4/19/2010

பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுத்த விஷயம்

விடுதலைப் புலி பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மையாரை தமிழகத்துள் வரவிடாது பிளேனிலேயே திருப்பி அனுப்பிய விவகாரம் இங்கு பல எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. அவரவர் தத்தம் முந்தைய நிலைக்கேற்ப எதிர்வினை புரிகின்றனர்.

வயது முதிர்ந்த அந்த அம்மையாரை அனுமதிப்பதில் என்ன கெடுதல் வந்துவிடப்போகிறது என்பது இங்குள்ள பலரின் வாதங்களில் முக்கியமானது. முதலில் அதைப் பார்ப்போம்.

அப்படியே உள்ளே வந்தால் என்ன செய்திருப்பார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும். ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்.

எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம். நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள். இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்.

நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை. ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். மாநில அரசு தன்னிச்சையுடன் இதை பின்பற்றியதோ அல்லது வேறு வழியின்றி பின்பற்றியதோ எதுவாயினும் ஒரு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது.

வெறுமனே சிலரது நாடகத் தன்மை மிக்க செயல்பாடுகளுக்கு தீனி போட்டதாக அமைந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது நல்லதுக்குத்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

248 comments:

1 – 200 of 248   Newer›   Newest»
அரவிந்தன் said...

வெட்டியாக வரதராச பெருமாளுக்கு தண்ட சோறு போட்டதன் பின்னணி என்னவாக இருந்திருக்கும்.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

dondu(#11168674346665545885) said...

ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நல்லபடியாக நிறைவேறியிருந்தால் இப்போது ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இல்லாம போயிருந்திருக்கும். புலிகள் மற்றும் பிரேமதாசாவின் கூட்டணி அதை தகர்த்தது.

வரதராஜப்பெருமாள் ஒரு நன்னம்பிக்கையில் (good faith) அரசு தலைமையேற்றார். அவருக்கு இந்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அதன் கடமை. அதைத்தான் அதுவும் செய்தது.

புலிகளின் வன்மம் கடல் கடந்தும் செயல்படும் என்பது யாவரும் அறிந்ததே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

M.Mani said...

அந்த அம்மாவிற்கு விசா கொடுக்காமல் இருந்திருக்காலாம். ஏன் இப்படி குளறுபடி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
ராஜிவ் செய்த ஒரே உருப்படியான செயல் இந்தியா-இலங்கை ஒப்பந்தமே. அதைக்கெடுத்தது இப்போது ஒப்பாரி வைக்கும் கூட்டமே.

dondu(#11168674346665545885) said...

@மாணிக்கம்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. விசா கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதை ஏதோ ஆர்வக் கோளாறில் செய்திருப்பார்களாக இருக்கும். எது எப்படியாயினும் இதையாவது செய்து வருகையை தடுத்தார்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். //

என்னய்யா உங்கள் கற்பனை!?

வயது முதிர்ந்தால் மட்டும் போதாது!

உங்களுக்குத்தான்!

அரவிந்தன் said...

//அதை ஏதோ ஆர்வக் கோளாறில் செய்திருப்பார்களாக //

உங்க ஆர்வக் கோளாறுக்கு ஒரு அளவு வேண்டாமா.?

dondu(#11168674346665545885) said...

@அத்திவெட்டி ஜோதிபாரதி
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் சொன்னது மாதிரித்தான் நடந்திருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுதர்ஷன் said...

//அப்படியே உள்ளே வந்தால் என்ன செய்திருப்பார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்//

என்ன இது ? புலிகளின் ஆதரவாளர்களா ? அப்ப நீங்க எல்லாம் யாரு எதிராளிகளா ? சரி ஓகே உங்கள் பார்வையில் புலிகள் வேறு தமிழர் வேறு ? தமிழர்களுக்கு சாதகமானவர்கள் தானே நீங்கள் . எங்க உரிமையை வாங்கி குடுங்க பாப்பம் .....அடங்காமல் நிமிர்ந்து நின்றது குற்றமா ??

சரி ராஜீவ் கொலையாளிகள் வரக்கூடாது . அப்ப தமிழர் கொலையாளிகள் வரலாமா ?? கிரிக்கெட் எல்லாம் பாதிருக்காங்கையா ...

உங்கட சில்லறைத்தனமான அரசியல் விளையாட்டை விட அந்த அம்மா வந்தா சட்ட ஒழுங்கு சீர் குலைஞ்சிடுமோ ?

யாருக்காக அழுகிறமோ இல்லையோ கருணாநிதி செத்தா தீபாவளி தான்

தமிழ் குரல் said...

டோண்டு சார்,

உங்களுகெல்லாம் தமிழர்கள் என்றால் மனிதர்களாக தெரிய வாய்ப்பில்லை...

புலிகளின் வன்மம் பற்றி பேச... எந்த அரச பயங்கரவாதிகளான இந்தியாவிற்கு எந்த அருகதையும் இல்லை...

இந்த நிகழ்வை கண்டு மகிழும் நீங்கள்... கன்னட பிரசாத்தின் வாடிக்கையாளர் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு வெளிநாட்டில் இருந்து... பெண்களை சப்ளை செய்யும் போது மகிழ்ச்சி அடைய வேண்டும்...

85 வயது பெண்மனி யாராக இருந்தால் என்ன? அவருக்கு தமிழ் நாட்டில் நிறைய உறவினர்கள் உண்டு... அவர் வருவது சிகிச்சைக்கு...

போற போக்கை பார்த்தால்... மருத்துவ மனைகளில் பார்ப்பனர்கள் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் சொல்வீர்கள் போல் தெரிகிறது...

வஜ்ரா said...

//
@மாணிக்கம்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. விசா கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதை ஏதோ ஆர்வக் கோளாறில் செய்திருப்பார்களாக இருக்கும். எது எப்படியாயினும் இதையாவது செய்து வருகையை தடுத்தார்களே.
//

இலங்கை பாஸ்போர்ட் உள்ளவர்கள் இந்தியாவர விசா எல்லாம் வாங்கத்தேவையில்லை என்றே நினைக்கிறேன். அல்லது எமர்ஜென்சி சர்டிஃபிக்கேட் வைத்திருக்கலாம். இலங்கைவாசிகள் அதை வைத்துக்கொண்டு விசா வாங்காமல் உள்ளே நுழையலாம்.

மணிஜி said...

சார்..இப்ப மட்டும் இங்கு புலிஆதரவாளர்கள் இல்லையா? கலவரமா நடக்கிறது?பிரபாகரனை தமிழக மக்கள் எந்தளவுக்கு மதித்தார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்தது. ஆனால் இந்த அம்மா விஷயத்தில் இந்த கெடுபிடி தேவையில்லை என்பது என் கருத்து. மனிதாபிமானம் என்று ஒன்று இருக்கிறதே..(முன்பின் தெரியாத ஒரு பதிவருக்காக நாம் செய்த விஷயங்கள் நீங்கள் அறிந்ததே..)

Azhagu Selvan SP said...

இப்படி எழுதுற உங்கள மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும், தமிழினம் குண்டி அடிக்கபட்டுகொண்டே தான் இருக்கும்.

அட சீ!

மணிஜி said...

அட ! பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக இதனை மைனஸ் ஓட்டா? நான் ஒரு + போடறேன் சார்..

ஆளவந்தான் said...

ஜஸ்ட் இக்னோர்.. ( நான் உங்க பதிவ சொன்னேன்).

வெற்றி-[க்]-கதிரவன் said...

டோண்டுவை நான் இந்திய பாதுகாப்பு ஆலோசகாரா நியமிக்க சிபாரிசு செய்கிறேன்

-வெற்றிக்கதிரவய்யர்

dondu(#11168674346665545885) said...

@மணிஜீ
நாட்டு நலன் விஷயத்தில் செண்டிமெண்ட் பார்க்கலாகாது. நான் சொன்னவை நடந்திருக்கும் வாய்ப்பு அதிகமே. எப்படியும் ஏன் விஷப்பரீட்சை? அரசை நடத்துபவர்கள் இதையெல்லாம் யோசிக்காமல் செயல்பட வேண்டுமா?

அப்பெண்மணி புலிகள் ஆதரவாளர்களுக்கு ஒரு rallying point ஆக அமைவதற்கான அத்தனை வாய்ப்புக்களும் இருந்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Rettaival's Blog said...

உங்கள் மனிதாபிமானம் புல்லரிக்க வைக்கிறது. ஒரு வயதான பெண்மணியைப் பார்த்து ஒரு அரசாங்கம் இவ்வளவு தடுமாறுமானால் , விசா வழங்கியும் மறுத்தும் விளையாடுமானால் நமக்கெதுக்கு சோறு. வேறு எதையாவது தின்று விட்டுப் போகலாமே...

ஒரு சக உயிரினமாகவும் மதிக்கத் தெரியாத இனமாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதின் வலி இது. ஒரு உயிரைக் காப்பாற்றும் திறமை இருந்தும் அதை செய்ய வக்கில்லாமல் போனால் யாரும் நம்மை மன்னிக்க மாட்டார்கள், கடவுள் உட்பட.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வெற்றி-[க்]-கதிரவன் said...
டோண்டுவை நான் இந்திய பாதுகாப்பு ஆலோசகாரா நியமிக்க சிபாரிசு செய்கிறேன்

-வெற்றிக்கதிரவய்யர்
//

திரு வெற்றிக்கதிரவய்யர்,

டோண்டு ராகவன் அவர்களை பார்டருக்கு அனுப்புனா குண்ட புடிச்சு வீசுவாரு!

இதுக்கு எதிர் கடை போடுறதுக்கு பதிலா சதீஸ்கரில் கொல்லப்பட்ட இந்திய அதிகாரிகளைக் காப்பாற்ற பாடுபட்டிருக்கலாம் டோண்டு!

மணிஜி said...

டோண்டு சார்..நாட்டு நலன்னனு புண்ணாக்கு இல்லை. இங்க இருக்கிற மாவோயிஸ்ட்டை சமாளிக்க முடியலை. நேத்திக்கு சின்னசாமி ஸ்டேடியம் குண்டுகள் தெரியும் நமக்கும். இதில் நம் உணர்வுக்கு கொஞ்சமாவது மரியாதை ..இல்லை அங்கீகாரம் வேணும் சார்.. சோ மாதிரி எல்லாவற்றையும் நீங்கள் பார்ப்பது தவறு சார்.. சோ ஒன்னும் அத்தாரிட்டி இல்லை எல்லாவற்றுக்கும்..அவரும் ஊசலாடுபவர்தான்..

மணிஜி said...

டோண்டு சார்.இந்த அரசாங்கம் என்னமோ நாட்டு நலனுக்கு இருக்கிறாப்ல சொல்றீங்க.. தி.தே . பசங்க சார்.. (தேன்னா தப்பா நினைக்காதீங்க..நான் தேங்காயை சொல்றேன்)

ராஜேஷ், திருச்சி said...

தேவையற்ற வன்மம்.. கிடைத்த சான்ஸ் யூஸ் பண்ணி கருணாநிதி எதிர்ப்பு.. சூப்பர்

வஜ்ரா said...

//
இப்படி எழுதுற உங்கள மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும், தமிழினம் குண்டி அடிக்கபட்டுகொண்டே தான் இருக்கும்.

அட சீ!
//

தமிழிணத்திற்கு யார் கு. அடிக்கிறார்கள் என்பது நீங்கள் சொல்லித் தெரியத் தேவையில்லை.

மத்தியில் ஆழும் அரசில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் மத்திய மந்திரிகள். அதில் இருவர் தி.மு.க குடும்பத்தவர்கள். அவர்கள் எல்லாம் சேர்ந்து தமிழினத்தை ஓசியில் ___________கொண்டு இருக்கும் போது தனியாக கு.அடிப்பது எல்லாம் இயலாத காரியம்.

முதலில் ஓசி _____ வாங்கிக்கொண்டிருக்கும் தமிழினத்தைப் போய் காப்பற்றவும்.

Anonymous said...

//
டோண்டுவை நான் இந்திய பாதுகாப்பு ஆலோசகாரா நியமிக்க சிபாரிசு செய்கிறேன்

-வெற்றிக்கதிரவய்யர்
//
சீனப்பாதுகாப்பு ஆலோசகர் வெற்றிக்கதரவய்யர் அவர்களே,

இப்புடி ஐயர்கள் சிபாரிச் செஞ்சு செஞ்சுத்தான் நாடே குட்டிச்சேகுவேராவா..சீ ..குட்டிச்செவராப் போய்க் கெடக்கு..

bala said...

Dondu,

This is a very wrong view.By denying much needed medical care for an old woman,central and state Govt have sunk to very low levels of depravity and morbidity.

When I heard about this,I felt ashamed to have been born a Tamilian and an Indian.I have been gripped with that feeling of shame and sadness ever since.

But then, what else you can expect from a Govt of pseudo secularists and Dravidian politicians.Only deceit and utter disregard for human values have characterized these guys.

Having allowed Sinhala Budhists to kick tamils asses and then later denying entry to an old lady,even if she happens to be Prabhakarans mother,I believe Indian Govt have earned the wrath of tamils;forget the wrath,no matter which way you look at,this is a third rate and despicable act from both central and state govt.

நாமக்கல் சிபி said...

சார்..இப்ப மட்டும் இங்கு புலிஆதரவாளர்கள் இல்லையா? கலவரமா நடக்கிறது?பிரபாகரனை தமிழக மக்கள் எந்தளவுக்கு மதித்தார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்தது. ஆனால் இந்த அம்மா விஷயத்தில் இந்த கெடுபிடி தேவையில்லை என்பது என் கருத்து. மனிதாபிமானம் என்று ஒன்று இருக்கிறதே..

இதேதான் என் கருத்தும்!

ஒரு குட்டு குட்டிக்கிறேன்(-)

வெற்றி-[க்]-கதிரவன் said...

//Anonymous said...
//
டோண்டுவை நான் இந்திய பாதுகாப்பு ஆலோசகாரா நியமிக்க சிபாரிசு செய்கிறேன்

-வெற்றிக்கதிரவய்யர்
//
சீனப்பாதுகாப்பு ஆலோசகர் வெற்றிக்கதரவய்யர் அவர்களே,

இப்புடி ஐயர்கள் சிபாரிச் செஞ்சு செஞ்சுத்தான் நாடே குட்டிச்சேகுவேராவா..சீ ..குட்டிச்செவராப் போய்க் கெடக்கு..
//


மன்னிக்கணும் நான் இஸ்ரேல் போய் இப்ப தான் ட்ரைனிங் எடுக்க போறேன் அப்பறம் தான் எனக்கு போஸ்டிங் வொர்க் எல்லாம் கொடுப்பாங்க அதுவரை சோ & கோ டெய்லி பேஸ் தத்துவங்களை கற்றுக்கொள்ள சொன்னார்கள்


(அனானி பின்னூட்டம் டோண்டு சார் போடாத பட்சத்தில், அவர்கள் உண்மை பெயரில் போட்டிருக்கலாம்)

raja said...

மிஸ்டர் டோண்டு.. (என்ன பேருங்க இது) உங்கம்மாவுக்கு முடியாம போச்சுன்னாக்கூட இப்படித்தான் யோசிப்பிங்களா.. உங்க வீட்லயும் குடும்ப அரசியல் இருக்கும்.. அதுக்காக அவங்க எக்கெடு கெட்டுப்போன என்னன்னு வீட்ருவீங்களா.. என்ன மனசுய்யா உங்க மனசு..

KANTHANAAR said...

////பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும். ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்.////
அட ஆமாம் ஆமாம்... பின்னே நாம் எத்தனை செலவு பண்ண வேண்டியிருக்கு.. வருசா வருசம் தியாகய்யர் உச்சவத்த லைவ்வா டிவியில காட்ட செலவு ப்ண்ணணும்..்.. வளர்ப்பு மகன் கலியாணம் நடத்த மொத்த போலீஸ் படைய உபயோகிக்க செலவு ப்ண்ணணும்.. போபோர்ஸ் ஆரம்பிச்சி ஊர்ல இருக்கற அத்தனை ஊழல் பண்ணி அத சரிகட்ட செலவு ப்ண்ணணும்.. வரதராச பெருமான காப்பாத்த செலவு ப்ண்ணணும்.. இப்படி எத்தனையோ செலவு இரு்க்கு.. போயும் போயும் 85 வயசு கிளவிக்கு செலவு பண்ணுவாளா.. பகவானுக்கே அடுக்காதுன்னா..
கந்தசாமி

Anonymous said...

அய்யா டோண்டு அவர்களே..

நான் ஒன்றும் புலி ஆதரவாளன் அல்ல. ஆனால் புலிகள் இயக்கம் பற்றி சிறிதளவு தெரிந்தும் வைத்திருக்கிறேன். நான் பேச வந்தது அவர்களைப் பற்றி அல்ல. பார்வதியம்மாள் வயதானவர். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர். அதைவிட சற்று மனநலமும் குன்றியவர். இந்த நிலையில் அவரது மருத்துவச் சிகிச்சைக்கு நீங்கள் எதிராகப் பேசுவது வருத்தமாக இருக்கிறது. நெடுமாறனோ, வைகோவோ ஏன் கருணாநிதியோ அவரை வைத்து அரசியல் பண்ணுவார்கள் என்பதால் அந்த வயதான மூதாட்டியின் வைத்தியத்தை மறுத்தளிப்பது சரியா?

உங்கள் பதிவுகளை நான் இதற்கு முன்பு படித்தது இல்லை. முதல் முதலில் படிக்கிறேன். உங்களுடைய மனம், ஏதோ சாடிஸ்ட்டாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன். உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் புலிகள், பிரபாகரன் மீது ஒருவித எரிச்சல் வெளிப்படுகிறது.

நீங்களும் வயதானவர்தான் என்று நினைக்கிறேன். பிரபாகரனை மகனாகப் பெற்றது அவரது குற்றமா? இந்திய அரசு அவருக்கு விசா கொடுக்காமல் இருந்திருந்தால் அவர் ஏன் இங்கே வரப் போகிறார். ஆனால் அவரைத் திருப்பி அனுப்பிய இந்திய அரசைப் பாராட்டுகிறீர்கள். ஐயா, உங்கள் எண்ணங்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.

உண்மைத்தமிழன் said...

என்னால முடிஞ்சது ஒரு மைனஸ் ஓட்டு..!

குத்திட்டேன்..!

dondu(#11168674346665545885) said...

பார்வதி அம்மாள் என்பவர் மீது தனிப்பட்ட முறையில் என்ன கோபம் இருக்கவியலும்? ஆனாலும் அவரை வைத்து அரசியல் பண்ண பெரிய கும்பலே இங்கு காத்திருக்கிறது. அது பற்றித்தான் எனது பதிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அரவிந்தன் said...

//உங்களுடைய மனம், ஏதோ சாடிஸ்ட்டாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன்.//

சந்தேகமே வேண்டாம்..

Unknown said...

எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம். நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள். இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும். குஸ்புவுக்கு கோயில் கட்டிய கூட்டம் நல்ல பதிவு. —. "கள்ளமில்லா உள்ளம் தைக்கும் முள்ளையும் ஏற்கும்". என்றென்றும் நட்புடன் முல்லைமுகாம் mullaimukaam.blogspot.com

அரவிந்தன் said...

//பார்வதி அம்மாள் என்பவர் மீது தனிப்பட்ட முறையில் என்ன கோபம் இருக்கவியலும்? //

இதை பதிவில் சொல்லியிருக்கலாமே

dondu(#11168674346665545885) said...

@அரவிந்தன்
ஒரு நிகழ்வு நடந்திருந்தால் என்னென்ன மேற்கொண்டு நடந்திருக்கும் எனக் கூறத்தான் இப்பதிவு. அதில் பார்வதி அம்மாள் மீது தனிப்பட்ட விரோதம் என்றெல்லாம் எதுவும் இல்லை. என் பதிவைப் பார்த்ததுமே அது புரிந்திருக்க வேண்டும்.

கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை, நான் சொல்ல நினைத்ததை கூறினேன். அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

- யெஸ்.பாலபாரதி said...

நானும் ஒரு குட்டு குட்டிக்கிறேன்(-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

டோண்டுக்கு முடியாம போகும்போது ஆசுபத்திரியில அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்புனா, அதை நியாயம் என்று யாராவது கூவினால், அவருக்கு அவரு புள்ளங்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு எப்படி வலிக்குமோ அப்படித்தான் எனக்கும் இப்ப வலிக்குது!

இது இயல்பானது!

இது போன்ற சூழல் தனக்கு எற்படும் போது, டோண்டு அதை மனிதாபிமானத்துடன் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன்! அந்த வலியை தாங்கும் சக்தி அவரிடம் உண்டு என்று நம்புவோம்!

ஆளவந்தான் said...

//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...

டோண்டுக்கு முடியாம போகும்போது ஆசுபத்திரியில அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்புனா, அதை நியாயம் என்று யாராவது கூவினால், அவருக்கு அவரு புள்ளங்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு எப்படி வலிக்குமோ அப்படித்தான் எனக்கும் இப்ப வலிக்குது!
//

இதுல முக்கியமா, அனுப்புறவங்களுக்கும் இவருக்கும் “தனிப்பட்ட விரோதம்” இல்லாம இருந்தா இவருக்கு வருத்தம் இருக்காது. அப்டி தானே????

Anonymous said...

I think couple of years back when an Eelam blogger berated that he wished the same fate to your daughter that his Eelam Sisters were facing, i could not recognize his real anger at that time. But seeing your post here, i understand his anger now.

Mr. Dondu, please think for a second about the old lady (who is like your mother) and not about the goddamn geo-politics that our country is ineffectively involved in.

As an ardent reader of your blog post, i am really disappointed. Please remove this post.

-Venkat

Anonymous said...

// அப்படியே உள்ளே வந்தால் என்ன செய்திருப்பார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும். ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்.//
டோண்டு அவர்களுக்கு சில கேள்விகள்.
பிரஸ் மீட்டுகளும் அழுவாச்சி பேட்டிகளும் எப்படி நாட்டை கெடுத்து விடும் என நினைக்கிறீர்கள்?
கணிசமான தொகையா? நாட்டை சுரண்டிக் கொழுக்கும் அரசியல் வாதிகளுக்கு சம்பளத்துடன் எல்லா மருத்துவ, ஊர் சுற்றும் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறோமே அதை விட கணிசமானதா? சுடுகாட்டு கூரை முதல் பீரங்கி வரை மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை விடவா?
கொஞ்ச நாளே வாழப் போகும் ஒரு வயதான பெண்மணிக்கு செய்யும் மருத்துவ செலவு பற்றிய உங்கள் அக்கறை அருமை.

Anonymous said...

டோண்டுவின் ஒரே போயிண்ட் - அதை திரும்பதிரும்ப பின்னூட்டத்தில் சொல்லிவிட்டார் - பார்வதி அம்மாள் சிகிச்சைக்கு சென்னையில் இருந்தால், அந்நிகழ்வைப் பயன்படுத்தி கலாட்டா செய்வார்கள் புலி ஆதரவாளர்கள.

ஆர் இந்த ஆதரவாளர்கள்? திருமா, வைகோ, நெடுமாறன், திகவினர் போன்றவர்கள்.

இது மிகையான வாதம்.

அப்படியே அவர்கள் செய்யினும் கூட, அதை அரசு நன்றாக சமாளிக்க முடியும்: அதாவது அசம்பாவிதங்கள் ஏற்படாவண்ணம். என்ன சத்தம் போடுவார்கள். கொடி ஏந்துவார்கள். சிறை நிரப்புவார்கள். அரசால் சமாளிக்கமுடியாதா?

புலி அனுதாப அலை என்று ஒன்றும் இன்று இல்லை. அதற்கு பல கரணியங்கள் உள். அவற்றுள் முதலாவது: தமிழ்நாட்டுத்தமிழன் அடைப்படையில் ஒரு பயந்தானங்கொள்ளி ம்ற்றும் தன்னலம் பேணுபவன். இவனை இப்படி மாற்றிவைத்தது பார்ப்ப்னிய இந்துமதம். என்று பார்ப்பனீயத்திற்கு அடிமையானானோ அன்றே தமிழன் கோழையானான்.

எனவே எந்த சலசலப்பும் சீக்கிரம் ஓய்ந்து மக்கள் தத்தம் வேலைகளுக்குப்போய்விடுவர்.
பார்வதி அம்மாள் சிகிச்சை முடிந்து ம்லேசியா திரும்பி விடுவார். அவ்வள்வுதான்.

பார்வதி அம்மாள் விசயத்தில், புலிஆதரவாளர்கள் செய்த, அல்லது செய்யும் அரசிய்லை விட, புலி எதிர்ப்பாளர்கள் செய்யும் அரசியலே கூடல்.

80 வய்து பெண் ஒரு rallying point என்பதெல்லாம் ஒரு paranoia.

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.

Anonymous said...

இலங்கை பாஸ்போர்ட் உள்ளவர்கள் இந்தியாவர விசா எல்லாம் வாங்கத்தேவையில்லை என்றே நினைக்கிறேன். அல்லது எமர்ஜென்சி சர்டிஃபிக்கேட் வைத்திருக்கலாம். இலங்கைவாசிகள் அதை வைத்துக்கொண்டு விசா வாங்காமல் உள்ளே நுழையலாம்.//

ஸ்ப்பா.. இன்னும் இலங்கையை இந்தியாவின் கொலனி (காலனி)யாகத்தான் நினைக்கிறாங்கப்பா..

விசா கட்டாயமாக வேண்டும். ஆனா எந்த நாட்டு இந்திய தூதரகமென்றாலும் காசு வாங்கிட்டு விசா தர்றாங்க இந்திய தூதரக காரங்க..

வஜ்ரா said...

மருத்துவத்திற்காக மட்டுமே அனுமதி வழங்கியிருக்கலாம்.
பொது மேடைகளில், அரசியல் மற்றும் அரசியல் அல்லாத கூட்டங்களில் கலந்துகொள்வது போன்ற விஷயங்களுக்கு அனுமதி மறுத்திருக்கலாம். பேட்டி கொடுப்பது கூட தடை செய்யப்பட்டிருக்கலாம். நாட்டிற்குள்ளேயே வரக்கூடாது என்பது கொஞ்சம் ஓவர் தான்.

ஒன்று கவனித்தீர்களா, இங்கு அந்த சைடுக்கு ஜால்ரா தட்டுபவர்களில் எவனுமே ஆம்பளை மாதிரி தெரியல்லை. ஏன்னாக்க..மத்திய மந்திரி சபையில் தி.மு.க அங்கம் வகித்துக்கொண்டிருந்தாலும் தொப்புள் கொடி உறவுக்காரனை இப்படி சாகவிட்டதுக்கு அங்கே போய் கேள்வி கேட்கத் துப்பில்லாமல் இங்கே வந்து சோ பற்றி பேசுகிறார்கள்.

என்னமோ சோ வும் சு.சாமியும் ஐகோர்ட்டில் கேஸ் போட்டு அந்த அம்மாவை ஊருக்குத் திருப்பியனுப்பியது போல...

இப்படிப்பட்ட ஒம்போதுப்பசங்களையெல்லாம் எவனாவது கு.அடிக்காமல் இன்னும் விட்டுவைக்கிறான் என்றால் தான் தப்பு.

Itsdifferent said...

Everyone talked about the individual, Dondu talked about the politics that would have happened around that individual.
Emotion vs pragmatism.

மாயாவி said...

ராஜீவ், ஜே.ஆர்.ஜெயவர்தன ஒப்பந்தத்தில என்ன இருக்குனு தெரியாமலேயே அது நல்ல ஒப்பந்தம் அப்படீன்னு எதுக்கு ஜால்ரா?

இந்தியாவிற்க்கும், பாக்கிஸ்தானுக்கும் சண்டை. ஆனால் அமெரிக்காவும் பாகிஸ்தானும் ஒப்பந்தம் செய்து கொண்டால் இந்தியா அதை ஏற்குமா???

ராஜீவ் செய்தது அதைத்தான். அதன் பலன், ஜெயவர்தனா மாதிரியான ஒரு அரசியல் பெருச்சாளிகிட்ட ராஜீவ் மண் கவ்வினதுத்தான் மிச்சம்.

அதற்க்கு உண்மையான காரணம் உங்களை மாதிரி விபரம் புரியாத ஜே.என்.டிக்ஸிட், ரொமேஸ் பண்டாரி, நாராயணன் கூட இருந்ததுதான்.

ராஜீவை மனித வெடிகுண்டாக மாறி கொலை செய்த பெண் இந்திய ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டவர் அப்படீங்கிறதை ஞாபகம் வச்சுக்குங்க!!

இந்த ஒரு வயசு போன அம்மாவிற்க்கே இந்தப் பயம் அப்படீன்னா???

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பார்வதி அம்மாள் என்பவர் மீது தனிப்பட்ட முறையில் என்ன கோபம் இருக்கவியலும்? ஆனாலும் அவரை வைத்து அரசியல் பண்ண பெரிய கும்பலே இங்கு காத்திருக்கிறது. அது பற்றித்தான் எனது பதிவு.
//

சூப்பர் சார்.. எப்படி சார் இப்படி?..

ராஜ பட்ஷே, இங்கு வந்து, கோயில் , குளம் என சுற்றியபோது வராத, பிரச்ச்சனை..இந்த மூதாட்டி வருவதால் உண்டாகப்போகிறதா?...

அவருக்கும், காவல்துறை பாதுகாப்பு அளித்தது..

( சார்.. இனி பேசாமா, சாருவை நீங்கள், ’மகாத்மா’ என அழைக்கலாம்..)

பட்டாபட்டியின் கார், சரியாக 10 விநாடிகளில்..இந்த பதிவிலிருந்து வெளியேறியது..

Suresh Ram said...

தமிழ் குரல் said...
உங்களுகெல்லாம் தமிழர்கள் என்றால் மனிதர்களாக தெரிய வாய்ப்பில்லை...
Jo Amalan Rayen Fernando said...
தமிழ்நாட்டுத்தமிழன் அடைப்படையில் ஒரு பயந்தானங்கொள்ளி ம்ற்றும் தன்னலம் பேணுபவன்...
S.Sudharshan said...
ஓகே உங்கள் பார்வையில் புலிகள் வேறு தமிழர் வேறு ?....
யாருக்காக அழுகிறமோ இல்லையோ கருணாநிதி செத்தா தீபாவளி தான்
வஜ்ரா said...
ஒன்று கவனித்தீர்களா, இங்கு அந்த சைடுக்கு ஜால்ரா தட்டுபவர்களில் எவனுமே ஆம்பளை மாதிரி தெரியல்லை...
மணிஜீ...... said...
இப்ப மட்டும் இங்கு புலிஆதரவாளர்கள் இல்லையா? கலவரமா நடக்கிறது...
மாயாவி said...
ராஜீவை மனித வெடிகுண்டாக மாறி கொலை செய்த பெண் இந்திய ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டவர் அப்படீங்கிறதை ஞாபகம் வச்சுக்குங்க!!...

dondu(#11168674346665545885) said...

இந்திய அரசு என்பதன் முதல் வேலையே நாட்டின் நலனே. அதிலெல்லாம் உணர்ச்சிவசப்பட முடியாது.

அப்பெண்மணி இங்கு வந்திருந்தால் என்னவெல்லாம் சீன் போடலாம் என பெரிய அஜெண்டாவே வைத்திருந்தார்கள். அவற்றை தவிர்த்தது புத்திசாலித்தனமான செயல்.

வைத்திய உதவிக்கு இந்தியாதான் கிடைத்ததா? மலேசியா சிங்கப்பூரில் இல்லாத வைத்திய வசதிகளா?

அப்போதும் பாலசிங்கத்துக்கு வைத்திய உதவி என்னும் பெயரில் இந்தியாவினுள் நுழைக்கப் பார்த்தார்கள். நல்ல வேளையாக நடக்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்திய அரசு என்பதன் முதல் வேலையே நாட்டின் நலனே. அதிலெல்லாம் உணர்ச்சிவசப்பட முடியாது.
//

ஆமாம்..ஆனால், எந்த நாடு சார்?.. இத்தாலியா?..


// அப்பெண்மணி இங்கு வந்திருந்தால் என்னவெல்லாம் சீன் போடலாம் என பெரிய அஜெண்டாவே வைத்திருந்தார்கள். அவற்றை தவிர்த்தது புத்திசாலித்தனமான செயல்.//

அதை நேராக சொல்லியிருக்கலாமே..
அப்படிச்சொன்னா, அடுத்து ஓட்டு கிடைக்காதே?

// வைத்திய உதவிக்கு இந்தியாதான் கிடைத்ததா? மலேசியா சிங்கப்பூரில் இல்லாத வைத்திய வசதிகளா?//

இவர்கள் என்ன தனிவிமானத்தில, முரசொலி மாறனை, அமெரிக்கா அனுப்பியதுபோல அனுப்பமுடியமா?
அந்தளவுக்கு வசதி வாய்ப்பு இல்லை என நினக்கிறேன்..
பாவம்.. மகன், மகள், மறுமகள், மறுமகன், பேரன், பேத்தி யாரும் ஆட்சியில் இல்லையே...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்திய அரசு என்பதன் முதல் வேலையே நாட்டின் நலனே. அதிலெல்லாம் உணர்ச்சிவசப்பட முடியாது.
//


அமெரிக்க அதிபர் வந்தபோது வராத பிரச்சனை..
Exபாகிஸ்தான் அதிபர் வந்தபோது வராத பிரச்சனை..
தலாய்லாமா வந்தபோது வராத பிரச்சனை..
ராஜபட்சே வந்தபோது வராத பிரச்சனை..
.
.
இந்த வயதான முதியவர் வரும்போது வந்திடுமா சார்?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

dondu(#11168674346665545885) said...

@மாணிக்கம்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. விசா கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதை ஏதோ ஆர்வக் கோளாறில் செய்திருப்பார்களாக இருக்கும். எது எப்படியாயினும் இதையாவது செய்து வருகையை தடுத்தார்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

இதில என்ன ஆர்வம் இருக்கிறது என்பதை , அடியேனுக்கு சொல்கிறீர்களா சார்?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மீண்டும் தமிழகம் சென்று மருத்துவம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று பார்வதியம்மாள் அறிவித்தால், அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அது பற்றி கடிதம் எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது. - கலைஞர்
//


நாட்டு நலன் சீர்பட்டுவிட்டதா என்பதை தெளிவுப்படுத்துங்கள் சார்...

bala said...

//அவற்றுள் முதலாவது: தமிழ்நாட்டுத்தமிழன் அடைப்படையில் ஒரு பயந்தானங்கொள்ளி ம்ற்றும் தன்னலம் பேணுபவன். இவனை இப்படி மாற்றிவைத்தது பார்ப்ப்னிய இந்துமதம். என்று பார்ப்பனீயத்திற்கு அடிமையானானோ அன்றே தமிழன் கோழையானான்.//

Jo Amalan Rayen D'souza Sancho Panza Fernando ,

Vajra is correct.It is the so called dravidian tamils who let down Eelam tamils and got their asses kicked by Sinhala Budhists.It is Tamils like you who either out of greed or hate or both,gave up your tamil identity and converted to Christianity (and imagined that you have become on par with the European whites or the Arabian Jihadists), who have let down tamils and betrayed their interests.

Tamils lost because they thought that they have nothing in common with India, forgetting their roots and became dravidian,christian,or Islamic fanatics.Tamils are paying the price for their sin.

bala said...

//இந்திய அரசு என்பதன் முதல் வேலையே நாட்டின் நலனே. அதிலெல்லாம் உணர்ச்சிவசப்பட முடியாது...//

Dondu,

Is this a joke?Since when the Govt of pseudo secularists and dravidian fanatics been acting in the interest of India and Indians?

Sendhilkumar AV said...

Appaavi Iyer pasanga Sri lanka la kootama sethirunthanganna intha Donduvum, Cho vum support panniuyruppanaganunga.

thamizan vera.. paapanunga verannu Dondu reminding..ivanunga pesama tamil naattai gaali panniutu porathu nallathu.

Suppose it is WB or Maharashtra, Cho vum intha Dondu vaium eppavo thookiruppanunga!

Cheers, Sendhil

சக்திவேல் said...

கிழவி வருவதால் அதைவைத்து தமிழக மக்கள் மனம் மாறிவிடுவார்கள் என்று பயந்து அலறுறீங்களே. ஒரு விசயத்தை நினைத்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. வரவே மாட்டார் என்று நீங்கள் நம்பிக்கொன்டிருக்கும் அவர் வந்தால் என்ன ஆவீர்கள்?

Madhavan Srinivasagopalan said...

டோண்டு சார், உங்கள் கருத்துக்கள் சரியானவையே.
மேலும், அவர் பின்வரு நாட்களில் MLA , MP , மந்திரி கூட ஆகியிருப்பார்.

chandra said...

Dondu sir,

whatever you have said is well said. The dissenter will say anything, but deeply meaningless words. They cannot think of other alternative that is why they tend to throw words like it comes.

good luck

chandra

Jawahar said...

உணர்வு தூக்கலாக இருக்கும் பிரச்சினை இது.

அறிவுப்பூர்வமான ஆய்வுகள் இதில் எடுபடாது.

எடுபடாதது மட்டும் இல்லை, தவறாக எடுத்துக் கொள்ளப்படுகிற அபாயமும் இருக்கிறது.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் சாத்தியமே.

Anonymous said...

ஜோ அமாலன் பிரனாண்டோ !!

உங்கள் கருத்துக்கள் எப்படியோ , ஆனால் விடாமல் அச்சு பிச்சு பின்னூட்டம் போடுவதில் மன்னன் நிங்கள். படிப்பதற்கு செம ஜாலியாய் இருக்கு. அமாலன் அய்யா தொடர்ந்து பின்னூட்டுங்கள் , நான் உங்கள் ரசிகன்.

ஆராவமுதன்

Veliyoorkaran said...

டோண்டு அண்ணேன் வணக்கம்..நீங்க என்ன சாதி என்ன மதம் அதெல்லாம் எனக்கு தெரியாது...நீங்க என்னவா வேணா இருந்துட்டு போங்க...ஆனா ,நீங்க சொன்ன கருத்து தப்புன்னேன்...மாத்திக்கங்க..! உங்கள போய் 247 மடையனுக பாலோ பன்றானுகன்னு நெனைக்கரப்ப ரொம்ப ஆச்சர்யமா இருக்குன்னேன்..! ஒரு கெழட்டு சிறுக்கிய வைத்தியம் பார்க்கவிடாம திருப்பி அனுப்புன பொட்டை அரசாங்கத்துக்கு சொம்படிக்கரத நீங்க பெருமையா நெனைச்சீங்கன்னா.,உங்கள திரும்பி அடிக்கறத நானும் பெருமையா நெனைப்பேன்...! இத நீங்க போஸ்ட் பண்ணலைனா உங்கள தாறுமாறா கிழிச்சு தனி பதிவு போடுவேன்...அதுல மொதோ கமென்ட் இதான்...!!
Now,You are under arrest..!

Kodees said...

//ராஜ பட்ஷே, இங்கு வந்து, கோயில் , குளம் என சுற்றியபோது வராத, பிரச்ச்சனை..இந்த மூதாட்டி வருவதால் உண்டாகப்போகிறதா?...//

என்ன பதில் சார்!

dondu(#11168674346665545885) said...

@ஈரோடு கோடீஸ்
ராஜபட்சே இங்கு வந்தது ராஜரீக உறவுகள் கீழே வருகிறது. அதையெல்லாம் இந்த கேசில் போட்டு குழப்பிக் கொள்ளலாகாது.

@சக்திவேல்
அப்படியே வந்தால் எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து அனுமதித்திருப்பார்கள் என விட்டிருப்பேன். ஆனால் எனது ஆட்சேபணைகளில் மாற்றம் இல்லை.

அன்புடன்
டோண்டு ராகவன்

Anonymous said...

//அப்படியே உள்ளே வந்தால் என்ன செய்திருப்பார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள்//

பாப‌ர் கால‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ம‌சூதியை வைத்து அர‌சிய‌ல் ப‌ண்ணிய‌து ச‌ரி என்றால், பார்வ‌திய‌ம்மாளை வைத்து அர‌சிய‌ல் செய்வ‌து ஒன்றும் த‌வ‌றில்லை.

//எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம். நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள். இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்.//

மாகாத்மா காந்தி கொலையில் முக்கிய‌ ப‌ங்கு வ‌கித்த‌ குற்ற‌த்திற்காக‌, ஆயுள் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு, 14 ஆண்டுகள் த‌ண்ட‌னை அனுப‌வித்த‌ பின்ன‌ரும் உச்ச‌நீதிம‌ன்ற‌ம் விடுத‌லை செய்ய‌ ம‌றுத்த‌, கோபால் கோட்சேவை விடுத‌லை செய்த‌து ம‌ராத்திய‌ அர‌சு. விடுத‌லைக்கு பின்பும் காந்தி கொலையை நியாய‌ப் ப‌டுத்திப் பேசிய‌ கோபால் கோட்சேவின் வீடு நினைவ‌க‌ம‌க‌ செய‌ல்ப‌டுவ‌து ச‌ரியென்றால், பிர‌பாக‌ர‌னுக்கு நினைவ‌க‌ம் அமைப்ப‌தும் ச‌ரியே!
அது என்ன‌ கோட்சேவுக்கு (பிராமின்)ஒரு நியாய‌ம், பிர‌பாக‌ர‌னுக்கு (பிராமின் இல்லாத‌) ஒரு நியாய‌ம்?


-கிருஷ்ண‌மூர்த்தி

Suresh Ram said...

//சக்திவேல் said...
வரவே மாட்டார் என்று நீங்கள் நம்பிக்கொன்டிருக்கும் அவர் வந்தால் என்ன ஆவீர்கள்?//
கட்டைவிரல் சாமியார் said
ரஜினி அரசியலுக்கு வர மாட்டார். பின் நாளில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ்அரசியலுக்கு வருவார், என்றார்

கால் பேருவிரலின் அமைப்பு கஜமுக அமைப்பு
http://www.tamilthunder.com/forum/archive/index.php/t-35053.html

மங்குனி அமைச்சர் said...

///Veliyoorkaran said...

டோண்டு அண்ணேன் வணக்கம்..நீங்க என்ன சாதி என்ன மதம் அதெல்லாம் எனக்கு தெரியாது...நீங்க என்னவா வேணா இருந்துட்டு போங்க...ஆனா ,நீங்க சொன்ன கருத்து தப்புன்னேன்...மாத்திக்கங்க..! உங்கள போய் 247 மடையனுக பாலோ பன்றானுகன்னு நெனைக்கரப்ப ரொம்ப ஆச்சர்யமா இருக்குன்னேன்..! ஒரு கெழட்டு சிறுக்கிய வைத்தியம் பார்க்கவிடாம திருப்பி அனுப்புன பொட்டை அரசாங்கத்துக்கு சொம்படிக்கரத நீங்க பெருமையா நெனைச்சீங்கன்னா.,உங்கள திரும்பி அடிக்கறத நானும் பெருமையா நெனைப்பேன்...! இத நீங்க போஸ்ட் பண்ணலைனா உங்கள தாறுமாறா கிழிச்சு தனி பதிவு போடுவேன்...அதுல மொதோ கமென்ட் இதான்...!! ////


ஆகா வெளியூரு இப்படியும் பிரபலம் ஆகலாம் போல , இரு நான் போய் பின் லேடன என் இந்தியாவுக்கு விருந்துக்கு அழைக்க வில்லைன்னு ஒரு பதிவு போட்டு நானும் மிகபெரிய பிரபல பதிவராகிடுறேன்

Srikanth Meenakshi said...

Dondu sir,

Has Mrs. Parvathi indulged in political activities here in the past? No. Has there been instances where she has been used politically in the past? No. Has there been instances when she has allowed such happenings? No.

If she had come, and something like that happened, what would be the worst consequence? A meeting happens, a few inconsequent people get some irrelevant political mileage, and life goes on. And the govt. would have had a better standing to turn her back the next time.

However, I don't think anything of that sort would have happened - she most likely would not have allowed it to happen.

What has happened, especially in the current context of a non-existent LTTE, is just bureaucratic over-reaction at best, and cruel prejudice at worst.

Let's not lose our humanitarian instincts just to spite people we don't agree with.

- Srikanth

Unknown said...

viduga sir.ivangallam evlo manithapimanam ullavanga.G.H vasala poi dailyum kilo 10 rubanu manithapimanam vikiravanga sir ivanga.

Guna said...

டோண்டு சார்

இந்த மாறி பேசுறது நாள்தான் எல்லோரும் ஏன் கடவுள் நம்பிக்கை உள்ள தமிழன் கூட பார்ப்பனப் பார்த்த புடிக்கறதில்லை.அது எப்படி சார் சொல்லி வெச்சமாரி அதனை பார்பனர்களும் ஒரே மாறி பேசறிங்க ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

லூசாப்பா நீ....!

ஹரி, சிங்கப்பூர் said...

வணக்கம் டோண்டு அவர்களே ! உங்கள் வயது 60 இருக்குமா ! பிராமண வால்களின் துதி பாடும் நீங்கள் என்றோ ஒரு நாள் மாரடைப்பு வரும் வேளையில் , தவறு தங்களுக்கு மாரடைப்பு வராது, இதயமில்லா இந்திய அரசியல் கிழங்களில்நீங்களும் ஒன்று தானே எனவே தங்களுக்கு கை கால்கள் இழுத்து கொள்ளும் பொழுது ,மருத்துவ மனை அடைய பாமர வீதி வழியே பயணிப்பீரா, அல்லது பாமர மக்கள் அன்று தங்களை போல் இதயம் தொலைத்து உங்களை தடுத்து நிறுத்தினால், அவர்களது செயலுக்கு வாழ்த்துரை வாசிப்பீரா ... தங்களுக்கு மகனோ , மகளோ இருப்பார்கலேயாயின் அவர்களிடம் கேளுங்கள் எது நியாயம் என்று, ஏன் நீரே ஒரு தாய்க்கு மகனாகதானே இருப்பீர்கள் , வானம் பெயர்த்து நீங்கள் பொழிய வில்லையே ???

Suresh Ram said...

/அது எப்படி சார் சொல்லி வெச்சமாரி அதனை பார்பனர்களும் ஒரே மாறி பேசறிங்க ?/
இப்படி பேசறவன் எல்லாம் பாப்பான் என்று முன்முடிவு ஆகிவிட்டது.அதான்

Anonymous said...

My initial reaction to this post was that it is sick and morbid and the thoughts of a pseudo nationalistic right wing person.

Thinking about it more, it also seems to be a deliberate ploy to get more hits (even if they result in negative votes). After all any advertisement is good advertisement.

Whatever it may be, it reeks of inhumanity.

Ajay

Anonymous said...

மூக்கு புடைப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோணும்

vasu balaji said...

ராஜீவ் ஜெயவர்த்தன ஒப்பந்தமா? அப்படியே சுபிட்சமாயிருக்குமா? அப்போவும் ஹிந்து படிச்சிருப்பீங்களே சார். அன்னைக்கு மனசாட்சி இருந்தது எழுதினானே. இன்னமுமா ஒப்பந்தம்னு பேசுறீங்க? பக்கத்துலதான் புழல். ஒரு எட்டு நடந்து போய் என்ன நடந்ததுன்னு கேட்டுட்டு எழுதுங்க சார்.

ஈரோடு கதிர் said...

//தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்.//

அசிங்கமான கற்பனை...

முதன் முதலில் பின்னூட்டம் இடுகிறேன்.. ஒரு மைனஸ் வாக்குடன்..

பருப்பு (a) Phantom Mohan said...

சார் வணக்கம்!
உங்களைப் பார்த்தா எங்க தாத்தா மாதிரியே இருக்கேங்க! அந்தக் காலத்திலே BE படிச்சிருக்கீங்க..என்ன பண்ணி என்ன புண்ணியம்..இந்த செத்த சவம் இந்திரா வ கல்லல அடிச்சான்...வடக்கு தெக்குன்னு டயலாக் உட்டான்..இப்போ அதே சோனியா பின்னாடி திரியிறான்...

அந்த அம்மா இங்க வந்தா அரசியல் பண்ணுவாங்கள! ஏங்க லூச நீங்க? இரண்டரை மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தவன் இவன்...இவனப் பொய் சப்போர்ட் பண்ணிக்கிட்டு...பணம் குடுத்த எதுவும் நல்லாப் படிங்க எதுவும் பண்ணுவான் இவன்...தயவு செஞ்சு இந்த மாதிரி எழுதாதீங்க! எதாவது காமிடிய எழுதுங்க..சமையல் குறிப்பு எழுதுங்க..இந்த நாயைப் பத்தி சிங்கி அடிச்சு வேண்டாம்...

Unknown said...

//பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம்//
பிரபாகரன் ச்ம்மந்தப்ப்ட்டது என்றால் தமிழ், தமிழ்நாடு, தமிழன்.
இது எதுவுமே வேண்டாமென்றால்
எங்கே இடம் பெயர போகின்றீர்.

பிராமணர்கள் சுயநலவாதிகள் என்பதையும் தமிழனுக்கு எதிரிகள் என்பதையும் நன்கு நிரூபித்துள்ளீர்கள்.

க.பாலாசி said...

//நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை//

அய்யா..... பாத்தா வயசானவர் மாதிரி இருக்கீங்க... இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல... எத நாட்டு நலன்னு சொல்றீங்க?? இல்ல நினைக்குறீங்க...??

ILA (a) இளா said...

வயசுக்காக, உங்க மேல கொஞ்சம் மதிப்பும் மரியாதையும் வெச்சிருந்தேன். **லி பிரச்சினை அப்போ கூட விளம்பரத்துக்காக பண்ணிக்கிறார்னு நினைச்சுகிட்டு ஒரு சாஃப் கார்னர் இருந்துச்சுங்க. அதுவும் இந்தப் பதிவு பார்த்துட்டு போயிருச்சு. மதிப்பும் மரியாதையும் நாம நடந்துக்கிறதுலதான் இருக்குன்னு பெரியவங்க சொல்ல கேள்வி.

ரோகிணிசிவா said...

there are two ways of gaining popularity , and i believe u have do have gained it the other way "சர்ச்கைகுரிய விசயங்களை எதிர் வாதம் செய்து புகழ் அடைவது ஒரு அறிவார்ந்த செயல் அல்ல"
i should actually blame my self for reading and commenting it too,
are you really out of your mind to put these cheap arguments,wen u write something see to that u put-forth some good things,
just an internet connection ,todays paper, tamil type writer alone is not enough !!!!!

நூல்பொய்யன் said...

//ஒரு கெழட்டு சிறுக்கிய வைத்தியம் பார்க்கவிடாம திருப்பி அனுப்புன பொட்டை அரசாங்கத்துக்கு//

யாருப்பா பொட்டை? சின்ன பசங்களையும், பெண்களையும் மனித வெடிகுண்டுகளாக முன்னால் அனுப்பி, அவர்களை சாகவிட்டு, அவர்களுக்கு பின்னால் பதுங்கிக்கொண்டு தான் மட்டும் உயிர் வாழ்ந்துகொண்டிருந்த "மாவீரன்" தான் பொட்டை. அந்த பொட்டையை சேர்ந்த யாராக இருந்தாலும், அவர்களும் மனித வெடிகுண்டாக இருப்பதற்கு சாத்தியகூறுகள் இருப்பதால், இந்திய அரசாங்கம் எடுத்த முடிவில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. டோண்டுவுக்கு எதிராக வந்த கமெண்டுகளை பார்த்தால், அவை வன்மத்தில் எழுதப்பட்டவையே அன்றி நாட்டின் நலனை சிறிதும் கருத்தில் கொண்டவையாக தோன்றவில்லை.

Unknown said...

டோண்டு அவர்களே, இறந்த மகனை நினைத்து ஒரு தாய் விடும் கண்ணீரை பற்றி கூட இப்படி எழுத வேண்டுமா?
உங்கள் கருத்தை நீங்கள் பதிப்பது சரி. ஆனால் இப்படிபட்ட வார்த்தைகள் ஏன்?
இப்படி நடக்கும் அப்படி நடக்கும் என்பதெல்லாம் உங்களின் யுகம்

தேர்தல் நேரத்தில் எவ்வளவு போராட்டங்கள் , பிரஸ் மீட்டிங் நடந்தது.. தீ குளிப்பெல்லாம் நடந்தும் நீங்கள் நினைப்பது போன்ற அசம்பாவிதங்கள் என்ன நடந்தது?

//நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள். //
ஏனிந்த வெறி? அதான் காட்டினார்களே பிணத்தை.. பார்த்து சந்தொஷப்பட்டிருபிர்கள் என புரிகிறது.

அந்த அம்மையார், உல்லாச பயணமாக இங்கே வரவில்லை.. மருத்துவ உதவி கேட்டு தான் வந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?
பலரும் சொன்னது போல், விளம்பரம் தேடியே டோண்டு இந்த பதிவிட்டதாக படுகிறது

Guna said...

//இப்படி பேசறவன் எல்லாம் பாப்பான் என்று முன்முடிவு ஆகிவிட்டது.அதான்//

எனக்கு தெரிந்து அவர்கள் தான் இப்படி பேசுகிறார்கள்.

வேணும்னாலும் ஒரு சர்வே எடுத்து பாருங்களேன்.

Guna said...

இவ்வளவு பேர் ஈழத்துக்கு சப்போர்ட் பன்றாங்க பெருமையா இருக்கு.

சக்திவேல் said...

நூல்பொய்யன் அவர்களே குன்டுபோட்டு கொத்தானிகள் வீசி, கற்பழித்து வாழ்வை அழித்தவர்களை, ஏழைகள் எப்படி பழிவாங்குவார்கள்?
எளியவ்ர்களும் வலிமை பெற்றுவரும் காலம் இது என்று உணர்ந்து சமாதானம் பேச மனமே வராதா உங்களுக்கெல்லாம்? எளியவர்களும் அழிவு ஆயுதங்களை தயார் செய்யமுடியாது என்று நினைக்கின்றீர்களா? தான் மட்டும் உயர்ந்தவன் என்ற என்னம் இருக்கும் வரை இதுக்கு முடிவே இருக்காது.

பக்கவாதம் வந்து நடக்க முடியாத 80 வயது கிழவி மனிதகுன்டாக வந்து உங்கள் சோனியாவை கொன்னுடுவான்னு பீலா விடுறீங்களா? (சோனியாவை உங்களுக்கு பிடிக்காது இருந்தாலும் தமிழர்களை கொல்லுறாளேன்னு சந்தோசம் உங்களுக்கெல்லாம்). எங்கே அந்த கிழவி வந்தால் ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் அனுதாபம் கூடிப்போகும்ன்னுதான பயந்து அலறுறீங்க.

Krishnakumar said...

Mrs.Parvathi ammal had lived in trichy till 2004 or 2003. What trouble did she cause then?

I think you do not know much about Parvathi ammal, she cannot speak legibily and no one can even understand what she says. So with such a condition what harm can she cause?

This ninconpoop govt. should arrest Seeman ,kolathur mani and vaiko for the damage they are causing. Mani had even attacked military vehicle and seeman and vaiko all the time talk against india's integrity. sparing all those criminals acting against a poor woman speaks high of indian security agents. Shame on them.

Sabarinathan Arthanari said...

45 வது மைனஸ் ஓட்டு என்னுது :(

இந்த மாதிரியான கருத்துக்களை வெளியிடுவதன் பிண்ணனி என்னவாக இருந்தாலும் வருந்த தக்கது.

அந்த மூதாட்டி செயலாற்ற முடியாத அளவிற்கு உடல் நலம் குன்றியவர் என்பதும் தமிழர் என்பதும், தமிழர்கள் தாய் மண் தமிழகம் என்பதும் குறிப்பிடதக்கது

உடனடியாக பதிவிற்கு வருத்தம் தெரிவித்தல் நலம்.

Anonymous said...

This is not a view of a broad minded "Nationalistic Right Wing" person but by a "selfish casteist" whose sole aim is to get more hits.

Dondu is lot different from Arvindan Neelakandan type of people. Dondu knows that he is wrong even "pragmatically" but wants to just boast that he is a "sandai kaara paarpaan".

This is completely against the Hindhu Dharma. Aditi Devo Bhava !

-Venkat

ரவிஷா said...

நீங்கள் சொல்லும் வாதம், totally invalid. அந்தப் பெண்மணியை போலிஸ் பாதுகாப்புடன் ஆஸ்பத்திரியிலேயே வைத்திருந்தால், அழுகாச்சி கூட்டமெல்லாம் நடத்தமுடியாமல் செய்திருக்கமுடியும்! தாத்தாவின் கையில்தான் போலிஸ்! தவிரவும், மத்தியில் சொன்னால் கருப்பு மற்றும் கலர் கலரான உடுப்பில் பூனை, எலி, நரி போன்ற பாதுகாப்பு படையினர் காவல் காக்கலாம்! சொல்லப்போனால், அந்த மூதாட்டியை வைத்துக்கொண்டு பலர் “ஆதாயம்” தேடுவதை diversion ஆக்கி தற்காலிகமாக மின்வெட்டு, விலைவாசி, அழகிரி பிரச்சினைகளை சமாளித்திருக்கலாம் தாத்தா! இந்த முறையும் இத்தாலி சீமாட்டியின் முந்தானைக்குள் ஒளிந்துகொண்டு கடிதம் என்றெல்லாம் பம்மாத்து செய்கிறார் கலைஞர்!

dondu(#11168674346665545885) said...

உள்ளே விடும் வரைக்கும்தான் கண்ட்ரோல், பிறகு தும்பை விட்டு வாலை பிடித்த கதைதான்.

நான் சொன்னதில் உறுதியாகவே இருக்கிறேன். இந்த எதிர்ப்பு பின்னூட்டங்கள் அவரவர் தத்தம் குற்ற உணர்ச்சியை மறைக்கவே ஓவர் சீன் காட்டுவதாக எனக்கு படுகிறது.

அம்மாதிரி காம்ப்ளக்ஸ் எனக்கு முதலிலிருந்தே கிடையாது. புலிகளை நான் தீய சக்தியாகவே பார்க்கிறேன். அவர்களை என்கரேஜ் செய்யக் கூடிய எந்த விஷயமும் எனக்கு ஒப்புதல் இல்லை.

நான் ஒன்றும் இங்கே பாப்புலாரிடி காண்டஸ்டுக்கு எல்லாம் வரவில்லை.

என் மேல் மதிப்பு இல்லை எனச் சொன்னால் அது சொல்பவரது பிரச்சினை. அதை கூறுவது அவரது சுதந்திரம்.

I am least bothered.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஈரோடு கதிர் said...

http://maaruthal.blogspot.com/2010/04/blog-post_941.html

ரோஸ்விக் said...

http://thisaikaati.blogspot.com/2010/04/dondu.html

மைனஸ் ஓட்டுடன்.

அன்புடன்,
ரோஸ்விக்

Unknown said...

டோண்டு சார்..

உங்க தேஸ ஸேவை அபாரம் ஸார்.

உங்க மனித நேயத்தைப் பார்த்து எனக்குப் புல்லரிக்குது.

உங்களைக் குத்தம் சொல்றவாளுக்குப் புரியுமா ஸார் உங்களுக்குள்ள எவ்வளவு பெரிய மனித நேயன் ஒளிஞ்சிண்டிருக்கான்னு?

பைத்தியங்கள்...

உங்க ஸேவையை தொடர்ந்து ஸெய்யுங்கோ ஸார்.

Anonymous said...

ஸ்ஸ்ஸ்ஸபா... இதுக்கே நோக்காடா?.. அப்போ நீங்க வைகுந்தம் போறச்ச.. அங்க லாண்ட் ஆக விடாம அந்தரத்தில பறக்க விட்டா என்னாகும்? நினைச்சுப் பார்க்கவே பதறிப் போறதே மாமா.. அதை விட அந்தரத்தில தொங்க விட்டது செரிதாம்லன்னு யாராவது ஓலை அனுப்பிச்சா என்னாகும்.. விட்டா நீங்களே அழுவாச்சி ப்ரஸ்மீட் கூட்டிடுவீங்க போலருக்கே... பாதாம்பாலும்.. பருப்பு வடையும் சாப்ட்டு தெம்பா இருக்கணும்... நாம அடிப்போம்... திரும்ப யாராவது தும்மினாலே செத்துடுவோம்னா எப்பூடி

செ.சரவணக்குமார் said...

என்ன பேசுகிறீர்கள்? நிதானத்தோடுதான் இருக்கிறீர்களா? இந்தப் பதிவு உங்கள் குரூர மனதின் வெளிப்பாடு. முதல் முறையாக உங்கள் பதிவுக்கு பின்னூட்டமிடுகிறேன். மைனஸ் ஓட்டுடனும்.

சக பதிவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த இடுகையை நீக்கிவிடலாமே.

யூர்கன் க்ருகியர் said...

//நான் சொன்னதில் உறுதியாகவே இருக்கிறேன். இந்த எதிர்ப்பு பின்னூட்டங்கள் அவரவர் தத்தம் குற்ற உணர்ச்சியை மறைக்கவே ஓவர் சீன் காட்டுவதாக எனக்கு படுகிறது.//


..இதுல உறுதியா வேற இருக்கிறாராமாம் :(
அப்ப நீ உறுதியா கேவலமானவன்தான்!!

Unknown said...

I know some tamil people who are from Srilanka and share this view. but half of the blogger's, who are going all out against Dondus don't know much about this.

Why everyone thinks anything against LTT is against Tamil? Or anything supporting LTT is supporting Tamil? this part I don't understand.

Once I read a srilankan tamil blogger who wrote that we from tamil nadhu only added fuel in the fire by supporting armed struggle, he said instead of barinwashing them to become fighters, tamil nadhu should have not allowed their growth .

Lastweek I watched Muralidharan interview in "Coffee with Anu", he did mentioned that "Everyone in Srilanka (including tamil) are really happy, on finally war is over, and there will be no bombblast from now"

So I am confused here, why all the tamil bloggers are going all out supporting anything that is LTT? can anyone really from Srilanka share there personal opinion here.

Suresh Ram said...

http://imsai.blogspot.com/2010/04/blog-post.html

//அழகு செல்வன்,S.P said...
இப்படி எழுதுற உங்கள மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும், தமிழினம் குண்டி அடிக்கபட்டுகொண்டே தான் இருக்கும்.//

மாடல மறையோன் said...

When you are least bothered about negative comments and when you are sure your stand against allowing P's mother into India, is correct,

then
why do you keep open house here inviting all sorts of criticisms?

Why couldn't you have asked only for positive comments supporting your stand, like that of Jawahar, Nool poiyan and a few others?

You kept it open and allowed the negative comments - all for what but to get more popularity as a blogger?

You clearly foresaw the negative comments and increased the number of feedback.

All for what?

மணிஜி said...

ஏற்கனவே சொன்னதுதான்..அழுகாச்சி கூட்டங்கள் நடத்தினால் தமிழக மக்களின் அனுதாபத்தை அள்ளிவிடலாம் என்று நினைப்பது தவறு.. தேர்தல் முடிவுகள் அதை சொல்லியது. இங்கு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் யார்? வைகோவோ, நெடுமாறனொ இல்லை. திருமாவுக்கும் இது ஈகோ பிரச்சனையாயிற்று. முதல்வரிடம் முன் கூட்டியே தெரியபடுத்தியிருந்தால் அவர் நிச்சயம் எதாவது செய்திருக்க வாய்ப்புண்டு. அம்மையாரின் வருகையை வைகோ வகையறாக்கள் அரசியலாக்கவே முனைந்தார்கள். மக்களிடம் அது நிச்சயம் எடுபடாது என்று தெரிந்தும். ஆனால் டோண்டு சார் நீங்கள் சோ மாதிரி எழுதுவதை நிறுத்துங்களேன். நான் உறுதியாக சொல்வது இதுதான்.. ஆளுங்கட்சியை பகைத்துக் கொண்டு இவர்கள் செயலாற்றவே முடியாது. வைகோவிற்கு உண்மையில் நல்லெண்ணம் இருந்திருந்தால் அவர் முதல்வரை சந்தித்திருக்க வேண்டும். முக ஒன்றும் அணுக முடியாதவர் அல்ல ..ஜெவை போல..

மா சிவகுமார் said...

சீ!!!!

அருவெருப்புடன்,
மா சிவகுமார்

Anonymous said...

கருணாநிதியும் இப்படித்தான் நினைத்திருப்பார். அதனாலேயே தடுத்து திருப்பி அனுப்பச் சொல்லியிருப்பார். ஆனால், அதனை வெளியில் சொல்லமாட்டார். ஏதோ தான் மட்டும்தான் இரங்குவது போலவும், தான் மட்டும்தான் ஈழ மக்களுக்கு பரிவது போலவும் பேட்டியும், உண்ணாவிரதமும் பண்ணிவிட்டு உள்ளே நீங்கள் சொல்லுவதைத்தான் செய்திருப்பார்.

நேர்மையுடன் மனதில் பட்டதை சொன்னதற்கு வாழ்த்துக்கள்.

puduvaisiva said...

''முட்டாள்களுடன் விவாதம் செய்யாதீர்கள்
ஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...''


"அவரவர் தத்தம் முந்தைய நிலைக்கேற்ப எதிர்வினை புரிகின்றனர்"

திரு.டோண்டு இப் பதிவுக்காக உங்களை குற்றம் சொல்வது தவறு காரணம் இது உங்கள் பரம்பரை ரத்தத்தில் கலந்த விஷ எண்ணங்கள் இவைகள் இப்போது காலத்துக்கு ஏற்ப அது வெளிபடுகிறது.

- இரவீ - said...

unga sila pathivai padikka nernthatha nenachchu - varuththapaduren.

Kndippa ini enna ezhuthinaalum padikkala - nalla irunga.

Unknown said...

I can understand your point of view, I even know some tamil people who are from Srilanka who share this view. but half of the blogger's, who are going all out against Dondus don't know much about this.

Why everyone thinks anything against LTT is against Tamil? Or anything supporting LTT is supporting Tamil? I really don't understand this part.

Once I read a srilankan tamil blog, its wrote that we from tamil nadhu only added fuel in the fire by supporting the armed struggle, he said tamil nadhu should have not allowed their growth .

Lastweek when I watched Muralidharan interview in "Coffee with Anu", he did mentioned that "Everyone in Srilanka (including tamil) are really happy now, because finally the war is over, and there will be no bomb blast from now"

So I am confused here, why all the tamil bloggers are going all out supporting anything that is LTT? can anyone really from Srilanka share there personal opinion here.

Nara said...

//அம்மாதிரி காம்ப்ளக்ஸ் எனக்கு முதலிலிருந்தே கிடையாது. புலிகளை நான் தீய சக்தியாகவே பார்க்கிறேன். அவர்களை என்கரேஜ் செய்யக் கூடிய எந்த விஷயமும் எனக்கு ஒப்புதல் இல்லை.

நான் ஒன்றும் இங்கே பாப்புலாரிடி காண்டஸ்டுக்கு எல்லாம் வரவில்லை.

என் மேல் மதிப்பு இல்லை எனச் சொன்னால் அது சொல்பவரது பிரச்சினை. அதை கூறுவது அவரது சுதந்திரம்.//

போலி பிரச்சனை பற்றி அடிக்கடி எழுதும் போது எல்லாம் ஒரு விளம்பரம் தானோ என்று நினைத்திருக்கிறேன்.

பரபரப்புக்கு ஆசைப்பட்டு, அட்டைக் கத்தி சுழற்றும் பதிவர்களை சமாளிக்க வேண்டும் என்ற நிலையில் இப்படி பதிவெழுதுவதே பெரிய விஷயம் தான்.

Anonymous said...

தமிழ்நாட்டு பதிவர்கள் பார்வதியம்மாள் வயதானவர், பக்கவாத நோய், மருத்துவச் சிகிச்சைக்கு மறுப்பு என்று கோமாளித்தனமான பதிவுகள் எழுதி தள்ளுகிறார்கள்.உண்மையிலேயே மருத்துவ சிகிச்சை தான் நோக்கமாக இருநதால் பார்வதியம்மாளின் முதலாவது மகன் டென்மார்க்கில் மிக வசதியாக இருக்கிறார். தனது தயாருக்கு இந்தியாவில் கிடைப்பதைவிட சிறந்த மருத்துவ சிகிச்சை அவரால் டென்மார்க்கில் கொடுக்க முடியும். பக்கவாத நோய் ஒன்றும் அபூர்வ நோய் அல்ல. சிங்கப்பூர் மலேசியா இலங்கையிலும் சிகிச்சை பெற முடியும். பார்வதிஅம்மாள் மீண்டும் இலங்கைக்கு திரும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.பிரபாகரனால் பிள்ளையை இழந்த தாய், கணவனை இழந்த மனைவி என்று நிறைய இருக்கிறார்கள்.

Anonymous said...

me a die-hard right-winger, a nationalist, a fan of Cho. I condemn this anti-humanitarian post.

For others, please don't paint all Brahmins in the same brush yet again just on one non-sense post.

smart said...

என்ன பேசுறேங்க, மருத்துவ உதவிக்கு கூட அனுமதிக்கலைனா நாம எல்லாம் மனிதர்கள் என்று சொல்வதற்கு அர்த்தமில்லை. வீணாக ஒரு வாதத்தை வைச்சுட்டேங்க இன்னி மாட்டிகிட்டு முழிங்க. சும்மா மெல்லுற வாய்க்கு அவுல் கிடைச்சுருச்சு

RRSLM said...

இதை படித்துவிட்டு நான் பண்ண முதல் காரியம் "Stop following this site".

அப்பாவி முரு said...

டோண்டுவின் வீங்குன மண்டையில் என்னோட கொட்டும்...

பித்தனின் வாக்கு said...

ஒரு வயது முதிந்த பெண்மணியை எதே தீவிரவாதி ரேஞ்சுக்கு, விமானத்தில் வைத்துத் திருப்பி அனுப்புவது கேவலம் இல்லியா?.

// அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார் //
அவர் கொழும்புவில் இருக்கும் போதே, அவருக்கு அடிக்கடி நினைவு தப்பி விடுகின்றது என்ற செய்திகளை நீங்கள் படிக்கவில்லையா?

// பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும். //
எவ்வளவு செலவு செய்வீங்க, முரசு ஒலித்த மாறனுக்கு பண்ணியதை வீடவா, இல்லை புருக்ளின் மருத்துவ மனைக்குக்கு செய்ததை வீடவா? (சாப்பையான காரணங்கள்).

// எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம். //

இதில் எனக்கு கூட உடன்பாடு உள்ளது, ஆனால் அதுக்காக இலங்கைத் தமிழர்களையும், பெண்களையும், குழந்தைகளையும்,முதியயோர்களையும் விட்டு விட முடியுமா?.

/// நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை. //

ஒரு 75 வயதான பெண்மணியால் ஒரு நாட்டு நலனைக் கெடுக்க முடியும் என்றால், அவ்வளவு கேவலாமாக இருக்கின்றது உங்கள் நாட்டின் பாதுகாப்பு. அதும் எப்படி சீக்காளியான, பக்கவாதத்தில் பேச முடியாத ஒரு பெண்ணால் போய்விடும் என்று நினைக்கும் அளவுக்கு இருக்கின்றது என்று ஒத்துக் கொள்கின்றீர்களா? சப்பைக் கட்டு கட்டுவது என்றால் அதுக்கு ஒரு அளவு இருக்கு. இப்படி எல்லாமா? உலகின் பெரிய இரானுவம், நாலவது விமானப்படை இரண்டாவது ஜன நாயகம் ஒரு வயசான பெண்ணுக்கு பயப்படுமா? என்ன கதை இது.

// ஒரு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது. //
இது போன்ற கேவலாமான வரிகள் எழுத எப்படி யோசித்தீர்கள். அந்த அம்மா, சொன்னால், மக்களிடம் செல்வாக்கு இல்லாத இரண்டாம் கட்ட தலைவர்கள், அதை வைத்து அரசியல் பண்ணினால், எல்லா தமிழ் மக்கள் ஏமாறுவார்கள் அல்லது அசம்பாவிதம் செய்வார்கள் என்று எப்படி உங்கள் மக்களை நீங்கள் கேவலாமாக நினைத்தீர்கள். பிரபாகரன் இறந்த போது, குட்டிமணி, தங்கதுரை,ஜெகன்னுக்கு கொடுத்த மரியாதை கூட தராத மக்கள், அவர் அம்மா சொன்னால் அசம்பாவிதம் செய்வார்கள் என்று எப்படி நினைத்தீர்கள்.

தமிழ், தமிழ், திராவிடம், இனவாதம் எனப் பொய்யும் புரட்டும் பேசும் மக்களிடம் கூட ஏமாறத மக்கள், மாத்தி மாத்தி ஓட்டுப் போடும் புத்திசாலியான மக்கள், ஒரு வயதான பெண்மணியை வைத்து செய்யும் அரசியலை எப்படி ஏமாறுவர்கள். இதை நீங்கள் யோசிக்கவில்லையா?

// கிள்ளி எறியப்பட்டது நல்லதுக்குத்தான். //
நல்லது அல்லையா!! இது அசிங்கம். நாம் மலத்தை நம் முகத்தில் பூசிக் கொண்ட அசிங்கம். செம்மொழி மானாடு நடைபெறும் சமயம், அந்த அம்மாவை, இங்க கொண்டு வந்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தால் அது அந்த தலைவர்களின் அசிங்கம். அவர்களின் கனவுகள் எங்க நிறைவேறி விடுமோ என்று பயந்து அரசியலுக்காக அவர்களை திருப்பி அனுப்பி விட்டு, இன்று வாய்க்கு வந்தது எல்லாம் பேசி சமாளிக்கும் நிலை இன்னமும் அசிங்கம். இதுக்கு ஆதரவாக பதிவு போட்டு உங்களை நீங்கள் அசிங்கப் படுத்திக் கொள்வது மாபெரும் அசிங்கம். உங்கள் கற்பனை எல்லாம் சரி, ஆனால் இந்த அம்மாவால் எல்லாத்தையும் மாற்றி விட முடியும் என்ற நிலையில் நம் மக்களின் ஆறிவையும், நாட்டின் பாதுகாப்பையும் குறைவாக நினைத்து கட்டுரை எழுதுவது மிகப் பெரும் அசிங்கம்.

நீங்க பி ஈ எல்லாம் பச்சதா சொல்றாங்க, நான் அந்த அளவுக்கு எல்லாம் பய்க்கலை சாரு, ஆனா ஒன்னு சொல்லிக்கிறன். முதல்ல போய் மெய்ப் பொருள் நாயனார் கதை படிங்க சாமி. நன்றி.

குடுகுடுப்பை said...

April 20, 2010 4:07 PM
ILA(@)இளா said...
வயசுக்காக, உங்க மேல கொஞ்சம் மதிப்பும் மரியாதையும் வெச்சிருந்தேன். **லி பிரச்சினை அப்போ கூட விளம்பரத்துக்காக பண்ணிக்கிறார்னு நினைச்சுகிட்டு ஒரு சாஃப் கார்னர் இருந்துச்சுங்க. அதுவும் இந்தப் பதிவு பார்த்துட்டு போயிருச்சு. மதிப்பும் மரியாதையும் நாம நடந்துக்கிறதுலதான் இருக்குன்னு பெரியவங்க சொல்ல கேள்வி.

sundarmeenakshi said...

ungal asai appadammaka velivandu viddadhu.

Sivakumar said...

டோண்டு எழுதிய விதத்தில் தவறு.
கருத்துகளை இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம்.
சொல்ல வந்ததை ரத்ன சுருக்கமாக கூறியிருக்கலாம்.
அந்தம்மா சிங்கப்பூர், மலேசியாவிலேயே சிகிச்சை பெற்றிருக்கலாம்.

கட்டுரை பதிவுலகத்தினரால் தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது.

ஒருமுறை யுவகிருஷ்ணா கூறியது போல பதிவுலகம் பொது மக்களின் கருத்தில் இருந்து பிரள்ந்தே இருந்திருக்கிறது என்பது இப்பதிவிற்கு வந்த மைனஸ் ஒட்டுகளும் பின்னூட்டங்களும் காட்டுகின்றன.

எண்ணங்கள் 13189034291840215795 said...

Itsdifferent said...

Everyone talked about the individual, Dondu talked about the politics that would have happened around that individual.
Emotion vs pragmatism.


Well said..

தமிழக அரசுக்கு முறைப்படி அறிவிக்காது வைத்தியம் பார்க்க வரவழைக்கப்பட்டது முழுக்க முழுக்க பிரச்னை செய்யும் எண்ணமே தவிர, வைத்தியத்துக்காக அல்ல..என்பது சின்ன குழந்தைக்கு கூட புரியும்..

மலேஷியா, சிங்கப்பூரில் கனடா, டென்மார்க்கில் இல்லாத வைத்தியமா?

மனிதாபிமானம் என பலமுறை ஏமாந்தது போதும்...


டோண்டு உங்கள் பதிவின் கருத்து சரியே...அந்த அம்மாவின் மேல் இல்லை உங்கள் கருத்து என்பதை புரியாதவர்கள் / புரியாத மாதிரி நடிக்கட்டும்...

ஹரன் said...

//Dondu said:
ஏன்னப்பா.. பெரியவங்களை எப்படிதான் நோகடிப்பதா?
இதற்கு, நேரா பேசியிருக்கலாமே?
//
வணக்கம் டோண்டு , பெரியவங்கள எப்படி நோகடிக்கரதுன்னு உங்களுக்கு வேணா தெர்யும் , உங்க பதிவுல இருந்தே தெரியுதே ... நீங்க வயசான ஒரு அம்மாவை பத்தி ஓவரா மனசாட்சி இல்லாம பேசறீங்க , உங்கள ஊரு கூடி அடிச்சா வலிக்குதோ ? அப்பயும், என் கருத்துக்கு மாற்றம் இல்லேன்னு தானே சொல்றீங்க , நீங்க கருத்து சொல்லல , கருமத்த சொல்லி இருக்கீங்க.. ப்ளாக் க்ளோஸ் பண்ணிட்டு போங்க, இனி எவனும் படிக்க மாட்டான் உங்க பதிவ ,இவ்வலு பேரு சொல்லியும் நீங்க ஒத்துக்கலனா என்னத்த சொல்றது ...

எல்லா அய்யர்ங்க வீட்டுலயும் ஒரு மனம் வளர்ச்சி குன்றிய நபரோ அல்லது உடல் வற்றிய நபரோ இருப்பார்கள் என்று சொல்லுவாங்க.
சின்ன வயசுல எங்கப்பா கிட்ட கேட்டேன் ஏன்பா அப்படின்னு , அவரு சொன்னாரு செஞ்சதுக்கு , செய்யறதுக்கு கடவுள் கொடுக்கறதுன்னு சொன்னாரு ...
இவங்க வீட்டுல அந்த கேஸ் இவரு தான் போல ... (இது கொஞ்சம் அதிகமா இருந்தா மன்னிக்கவும் மக்களே , மனிதர்களே! (டோண்டு மற்றும் அவரை சார்ந்தவர்களை தவிர ))

அவங்க எந்த நாடோ,யாரோ, எப்படி வேணா இருக்கட்டும் , ஒரு வயசான அம்மாவ காக்க வச்சு திருப்பி அனுப்புனதுல என்ன அரசியல் இருக்குன்னு தெரியல ... ஏது, உங்க வீட்டுக்கு வந்தா தண்ணி கூட கொடுக்க மாடீங்க போல, இனி நீங்க கொடுத்தாலும் எவனும் குடிக்க மாட்டான் .. அவங்க என்ன திருப்பதிக்கு சாமி கும்பிடவா வந்தாங்க , லூசு பயலுகளா ... கடவுள் இருந்தாருனா !... இருக்காருனே வச்சுக்குவோம் , உங்களுக்கு இருக்கு :)

"தன் வினை தன்னை சுடும் "
"முற்பகல் செயின் பிற்பகல் விளையும் "

priyamudanprabu said...

அந்த அம்மாவிற்கு விசா கொடுக்காமல் இருந்திருக்காலாம்
இதைசெய்யாமல் வந்தவரை திருப்பி அனுப்புவது முட்டாள்தனம்

இதுக்கு உம்ம சம்ம்ப்பொர்ட் வேர

போங்கப்பு போயி,,,,,,,,,,,,,,,,,,,.........

பரிமள ராசன் said...

தமிழ் நாட்டிலிருந்து கேடு விளைவிப்பவன் எவனையாவது வெளியேற்ற வேண்டுமெனில் அணைத்து பார்ப்பனர்களைத்தான் முதலில் விரட்ட வேண்டும்.அவர்கள் வந்தேரிகள்.நாடட்றவன்கள்.மொழி பண்பாடு,கலாச்சாரம் இல்லாத பண்ணாடைகள்.அவர்களுக்கு தமிழினத்தை பார்த்தால் வயிற்றெரிச்சலாகவும்,பொறாமையாகவும் இருக்கத்தான் செய்யும்.ஊத்தவாயன் சங்கராச்சாரி கொலை செய்வான்,பெண்களோடு கள்ள உறவு கொள்வான்,காஞ்சிதேவநாதன் கருவரையிலேயே கலவி புரிவான்.இவனெல்லம் தமிழ்நாட்டில் நக்கி பிழைக்கலாம்.இவனையெல்லாம் முதலில் தமிழ்நாட்டைவிட்டு விரட்டவேண்டும்.இந்திராகாந்தியை கொன்ற சீக்கியன் நாடாளலாம்,காந்தியை கொன்ற பார்ப்பான் நாடாளலாம்.ஒரு இனம் காக்க வீரஞ்செரிந்த, போர்மரபுகளை மீராது போரிடும் தேசியதலைவரின் தாயார் மருத்துவ சிகிச்சைக்காக எங்கள் தாய்மண்ணிற்க்குள் அனுமதி மறுப்பதும்,அதற்க்கு இங்கு சில பண்ணாடை பார்ப்பான்கள் ஒத்து ஊதுவதும் தான் தமிழ்நாட்டில் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கொண்டுவரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.பெரியார் சொன்னார்"எனக்கு பின் வரும் இளைஞர்கள் என்னைப்போல் பொறுமையாக இருக்கமாட்டார்கள்".அந்தசூழலை பார்ப்பனர்களே கொண்டுவந்து விடுவார்கள்.இந்த டோண்டுவும் இதைதான் செய்கிறான்.பார்ப்பனனுக்கு கணிணியும்,மணியாட்டவும் மட்டும் தான் தெரியும்.ஆனால் உழைக்கும் தமிழனுக்கு கணிணியும் தெரியும் மாட்டு தோலை உறிக்கவும் தெரியும்.அதனால் பார்ப்பான் தோலை உறிப்பது மிகவும் எளிதான ஒரு வேலைதான் என்பது புத்திசாலிகள்போல் நடிக்கும் இவன்களுக்கு எளிதில் புரியும் தானே?

Ravichandran Somu said...

டோண்டு ஐயா,

தாங்கள் எனது கல்லூரி சீனியர் என்பதற்காக வெட்கப்படுகிறேன்....

வெறுப்புடன்,
-ரவிச்சந்திரன்

வால்பையன் said...

சின்ன பதிவா இருக்கே!

Unknown said...

எங்கே பிராமணன் என்று ஏன் தேடுகிறீர்.

இந்த சுயநல பதிவு எழுதியதன் மூலம் யார் பிராமணன் என்று நன்கு காட்டிவிட்டீர்.

நீர்தானய்யா
அக் மார்க் பிராமணன்.

இப்படியே கன்டின்யு பண்ணுங்கோ ரொம்ப நன்னாயிருப்பேள்.

dondu(#11168674346665545885) said...

//Dondu said:
ஏன்னப்பா.. பெரியவங்களை எப்படிதான் நோகடிப்பதா?
இதற்கு, நேரா பேசியிருக்கலாமே?//

நீங்கள் இப்பின்னூட்டத்தை பார்த்த பதிவில் போய் மறுபடி பார்க்கவும். அது நான் இட்டதல்ல. அதர் ஆப்ஷனில் அந்த டோமர் பதிவரோ அவரது அல்லக்கையோ இட்டிருக்க வேண்டும் அல்லது வேறு யாராவது அதை இட்டு, அந்த டோமர் பதிவர் அது டோண்டு போட்டதல்ல என பார்க்கும் அறிவு கூட இல்லாமல் பறை
சாற்றி வந்திருக்கிறார்.

ஒன்று மட்டும் மறுபடியும் கூறுவேன். டோண்டு கூறியது கூறியதுதான். அதே சமயம் அதனால் எல்லாம் என்னை திட்ட முனைந்தால் I am least bothered. அது சம்பந்தப்பட்டவர் மனநலம் இல்லா பிரச்சினை.

அது சரி, அது என்ன ஹரன் என்னும் முகமூடியுடன் வந்திருக்கிறீர்கள்? போய் உண்மையான பிளாக்கர் ஐடியுடன் வாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

தாயே...
சாதாரண மகனைப் பெற்றிருந்தால்
மாளிகையில் கொலுவிருப்பாய்
துணையாய் அணைத்திருப்பான்
வஞ்சனையில்லா வரவேற்பும்
வாழ்வும் இனித்திருக்கும்.

வீரனைப் பெற்றதாலோ
விழுதாய் தள்ளாட்டம்
மீண்டும்...
பெற்றெடு தாயே
தயங்காதே நீ !!!

ஹேமா(சுவிஸ்)

dondu(#11168674346665545885) said...

//அந்த அம்மாவிற்கு விசா கொடுக்காமல் இருந்திருக்காலாம்
இதைசெய்யாமல் வந்தவரை திருப்பி அனுப்புவது முட்டாள்தனம்//
அதற்காக சங்கடப்பட்டுக் கொண்டு உள்ளே அனுப்பியிருந்தால் அதைவிட அதிக முட்டாள்தனமாக இருந்திருக்கும்.

வேண்டுமென்றே சங்கடப்படுத்த வேண்டும் என்றே காய்களை நகர்த்தியிருக்கிறார்கள் என்பது க்ளியராக தெரிகிறது.

ராஜீவை தண்டிக்கிற்ரேன் பேர்வழி என அவரை கொலை செய்தார்கள். சரியப்பா போய்த் தொலையுங்கள் என இந்திய அரசு ஈழப் பிரச்சினையிலிருந்து கைககழுவும்படியும் செய்தார்கள்.

இவ்வளவு நடந்த பிறகும் வெட்கமில்லாமல் பாலசிங்கத்துக்கு சிகிச்சை என்னும் பெயரில் அவரை உள்ளே நுழைக்க முயன்றார்கள். இம்முறை பார்வதி அம்மாள் அவர்களது பகடைக் காய் ஆனார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

I see nobody making a valid argument to the questions raised in this post. instead everyone saying emotional dialog as if they are in some bad vijaykanth movie.

This reminds me a scene In the movie "Nandha", where one guy will talk about tamil, struggle, etc. rajkiren's reply will be everyone are fond of tamil, but that doesn't mean you have to act like you got it. (watch this scene once again guys)

Go on Attack this post, I am not gonna stop you, but make valid arguments instead of talking tamil tamil tamil, what that has to do with this issue, If she is from Italy will you guys be fighting like this. every day there are lot of people get rejected entry to the country, did anybody have that data here?


Most of the comments here sounds Racist to me, be proud of yourself on being Tamilen, but that doesn't mean act like you are not a Indian.


personally I am an Indian then tamilen, I am sure we all feel that way, for once we should not be emotional and look in to these issues in matured manner and don't be fooled by the politics in this.

அருள் said...

//நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை. ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.//

மிஸ்டர் டோண்டு.

நீங்கள் நாட்டின் நலன் என்று சொல்வது "பார்ப்பானின் நலம்தான்".

தமிழின எதிர்ப்பு உங்கள் இரத்ததில் இருக்கிறது.

உங்கள் கூட்டத்தை தமிழ்நாட்டைவிட்டு விரட்டும் நாள்தான் தமிழனுக்கு சுதந்திரநாள்.

☀நான் ஆதவன்☀ said...

இந்த பதிவை படிச்சுட்டு மைனஸ் ஓட்டு போடலாம்னு வந்து தெரியாத்தனமா ப்ளஸ் கையை அமுக்கிட்டேன் :(

அந்த ப்ளஸை மைனஸா கன்ஸிடர் பண்ணிக்கங்களேன்

M.Mani said...

என் மேல் மதிப்பு இல்லை எனச் சொன்னால் அது சொல்பவரது பிரச்சினை. அதை கூறுவது அவரது சுதந்திரம்.

I am least bothered.

அன்புடன்,
டோண்டு ராகவன்.

பாராட்டுக்கள் டோண்டு அவர்களே. ஒருவர் உங்களுக்கு 200 முட்டாள்கள் followes என்று போட்டிருக்கிறார்.தன்னைப்பற்றியே நினைத்து அவ்விதம் போட்டிருப்பார் போலிருக்கிறது.
ஒருவர் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் எப்படிப்போடலாம்? என்று கேட்டுள்ளார். தமிழ்நாட்டு தமிழர்கள் எல்லாம் பயந்தாங்கொள்ளிகள் என்று கேலிவேறு. ரொம்ப தைரியசாலிகளாய் இருந்தால் ஏன் உங்கள் மாவீரன் சென்னைக்க ஓடிவந்து வாழ்ந்து கொண்டிருந்தார்.
இந்த பதிவில் கருத்துவேறுபாடு கொண்டவர்கள் அநேகம்பேர் பார்ப்பனர்களைத்திட்டுவதையேத் தொழிலகாக் கொண்டுள்ளனர். தமிழ்த்தாத்தா என்று கொண்டாடுபவர் ஒரு பிராமணர்தான்.

Guna said...

//தமிழ்த்தாத்தா என்று கொண்டாடுபவர் ஒரு பிராமணர்தான்.//

அவர் ஒன்னும் உங்களைப்போல் தமிழர்க்கு துரோகம் பண்ணவில்லையே ?

எனக்கு இதில் டோண்டுவின் பதில் பிடிக்க வில்லை .

ராஜீவ் என்ன யோக்கியரரோ ?

தமிழ் மக்கள் அடி கொடுத்ததும் திருந்தாத காங்கிரஸ்.

தனித்து போட்டியிட்டால் டேபோசிட் கூட வாங்க முடியாது.

ராகுல் வந்தாலும் நடக்காது.இன்னொரு தடவை ராஜீவே பிறந்து வந்தாலும் நடக்காது.


பார்பனர்கள் மட்டும் சப்போர்ட் பண்ணிக்க வேண்டியது தான்.

sathishsangkavi.blogspot.com said...

அய்யா டொண்டு....

ராஜபக்ஷேவே அந்த அம்மாவ சிகிச்சைக்காக வெளிநாடு போவதேன்றால் போங்க என சொல்லியாச்சு....
இங்க இருக்கற சில சுயநல அரசியல்வாதிகள் போல நீங்க ஒரு பதிவ போட்டு பதிவுலகல நிறைய பேர் நேரத்தை வீணடிச்சிட்டிங்க....

பதிவுலகம் முழுவதும் பேச்சே டொண்டுவைப்பற்றிதான்......
நீங்க நெனச்சது நடந்திருச்சு.....

Anonymous said...

Dear டோன்டு,
இன்றுகாலை நான் பதிவிட்ட இரண்டு பின்னூட்டங்கள் இதுவரை இங்கு காணப்படவில்லை.
நீங்கள் அதை அனுமதிக்கவில்லை என்ற பட்சத்தில் தயை கூர்ந்து அதை தெரிவித்தால் எனக்கு உதவியாக இருக்கும்
நன்றி

dondu(#11168674346665545885) said...

@அனானி
பல அனானி பின்னூட்டங்கள் விஷமத்தனமாக, வன்மத்துடனும், அதுவும் மற்றப் பதிவர்களையும் திட்டியும் வந்ததால் நிராகரிக்கப்பட்டன. இனியும் அவ்வாறே நடக்கும்.

தைரியம் இருந்தால் பிளாக்கராக வரவும், பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஸார், உம்ம தேஸாபிமானம் பேஸா இருக்கு! பிச்சு ஒதறுரீர் ஓய்! உமக்கு ஒரு பேரு வெச்சிருக்கேன் கேக்கரேளா! அது..... பிணந்தின்னிக் கழுகு! என்ன பேரு பிடிச்சிருக்கா? ஜமாய்ங்கோ!
(நீரு, அந்தக் கெழவிய பத்தி எழுதாம அத வெச்சி அரசியல் பண்ணிக்கிட்டிருக்க பெருச்சாளிகள ஒரு பிடி பிடிச்சிருந்தீர்னா நன்னா இருந்திருக்கும்..என்ன ஓய்.... காதுல விழறதா?)

Anonymous said...

Hai.
Do u know the full story about Ealam???
I hope you dont know even 1% of story.
When ur Indian army ( IPKF) came to Jaffna, i was 6 years old kid. Even still i know the pain they gave to us. I losted my 2 brothers because of IPKF. even my brothers are innocent. Still i dont feel Rajeev muder was wrong. What i feel is Pirabakaran is wrong. He did very big mistake. He should kill Mu.Ka and Rajeev family. Still every srilankan Tamils memories MGR. Because he did alot for srilankans. We belive, if MGR and Indra alive, now we are at tamil ealam. wishing you a long live...
Barathy from Jaffna.

dondu(#11168674346665545885) said...

அம்மாதிரி பதிவை நீங்கள் போட முடியாம ஒங்களை யார் தடுத்தது பன்னிக்குட்டி?

அது சரி, என்னோட பதிவே இதை அரசியலாக்க நினைச்சவங்களை எதிர்த்துத்தாங்கறத கூட புரிஞ்சுக்க முடியாத நீங்களெல்லாம் பதிவாவது போடறதாவது.

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அனானிக்கு மறுபடியும் கூறுகிறேன். பிளாக்கராக வா. இல்லாவிட்டால் போ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

எச்சரிக்கை:

"பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து" என்பதுபோல் காட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் காரங்க பத்திரிகைகளில் 'வாசகர் கடிதம்' எழுதுவதற்காக ஒரு கூட்டத்தையே மாத சம்பளம் கொடுத்து வளர்த்து விட்டுருந்தாங்க.

அதுபோல இப்போ "டோண்டு" கூட்டமும் ஆர்.எஸ்.எஸ் கிட்ட சம்பளம் வாங்கும் கூட்டம் போலதான் தெரிகிறது. தமிழன எதிர்த்து எழுதுறது இவங்களோட ஹாபி இல்லை. முழுநேரத்தொழில்.

அதனால, பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து என்று காட்டும் இந்த முயற்சியை, ஏதோ நிறைய பேரோட கருத்து என நம்பிவிட வேண்டாம்.

dondu(#11168674346665545885) said...

//Do u know the full story about Ealam???//
It is all fine. Then why do you come again and again to India for help? Don't you have self-respect?

Regards,
Dondu N. Raghavan

ஆர்.வேணுகோபாலன் said...

//தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்.//

மொத்தப் பதிவிலேயே இந்த வரிகள் மட்டும் தவிர்க்கப்பட்டிருக்கலாமோ என்று தோன்றியது.

மற்றபடி நீங்கள் கூறியிருப்பது அனைத்தும் மிகவும் சரியே!

//எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம்.//

நிரம்ப சரி! தீவிரவாதிகளோடு தொடர்புடையவர்களுக்கு இங்கு என்ன வேலை? இவர்களுக்காக நிதிதிரட்டுகிறேன் பேர்வழி என்று வெளிநாடுகளில் இருந்து சொகுசுவாழ்க்கை நடத்துகிறவர்களிடம் போக வேண்டியது தானே? இந்தியாவுக்கு, அதுவும் குறிப்பாக சென்னைக்கு வர வேண்டியதன் மர்மம் என்ன?

இதைச் சொல்வதற்கு ஒரு நேர்மை வேண்டும். தாறுமாறாக விமர்சிப்பவர்களுக்கு எதுவும் வேண்டாம்.

எவ்வளவு அநாகரீமாக விமர்சனங்கள் செய்யப்பட்டபோதிலும், துணிவாக சற்றும் கண்ணியம் குறையாமல், நிதானம் தவறாமல் பதில் அளித்திருக்கிறீர்கள். இதற்காவே உங்கள் பதிவைப் பாராட்டியே தீர வேண்டும்.

மற்றபடி இந்த மைனஸ் ஓட்டுக்களைப் பற்றியோ, பார்ப்பனன் என்று (வழக்கம்போல) விமர்சிப்பது குறித்தோ கவலைப்படாதீர்கள். இவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லையென்றால், பார்ப்பனர்களைப் பிடித்துத் திட்டுவதே பிழைப்பு! துடைத்துப் போட்டு விட்டு உங்களது பணியைத் தொடருங்கள் சார்!

ஏறக்குறைய ஆறுமாதங்கள் கழித்து வலைப்பதிவில் ஒருவருக்குப் பின்னூட்டம் இட்டிருக்கிறேன் - அவரது எண்ணத்தெளிவுக்காகவும் துணிவுக்காகவும்! HATS OFF!!

dondu(#11168674346665545885) said...

//தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்.//
அப்படியே தரவைத்திருப்பார்கள் என்பதாலேயே சொன்னேன். கண்ணீர் நிறைந்த பேட்டிகள்னு சொல்லியிருக்கலாமோ?

மற்றப்படி உங்கள் புரிதல்களுடன் கூடிய பின்னூட்டங்களுக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

பார்வதி அம்மாவுக்கு அனுமதி மறுத்த விஷயத்தில் எனக்கு உங்களுடன் உடன்பாடு இல்லை என்றாலும். உங்களுக்கு வரும் எதிர் பின்னூட்டங்கள் அனைத்திலுமே பார்ப்பான துவேஷம் தான் மேலோங்கியிருக்கிறது. போட்டவர்கள் அனைவருமே சொல்லிவைத்தார் போல் உங்கள் ஜாதியைத் தான் பிரதான எதிரியாக்கித் திட்டுகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் அடிப்படை மனித உரிமை பற்றி யோசிக்கக் கூடத் தகுதி இல்லை என்பதைத்தான் அவர்களது ஜாதி வெறிப் பின்னூட்டங்களும் பதிவுகளும் காட்டுகின்றன.

நான் இதே பதிவில் எனது முந்தய பின்னூட்டங்களில் கேட்ட கேள்விக்கு திருப்திகரமான பதில் யாரிடமிருந்தும் வரவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Anonymous said...

//
"பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து" என்பதுபோல் காட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் காரங்க பத்திரிகைகளில் 'வாசகர் கடிதம்' எழுதுவதற்காக ஒரு கூட்டத்தையே மாத சம்பளம் கொடுத்து வளர்த்து விட்டுருந்தாங்க.

அதுபோல இப்போ "டோண்டு" கூட்டமும் ஆர்.எஸ்.எஸ் கிட்ட சம்பளம் வாங்கும் கூட்டம் போலதான் தெரிகிறது. தமிழன எதிர்த்து எழுதுறது இவங்களோட ஹாபி இல்லை. முழுநேரத்தொழில்.
//

வெளி நாட்டுக் கைக்கூலியாக இருப்பதைவிட ஆர்.எஸ்.எஸ் கைக்கூலியாக இருப்பது எவ்வளவோ மேல்.

dondu(#11168674346665545885) said...

@வஜ்ரா
பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுக்காமல் உள்ளே விட்டிருந்தால் பல குழப்பங்கள் வந்திருக்கும். அவரை பகடை காயாக ஆக்கியவர்கள் எதிர்பார்த்ததும் அதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
அதனால, பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து என்று காட்டும் இந்த முயற்சியை, ஏதோ நிறைய பேரோட கருத்து என நம்பிவிட வேண்டாம்.
//

டோண்டு கருத்தே பார்ப்பானர் கருத்து என்ற உங்களைப்போன்ற லூசு கேசுகளின் கருத்தை எவ்வாறு யாருமே நம்ப மாட்டார்களோ அவ்வாறே பார்ப்பானர் கருத்தே பொதுமக்கள் கருத்து என்று யாருமே நம்ப மாட்டார்கள்.

ஆகவெ இனி நீங்கள் நிம்மதியாக கீழ்ப்பாக்கத்தில் போய் அட்மிட் ஆயிக்கல்லாம்.
---

//
பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுக்காமல் உள்ளே விட்டிருந்தால் பல குழப்பங்கள் வந்திருக்கும். அவரை பகடை காயாக ஆக்கியவர்கள் எதிர்பார்த்ததும் அதுதான்.
//

இன்று தமிழகம் இருக்கும் சூழலில் அந்தம்மாவை வைத்து அரசியல் செய்யப்பட்டிருந்தால் அது திராவிட அரசியலுக்கு எதிராகவே முடிந்திருக்கும் என்பது என் துணிபு. ஆகவே, கலைஞர் பார்வதி அம்மாவுக்கு இதயத்தில் இடம் கொடுத்துவிட்டு பிளேனில் திருப்பியனுப்பிவிட்டார்.

பனித்துளி சங்கர் said...

////// ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்./////////

நண்பரே நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் .அந்த தாய் ஒன்றும் வேற்றுக்கிரகவாசி இல்லை உங்களின் முழி பிதுங்குவதற்கு .

பனித்துளி சங்கர் said...

////////நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை. ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். /////////


ஹா ஹா ஹா

வாங்க நாட்டு நலம் விரும்பி அவர்களே .
ரோட்டில் நம் கண் முன்ன நாம் உறவுகள் ஆடை இன்றி தவிப்பது உங்கள் அரசிற்கு தெரியவில்லை . ஆனால் ஏதேனும் ஒரு திறமை உள்ள பெண் தான் சொந்த முயற்சியால் இந்த நாட்டிற்க்கு பெருமை சேர்த்தவளின் உள் ஆடை பற்றி உங்களின் அரசு விமர்சிக்கும் . இதுவா உங்களின் நாட்டின் நலன் ???????????????????????????????????????????????????????????????????????????

பனித்துளி சங்கர் said...

////அப்படியே உள்ளே வந்தால் என்ன செய்திருப்பார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள்.///////////


உண்மைதான் இந்த தாயால்தானே அப்பாவி தமிழர்கள் கற்பிழந்து கதற கதற கொல்லப்பட்டார்கள். அதர்க்காக இந்த பிரஸ் மீட்கள் தேவைதான் .

ILLUMINATI said...

// அப்பெண்மணி இங்கு வந்திருந்தால் என்னவெல்லாம் சீன் போடலாம் என பெரிய அஜெண்டாவே வைத்திருந்தார்கள். அவற்றை தவிர்த்தது புத்திசாலித்தனமான செயல்.//

அது எப்படி ஓய் உமக்குத் தெரியும்? நீரு என்ன உள்துறை அமைச்சரா,இல்ல முதல்வரா?சும்மா சப்பக்கட்டு கட்ட வேண்டாம்.

// நான் சொன்னதில் உறுதியாகவே இருக்கிறேன். இந்த எதிர்ப்பு பின்னூட்டங்கள் அவரவர் தத்தம் குற்ற உணர்ச்சியை மறைக்கவே ஓவர் சீன் காட்டுவதாக எனக்கு படுகிறது.//

என்னத்த ஓவர் சீன்? மனிதாபிமானம் காட்டுவது உங்களுக்கு ஓவர் சீனா தெரியலாம்.எங்களுக்கு இல்ல.....

ஆமா கேக்கனும்னு நெனச்சேன்.அது என்ன அழுகாச்சி கூட்டம் வச்சுருப்பானுங்கனு ஒரு உளறல்? கூட்டம் வச்சுருந்தா இங்க அப்படியே எல்லாம் பொங்கி இருப்பானுங்களா? புரிஞ்சு பேசுரீங்களா?இல்ல சும்மா நடிக்கிறீங்களா?

// ராஜபக்ஷேவே அந்த அம்மாவ சிகிச்சைக்காக வெளிநாடு போவதேன்றால் போங்க என சொல்லியாச்சு....
இங்க இருக்கற சில சுயநல அரசியல்வாதிகள் போல நீங்க ஒரு பதிவ போட்டு பதிவுலகல நிறைய பேர் நேரத்தை வீணடிச்சிட்டிங்க....
பதிவுலகம் முழுவதும் பேச்சே டொண்டுவைப்பற்றிதான்......
நீங்க நெனச்சது நடந்திருச்சு.....//

உண்மை தான் Sangkavi.....இவரு சும்மா சும்மா பிளாக்கர் ஆக வா என்று சொல்வது சந்தேகத்தையே கிளப்புது ....

Unknown said...

oru blog vachurukuravangaley parvathiammala vachu ivlo arasiyal pannumpodhu.oru katchikaran evlo arasial pannuvan.

பனித்துளி சங்கர் said...

/////எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம். நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள். இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்.///////

தரம் கேட்ட பல தலைவன் என்ற மனிதப் பிறப்பில் இருந்து மாறுபட்ட குணங்களுடன் ஆட்சி செய்யும் எத்தனையோ நரிகளுக்கு நினைவாலயம் வைக்கும் பொழுது சுயநலமே பாராமல் என் உடன் பிறவா மக்களிற்க்காக எதிர்பார்ப்பு எதுவும் இன்றி உயிரை கொடுத்த அந்த மாவீரனுக்கு நினைவாலயம் வைப்பதர்க்கு எதர்க்கு நாங்கள் தயங்க வேண்டும் .

ஹரன் said...

dondu(#11168674346665545885) said...
//Dondu said:
ஏன்னப்பா.. பெரியவங்களை எப்படிதான் நோகடிப்பதா?
இதற்கு, நேரா பேசியிருக்கலாமே?//

நீங்கள் இப்பின்னூட்டத்தை பார்த்த பதிவில் போய் மறுபடி பார்க்கவும். அது நான் இட்டதல்ல. அதர் ஆப்ஷனில் அந்த டோமர் பதிவரோ அவரது அல்லக்கையோ இட்டிருக்க வேண்டும் அல்லது வேறு யாராவது அதை இட்டு, அந்த டோமர் பதிவர் அது டோண்டு போட்டதல்ல என பார்க்கும் அறிவு கூட இல்லாமல் பறை
சாற்றி வந்திருக்கிறார்.

//
அப்படியென்றால், அந்த அடிப்படை (பெரியவர்களை நோகடிப்பது தவறு )கூட உங்களால் உணர முடியவில்லை , சரி தானே? அதனால் தான் ஒரு முதியவரின் மருத்துவ தேவையை உங்களால் உணர முடியவில்லை ... அதுவும் , தாங்கள் அந்த அம்மணி சட்ட ஒழுங்கு சீர்கேடு விளைவிப்பார் என்ற ரீதியில் பேசி இருப்பது , சின்ன புள்ள தனமா இருக்கிறது ... இந்த தமிழகத்திற்கு அது மட்டும் தான் அச்சுறுத்தலா, மற்ற அச்சுறுத்தல் அனைத்திற்கும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறதா...தாங்கள் , அவர் வருகையை ஆமோதிக்க தேவை இல்லை, ஆனால் ஒரு முதியவரை கஷ்ட படுத்திய செயலை நியாயம் என்று கூறுவது தான் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று ...

Chandramohan said...

Prejudiced thoughts... INGAYUMA.. Not to a old lady....

dondu(#11168674346665545885) said...

//அந்த ப்ளஸை மைனஸா கன்ஸிடர் பண்ணிக்கங்களேன்//
ஆசை தோசை அப்பளாம் வடை. ஒரு பிளஸ் சிக்கிருச்சி. அப்படி உட்டுடுவோமா?

அன்புடன்
டோண்டு ராகவன்

நூல்பொய்யன் said...

//இப்போ "டோண்டு" கூட்டமும் ஆர்.எஸ்.எஸ் கிட்ட சம்பளம் வாங்கும் கூட்டம் போலதான் தெரிகிறது//

அப்போ, நீங்க எல்லாம் விடுதலைபுலி தீவிரவாதிங்க கிட்ட கூலி வாங்கினவங்களா? அவங்களுக்காக, நம் நாட்டு நலனை கூட பாக்காம கண்ணு, மண்ணு தெரியாம கூப்பாடு, ஒப்பாரி எல்லாம் போடறீங்களே?

தீவிரவாதத்துக்கு எதிரா ஏனோ, தானோன்னு நடவடிக்கை எடுக்கற கருணாநிதி ஆட்சியிலேயே உங்களால தாக்கு புடிக்க முடியலையே; உங்க போதாத காலம், தப்பி தவறி ஜெயலலிதா மட்டும் ஆட்சிக்கு வந்தாங்கன்னா, அவ்ளோதான் - உங்க கூட்டம் எல்லாம் துண்ட காணோம்; துணிய காணோம்னு ஓட வேண்டியதுதான். ஒரு வலையுலக காக்காவ (அதாவது வலைப்பதிவர) புடிச்சு தேச துரோக குற்றத்துக்கு ரெண்டு தட்டு தட்டினா போதும்; மீதி அத்தனை காக்காவோட கூப்பாடும், "கப் சிப்" ஆயிடும்.

Suresh Ram said...

இலங்கை வாழ இந்தியர்களின் நலனை மற்ற இந்தியர்களும் இது ஏதோ தமிழ் நாடு பிரிவினை முயற்சியாக பார்கின்றனர்
போலி இலங்கை தமிழ் ஆதரவாளர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து (NRI ) இலங்கை வாழ் இந்தியர்களை தனிமை படுத்தி விட்டனர்.
அப்பாவி இலங்கை வாழ் இந்தியர்களுக்கு NRI எந்த ஆதரவும் தருவதில்லை.அவர்கள் இதை ஒரு இந்திய பிரச்சனையாக கருதுவது கூட இல்லை
தமிழ் நாட்டில் உள்ள சில தி மு க பாணி உதிரி கட்சிகளின் ஆவேச பேச்சை காட்டி பிரபாகரன் போன்றவர்களை ஏதோ கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி அவரை காலி செய்து விட்டனர் .
தி மு க பாணி பார்பன எதிப்பு , சுய பச்சதபாம் , கோழை தனமான மிரட்டல் , என்கிற ஆயுதங்கள் தான் மிச்சம்

இலங்கை இந்திய வம்சாவளினர் இனிமேலாவது இந்த போலி தமிழ் வாதிகளையும் பார்பன எதிர்பாளர்களையும் புறக்கணித்து தங்களை இந்தியர்களுடன் identify செய்த கொள்ளுவது அவர்களுக்கு நல்லது

Suresh Ram said...

Malaysian Indian Congress hoping to recapture parliament seat
Posted on: 12 Apr 2010
Kuala Lumpur: Backed by Prime Minister Najib Tun Razak, the Malaysian Indian Congress (MIC) is hoping to recapture a parliament seat it lost two years ago in Selangor to assert its political importance in a multi-ethnic nation.
.......
http://www.mathrubhumi.com/english/news.php?id=89905

அருள் said...

//வெளி நாட்டுக் கைக்கூலியாக இருப்பதைவிட ஆர்.எஸ்.எஸ் கைக்கூலியாக இருப்பது எவ்வளவோ மேல்//

--அனானி

//நீங்க எல்லாம் விடுதலைபுலி தீவிரவாதிங்க கிட்ட கூலி வாங்கினவங்களா?//

--நூல்பொய்யன்

//டோண்டு கருத்தே பார்ப்பானர் கருத்து என்ற உங்களைப்போன்ற லூசு கேசுகளின் கருத்தை எவ்வாறு யாருமே நம்ப மாட்டார்களோ அவ்வாறே பார்ப்பானர் கருத்தே பொதுமக்கள் கருத்து என்று யாருமே நம்ப மாட்டார்கள்.

ஆகவெ இனி நீங்கள் நிம்மதியாக கீழ்ப்பாக்கத்தில் போய் அட்மிட் ஆயிக்கல்லாம்.//

--வஜ்ரா

ஹா..ஹா..ஹா... பார்ப்பனர்களின் கோபம் மகிழ்ச்சியளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் பத்திரிகை "ஆர்கனைசரின்" வாசகர் வஜ்ராவிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

ஆர்.எஸ்.எஸ் காரங்க ப்ளாகில் எழுதுவதற்காக எதனைபேரை மாத சம்பளம் கொடுத்து வளர்த்து விட்டாலும், இனி உங்களுக்கு அந்திம காலம்தான்.

ப்ளாக் உலகம் இப்போது பார்ப்பனர்களின் கடைசி புகலிடம். இங்கிருந்தும் உங்களை துரத்தும் காலம் வரும்.

Unknown said...

ada enna ivalaavu comment donduvukku....

Unknown said...

dondu neenga oru mandu....

satheshpandian said...

வரவர உங்க கற்பனைக்கு அளவே இல்லை. உங்களுடைய வீரத்தை அந்த வயது முதிர்ந்த அம்மாவிடமா காட்டுவது..
வாழ்க உங்களின் வல்லரசு கனவு

satheshpandian said...

//அப்போ, நீங்க எல்லாம் விடுதலைபுலி தீவிரவாதிங்க கிட்ட கூலி வாங்கினவங்களா? அவங்களுக்காக, நம் நாட்டு நலனை கூட பாக்காம கண்ணு, மண்ணு தெரியாம கூப்பாடு, ஒப்பாரி எல்லாம் போடறீங்களே?

தீவிரவாதத்துக்கு எதிரா ஏனோ, தானோன்னு நடவடிக்கை எடுக்கற கருணாநிதி ஆட்சியிலேயே உங்களால தாக்கு புடிக்க முடியலையே; உங்க போதாத காலம், தப்பி தவறி ஜெயலலிதா மட்டும் ஆட்சிக்கு வந்தாங்கன்னா, அவ்ளோதான் - உங்க கூட்டம் எல்லாம் துண்ட காணோம்; துணிய காணோம்னு ஓட வேண்டியதுதான். ஒரு வலையுலக காக்காவ (அதாவது வலைப்பதிவர) புடிச்சு தேச துரோக குற்றத்துக்கு ரெண்டு தட்டு தட்டினா போதும்; மீதி அத்தனை காக்காவோட கூப்பாடும், "கப் சிப்" ஆயிடும்.///


அம்மா பேச்சு தான் அப்படி செயல் வேற
அய்யா பேசுறது இனிக்கிறது மாதிரி இருக்கும் இவரோட ஆட்சியில தான் எகபட்டபேரை உள்ளே தூக்கி வச்சிருக்கார்.
புலிகள் அம்மாவை இது வரை எதிர்த்து பேசியது இல்லை.
விவரம் வேண்டுமென்றால் சிபிஐ கார்த்திகேயன் எழுதிய நூலை முழுவதும் படிக்கவும்.
ஆனால் அய்யாவை அவர்கள் மதித்தது இல்லை. MGR காலத்தினை நினைவு கொள்ளவும்.
வரலாறு தெரியாமல் உளற வேண்டாம்.

Unknown said...

அய்யா டொண்டு, உமக்குத்தான் இந்த பதிவு

http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_21.html

நூல்பொய்யன் said...

//அம்மா பேச்சு தான் அப்படி செயல் வேற//

எனக்கு தெரிஞ்ச வரலாறுபடி அம்மா ஆட்சியில் வைகோ, திருமா, வீரmoney, சீமான், கோமான், மற்றும் வேறு எந்த பேமானியும், ஈ, எறும்பு, காக்கா போல எதுவுமே தீவிரவாதத்துக்கு வெளிப்படையான ஆதரவோ அல்லது இப்போது நடைபெறுகின்ற ஒப்பாரி வித்தைகளோ எதுவுமே செய்ய திராணி அற்ற நிலையில்தான் இருந்தன. வைகோ கொழுப்பெடுத்து திருமங்கலத்தில் நடத்திய ஸ்டன்டுக்கு POTAவில் அவர் பட்ட அவஸ்தைக்கு பிறகு எந்த காக்காவுக்கும் பேதி வந்திருக்கும்.

தம்பி சதீசு, உங்க வீரம் நிஜமா போலியான்னு கொஞ்சம் உலகத்துக்கு காட்டுங்களேன், போற வழிக்கு உங்களுக்கு புண்ணியமா போகும்.

வஜ்ரா said...

//
ஹா..ஹா..ஹா... பார்ப்பனர்களின் கோபம் மகிழ்ச்சியளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் பத்திரிகை "ஆர்கனைசரின்" வாசகர் வஜ்ராவிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

ஆர்.எஸ்.எஸ் காரங்க ப்ளாகில் எழுதுவதற்காக எதனைபேரை மாத சம்பளம் கொடுத்து வளர்த்து விட்டாலும், இனி உங்களுக்கு அந்திம காலம்தான்.

ப்ளாக் உலகம் இப்போது பார்ப்பனர்களின் கடைசி புகலிடம். இங்கிருந்தும் உங்களை துரத்தும் காலம் வரும்.
//

ஹலோ அருள்,
எனக்கு பிளாக் எழுத எவனும் சம்பளம் எல்லாம் கொடுப்பதில்லை. நான் பார்ப்பானன் அல்ல, நான் ஆர்.எஸ்.எஸ் காரனும் அல்ல. நான் ஆர்கனைசர் மட்டுமல்ல, புதிய ஜனநாயகம் கூடத் தான் படிக்கிறேன். என் வலைப்பதிவில் பீப்பிள்ஸ் டெமாக்கிரஸி வலைத்தளத்தின் லிங்க் கூட உண்டு.

பார்ப்பானர் கருத்தே பொதுமக்கள் கருத்து என பிரச்சார பாணியை ஆர்.எஸ்.எஸ் கடைபிடிப்பதாக கான்ஸ்பிரஸி செய்வது நீங்கள்.
பொதுமக்கள் என்போர் அறிவுள்ள தனி மனிதர்கள், கான்ஸ்பிரஸி தியரிகளை நம்பும் (உங்களைப் போன்ற) முட்டாள்கள் அல்ல என்பது என் கருத்து.

எந்த பத்திரிக்கையில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எழுத்தைப் பதிக்கிறார்கள் என்று சொல்லவும். பத்திரிக்கை உலகமே அவர்களைத் தீண்டத்தகாதவர்களாகத் தான் பார்க்கிறது என்பது உண்மை நிலை. அதெல்லாம் அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.

அது சரி, பார்ப்பானர்களையெல்லாம் பிளாகை விட்டு துரத்திய பிறகு யார் மேல் குற்றம் சொல்லி துரத்தப்போகிறீர்கள் ? i.e., who is next in your hit list ?

அன்புடன் நான் said...

சிங்கள குரோமசோம் கலந்திருந்தா இப்படித்தான் எழுத தோணும்!

அ சொ said...

திரு. ராகவன்,
இப்பதிவு மிகவும் தரம் தாழ்ந்த ஒன்று...Arun

Unknown said...

sir mutichuduchu ivangaloda manithabimanam mannakatti ellam. ipa yaaruku kootam athikama koodudhukuradhuthan pirachanai. parvathyammal inimey thevaillai.

பருப்பு (a) Phantom Mohan said...

நான் சொன்னதில் உறுதியாகவே இருக்கிறேன். இந்த எதிர்ப்பு பின்னூட்டங்கள் அவரவர் தத்தம் குற்ற உணர்ச்சியை மறைக்கவே ஓவர் சீன் காட்டுவதாக எனக்கு படுகிறது./////

நீங்க என்னத்த சொன்னிங்க..சிங்கி அடித்ததில் உறுதியாக இருக்கேன்னு சொல்லுங்க

உங்க கிட்ட சீன் காட்டி நாங்க என்ன பண்ண...சீன் போடறதுன்ன என்னன்னு ரெண்டு மணி உண்ணாவிரதம் இருந்தனே ஒரு )^*%^*^*%^*(^%*%^*&%*%^*&%*&%^*&%^*&^*%&*%&^%^%^%$*&%&%^$^%(*WE£^*&&(*&(*^£)(&(*"^&(*£&^ அவன்கிட்ட கேளுங்க

/////புலிகளை நான் தீய சக்தியாகவே பார்க்கிறேன். /////

என்னங்க உங்க இந்த பதிவே நாட்டு நலனாப் பத்தியும்..நாடு முன்னேரத்தப் பத்தியும் தான்..புலி இந்தியாவின் தேசிய விலங்கு, அப்டி எல்லாம் தப்ப பேசக்கூடாது..

இல்ல விடுதலை புலியப் பத்தின்ன உனக்கு மரியாதையே கிடையாது...உன் வீட்டுல உன்ன திட்டக் கூடாதுன்னு பாக்குறேன்..என் ஏரியா வுக்கு வா உனக்காக ஒரு பதிவு போடறேன்.

/////என் மேல் மதிப்பு இல்லை எனச் சொன்னால் அது சொல்பவரது பிரச்சினை. அதை கூறுவது அவரது சுதந்திரம்./////

இந்த இடத்துல உனக்கு மப்பு தெளிந்ச்சிடுச்சு ன்னு நெனைக்கேன்

//////I am least bothered.////

finishing touch but we will smite u

satheshpandian said...

நூல்பொய்யன் said...
//அம்மா பேச்சு தான் அப்படி செயல் வேற//

எனக்கு தெரிஞ்ச வரலாறுபடி அம்மா ஆட்சியில் வைகோ, திருமா, வீரmoney, சீமான், கோமான், மற்றும் வேறு எந்த பேமானியும், ஈ, எறும்பு, காக்கா போல எதுவுமே தீவிரவாதத்துக்கு வெளிப்படையான ஆதரவோ அல்லது இப்போது நடைபெறுகின்ற ஒப்பாரி வித்தைகளோ எதுவுமே செய்ய திராணி அற்ற நிலையில்தான் இருந்தன. வைகோ கொழுப்பெடுத்து திருமங்கலத்தில் நடத்திய ஸ்டன்டுக்கு POTAவில் அவர் பட்ட அவஸ்தைக்கு பிறகு எந்த காக்காவுக்கும் பேதி வந்திருக்கும்.

தம்பி சதீசு, உங்க வீரம் நிஜமா போலியான்னு கொஞ்சம் உலகத்துக்கு காட்டுங்களேன், போற வழிக்கு உங்களுக்கு புண்ணியமா போகும்.
///


அண்ணன், அவங்க எதிரியாக பார்த்தது இங்கே இருக்கும் எதிர் கட்சிகளை தான். எங்கே ஒரு முக்கிய புலி உறுப்பினர் அவர் ஆட்சியில் கைதுன்னு சொல்லுங்க பாப்போம்.
என் வீரத்தை உங்களிடம் காட்டி என்ன நடக்க போகுது...

satheshpandian said...

இங்கே அந்த அம்மாவுக்கு பதிலாக உங்கள் அம்மா வந்திருந்தால் இதே பதிலை தான் சொல்லுவீர்களா?

நூல்பொய்யன் said...

//எங்கே ஒரு முக்கிய புலி உறுப்பினர் அவர் ஆட்சியில் கைதுன்னு சொல்லுங்க பாப்போம்.//

நாந்தான் சொன்னேனே, புலி எல்லாம் கிலி பிடித்து போய் வாலை சுருட்டி கொண்டு ஒளிந்து கொண்டு இருந்தன, அம்மா ஆட்சி காலத்தில் என்று. கூலிபடைகள் ஒரு சிலது மட்டும் வாலை ஆட்ட முற்படும்போது, அம்மா வைகோவுக்கு போட்ட போட்டில், சர்வ நாடியும் அடங்கி ஒடுங்கி "மாவீரர்களாக" எல்லாத்தையும் பொத்திக்கொண்டு மூலையில் முடங்கி கிடந்தன.

தம்பி உனக்கு "வீரம்" என்று ஒன்று இருந்தால், "உலகுக்கு" காட்டு என்றுதான் சொன்னேன். அப்பதானே, தெரியும் அது நிஜ வீரமா, இல்லை "மாவீரன்" போன்ற உடான்ஸ் வீரமா என்று?

satheshpandian said...

//நாந்தான் சொன்னேனே, புலி எல்லாம் கிலி பிடித்து போய் வாலை சுருட்டி கொண்டு ஒளிந்து கொண்டு இருந்தன, அம்மா ஆட்சி காலத்தில் என்று. கூலிபடைகள் ஒரு சிலது மட்டும் வாலை ஆட்ட முற்படும்போது, அம்மா வைகோவுக்கு போட்ட போட்டில், சர்வ நாடியும் அடங்கி ஒடுங்கி "மாவீரர்களாக" எல்லாத்தையும் பொத்திக்கொண்டு மூலையில் முடங்கி கிடந்தன.
///



தயவு செய்து தெரியாத விசயங்களை பேச வேண்டாம்.
அம்மா தனக்கு எதிரானவர்களை நேரடியாக தாக்குவார்.
அய்யா அப்படி இல்லை. அவர் அவர்களுக்கு நெஞ்சில் இடம் என்று சொல்லி அதே நெஞ்சில் குத்துவார்.
அம்மாவை சந்தித்த புலிகள் அமைப்பினர் உண்டு. அய்யாவை மருந்துக்கு கூட சந்தித்தது இல்லை.

Anonymous said...

//நான் பார்ப்பானன் அல்ல// - vajra

நிறைய பேர் இப்படி சொல்லித்தான் எழுதுகிறார்கள். சிலர் முசுலிம் பெயர்கள், கிருத்துவ பெயர்கள், பெயர்களிலும் எழுதுகிறார்கள். இதற்கு ‘அனானி’ பேரிலேயே எழுதிவிட்லாம்.

நான் பார்ப்பான் அல்ல என்றால் ஒரு ப்ள்ஸ் போயிண்டா? நான் பார்ப்பான் என்று சொல்லிவிட்டால், ஒரு மைனஸ் போயிண்டா?

Have some self respect!

//பொதுமக்கள் என்போர் அறிவுள்ள தனி மனிதர்கள்,//

அப்படியெல்லாம் கிடையாது. பொதுமக்களை ஏமாற்றித்தான் இன்று அரசிய்லவாதிகள் பிழைக்கிறார்கள். இந்துக்களை ஏமாற்றி உங்கள் ஆர் எஸ் எஸ், பி.ஜே.பி பிழைக்கின்றன.

ஊடகங்கள், மேடைப்பேச்சு - இத்தியாதிகளை வைத்து மக்களை சுலப்மாக ஏமாற்றலாம்.

டோண்டுவின் கருத்து பார்ப்பனர்களின் பொது கருத்தா இல்லையா, என்பதை எப்படி கண்டுபிடிக்க?

வலைபதிவுகளில், போரம் இவற்றில் நாம் பார்க்கலாம். இங்கு முகம் தெரியாமல் எழுதலாம்.

ஒரு பார்ப்பன எதிர்ப்பு பதிவை போடுங்கள். அப்போது தெரியும் ஆர் எப்படி என்று. போட்டவனை என்ன சொல்கிறான் என்பதற்கு முன்பேயே, ஒரு கூட்டமாக வந்து, ‘பார்ப்பனத்துவேசி’ என்று எழுதுவார்கள்.

பிரபாகரன், வி.புலிகள், ஈழம். தமிழா வட்மொழியா கோயிலில், இராமர் பாலம், அயோத்தி பிரச்னை, பாபர் மசூதி உடைப்பு, மோடி, இட ஒதுக்கீடு - இவற்றிலெல்லாம் டோண்டு என்னென்ன கொள்கைகளை வைத்திருக்கிறாரோ, அது தமிழ்ப்பார்ப்பன சுமூகத்தில் கொள்கைகள என தாராளமாகச்சொல்லலாம்.

அவற்றைப்பிடிக்காதவர்கள், இங்கே ஒட்டுமொத்தமாக, தமிழ்ப்பார்பன்ச்சமூகத்தைச்சாடுவது, அவர்களைப்பொறுத்தவரை சரியே.

Anonymous said...

//தமிழ்த்தாத்தா என்று கொண்டாடுபவர் ஒரு பிராமணர்தான்// Manickam

பிராமணர் என்று எவரும் இல்லை தாத்தா காலத்திலேயே.

எங்கே பிராமணன் என சோ தேடுவதும், சோவின் பி.ஆர்.ஓ டோண்டு விளம்பரம் தேடுவது தமிழ்ச்சமூகத்தை ஏமாற்றும் வேலை. இவ்வேலையை தமிழ்ப்பார்ப்பனர்கள் காலம்காலமாக செய்து வருகிறார்கள்.

தங்களை பிராமணர்கள் என்று சொல்லி ஏமாற்றிய ஒரே காரணத்தாலே தமிழ்நாட்டில் பார்பன எதிர்ப்பு வந்தது.

அயயா, மாணிக்கம், தமிழ்தாத்தா, தமிழுக்குத்தான் தொண்டு செய்தார். ஆங்கிலத்துக்கும் தொண்டு செய்த தமிழ்பார்ப்பனர்களும், மலையாளத்துக்கு தொண்டு செய்த தமிழ்பார்ப்பனர்களும் (பரமேஸ்வ்ர ஐயர்), கன்னட்த்து மஸ்தி வெங்கடேச ஐய்ங்கார் என்று உண்டு.

இது வேறு. தமிழர், தமிழர் நலம், வேறு.

தமிழ்தாத்தா வாழ்கையை ஆராய்ந்தால், அவர் எவ்வள்வு அசிங்கமான் பார்ப்பன் வெறியர் என்று தெரியும். பார்ப்ப்னரல்லாதவருக்கு நான் தமிழ் சொல்லித்தர மாட்டேன் என நாரண் துரைக்கண்ணனை வெளியே போச்சொன்னவர். ஒரு உதாரணம்தான்.

Anonymous said...

டோண்டு சார், நீங்கள் சில வாக்கியங்களை தவிர்த்திருக்கலாம். புதுசு புதுசா டிசைன் டிசைனா ஆளுங்க வந்து எப்பவும் போல பார்ப்பான தாக்கியிருக்காங்க. இப்படி எழுதுறதால நான் இந்தப் பதிவ ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. இன்னும் தெளிவாக இதை யார் யார் அரசியலாக்கியிருப்பார்கள் என்று ஒரு வரி சேர்த்திருந்தால் இவ்வளவு ஆர்ப்பாட்டம் இருந்திருக்காது. நீங்கள் சொன்னது போலவே ஜு வி மற்றும் நக்கீரன் சொம்பைஎடுத்துக் கொண்டு வந்து பேட்டி எடுத்து அந்த அம்மா சொன்னதை ஒன்றுக்கு நுறாக திரித்திருப்பார்கள். கூடவே பிரபாகரன் உயிரோடிருப்பதாக அந்தம்மாவே சொன்னதாக கதையடித்தும் இருப்பார்கள்.
கடைசியாக, முடிந்தால் அந்த அம்மையாரை மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்திருக்கலாம் என்ற வரியை சேர்த்து விடுங்கள். : அன்புடன் அனானி

dondu(#11168674346665545885) said...

//கடைசியாக, முடிந்தால் அந்த அம்மையாரை மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்திருக்கலாம் என்ற வரியை சேர்த்து விடுங்கள்.//
அவ்வாறு போலியாக பின்சேர்க்கை தரும் அவசியம் எனக்கில்லை.

அதுவும், உள்ளே அனுமதித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதையும் எடுத்துக் காட்டிய பிறகு இதையும் எழுதுவது சரியாக வராது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@ஜோ அமலன் ராயென் ஃபெர்னாண்டோ
வஜ்ரா என்பவரை பெர்சனலாகவே பல பதிவர்களுக்கு தெரியும். இஸ்ரேலில் இருந்தவர். அவருடன் நானும் போனில் பேசியுள்ளேன்.

ஆனால் உம்மைப் பற்றி அவ்வாறு சொல்லவியலாது. ஆனால் எனக்கென்னவோ நீங்கள் எழுதும் ஸ்டைலை பார்த்தால் ஆதிசேஷன் என்னும் ஒரு பதிவர் நினைவுக்கு வருகிறார்.

ஆக, ஆனாமத்து உண்மையிலேயே நீங்கள்தான். பிளாக்கராக இருந்தாலும் வெரிஃபை செய்யப்படாத நபர்.

டோண்டு ராகவன்

Sivakumar said...

பதிவர்கள் சற்று நிதானத்துடன் இவ்வகை நிகழ்வுகளை அணுக வேண்டுமென்று நினைக்கிறேன்.

மனிதாபிமானம்.... மனிதாபிமானம்.... என்று கூவத் தேவையில்லை.
ஏனெனில் அந்த வயதான பெண்மணியை மலேசியாவில்
இருந்து நாடுகடத்தவில்லை. மலேசியாவில் கிடைக்காத சிகிச்சை இங்கே கிடைக்கிறதா என்ன....

நினைவில் கொள்ளுங்கள்.... இங்கே வந்து சிகிச்சை பெறும் வெளிநாட்டவர் பெரும்பாலும் ஆப்ரிக்கா கண்டத்தைச்
சேர்ந்தவர்கள் தான்.

மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு அந்நாட்டிலேயே சிறந்த
சிகிச்சை கிடைக்கிறது.

இதற்காக பின்னூட்டத்தில் இந்த அளவுக்கு சாடியிருக்கத் தேவையில்லை.
அவர்களின் பின்னூட்டங்களை அருவருப்புடனே தவிர்த்தேன்.

மேலும் தமிழ்மணம் முழுவதும் இவ்வாறான உணர்ச்சி வயமான
மக்கள் தான் விரவியிருக்கிறார்கள் என்பதையும் மைனஸ் ஓட்டுகள் தெரிவிக்கின்றன.

மணிஜீயின் பின்னூட்டங்கள் அவர் சரியாக புரிந்து கொண்டிருப்பதைக் காட்டின.

பல்லு பிச்சை said...

டோண்டு சார்,

//புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை//

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய் அப்படினு பள்ளிப் பருவத்துல சொல்லி கொடுத்ததயே இவரு கத்துக்கலயாம், இதுல புதுசா மத்தவங்ககிட்ட அதுவும் இந்த வயசுல கத்துக்க போறாறாம். சும்மா காமெடி செய்யாதிங்க சார். இதுவரைக்கும் நீங்க கத்துகிட்டதே போதும் சார். இதுக்கு மேலயும் புதுசா கத்துகிட்டு உங்களை நீங்களே கேவலப்படுத்திக்காதிங்க.

அடடே, அப்புறம் சொல்ல மறந்துட்டேனே 6 இலட்சம் ஹிட்ஸ் வர போகுதுல சீக்கிரம் நண்பர்களுக்கு நன்றி - 6 பதிவ ரெடியா டிராப்ட்ல வச்சுக்கங்க சார். எவன்/எவள் நாசமா போனா நமக்கென்ன நாம 6 இலட்சம், 7 இலட்சம், 8 இலட்சம்னு போய்கிட்டே இருப்போம். நீங்க நடத்துங்க சார்.

பல்லு பிச்சை

dondu(#11168674346665545885) said...

@பல்லுப் பிச்சை
கிட்டத்தட்ட 3 வருஷமா ஒரு பதிவை கூட போடாமல், வெறுமனே பிளாக்கர் பின்னூட்டத்துக்கு மட்டும் பிளாக்கர் ஐடியை வச்சிருக்கும் ஒங்களுக்கு என்னை பற்றிப் பேச ஒரு யோக்கியதையும் இல்லை.

போங்க சார் போய் ஏதாவது பதிவு போடப் பாருங்க, அதுக்கான மூளை ஏதாச்சும் இருந்தால். இல்லாக்காட்டி அவ்வப்போது மத்தவங்க பதிவுக்குள்ள வந்து வெறிக்க வெறிக்க பாத்துட்டு ஓடிப்போயிடுங்க (நன்றி கவுண்டமணி).

டோண்டு ராகவன்

selventhiran said...

வரிக்கு வரி ஈனத்தனம் மிளிரும் பதிவு. வாழ்த்துக்கள் ஈனரே!

பல்லு பிச்சை said...

//கிட்டத்தட்ட 3 வருஷமா ஒரு பதிவை கூட போடாமல், வெறுமனே பிளாக்கர் பின்னூட்டத்துக்கு மட்டும் பிளாக்கர் ஐடியை வச்சிருக்கும் ஒங்களுக்கு என்னை பற்றிப் பேச ஒரு யோக்கியதையும் இல்லை.//

அடடே அப்படியா? தெரியாம போச்சே. இதுக்கு முன்னாடியும் உங்களுக்கு பின்னூட்டம் போட்டு இருக்கேனே. ஓஹோ அப்போ உங்களை குற்றம் சொல்லாததால எனக்கு யோக்கியதை இருந்து இருக்கும்.

//போங்க சார் போய் ஏதாவது பதிவு போடப் பாருங்க, அதுக்கான மூளை ஏதாச்சும் இருந்தால். இல்லாக்காட்டி அவ்வப்போது மத்தவங்க பதிவுக்குள்ள வந்து வெறிக்க வெறிக்க பாத்துட்டு ஓடிப்போயிடுங்க (நன்றி கவுண்டமணி).//

நல்ல வேளை சார், உங்க அளவுக்கு எனக்கு மூளை இல்ல. நெனச்சாலே சந்தோசமா இருக்கு.

ஆமா பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய் அப்படினு பள்ளிப் பருவத்துல சொல்லி கொடுத்தத கத்துக்கலயானு கேட்டு இருந்தேனே அதுக்கு பதிலயே காணோம்? அது சரி பதில் இருந்தாதான.

பல்லு பிச்சை

dondu(#11168674346665545885) said...

//வாழ்த்துக்கள் ஈனரே//
நன்றி வீணரே.

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//ஆமா பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய் அப்படினு பள்ளிப் பருவத்துல சொல்லி கொடுத்தத கத்துக்கலயானு கேட்டு இருந்தேனே அதுக்கு பதிலயே காணோம்? அது சரி பதில் இருந்தாதான.//
அதான் முதலிலேயே ஒட்டுமொத்தமாகவே பதில் சொல்லிட்டேனே, என் பதிவை விமரிசிக்கும் யோக்கியதை உமக்கில்லையென சொல்லி விட்டேனே. இப்போது என்ன தனி பதில் அதுக்கு பாழாப்போறதாம்?

டோண்டு ராகவன்

A

பல்லு பிச்சை said...

//அதான் ஒட்டுமொத்தமாகவே பதில் சொல்லிட்டேனே//

பதில் சொல்லியாச்சா? பாருங்க சார் உங்க அளவுக்கு மூளை இல்லாததால நீங்க பதில் சொன்னது கூட புரியல.

//உமக்கில்லையென சொல்லி விட்டேனே.//


நீரெங்கே சொன்னீர்? நான்தானே சொன்னேன்?

//இப்போது என்ன தனி பதில் அதுக்கு பாழாப்போறதாம்?//

அதான இருந்தா சொல்லிர மாட்டோமா?

பல்லு பிச்சை

பல்லு பிச்சை said...

//என் பதிவை விமரிசிக்கும் யோக்கியதை உமக்கில்லையென சொல்லி விட்டேனே//

இதற்கு முன் 2008-ல் பின்னூட்டம் போடும்போது எனக்கு யோக்கியதை இருந்ததாவென நான் கேட்டிருந்தேனே.

பல்லு பிச்சை

dondu(#11168674346665545885) said...

1. http://dondu.blogspot.com/2007/11/blog-post_20.html
பல்லு பிச்சை said...
//ரங்கத்தில் ஆபாசங்கள்//

டோண்டு ஐயா, அகரம் என்ன பாவம் செய்தது?. என்னடா இவன் வந்தோமா பிச்சை எடுத்தோமானு இல்லாம நொட்ட சொல்லிக்கிட்டே இருக்கானேனு நினைக்காதிங்க. எழுத்து பிழைய பார்த்தால் எனக்கு அலர்ஜி.

November 20, 2007 9:13 AM
dondu(#11168674346665545885) said...
ரங்கத்தில் ஆபாசங்கள் என்பது பம்மலாரின் அப்புத்தகத்தில் உள்ள ஒரு அத்தியாயத்தின் தலைப்பு. அது எப்படியே எடுத்து ஆளப்பட்டது.

மற்றப்படி இடையின எழுத்து ர சொற்கள் முன்னால் வராவென்பதை நானும் அறிவேன்.

அன்புடன்,
டோண்டு இராகவன்

November 20, 2007 9:19 AM

2. http://dondu.blogspot.com/2007/10/blog-post_20.html
பல்லு பிச்சை said...
//இப்பதிவுக்கு ஒரே ஒரு தமிழ்மண ஸ்டாராவது மிஞ்சி இருக்கிறதே? நல்லவேளை கோவணத்தை உருவுவது போல அதையும் உருவாமல் விட்டார்களே?//

இதுல அப்படி என்னய்யா ஒரு குரூரமான சந்தோசம்?. திராவிட குஞ்சுக எல்லாம் ஒரு "-" குத்திட்டுதான டோண்டு பதிவையே படிக்க ஆரம்பிக்குறது. பின்ன எப்படி 4 ஸ்டார், 5 ஸ்டார் எல்லாம் வரும்?. ம்ம்ம்ம்ம் "-" குத்துரதுக்குன்னே ஒரு கும்பல் இருக்குதுப்பா

3. http://dondu.blogspot.com/2007/10/blog-post_20.html
பல்லு பிச்சை said...
//கணவன் இன்றி குழந்தை ஏது?//

இதை படிச்சதும் திருடா திருடி படத்திலிருந்து ஒரு டயலாக் தான் நியாபகத்துக்கு வந்தது.

July 18, 2008 10:54 AM

இம்மாதிரி பின்னூட்டங்களுக்கும் இந்தப் பதிவுக்கான பின்னூட்டங்களுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இல்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

Jo Amalan Rayen Fernando said...

//பிரபாகரன், வி.புலிகள், ஈழம். தமிழா வட்மொழியா கோயிலில், இராமர் பாலம், அயோத்தி பிரச்னை, பாபர் மசூதி உடைப்பு, மோடி, இட ஒதுக்கீடு - இவற்றிலெல்லாம் டோண்டு என்னென்ன கொள்கைகளை வைத்திருக்கிறாரோ, அது தமிழ்ப்பார்ப்பன சுமூகத்தில் கொள்கைகள என தாராளமாகச்சொல்லலாம்//

ரோம்ப சரியாக சொன்னீர்கள். இது எல்லாம் அவங்க ஜீன்ல இருகு சார்.

வஜ்ரா said...

//பார்ப்பானர் கருத்தே பொதுமக்கள் கருத்து என பிரச்சார பாணியை ஆர்.எஸ்.எஸ் கடைபிடிப்பதாக கான்ஸ்பிரஸி செய்வது நீங்கள்.
பொதுமக்கள் என்போர் அறிவுள்ள தனி மனிதர்கள், கான்ஸ்பிரஸி தியரிகளை நம்பும் (உங்களைப் போன்ற) முட்டாள்கள் அல்ல என்பது என் கருத்து.//

வஜ்ரா சார், சேது சமுத்திர திட்டம் இன்னும் இழுபறியா இருப்பதுக்கு காரணம் தெரியுமா? அங்க இராமன் கட்டின பாலம் இருக்குன்ன ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரத்தை பார்ப்பன உச்சநீதிமன்ற நீதிபதிகள் நம்புவதுதான் காரணம்.

இராமனோட பேரச்சொல்லி பல ஆயிரம் பேரை கொலையும் பண்ணி, பி.ஜே.பி ஆட்சியையும் பிடிச்ச நாட்டுல "பொதுமக்கள் கான்ஸ்பிரஸி தியரிகளை நம்பும் முட்டாள்கள் அல்ல" என்று சொல்வது வேடிக்கை தான்.

//எந்த பத்திரிக்கையில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எழுத்தைப் பதிக்கிறார்கள் என்று சொல்லவும். பத்திரிக்கை உலகமே அவர்களைத் தீண்டத்தகாதவர்களாகத் தான் பார்க்கிறது என்பது உண்மை நிலை//

ஹா...ஹா... இதச்சொல்ல உங்களுக்கு கூச்சமா இல்லையா? இந்தியாவின் பெரும்பான்மையான பத்திரிகைகள் ஆர்.எஸ்.எஸ் + பார்ப்பான் பிடியிலதான் இருக்கு. இட ஒதுக்கீடு, பிரபாகரன், வி.புலிகள், ஈழம், இராமர் பாலம் இதுபத்தியெல்லாம் பத்திரிகைகள் செய்கிற விஷம பிரச்சாரத்துக்கு பின்னணி ஆர்.எஸ்.எஸ் நெட்வொர்க்தான்.

//நான் பார்ப்பானன் அல்ல//

பார்ப்பன "விஷ" சிந்தனை என்பது பார்ப்பானிடம் மட்டும்தான் இருக்கனும்னு இல்லை. சில சமயம் அந்த விஷம் மற்றவர்களுக்கும் பரவுவது உண்டு. இதுக்கு Brahmanical Social Order என்று பேர். இடஒதுக்கீட்டை எதிர்த்து ஓ.பி.சி இளைஞர் தீக்குளிச்சது இதுக்கு உதாரணம்.

வஜ்ரா said...

அருள்,

உங்களுடன் விவாதிப்பதில் எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை.
மேலும் இது விடுதலைப்புலித் தலைவரின் தாயை நாட்டிற்குள் விடாமல் தடுத்தது பற்றியது. ஆர்.எஸ்.எஸ் பற்றியது அல்ல.

முடிந்தால் உங்கள் பதிவில் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் "சதி" பற்றி பதிவு போடுங்கள். அங்கு வந்து பேசிக்கிறேன்.

இங்கு டோண்டுவின் கருத்தை எதிர்க்கும் 100 க்கு 99 பேர் அவரது கருத்தை விட்டு, அவரது ஜாதியை குறிவைக்கின்றனர் என்பது என் குற்றச்சாட்டு. முடிந்தால் அதற்கு தெளிவான பதில் தரவும்.
வெட்டித்தனமாக எதற்கெடுத்தாலும் அவன் ஆர்.எஸ்.எஸ், அவன் பார்ப்பான் ஆகவே அவனையும் அவனது ஜாதியையும் அவனது மெண்டாலிட்டியையும் திட்டுவது முற்றிலும் சரியே என்று ஞாயப்படுத்தாதீர்கள்.

மற்றதெல்லாம் தேவையில்லாத வெட்டிப்பேச்சு.

டவுசர் பாண்டி... said...

தாமதமாய்த்தான் பார்த்தேன்....பதிவுகளை பின்னூட்டங்கள் ஜோர்.

மெய்யாலுமே சொல்றேன்...உங்க பதிவு, உங்க கருத்து...நீங்க எழுதுனதுல தப்பே இல்லைன்னேன். ஆனா ஒரு முரட்டு ஹெட்மாஸ்ட்டரின் தொணியில இருக்கு உங்க பதிவு.அதான் நெறய பேருக்கு புடிக்கலை.

வைக்கோவுக்கோ, நெடுமாறனுக்கோ அந்த அம்மாவுக்கு நல்ல பராமரிப்பும், மருத்துவ கவனிப்பும் கிடைக்கணும்ங்கற நல்லெண்ணம் இருந்திருந்தா இந்த பிரச்சினையை இன்னும் நல்லவிதமா செயல் படுத்தியிருக்கலாம்.ஆனா அவங்களுக்கு அந்த மாதிரியான எண்ணம் எதுவும் இருந்ததா தெரியலை....இதை ஏன் இங்க வந்து கருத்து சொன்ன கந்தசாமிகள் எவனும் கண்டுக்கலைன்னு தெரியலை.

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் இல்லாத மருத்துவ சேவை சென்னையில் கிடைக்கிறது என்பது கேப்பையில நெய் வழியுதுங்கற மாதிரித்தான் இருக்கு.

கலைஞருக்கு தெரியாமல் இத்தனை நாடகமும் நடந்திருக்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரின் முன்னுரிமைகளில் ஈழத்தமிழர்கள் இல்லை என்பதை மீளவும் நிரூபித்திருக்கிறார்.

நானும் உங்களை ஐந்து வருடமாய் தொடர்ந்து கொண்டிருக்கிறேன், ஒரு பழக்கத்தை விடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்....வீம்புக்காச்சும் மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சில் துப்பும் பழக்கத்தைத்தான் சொல்கிறேன்....ஹா..ஹா...

அருள் said...

வஜ்ரா said...

//இங்கு டோண்டுவின் கருத்தை எதிர்க்கும் 100 க்கு 99 பேர் அவரது கருத்தை விட்டு, அவரது ஜாதியை குறிவைக்கின்றனர் என்பது என் குற்றச்சாட்டு. முடிந்தால் அதற்கு தெளிவான பதில் தரவும்.//

பார்ப்பானுக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரனுக்கும் கருத்துன்னு ஒரு மண்ணும் கிடையாது. சுயசிந்தனை, நியாய உணர்வு என்பதெல்லாம் இவங்களுக்கு ரொம்ப தூரம். காலம் காலமா "தேய்ந்த ரெக்கார்டு" போல ஒரே விஷயத்தை வாந்தியெடுப்பதுதான் வேலை.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை காலகாலத்துக்கும் சுரண்ட வேண்டும், அடுத்தவரை சுரண்டி வாழவேண்டும் என்ற சதி மட்டும்தான் இவர்களின் குறிக்கோள். அதற்கு எதிராக தமிழ், தமிழன், இடஒதுக்கீடு என்று எதுவந்தாலும் பாய்ந்து புடுங்குவது இக்கூட்டத்தின் தொழில்.

டோண்டுவின் கருத்துக்கு எத்தனையோ பேர் விளக்கம் கொடுத்துவிட்டனர். ஆனால், அந்தக்கூட்டத்துக்கு அது ஒருபோதும் உரைக்காது. ஏனெனில், தமிழன் என்கிற அடையாளமே, பார்ப்பன சுரண்டல் கூட்டத்தின் சுயநலத்துக்கு எதிரானது.

எனவே, டோண்டுவின் கருத்து என்பது தனிப்பட்ட நிகழ்வல்ல. அது பார்ப்பன இனவெறியின் வெளிப்பாடு. "அவன் ஆர்.எஸ்.எஸ், அவன் பார்ப்பான் ஆகவே அவனையும் அவனது ஜாதியையும் அவனது மெண்டாலிட்டியையும் திட்டுவது" என்பது நியாயம்தான்.

dondu(#11168674346665545885) said...

//பார்ப்பானுக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரனுக்கும் கருத்துன்னு ஒரு மண்ணும் கிடையாது. சுயசிந்தனை, நியாய உணர்வு என்பதெல்லாம் இவங்களுக்கு ரொம்ப தூரம். காலம் காலமா "தேய்ந்த ரெக்கார்டு" போல ஒரே விஷயத்தை வாந்தியெடுப்பதுதான் வேலை.//
ஆகா வந்துட்டாரய்யா அருளாளர். அது சரி, இந்த விஷயத்துக்கு இங்கே இவ்வளவு பேசும் இந்த மனுசர் அது பற்றி தனது வலைப்பூவில் பதிவு ஒன்றும் போட்டதாகத் தெரியவில்லையே? ஊரார் பதிவுகளில் வந்து வாந்தி எடுப்பதுதான் வேலை போலிருக்கு.

ஐயா எங்களுக்கு ஆயிரம் வேலைகள் உண்டு. நாங்கள் என்ன லாப நோக்கமில்லாத நிறுவனங்களா என்ன? அவைதான் அதிக வரி ஏய்ப்பும் செய்கின்றன என்பதை அறிவீர்களா?

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//
ரொம்ப சரியாக சொன்னீர்கள். இது எல்லாம் அவங்க ஜீன்ல இருக்கு சார்.//

கூடிய சீக்கிரம் மன நல மருத்துவராக வரும் வாய்ப்பு உங்களுக்கு உண்டு. ஆகா என்ன கண்டுபிடிப்பு?

டோண்டு ராகவன்

தமிழ்போராளி said...

நண்பர்களே டோண்டு போன்ற துரோகிகளை முதலில் நாட்டை விட்டு அனுப்பவேண்டும். ஒரு மனிதனாக யாரும் மதிக்க கூடாது. தயவு செய்து யாரும் பதில் எழுதி பெரிய ஆளாக ஆக்க வேண்டாம்.
டோண்டு நீ ... எல்லாம் ...............................................................................................................................................................

dondu(#11168674346665545885) said...

//தயவு செய்து யாரும் பதில் எழுதி பெரிய ஆளாக ஆக்க வேண்டாம். //
அப்புறம் எதுக்கு இங்கே வரணும்?

டோண்டு ராகவன்

Unknown said...

neega great sir.ungakita kadhuka neraya iruku sir. Konta Kolgail uruthi. ipavum ivlo porumaya,uruthiya,nagarigathoda pathil sollikidu irukiga paaruga idhuthan enaku putichuruku.yeputi sir ungalala mutiudhu.vazhkai katru kodutha anubavama sir???

NO said...

அதான் கலைஞர் பார்வதி அம்மாள் விடயத்தில் ரொம்ப திட்டமிடாமல் casual ஆக நடந்து கொண்டார்! இதனால் தமிழகத்தில் அவருக்கு ஒன்றும் பாதிப்பு ஆகாது என்பது நன்றாகவே அவருக்கு தெரியும்! சொல்லவருவது என்னவென்றால், ஓட்டு போடுபவர்கள் தங்களுக்கு ஒரு நல்ல ஆட்சி கிடைக்க வேண்டும் என்று தான் ஒட்டு போடுவார்கள்! மலிவான அரிசி, மக்களுக்கு நிறைய ரோடுகள், தொழிற்ச்சாலைகள், வேலை வாய்ப்பு, நல்லாட்சி போன்றவைதான் முக்கியமென அவருக்கும் தெரியும், ஜெயலலிதாவிற்கும் தெரியும்!

அதை செய்யாமல் இலங்கை பிரச்னையை எடுத்துக்கொண்டு மட்டும் பேசினால் ஒன்றும் வேலைக்கு ஆகாது என்பது அவருக்கு தெரியும்! எப்பொழுது ஒன்று ஓட்டுக்கு உதவாது என்று ஒரு அரசியல் வாதி (எந்த ஒரு நாடிலும்) நினைக்கிறாரோ, அப்பொழுதே அதற்க்கு மதிப்பு குறைகிறது, கவனிப்பு குறைகிறது! இலங்கை, ஈழ தமிழகளின் விடயத்தில் இதுதான் நிலைமை!

வைகோவிற்க்கும் நெடுமாறனுக்கும் கூட இது புரிந்து விட்டது! இருந்தும்
பிழைப்பிற்கு வேறு வழி இல்லாத அவர்கள், ஏதாவது செய்து இந்த விடயத்தை முன்னிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இதை செய்திர்ப்பார்களோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது!

என்ன செய்ய, தமிழ் வலை உலகில் உள்ளவர்கள் தாங்கள் தான் ஏதோ தமிழகத்தின் பிரதிநிதி என்றும், அவர்களின் எண்ண ஓட்டம்தான் சாதாரண குடிமகனின் எண்ண ஓட்டமும் என்றும் நினைத்து காட்டு கூச்சல் போடுகிறார்கள்! எப்படி அந்த நினைப்பு பலருக்கு வருகிறது என்றால், பதிவு எழுத எழுத, தன்னாலும் பல பரிமாணங்களில்
பல விடயங்களில் பகிர்வு செய்ய முடியும் என்ற எண்ணம் ஒரு கிரீடமாக அவர்கள் மேல் உட்ட்கார்ந்து, நான் ஒரு எடுத்துக்காட்டு என்று தொடங்கி, நான் ஒரு பிரதிநிதி என்று முடிகிறது! யாரின் பிரதிநிதி என்றால், சாமானிய மக்களின் பிரதிநிதி, நான் எழுதுவது அவர்களின் எண்ணங்கள்ளைதான் என்ற மாயப்போர்வையில் அவர்களே சிக்கி கொள்கிறார்கள்!

அதவும் இந்த மாதிரி ஒரு விடயம் நடந்தவுடன், அதுவும் அவர்களுக்கு பிடிக்காத இந்த மாதிரி ஒரு பதிவை ஒருவர் போட்டவுடன், தமிழக மக்களும் இப்படியே நினைப்பார்கள், அவர்கள் எல்லாம் அவமானபடுத்தப்பட்டார்கள் என்று எண்ணம் கொண்டு வசை பாடுகிறார்கள்!

உண்மை என்னவென்றால், இவர்களுக்கும் தமிழக மக்களின் எண்ண ஓட்டத்திற்கும்
சம்மந்தமே இல்லை!

வந்த பின்னூட்டங்களை பார்த்தாலே தெரியும்! சிலர் உண்மையாகவே கோபம்
கொண்டும் எழுதினாலும், தொண்ணூறு சதவிகித பின்னூட்டக்காரர்கள், பழைய கணக்குகளை உங்களிடம் தீர்க்கவே எழுதுகிறார்கள் என்று! போதாததற்கு, கண்டபடி personal attack செய்து தங்களின் காழ்ப்புணர்ச்சிகளை
தீர்த்து கொண்டார்கள்! ஓரிருவர் தவிர எவரும் நீங்க சொன்ன கருத்தை பற்றி பேசியதாக தெரியவில்லை!

கவலை பட வேண்டாம்!

தமிழ் வலை உலக பதிவு வீரர்கள் தமிழகம் இல்லை! அவர்கள் எழுதுவது இந்திய
தமிழ் மக்களின் பிரதிபலிப்பும் இல்லை!

தாங்களே தயாரித்து தாங்களே அணிந்த கிரீடத்தை பார்த்து மற்றவர்கள் துதி பாடுவார்களா என்று ஏங்கி, நான் மற்றவருக்கு பாடினால், அப்படியாவது துதி எனக்கு வராதா என்று கணக்கிட்டு ஆசைகளை தீர்த்து கொள்ளும் ஒரு டைம் பாஸ் செய்யும் ஜனமே இது!

இதில் ஒருவர் எழுதுகிறார், அனைத்து தமிழர்களின் மாவீரனின் தாயாரம், ஆதலால், அவரை பற்றி சொன்னது தமிழர் அனைவருக்கும் அவமானமாம்! அதாவது தன் துக்கத்தை தமிழகத்தின் ஒட்டு மொத்த துக்கமாக்க வேண்டுமாம். அதாவது பிரபாகரன் மாண்டதையே ஒரு பொருட்டாக கருதாது, புலிகளை எதிர்த்த ராஜீவின் விதவைக்கு ஏகப்பட்ட ஓட்டு போடும் தமிழகம், இதனால் அவமானப்பட்டு விட்டதாம்! உளறலுக்கு ஒரு அளவு வேண்டாமா????

கலைஞர், மன்மோகன் சிங்கு, சோனியா காந்தி, ஜெயலலிதா போன்றவர்கள், இந்திய மக்களுக்கு நல்லது செய்யதான் தமிழர்களால் தேர்வு செய்யபட்டிருக்கிரார்கள்!
வேறு மாதிரி பேசிய வைகோவிற்கு தமிழக மக்கள் ஆப்பு வைத்தார்கள்!

பதிவுலக தமிழ் புரட்சிகளே,உங்களை போன்று எண்ணமுடைய தலைவர்கள்
தமிழகத்தில் வெற்றி பெற்று வர வேண்டுமென்றால், நீங்களே தமிழகம் வந்து உங்களின் வீர தீர சொல்லாற்ற்ல்களை பிரயோகித்து தேர்தலில் நிற்க வேண்டியதுதானே! என்ன ஆகும் தெரியுமா??? ஒரு ஒட்டு கிடைக்கும்!


நன்றி

NO said...

தமிழ் வலை உலகம் தமிழகம் அல்ல
---------------------------------------------------------------

பிரபாகரன் அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும்!
சொன்னது வைகோ. பிரபாகரன் மறைந்த செய்தி வந்ததுமே, எந்த ஒரு சலனமும் தமிழகத்தில் இல்லை! சலனமும் ஏற்ப்படாது என்பதை சில நாட்களுக்கு முன்னர் தி மூ காவிற்கு ஒட்டுப்போட்ட கோடி பேரும் தெரிவித்து விட்டார்கள்!

தீக்குளித்தார் ஒருவர். இந்த வலை தளத்திலும் மற்றும் சில பத்திரிகைகளின்
கடை பக்கங்களிலுமே அது எழுதப்பட்டது! அவரின் மரணத்தை ஒரு பெறும் நிகழ்வாக ஆக்க பலர் முயன்றார்கள்! சுமார் ஐந்நூற பேர் ஊர்வலத்திற்கு வந்தார்கள்! கோஷம் எழுப்பினார்கள்! கலைந்தார்கள்! வேறு ஒன்றும் நடக்கவில்லை என்றதும், சிலர் தங்கள் பற்றை காட்டிக்கொள்ள மாங்கு மாங்கென்று வலை தளங்களில் எழுதினார்கள் எழுதுகிறார்கள், எழுதுவார்கள்!

தமிழ் வலை தளங்களை பார்ப்பவர்கள், அதாவது சீரியஸ் ஆக பார்ப்பவர்கள், சுமார் ஆயிரம், maximum பத்தாயிரம் என்று வைத்துக்கொண்டாலும், தமிழர்களின்
எண்ணிக்கையில் அது மிக மிக மிக மிக சிறிய சதவிகிதமே! தமிழ் வலைப்பதிவர்களைப்போல, அதாவது இந்த விடயத்தில் வெகுண்டு எழுந்து,
இந்தியாவை, இந்திய இறையாண்மையை மற்றும் அதன் தலைவர்களை கண்டபடி வசைபாடுபவரின் எண்ணிக்கை கண்டிப்பாக அதைவிட கொஞ்சம் கம்மியாகவே இருக்கும்! இதில் பலர் இந்தியர்களே இலர்! இலங்கையை விட்டு வேறு ஊர்களில் சென்ற விடுதலை புலி அபிமானிகள்!

இந்த அளவு உணர்ச்சி கொண்டு தமிழகம் இருக்குமாயின், இந்திய அரசாங்கம் இந்த விடயத்தை வேறு மாதிரி கையாண்டிருக்கும்! இந்நேரம், தனி ஈழமே பிறந்திருக்கலாம்! ஆனால் அப்படி நடக்கவில்லையே! தமிழகத்தில் இலங்கை
பிரச்சனையால், பிரபாகரனின் மரணத்தால் ஒரு சலசலப்பும் இல்லையே! வலை தளத்தில் மட்டும் தானே வீரம் கொண்டு போட்டு தாக்கப்படுகிறது, அதுவும் பலர் வெளி நாடுகளில் உட்கார்ந்து கொண்டு!

இருபது வருடங்களுக்கு முன்னர் கலைஞர் ஆட்சி, விடுதலை புலிகளுக்கு ஆதரவாக
இருந்தது என்று கூறி கலைக்கப்பட்டது!அடுத்த தேர்தலில் திமுக தோற்றது!
ராஜீவ் காந்தியின் மறைவு அதற்க்கு ஒரு காரணம் என்றாலும், யோசிக்க வேண்டிய
விடயம், அது பரிதாப ஓட்டாக இருந்தாலும் அது தமிழ் மக்கள் போட்டது! அதாவது, விடுதலை புலியா, இராஜீவ் காந்தியா என்ற கேள்விக்கு தமிழர்கள் அளித்த பதில் வெரி clear!

சென்ற வருடம் நடந்ததும் இதே போலதான்! இலங்கை தமிழர் மேல் பலர் பரிதாபம்
கொண்டாலும், தங்களின் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தி உடைய தமிழக மக்கள், தங்களை ஆட்ச்சி செய்யப்போகிராறவர் யார் என்பதை முடிவெடுப்பதில், இலங்கை பிரச்சனையோ, அல்லது பிரபாகரனின் நிலைமையோ ஒரு பொருட்டாகவே
பார்க்கவில்லை! புத்தகத்திலும், சில நாளிதழ்களிலும் வந்ததை படித்து, பாவம், என்ன செய்ய என்று மட்டும் சொல்லி விட்டு, கலைஞருக்கு மற்றும் காங்கிரஸ் ற்கு ஒட்டுபோட்டார்கள்!

இங்கே சீறி எழும் தமிழ் வலைப்பதிவர்களைப்போல தமிழக மக்கள் எல்லோரும் அல்லது அட்லீஸ்ட் ஒரு கணிசமான பங்கு இருந்தாலும், நிலைமை வேறு மாதிரியாக அல்லவா இருந்திருக்க வேண்டும்???? இல்லையே!

வீறு கொண்டு சத்தம் போட்ட புரட்சி புயல் வைக்கோவே மண்ணை கவ்வினாரே??
அவருக்கு விழுந்த முக்கள் வாசி ஓட்டும், ஆதிமுக ஓட்டுதான், அப்படியிருக்க, இலங்கை தமிழருக்காக விழுந்த ஓட்டு என்று பார்த்தால் மிக மிக மிக குறைவாக
இருந்திருக்கும்!

இது கலைஞருக்கு நன்றாக புரிந்து விட்டது! வைகோவிற்க்கும், நெடுமாறனுக்கும் கூட புரிந்திருக்கிறது!

«Oldest ‹Older   1 – 200 of 248   Newer› Newest»
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது