மே 2005-லிருந்து ஆரம்பித்த போலி விவகாரம் தற்போது தீவிர நிலையடைந்துள்ளது. இது பற்றி நான் வெவ்வேறு நேரங்களில் போட்ட பதிவுகள் ஒரு லேபலின் கீழ் உள்ளன. தேவையானவர்கள் அவற்றைப் பார்த்து கொள்ளலாம்.
நண்பர் சர்வேசன் பதிவில் பல பின்னூட்டங்கள். அவற்றில் சிலவற்றில் போலி பிரச்சினைக்கு போலி மட்டும் காரணமல்ல, டோண்டுவும்தான் என கூறப்பட்டுள்ளது. ஆகவே இப்பதிவு.
முதலில் ஒன்றை கூறி விடுகிறேன். மற்றவர்கள் விஷயத்தில் அந்த மலேஷியப் பதிவர் எப்படியோ தெரியாது. ஆனால் எனது விஷயத்தில் நேரடியாக தாக்குதல்தான். அதுவும் என் பெயரில் வலைப்பூ தயாரித்து நான் கருத்து கூறுவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினான். அதனாலேயே அவன் போலி டோண்டு என பெயர் பெற்றான். பலர் அதை நம்பவும் செய்தனர் (உதாரணம் பதிவர் வேதா, டி.பி.ஆர். ஜோசஃப் ஆகியோர்). அந்நிலையில் நான் வேறு விதமாக செயல்பட்டிருக்க முடியாது. அவன் தாக்கிய மற்ற பதிவர்கள் பதிவு போடுவதையே நிறுத்தினர். ஆனால் நான் அவாறு செய்ய மறுத்தேன். என்ன செய்வது எனது அடிப்படை குணமே அடாவடிக்கு பணிய மறுப்பதுதான். நல்ல எண்ணத்துடன் அறிவுரை கூறியவர்களை நான் குறை சொல்லவில்லை. அதே சமயம் எனக்கு சரி என்று பட்டதையும் செய்தேன். அதில் எந்த குழப்பமும் இல்லை.
"அவன் அப்படித்தான், நீதான் பணிந்து போக வேண்டும்" என கருத்துடையவர்களை பார்த்து எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது. தெருவில் இருவர் சண்டை போடுகிறார்கள். அவர்களில் ஒருவன் எங்கே சண்டை என அலைபவன், இன்னொருவன் தாக்கப்பட்டு தற்காத்து கொள்ள போராடுபவன். பலர் சண்டையை விலக்க வருவார்கள். முக்கால்வாசி சமயம் என்ன நடக்குமென்றால் எல்லோரும் இரண்டாமவனை மட்டும் பிடித்து கொள்ள அடாவடிக்காரன் அவனை இன்னும் நாலு குத்து விடுவான். நான் கூறுவது என்னவென்றால், முடிந்தால் இருவரையும் கட்டிப் பிடித்து நிறுத்து. இல்லாவிட்டால் வேடிக்கை பார். இம்மாதிரி ஒருவரை மட்டும் இழுத்து பிடிக்காதே என்பதே.
என்னை தாக்கிய அந்த மலேசிய பதிவர் எனக்கு பின்னூட்டம் இட்டதற்காக ஆண் பெண் பேதமின்றி எவ்வளவு எவ்வளவு குருட்டுத்தனமாக தாக்குகிறான் என்பதைத்தான் எல்லோரும் பார்க்கிறீர்களே. அதை தவிர்க்கவே பலர் பின்னூட்டம் இடவே தயங்கினர். எனது நண்பர்கள் மட்டும் பல பெயர்களில் வந்து பின்னூட்டம் இட்டனர். நாட்டாமை, அறவாழி அந்தணன், ராஜ் சந்திரா, வெங்கடேஷ் சர்மா, பஜ்ஜி, முனிவேலு, தங்கம்மா, நெப்போலியன் இன்னு மற்றும் பல பெயர்களில் வந்தனர்/வருகின்றனர். இப்போது அனானி ஆப்ஷனை போட்டு விட்டதால் அதற்கும் தேவையின்றி போய் விட்டது.
முரளி மனோஹர்? எனக்கு நானே நண்பன்தானே. அப்பெயரில் ஏதேனும் ஆபாச கருத்துகள் வந்தனவா? அதை தேடி தேடி அலுத்தனர் எதிரி முகாமினர். முரளி மனோஹர் என்பது புனைப்பெயரே. அதை வைத்ததற்காக என்னை தாக்குபவர்கள் கல்கி, அறிஞர் அண்ணா, ஸ்ரீவேணுகோபாலன் ஆகியோரையும் தாக்குவார்களா? அவர்கள் வரிசையில் சேர்ந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சியே.
எனது கருத்துகளில் ஒப்புதல் இல்லையெனில் சம்பந்தப்பட்ட பதிவுக்கு வந்து பின்னூட்டமிடுங்கள். அவ்வாறு செய்யாது தயங்குபவர்களில் பலர் போலிக்கு பயப்பட்டே அவ்வாறு செய்கின்றனர். இது அவர்தம் மனசாட்சிக்கு தெரியும். இப்போது நடப்பது யுத்தம். Stand up and be counted.
சர்வேசன், ஓசை செல்லா, அதியமான் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club – December Meet
-
Hi Sir, Hope you’re doing well. The First meet of ‘Manasa Book Club’ had a
wonderful response — we had 15 participants. Everyone was highly
enthusiastic an...
3 hours ago
