5/13/2010

தனது சொந்த சாதிக்கு மட்டுமே சப்பைகட்டு கட்டும் முற்போக்கு பதிவர்கள்

வினவு பதிவுகளுக்கு போய் பின்னூட்டம் போடுவதை நிறுத்தினாலும் அதற்காக அவற்றைப் படிக்காமல் எல்லாம் இல்லை. அப்பதிவுகளில் பலவற்றில் தங்களை முற்போக்காளர்கள் என சுயமுத்திரை குத்திக் கொள்பவர்களின் வேஷமும் துகிலுரியப்படுவதை பார்க்க தமாஷாக இருக்கிறது.

உதாரணத்துக்கு கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்டையே எடுத்துக் கொள்வோம். அப்பதிவில் தன் குலவழக்கப்படி வினவு எப்பாடுபட்டாவது பார்ப்பனீயத்தை கொண்டு வருவதையும் செய்துள்ளது இப்பதிவுக்கான விஷயம் இல்லை என்றாலும் போகிற போக்கில் குறிப்பிட்டு விட்டு செல்கிறேன். கூடவே சிலருக்கு (குழலி, தமிழ்சசி) வன்னிய டோண்டு என பட்டம் அளித்து தனது டோண்டு ஃபிக்ஸேஷனை மீண்டும் நிரூபிக்கும் காமெடி பீஸான வினவு பற்றியும் இப்பதிவு இல்லை.

வினவே எதிர்பார்க்காத அளவில் ஒரு வன்னிய பதிவர் சீறி எழுந்து தனது சாதியை டிஃபண்ட் செய்துள்ளார். அதுகூட பிரச்சினை இல்லை, சகட்டு மேனிக்கு பார்ப்பானரை சாடி எல்லா பார்ப்பனர்களையுமே ஒட்டு மொத்தமாக இழிவுபடுத்தும் ஒரு சான்சையும் விடாத அவர் தங்களை முற்போக்காளர்கள் என சுயமுத்திரை குத்திக் கொள்பவர்களில் முக்கியமானவர் என்பதை கூறிவிட்டே இப்பதிவுக்கு செல்கிறேன்.

வினவில் அப்பதிவு வன்னிய சாதிவெறியர்களின் செயல்பாடு பற்றியதாகும். முதல் பின்னூட்டமே நான் போன பாராவில் குறிப்பிட்ட பதிவருடையதுதான். அவரின் பின்னூட்டங்களை இங்கே ஒன்றன் பின் ஒன்றாக போடுகிறேன். ஒவ்வொரு பின்னூட்டத்துக்குமான மற்றவர்களது எதிர்வினைகளை போட்டுக் கொண்டிருந்தால் பதிவு மிகப்பெரியதாகி விடும். ஆகவே தேவைப்பட்டவர்கள் சிரமத்தைப் பார்க்காது அங்கு போய் அவற்றை தேடிப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சம்பந்தப்பட்ட பதிவர் பெயர் அருள்:

1. //கொளத்தூரில் வன்னியரின் நிலையும், தலித்துகளின் நிலையும் ஒன்றுதான். காலம் காலமாக நிலவிவரும் சாதி வேறுபாடுதான் இருவரையும் பிரிக்கிறது. கல்வி, பொருளாதார நிலைகளில் மிகமிகமிக பின் தங்கியிருக்கும் வன்னியர்களின் அறியாமையால் சில பிரச்சினைகள் எழலாம். அது தவறுதான். அதற்காக வார்த்தைக்கு வார்த்தை ‘வன்னிய சாதிவெறி’ என்பது வன்னியர்களுக்கு எதிரான உங்களின் காழ்ப்புணர்ச்சியைதான் காட்டுகிறது.//

2. சீ.பிரபாகரன் என்னும் வன்னிய பதிவர் தாழ்த்தப்பட்டவர்கள் வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதி எடுத்துக்காட்டியுள்ளார். அவருக்கு பதிலாக அருள் கூறுகிறார், //சீ.பிரபாகரன் – நீங்கள் கூறுவது உண்மை என்று நான் சாட்சி கூறுகிறேன்//.

3. //கொளத்தூர் பகுதியில் பா.ம.க. தலைவர் கோ.க. மணி மீது போடப்பட்ட ஒரு பொய் வழக்கினை காரணமாக வைத்து கோயில் விழாவில் மேளம் வாசிக்க ஆதிதிராவிடர்களை அழைக்கவேண்டாம் என்று முடிவுசெய்த வன்னியர்கள் அருந்ததியினரை அழைத்தனர்.
மேளம் வாசிப்பது ஒரு தொழில் என்று எடுத்துக்கொண்டால், அதனை எங்குவேண்டுமானாலும் செய்வதற்கு அருந்ததியினருக்கு உரிமை இல்லையா?
ஆனால், மேளம் வாசித்த அருந்ததியினரை ஆதிதிராவிடர்கள் மிரட்டியுள்ளனர். அருந்ததியினருக்காக வன்னியர்கள் பேசப்போய் கலவரம் ஏற்பட்டுள்ளது.
வன்னியர்கள் சண்டையிட்டது தவறுதான். ஆனால், அருந்ததியினருக்கு எதிராக ஆதிதிராவிடர்கள் நடந்துக்கொண்டது மட்டும் நியாயமா?
வன்னியர்கள் ஆதிதிராவிடர்களுக்கு எதிராக நடப்பது சாதி வெறிதான். அப்படியானால், அருந்ததியினருக்கு எதிராக ஆதிதிராவிடர்கள் நடந்துகொண்டதற்கு என்ன பெயர்?
வன்னியர்களை பார்ப்பனர்களுக்கு இணையாக பேசுவது எல்லாம் ரொம்ப ஓவர்//.

4. ///அருள் அவர்களே,வன்னியரின் நிலையும், தலித்துகளின் நிலையும் ஒன்றுதான சற்று விளக்குகளேன்///
Kanisays:
‘நான் உயர்ந்த சாதி, நீ தாழ்ந்த சாதி’ என்கிற வீண் சாதிப்பெருமையை தவிர – கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை போன்ற எல்லாவற்றிலும் வன்னியரின் நிலையும், தலித் மக்களின் நிலையும் ஒன்றுதான்.
உண்மையில், தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கிய பகுதிகள் என்பவை எல்லாம் – வன்னியர்களும் பறையர் பிரிவினரும் அதிக அளவில் வாழும் பகுதிகள்தான்.
இந்த அவலத்தை எதிர்த்து போராடுவதே இன்றைய தேவை//

5. //அதிகாரமிக்க பதவிகளில் வன்னியர்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்று சொன்னதில் என்ன தவறு கண்டீர்கள்?
டிஐஜி பதவி ஒன்றுதான். அந்த ஒன்றும் வன்னியருக்கு இல்லை என்று சொல்வதில் என்ன பிரச்சனை? டிஐஜி பதவி உருவாக்கப்பட்டதிலிருந்து ஒரு டிஐஜியும் வன்னியர் இல்லை.
உண்மையை சொல்வதால் வெறி ஏறும் என்றால், உண்மையை சொல்லக்கூடாதா?//

6. //வால்பையன்says:
// ///எனது மகளுக்கு நான் சாதி சான்றிதழ் தரவில்லை, தர மாட்டேன் என்று சொல்லியிருக்கேன்! அடுத்த தலைமுறையிலாவது சாதி ஒழிய அதை செய்வோம் முதலில்!சாதிவாரியான கணகெடுப்பில் கூட நான் ”சாதி இல்லை” என்றே சொல்வேன்/// //
இது என்ன முற்போக்குன்னு யாராவது விளக்குங்களேன்.
சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவைன்னு அண்ணல் அம்பேத்கர் “பல லட்சங்களிலிருந்து பின்னங்களுக்கு”னு ஒரு கட்டுரை எழுதியிருக்கார். அதப்படிங்க வால்பையன்//.

7. //அருணா says:
கட்டுரையாளர் தாழ்த்தப்பட்டவர்கள் ஆதரவாக எழுதிஉள்ளார்/// //
அப்படி கூறிவிட முடியாது.
வன்னியர்களும் தலித் மக்களும் அடித்துக்கொள்ள வேண்டும் என்பது ஆதிக்க சாதியினரின் விருப்பம்.
அதைத்தான் இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகிறது.
வன்னியர்களும், தலித்துகளும் நேரடியாக பேசினால் பிரச்சனைகளை தீர்க்க முடியும். நடுவில் மற்றவர்களை விடுவது பூனைகள் தோசையை பங்கிட குரங்கிடம் போன நிலைதான் ஏற்படும்.
ஆதிக்க சாதியினரிடம் எச்சரிக்கையாக இருப்பது – வன்னியர், தலித் இரண்டு பிரிவினருக்குமே அவசியம்//.

8. //சரி. என்னதான் முடிவு?
சாதி வெறி என்பது எல்லா மேல் மற்றும் நடுத்தர சாதிகளிடமும் இருக்கிறது. வன்னியர்களுக்கு மேல் பார்ப்பனர்கள் + வெள்ளாளர்கள், பறையர்களுக்கு மேல் வன்னியர்கள், அருந்ததியினர்களுக்கு மேல் பறையர்கள். இது இந்து மதம் கொடுத்த கொடை. காலம் காலமாக பலர் முயற்சித்தும் இன்றுவரை முடிவு எதுவும் இல்லை. நேற்றைவிட இன்று பரவாயில்லை என்பதே நிலை. அதற்காக சாதிவெறியை அனுமதிக்க வேண்டும் என்பது இல்லை.
குற்றம் இழைப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அது எந்த சாதியின் வெறியானாலும் சரி.
பா.ம.க வன்னியர்களை நம்பி அரசியல் செய்கிறது. ஆனால், சாதிவெறியை அதுதான் தூண்டுகிறது என்பதும், பா.ம.க.வால்தான் சாதிச்சண்டையே வருகிறது என்பது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு.
அதே போல விடுதலை சிறுத்தைகள் வேடிக்கை பார்க்கின்றனர் என்பதும் தவறு.
பா.ம.க இல்லாமல் போனால் வன்னியர்களுக்கு நல்லது என்பதும், வி.சி.க்கள் இல்லாமல் போனால் தலித்துகளுக்கு நல்லது என்பதும் – ஆதிக்க சாதி பிரச்சாரம்.
பா.ம.க இல்லாமல் போனால் மிகமிக பின் தங்கிய சமூகமான வன்னியர்களுக்காக பேச வேறு யார் இருக்கா?
வி.சி.க்கள் இல்லாமல் போனால் ஒடுக்கப்படும் சமூகமான தலித்துகளுக்காக பேச வேறு யார் இருக்கா?//

9. //உழைக்கிற வன்னியரையும் தலித்தையும் பிரிப்பவை பா.ம.கவும், வி.சியுமா? தலைக்கீழா மாற்றி பேசாதீர். இரண்டுசாதிகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்ததான் இரண்டு அமைப்புகளும் பாடுபட்டன.//

10. //கல்லூளி மங்கன்says:
// ///பாமக பேசியதன் பின்னணி தெரியுமா உங்களுக்கு
1. நானோ என் மகனோ சட்டமன்றா நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன்2. என் வாரிசுகள் யாரும் கட்சியில் சேர மாட்டார்கள்…………………………………………………./// //
ஓ, தெரியுமே.
1950களில் வன்னியர்களுக்காக அரசியல் கட்சி தொடங்கிய தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் இராமசாமி படையாட்சியும், பொதுநலக் கட்சியின் மாணிக்கவேல் நாயகரும் 1952 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் போட்டியிட்டு 25 இல் வெற்றிபெற்றனர்.
காங்கிரஸ் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாததால் மாணிக்கவேல் நாயகருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இராஜாஜி முதல்வர் ஆனார். 1954 இல் காமராஜர் முதல்வராக இராமசாமி படையாட்சியும் ஆதரவு கொடுத்து அமைச்சரானார்.
இரண்டு பேருமே கட்சியை கலைத்துவிட்டு தொண்டர்களை காங்கிரசில் சேரச்சொன்னார்கள்.
இதனால், வன்னியர்களுக்காக பேச அரசியல் கட்சி இல்லாமல் போய்விட்டது.
இதனால்தான் “நானோ என் மகனோ சட்டமன்றா நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன்” என்று மருத்துவர் இராமதாசு கூறினார்.
இதன்படி, அவர் இன்றுவரை எந்த பதவிக்கும் வரவில்லை.
மற்றபடி காலத்துக்கு ஏற்ப சத்தியத்தை கைவிடுவது ஒன்றும் கொடூர குற்றம் இல்லை//.

11. /////ஒரு தடவை தீ மூ கா மற்றொரு முறை ஆ தீ மூ கா என்று மாறுபடுகிறாரே////
பா.ம.க கூட்டணி மாறுவது மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா? கூட்டணி மாறாத ஒரு தேர்தல் கட்சியை காட்டுங்களேன்//.

12. //வன்னியர்களுக்கு கொள்கை இல்லை என்று சொன்னால், வேறு எவருக்குமே கொள்கை இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்
காலை 8 மணி முதல் இரவு 12 மணிவரை திறந்திருந்த டாஸ்மாக் கடைகள் இப்போது 10 to 10 என நேரம் குறைந்தது பா.ம.கவால்தான்.
முன்னணி சினிமா நடிகர்கள் திரைப்படஙகளில் புகைப்பிடிக்காமல் இருப்பதும் பா.ம.கவால்தான்.
மற்றபடி மதுக்கடைகளை ஒலிப்பதும், இரசிகர் மன்றங்களை ஒளிபதும் பா.ம.கவுக்கு நேர்ந்துவிட்ட வேலைகள் அல்ல. கடைவிரித்தோம் கொள்வார் இல்லை என்பது போல மருத்துவர் இராமதாசு போராடுகிறார். நடந்தால் நடக்கட்டும், நடக்காவிட்டால் போகட்டும்
மற்றபடி ‘வன்னிய சாதிவெறியர்கள்’ என்று எல்லா வன்னியர்களையும் பொத்தாம் பொதுவாக சொல்வதை கண்டிக்கிறேன்//.

13. //பார்ப்பனர்களைப் போல (எல்லா) வன்னியர்களும் சாதிவெறியர்கள் என்பது உங்கள் கருத்தா? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க//.

14. ////சாதி வெறி பிடிச்ச சனியன்களா!// என்பது தமிழ்நாட்டில் எல்லோருக்குமே பொருந்தும் – ஏனென்றால், பலப்பல உட்பிரிவுகள் இல்லாத சாதி எதுவும் இல்லை.
சாதி இல்லாத தமிழனும் யாரும் இல்லை. கொஞ்சம் உங்கள சுத்தி பாருங்க. மாமா, சித்தப்பா, அண்ணன், தம்பி, அக்கா – எல்லா உறவுகளும் யாரை கல்யாணம் பண்ணியிருக்காங்க//?

15. //காடுவெட்டி குருவுக்கு வரவேற்பு கொடுத்த வன்னியர்களை எந்த அடிப்படையில் “வன்னிய வெறியர்கள்” என்று கூறுகிறீர்கள்//?

16. //வால்பையன் says:
// ///எவனனொருவன் தன் சாதி சிறந்தது/உயர்ந்தது, என் சாதிகாரர்கள் நல்லவர்கள் என்கிறானோ, அவன் நிச்சயமாக சாதிவெறியன், அதுவே மதத்திற்கும்!// ///
எவனனொருவன் தன் சாதி சிறந்தது/உயர்ந்தது என்கிறானோ, அவன் நிச்சயமாக சாதிவெறியன் என்பது சரிதான்.
என் சாதிகாரர்கள் நல்லவர்கள் என்பதும் சாதிவெறியா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.
சாதி, மதம் எல்லாம் மனிதனை பிடித்த அடையாளம். மத அடையாளத்தை மாற்ற முடிகிறது. சாதி அடையாளம் பிறப்பிலேயே வருகிறது.
ஒருவன் எந்த அடையாளத்தினால் ஒடுக்கப்படுகிறானோ, சுரண்டப்படுகிறானோ, அந்த ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்க்க அதே அடையாளத்தை பயன்படுதுவதில் தவறு எதுவும் இல்லை. உண்மையில் அதுதான் விடுதலைக்கு வழி.
எனவே, அடையாளத்தின் அடிப்படையில் ஒன்றிணைவது அடக்குவதற்கா? அல்லது விடுதலைக்கா? என்பதுதான் முக்கியம்.
எனவே, தலித், ஓ.பி.சி, முஸ்லீம் என்கிற அடையாளங்கள் பெரும்பாலும் விடுதலைக்கானவைதான் என்பது எனது கருத்து//.

17. //வால்பையன் says:
//சாதி அடையாளம் பிறப்பிலேயே வருகிறது.// என்பது ஒரு உண்மை. சாதியை யாரும் தேர்ந்தெடுக்க முடியாது. இந்த உண்மையை சொன்னால் எப்படி வர்ணாசிரம தர்மத்தை வளர்ப்பதாகும்?
சான்றிதழில் சாதிப்பேரை போடாமல் விடுவது. இடஒதுக்கீட்டை ஒழிப்பது – இதனாலெல்லாம் சாதி ஒழியும் என்பது உயர்சாதியினர் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு வஞ்சகக் கற்பனை.
மகளுக்கு சாதிசான்றிதழ் தராமல் விடுவதனால் “இனிவரும் சமூகமாவது சாதியில்லாமல் வரும்” என்று மனப்பால் குடிப்பது ஒருமூட நம்பிக்கை.
//சாதி ஒழியாத வரைக்கும் இப்படி அடிச்சிகிட்டு சாவறது தான் நடக்கும்!// என்று நீங்கள் சொல்வது சரியான கருத்துதான். அப்படியே, சாதி ஒழிய ஒரு நல்லவழி சொன்னால் பயனாக இருக்கும்//

சும்மா சொல்லப்படாது, மனிதர் தனது சாதிக்கு நன்றாகவே சப்பைக்கட்டு கட்டுகிறார். ஏதோ ஓரிருவர் தனது வன்னிய சாதியில் இருப்பதற்காக சாதி மொத்தத்தையுமே வெறிபிடித்தவர்கள் என லேபல் போடக்கூடாது என உத்தமமாக குறிப்பிடுபவர், பார்ப்பனர்கள் மேல் ஒட்டுமொத்தமாக சேறு அடிப்பதற்கு மட்டும் அஞ்சவில்லை.

இந்த அழகில் இப்போது எந்த பார்ப்பனர் தலித்துகளை சவுக்கால் அடிக்கின்றனர்? அவர்கள் வாயில் மலத்தை இடுகின்றனர்? தாழ்த்தப்பட்டவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து போகக்கூடாது, குடைபிடித்து போகக்கூடாது, தாங்கள் வந்தால் மரியாதை தரவேண்டும், சைக்கிளில் செல்லக்கூடாது என்றெல்லாம் கெடுபிடி செய்கின்றனர்? இருப்பினும் அவர்களை ஒட்டுமொத்தமாக ஒரே சுண்ணாம்பாக போட்டு அடிக்கும் இப்பதிவர் தனது சாதி என்றவுடனேயே hair splitting வாதங்களை முன்வைக்கிறார். கூடவே பாமகவின் கொபசேவாக வேறு உருவெடுக்கிறார்.

இருப்பினும் இப்பதிவர் எனது பதிவுகளில் வந்து அலம்பல் செய்யும் அதே அருளா என தயங்கி நின்ற போது, அதே வினவு பதிவில் வால்பையனது பின்னூட்டம் எண் 69.1 அவரேதான் என தெளிவுபடுத்தியது. வால் பையனுக்கு என் நன்றி.

இந்த உண்மைகளை வெளியே கொணர்ந்த வினவின் அந்தப் பதிவுக்கும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

294 comments:

1 – 200 of 294   Newer›   Newest»
வால்பையன் said...

//வன்னிய டோண்டு//


ஐகான் ஆனது குறித்து மகிழ்ச்சி கொள்ளுங்கள்!

வால்பையன் said...

எப்படியே உயர்சாதி திமிர் பிடித்த வெறியர்களுக்கு காயடிக்கும் சந்தர்ப்பம் அமைந்துவிட்டது! உங்களுக்கு மகிழ்ச்சி தானே!


என் சாதி/என் மதம் சிறந்தது என்பது நிச்சயமாக தீவிரமாக மாறும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை! அது யாராக இருந்தாலும் நிச்சயம் சண்டை போடுவேன்!

தனி காட்டு ராஜா said...

யாருக்கும் வெக்கமில்லை ...

அருள் said...

நான் கடைசியா 'வினவு'வில் எழுதினத நீங்க விட்டுட்டீங்க மிஸ்டர் டோண்டூ.

அதனால, நானே போட்டுறேன்:

"அருந்ததினரை பறையர் பிரிவினர் மிரட்டினர். தலித்துகளை வன்னியர்கள் தாக்கினர் – இந்த இரண்டு நிகழ்வுகளும் தவறுதான். இதில் வன்னையர்கள் இழைத்தது பெரிய குற்றம். இந்த குற்றத்தை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

மற்றபடி கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்களில் சில மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். கொளத்தூர் பகுதி நிலவரத்தை நேரில் காணாமல் இதில் கருத்து சொல்ல இயலாது.

கட்டுரைக்கான பின்னூட்டங்கள்தான் அதிகம் சிந்திக்கத் தூண்டுகின்றன. வன்னியர்களுக்கு எதிரான தலித்துகளின் கோபம் நியாயமானது. புரிந்துகொள்ளக்கூடியது.

ஆனால், ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக’ ஆளுக்கு ஆள் வன்னியருக்கு எதிரான வன்மத்தோடு எழுதுவதின் பின்னணி என்ன? தலித்துகள் மீதான பாசமா? அல்லது, வன்னியர்கள் மீதான வெறுப்பா?

தலித்துகளின் தோலின்மீது வன்னியர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். வன்னியரின் தோலின்மீது வேளாளர், பார்ப்பனர், நாயுடு, ரெட்டி, முதலியார் எல்லோரும் உட்கார்ந்திருக்கிறார்கள். வன்னியருக்கு எதிரான ஆதிக்க சாதிகள் எல்லோரும் இப்போது வன்னியர்கள் மீது பாய்கிறார்கள்.

இக்கட்டுரைக்கான பின்னூட்டம் ஒன்று “எல்லா வன்னியர்களும் சாதிவெறியர்கள்” என்று சுற்றிவளைத்து கூறுகிறது. (57. கோவி.கண்ணன்)

இதுதான் இன்றுள்ள உண்மை நிலைமை. எல்லா ஆதிக்க சாதிகளும் வன்னியர்களுக்கு எதிரான “சாதிவெறியுடன்” வாழ்கின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வன்னியர்களை ஓரம்கட்ட அணிவகுக்கின்றனர்.

ஆங்கிலேயர்காலத்தில் வன்னியரின் நிலத்தை பிடுங்கியவர்கள், அதற்கு பின் அரசியல் அதிகாரத்திலிருந்து வன்னியர்களை ஓரம் கட்டியவர்கள், அதிகாரமிக்க இடங்கள் வன்னியர்களுக்கு கிடைக்காமல் அபகரித்தவர்கள் – எல்லோரும் வன்னியர்கள் இனிமேலும் பஞ்சை பராரிகளாகவே உழல வேண்டும் என்று விரும்புகின்றனர்.

கல்லாமை, வறுமை, வேலையின்மை, நல்வாழ்வு குறியீட்டிலும் மனித மேம்பாட்டிலும் மிக பின் தங்கியநிலை, அதிகம்பேர் வேளாண்மையே கதியாக கிடப்பது – இது எல்லாவற்றிலும் தமிழ்நாட்டிலேயே உச்சத்திலிருப்பது வன்னியர்களும் பறையர்களும்தான்.

இந்த உண்மையைக்கூட உணரமுடியாமல், உண்மையான எதிரிகளை அடையாளம் காணாமல் – தலித்துகளுடன் சண்டையிடும் முட்டாள்தனமான வாழ்வில் வன்னியர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்.

வன்னியர்கள் உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டு, அவர்களது ஆதிக்கத்தை அகற்றும் போரில் இறங்காதவரை இந்த நிலை தொடரவே செய்யும்.

எப்படியோ, ‘வினவு’க்கு பின்னால் இருப்பதும் ஆதிக்கசாதி கூட்டம்தான் என்பதை வன்னியர்கள் புரிந்துகொண்டால், அதுவே இப்போதைக்கு போதும்."

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இது போன்ற, உங்களுடைய பெயர் சம்பந்தப்பட்ட பதிவுகளால், உங்களது பெயர் அனைவருக்கும் தெரிவதால், உங்களுக்கு மகிழ்ச்சியா? இல்லையா?

இதனால் பெரும் புகழ் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா? இல்லையா?

இதை தெளிவுபடுத்த முடியுமா ஐயா?

தினவு said...

Hypocrisy is the name of the game. ராமதாசுவின் சீடன் நேர்மையா இருப்பாருன்னு நீங்க முதலில் நினைச்சதே தப்பு. உங்களுக்கு ஆனாலும் குசும்பு அதிகம். இந்த மாதிரி எல்லாருக்கும் தெரியறா மாதிரி, you can't disrobe people's personality in public. Its a different matter whether it will be able to pierce some thick skins.

எப்பிடித்தான் சிலபேருக்கு கொஞ்சம்கூட வெக்கம் இல்லாம தனக்கு ஒரு ரூலு; மத்தவங்களுக்கு ஒரு ரூலுன்னு பேச மனசு வருதோ. இவனுங்க யோக்யதையே கேவலம்; இதுல மத்தவங்களுக்கு அட்வைஸ் குடுக்கறானுங்க. போக்கத்தவனுங்க.

M Arunachalam said...

'முற்போக்கு' அப்பிடின்னா என்ன சார்? "வயித்து போக்கு" மாதிரியா?

dondu(#11168674346665545885) said...

//நான் கடைசியா 'வினவு'வில் எழுதினத நீங்க விட்டுட்டீங்க மிஸ்டர் டோண்டூ//
நான் பதிவு [போடுவதற்காக வினவின் பதிவுக்கு போய் கன்ட்ரோல் எஃப் போட்டு அதில் அருள் என தட்டச்சிட 29 ஹிட்கள் கிடைத்தன. அப்போது இப்பின்னூட்டம் இல்லை.

எனினும் நான் உங்களது போலித்தனத்தை உரித்துக் காட்டியதற்கு அது மேலும் வலு சேர்க்கிறது, நன்றி.

//அதனால, நானே போட்டுறேன்://
வேற வ்ழி? இல்லேன்னாக்க அதை போட்டுக் கொடுக்க இங்க பல பேரு இருக்காங்களே.

வால்பையனை மட்டும் டிபெண்ட் செய்து எழுதினேன், இப்போது நீங்களும் ஊர்ஜிதம் செய்து விட்டீர்கள்.

சந்தோஷமா இருக்கு.

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//இதனால் பெரும் புகழ் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா? இல்லையா?//
இந்தியாவுக்கான கூகள் தளத்தில் வெறுமனே டோண்டு என யூனிகோடில் தட்டச்சிட்டு தேடினால் ஒரு லட்சத்துக்கும் மேல் ஹிட்கள் வர்ம் இந்த நிலையில் மேலும் புகழ் பெற்று நான் என்ன செய்யப் போகிறேன். எனது பதிவு விஷயத்துக்கு வந்து எதிர்வினை செய்யுங்கள், அது முடிந்தால்.

டோண்டு ராகவன்

Anonymous said...

http://thatstamil.oneindia.in/news/2010/05/13/karunanidhi-pannerselvam-murasoli.html

ராமரை இழிவுபடுத்திப் பேசிய கருணாநிதி அவ்வப்போது மட்டும் ராமரை,புராணங்களை துணைக்கு அழைக்கிறாரே ?
(இது பற்றி தனி பதிவு போடவும்)

dondu(#11168674346665545885) said...

@அனானி
ஏற்கனவேயே இது பற்றிய தனிப்பதிவு போட்டாயிற்றே, பார்க்க: http://dondu.blogspot.com/2007/11/blog-post_08.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

டோண்டு ராகவன் said...

// ///தங்களை முற்போக்காளர்கள் என சுயமுத்திரை குத்திக் கொள்பவர்களின் வேஷமும் துகிலுரியப்படுவதை பார்க்க தமாஷாக இருக்கிறது.// ///

உங்களது அகராதியில் 'வஞ்சிக்கப் பட்ட வன்னியர்களுக்காக பேசுவது' பிற்போக்கு என்றால், பிற்போக்காளனாக இருப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

// ///எனினும் நான் உங்களது போலித்தனத்தை உரித்துக் காட்டியதற்கு அது மேலும் வலு சேர்க்கிறது/// //

நான் வெளிப்படையாகத்தான் எழுதியுள்ளேன். இதில் புதிதாக துப்பறியவும், தோலுரிக்கவும் என்ன இருக்கிறது?

வால்பையன் said...

//'வஞ்சிக்கப் பட்ட வன்னியர்களுக்காக பேசுவது' //


வஞ்சிகோட்டை வாலிபன் என்பதை விட இந்த தலைப்பு சூப்பர்!

எதுக்கய்யா தாழ்த்தபட்ட மக்களை ஊரை விட்டு ஒதுக்கி வச்சிருக்கிங்க, எதுக்கு அடிக்கிறிங்கன்ன கேட்டா வஞ்சிக்கபட்டாங்களாம்!

யாரால் வஞ்சிக்கப்பட்டிங்களோ அவுங்களோட சண்டை போடனும், தலித் மக்கள் என்ன பண்ணாங்க உங்களை!?

Unknown said...

//எனினும் நான் உங்களது போலித்தனத்தை உரித்துக் காட்டியதற்கு அது மேலும் வலு சேர்க்கிறது//

உங்க பதிவுல எதிர்த்து பின்னூட்டம் போட்ட இப்படியா பண்ணூவீங்க

அருள் said...

தினவு said...

/// //ராமதாசுவின் சீடன் நேர்மையா இருப்பாருன்னு நீங்க முதலில் நினைச்சதே தப்பு.// ///

நான் எந்த இடத்தில் நேர்மை தவறினேன் என்று விளக்க முடியுமா?

Unknown said...

//யாரால் வஞ்சிக்கப்பட்டிங்களோ அவுங்களோட சண்டை போடனும், தலித் மக்கள் என்ன பண்ணாங்க உங்களை!?/

வால் டோண்டு எதுக்கு பிராம்னர்களை சப்போட் பண்ணுறார். அதுபோல அருள் அவங்க ஜாதிய சப்போட் பண்ணுகிறார். இதுல என்ன தப்பு

அருள் said...

வால்பையன் said...

// ///யாரால் வஞ்சிக்கப்பட்டிங்களோ அவுங்களோட சண்டை போடனும், தலித் மக்கள் என்ன பண்ணாங்க உங்களை!?// ///

அதைத்தான் நானும் சொல்லியிருக்கேன். நல்லா படிங்க.

""ஆங்கிலேயர்காலத்தில் வன்னியரின் நிலத்தை பிடுங்கியவர்கள், அதற்கு பின் அரசியல் அதிகாரத்திலிருந்து வன்னியர்களை ஓரம் கட்டியவர்கள், அதிகாரமிக்க இடங்கள் வன்னியர்களுக்கு கிடைக்காமல் அபகரித்தவர்கள் – எல்லோரும் வன்னியர்கள் இனிமேலும் பஞ்சை பராரிகளாகவே உழல வேண்டும் என்று விரும்புகின்றனர்.

கல்லாமை, வறுமை, வேலையின்மை, நல்வாழ்வு குறியீட்டிலும் மனித மேம்பாட்டிலும் மிக பின் தங்கியநிலை, அதிகம்பேர் வேளாண்மையே கதியாக கிடப்பது – இது எல்லாவற்றிலும் தமிழ்நாட்டிலேயே உச்சத்திலிருப்பது வன்னியர்களும் பறையர்களும்தான்.

இந்த உண்மையைக்கூட உணரமுடியாமல், உண்மையான எதிரிகளை அடையாளம் காணாமல் – தலித்துகளுடன் சண்டையிடும் முட்டாள்தனமான வாழ்வில் வன்னியர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்.

வன்னியர்கள் உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டு, அவர்களது ஆதிக்கத்தை அகற்றும் போரில் இறங்காதவரை இந்த நிலை தொடரவே செய்யும்.""

வால்பையன் said...

//வால் டோண்டு எதுக்கு பிராம்னர்களை சப்போட் பண்ணுறார். அதுபோல அருள் அவங்க ஜாதிய சப்போட் பண்ணுகிறார். இதுல என்ன தப்பு//


தப்பு யார் பண்ணினாலும் தப்பு தப்பு தான்! அதை நியாயப்படுத்துபவர்கள் மறைமுகமாக அந்த தப்பில் பங்கெடுக்கிறார்கள், அது டோண்டுவாக இருந்தாலும் சரி நானாக இருந்தாலும் சரி நீங்களாக இருந்தாலும் சரி!

முதலில் அருள் மேட்டரை முடிப்போம், பிறகு டோண்டுவுக்கு வருவோம்!

அருள் அந்த கலவரத்தில் பங்கெடுத்த ஒருவரா!?

வெற்றிவேல் said...

அருளும் டோண்டுவும் ஒன்று அல்ல.
எந்த ஒரு இடத்திலாவது பார்ப்பனர்கள் தலித்துகளையோ வன்னியர்களையோ வன்கொடுமை செய்திருந்தால் அதனை டோண்டு ஆதரிக்கப்போவதில்லை.

ஆனால், வன்னியர்கள் தலித்துகளை வன்கொடுமை செய்வதை ஆதரித்து, வரலாற்று ரீதியாக காரணம் எழுதி சப்போர்ட் செய்கிறார் அருள்.

அப்படி செய்யும்போதே, வன்னியர்கள் செய்யும் அராஜகங்களுக்கு பொறுப்பை பார்ப்பனர்கள் மீது போடவும் கொஞ்சவும் தயங்குவதில்லை.

டோண்டு ஆரம்பம் முதலே சொல்லிவருவதுதான் இது. பார்ப்பனர்கள் செய்யாத குற்றங்களை பார்ப்பனர்கள் மீது போட்டு தாங்கள் செய்யும் குற்றங்களை நியாயப்படுத்த அலையும் ஒரு வித மன வக்கிரமே, வினவு, அருள் ஆகியோருக்கு இருக்கிறது.

இது ஒரு வகை மனநோய்.

வால்பையன் said...

//உண்மையான எதிரிகளை அடையாளம் காணாமல் – தலித்துகளுடன் சண்டையிடும் முட்டாள்தனமான வாழ்வில் வன்னியர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்.//


இதை கூட ஒருவகையில் ஏற்று கொள்ளலாம், ஆனால் பூசி மொழுகுவது போல் சொல்வது தான் உதைக்கிறது!, அவர்களுக்கு உண்மையான எதிரியை யார் காட்ட வேண்டும், நீங்கள் சொல்லி கொள்ளும் சாதி தலைவர்கள், அவர்கள் எதிர்பார்ப்பதோ வாழ்க கோஷமும், கட் அவுட்டும், சவாரி செய்ய தொண்டர் முதுகும்!, கோ.சி.மணிக்கு வரவேற்ப்பு கொடுப்பது சாதிவெறியா என்ற கேள்வியை வினவு தளத்தில் வைத்திருந்தீர்கள்! அப்படிபட்ட ஆடம்பரமான வறவேற்பை எதிர்பார்பவன் ஒரு நல்ல தலைவனே கிடையாது! அம்மாதிரி விளம்பர பிரியர்களால் உங்களுக்கு விடிவு வரும் என்று நம்பினால் நீங்கள் கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடும் என நம்புகிறவர்கள்!


உங்களுக்கு சமூக ஆர்வம் உண்டா! நீங்களே செல்லுங்கள், ஒவ்வொரு சகோதரனிடமும் சொல்லுங்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் நமது சகோதரர்கள் என்று!.

ஆதிதிராவிடரை அடித்தாலும், அருந்ததியினரை ஆதிரிக்கிறோமே என்பது செய்த குற்றத்தை விட கேவலமான ஸ்டேட்மெண்ட்!

உங்களுக்கு சாதி வேணுமா, எழுதி நெத்தியில கூட ஒட்டிகோங்க, ஆனா சக மனிதனை தாழ்ந்த சாதி என்று சொல்ல எந்த மயிராண்டிக்கும் உரிமையில்லை!(சொன்னவங்களுக்கு தான் இது, உங்களுக்கு அல்ல)

கோவி.கண்ணன் said...

// அருள் says:
May 12, 2010 at 10:38 pm

பார்ப்பனர்களைப் போல (எல்லா) வன்னியர்களும் சாதிவெறியர்கள் என்பது உங்கள் கருத்தா? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.//

//இக்கட்டுரைக்கான பின்னூட்டம் ஒன்று “எல்லா வன்னியர்களும் சாதிவெறியர்கள்” என்று சுற்றிவளைத்து கூறுகிறது. //

நாம் சொன்னதில் என்ன தவறு ?

தலித்துகள் தவிர்த்து, சாதி உரிமை, பெருமை என்று கொடிப் பிடித்து சாதியை வெளியே சொல்கிறவர்கள் அனைவருமே சாதிவெறியர்கள் தான். சாதிகளுக்குக் கொடுக்கும் இட ஒதுக்கீடுகள் அந்தந்த சாதிக்கான சலுகை என்றாலும் கூட அவை கேட்கப்படும் இடத்தில் மட்டுமே சாதிப் பெயரைச் சொன்னால் போதுமே, மற்ற இடத்திலெல்லாம் நான் இந்த சாதி இந்த சாதி என்றால் அவன் சாதிவெறியன் தான்.

பிறக்கும் போதே யாரும் சாதி அபிமானிகளாகப் பிறப்பது இல்லை, முதலில் சாதி அபிமானம், பிறகு அதனால் கிடைக்கும் லாபம் (குறைந்த பட்சம் அடுத்தவனை தாழ்த்துவது) இவைதான் ஒருவனை சாதிவெறியன் ஆக்குகிறது. சாதி பாசத்திற்கும், வெறிக்கும் கையில் தீவட்டி வைத்திருப்பதற்கும், அதைத் தூக்கி மற்றொரு சாதிக்காரன் வீட்டு கூரையில் வீசுவதற்கும் உள்ள வேறுபாடு தான். ஒரு சாதி அபிமானி சாதிவெறியனாக மாற கலவரம் என்ற சூழல் இருந்தாலே போதும், இப்ப சொல்லுங்க சாதியை வெளியே சொல்லும் எவனும் சாதிவெறியனா இல்லையா ?

மதவெறி, சாதிவெறிகள் என்பவை வேற்றுலகவாசிகளால் நடத்தப்படுவதில்லை, அதன் மீது பற்று வைத்துள்ளவர்கள் தான் அப்படி மாறிப் போவார்கள்.

சாதி என்பதே இழிவின் அடையாளமாக பலரும் உணர்ந்துள்ள வேளையில் பொதுத்தளத்தில் சாதியை வெளியே சொல்லுகிறவர்கள் சாதிவெறியர்கள் தான்.

M.Mani said...

சாதியைப்பற்றிக் கூறுபவர்களெல்லாம் இந்துமதத்தில் மட்டும்தான் பிரிவுகள் இருப்பதுபோல் பேசுகிறார்கள். மற்ற மதங்களிலும் நாடுகளிலும் சாதி என்ற பெயர் இல்லாமல் பிரிவுகள் இருக்கின்றன.

அருள் said...

கோவி.கண்ணன் said...

// //சாதி என்பதே இழிவின் அடையாளமாக பலரும் உணர்ந்துள்ள வேளையில் பொதுத்தளத்தில் சாதியை வெளியே சொல்லுகிறவர்கள் சாதிவெறியர்கள் தான்// //

வன்னியர்களின் பின் தங்கிய நிலைக்கு, அவர்கள் வன்னியர்கள் சாதியில் பிறந்ததுதான் முதன்மையான காரணம். எனவே, வன்னியர்கள் தனது சாதி அடையாளத்தை மறைப்பதால் எந்த பயனும் இல்லை. மாறாக சாதியை முன்னிறுத்தி போராட வேண்டும் என்பது என் கருத்து.

இது மற்ற ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிராக போவதுதான் தவறு.

என்னை பொருத்தவரை - ஒடுக்கப்படும் சாதிகள், அவரவர் சாதியின் பேரால் திரள்வது அவசியம்.

// //சாதிகளுக்குக் கொடுக்கும் இட ஒதுக்கீடுகள் அந்தந்த சாதிக்கான சலுகை// //

இதனை நான் மறுக்கிறேன். இடஒதுக்கீடு என்பது உரிமை.

வால்பையன் said...

//மற்ற மதங்களிலும் நாடுகளிலும் சாதி என்ற பெயர் இல்லாமல் பிரிவுகள் இருக்கின்றன.//


எல்லா நாட்லயும் லஞ்சம் இருக்கு!, ஆனா அங்கெயெல்லாம் கடமையை மீறுவதற்க்கு தான் லஞ்சம், இங்கே தான் கடமையை செய்வதற்கே லஞ்சம்!

நன்றி சுஜாதா!


அங்கேயும் ஒரு வால்பையன் இருப்பான் நிச்சயமாக!

வால்பையன் said...

//வன்னியர்களின் பின் தங்கிய நிலைக்கு, அவர்கள் வன்னியர்கள் சாதியில் பிறந்ததுதான் முதன்மையான காரணம். //


அப்படி பின் தங்கிய நிலைக்கு கொண்டு செல்லும் கேடு கெட்ட சாதி பெயர் தேவையா!? தூக்கி போட்டு நானும் மனுசண்டான்னு வாழலாமே!, இல்ல இடஒதுக்கீட்டால் தான் முன்னேற முடியும்னா மீதம் இருப்பவர்களுக்கு, உங்கள் சாதியில் இருக்கும் பணக்காரர்கள் தொழில் வசதி செய்து தரலாமே, ஏன் பணம் சம்பாரிச்சவுடன் ஏற்றிவிட்ட ஏணியை கண்டுக்காமல் போறான்!?


//ஒடுக்கப்படும் சாதிகள், அவரவர் சாதியின் பேரால் திரள்வது அவசியம்.//

திரண்டு அடுத்த சாதிகாரனை அடிக்கவா!?, எதுக்கு பதிவு, இந்த பதில் எதுக்கு?

பெசொவி said...

//உங்களுக்கு சாதி வேணுமா, எழுதி நெத்தியில கூட ஒட்டிகோங்க, ஆனா சக மனிதனை தாழ்ந்த சாதி என்று சொல்ல எந்த மயிராண்டிக்கும் உரிமையில்லை//

Well Said, Vaalpaiyan!

SABASH!

அருள் said...

தந்தைப் பெரியார் - குடியரசு தலையங்கம் 8.11.1931

"வகுப்புவாதம் சொல்லக்கூடாது என்பதன்மூலம் ஏதோ சில பயங்காளிகளையும், வேறு வழியில் பிழைக்க வழியற்ற தேசியவாதிகளையும், உத்யோகம் - பதவிப் பிரியர்களையும் மிரட்டலாமேயொழிய, வகுப்பு பிரிவுகளாலும் உயர்வு - தாழ்வு வித்தியாசங்களாலும் உள்ள கஷ்டத்தையும் கேட்டையும் ஒழிக்க முடியுமா?

வகுப்புவாதம், மதவாதம், சாதிவாதம் பேசி, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்பவர்களால் தேசத்தின் விடுதலை கெட்டுப்போகின்றது என்று திப்பிலி, தேசாரம், சதக்குப்பை இவைகளெல்லாம் பேசவும் எழுதவும் தொடங்கிவிட்டதைக் கண்டு நாம் சிறிதும் இலட்சியம் செய்யவில்லை.

அந்தப்படி பேசும், எழுதும் யோக்கியர்களில் 100க்கு அரைப் பேராவது தங்கள் மததையும், உள் மதத்தையும், சாதியையும், வகுப்பையும் விட்டுவிட்டவர்கள் உண்டா என்று பந்தயம் கட்டிக் கேட்கிறோம்.

எப்போது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், சாதி, வகுப்பு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்கமுடியும்?""

தந்தைப் பெரியார் - குடியரசு தலையங்கம் 8.11.1931

Anonymous said...

//
வால் டோண்டு எதுக்கு பிராம்னர்களை சப்போட் பண்ணுறார். அதுபோல அருள் அவங்க ஜாதிய சப்போட் பண்ணுகிறார். இதுல என்ன தப்பு
//

டோண்டு அவரது சாதிக்கு சப்போர்ட் செய்கிறார் என்பதனால் அவரை சாதி வெறியன் என்னும் வயித்துப்போக்குகள்...அருள் தன் சாதிக்கு சப்போர்ட் செய்யும் போது மட்டும் ஏன் அவனை சாதி வெறியன் என்று சொல்வதில்லை.

வால்பையன் said...

//தந்தைப் பெரியார் - குடியரசு தலையங்கம் 8.11.1931//


1931

கிட்டதட்ட 80 வருடங்கள்!

ஏன் பெரியாரோட நின்னுட்டிங்க!, அப்படியே சேர, சோழ , பாண்டியன் கதைக்கும் போலாமே! ஏனய்யா சாதிவெறியோட தாழ்த்தப்பட்டவனை அடிச்சிஞ்ங்கன்னு கேட்டா பெரியார் பேசுனதை எடுத்து கொடுக்குறிங்க!

பெரியார் மற்ற சாதிகாரனை அடின்னு சொன்னாரா!? 1931 ல் பெரியார் சொன்னதை யோசிக்காமல் அப்படியே பின்பற்றுவது தான் முற்போக்குதனமா!? சுயம எதுவும் அறிவில்லையா!?

மணிஜி said...

சும்மா ஃபாலோஅப்புக்காக

அருள் said...

வால்பையன் said...

// //1931 ல் பெரியார் சொன்னதை யோசிக்காமல் அப்படியே பின்பற்றுவது தான் முற்போக்குதனமா!?// //

எங்களுக்கு அறிவை கொடுத்தவர் பெரியார்தான். அவர் இல்லாமல் போயிருந்தால் கொஞ்சமும் விழிப்புணர்வே இல்லாமல் கிடந்திருக்க வேண்டியதுதான்.

அதுசரி, 2000 வருடமா இருக்கிற பைபிள், குர் ஆன், கீதை இதையெல்லாம் இன்னமும் வேதவாக்கா வச்சுக்கலாம், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் அதவச்சு சத்தியம் வாங்கலாம். 150 வருடத்துக்கு முன்னாடி போட்ட சட்டத்தை வச்சு இன்னைக்கு முட்டிக்கு முட்டி தட்டலாம்.

திருவள்ளுவர் எழுதின திருக்குறளத்தான் எல்லோரும் உதாரணமா காட்டுராங்க. அது என்ன முந்தாநாள் எழுதினதா?

///பெரியார் மற்ற சாதிகாரனை அடின்னு சொன்னாரா!? //

நான் ஒன்றும் மற்ற சாதிக்காரனை அடிக்கவேண்டும் என்று கூறவில்லை, அதை நியாயப்படுத்தவும் இல்லை.

dondu(#11168674346665545885) said...

இந்தத் தருணத்தில் தலித்தை மணந்த கள்ளர் சாதிப் பெண் படுகொலை என்னும் வினவு பதிவு நினைவுக்கு வந்து தொலைக்கிறது, பார்க்க: http://www.vinavu.com/2009/11/06/caste-killing/

அதில் கள்ளர் சாதி வெறி என்று ஆரம்ப சூரத்தனத்துடன் பதிவிட்ட வினவு தனது பின்னூட்டம் 3.1-ல் இவ்வாறு எழுதுகிறார்:

//ராசாத்தி மற்றும் நண்பர்ளுக்கு,
தமிழகத்தின் ஆதிக்கசாதிகளில் முன்னணி வகிக்கும் கள்ளர் சாதியில் உள்ள ஆதிக்க சக்திகள் சசிகலா கும்பல்மூலம் அரசியல் ரீதியாகவும், கொல்லப்பட்ட முட்டைரவி, தி.மு.கவின் கலைவாணன் மூலம் தாதாயிசத்திலும் ஆதிக்கம் செய்கிறது. மற்ற சாதிகளை விட தலித்துக்களை குறிப்பாக காதல் மணம் செய்வோரை படுகொலை செய்யுமளவு இங்கு சாதிவெறி கோலேச்சுகிறது. அதைக் குறிப்பிடத்தான்
//தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்//
என்று எழுதியிருந்தோம். ஆனால் அப்படி எழுதியது தவறு என்பதை சுயவிமரிசனம் செய்து கொள்கிறோம். ஏனெனில் அந்த வரியின் பொருள் பிறப்பிலேயே சாதிவெறி என்ற பார்ப்பனியத்தின் பொருளை ஏந்தி வருகிறது. கள்ளர் சாதியிலும் ஏதுமற்ற உழைக்கும் மக்களும் இருக்கிறார்கள். சாதிவெறிக்கு அந்த சமூகம் பலியாகி இருந்தாலும் அதை மேற்கண்ட வரியில் இடித்துரைப்பது தவறு. தவறினைச் சுட்டிக்காட்டியமைக்கு தோழர் ராசாத்திக்கு நன்றி. இனி இத்தவறுகள் நிகழாத வண்ணம் கவனமாக இருப்போம்//

அதன் பிறகு ஸ்ட்ரெய்ட்டாக பார்ப்பனியத்தில் மேலே அட்டாக்தான்.

ஆனால் இப்போது வன்னிய பதிவுக்கு அவர்கள் மேல் உள்ள தாக்குதல் அப்படியே இருக்கிறது.

ஆக, நான் எந்த முடிவுக்கு வருகிறேனென்றால், வினவு கள்ளர் சாதியை சேர்ந்தவர்.

அருளுக்கு வன்னியரைச் சொன்னால் வலிக்கிறது, வினவுக்கு கள்ளர் சாதி மேல் சுயசாதிப் பாசம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

smart said...

அந்த உண்மைகளை வெளியே கொணர்ந்த இந்தப் பதிவுக்கும் நன்றி.

Unknown said...

டோண்டு சார், அடங்க மாட்டீங்களா, நாரதர் வேலைய மீண்டும் ஆரம்பிச்சுட்டீங்க, இப்படி பதிவு போட்டா கூகுள் லட்சம் என்னா கோடி கூட காட்டும்,

வால்பையன் said...

//
அதுசரி, 2000 வருடமா இருக்கிற பைபிள், குர் ஆன், கீதை இதையெல்லாம் இன்னமும் வேதவாக்கா வச்சுக்கலாம், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் அதவச்சு சத்தியம் வாங்கலாம். 150 வருடத்துக்கு முன்னாடி போட்ட சட்டத்தை வச்சு இன்னைக்கு முட்டிக்கு முட்டி தட்டலாம்.

திருவள்ளுவர் எழுதின திருக்குறளத்தான் எல்லோரும் உதாரணமா காட்டுராங்க. அது என்ன முந்தாநாள் எழுதினதா?//


ஏற்கனவே வினவு பதிவில் சொன்னது தான், அந்த நாய் .... திங்குதுன்னா! ................
நான் எனது பதிவுகளில் இவை அனைத்தியும் சாடி வருகிறேன், வள்ளுவரையும் சேர்த்து தான் சொல்றேன்!

நடந்த தப்புக்கு காரணம் என்ன? அதை களைய என்ன வழின்னு யோசிக்க நேரம் எடுத்துகிட்டா மனிதம் உருப்படும்! இன்னும் சப்பை கட்டு கட்டுதல் உருப்படும் நம்பிக்கையை கொஞ்சம் கூட தரவில்லை!

வாழ்க சாதிவெறி
ஒழிக எல்லா சிறுபான்மையினரும்!

இப்போ சந்தோசமா தோழரே!

அருள் said...

வால்பையன் said...

//தந்தைப் பெரியார் - குடியரசு தலையங்கம் 8.11.1931//


1931

கிட்டதட்ட 80 வருடங்கள்!?// ///

சரி. கொஞ்சம் கிட்டக்க வச்சுக்குவோம்.

1950 ஓ.கே வா?

""கடைசியாக நான் கூறுவது நமக்கு அழிவையும் கீழ்த்தன்மையையும் வசதியின்மையையும் கொடுக்கிற இந்தசாதி ஒழிந்து, மக்களுக்கு சமமான தன்மை வரும்வரை, இப்பொதைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அறிவு வளர்ந்து நாகரீகம் அடைந்து அரசியலில் கலந்துகொள்வதற்காகக் கல்வி, உத்யோகம் முதலியவைகளில் அவரவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விகிதாச்சாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான்.""

தந்தை பெரியார் - 2.4.1950 இல் பேசியது (விடுதலை 9.4.1950)

ஓ இதுவும் 60 வருடம் பின்னாடி இருக்கா?

சரி. இன்னும் கொஞ்சம் கிட்டக்க வச்சுக்குவோம்.

1969 ஓ.கே வா?

"பதவிகள் வழங்குவதில், உத்யோகம் வழங்குவதில் அரசாங்கம் எந்தச் சாதியாருக்கும், எந்த மதத்தினருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது.

ஒவ்வொரு சாதிக்கும், மதத்திற்கும் அதைச் சேர்ந்த மக்கள் எண்ணிக்கை விகிதப்படி பதவி, உத்யோகம் முதலியவைகளை வழங்கவேண்டும்."

தந்தை பெரியார் - விடுதலை தலையங்கம் 5.3.1969

இதுவும் பழசுன்னா, 1972 ஓ.கே வா?

""தகுதி, திறமை, தரம்' எதற்காக வேண்டும்? அதன் அர்த்தம் என்ன? அதன் பலன் என்ன? மந்திரிசபையில், பெரிய பதவியில், அதிகாரத்தில் 'தரமுள்ளவர்'களால் 'திறமை' உள்ளவர்களால் ஏற்பட்ட நன்மை என்ன? 'தகுதி, திறமை, தரம்' அற்றவர்களால் ஏற்பட்ட கெடுதி என்ன?

அதிகாரம், உத்யோகங்களிலும் வகுப்பு, உள்வகுப்பு, உள்பிரிவு, சாதி வகுப்புரிமை வேண்டும்.""

தந்தை பெரியார் - விடுதலை தலையங்கம் 18.7.1972.

இதுவும் பழசுன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது. 1973 இல் பெரியார் எங்களை அனாதையாக விட்டு மறைந்துவிட்டார்.

வால்பையன் said...

அய்யா புண்ணியவானே, நான் எப்போ இடஒதுக்கீடு வேணாம்னு சொன்னேன்! ஏன் சாதிவெறின்னு தான் கேட்டேன்! வசதியா இருக்குறவங்களுக்கு எதுக்கு சாதி அடையாளம்னு தான் கேட்டேன்!


//1973 இல் பெரியார் எங்களை அனாதையாக விட்டு மறைந்துவிட்டார். //


பெரியாருக்கு பிறகு யாருமே மூளையோட பிறக்கலையா!?

அருள் said...

வால்பையன் said...

// ///நடந்த தப்புக்கு காரணம் என்ன? அதை களைய என்ன வழின்னு யோசிக்க நேரம் எடுத்துகிட்டா மனிதம் உருப்படும்!// ///

நானும் அதைத்தான் சொல்கிறேன்.

இந்திய நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லை. இருக்கவும் முடியாது. இங்கே மக்களாட்சி என்பது மக்கள் கூட்டங்களின் ஆட்சிதான். அமெரிக்க நாட்டில் ஏறக்குறைய மக்கள் எல்லோரும் சமம். இங்கே அப்படி ஒருபோதும் இருந்தது இல்லை. அங்கே ஜனநாயகம் சாத்தியமாகலாம், இங்கே ஜனநாயகம் சாத்தியமாகாது.

இங்கு ஒருசில சிறுபான்மை கூட்டத்தினர் அரசியல் அதிகாரத்தையும் உயர்பதவிகளையும் கைப்பற்றி அவர்களுக்கான ஆட்சியை நடத்துகிறார்கள்.

அந்த அடிப்படையில் வன்னியர்கள் அதிகாரத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டவர்களாக வாழ்ந்துவருகின்றனர்.

இதுதான் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நிலை.

ஒருசிலர் வாழ்வாங்கு வாழும்போது பெரும்பான்மையினர் புறக்கணிக்கப்படுவது பேரழிவுக்கே இட்டுச்செல்லும்.

எனவே, வளங்களிலும் வாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கும் இதர ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்ப பங்கு அளிக்கப்பட வேண்டும்.

இதற்காக போராட வேண்டும்.

வால்பையன் said...

//இங்கு ஒருசில சிறுபான்மை கூட்டத்தினர் அரசியல் அதிகாரத்தையும் உயர்பதவிகளையும் கைப்பற்றி அவர்களுக்கான ஆட்சியை நடத்துகிறார்கள்.//


இது என்ன புதுக்கதை!


//அந்த அடிப்படையில் வன்னியர்கள் அதிகாரத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டவர்களாக வாழ்ந்துவருகின்றனர்.//


நீங்களே(பா.ம.க) வாங்கிகிட்டது அது!, சும்மா மரத்துக்கு மரம் தாவுனா உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணான்னு தான் இருக்கனும்!


//இதுதான் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நிலை.//


சிறுபான்மை, பெரும்பான்னையை ஒடுக்குதா!? என்ன கொடுமை சார் இது!



//ஒருசிலர் வாழ்வாங்கு வாழும்போது பெரும்பான்மையினர் புறக்கணிக்கப்படுவது பேரழிவுக்கே இட்டுச்செல்லும்.//


பெரும்பான்மையினர் ஒரு காலத்தில் புடுங்குனதை தானே இப்போ அவுங்களுக்கு கொடுக்குறாங்க, அது எப்படி பேரழிவுக்கு போகும்!


//வளங்களிலும் வாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கும் இதர ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்ப பங்கு அளிக்கப்பட வேண்டும்.//


சமீபகாலமா தமிழ்கத்தை ரெண்டா பிரிக்கனும்னு பேசாம இருக்கிங்களே, கூடவே அதையும் சேர்த்துகோங்க!

என் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாதுன்னு நம்புனா எல்லாம் வளரும், யாராவது பிச்சை போட்டா தான் வளருவேன்னா, தட்டை பார்த்துகிட்டே உட்கார்ந்திருக்கனும்!

Anonymous said...

அருளின் அவா:
#ஜாதி ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து தலித்களை துன்புறுத்தவேண்டும்.
#அவர்கள் கொதித்து எழும்போது எல்லாப்பழியையும் பார்ப்பனர்கள் மீது போட்டுத்தப்பித்துக்கொள்ளவேண்டும்.

Krishnakumar said...

Who is stopping the Vanniyars to come up? is anyone beating the vanniyars with belt if they study? or is any one cutting trees and putting it on the entrance of any vanniyar colony so that vanniyars cannot go to school?

Kaduvatti Guru said vanniyars were the rulers of TN. So why do they need reservations? The fucking brahmins were beggers at that time, as they had to beg for their food. when beggers are not having reservations why the kings should have it?

I dont know when Vanniryarism would end.

Any body who is talking about their caste is a terrorist. He should be shot dead. This would include Dondu also.

வெற்றிவேல் said...

//சிறுபான்மை கூட்டத்தினர் அரசியல் அதிகாரத்தையும் உயர்பதவிகளையும் கைப்பற்றி அவர்களுக்கான ஆட்சியை நடத்துகிறார்கள்.//
சூப்பர்.. இதனைத்தான் பலரும் சொல்கிறார்கள்.
பிராம்மணரல்லாதவர்களுக்காக உழைக்கிறோம் என்று சொல்லி கருணாநிதி குடும்பம் கொழுத்திருக்கிறது
வன்னியருக்காக உழைக்கிறோம் என்று சொல்லி ராமதாஸ் குடும்பம் கொழுக்கிறது.
ஒவ்வொரு ஜாதியும் , அந்த ஜாதியில் இருக்கும் ஒரு குடும்பம் கொழுக்க உழைக்கவேண்டும் என்று மூளை சலவை செய்யப்படுகிறது.
அய்யா முழு இந்தியாவையும் முன்னேற்ற வாருங்கள். மத, ஜாதி, இன காழ்ப்புணர்வை உருவாக்கி அரசியல்வாதிகள் கொழுக்க அனுமதிக்காதீர்கள்.

அருள் said...

வால்பையன் said...

// ///வசதியா இருக்குறவங்களுக்கு எதுக்கு சாதி அடையாளம்னு தான் கேட்டேன்!// ///

வசதி என்பது வாழ்வின் ஒரு அங்கம் தான். அதனாலேயே சாதி ஒழிந்துவிடுமா? வசதியா இருந்தாலும் தலித் ஒருத்தருக்கு சென்னையில வாடகை வீடு எளிதாக கிடைக்குமா'ன்னு கேட்டுப்பாருங்க?

வசதியும் அதிகாரமும் ஒன்னா? இடஒதுக்கீடு என்பது வெறும் வேலைவாய்ப்பு இல்லை. அது அதிகாரத்தில் உரிய இடம் பிடிக்கும் பாதை.

ஒடுக்கப்பட்ட சாதிகளில் வசதியானவர்கள் தங்கள் சாதி அடையாளத்தை மறைப்பதால், அதேசாதியின் ஏழைகளுக்குதான் இழப்பு.

வசதியா இருக்கிறவங்க சாதிவாரி கணெக்கெடுப்புல சாதிப்பேரை சொல்லக்கூடாதுங்கிறீங்க - இதனால் யாருக்கு இலாபம்? அந்த சாதியோட மக்கள்தொகை குறையும். அதையே காரணமா வச்சு இடஒதுக்கீடும் குறையும். அதே சாதியோட ஏழைகள்தான் பாதிக்கப்படுவாஙக.

உயர்பதவிகளில், மக்களுக்கு பணியாற்றும் முக்கியமான இடங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினர் இருப்பது அந்தசாதியினரின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு அவசியம். இதுகுறித்து மண்டல்குழு அறிக்கை விரிவாக விளக்கியுள்ளது.

ஐ.ஏ.எஸ் போன்ற உயர்பதவிக்கான போட்டிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலேயே கொஞ்சம் வசதியானவர்கள்தான் வெற்றிபெரும் அளவுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள முடியும். ஏழைகள் அந்த இடத்துக்கு வருவது எப்போதாவதுதான் சாத்தியமாகும்.

மருத்துவம் போன்ற உயர்படிப்புகளில் இடம் பிடித்தால்கூட அதன்பிறகு ஆகும் அடிப்படை செல்வுகளைக்கூட ஏழைகளால் தாக்குபிடிக்க முடிவது இல்லை. இதனால் ஒடுக்கப்பட்ட வகுப்பு ஏழைகள் முன்னுக்கு வரக்கூடாது என்று நான் சொல்வதாக நினைக்கக்கூடாது.

ஒடுக்கப்பட்ட வகுப்பிலேயே ஏழைகள் இடத்தை வசதியானவர்கள் அபகரிக்கிறார்கள் என்பது பித்தலாட்டமான வாதம்.அது உண்மை என்று வைத்துக்கொண்டால்கூட, அதற்கு என்ன தீர்வு?

இந்த சிக்கலை மிக எளிதாக தீர்த்துவிடலாம். ஒருபிரிவுக்கான இடஒதுக்கீட்டில் ஏழைகளுக்கும், முதல் தலைமுறையினருக்கும்தான் முன்னுரிமை. ஏழைகளில் போட்டிக்கு யாரும் ஆளே இல்லை என்றால்தான் அதேசாதியின் மற்றவர்களுக்கு என்று விதிகளை வகுக்கலாம்.

அதைவிட்டுவிட்டு 'க்ரீமி லேயர்' என்றுசொல்லி வசதிபடைத்தவனை பொதுப்பட்டியலில் தள்ளிவிட்டு - ஆதிக்க சாதிகள் முழு அப்பத்தை அபகரிப்பது என்ன நியாயம்? (தலித் இடஒதுக்கீட்டில் 'க்ரீமி லேயர்' இல்லை, ஓ.பி.சி இடஒதுக்கீட்டில் மட்டும் 'க்ரீமி லேயர்' என்பது என்ன தத்துவம்?)

ஒடுக்கப்பட்ட வகுப்பின் வசதியானவனுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு - ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களுக்கு போவதால் சமூகத்துக்கும் கிடைக்கும் நன்மை என்ன?

ஏழைகள் ஓ.பி.சியில் மட்டும்தான் இருக்கிறார்களா? ஆதிக்கசாதியிலும் ஏழைகள் இருப்பதாக கூறுகிறார்களே - அங்கே 'க்ரீமி லேயரை' கொண்டுவந்து, ஏழைகளுக்கு வழிவிட்டால் என்ன?

முதலில் - ஒடுக்கப்பட்ட வகுப்பின் பணக்காரனும், ஆதிக்க சாதியின் பணக்காரனும் ஒன்றா என்று யோசித்துப்பாருங்கள்.

மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் பிற்படுத்தப்பட்ட ஒருவனுடைய வருமானத்தை நம்பி எத்தனை பேர், எத்தனை உறவுகள் இருக்கின்றன என்று உங்களுக்குத்தெரிந்த யாரையாவது ஒப்பிட்டு பாருங்கள். அதேநபர் ஏதாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டால் அவரை காப்பாற்றும் நிலையில் எத்தனை சுற்றத்தார் இருக்கின்றனர் என்று பாருங்கள்.

இதையே உங்களுக்குத்தெரிந்த ஆதிக்க சாதியில் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் யாருடனாவது ஒப்பிட்டு பாருங்கள். பங்கு கேட்க ஆளே இருக்காது, ஆனால், உதவி செய்ய பலர் இருப்பார்கள்.

எனவே, "வசதியா இருக்குறவங்கள் சாதி அடையாளத்தை கைவிடுவது" ஆதிக்க சக்திகளுக்கு துணை போகும் செயல்தான்.

வழிப்போக்கன் said...

////வினவே எதிர்பார்க்காத அளவில் ஒரு வன்னிய பதிவர் சீறி எழுந்து தனது சாதியை டிஃபண்ட் செய்துள்ளார். ////

வினவு என்ன எதிர்பார்க்கிறது என்பது உங்களுக்கு எப்படி தெரியும்??? எதுக்கு இந்த லூஸ் டாக்???

Anonymous said...

திரு டோண்டு,

அருள் அவர்கள் வன்னியரை தற்காத்து இட்டுள்ள பின்னூட்டங்களை மட்டும் தான் வெளியிட்டுள்ளீர்கள். இன்னும் அண்ணாரது முந்தைய 'முற்போக்கு' கருத்துக்களையும் (பிராமணத் துவேஷம் தவிர்த்து) சேர்த்து வெளியிட்டிருந்தீர்களென்றால் இது போன்ற 'முற்போக்கு'வாதிகளின் முகத்திரை இன்னும் 'பப்பரப்பா'வென்று இளித்திருக்கும்.

வெற்றிவேல் said...

//ஏழைகள் ஓ.பி.சியில் மட்டும்தான் இருக்கிறார்களா? ஆதிக்கசாதியிலும் ஏழைகள் இருப்பதாக கூறுகிறார்களே - அங்கே 'க்ரீமி லேயரை' கொண்டுவந்து, ஏழைகளுக்கு வழிவிட்டால் என்ன?//

குழலியும் இப்படித்தான்கேட்டார். ஏனென்றால், குழலிக்கும், அருளுக்கும் இன்னும் பாமக அரசியல் நடத்த அள்ளிக்கொடுக்கும் ஏராளமான பணக்காரர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்.

இப்படி எழுத வெட்கப்பட வேண்டும். ஆனால் தங்களை ஏதோ ஒடுக்கப்பட்ட சாதி என்று காட்டிக்கொண்டு தாழ்த்தப்பட்ட எங்கள் மீது வன்கொடுமை செய்துகொண்டு பழியை பார்ப்பனர்கள் மீது போட்டுவிட்டு முற்போக்கு வேடம் போட்டு ஓடும் உங்களுக்கு வெட்கம் ஏது?

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். இட ஒதுக்கீடு என்பது வசதியற்றவர்கள் வாய்ப்பற்றவர்களுக்கு கிடைக்கத்தான். வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு அல்ல.

இரண்டாவது, இட ஒதுக்கீடு உள்ள இடத்தில்தான் ஜாதிவாரி இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு அல்லாத இடத்தில் இட ஒதுக்கீடு அல்ல. அங்கு ஓப்பன் கோட்டா. அதில் யார் வேண்டுமானாலும் பணக்காரரோ ஏழையோ படிக்க வரலாம்.

மூன்றாவது பணக்கார வன்னியர்கள் நன்றாக படித்து ஓப்பன் கோட்டாவில் வந்தால் பாதிக்கப்படப்போவது வன்னியர்கள் அல்ல. அங்கு கொஞ்சம் இடங்களை பெற்று வரும் முற்பட்ட சாதியினர்தான் மேலும் குறைவாக இடங்களை பெறுவார்கள். புரிகிறதா? வன்னியர்கள் பெறும் இடங்கள்தான் அதிகமாகும்.
பணக்கார வன்னியர்கள் ஓபிசி கோட்டாவில் நுழைவது ஏழை வன்னியர்களுக்குத்தான் பாதகமானது.

உங்களுக்கு இன்னும் பலமுறை சொன்னாலும் புரியாது. ஏனென்றால், உங்களது சுயநலம் உங்களை புரியாதமாதிரி நடிக்கவைக்கும்.

கால்கரி சிவா said...

//அமெரிக்க நாட்டில் ஏறக்குறைய மக்கள் எல்லோரும் சமம்//

சிரிப்புத்தான் வருகுதய்யா. எதெற்கெடுத்தாலும் அமெரிக்க்காவைப் பார் என உசுப்பேத்தி உசுப்பேத்தியே அமெரிக்கா இந்த நிலைமையில் இருக்கிறது :)


அமெரிக்காவிலிருந்து கால்கரி

dondu(#11168674346665545885) said...

//வினவு என்ன எதிர்பார்க்கிறது என்பது உங்களுக்கு எப்படி தெரியும்??? எதுக்கு இந்த லூஸ் டாக்???//
வினவு விடாத லூஸ் டாக்கா? அப்பதிவர் எதிர்பார்ப்பது பார்ப்பனர்களின் அழிவைத்தான். வன்கொடுமை செய்யும் பார்ப்பனரற்ற உயர் சாதியினர், ஓ.பி.சி., பி.சி ஆகியோர் செய்வதை வெட்கமேயில்லாது பார்ப்பனீயம் என சாயம் பூசி அவர்களை தப்புவிப்பது.

அவரை தாக்கும் சந்தர்பங்களை நான் ஏன் விட வேண்டும்?

இது ஒரு யுத்தம். நான் அதில் எவ்வித சலுகையும் கேட்கவில்லை, அதே போல தரவும் மட்டேன்.

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

Hi Dondu,

Congrats!

Your story titled 'தனது சொந்த சாதிக்கு மட்டுமே சப்பைகட்டு கட்டும் முற்போக்கு பதிவர்கள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th May 2010 12:50:01 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/249129

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Thanks Tamilish

N. Raghavan

கோவி.கண்ணன் said...

டோண்டு சார்,

ஒரு விதத்தில் நீங்கள் அருளைப் பாராட்டனும், வருணாசிரம மரம் பட்டுப் போகக் கூடாதுன்னு உங்க பாணியில் பிறப்பு வழி சாதிக்கு அவரும் ஆதரவளிக்கிறார்

dondu(#11168674346665545885) said...

@கோவி கண்ணன்
ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். சாதீயம் பேசி மற்ற சாதியினரை கொடுமைபடுத்தலாகாது என்று கூறுவதில் நான் என்றுமே பின்தங்க மாட்டேன்.

அதே போல எந்த சாதியும் உயர்த்தி என நான் எங்கும் கூறவில்லை. எங்கள் வீட்டுக்கு எதிரில் இருக்கும் மண்டபத்தில் தாம்ப்ராஸ் மகாநாடு இரண்டு நாட்களுக்கு நடந்தது, அதை நான் எட்டிப் பார்க்க்கக் கூட இல்லை என்பதும் நிஜம்.

பிரச்சினை என்னவென்றால் டிஃபால்டாக பாப்பான்தான் எல்லாத்துக்கும் காரணம் என நீட்டி முழக்கிப் பேசி, என்னைப் போன்றவர்கள் உங்களைப் போன்றவர்களுடன் சேரவொட்டாமல் செய்யும் பலரால்தான் நானும் எதற்கு வம்பு என தள்ளி நிற்கிறேன். அதுவும் தத்தம் சாதியினர் செய்யும் கேடுகெட்ட வன்கொடுமைகளை பார்ப்பனீயம் என நேர்மையின்றி ஒரு லேபல் தருவதை ஆட்சேபிக்கிறேன். அதன் நோக்கமே தத்தம் தவறுகளை திசைதிருப்ப அம்மாதிரியினர் செய்யும் முயற்சியாக நான் பார்க்கிறேன் (நீங்களோ வால்பையனோ அந்த நோக்கத்தில் செய்யாவிட்டாலும், மற்றவர்கள் முக்கால்வாசி பேர் அப்படித்தான் செய்கிறார்கள்).

ஆகவேதான் சாதீயம் என்ற பொதுவான சொல்லை பார்ப்பனீயம் என லேபல் செய்யும் முட்டாள்களுடன் விவாதமே செய்யாதீர்கள் என கூறிவிட்டு நானும் அவ்வாறே நடந்து வருகிறேன்.

நான் சாதியின் இருப்பைப் பற்றிக் கூறுவதே அது இல்லாதது போல நடிப்பது புத்திசாலிச் செயலாகாது என்பதை எடுத்துக் காட்டவே. ஓர் அமைப்பு இவ்வளவு நாட்களாக இருந்து வருகிறதென்றால், அதற்கு ஏதேனும் காரணம் இல்லாமலா இருக்கும்? நான் செய்ய நினைப்பது யதார்த்தத்தைக் கூறுவதே.

அருள் விஷயத்தில் அவர் எனது ஒவ்வொரு கருத்துக்கும் வந்து சம்பந்தமின்றி பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாக திட்டுவதாலேயே இப்பதிவைப் போட்டேன், அவர் மட்டும் என்ன ஒழுங்கு என. நான் இப்பதிவில் சொன்ன எந்த பாயிண்டுகளுக்கும் அவரிடம் நேரடி பதில் இல்லை என்பதும் சிந்திக்கத் தக்கதே.

ஏதோ இதையெல்லாம் நான் நட்பு பாராட்டும் உங்களிடம் கூற வேண்டும் எனத் தோன்றுவதால் கூறினேன்.

எப்போதாவது நேரில் பார்க்கும்போது உங்களிடம் நேரம் இருந்தால் மேலும் பேசுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

வால்பையன் said...

///
//வளங்களிலும் வாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கும் இதர ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்ப பங்கு அளிக்கப்பட வேண்டும்.//


சமீபகாலமா தமிழ்கத்தை ரெண்டா பிரிக்கனும்னு பேசாம இருக்கிங்களே, கூடவே அதையும் சேர்த்துகோங்க!

என் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாதுன்னு நம்புனா எல்லாம் வளரும், யாராவது பிச்சை போட்டா தான் வளருவேன்னா, தட்டை பார்த்துகிட்டே உட்கார்ந்திருக்கனும்!// ///

இடஒதுக்கீடு, வகுப்புவாரி பங்கீடு - இதையெல்லாம் 'பிச்சை' என்பது சரியல்ல. அது உரிமை.

தமிழகத்தை ரெண்டா பிரிக்கனும்'னு சொல்வதில் எந்த தவரும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

அருள் said...

வெற்றிவேல் said...

// ///ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். இட ஒதுக்கீடு என்பது வசதியற்றவர்கள் வாய்ப்பற்றவர்களுக்கு கிடைக்கத்தான். வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு அல்ல.// ///

முதலில் நீங்கள் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். இடஒதுக்கீடு சாதி அடிப்படையில்தான் தரவேண்டும் என்று அரசியல் அமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதை உச்சநீதிமன்ற தீர்ப்பும் உறுதி செய்துவிட்டது.

சாதியின் பின் தங்கிய நிலையை அளவிட சமூக - கல்வி நிலைதான் அளவுகோளாக கொள்ளப்படுகிறது. பொருளாதாரம் எளிதில் மாறக்கூடியது என்பதால் அது கணக்கில் கொள்ளப்படவில்லை.

மேலும் பின் தங்கிய நிலை என்பதும் தனிநபர் அடிப்படையிலானது அல்ல. அது குழு அடிப்படையிலானது.

"இட ஒதுக்கீடு என்பது வசதியற்றவர்களுக்கு கிடைக்கத்தான்" என்று நீங்களாக ஒரு கட்டுக்கதையை புகுத்தாதீர்.

// ///இட ஒதுக்கீடு உள்ள இடத்தில்தான் ஜாதிவாரி இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு அல்லாத இடத்தில் இட ஒதுக்கீடு அல்ல. அங்கு ஓப்பன் கோட்டா. அதில் யார் வேண்டுமானாலும் பணக்காரரோ ஏழையோ படிக்க வரலாம்./// //

இடஒதுக்கீடே பொருளாதார அடிப்படையிலானது இல்லை எனும்போது - ஓப்பன் கோட்டாவுக்கு ஒருநியாயம், இட ஒதுக்கீட்டுக்கு இன்னொரு நியாயம் என்பது - என்ன நியாயம்?

அருள் said...

வால்பையன் said...

// ///பெரியாருக்கு பிறகு யாருமே மூளையோட பிறக்கலையா!?/// //

பெரியாரே தன்னை பெரிய அறிவாளி என்று கூறிக்கொள்ளவில்லை.

''தமிழர்களை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை செய்ய யாரும் முன்வராததினால், நான் அதை மேற்கொண்டு வருகிறேன்" என்றுதான் அவரே கூறுகிறார்.

சமூகத்தை மாற்ற மூளை மட்டும் போதாது, துணிச்சலும் வேண்டும் . அந்தவகையில் - பெரியாருக்கு இணையாக யாரும் இல்லை என்பது உண்மைதான்.

வால்பையன் said...

//ஐ.ஏ.எஸ் போன்ற உயர்பதவிக்கான போட்டிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலேயே கொஞ்சம் வசதியானவர்கள்தான் வெற்றிபெரும் அளவுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள முடியும்.//


இது நீங்க சொன்னது!



//ஒடுக்கப்பட்ட வகுப்பிலேயே ஏழைகள் இடத்தை வசதியானவர்கள் அபகரிக்கிறார்கள் என்பது பித்தலாட்டமான வாதம்.அது உண்மை என்று வைத்துக்கொண்டால்கூட, அதற்கு என்ன தீர்வு?//


இதுவும் நீங்க தான் சொன்னது!

தீர்வு சொல்றதுக்கு நான் நீதிபதி அல்ல!

நான் சொல்ல வர்ற விசயத்தை முதல்ல புரிஞ்சிகோங்க!
வினவு பதிவில் குறிபிட்ட சம்பவட்தில் காவல்துறை தாக்கப்பட்டது, அதற்கு காரணம் அந்த உயர் அதிகாரி ஒரு தாழ்த்தபட்ட வகுப்பை சேர்ந்தவர், அவர் உயர் அதிகாரி எனக்கூட பாராமல் அவரை தாக்கும் அளவுக்கு ஏறி போயிருக்கும் உங்கள் சாதி வெறிக்கு முதலில் காயடித்துவிட்டு பிறகு இடஒதுக்கீடு பற்றி பேச வாருங்கள், என் சாதி பெருசு, என் சாதி காரனுக்கு நெத்தியில முளைச்சிருக்குன்னு பேசுறவங்களுக்கு எதுக்கு இடஒதுக்கீடு, இப்பவே இந்த சாதிவெறி பிடிச்சு அழையிறிங்களே, நீங்கெல்லாம் உயர்பதிவுக்கு வந்த தாழ்த்தபட்டவன் ஒருத்தன் ரோட்டில் நடமாட முடியுமா? உயிரோட கொழுத்திற மாட்டிங்க!

இடஒதுக்கீடு பற்றி உங்களிடம் விளக்கம் கேட்க இங்கே உரையாட வில்லை, உங்கள் சாதிவெறியை தோலுரிக்கவே இங்கே உரையாடி கொண்டிருக்கிறேன், அதற்கு பதில் சொல்லவும்!




//(தலித் இடஒதுக்கீட்டில் 'க்ரீமி லேயர்' இல்லை, ஓ.பி.சி இடஒதுக்கீட்டில் மட்டும் 'க்ரீமி லேயர்' என்பது என்ன தத்துவம்?)//


பூனை எட்டிபார்க்குதுடோய்!

வால்பையன் said...

//ஒடுக்கப்பட்ட வகுப்பின் பணக்காரனும், ஆதிக்க சாதியின் பணக்காரனும் ஒன்றா என்று யோசித்துப்பாருங்கள்.//


அதிலென்ன சந்தேகம் கண்ட்டீர்கள், ஆ.ராசா போடலையா ஆட்டம்! அவர் என்ன உயர்சாதி என சொல்லிகொள்பவரா!?


//இதையே உங்களுக்குத்தெரிந்த ஆதிக்க சாதியில் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் யாருடனாவது ஒப்பிட்டு பாருங்கள். பங்கு கேட்க ஆளே இருக்காது, ஆனால், உதவி செய்ய பலர் இருப்பார்கள்.//


என்ன ஒரு தட்டையான வாதம், தாழ்த்தபட்டவர்களில் புடிங்கி தின்ன தான் ஆள் இருப்பாங்களாம், உயர்சாதியில் உதவி செய்வார்களாம், அய்யா அருள், ஆனாலும் இபடி அருள் வந்து ஆடக்கூடாது, இங்கே எல்லாரும் மனுசங்க தான், எல்லாருக்கும் மனசாட்சி இருக்கு, ஆனா உங்களை வைத்தே எல்லா மனிதர்களையும் எடை போடாதீர்கள், உங்களை போல் எந்த மனிதரும் அடுத்தவன் காசை புடிங்கி திங்க நினைக்க மாட்டார்கள்!


//"வசதியா இருக்குறவங்கள் சாதி அடையாளத்தை கைவிடுவது" ஆதிக்க சக்திகளுக்கு துணை போகும் செயல்தான்.//


ஏற்கனவே சொல்லிட்டேனப்பா, சாதி வேணும்னா எழுதி நெத்தியில கூட ஒட்டிகோங்க, என்ன மசுத்துக்கு அடுத்தவனை தாழ்ந்தசாதின்னு சொல்லி அடிக்கிறிங்க!,


சாதி மறுப்பதும் ஏற்று கொள்வதும் அவனவன் தனிபட்ட விசயம், சாதி வேணுமா வேணாமான்னு அவரவர் பார்வையிலேயே விட வேண்டும்! என்னுடய கருத்துகள் மட்டுமே உரையாடலாக, சாதி வெறுப்பவர் தூக்கி போட்டு மனிதத்தில் வாங்க, மனிதர்களாக வாழ்வோம்!

Anonymous said...

வால் பையனின் அனைத்து பின்னூட்டங்களையும் ஆதரிக்கிறேன். சுய சிந்தனையும், சுய மரியாதையும், சுய நம்பிக்கையும் உள்ள எந்த தனி மனிதனோ அல்லது பெரியாரின் கொள்கைகளை உண்மையாக பின்பற்றுபவரோ சாதிப் பெயரை சொல்லவோ, சாதிப் பெயரைப் பயன்படுத்தி அதனால் அடையும் லாபங்களை அனுபவிக்கவோ வெட்கப்படுவார்கள். எந்த அடிப்படையிலும் தன் சொந்த சாதிப்பற்றையோ, சாதி வெறியையோ வெளிக்காட்டுவது அல்லது ஆதரிப்பது சமூகத்தை மேன்மேலும் வலுவிழக்கச் செய்யும். உங்கள் சாதியை மட்டும் வளப்படுத்த ஆதரித்து பிரச்சாரம் செய்வதை விடுத்து வேறு ஆக்க பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துங்கள்.

அருள் said...

வெற்றிவேல் சைட்...

// ///பணக்கார வன்னியர்கள் நன்றாக படித்து ஓப்பன் கோட்டாவில் வந்தால் பாதிக்கப்படப்போவது வன்னியர்கள் அல்ல. அங்கு கொஞ்சம் இடங்களை பெற்று வரும் முற்பட்ட சாதியினர்தான் மேலும் குறைவாக இடங்களை பெறுவார்கள். புரிகிறதா? வன்னியர்கள் பெறும் இடங்கள்தான் அதிகமாகும்./// //

புரிகிறதா'ன்னு கேட்குறீங்க. முதல்ல உங்களுக்கு புரிகிறதா'ன்னு சொல்லுங்க?

ஓப்பன் கோட்டா என்பது, எல்லோருக்கும் பொதுவானது. அது FC கோட்டா இல்லை. நன்றாக படித்து FC மாணவர்களுக்கு இணையா மார்க் வாங்குற பணக்கார வன்னியர்கள் இப்பவே ஓப்பன் கோட்டாவில் இடம் பிடித்துக்கொண்டுதான இருக்கிறார்ர்கள்.

ஓப்பன் கோட்டாவில் இடம்பிடிக்கும் வன்னியர்கள் MBC லிஸ்ட்டில் வருவது இல்லை. இதுதான் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறதே!. இதில் புதிதாக என்ன இருக்கிறது?

// ///பணக்கார வன்னியர்கள் ஓபிசி கோட்டாவில் நுழைவது ஏழை வன்னியர்களுக்குத்தான் பாதகமானது./// //

சரி, வன்னியர்களுக்குதானே பாதகமானது. அதற்காக அவர்கள்தானே கவலைப்படவேண்டும். அதில் உங்களுக்கு என்னகவலை?

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டில் ஏழை வன்னியர்களுக்கும், முதல் தலைமுறையினருக்கும்தான் முன்னுரிமை. ஏழைகளில் போட்டிக்கு யாரும் ஆளே இல்லை என்றால்தான் பணக்கார வன்னியர்களுக்கு என்று விதிகளை வகுக்கலாம். அதற்கு எந்தவன்னியனும் எதிர்ப்பு சொல்லவில்லை.

அதைவிட்டுவிட்டு 'க்ரீமி லேயர்' என்றுசொல்லி வசதிபடைத்தவனை பொதுப்பட்டியலில் தள்ளிவிட்டு - ஆதிக்க சாதிகள் முழு அப்பத்தை அபகரிப்பது என்ன நியாயம்?

வன்னியரில் வசதியானவனுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு - ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களுக்கு போவதால் சமூகத்துக்கும் கிடைக்கும் நன்மை என்ன?

வால்பையன் said...

//தமிழகத்தை ரெண்டா பிரிக்கனும்'னு சொல்வதில் எந்த தவரும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.//


தல என்ன உளருதோ, அதை தான் தொண்டனும் உளரனும் என்கிற கட்சி தர்மத்தை கடைபிடிப்பது குறித்து மகிழ்ச்சி!


ராமதாஸ்:நமக்கு வாய்ந்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்!

அருள் said...

// ///உங்கள் சாதி வெறிக்கு முதலில் காயடித்துவிட்டு பிறகு இடஒதுக்கீடு பற்றி பேச வாருங்கள்./// //

ஒன்றை செய்துவிட்டு மற்றதை செய்ய வேண்டும் என்றால் கடலில் அலைநின்ற பிறகு குளிக்க வேண்டியதுதான்.

சாதிச்சண்டைகளுக்கு பின் தங்கிய நிலையும் ஒரு முக்கிய காரணம் என்று, தென்மாவட்ட கலவரங்களுக்கான் காரணங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அரசின் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

எனவே, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்தும் அவரவர்களுக்கான உரிமையை, பங்கினை பெற்று அவலவாழ்விலிருந்து விடுதலைப் பெறவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான சாதிவெறிக்கு முடிவுகட்டவேண்டும் என்பதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை.

வால்பையன் said...

//''தமிழர்களை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை செய்ய யாரும் முன்வராததினால், நான் அதை மேற்கொண்டு வருகிறேன்" என்றுதான் அவரே கூறுகிறார்.//


அவரது காலத்தில் நிச்சயமாக மானமும், அறிவும் தேவைபட்டது, அதற்காக போராடினார், இப்போ அதையெல்லாம் அடகு வச்சிட்டு தலைமை புகழ்பாடி சுயமரியாதையை இழுந்துட்டு ஒரு கூட்டம் திரியுது, இதக்கு தானா பெரியார் சுயமரியாதை இயக்கம் நடத்தினார்!?

இன்றைய செய்தி, மேல்சபையில் அன்புமணிக்கு பதவி, பா.ம.க மீண்டும் மரம் தாவுமா!


ஆடுறா ராமா
ஆடுறா ராமா

வால்பையன் said...

//'க்ரீமி லேயர்' என்றுசொல்லி வசதிபடைத்தவனை பொதுப்பட்டியலில் தள்ளிவிட்டு - ஆதிக்க சாதிகள் முழு அப்பத்தை அபகரிப்பது என்ன நியாயம்? //


நீங்களே ஒரு ஆதிக்கசாதி தான், அந்த சாதிவெறி தான் தலித் மக்களை தாக்க வைத்தது, உங்களுக்கு மற்றவர்களை ஆதிக்கசாதி என சொல்லும் யோக்கியதை இல்லை!.

நியாயமாக தாழ்த்தபட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய அப்பத்தை, என்னை MBC யில் சேர் ஆளாளாலுக்கு தன்னை தானே தாழ்த்தி கொண்டு புடுங்கி தின்னும் குரங்கு கூட்டம் தான் இந்த சாதிபற்று!


காலனியாதிக்கம் இன்று அதிகாரவர்க்கம் மூலம் மறு உருவம் பெற்றுள்ளது, எம்மக்களை நினைக்கையில் என் கண்கள் பெருகுது!

அருள் said...

வால்பையன் said...

// ///தாழ்த்தபட்டவர்களில் புடிங்கி தின்ன தான் ஆள் இருப்பாங்களாம், உயர்சாதியில் உதவி செய்வார்களாம், அய்யா அருள், ஆனாலும் இபடி அருள் வந்து ஆடக்கூடாது, இங்கே எல்லாரும் மனுசங்க தான், எல்லாருக்கும் மனசாட்சி இருக்கு, ஆனா உங்களை வைத்தே எல்லா மனிதர்களையும் எடை போடாதீர்கள், உங்களை போல் எந்த மனிதரும் அடுத்தவன் காசை புடிங்கி திங்க நினைக்க மாட்டார்கள்!/// //

'தாழ்த்தபட்டவர்களில்' என்றும் நான் கூறவில்ல, 'புடிங்கி தின்ன' என்றும் நான் கூறவில்லை.

"மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் பிற்படுத்தப்பட்ட ஒருவனுடைய வருமானத்தை நம்பி எத்தனை பேர், எத்தனை உறவுகள் இருக்கின்றன என்று உங்களுக்குத்தெரிந்த யாரையாவது ஒப்பிட்டு பாருங்கள். அதேநபர் ஏதாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டால் அவரை காப்பாற்றும் நிலையில் எத்தனை சுற்றத்தார் இருக்கின்றனர் என்று பாருங்கள்."

என்றுதான் கூறினேன். இங்கு யாரும் தனித்தீவாக வாழவில்லை. ஒருவர் மற்றவருக்கு உதவிசெய்யும் தேவை எப்பொதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

உயர்சாதியினரில் பெரும்பாலனவர்கள் நல்ல வருமனத்துடன் இருப்பதால், அடுத்தவரை உதவி கேட்கும் நிலையில் இருப்பவர்கள் குறைவு, அதேபோன்று ஆபத்தில் உதவிசெய்யும் அதிகாரநிலையில் இருப்பவர்கள் அதிகம்.

பிற்ப்படுத்தபட்டவர்களின் நிலை இதற்கு மாறானது என்று கூறினேன். இதில் "அடுத்தவன் காசை புடிங்கி திங்க" என்ன இருக்கு?

NO said...

அன்பான நண்பர் திரு டோண்டு,

நல்ல பதிவு!

மற்றுமொரு மறைத்து வைக்கப்பட்ட செயல் திட்டம் (hidden agenda) வெளியே வந்தது!!
நானும் கவனித்துதான் கொண்டிருக்கிறேன், சுமார் ஒரு வருடமாக இந்த முற்போக்கு மன்னாதி மன்னர்கள் எல்லாம் யாரென்று! பல ரூபங்களில் வருகிறார்கள் இவர்கள்! இவர்களின் முகமூடிகள் சில கீழே!

1 பெரியார்
2 சே குவேரா
3 மாவோ மற்றும் ஸ்டாலின்
4 ஈழ ஆதரவு

இந்த வேடதாரிகளுக்கு முதல் காவல் கோட்டை பெரியார்! இவர்கள் பெரியார் தாடியின் உள்ளே மறைந்துகொண்டு, ஜாதி ஒழிக என்று கத்தும் கடைந்தெடுத்த ஜாதி வெறியர்கள் மற்றும் பெரியாரின் இந்து மத எதிர்ப்பை (பொதுவான மத எதிர்ப்பு மற்றும் சடங்குகளை நம்ப்பாமை போன்றவைகளை அல்ல) மட்டும் எடுத்துக்கொண்டு இந்து மதத்தின் மேலே கல்லடித்துக்கொண்டிருக்கும் மதவெறி பிடித்த வேற்று மதக்காரர்கள்!


ஒரு உதாரணம்! நண்பர் திரு KRP செந்தில் என்பவர் (இவர் சே குவேர ஸ்வாமிகள் ஆராதனை கும்பலை சேர்ந்தவர்) ஒரு பதிவு எழுதினர். அதாவது பெரியாரிசத்தை ஆதரிக்கும் இஸ்லாமியர்கள் என்று தலைப்பிட்டு! அதாவது இஸ்லாமியர்கள் பெரியாரின் கருத்துகளை ஆதரிக்கிறார்களாம் அதில் வந்து சிங்கி அடித்தவர்கள் பல இஸ்லாமியர்கள் (இதில் மதவெறி துளியும் இல்லாத, மாற்று மதங்களை சாடாத அனேக இஸ்லாமியரைப்போன்றஒருவரான அருமை நண்பர் திரு M M அப்துல்லாவும் அடங்கும் ) !!!

அதற்க்கு நான் எழுதிய மறுமொழி கீழே!!

NO said...

அதற்க்கு நான் எழுதிய மறுமொழி கீழே!!


//அன்பான நண்பர் திரு செந்தில்,

இங்கே உங்களின் டைட்டில்லே தவறு ஐயா!

இஸ்லாமியர் எங்கே பெரியார் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்கள்? அவர்கள் ஏற்றுக்கொள்வது பெரியாரின் இந்து மத எதிர்ப்பு மட்டுமே! அது மிக்க
விலாவாரியாக பெரியாரால் செய்யப்பட்டதால், அவரை மற்ற "மத" காரர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது! அவ்வளவே!

ஈ வே ராவின் கடவுள் மறுப்பை
"இந்து மத" மறுப்பு என்ற இடத்தில் மட்டுமே வைத்து, வேண்டுமென்று அங்கேயே நிறுத்திக்கொண்டு, அவர் 'எல்லா கடவுள்களையும்
"இல்லை" என்று சொல்லவில்லை, சொன்னது " இந்து மதத்தை" மட்டுமே என்று ஒரு புதிய வெங்காய தோசையை சுட்டு , அதற்க்கு இந்து மதத்தை மட்டும் திட்டி
"பகுத்தறிவுவாதி" என்று பட்டம் பெற்ற ஏனைய கொள்கை கோமான்களின் கையிலிருந்து எண்ணையை வாங்கி, இதோ பார், எல்லோரும் சொல்லிவிட்டார்கள் இந்து மதம் பொய் மதம், எங்கள் மதமே மெய் மதம் என்று selective ரீடிங் செய்து ஊரெல்லாம் தம்பட்டம் அடிப்பதுஎந்த விதத்தில் பகுத்தறிவு?

மறுபடியும் சொல்லுகின்றேன், இஸ்லாமியர்களுக்கு ஈ வே ராவை பிடித்த்திருப்பதின் கரணம் அவர் இந்து மதத்தை திட்டியதால் மட்டுமே! அவரின் மற்ற கருத்துகளால் இல்லை!! (ஒரு இஸ்லாமிய பெண் பெரியார் சொன்ன பெண்ணைப்போல இருந்துதான் பார்க்கட்டுமே, இருக்கதான் முடியுமா? விடுவார்களா??)

நண்பர் திரு அப்துல்லாஹ் கோபித்து கொள்ளக்கூடாது - கொடுமை என்னவென்றால், தன் மத அடையாளங்களை அணிந்துகொண்டு, எங்கள கடவுள்தான்
எல்லாம், எங்கள் இறைதூதர் தான் எல்லாம் என்று அடித்துபேசி, தன் குல பெண்களுக்கு திரை இட்டு மூடி அதை பற்றி எல்லாம் சிறிதும் கவலைபடாமல், பொருட்படுத்தாமல், பெரியாரின் அடிபொடிகளை தங்கள் மத்தியில் பேசச்சொல்லி கேட்பது எப்பேர்பட்ட அசட்டுத்தனம்??

அதையும் விடுங்க -

கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணகுபவன் காட்டுமிராண்டி

- மேலே உள்ளதற்கு இஸ்லாமியரின் விளக்கம் என்ன?

இஸ்லாமியர்க்கு கடவுளை யார் கற்பித்தது??? ஆபிரஹாம் (இப்ராகிம்) , மோசேஸ் (மூசா) மற்றும் பலர், அனால் கடைசியாக உங்களின் தூதர் முகமது! அப்போ இவர்களெல்லாம்????
கடவுளை பரப்புகிறவன் - நீங்கள் எல்லாம் தினமும் மைக் போட்டு கூபிடுகிரீர்களே, மேலும் உண்மைமதம் இதுவே என்று பல வெப் சைட் வைத்து பரப்புகிறீர்களே, அவ்வளவு என், உங்கள் இரு தூதரே பரப்பினாரே, அப்பொழுது அவர்களெல்லாம்????
கடவுளை வணங்குபவன் காட்டு மிராண்டி - ஐந்து வேளை கண்டிப்பாக, அப்போ????

இஸ்லாமியருக்கு பெரியாரின் தேவை, அவரின் கருத்துகாளால் அன்று, அவரின் இந்து மத எதிர்ப்பினால் மட்டுமே!

நான் சொல்லுவது ஒன்றுதான் - பெரியார் தாடியின் பின்னால் மறைந்து கொண்டு இந்து மதத்தை இகழ்ந்து பேசும் இந்து அல்லாதவர், அப்படி மறைந்து இருப்பதற்கு அர்த்தம் இந்து மதத்தை தாக்குவதற்கு மட்டுமே! பெரியாரின் கருத்துகளின்பால் கொண்ட பற்றுதலால் இல்லை!

பெரியாரை சிலாகித்து, அவரின் கொள்கைகளை ரசிப்பவர் குறைந்த பட்சம், மதம் மற்றும் அதன் மூலம் வந்த சடங்குகளை நிராகரிப்பு , அதிகபட்சம் கடவுள் மறுப்பு என்ற எல்லைகளுக்குள் இருக்க வேண்டும்! அப்படி இருந்தால், குறைந்த பட்சம் ஒருவரின் "ஒரே உண்மையான" புத்தகங்கள், அவை கூறும் ஆயிரம் சடங்குகள் மற்றும் வழிமுறைகள் புரம்தள்ளப்படும், அதிக பட்சம் கடுவுள் இல்லை இல்லை இல்லை என்று சொல்லப்படும்!

இஸ்லாமியரை பொறுத்தவரையில், சத்தியமாக இந்த எல்லைகளுக்குள் ஒருவர் வந்துவிட்டால் அவர் இஸ்லாமியர் இல்லை என்றே வந்து முடியும்! ஏனென்றால், அவர்கள் ஒரே ஒரு கடவுளையாவது நம்பவேண்டும், அதுவும் உங்கள் இறை தூதர் சொன்ன கடவுளை, அதுவும் அவர் இறை தூதர் என்று முதலில் நம்பவேண்டும், மேலும் அவர் உங்களுக்கு கொடுத்த புத்தகமே உண்மையான புத்தகம், அவர் வாழ்வு நிகழ்வுகளே எல்லாவற்றிற்கும்
எடுத்துக்காட்டு என்று பல "நம்பிக்கைகள்' இருக்கவேண்டும்!

சொல்ல வருவது என்னவென்றால், அப்படி இஸ்லாமியர் கண்டிப்பாக வர முடியாமல் இருக்கும் ஒரு வட்டத்தில் பெரியாரிசம் இருக்கையில், அந்த பெரியாரிசத்தை நாங்கள் சிலாகிக்கிறோம், ஏற்கிறோம் என்று சொன்னால் அதற்க்கு அர்த்தமே இல்லை இந்து மத துவேஷத்தை தவிர!!

நன்றி //


மேலே சொன்னது ஒரு சாம்பிள் மட்டுமே . மேலும் எழுதுகின்றேன் மற்ற முகமூடிகளை பற்றி!

வால்பையன் said...

//உயர்சாதியினரில் பெரும்பாலனவர்கள் நல்ல வருமனத்துடன் இருப்பதால், //


உங்ககிட்ட புள்ளிவிபரம் கேப்டனுக்கு மேல இருக்கும் போலயே!
எல்லா வர்க்கத்திலும் பொருளாதார ஏற்றதாழ்வு ஊண்டு, கூட பொறந்த அண்னன், தம்பிக்கு உதவி செய்ய யோசிக்கும் காலம் இது, அது மனிதனுக்கே உரிய சுயநலம் குணம், அதை சாதிரீதியாக பிரிக்க இயலாது, பிடிங்கி தின்ன ஜால்ரா போட்டு ஒரு கூட்டம் எல்லா சமூகத்திலும் உண்டு!

அருள் said...

// ///நியாயமாக தாழ்த்தபட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய அப்பத்தை, என்னை MBC யில் சேர் ஆளாளாலுக்கு தன்னை தானே தாழ்த்தி கொண்டு புடுங்கி தின்னும் குரங்கு கூட்டம் தான் இந்த சாதிபற்று!// ///

நீங்கள் சொல்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. தாழ்த்தபட்டவர்களுக்குதான் தனியாக SC கோட்டா இருக்கிறதே. அப்புறம் எப்படி பிற்படுத்தப்பட்டவங்க குறுக்கே புகுந்து புடுஙக முடியும்?

MBC யில் சேருன்னுதான சொல்றாங்க, SC யில் சேருன்னு யாரும் சொல்லலையே. அது எப்படி தாழ்த்தபட்டவர்களுக்கு எதிரானதாகும்?

MBC கோட்டாவால தாழ்த்தபட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய அப்பம் எப்படி பரிபோகும்'னு எப்படி யோசித்தாலும் புரியவில்லை.

மற்றபடி, இடஒதுக்கீடு கேட்பது 'புடுங்கி தின்னும்' செயல் அல்ல. அது ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை.

seeprabagaran said...

சமூகநீதி, இடஒதுக்கீடு பற்றி ஆரோக்கியமான விவாதங்கள் தேவை. அந்தவகையில் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்யும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...

இந்திய ஆட்சிப்பரப்பில் பல தேசிய இனங்களும் ஆயிரக்கணக்கான வகுப்புகளும் சாதிகளும் உள்ளன என்பதும் அதுப்பற்றிய புரிதல்களும் தங்கள் அனைவருக்கும் இருக்கும் என நம்புகிறேன்.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இனவழிச்சமூகம், மொழிவழிச்சமூகம், சாதியச்சமூகம் என நாம் வகைப்படுத்தப்பட்டுள்ளோம். இப்போது அல்ல இனி எப்போதுமே சாதியை ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. எனவே சாதிய பூசல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் இடங்கொடுக்காமல், மோதல்களுக்கும் காரணமாக இருக்காமல் அனைவரும் வளமோடு என்ன வழிவகை உள்ளது என ஆராய்ந்து அனைத்து சமூகத்தினரும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

இடஒதுக்கீடு என்பது அனைத்து சமூகநோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி அல்ல. அது ஒரு குறிப்பிட்ட நோயை தீர்க்கும் மருந்து மட்டுமே.

விவாதம் தொடரட்டும்.

seeprabagaran said...

தந்தைப் பெரியார் எந்தவொரு மதத்தையும் உயர்வாக கருதவில்லை. அனைத்து மதங்களுக்கு எதிராகவும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அருள் said...

NO said...

// ///நானும் கவனித்துதான் கொண்டிருக்கிறேன், சுமார் ஒரு வருடமாக இந்த முற்போக்கு மன்னாதி மன்னர்கள் எல்லாம் யாரென்று! பல ரூபங்களில் வருகிறார்கள் இவர்கள்!/// //

அய்யா, NO - ஏற்கனவே ஒரு பதிவர் கேட்டார் "'முற்போக்கு' அப்பிடின்னா என்ன சார்? "வயித்து போக்கு" மாதிரியா?" ன்னு.

எனக்கும் அந்த சந்தேகம்தான். வயித்து போக்கு' நமக்கே தெரியும். சந்தேகம் இருந்தா டாக்டர் கிட்ட 'சர்ட்டிஃபிகேட்' வாங்கிக்கலாம். ஆனால். முற்போக்கை கண்டுபிடிப்பது எப்படி? அக்மார்க், ISO மாதிரி யாராவது 'சர்ட்டிஃபிகேட்' குடுத்தா சொல்லுங்க. நானும் வாங்கிக்கிறேன்.

ஆனாலும், பதிவர்கள் கிட்ட முற்போக்கு சர்ட்டிஃபிகேட் வாங்குறது ரொம்ப சுலபம் - வன்னியர்களை சாதிவெறியர்கள்'னு திட்டினா முற்போக்கு. வன்னியர்களுக்கு ஆதரவா பேசினா பிற்போக்கு.

வால்பையன் said...

//தாழ்த்தபட்டவர்களுக்குதான் தனியாக SC கோட்டா இருக்கிறதே. அப்புறம் எப்படி பிற்படுத்தப்பட்டவங்க குறுக்கே புகுந்து புடுஙக முடியும்? //


கிரிமிலேயர் பத்தி பேசுனிங்களே, அதுக்கு தான், அந்த அப்பம் பதில்!


//MBC யில் சேருன்னுதான சொல்றாங்க, SC யில் சேருன்னு யாரும் சொல்லலையே. அது எப்படி தாழ்த்தபட்டவர்களுக்கு எதிரானதாகும்?//


வேலை கொடுக்காதிங்க, பிச்சை போடுங்க என்பதற்க்கும், இதுக்கும் பெரிய வித்தியாசம் எனக்கு தெரியல!


//இடஒதுக்கீடு கேட்பது 'புடுங்கி தின்னும்' செயல் அல்ல. அது ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை.//


ஒடுக்கப்பட்டவர், நசுக்கப்பட்டவர் டயலாக்கெல்லாம் நல்லாயிருக்கு, நீங்க ஒடுக்கபட்டவர்னா ஏன் தலித் மக்களை ஒதுக்கி வைக்கனும், அவர்களை ஒடுக்கும் அதிகாரம் உங்களுக்கு கொடுத்தது யார்!?

அருள் said...

வால்பையன் said...

// //எல்லா வர்க்கத்திலும் பொருளாதார ஏற்றதாழ்வு ஊண்டு// //

உண்டுதான். ஆனால் எல்லாம் ஒன்றா?

நாட்டுக்கோட்டை செட்டியார் சாதியினரில் இருக்கும் 'பொருளாதார ஏற்றதாழ்வு'ம், வன்னியர் சாதியினரில் இருக்கும் 'பொருளாதார ஏற்றதாழ்வு'ம் - இரண்டும் ஒன்றா?

வன்னியரில் எத்தனை சதவீதம் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிறார்களோ, அத்தனை சதவீதம் பேர் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிறார்களா?

(நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வறுமையில் வாடவேண்டும் என்று கூறுவதாக எடுதுக்கொள்ளாதீர். வன்னியர்களும் மற்றவர்களுக்கு சமமாக உயரவேண்டும் என்கிற அடிப்படையில், ஒரு ஒப்பீட்டுக்காக சொல்கிறேன்)

வால்பையன் said...

//பதிவர்கள் கிட்ட முற்போக்கு சர்ட்டிஃபிகேட் வாங்குறது ரொம்ப சுலபம் - வன்னியர்களை சாதிவெறியர்கள்'னு திட்டினா முற்போக்கு. வன்னியர்களுக்கு ஆதரவா பேசினா பிற்போக்கு. //


அடடே, என்ன ஒரு கண்டுபிடிப்பு!
நான் பிற்போக்குவாதி தான், நான் என்ன சொல்றேனா! எவனொருவன் தன்சாதி பெரிது, என் சாதிகாரன் தப்பே பண்ண மாட்டான், அவனை யாரும் திட்டாம உதவி செய்யுங்கன்னு சொல்றானோ அவனை இழுத்து புடிச்சி காயடிக்கனும், இது எல்லா சாதிக்கும் பொருந்தும், வன்னியருக்கு மட்டும் சொல்லாததால் நான் பிற்போக்குவாதியாகிட்டேன்!

அந்த சர்டிபிகேட் எங்கே போய் வாங்குறது!?

dondu(#11168674346665545885) said...

//ஆனாலும், பதிவர்கள் கிட்ட முற்போக்கு சர்ட்டிஃபிகேட் வாங்குறது ரொம்ப சுலபம் - வன்னியர்களை சாதிவெறியர்கள்'னு திட்டினா முற்போக்கு. வன்னியர்களுக்கு ஆதரவா பேசினா பிற்போக்கு.//

வன்கொடுமைகள் செய்தார்கள் என யாரையுமே குறிப்பிட முடியாத பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாக வார்னிஷ் அடிச்சப் போது மட்டும் இனிச்சுதா? இப்ப படுங்க அருள் படையாச்சி!!!!

டோண்டு ராகவன்

வால்பையன் said...

ஒரு நாவிதருக்கு பெரிதாக படிப்பறிவில்லை, அவரது 12 வயது மகனை தொழில் கற்று கொடுக்கிறேன் என்று கடையில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார், அவரது சமூகத்தில் முன்னேறிய யாருமே அவருக்கு சரியான வழி காட்டவில்லை.

பையனை படிங்க வையுங்க, நிச்சயமா எதாவது வேலை கிடைக்கும், உங்கள் மகனும் சமூகத்தில் உள்ள மற்றவர்களை போலத்தான், நீங்கள் செய்யும் தொழிலையே அவனும் செய்ய வேண்டிய அவசியமில்லை, மதுரை பாலிடெக்கினிக்கில் முடிவெட்டுவது எப்படி என்று சொல்லி தர்றாங்க, இப்போ யார் வேணும்னாலும் அதை செய்ய முடியும்!, ஆனால் உங்கள் மகன் முன்னேறுவது உங்களால் தான் முடியும்னு அவனை கொண்டு போய் ஸ்கூலில் சேர்க்க வைத்தேன்!

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் உண்மையில் இம்மாதிரி குழத்தொழிலில் சிக்கி கொண்டவர்கள் தான், அவர்களே முன்னேற்றமே சரியான இந்தியாவின் முன்னேற்றம், வன்னியர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று சொன்னால் யாராலும் ஏற்றுகொள்ள முடியாது, அது தீவிர சாதிவெறியின் வெளிப்பாடக தான் தெரிகிறது!

அருள் said...

வால்பையன் said...

// ///ஒடுக்கப்பட்டவர், நசுக்கப்பட்டவர் டயலாக்கெல்லாம் நல்லாயிருக்கு, நீங்க ஒடுக்கபட்டவர்னா ஏன் தலித் மக்களை ஒதுக்கி வைக்கனும், அவர்களை ஒடுக்கும் அதிகாரம் உங்களுக்கு கொடுத்தது யார்!?/// //

தலித் மக்களை ஒதுக்கி வைப்பதும், அவர்களை ஒடுக்குவதும் தவறு, நியாயமற்றது என்றுதான் நானும் சொல்கிறேன்.

தலித்துகளுக்கு எதிராக ஒருசில வன்னியர்கள் செய்யும் செயல்களால் தலித்துகளுக்கு மட்டுமல்ல, வன்னியர்களுக்கும் இழப்புதான் என்பது எனது கருத்து.

வன்னியர் - தலித் மோதல்களால் இருபிரிவினருக்குமே பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. வன்முறையால் தலித்துகள் அதிகம் பாதிப்படைகின்றனர். வழக்கு, கைது என வன்னியர்களும் இழக்கின்றனர்.

எனவே, தலித்துகளுக்கு எதிராக இல்லாமல் - வன்னியருக்கு மேலே இருக்கும் ஆதிக்க சாதி அதிகாரத்தை தூக்கி எறிய வன்னியர்கள் முன்வரவேண்டும் என நான் விரும்புகிறேன்.

அதாவது, வன்னியர்கள் தங்களது உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டு, ஜனநாயக வழியில் அவர்களது மிதமிஞ்சிய ஆதிக்கத்தை அகற்ற வேண்டும்.

வால்பையன் said...

//நாட்டுக்கோட்டை செட்டியார் சாதியினரில் இருக்கும் 'பொருளாதார ஏற்றதாழ்வு'ம், வன்னியர் சாதியினரில் இருக்கும் 'பொருளாதார ஏற்றதாழ்வு'ம் - இரண்டும் ஒன்றா?//

செட்டியா இருந்தாலும் சரி, வட்டியா இருந்தாலும் சரி, எல்லா கழுதைகளும் ஒன்னு தான்!, மனிதநேயமில்லாமல் சாதிவெறி பிடித்து என் சாதி பாவம் என்பது ஊரார் பார்த்து சிரித்து கொண்டிருக்கும் கேலிகூத்து!

அய்யா எனக்கு செட்டியும் தெரியாது, குட்டியும் தெரியாது, நான் சிறுவயதிலிருந்தே சாதி/மதம்/கடவுள் மறுப்பாளன், உங்க புள்ளிவிபரத்தையெல்லாம் எதாவது ஏமாந்த சோனகிரிகிட்ட காட்டுங்க!


//வன்னியரில் எத்தனை சதவீதம் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிறார்களோ, அத்தனை சதவீதம் பேர் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிறார்களா?//


ஏன் வன்னியர்கள் வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்க்கிறார்கள் என்று என்றாவது யோசித்தததுண்டா!?

வால்பையன் said...

//அதாவது, வன்னியர்கள் தங்களது உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டு, ஜனநாயக வழியில் அவர்களது மிதமிஞ்சிய ஆதிக்கத்தை அகற்ற வேண்டும்.//


இதுக்கும் பதில் சொல்லியாச்சு!, கேடுகெட்ட அரசியல்வாதிகளை நம்பினால் கடைசி வரை விரல் சூப்பிட்டு தான் இருக்கனும்!

Unknown said...

//
டோண்டு அவரது சாதிக்கு சப்போர்ட் செய்கிறார் என்பதனால் அவரை சாதி வெறியன் என்னும் வயித்துப்போக்குகள்...அருள் தன் சாதிக்கு சப்போர்ட் செய்யும் போது மட்டும் ஏன் அவனை சாதி வெறியன் என்று சொல்வதில்லை.
//

எல்லாம் ஒரு சப்பைக்கட்டுதான். தன் ஜாதி எந்த பாவமும் செய்யாதது. எதிர் ஜாதி இருக்கே அதுதான் எல்லா தப்பும் பண்ணினது. இது தான் இத்தனை பின்னூட்டத்தின் கருத்தும். என்ன எழவு இது

Anonymous said...

பின்னி பெடல் எடுக்கும் வால்பையன், NO விற்கு ஒரு சபாஷ்!
அருளுக்கு இன்று நாள் சரியில்லை.
பெரியார் முதலில் ஆரம்பித்தது ஒழுக்கம் மற்றும் மதங்கள் அற்ற ஒரு சமுதாயம் அமைக்கவே .இதில் இஸ்லாமியர்கள் மதப் பற்றைப்பார்த்து பயந்து,ஒழுக்கம் மற்றும் இந்து மதம் அற்ற ஒரு சமுதாயம் என்று கொள்கையை மாற்றினார்.பிறகு அதை இந்து மதம் அற்ற ஒரு சமுதாயம் என்று மாற்றி ஜாதி மற்றும் கடவுள்களை திட்ட ஆரம்பித்தார்.அந்தோ! அங்கும் அவனவன், பிறர் ஜாதியையும் கடவுளையும் திட்டும்போது ஆதரித்து தன் ஜாதி, கடவுள் பக்கம் வரும்போது எதிர்க்க ஆரம்பித்தான்
(இப்போ நம்ம அருள் போல).
எக்க சக்கமாக மாட்டிக்கொண்ட பெரியாருக்கு துணையாக வந்தது பார்பன ஜாதி .இவர்கள் மைனாரிட்டி எனவே ஆதரிக்க யாரும் இல்லை மேலும் இவர்கள் மீது மற்ற ஜாதியினருக்கும் பொறாமை.இதை பயன்படுத்தி முழு முனைப்பாக, தி க வை, பா.எ க வாக மாற்றி இவர்கள் வணங்கும் ராமர்,கிருஷ்ணர் ஆகிய கடவுள்களை திட்டுவதை கொள்கையாக மாற்றிக்கொண்டார்.
வியாபாரமும் நன்கு சூடு பிடித்தது.
இந்த டெக்னிக்கை மு க வும் செவ்வனே பயன்படுத்தி நாட்டை ஆட்டை போட்டு வருகிறார்
இந்நிலையில் பார்பனர்களே மனம் வெதும்பி கைபர் கணவாய் நோக்கி சென்றால் ,அங்கு அவர்களுக்கு முன் சென்று,அவர்கள் வெளியேறுவதை தடுக்கும் கோஷ்டி அருள்,மு.க மற்றும் தி.க ஆகத்தான் இருக்கும்.அப்புறம் வியாபாரம் எப்படி செய்வதாம் ?

Anonymous said...

ஒரு suggestion வால்பையன்!
யாரெல்லாம் ஜாதி வேண்டும் என்கிறார்களோ அவர்களுக்கு இரண்டு stickers தருவோம்.முதலாவது says
"ஜாதி இங்கு தொடங்குகிறது"
இதை அவர்கள் வீட்டு வாசல் கதவின் வெளிப்புறம் ஒட்டிக்கொள்ளட்டும்.
இரண்டாவது sticker says
"ஜாதி இங்கு முடிகிறது"
இதை அவர்கள் வீட்டு வாசல் கதவின் உட்புறம் ஒட்டிக்கொள்ளட்டும்.

seeprabagaran said...

திரு.அருள் அவர்களுக்கு, வணக்கம். உங்களோடு வாதம் செய்பவர்களுக்கு பதில் சொல்லுங்கள். விதண்டாவதம் செய்பவர்களுக்கு தாங்கள் பதிலளிக்கத்தேவையில்லை என்று கருதுகிறேன்.

M Arunachalam said...

'முற்போக்கு' அப்பிடின்னா என்ன சார்? "வயித்து போக்கு" மாதிரியா?

சில கமெண்டுகள படிச்சவுடனே இப்போ கொஞ்சம் புரியராபோல இருக்கு.

வயித்துபோக்கு என்பது கண்ட, கண்டதையும் தின்னு அதனால வயிறு பேஜாராகி, அஜீரனத்தினால் மலமாக வெளியேறுவது - இது தெரிந்த விஷயம்.

அதுபோலவே, 'முற்போக்கு' என்பதும் கண்ட, கண்டதையும் மனசுல போட்டு குழப்பி, அதனால மூளை பேஜாராகி, மூளை ஜுரத்தினால் கமெண்டாக வெளியேறுவது - இது இப்போது புலப்படுவது போல இருக்குது.

டோண்டு ப்ளாக் படிச்சா, இதுபோல பொது அறிவு பெருகும் போல!

அருள் said...

jaisankar jaganathan said...

// ///தன் ஜாதி எந்த பாவமும் செய்யாதது. எதிர் ஜாதி இருக்கே அதுதான் எல்லா தப்பும் பண்ணினது. இது தான் இத்தனை பின்னூட்டத்தின் கருத்தும்./// //

ரொம்ப சரியாக சொன்னீர்கள்.

வன்னியர்கள் என்றதும் எல்லோரும் பாய்ந்து பிடுங்குவதன் காரணம் இதுதான்.

Anonymous said...

// ///ஒரு suggestion வால்பையன்!
யாரெல்லாம் ஜாதி வேண்டும் என்கிறார்களோ அவர்களுக்கு இரண்டு stickers தருவோம்.முதலாவது says
"ஜாதி இங்கு தொடங்குகிறது"
இதை அவர்கள் வீட்டு வாசல் கதவின் வெளிப்புறம் ஒட்டிக்கொள்ளட்டும்.
இரண்டாவது sticker says
"ஜாதி இங்கு முடிகிறது"
இதை அவர்கள் வீட்டு வாசல் கதவின் உட்புறம் ஒட்டிக்கொள்ளட்டும்/// //

அடடா, ஜாதியை ஒழிக்க என்ன ஒரு அற்புதமான ஐடியா! அப்படியே 'நோபல்' பரிசு கமிட்டிக்கு அனுப்புங்க. அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும்.

Anonymous said...

// ///பின்னி பெடல் எடுக்கும் வால்பையன், NO விற்கு ஒரு சபாஷ்!
அருளுக்கு இன்று நாள் சரியில்லை.// ///

என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன். மற்றவர்கள் அதற்கு மாற்பட்டால் அதனால் என்னுடைய நேரத்துக்கு என்ன கேடு வந்துவிட போகிறது.

தலித்துகள் வன்னியர்கள் மீது கோபப்படுவதில் ஒரு நியாயமிருக்கிறது. ஆனால், வன்னியர்களால் எந்த பாதிப்பிற்கும் ஆளாகாத 'மற்றவர்கள்' வன்னியர்கள் மீது பாய்ந்து விழுவதின் மர்மம் என்ன? இதைப்பற்றி வன்னியர்கள் யோசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த பதிவை படிக்கும் ஒருசில வன்னியர்கள் யோசிப்பார்கள் என நம்புகிறேன்.

மற்றபடி, பதிவுலகில் ஏராளமானோர் வன்னியர்களுக்கு எதிராகவே எழுதுவதால் அதுவே நியாயமாகிவிடாது. பதிவுலகில் வன்னியர்கள் மிகக்குறைவு, எனவே வன்னியர்களுக்கு ஆதரவும் குறைவு.

வால்பையன் said...

//இந்த பதிவை படிக்கும் ஒருசில வன்னியர்கள் யோசிப்பார்கள் என நம்புகிறேன்.//


இந்த பதிவை படிக்கும் மனிதர்களுக்கும் தெரியும் சாதிவெறி எதுவரை கொண்டு செல்லும் என்பதும்!


//பதிவுலகில் ஏராளமானோர் வன்னியர்களுக்கு எதிராகவே எழுதுவதால் அதுவே நியாயமாகிவிடாது. பதிவுலகில் வன்னியர்கள் மிகக்குறைவு, எனவே வன்னியர்களுக்கு ஆதரவும் குறைவு.//


தலைவரு இங்கேயும் இடஒதுக்கீடு கேக்குறாரப்பா!

வன்னியர் பற்றி ஏராளமானோர் எதிரா எழுதுறாங்களாம்ல, வினவு எழுதிய பதிவின் தொடர்ச்சியாக தான் இப்போ ஆரம்பிச்சிருக்கு, இவர் எதை சொல்றாருன்னே தெரியலையே!


நல்லா பாருங்க, இங்கே விவாதம் எனக்கும், உங்களுக்கும் தான், மற்றவர்கள் பொதுவான கருத்தையே சொல்லி வருகிறார்கள்!

கிருஷ்ண மூர்த்தி S said...

கிராமப் பக்கங்களில் "அருள்" வருவதை சாமி ஆவேசம் வந்து விட்ட மாதிரிச் சொல்வது மாதிரி, இங்கே அருள் தன்னுடைய சாதிப் பாசம் வந்து ஆடியதும், வால்பையன், நின்று நிதானமாக அதை அடித்து விளையாடிய பின்னூட்டங்களைப் பார்த்த பிறகு, ஒரு பட்டி மன்றத்தைப் படித்த மாதிரி இருந்தது!

ஜெய்சங்கர் ஜெகநாதனுக்கு ஒரு கேள்வி!

நானும் டோண்டு சாரின் சில பதிவுகளில் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் வருகிறேன்!

எப்படிப் பதிவின் உள்ளடக்கத்துக்குச் சம்பந்தமே இல்லாத பின்னூட்டங்களாக எழுதிக்கொண்டே இருக்க முடிகிறது? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீர்களா?

அப்புறம் ஐயா அருள்! நான் ஒதுக்கீடு, சலுகைகளில் முன்னுக்கு வந்த நிறையப் பேரைப் பார்த்துவிட்டு வந்த அனுபவத்தில் சொல்கிறேன்! முன்னுக்கு வந்த இவர்களால், இவர்களுடைய சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் நெருங்கிய உறவினர்களுக்குக் கூட எந்த விதமான சிறிய உதவி, ஒத்தாசை, வழிகாட்டுதல் கிடையாது!

ஊழல், தப்புச் செய்து மாட்டிக் கொள்கிற போது மட்டும் ஜாதியைப் பயன்படுத்திக் கொள்வது நடக்கும்!

NO said...

முற்போக்கு நான் என்று எப்படி முகமூடி அணிந்து கொண்டு உலாவரவேண்டும், சமயம் வரும்பொழுது தன ஜாதி வெறி சுய ரூபம் என்ன என்பதை எப்படி ஒரு பித்தலாட்ட "விவாத நிலை நிறுத்தலின்" மூலம் எடுத்து வைக்க வேண்டும் என்பதற்கு திரு அருள் ஒரு சிறந்த அத்தாட்சி! வாழுத்துகள். நன்றாக எழுதுங்கள்! மேலும் உங்கள் சாயம் வெளுக்கட்டும்!

பெரியார் மந்திரம் ஜெபிக்கும் முற்போக்கு அறிவுச்சுடர்கள் மற்றும் பெரியார்ன் பெயரைச்சொல்லி கச்சேரி நடத்துபவர்கள் என்று பார்த்தால் எல்லோரும் "ஆண்ட" பரம்பரைகள்தான்!!!! "ஆளுமை" குறைவாக இருப்பதாக தோன்றும் பொழுது நாங்கள் கீழ்நிலையில் உள்ளோம் என்ற கச்சேரி ஆனால் உண்மையாக கீழ்நிலையில் இருப்பவர்கள் அதை சொன்னால், நாங்களும் நீயும் ஒன்றா என்ற புதிய கச்சேரி! இதில் இரண்டாவது கச்சேரி, தனி கச்சேரி! வெளியே வரக்கூடாத தனியார் கச்சேரி! முதல் கச்சேரி, தங்களின் சொந்தங்களே, நெருங்கியவர்களே, சுற்றத்தாரே , செய்த, செய்து கொண்டிருக்கும் ஜாதிய கூத்துக்கு
எதிர்ப்பு தெரிவிக்காத, தெரிவிக்க முடியாத, விரும்பாத, ஆன்மாக்கள், தங்களின் இயலாமையை மூடி மறைக்க, சத்தத்தை வெளியே விடாமல் மறைக்க நடத்தும் சங்கீத சாகசம்! மேலும் இதற்க்கு வாத்திய இணைப்பாக, அறையும் குறையுமாக படித்தது, நான் முற்போக்கு என்று சொல்லாவிட்டால் அது தவறு என்ற நிலையை எடுத்து, வஞ்சிக்க பட்டு விட்டேன் என்று புது ராகத்தை ஒன்றை அவிழ்த்துவிட்டு, நானும் தாழ்ந்தவந்தான், பாருங்கள் என்ற அப்பட்டமான பொய் நாதத்தை சத்தம்கொண்டு இசைக்கும் நாவீன பெரியாரிய கச்சேரி! இதை எல்லாம் சேர்த்துதான் நம் புரட்சி பாசாங்குக்காரர்களின் பகுத்தறிவு கச்சேரி!!

இதுல இப்பொழுது புதிய வித்வான் திரு அருள்!

நன்றி

NO said...

அன்பான நண்பர் திரு அருணாசலம்,

உங்கள் புரிதலுக்கு மேலும் வலு சேர்க்கிறேன்!

"முற்போக்காளர் என்பவர் வாயால் வாந்தி எடுப்பவர், பிற்போக்காளர் என்பவர் பின்னாலிருந்து மலம் கழிப்பவர்" (எல்லோரும் அதேதானே, இதில் என்ன விசேடம் என்று கேட்பவர்களுக்கு நாங்கள் சொல்லுவது - டேய் இந்து மத சொம்பு தூக்கி, மதவெறி ஆர் எஸ் எஸ் பாசிஸ்டு, வாயை மூடு" என்பது மட்டுமே!!)

இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்!

"பகுத்தறிவு எனப்படுவது யாதெனின் இந்து மதத்தை மட்டும் கண்டபடி திட்டல்"

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளில் அவர் ஜாதியை கண்டுபிடித்து திட்டுவது பகுத்தறிவு"

நன்றி

Anonymous said...

//வன்னியர்கள் என்றதும் எல்லோரும் பாய்ந்து பிடுங்குவதன் காரணம் இதுதான்.//

வன்னியன் மற்றவர்களை, குறிப்பாக தாழ்த்தப்படவர்களின் மீது - அவர்களின் இட ஒதுக்கீட்டின் மீது காழ்ப்பு கொண்டு, அதை வெளியே சொல்லவும் முடியாமல், உள்ளேயே வைத்துகொண்டு மறுகவும் முடியாமல் - வன்கொடுமை புரிவதன் காரணமும் இதேதான்.

Anonymous said...

//
எல்லாம் ஒரு சப்பைக்கட்டுதான். தன் ஜாதி எந்த பாவமும் செய்யாதது. எதிர் ஜாதி இருக்கே அதுதான் எல்லா தப்பும் பண்ணினது. இது தான் இத்தனை பின்னூட்டத்தின் கருத்தும். என்ன எழவு இது
//

நீங்க எந்த சைடு கோல் போடுறீங்கன்னே தெரியல்ல...

அந்த "என்ன எழவு இது ங்குறது" கேள்வியா இல்ல பதிலா ?

இப்புடியே அடுத்த ஜாதி மேல் குற்றம் சொல்லிவிட்டுப் போனால் ஊர்ல எந்த ஜாதியும் உத்தம ஜாதின்னு மிஞ்சாது சாமியோவ்.

தன் செயலுக்கு தானே பொறுப்பு என்று ஏற்கத் தெரியாத எந்த மனிதனும் அறிவு முதிர்ச்சி இல்லாதவன் என்று அழைக்கப்படுவான்.

அதுவே ஜாதிகளுக்கும், சமூகங்களுக்கும் பொருந்தும்.

ஒரு சமூகத்தில் ஒரு ஜாதியை கீழாக நடத்திவிட்டு அதற்குக் காரணம் பார்ப்பானன், தங்கள் ஜாதியல்ல என்று பழியை அடுத்தவன் மேல் போடுவது என்பது மூளை வளர்ச்சியில்லாதவர்கள் செயல்பாடு. அப்படிச் செய்பவர்களைத் தங்கள் ஜாதித் தலைவர்களாக ஏற்கும் ஜாதியினர் மோசமான ஜாதிவெறியர்கள். அருள் என்பவர் செய்வது அதுவே.

இங்கு வன்னியர் ஜாதியை யாருமே திட்டவில்லை. அருள் என்ற மனிதரின் மன/மூளை வளர்ச்சியைத் தான் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.

அருள் said...

வால்பையன் said...

// //ஏன் வன்னியர்கள் வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்க்கிறார்கள் என்று என்றாவது யோசித்தததுண்டா!?// //

யோசித்தது உண்டு.

வன்னியர்கள் வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்வது இயல்பானது அல்ல. (உண்மையில், வறுமை என்பதே இயல்பானது அல்ல - ஒருவர் மற்றவரை சுரண்டுவதும், வாய்ப்புகளை மறுப்பதும்தான் வறுமைக்கு காரணம். கூடவே, வறுமை ஒரு மனித உரிமை மீறல்). வன்னியர்களின் வறுமை நிலை என்பது தற்செயலானதோ, அவர்களின் இயலாமையாலோ ஏற்பட்டது அல்ல. மாறாக, கடந்தகாலங்களில் அதிகாரமிக்க இடங்களில் இருந்து வன்னியர்கள் ஓரங்கட்டப்பட்டதே இன்றைய அவல நிலைக்கு முக்கிய காரணம்.

உங்களுக்கு பழையகதை பிடிக்கது - என்றாலும் கொஞ்சம் சொல்லித்தான் ஆகவேண்டும்.

1. சோழ மன்னர்கள் ஆட்சிகாலத்தின் முடிவில் தொடங்கி சுமார் 400 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் 'வலங்கை - இடங்கை' சாதி மோதல்கள் நடந்தன. அந்த மோதலில் எல்லா சாதிகளாலும் வன்னியர்கள் ஒதுக்கப்பட்டனர்.

2. 1820 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் நிலத்துக்கு பட்டா கொடுக்கத்தொடங்கியபோது, வன்னியர்களின் நிலத்தை - சர்க்காருக்கு நெருக்கமாக இருந்த பார்ப்பனர்களும், வேளாளர்களும் அபகரித்துக்கொண்டனர். (விரிவாக அறிய காண்க: http://arulgreen.blogspot.com/2010/04/blog-post_30.html

3. 1871 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் 'சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு' நடத்தினர். அதில் வன்னியர்களில் சிலரை 'பள்ளி' என்றபெயரில் தவறாக 'தீண்டத்த்காதவர்கள்' பட்டியலில் சேர்த்தனர். அக்காலத்தில் தீண்டத்தகாதவர்கள் பட்டியலில் இருப்பது அச்சாதியை மேலும் ஒடுக்கவே செய்யும் என்பதால் வன்னியர்கள் எதிப்பு தெரிவித்தனர். இதனை மாற்றுவதற்காகத்தான் 'நாங்கள் சத்திரியர்கள்' என்ற முழக்கத்தை கையில் எடுத்தனர்.

அதாவது, அன்றைய சூழலில் சாதி பெருமை பெசுவது என்பதே ஒரு போராட்டத்தேவையாக இருந்தது. இதற்காக 1888 இல் வன்னியகுல சத்திரிய மகாசங்கம் தொடங்கப்பட்டது. மிக நீண்ட போராட்டத்தின் விளைவாக 1931 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், பள்ளி என்பது கைவிடப்பட்டு "வன்னியகுல சத்திரியா" என்று சேர்க்கப்பட்டது. இன்றும் இடஒதுக்கீட்டு சாதிப்பட்டியலில் இநதப்பெயர்தான் இருக்கிறது.

4. சுதந்திர இந்தியாவில் வன்னியர்கள் 1. சாதிவாரி இடஒதுக்கீடு, 2. தேர்தலில் உரிய இடம் - கேட்டனர். கிடைக்காததால் தனித்து தேர்தலை சந்தித்து 1952 சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் போட்டியிட்டு 25 இல் வென்றனர். ஆனால், வெற்றிபெற்றவர்கள் அமைச்சர் பதவிக்காக காங்கிரசில் இணந்தனர்.

5. 1987 இல் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் 107 சாதிகளுக்கு MBC என 20 % இடஒதுக்கீடு கிடைத்தது. அதனால் விளைந்த நன்மையும் அதிகம் இல்லை.

இப்படி, காலம்காலமாக வன்னியர்களுக்கு கிடைத்த நன்மை எதுவும் இல்லை.

கடந்த 60 ஆண்டுகளில்

1. அரசு வேலைகளில் வன்னியர்களுக்கு கிடைத்த பங்கு என்ன?

2. அதிகாரமிக்க பதவிகளில் வன்னியர்களுக்கு கிடைத்த பங்கு என்ன?

3. கடந்த 60 ஆண்டுகளில் அமைச்சரவைகளில் பங்கேற்றவர்களில் வன்னியர்கள் எத்தனை பேர்?

4. நீதிபதிகளில் வன்னியரகள் எத்தனை பேர்?

5. வங்கிகளில் முக்கிய பதவிகளில் இருந்தது யார்? வங்கிகளில் வன்னியர்களுக்கு கிடைத்த கடன் எவ்வளவு?

6. அரசின் ஒப்பந்தப்பணிகளில் வன்னியர்களுக்கு கிடைத்த பங்கு என்ன?

7. தொழில்தொடங்க வன்னியர்களுக்கு எந்த அளவு வாய்ப்பு அளிக்கப்பட்டது?

8. நில உடைமையில் வன்னியரின் அளவு என்ன?

9. 1920 தொடங்கி கடந்த 90 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி வகித்தோர் 20 பேர். அதில் ஒருவர் கூட வன்னியர் இல்லை.

இப்படி எல்லா வளங்களிலும், வாய்ப்புகளிலும், இடங்களிலும் வன்னியர்கள் மக்கள்தொகைக்கு ஏற்ப இடம் பெறவில்லை. வன்னியர்கள் அதிகாரத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

ஏன் வன்னியர்கள் வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்க்கிறார்கள் என்றால், அதற்கு இதுதான் காரணம்.

தினவு said...

//இங்கு வன்னியர் ஜாதியை யாருமே திட்டவில்லை. அருள் என்ற மனிதரின் மன/மூளை வளர்ச்சியைத் தான் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.//

கடவுள் 'அருள்' வந்து ஆடுவதற்கு விஞ்ஞானபூர்வமாக விளக்குபவர்கள் அதற்கு MPD (Multiple Personality Disorder) அதாவது வேறொரு ஆளாக தன்னைத்தானே பாவித்துக்கொண்டு பழகும் வியாதி என்று கூறுவார்கள்.

அது போலவே, டோண்டு 'அருள்' வந்து இப்போது ஆடிக்கொண்டிருப்பவரும் MPD யினாலே அவதியுறுகிராரோ என்று எண்ண தோன்றுகிறது. ஏனெனில், சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, எல்லாத்துக்கும் பார்ப்பனரே காரணம் என்று வீராவேச கமெண்ட் போடும் ஆசாமி, தன்னுடைய சாதி மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த கொடுமை பட்டவர்தனமாக வெளிப்படும்போது, அதனை செய்த தன்சாதியினரை குற்றம் சாட்டாமல், ஏதோ ரோட்டில் போகும்போது ஒன்னுக்கு போனவனை இனிமே இப்படி போகாதப்பா என்று சொல்லுவதுபோல், செல்லமாக தட்டிவிட்டு, விலாங்கு மீனை போல் நழுவுவதை பார்த்தால், இது நிச்சயம் MPD கேஸ்தான் என்று சொல்ல தோன்றுகிறது.

வால்பையன் said...

//உண்மையில், வறுமை என்பதே இயல்பானது அல்ல - ஒருவர் மற்றவரை சுரண்டுவதும், //


அந்த ஒருவர் வேறயாருமில்ல, உங்க கட்சி தலைவர்கள் தான்!


சுரண்டபட்ட ஆதாரங்கள், புள்ளிவிபரங்கள் நீங்கள் பா.ம.க விற்க்கு லாயக்கில்லை என காட்டுகிறது!, பேசாம கேப்டன் கட்சியில் சேருங்க!,


பார்பனர்களும், வேளாளர்களும் வன்னியர்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்தது உண்மையென்றால், அந்த மூன்று சாதி தவிர மற்றவர்களெல்லாம் கடுக்காய் தான் கொடுத்திருப்பாங்க, ஏன்னா உங்க மெஜாரட்டி அப்படி!

உங்க இடஒத்துக்கீட்டு வேண்டுகோள் தப்பில்ல, ஆனா சாதிவெறி தான் தப்பு, உங்க பக்கம் நியாயம் சொல்ற மாதிரி, மேலிருக்கும் புண்களை ஆறவைக்கும் முயற்சியும் எடுங்க!

உலகிலேயே வன்னியர் சாதி தான் பல கொடுமைக்கு ஆளான மாதிரி சீன் போடுறதால இங்க யாரும் உச்சு கொட்ட போறதில்ல, நீங்க போடுற ஆட்டமும் நாடு பார்த்துகிட்டு தான் இருக்கு!

Unknown said...

/ஜெய்சங்கர் ஜெகநாதனுக்கு ஒரு கேள்வி!

நானும் டோண்டு சாரின் சில பதிவுகளில் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் வருகிறேன்!

எப்படிப் பதிவின் உள்ளடக்கத்துக்குச் சம்பந்தமே இல்லாத பின்னூட்டங்களாக எழுதிக்கொண்டே இருக்க முடிகிறது? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீர்களா?
//

நீங்க எத்தனை பின்னூட்டம் பதிவுக்கு சம்பந்தமாக இட்டுள்ளீர்கள். தல இதெல்லாம் ஒரு தமாஷ். இதில் எழுதுவதால் பொழுது போகுது. அவ்வளவுதான்

ConverZ stupidity said...

//யாரால் வஞ்சிக்கப்பட்டிங்களோ அவுங்களோட சண்டை போடனும், தலித் மக்கள் என்ன பண்ணாங்க உங்களை!?

இல்ல வால்ஸ்'s, தண்ணீர்ல தொலைச்சிட்டு, தரைல தேடுற 'புத்திசாலிங்க' இவுங்க.

பொன்னகரதுல இனமா பணமா-ன்னு பிரச்சாரம் செஞ்சாங்க. இப்போ ராஜ்யசபை சீட்டுக்காக மு.க-வ சம்பந்தமே இல்லாம ஜால்ரா அடிக்கிறாங்க. இவுங்க வன்னியர்கள முன்னேத்தபோராங்கலாம்.

Unknown said...

//எப்படிப் பதிவின் உள்ளடக்கத்துக்குச் சம்பந்தமே இல்லாத பின்னூட்டங்களாக எழுதிக்கொண்டே இருக்க முடிகிறது? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீர்களா?
/
இது பின்னூட்டத்துக்கு பின்னூட்டம். புரியுதா. கிச்சா

அருள் said...

Anonymous said...

//அருள் என்ற மனிதரின் மன/மூளை வளர்ச்சியைத் தான் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.//

தினவு said...

//இது நிச்சயம் MPD கேஸ்தான்//

ரொம்ப நன்றி.

வன்னியருக்காக பேசினால் ஏன் எரிகிறது?

ஓ.கே. ஆளாளுக்கு அவங்க அவங்க சாதிவெறிய காட்டுங்க.

Sreenivasan said...

நான் வட ஆற்காடு மாவட்டத்துல படிப்பு, உத்தியோக ரீதியா சில காலம் வசித்தேன். அப்பொழுது பஞ்சமர் வன்னியர்களால் வேலை இடங்களில் ஒடுக்கப்படும்(பணம், அதிகாரம்) ஈனச்செயலை நேரடியாக பார்த்திருக்கிறேன்.

Unknown said...

//நான் வட ஆற்காடு மாவட்டத்துல படிப்பு, உத்தியோக ரீதியா சில காலம் வசித்தேன். அப்பொழுது பஞ்சமர் வன்னியர்களால் வேலை இடங்களில் ஒடுக்கப்படும்(பணம், அதிகாரம்) ஈனச்செயலை நேரடியாக பார்த்திருக்கிறேன்.

//

நான் திருச்சி மாவட்டத்துல படிப்பு, உத்தியோக ரீதியா சில காலம் வசித்தேன். அப்பொழுது பஞ்சமர் ஐயங்கார்களால் வேலை இடங்களில் ஒடுக்கப்படும்(பணம், அதிகாரம்) ஈனச்செயலை நேரடியாக பார்த்திருக்கிறேன்.

இது எப்படி இருக்கு

பணக்காரன் said...

//
உண்மையில், வறுமை என்பதே இயல்பானது அல்ல - ஒருவர் மற்றவரை சுரண்டுவதும், வாய்ப்புகளை மறுப்பதும்தான் வறுமைக்கு காரணம். கூடவே, வறுமை ஒரு மனித உரிமை மீறல்
//

நீங்கள் ஏழையாக இருக்கக் காரணம், நான் பணக்காரனாக இருப்பதனால் தான் என்கிறீர்களா ?

அருள் said...

//நான் வட ஆற்காடு மாவட்டத்துல படிப்பு, உத்தியோக ரீதியா சில காலம் வசித்தேன். அப்பொழுது பஞ்சமர் வன்னியர்களால் வேலை இடங்களில் ஒடுக்கப்படும்(பணம், அதிகாரம்) ஈனச்செயலை நேரடியாக பார்த்திருக்கிறேன்.

//

//நான் திருச்சி மாவட்டத்துல படிப்பு, உத்தியோக ரீதியா சில காலம் வசித்தேன். அப்பொழுது பஞ்சமர் ஐயங்கார்களால் வேலை இடங்களில் ஒடுக்கப்படும்(பணம், அதிகாரம்) ஈனச்செயலை நேரடியாக பார்த்திருக்கிறேன்.//

நான் சென்னை மாவட்டத்துல படிப்பு, உத்தியோக ரீதியா சில காலம் வசித்தேன். அப்பொழுது பஞ்சமர் அய்யர்களால் வேலை இடங்களில் ஒடுக்கப்படும்(பணம், அதிகாரம்) ஈனச்செயலை நேரடியாக பார்த்திருக்கிறேன்.

இது எப்படி இருக்கு

Anonymous said...

//
நான் திருச்சி மாவட்டத்துல படிப்பு, உத்தியோக ரீதியா சில காலம் வசித்தேன். அப்பொழுது பஞ்சமர் ஐயங்கார்களால் வேலை இடங்களில் ஒடுக்கப்படும்(பணம், அதிகாரம்) ஈனச்செயலை நேரடியாக பார்த்திருக்கிறேன்.

இது எப்படி இருக்கு
//

இது தான் உங்கள் பொழுது போக்கின் லட்சணமா ?

நீங்க அருள் ver. 2.0 போலிருக்கிறதே ?

அருள் said...

converse said...

// ///பொன்னகரதுல இனமா பணமா-ன்னு பிரச்சாரம் செஞ்சாங்க. இப்போ ராஜ்யசபை சீட்டுக்காக மு.க-வ சம்பந்தமே இல்லாம ஜால்ரா அடிக்கிறாங்க.// ///

சரிதான் சார்.

இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை ?

Anonymous said...

//
ரொம்ப நன்றி.

வன்னியருக்காக பேசினால் ஏன் எரிகிறது?

ஓ.கே. ஆளாளுக்கு அவங்க அவங்க சாதிவெறிய காட்டுங்க.
//

ஹலோ அருள் படையாச்சி,

டோண்டு ராகவன் ஐயங்கார்களுக்காக வக்காலத்து எல்லாம் வாங்கவில்லை. தான் ஒரு ஐயங்கார், அதுக்கென்ன இப்ப ? என்று கேட்டதுக்கே அவருக்கு ஜாதி வெறியன் னு முத்திரை குத்தின முன்னாடி ஓப்பனாகி போய்க்கொண்டிருப்பவர்கள் உங்களை என்ன வென்று சொல்கிறார்கள் என்று பார்த்துக்கொள்ளவும்.

டோண்டுவை விட அதிக ஜாதிவெறி உங்களிடம் உள்ளது.

Unknown said...

//இது தான் உங்கள் பொழுது போக்கின் லட்சணமா ?

நீங்க அருள் ver. 2.0 போலிருக்கிறதே ? //

எல்லோரும் ஒருத்தர மொத்துரது சரியா. டொண்டு எழுதாத அருள் எழுதிட்டாரா. எல்லாம் தன்னைப் பொறுத்தவரை ஒரு நியாயம் . அடுத்தவருக்கு ஒன்று

அருள் said...

// //உலகிலேயே வன்னியர் சாதி தான் பல கொடுமைக்கு ஆளான மாதிரி சீன் போடுறதால இங்க யாரும் உச்சு கொட்ட போறதில்ல// //

ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படும் - ஒரு சாதி வன்னியர் சாதி என்றுதான் சொன்னேன்.

"உலகிலேயே" வன்னியர் சாதி தான் பல கொடுமைக்கு ஆளானதா சொல்லையே.

அப்புறம் - 'யாரும் உச்சு கொட்டனும்'னு வன்னியர்கள் எதிர்ப்பாக்கலை.

அருள் said...

பணக்காரன் said...

// //நீங்கள் ஏழையாக இருக்கக் காரணம், நான் பணக்காரனாக இருப்பதனால் தான் என்கிறீர்களா?// //

என் நண்பர் ஒருத்தர் பேரு கோடீஸ்வரன். அதுகூட காரணம்னு நான் சொல்லமாட்டேன்.

தினவு said...

//ஓ.கே. ஆளாளுக்கு அவங்க அவங்க சாதிவெறிய காட்டுங்க.//

உங்களை MPD கேஸ் னு சொன்னதினாலே, நான் "Dr." ஜாதின்னு குற்றம் சாட்டறீங்களா?

ச்சே, என்ன உலகமடா இது. மருத்துவர் ஜாதின்னு சொன்னாலே, ஜாதி வெறியன்னு சொல்றாங்களே.

Rajan said...

//அப்புறம் - 'யாரும் உச்சு கொட்டனும்'னு வன்னியர்கள் எதிர்ப்பாக்கலை.//


ஒரு கெடா மாட்டிகிச்சு போல !

Rajan said...

//ச்சே, என்ன உலகமடா இது. மருத்துவர் ஜாதின்னு சொன்னாலே, ஜாதி வெறியன்னு சொல்றாங்களே.//


நீங்க வேணா ஒரு ச்சேஞ்சுக்கு மயிராண்டி ஜாதின்னு சொல்லிப் பாருங்களேன்!

M Arunachalam said...

//எல்லோரும் ஒருத்தர மொத்துரது சரியா.//

சரிதான் - அந்த ஒருத்தன் ரெட்டை நாக்கு காரனாக இருக்கும்போது. மற்றவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த குற்றத்தையும், பார்ப்பனர்கள்தான் செய்தார்கள் என்று வேண்டுமென்றே பார்ப்பன வெறுப்பை உமிழ்ந்தவனுக்கு, தன் ஜாதிக்காரன் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த வன்கொடுமையை அதே தீவிரத்துடன் கண்டிக்க துப்பில்லாமல் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு இருக்கும்போது, இப்படி தர்மஅடி விழத்தான் செய்யும். ரொம்ப கஷ்டமா இருந்தா, நீயும் ரெண்டு அடி வாங்கி கொண்டு போய், "அந்த ஒருத்தனுக்கு' உன் விஸ்வாசத்தை காட்டு.

//டொண்டு எழுதாத அருள் எழுதிட்டாரா. எல்லாம் தன்னைப் பொறுத்தவரை ஒரு நியாயம் . அடுத்தவருக்கு ஒன்று//

உன் உளறலுக்கு எல்லையே கிடையாதா?

அருள் said...

Anonymous said...

// //நீங்க அருள் வெர். 2.0 போலிருக்கிறதே ?// //

நான் ஒரு மாதத்துக்கு முன்புதான் பதிவுலக எட்டிப்பார்த்தேன்.

அதுக்குள்ள 'வினவு'ல ஒருத்தர் - எப்பவோ எழுதின 'குழலி' என்பவர்தான் அருள் என்றார்.

இப்போ இங்க இன்னொருத்தர் ஜெய்சங்கர் ஜகனாதனை அருள் வெர். 2.0 என்கிறார்.

நல்லா இருக்குது ஞாயம். மற்றவர்கள் இப்படிதான் பேசவேண்டும் என்று நீங்களே முடிவு செய்தா எப்படி?

Rajan said...

//ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படும் - ஒரு சாதி வன்னியர் சாதி என்றுதான் சொன்னேன்.
//


அடங்கப்பா! சாமி .... இவருக்கு என்ன வேணும்னு ஆராச்சும் கேட்டு சொல்லுங்கப்பா

Rajan said...

//பொன்னகரதுல இனமா பணமா-ன்னு பிரச்சாரம் செஞ்சாங்க. இப்போ ராஜ்யசபை சீட்டுக்காக மு.க-வ சம்பந்தமே இல்லாம ஜால்ரா அடிக்கிறாங்க. இவுங்க வன்னியர்கள முன்னேத்தபோராங்கலாம்.//

அவுனுகள மாதிரி ஒரு மானங்கெட்ட லெட்டர் பேடு கட்ச்சிய பாக்க முடியாது! சோமாரிக்கி சொம்பு தூக்கவும்,கேப்மாரிக்கு கேரியர் தூக்கவுமே ஆவார்கள்

Rajan said...

//ஹலோ அருள் படையாச்சி,//


என்னா ஆச்சி!

அருள் said...

M Arunachalam said...

// //ஒருத்தன் ரெட்டை நாக்கு காரனாக இருக்கும்போது.// //

அய்யா, ரெண்டு நாக்கும் இல்லை. மூன்று நாக்கும் இல்லை.

கொளத்தூரில் வன்னையர்கள் இழைத்தது பெரிய குற்றம் என்று நானும் திரும்ப திரும்ப சொல்லிட்டேன். நான் வேற என்ன செய்யனும். கொளத்தூருக்கு போய் வன்னியர்களை அடிக்கனுமா?

ஆனால், இதஒரு சாக்காவச்சு எல்லாரும் ஒட்டுமொத்தமா வன்னியர்கள்மீது பாய்ந்துபிடுங்குவதையும் ஆதரிப்பதுதான் - சப்பைகட்டு கட்டாமல் இருக்கும் வழியா?

இதுல "இப்படி தர்மஅடி விழத்தான் செய்யும்"னு டயலாக் வேற. சும்மா சொறிஞ்சு விடுறதுக்கு பேரு தர்ம அடியா?

NO said...

//1. சோழ மன்னர்கள் ஆட்சிகாலத்தின் முடிவில் தொடங்கி சுமார் 400 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் 'வலங்கை - இடங்கை' சாதி மோதல்கள் நடந்தன. அந்த மோதலில் எல்லா சாதிகளாலும் வன்னியர்கள் ஒதுக்கப்பட்டனர்.// எப்படி சொல்லுறீங்க? சொல்லுவது அப்பட்டமான வரலாற்று திரிப்பு! அப்படி ஆகி இருந்தால் ஏன் நீங்கள் மஜோரிட்டி ஆக இருக்கும் ஊரில் தலித்துகளுக்கு தனியே காலனி இருக்கு! வன்னியர்களுக்குதானே இருக்கணும்??

// 2. 1820 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் நிலத்துக்கு பட்டா கொடுக்கத்தொடங்கியபோது, வன்னியர்களின் நிலத்தை - சர்க்காருக்கு நெருக்கமாக இருந்த பார்ப்பனர்களும், வேளாளர்களும் அபகரித்துக்கொண்டனர். (விரிவாக அறிய காண்க: http://arulgreen.blogspot.com/2010/04/blog-post_30.ஹ்த்ம்ல்//)
முதலில் 1820 வரையில் நீங்கள் மிக்க நிலம் உள்ளவர்கள், அதாவது ஆண்டைகள் என்பதை இங்கு மட்டும் அல்ல, பல இடங்களில் சொல்லி விட்டீர்கள்!
அப்படி இருக்கும் பொழுது உங்களின் தாழ்வு (அதுவும் நீங்களே சொல்லிக்கொள்வது) ஒரு வாழ்ந்து ஆண்ட பரம்பரையினர் தற்போதைய நிலைமைதான்! நீங்கள் பார்பனரை திட்டும்பொழுது சொல்லுவதோ, இத்தனை காலம் அனுபவித்தீர்களே, இப்பொழுது மற்றவர் அனுபவிக்கட்டும் என்று! உங்களுக்கு அது பொருந்தாதா???

அதை கூட விடுங்க. நான் சொல்லிக்காட்டியது, உங்களின் பித்தலாட்ட லாஜிக்கைதான்! நீங்கள் சொன்னதே ஒரு வரலாற்று திரிப்புதான்! சும்மா ஒரு லின்க்கை கொடுத்தால் நீங்க சொல்லுவது சரியா?? இது உங்க ஜாதி வெறி தலைவர்கள் உங்களைப்போன்றவர்களுக்காக கண்டு பிடித்த புதிய வரலாறு! அன்னைக்கு அப்படி இருந்தோம் பாரு! நம்மள இப்படி ஆக்கிட்டானுகளே, விடாத என்று உங்களை கும்பல் சேர்ப்பதற்காக சொல்லப்படுவது! கும்பல் கூடியவுடன், அதன் மூலம் வரவுகள் பார்த்தவுடன், நீங்கள் கழுட்டி விடப்படுவீர்கள்!! நீங்களும் கடுப்பாகி இந்த மாதிரி ஒளிந்து கொண்டு கச்சேரி செய்வீர்கள்!

பாய்ண்ட்டு நம்பர் மூன்று முதல் ஒன்பது வரை நீங்க என்ன சொல்ல வரீங்க சார்? முதலில் நிலம் உள்ளவர், சத்திரியர் என்று சொல்லுறீங்க அப்புறம் நாங்கள் ஒடுக்கப்பட்டோம் என்று சொல்லுகிறீர்கள், அப்புறம் சத்திரியர்களாக ஆக்கப்பட்டோம் என்று வேறு சொல்லுகிறீர்கள்!!! அரசியலில் முதலில் ஜெயித்தோம் என்கிறீர்கள் பின்னர் பதவிக்காக விட்டோம் (?) என்கிறீர்கள்!

மொத்ததில, ஒரு முடிவை எடுத்துவிட்டு அதற்க்கு பல அர்த்தமிலா சொற்றொடர்களை ஒன்றபின் ஒன்றாக அடுக்கி வைக்குரீர்கள் !!

நண்பர் திரு அருள், இவ்வளவு ஜாதி பற்று வைத்துக்கொண்டு எதற்கு நீங்கள் பகுத்தறிவு வேடம் போட்டு டான்சு ஆடுறீங்க என்பதுதான் கேள்வி! ஒளிவு மறைவிலாது சொல்லலாமே அதை! அதாவது நான் பெரியாரின் கொள்கைகளை மற்ற ஜாதிகளை திட்டுவதற்கு மட்டுமே கடை பிடிப்பவன், என் சாதியென்று வரும்பொழுது என் பார்வை வேறு மாதிரி செல்லும் என்று!! உங்களை பொறுத்தவரையில் உங்களின் சாதியர்களின் கோபம் மட்டுமே
உண்மை, உங்களுக்கு கீழ உள்ள ஜாதிகளின் கோபம் விதண்டாவாதம், மேலே உள்ளவரின் சாதி சுரண்டல்வாதம் என்று சாதி வெறி உங்களுக்கு பல நாட்களாக ஊட்டப்பட்டுவிட்டது!! இந்த வெறிக்கு மேல் நீங்க பூச நினைக்கும் வண்ணம்தான் பெரியார்!!

இதற்க்கு எல்லாம் மகுடம் வைத்தார்ப்போல, நாங்க பலகாலம் நிலம் வைத்து இருந்த பரம்பரை, சூழ்ச்சியால் இப்பொழுது நிலம் இழந்தோம் என்று கூறி புலம்பிவிட்டு, பெரியார் வராமல் இருந்திருந்தால் நிலைமை மோசமாக இருந்திருக்கும் என்று வேறு கூறி, சம்மந்தமே இல்லாமல் பெரியாரை வேறு நுழைக்கிறீர்கள்!

உள் ஒன்று வைத்துக்கொண்டு மற்றவைகளை திட்ட பகுத்தறிவு வேடம் போடுபவர் வழியில் திரு அருள் ஒரு புதிய காப்பி!!

அருள் said...

ராஜன் said...

// //அவுனுகள மாதிரி ஒரு மானங்கெட்ட லெட்டர் பேடு கட்ச்சிய பாக்க முடியாது.// //

உங்கள யாரு சார் பார்க்க சொன்னது?

கண்ண கெட்டியா மூடிக்கோங்க.

Anonymous said...

//
இதுல "இப்படி தர்மஅடி விழத்தான் செய்யும்"னு டயலாக் வேற. சும்மா சொறிஞ்சு விடுறதுக்கு பேரு தர்ம அடியா?
//

அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளவு அடின்னா, அடி வாங்குனவன் உசுரோட இருப்பான்றெ ?

தினவு said...

//நீங்க வேணா ஒரு ச்சேஞ்சுக்கு மயிராண்டி ஜாதின்னு சொல்லிப் பாருங்களேன்!//

அப்ப ரெண்டும் ஒன்னில்லையா?

அருள் said...

NO said...

// //இவ்வளவு ஜாதி பற்று வைத்துக்கொண்டு எதற்கு நீங்கள் பகுத்தறிவு வேடம் போட்டு டான்சு ஆடுறீங்க என்பதுதான் கேள்வி!!// //

அனைத்து சாதிக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும், வகுப்புவாரி பங்கீடு வேண்டும் - என்பது ஒரு நியாயமான கோரிக்கை என்று நான் நம்புகிறேன்.

அந்தவகையில், வன்னியர்களுக்கும் அவர்களது மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம், பங்கீடு வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

இதில் பகுத்தறிவு வேடம் எங்கே இருக்கிறது?

// //உங்களை பொறுத்தவரையில் உங்களின் சாதியர்களின் கோபம் மட்டுமே
உண்மை, உங்களுக்கு கீழ உள்ள ஜாதிகளின் கோபம் விதண்டாவாதம், மேலே உள்ளவரின் சாதி சுரண்டல்வாதம் என்று சாதி வெறி உங்களுக்கு பல நாட்களாக ஊட்டப்பட்டுவிட்டது!!// //

கீழ உள்ள ஜாதிகளின் கோபம் விதண்டாவாதம் என்று நான் கூறவில்லை. அவர்களது கோபம் நியாயமானதுதான்.

இதில் சாதிவெறி எங்கே வந்தது?

M Arunachalam said...

//வன்னியர்கள் என்றதும் எல்லோரும் பாய்ந்து பிடுங்குவதன் காரணம் இதுதான்.//

//சும்மா சொறிஞ்சு விடுறதுக்கு பேரு தர்ம அடியா?//

சும்மா சொரிஞ்சு விடுறதுக்கு பேரு பாய்ந்து புடுங்கறதா?

வால்பையன் said...

//கீழ உள்ள ஜாதிகளின் கோபம் //


கீழ உள்ள சாதி?

அவரு சொன்னாருன்னா நீங்களும் ஆமான்னு சொல்விங்களா?

எதுக்கு கீழ?
அப்படி சொல்லும் போதே நீர் ஒரு உயர்ந்த சாதியில் பிறந்தவர் என்ற எண்ணம் வெளிவருகிறது இல்லையா!?, இதை உங்கள் சாதிக்காரர்கள் செயலாக காட்டியிருக்கிறார்கள், இதுக்கு தான் இந்த கருமம் பிடிச்ச சாதியை ஒழிங்கன்னு சொல்றது!

உங்க சாதிக்கு இடஒதுக்கீட்டு வேணும் என்பதோடு நிறுத்திகனும், திரும்ப ஒருக்கா கீழ் சாதி, மேல் சாதின்னு வந்ததுன்னா சட்டைய கழட்டி போட்டு கோதாவில் இறங்குவேன்!

Anonymous said...

//
நண்பர் திரு அருள், இவ்வளவு ஜாதி பற்று வைத்துக்கொண்டு எதற்கு நீங்கள் பகுத்தறிவு வேடம் போட்டு டான்சு ஆடுறீங்க என்பதுதான் கேள்வி!
//

இதற்கு மட்டும் பதில் வரவே மாட்டேங்குது.

யோக்கியர் அருள் கௌத்தூரில் நடத்தது தப்புன்னு ஒத்துக்கிட்டாராம். அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாதாம்.

இதுல கேப்புல ஒரு காமடி பீஸ் பிட்டைப் போட்டுட்டு ஓடுது.. ஜெய்சங்கர் ஜெகநாதன்னு ரொம்ப சின்ன பேரா வெச்சிருக்கு அது..

அதைக்கேட்டா இதெல்லாம் டைம் பாஸாம். டைம் பாசுக்காக பார்ப்பானர்களைத் திட்டுறதே சிலருக்கு முழு நேரத் தொழிலாக இருக்கு.

அருள் said...

தினவு said...

// //ச்சே, என்ன உலகமடா இது. மருத்துவர் ஜாதின்னு சொன்னாலே, ஜாதி வெறியன்னு சொல்றாங்களே.// //

மருத்துவரை திட்டுவதால் உங்கள் மனசுக்கு இதமா இருக்குமே!

நாதியத்து கிடந்த ஒரு சமூகத்துக்காக பேச ஒரு ஆள் வந்தா - மத்தவஙகளுக்கு எரியும்தானே?

ஒ.கே, நல்லாதிட்டிக்கோங்க.
கொஞ்சமாவது எரிச்சல் அடங்கட்டும்

Unknown said...

//அந்த ஒருத்தனுக்கு' உன் விஸ்வாசத்தை காட்டு.

//டொண்டு எழுதாத அருள் எழுதிட்டாரா. எல்லாம் தன்னைப் பொறுத்தவரை ஒரு நியாயம் . அடுத்தவருக்கு ஒன்று//

உன் உளறலுக்கு எல்லையே கிடையாதா?//

ஏன் அருணாசலம். விசுவாசத்த யார்யாருக்கோ காட்ட அவங்க வீட்டு நாயா இருக்க உங்களுக்கு கூச்சமில்லாம இருக்கலாம். எனக்கு அப்படி இல்லை

Unknown said...

//இதுல கேப்புல ஒரு காமடி பீஸ் பிட்டைப் போட்டுட்டு ஓடுது.. ஜெய்சங்கர் ஜெகநாதன்னு ரொம்ப சின்ன பேரா வெச்சிருக்கு அது..

அதைக்கேட்டா இதெல்லாம் டைம் பாஸாம். டைம் பாசுக்காக பார்ப்பானர்களைத் திட்டுறதே சிலருக்கு முழு நேரத் தொழிலாக இருக்கு.
//

நீ டெரர் பீஸா இருந்தா ஒரிஜினல் பேருல வா. நீயே ஒரு அனானி பீஸு. இதுல ஒனக்கு காமடி பீசுவேற

Unknown said...

// சட்டைய கழட்டி போட்டு கோதாவில் இறங்குவேன்//
இறங்குங்க . அப்படியே NO வுக்கும் எதிரியாக

வால்பையன் said...

//நாதியத்து கிடந்த ஒரு சமூகத்துக்காக பேச ஒரு ஆள் வந்தா - //


டாக்டருக்கு அரசியல் பண்ண ஒரு கிளை வேணும், அது தான் சாதி, புடிச்சி தொங்கிட்டு இருக்கார்! அவர் என்னமோ மரத்தையே காப்பாத்திற போற மாதிரி நீங்கெல்லாம் பீலா வுடுறிங்க! கொள்கையை தூக்கி குப்பையில போட்டுட்டு திரும்பவும் போயிட்டார்!

பொது குழு கூட்டி ஓட்டு வாங்கி தானே கட்சி மாறுனிங்க, அப்போ ஓட்டு போட்டவனெல்லாம் கேனயனா?, இப்போ ஏன் பொது குழு கூட்டல!

ராமாதாஸ் ஏமாற்றுவர் ஆனால் புத்திசாலி, மாறினால் எதாவது மாற்றம் நிகழும்!

நீங்கள் ஏமாறுபவர் நிச்சயமாக புத்திக்கும் உங்களுக்கும் சம்பந்த இருக்கப்போவதில்லை, உங்கள் சமூகம் உங்களை பார்த்து பரிதாபம் தான் படனும்!

அருள் said...

வால்பையன் said...

// //கீழ உள்ள சாதி?

அவரு சொன்னாருன்னா நீங்களும் ஆமான்னு சொல்விங்களா?// //

வன்னியர்களை விட அதிகம் ஒடுக்கப்பட்டவர்கள், அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், சிலநேரம் வன்னியர்களினாலேயே பாதிக்கப்படுபவர்கள் என்ற பொருளில்தான் கூறினேன். (வன்னியர்களால் பதிக்கப்படுவோர் வேறு யாரும் இல்லை). "தாழ்ந்த" என்ற பொருளில் கூறவில்லை.

உண்மையில், தலித்துகளை 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்றுதான் கூறுகிறோம், தாழ்ந்தவர்கள் என்பது இல்லை. அவ்வாறு - 'பிற்படுத்தப்பட்டோர்' என்கிறோம், 'பின்தங்கியவர்கள்' என்பது இல்லை.

குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை

தினவு said...

//இதுல கேப்புல ஒரு காமடி பீஸ் பிட்டைப் போட்டுட்டு ஓடுது.. //

கண்டுக்காதீங்க. சிலதுங்க இப்பிடித்தான் தாங்களும் ஏதோ கமெண்ட் போடனும்ன்னே சம்பந்தமே இல்லாம எழுதுவாங்க. லூஸ்ல உடுங்க. ரோடுல சில பேர் சண்டை போடும்போது சைடுல தெருநாயிங்க அதுங்க பாட்டுக்கு parallelஆ
குறைச்சுகிட்டே ஓடிட்டு இருக்குமே பாத்ததில்லே, அதுமாரிதான் இதுவும்.

Rajan said...

//உங்கள யாரு சார் பார்க்க சொன்னது?

கண்ண கெட்டியா மூடிக்கோங்க.//



உங்க மருத்துவர் அய்யா ஷகீலாவும் இல்ல அதப் பாத்து கண்ண மூட நான் குட்டி பாப்பாவுமில்ல! நல்லா தொறந்து தான் வெச்சுப்பேன் கண்ண! ஆமா மரவெட்டி ராமதாசதான் இப்ப மருத்துவராக்கிட்டீங்களா?

Unknown said...

// தெருநாயிங்க அதுங்க பாட்டுக்கு parallelஆ
குறைச்சுகிட்டே ஓடிட்டு இருக்குமே பாத்ததில்லே, அதுமாரிதான் இதுவும்//

நான் தெருநாய்னா என்னப்பாத்து குலைக்கிற நீ என்ன சொறிநாயா

வால்பையன் said...

// சட்டைய கழட்டி போட்டு கோதாவில் இறங்குவேன்//
இறங்குங்க . அப்படியே NO வுக்கும் எதிரியாக //


வேடிக்கை பார்பவர் அதை மட்டும் செய்தல் நலம்! சண்டை போடுபவனுக்கு தான் தெரியும், எப்போ, எங்கே , யாரை அடிக்கனும்னு!

Rajan said...

//நான் தெருநாய்னா என்னப்பாத்து குலைக்கிற நீ என்ன சொறிநாயா //


இங்க நான் ஒருத்தன் இருக்கங்கிறதயே மறந்துட்டீங்களா? அவ்வ்வ்வ்

வால்பையன் said...

//"தாழ்ந்த" என்ற பொருளில் கூறவில்லை.//


// //உங்களை பொறுத்தவரையில் உங்களின் சாதியர்களின் கோபம் மட்டுமே
உண்மை, உங்களுக்கு கீழ உள்ள ஜாதிகளின் கோபம் விதண்டாவாதம், மேலே உள்ளவரின் சாதி சுரண்டல்வாதம் என்று சாதி வெறி உங்களுக்கு பல நாட்களாக ஊட்டப்பட்டுவிட்டது!!// //


இதற்கான பதில் தான் நீங்கள் சொன்னது, கோபத்தை ஏற்று கொள்கிறீர்கள் ஏனென்றால் சுரண்டல் வாதத்தில் உங்கள் குழுமமும் அடிபடுவதால், தாழ்த்தபட்டவர்கள் என்று எப்போதும் குறிப்பிடுவது போல் தான் சொல்லியிருக்கனும், கிழே இருக்கும் சாதிகள் நிச்சயமாக அந்த அர்த்தத்தை குறிக்காது, எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிப்பிங்க!


//குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை //


உடன்பாடு உள்ளவர்கள் மெஜாரிட்டியா இருக்காங்களே, எதை வைத்து உங்களுக்கு சலுகைகள் அரசு கொடுக்கனும், அப்படி கொடுத்தால் என்னவெல்லாம் செய்வீர்கள் என்பது தெரியாதா என்ன?

வால்பையன் said...

//நான் தெருநாய்னா என்னப்பாத்து குலைக்கிற நீ என்ன சொறிநாயா //


இதுக்கு அவுங்க போடுற சாதி சண்டையே பரவாயில்ல!

Rajan said...

//உங்க சாதிக்கு இடஒதுக்கீட்டு வேணும் என்பதோடு நிறுத்திகனும், திரும்ப ஒருக்கா கீழ் சாதி, மேல் சாதின்னு வந்ததுன்னா சட்டைய கழட்டி போட்டு கோதாவில் இறங்குவேன்!///


எந்த சாதிக்கு எட ஒதுக்கீடு வேணுமாம்? யோவ் ஏன்யா ரவுசு பண்றீங்க !

அருள் said...

// //இப்போ ஏன் பொது குழு கூட்டல!// //

நல்லாதான் கேக்குறாங்க டீட்டெய்லு.

இப்போ எப்ப சார் கூட்டணி மாறுனாங்க? இப்ப எதுனா தேர்தல் வரப்போகுதா?

கூட்டணி பத்தி பேசும் தேவை வந்தாதான பொதுக்குழுவ கேட்க முடியும்?

அருள் said...

ராஜன் said...

// //மரவெட்டி ராமதாசதான் இப்ப மருத்துவராக்கிட்டீங்களா?// //

1987 சாலைமறியல் போராட்டத்துல் ஒரே நாளில் 21 பேரை போலீஸ் கொன்னுச்சு.

அது மேலும் தொடராம தடுக்க சுமார் 100 மரத்த வெட்டினாங்க?

தற்காப்புக்காக கொலையே பண்ணலாங்குது சட்டம். வன்னியர்கள் மரம் வெட்டுனது தப்பா? இதுக்கு ஒரு பட்டப்பேரா?

நல்லா இருக்கு உங்க மனிதாபிமானம்.

Anonymous said...

Arul said:
// //எல்லா வர்க்கத்திலும் பொருளாதார ஏற்றதாழ்வு ஊண்டு// //

கல் குவாரில 3000 ருவா சம்பளத்துக்கு இருந்த அம்புமணி ராமதாஸ் குடும்பம் எப்புடி இவ்ளோ சொத்து சேர்த்துச்சு? வன்னிய மக்களை அடிச்சுப் புடிங்கி வன்னிய பல்கலைக் கழகம் கட்ட 100 ஏக்கர் நெலத்த புடிங்கின அம்புமணி குடும்பத்தக் கேள்வி கேக்காம இங்க வந்து என்ன விதண்டாவாதம்? தைரியமிருந்தா குழலியும் நீங்களும் அம்புமணி ராமதாஸ் கிட்ட கேளுங்க.

அருள் said...

வால்பையன் said...

// //நீங்கள் ஏமாறுபவர் நிச்சயமாக புத்திக்கும் உங்களுக்கும் சம்பந்த இருக்கப்போவதில்லை, உங்கள் சமூகம் உங்களை பார்த்து பரிதாபம் தான் படனும்!// //

ரொம்ப நல்லது.

ஆனாலும், எனக்காகவோ அல்லது வன்னியர் சமூகத்தை நினைச்சோ நீங்க இப்படியெல்லாம் கவலைப்படுவதுதான் புல்லரிக்க வைக்குது.

Unknown said...

////நான் தெருநாய்னா என்னப்பாத்து குலைக்கிற நீ என்ன சொறிநாயா //


இதுக்கு அவுங்க போடுற சாதி சண்டையே பரவாயில்ல!

//

வால் ஒரு கோபத்துல எழுதிட்டேன். எனக்கு வேடிக்கை பாத்துதான் பழக்கம் . நாளைக்கு பாக்கலாம். வரேன்

வால்பையன் said...

எனக்கு வன்னியும் தெரியாது, ..ன்னியும் தெரியாது, சக மனிதன் மேல் எப்போதிருக்கும் அக்கறையை தான் வெளிபடித்தியிருக்கேன்!,

எனக்கு நண்பனாக இருக்க நீங்கள் மனிதராக இருந்தாலே போதுமானது, எந்த வெண்னை சாதி(பெயரும்)யும் தேவையில்லை

தினவு said...

//நான் தெருநாய்னா என்னப்பாத்து குலைக்கிற நீ என்ன சொறிநாயா//

இல்ல. நாங்கல்லாம் சண்டைய வேடிக்கை பாக்க வந்தவங்க. அப்பப்ப, நாயிங்கள கல்லால அடிப்போம்.

அருள் said...

Anonymous said...

// //கல் குவாரில 3000 ருவா சம்பளத்துக்கு இருந்த அம்புமணி ராமதாஸ் குடும்பம் எப்புடி இவ்ளோ சொத்து சேர்த்துச்சு? // //

அடடா, அநானி...ஆரம்பிச்சிட்டீரா கோயபல்ஸ் பிரச்சாரத்த?

வன்னியர்களில் நிறைய பேரு கல் குவாரில உழைச்சுகிட்டுதான் இருக்காங்க. அதுஒருபக்கம் இருக்கட்டும்.

அவரோட அப்பா 1970 களிலேயே திண்டிவனத்தில் புகழ்பெற்ற மருத்துவர். அப்புறம் எதுக்கு கல் குவாரில வேலைக்கு போகனும்?

அருள் said...

வால்பையன் said...

// //எதை வைத்து உங்களுக்கு சலுகைகள் அரசு கொடுக்கனும்// //

வன்னியர்களுக்கு யாரும் எந்த சலுகையும் கொடுக்க வேண்டாம். வகுப்புவாரி பங்கீடு என்பது உரிமை.

'எதை வைத்துன்னு கேட்டா' வன்னியர்களின் எண்ணிக்கைய வச்சு கொடுத்தா போதும்.

அரசு கொடுக்கலன்னாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை, அதை எடுத்துக்கொள்ளும் காலமும் வரும்.

தினவு said...

//இதுக்கு அவுங்க போடுற சாதி சண்டையே பரவாயில்ல//

காமெடி பீஸ் நாய் ஜாதி சண்டைக்கு தயாராகுது போல. அதான், தெரு நாய், சொறி நாய், வெறி நாய்னு தரம் பிரிக்க ஆரம்பிச்சாச்சு. உங்களுக்கு மனிதம் வேணும். ஆனா, காமெடி பீசுக்கு 'நாயிதம்' வேணாம் போல.

தினவு said...

//அப்படியே NO வுக்கும் எதிரியாக//

சபாஷ். ஆரம்பிச்சாச்சா போட்டு குடுக்கற மாமா வேலைய? செய்ங்க, செய்ங்க. தொழில ஒழுங்கா செய்ங்க.

வால்பையன் said...

//வகுப்புவாரி பங்கீடு என்பது உரிமை.//


உங்களை போல் தமிழகமெங்கும் மக்கள் இருக்கிறார்கள், வகுப்புவாரியாக கொடுக்கும் முன்னர் உங்களில் எத்தனை பேர் மனிதர்களாக உள்ளீர்கள், எத்தனை பேர் சாதிவெறியோடு உள்ளிர்கள் என கணக்கெடுக்க வேணும்!


//அரசு கொடுக்கலன்னாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை, அதை எடுத்துக்கொள்ளும் காலமும் வரும். //


மொத்தமா சேர்த்து அடிச்சு புடிங்கிகலாம்னு சொல்றிங்க!, என்ன தான் முயற்சி பண்ணினாலும் உங்கள் சாதிவெறியில் இருக்கும் வன்முறை குணத்தை உங்களால் மறைக்க முடியவில்லை!

வால்பையன் said...

//காமெடி பீஸ் நாய் ஜாதி சண்டைக்கு தயாராகுது போல. //


வளர்த்து கொண்டே செல்வது சரியல்ல தோழரே!

கடக்க வேண்டிய தூரம் அதிகம்!
வெட்டி சண்டையிட இங்கே ஏது நேரம்!

அருள் said...

வால்பையன் said...

// //எனக்கு வன்னியும் தெரியாது, ..ன்னியும் தெரியாது, சக மனிதன் மேல் எப்போதிருக்கும் அக்கறையை தான் வெளிபடித்தியிருக்கேன்! எனக்கு நண்பனாக இருக்க நீங்கள் மனிதராக இருந்தாலே போதுமானது, எந்த வெண்னை சாதி(பெயரும்)யும் தேவையில்லை// //

" வன்னியும் தெரியாது, ..ன்னியும் தெரியாது" - அடடா, என்ன அற்புதமான அக்கறை.

அதுபோகட்டும். சாதியை சொல்வது நண்பனாக இருப்பதற்காகவோ இல்லாமல் போவதற்காகவோ அல்ல. ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்குமுறையிலிருந்து வெளியே வர, உரிமை பெற சாதி அடிப்படையில் ஒன்றிணைவது அவசியமாகிறது.

மற்றபடி வன்னியர்கள் எல்லாம் கழுத்தில் சாதி போர்டோடு அலையவேண்டும் என்பது என் கருத்தல்ல.

வால்பையன் said...

//" வன்னியும் தெரியாது, ..ன்னியும் தெரியாது" - அடடா, என்ன அற்புதமான அக்கறை.//


நிச்சயமாக சொல்வேன்!
உங்கள் பெயர் அருள், அழைக்க அது போதும், பின் எதற்கு சாதி, அது எங்கேயேனும் உங்கள் குணத்தை குறிக்கிறதா?, உங்களது செல்வாக்கை குறிக்கிறதா?, உங்களது நாகரீகத்தை குறிக்கிறதா!?
எதுவுமல்லாம் அந்த அடையாளத்தை நான் ஏன் மதிக்க வேண்டும், நீங்க என்னவாவேனும்னாலும் இருந்துட்டு போங்க, சக மனிதனாக மட்டுமே அருளுக்கு மரியாதை!

Anonymous said...

Arul said:

\\அவரோட அப்பா 1970 களிலேயே திண்டிவனத்தில் புகழ்பெற்ற மருத்துவர். அப்புறம் எதுக்கு கல் குவாரில வேலைக்கு போகனும்?//

௦ 1970 ல இருந்த அம்புமணி ராமதாசோட நெலம என்ன? இப்போ இருக்குற நெலம என்ன? இப்ப இருக்குற சுமார் ஆயிரம் கோடி சொத்து எப்புடி வந்தது? பொலீஸ் சுட்டு செத்துப் போன வன்னியைக் குடும்பத்துக்கு அம்புமணி ராமதாஸ் என்ன உதவி செஞ்சார்? அம்புமணி கல்குவாரில 3000 சம்பளத்துக்குப் போகலைன்னு உறுதிப் படுத்த முடியுமா? அப்புறம் எதுக்காக மரத்த வெட்டனும்? இப்போ மறுமகள வச்சு பசுமைத் தாயகம்னு மரம் நடணும்? அம்புமணி ராமதாஸ் எதையுமே யோசிச்சு செய்ய மாட்டாங்களா?வன்னியர்ல வேற யாருமே பசுமைத் தாயகத்துக்கு லாயக்கு இல்லையா? எதுக்கு குடும்ப உறுப்பினர்கள மட்டுமே எல்லாப் பதவிக்கும் அம்புமணி ராமதாஸ் போடுறாரு?

அருள் said...

வால்பையன் said...

// //உங்களில் எத்தனை பேர் மனிதர்களாக உள்ளீர்கள், எத்தனை பேர் சாதிவெறியோடு உள்ளிர்கள் என கணக்கெடுக்க வேணும்!// //

'உங்களில்' என்பது யாரைக்குறிக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை வன்னியரை குறிக்குமானால், அப்படியே எல்லா சாதிகளிலும் "எத்தனை பேர் சாதிவெறியோடு உள்ளார்கள்" என்று கணக்கெடுங்கள். அப்போது தெரியும் யார் சாதி வெறியர் என்று.

// ////அரசு கொடுக்கலன்னாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை, அதை எடுத்துக்கொள்ளும் காலமும் வரும். //
மொத்தமா சேர்த்து அடிச்சு புடிங்கிகலாம்னு சொல்றிங்க!// //

அப்படின்னு நீங்கதான் சொல்றீங்க. என்னபண்றது - வன்னியர்னா 'இப்படிதான்'னு உங்க மனசு சொல்லுது.

ஆனால், நான் 'ஆட்சியை பிடித்து எடுத்துக்கொள்ளும் காலமும் வரும்' என்ற பொருளில் சொன்னேன்.

அருள் said...

Anonymous said...

// //அம்புமணி கல்குவாரில 3000 சம்பளத்துக்குப் போகலைன்னு உறுதிப் படுத்த முடியுமா?// //

அய்யையோ... தாங்க முடியல.

மருத்துவர் அன்புமணி பள்ளிப்படிப்பை ஏற்காடு மான்போஃட் பள்ளியில படிச்சார். அதன்பிறகு சென்னை MMC இல் MBBS படிச்சார். திண்டிவனத்துல மருத்துவரா பணிசெய்தார். அப்புறம் நடுவண் அமைச்சர் ஆனார் - இப்போ கட்சிப்பணியில முழுசா ஈடுபட்டுள்ளார்.

இதுல கல்குவாரில வேலைக்கு போக ஏது நேரம்?

தினவு said...

//மரவெட்டி ராமதாசதான் இப்ப மருத்துவராக்கிட்டீங்களா?//

சரியா போச்சு போங்க. உங்களுக்கு விஷயமே தெரியாது போல.

'மரம் வெட்டி' என்னைக்கோ graduate ஆகி 'காடு வெட்டி' ஆக மாறி, பின்பு 'மனித வெட்டி' ன்னு இன்னொரு promotion கூட வாங்கி, இப்போ அதையே decent or diplomatic ஆ வெளிய சொல்லுறதுக்கு "மருத்துவர்"னு மாய்மாலம் காட்டறாரு.

எல்லா ஊருலயும் டாக்டருங்க ஆபரேஷன் ரூமுல வெட்டரதுல்லையா, அது போல இவரு ஆபரேஷன் ரூமுக்கு வெளியவே செய்வாரு. அவரு போற, வர ஜீப்புல, காருல பின்னாடி டிக்கில பாத்தீங்கன்னா, கத்தி, கடப்பாரை, வெட்டரிவாள், உருட்டுக்கட்டை போன்ற மருத்துவர்களுக்கே உரித்தான உபகரணங்கள கூடவே எடுத்துட்டு போவாரு. ஒரு ஆத்திர, அவசரத்துக்கு, மத்தவங்களுக்கு 'முதலுதவி' தேவைப்பட்டா, உபயோகமா இருக்குமேன்னு. இல்லைங்களா, அருள் சார்?

வெற்றிவேல் said...

//சரி, வன்னியர்களுக்குதானே பாதகமானது. அதற்காக அவர்கள்தானே கவலைப்படவேண்டும். அதில் உங்களுக்கு என்னகவலை?
//
தூ... இது போல ஒரு ஜாதி வெறி பிடித்த கேள்வியை நான் பார்த்ததே இல்லை.

இதற்கும் எங்களுடைய பெண்களை நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அடக்குமுறை செய்வோம். கேட்க நீ யார் என்று சொல்லும் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

அய்யா. இங்கே ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அடக்குமுறையில் கொடுமைப்படுபவர்களுக்கும் பரிந்து பேசுகிறார்கள். அவர்கள் என்ன ஜாதி, என்ன மதம் என்ன இனம், ஆணா பெண்ணா என்பது பொருட்டல்ல. என் ஜாதி ஏழைகளை நாங்கள் கொடுமைப்படுத்துவோம். கேட்க நீ யார் என்று சொன்னால், நான் இந்தியன் அவனும் இந்தியன் அவனுக்காக நான் பரிந்துபேசுவேன் என்பதுதான் பதில்.

ஒவ்வொரு வன்னியர்களும் உங்களைப் போல ஜாதி வெறி பிடித்தவர்கள் அல்ல. ஜாதிவெறியை தூண்டிவிட்டு சுயலாபம் அடைய துடிப்பவர்கள் அல்ல.

மனிதன் said...

ஒரு கூட்டம் வன்னியர்களின் அரசியல் எழுச்சியை பார்த்து வயிர் எரிந்து கிடக்குறார்கள்.பா.ம.க மட்டுமல்ல ,தமிழகத்தில் முக்கிய திமுக,அதிமுக,காங்கிரஸ்,தே.மு.தி.க.உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் வன்னியர்கள் பங்களிப்பின்றி வெற்றிகரமாக இயங்க முடியாது .இந்த எழுச்சி நெருப்பை சிறு பொறியாக ஆண்டுகளுக்கு பற்ற வைத்த பெருமை பா.ம.க.வை சேரும்.இந்த அரசியல் எழுச்சியை பார்த்து பொறாமை கொண்டவர்களின் கூப்பாடுதான் சாதி வெறியர் மரம் வெட்டி என்ற அவதூறுகள் .வன்னியர்களின் முதல் வெற்றி ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு-மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு .எமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் .

வால்பையன் said...

//'உங்களில்' என்பது யாரைக்குறிக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை வன்னியரை குறிக்குமானால், அப்படியே எல்லா சாதிகளிலும் "எத்தனை பேர் சாதிவெறியோடு உள்ளார்கள்" என்று கணக்கெடுங்கள். அப்போது தெரியும் யார் சாதி வெறியர் என்று.//


வெறி புடிச்சா எந்த நாயா இருந்தா என்ன, கல்லால அடிச்சு கொல்ல வேண்டியது தான், நாய்ல என்ன சாதி வேண்டிகிடக்கு!

அருள் said...

வெற்றிவேல் said...

// //நான் இந்தியன் அவனும் இந்தியன் அவனுக்காக நான் பரிந்துபேசுவேன்// //

சூப்பர்தான் போங்கோ.

இன்னும் ஏன் உங்க இந்தியாவும், உங்க இந்தியனும் உலகிலேயே மோசமான நிலையில் இருக்கங்கன்னுதான் தெரியிலை.

சரி விடுங்க. ஓநாயும் இந்தியன், ஆடும் இந்தியன்.

இனிமே வண்டலூர் zooல எல்லாவிலங்குகளையும் ஒரே கூண்டுல அடைக்கவேண்டியதுதான் பாக்கி.

நடக்கட்டும்.

Unknown said...

//காமெடி பீஸ் நாய் ஜாதி சண்டைக்கு தயாராகுது போல//

சொந்த பேரு இல்லாத அனாதை நாய் கூப்பாடு போடுது

Unknown said...

//காமெடி பீஸ் நாய் ஜாதி சண்டைக்கு தயாராகுது போல. அதான், தெரு நாய், சொறி நாய், வெறி நாய்னு தரம் பிரிக்க ஆரம்பிச்சாச்சு. உங்களுக்கு மனிதம் வேணும். ஆனா, காமெடி பீசுக்கு 'நாயிதம்' வேணாம் போல//

தினவு எடுத்தா அதுக்க்ப்பேரு பன்னி. எனக்கு நாயிதமும் வேணாம். உன்ன மாதிரி பன்னியும் வேனாம்.

Krishnakumar said...

I dont know how much it is true , i heard from my friend who was from the same town/village of ramadoss, that Ramadoss got into medical college through SC/ST quota. He claimed that he belonged to SC/ST to get admission but i am not sure how much that is true.

Unknown said...

//ஆரம்பிச்சாச்சா போட்டு குடுக்கற மாமா வேலைய?//

மாமாவா நான் யாருக்கு இருந்தேன்னு சொன்னா உனக்கு பேஜாராயிடும்

ConverZ stupidity said...

அருள் said...

// ///பொன்னகரதுல இனமா பணமா-ன்னு பிரச்சாரம் செஞ்சாங்க. இப்போ ராஜ்யசபை சீட்டுக்காக மு.க-வ சம்பந்தமே இல்லாம ஜால்ரா அடிக்கிறாங்க.// ///

//சரிதான் சார்.

//இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை ?

ஸோ, ரெட்டைவேடம் போடுற ஆளுங்க தான் உங்க தானை தலைவர்களா? நீங்க வேணுமுன்ன இருக்குற அரசியல் கன்றவியோட இந்த கன்றாவியையும் சாஹிச்சிகலாம் ஆனா மத்தவங்களுக்கு இதெல்லாம் டூ மச், தேவையுமில்லை.

Unknown said...

//தினவு said... //

உங்க ப்லொக் என்ன முதல்ல. இனிஷியல் இல்லாம பேசாதீங்க

அருள் said...

வால்பையன் said...

// //நீங்க என்னவாவேனும்னாலும் இருந்துட்டு போங்க, சக மனிதனாக மட்டுமே அருளுக்கு மரியாதை!// //

சரியான கருத்துதான்.

எனக்கு வன்னியர் அல்லாத நண்பர்கள்தான் அதிகம். அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய கருத்து தெரியும். யாரும் வித்தியாசமாக நினைத்தது இல்லை. நான் 'ஆதிக்க சாதி' என்று கூறும் அதே சாதி நண்பர்களை நானும் வித்தியாசமாக பார்த்தது இல்லை.

தனிமனித உறவில் சாதி தேவையே இல்லை.

உண்மையில், நட்பு, காதல், திருமணம் இதில் எல்லாம் சாதி பார்ப்பது தவறு. இதில் நட்பு மட்டும்தான் இன்றையநிலையில் சாத்தியமாகிறது. திருமணம் என்பது யாரோ ஒருவரால்தான் முடிகிறது. (மணமக்கள் தேவை விளம்பரங்களில் சாதியை பார்க்கும்போதெல்லாம் வேதனையாகத்தான் இருக்கிறது.)

கலப்புதிருமணங்கள் கூட ஒரே தலைமுறையில் 'ஆண்வழி' சாதிக்கு திரும்பி விடுகிறது. கலப்புதிருமணம் செய்த பெற்றோர் பிள்ளைகளை அப்பாவின் சாதியில் கட்டிக்கொடுப்பதை பார்க்கிறேன்.

சாதி ஒழிக்கப்படும் காலம்தான் உண்மையில் இந்த நாட்டின் விடுதலை நாள் என்று நம்புகிறவன் நான்.

ஆனால் அது எப்படி என்பதுதான் என் கேள்வி.

சாதி இல்லை என்று வெறுமனே வாய்வார்த்தைகளில் கூறுவதால் சாதி இல்லாமல் போய்விடுமா?

நோயை தீர்க்க, அது என்ன நோய் என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்கேற்ப சிகிச்சையும் அளிக்க வேண்டும். மாறாக நோயே இல்லை என்பது சிக்கலை மேலும் கடினமாக்கும்.

சமூகத்தின் அடிப்படை சிக்கலாக இருப்பது, சாதியால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுதான். இப்போது சாதியே இல்லை என்று சொல்வதால் யாருக்கு நன்மை - ஆதிக்கம் செய்வோர் அதனை தொடரவே அது உதவி செய்யும்.

சாதியை ஒழிக்க வேண்டும் என்று இந்த நாட்டில் ஓயாமல் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்கள் - அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும்தான். அவர்கள் காட்டிய வழிதான் "வகுப்புவாரி பங்கீடு" என்பது.

இதுகூட இதுவரை ஒடுக்கப்பட்டவர்கள் இழந்ததற்கு இழப்பீடு அல்ல. இனிவருங்காலத்திலாவது 'அவரவர்க்கு உரிய' பங்கினை பெறவேண்டும் என்பதுதான்.

"வகுப்புவாரி பங்கீடு" என்பதற்கு சாதி அடையாளம் அவசியம் (அதாவது, எந்த சாதி, எத்தனை பேர், அவர்களுடைய நிலை என்ன எனபதை அளவிட). மேலும், இதற்கான போராட்டத்தையும் சாதியை கடந்துபோய் நடத்திவிட முடியாது. யாரையும் அப்படி ஒன்று திரட்ட இயலாது.

மற்றபடி எல்லா இடத்திலும் சாதியை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்றோ, சாதி பெருமையை பேச வேண்டும் என்றோ, மற்றவர்களை தாழ்த்தி பேச வேண்டும் என்றோ நான் நினைக்கவில்லை.

வன்னியர்கள் அப்படி செய்வது தவறு, வேண்டாத வேலை என்றுதான் நான் கருதுகிறேன். மிக முக்கியமாக தலித்துகளுக்கு எதிரான செயல்களை நான் நிச்சயம் வெறுக்கிறேன்.

Anonymous said...

வன்னீயம் ஒழிக. குறிப்பு: நான் வன்னியர்களை சொல்லவில்லை. அருளிடம் ஒளிந்து கொண்டு இருக்கும் வன்னீயத்தை சொல்கிறேன். எனக்கும் வன்னிய நண்பர்கள் இருக்கிறார்கள்.

அருள், எங்கயோ கேட்ட மாதிரி இல்ல?!

வால்பையன் said...

//நான் 'ஆதிக்க சாதி' என்று கூறும் அதே சாதி நண்பர்களை நானும் வித்தியாசமாக பார்த்தது இல்லை.//


என்ன ஒரு திமிர் இருந்தா அவன் அந்த மாதிரி சொல்லுவான்! அவன் மட்டும் குண்டி வழியா பிறந்தானா, எல்லாரையும் மாதிரி தானே பிறந்தான், அவன் மட்டும் எப்படி ஆதிக்கசாதி, இதெல்லாம் கேட்கனும், கேட்காட்டி விரல் சூப்ப வேண்டியது தான்!


//சாதி ஒழிக்கப்படும் காலம்தான் உண்மையில் இந்த நாட்டின் விடுதலை நாள் என்று நம்புகிறவன் நான்.//

அதற்கான ஒரு படியை கூட எடுத்து வைக்க மறுக்கிறீர்களே!


//சாதி இல்லை என்று வெறுமனே வாய்வார்த்தைகளில் கூறுவதால் சாதி இல்லாமல் போய்விடுமா? //


வார்த்தையில் சொல்லி பிரயோசனமில்லை, ஏட்டிலும் நிராகரிக வேண்டும், தன்னை மனிதனாக அடையாளபடுத்தவே விரும்ப வேண்டும்!


//நோயை தீர்க்க, அது என்ன நோய் என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்கேற்ப சிகிச்சையும் அளிக்க வேண்டும். மாறாக நோயே இல்லை என்பது சிக்கலை மேலும் கடினமாக்கும்.//

நான் எப்ப சொன்னேன் நோயே இல்லைன்னு, பழைய பின்னூட்டம் ஒன்றுல் புண்ணை ஆற்ற பாருங்கள் என்றேன் ஞாபகம் இருக்கா! சாதி=நோய், சாதிவெறி=புண். சில புண்கள் பாதித்தவரை அழிவுக்கும் கொண்டு செல்லும், இது அப்படி தான்!



//சமூகத்தின் அடிப்படை சிக்கலாக இருப்பது, சாதியால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுதான். இப்போது சாதியே இல்லை என்று சொல்வதால் யாருக்கு நன்மை - ஆதிக்கம் செய்வோர் அதனை தொடரவே அது உதவி செய்யும்.//


ஆதிக்கம் செய்பவனிடம் நான் இன்ன சாதி என்றால் ஏளனமாக பார்த்து, அவனா நீ என்பான்! நான் உன்னை போல மனிதனடா என்றால், யோசிப்பான்!, ஆதிக்கசாதி மேலும் துள்ளினால் அவனுக்கு காய் அடிச்சிவிட்றனும், அவனெல்லாம் சமூகத்திற்கு கேடு!


//சாதியை ஒழிக்க வேண்டும் என்று இந்த நாட்டில் ஓயாமல் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்கள் - அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும்தான். அவர்கள் காட்டிய வழிதான் "வகுப்புவாரி பங்கீடு" என்பது.//


எல்லாம் சொன்னாங்க, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தபட்ட மக்களுக்கு என்று, தன்னை தானே தாழ்த்தி கொண்டு எனக்கும் உண்டகட்டி கொடுன்னு கேட்க சொல்லல!


//இதுகூட இதுவரை ஒடுக்கப்பட்டவர்கள் இழந்ததற்கு இழப்பீடு அல்ல. இனிவருங்காலத்திலாவது 'அவரவர்க்கு உரிய' பங்கினை பெறவேண்டும் என்பதுதான்.//


உனக்கான உணவை யாரும் தடுக்க முடியாது தோழரே! இன்னும் வேணும்னு அடுத்தவன்கிட்ட இருந்து புடுங்காம இருந்தா சரி!


//வன்னியர்கள் அப்படி செய்வது தவறு, வேண்டாத வேலை என்றுதான் நான் கருதுகிறேன். மிக முக்கியமாக தலித்துகளுக்கு எதிரான செயல்களை நான் நிச்சயம் வெறுக்கிறேன்.//


இது தான் மனிதத்துக்கு அழகு!

மனிதன் said...

”ஆதிக்க சாதிகளும் வன்னியர்களுக்கு எதிரான “சாதிவெறியுடன்” வாழ்கின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வன்னியர்களை ஓரம்கட்ட அணிவகுக்கின்றனர்.
இங்கு வன்னியர்களுக்கு எதிராக எழுதும் நீங்கள் உங்களுடைய ஜாதியை சொல்ல தைரியம் உண்டா? சொல்ல மாட்டீர்கள் ,சொன்னால் உங்கள் முகமூடி கிழிந்துவிடும் .தைரியம் இருந்தால் சொல்லுங்கள். நீங்கள் உங்கள் ஜாதி வெறி காரணமாகவே வன்னியர்களுக்கு எதிராக அவதூறாக எழுதி அரிப்பை தீர்த்து கொள்கிறீர்கள் .

வால்பையன் said...

//இங்கு வன்னியர்களுக்கு எதிராக எழுதும் நீங்கள் உங்களுடைய ஜாதியை சொல்ல தைரியம் உண்டா? சொல்ல மாட்டீர்கள் //

மனித இனத்தில் நான் ஆண்சாதி பாட்டாளி!

எனி மோர் கொஸ்டீன்ஸ்!

தினவு said...

//இனிஷியல் இல்லாம பேசாதீங்க//

நான் இனிஷியல் சொன்னா உனக்கு பேஜாரா பூடும் கண்ணு.

//தினவு எடுத்தா அதுக்க்ப்பேரு பன்னி.//

அப்படீங்களா, அருளானந்த சீடரே?

//எனக்கு நாயிதமும் வேணாம். உன்ன மாதிரி பன்னியும் வேனாம்.//

Yes. Better stay away from me.

//சொந்த பேரு இல்லாத அனாதை நாய் கூப்பாடு போடுது//

This is the stock reply for anyone, who can't argue with points. இன்று போய், நாளை வா, ராவணா!

தினவு said...

//மாமாவா நான் யாருக்கு இருந்தேன்னு சொன்னா உனக்கு பேஜாராயிடும்//

இப்ப யாருக்கு மாமாவா இருக்கேன்னு எங்க எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. அது போதும். ஆமாம், மாமா வேலைல சம்பாத்யம் எல்லாம் நல்லா இருக்கு போல? இல்லை, தேடி தேடி ஆளுங்களை போட்டு குடுக்கறியே, வெக்கம் இல்லாம, அதான் கேட்டேன்.

அருள் said...

பதில் பெருசா இருக்கு.

அதனால - இது PART - 1

டோண்டு ராகவன் சார்

// // நான் இப்பதிவில் சொன்ன எந்த பாயிண்டுகளுக்கும் அவரிடம் நேரடி பதில் இல்லை என்பதும் சிந்திக்கத் தக்கதே.// //

என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி என்ன 'பாயிண்டு' சொன்னீங்கன்னு தேடிப்பார்த்தேன்:

// //இப்போது எந்த பார்ப்பனர் தலித்துகளை சவுக்கால் அடிக்கின்றனர்? அவர்கள் வாயில் மலத்தை இடுகின்றனர்? தாழ்த்தப்பட்டவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து போகக்கூடாது, குடைபிடித்து போகக்கூடாது, தாங்கள் வந்தால் மரியாதை தரவேண்டும், சைக்கிளில் செல்லக்கூடாது என்றெல்லாம் கெடுபிடி செய்கின்றனர்?// //

// //வன்கொடுமைகள் செய்தார்கள் என யாரையுமே குறிப்பிட முடியாத பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாக வார்னிஷ் அடிச்சப் போது மட்டும் இனிச்சுதா?// //

அப்படின்னு கேட்டிருக்கீங்க?

நல்ல வேளை - இப்போது எந்த அமெரிக்கர், எந்த ஆஸ்திரேலியர், எந்த ஜப்பான்காரர் தலித்துகளை சவுக்கால் அடிக்கின்றனர்? - என்று கேட்காமல் விட்டதுக்காக உங்கள பாராட்டனும்.

குறைஞ்ச பட்சம் பக்கத்துல உள்ள 'சீனா காரர்களாவது அடிக்கிறார்களா' என்று கேட்காம விட்டிங்களே, அதுதான் கிரேட்.

சரி, அது போகட்டும். பார்ப்பனர்கள் தமிழ்நாட்டுல 50 லட்சம், ஒரு கோடின்னு இல்லை. இருக்குறதே 1 % க்கும் குறைவு. அதுவும் வன்னியர்களோ, தலித்துகளோ வசிக்காத 'சேஃப்' ஆன இடத்துல இருக்கீங்க. (அந்த காலத்துலேயே, குடியிருக்க மேட்டுப்பகுதி உங்களுக்கு,பள்ளம் மத்தவங்களுக்கு. ஆற்றுபாசன நிலம் உங்களூக்கு, வானம் பார்த்த பூமி மத்தவங்களுக்கு.)

வன்னியரும் தலித்தும் பக்கத்து, பக்கத்து தெருவுல வசிக்குறாங்க, ஒரே நிலத்துல வேலை செய்யுறாங்க. தினமும் ஒருத்தர் முகத்துல ஒருத்தர் முழிக்கிறாங்க - உங்க நிலைமை அப்படியா இருக்கு?

இதுல 'பார்ப்பனர்கள் வன்கொடுமை செய்தோமா'ன்னு நல்லாதான் நெஞ்ச நிமிர்த்தி கேட்குறீங்க.

'அங்க விடாம தடுத்தமா? இங்க விடாம தடுத்தமா'னு கெட்கிறீங்கள - எங்கயாவது கோயில் கருவரைக்குள்ள எங்கள விட்டீங்களா? ஆளை விடாதது இருக்கட்டும், சிதம்பரம் கோயில்'ல நாங்க பேசர மொழியைக் கூட விடமுடியாதுன்னுதான சொன்னீங்க, இன்னும் அதுக்காக சுப்ரீம் கோர்ட்'ல மல்லு கட்ராரு உங்க சு.சாமி. (நீங்க மட்டும் தலித்தை கோயில விட்டீங்களான்னு கேட்பீங்க - அது உங்ககிட்ட கத்துகிட்ட தவறுதான், அதுக்காக எந்த வன்னியரும் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகல)

பார்ப்பனர்கள் வன்கொடுமை செய்தோமா ? என்று திரும்ப திரும்ப கேட்குறீங்க - நீங்க செய்த கொடுமை கொஞ்சமா? உங்களோட கூட்டம் குறைவுதான், ஆனால் அணுகுண்டு மாதிரி தீமை ரொம்ப அதிகம்.

PART - 2 ஐ பார்க்கவும்.......

அருள் said...

இது PART - 2

உருவத்தில் குள்ள பார்ப்பான் வாமனன், மாமன்னன் மாவலி தலையில கால்வைத்த மாதிரி நீங்க செய்கிற வேலை பெரிது. பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் முன்னேற்றம் வரவே கூடாது என்று நீங்கள் செய்த சதி எத்தனையோ?

1. சுதந்திரம் வந்ததாக கூறப்பட்ட உடனேயே State of Madras Vs. Smt. Champakam Dorairanjan கேஸ்ல பிற்படுத்தபட்டவர்களுக்கு இடஒதுக்கீடே செல்லாது'ன்னு தீர்ப்பு எழுதினார் உங்க ஜட்ஜ் 1950 ஆம் ஆண்டுல.

2. பெரியாரும் காமராசரும் படாதபாடுபட்டு அரசியல்சாசனத்தையே முதல்முறைய திருத்தி இடஒதுக்கீட்டை காப்பாத்தினாங்க. உடனே உங்க நீதிபதி M R Balaji v. State of Mysore கேஸ்'ல வாதியும் கேட்காம, பிரதிவாதியும் கேட்காம - தானாகவே முன்வந்து 50 % மேல இடஒதுக்கீடு கூடாது'ன்னு தீர்ப்பு எழுதினாரு 1963 ஆம் ஆண்டுல.

3. சரி, பார்ப்பனர்களுக்கு காலகாலத்துக்கும் பாதுகாப்பு வேணுமே'னு Kesavanand Bharti v St of Kerala கேஸ்ல 'அரசியல் சாசனத்தின் அடிப்படி கட்டமைப்பை மாற்றவே முடியாது'ன்னு ஒரே பொடா போட்டது 13 நீதிபதிகள் பெஞ்ச், 1973 ஆம் ஆண்டுல. கூடவே, நீதிபதிகள் நினைச்சா அரசியல் சாசன திருத்ததை மறுக்கலாம்'னும் சொல்லிட்டாங்க. இதுல கொடுமை என்னன்னா - 13 நீதிபதிகளும் 15 விதமா தனியாகவும் கூட்டாகவும் தீர்ப்பு எழுதுனாங்க. இதுலு 5 பேர் சொன்னத்தான் மெஜாரிட்டி தீர்ப்பாம். (இந்த தீர்ப்ப மாத்த 15 நீதிபதிகள் பெஞ்ச் வேணும், அது என்வாழ்நாளில் நடக்காது).

உலகத்துல எல்லா நாடுகளுமே, இன்னும் 100 ஆண்டு, 200 ஆண்டுக்கு பின்னால் வருகிறவன் தலை எழுத்தை நாம தீர்மானிக்க உரிமையில்லன்னு, அரசியல் சாசனத்தை மாற்ற வழி வச்சுருக்காங்க. ஆனால், இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் - இந்திய அரசியல் சாசனத்தின் 'கட்டமைப்பை' மாற்றக்கூடாதாம், (மனுதர்மம் தான் அந்தக்கட்டமைப்பின் அடிப்படை என்பது வேறு செய்தி). இதை கேலிக்கூத்துங்கிறதா? கொடுமைங்கிறதா? - இன்று இடஒதுக்கீட்டில் உள்ள எல்லா சட்டசிக்கல்களுக்கும் இந்த தீர்ப்புதான் காரணம்.

4. அதன் பிறகும் பிற்படுத்தப்பட்ட மக்களை விட்டுவிடக்கூடாதுன்னு 1993 இல் 'க்ரீமி லேயர்' தத்துவததையும் புகுத்தினாங்க.

ஆனால், பாருங்க - இது எல்லாமே 'அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கம்' வேலை, அதாவது மக்களால் தேர்ந்த்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் வேலைகள்.

நடுவுல புகுந்து உங்க ஆளுங்க 'ஹைஜாக்' பண்ணிட்டாங்க.

நீதித்துறையால் நடத்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான வன்முறைகளின் 'சாம்பிள்'தான் இது. எல்லாத்துறைகளிலும் ஏராளமான 'வன்முறைகளை' இன்னும் செய்துகொண்டுதான் இருக்கீங்க.

பத்திரிககளில் உங்க 'இந்து'வும், தினமலரும் செய்யும் வன்முறை கொஞ்சமா?

ஓ. கே - //வன்கொடுமைகள் செய்தார்கள் என யாரையுமே குறிப்பிட முடியாத பார்ப்பனர்கள்//னு நெஞ்சை நிமிர்த்தி பேசுங்க.

உங்கள யாராவது கேட்க முடியுமா?

அருள் said...

தினவு said...

//அப்படீங்களா, அருளானந்த சீடரே?//

உடனே சீடர், தொண்டர்'னு எதுக்கு கிளப்புறீங்க? நான் இப்போதான் பதிவுல எட்டிப்பார்க்கிறேன், அவர் ரொம்ப நாளா இருக்கார்.

சரி - தினவு, நீங்க யாரு, பிரேமானந்தா சீடரா? நித்யானந்தா சீடரா? இல்லை - தினவானந்தா'ன்னு தன் ஆசிரமமா?

Krishnakumar said...

//எங்கயாவது கோயில் கருவரைக்குள்ள எங்கள விட்டீங்களா?

You Vanniya Veria, I think your knowledge is zero. Are you from TamilNadu? Have you ever gone to any temple so far.

You know baby, In temples the bastard kurukals will not even allow other brahmins to enter into the sanctum. Some kurukals may allow some women inside the sanctum to do jalsa but not other brahmins.

வெற்றிவேல் said...

அருள் said..
//இன்னும் ஏன் உங்க இந்தியாவும், உங்க இந்தியனும் உலகிலேயே மோசமான நிலையில் இருக்கங்கன்னுதான் தெரியிலை.
//
அப்படீங்களா?
தன்னை இந்தியன்னு நினைக்கிற மனிதர்கள் இங்கே இருக்கட்டும். இந்தியனென்று நினைக்காத உங்களை மாதிரி ஜாதிவெறியர்கள் தானாக நாட்டை விட்டு கிளம்பலாம். விட்டுது சனி..

Epitome of Negativity said...

//seeprabagaran said...
திரு.அருள் அவர்களுக்கு, வணக்கம். உங்களோடு வாதம் செய்பவர்களுக்கு பதில் சொல்லுங்கள். விதண்டாவதம் செய்பவர்களுக்கு தாங்கள் பதிலளிக்கத்தேவையில்லை என்று கருதுகிறேன்//

##ஒரு சிறு குழப்பம். யார் விதண்டாவாதம் செய்வது? டோண்டுவா, அனானீகளா, அல்லது மரம் வெட்டியாரின் அடி வருடி அய்யா அருள் அவர்களா?


//Arul said:
ஓ.கே. ஆளாளுக்கு அவங்க அவங்க சாதிவெறிய காட்டுங்க.//

##நான் சாதி வெறியை காட்டுகிறேன் ஆகையால் நீங்களும் காட்டுங்கள் என்று அனுமதி கொடுத்ததிற்கு நன்றி.

//நாதியத்து கிடந்த ஒரு சமூகத்துக்காக பேச ஒரு ஆள் வந்தா - மத்தவஙகளுக்கு எரியும்தானே?
ஒ.கே, நல்லாதிட்டிக்கோங்க.//

##ஹீ ஹீ...திட்டிக்றோம்

//கல் குவாரில 3000 ருவா சம்பளத்துக்கு இருந்த அம்புமணி ராமதாஸ் குடும்பம் எப்புடி இவ்ளோ சொத்து சேர்த்துச்சு? வன்னிய மக்களை அடிச்சுப் புடிங்கி வன்னிய பல்கலைக் கழகம் கட்ட 100 ஏக்கர் நெலத்த புடிங்கின அம்புமணி குடும்பத்தக் கேள்வி கேக்காம இங்க வந்து என்ன விதண்டாவாதம்? தைரியமிருந்தா குழலியும் நீங்களும் அம்புமணி ராமதாஸ் கிட்ட கேளுங்க.//

##கொட்டையை கழட்டி கையில் கொடுது அனுப்பி விடுவாரகள்

//வன்னியர்களுக்கு யாரும் எந்த சலுகையும் கொடுக்க வேண்டாம். வகுப்புவாரி பங்கீடு என்பது உரிமை.
'எதை வைத்துன்னு கேட்டா' வன்னியர்களின் எண்ணிக்கைய வச்சு கொடுத்தா போதும்.//

##எண்ணிக்கையை வைத்து தமிழ்னாட்டில் ஒதுக்கீடு கொடுக்கணும் என்றால் முதலில் தெரு மற்றும் சொறி நாய்களுக்கும் அப்புறம் பன்னிகளுக்கும் தான் முன்னுரிமை தரவேணும். அதிலும் சாதிய கண்டுபிடிச்சு, கேட்டாலும் கேப்பிங்க போல... நல்லாருங்க. தமாஷா இருக்கு....உங்கள் இரு தமிழக திட்டமும் சூப்பர்...ரொம்ப நல்லாருங்க.

dondu(#11168674346665545885) said...

@அருள் படையாச்சி
கோவில் கருவரைக்குள் அர்ச்சகரைத் தவிர வேறு யாருமே போக முடியது. அதெல்லாம் ஆகம விதிகளில் வரும். வேறு யாருமே என்றால் மற்ற பார்ப்பனரும் அடங்குவார்கள்.

ஒரு லாரிக்கு கூட ஆள் சேர்க்க முடியாத பார்ப்பனர்கள்தான் சாதி வெறிக்கு காரணம் என நீங்கள் கூறுவது நகைப்புக்குரியது. கிராமங்களில் இப்போது அக்கிரகாரங்களிலேயே பார்ப்பனர் கிட்டத்தட்ட இல்லவே இல்லை. எல்லோரும் வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.

வன்னியர்கள் கிராமங்களில் சட்டமாக அமர்ந்து கொண்டு செய்யும் வன்கொடுமைகளை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். நாங்கள் செய்யவே இல்லை அல்லவா?

அப்படியும் ஜெயசங்கர் என்னும் பதிவர் விட்ட ஒரு கருத்து முத்துக்குக்கு இசைவாக நீங்களும் //நான் சென்னை மாவட்டத்துல படிப்பு, உத்தியோக ரீதியா சில காலம் வசித்தேன். அப்பொழுது பஞ்சமர் அய்யர்களால் வேலை இடங்களில் ஒடுக்கப்படும்(பணம், அதிகாரம்) ஈனச்செயலை நேரடியாக பார்த்திருக்கிறேன்// என வீம்புக்கு சொன்னதைத் தவிர வேறு என்ன செய்ய முடிந்தது உங்களால்.

வாமனாவதாரம் கடவுள் செயல் அவ்வளவே, அதையெல்லாம் இங்கே ஏன் போட்டு குழப்பிக் கொள்கிறீர்கள்.

வன்னியர்களை ஒட்டு மொத்தமாக சாதி வெறியர்கள் எனக்கூறிவிட்டார்கள் என அங்கலாய்க்கும் நீங்கள் சர்வசாதாரணமாக அதை விட பெரிய குற்றச்சாட்டுகளாக பார்ப்பனர் மேல் வைத்தீர்களே.

எது எப்படியானாலும் நன்றாக எல்லோரிடமும் வாங்கி கட்டிக் கொண்டீர்கள். அது போதும் எனக்கு.

நீங்கள் வாங்கிய கும்மாங்குத்துகளால் உங்களுக்கு மூளை பிசகி விட்டதென என்ணூகிறேன்.

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@கிருஷ்ணகுமார்
தேவநாதன் செயலுக்கு அவனுக்கு வேண தண்டனை கொடுத்தாகி விட்டது. ராசாவை தலித் என சப்போர்ட் செய்தது போலவெல்லாம் அவனை யருமே, முக்கியமாக எந்த பார்ப்பனருமே சப்போர்ட் செய்யவில்லை என்பதை அறியவும்.

டோண்டு ராகவன்

கால்கரி சிவா said...

எனக்கு இடமில்லை உனக்கு இடமில்லை என நாம் அடித்துக் கொள்கிறோம். ஏன் நம் அரசாங்கத்திடம் பணம் இல்லை அதனால் இவ்வளவுதான் முடியும் என சாதிக்கு ஏற்றவாறு இடம் பிரித்து தந்தது நியாயம் தான். ஆனால் இன்றைய நிலைமை என்ன? இந்த ஏழ்மை ஏன் தொடர்கிறது நம்மில் எத்தனை பேர் யோசிக்கிறோம். சுமார் 1,00, 000 கோடி வரை கொள்ளை போயிருக்கிறது. யார் பணம். மக்களாகிய நம் பணம் அந்த பணத்தை வைத்து எல்லாருக்கும் இடம் வழங்கலாமே. அதைப் பற்றி ஏன் ஏன் யாரும் வாய் திறப்பதில்லை. பத்திரிக்கைகள், தொழிலதிபர்கள் ஆளும் கட்சி, எதிர் கட்சி, அரசு அதிகாரிகள், வரிந்து கட்டிக் கொண்டு ஜாதி சணடையிடும் பதிவர்கள ஆகிய எல்லாரும்.

ஏன் அந்த கொள்ளையை எதிர்க்க வேண்டும் என சிறிது உணர்வும் வரவில்லை நமக்கு.

மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் கயவர்களை எதிர்க்காதவரை நாம் இந்த மாதிரி சாதி, இட ஒடுக்கீடு போன்ற சகதியில் உழன்று கொண்டிருக்க்வெண்டியது தான்

Anonymous said...

//உயர்சாதி திமிர் பிடித்த வெறியர்களுக்கு காயடிக்கும் சந்தர்ப்பம் அமைந்துவிட்டது! //

வால் பையன்,
காயடிப்பது தான் உங்கள் தொழிலா? எல்லாப் பதிவுகளிலும் இதையே எழுதுவதால் வந்த சந்தேகம்.

இந்தத் தொழில் செய்வோருடன் நான் பேசுவதில்லை, மன்னிக்கவும்.

தினவு said...

//உடனே சீடர், தொண்டர்'னு எதுக்கு கிளப்புறீங்க? நான் இப்போதான் பதிவுல எட்டிப்பார்க்கிறேன், அவர் ரொம்ப நாளா இருக்கார்.//

ரொம்ப நாளா இருந்து எண்ண புண்ணியம்? பதிவுக்கு சம்பந்தமா கமெண்ட் போடுற அளவுக்கு கூட மூளை வளர்ச்சி அடயலையே, எண்ண பண்ணுறது? அதான் பாவம், வேற யாராவது போடுற கமெண்டுக்கு அவருக்கு தெரிஞ்ச அளவுக்கு "லொள், லொள்" நு ஏதோ கொரைச்சிட்டு ஓடி போயிடறார் - ஒரு சீடன் மாறி.

//சரி - தினவு, நீங்க யாரு, பிரேமானந்தா சீடரா? நித்யானந்தா சீடரா? இல்லை - தினவானந்தா'ன்னு தன் ஆசிரமமா?//

இது என்ன கேள்வி சாமி? நீங்களே எனக்கு மருத்துவர்னு பட்டம் கொடுத்துட்டு (MPD ஞாபகம் வருதா?) இப்ப சாமியார தேடி அலையறீங்களே? ஒ... இது உங்க MPD வியாதியோட வேறொரு பரிமானமோ? உங்களுக்கு உள்ளே இருக்கற இன்னொரு நபர் எட்டி பாக்கராரோ?

Anonymous said...

//காயடிப்பது தான் உங்கள் தொழிலா?//

இப்போதைக்கு அதுதான். இன்னும் முத்தலையே. முத்தினவுடனே பழம் அடிக்க ஆரம்பிப்பார்.

Unknown said...

//பதிவுக்கு சம்பந்தமா கமெண்ட் போடுற அளவுக்கு கூட மூளை வளர்ச்சி அடயலையே, எண்ண பண்ணுறது/

உன்னோட கமெண்டுக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம். இது நெட் . அதனால நீ நாய்னு தெரியாம பேசிட்டேன். நாய் குலைச்சு திருப்பி குலைக்கிறது தப்பு.

Unknown said...

//இன்று போய், நாளை வா, ராவணா/

ராவணன் தவம் பண்ணி சிவபெருமான் கிட்ட வரம் வாங்கினவன். உன்ன மாதிரி அனாதை பரதேசி இல்லை

அருள் said...

தினவு said...

// //"லொள், லொள்" நு ஏதோ கொரைச்சிட்டு ஓடி போயிடறார் // //

மனிதனை திட்டுறதுக்காக

நாயை, பன்றியை திட்டுறீங்க. எருமை மாட்ட கூடதிட்டுராங்க!

இதைகேக்க இங்க புளூ க்ராஸ் எதும் இல்லாயா? (ஆமாம், நெட்'ல வொய்ட் க்ராஸ்தான அதிகம்).

அது இருக்கட்டும். ஏன் யாரும் 'பசுமாடே'ன்னு திட்டமாட்டங்கிறீங்க?

நாய் கேவலம், பன்றி கேவலம், எருமைமாடு கேவலம், பசுமாடு மட்டும் புனிதமானது எப்படி?

டோண்டு சார் விளக்குவார்!

Unknown said...

//ஜெயசங்கர் என்னும் பதிவர் விட்ட ஒரு கருத்து முத்துக்குக்கு //

கருத்து இன்னொருதரோடது. என்னது இல்லை. நான் சும்மாத்தான் எழுதினேன்

Unknown said...

//அது இருக்கட்டும். ஏன் யாரும் 'பசுமாடே'ன்னு திட்டமாட்டங்கிறீங்க/

அது பாராட்டு. திட்டு இல்லை.அதனால தான்

Unknown said...

//தேவநாதன் செயலுக்கு அவனுக்கு வேண தண்டனை கொடுத்தாகி விட்டது. ராசாவை தலித் என சப்போர்ட் செய்தது போலவெல்லாம் அவனை யருமே, முக்கியமாக எந்த பார்ப்பனருமே சப்போர்ட் செய்யவில்லை என்பதை அறியவும்.
//
அர்ச்சகர் சங்கம் அவருக்கு உதவி செய்ததா பேப்பர்ல பாத்தேனே.

அருள் said...

கால்கரி சிவா said...

// //சுமார் 1,00, 000 கோடி வரை கொள்ளை போயிருக்கிறது. யார் பணம். மக்களாகிய நம் பணம் அந்த பணத்தை வைத்து எல்லாருக்கும் இடம் வழங்கலாமே. அதைப் பற்றி ஏன் ஏன் யாரும் வாய் திறப்பதில்லை.// //

நல்லா கேட்டீங்க சார் ஒரு கேள்வி.

ஆனால், அமவுண்ட்'தான் குறைச்சு சொல்லிட்டீங்க. உண்மையில் 1.4 ட்ரில்லியன், அதாவது சுமார் 70 லட்சம் கோடி வெளியில பதுக்கப்பட்டிருக்கிறது.

அப்புறம், இன்னும் ஒரு 1,25,000 கோடி பணம் இந்திய வங்கிகளில் கடன் வாங்கப்பட்டு திரும்பிவராம இருக்கு. ஏதோ ஏழைகள் வாங்குன கடன்'னு நினச்சிடாதீங்க. எல்லாம் பெரும் பணக்காரர்கள் வாங்கினது.

எல்லாத்திலும் சாதி பார்க்குறேன்'குறாங்க - என்ன பண்றது:

இதிலேயும் 'பணத்த அபகரிச்சவங்க சாதிய பாத்தா' //அதைப் பற்றி ஏன் யாரும் வாய் திறப்பதில்லை// என்ற உங்க கேள்விக்கு பதில் கிடைக்கும்.

அருள் said...

வெற்றிவேல் said...

// //தன்னை இந்தியன்னு நினைக்கிற மனிதர்கள் இங்கே இருக்கட்டும். இந்தியனென்று நினைக்காத உங்களை மாதிரி ஜாதிவெறியர்கள் தானாக நாட்டை விட்டு கிளம்பலாம்.// //

இந்தியன்'னு ஒரு இனம் இருக்கிறதா நான் எங்கேயும் கேள்விப்பட்டது இல்லை. (அது அரசாங்கம் ஒரு வசதிக்காக வச்சிருக்கிற பெயர். வண்டலூர் zoo'ல என்ன இருக்குன்னு கேட்டா, விலங்குகள் இருக்குன்னு பொத்தாம் பொதுவா சொல்றா மாதிரி.)

நான் தமிழன்'னு நினைக்கிறேன். உங்க 'அகராதிப்படி' வன்னியத் தமிழன்'னு வச்சுக்குங்க. நான் அப்படி சொல்லல (தமிழன் இனம், வன்னியன் சாதி: தமிழன் என்று சொல்வதில் எனக்கு பெருமைதான். வன்னியன் என்பதில் எனக்கு பெருமிதம் இல்லை).

சரி, நாட்டை விட்டு கிளம்பலாம்'னு உத்தரவு போட்டுட்டீங்க - நான் தமிழன் - நான் எங்க போகனும்'னு நீங்களே சொல்லிடுங்களேன்.

sridhar said...

//இதிலேயும் 'பணத்த அபகரிச்சவங்க சாதிய பாத்தா' //அதைப் பற்றி ஏன் யாரும் வாய் திறப்பதில்லை// என்ற உங்க கேள்விக்கு பதில் கிடைக்கும்.
//

பாத்து சொல்லுங்களேன், இதுல எவ்வளவு இட ஒதுக்கீடுனு தெரிஞ்சுக்க எனக்கும் ஆசை தான்.

இதுலயும் புள்ளி விவரம் கொடுப்பீங்கனு நினைக்கிறேன் (மாட்டினவங்க எல்லாம் ___ சாதி, மாட்டாதவங்க எல்லாம் ___ சாதி அப்படீனு உங்க "டிரேட் மார்க்" முட்டாள் தனமான வாதம் இருக்கபிடாது சொல்லிப்புட்டேன்)

அருள் said...

வெற்றிவேல் said...

// //தன்னை இந்தியன்னு நினைக்கிற மனிதர்கள் இங்கே இருக்கட்டும்// //

தேச பக்தி - தந்தைப் பெரியார்.

"நான் ஒரு தேசாபிமானியல்லன்; அதுமாத்திரமல்ல; தேசாபிமானத்தைப் புரட்டு என்றும், அது தனிப்பட்டவர்கள் வயிற்றுச் சோற்று வியாபாரம் என்றும் சொல்லியும், எழுதியும் வரும் 'தேசத் துரோகி'யாவேன். ஒரு காலத்தில் தேசாபிமானத்துக்காகச் சிறை செல்லும்படியான அவ்வளவு தேசாபிமானியாய் இருந்து, பலமுறை சிறை சென்று வந்துதான் அதன் அனுபவத்தைச் சொல்லுகிறேனே ஒழிய, வெளியில் இருந்து வேடிக்கை மாத்திரம் பார்த்துவிட்டு நான் இப்படிச் சொல்லவில்லை.

'நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும், தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலை போகாது' என்பதுதான் தேசாபிமானிகளின் - மகாத்மாக்களின் சுயராஜ்ய தர்மமாகும்.

அவனவன் சாதித் தொழிலையும் பரம்பரைப் பெருமையையும் பழக்கவழக்கங்களையும் காப்பாற்றும் காங்கிரசு சுயராஜ்யத்தில், தோட்டி புல் சுமப்பதைவிட வேறு தொழில் ஏற்பட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இந்தக் காரணத்தால்தான் நான் தேசத் துரோகியாக இருக்கிறேன்.

ஆனால், பார்ப்பனர் சாதியையும் - பறையர் சாதியையும் அழித்து, எல்லோரும் சரிசமமான மனிதர்கள் என்று ஆக்கும் தேசாபிமானத்திற்கு நான் விரோதியல்லன்; துரோகியுமல்லன் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்."

"தேசாபிமானம், தேசபக்தி என்பவைகள் சுயநலச் சூழ்ச்சி என்றும், தனிப்பட்ட வகுப்பு மக்களால் தங்கள் வகுப்பு நலத்துக்காகப் பாமர மக்களுக்குள் புகுத்தப்படும் ஒரு போதையென்றும் பல தடவைகள் நாம் சொல்லி வந்திருக்கிறோம்."

தந்தைப் பெரியார் - 'குடியரசு' தலையங்கம் - 29.9.1935

வஜ்ரா said...

இங்கு அருளுக்கு பொதுமாத்து வழங்கியிருக்கிறார்கள். ரெண்டு நாள் இந்தப்பக்கம் வரவில்லை...அதுக்குள்ள அடி திகுடுதெம்பா விழுந்திருக்கு...பரவாயில்லை. ஆனால், இன்னும் மனுசன் பெரியார் எழுதியதைக் கோட் செய்துகொண்டிருக்கிறார்.

இந்த மாதிரி ஜாதி அபிமானிகள் பெரியாரை கோட் செய்வதால் பெரியாருக்குத் தான் அவமானம் என்பது கூடத் தெரியாமலா பெரியார் தாசர்கள் இருக்கிறார்கள் ?

dondu(#11168674346665545885) said...

@வஜ்ரா
ஈவேரா அவர்களே தனது சுயஜாதி அபிமானத்தை காட்டியுள்ளாரே.

கீழ்வெண்மணியில் வைத்து 44 ஹரிஜன விவசாயத் தொழிலாள்ர்கள் பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடு எரித்த போது, அது பற்றிய ஒரு சவ அறிக்கையை விட்டவர்தான் அந்த கன்னட பலீஜா நாயுடு ஈவேரா அவர்கள்.

அருள் குருவுக்கேற்ற சீடரே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//சரி, நாட்டை விட்டு கிளம்பலாம்'னு உத்தரவு போட்டுட்டீங்க - நான் தமிழன் - நான் எங்க போகனும்'னு நீங்களே சொல்லிடுங்களேன்.//

Arul,

I would suggest Somalia as your destination.There you will find a lot of people (pirates and thugs) who look and behave like most casteist tamils paricularly vanniyar fanatics like yourself.You can do great business there.Please spare tamlnadu and India.

Anonymous said...

vajra,

you are wrong.periyaar was the worst caste fanatic TN had seen.You probably are not aware.

«Oldest ‹Older   1 – 200 of 294   Newer› Newest»
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது