7/04/2008

டோண்டு பதில்கள் - 04.07.2008

பாண்டிய நக்கீரன்
1. ஒருவேளை மாறன் சகோதரர்கள் செல்வி ஜெயலலிதாவிடம் சரணாகதி அடைந்தால்?
பதில்: அடுத்த தேர்தல் சுவாரசியமாகவே இருக்கும்.

2. கலைஞர் என்ன அறிக்கை விடுவார்?
(குறிப்பு:ஜெயலலிதாவும்,மாறன் மகன்களும்-பெரியாரின் பரம வைரிகளான இரு பிரிவுகளை சேர்ந்தவர்கள்)

பதில்: சூத்திரனான என்னை அழிக்கவே இவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர் என அறிக்கை விட்டால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

3. தினகரன் பத்திரிகை, அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு தினமலர், துக்ளக் பட்ட அவஸ்தையை அனுபவிக்கும் போல் உள்ளதே?
பதில்: எல்லா செயல்களுக்கும் எதிர்வினை ஒன்று இருக்குமல்லவா?

4. அண்ணா அவர்கள் சொன்னது போல் திமுகவை அவரது தம்பிகளே ......?
பதில்: தவறு, அவரது ஒரு தம்பியே என்று திருத்தி கொள்ளவும். அதுவும் பெரிய குடும்பஸ்தரான அந்த ஒரே ஒரு தம்பி!

5. மத்திய அரசில் அத்வானி பிரதமர் ஆனாலும் இதே கொள்கைகளைத்தான் கடைபிடிக்கப் போகிறார்கள்?
பதில்: எதை குறிப்பிடுகிறீர்கள்? அணு ஆயுத ஒப்பந்தம் அல்லது பொருளாதாரக் கொள்கைகள்? இரண்டுக்கும் பதில் ஆம்தான்.

6. புதிய மொந்தை பழைய கள் கதைதானே? மீண்டும்?
பதில்: ஆம்.

7. பா.ம.க.வை வெளியேற்றிவிட்டு விஜயகாந்த்தை காங்கிரஸ் துணையுடன் இழுக்க திமுக முயலுவதுபோல் உள்ளதே?
பதில்: கலைஞர் ஏதாவது இம்மாதிரி செய்து கட்சியை தேற்றினால்தான் உண்டு.

8. வை,கோ வின் எதிர்காலம் அவ்வளவுதானா?
பதில்: பாவம் அவர். புலிகளை அம்மாதிரி வெளிப்படையாக ஆதரிப்பதன் பலனை அறுவடை செய்கிறார்.

9. ஒருவேளை கலைஞருக்கு பின்னால் ஆட்சி அதிகாரம் மதுரை அழகிரியின் கைக்கு சென்றால்?
பதில்: திமுக தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மாதிரி நடக்கும் வாய்ப்பு அதிகம், ஏனெனில் திமுகவின் வெற்றிகள் பலவற்றுக்கு அழகிரிதான் காரணமாக இருப்பார்.

10. இலவு காத்த கிளி யாக மாறும் ஸ்டாலின் என்ன செய்வார்?
பதில்: சோகப்பாடல்?


ரமணா:
1. பணவீக்க விகிதம் மொத்த குறியீடு எண்ணின் அடிப்படையில் அதுவும் 1994 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையில் தவறாகக் கணக்கிடப் படுவதாக சொல்வது பற்றி தங்கள் கருத்து?
பதில்: எனக்கு சற்றே தகராறான விஷயம் இந்த புள்ளிவிவரங்கள். ஒன்று நிச்சயம், பணவீக்கத்தின் அடிப்படைகள் வேகமாக அப்போதைய அரசின் சௌகரியத்துக்கு ஏற்ப மாற்றப்படுபவை. ஆகவே ஒரு ஒட்டுமொத்தமான பிக்சர் கிடைப்பது கஷ்டம். நான் தேர்ந்தெடுக்கும் முறை தங்கத்தின் விலை. ஒரு பவுன் தங்கத்துக்கு 1932-ல் எவ்வளவு மூட்டைகள் அரிசி கிடைத்ததோ அதே அளவு அரிசி இப்போதும் கிடைப்பதாக தெரிகிறது. சமீபத்தில் 1979-ல் ஆகஸ்டு மாத அளவில் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூபாய் 450. இன்று 9000-க்கும் மேல். ஆகவே 1979 விலைகளை போல இப்போதைய விலைகள் 20 மடங்குகள். அவ்வளவே எனக்கு சொல்லத் தெரியும்.

2. இந்தியாவின் இப்போதையை பணவீக்கம் (உண்மையாக 25% என்கிறது ஒரு தகவல்) நிலைமைக்கு காரணமான இரு மேதைகளும் வேறு ஒரு pay roll ல் உள்ளதாக வரும் தகவலில் உண்மை இருக்குமா?
பதில்: உண்மை இல்லை. அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் ரொம்பவுமே நேர்மையானவர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை அசைக்க முடியாமல் உள்ளது.

3. நிதி அமைச்சரை மட்டும் குறை கூறுவது உங்களுக்கு ஏற்புடையதா?
பதில்: இல்லை. அவரும் பாவம் இடதுசாரிகளால் ரொம்பவுமே பீடிக்கப்பட்டுள்ளார்.

4. பொதுவாக பங்கு வணிகம் சரிந்தால் முட்டுக் கொடுக்க கொள்கை பரப்புச் செயலாளர் போல வரும் நிதி அமைச்சர் இப்போது மெளனம் சாதிப்பது ஏன்?
பதில்: என்ன கூற வேண்டும் என்பதை தெரிந்து கொண்டா நம்மிடம் கூறாது வஞ்சனை செய்கிறார்? அவரே மூச்சு திணறுகிறார் இப்போது.

5. அரசின் தவறான (நியாயம், நேர்மை, தர்மம் இவையெல்லாம் பழங்கதையாய் ஆகிவிட்ட நம் பாரத தேசத்தில்) பொருளாதரக் கொள்கையினால் விலைவாசிகள் வெகுவாக ஏறி, உணவுக்காக உள் நாட்டு சண்டை, கலவரம், கொள்ளைகள் முதலிய நடந்தால் அதற்கு யார் காரணம்? (இது கற்பனையல்ல நடக்கப் போகும் நிதர்சனம்)
பதில்: இம்மாதிரி பொருளாதார நெருக்கடிகள் உலக பொருளாதாரத்தில் பல முறை நடந்து விட்டன. இந்தியாவும் உலகத்தின் ஒரு பகுதி அவ்வளவே.

7. கடைசியில் நமது கடலில் மீன் பிடிக்கும் உரிமையையும் பன்னாட்டு பகாசுர கம்பெனிகளுக்கு தாரை வார்க்க அரசு முயலுகிறதே?
பதில்: ஓரளவுக்கு மேல் தீவிரமாக மீன் பிடிப்பதை செய்தால் நமக்குத்தான் சுற்றுப்புற சூழல் கெட்டு நஷ்டம். நீங்கள் சொல்வது நிஜமா எனத் தெரியவில்லை. அது உண்மையாக இருந்தால் அரசு செய்வது கண்டிக்கத் தக்கது.

8. அரசு காண்டிரக்ட்களில் 30% கட்சிகாரங்களுக்கு,20% ஒப்பந்தக்காரருக்கு மீதம் உள்ள 50% ல் பணிகள் இவ்வளவு நடக்கும் போது கமிஷன் அற்ற ராம ராஜ்யம் இருந்தால் எப்படி இருக்கும்?
பதில்: மோடி பற்றிய இப்பதிவில் நான் எழுதியது இது. "மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம் எனக் கூறினார் (எவ்வளவு காலக்கட்டம் என்பதை சரியாக கேட்க இயலவில்லை லௌட்ஸ்பீக்கர் சதி செய்தது). ஆனால் மிகவும் அதிகம் அது, சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்". ஒரு செக்போஸ்டுக்கே இப்படி என்றால் நாடு முழுக்க இதே மாதிரி நிலையிருந்தால் என்ன மாதிரி இருக்கும்?

9. திமுக அமைச்சர்களில் இந்த தடவை நல்ல அறுவடை யாருக்கு?
பதில்: இந்தியன் தாத்தாவோ ரமணாவோதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

10. கனிமொழியின் பதவி ஏற்பு (அமைச்சராக) தாமதம் என்ன காரணம் ( அழகிரியின் சுப்போர்ட் வேறு இருக்கே)?
பதில்: ஸ்டாலினை மறந்து விட்டீர்களே?


தென்காசி:
1. சைவக் கோவில்களைவிட வைணவக் கோயில்களில் கடவுளை வணங்கும் போது ஒரு பரவசம் வருவதன் காரணம்?
பதில்: அப்படி ஒன்றும் எனக்கு தெரியவில்லையே. பல கோவில்களை பார்த்தவன் என்ற முறையில் வேறொன்று கூறுவேன், அதாவது வைணவ கோவிகளில் வெகு சீக்கிரம் நடை சாத்தி விடுகிறார்கள். சைவ கோவில்கள் அப்படி அல்ல. நிறைய நேரம் திறந்திருக்கின்றன. மேலும் சன்னிதிகள் சாத்தியிருந்தாலும் பிரகாரங்களில் செல்ல இயலும். வைணவ கோவில்களை பற்றிய எனது இந்த விமரிசனத்தை இங்கே வைக்கிறேன்.

2. தென்கலை,வடகலை இடும் திருநாமம் தவிர வழிபாடுகளில் உள்ள வேறுபாடுகளை சொல்லவும்?
பதில்: தேசிகரை பின்பற்றுபவர்கள் வடகலை. ஆழ்வார்களை பின்பற்றுபவர்கள் தென்கலையினர். பின்னவர்கள் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள், திவ்யபிரபந்த பாராயணம் செய்து உற்சவருக்கு முன்னால் செல்பவர்கள். வடகலையினர் சம்பிரதாயமாக வேத பாராயணம் செய்வதற்கு முக்கியத்துவம் தருபவர்கள். உற்சவருக்கு பின்னால் வேத கோஷம் செய்த வண்ணம் செல்வார்கள். காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் உற்சவங்களில் இந்த வேறுபாட்டை நன்கு காணலாம். மற்றப்படி இருபிரிவினருமே ஐயர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்கள்.

3. சிவனை வழிபடுவர் பெருமாளை வணங்கும்போது வைணவர்கள் மாதிரி செயல்படுவது ஏன்?
பதில்: பெருமாளை வழிபடுபவர்கள் யாராக இருந்தாலும் அந்த நேரத்தில் வைணவ சம்பிரதாயங்களைத்தான் பின்பற்றுவர். அதுவே சிவனை வழிபடுபவர்களுக்கும் பொருந்தும். அச்சமயம் அவர்கள் சைவர்கள். வேதபாடசாலைகள் நடத்துவதில் ஐயர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது மனதுக்கு நிறைவாக உள்ளது.

4. ராமானுஜ சுவாமிகள் பிற ஜாதியினரையும் வைணவராக மாற்றினார் என்பது உண்மையா?
பதில்: அது என்னவோ உண்மைதான். திருவரங்கனின் சிலை மாலிக்காபூர் படையினர் வசம் போகாமல் இருக்க அதை எடுத்து கொண்டு ஊர் ஊராக அலைந்தபோது காட்டுவாசிகள் பலர் பக்தியுடன் உதவினர். அவர்களை எல்லாம் வைணவராக்கினார் அந்த மகான்.

5. பொதுவாகவே வைணவர்கள் முற்போக்கு கொள்கையுடன் இருக்கிறார்களே? இது பற்றி தங்கள் கருத்து?
பதில்: அப்படி ஒன்றும் பொதுப்படையாக கூற இயலாது.


ஆயிஷா LKG:
1) மதம் மாறினால் மரணதண்டனை என்று பதிவெழுதும் இஸ்லாமியர்கள் கட்டாய மதமாற்ற சட்டத்தை எதிர்த்தது எந்த அடிப்படையில் என்று ஒன்றுமே புரியவில்லை. இந்த குழப்பத்தை போக்குவீர்களா?
பதில்: மதமாற்றம் வேறுமதத்திலிருந்து தத்தம் மதத்துக்குத்தான் வரவேண்டும் என்று இசுலாமியர் மட்டுமல்ல போப்பாண்டவரே அந்த மனநிலையில்தான் இருக்கிறார்.

2) கட்டாய மதமாற்ற சட்டத்தை எதிர்த்து சாமியாடிய நமது அறிவுஜீவிகள் யாருமே "மதம் மாறினால் மரணதண்டனை" என்பதை பற்றி முணுமுணுக்க கூட செய்யவில்லை. இது பகுத்தறிவின்பாற்பட்ட கொள்கையா, அல்லது இன்டெலெக்சுவல் தொடை நடுங்கித்தனமா என்பதையும் விளக்கிடுங்கள் டோண்டு சாரே.
பதில்: தொடை நடுங்கித்தனமேதான்.


ரங்கன்:
1. மானுடம், மனிதநேயம், மனிதாபிமானம் போன்ற சொற்களை பற்றிய தங்கள் புரிதல் / வரையரை என்ன?
பதில்: கஷ்டப்படுபவர்களுக்கு தேவைக்கேற்ப உதவுதல் நலம். அதுவும் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர் தன் முயற்சியையும் செய்தால்தான் உதவ வேண்டும். எல்லாமே பிறர் பார்த்து கொள்வார்கள் என விட்டேற்றியாக இருப்பவரை கஷ்டப்பட்டு கொள் என விட்டுவிடுவது நல்லதே. அவர்கள் தவிர்க்க வேண்டிய நபர்கள்.

ஏகே. சுந்தர்:
1. பல மதத்தவர்களும் ஒன்றாக வாழும் ஈவேரா பிறந்த மண் தமிழ்நாடு. ஆனால், இங்கே மதச்சார்பின்மையை பின்பற்ற மறுத்து, இந்து மதத்தின் உயர்வைப் பற்றிய தகவல்களை மட்டுமே வெளியிட்டு, மதவெறியைப் பரப்புகிற இணையதளம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: இசுலாமிய இணையதளங்கள், கிறித்துவ இணையதளங்கள் எத்தனை உள்ளன என்பதை அறிவீர்களா?

ரமணா:
1. வீதிகளில் கார்களில் தனியாகச் செல்பவர்களால் தான் பெட்ரோல்/டீசல் செலவு கட்டுபடுத்த முடியாமல் இருப்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
பதில்: ஒரு தலைவனுக்கு பின்னால் ஆயிரம் கார்கள் பவனிவரும் நிலையைப் பார்த்தால் நீங்கள் சொல்பவர்கள் செய்வது ஜுஜுபியே.

2. இது மாதிரி பொருளாதார சுனாமிகள் வரும் போது நம்மவர்களும் கொஞ்சமாவது தியாகம் செய்ய முயலுவது மாதிரி தெரியவில்லையே?
பதில்: எதில் தியாகம் செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

3. அரசும் நியாயம் இல்லாமல் அதீதமான வரியை குறைக்க மறுப்பது தர்மமாகுமா? (ஒரு லிட்டருக்கு வரி இவ்வளவு என்று fixed ஆக வைக்கலாமே?
பதில்: போன பதிவிலேயே கூறிய பதில்தான் இங்கும். அரசுவரியை கணக்கில் எடுத்து கொண்டு பட்ஜட் போட்டாகிவிட்டது. இப்போது வரியை குறைத்தால் பட்ஜெட்டில் விழும் துண்டு வேட்டியாகும்.

4. அடித்தவரை லாபம் என்று அரசே நியாமில்லாமல் நடக்கும் போது இரும்பு. சிமிண்ட் வணிகர்களை கட்டுபடுத்த முயற்சி செய்வது "ஊருக்குதான் உபதேசம்" இல்லையா?
பதில்: ஊருக்கு மட்டும் உபதேசம் என்பது மனித இயல்புதானே.

5. இவர்களை தண்டிக்க யார் வருவாரோ?
பதில்: எத்தனுக்கு எத்தன் இல்லாமலா இருப்பான்.


அனானி (02.07.2008 காலை 06.06-க்கு கேட்டவர்):
1. What will happen to the world if the crude oil price goes above 200 dollars?.
விலைவாசிகள் தாறுமாறாக ஏறும். பணப்புழக்கம் குறைந்து வீடுகள் கட்டுவது குறையும். கட்டிடத் தொழிலாளர்கள் வேலை இழப்பர். வாங்கும் சக்தி குறைவதால் பொருட்களை வாங்குவது குறையும். அப்போது ஒன்று விலை குறையும் அல்லது சம்பந்தப்பட்ட பொருளின் உற்பத்தி குறையும். மேலும் வேலையில்லாத நிலைமை அதிகரித்து, வாங்கும் சக்தி மேலும் குறைந்து, விடுங்கள் மூச்சு விட்டு கொள்கிறேன்.

2. Is it true, due to on line trading ,the present condition (shortage) for crude oil price, as said by our mof?
அவர் உண்மையில் அவ்வாறு கூறினாரா என்பதை நான் அறியேன். மேலும் ஊகவணிகம் பற்றி எனது அறிவு கம்மி, லேது என்றே கூறிவிடலாம்.

3. When will the govt pull up the culprits?
குற்றவாளி யார் என்பதை பொருத்து அரசின் நடவடிக்கை இருக்கும்.

4. Onion for BJP fall and now petrol for congress?
அப்படித்தான் தோன்றுகிறது. இரண்டுமே ஓவர் சிம்ப்ளிஃபிகேஷன்கள்தான்.

5. It is feared that the inflation will not come down to single digit,in the near future for the following reasons: 1. 6th pay commission to central staff from 1.1.2006; 2. Equal pay to all state govts from 1.1.2006; 3. Pay revision to all psus from 1.1.2007; 4. Free schemes by state govts to remain in office; 5. Farmres not ready to do farming due to their heavy losses; 6. Free on line trading in all posssible ways.
அப்படித்தான் என நானும் அஞ்சுகிறேன்.


எம். கண்ணன்:
1. ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு (CBSE) என இரண்டு கல்வித்திட்டங்கள் இருந்தால் போதுமே. தமிழ்நாட்டில் இன்னும் எதற்கு ஆங்கிலோ இண்டியன், மெட்ரிகுலேஷன் என விதவிதமாக கல்வித் திட்டங்கள்? இவற்றில் என்ன வேறுபாடு? எதற்கு இவை தொடர வேண்டும்?
பதில்: ஒவ்வொரு கல்விமுறைக்கும் சரித்திர சமுதாயக் காரணங்கள் உண்டு. உதாரணத்துக்கு ஓரியண்ட்டல் பள்ளியிறுதித் தேர்வு. மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகள் சிறுபான்மையினர் திட்டங்கள் கீழ் வருவன. எல்லாம் அப்படியே இருக்கட்டுமே என்ன பிரச்சினை. யாருக்கு எது விருப்பமோ அதை கற்கட்டுமே.

2. உங்களுக்கு நீச்சல் தெரியுமா? ஆற்று நீரில் நீந்தியதுண்டா?
பதில்: நீச்சல் தெரியும். என் தந்தை திருவல்லிக்கேணி மெரினா நீச்சல் குளத்தில் வைத்து சொல்லிக் கொடுத்தார். ஆறுகளில் நீந்த பயம்.

3. நங்கநல்லூர் வீடுகள் எல்லாம் பெரும்பாலும் பெட்டி பெட்டியாக உள்ளனவே? ஏன் அப்படி ? உங்கள் வீட்டில் காற்றோட்டம், வெளிச்சம் நன்றாக வருவதுண்டா?
பதில்: நங்கநல்லூரில் முதலில் வீடுகள் கட்டியது நடுத்தரவர்க்கத்தினரே. அவர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் காரியத்துக்காகும் வடிவமைப்பே போதுமானதாக இருந்திருக்கிறது. இப்போது வந்து பாருங்கள். பல பிரும்மாண்டமான அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனது வீடு தெற்கு பார்த்த வீடு. சமீபத்தில் 1969-ல் குடிவந்தபோது காற்று பிய்த்து கொண்டு போகும். ஜன்னல்கள் கதவுகள் எல்லாவற்றுக்கும் கொக்கிகள் போட்டு வைக்கும் நிலை. இப்போது சுற்றிலும் பெரிய கட்டிடங்கள் வந்து விட்டதால் அந்த அளவுக்கு காற்று இல்லாவிட்டாலும் நிலைமை பரவாயில்லைதான்.

4. சோ எழுதிய 'கூவம் நதிக்கரையினிலே' எம்.ஜி.ஆர்- கருணாநிதி காலத்திய அரசியலை வைத்து எழுதப்பட்டது. இன்றைய சூழ்நிலைக்கு ஜக்குவின் யோசனகள் பொருந்தி வருமா? 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' மாதிரி - கூவம் நதிக்கரையினிலேவிலிருந்து சிறப்புப் பகுதிகளை அவ்வப்போது பகிரமுடியுமா? இன்றைய பெரும்பாலான தமிழ்மண இளைஞர்களுக்கு அது ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்
பதில்: அதில் ஒரு சுவையான இடம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு குடும்பத்தின் பட்ஜட்டை அரசால் நடத்த முடியுமா என்று கந்தசாமி என்பவர் கேட்ட கேள்விக்கு ஒரு வளவினுள் வசித்த சில குடும்பங்களின் நிர்வாகத்தை அரசு ஏற்று கந்தரகோளம் செய்கிறது. அதை துவங்கும் நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றுகின்றனர். அதை கிட்டே போய் ஊதி அணைத்து அபசகுனம் உண்டாக்கலாம் என்னும் ஆர்வத்தில் கலைஞர் குத்து விளக்கை நோக்கி கேஷுவலாக நகர, அவர் என்னவோ விஷமம் செய்யப் போகிறார் என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்த எம்ஜிஆர், ஆனால் அது என்ன என்பது தெரியாது, கலைஞரை நோக்கி நகர்ந்து "என்ன சௌக்கியமா" என்று கேட்டு அவரை கட்டியணைத்து அந்தண்டை தள்ளிக் கொண்டு போகிறார். இதை படித்துவிட்டு பல நாட்களுக்கு எனக்கு நானே அவ்வப்போது சிரித்திருக்கிறேன். அவ்வப்போது பலமாக சிரித்து தில்லியில் பக்கத்துவீட்டு சர்தார்ஜியை துணுக்குற செய்திருக்கிறேன். அப்புத்தகம் கைவசம் இல்லை. வாங்கினால் நீங்கள் கூறுவது போல செய்தால் போயிற்று.

5. 'வியங்கோள் வினைமுற்று' பற்றி சொன்னீர்கள். தமிழ் இலக்கண விதிகளை சிம்பிளாக உதாரணங்களுடன் அவ்வப்போது பதிவுகளாக கொடுக்க முடியுமா ? உங்கள் உதாரணங்களில் மக்கள் மனதில் பச்சக் என்று பதியும்.
பதில்: அவ்வளவு இலக்கண ஆளுமை என்னிடம் இல்லை என அஞ்சுகிறேன்.

6. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலங்களில் அவருக்கு ஆட்சியை நடத்திச் செல்ல உதவிய முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் யார் யார் ? (உதா: பண்ருட்டி டெல்லி விஷயங்களை கவனித்துக்கொண்ட மாதிரி). எப்படி எம்.ஜி.ஆரால் அதிகாரிகளை நம்பி ஆட்சியை ஒப்படைத்து வெற்றியும் காண முடிந்தது?
பதில்: எம்.ஜீ.ஆர். அவர்களுடைய வக்கீல் அவருக்கு பல நல்ல ஆலோசனைகளை பின்புலத்திலிருந்து தந்ததாக படித்துள்ளேன். விஷயம் அதற்குமேல் தெரியாது. இக்கேள்விக்கு சரியான பதிலை நண்பர் உண்மைத் தமிழன் போன்றவர்கள் இன்னும் சுவைபட தர இயலும். ஆனால் ஒன்று ஆட்சியை நடத்துவது என்பது ஒருவர் மட்டும் ஆடும் ஆட்டம் அல்ல. சுற்றிலும் நல்ல ஆலோசகர்களை வைத்து கொள்ளல் நலம்.

7. இந்திரா காந்தி இப்போது இருந்திருந்தால் இந்த நியூக்ளியர் டீல் மற்றும் இடது சாரிகளை எப்படி கையாண்டிருப்பார்? (கூட்டணி ஆட்சி நிலையில்)
பதில்: இந்திராவிடம் பல தவறுகள் இருந்தாலும் நல்ல ஆளுமை இருந்தது என்பதை மறுக்க இயலாது. சோஷலிசத்தை கட்டிக் கொண்டு அழாமல் இருந்தால் இன்னும் சோபித்திருப்பார். இப்போது இருந்தால் அதை இன்னேரத்துக்கு விட்டிருப்பார் என கூற இயலாது. ஆகவே இக்கேள்விக்கு சரியான விடை கூற இயலவில்லை.

8. சென்னையில் அதிமுக வளர்ந்ததற்கு (அதிக எம்.எல்.ஏக்கள்) காரணம் - திமுகவின் அராஜகத்தின் மீது மக்கள் வெறுப்பா இல்லை ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு, வீராணம் நீர் மற்றும் அரசு அதிகாரிகளைக் கையாண்டதா ? தற்போது சென்னை மக்களுக்கு திமுகவின் மீது அபிமானம் எப்படி உள்ளது? (வேலை வாய்ப்பு பெருகியுள்ள நிலையில்)
பதில்: நீங்கள் சொன்ன காரணங்கள் எல்லாமேதான். இப்போதைய நிலை என்னவென்றால் கலைஞரின் குடும்ப அரசியலால் திமுக தொண்டர்களே துவண்டு போயுள்ளனர். ஜெயலலிதா சரியாக காய்களை நகர்த்தினால் அவருக்கு வெற்றி நிச்சயம். ஈகோ எல்லாம் பார்க்காது ராமதாசை வளைத்து போடுவது காலத்தின் கட்டாயம். செய்வாரா என்பது பெரிய கேள்விக்குறி. மொத்தத்தில் ஜெயும் சரி கலைஞரும் சரி தத்தம் தவறுகளால் எதிராளிக்கு அதிக ஆதாயம் தருவதிலேயே நிற்கின்றனர். கலைஞர் அதிக தவறுகள் செய்தால் ஜேயின் வெற்றி நிச்சயம் and vice versa.

9. தமிழ் வலையுலகில் காமம் பற்றி துவங்கிவைத்தது (சமீபத்தில்) ஜெயமோகனின் 'கம்பனும் காமமும்' பதிவுகள் தானே ? யாருடைய காமம் பற்றிய பதிவுகள் சுவையாக இருக்கின்றன?
பதில்: ஜெயமோகன் மிக அழகாக எழுதுகிறார். அதை எழுதுவதும் ஒரு கலையே. இது பற்றி நானும் சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும் என்னும் தலைப்பில் பதிவு எழுதியுள்ளேன்.

10. வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவிற்கு உங்கள் ஓட்டு விழுமா ? ஆம் என்றால் ஏன் ? இல்லை என்றால் ஏன்?
பதில்: பா.ஜ.க. அல்லது அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்குத்தான் என் ஓட்டு.


பாண்டிய நக்கீரன்:
1. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எங்கும் இதே பேச்சு.இதன் பாதிப்பில் இந்தியர் கதை அதோ கதி எனும் இடதுகளின் வாதம் உண்மையாய் விடும் போலுள்ளதே. 1. வீட்டு வாடகை ஏற்றம்; 2. பணவீக்கவிகிதம் 25 % மேலே மேலே; 3. கச்சா எண்ணெய் விலை 140 டாலருக்கும் மேலே; 4. பங்கு வர்த்தகம் பாதாளம் நோக்கி; 5. விவசாயிகளின் கையறு நிலை; 6. பட்டினிச் சாவு வருமோ என பதறும் பத்திரிக்கைகள்.
தங்களின் விரிவான பதில் இன்றைய சூழ்நிலை அடிப்படையில், நடு நிலையுடன்:

பதில்: உலகமயம் வராதிருந்தாலும் இதற்குமேல் கெடுதல்கள் வந்திருக்கும். 1991-ல் திவாலாகியிருப்போம். இது பற்றி நான் கூறுவதை விட நண்பர் அதியமான் கூறுவதைப் பார்க்கலாம்.


வெண்பூ:
1. நீங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோசமாக உணர்ந்தது எப்போது?
பதில்: இப்போது இக்கேள்விக்கு பதில் எழுதும் இத்தருணத்திலும் சந்தோஷமாகத்தான் உணர்கிறேன். என்ன குறை எனக்கு? மிகவும் பிடித்த வேலை படிப்பது, மொழிபெயர்ப்பது. அவற்றை செய்ய செம துட்டு வேறு தருகிறார்கள். வாழ்க்கையே அற்புதமயமானது.

2. உங்களுக்கு பல மொழிகள் தெரிந்ததால் Translator வேலை செய்கிறீர்களா? இல்லை Translator ஆவதற்காக பல மொழிகள் கற்றீர்களா? (ஏற்கனவே மற்ற பதிவுகளில் இதைப் பற்றி எழுதியிருந்தால் தவறாக நினைக்க வேண்டாம். சுட்டி மட்டும் கொடுக்கவும்)
பதில்: இது பற்றி ஜெயா டி.வி.யில் நான் பேட்டியில் கூறியபடி, படிக்கும் ஆர்வத்தாலும், பல பன்மொழி புத்தகங்களை அந்தந்த மொழியிலேயே படிக்கும் ஆர்வத்தாலும் அன்னிய மொழிகளை கற்றேன். மொழிபெயர்ப்பு என்பது அதன் கூடவே பின்னால் ஒரு துணைப்பொருளாக வந்தது.

3. இந்தியா உண்மையாகவே ஜனநாயக நாடு என்பது சரியா? ஏனெனில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முறையில், ஒவ்வொரு படிக்கட்டும் ஜனநாயக ரீதியாகவே ஏறப்படுகிறது (Primary elections for candidate selection by each party, then general election etc.) இங்கு அது கண்டிப்பாக சாத்தியமில்லை, மாநிலத்திலும், மத்தியிலும்.
பதில்: அங்கு அப்படி, இங்கோ, ஸ்டாலினா அழகிரியா என்ற சர்ச்சை. அமெரிக்கா அளவுக்கு ஜனநாயகத்தை பெற இந்தியா போக வேண்டிய தூரம் இன்னும் மிகவும் அதிகம்.


ரமணா:
1. பல தான தருமங்கள் ,கடவுள் கைங்காரியங்கள் ஆலயத் திருப்பணிகள்,ஆன்மீக அமைப்புகளுக்கு தாராள பொருளுதவி, யோக அமைப்புகளுக்கு எல்லா உதவிகளும் அவர்களது வளர்ச்சிக்கு செய்து பெரும் பேர் பெறும் ஆலை அதிபர்கள், பெரும் வணிக பிரமுகர்கள், தொழிற்சாலை முதலாளிகள் பல்ர் தங்களது பணியாளர்களை அடிமைபோல் நடத்தியும் மிகச் சொற்ப சம்பளம் (தினக் கூலி 100 க்கு கீழ்) கொடுத்தும் பெரும் பணம் ஈட்டுகின்றனரே, இவர்கள் செய்யும் மேலே சொன்ன அந்த புண்ணியங்கள் இவர்கள் போகும் வழிக்கும் உதவிடுமா? கடவுளை, சமுதாயத்தை ஏமாற்ற முயலும் இந்த கபட சன்னியாசிகளை பற்றி தங்களின் கருத்து?
அதாவது "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று அவ்வப்போது கூவி, பக்தியை வெளிப்பட காட்டிக் கொண்டு 910 ரூபாய்க்கு மேல் சம்பளம் தராத, "அன்பே சிவம்" நாசர் போன்றவர்களை பற்றி கேட்கிறீர்கள். அவர்கள் செய்வது புண்ணியங்கள் என யார் சொன்னது? ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பூஜைக்காக ஒரு சீப்பு வாழைப்பழத்தை பக்தர் ஒருவர் தன் வேலைக்கார பையன் (பத்து வயதிருக்கும்) கையில் கோவிலுக்கு கொடுத்து அனுப்ப, பசியோடு இருந்த அச்சிறுவன் இரண்டு பழங்களை மட்டும் அதிலிருந்து பிய்த்து உண்ண, அதை கண்ட பூசாரி அப்பையனை நையப்புடைத்தார். பிறகு பூஜை நடந்தது. அன்று இரவு பக்தர் கனவில் வந்த கடவுள் அவரிடம், இரண்டு பழங்கள் மட்டுமே தன்னையடைந்ததாகக் கூறினார் என்று கதை போகிறது. இதை அப்படியே நம்பும் இந்த டோண்டு ராகவன் உங்கள் இக்கேள்விக்கு வேறு என்ன விடை தருவான் என நினைக்கிறீர்கள்?


பாண்டிய நக்கீரன்:
1. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் தங்களை கவர்ந்தவர் யார்?
பதில்: கிருஷ்ணதேவராயர்.

2. முக்கியமான காரணம்?
பதில்: இசுலாமிய மன்னர்களின் ஆக்கிரமிப்புகளை அடக்கியவர்.

3. அவர் செய்த பெரிய நன்மை?
பதில்: இந்து மதத்துக்கு தன்னம்பிக்கை தந்தார்.

4. அவரை மீறி நடந்த பெரிய தவறு?
பதில்: அரசியல் யதார்த்தம் புரியாது இசுலாமியரை தம் படைகளில் நல்ல பதவிகளில் நியமித்தது. அவரது காலத்தில் உடனடி பாதிப்பில்லை, ஏனெனில் அவரது ஆளுமை அப்படிப்பட்டது. அவருக்கு பின்னால் வந்த ராமராயர் காலத்தில் பெரிய வீழ்ச்சி அதனால் உண்டாயிற்று.
இதனால் நான் இசுலாமியரை குறை கூறுவதாக எண்ண வேண்டாம். அவர்கள் மதத்துக்கு அவர்கள் உண்மையாக இருந்தார்கள். அவர்களை நம்பியது இவர்கள் தவறு. இக்காலத்தில் மதசார்பற்ற அரசு நடப்பதால் அந்தக் கண்ணோட்டம் இப்போது பொருந்தாது.

5. அவரது நினைவாக எதைக் கருதுகிறீர்கள்?
பதில்: திருப்பதி கோவிலுக்கு அவர் பல திருப்பணிகள் செய்துள்ளார்.

6. மன்னராட்சிக்கும் ,இன்றைய போலி மக்கள் ஆட்சிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு?
போலியாக இருந்தாலும் மக்களாட்சியில் தேர்தல் மூலம் ஆட்சியாளர்களை மாற்ற இயலும். மன்னராட்சியில் அது நடக்காது.

7. இன்னும் முடியாட்சி மீது ராஜ விசுவாசம் உள்ளவர்கள் பற்றிய தங்கள் கருத்து?
பதில்: காலத்தோடு ஒட்டாதவர்கள்.

8. தங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றியோர் யாராவது இந்த உணர்வோடு உள்ளனரா? அவர்கள் பற்றிய தங்கள் கருத்து?
பதில்: இல்லை, நல்ல வேளையாக.

9. இதே மாதிரி தற்சமயம் உலகில் எங்கெல்லாம் மன்னாராட்சி தொடர்கிறது?
பதில்: இங்கிலாந்து, ஸ்பெயின், சவுதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகள்.

10. சுதந்திர இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் "super star" யார்?
பதில்: சூப்பர் ஸ்டார் என்றால் ஜவஹர்லால் நேரு அவர்களைத்தான் கூறுவேன்.

11. தாங்கள் சொல்லும் காரணம்?
பதில்: எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அவர்தான் பிரதம மந்திரியாக இருந்திருக்கிறார். அவரது தலைமை ஒருபோதும் கேள்விக்குட்படுத்தப்படவில்லை. சொதப்பல்கள் பல செய்தார், காஷ்மீரத்தில் அவர் செய்த கந்தரகோளம் இன்னும் நம்மை வாட்டுகிறது என்பது உண்மையாயினும் அவர்தான் சூப்பர் ஸ்டார்.

12. அவரோடு அலுவலக விசயமாக (மொழிபெயர்ப்பு) தொடர்பு இருந்ததுண்டா? (அல்லது அவரது காரியதரிசியுடன்)அதில் ஏதாவது புதிய மகிழ்வான அனுபவம் உண்டா? கசப்பான அனுபவம் ஏதாவது? அதை (அந்த நெருக்கத்தை) நண்பர்கள் முன்னேற்றதிற்ககாக சிபாரிசுகள் செய்ய முயன்றதுண்டா? பழமா? காயா?
பதில்: அவர் சமீபத்தில் மே 27, 1964-ல் இறந்தபோது நான் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு விடுமுறையில் இருந்தேன். அன்னிய மொழி ஏதும் தெரியாது. ஆகவே உங்களது இது சம்பந்தமான ஒரு கேள்விக்கும் என்னிடம் பதில் லேது.

13. அவரையும் இப்போதைய பிரதமரை ஒப்பிட்டு கருத்து சொல்லவும். அவர் இப்போது இருந்தால் என்ன சொல்லுவார்? அது உங்களுக்கு ஏற்புடையதா?
பதில்: அவர் உண்மையிலேயே பிரதமர். இப்போதைய பிரதமர் பொம்மை பிரதமர். இப்போது இருந்தால் அவர் சொல்லக்கூடிய வார்த்தை ஒன்றுதான். அதுதான் "நான்சென்ஸ்". எனக்கு ஏற்புடையதே.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

53 comments:

Unknown said...

தங்களின் எல்லாப் பதில்களும் சூப்பர் சார்.அடுத்த கேள்விப் பட்டியலுடன் சந்திக்கிறேன்.நன்றிகள்.தங்களின் அனுபவம் பொதிந்த பதில்களுக்கு பாரட்டுக்கள்.

-பாண்டிய நக்கீரன்

Unknown said...

1.தமிழ் புதின எழுத்தாளர்களில் தங்களை மிகவும் கவர்ந்தவர் யார்?

2.பிடித்த புத்தகம்?

3.தமிழ்வாணனின் துப்பறியும் கதையில் கல்லுரிக்காலத்தில் ஈடுபாடு உண்டா?

4.அவர் ஆங்கில"சேஸ்" களை காப்பிஅடிப்பதாக சொல்வார்களே?

5.அந்த ஆங்கில "சேஸ்" களைப் படித்ததுண்டா?

6.ஆங்கில நாவல்களை தொடர்ந்து படித்த் நண்பர்களின் ஆங்கிலப் புலமை இன்றும் ஜொலிக்கிறது?


7.இந்த வரிசையில் தாங்கள் உண்டா?

8.தற்கால எழுத்தாளர்களில் யார் பிரபலம்(விற்பனை அடிப்படையில்)?

9.புத்தக விற்பனை படு அம்ர்க்களப் படுகிறதே/

10.அதிலும் பிரபல புத்தங்களின் "டூப்பிளிக்கேட்" மலிவான வில்லக்கு விற்கப் படுவதை பற்றி?

-பாண்டிய நக்கீரன்

dondu(#11168674346665545885) said...

அடுத்த வாரத்துக்கான முதல் பத்து கேள்விகளும் அதற்கான வரைவுக்கு சென்று விட்டன. நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SP.VR. SUBBIAH said...

./// இவர்களை தண்டிக்க யார் வருவாரோ?
பதில்: எத்தனுக்கு எத்தன் இல்லாமலா இருப்பான்//

Correct! The authority of Dharma (kala devan) will punish them by sending a right person!

Anonymous said...

//பதில்: ஊருக்கு மட்டும் உபதேசம் என்பது மனித இயல்புதானே.//

:-)

சரவணன்

Unknown said...

// dondu(#11168674346665545885) said...
அடுத்த வாரத்துக்கான முதல் பத்து கேள்விகளும் அதற்கான வரைவுக்கு சென்று விட்டன. நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
கேள்வி பதிலகளை " note pad" ல் டைப் செய்ய்கிறிர்களா.ஊதாவண்ணம் கொடுப்பதற்கு என்ன "comment" கொடுக்கிறிர்கள்? "E kalappai" அல்லது என்ன தமிழ் மென்பொருள் உபயோகிக்கிறார்கள்?

dondu(#11168674346665545885) said...

நோட் பேட் எல்லாம் எதற்கு? பிளாக்கரிலேயே வரைவுகளை எவ்வளவு வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாமே. என்ன, 'சேமி' என்னும் ஆணையைத் தரவேண்டியிருக்கும். கேள்விகள் வரவர அவை வரைவில் ஏற்றப்பட்டு விடுகின்றன.

மற்றப்படி ஊதா எழுத்துக்கள் எல்லாம் பிளாக்கரின் டீஃபால்ட் அமைவுகளை சார்ந்துள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

./// இவர்களை தண்டிக்க யார் வருவாரோ?
பதில்: எத்தனுக்கு எத்தன் இல்லாமலா இருப்பான்//

Correct! The authority of Dharma (kala devan) will punish them by sending a right person!//

எத்தனுக்கு எத்தன் வரட்டும் மகிழ்ச்சி. எத்தனால் பாதிக்கப்படுபவர்களுக்கும் நிவாரணம் கொடுக்க காலதேவன் ஆள் அனுப்புவாரா? எப்படீன்னு விளக்குங்கய்யா.

ஜோசப் பால்ராஜ் said...

வணக்கம் அய்யா,
உங்கள் பதில்கள் மிக அருமை. நறுக்கு தெரித்தாற்போல் இருப்பது மிக நன்றாக இருக்கின்றது.

//"பதில்: மதமாற்றம் வேறுமதத்திலிருந்து தத்தம் மதத்துக்குத்தான் வரவேண்டும் என்று இசுலாமியர் மட்டுமல்ல போப்பாண்டவரே அந்த மனநிலையில்தான் இருக்கிறார்."//

தயவு செய்து ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவும்.
போப் ஆண்டவர் என்பவர் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் தலைவர் அல்ல. ரோமன் கத்தோலிக்க பிரிவினருக்கு மட்டுமே அவர் தலைவர் ஆவார்.

இங்கு மதமாற்றத்தில் அதிக அக்கறை காட்டுவதும், தெருமுனைப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதும், துண்டு பிரசுரங்கள் வெளியிடுவதும் ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவர்கள் அல்ல. கத்தோலிக்கர்கள் பிற மத சகோதரர்களை மதமாற்றம் செய்ய முனைவதில்லை. எந்த மதத்தை சேர்ந்தவர்களும் கத்தோலிக்க ஆலயங்களுக்கு செல்லலாம், வழிபாட்டில் கலந்து கொள்ளலாம். திருப்பலியின்போது வழங்கப்படும் திவ்விய நற்கருணையை மட்டும் வாங்க முடியாது என்பது தவிர வேறெந்த வேறுபாடும் கத்தோலிக்க ஆலயங்களில் கிடையாது.

(கத்தோலிக்கர்கள் கூட புது நன்மை எனும் அருட்சாதனம் பெற்றவர்களும், பாவ மன்னிப்பு பெற்றவர்களும் மட்டுமே திவ்விய நற்கருணையை உட்கொள்ளலாம் என்பது விதி. புதுநன்மை என்பது 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தரப்படும், அதற்கு முன்னர் ஒரு சில பயிற்சிகளும் உண்டு.)

எனவே போப் ஆண்டவர் கூட மதமாற்றத்தில் ஈடுபாடு கொண்டுள்ளார் என்று நீங்கள் கூறுவது தவறான கருத்து.

Anonymous said...

நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வாக உங்கள் கருத்துக்களையும்,தமிழிலக்கணக் கட்டுரைகளை உங்களிடம் எழுதச் சொல்லிக் கேட்கும் போது,உங்களுக்குத் தோன்றும் அவலநிலை பற்றியும்,இத்தகைய கேள்விகளைக் கேட்கும் பதிவர்களின் அறியாமை பற்றியும் உங்கள் கருத்து?


கோமணகிருஷ்ணன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் பால்ராஜ் அவர்களே, போப்பாண்டவர் கடைசியாக இந்தியாவுக்கு வந்த போது பயன்படுத்திய சொற்கள் "ஆன்மாக்களின் அறுவடை" என்று பொருள் வரும் ஆங்கிலச் சொற்கள். மேலும் இது பற்றி அறிய பார்க்கவும்: http://www.upiasiaonline.com/Society_Culture/2007/03/29/commentary_jesus_tomb_and_dj_vu/5908/

நான் போப்பாண்டவரை குறைத்து மதிப்பிடவில்லை. அவர் வந்த போது பத்திரிகைகளில் வெளியான விஷயங்களை வைத்தே அவ்வாறு கூறினேன். மேலும் பிரசாரம் செய்து தம் மதத்துக்கு புதியவர்களை ஈர்ப்பதை செய்வது கிறித்துவ மற்றும் இசுலாமிய மதங்கள் என்பதை நான் உள்ளது உள்ளபடி கூறுவது என்னும் அடிப்படையிலேயே கூறுகிறேன். அது தவறு என்று எங்கும் நான் சொல்லவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்


அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//2. Is it true, due to on line trading ,the present condition (shortage) for crude oil price, as said by our mof?//

Online Futures trading of Oil is just trading in paper, it cannot cause shortage. If our minister says futures trading is causing shortage, he is lying.

If you are asking then why was shortage of fuel in Chennai recently. There is only one answer.
When you have price control shortages are inevitable.

Price controls cause shortages.

http://en.wikipedia.org/wiki/Economic_shortage

Anonymous said...

//Anonymous said...
நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வாக உங்கள் கருத்துக்களையும்,தமிழிலக்கணக் கட்டுரைகளை உங்களிடம் எழுதச் சொல்லிக் கேட்கும் போது,உங்களுக்குத் தோன்றும் அவலநிலை பற்றியும்,இத்தகைய கேள்விகளைக் கேட்கும் பதிவர்களின் அறியாமை பற்றியும் உங்கள் கருத்து?


கோமணகிருஷ்ணன்

கோ.கி அவர்களுக்கு,

டோண்டு சார் அவர்களின் பழுத்த அனுபவத்தை வைத்துத்தான் அவர்களிட்ம் கேள்வி கேட்கப்படுகிறது.

Narasimhan Raghavan
Chennai, Tamil Nadu, India
I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.

அவர் எழுதிய இந்த பதிவுகளை படித்து பாருங்கள் பின் உங்கள் முடக்கு வாதத்தை சொல்லுங்கள்

Labels
CPWD நினைவுகள் (8)
IDPL நினைவுகள் (9)
The Great Indian Novel (4)
அசிமோவ் (2)
அமெரிக்கா (2)
அரசியல் (51)
ஆண் பெண் கற்புநிலை (6)
இலக்கிய நயம் (4)
இஸ்ரேல் (13)
எந்தையும் தாயும் (2)
எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் (2)
என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (26)
கலப்பு திருமணம் (1)
காமராஜர் (8)
கிறுக்கு குணங்கள் (1)
கோவில்கள் (3)
சினிமா (15)
சோ (18)
டி.வி. சீரியல்கள் (5)
டோண்டு பதில்கள் (17)
டோண்டுவின் அனுபவங்கள் (85)
தன்னம்பிக்கை (40)
தவிர்க்க வேண்டிய நபர்கள் (5)
தொழில்நுட்பம் (3)
நகைச்சுவை (29)
நான் ரசித்த கதைகள் (2)
நீதிக்கதை (2)
நேரு குடும்பம் (6)
பதிவர் வட்டம் (70)
பத்திரிகை செய்திகள் (1)
பம்பாய் நினைவுகள் (5)
புதிர்கள் (27)
பொருளாதாரம் (27)
போலி டோண்டு (10)
மின்னஞ்சல் கதைகள் (3)
முரட்டு வைத்தியம் (6)
மொக்கை (8)
மொழிபெயர்ப்பு (45)
ராஜாஜி (5)
வாடிக்கையாளரை அணுகும் முறைகள் (10)
விளையாட்டு (1)
விவாத மேடை (157)
ஹைப்பர்லிங் (11)

தூங்குவதுபோல் பாசங்கு செய்யும் , கோ.கி என்ன இன்று வேறு இடம் கிடக்கவில்லையா?
நவீன தெனாலிராமனா? நவீன நாரதரா

ராமகிருஷ்ணஹரி

Subbiah Veerappan said...

///ரங்கன் சைட்...
./// இவர்களை தண்டிக்க யார் வருவாரோ?
பதில்: எத்தனுக்கு எத்தன் இல்லாமலா இருப்பான்//
Cஒர்ரெcட்! Tகெ ஔதொரிட்ய் ஒf Dகர்ம (கல டெவன்) நில்ல் புனிஷ் தெம் ப்ய் சென்டிங் அ ரிக்க்ட் பெர்சொன்!//
எத்தனுக்கு எத்தன் வரட்டும் மகிழ்ச்சி. எத்தனால் பாதிக்கப்படுபவர்களுக்கும் நிவாரணம் கொடுக்க காலதேவன் ஆள் அனுப்புவாரா? எப்படீன்னு விளக்குங்கய்யா.////

காலதேவன் எல்லோருக்கும் பொதுவானவர் சாமி!
நம்பிக்கை கொள்ளுங்கள்! நிச்சயம் வருவார். மழையாக! பயிராக! உணவாக!

Anonymous said...

//நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வாக உங்கள் கருத்துக்களையும்,தமிழிலக்கணக் கட்டுரைகளை உங்களிடம் எழுதச் சொல்லிக் கேட்கும் போது,உங்களுக்குத் தோன்றும் அவலநிலை பற்றியும்,இத்தகைய கேள்விகளைக் கேட்கும் பதிவர்களின் அறியாமை பற்றியும் உங்கள் கருத்து?//

கோமணம், உன்னுடைய அறியாமை பத்தி என்ன சொல்ல.

அவர் பதில் கூறாத கேள்விகளுக்கு, சரியான பதில் இருந்தால் யார் வேண்டுமானாலும் பின்னூட்டமாக
போடலாம்.

பாருங்கள் ஒரு அனானி,
தட்டுபாடு என்பது பொருளின் விலையை அரசு கட்டுபடுத்துவதினால் விளைவது. தற்கால எரிபொருள் தட்டுபாடுக்கு இது ஒரு காரணம்...என்று விளக்கியுள்ளார்.

எப்படியோ கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது... இதற்கு மேலே என்ன வேண்டும்?

Anonymous said...

உங்கள் நல்ல புத்தி வக்கிரபுத்தி இரண்டும் கேள்வி பதிலாக வந்துள்ளது.



pullirajaa

Anonymous said...

// குசேலன் said...
//நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வாக உங்கள் கருத்துக்களையும்,தமிழிலக்கணக் கட்டுரைகளை உங்களிடம் எழுதச் சொல்லிக் கேட்கும் போது,உங்களுக்குத் தோன்றும் அவலநிலை பற்றியும்,இத்தகைய கேள்விகளைக் கேட்கும் பதிவர்களின் அறியாமை பற்றியும் உங்கள் கருத்து?//

கோமணம், உன்னுடைய அறியாமை பத்தி என்ன சொல்ல.

அவர் பதில் கூறாத கேள்விகளுக்கு, சரியான பதில் இருந்தால் யார் வேண்டுமானாலும் பின்னூட்டமாக
போடலாம்.

பாருங்கள் ஒரு அனானி,
தட்டுபாடு என்பது பொருளின் விலையை அரசு கட்டுபடுத்துவதினால் விளைவது. தற்கால எரிபொருள் தட்டுபாடுக்கு இது ஒரு காரணம்...என்று விளக்கியுள்ளார்.

எப்படியோ கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது... இதற்கு மேலே என்ன வேண்டும்?

well said sir .thank you.

Anonymous said...

dondu avargale, what happened my posts? why you not publish?

komanakrishnan

Anonymous said...

//Economic shortage
From Wikipedia, the free encyclopedia
Jump to: navigation, search

Polish meat shop in the 1980s.Economic shortage is a term describing a disparity between the amount demanded for a product or service and the amount supplied in a market. Specifically, a shortage occurs when there is excess demand; therefore, it is the opposite of a surplus.

Economic shortages are related to price—when the price of an item is "too low," there will be a shortage. In most cases, a shortage will compel firms to increase the price of a product until it reaches market equilibrium. Sometimes, however, external forces cause more permanent shortages—in other words, there is something preventing prices from rising or otherwise keeping supply and demand unbalanced.

In common use, the term "shortage" may refer to a situation where most people are unable to find a desired good at an affordable price. In the economic use of "shortage", however, the affordability of a good for the majority of people is not an issue: If people wish to have a certain good but cannot afford to pay the market price, their wish is not counted as part of demand.//


thank you sir for your kind reference.
actually my explanation for the present shortage in supply of oil is created one by vested interests.

due to on line trading the crude oil price is going above 140 dollar.
then the oil producing countries (opec)want to get more money.hence they are not increasing production of crude oil even after the fervent appeal of usa & other nations .

if the on line trading is stopped once for all .then the artificial price increase may come down.then the supply may match the demand.

I think this may be the explanation

on line trading may be indirect reason for the present shortage in oil sector (created by vested interests )

Anonymous said...

//SP.VR. SUBBIAH said...
///ரங்கன் சைட்...
./// இவர்களை தண்டிக்க யார் வருவாரோ?
பதில்: எத்தனுக்கு எத்தன் இல்லாமலா இருப்பான்//
Cஒர்ரெcட்! Tகெ ஔதொரிட்ய் ஒf Dகர்ம (கல டெவன்) நில்ல் புனிஷ் தெம் ப்ய் சென்டிங் அ ரிக்க்ட் பெர்சொன்!//
எத்தனுக்கு எத்தன் வரட்டும் மகிழ்ச்சி. எத்தனால் பாதிக்கப்படுபவர்களுக்கும் நிவாரணம் கொடுக்க காலதேவன் ஆள் அனுப்புவாரா? எப்படீன்னு விளக்குங்கய்யா.////

காலதேவன் எல்லோருக்கும் பொதுவானவர் சாமி!
நம்பிக்கை கொள்ளுங்கள்! நிச்சயம் வருவார். மழையாக! பயிராக! உணவாக//



God's Punishment

Jehovah oversees all things, therefore the miss-fortunes of the sinners is through the intercession of Jehovah. Of course, when it happens to the good guys, it is a test of the good guys’ will; and if they pass they will be amply rewarded in heaven. When it happens to the bad guys, they deserve it. The same applies to cities, nations, and the Jews: they all get what they deserve.

Anonymous said...

//தென்கலை,வடகலை இடும் திருநாமம் தவிர வழிபாடுகளில் உள்ள வேறுபாடுகளை சொல்லவும்?
பதில்: தேசிகரை பின்பற்றுபவர்கள் வடகலை. ஆழ்வார்களை பின்பற்றுபவர்கள் தென்கலையினர். பின்னவர்கள் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள், திவ்யபிரபந்த பாராயணம் செய்து உற்சவருக்கு முன்னால் செல்பவர்கள். வடகலையினர் சம்பிரதாயமாக வேத பாராயணம் செய்வதற்கு முக்கியத்துவம் தருபவர்கள். உற்சவருக்கு பின்னால் வேத கோஷம் செய்த வண்ணம் செல்வார்கள். காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் உற்சவங்களில் இந்த வேறுபாட்டை நன்கு காணலாம். மற்றப்படி இருபிரிவினருமே ஐயர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்கள்.


அஞ்சல் துறை,தொலை தொடர்புத் துறை,ரயில்வே துறை,ஆடிட்டர் துறை,கம்பெனி நிர்வாகங்கள் இவற்றில் ஐயர்களை விட அயங்கார் இனத்தவரே
கொடி கட்டி பறந்தனர்.( இன்னும் அவ்ர்களின் நிர்வாகமேலாண்மையின் தாக்கம் இருக்கிறது-உதாரனத்திற்கு டி.வி.எஸ்) திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் தென் திருப்பதி
திவ்விய தேசங்களை t.v.s நிர்வகிப்பதே அவரது திறமைக்கு சாட்சி

dondu(#11168674346665545885) said...

I get confused between Komanakrishnan and கோமணகிருஷ்ணன். No coments are pending. Please send comment once again.

Dondu N. Raghavan

Anonymous said...

//if the on line trading is stopped once for all .then the artificial price increase may come down.then the supply may match the demand.

I think this may be the explanation
on line trading may be indirect reason for the present shortage in oil sector (created by vested interests )//

I don't know what you are referring as online trading. I presume that you are referring to Futures Trading.

Stopping futures trading will only make commodity markets less efficient.

There is no evidence whether futures trading can impact prices in the spot market.

Some say that large infusion of funds might be a reason for oil price increase, but without the support of other factors like
1. restricted supply
2. unrelenting demand
3. weakening dollar
price cannot stay too high for too long just by pure speculation alone.

Many economists say that oil has been too cheap in the past few years and only now the price reflects its fundamentals.

Anonymous said...

//dondu(#11168674346665545885) said...

I get confused between Komanakrishnan and கோமணகிருஷ்ணன். No coments are pending. Please send comment once again.

Dondu N. Raghavan

Komanakrishnan and கோமணகிருஷ்ணன்


கோமணகிருஷ்ணன்
எத்தனை
கோமணகிருஷ்ணனோ
ஏன் கோ.கி
வேறு பேரா கிடைக்கவில்லை

உலகின் அனத்து உயிர்களையும் காக்கும் கடவூளாய்
பத்து அவதாரம் எடுத்த்த
பரந்தாமனின் பகவத் கீதை அருளிய புண்ணிய அவதாரமான
ஸ்ரீகிருஷ்ண புனித நாமத்தை இப்படி செய்வது உங்களுக்கே அடுக்குமா? அடுத்த பிறவியில்

அந்த கோ.............
வாய் மாறிவிடப் போகிறீர்கள் ஜாகிரதை
இனியாவது
கோபால கிருஷ்ணன்
கோகுல கிருஷ்ணன் என்று பேரை மாற்றி கொள்ள
வலைப்பதிவுலகம் ஆனையிடுகிறது





.

ezhil arasu said...

டோண்டு சார் இந்த பழமொழிகளுக்கு உங்கள் பாணியில் புதுவிளக்கம் கொஞ்சம் நகைச்சுவை கல்ந்து(தற்கால அரசியல்,பொருளாதார,சமுகநில ஆகியவற்றை சார்ந்து)

1.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

2.மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம்.

3.நிறை குடம் நீர் தளும்பாது. குரை குடம் கூத்தாடும்

4.ஆழம் பார்க்காமல் காலை விடாதே

5.முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்

6.யானைக்கும் அடி சறுக்கும்

7.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு


8.இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் (திருக்குறள்)

9.புலி பசித்தாலும் புல்லை தின்னாது.

10.வெறும் கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம்.


கேள்வி பதில் பதிவானாலும் ஓ,கே.
வரும் வெள்ளிகிழமைக்கு

Anonymous said...

//மற்றப்படி இருபிரிவினருமே ஐயர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்கள். //

in terms of headcount what do you mean to say.

1. தென்கலை < ஐயர் and வடகலை < ஐயர்
or
2. ஐயங்கார் < ஐயர்

dondu(#11168674346665545885) said...

ஐயங்கார் (தென்கலை+வடகலை) < ஐயர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//Anonymous said...
//மற்றப்படி இருபிரிவினருமே ஐயர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்கள். //

in terms of headcount what do you mean to say.

1. தென்கலை < ஐயர் and வடகலை < ஐயர்
or
2. ஐயங்கார் < ஐயர்


ஒரு சம்யம் எனது நெருங்கிய நண்பர் (ஐயங்கார்)வீட்டிற்கு வேறு ஒரு நண்பருடன் (ஐயர்) சென்றிருந்த சமயத்தில்.குடிக்க தண்ணிர் கொடுத்தார்கள்.தண்ணிர் குடுத்த குவளையை கவிழ்த்தி வைக்க சொன்னார்கள்(நல்ல பரந்த,தாரள மனதுடய,குனமுடைய ஐயங்கார் நண்பனின் அம்மா அவர்கள்).
அந்த குவலை மேல் நீர் தெளித்த பின் உள்ளே எடுத்து சென்றார்கள்.

ஐயர் உபயோகித்தது ஐயங்காருக்கு தீட்டா?எனக்கு இது வரை புரியவில்லை.கேட்டால் நண்பர்களுக்குள் பிரச்சனை வரக்கூடாதே.

இது என்ன சம்பிரதாயம்.
அப்படியென்றால் ஐயரை விட ஐயங்கார் forward cast எனக் கொள்ளலாமா?

இந்த நிகழ்ச்சி நடந்தது சுமார் 25 வருடங்களுக்கு முன்னால்.இப்போது நிலை என்ன?மாறி இருக்கிறாதா?

Anonymous said...

//
ஐயங்கார் (தென்கலை+வடகலை) < ஐயர்.
//

யார் முதல் இடம் என்ற போட்டி அல்ல, யார் கடைசி இடத்தில் என்ற போட்டி போல் தெரிகிறது.

Anonymous said...

//பெயர் சென்சார் செய்யப்பட்டது said...
//
ஐயங்கார் (தென்கலை+வடகலை) < ஐயர்.
//

யார் முதல் இடம் என்ற போட்டி அல்ல, யார் கடைசி இடத்தில் என்ற போட்டி போல் தெரிகிறது.

July 04, 2008 8:53 PM
இது நல்ல இருக்கே!

dondu(#11168674346665545885) said...

//இந்த நிகழ்ச்சி நடந்தது சுமார் 25 வருடங்களுக்கு முன்னால்.இப்போது நிலை என்ன?மாறி இருக்கிறாதா?//
ஐயர் உபயோகித்த டம்ளரை ஐயங்கார் கழுவி எடுத்து கொண்டாரா? எனக்கு தெரிந்து இம்மாதிரி பழக்கம் இல்லை. ஆகவே நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னிடம் விடையில்லை.

டோண்டு ராகவன்

thenkasi said...

1.சென்னையில் நாடக சபாக்களின் தற்போதய நிலை என்ன?( வாசகர் வருகை,ஹைடெக் மாற்றங்கள்)

2.நாடகக் குழுக்களில் "பிசி"யாக உள்ள குழு யாருடையது.

3.நாடகக் காவலர் மனோகர் வைத்திருந்த பிரமாண்ட அரங்க அமைப்புகளை என்ன செய்தார்கள்?

4.ரேடியோ நாடகங்கள் கூட தற்சமயம் சோபிக்கவில்லையே?

5.டீ.வி சிரியல்கள் எல்லோரையும் இழுத்துவிட்டதே?

6.உங்களுக்கு சிரியல்கள் பார்க்கும் பழக்கம் உண்டா?

7.அதை பற்றிய விமர்சனம்(பிடித்த அல்லது பிடிக்காத)

8.திரப்பட உலகம் பெரிய கார்பொரேட் கைகளில், செல்வு கூட எகிறுதே?

9. 4 படங்களை தவிர ம்ற்ற எல்லாம் ஊத்திக் கொண்டதாமே?(அஞ்சாதே,ச.சுப்பிரமணியம்,சண்டை,யா.மோகினி)

10.அடுத்த வருங்கால முதல்வர் கனவை அப்பாவுக்காகா காண முயலும் விஜயின் குருவி கூட( "நாளய சின்னத் தளபதி" இரண்டின் தாயரிப்பு- அரசு செல்வாக்கு-etc)பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கவில்லையே?

Anonymous said...

//தூங்குவதுபோல் பாசங்கு செய்யும் , கோ.கி என்ன இன்று வேறு இடம் கிடக்கவில்லையா?
நவீன தெனாலிராமனா? நவீன நாரதரா

ராமகிருஷ்ணஹரி//

டோண்டு அவர்களே,இது என்ன இன்னொரு முரளி மனோஹர் மாதிரி இருக்கிறது !

komanakirishnan

Anonymous said...

//Anonymous said...
//தூங்குவதுபோல் பாசங்கு செய்யும் , கோ.கி என்ன இன்று வேறு இடம் கிடக்கவில்லையா?
நவீன தெனாலிராமனா? நவீன நாரதரா

ராமகிருஷ்ணஹரி//

டோண்டு அவர்களே,இது என்ன இன்னொரு முரளி மனோஹர் மாதிரி இருக்கிறது !

komanakirishnan


ha! ha! ha!

no you are totally wrong.
please guess me

-your close friend

still you have not changed your name
you will get god's punshment shortly.

ramakrishanahari.
tamilnadu

Anonymous said...

//Anonymous said...
//Anonymous said...
//தூங்குவதுபோல் பாசங்கு செய்யும் , கோ.கி என்ன இன்று வேறு இடம் கிடக்கவில்லையா?
நவீன தெனாலிராமனா? நவீன நாரதரா

ராமகிருஷ்ணஹரி//

டோண்டு அவர்களே,இது என்ன இன்னொரு முரளி மனோஹர் மாதிரி இருக்கிறது !

komanakirishnan


ha! ha! ha!

no you are totally wrong.
please guess me

-your close friend

still you have not changed your name
you will get god's punshment shortly.

ramakrishanahari.
tamilnadu


ithe maathiri oru padathththil maNivaNNan bus staapil nenRu koNdu ,varum pas il uLLavarkaLai"maapillai enaa nalla irukiyaa,viiddila ellaarum sukamaa? enkk kEdaka ,pirayaanam pannuravn mandaiyai udaththukkoLvaan"

athu pol nilamai nama
"valaipathivu vadivelu"
komanakrishana kku

Anonymous said...

//"valaipathivu vadivelu"
komanakrishana kku


ஆகா என்னா பேர் பொருத்தம்

பிரமாதம் போங்கண்ணா!!!!!!!!!!

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.............................வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இப்பவே கண்ணை கட்டுதே

வ்லைப்பதிவு வடிவேலு
அண்ணன் கோ.கி
என்ன பதிலையே காணோம்?

Anonymous said...

1.what will haappen to leftists if congress breaks the understanding?

2.will west bengal govt get threats of dissolving, based on lay and order in famous " nadi kiraam"

3. it is told that leftist forces( all )will get less seats if election is ordered?is it true?

4.by joining with congress the leftists lost their masses ?is it ok

5.it seems wind blows favour of bjp.and next p.m is sri athvaniji?


your( dondu ragavanji) joy knows no bounds !


ramakrishanahari.

Anonymous said...

1.கடைசியில் சிவப்பு கோழிகளின் சாயம் வெளுக்கப் போகிறதா?


2.ஒர் சில பதவிகளுக்காக காட்டி கொடுக்கும் மூ.யாதவ் பற்றி உங்கள் கருத்து?


3. அப்துல்கலாம் கூட எப்படி?யாரைத்தான் நம்ம்புவதோ!




4.அணு ஒப்பந்தை விட பயங்கரமான 123(hide)பற்றி ?


5.சீனா கூட 123 ல் கையெழுத்து போடாமால் அணு ஒப்பந்தம் செய்த‌தாக தெரிகிறதே?

6.பா.ஜ.க வின் நிலை ,தற்போது?

7.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதன் நிlaiப்பாடு?

8.அமெரிக்காவில் பெரும் கூட்டம் வீட்டுக் கடனால் அல்லலுறுகின்றனர் உண்மையா,மிகைப்படுத்தப்படுகிறதா


9.கார்க்கு பெட்ரோல் போட தன்னையே கொடுக்கும்( பலான சுகம்) போக்கு உள்ளதாமே?


10.பிரதமர்க்கு பெரும்பான்மை இல்லாதது போல் தெரிகிறதே?


ramanasthiram

Anonymous said...

// Tamil Paiyan said...
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

http://www.tamilish.com is very good and fine.Thanks to sri tamil paiyan
ramakrishanahari

Anonymous said...

//I get confused between Komanakrishnan and கோமணகிருஷ்ணன். No coments are pending. Please send comment once again.
//

டோண்டு அவர்களே, இதே கேள்வியை தமிழிலும் கேட்டிருந்தேன். மேலும் முந்தைய பதிவில் மத நல்லிணக்க கருத்தும் தெரிவித்திருந்தேன். அவற்றை நீங்கள் பதிக்கவில்லை. ஒருவேளை எனது கருத்தினால் நீங்கள் பயந்தோ அல்லது பிடிக்காமலோ பதிக்கவில்லை என நினைத்தேன்.

மத நல்லிணக்கம் பற்றிய எனது அந்த கருத்து இதுதான் (முடிந்தால் பதிக்கவும்):

your question "மத நல்லிணக்கம் என்றால் என்ன ?"

அப்பாவி சிறுபான்மையினரை கொல்லுவதே நல்லிணக்கம். நீ ஒசந்த சாதி நீ தாழ்ந்த சாதி என வ்ருணாசிரம பேதம் பார்ப்பதே நல்லிணக்கம். ஆடு மாடு மேய்க்க கணவாய் வழியாக வந்து தமிழரையும் திராவிடரையும் அடிமைப்படுத்துவதே நல்லிணக்கம். RSS, VHP, சோ, மோடி போன்ற மதவெறியர்கள் சொல்லுவதே நல்லிணக்கம்.

இவைதான் நல்லிணக்கமா என உங்கள் உள்ளங்கவர்ந்த பெருங்குழை காதரை கேட்டு சொல்லவும்

கோமணகிருஷ்ணன்

Anonymous said...

அப்பாவி சிறுபான்மையினரை கொல்லுவதே நல்லிணக்கம். நீ ஒசந்த சாதி நீ தாழ்ந்த சாதி என வ்ருணாசிரம பேதம் பார்ப்பதே நல்லிணக்கம். ஆடு மாடு மேய்க்க கணவாய் வழியாக வந்து தமிழரையும் திராவிடரையும் அடிமைப்படுத்துவதே நல்லிணக்கம். RSS, VHP, சோ, மோடி போன்ற மதவெறியர்கள் சொல்லுவதே நல்லிணக்கம்.

இவைதான் நல்லிணக்கமா என உங்கள் உள்ளங்கவர்ந்த பெருங்குழை காதரை கேட்டு சொல்லவும்

கோமணகிருஷ்ணன்

one small request to sri.dondu ragavanji,

please give him a suitable and fitting reply.
"valaippathivulaga vadiveluvukku"
nakaisuvai konjam athikam poolum

ramakrishanahari

Anonymous said...

//இவைதான் நல்லிணக்கமா என உங்கள் உள்ளங்கவர்ந்த பெருங்குழை காதரை கேட்டு சொல்லவும்

கோமணகிருஷ்ணன்

பெருங்குழை காதரை கேட்டு சொல்லவும்

ithu romba kusumballavaa

ramakrishanahari

thenkasi said...

//இவைதான் நல்லிணக்கமா என உங்கள் உள்ளங்கவர்ந்த பெருங்குழை காதரை கேட்டு சொல்லவும்

கோமணகிருஷ்ணன்.

மத நல்லிணக்கம்,மதச் சார்பின்மை இதெல்லாம் இந்தியாவில் தேர்தலில் ஓட்டு வாங்க உப்யோகப்படும் பிரம்ம சூத்திரங்கள்.

1.எல்லா அரசியல் தலைவர்களும் (பா.ஜ.க உட்பட) தங்களை சிறுபான்மையின காவலன் எனக் காட்டிக்கொள்வதை பெருமையாய் கொண்டுள்ளனர்.

2.வேட்பாளர்களில் நாங்கள் சிறுபான்மையின மக்களூககு வாயப்பு கொடுத்துள்ளோம் என்பதற்காவே சாதரண பேர்களையும் தலை தூக்கி வைத்துகொண்டு ஆடுவார்கள்.

3.சிறுபான்மையின மத விழாக்களில் பங்கெடுப்பது ஏதோ தெய்வ கைங்கரியம் போல் செய்து போட்டாவுக்கு போஸ் கொடுக்காதவர் யார்?


4.நாத்திகம் பேசும் பகுத்தறிவு அறிவு ஜீவிகளெல்லாம் உலகிலே இந்து மதத்தில் மட்டும் தான் மூடநம்பிக்கை சமாச்சாரங்கள் என்பது போல் சாமியாடி குறி சொல்வார்கள்

5 பொறுமைக்கு இலக்கணமாய் நம் முன்னோர்கள் ஒற்றுமையாய் வாழ்ந்து சிறப்பித்த இந்து மத மக்கள‌னைவரும்,தற்சமய்ம் ஜாதிப் பிரிவுகளாய் பிரிந்து கிடப்பதை சரி செய்ய கடவுள், அவரே கல்கி அவதாரம் எடுத்து வந்தால் தான்
இக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும்

dondu(#11168674346665545885) said...

//எல்லா அரசியல் தலைவர்களும் (பா.ஜ.க உட்பட) தங்களை சிறுபான்மையின காவலன் எனக் காட்டிக்கொள்வதை பெருமையாய் கொண்டுள்ளனர்.//
எனக்கு தெரிந்து குஜராத் தேர்தலில் மோடி ஒருவர்தான் அம்மாதிரி எல்லாம் அசடு வழியவில்லை. சிறுபான்மையினரின் பாதுகாப்பு பற்றி அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தான் குஜராத்திலுள்ள அத்தனைபேருக்கும் பாதுகாப்பு தந்து ஒட்டுமொத்தமாக குஜராத்தை மேலும் முன்னேற்ற பாடுபடப் போவதை சொன்னார்.
அதே போல காங்கிரஸ் கடந்த தேர்தலில் இலவச டி.வி. தருவதாக அளித்த வாக்குறுதிக்கு எதிராக மோடி கூறியதெல்லாம் ஒன்றுதான். அதாவது வரி தராது ஏய்த்தவர்களுக்கு நோட்டீஸ் தரப்போவதாக எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி கூறினார்.

இதையெல்லாம் மக்கள் ஒத்து கொண்டனர். அவருக்கு ஓட்டு அளித்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

thenkasi said...

///எல்லா அரசியல் தலைவர்களும் (பா.ஜ.க உட்பட) தங்களை சிறுபான்மையின காவலன் எனக் காட்டிக்கொள்வதை பெருமையாய் கொண்டுள்ளனர்.//
எனக்கு தெரிந்து குஜராத் தேர்தலில் மோடி ஒருவர்தான் அம்மாதிரி எல்லாம் அசடு வழியவில்லை. சிறுபான்மையினரின் பாதுகாப்பு பற்றி அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தான் குஜராத்திலுள்ள அத்தனைபேருக்கும் பாதுகாப்பு தந்து ஒட்டுமொத்தமாக குஜராத்தை மேலும் முன்னேற்ற பாடுபடப் போவதை சொன்னார்.
அதே போல காங்கிரஸ் கடந்த தேர்தலில் இலவச டி.வி. தருவதாக அளித்த வாக்குறுதிக்கு எதிராக மோடி கூறியதெல்லாம் ஒன்றுதான். அதாவது வரி தராது ஏய்த்தவர்களுக்கு நோட்டீஸ் தரப்போவதாக எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி கூறினார்.

இதையெல்லாம் மக்கள் ஒத்து கொண்டனர். அவருக்கு ஓட்டு அளித்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டோண்டு சார் சொல்வதை எல்லாம் பார்க்கும் போது , ஒரு வேளை விலையுர்வு,கூட்டணிக் குழப்பங்கள்,ஆகியவற்றால் காங்கிரஸ் தோற்று பா.ஜ.க கூட்டணி ஆட்சிக் கட்டிலில் ஏறினால் பெரியவர் அத்வானிஜி யை விட மோடி பொருத்தமாய் இருப்பார் போலுள்ளதே.

இதே மாதிரி ஒரு வலிமையான தலைவர் அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமால் அடுத்த த்லைமுறையைப் பற்றி சிந்த்தித்து, போலி மத சார்பின்மைக்கு சாவு மணியடிக்கும் பொன்னாளுக்கு காத்திருப்போம்

Anonymous said...

வலையுலக வடிவேலு கோ.கி.ஐ கோமணம் கழட்ட வந்திருக்கும் ராமகிருஷண ஹரி வாழ்க.....
ஒரு உறையில் ஒரு வாள்தான் இருக்க முடியும் !
தமிழ் மணத்தில் ஒரு கோமணகிருஷணனுக்குத்தான் இடம் !

komanakirushnan

enRenRum-anbudan.BALA said...

தென்கலை,வடகலை இடும் திருநாமம் தவிர வழிபாடுகளில் உள்ள வேறுபாடுகளை சொல்லவும்?

டோண்டு அவர்கள் எடுத்துரைத்த வேறுபாடுகளைத் தவிர இன்னும் சில முக்கியமானவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. வடகலை சம்பிரதாயத்தில், ஜீவாத்மாவானது (பரமாத்விடம்) சரணாகதி அடைவதற்கான வழிமுறைகளை கடைபிடிப்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, முக்தி அடைய ஜீவாத்மாவின் 'முயற்சி' அவசியம் என்பது சொல்லப்பட்டுள்ளது.

தென்கலை சம்பிரதாயம், 'சரணாகதி' என்பதையே ஒப்புக்கொள்வதில்லை, ஏனெனில், ஜீவாத்மா என்பது சதாசர்வ காலமும் பரமாத்வின் கட்டுக்குள் இருப்பதால், பரமாத்மாவானது தனது 'விருப்பத்தின்' பேரில், ஒரு ஜீவாத்மாவுக்கு முக்தி அளித்து காக்க இயலுமே அன்றி, ஜீவாத்மா தானாக 'சரணாகதி'யை மேற்கொள்ளும் திறம் படைத்தது கிடையாது !

2. வடகலையார், திருமகளை பரமாத்ம சொரூபமாக (திருமாலுக்கு இணையாக) பார்க்கின்றனர். தென்கலையார், திருமகளை ஜீவாத்மாகவே (அதே சமயம், திருமாலிடம் பரிந்துரைக்கும் சக்தி கொண்டவராக!) பார்க்கின்றனர்.

3. வடகலையார் (தென்கலையாரை விடவும்!) சந்தியாவந்தனம் போன்ற நித்ய அனுஷ்டானங்களை கடைபிடிக்கும் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.

4. பரமாத்மா, ஜீவாத்மாக்களின் துயரைக் கண்டு வருந்துவதில்லை (ஏனெனில், அவற்றின் துயர் துடைக்கும் திறன் பரமனிடம் இருப்பதால், அவர் வருத்தம் அடைய வேண்டிய அவசியமில்லை!) என்பது வடகலையார் நம்பிக்கை.

தென்கலையார், ஜீவாத்மாக்களின் துயரைக் கண்டு (ஸ்ரீராமர் போல) பரமாத்மா மனம் வருந்துவதாகவே நம்புகின்றனர்.

எ.அ.பாலா

thenkasi said...

// enRenRum-anbudan.BALA said...

தென்கலை,வடகலை இடும் திருநாமம் தவிர வழிபாடுகளில் உள்ள வேறுபாடுகளை சொல்லவும்?

டோண்டு அவர்கள் எடுத்துரைத்த வேறுபாடுகளைத் தவிர இன்னும் சில முக்கியமானவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. வடகலை சம்பிரதாயத்தில், ஜீவாத்மாவானது (பரமாத்விடம்) சரணாகதி அடைவதற்கான வழிமுறைகளை கடைபிடிப்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, முக்தி அடைய ஜீவாத்மாவின் 'முயற்சி' அவசியம் என்பது சொல்லப்பட்டுள்ளது.

தென்கலை சம்பிரதாயம், 'சரணாகதி' என்பதையே ஒப்புக்கொள்வதில்லை, ஏனெனில், ஜீவாத்மா என்பது சதாசர்வ காலமும் பரமாத்வின் கட்டுக்குள் இருப்பதால், பரமாத்மாவானது தனது 'விருப்பத்தின்' பேரில், ஒரு ஜீவாத்மாவுக்கு முக்தி அளித்து காக்க இயலுமே அன்றி, ஜீவாத்மா தானாக 'சரணாகதி'யை மேற்கொள்ளும் திறம் படைத்தது கிடையாது !

2. வடகலையார், திருமகளை பரமாத்ம சொரூபமாக (திருமாலுக்கு இணையாக) பார்க்கின்றனர். தென்கலையார், திருமகளை ஜீவாத்மாகவே (அதே சமயம், திருமாலிடம் பரிந்துரைக்கும் சக்தி கொண்டவராக!) பார்க்கின்றனர்.

3. வடகலையார் (தென்கலையாரை விடவும்!) சந்தியாவந்தனம் போன்ற நித்ய அனுஷ்டானங்களை கடைபிடிக்கும் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.

4. பரமாத்மா, ஜீவாத்மாக்களின் துயரைக் கண்டு வருந்துவதில்லை (ஏனெனில், அவற்றின் துயர் துடைக்கும் திறன் பரமனிடம் இருப்பதால், அவர் வருத்தம் அடைய வேண்டிய அவசியமில்லை!) என்பது வடகலையார் நம்பிக்கை.

தென்கலையார், ஜீவாத்மாக்களின் துயரைக் கண்டு (ஸ்ரீராமர் போல) பரமாத்மா மனம் வருந்துவதாகவே நம்புகின்றனர்.

எ.அ.பாலா//

தங்களின் விரிவான பக்திப் பரவசமான விளக்கத்திற்கு நன்றி.

Anonymous said...

>> "எனது வீடு தெற்கு பார்த்த வீடு"

வாஸ்து நம்பிக்கையில்லையா? வாஸ்து, ஜாதகம், ஜோதிடம் பற்றி உங்கள் கருத்து?

dondu(#11168674346665545885) said...

//வாஸ்து நம்பிக்கையில்லையா?//
தெற்கு பார்த்த வீடு என்று சொன்னது அதில் காற்று நன்கு வரும் என்பதை குறிக்க. மற்றப்படி வாஸ்து எல்லாம் நம்புவதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//if the on line trading is stopped once for all .then the artificial price increase may come down.//

if futures trading is stopped, prices may not come down rather it may increase wildly...

Onions have no futures market, yet their recent price volatility makes the swings in oil and corn look tame.

What onions teach us about oil prices

By Jon Birger, senior writer
Last Updated: June 30, 2008: 11:49 AM EDT

(Fortune Magazine) -- Before the U.S. Commodity Futures Trading Commission starts scrutinizing the role that speculators may have played in driving up fuel and food prices, investigators may want to take a look at price swings in a commodity not in today's news: onions.

The bulbous root is the only commodity for which futures trading is banned. Back in 1958, onion growers convinced themselves that futures traders (and not the new farms sprouting up in Wisconsin) were responsible for falling onion prices, so they lobbied an up-and-coming Michigan Congressman named Gerald Ford to push through a law banning all futures trading in onions. The law still stands.

And yet even with no traders to blame, the volatility in onion prices makes the swings in oil and corn look tame, reinforcing academics' belief that futures trading diminishes extreme price swings. Since 2006, oil prices have risen 100%, and corn is up 300%. But onion prices soared 400% between October 2006 and April 2007, when weather reduced crops, according to the U.S. Department of Agriculture, only to crash 96% by March 2008 on overproduction and then rebound 300% by this past April.

The volatility has been so extreme that the son of one of the original onion growers who lobbied Congress for the trading ban now thinks the onion market would operate more smoothly if a futures contract were in place.

"There probably has been more volatility since the ban," says Bob Debruyn of Debruyn Produce, a Michigan-based grower and wholesaler. "I would think that a futures market for onions would make some sense today, even though my father was very much involved in getting rid of it."

First Published: June 27, 2008: 10:09 AM EDT

http://money.cnn.com/2008/06/27/news/economy/The_onion_conundrum_Birger.fortune/?postversion=

thenkasi said...

// dondu(#11168674346665545885) said...
//வாஸ்து நம்பிக்கையில்லையா?//
தெற்கு பார்த்த வீடு என்று சொன்னது அதில் காற்று நன்கு வரும் என்பதை குறிக்க. மற்றப்படி வாஸ்து எல்லாம் நம்புவதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்.


தங்களது புரட்சிக்கர கருத்துக்கு நன்றி.

1.இன்று விற்கும் புத்தகங்களில் சோதிடம் சார்ந்த புத்தகங்களுக்கு தான் கிராக்கி ஏன்?

2.முக்கால் வாசி டீ.விகளில் வாஸ்து,பெயர் மாற்றுதல்,கல் அணிதல்
களை கட்டுகிறதே?அதிகம் பேர் நம்புவதலானேதானே

3.பகுத்தறிவு சிங்கங்கள் கூட யாகம்,சோதிடம் என் அலைவதாக தகவல்,உண்மையில்லையா?

4.ஒரு சில கட்சிகள் ஜாதகம் பார்த்தே வேட்பாளர்களை நிறுத்துகின்றனர் இல்லையா?

5.மனிதன் எவ்வளவு நாத்தீகம்,பகுத்தறிவு பேசினாலும் 50 வயதுக்குமேலே கோயிலே சரணம்
என்றுதானே இருக்கிறார்கள்-பக்தி என்று வரும் போது ஜாதகம்,சகுனம் பார்ப்பது,சூலம் பார்ப்பது, எல்லாம் ஒன்றுக் கொன்று தொடர்புடையது தானே?

Anonymous said...

more on futures trading...

REVIEW & OUTLOOK

The Onion Ringer
July 8, 2008; Page A20

Congress is back in session and oil prices are still through the roof, so pointless or destructive energy legislation is all but guaranteed. Most likely is stiffer regulation of the futures market, since Democrats and even many Republicans have so much invested in blaming "speculators" for $4 gas.

Congress always needs a political villain, but few are more undeserving. Futures trading merely allows market participants to determine the best estimate – based on available information like supply and demand and the rate of inflation – of what the real price of oil will be on the delivery date of the contracts. Such a basic price discovery mechanism lets major energy consumers hedge against volatility. Still, "speculators" always end up tied to the whipping post when people get upset about price swings.

As it happens, though, there's a useful case-study in the relationship between futures markets and commodity prices: onions. Congress might want to brush up on the results of its prior antispeculation mania before it causes more trouble.

In 1958, Congress officially banned all futures trading in the fresh onion market. Growers blamed "moneyed interests" at the Chicago Mercantile Exchange for major price movements, which could sink so low that the sack would be worth more than the onions inside, then drive back up during other seasons or even month to month. Championed by a rookie Republican Congressman named Gerald Ford, the Onion Futures Act was the first (and only) time that futures trading in a specific commodity was prohibited, and the law is still on the books.

But even after the nefarious middlemen had been curbed, cash onion prices remained highly volatile. In a classic 1963 paper, Stanford economics professor Roger Gray examined the historical behavior of onion prices before and after the ban and showed how the futures market had actually served to stabilize prices.

The fresh onion market is highly seasonal. This leads to natural and sometimes large adjustments in prices as the harvest draws near and existing inventories are updated. Speculators became the fall guys for these market forces. But in reality, the Chicago futures exchange made it possible to mitigate the effects of the harvest surplus and other shifts in supply and demand.

To this day, fresh onion prices still cycle through extreme peaks and troughs. According to the USDA, the hundredweight price stood at $10.40 in October 2006 and climbed to $55.20 by April, as bad weather reduced crop yields. Then it crashed due to overproduction, falling to $4.22 by October 2007. In April of this year, it rebounded to $13.30.

Futures trading can't drive up spot prices because the value of futures contracts agreed to by sellers expecting prices to fall must equal the value of contracts agreed to by buyers expecting prices to rise. Again, it merely offers commodity producers and consumers the opportunity to lock in the future price of goods, helping to protect against the risks of future price movements.

Tellingly, the absence of that option for onions now has some growers asking Congress to lift the ban. But instead of learning from its onion mistakes, the political class seems eager to repeat them.

http://online.wsj.com/article/SB.html?mod=opinion_main_review_and_outlooks

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது