4/05/2010

நீயும் நானும் திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகுப்பு

Disclaimer: This is a politically incorrect post.

இப்பாடல் இது குறுந்தொகையில் வருவதாக அறிகிறேன்.

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"


"உன் தாய்க்கும் என் தாய்க்கும் என்ன தொடர்பு? என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவினர்கள்? நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் பார்த்து கொண்டது இல்லையே. பாலை மண்ணில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன" என்பது இப்பாடல்.

ஆனால், சங்ககாலத்து காதலுக்கு உதாரணமாக இதை உணர்ச்சிவசமாகப் பேசி விளக்கும் தமிழாசிரியர்கள், இலக்கியச் செம்மல்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் ஞாபகமாக தத்தம் மக்களுக்கு திருமணம் செய்துவைக்க முனையும்போது மட்டும் கீழ்க்கண்ட பாடல் கூறிய ரேஞ்சுக்கே செயல்பட விருபுவர்.

உனக்கும் எனக்கும் ஒரே ஊர் வாசுதேவநல்லூர்
நீயும் நானும் ஒரே மதம் திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகுப்பும் கூட
உன்றன் தந்தையும் என்றன் தந்தையும் சொந்தக்காரர்கள் மைத்துனன்மார்
எனவே செம்புலப் பெயல்நீர் போல அன்புடைய நெஞ்சம் கலந்தனவே.


மேலே குறிப்பிட்டுள்ள கவிஞர் மீரா (மீ.ராஜேந்திரன்)வின் புகழ் பெற்ற வரிகள் கேட்கத் தமாஷாக இருந்தாலும், அவற்றில் உள்ள யதார்த்தம் முகத்தில் அறைகிறது. அவரே அதை உணர்ந்துதான் மனம் நொந்து பாடியுள்ளார் என நினைக்கிறேன். ஆகவே மேலே குறிப்பிட்ட தமிழாசிரியர்கள், இலக்கியச் செம்மல்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரும் அதைச் செய்வதில் என்ன ஆச்சரியம்?

செய்யட்டும், அதில் ஆட்சேபமில்லை. ஆனால் மற்றவர்களுக்கு மட்டும் அதை அறிவுறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்பதைக் கேட்டால் மட்டும் ஆட்டோக்கள் அனுப்பப்படும்.

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல. அது ஆணின் குடும்பத்தையும் பெண்ணின் குடும்பத்தையும் வெளிப்படையாக/மறைமுகமாக இணைக்கும் சங்கிலிகளை உள்ளடக்கியது. ஆகவே இதில் போய் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என அக்கறையின்றி பேசாமல் பொறுப்புணர்ச்சியுடன் பேசுதல் நலம்.

நம்ம ஜெயமோகன் சாதி அமைப்பு பற்றி எழுதிய பதிவு வரிசையில் ஒரு இடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் சொன்னவற்றை இங்கு முதற்கண் விவாதத்துக்கு வைக்கிறேன்.

“சாதி என்ற அமைப்பு இந்திய சமூகத்தின் முக்கியமான ஒரு கூறு. அதன் வரலாற்றுப் பரிணாமம், சென்றகாலத்தில் அதன் சமூகப்பயன்பாடு, அதன் நிகழ்காலப்பணி எதைப்பற்றியும் எந்த ஆய்வும் இந்தியாவில் நடக்கவில்லை. இந்தியாவை நோக்கிய ஆங்கிலேயர் அதை இந்திய சமூகத்தைப் பீடித்திருக்கும் ஒரு நோய் என்று சொன்னார்கள். இந்திய படித்த வர்க்கம் அப்படியே ஏற்றுக்கொண்டு சொல்ல ஆரம்பித்தது. வெள்ளையனே சொல்லிவிட்டான் என்ற தாழ்வுமனப்பான்மையே காரணம்.

ஆனால் உண்மையில் இந்த நிராகரிப்பு என்பது நம் படித்தவர்கத்தின் நாக்குகளில் மட்டுமே இருந்தது. நெஞ்சில் நிகழவில்லை. இக்கணம் வரை அப்படித்தான். ஏன் என்றால் அவனுக்குள் சாதியைப்பற்றிய எந்த விவாதமும் நிகழவில்லை. அவ்வாறு விவாதம் நிகழ்ந்திருந்தால் சாதியின் சமூகப்பங்களிப்பு குறித்து அவன் சிந்தனை செய்திருப்பான். இப்போதும் சாதியைச் சுமக்க அவனுக்கு என்ன காரணங்கள், கட்டாயங்கள் உள்ளனவோ அந்தக் காரணங்கள் எல்லாமே விவாதத்துக்கு வந்திருக்கும். அவற்றை வேறு எவ்வகையில் தாண்டிச்செல்ல முடியும் என்று பார்த்திருப்பான். அந்த வழிமுறைகள் அவனுக்கு உதவியிருக்கும்”.

===========================================================================================

“இந்தக் கோணத்தில்தான் நாம் காந்தி சாதியைப் பற்றி என்ன நினைத்திருந்தார் என்று பார்க்க வேண்டும். காந்தி அக்காலத்தில் ஒரு இந்து சாதியைப்பற்றி இயல்பாக என்ன நம்பிக்கை கொண்டிருந்தாரோ அந்த நம்பிக்கையையே தானும் கொண்டிருந்தார். அவர் காலத்தில் ஐரோப்பியரை வழிமொழிந்து சாதிக்கு எதிராகப் பேசியவர்கள் அந்தரங்கத்தில் கொண்டிருந்த நம்பிக்கைதான் அது. காந்தியின் உண்மையுணர்ச்சியே அவரை அதை நேர்மையாக பதிவுசெய்ய வைத்தது.
காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று. அது சமூகத்தின் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. தந்தையரின் தொழிலை மகன் செய்யும்போது இயல்பாகவே அவனுக்கு அதில் திறமை உருவாகி வருகிறது. இந்திய சமூகம் உள்மோதல்களினால் அழியாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட அது பலநூற்றாண்டுகளாக உதவி வந்திருக்கிறது.
இந்திய சமூகம் மீது நெடுங்காலமாக நிகழ்ந்த பல அன்னியத் தாக்குதல்களை வெல்லவும் தாக்குபிடிக்கவும் அது உதவியிருக்கிறது. மக்கள் பிறப்பின் அடிப்படையில் ஒரு தொழில்குழுவாகத் திரண்டு ,ஒரே உடலாக தங்களுக்கு வாழ்க்கை விடுத்த கடுமையான சவால்களை சமாளிக்க சாதியமைப்பு வழியமைக்கிறது. ஆகவே மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரத்தின் உதவி இல்லாமலேயே மக்கள் தங்களை சிறிய சுயநிர்வாக அமைப்புகளாக தொகுத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக்கொள்ள சாதி உதவியிருக்கிறது. சாதியாசாரங்களும் சாதிவிதிகளும் அவ்வாறு உருவாகி வந்தவையே”.


நான் கூறவருவது இதுதான். இப்போது கூட கல்யாணங்களை பெற்றோர்கள் நிச்சயிப்பது என வந்தால் சொந்த சாதியில்தான் பென்ணோ பிள்ளையோ தேடுவார்கள். ஏனெனில் கைவசம் இருக்கும் சௌகரியமான ஏற்பாட்டை மீறிக்கொண்டு ஏன் தூரத்தில் இருக்கும் ஏதோ கற்பனை சமத்துவம் எல்லாம் பார்த்து, பிறரிடம் நல்ல பெயர்/சான்றிதழை கோரி (அந்த சான்றிதழை வைத்துக் கொண்டு நாக்கைக்கூட வழிக்க முடியாது) செயல்பட வேண்டும் என நினைக்க வேண்டும் என்பthee பெரும்பாலானோரது எண்ணம். அதில் தவறில்லை எனச் சொல்வதே இப்பதிவு.

எழுத்தாளர் எஸ்.வி.வி. அவர்கள் சென்ற நூற்றாண்டு முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் பிரசித்தி பெற்றவர். அவரது நாவல்களைப் பார்த்தால் காதலனும் காதலியும் எது எப்படியானாலும் ஒரே சாதியைத்தான் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்களை வைத்துத்தான் கவிஞர் மீரா அவர்கள் நொந்து போய் அக்கவிதையை எழுதியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் ஏன் மனம் நோக வேண்டும் எனத் தெரியவில்லை. அவரவர் நலனை அவரவர்தானே பார்த்துக் கொண்டு போக வேண்டும்? அதை செய்பவர்களை பார்த்து இவர் ஏன் மனம் நோக வேண்டும்?

சொந்த சாதியில் திருமணமோ, கலப்புத் திருமணமோ கேஸ் பை கேஸ் ஆக பார்க்க வேண்டியனவே. இதில் மூன்றாம் மனிதர்களுக்கு என்ன வேலை? எல்லா ஆப்ஷன்களும் இருக்கட்டும்.

திருமணத்துக்கு தயாராகும் இளைஞர்களும் பெண்களும் இதையும் சிந்தித்துப் பார்த்து தத்தம் நலனுக்கு ஏற்ப செயல்படுவதே புத்திசாலித்தனம். அப்படியும் கலப்பு மணம் செய்தால் அது உங்களுடைய சொந்த முடிவாகத்தான் இருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

84 comments:

வால்பையன் said...

சாதியின் சமூக பங்களிப்பு குறித்து சிந்தித்தால் பார்பனீயத்தின் உயர்சாதி திமிரும், உரிமைகள் பரிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களின் அழுகுரலும் தான் கேட்குது! அது திரும்ப கேட்கனும்னு ஜெயமோகனுக்கு ஆசை போல!

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் நாடார் சாதியினர் மேலாடை அணியக்கூடாதென்ற சட்டம் திரும்ப வந்தால் ஜெயமோகன் மகிழ்ச்சியுறுவார் என்பது மட்டும் தெரிகிறது!

**************

உறவினர்களுக்குள் திருமணம் செய்வதற்கும், ஒரே சாதியில் திருமணம் செய்வதற்கும் என்ன சம்பந்தம் என விளக்கி சொன்னால் பரவாயில்லை! ஒருவேளை பதிவிலேயே எழுதி எனக்கு புரியாமலும் இருக்கலாம், விளக்கவும்!

எல் கே said...

முகத்தில் அறையும் நிதர்சனம்

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
உறவினராக இருந்தால்தானே ஒரே சாதி என்பதில் நிச்சயமாக இருக்க முடியும்? சாதி, உறவு விட்டுப் போகக்கூடாது, சொத்து வெளியே போகக்கூடாது என்பதுதானே பல திருமணங்களில் அடிப்படை பிரச்சினையே?

என்னமோ மற்ற சாதியினரிடம் திமிர் இல்லாதது போல பார்ப்பனீயம் என ஒரு சாதியை மட்டும் குறிவைப்பது ஒரு வன்ம மனப்பான்மையையே காட்டுகிறது. அப்படியெல்லாம் இல்லை என நீங்கள் எவ்வளவுதான் டிஸ்கி வைத்தாலும் அது என்னால் ஏற்கக்கூடியது அல்ல.

உயர்சாதீய மனப்பான்மை என்ற பொதுச் சொல் இருக்கையில் மொட்டையாக பார்ப்பனீயம் எனக்கூறுவது தத்தம் சாதியினரின் திமிர்களை மறைக்க உபயோகிக்கும் அலிபையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//சாதி, உறவு விட்டுப் போகக்கூடாது, சொத்து வெளியே போகக்கூடாது என்பதுதானே பல திருமணங்களில் அடிப்படை பிரச்சினையே?//


உறவு என்பதற்க்கு சில அடிபடை காரணங்கள் உள்ளன, உதாரணமாக வயதான காலத்தில் நம்மை பார்த்து கொள்வார்கள் என்பது பெற்றோர்கலீன் நினைப்பு, அதே போல் சொத்தும், நம் சொத்தை அடுத்தவன் அனுபவிப்பதா என்ற சுயநலம் மிக்க சிந்தனை அவ்வாறு செய்ய தூண்டுகிறது,

என் கேள்வி, இதில் சாதி எங்கே வந்தது, இங்கே சாதி என்ற சொல்லே தேவையில்லையே!


//என்னமோ மற்ற சாதியினரிடம் திமிர் இல்லாதது போல பார்ப்பனீயம் என ஒரு சாதியை மட்டும் குறிவைப்பது ஒரு வன்ம மனப்பான்மையையே காட்டுகிறது.//

சாதி அடுக்குகளை உருவாக்கியது யார்! உயர்சாதியம் பார்பனியத்தை தானே பின்பற்றுகிறது, இப்பொழுதும் சாதி வேண்டும், வர்ணாசிரமம் வேண்டும் என்று கதறி கொண்டிருப்பது யார்!?


//உயர்சாதீய மனப்பான்மை என்ற பொதுச் சொல் இருக்கையில் மொட்டையாக பார்ப்பனீயம் எனக்கூறுவது தத்தம் சாதியினரின் திமிர்களை மறைக்க உபயோகிக்கும் அலிபையே.//

உயர்சாதீய மனப்பான்மை என்பது டைப் அடிக்க நீளமாக இருப்பதால் பார்பனீயம் என்று சுருக்கமாக டைப் அடிக்கிறேன், எவனொருவன் சாதி திமிரில் இருக்கிறானே அவனுக்கு காயடிக்க வேண்டும் பலமுறை உங்கள் ப்ளாக்கிலேயே கமெண்டியிருக்கிறேன்!

****

சாதியால் ஏற்பட்ட நன்மைகள் என நீங்களோ அல்லது ஜெயமோகனோ பதிவிட்டால் அந்த இழவு நாட்டுக்கு என்ன செய்தது என நானும் தெரிந்து கொள்வேன்!

dondu(#11168674346665545885) said...

//உயர்சாதீய மனப்பான்மை என்பது டைப் அடிக்க நீளமாக இருப்பதால் பார்பனீயம் என்று சுருக்கமாக டைப் அடிக்கிறேன், எவனொருவன் சாதி திமிரில் இருக்கிறானே அவனுக்கு காயடிக்க வேண்டும் பலமுறை உங்கள் ப்ளாக்கிலேயே கமெண்டியிருக்கிறேன்!//
இவ்வளவு தரம் பின்னூட்டமிடவெல்லாம் சோம்பேறித்தனம் இல்லை, ஆனால் சரியான வார்த்தையான உயர்சாதீய மனப்பான்மை என்பதை அடிக்க மட்டும் எங்கிருந்தோ சோம்பேறித்தனம் வந்து விடுகிறது. வேண்டுமென்றால் சாதித்திமிர் என்றே டைப்புங்களேன்?

வேண்டுமென்றே பார்ப்பனர்களை மட்டம் தட்டுவதற்காகவே பார்ப்பனீயம் என்ற இந்த அலிபையை உபயோகிப்பவர் எல்லோரையும் காயடிக்கவேண்டும் என்று நானும் என் தரப்பிலிருந்து சொல்கிறேன். அவரவர் சாதியினரை அவரவர் பார்த்து கொள்ளட்டும். ஆரம்பித்தது யார் என்று எவனோ முட்டாப்பயல் வெள்ளைக்காரன் தனது கிறித்துவ மதத்தைப் பரப்ப சொன்னதை சிரமேற்கொண்டு செயல்படும் பகுத்தறிவற்ற பார்ப்பன வெறுப்பாளர்களுடன் எனக்கு எந்தச் சமாதானமும் இருக்க முடியாது.

இது ஒரு யுத்தப் பிரகடனமாகவே வைத்துக் கொள்ளுங்கள்.

தேவநாதன் தனிப்பட்ட பார்ப்பனன் தவறு செய்யும்போது அவனை உதைப்பதில் நானும் சேர்ந்து கொள்வேன்.

நான் என்ன தலித்துகளை எரித்த கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு சப்பைக்கட்டு கட்டிய ஈவேராமசாமி நாயக்கர் என்னும் பலீஜா நாயுடு போன்று செயல்படுபவனா?

அதிருக்கட்டும். இது கலப்புத் திருமணம் பற்றிய பதிவு. அது பற்றிப் பேசுங்கள். அதனுடைய அனுகூலங்கள், பிரதிகூலங்கள் ஆகியவை பற்றிப் பேசவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இதெல்லாம் இருக்கட்டும். இலக்கியத்தில் குறுந்தொகையின் இப்பாட்டோடு பாப்லா நெருடோடு கவிதையோடு ஒப்பிட்டு ஒரு அதி முக்கிய ஆய்வு கட்டுரை தமிழில் வந்தள்ளது. படியுங்கள்...தேடி கண்டு படித்துவிட்டு பேசவாருங்கள் (உழைப்பு முக்கியம்) சங்கத்தமிழையும், நவீனக்கவிதை, மற்றும் பிறகான நவீன கவிதைகளும் பற்றி பிறகு விரிவாக பேசலாம்..

வால்பையன் said...

//ஆரம்பித்தது யார் என்று எவனோ முட்டாப்பயல் வெள்ளைக்காரன் தனது கிறித்துவ மதத்தைப் பரப்ப சொன்னதை சிரமேற்கொண்டு செயல்படும் பகுத்தறிவற்ற பார்ப்பன வெறுப்பாளர்களுடன் எனக்கு எந்தச் சமாதானமும் இருக்க முடியாது.//

உண்மையை சொன்னா அவன் முட்டாபயலா தான் தெரிவான்!


//நான் என்ன தலித்துகளை எரித்த கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு சப்பைக்கட்டு கட்டிய ஈவேராமசாமி நாயக்கர் என்னும் பலீஜா நாயுடு போன்று செயல்படுபவனா?//

பெரியாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதையும் உங்கள் பதிவிலேயே கமெண்டியிருக்கிறேன்! பெரியார் என்ன கடவுளா, எதை செய்தாலும் சரியா செய்வதற்கு!

//அதிருக்கட்டும். இது கலப்புத் திருமணம் பற்றிய பதிவு. அது பற்றிப் பேசுங்கள். அதனுடைய அனுகூலங்கள், பிரதிகூலங்கள் ஆகியவை பற்றிப் பேசவும்.//


கலப்பு திருமணங்கள் தான் வாரிசுகளுக்கு ஆரோக்கியமானது என்ற ஒரு கருத்து போதாதா, அதை ஆதரிக்க, சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்! சாதியை கட்டிகிட்டு அழுதா என்ன கிடைக்கும்!


பார்பனீயதை எதிர்ப்பதற்கு பல காரணங்கள் முன் வைக்கப்படிருக்கின்றன, அதற்கு விளக்கம் அளிக்காமல் இன்னும் உயர்சாதியத்தை பற்றியும், பெரியார் பற்றியும் பேசியே தட்டி கழிக்கிறீர்கள், நான் சொல்ல என்ன இருக்கு!

dondu(#11168674346665545885) said...

@அனானி

தமிழ்க்கவிதையை அகம்/புறம் கோட்பாட்டைக் கொண்டு ஆராய்ந்தோம். இனி மேற்கத்திய கலாச்சாரத்தைச் சார்ந்த ஸ்பானிஷ் மொழியின் முக்கியக் கவிஞரான பாப்லோ நெருடாவின் நிர்வாணம் என்ற பெயர்பெற்ற கவிதையைக் காண்போம்.

இந்தக் கதிர்தான் ஓடும் சூரியன்
இந்த வட்டம்தான் கிழக்கு
காற்றில் ஊடுருவக்கூடிய& தூது
அதனுள்ளேயே சிக்கிக் கொள்கிறது
நடுப்பகலானது, உச்சியிலும் நேராகக் குத்திட்டும்.
கொடிக்கம்பம் வானத்தைத் தாங்குகையில்
தெளிவான அம்புகள் பறக்கின்றன
மௌனத்திலிருந்து மௌனம் வரையில்
மெல்லிய பறவைகள் காற்றில் மிதந்தபடி,
விதியின் கோடுகள்
தன்பால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

‘யாயும் ஞாயும்’ என்ற குறுந்தொகைப் பாடலில் பல எதிர்வுகளைக்கண்டோம். நெருடாவின் கவிதையிலும் அகம்/புறம் சார்ந்த எதிர்வுகள் உள்ளன. அவை பல்வேறு வகையாக வெளிப்படுகின்றன. ‘மௌனத்திலிருந்து மௌனம் வரை’ என்பதில் இருவேறு எதிர்வுகளாக மௌனங்கள் வருகின்றன. கவிதையின் கிழக்கு என்ற திசை வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. கிழக்கை ஆண்-மௌனம் எனலாம்.( வெளிப்படையாகச் சொல்லப்படாதது மேற்கு). ஒரு மௌனம் ஆணாக, மற்றொன்று மேற்கென்ற பெண் மௌனமாகிறது. நடுப்பகல் என வரும் குறியீடு, கிழக்கையும் (ஆண்) மேற்கையும் (பெண்) இணைக்கின்ற புள்ளியாகிறது. அந்தப் புள்ளியே கூடல். சொல்லப்படாத அகத்திணைக் குறியீடு ஆண் X பெண்ணின் இணைவு. அதைப் புறரீதியான மொழிக்குறிகளின் உதவியுடன் நெருடா தன் கவிதையில் சாத்தியப்படுத்துகிறார்.

செம்புலப்பெயல்நீராரின் பாடலிலும் சரி, எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்து நெருடா இயற்றும் கவிதையிலும் சரி, எதிர்வுகளின் இணைவுகள் உள்ளன. அவை பின்வருமாறு அமைகின்றன.

குறுந்தொகைப் பாடல்

மழை ----------------------
--------------------------- 1
-------------- கூடல்(செம்புலப் பெயல்நீர்)
--------------------------- 1
செம்மண்பூமி----------------

நெருடாவின் கவிதை

--------------- கூடல்(நடுப்பகல்)
----------------------- 1
--------------------------------------------------
1------------------------------------------------1
கிழக்கு-----------------------------------------மேற்கு

குறுந்தொகைப் பாடல் அகத்திணைக்குரிய வரையறையில் இயங்குகிறது. அதனால் நிகழும் கூடல் உடல்களின் கூடலாகிறது. நெருடாவின் கவிதை உடலுக்குப் பதிலியாகக் கவிஞனின் நுட்பமான பார்வையை முன்னிறுத்துகிறது. அதன் வழியாக, கூடல் சொல்லப்படுகிறது. ஆக, பழந்தமிழ்ப்பாடலும் நெருடாவின் பாடலும் தத்தம் போக்கில் பிரபஞ்ச ஒருமையை உள்ளீடாக மொழிகின்றன.

செமமண்ணும் மழைநீரும் இணைவதை ஆண்/பெண்ணின் பௌதீகக் கூடல் என்றால், நெருடாவின் நிர்வாணம் கவிதையில் ‘நடுப்பகல்’ என்ற கிழக்கு/மேற்கின் கூடல் அ-பௌதீகத் தன்மையுடையது. இயற்கைவெளியின் எதிர்வுகள் இணைவதில் நடுப்பகல் பிரபஞ்ச சங்கமப் புள்ளியாகிறது. இந்தக்கவிதையில் மனிதன் நேரடியாகத் தடம்பதிக்கவில்லை. எனினும் ‘கொடிமரம்’ என்ற குறியீட்டை வைத்து மனிதர்களின் கலாச்சாரத்தைச் சொல்லியுள்ளார் நெருடா. இதன் மூலம் மறைமுகமாக மனித இருப்பு உணர்த்தப்படுகிறது.

குறுந்தொகைப் பாடலில் உள்ள கூடல், அகத்திணைக்குரியது. இதிலிருந்து நெருடா கவிதையின் கூடல் மாறுபடுகிறது. இந்த மாறுபாட்டிற்குக் காரணம் நெருடா என்ற கவிஞனின் காலமே. தமிழ்க்கவிதையில் சொல்லப்பட்ட கூடல், நெருடாவால் பிரபஞ்ச வெளிக்கு விரிக்கப்படுகிறது.

தமிழ்ப்பாடலில் உடல்சார்ந்த கூடல், இயற்கைக்கூறுகளின் கலப்புடன் நிகழ்கிறது. நெருடாவின் கவிதையில் பிரபஞ்சம் சார்ந்த கலாச்சாரம், கூடலாக விகசிக்கிறது. இவ்வாறு தமிழ் மரபான அகத்திணையின் பாங்கை வளர்த்தெடுக்கும் முகமாக நெருடாவின் கவிதை அமைகிறது.
ஓக்கேயா அனானி?

நன்றி: http://nagarjunan.blogspot.com/2009/07/1_17.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

விளக்கம் படித்து டரியலானேன்!

பத்துபாட்டுக்கு பதிலா ஒரு குத்து பாட்டு கேட்டுட்டு போயிரலாம்!

dondu(#11168674346665545885) said...

//பார்பனீயதை எதிர்ப்பதற்கு பல காரணங்கள் முன் வைக்கப்படிருக்கின்றன//
உயர்சாதீயம் அல்லது சாதித்திமிர் என்று சரியான வார்த்தைகளை நீங்கள் பிரயோகிக்காதவரை உங்களுடனோ, அல்லது இதே மாதிரி பார்ப்பனீயம் என தவறாக பிரயோகம் செய்பவருடனோ நான் விவாதிப்பதாக இல்லை.

பார்ப்பனீயம் என்னும் தில்லாலங்கடி என்னும் உங்கள் பதிவில் இது சம்பந்தமாக முதலில் சொன்னதை தவிர வேறு பின்னூட்டம் போடவில்லை என்பதை நீங்கள் இப்போதும் அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம். அது 300 பின்னூட்டங்களுக்கு மேல் உள்ள பதிவு. ஹீப்ரூ மொழி பற்றி உங்கள் தகவல் பிழையை மட்டும் சுட்டிக் காட்டியிருப்பேன்.

ஆகவே இங்கும் எனது நிலை அதுவேதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
அனானி கேட்டார், கூகளண்ணனிடம் கேட்டேன். கிடைத்தது. நீங்கள் டரியலானீர்கள். :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் கேட்டது:

/பார்பனீயதை எதிர்ப்பதற்கு பல காரணங்கள் முன் வைக்கப் பட்டிருக்கின்றன. அதற்கு விளக்கம் அளிக்காமல் இன்னும் உயர் சாதியத்தை பற்றியும்,பெரியார் பற்றியும் பேசியே தட்டி கழிக்கிறீர்கள், நான் சொல்ல என்ன இருக்கு!/

விளக்கம் சொல்லியே ஒழிஞ்சுபோயிடணும்னா...?

Anonymous said...

thats good. But what did you derive out of this analysis? ..

dondu(#11168674346665545885) said...

உடல்நலமுள்ள குழந்தைகள் பிறக்க சொந்த சாதியில் உறவில்லாதவரை மணக்கும் வழியும் உண்டே.

உணவு பழக்க வழக்கங்கள், சாமி கும்பிடும் முறை, சடங்குகள் செய்யும் முறை ஆகியவை மேட்ச் ஆவது ஒரே சாதித் திருமணத்தில்தான்.

முதல் உடல் மயக்கத்தில் இதெல்லாம் வேண்டாம் என்றாலும் சம்பந்தப்பட்ட மணமக்கள் பிறகு தத்தம் சகோதர சகோதரிகளுக்கு நடக்கும் சொந்த சாதித் திருமணங்களின் கோலாகலத்தை நோக்கி, தமது திருமணம் எவ்வாறு யாருமின்றி அனாதையாக நடந்தது என்பதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து மனம் புழுங்குவதும் பல முறை நடந்துள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ashok D said...

//பத்துபாட்டுக்கு பதிலா ஒரு குத்து பாட்டு கேட்டுட்டு போயிரலாம்!//
பெயர் பொருத்தம் சரியாக தங்களுக்கு அமைந்துள்ளது... வாய்விட்டு சிரித்துவிட்டேன்... :)))

வால்பையன் said...

ஒரு சாதிகாரன் அவனை விட கீழிருக்கும் சாதிகாரனிடம் தன் மேட்டிமைதனத்தை காட்டுகிறான்!

அதாவது ஒரு எம்.பி.சி ஒரு எஸ்.சியிடம், அவன் பி.சியிடம் உயர்சாதிய திமிர் காட்டினால் நையபுடைக்கபடுவான், அதே போல் ஒரு பி.சியும், அவன் சாதி திமிரை அவனுக்கு கீழிருப்பவனிடம் காட்டுகிறான்! ஆனால் பார்பனியத்திற்கு கீழ் தான் எல்லா சாதியும் என்று சொல்பவர்களிடம் என்ன பெயர் வைத்து பேசுவது!

சாதி அடுக்குகளை உருவாக்கியதால் வேர் பார்பனீயம் என்கிறேன் நான், அதை வெட்டி விட்டால் அதாவது அந்த எண்ணத்தை(உயர்ந்த சாதி எண்ணம்) அகற்றி விட்டால் ஆட்டோமேடிக்காக மற்ற சாதி என சொல்லி கொள்பவர்களும் அடங்குவார்கள் என்கிறேன்!

நீங்கள் சாதியை சொல்லி கொள்வதால் நான் உயர்சாதி என்ற நன்மை உங்களுக்கு இருக்கிறது, எல்லோரும் சாதியை ஆதரிக்க சொல்றிங்களே அதில் என்ன நன்மை இருக்கிறது!

சரி பார்பனியம் பற்றி பேச வேண்டாம், ஏன் அனைவரும் சாதி சொல்லிகனும்னு சொல்றிங்க, அப்பன் தொழிலை பார்த்தால் தான் சரின்னு எப்படி சொல்றிங்க, இருக்குற பள்ளிகூடத்தை எல்லாம் மூடிட்டு அவனவன் அப்பன் தொழிலை பாருங்கடா சொல்லிரலாமா!?
நீங்க மட்டும்(அய்யமார்கள்) மணி ஆட்டிகிட்டு கோவிலில் அடுத்தவனை ஏமாற்றியே பிழைத்து கொள்ளலாம்!

வால்பையன் said...

//உடல்நலமுள்ள குழந்தைகள் பிறக்க சொந்த சாதியில் உறவில்லாதவரை மணக்கும் வழியும் உண்டே. //


ஹாஹாஹா,
அங்கும் ஏன் சொந்த சாதி என்ற பெயர், அவன் உறவினன் இல்லை என்ற போதே அந்நியன் ஆகிறான், பிறகு எந்த சாதியாய் இருந்தால் என்ன!? அதன் சமூக கட்டாயத்தை விளக்கமாக சொல்லவும்


//உணவு பழக்க வழக்கங்கள், சாமி கும்பிடும் முறை, சடங்குகள் செய்யும் முறை ஆகியவை மேட்ச் ஆவது ஒரே சாதித் திருமணத்தில்தான்.//


உயர் வாழத்தானே உணவு, அதில் என்ன பழக்கமுறை வேண்டிகிடக்கு, சாமி கும்பிடுதல், சடங்குகள் என எனக்கு போய் உதாரணம் சொல்றிங்களே, இப்படி சொல்லி கொடுத்து தானே பல நூற்றாண்டுகளாக உங்களுக்கு கீழயே வச்சிருக்கிங்க


//முதல் உடல் மயக்கத்தில் இதெல்லாம் வேண்டாம் என்றாலும் சம்பந்தப்பட்ட மணமக்கள் பிறகு தத்தம் சகோதர சகோதரிகளுக்கு நடக்கும் சொந்த சாதித் திருமணங்களின் கோலாகலத்தை நோக்கி, தமது திருமணம் எவ்வாறு யாருமின்றி அனாதையாக நடந்தது என்பதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து மனம் புழுங்குவதும் பல முறை நடந்துள்ளது.//


பெற்றோரே சாதி மறுப்பு திருமணத்தை அதாவது ஒட்டு மொத்த சமூகமும் ஆதரித்தால் சகோதரர் ஏன் அநாதையாக திருமணம் செய்ய வேண்டும்! எப்படி பார்த்தாலும் உறவினன் தான் கல்யாணத்துக்கு வருவானே தவிர இது கவுண்டர் வீட்டு கல்யாணம், தேவர் வீட்டு கல்ஆனம் என்று சாதிகாரன் வரமாட்டான், பின் சாதி மறுப்பு திருமணத்திற்கு என்ன தடை!

dondu(#11168674346665545885) said...

//ஆனால் பார்பனியத்திற்கு கீழ் தான் எல்லா சாதியும் என்று சொல்பவர்களிடம் என்ன பெயர் வைத்து பேசுவது!//
அப்படி ஏதாவது பார்ப்பனர் சொன்னால் பார்ப்பனீயம் எனச் சொல்வேன் என்றால், கவுனடியம், பிள்ளையியம், முதலாரியம், செட்டியியம் என்றெல்லாம் கூட கூற வேண்டியிருக்கும் தயாரா?

ஆகவேதான் சாதி திமிர் என்ற பொது வார்த்தையை உபயோகிக்க சொல்கிறேன். பார்ப்பனர்கள்தான் அதன் வேர் என்று சொல்வதையும் ஒத்துக் கொள்ள முடியாது. அக்காலத்தில் அதிகாரம் சத்திரியர்களிடமும், பொருள் வைசியர்களிடமும் இருந்தது. வேலை பிரித்தல் அவரவர் என்ணப்போக்கின் பலத்தில் நடந்தது. பார்ப்பனர்கள் மட்டுமே காரணம் அல்ல. பல நேரங்களில் இந்த அடுக்குகள் தானே ஏற்பட்டுள்ளன.

அதையெல்லாம் பார்க்காது மொட்டையாக பார்ப்பனீயம் என்று சொல்பவர்களுடன் எனக்கு என்ன விவாதம் இருக்கவியலும்?

ஒன்று செய்யுங்கள். ஜெயமோகன் பதிவுக்கு போய் கேட்டு பாருங்கள். எனக்கு இனிமேல் இது சம்பந்தமாக உங்களுடம் விவாதம் இல்லை. உங்கள் டெர்மினாலஜி சரியாக இல்லாது இருக்கும் வரை அதுதான் எனது நிலைப்பாடு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

@ கிருஷ்ணமூர்த்தி சார்!

விளக்கம் சொல்வதால் ஏன் ஒய்ந்து போகிறோம், நமது சிந்தனைக்கு வேலை தானே அது! மேலும் சரியான விளக்கம் அளித்தால் யார் அதன்பின் கேட்கபோகிறார்கள்!

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
வீட்டில் எல்லோரும் நலமா? என் பேத்தி எப்படியிருக்கிறாள். கமாடிட்டி மார்க்கெட் நிலை என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//கவுனடியம், பிள்ளையியம், முதலாரியம், செட்டியியம் என்றெல்லாம் கூட கூற வேண்டியிருக்கும் தயாரா? //

அதை தான் மொத்த பெயராக பார்பனீயம் என்கிறோமே!

அதாவது சாதி அடுக்குகளை உருவாக்கியது பார்பனீயம், அதை கடைப்படிப்பவர்களுக்கும் அதே பெயர் தான்! அய்யரியம், அய்யாங்காரியம் என தனி தனி பெயரிட்டால் கெஜட் தாங்காது!


//பார்ப்பனர்கள்தான் அதன் வேர் என்று சொல்வதையும் ஒத்துக் கொள்ள முடியாது. அக்காலத்தில் அதிகாரம் சத்திரியர்களிடமும், பொருள் வைசியர்களிடமும் இருந்தது.//

தலைமுறை தலைமுறையாக அரசன் வழி வம்சம் அரசனாக தான் இருந்தது, போர் என்றால் வீட்டுக்கு ஒருவன் வர வேண்டும் என்றிருந்த போது அங்கே மளிகைகடை வைத்திருந்தவன், பானை செய்தவன் என சாதி அடுக்குகள் இருந்ததற்கு ஆதாரங்கள் இல்லை!, இந்து மதத்தையும், வேதத்தையும் உள்நுழைத்த ஆரியர்களே, நாங்கள் நெத்தியிலிருந்து பிறந்தோம், நீ மார்பிலிருந்து(அரசர்கள்,நிலபிரபுக்கள்), நீ வயிற்றிலிருந்து(மந்திரி, வசதியான செல்வந்தர்கள்), நீ காலிலிருந்து(அடிமட்ட பொதுமக்கள்) என பிரித்து அரசியல் செய்தார்கள், இன்னும் அது அங்கே தான் இருந்தது, ஆரியர்கள் கொண்டுவரவில்லை என்னும் ஒன்றை தான் நீங்கள் சொல்லவில்லை, அதையும் சொல்லி வரலாற்றை புரட்டி போடுங்கள்


//ஒன்று செய்யுங்கள். ஜெயமோகன் பதிவுக்கு போய் கேட்டு பாருங்கள். //


நீங்களாவது டைரக்ட் அய்யங்கார், ஜெயமோகனோ வெறும் சொம்புதூக்கி, அவரிடம் கேட்டால் எதையாவது சொதப்புவார்! அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன்!, விவாதம் முற்று பெற்றதாக நீங்கள் நினைத்தால் பதில் சொல்ல வேண்டாம்! ஆனா பின்னூட்டத்தை மட்டும் ரீலீஸ் பண்ணிருங்க, வேறு யாராவது எனக்கு விளக்கலாம்!

வால்பையன் said...

வீட்டில் அனைவரும் நலம், இன்றிலிருந்து உங்கள் பேத்திக்கு தேர்வு ஆரம்பம், அடுத்த வாரம் சென்னை வருவார்கள், வெயிலை நினைத்தால் பயமாக இருக்கிறது!, அங்கே அம்மா, அக்கா அனைவரும் நலமா?

Ashok D said...

//அக்காலத்தில் அதிகாரம் சத்திரியர்களிடமும், பொருள் வைசியர்களிடமும் இருந்தது//

ஆனால் அவர்களை கடவுளின் பெயரால் பயங்காட்டியும் யாகங்கள் வளத்தி... போருக்கு போகும் போது ..’ஜெயவிஜய பவ’ என்று வாழ்த்தி.. போரில் தோற்றால் அதற்கும் ஒரு பரிகார பலன்கள் கொண்டு - எல்லாவற்றிலும் பிரதானமாய்.. ஆனால் உழைக்காமல் சிறக்கும் சிறந்துகொண்டிருப்பவரும் யாரோ?

Anonymous said...

..so for everypost you are trying to get mileage out of caste/creed/religion. or just because you know every subjects under the sun.. ( sorry to use the pharse)..Literature and philosophy requires lot of mind/body work. Just simply getting info thru google does not lead you anywhere. Rather had you anaysed in depth with sangam poem, i would have appreciated. But, Regret you lack lieraary sensibility/ and philosophical in sight. kindly do not quote guys like jayamohan...

dondu(#11168674346665545885) said...

//Literature and philosophy requires lot of mind/body work. Just simply getting info thru google does not lead you anywhere.//
First come out in the open with your identity, just as Jeyamohan or I do.

I will analyze things as I please and that too provided there is enough time.

Your English sentences are full of grammar mistakes. Please spare the English language.

Regards,
Dondu N. Raghavan

Ashok D said...

//ஜெயமோகனோ வெறும் சொம்புதூக்கி, அவரிடம் கேட்டால் எதையாவது சொதப்புவார்! //

அய்யோ... பாவம்ப்பா மக்கள்... பெரியயயயயயயய... பதிவு போட்டு மக்களை துன்புறுத்துவார்...வால் :(

Anonymous said...

oh my dear intellectual,
forgive me my lord.. i have to learn from you " of(f) grammatology" ( please search google!!!).Nevertheless am believe in writing not the author or ownership of tne text..

ராம்ஜி_யாஹூ said...

சம கால அரசியல் வாதிகள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு வேறு ஜாதியில் திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

உதாரணம்; கலைஞர், சோனியா காந்தி, வைகோ.

கலைஞர் வீட்டில் நிறைய கல்யாணங்கள் ஜாதி கலப்பில் தான் , அழகிரி தன் புதல்வருக்கு மாற்று ஜாதி பெண்ணை தான் பார்த்து உள்ளார். பிரியங்கா காந்தி வேறு ஜாதி நபரை தான் திருமணம் புரிந்து உள்ளார். வைகோ வீட்டிலும் நிறைய திருமணங்கள் ஜாதி மாறி நடந்து உள்ளன.

பாரதி ராஜ, பாலச்சந்தர் , ரஜினி வீட்டிலும் இது உண்டு.

dondu(#11168674346665545885) said...

@ராம்ஜி யாஹூ
நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். சொந்த சாதியில் திருமணமோ அல்லது கலப்புத் திருமணமோ அது அவரவர் தத்தம் நிலைப்பாடு, அனுகூலங்கள் பிரதிகூலங்கள் ஆகியவற்றை எடைபோட்டே செய்ய வேண்டும் என்பதுதான் அது.

மற்றவரது போகிறபோக்கில் பாராட்டுக்காகவெல்லாம் செய்தால் கஷ்டம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sabarinathan Arthanari said...

@Dondu, @வால்பையன்
இன்னைக்கு கும்மி இங்கயா ரைட்டு,

@Dondu பாஸ் நீங்க சொல்ற கருத்தெல்லாம் பால்ய விவாகம் செஞ்ச உங்க காலத்துலயே (20 நூற்றாண்டுலேயே) வழக்கொழிஞ்சு போச்சி :).

இப்பவெல்லாம் இளவட்டங்கள் பயங்கர உசாரு. புடிச்ச பொண்/பையணா பாத்து செலக்ட் பண்ணிக்கராங்க. பெற்றோர்களும் வரண் படிச்சிருக்கா, பொண்/பையன வைச்சு நல்ல படியா காப்பாத்துவானா என்று பார்ப்பதோடு சரி.

என்னுடைய 2 நண்பர்களுக்கு காதல் திருமணம் தான். பெற்றோர்களே நல்ல படியா ஜாம் ஜாம்னு திருமணம் செய்து வைச்சாங்க. எல்லோருக்கும் சந்தோசம். சூப்பரா இருக்காங்க.

மத்தவங்களுக்கெல்லாம் பொருத்தம் பார்த்து / பணத்தை பார்த்து / சாதி பார்த்து என்று பார்த்துகிட்டே இருக்கறதனால கல்யாணமே நடக்க மாட்டேங்குது.

இப்பவெல்லாம் காலத்திற்கு தகுந்த மாதிரி மாற்றம் வந்துருச்சு. பழைய பருப்பு வேகாம போயிடப்போகுது பார்த்துக்குங்க. :)

[இது நண்பர்களிடம் பேசுவது போலவே எழுதி இருக்கிறேன். பிடிக்கவில்லையெனில் சொல்லி விடவும். அணுகுமுறையை மாற்றி கொள்கிறேன்]

Sabarinathan Arthanari said...

சாரி பாஸ் பதிவின் கருத்தோட ஒத்து போக முடியல. நெகடிவ் ஓட்டு குத்திட்டேன். [இது பின்னூட்டங்கள பாலோ பண்ண]

dondu(#11168674346665545885) said...

@சபரிநாதன் அர்த்தநாரி

நானும் அதைத்தான் சொல்கிறேன்.
சொந்த சாதியில் திருமணமோ, கலப்புத் திருமணமோ கேஸ் பை கேஸ் ஆக பார்க்க வேண்டியனவே. இதில் மூன்றாம் மனிதர்களுக்கு என்ன வேலை? எல்லா ஆப்ஷன்களும் இருக்கட்டும்.

மற்றப்படி பொதுப்படையாக பேசுவதில் என்ன பொருள் இருக்க முடியும். பை தி வே ஹிந்து, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆகிய இதழ்களில் கல்யாண விளம்பரங்கள் பார்த்துள்ளீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

2010/4/6 Tamilish Support


Hi Dondu,

Congrats!

Your story titled 'நீயும் நானும் திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகுப்பு' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 6th April 2010 01:21:01 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/219123

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
Thanks Tamilish

Anonymous said...

//அப்படி ஏதாவது பார்ப்பனர் சொன்னால் பார்ப்பனீயம் எனச் சொல்வேன் என்றால், கவுனடியம், பிள்ளையியம், முதலாரியம், செட்டியியம் என்றெல்லாம் கூட கூற வேண்டியிருக்கும் தயாரா? //
ஹை!!ஆசை,தோசை,அப்பளாம் வடை!!
"இவனை எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிட்டு சும்மா இருக்கான்டா! இவன் ரொம்ப நல்லவன்டா" க்ரூப் கிட்டதான் நாங்க விளையாடுவோம்.
மத்தவங்க வழிக்கு போனா,சங்கை அறுத்துடுவாங்கல!

Sabarinathan Arthanari said...

//காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று.//

ஆனால் சாதி என்பது குலத்தொழிலின் அடிப்படையில் இழிபொருளாக பார்க்கபடும் நிலை வந்ததுமே முழுமுதலாக கேடு கெட்ட நிலைக்கே கொண்டு சென்றது.

//1931ல் காந்தி எழுதினார் ” நான் நவீன அர்த்தத்தில் சாதி அமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது ஒரு சமூகத்தீங்கு, முன்னேற்றத்துக்கு தடை. மனிதர்கள் நடுவே உள்ள எவ்வகையான ஏற்றதாழ்வுகளையும் நான் நம்பவில்லை. நாமெல்லாம் மூற்றிலும் சமம். சமத்துவம் என்பது ஆன்மாவிலே ஒழிய உடல்களில் அல்ல….புறவயமாக தெரியும் //

இதையும் அதே பதிவில் ஜெயமோகன் எழுதி உள்ளார். தங்களுடைய பதிவின் பொருள் முற்றிலும் மாறாக இருக்கிறதே ? பாதி கட்டுரையின் பொருள் மட்டும் எடுத்தல் திரிவு படுத்தல் போலல்லவா?

Sabarinathan Arthanari said...

மேலும்

//சாதியை அழிப்பதற்கு மிகச்சிறந்த மிகவேகமான தடையற்ற வழி என்னவென்றால் சீர்திருத்தவாதிகள் அதை தங்களிடமிருந்தே தொடங்குவதுதான். தேவையென்றால் அதற்காக அவர்கள் சமூகத்தின் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவேண்டும் .மாற்றம் படிபப்டியாக ஆனால் உறுதியாக நிகழும்”

சொன்னதை தானே செய்வதற்கும் காந்தி தயாரானார். மார்க் லிண்ட்லே கோராவுக்கும் காந்திக்கும் இடையேயான உறவைச் சுட்டிக்காட்டுகிறார். பிறப்பால் பிராமணரான கோரா தன் சாதியை துறந்தார்.அதற்காக அவர் வேலையை விட்டு துரத்தப்பட்டார். தலித் மக்கள் நடுவே சேவைசெய்த கோராவை 1944 ல் காந்தி தன் ஆசிரமத்துக்கு அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டார்.//

//1945 ல் காந்தி எழுதினார். ”பெண்ணுக்கு எந்த தகுதி இருந்தாலும் திருமணம் ஒரே சாதிக்குள் என்றால் என் ஆசீர்வாதத்தை தயவுசெய்து கோராதீர்கள். அவள் வேறு சாதி என்றால் மட்டுமே நான் என் ஆசீர்வாதத்தை அனுப்புவேன்”//

//இனிமேல் கவனியுங்கள், காந்தியை அவதூறுசெய்து வெளியிடப்படும் எந்த ஒரு ஆய்வேட்டுக்கு அல்லது நூலுக்குப் பின்னாலும் ஓர் அயல்நாட்டு பல்கலைக் கழகம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு கிறித்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதியுதவி இருக்கும்.//

வெளிநாட்டுக்காரர்கள் மட்டுமா ?

dondu(#11168674346665545885) said...

//இதையும் அதே பதிவில் ஜெயமோகன் எழுதி உள்ளார். தங்களுடைய பதிவின் பொருள் முற்றிலும் மாறாக இருக்கிறதே ? பாதி கட்டுரையின் பொருள் மட்டும் எடுத்தல் திரிவு படுத்தல் போலல்லவா//
சாதிகள் உள்ளன என்று மட்டும்தான் கூறுகிறேன். அவற்றுள் ஏற்றத் தாழ்வு பார்க்கலாகாது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.

சாதி எப்படி வந்தது, ஆரம்பகாலங்களில் அதன் அவசியம் என்ன என்பதைத்தான் நான் குறித்தேன். இன்று கூட சாதி சங்கங்களால் பலன் அடைபவர்கள் அனேகம்.

திருமணம் என்பதை பார்க்க பல காரணிகள் உண்டு. யாரோ ஒரு மூன்றாம் மனிதரின் கருத்துக்காகவெல்லாம் அதை உட்படுத்தல் புத்திசாலித்தனம் இல்லை என்றுதான் நான் கூறப்புகுந்தேன்.

மர்றப்படி காந்தி ரேஞ்சுக்கெல்லாம் என்னால் யோசிக்க இயலாது. அவர் மகான். நான் மகான் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

ஹாஹாஹா!

உண்மையில் சொன்னவைகள் இந்த பதிவில் பயங்கரமாக திரிக்கப்பட்டிருக்கு!
இதுக்காவது பதில் சொல்லுங்க டோண்டு சார்!

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
பதில் சொல்லியாகி விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குடுகுடுப்பை said...

டோண்டு சார் , இன்றைக்கு பிரியமுடன் வசந்த் ஒரு பதிவு போட்டிருக்கார். திருமணங்களில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரங்களின் தமிழ் விளக்கங்களோடு அதற்கு உங்கள் பதில் என்ன? அவன் ஒழிக ,இவன் ஒழிக என்று பேசி மனமக்களை வாழ்த்தும் சீர்திருத்த திருமண வாழ்த்த விட மந்திரம் கேவலமா இருக்கே ஏன்?

பி:கு
நான் போலி செக்கூலரிஸ்ட் இல்லை, இந்து, திராவிடன் என்றே அடையாளப்படுத்திக்கொள்கிறேன் அதில் இருக்கும் ஜனநாயகத்திற்காக,உதாரணமாக உம் கருத்துக்கள் பல பிடிக்காவிட்டாலும் முகத்தில் அடித்தாற்போல் சொல்லலாம். இதில் இருக்கும் குப்பைகள் ஒருநாள் தொலைந்து போகும் என்ற நம்பிக்கையிலும்.

Anonymous said...

Baa baa black sheep, have you any wool?

Yes sir, yes sir, three bags full!

One for the master, one for the dame,

And one for the little boy who lives down the lane.

ரவி said...

வீட்டில் அனைவரும் நலம், இன்றிலிருந்து உங்கள் பேத்திக்கு தேர்வு ஆரம்பம், அடுத்த வாரம் சென்னை வருவார்கள், வெயிலை நினைத்தால் பயமாக இருக்கிறது!, அங்கே அம்மா, அக்கா அனைவரும் நலமா-------///////////////////

யேய் வாட் ஈஸ் திஸ் ?

இங்க என்ன கூத்துப்பட்டறையா நடக்குது ?

Rajan said...

//உயர்சாதீய மனப்பான்மை என்ற பொதுச் சொல் இருக்கையில் மொட்டையாக பார்ப்பனீயம் எனக்கூறுவது தத்தம் சாதியினரின் திமிர்களை மறைக்க உபயோகிக்கும் அலிபையே.//

உங்களுக்கு உறுத்தாத வாறு பார்பனீயத்தை மென்மையாக அழைக்கச் சொல்லுகிறீர்களா சார் !

Rajan said...

//என்னமோ மற்ற சாதியினரிடம் திமிர் இல்லாதது போல பார்ப்பனீயம் என ஒரு சாதியை மட்டும் குறிவைப்பது ஒரு வன்ம மனப்பான்மையையே காட்டுகிறது. //

என்னவோ மற்ற ஆதிக்க சாதீயங்களை எவரும் விமர்சிக்காதது போல பார்ப்பனீய தாக்குதலின் போது மட்டும் வெகுண்டெழுவது குரூர மனப் பான்மையை காட்டவில்லையா ?

Rajan said...

//உணவு பழக்க வழக்கங்கள், சாமி கும்பிடும் முறை, சடங்குகள் செய்யும் முறை ஆகியவை மேட்ச் ஆவது ஒரே சாதித் திருமணத்தில்தான்.
//

தின்பதும் ,மணியாட்டுவதும் , சடங்கு செய்வதும் தான் இல்லறமா

Rajan said...

//தேவநாதன் தனிப்பட்ட பார்ப்பனன் தவறு செய்யும்போது அவனை உதைப்பதில் நானும் சேர்ந்து கொள்வேன். //

வேறு மார்க்கமில்லை சார் அங்கு சென்று அவனுக்கு சொம்பெடுத்தால் உதையில் பகுதி பங்கை நீரும் பெற வேண்டியிருக்குமே

Rajan said...

//இது ஒரு யுத்தப் பிரகடனமாகவே வைத்துக் கொள்ளுங்கள். //

உச்சகட்டம்

Rajan said...

//பகுத்தறிவற்ற பார்ப்பன வெறுப்பாளர்களுடன் எனக்கு எந்தச் சமாதானமும் இருக்க முடியாது.//

பகுத்தறிவு பகலவ பார்ப்பனர்களிடம் எமக்கும் அஃதே

Rajan said...

//அவரவர் சாதியினரை அவரவர் பார்த்து கொள்ளட்டும்.//

அவரவர் சாதியை அவரவரே காயடிக்க வேண்டும் .

Rajan said...

//வேண்டுமென்றே பார்ப்பனர்களை மட்டம் தட்டுவதற்காகவே பார்ப்பனீயம் என்ற இந்த அலிபையை உபயோகிப்பவர் எல்லோரையும் காயடிக்கவேண்டும் என்று நானும் என் தரப்பிலிருந்து சொல்கிறேன்.//

நீங்கள் காயடிக்க கை கால்களை இறுக்கிப் பிடிக்கவாவது கொஞ்சம் பேர் வேண்டும். தீட்டென்று தள்ளி நின்றிடப் போகிறார்கள் சார்

வஜ்ரா said...

வருடா வருடம் காந்தி ஜெயந்தி அன்று பொதிகையில் ரிச்சர்ட் அட்டன்பரோ எடுத்த காந்தி படத்தை ஒளிபரப்புவது போல் ஏன் இந்த சம்ஜெக்டில் பதிவு போடுகிறீர்கள் ?

உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் பல வார்த்தைகளில் பல பதிவுகளில் சொல்லிவிட்டீர்கள். அது அனைவருக்கும் தெரியும்.

karthi said...

வால்பையன்

ஜெயமோகன் யாருக்கு சொம்பு தூக்கினார்?

வால்பையன் said...

//ஜெயமோகன் யாருக்கு சொம்பு தூக்கினார்?//

வர்ணாசிரமத்தையும், சாதியையும் ஆதரிப்பவர்களுக்கு!

dondu(#11168674346665545885) said...

//வேறு மார்க்கமில்லை சார் அங்கு சென்று அவனுக்கு சொம்பெடுத்தால் உதையில் பகுதி பங்கை நீரும் பெற வேண்டியிருக்குமே//
கீழ்வெண்மணியில் கோலகிருஷ்ண நாயுடுவுக்கு செம்பு தூக்கிய பலீஜா நாயுடு, நிலம் ஆக்கிரமிப்பு புகழ் நீதிபதி தினகரனுக்கு செம்பு தூக்கும் வீரமணி, ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசாவுக்கு செம்பு தூக்கீய திக/திமுகவினர் எல்லோருமே சாதிப்பாசத்தையே வெளிப்படுத்தினர். அவ்வாறு டோண்டு ராகவன் செய்ய மாட்டான் என்பதுதாச்ன் நான் கூறப்புகுந்தது.

//உங்களுக்கு உறுத்தாத வாறு பார்பனீயத்தை மென்மையாக அழைக்கச் சொல்லுகிறீர்களா சார் !//
முதலியாரியம், நாயுடுவியம், கவுண்டரியம், பிள்ளையியம் ஆகியவர்றையும் ஏன் பார்ப்பனியம் எனக்கூறுகிற்கள் என்பதுதான் கேள்வி. சாதிவெறி என ஒட்டு மொத்தமாகக் கூறவும் இல்லாவிட்டாலும் கேஸ் பை கேஸ் போட்டு அழைக்கவும்.

//என்னவோ மற்ற ஆதிக்க சாதீயங்களை எவரும் விமர்சிக்காதது போல பார்ப்பனீய தாக்குதலின் போது மட்டும் வெகுண்டெழுவது குரூர மனப் பான்மையை காட்டவில்லையா ?//
மற்ற ஆதிக்க சாதிகளை சாடும்போதும் பார்ப்பனியம் என போட்டு கொள்வது உங்கள் குள்ளநரித்தனத்தைத்தானே காட்டுகிறது. மற்றப்படி பார்ப்பனர்கள் தற்சமயம் எங்கே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை கூறவும்.

நீங்கள் முதல் முறையாக பல கேள்விகள் கேட்டதால் இவ்வளவு நேரம் பதில் கூறினேன். வெறுமனே சகட்டுமேனிக்கு பார்ப்பனியம் என லேபல் ஒட்டுபவருடன் அது சம்பந்தமாக விவாதம் செய்வதாக இல்லை. முதலில் வினவு, பிறகு வால்பையன், இப்போது நீங்கள்.

டோண்டு ராகவன்

karthi said...

"கீழ்வெண்மணியில் கோலகிருஷ்ண நாயுடுவுக்கு செம்பு தூக்கிய பலீஜா நாயுடு, நிலம் ஆக்கிரமிப்பு புகழ் நீதிபதி தினகரனுக்கு செம்பு தூக்கும் வீரமணி, ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசாவுக்கு செம்பு தூக்கீய திக/திமுகவினர் எல்லோருமே சாதிப்பாசத்தையே வெளிப்படுத்தினர்."

dondu sir good reply

வால்பையன் said...

//"கீழ்வெண்மணியில் கோலகிருஷ்ண நாயுடுவுக்கு செம்பு தூக்கிய பலீஜா நாயுடு, நிலம் ஆக்கிரமிப்பு புகழ் நீதிபதி தினகரனுக்கு செம்பு தூக்கும் வீரமணி, ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசாவுக்கு செம்பு தூக்கீய திக/திமுகவினர் எல்லோருமே சாதிப்பாசத்தையே வெளிப்படுத்தினர்." //


இவெனுங்கெள்ளாம் யோக்கிய சிகமாணின்னு இங்க யாரும் சொல்லலயே!, அடுத்தவன் மாட்டும் போது தன் சூத்தும் நாறிடும்னு சொம்பு தூக்குறானுங்க!

ராஜேஷ், திருச்சி said...

டோண்டு அவர்களே, அதான் தெளிவாக சொல்லிவிட்டார்களே , ஐயரியம் , அய்யன்கரியம் , முதளியாரியம், கவுண்டரியம் , வன்னியரியம், செட்டியியம் எல்லாம் சேர்ந்து ஒரு சொல் "பார்பனீயம்" என்று.
அப்புறம் என் நீங்கள் திரும்ப திருமா பார்பனீயம் என்பதற்கு பார்பனன், பார்பனன் என்றி அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று புரியவில்லை
ஒரு வேலை தனி தனியாக அவர்கள் பெயரிட்டால் நீங்கள் பார்ப்பனியத்தை எப்படி பேசினாலும் கண்டு கொள்ள மாட்டீர்களா?

dondu(#11168674346665545885) said...

//அதான் தெளிவாக சொல்லிவிட்டார்களே , ஐயரியம் , அய்யன்கரியம் , முதளியாரியம், கவுண்டரியம் , வன்னியரியம், செட்டியியம் எல்லாம் சேர்ந்து ஒரு சொல் "பார்பனீயம்" என்று.
அப்புறம் என் நீங்கள் திரும்ப திருமா பார்பனீயம் என்பதற்கு பார்பனன், பார்பனன் என்றி அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று புரியவில்லை
ஒரு வேலை தனி தனியாக அவர்கள் பெயரிட்டால் நீங்கள் பார்ப்பனியத்தை எப்படி பேசினாலும் கண்டு கொள்ள மாட்டீர்களா?//

ஒரு தவறான கலைச்சொல்லை அவர்கள் ஒரு சாதியின் மேல் உள்ள வன்மம் காரணமாக பிரயோகம் செய்தால் அவ்வாறு செய்பவர்களை நான் ஏண்டா ஜாட்டான் என்றுதான் கேட்பேன்.

இதில் எந்த சமரசமும் இல்லை. மற்றப்படி ஒரு குறிப்பிட்ட பார்ப்பனன் சாதித் திமிருடன் நடந்து கொண்டால் அவனை கண்டிப்பவர்களில் நானும் முன்னணியில் நிற்பேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

M.Mani said...

நான் இந்த ப்ளாக் விஷயத்துக்குப் புதியவன். ஓரிரு மாதங்களாகத்தான் இப்பதிவுகளைப் பார்க்கிறேன். போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள்போல் போலி ஜாதியவாதிகள் பார்ப்பனீயம் என்று அடிக்கடி உபயோகப்படுத்துகின்றனர்.சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுகளில் ஜாதி வெறி அதிகம் பார்ப்பனர் அல்லாதவரிடம்தான் அதிகம் உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களை நசுக்கும் போக்கு அவர்களிடமே காணப்படுகிறது. என்னுடைய அனுபவத்தில் ( 40 ஆண்டுகள் மத்திய அரசில் பணிபுரிந்தவன்)95 சதவீத பார்பனர்கள் தங்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்படுவர். இது மற்றவர்களிடம் சுமார் 40 சதவீதம்தான்.மற்றசாதியினர் அவர்களைப்பார்த்து பொறாமைப்படத்தான் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய dedicationஐ கற்றுக்கொள்ள யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. இதுதான் கொடுமையி்ன் உச்சக்கட்டம்.
என்னுடைய பதிவைப்பார்த்து என்னை பார்ப்பனன் என்று எண்ண வேண்டாம். நான் நாடார் இனத்தைச்சேர்ந்தவன்.

வால்பையன் said...

//நான் நாடார் இனத்தைச்சேர்ந்தவன். //


நாடார் என்பது இனமா தோழரே!?

நீங்கள் உங்கள் சாதியை விரும்புகிறீர்களா?, சாதி கொடுமைகள் உங்கள் ஊரில் நடந்துள்ளதா!?

சாதிய முறைகள் அனைத்திற்கும் பொது பெயர் பார்பனீயம், அது பார்பனர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பார்பனீயம் என்றால் கோபபட வேண்டியது உங்களை போல் சாதி சொல்லி திரிபவர்கள் தான், நிச்சயமாக சொல்வேன் நீங்கள் செய்வதும் பார்பனீயம் தான்!

hayyram said...

// 95 சதவீத பார்பனர்கள் தங்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்படுவர். இது மற்றவர்களிடம் சுமார் 40 சதவீதம்தான்.மற்றசாதியினர் அவர்களைப்பார்த்து பொறாமைப்படத்தான் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய dedicationஐ கற்றுக்கொள்ள யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. //

இன்னும் அது தான் நடக்கிறது.

Unknown said...

//தின்பதும் ,மணியாட்டுவதும் , சடங்கு செய்வதும் தான் இல்லறமா//

இல்லை ராஜன் அண்ணா இல்லை.ஆனால்,தின்பது,24x7 யாரையாவது சகட்டு மேனிக்கு திட்டிக் கொண்டிருப்பது,சியர் லீடர்கள் உசுப்பேத்திவிட ஆபாசமாக பேசி புளகாங்கிதம் அடைவது,ரெள்டித் தனம் பண்ணுவது,மிரட்டுவது என்று வெட்டியாய் வாழந்து வரும் சைக்கிள் கடை கும்பல் செய்வது இல்லறமா அல்லது தர்மமா என்று கேட்கிறேன்.

வால்பையன் said...

// 95 சதவீத பார்பனர்கள் தங்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்படுவர். இது மற்றவர்களிடம் சுமார் 40 சதவீதம்தான்.மற்றசாதியினர் அவர்களைப்பார்த்து பொறாமைப்படத்தான் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய dedicationஐ கற்றுக்கொள்ள யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. //


அவா என்ன சொல்றா! எங்களை மணி ஆட்டி மந்திரம் சொல்ல கத்துக்க சொல்றாளா!?
அதுக்கு நண்பர் ஹேராம் வேற ஜிங்சக் அடிச்சிட்டு போயிருக்காரே!


எனது கணக்கு வாத்தியார் பிராமணர் தான், நான் அவரிடம் கணக்கு கத்துகலையா!? பார்பணீயம் சொன்னா எங்களுக்கு ஏமய்யா வலிக்குது, அதை கடைபிடிக்கிறதாலயா!?

Anonymous said...

Frankly, I could not understand what you say.

First you began with sangam song. It rejects all condtions for a romance between a man and woman. You say,Tamil professors are hung-go about the song.

Next you quote Meera. He says conditions apply in a couple getting married.


After that, I am confused. You go to Jeyamohan and castes and the justness of caste system and how it helped India.

You began as if you are against love marriage without conditions like castes etc. Then, at the end, you are for anything with or without.

Do you mean to say, those who are against castes, should get their daughters or sone married intercaste?

Or, do you mean to say:

They talk about abolition of castes by intercaste marriages, but such talk is hypocricy, as they want to marry their daughters within their own caste?

Let me get you correctly first.

dondu(#11168674346665545885) said...

@ஜோ அமலன் ராயென் ஃபெர்னாண்டோ
ஒரு தடவைக்கு நான்கு தடவை பதிவை படிக்கவும். ஒரு வேளை புரிந்தாலும் புரியலாம்.

கலப்புத் திருமணத்தின் சிக்கல்களை கூறினேன், சுயசாதியில் திருமணம் டீஃபால்ட்டாக நடக்கும் காரணங்களை எடுத்துரைத்தேம்.நடப்பைத்தான் கூறினேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Manickam!

You are a Nadar. You find brahmins with virutes. What about Nadars? Do they hve nothing but vices?

Please remember Dondu Ragavan says all jaathis are with veris. He clubs Naadaars too.

Why to go to him? Come to me. I find and say that the worst offenders of caste veri is Thevars and Nadars of southern districts.
Why dont you start with your caste people? I mean change their minds? எங்க பாத்தாலும் சரத்குமார் படம்தான். ஏன்னா அவர் நாடாராம். காமராஜ் முதலமைச்சர். ஆனால் நாடார் பாட்டு இப்படி வரும்:

பொன்னை நாடார்
பொருளை நாடார்
எங்கள் காமராஜ் நாடார்.

எங்க பாத்தாலும் நாடார்கள் ஜாதி வெறியோடுதான் அலைகிறார்கள்.

அதைதான் கேட்கிறார் டோண்டு ராகவன்: தேவர் நாயுடு நாடான் பிள்ளை என்று அவனவன் தன் ஜாதி யென வெறிபிடித்து அலைய, ஏன் எங்களை மட்டும் எடுத்து பார்ப்பனீயம் என்கிறீர்கள்.

மாணிக்கம், பதில் சொல்லுங்கள்

Anonymous said...

From your reply, I take it like that:

Intercaste marraiges are fraught with insurmountable difficulties for the couple. Such marriages often collapse.

Marriage within castes face no such dangers. They long last.

Am I correct in getting you thus?

After that, you also say, youth should be given the option to choose anyone.

This is an irony. It is like asking the child to choose between two toffees after explaining to it that one will taste bitter; other, sweet.

That is why I am saying you have written a confusing blogpost.

Now, my comments:

People today are not intererested in endogamous marriages, as they dont worry whether their caste, as an intact entity, will survive after a millenniam or millennia. The orthodox Hindus can be numbered only a few.

People first seek allainces within caste, only because it is easy to search as they have contacts built over time. In case they live among assortments of communities, like the Tamils in Canada, living with Punjabis, Telugus, and variety of Tamils castes, they have contacts, without any caste or linguistic affiliations. Tamils who hve migrated to other countries, centuries ago, like Fiji, SA,have no caste system. They have a single identity as Tamil, and that too, is collapsing beause, other Indians hve joined the community, together they call themselves as Asisn community of Indian origin.

We cant jump and call it broadmindedness. It is all convenience.

About same culture and food habits etc., it is true only if we live as separate communities. When the walls become porous, and people mingle, that too evaporate.

Convenience is the only word.

Jeyamohan's caste defence that it served well ..we can fight with our enemies if we live in caste communities, is an ancient point. Today, no Cheran is coming to war with Pandian. All those who defend caste system or varnashradharamam are living vicariously in the distant and hoary past.

However, the case of dalits will continue to be bad, for a long time to come, because we need now someone to feel superior to. Their change is impossible because indian countryside, as well as TN's, remain mostly same.

Freethinker said...

//.......... மற்ற ஆதிக்க சாதிகளை சாடும்போதும் பார்ப்பனியம் என போட்டு கொள்வது உங்கள் குள்ளநரித்தனத்தைத்தானே காட்டுகிறது. மற்றப்படி பார்ப்பனர்கள் தற்சமயம் எங்கே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை கூறவும்......................//

மற்ற உயர் சாதியில் உள்ளவர்கள் யாரும் இந்த வேலை தான் பார்பேன் என்று அடம் பிடிபதில்லையே திரு. டோண்டு பார்ப்பான் அவர்களே. மயிலாடுதுறை பக்கம் போனிகன்ன பலீஜா நாயுடு, முதலியார் எல்லாம் வயல்ல இறங்கே ஏர் உளுவுரங்க, பெரிய பெரிய கட்டிடம் கட்ட சாரம் கட்டுறாங்க....அதே இனத்தை சேர்ந்த பெண்கள் நடவு நடுறாங்க....விறகு வெட்டி வந்து வியாபாரம் பன்னுரங்க..இப்படி பார்பனரல்லாத உயர் வகுப்பினர் தான் பணக்காரராக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் எந்த தொழில் தமக்கு அமைகிறதோ அதற்க்கு ஏற்றார் போல வேலை செயுரன்களே.

ஆனா எந்த பார்ப்பான் உழுதான், சாரம் கட்டுறான் எந்த பாப்பாத்தி நடவு நாட்டு இருக்காங்க ஒருத்தர அடையாளம் காட்ட முடியுமா . சோத்துக்கே வழி இல்லாம இருந்தாலும் (ஹிந்து பேப்பர் படிச்சிகிட்டு) இந்த வேல எதுவும் பாக்க மாட்டார்கள் பார்பனர்கள் ஒன்னு கோவில் இல்ல பீயுன் வேலைய இருந்தாலும் அரசாங்க உத்தியோகம் ...எப்படி இருக்கு ....அதற்க்குத்தான் இந்த கோவில்,மதம்,சாதி,சாஸ்திரம் எல்லாத்தையும் பாது காத்து வச்சுக்கிட்டு இன்னும் மக்களை ஏமாற்றி ஒரு இனம் மட்டும் ஓகோன்னு வளரனும்..அதுதான் சோ,ராமகோபாலன் அந்த வழி வந்த நீங்கள் கூறும் மத, சாதி ஒழிப்பு. நீங்கள் திராவிட இயக்கத்தை சாடுவது நீங்கள் எந்த அளவு உங்கள் பிழைப்பில் அடி விழுந்துள்ளது நன்றாக தெரிகிறது.

கொஞ்சம் தூங்கின மீண்டும் தமிழ்நாடே நாடே நங்கனல்லூரா மாத்தி மறுபடியும் வருணாசிரம் பேசிகிட்டு சாஞ்ச திண்ணையில உட்கார்ந்து ஒய் போட்டு பேசிகிட்டு இருக்கலாமுன்னு கனவு கான்றிங்களா டோண்டு பார்ப்பான் அவர்களே.....அது நடக்காது....!!
பார்பான் பண்ணையம் கேட்பாரும் உண்டோ நிலைமை மாறிற்று.......

Anonymous said...

JARF the intelligent,

jemo never defended caste. All he says is without proper research from within if the so called intellectuals accept western views without question, they will be the biggest idiots and caste can never be eliminated.
If caste is bad or good ?
why do people still stick to caste based everything ?
From palasarakku maligai to paarpaaneeyam all are caste based.
Higher education to job promotion is caste based. why ?
There is advantage of being in that system. If today based on it you get reservation yesterday based on it you got something else. Then why shall anybody leave his caste and say i don't believe in caste system ?

Only fools will do that. Valpayyan may talk all goodies here but when it comes to his son/daughter he is not going to say i dont want reservation based on my caste. I dont want promotion based on my caste.

This hypocrisy is what Je mo is pointing out. Why this hypocrisy when you cannot do what you preach ?

Guna said...

பார்பனியம் சாதி பிரித்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஏன் என்றால் சாதி என்பது இடத்துக்கு இடம் மாறுகிறது.ஒரு சமுதாயம் பிரித்தது என்றால் எல்லா இடமும் ஒரே பெயர் இருந்திருக்கும்.ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.ஏதோ ஒரு காரணத்தால் பிரித்திருக்கலாம்.

சரி இதை படிக்காதவர்கள் தான் தொங்கி கொண்டு இருக்கிறார்கள் என்றும் சொல்லுவதற்கில்லை......

சாதி சங்கத்தின் தலைவர்கள் எல்லாம் படித்தவர்கள் தான் என்ன செய்ய ரத்தத்தில் ஊறிவிட்டது.

சாதியை ஒழிப்பேன் (ஒழிப்போம்) என்று சொன்னவர்களும் இன்று சாதி முறையைத்தான் பின்பற்றுகிறார்கள்.

நட்ப்புக்கு யாரும் சாதி பார்பதில்லை ஆனால் கல்யாணம் என்றால் பார்த்துதான் செய்கிறார்கள்.

காதல் கல்யாணம் பண்ணிகொண்டவர்கள் கூட ஏதோ ஒரு சமுதாய பின்னணியில்தான் (மதம் அல்லது சாதி )
வாழ்கிறார்கள்.

அவர்களை கேட்டாலும் தன் பிள்ளைகள் காதல் திருமணம் என்றால் வேண்டாம் என்று சொல்லுகிறார்கள்.

நீங்கள் பண்ணியதை ஏன் உங்கள் பிள்ளைகள் பண்ணகூடாது என்றால் நாங்கள் படும் கஷ்டம் அவர்களுக்கு வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள்.

அதுவும் உண்மைதானே அவ்வாறு வாழ்ந்தவர்களுக்கு தான் அந்த வலி தெரியும்.

கலப்பு திருமணம் பண்ணிகிட்டவர்கள் எல்லோரும் எதோ ஒரு வகையில் அடிபடுகிறார்கள்.

நம்மாளால் பாராட்ட மட்டுமே முடியும்.அவர்களுக்காக நாம் என்ன பண்ண முடியும்.

நீங்கள் கேட்கலாம் எத்துனையோ பேர் பண்ண வில்லையா ?என்று பணம் புகழ் அதிகாரம் படைத்தவர்கள் பண்ணிக்கொண்டலும் அவர்களது உறவுகள் முறிக்க பாட்டுதானே இருக்கு இன்னும் (நடிக்கர்கள் ,அரசியல் தலைவர்கள் உட்பட )

ஒருநாள் நீயா நானா வில் ஒருத்தர் சொன்னார் .ஒரு குழந்தைக்கு ஒரு விழா நாளில் எத்தனை பேர் துணிகள் எடுத்து கொடுப்பார்கள் என்று (இது உணர்வு பூர்வமான விசியம் ) மாமா ,மச்சான் இப்படி குறைந்தது 3 பேராவது எடுத்து தருவார்கள் ஆனால் அவருக்கு அவுங்க அப்பா மட்டும் தான் எடுத்து தருவாராம்.

அவர் மனதின் ஏக்கம் புரிகிறது.நம் குடும்பத்தை தனியா தானே பார்கிறார்கள் என்று வருந்தினார்.

நடை முறை இது தானே .

விவாதம் வேறு வாழ்க்கை வேறு

படித்தவர்களுக்கும் அறிவு இடம் கொடுத்தாலும் மனது இடம் கொடுப்பதில்லை...

அரசாங்கமும் அதில் சறுக்கி விட்டது.அவர்கள் தான் என்ன செய்ய முடியும் தினசரி வாழ்க்கையில் யாரும் பங்கு பெறுவதும் இல்லை.

இவுலகில் எங்கும் சமத்துவம் கிடையாது என்பதே என் திண்ணம்.அப்படி இருந்தால் அணு ஆயுதமே தேவை இல்லை.

என்ன வெள்ளை காரன் நம்மள மட்டமா பார்ப்பான் .நமோ நமுளுக்குலையே பார்த்துக்குறோம் அவளவு தான்.

உரிமைகள் பறிக்க பட்டு விட்டது என்று இப்போது சொல்ல முடியாது.

கிராமத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் நகரத்தில் இல்லை.

இதை பற்றி பேசினால் பேசி கொண்டே போகலாம்.

சமுதயதொடு ஒத்து வாழ்ந்து விடுவோமே ..

வாழ்க்கை யில் ஆயிரம் இருக்கு சொந்தம் ,சந்தோசம் ,துக்கம் என்று இதைவிட பல பிரச்சினைகள் .....

வரலாறு ளையும் பார்பனன் சொல்லி எந்த அரசனும் கோவில் கட்டவும் இல்லை(எனக்கு தெரிந்து ).அரசனின் விருப்ப படிதான் நடந்திருக்கு.

ரவி said...

இந்த கேள்விக்கு முறையான பதில் என்னிடம் உள்ளது. ஒரு விஷயத்தை அதனை கண்டுபிடித்தவர் பெயரால் சொல்வது தவறல்ல. இதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், ரொம்ப நெருக்கமான உதாரணம் சொல்லமுடியும். ராமன் விளைவு என்றால் என்ன ?

ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை சர்.சி.வி.ராமன் 1928- ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்குஇராமன் விளைவு (Raman Effect) என்று பெயர்

http://ta.wikipedia.org/wiki/இராமன்_விளைவு

ஆக, பார்ப்பணீயத்தை, அதனை கண்டுபிடித்த பார்ப்பணர்களின் குழு பெயரை வைத்து அழைப்பதில் தவறில்லை. இது இன்னும் வருணாசிரம தர்மத்தை தாங்கி பிடிக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கே உறுத்தும். பார்ப்பன சாதியில் பிறந்து பார்ப்பணீயத்தை கைக்கொள்ளாதவர்களும் உண்டு. உயர் சாதியில் பிறந்து பார்ப்பணீயத்தை கைக்கொள்வோரும் உண்டு. யார் பார்ப்பணீயத்தை கைக்கொள்கிறார்களோ அவர்களுக்கே இது பொருந்தும்.

ராஜன் பதிவில் இட்ட பின்னூட்டம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? இது உங்களுக்கும் பொருந்தும்போல் தோன்றுகிறது

dondu(#11168674346665545885) said...

@செந்தழல் ரவி
தவறான வாதம். வர்ணங்களை உருவாக்கியது பார்ப்பனர்கள் அல்ல. அதிகாரம் எப்போதும் அரசர்களிடமே இருந்துள்ளது. வர்ணங்கள் காலப்போக்கில் தாங்களே தேவைக்கேற்ப உருவாகின, அவ்வள்வே.

இதை பல நீதிகள் வகைப்படுத்தியுள்ளன. அவர்களில் ஒருவர் மனு. அவர் பார்ப்பனர் அல்ல.

கீதையில் வர்ணங்களை தானே உருவாக்கியதாக கூறிய கிருஷ்ணர் யாதவர்.

அக்காலத்தில் படிப்பு இருந்ததால் பார்ப்பனர்கள் பலரால் உருவாக்கப்பட்ட கான்சப்டுகளை அரசாணைபடி தொகுத்து எழுதியிருக்கலாம் என்று வேண்டுமானால் கூறலாம்.

கம்பெனி மேலாண்மை சொல்வதை Personnel Department-ஐ சேர்ந்தவர்கள்தான் ஆணைகள் மூலம் தெரிவிப்பார்கள். அதற்கான கையொப்பம் போடும் அந்தத் துறையின் தலமை அதிகாரிக்கு அந்த பவரை தந்தது கம்பெனியின் மேலாண்மை.

ஆனால் என்ன நடக்கிறதென்றால் எல்லா கம்பெனிகளிலுமே இந்த டிபார்மெண்டை சேர்ந்தவர்களை மற்ற பணியாளர்களுக்கு பிடிக்காது. அதை நீங்களே பல கம்பெனிகளில் பார்த்திருக்கலாம்.

சரி அதை விடுங்கள். என்னுடைய பாயிண்டுகள் இவையே.

1. வர்ணங்கள் என்று உருவானவை காலத்தின் கட்டாயத்தால் நிகழ்ந்தவையே. அக்கால கட்டத்துக்கு அவையே சிறந்த தீர்வு.
2. காலப்போக்கில் சாதிகள் அவற்றிலிருந்து உருவாகி ஏர்றத்தாழ்வு எல்லாம் பார்க்கப்பட்டது.
3. இப்போது நிலைமை என்னவென்றால் உயர்சாதீய மனப்பான்மை பார்ப்பனர் அல்லாத மற்ற உயர்சாதியினரிடமே அதிகம் உள்ளன.
4. அவர்கள் தங்களது தற்காலத்திய அட்டூழியங்களை மறைக்க அந்த உயர்சாதி மனப்பான்மைக்கு பார்ப்பனீயம் என பெயர் சூட்டியுள்ளனர்.
5. நான் இந்த லேபல்லிங்கைத்தான் எதிர்க்கிறேன்.
6. என்னதான் யார் டிஸ்கி கொடுத்தாலும் பார்ப்பனீயம் என்னும் கலைச்சொல் பார்ப்பனர்களை இழிவுபடுத்தும் நோக்கதிலும், மற்ற ஆதிக்கசாதியினர் தாம் செய்யும் வன்கொடுமைகளை மறைக்கவுமே உபயோகிக்கின்றனர்.
7. ஆகவே, இந்த எளிய லாஜிக்கை புரிந்துகொள்ள மறுக்கும் எவருடனும் இது சம்பந்தமாக அவர்களது பதிவுகளுக்கு செவதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் குரல் said...

//*6. என்னதான் யார் டிஸ்கி கொடுத்தாலும் பார்ப்பனீயம் என்னும் கலைச்சொல் பார்ப்பனர்களை இழிவுபடுத்தும் நோக்கதிலும், மற்ற ஆதிக்கசாதியினர் தாம் செய்யும் வன்கொடுமைகளை மறைக்கவுமே உபயோகிக்கின்றனர்.*//

டோண்டு சார்,

பார்ப்பனீயம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும் என பத்திரம் எழுதி கொடுக்கப்பட்டுள்ளதா என்ன?

பார்ப்பனீயத்தியதிற்கு நீங்கள் மட்டுமே உரிமை கொண்டாடுகிறீர்கள்...

தனக்கு கீழானவன் என எளிய சமுதாயத்தினரை இழிவு படுத்துபவர்கள்... பிள்ளையாக இருந்தாலும் சரி, முதலியாராக இருந்தாலும் சரி, கவுண்டராக இருந்தாலும் சரி, வன்னியராக இருந்தாலும் சரி, கள்ளராக இருந்தாலும் சரி, நாடாராக இருந்தாலும் சரி...

அவர்கள் நவீன பார்ப்பனர்களே... அவர்கள் கற்று கொண்டது என்னவோ... பார்ப்பனர்களிடமே...

எளிய மக்களை இழிவுபடுத்துபவர் யாராக இருந்தாலும்... பார்ப்பனராக இருந்தாலும் சரி, நவீன பார்ப்பனராக இருந்தாலும் சரி... அவர்கள் காயடிக்கபட வேண்டியவர்களே...

இப்படியே... அவ்வப்போது... சாதி திமிர் பதிவுகளை போட்டு கொண்டே இருந்தால்... உங்கள் வலை பூவிற்கு... நல்ல ஹிட் கிடைக்கும்... வாழ்த்துக்கள்...

dondu(#11168674346665545885) said...

//அவர்கள் கற்று கொண்டது என்னவோ... பார்ப்பனர்களிடமே...//
அதாவது சுயபுத்தியே சுத்தமாக அவர்களிடம் கிடையாதாமா?

பார்ப்பனீயம் என்னும் சொல்லை இப்போதைய பார்ப்பனர்களை இளப்பம் செய்யவே பிரயோகம் செய்பவர்களுடன் எனக்கு விவாதம் செய்ய ஒன்றுமில்லை. அவர்களே தங்களுக்குள் அடித்து கொண்டு சாகட்டும். நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்.

டோண்டு ராகவன்

hayyram said...

//வர்ணங்கள் என்று உருவானவை காலத்தின் கட்டாயத்தால் நிகழ்ந்தவையே. அக்கால கட்டத்துக்கு அவையே சிறந்த தீர்வு.//

இப்போது கூட வக்கீலகளுக்கு ஒரு யூனியன், டாக்டர்களுக்கு யூனியன், ஆட்டோகாரர்களுக்கு யூனியன் என்று கூட்டம் கூட்டமாக நான் இந்த யூனியனைச் சேர்ந்தவன் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்களே அதுவே நவீன காலத்தின் வர்ணங்கள் தானே! வக்கீல் பிள்ளை வக்கீலாகவும் டாக்டர் பிள்ளைகள் டாக்டராகவும் ஆவதும் குலத்தொழில் தானே! முதல்வர் கருணாநிதி பிள்ளை முதல்வராகவே ஆகும் வர்ணாசரம குலத்தொழில் வாழ்வை யாரும் கேள்வி கேட்பதாய் இல்லை. கட்சியின் கடைசித் தொண்டனுக்கு ஒருநாள் முதல்வராகும் வாய்ப்பாவது கொடு என்று அங்கே சிகப்புக் கொடி பிடிக்கவோ சமத்துவம் பேசவோ யாருக்கும் முதுகெலும்பு இல்லை. பாப்பானை கேள்விகேட்பதைப் போல அவர்களிடம் கேள்வி கேட்டால் பப்பு வேகாதே!

www.hayyram.blogspot.com

தமிழ் குரல் said...

//*அதாவது சுயபுத்தியே சுத்தமாக அவர்களிடம் கிடையாதாமா?*//

டோண்டு சார்,

அவர்களுக்கு சுய புத்தியை தொலைத்து விட்டுதானே... சாதி வெறி பிடித்து... நவீன பார்ப்பனர்கள் ஆகின்றனர்...


//* அவர்களே தங்களுக்குள் அடித்து கொண்டு சாகட்டும். நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்.*//

டோண்டு சார்,

யாராவது அடித்து கொண்டால்... நிறுத்த முயற்சி செய்யாமல்... சாகட்டும் என வேடிக்கை பார்ப்பதுதான் பார்ப்பனீய குணம் என நிரூப்பிகிறீர்களே... சண்டை என்றால் சாவு சகஜம் என... அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை பற்றி... 2008 டிசம்பரில் ஜெயலலிதா சொன்னதற்கும்... நீங்கள் சொல்வதற்கு வேறுபாடு என எதுவும் தெரியவில்லையே...

dondu(#11168674346665545885) said...

//
யாராவது அடித்து கொண்டால்... நிறுத்த முயற்சி செய்யாமல்... சாகட்டும் என வேடிக்கை பார்ப்பதுதான் பார்ப்பனீய குணம் என நிரூப்பிகிறீர்களே//
வேறு என்ன செய்ய முடியும்? சாதிவெறின் தவறு என பொதுப்படையாக கூறினால் நல்ல மனிதர்கள் எல்லோருமே அதற்கு துணைபோவார்கள்.

அதை விடுத்து பார்ப்பனரகளை மட்டும் குறிவைத்து சாதிவெறிக்கு பார்ப்பனீயம் என அக்கிரமமாக சாயம் பேசினால் அப்படித்தான் எதிர்வினை தரவியலும்.

இல்லாவிடில் உங்களது குத்தல் பேச்சுக்களை கேட்க வேண்டும் என எங்களுக்கு என்ன தலைவிதி. ஆகவேதான் அடித்துக்கொண்டு சாகுங்கள் ஜாட்டான்களா எனக்கூறி விலகுகிறேன்.

டோண்டு ராகவன்

குடுகுடுப்பை said...

பார்ப்பனர் என்ற சொல் அய்யர்,அய்யங்கார் வகையறாக்களை மட்டுமே குறிக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.

குறிப்பாக என்னுடைய சாதித்திமிருக்கும் மற்றொரு மதம் சார்ந்தவனின் மதத்திமிருக்கும் பார்ப்பானீயம் என்று சொன்னாலும் நடைமுறை புரிதல் கண்டிப்பாக மேலே சொன்னதுதான்.

அ. நம்பி said...

//பார்ப்பனீயம் என்னும் சொல்லை இப்போதைய பார்ப்பனர்களை இளப்பம் செய்யவே பிரயோகம் செய்பவர்களுடன் எனக்கு விவாதம் செய்ய ஒன்றுமில்லை.//

//இல்லாவிடில் உங்களது குத்தல் பேச்சுக்களை கேட்க வேண்டும் என எங்களுக்கு என்ன தலைவிதி. ஆகவேதான் அடித்துக்கொண்டு சாகுங்கள் ஜாட்டான்களா எனக்கூறி விலகுகிறேன்.//

நீங்கள் படித்துப் பார்க்க இரண்டு கதைகள்; உங்களுக்குத் தெரிந்த கதைகளாகக்கூட இருக்கலாம்; மீண்டும் படிக்கலாமே!

http://nanavuhal.wordpress.com/2010/04/07/vivaatham/

கோவி.கண்ணன் said...

//கீதையில் வர்ணங்களை தானே உருவாக்கியதாக கூறிய கிருஷ்ணர் யாதவர்.//

தகவல் பிழை, வருணத்திற்கு ஆதாரம் கீதை, எனவே கீதைக்கு வெளியே சொல்லும் உதாரணத்தைவிட கீதையினுள்ளே சொல்லும் உதாரணம் தான் சரியாக இருக்கும்.

அதே கீதையில் தான் எல்லாவற்றிலும் உயர்ந்ததில் தான் இருப்பதாக அடையாளப்படுத்தும் கிருஷ்ணன், பாண்டவர்களில் நான் அர்ஜுனன், வருணத்தில் என்னுடைய வருணம் 'பிராமணன்' என்பான், நான் வைசியன் என்று கூறவில்லை.

dondu(#11168674346665545885) said...

கோவி.கண்ணன் has left a new comment on your post "நீயும் நானும் திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகு...":

//கீதையில் வர்ணங்களை தானே உருவாக்கியதாக கூறிய கிருஷ்ணர் யாதவர்.//

தகவல் பிழை, வருணத்திற்கு ஆதாரம் கீதை, எனவே கீதைக்கு வெளியே சொல்லும் உதாரணத்தைவிட கீதையினுள்ளே சொல்லும் உதாரணம் தான் சரியாக இருக்கும்.

அதே கீதையில் தான் எல்லாவற்றிலும் உயர்ந்ததில் தான் இருப்பதாக அடையாளப்படுத்தும் கிருஷ்ணன், பாண்டவர்களில் நான் அர்ஜுனன், வருணத்தில் என்னுடைய வருணம் 'பிராமணன்' என்பான், நான் வைசியன் என்று கூறவில்லை.

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

மேலே வந்த பின்னூட்டத்தை அனுமதித்தும் பிளாக்கர் சொதப்புவதால் எனது தரப்பிலிருந்து வெளியிடுகிறேன்.

@கோவி கண்ணன்
வர்ணங்களில் தன்னை பிராமணன் என கிருஷ்ணர் கூறிக்கொண்டதாக நீங்கள் சொல்வது எனக்கு புதிய தகவல். எந்த காண்டக்ஸ்டில் அவர் கூறினார் என்பதும் புரியவில்லை.

ஆனால் அவர் உண்மையிலேயே யாதவர் என்பதில் எந்தத் தகவல் பிழையும் இல்லை. ஒரு வேளை வர்ணரீதியான பிராமணனை அவர் உயர்த்தினார் என்று வேண்டுமானால் வைத்து கொள்ளலாம். அதுகூட அனுமானமாகத்தான் கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆ. கணேசன் said...

//அதே கீதையில் தான் எல்லாவற்றிலும் உயர்ந்ததில் தான் இருப்பதாக அடையாளப்படுத்தும் கிருஷ்ணன், பாண்டவர்களில் நான் அர்ஜுனன், வருணத்தில் என்னுடைய வருணம் 'பிராமணன்' என்பான், நான் வைசியன் என்று கூறவில்லை. //

கண்ணன் கூறியது: (10.37)

`விருஷ்ணிகளுள் நான் வாசுதேவன், பாண்டவர்களுள் தனஞ்ஜயன், முனிகளுள் வியாசர், கவிகளுள் நான் சுக்கிரன்'.

`Of the descendants of Vrishni I am Vasudeva, and of the Pandavas I am Arjuna. Of the sages I am Vyasa, and among great thinkers I am Usana.

`வருணத்தில் என்னுடைய வருணம் பிராமணன்' என்று கண்ணன் சொன்னதாக கீதையில் எங்கே வருகிறது என்று சொன்னால் தெரிந்துகொள்ளலாம்.

Arunachalam said...

Thiru A Ganesan
Thanks for the clarification.
As soon as I read that
[ incorrect] bit about "Varnangalil naan Brahmananan"[!] I reached for Bharathiyaar's translation of the GIta-just to confirm.[ 10 th chapter Viboothi yogam]
Yes, Krishna doesnt say anything like that.
In Tamilnadu its so easy to
[mis] quote!

வஜ்ரா said...

கடவுளை கற்பிப்பவன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியாரையும், அருட் பெருஞ்சோதி தனிப்பெருங்கடவுள் என்று கடவுளைக் கற்பித்த வள்ளலாரையும் போட்டு குருமா செய்தால்...?

குருமாவில் பார்ப்பானீயம் தான் மிதக்கும்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது