ஆ, எம்ஜிஆரா வில்லத்தனமான ரோலில்?
எம்ஜிஆர் வில்லன் ரோலில் நடித்த ஒரு க்ளிப் பிரஹலாக்தா படத்தில். இதில் அவர் காமாந்தகார இந்திரனாக நடித்து ஹிரண்யகசிபுவின் மனைவி லீலாவதியை ஈவ் டீசிங் செய்யும் காட்சி.
லோக்கலைசேஷனுக்காக செய்யும் காமெடிகள்
பம்மல் சம்பந்த முதலியார் பல ஷேக்ஸ்பியர் நாடகங்களை தமிழாக்கி நடத்தி இருக்கிறார். அவற்றில் பாத்திரங்களுக்கு தமிழ்ப் பெயர்களாக வைப்பார். உதாரணத்துக்கு ஹாம்லெட் அமலாதித்யன், ஒஃபீலியா அபலை, ஜூலியஸ் சீசர் வீரசிம்மன், ப்ரூட்டஸ் பரதன், ஆண்டனி ஆனந்தன், கமில்லெ கமலா போன்றவை. அவர் செய்தது ஒரு லாஜிக்குடன் இருக்கும். பார்ப்பவர்களுக்கும் அவை விபரீதமாகத் தென்படாது.
ஆனால் தற்போது? அவள் ஒரு தொடர்கதை படத்தில் காட்டப்படும் சென்னையின் பல இடங்களை கேரளாவில் உள்ள ஊர்களாக காட்டிய கூத்து நடந்தது. மின்சார வ்ண்டியை பார்த்து கேரள சகோதரர்கள் கைகொட்டி சிரித்தனர். ஏன் இந்தக் கொலை வெறி என்றுதான் கேட்கிறேன். அப்படியே சென்னை என காண்பித்துவிட்டு பாத்திரங்களின் பெயரை மட்டும் மலையாளப் பெயர்களாக வைத்திருக்கலாமே. லாஜிக் அடிபடாதே.
லாஜிக் பார்ப்பது
நான் சமீபத்தில் 1960-61-ஆம் கல்வியாண்டில் பத்தாவது படிக்கும்போது ஒரு நாள் எங்கள் ஆசிரியர் சங்கரராமன் அவர்கள் கோபத்துடன் வகுப்புக்கு வந்தார். கட்டுரை நோட்டுகளையும் எடுத்து வந்திருந்தார். என்னை பெயரிட்டு அழைத்து நிற்கச் சொன்னார். நானும் ஏதும் புரியாது நின்றேன். அன்றைய கட்டுரை வணிகக் கடிதம் எழுதுவது பற்றியது.
அதில் நான் ஒரு புத்தக கம்பெனிக்கு எழுதி புத்தகங்களை ஆர்டர் செய்வது போல இருக்கும் கட்டுரை அது.
நான் ஆர்டர் செய்தது:
1. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி - 10,
2. என்சைளோப்பீடியா பிரிட்டானிக்கா - ஒரு முழு செட்
இவற்றை விபிபியில் அனுப்புமாறு எழுதியிருந்தேன்.
ஆசிரியர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார், “ஏண்டா தபால்காரன் மேல் உனக்கு என்ன அவ்வளவு கோபம்? இடுப்பெலும்பு முறிந்து விடுமேடா அத்தனை புத்தகங்களையும் தூக்கினால்”? அப்போதுதான் நான் எழுதிய அபத்தம் எனக்கே புரிந்தது.
வெறும் மொழி எழுதினால் மட்டும் போதாது பொது அறிவும் அதில் சேர்ந்திருக்க வேண்டும் என்பதை அவர் எனது உதாரணத்தை வைத்து விளக்கினார்.
பார்த்தசாரதி இன்னொரு திருவாழத்தான். புது சொற்களை வாக்கியங்களில் பிரயோகிக்கச் சொன்னால், அவன் இவ்வாறு வாக்கியங்களாக எழுதுவான்.
1. விட்டெறிதல்: அவன் லட்ச ரூபாயை விட்டேறிந்தான்.
2. தாவுதல்: அவன் குளத்துக்குக் குளம் தாவினான்.
3. அநேகமாக: அனேகமாக நாளை உலகம் முடிவடையும்.
துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்
லேட்டஸ்ட் துக்ள்க். ராசா பயத்துடன் ஜெயில் காவலாளியை கேட்கிறார்: “ஒரு சந்தேகம் வருது. யாராவது சாமியார் நரபலி கொடுத்தா அவங்க தப்பிச்சுக்கலாம்னு சொல்லியிருப்பாரோ? நைஸா விசாரியுங்களேன், திக்கு திக்குங்குது”.
பாவம் ராசா. எத்தனை பேருக்குத்தான் பயப்படுவார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீ ஒரு நார்சிஸிஸ்ட்!
-
Bala Subramanian Sir, I am a big follower of your writing and videos. With
due apologies, I find a kind of narcissism in your approach for sometime.
You ma...
10 hours ago


5 comments:
\\நான் சமீபத்தில் 1060-61-ஆம் கல்வியாண்டில்// சார் இவ்வளவு சமீபம் எல்லாம் ஓவர் சார் :)))
//நான் சமீபத்தில் 1060-61//
அதெப்புடி 900 வருடங்களுக்கு மேலாக.....!!
அட நீங்கள் சித்தரா..?
@Madhavan
Thanks, I corrected the error.
Regards,
N. Raghavan
"நன்றி,நல்ல கருத்து.......
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன் என் பக்கம் வாங்க.
Post a Comment