1/29/2009

நல்லவர்களுடன் பேரம் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

மகாத்மா காந்தி மிகவும் நல்லவர் என்பதில் எந்தவித சந்தேகமும் இருந்திருக்க முடியாது. ஆனால் அவருடன் நெகோசியேஷன் செய்தவர்கள் அவர் நல்லவராக இருப்பதால் அவரை நம்பி, மோசம் போனது எனக்குத் தெரிந்து ஒருமுறை நடந்துள்ளது. நான் இங்கு குறிப்பது தலித்துகளுக்கான தனி வோட்டர் லிஸ்டைத்தான்.

வட்டமேஜை மகாநாட்டுக்கு சென்ற அம்பேத்கர் தலித்துகளுக்காக போராடி இதை வெள்ளை அரசிடமிருந்து பெற்றார். அதை திரும்பப் பெற வேண்டும் என அழிச்சாட்டியமாக காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ள எல்லோரும் அம்பேத்கரை நெருக்க, அவரும் விட்டு கொடுத்தார். என்ன ஆயிற்று? தலித்துகளுக்குத்தான் நஷ்டம். காந்திக்கென்ன அவர் பாட்டுக்கு போய் சேர்ந்து விட்டார்.

மன்னர்கள் மான்யம் விஷயத்தில் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் தனிப்பட்ட உறுதி தந்ததினாலேயே பல சுதேச மன்னர்கள் இந்தியாவுடன் இணைப்புக்கு ஒத்து கொண்டனர். அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இந்திரா அந்த ஒப்பந்த அடிப்படையையே மீறி ஆட்டம் போட்டார். அப்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்தபோது, வாக்களித்தவர் எவ்வளவு பெரிய மனிதரானாலும் அதற்கெல்லாம் தான் கட்டுப்பட வேண்டியதில்லை என இந்திய அரசு வெளிப்படையாகவே அறிக்கை விட்டது. ஆக பட்டேலின் வார்த்தைகளுக்கு அவ்வளவுதான் மதிப்பு.

இப்படித்தான் நான் தில்லியில் இருந்தபோது ஒரு நிறுவனத்தில் துபாஷியாக கூப்பிட்டனர். நிர்வாக அதிகாரி என்னிடம் பேரம் பேசி ஒரு தொகைக்கு ஒப்புக் கொண்டோம். பிறகு அந்த நிறுவனத்தின் முதலாளி என்னிடம் இது சம்பந்தமாக மேலும் பேச முனைந்தார். அவரிடம் நான் நடந்ததை கூற, அவர் நிர்வாக அதிகாரிக்கு இது சம்பந்தமாக பேரம் பேச அவர்கள் கம்பெனி விதிப்படி அதிகாரம் கிடையாது என்றாரே பார்க்கலாம்!

டோண்டு ராகவனிடமா இதெல்லாம் நடக்கும்? முதலாளியை ஒரே ஒரு கேள்வி கேட்டேன், அதாவது நான் நிர்வாக அதிகாரியுடன் பேரம் பேசியது இப்போதைக்கு செல்லாது என்பதுதானே என. அவரும் யதார்த்தமாக ஆமாம் எனக் கூறிவிட, சரி புதிதாகவே பேரம் பேசலாம் என கூறிவிட்டு, நான் முதலில் கேட்டதை விட ஆயிரம் ரூபாய் அதிகமாகவே கோட் செய்தேன். முதலாளி திகைப்புடன் நான் ஏற்கனவே குறைவாகக் கேட்டதை நினைவுபடுத்த, அதுதான் செல்லாது என நாம் ஒப்பு கொண்டு விட்டோமே என அவர் கூறியதை புறங்கையால் தள்ளினேன். இதில் என்ன விசேஷம் என்னவென்றால், நிர்வாக அதிகாரியுடன் பேசிய அடுத்த நாளே இன்னொரு வாடிக்கையாளர் என்னை அணுகியிருந்தார். அப்போதைக்கு அவரை காத்திருக்க சொன்னது இந்த விஷயத்தில் நல்லதாகப் போயிற்று என்றுதான் சொல்ல வேண்டும். அவரது வேலை மொழிபெயர்ப்பு வேலைதான், ஓரிரு நாட்கள் கழித்து சென்றாலும் பாதகமில்லை. ஆகவே துபாஷி வேலை பேர விஷயத்தில் என்னால் கடுமையாக நடந்து கொள்ள முடிந்தது. இவரோ ஐயோ பாவம் என்னும் நிலையில்தான் இருந்தார். சட்டென்று வேறு ஆள், அதுவும் பொறியியல் பின்னணியுடன் துபாஷி அவர்களுக்கு அவ்வளவு குறுகிய காலத்தில் கிடைக்காது. இப்போது என்ன ஆயிற்றென்றால், நான் நிர்வாக அதிகாரியிடம் ஒத்து கொண்ட விலைக்கே என்னை வரச்சொல்ல அவர் என்னை மிகவும் வேண்டி கேட்டு கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், இதிலும் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். நான் அதிக விலைக்கே பிடிவாதமாக இருந்து அதை பெற்றிருக்கலாம். ஆனால் முதலாளிக்கு அது தாங்க முடியாத அவமானமாக இருந்திருக்கும். அது எங்களது பிற்கால ஒத்துழைப்புக்கும் விரோதமாக இருந்திருக்கும். அதையும் நான் பார்த்து செயல்பட்டது எனது அறிவார்ந்த சுயநலமே.

இதனால் என்ன ஆயிற்றென்றால், புது வாடிக்கையாளர்களின் சார்பில் அவர்களது அதிகாரிகள் யாரேனும் என்னுடன் பேரம் பேச முயன்றால், நான் முதலிலேயே தெளிவாக அவர்களிடம் இதற்கான அதிகாரம் உள்ளதா எனக் கேட்டு உறுதி செய்து கொள்வேன். சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரி நல்லவர்தான். இம்மாதிரி முதலாளி செய்ததால் அவர்தான் அதிகம் சங்கடப்பட்டார், என்னிடம் அதை கூறி வருத்தப்பட்டார் என்பதெல்லாம் நிஜமே. ஆனால் அவரது சங்கடத்தால் எனக்கு என்ன பயன்? நாக்கை வழிக்கக்கூட பயன்படாது. பின்னால் வருத்தப்படுவதை விட நம்பிக்கையில்லாமல் நடப்பது மேல்.

ஆகவேதான் கூறுவேன், பேரம் பேசும்போது ஜாக்கிரதை. அதுவும் நல்லவர்களுடன் பேரம் பேசும்போது ஜாக்கிரதையோ ஜாக்கிரதை!!!!

அன்புடன்,
டோண்டு ராகவ்ன்

டோண்டு பதில்கள் - 29.01.2009

போன வாரத்துக்கான பதில்கள் பதிவில் நான் இவ்வாறு எழுதினேன்.
“நான்கு பதிவுகளாக 120 கேள்விகள் கேட்ட அனானியின் கடைசி 20 கேள்விகளுக்கு இப்பதிவில்தான் பதிலளித்தேன். அவரே இப்போது புதிதாக 25 கேள்விகள் கேட்டுள்ளார். ஆகவே அக்கேள்விகளை அடுத்த பதிவுக்கு அனுப்புகிறேன்”.
அதன்படி அந்த 25 கேள்விகள் இப்பதிவை ஆரம்பித்து வைக்கின்றன.

அனானி (21.01.2009 காலை 05.18-க்கு கேட்டவர்):
1. மகா கவி பாரதியார் பக்திநெறியிலிருந்து சித்தர் நெறிக்கு உயர்ந்தார். பின் அவரால் முக்திநெறிக்குள் செல்லமுடியாது தடுத்தது எது?
பதில்: விவேகானந்தர் பற்றி ஒரு நிகழ்வை கூறுவார்கள். தியானம் செய்யும் இன்பத்தை அறிந்துணர்ந்த அவர் தியானத்திலேயே மூழ்க எண்ணியிருக்கிறார். அதை அவர் தனது குரு ராமகிருஷ்ணரிடம் கூற அவர் பதறிப்போய் அவர் அவ்வாறெல்லாம் செய்யக் கூடாது, ஏனெனில் அவரால் இந்த சமூகம் உய்ய வேண்டியிருந்தது. அவ்வாறிருக்க அவர் தியானத்தில் மூழ்குவது சுயநலமாகும் என்று அவருக்கு உணர்த்தினார். அதே போலத்தான் பாரதியும். அவர் மகாகவி எல்லாம் சரிதான். ஆனால் அவருக்கும் குடும்பம் என ஒன்று இருந்தது. வேறு கடமைகளும் இருந்தன. அதனாலேயே அவர் வணங்கும் அம்பிகை அவரை முக்திநெறிக்குள் போக விடவில்லை எனக் கருதுகிறேன்.

2. பாரதியார் பணியாற்றிய மதுரை உயர்நிலைப்பள்ளியை மத்திய அரசு நினைவுச் சின்னமாய் மாற்றும் செயலுக்கு மாநில அரசின் பாராமுகம் ஏன்?
பதில்: இது எனக்கு புது செய்தி. அது பற்றி ஒன்றும் தெரியவில்லை.

3. நாட்டுடைமை ஆக்கப் பட்ட பாரதியாரின் கவிதை தொகுப்பில், அவரால் எழுதப்படாத சில பிற சேர்க்கைகள் சேர்ககப்பட்டுள்ளன என்ற பாரதியாரின் பேத்தி விஜயபாரதியின் குற்றச்சாட்டு பற்றி?
பதில்: இது பற்றி எனது நண்பரிடம் கேட்டேன். அவர் பாரதியாரில் அத்தாரிட்டி. அவர் விசாரித்து கூறுவதாகச் சொன்னார்.

4. நெருங்கிய நண்பர்களாய் இருந்த வ.உ.சி, சிவா ஆகிய இருவரிடம் கடைசி காலத்தில் பாரதியாரின் நட்பின் நெருக்கம் குறைந்து காணப்பட்டதற்கு காரணம்?
பதில்: இது பற்றியும் எனது அதே நண்பரிடம் கேட்டேன். நீங்கள் கேட்டது போல இல்லை என்கிறார். பாரதியார் இறந்ததும் வ.உ.சி. அவர்கள் “நான் கண்ட பாரதி” என்னும் தலைப்பில் புத்தகமே எழுதுகிறார். சிவாவுக்கு தொழுநோய் வந்து விட்டது. வ.உ.சி. மனத்திடம் குன்றிய நிலையில் 6 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு வந்துள்ளார். பாரதியோ அச்சமயம் புதுச்சேரியில். அவருக்கும் ஏகப்பட்ட கவலைகள். எல்லாமாக சேர்ந்து செயல்பட்டன. மன உற்சாகம் என்பது ஒருவரிடம் எப்போதுமே இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. பாரதி இறந்தபிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வாழ்ந்த வ.உ.சி.யின் வாழ்க்கை மிகவும் பிரச்சினை நிரம்பியதாக இருந்திருக்கிறது. சன்னது பிடுங்கப்பட்ட நிலையில் அவரால் வக்கீலாக தொழில் செய்ய இயலவில்லை. பிறகு வாலஸ் என்ற நீதிபதியின் உதவியோடு அதை திரும்பப் பெற்றார். தனது ஒரு பிள்ளைக்கு அவர் வாலீஸ்வரன் என்றே பெயர் வைத்ததாகவும் படித்துள்ளேன் (வாலஸ் என நான் தவறுதலாக எழுதியதை சுட்டிக்காட்டிய ஆர்.வி. அவ்ர்களுக்கு நன்றி).

5. பாரதியாரின் புரட்சிக் கருத்துக்களில் ஈர்க்கபட்டு தன் பெயரை பாரதிதாசன் என வைத்துக் கொண்டார் பகுத்தறிவுவாதி புரட்சிக் கவிஞர். தற்கால பகுத்தறிவுத் தலைவர்கள் பாரதியை பாராட்டும் விகிதம் சற்று குறைவாயிருப்பதன் காரணம்?
பதில்: நீங்கள் சொல்லும் socalled பகுத்தறிவுவாதிகள் பெயரில் மட்டும்தான். பாரதியை பாராட்ட அவர்களுக்கு எப்படி மனம் வருமாம். அவர் பார்ப்பனர் ஆயிற்றே.

6. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபோகம் எப்படி?
பதில்: நான் அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்கவில்லை. மறந்து விட்டேன். மேலும் ஒபாமா வென்றதில் எனக்கு மகிழ்ச்சி ஏதும் இல்லை.

7. முன்னாள் அதிபர் புஷ்ஷின் நிர்வாகத்தை விட நல்ல நிர்வாகம் கொடுப்பரா?
பதில்: கொடுத்தால் அமெரிக்காவுக்கு நல்லது. நான் ஏற்கனவே பல முறை கூறியபடி அமெரிக்காவில் நான் ரிபப்ளிக்கன்களையே ஆதரிக்கிறேன்.

8. அமெரிக்கா பொருளாதாரச் சரிவிலிருந்து மீடகப்படுமா, ஓபாமாவால்?
பதில்: நல்லதையே நினைப்போம். அதுவே நடக்கும் என எதிர்பார்ப்போம்.

9. அவரது கொள்கையால் இந்தியாவுக்கு நன்மை அதிகமா? தீமை அதிகமா?
பதில்: சாதாரணமாக டெமாக்ரட்டிக்குகளால் இந்தியாவுக்கு தொல்லைகளே அதிகம்.

10. அமெரிக்காவை ஆளும் கட்சிகளின் பற்றிய உங்கள் மனநிலையில் மாற்றம் வருமா,ஒரு வேளை ஓபாமா நல்ல நிர்வாகம் செய்தால்?
பதில்: நான் சமீபத்தில் 1900-லிருந்து அமெரிக்காவில் நடந்ததை நினைத்து பார்க்கிறேன். என்னை பொருத்தவரை அமெரிக்காவுக்கு நல்ல நிர்வாகி தேவை. ஒபாமா மேல் எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. அப்படியே அவர் நல்லது செய்தால் நான் சொன்னது தவறு என நிரூபிக்கப்பட்டால் என்னைவிட அதிக மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள் யார் இருக்க இயலும்.

11. தமிழக அரசியல் கட்சிகளில் உறுப்பினர் எண்ணிக்கையில்( ஒரு கோடி) திமுக முன்னணி உண்மையா?
பதில்: இது நிஜமான வளர்ச்சியா அல்லது யானைக்கால் போன்ற வீக்கமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். (கோவி கண்ணன் கூட சொல்லலாம்).

12. சென்னையில் படித்தவர்கள், பாமரர்கள், நடுத்திர வர்க்கம் இவர்கள் மத்தியில் தொடர்ந்து திமுகவுக்கு ஜே ஜே .உங்கள் கருத்து?
பதில்: சாதாரணமாக சென்னை நகரம் திமுகவின் கோட்டை என இருந்து வந்திருக்கிறது. ஆனால் இம்முறை அவ்வளவு எளிதாக கூறிட இயலாது என்றுதான் எனக்கு படுகிறது.

13. அரசு ஊழியர்களதான் தேர்தலில் முக்கிய துருப்புச் சீட்டு என்று அடிப்படையான உண்மை கூட புரிந்து கொள்ளாத கான்வெண்ட் ஜெயலலிதாவைவிட, சாமானிய கலைஞர் சாமர்த்தியசாலிதானே?
பதில்: கலைஞரும் சரி ஜெயலலிதாவும் சரி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. ஆனால் தீவிரவாத மற்றும் புலிகள் எதிர்ப்பு நிலையால் ஜெயலலிதாவின் தகுதி சற்றே அதிகமாக உள்ளது.

14. காங்கிரஸ்-திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் தீய நோக்கோடு ஜெயலலிதா தெரிந்தே இலங்கை தமிழர் பிரச்சனையில் எதிர் கருத்து தெரிவிக்கிறார் என்ற வீரமணியின் குற்றச்சாட்டு?
பதில்: திமுக கூட்டணியில் ஜெயலலிதா குழப்பம் ஏற்படுத்துவதோ அல்லது அதிமுக கூட்டணியில் கலைஞர் குழப்புவது ஆகிய இரண்டுமே தவிர்க்க முடியாதுதானே. இதில் என்ன தீய நோக்கம் வந்தது? அது இருக்கட்டும், பை சான்ஸ் ஜெ வெற்றி பெற்றால் வீரமணி என்ன சொல்லப் போகிறார் என்பதையும் சுலபமாக ஊகிக்க முடியும்தானே.

15. காங்கிரஸ் ,திமுக, விஜயகாந்த் கூட்டணி (பேச்சுவார்த்தை நடைபெறுகிறது-கலைஞரின் சம்மதமும் ரெடியாம்))அமைக்கும் சமயத்தில்,ஜெயலலிதா மற்ற எல்லாக் கட்சிகளின் துணையோடும் (பாஜகவுடன் மட்டும் ரகசிய உடன்பாடு), ரஜினியின் ஆதரவோடும் நாடளுமன்ற தேர்தலைச் சந்தித்தால்? முடிவு என்னவாகும்?
பதில்: நீங்கள் சொன்ன கன்ஃபிகரேஷன் வந்தால் ஜெயலலிதா பாடு திண்டாட்டமே.

16. கிராமங்களில் இருந்து நகருக்கு வந்து செல்வந்தராய் மாறியுள்ளவர்களில் தனது கிராமத்தை மறக்கமால் அதன் முன்னேற்றதிற்காக பாடுபடுவோரில் தங்களை மிகவும் கவர்ந்தவர் யார்? விளக்குக?
பதில்: இளையராஜா இருக்கிறார் போலிருக்கிறதே.

17. சென்னை விமான நிலைய விரிவாக்கத்தால் அதிகம் பயன் பெரும் கிராம(ரியல் எஸ்டேட் விலையேற்றம்) மக்கள் அதனை எதிர்ப்பது ஏன்?
பதில்: இம்மாதிரி நில ஆர்ஜிதம் செய்யும்போது சரியான தொகை சரியான நேரத்தில் கிடைப்பதில் பல தொல்லைகள் உள்ளன. நெய்வேலியிலேயே இந்த பிரச்சினை இன்னும் இருக்கிறது என படித்துள்ளேன்.

18. சென்னைப் புறநகர் விரிவாக்கம் நான்கு திசைகளில் எந்த, எந்த ஊர்வரை சென்றுள்ளது?
பதில்: தெற்கில் மறைமலை நகர், மேற்கில் ஸ்ரீபெரும்புதூர் வரை என நினைக்கிறேன். வடக்கே திருவொற்றியூர்? நிச்சயமாகத் தெரிவது கிழக்கேதான், அதாவது வங்காள விரிகுடா.

19. செங்கல்பட்டும் சென்னையும் ஒன்றாய்விடும் போலுள்ளதே?
பதில்: இப்போதே செங்கல்பட்டு வரை நகரக் கட்டணத்தில் பஸ்கள் விடுகிறார்கள் போலிருக்கிறது?

20. மென்பொருள் வணிகத்தில் உருவாகிவரும் தேக்க நிலை, சென்னை அடுத்து உள்ள கிராமங்களில் விஷம் போல் ஏறிய காலிமனை விலையை கட்டுக்குள் கொண்டு வரத் தொடங்கிவிட்டதா?
பதில்: விலை குறைந்தாலும் அந்த விலையைக் கூடத் தர இயலாதவர்களை பொருத்தவரை விலை கட்டுக்குள் இருக்கும் எனக் கூறிட இயலுமா?

21. போலி டோண்டு காலங்கள் போல் இப்போது ஹேக்கர்ஸ் காலம் போலுள்ளதே?
பதில்: ஹேக்கர்ஸ் காலம் காலமாக இருந்தனர், இருக்கின்றனர், இருப்பார்கள். ஒரு போலி டோண்டு இல்லாவிட்டால் என்ன, வேறு யாருக்காவது போலி வரலாம். தீமையுடனான யுத்தத்தில் தளருதல் ஆகாது.

22. கள்ளன் பெரிசா? காப்பான் பெரிசா என்பது போல் உள்ளதே பதிவுலகில் நடக்கும் சமாச்சாரங்கள்?
பதில்: அவ்வாறு கூறும் அளவுக்கு என்ன ஆகிவிட்டது?

23. பதிவுலகம் டல்லடிப்பதாய் எழும் கருத்து உண்மையா?
இல்லவே இல்லை.

24. தமிழ்மணம், தமிலிஸ் ஒப்பிடுக?
பதில்: என்னைப் பொருத்தவரை தமிழ்மணம் அதிக எளிமையாக உள்ளது. தமிலிஷின் விதிகள் குழப்பமாக உள்ளன. ஒரு வேளை நான் தேவையான முயற்சிகளை எடுக்காதிருப்பதும் எனது இந்த மனப்போக்குக்கு காரணமாக் இருக்கலாம்.

25. உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தைத்தவிர வேறு எந்த தமிழ் திரட்டிகளில் இணைப்பு கொடுத்துள்ளீர்கள்?
பதில்: வேறு எங்கும் தரவில்லை.


தேவராஜ் அர்ஸ்:
1. Is the fall of Mullai theevu end of LTTE?
பதில்: நான் அவ்வாறு கருதவில்லை. உள்நாட்டு கொரில்லா யுத்தம் அதிகரிக்கும் என அஞ்சுகிறேன்.

2. In the non-existence of LTTE can the Srilankan Tamils attain self autonomy?
பதில்: இப்போது இந்திய அரசு இலங்கை அரசை இந்த விஷயத்தில் நிர்ப்பந்திக்க வேண்டும்.

3. Will this fall of Mullai Theevu bring peace to the Srilankan Tamils?
பதில்: புலிகள் அடங்குவது முக்கியம். மற்றவை நடக்க இந்திய அரசும் முனைய வேண்டும்.

4. Why are the Indian Tamils in Srilanka treated as slaves by the Northern Srilankan Tamils?
பதில்: இது துரதிர்ஷ்டவசமானது.


அனானி (27.01.2009 காலை 05.50-க்கு கேட்டவர்):
1. தமிழக அரசு ஊழியர்களுக்கு அரசால் செய்யப்பட்ட புதிய மருத்துவ காப்பீடு திட்டம் சரியானதா?
பதில்: இது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. பேப்பர் அளவில் எல்லாமே சரியாக இருப்பது போலத் தோன்றினாலும், நிஜத்துக்கும் அதற்கும் இருக்கும் வேறுபாடுகள் அனேகம் என்று அஞ்சுபவர்கள் உள்ளனர்.

2. அரசுத்துறை காப்பீட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்யாமல் நட்சத்திர தனியாரிடம்.இது நியாயமா?
பதில்: அரசில் உள்ளவர்களுக்கு என்ன தேவையோ யார் அறிவார்?

3. அரசு மருத்துமனை வசதிகளை மேம்படுத்தாமல் தனியாரை ஊக்கப் படுத்துவது மக்களிடம் அரசுத் துறைகளின் மேலுள்ள நம்பகத்தன்மையை பாதிக்காதா?
பதில்: என்னமோ அரசு மருத்துவ மனைகள் நம்பிக்கைக்குரியனவாக இருப்பது போல கேள்வி கேட்கிறீர்கள்? என்னைப் பொருத்தவரை சாய்ஸை மக்களிடமே விடுவது நல்லது. ஒரேயடியாக அரசு மருத்துவ மனை என்று மட்டும் இருப்பது எவ்வளவு தவறோ, அதே அளவு தவறு அரசு மருத்துவமனைகளே இல்லை என்பதும்.

4. கலைஞர் எது செய்தாலும் நன்மைக்கே என எண்ணும் அரசுத் துறை ஊழியர் எண்ணம் சரியா?
பதில்: அப்படியெல்லாம் எவரும் இன்னுமா நம்புகிறார்கள் (நன்றி, வின்னர் வடிவேலு)?

5. இந்தத் திட்டத்தை ஒர் கோடி மக்களுக்கும் விரிவுபடுத்துவதில் உள் நோக்கம் இருக்கிறதா?
பதில்: ஓட்டுவேட்டை தவிர வேறு என்ன உயர் நோக்கம் இருக்க முடியும்?

6. டீவி, கேஸ், ஒரு ரூபாய் அரிசி, இலவசப்பட்டா, மருத்துவக் காப்பீடு அடுத்து?
பதில்: கலைஞர் கற்பனை வளம் மிக்கவர். வேறு ஏதாவது யோசிப்பவாரக இருக்கும்.

7. 50 ரூபாய்க்கு மளிகைப் பொருள் திட்டம் தோல்வியா? காரணம்?
பதில்: என் வீட்டமாவைக் கேட்டேன். ஒரே ஒரு முறை கிடைத்ததாகக் கூறினார். இது வெற்றியா தோல்வியா என்பதை இதை வைத்து சொல்ல முடியாது. தமிழகம் முழுதுக்கும் பார்க்க வேண்டும். ஆனால் ஒன்று, அடக்க விலைக்கு குறைவாக வைத்து விற்கும் எந்த திட்டமும் உருப்படாது.

8. இந்தவருடம் பொங்கல் பரிசுப் பொருள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்பட்டது போல் ,வருமான வரம்பு பார்க்காமல் இலவச டீவி எல்லோருக்கும் எனும் தகவல் உண்மையா?
பதில்: அவ்வாறு தந்தால் அது அடிமுட்டாள்தனம்.

9. இந்த மக்களை கவரும் ரசவாத வித்தை முன்னால் ஜெ என்ன கூட்டணி அமைத்தாலும் தேறுவாரா?
பதில்: கஷ்டம்தான். அதிலும் ஊழல் விஷயத்தில் கலைஞருக்கும் ஜெவுக்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லை என்பதை எண்ணும்போது கஷ்டம்தான்.

10. தமிழக காங்கிரஸ் என்ன கஜகர்ணம் போட்டாலும் அன்னை சோனியா அவர்களின் கூட்டணி முடிவில் மாற்றமில்லையே? இது எப்படி சாத்யமாகிறது? இதை ஜெ,நரசிம்மராவ் கூட்டணி காலத்தோடு ஒப்பிடவும்? முடிவு அன்று மாதிரி எதிர்மறையாக நடக்க வாய்ப்பு?
பதில்: யூ மீன் இன்னொரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற அமைப்பு? சரித்திரம் திரும்பலாம். ஆனால் அவ்வாறு திரும்பும்போது அது கேலிக் கூத்தாகத்தான் முடியும்.


சேதுராமன்:
1. தமிழ் நாட்டிலே பலர் சொன்னதையும், சிலர் சொல்ல நினைத்ததையும், நேற்று மஹிந்தா ராஜபக்சே உள்ளங்கை நெல்லிக்கனி போல சொல்லியிருக்கிறார்.
மு.க. ஸ்ரீலங்காவுக்குப் போகக் கூட வேண்டாம் உடனே தன்னுடைய கவிதை மடல் மூலம் ஒரு வேண்டுகோள் - புலித்தலைவர் பிரபாகரனை,ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, சரணடையச் சொல்லுவாரா? லக்ஷக்கணக்கான தமிழர்கள் உயிர்களையும், உடைமைகளையும் காப்பது மு.க. கையில்தான் உள்ளது!

பதில்: அவ்வாறு கவிதை எழுதினால் அவருக்கு வோட்டு நிச்சயம் கிடைக்குமா? பிரபாகரனின் ஆட்கள் அவரையும் போட்டு தள்ளிவிட்டால் என்ன செய்வதாம்? கலைஞர் மேல் ஏன் இந்தக் கொலைவெறி ராஜபக்சேவுக்கு?


அனானி (27.01.2009 மாலை 05.59-க்கு கேட்டவர்):
1. பொதுவாகவே தற்சமயம் எல்லோரது பதிவுகளுக்கும் வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை குறைவாகவே வருவதன் காரணம் யாது?
பதில்: பதிவர்கள் அதிகரிப்பு, பதிவுகள் அதிகரிப்பு. எந்தப் பதிவும் ஐந்து நிமிடத்துக்கு மேல் தமிழ்மணத்தின் முகப்பில் நிற்பதில்லை. மேலும் பலருக்கு முதலில் இருந்த ஊக்கம் குறைந்து விட்டது.

2. காவிரிப்பிரச்சனை தற்போதைய நிலை என்ன?
பதில்: ஆழ் உறக்கத்தில் உள்ளது. இப்போதைக்கு பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் மட்டங்கள் திருப்திகரமாக இருப்பதான தோர்றம் இருக்கிறது. வரும் கோடையில் சத்தம் ஆரம்பிக்கலாம்.

3. இராணுவ ஆட்சி இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு எப்போதாவது இருந்ததா? இனி வருமா?
பதில்: 1977-ல் ஒரு சிறு சாத்தியக்கூறு இருந்தது. நல்ல வேளையாக இந்திரா எலெக்‌ஷன் அறிவித்தார். இப்போதைக்கு அது வரும் சாத்தியக்கூறு இல்லை. அப்படியே நிலைமை இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

4. நடக்கும் தேர்தல் ஊழல்களை பார்க்கும் போது சில பெரியவர்கள் இராணுவ ஆட்சியை ஆதரிக்கிறார்களே? உங்கள் நிலை என்ன?
பதில்: வாணலிக்கு பயந்து நெருப்பில் குதிக்கும் நிலை போன்றது இராணுவ ஆட்சியை ஆதரிப்பது.

5. தமிழக முதல்வர், பிரதமர் திடீர் உடல் நலக் குறைவு. இலங்கை தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய இருவரும் இப்படி? இலங்கை தமிழினத்தின் எதிர்காலம்?
பதில்: அரசியலில் யாருமே இன்றியமையாதவர்கள் இல்லை. இவர்கள் இல்லாவிட்டால் இன்னொருவர் வருவார்.


அனானி (27.01.2009 மாலை 07.24-க்கு கேட்டவர்):
1) குமுதத்தில் பதலக்கூர் ஸ்ரீனிவாசுலு எழுதிவரும் 'ஒரு நடிகனின் கதை' - வாரிசு நடிகராய் பின் கட்சித்தலைவரானவரைக் குறிக்கிறதா? இந்த வார கதையில் வரும் காமெடி நடிகர் - பெல் நடிகர் தானே ? படம் 16 சம்பந்தப்பட்டதுதானே? முந்தைய வாரத்தில் குறிப்பிடப்பட்ட நடிகை தற்போது அரசியல் கட்சியில் இருப்பவர்தானே?
பதில்: இது ஒரு அசிங்கம் பிடித்தத் தொடர். இது பற்றி கேள்வி வேறு தேவையா? முன்பு நடிகையின் கதையை போட்டவர்கள் இப்போது நடிகனின் கதையை எழுதுகிறார்கள். கஷ்டம்டா சாமி. சரி கேள்வி கேட்டு விட்டீர்கள், என்ன செய்வது வேண்டா வெறுப்பாக குமுதம் இதழைத் தேடி எடுத்து படித்தேன். பெல் நடிகர் போல இல்லையே. வைகைப் புயல் போல அல்லவா இருக்கிறது? அவர்தானே எதிர்வீட்டை வாங்கியுள்ளார்?

2) இந்தியாவிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் C.E.O-க்களில் 2-ஆம் இடம் கலாநிதி மாறனாமே? (முகேஷ் அம்பானிக்குப் பிறகு)? அதனால்தான் சன் பிக்சர்ஸ் வெளியீடுகளா? சன் குழுமத்திற்கு யார் ஆடிட்டர்?
பதில்: அடேங்கப்பா அவ்வளவு சம்பளமா? ஆடிட்டர் முதலில் எர்ணஸ்ட் & யங் இருந்ததாக அறிகிறேன். இப்போது யார் என்பதை விசாரித்து பார்க்கிறேன். அது சரி, அதற்காக எல்லாம் படம் எடுப்பார்களா என்ன?

3) லக்கிலுக் எழுதிய புத்தகத்தின் உங்கள் விமர்சனம் எப்போது வரும்?
பதில்: படித்தவுடன் வரும். புத்தகம் வாங்கியதோடு சரி. இன்னும் பிரிக்கக் கூட இல்லை. இனிமேல்தான் படிக்க வேண்டும்.


அனானி (28.01.2009 காலை 05.38-க்கு கேட்டவர்):
1. பெரியவர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாய் இருந்த காலம்? எப்படி?
பதில்: அவர் 1987-லிருந்து 1992 வரை ஜனாதிபதியாக இருந்தார். அவர் அக்காலக் கட்டத்தில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியிருக்கிறார். அவர்களில் மூவர், வி.பி. சிங், சந்திரசேகர் மற்றும் நரசிம்ம ராவ் அவரால் நியமிக்கப்பட்டவர்கள். அவரது காலக் கட்டத்தில்தான் முதல் முறையாக மத்திய அரசில் கூட்டணி ஆட்சி வந்தது.

2. தமிழக தொழில் அமைச்சராய் இருந்த போது செய்திட்ட சாதனைகள்?
பதில்: ஜெயமோகன் எழுதுகிறார், “காமராஜ் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்த ஆர்.வெங்கடராமன் இன்றைய முக்கியமான தொழில்வட்டங்களாகிய கோயம்புத்தூர், திருப்பூர், சிவகாசி, ஓசூர் ஆகியவற்றின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்தார். இந்த மையங்களே இன்றும் தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பாக இருக்கின்றன. தமிழகம் அதன் பொருளியல் வளர்ச்சிக்காக ஆர்.வெங்கடராமன் அவர்களுக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது. குறிப்பாக பின்தங்கிய வரண்ட கிராமப்பகுதியான ஓசூருக்கு அது பெங்களூருக்கு அருகே வருகிறது என்பதனாலேயே அமைந்துள்ள சாதகநிலையை ஊகித்த அவரது செயல் தீர்க்கதரிசனம் மிக்கது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்”.

3. ஜெ.யை அவர்தான் பின்னல் இருந்து இயக்குகிறார் என்பார்களே?
பதில்: நீங்கள் அந்திமழை பதிவைப் பார்த்து அவ்வாறு கூறுகிறீர்களா? எனக்கு இது புது செய்தி. ஆகவே உடனே கருத்து கூறுவதற்கில்லை. ஒரு வேளை கலைஞருக்கும் அவருக்கும் ஆகாது என்பதால் அவர் ஜெயலலிதாவை ஆதரித்து இருக்கக் கூடுமோ என்னவோ. தெரியவில்லை.

4. காஞ்சிமடத்தோடு இவரது தொடர்பு கடைசி காலத்தில் சுமுகமாய் இருந்ததா?
பதில்: இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

5. டெல்லியில் இருந்தபோது பெரியவரை நேரில் சந்ததித்த அனுபவம் ஏதும் உண்டா? இல்லை சென்னை வந்த பிறகாவது?
பதில்: ஒரே ஒரு முறை தில்லியில் எனது உறவினர் வீட்டு திருமணத்து ரிசப்ஷனில் வைத்து பார்த்துள்ளேன். ஆனால் அருகில் சென்று பேச முயலவில்லை. அதில் ஆர்வமுமில்லை.

நவீன பாரதி:
1) மாலன் எழுதிய ‘ஜனகனமன’ படித்திருக்கிறீர்களா?
பதில்: இல்லை.

2) பாகிஸ்தானின் சுதந்திரம் ரத்தம் சிந்தாமல் கிடைத்தது என்ற கூற்று சரியானதா?
பதில்: பாகிஸ்தானும் சரி இந்தியாவும் சரி, சுதந்திரம் அதிக ரத்தம் சிந்தாமல்தான் கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு இரு தேசங்களுமே மிக அதிக ரத்தம் சிந்தி விட்டன.

3)அமெரிக்காவில் வாழும் யூதர்களின் ஓட்டுக்காகத்தான் இஸ்ரேலின் காசா பகுதி தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறலாமா?
பதில்: அவ்வளவு சுலபமாக அதை கூறிவிட இயலாது.யூதர்களது லாபி பல முனைகளில் அமெரிக்காவில் செயல்படுகிறது.

4)இலங்கைக்கு ராஜபக்‌ஷே அழைப்பையேற்று செல்லாமல் இருப்பதற்கு கருணாநிதி என்ன காரணம் சொல்லுவார்?
பதில்: என்ன காரணமாக இருந்தாலும் அது நொண்டிக் காரணமாகத்தான் இருக்கும்.

5)ஜெயலலிதா என்ன காரணம் சொல்லுவார்?
பதில்: என்ன காரணமாக இருந்தாலும் அது நொண்டிக் காரணமாகத்தான் இருக்கும்.

6) தங்கள் தந்தையாரின் பத்திரிக்கை நிருபர் அனுபவங்களை பதிவாக எழுதும் எண்ணமுண்டா? சுட்டி தயாராக உள்ளதா?
பதில்: அட, தேவலையே. நல்ல ஐடியாவாக இருக்கே. முயற்சிப்பேன்.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/28/2009

பதிவர் சுப்பையா அவர்களின் இடுகை தூண்டிய எண்ணங்கள்

இன்று எதேச்சையாக நண்பர் சுப்பையா அவர்களது அதிரவைத்த இளம் சந்நியாசி! பதிவை படிக்க நேர்ந்தது. வழக்கம்போல சுவாரசியமான இடத்தில் தொடரும் போட்டுவிட்டார். மேலே கதை எப்படி போகிறது என்பதை அறிய நானும் ஆர்வமாக உள்ளேன். நிற்க.

இம்மாதிரி வேஷம் இட்டு செல்வது என்பது பல முறை பல தருணங்களில் நடந்துள்ளது. காவியத்திலும் சரி சரித்திரத்திலும் சரி அது பலமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது.

ஒரு பெரிய கொள்ளைக்காரன் இருந்தான். அரசரின் பொக்கிஷத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினான். அதற்கு முதலில் அரசரின் நம்பிக்கையை பெற வேண்டும். தீர யோசித்துவிட்டு ஒரு சாமியார் வேடம் தரித்து ஊருக்கு வெளியே காட்டில் ஒரு குடில் அமைத்து வசிக்க முற்பட்டான். சில நாட்களில் அவனைப் பார்க்க பலர் வந்தனர். ஒருவரிடமும் அதிகம் பேசாமல் அவர்கள் சொல்வதை மட்டும் காது கொடுத்து கேட்டதில் பல விஷயங்களை கற்று கொண்டான். அவற்றில் பல அவனது தொழிலுக்கு உதவக்கூடிய துப்புகள். கடைசியாக அரசனும் வந்தான். அவனை வணங்கி தனது குறைகளைச் சொன்னான். இவனும் தனக்கு தோன்றிய ஆலோசனைகளை கூற அவையும் குருட்டாம்போக்கில் சரியாக ஒர்க் அவுட் ஆனதால் அரசன் இவனை மிக அதிகமாக நம்ப ஆரம்பித்தான்.

இப்போதுதான் அந்தக் கொள்ளைக்காரனே எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. தனது சுயநலத்துக்குத்தான் என்றாலும் அவன் விடாது நல்ல விஷயங்களையே கூறி வந்ததில் அவனது எண்ண ஓட்டத்தில் மாறுதலைத் தெரிவித்தன. சாதாரண நடிப்புக்கே இந்தப் பலன் என்றால் உண்மையாக திருந்தினால் என்னென்ன பலன்கள் உண்டு என்ற ரேஞ்சில் யோசிக்க ஆரம்பித்தான். அவனது ஒரிஜினல் நோக்கங்கள் தானாகவே மறைந்தன. பிறகு பெரிய சாதுவாக உருவெடுத்து பல் நாடுகளுக்கு சென்று பெரும் புகழ் பெற்றான்.

நம்பமுடியாத கதையாக இது சிலருக்கு தோன்றலாம். ஆனால் இம்மாதிரி நிகழ்ச்சிகள் பல இலக்கியத்தில் உண்டு.

சமீபத்தில் அறுபதுகளில் வந்த படம் தேவ் ஆனந்த் வகீதா ரெஹ்மான் நடித்த "Guide" கதையே இதுதான். சாதாரண ஏமாற்றுவேலைகளில் ஈடுபட்டு சிறை சென்ற ராஜு விடுதலை ஆனதும் கால்போன போக்கில் செல்ல, ஓரிடத்தில் தங்குகிறான். அவனை உள்ளூர் மக்கள் ஒரு சாதுவாக நினைத்து ஆதரவு அளிக்கின்றனர். அந்த ஊரில் பஞ்சம் வருகிறது. மழையே இல்லை. இவன் யதார்த்தமாக ஏதோ கூறப்போக, மழை வரும்வரையில் அவன் உண்ணாவிரதம் இருந்து தேவையானால் உயிரையும் விடத் தயார் என செய்தி பரவி, அவனது உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு செய்யப்படுவதை கண்டு திடுக்கிடுகிறான். உள்ளூரில் உள்ள ஒரு குடியானவனிடம் அவன் தன்னைப் பற்றிய உண்மையை கூற அவனோ இதை சர்வசாதாரணமாகவே எடுத்து கொள்கிறான். வழிப்பறிகொள்ளை செய்து வந்த வால்மீகி பின்னால் ராமாயணம் எழுதியதை கூறுகிறான். நாட்கள் செல்லச் செல்ல ராஜுவும் நிகழ்ச்சிகளால் கவர்ந்து செல்லப்பட்டு கடைசியில் உயிர் துறக்கிறான். ஆனால் அவன் உயிர் பிரியும் தருவாயில் மழை பெய்ய ஆரம்பிக்கிறது. அவனது மனப்போராட்டங்களை காட்டும் இந்த காட்சியைப் பாருங்கள்.. படத்தின் முடிவில் அவன் இறக்கும் காட்சி ஒரு கவிதை.

[வசனங்கள் ஹிந்தியில் உள்ளன. அந்த மொழி புரிந்தவர்களுக்கு அந்த வசனத்தின் கம்பீரம் புலப்படும். தெரியாவிட்டாலும் பரவாயில்லை, விஷ்வலாக பார்ப்பதே ஓர் அனுபவம். இருந்தாலும் இப்படத்தின் ஆங்கில மொழியாக்கத்தின் ஒரு காட்சியும் தருவேன். ராஜுவின் அறிமுகம் இதில் உண்டு. எப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டான்னு பார்க்கலாம். பை தி வே இக்கதை ஆர்.கே. நாராயணனுடையது. அதன் தமிழாக்கத்தைத்தான் நான் படித்துள்ளேன்].

ஓக்கே பதிவின் விஷயத்துக்கே மறுபடியும் வருவேன். ராமாயணத்தில் ஓர் அருமையான காட்சி. அசோக வனத்தில் இருக்கும் சீதையை ஏமாற்ற ராவணனே ஏன் ராமனாக உருமாறி சீதையிடம் செல்லக்கூடாது என அவனது ராணிகளில் ஒருத்தி ஆலோசனை கூறுகிறாள். ராவணன் சலிப்புடன் கூறுகிறான், “எனக்கு மட்டும் அது தோன்றாமல் இருக்குமா? அதையும் செய்தேனே. ஆனால் என்ன ஆச்சரியம்? ராமனது ரூபத்தை எடுத்த பிறகு பிறன்மனை நோக்கா பேராண்மை எனக்கும் வந்து விட்டதே. இதென்ன முதலுக்கே மோசமாகப் போனது என துணுக்குற்று வேடத்தைக் களைந்தேன்”.

பொதிகை தொலைகாட்சியில் காந்தி ஜயந்திக்க்காக ஒரு நாடகம் போட்டார்கள். அதில் ஒரு நிகழ்ச்சி. உள்ளூர் குடிகாரன் ஒருவன் முகப் பொருத்தத்தை வைத்து காந்தியாக வேடம் போட வேண்டியிருந்தது. நாடக ரிகர்சல்கள் கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்தது. அவனுக்கு கோச் செய்தவர் காந்தியடிகளின் பாத்திரம் நன்றாக தத்ரூபமாக வர வேண்டுமென எண்ணி அவனுக்கு காந்தியை பற்றி எல்லா விஷயங்களையும் அவன் மனதில் படுமாறு எடுத்துரைக்கிறார். நாடகம் முடிந்தது. ஆனால் அவன் பழைய வாழ்க்கைக்கு திரும்பவே இல்லை. குடிப்பழக்கத்தை அடியோடு விட்டான். இப்போது இது குறித்து பலர் கேள்விகள் கேட்கலாம். ஆனால் அந்த நாடகத்தை பொதிகையில் பார்த்தபோது என்னுள்ளே அக்கேள்விகள் வரவே இல்லை என்பதே நிஜம்.

Ellis Peters எனக்கு பிடித்த எழுத்தாளர். அவர் உருவாக்கிய பல பாத்திரங்களில் முக்கியமானது காட்ஃபேல் என்னும் பாதிரியார். அவர் ஒரு துப்பறியும் நிபுணர் கூட. அவர் வரும் கதைகளின் காலக்கட்டம் 12-ஆம் நூற்றாண்டாகும். அதில் ஒரு கதையில் Saint Winifred என்பவரது எலும்புகளை ஒரு சமாதியில் இட்டு அதை வழிபடுவதாக கதை வரும். ஆனால் நடந்ததென்னவென்றால் சமாதியில் இருந்தவை Saint Winifred-ன் எலும்புகள் அல்ல. அவை ஒரு ஏமாற்று பேர்வழிக்கு சொந்தம். அது தெரியாது மக்கள் வந்து வழிபடுகின்றனர். பல அற்புதங்களும் நிகழ்கின்றன. உண்மை எது என்பது சில நாட்களுக்கு பிறகு அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. ஆனால் உண்மை என நம்பி பிரார்த்தனை செய்தது மட்டும் பலிக்கிறது. கதையில் என்னவோ இது போகிறபோக்கில் கூறப்பட்டாலும் அதன் தாக்கம் பலமாகவே இருந்தது.

ஓக்கே சுப்பையா அவர்களது பதிவில் கூறப்பட்ட கதை எப்படி போகிறது என பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/25/2009

சென்னை பதிவர் சந்திப்பு - 25.01.2009

எனது கார் என்னை கிழக்கு பதிப்பகம் எதிரே விட்டுவிட்டு அடையாறுக்கு விரைந்தபோது மணி மாலை 5.40. கீழே வெண்குழல் சேவைக்காக ஒதுங்கியிருந்த மூன்று பதிவர்கள் அதிஷா, கேபிள் சங்கர் மற்றும் அகிலன் மாடியில் மீட்டிங் துவங்கி விட்டதை உறுதி செய்தனர். மாடியில் போனதுமே கண்ணில் பட்டது கோவி கண்ணனும் அவர் அருகில் அமைந்திருந்த டி.வி. ராதாகிருஷ்ணனும்தான்.

அப்போது தமிழ் நாடகங்களைப் பற்றி பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. நல்ல நாடகங்கள் சரியாக ஓடாததற்கு காரணங்களில் டிக்கெட் விலைகள் அநியாயத்துக்கு உயர்ந்ததும் ஒரு காரணமே என ராதாகிருஷ்ணன் கூறினார். நல்ல நாடகங்கள் மக்களிடம் எடுபடாமல் போகின்றது என்றும் கூறப்பட்டது. அப்படி ஒரேயடியாக மக்கள் மேல் பழி போடக்கூடாது என பத்ரி அவர்கள் நிதானமாகவும் அழுத்தமாகவும் கூறினார். இதைத்தான் எல்லா விஷயங்களிலும் சொல்லி வருகிறார்கள் என அவர் புத்தகங்களை உதாரணமாக காட்டினார். ரசிகர்களை ஒன்றிணைக்கும் தேவை இருப்பதையும் கூறிய அவர் இளம் தலைமுறையினரை இதற்காகக் குற்றம் சொல்லக் கூடாது என்றும் கூறினார்.

ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “சொல்லக் கொதிக்குது மனசு” பற்றி பேச்சு திரும்பியது. பொதுவாகவே நாடகங்களுக்கு செலவழிக்கும் தொகையை அதை பார்க்கும் ஆடியன்ஸுடன் ஒப்பிட்டால் அது மிக அதிகம் என அபிப்பிராயம் கூறப்பட்டது. உதாரணத்துக்கு ஐயாயிரம் ரூபாய் செலவழித்து ஒரு ஊரில் நாடகம் போட்டால் மிஞ்சிமிஞ்சி போனால் 1000 பேர் பார்க்கலாம். அதுவே 2 லட்சம் ரூபாய்கள் செலவழித்து தொலைகாட்சி நாடகமாக போட்டால் ஒரு கோடி பேர் வரை பார்க்க முடிகிறது என்ற கணக்கும் கூறப்பட்டது.

எல்லாவற்றுக்கும் ஒரு ப்ரமோஷன் தேவைப்படுகிறது என்றும் கூறப்பட்டது. சினிமா புகழ் உள்ள நடிகர்கள் நடித்தால் அதுவே நாடகத்துக்கு பெரிய விளம்பரமாக ஆகிறது. கிரேசி மோகன், எஸ்.வி. சேகர் ஆகியோரது நாடகங்கள் போவதற்கு காரணம் அவர்களது சினிமா புகழும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.

பிறகு இப்போதுதான் முடிவடைந்த புத்தகக் கண்காட்சி பற்றி பேச்சு திரும்பியது. அதிலும் பபாசி சரியாக ப்ரமோட் செய்யவில்லை என கூறப்பட்டது. போன ஆண்டை விட இந்த ஆண்டு ப்ரமோஷனுக்காக செய்யப்பட்ட செலவு குறைவு, இருப்பினும் கூட்டம் வந்ததற்கு காரணம் கடந்த பல ஆண்டுகளாக செய்யப்பட்ட ப்ரமோஷனே காரணம் என கூறப்பட்டது. இம்மாதிரி வரும் ஆண்டுகளிலும் அதிக அக்கறையுடன் முன்னிறுத்தாவிட்டால் பத்தாண்டுகளில் அதன் முக்கியத்துவம் குறையும் என்ற அச்சத்தையும் பத்ரி வெளியிட்டார்.

பேச்சு இப்போது சங்கமத்துக்கு சென்றது. முதலாம் ஆண்டில் சாதாரண நிலையில் நடத்தப்பட்ட அது பிறகு அரசின் அமோக ஆதரவால் இப்போது பெரிய அளவில் நடப்பது சுட்டிக் காட்டப்பட்டது. இருப்பினும் திமுக இத்துடன் அதிகமாக அடையாளம் காணப்பட்டதால் அதன் முக்கியத்துவம் மாற்று கட்சிகளின் ஆட்சியில் குறையலாம் என்றும், அது துரதிர்ஷ்டவசமானது என்றும் பத்ரி கூறினார். ஜெகத்ரட்சகன் கஸ்பார் அவர்களின் புலிகள் தொடர்பு பற்றியும் சிலர் எடுத்து கூறினர்.

திசம்பர் மாத இசைவிழாவும் அரசு நிதியுதவியுடன் நடக்கிறது என்னும் கூற்றை பத்ரி மறுத்தார்.

திடீரென பேச்சு சுனாமி பக்கம் திரும்பியது. முதல் இரண்டு நாட்களில் வந்த உதவிகள் spontaneous- ஆக வந்தவை என கூறப்பட்டது. பிறகுதான் அவரவர் வசூல் செய்ய கிளம்பியது பற்றி கூறப்பட்டது. ஆனால் இது சம்பந்தமாக பல குறைகள் இருந்தாலும் அரசு இயந்திரம் செயல்பட்டது உலக அளவில் ஆவலை தூண்டின என்றும் கூறப்பட்டது. அமெரிக்காவில் காத்ரீனா புயலில் இறந்தவர்களின் உடல்களை கரை சேர்த்து அந்திம கிரியைகளை குழப்பமில்லாமல் செய்வதற்கு நம்மூர் ஹெல்த் ஆஃபீசர் அமெரிக்காவுக்கு தருவிக்கப்பட்டு அவரிடமிருந்து ஆலோசனை பெற்றதும் கூறப்பட்டது.

இவ்வளவு பிணங்கள் சுனாமியில் கரை ஒதுங்கினாலும் ஒரு காலரா மரணம் கூட நிகழவில்லை என்பது நமது செயல்பாட்டுக்கு பெரிய சான்றாக விளங்கியதும் கூறப்பட்டது.

சுனாமி பற்றிய எச்சரிக்கைகள் பற்றிய தனது செயல்பாடுகளை இஸ்மாயில் அவர்கள் விளக்கினார். மேலதிகத் தகவல்களை அவரே தருவார்.

இப்போது சந்திப்புக்கு வந்தவர்கள் தமது சுய அறிமுகங்களை ஆரம்பித்தனர்.

அவ்வாறு செய்தவர்கள்:
1. லக்கிலுக்,
2. வெண்பூ,
3. சிங்கப்பூர் விஜய் ஆனந்த்,
4. அ.மு. சய்யது (மலைப்பொதிகை),
5. பிகுலு (bigulu.blogspot.com)
6. அருண் (வாசகர், சங்கரன் கோவில்)
7. பத்ரி
8. சென்னை தமிழன்
9. நர்சிம் (யாவரும் கேளிர்)
10. முரளி கண்ணன்
11. கேபிள் சங்கர்
12. கோவி. கண்ணன்
13. ராம் சுரேஷ்
14. படித்துறை கணேஷ்
15. அகிலன்
16. லட்சுமி
17. பாலபாரதி
18. அசன் அலி
19. டி.வி. ராதாகிருஷ்ணன்
20. சங்கர் (வாசகர்)
21. அதிஷா
22. அக்கினி பார்வை
23. அறிவானந்தன் (வாசகர்)
24. முகம்மது இஸ்மாயில்
25. வெங்கட் என்னும் வெண்பூ
26. மருத்துவர் ப்ரூனோ

யாரேனும் விட்டு போயிருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.

இப்போது பாலபாரதி பத்ரியிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது நாட்டுடைமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை மலிவு பதிப்பாக வெளியிட வேண்டுமென்று. பத்ரி அவரிடம் இதற்கான ஒரு லிஸ்ட் தருமாறு கேட்டார். சமுத்திரத்தின் படைப்புகள் குறித்து பத்ரி உடனேயே சாதகமான பதிலை கூறினார். புதுமைப்பித்தனின் படைப்புகளும் தேவை என கூறப்பட்டது. இது சம்பந்தமாக பரிந்துரை செய்யப்பட்ட பெயர்கள் நா. பார்த்தசாரதி, மயிலை வெங்கடசாமி ஆகியோர்.

இப்போது சில புத்தகங்களை கண்காட்சி ஸ்டால்களிலிருந்து விற்பனை செய்வதை போலீசார் வாழ்மொழி உத்திரவு மூலம் தடுத்தது பற்றி பத்ரியிடம் கேட்கப்பட்டது. அவர் கூறப்போவதை நான் நோட் செய்வதை கவனித்த பத்ரி “டோண்டு ராகவன் நோட் செய்கிறார். அவர் இதை வெளிப்படையாகவே எழுதலாம்” எனக் கூறிவிட்டு மேலே சொன்னார்:

போலீஸ் அம்மாதிரியெல்லாம் வாய்மொழி உத்தரவு போட சட்டத்தில் இடம் இல்லை. ஆனாலும் போட்டார்கள் என்றால் அந்த கண்காட்சியில் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரலாம் என்பதை முன்னிறுத்தித்தான் அவ்வாறு செயல்பட்டனர். பபாசி இதற்கு மறுத்திருந்தால் அவர்களால் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆனால் பபாஸி அவ்வாறு செய்யாது புத்தக விற்பனையாளர்களைத்தான் கட்டுப்படுத்தியது. இந்த விஷயம் கூட இரண்டாம் நாள்தான் நடந்தது. இதை கிழக்கு பதிப்பகம் கடைபிடித்தது. ஆனால் அவர்களிடம் புத்தகம் வாங்கி விற்பனை செய்பவர்கள் இது விஷயமாக போலீசாருடன் கண்ணாமூச்சி நடத்தினர்.

ஆனால் அதனால் எல்லாம் தனக்கு பொருள் நஷ்டம் ஏற்பட்டதாக அவர் கூற விரும்பவில்லை. இதை ஒரு கொள்கை விஷயமாகவே பார்க்க விரும்பினார். இம்மாதிரி வாய்மொழி உத்திரவுகளை தடை செய்யும் திசையில்தான் செல்ல வேண்டும். மறுத்திருக்க வேண்டிய பபாசி இம்மாதிரி விட்டுகொடுத்தது தவறு. அந்த அமைப்பே பல்லில்லாத அமைப்பாக போய்விட்டது. அதன் பகுதியாக இருக்கும் தானும் அவ்வாறே என நகைச்சுவையுடன் பத்ரி குறிப்பிட்டார்.

முரளி கண்ணன் கண்காட்சி நடந்த இடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது பற்றி பேசினார். நிரந்தர புத்தகக் கண்காட்சி எக்மோரில் நடப்பதை லக்கிலுக் எடுத்துரைக்க, பத்ரி அது ஒரு பெரிய புத்தகக் கடை மட்டுமே என கூறினார். ஆனால் பபாசி புத்தகக் கண்காட்சியில் 650-க்கும் அதிக அளவில் காட்சியாளர்கள் வருவதை அவர் சுட்டி காட்டினார். கலைஞர் இதற்காக நிரந்தர இடத்தை இலப்வசமாகவோ அல்லது டோக்கன் லீசுக்கோ தருவதாக கூறி இரண்டாண்டுகள் ஆகியும் பபாசி ஒன்றுமே செயல்படாது இருக்கிறது.

திடீரென எங்கிருந்தோ இஸ்ரேல் என பேச்சு வர டோண்டு ராகவனின் காதுகள் கூர்மையாயின. அவனது இஸ்ரேல் சம்பந்த பதிவுகள் பற்றி இஸ்மாயில் அவர்கள் கேள்வி கேட்க, அடுத்த ஐந்து நிமிஷங்களுக்கு அவன் இஸ்ரேல் பற்றி பேச ஆரம்பிக்க, சட்டென சில பதிவர்கள் ஏனோ மாயமாக மறைந்தனர். முதலுக்கே மோசம் வந்துவிடும் போலிருக்கிறதே என பயந்த சிலர் பேச்சை சினிமா பக்கம் திருப்பினர். ஆனால் அவன் அதற்குள் இஸ்ரேலுடனான தனது பூர்வஜன்ம பந்தத்தை சொல்லிவிட்டிருந்தான்.

அப்போதுதான் வந்திருந்த சினிமா தயாரிப்பாளர் ஷண்முகப் பிரியன் மிருதுவான குரலில் பேச ஆரம்பித்தார். பேச்சு சன் டீவி எடுக்கும் படங்களை பற்றி மாற, லக்கிலுக், கேபிள் சங்கர் ஆகியோர் மினிமம் காரண்டி, டிஸ்ட்ரிப்யூட்டர்கள் படும் அவதி ஆகியவை பற்றி பேச ஆரம்பித்தனர். அது பற்றி அவர்களே தத்தம் பதிவுகளில் கூறினால் அதன் மவுசே தனிதானே.

அதே போல மதப்பிரசாரம் பற்றியும் ஒருவர் பேசினார். அது தவறு என்று கூறிய ஒருவர் மேலே கூறியதும் சுவாரசியமாக இருந்தது. இசுலாமியரான அவர் தம் மதத்தவரையே இது பற்றி கேள்வி கேட்பதாகவும் அது பற்றிய பதில்கள் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறினார். இப்பதிவை அவர் படித்தால் அவரை நான் இதில் பின்னூட்டமிடவோ அல்லது தனது வலைப்பூவில் இது சம்பந்தமாக பதிவிடவோ கேட்டு கொள்கிறேன்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் பற்றியும் பேச்சு வந்தது. முதலில் குறைந்த அளவே பிரிண்ட் எடுத்தவர்கள் இப்போது படம் அமோகமாக போக, ஆயிரக்கணக்கில் பிரிண்டு எடுப்பது பற்றி பேச ஆரம்பித்தனர். முதல் இரண்டு நாட்களிலேயே படம் தேறுமா தேறாதா என்பதை கணிக்கலாம் என ஒருவர் கூற, நான் சமீபத்தில் 1962-ல் வெளி வந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” படம் இரண்டாம் வாரம்தான் பிக்கப் ஆனது பற்றி கூறினேன். சுப்பிரமணியபுரம் என்னும் படமும் அவ்வாறுதான் பிக்கப் ஆனது பற்றி இன்னொருவர் கூறினார்.

நடுவில் கூல் ட்ரிங்க், சாக்லேட் ஆகியவை வழங்கப்பட்டன. அவற்றை ஏற்பாடு செய்தவர்கள் வாழ்க.

நேரம் இரவு எட்டரை ஆக, மீட்டிங் கலைய ஆரம்பித்தது. நான் என் வீட்டம்மாவுக்கு ஃபோன் செய்து காருடன் வருமாறு கூற அவரும் 15 நிமிடங்களில் வந்து சேர்ந்தார். காருக்காக காத்திருக்கும் நேரத்தில் இஸ்மாயிலுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் துரௌபதி, அஸ்வத்தாமா ஆகியோர் பற்றி பேசினார். மகாபாரதத்தை நன்கு படித்து வைத்திருக்கிறார்.

காரில் ஏறி வீட்டுக்கு வரும்போது நேரம் இரவு ஒன்பதரை மணி.

நல்ல அனுபவம். இடம் கொடுத்த பத்ரிக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

செந்தழல் ரவியின் பதிவுக்கு பதில் அளிக்கும் நோக்கத்தில்

படிப்பு விதிகளை கற்று கொடுக்கும். வாழ்க்கையோ விதிவிலக்குகளையே முக்கியமாக கற்று தருகிறது. படிப்பு என்பது பாடம் நடத்திவிட்டு தேர்வு வைப்பது. ஆனால் வாழ்க்கையோ தேர்வு நடத்திவிட்டு பாடம் கற்று தருகிறது என்றும் கூறலாம்.

வாழ்க்கை ஒற்றை பரிமாணத்தில் இயங்க முடியாது.

தர்க்க சாத்திரத்தில் ஒருவிதி உண்டு. அதை இவ்வாறு பார்க்கலாம்.

முதலில் நால்வகையான வாக்கியங்கள்.

1. எல்லா மனிதர்களும் நல்லவர்கள் ( All men are good - Universal affirmative - Proposition A) அ என வைத்து கொள்ளலாம்
2. ஒரு மனிதரும் நல்லவர் அல்ல (No men are good - Universal negative - proposition E) எ என வைத்து கொள்ளலாம்
3. சில மனிதர்கள் நல்லவர்கள் (Some men are good - Particular affirmative - Proposition I) ஐ என வைத்து கொள்ளலாம்
4. சில மனிதர்கள் நல்லவர்கள் அல்ல (Some men are not good - Particular negative - Proposition O) ஓ என வைத்து கொள்ளலாம்.

டிடக்சன் (deduction) என அழைக்கப்படும் தர்க்க சாத்திரத்தின் இப்பிரிவில் எல்லா வாக்கியங்களையும் முதலில் மேலே குறிப்பிட்ட நான்கு வகைகளில் ஒரு வகையாக சுருக்கி எழுதுவது இன்றியமையாதது.

இப்போது வரும் விஷயம் உண்மை மற்றும் பொய் பற்றியது. உதாரணத்துக்கு வாக்கியம் 1 உண்மை என வைத்து கொண்டால், வாக்கியம் 3-ம் உண்மைதான். ஆனால் வாக்கியம் இரண்டும் நான்கும் பொய்யாகி போகும். அதே போலத்தான் வாக்கியம் 2 உண்மை என வைத்து கொண்டால், வாக்கியம் 4 உண்மை, வாக்கியங்கள் 3 மற்றும் 1 பொய்.

மேலே சொன்னது எல்லோருக்குமே புரிந்து விடும். ஆனால் வாக்கியம் 3 அல்லது 4 உண்மை என்றால் மற்ற வாக்கியங்களின் நிலை என்பதில்தான் குழப்பமே வரும். சில மனிதர்கள் நல்லவர்கள் என்பது உண்மையானால் சில மனிதர்கள் நல்லவர்கள் அல்ல என்பது உண்மையா என்றதற்கு நான் சமீபத்தில் 1962-63 கல்வியாண்டில் சென்னை புதுக்கல்லூரியில் பி.யு.சி. லாஜிக் பாடம் படிக்கும்போது முதலில் அது உண்மை என்றுதான் எழுதினேன். ஏனெனில் வாழ்க்கையில் நாம் நல்லவர்களையும் பார்க்கிறோம் நல்லவர்கள் அல்லாதவர்களையும் பார்க்கிறோம் அல்லவா?

ஆனால் எங்கள் லாஜிக் ஆசிரியர் முகம்மது காசிம் அவர்கள் நான் எழுதியது தவறு என்றார். சிலர் நல்லவர்கள் அல்ல என்பது சந்தேகத்துக்குரியது என்றார். அவர் சொன்ன வாதம் என்னவென்றால், எனக்கு தெரிந்தவரை நான் பார்த்த சிலர் நல்லவர்களே. நான் அவர்களைப் பற்றித்தான் பேசுகிறேன். நல்லவர்கள் அல்லாதவர்களை பற்றி நான் அறியேன். ஆகவே அவர்களைப் பற்றி பேச இயலாது என்பதுதான் அந்த வாதம். அச்சமயம் எனக்கு அது புரியவில்லை. சில ஆண்டுகளாயின. அதுதான் வாழ்க்கை கற்று தந்த பாடம்.

இப்போது செந்தழல் ரவியின் இப்பதிவுக்கு வருவோம்.

அவர் தலித்துகளின் பெருமைகளை பட்டியலிடுவதாக எண்ணி அவர்களை இழிவுபடுத்தவே செய்கிறார். அதில் அவர் விதந்தோதியிருக்கும் விஷயங்களை தவிர்ப்பதே தலித்துகளுக்கு தாங்கள் முன்னேற விரும்பினால் இருக்கும் ஒரே வழி.

அவர் எழுதுகிறார்:

இரட்டைக்குவளை முறை வைத்து மற்ற சாதியால் தனி குவளையில் உணவு வழங்கப்பட்டு, தனி டம்ளரில் டீ கொடுக்கப்பட்டாலும் " ஆண்ட" என்று சொல்லி எந்த எதிர்ப்பும் காட்டாமல் வாங்கி குடிக்கும் காந்தீய சமூகம் பறையர் சமூகம். இதில் என்ன பெருமை இருக்க இயலும்? நீ யாரடா ஜாட்டான் என்னை ஒதுக்குவது, நாங்களே ஒற்றுமையாக இருந்து அவ்வாறு இரட்டைக் குவளை கடைகளை புறக்கணிப்போம். முன்பே இவ்வாறு முன்னேறிய நாடார்களை போல நாங்களும் முன்னேறுவோம் என்ற சண்டைமனப்பான்மை அல்லவா தேவை? தலித் அதிகாரிகளை காத்திருப்பில் வைக்கிறார்களா, அதை உங்களுக்கு சாதகமாக திருப்பி கொள்வது உங்கள் கைகளில்தான் உள்ளது.

திருக்கோவில்களில் கருவறைகளில் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, வெளியில் இருந்து கும்பிட்டு செல்லும் அற்புத சமூகம் இந்த சமூகம்...
அப்படிப்பட்ட சாமியே தேவையில்லைதானே. மேலும் உங்களுக்கு முன்னேறுவதற்கு தோதான பல வேலைகள் செய்ய பாக்கியிருக்கின்றன. அந்த சாமிகளை நீங்களே புறக்கணியுங்கள். பொருளாதார அளவில் முன்னேறுங்கள். தானே மற்றவர்கள் ஓடிவருவார்கள்.

எல்லா ஊரிலும் சேரி என்று தனியாக தள்ளிவைத்தபோதும் சரி, தொட்டால் தீட்டு என்று ஒதுக்கியபோதும் சரி, எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாமல் அதை ஏற்றுக்கொண்ட மென்மை சமூகம் பறையர் சமூகம்...
கண்டிப்பாக எதிர்ப்பை காட்டத்தான் வேண்டும். ஆனால் அதையும் உடனடி பாதிப்பு இல்லாமல் செய்ய வேண்டும். உயர்சாதியினர் என தங்களை அழைத்து கொள்பவர்களுக்கு தரும் சேவைகளை நிறுத்தி விடுங்கள். முடிந்தவரை நகரங்களுக்கு குடியேறுங்கள். இதற்கும் உங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும். நாடார்களை மனதில் இருத்துங்கள்.

மற்ற சாதியினருக்கு உட்பிரிவுகள் பல இருந்தாலும் பறையர் சமூகத்தில் அனைவரும் பறையர் என்று வழங்கியது. இதில் இருந்தே தெரியவில்லையா, அது ஒரு சமத்துவ சகோதரத்துவ சமூகம்...
இது உண்மையே அல்ல. தலித்துகளிலும் உட்சாதிகள் உண்டு. அங்கும் ஒடுக்குமுறைகள் உண்டு. இதை மீறித்தான் அவர்கள் ஒன்றுபட வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் போன்ற மாபெரும் பர்சனாலிட்டிகளை கொண்டது இந்த சமூகம். அம்பேத்கர் வடநாட்டு பறையர், தமிழ்நாட்டு பறையரைவிட நல்ல பர்சனாலிட்டி...
பெர்சனாலிட்டி பற்றியெல்லாம் தெரியாது. ஆனால், அவர் செய்த ஒரு தவறை மட்டும் செய்துவிடாதீர்கள். அதாவது தலித்துகளுக்கு தனி வோட்டர் லிஸ்ட் வந்ததை எதிர்த்து காந்தியடிகள் இருந்த உண்ணாவிரதத்துக்கு பணிந்து வாபஸ் பெற்று கொண்டது. நான் அம்பேத்கராக இருந்திருந்தால் இம்மாதிரி அடாவடியான கோரிக்கை/உண்ணாவிரதத்துக்கு செவி சாய்த்திருக்கவே மாட்டேன். சாகட்டும் என விட்டிருப்பேன்.

திராவிட இயக்கங்களின் வரலாற்றில் பறையரின் பங்கு பெரும்பங்கு. பறையரிடம் ஓட்டு வாங்க ஆயிரம், ஐநூறு எல்லாம் செலவு செய்ய தேவையில்லை...பத்து ரூபாயும் சாராயமும் கொடுத்தாலே போதும். இதில் இருந்தே தெரியவில்லையா, இந்த பறையர் சமூகம் ஒரு சிறந்த சிக்கன சமூகம்...
இங்கெல்லாம் சிக்கனம் செல்லாது என இப்பதிவரின் நக்கலான ஸ்டேட்மெண்டிலிருந்தே தெரிகிறது அல்லவா.

அரசு இலவசமாக கொடுத்த சீருடைகளை அணிந்துகொண்டு, பள்ளி செல்லும் பிள்ளைகள் அரசு வழங்கும் மதிய உணவை அழகாக உண்டு, செருப்பு அணியாத கால்களில் வெய்யிலை பொருட்படுத்தாமல் வீடு திரும்புவது அழகு. இதில் இருந்தே தெரியவில்லையா ? இந்த சமூகத்தில் சகிப்பு தன்மை இயல்பிலேயே வந்துவிடுகிறது என்று ?
சகிப்பு தன்மை என்பது தம்மை சிறுமைபடுத்தும் எந்த விஷயங்களிலுமே இருக்கக் கூடாது என்பதே நிஜம்.

எல்லா சமூகத்தை பற்றியும் எழுதிவிட்டீர்களே, இனி பறையன், சக்கிளி, அருந்ததியர், ஒட்டன் என்று மற்ற சாதியை பற்றியும் பெருமையாக எழுதுங்களேன் சாதி வெறியர்களே?
இங்குதான் லாஜிக் துணைக்கு வருகிறது. ஒரு சாதியின் நல்ல விஷயங்களை பற்றி எழுதினால் அது மற்ற சாதிகளை மட்டம் தட்டுகிறது, அவ்வாறு எழுதுபவர்கள் சாதி வெறியர்கள் என்பது லாஜிக்கில் குறைபாடு உள்ளவர்கள் சிந்திப்பது.

ஆகவே, பொங்கி எழுங்கள் தலித் தோழர்களே. நீங்கள் இதனால் இழக்க இருப்பது அடிமை சங்கிலிகளே.

உங்களுக்கு அனுதாபம் காட்டுபவர்கள் உங்களை அப்படியே அடக்கி வைக்க நினைப்பவர்கள். ஏதோ அரசு வந்துதான் உங்களை பாதுகாக்க வேண்டும் என உங்களை நினைக்குமாறு தூண்டுபவர்கள் எங்காவது முன்னேறிவிடப் போகிறீர்களே என கவலைப்படுபவர்கள். உங்களுக்கு தேவை நீங்கள் முன்னேற வேண்டும் என்னும் ஆதங்கத்தில் உங்கள் குறைபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுபவர்களே. முந்தைய பத்தியில் நான் சுட்டியுள்ள பதிவிலிருந்து சில வார்த்தைகள்:

“இதையெல்லாம் சொல்லிவிட்டு இன்னும் சில கூறுவேன். தலித்துகளும் தத்தம் நிலையை உயர்த்த பாடுபட வேண்டும். என்ன நடக்கிறது என்றால் அவர்களில் பலர் ஒரு மொந்தை கள்ளுக்கும் ஒரு வேளை அசைவ சாப்பாட்டுக்கும் தங்கள் உழைப்பை வழங்கி விட்டு சென்று விடுகின்றனர். அதிலும் தங்கள் சகோதரர்களையே ஆண்டைக்காக அடிப்பதும் நடக்கிறது. பார்த்திபன் நடித்த பாரதி கண்ணம்மா இதை சரியான பார்வை கோணத்தில் காட்டாவிட்டாலும் காட்டிய அளவிலேயே மனதை பாதித்தது. அக்கொடுமையை பற்றி சரியாகக் கூறாது பூசி மொழுகிவிட்டு மீனாவுக்காக உடன்கட்டை ஏறுவது போன்ற அபத்த காட்சி.
பெற வேண்டிய கூலி கிடைக்கவில்லையென்றால் வேலை செய்ய முடியாது என்று இருப்பதே உத்தமம். மிகக் கடினமான செயல்தான் இருந்தாலும் ஏதேனும் பெரிய அளவில் இவ்வாறு செய்ய வேண்டும். அவர்களிலேயே படித்து பெரிய நிலைக்கு வந்து விட்டவர்கள் தங்களது ஏழை சகோதரர்களிடமிருந்து விலகி நிற்பது துரதிர்ஷ்டவசமானது”.

ஒன்று நினைவில் இருக்க வேண்டும். சாதி இல்லை, இருந்தாலும் என்னளவில் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன், அது பற்றி பேசவே மாட்டேன் என நினைப்பவர்கள் நெருப்பு கோழி போல மணலுக்குள் தலைகளை புதைத்து கொள்பவர்கள்.

கலப்பு திருமணம் வேண்டும் என பேசுபவர்கள் தங்களுக்கு என வரும்போது மட்டும் முறைப்பெண்களை மணந்து கொண்டு தங்கள் பெற்றோரின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்ததாகவும், தமது குழந்தைகளுக்கு கலப்புத் திருமணம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு பிறகு செய்யப்போவதாகவும் (யார் அப்போது இதயெல்லாம் நினைவில் வைத்து கொள்ள போகிறார்கள் என்னும் தெனாவெட்டில்) பசப்புபவர்கள். அல்லது அப்படியே செய்து கொண்டாலும் ஐயர் அல்லது ஐயங்கார் பெண்களாக தேடி காதலித்து மணம் முடிப்பவர்கள். அவர்களையெல்லாம் நம்புவது மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான்.

ஆனால் ஒன்றில் மட்டும் அவர்களை பின்பற்றலாம் தலித்துகள். தமது நலன் என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி செயல்படவேண்டும் என்பதே அது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/22/2009

பாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்

பெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம், ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது. பதிவுக்கு போகும் முன்னால் சில வார்த்தைகள். முதலில் இந்த வரிசையை துவக்கக் காரணமே எனது கேள்வி பதில் பதிவுக்கு செட்டியார் சமூகம் பற்றிய வந்த சில கேள்விகளால்தான். அவற்றுக்கு பதில் கூற இணையத்தை நாடியதில் பல விஷயங்கள் தெரிய வந்தன. அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே அக்கேள்விகளுக்கென தனி பதிவே போட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு.

நாடார்களை நான் மிகவும் அட்மைர் செய்கிறேன். தமது சொந்த முயற்சியால் முன்னுக்கு அவர் வந்ததது யூதர்கள் 2000 ஆண்டு காலம் போராடி யூத நாட்டை அடைந்ததற்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல எனது எனது அசைக்க முடியாத கருத்து. ஆகவே அவர்கள் பற்றியும் பதிவு வந்தது.

இந்த இரு பதிவுகளுக்குப் பிறகு ஒரு மாதிரி வேகம் வந்து விட்டது. இந்த அவசர உலகில் ஒரு ஒழுங்குடன் நிலைத்து நிற்பவை என்பன சிலவே. அவற்றில் நமது பாரம்பரியமும் ஒன்று. இயற்கையில் வேறுபாடுகள் அனேகம் உண்டு. எல்லாவற்றையும் ரோடு போடுவது போல சமன்படுத்துவது என்னும் செயல்பாட்டில் பல பாரம்பரியங்கள் அழியும் அபாயம் எப்போதுமே தொக்கி நிற்கிறது. அவற்றை கட்டிக் காப்பதில் பல சாதி சமூகங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றை பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே இந்த வரிசையை இப்போதைக்கு விரிவுபடுத்தி மேலும் சில சாதிகளைப் பற்றி எழுத நினைக்கிறேன். தத்தம் சாதிகள் பற்றி அபூர்வ தகவல்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் பதிவர்கள் அவற்றை எனக்கு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நானும் கூகளண்ணனை நாடுவேன்.

ஓக்கே, இந்த முறை நான் கூறப்போவது பாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம் பற்றித்தான்.

இம்முறையும் வழக்கம்போல நன்றி இரா. மணிகண்டன் அவர்கள் மற்றும் குமுதம் 14.01.2009, 21.01.2009 மற்றும் 28.01.2009 இதழ்கள். வழமைபோல குமுதத்தில் வந்ததை பார்த்த பிறகு டோண்டு ராகவனும் வருவான். முதலில் ஓவர் டு குமுதம்.

அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள். அவனோடு நேருக்குநேர் பேசியோ போரிட்டோ அவனை வெல்லமுடியாது என்று முடிவு கட்டிய வெள்ளையர்கள், அவனை சிறைப் பிடித்தவுடன் தூக்கிலிட்டார்கள். அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை. அவன் தலையை வெட்டித் துண்டித்து ஈட்டியில் குத்தி காட்சிப் பொருளாக நடுச்சந்தியில் நட்டு வைத்தார்கள்.

``கட்டபொம்மு நாயக்கர் பிடிபடுவதிலும், அவரது மந்திரியான சுப்ரமணியபிள்ளை பிடிபட்டதே நமக்கு வெற்றி'' என்று வெள்ளையர்கள் மேலே நடந்த நிகழ்ச்சியை மேலிடத்திற்கு இப்படித்தான் தெரிவித்தார்கள்.
கட்டபொம்முவின் மந்திரியாக இருந்த தானாபதிப் பிள்ளைதான் அந்த இளைஞன். பெயர் சுப்ரமணிய பிள்ளை. தூக்கிலிட்டாலும் மீண்டும் எழுந்து வந்துவிடுவாரோ என்று பரங்கியரை அஞ்சி நடுங்க வைத்த இந்த சுத்த வீரரைத் தந்த சமூகம் `பிள்ளைமார்' என்று அழைக்கும் வேளாளர் சமூகம்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம்.

கன்னியாகுமாரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வேளாளர்கள்தான் பெரும்பாலும் பிள்ளைமார் என்று அழைக்கப்படுகிறார்கள். பிள்ளை என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.

தென் தமிழகம்தான் இவர்களின் பூர்வீகம் என்றாலும் வேலை நிமித்தமாக இப்போது தமிழகம் முழுவதும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். எங்கு சென்று வாழ்ந்தாலும் `பிள்ளைமார்' தங்கள் அடையாளத்தையும் பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் விடாமல் பாதுகாத்து வருகிறார்கள்.

தொடக்கத்தில் பிள்ளை என்ற பட்டம் இவர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. இடைக்காலத்தில் பிற சமூகத்தினரும்கூட இப்பட்டத்தைப் போட்டுக் கொள்வதைப் பெருமையாகக் கருதத் தொடங்கி விட்டனர். ஆனால் அவர்களுடன் பண்பாட்டு ரீதியில் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.

சேர சோழ பாண்டியர்களின் அமைச்சர்களாக இருந்து வழி நடத்திச் சென்றவர்களாக இவர்களைச் சொல்வதுண்டு. மன்னர்களுக்கு முடிசூட்டு விழாவில் முடி எடுத்துக்கொடுக்கும் உரிமை இருந்ததாகக் கூறுவோரும் உண்டு.

பிள்ளைமார்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். என்றாலும் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாமல் ஆட்களை வைத்து விவசாயத் தொழில் செய்கின்றனர்.

அன்றைய பாண்டிய நாட்டில் மழையின்றி பஞ்சம் தலைவிரித்தாடியது. தனது நாட்டில் மழையைப் பொழிவிக்காத மேகங்களைப் பிடித்து வந்து பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி சிறையில் அடைத்து விட்டான். தேவர்கள் உட்பட அனைவரும் கார்முகில்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இனிமேல் மேகங்கள் தங்களது வேலையை ஒழுங்காகச் செய்யும் என்று யாராவது ஒப்புதல் கொடுத்து பிணையக் கைதியாக இருந்தால் மட்டுமே மேகங்களை விடுவிப்பேன் என்றான் மன்னன். அப்போது வேளாளர் ஒருவர்தான் மேகங்களுக்குப் பதில் தான் சிறையில் இருப்பதாக வாக்குறுதி அளித்து மேகங்களை விடுவித்தாராம்.

இதனால் அவர்கள் கார்காத்த வேளாளர் என்று அழைக்கப்பட்டதாக செவிவழிக் கதை உண்டு. அந்தளவிற்கு பிறரின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக பிள்ளைமார் சமூகத்தார் இருந்திருக்கிறார்கள்.

வேளாளர்களில் ஒரு பிரிவினர் சைவப் பிள்ளைமார். இவர்கள் அதிகாலை சிவநாமத்தை உச்சரித்துவிட்டுத்தான் விழிக்கிறார்கள். காலை, மதிய, இரவு உணவுக்கு முன்னும் இறைவழிபாடு நடத்துவதை இவர்கள் மறப்பதே இல்லை.

இவர்களுக்கு பல குலதெய்வங்கள் இருக்கின்றன. பிள்ளைமார்களில் வைணவத்தைக் கடைப்பிடிப்போரும் இருக்கிறார்கள். நாமதாரி பிள்ளைமார்கள் திருமண் இட்டுக்கொள்கிறார்கள். இப்போது சைவம், வைணவம் கடைப்பிடிப்போரிடையே திருமண உறவு வைத்துக்கொள்வதும் உண்டு.

திருச்செந்தூர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், தென்காசி, குற்றாலம் கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்வது சைவப் பிள்ளைமார்களின் வழக்கம். அதேசமயம், வைணவத்தில் ஈடுபாடுடைய பிள்ளைமார்கள் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாங்குனேரி போன்ற நவ திருப்பதி ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவது பிரசித்தம்.

இவர்களுள் கோட்டைப் பிள்ளைமார் நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடபகுதியில் உள்ளனர். இக்கோட்டைக்குள் இருக்கும் கல்வெட்டில் `பிள்ளைமார்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இச்சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கோட்டைக்குள்ளிருந்து வெளியே வருவதே இல்லை. வெளிஉலகம் என்னவென்றே தெரியாமல் இவர்கள் வாழவேண்டிய சூழ்நிலை. கோட்டைக்குள் மற்ற எந்த சமூகத்தவரும் நுழையத் தடை விதித்திருந்தனர். ஒரு பெண் பூப்படைந்தபின்னர் உடன்பிறந்த சகோதரன், தந்தை, தாய்மாமன் தவிர மற்ற ஆண்களைப் பார்க்கக் கூடாது. கணவனை இழந்த பெண்கள் கடுமையான விரதங்கள் இருந்து கணவன் காலமான சிறிது காலத்திற்குள்ளேயே உயிர்விடும் நிலை இருந்தது.

இன்று அவர்களின் நிலை என்ன?.


இவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தங்கள் குலப்பெண்களை கோட்டையை விட்டு வெளியில் அனுப்பாததை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலத்தில் அந்த முறையில் சிற்சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கோட்டைப் பிள்ளைமார் இனப் பெண்கள் வெளியில் வரத் தொடங்கினர். கல்வி கற்கத் தொடங்கினர்.

இந்த சமுதாயத்தில் பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பெண்ணின் வழித் தோன்றலாகவே கருதப்படுகிறது.

பொதுவாக பிள்ளைமார் சமூகத்தில் வரதட்சணை கேட்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. தொடக்கத்தில் பிள்ளைமார் சமூகத்தார் தங்கள் சொந்தத்திலேயே திருமண உறவு கொண்டிருந்தனர். உறவு விட்டுப் போய் விடக் கூடாது என்பதால் இப்படி இருந்தனர். ஆனால் இப்போது தங்கள் சொந்தங்களில் நல்ல வரன் கிட்டாதபோது மற்ற பிள்ளைமார்களுடனும் திருமண உறவு கொள்ளும் வழக்கம் வந்து விட்டது.

திருமணங்களை இரண்டு வீட்டாரும் பேசி முடிக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம் என்றவுடன் வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள். பந்தக்கால் நடுவது, மாப்பிள்ளை அழைப்பு உட்பட அனைத்திற்கும் அன்றே நாள் குறிக்கிறார்கள். திருமணத்தை நடத்துவது பெண் வீட்டாரின் பொறுப்பாகவே இன்றும் உள்ளது.

முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். திருமணத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடக்கிறது. தேசிகர் ஒருவர் சைவமுறைப்படி மந்திரங்கள் ஓதி திருமணத்தை நடத்தித் தருகிறார்.

மாப்பிள்ளை, சகலை, மைத்துனர் என்று மூன்று பேர் அமர்ந்திருக்க, மணமான புதுப் பெண் வாழை இலை போட்டு அவர்களுக்குப் பரிமாற வேண்டும். இதனை `சட்டரசம் பரிமாறுதல்' என்கின்றனர்.

திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை பெண்ணை தேங்காய் உருட்டச் சொல்லுதல், தலையில் வைத்து அப்பளம் உடைத்தல் போன்ற விளையாட்டுக்களை ஆடச் செய்வது, பல பிள்ளைமார் சமூகத்தாரிடம் இன்றும் காணப்படும் வழக்கம்.

மணப்பெண் வீட்டிலும் மாப்பிள்ளையின் மறுவீட்டு அழைப்பிலும் விருந்து உபசாரம் தடபுடலாக இருக்கும். இவர்களின் திருமண விருந்தில் சொதி சாப்பாடும் அவியலும் மிகப் பிரசித்தம்.

பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த முப்பதாம் நாளில் சடங்கு நடக்கும். தாய்மாமன் சீலை எடுத்துக் கொடுத்து இந்தச் சடங்கை நடத்த வேண்டும். இந்தச் சடங்கிற்குப் பின், அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது. ஆனால் இப்போது இந்த முறை மாறி, காலத்திற்குத் தக்கபடி நடக்கத் தொடங்கிவிட்டனர்.

பெரும்பாலான பெண்கள் முன் கொசுவம் வைத்து சேலை கட்டுவது வழக்கம். காதில் `பாம்படம்' அணிய காதுகளை நீண்ட அளவிற்கு வளர்ப்பது இவர்களது வழக்கம்.இன்று நாகரிகம் கருதி இந்த வழக்கம் குறையத் தொடங்கி விட்டது.

விதவைகள் திருமணத்திற்கு அனுமதி மறுத்து வந்த இவர்கள், இப்போது அதற்கு அனுமதி வழங்க ஆரம்பித்து விட்டனர். விதவைகள் வெள்ளைச் சேலை அணியும் வழக்கமும் அருகி வரத் தொடங்கி விட்டது.

கணேசருக்கு செவ்வாய் பூஜை செய்வது வழக்கம். பெண்கள் மட்டுமே இந்த பூஜை செய்வதாக சொல்லப்பட்டது. இதில் ஆண்கள், சிறுவர்கள் அனுமதி கிடையாது. அய்யனார், காளி முதலிய கிராம தெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் இச்சமூகத்தினர் ஆற்றிய பங்கு மிகப் பெரியது.

இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு வீர வரலாறு. இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றார்கள். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இதில் ஈடுபட்டோரில் பிள்ளை மார்களின் பங்கு மகத்தானது.

உறங்கிக்கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, நாமிருக்கும் நாடு நமக்குச் சொந்தமானது என்று மக்களை எழுச்சிபெறச் செய்தவர் வ.உ.சி. நாமே கப்பல் ஓட்டி கடல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முடியும் என்று முனைந்து வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவி இரண்டு கப்பல்களை விட்டார். சுதந்திரப்போரில் தென்னகத்தின் தளபதியாக இருந்து ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்தார். அதனாலேயே வெள்ளையரின் அடக்குமுறைக்கு ஆளாகி, சொத்து சுகங்களை இழந்து செக்கிழுத்து கல் உடைத்து சொல்லொணாத் துன்பங்களைச் சுமந்தார்.

நமது பாரதநாட்டின் விடுதலை வரலாற்றில் மாவீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயர் அழுத்தமாகப் பதிந்துள்ளது.

தமிழ்நாட்டில் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக இருந்து வெள்ளையர்களை அச்சுறுத்தியதால் பலமுறை சிறை சென்றார். காந்தியடிகளின் தலைமையின்கீழ் போராடிய அகிம்சா வீரர்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பிள்ளைமார் சமூகத்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது.

அதேபோல், இச் சமூகத்தினர் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது.


அன்றைய சென்னைப் பட்டினம் அதிர்ச்சியில் உறைந்துபோய் கிடந்தது. திடீரென பொழிந்த வெடிகுண்டு மழையில் ஜனங்களைவிட வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் ஆடிப்போய்விட்டார்கள். அவர்கள் நடுக்கத்துடன் உச்சரித்த ஒரே பெயர் ஜெய்ஹிந்த் செண்பகராமன். ஏன்?

1914-ல் செப்டம்பர் மாதம் 22-ஆம் நாள் எம்டன் நீர்முழுகிக் கப்பலில் பயணித்து சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைத் தகர்க்க வெடிகுண்டு வீசிய பெருவீரன். இந்தியாவைவிட்டு வெள்ளையர்களை வெளியேற்ற, இந்தியாவுக்கு வெளியே இந்திய தேசீய தொண்டர் படையை (ஐ.என்.வி.) ஆரம்பித்தவர். அதன் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷார் கலக்கம் அடைந்தனர். சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏ.வுக்கு முன்னோடி அது.

இப்படி தன்னலம் கருதாத வீரர்களை தாய்மண்ணின் விடுதலைக்கு அர்ப்பணித்ததன் விளைவு, பிள்ளைமார் சமூகத்தின் மேல் மற்ற சமூகத்தார்க்கு ஒரு மதிப்பும் மரியாதையும் கூடியது.

பழங்காலந்தொட்டே, தம் சமூகத்தாரையும் தம்மை சுற்றியுள்ள பிற சமூகத்தாரையும் கல்வியும் பக்தியிலும் சிறந்து விளங்க வைக்க பிள்ளைமார் சமூகத்தார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் போற்றப்பட வேண்டியவை.

பிள்ளைமார்களின் சமயப் பற்றுக்கும் அருள்நெறித் தொண்டிற்கும் சான்றாய் விளங்குவதுதான் பதினெட்டு சைவ ஆதீனங்கள். அவை சைவ சமய வளர்ச்சிக்காக மட்டும் பாடுபடுவையாக இல்லாமல், கல்வியையும் நீதிநெறிகளையும் மக்களுக்கு கற்றுத் தரும் மடங்களாக விளக்குவதுதான் அவற்றின் சிறப்பு. சைவ சித்தாந்த நூல்களை தமிழுக்குத் தந்தார்கள். அதன் மூலம் கல்வியையும் ஒழுக்கத்தையும் போதித்தார்கள்.

மனித சமூகம் வாழ வழிகாட்டிய வடலூர் வள்ளல் பெருமான் இச்சமூகத்தாரின் பெருமைகளை நிலை நாட்டியதில் முன்னவராய்த் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.

சைவத்தையும் தமிழையும் வளர்த்திடும் குறிக்கோளுடன் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை ஆரம்பித்ததன் மூலம் திருவரங்கம் பிள்ளையும் திரு. வ. சுப்பையா பிள்ளையும் வரலாற்றுச் சாதனை படைத்தவர்களாகத் திகழ்கிறார்கள்.

தமிழுக்கு இச்சமூகம் ஆற்றியுள்ள பங்களிப்பு விலை மதிக்க முடியாதது. மறைமலையடிகள், எம்.எஸ். பொன்னுலிங்கம், க.சு. பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, க. அப்பாதுரை, சாத்தன்குளம் ராகவன், புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், தி.க.சி., வண்ண நிலவன், ரா.சு. நல்லபெருமாள், வண்ணதாசன், நெல்லைக் கண்ணன், சுகிசிவம், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் என்று மிகப்பெரிய வரலாற்றுப் பட்டியலைக் கொண்டது இச்சமூகம்.

சைவர்களாக இருந்த பலர் திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பங்குபெற்ற வரலாறும் உண்டு.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஏ.சி.பி. வீரபாகு, இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக இருந்த தியாகி எம்.சி. வீரபாகு, சுயமரியாதை இயக்கத்தில் பெரும் பங்காற்றிய சி.டி. நாயகம் என்று பலர் பாடுபட்டுள்ளனர்.

தோழர் ஜீவா போன்றவர்களால் இம்மன்ணில் கம்யூனிசக் கோட்பாடுகள் மலர்சி கண்ட வரலாற்றை மறக்க முடியாது.

இன்று மேயர்கள், மந்திரிகள் என்று அரசியலில் வலம் வரும் இச்சமூகத்தாரின் எண்ணிக்கை அதிகம்.

சமயம், கல்வி, இலக்கியம், சமூகப்பணி, பதிப்புப் பணி, பத்திரிகை, வணிகம், அரசியல் என்று இச்சமூகத்தார் கால் பதிக்காத துறையே இல்லை.

“தமிழகத்தின் ‘பொற்காலம்’ எனப் போற்றப்படும் சங்க காலம் தொட்டு இன்றைய காலம் வரையிலும் தமிழ் அழியாது பாடுபடுவோர் பிள்ளைமார்களே என்பதுதான் வரலாற்றுச் சிறப்பு. பக்தி இலக்கியங்கள் மட்டுமல்லாது பாமரர்களும் பயன்பெறும் வகையில் இலக்கியங்களை அடுத்த தளத்திற்கு இயங்க வைத்தவர்களில் பெரும்பாலோர் இச்சமூகத்தைச் சார்ந்தவர்களே” என்கிறார் சைவநெறி காந்தி.

தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. கணபதி சந்தானம் கூறுகிறார், “தமிழகத்தின் தொன்மையான இனம் வேளாளர் இனம். சைவமும் தமிழும் வளர பெரும்பணி செய்து வருகிறார்கள். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அப்பரின் வாக்கிற்கும், ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற வள்ளலாரின் கொள்கைகளையும் வ.உ.சி. போன்றோரின் தேசபக்தியையும் கடைபிடித்து வருபவர்கள். நாம் நல்லவர்கள்; நமக்கு அனைவரும் நல்லவர்களே என்ற அடிப்படையில் பணி செய்து வருபவர்கள்.”

இப்போது சில பிள்ளைமார் நட்சத்திரங்களைப் பார்ப்போம்.

எம்.சி. வீரபாகு: சுதந்திரப் போராட்ட தியாகி. இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்தவர். அரசியல் சட்ட ஒப்புமையில் தமிழில் கையொப்பம் இட்டு புரட்சி செய்தவர். வ.உ.சி.க்குப் பின், அவரது பெயரில் கப்பல் கம்பெனியை நிறுவியவர்.

பரலி. சு. நெல்லையப்பர்: பாரதியாரின் உற்ற தோழர். அவரது நூல்கள் வெளிவர காரணமாக இருந்தவர். பாரதியாரின் இறுதிக்காலம் வரை உடன் இருந்த தேசத் தொண்டர்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை: உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் இவரது “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” பாடலைத்தான் வழிநெடுக முழக்கமிட்டார்கள்.

கி.ஆ.பெ. விஸ்வநாதம்: தமிழர்களுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். ‘தமிழர் மாநாடு’ கூட்டி இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழர்களைத் தட்டி எழுப்பியவர். ‘தமிழ் மருந்துகள், தமிழ்ச் செல்வம்’ உள்ளிட்ட 25 நூல்கள் எழுதியவர். 96 வயது வரை பெருவாழ்வு வாழ்ந்தவர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: பொதுவுடைமை கருத்துக்கள் ஏழை எளிய மக்களை எளிதில் சென்றடையும்படி பாடல்களை எழுதியவர். குறுகிய காலத்தில் அவர் அடைந்த புகழ் திரையுலகில் யாரும் அடையாதது.

கணிதமேதை எஸ்.எஸ். பிள்ளை: உலகப் புகழ் பெற்ற கணித மேதை. 300 ஆண்டுகளாக விடை காணாத கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக கணிதப் பேராசிரியர் வாரிங் என்பவரின் கணிதப் புதிருக்கு விடை கண்டு பிடித்தவர். 1950-ல் சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த உலக கணித விஞ்ஞானிகள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கச் சென்றபோது விமான விபத்தில் உயிர் நீத்தவர்.

அகிலன்: தமிழ் மொழிக்கு சிறந்த நாவல்களையும் சிறுகதைகளையும் படைத்தவர். இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீடவிருதை தமிழில் முதன் முதலாகப் பெற்று சரித்திரம் படைத்தவர்.

வல்லிக்கண்ணன்: தமிழ் இலக்கிய உலகில் தனித்தடம் பதித்தவர். ‘கிராம ஊழியன்’ ஆசிரியர். நாடகம், புதுக்கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு என்று பல்வேறு தளங்களில் தமிழை வளர்த்தவர்.

ஜெயகாந்தன்: நாவல், சிறுகதை உலகின் புரட்சி மன்னர். சிறந்த மேடைப் பேச்சாளர். யாருக்கும் அஞ்சாமல் மனதில் பட்டதைத் துணிச்சலுடன் எழுதும் வல்லமை படைத்தவர். பல விருதுகளைப் பெற்ற இவரை ‘ஞானபீட விருது’ தேடிவந்து பெருமை கொண்டது.

(இன்னும் நூற்றுக்கணக்கான அறிஞர்களை இச்சமூகம் தந்து வரலாறு படைத்துள்ளது).



மீண்டும் டோண்டு ராகவன். சமீபத்தில் அறுபதுகள் வரைகூட தமிழ்த் திரைப்படங்களில் சாதிப் பெயர்கள் சர்வ சாதாரணமாக புழங்கி வந்தன. முக்கால்வாசி படங்களில் கதாநாயகன் பிள்ளை சாதியை சார்ந்தவராகவே காட்டப்படுவார். அவரது தந்தையை எல்லோரும் மரியாதையாக பிள்ளவாள் என அழைப்பார்கள். இலங்கையில் இந்த சாதியினர் தமிழர்களில் மிகவும் முன்னேறியதாக வரையறுக்கப்பட்டவர்கள்.

மேலே சொன்ன பட்டியலில் விட்டு போனவர்களில் ஒருவர் சி.வை. தாமோதரம் பிள்ளை. “யாழ்ப்பாணத்தில் பிறந்த அப்பெருந்தகை, தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, தலைசிறந்த தமிழ்த் தொண்டாற்றி, வரலாற்றில் நிலையானதோர் இடமும், நெடிய புகழும் பெற்றார். 'தேசப்பற்றும், சமயப் பற்றும், மொழிப்பற்றும் அற்ற மனிதர் இருந்தென்ன? இறந்தென்ன?' என வினவினார், அப்பெருமகனார். பண்டைக்கால இலக்கியங்களைப் பதிப்பிப்பதை தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். ஏடுகளைத்தேடி, இரவு பகல் பாராது தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். பதிப்புப் பணியில் முன்னோடியாய், பத்திரிகைப்பணியில் முன்மாதிரியாய்த் திகழ்ந்தவர்” என அவரைப் பற்றி எழுதுகிறார், குன்றக்குடி பெரிய பெருமாள் என்பவர்.

உவேசா அவர்களது ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை மடத்தின் ஆதரவில் இருந்தவர். அம்மடமும் அவரும் இல்லாவிட்டால் உவேசா அவர்களது தொண்டும் தமிழுக்கு கிடைக்காமல் போயிருக்கக் கூடும்.

மேலதிகத் தகவல்கள் கிடைத்தால் தன்யனாவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 22.01.2009

அனானி (120 கேள்விகள் கேட்டவர்)
101.நம்மிடயே வாழும் பலர் எதையோ பறிகொடுத்துபோல் எப்போதும் இருக்கும் போது ஒரு சிலர் சிரித்துக் கொண்டே வாழ்வில் வலம் வரும் வாழ்வியல் ரகசியம் தெரிந்தவர்களில், தாங்கள் சமீபத்தில் சந்தித்த நபர் யார். அவரைபற்றி சொல்லவும்?
பதில்: இந்த விஷயத்தில் பளீரென நினைவுக்கு வருபவர் ஜெயமோகன் அவர்களே. அவர் வாழ்வியல் ரகசியத்தை கண்டுணர்ந்த, நான் அறிந்த சிலரில் முக்கியமானவர். அவரைபற்றி நான் கூறுவதைவிட அவரது இப்பதிவே கூறும். இதுபோல அவர் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறார்.

102. திருமங்கல இடைத் தேர்தலில் அதிமுகவை விட, திமுக ஆள் பலம், அதிகார பலம்,பண பலம்,பிரச்சார பலம், செய்து ஊடக பலம் போன்றவற்றை பெற்று, தெம்பாய் இருப்பது அங்குள்ள மக்கள் மனநிலையை தனக்கு சாதகமாக்கி கொள்ளுமா? கவுத்து விடுமா?
பதில்: மன்னிக்கவும் இக்கேள்வியின் முறை வருவதற்கு முன்னாலேயே தேர்தல் வந்து முடிந்து விட்டது. இது பற்றி சோ அவர்கள் துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங்கில் சொன்னதை எனது அதற்கான பதிவுகளில் பார்த்து கொள்ளுங்கள். எனது கருத்தும் அதுதான்.

103. திருநெல்வேலி என்றால் அல்வா,மதுரை என்றாலே மல்லிகைப் பூ இப்படி பிற நகரங்களின் சிறப்பை எழுதவும்?
பதில்:
பொன்னு வெளையற பூமியடா வெவசாயத்தை பொறுப்பா கவனுச்சு செய்யுறோமடா
உண்மையா உழைக்கிற நமக்கு எல்லா நன்மைகளும் நாடி வந்துகூடுதடா..
மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு
ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு செல்லக்கண்ணு
கருதை நல்ல வெளையச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு செல்லக்கண்ணு
( என்றா.. பல்லக்காட்ட்ற... அட தண்ணிய சேந்து...)
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு
சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு

படம் : மக்களைப் பெற்ற மகராசி; வருடம் : (சமீபத்தில்) 1957; பாடலை இயற்றியவர் : மருதகாசி; பாடலைப் பாடியவர் : T.M.சவுந்தர்ராஜன்; பாடலுக்கு இசை அமைத்தவர் : கே.வி.மகாதேவன்; ராகம் : சிந்து பைரவி; இயக்கியவர் : ஏ.பி.நாகராஜன்; நடித்தவர் : நடிகர் திலகம் சிவாஜி கணேசன்; தயாரிப்பு : நடிகர் வி.கே.ராமசாமி

104. பொதுவாய் காதல் திருமணங்கள் முதலில் இனித்து பின் கசக்கிறது.காதல் திருமணம் செய்து முழுவதும் இனிப்பாய் வாழ்ந்த தம்பதியினர் யார்?
பதில்: சாதாரணமாக காதல் திருமணம் என்பது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ஆரம்பிக்கிறது. அதனால்தான் சிறிதளவு ஏமாற்றம் வந்தாலும் தாங்க முடிவதில்லை. எப்படிப்பட்ட காவிய காதலாயினும் தினசரி உப்பு மொளகாய் பிரச்சினையில் மங்குவது சகஜமே. பிறகு பிரச்சினைகளில் ஆழ்ந்து ஒன்றாகப் போராடி முன்னுக்கு வரும் நிலையிலேயே எம்மாதிரி திருமண வாழ்க்கையுமே இனிக்கும். அம்மாதிரி வாழும் பலரை எனக்கு தெரியும். ஆனால் அவர்கள் பெயரை சொல்வது அவர்களது ப்ரைவசியை பாதிக்கும்.

105. தமிழ் இலக்கிய உலகில் ஒரு ஜாம்பவானாய் இருந்து, கம்பராமயணத்திலும் சீறாப்புராணத்திலும் நல்ல ஆளுமை பெற்றிருந்தை போல் இன்றய இலக்கிய உலகில் இனம், மதம் தாண்டி இலக்கியச் சேவை ஆற்றும் பண்பாளர் யாரும் உள்ளனரா?
பதில்: உங்கள் கேள்வியில் நீங்கள் யாரையோ உதாரணம் காட்ட நினைத்து விட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன். அது நீதியரசர் மு.மு. இஸ்மாயில் என்பது என் யூகம். கலையுலகில் ஜேசுதாஸ் (அய்யப்பன் பாடல்கள், குருவாயூர் கோவில் பாடல்கள்), ஷேக் சின்னமௌலானா சாஹேப் (திருவரங்கம்) ஆகியோரை கூறலாம்.

106. இந்தியாவில் குடி அரசு தினம், சுதந்திரம் தினம் முதலிய கொண்டாட்டங்களில் ஆண்டுக்கு ஆண்டு ராணுவப் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் கூடி கொண்டே போகிறதே? இப்படியே போனால்?
பதில்: கவலை கொள்ள வேண்டிய நிலைமைதான். ஆனால் வேறு வழியில்லை.

107. சென்னையில் தற்சமயம் மின்தடை எப்படி உள்ளது. இன்வெர்ட்டர் வசதி உங்கள் இல்லத்தில் உண்டா?
பதில்: இப்போது அவ்வளவாக இல்லை. பொதுவாக சென்னை என எடுத்து கொண்டால் தமிழகத்தின் மற்ற ஊர்களைவிட இங்கு மின்வெட்டு குறைவு என்றுதான் கேள்விப்படுகிறேன். எங்கள் வீட்டில் இன்வெர்டர் கிடையாது.

108. குடும்ப சூழ்நிலையில் வாழும் பேரிளம் பெண்களும் பூயுட்டி பார்லருக்கு படையெடுப்பது பற்றி கமெண்ட் என்ன? காலம் மாறி காசை கரைக்கிறாதா? இது சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்கள் புண்ணியமா?
பதில்: இதில் பெண்ணென்ன, ஆணென்ன. வசதி உள்ளவர்கள் போகிறார்கள். நமக்கு என்ன கமெண்ட் இது பற்றி இருக்க இயலும்?

109. மாமியார் vs மருமகள் சண்டை போல் மாமனார் vs மருமான் சண்டை வருவதில்லையே?
பதில்: மாமனும் மருமகனும் தத்தம் மனைவியரிடம் வாங்கும் உதை பற்றி பேசி ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்வதால் வேண்டுமானால் நீங்கள் சொல்வதுபோல இருத்தலுக்கு காரணமாக இருக்கலாம்.

110. செய்தி மற்றும் ஊடகத்துறையின் அபாரவளர்ச்சியின் பயனாய் வந்து விழும் தகவல்கள், சில சமயம் பல தீமைகளை அள்ளித் தெளித்து விடும் பாதகச் செயல் நடந்துவிடுகிறதே?
பதில்: எல்லா முன்னேற்றத்திலும் சாதகம் மற்றும் பாதகம் உண்டு.

111. இலங்கைதமிழர் பாதுகாப்பு நிதிக்கு மொத்தம் சேர்ந்த தொகை எவ்வளவு? அதிகத் தொகை அள்ளிக் கொடுத்தவர் யார்?
பதில்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு பெற வேண்டிய தகவல்.

112. தமிழ் திரைப்பட பாடல் எழுதும் கவிஞர்களில் இப்போது படுபிசி யார்?
பதில்: வைரமுத்து என நினைக்கிறேன். நம்ம பிளாக்கர்களிலேயே ஒரு பாடலாசிரியர் இருக்கிறார். மெட்டி ஒலி சீரியலில் வரும் “மன்சே மனசே” என்னும் பாடலை எழுதியவர். அவர் பெயர் மறந்து விட்டேன். அவரைக் கேட்டால் இதற்கு விடை தெரியலாம். இல்லாவிட்டால் லக்கிலுக் அல்லது உண்மைத் தமிழனை கேட்கலாம்.

113. இந்தியத் திரையுலகில் இன்று 'நம்ப்ர் ஒன்' இயக்குனர் யார்? திறமையும், வெற்றியும், வருமானமும், புகழும் ஒருங்கே பெற்றவர்
பதில்: என் மனதுக்கு தோன்றுவது கே. பாலச்சந்தர்தான். இன்னும் அதிக பெயர்களுக்காக இக்கேள்வி லக்கிலுக், கேபிள் சங்கர், பாலபாரதி ஆகியோருக்கு அனுப்பப்படுகிறது. பின்னூட்டங்களில் இவை வந்தாலும் ஏற்புக்குரியதே. (இக்கேள்வி பதில் கூறாமல் விட்டுப் போனதை சுட்டிக் காட்டியவருக்கு நன்றி).

114. தற்கால மக்களில் படிக்காத பாமரர்களிடம் கூட விழிப்புணர்வு கூடியுள்ளதே?
பதில்: எளிய மக்களும் பத்திரிகை படிக்கும் அளவுக்கு எளிமையாக தந்த சி.பா. ஆதித்தனார் தயவில் ஒரு தலைமுறையே செய்திகளை படித்து அறிந்தது. இப்போது அதே எளிமையுடன் தொலைக்காட்சி செய்திகள் அதிகரித்து விட்டன. விழிப்புணர்வு கூடுவதற்கு கேட்பானேன்.

115. அரசியலில் முதியவர்கள் இளைஞர்களுக்கு தானாக வழிவிடமாட்டார்கள் போலிருக்கே?
பதில்: யார் யாருக்கு வழிவிடுவது? முன்னேறுவதற்கான ஊக்கம் இருப்பவர்கள் இதையெல்லாம் எதிர்பார்க்கலாகாது.

116. விரசமும் ஆபாசமும் கொடிகட்டி பறக்கும் திரைப் படப்பாடல் வரிகளுக்கு தணிக்கை இருக்கிறதா?
பதில்: இருக்கிறது என சொல்லி கொள்கிறார்கள். உதாரணத்துக்கு சுமைதாங்கி படத்தில் வரும் “எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி” எனத் துவங்கிய பாடலை ரேடியோவில் கேட்டிருப்பீர்கள். அதையே சினிமாவில் பார்க்கும் போது “எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி” என்று வருவது சென்சார் செய்த பிரச்சினையால்தான். இந்த மாதிரி பல உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் ஒன்று இம்மாதிரி சில படங்களுக்கு மட்டும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்ப்பார்கள். அதே சமயம் “குருவி கடைஞ்ச கொய்யாப்பழங்களை” விட்டு விடுவார்கள்.

117. டைரக்டர் சிகரம், டைரக்டர் இமயம் ஒப்பிடுக?
பதில்: இருவரும் சேர்ந்து நடிக்கும் ரெட்டச்சுழி என்னும் படத்தை பார்த்து ஒப்பிடலாமே.

118. காஞ்சி மட வழக்கு எந்த நிலையில் உள்ளது? தீர்ப்பு எப்போது?
பதில்: இப்போதுதான் சாட்சிகளை பதிவு செய்வது முடிந்து அவர்களை விசாரணை செய்வது ஆரம்பித்திருப்பதாக இம்மாதிரி விஷயங்களை அதிகம் தெரிந்து வைத்திருக்கும் ஒரு இணைய நண்பர் எனது இது சம்பந்தமான கேள்விக்கு பதில் கூறியுள்ளார். அவர் யார் எனப்தை அவர் அனுமதி இல்லாமல் கூறுவதற்கு இல்லை.

119. சினிமா இயக்குனர்களில் நடிக்க வந்தவர்களில் பெரும் வெற்றி பெற்றது யார்?
பதில்: மணிவண்ணன், ராமராஜன், ஆர். சுந்தரராஜன், பார்த்திபன், பாக்கியராஜ், சுந்தர் சி. என பெரிய பட்டியலே உள்ளதே. மேற்கொண்டு பெயர்களை பின்னூட்டங்களில் பதிவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். (ஆண்பாவம் பாண்டியராஜனின் பெயரை சேர்க்கிறேன்.மேலும் பெயர்கள் வரவர இம்மாதிரி சேர்க்கப்படும். அவ்வாறு சொல்பவர்களுக்கு நன்றி).

120. நெஞ்சு வலியின் அடையாளங்களும், வாயுத் தொல்லையின் அறிகுறிகளும் ஒன்றாமே? இசிஜி தான் நல்ல பதிலாம்?
பதில்: அந்த இசிஜியும் Treadmil சோதனைக்கு பிறகு நிற்க வைத்து எடுக்க வேண்டும். சாதாரணமாக படுக்க வைத்து எடுக்கப்படும் ஈசிஜீ நார்மலாக இருப்பதாகவும் ஆகவே பிரச்சினை இல்லை என்று சொன்ன ஒருவர் இரண்டே மாதங்களில் மாலை போடப்பட்ட படத்தை அலங்கரித்ததது பற்றி சுஜாதா அவர்கள் எழுதி விட்டார்.


சகதமிழ் மொழிபெயர்ப்பாளர் பொன்னன் (மின்னஞ்சல் மூலம்) கேட்டது (இவரும், இன்னொருவரும் நானும் சேர்ந்துதான் ப்ரோஸ்காம் தலைவாசலை தமிழுக்கும் கொண்டு வந்தோம்):
1. தமிழ்ப் பெயரை சூட்டிக்கொள்வதை குறித்து பொது இடங்களில் கருணாநிதி பேசியிருப்பதை குறித்து உங்கள் கருத்து?
பதில்: அவர் இது பற்றி எங்கு எப்போது என்ன கூறினார் என்று கூற இயலுமா பொன்னன் அவர்களே?

2. வாழ்க்கையில் பெண்கள் எதை சாதிக்க வேண்டும்?
பதில்: இதில் ஆணென்ன, பெண்ணென்ன? மனதுக்கு நிறைவான செயலாக்கத்துடன் வாழ வேண்டும்.

3. உங்கள் வாழ்க்கையில் இந்த புளோக் என்ற ஒன்று இல்லாவிட்டால்?
பதில்: பிளாக் என்ற ஒன்றை அறியும்போது எனது வயது 58-க்கும் மேல். ஆகவே அதை நான் பார்க்காதிருந்தால், அந்த 58 ஆண்டுகள் வாழ்ந்ததை போல வாழ்ந்து கொண்டிருப்பேனாக இருந்திருக்கும். என்ன, தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகள் என் வாழ்வில் வந்திராது. அனைத்துலக மொழிபெயர்ப்பு தலைவாசலாம் ப்ரோஸ் காமின் ப்ளாட்டினம் உறுப்பினர் ஆகியிருக்க இயலாது. உங்களை நண்பராக பெற்றிருக்க மாட்டேன்.

4. வாழ்க்கையில் எதை சாதித்தாலும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறதே. அது இறைசிந்தனை இல்லாததுதானே?
பதில்: இறை சிந்தனை என்பதை விட ஒருமுனைபட்ட சிந்தனை எனக் கூறுவது பொருத்தமாகும். சாதனைகளை பொருத்தவரை போதுமென்ற மனம் பொன் செய்யும் மருந்தல்ல. ஒரு சாதனை அடைந்தாயிற்றா, அடுத்த இலக்கு என்ன என்பதை உடனடியாக தீர்மானித்தல் அவசியம். முடிந்தால் ஒரு சாதனை எட்டுவதற்கு சற்று முன்னாலேயே அடுத்த இலக்கை தீர்மானித்து வைத்திருப்பது உத்தமம்.

5. தற்பொழுது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?
பதில்: ஈழத்தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் “இப்ப அங்க என்ன நேரம்” என்னும் கட்டுரை தொகுப்பு. பா. ராகவனுக்கு நன்றி. அவர் பதிவில்தான் முதல்முதலாக இவரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.


ராபின்ஹூட்:
1. திரு.கருணாநிதி,ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆட்சியில் செய்த நல்ல விசயங்கள் சிலவற்றைக் கூறுங்கள்.
பதில்: என்ன ஒப்பிடுதல் இது? போயும் போயும் பன்னீர்செல்வத்தையா நம்ம கலைஞருடன் ஒப்பிடுவது? கருணாநிதி அரசு செய்த காரியங்களில் எனக்கு பிடித்தவை சமத்துவபுரம் மற்றும் உழவர் சந்தை.

2. தாங்கள் வருமான வரி செலுத்துவது உண்டா?
பதில்: கண்டிப்பாக. அது இல்லாமலா? செலுத்திவிட்டால் கிடைக்கும் நிம்மதியே அலாதிதான்.


எம். கண்ணன்:
1. கடந்த 2- 3 வருடங்களாக இந்திப் படங்களின் வெளியீடுகள் மிகவும் அலப்பரையாக இருக்கிறதே ? ஓவ்வொரு படம் ரிலீசாவதற்கு சில வாரங்கள் முன்பிருந்தே ஒரேயடியாக ஆங்கில / இந்தி டிவி சேனல்களில் ஓவர் கவரேஜ் செய்கிறார்களே?
பதில்: எல்லாம் பணம் செய்யும் மாயம். முன்னேல்லாம் கருப்பு வெள்ளை படங்களில் இருக்கும் எளிமை இப்போது இல்லை என்றெல்லாம் கூற மனம் விழைந்தாலும் முடிவதில்லை. இந்திப் படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் உண்டு. ஆகவே அங்கு எதையும் செய்தாவது தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தேவைப்படுகிறது. ஆகவேதான் அலப்பரைகள் அலம்பல்கள் உதார்கள் எல்லாம். மலையாளப் படங்கள் எளிமையாக இருப்பதன் காரணம் அங்குள்ள பணப்போக்குவரத்து குறைபாடுதான் காரணம் என்கிறார் ஜெயமோகன். அக்கட்டுரை ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.

2. ஒரு சில படங்கள் தவிர இந்திப் படங்கள் எல்லாமே மேல்தட்டு மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸை வைத்தே எடுக்கப் படுகிறது போலுள்ளதே ? உ.பி, பீகார், ம.பி,ராஜஸ்தான், போன்ற பீமாரு பிரதேச இந்திக்காரர்களின் கதைக்களத்தில் எந்தப் படமும் வருவது போல் தெரியலையே?
பதில்: உபி, மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களுக்குள் போய் பார்த்திருக்கிறீர்களா? அங்கெல்லாம் ஓடும் படங்களே அலாதிதான். ஜய் சந்தோஷி மா என்னும் படம் சமீபத்தில் எழுபதுகளில் ஓடி வசூலை அள்ளியது. அதைப் பார்த்தால் ரொம்பவுமே குழந்தைத்தனமாக இருக்கும். நம்மூர் ஏ.பி.நாகராஜன் அவர்களது தரம் எல்லாம் அப்படத்தை எடுத்தவர்களுக்கு எட்டாக்கனி. அதை விடுங்கள் ஜய் ஷாகும்பரி மாதா என்னும் படம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காய்கறிகளுக்கெல்லாம் அதிபதியாம். சுகேது மேத்தாவின் Maximum City என்னும் புத்தகத்தில் அப்படம் பற்றி எழுதியிருக்கிறார். அப்படம் பம்பாய்க்கு கூட வரவில்லை (இங்கு காய்கறிக்கு இறைவி தேவை இல்லை. வாடகைக்கு வீடு கிடைக்கச் செய்யும் இறைவிதான் தேவை என அவர் கிண்டலடித்துள்ளார். வட இந்திய பி அண்ட் சி செண்டர்களிலேயே ஓடி பணம் சம்பாதித்து விட்டது. ஆக நீங்கள் குறிப்பிடும் படங்கள் நகர்வாழ் பார்வையாளர்களுக்கு கிடைக்காது.

3. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் கூட இல்லாத நிலையில் அத்வானி ஏன் இன்னும் கூட்டணி உருவாக்குவதில் வேகம் காட்டவில்லை? கூட்டணி வைத்தால் தான் வெற்றி என்ற நிலை நாடு முழுவதும் வந்து விட்ட இந்தக் காலத்தில்?
பதில்: அகில இந்திய நிலை பரவாயில்லை. தமிழகத்தில் என்னவோ பாஜக ஐயோ பாவம் கேஸ்தான். அவர் என்ன கூட்டணிக்கு மாட்டேன் என்றா கூறுகிறார்? தமிழக கட்சிகள்தான் பாஜக என்றாலே தூர ஓடுகின்றன. ஒரு வேளை மத்தியில் பாஜக ஜெயிக்க வேண்டும் என இங்குள்ள கட்சிகள் எதிர்பார்க்கின்றனவோ என்னவோ, நான் அறியேன். இதற்குத்தான் தமிழில் ஒரு சொலவடை உண்டு, “கல்யாணம் ஆனாத்தான் பைத்தியம் தெளியும், பைத்தியம் தெளிஞ்சாத்தான் கல்யாணம் நடக்கும்” என்று.

4. அனில் அம்பானியும், சுனில் மிட்டலும், ரத்தன் டாட்டாவும் மோடி பிரதமராக வந்தால் நல்லது என விளம்பி இருக்கின்றனரே?
பதில்: இந்த எலெக்‌ஷனில் அது சாத்தியமில்லை. மோடிக்கு இன்னும் நேரம் இருக்கிறது. முதலில் மத்திய மந்திரியாகி தனது அமைச்சகத்தை கன் பாயிண்டில் வைக்க வேண்டும். ஆனால் அதற்கு பிரதமர் ஆதரவு தேவை. இப்போதைக்கு அவர் சேவை குஜராத்துக்குத்தான் அதிகம் தேவை என நான் நினைக்கிறேன்.

5. வலைப்பதிவு உலக கிசுகிசு ஒன்று சொல்லுங்களேன்?
பதில்: மேலே சங்கராச்சாரியார் சம்பந்தப்பட்ட கேள்விக்கு எனக்கு விவரம் தந்தவரின் பெயரை நான் கூறவில்லை. அதையே கிசுகிசுவாக வைத்து கொண்டு அவர் யார் என கண்டு பிடியுங்களேன். கார்த்திகேயன் அருள் இருந்தால் கண்டு பிடிக்கலாம்.

6. உங்களின் அன்றாட உணவு வகைகள், நேரங்கள் என்னென்ன? நடைபயிற்சி தவிர உணவுக்கட்டுப்பாடும் உண்டா?
பதில்: பசித்து உண்பதுதான் சரி. உணவு உண்ணும் வேளை வரும்போது பசிக்காமல் இருந்தால் அந்த வேளை உணவை தியாகம் செய்வது நலம். ஆனால் ஒன்று, இம்மாதிரி பசியின்மை தொடர்ந்து வந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

7. டாக்டர் பிரகாஷ் விவகாரத்தில் ஒரு பிரபலத்தின் மகளும் சிக்கிக் கொண்டதால்தான் அவருக்கு அவரச அவசரமாய் திருமணம் நடத்தப்பட்டதாமே?
பதில்: தெரியாது, தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை.

8. டி.எம்.எஸ் பாடிய பாடல்களில் பிடித்த 5 பாடல்கள் எது? ஏன்?
பதில்: ரொம்ப கஷ்டமான கேள்வி. இருந்தாலும் முயற்சி செய்கிறேன். 1. நூறாயிரம் பார்வையிலே (படம் வல்லவனுக்கு வல்லவன்)
2. நல்ல பேரை வாங்க வேண்டும் (படம் நம்நாடு. இரு குழந்தைகளில் சின்ன குழந்தை யார் என்று தெரிகிறதா)?
3. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் (படம் படகோட்டி)
4. அவள் பறந்து போனாளே (படம் பார் மகளே பார்)
5. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா (படம் ஆலயமணி)
காரணம்? அப்பாடல்களை நீங்களே கேளுங்களேன்.

9. ஜப்பான் சென்றுள்ள லாலு பிரசாத் புல்லட் ரயிலில் சென்று வந்துள்ளாரே ? இந்தியாவிலும் புல்லட் ரயில் விடப்போகிறாராமே? நிஜமாகவே நடக்குமா?
பதில்: லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சகத்துக்கு ஒரு pleasant surprise. அவர் மனது வைத்து, அரசும் ஒத்துழைப்பு தந்தால் நிஜமாகவே நடக்கும். இந்த திறமை விஷயத்தில் அவர் மோடியுடன் ஒப்பிடக் கூடியவர். ஆனால் லஞ்ச ஊழல் புகார்கள் அவருக்கு இழுக்கு தருகின்றன.

10. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள நம் தமிழக அரசியல்வாதிகள் - அதை எவ்வாறு ஆப்பரேட் செய்கின்றனர்? பணத்தேவை ஏற்படும் போது எந்த ரூட்டில் அந்தப் பணம் இங்கு வருகிறது ? டெபாசிட் செய்யும் போது எப்படி ஸ்விஸ்க்கு செல்கிறது?
பதில்: கிழிஞ்சுது லம்பாடி லுங்கி என ஒய்.ஜி. மகேந்திரன் ஒரு படத்தில் கூறுவார். என்னைப் போய் இந்த கேள்வி கேட்கலாகுமா? எனக்கு எப்படி தெரியும்? பாஸ்போர்ட் கூட கிடையாது என்னிடம். (பை தி வே நான் சொன்ன அந்த மகேந்திரன் படம் ரஜனிகாந்த், ராதிகா, கார்த்திக், சங்கராபரனம் துளசி ஆகியோர் நடித்தது. “என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்த மானே” என்ற இனிமையான பாடல் அதில் வரும். படத்தின் பெயர் தெரியவில்லை. யாராவது கூற இயலுமா)?


விஜய்:
1. ஒபாமாவின் பதவியேற்பைப் பார்த்தீங்களா?
பதில்: லைவாக பார்க்கவில்லை. மறந்து விட்டேன். அடுத்த நாள் காலை செய்திகளில் பார்த்தேன்.

2. பதவியேற்பு உரை பிடித்ததா?
பதில்: ஒரு கருத்தும் இல்லை, ஏனெனில் பார்க்கவில்லை.

3. என்றைக்கு நம் நாட்டு பிரதமரும் இப்படி உணர்ச்சி பூர்வமாகப் பேசும் (யாரோ எழுதிக் கொடுத்ததைப் பார்த்துப் படிக்காமல்) தருணம் வரும்?
பதில்: அப்படித்தான் என்பதை நீங்கள் அறிவீர்களா? அப்படியே பார்த்து படித்தாலும் என்ன தவறு? அவர் என்ன சொல்கிறார் என்பதுதானே முக்கியம்?

4. நம் நாட்டு தொல்லைக் காட்சி சானல்கள் அனைத்தும் கறுப்பு அதிபர் கறுப்பு அதிபர் என்று ஏன் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்? ஆனால் CNNஓ, BBC'ஓ அப்படிச் சொல்ல வில்லையே?
பதில்: இல்லையே சொன்னார்களே, ஆங்கிலத்தில். The first Black to be a president என்று சொல்வதை நானே கேட்டேனே.

5. இன்னமும் ஒபாமா மீதான காண்டு தீரவில்லையா?
பதில்: அவர் மேல் எனக்கு என்ன காண்டு இருக்க முடியும்? அவருடன் எனக்கு ஏதேனும் வாய்க்கால் வரப்புத் தகராறா என்ன? ஆனால் நான் ஏற்கனவே கூறியபடி அமெரிக்காவில் நான் ரிபப்ளிகன் கட்சியைத்தான் எப்போதுமே ஆதரிப்பது அப்படியேதான் உள்ளது. பார்ப்போம். இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு பிறகு நான் அதிகமாக விரும்பும் நாடு அமெரிக்கா. அது நன்றாக இருக்க வேண்டுமெனத்தான் நான் விரும்புகிறேன். அப்படியே ஒபாமா அமெரிக்காவை முன்னுக்கு கொண்டு வந்து நான் கூறியது தவறு என நிறுவப்பட்டால் அதற்காக என்னைவிட வேறு யாருமே மகிழ்ச்சி அடைய இயலாது.

6. பதவியேற்கும் போது முதல் இரண்டு வார்த்தைகள் ஒழுங்காக வராமல் தடுமாறினாரே கவனித்தீர்களா?
பதில்: என்னதான் இருந்தாலும் மேடை பயம் யாரை விட்டது?

[நான்கு பதிவுகளாக 120 கேள்விகள் கேட்ட அனானியின் கடைசி 20 கேள்விகளுக்கு இப்பதிவில்தான் பதிலளித்தேன். அவரேதான் இப்போது புதிதாக 25 கேள்விகள் கேட்டுள்ளார் என நினைக்கிறேன். எது எப்படியிருந்தாலும் அக்கேள்விகளை அடுத்த பதிவுக்கு அனுப்புகிறேன்].


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/21/2009

அஞ்சாநெஞ்சன் கஞ்சா கருப்பு


தஞ்சாவூரில் தை திருநாளன்று பிரபலங்களை அழைத்து விழா கொண்டாடும் எம். நடராஜன் அவர்கள் இம்முறை நடிகர் கார்த்திக்கையும் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பையும் அழைக்க, கார்த்திக் அதிலிருந்து எஸ்ஸாகிவிட கஞ்சா கருப்பு மாட்டிக் கொண்டார்.

விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கவிஞர் சினேகன் “அஞ்சா நெஞ்சன் என்று யார் யாரோ தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள். நிஜமான அஞ்சா நெஞ்சனாக இங்கே அமர்ந்திருப்பவர் கஞ்சா கருப்புதான்” என ஏடாகூடமாக பட்டம் தந்து அவரை பொக்கையில் விட்டார். அதுவரை உற்சாகமாக இருந்த கஞ்சா கருப்பு புஸ்வாணமாகிவிட்டார்.

“ஏம்பா தேரை இழுத்து தெருவில விடுறீங்க. நான் செவனேன்னுதானே புள்ள பூச்சியாட்டம் உட்கார்ந்திருக்கேன்” என சலித்தபடியே மைக் பிடித்தார் கஞ்சா கருப்பு. மேற்கொண்டு இக்கூட்ட விவரம் வேண்டுபவர்கள் இந்தவார ஜூனியர் விகடன் (25.01.2009 இதழ்) 19-ஆம் பக்கத்துக்கு செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். டோண்டு ராகவனும் முரளிமனோகரும் இப்பதிவுக்கு செல்கிறோம்.

பருத்திவீரன் படத்தில் இதே மாதிரி ஒரு சீனில்தான் டீக்கடையில் வேலை செய்த கஞ்சா கருப்புவுக்கு வேலை போயிற்று என்பதையும் கஞ்சா கருப்பு உணர்ந்திருப்பார்தானே. பின்னே என்ன, நிஜமான அஞ்சா நெஞ்சனிடம் மோத அவர் என்ன கில்லி விஜயா?



“இந்த மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்பை ரணகளமாக்கிட்டாங்கப்பா”ன்னு வடிவேலு வின்னர் படத்தில் நொந்து கொள்வதும் நினைவுக்கு வருகிறது.



இன்னொரு சீனும் நினைவுக்கு வருகிறது. வடிவேலு தன் வேலைக்காரன் பின்னால் வர, தெருவோரமாகப் போய் கொண்டிருக்கிறார். வழியில் ஒரு டீக்கடையில் ஒருவன் பந்தாவாக அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருக்கிறான். அவன் அவ்வாறு உட்கார்ந்திருப்பதை பொறுக்காத வேலைக்காரன் எஜமானன் வடிவேலுவையும் உசுப்பிவிட்டு அவ்வாறே உட்கார்ந்து பந்தா செய்யும்படி கூறுகிறான். கடைசியில் வடிவேலு சாக்கடையில் விழ வேலையாளி எஸ்ஸாகிறான். இந்த காட்சியை பலமுறை தொலைகாட்சி காமெடி சீன்களில் பார்த்துள்ளேன். ஆனால் படத்தில் பெயர் நினைவுக்கு வரவில்லை. ஆகவே தமிழ்ப்படங்களில் அத்தாரிட்டியான லக்கிலுக்குக்கு ஃபோன் போட்டு கேட்டால், அவர் தானும் இந்த சீனை பார்த்திருப்பதாகவும், ஆனால் பெயர் தனக்கும் நினைவுக்கு வரவில்லை எனக் கூறிவிட்டார். யோசித்து நினைவுக்கு வந்தால் எனக்கு ஃபோன் செய்வதாகக் கூறியுள்ளார். இப்பதிவை பார்க்கும் எவருக்கேனும் அப்படத்தின் பெயர் தெரிந்தால் பின்னூட்டத்தில் கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.

சமீபத்தில் 1978-ல் தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு இடை தேர்தல் வந்தது. அப்போது காங்கிரஸ் அதிமுக கூட்டணி இருந்த காலம். அத்தேர்தலுக்கு இந்திரா காந்தி நிற்பதாக இருந்தது. அவரை எதிர்த்து கலைஞர் நிற்க வேண்டும் என ஒரு பெரிய முயற்சியே நடந்தது. கலைஞருக்கு இதில் அவ்வளவாக உற்சாகம் இல்லை. ஆனால் அவரை சுற்றிய அவரது அடிப்பொடிகள் பயங்கரமாக அலம்பல் செய்து வந்தனர். அப்போது குமுதத்தில் ஓவியர் செல்லம் வரைந்த கேலிச் சித்திரம் வந்தது. அதில் தீமிதிக்கு எல்லாம் தயார் நிலையில் இருக்க, கலைஞருக்கு மாலை போட்டு அவர் இரு கைகளையும் அவரது இரு தொண்டர்கள் பிடித்து கொண்டு, “பாருங்கள், கலைஞர் தீமிதித்து சாதனை காட்டப் போகிறார்” என முழக்கமிடுகிறார்கள். கலைஞரோ முகத்தில் சோகம் கலந்த வெறுப்பை காட்டியவாறு கேமரா லுக் தருகிறார். இந்த மாதிரி தொண்டர்கள் இருக்கும்போது எனக்கு எதிரி தேவையா என்பது போல முகத்தில் பாவனை இருக்கும். (கேமரா லுக் என்பது நடிகர் நடிக்கும்போது கேமராவையே பார்ப்பது. அப்போதுதான் பார்வையாளர்கள் தங்களைத்தான் நடிகர் பார்க்கிறார் என்ற உணர்வினை பெறுவார்கள்). இந்த மாதிரி கேமரா லுக்கை லாரல் ஹார்டி ஜோடியில் ஹார்டி கேமரா லுக் தருவார். அதன் தாத்பர்யம் என்னவென்றால் இம்மாதிரி படுத்துபவனை வைத்து கொண்டு நான் என்ன செய்வது என்று நொந்து நூடுல்ஸாவதுதான்.

கலைஞரின் நல்லவேளையோ என்னவோ இந்திரா தஞ்சையில் தேர்தலுக்கு நிற்காது சிக்மகளூர் தொகுதிக்கு சென்றார். அதன் பிறகு அதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் சுமுகமில்லாது போக கலைஞர் “நேருவின் மகளை” வரவேற்று போஸ்டர் போட்டு, கூட்டு வைத்து 1980 பாராளுமன்ற தேர்தலில் வென்றது பிறகு நடந்தது. அத்துடன் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவர் கெட்ட வேளையோ என்னவோ அவரை யாரோ உசுப்பிவிட, அவரும் இந்திராவிடம் பேசி எம்.ஜி.ஆரின் மாநில அரசை கலைக்க வைத்தார். பிறகு நடந்த இடை தேர்தலில் மறுபடியும் எம்ஜிஆர் ஜெயித்ததுதான் நடந்தது. அடுத்த 7 ஆண்டுகளுக்கும் மேல் அவரால் முதலமைச்சர் பதவியை கனவுகூட காணமுடியவில்லை. அதைவிட பெரிய கெடுதி என்னவென்றால் அதுவரை ஊழலே இல்லாது ஆட்சி நடத்திய எம்.ஜி.ஆர். பிறகு அதில் கலைஞரே மலைக்கும் அளவுக்கு ஊழலில் பி.எச்.டி. செய்ததுதான்.

“ஏதாவது சீரியசாக பேசாது என்ன இது சும்மா மொக்கை போடுகிறாய்” என முரளி மனோகர் கோபித்து கொள்வதால் சீரியசாகவே பேசி பதிவை முடிக்கிறேன்.

ஆகவே மக்களே தனது வலிமையின் எல்லை அறிந்து செயல்படுவதே நலம், இதிலெல்லாம் மற்றவர் உசுப்பல்களையெல்லாம் அலட்சியம் செய்து நடப்பதே நலம்” என மகாத்மா காந்தி சொன்னதை கேட்டு எல்லோரும் நன்மை பெறுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/20/2009

ஒரு மாத திருப்பாவை விருந்து பிரமாதம்!!!

நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள் நான் இந்தப் பதிவில் குறிப்பிட்டபடி மார்கழி மாதம் முழுவதும் தனது வலைப்பூவில் திருப்பாவை பற்றி தினம் ஒரு பதிவாக போட்டுள்ளார். ஒரு மாதம் போனதே தெரியாமல் சென்று விட்டது.

பதிவுகளை ஆரம்பிக்கும் முன்னால் மார்கழி பற்றியும், பாவை நோன்பு குறித்தும் ஒரு சிறிய முன்னுரை கொடுத்தார். பிறகு தான் ஒவ்வொரு பாட்டையும் பற்றி போடும் பதிவுகளின் ஒட்டுமொத்த டெம்ப்ளேட்டையும் கொடுத்தார். என்ன இருந்தாலும் பொறியியல் நிபுணர் அல்லவா?

நான் சாதாரணமாக இம்மாதிரி ரிலிஜியஸ் பதிவுகளிலெல்லாம் ரொம்ப ஆர்வம் காட்டுவதில்லை. திருப்பாவையில் கூட உந்து மதகளிற்றன் என்னும் பாடலில்தான் எனக்கு அதிக ஆர்வம். அதற்கு முக்கிய காரணமே அது ராமானுஜர் சம்பந்தப்பட்டதுதான். அவரது அப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம்:
“நான் ஆவலுடன் எதிர்ப்பார்த்த திருப்பாவை பாடல் இது. எனக்கு பிடித்த இப்பாடலை முதன் முறையாக சமீபத்தில் அறுபதுகளில் ரா. கணபதி கல்கியில் எழுதியிருந்ததை படித்தபோதே அப்பாடல் என் மனதில் நின்று விட்டது. பல ஆண்டுகள் கழித்து தேசிகன் அவர்கள் தனது பதிவில் எழுதியதையும் படித்தேன்.

திருப்பாவையை பாடியபடி திருக்கோட்டியூரில் பிட்சைக்குச் சென்ற ராமானுஜர், "உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்" பாசுரத்தை பாடிய வண்ணம் நடந்தபோது தான் திருக்கோட்டியூரில் இருப்பதை மறந்து, திருவில்லிபுத்தூரிலேயே இருப்பதாக என்ணிக் கொண்டாராம். தன்னையும் திருப்பாவை பாடும் ஆண்டாளின் தோழிகளில் ஒருவராகவே எண்ணிவிட்டாராம் என்று ரா. கணபதி அவர்கள் எழுதியிருந்தார்.

இப்பாடலை நீங்கள் எப்படிக் கையாளப் போகிறீர்கள் என ஆவலுடன் எதிர்பார்த்தேன். என்னை நீங்கள் ஏமாற்றவில்லை. இதுவரை யோசிக்காத கோணங்களில் எல்லாம் இதை வர்ணித்து விட்டீர்கள்”.

திருப்பாவை ஒவ்வொருவருக்கும் ஒரு அர்த்தம் அளிக்கிறது. ஆண்டவன் மற்றுமே ஆண் பக்தர்கள் அனைவரும் பெண்களே என்ற நாயக நாயகி பாவத்தையும் முன்னிருத்துகிறது.

நம்ம பாலா மாதிரியே பதிவர் கேஆர்எஸ்ஸும் திருப்பாவை பதிவுகள் போட்டுள்ளார். அவர் பாலாவின் பதிவுகளுக்கு வந்து இட்ட பின்னூட்டங்கள் சுவாரசியமானவை. உதாரணத்துக்கு மாலே மணிவண்ணா என்னும் துவங்கும் பாசுரம் பற்றிய பாலாவின் பதிவு. திருப்பாவை பற்றி பதிவுகள் போட்ட இருவரும் நடத்திய பின்னூட்ட விவாதத்தை இங்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நடுவில் சங்கர் வேறு பின்னூட்டம் இட்டிருக்கிறார்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பாலா
இதைக் கொஞ்சம் பாருங்கள்! ஒன்றுக்கொன்று முரண்படும் விளக்கமாக உள்ளது!

//சங்கநாதத்தின் முழக்கமானது நோன்புக்குப் பகைமையாக இருப்பவரை நடுங்கி விலகி ஓடச் செய்யும்//

//சங்கு - பிரணவ நாதம் ஏற்படுத்துவதால் மந்த்ராஸானத்தைக் குறிக்கிறது//

சங்கு - என்றுமே பிரணவ நாதம் தான்! ஆதார ஸ்ருதி என்பார்கள்!
போரில் கூட துவக்கத்தின் அறிகுறி தானே தவிர, பகைவரை ஓடச் செய்யும் அறிகுறி அல்ல! களம் விட்டு ஓட எக்காளம் ஊதப்படும்! சங்கு அல்ல!

ஒரு வேளை, பறை அறைதலை மாற்றிச் சொல்லிவீட்டீர்களோ?

//பல்லாண்டு படிக்க பெரியாழ்வாரையும் நம்மாழ்வாரையும் அனுப்பினான். மங்கள தீபமாக நப்பின்னைப் பிராட்டியை உடன் அனுப்பினான். கொடியாக கருடன் வந்தான். விதானமாக ஆதிசேஷன் வந்தான்.//

நயமான விளக்கம்!
10:56 PM, January 12, 2009
ச.சங்கர் said...
பாலாஜி

சங்கின் மகிமை பற்றி எழுதும் போது ஏன் ஆண்டாளே இன்னொரு இடத்தில் குறிப்பிட்டதை இங்கு"ம்" குறிக்க மறந்தாய்? முன்னமே சொன்னது என்று விட்டு விட்டாயா?எந்த இடமா?யோசி...யோசி..யோசி
" வலம்புரி போல் நின்றதிர்ந்து "
அவன் கையில் உள்ள சங்கம் ஊதும் போது நின்று அதிருமாம்? யாருக்கா? " பேரக் கேட்டாலே சும்மா அதுருதுல்ல" அப்படீன்னு உங்க ஹீரோ யாரைப் பாத்து சொல்றார்? அவங்களுக்குத்தான்.

போர்களிலும் பகைவர்களின் பெருந்தோல்விகளைப் பறை சாற்றும் விதமாக முழங்கி அவர்களது படைகளை சிதறடிப்பதும் சங்கங்கள்தான். "அஸ்வத்தாமா அதஹ" என்று சொல்லி "குஞ்சரஹ"விற்கு முன்னாலும் "போர் நடுசென்டரில்" முழங்கியது சங்க நாதம்தான்.

இப்படிப்பட்ட பெருமை
வாய்ந்த சங்கத்தை ஆண்டாள் தனது நோம்பிற்காய் எவ்வளவு அழகாய்க் கேட்கிறாள்.சூப்பர்.
7:52 PM, January 15, 2009
enRenRum-anbudan.BALA said...
சங்கர்,

மாற்றாருக்கு அச்சத்தைத் தரும் சங்கநாதம் என்பதற்கு இப்படி ஒரு விளக்கமா ? நல்லா இருக்கு :)

திருப்பாவையில் எத்தனை இடங்களில் சங்கம் வருகிறது என்று தெரியும்! அதென்ன "யோசி யோசி யோசி" ;-)

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து*

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ*

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்*

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்*

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே

அத்துடன், பரமனது இருவகைப்பட்ட குணநலன்(அடிய்வரை ஆட்கொள்ளுதல், மாற்றாரின் மாற்றழித்தல்) போலவே, அவனது சங்கமும் இரு வேறு தன்மைகள் கொண்டுள்ளது போலும்!

ஆண்டாள் பரமனின் த்வயத் தன்மையை சுட்டிக் காட்டியிருக்கிறாள்.

நந்தகோபன் குமரன் - அடக்க ஒடுக்கமானவன்
யசோதை இளஞ்சிங்கம் - குறும்புகள் நிறைந்தவன்!

கதிர்-மதியம் போல் முகத்தான்

திங்களும் ஆதித்தனும் எழுந்தாற்போல்
**************

குருகையூர் கோன் பாடியதையும் நினைவு கூர வேண்டும்.

உளன் என அலன் என இவை குணமுடைமையில் உளன் அவன் இரு தகைமையொடும் ஒழிவிலன் பரந்தே !

எ.அ.பாலா
10:16 PM, January 15, 2009
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//போர்களிலும் பகைவர்களின் பெருந்தோல்விகளைப் பறை சாற்றும் விதமாக முழங்கி அவர்களது படைகளை சிதறடிப்பதும் சங்கங்கள்தான்//

போரில் தம் "வெற்றியைக்" குறிக்கத் தான் சங்கம் முழங்குவார்களே அன்றி, எதிர்ப் படைகளை "ஓட வைக்கவோ, சிதறடிக்கவோ" சங்கம் முழங்க மாட்டார்கள்!

//"அஸ்வத்தாமா அதஹ" என்று சொல்லி "குஞ்சரஹ"விற்கு முன்னாலும் "போர் நடுசென்டரில்" முழங்கியது சங்க நாதம்தான்//

"போர் நடுசென்டரில்" எல்லாம் முழங்கலீங்க திரு. ச.சங்கர்!

அன்றைய போர் "முடிந்து" அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் போது, வெற்றி முழக்கமாக அது முழங்கப்பட்டது! எதிர்ப் படைகளை ஓட வைக்கவோ, துரோணரைச் சிதறடிக்கவோ சங்கம் முழங்கவில்லை!

அந்தச் சங்க நாதத்தைக் கேட்டதால் ஆச்சாரியர் துரோணரும் பயந்து போய் சிதறி எல்லாம் ஓட வில்லை! மனம் ஒருமைத் தான் பட்டார்!

//"பேரக் கேட்டாலே சும்மா அதுருதுல்ல"//

அதற்குப் பயன்படுவது சங்கு அல்ல! "அதிர வைக்க" சங்கைப் பயன்படுத்த மாட்டார்கள்! பறை கொட்டுவார்கள்! எக்காளம் ஊதுவார்கள்! வெட்சி-கரந்தை, வஞ்சி-காஞ்சி, உழிஞை-நொச்சி என்ற திணைகளையும் பாருங்கள்! பகைவர் சிதறுதலைக் காட்டும்!

பெருமாளின் சங்கம் = பிரணவ நாதம்!
பிரணவம் எதிரிக்கு ஆகட்டும், உற்றார்க்கு ஆகட்டும், நாதமே காட்டும்! மிரட்டாது! ஓட்டாது! ஓட வைக்காது!

"சும்மா அதுருதுல்ல" என்ற வீண் தம்பட்டங்களுக்கு, சுய தம்பட்டங்களுக்கு எல்லாம் பிரணவம் பயன்படுவது கிடையாது!

ஜெய முழக்கம் கேட்டு, தம் வீண் தம்பட்டங்கள் இனி செல்லாது என்று பகைவர்கள், தானாக ஓடினால் தான் உண்டு! :)

அதான் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டுச் சொன்னேன்
போரில் கூட சங்கநாதம் துவக்கத்தின்/முடிவின்/வெற்றியின் அறிகுறி தானே தவிர, பகைவரை ஓடச் செய்யும் அறிகுறி அல்ல!
9:18 PM, January 16, 2009
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//திருப்பாவையில் எத்தனை இடங்களில் சங்கம் வருகிறது என்று தெரியும்!//

"எதற்காக வருகிறது" என்றும் தெரிய வேண்டும் அல்லவா? :)
எண்ணிக்கை முக்கியமல்ல!
எண்ணிக்-கை பற்றல் தான் முக்கியம்!

1. வலம்புரி போல் நின்று அதிர்ந்து = மழைக்காக முழக்கம்! வாழ உலகில்-அதற்காக முழக்கம்!

//சங்கம் ஊதும் போது நின்று அதிருமாம்? யாருக்கா? "பேரக் கேட்டாலே சும்மா அதுருதுல்ல// போன்ற தம்பட்ட முழக்கம் எல்லாம் பெருமாளுக்கு அல்ல! வெறும் ஆளுக்குத் தான்! :)

2. புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ = யாரையும் களத்தில் இருந்து ஓட்டிட முழங்கலை! கோயிலில் பிரணவமாய் முழங்குகிறார்கள்!

3. தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் = யாரையும் களத்தில் இருந்து ஓட்டிட முழங்கலை! கோயிலில் பிரணவமாய் முழங்குகிறார்கள்!

4. ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன, பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் = நடுங்க+முரல்வன என்று சேர்த்துச் சொல்கிறாள்!

முரல்தல் வண்டுகளின் சப்தம்! வண்டினம் முரலும் சோலை என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார்!
சங்க நாதம் அப்படித் தான் இருக்காம்! பூம்ம்ம்ம்ம் என்று ஓம்ம்ம்ம்ம் போல் ஒலிக்குது!

நடுங்க+முரல்வன என்பதில் நடுக்கம், ஒடுங்கத் தான்! "விலகி ஓடச்" செய்ய அல்ல! அதான் "நடுங்கி ஓட" என்னாது "நடுங்கி முரல்வன" என்கிறாள்! வண்டுகளின் ஹூங்கார ஓங்கார சப்தம்!

5. நாச்சியார் திருமொழியில் சொல்லாழி வெண்சங்கே என்ற பத்து பாசுரமும் இதே அடிப்படை தான்!

//சங்கநாதத்தின் முழக்கமானது நோன்புக்குப் பகைமையாக இருப்பவரை நடுங்கி "விலகி ஓடச் செய்யும்"//

சங்கத் த்வனியின் பிரணவ நாதம் மாற்றார்க்கு நடுக்கம் கொடுக்கும்! அந்த நடுக்கமானது ஒடுக்கம் கொடுக்கும்!

அதனால் தான், "விலகி ஓடச் செய்யும்" என்பதை மட்டும் சுட்டிக் காட்டினேன்! "விலகி ஓடச்" செய்யாது! "விலக்குதல்" பிரணவ மேன்மை ஆகாது!

//ஆண்டாள் பரமனின் த்வயத் தன்மையை சுட்டிக் காட்டியிருக்கிறாள்//

துவய மந்திரத்தில் பிரணவம் இருக்காது! இதே தான் காரணம்! "விலகி ஓடச்" செய்யாது!
"விலக்குதல்" பிரணவ மேன்மை ஆகாது!

அதை மட்டுமே அடியேன் சுட்டிக் காட்டினேன்!
9:52 PM, January 16, 2009
ச.சங்கர் said...
பாலாஜி

நேற்றுப் பின்னூட்டம் இட்டதின் தொடர்ச்சியாக மேலும் சில பாசுரங்கள் "சங்கத்தின்" சார்பாக

பந்தார் விரளாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப்,
பாரதத்து
கந்தார் களிற்றுக் கழன் மன்னர் கலங்கச் சங்கம் வாய்வைத்தான்
.............................................................................................
..............................................................................................


என்றும்

கயம் கொள் புண்தலைக் களிறுந்து வெந்திறல்

கழல் மன்னர் பெரும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும்
வந்திலன், மறிகடல் நீர்
............................................................................................
.............................................................................................

என்றும்

பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் போற்றியிருக்கிறார்

மேலும் பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதியிலே

மயங்க வலம்புரி வாய்வைத்து வானத்
தியங்கும் எரிமதிரோன் றன்னை முயங்கமருள்
தேராழி யால் மறைத்த தென்நீ திருமாலே
போராழிக் கையால் பொருது ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என்றும் போர்க்களத்திலே எதிரிகளை மயங்கவும் , கலங்கடிக்கவும்வும் அடிக்க சங்க நாதம் செய்ததை அழகுற சொல்லியிருக்கிறார்கள்.


சங்க நாதம் "ப்ரணவ நாதம்" என்று பூர்வாச்சாரியர்கள் சொல்லியிருக்கின்றனர் என்பதை நானும் படித்திருக்கிறேன். ஆனால் மற்ற தாத்பரியங்கள் இல்லை என்று எங்கும் நான் படித்த நினைவில்லை .எனவே நீ குறிப்பிட்டது போல் எதிரிகளை பயந்து, கலங்கி , அதிரடிக்கும் சங்கு என்று நேரடி அர்த்ததில் கூறப்பட்டிருப்பது நானறிந்த வரையில் சரியாகத்தான் இருக்கிறது.
11:02 PM, January 16, 2009
enRenRum-anbudan.BALA said...
//"எதற்காக வருகிறது" என்றும் தெரிய வேண்டும் அல்லவா? :)
எண்ணிக்கை முக்கியமல்ல!
எண்ணிக்-கை பற்றல் தான் முக்கியம்!
//
சங்கர் கேட்டதற்காக இத்தனை இடங்களில் வருகிறது என்று குறிப்பிட்டதற்கு, **'எதற்காக வருகிறது?' 'என்றும்' தெரிந்து கொள்ளுங்கள்** என்றால், நான் சொல்ல எதுவுமில்லை!

சங்கம் பிரணவத்தைக் குறிப்பதால், அதன் முழக்கத்திற்கு எதிர்மறையான விளைவு இல்லை என்று அர்த்தமாகாது! முன்பே சொன்னது போல, ஓரு பாசுரத்திற்கு பன்முனை விளக்கம் என்பதை அதைச் சுவைப்பதற்கான அனுபவமாகக் கொள்ளல் வேண்டும்.

மேலும், நான் "த்வயத் தன்மை" என்று சொன்னபோது, த்வயம் = இரண்டு என்ற அர்த்தத்தில் சொன்னேன். த்வய மந்திரத்தைப் பற்றி எதுவும் சொல்ல வரவில்லை! அதனால், தான் நம்மாழ்வார் பாசுரத்தைச் சுட்டினேன், பரமனின் இருவகைப்பட்ட நிலைகளைக் குறிக்க மட்டுமே.

நன்றி.
11:37 PM, January 16, 2009
ச.சங்கர் said...
அன்புள்ள பாலா

வியாச பாரதத்தில் துரோண பர்வத்தில் வரும் சில சங்கு முழக்கங்களையும் சுட்டியுள்ளேன்.சம்ஸ்க்ருதம் எனக்கு தெரியாதாகையால் G M கங்குலி என்பவரால் மொழி பெயர்க்கப் பட்ட புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டியுள்ளேன்.

1)அபிமன்யு இறந்த அன்று இரவு அர்ஜுனன் மறுநாள் சூரிய மறைவுக்குள் ஜயத்ரதனை வதைப்பதாக சபதம் எடுக்கிறான். அப்படி சபதம் எடுத்ததும் அர்சுனனும் ,கிருஷ்ணனும் தத்தனது சங்கங்களான தேவதத்தத்தையும், பாஞஜன்யத்தையும் எடுத்து ஊதுகிறார்கள். அது போரின் தொடக்கமும் அல்ல, முடிவும் அல்ல, வெற்றியைக் குறித்த முழக்கமும் அல்ல. அந்த சங்கங்களின் முழக்கம் பற்றிய மொழி பெயர்ப்பை கங்குலியின் வார்த்தைகளில் அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன்

"After Arjuna had taken that oath, Janarddana, filled with wrath, blew his conch, Panchajanya. And Phalguna blew Devadatta. The great conch Panchajanya, well filled with the wind from Krishna's mouth, produced a loud blare. And that blare made the regents of the cardinal and the subsidiary points, the nether regions, and the whole universe, to shake, as it happens at the end of the Yuga. Indeed after the high-souled Arjuna had taken the oath, the sound of thousands of musical instruments and loud leonine roars arose from the Pandava camp."

வியாசர் அந்த சங்க நாதம் உலகத்தையே உலுக்கியது என்று எழுதியிருப்பதாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2) மறுநாள் போரில் ஜயத்ரதனை காப்பதற்காக நிறைய மஹாரதர்கள் குவிந்து அர்சுனன் ரதத்தை சூழ்ந்து தாக்கும் போது கிருஷ்ணன் அர்ஜுனனை காண்டீவத்தை "டங்காரம்" செய்யச் சொல்லி கூடவே தன் சங்கமான பாஞ்ச ஜன்யத்தையும் ஊதுகிராராம்.

"Beholding that great bowman afflicted with the shafts of Dhananjaya and fallen into great distress, many warriors rushed to the spot, desirous of rescuing him. These, with many thousands of cars, well-equipped elephants and horses, as also with large bodies of foot-soldiers, excited with wrath, encompassed by large bodies of men, neither that car of theirs nor of Arjuna and Govinda could any longer be seen. Then Arjuna, by the might of his weapons, began to slaughter that host. And car-warriors and elephants, by hundreds, deprived of limbs, fell fast on the field. Slain, or in the act of being slain, those failed to reach the excellent car. Indeed, the car on which Arjuna rode, stood motionless full two miles from the besieging force on every side. Then the Vrishni hero (Krishna), without taking any time, said unto Arjuna these words: Draw thy bow quickly and with great force, for I will blow my conch.' Thus addressed, Arjuna drawing his bow Gandiva with great force, began to slaughter the foe, shooting dense showers of shafts and making a loud noise by stretching the bowstring with his fingers. Kesava meanwhile forcibly and very loudly blew his conch Panchajanya, his face covered with dust. In consequence of the blare of that conch and of the twang of Gandiva, the Kuru warriors, strong or weak, all fell down on the ground. The car of Arjuna then freed from that press, looked resplendent like a cloud driven by the wind. (Beholding Arjuna) the protectors of Jayadratha, with their followers, became filled with rage. Indeed, those mighty bowmen, the protectors of the ruler of Sindhus, suddenly beholding Partha, uttered loud shouts, filling the earth with that noise. The whiz of their arrows were mingled with other fierce noises and the loud blare of their conchs. Those high-souled warriors uttered leonine shouts. Hearing that awful uproar raised by thy troops, Vasudeva and Dhananjaya blew their conchs. With their loud blare (of their conchs), the whole earth, with her mountains and seas and islands and the nether regions, O monarch, seemed to be filled. Indeed, that blare, O best of Bharatas, filled all the points of the compass, and was echoed back by both the armies. Then thy car-warriors, beholding Krishna and Dhananjaya, became very much frightened."

இது நடந்தது போரின் அன்றைய தினத்தின் "நடு சென்டரில்தான்". இங்கு பாஞ்சஜன்யத்தை எடுத்தூதியது வெற்றியைக் குறிக்கவும் அல்ல.அந்த நாதத்தை கேட்ட பகை கெளரவ வீரர்கள் சிதறி விழுந்தனராம்.அப்படி விழுந்ததும் அர்சுனனுடைய ரதம் அந்தப் பகைவர் கூட்டத்தின் மத்தியிலிருந்து விடுபட்டதாம், வியாசர் சொன்னதாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளதைக் காணலாம். அதன் பின் மற்றும் போரின் "நடு சென்டரில்" ஒரு முறை இருவரும் எழுப்பும் சங்க நாதத்திற்கு பகைவர் பயந்தனர்(அ)நடுங்கினர் என்று கூறியிருப்பதையும் காணமுடியும்.

3,பின்னும் பகைவர்களை மிரட்டும் வண்ணம் எதிரெதிர் அணியிலுல்ளவர்கள் (கிருஷ்ணன், அர்ஜுனன் உட்பட) எப்படி சங்கம் ஊதினார்கள் என பின் வரும் விளக்கத்தில் சொல்கிறார்

"Those foremost of men, taking up their conchs blew them, filling O king, the welkin and the earth with her seas (with that blare). Then those foremost ones among the gods, viz., Vasudeva and Dhananjaya, also blew their foremost of conchs on earth. The son of Kunti blew Devadatta, and Kesava blew Panchajanya. The loud blast of Devadatta, sent forth by Dhananjaya, filled the earth, the welkin, and ten points of the compass. And so Panchajanya also blown by Vasudeva, surpassing all sounds, filled the sky and the earth. And while that awful and fierce noise continued, a noise that inspired the timid with fear and the brave with cheers, and while drums and Jharjharas, and cymbals and Mridangas, O great king, were beat by thousands, great car-warriors invited to the Kuru side and solicitous of Dhananjaya's welfare, those great bowmen, filled with rage and unable to bear the loud blast of Arjuna's and Krishna's conchs, those kings from diverse realms supported by their respective troops, in rage blew their great conchs, desiring to answer with their own blasts the blasts of Kesava and Arjuna. The Kuru army then, urged forward by that blare of conchs, had its car-warriors, elephants, and steeds filled with anxiety and fear. Indeed, O lord, that host looked as if they that comprised it were ill. The agitated Kuru host, echoing with that blare of conchs blown by brave warriors, seemed to be like the welkin resounding with the noise of thunder and fallen down (through some convulsion of nature). 1 That loud uproar, O monarch, resounded through the ten points and frightened that host like critical incidents at the end of the Yuga frightening all living creatures. Then, Duryodhana and those eight great car-warriors appointed for the protection of Jayadratha all surrounded the son of Pandu."

இதற்கு மூல சமஸ்க்ருத ஸ்லோகங்கள் வேண்டுமாயினும் அறிந்தவர்களிடம் கேட்டுத் தருவது ஒன்றும் பெரிய காரியமன்று.அதே நேரத்தில் "அஸ்வத்தாமா அதஹ"விற்க்குப் பிறகு "குஞ்சரஹவிற்கு" முன் சங்கம் முழங்கியதாக S M கங்குலியின் ட்ரன்ஸ்லேஷனில் குறிப்பில்லை,ராஜாஜி பாரத மொழிபெயர்ப்பிலும் கூட குறிப்பில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன்.(அது உபன்யாச வழியாகக் கேட்டதுதான்)

பாஞ்ச ஜன்யத்தின் சங்கநாதம் அதிர வைக்கும், நடுங்க வைக்கும். சிதற வைக்கும், எதிரிகளை ஓட வைக்கும் என்று வியாசரும் சொல்லியிருக்கிறாராம்.

இதுவரை தொகுத்த தகவல்களை வைத்து நீ ஏன் "சங்கத்தின்" சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி தனிப் பதிவு போடக் கூடாது ??
3:08 AM, January 17, 2009
enRenRum-anbudan.BALA said...
சங்கர்,

சங்கநாதம் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை மாதிரி உள்ளது தங்கள் பின்னூட்டம் :) பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன், நன்றி !

இப்படியெல்லாம் எழுதுவதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பந்தம் தான் காரணம் போல் தெரிகிறது :) கோதை நாச்சியாருக்கும் நன்றி!

அபிமன்யு கொல்லப்பட்ட அன்று பார்த்தனுக்கு தேரோட்டிய் சாரதி கடுங்கோபத்தில் தன் பாஞ்சஜன்னியத்தை ஊதியதாக ராஜாஜியும் எழுதியதாகத் தான் ஞாபகம், அர்ஜுனன் சங்கெடுத்து ஊதியது பற்றி அவர் குறிப்பிட்டுள்ளாரா என்று எனக்குத் தெரியவில்லை.

எ.அ.பாலா
2:25 PM, January 17, 2009
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
திரு.ச.சங்கர் அவர்கள் தன் கருத்துக்களைத் தானே மறுத்து உரைக்கிறார்! :)

"கலங்கச்" சங்கம் வாய்வைத்தான்
"மயங்க" வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும்
"மயங்க" வலம்புரி வாய்வைத்து

என்று எம்பெருமானிடத்தில் மாற்றார், "கலங்கவும்","மயங்கவும்" தான் சங்க நாதம்! "விலகி ஓடச்" செய்ய அல்ல!

அதான் "விலகி ஓடச் செய்ய" என்று குறிக்க வேண்டாம் பாலா, என்று அடியேன் கேட்டுக் கொண்டேன்!
முந்தைய பின்னூட்டதில் நடுங்க+முரல்வன என்றும் எடுத்துக் காட்டினேன்!
உங்களின் மற்ற நய விளக்கங்களைப் பாராட்டவும் பாராட்டினேன்!

ஆனால் வழக்கம் போல் புரிந்து கொள்ளாமல்,
வெறுமனே திரட்டும் பொருட்டு,
திருச்சங்கம் வருகின்ற எத்துனை பாசுரங்களை இங்கே நீங்கள் எடுத்து ஆண்டாலும்......
அவற்றில் ஒன்றில் கூட "விலகி ஓடச் செய்யும் படி" இருக்காது! :)))

//சங்கம் பிரணவத்தைக் குறிப்பதால், அதன் முழக்கத்திற்கு எதிர்மறையான விளைவு இல்லை என்று அர்த்தமாகாது!//

அடியேனும் அப்படிச் சொல்லவில்லை! ஆயுதங்களுக்கு அனுக்ரஹ/நிக்ரஹ அம்சங்கள் உண்டு! ஆனால் தாமரை, சங்கம் இரண்டையும் கூட "ஆயுதம்" என்று சொல்வானேன்? என்பது தான் சூட்சுமம்! அவை எம்பெருமானிடத்து இருந்து "விலகி ஓடச் செய்யும் படி" இருக்காது என்று தான் குறிப்பிட்டேன்! "ஒடுங்குதலுக்கும்", "விலகி ஓடுதலுக்கும்" நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதைச் சற்று நிதானித்தால், உங்களுக்கே புரியும்!

//முன்பே சொன்னது போல, ஓரு பாசுரத்திற்கு பன்முனை விளக்கம் என்பதை அதைச் சுவைப்பதற்கான அனுபவமாகக் கொள்ளல் வேண்டும்//

அது தங்களுக்கும் பொருந்தும் அல்லவா? :)
பன்முனை, பல்தர விளக்கங்கள் அதைச் சுவைப்பதற்கான "அனுபவமாகக்" நீங்களும் கொள்ளல் வேண்டும்! :)

குறிப்பு:
இங்கே அடியேன் அடியேன் என்றது "மிகையான போலியான தன்னடக்கத்துக்கு" அல்ல! :)
அது வைணவ பரிபாஷை! பரிபக்குவம் புரிந்தால் பரிபாஷையும் புரியும்! :)

அது தான் நம்மாழ்வார் காட்டும், "மிகையான போலியான தன்னடக்கம்"! :)
அடியார், அடியார், தம் அடியார், அடியார் தமக்கு,
அடியார், அடியார், தம் அடியார், அடி யோங்களே!
9:11 PM, January 17, 2009
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சபதம் எடுத்ததும் அர்சுனனும் ,கிருஷ்ணனும் தத்தனது சங்கங்களான தேவதத்தத்தையும், பாஞஜன்யத்தையும் எடுத்து ஊதுகிறார்கள், அது போரின் தொடக்கமும் அல்ல,//

ஹா ஹா ஹா
ஆனால் சபதத்தின் தொடக்கம் அல்லவா? :)
அன்றைய போரின், அன்றைய காரியத்தின் தொடக்கம் அல்லவா?

//கிருஷ்ணன் அர்ஜுனனை காண்டீவத்தை "டங்காரம்" செய்யச் சொல்லி கூடவே தன் சங்கமான பாஞ்ச ஜன்யத்தையும் ஊதுகிராராம்//

அப்படி டங்காரமும், ஹூங்காரமும் செய்த பின்னர், "விலகி ஓட வில்லையே"?
ஜயத்ரதனைச் சூழ்ந்து காப்பாற்றத் தானே முனைந்தார்கள்? :)
கடைசியில் சக்கரத்தால் மறைத்து, பொழுது சாய்ந்தது போல், சாய்ந்த பின்னர் தானே, அவனை விட்டு விலகினார்கள்?

சங்கை ஊதியது "விலகி ஓடச் செய்ய" அல்ல!
சங்க நாதம் என்பது பிரதிக்ஞையின் அடையாளம், ஒடுக்கத்தின் அடையாளம், பிரணவத்தின் அடையாளம்!

ஓடுக்கம் என்பது வேறு! நீங்கள் சொன்ன "விலகி ஓடச் செய்யும்" என்பது வேறு!

இங்கே பேசு பொருள் நீங்கள் சொன்ன //நோன்புக்குப் பகைமையாக இருப்பவரை நடுங்கி விலகி ஓடச் செய்யும்// என்பது!
பகையை விரட்டவா ஆண்டாள் சங்கைக் கேட்டாள்? - இதுவே கேள்வி!

ஆம் எனில்,
1. யார் நோன்பின் பகைவர்?
2. இணங்காதாரையும் வீடு வீடாகச் சென்று அழைக்கும் கோதையின் கருணையுள்ளம், விரட்டவா சங்கைக் கேட்கும்? "விலகி ஓடச் செய்யவா" சங்கைக் கேட்கும்?
9:29 PM, January 17, 2009
enRenRum-anbudan.BALA said...
//"ஒடுங்குதலுக்கும்", "விலகி ஓடுதலுக்கும்" நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதைச் சற்று நிதானித்தால், உங்களுக்கே புரியும்!
//
சங்கு ஊதியபோது, பகைவர்கள் நடுங்கி ஒடுங்கினார்கள் என்பதிலோ, விலகி/சிதறி ஓடினார்கள் என்பதிலோ நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக நீங்கள் கருதுவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது. மேலும், இந்த வார்த்தை விளையாட்டை வளர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை!

முதலில் "போரில் கூட துவக்கத்தின் அறிகுறி தானே தவிர," என்று கூறினீர்கள். அடுத்தபடியாக "துவக்கத்தின்/முடிவின்/வெற்றியின் அறிகுறி தானே தவிர" என்று சேர்த்துக் கொண்டீர்கள். அப்புறம் சற்று யோசித்து, "சபதத்தின் தொடக்கத்தையும்" சேர்த்துக் கொண்டீர்கள்! ஏன் என்று கேட்டு அதைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை!

//அது தங்களுக்கும் பொருந்தும் அல்லவா? :)
பன்முனை, பல்தர விளக்கங்கள் அதைச் சுவைப்பதற்கான "அனுபவமாகக்" நீங்களும் கொள்ளல் வேண்டும்! :)
//
சுவைப்பதற்கான அனுபவமாக இருந்தால் கண்டிப்பாகச் சுவைக்கலாம்! நீங்கள் உள் உறைப் பொருளையும், நேரான பொருளையும் ஒப்பிட்டுப் பேசியதால் இப்படி சொல்ல வேண்டியதாயிற்று. முன்னமே "புள்ளும் சிலம்பின காண்" பாசுர பின்னூட்டத்திலும், பெரியாழ்வார் எப்படி ஆண்டாளுக்கு "பிள்ளாய்" ஆவார் என்றபோது, இதையே தான் சொன்னேன்.

//அது வைணவ பரிபாஷை! பரிபக்குவம் புரிந்தால் பரிபாஷையும் புரியும்! :)//
உங்கள் அளவு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு எனக்கும் பரிபக்குவமும், பரிபாஷையும் புரியும் என்றே நினைக்கிறேன்! மற்றபடி, பகவத் சங்கல்பம் தான்!

//அது தான் நம்மாழ்வார் காட்டும், "மிகையான போலியான தன்னடக்கம்"! :)
அடியார், அடியார், தம் அடியார், அடியார் தமக்கு,
அடியார், அடியார், தம் அடியார், அடி யோங்களே!
//
இது போன்ற, "ஆழ்வார் குறித்த நகைச்சுவை" தயவு செய்து இங்கு வேண்டாமே :-(

//2. இணங்காதாரையும் வீடு வீடாகச் சென்று அழைக்கும் கோதையின் கருணையுள்ளம், விரட்டவா சங்கைக் கேட்கும்? "விலகி ஓடச் செய்யவா" சங்கைக் கேட்கும்?
//
ஆய்ப்பாடியில் (அல்லது கோபியரில்) "இணங்காதார்" யாரும் கிடையாது! ஆண்டாள், உறக்கத்தில் சுகம் காண்பவர்களை, துயிலெழுப்புகிறாள். நோன்பிருந்து, அவர்களும் கண்ணபிரான் அருளுக்கு பாத்திரமாக விழைகிறாள், 'ததீயரோடு சரணாகதி' என்ற வைணவக் கோட்பாட்டின் படி. அவர்கள் அனைவரும் அடியவரே, "இணங்காதார்" இல்லை!

"அவரவர் தமதமது அறிவறி வ்கைவகை" கருத்துக்களை சொல்லியாகி விட்டது. போதும் என்று நினைக்கிறேன். நன்றி.
எ.அ.பாலா


நான் இந்த விவாத மழையை பார்த்து ரசித்ததோடு நின்று கொண்டதற்கு முக்கியக் காரணமே என்னிடம் அதை செய்வதற்கான சரக்கு லேது என்பதனாலேயே.

திருப்பாவையின் விசேஷம் என்றுதான் கூறவேண்டும். நாத்திகர் என தன்னை கூறிக்கொள்ளும் கோவி. கண்ணனே பதிவு போட்டுவிட்டார்ல!!. அவர் சுட்டியவை கேஆரெஸ்ஸின் பதிவுகளை. மிகவும் பாராட்டியுள்ளார். பேஷ், பேஷ், மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது