3/30/2010

பதிவர் குழுமம் - குழந்தைக்கு பல் முளைக்கும் பிரச்சினைகள்

ஒரு முயற்சிக்கு முதலில் வரும் தடைகளை குறிக்க ஆங்கிலத்தில் teething troubles என்பார்கள். பல் முளைக்கும்போது குழந்தைக்கு பேதியாகும், காரணம் என்னவென்றால் அது கையில் கிடைப்பதையெல்லாம் வாயில் போட்டு கடிக்க முயல்வதே. இந்த வலைப்பதிவாளர்களின் குழுமம் சம்பந்தப்பட்ட சலசலப்புகள் எனக்கு அதைத்தான் நினைவுபடுத்துகின்றன.

எனது இது சம்பந்தப்பட்ட பதிவையும் சேர்த்து இது பற்றி பல பதிவுகள் வந்து விட்டன. முதல் வரிசையில் உட்கார்ந்தவர் எல்லோருமே பார்ப்பனர் என்ற பொறாமை பிடித்த உள்ளடக்கம் கூட ஒரு பதிவுக்கு உண்டு. அப்பதிவு அதை எழுதியவர் பார்ப்பனர்களை வெறுப்பவர் என்ற ஒரு தகவலை விட வேறு என்ன உருப்படியான தகவல் தந்தது என்னவென்றால், அவரது கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்த கருத்து கந்தசாமிகள், மனநலமில்லாத மருத்துவர் ஆகியோரது பார்ப்பன வெறுப்பு அவர்களிடம் வேறு விஷயங்களை பகுத்தறிவுடன் பேசும் திறனை பாதிக்கிறது என்பதுதான்.

பிறகு வருகிறார் உண்மை தமிழன். அவரது பதிவில் சோகம் இழையோடுகிறது. வருத்தமாகத்தான் இருக்கிறது. இம்மாதிரியான எல்லா முயற்சிகளுக்குமே இப்படித்தான் ஆரம்பத்தில் அதைரியப்படுத்தும் போக்குகள் வரும். அதற்காகவெல்லாம் கண்டு மனம் தளரக்கூடாது என்று மட்டுமே நான் கூறுவேன்.

அவர் பதிவிலிருந்து சில வரிகள்:

அடுத்தது அந்த டிராப்ட் பேப்பர். தண்டோரா அண்ணனிடம் "நான் ஒரு டிராப்ட்டை வடிவமைப்பு அனுப்புகிறேன். பாருங்கள்.. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.. ஏதேனும் திருத்தம் இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.." என்றேன். கேபிளிடமும் இதையே சொன்னேன். சரி என்றார்கள். ஆனால் என் நேரம் பாருங்கள்.. என் அப்பன் முருகன் இடையில் புகுந்து விளையாடிவிட்டான்.

நான் அனுப்பிய பாண்ட் தண்டோரா அண்ணன் சிஸ்டத்தில் ஓப்பன் ஆகவே இல்லை.. கேபிளுக்கும் இதே கதிதான்.. சரி.. சூர்யாவிடமாவது கருத்துக் கேட்கலாம் என்று சொல்லி அவருக்கும் அனுப்பி வைத்தேன். அவரும் இதையேதான் சொன்னார்.. நேரமும் கடைசி நாள் என்பதாகிவிட்டதால் "நீங்க பிரிண்ட் அவுட் எடுத்திட்டே வந்திருங்க.. பார்த்துக்கலாம்.." என்று தண்டோரா அண்ணனும், கேபிளும் சொல்ல.. எடுத்து வந்தேன்.


போகிறபோக்கில் தெரியாமல்தான் கேட்கிறேன். ஏன் இந்த பிரச்சினை வர வேண்டும்? ஏன் யூனிகோட் லதாவில் அடிக்கக் கூடாது? நீங்கள் தட்டச்சிடும்போது பார்த்திருக்கிறேன். ஏதோ ஒரு பழைய சிஸ்டத்தை கடைபிடிக்கிறீர்கள் என்று (பெயர் மறந்து விட்டது). ஏன் இந்த கஷ்டங்கள்? இகலப்பை இல்லையா? இதெல்லாம் இங்கு ஏன் கேட்கிறேன் என்றால், மேலே சொன்ன கஷ்டத்தால்தான்.

உண்மை தமிழன் சொன்ன மற்ற சில பாயிண்டுகள்:
நான் முதலில் மைக்கை பிடித்தவுடனேயே தெளிவாகச் சொன்னேன். "சங்கம் ஆரம்பித்தால் என்னென்ன செய்ய வேண்டும்..? எப்படியெல்லாம் செயல்பட வேண்டும்..? யார், யாரெல்லாம் இருக்க வேண்டும்..? அதற்கான அரசு வழிமுறைகள் என்னென்ன..? அதை நாம் எப்படி பின்பற்றுவது.. இதைத்தான் இந்தக் கேள்விகளில் கேட்கப்பட்டிருக்கிறது. பதிவர்கள் தயவு செய்து இந்தக் கேள்விகளுக்கு தங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்குமாறுதான்" நான் கேட்டுக் கொண்டேன்.

"நமக்காக ஒரு அமைப்பை ஆரம்பிக்கலாமா? வேண்டாமா?" என்று நான் கேட்பதாக இருந்தால், எதற்கு இப்படி ஒரு வில்லங்கத்தை தட்டச்சு செய்து கொண்டு வர வேண்டும்..? ஒரு அமைப்பு நமக்கு வேண்டும் என்று நினைத்துதான் நான் அதனை கொண்டு வந்து கொடுத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது..? அமைப்பு ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்பதுதான் அன்றைய அஜெண்டா என்றால் கடைசி நேரத்தில் அண்ணன் ஞானி கேட்டதுபோல் கையைத் தூக்கும்படி நான் முதலிலேயே கேட்டிருப்பனே..?

மேதகு சிவராமன் எங்களது பதிவுகளைப் படித்ததாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் என்ன, எப்படி படித்தார் என்று எனக்குத் தெரியவில்லை.

அமைப்பைத் துவக்க ஆலோசனைக்காகத்தான் அழைத்திருந்தோம். அமைப்பாக உருவெடுக்க எங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை ஒரு வரியில் சொல்லி முடித்திருக்கலாம். தேவையில்லாமல் நாங்கள் ஏதோ திட்டமிட்டே முன்பே சதி வேலை செய்து அமைப்பை உருவாக்கிவிட்டு பின்பு வெறும் கண்துடைப்புக்காக அவர்களை அழைத்ததாக கதையைத் திரித்துவிட்டார் மேதகு சிவராமன்.

வலையுலகத்திற்கு அமைப்பு எதற்காக இப்போது தேவை என்று இந்த மேதகுதான் கேட்டார். வெறும் இரண்டு பேர் மட்டுமே சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி மாதந்தோறும் ஒரு திரைப்படத்தினை காட்டும்போது, கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 5000 வலைப்பதிவர்கள் இயங்கி வரும் இந்தத் தமிழ்ச் சூழலில் அவர்களை வைத்து ஒரு அமைப்பாக்கி என்னவெல்லாம் செய்யலாம் என்று ஏன் இந்த பின்னவீனத்துவ ஐயாவுக்குத் தோணவில்லை என்பது எனக்குப் புரியவே இல்லை.

எதற்குத் தேவை என்று கேட்டதற்குக்கூட நான் ஒரு இடத்தில் பதில் சொன்னேன்..

அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இணையத்தில் எழுதும் ஆர்வமுள்ளவர்களை நாம் வலையுலகத்திற்குள் இழுக்கலாம்.

அவர்களுக்கு வலையுலகத்தை அறிமுகப்படுத்தலாம்.

ஒரு அலுவலகம் அமைத்து அங்கே வலையுலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு நாமே சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

மாநகராட்சி பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு அமைப்பின் சார்பாக வலைப்பதிவர் பட்டறையை நடத்தலாம்.

வலையுலகத்திற்குள் பலரும் வருவதால் அவர்களுக்கு நிச்சயமாக பலன்கள் கிடைக்கும். நட்புகள் கிடைக்கும்.. இதனால் எனக்குக் கிடைத்ததுபோல் நல்லவைகளும் நிச்சயம் நடக்கும்..

என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன்.

இதையெல்லாம் தனி நபர்களாக இருந்து செய்கின்றபோது பல்வேறு விமர்சனங்களும் பணச்சிக்கல்களும் ஏற்படக்கூடிய சூழல் உண்டு. ஒரு அமைப்பின்கீழ் என்றால் உடனடியாக எங்கே வேண்டுமானாலும் அனுமதி கிடைக்கும்.. ஏன் ஸ்பான்ஸர்ஷிப்கூட உடனடியாக கிடைக்கும். அதனை வைத்து நாம் நடத்த வேண்டியவைகளை பெரிய அளவில் பேர் சொல்லக் கூடிய அளவுக்கு நடத்தலாமே.. தனி நபர்களாக இருக்கின்றபோது இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்..

ஒரு அமைப்பின் கீழ் இருந்தால் நாளை எந்தவொரு அதிகார வர்க்கத்திடமும் நாம் தைரியமாகப் பேசலாம். குரல் கொடுக்கலாம். தனி நபர்களாக போய் பேசுவதற்கும், அமைப்பின் பெயரில் போய் பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

இனி வரும் காலங்களில் அரசும், ஆட்சி நிர்வாகமும், அரசியல் சட்டமும் வலையுலகத்தினரை பத்திரிகையாளர்களில் ஒருவராக அங்கீகரிக்காவிட்டால் பலவித பிரச்சினைகள் பதிவர்களுக்குத்தான் ஏற்படப் போகிறது. ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட் வழக்கொன்றில் "வலைத்தளங்களில் யார் என்ன எழுதினாலும் அதற்கு அவரே பொறுப்பு.. அது குற்றச்சாட்டாக இருந்தாலும், அவதூறாக இருந்தாலும், வெளியில் இருந்து எடுத்துக் கையாண்டதாக இருந்தாலும் சரி.. அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.." என்று தீர்ப்பு சொல்லியுள்ளது.

இது எப்படி இருக்கிறது எனில், ஒரு பத்திரிகையில் ஒரு அரசியல்வாதியை ஊழல்வாதியாக எழுதியிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தச் செய்தியை நீங்கள் உங்களது பதிவில் காப்பி செய்து வெளியிட்டீர்களேயானால் அந்த ஊழல் அரசியல்வாதி உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அந்த அரசியல்வாதி ஊழல் செய்தார் என்பதை நீங்கள்தான் நிரூபித்தாக வேண்டும். அந்தப் பத்திரிகையில் இருந்ததை நான் காப்பி செய்தேன் என்று சொல்லி ஜகா வாங்க முடியாது.

இதே செய்தி பத்திரிகையில் வந்திருந்தால் கட்டுரையை எழுதிய கட்டுரையாளர் நமது நிருபர் என்று எழுதியிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அப்போது அது பத்திரிகையின் ஆசிரியரைத்தான் தாக்கும். ஆனால் எந்தவொரு அரசியல்வாதிகளும் இப்போதைய நிலையில் பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து மறுப்பு அறிக்கை போடச் சொல்வதோடு விட்டு விடுவார்கள். ஆனால் நமக்கு என்ன பாதுகாப்பு..?

அதற்காக "அதையெல்லாம் ஏன் எழுதுற.. போய் நாலு சினிமா விமர்சனம் எழுதிட்டு போய்க்கிட்டே இரு"ன்னு சொல்லாதீங்க.. யோசித்துப் பாருங்கள்.. எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றுதான் இதனை சொல்கிறேன். அதற்காக இதுவே முக்கியக் காரணமும் அல்ல.. முக்கியக் காரணங்கள் நான் மேலே சொன்னவைகள் மட்டுமே..

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மீன்பாடி ஓட்டுநர்கள் சங்கம், டிரைகிளீனர்ஸ் சங்கம் என்று அவர்கள்கூட ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு தங்களது தொழிலுக்கு எந்தவிதத்தில் யாரால் பங்கம் வந்தாலும் அதனை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள் அமைப்பின் சார்பில்.. யாரும் தனி நபராகக் குரல் கொடுப்பதில்லை. நமக்குத்தான் பிரச்சினையே இல்லையே.. நாமதான் ஜம்முன்னு மகாராஜா மாதிரி இருக்கோம்னு சொன்னால் எப்படி..?

கிட்டத்தட்ட 7 அல்லது 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வலைப்பதிவுகள் அறிமுகமாகி அதில் தலைநகரான சென்னையில் மட்டும் முகம் தெரிந்து வெறும் 60 பதிவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்..? சென்னையில் இருக்கின்ற வார்டுகளின் எண்ணிக்கையே நூற்றுக்கும் மேல்..

பலரும் வாசிக்கிறார்கள்.. ஆனால் எழுதத் தயங்குகிறார்கள். அவர்களை நாம் எப்படி இழுப்பது..? இப்படி பொதுச் சேவை செய்வதற்கு யாருக்கு, எத்தனை பேருக்கு இங்கு இப்போது நேரம் இருக்கிறது..? நாம் மட்டுமே போதுமா..? நாம் இந்த இடத்தில் இருந்து விலகும்போது நமக்குப் பின்பாக ஒரு ஐயாயிரம் பேராவது சென்னையில் இருக்க வேண்டாமா..? நாம் நினைத்தால் முடியும்.. மனம் வைத்தால் முடியும்..

அமைப்பை உருவாக்குவோம்.. சந்தா உருவாக்குவோம்.. அவரவர் முடிந்த அளவுக்கு பணத்தைக் கொடுப்போம்.. நிதியினை மேம்படுத்துவோம்.. அதனை முறைப்படி பராமரிப்போம். பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்போம். வலைப்பதிவுகளை ஆரம்பிக்க நினைப்போர், எழுத நினைப்போர் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். அழையுங்கள் என்று நாம் அவர்களை அழைப்போம்.

அழைப்பு விடுத்தவர்களை சங்க அல்லது அமைப்பின் அலுவலகத்தில் ஒரு நாளில் பயிற்சி கொடுத்தனுப்புவோம்.. அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைப்போம்.. மாதத்தில் 15 நாட்களில் ஒரு நாளைக்கு ஒருவர் என்றால்கூட மாதம் 15 பேர், வருடத்திற்கு 180 பேரை நமது அலுவலகத்தின் வாயிலாகவே நாம் உருவாக்கலாமே..?

இதன் பின் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது தனியார் கல்லூரியில் அமைப்பின் சார்பில் பேசி பட்டறைகளை நடத்தினால் எத்தனை பேரை நாம் வலையுலகத்திற்குள் இழுக்க முடியும்..?

இதற்கு முதலில் என்ன தேவை..? ஒரு அலுவலகம்.. போதுமான கணினிகள்.. சொல்லித் தருவதற்கு ஒரு நபர்.. முதலில் அமைப்பில் இருப்பவர்கள் முறை வைத்து சொல்லித் தருவோம். பின்பு இதற்கென்றே தனியாக ஒருவரை சம்பளத்திற்கு நியமித்து செய்வோம்.. ஏன் முடியாது..?

எடுத்த எடுப்பிலேயே ஏன்.. எதுக்கு.. என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தால் அடுத்தக் கட்டத்திற்கு எப்படிச் செல்வது..?

இப்படியே மாதந்தோறும் நமக்கு நாமே ஒரு திரைப்படத்தைப் பார்த்து ஒப்பேத்திவிட்டு.. சென்னை வரும் பதிவர்களுக்கு வரவேற்பு கொடுத்து அவர்களை மனம் குளிரவைத்து அனுப்பிவிட்டு டாட்டா.. பை.. பை.. சொல்லிவிட்டுச் செல்வதில் யாருக்கு என்ன புண்ணியம்..?

ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப்களில் சமூக சேவைகளையும் செய்கிறார்கள். அதோடு தங்களுக்கிடையிலான குடும்ப உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தி குடும்பமாக பழகுகிறார்கள். நாம் என்றைக்காவது இதனைச் செய்திருக்கோமா..?

இரண்டாண்டுகளுக்கு முன்பெல்லாம் எந்தவொரு பதிவர் சந்திப்பிலும் "எங்க வேலை பார்க்குறீங்க..?" அப்படீன்ற கேள்விக்கு மட்டும் சரியான பதில் கிடைக்கவே கிடைக்காது.. ஏதோ ஒரு கம்பெனின்னு மட்டும்தான் சொல்வாங்க.. "வீடு எங்க இருக்கு?"ன்னு கேட்டாலும் அதுக்கும் அதுதான் பதில் கிடைக்கும். அப்போதிருந்த சூழல் அப்படி.. ஆனால் இன்றைக்கு அப்படியல்ல..

இரண்டு மாதங்களுக்கொரு முறை அமைப்பின் சார்பில் எங்கேயாவது அனைத்துப் பதிவர்களும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளலாம்.. பரஸ்பரம் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளலாம்.. தனி நபர்களாக இருந்து இதனை எப்படிச் செய்ய முடியும்..?

இது எதுவுமே வேணாம்.. ச்சும்மாவே இருப்போம் என்றால் என்ன மயித்துக்கு, என்ன எழவுக்கு.. என்ன வெங்காயத்துக்கு.. பின்னவீனத்துவத்தையும், இலக்கியத்தையும், அரசியலையும், சினிமாவையும் எழுதணும்.. அதையும் எழுதாம விட்டுட்டு அவங்கவங்க சோலியைப் பார்த்துட்டுப் போகலாமே..? எதுக்காக அங்க வாங்க. இங்க வாங்கன்னு சொல்லிக் கூப்பிட்டு பெட்ரோலையும் வேஸ்ட் பண்ணி.. நேரத்தையும் ஏன் நாம வீணாக்கணும்..? நாம செத்த பின்னாடி நூறு பேரு இரங்கல் தெரிவிச்சு பதிவு மட்டும் போட்டுட்டு அதை நம்ம பிள்ளைககிட்ட காட்டிட்டு அமைதியா இருக்கவா..?

மெஜாரிட்டியாக ஆரம்பிக்கலாம் என்பது தெரிந்த பின்பு "நான் அதனை எதிர்க்கவில்லை. ஏன் முன்பே பிளான் செய்தீர்கள் என்பறுதான் கேட்டேன்.." என்று இடக்கு மடக்காக கேள்வி கேட்டு மீண்டும் பிரச்சினையைத் திரித்ததும் 'மேதகு' பார்ட்டிதான்.. அந்தப் படபடப்பில், அனைவருமே நண்பர்களாக இருந்ததினாலும் யாரையும் கண்டித்துப் பழக்கமில்லாத காரணத்தினாலும் எனக்கும், கேபிளுக்கும் வேறு வழியே இல்லாமல் மீட்டிங்கை முடிக்க வேண்டியதாகிவிட்டது.

இத்தனையும் செய்துவிட்டு "இப்போது நீங்கள் அமைப்பை ஆரம்பித்தால் நிச்சயம் நான் சேருவேன்" என்று சொல்கின்றவரை என்னவென்று சொல்வது..? பின்பு எதற்காக இவ்வளவு பெரிய வெட்டி ஆர்ப்பாட்டம்..? இந்த அறிவுஜீவித்தனமான பேச்சுக்களுக்கெல்லாம் இந்த அர்த்தராத்திரியில் கண் முழித்து பதில் சொல்லித் தொலைய வேண்டியிருக்கிறது..

இதிலும் சினிமா பி.ஆர்.ஓ.க்கள் மாதிரி கதை ஒன்றையும் சொல்கிறார் மேதகு சிவராமன்.. அவர் கீழே இறங்கி வந்தபோது தண்டோராவும், கேபிளும் அங்கே இல்லவே இல்லையாம்.. எப்படி இருப்பார்கள்..? யாருக்காவது பேசுவதற்கு மனசு வருமா..?

பந்தல் கட்டி, தோரணம் அமைத்து தாலி கட்டுற நேரத்துல பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடுறவன், சொல்லிட்டுப் போறதுக்கு மாப்பிள்ளை சொந்தங்களையே காணோம்னு புலம்பினானாம்.. இப்படித்தான் இருக்கு இது..

எனக்கும் அங்கே இருப்பதற்கு மனசில்லைதான். ஆனால் டிவிஆர் ஸார், "கண்டிப்பா டீ வாங்கிக் கொடுத்தே ஆகணும்.." என்று வற்புறுத்தியதால் கடைக்கு வந்து நிற்க வேண்டியதாகிவிட்டது.

கேபிள் மற்றும் தண்டோரா, சூர்யா, அகநாழிகை வாசுதேவன், பலாபட்டறை இவர்களுடன் நானும் இரவு பத்தே கால் மணிவரையில் அந்தப் பகுதியில்தான் இருந்தோம்.

ஏதோ எழுதுவதற்கு ஒன்றுமே இல்லை என்று பக்கத்தை நிரப்பும் பத்திரிகை பாணியில் மேதகு சிவராமன் எழுதியிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை படித்துப் பார்த்தபோது ழான்சத்தார் ஏன் முன்பே செத்துப் போனார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது..

இதில் இன்னுமொரு காமெடி அருமைத் தம்பி அதிஷா. ஆதரித்துப் பேசிய அனைவரையும் குறுக்குக் கேள்வி கேட்டு அமைப்பை உருவாக்க எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தவர், கடைசியில் வீட்டிற்குப் போகும்போது கேபிளிடம் "நானும் சேர்கிறேன்" என்றாராம்.

நான் கடையருகே பார்த்தபோது அதிஷாவிடம் பேசினேன். "நீ பத்திரிகையாளர் சங்கத்தில் சேர்ந்துவிட்டாயா..?" என்றேன். "ஆமாண்ணே.. சேரப் போறேன்.." என்றார். "அங்க ஏன் சேரப் போற..?" என்றேன். "முதல்வர் வீடு கொடுக்கப் போறாரு.. எனக்கு வீடு வேணும்.. அதுக்காக சேரப் போறேன்.." என்றார். "சந்தோஷம்.. அதே மாதிரி நாம ஒரு அமைப்பா சேர்ந்து நாலு பேருக்கு உதவி செய்யலாமே.. இதை ஏன் எதிர்க்குற..?" என்று கேட்டேன்.. "ஏன் இப்படியே செய்யலாமே..?" என்று திருப்பிப் பதில் சொன்னார். "அப்ப உனக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா..?" என்று என் தொண்டைவரையில் கேள்வி எழுந்தது.. ஆனாலும் அப்போதைய நாகரிகம் காரணமாக அடக்கிக் கொண்டேன். இப்போது இங்கே எழுதிவிடத் தோன்றுகிறது. எழுதிவிட்டேன்.

இவருக்கு வீடு கிடைக்கிறது என்பதற்காக இவர் ஒரு அமைப்பில் உறுப்பினராகச் சேரலாமாம். ஆனால் நாம் யாராவது ஒருத்தருக்கு ஒரு நூறு ரூபாய் உதவி செய்வதற்குக்கூட அமைப்பை உருவாக்கக் கூடாதாம்.. ம்ஹும்.. தாங்க முடியவில்லை..

எப்படியிருப்பினும் அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று அரசு அங்கீகாரத்துடன் அமைப்பதாக முடிவாகிவிட்டது. இந்த அளவுக்கு பதிவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்..



இவருடைய பதிவையும் மற்றவர்களது பதிவுகளையும் பார்த்து நீ என்ன சொல்கிறாய் என முரளி மனோகர் என்னை கேட்டு படுத்துகிறான். நான் அவற்றை கூரும் முன்னால் முகமூடி சொன்ன சில விஷயங்களையும் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன்.

மொதல்ல இது மாதிரி ஆலோசனை கூட்டத்துக்கு முக்கிய சமாச்சாரம் :: ஒரு கண்டிப்பான ஒருங்கிணைப்பாளர், ஒரு தெளிவான அஜெண்டா. இது ரெண்டுமே இல்லாம வாங்க பேசிக்கலாம்னு ஒரு கூட்டத்த கூட்டிட்டு அப்புறம் சரியாவே முடிவு ஏற்படலன்னா எப்பூடி?

பக்கத்து வூட்டுக்காரன் புள்ள பெத்துக்குரானேன்னு நாமளும் புள்ள பெத்துக்க ஆசைப்பட்டா இப்படித்தான்... முதல்ல வலைப்பதிவாளர்களுக்கு எதுக்கு சங்கம்? உங்க mission statement என்ன? இதுக்கு தெளிவான ஒரு பதில முடிவு பண்ணுங்க. விஜய் கூடத்தான் முதல்வர் ஆகணும்னு (அவங்கப்பன் கவர்னர்?) ஆசைப்படுறான்.

//ஆனால் எந்தவொரு அரசியல்வாதிகளும் இப்போதைய நிலையில் பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து மறுப்பு அறிக்கை போடச் சொல்வதோடு விட்டு விடுவார்கள். ஆனால் நமக்கு என்ன பாதுகாப்பு..? //

பத்திரிக்கைகாரனுக்கு கிடைக்கும் அதிகாரமும் அங்கீகாரமும் சங்கம் வைச்சா கிடைச்சிடுமா? அது பத்திரிக்கையின் ரீச்சை பொறுத்தது அல்லவா? உண்மையான ‘சுதந்திர’ நாட்டில் என்னதான் மட்டமான பத்திரிக்கைனாலும் தராசு பத்திரிக்கையிலும் முரசொலியிலும் நடத்திய கூத்தையெல்லாம் செய்துவிட்டு எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்துவிட முடியாது... ஆனால் தமிழகத்தில்...?

//ஒரு அமைப்பின் கீழ் இருந்தால் நாளை எந்தவொரு அதிகார வர்க்கத்திடமும் நாம் தைரியமாகப் பேசலாம். குரல் கொடுக்கலாம். தனி நபர்களாக போய் பேசுவதற்கும், அமைப்பின் பெயரில் போய் பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு... ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மீன்பாடி ஓட்டுநர்கள் சங்கம், டிரைகிளீனர்ஸ் சங்கம்..//

மேற்கண்ட எல்லா சங்கத்திலும் அதன் உறுப்பினர்களுக்கென்று ஒரு பொது புள்ளி உண்டு. அப்புளிக்கென்று ஒரு பாதிப்பு வரும்பட்சத்தில் அதில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். பல்வேறு தொழிலை செய்துகொண்டு குடும்பத்திற்கும் இதர பொழுதுபோக்கிற்கும் நேரம் செலவிட்டது போக மிச்சமிருக்கும் நேரத்தில் மீத பர்ஸ்டேய் போடும் சிலர் சங்கம் வைத்துதான் நட்பு வளர்க்க வேண்டும் என்பதில்லை. சும்மா காந்தி சிலைக்கருகில் சுண்டல் சாப்பிட்டும் வளர்க்கலாம்.

செவ்வாய், மார்ச் 30, 2010 இரவு 3:22:00
முகமூடி said...
//ச்சும்மாவே இருப்போம் என்றால் என்ன மயித்துக்கு, என்ன எழவுக்கு.. என்ன வெங்காயத்துக்கு.. பின்னவீனத்துவத்தையும், இலக்கியத்தையும், அரசியலையும், சினிமாவையும் எழுதணும்.. அதையும் எழுதாம விட்டுட்டு அவங்கவங்க சோலியைப் பார்த்துட்டுப் போகலாமே..? //

அதாங்க வலைப்பதிவளர்களின் அடிப்படை சோலியே.. எவனவனுக்கு எழுத்து வருதோ, அல்லது எழுதறதுக்கு ஏதாவது ஒண்ணு நம்மகிட்ட இருக்கோன்னு தோணுதோ அவனவன் தன்னளவில் கட்டற்ற சுதந்திரத்தோட எந்தவித நிர்பந்தமோ கவலையோ இல்லாமல் எழுதுவதுதான் வலைப்பதிவு. ஏற்கனவே அதெல்லாம் மாறிப்போய் கொஞ்ச கொஞ்சமா கூட்டணி சேர்ந்துகிட்டு இப்படி எழுதினா அந்த பிரபல பதிவருக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு சென்சர்... தனக்கு பிடிச்ச பதிவர் எழுதினா அது குப்பைனா கூட ஆகா ஓகோன்னு முதுகு சொறிதல்னு இருக்கிற கூத்து போதாதுன்னு இப்போ சங்கம் வேறயா...

// அமைப்பை உருவாக்குவோம்.... to ....செல்வதில் யாருக்கு என்ன புண்ணியம்..? //

சித்தூர் சோசியன் ஒருத்தன் இருக்கான்... அவன்கூட இந்த மாதிரி பல திட்டங்கள் வச்சிருக்கான்னு அப்பப்போ சனாதிபதிக்கு எல்லாம் தந்தி அடிப்பானாம். அதுல எதையாவது படிச்சிட்டு இவன் ஒரு மறை கழண்ட கேஸுன்னு நினைக்காதவங்க கைதூக்குங்க பாப்போம். பொது புத்தி அப்படித்தான் நினைக்கும். அது மாதிரி பலருக்கும் பல நினைப்பு வரத்தான் செய்யும்.. உடனே ஓவரா அதுக்கு செண்டிமெண்ட் பீலிங் கொடுக்காதீங்க.

// பலரும் வாசிக்கிறார்கள்.. ஆனால் எழுதத் தயங்குகிறார்கள். அவர்களை நாம் எப்படி இழுப்பது..? இப்படி பொதுச் சேவை செய்வதற்கு // இது எப்படி சேவை என்ற கணக்கில் வருகிறது?

மீண்டும்.. முதல்ல வலைப்பதிவாளர்களுக்கு எதுக்கு சங்கம்? உங்க mission statement என்ன? இதுக்கு தெளிவான ஒரு பதில முடிவு பண்ணுங்க. சங்கத்தின் சட்ட திட்டங்கள் என்ன? அடிப்படை அம்சங்கள் என்ன? என்ன குறிக்கோள், அதை அடையும் வழிமுறைகள் என்ன? சங்கத்தின் எல்லை எது? மூர்த்தி மாதிரி ஆட்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு சங்கம் வக்கீல் அமைக்குமா? உறுப்பினர்களுக்கு தகுதிகள் என்ன? ஜோக்குகள் காப்பி பேஸ்ட் செய்து அதை பதிவாக்கி மற்ற பதிவுகளில் மீதபர்ஸ்டேய் அல்லது ரிப்பீட்டேய் சொல்பவர்கள் பதிவர்களா இல்லை பர்ஸ்டு பெஞ்சில் உட்கார்ரவ்ன் எல்லாம் பூணுல் போடுறானா என்று உன்னிப்பாக பார்த்து பதிவு எழுத வேண்டுமா? இதெல்லாம் முதல்ல சொல்லுங்க... அவசியமில்ல அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று (என்ன எழவுடா இது, இதுல கூட எதுன்னே தெரியாம எதையாவது ஒன்னா) அமைச்சே தீருவோம் அப்படீன்னு வெறியோட இருந்தீங்கன்னா.. ஆல் த பெஸ்ட்...

- நேர்மையான தலைமையோ தேவையான குறிக்கோளோ இல்லாத எந்த சங்கத்திலும் இதுவரை சேராத உங்க பெயர் தெரியாத கன்ப்யூஸ்ட் குழுமத்தில் ரிடையர்டு பதிவர் (ரிடையர்டு பதிவர்கள எல்லாம் உங்க சங்கத்துல உண்டா?)

செவ்வாய், மார்ச் 30, 2010 இரவு 3:22:00
முகமூடி said...
- நேர்மையான தலைமையோ தேவையான குறிக்கோளோ இல்லாத எந்த சங்கத்திலும் இதுவரை சேராத (உங்க பெயர் தெரியாத கன்ப்யூஸ்ட் குழுமத்த சொல்லல..அதில் சேரும் குறிக்கோளும் இல்லை) ரிடையர்டு பதிவர் (ரிடையர்டு பதிவர்கள எல்லாம் உங்க சங்கத்துல உண்டா?)



என்னோட கருத்துக்கள்? எல்லாத்துக்கும் முன்னால் ஒரு கோ-ஆர்டினேட்டர் முதலிலிருந்தே செயல் பட்டிருக்க வேண்டும் என்பதை கூற விரும்புகிறேன். பேசாமல் ஞாநியையே அந்த வேலையை செய்ய விட்டிருக்கலாம்.

வேறு என்ன சொல்ல வேண்டும்? குழுமம் அமையட்டும். அதன் செயல்பாட்டை பார்த்து முடிவு செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

150 comments:

Kolipaiyan said...

//அனைவருமே நண்பர்களாக இருந்ததினாலும் யாரையும் கண்டித்துப் பழக்கமில்லாத காரணத்தினாலும் எனக்கும், கேபிளுக்கும் வேறு வழியே இல்லாமல் மீட்டிங்கை முடிக்க வேண்டியதாகிவிட்டது.//

அன்று நானும் வந்திருந்தேன். மறுத்து பேசிய அதே நண்பர்கள் பிறகு சம்மதம் சொன்னபோது ....!

Anonymous said...

வேலை இல்லா வேடுவராஜன் வேதாளத்தை பிடித்து சிரைத்த கதையா அல்லவா இருக்கு ? இப்ப இந்த மாதிரி அமைப்பு இல்லை என்று யார் அழுதா ?

ஈரோடு வலை ரசிகர் மன்றம்

Kiruthigan said...

தொடரட்டும் சாதனைகள்..

Dr.Rudhran said...

ஜாதிவெறியுடனும் ஜாதித்திமிருடனும் தொடர்ந்து பேசும்போது என்னை இழுப்பது நல்லதல்ல. இது எச்சரிக்கை.

ராஜேஷ், திருச்சி said...

what are trying to say here (in this post) Mr Raghavan???
am confused..
this is a mere cut and paste from Tamilan's blog ...

total lines 422
cut and paste from other blog 411
dondu's writing 11

u cud have just given the links to their blog.

nothing more than you added one more post to your blog count.. :)

dondu(#11168674346665545885) said...

@ருத்ரன்
தேவையற்ற பார்ப்பன வெறுப்பை உமிழும் உங்களது கருத்துக்கள்தான் என்னை அவ்வாறு எழுத வைக்கின்றன. கூல் கூல் ருத்ரன்.

டோண்டு ராகவன்

KANTHANAAR said...

/////அவரது கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்த கருத்து கந்தசாமிகள், மனநலமில்லாத மருத்துவர் ஆகியோரது பார்ப்பன வெறுப்பு //////
நண்பரே... நீங்கள் குறிப்பிடுவது என்னை அல்ல என்றே நான் நினைக்கிறேன்... காரணம் நான் எதிலும் கலந்து கொள்ளவில்லை. நிற்க.. அப்படி என்னைத்தான் என்றால்.. ஒரு விசயம் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்... நான் cause and effect மற்றும் விஞ்ஞான பூர்வமானதை மட்டும் நம்பும் ஒரு சாதாரணன்.. நான் சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி என் பின்னுாட்டம் சற்று காட்டமாக இருந்தால் அது அந்தக் கட்டுரை எழுதப் பட்ட விதத்தில்தான் பிரச்சனை இருக்குமே ஒழிய வேறில்லை.. மனிதனை மதிக்கத் தெரிந்தவன்.. அப்படியே சக மனிதர்கள் மனிதத் தன்மையோடு அணுகவேண்டும் என்ற கோட்பாட்டில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்... சரி தற்போதைய பதிவர் பிரச்சனை பற்றி ஒரு லைனில் என் கருத்து....... தற்போது உயர்சாதி பார்ப்பது என்பது மட்டுப் பட்டுள்ளது மாறாக பணசாதி மட்டுமே கோலோச்சும் காலமாக மாறி வருகிறது.. இதுவும் ஒரு நவீன தீண்டாமையே.. இதை அனைவரும் சேர்ந்துதான் மாற்ற முடியும்.....

hayyram said...

// இது எச்சரிக்கை//

ஐயய்யோ ருத்ரன் ஆட்டோ அனுப்பப்போறாரு போலருக்கே. டோண்டு சார்! எதுக்கும் ஜாக்ரதையா இருங்க.

Anonymous said...

//ஜாதிவெறியுடனும் ஜாதித்திமிருடனும் தொடர்ந்து பேசும்போது என்னை இழுப்பது நல்லதல்ல. இது எச்சரிக்கை.//

AYYO Paavam.

dondu(#11168674346665545885) said...

@ kantha
நீங்கள் திடீரென எங்கிருந்து வந்தீர்கள்? அந்தப் பதிவில் நீங்கள் பின்னூட்டம் கூட இடவில்லையே.

பிறகு எனது ஜிமெயில் ஆர்கைவ்சில் போய் kantha என தட்டிப் பார்த்தல் வேறு பழைய பதிவுகளில் உங்கள் பின்னூட்டம் கண்டேன்.

இதுவரை உங்கள் பெயரை காந்தா என்றுதான் ப்டித்து வந்திருக்கிறேன். இப்போதுதான் புரிகிறது, அது கந்தா என்னும் கந்தசாமி என.

சாரி சார் கருத்து கந்தசாமி என்பது ஒரு சொலவடை. உங்களை குறிக்கவில்லை.

நான் குறிப்பிட்டவர் வேறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Uma said...

ஆமாமாம். மனநலமில்லாத மருத்துவரும் சொலவடைதான். மூளையில்லாத மனிதர்களும் சொலவடைதான்! பார்ப்பன வெறுப்பு தேவையற்றது என்று பார்ப்பனரல்லாதோர் சொல்லட்டும்!

Uma said...

@hayyram,
நீங்கதான் ப்ரோஃபைல் கூடக் காட்டாமல் அதிஜாக்கிரதையாக இருக்கிறீர்களே. அவ்வளவு அக்கறை இருந்தால் டோண்டுவிற்கும் சொல்லிக் கொடுங்களேன் :) நீங்கள் காப்பாற்றிக் கொண்டிருப்பது உங்கள் பார்ப்பனீயத்தைத் தவிர கோழைத்தனத்தைத் தான். அல்லது இரண்டும் ஒன்றோ? தெளிவு படுத்துங்கள்.

dondu(#11168674346665545885) said...

//பார்ப்பன வெறுப்பு தேவையற்றது என்று பார்ப்பனரல்லாதோர் சொல்லட்டும்!//
அவர்கள் ஏன் சொல்லப்போகிறார்கள்? தலித்துகள் அல்லாத அபார்ப்பனர்கள் தலித்துகளுக்கு தாங்கள் செய்யும் வன்கொடுமைகளை எல்லாம் செய்து விட்டு உயர் சாதீயம் என பேச்சு வரும்போது மட்டும் அதை சௌகரியமாக பார்ப்பனீயம் என லேபல் கொடுத்துக் கொண்டு தங்களுக்கு அலிபை தேடிக் கொள்பவர்களுக்கு பார்ப்பன வெறுப்பு ரொம்பவுமே தேவைதானே.

ஹிட்லர் காலகட்டத்தில் யூதர்களை கிரிமினல்கள் இனம் என சொன்னதில் பல மனநலம் இல்லாத மருத்துவர்களும் இருந்தனர் என்பது சரித்திரம். மெண்டல்ஸ் ஒருவர் போதாதா?

ஐரோப்பாவிலும் இப்படித்தான் பேச்சாக ஆரம்பித்து வினையாகப் போனது. சாதாரண மக்களை விடுங்கள். தங்களை அறிவியலாள்ர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் செய்ததுதான் பெரிய கொடுமை.

ஆர்வி அவர்களுடன் பேசும்போது அவர் பார்ப்ப்பனர் என்பது அவரது ஜெனோடைப் என திருவாய் மலர்ந்தருளினவர் இந்த மனநலம் இல்லா மருத்துவர். இம்மாதிரி அவிஞ்ஞான முறைப்படி சிந்திப்பவரிடம் வரும் நோயாளிகள் ஐயோ பாவம்தான்.

இப்போது கூட அவர் எனக்கு ஃபிசிகலாக மிரட்டல் விடுத்துள்ளார். அவரது மன அமைதிக்காக ஏதேனும் செய்வது நல்லது.

பார்ப்பனர்கள் என்றாலே சிவப்பு துணியை கண்ட காளை போல மிரளுகிறார். என்ன ஆச்சு?

//நீங்கள் காப்பாற்றிக் கொண்டிருப்பது உங்கள் பார்ப்பனீயத்தைத் தவிர கோழைத்தனத்தைத் தான். அல்லது இரண்டும் ஒன்றோ?//

டோண்டு ராகவன் கோழை என அவனது விரோதி கூட கூற மாட்டான். போலி டோண்டுவே கடைசியில் ஒன்றுமில்லாமல் போனான்.

ஆ ஊன்னா பாப்பான் என்று சொன்னால் இந்த சண்டைக்கார பாப்பான் வந்து என்னடா ஜாட்டான் என்றுதான் கேட்பான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Dr.Rudhran said...

டோண்டு ராகவன் கோழை என அவனது விரோதி கூட கூற மாட்டான்.
is it so?
let me see your courage/conviction/commonsense.
i warn you again.

Uma said...

@டோண்டு,
ஹாய்ராமிற்கு நீங்கள் ஸ்போக்ஸ்மேனா அல்லது பார்ப்பனீயத்திற்கு நீங்கள் ஸ்போக்ஸ்மேனா? இல்லை நீங்களும் ஹாய்ராமும் ஒன்றா? அப்படி என்றால் பாலா யார்? chinnappenn 2000 யார்?
பார்ப்பனீயத் திமிர் எங்கள் அனுபவம். கோழைத்தனமும். ஒன்றைப் பற்றி பேசும் போது வேறு ஏதாவதைப் பற்றி உளறுவது போல் தாக்குவது பார்ப்பனக் குயுக்தி. நேரில் பேசுவோமே?

ப.கந்தசாமி said...

சென்னை பதிவர்கள் குழுமம் தமிழ்நாட்டுக்கு முன்மாதிரியாக செயல்படும், கோவையிலும் அதைப்போன்று ஒன்று ஆரம்பிக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்- யோசிக்கிறேன்-யோசிப்பேன்.

ஆனால் என் உயிர் போனாலும் ஒரு பதிவர் குழுமம் ஆரம்பித்து அதனால்தான் போகவேண்டுமென்ற விதி இருந்தால் விட்டுப்போகுமா என்ன?............:-)

(டோண்டு ராகவன் மன்னிப்பாராக)

வாக்காளன் said...

போலி டோண்டுவை ஒழிக்க கூட பார்பனரல்லதோர் உதவியுடன் தன செய்ய முடிந்தது டோண்டு சாரால்.. இதை அவரே சொன்னது (ஒரு பதிவில்..)
டோண்டுவுக்கு சில நேரங்களில் மட்டும் மற்றவர் உதவி தேவை.. இது தானே பக்க பார்பனீயம் , அதைதானே சண்டைக்கார பார்பான் டோண்டு செய்வர்.. ! அவரை கேள்வி கேட்டல் அவர் உடனே "மனநலம் அற்ற மருத்துவர் என்பார்" .. என்ன செய்வது.. டோண்டு நீதி . கவிழ்ப்பதில் கில்லாடிகள் அவார்கள்

Uma said...

//இப்போது கூட அவர் எனக்கு ஃபிசிகலாக மிரட்டல் விடுத்துள்ளார்.// அப்படியா? இல்லை அரண்டவன் மிரண்டுதான் "பார்ப்பானா"?

Anonymous said...

விசுவின் புகழ் பெற்ற டயலாக் தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. விட்டுத் தள்ளுங்க டோண்டு சார்!

குடும்பமா சேர்ந்து தாக்குதலா?

இது நிச்சயமாக ஒரு மிரட்டல். நீங்கள் புகார் கொடுக்கலாம்.

Anonymous said...

//டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.//

ithuvarai katrathu kaiman alavu.
kallaathathu kadal alavu.

Anonymous said...

\\ஜாதிவெறியுடனும் ஜாதித்திமிருடனும் தொடர்ந்து பேசும்போது என்னை இழுப்பது நல்லதல்ல. இது எச்சரிக்கை.//

//இப்போது கூட அவர் எனக்கு ஃபிசிகலாக மிரட்டல் விடுத்துள்ளார்.// அப்படியா? இல்லை அரண்டவன் மிரண்டுதான் "பார்ப்பானா"?

சமுதாயத்தில் மதிப்பிற்குரிய நிலையிலிருக்கும் மருத்துவரும் அவரது மனைவியும் குழாயடிச் சண்டை போடுவது வேதனையான விஷயம். மனநலத்தின் அடிப்படையே வெறுப்பின்றி வாழ்தல் எனும்போது, இப்படியான பார்ப்பன வெறுப்பைச் சுமந்து கொண்டு எப்படி வைத்தியம்/ஆலோசனை தருகிறார் மதிப்பிற்குரிய ருத்ரன் சார்?

Anonymous said...

ஐயா,
தயவு செய்து பார்ப்பனர் மீதான தனிமனித தாக்குதல் வேண்டாமே.
உமா மேடம்,மனிதம் வளர்ப்போம்.நாளையே உங்களுக்கோ அல்லது ருத்ரன் சாருக்கோ பெரிய ஆக்ஸிடெண்ட் ஆகி பெரிய ரத்த இழப்பு,அரிய வகை ரத்தம் எங்கும் கிடைக்கவில்லை.
பாப்பான் தான் ரத்தம் கொடுக்க வரான்.
வேண்டாம் என்பீர்களா?
இன வெறுப்பை விடுங்கள்.இது யூதர்கள் மீதான் ஜெர்மானியரின் வெறுப்பை விட மோசமாயுள்ளது.
என்னிடம் கூகிள் ஐடி இல்லை.நான் பார்ப்பானும் அல்ல.அனானியாக வந்ததற்கு தய்வுசெய்து மன்னிக்கவும்.
புண்ணியகோடி.

தமிழ் குரல் said...

டோண்டு சார்,

இந்த சங்கத்தை கொண்டு என்ன சாதிக்க போகிறீகள்?

சோவை அழைத்து விழா நடத்த பயன்படுமா?

சங்கம் என்றால் பொதுவானர்வர்களை கொண்டு செய்ய வேண்டியது... விருப்பு, வெறுப்பிற்கு அப்பாற்ப்பட்டு இருக்க வேண்டியது...

உண்மைத் தமிழன் என்பவர் நடுநிலையாளரா? அவர் ஒரு ஜெயலலிதா ஆதரவாளர், அப்படி என்றால், தமிழ் வலைபதிவாளர்கள் சங்கம், ஜெ... கட்சியின் கிளை அமைப்பாகி விடும் எனும் சந்தேகம் இயற்கையில் தோன்றுமே?

தமிழ் வலைபதிவிற்கு... மிக அதிக பங்களிப்பை கொடுத்திருக்கும் பாலபாரதி போன்றவர்களை இது தொடர்பாக யாராவது நாடினார்களா?

இப்போது நடபதெல்லாம்... உண்மைத் தமிழன் போன்றவர்கள்... சங்கம் என சொல்லி கொண்டு... தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்
ஆக பார்க்கிறார்களே...

உண்மைத் தமிழனின் நடவடிக்கையை காணும் போது... கடந்த 2009ஆம் தேர்தலின் போது... ஈழ ஆதரவு இணைய குழுமத்தில் புகுந்த... வடகலை ஐயங்கார் கல்வி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர்... ஜெ... கட்சியின் விண்ணபங்களை அனுப்பி ஜெ... கட்சிக்கு ஆள் சேர்த்ததே நினைவுக்கு வருகிறது...

ராஜேஷ், திருச்சி said...

Doctors, Leave this Dondu ... you can wake up only those who are sleeping.. not those who are acting as if they are sleeping..!

DONDU SIR, you continue to play ! no problems sir.. you are the best and you are not the typical brahmin who follow bramaneeyam..!

//ஒன்றைப் பற்றி பேசும் போது வேறு ஏதாவதைப் பற்றி உளறுவது போல் தாக்குவது பார்ப்பனக் குயுக்தி. //

perfect example.. 100% parpaneeyam done by parpanars.. I have a live experience.. it just happend toda

will share it later..

smart said...

//ஆமாமாம். மனநலமில்லாத மருத்துவரும் சொலவடைதான். மூளையில்லாத மனிதர்களும் சொலவடைதான்! பார்ப்பன வெறுப்பு தேவையற்றது என்று பார்ப்பனரல்லாதோர் சொல்லட்டும்//

உமாக்கா,
நீங்கள் எதை சொல வடை என்கிறீர்கள்? ஏன் வடை சுடுகிறேர்கள்? நீங்களும் மனநலம் பாதிக்க பட்டுவிட்டேர்களா?

smart said...

//ஜாதிவெறியுடனும் ஜாதித்திமிருடனும் தொடர்ந்து பேசும்போது என்னை இழுப்பது நல்லதல்ல. இது எச்சரிக்கை//

dear rudran,

அவர் கலைத்திறனுடன் உங்களை இழுத்துள்ளார் போல கலைக்கண்ணுடன் பாருங்கள். பழைய நாத்திகத் தீவிரவாதத்தை கையில் எடுக்காதீர்கள் PLEASE.

'ஜாதித்திமிர்' என்பதை எந்த psychology புத்தகத்தில் படித்தீர்கள்?

smart said...

//ஹாய்ராமிற்கு நீங்கள் ஸ்போக்ஸ்மேனா அல்லது பார்ப்பனீயத்திற்கு நீங்கள் ஸ்போக்ஸ்மேனா? இல்லை நீங்களும் ஹாய்ராமும் ஒன்றா? அப்படி என்றால் பாலா யார்? chinnappenn 2000 யார்?
பார்ப்பனீயத் திமிர் எங்கள் அனுபவம். கோழைத்தனமும். ஒன்றைப் பற்றி பேசும் போது வேறு ஏதாவதைப் பற்றி உளறுவது போல் தாக்குவது பார்ப்பனக் குயுக்தி. நேரில் பேசுவோமே?//


correct it
ஒன்றைப் பற்றி பேசும் போது வேறு ஏதாவதைப் பற்றி உளறுவது போல் தாக்குவது பார்ப்பனக் குயுக்தி

as
ஒன்றைப் பற்றி பேசும் போது வேறு ஏதாவதைப் பற்றி உளறுவது போல் தாக்குவது rudran's family(terrorist) குயுக்தி

நீங்கள் தானே அப்படி பேசுகிறேர்கள்

ராமுடு said...

Mr.Dondu Sir,
Leave this. Don't take it serious.

Others:

Dont understand why this much of aggresiveness and pin pointing individual with caste & religion? Are we in stone age period? We should use blog to share our good experience and it should be for the betterment of society.

Pls stop writing about religion & caste politics.

Regards
Ramudu.

Anonymous said...

\\ஜாதிவெறியுடனும் ஜாதித்திமிருடனும் தொடர்ந்து பேசும்போது என்னை இழுப்பது நல்லதல்ல. இது எச்சரிக்கை//

வினவு கும்பலோட டாக்டர் சார் குலவும்போதே நெனச்சேன். இப்போ எச்சரிக்கை விடறாரு. நாளைக்கே மருதையனோட வந்து என்னத்தையாவது செஞ்சு வைக்கப் போறார். உஷார் டோண்டு சார்.

முகமூடி said...

”“Be more concerned with your character than your reputation, because your character is what you really are, while your reputation is merely what others think you are” என்று ஒரு quote உண்டு...

தமிழகத்தில் மனநல மருத்துவர் என்றாலே பெயர் சொல்லக்கூடியவராய் இருந்த/ப்பவர் வலைப்பதிவு எழுத வந்தபின் தெரியும் அவரது இன்னொரு முகம் ஏமாற்றம்/அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது... ரெப்யூடேஷன் பற்றி அவர் கவலைப்படாதவராய் இருக்கலாம்... ஆனால் அவரது எண்ணங்கள் எழுத்துக்களாய் மாறி, பதியப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை கூடக்கூட அந்த அளவு அவரது கேரக்டர் வெளிப்பட்டு ஜாதீய பாம்புகளை இன்னும் எந்த எந்த எதிர்பார்க்காத புற்றுக்களில் எல்லாம் பார்க்க வேண்டுமோ என்ற ஆயாசமே மேலோங்குகிறது....

**

உமா.. ஹாய்ராமிற்கு டோண்டு ஸ்போக்ஸ்மேனா என்று உங்களுக்கு கேள்வி எழுவதை போலவே ருத்ரனுக்கு நீங்கள் மனைவி என்ற காரணத்தால் ஸ்போக்ஸ்வுமன் வேலை பார்க்கிறீர்களே அது அவசியமா என்று பலருக்கும் கேள்வி எழுகிறது. ஒரு சாதாரண பதிவராகத்தான் உங்கள் கருத்தை பதிகிறீர்கள் என்று ஜோக் அடிக்காதீர்கள்.

பார்ப்பன வெறுப்பு தேவையற்றது என்று பார்ப்பனரல்லாதோர் சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்வீர்களா? அதற்கு முதலில் சொல்பவன் பார்ப்பானா இல்லையா என்ற ஆராய்ச்சியிலிருந்து விடுபடவேண்டுமே? அது உங்களுக்கு சாத்தியமா?

”அரண்டவன் மிரண்டுதான் "பார்ப்பானா"?” என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... ”இது எச்சரிக்கை / let me see your courage/conviction/commonsense. i warn you again” என்பதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று ஒரு சாதா வலைபதிவர் பார்வையில் அல்லாமல் அவர் மனைவி ஆகவே அவரை மற்றவரை விட நன்றாக புரியும் என்ற அளவில் நீங்கதான் அருஞ்சொற்பொருள் விளக்குங்களேன்...

dondu(#11168674346665545885) said...

முகமூடி அவர்களின் பின்னூட்டத்தை மஉறுத்துவதிலும் பிரச்சினை, பிளாக்கருக்கு என்ன ஆயிற்று என்று புரியவில்லை. அதையும் இங்கே கட் அண்ட் பேஸ்ட் செய்கிறேன்.

முகமூடி
to me

show details 7:19 AM (22 minutes ago)

- Hide quoted text -
முகமூடி has left a new comment on your post "பதிவர் குழுமம் - குழந்தைக்கு பல் முளைக்கும் பிரச்ச...":

”“Be more concerned with your character than your reputation, because your character is what you really are, while your reputation is merely what others think you are” என்று ஒரு quote உண்டு...

தமிழகத்தில் மனநல மருத்துவர் என்றாலே பெயர் சொல்லக்கூடியவராய் இருந்த/ப்பவர் வலைப்பதிவு எழுத வந்தபின் தெரியும் அவரது இன்னொரு முகம் ஏமாற்றம்/அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது... ரெப்யூடேஷன் பற்றி அவர் கவலைப்படாதவராய் இருக்கலாம்... ஆனால் அவரது எண்ணங்கள் எழுத்துக்களாய் மாறி, பதியப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை கூடக்கூட அந்த அளவு அவரது கேரக்டர் வெளிப்பட்டு ஜாதீய பாம்புகளை இன்னும் எந்த எந்த எதிர்பார்க்காத புற்றுக்களில் எல்லாம் பார்க்க வேண்டுமோ என்ற ஆயாசமே மேலோங்குகிறது....

**

உமா.. ஹாய்ராமிற்கு டோண்டு ஸ்போக்ஸ்மேனா என்று உங்களுக்கு கேள்வி எழுவதை போலவே ருத்ரனுக்கு நீங்கள் மனைவி என்ற காரணத்தால் ஸ்போக்ஸ்வுமன் வேலை பார்க்கிறீர்களே அது அவசியமா என்று பலருக்கும் கேள்வி எழுகிறது. ஒரு சாதாரண பதிவராகத்தான் உங்கள் கருத்தை பதிகிறீர்கள் என்று ஜோக் அடிக்காதீர்கள்.

பார்ப்பன வெறுப்பு தேவையற்றது என்று பார்ப்பனரல்லாதோர் சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்வீர்களா? அதற்கு முதலில் சொல்பவன் பார்ப்பானா இல்லையா என்ற ஆராய்ச்சியிலிருந்து விடுபடவேண்டுமே? அது உங்களுக்கு சாத்தியமா?

”அரண்டவன் மிரண்டுதான் "பார்ப்பானா"?” என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... ”இது எச்சரிக்கை / let me see your courage/conviction/commonsense. i warn you again” என்பதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று ஒரு சாதா வலைபதிவர் பார்வையில் அல்லாமல் அவர் மனைவி ஆகவே அவரை மற்றவரை விட நன்றாக புரியும் என்ற அளவில் நீங்கதான் அருஞ்சொற்பொருள் விளக்குங்களேன்...

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Posted by முகமூடி to Dondus dos and donts at March 31, 2010 7:19 AM
Reply

Forward

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அதியமானின் ஒரிஜினல் பின்னூட்டங்கள் இப்போது வந்து விட்டதால், நான் கட் அண்ட் பேஸ்ட் செய்து போட்டதை எடுத்து விடுகிறேன். ஆனால் அவருக்கு நான் அளித்த பதிலை மட்டும் ரீடெய்ன் செய்து கொள்கிறேன்.

@அதியமான்
நீங்களே பார்த்தீர்களே, எவ்வாறு இப்போதும் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன.

ஒரு குழுவினர் மேல் இத்தனை வன்மத்துடன் இருப்பது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையே. பார்ப்பனர்களது ஜெனோடைப் என்ற ரேஞ்சுக்கு பேசுவதெல்லாம் அறிவியலாளர் ஒருவருக்கு அழகல்ல. அதைத்தான் குறிப்பிட்டேன்.
மற்றப்படி ருத்ரனுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் என்ன சண்டை இருக்க முடியும்?


அன்புடன்,
டோண்டு ராகவன்

hayyram said...

//டோண்டு ராகவன் கோழை என அவனது விரோதி கூட கூற மாட்டான்.
is it so?
let me see your courage/conviction/commonsense.
i warn you again.///

டோண்டு சார் எதுக்கும் முன் ஜாக்கிரதையா டிராபிக் ராமசாமி மாதிரி ஒரு போலீஸ் காவல் கேட்டு வைங்க. பயங்கரமா மெரட்டராங்க. டோண்டு மேல பயங்கர காண்டுல இருக்காங்க போலருக்கே. நீங்க யார்கிட்டயும் மாட்டிக்காம நல்லா இருக்கனும்னு நான் ஆண்டவன வேண்டிக்கிறேன் சார்.

hayyram said...

//@hayyram,
நீங்கதான் ப்ரோஃபைல் கூடக் காட்டாமல் அதிஜாக்கிரதையாக இருக்கிறீர்களே. அவ்வளவு அக்கறை இருந்தால் டோண்டுவிற்கும் சொல்லிக் கொடுங்களேன் // என் அன்பிற்குரிய சகோதரி உமாவே! உங்கள் மீது எனக்கு நிறைய அன்பும் மரியாதையும் இருக்கிறது. நீங்கள் இவ்வளவு அநாகரீகமாக குடும்பத்தோடு ஜாதி வெறி பிடித்தவர்களாகவும் அதீத கோபத்தால் மனநலம் பாதிக்கப்பட்டும் இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு பரிதாபமாக இருக்கிறது. எல்லோரிடமும் அன்பு காட்டியே பழகுங்கள். அன்பும் கருணையும் சாதிக்காததை அதிகாரம் சாதிக்காது சகோதரி. அன்போடு ஒருவரை அனுகத்தெரியாதவர் எப்படி ஏற்கனவே அன்பில்லா நோயால் பீடிக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு அன்போடு வைத்தியம் செய்ய முடியும் என்பது கேள்விக்குறி. மனநோயாளிகள் ஏற்கனவே மனநோய் உள்ளவரிடத்தில் எப்படிக் குணப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதும் ஆச்சரியம். இந்த சந்தேகங்களை உண்டாக்குபவர்கள் கோபக்குடும்பமான நீங்களே அன்றி வெளி சமூகம் அல்லவே சகோதரி. தயவு செய்து அக்னியைக் கொட்டாதீர்கள். அன்பும் கருணையும் கொண்டு அரவனைத்துப்பழகுங்கள். அப்படி அன்போடு பழகினால் , உங்களை யாரேனும் திட்டினால் டோண்டுவே டோன் டூ திஸ் என்று சத்தம் போடுவார். அன்பே ஜெயம் சகோதரி. மேலும் டோண்டு சாருக்கு சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு அவர் சிறியவர் அல்ல. அவருக்கு தானே கற்றுக்கொள்ளத் தெரியும் என்பது அடியேனின் கருத்து. தங்கள் அன்பிறிகும் அறிவுரைக்கும் நன்றி சகோதரி உமா.

dondu(#11168674346665545885) said...

இது என்ன யட்சிணி வேலை என புரியவில்லை. அதியமானின் பின்னூட்டங்கள் மீண்டும் காணவில்லை. ஆகவே அவற்றை கட் அண்ட் பேஸ்ட் செய்து போடுகிறேன்.

K.R.அதியமான் has left a new comment on your post "பதிவர் குழுமம் - குழந்தைக்கு பல் முளைக்கும் பிரச்ச...":
my comment in Sivaraman's post can be reposted here too :

அடக்கடவுளே ! ‘சங்கம்’ ஆரம்பிக்ககும் முன்னாலேயே இத்தனை குழப்பங்கள் மற்றும் ‘விவாதங்களா’ ? ஞாநி தம் அனுபவங்களை பற்றி சென்னதை நியாபகப்படுத்திக்க வேண்டும் !

நண்பர்களே, freeஆ உடுங்கப்பா. இத்தனை விவாதம் செய்யும் அளவிற்க்கு பெரிய விசியம் அல்ல இதில். தொழிற் சங்கங்கள் அல்லது லயன்ஸ் கிளப் அல்லது ’முற்போக்கு’ எழுத்தாளர் சங்கம் போல நாம் உருவாக்கப்போகும் சங்கம் அல்லது குழுமம் ’செயல்’ பட போவதில்லை. சும்மா ஒரு informal forum. Unregisteredஆக கூட முதலில் துவங்கலாம். பதிவர்கள் பற்றிய ஒரு data base இருந்தாலே கூட போதும்.
ஒரு managing committee இருந்தால் கூட போதும். (அண்ணன் தண்டோரா, நர்சிம், கேபிள் சங்கர், பொன் வாசுதேவன், உண்மை தமிழன், அய்யா T.V.R, பைத்தியக்காரன் போன்ற சில முன்னோடிகள் அந்த கமிட்டியில் இருந்தால் கூட போதும்) தலைவர், செயலாளர் போன்றவர்களை பிறகு முடிவு செய்து கொள்ளலாம். அந்த கூகுள் group இல் அனைவரும் சேர்ந்து கொண்டால் கூட ஒரு ஆரம்பம்.

Non Resident Indian போல சென்னையில் வசிகாத உறுப்பினர்கள் என்றும் ஒரு வகை உறுப்பினர்களை சேர்க்கலாம். Chennai Resident member and Non-resident member. அவரவர் விருப்பம். அலுவலகம் யாராவது ஒருவர் தம் அலுவலகத்தில் ஒரு மூலையை அளித்தால் புண்ணியமுண்டாகும். (அண்ணன் தண்டோரா பெருந்தன்மையுடன் அளிப்பார் என்று நம்புகிறேன் !! ) சந்திக்கும் இடமாக வழக்கம் போல Discovery book palace அல்லது பூங்கா அல்லது மெரினா. தேவை பட்டால் ‘நன்கொடை’ அல்லது சந்தா வாங்கி செலவுகளை பகிர்ந்துகொள்ளாம். No hard and fast rules. Just an informal forum for better co-ordination and exchange of messeges and info. உரையாடல் அமைப்பினர் வழக்கம் போல தங்கள் செய்லபாடுகளை தொடரலாம். தேவை பட்டால் சங்கத்தின் ‘உதவியை’ கேட்டு பெறலாம். அதுவும் optional தான்.

இந்த விசியம் பற்றிய அடுத்த ‘விவாத’ சந்திப்பிற்க்கு வருவாதாக இல்லை. Too much ‘talk’. ஜாலிய இருங்கப்பா. Take it easy மக்களே.
==================================
Posted by K.R.அதியமான் to Dondus dos and donts at March 30, 2010 11:10 PM

K.R.அதியமான் has left a new comment on your post "பதிவர் குழுமம் - குழந்தைக்கு பல் முளைக்கும் பிரச்ச...":


/////பார்ப்பன வெறுப்பு தேவையற்றது என்று பார்ப்பனரல்லாதோர் சொல்லட்டும்!////

இந்த வாக்கியமே சரியாக படவில்லையே. யாரும், யாரையும் வெறுப்பது சரியானதல்ல. பார்பானியத்தை (அல்லது சாதியத்தை) வெறுப்பது / எதிர்ப்பது சரிதான். ஆனால் பார்பனர்களையோ அல்லது வேறு ஜாதி மத குழுவினரை ‘வெறுப்பது’ என்பதே ஏற்றுகொள்ள முடியாத விசியம். மனோபாவத்தை, கொள்கைகளை வெறுக்கலாம் அல்லது எதிர்கலாம். ஆனால் ஒரு சாதியை சேர்ந்த மக்களை அப்படி வெறுப்பது பற்றி பேசுவதே சரியாக படவில்லை. அதை மற்றவர்கள் சொல்லட்டும், பார்பனர்கள் சொல்ல கூடாது என்ற தொணியில் இந்த வாக்கியம் அமைந்துள்ளது…

டோண்டு சார்,

நீங்கள் தனி மனித தாக்குதலில் ஈடுபடுவது சரியல்ல. உங்க வயதிற்க்கு தேவையுமல்ல. வழக்கமாக இப்படி செய்ய மாட்டீர்களே ?
Posted by K.R.அதியமான் to Dondus dos and donts at March 30, 2010 11:09 PM
Reply

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ganesh said...

ருத்ரன் சாரை கேள்வி கேட்பவர்கள் யாரும் என் இதை பற்றி ஒரு வார்த்தை கூட டோண்டு சாரிடம் கேட்கவில்லை , பேசவில்லை??
ஹேரம், முகமூடி உள்ளிட்ட அனைவருமே.. !

//மனநலமில்லாத மருத்துவர் ஆகியோரது //

//இந்த சண்டைக்கார பாப்பான் வந்து என்னடா ஜாட்டான் என்றுதான் கேட்பான்.////

R.Gopi said...

பதிவு ஒன்றிருக்க, பின்னூட்டங்கள் வேறு திசை நோக்கி பயணிக்கிறதே..

குடுகுடுப்பை said...

எனக்கு டோண்டுவை சில காரணங்களுக்காக பிடிக்காது, என்றென்றும் அன்புடன் பாலா, சீமாச்சு , ஆர்வி போன்றவர்களைப் பிடிக்கும். பார்ப்பனர்கள் என்றைக்கோ செய்த தவறுக்கெல்லாம் ஒட்டுமொத்தமாக அனைத்து பார்ப்பனரையும் எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

Unknown said...

//ஹாய்ராமிற்கு நீங்கள் ஸ்போக்ஸ்மேனா அல்லது பார்ப்பனீயத்திற்கு நீங்கள் ஸ்போக்ஸ்மேனா? இல்லை நீங்களும் ஹாய்ராமும் ஒன்றா? அப்படி என்றால் பாலா யார்? chinnappenn 2000 யார்?
பார்ப்பனீயத் திமிர் எங்கள் அனுபவம்//

யார் யார் யாரென நீங்களே சொல்லிவிடுங்களேன் உமா நீங்க தான் ஷெர்லக் ஹோல்ம்ஸ் ஆயிற்றே.திராவிடீய தமிழனின் அயோக்யத்தனமும்,ஆணவமும் எங்கள் அனுபவ்ம் தான்.

Rajan said...

//ஆ ஊன்னா பாப்பான் என்று சொன்னால் இந்த சண்டைக்கார பாப்பான் வந்து என்னடா ஜாட்டான் என்றுதான் கேட்பான்.//

நீங்க பார்ப்பான்னு நீங்களே சொல்லிக்கற மாதிரி நெறையப் பேரு ஒத்துக்க மாட்டேங்கிறாங்களே ! அது ஏன் சார் !

Rajan said...

//அவர்கள் ஏன் சொல்லப்போகிறார்கள்? தலித்துகள் அல்லாத அபார்ப்பனர்கள் தலித்துகளுக்கு தாங்கள் செய்யும் வன்கொடுமைகளை எல்லாம் செய்து விட்டு உயர் சாதீயம் என பேச்சு வரும்போது மட்டும் அதை சௌகரியமாக பார்ப்பனீயம் என லேபல் கொடுத்துக் கொண்டு தங்களுக்கு அலிபை தேடிக் கொள்பவர்களுக்கு பார்ப்பன வெறுப்பு ரொம்பவுமே தேவைதானே.//

பார்ப்பனம் பூணூல் போட்டவனை மட்டும் பீடித்திருக்கவில்லை. நற்குடி மமதை கொண்ட அனைவரும் பார்ப்பனீய நெடி வீசும் விஷங்களே . அல்லாமல் பூணூல் போட்டதால் மட்டுமே விமர்சிக்கும் பட்சத்தில் எதிர்த்து குரல் கொடுங்கள் நியாயமானதாக இருக்கும் ... மிஸ்டர் டோண்டு ராகவைய்யங்கார் (இப்படி கூப்பிட்டால் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் போல !)

Rajan said...

/பார்ப்பனர்கள் என்றாலே சிவப்பு துணியை கண்ட காளை போல மிரளுகிறார். என்ன ஆச்சு?//

ஆமாமாம் ! பார்ப்பனர்களைக் கண்டால் எனக்கும் கூட மெத்தப் பயம்தான் ! இருக்காதா பின்னே

Unknown said...

//வேறு திசை நோக்கி பயணிக்கிறதே//

ஆமாம் ஆர் கோபி ஐயா ஆமாம்,

இப்படி திசை திருப்புவது ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிடீயரகளின் குயுக்தி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும் என்று கேட்கிறேன்.

Rajan said...

//பார்ப்பன வெறுப்பு தேவையற்றது என்று பார்ப்பனரல்லாதோர் சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்வீர்களா? அதற்கு முதலில் சொல்பவன் பார்ப்பானா இல்லையா என்ற ஆராய்ச்சியிலிருந்து விடுபடவேண்டுமே? அது உங்களுக்கு சாத்தியமா?//

ஜாலம் நிறைந்ததாக இருக்கலாம் தோழா ! நிதர்சனம் அவ்வாறு இல்லை . பார்ப்பன பிடிப்பு இரு தினங்களாக பதிவர் சந்திப்பு தொடர்பான இடுகைகளின் பின்னூட்ட அரசியலிலும் ஒட்டுக்குத்தும் நடுவு நிலையிலும் தெளிவாகத் தெரிகிறது. இன்னுஞ் சொல்லப் போனால் , பதிவர்களிடையே துவேஷம் இந்த அளவிற்கு ( பார்பன ஆதரவின் போது) மேலெழும் என்பது எனக்கும் வியப்பளித்த ஒன்று

Rajan said...

//அதை மற்றவர்கள் சொல்லட்டும், பார்பனர்கள் சொல்ல கூடாது என்ற தொணியில் இந்த வாக்கியம் அமைந்துள்ளது…//

இங்கு பார்ப்பனீய எதிர்ப்பு தேவையற்றது எனும் எடுகோள் பார்ப்பனர்களால் முன்வைக்கப் பட கூடாது என சொல்வதை விட முன் வைக்கப் படுவதில் செறிந்த பொருளில்லை என்றிருக்கலாம் . என் மட்டிலும் பார்ப்பனீய எதிர்ப்பு தேவையற்றதென தலித்துகளே சொன்னாலும் அது ஏற்புடையதல்ல.

Rajan said...

//யார்கிட்டயும் மாட்டிக்காம நல்லா இருக்கனும்னு நான் ஆண்டவன வேண்டிக்கிறேன் சார்.//


மகர நெடுங்குழை காதனையா ? வேண்டிக்குங்க .... அப்பிடியே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் செமிக்காவது போவணும்னு தாதா பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிடுங்கோ

Anonymous said...

ஒரு மருத்துவர், அதுவும் பெயர் சொன்னால் தெரியும் நிலையில் இருப்பவரின் பின்னூட்டம் இத்தனை தரம் தாழ்ந்ததாக இருப்பது வேதனை தான்.

ஒரு சமுதாயத்தை பற்றி இவர் கன்னாபின்னா என்று விமர்சிப்பாரம் ஆனால் பதிலுக்கு யாராவது விமர்சித்தால் பிச்சுபுடுவேன் என்பாராம். விமர்சனத்தை தாங்கும் பக்குவம் இல்லை என்றால் குடும்பத்துடன் வீட்டில் சமைத்து உண்டு கொண்டு இருந்திருக்க வேண்டும்.

வெறுமென இருந்த மருத்துவரை டோண்டு வம்புக்கு இழுக்கவில்லை !! விமர்சனம் அலர்ஜி என்றால் கவிதை ஓவியம் என்று இருங்களேன்.

வால்வளந்தவன்


என்னது இது கூஜா மட்டும் வந்திருக்கு "சொம்பை" இன்னும் காணோம்.

உமர் | Umar said...

//பதிவு ஒன்றிருக்க, பின்னூட்டங்கள் வேறு திசை நோக்கி பயணிக்கிறதே..//

இந்தப் பதிவின் நோக்கமே அதுதான!

Rajan said...

//இந்தப் பதிவின் நோக்கமே அதுதான!//

ஹா ஹா ஹா ! சூப்பர்

உமர் | Umar said...

அசோக்கின் பதிவின் உள்ளடக்கத்தைப் புரிந்துக்கொள்ளத் தெரியாமல் அல்லது புரிந்துக் கொள்ள முயலாமல், மார்தட்டிக் கொள்ளும் பார்ப்பன புத்தியின் அகங்காரம்தான் இந்த பதிவு. இதைபோன்ற ஒரு விஷயத்தைதான், பார்ப்பனபுத்தி என்று அசோக் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டி இருந்தார். டாக்டர் ருத்ரன் அவர்கள் அந்தப் பதிவில் வேடிக்கை பார்ப்பதை மட்டுமே கூறியிருந்தார்.

ஆனாலும், சமூகத்தில் மேல்நிலைக்கு வந்துவிட்ட ஒருவர், பார்ப்பனர்களை அனுசரித்துச் செல்வதில்லை என்பதற்காக, அவர் மீது கொண்ட வன்மத்தை விஷமாகக் கக்குவதர்காக ஒரு பதிவு.

Rajan said...

//என்னது இது கூஜா மட்டும் வந்திருக்கு "சொம்பை" இன்னும் காணோம்.//

கூஜாவுல ஜலத்த றொப்புங்கோ மொதல்ல ! சொம்பு வரச்சே பாத்துக்கலாம்

Rajan said...

பார்ப்பனர்களை அனுசரித்தல் என்பதன் பொருள் என்ன இங்கு !

நான் சொல்லி விடுவேன் ஆனால் ரிலீஸ் ஆகாது !

Anonymous said...

சொம்பும் வந்து விட்டது.

Anonymous said...

நுணலும் தன் வாயால் கெடும் என்பார்களே ? அது இது தானா !!!!


வால்வளந்தவன்

உமர் | Umar said...

// உயர் சாதீயம் என பேச்சு வரும்போது மட்டும் அதை சௌகரியமாக பார்ப்பனீயம் என லேபல் கொடுத்துக் கொண்டு //

ஐயா, உங்கள் வசதிக்காக சமூகத்தில் மேம்படுத்திக்கொண்டவர்களை உங்களோடு இணைத்துக் கொண்டு, உங்கள் பார்ப்பன புத்தியை அவர்களுக்கும் கற்றுக் கொடுத்துவிட்டு, அதனை உயர் சாதீயம் என்று அழைக்கவேண்டும் என்றும் கூறுவீர்கள். உங்கள் சௌகரியத்திற்காக புது வார்த்தைகளை அறிமுகப்படுத்தி அதை யாரும் பின்பற்றவில்லை என்றும் அங்கலாய்ப்பு. வாழ்க பார்ப்பனீயம்!

உமர் | Umar said...

//ஆர்வி அவர்களுடன் பேசும்போது அவர் பார்ப்ப்பனர் என்பது அவரது ஜெனோடைப் என திருவாய் மலர்ந்தருளினவர் இந்த மனநலம் இல்லா மருத்துவர். //

ஜெனோடைப் மாறிவிடக்கூடாது என்பதற்காக நீங்கள் மெனக்கெடுவது எல்லாம் இன்றைய உலகிற்குத் தெரியும். இது குறித்து யாரும் பேசினால், கருத்துக் கூற முடியாத கணத்தில், தனிநபரைத் தாக்கி வசைபாடத் தொடங்கி விடுவீர்கள்.

உமர் | Umar said...

//இப்போது கூட அவர் எனக்கு ஃபிசிகலாக மிரட்டல் விடுத்துள்ளார்.//

ஐயோ கொல்றாங்கப்பா என்னும் டப்பிங் குரல் ஏனோ நினைவிற்கு வருகிறது!

உமர் | Umar said...

//சமுதாயத்தில் மதிப்பிற்குரிய நிலையிலிருக்கும் மருத்துவரும் அவரது மனைவியும் குழாயடிச் சண்டை போடுவது வேதனையான விஷயம்.//

சமூக ஏற்றத் தாழ்வுகளையும், அதன் காரணிகளையும் ஒருவர் சொல்லும்போது, காரணிகளின் காரணகர்த்தா அந்த ஒருவரை மனநலமில்லாதவர் என்பாராம்; அந்த ஒருவர் வந்து பதில் கூறினால்; அனானி ஒருவர் குழாய்ச் சண்டை என்பாராம். அந்த அனானி யாரென்று அறிந்தால்... ஹே ராம்!

Anonymous said...

//அசோக்கின் பதிவின் உள்ளடக்கத்தைப் புரிந்துக்கொள்ளத் தெரியாமல் //

அடேங்கப்பா அசோக்கின் பதிவின் உள்ளடக்கம் சாதரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத மாபெரும் தத்துவம்,சைக்கிள் கடை கும்பல்,,மற்றும் மன நலன் குன்றிய மருத்துவர் போன்ற, பொறிக்க்கித் தனத்தில் நோபல் பரிசு பெற்ற மாமேதைகளால் தான் புரிந்து கொள்ள முடியும்.நோபல பரிசு பெற்ற கூஜா + சொம்பு கும்பலுக்கு வாழ்த்துக்கள்.

Rajan said...

//மாபெரும் தத்துவம்,சைக்கிள் கடை கும்பல்,,மற்றும் மன நலன் குன்றிய மருத்துவர் போன்ற, பொறிக்க்கித் தனத்தில் நோபல் பரிசு பெற்ற மாமேதைகளால் தான் புரிந்து கொள்ள முடியும்.நோபல பரிசு பெற்ற கூஜா + சொம்பு கும்பலுக்கு வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு நன்றி ! அனானி பெயர் சொல்ல அப்பிடி என்ன தயக்கம் ? பார்பனீயம் பேச வந்தாச்சுல்ல அப்பறம் எதுக்கு சட்டைக்குள்ள பூநூல ஒளிச்சு மறச்சு வெக்கணும் ! தொறந்து காட்டிட்டே வரலாமே பூநூல

Rajan said...

//பக்குவம் இல்லை என்றால் குடும்பத்துடன் வீட்டில் சமைத்து உண்டு கொண்டு இருந்திருக்க வேண்டும்.//

நிஜப் பெயருடன் வர வக்கு வகை இல்லாது போனால் ஆத்தோட இருந்திருக்கணும் ... கணபதி ஹோமம் நடத்திண்டு ... விமர்சனத்துக்கு பயப் படுவது பற்றி அனானிகள் பேசுவதைப் பார்த்தால் எதில் சிரிப்பது எனத்தெரியவில்லை

Uma said...

இந்தப் பின்னூட்டத்தில்லாவது (பிரசுரிக்கப்பட்டால்) அவரவர்க்கு எழுதியதை அவரவர் படியுங்கள்!
@முகமூடி
//உமா.. ஹாய்ராமிற்கு டோண்டு ஸ்போக்ஸ்மேனா என்று உங்களுக்கு கேள்வி எழுவதை போலவே ருத்ரனுக்கு நீங்கள் மனைவி என்ற காரணத்தால் ஸ்போக்ஸ்வுமன் வேலை பார்க்கிறீர்களே அது அவசியமா என்று பலருக்கும் கேள்வி எழுகிறது. ஒரு சாதாரண பதிவராகத்தான் உங்கள் கருத்தை பதிகிறீர்கள் என்று ஜோக் அடிக்காதீர்கள்.//
நான் பதிவு ஆரம்பித்த இந்தச் சில நாட்களிலேயே என்னை சாதாரணப் பதிவராக இருக்கவிடவில்லையே smart, chinnappenn2000 & bala போன்றவர்கள். நான் ருத்ரனின் மனைவியாகத்தான் பேசுகிறேன். நீங்களாக ஜோக் அடித்து சிரிக்காதீர்கள். ருத்ரனுக்கு ஸ்போக்ஸ்மேன் தேவையென்றால்தான் பதிவுலகமே சிரிக்கும். உங்கள் வீட்டில் ஒரு பெண்ணின் கணவனை மனநலமில்லாத மருத்துவர், டெரரிஸ்ட் என்றெல்லாம் சொன்னால் அவர்கள் பேசாமல் இருக்கலாம். நான் அப்படி அல்ல. இந்தப் பதிவில் ருத்ரன் இழுக்கப் பட வேண்டிய அவசியம் உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் டோண்டுவின் நண்பர் என்ற முறையில் எனக்கு அருஞ்சொற்பொருள் விளக்குங்களேன். மற்றபடி நான் என்ன செய்யவேண்டும் செய்யக்கூடாது என்றெல்லாம் நீங்கள் சொல்லி நான் கேட்டுக்கொள்ள வேண்டியதில்லை. இதை மிகுந்த மரியாதையுடன் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.
//”அரண்டவன் மிரண்டுதான் "பார்ப்பானா"?” என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... ”இது எச்சரிக்கை / let me see your courage/conviction/commonsense. i warn you again” என்பதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று ஒரு சாதா வலைபதிவர் பார்வையில் அல்லாமல் அவர் மனைவி ஆகவே அவரை மற்றவரை விட நன்றாக புரியும் என்ற அளவில் நீங்கதான் அருஞ்சொற்பொருள் விளக்குங்களேன்...//
எச்சரிக்கை என்றாலே “இப்போது கூட அவர் எனக்கு ஃபிசிகலாக மிரட்டல் விடுத்துள்ளார்”, “நீங்களே பார்த்தீர்களே, எவ்வாறு இப்போதும் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன.” என்றெல்லாம் அரண்டவன் தான் புலம்புவான் . இன்னொரு முறை மனநலமில்லாத மருத்துவர் என்றோ, டெரரிஸ்ட் என்றோ எழுதப்பட்டால் defamation suit வெற்றிலை பாக்கு பருப்புத்தேங்காயுடன் தாம்பாளத்தில் personal delivery செய்யப்படும். இந்தப் பதிவில் வந்த பின்னூட்டங்கள் எல்லாம் மட்டறுக்கப் பட்டவையே!
@அதியமான்,
//பார்ப்பன வெறுப்பு தேவையற்றது என்று பார்ப்பனரல்லாதோர் சொல்லட்டும்!// பார்ப்பனீயம் a.k.a. என்ற சாதீயத்தைத்தான் அப்படி குறிப்பிட்டேன். டோண்டுவின் குறிப்பை வெட்டி ஒட்டியதால் குழப்பம். I regret the typo and the misunderstanding it caused.
@hayyram, smart, chinnappenn(in absentia) & the likes,
I refuse to acknowledge your presence henceforth until the day you have the guts to come out of your closets! Are there many skeletons in there, by the way?

உமர் | Umar said...

//Dont understand why this much of aggresiveness and pin pointing individual with caste & religion? Are we in stone age period? We should use blog to share our good experience and it should be for the betterment of society.//

forwarded to Dondu Raghavan Iyengar(!)

உமர் | Umar said...

// பார்பனீயம் பேச வந்தாச்சுல்ல அப்பறம் எதுக்கு சட்டைக்குள்ள பூநூல ஒளிச்சு மறச்சு வெக்கணும் ! தொறந்து காட்டிட்டே வரலாமே பூநூல //

பூணூல் வெளிய வந்திருச்சு. மறைந்சிருக்கிறது வேற

உமர் | Umar said...

//அடேங்கப்பா அசோக்கின் பதிவின் உள்ளடக்கம் சாதரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத மாபெரும் தத்துவம்,//

எல்லாத்தையுமே மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் உங்களுக்கு எதுவும் புரியாது! அதைதான் அசோக்கும் நோட்டோடு அலையும் டோண்டு என்று கூறினார். மீண்டும் வாந்தி மட்டுமே எடுக்கத் தெரியும் என்று நிரூபித்த அத்தனை பார்ப்பனர்களுக்கும் ஒரு மிகப்பெரும் நன்றி.

K.R.அதியமான் said...

டோண்டு சாரை எனக்கு சில ஆண்டுகளாக தெரியும். பல முறை அவரின் வீட்டிற்க்கு சென்று பல மணி நேரங்கள் உரையாடி உள்ளேன். பல புத்தகங்கள், தகவல்களை exchange செய்து கொண்டிருக்கிறோம். இனிய நண்பர். சாதி வித்யாசம் பாராட்டாதவர். அனைத்து சாதி, மதத்தினரையும் சமமாக நடத்துபவர் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். கண்டிப்பாக அவர் ஒரு பார்பானியவாதி அல்லர். This is my understanding and judgement. அவருடன் முரண்படலாம். (நான் சில விசியங்கள் முரண்படுகிறேன்). ஆனால் அவரை பற்றி வினவு எழுதிய கட்டுரையில் மிக தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் ஒரு பொறியாளராக, ஊழியராகவே பணி புரிந்தவர். டெல்லியில் பல ஆண்டுகள் தினமும் 40 கி.மி சைக்கிளில் பயணம் செய்து தொழிற்சாலைக்கு சென்றவர். பல ஆண்டுகளாக சைக்கிளில் பயணம் செய்தவர். எளிமையானவர். கேரள தொழிலாளர்களில் சிலர், செய்யாத வேலைக்கு கூலி கேட்பதை பிச்சைகாரபுத்தி என்று எழுதியதாலேயே அவர் ’மேட்டிமைதனம்’, நிலபிரவுத்துவ மனோபாவம் கொண்டவர் என்பது போல வினவு கட்டுரையில் எழுதப்பட்டிருப்பது மிக தவறான அவதானிப்பு. மிகுந்த சுயமரியாதை உணர்வு கொண்டவர் அவர். செய்யாத வேலைக்கு கூலி கேட்பதை பற்றிய அவரின் கருத்து மிக ஆணித்தரமானது. உடனே அதை கொண்டு jumping to hasty and wrong conclusions. He has his standards and values. That is all.

வஜ்ரா said...

//
நீங்க பார்ப்பான்னு நீங்களே சொல்லிக்கற மாதிரி நெறையப் பேரு ஒத்துக்க மாட்டேங்கிறாங்களே ! அது ஏன் சார் !
//

ராஜன்,

மொதல்ல நீங்க இன்ன சாதின்னு ஓப்பனாக ஒத்துக்குங்க...

அப்புறம் நீங்க எழுதுறதுக்கு எப்படி பின்னூட்டம் வருதுன்னு பாருங்க...இன்னிக்கு உங்களைத் தூக்கிவிட்டவனுங்கள்ளாம் வந்து உங்களைக் கும்மு கும்முன்னு கும்முவானுங்க...நீங்க எழுதுறதுக்கு இப்படியெல்லாம் அர்த்தம் இருக்கான்னு உங்களுக்கே தெரியாத அர்த்தத்தையெல்லாம் அவிங்க சொல்லுவானுங்க.


தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு.

Rajan said...

//மொதல்ல நீங்க இன்ன சாதின்னு ஓப்பனாக ஒத்துக்குங்க...//

நான் எந்த இடத்திலாவது ராஜனுக்கு பின் இன்ன சாதியென்று போட்டு இருக்கிறேனா ? ஏன் பிறர் ஒத்துக் கொள்வதில்லை எனக் கேட்டால் சம்பந்தமே இல்லாமல் ஏதோசொல்கிறீர்கள்

Rajan said...

//நீங்க இன்ன சாதின்னு ஓப்பனாக ஒத்துக்குங்க...//

இப்ப சொல்றேன் கேட்டுக்குங்க

நான் மொதல்ல இஸ்லாமியப் பின்னணில இருந்து ஸ்ட்ரைட்டா எகன்கர் என்ற மதத்துக்கு போயி டக்குனு யூ தரன் போட்டு நித்தியானந்த சாதில சேந்து இப்ப எங்க போறதுன்னு தெரியம் முழிச்சுட்டுஇருக்கேன்

Uma said...

@அதியமான்,
இவ்வளவு இனிமையும், நடுநிலையும் உள்ள, சாதீய வித்தியாசம் இல்லாத ராகவையங்கார் ருத்ரனை இந்தப் பதிவில் ஏன் குறிப்பிட்டார்?

அரவிந்தன் நீலகண்டன் said...

//பார்ப்பன வெறுப்பு தேவையற்றது என்று பார்ப்பனரல்லாதோர் சொல்லட்டும்!//
பார்ப்பன வெறுப்பு தேவையற்றது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட பார்ப்பனரல்லாத ஆதிக்கசாதிகளின் கேடயம் என்பதாலும் எவ்வித சமூகவியல் அடிப்படையும் அற்ற வெறுப்புமிழ்தல் மட்டுமே என்பதாலும் பார்ப்பன வெறுப்பு -for that matter எந்த வெறுப்பும் தேவையற்றது. வெறுப்பு ஒரு மனநோய். தமிழக சூழலில் பார்ப்பன வெறுப்பு ஈவெரா என்கிற சிறியார் பரப்பிவிட்ட சமூகநோய். போதுமா?

அரவிந்தன் நீலகண்டன் said...

//இவ்வளவு இனிமையும், நடுநிலையும் உள்ள, சாதீய வித்தியாசம் இல்லாத ராகவையங்கார் ருத்ரனை இந்தப் பதிவில் ஏன் குறிப்பிட்டார்?//

ஒருவேளை அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் வெளியாகும் ருத்ரனின் பகுத்தறிவற்ற வெறுப்பு முகம் காரணமாக இருக்கலாமோ?

அரவிந்தன் நீலகண்டன் said...

//இவ்வளவு இனிமையும், நடுநிலையும் உள்ள, சாதீய வித்தியாசம் இல்லாத ராகவையங்கார் ருத்ரனை இந்தப் பதிவில் ஏன் குறிப்பிட்டார்?//
அதுதானே....ஒருவேளை வெறுப்பும் பகுத்தறிவின்மையும் கொண்ட ருத்ரனின் காழ்ப்புணர்வு வெளிப்பட்டதன் காரணமாக இருக்கலாமோ?

அரவிந்தன் நீலகண்டன் said...

//பார்ப்பனீய எதிர்ப்பு தேவையற்றதென தலித்துகளே சொன்னாலும் அது ஏற்புடையதல்ல//
ஆமாண்ணோவ் இல்லைன்னா நம்ம சாதிப்பசங்க தலித் குடிசையை தீ வைக்கிறதுக்கு பழிபாவம் ஏக்க வேறு யாரு பலியாடா கிடைப்பாங்கண்ணோவ்? கீழ் வெண்மணிக்கு வாய்பொத்தி மௌனம் காத்த ஈவெராவியம்னானோவ் சொல்ல முடியும். அட போங்கையா நீங்களும் உங்க போலி-முற்போக்கு மனுசநேய வேசமும் வந்துட்டானுங்க...

அரவிந்தன் நீலகண்டன் said...

//போறதுன்னு தெரியம் முழிச்சுட்டுஇருக்கேன்//
இதில இன்னா கஸ்டங்கண்ணா இருக்கு? பேசாம சரஸ்வதியை நிர்வாணமா வரைஞ்சு "பாரு பாரு நானும் ரவுடிதான்"னு சவுண்டு விடணுங்கண்ணோவ். அப்புறம் சின்ன வயசிலேந்து கஸ்டம் எதாச்சும் வந்துச்சுன்னா மேரி இல்ல மேரி அந்த மேரி சொரூபம் முன்னாடி நின்னு பேசணுங்கண்ணோவ்...அதெல்லாம் நல்ல மன ஆரோக்கியமானவங்க செய்ற விசயங்கண்ணோவ் அப்புறம் எவனாவது லேசா அந்த மேரிய கிண்டலடிச்சா கூட மனசெல்லாம் உருக எனக்கு அப்படியே பனியனுக்குள்ள அது குறு குறுத்துச்சுன்னு பதிவு போடணுங்கண்ணோவ்...எவனாவது ஏதாவது சொன்னா "I warn you" அப்படீன்னு ஆட்டோ அனுப்புற ரேஞ்சுக்கு மிரட்டணுங்கண்ணோவ் அதுக்கப்பால இதுக்கெல்லாம் காரணம் பார்ப்பனீயம் அப்படீன்னு மங்களம் பாடிட்டா போதுங்கண்ணோவ் அப்படியே ஞானம் சுனாமி மாதிரி வந்து நம்ம மேல அலையடிக்குங்கண்ணோவ்...

அரவிந்தன் நீலகண்டன் said...

//ஜெனோடைப் மாறிவிடக்கூடாது என்பதற்காக நீங்கள் மெனக்கெடுவது எல்லாம் இன்றைய உலகிற்குத் தெரியும். //

ஆமா நாமெல்லாம் சர்வ உத்தமம்... எனக்கு தெரிஞ்சு இன்னைய தேதில தலித்துகளூக்கு எதிரா கடுமையான வன்கொடுமைல ஈடுபடுற சாதிக்காரன்களோட நகர்ப்புற பதிப்புகள்தான் "பாப்பனீயம்"னு சவுண்ட் உடுறது. கொஞ்சமாவது மனச்சாட்சி இருந்தா முதல்ல ஒழிக்க வேண்டியது வெள்ளாளனீயம், செட்டியாரீயம், கவுண்டரீயம் வன்னியரீயம்னு எல்லா ஈயத்தையும்தான். அதுக்கு தைரியம் கிடையாது சாதில இளச்சவன் இளிச்சவாயன் என்ன சொன்னாலும் கேட்டுட்டு இருக்கிறவன் என்ன ஆபாசமா திட்டினாலும் பேசாம இருக்கிறவன் பாப்பான். பிறகென்ன வேட்டியை பிருஷ்டத்துக்கு மேல மடிச்சு கட்டிகிட்டு அவன் கிட்ட வீரத்த அதுவும் அக்மார்க் திராவிட வீரத்தை காட்ட வேண்டியதுதான்...இதெல்லாம் ஒரு பொழப்பு... ஒரு சர்வே எந்த சாதிலேருந்து சாதிய எதிர்ப்பு திருமணங்கள் அதிகம் நடந்திருக்குன்னு செஞ்சா தெரிஞ்சிரும் எவன் உண்மைல ஜிகோடைப் பாதுகாக்க மெனக்கெடுதாம்னு

வஜ்ரா said...

//
நான் மொதல்ல இஸ்லாமியப் பின்னணில இருந்து ஸ்ட்ரைட்டா எகன்கர் என்ற மதத்துக்கு போயி டக்குனு யூ தரன் போட்டு நித்தியானந்த சாதில சேந்து இப்ப எங்க போறதுன்னு தெரியம் முழிச்சுட்டுஇருக்கேன்
//

தமிழ் நாட்டுக்கு ரெண்டாவது சாரு நிவேதிதா தேவையா என்பதை தமிழர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

ஆனாலும், நீங்கள் மட்டும் பதிவர் சந்திப்புக்குப் போய் முதல் பெஞ்சுல உட்காருங்க...அப்புறம் இருக்குல்ல டீ உங்களுக்கு வேட்டு..

உங்க சட்டையக் கழட்டி, பேண்டை கழட்டி உங்க phenotype ஐ வைத்து ஜீனோடைப் எல்லாம் பார்த்து, டி.என்.ஏ எடுத்து ஜீன்களை சீக்குவன்ஸ் எல்லாம் செய்து உங்கள் 2500 வருட சரித்திரத்தையே சொல்லிவிடுவார்கள்...

மறுபடியும் சொல்லுறேன்...

தமிழன் என்றொர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு.

Uma said...

@அரவிந்தன், நீங்கள் ருத்ரனுக்கு தனியாக அனுப்பும் மெயில்களையும் நான் பார்த்திருக்கிறேன். பின்னூட்டங்களையும் பார்க்கிறேன். இந்த "Playing to the gallery" தான் பார்ப்பனீயம். Kudos!

வஜ்ரா said...

//
பார்ப்பனீய எதிர்ப்பு தேவையற்றதென தலித்துகளே சொன்னாலும் அது ஏற்புடையதல்ல
//

அதாவது தலித்துகளே வந்து போதும்யா விடுங்கய்யா பார்ப்பானனுங்களன்னு, நல்ல மனசோட சொன்னாலும் மேல்ஜாதிக்காரங்க நீங்க விட மாட்டீங்க...

சரிங்கண்ணா...

இதுல இருந்து என்ன தெரிஞ்சிக்க/புரிஞ்சுக்க முடியும்னு மூளையுள்ளவனுக்கு எடுத்துச் சொல்லத் தேவையில்லை.

பூனைக்குட்டி...சிச்சீ...ஒரு மாபெரும் யானைக்குட்டியே வெளியில் வந்துவிட்டது..

அரவிந்தன் நீலகண்டன் said...

//எச்சரிக்கை என்றாலே “இப்போது கூட அவர் எனக்கு ஃபிசிகலாக மிரட்டல் விடுத்துள்ளார்”, “நீங்களே பார்த்தீர்களே, எவ்வாறு இப்போதும் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன.” என்றெல்லாம் அரண்டவன் தான் புலம்புவான் //

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பன வெறுப்பு என்று இன்றைக்கு நீங்களெல்லாம் தூக்கிக் கொண்டிருக்கிற அதே கருத்தியல் ஆயுதத்தை தூக்கிக் கொண்டுதான் ஒரு கோஷ்டி போலி டோ ண்டுவாக செயல்பட்டது. அதில் ஒருவன் அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரையும் எந்த அளவு ஆபாசமாக தாக்க முடியுமோ அந்த அளவு ஆபாசமாக தாக்கினான். அவன் நடத்திய வலைப்பதிவில் இன்றைக்கு போலிமானுடம் பேசும் அனைத்து அல்லக்கைகளும் ஆதரவளித்து வந்தன. இந்த அடியை பட்டவன் மீண்டும் அதே ஆயுதத்தை சமுதாயத்தில் பொறுப்புள்ள மனிதர் என தான் நினைத்த ஒருவர் கையிலெடுக்கும் போது அரண்டு பார்க்கத்தான் செய்வார்.

அரவிந்தன் நீலகண்டன் said...

//ராகவையங்கார்//
அவருடைய ப்ரொபைலில் அவர் "Narasimhan Raghavan" என்றுதான் போட்டிருக்கிறார். அவர் தன்னை குறைந்தபட்சம் இவ்விடத்திலாவது ராகவையங்கார் என சொல்ல விருப்பப் படவில்லை. அவ்வாறிருக்க நீங்கள் ஏன் அவரது சாதியை சொல்லி குறிப்பிட வேண்டும்?

ஹரன்பிரசன்னா said...

ருத்ரனின் புத்தகங்கள் சிலவற்றை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்பு படித்த ஞாபகம். திடீரென்று சில படங்களில் தலை காட்டுவார். இப்போதெல்லாம் அவர் பல பதிவுகளில் மனம் காட்டுவதால், அவர் தலை காட்டியபோது எனக்கு இருந்த எண்ணங்கள் எல்லாம் சிதறி ஓடிவிட்டன. இவரது புத்தகத்தையா படித்தேன் என்றெல்லாம் தோன்றிவிட்டது. டோண்டு ஒரு பதிவு எழுதி, அதில் அவரைக் குறிப்பிட்டுவிட்டதால் அவர் வெளிப்படையாக மிரட்டுவதெல்லாம் ரொம்பவே அதிகம். அதிலும் ஜாதி வெறி சம்பந்தப்பட்ட பதிவுகளில் என்று அவர் சொல்வது உச்சகட்ட காமெடிதான். வினவு தளத்தில் அவர் கமெண்ட் போட்டிருக்கும் பதிவெல்லாம் ஜாதி வெறியே இல்லாமல், வெண்கொடி பறப்பவை மட்டுமே என்பதை இத்தனை நாள் புரிந்துகொள்ளாத இந்த பிளாக்கர் உலகம் எப்படி உருப்படும்? அதுதான் குடும்பத்தோடு வந்து அவர் வருத்தப்படுகிறார். ஆம், சரியான வார்த்தை இப்போதுதான் கிடைத்தது. அது மிரட்டல் அல்ல, வருத்தம். ஏனென்றால் இதுதான் தமிழ்நாட்டுப் பழக்கம். மனநல மருத்துவரும் தமிழ்நாட்டுப் பிரஜைதானே. எனவே டோண்டு, dont do. :-)

Unknown said...

அடேடே இங்கு ஒரு மகாபாரதப் போரே நடந்து கொண்டிருக்கிறதே?சிந்தாதரிப்பேட்டை சைக்கிள் கடையும்,கருவாட்டு கடையும் ஒன்றாக படையெடுத்து வந்திருக்கிறதே.

முதலில் பெரிய தாடி+ சின்ன தாடி நேரில் ஆஜராகி மிரட்டல்விடுத்துப் போனார்கள்.உடனே, சைக்கிள் கடை காலட்படை டிவிஷனின் பிராதான ரெள்டிகள் ராஜன் & கும்மி கம்பைன் ஸ்பாட்டுக்கு வந்து விட்டனர்.

அதிலும் இந்த சூப்பர் ஸ்டார் ராஜ்ன் இருக்கிறதே அது ஒன்றே போதாதா போர் புரிய;"கும்மா கும்மா கும்மாடி,சும்மா சும்மா சும்மாடி" என்ற லெவலில் கவிதைகளை விநாடிக்கு அரை டஜன் என்ற கணக்கில அவர் விட்டார்னாக்க நாடு தாங்குமா?இது ஒர்க் அவுட் ஆகவில்லையென்றால், கும்மி,ராஜன் இரண்டு பேசும் ஆபாசப் பேச்சு பரஸ்பரம் பேசிக்கொள்வது போல் ஒரு ட்ராமா போட்டுக் காமிப்பாங்க.போததற்கு, அப்பப்போ இந்த ரெளடி கும்பலின் சியர் லீடர் வேற வந்து ஜய் ஹோ கத்திவிட்டு போவாங்க.

இது ஒன்றுமே ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால், கும்பலின் தலைவர் பெரிய தாடியின் ப்ரம்மாஸ்திரம் ஒன்று இருக்கிறது.அதற்குப் பெயர் பெரிய தாடியின் மெட்றாஸ் பாஷை.அதை மட்டும் எடுத்துவிட்டாரென்றால் பூமி தாங்குமா?

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?டோண்டு ஐயா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

K.R.அதியமான் said...

Mrs.Uma,

டாக்டர் ருத்திரனை மரியாதை குறைவாக அவர் இங்கு எழுதியது தவறுதான். D.R.Ashok என்பவர் சமீபத்தில் எழுதிய கீழ்தரமான சாதிய வெறுப்பை உமிழும் பதிவில் டோண்டு சாரை நேரடியாக தாக்கி எழுதப்பட்டதன் எதிர்வினை இது. ஆனால் ஒரு தவறை மற்றொன்று நியாயப்படுத்தாது.

அதற்காக நீங்களும் ’ராகாவயங்கார்’ என்று சாதி பெயர் சொல்லி மீண்டும் இப்படி எழுதுவது, உங்கள் மீது கொண்டிருக்கும் மரியாதையை குறைக்கிறது. இது ஒரு ’பகுத்தறிவான’ எதிர்வினை அல்லவே.

Anonymous said...

டோண்டு சார் !!
எங்க உங்க பழைய "பார்" புகழ் நண்பர் ??

அவருடைய சிஷ்ய கேடிகள் தான் இங்கே அடித்து ஆடுபவர்கள் !!
ஏன் அவரே கூட ஏதேனும் பேரில் ஒளிந்து இருக்கலாம்.
நல்ல என்ஜாய் பண்ணுங்க எல்லாம் உங்க நண்பர்கள் தானே !


சங்கர்பாண்டியன் ஸ்டோர்ஸ்
மளிகை மொத்த வியாபாரம்

Anonymous said...

\\ஒருவர் குழாய்ச் சண்டை என்பாராம். அந்த அனானி யாரென்று அறிந்தால்... ஹே ராம்!//

இதை எழுதியது அன்புடன் அனானி என்று டோண்டு சாருக்கு எப்போவாவது பின்னுட்டம் போடும் அடியேன் தான். ஹேராம் இல்லை.

மனநலத்திற்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் இப்படி 24 மணி நேரமும் இணையத்தில் புரண்டு கொண்டிருந்தால் சமுதாயத்திற்கு நல்லதா?

வாக்காளன் said...

அதியமான் - திரு டோண்டு பற்றிய உங்கள் மதிப்பீடு மிக சரியாக இருக்கலாம்.. ! அனால் சில பல நேரங்களில் டோண்டு அவர்களின் ஆழ் மனதில் கட்டமைக்கபட்டிருக்கும் பார்பனீயம் அவரையும் மீறி வெளியே எட்டி பார்த்துவிடுகிறது .. என்ன செய்ய.

சங்கரச்சாரி கைது பற்றி பேச்சு வரும் பொது , சடார் என்று சம்பந்தமே இல்லாமல் ராசா அலைவரிசை என்று பேசுவார்.. அவரின் அவசரத்தில் ஈசியாக புரிந்துக்கொள்ளலாம்.. சங்கரச்சாரி பற்றி எங்கே பேச்சு நீண்டு விடுமோ என்பதே அவரின் அச்சமாக இருக்கும் .. இது ஒரு வித பார்ப்பனீய குயுக்தி.. !

டோண்டு இதை செய்வார் .. ரஞ்சியின் கள்ள காதலன் நித்தியானந்தா - பெரியார் ஒப்பீடு.. நித்தியா மேட்டர் நீர்க்க வேண்டும் என்ற அவசரம் பெரியாரை .. உள்ளிழுக்கும் ..

இங்க்ஹே டோண்டு வை குறை சொல்லவில்லை.. பார்பநீயத்துகு (பார்பனர் அல்ல) பதாகை pidippavarai தான் குறை சொல்லுகின்றனர். ருத்ரனுக்கு பார்பனீயம் பிடிக்கவில்லை .. அது பற்றி அவர் பதிவுகளில் குறை சொன்னால் டோண்டுவிற்கு குறுகுறுக்கும் .. உடனே மனநலம் அற்றவர் என்று ஏசுவார் .. ! பார்ப்பவர் ஒன்னும் சொல்லாமல் போகவேண்டும் .. என்ன நியாயம்?

பார்பனியத்தை குறை சொன்னால்.. ஒன்று பார்பனியம் தவறில்லை என்று வெளிப்படையாக சொல்லவேண்டும் . அதை விட்டு என் அப்பன் குதிருக்குள் இல்லை என்ற விதத்தில் நான் பார்பனீயத்தை கடைப்பிடிப்பவன் இல்லை என்று சொல்லி கொண்டே சினம் காட்டினால் என்ன அர்த்தம்?

அரவிந்த நீலகண்டன்.. பேச்செல்லாம் நன்னா இருக்கு ஓய் உமக்கு.. !

தாழ்தபட்டவா கொடுத்த பட்சணம் டா அம்பி தொட்டுடதே தீட்டு ... காசு எவா கொடுத்தா என்னடா , நன்னா ஜலம் தெளிச்சு எடுத்து வெய்... நான் இப்படி பார்பனியத்தை (கவனிக்கவும் - பார்பனர் அல்ல) கடைப்படிப்பவாலை பல ஆத்துல பார்த்தது தான்

பார்பனீயம் எதிர்ப்பு கூட தேவையற்றது .. பயங்கரமானதா?

//ஈவெரா என்கிற சிறியார் //
பெரியார் சிறியார் தான் உமக்கு.. உங்களின் கொலை குற்றவாளி சுப்புணி சங்கராச்சாரி , "உமனைசெர்" தேவநாதர் குருக்கள் , ரஞ்சியின் கள்ளக்காதலன் நித்தியா எல்லாம் உமக்கு மகா பெரியவா என்று தெரியும் போது , ஈ வே ரா உமக்கு சிறியாரை தெரிவது வியப்பில்லை மாமா.

//அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் வெளியாகும் ருத்ரனின் பகுத்தறிவற்ற வெறுப்பு முகம் காரணமாக இருக்கலாமோ?//
ஈன உங்களுக்கு அதிர்ச்சி ? பதிவெழுத வரும் போது ருத்ரன் என்ன "நான் பார்பனீயத்தை எதிர்க்க மாட்டேன் என்று உங்களுக்கு அவர் பிட் நோட்டீஸ் அனுப்பினாரா? ? அப்புறம் என் அதிர்ச்சி?

///பகுத்தறிவின்மையும் கொண்ட ருத்ரனின் காழ்ப்புணர்வு வெளிப்பட்டதன் காரணமாக இருக்கலாமோ?///
பார்ப்பனீயம் பல் இ ளித்துக்கொண்டு வெளி வருவது கூட காரணமாக இருக்கலாம்

//இதில இன்னா கஸ்டங்கண்ணா இருக்கு? //
அதானே .. இதை விட எனேனமோ மோடி மஸ்தான் வித்தை எல்ல்லாம் செஞ்ச பார்பனிய (கவனிக்கவும் பார்பனர் அல்ல) கும்பலக்கு இதெல்லாம் ஜுஜுபி
--
அதென்ன பார்ப்பனீயத்தை தூக்கி பிடிப்பவர்களில் பலரும் அனானிகளாகவே இருகின்றார்கள்..

உமர் | Umar said...

//அவர் தன்னை குறைந்தபட்சம் இவ்விடத்திலாவது ராகவையங்கார் என சொல்ல விருப்பப் படவில்லை.//

ஆமாம்! அவர் போடும் பின்னூட்டங்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியாதுதான்!

உமர் | Umar said...

//சிந்தாதரிப்பேட்டை சைக்கிள் கடையும்,கருவாட்டு கடையும் ஒன்றாக படையெடுத்து வந்திருக்கிறதே.//

அட இங்க அந்த புரோக்கரும் வந்த மாதிரி தெரியுது?

//அதிலும் இந்த சூப்பர் ஸ்டார் ராஜ்ன் இருக்கிறதே அது ஒன்றே போதாதா போர் புரிய;"கும்மா கும்மா கும்மாடி,சும்மா சும்மா சும்மாடி" என்ற லெவலில் கவிதைகளை விநாடிக்கு அரை டஜன் என்ற கணக்கில //

சின்னப்பொண்ணு எதையும் மறக்கல அம்மாடி!

//கும்மி,ராஜன் இரண்டு பேசும் ஆபாசப் பேச்சு பரஸ்பரம் பேசிக்கொள்வது போல் ஒரு ட்ராமா போட்டுக் காமிப்பாங்க.//

ஆமா ராஜன் ஆபாசம் அப்படின்னு என்னமோ ஒன்னு சொல்லுறாங்களே. அது என்ன?

//டோண்டு ஐயா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். //

இது என்ன உங்க ஜெய் ஹோவா ?

உமர் | Umar said...

//உங்க சட்டையக் கழட்டி, பேண்டை கழட்டி உங்க phenotype ஐ வைத்து ஜீனோடைப் எல்லாம் பார்த்து, டி.என்.ஏ எடுத்து ஜீன்களை சீக்குவன்ஸ் எல்லாம் செய்து உங்கள் 2500 வருட சரித்திரத்தையே சொல்லிவிடுவார்கள்..//

ஏன் அவ்வளவு கஷ்டப்படறீங்க? உங்க ஆளுங்க சொல்லுற மாதிரி பேருக்குப் பின்னாடி ஜாதிப் பேரப் போட்ட தெரிஞ்சிரிரும். ஆனா, என்ன பண்ணுறது? மக்கள் இப்ப தெளிவாயிட்டாங்க

உமர் | Umar said...

வந்திருக்கும் இத்தனை கமெண்டுகளில் எத்தனை கமெண்டுகள் பதிவர் சங்கம் குறித்து வந்துள்ளன? பதிவின் நோக்கம் இப்பொழுதாவது புரிகிறதா? பார்ப்பனீயத்தை தொடர்ந்து பேசுபொருளாய் வைத்திருக்கும் ராகவன் ஐயங்கார் வாழ்க!

அரவிந்தன் நீலகண்டன் said...

Setting the record straight:
http://arvindneela.blogspot.com/2010/03/just-to-set-record-straight.html

Dr.Rudhran said...

@கும்மி
//வந்திருக்கும் இத்தனை கமெண்டுகளில் எத்தனை கமெண்டுகள் பதிவர் சங்கம் குறித்து வந்துள்ளன? பதிவின் நோக்கம் இப்பொழுதாவது புரிகிறதா?//
hm, await abuse for this also!!

வஜ்ரா said...

//
வந்திருக்கும் இத்தனை கமெண்டுகளில் எத்தனை கமெண்டுகள் பதிவர் சங்கம் குறித்து வந்துள்ளன? பதிவின் நோக்கம் இப்பொழுதாவது புரிகிறதா? பார்ப்பனீயத்தை தொடர்ந்து பேசுபொருளாய் வைத்திருக்கும் ராகவன் ஐயங்கார் வாழ்க!

//
சூப்பரு...

ஆமா......பார்ப்பானர்கள் ஒழிக...பார்ப்பானீயம் வாழ்க கரெக்டா ?

Uma said...

@Aravindan, @Athiyaman,
Please see how Raghavan has referred to himself in D.R.Ashok's post from which this tirade has allegedly started. We personally do not care whether he is vadakalai or thenkalai also!

Uma said...

@Aravindan, @Athiyaman,
Please see how Raghavan has referred to himself in D.R.Ashok's post from which this tirade has allegedly started. We personally do not care whether he is vadakalai or thenkalai also!

aravindan neelakandan said...

I have been away from blog-world for quite some time particularly after the Dravidian Poli-Dondu used to fill my mail box with hate mail. After the in-fighting within the Poli-Dondu group this kind of anti-Brahmin hatred sort of mellowed down. What prompted me to reply was this comment by a blogger named Uma //பார்ப்பன வெறுப்பு தேவையற்றது என்று பார்ப்பனரல்லாதோர் சொல்லட்டும்//
Notice that it is not even பார்ப்பனீய எதிர்ப்பு but பார்ப்பன வெறுப்பு. I consider the above said blogger and anyone who holds the same views, as fascist hate-mongers similar to Nazis.And as a Tamil Non-Brahmin Hindu it is my duty to deny such public proclamation of hatred against a group by such hate mongers.

aravindan neelakandan said...

//Please see how Raghavan has referred to himself in D.R.Ashok's post from which this tirade has allegedly started. We personally do not care whether he is vadakalai or thenkalai also!//

If he refers to himself as Brahmin does that mean he tells he is superior to us? If he tells that then definitely let us oppose that. என்னை எதாவது மறை கழண்ட கேஸ் "நீ ஒரு பார்ப்பன அடிவருடி" என்று சொன்னால் நானும் "ஆமா நான் பாப்பார அடி வருடிதான் அதுக்கென்ன இப்போ ஜோலியை பாத்துட்டு போடா"என்றுதான் சொல்லுவேன். இந்த தமிழ் வலையுலகில் பார்ப்பனர்களை போல ஆபாசமாக தாக்கப்பட்ட வேறெதாவது ஒரு சாதி இருக்குமா என்பது ஐயமே. சாதியத்தை நான் எதிர்க்கிறேன். வெறுப்புமிழும் எதையும் நான் எதிர்க்கிறேன். இதையே உமா என்கிற பதிவர் "பார்ப்பனீய மேலாதிக்கம்" அல்லது "பார்ப்பனீய எதிர்ப்பு" என்றோ சொல்லியிருந்தால் "பார்ப்பனீய" என்கிற சொல்லாட்சியின் காலனிய வேர்களையும் அத்தகைய வார்த்தையாடலை இன்று பயன்படுத்துவோரின் வரலாற்றறிவின் வறட்சியையும் மட்டும் சொல்லிவிட்டு போயிருப்பேன். ஆனால் அம்மணி வெறுப்பை அல்லவா பார்ப்பனரல்லாதவர் வழி மொழிய எதிர்பார்த்தார்... மனநல மருத்துவர் ருத்திரனோ "எச்சரிக்கைகள்" விடுத்தார். கருத்து சுதந்திரத்தையும் கலை சுதந்திரத்தையும் குறித்து கையாற தட்டச்சி வலைப்பதியும் பெருமக்கள் இவர்கள். என்ன இருந்தாலும் மார்க்சிய மாவோயிஸ cheer-leader இடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? விதி எத்தனை நாள்தான் என்னதான் சிந்தாநதியில் குளிக்க வைத்தாலும் ஸ்டாலினிய ரஷிய கரடியின் நகம் இரத்த வேட்கையுடன் பிறாண்டலை விட்டுவிடுமா என்ன?

அரவிந்தன் said...

//அனால் சில பல நேரங்களில் டோண்டு அவர்களின் ஆழ் மனதில் கட்டமைக்கபட்டிருக்கும் பார்பனீயம் அவரையும் மீறி வெளியே எட்டி பார்த்துவிடுகிறது .. என்ன செய்ய.//

கடைசிகாலத்தில் ஆனானப்பட்ட எழுத்தாளர் சுஜாதா அவர்களே தனது பிராமண சாதிப்பற்றை வெளிப்படையாக காண்பித்தார்.


பொதுவானவர்,நல்லவர் என்று நம்பப்பட்ட சுஜாதாவே அப்படி மாறும் போது ஆரம்பத்திலிருந்தே பிராமணியத்தை தூக்கிபிடிக்கும் டோண்டுவிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்.?

தனிபநபர் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் டோண்டுவே இன்று தனிநபர் தாக்குதலில் இடுபடுவது தான் கொடுமையிலும் கொடுமை.

கருத்துகளால் மோதும் மனநிலையை டோண்டு அவர்கள் இழந்துவிட்டார் போல தோன்றுகிறது

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Uma said...

@அரவிந்தன்,
Please read my first comment to Athiyaman before you sit on a pedastal like an atheenam and start preaching about the etymology of the word to diffuse my ignorance in linguistic history! May be would help to include Mr. Athiyaman also in it because I seem to agree with him about the reference of பார்ப்பனீயம் aka சாதீயம்.
//அம்மணி வெறுப்பை அல்லவா பார்ப்பனரல்லாதவர் வழி மொழிய எதிர்பார்த்தார்// And how is that you understand or interpret this from what I have written here so far!? Or is this what I called பார்ப்பனீயக் குயுக்தி!

வஜ்ரா said...

மருத்துவர் ஐயா play the victim விளையாட ஆரம்பித்துவிட்டார் போலும்.

..
பார்ப்பானன் என்கிற ஜாதியை வெறுப்பவர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கும் தமிழ் வலைப்பதிவாளர்களால் சங்கம் அமைக்கப்பட்டால் அது எப்படியிருக்கும் ?

அது இணைய திராவிடர் கழகமாகத்தான் இருக்கும்.

Anonymous said...

//மார்க்சிய மாவோயிஸ cheer-leader இடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? விதி எத்தனை நாள்தான் என்னதான் சிந்தாநதியில் குளிக்க வைத்தாலும் ஸ்டாலினிய ரஷிய கரடியின் நகம் இரத்த வேட்கையுடன் பிறாண்டலை//

அரவிந்தன் நீலகண்டன்,

சியர் லீடர் மாவொயிஸ்டா?சைக்கிள் கடை பசங்க சில்லறை ரெள்டிகள் தான்;மாவோயிஸ்ட்கள் தீவிரவாதிகள் ஆனால் சைக்கிள் கடை விடலைப் பசங்க போல் பொறிக்கி கும்பல் கிடையாது.

Uma said...

@அரவிந்தன் நீலகண்டன், for your convenience since you seem to be selective in reading.
@அதியமான்,
//பார்ப்பன வெறுப்பு தேவையற்றது என்று பார்ப்பனரல்லாதோர் சொல்லட்டும்!// பார்ப்பனீயம் a.k.a. என்ற சாதீயத்தைத்தான் அப்படி குறிப்பிட்டேன். டோண்டுவின் குறிப்பை வெட்டி ஒட்டியதால் குழப்பம். I regret the typo and the misunderstanding it caused.//

உமர் | Umar said...

@ aravindan neelakandan
//"பார்ப்பனீய" என்கிற சொல்லாட்சியின் காலனிய வேர்களையும் அத்தகைய வார்த்தையாடலை இன்று பயன்படுத்துவோரின் வரலாற்றறிவின் வறட்சியையும் மட்டும் சொல்லிவிட்டு போயிருப்பேன்//

"உயர்சாதீயம்" என்ற சொல்லாட்சியின் காவி வேர்களையும், அத்தகைய வார்த்தையாடலை இன்று பயன்படுத்துவோரின் வரலாற்றுத் திரிபு குயுக்திகளையும் சற்று நினைவிற்கு கொண்டு வாருங்கள்;அவற்றைப் பற்றி அறிந்திருந்தால்

அரவிந்தன் நீலகண்டன் said...

//for your convenience since you seem to be selective in reading//

முதலில் தெள்ளத் தெளிவாக சாதியின் பெயர் சொல்லி அதன் மீதான வெறுப்பு என்று சொல்ல வேண்டியது. அப்புறம் இரட்டை அர்த்தத்தில் "பார்ப்பானா" என்று கேட்க வேண்டியது. அப்புறம் உங்கள் ஆதரவாளர் அந்த குறிப்பிட்ட சாதியினர் பேசும் பாணியில் கிண்டலடிக்க வேண்டியது பிறகு வேண்டியவங்க வேண்டியதை எடுத்துக்கிடுங்கப்பா என்று பத்தோடு பதினொன்றாக அது டைப்போ நான் ரிக்கெட்டுரேன் என்ன வேண்டியது. கக்க வேண்டிய வெறுப்பைத்தான் கக்கியாகிவிட்டதே இனி என்ன கூட்டத்தோடு மூலையில் ஒரு ரிக்ரெட் ரிக்ரெட்டிட்டால் போச்சு. ஒருவேளை is that typo a keyboard equivalent of a Freudian slip? Only the shrink may know. இதனை நேர்மைக்குறைவாக கொண்டால் ஒருவேளை இதுதான் -உங்கள் பாஷையில்- உங்களுக்குள் தூங்கும் ...ahem...'பார்ப்பனீயமோ...'

When your typos manifest hatred for a section of humanity you do not simply regret as a side option you should apologize. But then that needs honesty and humanity.

அரவிந்தன் நீலகண்டன் said...

கும்மி,
எங்கள் வேர்கள் காவிதான். சாதியத்தின் மையக்கண்ணில் இறங்கி எதிர்த்த நாராயணகுருவும் அய்யாவைகுண்டரும் உயர்த்திய பதாகையின் நிறம் அது. கீழ்வெண்மணிக்கு தன் சாதிக்காரன் என்றவுடன் இளித்த ஈயமான ஈவெரா பகுத்தறிவு ஈயமல்ல எங்கள் வேர்களில் இருப்பது. தலித் விடுதலைக்காக களமிறங்கியவரென அண்ணல் அம்பேத்கராலேயே புகழப்பட்ட சுவாமி சிரத்தானந்தர் சிந்திய உதிரத்தால் நிமிர்ந்தெழுந்த காவியின் நிறம் மட்டுமே சாதியத்தை அழிக்க முடிந்தது. போலி பகுத்தறிவும் காலனிய இனவாதமும் அசட்டு சாதிய பெருமையும் அன்னிய பணத்துக்கும் சித்தாந்தத்துக்கும் வாலாட்டி குலைக்கும் அஃறிணை புத்தியும் அதை உணர முடியாது

அரவிந்தன் நீலகண்டன் said...

Setting the record Straight-II

http://arvindneela.blogspot.com/2010/03/setting-record-straight-for-rudrans-ii.html

அரவிந்தன் நீலகண்டன் said...

டோண்டு நீங்கள் ருத்ரனை மனநலம் இல்லாத மருத்துவர் என சொன்னது சரியல்ல.

ஆனால்
//ஆர்வி அவர்களுடன் பேசும்போது அவர் பார்ப்ப்பனர் என்பது அவரது ஜெனோடைப் என திருவாய் மலர்ந்தருளினவர் இந்த மனநலம் இல்லா மருத்துவர். இம்மாதிரி அவிஞ்ஞான முறைப்படி சிந்திப்பவரிடம் வரும் நோயாளிகள் ஐயோ பாவம்தான்.//

1) இப்படி அவர் சொல்லியிருந்தால்
2) அவருக்கு வரும் டென்ஷனை, அவர் விடும் மிரட்டல்களை பார்த்தால்
3) அவருக்கு ஆதரவாக பதிவிடும் உமா எனும் பதிவருக்கு ரொம்ப கச்சிதமாக ஏற்படும் Frudian slip typos ஐ பார்த்தால்

நீங்கள் சொன்னது சரியோ என நினைக்கத் தோன்றுகிறது.

இருந்தாலும் டோண்டு நீங்கள் ருத்ரனை மனநலம் இல்லாத மருத்துவர் என சொன்னது சரியல்லதான்.

dondu(#11168674346665545885) said...

@அரவிந்தன் நீலகண்டன்
நல்ல சமநிலை பின்னூட்டத்துக்கு நன்றி.

என்ன இருந்தாலும் ருத்ரன் பிரசித்தி பெற்ற மருத்துவர். அவரை அவ்வாறு சொன்னதற்காகவும், அதனால் அவர் மனம் புண்பட்டதற்கும் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். அவர் மனைவிக்கும் இதையே சொல்கிறேன்.

இருவருமே என்னை மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதி.இண்டியா said...

தனியா லூசுத்தனமா பேசிகிட்டிருந்த்தாரு , இப்ப துணைக்கு ஆளு வேறயா ?


மதி.இண்டியா

உமர் | Umar said...

@அரவிந்தன் நீலகண்டன்
அஃறிணை புத்தி பற்றி நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டிய நிலையில் நான் இல்லை. எதிர்த்து பேசவேண்டுமே என்பதற்காக ஏதேதோ வார்த்தைகளை அள்ளி இறைத்திருக்கின்றீர். அவர்ற்றுள் எத்தனை உங்களுக்குப் பொருந்துகின்றன என்று பார்த்துக்கொண்டால் கொஞ்சம் புண்ணியமாய் இருக்கும்.

@ smart
அவர் profile-ல் தான் அப்படிப் போடவில்லை. அவர் இடும் பின்னூட்டங்களில் பலவற்றிலும் அந்த பிறப்பால் வந்த பட்டத்தை போட்டுக்கொள்ளத் தவறியதில்லை என்பதையும் சற்று பாருங்கள்.

@ Dondu
12 மணி மேரமாக இத்தனைப் பேர், நீங்கள் டாக்டர் அவர்களைக் குறித்து கூறிய வார்த்தைகள் தவறு என்று கூறினோம். அப்பொழுதெல்லாம் கள்ளமௌனம் சாதித்த நீங்கள் அரவிந்தன் நீலகண்டன் சொன்னவுடன் (!) வருத்தம் தெரிவித்திருப்பதற்கு நன்றி :-)

உமர் | Umar said...

@smart
Check this
http://timeforsomelove.blogspot.com/2010/03/blog-post_31.html

Anonymous said...

I think the matter be treated as closed.

I am too late here. However, my feedback is not for Dondu. It is for A.N.

I have been reading him; and have somewhat formed a opinion of an adovate of 'inclusive' Hinduism.

He is here finally reverting to that, read his final comments.

My opinion is that he has damaged his reputation - at least in my estimate.

Dondu Ragavan is not a company to keep for advocates of inclusive Hinduism. DR should be left alone, with his friends.

If A.N intervenes here on his behalf, it is hypocricy.

For, I have seen once in the comments area of D.R that he begged D.R not to be a casteist.

Further, D.R has made no secrets of his caste - he has done wherever and whenever he liked.

As many have pointed out, D.R has announced his caste, like the girl on Vijay TV, and said proud of it. For a person like A.N. this should be anathema.

All your talk of Narayana guru, Annal ambekar will sound hollow if you keep company of D.R.

முகமூடி said...

பார்ப்பனீய எதிர்ப்பு Freudian slipல் பார்ப்பன எதிர்ப்பு ஆனதை பற்றிய ஒரு பழைய ஜோக் -

Two guys are sitting at a bar talking and one guy asks the other guy, "Man, do you ever have a Freudian slip?"

"What are you talking about?" says the other guy.

"Well I was at the airport the other day and one of the clerks had really big tits, and I meant to say, 'Could I have two tickets to Pittsburgh,' but I accidentally said, 'Could I have have two tickets to Titsburgh."

The other guy says, "Oh yeah! I know what you're talking about! I was sitting at the dinner table with my wife the other day and I meant to say, 'Could you pass the salt please,' but instead I said, 'Bitch you ruined my life!"

அரவிந்தன் நீலகண்டன் said...

//If A.N intervenes here on his behalf, it is hypocrisy//

Please note that i am not intervening on behalf of Dondu. If u look at previous blog posts of Dondu (when i was active in the last iteration) you would have found me to be his strong critic. i intervened here because i (and i am ashamed to say) respected Rudrans and when i found them advocating a line that was dangerously similar to Poli -in the name of non-Brahmins- i thought (oh! Blame me!) i should intervene and make certain things clear.

I am not aware of Rudran making statements that he is proud of his caste. Still i do not believe it but as occasions have repeatedly proved i am a fool in over-judging the goodness of my ideological opponents. So i will be thankful if you can provide proof for what you say that Dr. Rudran is a casteist.

ஆனால் இதையெல்லாம் விட சீரியஸான பிரச்சனை ஒன்று இருக்கிறது. 'உமா' என்கிற பதிவர் எழுதுகிறார்: //அரவிந்தன், நீங்கள் ருத்ரனுக்கு தனியாக அனுப்பும் மெயில்களையும் நான் பார்த்திருக்கிறேன்//

ருத்ரன் அவருடைய வலைப்பதிவில் என்னுடன் தொடர்பு கொண்டால் அவர் புரிதலுக்கு உதவுவார் (ஆமாம் விவாதித்தல் உரையாடல் எல்லாம் அங்கே கிடையாது அவர் 'உதவுவார்' அல்லது 'விளக்குவார்': நீ கேட்டுக்கொள் - உன் வயது என் அனுபவத்துக்கு இருக்குமா- என் வெளுத்த தாடியைப் பார்...வாயை மூடிக்கொண்டு நான் செய்வதை பார்த்துக்கொண்டு இரு - இதுதான் அங்கே.) என்று சொன்ன போது நான் தனிமடல் மூலம் ஒரு உரையாடலுக்கு தயாரானேன். ஆனால் அவர் எப்போதும் அவருக்கு அனுப்பப்படும் மடல்கள் மற்றொரு சக-பதிவருடன் -அது அவருடைய வாழ்க்கைதுணையாகவே இருக்கட்டும் அல்லது வேறொருவராக இருக்கட்டும்- பகிர்ந்து கொள்ளப்படும் என சொல்லவேயில்லை. பொதுவாக ஒருவருக்கு -அதிலும் மனநல மருத்துவராக ஊரறிய மதிக்கப்படும் ஒரு பெரியவருக்கு (நமட்டு சிரிப்பு சிரிக்காதீங்கையா - நான் அந்தாளை அப்படித்தான் நெனச்சுகிட்டு இருந்தேன்) ஒரு தனி-மடல் மின்னஞ்சல் அனுப்புவதாக இருக்கும் பட்சத்தில் அதை அவர் மட்டும் படிக்கிறார் என்பதுதான் ஒரு சொல்லப்படாத எழுதப்படாத ethical implication. ஆனால் ஒரு சாதாரண வலைப்பதிவு-மின்னஞ்சல் விஷயத்திலேயே அப்படி எந்த ஒரு ethicsம் இல்லாத இவர் எப்படிப்பட்ட மனநல மருத்துவராக இருப்பார்? இவரை நம்பி எத்தனை பேர் தங்கள் அந்தரங்கங்களை இவரிடம் சொல்லுகிறார்கள்...கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருக்கிறது.

இவரது ethicsம் கேள்விக்குரியதுதானோ என தோன்றுகிறது. மிக மிக வருத்தமான விஷயம்.

Dr.Rudhran said...

dondu, i do accept your apology at face value and consider the matter closed at this point.

Unknown said...

//The other guy says, "Oh yeah! I know what you're talking about! I was sitting at the dinner table with my wife the other day and I meant to say, 'Could you pass the salt please,' but instead I said, 'Bitch you ruined my life!"//

முகமூடி தெய்வமே,

Freudian Slip சாமாசாரத்தினால் இப்படி ஒரு உபயோகம் இருக்கிறது என்று எடுத்துரைத்து,மன உளைச்சலில் வாடும் நபரின் வாழ்வில் "ஒளி" ஏற்றி வைத்த நீர் ஒரு தெய்வப் பிறவி என்பதில் சந்தேகம் இல்லை.

Uma said...

@முகமூடி,
//I am not aware of Rudran making statements that he is proud of his caste// என்று அரவிந்தன் நீலகண்டன், ஜோவின் D.R. என்ற டோண்டு ராகவனை, Dr. என்று கருதிப் பேசியிருக்கிறாரே, அவரிடம் உங்கள் பிற Freudian Slips பற்றிய ஜோக்-களைப் பகிர்ந்து கொள்ளலாமே. just a free suggestion in return for a free joke :)

@அரவிந்தன் நீலகண்டன்,
ஜோ குறிப்பிட்ட D.R. யாரை, உங்களின் எந்த காமெண்ட் பற்றியது என்று ஆதீன பீடத்தை விட்டு இறங்கி வந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இன்னொன்று, அடுத்த முறை ருத்ரனுக்கு மெயில் அனுப்பினால், ருத்ரனின் தொழில் முறையில் அணுகுகிறீர்கள் என்று முதலிலேயே குறிப்பிட்டால் அவருக்கு confidential என்று file செய்யவும் என்னிடம் காட்டாமல் இருக்கவும் உதவும். அவர் ஏதோ எனக்கு வந்த தாக்குதல்களுக்கு நீங்கள் மருந்து தடவுவதாக நினைத்து என்னிடம் காட்டினார். திருப்பி அவர் தொழில் மீது தாக்குதல் நடத்தி defamation suit-இல் பேரை மட்டுமே மாற்றும் வசதியைக் கொடுக்காதீர்கள்.

@டோண்டு,
இவ்வளவு வேடிக்கையும் பார்த்து விட்டு ஆற அமரக் கேட்டாலும், மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன் என்று தமிழ் சினிமாவில் சொல்லித் தந்திருப்பதால், ருத்ரனை வழி மொழிகிறேன்.

உமர் | Umar said...

@ முகமூடி
Jokes apart Freudian slip தொடர்பான எனது நேரடி அனுபவம்

என்னுடன் ஒன்றாகப் பயின்ற இரு மாணவர்களுக்கிடையே, ஒரு முறை சண்டை ஏற்பட்டது . அப்பொழுது ஒருவன் இன்னொருவனைப் பார்த்து "பள்ள நாயே " என்றான். அனைவரும் அதிர்ச்சியுற்றோம்.; அங்கிருந்த இன்னொரு மாணவன் உடனடியாக அப்படி சொன்னது தவறு என்றான். உடனே வசை பாடியவன் "இல்லை நான் பல்லை உடைப்பேண்டா நாயே என்று சொல்வதற்கு பதில் அப்படி சொல்லிவிட்டேன்" என்றான். வசை பாடியவன் ஒரு ஐயர்.

ஆமாம் இவர்களுக்கு, slip of the tongue aka freudian slip பற்றி ரொம்ப நன்றாகவேத் தெரியும்.

வஜ்ரா said...

//
@அரவிந்தன் நீலகண்டன்
நல்ல சமநிலை பின்னூட்டத்துக்கு நன்றி.

என்ன இருந்தாலும் ருத்ரன் பிரசித்தி பெற்ற மருத்துவர். அவரை அவ்வாறு சொன்னதற்காகவும், அதனால் அவர் மனம் புண்பட்டதற்கும் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். அவர் மனைவிக்கும் இதையே சொல்கிறேன்.

இருவருமே என்னை மன்னிக்கவும்.
//

ம்ம்ம்...
அந்த தாடி டாக்டர்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்டுட்டீங்க...

ஆனா, தாடி டாக்டர் விட்ட மிரட்டலுக்கு அவர் ஒன்றும் சொல்லல்லியே...அந்த மிரட்டல் அப்படியே ஓப்பனாக இருக்கே! அந்த மேட்டரை யார் குளோஸ் செய்வது ?

அடுத்த முறை பதிவர் சந்திப்புக்குப் போகும் போது தகுந்த பாதுகாப்புடன் செல்வீர்களா ?

வஜ்ரா said...

//
நீங்கள் டாக்டர் அவர்களைக் குறித்து கூறிய வார்த்தைகள் தவறு என்று கூறினோம். அப்பொழுதெல்லாம் கள்ளமௌனம் சாதித்த நீங்கள் அரவிந்தன் நீலகண்டன் சொன்னவுடன் (!) வருத்தம் தெரிவித்திருப்பதற்கு நன்றி :-)
//

டோண்டு ஏதோ பதிவர் சந்திப்புக்கெல்லாம் போகணும் என்று ஒத்துக்கொண்டு விட்டார் போலும்..

வஜ்ரா said...

Dr. Rudhran,

You don't deserve any apology from anybody. So, please don't behave as if you are in a moral high ground all the while.

In fact, you owe an apology for intimidating people who do not agree with your pet theories and call you what you really are.

Anonymous said...

//I am not aware of Rudran making statements that he is proud of his caste//

I was saying DR has always said he is proud of his caste and wants his fellow Iyers/Iyengars to say so.

According to him, Tamilbrahmins are hesitant to reveal their identity as brahmins, by dropping the brahmin surnames, either publicly or officially, in recent times.

This point is found in so many of his blogposts.

Rudran is a different kettle of fish.

Anonymous said...

Also your latter comments on the theme of INCLUSIVE HINDUISM here, are not addressed to me but some others here. You hve been led to prove yourself, not by me, but by them.

You may not keep his company. Which is most welcome.

Kindly keep the Tamil proverb which comes straight from my place in TN, in mind.

பனைமரத்துக்கீழிலிருந்து பாலைக்குடித்தால் நீங்கள் கள்ளுதான் குடிக்கிறீர்கள் என்பார்கள்

Regards.

dondu(#11168674346665545885) said...

@வஜ்ரா
ட்விட்டரில் நான் இது விஷயமாக சொன்னது:

என் கருத்தில் மாற்றமில்லை. இருப்பினும் உண்மை கசக்கும். அதை சொன்னதற்காக மன்னிப்பு. அரவிந்தன் நீலகண்டன் கூறியது இங்கு எனது மனத்தை மாற்றியது.
about 13 hours ago via web

Latest: @Aravindank உண்மை புண்படுத்தியது. ஆகவே மன்னிப்பு கேட்டதால் எனக்கு ஒன்றும் மனவருத்தம் இல்லை, ஏனெனில் நானும் மன்னித்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அரவிந்தன் நீலகண்டன் said...

//@அரவிந்தன் நீலகண்டன், ஜோ குறிப்பிட்ட D.R. யாரை, உங்களின் எந்த காமெண்ட் பற்றியது என்று ஆதீன பீடத்தை விட்டு இறங்கி வந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.//

அம்மணி எனக்கு ஆதீனமும் இல்லை வேறெந்த தீனமும் இல்லை. தூக்க கலக்கமும் ருத்ரன் மீதான ஏமாற்றமும் D.R. ஐ Dr. என பார்க்க வைத்திருக்கலாம். மெயில் விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவு தொடர்பாக என் விளக்கத்தை அளிப்பேன் தொடர்பு கொள் என்று சொல்லி ஒரு உரையாடலை தொடங்குகிறவர் அதனை மற்றொருவருடன் பகிர்ந்து அதனை அந்த மற்றொருவர் பொதுவில் -சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் பெறாமல்- "நான் நீ அனுப்புகிற மெயில்களை படிக்கிறேன்" என குறிப்பிடுவது ethical அல்ல.

//ஏதோ எனக்கு வந்த தாக்குதல்களுக்கு நீங்கள் மருந்து தடவுவதாக நினைத்து என்னிடம் காட்டினார்.//

நிச்சயமாக. அது அவருடைய மனம் காயப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த காயங்களை கூடுதலாக அனுப்பவித்தவர்கள் இங்குண்டு என காட்டஎனவே சோர்ந்து போகாமல் இருக்க அனுப்பப்பட்டதுதான். அது தவறல்ல. ஆனால் உன் மடலை நான் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாமா என கேட்டிருந்தால் அது ethical ஆக பண்பாட்டுடமையாக இருந்திருக்கும். அது போகட்டும். அது குறித்து நீங்கள் பொதுப்புலத்தில் பேசியது தவறு. இப்போது கூட நான் ருத்திரனுக்கு அனுப்பிய மடல்களை மட்டுமே பொதுப்புலத்தில் வைத்திருக்கிறேனே தவிர அவர் எனக்கு அனுப்பிய எதையும் அல்ல.

//அவர் தொழில் மீது தாக்குதல் நடத்தி//

அவர் தொழில் மீது தாக்குதல் எதையும் நடத்தவில்லை. ஆனால் நான் இப்படி ஒருவரை என்னுடைய மருத்துவராக தேர்ந்தெடுக்க மாட்டேன். மற்றபடி அவர் தொழில் அமோகமாக நடக்கட்டும் எனக்கு எவ்வித கவலையும் சந்தோஷமும் கிடையாது. எனக்கு சாபம் கொடுக்கவோ அருளாசி வழங்கவோ தெரியாது. நீ வளரவே மாட்டாய் என்று சாபமிடுவது நீ ஒரு இரட்டை வேடதாரி என தனிமடலில் abusive ஆக தீர்ப்பளிப்பது. இதெல்லாம் எனக்கு கிடையாது. இதற்கு மேலும் நான் சொன்னதை அவர் தொழில் மீது நடத்தப்படும் தாக்குதல் வழக்கு என்றெல்லாம் பயமுறுத்தினீர்கள் என்றால் நான் என்ன செய்ய முடியும். "அய்யா நான் சொன்னதெல்லாம் தவறு. மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று கேட்டுக்கொள்வதை தவிர. இதையே நீங்கள் உங்கள் வெற்றியாக கொண்டாடிக் கொள்ளவும் செய்யலாம்.

//அவருக்கு confidential என்று file செய்யவும் என்னிடம் காட்டாமல் இருக்கவும் உதவும்.//
Come to think of it...though it was not sent to him for getting his help but to give him moral support was marked in its subject "Personal and Confidential" And still when he shared it with you he never had the ethical courtesy to ask me if he can share. Good.

வஜ்ரா said...

//
@வஜ்ரா
ட்விட்டரில் நான் இது விஷயமாக சொன்னது:

என் கருத்தில் மாற்றமில்லை. இருப்பினும் உண்மை கசக்கும். அதை சொன்னதற்காக மன்னிப்பு. அரவிந்தன் நீலகண்டன் கூறியது இங்கு எனது மனத்தை மாற்றியது.
//

தெளிவுபடுத்தியதற்கு நன்றி சார்.

வலைஞன் said...

பார்ப்பனர்கள் என்ன தலை கீழே நின்றாலும் தமிழ் நாட்டில் இனிமேல் தலை எடுக்க முடியாது.இங்கு அந்த அளவிற்கு பார்ப்பன துவேஷம் 80 ஆண்டுகளாக விருட்சமாக வளர்ந்துள்ளது.பிராமணர் அல்லாதோர் அனைவரும் (மீண்டும் சொல்கிறேன்) 'அனைவரும்' பிராமணர்களை வெறுப்பவர்கள்.என்ன, அளவு தான் சற்று வேறுபடும்.
எண்ணிக்கையிலும் உடல் வலிமையிலும் கடைசி ராங்கில் உள்ள பார்பனர்களால் இதை எதிர்த்தது எதுவும் செய்யமுடியாது.
ஒன்று அடங்கி போகவேண்டும் அல்லது தமிழ் நாட்டை விட்டு ஓடி போகவேண்டும்.
இந்த பதிவை பலர் விரும்ப மாட்டார்கள் என்ன செய்வது?
உண்மை கசக்கும்.
குறிப்பாக வலை தளத்தில் பார்ப்பன துவேஷம் தலை விரித்து ஆடுகிறது!

அரவிந்தன் நீலகண்டன் said...

//பிராமணர் அல்லாதோர் அனைவரும் (மீண்டும் சொல்கிறேன்) 'அனைவரும்' பிராமணர்களை வெறுப்பவர்கள்.என்ன, அளவு தான் சற்று வேறுபடும்.//

மனநலமில்லாத திராவிட இனவாதிகளின், எதிலும் ஜீனோடைப் வேறுபாடு பார்க்கும்/தேடும் கிறுக்கு இனவாத வெறுப்பு கக்கிகளின் உளறலுக்கு சற்றும் குறையாத பத்தரை மாற்று அக்மார்க் உளறல்.

Anonymous said...

சார் நான் நாடுக் கோட்டை செட்டியார் ,

எனக்கு எந்த ஜாதி மேலயும் வெறுப்பு கிடையாது, இப்படி எல்லாம் பொதுப் படுத்தினா எப்படி ? தமிழ் நாட்டில் பிறந்தா திராவிடக் குஞ்சா தான் இருக்கனுமா ?? என்ன பேச்சு இது ?? வலைஞ்ன் நீங்க ஒரு "குலை"ஞ்ன்

சாத்தப்பன்

Dr.Rudhran said...

அரவிந்த்! நீ எனக்கு moral supportக்கு அஞ்சலா?
ஹிம்
நாக்க கூட நாக்கு வேண்டுமே குட்டி!!

andd, DONDU if the matter is closed why are your henchmen still barking with your permission. i shall consider their insinuations as initiated or encouraged or inspired or encouraged by you.

dondu(#11168674346665545885) said...

@Rudhran
Use your hectoring tones and outpourings with others. I dont require your directives as to how I should run my blog.

You are welcome to your conclusions and I to mine.

Dondu N. Raghavan

அரவிந்தன் நீலகண்டன் said...

டோ ண்டு...ருத்ரன் பாவம்....சென்னை வெயில் அவரை என்ன செய்து விட்டது பார்த்தீர்களா...அவருக்கு போய் சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே...அவர் மனநலமில்லாத மருத்துவர் அல்ல மனநலம் உடைய மருத்துவர் என எப்படி நிரூபிக்கிறார் பாருங்கள்...இந்த மாதிரி நல்ல மன ஆரோக்கியத்தை கடைசியாக எங்கே சந்தித்தோம் நினைவிருக்கிறதா? பாவம்...எப்படி இருந்த ஆள் இப்போது இப்படி ஆகிவிட்டார்...ம்ஹும்

aravindan neelakandan said...

//அவர் ஏதோ எனக்கு வந்த தாக்குதல்களுக்கு நீங்கள் மருந்து தடவுவதாக நினைத்து என்னிடம் காட்டினார்.//
அன்புள்ள ருத்ரன்,

இது உமா என்கிற பதிவர் நீங்கள் செய்ததாக சொன்னது. நான் அனுப்பியது moral support க்காகத்தான். "நக்க நாக்கு வேண்டுமே குட்டி"- என சொல்கிற நீங்கள்தான் அந்த மின்னஞ்சலை தாக்குதல்களுக்கு மருந்து தடவுவதாக உமா என்கிற பதிவரிடம் காட்டியிருக்கிறீர்கள். "நக்க நாக்கில்லாத குட்டியை வைத்து மருந்து தடவவா நினைப்பேன்" என நீங்கள் கேட்க வேண்டியது என்னிடமல்ல. சரி விடுங்கள், மேலும் மேலும் நீங்கள் கீழே விழுந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் நான் எழுதியதெல்லாம் தப்பு என்று உங்களிடம் கேட்டுக்கொண்டால் உங்களை நீங்களே சிறுமைப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள் என்றால் அப்படியே கேட்டு விடுகிறேன். இதையும் மன்னிப்பாக face-value வில் எடுத்துக்கொண்டு நிறுத்திக் கொள்ளுங்கள். பெரியமனிதராக கருதப்பட்ட ஒருவர் இப்படி ஒரேயடியாக தன்னைத்தானே மட்டமாக்கி கொள்வது சகிக்க முடியாமல் இருக்கிறது.

அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

சுழியம் said...

To Aravindan Neelakandan:

சாதி வெறி எந்த வடிவில் இருந்தாலும் எதிர்க்கும் நீங்கள் டோண்டுவின் தளத்தில் சாதி எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தீர்கள். ஆனால், டோண்டுவிற்கோ அல்லது ருத்திரனுக்கோ இந்தப் பிரச்சினை தங்களைப் பிரபலமாக்கிக் கொள்ள பயன்படும் ஒரு கருவி மட்டுமே. பிரபலமாவது தொழிலுக்கு புதிய வாடிக்கையாளர்களைப் பிடிக்கச் செய்யப்படும் அத்தியாவசியமாக அவர்களுக்கு இருக்கிறது. ப்ளாக் உலகில் பிரபலாமாவதும் எளிது. ஏதேனும் ஷாக் வேல்யு உள்ளதைப் பேச வேண்டும். அது உண்மையா, பொய்யா, அது பற்றி நிஜமாகவே அக்கறை இருக்கிறதா என்பது பற்றி எல்லாம் கவலையே பட வேண்டியதில்லை. நம்மைப் பற்றி ஆயிரம் பேரை பேச வைத்தால் போதும். எழுத்தாளர் சுஜாதா இந்த ப்ளாக்கர்களைப் பற்றி மிகச் சரியாகவே கணித்துச் சொல்லி இருந்தார். உங்களுக்குத் தெரியாதது இல்லை.

இந்தப் பதிவுலகில் இருப்பவர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:

1 புத்திசாலித்தனமாக தங்களது வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுபவர்கள்

2 மேலே உள்ள குழுவினரின் நோக்கம் தெரியாமல் அவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி செய்து தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் மேம்போக்கு அசடுகள்

கமெண்டுகளின் எண்ணிக்கை குறையும் போதெல்லாம் டோண்டு பார்ப்பான் உசத்தி என்று பதிவு போட்டு கமெண்டுகளின், வாசகர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்ளுவார். ஆபாசமாக தரம் தாழ்ந்து எழுதுவதன் பேசுவதன் மூலமாக தன்னை எப்போதும் பிரபலமாக வைத்திருக்க ருத்திரன் முயலுவார். இந்த இரண்டு பேரும் சண்டை போடுவதால் அவர்களுக்குத்தான் லாபம். கமெண்டுகளின், வாசகர்களின் எண்ணிக்கை இவர்களுக்குக் கூடும்.

ராஜாஜியைத் திட்டோ திட்டு என்று திட்டி ஈவேரா கல்லா கட்டினான் இல்லையா. அந்தப் பணம் பிடுங்கியின் வாயைப் பார்த்துக்கொண்டு, அவன் நிஜமாகவே சமூக அக்கறை உள்ளவன் என்று நம்பி அவன் பின்னால் திரிய ஒரு பத்து இளிச்சவாயன்கள் மாட்டினார்கள் இல்லையா. அந்த யுக்தியைத்தான் இந்த இரண்டு பேரும் செய்து பலன் அடைகிறார்கள்.

மேலும், பிரபலமான டாக்டர் விஷயம் தெரிந்த நல்ல டாக்டராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. டோண்டு, ருத்திரன் இந்த இரண்டு பேருடைய தொழில் சம்பந்தமான அறிவை, ஞானத்தை ஒப்பிட்டால் டோண்டு பல ஆயிரம் படிகள் மேலே இருக்கக் கூடும். டோண்டு மொழி பெயர்த்த பக்கங்கள் கண்டிப்பாக ருத்திரனால் நிஜமாகவே குணமானவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும், தவறே செய்யவில்லை என்று நன்கு தெரிந்தும், டோண்டு ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் ? வேறொன்றுமில்லை. யாராவது ருத்திரனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது, திமுக எம்பிகள், மந்திரிகள் சில பேர் ருத்திரனின் class mates அல்லது glass mates என்று அவருக்கு சொல்லி இருக்கலாம். எனவே, அவரும் ஜகா வாங்கி விட்டார்.

"நான் உன்னை திட்டியதில், குறை சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்கிறது ஒரு கதா பாத்திரம். "நீ சொல்லுவதை உண்மையில் நான் உண்மையில் நம்பவில்லை. இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுகிறேன்" என்கிறது மற்றொரு கதா பாத்திரம். இந்த நாடகத்தை நிஜம் என்று நம்பி ஆளுக்கொரு பக்கம் சேர்ந்துகொண்டு அடித்துக்கொள்ளவும் ஒரு கூட்டம் வந்து விடுகிறது.

இந்த விளம்பரச் சண்டைகளுக்கு நடுவில் நிஜமாகவே சாதி வெறியை தவறு என்று சொன்ன உங்கள் தரப்பு ஒரு அபஸ்வர நிம்மதி. ஆனால், அவர்களும் உங்களைப் போலவே சாதி குறித்த கவலையால்தான் சண்டை போடுகிறார்கள் என்று தப்பித் தவறி நீங்கள் எண்ணி இருந்தால்.......... ....... .......... வெள்ளந்தி ஐயா நீங்கள் !!

இந்த வெள்ளந்தி நிலையில் இருந்து தப்பிக்க, காலையில் 4 மணிக்கு எழுந்து, குளித்து, சுத்தமான ஆடை அணிந்துகொண்டு, அனுபவப்பட்டவர்கள் சொல்லி வைத்த இந்த வாசகத்தை 108 முறை சத்தமாக வேகமாக ஜெபியுங்கள்:

பைத்தியக்காரனுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியனுக்குப் பைத்தியம் பிடித்தால் அந்தப் பைத்தியக்கார வைத்தியனுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியம் தெரிந்த (!) வைத்தியனுக்கும் பைத்தியம் பிடிக்கும்.

அரவிந்தன் நீலகண்டன் said...

//அஃறிணை புத்தி பற்றி நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டிய நிலையில் நான் இல்லை.//

கரெக்ட் உங்களை குறித்து உங்களுக்கு நான் ஏன் சொல்லித்தர வேண்டும்?

//அப்பொழுது ஒருவன் இன்னொருவனைப் பார்த்து "பள்ள நாயே " என்றான். அனைவரும் அதிர்ச்சியுற்றோம்.; அங்கிருந்த இன்னொரு மாணவன் உடனடியாக அப்படி சொன்னது தவறு என்றான். உடனே வசை பாடியவன் "இல்லை நான் பல்லை உடைப்பேண்டா நாயே என்று சொல்வதற்கு பதில் அப்படி சொல்லிவிட்டேன்" என்றான். வசை பாடியவன் ஒரு ஐயர். //

அய்யா நான் தலித் சமுதாய மக்களுடன் கடந்த பத்து வருடங்களாக ஓரளவு நெருங்கி பழகியவன் - ஓரளவு அவர்கள் வலியையும் அனுபவித்தவன். ஆனால் அவர்களின் வலிகள் அவர்களுக்கே உரியவை. மகத்தானவை. என்னுடைய அனுபவத்தில் தலித்துகளுக்கு எதிரான இத்தகைய வசையாடலை நில உடைமை சமுதாயங்களான, ஆதிக்க சாதியினரான, வெள்ளாள வெறியர்களிடம் அதிகமாக கண்டிருக்கிறேன். அதே நேரத்தில் தலித்தியம் எல்லாம் அறிவுஜீவி ஃபேஷனாகவும் அமெரிக்க யாத்திரைக்கு விஸா வாங்கித்தரும் மந்திரக்கோலாகவும் மாறுவதற்கு முன்னரே அவர்களுடன் தங்கி தனது சமுதாயத்தை எதிர்த்து போராடிய வெள்ளாளர்களையும் பார்த்திருக்கிறேன். அய்யா வைகுண்டரின் சரித்திரத்தில் திருவிதாங்கூர் மன்னன் தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன்-நடவடிக்கை எடுக்க முயன்ற போது அரசவையில் இருந்த பிராம்மணன் தடுத்ததாகவும் ஆனால் தளபதி (அப்போது தளபதிகள் ஆங்கிலேய கர்னல்கள்) மன்னனை தூண்டியதாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பிராம்மணர்களில் நிச்சயமாக சாதி வெறியர்கள் உண்டு எல்லா சாதிகளிலும் போல. ஆனால் நம்மால் வெறுக்கப்படும் பிராம்மண சாதியில் சுயவிமர்சனம் செய்து அந்த சாதியக்கூட்டிலிருந்து வெளி வந்து தாழ்த்தப்பட்டவர்களுக்காக சொந்த சாதியை எதிர்த்து போராடியவர்கள் எத்தனை பேர் நம்மில் உண்டு? மிகப்பெரிய வன்கொடுமைகளை தாழ்த்தப்பட்டவர்கள் மீது நாம் செய்ய நமக்கு கிடைத்துள்ள கோழைத்தனமான ஆயுதமல்லவா பார்ப்பனீயம். அதனால்தானே அதை கைவிட நமக்கு இத்தனை தயக்கம். அவரவர் தான் பிறந்த சாதியில் இருக்கும் சாதியத்தை எதிர்த்து போராடி த்ன் சாதி ஆதிக்கம் செலுத்தும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கு தோள் கொடுத்தாலே போதும் சாதியம் ஒழிந்துவிடும். ஆனால் அதற்கான ஆன்மிக பலம் இல்லாத போது காலனிய இனவாதம் அளித்த கேடயத்துக்குள் மறைந்து கொண்டு பார்ப்பனீயம் என்றுதான் ஊளையிடத்தோன்றும்

உமர் | Umar said...

@அரவிந்தன் நீலகண்டன்
//கரெக்ட் உங்களை குறித்து உங்களுக்கு நான் ஏன் சொல்லித்தர வேண்டும்?//

:-)

// தலித்துகளுக்கு எதிரான இத்தகைய வசையாடலை நில உடைமை சமுதாயங்களான, ஆதிக்க சாதியினரான, வெள்ளாள வெறியர்களிடம் அதிகமாக கண்டிருக்கிறேன்//

என்னுடைய வகுப்புத் தோழர்களில் சிலரது சாதி மட்டுமே இன்று வரையுமே எனக்குத் தெரியும். வகுப்பில் இருந்த அனைத்து ஐயர் மற்றும் ஐயங்கார் தவிர அந்த தலித் நண்பரின் சாதிகள் மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தன. ஐயர் மற்றும் ஐயங்கார், தனி சிறுக்குழுவாக செயல்படும் தன்மை மற்றும் வேறு சில நடவடிக்கைகள் அவர்களுடைய பிறப்பு சாதியை தெரிவித்துவிடுகின்றன. அந்த தலித் நண்பனின் சாதியை அந்த வசவினைக் கேட்ட பின்பே அறிந்தேன். அவர் தலித் என்று எப்பொழுதும் கூறிக்கொண்டதுக் கிடையாது; ஆனால், ஐயர் சாதியைச் சார்ந்தவர்கள் முதலில் பிறரது சாதியை அறிந்துகொள்கின்றனர்.

//நம்மால் வெறுக்கப்படும் பிராம்மண சாதியில் சுயவிமர்சனம் செய்து அந்த சாதியக்கூட்டிலிருந்து வெளி வந்து தாழ்த்தப்பட்டவர்களுக்காக சொந்த சாதியை எதிர்த்து போராடியவர்கள் எத்தனை பேர் நம்மில் உண்டு? //

அதையே தான் அய்யா நாமும் கேட்கின்றோம்.

// அவரவர் தான் பிறந்த சாதியில் இருக்கும் சாதியத்தை எதிர்த்து போராடி த்ன் சாதி ஆதிக்கம் செலுத்தும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கு தோள் கொடுத்தாலே போதும் சாதியம் ஒழிந்துவிடும்//

தான் பிறந்த சாதியை ஒருவன் தூக்கிப்பிடிப்பதை நிறுத்தினாலே, சாதியம் ஒழிந்துவிடும் என நான் எண்ணுகின்றேன். தன் சாதியை உயர்த்திப் பிடிப்பவர்களான டோண்டுவிற்கு இந்த சங்கு கேட்டதா என்றுதான் தெரியவில்லை. :-)

அரவிந்தன் நீலகண்டன் said...

//ஐயர் சாதியைச் சார்ந்தவர்கள் முதலில் பிறரது சாதியை அறிந்துகொள்கின்றனர்//

இல்லை என்கிறேன். சாதிய உணர்வுடைய எவனும் பிறன் செய்வதில் அவன் சாதியை கண்டுபிடிக்க முயல்கிறான். தமிழ்நாட்டின் பெரிய சாதி எதிர்ப்பாளானாக அறியப்பட்ட ஒருவன் தனக்கு அறிவுரை செய்த ஒருவன் அந்த இடத்தைவிட்டு அகன்ற உடன் தன்னுடைய அணுக்கத் தொண்டனுடன் சொன்னானாம் "சாதிப்புத்திய காட்டிட்டான் பாத்தியா" அந்த அணுக்கம் அதிர்ச்சி அடைந்து "அய்யா நீங்க சாதியே இல்லைன்னுல்லா சொல்லுவீங்க"ன்னுச்சாம். அதுக்கு அந்த தலைவன் சொன்னானாம் "சாதிதானடா இல்லைன்னு சொன்னேன் வெங்காயம்...சாதிப்புத்தியா இல்லைன்னு சொன்னேன்" இது நான் கேள்விப்பட்ட விஷயம். திண்ணியத்தில் தலித் வாயில் மலம் திணித்த ஆதிக்க சாதி நாயின் கட்சி என்ன? திண்டுக்கல்லில் அஇஅதிமுக முதன் முதலாக போட்டியிட்ட போது தேவர் சாதிக்கு அரசு செய்த சலுகைகள் அப்படீன்னு பட்டியல் போட்டு தமிழக அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது. அப்போது அரசில் இருந்த கட்சி எது? அரசு விளம்பரத்திலேயே ஆதிக்க சாதிக்கு தூபம் போட்ட திராவிட தடித்தனம் எப்படி சாதியத்தை பார்ப்பனீயம் என்று சொல்லி தப்பப் பார்க்கிறது? இந்த எத்துவாளித்தனத்தையும் மொள்ளமாறித்தனத்தையும் திராவிடீயம் என சொல்லலாமா?

நாராயண குரு சொன்னது போல "பார்த்து தெரியாத சாதியை ஏன் கேட்டுத் தெரியப் பார்க்கிறாய்?" ஹிந்துத்துவம் நாராயணகுருவையும் அய்யா வைகுண்டரையும் அய்யன் காளியையும் சுவாமி விவேகானந்தரையும் சார்ந்தது. வெறுப்பைத் தூண்டும் எதையும் அநீதியை வளர்க்கும் எதையும் அது மனுவோ ஈவெராவோ அது கீழென விலக்கும்

Anonymous said...

///என்னுடன் ஒன்றாகப் பயின்ற இரு மாணவர்களுக்கிடையே, ஒரு முறை சண்டை ஏற்பட்டது . அப்பொழுது ஒருவன் இன்னொருவனைப் பார்த்து "பள்ள நாயே " என்றான். அனைவரும் அதிர்ச்சியுற்றோம்.; அங்கிருந்த இன்னொரு மாணவன் உடனடியாக அப்படி சொன்னது தவறு என்றான். உடனே வசை பாடியவன் "இல்லை நான் பல்லை உடைப்பேண்டா நாயே என்று சொல்வதற்கு பதில் அப்படி சொல்லிவிட்டேன்" என்றான். வசை பாடியவன் ஒரு ஐயர்.

ஆமாம் இவர்களுக்கு, slip of the tongue aka freudian slip பற்றி ரொம்ப நன்றாகவேத் தெரியும்.///

முழுக்க முழுக்க பொய். நான் வேலை பார்க்கும் பள்ளியில் அய்யர் வீட்டுப் பிள்ளைகளைத் தான் மற்ற ஆதிக்க சாதிப் பிள்ளைகள் பூணூலு, குடுமி என கிண்டல் செய்கின்றன. இவர்கள்தான் தாழ்த்தப் பட்ட சாதிக் குழந்தைகளையும் கூசாமல் பள்ளன் ,பறையன் என்று திட்டுகின்றன.தகராறு என்று வந்தால் எல்லாம் தனது ரெளடி திராவிட அப்பனும் மாமனும் பார்த்துக் கொள்வான் என்ற திமிரில்.இப்படிக் குழந்தைகளின் மனத்திலும் நஞ்சை வளர்த்திருப்பதுதான் இந்த 60 வருட திராவிட நச்சுக் கலாசாரத்தினால் ஏற்பட்ட பெரும் சீரழிவு.

இப்போது ஆதிக்க சாதி நாய்கள் "கும்மி" அடிப்பதெல்லாம் தான் போய் அதிகாரத்தில் அமர்ந்து கோலோச்சத்தான்.அதனை செவ்வனே செய்து கொண்டும் இருக்கின்றன. இருந்தாலும் தன் மீது வரும் பழிகளை திசை திருப்ப ஒன்று வேண்டுமல்லவ அதனால்தான் பார்ப்பனர், பார்ப்பனீயம் என்று "கும்மி" அடிக்கின்றன.

உமர் | Umar said...

@அரவிந்தன் நீலகண்டன்
//அதுக்கு அந்த தலைவன் சொன்னானாம் "சாதிதானடா இல்லைன்னு சொன்னேன் வெங்காயம்...சாதிப்புத்தியா இல்லைன்னு சொன்னேன்" இது நான் கேள்விப்பட்ட விஷயம்//

இது நான் கேள்விப்பட்டதில்லை; ஆனாலும் மறுக்கவில்லை.

//திண்ணியத்தில் தலித் வாயில் மலம் திணித்த ஆதிக்க சாதி நாயின் கட்சி என்ன?//

இதே கோபம்தான் எமக்கும் சாதி வெறித் தாண்டவமாடும்போது வருகின்றது. நீங்கள் நாய் என்று கூறியிருக்கின்றீர்கள்; நான் பன்னி என்று கூறுவேன். ஆனாலும் சாதீயத்தின் ஊற்றுக்கண் என்னவென்று நீங்கள் நினைக்கின்றீர்கள் என்று தெரியவில்லை.

//திண்டுக்கல்லில் அஇஅதிமுக முதன் முதலாக போட்டியிட்ட போது தேவர் சாதிக்கு அரசு செய்த சலுகைகள் அப்படீன்னு பட்டியல் போட்டு தமிழக அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது.//

இன்றும் சாதீயம் அழியாமல் பார்த்துக்கொள்ளும் வேலையை, எல்லா வோட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும், சாதிச் சங்கங்களும் செவ்வனே செய்து வருகின்றன.

@ அனானி
//முழுக்க முழுக்க பொய்//

அந்தக் குறிப்பிட்ட சம்பவம் நடக்கும்போது, நீங்கள் அருகிலேயே நின்றுக்கொண்டிருந்தீர்கள் அல்லவா? அய்யா நான் குறிப்பிட்டது எங்கள் பள்ளியில் நடந்த சம்பவம். நாம் இருவரும் ஒரே பள்ளியில் படித்தோமா என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு எப்படி?

//இப்போது ஆதிக்க சாதி நாய்கள் "கும்மி" அடிப்பதெல்லாம் தான் போய் அதிகாரத்தில் அமர்ந்து கோலோச்சத்தான்//

அறிய கண்டுபிடிப்பு அய்யா! அதிகாரமும் கோலோச்சுவதும் எமது எண்ணத்தில் இல்லை; யாருடைய எண்ணத்தில் என்று கூறினால் மீண்டும் ஆரம்பத்திலிருந்தேத் தொடங்க வேண்டும்.

//இருந்தாலும் தன் மீது வரும் பழிகளை திசை திருப்ப ஒன்று வேண்டுமல்லவ அதனால்தான் பார்ப்பனர், பார்ப்பனீயம் என்று "கும்மி" அடிக்கின்றன. //

இப்பொழுது எம்மீது என்ன பழி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், பேசுபொருளை விட்டு வேறு பக்கம் திசை திருப்பும் குயுக்தி யாருடையது என்று தொடங்கினால் மீண்டும் .........

அய்யா அனானி! கோவி கண்ணன் ஒரு பதிவு போட்டிருந்தாரே. அவனா நீயி...?

Anonymous said...

\\இருந்தாலும் தன் மீது வரும் பழிகளை திசை திருப்ப ஒன்று வேண்டுமல்லவ அதனால்தான் பார்ப்பனர், பார்ப்பனீயம் என்று "கும்மி" அடிக்கின்றன//

என் மதிப்பிற்குரிய அரவிந்தன் நீலகண்டன் சொன்னது போல எந்தெந்த சாதியில் எத்தனை சதவீதம் கலப்பு மணம் செய்திருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு நடந்தால் இந்த ஆதிக்க சாதியின் கும்மிகள் குறையும். வீம்புக்கு எவனோ என்னத்தையோ $#* செத்த மாதிரி கும்மிகளும் தங்கள் பங்கிற்கு பார்ப்பானை $#* பிழைப்பு நடத்துகின்றனர். சட்டக் கல்லூரி வன்முறையே போதுமே இவர்களின் வண்டவாளத்தைக் காண்பிக்க. இதை எழுதியது ஹேராம் இல்லை. நானாகிய அன்புடன் அனானி.

அரவிந்தன் நீலகண்டன் said...

கும்மி,

//அந்தக் குறிப்பிட்ட சம்பவம் நடக்கும்போது, நீங்கள் அருகிலேயே நின்றுக்கொண்டிருந்தீர்கள் அல்லவா? அய்யா நான் குறிப்பிட்டது எங்கள் பள்ளியில் நடந்த சம்பவம். நாம் இருவரும் ஒரே பள்ளியில் படித்தோமா என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு எப்படி?//
நான் அந்த நிகழ்ச்சி நடந்ததை பொய் என்றோ உண்மை என்றோ சொல்லவில்லை. ஆனால் //ஐயர் சாதியைச் சார்ந்தவர்கள் முதலில் பிறரது சாதியை அறிந்துகொள்கின்றனர்// என்று தெள்ளத்தெளிவாக சொல்கிறீர்களே அதைத்தான் முழுப்பொய் என்கிறேன். அதைத்தான் முழுக்க முழுக்க நமக்குள் இருக்கிற சாதியகாழ்ப்புணர்வின் வெளிப்பாடே தவிர உண்மை அல்ல என்கிறேன்.

//சாதீயத்தின் ஊற்றுக்கண் என்னவென்று நீங்கள் நினைக்கின்றீர்கள் என்று தெரியவில்லை.//

சாதீயத்தின் ஊற்றுக்கண் சமூக பொருளாதார காரணிகள். குறிப்பாக காலனீயம். அத்துடன் எந்த மானுட குழுமத்துக்கும் இருக்கும் நான் மற்றவனை விட உயர்ந்தவன் என்கிற எண்ணம். உதாரணமாக இதோ என் முன்னால் ஒரு தேவர் சாதி சங்க ஆண்டுவிழா இதழ் இருக்கிறது. "பிறப்பிலேயே வீரம் கொண்ட மறவர் குலம்" என்கிறது. இதனை பார்ப்பான் கற்றுக்கொடுக்கவில்லை. இதனை சில நண்பர்களிடம் காட்டி இதை படிக்கும் போது கோபம் வருகிறதா என்று கேட்டேன். "இதிலென்ன இருக்கிறது ....ஒண்ணுமில்லை" என்றார்கள். இப்போது இதையே "பிறப்பிலேயே சிறந்த அறிவு கொண்ட தென்னிந்திய ஸ்மார்த்தர்களே" என ஒரு பத்திரிகையில் போட்டிருந்ததாக வைத்துக்கொள்வோம் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்று கேட்டேன். "அது பார்ப்பனீயம்" என்கிறார்கள். இதையே வெள்ளாள சங்கத்தின் "பிறப்பிலேயே வாரி வழங்கும் விருந்திருக்க உண்ணா ஈகை குணம் கொண்ட வெள்ளாளனும்" மெர்கண்டைல்ஸ் வங்கி பிரச்சனை குறித்து பேசும் போது கூட ""நாடாண்ட நாடார் இனம்" என்று பேசும் நாடார் மகாஜன சங்க பத்திரிகைகளிலும் இயல்பாக காண முடியும். இதையெல்லாம் இங்கு பார்ப்பனன் கொண்டு பரப்பிவிடவில்லை. இன்றைக்கு சாதியே இல்லாததாக நாம் கருதக் கூடிய மேற்கத்திய நாடுகளின் சரித்திரத்தை கொஞ்சம் ஆழமாக பார்த்தால் நமக்கு பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக அங்கு தொழில்புரட்சி ஆரம்பமாவதற்கு முன்னால்.

உதாரணமாக கிழக்கு ஐரோப்பாவில் பல இடங்களில் மேற்குடியினர் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளிகள் இருந்திருக்கின்றன. மருத்துவ கல்லூரிகளில் தழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள்தான் பிணங்களை தொட்டு அறுத்து காட்டுவார்கள். மேல்சாதியைச் சேர்ந்தவர்கள் லெக்சர் மட்டும்தான் செய்வார்கள். ஆனால் அவர்களே பேராசிரியர்கள் பட்டம் பெற முடியும். சில குறிப்பிட்ட சாதிகளை சேர்ந்தவர்களுக்கு சர்ச்சுக்குள் போக முடியாது. Profane என்கிற ஆங்கிலவார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் பொருளே கோவிலுக்கு வெளியே...கோவிலுக்கு உள்ளே செல்ல முடியாத கூட்டம் வெளியே நிற்கும் அதன் பண்பாடு அதன் மொழி எல்லாமே மட்டம். மேல்சாதி காரர்களுக்கு வியர்த்தால் அது perspiration கீழ்சாதிகளுக்கும் விலங்குகளுக்கும் வியர்த்தால் அதன் பெயர் sweat. இப்படி மொழியிலேயே சாதியம் ஊறியது ஐரோப்பியம். இதனை சர்ச் ஆதரித்தது. ஏன் நாம் சீர்திருத்த வாதி என புகழ்கிறோமே மார்ட்டின் லூதர் அவர் கீழ்சாதியினரின் உரிமைப் போராட்டங்களை வெளிப்படையாக எதிர்த்தார். ஜெர்மனியில் மட்டும் ஒரே நாளில் 6000 நிலமில்லா விவசாயிகள் லூத்தரன் தளபதி ஒருவனால் கொல்லப்பட்டார்கள். அப்படியானால் எப்படி சாதியம் அங்கு ஒழிந்தது?

அரவிந்தன் நீலகண்டன் said...

அங்கு சாதியம் ஒழிந்ததற்கான முக்கிய காரணங்கள் இரண்டு

ஒன்று ஐரோப்பாவின் காலனிய ஆதிக்கம். அங்கிங்கெனாதபடி உலகெங்கும் கான்ஸர் செல்களை போல பரவி உலகின் அனைத்து இயற்கை வளங்களையும் சுரண்டி கண்டம் கண்டமாக கர்த்தரின் பெயரால் கருவறுத்து முடிந்தவரை அடிமைகளாக்கிய காலனிய ஆதிக்கம். அமெரிக்கா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூஸிலாந்து என பரவிய ஐரோப்பியத்துக்கு சாதியம் சமூக பொருளாதார காரணிகளால் தேவையற்றதாகியது.

இரண்டாவதாக சான்றிதழ்களில் அவர்கள் சாதியை புகுத்தவில்லை. இன்றைக்கும் Smith, Barber, Butler என்கிற சாதிப்பெயர்களை நீங்கள் காணலாம். அனால் அவை சாதியத்தன்மைகளை இரு நூற்றாண்டுகளாக இழந்துவிட்டன. இருந்தாலும் இங்கிலாந்தின் கிராமப் பகுதிகளில் உதாரணமாக East Anglia போன்ற இடங்களில் சில ஸ்தாபனங்களில் "உயர்குடி" மக்கள் மட்டுமே செல்லக் கூடிய அறைகள் அவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய கோப்பைகள் ஆகியவற்றை காணலாம். ஆக முழுமையாக சாதியம் ஒழிந்துவிடவில்லை. ஆனால் வீரியம் இழந்துவிட்டது. ஐரோப்பாவின் சமுதாய சமத்துவத்துக்கு நாம் கொடுத்த விலை அதிகமானது.

அதே காலகட்டத்தில் இந்தியாவில் காலனிய ஆதிக்கம் ஏற்பட்டது. சாதி சான்றிதழில் நுழைந்தது. ஒப்பீட்டளவில் இந்திய சாதி முறை ஐரோப்பிய சாதியத்தைக் காட்டிலும் நெகிழ்ச்சியானது. "சூத்திரர்" "ஷத்திரியர்" ஆகியிருக்கிறார்கள். ஐராவதி கார்வே என்கிற இந்திய சமுதாயவியலின் முன்னோடி அறிஞர் சித்பவன் பிராம்மணர்களின் வேர்கள் மீனவ சமுதாயத்திலிருப்பதை சொல்லியிருக்கிறார். இந்தியா நான்கு பிரிவுகளை கொண்ட வர்ண அமைப்பைக் கொண்டிருந்தது என்றால் ஐரோப்பிய சாதியம் ஏழடுக்கு முறையை கொண்டிருந்தது. ஆனால் சான்றிதழ்களில் சாதி நுழைக்கப்பட்டது ஒரு பெரிய இறுக்கத்தை இந்த அமைப்புக்கு கொடுத்தது. அத்துடன் ஆரிய இனவாதக் கோட்பாடு இங்குள்ள பிராம்மணர்கள் என தங்களை கருதியவர்களுக்கு பெரிய இறுமாப்பை அளித்தது. தங்களை ஆளுகிற வெள்ளைஇனத்துடன் தொடர்புடைய ஆரிய இனம் என நினைத்துக் கொண்டார்கள். ஆரிய இனவாதத்தை ஏற்றுக்கொள்ளாத சில பாரம்பரிய மடத்து பெரியவர்கள் கூட தங்களை கர்ம பலத்தினால் பிறரினும் உயர்ந்தவர்கள் என கருதிக்கொண்டார்கள். அதே நேரத்தில் தங்களுக்கென பாரம்பரியமாக இருந்த உஞ்சவிருத்தியையும் வேதமோதுதலையும் விட்டுவிட்டு எல்லோருடனும் போட்டி போட்டார்கள். இந்த போட்டியின் தொடக்கத்தில் வெள்ளைககாரனும் இவர்களுக்கு ஆதரவளித்தான். இதனால் பிராம்மண அபிராம்மண வேறுபாடு வளர ஆரம்பித்தது.

Anonymous said...

//அந்தக் குறிப்பிட்ட சம்பவம் நடக்கும்போது, நீங்கள் அருகிலேயே நின்றுக்கொண்டிருந்தீர்கள் அல்லவா? //

திருட்டைக் கண்டு பிடிக்கும் போலிஸ்காரன் திருட்டு நடக்கும் போது கூடவே நிற்கிறான எனன? உங்கள் புளுகு மூட்டைகளைத் தெரிந்து கொள்ள கூட்வெல்லாம் இருக்க வேண்டுமா என்ன?

////இப்போது ஆதிக்க சாதி நாய்கள் "கும்மி" அடிப்பதெல்லாம் தான் போய் அதிகாரத்தில் அமர்ந்து கோலோச்சத்தான்//

அறிய கண்டுபிடிப்பு அய்யா! அதிகாரமும் கோலோச்சுவதும் எமது எண்ணத்தில் இல்லை; ////

ஆதிக்க சாதிகளைப் பற்றி சொன்னவுடன் "எனக்கு அப்படி எண்ணமில்லை " என்று செல்ஃப் கன்ஃபெஷன் வருகிறதோ?

//அய்யா அனானி! கோவி கண்ணன் ஒரு பதிவு போட்டிருந்தாரே. அவனா நீயி...?///

கண்ட கருமாந்திரப் பதிவுகளை எல்லாம் நான் படிப்பதில்லை.கொஞம் எதுத்து கேள்வி கேட்ட உடனேயெ பழி போடுரதுக்கு முதுகைத் தடவிப் பாக்குற ஆதிக்க சாதி புத்தியைக் காட்டிட்டியே 'நீ தான் அவன் "

அரவிந்தன் நீலகண்டன் said...

சாதிய வர்ணாசிரமம்தான் ஹிந்து தருமம் என திக குரல்களும் தெய்வத்தின் குரல்களூம் பேச ஆரம்பித்தன. ஒன்றை மற்றொன்று நியாயப்படுத்தின. சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்த இனவாத திராவிடத்தாலும் ஹிந்து தர்மத்தை காப்பாற்ற சாதிய வர்ணாஸ்ரமத்தாலும் முடியாது. இதன் பிரத்யட்ச உதாரணம் பிறப்படிப்படையிலான பார்ப்பனீயத்தை எதிர்த்த திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் ஒருவர் "கருவின் குற்றம்" என்று கவிதை எழுதும் நிலை சில பத்தாண்டுகளிலேயே ஏற்பட்டதே. இந்நிலையில் உண்மையான சமுதாய ஆன்மிக சமத்துவத்தின் குரலாக சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ நாராயண குரு ஆகியோரின் குரல்கள் தர்மத்தின் பதாகையை தூக்கிப் பிடித்தன. தீண்டாமையும் சாதியமும் கீழ்களது ஆச்சாரம் என அவை முழங்கின. ஹிந்துத்துவத்தின் அடித்தளம் இந்த வேதாந்த சமத்துவமே. இந்திய சமுதாயத்தின் முன்னால் இருக்கும் பெரிய சவால் ஐரோப்பாவை போல் தன்னாட்டு தீமையை நீக்க பிற இனத்தவரை கருவறுக்காமல் அடிமையாக்காமல் சாதியத்தை ஆன்மபலத்தால் வெல்லுவது. அது நிச்சயமாக எளிதல்ல. தேவையில்லாமல் இனவாத வெறுப்புடன் ஒரு குறிப்பிட்ட சாதியை தாக்கி அதன் மூலம் தனக்குத்தானே எளிதாக முற்போக்கு முலாமும் ஒளிவட்டமும் சூட்டிக்கொள்ளாமல் உண்மையிலேயே சாதியத்தை அழிக்க நமக்கு -குறிப்பாக அபிராமணர்களுக்கு- தேவை சுயசாதி விமர்சனம். "பாப்பானை ஐயரென்ற காலமும் போச்சே" என்றான் பாரதி. "வீணனை வெள்ளாளனென்ற காலமும் போச்சே" "தேவன் காலடி மண்ணை வணங்கும் தீனமும் போச்சே" என்றும் அந்தந்த சாதிகளில் பாட ஆளில்லாததுதான் நமக்கு வந்த கெடுதி.

அரவிந்தன் நீலகண்டன் said...

//பாரம்பரியமாக இருந்த உஞ்சவிருத்தியையும் வேதமோதுதலையும் விட்டுவிட்டு எல்லோருடனும் போட்டி போட்டார்கள்//

அப்படி போட்டி போட்டது தவறல்ல. ஆனால் அதே நேரத்தில் தங்கள் பாரம்பரிய அதே தனித்தன்மை தொடரவேண்டுமென்றும் நினைத்தார்கள். இது சென்னை வந்த அபிராம்மணர்களுக்கு கடுமையான வெறுப்பை உருவாக்கியது. அதே காலகட்டத்தில் பிரிட்டிஷாருக்கு பிராம்மணர்கள் மீதிருந்த கரிசனம் மாற ஆரம்பித்தது. மதமாற்றிகளுக்கோ ஏற்கனவே பிராம்மணர்கள்தான் தங்கள் மதமாற்றத்துக்கு இடைஞ்சல் என்கிற எண்ணம் இருந்தது. சமுதாய தீமைகளின் ஒட்டுமொத்த உருவம் பிராம்மணர்கள் என அவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். இது சென்னையை மையம் கொண்டிருந்த அபிராம்மணர்களுக்கு அப்பீல் ஆனது. இந்த சென்னை வாழ் சௌகரிய ஜமீந்தார் அபிராம்மணர்களின் பிராம்மண துவேஷத்துக்கும் சமூக நீதிக்கான போராட்டத்துக்கும் குறிப்பாக தலித்துகளீன் சாதிய எதிர்ப்புக்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை. உண்மையான சமூக நீதிக்கான போராட்டத்தில் (வெறும் எடைக்கு எடை பொருள் சேகரித்தபடி மேடையில் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் பகுத்தறிவற்ற ஆபாசமல்ல உண்மையான உரிமைப் போராட்டம்) எல்லா சாதியினரும் ஈடுபட்டனர். பிராம்மணர்கள் உட்பட. ஆனால் மதமாற்ற சக்திகளும் அபிராம்மண ஆதிக்க சாதிகளுக்கும் பார்ப்பனீயம் என்பதை சாதியத்துடன் இணைத்து பேசுவது பல இலாபங்களை அளிப்பதால் அது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிராம்மண துவேஷம் வெள்ளைக்காரனும் குட்டி ஜமீந்தார்களும் பரப்பிய பகுத்தறிவற்ற எயிட்ஸாக மனங்களை பீடிக்கிறது. இந்த மனநலமின்மைக்கு பெரிய மனிதர்களாக தமிழகத்தில் கருதப்படுபவர்கள் கூட விலக்கில்லை.

அரவிந்தன் நீலகண்டன் said...

சாதியம் குறித்த விரிவான கட்டுரைத் தொடரை கீழ் உள்ள சுட்டிகளில் காண்க:

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் - 1
சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் - 2
சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் - 3
சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் - 4
சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் - 5
சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் - 6
தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்

உமர் | Umar said...

@அரவிந்தன் நீலகண்டன்
ஒரே பதிலில் இருவருக்கான பதிலை போட்டதைத் தவறாக புரிந்துக்கொண்டுள்ளீர்கள். உங்களுக்கான பதிலையும் அதற்கடுத்து அனானிக்கான பதிலையும் இட்டேன். பொய் சொல்வதாகக் கூறியது அனானி.

உங்களுடனான உரையாடல் ஆரோக்கியமாகவே செல்வதாகவே எனக்குப் பட்டது. இப்பொழுது நீங்கள் கூறியவற்றுள் எனக்கு பல மாற்றுக்கருத்துகள் உள்ளன. நான் பதிவிடும் சூழல் இல்லாததால் உங்கள் தளத்தில் வந்து விவாதிக்கலாம் என்று எண்ணுகின்றேன். இந்தப் பதிவில், மையப் பொருளை யாரும் தொடாமல், டாக்டர் அவர்கள் மீதான வசை குறித்து நிறையவே பேசி, நீங்கள் சொன்னவுடன் டோண்டுவும் வருத்தம் தெரிவித்து விட்டதால் இந்தப் பதிவில் விவாதிப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன்.

நன்றி :-)

உமர் | Umar said...

@ அனானி
//கண்ட கருமாந்திரப் பதிவுகளை எல்லாம் நான் படிப்பதில்லை.கொஞம் எதுத்து கேள்வி கேட்ட உடனேயெ பழி போடுரதுக்கு முதுகைத் தடவிப் பாக்குற ஆதிக்க சாதி புத்தியைக் காட்டிட்டியே 'நீ தான் அவன் " //

உங்களுடைய குயுக்தி குறித்து நிறையவே பேசிவிட்டதாலும், கோவி கண்ணனின் பதிவும் இதனோடுத் தொடர்புடையது என்பதாலும், நீங்கள் 'கண்ட கருமாந்திரத்தை' எல்லாம் படிப்பதில்லை என்றாலும், மற்றவர்களுக்கு அறிந்துக் கொள்ள உதவும் என்பதாலும் அந்த பதிவிற்கான லிங்க்
http://govikannan.blogspot.com/2010/04/blog-post.html

உங்க பதில்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வருது - "எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல" (கோவி சரியாதான் சொல்லி இருக்கீக.)

நன்றி :-)

Anonymous said...

//உங்க பதில்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வருது - "எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல"//

கண்ணாடி முன்னாடி நிற்கிறீர்களோ என்னமோ. அதனால்தான் தன்னைத் தானே பார்க்கும் போது கழிவிரக்கம் மேலிட்டு பழமொழியெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது