Showing posts with label விள்ம்பரங்கள். Show all posts
Showing posts with label விள்ம்பரங்கள். Show all posts

4/26/2012

டிஃபன்சிவ் டிரைவிங்

வண்டியோட்டிகள் கற்க வேண்டிய முதல் பாடம் சுயபாதுகாப்புடன் கூடிய வண்டியோட்டம். அதாகப்பட்டது சாலையில் உள்ள மற்ற வண்டியோட்டிகள், பாதசாரிகள் ஆகியோர் இடியட்ஸ், சும்பன்கள் என்ற உணர்வுடன் அவர்களது சொதப்பல்களையும் அவதானித்து ஒரு மார்க்கமாக செல்ல வேண்டும் என்பதே அது.

இது சம்பந்தமாக சீயட் கம்பெனியினரின் விளம்பரங்கள் நல்ல கற்பனை திறத்துடன் உள்ளன. முதல் படத்தைப் பாருங்கள்.

எச்சரிக்கைப் பலகை வைப்பவன் சொதப்பினாலும் வண்டியோட்டுபவர் சாக்கிரதையாகவே செயல்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் படத்தில் இரண்டு மாது சிரோன்மணிகள் வம்புப் பேச்சில் ஈடுபட குழந்தை ஸ்கூட்டரில் மாட்டிக் கொள்வதில் இருந்து தப்பிக்கிறது, சீயட்டின் உபயத்தால். இப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் என் மனைவிக்கு ஆத்திரம் வரும் பாருங்கள், “ஒவ்வொருத்தியையும் கன்னம் கன்னமாக இழைத்து அறைய வேண்டும்” என்பார்.

 

இன்னொரு நாதாரி செல்போனில் பேசிக் கொண்டே குழந்தையின் வண்டியை தள்ளிக் கொண்டு செல்லும் கூத்தையும் பாருங்கள்.

 

மற்றவர்களுக்கான பச்சை விளக்கை கவனிக்காமல் சென்றாலும் சம்பந்தப்பட்டவர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் விதிதான்.



ஆனால் ஒன்று, இந்த விளம்பரங்கள் சீயட் கம்பெனிய்ன் டயர்களுக்காத்தான் என்றாலும், கூடவே பொது நலன் பாதுகாக்கப்படுவதும் வெள்ளிடை மலை. சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்துக்கு பாராட்டுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது