எபிசோட் - 52 (17.03.2010) சுட்டி - 1 & சுட்டி -2
(இசைதமிழ் தளத்தில் இந்த எபிசோட் அப்லோட் ஆகாததால், முதல் சுட்டி வேலை செய்யாது).
அசோக்கும் வசுமதியும் கோவிலில் சந்திக்கின்றனர். அவன் தங்களது சஷ்டியப்த பூர்த்தி பத்திரிகையில் தனது பெயரை போட வேண்டாம் எனக் கூறியதை அவள் குறை கூறுகிறாள். தன் அன்னையை சமாதானப்படுத்தும் அவன் கோவில் குருக்களின் பெண்ணுக்கு அவள் கல்யாணத்துக்காக தங்க சங்கிலி போட வேண்டியிருக்கிறது என்றும், சஷ்டியப்தபூர்த்திக்காக தனக்கு தரப்போகும் உடை வகையறாக்களுக்கு பதிலாக அப்பெண்ணின் திருமணத்துக்காக 15000 ரூபாய் அவள் நன்கொடையாகத் தரவேண்டுமென அவன் கேட்டுக் கொள்ள அவளும் செக் தருகிறாள்.
சிங்காரத்தின் மகனுக்கு இதயத்தில் ஓட்டை என்றும், அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்ச ரூபாய் போல செலவு வரலாம் என்பதால் சிங்காரம் இடிந்து போய் அசோக்கிடம் ஆறுதல் தேடி வருகிறான். அவனிடம் அசோக் மரணத்தின் தவிர்க்கமுடியாத தன்மை பற்றிக் கூற, சோவின் நண்பர் “ஏன் சார் இவனுக்கு வேறுவேலையே கிடையாதா, எல்லோரிடமுன் மரணத்தை பற்றியே பேசுகிறானே” என அலுத்து கொள்ள அவரோ அசோக் பேசுவது அப்படியே கீதையில் உள்ளதை மேற்கோள் காட்டியே என சுட்டிக் காட்டுகிறார்.
அதற்காகவெல்லாம், ஓர் உயிர் மரண அபாயத்தில் இருக்கும்போது அதைக் காப்பாற்ற போராடாமல் இருக்கக் கூடாது எனவும், தன்னால் முடிந்த அளவுக்கு அப்பையனின் ஆப்பரேஷனுக்காக செலவு செய்யத் தேவையான பொருளை பலரிடமும் கேட்டு பெர்று தருவதாக அசோக் சிங்காரத்திடம் வாக்கு தருகிறான்.
சமையற்கார மாமியும் அவள் கணவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். வழக்கம்போல அந்த கணவன் தன் கையாலாகாத்தனத்தின் பிரகடனம் செய்கிறான். நாதன் தனக்கு வேலை கொடுத்ததியும் சொல்கிறான். இருப்பினும் அவனது குறைகளை கழுத்துமட்டும் சுமக்கிறான்.
வேம்பு சாஸ்திரியின் சம்பந்தி சிகாமணி முதலியாரின் கார் திருட்டு போயிருக்கிறது. அது இப்போது ஆந்திராவின் தாதா ஒருவரிடம் இருப்பதாகவும் அவனது பிரைவேட் டாக்சியாக செயல்படுகிறது என்பதை அறிந்து அவர் அதிர்ச்சியடைகிறார். ஆனால் அதை மீட்டுத் தரவியலாது என போலீஸ் அதிகாரி வெளிப்படையாகவே கூறி, அது தொலைந்து போனதற்கான சான்றிதழைத் தருவதாகக் கூறி அவரை சமாதானம் செய்ய முயல்கிறார். ஆனால் முதலியார் ஒத்து கொள்ளவில்லை.
சிங்காரத்தின் மகன் ஆபரேஷன் சம்பந்தமாக அசோக் தன் மேல் இரட்டைவட சங்கிலியை திருடியதாக பழி சுமத்தி லாக்கப்பில் தள்ளீய அப்பெண்ணின் கணவரிடம் ஏதேனும் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ள அதே பெண்மணி அதே சங்கிலியையே அசோக்கிடம் கொடுத்து அதை விற்று பணத்தை ஆபரேஷனுக்காக உபயோகித்து கொள்ள கூறுகிறாள். அசோக் அதற்கென்ன அவசியம், இந்த சங்கிலி அவளது பிரியமான உடைமை அல்லவா எனத் தயங்க, அவளோ இதை பிராயச்சித்தமாக வைத்து கொள்ளும்படி கூறுகிறாள்.
(தேடுவோம்)
எபிசோட் - 53 (18.03.2010) சுட்டி - 1 & சுட்டி -2
காசி யாத்திரைக்காக குருவிபோல சேர்த்த 15000 ரூபாயை வேம்புவின் சகோதரி சிங்காரத்தின் மகனது ஆப்பரேஷனுக்காக தர, வேம்பு சாஸ்திரி ஆடிப்போகிறார். அவரது மனைவி சுப்புலட்சுமியோ தனது நாத்தனாரின் இச்செயலை ஆதரிக்கவே இல்லை. இருப்பினும் வேம்புவின் சகோதரி திடமாகவே இருந்து அப்பணத்தை அசோக்கிடம் தருகிறாள்.
கங்கையில் பாபம் கரைப்பது பற்றி சோவின் ந்ண்பர் அவரிடம் கேட்க, அவரும் விளக்குகிறார். கங்கையில் ஸ்நானம் செய்வதை விட அதிகப்பலன் காவேரியில் ஸ்நானம் செய்வதால் வருகிறது என்றும், அதுவும் துலாக்காவேரி ஸ்நானம் மிகவும் விசேஷம் என்றும் கூறுகிறார்.
நாதனின் நடக்கவிருக்கும் சஷ்டியப்தபூர்த்தி பற்றி பாகவதரின் மனைவியும், அவளது இரண்டாம் பிள்ளை மணியும் விவாதிக்கின்றனர். அசோக் தான் பிரும்மச்சரியம் கடைபிடிப்பதால் அந்த சஷ்டியப்தபூர்த்தி பத்திரிகையில் தன் பெயரை போடக்கூடாது என கூறியது பற்றியும் பேச்சு வருகிறது.
பர்வதமும் அவள் வீட்டுக்கு அருகில் குடிவந்திருக்கும் சமையற்கார மாமியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். தனது கணவனுக்கு இருக்கும் உடல் உபாதைகள் பற்றி சமையற்கார மாமி கூற, பர்வதம் அவள் ஆயுர்வேத முறையை முயற்சிக்கலாம் என ஆலோசனை தருகிறாள்.
சோ தனது நண்பரிடம் ஆயுர்வேத வைத்தியம், தன்வந்திரி அவதாரம் ஆகியவை பற்றி கூறுகிறார்.
நீலகண்டன் வீட்டில் உமா இருக்கிறாள். அவளது மாமியாரின் போன் வருகிறது. அவள் தன் மாமியாரிடம் பேசிவிட்டு, ரமேஷுக்கு போன் செய்ய முயன்றால், ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. ஆபீசுக்கு போன் செய்தால் ரமேஷ் மாலை ஆறுமணிக்கே புறப்பட்டுவிட்டதாக செக்யூரிட்டி கூறுகிறான்
வீட்டில் ரமேஷ் தான் ஆஃபீசில் இருந்ததாக வழக்கமான பொய்யைக் கூற, அதற்குமேல் பொறுக்கமுடியாது அவள் அவன் பொய் சொல்வது தனக்குத் தெரியும் எனக்கூறுகிறாள். அவனோ தான் எப்போதுமே தனது உடல் ஆரோக்கியத்தை பேணுவதாகவும் ஆகவே தினமும் ஜிம்முக்கு போய்விட்டு இரவு லேட்டாக வருவதாகவும் விடாப்பிடியாக கூறுகிறான்.
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
𝐅𝐞𝐓𝐍𝐀: 𝐟𝐨𝐫𝐜𝐞 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬, 𝐧𝐨𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐦𝐚𝐣𝐨𝐫𝐢𝐭𝐲
𝐫𝐮𝐥𝐞
-
பேரவையின் வரலாறு என்பது, தொன்றுதொட்டு நிகழ்ந்து வருவது. ”இன்னார் தலைவராக
இருக்கும் போது, வீதிக்கே சென்று திரிசாவை வரவழைத்தார்கள்”, இப்படியெல்லாம்
சுவடுகள...
2 days ago

1 comment:
Hello Dondu sir,
how are you writing the entire script? are you part of Cho's team? or watching the serial and have more passion to write in this blog?
Cheers, Sendhil
Post a Comment