ஒருவர் இந்தியர் மற்றொருவர் ஹங்கெரிய நாட்டைச் சேர்ந்தவர்.ஒருவருக்கொருவர் பரிச்சயம் இல்லை.
ஆனால் இந்த இரு பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
மைத்ரேயியைப் பற்றி அவர் இள வயது ருமேனிய நண்பர் எலியாட் ருமேனிய மொழியில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு "La nuit bengali" என்றத் தலைப்பில் வந்தது.
பிரோஷ்காவைப் பற்றி அவர் ஜெர்மானிய நண்பர் "Ich denke oft an Piroschka" (பிரோஷ்காவின் நினைவு எனக்கு அடிக்கடி வருகிறது) என்றத் தலைப்பில் ஜெர்மன் மொழியில் எழுதியுள்ளார்.
இரண்டு புத்தகங்களுக்கிடையில் அதிசய ஒற்றுமை உண்டு.
முதலில் மைத்ரேயி: 1930-ல் நடந்த உண்மைக் கதையாக அது குறிப்பிடப்பட்டுள்ளது.16 வயது மைத்ரேயிக்கு எலியாட் மேல் ஒரு மயக்கம். இருவர் காதலும் கலாசார வேற்றுமைகள் காரணமாக முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.தன் அனுபவங்களைப் பற்றி எலியாட் தன் நோக்கில் எழுத அது மைத்ரேயியைப் பற்றி வாசகர்களுக்கு ஒரு தவறானக் கண்ணோட்டம் கொடுத்து விட்டது.
மைத்ரேயியும் தன் சிறு வயதுக் காதலைப் பற்றி எழுதியுள்ளார். ஆனால் அது எனக்கு இதுவரைப் படிக்கக் கிடைக்கவில்லை.பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் ஆங்கில மொழி பெயர்ப்பு மைத்ரேயி இறந்தபின்புதான் வெளி வந்தது. அதைப் படிக்க எனக்கு விருப்பம் இல்லை.
இப்போது பிரோஷ்காவைப் பார்ப்போம்.1939 ஹங்கேரியில் நடந்தது.16 வயதுப் பிரோஷ்காவுக்கும் இந்த ஜெர்மானிய வாலிபனுக்கிடையிலும் அன்பு மலர்ந்தது. இந்த நாவலில் யுத்தம் காரணமாகப் பிரிவு ஏற்படுகிறது. "பிறகு நான் பிரோஷ்காவை பார்க்கவேயில்லை" என்ற வரியுடன் ஜெர்மானிய நாவல் முடிவடைகிறது.
ஆனால் இதே புத்தகத்தின் பின்னாள் வெளியீட்டை பார்த்தப் போது அவர்கள் இருவரும் மறுபடிச் சந்தித்ததுப் பற்றிக் குறிப்பிடப் படுகிறது.அப்போதுதான் வாலிபன் கூறியது மிகைப்படுத்தப்பட்டது என்றுத் தெரிய வருகிறது.ஆனால் ஒன்று. பிரோஷ்கா இதைப் பற்றி ஹ்ங்கேரிய மொழியில் கதை ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை.
இரண்டிலிருந்தும் நான் அறிந்தது என்னவென்றால் ஒரே நிகழ்ச்சியைப் பற்றி அதில் சம்பந்தப்பட்ட இருவர் பிற்காலத்தில் எழுதும் போது உள்ளடக்கம், கட்டமைப்பு எல்லாவற்றிலும் வேறுபாடுகள் தெரிகின்றன என்பதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
P.S. I am reposting this as it has vanished from my archive without trace and without any known reason. It is unfortunate that Raviaa's comment too has vanished. I had replied to his query and that too is gone.
A novel-writing workshop at Walnut Creek, California.
-
I conducted a workshop on writing novels in Chennai for Manasa
Publications. Now, my friends in the USA are asking me to hold similar
classes there. A one-...
29 minutes ago
No comments:
Post a Comment