6/30/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 109 & 110)

எபிசோடு 109 (28.06.2010) சுட்டி - 2
அசோக்கை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்னும் நோக்கத்திலேயே வக்கீல் கடைசியாக அந்த அஸ்திரத்தைப் பிரயோகம் பண்ணவிருக்கிறார், எல்லாமே நல்லபடியாக முடியும் என நாம் நம்புவோம் என நீலகண்டன் கூற, அந்த பிரும்மாஸ்திரத்துக்கு தனது நமஸ்காரம் என காதம்பரி கூறியதைக் கேட்கும் சோவின் நண்பர் பிரும்மாஸ்திரம் பாக்கி எல்லா அஸ்திரங்களிலும் பெரிதா என்னும் கேள்வியை வைக்கிறார்.

அந்த மாதிரி பொது புத்தியில் அமைந்து விட்டது என சோ கூறுகிறார். ஆனால் இன்னும் பல அஸ்திரங்கள் உள்ளன. உதாரணத்துக்கு நாராயணாஸ்திரம். அது பிரும்மாஸ்திரத்தை விடவும் பெரிது எனக்கூறாவிட்டாலும் அது பற்றிய வர்ணனைகள் அவ்வாறு நினைக்கவும் தூண்டலாம். அதே போல பிரும்மசிரஸ் என்ற இன்னொரு அஸ்திரமும் இருக்கிறது. அதை செலுத்தினால் அணு ஆயுதப்பிரயோகத்தின் அத்தனை கெட்ட பலன்களும் விளையும் என்பதும் கூறப்பட்டுள்ளது என்றெல்லாம் கூறும் சோ உதாரணமாக அஸ்வத்தாமனும் அருச்சுனனும் ஒருவரையொருவர் அழிக்கவிட்ட அந்த பிரும்மசிரஸ் அஸ்திரம் சம்ப்பந்தமாக இன்னும் கூறுகிறார்.

சிறையில் அசோக்கைப் பார்க்க வருகிறாள் காதம்பரி. ஒரு வேளை அசோக்தான் அக்கொலையை செய்திருப்பானோ என்ற தனது சந்தேகத்தையும் அவள் வெளிப்படையாகக் கேட்க, அசோக் திட்டவட்டமாகவே தான் அக்கொலையைச் செய்யவில்லை எனக்கூறுகிறான். எல்லாம் கடவுள் செயல் என அவன் மேலும் கூற, அதை புரிந்து கொள்ளமுடியவில்லை என அவள் கூறுகிறாள். அவன் திருவிளையாடலை யார்தான் அறியவியலும் என்றும் அசோக் கூறுகிறான்.

அசோக் எவ்வளவு வேதங்கள் படிச்சிருக்கான், அவனே அதை புரியவில்லை என்றால் என்ன அர்த்தம் என நண்பர் கேட்க, ஒருவன் தனக்கு எல்லாம் புரிந்தது எனக்கூறினால் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை எனப் பொருள் என்று சோ பதிலளிக்கிறார். ஒருவன் ஒரு விஷயம் தனக்குப் புரியவில்லை என்று கூறினால் அவன் அதைத் தேடி புரிந்து கொள்ள இயலும். அந்த அடக்கம்தான் தேவை, அது அசோக்கிடம் இருக்கிறது என்கிறார், சோ.

அது இருக்கட்டும், இந்தப் பெண் காதம்பரி அசோக்கைப் பற்றி என்ன நினைக்கிறாள் என சோவின் நண்பர் கேட்க, ஒரு பெண்ணீன் மனத்தை அறிய தேவர்களாலும் இயலாது என்னும் பொருள்பட அவர் ஒரு ஸ்லோகத்தைச் சொல்கிறார்.

திருமணத்துக்கு முன்னால் அவன் ஒரு விசித்திரப்பிறவி என்றே தானும் பலரைப் போலவே நினைத்ததாகவும், ஆனால் இப்போதுதான் அவன் எப்படிப்பட்ட ஞானஸ்தன் என்று தான் உணர்ந்ததாகவும், அவனுக்கு மனைவியானது தான் செய்தச் பெரும்பாக்கியம் என்றும் காதம்பரி உணர்ர்ச்சி பொங்கக் கூறுகிறாள்.

தான் தண்டனை அனுபவிக்க வேண்டியது அவன் சித்தம் என்றால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், அப்படியின்றி இந்த நாடகத்தின் உச்சக்கட்டத்தில் அவன் ஏதேனும் அற்புதங்கள் நிகழ்த்தினாலும் அது பற்றியும் தான் ஒன்றும் செய்யவியலாது என்றும் அசோக் கூற, காதம்பரி அன்றைய தினலம் கோவிலில், கொட்டும் இடிமழையில் தங்களை ஆசீர்வதித்த அந்த தெய்வீக சன்னியாசி பற்றிக் பேசுகிறாள். அன்று விடியற்காலை அவர் தனது கனவில் வந்து எல்லாமே நல்லபடியாக முடியும் எனக்கூறிச் சென்றதாகவும் அவள் கூறுகிறாள்.

இதற்குள் பார்வையாளர் நேரம் முடிய, அசோக் செல்ல வேண்டியதாகிறது. அவன் சென்றதும் அவனுக்கே தெரியாமல் அவன் பற்றிய அந்த முயற்சியை அவனது வக்கீல் எடுக்கவிருப்பதையும், தான் உட்பட எல்லோருமே அத்ற்கு ஒப்புதல் தந்ததையும் எண்ணி அதற்காக அவனிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்கிறாள்.

(தேடுவோம்)

எபிசோடு - 110 (29.06.2010) சுட்டி - 2
அசோக்கின் வக்கீல் இப்போது தனது பிரும்மாஸ்திரத்தை எடுத்து வீசுகிறார். நான் எதிர்பார்த்ததுதான் என்றாலும் அது தேவையின்றி ஏதெனும் அற்புதம் நிகழ்ந்திருக்கலாகாதா என ஆதங்கப்பட்ட எனக்கு இப்போது மன்ம் சஞ்சலமடைவதை தவிர்க்க இயலவில்லை. அதாவது அசோக் மனநலம் குன்றியவன் ஆகவே அவனது செயல்களுக்கு அவன் பொறுப்பில்லை என்பதே அவர் வாதம். ஒரு தேர்ச்சி பெற்ற திறமையான வக்கீலுக்கு ஏற்ப அவர் தனது வாதங்களை முன்வைக்கிறார்.

அசோக் பணத்தையும் மண்ணையும் ஒன்றாக பாவித்து பணத்தை வீசி எறிந்தது, புத்தகங்களால் பலன் இல்லை என காலேஜ் புத்தகங்களை எரித்தது, தெருவில் போகும் ப்சு மாட்டை நந்தினி என அழைத்து அதனுடன் பேச முயன்றது (இதைக்கூடவா சேர்த்தார்கள் எனப் பொங்கிய என்னை முரளி மனோகர் தடுத்து பேசாமல் பாரு சீரியலை, இல்லாவிட்டால் இந்த எபிசோடுக்கு நான் பதிவு போடுகிறேன் எனச்சொல்லி என்னை அடக்கினான்), பணக்காரன் மகனாக இருந்தும் பிட்சை எடுத்தது, மனநல மருத்துவர்கள் அவனுக்காக எழுதித் தந்த மருந்துகளின் லிஸ்ட், இன்னும் பல விஷயங்களை வக்கீல் அடுக்கிக் கொண்டே போக கைலாயத்தில் உமா, நாரதர், விஸ்வாமித்திரர் புடை சூழ் வீற்றிருக்கும் பரமசிவன் இதெல்லாம் கேட்டு எல்லோருடனும் சேர்ந்து சிரிப்பது எனது மனதுக்கு ஆறுதலாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டு விடுகிறேன்.

வக்கீல் கூறக்கூற காதம்பரி, வசுமதி, நீலக்ண்டன் ஆகியோர் மனம் புழுங்குவதை காண முடிகிறது. நடுவில் இதை மேலும் காண இயலாத சாம்பு சாஸ்திரிகளோ வேம்புவை வெளியில் இழுத்துச் சென்று தனது ஆற்றாமையை அவரிடம் சொல்லி பிரலாபிக்கிறார். வேம்பு மிகவும் கஷ்டப்பட்டு அவரை சமாதானம் செய்கிறார். வர்ண ரீதியான பிராமணனாக வாழ முயன்றால் பைத்தியம் என்றுதான் பட்டம் கட்டுவார்களா என அவர் பொங்க, அவரை மிக சிரமப்பட்டு சமாதானம் செய்து வேம்பு கோர்ட்டுக்குள் இழுத்துச் செல்கிறார்.

அசோக்கை அரசு மனநல மருத்துவர் மூலம் பரிசோதிக்கச் செய்து பிறகு என்ன செய்வது என்பதை ஆராயலாம் என கோர்ட் கூறி கலகிறது. நாதன் டிஸ்சார்ஜ் ஆகலாம் என நீலக்ண்டன் கூற, அவரோ அசோக் கேஸ் பற்றி விசாரிக்க, நடந்ததைக் கூறுகிறார் நீலகண்டன்.

சாம்புவின் மகள் கருவுற்றிருப்பதை செல்லம்மா வீட்டில் உள்ளோருக்கெல்லாம் கூறி சர்க்கரை வழங்க அந்த சந்தோஷத்தில் சாம்புவால் பங்கு கொள்ளவியலவில்லை. அசோக்குக்கு நடந்த அநீதியை நினைத்து மனம் குமைகிறார் அவர். வர்ணரீதியான பிராமணன் என்றால் அவன் பைத்தியம்தானா என செல்லம்மா ஆதங்கத்துடன் கேட்க, சோவின் நண்பரும் அதே கேள்வியை வைக்க அவர் ஆமோதிக்கிறார். பாரதியாரை எல்லோரும் பைத்தியம் என்றுதானே கூறினார்கள், ஆனால் அவரோ மற்றவர்களை விட வித்தியாசமாகத்தானே வாழ்ந்தார்.

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாட பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலெ - நான்
வீழ்வேன் னென்று நினைத்தாயோ!

என்றுதானே கடைசிவரை நின்றார். அதே போல அசோக் இங்கே ஆன்மீக உலகில் நிலைகொண்டு இருக்கிறான். அவனை பைத்தியமாகப் பார்ப்பவர்களுக்குத்தான் பிரச்சினை அவனுக்கல்ல என சோ அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறர்.

அர்த்த சாத்திரம் எழுஹிய சாணக்கியர் முக்கிய மந்திரி பதவியை வகித்தவர். ஆனால் அவர் வாழ்ந்தடோ ஒரு சிறு குடிசை. ஆனால் அதே போல இப்போது ஒரு மந்திரி நிஜமாகவே குடிசையில் இருந்தால் யாருமே அவரை மதிக்க மாட்டார்களே. அதுதான் உலகம்.

இருப்பினும் செல்லம்மாவுக்கு ஆறவேயில்லை. என்னதான் இருந்தாலும் ஒரு வக்கீலே தன் கட்சிக்காரர் பற்றி இவ்வாறு கூறலாமா எனக் கேட்க, சாம்புவோ அசோக்கை தூக்கு தண்டனையிலிருந்து தப்புவிக்க அவருக்கு வேறு வழி தோன்றவில்லை என்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

வலை ரசிகன். said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே
ஒரு முக்கியவேண்டுகோள்.

நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்
என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திர்க்கு எதிராக
ராஜன்+வால்பையன்
இருவரும் நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸால்)
அவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்ளால்
விமர்ச்சனம் செய்துள்ளார்கள்.

இவர்கள் நாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தால்
நிச்சயமாக நாம் பதில் சொல்லகடமைப்பட்டிருக்கிரோம்.

ஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமான
வார்த்தைகளை உபயோகித்து இருக்கிரார்கள்.

நீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்
ராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.

நான் கூறுவது சரியா தவரா?
பதில் கூறவும்.
வஸ்ஸலாம்.
http://allinall2010.blogspot.com/2010/07/blog-post.html

hayyram said...

//ஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமான
வார்த்தைகளை உபயோகித்து இருக்கிரார்கள்// உங்களைப் போன்றவர்கள் மேடைப்பேச்சுக்களிலும், தொலைக்காட்சி பேச்சுக்களிலும் இந்துக்கடவுளரை சாத்தான் என்று கூறுவதை முதலில் நிறுத்துங்கள். மற்றவை பிறகு..

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது