1/15/2010

துக்ளக் ஆண்டுவிழா கூட்டம் - 14.01.2010: பகுதி - 1

ஆறரை மணி கூட்டத்துக்கு நாலரை மணிக்கே போனேனோ அரங்கத்தினுள்ளே அமர கிடைத்ததோ. இல்லாவிட்டால் கதை கந்தல்தான்.

சரியாக ஆறரை மணிக்கு சோ அவர்கள் தன் உதவியாளர்கள் புடைசூழ் கரகோஷங்களுக்கிடையில் மேடைக்கு வந்தார். எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என அவர் கூற, எதிர்பார்த்தது போலவே பல குரல்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் என பிராம்ப்ட் செய்தன. அதை அவரும் தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் புறம் தள்ளினார்.

தனது உதவியாளர்களை அறிமுகம் செய்யும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப்பெயர் குறிப்பிட்டது கலகலப்பை உருவாக்கியது. அவர் அறிமுகம் செய்தவர்கள் (சிலருக்கு அடைமொழிகளுடன்):

1. அருளாளர் ரங்காச்சாரி (ஒரு கோவில் அறங்காவலர்)
2. நிர்வாகச் செம்மல் உதயசங்கர் (அவன் தெலுங்கன், நான் சொல்லறது புரியாது)
3. இளஞ்சிங்கம், இளையதளபதி (இதுக்கென்ன காசா பணமா, கொடுத்தாப்போச்சு) சுந்தரம் (சமீபத்தில் 1940-ல் பிறந்தவர் என அறிகிறான் டோண்டு ராகவன்)
4. சமூகநீதி காவலர் சத்யா
5. மக்கள் திலகம் பர்க்கத் அலி (ஏன்னாக்க, இவன் பேசறது யாருக்குமே புரியாது)
6. நாவுக்கரசர் சுவாமிநாதன்
7. மாவீரன் கணேஷ் (கார் டயர் பக்கத்தில் வெடித்ததற்கு யாரோ பாம் வச்சுட்டான்னு சொல்லி தானும் காபராபட்டு சோவையும் காபராவுக்குள்ளாக்கினார்)
8. உலகம் சுற்றிய வாலிபன் வெங்கையா (ஒரு முறை மலேசியாவுக்கு போயிருக்கிறார்)
9. ஆற்றல் அரசு ஷண்முகம் (நன்றாகக் காப்பி ஆற்றுவார்)
10. மௌனகுரு ராமமூர்த்தி
11. தமிழின் தமிழே வண்ண நிலவன் என்னும் துர்வாசர்
12. சிந்தனைச்செல்வன் வசந்தன் பெருமாள்
13. விஜய்கோபால் - ஆர்டிஸ்ட்
14. ராமு - ஆர்டிஸ்ட்
15. ஸ்ரீகாந்த்
16. குமார் - கார்ட்டூனிஸ்ட்
17. ராஜன் லே அவுட் ஆர்டிஸ்ட்
18. நிகில் - அட்டெண்டர்
19. தினேஷ்

வழக்கம்போல தெரிவு செய்யப்பட்ட வாசகர்களை பேச அழைக்கும் முன்னால் தான் எழுதிய ஹிந்து மகாசமுத்திரம் பகுதி - 5 வெளியிட்டார். அதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டவர் அவரது பேத்தி சுட்டிப்பெண் சுசித்ரா.

பெண்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என ஒரு பயலும் இனிமேல் சொல்லமுடியாது என்றதும் அரங்கத்தில் கலகலப்பு.

இப்போது பேச அழைக்கப்பட்ட வாசகர்கள்:

1. ஏ. ஸ்ரீதரமூர்த்தி, கோவை
தனது வயதும் துகள்க்கின் வயதும் ஒன்றே என அவர் கூறினார் பிறகு கேள்விகள் வந்தன.
அ. தமிழ்ச்செம்மொழி மாநாட்டினால் என்ன பயன்?
ஆ. அசாமில் பங்களாதேசிகளின் ஊடுருவல்கள், அங்கிருந்தே கோவைக்கும் வந்து விடுகிறார்கள்
இ. துக்ளக்கில் வெளியாகும் ஹிந்து மகாசமுத்திரத்தின் பேப்பர் தரத்தை சரிசெய்தால் பைண்ட் செய்து வைத்துக் கொள்வதற்கு சுலபமாக இருக்கும்.

சோவின் பதில்கள்:
அ. அதன் பலன் அது இல்லாமலேயே சிரமம் ஏதும் இல்லாமல் இடைதேர்தலால் கிடைக்கும். பின் இது ஏன் என்றால், அது கலைஞர் புகழாசைக்கு ஒரு தீனி
ஆ. இது ஒரு மைனாரிட்டி பிரச்சினையாக சாயம் பூசப்படுகிறது. கவலைக்குரிய பிரச்சினை. பாஜக மட்டுமே இது பற்றி கவலை தெரிவிக்கிறது.
இ. எல்லோருமே புத்தகத்தை வாங்காது பைண்ட் செய்து போய்விட்டால், அலயன்ஸ் சீனுவாசன் கோச்சுப்பார்.

2. அப்துல் ரஹ்மான்
துக்ளக் படிக்காமல் இருக்க முடியவில்லை என்று சொன்ன அவர் இட்ட கேள்விகள்:
அ. டாக்டர் கலைஞர் பற்றி விமரிசனம் செய்து என்ன பலன் கண்டீர்கள்?
ஆ. தேசீய அளவில் பாஜகவின் நிலைமை ஏன் மங்கி வருகிறது?
இ. திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே கைவிட்டால் பாமகவின் கதி?

சோவின் பதில்கள்:
அ. பலன் வேண்டுமென்றால் விமரிசனம் செய்யாமல் இருந்திருக்க வேண்டும். இப்போது என்ன ஆயிற்றென்றால் தான் இவ்வாறு அதிகாரபீடத்தை எதிர்கொள்வதாலேயே துக்ளக் ஆண்டுவிழா நிகச்சி இவ்வளவு பாப்புலராக உள்ளது. அந்தப்பலனே போதும்.
ஆ. பாஜகவின் பல இன்னல்கள் அதுவாகத் தேடிக்கொண்டதே. வாஜ்பேயீ பிரதமராக இருந்த அந்த ஐந்து ஆண்டுகளில் அத்வானி கடைசி இரண்டாண்டுகளுக்கு பிரதமராக இருந்திருந்தால் நிலைமையே பாஜகவுக்கு சாதகமாக இருந்திருக்கும். அத்வானி நாடறிந்தவர். இப்போதைய தலைவர் பற்றி அம்மாதிரிக் கூற இயலாது. இருப்பினும் அவரும் நல்ல யோக்கியதைகளை உடையவரே என கூறப்படுகிறது. அது உண்மையானால் சந்தோஷமே.
இ. அப்படி பாமகவை இரு கட்சிகளுமே கைவிடும் எனத் தான் நினைக்கவில்லை. பாமகவும் தன் நிலையை கண்டுணர்ந்து சூதனமாக நடந்து கொள்ள வேண்டும்.

3. குப்புசாமி, கோவை
அ. அடுத்த ஆண்டு காமராஜ் ஆட்சி அமையுமா?
ஆ. பூரண மதுவிலக்கை திரும்பக் கொண்டுவரவேண்டும் என சோ அவர்கள் கலைஞரோடு பேசுவாரா?

சோவின் பதில்க்ள்:
அ. ம்காமராஜின் ஆட்சியை அமைக்கும் தகுதியுடன் இப்போதைய காங்கிரசில் யாருமே இல்லை. எப்படியும் அதனால் அசெம்பிளி தேர்தலில் தனியாக நிற்க முடியாது. திமுக அல்லது அதிமுகவைத்தான் சார்ந்து இருந்தாக வேண்டும், ஏனெனில் லோக்சபா சீட்டுகள்தான் அவர்களுக்கு அதிக முக்கியம்.
ஆ. பூரணமதுவிலக்கு இத்தருணத்தில் பிராக்டிகல் இல்லை.

4. கலைச்செல்வன், ராமநாதபுரம்
அ. பெண்கள் இடஒதுக்கீட்டை அதரிக்கிறீர்களா?
ஆ. அப்படி இடஒதுக்கீடு வந்து, நிறைய பெண்கள் பார்லிமெண்டுக்கு வந்தால் மருமகள் பாதுகாப்புச் சட்டம் வருமா?
இ. நீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசியம்.

சோவின் பதில்கள்:
அ. இது வேண்டாத வேலை.
ஆ. தேர்ந்தெடுக்கப்படும் பெண்களில் மாமியார்கள் எவ்வளவு மருமகள்கள் எவ்வளவு என்பதை இது பொருத்துள்ளது.
இ. ஒரு ஹைகோர்ட் தலைமை நீதிபதி தாந்தோன்றித்தனமாகச் செயல்பட்டு நிலங்களை ஆக்கிரமிக்கிறார். அவரை காப்பாற்றவே காய்கள் நகர்த்தப்படுகின்றன. நீதிபதிகள் சொத்து அறிவிப்பு திட்டம் பற்றி சுப்ரீம் கோர்ட்டின் ரெஜிஸ்ட்ரார் கீழ்க்கோர்ட்டில் போட்ட கேஸ் தள்ளுபடியாகிறது. இதென்ன கூத்து? இந்தழகுக்கு அவர் தாழ்த்தப்பட்ட சாதி என்று வேறு ஒப்பாரி.

5. ரகுபதி, ஈரோடு
அ. இடைதேர்தல்களில் மக்கள் தக்க ஆதரவு அளித்ததாகக் கலைஞர் கூறுகிறாரே.

சோவின் பதில்: அந்த ஆதரவெல்லாம் இலவசங்களை நிறுத்தினால் மாயமாக மறையும். அந்த ஆதரவு இல்லை என்ற பயத்தாலேயே இலவசங்கள். (கருணாநிதியின் பேச்சுக்களை வெறுமனே பட்டியலிட்டார், அதற்கே கேலிக்கூச்சல்கள் அரங்கத்துள் எழுந்தன).

6. என். ராஜன், நங்கநல்லூர்
அ. மாநில அரசின் நிதிநிலைமை பற்றி? கருணாநிதி எவ்வாறு இவ்வளவு இலவசங்களை அளிக்கிறார்?
ஆ. மத்திய ரயில்வே அமைச்சராகச் செயல்பட்ட லாலு பிரசாத் யாதவ் பற்றி பிறகு கூறுவதாக சோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கூறினார். இப்போது கூறலாமே?

சோவின் பதில்கள்:
அ. மாநிலநிதிநிலைமை பற்றி பின்னால் முருகன் ஐ.ஏ.எஸ். பேசுவார்.
ஆ. லாலுவை பற்றி இப்போது மமதா பானர்ஜீ கூறுவதைப் பார்த்தாலே போதுமே.

7. வெங்கடேசன்
இவர் கேட்ட கேள்விகள், சோவின் அவற்றுக்கான ப்திக்ல்கள் சரியாக கேட்கவில்லை. துக்ளக் இதழில் அவற்றைப் பின்னால் பார்க்கலாம்.

8. மஹாபிரபு
அ. பிரபாகரன் தந்தையின் இறப்புக்காக ஏன் கவிதை இல்லை கலைஞரிடமிருந்து?
ஆ. முதல்வராக தெரிவு செய்யப்பட மக்களது ஆதரவு ஜெ-க்கா கலைஞருக்கா?
இ. கலைஞருக்கு பிறகு அழகிரியா ஸ்டாலினா என்று போட்டி வருமா?
ஈ. இது வரை அழகிரி சொல்லிச் சொல்லி ஜெயித்திருக்கிறார். வரும் அசெம்பிளி தேர்தலில் 190 சீட்டுகள் திமுகவுக்கு கிடைக்கும் என்பது உண்மையிலேயே நடக்குமா?

சோவின் பதில்கள்:
அ. அதற்குத்தானே மௌன அழுகை அவர் கைவசம் உள்ளது? அதற்கு மேல் பேச அவருக்கு பயமாக இருக்காதா?
ஆ. இலவசங்களை நிறுத்தினால் தானே தெரியும்.
இ. சொல்லமுடியாது, வந்தாலும் வரலாம். இருக்கும் சொத்தை காப்பாற்றிக் கொள்வோம் என எல்லோரும் நினைத்தால் வராமல் போகலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு.
ஈ. இலவசத்தை நிறுத்தினால் தானே தெரிந்து போகிறது.

9. நாராயணன்
அ. எங்கே பிராமணன் சீரியலின் நேரத்தை இரவு எட்டரை மணிக்கு மாற்ற இயலுமா. இரவு எட்டரை மணி ஸ்லாட்டுக்கு வீட்டில் பலத்த போட்டி.
ஆ. அவர் தனியா நின்னா 1500 கோடி ரூபாய்கள் தருவதாக விஜயகாந்திடம் கூறப்பட்டதா?

சோவின் பதில்கள்:
அ. நான் சொல்லியெல்லாம் ஜெயா டிவியில் நேரத்தை மாற்ற மாட்டார்கள். நீங்கள் பேசாமல் வீட்டிலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுப்பதே நலம்.
ஆ. விஜயகாந்தின் செயல்பாடு இந்த சந்தேகத்தை வரவழைத்தாலும், அவ்வளவு பண்மெல்லாம் தந்திருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
(திடீரென அர்ச்சகர் தேவநாதனுக்கு பலத்த கண்டனம் தெரிவித்தார். ஆனால் எந்த காண்டக்ஸ்டில் என விளங்கவில்லை)

10. ரவி ஹைதராபாத்
அ. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு WTO-வுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்த்தத்தால் வந்ததா?
ஆ. விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாறுவது பற்றி
இ. கிறித்துவம் முன்னெப்போதிருப்பதை விடவும் பரவுகிறதே?

சோவின் பதில்க்ள்:
அ. விலைவாசி உயர்வு எப்போதுமே இருந்து வந்துள்ளது.
ஆ. விளை நிலங்களும் வேண்டும் தொழிற்புரட்சியும் வேண்டும் என எவ்வாறு இருக்க முடியும்?
இ. கட்டாய மதமாற்றம், ஆசைகள் காட்டி மதமாற்றம் ஆகியவைதான் கண்டிக்கத்தக்கன. தானே சுயவிருப்பத்தில் மதம் மாறுவதை குறைகூறவியலாது.

11. ஸ்வாமிநாதன் வேளச்சேரி
அ. கருணாநிதி வாக்குறுதி அளித்ததையேல்லாம் செய்து விட்டார்
ஆ. கூட்டணி கட்சிகளை ஜே மதிக்காத விஷயம்
இ. பத்திரிகைகள் ஏன் எப்போதுமே பாஜகவுக்கு எதிராக உள்ளன?

சோவின் பதில்கள்:
அ. எங்கே நிறைவேற்றினார், பட்டியலிடுங்கள்? நிறைவேற்றாத வாக்குறுதிகளில் ஒன்றாக ஆளுக்கு இரண்டு ஏக்க நிலம் அளிப்பதாக சொதப்பியதைக் கூறினார்.
ஆ. கருணாநிதி இந்திராவை திட்டாத வசவுகள் இல்லை, அவரையே காங்கிரஸ் கூட்டணி பார்ட்னராக ஏற்கும்போது ஜெயுடன் ஏன் காங்கிரஸ் கூட்டணி வைக்காது?
இ. எப்போதுமே எதிரிகள் என்றில்லை. ஆதரவு நிலைகளும் எடுத்துள்ளன. ஆனால் பாஜக தலைவர்கள் டிவி மைக்ரோஃபோனை பார்த்தாலே உளற ஆரம்பித்து விடுகிறார்கள்.

வாசகர்கள் கேள்விபதில்கள் முடிந்ததும் அவர் விஜய் என்பவரை நீதித்துறை பற்றியும், முருகனை நிர்வாகத்துறை பற்றியும், குருமூர்த்தியை பொருளாதாரத்துறை பற்றியும், பழ கருப்பையாவை அரசியல் துறை பற்றியும் பேச அழைத்தார்.

இது வழக்கத்துக்கு மாறான செயல்.

அப்பேச்சுகள் பற்றி அடுத்த பதிவில் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

அ. நம்பி said...

சுருக்கமாக இருந்தாலும் தெளிவாக எழுதியுள்ளீர்கள் ஐயா.

//அப்பேச்சுகள் பற்றி அடுத்த பதிவில் கூறுவேன்//

விரைவில்...!

Sivakumar said...

இ வ., உங்களை முந்தி கிட்டார் ஐயா.

இருந்தாலும் தங்களுடைய பதிவு அங்கேயே நானும் பங்கெடுத்ததைப் போன்று இருக்கிறது.

நன்றி.

Madhavan Srinivasagopalan said...

Thanks for the post..

Anonymous said...

Like GBM of Corporate Companies. Everyone is so interested personally.

வடுவூர் குமார் said...

என்ன தான் இட்லி வடை ரன்னிங் கமென்ரி கொடுத்திருந்தாலும் இப்படி படிப்பதில் தான் சுவாரஸ்யமாக இருக்கு.உங்களை பற்றியும் ஒரு வரி இருந்ததே!

ஆர். முத்துக்குமார் said...

//மாவீரன் கணேஷ் (கார் டயர் பக்கத்தில் வெடித்ததற்கு யாரோ பாம் வச்சுட்டான்னு சொல்லி தானும் காபராபட்டு சோவையும் காபராவுக்குள்ளாக்கினார்//

மாவீரன் ரமேஷ்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது