8/19/2007

யார் எதை எழுதுவது என்று யார் கூறுவது?

ஞாநி பாலியல் கல்வி பற்றி விகடனில் எழுதப் போகிறார் என்று செய்தி வந்தாலும் வந்தது, அவரவருக்கு கடுப்பு ஏறுகிறது.

"அரசியல் விமர்சனங்கள் எழுத பத்திரிகையாளர் ஞாநிக்குத் தகுதியுண்டு. பாலியல் சார்ந்த சிறுகதைகள், புதினங்கள் எழுதவும் தகுதியுண்டு. ஆனால், மருத்துவர்களாகிய பெற்றோர்களின் மகன் மகப்பேறு பார்த்தது எவ்விதம் பிழையோ அவ்விதமே பாலியல் கல்வி குறித்தத் தொடர் எழுதுதல் ஞாநிக்குப் பிழை என்பதை ஞாநியும் உணர வேண்டும். நாமும் உணர வேண்டும்" என்று திருவாய் மலர்கிறார் ஒரு பார்ப்பன எதிர்ப்பாளர். ஒரு பத்திரிகையில் என்ன வரவேண்டும் என்று தீர்மானம் செய்வது அப்பத்திரிகையின் ஆசிரியர். அந்த உரிமையில் நாம் தலையிடலாகாது என்று இவரிடம் கூறினால் என்ன ஆகும். தன் வலைப்பூவில் என்ன எழுதுவது என்பது தனது உரிமை என்று மட்டும் கூறுவார் அவ்வளவுதானே.

அதிருக்கட்டும். பள்ளியில் மிகச்சில வகுப்புகளே படித்து தன் அனுபவ அறிவை மட்டுமே வைத்து கொண்டு காலம் கழித்த பெரியார் அவர்கள் என்ன அடிப்படையில் தமிழ் சீர்த்திருத்த எழுத்துக்கள் கொண்டு வந்தார்? அதுவும் கொம்பு வைத்த லை, னை, ளை ஆகியவற்றுஇக்கு மாற்றாக. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் கூறவேண்டும். அதாவது அவர் பத்திரிகையின் அச்சுக்க்கூடத்தில் சம்பந்தப்பட்ட வார்ப்புருக்கள் தேய்ந்து போனதால் மட்டுமே அவர் அவசியத்துக்காக இவற்றைப் பயன்படுத்தினார். மற்றப்படி அவரே கைப்பட எழுதும்போது கொம்பு வைத்த எழுத்துக்களையே பயன்படுத்தினார். எனது பாயிண்ட் இதுதான். தமிழறிவு இல்லாது, அதுவும் எழுத்துக்களான மாத்திரைகள் போன்றவற்றின் அறிவு கிஞ்சித்தும் இல்லாத ஒரு பெரியார் செய்தபோது புகழ்ந்தீர்கள். ஆனால் ஞாநி மட்டும் தவறிழைத்தார். எப்படி ஐயா இந்த மெய்சிலிர்க்கும் பகுத்தறிவுடன் பேசுகிறீர்கள்?

மதன் அவர்களின் சரித்திரத் தொடர் பற்றியும் கண்டனங்கள். மதன் செய்த ஒரே குற்றம் அவர் பார்ப்பனராக இருப்பதுதான்,அப்படித்தானே. ஆண் பெண் பாலுறவுகளைப் பற்றி எழுத பலருக்கு தகுதி உண்டு. நானும் எழுதலாம் நீங்களும் எழுதலாம். ஏனெனில் அனுபவ அறிவு என்று ஒன்று உண்டு.

இந்த இடத்தில் சிறு திசை மாற்றம். ஹாரி பாட்டரின் கடைசி புத்தகம் பற்றி proz.com என்னும் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் ஒரு தனி மன்றம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் மட்டுறுத்தனர் நான்தான். அது அப்புத்தகத்தை படித்தவர்களுக்கு மட்டுமே. அதில் ஒரு மொழிபெயர்ப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். "Now I have a hard time to think about what to do with my son, who is 11 this November, because the book is certainly not for his age, with all this snogging, sexual experience and so on taking a good half of it. I know the characters have grown adult, but what on earth should I tell to my 11-year-old kid who is desperate to know any news about Harry? That Harry was f***ng with Ginny? Mind you..."

அவருக்கு நான் அளித்த பதில்: "Recently in the year 1957 I was 11 year old myself and I vividly remember what we used to talk among ourselves and the colorful languages employed by us, of course in Tamil; but about snogging, we understood".

இதுதான் பிரச்சினை. பாலியல் சம்பந்தமாக பேசவே பலர் தயங்குகிறார்கள். ஞாநி பல இடங்களிலிருந்து விஷயங்கள் சேகரித்து தொகுத்தளிக்கிறார். இதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? இஷ்டம் இருந்தால் படியுங்கள் இல்லாவிட்டால் தினகரனுடன் உங்கள் வாசிப்பை நிறுத்தி கொள்ளுங்கள். யாருக்கு நஷ்டம்? தொடர் முடிந்த போது அவர் நூல்கள் பட்டியலை இடப் போகிறார். இதில் மற்றவர் உழைப்பை திருடுவது எங்கிருந்து வந்தது? அதிலும் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக இதைச் செய்துவருவதாக வேறு பேச்சு? ஆனால் என்ன செய்வது, தனது ஐந்தாவது வயதில் சக பார்ப்பன மாணவன் எச்சில் துப்பினான் தன்மேல் என்ற ஒரே காரணத்துக்காக பார்ப்பன வெறுப்பை மேற்கொண்ட பெருந்தகையிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும்? அதே சமயம் தனக்கு முதன் முதலில் வேலை கொடுத்து ஊக்குவித்த பார்ப்பனரைப் பற்றி பேசும்போது மட்டும் அவர் பார்ப்பனர் என்பது இரண்டாம் இடத்துக்கு போய் விடும் - ஏன் மறந்தே கூட போய்விடும். என்ன செலக்டிவ் ஞாபகங்கள்?

பதிவை முடிக்கும் முன்னால் ஒரு தமாஷ். Everything you wanted to know about sex, but were afraid to ask என்னும் புத்தகம் சமீபத்தில் எழுபதுகளின் ஆரம்பத்தில் வந்து சக்கைபோடு போட்டது. அதிலிருந்து ஒரு சிறு பகுதியை நினைவிலிருந்து எடுத்து தமிழில் தருகிறேன்.

கேள்வி: சுய இன்பம் செய்தால் உடலுக்கு கேடாமே? அதுவும் ஆண்களுக்கு சக்தி விரையமாமே.
பதில்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தேவையின்றி பல தலைமுறைகளாக சிறுவர்களை பயமுறுத்தவே இது கூறப்பட்டுள்ளது. தன் உடல் உறுப்புகளை பற்றி பிரக்ஞை வரும்போது எல்லோரும் செய்ததுதான் அது. என்ன, தாங்கள் பெற்றோராகும்போது மட்டும் அவர்களும் தங்கள் சிறுவர்களுக்கு இதே தடையை விதிக்கின்றனர். மறுபடியும் கூறுவேன், சுய இன்பத்தால் எந்த கெடுதியும் கிடையாது. என்ன துணி பாழாகும் அவ்வளவே.
கேள்வி: ஒரு கெட்ட விளைவும் இல்லையே?
பதில்: இல்லை. என்ன, உங்கள் காதுகள் மட்டும் கீழே விழுந்து விடும்.
அடிக்குறிப்பில் எடிட்டர் கூறுவது: Don't take it seriously, it is his attempt at humor.

அன்புடன்,
டோண்டு ராகவன்

66 comments:

Anonymous said...

டோண்டு சார்,ரோட்டிலே தண்ணியடிச்சிட்டு உளறிக்கிட்டும் பொலம்பிக்கிட்டும் போவானுங்களே, அவனுங்களுக்கு நீங்க எதுவும் விளக்கம் கொடுத்துகிட்டு நிப்பீங்களா? கண்டுக்காம போய்கிட்டே இருப்பீங்க தானே? அப்படி தான் இவனுங்களையும் கண்டுக்க கூடாது.

'இணையத்தில் கட்டுப்பாடற்ற சுதந்திரம் இருக்கு' அப்படீன்னு பீலா விட்டுகிட்டு கண்டபடிக்கும் எழுதுறானுங்க. அப்படீன்னா எதுக்கு புனைப் பெயரிலே பிளாகரிலே எழுதுறானுங்களாம்? சொந்தமா சொந்தப் பெயரிலே ஒரு வெப் சைட் காசு கொடுத்து வாங்கி சொந்த முகவரியை போட்டு தில்லா எழுத வேண்டியது தானே?

இவனுஙளுக்கு பிடிக்கலைன்னா அவன் இவன்னு எழுதுவானுங்களாம். ஆனா இவனுங்களாஇயும் இவனுக்குப் புடிச்ச ராமசாமி நாயக்கன், கருணாநிதி மாதிரியான கம்___டிகளை யாரும் எழுதிடக்கூடாது. துள்ளிக் குதிச்சு ஓடி வருவானுங்க பாருங்க.

ஓஷோவை அவன் இவன்னு ஒரு பொறம்போக்கு எழுதியிருக்கான்.

அடேய். உன் பக்கத்து வீட்டுக்காரன் செய்யறது உனக்கு புடிக்கலைன்னா நேரில போய் அவனே இவனேன்னு பேசிப் பாரேன். முட்டியை பேத்துடுவான். பொறம்போக்கு தனமா பெரிய பருப்பு மாதிரி இங்க வந்து எல்லாரையும், எல்லாத்தையும் அவன் இவன்னு எழுதுறது கண்டிப்பா கட்டணக் கழிப்பறையிலே கரியால கண்டபடி கிறுக்குறதுக்கு சமம்.

பெப்சி உமா, மாலன், க்னானி, சுஜாதா, மதன் எல்லாரும் பிராமணர்கள். டைரக்டர் சங்கர் போன்றவர்கள் பிராமண அடிவருடிகளாம். அப்படீன்னு இந்த ராமசாமி நாய்க்கனின் அடிவருடிகள் புலம்பி வருகிறர்கள். அவனுங்களுக்கெல்லாம் வெயிட் கொடுத்து நீங்க ஏன் உங்களையே தரம் தாழ்த்திக்கிறீங்க சார்?

எதிரிங்கலா இருக்க கூட ஓரளவுக்காவது தகுதி இருக்கனும் சார்.

இம்சை said...

Valga Valamudan

Anonymous said...

நன்றாக இருக்கு அதே சமயம் உண்மையும் இருக்கு.

Doctor Bruno said...

ஞாநி நன்றாகத்தான் எழுதிவருகிறார்.....

"வந்தார்கள் வென்றார்கள்" பல சரித்திர புத்தகங்களை விட அருமையாகத்தான் இருந்த்து. ஆனால் "மனிதனுக்குள் ஒரு மிருகம்" இலக்கற்றி சென்றதும் உண்மை...

எப்பொருள் யார் வாய் கேட்பினும் மெய்ப் பொருள் காண வேண்டும்.....

Anonymous said...

மீண்டும் புல் ஃபார்முக்கு வநதுவிட்டீர்கள் டோண்டுசார்.

சூப்பர்

Anonymous said...

சமூகத்தை விகடன கெடுக்கிறது என்று சொல்லும் அறிவுமதி ரெண்டு பொண்டாட்டி கட்டியவர்.இதை விடவா சமுதாயத்தை விகடன் கெடுக்க முடியும்?

இவரது வாடி,வாடி நாட்டுக்கட்டை பாட்டில் இல்லாத ஆபாசமா?

Anonymous said...

அருமையான பதிவு டோண்டு சார்
சில ஜன்மங்களுக்கு பதில் கொடுக்க தேவை இல்லை என்றே இணைக்கிறேன்..

பெப்சி உமா தொடர்பான ஒரு வீடியோ தொடர்பாக பதிவில் மாமி பாப்பாத்தி என்று சொல்லி திட்டி கொண்டு இருக்கின்றனர். பெப்சி உமா என்ன சொன்னார் என்று தெளிவாக இல்லாத போதே அவர் மேல் கேவலமான விமர்சனம்.

இது தான் கருத்து சுதந்திரம் என்றால் சிரிப்பாக இருக்கிறது

Anonymous said...

அறிவுமதி ஒரு அறிவு கெட்ட மதி. அவரை யாரும் பாடல் எழுத கூப்பிடவில்லை என்றவுடன் நான் இனிமே தமிழ் சினிமா பாடல்கள் எழுத மாட்டேன்னு சொன்னாராம்.ஐய்யோ இந்த பழம் புளிக்கும் என்ற கதைதான்.

Anonymous said...

மதன் வன்றார்கள் வென்றார்கள் புத்தகத்தை ஒரு ஆராய்சி மாணவனிடம் திருடினார் என்று சொன்னதை அவர்கள் நீருபிக்க முடியுமா??
அவங்களுக்கு பேச்த்தான் தெரியும்.

Anonymous said...

அறிவும், மதியும் இல்லாத இனவெறுப்பு பேர்வழிகளுக்கு அறிவுமதி என்று பெயர்.

இவரெல்லாம் படித்தவரா?வெட்ககேடு.

Anonymous said...

அந்த நாதாறி அறிவுமதி பன்னாடை, செக்ஸ் கல்வியறிவு பெற்றவர் தான் செக்ஸ் பத்தி எழுதனும்னு சொல்லி அதையும் ஒருத்தன் பதிவு செஞ்சிருக்கான் பாருங்க.

அடப்பாவிகளா, அப்படீன்னூ பாத்தா தினமும் கடவுளைப் பத்தியும், புராணங்களைப் பத்தியும் கண்டபடிக்கும் எழுதிகிட்டும் உளறிக்கிட்டும் இருக்கீங்களே, நீங்க எங்கடாப்பா புராண இதிகாசங்களையெல்லாம் படிச்சிட்டு வந்தீங்க? சர்ட்டிபிகேட் வெச்சிருக்கீங்களாடாப்பா?

Anonymous said...

யாரிந்த அறிவில்லா மதி? அட்ரஸ் இல்லாதவனுங்க எல்லாம் மக்கள் கிட்ட புகழ் வாங்குறதுக்கு இப்படி தான் பிரச்னைய கெளப்பி விடுவானுங்க.

ஆனா ஞானி பாடு தான் திண்டாட்டம். மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி.

Arun Kumar said...

ஞானி பெரியார் பாதையை பின்பற்றுபவர் .வீரமணி கூட்டத்தை விட பெரியார் சொன்ன கருத்துகளை நாகரீகமாக மக்களிடம் கொண்டு சேர்பவர் இவர்.ஞானியை போலி பகுத்தறிவு கூட்டம் பார்பான் என்று விளிப்பதின் காரணம் போலி பகுத்தறிவு தாத்தாவை ஞானி நியாமாக விமர்சனம் செய்வது தான்.

Anonymous said...

கல்கி பத்திரிகையிலே கூட ஙானியின் இந்த தொடரை குறை சொல்லி எழுதியிருக்காங்க. அப்படீன்னா கல்கி பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிகை இல்லையா?

Anonymous said...

அறிவுமதியுன் தனிபட்ட வாழ்க்கை தொடர்பாக பேசினால் ஊர் சிரிக்கும்.
தன் மேல் எச்சில் துப்பினவுடன் உடனே ஜாதி விரோதம்
நேரில் காட்ட முடியாத வெறுப்புணர்சிகளை இணையத்தில் கொண்டு மொத்தமாக வாந்தி எடுக்கிறாங்க

Anonymous said...

//கல்கி பத்திரிகையிலே கூட ஙானியின் இந்த தொடரை குறை சொல்லி எழுதியிருக்காங்க. அப்படீன்னா கல்கி பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிகை இல்லையா?//

அது அவாள் பத்திரிக்கைன்னு வாள் வாள்ன்னு குலைக்க தான் தெரியும்.பதில் வராது :)

Anonymous said...

//தனது ஐந்தாவது வயதில் சக பார்ப்பன மாணவன் எச்சில் துப்பினான் தன்மேல் என்ற ஒரே காரணத்துக்காக பார்ப்பன வெறுப்பை மேற்கொண்ட பெருந்தகையிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும்? அதே சமயம் தனக்கு முதன் முதலில் வேலை செய்து ஊக்குவித்த பார்ப்பனரைப் பற்றி பேசும்போது மட்டும் அவர் பார்ப்பனர் என்பது இரண்டாம் இடத்துக்கு போய் விடும். என்ன செலக்டிவ் ஞாபகங்கள்?//

அப்படில்லாம் இல்லைங்ண்ணா
தம்பி ஏற்கனவே தினமலரை கண்டபடி திட்டிஎழுதி இருக்கு.
தம்பிக்கு இப்போ புஸ்தகம் எழுத வேண்டும் என்று ஆசை.அதான் அந்தர் பல்டி.
வலைபதிவர் பட்டறையில் யார்கூட சுத்திண்டுஇருந்தார்ன்னு பார்கலையோ?

Anonymous said...

avanungalukku ellaam bathil solli oru pathivai waste pannitteengalae.

Anonymous said...

//எதிரிங்கலா இருக்க கூட ஓரளவுக்காவது தகுதி இருக்கனும் சார்.//

இது பதில் :)))))))

Anonymous said...

சரி, இதை இதை இவங்க இவங்க தான் எழுதணும்னு ரூல்ஸ் எல்லாம் போடுறாங்களே?

* தலைவனா இருக்க என்ன என்ன தகுதி இருக்கணும்?
* இப்படி அட்வைஸ் பண்ண என்ன என்ன தகுதி இருக்கணும்?

இதெல்லாம் யார் சொல்றதாம்?

Anonymous said...

வலைபதிவர் பட்டறையில் மாலனை எதிர்த்து ஏன் கேள்வி கேட்டகவில்லை என்று ஒரு மேல்மாடிகாலி கேள்வி கேட்டு இருந்தது?கூடவே திராவிட புயல் நீங்க கூடவான்னு ஒரு கூட்டு தொகை வேறு.ஏதோ இலங்கை தமிழர்கள் தவறே செய்யாதவங்க அவங்களை ஏதாச்சும் சொன்னா கூட்டம் சேர்க்கிறது
சமீபத்தில் வந்த சிவாஜி படத்தில் ரஜினி சொல்லும் ஒரு வசனம் தான் ஞாபகம் வருகின்றது. சிங்கம் சிங்கிளா வரும்,பன்னிங்க...

Anonymous said...

pattaraiyilE yAru kUda suththikittu iruwthichchi?

Anonymous said...

* தலைவனா இருக்க என்ன என்ன தகுதி இருக்கணும்?

மஞ்சள் துண்டு வாழ்க்கையை படித்து பாருங்கள்:)))))))
* இப்படி அட்வைஸ் பண்ண என்ன என்ன தகுதி இருக்கணும்?
தமிழ் ப்ளாக் எழுத வேண்டும். பேரு கிக்கிகூக் பப்பிபாக் என்று சுத்த தமிழில் வைத்து கொள்ள வேண்டும் :))

Anonymous said...

//கல்கி பத்திரிகையிலே கூட ஙானியின் இந்த தொடரை குறை சொல்லி எழுதியிருக்காங்க. அப்படீன்னா கல்கி பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிகை இல்லையா?//

கல்கி பத்திரிக்கையில் இந்த அறிவுகெட்ட கூமூட்டை மதி எழுதிய மாதிரி இனவெறுப்பு கட்டுரையா எழுதினார்கள்?

Anonymous said...

//கடந்த இரண்டாயிரம் வருடங்களாக இதைச் செய்துவருவதாக வேறு பேச்சு? //

நல்லா மூளை சலவை செய்து வைச்சுருங்காங்க சார்

Anonymous said...

சாத்தான் வேதம் ஓதுறது அப்படீன்றது இது தான்.

புரான இதிகாசங்களை மொழி பெயர்க்கிறோம்ன்னு இவனுங்க பத்திரிகையிலே கண்டபடிக்கும் ஒளறிக் கொட்டுறனுங்களே, அதையெல்லாம் என்ன சொல்லுவானாம் இந்த அறிவிலி மதி

Anonymous said...

//pattaraiyilE yAru kUda suththikittu iruwthichchi?//

அவரு இப்ப யாருக்கு அதிகமாக ஜிங்குசா ஜிங்குசா அடிக்கிறாறுன்னு தெரியலைலியா?
என் மீது விழுந்த எச்சில்ன்னு ஒரு புஸ்தகம் வந்தாகூட ஆச்சர்யம் இல்லை.

Anonymous said...

நல்ல பதிவு நன்றாக எழுதி இருக்கீறீர்கள்

Anonymous said...

//கிக்கிகூக் பப்பிபாக் என்று சுத்த தமிழில் வைத்து கொள்ள வேண்டும் //

Venaam, vittudunga, naan aludhuduvaen

Anonymous said...

சார் இவனுங்களுக்கு இணையத்தில் சின்ன புள்ளைங்க போட்டோ போட்டு செக்ஸ் கதைதான் எழுத தெரியும். அதுக்கு ஒரு பேரவை கூட வைச்சுபாங்க.
உங்களுக்கு பின்னோட்டம் போட்ட இவனுங்க வீட்ல பேசுவது போல நமக்கு மெனக்கேட்டு வந்து பின்னோட்டம் போட்டு போவானுங்க.இவனுங்கு எல்லாத்துக்கும் மரியாதை கொடுத்து ஒரு பதிவை வீணாக்கி விட்டீர்கள்

Anonymous said...

//Venaam, vittudunga, naan aludhuduvaen//

என் திராவிட நண்பர்களுக்குன்னு ஒரு மடல் சில நாட்களுக்கு முன்னர் வந்தது.சம்ம தமாசு:)))))))

Anonymous said...

நாங்க எப்படி குலைக்க வேண்டும் என்று நினைத்தாலும் பார்பனர்கள் என்று சொல்லிதான் ஆரம்பிப்போம்

Anonymous said...

//என் திராவிட நண்பர்களுக்குன்னு ஒரு மடல் சில நாட்களுக்கு முன்னர் வந்தது.//

Adhu enga? link please. padichchu sirichu vayiru punnagumo?

Anonymous said...

ஒரு கேள்விபதில் பதிவில் உங்களை விமர்சித்து இருந்தார் தோழர்.போலியுடன் ஒரு கற்பனை பேட்டின்னு போட்டு உடன்பிறப்பு எப்படி எல்லாம் பல்லக்கு தூக்கினார் என்பதை உலகம் மறக்குமா? தோழா பகுத்தறிந்து சிந்தித்து பார்

Anonymous said...

சார் இது எல்லாம் கலைஞரின் ராஜதந்திரம்.இது உங்களுக்கு தெரியவில்லையா? ஜெயாடிவியில் கலைஞர் என்று சொல்ல வேண்டும் என்று அவர் ராஜதந்திரம் செய்து கலைஞர் டிவின்னு பேரு வைச்சாரு.இப்போ ஞானியை அறிவுமதியை வைச்சு திட்ட சொல்றாரு.இது எல்லாம் ராஜ தந்திரம் சார்.

Anonymous said...

//Adhu enga? link please. padichchu sirichu vayiru punnagumo?//
enakkum vendum

Anonymous said...

அடடே, அதையும் ஒருத்தரு ஒளறியிருந்தாரு. அப்படீன்னா ஜெயா டி.வி.யிலே பேரு வாங்கணும்னு அந்த சொட்டை பொலம்பிக்கிட்டு இருக்காக்கும்?

ஜயா டி.வி.யிலே 'கலைஞர் டி.வி.'ன்னு சொல்லுறதுக்கு அவங்க என்ன பைத்தியமா? ஏற்கனவே சன் டி.வி.யை 'தி.மு.க. குடும்ப தொலைக்காட்சி' அப்படீன்னு சொல்ற மாதிரி வரப்போற இத்துப் போன டி.வி.யை 'சொட்டை டி.வி.' அப்படீன்னு சொல்லிட்டு போகப் போறங்க.

இது ராஜ தந்திரம் அது இதுன்னு ஒருத்தன் பில்டப் கொடுத்து பதிவெல்லாம் போட்டிருந்தான் பாருங்க. தமாசு. தமாசு.

Anonymous said...

நல்ல பதிவு

Anonymous said...

//ஜயா டி.வி.யிலே 'கலைஞர் டி.வி.'ன்னு சொல்லுறதுக்கு அவங்க என்ன பைத்தியமா? ஏற்கனவே சன் டி.வி.யை 'தி.மு.க. குடும்ப தொலைக்காட்சி' அப்படீன்னு சொல்ற மாதிரி வரப்போற இத்துப் போன டி.வி.யை 'சொட்டை டி.வி.' அப்படீன்னு சொல்லிட்டு போகப் போறங்க.

இது ராஜ தந்திரம் அது இதுன்னு ஒருத்தன் பில்டப் கொடுத்து பதிவெல்லாம் போட்டிருந்தான் பாருங்க. தமாசு. தமாச//

சொட்டை டிவி நன்னா இருக்கு
ஏர்போர்ட் தலையன் டிவி
மஞ்சள் துண்டு டிவி
மொக்கை மண்டை டிவின்னு கூட சொல்லலாம்.

அது எல்லாம் ராஜதந்திரம் :))) தமாசு தமாசு

Anonymous said...

என்ன எதிரணியில் இருந்து சவுண்டே இல்லை?

Anonymous said...

சார் முரசொலியிலே 'about murasoli' அப்படீன்னு ஒரு பக்கம் போட்டிருக்கானுங்க. படிச்சு பாருங்க. பெரிய்ய்ய்ய்ய்ய்ய தமாசு. எம்.ஜி.யார். பத்தியெல்லாம் பொலம்பிருக்கானுங்க. ராசதந்திரம். அவரு உயிரோட இருக்குறப்ப அவரோட தொப்பியிலே ஒரு மசிரைக்கூட புடுங்க முடியல. அதுக்கெல்லாம் ஒரு பில்டப் கொடுத்து இப்போ எழுதியிருக்கானுங்க பாருங்க. ராசதந்திரமாம்.

Anonymous said...

//என்ன எதிரணியில் இருந்து சவுண்டே இல்லை?//

எல்லாம் சனிக்கிழமை சரக்கடிச்சிட்டு கவுந்தடிச்சு படுத்திருப்பானுங்க. வேறென்ன?

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

முதலில் ஞாநி செய்யப்போவது என்ன என்பதை அவரை எதிர்ப்பவர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதே நிஜம். தேவையின்றி அவரது முப்புரி நூலை பிடித்து தொங்கியதுதான் அவர்கள் செய்தது.

பாலியல் வல்லுநர்கள் இது பற்றி பல புத்தகங்கள் போட்டுள்ளனர். அவற்றைத் தொகுத்து ஞாநி அவர்கள் எழுதப் போவதாகத்தான் அறிகிறேன். தொகுத்து எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதுவதும் ஒரு திறமைதானே. அது அவரிடம் உள்ளது.

மேலும் நான் ஏற்கனவே சொன்னதுபோல இந்த விஷயத்தில் நம் எல்லோருக்குமே சுயஅனுபவங்கள் உண்டு. அவற்றுக்கு முரணாக ஞாநி எழுதினால் கேள்வி கேட்காமல் விடுவோமா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Gnani is one of the best writers in popular Tamizh writings today. His style of writing is like a whiff of fresh air!

Gyani is doing an excellent job of giving information. He is also good at using words carefully to give the exact meaning and to the point. This appears to be a first time effort in a popular magazine.

If this writing is touching the reader in some ways and making him think , Gnani and the editor of the AV have achieved what they set about.

If at all he has used information from other publications, it is ok. An ordinary reader of a popular magazine may not have access to various writings on the subject and may not have inclination to seek information. When it is packaged so neatly, who cares?

Commendable efforts and the writer has to be appreciated and encouraged and the editor to be saluted!

People who are not comfortable will find hundred ways to critise. Hope Gnani will not be affected by such criticisms.

dondu(#11168674346665545885) said...

//People who are not comfortable will find hundred ways to critise. Hope Gnani will not be affected by such criticisms.//
நூறு வழிகள் எல்லாம் இல்லை. ஒரு வழிதான். அதாவது ஞாநி என்பவர் பார்ப்பனர். அது போதும் எதிர்ப்புகளுக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

How come this post is not seen in recent comments list in thamizmanam?

dondu(#11168674346665545885) said...

//How come this post is not seen in recent comments list in thamizmanam?//
The number of comments has exceeded 40. Hence click under the button for comments > 40.

Regards,
Dondu N.Raghavan

அரவிந்தன் said...

40க்கும் மேற்ப்பட்ட பின்னூட்டங்களில் ஒன்று கூட சொந்த பெயரில் வராதது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது..

எதாவது குறிப்பிட்ட காரணங்கள் இருக்கா..

அன்புடன்
அரவிந்தன்
nattunadappu.blogspot.com

dondu(#11168674346665545885) said...

அன்புள்ள அரவிந்தன்,

பதிவர்களாக வந்தவர்கள் இம்சை, டாக்டர் ப்ரூனோ, ரெக்கி மற்றும் நீங்கள்.

மற்றவர்கள அவ்வாறு வராததன் காரணம் வெளிப்படையே. மேலே ஒன்றும் கூறுவதற்கில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அரவிந்தன் said...

உங்கள் கருத்தினை பாராட்டி எழுதியவர்கள் கூட அனானி-யாக எழுதியததின் காரணம் என்னவாக இருக்கமுடியும்..?

பொதுவாக திட்டி எழுதுபவர்கள்தான் அனானியாக எழுதுவார்கள் என்று நான் நினைக்கிறேன்..

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்.

Anonymous said...

Mr Dondu i accept your logical argument.

dondu(#11168674346665545885) said...

//உங்கள் கருத்தினை பாராட்டி எழுதியவர்கள் கூட அனானி-யாக எழுதியததின் காரணம் என்னவாக இருக்கமுடியும்..?
பொதுவாக திட்டி எழுதுபவர்கள்தான் அனானியாக எழுதுவார்கள் என்று நான் நினைக்கிறேன்..//

பாராட்டி எழுதுபவர்களை திட்டி பின்னூட்டம் வருமே. உங்களுக்கே வந்தாலும் வரலாம். எதற்கும் மட்டுறுத்தலை உங்கள் வலைப்பூவில் கொண்டு வரவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு சார் இந்த பதிவில் 1,50,000 பார்வையைளார்கள் எண்ணிக்கையை தொட்டு விடுவீர்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

Anonymous said...

//குழலி / Kuzhali said...
அறிவுத்திருட்டை செய்வது மிக சாதாரணமாக இருக்கின்றது, அதற்கு அங்கீகாரம் வேறு.... மற்றவர்கள் பெற்ற பிள்ளைக்கு தான் அப்பன் என்று சொல்லிக்கொள்வது போல....

மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்களின் பின்னே ஒரு வரலாற்று மாணவனின் உழைப்பு இருக்கிறதாம்.... எவன் எவனோ எழுதுவதற்கு டச்சப் கொடுத்து தன் பெயரில் போட்டுக்கொள்வது.... கொடுமைடா சாமி இந்த அறிவு ஜீவிகளின் திருட்டுத்தனம்....
//

மற்றொரு பதிவில் இப்படி இந்த நபர் உளறியிருக்கிறார்.

ஆதாரம் இல்லாமல் யார் வேன்டுமென்றாலும் யாரை வேண்டுமென்றாலும் இப்படி கூறி விடலாம்.

ஆதாரம் எங்கே என்று கேட்டால் பார்ப்பனர் அது இதுவென்று திசை திருப்பி விடுவது இந்த ஜந்துக்களுக்கு கை வந்த கலை.

இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது "ஐயோ கொல்றாங்களே" ஸ்டைலில் "ஐயோ சூத்திரன்னு சொல்லிட்டாங்களே" அப்படீன்னு திசை திருப்புறது. "எங்கேடா சொல்லிருக்காங்க" அப்படீன்னு யாரும் கேட்காம இருக்கிறது இந்த ஜந்துக்களுக்கு ரொம்பவே வசதியா போயிடுது.

'வந்தார்கள் வென்றார்கள்' புத்தகத்தின் பின்னால் அதை எழுத உதவிய புத்தகங்கள் லிஸ்ட் இருக்கிறது. வரலாறு என்பதையே பழைய நூல்களிலிருந்து குறிப்பு எடுத்து தான் எழுத முடியும். இந்த கும்பல் எழுதியும் பிதற்றியும் வருவது போல 'இரண்டாயிரம் காலம்' என்ற பொய்க்கு தான் குறிப்பெல்லாம் தேவையில்லை.

Anonymous said...

கருணாநிதி பராசக்தியில் எழுதிய வசனமே அந்த ஆளுடையது இல்லையாம். 'தொல்காப்பிய உரை' ஒரு தமிழ் அறிஞருடையதாம். மண்டபத்திலே யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து தான் இவ்வளவு நாளும் கருணாநிதி காலத்தை ஓட்டு வருகிறாராம்.

இல்லையென்று குழலி போன்றவர்கள் நிருபிக்கட்டுமே.

பி.கு. : இப்போதைய அரசியல் சூழ்நிலையில் "ஆமாம் ஆமாம் அப்படி தான் இருக்கும்" என்று குழலி அந்தர் பல்டி அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு சில நாட்களில் அவருடைய தலைவன் அடிக்கப்போகும் அந்தர் பல்டிக்கு இப்போதே சமாலிப்பு கட்டுரை தயாராகி வருகிறதாம் சிங்கப்பூரில்.(அட, வழக்கம்போல திருடி எழுதப்படுவது தான்)

Anonymous said...

Dondu Sir,
One word. I SALUTE your efforts.
Please march ahead. We are behind you.

One suggestion. Pinnootangalil ungalai thitti varubavaigalai over jananayagamaga allow seigireergal. Adhu sila samayam "Evlo adichalum thangran. Ivan romba nallavandaaaa.." rangeku aagi ungal dignity-ai kuraikkirathu.
Ungal side weak anathu pol oru thotram uruvagirathu. Adhai mattum satru gavanikkavum. All the best!

ஜீவி said...

எழுதுபவர்களில் ஞானி, ஞாநி என்று
இருவர் (வெவ்வேறு சமூகத்தைச்
சேர்ந்தவர்கள்) இருக்கிறார்கள் என்றே
பலருக்குத் தெரியாது.
இதில் இந்த ஞாநி எந்த ஞானி என்று
எத்தனை பேருக்குத் தெரியும்?..
தெரியவில்லை..
எழுதுபவரும், ஜாதி பார்த்து பத்திரிகை
தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களுக்கு
விகடனாலும்--குங்குமமானாலும்
ஒன்றே. காசுதான் குறி. (உ.ம்: வைரமுத்து)
பத்திரிகையும் ஜாதிபார்த்து எழுதுபவரைத் தீர்மானிப்பதில்லை.
(உ.ம்: மேலாண்மைப் பொன்னுசாமி)
அவர்களுக்கு பத்திரிகை 'போணியாவது ஒன்று தான் இலக்கு.
இப்படியிருக்கையில் ஞாநி எந்த ஜாதியைச் சார்ந்தவராய் இருந்தால் தான் என்ன?
செக்ஸ் சாமாச்சாரத்தைப் பொருத்தவரையில், எல்லோருக்கும்
(புதிரா, புதினமா புகழ் அமரர் டாக்டர்
மாத்ருபூதம் உட்பட) வாத்ஸ்யாயனரின் காமசூத்திரமும்,
Marriage Mannual- போன்ற ஆங்கில
நூல்களும் தான் மூலம். அந்த எல்லைகளைத் தாண்டி, புதுசாக யாரும் எழுதிவிடப் போவதில்லை.
எழுதும் விஷயத்தில் இருக்கும் ஞானம் தான் முக்கியமே தவிர,
எதை யார் எழுதினால் என்ன?
ஆகையால் தான் திரு. டோண்டு
சீறி எழுந்திருக்கிறார். இது சிலர்
குறிப்பிட்டிருப்பது போல, தேவையில்லாதது போல நான்
நினைக்கவில்லை; இந்த நியாயமான
சீறல் ஒவ்வொரு விஷயத்திலும்
வேண்டிய ஒன்றுதான்.
எதிர்ப்பு அதிகம் இல்லாததற்குக்
காரணம்-- உண்மை கசக்கும் என்பதுதான்.

Anonymous said...

அனானிமசை வழிமொழிகிறேன்

வாடா,போடா என்று உங்களை விளிக்கும் (வெளிநாட்டில் எச்சிலை பொறுக்கித் தின்னும் தெருப்பொறுக்கி நாய் ஒன்றின்) மரியாதை கெட்ட பின்னூட்டங்களை நீங்கள் அனுமதிக்கிறீர்கள்.அவற்றை படித்தால் எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது.

Anonymous said...

சில பேர் எழுதலாங்கறாங்க. சில பேர் கூடாதுங்கறாங்க. நம் நாட்டில் பாலியல் பற்றியும், பாலியல் கல்வி பற்றியும் போதிய விழிப்புணர்வும், புரிதல்களும் இல்லை.

நாம சொல்ல வந்த விடயத்துக்கு வருவோம்.

சில தொழில்கள் செய்பவர்களை Professionals என்று சொல்வோம். மருத்துவர்கள், பொறியாளர்கள் ஆகியோர். இது சம்பந்தப் பட்ட செயல்களை இவர்கள் தான் செய்ய வேண்டும். குறிப்பாக மருத்துவர்கள். ஏனென்றால் இதனால் ஏற்படும் விளைவுகள் மீளப் பெற முடியாதவை.

செக்ஸ் கல்வியும் இது போலத் தான். இதற்கு முறையான மருத்துவர்கள் மட்டுமே ஆலோசனை சொல்ல முடியும். சொல்ல வேண்டும். ஒரு பதிவர் எழுதி இருக்கிறார் அனுபவ அறிவு இருந்தால் போதும் என்று. யாருக்கு இல்லை இங்கு அனுபவம். உங்களுக்கிருக்கிறது. எனக்கிருக்கிறது. ஆனால் அனுபவம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப் படுகிறது இல்லையா. அப்பதிவரின் அனுபவத்தை எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்.

//ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.//

//ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.//

எனக்கு கூட ஜுரம் வந்தால் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று அனுபவ அறிவு இருக்கிறது. இருந்தாலும் நாம் ஏன் மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஜூரம் என்பது மற்ற நோய்களுக்கான முன்னறிவிப்பே. இது மருத்துவரால் மட்டுமே சரியாக கண்டறியப் பட்டு அதற்கேற்றார்போல் மருந்து கொடுக்கப் படுகிறது. இது திருப்பதியில் போய் மொட்டையைத் தேடும் கதையில்லை.

முறையான மருத்துவக் கல்வியும் ,அறிவும், தேர்ந்த அணுகுமுறையும் இன்றி பாலியல் கல்வி கற்பிக்கப் பட்டால், தவறான பின் விளைவுகளையே ஏற்படுத்தும்

ஞாநி ஒரு பத்திகையாளராக இருக்கலாம். ஆனால் அவர் செக்ஸ் கல்வி (கவனிக்கவும்) பற்றி எழுதுவது என்பது சுயவைத்தியம் பார்ப்பது போலாகும்.

அனுராதா ரமணன் அந்தரங்க ஆலோசனை சொல்வதற்கும், மாத்ருபூதம் ஆலோசனை சொல்வதற்கும் வித்தியாசமில்லையா?

அனுராதா ரமணனுக்கு சமூகப் பார்வை. மாத்ருபூதத்திற்கு மருத்துவப் பார்வை.

மற்றபடி, யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளனாகலாம். எழுத்தாளனாகலாம். பொறியாளராகலாம். (எங்க ஊர் மேஸ்திரி எட்டு கூட தாண்டல. ஆனா சூப்பரா வீடு கட்டுவாரு.)

ஆனால் மருத்துவராக முடியாது. அதைப் பற்றி எழுத முடியாது என்பது என் புரிதல்.

விஜயன்
http://manasukul.blogspot.com/2007/08/blog-post_234.html

dondu(#11168674346665545885) said...

விஜயன் பதிவுக்கு ஏற்கனவே பின்னூட்டம் இட்டு விட்டேன். அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. அது இதோ:
"விஜயன் அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://manasukul.blogspot.com/2007/08/blog-post_234.html

நான் ஆண் பெண் கற்பு நிலை - 2 பதிவில் போட்டதை காண்டக்ஸ்டிலிருந்து பிரித்தெடுத்து போட்டுள்ளீர்கள். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/2_14.html
அதில் நான் எழுதியது காண்டக்ஸுடன் இதோ:
"ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.

குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.
ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்".

நான் கூறியதில் மருத்துவ ரீதியாக ஒரு தவறும் இல்லை என்பதை திருமதி டெல்ஃபின் அவர்களே ஒத்துக் கொள்வார்.

இன்னொரு விஷயம்: ஞாநி விஷயத்தில் வந்த ஆட்சேபணையில் அவர் பார்ப்பனர் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்கள். அதை பற்றி ஏன் கருத்து கூற விரும்பவில்லை?
இப்பின்னூட்டத்தின் நகலை நான் மேலே சுட்டியுள்ள எனது பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன்".

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இந்த பதிவில் நீங்கள் அடித்திருக்கும் கும்மி, இளைஞர் பட்டாளம் அடிக்கும் கும்மியை விட 100 மடங்கு மேலானது.

இவன்,
டோண்டு 'கொலை'வெறியன்
சிம்ரன் ஜூஸ் கடை மேல்மாடி (காலி),
மடிப்பாக்கம்

dondu(#11168674346665545885) said...

விஜயன் அவர்கள் பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.

//மன்னிக்கவும் டெல்பின் யார் என்று எனக்கு தெரியாது. டெல்பின் ஒரு பதிவர் என்று நீங்கள் சொன்னால்...//
டெல்ஃபின் ஒரு மருத்துவர். உங்களுக்கு பின்னூட்டமும் இட்டவர். நான் கூறியது மருத்துவ கூற்றின்படி சரி என்பதையே அவரும் கூறுவார் என்றுதான் நான் கூறினேன்.

//நான் ஆண் பெண் கற்பு நிலை - 2 பதிவில் போட்டதை காண்டக்ஸ்டிலிருந்து பிரித்தெடுத்து போட்டுள்ளீர்கள்//
ஆமாம்.//
ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இப்போது காண்டக்ஸுடன் தந்துள்ளேன் என்ன கருத்து கூறுவீர்கள்?

//என்ன திசை திருப்புகிறீர்களா? என் பதிவில் எங்கு ஜாதி இருக்கிறது. நீங்கள் விடாமல் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஞாநி பார்ப்பனராக இருந்தால் எனக்கென்ன? யாராயிருந்தால், என்னவாக இருந்தால் எனக்கென்ன?//
எனது பதிவைப் பற்றித்தானே நீங்கள் இப்பதிவில் கூறினீர்கள்? வெறுமனே காண்டக்ஸ்டிலிருந்து பிரித்தெடுத்து அர்த்தத்தை குலைத்தது போதாது என்று பாதிப்பதிவைப் பற்றி மட்டுமே கூறியுள்ளீர்கள். இன்னொரு பாயிண்டுக்குத்தான் நான் பதில் கேட்டேன். இல்லை எனது பதிவையே அரைகுறையாகத்தான் படித்தீர்களா?

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//டோண்டு சார் இந்த பதிவில் 1,50,000 பார்வையைளார்கள் எண்ணிக்கையை தொட்டு விடுவீர்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//
நன்றி. நீங்கள் சொன்னதுபோலவே நடந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

டோண்டுசார்,

கழகத்து இளைஞர், மற்றும் இதர அ முதல் ஃ அணிக்கு யார் தலைவர்னு நிர்ணயம் செய்யுற கல(ழ)க நினைப்புதான் எல்லாவற்றிலும் நிர்ணயிக்க நினைக்க வைக்குது!

நினைப்பு பொழைப்பைக் கெடுக்கும்!

கோவிலுக்குப் போக மறுப்பவன் கோபுரத்தை தரிசித்தாலே போதும் என்ற ஆன்றோர் வாக்கையே திரித்து கோவிலுக்குள் போகவிடாமல் கோபுரத்தை எட்டநின்று பார்க்க வைத்தவர்கள் பார்ப்பனர்கள்னு கடவுள் மறுப்பு இயக்க பகுத்தறிவு ஆன்மீகவாதிகள் (சிரிப்பா வருது) எழுதும் சிந்தனை!

இப்படி எண்ணற்ற அபத்தங்கள் எல்லாத்தையும் 2000 ஆண்டு 5000 ஆண்டு ஆரிய ஆக்கிரமிப்பு திராவிட பொய் வரலாற்று குப்பைச் சாக்கில் வசதியாக ஒளித்து வைத்துக்கொள்ளலாமே :-))

Anonymous said...

The posts by you esp. regarding sexuality etc., are absolutely practical.

Then why are you getting this much wild protests by certain self-proclaimed 'tamil culture crusaders'? that too with cheap, vulgar obscenities?

Anyways, 1000 salutes to your blogs!! I am an avid reader of yours...

Singamuthu

Anonymous said...

//எதிரிங்கலா இருக்க கூட ஓரளவுக்காவது தகுதி இருக்கனும் சார்//

இதை விட சூப்பராக சொல்ல முடியாது. கேவலம் இதெல்லாம் ஒரு கட்டுரை என்று இதற்கு பதிவு இட்டு வீணாக்கி இருக்க வேண்டாம்.! கட்டுரையை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர் பொழுதை கழிக்க வக்கற்று செய்ய வேண்டிய கேவல செயல் அது..!

தலைப்பை "யார் எதை எழுதுவது என்று யார் கூவுவது?" என்று படித்தேன் - அப்படி படித்தாலும் பொருள் சரியாக வருவது நகைச்சுவை.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது