முதலில் தினமலரில் வந்த இச்செய்தியை பார்த்து விடுங்கள். பிறகு என் கருத்தைத் தெரிவிக்கிறேன்
ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்
ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, டில்லியிலும், தமிழகத்திலும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்துள்ள நிலையில், முதல்வர் கருணாநிதி நேற்று ராஜாவை சென்னைக்கு அழைத்து விளக்கம் கேட்டார். "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது, சி.பி.ஐ., ரெய்டில் நடந்தது என்ன?' என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, முதல்வர் விரிவாக விசாரணை நடத்தினார்.
ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக, 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியதை அடுத்து, சி.பி.ஐ., களத்தில் இறங்கியது. கடந்த 8ம் தேதி, முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது முன்னாள் உதவியாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரது வீடுகளிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். டில்லி, சென்னை, பெரம்பலூர் என 14 இடங்களில் நடந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்களையும், பண பரிமாற்றம் தொடர்பான ராஜாவின் முக்கிய டைரி ஒன்றையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றினர். சி.பி.ஐ., நடவடிக்கையால், முதல்வர் கருணாநிதி கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், ராஜாவை அழைத்து முதல்வர் விரிவாக விசாரணை நடத்தினார்.
சி.ஐ.டி., காலனியில் உள்ள இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை, நேற்று காலை ராஜா சந்தித்தார். சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியும், சி.பி.ஐ., ரெய்டு குறித்தும், அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், முதல்வர் விளக்கம் கேட்டறிந்தார். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், அடுத்த கட்டமாக ராஜாவை அழைத்து விசாரணை நடத்தி, அவர் தரும் பதில்களின் அடிப்படையிலும், சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ராஜாவை விசாரணைக்கு அழைத்தால், அடுத்து என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதனால் யார், யார் சிக்குவார்கள், டைரியில் யார், யாருடைய பெயர்கள் எல்லாம் இருக்கின்றன, விசாரணையை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும், முதல்வர் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் மக்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு பெரிய இழப்பு ஏற்படுமோ என்று, தி.மு.க., தலைமை அஞ்சுகிறது. இதனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து பெரிய நெருக்கடி ஏற்பட்டால், கட்சியில் ராஜா வகித்து வரும் கொள்கை பரப்பு செயலர் பதவிக்கும் ஆபத்து வரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்கு தயார்: நேற்று முன்தினம் இரவு 12.10 மணிக்கு, டில்லியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் ராஜா, சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் பேட்டியளிக்கும்போது, "ஸ்பெக்ட்ரம் புகார் குறித்த சி.பி.ஐ., விசாரணை என்பது வழக்கமான நடைமுறை. சி.பி.ஐ.,யின் இந்த நடவடிக்கைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து, குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்' என்றார்.
இப்போது டோண்டு ராகவன்.
கருணாநிதி நிச்சயமாகவே கேட்டிருக்கக் கூடிய ஒரு கேள்வியை நான் ஊகிக்கிறேன்.
“என்ன ராசா, நீங்கள் பதவி இழந்து இவ்வளவு நாட்கள் ஆச்சு. உங்களை விசாரிக்கவில்லையேன்னு எல்லோரும் கேள்வி கேட்டு, சுப்ரீம் கோர்ட்டும் அரசுக்கும் சிபிஐக்கும் கிடுக்கிப் பிடி போடுவதும் பல நாட்களாகவே எல்லோரும் பார்த்துத்தான் வந்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இப்படியா அஜாக்கிரதையாக டயரியை ரெய்டில் சிக்குமாறு வைப்பது”?
ராசா என்ன பதிலளித்திருப்பார் என்பதை நான் உங்களது ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.
ஆனால் ராசா அப்பால் சென்றதும், கருணாநிதி மேலும் இம்மாதிரி யோசித்திருக்கலாம். டயரியை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேணும் என்பதே ராசாவின் நோக்கமாகக் கூட இருக்கலாம். அப்போதுதானே தன்னுடைய கூட்டாளிகள் மற்றும் புரவலர்களும் மாட்டுவர்? மேலும், இந்த நடவடிக்கைக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுத்து, குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதாக ராசா கூறுவது எந்த வரைமுறையில் வரும்? அப்ரூவராக மாறினால் தண்டனை கிடைக்காது/கணிசமான அளவில் குறையும் என்பது அவருக்குத் தெரியாதா?
இதனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து பெரிய நெருக்கடி ஏற்பட்டால், கட்சியில் ராஜா வகித்து வரும் கொள்கை பரப்பு செயலர் பதவிக்கும் ஆபத்து வரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பதும் கருணாநிதி தன்னைத் தானே கேட்கும் கேள்வியின் விளைவுதானோ?
அது சரி, சுப்பிரமணியன் சுவாமியின் கூற்றுப்படி 10% (ராசா) 30% (கருணாநிதி) சம்பாதித்தவருக்கே இந்த மன உளைச்சல் என்றால் 60% சம்பாதித்தவர் (சோனியா) எவ்வளவு யோசிக்க வேண்டும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பாலையில் முளைத்தல்
-
முளைத்தலெனும் தொடர் மொழிநடை, இன்றைய அறைகூவல் அன்புள்ள ஜெயமோகன், அண்மையில்
ஈழத்து எழுத்தாளர் கிரிசாந் எழுத்துகளில் உங்களுடைய நடையின் சாயல் இருப்பதைப்
பற்ற...
1 week ago

