோட்டை விடும்போது பாரா, மாயவரத்தான், போன்றவர்களது எதிர்வினைகளையும் பார்த்தேன். மாயவரத்தான் மடிக்கணினியுடன் ஆஜராகியிருந்திருக்கிறார். ஆகவே பந்துக்கு பந்து கீச்சுகள் அவரது கணினியிலிருந்து வந்த வண்ணம் இருந்தன.

ஆனால் நான் மேட்சை முழுமையாக பார்த்ததாகக் கூற முடியாது. முந்தானை முடிச்சு, நாதஸ்வரம், தங்கம், தென்றல் ஆகிய சீரியல்கள் மிஸ் பண்ண முடியாத கட்டங்களில் உள்ளன. இருப்பினும் மேட்சையும் அவ்வப்போது விளம்ப்ர சீரியல்களின் இடைவேளைகளில் பார்த்தேன் என வைத்துக் கொள்ளுங்கள்.

கடைசியில் நானும் மடிக்கணினியுடன் டிவி முன்னால் ஆஜர் ஆனேன். மற்றவர்களைப் போலவே உடனுக்குடன் கமெண்ட் போடுவதும் நன்றாகவேதான் உள்ளது.

கடைசியில் இந்தியா வெற்றி பெற்றது என்பது இதற்குள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/24/2011

சுட்டு சாப்பிடு சூப்பர் டேஸ்டு

இன்று இணையத்தை மேய்ந்து கொண்டிருந்தபோது எதேச்சையாக நண்பர் பாரா அவர்களது சுட்டு சாப்பிடு சூப்பர் டேஸ்டு என்ற தலைப்பில் உள்ள பதிவை படித்தேன். அதிலும் அக்காலகட்டத்தில் நானும் பின்னூட்டமிட்டிருந்திருக்கிறேன் என்பது அப்போதுதான் என் நினைவுக்கும் வந்தது.

லக்கிலுக்கின் விளம்பர உலகம் பற்றிய என்னும் புத்தகத்துக்கான மதிப்புரைதான் அப்பதிவு. ஆனால் இப்பதிவு அந்தப் புத்தகம் பற்றியல்ல.

பாரா அவர்கள் ஒரு விளம்பர வாசகத்துக்காக தான் பட்ட கஷ்டங்கள் பற்றிக் கூறினார். அதில் அவர் இவ்வாறும் எழுதினார், வெகுகாலம் முன்னர் அப்பளம், ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று என்னிடம் தனக்கான விளம்பர வாசகங்களை எழுதித் தரச் சொல்லிக் கேட்டது. ரூ. இருநூற்றைம்பது மட்டும் என்று ரசீது எழுதி கையெழுத்து வாங்கிக்கொண்டு ஒரு மாமா ஐந்து ஐம்பது ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொடுத்துவிட்டு, ‘அட்வான்ஸ் இப்ப வாங்கிக்கோங்கோ. மிச்சத்த முடிச்சதும் செட்டில் பண்ணிடறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

கிட்டத்தட்ட ஆறு மாத காலம் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் சலிக்காமல் சுமார் ஆயிரம் விளம்பர வாசகங்களையாவது எழுதிக் கொடுத்திருப்பேன். ஒன்றுகூட அந்த அப்பள கம்பெனி முதலாளிக்குச் சரிப்பட்டு வரவில்லை. இறுதியில் அவரே எழுதினாரோ, வேறு யாரைக் கொண்டு எழுதவைத்தாரோ தெரியவில்லை. வெளிவந்த அவர்களது விளம்பரத்தை செங்கல்பட்டு தாண்டி எங்கேயோ செல்லும்போது ஒரு சிறு ஹோர்டிங்கில் பார்த்து தலையில் அடித்துக்கொண்டேன். என்ன கண்றாவி இது என்று பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பித் தள்ளினேன்.

ஏதோ ஒரு விளம்பரத்துக்கு இவன் ஏன் இத்தனை மாய்ந்து போகிறான் என்று நண்பர்கள் நினைத்திருக்கக் கூடும். அந்த அப்பள கம்பெனி மேலாளர் மாமா அதன்பின் என்னைச் சந்திக்கவில்லை. கொடுத்த 250 ரூபாயைத் திரும்பக் கேட்கவும் இல்லை. சனியன் விட்டது என்றுதான் நினைத்துக்கொண்டேன். அந்த விளம்பரம் ஒன்றே அவர்களுடைய கம்பெனியை இழுத்து மூடப் போதுமானது என்றும்.

ஆனால் நடந்தது வேறு. விளம்பரம் ஹிட். கிராமப்புறங்களில் ‘சுட்டு சாப்பிடு. சூப்பர் டேஸ்டு’ என்பது ஒரு வேத வரிபோல் ஆகிவிட்டது.

எண்ணெயில் பொறித்துச் சாப்பிடும் மத்திய தர வர்க்கத்துக்கு – அதற்கு மேற்பட்ட வர்க்கங்களுக்காகத் தனது அப்பளம் தயாரிக்கப்படவில்லை; எண்ணெய்க்குக் கூட வசதியற்றவர்கள்தான் டார்கெட் என்று அவர் என்னிடம் முதலிலேயே தெளிவாகச் சொல்லியிருக்கலாம். சுட்டு சாப்பிடு, சூப்பர் டேஸ்டு மாதிரி நானும் ஏதேனும் முயற்சி செய்திருப்பேன்.

எதற்கு இந்தக் கதை என்றால், விளம்பர உலகின் ஆதாரப்புள்ளி என்பது யார் டார்கெட் என்பதில்தான் இருக்கிறது”.


ரொம்ப சத்தியமான வார்த்தைதான். இலக்கு வாசகர்களை கண்டறிவதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும். அவரது அப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம், “மன்னிக்கவும் என்னால் ஒன்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. அப்பள கம்பெனி முதலாளி உங்களிடம் இலக்கு வாசகர்களை கூறினாலும் கூறாவிட்டாலும் அவரது பொருள் என்ன, யாரை குறிவைத்து விளம்பரங்கள் வரவேண்டும் என்பதை நீங்கள்தான் அவரைக் கேட்டிருக்க வேண்டும். நீங்களும் இதில் பல காலவிரயங்களை தவிர்த்திருக்கலாம்.

நான் பணிபுரியும் மொழிபெயர்ப்பு துறையிலும் இலக்கு வாசகர்கள் முக்கியம். உதாரணத்துக்கு ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு மொழிக்கு மாற்றும்போது அது ஒரு தொழிநுட்ப வார்த்தைகள் நிறைந்த கையேடாக இருந்தால் தயங்காமல் மொழிமாற்றும் நான் அதுவே அக்கம்பெனியின் இணையப்பக்கம் என்றால் அதை பார்க்க வேண்டியவர்கள் பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதையும் அவர்கள் மண்வாசனையே இல்லாத வாசகங்களை வைத்து கொண்டு சலிப்படைவார்கள் என்பதை உணர்ந்து மரியாதையாக வாடிக்கையாளரிடம் அவர் இந்த வேலையை பிரெஞ்சை தாய்மொழியாக கொண்டவரிடம்தான் தரவேண்டும் எனக்கூறி மேலே சொன்னதையும் சொல்வேன். இருப்பினும் பரவாயில்லை என சில வாடிக்கையாளர்கள் என்னையே செய்யச் சொன்னால், மண்வாசனை இல்லை என பின்னால் ஏதேனும் பிரெஞ்சுக்காரர் சொன்னால் அதை வைத்து என்னை தொந்திரவு செய்யக்கூடாது என்று கூறிவிட்டே வேலையைத் துவங்குவேன். அப்படியும் வேலையைத் தருபவர்கள் பிரெஞ்சுக்காரனுக்கு பணம் அதிகம் தரவேண்டும் என்னும் தயக்கத்தால்தான் என்னிடம் வருகிறார்கள் என்பது வேறு விஷயம்.

போகிற போக்கில், சுட்டு சாப்பிடு சூப்பரா இருக்கு என்பது அமர்க்களமான ஸ்லோகன்”.
மேலும், விளம்பர வாசகங்கள் என்பவை விளையாட்டல்ல, நல்ல உழைப்பு தேவைப்படும். அப்படித்தான் கோக்கோ கோலா சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒரு பிரச்சினை வந்தது. அதை அவ்வாறு உச்சரித்தால் சீன மொழியில் அது ஒரு ஒரு கெட்ட வார்த்தையாம். சீனாவில் ஒத்துக் கொள்ளும் பெயரை கண்டுபிடிக்க நீண்ட நாள் உழைப்பு தேவைப்பட்டதாம்.

இப்போது வேறு விஷயம் சொல்ல வேண்டும். இந்திய வாடிக்கையாளர்கள் இம்மாதிரியான தலைகீழ் மொழிபெயர்ப்புகளை (அதாவது ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு அல்லது ஜெர்மன்) என்னைப் போன்றவர்களிடம் தருவதற்கு பணம் மட்டும் காரணம் இல்லை. அவர்கள் என்னிடம் தரும் டெக்ஸ்ட்களில் உள்ளவை இந்திய ஆங்கிலத்தில்தான் இருக்கும். அதுவும் அவற்றில் எழுதியவரது தாய்மொழியின் வாசனையும் வரும். உதாரணம், some unknown person has set the paper இந்த மாதிரி வாக்கியத்தைப் பார்த்ததுமே ஆங்கிலத்திலிருந்து தன் மொழிக்கு மாற்ற முன்வரும் ஒரு சராசரி பிரெஞ்சுக்காரரோ ஜெர்மானியரோ தலைமயிரைப் பிய்த்துக் கொள்வது உறுதி. ஆனால் நான் அதை சரியாகக் கண்டு கொள்வேன். எழுதியவர் என்ன வார்த்தை போட நினைத்து இதைப் போட்டார் என்பதையும் அறிவேன் (நன்றி அப்பா).

கடந்த ஓரிரு மாதங்களாக அவ்வளவாக பதிவிடாததற்கு காரணம் வேலை மட்டுமல்ல. ஒரு வித அலுப்பே காரணம். அதிலிருந்து மீண்டு விட்டேன் என நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 24.03.2011

pt
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1.அதிமுக தலைமையின் தன்னிச்சையான போக்கால் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறது: வைகோ

பதில்: தங்களை அறியாமலேயே வைக்கோவும் ஜெயும் கருணாநிதிக்கு துணை போகிறார்கள். வேறு என்ன கூறுவது?

கேள்வி-2. திமுகவின் தேர்தல் அறிக்கை, வறுமையும் ேலைவாய்ப்பின்மையும் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது: திருப்பூரில் டி.கே.ரங்கராஜன் பேட்டி
பதில்: சரியாகத்தானே கூறுகிறார்? பை தி வே, இப்பேட்டியைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?

கேள்வி-3. கிரைண்டர்(அ) மிக்சி, லேப்-டாப் இலவசம்: தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள்
பதில்: தேர்தல் நெறிமுறைகளுக்கு அப்பட்டமான சவாலாக அல்லவா இது உள்ளது? தேர்தல் கமிஷன் தூங்குகிறதா?

கேள்வி-4. தனியார் பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்ட 321 அரிவாள்கள் பறிமுதல்
பதில்: வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் இளநீர் வியாபாரிகளுக்கு இலவசமாக அனுப்பியிருக்கிறோம் எனக் கூறினாலும் வியப்படைவதற்கில்லை.

கேள்வி-5. ராஜீவ் காந்தியை குற்றவாளி என்கிறார் பிரதமர்: .அத்வானி
பதில்: நீங்கள் இச்செய்தியைத்தானே கூறுகிறீர்கள்? ராஜீவை விடுங்கள், அவரை யார் என்ன சொன்னாலும் அவருக்கு என்ன பிரச்சினை? உயிருடன் இருப்பவர் பற்றிப் பேசவும்.

மன்மோகன் சொன்னதையே எடுத்துக் கொள்வோம். காங்கிரஸ் 2009-ல் பணபலத்தால்தான் வெற்றி பெற்றது என்பதை எல்லோருமே அறிவர். அதையே தான் குற்றமர்றவர் என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கூறியதன் மூலம், வோட்டர்களுக்கு ஒரு லஞ்சமும் தர முயலாது போனாலும் வெற்றி பெற்ற மோதியின் தரப்பை இன்னும் பலமாக்கியுள்ளார். அவர் அறியாமலேயே மோதிக்கு கிடைத்த வெற்றி (2002, 2007 மற்றும் உள்ளாட்சி தேர்தல்) அவர் குஜராத் கலவரத்தில் குற்றமற்றவர் எனக் காட்டுவதை உறுதிபடுத்தியுள்ளார். மன்மோகனுக்கு எனது நன்றிகள். இந்த அழகில் மேலே குறிப்பிட்ட 3 குஜராத் தேர்தல்களிலும் சம்பந்தப்பட்ட தேர்தல் கமிஷன் தலைமை கமிஷனர்கள் காங்கிரசுக்கு பூத் ஏஜெண்டாகவே கோமாளித்தனமாகச் செயல்பட்டனர். இருப்பினும் மோதி ஜெயித்தார்.

இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணை டீம் மோதியை கோத்ராவுக்கு பிந்தைய கலவரம் பற்றிய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/17/2011

டோண்டு பதில்கள் - 17.03.2011

pt
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. தமிழகத்தில் திமுக கூட்டணியில் 63 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் அந்த ஃபார்முலா வேலைசெய்யாது என சூசகமாகத் தெரிவித்துள்ளது.மேற்குவங்க தேர்தல் திரிணமூல் காங்கிரஸ்

பதில்: நியாயம்தானே. திருணாமுல் காங்கிரசுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட காங்கிரஸ் சந்தர்ப்பம் அளிக்கவில்லையே. ஆகவே பிளாக்மெயில் செய்ய வாய்ப்பு லேது.

கேள்வி-2. சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் உள்ள 79 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து மக்களவையில் இன்று கவலை தெரிவிக்கப்பட்டது.
பதில்: ஒரு சுண்டைக்காய் நாட்டை அடக்க உலக நாடுகளுக்கு துப்பில்லையா? எல்லா நாடுகளுமாக சேர்ந்து போர்க்கப்பல் எஸ்கார்ட் செர்வீஸை முறை வைத்து செய்து, அப்படி வரும் கொள்ளையரை ஒட்டு மொத்தமாக சுட்டு கைலாயம் அனுப்புவதே வழி. சிறையெல்லாம் பிடிக்கக் கூடாது. இல்லாவிடில் கொள்ளையன்களுக்கு தண்டச்சோறு வேறு போட வேண்டும். தேவையானால் சோமாலியாவின் துறைமுகங்களை சேட்டிலைட் போட்டோ மூலம் துல்லியமாக விடாது போட்டோ பிடித்து, கொள்ளையர்கள் இருக்கும் இடங்களை பாம் போட்டு தகர்க்க வேண்டும். செய்ய தில் இருக்கிறதா?

கேள்வி-3. சீனாவிடம் இருந்து நவீன போர்விமானங்களை வாங்கி தங்கள் படையில் சேர்த்த பாகிஸ்தான், கடற்படைத் திறனை அதிகரிக்கும்நோக்கில் தற்போது 6 நீர்மூழ்கிக் கப்பல்களையும் சீனாவிடம் இருந்து வாங்க.
பதில்: பாகிஸ்தான் ஒரு சுதந்திர நாடு. தனது நலனை பார்த்துக் கொள்ள வேண்டியது அதன் கடமை. இதில் ஆட்சேபம் தெரிவிக்க என்ன இருக்கிறது? இந்தியா விழிப்பாக இருந்தால் போதும்.

கேள்வி-4. மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது என்பதை வலியுறுத்தி மார்ச் 14-ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தவிருப்பதாக பாமக அறிவித்துள்ளது
பதில்: எனக்கு இந்த விவகாரம் புரியவில்லை. மருத்துவர் புரூனோ இக்கேள்விக்கு இன்னும் ஆதாரபூர்வ பதில்களுடன் விடையளிக்க இயலும்? ஓக்கேவா ப்ரூனோ?

கேள்வி-5. நாங்கள் ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததால்தான் திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறியாமல் காப்பாற்றப்பட்டது என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது.
பதில்: விட்டுத் தராவிட்டால் என்ற பேச்சுக்கே இடம் இல்லையே. வேறு வழி இல்லைதானே முஸ்லிம் லீகுக்கு.


thenkasi
கேள்வி-6. 2012 ல் உலகம் அழிவதற்கான முன்னோட்டம் தான் ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமி என்பது பற்றிய உங்கள் கருத்து?
பதில்: இம்மாதிரியான கேள்விகளுக்கு பாதுகாப்பான ப்தில் அப்படியெல்லாம் அழியாது என்பதே. இதனால் என்ன அனுகூலம் என்றால், உண்மையிலேயே அம்மாதிரி அழியாமல் உலகம் இருந்தால் எனது பதிலளிக்கும் திறன் போற்றப்படும். ஆனால் அழிந்து விட்டால்? அப்புறம் யார் கேள்வி கேட்பது, யார் பதில் சொல்வது? யாருமே மிஞ்ச மாட்டோமே.

ஒரு பிராடு ஜோசியர் எனது நினைவுக்கு வருகிறார். தம்பதியர் வந்து அவரிடம் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் எனக் கேட்டால் தைரியமாக ஆண் குழந்தைதான் எனக் கூறிவிடுவார். அதே நேரம் ஒரு தாளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பெண் குழந்தைதான் எழுதி, அதை ஒரு கவரில் தேதி சீலிட்டு வைத்து விடுவார். ஆண் குழந்தை பிறந்தால் பிரச்சினையில்லை. ஆனால் பெண் குழந்தை பிறந்து அத்தம்பதியர் மெனக்கெட்டு கேட்டால், தனக்கும் அது தெரியும் என்றும், ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மனதை நோகடிக்க விரும்பாததால் அவ்வாறு கூறியதாகவும், அதற்கு ஆதாரமாக அவர்கள் முன்னிலையிலேயே அந்த சீலிட்ட கவரை பிரித்து தாளில் எழுதியதைக் காட்டுவார். எப்புடீ?

கேள்வி-7. பூமியின் அச்சு விலகியுள்ளதாய் வரும் தகவல் இன்னும் என்ன செய்யப் போகிறது?
பதில்: யாருக்கு தெரியும்? யாருக்குத் தெரியும்? கூகளிட்டு பார்த்ததில் இந்தப் பக்கம் கிடைத்தது.

நாம் உணரும் வகையில் மாறுதல்கள் சீதோஷ்ண நிலையில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

கேள்வி-8. வரும் சுப்பர் முழுநிலவு 19.3.2011 என்ன செய்யப் போகிறது?
இங்கும் கருத்துகள் மாறுபடுகின்றன. இப்பக்கத்தைப் பார்க்கவும்.


மீண்டும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் அடுத்த வியாழனன்று சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/10/2011

டோண்டு பதில்கள் 10.03.2011

pt
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதால் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பெட்ரோல் மீதான விற்பனை வரியை 30 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் குறைத்து 27 சதவீதம் மட்டும் வசூலிக்க முடிவுசெய்துள்ளது.
பதில்: மக்களுக்கு மறதி உண்டுதான். ஆனால் அது நீண்டகால நினைவுகள். குறுகிய கால நினைவுகள் தீவிரமாக இருக்கும். ஆகவே பெட்ரோல் விஷயத்தில் சிறிது கரிசனம் காட்டினால், அது ஓட்டு போடும் வரை நினவிலிருக்கும் என்பது பொது புத்தி. அதில் உண்மையும் உண்டு.
pt:இவரல்லோ யாரும் நினக்ககாததையும் கொடுக்கும் தர்மப் பிரபு.தேர்தல் சாமிக்கு ஒரு ஓ போடு!
டோண்டு:மேலே பதிலில் கூறியுள்ளேனே.


கேள்வி-2 .இன்றைய பொன்மொழி உதிர்த்தவர் ப.சிதம்பரம்பட்டமரம் துளிர்க்காது; பச்சை மரம்தான் துளிர்க்கும்! காங்கிரஸ் பச்சை மரம். ஒரு இலை உதிர்ந்தால் இரண்டு இலைகள் துளிர்க்கும் !-
pt:அப்படி போடு அருவாளை!
டோண்டு:?

பதில்: அரிவாளா? சரிதான், அட்டைக்கத்தியல்லவா வீசுகிறார் ப.சி. பசியுடன்!

கேள்வி-3. லிபியா மக்கள் எனக்காக உயிரைக் கொடுப்பார்கள்: கடாஃபி
pt: அண்ணன் கடாஃபி லிபியாவின் கலைஞர்!
டோண்டு:?

பதில்: கடைசி லிபியனின் கடைசி சொட்டு ரத்தம் வரைக்கும் கடாஃபி போரிடுவாராக்கும்.

கேள்வி-4. குட்டக் குட்ட குனியக்கூடாது: தி.மு.க.வுக்கு கி. வீரமணி வேண்டுகோள்
pt:மே23 க்கு பிறகு பாருங்கள் வீரமணியின் அந்தர் பல்டியை அம்மா முன்னால்!
டோண்டு:?

பதில்: அப்படி குனிவது கூட சொந்த பொறியியல் கல்லூரிக்கு துணை போனால், மாயாவதிக்களிக்கப்பட்ட சேவையையும் மிஞ்சுவார் வீரமணி.

கேள்வி-5. 2ஜி ஊழல் விசாரணைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு: மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டுவந்தார் கபில் சிபல்
pt:வரவேற்போம் இருகரம் கூப்பி
டோண்டு:?

பதில்: கபில் அழுது கொண்டே சிரிக்கின்றார் போலிருக்கிறதே.

அருண் அம்பி
கேள்வி-6. ராவண கும்பகர்ணராமே?
பதில்: அழகிரியை கும்பகருணனாக்கி, தூங்க அனுப்பித்திடும் எண்ணமோ என்னவோ, யாமென்ன அறிவோம்?


பார்வையாளன்
கேள்வி-7. துக்ளக்கில் அறிஞர்கள் பலர் எழுதி இருக்கின்றனர்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவர்கள்..ஆனால் நையாண்டி எழுத்தில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தார் சோ... துக்ளக் வரலாற்றில் முதல் முறையாக , நையாண்டி எழுத்தில், சோவையே மிஞ்சி காட்டும் வகையில் , அல்ட்டிமேட் ரைட்டர் சாரு எழுத ஆரம்பித்து இருப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன? (உதாரணமாக இந்த வார துக்ளக் கட்டுரையின் முதல் வரியை பாருங்கள்.. முதல்வரின் கொள்ளு பேரனுக்கு காவல் இருக்க வேண்டிய போலீசார் இங்கு என்ன செய்கிறார்கள் என யோசித்தேன்)
பதில்: எனக்கென்னவோ இது சோவுக்கு நன்றாகப்படும் என்ற எண்ணத்தில் எழுதியது போலத்தான் படுகிறது. அதாவது செயற்கைதான், சின்சியரிட்டி ஏதும் இல்லை. போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.

கேள்வி-8. துணிச்சலான எழுத்து, வித்தியாசமான பார்வை இவற்றில் சோவிற்கு நிகராக , தமிழ் நாட்டில் அல்டிமேட் ரைட்டர் சாருவை மட்டுமே சொல்ல முடியும் என்ற கருத்து குறித்து உங்கள் கருத்து ?
பதில்: இதைவிட சோவை அவமதிக்க முடியாது.

கேள்வி-9. தொகுதி பங்கீட்டில் பணிந்து போனது காங்கிரசா, திமுக வா?
பதில்: தொகுதி கொடுப்பது முதற் கட்டமே. பிறகு தேர்தலுக்காக உழைக்க தொண்டர்கள் திமுகாவிலிருந்துதான் வரவேண்டியிருக்கும். காங்கிரசில் யாருமே தொண்டர் இல்லை, அவரவர் மனப்படி அவரவர் தலைவரேதான். நோகாமல் நோன்பு கொண்டாட நினைப்பவர்கள். விளைவு சுவாரசியமாக அமையும்.

கூட்டணி கடைசியில் ஒருவாறாக உருவானதில் முதல் இழப்பு பொது மக்களுக்கே.


மீண்டும் கேள்விகள் வந்தால் பிறகு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/03/2011

துக்ளக்கில் சாரு நிவேதிதா எழுதுகிறார், ரிலாக்ஸ் ப்ளீஸ்

பதிவர் ராம்ஜி யாஹூவின் கேள்வி:

ராம்ஜி_யாஹூ
சாரு சோவின் பத்திரிகையில் கட்டுரை எழுதுவது குறித்து டோண்டு அவர்களின் கருத்து என்ன?
அடுத்து ஜெயமோகன் கூட நக்கீரனில் எழுத இறங்கி வந்து விடுவாரோ?


பதில்: துக்ளக்கில் எழுத வாய்ப்பு கிடைத்தது சாருவுக்கு ஒரு பிரமோஷன் மாதிரியே. சோ அவர்களது பெருந்தன்மைக்கும் அது ஓர் எடுத்துக் காட்டு.

ஜெயமோகன் நக்கீரனுக்கு எழுத வருவது அவருக்கு பின்னடைவே. நக்கீரன் கோபாலுக்குஅது ஒரு நல்ல வணிக வாய்ப்பு.

ஓக்கே ராம்ஜியின் கேள்விக்கான பதில் முடிந்தது. எனது புதிய பதிவுக்கு அது தூண்டுகோலாக இருந்ததால் அக்கேள்விக்கு அடுத்த வியாழன் வரை காத்திருக்காது உடனே பதில் அளித்தேன்.

இன்று விற்பனைக்கு வந்த 09.03.2011 தேதியிட்ட துக்ளக்கில் சாருவின் முதல் கட்டுரை வந்து விட்டது (பக்கம் 8-9). சும்மா சொல்லப்படாது முதல் கட்டுரை நன்றாகவே உள்ளது. துர்வாசர் வண்ணநிலவன் கட்டுரையை படிப்பது போலவே இருந்தது.

முதலில் சுய அறிமுகம். பிறகு துகளக்கில் தான் எதிர்பாராத விதமாக எழுத வந்ததன் பின்னணி. ட்விட்டரில் இருக்கும் அராத்து என்னும் பதிவர் கொடுத்த ஆலோசனைக்கு நன்றி, துக்ளக் ஆசிரியருக்கு நன்றி தெரிவிப்பு.

தான் என்ன எழுதப்போகிறார் என்ற கேள்விக்கு ஐநா சபையில் போர்த்துகல் மந்திரி பேச வேண்டிய பேச்சை தான் பேசும் வெளி உறவு மந்திரியே இருக்கும்போது தனக்கு எழுத விஷயமா இல்லை என பூடகமான பதிலுடன் சாருவின் கட்டுரை ஆரம்பிக்கிறது. தொடர்கிறது மேல்நாட்டு மோகம் பற்றிய சாருவின் எண்ணங்கள். காதலர் தினம், அன்னையர் தினம், நண்பர்கள் தினம் ஆகியவர்றை நாம் குருட்டுத்தனமாக அந்த நாடுகளிலிருந்து பெற்றதை சாடுகிறார்.

இந்தியர்களது பல தீய பழக்கங்களை (கட்டுப்பாடின்மை, சாலைவிதிகளை கடைபிடிக்காமை, வெளிநாடுகளில் கஷ்டத்தில் மாட்டும் நாம்மவர்களை அரசு கண்டுகொள்ளாமல் இருத்தல் ஆகியவை) சாடுகிறார்.

அதுதான் சொன்னேனே துக்ளக்கில் வரும் துர்வாசர் கட்டுரை போலவே உள்ளது.

ஆக, ரிலாக்ஸ் செய்யச் சொல்லும் பதிவருக்கான விடை இப்போது கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.

அவர் சொன்ன ஒரு ஊகம்; அதில் அவரையும் மீறி துக்ளக்கின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைத்தான் பார்க்கிறேன். அந்த ஊகம்:

* நித்யாணந்தா சரசம் அல்லது சல்லாபம் பற்றி நிச்சயம் இருக்காது!

ஆம், நிச்சயம் இருக்காது. துக்ளக்கின் தரம் அப்படி.


அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் 03.03.2011

hayyram
கேள்வி-1. இட்லிவடையில் எஸ் வி சேகர் பேட்டியைப் பார்த்தீர்களா? தமிழ் சினிமாவில் பிராமணர்கள் மோசமாக சித்தரிக்கப்படுவது பற்றிய கேள்வியை இட்லிவடைக்கு அனுப்பி இருந்தேன். அது கேட்கப்பட்டது. கேள்வி முழுமை பெறுவதற்குள் நீண்ட பதிலை அளித்து விட்டார். அந்த பதில் பற்றி தங்களது கருத்தை அறிய ஆவல்!
(குறிப்பு: கேள்வி கேட்டவர்கள் பற்றிய விபரம் பற்றி எதுவும் கூறப்படாவிட்டாலும் என்னைத் தவிர வலைதளத்தில் இது பற்றி யாரும் கேட்பதில்லையோ என்கிற யூகத்தாலும் அந்தக் கேள்வி நான் அனுப்பியதாகத் தான் இருக்கும் என யூகித்துக்கொண்டேன்!)

பதில்: இக்கேள்வி இப்பதிவின் வரைவைப் பொருத்தவரை மிகவும் பிந்தி வந்தாலும், இதையே முதல் கேள்வி ஆக்குகிறேன்.

உங்களுக்கு பதில் சொல்லவே நான் இப்பேட்டியைக் கேட்டேன். சேகர் சொல்வதை இவ்வாறு சுருக்கலாம். அ) இதை பற்றி ரொம்பவும் பெரிதுபடுத்தினால் காரியத்துக்காகாது. அதை அப்படியே இக்னோர் செய்ய வேண்டும். ஆ) அவ்வாறு பிராமணர்களை கிண்டல் செய்பவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை, அதை மறைக்கவே அவ்வாறு செய்கிறார்கள். இ) அப்படி ரொம்பவும் பொறுக்க முடியாமல் போனால் பேசாமல் கோர்ட்டில் போய் ஸ்டே ஆர்டர் வாங்கி எதிர்ப்பைக் காட்டுவது நலம்.

என்னுடைய கோபமெல்லாம் பாலசந்தர் போல சொந்த ஜாதியினரையே மட்டம் தட்டும் இந்த அருவருக்கச் செய்யும் போக்கு மீதுதான். மற்ற சாதியினரை விடுங்கள், அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மைதான், ஆட்சியிலே இருந்தாலுமே. எனது வழியை பதிவுலகில் இத்தனை நேரத்துக்கு அறிந்திருப்பார்கள். சீறுவேன், சம்பந்தப்பட்டவரின் சாதி தெரிந்தால் அதைப் பற்றிய உண்மைகளை வெளியாக்கி, கிண்டல் செய்து அவரை வெறுப்பேற்றுவேன். நான் ஒன்றும் சமாதானவாதியெல்லாம் இல்லை. என்னை ஒரு கன்னத்தில் அடித்தால் அடித்தவனின் இரு கன்னத்திலும் மாறி மாறி பத்து அறைகள் கொடுப்பேன்.

pt
இந்த மின் அஞ்சலுக்கு டோண்டுவின் விமர்சனம்?
கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்
என்னை வச்சு காமெடி பண்ணாதிங்கைய்யா என் எவளவு கெஞ்சினாலும்
கனி அழகிரி ராசா அவரை விடுவதாக இல்லை .இந்நிலையில் வரும் தேர்தலில் அவர் தோல்வி அடைய பத்து காரணங்கள்.
1. ஈழ தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை விரட்டி சென்று கொத்து கொத்தாக ராஜபக்ச கொன்ற போது ஒருமணி நேரம் கலைஞர் உண்ணாதவிரதம் இருந்தது. அதை நேரடி ஒளிபரப்பும் செய்து கொண்டது. கலைஞருக்கு வேர்க்கும் என ராஜாத்தி அம்மாள் அவரது முடி இல்லாத தலையை துடைத்து விட்டது.

பதில்: தூள் படம் என நினைக்கிறேன், நடிகர் ஷிண்டே காவேரிக்காக உண்ணாவிரதம் இருப்பார், கடைசியில் எல்லோருக்குமே மாசுபட்ட வாட்டரில் ஜூஸ் தருவார் விக்ரம். சத்தியமாகச் சொல்கிறேன், கலைஞரின் இக்கூத்து எனக்கு அப்படத்தைத்தான் நினைவூட்டியது.

2. அதே பிரச்சனைக்கு தினசரி கடிதம் எழுதி ஒரு ஸ்டாம்ப் ஒட்டி பிரதமருக்கு அனுப்பியது. அதை அந்த ஆபீஸ் பியோனாவது படித்தானா என்பது பற்றி கவலையே படாதது.
பதில்: கலைஞரின் கடமை கடிதம் எழுதுவதே, பலன் பற்றியெல்லாம் கவலை இல்லை. பகவத் கீதையை ரொம்பத்தான் பின்பற்றுகிறார் அவர்.

3. இலவசம் இலவசம் என்று இலவசவீடுகள், ஒரு ரூபாய் மண்,கற்கள் கலந்த அரிசி கலர் டிவி என் கொடுத்து ஓட்டு வாங்கிட துடிக்கும் கேவலமான தந்திரம்.
பதில்: அக்கேவலமான பொருட்களை வாங்கும் மக்களின் கேவலம் இதற்கு எவ்வகையிலும் குறைந்தது அல்ல.

4. ராசா இமாலய ஊழல் செய்த போதும் அதை ஒப்பு கொள்ளாமல் அவர் சிறையில் களி தின்ன பிறகுதான் கட்சியை விட்டு நீக்குவேன் என்று அடம்பிடிப்பது.
பதில்: கலைஞர் மாதிரி நண்பர்கள் இருக்கும்வரை ராசாவுக்கு விரோதிகளே தேவை இல்லை. நண்பேண்டா.

5. ராசா விவகாரத்தால் வாசிங்டன் போஸ்ட் வரை இந்தியாவில் இப்படி ஒரு பணப்பேய் இருக்கிறது என்று இந்தியாவின் மானத்தை வாங்க வைத்தது.
பதில்: அதையும் மிஞ்சியதே இஸ்ரோ ஊழல். வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்.

6. இந்திய மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்படுகின்ற வேளைகளில் மீனவ குடும்பங்களுக்கு உதவி செய்யாமல் ஒரு கவிதை எழுதி கலைஞர் டிவியில் ஒளிபரப்பி மொக்கை போடுவது.
பதில்: வெட்கக்கேடு

7. தொடர்ந்து கதை வசனம் எழுதி தமிழ்மக்களை வாந்தி எடுக்க வைப்பது.அதை விட கொடுமை அவர் வசனம் எழுதிய படங்கள் ஓடுவதுக்கு முறுக்கு, லட்டு எண்டு மக்களுக்கு கொடுத்து பேதி என்று வீட்டுக்கு ஓடவைக்கிறது .
பதில்: தலையில் துண்டு போடும் தயாரிப்பாளருக்கு ஏதாவது பெர்மிட் தந்து விடுகிறாரே, நியாயஸ்தர் அவர்.

8. ஓட்டுக்கு லஞ்சம் படிப்புக்கு லஞ்சம் வீட்டுக்கு லஞ்சம் என்று வறிய மக்களின் வாழ்க்கையில் மண்ணை வாரிப்போடுவது .
பதில்: வெல்லப் பிள்ளையாரை கிள்ளி அவருக்கே நைவேத்தியம் வைப்பது போல மக்களது பணத்தைக் கொள்ளையடித்து, அதிலிருந்தே துக்குனூண்டு கிள்ளி இலவசமாக தருவதை மக்கள் நம்பும் வரை இக்கூத்து தொடரும்.

9. ஓட்டுக்காக குஸ்பு போன்ற நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கஸ்தூரிபாய்களை கட்சியில் சேர்த்து மக்களை வெறுப்படைய வைப்பது .குஸ்பு யார் என்று நம்ம கார்த்திக்கை கேட்டால் சொல்லுவார் .
பதில்: இதில் ஏன் குஷ்பூவை இழுக்கிறீர்கள்?

10. தமிழ் சினிமா விழா என்றால் ஓடி போய் முன்வரிசையில் இருந்து தன்னை மற்றவர்கள் பாராட்டுமாறு விட்டு விட்டு அந்த பாராட்டு மழையில் தூங்குவது.
பதில்: தேர்தலிலாவது மக்கள் பள்ளியெழுச்சி பாடினால் நன்றாக இருக்கும்.

11. இலங்கையின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: கிருஷ்ணா
பதில்: கிருஷ்ணாவை படகில் ஏற்றி அனுப்புவோமா?

12. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிப்பதற்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் 30 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்று தில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
பதில்: அதில் எவ்வளவு பேர் அல்லக்கைகள்?

13. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல்காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து கைத்தறி மற்றும் மின்தறி நெசவாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்
பதில்: அவ்வாறே கொடுத்து விட்டார்கள் போலிருக்கிறதே. இந்த அழகில், கடனை ஒழுங்காகத் திருப்புபவர்களுக்கு வட்டியில் தள்ளுபடியாம். ஆனால் கட்டாமலேயே டபாய்ப்பவர்களுக்கு அசலே தள்ளுபடியாம்.

14. மும்பை உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர் ஃபர்கானா ஷா தெரிவித்தார்
பதில்: ஐஷ்மனை இஸ்ரவேலர்கள் 1960-ல் பிடித்தனர். எல்லா வழக்குகளையும் முறைப்படியே நடத்தினர். 1962, மே 31-அன்று தூக்கில் போட்டனர். நம்மவர்கள் அவர்களிடம் கற்க வேண்டியது அதிகம் உள்ளன.

15. உதகை நகரில் 2 தனியார் தங்கும் விடுதிகளில் நடைபெற்றுள்ள தொடர் கொள்ளைச் சம்பவங்களால் சுற்றுலாப்பயணிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பதில்: டூரிசமையே நம்பி வாழும் ஊருக்கு இது தேவையற்ற சங்கடமே.

ezhil arasu
FOR DONDU'S COMMENT:-
கேள்வி-16. Two top executives of Tata group --chairman of the group's realty and infrastructure arm R Krishna Kumar and its managing director and chief executive officer Sanjay G Ubale -- were today questioned by the CBI in connection with the second-generation mobile telephony spectrum allocation scam
பதில்: பண்டோராவின் பெட்டி திறக்கப்ப்பட்டு விட்டது. எந்தப் புத்துல என்ன பாம்பு இருக்குமோ, யாருக்குத் தெரியும்?

கேள்வி-17. Among the acquitted, 40 were named in the first charge sheet, and of these, 28 were apprehended from the scene of the crime near Godhra railway station. They all have been released.
பதில்: குற்றம் நிருப்பிக்கப்பட்டவர்களில் 11 பேருக்கு தூக்கு, மீதிப் பேருக்கு ஆயுள் தண்டனை.

கேள்வி-18. Noting that Jammu and Kashmir had gone through a "difficult time" last year, Prime Minister Manmohan Singh today said the government was keeping its "fingers crossed" this summer while remaining vigilant as he asserted that no quarter should be given to secessionists.
பதில்: இந்த நேரு குளறுபடியை ஆரம்பித்து வைத்து விட்டு போய் சேர்ந்து விட்டார். நாம்தான் இன்னும் மாட்டிக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி-19. Do you think issues like corruption, terrorism, and misuse of power by the authorities are pushing India towards becoming a banana republic? What do we need to do to prevent this?
பதில்: இத்தாலியில் ஆட்சி கவிழ்ந்து கொண்டே இருக்கும். இருப்பினும் அங்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவது அதனால் எல்லாம் தடைப்படவில்லை. ஆனால் இங்கோ லஞ்சம் வாங்குபவர்கள் ஆட்சியில் நிலைத்து நிற்கின்றனர். நாட்டுக்குத்தான் நஷ்டம்.

கேள்வி-20. After grilling key aide and Green House Promoters managing director Sadiq Batcha on Tuesday, CBI investigators claimed on Wednesday former telecom minister A Raja invested a chunk of the kickbacks he received in the sale of second generation mobile telephony spectrum in real estate
பதில்: எல்லாம் முடிந்து, கேஸ் நடந்து ராசாவுக்கு தண்டனை தராத வரைக்கும் நாம்தான் இவ்வாறு ஸ்பெகுலேட் செய்து கொண்டிருப்போம்.

Surya
டோண்டு சாரின் கேள்வி-பதில் பகுதிக்காக
கேள்வி-21. கலாநிதி மாறனுக்கு ஒரு வருட சம்பளம் மற்றும் இதர சலுகைகளின் மதிப்பு ருபாய் முப்பத்தி ஏழு கோடியே எட்டு லக்ஷம்! அவரது மனைவி காவிரிக்கும் அதே சம்பளம்தான்!! இவர்கள் இருவரது சம்பளம் மட்டும் சன் குழும லாபத்தில் பதின்மூன்று சதம்! இவர்கள் இருவரது மொத்த சம்பளமும் சன் குழுமத்தின் வருட செலவில் பதின்மூன்று சதம் கூட. இது கொஞ்சம் ஓவராத் தெரியல்ல?
பதில்: மொத்த நிறுவனமே அவர்களுடையதுதான். இம்மாதிரி சம்பளமாக பெற்றுக் கொண்டால் வரிவிதிப்பு பரவலாகி, ஒவ்வொரு வகையிலும் வரிக்கு உட்படாத இன்கம் கூட்டினாலே கணிசமாக துட்டு சேருமே.

கேள்வி-22. விஜயகாந்த் ஒரு வழியாக ஜெயலலிதாவுடன் கூட்டணிக்கு சம்மதித்து விட்டது போல் தெரிகிறது. ஜெ - விஜய்காந்த் - வை.கோ - காம்ரேடு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் எவ்வாறு அமையும்? உங்கள் கணிப்பு என்ன?
பதில்: நிலைமை ஆளும் கட்சிக்கு பாதகமானதே. விஜயகாந்தால் ஓட்டுச் சிதறல் இருக்காதே.

கேள்வி-23. சில ஊடகங்களும் சில வலைப் பதிவர்களும் "ஜெயலலிதா சமூகத்தைச் சார்ந்த ஒரு பத்திரிக்கையாளர் திரை மறைவில் விஜய காந்துடன் கூட்டணிக்கு வேலை செய்தார்" என்று கூச்சமில்லாமல் எழுதுகிறார்கள். இதே சோதான் முன்பு தி.மு.க. விற்கும் த.மா.க.விற்கும் கூட்டணிக்கு வேலை செய்தார் என்பது மறந்து விட்டதே இவர்களுக்கு. திருமாவளவன் அவர்கள் தி.மு.கவிற்கும் பா.ம.க விற்கும் கூட்டணி அமையப் பாடு பட்டதை நான் " இசை வேளாளருக்கும் வன்னியருக்கும் கூட்டணி அமைய தலித் தவிக்கிறார்" என்று எழுதினால் (அப்படி ஒரு ஜாதி வர்ணம் பூசி எழுத எனக்கு மனம் இல்லை. ஒரு உதாரணத்திற்குத்தான் சொல்கின்றேன்). இதே பதிவர்கள்தான் "உன் ஜாதி என்ன? வர்ணம் என்ன?" என்று கூப்பாடு போடுவார்கள். இவர்கள் திருந்தவே மாட்டார்களா?
பதில்: மாட்டார்கள். தத்தம் சாதியை மட்டும் தூக்கிப் பிடிப்பார்கள் அம்மாதிரியான ஆஷாடபூதிகள்.

கேள்வி-24. பார்வதி அம்மாள் மறைவுக்கு கலைஞர் "இரங்கல் கவிதை" ஒன்றும் எழுதியது போலத் தோன்றவில்லையே? மருத்துவர் கூட ஒன்றும் கவலைப் பட்ட மாதிரி தெரிய வில்லையே? ஏன்?
பதில்: அவரவர் கவலை அவரவருக்கு.

Arun Ambie
கேள்வி-26. சிங்கூரில் ரெயில் பெட்டித் தொழிற்சாலை வருகிறதாமே? விவசாயம் இப்போது மட்டும் பாதிக்கப்படாதோ?
பதில்: ரயில் பெட்டித் தொழிற்சாலை அரசு கம்பெனியாக இருக்கும் என நம்புகிறேன். மமதா போன்றவர்களௌக்கு அங்கு பலத்த வேட்டையல்லவா. டாட்டாவிடம் அது கிடைக்காதே.

ரமணா
கேள்வி-27. கூட்டணி பேரத்தில் கருணாவின் சாணக்கியம் வெல்லுமா?ராகுலின் முயற்சி வெல்லுமா?
பதில்: இரண்டு திருடர்கள் கூட்டு சேர்ந்தால் ஒருவரையொருவர் நம்ப மாட்டார்கள்தான். பார்க்கலாம் கூத்து எவ்வளவு தூரத்துக்குத்தான் போகிறதென்று.

கேள்வி-28. திமுகவை காங் பாடாய் படுத்துவதாய் வரும் செய்திகள் உண்மையா?
பதில்: ஒரு இலை விழுந்தால், இரு இலைகள் துளிர்க்கும்?

கேள்வி-29. திருமாவும் அதிமுக பக்கம் போனால் பாமகவுக்கு இந்ததடவை `கோவிந்தோ கோவிந்தோ` நிலையா?
பதில்: திருமா அதிமுக பக்கம் போவார் என நான் நினைக்கவில்லை.

கேள்வி-30. திமுக முரண்டு பிடித்து பணியாவிட்டால் ஆட்சிக் கலைப்பு ஆளுனர் ஆட்சி,கைதுகள் படலம், என ஜூவியின் செய்திப்படி நடந்தால் யார் அதிகம் சந்தோஷப்படுவார்கள்?காரணம்?
அ)சோ ஆ)சு.சாமி இ)ஜெயலலிதா ஈ)ராகுல் உ)எம்ஜிஆரின் ஆத்மா ஆகியவர்கள் என்ன நினைப்பார்கள்?

பதில்: முக்கியமாக சந்தோஷப்படுவது மக்கள். சோ இமாதிரி சந்தோஷங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். மற்றவர்கள் பற்றி சொல்லத் தெரியவில்லை.

கேள்வி-31 பெரும் சொத்துக்குவிப்பு விவகார கோர்ட் நடவடிக்கைகள் தமிழகத்தில் தொடர் கதையா?
பதில்: அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் அது அகில இந்தியாவுக்கும் பொருந்தும்.

வஜ்ரா
தற்பொழுது அரபு உலகத்தில் நடந்துவரும் புரட்சிகள் பற்றி..
கேள்வி-31. இந்த புரட்சிகள் எல்லாம் அல்கோய்தா தீவிரவாதிகளின் செயலாக இருக்குமோ ?

பதில்: கவிழ்க்கப்படும் ஆட்சிகள் எல்லாமே ஊழல் ஆட்சிகள்தானே. ஆனால் இசுலாமிய நாடுகளில் என்ன கஷ்டம் என்றால் புரட்சியாளர்களே பின்னாலே ஊழல் வாதிகளாகி விடுகின்றனர்.

கேள்வி-32. இப்புரட்சிகள் மூலம் நாளை உருவாகும் நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாத, யூத வெறுப்பு கொண்ட ஆனால் ஜனநாயக நாடுகளாக (ஈரான் போல்) இருக்காது என்பது என்ன நிச்சயம் ?
பதில்: இஸ்ரவேலர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனால் அது அவர்களுக்கு பழக்கம்தானே.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வியாழனறு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது