12/08/2005

என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி - 2

"என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி" என்றத் தலைப்பில் வந்த இந்தப்பதிவு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டன. இதுவரை அதில் 537 பின்னூட்டங்கள் வந்து விட்டன. அவற்றில் பெரும்பான்மையானவை நான் மற்றப் பதிவுகளில் இட்டப் பின்னூட்டங்களின் நகல்களே. இப்போதைய நிலையில் அது மிகப் பெரிதாகி விட்டது. அதைத் திறந்து மூட நேரம் பிடிக்கிறது. ஆகவே அதே நோக்கத்துடன் இரண்டாம் பதிப்பை இங்கு துவக்குகிறேன்.

அதில் கூறியவற்றை இங்கு மறுபடியும் நகலிடுகிறேன். போலி டோண்டு என்ற இழிபிறவி செய்த லீலைகள் புதியவர்களுக்குத் தெரிய வேண்டாமா?

"அன்பு வலைப்பதிவு நண்பர்களே,

இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன. நான் கனவிலும் நினைக்க முடியாத அளவில் அவை அவதூறுகளைத் தாங்கியுள்ளன. முதலில் முகமூடி அவர்களின் பதிவுகளில் அவை ஆரம்பித்தன. இப்போது குமரேஸின் பதிவிலும் அவை தொடர்ந்துள்ளன. இன்னும் எங்கெல்லாம் அவை வரப்போகின்றன என்பது புரியவில்லை. ஆகவே என் பெயரைக் காத்து கொள்ள இப்பதிவினை ஆரம்பித்துள்ளேன். நான் எங்கு என்ன பின்னூட்டமிட்டாலும் இங்கும் அப்பின்னூட்டத்தை இடுவேன்.

ரோஸ வசந்த் அவர்களுக்கும் இம்மாதிரியே நடந்தது. அதற்கு எதிராக அவர் செய்ததையே செய்வது என்று தீர்மானித்துள்ளேன். இப்போது என் பெயரைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் என்னுடைய இப்பதிவிலும் என் பெயரில் பின்னூட்ட்மிடலாம். அவை உடனடியாக அழிக்கப்படும். ஏதோ என்னால் முடிந்ததை செய்யலாம் என்று உத்தேசம்.

நண்பர்களே, உங்களில் பலருக்கு என் மேல் கோபம் இருக்கலாம். இருப்பினும் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது சம்பந்தமாகக் கடைசியாக குமரேஸ் அவர்கள் பதிவில் இது சம்பந்தமாக வந்தவை இதோ:

(http://kumaraess.blogspot.com/2005/05/blog-post_21.html)

At Saturday, May 21, 2005 6:48:54 PM, Dondu said…

[[கமல் "திருமணம் என்கிற சடங்கிலேயே உடன்பாடில்லைனு சொன்ன...." தில் மிகவும் கோபமடைந்த இரசிகர்களில் நானும் ஒருவன்.]]

கல்யாணம் செய்தால் கழட்டி விடுவது ரொம்ப கஷ்டம். கோர்ட் படியேறி வக்கீல், வாய்தா என்று அலைய வேண்டும். பின்னர் ஜீவனாம்சம் என்ற தொந்தரவு வேறு உண்டு. கல்யாணம் செய்யாமல் என்றால் சிம்ரனைக் கூப்பிட்டோமா உறை போட்டு அடிச்சோமா, அபிராமியைக் கூப்பிட்டோமா.. அந்த நாள் கணக்கு பார்த்து செஞ்சோமா, கெளதமியைக் கூப்பிட்டோமா காப்பர்டீ மாட்டி செஞ்சோமா என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு பாணியில் சென்று விடும். இதுகூடத் தெரியாத மண்டுவாக இருக்கிறீர்களே?


At Wednesday, May 25, 2005 2:16:24 PM, அன்பு said…

டோண்டு-சார் சும்மா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...!?


At Wednesday, May 25, 2005 3:02:26 PM, Dondu said…

This is getting more and more ridiculous. The 4th comment above is given in my name after creating a new blogger identity. It leads to http://bramin.blogspot.com
If you click the blog title in that URL, it leads to my regular blog.
I am sure I saw some other name when I saw this comment sometime back.
This is a sure way of destroying the trust in the blogging world.
I can only hope that this madness will stop.
By the way, my original blogger number is 4800161, whereas the number of the misleading blogger is 9267865. I request the fellow bloggers to remember that such a thing can happen to anybody else.
Regards,
N.Raghavan

At Wednesday, May 25, 2005 3:06:59 PM, Dondu said…
The same thing has happened in Mugamoodi's two blogs as well. Some mad fellow is at large. I reproduce Mugamoodi's comments in this connection in http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_18.html

"யாருக்குமே தெரியாது என்றாலும் நீ என்ன சிந்திப்பாய், என்ன செய்வாய் என்பதுதான் நீ 'உண்மையிலேயே' யார் என்பதை கண்டுபிடிக்க எளிய வழி என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். நகைச்சுவையாக எழுதப்பட்ட பதிவு இது. சம்பந்தமே இல்லாமல் ஒரு தனி மனிதனை பற்றி கேவலமாக பின்னூட்டம் இட்டு துர்வாசர் என்பவர் திசைதிருப்பும் வேலையை ஆரம்பித்தார். பின்பு பாப்பான் என்ற பெயரிலும் அதனை தொடர்ந்தார். அது hackingல் முடிந்திருக்கிறது... துர்வாசர் இப்பொழுது தன் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருப்பார்.... வெற்றிக்களிப்பில் குதூகலமாக சிரித்துக்கொண்டிருக்கலாம்... துர்வாசர் உங்கள் வீட்டில் கண்ணாடி இருந்தால் அதன் முன் நின்று சிரித்துப்பாருங்கள்.... பெருமையக இருக்கிறதா... எனில் உங்களுக்கு உடனடி தேவை ஒரு மாறுதலான வாழ்க்கை முறை... அட்லீஸ்ட் சிறிது காலத்துக்காவது... குழந்தைகளின் சிரிப்பை ரசிக்கப்பாருங்கள்... காலையில் முடிந்தால் கடற்கரை பக்கம் போய் வாருங்கள்... நகைச்சுவை படங்கள் பாருங்கள்... கண்ணியை ஒரு வாரத்துக்கு மூட்டை கட்டி வையுங்கள்... நீங்கள் தற்போது பார்க்கும் வேலையில் ஒரு படி முன்னேற உங்கள் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்துங்கள்.... எல்லா குற்றவாளியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் குற்றத்தை ஆரம்பிக்கிறார்கள். கண்டுபிடிக்காத குற்றங்களின் விழுக்காடு மிக மிக குறைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்... ஒருவரை துன்பப்படுத்தி அதன் மூலம் மகிழ்ச்சி கொள்ளும் sickest mentality (ஸாடிஸ்ட் மனோபாவம்) மனிதனை மனிதன் என்ற நிலையில் இருந்து கீழிறக்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... என் திருப்திக்காக இதையெல்லாம் சொன்னேன்.... சிந்தித்துப்பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் நோயின் தீவிரத்தை பொறுத்தது.

illegitimate பின்னூட்டங்கள் அனைத்தையும் அழித்துவிட்டேன்... எதிர்கால தேவையை மனதில் கொண்டு linkஐ அழிக்கவில்லை. பின்னூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பபற்று இருப்பது நெருடலாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது."


கெட்டதிலும் நல்லது என்பது போல அப்பதிவு இட்டதும் எனக்கு அலை அலையாக ஆதரவு பின்னூட்டங்கள் வந்தன. என் கருத்துகளில் ஒப்புதல் இல்லாதவர்களும் எனக்கு ஆதரவு காண்பித்த அதே சமயம் போலி டோண்டுவும் தன் பங்குக்கு வெறுப்பைக் காண்பித்தான். அவனுடைய பின்னூடங்களில் மிக இழிவனவற்றை அழிக்க வேண்டியதாயிற்று. அதுவே ஐம்பதுக்கு மேல் இருக்கும். ஆக கிட்டத்தட்ட 600 பின்னூட்டங்கள் அப்பதிவிற்கு.

இப்போது இந்திய நேரம் காலை 10.23, டிஸம்பர் 8 -ஆம் தேதி. இந்த நிமிஷத்திலிருந்து நான் மற்றப் பதிவுகளில் இடும் பின்னூட்டங்களின் நகல் இப்பதிவிலும் இடப்படும். பழைய பதிவுக்கு ஓய்வு. (a well deserved rest!)

அன்புடன்,
டோண்டு ராகவன்

166 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ராகவன் அவர்களே,

இப்போதெல்லாம் உங்களைப்போலப் பலர் தாங்கள் பிறரின் பதிவுகளில் இடும் பின்னூட்டங்களைச் சேமித்து வைக்கிறார்கள்.

ஆனால், உங்களைப்போல அல்லாமல் தனியாகப் பதிவொன்றைத் தொடக்கி சேமிக்கிறார்கள்.

அவர்களைப்போல நீங்களும் செய்யுங்கள். நீங்கள் பின்னூட்டம் இடும்போதெல்லாம் அந்தப் பதிவின் முகவரியையும் சேர்த்து எழுதலாம். விரும்புபவர்கள் அங்கே வந்து பார்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

விட்டுப்போனது:

இங்கே இப்படித் தொடர்பின்னூட்ட மழை பொழிவது இடைஞ்சலாக இருப்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியத்தேவையில்லை..

-மதி

dondu(#11168674346665545885) said...

"ஆனால், உங்களைப்போல அல்லாமல் தனியாகப் பதிவொன்றைத் தொடக்கி சேமிக்கிறார்கள்."

அதைத்தானே நானும் இங்கு செய்கிறேன்?

அல்லது ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் ஒரு பதிவு போடுவது, அதுவும் இதற்காகவே ஒரு புது வலைப்பூவைத் திறந்து அதில் குழுவில் இல்லாதவர்களின் பின்னூட்டத்தைத் தடுத்து செட்டிங்க்ஸ் செய்து கொள்வது என்பதைக் குறிப்பிடுகிறீர்களா?

கட்டுப்படி ஆகுமா? டேஷ்போர்டிலேயே 300 பதிவுகளுக்கு மேல் வரிசைப்படுத்த முடிவதில்லையே. மேலும் என்னுடைய இம்முறை எனக்கு என் பின்னூட்டங்களின் எதிர்வினையை அறிய உதவுகிறது.

It is all a matter of self-preservation.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

i meant start a blog just to save your comments. i have seen couple of blogs. infact more than one blogger wanted to add such a blog to thamizmanam. and withdrew their request, once the logistical problems were explained to them.

Those blogs to save comments are existing. I dont have the links iwth me right now.

You could do the same!

This way everybody's sanity would be preserved along with your's.

-Mathy

ஐயர் said...
This comment has been removed by a blog administrator.
கசி said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்களின் இப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ.

நீங்கள் கூறுவது என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஹைப்பர் லிங்குகளை நினைவுபடுத்துகிறது. அவற்றுக்கான சில உதாரணங்கள்:
1)
2)

உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யமாக உள்ளன. தொடருங்கள்.

என்னுடைய இந்தப் பின்னூட்டத்தின் நகல் என்னுடைய இப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://kuzhali.blogspot.com/2005/12/blog-post_08.html#comments
"வெற்றிக்கொடி கட்டு" படத்தில் பார்த்திபன் வடிவேலு நகைச்சுவை காட்சிகளில் எனக்குப் பிடிக்காதது வடிவேலு டாய்லட்டை சுத்தம் செய்து சம்பாதித்ததை பார்த்திபன் கேலி செய்வதுதான்.

வடிவேலு பந்தா செய்தார் ஆகவே வேண்டும் அவருக்கு என்று கூறவும் முடியவில்லை. அதற்கானக் காரணத்தில் கூட அப்பாத்திரத்தின் உள்ளூடிய சோகம்தான் நினைவுக்கு வந்து படுத்தியது.

சென்னை மணப்பாக்கத்தில் பயிற்சி அளித்து சிங்கப்பூர் மலேசியா நாடுகளுக்கு அனுப்பும் ஒரு நிறுவனத்திற்கு நான் மொழி பெயர்ப்பு வேலைக்காகச் சென்றேன். இரண்டு சீனர்கள் வந்திருந்தனர். அவர்கள் பேசிய ஆங்கிலத்தை மொழி பெயர்க்கும் வேலை. வந்த சில நிமிடங்களிலேயே முதலில் வாக்களித்த சம்பளம் அளவுக்கு நிஜமாகக் கிடைக்காது என்பது தெரிந்து போயிற்று. ஆனால் என்ன செய்வது, பயிற்சி எடுத்தவர்கள் ஏற்கனவே செலவு பல செய்து முடித்துவிட்டிருந்தனர். விதியே என்று கொடுப்பதற்கு கையெழுத்திட வேண்டியதாயிற்று.

சீனர்கள் அசந்திருந்த சமயத்தில் நான் வேகமாகத் தமிழில் பேசி நம்மவர்கள் கேட்க வேண்டிய கேள்விகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். அவ்வளவுதான் என்னால் முடிந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வானம்பாடி said...

This is my humble suggestion.

You could start another blog (like donducomments.blogspot.com) and have a post with the explanation. Start saving these comments to the comments section of that post. You may not list that blog in Thamizmanam. This avoids the constant position that the comment-post now gets in the commented blogs section. Whenever you want others to refer the comments, you can link the other blog.

dondu(#11168674346665545885) said...

"This avoids the constant position that the comment-post now gets in the commented blogs section. Whenever you want others to refer to the comments, you can link the other blog."

That is the whole point of the exercise. Poli Dondu is still active and the problem for me is still persisting. I don't think there is anyone else, who is being singled out like I am. With the present arrangement he is not so brazen. Let the newcomers too know about this indecent fellow so that can be wary of him.

Tell me one thing frankly. Is there some technical or logistical problem of overloading the Tamilmanam system with this post of mine remaining in the commented posts section? If that is the case, please say so and I understand and will do as you suggest.

The earlier post has grossed more than 500 comments and it was getting unwieldy to open it and post the comments. Hence I opened this post.

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://kuzhali.blogspot.com/2005/12/blog-post_06.html#comments
"தமிழ் பிராமணர்களை பார்த்து ஒரு வகை பொறாமையுண்டு, ஏன் அவர்களைப் போல நாங்கள் முன்னேற முடியவில்லை என்று :-)
எங்கள் சமூகத்தில் 75 % சதவீதம் லோ மிடில் கிளாஸ், சிலர் எங்களைப் போல இப்பொழுது முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். ஐ.ஐ.டி, மருத்துவம், ஐ.ஏ. எஸ் போன்ற அரசு உயர்பதவிகள் படிப்பவர்களை பூத கண்ணாடி வைத்து தேட வேண்டும் . மெல்ல இப்பொழுதுதான் இஞ்சினீயரிங் கல்லூரியில் நுழைந்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நாங்கள் பிராமண வகுப்பு :-)"

மன்னிக்கவும், புரியவில்லையே. விளக்க முடியுமா? முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகப் படுகிறது.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் வரும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

மரத் தடி said...

தமிழ்மணம் முன்பக்கத்தில் தன் பதிவு வரவில்லை என்றால்கூட அடிக்கடி test என்று அடித்துப் பார்க்கும். இதற்கெல்லாம் எங்கே புரியப் போகிறது?

dondu(#11168674346665545885) said...

வீர வன்னியன் அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://veeravanniyan.blogspot.com/2005/12/blog-post_09.html#comments
"மற்றபடி வலைப்பதிவு செய்யும் எல்லோரும் என் நண்பர்கள் தான். டோண்டு மாமா உட்பட"

இவ்வாறு சொல்லிக்கொள்ளும் நீங்கள் செய்வது வேறு மாதிரியாக இருக்கிறதே. உங்கள் பதிவு http://veeravanniyan.blogspot.com/2005/10/blog-post_13.html
அதில் போலி டோண்டு என் பெயரில் பின்னூட்டமிட்டு அசிங்கப்படுத்தியிருக்கிறான். அதை வைத்து திரு ஜோசஃப் அவர்கள் என்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டார். குழலி வந்து உண்மை கூறியதும் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவர் நாகரீகம் தெரிந்த மனுஷன். ஆனால் நீங்கள்? அப்பின்னூட்டங்களை அப்படியே இந்த நிமிடம் வரை வைத்திருக்கிறீர்களே. இதுதான் நண்பருக்கு அழகா? பார்ப்பன எதிர்ப்பு என்பதைத் தவிர வேறு என்னக் காரணம் இதற்கிருக்கும் என நினைக்கிறீர்கள்?

Wo steckt Ihre "wohlbekannte Reife darin?"

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மோகந்தாஸ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://imohandoss.blogspot.com/2005/12/blog-post_06.html#comments

இங்கே வந்து டோண்டு அவர்களின் முகவரியை தவறாகப்பயன்படுத்தும் அன்பருக்கு. நான் IP Tracker வைத்திருக்கிறேன். என்னிடம் விளையாடவேண்டாம்."

மிக்க நன்றி மோகந்தாஸ் அவர்களே.

இப்போது விசிலடிப்பது பற்றி சில வார்த்தைகள். எனக்கு இந்த விஸில் அடிக்க வந்ததேயில்லை. எவ்வளவு முயற்சி, இருப்பினும் ஒன்றும் பயனில்லை. என் நண்பன் ஏ.வி பார்த்தசாரதி விஸிலிலேயே "பீஸ் சால் பாத்" படப் பாடல்களைப் பாடுவான். ரொம்ப நன்றாக இருக்கும்.

தி.மு.க. தலைவர்களில் ஒருவரான அன்பில் தருமலிங்கம் அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் சேலஞ்சுக்காக விஸிலடித்துக் காண்பிக்க அவருக்கு துக்ளக் வாசகர் ஒருவர் அன்பிகில் தர்மலிங்கம் என்று பெயர் வைத்து துக்ளக்குக்கு எழுதினார்.

இப்பின்னூட்டத்தின் நகல் இதற்காகவே நான் வைத்திருக்கும் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும்.

பார்க்க:
http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அருண் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ.

சோவை பற்றி நான் போட்ட பதிவில் நான் கூறியிருந்தவற்றில் சில இங்கே.

"துக்ளக்கை அதன் முதல் இதழிலிருந்துப் படித்து வருபவன் என்னும் முறையில் திட்டவட்டமாகக் கூறுவேன். அவர் ஒருபோதும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசனம் செய்தது இல்லை."

"சினிமாக் கவர்ச்சி, இலவசப் பரிசுத் திட்டம் ஒன்றும் இல்லாது வெற்றிகரமாகத் தன் பத்திரிகையை நடத்தி வருகிறார். அவர் பேசும் பொதுக் கூட்டங்கள், நடத்தும் நாடகங்கள் ஆகியவை அடையும் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுபவர் பலர். என்ன செய்வது ஐயாமார்களே? உண்மையை உண்மை என்றுதான் ஒத்துக் கொள்ள முடியும்."

அப்பதிவுக்கு வந்த பின்னூட்டங்களைப் பாருங்கள். அவர் உயர்தர முறையில் பத்திரிகை நடத்துவதை யாராலும் மறுக்க இயலவில்லை. அதற்காக அவரை திட்டுவதிலும் குறையவில்லை.

இந்தப் பின்னூட்டத்தின் நகல் என்னுடைய பிரத்தியேகப் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

பல்லவி அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://pallavi2005.blogspot.com/2005/12/blog-post_113398719361438789.html

பல்லவி அவர்களே,
போலி டோண்டுவின் வலையில் விழுந்து விட்டீர்களே. மேலே என் பெயரில் பின்னூட்டம் இட்டது போலி டோண்டு. அந்தப் பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தல் தெரியும் ப்ளாக்கர் எண் 11882041

ஆனால் என்னுடைய ப்ளாக்கர் எண் 4800161. அவனுடைய ப்ளாக்கர் எண்ணை க்ளிக் செய்து போனால் என்னுடைய ஃபோட்டொவுடன் என் வலைப்பூ மாதிரியே செட் அப் செய்து வைத்திருக்கிறான் அந்த இழி பிறவி.

அதைப் பற்றி நான் ஏற்கனவே உங்கள் இன்னொரு பதிவில் பின்னூட்டம் இட்டப் போது குறிப்பிட்டேனே, பார்க்க http://pallavi2005.blogspot.com/2005/12/blog-post_113398719361438789.html

மேலே என் பெயரில் போலி டோண்டு இட்டப் பின்னூட்டத்தை அழிக்கவும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சரி வந்ததுதான் வந்தேன், உங்கள் இப்பதிவுக்கான என் பின்னூட்டம் இதோ.

(இங்கு டோண்டு அவர்கள் கணவன் பெண்ணின் உடல் இச்சையை பூர்த்தி செய்யாவிட்டால் என்ன பெண்களும் உறையை மாட்டி கொண்டு மற்றவர்களிடம் செல்லுங்கள் என்று ஆலோசனை கூற வேண்டாம்.ஏனென்றால் இங்கு ஒரு பெண்ணின் இச்சையை எப்படி பூர்த்தி செய்வது என்று வடிகால் கேட்கவில்லை.ஒரு மனைவியின் இச்சையை கணவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் வலியுருத்தப்படுகிறது.மனைவிக்கும் உடல் இச்சை,விரக தாபங்கள் உண்டு அதை உணர்ந்து கணவன் அவளை பூர்த்தி செய்ய வேண்டுமென்பதே.இங்கு சொல்லப்படுவதும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் கணவன் மனைவியை பற்றியே)

அப்படீங்கறீங்க? நான் எங்கும் அவ்வாறு ஆலோசனை கூறவில்லையே. என் பதிவுகளைச் சரியாகப் படிக்கவும். அவ்வாறு போகிறவர்களின் நியாயத்தைப் புரிந்து கொண்டேன் என்றுதான் கூறினேன். அவ்வாறு செல்ல நேரிட்டால் முன்ஜாக்கிரதை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் கூறினேன்.

அது சரி, புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வந்தால் அவன் மனைவி என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

Please give an honest reply reflecting your convictions.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

For your future guidance:
1. My comments should carry my photo as well show my correct blogger number 4800161 on mouseover.
2. Whenever I comment elsewhere, its copy will be posted as comment in my special post http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

காயத்திரி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://yaalisai.blogspot.com/2005/12/blog-post.html
The above comment in my name is not mine. In this connection, I repeat the comment I gave in Pallavi's blog, which is self explanatory. Please delete the spurious comment and be vigilant. It is important to me as I am being slandered in the attempt made by the lowly worm that is போலி டோண்டு.

Now for my comment in Pallavi's blog, which is awaiting her moderation:

பல்லவி அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://pallavi2005.blogspot.com/2005/12/blog-post_113398719361438789.html

பல்லவி அவர்களே,
போலி டோண்டுவின் வலையில் விழுந்து விட்டீர்களே. மேலே என் பெயரில் பின்னூட்டம் இட்டது போலி டோண்டு. அந்தப் பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் தெரியும் ப்ளாக்கர் எண் 11882041

ஆனால் என்னுடைய ப்ளாக்கர் எண் 4800161. அவனுடைய ப்ளாக்கர் எண்ணை க்ளிக் செய்து போனால் என்னுடைய ஃபோட்டொவுடன் என் வலைப்பூ மாதிரியே செட் அப் செய்து வைத்திருக்கிறான் அந்த இழி பிறவி.

அதைப் பற்றி நான் ஏற்கனவே உங்கள் இன்னொரு பதிவில் பின்னூட்டம் இட்டப் போது குறிப்பிட்டேனே, பார்க்க http://pallavi2005.blogspot.com/2005/12/blog-post_113398719361438789.html

மேலே என் பெயரில் போலி டோண்டு இட்டப் பின்னூட்டத்தை அழிக்கவும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சரி வந்ததுதான் வந்தேன், உங்கள் இப்பதிவுக்கான என் பின்னூட்டம் இதோ.

(இங்கு டோண்டு அவர்கள் கணவன் பெண்ணின் உடல் இச்சையை பூர்த்தி செய்யாவிட்டால் என்ன பெண்களும் உறையை மாட்டி கொண்டு மற்றவர்களிடம் செல்லுங்கள் என்று ஆலோசனை கூற வேண்டாம்.ஏனென்றால் இங்கு ஒரு பெண்ணின் இச்சையை எப்படி பூர்த்தி செய்வது என்று வடிகால் கேட்கவில்லை.ஒரு மனைவியின் இச்சையை கணவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் வலியுருத்தப்படுகிறது.மனைவிக்கும் உடல் இச்சை,விரக தாபங்கள் உண்டு அதை உணர்ந்து கணவன் அவளை பூர்த்தி செய்ய வேண்டுமென்பதே.இங்கு சொல்லப்படுவதும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் கணவன் மனைவியை பற்றியே)

அப்படீங்கறீங்க? நான் எங்கும் அவ்வாறு ஆலோசனை கூறவில்லையே. என் பதிவுகளைச் சரியாகப் படிக்கவும். அவ்வாறு போகிறவர்களின் நியாயத்தைப் புரிந்து கொண்டேன் என்றுதான் கூறினேன். அவ்வாறு செல்ல நேரிட்டால் முன்ஜாக்கிரதை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் கூறினேன்.

அது சரி, புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வந்தால் அவன் மனைவி என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

Please give an honest reply reflecting your convictions.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

For your future guidance:
1. My comments should carry my photo as well show my correct blogger number 4800161 on mouseover.
2. Whenever I comment elsewhere, its copy will be posted as comment in my special post http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பல்லவி அவர்களே என்னுடைய பக்கம் http://dondu.blogspot.com என்பதில் உள்ளது. அவன் வேண்டுமென்றே என்னுடைய Dondus dos and donts என்ற தலைப்பில் ஜாதிவெறியன் என்று பெயர் வரும் பக்கத்தில் போடுகிறான். அப்பக்கத்தில் நான் எழுதிய பதிவுகளை நகலெடுத்து அதில் குசும்புத்தனமாக மாற்றங்கள் செய்து வருகிறான்.

உங்கள் பதிவுகளில் நானே இடும் பின்னூட்டத்தில் வரும் பெயரில் எலிக்குட்டியை வைத்தால் என் ப்ளாக்கர் எண் 4800161 வரும், அதில் என் ஃபோட்டோவும் நீங்கள் ஃபோட்டோக்களை எனேப்ள் செய்திருந்தால் வரும். மேலும் என் பின்னூட்டங்களின் நகல் இந்தப் பதிவிலும் வரும்.

ஜாதிவெறியன் என்ற பெயரில் பக்கம் வந்தால் அந்தப் பின்னூட்டம் நான் இட்டதில்லை.

நேரம் இருக்கும்போது இந்தப் பதிவின் முன்னோடியைப் பார்க்கவும். 500-க்கும் மேல் அதில் பின்னூட்டங்கள். திறந்து மூட நேரம் ஆவதால் இப்பதிவை போட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இது வரை உங்கள் இரு பதிவுகளில் ஒவ்வொன்றாக இரு பதிவுகள் போட்டுள்ளேன்.

முதல் பின்னூட்டத்தின் நகல் இப்பதிவின் முன்னோடிப் பதிவில் நகலிடப்பட்டுள்ளது. இரண்டாவது இப்பதிவில் நகலிடப்பட்டது.

முதல் பின்னூட்டத்தில் ஆண் பெண் கற்பு நிலை பற்றி நான் எழுதிய மூன்று பதிவுகளின் சுட்டிகளை ஹைப்பர் னிங்காகக் கொடுத்திருந்தேன். இரண்டாம் பின்னூட்டத்தில் நீங்கள் போலி டோண்டுவின் வலையில் விழுந்து விட்டீர்கள் என எழுதினேன்.

For your future guidance:
1. My comments should carry my photo as well show my correct blogger number 4800161 on mouseover.
2. Whenever I comment elsewhere, its copy will be posted as comment in my special post http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அருண் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

http://arunhere.com/pathivu/?p=127

விடுங்கள் அருண் அவர்களே. இவர்களின் புலம்பல்கள் எல்லாம் சோ என்னும் சிறந்த பத்திரிகையாளரை இருட்டடிப்பு செய்ய முடியாது. நான் ஏற்கனவே வேறு பல இடங்களில் கூறியதையே இங்கு திருப்பி எழுதுகிறேன். ஏனெனில் அவை சொல்லப்படவேண்டிய உண்மைகளே.

வருடம் 1975. நெருக்கடி நிலை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருந்தன. அப்போது தமிழக அரசை எதிர்த்து எழுதுவது ஊக்குவிக்கப்பட்டது. தன்னுடையப் பதவிக்காக நாட்டின் எதிர்க்காலத்தையே அடகு வைக்கத் துணிந்த ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்ட பிரதம மந்திரி அப்போது கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். தமிழகப் பத்திரிகைகள் சகட்டுமேனிக்கு தி.மு.க. அரசை எதிர்த்து எழுதி வந்தன.

கௌரவர் சபையில் அனைத்துப் பெரியவர்களும் பயத்தாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ வாய்ப் பொத்தி அமர்ந்திருக்க, வீறு கொண்டெழுந்தான் விகர்ணன். அது மஹபாரதத்தில் ஒரு அருமையான இடம். அதற்குச் சற்றும் குறைந்திராத அளவில் வீறு கொண்டு எழுந்தது துக்ளக்.

ஜூன் 25, 1975 தேதிக்கு முன்னால் வந்த துக்ளக்கில் அதன் ஆசிரியர் சோ ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி எப்போது மத்திய அரசை எதிர்த்து எழுதச் சுதந்திரம் இல்லையோ தான் மாநில அரசையும் எதிர்த்து ஒன்றும் எழுதப் போவதில்லை என்றுத் திட்டவட்டமாக அறிவித்தார் அவர். இத்தனைக்கும் அவருக்கு எதிராக தி.மு.க. அரசு பல அடாவடி நடவடிக்கை எடுத்து வந்திருந்தது. ஆனாலும் கீழே வீழ்த்தப்பட்டவரை அவர் எப்போதுமே மேலே தாக்கியதில்லை. அதற்கும் மேல் 1976-ல் தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டப் போது அவர் நேரடியாகக் கருணாநிதி அவர்கள் இல்லத்திற்குச் சென்று அவரிடம் தன் தார்மிக ஆதரவைத் தெரிவித்தார். அப்போது யாருமே கருணாநிதி அவர்கள் அருகில் செல்லத் துணியவில்லை.

இந்திரா அவர்கள் பெண்மணி என்பதால் சோ அவரை எதிர்க்கவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். நீங்கள் கூறியது போல அவர் பெண்ணை எதிர்ப்பது போன்ற தோற்றம் வருவது வெறுமனே அவரின் கேலியாக எழுதும் பக்கத்தின் பங்களிப்புதான் என்பது யாருக்கு புரிகிறதோ இல்லையோ நமக்குப் புரிகிறது.

சோ பெண்களை வெறுப்பவர் இல்லை. அவ்வாறானத் தோற்றம் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. என்ன, பெண் என்பதற்காக அவர்கள் தவறு செய்தால் கண்டிக்காமல் இருப்பது அவருக்குப் பிடிக்காது.

பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார். அதில் என்னத் தவறு? இப்போதுதான் பார்க்கிறோமே. பெண்கள் பஞ்சாயத்துத் தலைவிகளாக இருக்கும் பஞ்சாயத்தில் அவர்கள் கணவர்மார்கள்தானே கோலோச்சுகிறார்கள். இப்போது 33 1/3 % ஒதுக்கீடு வந்தாலும் அதுதானே அனேகமாக நடக்கும்? ஆகவே தனிப்பட்டப் பெண்கள் தங்கள் சொந்த பலத்தில் தேர்தலை ஜெயித்து வரட்டும் என்று வெளிப்படையாகக் கூறுகிறார். அது அவர் கருத்து. இதில் பெண் வெறுப்பு எங்கிருந்து வந்தது? அவர்களை கிண்டலடித்து எழுதும் அதே நேரத்தில் மற்ற ஆண்களை மட்டும் விட்டு விடுகிறாரா என்ன?

சோவின் ஒரு தனித்தன்மை என்று நான் கருதுவது என்னவென்றால் அது அவருடையத் தன்னம்பிக்கை நிறைந்தத் துணிச்சல் என்பதுதான். சங்கராச்சாரியாரின் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். தருமபுரி வழக்கை இழுத்தடிக்கும் அம்மாவின் அரசு இதில் இவ்வாறு முனைவது ஏன் என்று அவர் கேட்பதில் என்னத் தவற்றைக் கண்டீர்கள்? அதை விடுங்கள். உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். போலீஸார் வேண்டுமென்றே எல்லா விவரங்களையும் பத்திரிகைகளுக்கு லீக் செய்யவில்லையா? சங்கராச்சாரியார் ஒப்புதல் வாகுமூலம் கொடுத்து மன்னித்து விடுமாறுக் கதறி அழுததாக நக்கீரன் எழுதியது முன்னால். இப்போது பேச்சு மூச்சே இல்லை. உச்ச நீதி மன்றத்தில் துளசி வழியாத அசடா? இப்பொது? தமிழக அரசின் செயல்பாட்டில் குறையிருப்பதால்தானே வழக்குகள் பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டன?
சங்கராச்சாரியார் குற்றம் செய்தாரா இல்லையா என்பதை கோர்ட் பார்த்துக் கொள்ளும் அதற்கு முன்னரே நம்முடைய கிசு கிசு பத்திரிகைகள் அவரைப் பற்றி நாக்கூசாமல் எழுதின. எந்த அடிப்படையில்? சோவிற்கு இவ்வாறு எல்லோரும் சேர்ந்து ஒரு பட்சமாக ஒருவருக்கு தர்ம அடி கொடுப்பது பிடிக்காது. அதனால் அவர் தன் தரப்பிலிருந்து எழுதுவது ஒரு பேலன்ஸிங் செயலாகத்தான் இருக்க முடியும். குற்றச்சாட்டுகளில் இருக்கும் முரண்பாட்டுக்கு அரசால் என்னச் சமாதானம் கூற முடிந்தது?
சங்கரராமன் ஒரு ப்ளாக்மெயிலர் என்று ஜனவரி 2005 மீட்டிங்கில் குறிப்பிட்டார். அவர் கொல்லப்பட்டார் என்றுக் கூறியதற்கு "அதனால் அவர் ப்ளாக்மெயிலர் என்பது பொய்யாகி விடாது" என்று கர்ஜித்தார். ம்யூஸிக் அகாடெமி ஹாலில் இது எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. இக்கேஸைப் பற்றிய அவருடையப் பேச்சுக்களிலும் எல்லாத் தரப்பையும் பார்த்துத்தான் அவர் பேசினார். நான் அதற்கு நேரடி சாட்சி. இந்த நியாயமான அணுகுமுறை எவ்வளவு பத்திரிகையாளர்களுக்கு இருக்கும் என நினைக்கிறீர்கள்?

தங்கமணி அவர்கள் சோ அவர்களின் உள்நோக்கங்களைப் பற்றி எழுதினார். அவர் உள் நோக்கம் உள்ளவர்தான். அதாவது தன் பத்திரிகையை இவ்வாறு பயமின்றி நடத்திச் செல்ல வேண்டும் என்பது. அதனால்தான் அவர் எந்தத் தலைவரிடமும் போய் தனக்காக உதவி கேட்டவர் இல்லை.

இடதுசாரி அரசியல்வாதிகளுக்கு அவரைப் பிடிக்காது. காரணம் அவரது சோவியத் எதிர்ப்பே. இந்தியாவை மாஸ்கோ அடிமைப்படுத்துவது பற்றி அவர் எழுபதுகளிலேயே தொடராக எழுதினார். பலர் எதிர்த்தனர்.

ஆனால் மாஸ்கோவைப் பற்றி அவர் எழுதியது உண்மை என்று 1991-க்குப் பிறகு ருஷ்யாவில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ ஆவணங்களே சாட்சி. கம்யூனிஸ்டுகள் தனக்குத் தொல்லை கொடுக்காமலிருக்குமாறு அவர்களிடம் சோவியத் யூனியன் கூற வேண்டும் என்று அன்னை மாதா தாயார் இந்திரா காந்தி பிரஷ்னெவிடம் முறையிட்டிருந்தது உங்கள் எல்லோருக்கும் மறந்து விட்டதா?

அதே போல ஸ்டாலின் இறந்ததற்கு நம் மத்திய அரசாங்கம் இரண்டு நாட்கள் விடுமுறை விட, சோவியத் யூனியனிலோ அரை நாள் கூட விடுமுறை இல்லை. நாம் அசடு வழிந்ததுதான் மிச்சம். செக்கொஸ்லாவோகியாவில் சோவியத் யூனியன் 1968-ல் செய்த அட்டூழியத்துக்கு எல்லோரும் அதைக் கண்டிக்க இந்தியா மட்டும் நடுநிலைமை வகித்தது வெட்கக் கேடான விஷயம் அல்லவா? இதையெல்லாம் பார்த்துத்தான் சோ அவ்வாறு எழுதினார்.

ஆனால் ஒன்று அருண் அவர்களே. நிஜமாகத் தூங்குகிறவர்களை எழுப்ப இயலும். அவ்வாறு பாவனை செய்பவர்களைக் கண்டிப்பாக எழுப்ப முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அருண் அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://arunhere.com/pathivu/?p=131
எதற்கு ஏழு நட்சத்திரங்கள் எல்லாம் போட்டு மெனக்கெடுகிறீர்கள்? அந்த இழிபிறவி போலி டோண்டுதான் என்பதை சின்னக் குழந்தையும் சொல்லும்!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அருண் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட பின்னூட்டம் இதோ. பார்க்க: http://arunhere.com/pathivu/?p=127

"நீண்ட நாள் ‘துக்ளக்’ வாசகன் என்ற முறையில் ,என்னைப் பொறுத்தவரை சோ ஒரு ‘அபாயகரமான புத்திசாலி’. ஒரு வாசகனாக ‘சோமாரித்தனம்’ விளங்குவதற்கு கொஞ்ச நாட்கள் எடுக்கும் .அதுவரை அந்த நடுநிலை மாயை வலையில் வசமாக சிக்கிக்கொள்ளலாம்."
அப்படி எவ்வளவு நாட்கள் வாசகனாக இருந்தீர்கள். நான் முதல் இதழிலிருந்தே அப்பத்திரிகையின் வாசகன். நான் கூறுகிறேன் சோ அவர்கள் மற்றப் பத்திரிகையாளர்களை விட எவ்வளவோ உயர்ந்தவர். ஆ ஊ என்றால் உடனே பார்ப்பனர் என்று கூறி பழிப்பவர்கள் தங்கள் தாழ்வு மனப்பான்மையை மாற்றிக் கொள்ளட்டும் இல்லாவிட்டால் எப்படியோ போகட்டும்.

இதை எல்லாம் பார்த்துத்தான் நான் http://dondu.blogspot.com/2005/04/blog-post.html என்னும் உரலில் இப்பதிவை இட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வீர வன்னியன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://veeravanniyan.blogspot.com/2005/12/blog-post_13.html#comments

இவ்வளவு இப்போது பேசும் நீங்கள் என் பெயரில் போலி டோண்டு பின்னூட்டம் உங்கள் பதிவில் இட்டு அசிங்கப்படுத்தியிருக்கிறான் என்பதை நான் பலமுறை நிரூபித்துக் காட்டியும் அப்படியே அவற்றை எடுக்காமல் வைத்திருக்கிறீர்களே, இதற்கு என்ன காரணம்? இப்போது நீங்கள் அந்த வலியை உணர்கிறீர்களா?

இது சம்பந்தமாக உங்களுக்கு நான் ஏற்கனவே இட்டப் பின்னூட்டங்களில் ஒன்றை இங்கு தருகிறேன்.

"மற்றபடி வலைப்பதிவு செய்யும் எல்லோரும் என் நண்பர்கள் தான். டோண்டு மாமா உட்பட"
இவ்வாறு சொல்லிக்கொள்ளும் நீங்கள் செய்வது வேறு மாதிரியாக இருக்கிறதே. உங்கள் பதிவு http://veeravanniyan.blogspot.com/2005/10/blog-post_13.html
அதில் போலி டோண்டு என் பெயரில் பின்னூட்டமிட்டு அசிங்கப்படுத்தியிருக்கிறான். அதை வைத்து திரு ஜோசஃப் அவர்கள் என்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டார். குழலி வந்து உண்மை கூறியதும் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவர் நாகரீகம் தெரிந்த மனுஷன். ஆனால் நீங்கள்? அப்பின்னூட்டங்களை அப்படியே இந்த நிமிடம் வரை வைத்திருக்கிறீர்களே. இதுதான் நண்பருக்கு அழகா? பார்ப்பன எதிர்ப்பு என்பதைத் தவிர வேறு என்னக் காரணம் இதற்கிருக்கும் என நினைக்கிறீர்கள்?
Wo steckt Ihre "wohlbekannte Reife darin?"
இப்போது கூறுகிறீர்கள்: "நான் நாகரிமாக செய்தாலும், அநாகரிகமாக செய்தாலும், மனித குலத்திற்கே விரோதமான செய்கைகளை செய்தாலும் அதனை என் பதிவில் தான் செய்வேன். அடுத்தவர் பதிவில் வந்து செய்ய மாட்டேன்."
நானும் பின்னூட்டம் இட்டால் என் பெயரில் ப்ளாக்கர் பின்னூட்டங்களாகத்தான் இடுவேன். என் பெயரில் போலி டோண்டு தரும் பின்னூட்டங்களைக் கண்டு அறிந்து கொள்வதும் கடினம் இல்லை. அப்படியெல்லாம் இருந்தும், நான் பல முறை அதை நிரூபித்து காண்பித்தும் நீங்கள் சம்பந்தப்பட்ட அப்போலிப் பின்னூட்டங்களை அப்படியே இந்த நிமிடம் வரை வைத்திருக்கிறீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நான் மேலே வீரவன்னியன் பதிவில் இட்டப் பின்னூட்டத்தின் நகலை அருண் அவர்களின் பதிவிலும் இட்டேன். பார்க்க:
http://arunhere.com/pathivu/?p=131

வீர வன்னியன் இப்பதிவில் அவர் பெயரில் இடப்பட்டப் பின்னூட்டம் அவர் இட்டதில்லையென்று ஒரு புதிய பதிவு போட்டுள்ளார். அதில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://veeravanniyan.blogspot.com/2005/12/blog-post_13.html#comments

இவ்வளவு இப்போது பேசும் நீங்கள் என் பெயரில் போலி டோண்டு பின்னூட்டம் உங்கள் பதிவில் இட்டு அசிங்கப்படுத்தியிருக்கிறான் என்பதை நான் பலமுறை நிரூபித்துக் காட்டியும் அப்படியே அவற்றை எடுக்காமல் வைத்திருக்கிறீர்களே, இதற்கு என்ன காரணம்? இப்போது நீங்கள் அந்த வலியை உணர்கிறீர்களா?

இது சம்பந்தமாக உங்களுக்கு நான் ஏற்கனவே இட்டப் பின்னூட்டங்களில் ஒன்றை இங்கு தருகிறேன்.

“மற்றபடி வலைப்பதிவு செய்யும் எல்லோரும் என் நண்பர்கள் தான். டோண்டு மாமா உட்பட”
இவ்வாறு சொல்லிக்கொள்ளும் நீங்கள் செய்வது வேறு மாதிரியாக இருக்கிறதே. உங்கள் பதிவு http://veeravanniyan.blogspot.com/2005/10/blog-post_13.html
அதில் போலி டோண்டு என் பெயரில் பின்னூட்டமிட்டு அசிங்கப்படுத்தியிருக்கிறான். அதை வைத்து திரு ஜோசஃப் அவர்கள் என்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டார். குழலி வந்து உண்மை கூறியதும் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவர் நாகரீகம் தெரிந்த மனுஷன். ஆனால் நீங்கள்? அப்பின்னூட்டங்களை அப்படியே இந்த நிமிடம் வரை வைத்திருக்கிறீர்களே. இதுதான் நண்பருக்கு அழகா? பார்ப்பன எதிர்ப்பு என்பதைத் தவிர வேறு என்னக் காரணம் இதற்கிருக்கும் என நினைக்கிறீர்கள்?
Wo steckt Ihre “wohlbekannte Reife darin?”
இப்போது கூறுகிறீர்கள்: “நான் நாகரிமாக செய்தாலும், அநாகரிகமாக செய்தாலும், மனித குலத்திற்கே விரோதமான செய்கைகளை செய்தாலும் அதனை என் பதிவில் தான் செய்வேன். அடுத்தவர் பதிவில் வந்து செய்ய மாட்டேன்.”
நானும் பின்னூட்டம் இட்டால் என் பெயரில் ப்ளாக்கர் பின்னூட்டங்களாகத்தான் இடுவேன். என் பெயரில் போலி டோண்டு தரும் பின்னூட்டங்களைக் கண்டு அறிந்து கொள்வதும் கடினம் இல்லை. அப்படியெல்லாம் இருந்தும், நான் பல முறை அதை நிரூபித்து காண்பித்தும் நீங்கள் சம்பந்தப்பட்ட அப்போலிப் பின்னூட்டங்களை அப்படியே இந்த நிமிடம் வரை வைத்திருக்கிறீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முத்துக்குமரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. அது அவருடைய மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://eenpaarvaiyil.blogspot.com/2005/12/blog-post.html
நான் என்ன எழுதினேன் என்பதை ஒழுங்காகப் படித்து எழுத வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்ததாகத் தெரியவில்லை.
நீங்கள் இப்பதிவில் எழுதியது:
"திரு டோண்டு அவர்களின் ஆண்-பெண் கற்புநிலை-3 என்ற பதிவை எதேச்சையாக பார்த்த போது ஒரு பின்னூட்டமிட்ட நண்பருக்கு இந்த விளக்கத்தை சொல்லியிருக்கிறர்.
''பால்ய விவாகங்கள் பெண்களின் உடல் இச்சையை தீர்ப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது''
என்னுடைய அந்தப் பதிவில் நான் எழுதியது:
"பாலியல் உறவுக்கு உடல் தயாராகி பல ஆண்டுகள் கழித்துத்தான் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி திருமணம் நடக்கிறது. இடைபட்ட காலத்தில் உடல் இச்சை வரவே வராதா? ஆண் இதில் அதிகம் கஷ்டம் அடைவதில்லை. பெண்தான் அவதிக்குள்ளாகிறாள். பழங்காலத்தில் பால்ய விவாகத்துக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்த முறையில் வேறு சிக்கல்கள் எழுந்தன. உதாரணத்துக்கு பால்ய விதவைகள். அதில் மட்டும் சற்றே கருணையுடன் நடந்து, பால்ய விதவைகளுக்கும் மறு திருமணம் செய்து வைத்திருந்தால் பலரது வாழ்க்கை பாழாகாது இருந்திருக்கும். இந்த பிரச்சினையை ஹிந்தி படம் "ப்ரேம் ரோக்"-ல் ராஜ் கபூர் மிக அழகாக எடுத்துக்கூறியுள்ளார்."
பின்னூட்டத்தை மட்டும் மேற்கோள் காட்டி பதிவில் எழுதியதை விட்டு விட்டீர்கள்.
மேலும் என் பதிவில் நீங்கள் இட்டப் பின்னூட்டமும் அதற்கான என் பதிலும் இதோ:
"எத்தனை உயர்வான பார்வை பெண்கள் மீது
பெண்களை பற்றி உங்களுக்கு இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இருக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றே.
இன்று பெண்ணியம் பேசும் பலரின் உண்மை முகம் இதுதான்.."
நான் இட்ட பதில்:
"நான் கூறியது யதார்த்தம். மனித இனத்தில் பாதி அளவில் இருக்கும் பெண்கள் எதிர்க்கொள்ளும் சங்கடங்களையே இங்கு கூறப் புகுந்தேன். பால்ய விவாகங்கள் நடந்ததற்கு முக்கியக் காரணமே நான் கூறியதுதான். பெண் ருதுவாவதற்கு முன்னாலேயே அவளுக்கு திருமணம் முடிக்காது இருந்தால் அவளே தனக்கேற்ற வரனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அன்று மனு சாஸ்திரத்திலேயே இருந்திருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு?
எனக்கா பெண்கள் மேல் கீழ்த்தரமான எண்ணம்? உம்மைப் போன்று பேசுவர்களுத்தான் கீழ்த்தரமான எண்ணம்."
முக்கியக் காரணம் என்றுதான் கூறினேன். ஒரே காரணம் என்று கூறவேயில்லை.

மற்றப்படி அக்காலம் இக்காலம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. மனித இனம் நாகரிகம் பெற ஆரம்பித்தக் காலத்திலிருந்தே இவை எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

"எத்தனை உயர்வான பார்வை பெண்கள் மீது
பெண்களை பற்றி உங்களுக்கு இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இருக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றே.
இன்று பெண்ணியம் பேசும் பலரின் உண்மை முகம் இதுதான்.."

நான் கூறியது யதார்த்தம். மனித இனத்தில் பாதி அளவில் இருக்கும் பெண்கள் எதிர்க்கொள்ளும் சங்கடங்களையே இங்கு கூறப் புகுந்தேன். பால்ய விவாகங்கள் நடந்ததற்கு முக்கியக் காரணமே நான் கூறியதுதான். பெண் ருதுவாவதற்கு முன்னாலேயே அவளுக்கு திருமணம் முடிக்காது இருந்தால் அவளே தனக்கேற்ற வரனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அன்று மனு சாஸ்திரத்திலேயே இருந்திருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு?
எனக்கா பெண்கள் மேல் கீழ்த்தரமான எண்ணம்? உம்மைப் போன்று பேசுவர்களுத்தான் கீழ்த்தரமான எண்ணம்.

"இந்த வயதில் எந்த சுரப்பிகள் அவர்களது உடலில் அந்த இச்சையைத் தூண்டிவிட்டது என்பதும் அதை அவர்களால் தீர்க்க முடியாத சிரமத்தை களையவே கொண்டுவரப்பட்டதுதான் இந்த விவாகங்கள் என்பதும் சிறுவனான எனக்குத் தெரியவில்லை."
நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சிறுவன்தான். இது உங்களுக்குப் புரியாதுதான். சிறுவயதிலேயே திருமணம் செய்துவிட்டு, பெண் பருவம் அடையும்போது அவள் கணவன் மட்டுமே அவள் கண்களுக்கு இது சம்பந்தமானத் தேவைக்காகத் தெரிய வேண்டும் என்பதும் பழைய கால ஏற்பாடுகளின் அங்கம். முதலிரவு அறைக்கு வெளியில் நின்று பாட்டுக்கள் பாடுவார்கள். அதைக் கேட்டிருக்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முத்து அவர்கள் பதிவில் நான் இட்ட இரு பின்னூட்டங்கள் இதோ. பார்க்க:
http://muthuvintamil.blogspot.com/2005/12/3.html
"இதுப்போல பல பதிவுகள் உள்ளன. டோண்டு அண்ணாவும் போட்டுள்ளார்.அதையும் படிக்கலாம். திரு.டோண்டு அவர்களின் கருத்துக்களை பற்றியெல்லாம நாம் எதுவும் சொல்வதற்கில்லை.அவர் தெளிவாகவே இருக்கிறார். அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன் என்பதுதான்."
என்ன உளறல் ஐயா? நான் அவ்வாறு கூறியதை நிரூபிக்க முடியுமா? அவரைப் பற்றி மூன்று பதிவுகள் போட்டுள்ளேன். பல பதிவுகளிலும் பின்னூட்டமும் இட்டுள்ளேன். நான் கூறாத ஒன்றை கூறியதாகக் கூறுவது உங்களுக்கு அழகில்லை.

"திரு.சோ வை பற்றி விமர்சிப்பதற்கும் பிராமணர்களை விமர்சிப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை."
அதாவது நீங்கள் சோவை எதிர்ப்பதால் உங்களை பிராமணர்களுக்கு எதிரானவர் என்று கூறக்கூடாது அப்படித்தானே? ஆனால் என்னைப் போன்றவர்கள் சோவை ஆதரிப்பது மட்டும் எங்கள் பார்ப்பன ஆதரவைக் குறிப்பிடும் என்று நீங்கள் கூறுவதை என்னவென்று கூறுவது? அதற்கு மற்றவர்கள் போடும் பின்னூட்ட ஜிஞ்சாக்கள் காதைத் துளைக்கின்றன.

"அவரின் தி.மு.க எதிர்ப்பு வெறிக்கு ஒரு உதாரணம். நேற்று சில பி.ஜே.பி எம்பிக்கள் உட்பட பல எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில கேள்வி கேட்க லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டனர். இதை கிண்டலாக விமர்சிக்க வேண்டுமென்றால் நீங்களும நானும் நேரடியாக செய்வோம். இவர் என்ன பண்ணுவார் தெரியுமா?"
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் லஞ்சம் வாங்குவதை விஞ்ஞான பூர்வமாகச் செய்தவர்கள் திமுகவினரே. அந்த நிகழ்ச்சிகள் நடக்கும்போது அவற்றைப் பற்றிப் பத்திரிகைகளில் நேரடியாகப் படித்தவன் நான்.

அதே சோ 1975-ஜூன் மாதத்தில் எழுதியதைப் பற்றி நான் என் பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளேன். "வருடம் 1975. நெருக்கடி நிலை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருந்தன. அப்போது தமிழக அரசை எதிர்த்து எழுதுவது ஊக்குவிக்கப்பட்டது. தன்னுடையப் பதவிக்காக நாட்டின் எதிர்க்காலத்தையே அடகு வைக்கத் துணிந்த ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்ட பிரதம மந்திரி அப்போது கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். தமிழகப் பத்திரிகைகள் சகட்டுமேனிக்கு தி.மு.க. அரசை எதிர்த்து எழுதி வந்தன.

கௌரவர் சபையில் அனைத்துப் பெரியவர்களும் பயத்தாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ வாய்ப் பொத்தி அமர்ந்திருக்க, வீறு கொண்டெழுந்தான் விகர்ணன். அது மஹபாரதத்தில் ஒரு அருமையான இடம். அதற்குச் சற்றும் குறைந்திராத அளவில் வீறு கொண்டு எழுந்தது துக்ளக்.

ஜூன் 25, 1975 தேதிக்கு முன்னால் வந்த துக்ளக்கில் அதன் ஆசிரியர் சோ ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி எப்போது மத்திய அரசை எதிர்த்து எழுதச் சுதந்திரம் இல்லையோ தான் மானில அரசையும் எதிர்த்து ஒன்றும் எழுதப் போவதில்லை என்றுத் திட்டவட்டமாக அறிவித்தார் அவர். இத்தனைக்கும் அவருக்கு எதிராக தி.மு.க. அரசு பல அடாவடி நடவடிக்கை எடுத்து வந்திருந்தது. ஆனாலும் கீழே வீழ்த்தப்பட்டவரை அவர் எப்போதுமே மேலே தாக்கியதில்லை. அதற்கும் மேல் 1976-ல் தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டப் போது அவர் நேரடியாகக் கருணாநிதி அவர்கள் இல்லத்திற்குச் சென்று அவரிடம் தன் தார்மிக ஆதரவைத் தெரிவித்தார். அப்போது யாருமே கருணாநிதி அவர்கள் அருகில் செல்லத் துணியவில்லை."
பார்க்க: http://dondu.blogspot.com/2005/02/blog-post_20.html
இந்த ஆண்மை எந்த வேறு எவ்வளவு பத்திரிகையாளருக்கு இருக்கிறது?

துக்ளக்கை அதன் முதல் இதழிலிருந்துப் படித்து வருபவன் என்னும் முறையில் திட்டவட்டமாகக் கூறுவேன். அவர் ஒருபோதும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசனம் செய்தது இல்லை. பாராளுமன்ற உறுப்பினராக இருந்துக் கொண்டுத் தனக்களிக்கப்பட்ட ஃப்ண்ட்ஸ்களை பலப் பொதுக்காரியங்களுக்காக நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் செலவழித்து வருகிறார். எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் எல்லா தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டுதான் தன் கட்டுரைகளை எழுதுகிறார்.

ஒவ்வொரு பத்திரிகையும் தங்கள் விற்பனையை பெருக்கிக் கொள்ள இலவச பற்பொடி தரும் இக்காலத்தில், கவர்ச்சி, திரை செய்திகள், கிசு கிசுக்கள் இல்லாது இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை போட்டு வருகிறார். அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் பாதியாவது நெர்மையுடன் நடந்து கொண்டாலே பத்திரிகை உலகம் உருப்பட்டுவிடும்.

மற்றப்படி என்னை தமிழன் என்று நிலை நிறுத்திக்கொள்ள எந்த இணையத் தாசில்தாரர்களின் சான்றிதழும் எனக்கு தேவை இல்லை.

மேலே நான் இட்டப் பின்னூட்டமும் இப்பின்னூட்டமும் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முத்து அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://muthuvintamil.blogspot.com/2005/12/3.html
"இது என்னமாதிரி ஆர்க்யூமெண்ட் என்று எனக்கு புரியவில்லை.."
இதில் புரிவதற்கு என்ன இருக்கிறது?
"அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன் என்பதுதான்"
என்று நீங்கள் நான் கூறாததைக் கூறியதைத்தான் குறிப்பிட்டேன்.
அதை நிரூபிக்கச் சொல்லியும் கேட்டேன். அதை ஒதுக்கி விட்டீர்கள். ஏனெனில் அதற்கு உங்களிடம் பதில் இல்லை.

"(இது போலி டோண்டுவா இல்லை ஒரிஜினலா?)"
அதற்குத்தான் எலிக்குட்டி சோதனையெல்லாம் இருக்கிறதே. பார்த்துக் கொள்ளுங்கள். என தனிப்பட்டப் பதிவையும் பாருங்கள். இப்பின்னூட்டமும் அதில் நகலிடப்படும் அதையும் பார்த்துக்கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பூங்குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://kuzhappam.blogspot.com/2005/12/1.html#comments
First thing first. இதற்கு முந்தையப் பின்னூட்டம் இட்டது நானில்லை. அது போலி டோண்டு என்ற இழிபிறவி செய்த வேலை. தயவு செய்து அதை அழிக்கவும்.

"//உடல் இச்சை என்பது பசி, தாகம் போல அடிப்படை உணர்வு. தங்களைப் பொருத்தவரை அதை அடைவதில் எந்த சிரமும் இல்லாதவர்கள், மற்றவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதில் என்ன நியாயம்.//
இதில் நிச்சயமாக யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அரிப்பெடுக்கும்போதெல்லாம் சொறிந்துகொள்ளலாமா?
என்ன நினைக்கின்றார் அவர்?"
அரிப்பெடுக்கும்போதெல்லாம் சொரிந்து கொள்வதோ அல்லது தள்ளிப்போடுவதோ சம்பந்தப்பட்டவ்ர் பிரச்சினை. நான் யார் அதை பற்றிக் கூற?

"அடுத்தமுறை உங்கள் கண்மூடிய மனைவியுடன் புணரும்போது, தயவு செய்து மேற்சொன்ன கருத்துகளை நினைத்துப் பார்க்காதீர்கள். வாழ்க்கை கசந்துவிடும்."நிச்சயமாக. அதனால்தான் மற்றவர்களின் மனத்தை படிக்க முடியாமல் இருப்பது கடவுள் நமக்கு தந்த ஒரு வரம் என்றே கொள்ள வேண்டும். மேலும் தன் துணையைத் தவிர வேறொருவரை மனதில் நினைத்து இவருடன் உறவு கொள்வது காலம் காலமாக நடந்து வருவதுதான். இதில் ஆணென்ன, பெண்ணென்ன? பார்க்க:
Sex and Relationships - Sex - 4Health from Channel 4 - [ Diese Seite übersetzen ]
Nancy Friday's books on women's sexual fantasies (My Secret Garden) and men's (Men
in Love) include a wide range of case histories compiled from letters and ...
www.channel4.com/health/microsites/ 0-9/4health/sex/sar_fantasy.html - 32k - Im Cache - Ähnliche Seiten

"அதுதான் இருந்ததிலேயே ஒரு பெரிய கொடுமை. அவன் மண்டையைப் போட்டால் என்ன? அவனுக்கு அப்புறம் அவளுக்கு வாழ்வேயில்லை என்று காண்பித்தால்தானே மற்ற ஆண்கள் சும்மா இருப்பார்கள்?
கொடுமை, கொடுமை." இதற்கு உங்கள் எதிர் வினை:
"ஆணாதிக்க ஓநாய்களுக்கு பெண்களின் மேல் எத்துனை கரிசனம்..."
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் எழுதக் கூடாது. நீங்கள் கூறியது எனக்கு எப்படி பொருந்தும் என்பதை தெளிவாக நிரூபிக்க வேண்டும். ஏனெனில் நான் கூறியதற்குத்தான் நீங்கள் எதிர்வினை கொடுத்துள்ளீர்கள்.

ஏதோ எழுதவேண்டும் என்று நினைத்து விட்டீர்கள். ஆனால் எப்படி எழுதுவது என்பதை யோசித்து எழுதவும். இல்லாவிட்டால் உங்கள் வலைப்பூவின் பெயர் ஜஸ்டிஃபை செய்தவராவீர்கள்.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடை தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அருண் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://arunhere.com/pathivu/?p=136

“இது தவிர, பிற ஜாதி இயக்கங்களை, ஜாதியைத் தூக்கிப் பிடிக்கும் தலைவர்களை யாரும் எந்தக் காரணத்திற்காகவும் பாராட்டலாம். அவை எல்லாம் நடுநிலைமை என்றும், ‘பதிவுக்கு நன்றிகளாலும்’ அலங்கரிக்கப்படும். அதுவும் அதையே ஒரு பிராமணர் செய்தார் என்றால், ‘நீங்க தான் தலைவா…சூப்பர்’னு நச்சுனு பொன்னாடை போர்த்தப்படும்….வெயிட் வெயிட், ஆனா ஒரு வேளை மேற்கூறிய ஒருவரே, வேறு ஏதாவது சந்தர்ப்பங்களில் இந்த அக்ஸெப்டட் ஆளுங்களைத் திட்டினாரோ போச்சு, ‘ஒரு பிராமணரால் வேறு எப்படி சிந்திக்க முடியும்’னு ணங் ணங்குன்னு குட்டு வைக்கப்படும்!”
சரியாகச் சொன்னீர்கள். இதனாலேயே சில பார்ப்பனர்கள் தங்கள் ஜாதியை முழுக்க மறைத்து வாழ்கின்றனர். அதிலும் பெரியார் பாசறையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர் பலர் அப்படித்தான். ஏனெனில் அவர்களுக்கே தெரியும், தாங்கள் பார்ப்பன எதிர்ப்பை பாவித்தாலும் தங்கள் அடையாளம் மற்றவர்கட்குத் தெரியும்போது தங்களையும் தூக்கிப் போட்டு விடுவார்கள் என்பதுதான். இதைத்தான் நான் “என் சில வெளிப்படையான எண்ணங்கள்” என்றப் பதிவில் எழுதினேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/04/blog-post.html

தேன்துளி அவர்கள் வேலைக்காரிகளை சரியாக நடத்தாதது பற்றி எழுதியிருந்த பதிவு ஒன்றில் எஜமானிகளைப் பற்றிப் பேசும்போது அவர்கள் பார்ப்பனர்கள் என்று தொனிவர எழுதியிருந்தார். அதை சுட்டிக்காட்டிய நம் இருவரைப் பற்றி என்னவெல்லாம் பின்னூட்டங்கள் வந்தன என்பது உங்கள் நினைவில் இருக்கின்றன அல்லவா?

என்னைப் போல நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போ என்று கேட்காத மற்ற பார்ப்பனப் பதிவாளர்கள், உதாரணம் பத்ரி, எழுதும் பதிவுகளில் கூட தங்களால் ஏற்க முடியாத கருத்துகள் வரும்போது அவர்கள் பார்ப்பனர்கள் அப்படித்தான் பேசுவர் என்று கூறிவிடுவார்கள்.

அமெரிக்காவை திட்டிக்கொண்டே அந்த தேசத்துக்கு செல்ல விஸாவுக்காக அமெரிக்கத் தூதரக வாசல்களில் பிச்சைக்காரர்கள் போல காத்திருப்பவர்களே அதிகம். இதுவும் எல்லோருக்கும் தெரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முத்துக்குமரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. அது அவருடைய மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://eenpaarvaiyil.blogspot.com/2005/12/blog-post.html

"எனது கேள்விகளுக்கான பதிலைத் தெரிவிக்காமல் வேறு பக்கம் நகர்ந்து கொள்கிறீர்கள். என்னுடைய கேள்வி மிகத் தெளிவானது. வயது வராத பெண்ணிற்கு என்ன விதமான காம உணர்வும் இச்சையும் இருக்க முடியும்? அதற்கு பதில் சொல்லாமல் வயதிற்கு வந்த பிறகு வரும் இச்சைகளை முறைப்படி தீர்த்துக்கொள்வதற்காகவே
செய்யப்பட்டன என்று மழுப்புகிறீர்கள்."

அதற்கும் பதில் கூறுவேன். அதற்கு முன்னால் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புவேன். நான் பேச வந்தது வயதுக்கு வந்த பெண்களைப் பற்றித்தான்.

பெண்கள் வயதுக்கு வந்து பல ஆண்டுகள் கழித்துத்தான் அவளுக்கு திருமணம் நடக்கிறது. இத்தாமதத்திற்கு எவ்வளவோ காரணங்கள். அவற்றில் ஒன்று பெண் வேலைக்குப் போய் சம்பாதிப்பவளாக இருப்பதால் வரும் வேறு வித பிரச்சினை. அவள் சம்பளம் போய்விடுமே என்று கவலைப்படும் பெற்றோர்களும் உண்டு.

பெண்ணுக்கு 27 வயது ஆகும்போது அவளுக்கு ஐந்து வயதில் தங்கையோ தம்பியோ கொடுக்கும் வெட்கம்கெட்டப் பெற்றோரும் உண்டு. அரங்கேற்றம் படம் பார்த்தீர்கள்தானே?

இப்போது வயதுக்கு வராத பெண்களைப் பற்றி நீங்கள் கேட்டக் கேள்விக்கு வருவேன். கண்டிப்பாக அவர்களுக்கும் உடல் இச்சை வரும். இது சிறுவர்களுக்கும் பொருந்தும். மனித உடல் கூற்றின் விந்தை இதுவே. இந்த விஷயத்தைப் பற்றி ஏற்கனவே பல ஆய்வுகள் வந்துள்ளன.

உங்களுக்கு இது பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது என்று நீங்களே இவ்வார்த்தைகளில் கூறிவிட்டீர்கள்: "வாழ்க்கைப் பாடே பெரும்பாடா இருக்கிறதால இது வரை அந்தப் பாட்டைக் கேட்டதில்லை. இதற்கு பிறகு ஒரு முறைதான் கேட்க வாய்ப்பும் இருக்கிறது. அப்பையும் யாராவது பாடுவார்களா என்றும் எனக்குத் தெரியாது...."

உங்களுக்கு தெரியாது என்பதால் அவை இல்லாமல் போய்விடாது. ஒரு விஷயத்தைப் பற்றி முழுதும் தெரியாது நீங்கள் எழுதும் பதிவு என்பதாகத்தான் இத் எனக்கு தோன்றுகிறது. ஆகவே இனிமேலும் இப்பதிவில் பின்னூட்டம் இடுவது வீணான வேலை.

You have got the certainty of the very much ignorant.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான்... said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

The earlier comment that came under the name of Mayavaraththaan is not from him but that பொறம்போக்கு Poli Dondu.

gards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

பூங்குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://kuzhappam.blogspot.com/2005/12/1.html#comments
First thing first. It is not Mukamuudi who commented. It is Poli Dondu coming in here as Poli Mukamuudi.
Real Mukamuudi will not write such degenerate words.

Check with mouseover technique the blogger number. Take care. If you follow the link here it will take you to a blog having the appearance as if it is Mukamuudi's but it is not.

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

முத்துக்குமரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. அது அவருடைய மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://eenpaarvaiyil.blogspot.com/2005/12/blog-post.html

என்னுடையப் பதிவுகளைச் சரியாகப் படியுங்கள் என்றுதான் நான் கேட்கிறேன். அதைப் படிக்காததால்தான் என்னமோ நான் பால்ய விவாகங்களை ஆதரித்ததாக இப்பதிவாளர் அவராக நினைத்துக் கொண்டு இப்பதிவையே போட்டிருக்கிறார். முதலும் கோணல் முற்றும் கோணல் என்று ஆகிவிட்டது.

நான் பால்ய விவாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு முக்கியக் காரணமே அக்காலத்தில் பெண்கள் தேவையைப் புரிந்து கொண்டு இதைச் செய்தார்கள் என்பதை ஒரு சரித்திர நிகழ்ச்சியாகக் கூறியிருந்தேன் அவ்வளவுதான். அது கூடப் போகிற போக்கில் கூறியது. அதைக் கூறிய கையோடேயே பால்ய விதவைகள் பிரச்சினையையும் எழுதியிருக்கிறேனே. இப்போது கூறுகிறேன். நான் பால்ய விவாகத்தை எங்குமே ஆதரிக்கவில்லை. அது வந்ததற்கான முக்கியக் காரணத்தைத்தான் கூறினேன். மற்ற சரித்திர நிகழ்ச்சிகளால் அது கால வெள்ளத்தில் அடிபட்டுப் போய் விட்டது. அவ்வளவுதான். இதில் நான் அளித்ததாகக் கூறும் ஆதரவை என் பதிவுகளிலிருந்து எங்காவது இன்ஃபர் செய்ய முடியுமா?

இன்னொரு விஷயம் தேவதாசிகள் பற்றியது. நான் அதையும் ஆதரித்ததாக இன்னும் சிலர் கூறுகின்றனர். என்ன உளறல் இது.

"இன்றைய மாணவ மாணவியர்களுக்கு போட்டி நிறைந்த இந்த உலகில் தங்களை நிலை நிறுத்து கொள்ள தேவையான கல்வி அறிவை பெறுவதற்கும், அதை முதலீடாக கொண்டு வேலை வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையில் settle ஆக வேண்டும் என்பதுதான் முதன்மையான குறிக்கோளாக இருக்கிறதே தவிர எதிர்பாலார் மீது காம இச்சை கொண்டு அதை தீர்த்துக் கொள்ள வழி தேடுவதல்ல வாழ்க்கை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். பாவம் பழம் தலைமுறையினாரான அவருக்கு புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்."
அப்படி என்ன ஐயா தலைமுறை இடைவெளியைக் கண்டு விட்டீர்கள்? நீங்கள் கூறுவது நிலைமை அவ்வாறு இருக்க வேண்டும் என்பதே. நானும் அதைத்தான் விரும்புகிறேன். நானும் நீங்களும் விரும்புவதால் மட்டும் அப்படியாகிவிடுமா?

என் பதிவில் கூற வந்ததே வேறு. உடல் இச்சை என்பது பசி, தாகம் போன்ற உணர்வுதான். அதைத் தீர்த்துக் கொள்ள ஆணுக்கு வழிகள் இருக்கின்றன. பெண்ணுக்கு இல்லை. அவ்வளவுதான் விஷ்யம். அது பற்றிப் பேசுவதே பாவம் என்று நினைப்பதால்தான் பிரச்சினைகள் வருகின்றன.

மற்றப்படி ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி உடல் இச்சை என்பது வெகு சிறிய வயதிலேயே, பருவமடைவதற்கு முன்னமேயே வந்து விடுகிறது. உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் இதுதான் உண்மை.

"அப்புறம் ஆய்வுகளின் முடிவுகள் இறுதியானது அல்ல என்பதும் முன்னதன் முடிவுகளை பின் வருபவர்கள் தவறு என்று நீருபிப்பதும் அறிவியல் உலகின் எதார்த்தமான அடிப்படை விதி என்பதை என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்."

இப்போதைய நிலையைத்தான் நான் கூறினேன். அது தவறு, உடல் இச்சை சிறுவயதில் ஏற்படாது என்று ஆய்வு முடிவுகள் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முத்து அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://muthuvintamil.blogspot.com/2005/12/3.html
"dondu அண்ணா, உங்களுக்கு புரிவது கடினம்..படிக்கிற மத்த ஆளுங்க புரிஞ்சுக்குவாங்க...உங்க பதிவுகளோட திரண்ட கருத்து அதுதான்...போதுமா..."
இது சுத்த நழுவல். Dishonest reply. உங்களைச் சேலஞ்ச் செய்கிறேன். சோ பார்ப்பனர் என்பதால்தான் நான் அவரை ஆதரித்தேன் என்பதை என் எழுத்துக்களிலிருந்து காட்டுங்கள் பார்க்கலாம். இப்படித்தான் உங்கள் பேங்க் வேலைகளிலும் இன்ஃபர் செய்வீர்களா?

"மத்ததுக்கும் பதில் உண்டு..வெயிட் பண்ணுங்க.."
எவ்வளவு நாளைக்கு? நான் கூறிய மத்ததுகளை மறுபடியும் இங்கே திருப்பிக் கூறுவேன்.
1. நெருக்கடி நிலை வந்தப் போது (சமீபத்தில் 1975-ல்) அவர் தைரியமாக கருணாநிதிக்கு ஆதரவாகப் பேசியது. மற்ற பத்திரிகையாளர்கள் மாநில திமுக அரசுக்கு தர்ம அடி கொடுத்துக் கொண்டிருந்தப்போது மத்திய அரசை விமசரிக்க உரிமை இல்லாத நிலையில் மாநில அரசையும் விமசரிக்க மாட்டேன் என்று கூறியது.
2. கருணாநிதியின் அரசை சமீபத்தில் 1976-ல் கலைத்தப் போது தைரியமாக அவர் வீட்டுக்குச் சென்று தன் ஆதரவை அவருக்குத் தெரிவித்த ஆண்மையானச் செயல். வேறு எந்தப் பத்திரிகைக்காரரும் அக்காலத்தில் அதை செய்யத் துணியவில்லை. திமுகவினர் பலரே கருணாநிதியை தவிர்த்தனர். அந்த ஆண்மையைப் பற்றிக் கேட்டேன். அதுவும் நீங்கள் பதில் கூறவேண்டிய மற்றதுதான்.
3. மற்றப் பத்திரிகைகள் எல்லாம் கிசு கிசுவெல்லாம் எழுதி அதில் ஜீவிதம் நடத்தும்போது துக்ளக் மட்டுமே தன் தரத்தைக் காப்பாறிக் கொண்டுள்ளது. அது இன்றைக்கும் தொடர்கிறது. இதுவும் நீங்கள் பதில் கூற வேண்டிய "மத்ததைச்" சேர்ந்ததுதான். இதற்கும் உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.
4. கேள்வி கேட்கவே பணம் வாங்கும் எம்.பி.க்களுக்கிடையில் தனக்களிக்கப்பாட்ட நிதியை இவர் நல்லக் காரியங்களுக்கு செலவழித்து பைசா விடாமல் கணக்கு காட்டுவது. எவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதைச் செய்கிறார்கள் என்பதையும் கூறுங்கள்.
5. சமீபத்தில் 1975 என்று நான் எழுதும்போதே உங்களுக்குப் புரிந்திருக்கும், எல்லாவற்றையும் நானே அக்காலக் கட்டத்திலேயே நேரில் படித்து அறிந்தவன் என்று.
6. என்னமோ பார்ப்பனர்கள் மட்டும்தான் அவருக்கு ஆதரவு என்று கூறுகிறீர்களே. வரும் பொங்கலன்று சென்னையில் இருந்தால் துக்ளக் ஆண்டுவிழாவுக்கு வாருங்கள், வந்து பாருங்கள். ஒவ்வொரு அரசியல் வியாதியும் லாரி ஏற்பாடு செய்து பிரியாணிப் பொட்டலங்கள் கொடுத்து தங்கள் கூட்டங்களுக்கு ஆள் பிடிக்கும் இக்காலத்தில் அது ஒன்றும் இல்லாமலேயே அவர் கூட்டத்துக்குத் திரளும் ஆட்களைப் பாருங்கள். அதில் எல்லா ஜாதியினரும், மதத்தவரும் இருப்பதைப் பார்க்கலாம். அது வரைக்கும் நான் போட்ட இப்பதிவையும் பார்க்கவும். பார்த்துவிட்டு அதையும் அந்த மத்ததில் சேர்த்து பதில் கூறவும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/01/thuglak-35th-anniversary-meeting-on.html
"சமீபகாலமாக பிஜேபி பிரமுகர்கள் ரகசியமாகவோ, நேரடியாகவோ கேமராவை வைத்தால் உச்சகட்ட ஆர்வத்தில் எதையாவது செய்து எசகுபிசகில் சிக்கிவிடுகிறார்கள்"
இதில் என்ன கேலியோ தெரியவில்லை. தான் சேர்ந்த கட்சியானாலும் அவர் கிண்டல் செய்யாமல் விடுவதில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. ஆனால் தன் கட்சித் தலைவரோ, அவர் மகனோ விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்று ஒப்புக்கு கூறிக் கொண்டே அவர்கள் செய்வது எல்லாவற்றையும் சப்பைகட்டும் கொ.ப.செ.க்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

சோ தன்னைத் தானே கிண்டல் செய்து கொள்வதையும் சிலர் விமரிசனம் செய்தனர். நான் கேட்கிறேன் எவ்வளவு தன்னம்பிக்கை இருந்தால் ஒருவரால் இவ்வாறு செய்ய முடியும் என்று?

மொத்தமாகக் கூறுகிறேன், அவர் பத்திரிகையை நாகரிகமான முறையில் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் செய்கிறார் என்பதை உங்களால் மறுக்க இயலுமா?

அதுதானே முக்கியம். மற்றப்படி அவர் கருத்துக்களை ஒப்புக் கொள்வதோ கொள்ளாததோ அவரவர் முடிவுப்படித்தான் நடக்கும்.

வழக்கம்போல இப்பின்னூட்டமும் என்னுடைய தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முத்து அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://muthuvintamil.blogspot.com/2005/12/3.html
"எது நழுவல் என்பது உங்களது எல்லா பதிவுகளையும் கூட்டி கழித்து (இஸ்ரேல் ஆதரவு உள்பட) பார்த்தால் தானாக தெரியும்."
அண்ணாமலையில் வரும் ராதாரவியைப் போலப் பேசுவதால் தப்பிக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

இஸ்ரேல் ஆதரவுக்கும் பார்ப்பனீயத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? அதுவும் என்னுடைய இஸ்ரேலிய ஆதரவு எனக்கு பூர்வஜன்மத் தொடர்பு போன்றது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

நீங்கள் என்னைப் பற்றிக் கூறியது உங்களது prejudice அவ்வளவுதான். என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் அது பற்றி எனக்குக் கவலையில்லை. அதே போல சோ பார்ப்பனர் என்பதாலேயே நீங்களும் உங்கள் ஆதரவாளர்கள் பலரும் அவரை எதிர்க்கிறீர்கள் என்ற என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

சோவைப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கான பதில் பிறகு வரும் என்று நீங்கள் கூறியதாலேயே ஒரு நாளுக்கு மேல் காத்திருந்து கேட்டேன். இப்போது பார்த்தால் நான் கேட்ட ஒரு பாயிண்டுக்கும் உங்களிடம் பதில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

அருண் பதிவில் சோ பல்கலை வித்தகர் என்று எழுதியதை உங்களுக்கு உறுத்தியிருக்கிறது போல. ஒரு பெயர் பெற்ற நகைச்சுவை நடிகர், சிறந்த எழுத்தாளர், ஒரு பத்திரிகையை உயர்தரத்திலேயே வெற்றிகரமாக நடத்தி வருபவர், நியமன உறுப்பினராகி தன் பாராளுமன்ற பதவியின் கடமையை ஒழுங்காக நிறைவேற்றுபவர், தன் சுயகாரியத்துக்காக எந்த அரசியல் வியாதியிடமும் கையேந்தாதவர், வக்கீலாகவும் நன்றாக வேலை செய்தவர் என்று இப்படிப் பல திறமைகள் உள்ளவர் பல்கலை வித்தகர் இல்லையென்றால் வேறு யார் அந்தப் பட்டத்துக்குத் தகுதியானவர் என்பதைக் கூற இயலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முத்து அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://muthuvintamil.blogspot.com/2005/12/3.html

அப்படியானால் "மத்ததுக்கும் பதில் உண்டு..வெயிட் பண்ணுங்க.." என்று நீங்கள் கூறியதற்கு என்ன அர்த்தமாம்? நான் கூறிய பாயிண்டுகளில் ஒன்றுக்கு மட்டும் பதில் போட்ட நிலையில் நீங்கள் கூறியது. ஆகவே நான் சோ பற்றி பாஸிடிவாகப் போட்டக் கருத்துகளுக்கு பாயிண்ட் பை பாயிண்ட் பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதைத்தான் நான் எதிர்ப்பார்த்தேன். மொழியறிவு உள்ள எவரும் அவ்வாறுதான் எதிர்ப்பார்ப்பார்கள். அது சரி விடுங்கள். உங்களிடம் பதில் இல்லை என்பதை புரிந்து கொள்கிறேன். உங்களிடம் இல்லாத ஒன்றை கேட்டு சங்கடப்படுத்த விரும்பவில்லை.

"நீங்க இப்படித்தான் உங்கள் தொழிலில் ஏதாவது கேட்டால் ஏதாவது சொல்வீங்களா?
(உதா) காப்பி கிடைக்குமா என்று ஜெர்மன்காரன் கேட்டால் "பக்கத்தில் இட்லி நல்லா இருக்கும்.இட்லி சாப்பிடு.இட்லி நல்லா இல்லைன்னு சொல்ல உனக்கு என்ன தைரியம்..i challenge you " என்று சொல்வீர்களா?"
நல்ல கேள்வி. இதற்கு பதில் கூறவேண்டும் என்பதற்காகவே நான் சென்ற ஞாயிறன்று இரண்டு பிரெஞ்சுக்காரர்களை காஞ்சீபுரம் அழித்து சென்றதைக் கூறுவேன். நாங்கள் போன கோயில்களிலெல்லாம் செருப்பு விற்றார்கள். ஜோடி 150 ரூபாய் என்று கேட்டார்கள். ஒரு பிரெஞ்சுக்காரர் வாங்குவதற்கு இருந்தார். அவரிடம் வேகமாக நான் பிரெஞ்சில் ஜோடி 40 ரூபாய் கூடப் பெறாது என்று கூற அவரும் ஒத்துக் கொண்டார். பேரம் பேசி அதே விலைக்கு வாங்கிக் கொடுத்தேன். அதேபோல எனக்குத் தெரிந்த ஒரு ஹோட்டலில் அவர்களை அழைத்துச் சென்றபோது அவர்கள் சப்பாத்தி ஆர்டர் செய்ய நினைத்தப் போது அந்த ஹோட்டலில் தோசை நன்றாக இருக்கும், சப்பாத்தி சுமார் என்று கூறி அவர்களை தோசை சாப்பிடச் சொன்னேன். அவர்களும் சந்தோஷமாக நான் கூறியதை ஏற்றுக் கொண்டார்கள். ஆக இதுதான் ஒரு துபாஷியின் வேலை. விருந்தினரின் நலனை மறக்கக் கூடாது.

"சோ உத்தி பற்றி உங்கள் அரிய பெரிய கருத்தையும் சொல்றது......சின்ன பசங்க தெரிஞ்சுக்குவாங்கள்ள"

சோ உத்திதானே, கூறி விட்டால் போகிறது. மாட்டிக் கொண்டீர்களா?

ஒரு விஷயத்தை நன்கு உணர்ந்து ஆராய்ந்து தன் கருத்தைக் கூறுவது. அது எவ்வளவு எதிர்ப்பைப் பெற்றாலும் அதைத் தைரியமாகக் கூறுவது. உதாரணம்: எண்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு நாள் பாராளுமன்றத்தில் இந்திரா அவர்களும் ராஜீவ் அவர்களும் ஆதரவு தந்த நிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொண்டனர். மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஸ்டீஃபன் மிகக் கீழ்த்தரமான கை சமிக்ஞை செய்தார். திமுக உறுப்பினர் அப்போது உதவி சபாநாயகர். அவர்தான் அன்று சபாநாயகர் நாற்காலியில் இருந்தார். அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை. அதைப் பற்றி எழுத பத்திரிகைகள் பயந்த போது, சோ மட்டும் தைரியமாகத் தன் பத்திரிகையில் அந்த நிகழ்ச்சியைப் போட்டார்.

அதே போல ஒரு ஜோக்குக்காக ஆனந்த விகடன் ஆசிரியர் தமிழகச் சட்டசபையால் தண்டிக்கப்பட்ட போது தன் பத்திரிகையின் ஒவ்வொரு பக்கத்திலும் அந்த ஜோக்கை படத்துடன் போட்டார். அவர் உத்தி என்ன? உண்மையான பத்திரிகையாளனாக நடந்து கொள்வது. மேலும் தெரிந்து கொள்ள அவர் பத்திரிகை ஆண்டுவிழாவுக்கு வாருங்கள். தர்மானப் பத்திரிகை நடத்துவது. அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோஸஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2005/12/39.html
கலக்கிட்டீங்க ஜோஸஃப் அவர்களே. என் C.P.W.D. அனுபவம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. அது பற்றி இப்போதே தனிப்பதிவு போடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//"எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைக்கும் விதமாக, சோவை "வாய்ச்சொல்லில் வீரரடி" என்று சொல்ல முடியா வண்ணம்" // என்று எழுதவேண்டும் என்றால், இது என்ன அயோக்கியத்தனமாக இருக்கவேண்டும்? சரி இவருக்காக பிற எல்லாகட்சிகளிலும் இருக்கிற/இருந்த எம்.பிக்கள் கட்டிய கக்கூஸ்களை, பள்ளிகளை, போட்ட ரோடுகளை,சமத்துவ புரங்களை, மதிய உணவுகளை, பழங்குடி முன்னேற்ற ஏற்பாடுகளை எங்காவது கஷ்டப்பட்டு தேடிபிடித்து பட்டியலிட்டால் அருண் என்ன எழுதிய வாக்கியத்தை திரும்பப்பெற்றுக்கொள்வாரா?"

அதைத்தான் செய்து பாருங்களேன். அதில் பெரும்பான்மையான கேஸ்களில் சம்பந்தப்பட்ட எம்.பி. அடித்தக் கமிஷன்களும் கூடவே வரும். சோ அவர்கள் ஏதாவது கமிஷன் அடித்தார் என்று உங்களால் நாக்கின் மேல் பல் போட்டுப் பேச முடியுமா?

அதைக் கூறினால் அவர் தன் கடமையைத்தானே செய்தார் எனக் கூறி விட வேண்டியது. மற்ற எம்.பி.க்கள் செய்ததைப் பற்றிப் பேசும்போது மட்டும் ஊரில் நடக்காததையா செய்து விட்டார்கள் என சப்பைக்கட்டு கூறிக் கொள்வது. இதே வேலையாகப் போயிற்று.

சோவை எதிர்த்து பேசியவர்கள் பலர் தாங்கள் முதலில் சோ ஆதரவாளராக இருந்து பிறகு எதிர்ப்பாளராக ஆனவர்கள் எனக் கூறிக்கொண்டனர். அதை சுயபுத்தி வளர்ந்ததற்கு உதாரணமாகக் கூறினர். இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்து ஒருவர், என் நெருங்கிய உறவினர், அதே மாதிரி ஏன் ஆனார் என்பதை நேரில் பார்த்தவன் என்ற முறையில் இங்கு கூறுவேன்.

அவர் துக்ளக்குக்கு ஒரு கடிதம் எழுதினார். போர்னோக்ராபி எழுத்துக்களுக்கு ஆதாரமாகக் அவர் நிலை எடுத்திருந்தார். பேசாமல் தன் நிலையைக் கூறிவிட்டுப் போயிருக்கலாம். அப்படிச் செய்யாது தன் தாத்தா கூறியதாக இவ்வாறு எழுதினார். "போர்னொக்ராஃபி என்றெல்லாம் ஏன் பார்க்கிறீர்கள், அது பாட்டுக்கு அது மற்றப்படி நாட்டின் productivity-யைப் பார்க்கலாமே, அமெரிக்காவில் எல்லாம் அப்படித்தான் செய்கிறார்கள், என்று என் தாத்தா கூறுவார்" என்று எழுதப் போக சோ அவரைக் கிழித்துவிட்டார். இதில் விஷயம் என்னவென்றால் அந்த நபர் பிறப்பதற்கு பல ஆண்டுகள் முன்னமேயே அவரது அன்னை வழி மற்றும் தந்தை வழித் தாத்தாக்கள் இருவருமே இறந்து விட்டனர். சோ எழுதுகையில் அவ்வாறு ஒரு தாத்தா இருந்ததையே சந்தேகத்துக்குள்ளாக்கிவிட்டார். இதைப் பற்றி சோ அவர்கள் துக்ளக்கில் எழுதும்போது so and so ஊரிலிருந்து so and so இவ்வாறு எழுதியிருக்கிறார் என்று ஆரம்பித்து அவர் எழுதியதைக் கிழித்தார். கடைசியில் "இது அவருடைய சொந்தக் கருத்தா அல்லது தாத்தாவின் கருத்தா என்பது யோசிக்கத் தகுந்தது" என்று வேறு எழுதி விட்டார். இதைப் படித்த உடனேயே என் உறவினருக்கு எஸ்.டி.டி. கால் போட்டு இது அவர்தானா என்று கேட்க அவர் ஆமாம் என்றார். அதற்குப் பிறகு சோ மேல் மிகக் கோபம் கொண்டார், அவரை இன்றளவும் எதிர்த்து வருகிறார்.

இங்கும் பலருக்கு இம்மாதிரி காரணங்கள் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தமிழரங்கத்தின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ.

"கேவலமான ஆணாதிக்க சமூக அமைப்பில் ஆண் எதையெல்லாம் செய்ய முடிகின்றதோ, அதையெல்லாம் பெண் செய்யும் உரிமையைத்தான் பெண்ணியமாக கருதுகின்ற வக்கிரம் அரங்கேறுகின்றது."

ஏன், செய்தால் என்னவாம்? இதில் என்ன வக்கிரம்? உடல் இச்சை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. அதை தணித்துக் கொள்ள ஆண்களுக்கு எந்தத் தடையும் இல்லை. பல பெண்களிடமும் அவன் உறவு கொள்வதைக் கண்டிக்கும் மற்ற ஆண்களும் முக்கால்வாசித் தருணங்களில் தங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லையே எரிச்சலின் காரணமாகத்தான் அந்த நிலையை எடுக்கின்றனர். பல காரணங்களால் பெண்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. அது ஏன் என்பது எல்லோருக்குமே தெரியும். அதற்குள் இப்போது போய் ஒன்றும் ஆகப் போவதில்லை. உடல் இச்சை என்பதும் பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்வே. அதைத் தணித்துக் கொள்ள சில பெண்கள் முன்படும்போது மட்டும் ஒழுக்கக் கேடு என்றெல்லாம் ஏன் கூற வேண்டும்? அதை சம்பந்தப்பட்டப் பெண்ணே பார்த்துக் கொள்வார்.

இது பற்றி நான் போட்ட பதிவுகள்:
1)
2)
3)

மேற்படி பதிவுகளை அவற்றின் பின்னூட்டங்களுடன் பார்க்கவும். குஷ்பு அவர்கள் சொன்னதை காண்டக்ஸ்ட் சகிதம் புரிந்து கொள்ளவும். பெரியார் அவர்கள் ஏற்கனவே இதற்கு மேல் பேசி விட்டார். ஒரு ஆணாதிக்கம் பிடித்த இயக்குனருக்காக இங்கு இவ்வளவு சப்பைக் கட்டுக்களா? அவர் படத்தின் மூலம் கூற நினைத்த செய்தி இதுதான். ஆண் இப்படி அப்படித்தான் இருப்பான், ஆனால் பெண் மட்டும் எல்லாவர்றையும் சகித்துப் போக வேண்டும். அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மகேஸ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://mahendranmahesh.blogspot.com/2005/12/blog-post_19.html
முதற்கண், மேலே பின்னூட்டமிட்டது காசி அவர்கள் அல்ல. அவர் பெயரில் போலி டோண்டு இட்டப் பின்னூட்டம் அது. அது தெரியாமல் வார்த்தைகளை விடாதீர்கள். Use mouseover technique for God's sake.

நான் ஜாதியைப் பற்றிப் பேச நேர்ந்ததன் பின்புலனை அறிய என்னுடைய இப்பதிவுக்கு செல்லவும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_113188854570236465.html

அதில் "என் வெளிப்படையான எண்ணங்களை" பற்றிய ஹைப்பர் லிங்கைச் சொடுக்கவும். பதிவு மற்றும் அதன் பின்னூட்டங்களைப் பார்க்கவும். பிறகு முடிவு செய்யவும்.

இந்தப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இரயாகரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://tamilarangam.blogspot.com/2005/12/1.html#comments
"காசி அவர்களின் கருத்தை இட்டு டோண்டுவின் அப்பிரயம் என்ன என்று அறிய விரும்புகின்றேன்."
பி.இரயாகரன்

இரயாகரன் அவர்களே, காசி அவர்களின் கருத்து என்று நீங்கள் குறிப்பிடுவது அவர் எழுதியது அல்ல. போலி டோண்டு அது. எலிக்குட்டியை வைத்துப் பாருங்கள். இவ்வளவு நாட்கள் இங்கு தமிமணத்தில் இருக்கிறீர்கள், இது கூட தெரியாமல் என்ன கிழிக்கிறீர்கள்?

முதலில் காசி அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அப்பின்னூட்டத்தை அழியும். பிறகு என் கருத்துக்களுக்கு பதில் கூற வாருங்கள்.

என்னத்த, பதிவு எழுதி என்னத்த நீங்க ... (என்னத்தக் கன்னையா அவர்களின் குரலில்).

பை தெ வே, இப்பின்னூட்டம் என் தனிப் பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அலுப்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மகேஸ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://mahendranmahesh.blogspot.com/2005/12/blog-post_19.html
"ஒரு கம்ப்யூட்டரும் பதிய ஒரு இடமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என நினைப்பா?"

அதே கேள்வியை உங்களைக் கேட்கிறேன். ஒரு விஷயத்தின் பரிமாணங்களின் நீளம், அகலம் மற்றும் ஆழம் பற்றித் தெரியாமல் வாயை விடுவது ஏன்? காசி என்னும் கௌரவப்பட்ட தமிழ்மணம் நிர்வாகி இவ்வாறு தரக்குறைவாகப் பேசுவாரா என்ற பிரக்ஞை இன்றி தடித்த வார்த்தைகளை அவர் மேல் விடுவதற்கு யோசிப்பது என்பதே இல்லையா?

இப்படித்தான் உங்கள் வேலையிலும் செயல்படுவீர்களா?

இந்தப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அலுப்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இரயாகரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://tamilarangam.blogspot.com/2005/12/1.html#comments

என்னய்யா புடலங்கா கேள்வி? ஒரு இழிபிறவி காசியின் பெயரில் எச்சம் இட்டிருக்கிறது. அதை வலைப்பதிவாளர் அழிக்கட்டும், நான் கேட்ட கேள்விகளுக்கு விடை அளிப்பதாக வேறு வாக்கு கொடுத்திருக்கிறார். அவர் விடைகளைக் கூறட்டும். நடுவில் நீர் யார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மகேஸ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://mahendranmahesh.blogspot.com/2005/12/blog-post_19.html

"காசி தமிழ்மணம் நிர்வாகியா?அவருடைய நிர்வாக தகுதி பற்றி அவருடைய பதிலில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்."
சுத்தமாக உங்களுக்கு அறிவு இல்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். காசி கூறிய பதிலாக நீங்கள் குறிப்பிடுவது அவருடையதே இல்லை என்று நான் கூறுகிறேன். அது புரியவில்லையா உமக்கு? தமிழும் அவுட்டா? அதுவும் தெரியாதா?

"எனக்கு நிறைய வேலை இருக்கிறது."
உண்மைதான். தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும், மௌஸோவர் என்றால் என்னவென்று கற்றுக் கொள்ள வேண்டும். அது வரைக்கும் உங்கள் மேலதிகாரிகளுக்கு உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதும் தெரியாமல் இருக்க வேண்டும். ரொம்பவேத்தான் வேலை இருக்கு உங்களுக்கு.

இந்தப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அலுப்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://kuzhali.blogspot.com/2005/12/blog-post_20.html#comments
இந்தத் தவறுக்கு ரஜனிதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதென்ன குழந்தைகள் விஷயத்தில் விளையாடுவது? மிகவும் கண்டிக்கத் தகுந்தது.

இப்பின்னூட்டம் என்னுடையத் தனிப்பதிவிலும் பின்னூடமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அம்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இரயாகரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://tamilarangam.blogspot.com/2005/12/1.html#comments

ஸ்ரீரங்கன் அவர்களே,
கோபத்துடன் பின்னூட்டமிட்டது நான்தான். கடுமையாகவே வார்த்தைகள் விழுந்து விட்டன. போலி காசியின் பின்னூட்டம் என்று தெரிந்தும் அதை வைத்து என்னிடம் கேட்டக் கேள்வி சகிக்க முடியவில்லை. ஆகவே கோபம். மற்றப்படி என்னைப் பற்றி இவ்வளவு மென்மையான கருத்து வெளியிட்டதற்கு என் மனமார்ந்த நெகிழ்வு கலந்த நன்றி.

பாருங்களேன், இந்த நிமிடம் வரை கூட போலி காசியின் பின்னூட்டம் அப்படியே இருக்கிறது. நற நற. ஓக்கே, கோபமாகப் பின்னூட்டமிட்டதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.

இப்பின்னூட்டம் என் தனிப் பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

நெகிழ்வுடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கார்த்திக் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://karthikraamas.net/pathivu/?p=105

"I don't want to discuss about the topic because I not a regular reader of "Thuklak".
But I just need a clarification. Even for me your argument is seems to be funny and Childish. Are you seriously debating here? Or just cracking some jokes. I am bit confused please clarify.
(The using the word "Even for me" because I am just 25 Yrs Old guy and just an year experience in this blog world.)

அன்புள்ள சுட்டிப்பையன்,
உங்களுக்கு தர்க்க சாஸ்திரத்தில் நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. இது பற்றி நான் இப்போது பதிவுகள் போட ஆரம்பித்திருக்கிறேன். அதிலிருந்தே கூட நீங்கள் ஆரம்பிக்கலாம்.

நீங்களே ஒத்துக் கொண்டபடி நீங்கள் துக்ளக்கை தொடர்ந்து படிப்பதில்லை. ஆகவே உங்களுக்கு அது பற்றி அறிவு முழுமையாக இல்லை என்றுதான் பொருள் கொள்ள முடியும். இப்படி சுத்தமாக அறிந்து கொள்ள முயற்சிக்காத நிலையில் நீங்கள் என்ன வாதிட முடியும்?

என்னுடைய வாதங்கள் குழந்தைத்தனமாகவும் கோமாளித்தனமாகவும் இருக்கும் என நினைப்பது உங்கள் உரிமை. ஆனால் நீங்கள் கூறியதை நிலை நிறுத்த வேண்டியதும் உங்கள் கடமைதானே. அதிலிருந்து நீங்கள் எப்படி விலக முடியும்?

உங்களுக்கு கொஞ்சம் குழப்பமா? இது என்ன ஜோக்? உங்களுக்கெல்லாம் குழப்பமே இருக்கக் கூடாதே. ஏதாவது அறைகுறையாகத் தெரிந்தாலாவது தெரியாததைக் கேட்டுக் கொள்ளலாம் என்ற நிலை வரலாம். எங்கள் ஐந்தாம் வகுப்பு உபாத்தியாயய்ர் ரங்கா ராவ் அவர்கள் கூறுவார், ஒன்றுமே தெரியாதவனுக்கும் எல்லாமே தெரிந்தவனுக்கும் சந்தேகமே கிடையாது என்று. உங்களுக்கும் அதே மாதிரி சந்தேகமே கிடையாது. அந்த நிலை என்ன என்பதும் வெள்ளிடைமலை. அவ்வளவுதான்.

இப்பின்னூட்டதின் நகல் என்னுடையத் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இரயாகரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://tamilarangam.blogspot.com/2005/12/1.html#comments
"இந்த போலி பதிவை கருத்தாக போட்ட சம்பந்தப்பட்ட நபர், சொந்தப் பெயரில் இதை போடுவது நல்லது. மற்றவர் பெயரில் இதைச் செய்வதை நாம் எற்றுக் கொள்ளமுடியாது. அது ஆள் மாறாட்டாம். கருத்து என்ற வகையில், அவரின் கருத்து உள்ளடகத்தில் இது இருப்பதால் இதை நேரடியாகவே போட்டு இருக்காலம். போலியாக மற்றவர் பெயரால் போடுவது கண்டணத்துக்குரியது."
அது போலி என்று தெரிந்திருந்தும் இன்னும் அப்பின்னூட்டத்தை அப்படியே வைத்திருக்கும் உங்கள் செயல் மட்டும் கண்டனத்துக்குரியது இல்லையாமா. என்னே உங்கள் நியாய உணர்வு, அப்படியே புல்லரிக்கிறதையா.

"இங்கு தமிமணத்தில் இருக்கிறீர்கள், இது கூட தெரியாமல் என்ன கிழிக்கிறீர்கள்?" என்ற வார்த்தையில் உள்ள திமீர், இதை அனுமதிக்க முடியாது. காலகாலமாக மனிதர்களை அடக்கி வாழ்ந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள் அம்பலமாகும் போது, வரும் திமீர் தான்."
முதலிலாவது நீங்கள் வேலைக்கு சென்று இருந்தீர்கள், ஆகவே அப்பின்னூட்டத்தை அழிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது அப்படியும் முடியாது. அதை வைத்து அழகு பார்த்து போலி டோண்டுவுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். தமிழ்மணம் என்பது காசி அவர்கள் உருவாக்கிய வீடு. அதில் இருந்து கொண்டே இவ்வாறு அவரை அசிங்கப்படுத்துவதை அனுமதிக்கும் உங்களுக்கும் உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பவனுக்கும் வேறுபாடு அதிகம் இல்லை. இதில் காலம்காலமாக மனிதர்களை அடக்கிவைத்ததெல்லாம் எங்கிருந்து வந்தது?

நான் இப்போது கூறுகிறேன். போலி டோண்டு/காசி கூறியது நடக்காத ஒரு விஷயம், அனுமானத்திற்கானக் கேள்வி. அது விடை கூற யோக்கியதை இல்லாதது.

நான் எழுதியதை வைத்து என்னைக் கேள்வி கேளுங்கள். சம்பந்தமில்லாத வீட்டுப் பெண்களை இழுக்காதீர்கள். இது ஆணியம் பேசுபவன் செய்யும் திமிரான வேலை. இவ்வாறு கேட்பவனின் நேர்மையையே சந்தேகிக்க வேண்டியிருக்கும்.

"பெரியார் அவர்கள் ஏற்கனவே இதற்கு மேல் பேசி விட்டார். ஒரு ஆணாதிக்கம் பிடித்த இயக்குனருக்காக இங்கு இவ்வளவு சப்பைக் கட்டுக்களா? அவர் படத்தின் மூலம் கூற நினைத்த செய்தி இதுதான். ஆண் இப்படி அப்படித்தான் இருப்பான், ஆனால் பெண் மட்டும் எல்லாவற்றையும் சகித்துப் போக வேண்டும். அவ்வளவுதான்."

நான் முதலில் கேட்டக் கேள்விக்கு பதில் அளிக்க முடிந்தால் கூறவும்.

இப்பின்னூட்டம் என் தனிப் பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மதுமிதா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://madhumithaa.blogspot.com/2005/12/blog-post_113515847529368267.html#comments

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது மதுமிதா அவர்களே. நேரடியாக ப்ளாக்கர் பின்னூட்டப் பெட்டிக்கு வருமாறு உங்கள் செட்டிங்க்ஸ்களை அமையுங்கள். இப்போது எழுத்துமாற்றிப் பெட்டி இருக்கும் நிலையில் யார் வேண்டுமானாலும் பின்னூட்டம் இட முடியும் என நினைக்கிறேன்.

இதை கவனியுங்கள். என்னுடைய பின்னூட்டங்கள் போட்டோ மற்றும் சரியான ப்ளாக்கர் எண்ணுடனும் வரும். போலி டோண்டு என் பெயரில் பின்னூட்டம் இட்டால் ஏதாவது ஒன்றுதான் வரும். இல்லாவிட்டால் என் வலைப்பூ முகவரி தருவான். இதை நினைவில் வைத்துக் கொள்ளவும். சரியான ப்ளாக்கர் எண்ணை எலிக்குட்டியை வைத்துப் பார்த்து கண்டுபிடிக்கவும். காசி அவர்கள் விஷயத்திலும் அப்படித்தான்.

என்னுடைய இந்தப் பின்னூட்டம் என் தனி வலைப்பதிவிலும் இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

dondu(#11168674346665545885) said...

மதுமிதா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://madhumithaa.blogspot.com/2005/12/blog-post_113515847529368267.html#comments

மதுமிதா அவர்களே,

நான் சொன்னதின் தீவிரத்தை நீங்கள் இன்னும் உணரவில்லை போலிருக்கிறது. தயவு செய்து இந்த எழுத்துரு மாற்றம் செய்ய வசதியளிக்கும் பின்னூட்ட வசதியை நீக்குங்கள். இப்போது பாருங்கள் உங்கள் பேரிலேயே பின்னூட்டம் இட முடிகிறது.

அதே போல காசி அவர்களின் பெயரில் மேலே காணப்படும் பின்னூட்டம் அவருடையது அல்ல. அது மேலும் என் குடும்பத்தையும் கேவலப்படுத்துகிறது. ஆகவே அதை உடனே நீக்குங்கள். பின்னூட்டங்களை மட்டுறுத்துவதை (comment moderation) செயலாக்கவும். பச்சை விளக்கு அணைக்கப்பட்டவர்கள் தங்கள் வயிற்றெரிச்சலை இம்மாதிரி வெளியிட உங்கள் வலைப்பூ துணை போக வேண்டாம் எனக்கேட்டுக் கொள்கிறேன்.

இங்கு போலி டோண்டு செய்தது காசி அவர்களின் புகைப்படத்துடன் சேர்த்து அவனே உருவாக்கிய ஒரு போலி அக்கௌண்டிலிருந்து என்பதையும் அறியவும்.

இதே பின்னூட்டத்தை என் ப்ளாக்கர் பெயரிலும் இடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

http://madhumithaa.blogspot.com/2005/12/blog-post_113515847529368267.html#comments
நான் கூறியதன் சாராம்சம் இதோ.

பின்னூட்டமிட்டவர்களின் பதிவு எண் சரிதானா என்பதைப் பார்க்க எலிக்குட்டியை வைத்து சோதிக்கவும். அதிலும் ஃபோட்டோவுடன் பின்னூட்டம் இடுபவர்களின் விஷயத்தில் இது ரொம்ப முக்கியம். அப்படிப்பட்டவர்களின் விஷயத்தில் ஃபோட்டோ இல்லாமல் ப்ளாக்கர் எண் மட்டும் சரியாக வந்தால் கண்டிப்பாக அது போலிப் பின்னூட்டமாகத்தான் இருக்கும்.

பதிவாளர்கள் தத்தம் வலைப்பூக்களில் "அனானி" மற்றும் "அதர்" ஆப்ஷன்களை நீக்கவும்.

எது எப்படியானாலும் உங்களுக்கு தெரிந்த ப்ளாக்கர்கள் எழுத்து நடை மாறியிருந்தால் முக்கியமாக மேலே கூறியதை எல்லாம் கவனிக்கவும்.

நீங்கள் கொடுத்துள்ள எழுத்துரு மாற்றப் பெட்டியை நீக்கவும் அல்லது ப்ளாக்கர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அந்த வசதியையும் வைக்கவும்.

இது எதையும் செய்யாமல் காசி அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். இப்போது நடப்பது போலி டோண்டு போன்றவருடன் நாம் செய்ய வேண்டிய யுத்தம். ஞையா மிய்யா வேலைகள் எல்லாம் காரியத்துக்காகாது என்பதை மனதில் நிறுத்தவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2005/12/41.html
இதைத்தான் calling the bluff என்று கூறுவார்கள். அதை நீங்கள் நன்றாகவே செய்தீர்கள். இந்த மேலாளர்தானே உங்கள் உதவி மேலாளருக்கு ஆப்பு வைத்து, பிறகு வேறு விஷயத்தில் தானே சிக்கிக் கொண்டது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மதுமிதா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://madhumithaa.blogspot.com/2005/12/blog-post_113515847529368267.html#comments
"இந்த ரோமன் -> யுனிகோடு தட்டச்சு செய்ய ஒரு பெட்டி வசதி கொடுத்திருக்கிறீர்களே, அதையும் நீக்குங்கள், மதுமிதா. இதன்மூலமும், ஆள் மாறாட்டம் நடைபெற வாய்ப்பிருக்கிறது. டோண்டுவின் பெயரில் வந்த இதற்கு முந்தைய மறுமொழி அப்படியானதுதான் என்று நம்புகிறேன்."
கண்டிப்பாக நீங்கள் சொன்னதுதான் நடந்தது காசி அவர்களே.

ஏற்கனவே மதுமிதா அவர்களுக்கு அவர் பெயரிலேயே பின்னூட்டம் செய்து காட்டினேன். இருப்பினும் அவர் கேட்க மாட்டேன் என்கிறார்.

மதுமிதா அவர்களே உங்களிடம் இவ்வளவுப் பாதுகாப்புக் குறைபாடுகளை வைத்துக் கொண்டு காசி அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பது த்ரீ மச் ஆகும்.

அலுப்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இரயாகரன் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://tamilarangam.blogspot.com/2005/12/blog-post_22.html#comments

""ஏன், செய்தால் என்னவாம்? இதில் என்ன வக்கிரம்? உடல் இச்சை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. அதை தணித்துக் கொள்ள ஆண்களுக்கு எந்தத் தடையும் இல்லை." என்ற வாதமே அடிப்படையில் விபச்சாரத்தைக் குறிக்கின்றது."
என்ன பிதற்றல் ஐயா. ஆண் அந்த உடல் இச்சையைத் தணித்துக் கொண்டுதானே இருக்கிறான் இத்தனை ஆண்டுகளாக. அப்போதெல்லாம் அது விபசாரம் இல்லையாமா? அப்படியே அவன் போனாலும் இன்னொரு பெண்ணும் அதற்குத் தேவைதானே. இப்போது பெண்ணும் போகலாம் என்ற நிலையெடுக்கும்போதே இப்படி குதிக்கிறீர்கள்.

முதலில் சுழற்றிச் சுழற்றிப் பேசுவதையெல்லாம் நிறுத்தி நான் கேட்கும் சில எளிமையான கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள். என்னமோ டிஃபால்ட் மாதிரி கணினியில் உட்கார்ந்தாலே இடதுசாரி, வலதுசாரி என்றெல்லாம் ஜல்லியடிக்க ஆரம்பிக்கிறீர்கள். உங்களுக்கே நீங்கள் எழுதுவது புரிகிறதா என்பதே சந்தேகம்தான்.

கணவன் செயலற்றுப் போனால் அந்த மனைவி தன் உடல்தேவைக்கு என்ன செய்வாள்? அதுவே நிலைமை தலைகீழாகப் போனால் கண்வன் என்ன செய்வான் என்பதும் உங்களுக்குத் தெரியும்தானே? அவன் செய்வது மட்டும் நியாயம் என்றால் இவள் செய்வதையும் புரிந்து கொள்ள முடியும். அவள் மிகுந்த கட்டுப்பாட்டில் இருப்பதால் ரகஸியமாகத்தான் அதை செய்ய வேண்டியிருக்கிறது. செய்யவும் செய்கிறாள்.

இன்று மட்டுமல்ல, சரித்திரக் காலத்திலிருந்தே. ஆயிரத்தொரு அரபுக் கதைகள், டெக்காமெரான் ஆகியக் கதைகள் பல நூற்றாண்டுகள் பழமையானவை வைப்பாட்டி என்பது போல கள்ள புருஷன் என்பதும் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்திருக்கிறது.

நான் கூறியதெல்லாம் அச்செயல்களைப் புரிந்து கொள்கிறேன் என்பது மட்டுமே. அதற்கு ஏன் இப்படி குதிக்கிறீர்கள்?

இந்த அழகில் காசியின் பெயரில் ஓர் இழிபிறவி எச்சமிட அதை அகற்ற என்னுடன் பேரமா? வெட்கமாக இல்லை? முதலில் கணினி அறிவை வளர்த்துக் கொண்டு வாருங்கள். அல்லது சொன்னாலாவது தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் போலி காசியின் பின்னூட்டங்கள் இரண்டு அப்படியே இருக்கின்றன. போலி டோண்டுவுக்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. அதன்படி அவன் நடந்து கொள்கிறான். அந்த வலையில் நீங்கள் விழுந்தால் உங்களுக்குத்தான் கஷ்டம்.

"இவர்கள் என்னவகையான சமூக உறவுகளை கொண்டு இருக்கின்றனரே, அதை அப்படியே வாந்தியெடுக்கின்றனர்." ரொம்பக் கண்டீர்களோ? என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

இன்னொன்று. காசியின் பெயரில் எச்சமிட்ட போலி டோண்டு என மனைவி மக்களை இழுத்ததை நீங்கள் நியாயப்படுத்தியிருக்கிறீர்கள். உங்கள் ஒழுக்கம்தான் சந்தேகத்திற்கிடமானது.

எரிச்சலுடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ.

இது பற்றி நான் போட்ட 3 பதிவுகள்:

1)
2)
3)

பெரியார் கூறாததையா நான் கூறிவிட்டேன் என்று நான் இப்போது கூறுவதற்கு காரணம் என்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அல்ல என்பதையும் கூறிவிடுகிறேன். ஏனெனில் நான் எழுதியவை என் சுய அறிவுடன் பல ஆண்டுகளாக யோசித்து வந்ததே ஆகும். இந்த விஷயத்தில் நான் பெரியார் கூறுவதுடன் ஒத்துப் போகிறேன் என்று மட்டும் குறிப்பிடுவேன். அவர் கண்ணகியைப் பற்றிக் கருத்து கொண்டதையும் ஆதரித்து இந்தப் பதிவு போட்டுள்ளேன்.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் socalled பெரியார் சீடர்கள் குதிப்பதுதான். நிருபர்கள் பெரியார் கூறியதை வைத்து தமிழ் பாதுகாவலர்களிடம் (!!!) கேள்வி கேட்ட போது அவர்களால் கோபம்தான் படமுடிந்தது. அவர்களைப் பொருத்த வரை பகுத்தறிவுக்கு எப்போதோ சங்கு ஊதி விட்டனர்.

பெரியார் அவர்கள் கூறிய பல விஷயங்களில் எனக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர் நேரில் சந்திப்பவர்களிடம் எவ்வளவு கனிவாக பழகுவார் என்பதைத் தன் தனிப்பட்ட அனுபவமாக என் தந்தையுடன் சேர்ந்து ஹிந்துவில் நிருபராகப் பணி புரிந்த திரு. ஜி.என்.ஸ்ரீனிவாசன் அவர்கள் எனக்கு கூறியுள்ளார். காலம் சென்ற என் தந்தையும் அவ்வாறே என்னிடம் பலமுறை கூறியுள்ளார்.

அவ்வப்போது அவர் எழுதிய பல விஷயங்களை நான் மறுத்து எழுதியிருப்பினும் எனக்கு அவர் மேல் உள்ள தனிப்பட்ட மரியாதை எப்போதுமே உண்டு.

வழக்கம் போல இப்பின்னூடமும் என்னுடைய அதற்காக நான் இட்ட தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வா. மணிகண்டன் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://pesalaam.blogspot.com/2005/12/blog-post_24.html
என்ன மணிகண்டன் அவர்களே,
தமிழ்மணத்தில் உங்கள் இந்தப் பதிவை சேமித்து விட்டர்கள் அல்லவா? ஆனால் இப்போதெல்லாம் பதிவு போட்டு சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் நிஜம். Round Robin முறைப்படி சேமிப்பதாகக் கேள்விப்பட்டேன்.

என்னைப் பொருத்தவரையில் போலி டோண்டுதான் வலைப்பூக்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். இப்போதைக்கு அடக்கி வாசிக்கிறான். பின்பு நடக்க வேண்டியது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனின் திருவுள்ளப்படியே நடக்கும்.

வலைப்பூவிற்கு வந்ததிலிருந்து எனக்கு தமிழில் எழுத மிகப் பெரிய உந்துதல் கிடைத்துள்ளது. சொல்லி வைத்தாற்போல ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு வேலைகள் வேறு அதிகம் வர ஆரம்பித்துள்ளன.

ஆகவே என்ன நெருடலாக இருந்தாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்றக் கொள்கைதான் எனக்கு இப்போது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2005/12/43.html

என் நங்கநல்லூர் வீட்டை 22 வருடங்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தேன். மொத்தம் 8 குடித்தனக்காரர்கள். நாங்கள் போட்ட ஒரே கண்டிஷன் அசைவ உணவு சமைக்கக் கூடாது என்பதுதான். கடைசி குடித்தனக்காரர், கேரளாவைச் சேர்ந்தவர். அசைவ உணவு சாப்பிடக்கூடியவர் என்றாலும் என் வீட்டில் அதைச் செய்யவில்லை.

கூறப்போனால் சாப்பாடு விஷயத்தில் உள்ள வேறுபாடுதான் ஜாதியைப் பார்க்கச் சொல்லும் முக்கியக் காரணங்களில் ஒன்று. நானும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து, பல ஜாதி நண்பர்களுடன் பழகி வந்ததால் இந்த ஜாதி வேறுபாடு அவ்வளவாக என் கவனத்தைக் கவரவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மரம் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

http://tamilkudumbam.blogspot.com/2005/12/blog-post_113557204645804698.html#comments
"பள்ளியில் பார்த்தபோது இருந்ததில் பாதி உருவமாய் மாறிவிட்டாய். அங்கங்கு நின்று கொண்டும்., பேசியபடி அழுது கொண்டும் வந்தாய்., என்னை கடந்த போது உன்னையே பார்த்துக் கொண்டு நின்ற என்னைப் பார்த்து, தடுமாறி புன்னகைத்து, நிற்க நினைத்து., சட்டென தலையை குனிந்து கொண்டு கடந்து விட்டாய். பின்னால் ஒரு தோழியின் மூலம் உன் வாழ்க்கையறிந்தேன். அன்று உனக்கு என்ன துக்கமடி? வெகு நாட்கள் கழித்துப் பார்த்தும் ஏன் சென்றாய் அப்படி?."
என்னை மிகவும் பாதித்த வரிகள். அதே சமயம் உங்கள் மேலும் கோபம் வந்தது. அந்தப் பெண்தான் ஏதோ தயக்கத்தில் உங்களைப் பார்த்து தலையை குனிந்து கடந்து சென்றாள் என்றால், "என்னடி விஷயம்" என பதறிப்போய் கேட்டிருக்க வேண்டாமா நீங்கள்? உங்களைத் தடுத்தது எது?

உங்களை யாராவது ஏதாவது சொல்லி விடுவார்களே என்ற பயமா? அப்பெண்ணே நீ யார் என்ற ரேஞ்சில் பேசிவிடுவாள் என்ற தயக்கமா? அப்படியே கேட்டிருந்தாலும் அப்பெண் ஏதேனும் கூற மறுத்து விடுவாள் என்று நினைத்துவிட்டீர்களா? எது தடுத்தது உங்களை?

ஏன் இந்த இரட்டை நிலை? ஆண் தன் நட்பை விடாது இருக்கும்போது பெண்கள் மட்டும் ஏன் அப்படி இருக்க வேண்டும்? கடித்ங்கள், தொலைபேசிகள் எல்லாம் எதற்கு இருக்கின்றன? கணவனோ அவன் வீட்டினரோ ஏதேனும் கூறிவிடுவார்களோ என்று கற்பனையாகவோ நிஜமாகவோ ஏன் பயப்பட வேண்டும்? ஏன், ஏன் என்று இப்படிப் பல கேள்விகள்.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ரோசாவசந்த் அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://rozavasanth.blogspot.com/2005/12/blog-post.html#comments
நான் செல்லவில்லை. அன்று ஹ்யூமர் க்ளப் மீட்டிங் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில். என்னை Chief Guest ஆக கூப்பிட்டிருந்தார்கள். Guest of Humour என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அதை பற்றி தனிப்பதிவு என் வலைப்பூவில் போட இருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2005/12/44.html
நான் ஏற்கனவே கூறியதுபோல நகரத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு இதெல்லாம் இதுவரை தெரியாத செய்திகளாகத்தான் படுகின்றன.

20 வருடங்கள் நான் தில்லியிலேயே இருந்ததால் என் வீட்டை என் சார்பில் வாடகைக்கு விட்டது கூட என் நண்பரது குடும்பத்தினர்தான். அவரிடம் நான் சிலருக்கு வாடகைக்கு விடக் கூடாது என்று மட்டும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் முக்கிய கண்டிஷன் இலங்கைக்காரர்களுக்கு தரக்கூடாது, போஸ்ட் ஆஃபீஸ், தாலுக்கா ஆஃபீஸ், போலீஸ் ஸ்டேஷன் ஆகியோருக்கு வீடு கிடையாது ஆகியவை. ஒரு குடித்தனக்காரர் பி.சி.ஓ. நிறுவ எண்ணினார். So he was out. இலங்கைக்காரர் நல்லவராகவே இருந்தாலும் புலி தொந்திரவு இருக்கும் வரை அவர்களை கிட்டத்திலேயே சேர்க்கக் கூடாது என்றேன். முக்கியக் காரணம் நாம் வேண்டும்போது காலி வீடு கிடைக்காது.

அப்படியெல்லாம் பார்த்து வாடகைக்கு விட்டாலும் கடைசி குடித்தனக்காரர் ஒரு மாத வாடகையை பாக்கி வைத்து விட்டு கம்பி நீட்டினார். இருப்பினும் வீடு திரும்ப காலியாகக் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன். அது வேறு பெரிய கதை.

மேலும் நீங்கள் எழுதுவதை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நிலா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://nilaraj.blogspot.com/2005/12/blog-post_27.html#comments
மேலே காசி அவர்கள் கூறியதாகக் குறிப்பிடப்பட்ட பின்னூட்டம் அவருடையது அல்ல. மேலும் பின்னூட்டத்துக்கான உங்கள் செட்டிங்ஸ் அனானி மற்றும் மற்றவர் பெயரிலும் இடப்படும் விஷமப் பின்னூட்டங்களுக்கு வழி வகுக்கிறது.

கடந்த பல மாதங்களாக எழுதிவரும் உங்களுக்கு போலிப் பின்னூட்டங்களினால் வரும் கஷ்டம் தெரியவில்லையா? குறைந்த பட்சம் மட்டுறுத்தலையாவது செய்யலாமே.

மேலே காசி அவர்களின் பெயரில் பின்னூட்டமிட்ட போலி டோண்டுவிற்கு உங்கள் பிரச்சினையில் ஒரு அக்கறையும் கிடையாது என்பதே நிஜம். காசி அவர்கள் அவருடைய பச்சை விளக்கை அணைத்து விட்ட எரிச்சலில் அவர் ஊளையிடுகிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஞான வெட்டியான் அவர்கL பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://njaanavelvi.blogspot.com/2005/11/blog-post.html

மனம் பிறழ்ந்தவனைப் பற்றி நான் போட்டப் பதிவுகள் இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2005/06/blog-post_30.html

அவனே உங்களையும் பீடிக்கிறான் என்று நினைக்கிறேன். அவனை அலட்சியம் செய்யுங்கள்.

இப்பின்னூட்டம் நான் இதற்காகவே தனியாக வைத்திருக்கும் என் தனிப்பதிவிலும் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அப்பிடிப்போடு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://tamilkudumbam.blogspot.com/2005/12/blog-post_28.html#comments

போலிப் பின்னூட்டங்களால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். அவற்றைப் பற்றி நான் போட்டப் பதிவுகளைப் பார்க்கவும்.
1)
2)

முகமூடி அவர்கள் கூறுவது நிஜம். போலி டோண்டு கொடுக்கும் (அவன்தான் எல்லா போலிப் பின்னூட்டங்களுக்கும் ஆதார ஊற்று) பிரச்சினையைப் புரிந்து கொள்ளவும். அவ்வளவுதான் கூற முடியும்.

என்னுடைய இந்தப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அப்பிடிப்போடு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://tamilkudumbam.blogspot.com/2005/12/blog-post_28.html#comments
அரசியல் வாதிகளையே குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுவதில் தவறே இல்லை. இது பற்றி நான் போட்ட இப்பதிவு சம்பந்தப்பட்ட கட்சியின் ஆதரவாளர்களுக்கு பிடிக்கவில்லை.

பிறகு யோசித்துப் பார்த்து நாம் சொல்ல வந்ததை சரியாகச் சொல்லவில்லையோ என நினைத்து வெளிப்படையாகவே சம்பந்தப்பட்ட கட்சித்தலைவர் செய்தது சரியே அவரை இந்த விஷயத்தில் தொண்டர்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று கூட பதிவு போட்டு பார்த்தேன். அதுவும் அக்கட்சியின் கொ.ப.செ.வுக்குப் பிடிக்கவில்லை. அக்கட்சியின் தலைவரை இந்த விஷயத்தில் பின்பற்றுங்கள் என்றுதானே அக்கட்சியின் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டேன். இதில் என்ன தவறு என்பதுதான் புரியவில்லை.

ஆனால் ஒன்று அப்பிடிப் போடு அவர்களே. இம்மாதிரி கட்சிக்கு தன் குடும்பத்தைப் புறக்கணித்து சேவை செய்கிறவர்கள்தான் அக்கட்சியின் தலைமைக்கு தேவை, அப்படிப்பட்டவர்களிடம் பணம் காசு அல்லது உடல் உழைப்பை ஈகக் கூடிய அளவுக்கு உடல் வலிமை இருக்கும் வரை. பிறகு அவர்கள் கறிவேப்பிலை ரேஞ்சில் தூக்கி எறியப்படுவார்கள். தேவையானால் தலைவர்கள் அவ்வப்போது முதலைக் கண்ணீர் வடிப்பார்கள். ஹிந்தியை எதிர்த்து தீக்குளித்தவர்கள் தியாகத்தில் பதவிக்கு வந்தவர்களெல்லாம் தங்கள் பேரன் ஹிந்தி படித்ததால் மத்திய மந்திரியாக முடிந்தது என்றெல்லாம் கூறி பெருமிதப்பட்டுக் கொள்வார்கள்.

ஆனால் யோசித்து பார்த்ததில் கொ.ப.செ. அவர்களையும் குறை கூறமுடியாது. அவர் மட்டில் அவர் தலைவரின் செயலை நான் கேட்டுக்கொண்டது போல பின்பற்றப் போவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. அதே நேரத்தில் சாதாரணத் தொண்டர்களும் அதை செய்துவிடப் போகிறார்களே என்று பதறுவது கூட புரிந்து கொள்ள முடிகிறது, ஏனெனில் அவ்வாறு நடந்து விட்டால் கட்சிக்கு நல்லதில்லைதான்.

இப்பின்னூட்டம் வழக்கம்போல என்னுடைய இந்தத் தனிப்பதிவிலும் நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ரஞ்சித் அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ.

ஒரு அரசனுக்கு அடிக்கடி ஒரு கனவு வருமாம், தான் பட்டாம்பூசியாக இருப்பது போல. ஒரு நாள் திடீரென சந்தேகம் வந்ததாம். அதாவது தான் பட்டாம்பூச்சியாக இருப்பது போல கனவு காணும் அரசனா அல்லது அரசனாக இருப்பது போன்று கனவு காணும் பட்டாம்பூச்சியா என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

"பேசாம சேர்மன் சொன்ன கப்பல் பார்ட்டிக்கு லோன் கொடுத்திருந்தா இந்த பிரச்சினையே வந்திருக்காதில்ல?"

அப்படிக் கொடுத்திருந்தா வேற பிரச்சினை வந்திருக்குமுல்ல. அது சரி அந்த கப்பல் பார்ட்டிக்கு கடன் கொடுத்தார்களா, அது திரும்ப ஒழுங்காகக் கட்டப்பட்டதா? அவ்வாறு கட்டப்படாமல் இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட மேலாளர்தானே பாதிக்கப்பட்டிருப்பார்?

அப்படியே அது கட்டப்பட்டிருந்தாலும் அது நீங்கள் முதலில் கறாராக இருந்ததன் பலனாகத்தான் இருக்கும். அதற்காக உங்களுக்கு கிரீடம் எல்லாம் வைத்திருக்க மாட்டார்கள்தான். ஆனாலும் சம்பந்தப்பட்ட பல பேருக்கு அது புரிந்திருக்கும் அல்லவா.

அதே போல மூப்பனார் அவர்கள் கைகாண்பித்தவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்ட கோபால கிருஷ்ணன் அவர்களே இப்போது நினைவுக்கு வருகிறார். மூப்பனார் அவர்களிடம் நிருபர்கள் இது பற்றி கேட்ட போது அவர் பாக்கை மென்று கொண்டே "இந்தாளுக்கு ரூல்ஸ்படி ஏதாவது செய்ய முடிந்தால் செய்யவும்" என்றுதான் கேட்டு கொண்டேன் என்று கைகழுவிவிட்டார். அச்சமயம் இதை பத்திரிகையில் படித்த நான் மிகவும் எரிச்சல் அடைந்தேன்.

அதே போல கடன் மேளாவில் கடனுக்காக செக்யூரிடி கேட்டார் என்பதற்காக ஒரு வங்கி மேனேஜரை எல்லார் எதிரிலும் திட்டி அவமானப் படுத்திய ஜனார்த்தன் பூஜாரி அவர்களும் அவ்வாறே "கடன் கொடுக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகளை மறக்காமல் இருப்பது வங்கி மேனேஜரின் பொறுப்பு என்று விலாங்கு மீனாக பிற்காலத்தில் நழுவினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://ennulagam.blogspot.com/2005/12/46.html
தர்ம சங்கடமான நிலைமைதான். இருந்தாலும் ஒரு சிறு சந்தேகம். உங்கள் கப்பல் பார்ட்டியையே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கண்டுபிடித்ததையெல்லாம் தெளிவாக மேற்கோள் காட்டி கடனை மறுக்குமாறு சிபாரிசு எழுத்து ரூபத்தில் செய்திருந்தால் சேர்மன் அதை ஓவர்ரூல் செய்ய முடியுமா?

நான் வெளி ஆள், சுலபமாகக் கேட்டு விட்டேன் என நினைக்கிறேன். ஆனால் அவ்வாறு சிபாரிசு செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல். ஏனேனில், நிச்சயமாக உங்கள் கண்டுபிடிப்புகளை வைத்துத்தான் சேர்மன் அந்த கடனை ரிஜக்ட் செய்திருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க:
http://mugamoodi.blogspot.com/2005/12/blog-post_28.html
"இது போல போலிப் பின்னூட்டங்கள் என்னுடைய பதிவிலும் இடம்பெற்றன.
நானும் இது உங்கள் பதிவு போல் ஒரு செய்ய நினைத்தேன். ஆனால் அது புதிய போலிகளை உருவாக்கத் துணை செய்யக் கூடாது, என நினைத்து அதை பதியவில்லை.
--மகேஸ்"
அப்படியா மகேஸ் அவர்களே, இப்போது உங்கள் பதிவின் பின்னூட்ட பரிமாறல்களைப் பாருங்கள். அதாவது பதிவு:
http://mahendranmahesh.blogspot.com/2005/12/blog-post_19.html

1) At Tuesday, December 20, 2005 12:32:52 AM, காசி (Kasi) said…
ஒழுங்கு மரியாதையாக பார்ப்பனர்களை வாழ்த்தி உயர்வாக எழுதவும். இல்லை எனில் உங்கள் வலைப்பதிவு தமிழ்மணத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படும்.

2) At Tuesday, December 20, 2005 1:02:37 AM, மகேஸ் said…
படித்த முட்டாள் காசி, என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.

3) At Tuesday, December 20, 2005 1:05:27 AM, dondu(#4800161) said…
முதற்கண், மேலே பின்னூட்டமிட்டது காசி அவர்கள் அல்ல. அவர் பெயரில் போலி டோண்டு இட்டப் பின்னூட்டம் அது. அது தெரியாமல் வார்த்தைகளை விடாதீர்கள். Use mouseover technique for God's sake.
நான் ஜாதியைப் பற்றிப் பேச நேர்ந்ததன் பின்புலனை அறிய என்னுடைய இப்பதிவுக்கு செல்லவும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_113188854570236465.html
அதில் "என் வெளிப்படையான எண்ணங்களை" பற்றிய ஹைப்பர் லிங்கைச் சொடுக்கவும். பதிவு மற்றும் அதன் பின்னூட்டங்களைப் பார்க்கவும். பிறகு முடிவு செய்யவும்.
இந்தப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
4) At Tuesday, December 20, 2005 3:14:54 AM, dondu(#4800161) said…
"ஒரு கம்ப்யூட்டரும் பதிய ஒரு இடமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என நினைப்பா?"
அதே கேள்வியை உங்களைக் கேட்கிறேன். ஒரு விஷயத்தின் பரிமாணங்களின் நீளம், அகலம் மற்றும் ஆழம் பற்றித் தெரியாமல் வாயை விடுவது ஏன்? காசி என்னும் கௌரவப்பட்ட தமிழ்மணம் நிர்வாகி இவ்வாறு தரக்குறைவாகப் பேசுவாரா என்ற பிரக்ஞை இன்றி தடித்த வார்த்தைகளை அவர் மேல் விடுவதற்கு யோசிப்பது என்பதே இல்லையா?
இப்படித்தான் உங்கள் வேலையிலும் செயல்படுவீர்களா?
இந்தப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அலுப்புடன்,
டோண்டு ராகவன்
5) At Tuesday, December 20, 2005 3:56:09 AM, மகேஸ் said…
ஹா...ஹா...
காசி தமிழ்மணம் நிர்வாகியா?அவருடைய நிர்வாக தகுதி பற்றி அவருடைய பதிலில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
எனக்கு ஒரு விஷயத்தின் பரிமாணங்களின் நீளம், அகலம் மற்றும் ஆழம் பற்றித் தெரியவில்லையா?
ஹா...ஹா... என்னுடைய கொள்கை சிறியது, ஆனால் சக்தி வாய்ந்தது.
எந்த ஜாதியும் உயர்ந்ததும்/தாழ்ந்ததும் இல்லை. இது எனக்கு என் அம்மாவும்,ஆசிரியர்களும் சொல்லிக் கொடுத்தது.உங்களுக்கு நல்ல ஆசிரியர் கிடைக்கவில்லை போலும்.
நான் எந்த ஒரு ஜாதியைப் பற்றியும் உயர்தியோ/தாழ்த்தியோ பேசமாட்டேன்.
இது என்னுடைய தீர்மானமான பதில்.
எனக்கு நிறைய வேலை இருக்கிறது. உங்களுக்கு?

6) At Tuesday, December 20, 2005 4:34:54 AM, dondu(#4800161) said…
"காசி தமிழ்மணம் நிர்வாகியா?அவருடைய நிர்வாக தகுதி பற்றி அவருடைய பதிலில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்."
சுத்தமாக உங்களுக்கு அறிவு இல்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். காசி கூறிய பதிலாக நீங்கள் குறிப்பிடுவது அவருடையதே இல்லை என்று நான் கூறுகிறேன். அது புரியவில்லையா உமக்கு? தமிழும் அவுட்டா? அதுவும் தெரியாதா?
"எனக்கு நிறைய வேலை இருக்கிறது."
உண்மைதான். தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும், மௌஸோவர் என்றால் என்னவென்று கற்றுக் கொள்ள வேண்டும். அது வரைக்கும் உங்கள் மேலதிகாரிகளுக்கு உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதும் தெரியாமல் இருக்க வேண்டும். ரொம்பவேத்தான் வேலை இருக்கு உங்களுக்கு.
இந்தப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அலுப்புடன்,
டோண்டு ராகவன்
7) At Tuesday, December 20, 2005 5:23:02 AM, மகேஸ் said…
தமிழ்மணம் நிர்வாகி காசி அவர்களே,
தாங்கள் பின்னூட்டம் இடவில்லை என அறிந்தேன். உங்களைப் பற்றிக் கூறிய அனைத்துக் கருத்துக்களையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.
நான் கூறிய அனைத்தும் அந்த போலியான மனிதனைச் சேரும்.
To sum up:
காசியை படித்த முட்டாள் என்று போலி பின்னூட்டத்தைப் பார்த்து ஏசி விட்டீர்கள். அது போலி என்பதை எடுத்துக் காட்டியும் மேலும் அவரை இன்ஸல்ட் செய்தீர்கள். கடைசியில் உண்மை தெரிந்ததும் வெறுமனே வார்த்தைகளை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினால் போதுமா? ஒரு வருத்தம் தெரிவிப்பு அல்லது மன்னிப்பு கேட்டல் எதுவுமே கிடையாதா? இதுதான் நீங்கள் கற்ற நாகரிகமா?

குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்தது போல காசியை இழிவுபடுத்தியப் பின்னூட்டங்களையெல்லாம் அப்படியே வைத்து அழகு வேறு பார்க்கிறீர்கள்.

It actually makes you an accessory after the fact in the case of libel on Kasi.

It is only for people like you that Mugamudi had explained in detail how the misrepresenting comments are made in others' names.

Regards,
N.Raghavan

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://enkathaiulagam.blogspot.com/2005/12/13.html
"ரொம்ப நன்றிங்க.. ஹும், ஹும் (துக்கம் தாளாமல் விம்மல்..)"

இப்படியெல்லாம் லொள்ளு கூட பண்ணத் தெரியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2005/12/46_30.html
"ஒருவேளை நேற்று நான் அவரை ‘புகார் செய்யப்போகிறேன்’ என்று அச்சுறுத்தியதாலேயே எனக்கு அவர் வீட்டை வாடகைக்கு விட சம்மதித்திருக்கலாமே. அவருடைய தாயாரிடம் அவர் என்ன பொய் சொல்லி என்னை குடியமர்த்துகிறாரோ.. என் மனைவியோ மிகவும் எளிதாக உணர்ச்சிவசப்படக்கூடியவர். அங்கே குடிபோன பிறகு வீட்டு உரிமையாளருடைய தாயார் ஏதாவது அவமானப்படும்படி பேசிவிட்டால் மனம் குன்றிப்போக வாய்ப்புண்டு."

இவ்வளவு யோசித்திருக்கிறீர்களே, என்னைப் போல நீங்களும் உணர்ச்சி வசப்படுபவராகவே எனக்குத் தெரிகிறீர்கள். அதனால்தான் அந்த வீட்டுக்காரரின் மனச்சங்கடம், உங்கள் மனைவிக்கு ஏற்படக்கூடிய மனவருத்தம் எல்லாவற்றையும் யோசித்திருக்கிறீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இட்லி வடை அவர்களின் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://idlyvadai.blogspot.com/2005/12/2005-2.html
Fantastic. ஒரு நிமிடம் என்னை மறந்து விட்டீர்கள் என நினைத்தேன். இல்லை, என்னை மறக்கவில்லை என்பதை கண்டு மகிழ்ந்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கானா பிரபா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பினூட்டம் இதோ. பார்க்க: http://kanapraba.blogspot.com/2005/12/blog-post_113595230990175369.html

இதே படத்தைத்தான் ஹாலிவுட்டில் Magnificient Seven என்ற பெயரில் படமாக 1960-ஆம் ஆண்டு எடுத்தார்கள்.

நடித்தது Yul Brynner, Eli Wallach,
Horst Buchholz, Charles Bronson
and others.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய இதற்கானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கானா பிரபா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பினூட்டம் இதோ. பார்க்க: http://kanapraba.blogspot.com/2005/12/blog-post_113595230990175369.html

"இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய இதற்கானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments"

இதுதான் உங்களை குழப்பியது என நினைக்கிறேன். பின்னூட்டமிடுவது உண்மையான டோண்டு என்றறிய மூன்று சோதனைகள் உண்டு.
1. என் பெயர் மற்றும் அடைப்பு குறிகளுக்கிடையில் என் ப்ளாக்கர் எண்ணுடன் dondu(#4800161) என்று வரும். எலிக்குட்டியை அதன் மேல் வைத்து பார்த்தால் கீழே உங்கள் திரையில் உள்ள பட்டையில் அதே ப்ளாக்கர் எண் தெரிய வேண்டும்.
2. கூடவே உங்கள் ப்ளாக்கர் கணக்கில் போட்டோக்கள் எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் போட்டோவும் மேலே இருப்பது போல தெரியும்
3. நான் வேறு எந்த ப்ளாக்கூகளில் பின்னூட்டமிட்டாலும் அதன் நகல், (இப்பின்னூட்டம் உட்பட) என்னுடைய தனிப்பதிவில் வரும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

அவ்வளவுதான் விஷயம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: உங்கள் படத்தை பார்த்தால் ஹிந்தி நடிகரும் நடிகை நூதன் அவர்களின் மகன் மோனிஷ் பெஹல் அவர்கள் ஞாபகத்துக்கு வருகிறார்.

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2006/01/47.html
சுவாரசியமான அனுபவம். இப்போதைய தஞ்சை மற்றும் தமிழகத்தின் வேறு நகரங்களில் நீங்கள் அப்போது பட்ட கஷ்டங்களைப் பட வேண்டியிருக்காது என நினைக்கிறேன்.

நிற்க. இப்போது நான் இப்பின்னூட்டம் இடுவதன் நோக்கமே உங்களுக்கு ஒரு நற்செய்தி (!) தருவதற்குத்தான். தமிழ்மணத்துக்கு வாரிசு வந்து விட்டது. காசி அவர்கள் இதை http://www.nandhavanam.com/home.php என்று அப்டேட் செய்கிறார். சீக்கிரம் அதில் தங்கள் பதிவை இணைத்துக் கொள்ளுங்கள். அவர் தரும் இரு மீயுரைகளையும் உங்கள் டெம்பிளேட்டில் சேர்த்து கொள்ளவும். நான் செய்தாகி விட்டது. இப்போதைக்கு தமிழ்மணமும் நந்தவனமும் தனித்தனியாக இருப்பினும் future belongs to Nandhavanam.

பதிவுகள் உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படுகின்றன. தேவையானதைச் செய்யவும்.

இப்பின்னூட்டம் என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://nunippul.blogspot.com/2006/01/blog-post.html

சந்தேகமே வேண்டாம் உஷா அவர்களே. கடிதம் உண்மையான காசி அவர்களிடமிருந்துதான் வந்துள்ளது. நந்தவனம் கூடிய சீக்கிரம் தமிழ்மணமாகப் போகிறது.

என்னுடைய இப்பின்னூட்டமும் அதற்கெனவே நான் வைத்திருக்கும் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சோதனை

dondu(#11168674346665545885) said...

கானா பிரபா அவர்கல் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://kanapraba.blogspot.com/2005/12/blog-post_16.html#comments
ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன் தனது ஹிந்தி படம் ஒன்றை ஒரு தியேட்டரில் திரையிட முயன்றார். தியேட்டர் முதலாளியும் சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்டார். ஆனால் அப்போது அந்த தியேட்டரில் ஒரு பெங்காலிப் படம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு புக் செய்யப்பட்டிருந்தது. இருந்தாலும் அதை தூக்கி விட தியேட்டர் முதலாளி முடிவு செய்தார்.

வாசன் முதலில் அந்தப் படத்தைப் பார்த்தார். அதுதான் பதேர் பாஞ்சாலி. உடனே சத்யஜித் ரே அவர்கள் தங்குமிடத்திற்கு சென்று அவரிடம் அப்படத்தைப் பாராட்டி பேசினார். பிறகு அப்படத்தைத் தூக்கி விட்டு தன் படத்தை போட அவர் ஒத்து கொள்ளவில்லை.

இப்பின்னூட்டம் என்னுடைய இந்த தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க:

http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மோஹந்தாஸ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://imohandoss.blogspot.com/2005/11/blog-post_29.html
தமிழ் டெம்ப்ளேட்டில் எல்லாம் உள்ளே போகத் தேவையில்லை.

உங்கள் ஆங்கிலப்பதிவில் ஆட்சென்ஸ் உட்கார்ந்ததும், நேரடியாக தமிழ் டெம்ப்ளேடிற்கு வந்து ஆட்சென்ஸை க்ளிக் செய்து லாக்-இன் செய்து, முதலில் ஒரு இமெயில் முகவரியும் பாஸ்வேர்டும் கொடுத்தீர்கள் அல்லவா அதையே இங்கே கொடுத்து உள்ளே செல்லூங்கள் பின்னர் ஆங்கில பதிவில் சொன்னது போல் உங்களுக்கு பொறுத்தமான ஆடை தேர்ந்தெடுத்தால் முடிந்தது. இனி சம்பாதிக்கவேண்டியது தான் பாக்கி.

அதாவது டெம்ப்ளேட்டில் எல்லாம் போய் நகல்-ஒட்டல் எல்லாம் தேவையில்லை. இதைத்தான் நான் இப்போது அதாவது ஜனவரி 8, 2006 அன்று செய்தேன். வந்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ENNAR said...

விட்டு விடுங்கள் சார் முடிந்து கதை தொடர வேண்டாம்

dondu(#11168674346665545885) said...

கதை இன்னும் முடியவில்லை என்னார் அவர்களே. போலி டோண்டு இன்னும் செயலுடன் இருக்கிறான்.

ஒரு விஷயம் தெரியுமா? மே மாதம் இப்பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை விடவேயில்லை. அப்போதும் பலர் எனக்கு இதையெல்லாம் அலட்சியப்படுத்த ஆலோசனை கூறினர். நானும் அதைத்தான் செய்கிறேன். இருப்பினும் தற்காப்பு ஏற்பாடுகள் இன்றியமையானவையாகும். என் பெயர் பிளாக்கர் நம்பருடன் சேர்த்து எழுதுவது, என் ஃபோட்டோவை டிஸ்ப்ளே செய்தது ஆகிய இரண்டு ஏற்பாடுகளும் முக்கியமானவையே. டிஸ்ப்ளே எண்ணும் எலிக்குட்டி வைத்து பார்க்கும்போது ஒத்துப் போக வேண்டும், அத்துடன் ஃபோட்டொவும் கமெண்ட்டுடன் வரவேண்டும். ஆனால் இதில் இரண்டு பிரச்சினைகள். நிறைய பேருக்கு எலிக்குட்டியை வைத்துப் பார்க்கத் தெரியவில்லை, அல்லது சோம்பல் அல்லது அவர்கள் புதிய பதிவாளர்கள் அவர்களுக்கு இப்படி போலிப் பின்னூட்டங்கள் வரும் என்ற விஷயமே தெரியாது, ஆகவே அவ்வாறு பார்க்க மாட்டார்கள்.

இன்னும் சில பதிவாளர்கள் ப்ளாக்கரில் இல்லை ஆகவே மேலே குறிப்பிட்ட ஏற்பாடுகள் அவர்கள் பதிவு விஷயத்தில் பலிக்காது. ஆகவே அவர்களுக்காகவும் என்னுடைய இந்த தனிப்பதிவு. இதில் நான் வெளியில் இடும் பின்னூட்டங்கள் நகலாக பின்னூட்டமிடப்படும். என்னுடைய பதிவுகள் மட்டுறுத்தலில் இருப்பதால் இங்கு போலி டோண்டு கண்டிப்பாக வாலாட்ட முடியாது. இப்பதிவு இப்போதெல்லாம் நான் ஒவ்வொருமுறை பின்னூட்டமிடும்போதும் இற்றைப்படுத்தப்படுகிறது. இது இருந்ததால்தான் முகமூடி, குழலி, ரோஸாவசந்த் ஆகியோர் என்னைத் தவறாக நினைத்து தங்கள் பதிவுகளில் எழுதியவர்களிடம் உண்மை நிலையைக் கூற முடிந்தது.

To sum up:
போராட்டம் தொடர்கிறது. அவ்வளவுதான். கதை முடியவில்லை. என் தற்காப்பு ஏற்பாடுகள் தொடரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Balachandar's blog vide http://bunksparty.blogspot.com/2006/01/blog-post_113665559232878088.html and is awaiting moderation.
ராஜாஜி அவர்களின் சீர்திருத்தக் கல்வித் திட்டத்தைப் பற்றி நான் போட்ட இப்பதிவே உங்களுக்கு நான் இடும் பின்னூட்டம்.

மலர் மன்னன் அவர்கள் திண்ணையில் எழுதியதையும் பாருங்கள். அக்காலக் கட்டத்தில் அவர் நிருபராகப் பணியாற்றியவர்.

என்னுடைய இப்பின்னூட்டம் என்னுடைய இதற்கானப் பிரத்தியேகப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ராமசந்திரன் உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://nunippul.blogspot.com/2006/01/blog-post_07.html

நல்ல முடிவு. போலி டோண்டுவை ஒழிக்க இதுவே சரியான முறை. எல்லா பதிவாளர்களும் இதை செய்தால் ந்ன்றாக இருக்கும்.

சிலர் கதை முடிந்து விட்டது என நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை என்பதை உங்களுக்கு வந்த மின்னஞ்சல் நிரூபித்துவிட்டதல்லவா?

வழக்கம் போல இந்தப் பின்னூட்டமும் என்னுடைய தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நாட்டாமை அவ்ர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://peddarayudu.blogspot.com/2006/01/blog-post.html
ஆக தமிழ்மணத்தின் திரட்டிக்குள் வந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆதிரை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ullal.blogspot.com/2006/01/blog-post.html#comments
முதலில் விவாகரத்துக்கு அப்ளை செய்ய வேண்டும். கணவன் அவளது பராமரிப்பு செலவுகளுக்கு அவள் அவனை விட்டு பிரிந்த நாள் முதல் வட்டியுடன் தர வேண்டும். விவாகரத்து வழங்கும் வரை அந்தத் தொகை வந்துகொண்டிருக்க வேண்டும்.

அவனுடைய பிராவிடண்ட் ஃப்ண்ட் சேமிப்புகளுக்கு அவள் மகளே வாரிசு, விவாகரத்து ஆனாலும் கூட.

கூச்சப்படாமல் தனக்கு கணவன் செய்த கொடுமைகளை வழக்காடு மன்றத்தில் கூறவேண்டும். பெண் குழந்தையை வைத்து அவன் தவறான வழியில் சம்பாதிக்க முயலுவான் என்ற ரேஞ்சில் கூட தேவையானால் கூறலாம். இது யுத்தம். No holds are barred.

வழக்கம்போல இந்தப் பின்னூட்டமும் எனது இதற்கானத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பொன்னம்பலம் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://pulambalkal.blogspot.com/2006/01/12.html
பொன்னம்பலம் அவர்களே, இப்பாடல் வரும் காட்சியை "புன்னகை" படத்தில் பார்த்தீர்களா? கற்பழிக்க வரும் ராமதாசிடமிருந்து தன்னைப் பாதுகாக்கப் போராடாமல் ஜயந்தி சாவகாசமாக இந்தப் பாட்டைப் பாடுவார், பாட்டு முடிந்ததும் ராமதாஸ் தன் "கடமை"யைச் செய்து போவார்.

குறிபார்த்து ராமதாஸ் தொடைகளுக்கு நடுவில் ஒரு உதை விடாது என்ன ஐயா பாட்டு வேண்டியிருக்கிறது?

அந்தப் பாட்டை கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது.

இப்பின்னூட்டம் எனது தனிப்பதிவிலும் நகலிடப்படும், பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2006/01/53.html
இது சிறிய உலகம் என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்?

ஆக பையனுக்கு குட்டு கிடைத்தது!

இப்பின்னூட்டம் என் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மங்களூர் முத்துவின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://muthuvintamil.blogspot.com/2006/01/blog-post_12.html
"சுமார் ஆறு அடி உயரம், கழுத்தில் மாட்டிய மொபைல் என்று மாடர்னாக நின்று கொண்டிருந்தார் "என்றும் பதினாறு" டோண்டு.மூன்று மணிநேரத்திற்கும் மேல் நீண்ட எங்கள் பேச்சின் பெரும்பகுதி போலி டோண்டுவை பற்றிய சுழன்று கொண்டு இருந்தது. கம்ப்யூட்டர் தொழில்நுணுக்கம் எல்லாம் எனக்கு தெரியாது என்று கூறியபடியே ஆனால் கம்ப்யூட்டரின் எல்லா நுணுக்கங்களையும் பிட்டு பிட்டு வைத்தார் டோண்டு.கூர்மையான கவனிப்பின் மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாகவோ அவருக்கு கைகூடியுள்ள அவருடைய நுண்ணிய பார்வைகள் எனக்கு வியப்பூட்டின.தமிழ்மணத்தில் நடமாடும் போலிகளை பற்றிய ஒரு விஷயத்தில் அவர் தனக்கு தோன்றிய ஒரு சந்தேகத்தையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்தது தான் எனக்கு அவரின் அவதானிப்புகள் சரியாக இருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட காரணம். முழுக்க சரி என்று கூறமுடியாவிட்டாலும் தவறு என்று ஒதுக்கமுடியாது.

பிறகு சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி"

நீங்கள் என்னைப் பற்றி எழுதியதைப் பார்க்கும்போது சீரோ டிகிரியை படிக்காமலே உணர்ந்து கொண்டேன். அப்பா ஒரே குளிர்தான் போங்கள்.

இப்பின்னூட்டம் என்னுடைய பிரத்தியேகப் பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted in Mangalore Muthu's post and is awaiting moderation.
"//இவ்வளவு பெரிய புத்தக கண்காட்சியிலும் தன் ரேஞ்சுக்கு புத்தகம் இல்லை என்று கடைக்காரனுக்கு(எனக்கும்) புரிய வைத்த சந்தோஷத்துடன் கடையை விட்டு வெளியே வந்தார் டோண்டு.//"
This is supposed to pull me down to the earth? Not at all; on reading these lines, I was just amused imagining my facial expression as noticed by you. I do take up such exercises now and then ever since that Sunday that turned my life upside down recently in 1971.

As usual, this comment will be copied to my special post for such a purpose.

Regards,
N.Raghavan
P.S. A small glitch with eKalappai. Hence the comment in English.

dondu(#11168674346665545885) said...

மங்களூர் முத்து அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://muthuvintamil.blogspot.com/2006/01/blog-post_13.html
"இல்லை செய்யமுடியாது என்றால் இந்த வள்ளுவர் கொட்டத்தை (இதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) இடித்து விடுங்கள் அய்யா. தமிழனின் மானமும் திருக்குறளின் மானமும் இப்படி காற்றில் பறக்கவேண்டாம்.அந்த இடத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டிக்கொள்ளலாம்.வருமானமாவது வரும்."
முற்றிலும் ஒத்து கொள்கிறேன். ஆனால் ஒரு சந்தேகம், 1996-2001 வரையிலான காலக்கட்டத்தில் அது நன்றாகப் பராமரிக்கப்பட்டதா என்று யாராவது கூறுவார்களா?

இப்பின்னூட்டத்தை எழுதும்போது என்னுடைய புது பதிவிற்கு நீங்கள் இட்டப் பின்னூட்டம் கூகள் டாக் வழியாக மேலெழும்பியது. அதற்கு அச்சிடும் ஆணை கொடுத்து விட்டு இங்கு வருகிறேன்.

என்னுடைய இந்தப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும், பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என்னார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட்ப் பின்னூட்டம் இதோ. மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://merkondar.blogspot.com/2006/01/blog-post_113714279701644583.html
"எழுத்தாளர் சுஜாதா:
நம்முடைய எண்ணிக்கை என்ன? நம்மை அவர்கள் தமிழர்கள் அல்லர் என்கிறார்கள், நமக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். நான் திருக்குறள், சிலப்பதிகாரம் இவைகளுக்கெல்லாம் உரையெழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களைவிட நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன். (கைதட்டல்) சங்க காலத்தில் மிகச் சிறந்த புலவரான கபிலர் பிராமணர் .

எனக்கு ஆங்கிலேயரை விட நல்ல ஆங்கிலம் தெரியும் என்னை ஆங்கிலேயன் என சொல்ல முடியுமா? தமிழ் தெரிந்தால் தமிழனா.. வீரமாமுனிவர் வந்து இருந்து தமிழ் கற்று காவியம் படைத்தார் அவர் தமிழன் என்ற சொல்ல முடியுமா?"

என்னார் அவர்களே, பிறப்பால் தமிழரான பார்ப்பனர்களைத் தமிழர்கள் அல்ல என்று சிலர் கூற முயல்வதுதான் சுஜாதா அவர்கள் கூறியதற்கு அடிப்படை. வீரமாமுனிவரைக்கூட தமிழர் என்று கூறினாலும் தவறில்லை.

நான் கூறுகிறேன், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனர்கள் தங்களைத் தமிழன் என்று கூறிக்கொள்ள வேறு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://mugamoodi.blogspot.com/2006/01/blog-post_13.html

சோழநாடன் அவர்களே,

ரத்த அழுத்தமானி இப்போது என்ன ரீடிங் கொடுக்கிறது?

இதற்கு முன்னால் என்னுடைய இஸ்ரேல் பற்றிய ஒரு பதிவை படித்து விட்டு ஒரு வலைப்பதிவர் டென்ஷன் ஏகத்துக்கு ஏறி, அதற்கு டைவர்ஷனாக போன வருடம் ஏப்ரல் 1 அன்றைக்கு தனக்கு கல்யாணம் என்று அறிவிப்பு தர பலர் அவருக்கு வாழ்த்து சொல்ல, விஷயம் புரியாமல் நானும் வாழ்த்துரைக்கலாம் என்று அவர் பின்னூட்டப் பெட்டி பக்கம் சென்றேன். நல்ல வேளையாக கடைசி பின்னூட்டத்தில் அவர் டோண்டுவின் இஸ்ரேலிய பதிவு அளித்த டென்ஷன் காரணமாக அவ்வாறு உண்மையல்லாததை உரைத்ததாக எழுதியிருக்க ஓசைப்படாமல் வாபஸ் ஆனேன்.

அந்தப் பதிவர் ஈழநாதனா அல்லது டி.ஜே. தமிழனா அல்லது வேறு யாரவதா என்பது இப்போது என் நினைவில் இல்லை.

உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

இப்பின்னூட்டமும் என் வழமையான தனிப்பதிவில் பின்னூட்டமாக உடனேயே நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2006/01/blog-post_15.html
என்னுலகம், என் கதையுலகம் என்ற கணக்கில் இரட்டைக் குதிரை மேல் திறமையாக சவாரி செய்து அலை அலையாகப் பதிவு போட்டதே ஒரு ரிகார்ட்தான்.

மேலும் தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தேவ் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://chennaicutchery.blogspot.com/2006/01/blog-post_16.html#comments
இதுக்கெல்லாம் ஃபீலிங்க்ஸ் வாணாம் ஜோ. இதே படத்த தெகுங்கில டப்பிங்க் செஞ்சிக்கினாங்கன்னு வச்சிக்கோ. அதுல ஹீரோ ஆந்திர ராஷ்ட்ரத்து ஹைதராபாத்துன்னு மாட்லாடுவான். மெய்யாலும்தாம்பா. தில்லக்கேணிலேருந்து மைலாப்பூருக்கு போறமாரி காட்சி இருந்திச்சுன்னாக்க அதையே அபிட்ஸ்லேருந்து தார்னாகா போறதா சொல்லிப்பிடுவான், ஹக்கான். வர்ட்டா.

இப்படி எயுதிக்கினது,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நிலா அவ்ர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. அதை கவனிக்காமல் நான் பின்னூட்டத்தை நகல் எடுக்க மறந்து விட்டேன். ஆகவே நினைவிலிருந்து எழுதுகிறேன். பார்க்க: http://nilaraj.blogspot.com/2006/01/blog-post_16.html

என்னுடைய படத்தை எப்போது போடப் போகிறீர்கள் என ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

இது எழுதியது உண்மையான டோண்டுதான்.

நான் இடும் பின்னுட்டங்களின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் நகலிடப்படும் என்பது உங்களுக்கு தெரியும்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ennulagam.blogspot.com/2006/01/60.html
நான் டோண்டு ராகவன் என்ன நினைச்சேன்னா, உள்ளே அவருடைய அண்ணா இருந்திருப்பார், இருவருக்கும் உருவ ஒற்றுமை உண்டு என்ற ரேஞ்சில்தான்.

கோ. ராகவன் சபாஷ்.


இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பாலசந்தர் அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://bunksparty.blogspot.com/2006/01/blog-post_16.html#comments

நன்றி. நான் டோண்டு ராகவன். ராகவன் ஸ்ரினிவாசன் அல்ல.

ஒரு விஷயம் உங்கள் வலைப்பூவை குறித்து பேச விரும்புவேன். பின்னூட்டங்களை மட்டுறுத்த ரொம்பவுமே நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள். உதாரணத்துக்கு ராஜாஜி அவர்கள் கல்வித் திட்டத்தைபற்றி நானும் என்னார் அவர்களும் இட்டப் பின்னூடங்கள் தெரிய வெகு நாளாயிற்று. ஒரு வேளை அச்சமயம் வேறு வேலையில் ஆழ்ந்திருப்பீர்கள் போலும்.

ஒரு யோசனை. மட்டுறுத்தலுக்கான அறிவிப்பு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வருமாறு செய்யாதிருந்தால் அதை இப்போது செய்து விடுங்கள். ப்ளாக்கருக்குள் போய் மட்டுறுத்தல் செய்தல் எல்லா நேரத்துக்கும் கைவராது.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னூடைய இதற்கானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: மட்டுறுத்தல் நீக்கப்பட்டு விட்டது.

dondu(#11168674346665545885) said...

பாலசந்தர் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://bunksparty.blogspot.com/2006/01/blog-post_113755618506794908.html#comments

பாலசந்தர் அவர்களே,

"இது போன்று ஒன்றும் செய்யாமல் எதற்கு ஜாதி அடிப்படையில் தொழில் கல்வி கொண்டு வர வேண்டும்?"

மறுபடியும் தவறாக எழுதுகிறீர்கள். 1953-ல் தொழில் கல்வியை யாரும் கொண்டு வரவில்லை. அதற்கான அடிப்படை வசதிகள் அப்போதைய அரசிடம் கிடையவே கிடையாது என்பதுதான் நிஜம். நடந்தது என்னவென்றால் கிராமப் புறங்களில் பலர் தங்கள் பிள்ளைகளை தங்கள் தொழிலிலேயே போட்டார்கள். படிக்க பள்ளிக்கு அனுப்பவேயில்லை. அவர்களிடம்தான் குறைந்த பட்சம் ஒரு வேளையாவது பள்ளிக்கு அனுப்புங்கள் என்று அரசு கூறியது. வேண்டுமானால் இன்னொரு வேளை அவர்கள் தொழிலில் ஈடுபடட்டும் என்று கூறியது. இத்தகையத் தொழில் கல்வி அரசின் பாடத் திட்டத்தில் இல்லவே இல்லை. அப்படியே கற்றுக் கொள்ளாமல் போனாலும் அதற்காக ஒரு விளைவும் கிடையாது.

ஆக நீங்கள் பைனாக்குலரின் தவறான முனையிலிருந்து பார்க்கிறீர்கள்.

இப்போது என்ன நடக்கிறது? தகப்பன் தச்சன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் உழைத்துக் கொண்டே இருப்பான். பிள்ளை ஏட்டுப் படிப்பு படித்து வெள்ளையும் சொள்ளையுமான எழுத்தர் வேலை தேடுவான். கிடைக்கவில்லை என்றால் ஊர் சுற்றுவான். கையில் தொழில் இருந்தால், படிப்பு கொடுத்த அறிவை வைத்து வியாபாரத்தை விஸ்தரிக்கலாம் அல்லவா.

இப்பின்னூட்டமும் என்னுடைய இதற்கானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பாலசந்தர் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://bunksparty.blogspot.com/2006/01/blog-post_113755618506794908.html#comments

மேலே புகைப்படம் இல்லாத என் பெயரில் உள்ள பதிவு போலி டோண்டு அனுப்பியது.

"தொழில் கல்வி கற்பதையோ அல்லது கட்டாயம் ஆக்கியிருந்தாலோ அனைவரும் சம்மதித்திருப்பார்கள். ஆனால் ஏன் குலகல்வியாக இருக்க வேண்டும்? தச்சர் வீட்டு பையன் தச்சு வேலை படித்தால் தச்சு வேலை தான் செய்வான். தொழில் நுட்ப கல்வி படித்தால், தொழில் நுட்ப வேலை செய்வான். அதுவல்லவா முன்னேற்றம். ஒரு பையன் 20 வருடம் படித்து மீண்டும் கஷ்டபட்டு படிக்கவைத்த தந்தை செய்கின்ற வேலையை மீண்டும் செய்வான் அப்போது படிப்பு என்ன முன்னேற்றம் கொடுக்கிறது. படிப்பு ஏட்டு படிப்பு என்றால் அதற்கு தீர்வு தொழில் கல்வி . குல கல்வி திட்டமல்ல."
மறுபடி சொல்ல முயற்சிக்கிறேன். அப்போதைய நிதிநிலையில் (1952-54) அரசுசார் தொழிற்கல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்போதைய வறுமை பற்றி உங்களுக்கு ஒரு ஐடியாவும் இல்லை.

ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்தது வெறும் இரண்டு வருடங்கள். அதுவும் கம்யூனிஸ்டுகள் பிடியிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற அவர் எல்லோரும் (காமராஜ் உட்பட) கேட்டுக் கொண்டதற்கேற்ப முதல்வரானார். இந்த இரண்டு வருடங்கள் ரோல்லர் கோஸ்டரில் போவதைப் போல நிகழ்ச்சிகள் நடந்தன. வந்த காரியம் முடிந்து காங்கிரஸ் அரசு நிலைபெற்றதும் அவர் விலகிச் சென்றார். அந்த குறைந்த காலக் கட்டத்திலேயே பல அற்புதங்கள் நிகழ்த்தினார் அந்தக் கிழவர்.

அப்போது அதை ஏன் செய்யவில்லை, இதை ஏன் செய்யவில்லை என்று இப்போது பின் நோக்குப் பார்வையில் கேள்விகள் கேட்பது சுலபம்.

இப்பின்னூட்டமும் என்னுடைய இதற்கானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முத்து (தமிழினி) அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://muthuvintamil.blogspot.com/2006/01/blog-post_113756730507080621.html
“திரு டோண்டு சோ வை பற்றி பதிவு போட்டால் அதை எதிர்த்து ஏதாவது நான் எழுதவேண்டும் என்று வலைப்பதிவு நண்பர்கள் எதிர்ப்பார்ப்பதாக காற்று வாக்கில் ஒரு சேதி வந்தது. ஏன் அவர்கள் ஆசையை குலைக்கவேண்டும்?”
அதானே

”இது திரு.டோண்டு அவர்களின் இந்த(லிங்க்) பதிவை அடிப்படையாக கொண்டது. தகவல்பிழைகளுக்கு அவரை பிடிக்கவும்.”
அடப்பாவி மனுஷா கெடுத்தீர்களே காரியத்தை

”மேலும் காங்கிரஸ் பற்றி சோ கூறிய சில கருத்துக்களை நானும் ஆதரிக்க வேண்டி உள்ளது. இது தான் என் பிரச்சினை. ஒரு தரப்பை எதிர்க்க வேண்டும் என்னும்போது எதிர்தரப்பை ஆதரிக்க முடியாமல் போய்விடுகிறது.”
நிஜமாகவே பிரச்சினைதான்.

”உண்மையாகவே பா.ஜ.க மதவாத கட்சி என்று பத்திரிக்கைகள் நினைக்கின்றனவாம். இதற்கு என்ன அர்த்தம்? பா.ஜ.க மதவாத கட்சி இல்லை என்பதா?”
அவ்வப்போது முஸ்லீம் லீக்குடன் கைகோத்துக் கொள்ளும் கட்சிகள் மட்டும் தங்களை மதவவதக் கட்சிகள் என்று ஒத்துக் கொண்டுவிடுகின்றனவா?

”இது தான் கலக்கல் கருத்து. எப்போதுமே சோ ராமசாமி கடுமையான தாக்குதலுக்கு இடையே சில சலுகைகளை அள்ளி விடுவார்.அதற்கு உதாரணம் இது. கடவுளின் பெயரால் வன்முறை, மதத்தின் பெயரால் வன்முறை என்பதையே இந்த வார்த்தைகள் குறிக்கின்றன். குஜராத்தில் கலவரம் செய்தவர்களை இந்து தீவிரவாதிகள் என்றுதான் கூறுகின்றனர். அதுபோலத்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளையும் கூறுகின்றனர். (இந்த விஷயத்தில் சோவின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும். ஆனால் தான் நடுநிலைவாதி என்று சொல்லப்படவேண்டும் எனபதற்காக சில விஷயங்களை விட்டு கொடுப்பார் அவர்.(புத்திசாலி அல்லவா)”
சோ என்ன நினைக்கிறார் என்பது சில சமயம் அவருக்கே தெரியாது என்று அவரே கூறிக்கொள்வது உண்டு. உங்களுக்கு தெரிகிறது!! சோவை விட நீங்கள் மேல்.

”இனிமேல் விஜயகாந்தை ஆதரித்து கட்டுரைகளை துக்ளக்கில் எதிர்பார்க்கலாம். விஜயகாந்த பி.ஜே.பி கூட்டணியில் சேர்வதை பொறுத்து இது அமையும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.”
அப்படி எழுதுவார் என்று தோன்றவில்லை

”இன்றைய முதல்வரை பாம்பும் பல்லியும் கொசுவும் ஜெயிலில் படுத்தி எடுத்ததை பற்றி கூறலாமோ? துரைமுருகன் சட்டசபையில் அப்போது பண்ணிணார் என்று கூறப்பட்ட கலாட்டாக்கள்? சென்னாரெட்டி விவகாரம்? காலில் விழும் தமாசுகள்? எல்லா அரசியல்வாதியையும் விமர்சிக்க போனால் தமாஷ்தான்.”
அவை எல்லாம் அந்தந்த காலக்கட்டத்தில் சோவால் நையாண்டி செய்யப்பட்டவையே.
“ஓபனாக கலைஞரை எதிர்ப்பது தான் என் வாழ்நாள் லட்சியம் என்றும் மற்றவை பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்லிவிடலாம்.”
1976 பிப்ரவரியில் செய்ததை அறியாமலிருந்தால் நான் கூட நீங்கள் சொன்னதை ஒத்துக் கொண்டிருக்கலாம். 1996-ல் நடந்ததாவது உங்கள் நினைவில் இருக்கும் என நினைக்கிறேன்.
(ஒரு உதாரணத்திற்கு: அ.தி.மு.க ஆட்சி அமைத்த இந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை கார்ட்டூனில் தி.மு.க தாக்கப்பட்டுள்ளது? எத்தனை முறை கார்ட்டூனில் அ.தி.மு.க தாக்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாமா? அ.தி.மு.க ஆளுங்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்துக் கூறுங்களேன்.

”தேர்தலை சந்திக்க மட்டும் தேவையாம்.ஆட்சியை நரேந்திர மோடியை வைத்து இவர்கள் நடத்தி கொள்வார்களாமா?”
என் பதிவில் சொல்ல மறந்து விட்டேன். நரேந்திர மோடியின் ஆட்சியையும் புகழ்ந்தார் சோ. அது பற்றி வரும் துக்ளக்குகளில் பார்க்கலாம்.

”சரியோ தவறோ கட்சியின் கொள்கைகளை விடக்கூடாது என்று கூறிய உமாபாரதி நல்ல பண்புகளை துறந்தவராம்.ஆனால் ஆட்சியை பிடிக்க இவர்கள் ( பி.ஜே.பி என்று படிக்க) நடத்திய மற்ற கூத்துக்களை கீதையை மேற்கோள் காட்டி நியாயப்படுத்துவார் இவர்.”
கட்சிக் கட்டுப்பாட்டை உடைத்த அவர் மீது சரியான நடவடிக்கை எடுக்க கட்சி தவறியது என்பது பற்றியும் சோ பேசினார்.

”என்னமோ கருணாநிதி ஆட்சியில் யாரும் ரோட்டில் நடந்துபோக முடியாத சூழ்நிலை இருநததுபோலவும் அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் மீண்டும் அமைதி பூங்காவாக ஆனதாகவும் இவர் அடிக்கடி பில்ட் பண்ணுவது உண்டு. தண்ணீர் பஞ்சத்தை சமாளித்தது...அரசு ஊழியரை சமாளித்தது எல்லாம் அவங்கவங்களைத்தான் கேட்கணும்....”
தீவிர வாதம் சம்பந்தமான நிகழ்ச்சியில் கருணாநிதி அவர்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது நிஜமே. மழை நீர் சேமிப்பு திட்டத்தை ஜயலலிதா பண்ணியதும் அவருடைய கிரீடத்தில் ஒரு சிறகுதான். 90%-க்கு மேல் அது நிறைவேற்றப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது எதுவும் கற்பனை இல்லையே. மிக உறுதியான நடவடிக்கை எடுத்து அதை நிறைவேற்றினார். அந்த மன உறுதி கருணாநிதி அவர்களிடம் இல்லை என்பது நிஜமே.

”// பிறகு தேசீய கீதம் பாடப்பட்டது.//
இதையெல்லாம் சரியாக பண்ணிடுவாங்க...தேசியவியாதிங்க இல்லையா...”
தேசியவியாதியோ என்னவோ, ஆனால் நிச்சயம் அரசியல் வியாதி அல்ல. பார்வையாளர்கள் அனைவரும் கட்டுப்பாடோடு இருந்து தேசீய கீதம் பாடியதை ஏன் கிண்டல் செய்ய வேண்டும்? மற்ற மீட்டிங்குகள் பலவற்றில் இத்தகையக் கட்டுப்பாட்டை கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடமே பார்க்கவில்லை.

இப்பின்னூட்டமும் என்னுடைய தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்பின்னூட்டமும் என்னுடைய இதற்கானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

"இன்னோரு "பாலசந்தர் கணேசன்" இங்கே வந்து பின்னோட்டம் இட்டு சென்றுள்ளார். மற்றுமோரு போலி. அதை நான் நீக்கி விட்டேன்.."

சந்தோஷம். மற்றொரு போலி எல்லாம் இல்லை. அதுவும் போலி டொண்டுவே. அது சரி என்பெயரிலும் அதே போலி (போட்டோ இல்லாமல்) பின்னூட்டமிட்டதை நான் சுட்டிக்காட்டியும் அதை ஏன் நீக்காமல் வைத்திருக்க வேண்டும்? இவ்வளவு வெளிப்படையான விஷயத்தை உங்களுக்குப் புரியவைக்கவே எனக்கு தாவு தீர்ந்து போகிறதே, உங்களுக்கெல்லாம் ராஜாஜி அவர்களின் கல்வி முறையை விளக்கி நான் என்ன கூற முடியும்?

இப்பின்னூட்டமும் என்னுடைய இதற்கானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பாலசந்தர் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டன்ம் இதோ. பார்க்க: http://bunksparty.blogspot.com/2006/01/blog-post_18.html#comments
பாலசந்தர் அவர்களே, போலி டோண்டு யார் என்பது தமிழ்மணத்தில் அனேகருக்குத் தெரியும். முக்கியமாக எனக்குத் தெரியும், காசி அவர்களுக்கும் தெரியும். ஆகவே நீங்கள் அவன் யார் என்று தெரிவிக்கும்போது ஆச்சரியம் எல்லாம் அடைய மாட்டார்கள்.

அவன் இப்போதும் தமிழ்மணத்தில் வேறு சில பெயர்களில் ஒளிந்திருப்பதும் தெரியும். மீன் வாசனை போல அவன் எங்கிருந்தாலும் அடையாளம் காணப்படுவான்.

என் பின்னூட்டங்களைப் பொருத்த வரை 3 ஷரத்துகள் உள்ளன. அவை மூன்றும் சரியாக இருந்தால்தான் அது என்னுடைய பின்னூட்டம்.

உங்கள் பதிவுகள் அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களை வைத்திருக்கிறீர்கள். அவற்றை செயலிழக்கச் செய்து ப்ளாக்கர் பின்னூட்டம் மட்டும் என்றிருந்தாலே பாதி தொல்லை விடும். இப்போது அவன் உங்கள் மற்றும் என்னுடைய ப்ளாக்கர் எண்களை வைத்து பதிவிட முடிந்ததே இந்த அதர் ஆப்ஷனால்தான். ஆனால் இதில் என்னுடைய ஃபோட்டோ இருக்காது.

அப்படியே ப்ளாக்கர் பதிவாளர்கள் மட்டும் என்றிருந்தால் அவன் வேறு வழியைக் கையாளுவான். என்னுடைய டிஸ்ப்ளே பெயர் மட்டும் புகைப்படத்தை வைத்து அவன் சில ப்ளாக்கர் கணக்குகள் இம்மாதிரி நச்சுப் பின்னூட்டங்களுக்காகவே தயார் செய்து வைத்துள்ளான். அவற்றை உபயோகித்து பின்னூட்டமிட்டால் அது என் போட்டோவுடன் வரும். ஆனால் எலிக்குட்டியை பின்னூட்டத்தின் மேலே உள்ள dondu(#4800161)மேல் வைத்தால் திரையின் கீழே இடது பக்கத்தில் என் எண் (#4800161) தெரிய வேண்டும். போலி டோண்டுவாக இருந்தால் வேறு எண் தெரியும்.

ப்ளாக்கர் இல்லாத பதிவுகளில் மேலே கூறியவை பிரயோசனம் இல்லை. ஆகவே என் பின்னூட்டங்கள் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். அப்பதிவின் உரல் உங்கள் பதிவில் கொடுத்தாலும், மறுபடியும் இங்கே தருவேன். பார்க்க http://dondu.blogspot.com/2005/12/2.html

அப்பதிவையும் அதற்கு முன்னோடி பதிவையும் அவற்றின் முறையே 104 மற்றும் 537 பின்னூட்டங்களுடன் படித்தால் போலி டோண்டு யார் என்பது விளங்கும்.

ஆக உண்மை டோண்டுதான் பின்னூட்டமிடுகிறான் என்பதற்குத் தேவையான 3 ஷரத்துகள் பின்வருமாறு:
1. எலிக்குட்டியை dondu(#4800161)மேல் வைத்துப் பார்த்தால் கீழே 4800161 எண் தெரிய வேண்டும்.
2. அதே சமயம் டிஸ்ப்ளே பெயருடன் என் போட்டோவும் தெரிய வேண்டும் (சம்பந்தப்பட்டப் ப்ளாக்கர் போட்டோ எனேபிள் செய்திருந்தால்).
3. அப்பின்னூட்டத்தின் நகல் என் தனிப்பதிவிலும் வர வேண்டும்.
4. முக்கியமாக லூசுத்தனமாக எல்லாம் டோண்டு எழுத மாட்டான் என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்னொரு விஷயம். உங்கள் இன்னொரு பதிவில் உங்களிடம் சற்று கடுமையாக கடைசி பின்னூட்டமிட்டேன். மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://nunippul.blogspot.com/2006/01/1_18.html
"இவரின் தங்கை உதயசந்திரிகா. (பெயர் சரியா என்று சொல்லுங்கள்) சில படங்களில் "இது சத்தியம்" உட்பட சிலபடங்களில் கதாநாயகியாய் நடித்து, சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். சண்முகசுந்தரத்திற்கு பெண் வேடம் போட்டதுப் போலவே இருப்பார். இது சத்தியம் ஜாவர் சீதாராமன் எழுதி குமுதத்தில் தொடராய் வந்தது."

இது சத்தியம் ரா.கி. ரங்கராஜன் எழுதியது. படத்தில் கதாநாயகி சந்திரகாந்தா என்று நினைவு. படம் பார்க்கவில்லை.

""மின்னல் மழை மோகினி என்ற நாவலை, சென்ற முறை ஊருக்குப் போயிருந்தப் பொழுது, சென்னை பொது நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்தால் ... எல்லாவித மசாலாக்களும் கொண்டு, பாத்திரங்கள் கூட இதற்கு இன்னார் என்று கண்டுப்பிடித்துவிடலாம், சினிமாவுக்கு என்றே எழுதப்பட்ட மகாகாவியம் (!)"
படமாக எடுக்க ஆரம்பித்தார்கள். ஜெமினி, கே.ஆர். விஜயா. ஆனால் படம் முடிவடையவில்லை.

ஹாரி பாட்டரை விட்டுவிட்டீர்களே.

இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நல்லடியார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://athusari.blogspot.com/2006/01/blog-post_19.html#comments

"டோண்டு ராகவன் எங்கள் புதுக்கல்லூரியில் படித்தவர் என்றும் சில சர்ச்சைக்குறிய விவாதங்கள் தவிர்த்து வெகுளியாக எழுதி வருபவர் என்பதும் நான் அறிவேன். அந்தவகையில் திரு.டோண்டு அவர்கள் மீது எனக்கு கொஞ்சம் மதிப்புண்டு."
அதே கன்ஸிடெரேஷன் எனக்கும் உண்டு. அதுதான் புதுக்கல்லூரியின் மகிமை. உங்களிடமோ சலாஹுத்தீனுடனோ என்னாலும் கட் அண்ட் ரைட்டாகப் பேசமுடியதுதான். அதே போல முகம்மது நபி அவர்களை நான் எங்கும் தவறாகப் பேசவில்லை என்பதையும் பார்த்திருப்பீர்கள். சீறாப்புராணம் படித்ததன் பலன்.

உங்கள் அன்புக்கு நன்றி. சென்னைக்கு நீங்கள் வந்தால் சந்திப்போம். புதுக்கல்லூரி பற்றிப் பேசலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

டி. ராஜ் அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://seeking-spring.blogspot.com/2006/01/blog-post_19.html
போலி டோண்டு என்ற இழிபிறவியின் உதாருக்கெல்லாம் பயப்படாதீர்கள். அவனால் ஒன்றும் கழற்ற முடியாது. நீங்கள் என்னிடம் கூறியது போல மட்டுறுத்தல் போட்டு விட்டீர்கள்தானே. ஒரு கவலையும் இல்லை.

என்ன, வேறு இடங்களில் போய் உங்கள் பெயரில் எச்சம் கழிவான். சம்பந்தப்பட்டப் பதிவில் போய் இது போலி டோண்டுவின் லீலை என்று கூறினால் காரியம் தீர்ந்தது. அவனைப் பற்றி எல்லோருக்கும் தெரியுமாதலால் அவனால் ஒன்றும் கழட்ட முடியாது.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவில் நகலிடப்படுகிறது. அது வருகிறதா எனப் பார்த்து மட்டுறுத்தல் செய்யவும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என்னார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://merkondar.blogspot.com/2006/01/blog-post_20.html

விடுங்கள் என்னார் அவர்களே. தூங்குபவர்களை எழுப்பலாம், அம்மாதிரி பாவனை செய்பவர்களை எழுப்பவே முடியாது.

அரசு அப்போதிருந்த (1953) காலக் கட்டத்தில் கண்டிப்பாகத் தொழில் கல்வி கொண்டு வந்திருக்க முடியாது. தந்தை செய்யும் தொழிலில் துணையாக இருந்தால் அதற்கு கட்டணம் கிடையாது. தந்தையும் தன் மகனுக்கு நன்கு தொழில் கற்றுக் கொடுப்பான்.

ஐயா உங்கள் குழந்தைகளை அம்மாதிரி முழு நாளும் வைத்துக் கொள்ளாதீர்கள், ஒரு வேளையாவது பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கேட்டதில் என்ன அநீதியை கண்டு விட்டார்களாம்? உண்மையைக் கூறப்போனால் அத்திட்டம் முதலில் நடந்த கல்வியாண்டு 1953-54. அடுத்தக் கல்வியாண்டில் அதை மேலும் அதிக இடங்களுக்கு விரிவாக்க பல கோரிக்கைகள் இருந்தன. ராஜாஜி அவர்கள் பதவி துறந்து சென்றதும் அத்திட்டத்துக்கே மங்களம் பாடி விட்டார்கள்.

அவர் இருந்ததே இரண்டு ஆண்டுகள்தான். அதிலும் பெரும் பகுதி அரசை நிலையாக வைப்பதிலேயே கழிந்தது. இருப்பினும் அக்கிழவர் செய்த சாதனை அதிகம்.

அதெல்லாம் இப்போதையத் தலைமுறைக்கு புரியாதுதான்.

இப்பின்னூட்டம் என் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ரவி ஸ்ரீனிவாஸ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ravisrinivas.blogspot.com/2006/01/blog-post_20.html
"மேலும் காந்தியை மகான், உதாரண புருஷர், ராம பக்தர் என்று இந்துக்கள் கருதுவதும் உங்களுக்கு இடையூறாக இருக்கிறது. இது உண்மைதானே என்று கேட்டேன். ஆம் என்று ஒத்துக்கொண்டார்."

இப்போது நான் கூறுகிறேன். அதே போல வெள்ளம், சுனாமி, ரயில் விபத்துகள், புயல் ஆகிய பேரிழிவுகள் வரும்போதும் உள்ளூர் ஆர்.எஸ்.எஸ்ஸை கலெக்டர் உட்பட அரசு அதிகாரிகள் உதவி செய்யுமாறு அழைப்பது நிற்கவில்லை, அழைக்காவிட்டாலும் ஆர்.எஸ்.எஸும் வந்து ஜாதி மதம் பாராது எல்லோருக்கும் உதவி செய்து, மற்றவர் தொடக் கூசும் அழுகிய பிணங்களை அப்புறப்படுத்தல் ஆகிய வேலை செய்வதும் நிற்கவில்லை. அந்த சேவைகளையெல்லாம் அரசு எந்திரங்களும், ஊடகங்களும் இருட்டடிப்பு செய்வதும் நிற்கவில்லை. ஏன் இவ்வாறு என்று சம்பந்தப்பட்ட ஒரு கலெக்டரிடம் கேட்ட போது அவர் அது மேலிடத்து உத்திரவு என்று கூறினார்.

இது பல வருடங்களாகவே நடைப் பெற்று வருகிறது.

நெருக்கடி நிலையின் உச்சக் கட்டத்தில் விசாகப் பட்டினத்தில் புயல். அதிலும் இத்தொண்டர்கள் அரும்பணியாற்றினர். நியூஸ் ரீல் காட்சி பிரேமில் ஒரு சில நிமிடங்கள் ஆர்.எஸ்.எஸ் சேவா மண்டல் என்ற பேனரை அரங்கில் இருந்த நான் காணக் கிடைத்தது. அதற்காக சம்பந்தப்பட்ட கேமரா மேன் சஸ்பெண்ட் செய்யப் பட்டார் என்பதைப் பற்றிப் பிறகுப் படித்தேன்.

இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நாட்டாமை அவ்ர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://peddarayudu.blogspot.com/2006/01/blog-post_20.html

ரொம்பவும் கடுமையான பீஷ்ம விரதம் போல எடுத்துக் கொண்டீர்கள்.

மட்டுறுத்தல் இருக்கும் எல்லா பதிவுகளுக்கும் அதை விரிவுபடுத்தலாமே. அதைத்தானே என் பதிவில் பின்னூட்டமாகக் கூறியிருந்தீர்கள்?

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முத்து (தமிழினி) மற்றும் நாட்டாமை அவர்கள் பதிவுகளில் ஒரே நேரத்தில் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

http://muthuvintamil.blogspot.com/2006/01/blog-post_113756730507080621.html

http://peddarayudu.blogspot.com/2006/01/blog-post_20.html

முத்து மற்றும் நாட்டாமை அவர்களே,

உங்கள் வலைப்பூக்களை என்னுடைய வலைப்பதிவில் இணைப்பாகக் கொடுப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நம்மைப் போன்ற இளைஞர்களின் உற்சாகம்தான் இந்த நாட்டுக்குத் தேவை!!!!

இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பரஞ்சோதி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://siruvarpoonga.blogspot.com/2006/01/75.html#comments

பரஞ்சோதி அவர்களே,

நீங்கள் இங்கு குறிப்பிட்டக் கதையின் சரியான தலைப்பு "What men live by". "Godson" என்ற தலைப்பில் இருப்பது வேறு கதை.

இப்போது நீங்கள் இங்கு குறிப்பிட்ட கதைக்கு வருவோம்.

"வீட்டு வாயிலில் கணவனுடன் விருந்தாளி ஒருவனைப் பார்த்த அவள் அன்று ஏனோ வழக்கத்துக்கு மாறாக அமைதியாய் நடந்துகொண்டதோடன்றி அவனது உணவிற்காக எக்கேள்வியும் எழுப்பாமல் ஓட்ஸ் கஞ்சி தயாரித்து சூடாகக் கொடுத்தாள்."
முதலில் மனைவி கோபப்பட்டு வார்த்தைகளை விடுகிறாள். அதற்கு மார்ட்டின் கடவுளுக்காக அந்த வாலிபன் மேல் இரக்கம் காட்டுமாறு கேட்டுக் கொள்ள, பிறகு அவள் உணவு அளிக்கிறாள்.

"மார்ட்டின் செல்வாக்கு உயர்ந்தது. களங்கமற்ற வந்தவன் குழந்தையற்ற இல்லத்திற்கு வரம் பெற்ற குழந்தையாக, வாழவைக்க வந்த தெய்வமாகக் கருதப்பட்டான். வசதிகள் பெருகிடச் செல்வம் செழிக்க மார்ட்டீன் பெரிய வர்த்தகனாயினான். அவனது தயாரிப்புகள் விரும்பி வாங்கப்பட்டன. பெரிய கடைத்தெருவில் அலங்கார பெட்டிவைத்து புதிய உத்திகளுடன் வணிகப் புகழோடு முக்கியமான ஒரு நபர் என வாழத் தலைப்பட்டான்."
அப்படியேல்லாம் ட்ரமாட்டிக்காக மார்ட்டின் செல்வந்தனாகவில்லை. சாப்பாட்டுக்கு கஷ்டமில்லாத ஜீவனம்தான். ஆனால் அதுவே அவனுக்கு மிகப்பெரிய வரம் போலத் தென்பட்டது.

நீங்கள் கொடுத்த அடுத்த நிகழ்ச்சிகளின் வரிசையும் தவறே. முதலில் பணக்காரன் செருப்பு தைத்துக் கொள்ள வருகிறான், பிறகுதான் சீமாட்டி இரு குழந்தைகளுடன் வருகிறாள்.

நான் இந்தக் கதையை "23 tales from Leo Tolstoy" என்ற சிறுகதை தொகுப்பில் படித்தேன்.

அக்கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பின் கடைசி பாரா இதோ:

"And the angel's body was bared, and he was clothed in light so that
eye could not look on him; and his voice grew louder, as though it
came not from him but from heaven above. And the angel said:

"I have learnt that all men live not by care for themselves but by love.

"It was not given to the mother to know what her children needed for
their life. Nor was it given to the rich man to know what he himself
needed. Nor is it given to any man to know whether, when evening
comes, he will need boots for his body or slippers for his corpse.

"I remained alive when I was a man, not by care of myself, but
because love was present in a passer-by, and because he and his wife
pitied and loved me. The orphans remained alive not because of
their mother's care, but because there was love in the heart of a
woman, a stranger to them, who pitied and loved them. And all men
live not by the thought they spend on their own welfare, but because
love exists in man.

"I knew before that God gave life to men and desires that they
should live; now I understood more than that.

"I understood that God does not wish men to live apart, and
therefore he does not reveal to them what each one needs for
himself; but he wishes them to live united, and therefore reveals to
each of them what is necessary for all.

"I have now understood that though it seems to men that they live by
care for themselves, in truth it is love alone by which they live.
He who has love, is in God, and God is in him, for God is love."

And the angel sang praise to God, so that the hut trembled at his
voice. The roof opened, and a column of fire rose from earth to
heaven. Simon and his wife and children fell to the ground. Wings
appeared upon the angel's shoulders, and he rose into the heavens.

And when Simon came to himself the hut stood as before, and there
was no one in it but his own family."

பரஞ்சோதி அவர்களே இது மிக அருமையான கதை. என்னை மிகவும் பாதித்தது. சில மாதங்கள் முன்னால்தான் இணையத்திலிருந்து அதை காப்பி செய்து வன்தகட்டில் இறக்கிக் கொண்டேன். அவ்வப்போது மன அமைதிக்காக அதை நான் படிப்பதுண்டு. நீங்கள் குறிப்பிட்டதில் சில பிழைகள் தென்பட்டதால் அவற்றை இங்கு சுட்டிக் காட்டத் துணிந்தேன். மன்னிக்கவும்.

நீங்கள் ஒரு நல்ல சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

இப்பின்னுட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ராமசந்திரன் உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://nunippul.blogspot.com/2006/01/blog-post_22.html

"KOLLAM (Kerala): An Indian man from Kerala jailed in Saudi Arabia on charges of partially blinding a Saudi national will not have to pay with an eye for his offence. He has been pardoned.

The good news for A. Naushad came days ahead of Saudi king Abdullah bin Abdul Aziz's visit to New Delhi, where he will be the chief guest at India's Republic Day celebrations.

Naushad's family said one of his colleagues telephoned to convey the news Sunday, saying the Saudi victim of the crime had pardoned him.

Naushad's 50-year-old mother Nabeeza Beevi told IANS: "Allah is great and we are thankful to all who helped us. I do not know how to thank everyone including the person who pardoned my son."

கடவுளுக்கு நன்றி. சவுதி மன்னருக்கும்தான்.

உஷா அவர்களே, உங்கள் இப்பதிவின் வகைப்படுத்தலை மாற்ற மட்டுறுத்துனர்களால்தான் முடியும். மதி அல்லது காசி அவர்களுக்கு எழுதவும்.

இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பாலசந்தர் கணேசன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://bunksparty.blogspot.com/2006/01/blog-post_113790364209869998.html

பாலசந்தர் கணேசன் அவர்களிடம் கேட்டும் பிரயோசனமில்லாத கேள்வி இதுதான். எப்போது பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதை நிறுத்தப் போகிறீர்கள்?

விளக்குகிறேன். உங்கள் அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களால்தான் இத்தனை போலி டோண்டுவின் பின்னூட்டங்கள் வருகின்றன. அவற்றை ஒழித்து, மட்டுறுத்தலை செயல்படுத்தினாலேயே எல்லா பிரச்சினையும் ஒழியுமே. ஆனால் ஒன்று. அப்போதும் போலி ப்ளாக்கர் ஐடியில் என் பெயர் புகைபடத்துடன் பின்னூட்டம் இடுவான். அதற்கு எலிக்குட்டியை வைத்து பார்க்கும் முன்யோசனையும் வேண்டும். அதெல்லாம் உங்களுக்கு தெரிவதாகத் தெரியவில்லை.

மற்றவர்களை கேள்விகள் கேட்கும் முன்னால் இந்த பிரச்சினையை பார்த்து சரி செய்யவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நாட்டாமை அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://peddarayudu.blogspot.com/2006/01/blog-post_113807066487715658.html
நல்ல தேர்வு. ஒவ்வொருவருவரும் தத்தம் துறையில் பிரகாசிக்கின்றனர். அதுவும் டில்லி கணேஷ் காமெடியிலும் சரி டிராஜெடியிலும் சரி மிகவும் கலக்குகிறார்.

ஆனால் சிலருக்கு கோபம் வரப்போவது உறுதி. அதற்காக எல்லாம் நாட்டாமை தீர்ப்பை மாற்றி எழுதப் போகிறாரா என்ன?

மற்றத் துறைகளிலும் உங்களுக்கு பிடித்தமானவர்களைப் பட்டியலிடலாமே. உதாரணம்: அரசியல், பத்திரிகைத் துறை ஆகியவை.

இப்பின்னூட்டம் என்னுடையத்ப் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக ந்கலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நாட்டாமை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://peddarayudu.blogspot.com/2006/01/blog-post_113807594206128329.html

அடாவடிக்கு சரியான பதிலடி கொடுக்கும் நாட்டாமை அவர்களே,

நீங்கள் வயதில் இளையவராக இருக்கலாம். ஆனால் மனமுதிர்ச்சியில் பல பெரிசுகளை மிஞ்சி விட்டீர்கள்.

உங்களுக்கு என் மனப்பூர்வமான ஆசிகள்.

இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இறைநேசன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பினூட்டம் இதோ. பார்க்க:
http://copymannan.blogspot.com/2006/01/blog-post_24.html
எல்லா படங்களும் அற்புதம். அதிலும் அந்த கிட் காட் குழந்தை அதி அற்புதம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பாலசந்தர் கணேசன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://bunksparty.blogspot.com/2006/01/blog-post_23.html#comments
"டோண்டு அவர்களே,
நான் எந்தவிதமான கட்டுபாடும் விதிக்க விரும்பவில்லை. ஆனால் போலிகள் அதனை தவறாக பயன்படுத்தும் போது நானே அதனை நீக்கி விடுகிறேன். அதற்கு நான் அங்கிகாரம் கொடுப்பதில்லை."

மன்னிக்கவும் உங்கள் பேச்சும் செயலும் வெவ்வேறாக உள்ளன. உதாரணத்துக்கு இதைப் பாருங்கள். http://bunksparty.blogspot.com/2006/01/blog-post_113755618506794908.html

அதில் Wednesday, January 18, 2006 6:44:37 PM முத்திரையிட்டப் பின்னூட்டத்தைப் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பினாத்தல் சுரேஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://penathal.blogspot.com/2006/01/back-with-bang.html#comments
"2. வீட்டில் முட்டையே இல்லை.. இருந்தாலும் மிஸ்டர் எக்ஸுடன் இருந்த மிஸ்டர் ஒய் ஆம்லெட் போட்டார். எப்படி? (பதில் - மிஸ்டர் எக்ஸ் ஒரு கூ"முட்டை")"

அபாரம். அது சரி, இன்னும் 6 கேள்விகள் பாக்கி உள்ளன. இப்பத்தான் சதீஷ் என்னுடைய பல க்ளூக்களுக்குப் பிறகு கமலைப் பற்றிய பதிலை ஒரு வழியாகப் போட்டார்.

அது இருக்கட்டும், மேலே உள்ள போலி டோண்டு செந்தமிழில் இட்டப் பின்னூட்டத்தைப் பற்றி எனக்கு மின்னஞ்சலில் ஒரு நண்பர் தெரிவிக்க இங்கு வந்தேன்.

தயவு செய்து நாட்டாமையின் பதிவுக்கு பின்னூட்டமிட்டு அவர் போலி டோண்டுவிற்கெதிராக நடத்தும் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும். பார்க்க அவரது கடைசி 4 பதிவுகள்: http://peddarayudu.blogspot.com/

பின்னூட்டங்களை எனக்குப் போடுங்கள் என்று கேட்காத நானே கூறுகிறேன். அடாவடிக்கு எதிராகக் குரல் கொடுங்கள் என்று. போலி டோண்டுவால் ஒன்றும் கழட்ட முடியாது என்பது நிஜம்.

இப்பின்னூட்டம் என்னுடையத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://enkathaiulagam.blogspot.com/

கதை சுவாரசியமாகப் போகிறது. ஆர்தர் ஹெயிலி ரேஞ்சுக்கு பாத்திரங்கள் அறிமுகமாகின்றன.

இப்போது சமூகவியல்சார் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

மாதவனை பற்றியோ, போர்ட் மெம்பர்கள் பற்றியோ எழுதும் போதெல்லாம் அவர் என்ற எழுவாய் உபயோகிக்கிறீர்கள். ஆனால் வேலுவை ஏன் அவன் என்று குறிப்பிடுகிறீர்கள்? பியூனாக இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்திருப்பவரை அவர் என்று குறிப்பிட விடாமல் உங்களை தடுத்தது எது?

அதே போல வந்தனாவையும் அவள் என்று ஏன் குறிப்பிட வேண்டும். அவர் என்று ஏன் குறிப்பிடக் கூடாது? பெண் என்பதாலா? இதை நீங்கள் உங்களை அறியாமல்தான் போட்டிருக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் நந்தகுமார் மற்றும் நளினியை முறையே அவன் மற்றும் அவள் என்று கூறுவது பாந்தமாகவே உள்ளது. ஏனெனில் இருவரையும் சமமாகவே நடத்துகிறீர்கள்.

ஆனால் இந்த விஷயத்தில் எனக்கும் அதே பிரச்சினை என்றுதான் தோன்றுகிறது. யோசிக்க வேண்டிய விஷயமே.

இந்தப் பின்னூட்டத்தின் நகல் என்னுடையத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆர்த்தி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://arthyb.blogspot.com/2006/01/blog-post_113793523752544686.html
நான் வந்து கூறத் தேவையில்லாது என் சார்பில் உங்களுக்கு போலி டோண்டுவை அடையாளம் காட்டிய சக வலைப்பதிவாளர்களுக்கு நன்றி. அவனுடைய பின்னூட்டங்களை அழித்ததற்காகவும் மட்டுறுத்தலை செயலாகியதற்கும் உங்களுக்கும் என் நன்றி உரித்தாகுக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

யோசிப்பவர் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ, அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://yosinga.blogspot.com/

இப்போதுதான் மட்டுறுத்தல் வந்து விட்டதே. உங்கள் மனச் சங்கடங்களும் குறையும் என நம்புகிறேன்.

இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ராமசந்திரன் உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க:

மிக்க நல்லப் பதிவு உஷா அவர்களே. நன்றி.

சதயம் அவர்களே, ஆக்ஷன் எடுத்ததில்தான் இப்போது மாடரேஷனில் வந்து நின்றிருக்கிறது. ஒரு விஷயம் தெரியுமா, சைபர் க்ற்றப் புத்தகத்தில் வழக்கு என்று வந்துவிட்டால், ஆபாசப் பின்னூட்டம் வந்தப் பதிவுகள் சொந்தக்காரர்களும் பொறுப்பேற்க வேண்டும். இப்போது மட்டுறுத்தல் இருப்பதால் அப்படியெல்லாம் பதிவாளர்களை மீறி ஆபாசப் பின்னூட்டங்கள் வராதலாவா?

இன்னொரு விஷயம், போலிப் பேர்வழியே தன் பதிவில் எவ்வளவு நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறார் என்பதைப் பார்த்தால் தலையே சுற்றும்.

ஆக, இப்போதைக்கு ஆபாசப் பின்னூட்டங்களுக்கு பெருமளவில் செக் வைக்கப்பட்டுள்ளது என்பதே நிஜம். இதில் உங்களுக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்?

அப்படி மட்டுறுத்தல் செய்யாதப் பதிவுகளில் பின்னூட்டங்கள் வந்தால் அவை இற்றை செய்யப்பட மாட்டாது அவ்வளவுதான்.

இப்பின்னூட்டம் என்னுடைய வழமையானத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

Voice on Wings அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://valaipadhivan.blogspot.com/
எல்லா சுதந்திரத்துக்கும் ஒரு விலை உண்டு. மட்டுறுத்தல் வேண்டாம் என்று ஒருவர் இருக்கலாம். ஆனால் அதற்கான விலை தமிழ்மணத்தில் அவரது பதிவில் பின்னூட்டங்கள் வந்தால் மறுமொழியப்பட்ட பதிவுகளில் இற்றைப்படுத்த மாட்டாது என்பதே. அந்த விலையைக் கொடுத்துவிட்டு சுதந்திரமாக இருங்கள்.

சைபர் க்ரைம் போலீஸில் ஒரு புகார் சென்று விசாரணை, நடவடிக்கை என்று வந்தால், ஆபாசப் பின்னூட்டம் வரும் பதிவுக்கு சொந்தக்காரர்களும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகத்தான் கருதப்படுவார்கள்.

"போலிகளை இனங்காணலாம். அதுசரி. யார் இனங்காணலாம் என்பது தான் பிரச்சினை. எல்லா வாசகர்களும் இனங்காணுவார்களா? பதிவர் இனங்காண்பதற்கான சாத்தியம் அதிகம்."
வெங்கட் சாமினாதன் அவர்களுடன் போலி டோண்டு பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ஒரு பதிவையும் (என்னுடையதல்ல) அவருக்கு காண்பித்தேன். அதில் அவன் மத்தளராயன் என்ற பெயரில் அசிங்கப் பின்னூட்டமிட்டிருந்தான். அதை அவர் படித்துவிட்டு கூறினார்: "கிரகசாரம், என்ன இந்த இரா.முருகன் இப்படி எழுதியிருக்கிறார்" என்று. அவரிடம் உடனே அது இரா.மு. இல்லையென்றதும்தான் அவர் சமாதானமானார்.

"டோண்டு தன் கருத்துவேறுபாட்டால் அவதிப்பட்டார் ஆனால் காசி அப்படியில்லை, டோண்டுவை ஆதரித்ததற்காக அவர் பெயரில் ஆபாசப் பின்னூட்டங்கள் வந்தன" என்ற பொருள் படும்படி யாரோ கூறியிருந்தார். அவருக்கு நான் ஒன்று கூறுவேன். நான் என்ன என் பெயரில் அசிங்கப் பின்னூட்டங்கள் இடு என்று வேண்டி கேட்டுக் கொண்டா அவற்றைப் பெற்றேன்? வாதம் நடக்கும்போத்கு அதில் தன் கட்சி வலுவிழந்ததை உணர்ந்த ஒரு கோழை செய்த அக்கிரமம் அது. அதை எதிர்த்து என் முறையில் போராடினேன். இப்போது ஓரளவு வெற்றியும் பெற்றேன். அவனை இக்னோர் செய்யுமாறு கூறியவர்கள் அவர்கள் பெயரில் இம்மாதிரி அசிங்கம் செய்தால் விட்டுவிடுவார்களா?

ஆபாச்ப் பதிவு மட்டும் இல்லை, இன்னொருவர் பெயரில் அவர் கூறியிருக்க முடியாதக் கருத்துக்களைக் கூறுவதும் ஆட்சேபத்துக்குரியதே. அந்த வகையில் ஒரு உதாரணமாக மணிக்கூண்டு அவர்களின் இப்பதிவைப் பாருங்கள். http://manikoondu.blogspot.com/2005/06/blog-post_27.html#comments

போலி டோண்டு என் பெயரில் பின்னூட்டமிட, அதற்கு மூக்கு சுந்தர் பதில் கொடுக்க, அது நான் இட்டது என நான் எதிர்வினை கொடுக்க, அதை ஏற்று மூக்கு சுந்தர் இம்மாதிரி எழுதுகிறார்:
"Mookku Sundar said...
டோண்டுவின் பெயரில் பின்னூட்டம் இடும் அந்த முகமில்லா நண்பருக்கு,

இது மாதிரியான விவகாரங்களின் மூலம் என்ன சாதிக்க முயல்கிறீகள் என்பது புரியவில்லை. அவர் பெயரை உபயோகப்படுத்தி, நீங்கள் இடும் பின்னூட்டங்கள் முற்றிலும் நாகரீகமில்லாத அணுகுமுறை. அவருடன் பிணக்கு என்றால், கருத்து வேறுபாடு என்றால், அதை அவருடன் விவாதித்து கொள்ள, உங்களுக்கு என்ன வேறு முகமூடிப்பெயர்களா கிட்டவில்லை..?? சற்றும் நேர்மை இல்லாத, கிழ்த்தரமான அணுகுமுறை. அதன் பலன்கள் அவருக்கும், கேடுகள் உங்களுக்கும் கிடைத்துக் கொண்டிருப்பது கண்கூடு. பலருக்கு இதனால் தர்மசங்கடம். நீங்கள் இம் மாதிரியெல்லாம் அவர் பெயரில் பின்னூட்டம் விடாவிட்டால், அவரே அதை எழுதுவார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா,,?? அந்த "வாய்ப்பை" அவருக்கே தராமல், நீங்கள் தட்டிப் பறிப்பது என்ன நியாயம்..??

வேலையை நேர்மையாக செய்யுங்கள் நண்பரே..! இதற்கும் எனக்கு கீழ்த்தரமான முறையில் பதில் தந்தால், நான் பதில் சொல்ல மாட்டேன். உங்கள தலையில் நீங்களே மண் அள்ளிப் போடுகிறீகள் என்று பேசாதிருந்து விடுவேன்."

அதாவது ஒரு அடிப்படையும் இல்லாது அம்மாதிரி லூசுத்தனமாகப் பேசுவேன் என்பது அவர் துணிபு.

இப்போது போலிடோண்டு இன்னொரு பின்னூட்டம் இட்டான்.

"//நீங்கள் இம் மாதிரியெல்லாம் அவர் பெயரில் பின்னூட்டம் விடாவிட்டால், அவரே அதை எழுதுவார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா,,?? அந்த "வாய்ப்பை" அவருக்கே தராமல், நீங்கள் தட்டிப் பறிப்பது என்ன நியாயம்..??//

உண்மைதான் மூக்குசுந்தர் அவர்களே. எனது எண்ணம், எழுத்து, சிந்தனை என எல்லாமே பிராமனீயம் ஒன்று மட்டுமே. அதில் நான் ஊறிப் போய்விட்டேன். அதனைத்தாண்டி என்னால் வர இயலாது. நான் வர நினைத்தாலும் எனது மற்ற நண்பர்களும் எங்கள் பார்ப்பன சங்கமும் அனுமதி வழங்காது.

என்னைப்பற்றி நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களே. நன்றி

வழக்கம்போல இந்த பின்னூட்டம் எனது வலைப்பூவிலும் இடம்பெறும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"

சாதரணமாக எலிக்குட்டியை வைத்துப் பார்த்திருந்தாலே தெரிந்து போயிருக்கும் அது என்னுடையதில்லை என்று. அதைக் கூட செய்யாது மூக்கு சுந்தர் மறுபடியும் எழுதுகிறார்:
"Mookku Sundar said...
//உண்மைதான் மூக்குசுந்தர் அவர்களே. எனது எண்ணம், எழுத்து, சிந்தனை என எல்லாமே பிராமனீயம் ஒன்று மட்டுமே. அதில் நான் ஊறிப் போய்விட்டேன். அதனைத்தாண்டி என்னால் வர இயலாது. நான் வர நினைத்தாலும் எனது மற்ற நண்பர்களும் எங்கள் பார்ப்பன சங்கமும் அனுமதி வழங்காது.

என்னைப்பற்றி நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களே. நன்றி //

டோண்டு சார், இதற்கெல்லாம் எதற்கு நன்றி சொல்கிறீர்கள். ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்து இருக்கிறீர்களே.. அது ஒன்று போதாதா..?? :-)"
இந்த அழகில் ஸ்மைலி வேறு.

இப்போது நான் அதற்கு கொடுத்த எதிர்வினை:
"dondu(#4800161) said...
"டோண்டு சார், இதற்கெல்லாம் எதற்கு நன்றி சொல்கிறீர்கள். ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்து இருக்கிறீர்களே.. அது ஒன்று போதாதா..?? :-)"

மறுபடியும் தவறு செய்து விட்டீர்களே மூக்கு சுந்தர் அவர்களே. எலிக்குட்டியை வைத்து பார்த்து விட்டு எழுதியது நான்தானா என்று ஏன் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். என்னைப் பற்றி இவ்வளவு தவறான அபிப்பிராயம் ஏன் மூக்கு சுந்தர் அவர்களே? டோண்டு அவ்வாறு பேசக் கூடியவர் என்று வேறு சப்பை கட்டு கட்டுவீர்கள். நான் கூறுவேன் நீங்கள் அவசரக்காரர் என்று. அருணிடம் கோபித்து கொண்டு பிரயோசனம் இல்லை. முதலில் உங்கள் அளவில் சரியாக பார்த்து எழுதவும் என்று நான் கேட்டு கொள்கிறேன்.

வழக்கம் போல இப்பின்னூட்டமும் என் தனிப்பதிவில் வரும். http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அதற்கு மூக்கு சுந்தர் பதிவில் பதிலளிக்கவில்லை. ஆனால் நான் சற்றும் எதிர்பாராத முறையில் என்றென்றும் பாலா பதிலளித்தார்.

12:27 AM
enRenRum-anbudan.BALA said...
Dear Sundar,
//மறுபடியும் தவறு செய்து விட்டீர்களே மூக்கு சுந்தர் அவர்களே. எலிக்குட்டியை வைத்து பார்த்து விட்டு எழுதியது நான்தானா என்று ஏன் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்.
//
This is TOO MUCH !!! Sorry, THREE MUCH ;-)

FYI, I too failed to observe that the comment was from Duplicate Dondu :-)

I will take more care to check the Blogger ID, from now on !

மேலே உள்ளதுதான் பதிவில் கடைசிப் பின்னூட்டம் இன்றையத் தேதி வரை. மூக்கு சுந்தர் அவர்களுக்கு நான் இது பற்றி போட்ட மின்னஞ்சலும் அதற்கு அவரது பதிலும் பின்வருமாறு:

Dear Sundar,
You are aware of the travails I am going throrugh due to the antics of
false Dondu. In one blog of Manikkoondu you mistakenly thought that an outrageous comment in my name was made by me in actual fact. Buit it was not. You could have avoided the misunderstanding with the simple technique of a mouseover. No matter.

But why should you repeat the same mistake in the next blog of the
same Manikoondu? I refer to his blog on Saathiiyam, see
http://manikoondu.blogspot.com/2005/06/blog-post_27.html

Kindly read my latest posting in my blog http://dondu.blogspot.com on
the subject. This false Dondu has opened a new blog with my user name and my profile details including photo. The only defence I have
against him now is the blogger number. But if experienced persons like
you neglect to do that simple test, I will be nowhere.

I take this opportunity to deny vehemently that at no time would I
have made the outrageous casteist comments that were expressed by
false Dondu. All I did earlier was to acknowledge my origins in face
of great hostility against Brahmins. Believe me, it is a crown of
thorns but then I willingly wore it as a matter of principle as a
reaction mainly against fellow Brahmins, who hide their Brahmin
identity for one reason or other and try to sound more anti-Brahmin
than everybody else. This I see as pathetic gesture on their part.
They know in their heart of hearts that the moment their Brahmin
origin is known they will face ridicule in the hands of others. I
repeat that nowhere I have said that Brahmins are the best of the lot.
I am old enough to know that each caste contains its great men as well
as riffraffs and as a student of logic, I will be the last one to make
any hasty generalization.

Sorry for this rambling mail, but I thought I will let you know.

Regards,
N.Raghavan
sundar reply to me:
More options 6/30/05

Hello Dondu Sir,
I understand your situation. Thanks for your mail.
From now on, I will avoid answering to whoever posts in your name. I really dont know why you are hesistant
to take action against that criminal.

I know you already have enough suggestions from all your friends and well wishers.

I dont want to bug you more. Have a Great day every day.
love
-sundarrajan
p.s: your post on Uppliyappan kovil was fine. My Grandma is from Nachchiyar koil. I have enjoyed Garuda
Sevai so many times.

போலிப் பின்னூட்டங்கள் அப்பதிவில் இன்றுவரை அப்படியே உள்ளன என்பது வேறு விஷயம்.

ஆபாசப் பின்னூட்டங்களைக் கூட கண்டுபிடித்து விடலாம். ஆனால் இம்மாதிரி நான் கூறாததை என் பெயரில் எழுதி மற்றவர்களும் அதை நம்பி விடுகிறார்கள், அதுதான் உண்மையான அபாயம். ஆகவேதான் நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். இப்பின்னூட்டத்தையும் அவ்வாறே இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கொழுவியின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூடம் இதோ. அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://koluvithaluvi.blogspot.com/2006/01/blog-post_27.html
என்ன மஸ்ட் டூ மருமகனே நலமா? பின்னூட்டம் பெற இப்படியும் வழி இருக்கிறதா? நானும் கற்றுக் கொள்கிறேன்.

"//___ பாணியில் தனித்தனியாக ஒவ்வொருவருக்கம் நன்றி சொல்வதா இல்லையா என்று தீர்மானிக்கப்படும். //

யாரு பாணின்னு கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க தல. எங்களுக்கெல்லாம் தெரியாதுல்ல.
:-)"

அது யார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆசையில் நானும் இருக்கிறேன். ஹி ஹி ஹி.

இப்பின்னூட்டமும் என்னுடைய வழமையான தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குமரன் அவர்கள், பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://koodal1.blogspot.com/2006/01/134.html

தமிழ்க்கடவுளாம் முருகன் பெயர் தாங்கியிருக்கும் குமரன் அவர்களே, அக்கடவுளின் மாமனைப் பற்றிய உங்கள் இப்பதிவு நன்றாக உள்ளது.

தமிழை வளர்த்ததில் சைவமும் வைணவமும் போட்டி போட்டன என்று சொன்னால் மிகையாகாது.

என்னுடைய இப்பின்னூட்டமும் இதற்காக நான் வைத்துள்ள என் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

வாழ்த்துக்கள்

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முத்து (தமிழினி) அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ, பார்க்க: http://therthal2006.blogspot.com/2006/01/blog-post_27.html#comments

1939-ல் ஹிட்லர் ஸ்டாலின் ஒப்பந்தம் நடந்து இரு நாட்டினரும் சேர்ந்து போலந்தை கபளீகரம் செய்தனர். ஆக 1941 வரை கம்யூனிஸ்டுகள் பிரிட்டிஷாருக்கு எதிராகவே இருந்தனர். 1941-ஆம் ஆண்டு ஹிட்லர் சோவியத் யூனியன் மேல் படை எடுத்தவுடன் கம்யூனிஸ்டுகள் ஒரே இரவில் கட்சி மாறி, பிரிட்டிஷாரை ஆதரிக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு சோவியத் நலம்தான் பெரிதாகிப் போயிற்று. 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் அவர்கள் போராட்ட வீரர்களை வேட்டையாட பிரிட்டிஷ் அரசுக்கு தாராளமாக உதவி புரிந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பது 1962 வரை ஒன்றாகத்தான் இருந்தது. அதன் பிறகுதான் பிளவுபட்டது. சீனாவை கண்டிக்க வேண்டும் என்றவர்கள் வலது சாரி கம்யூனிஸ்டுகள், கண்டிக்கக் கூடாது என்பவர்கள் இடது சாரி கம்யூனிஸ்டுகள், அதாவது சி.பி.எம்.

இது சரித்திரம்.

இப்பின்னூட்டமும் என்னுடைய வழமையான தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும், பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மதி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://mathy.kandasamy.net/movietalk/archives/2006/01/16/49
"அமெரிக்க இராணுவம் மக்கார்த்தியினை விசாரணை செய்ய முடிவெடுக்கிறது. எட்வர்ட் ஆர். மர்ரோவின் நிகழ்ச்சியின் தாக்கம் எங்கும் எதிரொலிக்கிறது. ஆனால், சிபிஎஸ் நியூஸ் நிறுவனம் மர்ரோவின் நிகழ்ச்சியை ஞாயிற்றுக் கிழமைகளுக்குக் கொண்டு சென்று, ஐந்து episodeகளோடு முடிக்குமாறு சொன்னது. கேள்வி-பதில் (Quiz show) நிகழ்ச்சிகளுக்குப் பெருகி வந்த ஆதரவும் மர்ரோவின் நிகழ்ச்சியை மாற்றியதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது."
படம் அத்துடன் முடிந்து விட்டதா? மக்கார்த்திக்கு அப்புறம் நடந்தது என்ன என்பதைக் கூறவில்லையே. அப்படியிருந்தால் அது துரதிர்ஷ்டவசமானது. படத்தைப் பற்றி மட்டும் பேசும் இப்பதிவில் அதையும் குறிப்பிட்டிருந்தால் இப்போது படிப்பவர்களுக்கு உண்மை கடைசியில் ஜெயிக்கும் என்பது காட்டப்பட்டிருக்கும்.

அதை நான் செய்து விடுகிறேனே.
CENSURE OF SENATOR JOSEPH MCCARTHY (1954)
Periodically American society has been gripped by fear, and its responses have not done credit to its democratic nature. In this century the Red Scare following World War I (see Document 43) saw hundreds of innocent aliens rounded up, imprisoned and deported, for no reason other than fear of their allegedly radical ideas. The Cold War unleashed another Red Scare in the late 1940s and early 1950s. But where there had been no great alien menace in 1919, communism did exist and did pose a danger to western democracy in the post-World War II era.

The hunt for subversives started during the war itself, and was furthered by congressional committees that often abused their powers of investigation to harass people with whom they differed politically. Then in February 1950, an undistinguished, first-term Republican senator from Wisconsin, Joseph McCarthy, burst into national prominence when, in a speech in Wheeling, West Virginia, he held up a piece of paper that he claimed was a list of 205 known communists currently working in the State Department. McCarthy never produced documentation for a single one of his charges, but for the next four years he exploited an issue that he realized had touched a nerve in the American public.

He and his aides, Roy Cohn and David Schine, made wild accusations, browbeat witnesses, destroyed reputations and threw mud at men like George Marshall, Adlai Stevenson, and others whom McCarthy charged were part of an effete "eastern establishment." For several years, McCarthy terrorized American public life, and even Dwight Eisenhower, who detested McCarthy, was afraid to stand up to him. Finally, however, the senator from Wisconsin over-reached himself.

In January 1954, in what were to be the first televised hearings in American history, McCarthy obliquely attacked President Eisenhower and directly assaulted Secretary of the Army Robert Stevens. Day after day the public watched McCarthy in action -- bullying, harassing, never producing any hard evidence, and his support among people who thought he was "right" on communism began to evaporate. Americans regained their senses, and the Red Scare finally began to wane. By the end of the year, the Senate decided that its own honor could no longer put up with McCarthy's abuse of his legislative powers, and it censured him in December by a vote of 65 to 22.

For further reading: Richard Rovere, Senator Joe McCarthy (1959); Stanley Kutler, The American Inquisition (1982); Thomas C. Reeves, The Life and Times of Joe McCarthy (1982).


--------------------------------------------------------------------------------

CENSURE OF SENATOR JOSEPH MCCARTHY
Resolved, That the Senator from Wisconsin, Mr. McCarthy, failed to cooperate with the Subcommittee on Privileges and Elections of the Senate Committee on Rules and Administration in clearing up matters referred to that subcommittee which concerned his conduct as a Senator and affected the honor of the Senate and, instead, repeatedly abused the subcommittee and its members who were trying to carry out assigned duties, thereby obstructing the constitutional processes of the Senate, and that this conduct of the Senator from Wisconsin, Mr. McCarthy, is contrary to senatorial traditions and is hereby condemned.

Sec 2. The Senator from Wisconsin, Mr. McCarthy, in writing to the chairman of the Select Committee to Study Censure Charges (Mr. Watkins) after the Select Committee had issued its report and before the report was presented to the Senate charging three members of the Select Committee with "deliberate deception" and "fraud" for failure to disqualify themselves; in stating to the press on November 4, 1954, that the special Senate session that was to begin November 8, 1954, was a "lynch-party"; in repeatedly describing this special Senate session as a "lynch bee" in a nationwide television and radio show on November 7, 1954; in stating to the public press on November 13, 1954, that the chairman of the Select Committee (Mr. Watkins) was guilty of "the most unusual, most cowardly things I've ever heard of" and stating further: "I expected he would be afraid to answer the questions, but didn't think he'd be stupid enough to make a public statement"; and in characterizing the said committee as the "unwitting handmaiden," "involuntary agent" and "attorneys-in-fact" of the Communist Party and in charging that the said committee in writing its report "imitated Communist methods -- that it distorted, misrepresented, and omitted in its effort to manufacture a plausible rationalization" in support of its recommendations to the Senate, which characterizations and charges were contained in a statement released to the press and inserted in the Congressional Record of November 10, 1954, acted contrary to senatorial ethics and tended to bring the Senate into dishonor and disrepute, to obstruct the constitutional processes of the Senate, and to impair its dignity; and such conduct is hereby condemned.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குமரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://koodal1.blogspot.com/2006/01/138.html
"Counter ஏறக்குறைய 2200 தடவை இந்த வாரத்தில் 'கூடல்' வலைப்பூ பார்க்கப் பட்டிருக்கிறது என்று சொல்கிறது. ஆனால் அந்த எண்ணிக்கையில் நானே பார்த்தது எத்தனை தடவை என்றும், பின்னூட்டம் இட்டவர்கள் என் மறுமொழியைப் பார்ப்பதற்கும் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்கும் வந்து பார்த்தது எத்தனை தடவை என்றும் சொல்ல முடியாது ஆகையால் இந்த எண்ணிக்கையை ஐந்தால் வகுத்து அதனையே சரியான எண்ணிக்கையாய் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். அப்படிப் பார்த்தால் அந்த எண்ணிக்கை 440. இதுவும் அதிகமாகத் தான் தோன்றுகிறது."

நீங்கள் கூறுவது போல இல்லை. என்னுடைய கவுண்டர் நான் விசிட் செய்யும்போது எண்ணிக்கையைக் கூட்டுவது இல்லை. அதுவே சாதாரணமாக எல்லாவித கவுண்டர்களுக்கும் பொது விதியாகும் என்றுதான் நினைக்கிறேன். ஆகவே நீங்கள் ஐந்தினால் எல்லாம் வகுக்க வேண்டாம்.

மட்டுறுத்தல் கலாட்டாவில் உங்கள் பதிவுகள் பக்கம் அதிகம் வர கைவரவில்லை.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடையத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://mugamoodi.blogspot.com/2006/01/blog-post_29.html
அப்பிடிப்போடு அவர்களே,
மே 25, 2005-க்குப் பிறகு காவிரியில் நிறைய தண்ணீர் ஓடி விட்டது. அவர் அப்போது சொன்னது அவ்வளவு சரியில்லையோ என்ற முடிவுக்கு வந்து விட்டார், ஏனெனில் அவர் அப்போதிலிருந்து நடந்து வந்த நிகழ்ச்சிகள், குற்றவாளியின் தரப்பில் செய்யப்பட்ட எஸ்கலேஷன்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு வந்தவர். அப்படிப்பட்ட ஒரு பின்புலனும் இல்லாத நீங்கள் அவர் அப்போது சொன்னதை மட்டும் பொறுமையாகத் தேடிப்போயிருக்கிறீர்கள். பின்னால் ந்டந்ததையும் பார்ப்பதுதானே. ஏன் இம்மாதிரி அரைவேக்காட்டுத்தனமான பின்னூட்டங்கள் இடுகிறீர்கள்?

உங்கள் தட்டச்சு செய்ய்ம் கைதான் நரம்பில்லாததுபோல தோன்றுகிறது.

கோனார் நோட்ஸ் தேவையானால் நான் போடுகிறேன். ஆனால் அதையெல்லாம் புரிந்துகொள்ளும் பொறுமை உங்களிடம் உண்டா என்பது தெரியவில்லை.

முகமூடி அவர்களே, பாதிக்கப்பட்டவர் மற்ற நல்லவர்கள் ஆதரவுடன் முயற்சி செய்து குற்றவாளியை ஒரு மாதிரி கட்டுப்படுத்தி வைப்பதைப் பார்த்து மற்றவர்கள் ஏன் அழ வேண்டும்? அவர்களுக்கு அவன் மேல் என்ன பரிவு?

இப்பின்னூட்டம் என் தனிபதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

இவ்வாறு செய்வதற்கு காரணம் இப்பின்னூட்டம் உண்மை டோண்டு இட்டதே என்பதைக் காட்டும் மூன்றாம் சோதனைக்குட்பட்டே என்று அப்பிடிப் போடு அவர்களுக்கு கூறிக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://mugamoodi.blogspot.com/2006/01/blog-post_29.html

"பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்" எழுதியது தேவிபாலா என்றுதான் எனக்கு ஞாபகம். செல்வா என்னும் துப்பறியும் நிபுணன் வந்து அடி உதை எல்லாம் படுவான். அவனுக்கு ஆஃபீஸ்பாய் முருகேசன். அவனை அவ்வப்போது கலாய்த்துக் கொண்டிருப்பான்.

ஈகிள்ஸ் ஐ நரேந்திரன் மற்றும் வைஜயந்தியும் சைடில் தலை காட்டுவார்கள்.ஒரு கதையி வைஜயந்தி பர்தா அணிந்து இவன் அலுவலகத்துக்கு வந்து ஒரு கவரைக் கொடுத்துச் செல்வாள்.

இப்பின்னூட்டம் என் தனிபதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

இவ்வாறு செய்வதற்கு காரணம் இப்பின்னூட்டம் உண்மை டோண்டு இட்டதே என்பதைக் காட்டும் மூன்றாம் சோதனைக்குட்பட்டே என்று அப்பிடிப் போடு அவர்களுக்கு கூறிக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சதயம் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இது. மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://sadhayam.blogspot.com/2006/01/blog-post_26.html#comments

"தாக்குதலுக்குள்ளாகும் நபர்களை எளிதில் இனம் காணலாம், அவர்களால் தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாதபோது அவர்கள் மட்டில் தற்காப்புச் செய்ய சொல்லியிருக்க வேண்டும் தமிழ் மணம். அதை விடுத்து அவர்களுக்கு கோவனத்தை இறுக்கிக் கட்டுவது வசதியாய் இருக்கிறது என்பதற்காக அனைவரும் கோவணத்தை இறுக்கிக் கட்ட வேண்டுமென்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?"

பிரச்சினை என்னவென்றே புரியாமல் இருக்கிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது. தாக்குதலுக்குள்ளாகும் நபர்களுக்கு அவர்கள் சொந்தப் பதிவில் பிரச்சினை இல்லை. உதாரணமாக நான் எடுத்த தற்பாதுகாப்பு நடவடிக்கையால் என் பதிவில் போலி டோண்டு வரமுடியாது. ஆனால் மற்றவர்கள் பதிவுகளில் போய் என் பெயர், காசி அவர்கள் பெயர், மாயவரத்தான் அவர்கள் பெயர் ஆகியவற்றை மற்றவர்களைத் திட்டி வந்தான். பல சமயம் அப்பின்னூட்டங்கள் நாங்கள் எழுதியதாகவே கருதப்பட்டு எதிர் வினைகளும் கொடுக்கப்பட்டன. முக்கிய உதாரணங்கள் மகேஸ், மூக்கு சுந்தர், என்றென்றும் அன்புடன் பாலா, காஞ்சி பிலிம்ஸ், டி.பி.ஆர். ஜோசஃப், ரயாகரன், வா.மணிகண்டன் (கடைசியாகக் கூறப்பட்ட இருவரும் போலிப் பின்னூட்டம் என்று தெரிந்தும் அதை அழிக்க மறுத்தனர்). கடைசியாக பலர் பதிவுகளுக்குப் போய் என் பதிவுக்குப் பின்னூட்டங்கள் தரக்கூடாது என்று பயமுறுத்த ஆரம்பித்தான். That was the last straw.

ஆகவே தமிழ்மணம் மட்டுறுத்தல் செய்ய வேண்டும் என்று கூறியது. அவ்வாறு செய்யாவிட்டால் சம்பந்தப்பட்டவர் பதிவுகளில் பின்னூட்டங்கள் வரும்போது இற்றைப் படுத்தப்படமாட்டாது என்றும் கூறப்பட்டது.

"டோண்டு சார் பாரா சாரிடமே கேட்டுப் பாருங்க உங்க நான் போட்ட பின்னூட்டங்கள ரெண்டு புக்கா பைண்டு செஞ்சு செம்பதிப்பாகவே போட வசதிப்படுமான்னு ;-)"
சீரியசாகவே கூறுகிறேன், அப்பதிவுகளைப் பின்னூட்டங்களுடன் படியுங்கள். அக்காலக்கட்டத்தில் வந்த பதிவுகளைப் பற்றிய ஒரு குறுக்குவெட்டுப் பார்வையே கிடைக்கும். பதிவுகளுக்கான சுட்டிகளும் கிடைக்கும்.

இப்பின்னூட்டமும் வழக்கம்போல என்னுடையத் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

முக்கியமாக அதர் ஆப்ஷனை எனேபிள் செய்து வைத்திருக்கும் நீங்கள் என் பெயரில் பின்னூட்டங்கள் வந்தால் ப்ளாக்கர் எண், போட்டோ மற்றும் என் தனிப்பதிவில் நகலிடப்படல் ஆகிய சோதனைகளைப் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ராமசந்திரன் உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. பார்க்க: http://nunippul.blogspot.com/2006/01/3.html
வாடாமல்லி கதையை நான் தொடர் கதையாக வரும்போதே படித்தவன். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு சமுத்திரம் அவர்கள் என்னை அணுகினார். ஆனால் ரேட் ஒத்து வரவில்லை. ஆகவே செய்யவில்லை.

இந்தப் பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ராமசந்திரன் உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. பார்க்க: http://nunippul.blogspot.com/2006/01/3.html

அந்த நாவலுக்கு விருது தமிழிலேயே கிடைத்தது என்றுதான் என் ஞாபகம். ஆங்கிலத்தில் யாராவது மொழி பெயர்த்தார்களா என்பது பற்றித் தெரியாது.

இந்தப் பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ரகசியன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://rakasiyam.blogspot.com/2006/02/blog-post.html

மிக நல்ல முடிவு எடுத்ததற்கு வாழ்த்துக்கள்.

இந்தப் பின்னூட்டம் உண்மை டோண்டுதான் இட்டான் என்பதை காட்டும் பொருட்டு என்னுடையத் தனிப்பதிவிலும் உடனடியாக பின்னூட்டமாக நகலிடப்படுகிறது. அது அங்கு வருகிறதா என்பதைப் பார்த்தே இங்கு மட்டுறுத்தலை மேற்கொள்ளுமாறு காட்டுக் கொள்கிறேன். மேலும், போட்டோவை எனேபிள் செய்தால் என் பின்னூட்டம் என் சரியான ப்ளாக்கர் எண் dondu(#4800161) மற்றும் போட்டோவுடன் வரும்.
பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆர். வெங்கடேஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. அங்கு பட்டனை அமுத்தியதும்தான் அதை நகல் எடுக்கவில்லை என ஞாபகம் வந்தது.

அவர் பதிவின் சுட்டி: http://tamiloviam.com/nesamudan/page.asp?ID=152&fldrID=1

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இலவச கொத்தனார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://elavasam.blogspot.com/2006/01/blog-post_29.html
நூறுக்கு மேலே பின்னூட்டம் போயிடிச்சி போலிருக்கே. வாழ்த்துக்கள்.

இபின்னூட்டத்தின் நகல் என்னுடையத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். அது வருகிறதா என்று பார்த்தே நீங்கள் இதை மட்டுறுத்தவும். அதுவும் நீங்கள் அதர் ஆப்ஷனை வேறு வைத்திருப்பதால் போலி டோண்டு உங்களிடமும் வர வாய்ப்பு உண்டு என்பதற்காகவே இவ்வளவு முன்ஜாக்கிரதை நடவடிக்கைகள். என் தனிப்பதிவின் சுட்டி: http://dondu.blogspot.com/2005/12/2.html

உங்கள் பதிவில் என் பின்னூட்டம் போட்டொவுடனும் என் சரியான ப்ளாக்கர் எணுடனும் வர வேண்டும். அப்போதுதான் அது என்னுடையது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மாலிக் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் அவரது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://vilambi.blogspot.com/2006/02/blog-post.html

இந்துக் கடவுள் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த எஃப்.எம். ஹுஸேன் பற்றி உங்கள் கருத்து?

ஹுஸேனை எதிர்த்து ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ந்டத்தியபோது அதை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக சித்தரித்ததும் பல இசுலாமியர்கள் மற்றும் போலி மதச்சார்பற்றவர்கள் செய்ததே.

கராத்தே ஹுஸைனீ பத்திரிகையாளர்களை அழைத்து அந்த நிர்வாண படத்திற்கு அழகாக உடையை எழுதிப் பொருத்தினார். பிறகு எஃப்.எம். ஹுசேனின் நிர்வாணப் படத்தையும் பெரிதாக வரைந்து டிஸ்ட்ரிப்யூட் செய்தார். அப்போதும் பலர் எதிர்த்து கூக்குரலிட்டனர்.

ஃஎப்.எம்.ஹுஸேன் என்ற ஒரு பேர்வழி செய்ததற்கு ஒரு இசுலாமியரும் கண்டனம் தெரிவித்ததாகத் தெரியவில்லையே.

இதற்கு என்ன சமாதானம்?

இப்பின்னூட்டம் என்னுடையத் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். அங்கு வருகிறதா என்பதை சிரமத்தைப் பார்க்காது சோதனை செய்தே நீங்கள் இப்பின்னூட்டத்தை அனுமதிக்கவும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ராம்கி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. பார்க்க: http://theruththondan.blogspot.com/2006/01/blog-post_21.html
"இந்தப் பின்னூட்டத்தில் அவர் டோண்டு பெயரில் போட்டதைத் தவிர வேறு பிரச்னை எதுவும் எனக்குத் தெரியவில்லை. மிரட்டல் அல்லது எச்சரிக்கை அவரது உரிமை என்றே எடுத்துக் கொள்கிறேன். ஆனால் அது டோண்டு (4800161) எழுதியது இல்லை என்பதால் அதை நீக்கினேன்."

மிக்க நன்றி ராம்கி அவர்களே. என் பெயரில் வரும் பின்னூட்டங்களில் ஆபாசம் மிகுந்தவை உடனுக்குடனேயே கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆபாசம் இல்லாத என் பெயரில் வரும் பின்னூட்டங்களில் வேறு பிரச்சினை, அதாவது அது போலி என்று கண்டுகொள்ளப்படாமல் போவது.

இப்போதும் இளவஞ்சி பதிவில் அது வந்துள்ளது. மறுபடியும் மறுபடியும் என்னுடைய மூன்று சோதனைகளைப் பற்றிக் கூறி உங்களை போர் அடிக்க விரும்பவில்லை. மூன்றாம் சோதனையாக என்னுடைய இப்பின்னூட்டமும் என்னுடையத் தனிப்பதிவில் வழக்கம்போலவே பின்னூட்டமாக நகலிடப்படும் என்று சொல்லி வைக்கிறேன். அதைப் பார்த்துவிட்டே மட்டுறுத்தல் செய்யவும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பெனாத்தல் சுரேஷ் அவர்கள் பாண்டுராஜச் சோழன் பற்றி எழுதியப் பதிவில் நான் இட்டப் பின்னூட்டத்தை இடும் முன்னால் நகலெடுக்க மறந்து விட்டேன். பெனாத்தல் சுரேஷிடம் அவர் பதிவில் பின்னூட்டம் இட்டது நானே என்று இந்த முறை மட்டும் முதல் இரண்டு சோதனைகளை வைத்துப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடம்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சுந்தர் அவர்களின் அகர முதல பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://agaramuthala.blogspot.com/2006/02/bad.html
இஸ்ரேலின் முதல் பிரதமரான டேவிட் பென் குரியன் அவர்கள் தன் அமைச்சரவையில் இருந்த கோல்டா மயர் என்னும் பெண் மந்திரியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார், "அவர்தான் என்னுடைய அமைச்சரவையில் இருக்கும் ஒரே ஆண்" என்று.

அதே போல இந்திரா காந்தி அவர்கள் அரசிலோ அல்லது ஜெயலலிதா அவர்கள் அரசிலோ இருக்கும் ஒரே ஆண் யார் என்பதில் ஏதாவது சந்தேகம் யாருக்கேனும் உண்டா?

இப்பின்னூட்டமும் என்னுடைய வழமையானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நல்லடியார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://athusari.blogspot.com/2006/02/blog-post_08.html
"... குர்ஆனையும் ஹதீஸையும் பொருள் அறிந்து மணனம் செய்வதுடன் ஷரீஅத் சட்டங்களையும், விளக்க உரைகளையும், இஸ்லாமிய வரலாற்றையும் முழுமையாகக் கற்றவருக்கு "ஆலிம்/உலமா" என்ற பட்டமும் வழங்கப் படுகின்றது."

நம் புதுக்கல்லூரியில் நான் சமீபத்தில் 1962-63 கல்வியாண்டில் புகுமுக வகுப்பு படித்தபோது இருந்த முதல்வர் மாண்புமிகு அல் ஹஜ் அஃப்சல் அல் உலேமா சையத் அப்துல் சாஹேப் புகாரி அவர்கள் பெயரில் உள்ள அஃப்சல் என்பது என்னப் பட்டம் என்று கூற முடியுமா? ஹஜ் போயிருப்பதால் அல் ஹஜ் என்பது புரிகிறது, அல் உலேமாவும் இப்போது விளங்கி விட்டது. அஃப்சல்?

இப்பின்னூட்டமும் என் வழமையான தனிப் பதிவில் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ராமசந்திரன் உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்கு காத்திருக்கிறது. பார்க்க: http://nunippul.blogspot.com/2006/02/blog-post_09.html
1.b
2.b
3.b
4.b
5.b
6.b
7.b
8.b
9.b. பெருமையாகவே உணர்கிறேன்.
10.b.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய வழக்கமான தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

dondu(#11168674346665545885) said...

ஸ்ருசல் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://thadagam.blogspot.com/2006/02/blog-post_10.html

இதே மாதிரி ஒரு ஒண்டே மேட்சில் டெண்டுல்கர் மூன்றாம் ரன் எடுக்கும்போது போலர் குறுக்கே வந்து மோத, டெண்டுல்கர் க்ரீஸுக்கு சற்றே வெளியில் தடுமாற, அவர் மட்டை சில மைக்ரோசெகண்டுக்கு தரையிலிருந்து மேலே இருக்க, அப்போது பவுண்டரி தரப்பிலிருந்து வீசப்பட்ட பந்து டைரக்ட் ஹிட்டாக, அப்போது கேப்டன் வாசிம் அக்ரம் அப்பீல் செய்தது மட்டும் என்ன ஸ்பொர்ர்ட்மேன் ஸ்பிரிட் என்று யாராவது விளக்குவீரா?
கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்.

இப்பின்னூட்டமும் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தாணு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:

http://forusdear.blogspot.com/2006/02/blog-post_11.html
பாரதி சொன்னப் புதுமைப் பெண்ணாய்,
சிறுமைகண்டு பொங்கி, பெருமைக்குத் தலைவணங்கி,
தேமதுரத் தமிழோசை மறவாது செயலாற்றி,
திக்கெங்கும்
பரவட்டும் அச்சிறுப்பெண்ணின் ஆற்றல்

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சிறில் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://bblk.blogspot.com/2006/02/6.html

பேபல் கோபுரம் இப்போது உலகில் நிலவி வரும் பன்மொழி நிலையைக் குறிக்கிறது. என்னைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் இதை எங்கள் தொழிலின் குறியீட்டாக நினைக்கிறோம். என்னுடைய மொழிபெயர்ப்பு வலைத் தளத்திலும் அக்கோபுரம் உள்ளது. பார்க்க: http://www.nrtranslatorinterpreter.com/

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலூம் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சேகர் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://jssekar.blogspot.com/2006/02/blog-post_16.html#comments

"டூ டு டூ டு டூடூடூ" என்று ரயில்வே அதிகாரி வண்டி அந்த ஸ்டேஷனில் நிற்கும் நேரத்தைக் கூற, மாதவன் ஞே என்று விழித்து அவர் என்ன சொல்லுகிறார் என்று கமலை அழாக்குறையாகக் கேட்க அவரும் சிரிக்காமல் "அதான் சொன்னாரே, டூ டு டூ டு டூடூடூ" என்று கூற, மாதவன் தலையைப் பிய்த்துக் கொள்ள, கண்ணிலேயே நிற்கும் காட்சி அது.

(வண்டி நிற்கும் நேரம்: 1.58லிருந்து 2.22 வரைக்கும் என்பது பொருள்.)

கமல், மாதவன் இருவருமே போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படமே மாதவன் கமலின் வாரிசாகலாம் என்று ஒருவரைக் கூறவைத்து, தமிழ்மணத்தில், புயலையே கிளப்பியது என்றால் மிகையாகாது.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஞான பீடம் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. பார்க்க: http://njanapidam.blogspot.com/2006/02/blog-post_17.html
இக்கதை விகடனில் வெளியான போது படித்திருக்கிறேன். "அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்" என்ற வரிசையில் வேறு கதைகளும் வந்தன. அதில் ஒரு விவசாயி திடீரென பைத்தியம் பிடித்து கண்ணில் கண்டவர்களையெல்லாம் அறுவாளால் வெட்டிப் போடுகிறான். மன நில விடுதியில் அவரை கதாசிரியர் பார்த்த போது இந்த சாதுவா அவ்வாறு செய்தது என்று வியந்தார்.

இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

செய்தி.நெட்டில் நான் இட்ட இந்த பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிகிறது. பார்க்க: http://seythi.net/2006/02/17/50
முதலில் செய்தியை முழுமையாகக் கூறுங்கள் அல்லது விவரங்களுக்கான சுட்டியைத் தாருங்கள். இப்படி மொட்டைதாதன் குட்டையில் விழுந்தான் போன்று எழுதினால் என்ன செய்வது.

ஊகித்தவரை எழுதுகிறேன். தங்கமணி அவர்கள் கூறுவதை வழிமொழிகிறேன். நம்மவர் மேலேதான் தவறு. அமெரிக்கா என்றவுடன் ஏன் போய் விழுகிறீர்கள். அதனால்தான் அவன்களுக்கு இளப்பமாக இருக்கிறோம். அமெரிக்க தூதரகங்கள் வாயிலில் சூட், கோட், டை எல்லாம் போட்டுக் கொண்டு பிச்சைக்காரர்கள் போல நின்றால் இதுவும் செய்வார்கள் இன்னமும் செய்வார்கள்.

இல்லை எனக்கு பணம், வேலைதான் முக்கியம் என்றால் வாயை விடாமல் காரியம் ஆற்றிக் கொள்ளவும்.

இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஞான பீடம் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. பார்க்க: http://njanapidam.blogspot.com/2006/02/blog-post_17.html

"dondu pinnuttam ellaam iduvaara?
enakku doubt appu :)"
இது என்ன கேள்வி, விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பாவா என்று கேட்டது போல? என்னுடைய பிரசித்தி பெற்ற மூன்று சோதனைகளையும் வைத்து பார்ப்பதுதானே.

சன்னாசி அவர்களே, நீங்கள் கொடுக்கும் சுட்டி வேறெங்கோ கொண்டு செல்கிறாப்போல் தொன்றுகிறதே? அல்லது நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா?

நீங்கள் குறிப்பிட்ட கதையில் தனியாக இருப்பவன் அந்தக் காலனிக்கு சில மாதங்களுக்கு முன்னால் வந்து மாட்டிக் கொண்ட திருடனாக இருப்பான், அவனே தங்கள் காலனிக்குள் ஒரு வீட்டில் குடியிருப்பவனாக வருவது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதுதான் கதை. அக்கதையையா குறிப்பிடுகிறீர்கள்?

இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மோகன்தாஸ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://imohandoss.blogspot.com/2006/02/blog-post_114034874828379872.html
நீங்கள் குறிப்பிடும் புத்தகம் "பப்பிய்யோன்" (Pappillon, l is silent) என்ற பிரெஞ்சு புத்தகம். ஆன்றி ஷார்ரியேர் (Henri Charriere).

ஆனால் ஒன்று, ரா.கி. ரங்கராஜன் அவர்கள ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்துதான் அதை தமிழாக்கம் செய்திருக்க வேண்டும். அந்த நாவலை ஃபிரெஞ்சிலும் படித்திருக்கிறேன். ரா.கி.ராவின் மொழிபெயர்ப்பு மிக அருமை.

இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was placed by me in a blog post by Boston Bala vide http://snapjudge.blogspot.com/2006/01/britainuk-vs-russia-spyware.html

Q.E.D. is an abbreviation of the Latin phrase "quod erat demonstrandum" (literally, "which was to be demonstrated"). This is a translation of the Greek ὅπερ ἔδει δεῖξαι (hóper édei deĩxai) which was used by many early mathematicians including Euclid and Archimedes. Q.E.D. may be written at the end of mathematical proofs to show that the result required for the proof to be complete has been obtained. It is not seen as frequently now as in earlier centuries.

Modern-day usage
End-of-proof symbolism in the present day is often the symbol ■ (solid black square) called the tombstone, or the Halmos symbol (after Paul Halmos who pioneered its use). The tombstone is sometimes open; □ (hollow black square). Another simple way of stating that the proof is complete is to simply write "proven" or "shown" in parentheses after the final step of the proof, or to draw two forward slashes (//).

Unicode provides the "End of Proof" character U+220E (∎), but also provides U+25A0 (■, black square) and U+2023 (‣, triangular bullet) as alternatives.

Variations on the abbreviation
In English speaking countries the letters have been humorously interpreted as "Quite Easily Done" or, occasionally, "Quite Eloquently Done", or "Quite Enough Done". Other humorous expansions in the context of mathematical proofs are "Question Every Detail" or "Question Every Deduction", suggesting that the reader should check that the proof is indeed correct as claimed, or "Qualitatively Extracted Deduction."

There exists another Latin phrase, with a slight difference in meaning, but a similar, if less common usage. Quod erat faciendum translates into English as "Which was to be done." This is usually shortened to Q.E.F.. As with Q.E.D., Q.E.F. is a translation of the Greek geometers' closing oper edei poihsai. Euclid used this phrase to close propositions which were not precisely "proofs", but rather constructions for example.

Incidentally, some people prefer to use the more tongue-in-cheek WWWWW or W5 which stands for the English "Which Was What Was Wanted." or "Which Was What We Wanted."

Popular usage
In the 1987 American movie "No Way Out," the character Scott Pritchard (played by actor Will Patton) concludes an explanation of his character's power and ability to effect a solution inherent to the movie's story line with the phrase "quod erat demonstrandum".

In The Hitchhiker's Guide to the Galaxy, Douglas Adams hypothesises a dialogue between Man and God concerning whether a creature, the babel fish, which allows anyone who places it in their ear to understand any language, is too useful to have evolved purely by chance and therefore must have been divinely created.

GOD: "I refuse to prove that I exist, for proof denies faith and without faith I am nothing." MAN: "But the babel fish is a dead giveaway, isn't it? It could not have evolved by chance. It proves you exist, and so therefore, by your own arguments, you don't. QED." GOD: "Oh dear; I hadn't thought of that." Whereupon he promptly vanishes in a puff of logic.

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

கார்த்திக் ஜயந்த் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://karthikjayanth.blogspot.com/2006/02/it.html
Copy Paste உளவாக தானே கோடிடல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு. இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப் பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

dondu(#11168674346665545885) said...

இராமக் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://valavu.blogspot.com/2006/02/blog-post_24.html

இராமகி அவர்களே,
இவன்
இவனை
இவனால்
இவனோடு
இவனிடம்
ஆகியவற்றை டிஸ்கியில் எழுதி சோதித்தாலும் அதே முடிவுதானே வரும்? அதில் மட்டும் நீங்கள் எதிர்ப்பார்ப்பது வந்து விடுமா என்ன? இதில் ஒருங்குறி, நீங்கள் பரிந்துரைக்கும் டிஸ்கி எல்லாவற்றுக்கும் ஒரே நிலைதானே?

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இராமகி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://valavu.blogspot.com/2006/02/blog-post_24.html

பொறுமையாக நான் கேட்ட கேள்விக்கு பதிலளித்ததற்கு மிக்க நன்றி இராமகி அவர்களே.

மறுபடியும் உங்கள் உதாரணத்துக்கே வருவேன்.

இவன்
இவனை
இவனால்
இவனோடு
இவனிடம்
ஆகிய சொற்களில் உள்ள வேற்றுமை உருபுகள் கண்டு கொள்ளப்பட்டு அவன் என்று போட்டு ctrl H உபயோகித்து
அவன்
அவனை
அவனால்
அவனோடு
அவனிடம்
என்று மாற்றும் செயல்பாடு கேட்கிறீர்கள் என்று எனக்கு படுகிறது. எனது புரிதல் தவறானால் திருத்தவும்.

இந்தக் குறை பிரெஞ்சு, ஜெர்மன் ஆங்கிலம் என்து எல்லா மொழி எழுத்துக்களிலும் வரும். நான் புரிந்து கொண்டது என்னவென்றால் கணினிக்கு மொழியறிவு கிடையாது. வெறும் எழுத்துருக்களைத்தான் அதனால் இனம் காண முடியும் என்பது எனது துணிபு.

ஜெர்மனில் im என்பது in dem என்னும் இரு சொற்களின் சுருக்கமே. அதையெல்லாம் கணினி கண்டு கொண்டு சொற்களின் எண்ணிக்கையைக் காட்டும் மென்பொருள் (word counting software) அதை இரண்டு சொற்களாக எண்ணும் என்றெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது. எங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் அவற்றை இரு வார்த்தைகளாக எண்ணுவோம். கணினி எண்ணாது. அதே போலத்தான் நீங்கள் சொல்லும் பிரச்சினையும் வருகிறது. இவ என்பதை அவ என்பதால் ரீப்ளேஸ் செய்யுமாறு ஆணை கொடுத்தால் பிரச்சினை தீர்ந்தது. அவ்வளவே. கணினிக்கு உண்டு இல்லை என்றுதான் பார்க்கத் தெரியும் என்ற பைனரி தத்துவத்தைதானே நாம் பயன்படுத்தி இவ்வளவு சாதித்துள்ளோம்? பத்தோடு பதினொண்ணாக இதை பார்ப்பதை விட்டு ஏன் அவதிப்பட வேண்டும். இதில் தலித் சேரிகளெல்லாம் எங்கிருந்து வந்தன?

ஓக்கே உங்கள் வாதத்துக்கே வருவோம். 128 பொந்துகள் போதாது என்கிறீர்கள். நல்லது. இன்னும் எவ்வளவு பொந்துகள் தேவை என்பதில் தெளிவாக இருக்கிறோமா? அது பற்றி உங்கள் இடுகைகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வினையூக்கி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://vinaiooki.blogspot.com/2006/01/blog-post_31.html

அப்பிடிப்போடு வினையூக்கி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு: இந்தப் பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஸ்ருசல் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க:

http://thadagam.blogspot.com/2006/03/blog-post_114178780004877039.html

பல இடங்களில் வெவ்வேறு தருணங்களில் நானும் நீங்கள் கூறியதையே கூறியிருக்கிறேன்.

உண்மை, நந்தன் முதலிய பத்திரிகைகளை எடுத்துக் கொண்டால் ஒரு கொலையோ கற்பழிப்போ பற்றி செய்தி வந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் பார்ப்பனராக இருந்தால் உடனே பலான குற்றம் புரிந்த பார்ப்பனர் என்றே செய்தி போடுவார்கள். மற்ற ஜாதியினராக இருந்தால் வெறும் பெயரை மட்டும் போடுவார்கள். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி விஷயத்திலும் வெறுமனே உயர்சாதியினர் என்றுதான் இணையத்திலும் எழுதி வந்தனர். நான் அங்கு சென்று சம்பந்தப்பட்ட உயர்சாதியினர் என்ன சாதி என்று குறிப்பிட்டு எழுதுமாறு சவால் விட்டதும்தான் வேண்டாவெறுப்பாக பிறன்மலை கள்ளர் என்று ஜாதிப் பெயரை வெளியிட்டனர்.

வன்னியர்கள் செய்யாத தலித் அடக்குமுறைகளா, தேவர்கள் செய்யாததா? கீழ்வெண்மணி கொடுமைக்கு ஒரு நாயுடுதானே காரணம்?

திடீரென்று பார்ப்பனீயம் என்று எழுதுவார்கள். ஏன், உயர்சாதீயம் என்று எழுதுவதுதானே? மாட்டார்கள்? ரொம்ப பேசினால் இதையெல்லாம் பார்ப்பனர்தானே ஆரம்பித்து வைத்தது என்று கூறிச் சென்று விடுவார்கள். அதில் தாங்கள் மரம் வெட்டியதும், தலித்துகளை கொடுமைபடுத்தியதும் மறைந்து விடும் என்று மனப்பால் குடிக்கின்றனர்.

பார்க்கப்போனால் ஜாதியை விடாப்பிடியாக வைத்துக் கொண்டு தொங்கி இரட்டை கிளாஸ் முறை செயல்படுத்துவது எல்லாமே பார்ப்பனர் அல்லாத உயர் சாதியினர்தான். பார்ப்பனர்களுக்கு அதையெல்லாம் செய்ய நேரமுமில்லை, வசதியும் இல்லை. தங்கள் கல்வி, தொழில் முன்னேற்றம் என்று பார்த்துக் கொண்டு போகவே அவர்களுக்கு நேரம் போதவில்லை.

பல கிராமங்களில் அக்கிரஹாரம் என்று தனியாகவே இல்லை. அப்படியிருந்தாலும் கோவில்களில் பணிபுரியும் குருக்கள் ஓரிருவர் இருக்கலாம், திதி கொடுக்க பிராம்மணர்கள் இருக்கலாம். அப்படி ஒன்றும் சுகஜீவனத்திலும் அத்தொழில் செய்பவர்கள் இல்லை. தங்கள் சந்ததியினரை மேல் படிப்பு படிக்க வைத்து நகரங்களுக்கு அனுப்புவதே அவர்கள் முழு நோக்கமும்.

ஆக, பார்ப்பனர்கள் மேல் எல்லா பழியையும் போடுபவர்கள் தாங்கள் செய்யும் அக்கிரமத்தை மூடி மறைக்கவே அவ்வாறு செய்கின்றனர்.

பின்னூட்டம் நீண்டு விட்டது. மன்னிக்கவும். நீண்ட பதிவுக்கு நீண்டப் பின்னூட்டம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

இப்பின்னூட்டம் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு ஆதாரமாக அதன் நகல் என்னுடைய பிரத்தியேகப் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஸ்ருசல் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க:

http://thadagam.blogspot.com/2006/03/blog-post_114178780004877039.html

ஸ்ருசல் அவர்களே, முகமூடி அவர்களின் இப்பதிவைப் போய் படியுங்கள். பின்னூட்டங்களையும் சேர்த்துத்தான். சுவாரசியமாக இருக்கும். பார்க்க:
"பார்ப்பன எதிர்ப்புன்னு எவ்ளோ நாள்தான் ஜல்லி அடிக்கறது" http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_20.html

இப்பின்னூட்டம் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு ஆதாரமாக அதன் நகல் என்னுடைய பிரத்தியேகப் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தூண்டில் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://thoondil.blogspot.com/2006/03/blog-post_08.html

"ஒரு மலையாளி எம்.ஜீ.ஆர்,கர்நாடகக்காறி ஜெயலலிதா தமிழரை ஆண்டிருக்க முடியுமா?கர்நாடக ரஜனிகாந் நமது மக்களுக்கு என்ன கலைஞனா?"

பெரியார் கன்னடர். கருணாநிதி அவர்களும் தெலுங்கர் என்றுதான் கேள்வி. இதற்கு என்ன கூறுவீர்கள்?

ஜயலலிதா அவர்கள் தன்னை ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஐயங்கார் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தமிழ்சசி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://thamizhsasi.blogspot.com/2006/03/blog-post_11.html

வாஸந்தி அவர்கள் எழுதியதை உங்கள் பதிவு சரியாக பிரதிபலிக்கவில்லை. நீங்கள் சுட்டிய வாஸந்தி அவர்கள் கட்டுரையிலிருந்து:
"எத்தகைய நியாயமான போராட்டமாக இருந்தாலும் வன்முறையை நான் எதிர்ப்பவள். அதனால் ரணம் தான் மிஞ்சுமே தவிர சாதகம் இல்லை என்று நினைப்பவள். சொந்த இனத்தவரையும் ஒழிக்க முற்படும் சகிப்புத்தன்மையற்ற போக்கு, மானுடத்துக்கு எதிரான அசுரத்தனம் என்று நம்புபவள். இந்த எனது நம்பிக்கையே எனது நாவலில் புலிகளைப்பற்றின விமர்சனமாகப் பிரதிபலித்தது. தமிழ்ச்செல்வனே தனது கருத்தை விளக்கட்டும் என்று நான் பேசாமல் இருந்தேன். 'தியாகி கிட்டு மற்றும் தியாகி திலீபன் மரணங்களை நீங்கள் மிகவும் கொச்சைப்படுத்திவிட்டீர்கள். எங்கள் நோக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் எழுதிவிட்டீர்கள்' என்றார். 'என் கருத்து தவறாக இருந்தால் அடுத்த புத்தகத்தில் திருத்தி எழுதி விடுகிறேன்' என்றேன் சிரித்தபடி. 'திறந்த மனத்துடன் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறேன்; உங்கள் தலைவரை நேரில் காணும் எதிர்பார்ப்புடன். அவரையும் உங்கள் இயக்கத்தையும் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆவலுடன்' என்றேன். அதைத் தொடர்ந்து, ஆன்டன் பாலசிங்கம் கிட்டத்தட்ட அரைமணிநேரம் இந்திய அரசும் தமிழகமும் இந்தியப் பத்திரிகைகளும் தங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகவும், தங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதாகவும், அது தங்களுக்கு வருத்தத்தை அளிப்பதாகவும் சொன்னார். 'இந்தியா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாங்கள்தான் இங்கு மக்களுடைய போராட்ட சக்தி. இந்தப் பிரதேசமே எங்க கட்டுப்பாட்டிலே இருக்கு' என்றார் காட்டமாக.

அதைப் பற்றி எனக்கு சந்தேகமிருக்கவில்லை. 'ராஜீவ் காந்தி படுகொலை ஒட்டுமொத்த இந்திய மக்களை உலுக்கிவிட்டது. இந்திய நிலைப்பாட்டிற்கு அதுதான் காரணம்' என்று என்னால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

'எந்த அரசியல் கொலை நடந்திருந்தாலும் எங்களை சம்பந்தப்படுத்துகிறார்கள். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இந்திய ராணுவம் இங்க செஞ்ச அட்டூழியத்தின் எதிர் விளைவா சிலது நடந்திருக்கலாம்' என்றார் பாலசிங்கம்.

காதில் பூ சுத்துவதுபோல் இருந்தது எனக்கு. 'உங்களுக்கு அதில் சம்பந்தமில்லையா?' என்றேன். ஒலிநாடா ஓடிக்கொண்டிருந்தது. பாலசிங்கம் இல்லை என்னும் பொருள்பட தலையை மட்டும் அசைத்தார்."

டோண்டு ராகவன் இங்கு கூற விரும்புவது: ஒரு கூடை பூ அல்லவா சுற்றுகிறார் பாலசிங்கம்!

'பிரபாகரன் ஏன் வெளியில் வருவதில்லை?'

'அவர் அரசியல்வாதி இல்லே. மக்களுக்காக ஓய்வில்லாமல் செயல்படுபவர். அதற்கு விளம்பரம் தேவையில்லை'.

'அவரை நான் சந்திக்கணும். இளைஞர்களிடம் அவருடைய வசீகரம் ஏற்படுத்தும் மாற்றம் ஆச்சரியமானது. நேரில் காண ஆசைப்படுகிறேன்.'

பாலசிங்கம் மழுப்பலாகச் சிரித்தார். 'அவரை நேரில் கண்டா ஒரு ப்ராஸிக்யூஷன் வக்கீலைப் போல் கேள்வி கேட்பீர்களே?'

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. 'உங்கள் நாவலைப் படித்ததில் அவருக்கு நிரம்ப வருத்தம்' என்றார் தமிழ்ச் செல்வன்.

'நேரில் சந்தித்தால் என் எண்ணங்களை மாற்றிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்' என்றேன்.

'நீங்கள் இந்தியா திரும்பிய பிறகு எங்களைப் பற்றி என்ன எழுதுகிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கும் அது.' அதே சிரிப்புடன் வந்தது பதில்.

'உங்கள் வேண்டுகோளைத் தெரிவிக்கிறோம். சம்மதித்தால் சொல்லி அனுப்புவோம்' என்றார் பாலசிங்கம்.

இரண்டுநாள் கழித்து, 'பிரபாகரனுக்கு என்னை சந்திக்க நேரமில்லை' என்ற தகவல் வந்தபோது எனக்கு வியப்பேற்படவில்லை.

"யாழ்ப்பாணத்தில் நான் கால் வைத்த அடுத்த இருதினங்களில் பிபிஸி ஆனந்தி வந்து சேர்ந்திருந்தார். புலிகளுக்கு இணக்கமான அவருக்கு பிரபாகரன் விரிவான ஒரு பேட்டி அளித்தார். நான் இந்தியா திரும்புகையில் அது தினமணியில் ஏக விளம்பரத்துடன் பிரசுரமாயிற்று."

டோண்டு ராகவன் இங்கு கூற விரும்புவது: ஆக, பிரபாகரனை சந்திக்க முழு முயற்சியும் மேற்கொண்டார் வாஸந்தி அவர்கள் என்பது வெள்ளிடைமலை. பிரபாகரன் அவரை சந்திக்க பயந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது.

"எனது தோல்வியைச் சுட்டிக்காட்டுவதுபோல. பிரபாகரனை நான் நேரில் சந்திக்காவிட்டாலும், யாழ்ப்பாண விஜயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும், கிடைத்த தரிசனங்களும் மிக முக்கியமானவை, என்னுடைய சந்தேகங்கள் எல்லாம் ஊர்ஜிதமாயின."

டோண்டு ராகவன் இங்கு கூற விரும்புவது:
தன்னுடைய முடிவுகளுக்கு காரணம்தான் கீழே கொடுக்கிறாரே வாஸந்தி அவர்கள்.

"புலிகளின் பார்வையும் செவியும் எங்கும் வியாபித்தன. அவர்களுடைய அனுமதியில்லாமல் யாரும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற முடியாது. பலரின் வீடுகள், நிலங்கள் கைப்பற்றப்பட்டன. வெளிநாட்டில் குடியேற நினைத்தவர்கள், பல லட்சங்கள் இயக்கத்துக்குக் கொடுத்தால்தான் செல்ல முடியும். கொழும்பில் பாதிக் குடும்பமும் யாழ்ப்பாணத்தில் பாதிக் குடும்பமுமாக அல்லல்பட்டவர்கள் ஏராளம். இரவோடு இரவாகப் பல முஸ்லிம்கள் துரத்தப்பட்டதைப் பல தமிழர்களால் ஏற்க முடியவில்லை. பீதியுடன் அக்கம் பக்கம் பார்த்து ஒருவர் சொன்னார். "இவங்களை விட்டா இப்ப எங்களுக்கு வேற வழியில்லே என்கிற காரணத்தாலே பேசாம இருக்கோம்."

"கொழும்பில் பேராசிரியர் கா. சிவத்தம்பி காலை உணவிற்கு என்னை அழைத்து உபசரித்தது நேற்று போல் இருக்கிறது. 'சமாதானம் வருவதில் நிறைய சிரமங்கள் இருப்பதை நான் உணர்கிறேன்' என்றார் சிவத்தம்பி. 'நீண்ட காலமாக நடந்த போரில் இலக்கு புலிகள் என்றாலும் அடிபட்டது பொதுமக்கள். சமாதானப் பேச்சில் புலிகளுக்கு என்ன வேண்டும் என்பது பிரச்னையில்லை. இந்த நாட்டின் அரசியல் சட்ட சாஸனத்தில் தமிழர்களின் நிலை என்ன என்பதுதான் கேள்வி.'

உள்ளத்தில் எதிர்காலத்தைப் பற்றி எத்தனையோ கலக்கம் இருந்தாலும், அவரும் அவரது மனைவியும் காட்டிய அன்பும் விருந்தோம்பலும் ஆயுளுக்கும் மறக்காது. நான் கிளம்பும்போது அவரது மனைவி மாடியிலிருந்து என்னுடன் கீழ் இறங்கினார். என் கைகளைப் பற்றி பொலபொலவென்று கண்ணீர் உகுத்தார். 'யாழ்ப்பாணத்துக்குப் போக இயலாது. வயசுப் பெண்ணையோ மகனையோ அங்க அனுப்ப இயலாது. ஏனெண்டா அங்கு போனா அவன்களாலெ திரும்பி வர இயலாது. விடிவு காலம் எப்ப வருமோ ஈசுவரா எண்டு இருக்கு.' எனக்கு அடிவயிற்றைக் கலக்கிற்று. யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாத தன் துயரத்தை என்னிடம் இறக்கிவிட்ட நிம்மதியில் அவர் எனக்கு விடைகொடுத்த காட்சி, இன்னும் கனமாக இதயத்துள் அமர்ந்திருக்கிறது."

டோண்டு ராகவன் இங்கு கூற விரும்புவது: தன் பிள்ளைகளை பத்திரமான இடத்தில் வைத்துவிட்டு ஊரார் பிள்ளைகளுக்கு பெல்ட்பாம் கட்டும் இயக்கத்தின் தலைவனை கண்டு அவ்வளவு பயம் பொது மக்களுக்கு.

இப்பின்னூட்டம் உண்மையான டோண்டு ராகவன் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணம் அதன் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தமிழ்சசி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://thamizhsasi.blogspot.com/2006/03/blog-post_11.html

"சசிக்கு ஒரு ராசி போலும். பதிவுகளில் அவர் பேச வரும் முக்கிய விஷயங்கள் பின்னூட்டங்களால் எங்கோ திசை திரும்பி விடுகின்றன; திருப்பி விடப் படுகின்றன.டோண்டுவின் பின்னூட்டம் இதைத்தான் இங்கு செய்கிறது."

சசி சொல்ல வந்தது பத்திரிக்கைகள் எப்படி செய்திகளைத் தரவேண்டுமென்ற அவர் கருத்தை. அதற்கு இரு பத்திரிகையாளர்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். இதில் எதற்கு வாஸந்தியைத் தனிப்பட்ட முறையில் டோண்டு ஏற்றிப்பிடிக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை."

வாஸந்தியை உதாரணமாக எடுத்துக் காட்டியது சசி அவர்களே. அதில் அவர் கூறியதில் உள்ள குறைபாட்டைத்தான் கூறினேன். இதில் திசை திருப்பல் எங்கு வந்தது? மேலும் பிரபாகரன் வாசந்தி அவர்களை சந்திக்கத் தயங்கியிருக்கிறார் என்பதும் நிஜமே. பெல்ட் பாம் பற்றிக் குறிப்பிட்டதும் புலிகள் செய்யும் அராஜகத்தை எடுத்துக்கட்டி, வாசந்தி அவர்கள் தான் வந்த முடிவுகள் குறித்துஎழுதியதில் தவறு இல்லை என்றுதான் கூற முயற்சி செய்தேன். மற்றப்படி அவரை தூக்கிப் பிடிக்கும் அவசியம் எனக்கில்லை.

"இந்தப் பதிவில் நான் எழுதியுள்ளது பத்திரிக்கைகள் மற்றும் செய்தியாளர்களின் போக்கு குறித்து தான். அதைப் பற்றி மட்டும் விவாதிக்க வேண்டும்."
அதைதான் நானும் விவாதித்தேன். அதற்காக நீங்கள் சுட்டிய கட்டுரையை முழுக்கப் படித்து அதிலிருந்தே மேற்கோள் காட்டினேன். உங்களுக்கு அனிதா செய்தது சரியென்றுபட்டிருக்கிறது. அதைக்கூறப் புகுந்த நீங்கள் இன்னொரு பத்திரிகையாளர் செய்தது சரியில்லை என்று கூறினீர்கள். சரியாகத்தான் எனக்குப் படுகிறது என்று நான் கூறினேன். நீங்களும் விவாததினுள்ளேயே இருங்கள் என்றுதான் நானும் கூறுகிறேன்.

இப்பின்னூட்டம் உண்மையான டோண்டு ராகவன் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணம் அதன் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பொட்"டீ" கடை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://potteakadai.blogspot.com/2006/03/blog-post_24.html
"பின்னூட்டங்களை எவ்வாறு எடிட் செய்வது என்று யாராவது சொல்லி கொடுத்தீங்கனா உபகாரமா இருக்கும்!"

சொன்னால் போயிற்று. எடிட் செய்ய வேண்டிய பின்னூட்டத்தை நகலெடுத்துக் கொள்ளவும். பிறகு மட்டுறுத்தல் பெட்டியில் அப்பின்னூட்டத்தை ரிஜெக்ட் செய்யவும். நகலெடுத்ததை உங்கள் பின்னூட்டமாக ஒட்டி, அதற்கு மேல் இது பலானவர் இட்டப் பின்னூட்டம் என்று எழுதி விடவும். இப்போது நீங்கள் நகலெடுத்தப் பின்னூட்டத்தை எடிட் செய்யலாம்தானே.

சந்தேகம் இன்னும் ஏதேனும் இருந்தால் சிவனடியாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். ஆனால் என்ன, என்னுடையப் பின்னூட்டத்தை எடிட் எல்லாம் செய்யவில்லை. ஆனாலும் என் பெயரில் வெளியிடாமல் டோண்டுவின் பின்னூட்டம் இதோ என்று போட்டார். ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்பதற்கு மட்டும் பதில் கூற மறுத்து விட்டார்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டுவதற்காக அதன் நகலை என்னுடையத் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கால்கரி சிவா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க:http://sivacalgary.blogspot.com/2006/04/blog-post.html

""வறுமையில் நிறைவு கொள். நோயில் நிம்மதி அடை. சுரண்டல்களை சகித்துக் கொள். உயரப் போக ஆசைப் படாதே" என்றெல்லாம் மக்களிடம் சொல்வது இயற்கைக்கு மாறானது என்பது ஞானம் பெற்றவரின் பார்வை."

அவ்வாறு போதனை செய்பவர்களைப் பார்த்தால் அதையெல்லாம் அவர்கள் மற்றவர்களுக்குத்தான் கூறியிருப்பார்கள். தங்களுக்கு செல்வம் வருவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருப்பார்கள்.

இதையெல்லாம் உணர்ந்து அவரவர் தத்தம் நலனைப் பார்ப்பதே சரியாக இருக்கும்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் என்னுடைய இப்பதிவில் இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பத்மா அரவிந்த் அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://reallogic.org/thenthuli/?p=172
ஆங்கில மூலத்தை விட உங்கள் மொழிபெயர்ப்பு அருமை. முதலாவதில் பெண் மட்டும் பாதிக்கப்படுவ்தாகக் காண்பிக்க, நீங்கள் பேலன்ஸ்டாக எழுதியிருக்கிறீர்கள்.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடையத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தெக்கிக்காட்டான் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்க்காகக் காத்திருக்கிறது. பார்க்க; http://thekkikattan.blogspot.com/2006/05/blog-post_14.html

விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தபா என்றே பலரும் பேசுகின்றனர்.

உங்கள் வலைப்பூவில் அனானி ஆப்ஷன் இருப்பதை கூட சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் அதர் ஆப்ஷன் இருக்கிறதே? அது மிகவும் அபாயகரமானது. போலி மனிதர் அதை உபயோகித்துத்தான் மாயவரத்தான் பெயரில் பின்னூட்டமிட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்போது எலிக்குட்டி வைத்துப் பார்த்தாலும் சரியான ப்ரொஃபைல் எண் வருமாறு செய்யலாம். நீங்கள் அழித்த போலியின் பதிவில் மாயவரத்தான் அவர்கள் வலைப்பூவில் உபயோகிக்கும் இமேஜ் வந்ததா? அப்படி வந்திருந்தால் எலிக்குட்டியின் சோதனையில் வேறு எண் தெரிந்திருக்கும். இது சம்பந்தமாக நான் மாயவரத்தான் அவர்கள் சம்பந்தப்பட்டப் பதிவில் இட்டப் பின்னூட்டத்தின் நகல் இதோ. பார்க்க: http://mayavarathaan.blogspot.com/2006/05/325.html

"அதாவது (ஒரிஜினல்) டோண்டு சார் பாணியில் சொல்வதானால் என்னுடைய பெயரில் வந்திருக்கும் பின்னூட்டத்தில் என்னுடைய பெயரின் மேல் எலிக்குட்டியையோ புலிக்குட்டியையோ வைத்தீர்களானால் தெரியும் எண் இது தான்."

நீங்கள் என்னிடமிருந்து முழுக்கக் கற்றுக் கொள்ளவில்லை மாயவரத்தான் அவர்களே. தெக்கிக்காட்டான் பதிவில் அதர் ஆப்ஷனிருக்கிறது. ஆகவே உங்கள் ப்ரொஃபைல் எண்ணை எலிக்குட்டியிலும் வரவழைத்துக் கொள்ளலாம். அதற்குத்தான் என்னுடைய போட்டோவையும் போட்டேன், மேலும் என் பின்னூட்டங்களின் நகல்களை என் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இட்டேன்.

மூன்று சோதனைகளும் சேர்ந்து வெற்றி பெற்றால்தான் அது என்னுடைய பின்னூட்டம் என்பதை திரும்பத் திரும்பச் சொன்னேன். இப்போதும் கூறுவேன்.

இப்பின்னூட்டத்தின் நகலை தெக்கிக்காட்டானின் சம்பந்தப்பட்ட பதிவிலும் இடுவேன். பார்க்க: http://thekkikattan.blogspot.com/2006/05/blog-post_14.html

உங்கள் வலைப்பூவில் அதர் ஆப்ஷன் இல்லை, ஆகவே உண்மை டோண்டு என்பதைப் பார்க்க என் பதிவாளர் எண் மற்றும் போட்டோ சோதனைகள் ஒரு சேர வெற்றி பெற்றால் போதும்."

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட இதன் நகலை என் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பிரதீமா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://polappu.blogspot.com/2006/05/blog-post_114783068693413879.html

நாலரை ஆண்டுகள் பாஜக அரசில் பங்கு வகித்து விட்டு, மாறன் உயிருடன் இருக்கும் வரை காத்திருந்து, அவர் இல்லை என்றானவுடன், இவ்வளவு ஆண்டுகள் எதிரிகள் முகாமில் உளவு பார்த்ததாகக் கூறி காங்கிரஸுடன் சேர்ந்த எட்டப்பத்தனத்தை விடவா வைகோ பெரிய தவறு செய்து விட்டார்?

யார் எல்லாம் துரோகத்தைப் பற்றிப் பேசுவது என்ற வரைமுறையில்லாமல் போயிற்று. எல்லாம் நேரம்தேன்.

இப்பின்னூட்டத்தை இட்டது உண்மையான டோண்டு ராகவன் என்பதைக் காட்ட அதன் நகல் என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

இதில் கமலின் திருமண எதிர்ப்பை நக்கலடித்தது எதனால்.
திருமணம் ஆணாதிக்கத்தின் முறையில் தானே இன்று வரை நடக்கிறது.
கமல் லூப் போட்டு யாரை வேண்டுமானால் செய்யலாம். கூட படுப்பவர்கள் விரும்பாமலா நடக்கிறது அது.
திருமணத்தில் எனக்கும் உடன்பாடில்லை
எல்லா ஆண்களும் தன் மனைவியை தவிர வேறெந்த பெண்களையும் புணர மாட்டேன் என்று சொல்லாட்டும் திருமணத்திற்கு நானும் உடன்படுகிறேன்.
பெண்களை அடிமையாக பார்க்கும் ஆணாதிக்கம் நீர்த்து விட்டால் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நாம் பார்க்கலாம்

வேறு யாரும் இல்லை நான் தான்

வால்பையன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது