10/26/2010

ராஜன் திருமணம் பற்றிய விவாதம்

நான் பதிவர் சந்திப்புக்குத்தான் சென்றேன், கூடவே திருமணம் வரவேற்பு என்பதை போனசாகத்தான் பார்த்தேன். முதலில் பதிவு எதுவும் போடுவதாகவே இல்லை, ஏனெனில் ரொம்ப நேரத்துக்கு நான் மட்டும்தான் யாருமில்லாத கடையில் டீ ஆற்றும் மனநிலையில் இருந்தேன். லக்கிலுக் மற்றும் அதிஷா சிறிது நேரம் கழித்து வந்தனர், அதில் அதிஷா உடனேயே சென்று விட்டார்.

பலரும் கேட்டனர், பதிவு எப்போது வரும் என. அவர்களிடமும் நான் பிடி கொடுத்து எதுவும் கூறவில்லை. ஏனெனில் நான் சொன்னது போல பதிவர் சந்திப்பு என்ற ஒரு விஷயம் சீரியசாக நடக்கவே இல்லை. இருப்பினும் வீட்டுக்கு வந்து ரிகார்டுக்காக ஒரு பதிவு போட்டு அதற்குள் கும்மி எனக்கு அனுப்பியிருந்த படங்களையும் போட்டேன். அது ராஜன் அவர்களது பகுத்தறிவு எண்ணங்கள் சம்பந்தமாக பல பின்னூட்டங்களுக்கு இடம் கொடுக்கவே எனது தன்னிலை விளக்கத்தையும் பின்வருமாறு தந்தேன்.

ராஜன் சம்பந்தமான பகுத்தறிவு கேள்விகளை கமெண்ட் ஏதும் இல்லாமல் விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஏனெனில் நான் மண்டபத்திற்கு சென்றதுமே சம்பிரதாயத் திருமணம்தான் அது என்பதை உணர்ந்து கொண்டேன். வால்பையன் மற்றும் ராஜன் எனக்கு நண்பர்கள், ஆகவே நான் அவர்களை இது சம்பந்தமாக தோண்டித் துருவி கேள்விகள் எல்லாம் கேட்கவில்லை.

வால்பையனுக்கு ஃபோன் போட்டு கேட்டதற்கு அவர் அடுத்த நாள் திருமண முகூர்த்தம் சமயத்தில் ஐயரால், ஹோமம் வளர்க்கப்பட்டு, மந்திர உச்சாடனங்களுடன், எல்லா சம்பிரதாயங்களுடனும் நடந்ததை உறுதி செய்தார்.

ராஜனின் தாய் தந்தை இப்போது உயிருடன் இல்லை. மணமகள் அவரது பெற்றோருக்கு ஒரே பெண். இது காதல் திருமணம். பெண்ணின் தந்தையின் விருப்பத்துக்கு ராஜன் மதிப்பளித்தார் என்பதுதான் நிஜம்.

ராஜன் பெரியவர்களது விருப்பத்துக்கு பணிந்து போனது எனக்கு பிடித்தது. அவ்வளவே. அவர் வயதில் மிகவும் சிறியவர். மெதுவாக யதார்த்தங்களை புரிந்து கொள்வார். அவருக்கும் அவர் மனைவிக்கும் என் ஆசிகள்.


பதிவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நான் அந்த கமெண்டுகளை மாடரேட் செய்து தடுத்திருக்க வேண்டும் என கருத்து கூறியுள்ளார். அதை நான் ஏற்பதற்கில்லை. தனது நம்பிக்கைகளை, நாத்திகக் கொள்கைகளை இவ்வளவு வெளிப்படையாக, முக தாட்சண்யம் பார்க்காமல் பல தளங்களில் பேசி வருபவர், தானும் சமயம் வந்தால் அம்மாதிரி சங்கடமான கேள்விகளை எதிர்க்கொள்ள வேண்டும்தானே. அவர்கள் என்ன சிறு குழந்தைகளா? அதை அவரோ வால்பையனோ என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதே நிஜம்.

ராஜன் திருமணம் நடந்த மண்டபம் சிந்தாதிரிப் பேட்டையில் உள்ளது. நகரின் எல்லா பகுதிகளுக்கும் செல்லும் பஸ்களும் அருகில் உள்ள அண்ணாசாலையிலிருந்தே கிடைக்கும். அந்த மண்டபத்தின் வாடகை எவ்வளவு என அவரிடம் கேட்டதற்கு அவர் அதெல்லாம் பெண் வீட்டார் ஏற்பாடு, தனக்குத் தெரியாது எனக்கூறிவிட்டார். சற்றே அதிர்ந்து போனேன். காதல் திருமணம் புரிபவர் திருமணச்செலவில் பாதியை ஏற்பதுதானே சரியாக இருக்கும்?

அடுத்த நாள் வால்பையனிடம் இது பற்றி போனில் கேட்டபோது, அவர் திருமணச்செலவை இரு தரப்பினரும் சரி பாதியாக பங்கேற்பதையும் உறுதி செய்தார். நான் கேட்ட நேரத்தில் ராஜனுக்கு அந்த வாடகை எவ்வளவு எனத் தெரிந்திருக்காது இருந்திருக்கலாம். இன்னேரத்துக்கு அதை அறிந்து, அச்செலவையும், மற்றச் செலவுகளையும் இரு தரப்பினரும் சரிசமமாகவே பங்கேற்றிருப்பார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

ஆனால் எல்லோருமே ராஜன் மாதிரி இருப்பதில்லையே. காதல் என்றெல்லாம் அமர்க்களப்படும். கிட்டிமுட்டி திருமணப் பேச்சு என்று வந்ததும் மாப்பிள்ளைப் பையன் சமர்த்தாக தன் பெற்றோருக்கு அப்போது மட்டும் அடங்கிய பிள்ளையாகப் போய் விடுவான். பிள்ளைவீட்டார் விடாது பட்டியல் போடுவார்கள். அது இங்கு நடக்கவில்லை என நம்புகிறேன்.

பை தி வே, சம்பிரதாய திருமணத்தில் தாலி கட்டினால் மட்டும் போதாது, சப்தபதி சடங்கும் நடந்திருக்க வேண்டும். அந்த மந்திரங்களை அவதானித்தால் பலர் ஆச்சரியப்படுவது திண்ணம்.
அதை இங்கே தருகிறேன்.

மணமகன் மணமகளிடம் சொல்வது:
ஸகா! சப்தபதா! பவ ஸாக்யோவ்! சப்தபதா! பாபூவா!
என்னுடன் ஏழு அடிகள் எடுத்து வைத்து நீ என் சிறந்த தோழி ஆவாய்.

ஸக்யம் தே கமே யம் ஸக்யாத் தே மாயோஷம் ஸகயன் மே!
நாம் இணைவது தெய்வத்தின் ஆணையாகக் கருதுவதால், இந்த பந்தத்தில் இருந்து நான் என்றும் விடுபடமாட்டேன்.

மாயோஷ்ட சமயாவ சமயாவ சங்கல்பாவஹை சம்ப்ரியோவ்
அன்போடும் பாசத்தோடும் இணைந்து நாம் எல்லாச் செயல்களையும் இணைந்தே செய்வோம்

ரோசிஷ்ணு சுமனஸ்யமநோவ் இஷாமூர்ஜம் அபி ஸ்வசாநோவ்
நாம் எண்ணத்தாலும் செயலாலும் நண்பர்களாக இருப்போம். நம் கடமைகளையும் கர்மாக்களையும் இணைந்தே செய்வோம்

மனக்ஹும்சி சம்வ்ரதாஸ் ஸ்மு சித்தானி ஆகாரம் சத்வமாசி
நீ பாடல் எனில் நான் இசையாக இருக்கிறேன், நீ இசை எனில் நான் பாடலாக இருக்கிறேன்.

அமூஹம் அமூஹமாஸ்மி ஸா த்வம் த்யோவ்றஹம்
நான் ஆகாசமாக இருக்கிறேன் நீ பூமியாக இருக்கிறாய்

பருத்திவீ தவம் ரேதோ அஹம் ரேதோ பிருத்வம் மனோஹமஸ்மி
நான் செயலின் ஆதாரமாக இருக்கிறேன் நீ செலுத்தும் ஆற்றலாக இருக்கிறாய்

வாக் தவம் ஸாமா ஹம் அஸ்மி ருக்த்வம் சாமாம்
நான் எண்ணங்களாக இருக்கிறேன் நீ அதைச் சொல்லும் வாக்காக இருக்கிறாய்

அனுவ்ரதா பாவ பும்சே பும்சே புத்ராய வேத்தவை
நீ வார்த்தைகளாக இருக்கிறாய் நான் அதன் பொருளாக (அர்த்தம்) இருக்கிறேன்

ஸ்ரீயை புத்ராய வேத்தவை ஏஹி ஸூந்ரூரூதே||
நீ உன் அன்பான வார்த்தைகளால் என் வாழ்நாட்களை நிரப்பு, என் ஆற்றலாய் இருந்து நம் வாழ்வை மகிழ்ச்சியால் செழிக்கச் செய்வாயாக, நம் குடும்பம் குழந்தைகளால் செழித்து வளர உதவுவாயாக.
============================================
மணமகள் மணமகனிடம் சொல்வது:
முதலடி: ஏகமிஷே விஷ்ணுத்வ அன்வேது
தெய்வ சாட்சியாக எடுத்து வைக்கும் முதல் அடி

இரண்டாவதடி: த்வே ஊர்ஜ்வே விஷ்ணுத்வ அன்வேது
உனக்கும் நம் சந்ததிகளுக்கும் அளவில்லாத உணவுகளைக் கொடுக்க கடமைப்படுகிறேன். உனக்கு அளவில்லாத ஆற்றலும் ஆரோக்கியமும் அளிக்க உறுதிகொள்கிறேன்

மூன்றாமடி: த்ரீணீ வ்ருத்தவ விஷ்ணுத்வ அன்வேது
வேதங்களில் சொன்னபடி உன் வாழ்நாள் முழுதும் உன் கடமைகளை பூர்த்தி செய்ய நான் துணையிருக்க கடமைப்படுகிறேன். உன் விரதங்களை(கடமை) அனுஷ்டிக்க துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்

நாலாமடி: சத்வாரி மாயோ விஷ்ணுத்வ அன்வேது
நீ வாழ்நாள் முழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய கடமைப்படுகிறேன்.உனக்கு மகிழ்ச்சியைத் தருவேனென உறுதிகொள்கிறேன்

ஐந்தாமடி: பஞ்ச பசுப்ய: விஷ்ணுத்வ அன்வேது
நீ உன் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளுக்கும், பசுக்களுக்கும், பயிர்களுக்கும் பாதுகாப்பாயிருந்து அவை பெருகி வளம் கொழிக்கச் செய்யவும் துணையிருக்க கடமைப்படுகிறேன். நீ பராமரிக்கும் செல்லப்பிராணிகள், பசுக்கள் போன்றவை பெருகத் துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்.

ஆறாமடி: சத்ரு துப்யா: விஷ்ணுத்வ அன்வேது
மழை வெயில் பனி போன்ற எல்லா காலங்களிலும் நீயும் நம் சந்ததியினரும் பாதுகாப்பாக இருக்கத் துணையிருக்க கடமைப்படுகிறேன்.உனக்கு துன்பம் வராமல், எல்லா காலங்களிலும் காப்பேன் என உறுதிகொள்கிறேன்.

ஏழாமடி: சப்த சப்தப்யா: விஷ்ணுத்வ அன்வேது
அக்னி வளர்த்து நீ செய்யும் செயல்கள் வெற்றிபெற துணையிருக்கவும், உனக்கு இடைஞ்சல்கள், தீங்கு நேராமல் காக்கும்படி கடமைப்படுகிறேன்.நீ அக்னி வளர்த்து செய்யும் செயல்கள் எல்லாவற்றிற்கும் இடைஞ்சலில்லாமல் பார்த்துக் கொள்வேன் என உறுதிகொள்கிறேன்.
========================================
இருவரும் சொல்வது
========================================

ஓம் ஏகோ விஷ்ணுஜர்கத்ஸ்வரம், வ்யாஸம் யேன சராசரம்! ஹ்ருதயே யஸ்ததோ யஸ்ய! தஸ்ய ஸாக்ஷி ப்ரதீயதாம்!

மணமகன் சொல்வது: என் இணையே! நம் ஹ்ருதயபூர்வ அன்பினால் இணைந்து இந்த முதல் காலடி எடுத்து வைக்கிறோம். நீ நம் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளைச் சமைப்பாயாக. என் செயல்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் உன் துணையையும் வேண்டுகிறேன். நீ நம் குடும்ப மேன்மைக்கு உதவியாய் இருப்பாயாக. நீயும் நம் சந்ததிகளும் மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டிய செல்வ-நலன்களுக்காக உழைத்து உங்களைப் பேணுவேன் என்று உறுதி கூறுகிறேன். நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் இஷ ஏகபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயுது புத்ரான் வின்தாவஹை! பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்டய:

மணமகள் சொல்வது: உன்னிடம் நானும் அன்பினால் பணிந்து இணைகிறேன். நீ உன் வீட்டின் பொறுப்புக்கள் அனைத்தையும் என்னிடம் அளித்துவிடு. உனக்கான உணவை நானே தருகிறேன். நீ நம் குடும்பத்திற்காக ஈட்டிவரும் செல்வங்களை பேணி வளர்த்து செழிக்கச் செய்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். நம் குழந்தைகளும் நாமும் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்க பார்த்துக்கொள்ளும்படி நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் ஜீவாத்மா பரமாத்மா ச, ப்ருத்வி ஆகாஷமேவ ச! சூர்யசந்த்ரத்வயேமர்த்தயே, தஸ்ய சாக்ஷி ப்ரதீயதாம்!!

அன்பே! ஜீவனும் ஆத்மாவும் போல என்னில் இரண்டரக் கலந்த நீ, என்னோடு இரண்டாமடி எடுத்து வைத்து விட்டாய். பூமி ஆகாசத்தை நிரப்பி, ஆகாசத்தின் இருப்பைக் குறிப்பது போல, என் இதயத்தை உன் அன்பின் ஆற்றலால் நிரப்பி உறுதியாக்கு. உன் மகிழ்ச்சியாலேயே என் இதயம் உறுதியாகும்.அப்போதுதான் நானும் மகிழ்ந்திருப்பேன். நாம் இணைந்து நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றுவாயாக.

ஓம் ஊர்ஜே த்விபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

என் அன்பே! நீ துக்கமடைந்திருக்கும்போது, உன் இதயத்தை என் அன்பின் ஆற்றலால் நிரப்புவேன். நீ சந்தோஷமாயிருக்கும்போது நானும் மகிழ்ந்திருப்பேன். உன்னை என் அன்பான வார்த்தைகளால் மகிழ்வுறச் செய்வேன் என்று உறுதிகொள்கிறேன். நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் உன் மனைவியாக உன்னோடு இணைந்து காப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.

ஒம் த்ரிகுணாஷ்ச த்ரிதேவாஷ்ச, த்ரிசக்தி: சத்பராயண:!! லோகத்ரயே த்ரிஸந்த்யாயா: தஸ்ய ஸாக்ஷீ ப்ரதீயதாம்!

அன்பே! இப்போது என்னோடு மூன்றடிகள் நடந்துவிட்டாய். மங்களங்கள் நிறைந்த உன் கரங்களைப் பற்றிய எனக்கு இந்தப் புண்ணியத்தால் செல்வச் செழிப்பு நிறைந்து வளம் பெருகப்போகிறது. இன்றிலிருந்து உன்னைத் தவிர மற்ற பெண்கள் அனைவருமே என் தாய்கும் சகோதரிக்கும் ஒப்பாகக் கருதுவேன். நம் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை நாம் இணைந்து அளிக்கலாம் கல்வி செல்வம் பெருகி அவர்கள் நீடூழி வாழட்டும்.

ஓம் ராயஸ்போஷாய த்ரிபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

அன்பே! என் ஹ்ருதயபூர்வமாய் உன்னை விரும்புகிறேன், என் கணவனாக வரித்து உன் நலனையே குறித்திருப்பேன். மற்ற ஆண்கள் அனைவருமே என் தந்தைக்கும் சகோதரனுக்கும் ஒப்பாகக் கருதுவேன். நீயே என் மகிழ்ச்சியாக இருக்கிறாய்.

ஓம் சதுர்முகஸ்த்தோ ப்ரம்மா, சத்வாரோ வேதஸம்பவா: சதுர்யுகா: ப்ரவதந்த்ரே தேஷாம் சாக்ஷீ ப்ரதீயதாம்!!

அன்பே! என் பூர்வபுண்ணியங்களின் பலனாகவே உன்னோடு இந்த நான்காம் அடி எடுத்து வைக்கிறேன். என் வாழ்வில் சர்வமங்களங்கள் உன்னோடு வருகின்றது. நீ எனக்கு கர்மாக்கள் செய்யும் தகுதியுடைய புண்ணியத்தை தருகிறாய். நமக்கு செரிந்த அறிவும், பணிவும், மேன்மையும் கூடிய மக்கட்செல்வம் உண்டாகட்டும். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துவோம்.

மாயோ பவாய சதுஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

உன் வாழ்க்கை புஷ்பங்களிலிருந்து வீசும் நறுமணம் போல மணம் வீசட்டும். மணமாலையில் கோர்க்கப்பட்ட பூக்கள் போல உன்னோடு இணைந்தும், குழைத்து வைத்த சந்தனத்தினைப் போல உன் அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன்.

ஓம் பஞ்ச்சமே பஞ்ச்சபூதானாம், பஞ்ச்சப்ராணை: பராயணா:! தத்ர தர்ஷணிபுண்யானாம் சாக்ஷிண: ப்ராணபஞ்சதா:

அன்பே, இப்போது என்னோடு ஐந்தாம் அடியையும் எடுத்து வைத்து என் வாழ்வை சிறப்பானதாக்கினாய், அர்த்தமுள்ளதாக்கினாய். உனக்கு தெய்வத்தின் அருள் என்றும் இருக்கட்டும். நம் சந்ததிகள் நீடூழி வாழட்டும்.

ஓம் ப்ரஜாப்யாம் பஞ்சபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே நான் உனது துக்கங்களிலும் சந்தோஷங்களிலும் பங்கு கொள்கிறேன். உன் அளவில்லாத அன்பு கண்டு உன் மீது மதிப்பும் நம்பிக்கையும் கூடுகிறது. இந்த அன்பைப் பெற நான் எதுவும் செய்வேன்.

ஓம் ஷஷ்டே து ஷட்க்ருதூணாம் ச, ஷண்முக: ஸ்வாமிகார்த்திக: ! ஷட்ரஸா யத்ர ஜாயந்தே, கார்த்திகேயாஷ்ச சாக்ஷிண:!!

அன்பே! ஆறாம் அடியெடுத்து என்னோடு நடந்து என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பினாய். நம் பந்தத்தால் நமக்கு மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் விளையட்டும்.

க்ருதுப்ய: ஷட்ஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! நீ தர்மானுஷட்டான காரியங்கள் செய்யும் போதெல்லாம் நானும் அதில் பங்கேற்று உனக்கு துணையாயிருப்பேன். நம் குடும்பத்திற்கு தேவையான செல்வச் செழிப்புக்களை மிகுதியாக்க துணையிருப்பேன். தெய்வ காரியங்களிலும், நம் மகிழ்ச்சிக்காக நீ செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் எப்போதும் துணையிருப்பேன்.

ஓம் சப்தமே ஸாகராஷ்சைவ ஸப்ததீபா: ஸபவர்த்தா:! ஏஷாம் ஸப்தஷிர்பதநீநாம் தேஷாமாதஷர்சாக்ஷிண:!!

அன்பே! இந்த ஏழாம் அடியோடு நம் பந்தம் பிரிக்கவியலாததாக பிணைந்தது. நம் அன்பும் நட்பும் தெய்வீகமானது. தெய்வமே ஏற்படுத்திய பந்தம்தான் இது. நீ முழுமையாக எனதானாய், நான் முழுமையாக உனதானேன். என் வாழ்க்கையை உன் கையில் ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கை போகும் திசையை நீயே தீர்மானிப்பாயாக.

ஸகே சப்தபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! தெய்வத்தின் ஆணையாலும், புண்ணிய புத்தகங்களான வேதங்களில் குறித்த வண்ணமும் கர்மங்களைச் செய்து நாம் இணைந்தோம். நான் உனது மனைவியானேன். நாம் செய்த சத்தியப் பிரமாணங்கள் அனைத்துமே மனதால் செய்தவை. நாம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்போம். இந்தத் திருமணம் நம் வாழ்நாள் முடியும் வரை நீடித்திருக்கட்டும்.


ஓக்கே ராஜன், திருமண மண்டபத்துக்கு வாடகை எவ்வளவு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

251 comments:

1 – 200 of 251   Newer›   Newest»
அருள் said...

என்னமோ போங்க! உங்களுக்கு ஜாலிதான்.

சுயமரியாதைத் திருமணம் குறித்து தந்தை பெரியார் பலநேரங்களில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றில் முக்கியமான 5 கருத்துகள்:

1. ஆணும் பெண்ணும் அறிந்தவர்களாக இருந்து தாமே துணையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

2. வீண் செலவுகள் கூடாது.

3. திருமணம் தெய்வீகமானது அல்ல.

4. வாழ்விலும் சொத்திலும் சமபங்கு உரிமை உண்டு.

5. திருமண விஷயத்தில் தம்பதிகளுக்கே சுதந்திரம்.

இங்கே விவாதிக்கப்படும் திருமணம் பெரியாரின் அளவுகோள்களில், முதல் 4 அளவுகோள்களையும் நிறைவு செய்வதாகவே நான் நினைக்கிறேன். 5 ஆவது விஷயத்தில் மட்டும் பெண்வீட்டாருக்காக விட்டுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு குற்றம் அல்ல. "மனிதம்" என்றே கருதப்பட வேண்டும்.

(பல சுயமரியாதைத் திருமணங்களில் 'அய்யரில்லாமல் திருமணம்' என்கிற ஒருவிஷயத்தை மட்டும் நிறைவேற்றி - மற்றவற்றை வசதியாக விட்டுவிடுகிறார்கள்.)

எப்படிப் பார்த்தாலும் 100 க்கு 80 மதிப்பெண் பாஸ் தானே.

""தோழர்களே! நான் யாரையும் இம்மாதிரிதான் திருமணம் செய்யவேண்டுமென்று கட்டாயப்படுத்தவில்லை. சமாதானமாகத்தான் என்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லி வருகிறேன். உங்களுக்குள்ள அறிவைக்கொண்டு ஆலோசித்துப் பாருங்கள்.""

தந்தை பெரியார், விடுதலை 24.10.1948

Anonymous said...

//காதல் திருமணம் புரிபவர் திருமணச்செலவில் பாதியை ஏற்பதுதானே சரியாக இருக்கும்?//

உம்ம வீட்டு திருமணங்களில் மட்டும் பொண்டாட்டி வீட்டு செலவுன்றீங்க? இது மட்டும் எந்த ஊரு நியாயம்?

Anonymous said...

மொய் எவ்வளவு எழுதினீங்க?

எம்.ஜி.ஆர். கணக்கு கேட்ட மாதிரி ராஜனை கேட்கிறீங்களே. அதுக்காக கேட்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

@அனானி
நீங்கள் என்னைத்தான் கேள்வி கேட்டீர்கள் என்றால், எனது பதில் தயாராகவே உள்ளது.

நான் எனது அத்தை மகளையே காதலித்து திருமணம் புரிந்தவன். என் அத்தைக்கு பொருளாதார வசதி இல்லாததால் செலவு முக்கால்வாசி என் தந்தையே ஏற்றார்.

பொதுவான கேள்வி என்றால் என்ன செய்வது, அதுதான் நடைமுறையே.

ஆனால் காதலித்து திருமணம் செய்பவர்கள் அச்சமயத்தில் மட்டும் மணமகன் பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாகப் போவதுதான் கோழைத்தனமானது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

உம்ம பெண்ணோட கல்யாணத்தின் போது யார் செலவு?

ஒசை said...

நாரதரா இருந்து கலகத்தை துவக்கி வைச்சதாகவே கருதறேன். "நாத்திகமே உன் யோக்கியதைய பாருன்னு".

Anonymous said...

இந்த அருள் என்ற நபர் வேறு வலைத்தளங்கள் பக்கம் எட்டிப்பார்ப்பது கூட கிடையாது. இவரை தெரிந்தவர்களும் யாரும் கிடையாது.

ஒருவேளை பரபரப்பிற்காக இவரும் ஒரு ‘முரளிமனோஹர்’ தானோ?

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //சம்பிரதாய திருமணத்தில் தாலி கட்டினால் மட்டும் போதாது, சப்தபதி சடங்கும் நடந்திருக்க வேண்டும். அந்த மந்திரங்களை அவதானித்தால் பலர் ஆச்சரியப்படுவது திண்ணம்.// //

சந்தடி சாக்கில் "இந்த வைதீக திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள்" குறித்து புகழ்ந்து தள்ளிவிட்டீர்.

நானும் கூட சில இந்து திருமண மந்திரங்களை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

(திரு. ராஜன் திருமணத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை - அவரது திருமணத்தில் இந்த மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டனவா என்றும் தெரியாது.)

சில பாலுறவு சம்பந்தப்பட்ட வார்த்தைகள் இடம் பெறும், படிக்க விருப்பமில்லாதவர்கள் தயவு செய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம்:

''சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்.

"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

நான் அவளை கட்டிப்பிடிப்பேன். அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்த செய்யுமாறு... தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படிருக்கின்றது, யோனி,மத்யமம்,உபஸ்தம் என மூன்றாக பிரிக்கப்படிருக்கும் இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கின்றது. அதாவது விஷ்ணு,தொஷ்டா,தாதா ஆகிய தேவதைகள் இம் மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள், இவர்கள்தான்(?!) ஆணும் பெண்ணும் தேகசம்பந்தம் கொள்ளும் போது எல்லாம் சரியாக நடக்கின்றதா என்பதை கண்காணிக்கிறார்கள்

"ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்
தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீ
அனுமுருத்யஸ்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்
சம்மார்ஜன அனுரே பாப்யாம்
க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆதமானும்
பூஷ்ஹேஸ்யதா"

கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உணக்கு தெய்வம்
அவனைவிட்டு வெளியே நீ எங்கும் போகக்கூடாது,
வென்னீர்போடு,கால்பிடி,கைபிடி... தூங்கினால் விசிறிவிடு
இப்படி செய்வதால் தான் அவன் மூளையில் குடியேற முடியும்.

இந்து மதத்தை போற்றுவோம்.

dondu(#11168674346665545885) said...

@அருள்
நீங்கள் சொல்லும் அர்த்தங்கள் பிழையாகப் புரிந்து கொண்டு வருவது. அது பற்றி பலர் பேசி சரியான அர்த்தங்களை தந்து விட்டனர்.

//மொய் எவ்வளவு எழுதினீங்க?//
நூறு ரூபாய்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

வால்பையனுக்கு இந்த திருமணச் சடங்குகளில் சம்மதமா கேட்டீர்களா?

ஆனானப்பட்ட கருணாநிதி ஃபேமிலியே கோயில் கோயிலாக ஏறி இறங்குகிறார்கள். ராஜனெல்லாம் எம்மாத்திரம்?

Anonymous said...

சென்னைக்காரர் தானே நீங்கள்? சிந்தாதிரிப்பேட்டை கல்யாணமண்டப செலவு எம்புட்டுன்னு கேட்டு சொல்லுங்களேன்.

Anonymous said...

அருள் தான் சுயமரியாதை (அப்படீன்னா என்ன?) திருமணம் செய்து கொண்டதாக பீலா விடுகிறார்.

ராஜனையாவது பாராட்டலாம். தைரியமாக அனைவரையும் அழைத்து திருமணம் நடத்தினார்.

ஆனால் இதுவரையில் அருள் என்ற மனிதர் உண்மையிலேயே இருக்கிறாரா அல்லது இது யாருடைய ஸ்ப்லிட் பெர்சனாலிட்டியா என்று இன்னமும் தெரியவில்லை.

தில் இருந்தால் திருமண புகைப்படத்தை வெளியிடட்டும் - தேதியும் இடத்தையும் கூட!

Anonymous said...

அங்க வந்து பல் காட்டி சிரிச்சுகிட்டுருந்த தாடிக்காரன்கிட்ட என்னய்யா இப்படி கல்யாணம் நடக்குதுன்னு கேட்டிருக வேண்டியது தானே?

dondu(#11168674346665545885) said...

அருள் என்ன சொன்னார் என்றால், பாமக தலைவர்கள் நடத்தும் மணவிழாக்களில் ஐயர், நெருப்பு, மந்திரங்கள் ஆகியவை இல்லை என்று.

ஓக்கே, ஆனால் அன்புமணி திருமணம் எப்படி நடந்தது என்பதையாவது யாருக்காவது நினைவிருந்தால் கூறுங்கப்பூ!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

// //அருள் தான் சுயமரியாதை (அப்படீன்னா என்ன?) திருமணம் செய்து கொண்டதாக பீலா விடுகிறார்.
...தில் இருந்தால் திருமண புகைப்படத்தை வெளியிடட்டும் - தேதியும் இடத்தையும் கூட!// //

சொந்த அடையாளத்தோடு கேட்கக்கூட தில் இல்லையா?

Anonymous said...

குத்து விளக்கு ஏற்றுவது வன்னியர் பண்பாடு

http://cdn.wn.com/pd/20/d5/4ddc4b9ab678e7f8191c65c10bf9_grande.jpg

Anonymous said...

அதுக்கும் விளக்கம் வெச்சிருப்பாய்ங்க. அன்புமணியோட மாமனார் கிருஸ்ணசாமி சொன்னாருன்னு ஐயர கூப்பிட்டோமுன்னு.

வால்பையன் said...

//அதை அவரோ வால்பையனோ என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதே நிஜம்.//

நிச்சயம் விமர்சனங்களை மட்டுறுத்த வேண்டும் என எதிர்பார்க்கவில்லை!
எங்களது பதிவில் மட்டுறுத்தலே இல்லை என்பதும் உங்களுக்கு தெரியும்!

அருள் said...

// //அன்புமணி திருமணம் எப்படி நடந்தது என்பதையாவது யாருக்காவது நினைவிருந்தால் கூறுங்கப்பூ!!// //

சுயமரியாதை வழியில், பொதுநலக்கட்சி தலைவர் பெரியவர் மாணிக்கவேலர், அ.தி.மு.க வின் செல்வி ஜெயலலிதா பங்கேற்க வடபழனியில் 1992 இல் நடைபெற்றது.

வால்பையன் said...

ராஜன் மந்திரங்கள் எதையும் உச்சரிக்க மாட்டேன் என சொல்லி தான் அதற்கு சம்மத்தித்தார்.

மண்டபம் மற்றும் இதர செலவுகள் விசாரிக்க மறந்து விட்டேன், கேட்டு சொல்றேன், புது மாப்பிள்ளை பிஸியா இருக்கார் இப்போ!

ஒசை said...

அன்புமணி ராமதாஸ் அவர்களின் கல்யாணத்தை காணும் வாய்ப்பு, விஜய் டிவியின் "நம்ம வீட்டு கல்யாணம்" மூலம் கிட்டியது. எந்த வித ஆடம்பரங்களுக்கும் குறைவில்லாமல் நடந்தது. ஒரு வேளை சம்பந்தி காங் முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அந்த ஆடம்பரங்களை விரும்பி இருக்கலாமோ, என்னவோ. ராமதாஸ் கூட இங்கிலிஷ்காரன் உடை தான் அணிந்து இருந்தார். நாமெல்லாம் ஊருக்கு தான் உபதேசம் செய்வோம்.

dondu(#11168674346665545885) said...

@அருள்
இவ்வளவு வாய் கிழிய சுயமரியாதை திருமணத்தை ஸ்பான்சர் செய்த ஈவேராமசாமி நாயக்கர் தான் மட்டும் ரிஜிஸ்டர் கல்யாணம்தானே செய்து கொண்டார்?

சும்மா அவரை ஏன் சம்பந்தமில்லாமல் கோட் செய்கிறீர்கள்?

நீங்கள் கூறலாம், சட்டப்படி சொத்து வாரிசு விஷயத்துக்காக பதிவு திருமணம் செய்தார் என்று.

அதே அறிவு மற்றவர்களுக்கு அத்திருமணத்தை நடத்தி வைத்தபோது இருந்திருக்க வேண்டாமா?

தான் உபதேசித்ததை தானே செய்ய துப்பில்லாதவரின் மானத்தை நீங்கள் வேறு அவரை சம்பந்தம் இல்லாது கோட் செய்து கப்பலில் ஏற்றுகிறீர்கள்.

நாயக்கர் பாவம்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//சொந்த அடையாளத்தோடு கேட்கக்கூட தில் இல்லையா?//

அதை யாரு சொல்றாங்க?

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுப்பா.

கூல்பையன் said...

இதுவே டோண்டு இல்லத் திருமணம் ஒன்றில் வாலோ, ராஜனோ வந்திருந்தால் இப்படி கேட்காமல் விடலாம் என்று விட்டுருப்பார்களா? தனி பதிவு போட்டு ஆட்டம் போட்டிருப்பார்களே

கூல்பையன் said...

இனிமேல் ராஜனின் ஆட்டம் அடங்கி விடும்.

Unknown said...

இன்னிக்கு என்ன எல்லோரும் வால்பையன் குரூப்ப துவைச்சு காயப்போடரதுன்னு இறங்கி இருக்கீக...

//ராஜன் திருமணம் நடந்த மண்டபம் சிந்தாதிரிப் பேட்டையில் உள்ளது. நகரின் எல்லா பகுதிகளுக்கும் செல்லும் பஸ்களும் அருகில் உள்ள அண்ணாசாலையிலிருந்தே கிடைக்கும். அந்த மண்டபத்தின் வாடகை எவ்வளவு என அவரிடம் கேட்டதற்கு அவர் அதெல்லாம் பெண் வீட்டார் ஏற்பாடு, தனக்குத் தெரியாது எனக்கூறிவிட்டார். சற்றே அதிர்ந்து போனேன். காதல் திருமணம் புரிபவர் திருமணச்செலவில் பாதியை ஏற்பதுதானே சரியாக இருக்கும்?//

இது தான் சார் ஹைலைட்...ஏற்கனவே விஷயம் பத்திகிட்டு எரியுது...இதுல இன்னும் நல்லா எண்ணைய ஊத்துரீக...

வால்பையன் சொல்றாக...ஒளிவு மறைவு இல்லாம ஊர் முளுக்க கூப்பிட்டு கல்யாணம் செய்தார்களாம். கேட்குறவன் கேனன்னு நினைப்பு...இப்படியெல்லாம் நடக்குமுன்னு தெரிஞ்சி தான் முன்னாடிய கூப்பிடுமாதிரி ஒரு பிட்ட போட்டிருக்கானுவோ...அப்புறமா இப்படியெல்லாம் கேள்வி கேட்டா நாங்கல்லாம் ஓபன் டைப்பு, ஊருக்கெல்லாம் சொல்லிதான் கல்யாணம் சென்ஜோன்னு சொல்லிக்கலாம்ல....

இதெல்லாம் கேட்கனும்நு நம்ம தலைல எழுதி இருக்கு....

கூல்பையன் said...

வேட்டி, சட்டையா. பேண்ட், கோட்டா?

அதுவும் ராஜன் காசா? மாமனார் காசா?

Anonymous said...

வால்பையன் said...//ராஜன் மந்திரங்கள் எதையும் உச்சரிக்க மாட்டேன் என சொல்லி தான் அதற்கு சம்மத்தித்தார்//

இது எப்படி இருக்குனா, நான் "அந்த" மாதிரி தப்பெல்லாம் செய்ய மாட்டேன். ஆனா "arrange" மட்டும் பண்ணி கொடுப்பேன்னு சொல்ற மாதிரி இருக்கு...

அருள் said...

// //அருள் தான் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதாக பீலா விடுகிறார். ராஜனையாவது பாராட்டலாம். தைரியமாக அனைவரையும் அழைத்து திருமணம் நடத்தினார். ஆனால் இதுவரையில் அருள் என்ற மனிதர் உண்மையிலேயே இருக்கிறாரா அல்லது இது யாருடைய ஸ்ப்லிட் பெர்சனாலிட்டியா என்று இன்னமும் தெரியவில்லை.

தில் இருந்தால் திருமண புகைப்படத்தை வெளியிடட்டும் - தேதியும் இடத்தையும் கூட!// //

http://arulgreen.blogspot.com/2010/10/blog-post_26.html

http://www.flickr.com/photos/53666090@N08/

ஆம், எனது திருமணம் அய்யர், புரோகிதம், யாகம் எதுவும் இல்லாமல்தான் நடந்தது.

நாள்: 21.5.2004, இடம்: சிதம்பரம் நகரம்.

திருமண விழாவில் மருத்துவர் அய்யா அவர்கள், மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள், திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள், திரு. கோ.க.மணி அவர்கள், திரு. ஜெ. குரு அவர்கள், திரு. வேலு IAS அவர்கள் உள்ளிட்டோர் வந்து வாழ்த்துனர்.

படங்களை இங்கே காண்க:

http://arulgreen.blogspot.com/2010/10/blog-post_26.html

http://www.flickr.com/photos/53666090@N08/

ராம்ஜி_யாஹூ said...

அருள் அவர்களை அடுத்த சென்னை பதிவர் சந்திப்பில் சந்திக்க ஆவலாக உள்ளேன்

நிகழ்காலத்தில்... said...

//காதலித்து திருமணம் செய்பவர்கள் அச்சமயத்தில் மட்டும் மணமகன் பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாகப் போவதுதான் கோழைத்தனமானது.//

புத்திசாலித்தனம் டோண்டு சார்..:)

அடங்காம பேசி பெற்றோர் ஏதாவது காரணம் காட்டி திருமணத்தை நிறுத்திவிட்டால் நட்டப்படுவது யாரு:))


எங்கள் பக்கம் பெற்றோர் பார்த்து செய்யும் திருமணத்திலேயே நகை, செலவுப் பிரச்சினை வந்துவிட்டால் வீட்டுக்குத் தெரியாமல் பண உதவி செய்து அந்தத் திருமணத்தை நடத்தி விடுகின்றனர் எங்க மாப்பிள்ளைகள்.

இத்தனைக்கும் பொண்னு கிடைச்சா சரின்னு முழுச்செலவும் அல்லது நகைபோட்டுத் தான் திருமணம்:)

dondu(#11168674346665545885) said...

//புத்திசாலித்தனம் டோண்டு சார்..:)

அடங்காம பேசி பெற்றோர் ஏதாவது காரணம் காட்டி திருமணத்தை நிறுத்திவிட்டால் நட்டப்படுவது யாரு:))//

ஆககக, இப்படியெல்லாம் கூட சப்பைக் கட்டு கட்டலாமோ? வீட்டில் சொல்லி சுற்றிப்போட சொல்லவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

உமர் | Umar said...

முக்கியமான இரு விஷயங்களைப் பற்றி கூற விரும்புகின்றேன்.

1. புதன் மதியம் 3 மணி அளவில், திருமண மண்டபத்தில் வைத்து ராஜனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, மண்டபத்தின் வாடகை, வாடகை தவிர்த்த இதர செலவுகள் (மின் கட்டணம் போன்றவை) எவ்வளவு என்று கூறினார். 6 மணிக்கு மேல் டோண்டு அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, வாடகை எவ்வளவு என்று சொல்லவில்லை என்று டோண்டு கூறுகின்றார். கேள்வி கேட்ட சூழலிலோ அல்லது டோண்டுவிடமோ இவற்றைப் பேச விரும்பாமலிருந்திருக்கலாம். ஆனால், ராஜனுக்கு வாடகை உள்ளிட்ட அனைத்தும் நிச்சயமாக முன்னரே தெரியும். ஏன் டோண்டுவிடம் கூறவில்லை என்பதை (விடுமுறை முடிந்தபின்பு) அவர் வந்து கூறட்டும்.

2. திருமணம் நடைபெற்றபொழுது, காலை 7 மணி முதல் நான் அங்குதான் இருந்தேன். ராஜனோ, ரேவதியோ எவ்வித மந்திரங்களையும் உச்சரிக்கவில்லை.

dondu(#11168674346665545885) said...

//கேள்வி கேட்ட சூழலிலோ அல்லது டோண்டுவிடமோ இவற்றைப் பேச விரும்பாமலிருந்திருக்கலாம். ஆனால், ராஜனுக்கு வாடகை உள்ளிட்ட அனைத்தும் நிச்சயமாக முன்னரே தெரியும்.//

தெரியாது என்று மட்டும் கூறவில்லை. ஏன் தெரியாது என்பதற்கும் அவராகவே இது பெண்வீட்டார் செலவு எனக்கூறினார்.

அடுத்த நாள் வாலிடம் நான் டெலிஃபோனில் பேசியபோதுகூட அவரும் சொல்லவில்லை.

முந்தைய நாள் மூணு மணி அளவில் உங்களுக்கு தெரிந்தது வாலுக்கும் தெரிந்திருக்கும்தானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

உமர் | Umar said...

//முந்தைய நாள் மூணு மணி அளவில் உங்களுக்கு தெரிந்தது வாலுக்கும் தெரிந்திருக்கும்தானே?//

வால் மண்டபத்திற்கு வந்தபோது மாலை 5 மணி. வந்து சிறிது நேரத்தில் அறைக்குக் கிளம்பிவிட்டோம். வால், மண்டபத்தில் வைத்து ராஜனோடு பேசுவதற்கான நேரம் நிறைய இல்லை. வந்து சில நிமிடங்களில் கிளம்பிவிட்டார்.

உமர் | Umar said...

//தெரியாது என்று மட்டும் கூறவில்லை. ஏன் தெரியாது என்பதற்கும் அவராகவே இது பெண்வீட்டார் செலவு எனக்கூறினார்.//

உங்களிடம் கூற விரும்பாமல் இருந்திருக்கலாம். உங்களிடம் ஏன் அப்படி சொன்னார் என்பதை அவர் சொன்னால்தான் தெரியும்.

dondu(#11168674346665545885) said...

@கும்மி
சரி, உங்களையே கேட்கிறேன். மண்டபத்துக்கான செலவு என்ன? தகவலுக்காக அதை மட்டும் கேட்கிறேன்.

மற்றப்படி பாதி செலவை அவர் ஏற்றாரா இல்லையா என்பதை அவரே கூறட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

உமர் | Umar said...

//சரி, உங்களையே கேட்கிறேன். மண்டபத்துக்கான செலவு என்ன? தகவலுக்காக அதை மட்டும் கேட்கிறேன்.//

வாடகை மட்டும் Rs.37,500/--

உமர் | Umar said...

//மற்றப்படி பாதி செலவை அவர் ஏற்றாரா இல்லையா என்பதை அவரே கூறட்டுமே. //

இதுவும் தகவலுக்காக.

அறைக்கு முன்பணம் செலுத்தச் சென்றபோது, வால்பையன் கூறியது: "ராஜன் திருமண செலவினங்களால் மிகவும் டைட்டாக உள்ளார். அதனால், அறை ஏற்பாட்டை அவரை பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டேன். "

வால்பையன் said...

//இதுவே டோண்டு இல்லத் திருமணம் ஒன்றில் வாலோ, ராஜனோ வந்திருந்தால் இப்படி கேட்காமல் விடலாம் என்று விட்டுருப்பார்களா? தனி பதிவு போட்டு ஆட்டம் போட்டிருப்பார்களே //


நான் பதிவுலகம் வந்து 4 வருசம் ஆச்சு, நீங்க சொல்றதை பார்த்தா நான் யார் விசேசத்திற்கும் போயிருக்க முடியாது இல்லையா! அதற்கு சாத்தியமிருக்குன்னு நினைக்கிறிங்களா!?

சரி அதை விடுங்க, பொதுவா சாதி, மதம், கடவுள் தவிர்த்து ஒருவரின் தனிபட்ட வாழ்கை பற்றி என்ன விமர்சித்திருக்கோம்!

சக ப்ளாக்கராக சாருவின் எழுத்தை தவிர! கவனிக்க அதுவும் எழுத்தை தான்!

அருள் said...

ராம்ஜி_யாஹூ said...

// //அருள் அவர்களை அடுத்த சென்னை பதிவர் சந்திப்பில் சந்திக்க ஆவலாக உள்ளேன்// //

நன்றி. சந்திப்போம். ஆவலாக உள்ளேன்

Anonymous said...

// //அருள்....தில் இருந்தால் திருமண புகைப்படத்தை வெளியிடட்டும் - தேதியும் இடத்தையும் கூட!// //

தில் இருக்கு. இதோ பார்த்துக்குங்க:

http://arulgreen.blogspot.com/2010/10/blog-post_26.html

http://www.flickr.com/photos/53666090@N08/

வால்பையன் said...

//வேட்டி, சட்டையா. பேண்ட், கோட்டா?

அதுவும் ராஜன் காசா? மாமனார் காசா? //


உங்கப்பன் காசு மாமே!

வால்பையன் said...

//இது எப்படி இருக்குனா, நான் "அந்த" மாதிரி தப்பெல்லாம் செய்ய மாட்டேன். ஆனா "arrange" மட்டும் பண்ணி கொடுப்பேன்னு சொல்ற மாதிரி இருக்கு... //

நிறைய அனுபவம் போல உங்களுக்கு! :)

வால்பையன் said...

//முந்தைய நாள் மூணு மணி அளவில் உங்களுக்கு தெரிந்தது வாலுக்கும் தெரிந்திருக்கும்தானே?//

நான் ரூமில் இருந்தது உங்களுக்கு தெரியும் தானே!

நான் வந்த ப்ளாக்கர்ஸை கவனித்து கொண்டிருந்தேன், கும்மி ராஜன் அருகில் இருந்து புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்!

வால்பையன் said...

//அறைக்கு முன்பணம் செலுத்தச் சென்றபோது, வால்பையன் கூறியது: "ராஜன் திருமண செலவினங்களால் மிகவும் டைட்டாக உள்ளார். அதனால், அறை ஏற்பாட்டை அவரை பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டேன்." //

சென்னை தவிர மற்ற செலவினங்கள் பற்றி நான் அறிவேன்!

dondu(#11168674346665545885) said...

//நான் ரூமில் இருந்தது உங்களுக்கு தெரியும் தானே!//
நீங்கள் ஃப்ரெஷன் அப் ஆவதற்காக மாலை மண்டபத்திலிருந்து கிளம்பி எல்லீஸ் ரோடுக்கு போன பிறகுதான் நான் வந்தேன். ஆனால் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை மண்டபத்தில் அதற்கு முன்னால் இருந்தீர்கள் என்பது எனக்கு தெரியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//நீங்கள் ஃப்ரெஷன் அப் ஆவதற்காக மாலை மண்டபத்திலிருந்து கிளம்பி எல்லீஸ் ரோடுக்கு போன பிறகுதான் நான் வந்தேன். ஆனால் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை மண்டபத்தில் அதற்கு முன்னால் இருந்தீர்கள் என்பது எனக்கு தெரியாது.//

ஈரோட்டிலிருந்து வரும் போது ராஜன் கூடத்தான் வந்தேன், க்வரும் போது என் மனைவியையும் அழைத்து வந்தேன், பின் செங்குன்றம் போய் அவர்களை விட்டுட்டு மண்டபம் வர ரொம்ப லேட்டாயிருச்சு, வந்ததும் ரூம் போட போயிட்டேன்! அங்கே இருந்தது சில நிமிடங்கள் கூட இருக்காது!

அதிகபட்சம் ஒரு தம் அடிக்கும் நேரம்!

உமர் | Umar said...

//தில் இருக்கு. இதோ பார்த்துக்குங்க://

எச்சூஸ்மீ மிஸ்டர் அனானி. எங்கே போனீங்க?

dondu(#11168674346665545885) said...

அப்போ, உங்கள் மனைவி ரிசப்ஷனுக்கு வரவில்லை போலிருக்கே. கல்யாணத்துக்காவது அழைத்து வந்தீர்களா இல்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

அப்பா... சாமீ... தாங்க முடியலைடா கடவுளே!

திருமண மண்டபத்துக்கு எவ்வளவு செலவு? யார் வீட்டு காசு? பேண்ட் சட்டை யார் எடுத்தது? -- இதெல்லாம் ஒரு கேள்வியா....? தேவையா? ரொம்பதான் ஓவரா போரீங்க.

"இதுதான் சரி... இது தவறு" - என்று பலவிஷயங்களில் எல்லோருக்கும் ஒரு நிலைபாடு இருக்கும். சில தவிற்க முடியாத தருணங்களில் அந்த நிலைபாட்டை விட்டுக்கொடுப்பது மிகமிக இயல்பான ஒரு நிகழ்வு. இது ஏறக்குறைய எல்லோரது வாழ்விலும் நடக்கும் செயல்தான். அதற்காக அவர் தடம் புரண்டுவிட்டார் என்பது பேனைப் பெருச்சாளியாக்கி, பெருச்சாளியைப் பெருமாளாக்கும் செயல்.

இப்படி ஒன்றுமில்லாத விஷயத்திற்காக ஏன் கும்மியடிக்கிறீர்கள்? எல்லோரும் அன்னியன் பட விக்ரம் மாதிரியா வாழ்கிறீர்கள்? மனசாட்சியைத் தொட்டு பேசுங்கள்.

லஞ்சத்தை எல்லோரும்தான் எதிர்க்கிறார்கள். ஆனால் வாழ்நாளில் ஒரே ஒரு முறைக்கூட லஞ்சமே கொடுக்காமல் வாழ்ந்து வருபவர் யார்? போக்குவரத்து போலீசிடம் விதிகளை மீறி மாட்டும் போது, பள்ளியில் அதிக கட்டணம் செலுத்தும்போது - விதிமுறை மீறாமல் வாழ்வோர் எத்தனை பேர்?

இருசக்கர வாகனத்தில் போனால் தலைக்கவசம் அணிய வேண்டும், மகிழுந்தில் சென்றால் வார்ப்பட்டை அணிய வேண்டும், தெருவில் ஒரு குப்பயையும் போடக்கூடாது, பொது இடத்தில் புகைக்கக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனத்தில் செல்லக்கூடாது, நகை வாங்கினால் வரியுடன் கூடிய பில் வாங்க வேண்டும், சொத்துவாங்கினால் முழுமையான விலையைக் காட்டி வரிக்கட்ட வேண்டும்...இப்படி ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.

இதெல்லாம் சட்டப்படியான நிலைபாடுதான். இவை எல்லாவற்றையும் விடாப்பிடியாக நிறைவேற்றும் நியாயவான்கள் எத்தனைப் பேர்?

இதனுடனெல்லாம் ஒப்பிட்டால் - திரு. ராஜன் திருமணம் ஒரு நிலைதடுமாறிய நிகழ்வே அல்ல.

பெண்ணின் வீட்டில் "அய்யரை வைத்திருக்கிறார்கள்". பெண் வீட்டாரின் சரிசம உரிமைக்கு மதிப்பளித்து அவர் "அய்யரையோ, மந்திரத்தையோ தன்னளவில் நம்பாமல்" திருமணம் நடத்திருக்கிறது - என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் அவர் கொள்கையை விட்டுவிட்டார் என்றெல்லாம் பேசுவது பித்தலாட்டம். கணக்குக் கேட்பது கேலிக்கூத்து.

வால்பையன் said...

// உங்கள் மனைவி ரிசப்ஷனுக்கு வரவில்லை போலிருக்கே. கல்யாணத்துக்காவது அழைத்து வந்தீர்களா இல்லையா?//

குழந்தைய தனியா பார்த்துக்க முடியல வரும்போதே, அதுனால அம்மா வீட்லயே இருந்துகிட்டாங்க!

dondu(#11168674346665545885) said...

@அருள்
ஜ்யோவ்ராம் சுந்தர் பூணல் போட்டாரா இல்லையா என்றெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு ஒருவர் பார்க்கலாம், ஆனால் அவர்களை மட்டும் அப்படியே விட்டுவிட வேண்டுமா?

இது என்ன போங்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அருளின் அருகில் தான் அவர்களுடைய ஐயர் ராமதாசு உள்ளாரே. அப்புறம் என்ன?

வால்பையன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் பூணல் போட்டாரா இல்லையா என்றெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு ஒருவர் பார்க்கலாம், ஆனால் அவர்களை மட்டும் அப்படியே விட்டுவிட வேண்டுமா? //

அதை பற்றி சுந்தரிடமே பேசியாச்சே! மேலும் அப்பொழுது சுந்தர் சிவராமனின் நண்பர் என்பதால் ராஜன் அவ்வாறு கிண்டல் செய்தார்!

சுந்தர் எங்களுக்கும் நண்பர் என்பது தாங்கள் அறிந்தது தானே!

ராஜன் என்ன போங்கு ஆடினார் உங்களிடம்!?

கூல்பையன் said...

வால்,

ஒரே கேள்வி.

ராஜன் நினைத்திருந்தால் புரோகிதரோ, மந்திரமோ, பிள்ளையாரோ இல்லாமல் திருமணம் செய்திருக்கலாமா இல்லையா? அதற்கான முயற்சியாவது எடுத்தாரா?

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
அவ்வாறெல்லாம் கலாய்ப்பவர்கள் தாங்கள் கலாய்க்கப்படுவதற்கும் ரெடியாக இருக்க வேண்டும்.

மேலும் அந்த விஷயத்தில் மெனக்கெட்டு இதைப்பொருட்டசக எடுத்து பதில் கூறிய ஜ்யோவ்ராமையும் நான் விடவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //ஜ்யோவ்ராம் சுந்தர் பூணல் போட்டாரா இல்லையா என்றெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு ஒருவர் பார்க்கலாம், ஆனால் அவர்களை மட்டும் அப்படியே விட்டுவிட வேண்டுமா? // //

ஓஹோ... தானிக்கு தீனி சரி போயிந்தி'ன்னு வரீங்களா? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுதோ!

திரு. ராஜன் அடுத்தவருக்காக விட்டுக்கொடுத்தார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதாகத் தெரியவில்லை. இதனைப் பூணூல் கதையுடன் ஒப்பிடாதீர்.

"ஜ்யோவ்ராம் சுந்தர்" அடுத்தவருக்காக பூணூல் போட்டாரா?

வால்பையன் said...

//அவ்வாறெல்லாம் கலாய்ப்பவர்கள் தாங்கள் கலாய்க்கப்படுவதற்கும் ரெடியாக இருக்க வேண்டும்.//

நாங்கள் யாரும் ஓடி ஒளியவில்லையே!

வால்பையன் said...

//ராஜன் நினைத்திருந்தால் புரோகிதரோ, மந்திரமோ, பிள்ளையாரோ இல்லாமல் திருமணம் செய்திருக்கலாமா இல்லையா? அதற்கான முயற்சியாவது எடுத்தாரா? //

ராஜன் நினைத்தால் கல்யாணம் செய்யாமல் கூட இருப்பார்!

முயற்சி எடுக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? எனது பதிவை பாருங்க, அவருக்கு சமாதானம் சொல்லி அனுப்பியதே நாங்க தான்!

dondu(#11168674346665545885) said...

//"ஜ்யோவ்ராம் சுந்தர்" அடுத்தவருக்காக பூணூல் போட்டாரா?//
ஜ்யோவ்ராம் பூணலே போடல்லை, அது பனியன் பட்டை என்று கூறியதை நீங்க படிக்கவேயில்லையா?

//நாங்கள் யாரும் ஓடி ஒளியவில்லையே//
நானும் அவ்வாறு கூறவில்லையே? நான் கூறியது அருளுக்கான பதில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அவருக்கு சமாதானம் சொல்லி அனுப்பியதே நாங்க தான்!//
அவ்வாறு அவர் பெரியவர்களுக்காக விட்டுக்கொடுத்ததைத்தான் நானும் எனது பதிவில் பாராட்டினேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//அவர் பெரியவர்களுக்காக விட்டுக்கொடுத்ததைத்தான் நானும் எனது பதிவில் பாராட்டினேன்.//

ஆனா சிலர் அப்படியெல்லாம் ஏத்துக்க முடியாது, நீ கொள்கைக்காக சாகனும்னு சொல்றாங்க!

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //அவ்வாறு அவர் பெரியவர்களுக்காக விட்டுக்கொடுத்ததைத்தான் நானும் எனது பதிவில் பாராட்டினேன்.// //

பாரட்டினீங்களா?!!!

அடடா... இதே பதிவுல வைதீக மந்திரங்களை எல்லாம் இழுத்துப்போட்டு - பார்ப்பனீயம் வென்றது பார் - என்று 'சொல்லாமல் சொல்லி' இல்லாத வெற்றியைக் கொண்டாடுகிறீர்கள்.

ஆனாலும் உங்க கனவு நனவாகாது.

dondu(#11168674346665545885) said...

@அருள்
கிறித்துவ பாதிரியார் வேண்டாம், காஜியார் வேண்டாம் சுயமரியாதை திருமணமே செய்து கொள்ளுங்கள் என்று ஈவேராமசாமி நாயக்கர் எங்காவது கூறியிருக்கிறாரா?

அம்மாதிரி முசல்மான்களுக்கோ கிறித்துவர்களுக்கோ அவர் சுயமரியாதை திருமணம் நடத்தி வைத்திருக்கிறாரா?

அவ்வாறு எல்லோரும் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளவும் என சொல்ல உங்களால் முடியுமா?

பார்ப்பனர்கள் இல்லாது கட்சித் தலைவர்களை அழைத்தால் அவர்கள் திருமண மண்டபத்திலேயே எதிர்கட்சியினர் அழிய வேண்டும் என்றெல்லாம் அமங்கலமாக பேசுகின்றனர் (கண்ணதாசன் அவர்கள் தனது வனவாசம் புத்தகத்தில் கூறியது). தலைவனுக்கு அன்பளிப்பு, அவனது அல்லக்கைகளுக்கு பிரியாணி போட்டே பென்ணின் தந்தை நொந்து விடுவது பல முறை நடந்துள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

வால்பையன் said...

// //ஆனா சிலர் அப்படியெல்லாம் ஏத்துக்க முடியாது, நீ கொள்கைக்காக சாகனும்னு சொல்றாங்க!// //

இதுக்கெல்லாம் நீங்கள் வருத்தப் படாதீர்கள்.

'கொள்கைக்காக சாக முன்வந்தால்' நன்றாக சாகட்டும் என்று வேடிக்கைப் பார்க்கும் கூட்டம்தான் அதிகம்.

இந்த திருமணத்தை சாக்காக வைத்து திட்டுவோர் எல்லாம் - முன்பு ஏதோ ஒரு விஷயத்தில் நீங்கள் அவர்களைத் விமர்சித்தீர்கள் என்பதையே பின்னணியாகக் கூறுகிறார்கள். ஒரு கருத்தை கருத்தாக பார்க்காமல், தனிப்பட்ட பகையாக நினைக்கிறார்கள் போலிருக்கிறது.

பேச்சுரிமையின் லட்சணம் இதுதான். இது அவர்களின் சகிப்புத்தன்மையின் உண்மை முகத்தைக் காட்டுகிறது.

விஷயம் தெளிவாக இருக்கிறது. என்ன நடந்தது. எப்படி நடந்தது. யாருக்காக நடந்தது - என்பதை நீங்கள் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

இது நடக்கக் கூடியதுதான். இயல்புதான். மிகச்சாதாரமான நிகழ்வுதான். இதனாலெல்லாம் எவரது கொள்கையும் மாறாது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனாலும், வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று சேறடிக்கிறார்கள். என்ன செய்வது? - எல்லாம் பழைய பகை போலிருக்கிறது. தமிழ் சினிமாவின் பாதிப்போ என்னவோ!

உமர் | Umar said...

//ஆனாலும், வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று சேறடிக்கிறார்கள். என்ன செய்வது? - எல்லாம் பழைய பகை போலிருக்கிறது.//

எல்லோருக்கும் இதுவும் தெரிந்துதான் இருக்கின்றது.

NO said...

//ராஜன் மந்திரங்கள் எதையும் உச்சரிக்க மாட்டேன் என சொல்லி தான் அதற்கு சம்மத்தித்தார்//

பதிவுலக பொதுஜனம்: அட, பாப்பான் மட்டும் மந்திரம் சொல்லுறான் நாமெல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொல்லுறான் என்றுதானே திட்டினோம், இப்போ என்னடான்னா அத்தத்தான் நம்ம பகுத்தறிவு திலகங்களும் செய்யசொல்லுது!!!!!!!!!

குப்புசாமி முன்னுசாமி பகுத்தறிவு உரையாடல்!!!
----------------

குப்புசாமி - எலேய் முன்னுசாமி, நீங்க பெரிய பகுத்தறிவு சிங்கமுன்னு சொன்னாக, ஆனால் நீ என்னடான்னா கையுல தாயத்து கட்டி இருக்கிற?
முன்னுசாமி - எலேய் நான் பெரியார் பரம்பரை. எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனா பாரு பொஞ்சாதி ஆசபட்டுது அதான்!
குப்புசாமி - அப்போ நீ அதா நம்புதீங்கன்னு சொல்லு...
முன்னுசாமி - அட நீங்க ஒண்ணு, நான் நம்பாவிட்டாலும், நம்பாதவர்களுக்கும் இந்த தாயத்து வேலை செய்யுமுன்னு சொன்னாங்க...அதான்

பதிவுலக பொதுஜனம் - அட, துட்டு பண்ணுறது மட்டும்தாம் பகுத்தறிவு என்று நெனச்சோம், இந்த மாதிரி நெருப்பு வளர்ப்பது , பாப்பான் மாட்டும் மந்திரம் சொல்லட்டும், நாங்க கேட்க மட்டும் செய்வோம் என்பதெல்லாம் கூட பகுத்தறிவு போல இருக்கு! வாங்க எல்லோரும் பகுத்தறிவாளிகள் ஆகலாம்!

Bottom Line:

பகுத்தறிவு பகலவன்களே சாமியாண்ட ஓடும்பொழுது, இதைப்போன்ற பகுத்தறிவு பிஞ்சுகள் எல்லாம் எம்மாத்திரம்!

இதுல பக்கம் பக்கமா பதிவு வேற. வாழ்க பகுத்தறிவு, வாழ்க முற்போக்கு!

Anonymous said...

அடப்பாவிகளா.

ஊருக்கு உபதேசம் பண்ணுவானுங்களாம். இவனுங்க அதை ஃபாலோ பண்ண மாட்டாங்களாம். கேட்டால், நாங்க தான் சமாதானம் சொல்லி அனுப்பினோம் என்று நொண்டிச் சாக்கு வேற.

கேப்பையிலே நெய் வழிகிறது!

கூல்பையன் said...

சகிப்புத்தன்மை குறித்தும், பேச்சுரிமை குறித்தும் அருள் பேசுவது தான் உச்சகட்ட காமெடி

கூல்பையன் said...

கொள்கைக்காக சாக முடியாது சரி.

கொள்கைக்கு ஒத்து வரவில்லையென்றால் வேற பெண்ணை பார்க்க கூட முடியாதா?

பெண் தான் முக்கியம் கொள்கை முக்கியமில்லை என்ற முடிவுக்கு உம்மால் வர முடிகிறதென்றால், அவரவர்க்கு அவரவர் காரணம். அதையெல்லாம் கிண்டல் அடிக்க கூடாது.

கூல்பையன் said...

அருள் மானமுள்ளவன் என்ற பில்டப் கொடுத்துக்கொண்டு ராமதஸ் அருகில் பம்மிப்போய் உட்கார்ந்திருப்பது ஏன்?

கூல்பையன் said...

வால்பையன் பதிவில் கடைசியாக, “ஆமாம். நடந்ததை ஒப்புக் கொள்ளும் துணிவு எங்களுக்கு இருக்கிறது” என்று சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்.

யோவ், ஊருக்கு உபதேசம் பண்ணிட்டு நீயே இப்படி பண்ணுறியே. கேட்டா மாமனாரு மாற்றுத் திறனாளின்னு சால்ஜாப்பு.

இப்படி ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு சால்ஜாப்பு தேட முடியாதா? அப்படி தேடி சொல்ல வாய்ப்பு கொடுத்திட்டு கிண்டல் பண்ணிருக்கியா? சொன்ன ஒத்துக்குவியா?

உனக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம். நல்லா இருக்குடே

கூல்பையன் said...

வாழ்நாள் முழுக்க பிரம்மச்சரியத்தை கடை பிடிக்காதவனை எல்லாம் கிண்டல் செய்து கொண்டிருந்தவன் நொண்டிச் சாக்கை வைத்து கல்யாணம் செய்து கொண்டானாம். அந்தக் கதை தான்.

ஆனால் ஒன்று நிச்சயம்.

இனிமேல் கொள்கை மயிரு மட்டை என்று அந்த ராஜன் தூக்கிக் கொண்டு வர முடியாது

Anonymous said...

அருள் சொன்னதையே எடுத்துக் கொள்வோம்.

1. ஆணும் பெண்ணும் அறிந்தவர்களாக இருந்து தாமே துணையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

- இங்கே அவர்களாகவே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் சூழ்நிலையும் காரணம். ராஜனுக்கு பெற்றோர் இல்லை. மணப்பெண்ணின் தந்தை மாற்றுத் திறனாளி. எனவே இந்த பாயிண்ட்

2. வீண் செலவுகள் கூடாது.
-கல்யாண மண்டபத்துக்கே 37,500. வீட்டிலேயோ, ஹோட்டலிலோ தாலி கட்டியிருக்க வேண்டியது தானே?

3. திருமணம் தெய்வீகமானது அல்ல.
- அதான் பிள்ளையார் புகைப்படத்துடன் நடந்திருக்கிறது.

4. வாழ்விலும் சொத்திலும் சமபங்கு உரிமை உண்டு.
- இதை இப்போதே சொல்ல முடியாது.

5. திருமண விஷயத்தில் தம்பதிகளுக்கே சுதந்திரம்.
- இல்லையே, ராஜனுக்கு சுதந்திரமே இல்லையே. பெண்ணோட அப்பா சுதந்திரம் தானே

எனவே நூத்துக்கு நூறு ஃபெயில்.

குடுகுடுப்பை said...

அருள் பல சமயங்களில் உளருவதாக எனக்குத்தோண்றும் , இந்த விசயத்தில் மிகத்தெளிவாக பேசியிருக்கிறார், நீங்களும் ராஜன் விட்டுக்கொடுத்தது மேம்பட்ட செயலே என்று உணர்ந்ததாககவே கருதுகிறேன், ஆனாலும் இதனை வைத்து நடக்கும் விவாதங்கள் ராஜனின் சகிப்புத்தன்மையை பாராட்டாமல் கேலிக்கு உள்ளாக்குவது போல் உள்ளது.

Anonymous said...

//உங்கப்பன் காசு மாமே!//


I can tell anything about others; But no one should tell anything about me or my family.

I will make fun of others going to temple; But I don't make fun of my wife going to temple.

I will adjust myself to suit the situations, which benefits me. But I will make fun of you for the same.

All the animals are equal, but some are more equal.

He things he is the best; But I am better.

?????

Anonymous said...

பொண்ணோட அப்பா நம்பிக்கைக்காக கொள்கைத் தியாகம். ஓ.கே. அதே மாதிரி எத்தனையோ பேர் தங்கள் நம்பிக்கைக்காகவும், அடுத்தவர்களின் நம்பிக்கைக்காகவும் சிலவற்றை செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் தன்னுடைய பழைய சைக்கிள் கடையில் கிண்டலடித்தவர் இந்த ராஜன். கூடுதலாக, பிள்ளையார் உள்ளிட்ட கடவுள்களையெல்லாம் அவரவர் பிறப்பைப் பற்றி தன்னுடைய மண்புழுவின் மூளையால் சிந்தித்து, சைக்கிள் கடை க்ரீஸாய் வழியவிட்ட ராஜன், கடைசியில் பிள்ளையாரின் புன்முறுவல் பூத்த படத்துக்கு முன் கம்பீரமாக போஸ் கொடுக்கிறார்.
இன்னமும் வரும் நாட்களில் தன் மாமனார் சொன்னரென்பதற்காக லட்சுமி, முருகன், விக்னேஷ், ஆதித்யா போன்ற பெயர்களும் வைக்கக் கூடும். எல்லாம் காலக் கெரகம்னு போக வேண்டியது தான்.
அதெல்லாம் சரி, நல்ல நேரம் தாலி கட்ட மட்டும் தான் குறித்தார்களா? ஏன் கேட்கிறேனென்றால், அது குறித்து கூட நம் வால்பையனும் ராஜனும் சைக்கிள் கடையில் கும்மியடித்ததாக நினைவு.

Anonymous said...

//அதெல்லாம் சரி, நல்ல நேரம் தாலி கட்ட மட்டும் தான் குறித்தார்களா? ஏன் கேட்கிறேனென்றால், அது குறித்து கூட நம் வால்பையனும் ராஜனும் சைக்கிள் கடையில் கும்மியடித்ததாக நினைவு//

Soon you will see Mohammad Rajan & Mohammad woal Paian.

Anonymous said...

பகுத்தறிவுன்னு கப்ஸா விடுறவனெல்லாம் ஊருக்கு தான் உபதேசம் செய்வானுங்க என்பது புரியாதவர்களின் பிதற்றல் தான் பின்னூட்டங்கள்.

சாப்டர் க்ளோஸ்

கூல்பையன் said...

//என் கருத்தைத் திணிக்காமல், பிறர் மகிழ்ச்சியைக் கெடுக்காமல், ஆதிக்கம் காட்டாமல், லாபத்திற்காகவென்று மட்டும் செயல்படாமல், அன்பாக நடிக்காமல்,பண்பை மறக்காமல் செயல் படுவதே நான். முழுதாய்ச் சிரிப்பவனும், முழுதாய் ஆத்திரப்படுபவனுமே நான்.
//

இது இன்றைக்கு தாடிக்காரனின் பிதற்றல்.

அப்போ ராஜன் & கோ, அடுத்தவர்களி வாய்க்கூசும் அளவிற்கு திட்டி எழுதியது எல்லாம் எந்த அளவில் வரும் என்று விளக்குவாரா?

எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்டினி, உங்களுக்குன்னா ரத்தமா?

Anonymous said...

//உங்கப்பன் காசு மாமே!//

மணப்பெண்ணை இதை விட யாரும் கேவலப்படுத்தி விட முடியாது.

Anonymous said...

யோவ் வெண்ண அருள்.

எல்லாரும் அந்நியம் விக்ரம் மாதிரி இருக்கோமோ இல்லையோ?

தான் அந்நியன் விக்ரம் மாதிரி அடுத்தவஙக்ளை பேசிட்டு இப்போ ‘அம்பி’யா ராஜன் மாறிட்டதால தான் இந்த பதிவே.

அடிப்படையையே புரிஞ்சுக்கலையா நீ?

Anonymous said...

You tamil bloggers, nothing better to do?

i am reading your blogs from overseas
sometime feel like i am inside
Tamil nadu , assembly.
lot of politics.

வால்பையன் said...

@ கூல்பையன்

அடையாளம் கூட இல்லாமல் வந்துவிட்டு எங்களது நேர்மை பற்றி உங்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லை!

ராஜன் மாமனார் மாற்றுதிறன் பற்றி சொல்ல வேண்டுமென்றால் முதல் பதிவிலேயே சொல்லியிருப்பேன்!, உங்கள் பச்சாதாபம் எங்களுக்கு தேவையில்லை!

கூல்பையன் said...

அடையாளத்தோட வந்தால் என் குடும்பத்தினரை கேவலமா திட்டுவீர்கள். அதானே முடியும் உங்களால்?

கேட்ட கேள்விக்கு பதில்.

திசை திருப்பல்கள் வேண்டாம்

கூல்பையன் said...

முதல் பதிவிலேயே ராஜனின் மாமனார் குறித்து சொல்லிருப்பீர்களா?

நம்மை யார் கேள்வி கேட்க முடியும் என்ற இறுமாப்பில் இருந்தீர்கள். அதனால் அப்போது சொல்லவில்லை.

இப்போது நாலாபுறமும் இருந்து பூமராங் சுழன்று அடிக்கும் போது பதில் சொல்ல வக்கில்லை. அதான் ராஜன் மாமனார் அகப்பட்டுக் கொண்டார்.

உஙக்ளுக்கு ராஜன் மாமனார் என்று ஒரு சாக்குபோக்கு கிடைக்கிற மாதிரி அடுத்தவர்களுக்கும் எதாவது சாக்குபோக்கு, காரணம் இருக்கும் என்று என்றைக்காவது நினைத்திருக்கிறுக்கிறீர்களா? வாய்ப்பு வழங்கியிருக்கிறீர்களா? பொத்தாம் பொதுவாக வாய்க்கு வந்தபடியெல்லாம் ஆட்டம் போட்டீர்கள் தானே?

Anonymous said...

இங்கிலிபீசு அனானி,

ஆமாம். தமிழர்கள் எங்களுக்கு வேறு வேலை இல்லை. வெள்ளைக்கார தொரை உமக்கு என்ன வேலை இங்கே?

டோண்டு ஒரு மந்திரன் said...

போகிற போக்கைப் பார்த்தால் இந்தப் பதிவு எந்திரன் வசூலையே தாண்டிவிடும் போலருக்கே

வால்பையன் said...

// ‘அம்பி’யா ராஜன் மாறிட்டதால தான் இந்த பதிவே.//

வந்து பூனூல் மாட்டிவிட்ருவா போலயே!
டோண்டு எனக்கு நண்பர் அப்ப நானும் அம்பியா?
வினவும் நண்பர்கள் தான் அப்ப நான் கம்யூனிஸ்டா?
அருளும் நண்பர் தான் அப்ப நான் பா.ம.க.வா?

என்னாங்கயா லாஜிக் இது!?

வால்பையன் said...

//இது இன்றைக்கு தாடிக்காரனின் பிதற்றல்.//

இதில் தெரிந்து விட்டதே அய்யா நீர் யார் என்று!

உம்மாவா குடுமியை பிடித்து ஆட்டியதற்கு வாழி வாங்க வந்தீரோ, ராஜன் இல்லாவிட்டால் என்ன நான் இருக்கேனே, உம்மை கிழிக்க!

வாரும்மய்யா பாப்பர அனானியே!

கூல்பையன் said...

யோவ் வாலு.

உமக்கு மூளையும் இல்லைன்றத அடிக்கடி ஃப்ரூப் பண்றீரு.

’அம்பி’யாக மாறுவது என்றால் அய்யராக மாறுவது என்று அர்த்தம் இல்லை. இந்த ஜென்மத்தில் உமக்கு அது சாத்தியமில்லை.

ஒன்றை மறுத்துவிட்டு அதுவாகவே மாறுவது என்று அர்த்தம்

வால்பையன் said...

//உஙக்ளுக்கு ராஜன் மாமனார் என்று ஒரு சாக்குபோக்கு கிடைக்கிற மாதிரி அடுத்தவர்களுக்கும் எதாவது சாக்குபோக்கு, காரணம் இருக்கும் என்று என்றைக்காவது நினைத்திருக்கிறுக்கிறீர்களா? வாய்ப்பு வழங்கியிருக்கிறீர்களா? பொத்தாம் பொதுவாக வாய்க்கு வந்தபடியெல்லாம் ஆட்டம் போட்டீர்கள் தானே? //


ஆட்டம் எங்கே போட்டோம், உங்க வீட்டில் வந்தா கொஞ்சம் சொல்ல முடியுமா?

எங்கள் விவாத பொருள் தெரியாமல் சும்மா மந்திரம் சொல்றா மாதிரி உளரக்கூடாது, கோமனஅய்யரே!

கூல்பையன் said...

உம்மையும் உம்ம கூட்டாளிகளின் இரட்டை வேடத்தையும் தான் இங்கே ஆளுக்காள் நார் நாராகக் கிழித்து விட்டாயிற்றே. இன்று போய் நாளை வா சூத்திர வாலே

வால்பையன் said...

//அம்பி’யாக மாறுவது என்றால் அய்யராக மாறுவது என்று அர்த்தம் இல்லை. இந்த ஜென்மத்தில் உமக்கு அது சாத்தியமில்லை.//

நீர் மனிதனாக மாறுவதற்கும் சாத்தியமில்லை!

Anonymous said...

ஆக பொண்ணு கிடைக்குதுன்னு என்ன வேண்டுமானாலும் செய்ய இந்த பகுத்தறிவு அசிங்கங்கள் தயார் .

அருளின் தைரியத்தை பாராட்டுகிறேன் , இதே தைரியம் வால்பையனுக்கும் உண்டா ? உங்கள் திருமண படத்தையும் வெளியுடுங்கள் , உங்கள் பகுத்தறிவும் பழ்ளிழிக்கட்டும் .சீ தூ . இனி வாங்கப்பா உங்க பகுத்தறிவு செம்ப தூக்கிக்கிட்டு , பாக்கலாம்

கூல்பையன் said...

உம்மிடம் மனித சர்டிபிகேட் வாங்க எமக்குத் தேவையில்லை வாலு.

Anonymous said...

கேட்ட கேள்விக்கு பதில் இல்லைன்னா இப்படி தான் அசிங்கமா பேச ஆரம்பிப்பானுங்கன்னுறது தெரியாதா என்ன?

Anonymous said...

ஆமாம், பொண்ணு வீட்டுக்காரனுங்ககிட்ட இவனுங்க் பதிவெல்லாம் எடுத்து காமிச்சா எவன் பொண்ணு தருவான்?

வால்பையன் said...

//உம்மையும் உம்ம கூட்டாளிகளின் இரட்டை வேடத்தையும் தான் இங்கே ஆளுக்காள் நார் நாராகக் கிழித்து விட்டாயிற்றே. இன்று போய் நாளை வா சூத்திர வாலே //

வேடமிட்டு நடித்து யார் குடியையும் ஏமாற்றவில்லை, ஏமாற்றுபிழைக்கும் பாப்பர பிச்சைகாரரே! கோவில்ல அதானே பண்றிங்க!

வால்பையன் said...

நான் இடும் பின்னூட்டங்கள் அனைத்தும் என் சுயநினைவிலேயே இடுகிறேன், கோவத்தில் இடுகிறேன் என மட்டுறுத்தத்தேவையில்லை!

சொந்த் அபெயரில் வந்து பாராட்டிவிட்டு, பின்னாடியே அநாநியாக வந்து குலைத்து விட்டு செல்லும் பாப்பர பரதேசிகளை சந்திக்கும் துணிச்சல் எனக்குண்டு!

இப்போதும் சொல்கிறேன், உங்க பார்பனீயத்திற்கு என் கொண்டை கால் மசுரு கூட வணங்காது!

சும்மா உட்கார்ந்து பிச்சை வாங்கி திங்கிற உனக்கு எவ்ளோ தெனாவட்டு இருக்க்குறப்ப, உனக்கு பிச்சை போட்ட எனக்கு எவ்ளோ இருக்கனும்!


வா, இன்னைக்கு நீயா, நானான்னு பாத்துரலாம்!

கூல்பையன் said...

ராஜன் இனிமே ஒண்ணுத்தையும் கிழிக்க முடியாது பதிவுலகத்திலே. புர்ஞ்சுதா வாலு?

வால்பையன் said...

//அருளின் தைரியத்தை பாராட்டுகிறேன் , இதே தைரியம் வால்பையனுக்கும் உண்டா ? உங்கள் திருமண படத்தையும் வெளியுடுங்கள் , உங்கள் பகுத்தறிவும் பழ்ளிழிக்கட்டும் .சீ தூ . இனி வாங்கப்பா உங்க பகுத்தறிவு செம்ப தூக்கிக்கிட்டு , பாக்கலாம் //


வீட்டுக்கு வாயேன் அனானி!

எல்லா போட்டோவையும் காட்டுறேன், பிறகு துப்புறயா இல்ல மூஞ்சில கரியை பூசிட்டு போறியான்னு பார்க்கலாம்!,

என் கல்யாணத்துக்கு என் ஃப்ரெண்டு சிவராம கிரிஷ்னன்னு ஒருத்தன் வந்திருந்தான், அப்போ அது அய்யர் நடத்தி வச்ச கல்யாணமா குடுமி?

வால்பையன் said...

//ராஜன் இனிமே ஒண்ணுத்தையும் கிழிக்க முடியாது பதிவுலகத்திலே. புர்ஞ்சுதா வாலு? //

உம்மை கிழிக்க நான் போதுமே, இதுக்கு எதுக்கு ராஜனெல்லாம்!?

NO said...

குப்புசாமி முன்னுசாமி அண்ட் புதிய பகுத்தறிவு பகலவன் அருமைசாமி விவாதங்கள்:-

குப்ப்ஸ் - ஏம்பா முனூசு, உங்க வீட்டுல பிள்ளையார் சிலை வச்சு கும்பிட்டதா சொன்னங்க?
முனூசு - அட நீங்க ஒண்ணு, நம்ம பசங்க தெருஓரத்துல இருந்த கொஞ்சம் களிமண்ண எடுத்து விளையாடினாங்க, அப்புறம் பார்த்தா அது யான மாதிரி வந்திடுச்சு. வீடுல்ல உள்ளவங்களும் அந்த களிமண்ணு யானைக்கு பொட்டு வச்சு கும்பிட்டாங்க....
குப்ப்ஸ் - அதாம்பா நானும் கேக்கறேன், ஆக மொத்தம் கும்பிடீங்க இல்ல....
முனூசு - இல்ல, கும்பிட்டாங்க.....
குப்ப்ஸ் - இந்த டாங்க என்பதில் நீங்களும் இருக்கீங்க இல்ல...அதாவது கிடைசியில அது டீங்கதான??
முனூசு - அட என்னப்பா புரியாம பேசற, அவங்க களிமண்ண கும்பிட ஆச பட்டாங்க, நானும் ஒண்ணும் சொல்லல.....
குப்ப்ஸ் - அப்போ போன வாரம் நம்ம மாற்கெட்டாண்ட சில களிமண்ணு பொம்மையை ஒடச்சு இத்த கும்பிடுறவன் காட்டு மிராண்டீன்னு சொன்னது...
முனூசு - அது போன வாரம்......
குப்ப்ஸ் - அப்போ இந்த வாரம்..
முனூசு - நான் இந்த வாரம் லீவு.......கணகில வராது..........

குப்ப்ஸ் மயங்கி விழுகிறார்

சோடா எடுத்து வருகிறார் ஒருவர். யாரென்று பார்த்தால் பகுத்தறிவு பகலவன் அருமைசாமி!!

அருமை : எலேய் குப்பு , அதுதான் அண்ணன் விவரமா சொன்னாரில்ல, பகுத்தறிவுன்ன என்னன்னு, அப்புறமும் ஏம்பா இந்த மயக்கம்??
குப்ப்ஸ் - அது இல்ல அண்ணே, நீங்களே சொல்லுங்க, சாமி இல்லேன்னு ஊருக்கெல்லாம் சொல்லிட்டு, அவுங்க ஊட்டுல மட்டும் எல்லாம்....
அருமை: அட, உங்க கேள்வியே தவறு. இதைதான் நம்ம கொய்யா முன்னமே சொல்லி இருக்காரு. அதாவது, எதையும் வணங்காதே, எதுக்கும் யாருக்கும் மாலை போடாதே, எதையும் யவனயும் கண்ணை மூடி துதிக்காதே..........
குப்ப்ஸ் - அண்ணே, நீங்க சொல்லுற மேட்டருக்கும் இப்போ பேசுறதுக்கும் என்னங்க கநேக்ஸ்சன்?
அருமை - அதேதான் நானும் சொல்லுறேன்.....என்ன எங்களால சொல்லதான் முடியும்....செய்யரதுக்குதான் நீங்க, நாங்க இல்லை...அதுதான் பகுத்தறிவு, எங்க கொய்யாவும் அவருக்கு மேலே இருந்த பல பல அறிவாளீங்க எல்லாம் இதைதான் சொன்னாங்க, இதைத்தான் செஞ்சாங்க....வேணுமுன்னா ஆயிரத்து
எண்ணூற்றி ஐம்பத்தி இரண்டாம் வருடம் எழுதப்பட்டத எடுத்து சொல்லவா?
குப்ப்ஸ் - அண்ணே, எனக்கு மறுபடியும் மயக்கம் வராமாதிரி இருக்கு... இத்த விடுங்க, இப்போ நீங்க எங்க அவசரமா போயிட்டு இருக்கீங்க....
அருமை - அட அதுவா, நம்ம கொய்யா வழி வந்தவங்களுக்கு நாளைக்கு விழ எடுக்குறோம்.....அதுக்கு ஏற்பாடு செய்யத்தான்....
குப்ப்ஸ் - அங்கே நீங்க என்ன செய்யப்போறீங்க?
அருமை - அவர வணங்கி, மாலை போட்டு, அவரு என்ன சொன்னாலும் கேட்டு அவர் என்ன சொன்னாலும் செய்ய தயாரா இருப்போம்......... அதுக்குதான் இந்த கூட்டத்திற்கு போறேன்....
குப்ப்ஸ் - அப்போ கொஞ்சம் முன்னாடி நீங்க சொன்னது...
அருமை - எது ?
குப்ப்ஸ் - அதான் வணங்காதே, மாலை போடாதே....
அருமை - ஓ, அதுவா, பாருங்க இன்னைக்கு நான் லீவு........... எதை சொன்னாலும் பரவாஇல்லை.....நாளை முதல்தான் டூட்டி...........அது வேற......

குப்ப்ஸ் மறுபடியும் மயங்கி விழுகிறார்!!

பதிவுலக பொதுஜனம்: அட, என்னமா பேசுறாரு நம்ம அருமையும், முனூசும்! ஆகா, பகுத்தறிவுன்னா இப்படிதான் பேசணும். நாமெல்லாம் கேட்கணும். அதுல
ஓட்டை கண்டு பிடிச்சி பதில் கேள்வி கேட்டால், அது அநாகரீகம், பிற்போக்குத்தனம்! அவங்க அப்படி பேசுறதே அவர்களின் உயர்ந்த தன்மையை காட்டுகிறது...அதை கேள்வி கேட்பதினால் கேட்பவரின் தாழ்ந்த நிலையை மற்றும் தெளிவில்லா பகுத்தறிவு புரிதலை காட்டுகிறது!

வாழ்க முனூசு மற்றும் அருமை போன்றவர்கள். ஒழிக குப்புஸ் போன்றவர்கள்! பகுத்தறிவே எங்கள் வழி, அதை கேட்பது உங்கள் தலை விதி!

கூல்பையன் said...

இப்படித்தாண்டா எகிறுவீங்க உண்மையச் சொன்னால் ஊமத்தம் பிடிச்சவனே.

வால்பையன் said...

//கேட்ட கேள்விக்கு பதில் இல்லைன்னா இப்படி தான் அசிங்கமா பேச ஆரம்பிப்பானுங்கன்னுறது தெரியாதா என்ன? //

அடப்பாவிகளா, இவ்ளோ நேரம் நீங்க கேள்வியா கேட்டுகிட்டு இருந்திங்க, பிச்சைகாரன் வாந்தி எடுத்த மாதிரியல்லவா பேசிகிட்டு இருந்திங்க!

டோண்டு ப்ளாக் இன்னைக்கு மூத்திர நாத்தம் அடிக்குதேன்னு நானும் மோண்டுகிட்ட்டு இருக்கேன்!, உங்கலவா மேல சந்தனம் பீசிகிட்டு உள்ளே சாக்கடையை தானே வச்சிருப்பா!.

Anonymous said...

வாலு உன்னோட கல்யாணத்தின் போது நீ வலைப்பூ எழுதலை. எல்லாரையும் கல்யாணத்துக்கு கூப்பிடலை. அதனால தப்பிச்ச!

கூல்பையன் said...

நான் சொந்தப் பெயரில் வந்தெல்லாம் உன்னை பாராட்டவில்லை. நீ என்ன பெரிய தியாகம் செய்துவிட்டாய் உன்னைப் பாராட்ட?

ராஜனாவது இவ்வளவு நாள் போட்டிருந்த பகுத்தறிவு வேஷத்தை தியாகம் செய்திருக்கிறான்.

வால்பையன் said...

//இப்படித்தாண்டா எகிறுவீங்க உண்மையச் சொன்னால் ஊமத்தம் பிடிச்சவனே. //

நானும் உண்மைய தாண்டா சொன்னேன் நாத்தம் புடிச்சவனே!

கூல்பையன் said...

பன்னிக்கு சந்தனமும் சாக்கடையாத்தான் தெரியும் வாலு. அதனால நீ எங்களை சாக்கடைன்னே சொல்லிக்க. நோ வொர்ரீஸ்

கூல்பையன் said...

இம்புட்டு நாளா நீங்க கேட்டுட்டிருந்த கேள்விகளை இன்னைக்கு திரும்பிக் கேட்டா பிச்சைக்காரன் வாந்தி எடுப்பது போலத் தெரிவதில் ஆச்சரியமில்லை தான்

வால்பையன் said...

//வாலு உன்னோட கல்யாணத்தின் போது நீ வலைப்பூ எழுதலை. எல்லாரையும் கல்யாணத்துக்கு கூப்பிடலை. அதனால தப்பிச்ச! //

இல்லைனா டைவர்ஸ் வாங்கி கொடுத்துருவிங்களா அய்யரே!

வால்பையன் said...

//நான் சொந்தப் பெயரில் வந்தெல்லாம் உன்னை பாராட்டவில்லை. நீ என்ன பெரிய தியாகம் செய்துவிட்டாய் உன்னைப் பாராட்ட?//


என்னை எதுகய்யா நீ பாராட்டனும், உமக்கு அதற்குறிய தகுதி இல்லையே! நீரே திருட்டுபய மாதிரி முக்காடு போட்டு வர்றீர்! ஆன்பா நாத்தத்தை மறைக்க முடியல அய்யரே, போய் குளியும்!

வால்பையன் said...

//பன்னிக்கு சந்தனமும் சாக்கடையாத்தான் தெரியும் வாலு. அதனால நீ எங்களை சாக்கடைன்னே சொல்லிக்க. நோ வொர்ரீஸ் //


நீங்க எதுக்கு தான்யா கவலை பட்டிங்க, படுத்துருக்குரது சாக்கடையில, இதுல பேசுறதுக்கு மட்டும் குறைச்சலில்லை!
ஆத்துல பெரியவாகிட்ட கேட்டுட்டு வாரும், சண்டைக்கு நிக்கிறான் எப்படி மண்டி போட்டு வாலை சமாதான படுத்துறதுன்னு.

வால்பையன் said...

//இம்புட்டு நாளா நீங்க கேட்டுட்டிருந்த கேள்விகளை இன்னைக்கு திரும்பிக் கேட்டா பிச்சைக்காரன் வாந்தி எடுப்பது போலத் தெரிவதில் ஆச்சரியமில்லை தான் //


என்ன கேள்வியை நீர் கேட்டிட்டீர் அய்யா துள்ளுறீர்!

நாங்கள் கேட்ட கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியவில்லை, இப்போ கேளும் உம்ம கேள்விய!

Anonymous said...

முதல்ல இருந்து படி. கேள்வி புரியும். புரியலைன்னா உன் வூட்டுக்காரம்மாகிட்ட கேளு. இப்படி நாக்க புடுங்கற மாதிரி கேட்டுட்டானுங்க. நான் எங்க ஓடிப்போறாதுன்னு. போ.

Anonymous said...

காமலைக் கண்ணனுக்கு பாக்குறதெல்லாம் மஞ்சளாத் தான் தெரியும். அதனால உனக்கு எல்லாமே சாக்கடையா தெரிவதில் ஆச்சரியமில்லை

Anonymous said...

இனிமே கேள்வி கேட்கிறோம்னு சொம்ப தூக்கிக்குட்ட் சபைக்கு வந்திடாதீங்க வாலு. அதான் உஙக் நாட்டாமை சொம்பு சிந்தாதிரிப்பேட்டையிலேயே நசுங்கிடுச்சு.

வால்பையன் said...

//முதல்ல இருந்து படி. கேள்வி புரியும். புரியலைன்னா உன் வூட்டுக்காரம்மாகிட்ட கேளு. இப்படி நாக்க புடுங்கற மாதிரி கேட்டுட்டானுங்க. நான் எங்க ஓடிப்போறாதுன்னு. போ. //

அதையே காப்பி பண்ணி போடு. நான் ஓடி போரேனா, நீ ஓடுறியா பாரு

வால்பையன் said...

//காமலைக் கண்ணனுக்கு பாக்குறதெல்லாம் மஞ்சளாத் தான் தெரியும். அதனால உனக்கு எல்லாமே சாக்கடையா தெரிவதில் ஆச்சரியமில்லை //

உங்க புழுத்த கண்ணுக்கு தெரிஞ்சதை விடவா எங்களுக்கு தெரிஞ்சி போச்சு சாக்கடையா, சாக்கடையை சாக்கடைன்னு சொல்லாம என்ன சொல்றது. உங்க பாப்பர புத்தி தான் உலகறிஞ்ச விசயமாச்சே!

வால்பையன் said...

//இனிமே கேள்வி கேட்கிறோம்னு சொம்ப தூக்கிக்குட்ட் சபைக்கு வந்திடாதீங்க வாலு. அதான் உஙக் நாட்டாமை சொம்பு சிந்தாதிரிப்பேட்டையிலேயே நசுங்கிடுச்சு. //

டிங்கரிங் பண்ணி கேப்பேன்!

Anonymous said...

அப்படீன்னா அந்த டிங்கரிங் வாயன் ராஜனை வரச்சொல்லு. நீ ஓடிப்போ

அருள் said...

பார்ப்பனர்க் கூட்டத்தின் கருத்தெல்லாம் 'தேய்ந்த ரெக்கார்டு' மாதிரி.

எத்தனை முறை தெளிவாக விளக்கினாலும் சொல்வதை உள்வங்காமல் - எடுத்த வாந்தியையே மீண்டும் மீண்டும் எடுப்பார்கள் என்பதற்கு இந்தப் பதிவில் வரும் 'முகமில்லா' பின்னூட்டங்களே சாட்சி.

வால்பையன் said...

//அப்படீன்னா அந்த டிங்கரிங் வாயன் ராஜனை வரச்சொல்லு. நீ ஓடிப்போ //

வீட்ல இருப்பாரு, போய் விளக்கு புடிச்சிகிட்டே கேட்டுப்பாரேன்!

அருள் said...

பார்ப்பனை வைத்து திருமணம் செய்வது என்பது காலகாலமாக நடக்கும் நிகழ்வல்ல. இடையில் வந்தது இடையிலேயே போகும். காய்ச்சல் வந்தால் சரியாக சில நாள் ஆவது போலத்தான் இதுவும்.

என்னுடைய அண்ணனின் திருமணம் பார்ப்பன மந்திரத்துடன் நடந்தது - என்னுடைய திருமணம் அப்படி நடக்கவில்லை.

திரு.ராஜனுடைய திருமணம் பார்ப்பன மந்திரத்துடன் நடந்ததுள்ளது - அவர் மகள்/மகனுடைய திருமணம் அப்படி நடக்க வாய்ப்பிருக்காது.

பார்ப்பனக் கொட்டம் ஒருநாள் முற்றிலுமாக ஒழியும்.

இன்னொரு ரோசக்கார பார்ப்பான் said...

பின்னூட்டங்கள் எல்லை மீறுகின்றன. மட்டுறுத்தவும்.

கூல்பையன் said...

டிங்கரிங் வாயன் பொருத்தமான பெயர்

Anonymous said...

உன் அண்ணனை பார்ப்பனன் இல்லாம கல்யாணம் பண்ணுன்னு திருத்த்ருக்க வேண்டியது தானே அருளூ?

Anonymous said...

லைட்டு புடிக்க தான் ஒரு ஏழெட்டு அல்லக்கைங்க ரெடியா இருக்கீங்களே. நாங்க வேறவா?

Anonymous said...

அருளூ, பார்ப்பனக் கொட்டம் ஒழியுதோ இல்லையோ, வன்னியக் கொட்டம் அரசியல்ல ஏற்கனவே ஒழிஞ்சாச்சு. ஊரிலே இன்னும் சீக்கிரம் ஒழிஞ்சிடும்.

கூல்பையன் said...

கேள்வி இதுதாண்டா முண்டக்கலைப்பைகளா

ஊர் முழுக்க நக்கல் விட்டுட்டு திரிஞ்சீங்களே. இப்போ உங்களுக்குன்னா உடனே சப்பைக்கட்டு கட்டுறீங்களே? இதே மாதிரி அடுத்தவனுக்கும் ஆயிரம் நியாயம் இருக்குமுனு என்னைக்காச்சும் கேள்வி கேட்டுட்டு அப்புறம் நக்கல் விட்டீங்களா?

ஸ்ட்ரெய்டா பதில் சொல்லுங்க

அருள் said...

// //உன் அண்ணனை பார்ப்பனன் இல்லாம கல்யாணம் பண்ணுன்னு திருத்த்ருக்க வேண்டியது தானே அருளூ?// //

அண்ணனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும் அடுத்தவர் உரிமையில் தலையிடாததுதான் எங்கள் பண்பாடு.

அருள் said...

// //அருளூ, பார்ப்பனக் கொட்டம் ஒழியுதோ இல்லையோ, வன்னியக் கொட்டம் அரசியல்ல ஏற்கனவே ஒழிஞ்சாச்சு. ஊரிலே இன்னும் சீக்கிரம் ஒழிஞ்சிடும்.// //

ஒட்டுமொத்த பார்ப்பனக் கூட்டத்தையே ஒரேஒரு டெல்லி போர ரயிலுல ஏத்திவிட்டுடலாம்.(அப்படியெல்லாம் துரத்தமாட்டோம். சிறுபான்மையா இருந்தாலும் நீங்களும் இந்தநாட்டின் குடிமக்கள்தானே).

நீங்க எங்க கொட்டத்து ஒழிக்கப்போரீங்களா? காமிடி பண்ணாதீங்கோ.

Anonymous said...

அடுத்தவன் உரிமை எல்லாம் அண்ணன் தம்பிக்கு மட்டும் தானா? அப்புறம் என்ன மசித்துக்கு அடுத்தவனை குறை சொல்றீங்க? பண்பாட்டை பத்தி பேசுற நீ?

ஒரு ரயிலாவே இருக்கட்டும். சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.

நீங்க தான் பன்னிங்க. வதவதன்னு ஒட்டுமொத்தமா இருக்கீங்க.

டெல்லிக்கு ரயில் ஏறுறதைப் பத்தி நீ பேசாத.

அதான் உங்கொய்யா டெல்லிக்கு பையனை அனுப்ப அங்கயும் இங்கயும் அல்லாடினாரே.

அருள் said...

கூல்பையன் said...

// //ஊர் முழுக்க நக்கல் விட்டுட்டு திரிஞ்சீங்களே. இப்போ உங்களுக்குன்னா உடனே சப்பைக்கட்டு கட்டுறீங்களே? இதே மாதிரி அடுத்தவனுக்கும் ஆயிரம் நியாயம் இருக்குமுனு என்னைக்காச்சும் கேள்வி கேட்டுட்டு அப்புறம் நக்கல் விட்டீங்களா? ஸ்ட்ரெய்டா பதில் சொல்லுங்க// //

"சப்பைக்கட்டு" என்பது நீங்கள் கொடுக்கும் பெயர். அதாவது உங்களால் ஏற்க முடியாத பதில் எல்லாம் சப்பைக்கட்டு.

"ஸ்ட்ரெய்டா பதில்" பலமுறை சொல்லிவிட்டார்கள். மறுபடி மறுபடி கேட்டா என்ன பண்றது? நீங்க நல்ல டாக்ரா பாருங்க.

"அடுத்தவனுக்கும் ஆயிரம் நியாயம் இருக்குன்னா" - அந்த நியாங்களை எடுத்துச்சொல்லதான் நீங்க இருக்கீங்க. வெளியிட 'ப்ளாக்' இருக்கு. அப்புறம் என்ன?

அருள் said...

// //சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.// //

அடடா... அனானி 'அனாதை' முகம்தெரியாத தலைமறைவு சிங்கத்துக்கு ரொம்பதான் துணிச்சல்.

அருள் said...

// //திருமணத்தில் தாலி கட்டினால் மட்டும் போதாது, சப்தபதி சடங்கும் நடந்திருக்க வேண்டும்.// //

டோண்டு சார் இந்தப் பதிவுல "பார்ப்பனர்களின் மந்திரங்களை" ரொம்பவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

கொஞ்சம் விட்டால் இந்த 'வைதீகக் கூத்தெல்லாம்' கிறித்துவர்களின் புனித வேதாகமம், இசுலாமியர்களின் திருக்குர் ஆன் போல மாற்ற முடியாதவை, அதெல்லாம் முன்னோர் சொன்னது, கடவுள் காட்டிய வழி என்று பார்ப்பனக் கட்டுக்கதைகளை அள்ளி விடுவார்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால் - தங்களுக்குத் தேவை என்றால் பார்ப்பனர்கள் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்வார்கள் - அதாவது சீர்திருத்திக்கொள்வார்கள் என்பதே உண்மை. ஆனால், சூத்திரர்களை சுரண்டுவதற்கு இடைஞ்சலாக இருக்கும் சீர்திருத்தங்களை மட்டும் 'முன்னோர் சொன்னது' என்று கட்டிக்காப்பாற்றுவார்கள்.

""வைதீகப் பிரசாரத்துக்கும் வைதீகத்துக்காகவே உயிர் வாழ்வதாய்ச் சொல்லிகொள்ளும் பார்ப்பன சமூகத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய கலியாணங்களில் இப்போது (1934) எவ்வளவு சீர்திருத்தம், எவ்வளவு மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்.

காலை 7 மணிக்கு வீட்டைவிட்டுப் புறப்பட்டுத் தூரத்திலுள்ள கோயில்களுக்குப் போய் அங்குக் கலியாணம் செய்துகொண்டு, பகல் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மாலை 6 மணிக்குப் புறப்பட்டு வீடுவந்து சேர்ந்து விடுகிறார்கள்.

3 நாள், 5 நாள், 7 நாள் அவ்பாசனங்கள், சடங்குகள் என்பவைகள் எல்லாம் எங்கே போய்விட்டன? பெரும் செலவுகள், ஆடம்பரங்கள், பலவகைப்பட்ட விருந்துகள் எல்லாம் எங்கே போய்விட்டன?""

தந்தை பெரியார், 'பகுத்தறிவு' 7.10.1934

Anonymous said...

//உண்மை என்னவென்றால் - தங்களுக்குத் தேவை என்றால் பார்ப்பனர்கள் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்வார்கள் - அதாவது சீர்திருத்திக்கொள்வார்கள் என்பதே உண்மை//

ராஜனும், உன் அண்ணனும் எப்பய்யா பார்ப்பனரா ஆனாங்க?

Anonymous said...

//அடடா... அனானி 'அனாதை' முகம்தெரியாத தலைமறைவு சிங்கத்துக்கு ரொம்பதான் துணிச்சல்//

ஒரு போட்டோ போட்டுகிட்டா ரொம்ப துணிச்சல்னு அர்த்தமா?

அட்ரஸ் போன் நம்பரெல்லாம் போட்டுகிட்டு பேசுய்யா துணிச்சலைப் பத்தி.

அரசியல் அநாதைகள் அடுத்தவரை அநாதை என்பது முரண்நகை

அருள் said...

கூல்பையன் said...

// //இதுவே டோண்டு இல்லத் திருமணம் ஒன்றில் வாலோ, ராஜனோ வந்திருந்தால் இப்படி கேட்காமல் விடலாம் என்று விட்டுருப்பார்களா? தனி பதிவு போட்டு ஆட்டம் போட்டிருப்பார்களே// //

கூல்பையன் என்கிற தலைமறைவு பேர்விழியின் அறிவுக்கு இந்த கேள்வியே சாட்சி.

டோண்டு ஒரு பார்ப்பனர். அதுவும் தான் ஒரு பார்ப்பனர் என்பதையே பெருமையாகப் பேசுபவர். அவரது வீட்டுத் திருமணம் எப்படி நடந்தால் மற்றவர்களுக்கு என்ன?

ஒருவேளை அவர் வைதீக சடங்குகள் இல்லாமல் நடத்தினால் கூட, அதற்காக பார்ப்பனர்கள்தான் வயிற்றில் அடித்துக்கொள்ள வேண்டும். பகுத்தறிவு பேசுபவர்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை?

கேள்வி கேட்கவும் கொஞ்சம் மசாலா வேண்டும்.

கூல்பையன் said...

ரொம்பி வழியும் உன் அறிவுக்கு எல்லையே இல்லை அருளு.

இம்புட்டு நாளா அந்த் டிங்கர் வாயனுங்க அதையெல்லாம் கிண்டல் பண்ணிட்டு இருந்ததாலத் தானே கேள்வி.

அடிப்படையே புரிய மாட்டேங்குதே அருளு

அருள் said...

// //ராஜனும், உன் அண்ணனும் எப்பய்யா பார்ப்பனரா ஆனாங்க?// //

பார்ப்பனர்கள் தமக்கு இலாபம் என்றால் சடங்கு சம்பிரதாயங்களை தூக்கி குப்பையில் வீசுவார்கள். ஆற்றையே கடக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு, கடல்கடந்து ஃபாரின் போகிற மாதிரி...

ஆனால், திரு.ராஜனோ, எனது அண்ணனோ தங்களது பணத்தை இழந்திருக்கிறார்கள் (பார்ப்பானுக்கு கொடுத்த வெட்டி தட்சினையைச் சொன்னேன்.)

பார்ப்பனர்களின் இலாபத்தையும், பார்ப்பனர் அல்லாதாரின் இழப்பையும் ஒன்றாகப் பேசாதீர்.

அருள் said...

// //அட்ரஸ் போன் நம்பரெல்லாம் போட்டுகிட்டு பேசுய்யா துணிச்சலைப் பத்தி.// //

முகமே இல்லாத ஆட்கள் முகவரி கேட்கலாமா? அடடா... விட்டா ஜாதம் கேட்பீர்கள் போலிருக்கிறது.

அட்ரஸ் எல்லாம் ஏற்கனவே 'டோண்டு சார்' பதிவில் கொடுத்தாச்சு.

எழிலன் said...

கூல் பையன் அவர்களே.. எங்கள் நாட்டு பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள்.. அதாவது தனக்கு தனக்கு என்றால் புடுக்கும் ஆடும் என்று..

அது போன்று முற்போக்காளன் , பகுத்தறிவாளன் என்று வேஷம் கட்டி ஜல்லி அடித்துக்கொண்டிருக்கும் இந்த நாதாரிகள் அறிவுரை நக்கல் எல்லாம் மற்றவர்களுக்கு தான். இந்த வால் பையனும் அவனுக்கு நாய் போல் வாலாட்டி கொண்டிருந்த ராஜன் என்ற பேர்வழியும்.

எழிலன் said...

ஏம்பா அறிவு ரொம்பி வழியும் அருளு.. ஊருக்குதான் உபதேசமா.. உங்க அண்ணன் பாப்பான வச்சி கல்யாணம் பண்ணியதை கண்டிச்சி ஒரு பதிவோ அல்லது குறைந்தது ஒரு பின்னூட்டமோ போடுவியா..

அல்லது. ஹி..ஹி.. நாங்க மத்தவங்கள தான் விமர்சிப்போம்.. எங்க வீட்டில மாறா தான் நடப்போம் என்று ஒத்துகிறையா..

கூல்பையன் said...

'ஜாதகம்’

ம். அதையும் தான் வைத்திருப்பாயே. வெளியில் தானே பகுத்தறிவுவாந்தி வேஷம்

அருள் said...

// //உங்க அண்ணன் பாப்பான வச்சி கல்யாணம் பண்ணியதை கண்டிச்சி ஒரு பதிவோ அல்லது குறைந்தது ஒரு பின்னூட்டமோ போடுவியா..// //

எங்க அண்ணன் திருமணம் நடந்தது 1990 ல. அப்போ 'ப்ளாக்' இல்ல. ஹி...ஹி...

Anonymous said...

வால்ப்பசாமிக்கும் ராஜப்பாவுக்கும் டவசர் கிழிஞ்சது தான் ஊருக்கே தெரியுமே!

அப்பறம் எதுக்கு இங்க இத்தனை சத்தம் ?

செத்த எலியை எதுக்குப்பா இத்தனை நேரம் அடிக்கிறீங்க ! அதெல்லாம் தப்பூபூ....... இல்லையா

ஏனப்பன்

அருள் said...

// //வெளியில் தானே பகுத்தறிவுவாந்தி வேஷம்// //

நான் எதுக்கு வேஷம் போடனும்? பகுத்தறிவு என்பது ஆராய்ந்து பார்த்து நமக்கு சரியென்று படுவதை ஏற்பது/நம்புவது.

தமிழனுடைய பணம் பார்ப்பானுக்கு போகக்கூடாது. பார்ப்பன் நம்மைவிட மேலானவன் இல்லை - என்பதே எனது கருத்து.

தமிழனுடைய பண்பாட்டு பழக்க வழக்கங்களில் பார்ப்பானின் பங்கு எதுவும் இருக்கக் கூடாது. இது ஒரு விருப்பம் - படிப்படியாக நிறைவேறும்.

இன்றைக்கே எல்லாம் நடந்துவிடும் என்று நான் நம்பவில்லை, எதிர்பார்க்கவும் இல்லை.

dondu(#11168674346665545885) said...

//எங்க அண்ணன் திருமணம் நடந்தது 1990 ல. அப்போ 'ப்ளாக்' இல்ல. ஹி...ஹி...//
சமீபத்தில் 1990-ல் அந்தத் திருமணம் எப்படி நடந்தது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

// //சமீபத்தில் 1990-ல் அந்தத் திருமணம் எப்படி நடந்தது?// //

மந்திரம்'னு அய்யர் ஏதோ ஓத, நெருப்பில் சாப்பிடும் நெய்யைக் கொட்டி நடந்தது.

dondu(#11168674346665545885) said...

@அருள்
மனப்பூர்வமாகவே சொல்கிறேன், உங்கள் ஹானஸ்டான பதில் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது.

உங்களைப்போல நிமிர்ந்த பார்வையுடன் கூடிய இளைய தலைமுறை இருக்கும் வரை நாட்டுக்கு ஒரு கேடும் வராது.

உங்களுடன் மனவேறுபாடுகள் நிறைய எனக்கு உண்டு. ஆயினும் உங்களது இந்த மனப்பாங்கு எனக்கு பிடித்திருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

hi said...

அருள் சார்

http://athikkadayan.blogspot.com/2010/10/blog-post_26.html

இந்த தளத்துல சும்மா நச்சுன்னு நாலு கேள்வி உங்கள பாத்து டீசன்ட்டா கேட்டுருக்காங்க...எப்போதும் வேக வேகமா பதில் சொல்ற நீங்க எங்க போனீங்க...போய் பதில் சொல்லுங்க சார்...

ஆனா இந்த பாய் பசங்கள சும்மா சொல்லுக்கூடாது...நாத்திக பயலுவோல ரிவீட் அடிக்குருதுல கில்லாடிங்க

வெள்ளத்தான்

அருள் said...

திருமணம் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளை அவரவர் அவரவர் விருப்பம் போல நடத்தலாம், அதற்கான உரிமை எல்லோருக்கும் இருக்கிறது.

அதேசமயம், பார்ப்பன மேலாதிக்கத்தை ஏற்பதாகவோ, பார்ப்பானுக்கு தமிழனின் பணம் போவதாகவோ அது இருக்கக் கூடாது என்பதே அதிகப்படியான எதிர்பார்ப்பாகும்.

மற்றபடி சாமி கும்பிடுகிறார்களா? திருமணம் முடித்து கோவிலுக்கு போகிறார்களா? தாலி கட்டுகிறார்களா? வேறு ஏதாவது பார்ப்பனர் இல்லாத சம்பிரதாயங்களை பின்பற்றுகிறார்களா? என்பதெல்லாம் அவரவர் விருப்பம், அவரவர் பழக்க வழக்கம் என்றே கொள்ள வேண்டும்.

அப்படியும் விடாப்பிடியாக - பார்ப்பானை வைத்துதான் ஒருவர் திருமணம் செய்வாறென்றாலும் - அதற்கும் அவருக்கு உரிமை உண்டு. அது அறியாமையாகவோ, பயமாகவோ, வீம்பாகவோ இருக்கலாம். இருந்துவிட்டு போகட்டுமே. (ஆனால், அது நிச்சயம் தமிழர் பழக்கவழக்கமோ பண்பாடோ அல்ல என்பது மட்டும் உறுதி)

dondu(#11168674346665545885) said...

//அப்படியும் விடாப்பிடியாக - பார்ப்பானை வைத்துதான் ஒருவர் திருமணம் செய்வாறென்றாலும் - அதற்கும் அவருக்கு உரிமை உண்டு. அது அறியாமையாகவோ, பயமாகவோ, வீம்பாகவோ இருக்கலாம்.//
உங்கள் அண்ணன் திருமணத்தை எவ்வாறு வகைப்படுத்துவீர்கள்?

இந்தப் பதிவை அதன் பின்னூட்டங்கள் எல்லாவற்றையும் சேர்த்து அவரிடமோ உங்கள் வீட்டுப் பெரியவர்களிடமோ காட்டினால் அவர்கள் என்ன சொல்வார்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //உங்கள் அண்ணன் திருமணத்தை எவ்வாறு வகைப்படுத்துவீர்கள்? இந்தப் பதிவை அதன் பின்னூட்டங்கள் எல்லாவற்றையும் சேர்த்து அவரிடமோ உங்கள் வீட்டுப் பெரியவர்களிடமோ காட்டினால் அவர்கள் என்ன சொல்வார்கள்?// //

என் அண்ணன் திருமணத்தை புரோகித/மூடநம்பிக்கை/வைதீக வழியில் நடந்த திருமணம் என்றுதான் வகைப் படுத்த வேண்டும்.

இந்தப்பதிவை என்னுடைய உறவினர்களிடம் காட்டினால் ஒன்றும் ஆகாது. ஏனென்றால், இவையெல்லாம் நாங்கள் ஏற்கனவே பேசி வருபவைதான். எனது திருமணம் பார்ப்பான் இல்லாமல் நடந்ததை என்வீட்டில் எவரும் எதிற்கவில்லை.

பார்ப்பானை வைத்து திருமணம் என்பதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்கின்றன.

1. ஏற்கனவே முன்னோர் செய்துவரும் பழக்கம். (அதாவது தந்தை - தாத்தா காலம், அதற்கு முன்பெல்லாம் அவ்வாறு நடந்திருக்காது என்பதே வரலாற்று ஆய்வுகள் காட்டும் விளக்கம்)

2. பயம் - அதாவது பார்ப்பானை வைக்காவிட்டால் தெய்வ குற்றம் ஆகிவிடுமோ? இதனால் தீங்கு வருமோ? என்றெல்லாம் பயம் கொள்கிறார்கள்.

இப்படியெல்லாம் நம்பும்வரை அவர்கள் இதனை வலியுறுத்தவே செய்வார்கள். மாற்றத்திற்கும் விழிப்புணர்வுக்கும் முயற்சிக்கலாம்.

அதேசமயம் - அவர்கள் இதையெல்லாம் நம்பும் காலம் வரை, அவர்களது நம்பிக்கையை செயல்படுத்துவதை நான் எதிர்க்க மாட்டேன். அது அவர்களது உரிமை.

அடுத்தவர் நம்பிக்கையை/உரிமையை வலுக்கட்டாயமாக மாற்றுவது எனது வேலை அல்ல. காலம் மாறும்.

Anonymous said...

//Arul :அடுத்தவர் நம்பிக்கையை/உரிமையை வலுக்கட்டாயமாக மாற்றுவது எனது வேலை அல்ல. காலம் மாறும்//

Even you wish or don't wish, there will be not be enough bramin (taken rituals as a profession) to perform the rituals in near future. Already there are temples in such condition.

Arul - what really you would do, if you were a bramin? or what do you expect from a bramin?

Sridhar

Unknown said...

ராஜன்& கோ வினர், பெண் வீட்டார் கருத்துக்கு ஏற்ப நடந்து கொண்டது வரவேற்கத் தக்கதே! டோண்டு சார், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டுள்ளார்!

திருமணம் என்பது இருவரின் புது வாழ்க்கையின் ஆரம்பம்! மணமக்கள்தான் அங்கு முக்கியம்! மனமொத்து இணைகிறார்களா என்பது தான் முக்கியமே அல்லாது சடங்குகள் அல்ல!

திருமணம் என்பது குடும்பத்தார் சம்பந்தப்பட்ட விஷயம்! முகூர்த்தத்தை, தனியாக குடும்பப் பாரம்பரியத்துடன் நடத்திக் கொண்டு, பின்பு அனைவரையும் அழைத்து, ஒரு வேளை விருந்துடன் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது, நல்ல வழிமுறை என்பது எனது கருத்து!

பார்ப்பானும் வேண்டாம்! அரசியல்வியாதிகளும் வேண்டாம்! தங்களுக்குப் பிடித்த தலைமுறைகள் பல கண்ட பழுத்த தம்பதியர் முன்னிலையில், தாலியோ, மோதிரமோ, ஒப்பந்தமோ, மாலை மாற்றி இணைவதே சாலச் சிறந்தது!

அருள் said...

Sridhar Said...

// //Arul - what really you would do, if you were a bramin? or what do you expect from a bramin? // //

பார்ப்பனராக இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன? எல்லோரும் மனிதனாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, அடுத்தவனைவிட நான் உயர்ந்தவன் என்று கூறாமல், அடுத்தவர் உழைப்பை சுரண்டாமல், நாட்டின் பொது வளத்திலும் வாய்ப்பிலும் எல்லோருக்கும் சமபங்கு கொடுக்க முன்வரவேண்டும்.

அடுத்தவர்களின் நம்பிக்கைகளை, வழிபாட்டு முறைகளை, அவர்களுக்குள்ள சம உரிமையை மதிக்க வேண்டும். அடுத்தவர் பேசும் மொழியும் என்னுடைய மொழிக்கு ஈடானது, அடுத்தவர் வழிபடும் கடவுள் என் கடவுளைப் போன்றவரே - என்ற எண்ணம்/நம்பிக்கை வேண்டும்.

அடுத்தவர்களின் இசை, கலைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். மிக முக்கியமாக, நீ தொட்டால் நான் தீட்டாகி விடுவேன் என்றோ - நீ ஒருவாட்டி தான் பிறந்தாய், நான் இரண்டாவது முறையாக பிறந்திருக்கிறேன் என்றோ மற்றவர்களை சிறுமைப் படுத்தக்கூடாது.

எழிலன் said...

\\தமிழனுடைய பணம் பார்ப்பானுக்கு போகக்கூடாது. பார்ப்பன் நம்மைவிட மேலானவன் இல்லை - என்பதே எனது கருத்து.//

கரெக்ட்.. சரி நீங்க உங்க கல்யாணத்தில் உங்களுக்கு தாலி எடுத்து கொடுத்தாரே உங்க நவீன புரோகிதர் (கவனிக்கவும் பார்ப்பான் அல்ல) எவ்வளவு மால் வெட்டினீர்கள். இல்லையெண்டு சொல்லி சமாளிக்காதீர்கள் எங்களுக்கு தெரியும் அவர் அமவுண்டு வாங்காமல் எந்த கல்யானதிற்க்கும்
புரோகிதம் பார்ப்பதில்லையென்று.

Anonymous said...

அருள் என்ன காரணத்திற்காக டாக்டர் ஐயையோவை திருமணத்திற்கு தலைமை தாங்கச் சொன்னார்?

இவரை விட அவர் உசந்தவர் என்ப்தினாலா!

நூல்பையன் said...

//அடுத்தவனைவிட நான் உயர்ந்தவன் என்று கூறாமல், அடுத்தவர் உழைப்பை சுரண்டாமல், நாட்டின் பொது வளத்திலும் வாய்ப்பிலும் எல்லோருக்கும் சமபங்கு கொடுக்க முன்வரவேண்டும்.//

அருளுக்கு டாக்டர் ஐயையோ எம்.பி. பதவி வாங்கித் தர முன்வருவாரா?

எழிலன் said...

\\இவரை விட அவர் உசந்தவர் என்ப்தினாலா! //

எவரை விட.. ஒ.. அவரா.. அது எதனால் என்றால் சமீப காலங்களில் கல்யாண வைபவங்களில் அவரை விட இவர் தான் ஒப்பாரி வைத்து புலம்புவதில் சிறந்து விளங்குவதால்.. என் மகனுக்கு எம்பி சீட்டு இல்லையா.. எங்களுக்கு நாற்பது சீட்டு பிச்சை போட மாட்டீர்களா.. நாங்கள் எத்தனை முறை தான் கோல்மால்புரதுக்கும் போயஸ் கார்டனுக்கும் காவடி தூக்குவது..

அருள் said...

எழிலன் said...

// //சரி நீங்க உங்க கல்யாணத்தில் உங்களுக்கு தாலி எடுத்து கொடுத்தாரே உங்க நவீன புரோகிதர் (கவனிக்கவும் பார்ப்பான் அல்ல) எவ்வளவு மால் வெட்டினீர்கள். இல்லையெண்டு சொல்லி சமாளிக்காதீர்கள் எங்களுக்கு தெரியும் அவர் அமவுண்டு வாங்காமல் எந்த கல்யானதிற்க்கும் புரோகிதம் பார்ப்பதில்லையென்று.// //

உங்க புலனாய்வு திறமையை நினைச்சா புல்லரிக்குது.

என்ன பண்றது, எல்லாத்தையும் பேச வந்த பின்னால் இதையும் சொல்லிவிடுகிறேன்.

என்னுடைய திருமணச்செலவில் கணிசமான பணத்தைக் கொடுத்தவரே அவர்தான்.

அருள் said...

\\இவரை விட அவர் உசந்தவர் என்ப்தினாலா! //

1980 இல் அவர் வன்னியர் சங்கத்தை தொடங்கும் முன் எங்கள் நிலை என்ன? இப்போது வந்திருக்கும் மாற்றம் என்ன? என்பது யாரேனும் சில வன்னியர்களிடம் கேட்டால் உங்களுக்கு விடை கிடைக்கும்.

தெய்வம் என்று ஒன்று இருக்கும் என்று நம்பினால் - வன்னியர்களின் தெய்வம் மருத்துவர் அய்யா தான்.

Anonymous said...

அப்போ பிச்சை எடுத்தது நீ தானா அருள்? அடுத்தவனை பிச்சைக்காரன்னு சொல்லுற?

ஆனா உன் திறமையை பாராட்டணும்.

Anonymous said...

//தெய்வம் என்று ஒன்று இருக்கும் என்று நம்பினால் - வன்னியர்களின் தெய்வம் மருத்துவர் அய்யா தான்.//

பண்ருட்டி ராமசந்திரனுக்குமா?

வஜ்ரா said...

யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று உங்கள் திருமணத்தைத் உங்கள் நம்பிக்கைக்கு ஏற்றார் போல் நடத்தியிருக்கிறீர்கள் அருள்.

உங்கள் கொள்கைகளுடன் எனக்கு மிகப்பெரிய கருத்துவேறுபாடு இருப்பினும் உங்கள் நேர்மையை நான் பாராட்டியே ஆகவேண்டும். பாராட்டுக்கள் அருள்.

நிற்க, ராஜன் என்பவர் பேசிய பேச்சுக்கு இங்கு அவருக்காகப் பரிந்து பேசும் பலருக்கு விழும் வசவுகள் எல்லாம் ஜுஜ்ஜுப்பி ஒண்ணுமே இல்லை.

ராஜன் செய்தது பச்சை துரோகம். அதுவும் பகுத்தறிவுக்கும் பெரியாருக்கும். அதை மறுக்கிறீர்களா அருள் ?

dondu(#11168674346665545885) said...

//ராஜன் செய்தது பச்சை துரோகம். அதுவும் பகுத்தறிவுக்கும் பெரியாருக்கும். அதை மறுக்கிறீர்களா அருள்?//
ராஜனோ வால் பையனோ தங்களை எப்போதுமே ஈவேராமசாமி நாயக்கரை பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக் கொண்டதில்லை.

மற்றப்படி ராஜன் மந்திரம் சொன்னாரோ இல்லையோ, அம்மந்திரங்கள் ஒலிக்க திருமணம் நடந்தது ஆண்டவன் கட்டளையாகவே படுகிறது.

பெரியவர்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்த ராஜன், அவருக்கு அதற்காக ஊக்கமளித்த வால்பையன் மற்றும் கும்மி பாராட்டுக்குரியவர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//ஊக்கமளித்த வால்பையன் மற்றும் கும்மி பாராட்டுக்குரியவர்கள்.//

விட்டா பாப்பானுக்கு விளக்கு புடிச்சோம்னு சொல்விங்க போலயே!
விளக்கமா சொல்லிட்டேன், நாங்க சமாதானம் ஆனது ரேவதியின் அப்பாவுக்காக தான்!

NO said...

// ராஜனோ வால் பையனோ தங்களை எப்போதுமே ஈவேராமசாமி நாயக்கரை பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக் கொண்டதில்லை//
உண்மை.
ஆனால் பிரச்சனை ஈ வே ரா பற்றியது அல்ல. மதம், கடவுள், நம்பிக்கை, சடங்குகள் போன்றவையை தாறுமாறாக, நாகரீகமில்லாமல் தாக்கிவிட்டு
இப்பொழுது அவரே அதை செய்வதுதான் தமாஷு (இதை பிரச்சனை என்று சொல்லவில்லை, ஏனென்றால் அது அவர் அவர் விருப்பம்)!

//மற்றப்படி ராஜன் மந்திரம் சொன்னாரோ இல்லையோ, அம்மந்திரங்கள் ஒலிக்க திருமணம் நடந்தது ஆண்டவன் கட்டளையாகவே படுகிறது//
:-)))))

//பெரியவர்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்த ராஜன், அவருக்கு அதற்காக ஊக்கமளித்த வால்பையன் மற்றும் கும்மி பாராட்டுக்குரியவர்கள்//
நன்பெண்டா.............

dondu(#11168674346665545885) said...

//நாங்க சமாதானம் ஆனது ரேவதியின் அப்பாவுக்காக தான்!//
நானும் அதை சொல்லித்தானே உங்களை பாராட்டினேன்.

நண்பேண்டா!!!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ரேவதியின் அப்பாவுக்காக சமாதானம்?

அப்போ ராஜன் செய்தது தப்பு தானே?

அருள் said...

வஜ்ராவுக்கு பதில் 1:

வஜ்ரா said...

// //ராஜன் என்பவர் பேசிய பேச்சுக்கு இங்கு அவருக்காகப் பரிந்து பேசும் பலருக்கு விழும் வசவுகள் எல்லாம் ஜுஜ்ஜுப்பி ஒண்ணுமே இல்லை. ராஜன் செய்தது பச்சை துரோகம். அதுவும் பகுத்தறிவுக்கும் பெரியாருக்கும். அதை மறுக்கிறீர்களா அருள் ?// //

நல்ல கேள்வி. நான் திரு. ராஜனுக்காக பேசுவதாக நினைக்கவில்லை. அது என் வேலையும் அல்ல. யதார்த்தைப் பேச முற்பட்டேன். அவ்வளவே.

முதலில், "ராஜன் துரோகம் செய்தார்" என்றால் யாருக்கு துரோகம் செய்தார்? "துரோகம் என்றால் அது நம்பிக்கைக்கும் நலனுக்கும் எதிராக செய்யும் செயல்" என்கிறது க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி. இங்கு பலரும் கூரும் வசவுகளைப் பார்க்கும்போது "அவர் அவரது நம்பிக்கைக்கே துரோகம் செய்தார்" என்றுதான் எடுத்துக்கொள்ளலாம்.

மற்றபடி அவர் பெரியாரை பின்பற்றுகிறவரா என்பதெல்லாம் தெரியவில்லை. பெரியாரின் கருத்துக்களில் சிலவற்றை ஏற்பதும் சிலவற்றை ஏற்காமல் போவதும் தமிழ்நாட்டில் பலரும் செய்கிற செயல்தான்.

என்னுடைய கருத்து "திரு.ராஜன் எதையும் முரணாக செய்துவிடவில்லை, அவர் தனது கொள்கை எதையும் கைவிட்டுவிட்டார் என்றும் கூற முடியாது" என்பதே. ஒரு திருமண நிகழ்வில் மாப்பிள்ளை வீட்டார் சொல்வது எல்லாவற்றையும் பெண் வீட்டார் கேட்டுதான் ஆக வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இந்நிலையில் பெண் வீட்டாருக்காக மாப்பிள்ளை விட்டுக்கொடுக்காமல் வேறு என்னதான் செய்வது? என்னைப் பொறுத்தவரை பெண்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அவர் தனது கருத்தை விளக்கிக் கூறி பெண் வீட்டாரை ஏற்க செய்ய வேண்டும் என்று சிலர் கூறலாம். ஏன் அதையே பெண் வீட்டார் மணமகனுக்கு அவர்களது நிலையை விளக்கிக்கூறி - மாப்பிள்ளை விட்டுக்கொடுக்கக் கூடாதா? எல்லா இடங்களிலும் ஆண்கள் வைத்ததுதான் சட்டமா?

இதுவே பெண் ஒரு பகுத்தறிவு வாதியாக இருந்து - மாப்பிள்ளைவீட்டார் பக்திமான்களாக இருந்தால் - இதுபோலெல்லாம் கேள்வி எழாது என்றே நினைக்கிறேன். எல்லோரும் 'மாப்பிள்ளை வீட்டார்தான் அய்யரைக் கூப்பிட்டார்கள், பாவம் அந்தப் பெண் என்னசெய்யும்?' என்று பச்சாதாபப்பட்டு விட்டுவிடுவார்கள். (அதாவது, ஆணாதிக்கம் வென்றதில் மகிழ்ச்சிதான்).

ஒற்றக்கொள்கை, ஒரே சிந்தனை என்று 100 % ஒரேமாதிரி உலகில் இரண்டுபேர் இல்லவே இல்லை. எனவே, திருமண வாழ்வில் விட்டுக்கொடுப்பது தவிற்கவே முடியாதது. கணவருக்கு கடவுள் பிடிக்கவில்லை என்பதால் மனைவி கோவிலுக்கு போகக்கூடாது - என்றெல்லாம் சொன்னால், அது மனித உரிமைக்கு எதிரானதாகிவிடும்.

ஆக, இந்த விவாதத்தில் நான் கூறவருவது இதுதான் - திரு.ராஜனுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. திருமண நிகழ்வில் பெண்வீட்டார் அவர்களுடைய நிலைபாட்டை முன்வக்கிறார்கள். இருபுறமும் சரிசமம் என்று வரும்போது - நீயா, நானா என்கிற நிலையில் - சரி உங்களது விருப்பமே நடக்கட்டும் என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? இதில் எங்கே கொள்கை பறிபோகிறது? எல்லா இடத்திலும் ஆண்கள்தான் வெற்றி பெறவேண்டுமா?

மெய்யாகப் பார்த்தால் - அய்யர், அவர் சொல்லும் மந்திரம், அதனால் ஏற்படும் கோடானகோடி பலன் - இதையெல்லாம் திரு. ராஜன் மனப்பூர்வமாக நம்பி, கடவுளுக்கு பயந்து இதைச் செய்திருந்தால் மட்டுமே, அவர் கொள்கைக்கு மாறாக நடந்ததாகக் கூறமுடியும். அவர் அப்படி செய்ததாகத் தெரியவில்லை.

இராவணனிடமிருந்து மீண்டுவந்த சீதை மனதால் கெடவில்லை என்று கம்பர் சொல்லவில்லையா? அதுபோலத்தான் இதுவும்.

நூல்பையன் said...

//இதுவே பெண் ஒரு பகுத்தறிவு வாதியாக இருந்து - மாப்பிள்ளைவீட்டார் பக்திமான்களாக இருந்தால் - இதுபோலெல்லாம் கேள்வி எழாது என்றே நினைக்கிறேன்.//

அப்படியெல்லாம் இல்லை. அந்தப் பெண் ரிவால்வர் ரீட்டா கணக்காக ராஜன் பாணியில் அனைவரையும் திட்டியிருந்தால் இதை விட அதிகமாக கேள்வி எழுந்திருக்கும். ஏன் கல்யாணம் பண்ணினோம்னு யோசிக்கிற மாதிரி

வால்பையன் said...

//அப்போ ராஜன் செய்தது தப்பு தானே? //

நீங்கெல்லாம் மனுசன்னு வந்து பதில் சொல்லிகிட்டு இருக்கேன் பாரு, நான் செய்யுறது தான் தப்பு!

ராஜன் எதுவும் செய்யவில்லை என்பது எப்படியா தப்பாகும்!, ராஜனா அய்யர் புக் பண்ணாரு!

அருள் said...

வஜ்ராவுக்கு பதில் 2:

வஜ்ரா said...

// //ராஜன் என்பவர் பேசிய பேச்சுக்கு இங்கு அவருக்காகப் பரிந்து பேசும் பலருக்கு விழும் வசவுகள் எல்லாம் ஜுஜ்ஜுப்பி ஒண்ணுமே இல்லை.// //

திரு. ராஜன் பேசிய பேச்சுக்கு பதிலாகத் தான் எல்லோரும் பேசுகிறார்கள் என்கிறீர்கள். இது நியாயமா? என்று நீங்களே கூறுங்கள். அப்போது எதையும் கருத்தாகப் பார்க்காமல் தனிப்பட்ட பகையாக எடுத்துக்கொள்வதுதான் நல்ல பண்பாடா?

அப்புறம் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம், ஆரோக்கியமான விவாதம் என்பதற்கெல்லாம் என்ன அர்த்தம்? எந்த ஒரு விஷயத்திலும் அவரவர் கருத்தை சொல்லத்தான் செய்வார்கள். ஜனநாயக நாட்டில் இதெல்லாம் நடக்கும்தான். (எதற்குமே எல்லை உண்டு - ஆனால் அந்த எல்லை எது என்பது அவரவரைப் பொறுத்தது). அந்தந்த கருத்தை அதற்கேற்ப விமர்சிப்பதே நல்லது.

உதாரணமாக - திரு. ராஜன் சில பின்னூட்டங்களை எனக்கு எதிராகக் கூறினார். அவை இதோ.

பா.ம.க மற்றும் மருத்துவர் அய்யா அவர்கள் குறித்து திரு. ராஜனின் விமர்சனங்கள்:

""(பா.ம.க) அவுனுகள மாதிரி ஒரு மானங்கெட்ட லெட்டர் பேடு கட்ச்சிய பாக்க முடியாது! சோமாரிக்கி சொம்பு தூக்கவும், கேப்மாரிக்கு கேரியர் தூக்கவுமே ஆவார்கள்""

""மருத்துவர் ஜாதின்னு சொன்னாலே, ஜாதி வெறியன்னு சொல்றாங்களே.// நீங்க வேணா ஒரு ச்சேஞ்சுக்கு மயிராண்டி ஜாதின்னு சொல்லிப் பாருங்களேன்!""

""உங்க மருத்துவர் அய்யா ஷகீலாவும் இல்ல அதப் பாத்து கண்ண மூட நான் குட்டி பாப்பாவுமில்ல! நல்லா தொறந்து தான் வெச்சுப்பேன் கண்ண! ஆமா மரவெட்டி ராமதாசதான் இப்ப மருத்துவராக்கிட்டீங்களா?""

விரிவாகக் காண: http://dondu.blogspot.com/2010/05/blog-post_1924.html

திரு. ராஜனின் இந்த கருத்துக்களால் எனக்கு வருத்தம்தான். ஆனால், நான் என்னால் முடிந்த பதிலை சொல்லி விட்டுவிடத்தான் வேண்டும். கருத்துக்கு கருத்து. வேறு என்ன செய்வது?

ஆனால், அதை மனதில் வைத்து இன்று வேறொரு விவாதத்தில் பேசுவது ஆரோக்கியமான செயல் அல்ல. அவரவர் கருத்தைக் கூறலாம். பழைய பகையை வைத்து பேசக்கூடாது.

Anonymous said...

தேடி சென்று வால்பையன் வாங்கிய ஆப்பு, பார்வையிட

http://athikkadayan.blogspot.com/2010/10/blog-post_26.html

வஜ்ரா said...
This comment has been removed by the author.
வஜ்ரா said...

//
திரு. ராஜன் பேசிய பேச்சுக்கு பதிலாகத் தான் எல்லோரும் பேசுகிறார்கள் என்கிறீர்கள். இது நியாயமா? என்று நீங்களே கூறுங்கள். அப்போது எதையும் கருத்தாகப் பார்க்காமல் தனிப்பட்ட பகையாக எடுத்துக்கொள்வதுதான் நல்ல பண்பாடா?
//


ராஜனும் அப்படிச் செய்யவில்லை. கருத்தை கருத்தாகப் பார்க்காமல் கண்டபடி பேசியது அவர் தான்.

//
அப்புறம் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம், ஆரோக்கியமான விவாதம் என்பதற்கெல்லாம் என்ன அர்த்தம்? எந்த ஒரு விஷயத்திலும் அவரவர் கருத்தை சொல்லத்தான் செய்வார்கள். ஜனநாயக நாட்டில் இதெல்லாம் நடக்கும்தான். (எதற்குமே எல்லை உண்டு - ஆனால் அந்த எல்லை எது என்பது அவரவரைப் பொறுத்தது). அந்தந்த கருத்தை அதற்கேற்ப விமர்சிப்பதே நல்லது.
//

பேச்சுரிமை கருத்துரிமை எல்லாம் இந்து மதத்தை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் தானா ? இந்து மதத்தை கடைபிடிப்பவர்கள், பார்ப்பானரை புரோகிதம் செய்ய அழைப்பவர்கள் என்று எல்லோருக்கும் உண்டு தானே ?, ராஜன் போன்றவர்கள் எந்த உரிமையில் தாறுமாறாகப் பேசித் திரிகிறாரோ அதே உரிமை மற்றவருக்கும் உண்டு என்பது தெரிந்துகொள்ளுங்கள். அதை அவர்கள் பயன்படுத்தினால் பண்பாடு கலாச்சாரம் பற்றி பேசவந்துவிடுகிறார்கள்.

பண்பாடு எல்லாம் நீங்கள் எப்படி மற்றவரிடம் நடந்துகொள்கிறீர்களோ அதைப்பொருத்தது. கண்டபடி பேசினால் திருப்பிப் பேசுவார்கள் அதை வாங்கிக்கொள்ளவும் தைரியம் இருக்கணும்.

அருவாள் சண்டை என்று ராஜன் ஒரு பார்ப்பானை வெட்ட வருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், எதோ காரணத்தால் அந்த அருவாள் கீழே விழ அவர் வெட்ட வந்த பார்ப்பான் அதை எடுத்து ராஜனை வெட்டினால் அருவாள் வெட்டாதா ? யார் வெட்டினாலும் அருவாள் வெட்டும் தானே ? இவ்வளவு நாள் ராஜன் வெட்டினார், இப்பொழுது பதிலுக்கு சில சண்டைக்கார பார்ப்பான்கள் வெட்டுகிறார்கள்.

பண்பாடு பற்றிப் பேச நீங்கள் அருவாள் தூக்கிக்கொண்டு திரியும் ராஜனிடம் இருந்து ஆரம்பிக்கலாமே. அல்லது இங்கு சப்பைக்கட்டித் திரியும் சில வாலறுந்த பசங்களிடம் இருந்தும் ஆரம்பிக்கலாமே.

//
இராவணனிடமிருந்து மீண்டுவந்த சீதை மனதால் கெடவில்லை என்று கம்பர் சொல்லவில்லையா? அதுபோலத்தான் இதுவும்.
//

என்ன இது, காலக்கொடுமையா இல்லை கலிகாலமா ? நீங்கள் ராமாயணம் பேசுகிறீர்களா...ராஜன் செஞ்ச காமடிக்கு பதில் காமடியா ?

Anonymous said...

//வால்பையன் said...


வீட்ல இருப்பாரு, போய் விளக்கு புடிச்சிகிட்டே கேட்டுப்பாரேன்!//

ஏய் அசிங்கம் பிடிச்ச சனியனே உன் வாயிலே நல்லதே வராதா? எப்ப பார்த்தாலும் அசிங்கமா பேசிகிட்டு. தூ........ இதெல்லாம் ஒரு பொழப்பு.

யதார்த்தவாதி said...

சில முற்போக்குவாதிகள் எனக்கூறிக் கொள்வோர் யாதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் மற்றவர்களை புண்படுத்துவதுண்டு. இன்று தனக்கு நேர்ந்த நிர்பந்தம் மற்றையவர்களுக்கும் நேர்ந்திருக்கும் என்பதை ராஜன் புரிந்துகொண்டிருப்பார். இது அவரை மேலும் புடம்போடும்.

ஆனால் எனக்கு ஒரு வருத்தம், ராஜன் இன்று விரும்பாது ஏற்றுக்கொண்ட இந்த சடங்குமுறைகளும் அதனால் அவருக்கு ஏற்பட்ட கேலிகளும் அவரது மண வாழ்க்கையை பாதித்துவிடக்கூடாது. ஆகவே இந்த விவாதத்தை நிறுத்திக்கொள்வோம்.

Anonymous said...

//ராஜனா அய்யர் புக் பண்ணாரு!// அய்யயோ இது வேறயா? அவனா இவன்? கருமம் கருமம். வால்பையன் கூல் பிளிஸ். சொம்பு ரொம்ப நசுங்கிடுச்சு போல. டு டேஸ் ரெஸ்ட் எடுத்தா பகவான் அருளால எல்லாம் சரியாய்டும்.

Anonymous said...

//சப்பைக்கட்டித் திரியும் சில வாலறுந்த பசங்களிடம் இருந்தும் ஆரம்பிக்கலாமே//

ithu sari.

Anonymous said...

\\வீட்ல இருப்பாரு, போய் விளக்கு புடிச்சிகிட்டே கேட்டுப்பாரேன்!//

வால்பையன், உங்கள் பதிவுகளை உடன்பாடில்லாவிட்டாலும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். நிதானமாக பதில் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு, இப்படி நிதானமிழந்தா பதில் சொல்ல வேண்டும்? அதுவும் உங்களின் உற்ற முன்னாள் பகுத்தறிவுவாதியான ராஜனையும், அவரது மனைவியையும் இம்மாதிரியா கேவலப் படுத்துவது? பகுத்தறிவு என்ற பெயரில் நீங்கள் இருவரும் செய்த அட்டூழியங்களுக்கு அளவேயில்லாமல் போய், இப்போது ராஜன் பிள்ளையாரிடம் மண்டியிட்டும், ஐயரின் மந்திரங்களைக் காதில் கேட்டும் முடிந்துள்ளது. இனிமேல் அவர் முன்போல் பகுத்தறிவு வாந்தி எடுக்க முடியாது.

பார்ப்பன மந்திரத்தை பெண்ணின் தந்தைக்காக விட்டுக் கொடு என்று அறிவுரை சொன்ன நீங்களும் இனி கொஞ்ச நாளைக்கு பகுத்தறிவு சொம்பை ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம் கொடுப்பவனிடம் கொடுத்துவிட்டு கிடைக்கும் பணத்தில் குவார்ட்டர் அடித்து விட்டுக் குப்புற விழுந்து பகுத்தறிவு வாந்தியெடுக்காமல் பழம் வாங்கி சாப்பிடவும்.

வால்பையன் said...

//பார்ப்பன மந்திரத்தை பெண்ணின் தந்தைக்காக விட்டுக் கொடு என்று அறிவுரை சொன்ன நீங்களும் இனி கொஞ்ச நாளைக்கு பகுத்தறிவு சொம்பை ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம் கொடுப்பவனிடம் கொடுத்துவிட்டு கிடைக்கும் பணத்தில் குவார்ட்டர் அடித்து விட்டுக் குப்புற விழுந்து பகுத்தறிவு வாந்தியெடுக்காமல் பழம் வாங்கி சாப்பிடவும்.//


நீர் எல்லா ஓட்டையையும் சாத்திட்டு வேலையை பாரும், எங்களுக்கு தெரியும் என்ன செய்யனும்னு, பிச்சை எடுக்க போக நேரமாகலையா, அதுக்கு போயா மொதல்ல.

Anonymous said...

வால்ப்பன்,

இந்த முறை ரொம்ப அடி வாங்கிட்டேயேப்பா !! எத்தனை நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிப்பே. கொஞ்சம் வாய்விட்டு அழுதுடு.... எல்லாம் கடந்து போகும் ......

நான் உன் நண்பேண்டா !!!

ஏனப்பன்

வால்பையன் said...

//இந்த முறை ரொம்ப அடி வாங்கிட்டேயேப்பா !! எத்தனை நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிப்பே. கொஞ்சம் வாய்விட்டு அழுதுடு.... எல்லாம் கடந்து போகும் ......//

நான் எதுக்கு நண்பா அழனும், அழவேண்டியது பாப்பர பன்னாடைகள் தான்!, இன்னும் இவன் நின்னு அடிச்சிகிட்டு இருக்கானேன்னு பொச்செல்லாம் எரியுதாமாம்!
அவர்களுக்கு சமாதானம் சொல்லவும்!

நண்பேண்டான்னு சும்மா வாயில சொல்ல நான் என்ன டோண்டா!

Anonymous said...

வால்பையா உன்னுடைய வாய் சவடால் எல்லாம் இங்க மட்டும் தான், எங்கே அந்த பாய் பசங்க கிட்ட போ பாப்போம்...ரிவீட் வச்சு அனுப்புவானுங்க....அங்கதான் பாத்தோமே...

Anonymous said...

\வீட்ல இருப்பாரு, போய் விளக்கு புடிச்சிகிட்டே கேட்டுப்பாரேன்!//

ஏம்பா இந்த மாதிரி ஒரு நண்பனை பத்தி பேசுவதற்கே நல்லோர் கூனிக் குறுகிப் போவர், நீ அதை தட்டச்சு வேற செய்திருக்கே!

அடக்கம் அமரருள் உய்க்கும். வாய்க்கு வந்தபடி தடித்தணமா பேசினா இப்படி தான் யாரை என்ன பேசுறோம்னே தெரியாம பேச வைக்கும்.

பாவம் ராஜன் & கோ

கொஞ்சம் அடங்கு! சொம்பை கழுவி உள்ள எடுத்து வை. அடக்கமா இருக்க எளிய வழி: யாரேனும் ஒரு எளிய மாணவனுக்கு படிப்புக்கு உதவி செய். சும்மா கண்டதை எழுதிக் கொட்றதை விட அது நல்லது

அருள் said...

வஜ்ரா said...

// //என்ன இது, காலக்கொடுமையா இல்லை கலிகாலமா ? நீங்கள் ராமாயணம் பேசுகிறீர்களா...ராஜன் செஞ்ச காமடிக்கு பதில் காமடியா // //

காமடி எதுவும் இல்லை. இராமாயணத்தில் சீதை சுமார் ஒரு ஆண்டுகாலம் இலங்கையில் இராவணனுடன் இருந்ததாகக் கூறுகிறார்கள்.

அந்தக் காலகட்டத்தில் சீதை கற்போடுதான் இருந்ததாக வால்மீகி கூறுகிறார். ஆனால், கம்பர் அப்படி கூறவில்லை. சீதை மனதால் கெடவில்லை என்றுதான் கூறுகிறார். (அதாவது, சீதை உடலால் கெட்டுப்போகவில்லை என்று கம்பர் உறுதியாக நம்பவில்லை - அதை இராமனும் நம்பவில்லை என்பது வேறு செய்தி).

ஒருபெண் மீது ஆசைப்பட்டு தூக்கிப்போன ஒருவர் ஒரு ஆண்டுகாலமாக அவளை ஒன்றும் செய்யவில்லை என்பதை நம்புகிறீகள். (அதற்கு, விருப்பமில்லாதவர் தொட்டால் அவர் அழிந்து போகச்செய்ய்ம் சக்தி சீதைக்கு இருந்தது என்கிற துணைக்கதை வேறு)

ஆனால், ஒரு திருமணத்தில் அய்யரின் மந்திரத்தை நம்பாத மணமகன் வெறுமனே அதனைக் காதால் கேட்டதற்காக - அவர் கொள்கை காலாவதி ஆகிவிட்டது என்று கூப்பாடு போடுகிறீர்கள்.

சீதையின் கற்புக்கு ஒரு நீதி, திரு. ராஜனின் கொள்கைக்கு வேறொரு நீதியா?

(சீதை கெடவில்லை என்பதை ராமனே நம்பாமல் தீயில் இறங்க சொன்னான் - அதற்கு கற்புள்ளவள் தீயில் இறங்கினால் தீயும் தீண்டாது என்கிற விளக்கம் வேறு - இன்றும் இதை பின்பற்றினால் நாட்டில் எல்லா பெண்களும் செத்துப்போக வேண்டியதுதான் - காரணம் கற்பு அல்ல. தீ எல்லோரையும் கொல்லும் என்பதுதான்)

வால்பையன் said...

//வால்பையா உன்னுடைய வாய் சவடால் எல்லாம் இங்க மட்டும் தான், எங்கே அந்த பாய் பசங்க கிட்ட போ பாப்போம்...ரிவீட் வச்சு அனுப்புவானுங்க....அங்கதான் பாத்தோமே... //


பாப்பான் புத்தி பாவாடைகுள்ளன்னு ஒருத்தர் சொன்னாரு, நான் அப்ப நம்பல.

Anonymous said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்.

பாய், பசங்க என்றாலே பையன் என்று தானே அர்த்தம். இதென்ன புது ஆக்சிமோரானா ?

இல்ல லேடிபாய்ஸ் என்பது மாதிரியா ?

சொல்லுக சொல்லில் பிழையின்றி.

ஏனப்பன்.

வால்பையன் said...

//கொஞ்சம் அடங்கு! சொம்பை கழுவி உள்ள எடுத்து வை. அடக்கமா இருக்க எளிய வழி: யாரேனும் ஒரு எளிய மாணவனுக்கு படிப்புக்கு உதவி செய். சும்மா கண்டதை எழுதிக் கொட்றதை விட அது நல்லது //

எங்களுக்கு தெரியும், நீங்கள் மூடிட்டு போங்கள் அனானி!
சொல்றதை அடையாளத்தோடு சொல்ல முடியல உனக்கு அட்வைஸ் ஒரு கேடாக்கும், பிச்சை எடுத்து பிழைக்கிற பாப்பானுங்க கிட்ட சொல்லு உன் அறிவுரைகளை.

பொன்கார்த்திக் said...

ராஜனுக்கும் ரேவதிக்கும் வாழ்துக்கள்!

இந்த விவாதம் இந்த நேரத்தில் தேவையா?

ராஜனுடைய நிலையில் இருந்து சிறிது யோசித்து பாருங்கள்..

சரி ராஜனை விடுங்கள் ரேவதி நிலையில் இருந்து?

இது என்ன கருத்து விவாதமா? சண்டையா? பழிக்கு பழியா?

ஏன் இந்த விவாதத்தை ராஜனுடைய அடுத்த பதிவில் வைத்துக்கொள்ள கூடாது?

டோண்டு எல்லாம் உங்களாலே??

ராஜன் இப்போது இங்கு இல்லை அல்லவா? அவர் முன் அவர் தளத்தில் கேளுங்கள். அது மட்டுமே ஆரோக்கியமான கருத்து விவாதம்.

வால்பையன் said...

//டோண்டு எல்லாம் உங்களாலே??//

என்ன இப்படி சொல்லிட்டிங்க, பொன் கார்த்திக்

டோண்டு ரொம்ப நல்லவருங்க, அவர்கிட்ட பாப்பான் வாடையே அடிக்காது, பார்பனீய புத்தியே கிடையாது. பொழுது போகலைன்னா மட்டும் அதையெல்லாம் எடுத்து பாக்கெட்டில் வச்சிக்குவார், மத்த நேரத்தில் கோமணத்தில் இருக்கும்!

Anonymous said...

//எங்களுக்கு தெரியும், நீங்கள் மூடிட்டு போங்கள் அனானி!//

கோச்சுக்காதடா குழந்தே ! அருள் சார் எவ்வளவு மாறுபட்ட கருத்த சொன்னாலும் அடக்கமா சொல்றாரில்லே! இது வரைக்கும் ஒரு கெட்ட வார்த்தை கூட சொன்னதில்ல...

நீ இப்படி நாரடிக்கிறதாலே தானே கண்ணு (கொஞ்சம் கொங்கு பாஷை) அட்வைஸ் பண்ணவேண்டிருக்கு. நீ ரவுஸ் பண்ணாமா நீட்டா எழுதுப்பா.

நீ அறியாமலேயே கேவலமா எழுத வச்சிடுச்சிடுச்சில்லையா ! உன் துடுக்கு புத்தி ! உன் மனது கிடந்து இப்படி எழுதிட்டமேன்னு துடிப்பது எனக்கு புரியுது.

இப்ப வருத்தப்படறதை விட
டோண்டுசாரிடம் சொல்லி அதை அழிக்க சொல்லிடு! அது எதுக்கு அசிங்கமா ! எப்படி இருந்தாலும் அவர் உன் நண்பேன் தானேப்பா!

dondu(#11168674346665545885) said...

@பொன் கார்த்திக்
ராஜன் பெரியவர்களது விருப்பத்துக்கு பணிந்து போனது எனக்கு பிடித்தது. அவ்வளவே. அவர் வயதில் மிகவும் சிறியவர். மெதுவாக யதார்த்தங்களை புரிந்து கொள்வார். அவருக்கும் அவர் மனைவிக்கும் என் ஆசிகள்.

பதிவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நான் அந்த கமெண்டுகளை மாடரேட் செய்து தடுத்திருக்க வேண்டும் என கருத்து கூறியுள்ளார். அதை நான் ஏற்பதற்கில்லை. தனது நம்பிக்கைகளை, நாத்திகக் கொள்கைகளை இவ்வளவு வெளிப்படையாக, முக தாட்சண்யம் பார்க்காமல் பல தளங்களில் பேசி வருபவர், தானும் சமயம் வந்தால் அம்மாதிரி சங்கடமான கேள்விகளை எதிர்க்கொள்ள வேண்டும்தானே. அவர்கள் என்ன சிறு குழந்தைகளா? அதை அவரோ வால்பையனோ என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதே நிஜம்.

இப்போது வால்பையன் கூறுவதைப் பார்த்தால் அவர் என் மேல் கோபமாக இருப்பதுபோல படுகிறது. என்ன செய்வது முதலில் வினை புரிந்தால் எதிர்வினைகளைத் தவிர்ர்கவியலாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

அருள்,
ராமாயணத்தை பொருத்தவரை உங்க அளவுக்கு எனக்குத் தெரியாது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். என் ராமாயண அறிவு எல்லாம் ராமானந்த் சாகர் வரை தான்.

ஆனால், ராவணன் எந்தப்பெண்ணையும் அவளது விருப்பமில்லாமல் தொட்டால் அவன் தலை சிதறிவிடும் என்று சாபம் வாங்கியிருப்பதாக வரும். போகட்டும் விடுங்கள்.

பிரச்சனை ராமனைப் பற்றி அல்ல ராஜனைப் பற்றி.

வால்பையன் said...

//வால்பையன் கூறுவதைப் பார்த்தால் அவர் என் மேல் கோபமாக இருப்பதுபோல படுகிறது. என்ன செய்வது முதலில் வினை புரிந்தால் எதிர்வினைகளைத் தவிர்ர்கவியலாது.//

அப்படியே செய்வினை வைக்கிறவர் மாதிரியே பேசுறிங்களே, கலக்குங்க, இன்னைக்கு உங்க காட்ல தான் மழை!

«Oldest ‹Older   1 – 200 of 251   Newer› Newest»
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது